text
stringlengths
16
178
அஞ்சலிவந்தனம்‌ ஆருக்கும்‌ நன்மை.
அஞ்சனக்காரன்‌ முதுகில்‌ வஞ்சனைக்காரன்‌ ஏறினான்‌.
அஞ்சா நெஞ்சு படைத்தால்‌ ஆருக்கு ஆவான்‌?
அஞ்சாவது பெண்‌ கெஞ்சினாலும்‌ கிடையாது.
அஞ்சி ஆண்மை செய்யவேணும்‌.
அஞ்சி நடக்கிறவளுக்குக்‌ காலமல்ல.
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அஞ்சிலே பிஞ்சிலே கொஞ்சாமல்‌, அறுபதிற்குமேல்‌ கொஞ்சினானாம்‌.
அஞ்சில்‌ அறியாதவன்‌ ஐம்பதில்‌ அறிவானா?
அஞ்சினவனைக்‌ குஞ்சும்‌ வெருட்டும்‌.
அஞ்சினவனைப்‌ பேய்‌ அடிக்கும்‌.
அஞ்சினவன்‌ கண்ணுக்கு ஆகாசமெல்லாம்பேய்‌.
அஞ்சினாரைக்‌ கெஞ்சுவிக்கும்‌, அடித்தாரை வாழ்விக்கும்‌.
அஞ்சு காசுக்குக்‌ குதிரையும்‌ வேண்டும்‌, அதுவும்‌ ஆற்றைக்‌ கடக்கப்‌ பாயவும்‌ வேண்டும்‌.
அஞ்சு குஞ்சும்‌ கறியாமோ, அறியாப்‌ பெண்ணும்‌ பெண்டாமோ?
அஞ்சுகதவும்‌ சாத்தியிருக்க, ஆமுடையான்‌ வாயிலே பேணவளார்‌?
அஞ்சுக்கு அறுகு கிள்ளப்போனவன்‌, திரட்டிக்குக்‌ கொண்டுவந்தானாம்‌.
அஞ்சுக்கு இரண்டு பழுதில்லை.
அஞ்சு பணம்‌ கொடுத்தாலும்‌, அத்தனை ஆத்திரம்‌ ஆகாது.
அஞ்சுபணங்‌ கொடுத்துத்‌ கஞ்சித்தண்ணீர்‌ குடிப்பானேன்‌?
அஞ்சு பெண்‌ பிறந்தால்‌ அரசனும்‌ ஆண்டியாவான்‌.
அஞ்சும்‌ இருக்கிறது நெஞ்சுக்குள்ளே, அதுவுமிருக்கிறது புந்திக்குள்ளே.
அஞ்சுரு ஆணியில்லாத்தேர்‌ அசைவதரிது.
அஞ்சுபொன்னும்‌ வாங்கார்‌ அரைப்பணமே போதுமென்பார்‌.
அஞ்சும்‌ மூன்றும்‌ உண்டானால்‌, அறியாச்‌ இறுக்கியும்‌ கறியாக்குவாள்‌. (பெண்ணாவாள்‌)
அஞ்சுருவுத்தாலி நெஞ்சுருவக்கட்டிக்‌ கொண்டு வந்தாற்போல்‌ வலக்காரமாய்ப்‌ பேசுகிறாய்‌.
அஞ்சு வயதுப்‌ பிள்ளைக்கு ஐம்பது வயதுப்‌ பெண்‌ கால்‌ முடக்கவேண்டும்‌.
அஞ்சுவோரைக்‌ கெஞ்சடிக்கப்‌ பார்க்கிறான்‌.
அஞ்சூர்ச்சண்டை சிம்மாளம்‌, ஐங்கல அரிச ஒரு கவளம்‌.
அஞ்செழுத்தும்‌ பாவனையும்‌ அப்பனைப்போல்‌ (அவனைப்போல்‌) இருக்கிறது.
அடக்கத்துப்‌ பெண்ணுக்கு அழகேன்‌?
அடக்கமே பெண்ணுக்கு அழகு.
அடக்கம்‌ ஆயிரம்பொன்‌ தரும்‌.
அடக்கம்‌ உடையார்‌ அறிஞர்‌, அடங்காதார்‌ கல்லார்‌.
அடக்குவாரற்ற கழுக்காணி.
அடக்குவாரற்ற கழுக்காணியும்‌ கொட்டுவாரற்ற மேளமுமாய்த்‌ திரிகிறான்‌.
அடங்காத மனைவியும்‌ ஆங்கார புருஷனும்‌.
அடங்காப்‌ பாம்பிற்கு ராஜா மூங்கில்தடி.
அடங்காப்பிடாரியைப்‌ பெண்டுவைத்துக்‌ கொண்டது போல்‌.
அடங்காப்‌ பெண்சாதியால்‌ அத்தைக்கும்‌ நமக்கும்‌ பொல்லாப்பு.
அடங்காமாட்டுக்கு அரசன்‌ மூங்கில்‌ தடி.
அடங்கினபிடி பிடிக்கவேண்டுமேயல்லாமல்‌, அடங்காப்‌பிட பிடிக்கலாகாது.
அடம்பங்கொடியும்‌ திரண்டால்‌ மிடுக்கு.
அடா என்பான்‌, வெளியே புறப்படான்‌.
அடாது செய்தவன்‌ படாது படுவான்‌.
அடி அதிரசம்‌ (ஆலங்காய்), குத்து கொழுக்கட்டை.
அடி உதவுகிறதுபோல அண்ணன்‌ தம்பி உதவார்‌.
அடி என்கப்‌ பெண்சாதியில்லை, அஷ்ட புத்திரவெகு பாக்கிய நமஸ்து
அடி என்கிற மந்திரியுமில்லை பிடி என்கிற ராஜனுமில்லை.
அடி ஒட்டலே கரணம்‌ போடப்பார்க்கிறான்‌.
அடி ஒட்டையா யிருந்தாலும்‌ கொழுக்கட்டை வேக வேண்டியதுதானே
அடிக்க அடிக்கப்‌ பந்து அதிக விசைகொள்ளும்‌
அடிக்காயிரம்‌ பொன்‌ கொடுக்கவேண்டும்‌.
அடிக்கிற காற்றுக்கும்‌ பெய்கிற மழைக்கும்‌ பயப்படு.
அடிக்கிற காற்று வெயிலுக்குப்பயப்படுமா?
அடிக்கும்‌ ஒரு கை, அணைக்கும்‌ ஒரு கை.
அடிக்கும்‌ காற்றிலே எடுத்துத்‌ தூற்றவேண்டும்‌.
அடிக்கும்‌ பிடிக்கும்‌ சரி.
அடி செய்கிறது அண்ணன்‌ தம்பி செய்யார்‌.
அடிச்சட்டிக்குன்ளே கரணம்‌ போடலாமா?
அடித்த இடம்‌ கண்டுபிடித்தழ ஆறு மாசம்‌ செல்லும்‌.
அடித்த ஏருக்கும்‌ குடித்த கூழுக்கும்‌ சரி.
அடித்தது ஆட்டம்‌ பிடித்தது பெண்டு.
அடித்தாலும்‌ புருஷன்‌ புடைத்தாலும்‌ புருஷன்‌.
அடித்துப்‌ பழுத்ததும்‌ பழமா?
அடித்துப்‌ பால்‌ புகட்டுகிறதா?
அடித்து வளர்க்காத பிள்ளையும்‌ முறுக்கி வளர்க்காத மீசையும்‌ செவ்வையாகா.
அடித்து விட்டவன்‌ பின்னே போனாலும்‌, பிடித்து விட்டவன்‌ பின்னே போகலாகாது.
அடிநாக்கிலே நஞ்சும்‌ நுனிநாக்கிலே அமிர்தமுமா?
அடி நொச்சி நுனி ஆமணக்கா?
அடிப்பானேன்‌ பிடிப்பானேன்‌ அடக்குகிற வழியில்‌ அடக்குவோம்‌.
அடிமேல்‌ அடி அடித்தால்‌, அம்மியும்‌ நகரும்‌
அடிமை படைத்தால்‌ ஆள்வது கடன்‌.
அடியற்ற பனை போல்‌ விழுந்தான்‌.
அடியற்ற மரம்போல அலறிவிழுகிறது.
அடியற்றால்‌ நுனி விழாமலிருக்குமா?
அடியாத மாடு படியாது.
அடியிலுள்ளது நடுவுக்கும்‌ முடிக்கும்‌ உண்டு.
அடியும்‌ நுனியும்‌ தறித்த கட்டையபோல.
அடியும்‌ பட்டுப்‌ புளித்த மாங்காயா தின்னவேண்டும்‌?
அடி யென்று அழைக்கப்‌ பெண்டாட்டி, இல்லை, பிள்ளை எத்தனை பெண்‌ எத்தனை என்கிறான்‌.
அடியைப்பிடிடா பாரதபட்டா.
அடி யொட்டி யல்லா மேற்கரணம்‌ போடவேணும்‌?
அடிவானம்‌ கறுத்தால்‌, ஆண்டை வீடு வறுக்கும்‌.
அடிவண்டிக்‌ கடாப்போலே.
அடிவயிற்றிலே இடிவிழுந்தாற்போல.
அடுக்களைக்‌ இணற்றிலே அமுதம்‌ எழுந்தாற்போல.
அடுக்களைக்‌ குற்றம்‌ திருப்பால்‌ குழைந்தது, ஆமுடையான்‌ குற்றம்‌ பெண்ணாகப்‌ பிறந்தது.
அடுக்களைக்கு ஒரு பெண்ணும்‌ அம்பலத்துக்கு ஒரு ஆணும்‌ இருக்கிறதென்கிறான்‌.
அடுக்களைப்‌ பூனைபோல்‌ இடுக்கிலே ஒளிக்கிறது.
அடுக்களைப்‌ பெண்களுக்கு அழகுவேண்டுமா?
அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்குத்‌ தெரியுமா?
அடுக்குகிற வருத்தம்‌ உடைக்கிறதுக்குத்‌ தெரியாது.
அடுத்த கூரை வேவுங்கால்‌ தன்‌ கூரைக்கு மோசம்‌.
அடுத்ததன்‌ தன்மை ஆன்மாவாகும்‌.
அடுத்தது காட்டும்‌ பளிங்கதுபோல, (நெஞ்சில்‌) கடுத்‌தது காட்டும்‌ முகம்‌.
அடுத்தவரை அகல விடலாகாது.
அடுத்தவனைக்‌ கெடுக்கலாமா?
அடுத்தவன்‌ வாழ்வைப்‌ பகலே குடி கெடுப்பான்‌.
அடுத்த வீட்டுக்காரி பின்ளை பெற்றாளென்று அம்மிக்‌குழவி யெடுத்துக்‌ குத்தக்கொண்டாளாம்‌.