text
stringlengths
16
178
அதிருஷ்டவான் மண்ணைத்தொட்டாலும்‌ பொன்னாகும்‌.
அதிலே குறைச்சல்‌ இல்லை ஆட்டடா மணியை பூசாரி.
அதிலேயும்‌ இது புதுமை, அவள்‌ செத்தது மெத்த அருமை
அதின்‌ கையை எடுத்து அதின்‌ கண்ணிலே குத்துகிறது
அது அதற்கு ஓருகவலை, ஐயாவுக்கு எட்டுக்கவலை.
அதுவும்‌ போதாதென்று அழலாமா இனி?
அதுக்கு இட்ட காக மினக்கெட்டு அரிவாள்‌ மணைக்குச்‌ சுறுக்கிட்டதா?
அதெல்லாம்‌ உண்டிட்டு வாவென்பாள்
அதைக்‌ கைகழுவ வேண்டியதுதான்‌.
அதை நான்‌ செய்யாதேபோனால்‌ என்‌ மீசையை எடுத்துவிடுகிறேன்‌
அதைரிய முள்ளவனை அஞ்சாத வீரன்‌ என்றாற்போல.
அதை விட்டாலும்‌ கதியில்லை. அப்புறம்‌ போனாலும்‌ விதியில்லை
அஸ்த செவ்வானம்‌ அடைமழைக்கு லக்ஷணம்‌.
அத்தம்‌ மிகுதி அல்லவோ அம்பட்டன்‌ பெண்கேட்க வந்தது.
அத்தனையும்‌ நேர்ந்தான்‌ உப்பிட மறந்தாள்‌.
அத்தான்‌ செத்தால்‌ மயிராச்சு, கம்பளி மெத்தை நமக்காச்சு.
அத்திக்‌ காயைப்‌ பிட்டுப்‌ பார்த்தால்‌ அங்கும்‌ இங்கும்‌ பொள்ளல்‌.
அஸ்தி சகாந்தரம்‌ என்கிறது போலிருக்கிறது.
அத்தி பூத்தாற்‌ போல்‌ (இருக்கிறது).
அத்திப்‌ பழத்தைப்‌ பிட்டுப்பார்த்தால்‌ அத்தனையும்‌ புழு.
அத்திப்‌ பூவை ஆர்‌ அறிவார்கள்‌.
அத்திப்‌ பூவைக்‌ கண்டவர்கள்‌ உண்டா, ஆந்தைக்‌
குஞ்சைப்‌ பார்த்தவர்கள்‌ உண்டா?
அத்தி மரத்திலே தொத்திய கனி போல.
அஸ்தியிலே ஜ்வரம்‌.
அத்து மீறிப்‌ போனான்‌, பித்துக்‌ கொள்ளி ஆனான்‌.
அத்தைக்கு மீசை முளைத்தால்‌ சிற்றப்ப என்கலாம்‌.
அத்தைக்‌ கொழியப்‌ பித்தைக்‌ கில்லை ஒளவையாரிட்ட சாபத்‌ தீடு.
அத்தைத்தான்‌ சொல்வானேன்‌ வாயைத்தான்‌ வலிப்‌பானேன்‌ (நோவானேன்‌)?
அத்தை மகள்‌ அம்மான்‌ மகள்‌ சொந்தம்‌ போல.
அத்தை மகளானாலுஞ்‌ சும்மா வருமா?
அத்தோடே நிண்ணுது அலைச்சல்‌, கொட்டோடே நிண்ணுது குலைச்சல்‌.
அந்த ஊர்‌ மண்‌ மிதிக்கவே தன்னை மறந்து விட்டான்‌.
அந்தணர்க்குத்‌ துணை வேதம்‌.
அந்தணர்‌ மனையிற்‌ சந்தனம்‌ மணக்கும்‌.
அந்தப்‌ பருப்பு இங்கே வேகாது.
அந்தம்‌ சிந்தி அழகு ஒழுகுகிறது.
அந்தரத்தில்‌ கோல்‌ எறிந்த அந்தகனைப்‌ போல.
அந்தலை கெட்டுச்‌ சிந்தலை மாறிக்‌ இடக்கு.
அந்த வெட்க்க்கேட்டை (வெட்கத்தை) ஆரோடே சொல்லுகிறது?
அந்தி ஈசல்‌ பூத்தால்‌ அடைமழை அதிகரிக்கும்‌.
அந்திப்‌ பீ சந்திப்‌ மீ பேலாதான்‌ வாழ்க்கை சாமப்‌ பீ தட்டி எழுப்பும்‌.
அந்திமழை அழுதாலும்‌ விடாது.
அந்துக்கண்ணிக்கு அழுதாலும்‌ வாரானாம்‌ ஆமுடையான்‌.
அந்தாது நெல்லானேன்‌.
அபத்த பஞ்சாங்கத்துக்கு அறுபது நாழியும்‌ தியாச்சியம்‌.
அப்பச்சி குதம்பையைச்‌ சூப்பப்‌ பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறது போல.
அப்பச்சி கோவணத்தைப்‌ பருந்துகொண்டோடுகிறது, பிள்ளை வீரவாளிப்‌ பட்டுக்கு அழுகிறது.
அப்பத்தை எப்படிச்‌ சுட்டாளோ, தித்திப்பை எப்படி நுழைத்தாளோ?
அப்பம்‌ என்றாற்‌ பிட்டுக்‌ காட்ட வேண்டுமா?
அப்பம்‌ சுட்டது சட்டியில்‌, அவல்‌ இடித்தது திட்டையில்‌.
அப்பம்‌ சுட்டது திட்டையிலே, அவல்‌ இடித்தது சட்டியிலே.
அப்பனோடே போகிறவளுக்கு அண்ணன்‌ ஏது தம்பி ஏது?
அப்பன்‌ அருமை அப்பன்‌ மாண்டால்‌ தெரியும்‌, உப்பின்‌ அருமை உப்பு இல்லாவிட்டால்‌ தெரியும்‌.
அப்பன்‌ செத்தும்‌ தம்பிக்‌ கழுகிறதா?
அப்பன்‌ சோற்றுக்‌ கழுகிறான்‌, பின்ளை கும்பகோணத்தில்‌ கோதானம்‌ செய்கிறான்‌.
அப்பன்‌ பெரியவன்‌, சிற்றப்பா, சுருட்டுக்கு நெருப்புக்‌ கொண்டுவா.
அப்பன்‌ அப்பா என்றால்‌ ரங்கா ரங்கா என்பான்‌.
அப்பா என்றால்‌ உச்சி குளிருமா?
அப்பாஜி உப்பில்லை.
அப்பிடாவு மில்லை வெட்டுக்‌ கத்தியு மில்லை.
அப்பியாசம்‌ குலவிருது.
அப்பியாசம்‌ கூசாவித்தை.
அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
அமரபட்சம்‌ பூர்வபட்சம்‌, கிருஷ்ண பட்சம்‌ சுக்கிலபட்சம்‌.
அமரிக்கை ஆயிரம்‌ பெறும்‌.
அமர்த்தனுக்கும்‌ காணிவேண்டாம்‌ சமர்த்தனுக்கும்‌ காணிவேண்டாம்‌.
அமாவாசைக்‌ கருக்கலிலே பெருச்சாளி போனதெல்லாம்‌ வழி.
அமாவாசைச்‌ சோறு சும்மா அகப்படுமா?
அமாவாசைப்‌ பருக்கை என்றைக்கும்‌ அகப்படுமா?
அமிஞ்சி உண்டோ, குப்புநாயக்கரே.
அமிஞ்சிக்கு உழுதால்‌ சரியாய்‌ விளையுமா?
அமுக்கொற்‌ போலிருந்து அரணை அழிப்பான்‌.
அமுதம்‌ உண்கிற வாயால்‌ விஷம்‌ உண்பார்களா?
அமுதுபடி பூச்சியம்‌, ஆடம்பரம்‌ அதிகம்‌.
அமைச்சனில்லாத அரசும்‌, ஆமுடையானில்லாத ஆரிழையும்‌.
அம்பட்டக்‌ கிருதும்‌, வண்ணார ஓயிலும்‌.
அம்பட்டனை மந்திரித்‌ தனத்துக்கு வைத்துக்‌ கொண்டதுபோல.
அம்பட்டன்‌ குப்பையைக்‌ கிளறினால்‌ மயிர்‌ மயிராய்ப்‌ புறப்படும்‌.
அம்பட்டன்‌ கைக்‌ கண்ணாடி போல
அம்பட்டன்‌ பல்லக்‌ கேறினது போல.
அம்பட்டன்‌ பிள்ளைக்கு மயிர்‌ அருமையா?
அம்பட்டன்‌ மாப்பிள்ளைக்கு மீசை ஒதுக்கினது போல
அம்பலக்‌ கழுதை அம்பலத்திற்‌ கிடந்தாலென்ன, அடுத்த திருமாளிகையிற்‌ (திருமாளத்திற்‌) கிடந்தாலென்ன?
அம்பலத்தில்‌ ஏறும்‌ பேச்சை அடக்கம்‌ பண்ணப்‌ பார்க்கிறான்‌.
அம்பலத்தில்‌ கட்டுச்‌ சோறு அவிழ்த்தாற்‌ போல.
அம்பலத்தில்‌ பொதி அவிழ்க்கலாகாது.
அம்பலம்‌ வேகுது.
அம்பாத்தூர்‌ வேளாண்மை யானைகட்டத்‌ தான்‌ வானமட்டும்‌ போர்‌, ஆறுகொண்டது பாதி தூறு கொண்டது பாதி.
அம்பாணி தைத்தது போலப்‌ பேசுறான்‌.
அம்பா பாக்கியம்‌ சம்பா விளைந்தது, பாவிபாக்கியம்‌ பதராய்‌ விளைந்தது.
அம்பிகொண்டு ஆறுகடப்போர்‌ நம்பிக்கொண்டு நரிவால்‌ கொள்ளுவார்களா?
அம்மண தேசத்தில்‌ கோவணங்‌ கட்டினவன்‌ பைத்தியக்காரன்‌.
அம்மணமும்‌ இன்னலும்‌ ஆயுசுபரியந்தமா?
அம்மா குதிர்போல, ஐயா கதிர்‌ போல.
அம்ம கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒன்றா?
அம்மா தெருளுவதற்கு முன்னே ஐயா உருளுவார்‌.
அம்மாளுக்குத்‌ தமிழ்‌ தெரியாது, ஐயாவுக்கு வடுகு தெரியாது.
அம்மானும்‌ மருமகனும்‌ ஒரு வீட்டுக்கு ஆள் அடிமை.
அம்மான்‌ மகளுக்கு முறையா?