text
stringlengths
57
183k
கோவா கடற்கரையில்.. கோளாரான பார்வை வீசி... செல்ஃபி..! - பதற வைக்கும் வாணி போஜன்..! - Tamizhakam\nகோவா கடற்கரையில்.. கோளாரான பார்வை வீசி… செல்ஃபி..! – பதற வைக்கும் வாணி போஜன்..!\nJanuary 1, 2022 Tamizhakam Tamil Cinema News\nசன் தொலைக் காட்சிகளில் பல சீரியல்கள் ஒலி பரப்பப்பட்டு வருகின்றன, இந்த சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் தெய்வமகள் சீரியல் ஒன்று, இதில் சத்தியா என்ற கதாபாத்திரம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வாணி போஜன் ( Vani Bhojan ).\nஇந்த சீரியல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதுமட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார், தெய்வமகள் சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.\nசின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்களின் வரிசையில் தற்போது சேர்ந்துள்ளார் வாணி போஜன், இவர் தொடர்களில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே பல வாய்ப்புகள் வந்தன.\nஆனால் சரியான வாய்ப்புக்காகவும் கதைக்காகவும் காத்துஇருந்தார்.பின் சீரியல்கள் முடிந்ததும் தெலுங்கு படம் ஒன்றில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.\nஇதை சரியாக பயன்படுத்திக் கொண்ட வாணி, மிக்கு மாத்ரமே செப்பிதா என்ற படத்தில் நடித்தார்.சமீப காலமாக மென்மையான கவர்ச்சி காட்டி வரும் அம்மணி. கோவா கடற்கரையில் ஒரு மார்க்கமான பார்வையை வீசி எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சில இணையத்தை ஆட்டிப்படைத்தது வருகின்றது.\nPrevious Post:“எல்லோரும் பொம்பள மாதிரி உக்கார சொல்லுவாங்க.. ஆனா.. நான் இப்படித்தான் உக்காருவேன்..” – அலற விடும் சம்யுக்தா மேனன்..!\nNext Post:மேலாடையை கழட்டி விட்டு.. பொதுவெளியில் ரொமான்ஸ்.. நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்டம்..!
Ananda Vikatan - 11 April 2018 - வீரயுக நாயகன் வேள்பாரி - 77 | Vel Paari - Historical Hero - Ananda Vikatan - Vikatan\nமறுநாள் பொழுது விடிந்தது. நக்கவாரத் தீவிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் ஆயிமலையின் உச்சியிலிருந்து இருக்கன்குன்றையே பார்த்தபடி இருந்தனர். கடந்த சில நாள்களாக, குன்றின் மேற்குகையைச் சுற்றியே தோகைநாய்கள் ஊளையிட்டுக்கொண்டிருந்தன. நேற்று நள்ளிரவுக்குப் பிறகு ஊளைச்சத்தம் சற்றே அதிகமாகியது. ஆனால், அதிகாலை தொடங்கி இப்போது வரை அந்தச் சத்தம் பிரிந்து காடெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. தீவுமனிதர்கள் குழம்பிப்போய் இருந்தனர்.\nசெய்தி உதியஞ்சேரலுக்குச் சொல்லப்பட்டவுடன் அவனும், அமைச்சன் நாகரையரும் ஆயிமலைக்கு மேலேறி வந்தனர். குழப்பத்தில் நின்றிருந்த தீவுமனிதர்களிடம், ``என்ன நிலைமை?” என்று கேட்டான் அமைச்சன்.\n``எதிரிகள் தோகைநாய்களை ஏதோ செய்துவிட்டார்கள். அவை அனைத்தும் காடுகளுக்குள் சிதறி ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றைவிடக் கொடிய வேட்டை விலங்கு ஒன்றை ஏவி விட்டுள்ளனர். அதனால்தான் அவை இப்படிச் சிதறி ஓடுகின்றன. இனி அவற்றால் பலன் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்க முடியாது.”\nபதில் கேட்டு உதியஞ்சேரல் உறைந்து நின்றான். ``அப்படியென்றால், எதிரிகள் குகைகளுக்குள் இருக்கும் குதிரைகளை வெளியில் கொண்டுவந்துவிடுவார்களா? முழு வேகத்தோடு அவர்களின் தாக்குதல் தொடங்கிவிடுமா?”\nதீவுமனிதர்கள் மறுமொழியின்றி நின்றனர்.\n``எஃகல்மாடன் பறம்புக்குள் நுழைந்து ஐந்து நாள்கள் ஆகிவிட்டன. நமது திட்டப்படி வலதுபுறக் கணவாயின் வழியாகத் துடும்பனின் தலைமையிலான படை வந்து சேரும் என்ற நம்பிக்கையில் போய்க்கொண்டிருக்கிறான்.”\nநாகரையரின் வார்த்தை காதில் விழுந்துகொண்டிருந்தது. ஆனால், அதைக் கவனிக்கும் நிலையில் உதியஞ்சேரல் இல்லை. பறம்பின் உட்காடுகளுக்குள் தனித்துவிடப்பட்ட எஃகல்மாடனின் படை என்னவாகப்போகிறது என்பது அவனது மனக்கண்ணில் தெரிந்துகொண்டிருந்தது.\nஇரண்டாம் நாள் மாலை நேரம் நெருங்கியபோது குளம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது சோழனின் யானைப்படை. அதன் தளபதி அரிஞ்சயன் அளவற்ற மகிழ்வில் இருந்தான். வட்டாற்றில் திரும்பியதிலிருந்து யானைகளுக்குப் போதுமான நீர் கிடைக்கவில்லை. நிலைமையை எப்படிச் சமாளிக்கப்போகிறோம் எனத் தெரியாமல் திணறிக்கொண்டிருந்தபோதுதான் குளம் இருப்பது பற்றிய செய்தி வந்தது. அதன் பிறகு நெடுங்காடர்கள் தளபதி சிவியன் நேரில் போய்ப் பார்த்தான். குளத்துநீரில் நஞ்சேதும் இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகுதான், அதை நோக்கி யானைகளைச் செலுத்த அரிஞ்சயன் அனுமதியளித்தான்.\nஇந்தப் படையெடுப்பே யானைப்படையை மையப்படுத்தியதுதான். அடர்காடுகளில் காட்டுமனிதர்களை எதிர்கொள்ள, யானைப்படையை மையப்படுத்திய போர் உத்திதான் வெற்றியைத் தேடித்தரும். அதுவும் அரிஞ்சயன் போன்ற அனுபவமேறியவர்களின்கீழ் இயங்கும் யானைப்படை, வெற்றியை எளிதில் ஈட்டும்.\nசோழர்களின் படைத்தொகுப்பில் இருந்த மொத்த யானைகளில் சரிபாதிக்கும் குறைவான யானைகளைத்தான் இந்தப் படையெடுப்புக்குத் தேர்வுசெய்தான் அரிஞ்சயன். சிறந்ததொரு போர்யானை, தந்தங்களைக்கொண்டு பதினான்கு முறைகளில் தாக்கும் பயிற்சியைப் பெற்றிருக்கும்.\nமுகத்துக்கு நேராகத் தந்தத்தைக் குத்திச் செருகுவது, குறுக்காகக் கொடுத்துக் குத்தித் தூக்குவது, இரு பக்கங்களிலும் இரு தந்தங்களால் குத்துவது, எதிர் யானையின் தந்தவட்ட உதடு நோக்கிக் குத்துவது, பக்கவாட்டில் சாய்த்துக் குத்துவது, பக்கங்களில் நேராகக் குத்துவது, கண்ணிமைக்கும் நேரத்தில் துதிக்கையின் நடுவில் குத்தித் தூக்குவது, எதிர் யானையின் தலையைக் குறுக்கே பிடித்து ஒரு தந்தத்தால் குத்துவது, கோபத்தோடு எதிர் யானையின் திட்டாணியில் அடித்திழுத்து தந்தத்தைச் செருகுவது, உடலைப் பின்சுற்றிப் பின்பாய்ந்து குத்துவது ஆகியன உள்ளிட்ட பதினான்கு வகையான தந்தத் தாக்குதலில் தேர்ந்த யானைகளை மட்டுமே இந்தப் படையெடுப்பில் பங்கேற்கச் செய்தான் அரிஞ்சயன்.\n`அவ்வளவு சிறந்த போர்ப் பயிற்சியுடைய யானைகளை, கொடும்வெக்கையில் போதிய நீரின்றித் தொடர்ந்து நடக்கவைத்துக்கொண்டிருக்கிறோமே!’ என்று கவலைகொண்டிருந்தவன், குளம் கண்டு கவலை நீங்கினான். முதலில், ஐந்து வகைமையர்களின் தலைமையிலுள்ள ஐம்பது யானைகளை நீர் அருந்த அனுப்பினான். நீர் உறிஞ்சும் ஓசையிலே அவற்றின் தாகத்தை அறிய முடிந்தது. அதேபோன்று ஐந்து ஐந்து வகைமையரின் தலைமையில் குளம் நோக்கி ஐம்பது ஐம்பது யானைகளாக அனுப்பினான் அரிஞ்சயன்.\nபொழுது மங்கி இருள் கூடும் வரை யானைகள் அணிவகுத்துப் போய் நீர் அருந்தித் திரும்பிக்கொண்டிருந்தன. ஏற்கெனவே வகுக்கப்பட்ட ஒழுங்கின் அடிப்படையில் அவை வட்டாற்றில் நிலைகொண்டன.\nநான்கு காதத்தொலைவுக்கு நீண்டு கிடக்கும் இந்தப் பெரும்படையின் இரு பக்கங்களும் மலைக்குமேல் பறம்புவீரர்கள் தாக்குதலுக்கு ஆயத்தநிலையில் இருந்தனர். பறம்பின் வடதிசை ஊர்கள் அறுபத்தேழிலிருந்தும் வீரர்கள் திரட்டப்பட்டுவிட்டனர். அவர்களுக்கான ஆயுதங்களும் வந்துசேர்ந்துவிட்டன. ஆற்றின் இருபுறங்களும் சரியான இடைவெளியில் தாக்குதலுக்கான துல்லியமான உத்தி வகுக்கப்பட்டிருந்தது. இவ்வளவு பெருந்தாக்குதலை இதுவரை பறம்புமக்கள் நடத்தியதில்லை. இரவாதன், இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான்; பாரியின் உத்தரவு கிடைத்த கணம் வட்டாற்றில் பெருக்கெடுக்கப்போகும் குருதி வெள்ளத்தைக் காணத் துடித்துக்கொண்டிருந்தான்.\nபிட்டனின் குழப்பம், இந்தக் கணம் வரை நீங்கவில்லை. `சோழப்படையின் கரையோரப் பகுதிகளில் நிற்பவர்கள் நெடுங்காடர்கள் என்பது பாரிக்கும் பிட்டனுக்கும் மட்டுமே தெரியும். நாம் எறியும் அம்பும் ஈட்டியும் சரிபாதிதான் அவர்களைக் கடந்துபோய்த் தாக்கக்கூடியதாக இருக்கும். அப்படியிருந்தும் தாக்குதலுக்குப் பாரி ஆயத்தமாகியுள்ளான் என்றால், தெளிவான உத்தியை வகுத்துவிட்டான் எனப் பொருள். அந்த உத்தி, குளத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. என்ன அது?’ என்று விடை தெரியாத கேள்வியோடு உத்தரவுக்காகக் காத்து நின்றான் பிட்டன். ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மரங்கள் தம்முடைய கிளைகளில் எண்ணிலடங்கா வீரர்களைச் சுமந்தபடி சிலிர்த்து நின்றன.\nஆறாவது முறை ஐந்து வகைமையரின் தலைமையில் ஐம்பது யானைகளை அனுப்பியபோது, குளத்துநீர் ஏறக்குறைய வற்றி, தரை தொட்டுக்கிடந்தது. ஆனாலும் யானைகளின் துதிக்கைகள் உறிஞ்சியெடுத்தன. எல்லா யானைகளும் நீர் அருந்தி முடிக்கும் வரை அரிஞ்சயன் குளக்கரையிலே நின்றிருந்தான். கடைசி வரிசையில் வந்த யானைகளும் குளம் விட்டு அகன்றன. அரிஞ்சயன், அளவற்ற மகிழ்வடைந்தான். இனி பிரச்னையேதும் இருக்காது. சமாளித்துவிட முடியும் என்ற நம்பிக்கை உறுதியானவுடன் அதை வேந்தனிடம் தெரிவிக்க, குதிரையில் விரைந்தான்.\nபடை அணிவகுப்பில் யானைப்படையைக் கடந்து காலாட்படை தொடங்கும் இடத்தில் செங்கனச்சோழனுக்கான கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. ஆற்றின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் கூடாரத்தைக் கவசவீரர்கள் காத்து நின்றனர். உள்ளே வேந்தனுக்கு உணவு பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது. கூடாரம் வந்த அரிஞ்சயன், உணவு முடியட்டும் எனக் காத்து நின்றான்.\nஅணிவரிசையின் முன்புறம் நின்றிருந்த யானைகளிடமிருந்து சற்றே வேறுபட்ட ஒலி எழுவதைக் கேட்க முடிந்தது. `போதுமான அளவு நீர் குடித்த தெளிச்சியில் எழுப்பப்படும் ஒலியிது’ என எண்ணியபடி வேந்தனுக்காகக் காத்திருந்தான் அரிஞ்சயன். இதைவிடப் பேரொலிகொண்ட யானைப் பிளிறலை எதிர்பார்த்து மலையின் மேல் காத்திருந்தான் பாரி. அவனைச் சுற்றி நின்றிருந்த பன்னிரு வீரர்களும் அவன் சொல்லப்போகும் உத்தரவை, பிட்டனின் தலைமையிலான இடதுபுறப் படைக்கும் இரவாதனின் தலைமையிலான வலதுபுறப் படைக்கும் தெரிவிக்கக் காத்துக்கொண்டிருந்தனர்.\nநிலவற்ற வானில் இருள் அப்பிக்கிடக்கும் இந்தப் பொழுதில், ஒலியின் மூலம் மட்டுமே ஆற்றின் எதிர்த்திசையில் இருக்கும் இரவாதனுக்கு மறைகுறிப்பைக் கடத்த முடியும். பிட்டனும் பாரியும் ஒரே திசையில்தான் மேலும் கீழும் நிற்கின்றனர். எனவே, இவர்களுக்கு ஓசையின் மூலம் மறை குறிப்பைக் கடத்திவிடலாம். எல்லா ஏற்பாடுகளும் ஆயத்தநிலையில் இருந்தன. பாரியோ, வட்டாற்றில் நிறுத்தப்பட்டிருக்கும் யானைப்படையின் பிளிறல் ஓசையை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.\nஇவ்வளவு சிறந்ததொரு வாய்ப்பு கிடைக்கும் எனப் பாரி எதிர்பார்க்கவில்லை. இன்னும் சில நாள் பயணத்துக்குப் பிறகுதான் அவன் தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தான். சிறுகானத்தைக் கடந்து உப்பறைக்குப் போகும்வழி மிகக் குறுகிய கணவாய் அமைப்பைக்கொண்டது. அந்த இடம், நெடுங்காடர்களால் தடுப்பரணையோ, வலைப்பின்னலையோ உருவாக்க முடியாது. முழுமையான பாறைப் பிளவு அது. பிளவின் மேலிருந்து தாக்குதல் தொடுத்தால் படையின் முன்புற அணியை மிகக் குறுகிய நேரத்தில் முழுமுற்றாக அழிக்க முடியும். எதிர்பாராத அந்தத் தாக்குதல் அவர்களின் கட்டுக்கோப்பை எளிதில் சிதறடிக்கலாம்.\nநெடுங்காடர்களுக்குத்தான் காடு பற்றிய அச்சமிருக்காது. ஆனால், சோழப்படையினர் அனைவருக்கும் காட்டில் பார்க்கும் ஒவ்வொரு காட்சியும் அச்சத்தை உருவாக்கும். `எங்கெங்குமிருந்து மேலெழும் அம்புகளாலும் ஓசைகளாலும் முழக்கங்களாலும் அவர்களின் உறுதியை முற்றிலுமாகச் சிதைக்கலாம். அதன் பிறகு பறம்புவீரர்கள் சூறையாடலைத் தொடங்கலாம்’ என்றுதான் திட்டமிட்டிருந்தான் பாரி. ஆனால், பிட்டன் நீர்வற்றாக் குளம் ஒன்று இருப்பதைப் பற்றிய செய்தியைச் சொன்னவுடன் தனது திட்டத்தை மாற்றிக்கொண்டான்.\nநீர்ப்பசை இருக்கும் பாறைப் பிளவுகளிலும் மரச் செதில்களிலும் சங்கு அட்டைகள் இருக்கும். மற்ற அட்டைப்பூச்சிகளுக்கு, குருதியை உறிஞ்சும் வாய்ப்பகுதி ஒன்றுதான் உண்டு. ஆனால், சங்கு அட்டைப்பூசியானது விரிசங்கு வடிவிலானது. அதன் எல்லா முனைகளிலும் குருதி உறிஞ்சும் வாய்கள் உண்டு. மிக அரிதான உயிரினமான இது, மறையாற்றின் பகுதிகளில் உள்ள மர இடுக்குகளிலும் பாறை இடுக்குகளிலும் அதிகம் இருக்கும். அதனாலேயே மக்கள் அந்தக் காட்டுக்குள் போக மாட்டார்கள். ஆனால், இப்போது சங்கு அட்டைகள்தான் மிக அதிகமாகத் தேவைப்பட்டன.\nகுளம் பற்றிய செய்தியை அறிந்தவுடன் மறையாற்றின் பகுதியில் இருக்கும் சங்கு அட்டையைச் சேகரிக்க, கட்டையர்களுக்குக் கமுக்கமாக உத்தரவிட்டான் பாரி. ஆறு ஊர்க் கட்டையர்களும் மறையாற்றின் அடர்காட்டுக்குள் இறங்கினர். எண்ணற்ற சுரைக்குடுக்கையில் சங்கு அட்டையை நாள் முழுவதும் சேகரித்தனர். மருத்துவர்கள் தந்த செவ்வெண்ணெயைக் கைகளில் தேய்த்துக்கொண்டுதான் அவற்றைப் பிடித்தனர். அப்படியும் பிடித்தவர்களின் கைகள் எங்கும் குருதி கொட்டியபடியே இருந்தது.\nஅன்று இரவே குடுவையில் இருந்த சங்கு அட்டைகள் முழுவதையும் அந்தக் குளத்துக்குப் போய்ச் சேர்த்தனர். குளம் முழுக்க, எல்லாப் பகுதிகளிலும் பரவுமாறு சங்கு அட்டைகளைக் கொட்டிவிட்டுச் சுரக்குடுக்கையை எடுத்துவந்துவிட்டனர். சங்கு அட்டைகள் நீரின் அடிவாரப் பாறைகளிலும் மண்ணோடும் நீர்மீது மிதக்கும் செத்தைகளிலும் அப்பிக்கிடந்தன. சோழர்களின் தூசிப்படை மருத்துவர்களும் குறுங்காடர்களும் குளத்துநீரில் நஞ்சு கலக்கப்பட்டுள்ளதா எனச் சோதித்துப் பார்த்துவிட்டு, ``நஞ்சு ஏதும் கலக்கவில்லை. யானைகள் நீர் அருந்தலாம்’’ என்று கூறினர்.\nஅதைத் தொடர்ந்து யானைகள் குளத்தடிக்கு வந்து நீள்துதிக்கையால் நீரை உறிஞ்சின. நீரின் மேற்புறமும் அடிவாரத்திலும் இருந்த சங்கு அட்டைகள், உறிஞ்சப்படும் நீரினூடே துதிக்கைக்குள் போய்விட்டன. முதலில் வந்து நீர் குடித்த யானைகளின் துதிக்கைக்குள் ஓரிரு அட்டைகள் உள்ளே போயின. அடுத்தடுத்து யானைகள் வந்து நீரை உறிஞ்சியதும் அடிவாரத்தில் ஒட்டிக்கிடந்த அட்டைகள் கணக்கில்லாத எண்ணிக்கையில் துதிக்கைகளுக்குள் போயின.\nஉள்ளே போய்த் துதிக்கையின் சதைக்குள் ஒட்டிய சங்கு அட்டைகள், குருதியை உறிஞ்சத் தொடங்கியபோதுதான் விளைவு வெளிப்படத் தொடங்கியது. கூடாரத்துக்குள் உணவு உண்டு முடித்த செங்கனச்சோழனிடம் ``யானைகள் அனைத்தும் நன்றாக நீர் அருந்திவிட்டன. இனி நமக்குக் கவலைவேண்டாம்’’ என்று அரிஞ்சயன் சொல்லிக் கொண்டிருந்தபோது யானைகளின் பிளிறல் தொடங்கியது. ஒன்று மாற்றி ஒன்றாக இருளின் திசைக்குள்ளிருந்து பிளிறல் ஓசை மேலேறி வந்தது. அரிஞ்சயன் கூடாரத்துக்குள்ளிருந்து வேகமாக வெளியில் வந்தான். ஒவ்வொரு சங்கு அட்டைக்கும் ஆறு முனைகளில் ஆறு வாய்ப்பகுதிகள் உண்டு. ஆறும் ஒருசேரக் குருதியை உறிஞ்சும்போது அந்த இடத்தில் சதையே பிய்த்துக்கொண்டு வருவதுபோல இருந்தது. அதுவும் துதிக்கைக்குள் இந்தக் குடைச்சல் தொடங்கியதும் யானைகள் தலையை மறுத்து மறுத்து ஆட்டி, துதிக்கையை இங்குமங்குமாக வீசிச் சுழற்றின.\nசிறுசிறு சலசலப்புகள் யானைப்படைக்குள் உருவாகத் தொடங்கியபோது பாகன்கள் எல்லோரும் யானைகளை அமைதிப் படுத்தி, நின்ற நிலையிலிருந்து உட்காரும் நிலைக்கு அமர்த்திவைக்க முயன்றனர். அப்போதுதான் இடது மூலையில் இருந்த யானை ஒன்று பெரும்பிளிறலோடு துதிக்கையைத் தூக்கி இரு பக்கங்களும் அடித்தது. பக்கத்தில் இருந்த யானைகள் மிரண்டு விலகின. உடனே அதன் பாகன் அதன் அருகே சென்று அதை அடக்க முற்பட்டபோது சற்றும் எதிர்பாராமல் சுழற்றி வீசப்பட்டான்.\nயானைகளுக்கு என்ன நடக்கிறது என்ற கவனம் சில கணம்தான் இருந்தது. அதற்குள் பிளிறலின் ஓசை அங்குமிங்குமாகப் பல இடங் களிலிருந்து மேலெழுந்தது. யாருக்கும் எதுவும் புரியவில்லை. பாகன்கள் எல்லோரும் யானைகளின் மீதேறி அவற்றைக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தனர். அங்குசத்தால் அடித்தும் தலையில் ஊன்றிக் குத்தியும் மத்தகத்தில் வைத்து இழுத்தும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றனர். ஆனால், அவையெல்லாம் சிறிது நேரம்தான் நடந்தன.\nவேந்தனின் கூடாரத்திலிருந்து படையின் முன்வரிசை நோக்கிக் குதிரையில் விரைந்து கொண்டி ருந்தான் அரிஞ்சயன். ஏதோ ஒரு யானைக்கு மதம்பிடித்துவிட்டது என்றுதான் அவன் நினைத்தான். ``அந்த மதயானையை அப்புறப் படுத்துங்கள். முடியவில்லை என்றால், போர்வாள் கொண்டும் தந்த ஈட்டிகொண்டும் குத்திச் சரியுங்கள்” என்று ஓசையெழுப்பிய படி விரைந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் இருளுக்குள்ளிருந்து வீசப்பட்ட பாகன் ஒருவன் அரிஞ்சயனின் குதிரைமீது வந்து விழுந்த வேகத்தில் அடியோடு சரிந்தான் அரிஞ்சயன்.\nயானைகள் உள்மூக்கில் ஏற்படும் அரிப்பும் எரிச்சலும் தாள முடியாமல் துதிக்கையை முன்னும் பின்னுமாக வெறிகொண்டு வீசித் தாக்கத் தொடங்கிய கணத்தில் கட்டுக்கோப்புகள் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. நிலைமையின் விபரீதத்தை உணரும் முன்பே நூற்றுக்கணக்கான யானைப்பாகன்கள் அடித்து, மிதித்து, நசுக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். வீரமுண்ட வாத்தியமும் பேரிகையும் முழங்கி நிலைமையைக் கட்டுப்படுத்த, படைக்காவல்வீரர்கள் சிலர் முயன்றனர். ஆனால், யானைகளின் பிளிறலுக்கு நடுவே இந்தக் கருவிகளின் ஓசையேதும் மேலேறவில்லை. கீழே விழுந்த அரிஞ்சயன் எழுந்தபோது முன்புறப் படையின் கட்டுக்கோப்பு மொத்தமும் சிதைந்திருந்தது.\nஎன்ன நடந்தது என்பதைச் சிந்திக்க கணநேரம்கூட யாருக்கும் இல்லை. மூன்று தளகர்த்தர்தர்களின் உத்தரவின் கீழிருக்கும் முந்நூறு யானை களைக்கொண்ட இந்தப் படையில், ஒரே நேரத்தில் முப்பது யானைகள் கட்டுப்பாட்டை இழந்தாலே மொத்தப் படையும் சிதறிப்போய்விடும். ஆனால், இப்போதோ எல்லா யானைகளும் கட்டுப்பாட்டை இழந்துவிட்டன. துதிக்கையைத் தூக்கி வீசி அடித்துத் தாக்கும் அதன் வேகத்தில்தான் வேறுபாடு இருந்தது. சங்கு அட்டைகள் ஒன்றோ இரண்டோ யானைகள் சிலவற்றின் துதிக்கைக்குள் ஏறி அடிப்பகுதிக்குப் போகாமல் முன்பகுதியிலேயே இருந்தன. அந்த யானைகள் மட்டுமே சற்று கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள முயன்றன. மற்ற யானைகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பது யாருக்கும் புரியவில்லை. காடே அதிர்வதுபோலிருந்த பிளிறல் ஓசையால் பின்புறம் நின்றிருந்த காலாட்படை வீரர்கள் நடுங்கினர். கூடாரத்தில் இருந்த வேந்தனைப் பாதுகாக்க, தக்க ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினர். நெடுங்காடர்களுக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. அவர்கள் தலைவன் சிவியன் காலாட்படையின் பின்பகுதியில் நின்றுகொண்டிருந்தான். நிலைமையை அறிந்துவர முன்னோக்கிச் செல்ல முயலும்போது பெரும்கூச்சலோடு படையெங்கும் குழப்பம் பரவியிருந்தது.\nசெங்கனச்சோழனைக் கூடாரத்திலிருந்து வெளியேற்றி, வேந்தனுக்குரிய யானையின் மீதேற்ற முயன்றுகொண்டிருந்தான் உறையன். அப்போது அந்த இடத்துக்கு வந்த காலாட்படைத் தளபதி கிழானடிவானவன், வேந்தனை யானையின் மீதேற்றிப் பின்புறம் கொண்டுசெல்வதை ஏற்கவில்லை. ``இதைப் பார்க்கும் காலாட்படையின் அனைத்து வீரர்களும் நம்பிக்கை இழப்பர். கணப்பொழுதுக்குள் எல்லோருக்குள்ளும் அச்சம் பரவிவிடும். எனவே, குதிரையின் மீதேற்றிப் பின்புறம் விரைவோம்” என்றான்.\nஆனால் உறையனோ, ``யானைப்படையின் முன்பகுதியில் ஏதோ கடினமான பிரச்னை உருவாகியுள்ளது. சில யானைகளைப் பாகன்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என நினைக்கிறேன். இந்நிலையில், வேந்தன் குதிரையில் பயணிப்பது நல்லதன்று. வெகுண்டெழும் ஒற்றை யானையின் பிளிறல்கூடக் குதிரையை நிலைகுலையச் செய்துவிடும். எனவே, வேந்தனுக்குரிய யானையின் மீது ஏற்றுங்கள்” என்று வாதிட்டான்.\nவேந்தனின் யானை வீரர்களுக்குத் தோண்டப்படும் கிணற்றில் நீர் அருந்தியிருந்தது. எனவே, இதற்குப் பிரச்னை ஏதுமில்லை. பாகன் அதைக் கொண்டுவந்து கூடாரத்தின் ஓரம் நிறுத்தியிருந்தான். ஆனால், உள்ளே உறையனும் கிழானடிவானவனும் கடுமையாக உரையாடிக் கொண்டிருந்தனர்.\nஅந்த உரையாடல்களை அருகில் இருந்தவர்கூடக் கேட்க முடியாத நிலையில் பிளிறலின் ஓசை பன்மடங்கு அதிகரித்துக்கொண்டிருந்தது. படையின் முன்வரிசையில் இருந்த யானைகள் பாகன்களைச் சுழற்றி எறிந்தபடி வட்டாற்றின் முன்புறம் நோக்கி ஓடத் தொடங்கின.\nஇந்தக் கணத்துக்காகவே காத்திருந்த பாரி, தனது உத்தரவைப் பிறப்பித்தான். குளக்கரையெங்கும் பதுங்கி இருந்த பறம்புவீரர்கள் ஆற்றின் முன்பகுதியை நோக்கி எரியம்புகளை வீசத் தொடங்கினர். இருளைக் கிழித்தபடி ஆற்றின் இரு திசைகளிலிருந்தும் மணலுக்குள் எரியம்புகள் வந்து செருகின. முன்புறமாக ஓடத் தொடங்கிய யானைகள் நெருப்புமழைபோல் விடாதுபொழியும் எரியம்புகளைக் கண்டு, வந்த திசை நோக்கிப் பின்புறமாகத் திரும்பின.\nபிளிறலும் அலறலும் இருளை உலுக்கின. வெறிகொண்ட யானைகள் வட்டாற்றில் வந்த திசை நோக்கித் திரும்பி முறுக்கியபடி மணல் நெளிய ஓடிவந்தன. யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. வெறி கொண்டு முன்னேறும் யானைகளால் மொத்த யானைப் படையும் சிதறத் தொடங்கியது. ஆவேசம்கொண்ட யானைகள், பின்னிலையில் நின்ற காலாட் படைக்குள் புகுந்தன. அதகளம் தொடங்கியது. சங்கு அட்டைகள் உச்சி மூக்கில் குருதியை உறிஞ்சிய ஒவ்வொரு முறையும் துதிக்கையை ஓராயிரம் முறை சுழற்றியடித்தன யானைகள். தந்தங்களின் கூர்முனை இரு பக்கங்களிலும் குத்திக் கிழித்தன.\nஇருளெங்கும் பேரோலம் மேலெழுந்தபோது வட்டாற்றின் மணலெங்கும் குருதி ஊற்றெனப் பீச்சியடிக்கத் தொடங்கியது. படைவீரர்கள் செய்வதறியாது எங்கும் சிதறினர். குடிநீருக்காகத் தோண்டப்பட்ட எண்ணற்ற கிணறுகளில் நூற்றுக்கணக் கானவர்களை மிதித்துப் புதைத்தபடி யானைகள் முன்னேறிக் கொண்டிருந்தன. படையின் கட்டுக்கோப்பு குலையும் கணத்தில் பேரழிவு தொடங்கும். ஆனால், இங்கு தொடங்கிய கணத்திலேயே பேரழிவு முடிவுறும் நிலையை நெருங்கியது.\nயானைப்படைத் தளபதி அரிஞ்சயன் ஆற்றுமணலுக்குள் ஆழப் புதைந்து கொண்டிருந்தான். மணற்துகள்களைப்போல எலும்புகள் நொறுங்கிக்கொண்டிருந்தன. இடைவெளியின்றி மிதித்து நகர்ந்தன எண்ணிலா யானைகள்.\nதலைமைத் தளபதி உறையன் எது செய்தாவது காலாட்படையின் ஒரு பகுதி வீரர்களையாவது காக்க முடியுமா எனச் சிந்திக்கும்போது, எல்லாம் கைமீறிப்போயிருந்தன. படைவீரர்களோ யானைகளோ ஆற்றின் கரைகளில் எங்கெல்லாம் மேலேறுகிறார்களோ, அங்கெல்லாம் எரியம்புகள் பாய்ந்து கீழிறங்கின. நெருப்பின் பொறிபட்ட கணத்தில் கரையோரச் செடிகொடிகள் பற்றி எரிந்தன. மேலேறிய யானைகள் வெக்கை தாக்கிய வேகத்தில் பிளிறியபடி, சிக்கியவர்களை எல்லாம் அடித்து நசுக்கிக்கொண்டு மீண்டும் ஆற்றுக்குள் ஓடின.\nபற்றிய நெருப்பு காட்டுக்குள் பரவாமல், தகுந்த முன்னெச்சரிக்கையோடு பறம்புவீரர்கள் செயல்பட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் ஒற்றை அம்பைக்கூட சோழப்படையின் வீரர்களை நோக்கி எய்யவில்லை. பிளிறியபடி மேலேறும் யானைப்படையை ஆற்றை நோக்கிக் கீழிறக்கும் வேலையை மட்டுமே அவர்கள் செய்தனர். எந்த ஆற்றைப் பாழிநகருக்கான வழியாக செங்கனச்சோழன் தீர்மானித்து முன்னகர்ந்தானோ, அதே ஆற்றை மரணத்தின் பெரும்பாதையாக மாற்றினான் பாரி. எதிரிகள் நிலைகொண்டிருந்த நான்கு காதத்தொலைவுக்கும் மலைக்குமேல் தகுந்த இடைவெளியில் பறம்புவீரர்கள் நிலைகொண்டிருந்ததால் எல்லாவற்றையும் துல்லியமாகச் செயல்படுத்தினர். இருளை நகர்த்திச் செல்வதைப்போல வெறிகொண்ட யானைக் கூட்டத்தைக் கரையோடு கரையாக நகர்த்திக்கொண்டிருந்தனர்.\nவட்டாறெங்கும் பல்லாயிரக்கணக்கான வீரர்களை நசுக்கியபடி யானைகள் ஓடிக் கொண்டிருந்த அந்த நள்ளிரவின் பிற்பகுதியில், அழிவின் உச்சகட்டம் தொடங்கியது. `முதல்நிலைப் படையினர் தாக்குதலுக்கு ஆளாகிவிட்டனர்’ என்ற செய்தி, ஒருநாள் இடைவெளியில் வந்துகொண்டிருந்த இரண்டாம் நிலைப் படையின் தளபதிகளுக்கு எட்டியது. நெடுங்காடர்களின் தளபதி துணங்கன் துடித்தெழுந்தான். யானைப்படையின் தளபதி கச்சனும் காலாட்படையின் தளபதி ஆழிமார் பனும் வெகுண்டனர். தாக்கப்பட்டவர்களுக்கு உதவ உடனடியாகப் புறப்பட்டனர். இரவோடு இரவாக யானைகளை எவ்வளவு வேகமாக விரட்ட முடியுமோ, அவ்வளவு வேகமாக விரட்டிச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து காலாட்படையினரும் விரைந்து வந்தனர்.\nபோர் என்பது, கட்டுக்கோப்பான தாக்குதல். அதன் வெற்றி, தாக்கும் திறனில் மட்டுமன்று, அதன் ஒழுங்கமைப்பின் வடிவிலும் இருக்கிறது. வேந்தனின் படைகள், இந்தக் கருத்துக்கு நன்கு பழக்கப்படுத்தப்பட்டவை. ஆனால், அடர்காட்டுக்குள் முன்னிலைப்படை தாக்கப்பட்ட செய்தி தெரிந்த பிறகு விரைந்து சென்று சேர்வதுதான் முதல் வேலை. அதில் எவ்வளவு வேகத்தில் விரைய வேண்டுமோ அவ்வளவு வேகத்தில் விரைவதே முக்கியம் என உணர்ந்து ஆழிமார்பனும் கச்சனும் விரைந்துகொண்டிருந்தனர். துணங்கனோ நெடுங்காடர்களைத் திரட்டி யானைகளை முந்திக்கொண்டு ஓடினான்.\nபின்னிரவு சரிந்து கீழ்வானில் மெல்லிய ஒளிக்கீற்றுகள் மேலெழத் தொடங்கியபோது வட்டாறு இதுவரை சந்தித்திராத பேரழிவைச் சந்திக்க ஆயத்தமானது. இரண்டாம் நிலையில் இருந்த யானைப்படை கச்சனின் தலைமையில் விரைந்து முன்னேறிக்கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிர்த் திசையிலிருந்து பிளிறிக்கொண்டு வந்தது முதல்நிலை யானைப்படை. எந்த யானையின் மீதும் பாகன்கள் யாரும் இல்லை. வந்து கொண்டிருப்பது நமது படைதானா என்பதைக்கூட இருளுக்குள் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.\nதந்தத்தின் உள்மூக்குக்குள் துருவிக் கொண்டிருக்கும் குடைச்சல் தாங்க முடியாமல் துதிக்கையைச் சுருட்டி, திருகி, முறுக்கி வீசியபடி பிளிறிக்கொண்டு வந்த யானைகளை, எதிர் நிலையில் சந்தித்தது கச்சனின் யானைப்படை.\nஒரு யானையின் குருதி, பல நூறு வீரர்களின் குருதிக்குச் சமம். தந்தங்களைக்கொண்டு பதினான்கு விதங்களில் தாக்குவதற்குப் பயின்ற யானைகள், இருள் முடியும் கணத்தில் ஒன்றுடனொன்று நேர்கொண்டு மோதின. இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத பேரழிவு நிகழத் தொடங்கியது. உச்சிமண்டைக்குள் குருதியை உறிஞ்சிக் குடிக்கும் சங்கு அட்டைகளால் ஏற்படும் வேதனை தாங்காமல் துதிக்கைகொண்டு தமது தலையின் கும்பங்களையே நொறுக்குவதுபோல் அடிக்கும் யானைகள் எதிரில் சிக்கும் யானைகளை விட்டுவிடவா செய்யும்! சுழற்றியடித்துத் தந்தத்தால் குத்தித் தூக்கின.\nமணிக்கட்டிலும் மார்பிலும் கமுக்கட்டையிலும் விலாப்புற மடிப்பிலும் வயிற்றிலும் குத்தித் தள்ளப்பட்ட எண்ணிலடங்கா யானைகள் எழுப்பிய ஓலம் காட்டை உறையச்செய்தது. வட்டாற்றுக் கொதிமணல் குடித்து முடியாத கருங்குருதி, விழுந்து கிடந்த யானைகளுக்கு நடுவில் வீரர்களின் உடலை இழுத்து நகர்த்தியது. குருதி குடித்த வட்டாற்று மணற்பரப்பு மணிக்கற்களைப்போல ஒளி வீசியது.\nதோகைநாய்களை அழித்த பறம்புவீரர்கள் காட்டை ஊடறுத்துக் குறுக்குவழியில் குதிரைகளில் பறந்தனர். எஃகல்மாடன் தலைமையில் நடுக்காட்டுக்குள் ஊர்ந்துகொண்டிருந்த சேரப்படையை இரவில் நாற்புறமும் சூழ்ந்தனர். உள்ளங்கைக்குள் சிக்கிய இரையை அவர்களின் ஆசைக்கேற்ப அடித்திழுக்கும் வேட்டை தொடங்கியது. பறம்புவீரன் ஒவ்வொருவனும் எண்ணற்ற தோகைநாய்களாக உருமாறியிருந்தான். எந்தவொரு தாக்குதலையும் இவ்வளவு கொடும் ஆவேசத்தோடு பறம்புவீரர்கள் தொடங்கிய தில்லை. இருபதுக்கும் மேற்பட்ட குதிரைகளை இழந்தவர்களின் வெறி, வீசப்பட்ட ஒவ்வோர் அம்பிலும் இருந்தது. உள்ளங்கைக்குள் வைத்துக் கழுத்தைத் திருகி எடுப்பதைப்போல எதிரிகளின் படையை உயிரோடு திருகி எடுத்தனர். தாக்குதல் நடந்த செவ்வரிக்காட்டில் குருதி படியாத இலையென்று எதுவும் இல்லை.\nமுகத்தில் மூன்று அம்புகள் ஒருசேரத் துளைத்தபோது அவன் மண்ணில் வீழ்ந்தான். ஆனாலும் அவன் செய்வதைப்போலவே தலையை வெட்டியெடுத்தான் தேக்கன். குருதி நாளங்கள் வெடிப்பதைப்போலக் கத்திக்கொண்டு துண்டித்த அவனது தலையைத் தூக்கி வீசினான் தேக்கன். நீள்வாய் நாய்களை நம்பி உள்ளே வந்த எஃகல்மாடனின் தலையைக் கவ்விச் செல்ல ஒரு தோகைநாய்கூட உயிருடன் இல்லை.\n- மூன்றாம் பாகம் முற்றிற்று.
சிறிதுசிறிதாக நிறைவேறுகிறது ஆறுமுகன் தொண்டமானின் கனவு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்\nHome / இலங்கை / செய்திகள் / சிறிதுசிறிதாக நிறைவேறுகிறது ஆறுமுகன் தொண்டமானின் கனவு!\nசிறிதுசிறிதாக நிறைவேறுகிறது ஆறுமுகன் தொண்டமானின் கனவு!\nஅமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவு சிறிதுசிறிதாக நிறைவேறி வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nகொட்டகலை சீ.எல்.எஃப். வளாகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், பெருந்தொட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தைப் பெற்றுக்கொடுத்து அமரர் ஆறுமுகன் தொண்டமானின் கனவை நிறைவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Extenze அனுபவ அறிக்கைகள் - ஒரு ஆற்றல் அதிகரிப்பு உண்மையில் ஆய்வுகளில் வெற்றிகரமாக உள்ளதா?\nநம்பகமான Erektion Extenze எளிதான வழி Extenze. பல மகிழ்ச்சியான பயனர்கள் ஏற்கனவே காட்டியுள்ளனர்: பொட்டென்ஸ்டீகெருங் மிகவும் எளிதாக இருக்க முடியும். Extenze விளைவு மிகவும் எளிமையானது மற்றும் நம்பகமானது. Extenze ஆற்றலில் Extenze எவ்வாறு செயல்படுகிறது, எப்படி, இந்த மதிப்பாய்வில் நாங்கள் நிரூபிக்கிறோம்.\nஉங்கள் புதிய ஆற்றலைப் பற்றி உங்கள் மனைவி தனது சிறந்த நண்பரிடம் மகிழ்ச்சியுடன் சொல்ல வேண்டுமா?\nஎதிர்காலத்தில் நீங்கள் இதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை, அது மிகவும் நல்லது. உடலுறவில் சரியாக வேலை செய்யாத ஒருவர் வெறுமனே ஒரு உண்மையான பையன் அல்ல\nநீங்கள் எதிர்பார்ப்பது போல, இதை ஏற்றுக்கொள்வது அதே நேரத்தில் ஒரு கனமான உணவாகும், இப்போது நீங்கள் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் பொருட்டு யதார்த்தத்தை எதிர்கொள்ளத் தயாராக உள்ளீர்கள். கருவுறுதல் இல்லாததால் மனைவிகளால் கைவிடப்பட்ட ஆண்களின் அடியில் சேர நிச்சயமாக நீங்கள் ஆர்வம் காட்டவில்லை.\nநீங்கள் இனி பெண்களுடன் பேசக்கூடாது, ஏனென்றால் அவர்களை எப்படியாவது திருப்திப்படுத்த முடியாது என்று நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள். இது ஒரு ஆரம்பம்:\nஉங்கள் ஆற்றல் கோளாறு - மற்றும் எவ்வளவு ரகசியமாக இருந்தாலும் - உண்மையில் அந்நியர்களால் கவனிக்கப்படலாம் மற்றும் பெண்களுக்கு ஒரு சிறப்பு உணர்திறன் உள்ளது. அவர்களின் ஈர்ப்பு பெண்கள் மீது நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கவில்லை.\nஆனால் Extenze சரியான தீர்வை வழங்குகிறது: கடினமான Extenze, உடலுறவின் போது அதிக உறுதியுடன் இருப்பது, கட்டுப்பாடற்ற ஆசை மற்றும் தெளிவாக ஆரோக்கியமான ஈகோ. இது பல வழிகளில் எழுதப்பட்டுள்ளது.\nதொடர்ச்சியான நேர்மறையான மதிப்புரைகளை நீங்கள் நம்பினால், Extenze பெற்று, அதை நீங்களே முயற்சித்துப் பாருங்கள்.\nஅதை ஏன் சோதிக்கக்கூடாது? சிகிச்சை நிச்சயம் கிடைக்கும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம்.\nExtenze பற்றிய மிக முக்கியமான தகவல்கள்\nஆற்றல் மற்றும் Erektion திறனை மேம்படுத்த Extenze தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டின் முறை குறுகிய அல்லது நிரந்தரமானது - வெற்றி மற்றும் விளைவு உங்கள் திட்டங்கள் மற்றும் தனிப்பட்ட செயல்திறனைப் பொறுத்தது.\nபல்வேறு சோதனை அறிக்கைகளின்படி, இந்த திட்டத்திற்கான பொருள் மீறமுடியாது என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, தீர்வு குறித்த அனைத்து அத்தியாவசிய பின்னணி தகவல்களையும் கீழே சுருக்கமாகக் கூற விரும்புகிறோம்.\nஇயற்கையான நிலைத்தன்மையின் காரணமாக, நீங்கள் Extenze நன்றாக எடுத்துக்கொள்வீர்கள் என்று கருதலாம். Gynectrol மதிப்பாய்வையும் கவனியுங்கள்.\nவழங்குநருக்கு சந்தேகத்திற்கு இடமின்றி அந்த பகுதியில் ஒரு நீண்ட அனுபவம் உள்ளது. உங்கள் இலக்கை விரைவாக அடைய இந்த அனுபவத்தை நீங்கள் லாபகரமாகப் பயன்படுத்தலாம்.\nநிறுவனம் ஆற்றலை Extenze நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட Extenze விற்கிறது.\nடெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க Extenze செய்யப்பட்டது. இது அசாதாரணமானது. பிற போட்டியாளர் தயாரிப்புகள் பெரும்பாலும் ஒரே நேரத்தில் பல சவால்களை தீர்க்க முயற்சிக்கின்றன, அவை நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே செயல்படும்.\nஇதன் விரும்பத்தகாத விளைவு என்னவென்றால், பயனுள்ள பொருட்கள் மிகக் குறைவாகவே பயன்படுத்தப்படுகின்றன அல்லது இல்லை, இதனால் உட்கொள்வது நேரத்தை வீணடிக்கும்.\nExtenze நிறுவனம் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்கிறது. அதாவது சிறந்த விலை.\nஒரு வாடிக்கையாளராக உங்களுக்கு சிறந்த தயாரிப்பு Extenze?\nஅதை விரைவாக தெளிவுபடுத்த முடியும். மதிப்பீடுகள் சில பயனர்களுக்கு Extenze என்பது Extenze என்பதைக் காட்டுகிறது.\nExtenze சிறந்த எடை இழப்பு ஆதரவை Extenze. இது உண்மை.\nஅவர்கள் வசதியாக Extenze மட்டுமே Extenze முடியும் என்று நினைக்க வேண்டாம் & உடனடியாக எல்லா சிக்கல்களும் விதிவிலக்கு இல்லாமல் தீர்க்கப்படும். நீங்களே நேரம் கொடுங்கள். இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதுவரை ஒரு சில நாட்களுக்குள் யாருக்கும் நம்பகமான Erektion கிடைக்கவில்லை. ஒரு சில நாட்கள் அல்லது நீண்ட காலத்திற்கு கூட இந்த வளர்ச்சி தேவைப்படலாம்.\nஅவரது விருப்பங்களை உணர Extenze உதவுகிறது. இன்னும், நீங்கள் உங்கள் வீட்டுப்பாடத்தை செய்ய வேண்டும். நீங்கள் இப்போது அவற்றின் ஆற்றலை அதிகரிக்க விரும்பினால், நீங்கள் தயாரிப்பைப் பெறுவீர்கள், பயன்பாட்டு செயல்முறையை நோக்கத்துடன் செய்து உற்சாகப்படுத்துங்கள், பின்னர் முடிவுகளைப் பற்றி சரியான நேரத்தில்.\nஇந்த நேர்மறையான அம்சங்கள் Extenze பரிந்துரைக்கின்றன:\nமுற்றிலும் கரிம பொருட்கள் அல்லது பொருட்கள் உகந்த பொருந்தக்கூடிய தன்மை மற்றும் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பயன்பாட்டை உறுதி செய்கின்றன\nமருந்தகத்திற்கான உந்துதலையும், ஆற்றல் அதிகரிப்பதற்கான ஒரு மருந்தைப் பற்றிய சங்கடமான உரையாடலையும் நீங்கள் தவிர்க்கிறீர்கள்\nஆற்றலை அதிகரிக்க உதவும் வைத்தியம் பொதுவாக மருந்துடன் மட்டுமே கிடைக்கும் -Extenze இணையத்தில் எளிதாகவும் மலிவாகவும் இருக்கும்\nஇணையத்தில் ஒரு ரகசிய உத்தரவுக்கு நன்றி, உங்கள் பிரச்சினையை யாரும் கவனிக்க மாட்டார்கள்\nதிறம்பட திறனை அதிகரிப்பதற்கான மிகச் சிறந்த தயாரிப்புகளில் Extenze ஒன்றாகும் என்பதற்கான காரணங்களில் ஒன்று, இது உடலின் சொந்த செயல்பாட்டு வழிமுறைகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறது.\nபல ஆயிரம் ஆண்டுகால பரிணாம வளர்ச்சி என்பது நம்பகமான Erektion அனைத்து செயல்முறைகளும் ஏற்கனவே கிடைத்துள்ளன, மேலும் அவை தானாகவே தொடங்கப்பட வேண்டும்.\nExtenze பயன்பாட்டின் பெரிய நன்மை: இது வெறுமனே ஒரு நீண்ட விளைவைக் கொண்டுள்ளது.\nநைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களின் நீர்த்தலை ஏற்படுத்துகிறது, இது ஒரு பெரிய இரத்த விநியோகத்துடன் தொடர்புடையது, எனவே உங்களுக்கு அதிக வீக்கம் உள்ளது\nமேலும், அதிகரித்த இரத்த ஓட்டம் Erektion கடினமாக்குகிறது\nஇந்த வழியில், தயாரிப்பு முதன்மையாகத் தோன்றலாம் - ஆனால் அவசியமில்லை. விளைவுகள் வெவ்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவும் வன்முறையாகவும் இருக்கும். VigRX Plus மாறாக, இது மிகவும் திறமையானது.\nசிக்கலற்ற இயற்கை Extenze இந்த கலவையின் காரணமாக, ஒரு மருந்து இல்லாமல் Extenze வாங்கலாம்.\nதயாரிப்பாளர் மற்றும் இணையத்தில் தகவல்தொடர்புகள் மற்றும் மதிப்புரைகள் இரண்டும் ஒப்புக்கொள்கின்றன: பயன்பாட்டின் போது ஏற்படும் Extenze எந்தவொரு குழப்பமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nபயனர்கள் வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்தால் மட்டுமே போதுமான உத்தரவாதம் உள்ளது, ஏனெனில் Extenze பெரிதும் உச்சரிக்கப்படுகிறது.\nஎனது பரிந்துரை என்னவென்றால், நீங்கள் தயாரிப்பாளரை அசல் தயாரிப்பாளரிடமிருந்து மட்டுமே வாங்க வேண்டும், ஏனெனில் இது எப்போதும் ஆபத்தான தயாரிப்பு கள்ளத்தனமாக கவலைப்படும் பொருட்களுடன் திரும்பி வருகிறது. பின்வரும் உரையில் நீங்கள் திசைதிருப்பலைப் பின்பற்றினால், நீங்கள் நம்பக்கூடிய உற்பத்தியாளரின் இணையதளத்தில் இறங்குவீர்கள்.\nஉற்பத்தியாளரின் இணையதளத்தில் Extenze பொருட்களைப் பார்த்தால், பின்வரும் செயலில் உள்ள பொருட்கள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nExtenze, உற்பத்தியாளர் ஒவ்வொரு மூலப்பொருளின் சக்திவாய்ந்த Extenze உருவாக்க விரும்புகிறார், இது ஆராய்ச்சியின் படி, ஆற்றல் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முடிவுகளை அளிக்கிறது.\nஆனால் நீங்கள் நிச்சயமாக வெளிப்படையாக ஒட்டிக்கொள்ள வேண்டும்: நிறுவனத்தின் ஆலோசனை எப்போதும் முக்கியமானது.\nஇந்த கட்டத்தில் பயன்பாட்டைப் பற்றி சிந்திப்பது மிகுந்த முடிவுகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், உங்கள் அன்றாட வழக்கத்தில் தயாரிப்புகளை ஒருங்கிணைப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், கையேட்டில் தெளிவான மற்றும் பயனுள்ள தகவல்களைப் பெறுவீர்கள், மேலும் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் இருப்பு பற்றியும்.\nஎந்தவொரு அனுமானமும் ஆதாரங்களுக்கான காரணத்தால் இங்கே தெளிவாக விலக்கப்படலாம், இது இந்த நிலைக்கு செல்லும் வரை.\nஉண்மையில், Extenze அனுபவம் முதல் Extenze பிறகு சிறிது நேரம் தெரியும் அல்லது குறைவாக உச்சரிக்கப்படலாம்.\nஉங்கள் முன்னேற்றங்கள் மற்ற ஆய்வுகளை விட அதிகமாக இருக்கும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, மேலும் சில மணிநேரங்களில் ஆற்றலில் உறுதியான லாபங்களைக் காண்பீர்கள் .\nஅவரது கருத்துப்படி, மாற்றம் என்பது கவனிக்கப்படாமல் இருக்கலாம், ஆனால் ஒரு அந்நியன் உங்களுடன் பேசுகிறார்.\nExtenze பற்றிய பயனர்களிடமிருந்து அறிக்கைகள்\nஇந்த பரிகாரத்துடன் நேர்மறையான சோதனைகள் இருந்தால் உங்களைத் தெரிவிப்பது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. வெளியாட்களின் நடுநிலை தீர்ப்புகள் செயல்திறனைப் பற்றிய ஒரு நம்பிக்கைக்குரிய படத்தைக் கொடுக்கின்றன.\nExtenze பற்றிய யோசனையைப் பெற, நாங்கள் தொழில்முறை ஆய்வக பகுப்பாய்வையும், பல கூடுதல் காரணிகளையும் உள்ளடக்குகிறோம். இந்த கண்கவர் முடிவுகளை நாம் உடனடியாகப் பார்க்கிறோம்:\nExtenze, Extenze நடைமுறை அனுபவம் முற்றிலும் உறுதியானது. காப்ஸ்யூல்கள், ஜெல் மற்றும் பல்வேறு வைத்தியம் வடிவில் இந்த பொருட்களுக்கான சந்தையை நாங்கள் சில காலமாக கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சி செய்துள்ளோம், எங்களுக்கும் முயற்சி செய்துள்ளோம். இருப்பினும், தயாரிப்பு போலவே திருப்திகரமாக உள்ளது, இருப்பினும், சோதனைகள் மிகவும் அரிதானவை.\nஆற்றலின் பெரும்பகுதி ஆன்மீக இயல்புடையது. ஏனென்றால் நீங்கள் ஆண்பால் உணராததால் கவலைப்படுகிறீர்கள் என்றால், அது ஆளில்லா பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. எனவே இது Super 8 விட மிகவும் உதவியாக இருக்கும். இது குறைந்த ஆற்றலிலும் வெளிப்படுத்தப்படலாம்.\nபுகார்களின் பட்டியல் மிகவும் நீளமானது: இயலாமை, குறைந்த சகிப்புத்தன்மை மற்றும் தன்னிச்சையான Erektion குறைபாடுகள் - உங்கள் ஆண்குறி சரியாக செயல்படவில்லை என்றால், நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை.\nஒரு நாள், நீங்கள் உடலுறவுக்கு எந்த ஏக்கத்தையும் உணர மாட்டீர்கள், அதை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஆனால் அது உங்களுக்கு பிடிக்காது என்று நம்புகிறேன். காரணம் இல்லாமல், சமீபத்திய கண்டுபிடிப்புகளின்படி தயாரிப்பு உருவாக்கப்பட்டது.\nஎன்னை நம்புங்கள், அது உண்மையில் உங்கள் தலையில் வருகிறது & குறுகிய காலத்தில் நல்ல முடிவுகளைப் பார்ப்பீர்கள். நூறு சதவீதம்.\nஉங்கள் இலக்கை தைரியமாக உணர்ந்துகொள்வதன் மூலம், உங்கள் கூட்டாளர்களைப் பிரியப்படுத்தும் ஒரு ஆற்றல் உங்களுக்கு விரைவில் கிடைக்கும். உடலுறவு இனி அவசியமில்லை, ஆனால் வேடிக்கையாக இருந்தால், அது உண்மையில் தொடங்குகிறது. நீங்கள் பொதுவாக உங்களை மீண்டும் கண்டுபிடிப்பீர்கள்.\nவிறைப்பு கோளாறுகளை அகற்றுவதில் உங்களுக்கு ஆர்வம் இருப்பதாக நான் கருதுகிறேன். உங்களிடம் தற்போது ஒரு அட்டவணை உள்ளது: Extenze பெற்று வழிமுறைகளை Extenze பின்பற்றுங்கள்.\nஆகையால், அதிக நேரம் கடந்து செல்ல வேண்டாம் மற்றும் தயாரிப்பு ஒரு மருந்தகம் அல்லது உற்பத்தி நிறுத்தமாக மாறும் அபாயம் உங்களுக்கு இல்லை. இது இயற்கையாகவே பயனுள்ள தீர்வுகளின் வரம்பில் அவ்வப்போது நிகழ்கிறது.\nஅத்தகைய ஒரு பொருளை நீங்கள் சட்டப்பூர்வமாக இணக்கமாகவும் மலிவாகவும் வாங்க முடியும் என்ற உண்மையை விரைவாகப் பயன்படுத்த வேண்டும். இந்த நேரத்தில், அசல் வழங்குநரின் தளத்தில் நீங்கள் இன்னும் ஆர்டர் செய்யலாம். இந்த வழியில், நீங்கள் ஒரு பயனற்ற காப்கேட் தயாரிப்பு வாங்குவதற்கான ஆபத்தை இயக்கவில்லை. Semenax ஒப்பிடுகையில் இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஅந்த பயன்பாட்டை நீண்ட காலமாகத் தக்கவைத்துக்கொள்வதற்கான உங்கள் திறனை நீங்கள் சந்தேகிக்காவிட்டால், அதை கூட முயற்சி செய்யாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, முக்கிய காரணி விடாமுயற்சி. இருப்பினும், உங்கள் சூழ்நிலை உங்களை போதுமான அளவு ஊக்குவிக்கும் என்று நான் சந்தேகிக்கிறேன், இதன் மூலம் நீங்கள் விரும்பிய நிலையை நீங்கள் செயல்படுத்த முடியும்.\nஇந்த தயாரிப்பு வாங்குவதற்கு முன் என்ன செய்வது\nஎடுத்துக்காட்டாக, சில மோசமான இணைய கடைகளில் பேரம் தேடலை வாங்குவது ஒரு தவறு.\nமுடிவில், நீங்கள் உங்கள் சேமிப்பை சாளரத்திற்கு எறிவது மட்டுமல்லாமல், உங்கள் நல்ல அரசியலமைப்பையும் செலுத்துவீர்கள்!\nஅதன்படி, எங்கள் ஆலோசனை: நீங்கள் முகவரை ஆர்டர் செய்ய விரும்பினால், அதிகாரப்பூர்வ வழங்குநரின் அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் கடையில் பிரத்தியேகமாக அவ்வாறு செய்கிறீர்கள்.\nஇந்த வழங்குநர் தீர்வை வாங்குவதற்கான சிறந்த விருப்பமாக நிரூபிக்கிறார், ஏனென்றால் அது எல்லாவற்றையும் உண்மையில் பெறுகிறது - உருப்படியின் மிகக் குறைந்த ஏல விலைகள், கட்டாய சேவை வழங்கல் மற்றும் நம்பகமான விநியோகங்கள்.\nExtenze ஆர்டர் செய்வதற்கான பாதுகாப்பான வழி இது:\nGoogle இல் பொறுப்பற்ற தேடல் அமர்வுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் - நாங்கள் மதிப்பாய்வு செய்யும் இணைப்புகளைப் பயன்படுத்தவும். சலுகைகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க முயற்சிக்கிறேன், அது உத்தரவாதம், எனவே நீங்கள் சிறந்த விலை மற்றும் சிறந்த விநியோக நிலைமைகளுக்கு ஆர்டர் செய்கிறீர்கள்.
என்னது...தலைவி பார்ட் டூ எடுக்கப் போறாங்களா ?...கங்கனா நடிப்பாரா ? | Makers might plan to make sequel of thalaivi - Tamil Filmibeat\n| Updated: Monday, September 13, 2021, 22:16 [IST]\nசென்னை : டைரக்டர் ஏ.எல்.விஜய், நடிகை கங்கனா ரணாவத்தை வைத்து தலைவி படத்தை இயக்கினார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவி, நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு செப்டம்பர் 10 ம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது.\nஇந்த படத்தில் கங்கனா நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் ரோலில் கங்கனாவை நடிக்க வைத்தது சரியான தேர்வு என பலர் பாராட்டி வருகின்றனர். இருந்தாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூலை பெறவில்லை.\nதலைவி படத்துல நிறைய மிஸ்டேக்ஸ் இருக்கு.. பல விஷயங்களை மாத்திட்டாங்க.. கொதிக்கும் ஜூனியர் எம்ஜிஆர்!\nஅதோடு, தலைவி படத்தில் வரும் காட்சிகள் சில உண்மைக்கு புறம்பாக இருப்பதாக அரசியல் தலைவர்கள் சிலர் குற்றம்சாட்டி இருந்தனர். சட்டசபையில் ஜெயலலிதாவின் புடவையை பிடித்து அவமானப்படுத்தப்பட்டதாக படத்தில் காட்டபபட்டிருப்பதாகவும், ஆனால் உண்மையில் அப்படி எதுவுமே நடிக்கவில்லை. இது அவை குறிப்பில் உள்ளதாகவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nநடிகையாக இருந்த ஜெயலலிதா, எப்படி அரசியல் தலைவர் ஆனார் என்பது தான் தலைவி படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த பல முக்கியமான நிகழ்வுகளை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனராம். அதனால் தலைவி படத்தின் இரண்டாம் பாகம் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇன்னும் நிறைய இருக்கே\nஜெயலலிதாவின் வாழ்க்கையில் காட்டுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளதாக தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். இதனால் தலைவி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம். தலைவி படத்தை பார்த்த பலர் இந்த நிகழ்வை சேர்த்திருக்கலாம், அந்த நிகழ்வை சேர்த்திருக்கலாம் என கருத்து கூறி வருகின்றனராம். அதனால் தான் இரண்டாம் பாகத்தை இயக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.\nஆனால் தலைவி இரண்டாம் பாகத்தில் கங்கனா நடிப்பாரா என்பது தான் சந்தேகம். ஏனென்றால், சமீபத்தில் நடந்த தலைவி ப்ரோமோஷன் விழாவில் பேசிய கங்கனா, பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் தலைவி படத்தில் நடித்துள்ளேன். அடுத்ததாக தெலுங்கு படத்தில் நடிக்க நினைக்கிறேன். பிரபாஸுடன் ஒரு படத்தில் நடிக்க நினைக்கிறேன். பிரபாஸுடன் நடிக்க வாய்ப்பு கொடுக்குமாறு புரி ஜெகந்நாதனிடம் பலமுறை கேட்டு விட்டேன். தொடர்ந்து கேட்டு வருகிறேன் என தெரிவித்தார்.\nகங்கனாவின் அடுத்த பயோபிக்\nஜெயலலிதாவின் வாழ்க்கை படமான தலைவியில் நடித்ததை போல், அடுத்தபடியாக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை படத்தை தானே இயக்கி நடிக்க போவதாக கங்கனா கூறி உள்ளார். இதற்கிடையில் வருங்காலத்தில் தான் அரசியலில் நுழைய போவதாகவும் மறைமுகமாக கூறி உள்ளார் கங்கனா. அதனால் தலைவி2படத்தில் ஜெயலலிதா ரோலில் யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழு யோசிக்க துவங்கி விட்டது.\nஅரசியலுக்கு வர திட்டம்\nசமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா, நான் ஒன்றும் தேசியவாதியோ, அரசியல்வாதியோ இல்லை. பொறுப்புள்ள சாதாரண குடிமகள். நான் அரசியலில் நுழைய வேண்டும் என்றால் நிறைய மக்கள் ஆதரவு வேண்டும். ஆனால் தற்போது நான் நடிகையாக இருப்பதிலேயே எனக்கு மகிழ்ச்சி. ஒருவேளை நாளை மக்கள் என்னை விரும்பி, எனக்கு ஆதரவு அளித்தால் கண்டிப்பாக நான் அரசியலுக்கு வருவேன் என்றார்.\nஅடுத்தடுத்த படங்கள், அரசியல் கனவு என கங்கனா பல திட்டங்களை வைத்திருப்பதால் தலைவி2ல் அவர் நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.\nRead more about: thalaivi kangana ranaut thalaivi2தலைவி கங்கனா ரணாவத் தலைவி 2\nThe producers think that there isalot to show in Jayalalithaa’s life. Thus they have decided to produce the second part of the film. But Kanga to act in Thalaivi sequel in doubtable. because she wanst to act with Prabhas in Telugu movie and biopic of Indira Gandhi.
இலங்கையில் மேலும் 04 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஅதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2715 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் இன்றையதினம் பூரணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி, 2035 பேர் முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nதற்போது, 669 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
களஞ்சியம்: RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 13.\nRSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 13.\nதலித் இனத்தவர்களை எப்படியேனும் அழிக்க வேண்டும் என்ற கூட்டு ஆலோசனைதான் ஆர்.எஸ்.எஸ். நடத்திக் கொண்டிருந்தது. அன்றைய நாள்களில் சவர்ணர்கள், தலித்துகளை வீதியில் போட்டுக் கொன்றார்கள். இன்றோ இந்த சவர்ணர்கள்தான் உயர்ஜாதியினர் ஆர்.எஸ்.எஸ். ரூபத்தில் அவர்களை சதி செய்து கொலை செய்கிறார்கள்.\nஒரு காலத்தில் நாசர் மஹ்தனி பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை முன்னிறுத்தி மேடைப் பேச்சுக்களை தீவிரமாக பேசும் போது அது கேட்க கேட்க கோபம்தான் வந்து கொண்டிருந்தது எனக்கு. ஏனென்றால் சிறு வயதில் அம்மா சொல்லிக் கொடுக்கின்ற ஒரு ராம வசனம் நினைவுக்கு வரும்.\nமாலை நேரம் சுமார்4மணிக்குத்தான் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட செய்தியை நான் அறிகிறேன். அன்று முழுவதும் நானும் எனது ஆர்.எஸ்.எஸ். நண்பர்களும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தோம். எனது சாகாவின் எதிரொலி கேரளத்தில் நடக்கவில்லையென்றாலும், பைசாபாத்தில் நடந்தேறியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும், சாகாவின் மீது அதிக ஈர்ப்பும் ஏற்பட்டது.\nஅயோத்தி அணிவகுப்பிற்காக சென்ற பிறகுதான் தெரிகிறது இந்த ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் இல்லாத ஒரு பழியை முஸ்லிம்கள் மீது வேண்டுமென்றே போட்டு குற்றம் சுமத்தி அவர்களை அழிப்பதற்கு ஆயத்தமாகின்றார்கள் என்ற உண்மை. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இதனை நடத்திக்காட்டிவிட்டார்கள். இதனை நான் கண்கூடாகக் கண்டேன்.\nRSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் 14\nபதிந்தது அபூ சுமையா நேரம் 10:31 PM
தங்கக் கல்லறை » மூன்றாம் கோணம் /* ]]> */\nவார ராசி பலன்18.10.2020 முதல் 25.10.2020 வரை அனைத்து ராசிகளுக்கும் குரு பெயர்ச்சி பலன்கள் நவம்பர் 2020-2021 மீன ராசி\nவடகிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடு எகிப்து. இங்கு பழங்காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் வாழும்போதே பிரமிக்கத் தகுந்த வகையில் கல்லறை அதற்கு ஏகப்பட்ட பொருட்செலவும் செய்தனர். பல்லாயிரம் தொழிலாளரின் கடும் உழைப்பில், அவை உருவாகியுள்ளன. இன்று புராதன வரலாற்றுச் சின்னங்களாக நிமிர்ந்து நிற்கின்றன.\nஎகிக்ப்தின் ;ப்அழைய தலை நகர் தபோஸ் நகரம். இது உலகின் மிக நீண்ட நைல் நதிக்கரையோரம் உள்ளது. இங்கு திபோன் மலைத் தொடர் பகுதியில் புராதன கல்லறைகள் உள்ளன.\nஐரோப்பிய தொல்லியல் வல்லுனர்கள் 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இவற்றை ஆராயத் துவங்கினர். பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பிரமிடுகளைப் பற்றி சிந்தித்தாலே மரணம் நிச்சயம் என மர்மக் கதைகள் உலா வரத் துவங்கின. அந்தப் பக்கம் போகவே பலர் அஞ்சி நடுங்கினர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடான இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் ஹார்வார்டு கார்ட்டர் துணிச்சலுடன் களம் இறங்கினார். அவரது முயற்சிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த கார்னாவன் நிதி உதவி செய்தார். முதல் உலகப் போர் ஏற்பட்டதால், பணியில் இடையூறு ஏற்பட்டது. மனந்தளராமல் தொடர்ந்தார் கார்ட்டர்.\nமணலால் மூடப்பட்டு இருந்த கல்லறையில் நுழைவாயில் போன்ற பகுதி தென்பட்டது. துவாரம் இட்டு நீண்ட கம்பியை செலுத்தினார். அது தடையின்றிப் பாய்ந்தது. புராதன நாகரீக உலகம் அங்கிருந்தது.\nஅதில் எகிப்திய மன்னன் துட்டன் காமுன் உடல் வைக்கப்பட்டிருந்தது. உப்பால் பதப்படுத்தி, தைலங்கள் பூசி, பாடம் செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 3,350 ஆண்டுகளுக்கு முன், அந்த உடல் பதப்படுத்தப்பட்டிருக்கலாம். என கணித்தார் கார்ட்டர்.\nஉடலைத் தாங்கிய தங்கத் தகடு பதித்த பெட்டியும் இர்ஃபுந்தது. அதில் நவர்டத்தினங்கள் வைர மணி மாலைகள் மற்றும் பழங்காலத்தில் புழக்கத்தில் இருந்த 5000க்கும் மேற்பட்ட பொருட்கள் இருந்தன. மன்னனுக்கு சூடப்பட்டிருந்த மலர்மாலையும் வதங்கிய நிலையில் காணப்பட்டது. இது பெரும் ஆச்சரியம் தந்தது..\nகார்ட்டரின் கண்டுபிடிப்பின் துணைகொண்டு, சிற்பங்கள், இசைத் தொகுப்புகள், இலக்கியங்கள், திரைப்படங்கள் ஏராளமாக வெளிவந்தன. இவரது துணிச்சலான ஆய்வுக்கு பின்தான் எகிப்தில் உள்ள பிரமிடுகள் பற்றிய உண்மைகள் வெளிவந்தன மானுட வளர்ச்சியின் மேன்மையைப் பகிர்ந்தன.
சுனாமியில் மீண்டு உலகின் நெ.4 சைக்கிள் வீராங்கனை ஆன சிறுமி!\nஅந்தமானில் 2004-ல் சுனாமி தாக்கியபோது டெபோரா ஹெரால்டுக்கு வயது 9. தன்னைக் காப்பாற்ற மீட்புக் குழு வரும் வரை ஒரு மரத்தில் தன்னந்தனியாக ஒரு வார காலம் நம்பிக்கையுடன் போராடியவர். ஒரு கொடூர அனுபவத்தில் இருந்து மீண்ட அந்தப் பழங்குடிச் சிறுமி பின்னர் தனக்கான ஆறுதலாக சைக்கிள் பந்தயத்தைத் தேர்ந்தெடுத்தார். தன் ஈடுபாட்டின் விளைவாக விரைவிலேயே தேசிய சாதனைகளுக்குச் சொந்தக்காரரும் ஆனார்.\nஇருபது வயது இந்திய சைக்கிள் பந்தய வீராங்கனையான இவர், யூ.சி.ஐ. (யூனியன் சைக்கிளிஸ்ட் இன்டர்நேஷனல்) தனிநபர் உலகத் தரவரிசையில் நான்காம் இடம் வகித்து நாட்டுக்கு அரிய சிறப்பையும் பெருமையையும் சேர்த்துள்ளார். டெபோரா தனது ஜீ நியூஸ் பேட்டியில் கூறும்போது, "உலகத் தரவரிசையில் இந்த இடத்தை அடைந்ததில் மகிழ்ச்சி. இந்திய சைக்கிளிஸ்ட் ஒருவர் இந்த அளவில் சிறப்பிடம் பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்பது பெருமைப்பட வைக்கிறது.\nஇத்துடன் நிற்காமல், உலகின் நம்பர் ஒன் இடத்தைப் பிடிப்பதற்கு தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். என்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்வதற்கு உறுதுணையாக இருக்கும் எங்கள் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெறுவதற்காக இப்போது தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்" என்கிறார் உத்வேகத்துடன்.\nபுதுடெல்லியில் நடந்த டிராக் ஆசியா கோப்பை போட்டிகளுக்கு முன்பு தரவரிசையில் இவர் 10-வது இடத்தில் இருந்தார். அந்தப் போட்டித் தொடரில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றியதன் துணையுடன் தரவரிசையில் வெகுவாக முன்னேற்றம் கண்டார். உலகத் தரவரிசையில் இந்திய அணி 13-வது இடத்துக்கு முன்னேறியதற்கும் இவரது பங்களிப்பு மகத்தானது.\n"அதற்குத்தானே நாம் ஆடுகளத்தில் போராடுகிறோம். அணியில் இப்போது அங்கம் வகிக்கும் இடத்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த உத்வேகம் குறையாமல் அணியை முன்னெடுத்துச் செல்வோம்" என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் குறிப்பிட்டுள்ளார்.
அருள்வாக்கு சொல்லலாமா?| Arulvakku sollalama\nவீடியோ September 2, 2013\n“ஏம் மகளுக்கு கல்யாணம் எப்ப நடக்கும்?” “என் மகனுக்கு கவர்மன்ட் உத்யோகம் எப்ப கெடைக்கும்?” இப்படித் தேடி வருபவர்களுக்கு அருள்வாக்கு சொல்பவர்கள் ஏராளம். பலர் மனதில் கேள்விகளையும், வேறு சில விவாத மேடைகளில் சர்ச்சைகளையும் கிளப்பும் ‘அருள்வாக்கு சொல்லுதல்’ என்பது சரியா? சொல்கிறார் சத்குரு…\nஎன் அம்மா கோவில் போன்ற பக்தியான இடங்களுக்கு சென்றால் பல நேரங்களில் அவர்களுக்கு அருள் வரும். அப்போது அவர் அருள்வாக்கு சொல்வார். பல வருடங்களாக குழந்தையே இல்லாத ஒரு தம்பதிக்கு இன்னும் 8 வருடங்களில் குழந்தை பிறக்கும் என்றார்கள், அப்படியே நடந்தது. நம் கலாச்சாரத்தில் பல இடங்களில் இப்படி அருள்வாக்கு சொல்வது நடக்கிறது. இதெல்லாம் சரிதானா? சிறு வயதிலிருந்தே எனக்கு இந்தக் கேள்வி இருக்கிறது…\nPrevious articleஏன் மரணம் ஏற்படுகிறது?\nNext articleகடவுள்கள் இருந்தும் பசி, பட்டினி ஏன்?
அதிர்ச்சியில் அதிமுக... மகிழ்ச்சியில் அமமுக... திணறும் எடப்பாடி!\n3 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதால் அமமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.\nTamil Nadu, First Published May 6, 2019, 12:53 PM IST\nஅதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய மூன்று பேர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சபாநாயகரிடம் கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் எம்எல்ஏக்கள்3பேரும்7நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத பட்சத்தில்3பேரும் தகுதி நீக்கம் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ்க்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.\nஇந்த வழக்கு ஒன்றரை நிமிடத்திற்குள் நிறைவடைந்தது. பொதுவாக ஒரு வழக்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது வாதி, பிரதிவாதி வாதாடுதல் நடைபெறும். ஆனால் இந்த வழக்கை பொருத்தவரை வெறும் ஒன்றரை நிமிடத்துக்குள் விசாரணை நடத்தி தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அமமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஅதே வேளை அதிமுகவுக்கு இந்த உத்தரவு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஆட்சி அமைக்க பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அதிமுகவுக்கு இந்த3எம்.எல்.ஏக்களும் எதிராக வாக்களிக்கக் கூடிய நிலை உருவாகி உள்ளது. இதனால், 22 தொகுதி இடைத்தேர்தலில் 10 தொகுதிகளை வெல்ல வேண்டிய நிலை உருவாகி உள்ளது.\nLast Updated May 6, 2019, 12:53 PM IST
பெண் அழகி | நாற்சந்தி\nComments on: "பெண் அழகி" (12)\n3:59 பிப இல் 08/04/2012\nheyyy realy awesome… how can u write both revolutionary thoughts and contradicting thoughts like these.. i enjoyed reading t… engayo poringa…!!!\n2:44 பிப இல் 12/05/2012\nyes he is good 🙂\n5:18 பிப இல் 08/04/2012\nஆயினும் உங்கள் கருத்துக்கள்\n4:40 முப இல் 09/04/2012\nEnnamo.. Pucha sollikeringale\n4:28 முப இல் 10/04/2012\nபொதுவாகவே ஆணாகட்டும், பெண்ணாகட்டும் இயல்பே அழகு என்பது என் கருத்து. எழுத்துப் பிழைகளை தவிர்க்க முயலவும். பளிச்சென கருத்தைச் சொல்வதில் தய்க்கம் ஏன்? நல்ல பதிவு. தொடர்க இது போல்.\nSharren Pristina said:\n2:39 பிப இல் 11/04/2012\nவெளி தோற்றத்தை நான் அழகு என்று எண்ணியது இல்லை.உள்ளத்தின் அழகே மெய்யான அழகு. மேலும் அழகு பால் சார்ந்தது இல்லை என்பது எண் கருத்து. உங்கள் கருத்துகளையும் நான் ஆமோதிக்கிறேன்… வரவேற்கிறேன் !! இந்த வயதில் இத்தனை தெளிவான கருத்துகளை பதுவு செய்வதை எண்ணி நான் மிகவும் வியப்படைகிறேன். தொடர்க …… வளர்க ….!!! வாழ்த்துக்கள் !!!\n5:15 பிப இல் 14/06/2012\nஉங்கள் தகவல் நன்றாக இருக்கிறது..மேலாக வளர என் வாழ்த்துக்கள்..!\n6:48 முப இல் 06/08/2012\nநல்ல கருத்து! எல்லோருக்குமே பெண்கள்தான் soft target! நாங்கள் மிகவும் பெருந்தன்மையோடு பொறுத்துப் போகிறோம்! Beauty lies in the beholder’s eyes!\nபெண்களை கீழாகப் பார்க்கும் ஒரு தலைமுறை வளர்ந்து விட்டது. இளைஞர்கள் தான் இந்த நிலையை மாற்ற வேண்டும்.\n4:22 பிப இல் 06/08/2012\n5:05 பிப இல் 06/08/2012\nமுதல் இரண்டு வரிக்கு நீங்கள் சிரிப்பது புரிகிறது கார்த்திகேயன். ஆனால் அடுத்த இரண்டு வரிகள் ‘உங்க அம்மாவுக்கு ஒண்ணும் தெரியாது, தண்டம்….’ என்று திட்டும் அப்பாக்களைப் பற்றியது. இதை ஒரு பெண் சொல்ல முடியுமா?\nஅவசியமா Accessories ? « நாற்சந்தி said:\n12:43 பிப இல் 20/08/2012\n[…] (போகப்) பொருளாக பார்ப்பது தவறு என்று பெண் அழகி பதிவில் எழுதி இருந்தேன். ஆனால் இதில் […]\n[…] பெண் அழகி […]
தலைவிதி பற்றி பைபிள் பேசவில்லையா? - OnlinePJ.in\nPrevious Article சொர்க்கத்தில் 72 கன்னிகள் என்பது சரியா\nNext Article அடிமைப்பெண் தன் எஜமானனுக்கு பிள்ளை பெற்றால் சுதந்திரம் அடைவாளா?\nகேள்வி : பைபிள் விதியைப் பற்றி ஏதும் சொல்கின்றதா? தயவு செய்து விளக்கவும். என் கிறித்தவ நண்பன் பைபிள் விதியைப் பற்றி எங்கும் சொல்லவில்லை என்கிறான். பைபிள் மூலமே பதில் கூற வேன்டும்.\nஎல்லாம் விதிப்படி நடக்கின்ற்ன என்று இஸ்லாம் கூறுகிறது. இதற்கு எதிராக கிறித்தவ போதகர்கள் பல குதர்க்கமான கேள்விகளைக் கேட்கிறார்கள். எல்லாம் விதிப்படி என்றால் சொர்க்கம் நரகம் ஏன்? பாவம் செய்தவன் விதிப்படி தானே பாவம் செய்கிறான்? அவனைத் தண்டிப்பது என்ன நியாயம் என்பது போன்ற கேள்விகளைக் கேட்கின்றனர்.\nஇந்த நிலையில் நீங்கள் கேட்டுள்ள கேள்வி மிகவும் அவசியமான கேள்வியாகும். இஸ்லாத்தில் விதி குறித்த நம்பிக்கை உள்ளது போல் பைபிளிலும் விதி குறித்த நம்பிக்கையைப் பேசும் வசனங்கள் பல உள்ளன. ஆனால் கிறித்தவ போதகர்கள் அவற்றைப் படிக்காமல் இஸ்லாத்துக்கு எதிராக கேள்வி கேட்கின்றனர்.\n8. உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.\nவெளிப்படுத்திய சுவிசேஷம் 13:8\n12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின் படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத் தக்கதாக நியாயத் தீர்ப்படைந்தார்கள்.\nவெளிப்படுத்திய சுவிசேஷம் 20:12\n13. சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத் தீர்ப்படைந்தார்கள்.\n14. அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.\n15. ஜீவ புஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக் கடலிலே தள்ளப்பட்டான்.\nவெளிப்படுத்திய சுவிசேஷம் 20:13,14,15\n26. உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டு வருவார்கள்.\n27. தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.\nவெளிப்படுத்திய சுவிசேஷம் 21:26, 27\n3. நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.\n4. என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.\nசங்கீதம் 139:3, 4\n16. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாத போதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.\n21. அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும் போது, அவர்கள் சந்ததியாரின் வாயில் மறந்து போகாதிருக்கும் இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சி பகரும்; நான் ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப் பண்ணாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் இன்னது என்று அறிவேன் என்றார்.\n2. பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்து கொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது.\n1ம் பேதுரு 1:2\n31. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.\n28. அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.\n10. இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியான போது,\n11. பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்து கொள்ளுதலின் படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலை நிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,\n15. அவர் மோசேயை நோக்கி: எவன் மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன் மேல் இரக்கமாயிருப்பேன், எவன் மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன் மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.\n18. ஆதலால் எவன் மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன் மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.\n19. இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்து நிற்பவன்யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.\n21. மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின் மேல் அவனுக்குஅதிகாரம் இல்லையோ?\n23. தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபா பாத்திரங்கள் மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள் மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?\nரோமர் 9:10 - 23\n7. உலகத் தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம்.\n1 ம் கொரிந்திரியர் 2:7\n10. மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை.\n4. ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள் வரைக்கும் கொடுக்கவில்லை.\n17. கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப் பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.\nஇது போல் விதியின்படியே எல்லாம் நடக்கின்றன எனக் கூறும் பல வசனங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் ஏராளமாக உள்ளன.\nவிதியைக் குறித்து இஸ்லாம் என்ன சொல்கிறது என்று தேடிப்படிக்கும் கிறித்தவப் போதகர்கள் பைபிளில் விதியைப் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளதை அறியவில்லை. பைபிள் காட்டும் வழியை கிறித்தவ மக்களுக்குப் போதிக்கிறார்கள் என்பதை இந்த ஆதாரங்களில் இருந்து அறியலாம்.
கல்வி சிறகுகள் ஆர்கே: 09/05/16\nபுத்தகத்தை திருப்பி தராவிட்டால் 1 மாதம் ஜெயில் தண்டனை\nநூலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகத்தை திருப்பி தராவிட்டால் 1 மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என அமெரிக்க நகரில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதுநூலகத்தில் இருந்து எடுக்கும் புத்தகங்களை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றும் செயல்கள் எல்லா நாடுகளிலும் வழக்கம் போல் இருக்கிறது.\nஅமெரிக்காவில் இப்படி ஏமாற்றும் நபர்களுக்கு ஜெயில் தண்டனை கொடுக்கும் சட்டத்தை கொண்டுவந்துள்ளனர். அங்குள்ள அலபாமா நகரில் உள்ள நூலகத்தில் ஏரளமான புத்தகங்கள் திரும்பி வரவில்லை.\nசுமார் ரூ.1½ கோடி மதிப்புள்ள புத்தகங்கள் இப்படி திரும்பி வராமல் உள்ளது. எனவே புத்தகங்களை திருப்பி தராதவர்களுக்கு கடும் தண்டனை வழங்க அந்த நகர நிர்வாகம் முடிவு செய்தது.\nஅமெரிக்காவை பொறுத்தவரை நாடு முழுவதும் பொது சட்டம் இருந்தாலும், ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒவ்வொரு விதமான சட்டம் மற்றும் ஒவ்வொரு நகருக்கும் தனித்தனி சட்டம் என அங்கு உண்டு.\nஅதன்படி அலபாமா நகரில் நூலக புத்தகத்தை திருப்பி தராதவர்களுக்கு தண்டனை வழங்க புதிய அவசர சட்டத்தை உருவாக்கி உள்ளனர். அதன்படி, புத்தகத்தை திருப்பி தராதவர்களுக்கு முதல்கட்டமாக ரூ.6 ஆயிரம் அபராதம் வழங்கப்படும். மேலும் அவர்கள் குற்றத்தை பொறுத்து அவர்களுக்கு ஒரு மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்படும். இந்த சட்டம் உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.\nஇதுதொடர்பாக நூலக இயக்குனர் பால் லாரிட்டா கூறும்போது, நூலகத்தில் இருந்து புத்தகத்தை திருப்பி தராதவர்கள் நூலக புத்தகத்தை மட்டும் திருடவில்லை. அவர்கள் மக்களின் வரிப்பணத்தை திருடுகிறார்கள். எனவே தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று கூறினார்.\nதேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் ஜனாதிபதி\nசிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார். டில்லியில் நடந்த விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. மொத்தம் 339 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. இவர்களில் 23 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். நல்லாசிரியர் விருது, ரூ.50 ஆயிரம், வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது.\nகேரள மக்களின் முக்கியப் பண்டிகையான ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுதில்லியில் செயல்பட்டு வரும் "Punjab National Bank"வங்கியில் நிரப்பப்பட உள்ள191மேலாளர்,அதிகாரிபணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.ஆன்லைன் எழுத்துத் தேர்வுதேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பதாரர்கள் சம்ந்தப்பட்ட துறைகளில் இளங்கலை,முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.ஆன்லைனி எழுத்துத் தேர்வு அக்டோபர்10-ஆம் தேதி நடைபெறும். பொது,ஓபிசி,முன்னாள் ராணுவத்தினர் ரூ.400-ஐயும்,எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.50-ஐ விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.pnbindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் வரும்9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஅரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பதவி உயர்வுக்கானதுறைத்தேர்வுகள் ஆண்டுக்கு2தடவை (மே, டிசம்பர்) டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில், இந்த ஆண்டுக்கான 2-வது துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கு செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்.\nபுதிய வாக்காளர் பட்டியல் அறிக்கை கலெக்டர்களுக்கு கமிஷன் கெடு\nபுதிய வாக்காளர் பட்டியல் அறிக்கையை, வரும், 19ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்' என, மாவட்ட கலெக்டர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.\nதமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக, ஊரக மற்றும் நகர்ப்புற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்து வெளியிடுவது குறித்து, ஆகஸ்ட், 8ல், மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.\nசட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் அடிப்படையில், உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி, தேர்தல் அலுவலர்களான மாவட்ட கலெக்டர்கள் மூலம் முடுக்கி விடப்பட்டு முடியும் நிலையில் உள்ளது.\nஇதுகுறித்த அறிக்கையை, வரும், 19ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டு உள்ளது.\n வாக்காளர் பட்டியல் வரைவு பிரதிகளை, 12ம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும்; பட்டியல் அச்சுப்பணிகளை, 16க்குள் முடிக்க வேண்டும்\n வாக்காளர் பட்டியலை, 17ம் தேதிக்குள் வெளியிட வேண்டும்; முடிவு அறிக்கையை, வரும், 19க்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்­தி­யாவின் மொத்த சேமிப்பு விகிதம் குறைந்து வரு­வ­தா­கவும், இதை கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்றும் டி.பி.எஸ்., அறிக்கை தெரி­விக்­கி­றது. முத­லீட்­டிற்கு உள்­நாட்டு சேமிப்பு அவ­சியம் என கரு­தப்­ப­டு­கி­றது. இல்லை என்றால் இதற்­காக வெளி­நாட்டு முத­லீ­டு­களை அதிகம் சார்ந்­தி­ருக்க வேண்டும். இந்­நி­லையில்\nசர்­வ­தேச நிதியம் தக­வலின் படி, இந்­தி­யாவின் மொத்த சேமிப்பு உள்­நாட்டு உற்­பத்­தியில், 31 சத­வீ­த­மாக குறைந்­துள்­ளது.\nஇஸ்ரோ தகவல்தொடர்பு, காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்காக 2,211 கிலோ எடை கொண்ட 'இன்சாட்-3டிஆர்' என்ற செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோள் ஜி.எஸ்.எல்.வி எப்5 ராக்கெட் மூலம் செப்டம்பர் 8 ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இது இந்தியாவின் 10-வது ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும்.\nமுன்னாள் ஆசிரியர்களின் பாதம் கழுவி நன்றிக் கடன்: நாகர்கோவிலில் நெகிழ்ச்சியூட்டிய ஆசிரியர் தின விழா\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் டி.வி.டி. மேல்நிலை மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் முன்னாள் ஆசிரியர்களின் பாதங்களை கழுவி ஆசி பெற்ற இந்நாள் ஆசிரியர்கள்.\nஒவ்வொரு சாமானிய மனிதனின் வாழ்வியல் நகர்தலிலும், அவர் தம் சாதனை பயணத்திலும், நிச்சயம் ஒரு ஆசிரியரின் பங்களிப்பு இருக்கும். அந்த வகையில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முன்னாள் ஆசிரியர்களின் பாதம் கழுவி, ஆசி பெற்று, முன்னோரை குளிர வைத்துள்ளனர் நாகர்கோவில் டி.வி.டி. மேல்நிலை மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் இந்நாள் ஆசிரியர்கள்.\nஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு நாகர்கோவில் டி.வி.டி. மேல்நிலை மற்றும் ஆசிரியர் பயிற்சி பள்ளியின் சார்பில், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களின் இதய சங்கமம் என்னும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பள்ளியில் பணி புரிந்து, பணி நிறைவு பெற்றுள்ள 69 ஆசிரியர்களை அழைத்து வந்து உரிய மரியாதை செய்தனர்.\nபள்ளியின் ஆட்சிக் குழுத் தலைவர் முனைவர் மாணிக்க வாசகம், செயலாளர் நாகராஜன் ஆகியோர் ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்நிகழ்வில், டி.வி.டி. பள்ளியின் தலைமையாசிரியர் சிதம்பர தாணு மற்றும் பள்ளியின் அனைத்து பிரிவு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.\nசிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், ``இது ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி. அன்று இவர்கள் காலத்தில் எல்லாம் ஆசிரியப் பணிக்கு மிக பெரிய மரியாதை இருந்தது. இப்போது முகநூல், வாட்ஸ் அப் என இணைய தள பயன்பாட்டின் பெருக்கத்தினால் பலவகை சமூக வளைதளங்களும் வந்து விட்டன. அவை மாணவர்களை, அவர்களது ஒழுக்கக் கூறுகளை பெருமளவில் சிதைக்கவே செய்கின்றன. அவர்களது கவனத்தையும் திசை திருப்புகின்றன.\nஅந்த சூழலிலும் மாணவர்களை மீட்டுக் கொண்டு வரும் பணியை, மாணவனை மாண்பு உள்ளவனாய் தக்கவைக்கும் பணியை ஆசிரியர்கள் செய்வது பாராட்டுக்குரியது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இப்பள்ளியில் முன்னாள் ஆசிரியர்களின் சங்கமம் நடத்தி, மரியாதை செய்வதே அன்றைய ஆசிரியர்களின் புலமைக்கு சான்றாக உள்ளது” என்றார்.\nபணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் அன்றைய காலத்தில் ஆசிரியர் பணியின் போது தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்திய அளவில் தனி சிறப்பு பெற்று விளங்கிய, பிரமோஸ் ஏவுகணையை தயாரித்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, நம்பிநாராயணன் போன்றோருக்கு பாடம் எடுத்த அனுபவங்களையும் அவர்கள் தெரிவித்தனர்.\nஆசிரியர்கள் அவர்களைக் கவர்ந்த மாணவர்களையும் பற்றிப் பேசினர். ஆசிரியப் பணியில் அவர்கள் பின்பற்றிய அறக்கூறுகளையும் பகிர்ந்தனர்.\nஇந்நிகழ்வு குறித்து டி.வி.டி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் சிதம்பரதாணுவிடம் பேசினோம்.’’நானும் இதே பள்ளியில் படித்தவன் தான். எனக்கு ஒன்றாம் வகுப்பில் பாடம் எடுத்த ஆசிரியர், நான் பணிக்கு சேர்த்த போது ஓய்வு பெற்ற ஆசிரியர், நான் தலைமையாசிரியர் ஆகும் போது ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் என மூன்று தலைமுறைகளை என்னளவிலேயே இன்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதேபோல் அவர்களது அனுபவங்கள் தான் எங்களை செதுக்க உள்ளது. சங்கமம் என நிகழ்வுக்கு பெயர் வைத்தாலும் ஒரு குடும்ப விழாவாகவே இது நிகழ்ந்துள்ளது” என்றார்.\nநிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற வயதான ஆசிரியர்களை அமர வைத்து, அவர்களை இந்நாள் ஆசிரியர்கள் பாதம் கழுவி, அவர்களது ஆசீர்வாதத்தை பெற்றனர். நிகழ்வின் முடிவில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆனந்த கண்ணீர் அலையில் திளைத்துச் சென்றனர்\nஒன்றா… பலவா… எது சிறந்தது? - இதுதான் அறிவுலகின் மிகப் பழமையான கேள்வி. ஒன்றுதான் சிறந்தது என்பது அறிவுலகம் எழுதிய பழைய விடை. விடையை விளக்க எண்ணற்ற கதைகள்!\nபூனை - நரிக் கதை அவற்றில் ஒன்று. இந்தக் கதை இல்லாத நாடு கிடையாது. கீழை நாடுகளில் பூனை நரி. மேற்கு நாடுகளில் முள்ளம்பன்றி - நரி!\nகதை இதுதான். பூனையும் நரியும் நண்பர்கள். ஒருநாள், ‘உனக்கென்ன தெரியும்? எனக்கென்ன தெரியும்?’ என்று இரண்டும் பேசிக்கொள்கின்றன. ‘எனக்குச் சிறுசிறு உபாயங்கள் பல தெரியும்’ என்றது நரி. ‘எனக்கு ஒரே ஒரு பெரிய உபாயம் தெரியும்’ என்கிறது பூனை.\nசற்று நேரத்தில் வேடர்கள் வருகிறார்கள். அவர்க ளுடன் வேட்டை நாய்கள் வருகின்றன. தப்பிக்கப் பல உபாயங்கள் செய்தும் நரியால் முடியவில்லை. நாய்களிடம் மாட்டிக்கொள்கிறது. பூனைக்கு மரம் ஏறத் தெரியும். சரசர என்று மரத்தில் ஏறித் தப்பிக்கிறது. ‘எனக்குத் தெரிந்த ஒரே உபாயத்தால் தப்பித்துவிட்டேன் பார்’ என்று மாட்டிக்கொண்ட நரியைப் பார்த்துச் சொல்கிறது பூனை.\nபல வேண்டாம்; ஒன்று போதும்\nபல வேண்டாம்; ஒன்று போதும் என்பது கதையின் நீதி. பிரச்சினையைச் சுலபமாக்கி வழங்கப்பட்ட நீதி. இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது அதே நீதி!\nகாலம் மாற மாற, மாற்றத்துக்கேற்ற திறன்கள் தேவைப்படுகின்றன. இப்போது ஒன்று போதாது; பல வேண்டும் - இது பன்மையைப் போற்றும் காலம்!\nமரத்தில் ஏறித் தப்பிக்கையில், மரத்தில் மலைப் பாம்பு இருந்தால் பூனை என்ன செய்யும்? - எனப் புதுக் கேள்விகள் எழுந்தபோது பழைய நீதி தடுமாறியது.\n2008 பொருளாதார வீழ்ச்சியின்போது, ஒற்றை நோக்குப் பெருநிறுவனங்கள் தோல்வியைத் தழுவ, பல சிறு திறன் கொண்ட நிறுவனங்கள் தாக்குப்பிடித்து நின்றதை நாம் அறிவோம்.\nஇன்று வரை, ‘ஒன்றுதான் சிறந்தது’ என்ற பிடிவாதம் ஊன்றிக் கிடக்கும் இடம் - பள்ளிக்கூடம். அது முன்வைக்கும் ஒன்று - தேர்வு!\nவிளையாட்டு, கலை, தொழில்திறன் - எல்லாம் இருக்கட்டும் ஒரு ஆறுதலுக்கு. நாய்கள் துரத்தும்போது இதிலொன்றும் சரிப்படாது. தேர்வுதான் காப்பாற்றும் சக்தி! அது அளந்து சொல்வதுதான் உன் அறிவு. ‘வனத்துல திரிஞ்சாலும் இனத்துல வந்து அடை’ என்று சொலவடை சொல்வதுபோல, அங்கே, இங்கே போய் லேசாக எட்டிப் பார்த்தாலும், கடைசியில் பரீட்சை ஹாலுக்கு வந்து சேர்!\nசில நீதிகளை, நம்பிக்கைகளைத் தலைகுப்புறக் கவிழ்த்துத்தான் புதிய சிந்தனை பிறந்திருக்கிறது. பூமிதான் பிரபஞ்சத்தின் மையம் என்ற கருத்து கவிழவில்லையா? கடவுளே கலை இலக்கியப் படைப்புகளின் மையம் என்ற நிலை மாறி, மனிதனே மையம் என்ற மறுமலர்ச்சி தோன்றவில்லையா? வகுப்பறைகள் விதிவிலக்கா?\nவிழிப்புணர்வு காணாத இடமல்ல வகுப்பறை. ‘ஆசிரியரே மையம்’, ‘விவரித்தலே கற்பித்தல்’ என்ற போக்குகள் ஆட்டங்கண்டு வருகின்றன. பள்ளிக்கு வருமுன் அவர்களுக்கு எதுவும் தெரியாது. அல்லது ஒவ்வொன்றையும் தவறாகப் புரிந்துவைத்திருப்பார்கள்’ என்று குழந்தைகள் குறித்த பள்ளி மதிப்பீடுகள் தகர்ந்துவருவதும் உண்மை.\nமனதுக்கு இதமான சிறு சிறு முயற்சிகள் ஆங்காங்கே தென்படுகின்றன. ஆனால், குழந்தைகளின் ஓராயிரம் ஆற்றல்களை மலர வைக்கும் பெருமாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. உலகெங்கும் பள்ளித் தேர்வுமுறை இளக்கம் பெற்று வரும்போது, இந்தியாவில் அது மேலும் மேலும் இறுகிவருகிறது. தேர்வு என்ற ஒன்றை நோக்கிப் பிள்ளைகளைத் துரத்துவதும், குழந்தைகளுக்குள் இருக்கும் கலைஞர்களையும், விஞ்ஞானிகளையும், வீர வீராங்கனைகளையும் பிரித்து வெளியேற்றுவதும் உக்கிரமாய்த் தொடர்கிறது.\nஇயல்புப்படுத்துவது (normalisation) என்ற பெயரில் நடக்கும் சமூக அதிகாரம் குறித்து பூக்கோ (Foucault) நிறையப் பேசுவார். சம்பளம் வாங்குகிறார்கள் என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் மீதும், சம்பளம் வாங்கத் தயாராகிறார்கள் என்ற அடிப்படையில் மாணவர்கள் மீதும் இயல்புப்படுத்துவது என்ற அதிகாரம் பள்ளியில் பாய்கிறது. தேர்வுதான் பள்ளியின் இயல்பு. விலகினால்? ‘‘நாளைக்குப் பரீட்சை. இன்னைக்கு மேட்ச் ஆடப் போறேங் கிறான்… சுத்தக் கிறுக்கன்!”ஆற்றல்களைப் பறிகொடுத்த ஆசிரியர்களுக்கும் கணக்கில்லை. கலைத்திறன்கொண்ட ஆசிரிய நண்பரைப் பாராட்டிச் சொன்னபோது, நிர்வாகி என்னிடம் சலித்துச் சொன்னார், ‘‘பாட்டெல்லாம் நல்லாத்தான் பாடுவாரு.. ஆனா, ரிசல்டைத்தான் காணோம்!”\nஆசிரியரைப் பல கண்கள் கவனிக்கின்றன. அசட்டையாகச் சில கண்கள்; ஆதங்கத்துடன் சில கண்கள்; எப்போதும் விமர்சனத்துடன் சில கண்கள்.\nஆனால் இளங்கண்கள்... எதிர்காலத்தின் கண்கள் நம்பிக்கையுடன் பார்ப்பது ஆசிரியரை மட்டுமே. தங்களையும் தங்கள் திறன்களையும் கண்டுபிடித்துக் கொடுக்க இவரால் முடியும் என்ற எதிர்பார்ப்புடன் கவனிக்கின்றன. ஆசிரியரின் பெருமை - இந்தக் கண்களும் கண்களின் எதிர்பார்ப்புகளும்தான்!\nபோக வேண்டிய தூரமும், தாண்ட வேண்டிய தடைகளும் ஏராளம் இருக்கின்றன. தேர்வு தாண்டிக் குழந்தைகளைப் புரிந்துகொள்வதும், கொண்டாடு வதும்தான் எடுத்துவைக்க வேண்டிய முதல் எட்டு.\nஓய்வுபெற்ற ஆசிரியர். ‘எனக்குரிய இடம் எங்கே?’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.\nபுத்தகத்தை திருப்பி தராவிட்டால் 1 மாதம் ஜெயில் தண்...\nபஞ்சாப் நேஷனல் வங்கியில்191மேலாளர் பணிக்கு விண்ணப்...\nதேசிய தரவரிசை பட்டியல் தயாரிக்கப் பதிவு: கல்வி நிற...\nபுதிய வாக்காளர் பட்டியல் அறிக்கை கலெக்டர்களுக்கு க...\nமனவளர்ச்சி குன்றியவர்களை குணப்படுத்தும் குதிரையேற்...\nமுன்னாள் ஆசிரியர்களின் பாதம் கழுவி நன்றிக் கடன்: ந...\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளி ஆசிரியரின...\nமாநில நல்லாசிரியர் விருதுக்கு சேலம் மாவட்டத்தில் 1...\nஆசிரியர் தினம்: ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து\nசெப். 21-இல் எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்டக் கலந்தாய்வ...\nடிப்ளமோ நர்சிங்' படிப்புக்கு 6ம் தேதி முதல்விண்ணப்...\nஆசிரியர் தினவிழா பாடல். அனைத்து ஆசிரியர்களுக்கும் ...\nமாணவர்களின் நலனுக்காக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒன்ற...\nதேசிய தகவல் தொழில்நுட்ப விருதுபெறும் நமது ஆசிரியர்...\nவேலூர் மாவட்டத்தில் 2015-16-ன் தமிழக அரசின் டாக்டர...
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி:சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக மனு! – AanthaiReporter.Com\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி:சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக மனு!\nOctober 8, 2018 October 9, 2018 by aanthai\nதொடர் சர்ச்சைக்கும், எதிர்ப்புக்கும் உள்ளான சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 28 ஆம் தேதி வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு வழங்கியது. பெண்களை அனு மதிக்கும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவசம் போர்ட் தலைவர் பத்மகுமார் தெரிவித்தார். அதே சமயம் கேரள முதல்வர் பினராயி விஜயனும், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என்று தெரிவித்தார். மேலும் சபரிமலை கோயிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பும், வசதியும் செய்து கொடுக்கப்படும் எனவும் கூறினார்.\nஇந்த தீர்ப்பை அமல்படுத்தும் நடவடிக்கையில் கேரள அரசு தீவிரமாக இறங்கியது. இதற்கு கேரளா வில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. தீர்ப்புக்கு எதிராகவும், சபரிமலை ஐயப்பன் கோவிலின் பாரம்பரிய வழிபாட்டு முறையை பாதுகாக்க கோரியும் கேரளாவில் பல்வேறு இடங்களில் நேற்று ஐயப்ப பக்தர்கள் பேரணி நடத்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nபிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று திருவனந்தபுரத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதில் கலந்து கொள்ள ஐயப்பன் கோவிலின் தலைமை தந்திரிகள் மற்றும் கோவிலை முன்பு நிர்வகித்து வந்த பந்தளம் அரச குடும்பத்தினர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதில் பங்கேற்க அவர்கள் மறுத்து விட்டனர்.\nஇதற்கிடையே தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத் தலைவர் ஷியாலஜா விஜயன் உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அரசியல் சாசனத்துக்கு எதிராக இந்த எதிர்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevபிரதமர் மோடியை சந்தித்த போது பேசியது என்ன? முதல்வர் எடப்பாடி விளக்கம்!\nNextஇஸ்ரோ-வில் அப்ரென்டிஸ் வாய்ப்பு!\nகூர்கா இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!\nJune 18, 2019 June 18, 2019 by aanthai\nபுளிச்ச மாவு விவகாரம் – நடந்தது என்ன? – ஜெயமோகன் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்\n‘பஸ் டே’ என்ற பெயரில் சென்னையில் நடந்த விபரீதம்- வீடியோ!\nJune 18, 2019 by aanthai\nதண்ணிர் பிரச்னை ..அவ்வளவ்வா இருக்குது! – ராமதாஸ் கன்பியூஸ்!\nJune 17, 2019 June 18, 2019 by aanthai\nகிரிக்கெட் ;பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!\nJune 16, 2019 June 17, 2019 by aanthai\nஅப்பா என்ற தகப்பன் சாமி..!\nJune 16, 2019 by aanthai\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் பறிமுதலுடன்5லட்சம் ரூபாய் அபராதம்!\nJune 16, 2019 June 16, 2019 by aanthai\nஹாங்காங் மக்கள் போராட்ட எதிரொலி : சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு தடை!
கொரோனா மூன்றாம் அலை இந்த மாதமே தொடங்கிவிடும் - ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பகிர் தகவல்!!\nHome செய்திகள் தகவல் கொரோனா மூன்றாம் அலை இந்த மாதமே தொடங்கிவிடும் – ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் பகிர் தகவல்!!\nகொரோனா மூன்றாம் அலை இந்த மாதமே தொடங்கிவிடும் என்ற அதிர்ச்சி தகவலை ஐதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.\nஇந்தியா முழுவதும் எங்கு பார்த்தாலும் தற்போது கொரோனா மூன்றாம் அலை பற்றிய பேச்சுக்கள் தான் எழுந்து வருகிறது. இரண்டாம் அலையால் ஏற்பட்ட பாதிப்புகளே முழுதாக குறையாத நிலையில் மூன்றாம் அலை உலக மக்களை தீவிரமாக அச்சுறுத்தி வருகிறது.\nஅதற்கேற்றாற் போல் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கு விதிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஐதராபாத் மற்றும் கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கொரோனா மூன்றாம் அலை எப்பொழுது உருவாகும் போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளனர்.\nஅவர்களின் கூற்றுப்படி இந்த மாதமே கொரோனா மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், மேலும் வரும் அக்டோபர் மாதத்தில் அது உச்சத்தை தொடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அலை தொடங்கும் போது தினசரி தொற்று எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleக்ளோஸப் போஸ்… அதும் அந்த இடத்தில… அஸ்வின் நாயகியின் கிளாமர் அட்டகாசங்கள்!!!\nNext articleகாரசாரமான மட்டன் சுக்கா ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!
இன்றைய ராசி பலன் 02-10-2017 | Raasi Palan 02/10/2017 - Visar News\nHome » Raasi Palan » இன்றைய ராசி பலன் 02-10-2017 | Raasi Palan 02/10/2017\nஇன்றைய ராசி பலன் 02-10-2017 | Raasi Palan 02/10/2017\nமேஷம்: உங்கள் அணுகு முறையை மாற்றிக் கொள் வீர்கள். பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள்.\nநாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமை யான நாள்.\nரிஷபம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபா ரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: காலை 8.13 மணி வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் எதிலும் அவசரப்பட வேண்டாம். நண்பகல் முதல் கணவன்- மனைவிக் குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி கள் வரும். உறவினர்கள் உதவுவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகடகம்: காலை 8.13 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டி யிருக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்யோ கத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். சிக்கனம் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகை யில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகன்னி: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங் களை முன்னின்று நடத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபா ரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nதுலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதுமை படைக்கும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளால் ஆறுதல் அடைவீர்கள். தாயாருடன் மோதல்கள் வரக்கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதனுசு: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். சிறப்பான நாள்.\nமகரம்: காலை 8.13 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென் ஷன் வந்து செல்லும். நண்பகல் முதல் மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகும்பம்: காலை 8.13 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமீனம்: திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளை களால் டென்ஷன் அதிகரிக் கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.
Aval Vikatan - 28 July 2015 - பணம், உங்கள் பலம்! | Money Is Your Strength - Vikatan\nஅவசியம் எடுத்தாக வேண்டும்... ஆரோக்கிய காப்பீடு!\nகஸ்தூரி, மேகலா இருவரும் அலுவலகத் தோழிகள். சென்னை, தாம்பரத்தில் பக்கத்து பக்கத்து வீடுகளில் வாடகைக்குக் குடியிருப்பவர்கள். மறைமலைநகரில் இருக்கும் உடல் நலமில்லாத தோழி வேணியைப் பார்க்க கால்டாக்ஸியில் சென்றுகொண்டிருந்தார்கள்.\n‘‘வாடகை நாளுக்கு நாள் ஏறிட்டிருக்கு. எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி வாடகை வீட்டிலேயே காலம் தள்ளு வது..?” என்றார் கஸ்தூரி.\n‘‘கொஞ்சம் பணம் சேர்த்து வெச்சிருக் கேன். படப்பை பக்கத்துல மனை வாங்கிப் போடலாம்னு இருக்கேன்..!” என்று மேகலா பதில் சொல்லும்போது, தட்... தடார்! முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென வேகத்தைக் குறைக்க, கால் டாக்ஸியின் வேகத்தை உடனடியாக டிரைவரால் குறைக்க முடியா மல் போக... விபத்து. கஸ்தூரி, மேகலா இரு வருக்கும் படுகாயம். தோழி சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையிலே இவர் களும் அனுமதிக்கப்பட்டனர்.\nமருத்துவமனை செலவு5லட்ச ரூபாய்! ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி (ஆரோக்கிய காப்பீடு) எடுத்து இருந்ததால், கஸ்தூரிக்கு மருத்துவமனைச் செலவு இல்லை. இந்த பாலிசிக்கு அவர் கட்டியிருந்த பிரீமியம் 10,000 ரூபாய்தான்!\nஆனால், பிரீமியச் செலவை எண்ணி ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்கவில்லை மேகலா. இதனால், மனை வாங்க வைத்திருந்த5லட்சம் ரூபாய் கரைந்து போனது!\nஇனி என்றைக்கு காசு சேர்த்து மனை வாங்குவது, வீடு கட்டுவது என்ற கவலையில் மேகலா மெலிந்து போனார். அவர் வாழ்க்கை, பழைய நிலைக்குத் திரும்ப பல ஆண்டுகள் ஆனது. இப்போது மேகலாவும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்!\nஹெல்த் இன்ஷூரன்ஸ் என்றால் என்ன?\nதிடீர் விபத்து, காயம் ஏற்பட்டால் அல்லது உடல் நலக்குறைவு போன்றவற்றால் ஏற்படும் மருத்துவச் செலவை சமாளிக்க உதவும் நிதி பாதுகாப்புதான், ஹெல்த் இன்ஷூரன்ஸ். இந்த விவரங்களைப் பாருங்கள்... கடந்த 2000-ம் ஆண்டில் நுரையீரல் புற்றுநோய்க்கான மருத்துவச் செலவு சுமார் ரூ.1.75 லட்சமாக இருந்தது. அது 2015-ல் ஏறக்குறைய ரூ.5லட்சமாக அதிகரித்திருக்கிறது. இதேபோல், மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சை செலவு ரூ. 1.5 லட்சத்திலிருந்து ரூ.6லட்சமாக அதிகரித் துள்ளது. இவை சின்ன உதரணங்கள்தான்.\nஇப்படி மருத்துவச் செலவு நாளுக்கு நாள் அதிகரித் துக் கொண்டிருக்கும் நிலையில் ஏதாவது நோய் வந்தால், அதற்கான மருத்துவச் செலவை பெரும்பாலானவர்களால் சமாளிக்க முடியாது. அதேநேரத்தில், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்திருக்கும்பட்சத்தில் இது போன்ற செலவுகளை சுலபமாக சமாளித்துவிடலாம்.\nஆயிரங்களில் பிரீமியம் கட்டி, லட்சங்களை மிச்சப்படுத்தும் ஆரோக்கிய காப்பீடு அவசியம்தானே?!\nவேலை பார்க்கும் 28 வயதான பெண், அவரின் கணவர் (30 வயது) மற்றும்5வயது பிள்ளைக்கு5லட்சம் ரூபாய்க்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்தால் ஆண்டு தோராய பிரீமியம்..
Manmo7 | SMTamilNovels\nHome Uncategorized Manmo7\nபொன் மணற்பரப்பில் நடப்பட்டிருந்த குடையின் கீழ் அமர்ந்திருந்தார்கள் சக்திவேலும் திவாகரும். குடும்பமாகச் சுற்றுலா வந்திருந்தார்கள். மிதமான வெயிலோடு கடற்கரை கொஞ்சம் அமைதியாகக் தான் இருந்தது.\nதினகர் வரவில்லை. தொழில் ரீதியாக வெளிநாடு போயிருந்ததால் இவர்கள் மட்டுமே வந்திருந்தார்கள்.\n“என்னால நம்பவே முடியலை திவா. பையன் திடுதிடுப்புன்னு கேட்கவும் நான் ஆடிப்போயிட்டேன்.” சக்திவேலின் குரலில் கழுத்தைத் தடவினார் திவாகர்.\n“எனக்கென்னவோ இது நல்ல விஷயம் ன்னு தான் தோணுது சக்தி.”\n“திவா… நிஜமாத்தான் சொல்லுறியா? இது சரியா இருக்குமா?”\n“மித்ராக்கு இதை விட நல்ல சம்பந்தம் கிடைக்காதுன்னு தான் எனக்குத் தோணுது சக்தி.”\n“விசாரிச்ச வரைக்கும் பையன் கொஞ்சம் உல்லாசி போல தெரியுதேப்பா?” சக்திவேலின் முகத்தில் இப்போது கவலைகளின் சாயல் குடிகொண்டது.\n“இப்போ யாரு தான் உல்லாசி இல்லை சக்தி? அப்படியே இருந்தாலும் வெளி உலகத்துக்குப் போடுற வேஷமா இருக்கும். அதை விட கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும் நான் இப்படித்தான்னு வெளிப்படையா வாழ்றவன் பெட்டர் இல்லையா?”\n“நீ சொல்றதும் சரிதான்.”\n“மித்ராக்கிட்ட நான் இன்னும் பேசலை திவா.”\n“இதுல பேச என்ன இருக்கு. தேவகி எதுவும் சொல்லப் போறது இல்லை. அப்புறம் என்ன? நாம என்ன கெடுதலா பண்ணப் போறோம்? சட்டுப் புட்டுன்னு வேலையை முடி சக்தி.” இலகுவாகச் சொல்லி விட்டு அவர் மனைவியோடு போய் இணைந்து கொண்டார் திவாகர். சக்திவேல் போகும் தனது நண்பனையே பார்த்திருந்தார்.\nதிவாகரைப் போல அவரால் அத்தனை இலகுவாக இதற்கு முடிவு கட்ட முடியவில்லை. சந்திரசேகர் உயிரோடு இருந்திருந்தால் இப்படித்தான் தனது மகளுக்கு அவசர கோலத்தில் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்திருப்பானா?\nஇத்தனைக்கும் தேவகி வேறு வெகுளி. தங்களையே உலகம் என்று நம்பி இருக்கும் ஜீவன். அந்த நம்பிக்கைக்குத் தான் அவர்களுக்கு நியாயம் செய்ய வேண்டாமா?\nதிவாகரின் போக்கு கொஞ்ச காலமாக விசித்திரமாகத் தான் தோன்றியது சக்திவேலிற்கு. தொழிலில் திடீர் சரிவு ஏற்பட்ட போதும் இப்படித்தான் நடந்து கொண்டார்.\nமுதலுக்கு மோசம் வந்து விடக்கூடாது என்று அவர் செய்த வாதத்தில் நியாயம் இருந்ததால் தான் அன்றும் சக்திவேல் எதுவும் பேசவில்லை. ஆனால் இப்போதும் ஏன் இப்படியொரு அலட்சியம்?\nஒரு பெண் பிள்ளையின், அதுவும் தன் நண்பனின் மகள் வாழ்க்கையில் எடுக்கப்போகும் முக்கியமான முடிவு. அதை இத்தனை அலட்சியத்துடன் செய்வதா?\n‘ம்ஹூம்… திவா சரிப்பட்டு வரமாட்டான். தினகரிடம் தான் பேச வேண்டும்.’ எண்ணியபடியே சக்திவேலும் எல்லோரோடும் போய் இணைந்து கொண்டார்.\nதனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் சக்திவேலையே இமைக்காமல் பார்த்திருந்தாள் மித்ரமதி. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.‌ காதுக்குள் ‘ஙொய்…’ என்று ஒரு சத்தம் மட்டும் தான் கேட்ட வண்ணம் இருந்தது.\n“பார்க்க நல்ல பையன் போலத்தான் தெரிஞ்சுது சக்தி ண்ணா. கொஞ்சம் விசாரிச்சுட்டு உங்க எல்லாருக்கும் திருப்தியா இருந்தா சரி ன்னு சொல்லிடுங்க.” இது தேவகி.\n“வாயை மூடிக்கிட்டுச் சொல்லுற பேச்சைக் கேளு மித்ரா. மாமாங்க சொன்னா அது சரியாத்தான் இருக்கும்.”\n“நீ எதுவும் பேசாதே. என்ன பண்ணணும்னு எங்களுக்குத் தெரியும். இங்க யாரும் உன்னோட அபிப்பிராயம் கேட்கலை.” கறாராகப் பேசினார் தேவகி. மகளின் பிடிவாதம் அவர் அறிந்தது தானே.\n“தேவகி…‌ எனக்கு உன் கையால ரெண்டு தோசை, மொறு மொறுன்னு… ப்ளீஸ்.” சக்தி கேட்கவும்,\n“இதோ…” என்று நகர்ந்து விட்டார் தேவகி. மகளிடம் தனியாகப் பேச அவர் முயல்வது புரிந்தது. ஏதோ… நல்லது நடந்தால் சரிதான்.\n“இங்கப்பாரு மித்ரா, உனக்கும் வயசாகுது. உனக்குன்னு ஒரு சில கொள்கைகள் இருக்கலாம், நான் அதைத் தப்புச் சொல்லலை. ஆனா அதுவே உன்னோட வாழ்க்கைக்குப் பாதகமா அமையும் போது அதை எங்களால ஏத்துக்க முடியாது.” தேவகி நகரவும் ஆரம்பித்தார் சக்திவேல்.\n“அம்மாவை நினைச்சுப் பாரு. அப்பாவும் இல்லாம தனியா நிக்குறாங்க. வயசுப் பொண்ணை வீட்டுல வெச்சிருக்கும் போது எவ்வளவு கவலை அவங்க மனசுல இருக்கும்?”\n“ஏன் மாமா? கல்யாணம் பண்ணாம ஒரு பொண்ணால தனியா வாழ முடியாதா?”\n“முடியும் தான். இல்லேங்கலை. ஆனா எத்தனை காலத்துக்கு? நாளைக்கே நாங்க எல்லாரும் போய் சேர்ந்துட்டா உனக்குன்னு யாரிருக்கா?”\n“யாரும் தேவையில்லை மாமா.”\n“இப்போ அப்படித்தான் தோணும் மித்ரா. ஆனா வயசு போகும் போது புரியும்… வாழ்க்கையில நமக்குன்னு ஒரு துணை எவ்வளவு அவசியம் ன்னு.”\nமித்ரமதி தலையைக் குனிந்து கொண்டாள். எதிர்ப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று புரிந்தது.\n“நான் நல்லா விசாரிச்சுட்டேன் மித்ரா. எனக்குத் திருப்தியா இருக்கு. கார்த்திக் உனக்கு சரியா இருப்பான்னு எனக்குத் தோணுது. நீ நல்லா யோசிச்சு உன்னோட முடிவைச் சொல்லும்மா.”\nமித்ரமதி எந்தவித வாக்குவாதத்திலும் இறங்கவில்லை. இவர்களோடு பேசிப் பயனில்லை என்றே தோன்றியது. சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழலாம். அதுதான் சரியாக இருக்கும்.\nஅன்று இரவே கார்த்திக்கை அழைத்தாள் பெண். லண்டனில் அப்போது இரவு ஒன்பது மணியாக இருக்க மான்ஹட்டனில் நேரம் பிற்பகல் நான்கு.\nமார்க் உடன் ஏதோவொரு முக்கியமான கணக்கு வழக்கில் ஆழ்ந்திருந்த கார்த்திக்கைக் கலைத்தது ஃபோன்.\n“ம்ப்ச்…” ஒரு எரிச்சலோடு அதை எடுத்தவன் நம்பரைக் கூடப் பார்க்காமல் அழைப்பை ஏற்றான்.\n“நான்… மித்ரமதி பேசுறேன்.” ஆவேசமாக அழைத்தவளை லேசாகத் தடுமாற வைத்தது அவள் காதில் வந்து மோதிய அவன் குரல்.\n“ஹாய் மித்ரா.” அத்தோடு ஃபைலை மூடி வைத்தவன் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து கொண்டான். அதற்கு மேல் மார்க் அங்கு நிற்கவில்லை.\nஇந்தியாவில் நான்கு நாட்கள் தங்கி விட்டுப் போன வாரம் தான் அமெரிக்கா திரும்பி இருந்தான். நந்துவின் கல்யாணம் திருப்தியாக நடந்து முடிந்த நிறைவு அவன் மனதை நிரப்பி இருந்தது.\nபார்கவியும் அவன் எதிர்பார்த்தது போலவே அமைந்து விட அவர்கள் குடும்பம் நடத்தும் அழகைக் கண்ணாறப் பார்த்து விட்டு வந்திருந்தான்.\n“இன்னும் தூங்கலை? இப்போ என்ன டைம் அங்க?” நிஜமாகவே அவன் குரலில் அக்கறை தெரிந்தது.\n“ஏன்? என்னாச்சு? எனி ப்ராப்ளம் மித்ரா?”\n“சக்திவேல் மாமா வந்திருந்தாங்க.”\n“ஓ… அதுக்கும் நீங்க தூக்கத்தைத் தொலைக்கிறதுக்கும் என்ன சம்பந்தம் மித்ரா?”\n“எனக்கு அவர் சொல்லுற விஷயத்துல அவ்வளவு நாட்டமில்லை மிஸ்டர். கார்த்திக்.” தெளிவாக, நிதானமாக வந்தது மித்ரமதி யின் பதில்.\nஇதுவரை அவளாக அவனைப் பெயர் சொல்லி அழைத்ததில்லை. கார்த்திக் வற்புறுத்தித் தான் அழைக்க வைத்திருந்தான். ஆனால் இப்போது அழுத்தம் திருத்தமாக அவன் பெயரை உச்சரித்தாள் பெண்.\n“ம்…” அந்தப் பதிலை ஜீரணிக்கச் சற்று நேரம் எடுத்துக் கொண்டான் கார்த்திக். முதல் நிராகரிப்பு! அதுவும் ஒரு பெண்ணிடமிருந்து. அவன் தன்மானம் அந்த இடத்தில் பலமாகவே அடிவாங்கியது.\n“காரணம் என்ன ன்னு நான் தெரிஞ்சுக்கலாமா மித்ரா?”\n“பெருசா ஒன்னுமில்லை. கல்யாணத்துல இஷ்டமில்லை.”\n“ஓ… ஏனப்பிடி? ஏதாவது… யாராவது காரணமா?”\n“சேச்சே! அப்பிடியெல்லாம் இல்லை.”\n“அப்புறம் ஏன் மித்ரா?” அந்தக் குரலில் ஒரு கடினத்தன்மை இப்போது வந்திருந்தது.\n“இன்ட்ரஸ்ட் இல்லை மிஸ்டர். கார்த்திக்.”\n“ஆனா எனக்கு இருக்கே!” கண்கள் நிலைகுத்தச் சற்று அழுத்திச் சொன்னான் கார்த்திக். அந்தக் குரல் அவளை லேசாக பயமுறுத்தியது.\nசட்டென்று தன் தவறுணர்ந்து சிரித்தான் கார்த்திக்.\n“இது ஃபோன்ல பேசுற விஷயமில்லை மித்ரா. நாம பேசலாம். நிறையப் பேசலாம். அதுக்கப்புறமா நிதானமா முடிவெடுக்கலாமே!”\n“இதுல பேச என்ன இருக்கு கார்த்திக்? எனக்கு இந்தக் கல்யாணத்துல எல்லாம் பெருசா அவ்வளவு நாட்டம் இல்லை. இந்தக் காதல் கத்தரிக்காய் எல்லாம் சுத்தப் பைத்தியகாரத்தனம்.”\n“சரி சரி… இருக்கட்டும். நான் நாளைக்கே கிளம்பி வர்றேன். நாம பேசலாம் மித்ரா. இப்போ அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வர வேணாம். கொஞ்சம் பிஸியா இருக்கேன், நான் வெக்கட்டுமா?”\n“ம்…” அரைகுறையாகவே பதில் சொன்னாள் பெண். ஏனோ கார்த்திக்கை இப்போது பார்ப்பதில் அவளுக்கு அத்தனை விருப்பம் இருக்கவில்லை.\nஆம், இல்லை… இத்தோடு முடிக்காமல் எதற்குக் கிளம்பி வரப் போகிறானாம்? இவன் என்னிடம் நேரிடையாகப் பேசி எதைச் சாதிக்கப் போகிறான்!\nமனம் வெகுவாகக் குழம்பிப் போனது. குழப்பங்கள் எப்போது வந்தாலும் மனது தேடுவது நட்பைத்தானே. கை தானாகவே ரிச்சர்ட்டை அழைத்தது.\n“டிஸ்டர்ப் பண்ணுறேனா ரிச்சர்ட்?”\n“சத்தியமா இல்லை. டிவி தான் பார்க்கிறேன். நீங்க சொல்லுங்க.”\n“சக்திவேல் மாமா வீட்டுக்கு வந்திருந்தாங்க.”\n“ஓ… ஏதாவது ப்ராப்ளமா மேடம்?”\n“இது ப்ராப்ளமா இல்லையான்னு கூட எனக்குத் தெரியலை ரிச்சர்ட்.”\n“ஓ… அப்படி என்ன சொன்னாங்க? நீங்களே குழம்பிப் போற அளவுக்கு?”\n“கார்த்திக் ஃபோன் பண்ணி இருக்கார் சக்திவேல் மாமாக்கு.”\n“கல்யாணம் பேசி இருக்கார்.”\n“யாரு… சக்திவேல் சார் பொண்ணுக்கா?”\n“ரிச்சர்ட்… கேலி பண்ணாத.”\n“இது கேலி இல்லை மேடம். அந்தக் கார்த்திக் உங்களைக் கல்யாணம் பண்ண சக்திவேல் சார்க்கிட்ட கேட்டிருக்கார். நான் சொல்றது சரியா?”\n“அதைச் சொல்லுறதுல உங்களுக்கு எதுக்குத் தயக்கம்? நான் தான் இதை அன்னைக்கே சொல்லிட்டேனே?”\n“தயக்கம் எல்லாம் இல்லை ரிச்சர்ட். பிடிக்கலை.”\n“எங்கிட்ட இதுக்குப் பதிலில்லை. பிடிக்கலை… அவ்வளவுதான். அதை நான் கார்த்திக் கிட்டயே சொல்லிட்டேன்.”\n“ஓ… இது எப்போ?”\n“இப்போதான். உன்னைக் கூப்பிடுறதுக்கு கொஞ்சம் முன்னாடி.”\n“எதுக்கு மேடம் இவ்வளவு அவசரப்படுறீங்க? கொஞ்சம் ஆறுதலா யோசிச்சு முடிவு சொல்லி இருக்கலாம் இல்லை.”\n“இதுல யோசிக்க என்ன இருக்கு ரிச்சர்ட்? பிடிக்கலை… அவ்வளவுதானே. இப்போ சொன்னாலும், யோசிச்சுச் சொன்னாலும் பதில் ஒன்னுதானே?”\n“கார்த்திக் அதுக்கு என்ன சொன்னார்?”\n“நீ சொன்ன மாதிரியே தான் பதில் சொன்னார்.”\n“நாளைக்கே கிளம்பி வர்றாராம். நேர்ல பார்த்துப் பேசலாமாம்.”\n“மேடம்! நான் இப்பவும் சொல்லுறேன், கார்த்திக் உங்களுக்கு நல்லாவே மாட்ச் ஆவார். நீங்க இந்த விஷயத்தைக் கொஞ்சம் யோசிக்கிறது நல்லதுன்னு எனக்குத் தோணுது.”\n“ம்ப்ச்… ரிச்சர்ட்! நீ வேற ஏன் இப்படிப் பேசுறே? எனக்கு இதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் வரலை.”\n“ஆனா உங்களுக்குக் கார்த்திக்கைப் பிடிக்கும் மேடம்.”\n“வாட்! கம் அகெய்ன்.” ரிச்சர்ட்டின் பதில் அவளை வெகுவாக ஆச்சரியப் படுத்தியது.\n“என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா ரிச்சர்ட்!”\n“மேடம்! உங்களோட கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா கூடவே இருக்கேன். எனக்கு உங்களைப் பத்தி நல்லாவே தெரியும். அந்தக் கார்த்திக்கை உங்களுக்குப் பிடிக்கும் மேடம்.”\n“ரிச்சர்ட்… நீ… என்ன சொல்லுறே?” மித்ரமதிக்குள் இப்போது லேசானதொரு பதட்டம் வந்தது.\nஎப்படி ரிச்சர்ட்டுக்கு அவளைப்பற்றித் தெரியுமோ, அதேபோல ரிச்சர்ட்டையும் அவளுக்கு நன்றாகவே தெரியும். எப்போதுமே அவள் மேல் மெல்லியதொரு மயக்கம் இருந்தாலும், அதையும் தாண்டிய அக்கறையும் பாசமும் நிறையவே உண்டு அவனுக்கு.\n“உங்க கண்ணுல நான் பார்த்திருக்கேன் மேடம். அந்தக் கார்த்திக்கைப் பார்க்கும் போது உங்க கண்ணுல லேசா ஒரு சலனம் வந்து போகும். அதை நான் ரெண்டு மூனு தடவை பார்த்திருக்கேன். இதுக்கு முன்னாடி நீங்க அப்படி யாரையும் பார்த்ததும் இல்லை. இதுக்குப் பின்னாடி அப்படி நீங்க யாரையாவது பார்ப்பீங்கன்னும் எனக்குத் தோணலை.”\n“தப்பில்லை மேடம். நமக்கு ஒருத்தங்க மேல இப்படியெல்லாம் தோணும் போது அதை நிறுத்தி நிதானமா ஆராய்றது தப்பில்லை.”\n“கார்த்திக் மேல உனக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கா ரிச்சர்ட்?”\n“கார்த்திக் நல்லவனா கெட்டவனான்னு எனக்குத் தெரியாது மேடம். ஆனா… உங்க விஷயத்துல அவன் நல்லவன்னு தான் எனக்குத் தோணுது.”\n“ம்… மேல சொல்லு.”\n“பிடிவாதக்காரன். தான் நினைச்சதை நடத்தியே ஆகணும்னு நினைக்கிற ரகம். ஸ்ட்ரோங் பர்சனாலிட்டி.”\n“ஆனா பாசத்துக்குக் கட்டுப்படுவான்னு தோணுது. நீங்க அவசரப் பட்டு எந்த முடிவுக்கும் வராதீங்க மேடம். கொஞ்சம் டைம் எடுத்துக்கோங்க. பேசுங்க, பழகிப் பாருங்க. அதுக்கப்புறமா முடிவெடுக்கலாம்.”\n“எனக்குத் தெரிஞ்சு கார்த்திக் அத்தனை சுலபத்துல உங்களை விட்டுக் குடுக்க மாட்டான் ன்னு தான் தோணுது.”\n“நீ என்னைக் குழப்புற ரிச்சர்ட்.”\n“எம் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா மேடம்?”\n“இல்லைன்னா இந்த விஷயத்தையே உங்கிட்டப் பேசமாட்டேன் ரிச்சர்ட்.”\n“அப்போ நான் சொல்லுறதைக் கேளுங்க. நிம்மதியாத் தூங்குங்க. நாளைக்கு நம்ம ஹீரோ என்ன பண்ணுறார்னு பார்ப்போம். அதுக்கப்புறமா நிதானமா முடிவெடுக்கலாம்.”\n“ம்… குட்நைட் ரிச்சர்ட்.”\n“குட்நைட் மேடம்.” அழைப்பை மித்ரமதி துண்டிக்க ரிச்சர்ட்டின் உதடுகள் லேசாகப் புன்னகைத்தது.\nமித்ரமதியை அவனுக்கு நிறையவே பிடிக்கும். பிடிக்கும் என்று சொல்வதை விட ஒரு மயக்கமே உண்டு என்றால் சரியாக இருக்கும்.\nஇந்த இளவயதில் அத்தனை பெரிய கம்பெனியைக் கட்டி ஆளும் அவள் கெட்டிக்காரத்தனம் பார்த்து வாய்பிளப்பான் ரிச்சர்ட்.\nஆரம்பத்தில் தனக்கு அவள் மேலிருக்கும் ஈடுபாட்டை வெளிப்படையாகவே காட்டியிருந்தான் ரிச்சர்ட். அதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தோன்றவில்லை அவனுக்கு.\nஆனால், அவள் புறமிருந்து அதற்கு எந்தச் சாதகமானதொரு பதிலும் கிடைக்காமற் போகவே நாகரிகமாக விலகிக் கொண்டான்.\nஇன்றைக்கும் அந்த அழகான, துடிப்பான இளம்பெண் மேல் ஒரு மயக்கம் அவனுக்குண்டு. ஆனால் அதையும் தாண்டி அவள் மேல் மரியாதையும் உண்டு. அக்கறையும் உண்டு.\nதொலைபேசி சிணுங்கவும் எடுத்துப் பார்த்தான் ரிச்சர்ட். டொமினிக்கா அழைத்துக் கொண்டிருந்தாள்.\n“ஹாய் டார்லிங்!” அவன் வாழ்க்கையின் புதுவரவு இந்த டொமினிக்கா…\nThe Dorchester, Park Lane… நேரம் மாலை 7:20\nஅந்த உலகத்தரம் வாய்ந்த ஹோட்டலின் முன்பாக ப்ளாக் ஆடி புதுப்பெண் போல அன்ன நடை பயின்று வந்து நின்றது.\nபச்சை யூனிஃபார்மில் நின்ற சிப்பந்தி காரின் கதவைத் திறந்து விட இறங்கினாள் மித்ரமதி. அனைத்தும் கார்த்திக்கின் ஏற்பாடு.\nஅன்று மதியமே லண்டன் வந்திறங்கி விட்டான். குறுஞ் செய்தியாக வந்திருந்தது அந்தத் தகவல். அதையடுத்து ஃபோன் சிணுங்கியது. அவன் தான்.\n‘மித்ரா! ஈவ்னிங் மீட் பண்ணலாம். எங்கே, எத்தனை மணிக்குன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல டெக்ஸ்ட் பண்ணுறேன்.”\n‘கார்த்திக்…’ பேச்சை அத்தோடு அவன் முடித்துக் கொள்ளப் போக இடை மறித்தாள் பெண்.\n‘பேபி… நான் இப்போ ரொம்ப டயர்டா இருக்கேன். அடுத்த வாரம் லண்டன் வர்றதாத்தான் ப்ளான். ஆனா இன்னைக்கே கிளம்பிட்டேன். அதால நேத்து நைட் மார்க்கோட உக்காந்து ஃபுல்லா வேலை பார்த்தேன். ப்ளீஸ் டா.’ அவன் குரல் கெஞ்சியது.\n‘ஓகே…’ அதற்கு மேல் மித்ரமதியும் எதுவும் சொல்லவில்லை. இப்படிப் பேசுபவனிடம் என்ன சொல்வது?\nசற்று நேரத்திலெல்லாம் இன்னுமொரு குறுஞ்செய்தி அனைத்துத் தகவல்களையும் தாங்கி வந்திருந்தது. அவ்வளவுதான்.\nவழக்கம் போல காரும் வந்திருந்தது. அம்மாவிடம் எங்கே போகிறாள் என்று சொல்லிவிட்டுத் தான் கிளம்பினாள் இளையவள். அவர் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி! தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது பெண்ணுக்கு.\nஅன்றும் புடவை தான் கட்டியிருந்தாள் மித்ரா. அவள் மெல்லிடை வளைத்திருந்த ஆஃப் வொயிட் ஷிஃபானை பின்க் பார்டர் அலங்கரித்திருந்தது. அதே நிறத்தில் வெள்ளி ஜரிகை வேலைப்பாடு நிறைந்த ப்ளவுஸ்.\nநகைகளை பெருமட்டிற்குத் தவிர்த்திருந்தாள். காதில் மட்டும் பெரிய, கனமான அணிகலன். நீளமாக அவள் விரித்து விட்டிருந்த முந்தானை நிலத்தைத் தொட அவள் ஒயிலாக நடந்து வந்த போது எதிரே வந்த ஒரு பெண்மணி,\n“ப்யூட்டிஃபுல்” என்றார் ரசனையாக. வெள்ளைக் காரர்களுக்கு அந்நியக் கலாச்சாரத்தின் மேல் எப்போதுமே அலாதியானதொரு பிரியம் தான்.\nஅதுவும் இந்தியக் கலாச்சாரம் என்றால்… சொல்லவும் வேண்டாம். இந்தியர்களின் நேர்த்தியான புடவைக் கட்டும், ஆடை ஆபரணங்களும், செஞ்சாந்துத் திலகமும் அவர்களை எப்போதும் மயக்கும் விஷயம் தான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை!\nஅவர்களுக்காக புக் செய்யப்பட்டிருந்த டேபிளில் போய் அமர்ந்தாள் மித்ரமதி. கார்த்திக் இன்னும் வந்திருக்கவில்லை. சுற்றிவரக் கண்களை ஒரு முறை சுழல விட்டாள்.\nஆரவாரம் இல்லாமல் அமைதியாகப் பேசிச் சிரித்தபடி அந்த இடமே கலகலப்பாக இருந்தது. சுற்றி இருந்தவர்களின் சந்தோஷம் அவளையும் தொற்றிக் கொள்ள அவள் முகத்தில் தோன்றிய இளநகை அந்த முகத்திற்கே ஒரு தனிச் சோபையை அளித்தது.\nஇரவு நேரம் என்பதால் வெள்ளை நிறத்தைத் தேர்வு செய்திருந்தாள் மித்ரமதி. அங்கு மின்னிய மஞ்சள் ஒளியில் ஒரு தேவதை போல அமர்ந்திருந்தாள் ஆயிழை.\nகாத்திருப்பு கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. அவளை அதிக நேரம் சோதிக்காமல் தூரத்தே நடந்து வந்து கொண்டிருந்தான் கார்த்திக்.\nஅழகன் தான். அவள் மனம் அவனுக்காக அவளிடமே பேசியது. நடையிலும் கம்பீரம் தெறித்தது. இவனை வேண்டாம் என்று சொல்ல எந்தப் பெண்ணிற்கும் மனம் வராது.\nஇன்று அவனும் வெள்ளை சூட்டில் தான் வந்திருந்தான். தொலைவில் வரும்போதே அவன் கண்கள் மித்ரமதியை அளவெடுத்த படிதான் இருந்தது.\n“ஹாய் மித்ரா! லேட் பண்ணிட்டேனா?”\n“இல்லையில்லை… இப்போதான் நானும் வந்தேன்.” அவள் பேசும் போதே அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி மயங்கி வீழ்வது போல நடித்துக் காண்பித்தான்.\nலேசாக நாணம் மேலிட தலையைக் குனிந்து கொண்டாள் பெண். அந்த நாணம் அவனை வெகுவாகக் கவர்ந்தது.\n“ம்… பேசலாமே… சொல்லுங்க மித்ரா. எது உங்களை என் பக்கம் வரவிடாம தடுக்குது?”\n“அப்படியில்லை கார்த்திக்… எனக்கு இந்த… இந்தக் கல்யாணத்துல எல்லாம் நம்பிக்கை இல்லை.”\n“சரி… எம்மேல நம்பிக்கை இருக்கா?” அவன் கேட்கவும் அவள் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வை அவனை என்ன பண்ணியதோ! லேசாகப் புன்னகைத்தான் கார்த்திக்.\n“மித்ரா! நாம கொஞ்சம் வெளிப்படையா பேசலாமா?”\n“நீங்களோ நானோ சின்னப் பசங்க கிடையாது. வாழ்க்கையில இனியும் நாம தனிச்சு வாழ நம்ம வீட்டுல இருக்கிறவங்களும் விடப்போறதில்லை. நான் சொல்லுறது சரியா?”\n“அத்தோட… எனக்கு முன்னால இருக்கிற இந்த அழகான பொண்ணு எனக்கு வேணும் மித்ரா. எனக்கே எனக்குன்னு இந்த அழகு வேணும். நாளைக்கு எனக்குப் பொறக்கப் போற குழந்தைகளுக்கு இந்த அழகு, அறிவு எல்லாமே வேணும் மித்ரா.”\n“………..” மித்ரமதிக்கு வார்த்தைகள் வசப்படவில்லை. ஆனால் அந்தக் கண்கள் மட்டும் தெறித்துவிடும் போல ஆச்சரியத்தைக் காட்டின.\n“பார்த்த முதல் நாள்ல இருந்தே என்னைத் தொல்லை பண்ணுற இந்த முகம் எப்பவுமே என் பக்கத்துல வேணும் மித்ரா!” இப்போது அவன் குரல் லேசாகக் கரகரத்தது.\nஅவன் கை நீண்டு மேசை மேலிருந்த அவள் கையைப் பற்றிக் கொண்டது. விலக்கிக் கொள்ள முயன்றவளை அவன் அனுமதிக்கவில்லை.\n“கார்த்திக்!” அவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.\n“யெஸ் டார்லிங்! கார்த்திக் தான் கேக்கிறேன். இதுவரைக்கும் எந்தப் பொண்ணையும் பார்த்துக் கேக்காத ஒன்னை இந்த ரதிக்கிட்டக் கேக்குறேன்.”\nஅவன் கண்களின் மயக்கம் பார்த்து மித்ரமதி வெலவெலத்துப் போனாள். என்ன நடக்கிறது இங்கே? இவன் பேசிப் பேசியே என்னை வசியம் பண்ணி விடுவானோ!\nசட்டென்று எழுந்த மித்ரமதி அந்த இடத்தை விட்டு நகரப் போனாள். ஆனால் அதற்கும் அவன் அனுமதிக்கவில்லை. நான்கைந்து எட்டுக்கள் வைத்தவளின் கரம் பிடித்துத் தடுத்திருந்தான்.\nஇவர்கள் அமர்ந்திருந்த மேசையைச் சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேரும் இப்போது இவர்களைத் திரும்பிப் பார்த்தார்கள்.\n“கார்த்திக்! என்ன பண்ணுறீங்க?” இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒற்றைக் காலை மடக்கி நிலத்தில் மண்டியிட்டவன்,\n“வில் யூ மேரி மீ பேபி?” என்றான். மித்ரமதிக்கு மயக்கம் வராத குறைதான். இவனுக்கு என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது!\nசுற்றி வர இருந்த அத்தனை பேரும் இந்த நாடகத்தை ஒரு புன்னகையோடு பார்த்தபடி லேசாகக் கரவொலி எழுப்ப பயந்தே போய்விட்டாள் மித்ரமதி.\n“கார்த்திக்! ப்ளீஸ்… இப்படி பப்ளிக்ல பிஹேவ் பண்ணாதீங்க.” அவள் கெஞ்சியதையும் அலட்சியம் பண்ணியவன் பாக்கெட்டில் இருந்து ஒரு மோதிரத்தை எடுத்தான்.\n“ஓ… ஹௌ ஸ்வீட்… கம் ஆன் யங் லேடி.” பக்கத்தில் இருந்த ஒரு வயதானவர் ரசித்துச் சொல்லவும் திகைத்துத் திரும்பிப் பார்த்தாள் மித்ரமதி.\nஅங்கு அமர்ந்திருந்த அத்தனை பேரும் இவர்களைத் தான் பார்த்தபடி இருந்தார்கள். உதறித் தள்ளிவிட்டுப் போக ஒரு நிமிடம் போதும். ஆனால் எதுவோ ஒன்று பெண்ணைத் தடுத்தது.\nஅதுதான் காதல் என்று புரிந்து கொள்ளும் காலம் அவளைப் பொறுத்தவரை இன்னும் வந்திருக்கவில்லை.\n“ப்ளீஸ் ரதி!” கண்களில் காதல் வழிய அவன் கெஞ்சிய போது அவள் கை தானாக நீண்டது. ஒரு வெற்றிப் புன்னகையோடு அவள் விரலில் மோதிரத்தை அணிவித்தவன் அந்த விரல்களில் மென்மையாக இதழ் பதித்தான்.\n“ஹே…” கூடியிருந்தவர்களின் ஆரவாரம் சற்றே அதிகரிக்க, குழப்பத்தோடே அந்த இடத்தை விட்டு வெளியே வந்தாள் மித்ரமதி.\nகுளிர்ந்த காற்று முகத்தைத் தீண்டிய போதுதான் நடந்து முடிந்த நிகழ்வின் வீரியம் புரிந்தது அவளுக்கு. அவனும் அவள் பின்னோடே வரவும் காரைக் கொண்டு வந்து நிறுத்தினான் சிப்பந்தி.\nமறுப்பது மடத்தனம் என்று புரிந்து காரில் ஏறிக் கொண்டாள் மித்ரமதி. வீடு வந்து சேரும்வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.\nஅவள் முகத்தை மட்டும் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி காரை ஓட்டிக் கொண்டிருந்தான் கார்த்திக்.\nவீட்டின் முன்னால் காரை நிறுத்தியவன் அவள் இறங்கும் முன்பாக இறங்கி, அவள் பக்கக் கதவைத் திறந்து விட்டான்.\n“மித்ரா!” எதுவுமே பேசாமல் நகர்ந்து போனவளின் கரம் பிடித்தவன், அவளைத் தன் புறமாக இழுத்தான். அவள் வெற்றிடையில் பதிந்த அவன் கரம் அவளை லேசாக அணைத்தது.\nஅந்த ஸ்பரிசத்தில் திடுக்கிட்டவள் அண்ணார்ந்து பார்க்க, அவள் முகம் பற்றி லேசாக அந்த இதழில் இதழ் பதித்தான் கார்த்திக்.\nநடந்தது, நடப்பது என அத்தனையும் அவளைப் புரட்டிப் போட உள்ளே ஓடிவிட்டாள் மித்ரமதி. கார்த்திக் புன்னகைத்துக் கொண்டான்.\nகாரை வீட்டின் முன்பாக நிறுத்தும் போதே மித்ராவின் வீட்டு மாடியிலிருந்த திரைச்சீலை விலகுவதை கவனித்திருந்தான் கார்த்திக்.\nயாரென்று பார்க்க தேவகி தான் திரையை விலக்குகிறார் என்றும் அவனுக்குத் தெரியும். தெளிவாகக் காய் நகர்த்தினான் கார்த்திக் ஹரிகிருஷ்ணா.\nஅவன் காய் நகர்த்துவது வியாபாரச் சதுரங்கத்தில் என்றால் அதை இலகுவாக இனங்கண்டிருப்பாள் இளையவள்.\nஆனால்… அவன் காய் நகர்த்தியதோ காதல் சதுரங்கத்தில்! பாவம்… அதன் பாலபாடம் கூட அவள் அறிய மாட்டாளே!
ஜுலை -24, 1974 நியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் ஜேம்ஸ் சாட்விக் நினைவு தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர் - Tamil Science News\nHome JULY ஜுலை -24, 1974 நியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் ஜேம்ஸ் சாட்விக் நினைவு தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்\nஜுலை -24, 1974 நியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் ஜேம்ஸ் சாட்விக் நினைவு தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்\nஜுலை -24, 1974\nநியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் ஜேம்ஸ் சாட்விக் நினைவு தினம்.\nதகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்\nசர் ஜேம்ஸ் சாட்விக் (James Chadwick) அக்டோபர் 20, 1891ல் செஷெயரில் அமைந்துள்ள பொலிங்டனில், ஜோன் ஜோசப் சாட்விக்குக்கும் ஆன் மேரி நௌல்ஸ் சாட்விக்குக்கும் பிறந்தார். இவர் பொலிங்டன் குரொஸ் சர்ச் ஒஃப் இங்கிலாந்து ஆரம்பப் பாடசாலைக்கும் மான்செஸ்டரிலுள்ள ஆண்களுக்கான இலக்கணப் பாடசாலைக்கு கல்வி கற்கச் சென்றார். மேலும் மான்செஸ்டரிலுள்ள விக்டோரியாப் பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் கல்வி கற்றார். 1913ல், பெர்லின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றார். அங்கு ஹான்ஸ் கெய்கர் மற்றும் ஏர்னஸ்ட் ரூதர்போர்டின் கீழ் கல்வி கற்றார். முதலாம் உலகப்போரின் ஆரம்பத்தில் சாட்விக் ஜெர்மனியில் இருந்தார். அங்கு அவர், ரூல்பென் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். மேலும், ஓர் ஆய்வுகூடத்தை அமைத்துக்கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு சாள்ஸ் D. எல்லிசின் துணையுடன், பொசுபரசின் அயனாக்கம் பற்றியும், காபனோரொட்சைட்டினதும் குளோரினினதும் ஒளியிரசாயனத் தாக்கம் பற்றியும் ஆய்வுகளை மேற்கொண்டார்.\nகெய்கரின் ஆய்வுகூடம் அவரது விடுதலைக்காக முயற்சி செய்யும்வரை அவர் ரூல்பென்னிலேயே தமது வாழ்நாட்களைக் கழித்தார். 1932ல் சாட்விக், அணுக்கருவில் அதுவரை அறியப்பட்டிராத துணிக்கையொன்றைக் கண்டுபிடித்தார். தனது கண்டுபிடிப்புகளைப் பற்றி விரிவான விளக்கங்களை வெளியிட்டார். இத் துணிக்கை முதன்முதலில் எட்டோர் மஜோரனாவால் எதிர்வு கூறப்பட்டிருந்தது. இதன் மின் நடுநிலை காரணமாக இது நியூட்ரான் எனப் பெயர் பெற்றது. சாட்விக்கின் இந்தக் கண்டுபிடிப்பு யுரேனியம்-235ன் கருப்பிளவைப் புரிந்துகொள்ள மிகவும் உதவிகரமாக இருந்தது. ஆல்பாத் துணிக்கைகள் நேரேற்றம் கொண்டவையாதலால் அவை அணுக்கருவிலுள்ள நேரேற்றத்தால் தள்ளப்பட்டன. ஆனால் நியூட்ரான்கள் ஏற்றமற்றவையாதலால் அவற்றுக்கு கூலோமின் தடையைத் தாண்டவேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதனால் அவற்றால் பாரமான அணுக்கருக்களான யுரேனியம்-235 மற்றும் புளூட்டோனியம் கருக்களினுள்ளும் ஊடுருவக்கூடியதாயிருந்தது.\n1932ல் நியூட்ரான் பற்றுய சாட்விக்கின் கண்டுபிடிப்புக்காக அவருக்கு 1932ல் ரோயல் சங்கத்தின் ஹக்ஸ் பதக்கமும், 1935ல் பௌதிகவியலுக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. சாட்விக்கின் இந்தக் கண்டுபிடிப்பினால் ஆய்வுகூடங்களில், யுரேனியத்திலும் பாரமான மூலகங்களை உருவாக்கக்கூடியதாயிருந்தது. பீட்டா சிதைவினால் உருவாகும் நியூட்ரான்களை மோதச்செய்வதன் மூலம் இது சாத்தியமானது. இவரது கண்டுபிடிப்பு இத்தாலிய பௌதிகவியலாளரும் நோபல் பரிசாளருமான என்ரிகோ ஃபெர்மியைக் கவர்ந்தது. இதனால் அவர் நியூட்ரான்களை அணுக்கருக்களுடன் மோதச் செய்வதன்மூலம் ஏற்படும் இரசாயனத் தாக்கங்களை ஆராயத் தொடங்கினார். ஃபெர்மியால் வெளியிடப்பட்ட ஆய்வுகளும், ஒட்டோ ஹான் மற்றும் ஃப்ரிட்ஸ் ஸ்ட்ராஸ்மன் ஆகிய ஜெர்மன் கதிரியக்க ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகள் காரணமாக முதல் வகை அணுக்கருப் பிளவு கண்டுபிடிக்கப்பட்டது.\n1935ல், சாட்விக் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் பௌதிகவியலுக்கான பேராசிரியர் ஆனார். 1940ல் அணுகுண்டைத் தயாரிக்க ஆணையிடும் ஃப்ரிச் பியேல்ஸ் குறிப்பாணை காரணமாக, MAUD குழுவில் நியமிக்கப்பட்டார். அக் குழு சடப்பொருளைப் பற்றி மேலும் ஆராய்ந்தது. 1940ல் டிசார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வட அமெரிக்காவுக்கு விஜயம் செய்தார். அங்கு அமெரிக்கர்களைனதும் கனேடியர்களினதும் அணுக்கரு ஆராய்ச்சியை ஒன்றிணைப்பதில் ஈடுபட்டார். நவம்பர் 1940ல் இங்கிலாந்து திரும்பிய வேளை, போர் முடியும் வரையில் இந்த ஆய்வில் எதுவும் வெளிவராது என்றே அவர் கருதினார். டிசம்பர் 1940ல் MAUD நிறைவேற்றதிகாரியான ஃபிரான்ஸ் சைமன், யுரேனியம்-235 சமதானியைப் பிரித்தெடுக்க முடியும் என அறிவித்தார். சைமனின் அறிக்கை, பாரிய யுரேனியம் செறிவூட்டல் நிலையமொன்றுக்கான செலவுகள் மற்றும் தொழில்நுட்பத் தேவைகளையும் உள்ளடக்கியிருந்தது. "அணுகுண்டு என்பது சாத்தியமற்றது என்பது மட்டுமல்ல. அது மிகவும் இன்றியமையாததும் ஆகும்.\nபின் மிகக் குறுகிய காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் மன்காட்டன் திட்டத்தில் இணைந்து கொண்டார். இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இரு அணுகுண்டுகள் ஜப்பானியப் பேரரசின் மீது போடப்பட்டன. இதனால் ஆகஸ்ட் 1945ன் நடுப்பகுதியில் இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்தது. 1940ல், சட்விக் காம்பிரிட்சில் ஆய்வுகளில் ஏடுபட்ட ஹான்ஸ் வொன் ஹால்பன் மற்றும் லியூ கொவர்ஸ்கி ஆகிய இரு ஃபிரெஞ்சு விஞ்ஞானிகளின் தொழில்நுட்ப அறிக்கைகளை ரோயல் சங்கத்துக்கு அனுப்பினார். போரின்போது அவற்றை வெளியிடுவது உசிதமானதல்ல என்பதால் அவ்வாய்வறிக்கைகளை இரகசியமாக வைத்திருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 2007ல், ரோயல் சங்கத்தின் ஊழியர்கள், கணக்காய்வு நடவடிக்கைகளின்போது இவ்வறிக்கைகளைக் கண்டுபிடித்தனர்.\nஇரண்டாம் உலகப்போரின் போது ஐக்கிய அமெரிக்காவில் நடாத்தப்பட்ட மான்காட்டன் திட்டத்தில் பங்குபற்றிய ஒரு முன்னணி பிரித்தானிய விஞ்ஞானியுமாவார். இயற்பியலில் இவரது அடைவுகளுக்காக 1945ல் இவருக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டது. நியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்ற சர் ஜேம்ஸ் சாட்விக் ஜுலை 24, 1974ல் தனது 82வது அகவையில் கேம்பிரிட்ஜ், இங்கிலாந்தில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.\nஜுலை -24, 1974 நியூட்ரான் பற்றிய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர் ஜேம்ஸ் சாட்விக் நினைவு தினம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர் Reviewed by JAYASEELAN.K on 04:31 Rating: 5
தலைமுடியில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் DIY ஹேர் மாஸ்க்!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News\nதலைமுடியில் உள்ள நச்சுகளை வெளியேற்றும் DIY ஹேர் மாஸ்க்!!!\n2 February 2021, 8:57 am\nநமது சருமத்தைப் பராமரிக்கும் போது நாம் மிகுந்த கவனம் செலுத்துகிறோம். ஆனால் நம் முடியின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமா? ஆரோக்கியமான கூந்தலைப் பெறவும், அதனை பிரகாசமாக மாற்றவும், உங்கள் தலைமுடியை வளர்ப்பதற்கும், நிறைய DIY கள் உள்ளன.\nநம் தலைமுடி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகளைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது. உங்கள் உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றுவதும் ஆழமாக சுத்தம் செய்வதும் உங்கள் முகத்தை வெளியேற்றுவது போலவே முக்கியம். இது உங்கள் தலைமுடி ஆரோக்கியமான முறையில் தொடர்ந்து வளர்வதை உறுதிசெய்கிறது. மேலும் இது அடிக்கடி முடியில் எண்ணெய் பிசுக்கை வர விடாது. இதனை எளிய முறையில் நம் வீட்டில் இருந்தபடியே செய்து விடலாம்.\nஇதற்கு ½ கப் பச்சை தேயிலையை கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி, அது ஆறும் வரை தனியாக வைக்கவும். இப்போது ஒரு கிண்ணத்தில், 2-4 தேக்கரண்டி பென்டோனைட் களிமண்ணைச் (bentonite clay) சேர்க்கவும். இது ஆன்லைனில் எளிதாகக் கிடைக்கும். இதனை ஒரு தடிமனான பேஸ்டாக மாற்ற நாம் தயார் செய்து வைத்த கிரீன் டீயை சேர்த்து கலக்கவும். இதை உங்கள் உச்சந்தலையில் தடவி 15 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nஎரிமலை சாம்பலிலிருந்து பெறப்பட்ட பென்டோனைட் களிமண், ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், உங்கள் உச்சந்தலையில் இருந்து கதூசு மற்றும் அழுக்கை ஆழமாக உறிஞ்சும். இது இயற்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பெற்றது ஆகும். ஹெல்த்லைன் கூற்றுப்படி, நீங்கள் உலர்ந்த, மந்தமான கூந்தலைக் கொண்டிருந்தால், மேலும் இயற்கையான ஒரு பொருளைப் பயன்படுத்த விரும்பினால் களிமண்ணை முயற்சி செய்யலாம். அதே சமயம் பச்சை தேயிலை முடி உதிர்தலைக் கட்டுப்படுத்தும் கேடசின் உதவியுடன் செறிவூட்டப்படுகிறது.\nTags: DIY ஹேர் மாஸ்க், தலைமுடி பராமிப்பு\nPrevious பணத்தை செலவழிக்காமல் சுருள் முடியைப் பெற இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்\nNext கடலை மாவு ஃபேஸ் பேக்கின் நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்\nகருமையான அக்குள் பகுதியை உடனடியாக சரி செய்ய சிறந்த வீட்டு வைத்தியம்…!!!\n25 February 2021, 12:42 pm\nபேஷியல் முதல் பெடிக்யூர் வரை… இனி வீட்டிலே செய்யலாம் எளிதாக…!!!\n24 February 2021, 10:26 pm\n24 February 2021, 1:30 pm\nஅடிக்கடி உங்க நகங்கள் உடைந்து போகிறதா… உங்களுக்கான இரண்டு வீட்டு வைத்தியங்கள்!!!\n24 February 2021, 11:37 am\nதினம் ஒரு கலரில் நெயில் பாலிஷ் வைப்பவரா நீங்க… இதோ உங்களுக்காக இயற்கை நெயில் பாலிஷ் ரிமூவர்!!!\n23 February 2021, 9:37 pm\nஒரு உறவில் முத்தம் எந்த அளவுக்கு முக்கியம்…???\n23 February 2021, 8:37 pm\nஉங்கள் சருமம் ஆங்காங்கே வீங்கி காணப்படுகிறதா… இதனை நிர்வகிக்க சிம்பிளான டிப்ஸ்!!!\n23 February 2021, 12:12 pm\nஇந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும்… எந்த பியூட்டி பார்லருக்கும் செல்ல வேண்டாம்…!!!\n22 February 2021, 8:08 pm\nமுகத்திற்கு உடனடி பொலிவு தரும் பிளம்ஸ் ஃபேஸ் பேக்…!!!\nநன்றியுள்ள பிராணிக்கு நேர்ந்த கொடுமை..! இறைச்சிக்காக கடத்தப்பட்ட 61 நாய்கள் கம்போடியாவில் மீட்பு..!\n25 February 2021, 1:33 pm\nQuick Shareகம்போடியாவில் இறைச்சிக்காக படுகொலை செய்ய வண்டியில் கடத்தப்பட்ட 61 நாய்கள் கம்போடியாவில் மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்காசிய நாடுகளில் நாய்க்கறி மிகவும்…
வயநாடு காத்திருக்கிறது தான்யாவுக்காக.. கேரளாவின் முதல் ஆதிவாசி பெண் கலெக்டர்! | Wayanad Girl become asaCollector - Tamil Oneindia\nSreedhanya IAS: கேரளாவின் முதல் ஆதிவாசி பெண் கலெக்டர் தான்யா- வீடியோ\nவயநாடு: கவர்ச்சியான நிறம்.. ஈர்க்கும் எளிமை.. மலைக்க வைக்கும் திறமை.. இவர்தான் தான்யா! மாவட்ட கலெக்டராக விரைவில் வரப்போகிறார் இந்த ஆதிவாசி பெண்!\nவயநாடு மாவட்டத்தில் தொழுவண்ணா என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர்கள்தான் ஆதிவாசி இனத்தை சேர்ந்த சுரேஷ் - கமலம் என்ற தம்பதியினர். இவர்களது மகள் ஸ்ரீதான்யா. வயது 26 ஆகிறது.\nசின்ன குழந்தையில் இருந்தே துருதுருவென இருப்பார்.. நன்றாக படிக்கக்கூடியவர்.. பெரியவளாகி நீ என்னவாக ஆக போறே...ன்னு யாராவது கேட்டால், அதற்கு தான்யா சொன்ன ஒரே பதில் கலெக்டர்!\nதான்யாவின் கனவுக்கும் குடும்பத்துக்கும் நிறைய வேறுபாடு.. குடும்பத்தை தன் பிடியில் வைத்து கொண்டது. சாதாரண ஓலை வீடு.. அதுகூட பழைய கூரை... கரையான் பிடித்த வீட்டிலேயே வசித்து வந்தாள் இந்த குட்டி அறிவாளி!\nஇருந்தாலும் தன் லட்சியத்தை அடைய வேண்டும் என்ற முயற்சியை ஒருபோதும் கைவிடவில்லை. இன்னும் சொல்ல போனால் குடும்ப சூழலோ, சுற்றியிருக்கிற சூழலோ தான்யாவுக்கு ஒரு பொருட்டே இல்லை! தன் உயரத்தை அடைய வேண்டும் என்பதற்காக கடினமான சூழலை பழகி கொள்ள ஆரம்பித்தாள்.\nஇது எல்லாவற்றுக்கும் மேலாக பெற்றோரின் அரவணைப்பு, தான்யாவை அந்த உயரத்துக்கு அருகிலேயே அழைத்து சென்றது. கலெக்டர் ஆவது என்றால் சும்மாவா என்ன? சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும்.. அதற்கு டெல்லி செல்ல வேண்டும்.. ஆனால் பணம் வேண்டுமே? அதற்கு கூட பணம் இல்லாமல் திணறினர்.\nஅக்கம்பக்கத்தில் கடனை வாங்கி தான்யாவுக்கு கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைத்தனர் பெற்றோர். தேர்வையும் நன்றாகவே எழுதிவிட்டு ஊர் திரும்பினார் தான்யா. வந்ததும் பெற்றோருக்கு துணையாக கூலி வேலைக்கு கிளம்பி சென்றுவிட்டார் தான்யா!\nஅப்போதுதான் திடீரென ஒரு விபத்து.. கரண்ட் தாக்கியதில் அவரது இடது கை எலும்பு முறிந்துவிட்டது. இதற்கான சிகிச்சை எடுத்து கொண்டார். வலி காரணமாக கையில் கட்டு போட்டு கொண்டார். இந்த சமயத்தில்தான் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.\nஅதில் தான்யா 410-வது ரேங்க் பெற்றிருக்கிறார். இதன்மூலம் வயநாடு பகுதியில் ஆதிவாசி பெண் ஒருவர் முதல் முறையாக மாவட்ட ஆட்சியர் ஆகியுள்ளார் என்ற பெருமையும் தேடி வந்துள்ளது. பொதுமக்களின் வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்து வந்தாலும், ஆதிவாசி மக்கள் தான்யாவை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்!\nவயநாட்டு பகுதியில் ஏராளமான கடமைகளும், பொறுப்புகளும் வரிசையாக காத்துக் கிடக்கின்றன.. கலெக்டர் தான்யாவின் வருகைக்காக!\nmotivational stories wayanad collector வயநாடு கலெக்டர்\nTribal Girl Sreedhanya will be the first person from Wayanad to become an IAS officer if selected.
ஈராக்கில்7ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி!\nஈராக்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள\nஈபள் டவர் ஒளி அணைக்கப்பட்டு அஞ்சலி\nபிரான்சில் உள்ள உலக அதிசயங்களுள்\nஇலங்கை பலி விவரத்தை தவறாக பதிவிட்ட டிரம்ப்!\n500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பு போப் ஆண்டவர் கண்டனம்!\nஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு போப்\nஅமெரிக்க மாநிலங்களை புயல் தாக்கியது -4பேர் பலி\nமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான
விஜய் படத்தின் காப்பி என்பதெல்லாம் 'டூ மச்' - பாரசைட் படத்துல அப்படி என்ன தான் இருக்கு? - Indian Express Tamil parasite movie tamil review oscar winning film vijay minsaara kanna 168647 - விஜய் படத்தின் காப்பி என்பதெல்லாம் 'டூ மச்' - பாரசைட் படத்துல அப்படி என்ன தான் இருக்கு?\nParasite Movie Tamil Review Oscar Winning Film Vijay Minsaara Kanna 168647\nவிஜய் படத்தின் காப்பி என்பதெல்லாம் 'டூ மச்' - பாரசைட் படத்துல அப்படி என்ன தான் இருக்கு?\nஒரு மழையால் வீடு முழுதும் நீர் ஓடும் ஒரு பக்க வாழ்க்கையும், அதே மழையை சோபாவில் ரசிக்கும் ஒரு பக்க வாழ்க்கையுமே படம்\nFebruary 12, 2020 04:03:20 pm\nஆஸ்கர் விருது விழாவில் தென்கொரிய படமான ‘பாரசைட்’4விருதுகளை வென்றது. ‘என்னய்யா இப்படி ஒரு படத்தை நாம கேள்விப்பட்டதே இல்லையே’-னு சினிமா ஆர்வலர்கள், விமர்சகர்கள் முண்டியடித்து படத்தைப் பார்க்க, ரசிகர்களோ ‘நாங்க எப்போதுமே உங்களுக்கு “மாஸ்டர்” தான்’ என்ற மோடில், ‘இது தளபதி விஜய் படத்தின் காப்பி டோவ்’-ன்னு ஒரு போடு போட ஆடிக் கிடக்கிறது ஆஸ்கர்.\nவிழாவில் சிறந்த படத்துக்கான போட்டியில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட், 1917, ஜோக்கர், பாரசைட் உள்ளிட்ட படங்கள் இருந்தன. இதில் பாராசைட் தென்கொரியா படம். மற்றவை ஹாலிவுட் படங்கள். வழக்கம்போல் ஹாலிவுட் படம்தான் இந்த முறையும் சிறந்த படமாக தேர்வாகும் என கணிக்கப்பட்டது. ஆனால் அந்த ஹாலிவுட் படங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு போங் ஜோன் ஹோ இயக்கிய பாரசைட் சிறந்த படமாக தேர்வானது. அத்துடன் சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த வெளிநாட்டு படம் என மொத்தம்4விருதுகளை பாராசைட் வென்றது.\nகே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விஜய்யின் ‘மின்சாரக் கண்ணா’ படத்தின் காப்பி என்று விஜய் ரசிகர்கள் மல்லுக்கட்டிக் கட்டிக் கொண்டிருக்க, பாரசைட் படத்தில் அப்படி என்ன தான் இருக்குன்னு சுருக்கமா பார்ப்போம்,\nசுருக்கமா சொல்லனும்னா “வசதிக்கும் ஏழைமைக்கும் உள்ள வித்தியாசம் தான் ‘பாராசைட்’ படம்”. இந்த வேறுபாட்டை இயக்குனர் பாங்க் ஜூன் ஹோ ஆழமான திரைக்கதையோடு சொல்லியுள்ளார்.\nபாராசைட் = ஏழ்மை குடும்பம் “கிம்” + வசதியான குடும்பம் “பார்க்”\nவறுமையை போக்கி கொள்ள கிம் குடும்பத்தை சேர்ந்த நால்வரும் பொய் சொல்லி பார்க் வீட்டிற்கு வேலைக்கு நுழைகின்றனர். பின் பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் படம்(பாடம்) இருக்கும்.\nஒரு பக்க சின்ன பேஸ்மென்ட் வீட்டில் கழிவறை, அடுப்படி எல்லாம் ஓன்றாக உள்ள வீட்டில் கிம் குடும்பம் வசிக்கிறது. மறுபக்கம் அதே பேஸ்மென்ட் அளவில் பார்க் வீட்டின் குளியலறை இருக்கும். நினைத்து பார்க்க முடியாத வசதியில் பார்க் குடும்பம்.\nஜன்னல் காட்சிகள்: கிம் பேஸ் மேண்டில், ஜன்னல் வழியாக பார்த்தால் வழிப்போக்கர்கள் சிறுநீர் கழித்து விளையாடுவதும், கொசு மருந்து அடித்தால் வீட்டிற்கும் முழுதும் வரும்படியாக இருக்கும். பார்க் வீட்டினர் சோபாவில் அமர்ந்து ஜன்னல் வழியாக மழை கொட்டும் அழகை ரசிப்பர்.\nஏற்றம் – இறக்கம்: இதில் முக்கியமான ஒன்று கிம் வீடு, அவர்கள் வாழும் இடம் எல்லாம் கீழ் நோக்கியே செல்லும். அவர்கள் குனிந்த வண்ணமே செல்லவேண்டி இருக்கும். பார்க் வீடு, தெரு எல்லாம் மேல் நோக்கி இருக்கும். இதன் மூலம் வேறுபாட்டை அழுத்தமாக சொல்லியுள்ளார் இயக்குனர்.\nமழை: ஒரு மழையால் வீடு முழுதும் நீர் ஓடும் ஒரு பக்க வாழ்க்கையும், அதே மழையை சோபாவில் ரசிக்கும் ஒரு பக்க வாழ்க்கையுமே படம்.\nதுர்நாற்றம்: இது முக்கிய ஒன்று. படம் பார்த்தாலே மட்டுமே உணரமுடியும்.\nகல்: கிம் குடும்பத்திற்கு பரிசாக வரும் கல் அதிர்ஷ்ட கல் என நமக்கு தோன்றும் ஆனால் அது அதற்கு அல்ல அது வெறும் கல் மட்டுமே என கிளைமக்ஸில் குறிப்பிட்டுள்ளார்.\n50 நிமிடம் பின் வரும் திருப்பம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் முடிவு எதிர்பார்த்தது தான். முன்னாள் வீட்டு வேலை செய்பவர் பின் இருக்கும் கதையும் நம்மை சிந்திக்க வைக்குமே தவிர கோவப்பட வைப்பதில்லை. வறுமையின் கொடுமையும், தாழ்வுமனப்பான்மையும் சேர்ந்து ஒரு சக மனிதனுக்கு வரும் கோவமே கிம் கதாப்பாத்திரம் எடுக்கும் அந்த முடிவு(கிளைமேக்ஸ்).\nஇறுதியில் கிம்மின் மகன் கிம்மிற்கு எழுதும் கடிதத்தில் உள்ளவை எதிர்காலத்தில் நடக்குமா என தெரியாது? ஆனால் ஒரு ஏழையின் நம்பிக்கையாக இருக்கும். எவ்வளவு போராட்டங்கள் இருந்தாலும் பேஸ்மென்ட் வாழ் மக்களின் வாழ்க்கை அந்த நம்பிக்கையுடன் நகரும்.\nவறுமையால் செய்யும் தவறுகளை நியாயப்படுத்த முடியாது. இதில் இது தவறு, அது தவறு என்று இல்லை. சில நேரங்களில் வாழ்க்கையில் எந்த திட்டமிடல் இல்லாமலும் சில விஷயங்கள் நடக்கவே செய்யும். முந்தைய படத்தை போல் ஏழ்மை மக்களுக்கான குரல் இந்தப்படத்திலும் பாங்க் ஜூன் ஹோ எடுத்துரைத்துள்ளார்.\nபடம் எப்படினா? படம் பார்த்தால் நீங்களே உங்களுக்குள் படத்தை பற்றி விமர்சனம் செய்துக்கொள்ள வைக்கும். படத்தின் கதை படத்தின் பெயருடன் கச்சிதமாக ஒத்துபோகும்.\nவிமர்சனம் – பத்மபிரியா, ஆக்கம் – அன்பரசன் ஞானமணி\nParasite movie tamil review oscar winning film vijay minsaara kanna
At the Government Hospital in Palayamkottai Modern treatment in the gut and gastrointestinal tract || பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் குடல், இரைப்பையில் நவீன சிகிச்சை\nபாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் குடல், இரைப்பையில் நவீன சிகிச்சை + "||" + At the Government Hospital in Palayamkottai Modern treatment in the gut and gastrointestinal tract\nபாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் குடல், இரைப்பையில் நவீன சிகிச்சை\nபாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில்4பேருக்கு குடல் மற்றும் இரைப்பையில் நவீன எண்டோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.\nபாளையங்கோட்டை ஐகிரவுண்டில் அரசு பல்நோக்கு உயர் சிகிச்சை ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு4பேருக்கு நவீன எண்டோஸ்கோபி சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் ரவிச்சந்திரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nநெல்லை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் புதிதாக பல்நோக்கு உயர் ஆஸ்பத்திரி தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு குடல், இரைப்பை மருத்துவபிரிவில் தமிழகத்தில் முதன்முறையாக எண்டோஸ்கோபி என்ற கருவி மூலம் டாக்டர் கந்தசாமி என்ற குமார் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து சாதனை படைத்துள்ளனர்.\nநெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பரம்பரை வியாதியான சிறுகுடல் மீட்சி இருந்தது. அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை, மயக்க மருந்து எதுவும் இன்றி சிறுகுடலில் இருந்த ‘பாலிப்’ கட்டி நீக்கப்பட்டது.\nஇதே போல் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் உணவுக்குழாய் புற்றுநோயால் சாப்பாட்டை விழுங்க முடியாமல் அவதிப்பட்டார். அவருக்கு எண்டோஸ்கோபி மூலம் வயிற்றில் துறையிட்டு ‘பெக் குழாய்’ பொருத்தப்பட்டு இதன் மூலம் உணவு வழங்கப்படுகிறது. தனியார் ஆஸ்பத்திரியில் கூட அளிக்க முடியாத இந்த சிகிச்சையை இங்கு செய்யப்பட்டு உள்ளது.\nபாளையங்கோட்டையை சேர்ந்த ரஹீம் (வயது 55) என்பவருக்கு பித்தப்பை குழாய் அடைப்பால் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டு. அவருக்கு கல் நீக்கப்பட்டு, பிளாஸ்டிக் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு உள்ளது. ராஜபாளையத்தை சேர்ந்த அரிராம்சேட் (46) நீர் கட்டியால் அவதிப்பட்டார். அவருக்கு ‘சிஸ்டொகேஸ்ராஸ்டமி’ என்ற சிகிச்சையை அளித்து கட்டி முழுவதுமாக சரி செய்யப்பட்டு உள்ளது. குடல், இரைப்பை மருத்துவ பிரிவில் இந்த நவீன சிகிச்சைகள் தமிழகத்தில் முதன்முறையாக செய்யப்பட்டு உள்ளது. அனைத்து சிகிச்சைகளும் முதல்–அமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டு யாரும் வந்தால் பரிசோதனை செய்யவும், சிகிச்சை அளிக்கவும்2வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை இதுபோன்ற அறிகுறிகளுடன் வரவில்லை. அவ்வாறு யாருக்கும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது.\nபேட்டியின் போது குடல், இரைப்பை மருத்துவ பிரிவு துணைத்தலைவர் கந்தசாமி என்ற குமார், துணை பேராசிரியர் பாப்பி ரிஜாய்ஸ், உதவி பேராசிரியர் ‌ஷபிக் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் ரேவதி பாலன் ஆகியோர் உடனிருந்தனர்.
மூன்று கன்றுகளை ஈன்ற பசு| Dinamalar\nமேலுார், து.கோட்டைப்பட்டி விவசாயி வீரணன். இவருக்கு சொந்தமான பசு நேற்று இரவு வீட்டில் ஒரே பிரசவத்தில்2காளை மற்றும் 1 பசு உள்ளிட்ட மூன்று கன்றுகளை ஈன்றது. இப் பகுதி பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்து\nமேலுார், து.கோட்டைப்பட்டி விவசாயி வீரணன். இவருக்கு சொந்தமான பசு நேற்று இரவு வீட்டில் ஒரே பிரசவத்தில்2காளை மற்றும் 1 பசு உள்ளிட்ட மூன்று கன்றுகளை ஈன்றது.\nஇப் பகுதி பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்து சென்றனர்.\nமேலுார், து.கோட்டைப்பட்டி விவசாயி வீரணன். இவருக்கு சொந்தமான பசு நேற்று இரவு வீட்டில் ஒரே பிரசவத்தில்2காளை மற்றும் 1 பசு உள்ளிட்ட மூன்று கன்றுகளை ஈன்றது. இப் பகுதி பொதுமக்கள்\nகாந்தி ஜெயந்தி பேச்சு போட்டி
தருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்... - Namadhuamma Online Newspaper\nபுரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று தருமபுரியில் அம்மாவின் திருவுருவ சிலையை திறந்து வைத்து பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.\nதருமபுரி மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன் தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது.\nஅமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-\nவருகிற 24-ம்‘தேதி அம்மா பிறந்த நாள் விழாவில் நம் மாவட்டத்தில் ஒரு சிறப்பு இருக்கிறது. கடந்த 2001-2006-ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலையை புரட்சித்தலைவி அம்மா நமது மாவட்டத்திற்கு வருகை தந்து மாவட்ட கழக அலுவலகத்தில் திறந்து வைத்தார்.அதேபோல அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவில் இன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தருமபுரி மாவட்ட கழக அலுவலகத்திற்கு வந்து புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவச் சிலையை திறந்து வைக்க உள்ளார்.அன்றைய தினம் அரூரை மையமாகக் கொண்டு நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சிறப்புரை ஆற்றுகிறார்.\nஇதனை முன்னிட்டு அனைத்து கிராமங்களிலும் உள்ள கொடிக்கம்பங்களை மாற்றியமைப்பது,புதிய வர்ணம் பூசுவது என்பதை செய்ய வேண்டும். எதிர்வரும் தேர்தலை எதிர்நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இயக்கத்தையும் ஆட்சியையும் தமது இருபெரும் தலைவர்கள் வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். கழக அரசை மற்ற மாநிலங்கள் பாராட்டி கொண்டிருக்கிறது. மத்திய அரசு பல விருதுகளை வழங்கி கொண்டிருக்கிறது. பல்வேறு நிறுவனங்கள், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி யை தமிழக முதலமைச்சர் நடத்தி கொண்டிருக்கிறது எனக்கூறுகிறது.\nஅம்மாவின் வழியில் கழக ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது 21 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல், பாண்டிச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றிபெற்று இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இது அத்தனையும் அம்மாவையே சாரும். அம்மாவின் ஆன்மா நம்மோடு இருக்கும் வரை இந்த இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். கழகத்திலுள்ள எவரும் மாற்று கட்சிக்குத் செல்லவில்லை. அ.இ.அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் இருக்கும் வரை இந்த இயக்கத்தை எவராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது.\nவருகின்ற மிகமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் வெற்றிபெறக் கூடிய வகையில் நமது அத்தனை பேருடைய பணிகள் இருக்க வேண்டும். இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் வெற்றி மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிபேரூராட்சி, நகராட்சி தலைமையிடங்களில் அம்மா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக முன்னோடிகள் அன்னதானம் செய்ய வேண்டும்,
எண்ணெய் சருமத்திற்கான அடித்தளம் - குறைபாடுகளை சரியாக மறைத்தல் | ஒப்பனை\nமுகத்தில் உள்ள தோல் எங்கள் வணிக அட்டை, எனவே எல்லா பெண்களும் அவள் எப்போதும் முழுமையாய் இருக்க வேண்டும், அழகாகவும், புதியதாகவும், கதிரியக்கமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இருப்பினும், சில அதிர்ஷ்டசாலி பெண்கள் எந்த முயற்சியும் இல்லாமல் அவர்கள் விரும்பியதைப் பெற்றால், எண்ணெய் சருமத்தின் உரிமையாளர்கள் இதன் விளைவாக கடுமையாக உழைக்க வேண்டும்.\nஇதை எவ்வாறு கவனித்துக்கொள்வது மற்றும் புலப்படும் குறைபாடுகள் மற்றும் குறைபாடுகளை எவ்வாறு மறைப்பது என்பதை கீழே தருகிறோம். p>\nஇதற்கான ஈரப்பதமூட்டும் கிரீம் எண்ணெய் தோல்\nஎண்ணெய் சருமத்திற்கான குளிர்கால கிரீம்\nஎண்ணெய் சருமத்திற்கான அறக்கட்டளை\nஉங்கள் தொனியுடன் பொருந்துகிறது நிறத்துடன் பொருந்த\nஎண்ணெய் சருமத்திற்கான அடித்தளம் - பயன்பாட்டு விதிகள்\nஎண்ணெய் சருமத்திற்கான கிரீம் மெடிஃபைங்\nஈரப்பதமாக்குதல் எண்ணெய் சருமத்திற்கான கிரீம்\nஅடிப்படைக் கொள்கைகளில் ஒன்று அழகான தோல் நீரேற்றம். உலர்ந்த மற்றும் இயல்பான ஈரப்பதத்தை மட்டுமே நீங்கள் கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டுக்கதைகள் நீண்ட காலமாக அகற்றப்பட்டு வருகின்றன, எண்ணெய் வகைக்கு தினசரி நீரேற்றம் தேவைப்படுகிறது. இல்லையெனில், இது மண்ணான, நுண்ணிய மற்றும் தளர்வானதாக தோன்றுகிறது, சிவத்தல் மற்றும் சுடர்விடுதலால் பாதிக்கப்படுகிறது.\nஇது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது:\n< li> உணர்திறன்;\nமுகப்பரு பிரேக்அவுட்களுக்கு ஆளாகும்.\nநீங்கள் " உங்கள் சொந்த " கிரீம் பயன்படுத்தினால், நீங்கள் அடையலாம் முகப்பரு அல்லது பருக்கள் தோன்றுவது, அவை தோன்றுவதற்கு முன்பு கூட தோலில் இல்லை. ஆகையால், எண்ணெய்கள் இல்லாத ஒரு பொருளைத் தேர்வுசெய்க. (காமெடோஜெனிக் அல்லாதவை). சாலிசிலிக் அமிலமும் ஒரு நன்மை பயக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது, இது துளைகளைச் சுருக்கி அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது. நைட் கிரீம் தோராயமாக 25% நீர் மற்றும் 75% கொழுப்பைக் கொண்டிருக்க வேண்டும், மேலும் மேல்தோலின் ஆரோக்கியத்தை பராமரிக்க வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டிருக்க வேண்டும்.\nஒரு நபருக்கு குளிர்காலத்தில் சிறப்பு பாதுகாப்பு தேவை. கோடையில் மற்றும் ஆஃப்-சீசனில், ஒரு கொழுப்பு வகையின் உரிமையாளர்கள் ஒளி-கடினமான கிரீம்-திரவங்கள் அல்லது சீரம் பயன்படுத்தினால், குளிர்காலத்தில் பிற வழிகள் தேவைப்படுகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, கொழுப்புகள் இல்லாத ஒளி கிரீம்கள் காற்றின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு எதிராக சருமத்தை பாதுகாப்பற்றதாக விட்டுவிடுகின்றனஉறைபனி. p>\nஅவை குளிர்கால சீரம் அல்லது அடித்தளமாக இருக்கலாம். பிந்தையது ஒரு அலங்கார செயல்பாட்டை மட்டுமல்லாமல், ஒரு பாதுகாப்பாகவும் இருக்கும், இது உறைபனி மற்றும் காற்றுக்கு ஒரு தடையாக மாறும்.\nநாள் அடித்தளத்தை முகத்தில் பயன்படுத்துவதற்கான நேரத்திலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வெளியில் செல்வதற்கு 40 நிமிடங்களுக்கு முன்பு இதைச் செய்ய வேண்டும், இதனால் அது உறிஞ்சப்படுவதற்கு நேரம் கிடைக்கும். இல்லையெனில், உறைபனியில், கிரீம் ஆவியாகி, அது உறைந்து உள்ளூர் பனிக்கட்டிக்கு வழிவகுக்கும்.\nகலவைக்கு கவனம் செலுத்துங்கள். காஃபின் போன்ற ஒரு மூலப்பொருள் இதில் இருந்தால் நல்லது, இது துளைகளை சுருக்க உதவுகிறது. அல்லது சாலிசிலிக் அமிலம், இதன் செயல் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லது வைட்டமின் ஏ, இது மேல்தோல் அழற்சியை நீக்குகிறது.\nஎண்ணெய் தோலுக்கு குளிர்கால நாள் கிரீம் ஒன்றை உங்கள் விரல் நுனியில் தடவி, மசாஜ் வரிகளை ஒட்டவும். நினைவில் கொள்ளுங்கள், அதை மிகைப்படுத்தாமல் புகாரளிக்காமல் இருப்பது நல்லது. டி-மண்டலத்திற்கு அடித்தளத்தை மட்டுமே பயன்படுத்துவதன் மூலமும் நீங்கள் அதைக் கடந்து செல்லலாம்.\nஒப்பனை மற்றும் தூள் டோனல் வழிமுறையின் அடிப்படையாக அமைகின்றன. வழக்கமான நாள் கிரீம்களைப் போலன்றி, அவை3முதல் 25% வண்ணமயமான நிறமிகளைக் கொண்டுள்ளன. நிறமி 10% க்கும் அதிகமாக இருந்தால், அவை கிரீம் பொடிகள் என்று அழைக்கப்படுகின்றன. அடித்தளம் முகத்திற்கு சமமான மற்றும் இயற்கையான நிழலைக் கொடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், இது பிளாக்ஹெட்ஸ் மற்றும் முகப்பருக்களின் தோற்றத்தையும் தடுக்கிறது என்பது விரும்பத்தக்கது.\nஎண்ணெய்க்கு " அடித்தளம் " நபரின் வகை மிகவும் பொறுப்புடன் அணுகப்பட வேண்டும், ஏனென்றால் ஒரு மோசமான-தரமான அல்லது பொருத்தமற்ற தயாரிப்பு, நன்கு அறியப்பட்ட அழகுசாதன உற்பத்தியாளர்களிடமிருந்து கூட தீங்கு விளைவிக்கும். பிரகாசத்தை அதிகரிக்கவும், துளைகளை அடைக்கவும், செபாசஸ் சுரப்பிகளின் சுரப்பை இன்னும் அதிகரிக்கவும்.\nஎனவே, ஒரு "டோனரை" வாங்கும்போது, ​​பின்வரும் நுணுக்கங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்:\n" அறக்கட்டளை " அதி-ஒளி, காற்றோட்டமான நிலைத்தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்;\nஅத்தியாவசிய எண்ணெய்கள் குறைவாகவோ அல்லது குறைவாகவோ இருக்க வேண்டும்;\nசூரிய கதிர்வீச்சிலிருந்து வடிப்பான்களைச் சேர்க்கவும்;\nதுளைகளை இறுக்கும் பொருள்களைக் கொண்டிருங்கள் - சாலிசிலிக் அமிலம், வெள்ளை தேநீர் போன்றவை;\nஅலங்கார செயல்பாட்டிற்கு கூடுதலாக, அதில் மருத்துவ கூறுகளும் இருக்க வேண்டும் ஒரு பாக்டீரிசைடு அல்லது அழற்சி எதிர்ப்பு விளைவைக் கொண்டிருக்கும்;\n“ அடித்தளம் " பிரகாசத்தை நீக்குகிறது என்று குழாயில் ஒரு குறிப்பு இருக்க வேண்டும். வயதுக்கு ஏற்ப, இப்போது உற்பத்தியாளர்கள் இந்த கொள்கையின்படி " டோன் டோன்களை " உருவாக்குகிறார்கள்.\n" பன்றி ஒரு குத்து "அடித்தளத்தை நேரடியாக மந்திரவாதிக்குள் சரிபார்க்கவும் அஜைன். அதன் நிலைத்தன்மையைக் காண உங்கள் விரலில் சிறிது அழுத்துவது மதிப்பு. அமைப்பு ஒரே மாதிரியாக இல்லாவிட்டால், கட்டிகளைக் கொண்டிருந்தால், அவர்கள் உங்களுக்கு குறைந்த தரமான தயாரிப்புகளை விற்க முயற்சிக்கிறார்கள் என்று அர்த்தம்.\n“ அடித்தளம் Summer கோடையில், வெயில் காரணமாக, குளிர்காலத்தில் நீங்கள் பயன்படுத்தும் தொனியை விட இது ஒரு தொனியாக இருட்டாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்க. காலாவதி தேதியிலும் கவனம் செலுத்துங்கள். தைரியமான வகைக்கு முரணான ஏராளமான பாதுகாப்புகள் இதில் உள்ளன என்பதற்கான உயர் குறிகாட்டியாகும்.\nஉங்கள் தொனியை நிறத்துடன் பொருத்துகிறது\n“ டோன்கள் ", நீங்கள் அடுத்த தேர்வுக்குச் சென்று நீங்கள் விரும்பும் தொனியைத் தேர்வு செய்யலாம். மின்சாரம் உண்மையான நிறத்தை சற்றே சிதைக்கக்கூடும் என்பதால், பகலில் மட்டுமே நீங்கள் ஒரு தொனியைத் தேர்வு செய்ய வேண்டும்.\nதேர்ந்தெடுக்கும் போது, ​​" சாயம் பூசப்பட்ட "இது மணிக்கட்டில் இல்லை, ஏனெனில் இது தவறான முடிவுகளைத் தரக்கூடும், ஆனால் சப்மாண்டிபுலர் பகுதியில்:\nவெளிர் முகம் கொண்ட பெண்கள் பொருந்தாது" அடித்தளம் ”தோல் பதனிடுதல் விளைவுடன், அவர்கள் அதை எப்படி விரும்பினாலும் சரி. அவர்கள் பாதாமி அல்லது பீச் நிறத்தை தேர்வு செய்ய வேண்டும்;\nமஞ்சள் நிறமுடையவர்களுக்கு, " அடித்தளம் " ஆரஞ்சு அல்லது இளஞ்சிவப்பு.\nஎண்ணெய் சருமத்திற்கான அறக்கட்டளை - பயன்பாட்டு விதிகள்\nஉங்கள் கிரீம் மற்றும் தொனியை சரியாக வரையறுத்திருந்தாலும், “ டோனர் "உங்கள் முகத்தில்.\nஅதை சமமாக விநியோகிக்க உதவும் சில சிறிய ரகசியங்கள் உள்ளன:\nபயன்படுத்துவதற்கு முன்பு பால் மற்றும் டோனருடன் உங்கள் முகத்தை சுத்தப்படுத்த மறக்காதீர்கள். இது சுத்தமாகவும் ஈரப்பதமாகவும் இருக்க வேண்டும்;\n" டோனர் " இன் தொடர்ச்சியான பயன்பாட்டின் மூலம், இறந்த மேல்தோல் துகள்களை சரியான நேரத்தில் அகற்ற அடிக்கடி தோலுரித்தல் தேவைப்படுகிறது;\n< li> முகத்தில் அடித்தளத்தைப் பயன்படுத்தும்போது, ​​ஒரு கடற்பாசி பயன்படுத்தவும், இது உப்பு சேர்க்காத கனிம நீரில் முன் ஈரப்படுத்தப்படுகிறது;\nஅடித்தளம் மையத்திலிருந்து சுற்றளவுக்கு அல்லது கீழிருந்து மேலே பயன்படுத்தப்படுகிறது; = "சாய்வு"> அடித்தளம்\n"கண் பகுதியில். முடி வேர்களில் அதை நன்றாக கசக்க நேரம் ஒதுக்குங்கள்.\nஎண்ணெய் சருமத்திற்கான மேட்டிங் கிரீம்\nஎண்ணெய் வகை உரிமையாளர்களுக்கு, உற்பத்தியாளர்கள் முற்றிலும் விடுபடுவதாக உறுதியளிக்கிறார்கள் மேட்டிங் முகவரின் வழக்கமான பயன்பாட்டுடன் பிரகாசிக்கவும். மேட்டிங் கிரீம், நிச்சயமாக, அதை அகற்ற உதவுகிறது, ஆனால் தற்காலிகமாக மட்டுமே, ஏனென்றால் செபாஸியஸ் சுரப்பிகளின் வேலையை ஒழுங்குபடுத்துவது அவருடைய சக்தியில் இல்லை, ஏனென்றால் தோல் வகை இயற்கையால் மரபணு மட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.\nமேலும் அது கொழுப்பாக இருந்தால், அதிசயமான எந்த வழியும் அதை சரிசெய்ய முடியாது. மேட்டிங் விளைவைக் கொண்ட தயாரிப்புகள் உண்மையில் என்ன செய்ய முடியும் என்பது ஒப்பனை2மணி நேரம் நீடிக்கும்.\nஅவை மோசமான விளைவையும் கொண்டிருக்கின்றன, அவை உற்பத்தியாளர்கள் குறிப்பிட மறந்துவிட்டன, ஆனால் அழகுசாதன நிபுணர்கள் சத்தமாக பேசுகிறார்கள். மேல்தோல் செயற்கையாக உலர்த்துவதை நோக்கமாகக் கொண்ட மேட்டிங் தளத்தின் ஆக்கிரமிப்பு விளைவு, செபாஸியஸ் சுரப்பிகளின் வேலை அதிகரிக்க வழிவகுக்கும். நீங்கள் இயற்கையை முட்டாளாக்க முடியாது.\nபெறுநர்கள் கொழுப்பு என்று ஒரு சமிக்ஞையை அனுப்புவார்கள்சமநிலை தொந்தரவு செய்யப்படுகிறது மற்றும் மேல்தோல் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது, இதற்கு பதிலளிக்கும் விதமாக, செபாசஸ் சுரப்பிகள் இருமடங்கு வைராக்கியத்துடன் செயல்படத் தொடங்கும்.\nஇவ்வாறு, மேட்டிங் அடித்தளத்தை தவறாமல் பயன்படுத்தினால், அது பிரகாசத்தின் சிக்கலை அதிகரிக்கும். ஆகையால், ஒரு பொருளை ஒரு முதிர்ச்சியடையும் விளைவைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​உங்களுக்கு ஒரு தொழில்முறை மற்றும் நீண்டகால அலங்காரம் தேவைப்படும்போது மட்டுமே அதைப் பயன்படுத்தவும்.\nஎங்கள் உதவிக்குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். வெவ்வேறு உற்பத்தியாளர்களிடமிருந்து அடித்தளங்களை முயற்சிக்கவும், உங்கள் சரியான தயாரிப்பை நீங்கள் கண்டறிவது உறுதி. அடித்தளம் முதன்மையாக குறைபாடுகளை மறைக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் சரியான கவனிப்பு மட்டுமே அவற்றை சமாளிக்க உதவும்.\nஎப்படி அதிகரிப்பு பசியின்மை குழந்தை மற்றும் நிறுவ ஒரு ஆரோக்கியமான உணவு?\nஒரு சிறு குழந்தைக்கு ஒரு கால் மற்றொன்றை விடக் குறைவாக இருக்கும்போது என்ன செய்வது?\nவழிகள் மற்றும் சிறிய தந்திரங்கள்
ஓகஸ்ட் | 2007 | தாளிக்கும் ஓசை\nPosted by Jayashree Govindarajan under சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், துவையல், பக்க உணவு\nவாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயில் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தை சிவக்க வறுத்துக் கொள்ளவும்.\nஅத்துடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சிறிது வதக்கி, அடுப்பை அணைத்துவிடவும்.\nஆறியதும் தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து சிறிதளவு நீர் விட்டு கரகரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். (அம்மியில் அரைத்தால் மிகுந்த சுவையாக இருக்கும்.)\n* தேங்காயின் பச்சை வாசனை பிடிக்காதவர்கள் லேசாக வறுத்துக் கொள்ளலாம்.\n* துவரம் பருப்பு 1 டீஸ்பூன் சேர்த்து வறுத்துச் செய்தால் நன்றாக இருக்கும். பலருக்குப் பிடித்திருக்கிறது.\n* எனக்கு திவசத்தன்று செய்யும் தேங்காய்த் துவையல் பிடிக்கும். அம்மியில் அரைப்பது மட்டுமின்றி அத்துடன் 1 டீஸ்பூன் எள் சேர்ப்பதும் தான் சுவைக்குக் காரணம் என்று பிறகு தெரிந்துகொண்டேன்.\nசாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். பருப்புக் கூட்டு, பொரித்த அப்பளம், வடாம் வகைகளுடன் சேரும். இதற்கே முதல் இடம்.\nதயிர் சாதம், உப்புமா, தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ளலாம். நீண்ட பயணங்களுக்குத் தயாரிக்கும்போது, தேங்காயையும் நன்கு சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளலாம். கெடாமல் இருக்கும்.\nPosted by Jayashree Govindarajan under சப்ஜி(சப்பாத்தி), சமையல் குறிப்பு, தமிழ்ப்பதிவுகள், பக்க உணவு\nதாளிக்க: எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை\nவெண்டைக்காயைக் கழுவி, நன்றாக மேல் ஈரம் காயவிட்டு, சிறிய வட்டங்களாகவோ அல்லது நீளமாக குறுக்கிலோ நறுக்கிக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வெண்டைக்காயைச் சேர்க்கவும்.\nஉப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தயிர் சேர்த்துப் பிரட்டிவிட்டு, சிம்மில் வைத்து மூடிவைக்கவும்.\nஅவ்வப்போது திறந்து கிளறிவிட்டு மீண்டும் மூடவும்.\nஅரைப் பதம் வெந்ததும், கடலை மாவு தூவி, திறந்துவைத்தே வேகவைக்கவும்.\nஅடிப்பிடிக்காமல் மெதுவாக அவ்வப்போது திருப்பிவிட்டு, முக்கால் பதம் வெந்ததும் இறக்கவும்.\n* விரும்புபவர்கள் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லித் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.\n* தயிருக்குப் பதிலாக புளிநீரும், காரப்பொடிக்கு பதில் ரசப்பொடி அல்லது கறிப்பொடியும் சேர்க்கலாம்.\n* மிளகாய்த் தூளைக் குறைத்துக் கொண்டு, காலையில் செய்த தேங்காய்ச் சட்னி மீந்திருந்தால் அதையும் சேர்த்துக் கிளறியிருக்கிறேன். நன்றாக இருக்கும். (பச்சை மிளகாய், பொட்டுக்கடலை தேங்காய் அரைத்துச் சேர்ப்பது ஆந்திரா ஸ்டைல்)\n* வெண்டைக்காயுடன், தக்காளி, தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் மட்டும் அரைத்துவிட்டு தேங்காய் எண்ணையில் கடுகு தாளிக்கலாம். (கேரளா ஸ்டைல்)\n* வெண்டைக்காயை நீளத் துண்டுகளாக நறுக்கி, அரை மூடி தேங்காய், 4,5காய்ந்த மிளகாய், 1/2 டீஸ்பூன் சீரகம், உப்பு சேர்த்து அரைத்து காயில் பிசிறி 20 நிமிடம் வைத்து, வாணலியில் எண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வதக்கலாம்.\nகுழம்பு, ரசம் என்று எல்லா சாதத்துடனும், முக்கியமாக தயிர் சாதத்துக்கு மிகவும் பொருந்தும்.\nசெவ்வாய், ஓகஸ்ட் 21, 2007\nநோட்டீஸ்.. நோட்டீஸ்.. :)\nசுவாரசியங்களுக்காக தெருவுல இறங்கி நான் நோட்டீசெல்லாம் பார்க்கணுங்கறதில்லை… எங்க நோட்டீஸ் போர்டே நிறைய சொல்லும். 🙂\nகாய்ந்த மிளகாய் – 1 (விரும்பினால்)\nதேங்காய் – 1 டீஸ்பூன்(மட்டும்)\nஅடுப்பில் வாணலியில் எண்ணை விட்டு காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து நிதானமான தீயில் பச்சை வாசனை போக, கருகிவிடாமல் நன்கு கிளறிவிட்டுக் கொண்டே, சிவக்க வறுக்கவும்.\nஆறியதும் மிக்ஸியில் போட்டு, உப்பு, தேங்காய் சேர்த்து, சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, மிகவும் நைசாக அரைக்கவும்.\nசூடாக, தளரக் கலந்த வத்தக் குழம்பு, மிளகுக் குழம்பு அல்லது எந்தக் காரக் குழம்பு சாதத்திற்கு ஏற்றது. மிளகு ரசம் சாதத்துடனும் அருமையாகச் சேரும்.\nதுவரம் பருப்பு – 1/2 டீஸ்பூன்\nஒரு டீஸ்பூன் எண்ணையில் காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை என்ற வரிசையில் வறுத்துக் கொள்ளவும்.\nவறுத்த பொருள்களுடன் தேங்காயை வைத்து அரைத்துக் கொள்ளவும்.\nபுளித் தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள், சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.\nஅரைத்த விழுதையும் சேர்த்து மேலும் கொதிக்க வைத்து இறக்கவும்.\nகெட்டியான குழம்பை நெய் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிடலாம்.\nகுழம்பை நீர்க்க தயாரித்துக் கொள்ளவும். ஒரு கப் அரிசியைக் குழைந்த சாதமாக வடித்து, அதில் நெய், நல்லெண்ணை, குழம்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். சுடச் சுட, பருப்புத் துவையலுடன் சாப்பிட ஏற்றது. எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வீட்டினருடன் இந்த சாதம் (மட்டும்) சாப்பிட்டு விடுமுறை நாளில் ஒரு பகல் தூக்கம் போடுவது உத்தமமாக இருக்கும். : ) நேற்று தூக்கம் போட வைத்த பார்ஸிகளுக்கு (தாமதமான) புத்தாண்டு வாழ்த்துகள்! : )\nபுளியை நார், கொட்டை இல்லாமல் சுத்தமாக்கிக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் எண்ணெய் வைத்து, உளுத்தம் பருப்பு, மிளகு, புளி, காய்ந்த மிளகாய், பெருங்காயம் என்ற வரிசையில் சேர்த்து நன்கு வறுக்கவும்.\nவறுத்ததை சிறிது நீர் சேர்த்து நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெயில் கடுகு, சீரகம் கறிவேப்பிலை தாளித்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு, இந்த விழுதைப் போட்டு கொதிக்கவிட்டு இறுகி வந்ததும் இறக்கவும்.\n* இந்த விழுதை தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் ஒரு வாரத்திற்குள் எப்பொழுது வேண்டுமோ அப்போது சுலபமாக இந்தக் குழம்பை தயாரித்து விடலாம்.\n* விரும்பினால் தாளிக்கும்போது4பல் பூண்டு சேர்த்தும் வதக்கிக் கொள்ளலாம்.\nதாளிக்க – எண்ணெய்,3அல்லது4காய்ந்த மிளகாய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை.\nமிளகு, துவரம் பருப்பை நன்கு வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து, கடுகு, இரண்டாகக் கிள்ளிய காய்ந்த மிளகாய், சீரகம், கறிவேப்பிலை தாளித்து, புளி நீர், அரைத்த பொடி, மஞ்சள் தூள், பூண்டுப் பல், உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.\n* விரும்பினால் ஒரு துண்டு வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
“இந்த டாபிக் எனக்குள் தீயை உண்டாக்குகிறது” - தஸ்லீமாவுக்கு பதிலளித்த ரஹ்மான் மகள் | AR Rahman Daughter Khatija Responds When Trolled for WearingaBurqa | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News\nPublished : 16,Feb 2020 04:05 PM\nஎழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் எழுப்பிய பர்தா சர்ச்சைக்கு ரஹ்மானின் மகள் கதீஜா, மிக நீண்ட விளக்கத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் அளித்துள்ளார்.\nஇசை உலகில் மிகவும் புகழ்வாய்ந்த பிரபலமாக வலம் வருபவர் ஏ. ஆர். ரஹ்மான். அதிரடியான விஷயங்களில்கூட அவர் அமைதியாகவே பதில் கொடுப்பார். அதிகம் சர்ச்சைகளில் சிக்காத ரஹ்மான், கடந்த ஆண்டு மும்பையில் ‘ஸ்லம்டாக் மில்லினர்’படத்தின் பத்தாம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரஹ்மானின் மகள் கதிஜாவும் பங்கேற்றார். அவரது தந்தையோடு அவர் மேடையில் ஒரு உரையாடலையும் நடத்தினார். அப்போது கதிஜா அணிந்து வந்த பர்தா பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.\n‘ரஹ்மான் பிற்போக்குத்தனமாக நடந்து கொண்டுள்ளார்’என பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். உடனே அதனையடுத்து அது பெரும் விவாதமாக மாறியது. இதற்கு ரஹ்மானின் மகள், ‘நான் எந்த உடையை அணிய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்’ எனக் கூறி விளக்கம் அளித்திருந்தார். மேலும், ‘எனது தேர்வுக்கும் விருப்பத்திற்கும் எனது பெற்றோர்கள் பொறுப்பாக முடியாது’ என்று கூறியிருந்தார். அதன்பின் அந்தச் சர்ச்சை அடங்கியது.\nஇந்த நிகழ்வு முடிந்து இத்தனை மாதங்கள் கடந்த பின்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பெண்ணியவாதியும் சர்ச்சைக்குரிய எழுத்தாளருமான தஸ்லீமா நஸ்ரின், “நான் ஆர் ரஹ்மானின் இசையை முற்றிலும் விரும்புகிறேன். ஆனால் நான் அவரது அன்பான மகளை பார்க்கும்போது எல்லாம் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. ஒரு கலாச்சார குடும்பத்தில் படித்த பெண்களைக்கூட மிக எளிதாக மூளைச்சலவை செய்ய முடியும் என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் வருத்தமளிக்கிறது” என்று கூறியுள்ளார். இந்தப் பதிவை அவர் ட்விட்டரில் கூறியுள்ளார். அதற்குப் பலரும் தங்களின் கருத்துகளை பின்னூட்டமாக எழுதி வருகின்றனர்.\nஇந்தச் சர்ச்சையின் மிக முக்கியமான திருப்பமாக ஏ. ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா, அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில் அவர், “ஒரு வருடத்திற்குப் பின்பாக மீண்டும் இந்த டாபிக் சுற்ற ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டில் எவ்வளவு நடக்கிறது. ஆனால் அனைத்து மக்களும் ஒரு பெண் அணிய விரும்பும் துண்டு உடை குறித்து கவனம் செலுத்துகிறார்கள். ஆஹா, நான் மிகவும் திடுக்கிட்டுவிட்டேன்.\nஒவ்வொரு முறையும் இந்த டாபிக் எனக்குள் தீயை உண்டாக்குகிறது. நிறைய விஷயங்களைச் சொல்ல விரும்புகிறது. பல ஆண்டுகளாகப் பல்வேறு குணாதிசயங்களைக் கடந்த ஒரு வருடமாக நான் கண்டுவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளை எண்ணி பலவீனமடையவோ வருத்தப்படவோ மாட்டேன். நான் என்ன செய்கிறேன் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன், என்னைப் போலவே என்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நன்றி. நான் மேலும் சொல்ல விரும்பவில்லை” என்று மிக நீண்ட விளக்கத்தை பதிவிட்டுள்ளார்.\nமேலும் அவரது பதிவில், “அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின், என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். எனது உடையால் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. அதற்குப் பதிலாக நான் ஏற்றுக் கொண்ட விஷயத்தில் பெருமையாகவும் உறுதியாகவும் உணர்கிறேன்”எனக் கூறியுள்ளார்.\nஇருசக்கர வாகனத்தில் அக்டோபர் முதல் கைப்பிடி கட்டாயம்\n“படித்த குடும்பங்களில்தான் விவாகரத்து அதிகரித்துள்ளது” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் !\nRelated Tags : AR Rahman Daughte, Khatija , Burqa, Taslima Nasreen, ரஹ்மான் மகள், தஸ்லீமா நஸ்ரின், ஏ. ஆர். ரஹ்மான், கதீஜா, பர்தா சர்ச்சை,
A Leapord Gives Birth To4Cubs In A Hut In Maharashtra\nமகாராஷ்டிராவில் குடிசைக்குள் குட்டிகளை ஈன்ற சிறுத்தை - வன ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட நிலை! #ViralVideo\nவனங்களை தொடர்ந்து மனிதர்கள் ஆக்கிரமித்துவருவதால் இது போன்ற விஷயங்கள் நடைபெறுகின்றன.\nUpdated on : 19 August 2020, 12:34 PM\nமகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள இகாட்பூரி என்ற இடத்தில் குடிசைக்குள் சிறுத்தை ஒன்று4குட்டிகளை ஈன்றுள்ளது.\nநான்கு சிறுத்தை குட்டிகளுடன் ஒரு பெண் சிறுத்தை குடிசை ஒன்றுக்குள் இருக்கும் காட்சிகளும், நான்கு குட்டிகளும் ஒரு குடிசைக்குள் தவழ்ந்து செல்லும் காட்சிகளும் இடம்பெற்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஇதுகுறித்துப் பேசியுள்ள மகாராஷ்டிரா வனதுறை அதிகாரி கணேஷ்ராவோ ஜோலே, “இகாட்பூரியில் உள்ள ஒரு குடிசைக்குள் பெண் சிறுத்தை நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. நாங்கள் குட்டிகளை தாய் சிறுத்தை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக காத்திருக்கிறோம். குட்டிகள் இருப்பதால் தாய் சிறுத்தையை எங்களால் பிடிக்கமுடியவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.\nஏஎன்ஐ செய்தி நிறுவனம் ட்விட்டரில் பகிர்ந்துள்ள வீடியோ நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை அந்த வீடியோவுக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. சிறுத்தை குட்டிகள் மிகவும் அழகாக இருப்பதாக பலர் தெரிவித்தனர்.\nஅதே நேரத்தில் வனத்தில் குட்டிகளை ஈன்று, அங்கே இருக்க வேண்டிய சிறுத்தை ஒரு குடிசைக்குள் குட்டிகளை ஈன்றிருப்பது வருத்தத்துக்குரியது எனவும் சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சிறுத்தைகள் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் அதிகம் வருவது, வனங்களை மனிதர்கள் அதிக அளவில் ஆக்கிரமிப்பதை சுட்டுவதாகவும் உள்ளது.
முன்பேர வணிகத்துக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? - OnlinePJ.in\nPrevious Article நாம் ஏற்றுக் கொண்ட வேலையை மற்றவர் துணையுடன் செய்யலாமா?\nNext Article நேர்மையில்லாத தங்க வியாபாரம்!\nஎந்தப் பொருளையும் அன்றைய மார்க்கெட் நிலவரப்படி விற்பதும், வாங்குவதும் தான் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வியாபாரமாகும். நாளைக்கு நமக்கு வரக்கூடிய பொருளுக்கு இன்று விலை நிர்ணயித்துக் கொண்டால் அதில் விற்பவர் அல்லது வாங்குபவர் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இத்தகைய வியாபாரம் தான் முன்பேர வணிகம் என்று கூறப்படுகிறது.\nஒரு விவசாயி தனது வயலில் விளையும் நெல்லை ஒரு மூட்டை 500 ரூபாய்க்குத் தருவதாக வியாபாரியிடம் ஒப்பந்தம் செய்கிறார். அறுவடை நாளில் நெல் விலை 600 ஆகி விட்டால் விவசாயிக்கு அநியாயமாக 100 நூறு ரூபாய் நட்டம். அவரது வயிறு எரிய இது காரணமாக ஆகி விடும். நாம் இப்படி ஒப்பந்தம் செய்யாமல் இருந்தால் நமக்கு நூறு நூறு ரூபாய் அதிகம் கிடைத்திருக்குமே என்று என்று ஏக்கம் கொள்வார்.\nஅது போல் ஒரு மூட்டை நெல் 400 ஆகக் குறைந்து விட்டால் விவசாயிக்கு நூறு ரூபாய் அதிகம் கிடைத்தாலும் வியாபாரிக்கு நூறு ரூபாய் வீணாகிறது.\nஇந்த முன் வணிகம் தங்கம், டாலர் இன்னும் அனைத்துப் பொருட்களிலும் நடைமுறைபடுத்தப்படுகிறது.\nஇது போன்ற வியாபாரம் சிறந்ததல்ல என்றாலும் அன்றைக்கு நபித்தோழர்களுக்கு இருந்த வறுமை காரணமாக செல்வந்தர்களிடம் முன் கூட்டியே பணம் பெற்றுக் கொண்டு இது போல் வியாபாரம் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி அளித்தார்கள்.\n2239 - حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي المِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ، وَالنَّاسُ يُسْلِفُونَ فِي الثَّمَرِ العَامَ وَالعَامَيْنِ، أَوْ قَالَ: عَامَيْنِ أَوْ ثَلاَثَةً، شَكَّ إِسْمَاعِيلُ، فَقَالَ: «مَنْ سَلَّفَ فِي تَمْرٍ، فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ»، حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنْ ابْنِ أَبِي نَجِيحٍ، بِهَذَا: «فِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ»\n2239 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது, மக்கள் ஒரு வருடம், இரண்டு வருடங்களில் (பொருளைப்) பெற்றுக் கொள்வதாக, பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்து வந்தனர். ஒருவர் பேரீச்சம் பழத்திற்காக முன்பணம் கொடுத்தால் எடையைக் குறிப்பிட்டு, அளவைக் குறிப்பிட்டு கொடுக்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல் : புகாரி 2239\n2240 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي المِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ وَهُمْ يُسْلِفُونَ بِالتَّمْرِ السَّنَتَيْنِ وَالثَّلاَثَ، فَقَالَ: «مَنْ أَسْلَفَ فِي شَيْءٍ، فَفِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ، إِلَى أَجَلٍ مَعْلُوم\n2240 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மக்கள் இரண்டு, மூன்று வருடங்களில் பேரீச்சம் பழத்தைப் பெற்றுக்கொள்வதாக (ஒப்புக் கொண்டு, அதற்காக) முன்பணம் கொடுத்து வந்தார்கள். ஒருவர் ஒரு பொருளுக்கு முன்பணம் கொடுத்தால், அளவும் எடையும் தவணையும் குறிப்பிடப்பட்ட பொருளுக்காக (மட்டுமே) கொடுக்கட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல் : புகாரி 2240\nஇது போல் முன் பணம் கொடுத்தாலோ, வாங்கினாலோ அப்பொபோருள் எப்போது கொடுக்கப்படும் என்று நாளையும் எடையையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.\nஇந்த தரத்தில் உள்ள மிளகாயை இந்த விலைக்கு இந்த நாளுக்குள் தருவேன் என்று தெளிவுபடத் தெரிவித்து முன் பணம் வாங்கலாம்; கொடுக்கலாம்.\n14.06.2011. 11:41 AM\nஅமெரிக்க நிறுவனத்தில் பணிசெய்யலாமா?\nஇணை வைக்கும் இடங்களில் இருந்து ஆடு கோழி போன்றவற்றை ஏலத்தில் வாங்கி பயன்படுத்தலாமா?\nசர்ச் வரைந்த டி ஷர்ட் வியாபாரம் செய்யலாமா?\nபோதுமான வருமானம் இருக்கும்போது மார்க்க கல்வி கற்றுக்கொடுக்க காசு வாங்கலாமா?\nதள்ளுபடி, டிஸ்கவ்ண்ட்,கேஷ்பேக் என்று செய்யும் வியாபாரம் கூடுமா?
ஒரு ஹிந்து செய்யக்கூடாத காரியம் - மதம் மாī\nThread: ஒரு ஹிந்து செய்யக்கூடாத காரியம் - மதம் மாī\nசந்திரகுப்த மௌரியன், கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் கைப்பற்றிய பகுதியை, மீண்டும் கைப்பற்றினான்.\nஇந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முழுவதையும் ஆண்ட இந்த அரசன், தன் மகன் பிந்துசாராவுக்கு ராஜ்யத்தை கொடுத்து விட்டு, ஜைன மதத்தில் சேர்ந்தான்.\nபிந்துசாராவின் மகன் உலக புகழ் பெற்ற வீரனாக இருந்த சாம்ராட் அசோக சக்கரவர்த்தி.\n265BCல் கலிங்க போரில் வெற்றி பெற்ற பின், ஒரு புத்த பிக்ஷுவின் பேச்சை வேத வாக்காக எடுத்து, சமாதானம் பொறுமை அன்பு என்ற வார்த்தையில் மயங்கி பௌத்த மதத்தை ஏற்றான்.\nஒரு அரசன் நாட்டை காக்க எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும். க்ஷத்ரியனாக இருக்க வேண்டும். சந்யாசி போன்று பேச கூடாது. வீரர்களையும் போர் பயிற்சி குறையாதவர்களாக, வீரர்களாக எப்போதும் வைத்து இருக்க வேண்டும்.\nபௌத்த மதத்தை ஏற்ற அசோக சக்கரவர்த்தி, தன் குடையின் கீழ் இருந்த ஆப்கான் முதல் பாகிஸ்தான், இந்தியா முழுவதும் இருந்த அரசர்களை பௌத்த வழியில் இழுத்தான்.\nபௌத்த மதம் மிக வேகமாக பரவியது. எங்கு பார்த்தாலும் மொட்டை தலைகள். யார் வாயிலும் "புத்தம் சரணம் கச்சாமி" என்ற வார்த்தைகள்.\nஇது போதாது என்று வேத தர்மத்தை தன் இஷ்டத்துக்கு புரிந்து கொண்டு புது புது மதங்கள் உருவானது.\nகாபாலி என்ற கடவுளின் பெயரால், நர பலி கொடுக்கும் கூட்டம் உருவானது.\nஅரசனே பௌத்த மதம் என்று போனதால், போர் வீரர்கள் புத்த கோவில் கட்டவும், காவல் காக்கவும் ஈடுபடுத்த பட, போர் பயிற்சி குறைந்த, வீரம் குறைந்த வீரர்களாக ஆகிக் கொண்டிருந்தனர்.\nஇப்படி பௌத்த மதம் பாரதத்தில் தலை விரித்து ஆடிக்கொண்டிருந்த சமயத்தில், இந்தியாவிற்கு மேற்கு திசையில் இரு புது மதங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டு இருந்தன.\nஒரு மதம் வன்முறை மூலமாக தன்னை பரப்ப முயற்சி செய்து கொண்டிருந்தது.\nமற்றொரு மதம், பௌத்த மதத்தை போல அன்பு, இரக்கம் என்ற போர்வையில் பணத்தை கொடுத்தாவது பரப்ப முயற்சி செய்து கொண்டிருந்தது.\nசுமார் 788 AD - 820 ADல் இறைவனே இந்த வேதத்தை, பாரதத்தை காப்பதால், பௌத்தம் தலை விரித்து ஆடும் பாரதத்தை, வேத மார்க்கத்தில் இருந்து விலகி உருவான பொய் மதங்களை ஒடுக்க சிவபெருமானே "ஆதி சங்கராக" அவதரித்து 70க்கும் மேற்பட்ட பொய் மதங்களை ஒடுக்கினார். மீண்டும் வேத மார்க்கத்தை ஒளிர் விட செய்தார்.\nசந்திரகுப்த மௌரியனும், அசோக சக்கரவர்த்தியும் விதைத்த பௌத்த விதைகள், பிற் காலத்தில் வந்த அரசர்களையும், வீரர்களையும் கோழைகள் ஆக்கி விட்டது.\nஇந்த2ஹிந்துக்கள் மதம் மாறியதன் விளைவு, கோடீஸ்வரர்களாக இருந்த நாம், 947 ADல் ஆரம்பித்து, 1947 வரை இந்திய தேசமும், வாழும் ஹிந்துக்களும் இந்த புதிய உருவாக்கப்பட்ட மதத்தை சேர்ந்த வெளிநாட்டவர்கள், இந்தியாவில் கால் ஊன்றி, மத மாற்றம், கொள்ளை, கற்பழிப்பு, பெரிய பெரிய கோவில்களை இடித்து அவர்கள் வழிபடும் ஸ்தலங்களாக மாற்றுவது, அடிமை படுத்துவது, கலாச்சாரத்தை கெடுத்து தன் மாமிச மது கலாச்சாரத்தை புகுத்துவது என்று அனைத்தையும் நம் முன்னோர்கள் அனுபவிக்க வித்திட்டது.\nபௌத்த மதம் ஆப்கான் தாண்டி, ஈரான் வரை பரவி இருந்தது. ஹிந்துக்களாக இருந்த ஈரானியர்கள், 900AD சமயங்களில் பௌத்த மதத்தை தழுவி இருந்தனர்.\n947ADல், அமீர் சூரி என்ற ஈரான் அரசன் பௌத்த மதத்தில் இருந்தான்.\nஇந்த சமயத்தில், புதிதாக உருவாகி இருந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அரசர்கள் இந்தியா பக்கம் வர முயற்சி செய்து கொண்டிருந்தனர்.\nஸபாரிட் பரம்பரை (Saffarid Dynasty) சேர்ந்த இஸ்லாமிய படையை எதிர்க்க வேண்டிய நிலை அமீர் சூரிக்கு உருவானது.\nஒரு அரசன் அன்பு இரக்கம் என்று பௌத்த மதத்தில் இருப்பதை விட மதத்தை பரப்ப ஆயுதம் எடுக்கும் இவர்கள் மதம் பிடித்து போனது.\nதான் பௌத்தனாக இருந்த போதிலும், தன் மகனுக்கு "முகமது பின் சூரி" என்று இஸ்லாமிய பெயர் வைத்தான் அமீர் சூரி.\nதன் வரை பௌத்தனாக இருந்துவிட்டாலும், இவன் மகன் முகமது பின் சூரி இஸ்லாமியனாக வளர்ந்தான். முகமது பின் சூரி தன் மகன் "அபுஅலி இபின் முகம்மது"வை ஒரு இஸ்லாஸ்மியனாக வளர்த்தான்.\nஅபுஅலி, தான் பௌத்த குடும்பத்தை சேர்ந்தவன், அதற்கு முன் ஹிந்துவாக இருந்தவன் என்ற நினைவு இன்றி, தன் பௌத்த தேசமாக இருந்த ஈரான் தேசத்தை முழுவதையும், இஸ்லாமிய தேசமாக மாற்றினான். மசூதிகள் கட்டினான். மதராசாக்களை நியமித்தான். மத வெறி உருவானது.\nஒருவன் மதம் மாறினால், அவனுக்கு பின் வரும் அவன் சந்ததியினர் என்ன அட்டூழியம் செய்வார்கள் என்பது இவர்கள் ஹிந்துக்களுக்கு செய்த அட்டூழியத்தை கண்டே தெரிந்து கொள்ளலாம்.\nஇவன் மதம் மாறியதால், இவன் பிள்ளைகள், பின் வந்த சந்ததியினர்கள் ஹிந்துக்களுக்கு செய்யாத கொடுமைகள் இல்லை. ஈரான், ஆப்கான் போன்ற தேசங்கள் இஸ்லாமிய தேசங்கள் ஆகின.\nஅமீர் சூரி தன் மகனுக்கு இஸ்லாமிய பெயர் வைத்து, புதிதாக "கோரி பரம்பரை" என்ற முதல் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு உருவானது.\nஇவன் பரம்பரையில் வந்தவனே "முகம்மது கோரி". இவன் ஒருவனே 1000க்கும் மேற்பட்ட பெரிய பெரிய ஹிந்து கோவில்களை சிந்து தேசம், குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா போன்ற தேசங்களில் இடித்தான். கொள்ளை அடித்த தங்கங்களை கொண்டு ஆப்கான் நாட்டை இஸ்லாமிய தேசமாக்கி, சேர்த்தான்.\nஹிந்து பெண்களை தன் தேசங்களுக்கு எடுத்து சென்று விற்று விட்டான். எதிர்ப்பவர்களை கொன்று, பயந்தவர்களை மதம் மாற்றினான்.\nமதம் மாறிய அமீர் சூரி என்ற ஒருவனால், அடுத்த 1000 வருடங்கள் உலகமே ரத்தத்தில் புரண்டது.\nகோரியின் காலம் முடிந்து பின் வந்த அலாவுதீன் கில்ஜி டெல்லியை கைப்பற்றி இருந்தான்.\nஒரு சமயம் குஜராத் தேசத்தை நோக்கி போர் செய்த போது, அங்கு இருந்த "மாணிக்" என்ற ஒரு ஹிந்துவை தன் அடிமையில் ஒருவனாக விலைக்கு வாங்கினான்.\nஇந்த மாணிக் என்ற ஹிந்து, போர் கலையில் வீரனாக இருப்பதை கண்டு அலாவுதீன் கில்ஜி இவனை அடிமை தனத்தில் இருந்து விலக்கி, தன் படைத்தளபதியாக ஆக்கினான்.\nஇதனால் கவரப்பட்ட மாணிக், தன்னை இஸ்லாஸ்மியனாக மாற்றிக்கொண்டான்.\nமாலிக் காபுர் என்ற பெயரில், அலாவுதீன் கில்ஜியின் கட்டளையின் பெயரில், இவன் ஆந்திராவில் ஒரு லட்சம் படையுடன் சென்று அங்கு இருந்த ஹிந்து அரசனை தோற்கடித்து, ஊரையே கொள்ளை அடித்தான். கோவில்களை இடித்து, கோஹினூர் வைரத்தை காளியின் கோவிலில் இருந்து எடுத்துக்கொண்டு, பின்னர் மதுரை மீது படை எடுத்து, அங்கு இருந்த மீனாக்ஷு கோவிலை முற்றுகை இட்டான்.\nஉள்ளே புகுந்து, லிங்கமாக இருக்கும் சுந்தரேஸ்வரர் இருக்கும் இடத்தில், வேறொரு லிங்கத்தை இடித்து கீழே தள்ளி விட்டு கோவிலை நாசமாக்க முயன்றான். அடுத்த 60 வருடங்கள், மீனாக்ஷி கோவிலில் சுந்தரேஸ்வரருக்கு பூஜை இல்லாமல் தடைபட்டு போனது.\nRead more in ..\n« Goa முதல் கபாலீஸ்வரர் வரை நடந்த வரலாறு - Portuguese | அஞ்சனாத்ரி - திருப்பதியில் ஏழுமலை »
Posted on October 30, 2009 by S. Jayabarathan / சி. ஜெயபாரதன், கனடா\n2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash \nபங்கு கொள்வோர்: சீதா, இலட்சுமணன், குகன், வால்மீகி ஆசிரமத்தின் பெண் சீடர்கள்]\nசீதா: (புரியாத விழிகளுடன்) நீ என்ன சொல்கிறாய் ? நீ என்ன வஞ்சகம் செய்துவிட்டாய் ? மன்னிக்கச் சொல்லிப் பிறகு மன்னிக்க மேண்டா மென்று ஏன் மன்றாடுகிறாய் ? ஏன் உடம்பு நடுங்குகிறது ?\nசீதா: முதலில் வனவாசம் போவதற்கு முன்பும் அவர் ஒரு வார்த்தை என்னிடம் சொல்லவில்லை! பதினாங்கு வருடம் கானகம் போக வேண்டும் என்றார். ஆட்டுக் குட்டிபோல் அவர் பின்னால் சென்றேன்! தந்தை சொல் தட்டாத தனயன் என்று புகழ் பெற்றார். மனைவியை அடிமைபோல் நடத்துவது ஊரில் யாருக்குத் தெரியும் ? இரண்டாம் தடவை வனவாசம் தள்ளப்பட்டது முன்னைவிட மோசம். காட்டுக்குப் போவென்று கூட எனக்குக் கட்டளை இடவில்லை! சீதாவைக் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடு என்று தம்பிக்கு இரகசிய உத்தரவு! உருகிடும் உள்ளம் படைத்தவர் என் பதி! எப்படி நேராக மனைவிக்கு இந்தக் கோர தண்டனையைத் தருவது என்று மனம் தாங்காமல், தம்பிமார் காதில் மட்டும் சொல்லி யிருக்கிறார். யாருக்கும் தெரியாமல் நாடு கடத்தி என் மானத்தை ஓரளவு காப்பாற்றி யிருக்கிறார்! உத்தம குணமுடையவர் என் கணவர்! வால்மீகி: அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் சீதா. என் கருத்தை மாற்றிக் கொள்ளும் வேளை வந்து விட்டது! உத்தம புத்திரனாய்ப் புகழ் பெற்ற மாமன்னர், உத்தம கணவராகவும் இருப்பார் என்று சொல்ல முடியாது போலிருக்கிறது! சீதா: இராவணன் என்னைத் தொட்டுத் தூக்கிச் சென்றது உண்மை! ஆனால் அவன் என்னை பலவந்தப் படுத்தவில்லை! அப்படி ஆகியிருந்தால் நான் அன்றே உயிரைப் போக்கி என் மானத்தைக் காத்திருப்பேன். இப்போது என் மதிப்பை, மானத்தை என் பதி நசுக்கினாலும், உயிரை நான் மாய்த்துக் கொள்ளப் போவதில்லை! காரணம், என் வயிற்றில் வளர்ந்து வரும் என் பிரபுவின் குலவிளக்கு. மகரிஷி! இராவணன் எனக்கிழைத்த தீரா அவமானத்தையும் தாங்கிக் கொண்டு வாழ விரும்புகிறேன் நான். இனியும் குழந்தை பெற்றுக் கணவரோடு மனைவியாய் நெடுங்காலம் வாழ விரும்புகிறேன் நான். அப்படிக் கனவு காண்கிறேன்! ஆனால் அது நடக்கக் கூடியதா ? ஒன்றாய் வாழத் தவம் செய்தவளுக்குப் பதி இரண்டகம் செய்து விட்டார்! பதியிடமிருந்து இராவணன் என்னைத் தற்காலியமாகப் பிரித்தான்! ஆனால் பதியிடமிருந்து இப்போது நிரந்தரமாகப் பிரித்தது யாரென்று நினைக்கும் போது, என் நெஞ்சில் தீப்பற்றி எரிகிறது! (கோவென்று கதறி அழுகிறாள்).\nஇடம்: அயோத்திய புரி அரண்மணை\nபங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், மகரிஷி வசிஸ்டர், விசுவாமித்திரர், மன்னர்கள், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா. அனுமான், அங்கதன், சுக்ரீவன்.\n[அமைப்பு: மாமன்னன் இராமன் அசுவமேத யாகம் செய்வதற்குத் திட்டமிட்டுகிறான். மகரிஷி வசிஸ்டர் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் ஆகியோர் மூவரையும் அழைத்து யாகத்திற்கு ஒரு குதிரையைத் தியாகம் செய்யத் தயாரிக்கச் சொல்கிறார். அநேக மன்னர்கள், பெரியோர்கள், முனிவர்கள் ஆகியோருக்கு இராமன் ஓலை அனுப்பி அசுவமேத யாகத்தில் பங்கு கொள்ள வேண்டுகிறான். விசுவாமித்திர முனிவர் அவரது சீடர் படையுடன் வருகை தந்தார். சீதாவின் தந்தை ஜனக மாமன்னர் கூடக் கலந்து கொண்டார். இராமனுடைய பக்கத்து ஆசனத்தில் சீதாவுக்குப் பதிலாக முழுவடிவத் தங்கச்சிலை ஒன்று செய்யப்பட்டு வைக்கப் பட்டிருந்தது. ஜனக மன்னர் சீதாவின் சிலையைப் பார்த்ததும் திகைப் படைந்து அவர் மனதில் ஏதோ ஓர் ஐயப்பாடு எழுகிறது. இலங்கா புரியிலிருந்து மீண்டு பட்டத்து அரசியான சீதாவைப் பார்க்கப் போன ஜனக மன்னர், அவள் நாடு கடத்தப் பட்டிருப்பதும், வால்மீகி ரிஷியின் ஆசிரமத்தில் அடைக்கலமாகி இருப்பதும் தெரியவந்து மிகவும் மனமுடைந்து போகிறார்.\nலவா, குசா: ஏன் தெரியாது ? பாய்ந்தோடும் மானின் கண்ணை அடிப்போம்! பறக்கும் பறவையின் மூக்கை உடைப்போம்! பதுங்கித் தாவும் முயலின் காதைக் கிழிப்போம். எதிர்த்தால் உங்கள் நெஞ்சையும் இரண்டாய்ப் பிளப்போம்! குதிரையை எங்களிடம் விட்டுப் போவீர்! அல்லது உதிரத்தைக் கொட்டி உயிரை விட்டுப் போவீர்! முதலில் எடுங்கள் உங்கள் வில்லை!\n[எச்சரிக்கை அம்பைக் கவனாக விடுகிறான். லவா, குசா இருவருக்கும் இடையே அம்பு உரசிக் கொண்டு போகிறது].\nஅரங்க அமைப்பு: பரதன் ஏவிய ஓரம்பில் லவாவின் கரம் காயமானது!\n[வில்லைக் கீழே போட்டுவிட்டுக் குசா லவா கையிக்குக் கட்டுப் போடுகிறான்]\nஅடுத்துப் போரில் குசா பரதைனைக் காயப்படுத்தி முடமாக்கினான். கலங்கமற்ற சிறுவரைக் கண்டு பராக்கிரமமுள்ள அனுமான் படையினர் போரிடத் தயங்கி நின்றனர். அனுமான் ஏதோ சந்தேகப்பட்டுத் தன் ஒற்றன் ஒருவனை அனுப்பி ஆசிரமத்தில் சீதா இருப்பதை அறிந்து கொண்டான். அனுமான் சிறுவர்களின் கண்கள் இராமப் பிரபுவின் கண்களை ஒத்திருப்பதையும், முகச்சாயல் சீதாவின் முகத்தைப்போல் இருப்பதையும் கண்டு பேரதிர்ச்சி அடைந்தான்! அனுமானின் உடம்பு நடுங்க ஆரம்பித்துக் கைகள் தளர்ந்தன! இராமப் பிரபுவின் கண்மணிகளுடன் எப்படிப் போரிட்டு நான் சிறைப் படுத்துவேன் என்று மனமொடிந்தான் அனுமான்! அனுமான் படையினர் போரிடாமல் சும்மா நிற்பதைக் கண்டு, பரதன் பெருங் கோபம் அடைந்தான்! பரதன் சினத்தைக் கண்டு அனுமான் தயங்கிப் போரிட வந்தபோது லவா, குவா இருவரும் நடுங்கிக் கொண்டிருக்கும் அனுமானை எளிதாகப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப் போட்டனர். அப்போது இராமன் தேரில் வந்திறங்கிக் கோபத்துடன் நேராக இரட்டையர்களை நோக்கி நடந்தான்.\nலவா, குசா: எங்கள் குரு வேத மகரிஷி வால்மீகி! … ஏன் வில்லைக் கீழே போடுகிறீர் ? [அவர்களும் வில்லைக் கீழே போடுகிறார்கள்]. ஒன்று எங்களிடம் போரிடுங்கள்; அல்லது குதிரை எங்களிடம் விட்டுவிட்டு ஓடுங்கள். ஓடுபவரின் மீது யாம் அம்பு தொடுப்பதில்லை! ஆயுதமற்ற மனிதருடன் யாம் போரிடுவதில்லை! அது அறமற்றது என்று எங்கள் குருநாதர் சொல்லியிருக்கிறார்! இராமன்: [சிரித்துக் கொண்டு] உங்கள் யுத்த தர்மத்தை மெச்சுகிறேன். ஆயுதமற்ற நபருடன் நானும் போரிடுவதில்லை! அஞ்சாத சிறுவருடரும் நான் போரிடுவதில்லை! ஆமாம், வல்லமை மிக்க வில்லம்பு வித்தையை, நீங்கள் கற்றுக் கொள்ள எத்தனை மாதங்கள் ஆயின ?\njayabarat@tnt21.com [S. Jayabarathan (October 30, 2009)]\n3 thoughts on “சீதாயணம் (முழு நாடகம்)”\nmahakavius on October 10, 2014 at 11:14 PM said:\nYou say in several places that SitA spend several years in lankA. Do you have chronological evidence from Valmiki or Kamba Ramayanam? From what I understand, SitA spent slightly less thanayear in lankA. Even aruNAcala kavi mentions that through SitA in her dialog with Hanuman. Pl provide evidence for your ” பல வருடம்” stay in lanka.\nmahakavius on October 14, 2014 at 6:16 PM said:\n>>sitA spend<< in the first line of the comment should be read as "sItA spent".\nmahakavius on October 14, 2014 at 8:50 PM said:\nAfter reading your sItAyaNam completely, I like to compliment you for your bold venture. Your version of the uttara kANDam, especially the conversations, is fictional too just like some incidents in Ramayanam itself. I am mentioning this here because people who read your drama should not think your version is the correct one.
FaceApp Block India VPN Viral Photo Editing App How to Use । வைரலாகும் 'ஃபேஸ்ஆப்', இந்திய பயன்பாட்டாளர்களை ப்ளாக் செய்கிறதா?\nGadgets 360 Staff, 18 ஜூலை 2019 11:28 IST\nஇந்தியாவில் 'ஃபேஷ்ஆப்'பை பயன்படுத்துகிறீர்களா, இந்த பிரச்னை வரலாம்!\nஇந்த 'ஃபேஷ்ஆப்' என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு செயலி\nவயதானால் நம் முகம் எப்படி இருக்கும் என இந்த செயலி காட்டும்\nஇந்த செயலியில் 'மேக் யூ ஸ்மைல்' வசதியும் இடம்பெற்றுள்ளது\nசமூக வலைதளங்களில் தாற்போதைய ட்ரென்டிங்கில் இருப்பது இந்த 'ஃபேஸ்ஆப்' தான். ஒரே நாளில் பயங்கர வைரலான இந்த செயலி, தற்போது அனைவரது ஸ்மார்ட்போனிலும் இடம் பிடித்துவிட்டது. நமது தற்போதைய புகைப்படத்தை இந்த செயலியில் பதிவேற்றினால், நமக்கு வயதானால் அந்த முகம் எப்படி இருக்கும் என இந்த செயலி மாற்றிக்காட்டும். இந்தியாவில் இந்த செயலி தற்போது அனைவரது பயன்பாட்டிற்கும் வந்துள்ளது. அனைவரும், இதில் தங்கள் தற்போதைய புகைப்படங்களை பதிவேற்றி வயதானால் முகம் எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றிய வண்ணம் உள்ளனர்.\nஇன்னிலையில் இந்த ஆப் தங்கள் ஸ்மார்ட்போனில் ப்ளாக் செய்யப்பட்டாதாக டிவிட்டரில் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். இதை கேட்ஜெட் 360-ம் உறுதி செய்துள்ளது. இந்திய பயன்பாட்டாளர்களை இந்த செயலி ப்ளாக் செய்திருந்தாலும், 'ஃபேஷ்ஆப்' இன்னும் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கப்பெருகிறது.\nநீங்கள் ஆண்ட்ராய்ட் பயன்பாட்டாளராக இருந்தால், இந்தியாவில் இந்த 'ஃபேஸ்ஆப்' செயலியை பயன்படுத்திக்கொண்டிருந்தால், "Something went wrong, Please try again" என்ற ஒரு எச்சரிக்கை உங்களுக்கு தென்படும். அதே நேரம் iOS பயன்பாட்டாளர் என்றால் இந்த செயலி "ApiRequestError error6- Operation couldn't be completed" என்ற தகவலை உங்களுக்கு அளிக்கும். இந்த பிரச்னை முதலில் டிவிட்டரில் எழுப்பப்பட்டது. பின் கேட்ஜெட்ஸ் 360-யும் இதனை உறுதி செய்துள்ளது.\nஇந்த 'ஃபேஸ்ஆப்' என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு செயலி. இதில், நமது தற்போதைய புகைப்படத்தை இந்த செயலியில் பதிவேற்றினால், நமக்கு வயதானால் அந்த முகம் எப்படி இருக்கும் என இந்த செயலி மாற்றிக்காட்டும். தற்போது இந்த செயலி இந்தியாவில் ட்ரென்டாகி வருகிறது. கடந்த சில நாட்களில், ஆப்பிள் ஸ்டோரில், இலவச ஆப்கள் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதே நேரம், கூகுள் ப்ளே ஸ்டோரில் டாப் மூன்று இடங்களில் நிற்கிறது. இந்த ஆப்பின்மூலம், வயதான தோற்றம் கொண்டதாக மாற்றப்பட்ட புகைப்படங்களை, மக்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்த வண்ணம் உள்ளனர். இந்த செயலியில் ஓல்ட்-ஏஜ் பில்டர் மற்றுமின்றி, 'மேக் யூ ஸ்மைல்' வசதியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படியான வசதிகளைக் கொண்ட 'ஃபேஸ்ஆப்'-ல் இம்மாதிரியான பிரச்னைகள் ஏற்படுவது இதுவே முதன்முறை.\nTasneem Akolawala, 20 அக்டோபர் 2019
மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பட்டதாரி வாலிபர் பலி || tamil news motorcycle accident Graduate youth killed\nபதிவு: மார்ச் 02, 2021 21:37 IST\nமின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த பட்டதாரி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.\nபுதுவை சண்முகாபுரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது50). இவர் நகர கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சந்துரு (21). பட்டதாரி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை தனது மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றார்.\nஅப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் சந்துரு தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சந்துரு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇந்த விபத்து குறித்து வடக்குப்பகுதி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாஜக வேட்பாளராக போட்டியிட வீரேந்திர சேவாக் மறுப்பு | www.patrikai.com\nபாஜக வேட்பாளராக போட்டியிட வீரேந்திர சேவாக் மறுப்பு\nமேற்கு டில்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மறுத்துள்ளார்.\nகடந்த 2014 ஆம் வருட மக்களவை தேர்தலில் இருந்தே முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பாஜக சார்பில் போட்டியிட போவதாக செய்திகள் வந்தன. அவர் அரியானாவில் ரோக்தாக் தொகுதியில் போட்டியிடுவார் எனவும் பலர் கூறி வந்தனர். அவர் அந்த தேர்தலில் போட்டியிட வில்லை.\nகடந்த வருடம் ஜூலை மாதம் டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி மற்றும் மத்திய அமைச்சர் ராஜவர்தன் சிங் ராதோட் ஆகியோர் கட்சியின் சம்பர்க் ஃபார் சமர்த்தன் என்னும் நிகழ்வின் கீழ் வீரேந்திர சேவாக்கை சந்தித்தனர். அதனால் சேவாக் விரைவில் பாஜகவில் இணைவார் என பலரும் எதிர்பார்த்தனர்.\nடில்லி பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர், “தற்போது பர்வேஷ் வர்மா உறுப்பினராக உள்ள மேற்கு டில்லி தொகுதியில் வீரேந்திர சேவாக்கை போட்டியிட வைக்க பாஜக தலைமை விரும்பியது. ஆனால் வீரேந்திர சேவாக் தமக்கு அரசியல் விருப்பம் இல்லை எனவும் சொந்த காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிட போவதில்லை எனக் கூறி மறுத்து விட்டார்.”என தெரிவித்துள்ளார்.\nDenied to contest\nPrevious articleகூட்டணி என்றால் ‘கொடுக்கல் – வாங்கல்’ இருக்கத்தான் செய்யும்: சித்தராமைய்யா\nNext articleதிமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை? பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்
பெண்களுக்கு சம உரிமை வழங்கியதால் குழந்தைகள் ஒழுக்கம் கெட்டுவிட்டது?- சி.பி.எஸ்.இ. வினாத்தாளில் அதிர்ச்சி | Tamil News CBSE exam question paper women equal rights\nபெண்களுக்கு சம உரிமை வழங்கியதால் குழந்தைகள் ஒழுக்கம் கெட்டுவிட்டது?- சி.பி.எஸ்.இ. வினாத்தாளில் அதிர்ச்சி\nBy மாலை மலர்13 Dec 2021 7:36 AM GMT (Updated: 2021-12-13T13:06:06+05:30)\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு முதல் பருவ ஆங்கில பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட ஒரு வினா மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\nசி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு2கட்டங்களாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.\n10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. 12-ம் வகுப்புக்கு தற்போது தேர்வு நடந்து வருகிறது. 10, 12-ம் வகுப்பு முதல் பருவ பொதுத்தேர்வு வினாத்தாள்கள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக கணிதம் மற்றும் ஆங்கிலம் வினாக்கள் விடையளிக்க முடியாத அளவுக்கு கடினமாக கேட்கப்பட்டதாக தகவல் வெளியானது.\nஇந்தநிலையில் மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மீது மற்றும் ஒரு பிரச்சினை எழுந்துள்ளது. 10-ம் வகுப்பு முதல் பருவ ஆங்கில பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு வினா மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\nபெண்களுக்கு சம உரிமை வழங்கியதால், குழந்தைகளின் ஒழுக்கம் கெட்டு விட்டது, குழந்தைகள் மீது உள்ள பெற்றோர்களின் கட்டுப்பாடுகள் முற்றிலும் அழிந்து விட்டது. மனைவிக்கு அதிகாரம் அதிகம் கொடுத்துள்ளதால் பிள்ளைகளின் ஒழுக்கம் பாதிக்கப்படுவதாக ஒரு பத்தி கொடுக்கப்பட்டு அதற்கான வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.\nஇந்த வினா கல்வித்துறையில் சர்ச்சையை எழுப்பி உள்ளது. கல்வியாளர்கள், சமூக வலைதளங்களில் இது குறித்த கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.\nஇது குறித்து கொளத்தூர் எவர்வின் பள்ளி தாளாளர் புருஷோத்தமன் கூறும்போது, ‘‘10-ம் வகுப்பு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்வி மிகவும் கண்டிக்கத்தக்கது. கடும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் அதில் இடம் பெற்றுள்ளன. மாணவிகள் கணிசமான அளவிற்கு எழுதும் ஒரு தேர்வில் ஆண்களுக்கு சாதகமான ஒரு கேள்வி அமைந்துள்ளது. இது ஆண்-பெண் சமத்துவத்தை கேள்விக்குறியாக்கிவிடும். மீண்டும் கற்காலத்திற்கு செல்கிறோமோ என்கிற நிலை உருவாகி உள்ளது.\nஇந்த வினாத்தாளை தயாரித்த குழுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.\nபொது பள்ளிக்கான மேடையின் பொது செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியதாவது:-\nஒரு பாடத்திட்டம் என்பது வயதுக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. மதிப்பீடு என்பது பாடத்திட்டத்தின் ஒரு பகுதி. 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். ஆனால் இந்த குறிப்பிட்ட ஒரு கேள்வி கருத்துருவாக்கத்துக்கு பயன்படுகிறது.\nஅதில் ஆண்களுக்கு, பெண்கள் அடங்கிப் போகக்கூடிய சமூக கட்டமைப்பு, அத்தகைய கட்டமைப்புதான் ஒழுக்கத்தை குழந்தைகளுக்கு உருவாக்கும் என்ற புரிதலை உருவாக்குகிற வகையில் உள்ளது. எனவே அணுகு முறையில் பாடத் திட்டங்களும், வினாத்தாள்களும் இருக்க வேண்டும்.
டேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள் - ஆன்லைன் காஸினோ போனஸ் குறியீடுகள்\n(655 வாக்குகள், சராசரி: 4.005வெளியே)\nஏற்றுதல்...டென்மார்க்கில் 1948 முதல், சூதாட்டத் துறையில் ஒரு ஏகபோகம் இருந்தது, இது டான்ஸ்கே ஸ்பில் என்ற பெயரில் அரசு நிறுவனத்திற்கு சொந்தமானது. ஆச்சரியப்படுவதற்கில்லை, நாடு நிலத்தடி சூதாட்ட நிறுவனங்களை செழித்தது, ஆனால் டென்மார்க்கில் 1990 இல், ஒரு சூதாட்ட சட்டப்பூர்வமாக்கல் இருந்தது. லாட்டரிகள் மற்றும் குதிரை பந்தயம், கிரேஹவுண்ட் பந்தயம் மற்றும் புறா பந்தயங்களில் டான்ஸ்கே ஸ்பில் இன்னும் ஏகபோக உரிமையைத் தக்க வைத்துக் கொண்டாலும், பிற விடிவ் சூதாட்டத்தின் அமைப்பு தனியார் நிறுவனங்களுக்குக் கிடைத்தது, ஆனால் சில வரம்புகளுடன்: வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டில் ஒரு கேசினோவைத் திறக்க முடியும் ஒரு டேனிஷ் கூட்டாளருடன் ஒரு நிறுவனத்தை இணைக்கவும், எடுத்துக்காட்டாக, சொத்து உரிமையாளர்.\nஇன்றுவரை நம் ஆன்லைன் சூதாட்ட அடைவுக்கான பார்வையாளர்களுக்கான குறிப்பு, டென்மார்க்கில் உள்ள அனைத்து சூதாட்டங்களுக்கும் சட்டப்பூர்வமாகக் கருதப்படுகிறது. டென்மார்க்கில் சூதாட்டம் பற்றிய சட்டம் டேனிஷ் சூதாட்டம் சந்தையின் அனைத்து விதிகளையும் விதித்தது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதை மேற்பார்வையிடுதல், மற்றும் சூதாட்ட உரிமம் வழங்கும் டேனிஷ் சூதாட்டம் (Spillemyndigheden) ஆகியவற்றுடன் தொடர்புடையது.\nடென்மார்க்கில் ஆன்லைன் சூதாட்டம்\nஜனவரி 29, டிசம்பர் டென்மார்க்கில் ஆன்லைன் சூதாட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. அந்த நாளில் இருந்து நாட்டில் சூதாடுதலை ஒழுங்குபடுத்தும் ஒரு புதிய சட்டம் அமலுக்கு வந்தது. சில வகையான சூதாட்டங்களுக்கான Danske Spil ஒரு பகுதி ஏகபோகத்தை தக்கவைத்துக் கொண்ட போதிலும், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் டென்மார்க்கில் ஆன்லைன் சூதாட்ட தளங்கள், ஆன்லைன் ஸ்போர்ட்ஸ் தளங்கள் மற்றும் ஆன்லைன் காசினோ தளங்களில் ஆன்லைன் பந்தையங்களுக்கான உரிமம் தளங்கள் கிடைக்கின்றன. டென்மார்க்கில் ஆன்லைன் சூதாட்டத்தின் மீதான சட்டத்தின் படி, சூதாட்டத்தின் ஒரு வெளிநாட்டு இயக்குனருக்கு நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு சேவைகளை வழங்க முடியும், இது ஒரு சோதனை எடுத்து டென்மார்க்கில் உரிமம் பெற வேண்டும், அதே போல் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.\nஏற்கனவே புதிய சட்ட உரிமத்தின் நடைமுறையில் நுழைந்த முதல் வருடத்தில், 25, Bwin மற்றும் Ladbrokes போன்ற முன்னணி சர்வதேச ஆபரேட்டர்கள் உட்பட, ஆன்லைன் சூதாட்டங்களின் 888 வழங்குநர்கள் பெற்றனர். அதே நேரத்தில், டென்மார்க்கில் உரிமம் பெறாத ஆன்லைன் சூதாட்ட தளங்களுக்கு எதிரான போராட்டத்தில் அரசு தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளது.\nடாப் -10 டேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்களின் பட்டியல்\nடென்மார்க் ஸ்காண்டிநேவியா முத்து என்று அழைக்கப்படுவது வெறுமனே இது அல்ல: நாட்டின் சிறிய பகுதி இயற்கை மற்றும் வரலாற்று பொக்கிஷங்களின் எண்ணிக்கை வெறும் உயர்கிறது. SasinoToplists டென்மார்க்கின் மிக முக்கியமான அம்சங்களைப் பற்றியும் அத்துடன் டான்களின் சூதாட்டத்தைப் பற்றியும் கூறுகின்றன.\nடென்மார்க் - புவியியல் மற்றும் வரலாற்றின் ஒரு சிறிய பிட்;\nசூதாட்ட விளையாட்டு அமைப்புகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர் இசைக்குழுவைக் கொண்டிருக்க வேண்டும்;\nகாசினோ நுழைவு டிக்கெட்.\nகாஸினோ ஆறு நாடுகள் ஆல்போர்வ், ஓருஸ்ஸ்கே, கம்ப்யூம்ஸ், ஓடென்ஸ், ஹெல்சிங்கர் மற்றும் தலைநகரான கோபன்ஹேகனில் உள்ளன;\nடென்மார்க்கின் தலைநகரங்களில் கோபன்ஹேகன் தலைநகர் ஐந்து காட்சிகள்;\nடென்மார்க் மற்றும் டேன்ஸ் பற்றிய சுவாரசியமான உண்மைகள்.\nடென்மார்க் மற்றும் ஒரு சிறிய வரலாற்று குறிப்புக்கான இடம்\nடென்மார்க்கின் டென்மார்க் என்றழைக்கப்படும் டென்மார்க் சரியானது. இது வடக்கு ஐரோப்பாவில் ஒரு நாடு மற்றும் ஸ்காண்டிநேவிய நாடுகளின் தெற்குப் பகுதி ஆகும். நாடு ஜட்லாண்டின் தீபகற்பத்திலும், சிறிய தீவுகளின் தீவுகளிலும் அமைந்துள்ளது, மேலும் பரோயே தீவுகள் மற்றும் கிரீன்லாந்து ஆகியவை அடங்கும்.\nடென்மார்க்கில் இதுவரை ஒரு அரசியலமைப்பு முடியாட்சி இருந்தது, மற்றும் நாட்டின் மிக சக்திவாய்ந்த இராச்சியம் என்று குறிப்பிட்டது - 19 நூற்றாண்டு வரை டேனிஷ் மன்னர்கள் "அவரது கைகளில் நடைபெற்றது", வடக்கு ஐரோப்பா முழுவதும். இப்போது பரோயே தீவுகள் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளில் சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவை உள்ளன. 1972 முதல், டேனிஷ், Margrethe II என்ற 54 வது ராணி ஆளுகிறது.\nடென்மார்க்கில் கேசினோக்கள் மற்றும் சூதாட்டம்\nநாட்டில் காசோலைகளை சட்டப்பூர்வமாக்குதல் 1990 ல் ஏற்பட்டது மற்றும் அதில் வெளிநாட்டு ஆபரேட்டர்கள் உரிமத்தின் அடித்தளம் கொள்கை உள்ளது. ஒரு உரிமத்தை வழங்குவதற்கான முக்கிய நிபந்தனை - சூதாட்ட சேவைகளின் வெளிநாட்டு இயக்குனர் ஒரு டேனிஷ் நிறுவனத்தை ஏற்கனவே உள்ள டேனிஷ் நிறுவனத்துடன் இணைப்பதே ஆகும். என்ன நடந்தது என்று எந்த ஹோட்டல், தளத்தில் அத்தகைய கூட்டு உருவாக்க மிகவும் வசதியான வழி.\nடேனிஷ் தரப்புடன் முழுமையாக இணங்கினால், அண்டை நாடான நெதர்லாந்தைச் சேர்ந்த “ஹாலண்ட் கேசினோ”, ஜெர்மனியைச் சேர்ந்த “பேட் நியூனேஹர்”, ஆஸ்திரியாவிலிருந்து “கேசினோ ஆஸ்திரியா” போன்ற ஆபரேட்டர்கள் முடியும். வருடாந்திர வருவாயின் 45% இலிருந்து தொடங்கும் கேசினோ லாபத்தைப் பொறுத்து மாநிலத்தில் வரி விகிதம் அதிகமாக உள்ளது.\nஇந்த நேரத்தில், நாட்டில் உள்ள மிகப் பெரிய காசின்கள் உள்ளன. அவர்கள் ஆல்போர்வ், ஓருஹுஸ்கா, கவ்விகள், ஓடென்ஸ், ஹெல்சிங்கர் மற்றும் கோபன்ஹேகனில் தலைநகரில் உள்ளனர்.\nகாசினோ கோபன்ஹேகன். காசினோவில் உள்ள பொதுவான விதிகள் ஐரோப்பிய சூதாட்டத்தை மிகவும் சந்திக்கின்றன 14.00 இல் தொடங்கி 4.00 இல் முடிவடையும். காசினோவை மட்டுமே 18 வயதில் பார்க்க முடியும், எனவே நீங்கள் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.\nமற்றொரு நுணுக்கம் - நுழைவாயிலில் நீங்கள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். நாள் டிக்கெட் செலவுகள் 95 டேனிஷ் குரோனெர் (சுமார் € 12), ஒரு வாரம் - XXX, மற்றும் ஆண்டு XX DKK. கோடையில், நீங்கள் காஜினோவை ஷார்ட்ஸ் மற்றும் ஷேல்ஸில் பார்க்க முடியும், ஆனால் இங்கே விளையாட்டு உடைகள் வரவேற்கப்படாது.\nஒரு சூதாட்டத்தில் போக்கர் விளையாட்டு கண்ணாடிகளை அணியக்கூடாது போது, ​​ஐபாட் பயன்படுத்த மற்றும் சட்டை இல்லாமல் சட்டைகளை அணிந்து. ஆனால் WPT மற்றும் உலகமயமாதல் போட்டியைப் போன்ற உலகப் போட்டித் தொடரின்போது மேலும் ஜனநாயகத்தின் தோற்றத்தைப் பற்றிய விதிகள்.\nஒட்டுமொத்தமாக, கோபன்ஹேகனில் உள்ள சூதாட்ட விடுதிகள் மிகவும் பிரபலமானவை மற்றும் அதிக தேவை கொண்டவை. இது ஒரு சூதாட்டக்காரரின் ஆத்மாவை மட்டுமே விரும்பும் அனைத்தையும் கொண்டுள்ளது: சில்லி (ஐரோப்பிய மற்றும் அமெரிக்கன்), அனைத்து வகையான ஸ்லாட் இயந்திரங்கள் (140 விருப்பங்கள்), போக்கருக்கான அட்டவணைகள், பிளாக் ஜாக் மற்றும் பாங்கோவின் புன்டோ.\nபாரம்பரிய ஆய்வு ஹால், அருகிலுள்ள பகுதிகள் மற்றும் லிட்டில் மெர்மெயில் நினைவு சின்னமாக நகர மையத்தில் உள்ள தரமான நடைப்பாதை தவிர, கோபன்ஹேகன் வருகை மற்றும் தனிப்பட்ட இடங்கள் ஆகியவற்றை வழங்குகிறது.\nஅருங்காட்சியகம் "நம்புகிறாயோ இல்லையோ!". முகவரி: ஆர் å dhuspladsen , 57. இந்த அசாதாரண அருங்காட்சியகத்தில் புதிரான அடையாளத்தின் கீழ் “இதை நம்புங்கள் அல்லது நம்பாதீர்கள்!” ஒரு தொகுப்பு லெராய் ரிப்லி - பயணி மற்றும் சேகரிப்பாளர். பல ஆண்டுகளாக, உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான பயணங்கள் அவர் நிறைய ஆச்சரியமான விஷயங்களை குவித்துள்ளார். இங்கே நீங்கள் தாஜ்மஹாலின் ஒரு போட்டி, ஒரு மாமத்தின் எலும்புக்கூடு, ஒரு வீணை, சரங்கள் இல்லாமல் விளையாடுவது மற்றும் கடல் கூட வேடிக்கையானது.\n"பரிசோதனை" அருங்காட்சியகம். முகவரி: Tuborg Havnevej, 7, Hellerup. நீங்கள் குழந்தைகளுடன் பயணம் செய்கிறீர்களா அல்லது அனைத்து அதே உடல் சட்டங்களை புரிந்து கொள்ள விரும்பினால் - அது சரியான இடம். ஒரு சூறாவளி மற்றும் ஒரு பூகம்பம் மற்றும் பல இதர இடங்கள் என அழைக்கப்படும் ஒரு பன்ஹோகிராஃப் இயந்திரம் உள்ளது. அனைத்து காட்சிகள் தொட்டு.\nஅருங்காட்சியகம் "கின்னஸ்". முகவரி: Østergade 16. இந்த அருங்காட்சியகம் எந்த அறிமுகமும் தேவை இல்லை, அனைவருக்கும் தெரிந்த கின்னஸ் பதிவுகள் தெரியும். ஆனால் நீங்கள் எந்த பதிவையும் படிக்கையில், சில நேரங்களில் கற்பனை செய்வது கடினம். இங்கே நீங்கள் மிகவும் சுவாரஸ்யமான பதிவுகள் 500 காட்சிகளை விட கண்டுபிடிக்க முடியும், மற்றும் "கண்காட்சி மிஸ்டிக் எக்ஸ்ப்ளோரடரிட்டி » நீங்கள் உங்கள் நிழலைப் பிடிக்கலாம், எதிர் உட்கார்ந்த நபருடன் இடமாற்றுங்கள், மின்சார நாற்காலியில் அமரவும் கூட முடியும்.\nபார்க் "டிவோலி" கேளிக்கை. முகவரி: Vesterbrogade 3. இந்த கேளிக்கை பூங்கா உலகிலேயே மிகப் பழமையானது, மற்றும் வால்ட் டிஸ்னி டிஸ்னிலேண்ட் நெட்வொர்க்கை உருவாக்க ஒருமுறை அவர் ஈர்க்கப்பட்டார். இல்லை supernavorochennogo இடங்கள் இல்லை, ஆனால் கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சி மிகவும் வசதியான சூழலை உள்ளது.\n"எரோடிகா" அருங்காட்சியகம். முகவரி: Kobmagergade 24. இது உலகின் முதல் சிற்றின்ப அருங்காட்சியகம், அவர் 1992 இல் தோன்றினார். இன்றைய தினம் வரை நீங்கள் பழங்கால ரோமாபுரி மற்றும் இந்தியாவில் இருந்து சிற்றின்பத்தை நோக்கி மனப்போக்குகளின் வரலாறு கண்டுபிடிக்க முடியும். ஓவியங்கள், சிற்பங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், அத்துடன் சிற்றின்ப உள்ளாடை மற்றும் சோகோமாசிக் திசையில் இருந்து அனைத்து வகையான சாதனங்களும் உள்ளன. வெளிப்படையான காரணங்களுக்காக புகுபதிகை, 18 ஆண்டுகள், ஆனால் மாணவர்கள் ஒரு தள்ளுபடி கொண்டது.\nடென்மார்க் மற்றும் டேன்ஸ் பற்றிய சுவாரசியமான உண்மைகள்\nவேலை நாள் அதிகாலையில் தொடங்குகிறது - ஆரம்பத்தில் காலை9மணியளவில், டேன்ஸ் வேலைக்குச் செல்வார், மேலும் 8 மணிக்கு விலக்கு அளிக்கப்படும். கடைகளும் சீக்கிரம் மூடப்பட்டன, எனவே வார இறுதி நாட்களில் டேன்ஸ் பிரதான தயாரிப்புகளை வாங்கினார்;\nடென்மார்க்கில் மிக அதிக வரி உள்ளது - சராசரியாக 43%. இது குடிமகனின் வருவாயின் அளவு மற்றும் அவருக்குக் கிடைக்கும் நன்மைகள் ஆகியவற்றை சார்ந்துள்ளது;\nவேலை நேரத்தில் ஒவ்வொரு டேனும் ஒரு நாளைக்கு மூன்று சாப்பாடு கிடைக்கும். டேனிஷ் பிரச்சாரம், நிறுவனம் அல்லது அமைப்பு பாரம்பரியமாக அதன் சொந்த சாப்பாட்டு அறை மற்றும் சமையல்காரர்களுக்கு உள்ளது;\nடேனிஷ் ஆண்கள் பெண்களுடன் சமமாக வீட்டு வேலை செய்கிறார்கள். அவர்கள் மாடிகள் சுத்தம், குழந்தைகளை கவனித்து மற்றும் சுவையாக ஏதாவது சமைக்க நினைவில் இல்லை.\nடென்மார்க்கில் ரியல் எஸ்டேட் ஒப்பீட்டளவில் விலை உயர்ந்தது, இதனால் பெரும்பாலும் தரம் குறைந்தது. சுவர்களில் வளைவுகள், மற்றும் சில நேரங்களில் சிறந்த திட்டமிடல் இல்லை பெரும்பாலான அடுக்கு மாடிகளில்.\nடென்மார்க்கில், இலவச மருத்துவ பராமரிப்பு, அதே நேரத்தில் ஒவ்வொரு குடும்ப வைத்தியருக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகளை இணைத்தனர். இது ஒரு பிராந்திய அடிப்படையில் செய்யப்படுகிறது, மற்றும் நீங்கள் நகர்த்த போகிறீர்கள் என்றால், பின்னர் மருத்துவர் மாற்ற வேண்டும்;\nடென்மார்க் - சைக்கிள் நாட்டின். அவர்கள் மிகவும் நேசித்தனர் மற்றும் நேசத்துக்குரியவர்கள்.\nஐரோப்பாவின் வரைபடத்தில் டென்மார்க்\nடென்மார்க்கில் சூதாட்டங்களில் சூதாட்டம்\nடென்மார்க்கின் உதாரணம், நீங்கள் உண்மையில் கவர்ச்சிகரமான சூதாட்டத் தொழில் ஒன்றை உருவாக்குவது என்றால், எந்த பாதையை பின்பற்ற வேண்டும் என்பதை நீங்கள் காணலாம். ஒப்பீட்டளவில் அமைதியான குணங்களைக் கொண்ட டேனஸ், காசினோவில் நேரத்தை செலவிடுவதில்லை, அதற்காக அவர்கள் ஒவ்வொரு வாய்ப்பும் உள்ளனர்.\nடென்மார்க்கில் உள்ள காசினோ, ஒவ்வொரு கட்டத்திலும், அது இல்லையென நாம் கூற முடியாது. நாட்டில் மட்டுமே உரிமம் வழங்கிய ரெகுலேட்டர் யார்7ஆபரேட்டர்கள், மற்றும் இரண்டு பயன்பாடுகள் நிலுவையில் உள்ளது. எனினும், கூட சூதாட்ட, அதாவது, டேன்ஸ் சூதாட்ட விருப்பங்களை திருப்தி போதுமான. மூலம், டென்மார்க்கில், அது சுமார் சுமார் மில்லியன் மில்லியன் மக்கள், மற்றும் காசினோ பார்வையாளர்கள் வருகை சமாளிக்க முடியாது. இந்த அற்புதமான நாட்டைப் பார்வையிட நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், அங்கே ஒரு சூதாட்டப் பயணத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். சூதாட்டம் நிறுவனங்கள் அடிக்கடி வரலாற்று காலாண்டில், ஹோட்டல் கட்டிடத்தில், மற்றும் விஜயம் கூட சுவாரசியமாக உள்ளது.\nடென்மார்க்கில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான ஆர்ஹஸ் நகரில், மிக அழகான டானிஷ் காசினோ ஒன்றில் செயல்படுகிறது. இது அதன் நேர்த்தியான உட்புறங்களில் மட்டுமல்லாமல் சேவையின் தரம் பற்றியும் அறியப்படுகிறது. இந்த ஹோட்டல் ஹோட்டல் ராயல், ஆடம்பரமாகவும், ஆடம்பரமாகவும் இருக்கும் பிரபலங்கள் மற்றும் செல்வந்தர்களாக இருக்கும். ஹோட்டல் பகுதியில் பல வரலாற்று தளங்கள் உள்ளன. நன்கு அறியப்பட்ட மற்றும் இலத்தீன் காலாண்டு அதன் ஆற்றைக் கபே மற்றும் கடைகள் உள்ளன.\nசூதாட்டத்தில் கிடைக்கக்கூடிய விளையாட்டுகள் ரவுலெட், பிளாக் ஜாக் மற்றும் போக்கர் ஜோக்கீகளில் பந்தயம் கட்டும் சில அட்டவணைகள் அமைந்துள்ளன. அரங்கங்களில் நீங்கள் முதல் வகுப்பு இயந்திரங்களை கண்டுபிடிக்கலாம். பெரும்பாலும் சூதாட்ட சுவர்களில் முக்கிய போக்கர் போட்டிகள் இடம்பெறுகின்றன.\nகவர்ச்சிகரமான டென்மார்க், அதன் நகரம் ஒவ்வொன்றும், மூலதனத்தை மட்டுமல்ல, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடியது என்பது உண்மைதான். கோபன்ஹேகனில் அனைத்து சூதாட்டங்களும் அமைந்திருப்பதாக ஒருவர் நினைப்பார், ஆனால் அது இல்லை. மிகவும் சுவாரசியமான சூதாட்டத்தில் ஆல்போர் நகரில் வெற்றிகரமாக செயல்படுகிறது. நகரின் மத்திய பகுதியில் உள்ள ஹோட்டல் கட்டிடத்தில் அமைந்துள்ள தேவையில்லாத காசினோ எப்போதும் வாழ்வில் நிறைந்திருக்கும். பல கிளப், வசதியான விடுதிகள் மற்றும் சிறிய உணவகங்கள் இரவில் ரசிகர்களுக்கு சலிப்பு ஏற்படாது. சூதாட்டத்தில் நீங்கள் பல வகையான சில்லி, போக்கர் மற்றும் பிற அட்டை விளையாட்டுகளை விளையாட முடியும். முற்போக்கான jackpots உள்ளிட்ட 30 இடங்கள், மேலும் கிடைக்கும்.\nஎனினும், அதன் தலைநகரில் அமைந்துள்ள டென்மார்க்கின் மிகப் பெரிய சூதாட்டமாகும். இது புத்தாண்டு தினத்தன்று 1990 ல் திறக்கப்பட்டது மற்றும் நாட்டில் முதல் சட்ட சூதாட்டம் நிறுவப்பட்டது. நீங்கள் சூதாட்ட பொழுதுபோக்கு அதிகபட்ச தேர்வு வேண்டும் என்றால், நீங்கள் கோபன்ஹேகன் அதை பார்க்க தொடங்க வேண்டும். பல டேசன் கேமிங் அட்டவணைகள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட இடங்கள் உங்கள் விருப்பபடி ஒரு விளையாட்டு கண்டுபிடிக்க அனுமதிக்கிறது. மூலம், மிக பெரிய போக்கர் நிகழ்வுகள் பெரும்பாலும் இந்த நிறுவனத்தின் சுவர்களில் ஏற்பாடு. கேசினோ சிறந்த ஹோட்டல்களில் ரைஸான் ப்ளூ ஸ்காண்டினேவிய தலைநகரில் அமைந்துள்ளது.\nஇந்த கண்டுபிடிப்புகள் டேனிஷ் மக்கள் குறைந்த வேலை நேரங்கள், ஆனால், இருப்பினும், சராசரி வருமான அளவு - உலகின் மிக உயர்ந்தவையாகும்.\nஅது வெற்றிக்கான ஒரு சூத்திரத்தைப் போல தோன்றுகிறது (அது எல்லாவற்றிலும் இருந்தால்), ஆனால் டேனஸ் லெகோவைச் சேகரிப்பதற்காக தங்கள் நேரத்தை செலவிடவில்லை.\nஇந்த நாட்டின் உயர் வருவாய் மக்கள் ஆன்லைன் சூதாட்டத்தின் புகழை ஒரு கூர்மையான அதிகரிப்பு பங்களிக்க.\nஜனவரி 10 ம் திகதிக்கு முன், அரசுக்குச் சொந்தமான Danske Spil நிறுவனத்தின் உரிமத்தை உரிமையாளர் மற்றும் விகிதங்களைச் செலுத்தியவர். டேனிஷ் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் மீதமுள்ள சூதாட்டம் பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு பந்தயம் வழங்க அனுமதிக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்காக இயங்காது என்பதால், இந்த அரசு விவகாரங்களை மாற்றுவதற்கு உள்ளூர் அரசாங்கம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் டேன்ஸில் இருந்து சண்டையிடுவதற்கு பந்தயங்களுக்கான 1 வலைத் தளங்களை விட அதிகமாக உள்ளது. பல வளங்கள் டேனிஷ் மொழியில் பயனர்கள் பந்தயம் நடைமுறைக்கு எளிதாக்குகின்றன.\nபுதிய சட்டங்கள் Ladbrokes மற்றும் BET365 போன்ற நிறுவனங்களுக்கு அதன் சேவைகளை வழங்க அனுமதிக்கின்றன, இருப்பினும் மாநிலங்கள் தூய்மையான அதிர்ஷ்டத்தை அடிப்படையாகக் கொண்ட விலங்குகளின் மற்றும் சூதாட்டங்களின் பந்தயங்களில் ஏகபோகத்தை ஏகபோகமாக வைத்திருந்தன. கீறல் அட்டைகள் மற்றும் பிங்கோ போன்ற விளையாட்டுக்களைக் குறிக்கிறது, அங்கு வீரர் ஒரு மூலோபாயம் அல்லது திறமை பயன்படுத்தவில்லை மற்றும் அவ்வப்போது மட்டுமே நம்பியிருக்கிறார்.\nசூதாட்டம் நிறுவனம் Danske Spil வருவாய்களை ஒழுங்கமைக்க மற்றும் நடத்துவதற்கான பிரத்யேக உரிமைகளை இழந்த போதிலும் சட்டத்தின் மாற்றத்திற்குப் பின்னர் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது, இப்போது அது இரண்டு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது: Danske Lotteri Spil and Danske Licens Spil. பிந்தையது ஆன்லைன் கேமிங் துறையில் உள்ளடக்கியது மற்றும் சமீபத்தில் கடந்த வருடம் ஒப்பிடும்போது 60% வருவாயின் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇன்று, டானுக்கு சூதாட்டத்திற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் உலகம் முழுவதும் உள்ள மற்ற வீரர்களுக்கு எதிராக ஆன்லைன் போக்கர் போன்ற விளையாட்டுகள் விளையாடலாம். ஆனால் டேனிஷ் அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள விளம்பர மற்றும் உரிம ஒப்பந்த நிறுவனங்கள் கடுமையாக விதிக்கப்படும்.\nபெரும்பாலான ஐரோப்பியர்களைப் போலவே, டேன்ஸும் கால்பந்தை நேசிக்கிறார்கள் மற்றும் உள்நாட்டு சூப்பர் லீக் அணியில் நிறைய உள்ளனர். ஆங்கில பிரீமியர் லீக் மிகவும் பிரபலமானது, ஏனெனில் இது பெரும்பாலும் டேனிஷ் செயற்கைக்கோளில் காட்டப்படுகிறது (டேன்ஸ் ஒரு பருவத்திற்கு 280 போட்டிகளின் 380 ஐக் காணலாம்).\nசமீபத்தில், கோல்ப் வட்டி அதிகரித்தது, முக்கியமாக தாமஸ் பெர்ன் வெற்றிக்கு நன்றி. இளம் வீரர் டார்பிஜான் ஓலெஸென், ரசிகர்களின் ஆர்வத்திற்கு பங்களிக்கும். கைப்பந்து மற்றும் பேட்மின்டன் தொடர்ச்சியான வெற்றியை அடைந்தது, உலக பந்தய சைக்காலஜி சேர்ந்து சைக்கிள் பந்தயத்தில் "டூர் டி பிரான்ஸ்" பரிசுகளை வென்றது.\nடேன்ஸ் மேலும் போக்கருக்கு அடிமையாகிவிட்டார். ஆன்லைன் போக்கர் பிரபலமானது XXIX இன் ஆரம்பத்தில் போக்கர் குஸ் ஹேன்சனின் சாம்பியனில் வெற்றியைத் தொடர்ந்து வேகமாக வளரத் தொடங்கியது. டென்மார்க்கில், பல தொழில்முறை போக்கர் வீரர்கள், நாடு WSOP உலக தரவரிசையில் 2000 வது இடத்தில் உள்ளது. சூதாட்டம் சமூகம் டென்மார்க் பார்ட்டி போக்கர் போன்ற நேரத்தை பரிசோதித்த போக்கர் தளங்களை விரும்புகிறது.\nடென்மார்க்கில் சூதாட்டத்தின் எதிர்காலம்\nடென்மார்க்கில் சூதாட்டம் கடந்த வருடத்தின் சூதாட்டத் துறையின் புதிய வருவாயை4பில்லியன் DKK க்குள் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்திய பின்னர் வேகமாக அபிவிருத்தி செய்யத் தொடங்கியது.\nஎனினும், அரசாங்கம் டேன்ஸ் சேவைகளை வழங்கும் உரிமம் பெறாத வெளிநாட்டு சூதாட்ட வலைத்தளங்களைத் தடுக்க அனைத்தையும் செய்து வருகிறது. இந்த மட்டும் தான் 5-8, தளங்களில் blacklist பதிவு செய்யப்பட்டது என்று உண்மையில் வழிவகுத்தது.\nடென்மார்க்கில் சூதாட்டத்தில் பல தசாப்தங்கள் ஏகபோகத்திற்குப் பின்னர், Danske Spil நிறுவனம் இன்னமும் 62% சந்தையின் சொந்தமாக உள்ளது என்று எந்த ஆச்சரியமும் இல்லை. மற்ற வீரர்கள் டேனிஷ் மக்கள் பெரும்பான்மை பயன்படுத்த அதன் சேவைகளை பயன்படுத்தப்படுகிறது bookmaker, போட்டியிட முன் சிறிது நேரம் ஆகலாம்.\n0.1 டென்மார்க்கில் ஆன்லைன் சூதாட்டம்\n0.2 டாப் -10 டேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்களின் பட்டியல்\n3 டென்மார்க்கில் சூதாட்டம்\n3.0.1 டென்மார்க் மற்றும் ஒரு சிறிய வரலாற்று குறிப்புக்கான இடம்\n3.1 டென்மார்க்கில் கேசினோக்கள் மற்றும் சூதாட்டம்\n3.1.1 கோபன்ஹேகன் இடங்கள்\n3.1.2 டென்மார்க் மற்றும் டேன்ஸ் பற்றிய சுவாரசியமான உண்மைகள்\n3.1.3 ஐரோப்பாவின் வரைபடத்தில் டென்மார்க்\n4 டென்மார்க்கில் சூதாட்டங்களில் சூதாட்டம்\n4.1 ராயல் ஸ்காண்டினேவியன்\n4.2 காசினோ ஆல்போர்வ்\n4.3 காசினோ கோபன்ஹேகன்\n5 டென்மார்க்கில் ஆன்லைன் சூதாட்டம்\n5.0.2 பிரபலமான சந்தைகள்\n5.0.3 டென்மார்க்கில் சூதாட்டத்தின் எதிர்காலம்
இந்தியாவின் லே பகுதி சீனாவில் இருப்பதாக காட்டிய ட்விட்டர் – மத்திய அரசு கடும் கண்டனம்!\nHome செய்திகள் உலகம் இந்தியாவின் லே பகுதி சீனாவில் இருப்பதாக காட்டிய ட்விட்டர் – மத்திய அரசு கடும் கண்டனம்!\nஇந்தியாவின் லே பகுதி சீனாவில் இருப்பதாக சித்தரித்த ட்விட்டர் சமூக வலைதளத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவின் லே நகரை சீனாவின் ஒரு பகுதியாக ட்விட்டர் சமூக வலைதளம் காட்டி இருப்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக, பத்திரிக்கையாளர் ஒருவரின் ட்விட்டர் லைவ்வில் லே பகுதி சீனாவில் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இது தொடர்பாக ட்விட்டர் நிர்வாகத்தை நெட்டிசன்ஸ் சமூக வலைதளங்களில் வருத்தெடுத்தனர்.\nஇந்தநிலையில், இந்தியாவின் லே பகுதி சீனாவில் இருப்பதாக சித்தரித்த ட்விட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சேவுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில், இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் மதிக்காத ட்விட்டர் நிர்வாகத்தின் செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற முயற்சிகள் ட்விட்டருக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் நடுநிலை மற்றும் நேர்மை பற்றி கேள்விகளையும் எழுப்புகின்றன”. என்று கூறியுள்ளார்.\nஇதைத்தொடர்ந்து, இது ஒரு தொழில்நுட்ப கோளாறு என்றும், அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ட்விட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
மாலதி டீச்சர் - 44 - Tamil Kamaveri | baby-drive.ru\nHome » மாலதி டீச்சர் – 44\nமாலதி டீச்சர் – 44\n(Tamil New Sex Stories - Malathi Teacher 44)\nraji 2014-09-21 Comments\nTamil New Sex Stories – மாலதியின் பேன்டியில் உப்பியிருந்த ஈரச் சதைகளைத் தொட்டு தடவினேன். அவள் என் தோள்களைப் பற்றி இறுக்கினாள்.\n‘ஸ்ஸ்ஸ்ஸ்….. சிவ்வாõõ.. வேணாம்ம்ம்..’\n‘என்ன்னடி வேணாம்ம்?’ (பேன்டியில் தெரிந்த சதைப் பிளவை விரலால் வருடினேன்.)\n‘இல்ல்ல வேணாம்ம் டா.. ரொம்ப ஓவரா போறோம்ம்.. ஸ்ஸ்.. ஆஹ்ஹ்..’\n‘ஏய்ய்ய்… நெஜமா வேணாமா?’\n‘உன் மேல் உதடுதான் வேணாம் வேணாம்ங்குது. கீழ இருக்குற ரெண்டு உதடும் வேணும் வேணும்னு எப்படி ஜொள்ளு விடுது பாரு.’ (என் விரல்களை நனைத்திருந்த அவளின் ஈரத்தை மாலதியின் தொப்புளில் தடவினேன்.)\n‘ஏய்ய்.. ச்சீ பொறுக்கி..’\n‘போ சிவாõ.. அந்த உதடு ரெண்டும் கொஞ்சம் கூட வௌஸ்தைய இல்லாததுக. நீ தொட்டாலே விழுந்துடுங்க.’\n‘ம்ம்ம்ம்.’ நான் மாலதியின் பேன்டியின் பக்கவாட்டின் வழியாக என் விரலை உள்ளே நுழைத்தேன்.\n‘ஏய்ய்ய்… வேணாம்ம்ம். ஸ்ஸ்ஸ்..’\nலேசாக முளைத்திருந்த முடிகளின் சொரசொரப்பை வருடியபடி மென்சதைகளை அழுத்தி தடவிக் கொண்டு பிளவை தேடியது. அவள் நெளிந்தாள்.\n‘சிவ்வாõ.. வேணாம்ம்பாõ.. ப்ளீஸ்ஸ்..’\nஎன் விரல் பிளவைக் கண்டடைந்து அதன் ஈரத்தில் வழுக்கிக் கொண்டு இரண்டு இன்ச் உள்ளே சென்றது.\n‘ஸ்ஸ்ஸ்ஸ்ஏய்ய்ய்ய்…. ம்ம்ம்ம்ம்ம்ம்..’ (அவள் என் தோளை அழுத்திக் கொண்டு முனகினாள்.)\nமாலதியின் பிளவுக்குள் சென்ற என் விரல் அருகிலிருந்த இன்னொரு விரலையும் துணைக்கு அழைத்துக் கொண்டது. இரண்டு விரல்களையும் அசைத்து நிமிண்டினேன். அவள் துடித்தாள்.\n‘வ்வ்வேணாம்ம். சொன்ன்னா கேளுடாõ பொறுக்கி.. ஹ்ஹ்ம்ம்ம்..’\nஅவளின் முனகல் சத்தம் என்னை மேலும் உசுப்பேற்றத்தான் செய்தது. விரல்களின் வித்தையை கூட்டினேன். ஆனால் ஒரு பக்கம் மட்டும் பேன்டியை விலக்கி விளையாடுவது கொஞ்சம் சிரமமாயிருந்தது.\nவிரல்களை விடுவித்தேன். மாலதியின் மூடியிருந்த கண்கள் திறந்து என்னைப் பார்த்தன. நான் பேன்டியோடு அவளின் இன்ப மேட்டை தடவினேன். உள்ளேயிருந்து பேன்டியைத் தாண்டி எட்டிப் பார்த்த சிறு முடிகள் என் விரல்களை குத்தின.\nபேன்டியின் மேல் உப்பியிருந்த சதைகளை பிசைந்தேன். அவள் கீழுதட்டை கடித்துக் கொண்டு கண்கள் சொருக கிறங்கினாள். நான் பேன்டியின் மேல் பட்டையை விலக்கி கையை உள்ளே நுழைத்தேன். அவள் ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என்ற லேசான முனகலுடன் கண்களை இறுக்கி மூடினாள்.\nநான் லேசாக மேலேறி பிராவுக்குள் திமிறிக் கொண்டிருந்த முலைச் சதைகளை கடித்து நாக்கால் தடவினேன். மாலதி என் தோள்களை மேலும் இறுக்கிக் கொண்டாள்.\nநான் கழுத்தில் முத்தமிட்டு வாயை அடைந்து உதடுகளைப் பிரித்து அவளின் நாக்கை கடித்து இழுத்து சுவைத்தேன். பேன்டிக்குள் இருந்த என் வலது கை அவளின் உறுப்பை பிசைந்தது. அங்கு ஈரம் அதிகரித்திருந்தது.\nமாலதியின் மூச்சுக் காற்று சூடேறிப் போயிருந்தது. அவளின் வாயமுதத்தை பருகிச் சுவைத்த என் வாய்க்கு தகுந்த பதிலடி கொடுத்தாள். என் நாக்கை கடித்து இழுத்து தன் வாயக்குள் புதைத்துக் கொண்டு அதன் ஈரத்தை உறிஞ்சிக் குடித்தாள். என் ஜட்டிக்குள் சிங்கம் சீறியது.\nநான் என் வாயை விடுவித்து அவளின் காதருகில் நாக்கால் வருடினேன். வலது கையின் இரண்டு விரல்கள் பாதிக்கு மேல் அவளின் இன்பப் புழையில் நுழைந்திருந்தன.\n‘ம்ம்ம்மால்ல்லு.. மை டார்லிங்ங்..’\n‘ச்சீ.. போ.’ (உதட்டில் அரும்பிய வெட்கத்தை மறைத்தாள்.)\n‘நெசமாத்தான்டி.. அப்படியே சாஃப்டா, கொஞ்சம் உப்பலா, ஈரமா… ஸ்ஸ்ஸ… ம்ம்ம்ம்…’\n‘ஏய்ய்ய்.. போ சிவாõõ. கூசுது. இப்படி பேசுற. பொறுக்கிடா நீ.’\n‘ஐயோ கடவுளே.. சும்மா இரு சிவாõ.’\n‘இப்படி ஒரு புண்டைய தொட்ட பின்னால எப்படிடி சும்மா இருக்குறது.?’ (அவள் பேன்டியை கீழே இழுத்து முன் பகுதியை மட்டும் தொடை வரை இறக்கினேன்.)\n‘சிவாõõ.. ஏன்டா இப்படி அசிங்கமா பேசுற.. ம்ம்ம்’\n‘போடா.. ஒரு மாதிரி இருக்கு. கூசுது.’\n‘அய்யோõ போ சிவா.. எனக்கு தெரியாது.’\n‘ம்ம்ம்ம்’ (அவளின் பேன்டியை மேலும் கீழிறக்குவதற்காக இழுத்தேன். ஆனால் பின்பக்கம் அழுந்தியிருந்ததால் மறுத்தது.)\n‘லேசா குண்டிய தூக்குடி.’\n‘ஏய்ய்.. வேணாம்னு சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன விளையாடுறியா?’\n‘நோ சிவாõ. என்னை விடு. ப்ளீஸ்.’\nசற்று அழுத்தமான குரலில் அதட்டலாக சொல்லி என் கையின் நடுவிரலை திடீரென்று அவளின் புண்டைக்குள் ஆழமாக சொருகினேன்.\n‘ஸ்ஸ்ஸ்ஸ்ஆஆஆ…’ (லேசான அலறலுடன் தன்னையறியாமல் இடுப்பை எக்கினாள்.)\nமாலதி இடுப்பை எக்கியதும் அவளுடைய கொழுத்த குண்டிக்கும் கட்டிலுக்கும் இடையில் உண்டான கணநேர இடைவெளியை என் கைகள் தவறவிட வில்லை.\nசட்டென்று பேன்டியை இழுத்தேன். அது அவளின் பின்புறங்களைத் தடவிக் கொண்டு தொடைகள் வரை இறங்கியிருந்தது. சிவந்த மென்மையான அழகுப் புண்டை முழுமையாய் என் கண்களுக்கு விருந்தளித்தது.\n‘ஏய்ய்ய்.. பொறுக்கி.. ஹ்க்கும்.. ஹ்க்கும்.. போடாõ..’ (மாலதி சிறுமியைப் போல் சிணுங்கினாள்.)\nநான் லேசாக சிரித்தபடி மாலதியின் பேன்டியை மேலும் இறக்கி முழங்காலைத் தாண்டி கால் வழியாக அவிழ்த்தேன். பின்னர் அதை என் கையில் எடுத்து வைத்தபடி அவளைப் பார்த்தேன். அவள் லேசான வெட்கத்துடன் பார்த்தாள்.\nநான் அந்த பேன்டியை மூக்கில் வைத்து அவளின் இன்ப வாசனையை முகர்ந்தேன். பின்னர் அதில் முத்தமிட்டு மாலதியைப் பார்த்தேன். அவள் அதிர்ச்சி கலந்த வெட்கத்துடன் வேகமாக முகத்தை கைகளால் மூடிக் கொண்டாள்.\n‘அய்யோõ.. ச்ச்சீய்.. சிவாõ என்ன்னடா பண்ற?’\nஉன் புண்டை வாசம் எப்படி இருக்குனு பார்த்தேன்டி.\n‘அய்ய்யோ ராமாõ..’ (முகத்தை மூடியபடியே முனகினாள்.)\n‘ம்ம்ம்ம்ஹாõõõ… நல்லாத்தான்டி இருக்கு உன் வாசனை.’ (பேன்டியை மீண்டும் முகர்ந்து விட்டு லேசான முனகலுடன் சொன்னேன்.)\n(அவள் உடலை குலுக்கியபடி சிணுங்கினாள்.) ‘ச்ச்சீ போ சிவாõ.. கீழ போடு அத கருமம்.. பொறுக்கி..’\nநான் அந்த பேன்டியை அருகில் அவிழ்த்து வைக்கப்பட்டிருந்த அவளுடைய சேலையின் மீது போட்டுவிட்டு இரண்டு செழித்த தொடைகளையும் தடவி பிசைந்து மேலே÷றி அந்த வாழைத்தண்டுகளின் சங்கமத்தை அடைந்தேன்.\nஅவள் நெளிந்தபடி கால்களை இறுக்கி தடுக்க முனைந்தாள். ஆனால் தொடை இடுக்கில் நுழைந்த என் கை வலுவாக முன்னேறி அவளின் புண்டையை தொட்டது. ஆனாலும் தொடைகளை இறுக்கினாள்.\nநான் புண்டைப்பிளவில் என் விரலால் லேசா நிமிண்டினேன்.\n‘ஸ்ஸ்ஸ்ஸ்..’ (லேசான சிலிர்ப்புடன் சட்டென்று அவள் தொடைகள் அரைநொடி விலகி மீண்டும் இணைந்தன.)\nஇந்த இடைவெளியில் என் கை நன்கு முன்னேறி அவளின் புண்டையை அழுத்திக் கொண்டிருந்தது. அவள் உணர்ச்சிப் பெருக்கில் தன் தொடைகளின் நடுவில் சிறைப்பட்டிருந்த என் கையை இறுக்கிக் கொண்டு லேசா இடுப்பை எக்கினாள்.\nஉடலை நெளித்துக் கொண்டு கிறக்கத்துடன் என் பெயரை உச்சரித்தாள். அவளுடைய குரலில் காமத்தீ கொழுந்து விட்டு எரிந்தது. ‘சொல்ல்லுடி..’\n‘சிவ்வ்வ்வாõõõ..’ (மீண்டும் என் பெயரைச் சொல்லி முனகினாள்.)\nகொஞ்சம் தயக்கத்துடனும் நிறைய கிறக்கத்துடனும் என் கையை இறுக்கிப் பிடித்து சொன்னாள்.\nகாம கதைகள் பேருந்து Puntaikul kalla kadhal kadhaigal tamil kama kathai periy mulai paal kudithal அம்மா பால் tamil sexkadhai anni sinthi vettil ammavai otha tailor kilavan தமிழ் நக்கு செக்ஸ் விடீயோ அம்மா பம்பு செட்டிள் காம கதைகள் அம்மா அக்கா அத்தை கூட்டு ஓல் கதை சாந்தி அண்ணி காமகதை Tamil school pudikum kutty thangai Tamil sex storiys குண்டியிலிருந்து பீயை நக்குவேன் முஸ்லிம் நண்பனின் அம்மா அக்கா காமக்கதை என்.மாமானரும்.நானும்.ஒழ்.கதைகள் கைலி அக்கா xnxx மந்திரவாதி காமகதை காதலியின் மூத்திரம் குடிக்கும் செக்ஸ் கதைகள் Tamil kama kadhai en manaiviyin boss மூஸ்லிம் சுத்தூ xvideos திருவாளர் திருமதி காமக்கதை /inbana-ilam-pengal/tamil-kamakathaikal-kadhaliudan-mudhal-anubavam/ தழிழ் ஓள் sex voies 10 vayathu paiyanu anty xnxx மனைவி மாற்றி ஓக்கும் காம கதைகள் manager marumagal sex stories அத்தைகளின் உண்மை காமகதைகள் கர்ப்பிணியை நிற்க வைத்து ஓக்கும் காம கதைகள் gay kanji kuditha kadhai தப்புடா விடுடா xnxx Tamil kamakathai அரவாணி காமகதை டைலர் தந்த சுகம் kattiya manaiviyai kootti kodutha kanavar tamil kamakathaikal Tamil chinnapaiyan kama thai அம்மா மலம் பார்த்து காமகதை atthai pundai thooki katinal tamil kamakathaikal ௭ன் கூதி குழந்தை காமகதைகள் நீயும் கண்டிப்ப sex video HD பார்டியில் அக்கா என தெரியாமல் காம கதைகள் Tamil amma Kama sex video tamilathai kamaverei amma moothirathai kudida tamil sex story அப்பா மகள் காம களஞ்சிய கதைகள் அம்மாவுக்கு பீ கழுவி விட்டேன் Akka magalai otha tamil sex kathai ஆண்ட்டியுடன் காமப்போர் விதவை டீச்சர் கார் காமக்கதைகள் Mulaipaal vali kamakadhai குன்டி வெறி ஓழ் கதை Tamil manaiviyai kutikodutha magan sex kathaikal thathu kudumam kamakathaikal அம்மா சிறுவன் தமிழ் காமகதைகள்.com thangachi xxx thamil store அம்மாவையும் மகளையும் ஒன்றாக ஓத்தேன் நீக்ரோ சுன்னி புண்னட பக்கத்துவீட்டு கருவாச்சியின் ஓல்கதைகள் patti koothi peran vayil.in tamil மனைவி ஜானகி காம கதைகள் akkavukku wisper tamil xxx story அம்மாவின் இருட்டில் ஒள் மகனுடன் சுவாதி என் காதலி 36 kilavan group kamakathai தங்கையின் பீ மூத்திர காமகதை tamil gramathu kalla oal kathi malathi ool kathaikal கருத்த புண்டை Valikuthu methuva pannunga தமிழ் சூத்தடி காமகதைகள்
By newsdesk Tue, 26 Jan 20211611662026000\nராஜபாளையம் அருகே காய்ச்சலுக்கு ஊசி போட்டுக்கொண்ட இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த தளவாய்புரத்தை சேர்ந்தவர் முகேஷ் (24). இவர் கடந்த5நாட்களுக்கு முன்பு அங்குள்ள கூட்டுறவு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு ஊசி போட்டபோது, மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், முகேஷ் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்த நிலையில் விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மனோகரன், இன்று சம்பந்தப்பட்ட தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த சோதனையின்போது, மருத்துவமனை உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nமேலும், ஹோமியோபதி சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுவிட்டு, நோயாளிகளுக்கு ஆங்கில முறையிலான சிகிச்சையை அளித்து வந்ததும், அதற்காக மருத்துவரும், செவிலியரும் உரிய பயிற்சியை பெற்றிருக்க வில்லை என்பதும் தெரியந்தது. இதனை அடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் தளவாய்புரம் கூட்டுறவு மருத்துவமனையை பூட்டி சீல் வைத்தனர்.
மின்னம்பலம்:தேர்தல் விதிமீறல்: ஆசிரியை சஸ்பெண்ட்!\nதேர்தல் விதிமீறல்: ஆசிரியை சஸ்பெண்ட்!\nதபால் வாக்கு அளித்த விவரத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்ட பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nதமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் தபால் வாக்கு செலுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் சரகம் சுரண்டையில் ஆர்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும் சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் என்பவர் தன்னுடைய தபால் வாக்கைப் பதிவு செய்த பின்பு, அதை தனது வாட்ஸ்அப் , முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஇதை பார்த்த தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார், அதன் நகல்களை இணைத்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனுவொன்றை அனுப்பினார். அதில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார்.\nவாக்கு பதிவு விவரத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டது தேர்தல் நடத்தை விதிமீறலாகும். புகாரின் அடிப்படையில் அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்\nதேர்தல் நடத்தை விதிகளின் பிரிவு 49 (M)இன் படி விதி 38இன் கீழ் அல்லது இந்த விதிகளின் வேறு ஏதேனும் விதிகளின் கீழ் வாக்குச் சீட்டு வழங்கப்பட்ட ஒவ்வொரு வாக்காளரும் வாக்குச் சாவடிக்குள் வாக்களிக்கும் ரகசியத்தைப் பராமரிக்க வேண்டும் என்ற விதியை மீறியதற்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nதலைமை அலுவலர் தவிர வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குட்பட்ட பகுதியில் செல்போன், வயர்லெஸ் செட், கார்டுலெஸ் போன் போன்றவற்றை யாரும் பயன்படுத்தக் கூடாது.\nதேர்தல் அலுவலர்கள் வாக்குச்சாவடியை விட்டு வெளியே போகக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.\nபார்வையின்மை அல்லது பிற வகை உடல் நலிவு காரணமாக வாக்காளர் வாக்களிக்க ஏதுவாக, அவரின் சார்பில் வாக்களிக்க 18 வயது குறையாத ஒருவருக்கு அனுமதி அளிக்கலாம்.\nஒரே உதவியாளர் பல வாக்காளர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது.\nவாக்காளர்களுக்கு உதவியாளராக வருபவரிடம், பதிவு செய்த வாக்கின் ரகசியத்தைக் காப்பார் எனவும், வேறு எந்த வாக்காளருக்கும் உதவியாளராக ஏற்கெனவே செயல்படவில்லை எனவும் உறுதிமொழி பெற வேண்டும். உதவியாளராக வரும் நபருக்கு அவரது வலது கையில் ஆட்காட்டி விரலில் மை வைத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை இழுத்து மூட முயற்சி நடக்கிறதா? காவிகளின் திட்டம் பலிக்குமா? - Times Tamil News\nஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை இழுத்து மூட முயற்சி நடக்கிறதா? காவிகளின் திட்டம் பலிக்குமா?\nமுகமூடி அணிந்துவந்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அடிதடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யாமல், இழுத்தடித்துவரும் காவல் துறை மூலம் அந்த பல்கலைக்கழகத்தை இழுத்து மூட முயற்சி நடப்பதாக சொல்லப்படுகிறது.\nஇது குறித்து அழுத்தமான கருத்தை பதிவு செய்திருக்கிறார் திராவிடர் கழகத்தின் தலைவர் வீரமணி. டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள். அவசரக் கோலத்தில் நிறைவேற்றப்பட்ட சி.ஏ.ஏ. என்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, போராடி வருகின்றனர். இந்த மாணவர்களை, பல்கலைக்கழகத்தின் வளாக விடுதிக்குள் புகுந்த முகமூடி அணிந்த 30 குண்டர்கள் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர்.\n‘‘இந்தத் தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம்‘’ என்று ‘ஹிந்து ரக்ஷா தளம்‘ என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் பிறகும் இந்த காவிக் காலிகள்மீது சட்டம் பாயவில்லை. இதிலிருந்து இதில் மேலிடத்தின் கண்ஜாடையோடுதான் இவர்கள் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகவில்லையா?\nசட்டம் ஒழுங்கைக் காப்பாற்றி நாட்டில் பொது அமைதி, ஒழுங்கினைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசின் உள்துறை இதனை வேடிக்கைப் பார்ப்பதா? இதைவிட பெருத்த தேசிய அவமானம் வேறு உண்டா? படிக்கும் பல்கலைக் கழக மாணவர்கள் நாளை இந்த நாட்டினை வழிநடத்தப் போகிறவர்கள். அவர்கள் தங்களது எதிர்ப்பை - ஜனநாயக நாட்டில், அறவழியில் எதிர்க் கருத்துகளைக் கூற உரிமை இல்லையா?\nகருத்தைக் கருத்தாலே சந்திக்கத் தெம்பும் திராணியும் இல்லாத கயமைத்தனம் - கோழைத்தனம்தானே இப்படி முகமூடிகளை அணிந்து மாணவ இளந்தளிர்களிடம் இப்படி உயிர் பறிப்பு வேலை செய்து அவர்களை அச்சுறுத்தி அடக்க முயற்சிப்பது எவ்வகையில் நியாயம்? இதை வைத்து பல்கலைக்கழகத்தை முடக்க இருப்பதாக செய்திகள் வருகிறது. ஆளும் பா.ஜ.க. இதுபோன்ற முகமூடித்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும்;\nஇல்லையெனில் மக்கள் பாடம் புகட்டவேண்டிய நேரத்தில் தக்க பாடம் புகட்ட தவறமாட்டார்கள் - இது வரலாற்று உண்மை என்று கூறியிருக்கிறார் வீரமணி.
சேட்டைக்காரன்: சின்னஞ்சிறு வயதில்....!\nபதின்ம நினைவுகள் என்னும் தொடர்பதிவில் என்னை(யும்) அழைத்து விட்டார்கள் என்பதற்காக, அதிக மெனக்கெட்டு, எனது இயல்பான தோலை உரித்துப் புதிய சட்டையைப் போர்த்துக்கொண்டு எழுதிய பதிவல்ல. எவராயிருந்தாலும் சரி, நினைவுகளை நிறுத்துப்பார்க்கிறபோது அதில் தாழ்ந்திருக்கும் தட்டில் காயாமலிருக்கிற கண்ணீரின் முத்துக்களே அதிகம் குவிந்திருக்கும்- ஆனந்தக்கண்ணீர் உட்பட! நகைச்சுவையாய் எழுத யோசிக்க வேண்டியிருக்கிறது; எவரது முகமூடியையோ சிறிது நேரம் இரவல் வாங்கி அணிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால், கடந்து வந்த காலங்களைப் பற்றிக் கணக்கெடுப்பு நடத்துகிறவர்களுக்கு, ஒப்பனைகள் தேவைப்படுவதில்லை. பால்ய பருவங்களில் தாமணிந்த துணிமணிகளை யாரும் இன்னும் வைத்திருப்பதில்லை என்றாலும் அப்பாவின் விரல்பிடித்துக்கொண்டு போய் வாங்கிய அந்த நாளும், அந்த ஜவுளிக்கடையின் புதுத்துணி வாசமும், வெளியேறும்போது உயிரற்ற பொம்மைகளுக்கு நாமும் திருப்பி வணக்கம் சொன்ன அறியாமைக்கணங்களும் யாருக்கு மறந்திருக்கக்கூடும்?\nநீங்களே மறந்து விட்டிருக்கிற ஒரு பழைய தழும்பை எப்போதாவது ஒரு நண்பர் சுட்டிக்காட்டி இது எப்படி ஏற்பட்டது என்று கேட்கிறபோது, அந்த சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் புன்னகையும், விதிவிலக்காக மவுனமும் பதிலாக அளிக்கத்தோன்றும். இரத்தம் வடித்துக் காய்ந்து தழும்பான சில நினைவுகளுக்குப் பின்புலத்தில் சில இனிமையான நினைவுகள் இருக்கலாம். சைக்கிளில் ஒரு குட்டிதேவதையை அமர்த்தி பயமும் பரபரப்பும் கலந்து மிதித்த பயணங்களில் தடுமாறி விழுந்து வாங்கிய விழுப்புண்களின் தழும்பாக இருப்பின், அந்தப் புன்னகையின் வெப்பத்தை சினேகிதர்களால் அறிய முடியாது. ஆனால், மறக்க முயன்றும் முடியாத அந்தத் தழும்பின் சரித்திரத்தை நினைவுகூர்கிறபோது, வேப்பெண்ணையும் வியர்வையும் கலந்து வீசிய நெடி நுரையீரலுக்குள் திரும்பவும் வந்து நிரம்பியது போலிருக்கும்.\nசில சமயங்களில் நினைவுச்சின்னங்களை விடவும் கூரிய ஆயுதங்கள் இருக்க முடியாது என்று தோன்றும். ஒவ்வொன்றையும் பார்க்கிறபோதெல்லாம் சமநிலமாக முயன்றுகொண்டிருக்கும் இதயத்தில் எங்கிருந்தோ வந்த ஏர் உழுது உழுது உதிர ஈரத்தை உற்பத்தி செய்வது போலிருக்கும். தற்செயலாக சந்திக்கிற பழைய உறவுகள் போல, முகமும் பெயரும் மறக்காமலிருக்கிற பல நினைவுகள், வழியனுப்பினாலும் வலுக்கட்டாயமாக நம்மோடு இருந்து இம்சித்து விட்டுத்தான் போகும்.\nநினைவுகள் பசுமையாக இருக்கிறதா, பழுப்பு நிறத்திலிருக்கிறதா என்பதைக் காட்டிலும் அவை மக்கிப்போகாமல் இருப்பதே அவசியமாகிறது.\nஆண்டுக்கணக்காய் செருப்புமின்றி பள்ளிக்கு நடந்தும் முள்குத்திய சம்பவங்கள் அதிகம் நினைவுக்கு வருவதில்லை. ஆனால், மனிதாபிமானத்தோடு ஏற்றிக்கொண்ட மாட்டுவண்டிகளில் என் உடலோடு உரசி உட்கார்ந்த சில இரட்டைப்பின்னல்களில் வெள்ளைச்சிரிப்பு இப்போது நினைத்தாலும் குத்தி இறங்குகிறது.\nசெம்மண்தரையில் வியர்க்க விறுவிறுக்க கபடியாடிவிட்டு, முங்கி முங்கி சுனையில் குளித்தபோதெல்லாம் சிராய்ப்புகளில் சுள்ளென்று கடித்த மீன்களைப் பற்றி நினைக்கிறேனோ இல்லையோ, அதே சுனையின் கரையில் எவருமின்றி வேப்பமரத்திலிருந்து உதிர்ந்த இலைகளை எண்ணிக்கொண்டிருந்த ஏகாந்தப்பொழுதுகள் நினைவுக்கு வருகின்றன.\nஓடுகள் விலகிய பள்ளிக்கூட அறைகளில், கிழிந்த கால்சராயின் மீது சிலேட்டை வைத்து மறைத்த கணங்களும், சரியான விடை சொல்லியபோதெல்லாம் எழும்பி நிற்க வைத்து, கைதட்டல் ஒலியால் காதுகளைக் குளிர வைத்த நல்லாசிரியைகளும் நினைவுக்கு வருகின்றனர்.\nசொடலைமாடனின் சிலையைப் பார்த்துப் பயந்து கண்களை இறுக்கிக்கொண்டு கோவிலுக்குச் சென்ற பொழுதுகளும், கூடத்தில் முதல்முதலாய் ஒரு உயிரற்ற உடல்பார்த்து தூணை இறுக்கியணைத்த துக்கநிமிடங்களும் நினைவுக்கு வருகின்றன.\nடயர் வண்டியோட்டி குருமலை ரயில் நிலையம் வரைக்கும் சென்று, விரைந்து செல்லுகிற வண்டிகளை வேலியின் மீது அமர்ந்தபடி வேடிக்கை பார்த்த நாட்களும் நினைவுக்கு வருகின்றன.\nநெல்லயப்பர் கோவிலில் முதல்முறையாய்ப் பார்த்த குட்டியானையை வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று அடம்பிடித்து அழுததும் நினைவுக்கு வருகிறது.\nநண்பர்களோடு கூட்டு சேர்ந்து ஆளுக்கு ஒன்றாய் அவரவர் வீட்டிலிருந்து, வெல்லம்,உப்பு,மிளகாய்,புளி என்று கொண்டுவந்து படித்துறைக்கல்லில் இடித்து, குச்சியில் உருட்டி சுவைத்த நொட்டாம்புளி இப்போது நினைத்தாலும் ருசிக்கிறது.\nகொடைவிழாவில் சிலம்பம் சுற்றிச்சென்றதும், அசட்டுத்துணிச்சலில் நண்பர்களோடு மயானத்துக்குள் சென்று எரிந்து எழும்பிய உடலைக்கண்டு அஞ்சியதும், பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு நெல்லைக்கு ரயில்பிடித்துச்சென்று பூர்ணகலாவில் படம் பார்த்ததும் நினைவுக்கு வருகிறது.\n’என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா?’ என்று ஒரு அப்பாவி மாணவியிடம் கேட்டதும், அவள் அதைக் கெட்ட வார்த்தை என்று சொன்னதும்.....\nசைக்கிளை வியர்க்க விறுவிறுக்க மிதித்துச் சென்று ஒரு புன்னகைக்காக மூச்சுவாங்கியபடி காத்திருந்த நாட்களும்...\nஎல்லா நண்பர்களும் எங்கேங்கோ சென்றுவிட, நாங்கள் சேர்ந்து சுற்றிய காடுகளில் செருப்பணிந்து நடந்தும் முள்ளாய்க் குத்திய நினைவுகளும்....\nஉடன் ஓடிவிளையாடிய சகோதரிகள் குமரிகளானதும், வீட்டுக்குள்ளே தனி ஆணாக விலகி வாழ நேர்ந்த காலங்களும்....\nஅவ்வப்போது அடிப்பதை வழக்கமாக வைத்திருந்த அண்ணன் வேலை கிடைத்து வெளியூருக்குப் புறப்பட்டபோது, பஸ் நிலையத்தில் என்னையுமறியாமல் சிந்திய கண்ணீரும்....\nதன்னிரக்கம் போலிருக்கிறதோ? இந்தப் பருக்கைகள் சோற்றின் பதம் பார்ப்பதற்காக அல்ல. இன்னும் எங்கேயோ எனது உதட்டில் ஒட்டிக்கொண்டிருப்பது போல ஒரு எண்ணமும், எங்கிருந்தோ அம்மாவின் முந்தானைத்தலைப்பு அதைத் துடைத்து விடலாம் என்ற ஒரு நம்பிக்கையும், தினசரியும் என்னுடன் தான் நடமாடிக்கொண்டிருக்கின்றன.\nஅளவுக்கு மீறினால் நினைவுகளும் கூட நஞ்சுதான். அதனால், இப்போதைக்கு ஒரு காற்புள்ளி வைத்து விடுகிறேனே!\nஇதை யார் வேண்டுமானாலும் இங்கிருந்து தொடரலாம்; ஆனால், என்னை எழுத வைத்தவர்கள் இவர்கள்:\nஇவர்களுக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும். இந்தப் பதிவுக்காக மட்டுமல்ல! இந்த சேட்டைக்காரனின் முகமூடியை சற்றே கழற்றி விட்டுக் காற்று வாங்க வைத்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள வைத்ததற்காக! இருவருக்கும் நன்றி! இங்கு வருபவருக்கும் நன்றி!!\nvery touching post!!\nFebruary 27, 2010 at 11:06 PM\nஅழகா இருக்குங்க... :)\nசைக்கிளை வியர்க்க விறுவிறுக்க மிதித்துச் சென்று ஒரு புன்னகைக்காக மூச்சுவாங்கியபடி காத்திருந்த நாட்களும்...\_\_\_\nசொல்ல வந்த விசயத்தை சொல்லாமலே சொன்ன விதம் ரொம்பப் பிடிச்சிருக்கு... அப்பப்ப முகமூடியக் கழட்டி வச்சிட்டு இது மாதிரியும் எழுதுங்க..\nFebruary 28, 2010 at 12:42 AM\n..........It touches the heart and memories.......... very nice.\nஎன்ன சேட்டை அண்ணாச்சியா இது!!, டச் பண்ணீட்டீங்க.\nவழக்கமான உங்கள் பதிவுகளில் இருந்து மாறுபட்டு தனித்து நிற்கிறது இந்த இடுகை. உங்கள் இடுகைகளில் மிகவும் பிடித்த ஒன்று.\nஇப்பதிவைப் போலவே தனித்துத் தெரிகிறாய் நண்பா...\nபடித்து முடிக்கையில் நெகிழ்ச்சி ஆட்கொள்கிறது...\nசேட்டை உங்கள் மலரும் நினைவுகளை அற்புதமா வெளிப்படுத்தியிருக்கீங்க. உங்க ஊர் திருநெல்வேலி பக்கம்தானா, கொஞ்சம் சொல்லப்படாதா..\nகலக்கிட்டீங்க. அற்புதமான வரிகள்;\nமுகமூடியைக் கழற்றியபின் எவ்வளவு அழகாய் இருக்கீங்க.. அப்பப்ப இந்த மாதிரி ஒப்பனைகள் இல்லாம வாங்க..\nபால்ய நினைவுகள் பெரும்பாலும் என் பருவத்தே செய்ததவைகளில் 90 சதம் ஒத்துப் போகிறது. கிராமச்சூழலின் இருவரும் இருந்திருப்பதால் இருக்கலாம். என்னை எழுத சொன்னால் நீங்கள் எழுதியது + இன்னும் கொஞ்சம் என இருக்கும். அருமையான பகிர்வு....\nஇதுபோல் இன்னும் நிறைய!\n//very touching post!!//\nThank You very much. :-))\nஇளம்தென்றலுக்கு எனது நன்றி!\nMarch 1, 2010 at 8:36 AM\n//அழகா இருக்குங்க... :)//\nதமிழ்ப்ரியனுக்கு மனமார்ந்த நன்றி! :-)\nசொல்ல வந்த விசயத்தை சொல்லாமலே சொன்ன விதம் ரொம்பப் பிடிச்சிருக்கு... அப்பப்ப முகமூடியக் கழட்டி வச்சிட்டு இது மாதிரியும் எழுதுங்க..//\nசம்பவங்களை பிரித்து மேய விரும்பவில்லை. காரணம், சுவாரசியம் கூட்ட நகைச்சுவையை சொருகி விடுவேனோ என்ற பயம்தான். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முகிலன் அவர்களே!\n//..........It touches the heart and memories.......... very nice.//\nமிக்க நன்றி சித்ரா அவர்களே! எழுதியதன் குறிக்கோள் நிறைவேறியது போலிருக்கிறது.\n//என்ன சேட்டை அண்ணாச்சியா இது!!, டச் பண்ணீட்டீங்க.//\nஹி..ஹி! அப்பப்போ இந்த மாதிரி எழுதணுமுன்னு ஆசைதான். ஸ்டார்ஜன்னும் அநன்யாவும் புண்ணியம் கட்டிக்கிட்டாங்க! ரொம்ப நன்றிண்ணே!!\n//தங்கள் பதிவுக்கு நன்றிகள்..//\n//வழக்கமான உங்கள் பதிவுகளில் இருந்து மாறுபட்டு தனித்து நிற்கிறது இந்த இடுகை. உங்கள் இடுகைகளில் மிகவும் பிடித்த ஒன்று.\nஎனது ஆரம்பப்பதிவுகள் இப்படித்தான் இருந்தன. அவற்றில் கொஞ்சம் நகைச்சுவை சேர்த்தேன்; இதில் சமரசம் செய்து கொள்ளாமல் எழுதியிருக்கிறேன். கருத்துக்கு மிக்க நன்றி அக்பர் அவர்களே!\n//இப்பதிவைப் போலவே தனித்துத் தெரிகிறாய் நண்பா...\nபடித்து முடிக்கையில் நெகிழ்ச்சி ஆட்கொள்கிறது...//\nமிக்க நன்றி அகல்விளக்கு! உங்கள் கருத்து எனக்கு உற்சாகம் அளிக்கிறது, இது போல தொடர்ந்து எழுதுதற்கு!\n//சேட்டை உங்கள் மலரும் நினைவுகளை அற்புதமா வெளிப்படுத்தியிருக்கீங்க. உங்க ஊர் திருநெல்வேலி பக்கம்தானா, கொஞ்சம் சொல்லப்படாதா..\nகலக்கிட்டீங்க. அற்புதமான வரிகள்;//\nஇந்தப் பதிவை எழுத வைத்த சூத்திரதாரிகள் நீங்களும் அநன்யாவும் தானே? உங்களால் உந்தப்பட்டு எழுதிய பதிவே இது! உங்களது தாராளமான பாராட்டில் உங்கள் இருவருக்கும் சேர வேண்டிய பங்கும் இருக்கின்றது அண்ணே! மிக்க நன்றி!\n//முகமூடியைக் கழற்றியபின் எவ்வளவு அழகாய் இருக்கீங்க.. அப்பப்ப இந்த மாதிரி ஒப்பனைகள் இல்லாம வாங்க..//\nமிக்க நன்றி ரிஷபன் அவர்களே! இது போல துணிவாய் ஒப்பனையின்றி அவ்வப்போது வருவேன்; வரணும்! :-))\n//பால்ய நினைவுகள் பெரும்பாலும் என் பருவத்தே செய்ததவைகளில் 90 சதம் ஒத்துப் போகிறது. கிராமச்சூழலின் இருவரும் இருந்திருப்பதால் இருக்கலாம். என்னை எழுத சொன்னால் நீங்கள் எழுதியது + இன்னும் கொஞ்சம் என இருக்கும். அருமையான பகிர்வு....\nஇதுபோல் இன்னும் நிறைய!//\nபதிவுகள் குறித்து மட்டுமின்றி, வலைப்பதிவு குறித்தும் நீங்கள் எனக்கு அளித்த நல்ல அறிவுரைகளுக்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன் பிரபாகர் அவர்களே!\nஆழத்துடனும் அழுத்தத்துடனும் என் பழைய நினைவுகளை கிளறிவிட்டாய். எல்லோர் மனதிலும் இதுபோன்ற நிகழ்வுகள் இருந்துக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இது போன்றவற்றை படிக்கையில் மீண்டும் நினைவுக்கு வந்து அசைபோட வைக்கின்றன.\nஅமெரிக்காவில் ஒரு அம்மா\nவாங்க, கணக்குத் தொடங்கலாம்\nகாதலர் தின சிறப்புக் கவிதை.02\nகாதலர் தின சிறப்புக் கவிதை.01\nஆவியுடன் பேசலாம்-ஏர்லொள் புதிய சேவை\nஜஸ்ட் டென் ருபீஸ்!\nஸ்ரேயா ரசிகர்கள் சூளுரை\nஇது அம்ம பாட்டு....!\nதாத்தாவுக்காக ஒரு பாடல்\nதாய் சொல்லைத் தட்டாதே\nஸ்ரேயா மட்டும் இல்லேன்னா.....!
Home » Top News » முகமது ஷமி பந்து வீச்சில் ரோரி பர்ன்ஸ்: காணொளியைப் பாருங்கள் முகமது ஷமி மிகவும் தேவையான முன்னேற்றத்தைப் பெற; முகமது ஷமி பந்துவீச்சில் ரோரி எரியும் அதிர்ச்சி தரும் பந்து; முகமது ஷமி பந்து வீசிய ரோரி பர்ன்ஸ்: ஆஹா என்ன பந்து! முகமது ஷமி ரோரி பர்ன்ஸை சுத்தமாக பந்துவீசினார், பேட்ஸ்மேன் இப்படி பார்த்துக்கொண்டே இருந்தார்\nமுகமது ஷமி பந்து வீச்சில் ரோரி பர்ன்ஸ்: காணொளியைப் பாருங்கள் முகமது ஷமி மிகவும் தேவையான முன்னேற்றத்தைப் பெற; முகமது ஷமி பந்துவீச்சில் ரோரி எரியும் அதிர்ச்சி தரும் பந்து; முகமது ஷமி பந்து வீசிய ரோரி பர்ன்ஸ்: ஆஹா என்ன பந்து! முகமது ஷமி ரோரி பர்ன்ஸை சுத்தமாக பந்துவீசினார், பேட்ஸ்மேன் இப்படி பார்த்துக்கொண்டே இருந்தார்\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான5போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது டெஸ்ட் ஹெடிங்லியில் நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாவது நாள் இன்று மற்றும் ரோரி பர்ன்ஸ் வடிவத்தில் இந்தியா தனது முதல் முன்னேற்றத்தைப் பெற்றது. பர்ன்ஸை முகமது ஷமி தனது கவர்ச்சியான பந்து வீச்சில் பந்துவீசினார். பந்து மிகவும் நன்றாக இருந்தது, பர்ன்ஸ் முற்றிலும் அதிர்ச்சியடைந்தார். அவர் தைரியமாக மாறிவிட்டார் என்பதை அவரால் நம்ப முடியவில்லை போல. மறுபுறம், இந்திய வீரர்களின் கொண்டாட்டங்கள் முழுவீச்சில் இருந்தன.\nஉண்மையில், ஷமி 50 வது ஓவரின் கடைசி பந்தை மணிக்கு 133 கிமீ வேகத்தில் செய்தார். ரோரி குறுக்கே சென்று ஷாட் விளையாட விரும்பினார், ஆனால் அதை முற்றிலும் தவறவிட்டார். பந்து பேட் மற்றும் பேட் இடையே கடந்து, ஆஃப்-ஸ்டம்பின் மேல் தாக்கியது. இங்கே ரோரி ஆச்சரியப்பட்டார். அவன் சிறிது நேரம் அவன் இடத்தில் நின்றான். அவர் 153 பந்துகளில்6பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 61 ரன்கள் எடுத்தார்.\nஇன்று இங்கிலாந்து 120 ரன்களுக்கு முன்னதாக விளையாடத் தொடங்கியது. ரோரி மற்றும் ஹசீப் முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் பகிர்ந்து கொண்டனர். அதாவது, அவர் தனது முதல் நாள் ஸ்கோரில் 15 ரன்கள் சேர்த்து முதல் விக்கெட்டை இழந்தார்.\nடெட் டெக்ஸ்டர் இறந்தார்: டெட் டெக்ஸ்டர் யார்? பிரிட்டிஷ் வீரர்கள் கருப்பு பேண்ட் அணிந்து வெளியே வந்ததால் கிரிக்கெட் உலகம் சோகத்தில் மூழ்கியது\nஜேம்ஸ் ஆண்டர்சன் தலைமையிலான வேகப்பந்து வீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து மூன்றாவது இன்னிங்சின் முதல் நாளில் முதல் இன்னிங்சில் வெறும் 78 ரன்களுக்கு இந்தியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. பதிலுக்கு இங்கிலாந்து 42 ரன்கள் முன்னிலை பெற்றது, நாள் முடிவில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 120 ரன்கள் எடுத்தது. ஹசீப் ஹமீட் 130 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 60 ரன்களும், ரோரி பர்ன்ஸ் 125 பந்துகளில்5பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 52 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\n30ベスト br-r573 :テスト済みで十分に研究されています\n30ベスト パスタソース キューピー :テスト済みで十分に研究されています
சீனாவை ‘லெகிமா’ புயல் தாக்கியது: 22 பேர் பலி; 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம் - TamilSanjikai\nஆகஸ்ட் 11, 20190Comments 115\nசீனாவை ‘லெகிமா’ என்ற புயல் மையம் கொண்டிருந்தது. இந்த ஆண்டில் அங்கு மையம் கொண்ட 9-வது புயல் இது.\nஇந்தப் புயல் காரணமாக நேற்று முன்தினம் தொடங்கி ஷாங்காய் நகரம் உள்ளிட்ட பல நகரங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வந்தது.\n‘சூப்பர் புயல்’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்த புயல், நேற்று அதிகாலையில் தைவான் மற்றும் சீனாவின் நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்குரிய ஷாங்காய் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள வென்லிங் என்ற இடத்தில் கரையை கடந்தது. அப்போது அங்கு மணிக்கு 187 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இடைவிடாத மழையும் பெய்தது. தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் அபாய எச்சரிக்கை விடுத்தது.\nபலத்த காற்றில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.\nஅதற்கு மத்தியில் இரு சக்கர வாகனங்களை வாகனவோட்டிகள் தள்ளிக்கொண்டு சென்றனர். இதனால் வாகனவோட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினர்.\nஷாங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா, ஷாங்காய் டிஸ்னி விடுதி ஆகியவை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டன. வானிலை பாதிப்பால் ஷாங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா மூடப்பட்டது இதுவே முதல் முறை ஆகும். இங்கு செல்வதற்கு டிக்கெட் வாங்கியவர்கள் அடுத்த மாதத்திற்குள் ஏதாவது ஒரு நாள், அந்த டிக்கெட்டை பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புயல், மழை காரணமாக தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஷாங்காய் நகரில் இருந்து மட்டுமே2லட்சத்து 53 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nபுயல், வெள்ளத்தில் சிக்கி 22 பேர் பலியாகி உள்ளனர். 10 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன ஆனது என தெரியவில்லை.\n‘லெகிமா’ புயல் காரணமாக ஜெஜியாங் மாகாணத்தில் 288 விமான சேவைகள் ரத்தாகின. படகு, சாலை போக்குவரத்துகளும் முடங்கின. 27 லட்சம் வீடுகள் மின்வினியோகமின்றி இருளில் தவித்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. வென்ஜாவ் நகரில் நிலச்சரிவால் ஒரு அணை உடைந்தது. புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழுவீச்சில் மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.\nயாங்ஜியா நகரம் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. அதைச்சுற்றிலும் சுமார் 120 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. அன்குய், புஜியான், ஜியாங்சு நகரங்கள் புயலால் நிலை குலைந்து போய் உள்ளன.\nமது போதையில் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து கிடந்த இடைநிலைப் பள்ளி ஆசிரியர்!\nபொன்னியின் செல்வன் படத்தில் இணையவிருக்கும் கதாநாயகன்!\nசோனியாவிடம் நாளை கருணாநிதி சிலை திறப்பு அழைப்பிதழை ஸ்டாலின் வழங்குகிறார்\nசூப்பர் டீலக்ஸ் – ஒரு திரைப்பார்வை
உடல் தெரியும் மெல்லிய உடை! கடலில் நின்றபடி பின்னழகை வெளிச்சம் போட்டு கட்டிய தீபிகா படுகோனே! | deepika padukone over hot dress photo goes viral\nஉடல் தெரியும் மெல்லிய உடை! கடலில் நின்றபடி பின்னழகை வெளிச்சம் போட்டு கட்டிய தீபிகா படுகோனே!\n'ஐஸ்வர்யா' படத்தின் மூலம், கன்னடத்தில் நாயாகியாக கால் பதித்த தீபிகா படுகோனே, தற்போது பாலிவுட் திரையுலகில் உள்ள உச்சம் தொட்ட நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.\nChennai, First Published Mar 9, 2020, 4:31 PM IST\nகோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல், பல பாலிவுட் முன்னணி நடிகர்கள் வரை, அனைவருக்கும் ஜோடியாக நடித்து விட்டார். மேலும் ராம் லீலா, மஸ்தானி, ராணி பத்மாவதி போன்ற வரலாற்று சிறப்பு மிக்க படங்களிலும் நடித்துள்ளார்.\nகடந்த 2018 ஆம் ஆண்டு, பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்ட தீபிகா, திருமணத்திற்கு பின்பும் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட 'சப்பாக்' படத்தில் நடித்திருந்தார்.\nஇந்த படத்தில் இவரின் நடிப்பு நல்ல விமர்சனங்களை பெற்ற போதிலும், படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து '83 ' படத்தில் நடித்து வருகிறார். பிரபல கிரிக்கெட் வீரர் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்க, அவரின் மனைவி கதாப்பாத்திரத்தில் தீபிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.\nஇந்நிலையில் தீபிகா, கடற்கரையில்... உடல் தெரியும்படியான ஒரு வித மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த உடையில் அவரின் பின்னழகு மொத்தமும் தெரிகிறது. இந்த புகைப்படம் ஒரு பத்திரிகைக்காக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅந்த புகைப்படம் இதோ....\nLast Updated Mar 9, 2020, 4:31 PM IST
Karunanidhi's death: Puducherry leaders Mourning || கருணாநிதி மறைவு: புதுச்சேரி தலைவர்கள் இரங்கல்\nகருணாநிதி மறைவு: புதுச்சேரி தலைவர்கள் இரங்கல் + "||" + Karunanidhi's death: Puducherry leaders Mourning\nகருணாநிதி மறைவு: புதுச்சேரி தலைவர்கள் இரங்கல்\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவு உலகத்தமிழர்களுக்கே பேரிழப்பாகும் என்று தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nபுதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nஉலக தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, சிறந்த இலக்கியவாதியாக தமிழ்மொழி மற்றும் தமிழர்களின் காவலராக விளங்கிய தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு பெரும் துயரம் அடைந்தேன். கருணாநிதி தனக்கு வந்த சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர். கருணாநிதி ஒருவர் தான் நேரு முதல் தற்போதைய பிரதமர் மோடி காலத்து வரை அரசியலில் பணியாற்றியவர். தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் அவரைப்போல் யாரும் பணியாற்றி இருக்கவில்லை.\nடாக்டர் கருணாநிதியின் இழப்பு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள தமிழர்களுக்கு மட்டுமின்றி உலகத்தமிழர்களுக்கே பேரிழப்பாகும். அவரது பிரிவை யாராலும் ஈடு செய்ய முடியாது. இந்த நேரத்தில் அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தி.மு.க.கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்து இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nபுதுவை காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nஉலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவராக, பார்போற்றும் பண்பாளராக சிறந்த இலக்கியவாதியாக தமிழ் மொழியின் காவலராக விளங்கிய இணையற்ற தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு தமிழ் சமுதாயமே மீளா துயரில் ஆழ்ந்துள்ளது.\nபெரியார், அண்ணா ஆகியோரின் சீரிய கொள்கைகளை நெஞ்சிலே தாங்கி இளமை பருவம் முதலே சீர்திருத்த கருத்துகளை திக்கெல்லாம் பரப்ப தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட தனிப்பெரும் தலைவர் கருணாநிதியின் மாசற்ற மக்கள் தொண்டு ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்துக்கும், இந்திய திருநாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.\nமாபெரும் தலைவரை, தன் அன்பு தந்தையை இழந்து தவிக்கும் திராவிட முன்னேற்ற கழக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் மறவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.\nபுதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nஇந்தியாவின் முதுபெரும் தலைவரும், தமிழகத்தின் தனிப்பெரும் தலைவரும், தி.மு.க. வழித்தோன்றலாக விளங்கிய முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுடைய மறைவு செய்தி கேட்டு துயருற்றோம். அவரின் மறைவு அனைவருக்கும் பெரும் துயரத்தை அளிக்கிறது.\nகருணாநிதியின் மறைவு இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரால் கட்டி காத்து வந்த தி.மு.க.விற்கும், இயக்க தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கருணாநிதியின் மறைவினால் வாடுகின்ற அவரது குடும்பத்தினருக்கும், இயக்கத்திற்கும் எங்களது அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஇவ்வாறு அந்த செய்தியில் ரங்கசாமி கூறியுள்ளார்.\nராதாகிருஷ்ணன் எம்.பி.வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nதமிழினத்தின் தன்மான உணர்வினை தட்டியெழுப்பும் போராட்டங்களை சிறு வயது முதல் தலைமை தாங்கி நடத்தி அறிஞர் அண்ணாவின் வழியில் தமிழகத்தின் அரசியல் மாற்றத்தை உருவாக்கியவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. தனது வியத்தகு ஆற்றலால் வெற்றிகரமான பல சாதனைகளை செய்தவர்.\nபெண்கள் இடஒதுக்கீடு, திருநங்கைகள் வாழ்வில் மேம்பாடு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதி என தனது வாழ்நாளில் குரலற்றவர்களின் குரலாக ஓங்கி ஒலித்தவர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினருக்கும், தி.மு.க. முன்னணி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.\nபுதுவை தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nஉலக தமிழர்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் ஒப்பற்ற தலைவர், உலக வரலாற்றில் ஒரு பெரும் அரசியல் இயக்கத்திற்கு 50 ஆண்டுகள் தலைமை ஏற்றவர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைக் குரலாய் ஓங்கி ஒலித்த ஒப்பற்றத் தலைவர், அரசியல் அரங்கு, இலக்கியத்தளம், கலைத்துறை இவைகளில் சிறந்து விளங்கிய மேதை, நமது இதயமெல்லாம் நிறைந்த முத்தமிழ் அறிஞர், தலைவர் கருணாநிதி. அவரது மறைவு தமிழ் இனத்திற்கும், தமிழ் மாநிலத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும். அந்த ஒப்பற்ற தலைவருக்கு புதுச்சேரி மாநில தி.மு.க. தமது இதயம் கனிந்த இரங்கலையும், வீரவணக்கத்தையும் செலுத்துகிறது.\nஇந்திய நாடே அவரது இழப்பிற்கு கண்ணீர் சிந்துகிறது.கழகத்தின் எதிர்காலமே அவர்தான் என்ற நிலையில் நம்மையெல்லாம் அவர் இன்று ஆழ்ந்த துக்கத்தில் விட்டுச்சென்றுவிட்டார். கண்ணீரோடு கலங்கிநிற்கும் நாம் என்றும் அவர் புகழ்பாடுவோம். அவர் வழி நிற்போம்.\nபுதுச்சேரி மாநிலத்தில் தி.மு.க.வின் கொடிகளை அறைக்கம்பத்தில் பறக்கவிட்டு நம்முடைய இரங்கலை வெளிக்காட்டுவோம். தலைவரின் பூதஉடல் வைக்கப்பட்டிருக்கும் சென்னை ராஜாஜி அரங்கில் பெருந்திரளாக பங்கேற்று அஞ்சலி செலுத்துவோம்.\nவடக்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-\nஉலகத்தின் ஒட்டுமொத்த துயரமும் எங்கள் நெஞ்சில் இடியாய் இறங்கியுள்ளது. நாங்கள் சிறுவயது முதல் பார்த்து பார்த்து கேட்டுகேட்டு ரசித்து போற்றிய எங்கள் பாசத்துக்குரிய, நேசத்துக்குரிய அந்த கம்பீர கலைஞர் இன்று எங்களுடன் இல்லை. எங்களுக்கு இத்தனை நாள் தாயாய், தந்தையாய், அறிவாய் இருந்தார். எங்களின் மானம் காக்கின்ற ஆடையாக கூட இருந்தார். அவர் எங்களை தெரிந்து வைத்திருந்ததும், நாங்கள் அவரை அறிந்து வைத்திருந்ததும் ஒரு வரலாறு.\nஆனால் நாங்கள் மட்டும் இங்கே அம்மாவும் இல்லாமல், அப்பாவும் இல்லாமல் பரிதவித்து கதறி அழுது அழுது உறங்கி போகின்ற பிள்ளைகளாக மாறி போனோம். உன் பாதங்களில் எங்கள் அன்பு முத்தங்கள் ஆயிரத்தையும் பதித்து அனுப்புகிறோம்.\nஇவ்வாறு அந்த செய்தியில் கூறியுள்ளார்.\nகாரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-\nஇறவா புகழ்பெற்ற என் தமிழ், என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் மிதந்து உங்களை நான் காப்பேன் என்ற சொன்ன தலைவர், இன்று நம்மிடையே இல்லை. தலைவர் இறப்பால்\nலட்சோப லட்ச தொண்டர்கள் ஒட்டுமொத்தமாய் கண்ணீர் கடலில் மிதக்கிறோம்.\nகலைஞரை நேசிக்காதவர்கள் கூட, அவரது மரணம் யோசிக்க வைத்துள்ளது. இவ்வேளையில், கலைஞர் இல்லா தி.மு.க. என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்று மேற்கே மறைந்த சூரியன், நாளை கிழக்கே மீண்டும் உதிக்கும் தளபதியாய்! எனவே, இந்த இயக்கத்தை கட்டிக்காக்க, தளபதி அவர்கள் தலைமையில் கழகத்தை காக்க, சத்தியம் கூறுவோம். கலைஞர் இன்று இல்லை என்றாலும், அவர் உருவாக்கிய கழகத்தையும், தொண்டர்களையும் கண்களை இமைகள் காப்பது போல் காப்போம்.\nஇவ்வாறு அவர் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.\nஇதே போல் முன்னாள் அமைச்சர் ராஜவேலு, புதுவை மாநில விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் முன்னேற்ற நலச்சங்க தலைவர் கதிரொளி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முக கவசம் அணிய தேவையில்லை... இஸ்ரேல் நாட்டில் அதிரடி உத்தரவு..!! • Seithi Solai\nஇஸ்ரேல் நாட்டில் கொரோனா குறைந்து வருவதன் காரணமாக மக்கள் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேல் நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக ஞாயிறு முதல் திறந்தவெளியில் மக்கள் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் 300க்கும் குறைவானவர்களே அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் முக கவசம் அணிய வேண்டியதில்லை என்றும், எனினும் மூடிய அரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nTags: இஸ்ரேல் நாடு, முகக் கவசம், வேண்டியதில்லை
கோவில்களில் இதுதான் பேச்சு...!| Dinamalar\nகடன் வாங்கி கமிஷன் அடிக்கும் அதிமுக ஆட்சி: ஸ்டாலின் ... 12\nகோவில்களில் இதுதான் பேச்சு...!\nAdded : டிச 12, 2020 07:37\nதமிழர்களின் இசைக் கருவிகளில் யாழும் குழலும் முக்கியமானவை. புல்லாங்குழலையும் சங்க இலக்கியத்தில் குழல் என்று குறிப்பிடுவர். நாதஸ்வர இசைக் கருவியும் குழல் தான். இசை என்பது மொழிகளை கடந்த ஒரு தெய்வீக உணர்வு, தமிழ் காலாச்சாரத்தில் தனித்துவம் மிக்க இசைக்கருவியாக நாதஸ்வரமும், தவிலும் வகிக்கின்ற பங்கு மிகவும் முக்கியமானது. நாதஸ்வர இசையுடன்தான் அனேகமான தமிழர்களின்\nதமிழர்களின் இசைக் கருவிகளில் யாழும் குழலும் முக்கியமானவை. புல்லாங்குழலையும் சங்க இலக்கியத்தில் குழல் என்று குறிப்பிடுவர். நாதஸ்வர இசைக் கருவியும் குழல் தான். இசை என்பது மொழிகளை கடந்த ஒரு தெய்வீக உணர்வு, தமிழ் காலாச்சாரத்தில் தனித்துவம் மிக்க இசைக்கருவியாக நாதஸ்வரமும், தவிலும் வகிக்கின்ற பங்கு மிகவும் முக்கியமானது. நாதஸ்வர இசையுடன்தான் அனேகமான தமிழர்களின் முக்கியமான மங்கல, மகிழ்சிகரமான நிகழ்வுகள் நிகழ்கின்றன.சினிமா ரசிகர்களுக்கு சிவாஜி கணேசன், பத்மினி நடித்த 'தில்லானா மோகனாம்பாள்' என்ற திரைப்படம் ஞாபகம் இருக்கலாம். அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அந்தப் படத்தில் நாதஸ்வரம் வாசிப்பவராக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகவும் பிரமாதமாக நடித்தது தான் என்பதை மறக்கமுடியாது. அவர் ஒரு உண்மையான நாதஸ்வரக் கலைஞன்போல மூச்சடக்கி வாசிப்பதையும், ஒரு கலைஞனுக்குரிய கர்வம் அவர் கண்களில் பளிச்சிடுவதையும் ரசிகர்களால் உணரமுடிந்தது. நாதஸ்வரம், கடவுளுக்கு மேற்கொள்ளப்படும் ஒரு சேவை என்று கூட சொல்லலாம். பெரும்பாலும், கோவில்களில் வாசிக்கப்படுகிறது.அது போன்ற ஒரு சேவையில் ஈடுபட்டு வருகிறார், காரமடையை சேர்ந்த ஒருவர். பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி பிரிவு அருகே, நாய்க்கனுாரை சேர்ந்தவர் வெங்கட்ராமையா. இவரது மனைவி நாச்சம்மாள். வெங்கட்ராமையா மைசூர் கோவிலில், நாதஸ்வர வித்வானாக இருந்ததால், அங்கிருக்க வேண்டிய நிலை. இவர்களது மூன்றாவது மகன் ராஜகோபால், எட்டாம் வகுப்பு வரை, மைசூரிலுள்ள பள்ளியில் படித்து வந்தார். பின், குருகுலத்தில் சேர்ந்து, இசையை விருப்பப் பாடமாக எடுத்து படித்தார்.தொடர்ந்து, பத்து ஆண்டுகள், நாதஸ்வர கலைகளை கற்றுத் தேர்ந்தார். பின், மைசூர் அருகே மாதேஸ்வரா கோவிலில் நாதஸ்வர கலைஞராக சேர்ந்தார். கோவிலில், 25 ஆண்டுகள் பணி. இவரது மனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மகனும், நாதஸ்வர கலையில் டிப்ளமோ முடித்து, திருமணம், கோவில் உட்பட நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்.இந்நிலையில், மைசூரிலிருந்து, மேட்டுப்பாளையம் காரமடைக்கு குடிபெயர்ந்த ராஜகோபாலுக்கு, தற்போது வயது 73. இன்னமும், காரமடை அரங்கநாதர் கோவிலில், கடவுளுக்கு இசை சேவை செய்து வருகிறார். தனது மூச்சுக்காற்றை, நாதஸ்வரத்தின் வழியாக, இசையாக மாற்றி, கோவிலில் நடக்கும் அனைத்து வைபவ நிகழ்ச்சிகளுக்கு தகுந்தாற்போல் வசித்து வருகிறார். முக்கிய விழாக்களுக்கு வரும் பக்தர்களுக்கு, இவர் அவ்வளவு பரிட்சியம்.இதுகுறித்து, ராஜகோபால் கூறியதாவது:பெங்களூரில் உள்ள ஆல் இந்திய ரேடியோ, துார்தர்ஷன் ஆகிய நிலையங்களில், நாதஸ்வரம் வாசித்துள்ளேன். மேலும், காஞ்சியில் 'ஆசான் வித்துவான்' என்ற விருதும், மைசூரில் 'கலா தீப்தீ' என்ற விருது உட்பட, ஐந்து விருதுகள் பெற்றுள்ளேன். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், சொந்த ஊரான காரமடை வந்து, அரங்கநாதர் பெருமாளுக்கு இசை சேவை செய்து வருகிறேன்.எனது தாத்தா வீராசாமி, தந்தை வெங்கட்ராமையா ஆகியோர் நாதஸ்வர வித்வான்கள். அந்த வகையில், இசை மீது எனக்கு இருந்த மோகத்தால், நானும், எனது மகனும் நாதஸ்வர கலையை கற்றுள்ளோம். பரம்பரை, பரம்பரையாக நாதஸ்வர கலையை, உயிர்மூச்சாக வாசித்து வருகிறோம். கடவுளை நினைத்து நாதம் வாசிக்கும்போது, கடவுள் என்னுள் இருந்து இசையை இசைக்கிறார் என்று, ஒவ்வொரு நாளும் நினைத்து வருகிறேன்.இந்த முதிர்ந்த வயதிலும் கடவுளுக்கு சேவை செய்வதே, கடமையாக செய்து வருகிறேன். இருந்த போதும் போதிய வருவாய் இல்லாமல் சிரமம் ஏற்படுகிறது. நலிந்த இசைக் கலைஞர்களுக்கு, தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. உதவித்தொகை கேட்டு, அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன். எனக்கு உதவித்தொகை வழங்கினால், உயிர் மூச்சு உள்ளவரை, கடவுளின் புகழ் பாடுவேன்.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்த ஒரே ஒரு தவறு உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக அழிக்கும் என தெரியுமா? | This Hygine Mistake Will Destroy Your Love Life - Tamil Boldsky\n» இந்த ஒரே ஒரு தவறு உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக அழிக்கும் என தெரியுமா?\nஇந்த ஒரே ஒரு தவறு உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக அழிக்கும் என தெரியுமா?\nPublished: Wednesday, November 9, 2016, 15:00 [IST]\nபால்வினை நோய் தொற்று ஒன்று தான் உங்கள் இல்லற / தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கும் என எண்ண வேண்டாம். ஒருசில சுகாதார விஷயங்கள் கூட உங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சீர்கெடுக்கும். முக்கியமாக உள்ளாடை சமாச்சாரங்கள்.\nஒருசிலர் உள்ளே அணிவது எப்படி இருந்தால் என எண்ணுவதுண்டு. வெளிப்புற தோற்றம் அழகாக இருந்தால் போதுமா? உட்புற தோற்றம் அழகாக இல்லை எனிலும், ஆரோக்கியமற்றதாக இருக்க கூடாது. உள்ளாடை என்ற ஒற்றை விஷயத்தில் நீங்கள் செய்யும் தவறு, உங்கள் தாம்பத்தியத்தை பாதிக்கும்...\nஉள்ளாடை விஷயத்தில் தான் பெரும்பாலானோர் அவர்களுக்கே தெரியாமல் தவறு செய்கிறார்கள். உள்ளாடை அணியாமல் இருப்பது கூட தவறில்லை. ஆனால், ஒரே உள்ளாடையை இரண்டு, மூன்று நாட்கள் - அல்லது ஒரே உள்ளாடையை பல மாதங்கள் (அ) வருடக்கணக்கில் புதிது மாற்றாமல் பயன்படுத்துவது போன்றவை தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கும்.\nஒரே உள்ளாடையை அல்லது நீண்ட நாட்களாக பயன்படுத்தி வரும் உள்ளாடைகள் பிறப்புறுப்பு பகுதியில் தொற்றுகள் மற்றும் அலர்ஜிகள் உண்டாக காரணியாக இருக்கிறது. இதனால், ஏற்படும் பிறப்புறுப்பு பாதிப்புகள் தாம்பத்திய வாழ்வை கெடுக்கும்.\nகணவன் மனைவி இருவரும்6மாதத்திற்கு ஒருமுறை உள்ளாடையை புதியதாக மாற்றிவிட வேண்டியது அவசியம். ஏனெனில், நீங்கள் எத்தனை தான் துவைத்தாலும், உள்ளாடையில் ஏற்படும் அதிகப்படியான பாக்டீரியா மற்றும் வியர்வை போன்றவை தொற்று, எரிச்சல், அரிப்பு போன்ற பிரச்சனையை உண்டாக்கும்.\nசுகாதாரமற்ற தாம்பத்தியமும் கூட வாழ்விலும், ஆரோக்கியத்திலும் தீய தாக்கங்களை உண்டாகும். முக்கியமாக வெளியே கூறாவிட்டாலும், உங்கள் சுகாதார நிலை கண்டு உங்கள் துணை வருந்துவதும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.\nதேவையில்லாத, அநாவசியமாக நாம் எவ்வளவோ செலவு செய்கிறோம். இது நம் இல்லறம் மற்றும் ஆரோக்கியத்தை வலுவாக வைத்துக் கொள்ள உண்டாகும் செலவு. இதற்கு தயங்குவதோ அல்லது இதற்கெல்லாம் செலவு செய்ய வேண்டுமா என்ற எண்ணத்தை வளரவிடாமல். சுகாதாரமான வாழ்வை வாழ துவங்குங்கள்.\nஉங்க 'கலவி' ஆசை கொண்டு, நீங்க எப்படிப்பட்டவர் என்று தெரிஞ்சுக்க முடியுமாம்...\nசிறிய ஆண்குறி கொண்ட ஆண்கள் கலவி உறவில் காணும்6நன்மைகள்!\nஒரு மாதத்தில் பெண் அதிகபட்சமாக எத்தனை முறை உச்சகட்ட இன்பம் பெறுகிறார்கள்?\nநீங்க அதிகமா பார்ன் பார்க்குற நபரா? இதனால உங்க செக்ஸ் லைப் எப்படி பாதிக்கப்படுது தெரியுமா?\n'அந்த' நேரத்தில முகம் எப்படி இருக்கும்? கூச்சப்படாம உண்மையை கூறிய 15 பேர் - #SexFace #Confession\nஇதுவும் ஒருவகையில் பிராத்தல் தான். ஆனால், இங்கே ஆண்கள் பெறுவது வேறு! #SexSurrogate\nபெண்கள் உச்சகட்ட இன்பம் எட்ட7வழிகள் இருக்கிறதாம் - நிபுணர்கள் கூறும் குறிப்புகள்!\nதங்கள் 'முதல் அனுபவத்தை' பற்றி 20 பிரபல நடிகர், நடிகைகள் கூறிய பகீர் உண்மைகள்!\nஇந்த5விஷயம் கரக்டா இல்லன்னா 'அந்த' விஷயம் நடக்காமலேயே போயிடும்!\nRead more about: intercourse couple உடலுறவு தம்பதிகள்\nThis Hygine Mistake Will Destroy Your Love Life\nStory first published: Wednesday, November 9, 2016, 15:00 [IST]
இந்தியா எதிர்நோக்கி உள்ள இன்னொரு பெரும் பிரச்னை “எனர்ஜி எனப்படும் எரிசக்தி. உலக மக்கள் தொகையில் மொத்தம் 17 சதவீதத்தை நாம் கொண்டிருக்கிறோம். ஆனால் உலகில் உள்ள எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு வளங்களில் நம்முடையது, அல்லது நாம் அறிந்து வைத்திருப்பது வெறும் 0.8 சதவீதம்தான்! நிலக்கரி வளம் இன்னும் நம்மிடையே இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதை மேலும் மேலும் தோண்டி எடுத்து எரிக்கும் போது சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில்தான் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் எனப்படும் தண்ணீரினால் கிடைக்கும் சக்தி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.உலகம் முழுவதும் வெப்ப மயமாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நம்முடைய தண்ணீர் நிலைகள் வற்றிக் கொண்டே வருவதும் ஆபத்தான நிகழ்வு. இந்த நூற்றாண்டில் மனிதனுக்கு அரிதாகக் கிடைக்கக் கூடிய இரண்டு பொருட்களாக தண்ணீரும் எரிபொருளும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. நம்மிடம் மிகப்பிரமாண்டமான தண்ணீர் தேக்கி வைக்கக் கூ டிய ஹைடல் பிராஜக்டுகள் இருப்பதென்னவோ உண்மைதான். ஆனால் எதிர்நோக்கி உள்ள தட்டுப்பாட்டின் அளவைப் பார்க்கும் போது அவை போதாது.
ஊட்டி குளிரில் அலைந்து திரியும் குதிரைகள்: கரோனா க‌ஷ்டத்தால் கைவிடப்பட்ட அவலம் | Horses wandering in the cold of Ooty: Coronation abandoned by hardship - hindutamil.in\nPublished : 01 Jul 2020 15:09 pm\nUpdated : 01 Jul 2020 15:10 pm\nPublished : 01 Jul 2020 03:09 PM\nLast Updated : 01 Jul 2020 03:10 PM\nஊட்டி தெருவில் சுற்றும் குதிரைகள்\n“நடுங்கும் குளிரில் யார் வர்றாங்களோ இல்லையோ காலை 8 மணிக்குப் பழக்கதோஷத்துல இந்தக் குதிரைகள் ஆஜராகிடுதுங்க. ஆனா, இந்தக் குதிரைகளைக் கவனிக்கத்தான் ஆளில்லை” என்று வருந்துகிறார்கள் ஊட்டி நகரவாசிகள். உரிமையாளர்களால் கைவிடப்பட்ட குதிரைகள் தீவனம் கிடைக்காமல், ஊட்டியின் தெருக்களில் திரிவது விலங்கு நல ஆர்வலர்களை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.\nஊட்டி என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது அங்குள்ள ரேஸ் மைதானமும், குதிரை ரேஸ்களும்தான். கோடை சீஸனான ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும் பந்தயங்களில் 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் கலந்துகொள்ளும். வெவ்வேறு ஊர்களிலிருந்து குதிரைகளைக் கொண்டுவந்து பந்தயத்தில் விடுபவர்கள், தங்கள் குதிரைகள் ஓட முடியாத நிலைக்குச் சென்றுவிட்டாலோ, வயதாகி விட்டாலோ அங்கேயே விட்டுவிட்டுப் போய் விடுவதுண்டு. சிலர் அவற்றைக் குறைந்த விலைக்கு வாங்கி சுற்றுலாப் பயணிகள் மிகுதியாக உள்ள ஊட்டி படகு இல்லம், ‘நைன்த் மைல்’ போன்ற இடங்களில் சவாரிக்குப் பயன்படுத்துவது காலங்காலமாக நடந்து வருகிறது.\nபகலில் சவாரிக்குப் பயன்படுத்தப்படும் இந்தக் குதிரைகள் இரவு நேரங்களில் வீதிகளில் சுற்றித் திரிவதைப் பார்க்க முடியும். பெரும்பாலும் குதிரைக்காரர்கள் லாயம் வைத்து தீனி போடுவதில்லை என்பதுதான் இதற்குக் காரணம். காலையில் குதிரைகளுக்குக் கோதுமைத் தவிடு, கொள்ளு வைத்து சவாரிக்கு எடுத்துக்கொள்வார்கள். தீவனத்தை உண்பதற்காக தினமும் காலை நேரங்களில் பேருந்து நிலையம், படகு இல்லம், ‘நைன்த் மைல்’ போன்ற இடங்களில் குதிரைகள் தவறாமல் ஆஜராகிவிடும். இப்படி ஊட்டியில் சுமார் 150 முதல் 200 குதிரைகள் உள்ளன.\nகரோனா பொது முடக்கத்திற்குப் பின்பு பூங்காக்கள் பூட்டப்பட்டு விட்டன. சவாரிக்கு யாரும் வருவதில்லை என்பதால் துவண்டு போன குதிரைக்காரர்கள் குதிரைகளைச் சுத்தமாகக் கண்டு கொள்வதில்லை. லாயம் வைத்துக் குதிரைகளைக் கவனித்துவந்த ஒரு சில குதிரைக்காரர்களும் அவற்றைக் கோயில் மாடு கணக்காய் அவிழ்த்து விட்டுவிட்டனர். முன்பெல்லாம் இந்தக் குதிரைகள் இரவில் எப்படி ஊருக்குள் சுற்றித் திரிந்தனவோ, அதேபோல் இப்போது பகலிலும் சுற்றித் திரிகின்றன.\n“நம்ம எஜமான் வருவார். தவிடு, தீவனம் போடுவார்னு நம்பிக்கையோட இந்தக் குதிரைகள் இங்கே வர்ற மாதிரி இருக்கு. குதிரைக்காரர்களைத்தான் காணோம். அங்கங்கே இருக்கிறவங்க பரிதாபப்பட்டு தவிடு, கோதுமைன்னு கொடுப்பாங்க. எத்தனை நாளைக்கு அப்படிக் கொடுக்க முடியும்? இப்ப யாருமே எதுவும் கொடுக்கறதில்லை. அதனால அங்கங்கே புல்லை மேய்ஞ்சுட்டு, குப்பையப் பொறுக்கிட்டு திரியுது” என்கிறார்கள் சில இளைஞர்கள்.\nபொதுமுடக்கத்தின் ஆரம்ப காலத்தில் மசினக்குடி ‘இபான்’ அமைப்பின் தன்னார்வலர்கள் ஓட்ஸ், கோதுமைத் தவிடு போன்றவற்றைக் குதிரைகளுக்குத் தீவனமாக அளித்து வந்தனர். இப்போது அவர்களாலும் இவற்றுக்குத் தீவனம் கொடுக்க முடியவில்லையாம்.\nஇதுகுறித்து ‘இபான்’ அமைப்பின் பொறுப்பாளரும், கால்நடை மருத்துவருமான நைஜிலிடம் பேசினேன்.\n“இப்பக்கூட, ‘ஒரு குதிரை அடிபட்டுக் கிடக்குது… உடனே வாங்க’ன்னு போட் ஹவுஸ்கிட்ட இருந்து கூப்பிட்டிருக்காங்க. இந்த பொதுமுடக்கக் காலத்தில் மட்டும் அடிபட்ட, நோய்வாய்ப்பட்ட சுமார் 30 குதிரைகளுக்கு சிகிச்சை செஞ்சிருக்கோம். இதுவரைக்கும் ஏழெட்டுக் குதிரைகள் செத்திருக்கு. அதுல4குதிரைகள் பசியால் இறந்தன.3குதிரைகள் நோயால் இறந்தன. இப்பவும் 30 குதிரைகள் சாகிற நிலையில் இருக்கு. குதிரைக்காரங்க ரேஷன் கடையில அஞ்சு ரூபாய், 10 ரூபாய்க்குக் கோதுமை வாங்கி கஞ்சி வச்சு ஊத்திக்கிட்டு இருந்தாங்க. எப்படியும் ஒரு குதிரை5கிலோவுக்குக் குறையாம கோதுமைத் தவிடு சாப்பிடும். வருமானம் இல்லாததால அதையெல்லாம் சுத்தமா நிறுத்திட்டாங்க.\nபொதுமுடக்கம் முடிஞ்சு மைசூர் போனா ரூ.20 ஆயிரத்துக்குக்கூட குதிரை வாங்கிட்டு வந்துடலாம்னு நினைக்கிறாங்க. அவங்களையும் குற்றம்சொல்ல முடியாது. பிழைப்பு இல்லாமல், அவங்களே இப்ப மூட்டை தூக்கவும், கேரட் லோடு ஏத்தவும் கூலி வேலைக்குப் போறாங்க. குதிரைகளைக் காப்பாத்தணும்ங்கிற நோக்கத்தில் கால்நடைத் துறை அதிகாரிகள்கிட்ட பேசி ஒரு மீட்டிங் ஏற்பாடு செஞ்ச மாவட்ட நிர்வாகத்தினர், ரூ.50 ஆயிரம் நிதி உதவி கொடுத்தாங்க. தனியார் முதலாளிகள் சிலர் கணிசமான தொகை தந்தாங்க.\nஅதை வச்சுக் கொஞ்ச காலம் தீனி வாங்கி குதிரைக்காரங்களுக்குத் தந்தோம். அது பத்து, பதினைஞ்சு நாள் கூட போதலை. இன்னைக்கு ஒரு கிலோ கோதுமைத் தவிடு ரூ.25-க்கு விக்குது. ஓட்ஸ் அதைவிட விலை அதிகம். அதுதான் இப்ப மறுபடியும் கால்நடைத் துறை மருத்துவர்களை வச்சு மறுபடி மீட்டிங் போட்டு ஏதாவது உதவக் கேட்டிருக்கோம். மாவட்ட ஆட்சியரும் உதவுவதாகச் சொல்லியிருக்கார். ஏதாச்சும் உதவி கிடைச்சாத்தான் இந்த குதிரைகளைக் காப்பாற்ற முடியும்”.\nஇவ்வாறு நைஜில் தெரிவித்தார்.\nOotyHorsesCoronaஊட்டி குளிர்குதிரைகள்கரோனாஅவலம்கால்நடைகள்இபான்அலைந்து திரியும் குதிரைகள்கொரோனா\nகேரளத்தில் இன்று புதிதாக 1,169 பேருக்கு கரோனா தொற்று: சுகாதாரத் துறை அமைச்சர்...\nநீங்கள் அஹிம்சை ராணுவம்: மருத்துவர்கள் தினத்தில் இந்தியச் செவிலியர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி...
Maalaimalar News: Is not valid removal from congress party7members report\nவிசாரணை செய்யாமல் காங்கிரசில் இருந்து எங்களை நீக்கியது செல்லாது - நீக்கப்பட்ட7பேர் அறிக்கை\nபதிவு: செப்டம்பர் 05, 2018 15:04\nவிசாரணை செய்யாமல், விளக்கம் எதுவும் கேட்காமல் உயிரென நினைத்து பணியாற்றும் எங்களை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்று நீக்கப்பட்ட7பேரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nதமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஏற்பட்ட கோஷ்டி மோதலை தொடர்ந்து இளங்கோவன் ஆதரவாளர்களான விருகம்பாக்கம் பகுதி தலைவர் ஏ.வி.எம்.ஷெரீப், வில்லிவாக்கம் பகுதி முன்னாள் தலைவர் வில்லிவாக்கம் ஜான்சன், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் முன்னாள் பொது செயலாளர் பொன் மனோகரன், திருவல்லிக்கேணி பகுதி முன்னாள் தலைவர் கடல் தமிழ்வாணன், மயிலை பகுதி முன்னாள் தலைவர் முரளிதரன், மத்திய சென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் துணை தலைவர் சீனிவாச மூர்த்தி, வடசென்னை மாவட்ட முன்னாள் பொது செயலாளர் டி.பி.பாஸ்கரன் ஆகிய7பேரையும் கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து திருநாவுக்கரசர் நீக்குவதாக அறிவித்தார்.\nஇந்த நிலையில் நீக்கப்பட்ட7பேரும் இன்று கூட்டாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறி இருப்பதாவது:-\nசத்தியமூர்த்திபவனில் நடந்த மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் அனைத்து மூத்த தலைவர்களும் கலந்து கொண்டார்கள். மாவட்டத் தலைவர்கள் அல்லாத சிலரும் இந்தக் கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். இதைப் பார்த்து அனைவரையும் அனுமதிப்பதாகக் கருதி நாங்களும் கூட்ட அரங்கிற்குள் சென்றோம். எங்களைப் பார்த்த உடன் வேண்டுமென்றே வெளியேறும்படி சத்தம் போட்டார்கள்.\nபாரதிய ஜனதா, அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்களெல்லாம் அரங்கின் உள்ளே இருக்கும்பொழுது காங்கிரஸ்காரர்களாகிய நாங்கள் ஏன் உள்ளே வரக் கூடாது எனக் கேட்டுவிட்டு வெளியேறிவிட்டோம்.\nவெளியேறிய எங்களை கட்சிக்கே சம்பந்தம் இல்லாத திருநாவுக்கரசரின் கார் ஓட்டுநர் தகாத வார்த்தைகளை பேசி சட்டையை பிடித்து இழுத்து அடித்தார். உடனே அங்கே வந்த திருநாவுக்கரசர் எங்களைப் பார்த்து கடும் சொற்களால் மிரட்டினார்.\nஅப்போது பாரதிய ஜனதாவிலிருந்து வந்த வீரபாண்டியன் என்பவர் எங்களை தாக்கினார். இதைக் கேள்விப்பட்டு அரங்கில் உள்ளிருந்து வெளியே வந்த இளங்கோவன் எங்களை அமைதியாக செல்லும்படி அறிவுறுத்தினார். நாங்களும் அங்கிருந்து வெளியேறிவிட்டோம்.\nஆனால் எந்த விசாரணையும் செய்யாமல், எந்தவித விளக்கமும் எங்களிடம் கேட்காமல் எங்களை கட்சியைவிட்டு நிரந்தரமாக நீக்கியுள்ளதாக மாநிலத் தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇந்த நீக்கத்தைப் பற்றி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர்கள் சஞ்சய்தத், சென்னா ரெட்டி ஆகியோருக்கு புகார் அனுப்பியுள்ளோம். ஆகவே, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து வந்த திருநாவுக்கரசர் கட்சியை உயிரென நினைத்து பணியாற்றும் எங்களை நீக்கியது எந்தவிதத்திலும் செல்லாது. நாங்கள் எப்போதும் போல காங்கிரஸ்காரர்களாவே தொடர்ந்து செயல்படுவோம்.
பூச்செண்டு – கலைச்செல்வி சிறுகதை | பதாகை\nபூச்செண்டு – கலைச்செல்வி சிறுகதை\nஅவள் கண்ணாடி சன்னலின் வழியே வெளியே பார்வையை ஓட்டினாள். வழக்கம்போல தெரு அமைதியாக இருந்தது. அக்கொடிய வியாதி இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது என்றபோது யாரும் அத்தனை பெரிய விஷயமாக அதை எடுத்துக் கொள்ளவில்லை. ஒருவர் இரண்டாகி, இருவர் எட்டாகி, எட்டு அறுபத்துநான்கானபோது கூட நமக்கெல்லாம் அது வந்து விடாது என்ற பொது மனப்போக்கு கொண்டவர்களாகவே இருந்தனர். தொட்டுக் கொண்டால் கூட அக்கொடியவியாதிக்கான கிருமி தொற்றி விடும் என்ற உலக சுகாதார மையம் வீரிட்டது. ஏற்கனவே தொட்டதன் துர்பலனை உலகம் அனுபவிக்க தொடங்கியிருந்ததால், ‘நெருங்குதலிலிருந்து விலகியிருத்தல்’ என்ற புதியதொரு கோட்பாட்டை அது கடைபிடிக்கத் தொடங்கியது. வீட்டடங்கு என்ற பதம் எல்லோருக்குமே புதிதென்றாலும் இளைஞர்கள் நாள் முழுக்க வீட்டிலிருப்பதை உணராதவர்களாக இருந்தனர். வசதிப்படைத்த இளைஞர்களை விட வர்க்கத்தட்டுகளில் கீழ்நிலையிலிருந்த இளைஞர்களின் உலகம் அதிகமும் வெளியிலிருந்தது. அரையுலகிற்குள் இருப்பதென்பது, உடலை ஒருபுறமாக சாய்த்து ஒற்றைக்காலில் நொண்டியடிப்பதை போன்றது. நொண்டியடித்தபடியே இருப்பதால் இடுப்பில் வலி ஏற்பட்டது. பிறகு அது பொருளற்றவர்களின் உடலில் பரவத் தொடங்கியது, முக்கியமாக வயிற்றுக்கு. வசதிப்படைத்த இளைஞிகளும் இளைஞர்களும் இணையத்தின் அத்தனை பயன்பாடுகளையும் உபயோகப்படுத்திக் கொள்ளும் மும்மரிப்பான, தீவிரமான ஆவல் கொண்டனர். செயலிகளை புதிதுபுதிதாக பதிவிறக்கம் செய்துக் கொண்டனர். ஆனால் அதன் மீதான ஆர்வம் வடிய தொடங்கியபோது அவர்களிடம் இன்னும் தொழிற்நுட்பம் மீதமிருந்தது. கணினி வழியாக வீட்டுக்குள்ளிருந்து பணியாற்றியவர்களும் வெளியே செல்ல வழியற்ற அன்றாட வருவாய் ஈட்டுவோரும் ஒருமித்து பொறுமையிழக்க தொடங்கியபோது, தொற்று கூடியிருப்பதை காரணம் காட்டி அரசாங்கம் வீட்டுறைவு காலத்தை நீட்டித்திருந்தது.\nஅவனும் வீட்டுறைவில்தான் சிக்கியிருந்தான். ஆனால் சிக்கியபோது அவன் விடுதி ஒன்றின் அறையிலிருந்தான். அது அலுவல் சார்ந்த பயணம். இரண்டு நாள் கருத்தரங்கிற்காக திருச்சியிலிருந்து பெங்களுரூ வந்திருந்தான். ஒருநாள் ஊரடங்கு ஒரு வாரமாக நீட்டிக்கப்பட்டு கருத்தரங்கு இரத்தாகி, பயண வழிகளும் அடைக்கப்பட்டபோது அவனோடு சேர்ந்து திருச்சியிலிருந்த அவளும் பரிதவித்துப் போனாள். இருவரும் வாட்ஸ்ஆப்பின் காணொலி அழைப்பின் வழியாக பேசி பேசி அதை சரிக்கட்ட முனைந்தனர் “சஞ்சு எங்கருக்கா..” “அவளா..? ஜம்முன்னு என் மேல எப்டி துாங்றா பாரேன்..” காமிராவை கீழிறக்கிக் காட்டினாள். சஞ்சு மல்லாந்திருந்த அவள் வயிற்றின் மீது, உடலை உப்பலாக்கி கழுத்தை வளைத்து உடலில் வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தது. சஞ்சு காக்கடைல் பறவையாக இருக்குமாறு இப்பிறவியில் பணிக்கப்பட்டிருந்தது.\n“பொறாமையா இருக்கு..” என்றான். அவளை நோக்கி ஏந்திக் கொள்வது போல கைகளை நீட்டினான். இரவுகளில், தன்னிரு கைகளையும் ஏந்தி அவளை வாங்கி நெஞ்சில் சாத்திக் கொள்வான். அவள் தலையை நிமிர்த்தி அவன் விழிகளை தன் விழிகளால் துழாவுவாள். காமம் கொண்ட அவ்விழிகள் தன்னளவில் சிறுத்திருக்கும். அவளுடைய புற அசைவுகளை அனிச்சையாக எதிர்க் கொள்ளும் அவனுடல், அவளை வீழ்த்துவதிலேயே தொடர்ந்து விழையும். “என் அசைவுகளை உணரு..” என்பாள் உடல்வழியே. “அதுனாலதானே ஒன்னை இறுக்கக் கட்டிக்கிறேன்..” என்பான் செயல்வழியே. நான் விழைவதை நீ விழைவதும், நீ விழைவதை நான் விழைவதுமே பொருந்துகின்ற காமம். ஆழம் தீண்டுவதே காமத்தின் நிறைவு. நுகர்தலே பூக்களுக்கு மணம் உண்டாக்குகிறது.\nஅந்த வியாதிக்கு காரணமான அந்த நுண்கிருமியை பெரிதாக்கியபோது அது அழகிய பூச்செண்டுபோலிருந்தது. வல்லரசுகள் உருவாக்கியிருந்த வலிமைக் கொண்டவர்கள், வலிமையிழந்தவர்கள் என்ற உலகின் இரு பிரிவுகளை குறுகிய காலத்தில் அக்கொடியநோய் ஒருங்கிணைத்து அனைத்து காதுகளிலும் அப்பூச்செண்டை சொருகி வைத்திருந்தது.\nஊரடங்கும் வீட்டடங்கும் நீட்டிப்பானபோது அவனுக்கான விடுதி செலவை இனி ஏற்றுக் கொள்ளவியலாதென நிர்வாகம் மின்னஞ்சல் அனுப்பியிருந்தது. அந்நேரம் விடுதியும் மூடியாக வேண்டிய நிர்பந்தத்திலிருந்தது. “இப்படியெல்லாம் நடக்கும்னு ரெண்டுநாளுக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தாகூட நா அங்கேர்ந்து கௌம்பியிருக்க மாட்டேன்டா.. நீயும் தனியா அங்க கஷ்டப்பட்டிருக்க மாட்டே..” என்றான் தன்னிரக்கத்தோடு.\n“யெஸ்… வெஜிடபிள் கெடைக்கலே மளிகை கெடைக்கலேன்னு ஊரே லோலோன்னு அலையுது… இங்க சமைச்சு வச்ச சாப்பாட்ட சாப்பிட ஆளில்ல… என் ஒருத்திக்காக சமைச்சு நானே சாப்டறதெல்லாம் ஒலக போர்டா சாமி..”\n“அதுக்காக சாப்டாம இருந்துடாதே.. நானெல்லாம் இங்க சாப்டறது ஒண்ணுதான் வேலைன்னு செஞ்சிக்கிட்டிருக்கேன்.. நேரங்கெடைக்கும்போது ஏடிஎம்ல கொஞ்சம் பணத்த எடுத்து கைசெலவுக்கு வச்சிக்க.. எல்லாத்தையும் லிக்விட்டா வச்சுக்க முடியாது பாத்துக்க..”\n“போதும்.. போதும்.. போரடிக்காத..”\n”அதுசரி.. ஒனக்கு இருக்க வீடிருக்கு.. வெளாட சஞ்சு இருக்கா.. நாந்தான் ரொம்ப பாவம்…”\n“பொலம்பாத.. எதாது ஒரு வழி கெடைக்காமய போவும்…“ சஞ்சுவை நோக்கி அலைபேசியை திருப்ப அவன் திரைவழியாக அதனை கொஞ்சினான். அது தன் சிறிய அலகைக் கொண்டு திரையை கொத்தியது. அவளை பார்த்து கண்சிமிட்டிவிட்டு “இன்னைக்கு நீ ரொம்ப அழகாருக்கே..” என்றான். இரவுகளில் அடிக்கடி இதை கூறியிருக்கிறான். அவள் சிரித்துக் கொண்டாள். மனைவியின் அழகென்பது அலங்கரிக்கப்பட்ட கோபுரவாயில். கோட்டைக்குள் நுழைந்ததும் கோபுரம் விலகி பின்னே சென்று விடுகிறது. தரிசனம் என்பது கருவறை சிலையை காண்பதல்ல. அதிலுறையும் இறையை கண்டெடுப்பதே. இறை தான் நிறை. அது எடுத்தபிறகும் குறையாது, கொடுத்த பிறகும் மாறாது. மற்றொருவரில் தானாக, தன்னில் மற்றொருவராக. தானென ஏதும் மிஞ்சாததாக.\nநவீன உலகம் திகைத்து வியர்த்து அப்பூச்செண்டின் முன் கைக்கட்டி வாய் புதைத்து நின்றது. இத்தனைக்கும் அப்பூச்செண்டு பல இலட்சம் கோடிகளை செலவிடும் அளவுக்கு வல்லமை படைத்த இராணுவம் கொண்ட நாட்டையோ படைபலத்தையோ ஆயுதபலமென்று எதையுமோ கொண்டிருக்கவில்லை. வீடுகள், வீடுகளாகவே இருப்பதால் அவற்றை பதுங்குக்குழிகள் என்று மக்கள் கருதாமலிருக்கலாம். கனவு கண்டு விழித்ததும் எல்லாம் கடந்து விடும் என்பது போல அவர்கள் பகல்களில் உறங்கத் தொடங்கினர். கண்விழித்தபிறகும் சிலருக்கு நடக்கும் நிகழ்வுகள் உண்மைதானா? என்ற சந்தேகமிருந்தது. இலக்கியவாதிகள், இதனை மிக சிறந்த அறிவியல் கதை என்றெண்ணிக் கொண்டு கண்ணுறங்கினர். விழித்தெழுந்த பிறகு, அதையே கருவாக்கி, கதைகள் புனைந்து தங்களுக்குள் படித்துக் கொண்டனர். அது குறித்து காரசாரமாக விமர்சனங்கள் கூட எழுந்தது. எழுத்தை பார்த்து விமர்சனம் செய்யுங்கள், எழுத்தாளர்களை கருதிக் கொண்டு விமர்சனம் செய்ய வேண்டாம் என்று சிலர் பொங்கியெழுந்தனர். அவர்கள் வேற்றுலகவாசிகள் என்பதால் அவர்களை கழித்து விட்டு மீதி உலகம் இயங்கிக் கொண்டிருந்தது. சினிமாவிரும்பிகள் ஹாலிவுட் இயக்குநர்கள் இந்த பூச்செண்டை விட மிக அதிகமாக கற்பனை செய்யும் திறன் படைத்தவர்கள் என இறுமாந்து அதனை தாம் பார்த்த படங்களின் வழியே நிறுவ முயன்றனர். இவர்களையும் கழித்து விட்டு, மீத மனிதர்கள் வீடுகளுக்குள் அடைப்பட்டிருக்க, வெளியுலகில் பொது கட்டுமானங்களும் போக்குவரத்து சாதனங்களும் ஆள்வோரின்றி அயர்ந்துக் கிடந்தன. அதை கண்டு திகைத்த பறவைகள் முதலில் திசை தடுமாறின. பின் மீண்டபோது அவை தாங்கள் இழந்துவிட்ட மர்மதேசங்களை அடையாளம் கண்டன. இயற்கையோ கலைப்பாரின்றி பெருகி வழிந்தது.\nஅவளுக்கு பெங்களுரிலிருக்கும் தன் தோழியின் நினைவு வர அன்றிரவே அவளிடம் வாட்ஸ்ஆப்பில் “என்ன பண்றே..?” என்று குறுஞ்செய்தி அனுப்பி விட்டு காத்திருக்க, அத்தருணத்திலேயே அவளிடமிருந்து அழைப்பு வந்தது. “ஏய்.. இன்னுமா துாங்கல..?” என்றாள் ஆச்சர்யமாக. “இப்பல்லாந்தான் எப்ப வேணும்னாலும் துாங்கலாம்.. எப்ப வேணும்னாலும் எந்திரிக்கலாம்… எப்போ வேணும்னாலும் சமைக்கலாம்.. எப்போ வேணும்னாலும் சாப்டுலாம்னு ஆயிடுச்சே.. நேரத்துக்கு துாங்கி என்ன பண்ணப்போறே.. ஆனா இது கூட நல்லாதான் இருக்கு… நா காலைல அஞ்சு மணிக்குதான் துாங்க ஆரம்பிப்பேன்.. இப்போ மணி ஒண்ணுதானே..” என்றாள்.\n”ம்க்கும்.. அவரு வெளிநாட்ல மாட்டிக்கிட்டாரு..” என்றாள்.\n“அடிப்பாவீ.. அங்கயும் அதே கதைதானா..? எங்காளு ஒங்கூர்ல மாட்டிக்கிட்டாரு.. ஹோட்டல்லாம் குளோஸ் பண்ணீட்டா அவரு கதி அதோகதிதான்…”\n“ஏய் இங்கொருத்தி இருக்கேங்கிறத மறந்துட்டீயா..” என்றாள்.\n“மறக்காத்துனாலதானே ஒனக்கு போன் பண்ணேன்.. அப்டீன்னா காலைல அவர வர சொல்லுட்டுமா..,” என்றாள். “இதென்னடீ கேள்வீ..?” என்று தோழி கோபம் கொண்டாள்.\nஅவனை அப்போதே எழுப்பி சொன்னபோது “முன்னபின்ன தெரியா வீட்ல நா எப்படி தங்கறது..? என்றான். “ஒனக்குதான் தெரியாது.. எனக்கு அவள சின்னதுலேர்ந்தே தெரியும்.. சாதாரண நாள்ல யோசிக்க வேண்டியதெல்லாம் இப்போ யோசிச்சுட்டிருக்காத.. அத்தனாம்பெரிய வீட்ல அவளும் அவங்கம்மா மட்டுந்தான்… நீ போயி தங்கறதால அவங்களுக்கு எந்த எடஞ்சலுமில்ல… புரியுதா..?” என்றாள். “போறேன், வேற வழி..” “ஏய்.. ரொம்ப அலுத்துக்காத… ஒரு வாரந்தானே கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கடா…” என்றாள். கிருமியின் பரவல் அப்போது கட்டுக்குள் இருப்பதாகதான் சொல்லப்பட்டது. அடுத்தநாள் அறையை காலி செய்து விட்டு தோழியின் வீட்டுக்கு சென்று விட்டதாக தகவலளித்தான்.\nஉலகெங்கிலும் அந்த பூச்செண்டு தன் மகரந்தத்தை பரப்பிக் கொண்டிருக்க, மக்கள் தங்கள் வாழ்க்கையின் மீது எவ்வித அவநம்பிக்கையுமற்று அன்றாடங்களை கழித்துக் கொண்டிருந்தனர். எதிர்கால திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தனர். அவள் கூட சஞ்சுவுக்கு மருந்தகத்தில் சொல்லி பேர்ட்ஸ் ஸ்பெஷல் வைட்டமின் டானிக்கை வரவழைத்து ஸ்டாக் வைத்துக் கொண்டாள். “ஒனக்கொரு சஞ்சு மாதிரி எனக்கொரு அம்மா..” என்றாள் தோழி. ஆனால் நடையுடை இல்லாத அம்மா. போட்டது போட்டப்படி கிடக்கும் அம்மா. “நீ செய்றது ரொம்ப பெரிய உதவீடீ.. எல்லாம் சரியானபிறகு ஒருநாளு அங்க வந்து ஒங்கம்மாவ பாத்துட்டு வரணும்…” என்றாள்.\nசஞ்சு அவள் வலது கையில் ஏறி வலதுத்தோளில் அமர்ந்துக் கொண்டு க்வீக்.. க்வீக்.. என்று கத்தியது. பசியாக இருக்க வேண்டும். தானியமணிகளை சிறுத்தட்டில் கொட்டி நீட்ட, அது பட்பட்டென்று சத்தமிடும் அலகோடு அவற்றை கொத்தியது. அதில் தெறித்த மணிகள் அவள் நைட்டியில் தரையிலும் விழுந்தது. விரலை நீட்டியதும் சஞ்சு அதில் ஏறிக் கொள்ள அதை கட்டிலில் இறக்கி விட்டுவிட்டு, சிறிய கிண்ணத்தில் தண்ணீரை எடுத்து வந்தாள். சஞ்சு அதில் மூக்கை நுழைத்து ஒரு கொத்துகொத்தி விட்டு தலையை அண்ணாந்து நீரை பருகியது. அவனிடமிருந்து காணொலி அழைப்பு வர, நெட்டுக்குத்தலாக வைத்திருந்த தலையணையில் உடலை சரிவாக்கி அமர்ந்து, அலைபேசியை இயக்கியதும் சஞ்சு தத்தி தத்தி நடந்து வந்து நைட்டியை அலகால் கொத்தி பிடிமானம் ஏற்படுத்திக் கொண்டு மேலெழும்பி, அவள் மார்பிலேறிக் கொண்டது. நைட்டியின் பட்டனை வாயில் வைத்துக் கொண்டு அது கடித்து திருக, “ஏய்.. வாயில போயிட போவுது..” என்று அதட்டியவாறு சஞ்சுவை வயிற்றுக்கு நகர்த்தி விட்டு “ம்.. சொல்லு..” என்றாள். அவள் நகர்த்த நகர்த்த சஞ்சு மேலும் முனைப்போடு மேலேறியது. அதை கண்ணெடுக்காது பார்த்தவன் “நான் சஞ்சுவை ரொம்ப மிஸ் பண்றேன்..” என்றான். அவள் தலையை சாய்த்து சிரித்தாள். ஆட்டம் எதுவாக இருப்பினும், தோற்றவர்கள் வெற்றி பெறும் முனைப்பும், வென்றவர்கள் தோல்வி நேரிடுமோ என்ற தவிப்பும் கொள்வதாலேயே ஆட்டம் தொடர்ந்து களத்திலேயே இருக்க நேரிடுகிறது. அவன் எதோ பேசியபோது அவள் ஏதோ பதிலுறுத்தாள். இருமுனைகளும் ஒன்றையொன்று கவ்வி விலகி அமுதையோ நஞ்சையோ பரிமாறிக் கொள்ளும் நிறைவின் வழியாகதான் ஆட்டம் களைக்கட்டுகிறது. ஆனால் ஆட்டத்தின் மையம் ஒன்றேஒன்றாகதானிருக்க முடியும். மையமென்பது உணரப்படுபவை, உணர்த்துபவையல்ல. நிறைவென்பதே யோகம். அது உடலிருந்து மனதிற்கு எழுவதா..? அல்லது மனம் கொண்ட நிறைவை உடல் சுகிக்கிறதா? எதுவாயினும் முகம் ஆடியை போன்று செயல்பட்டு விடும்.\nஅந்த தொற்றுக்கிருமி அந்நாட்டின் ஆராய்ச்சிக்கூடத்தின் வழியே உருவாக்கப்பட்டது என்று வல்லரசு அந்நாட்டை சுட்டிக்காட்டி குறை கூறியது. ஏனெனில், அந்நாடுதான் இந்நோய் பரவலின் ஆதாரம். நோயை எவ்வளவு முடியுமோ அவ்வளவு துாரம் உலகின் கண்களிலிருந்து மறைத்து விட்டு, மறைக்கவியலாத காலக்கட்டத்தில்தான் இந்நோய் குறித்து உலகிற்கு அறிவித்தது என்றும் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவியலாது உலகு செயலிழந்து நிற்பதற்கு அந்நாடே காரணம் என்றும் வல்லரசு கடுஞ்சொல்லாடியது. வல்லரசு, வல்லரசாகவே நீடிக்க அதற்கு மேலதிக தொழிற்நுட்பமும், விற்பனைக்கான சந்தையும், பணியாற்றுவதற்கான ஆட்களும் தேவைப்படுகின்றன. அது தன்னுடைய கண்டுப்பிடிப்புகளுக்கேற்ப நோய்களையும் தேவைகளையும் உருவாக்கிக் கொள்கிறது என்று குற்றஞ்சாட்டப்பட்ட நாடு, வல்லரசை குத்திக் காட்டியது.\nசஞ்சு மெல்லிய விசிலொலி எழுப்பிக் கொண்டே மூடியிருந்த சன்னலின் கம்பியிலேறி விளையாடியது. அதன் நீண்டிருக்கும் கொண்டை மயிர்கள் காற்றில் வளைந்தாடின. “எப்போதான் அங்க வருவேன்னு இருக்கு” என்றான். ”புரியுது” என்றாள் சிரிப்புடன். “என்ன சிரிப்பு வேண்டியிருக்கு? அவன் கண்கள் காமத்தில் சிறுத்திருந்தன. அந்நியரொருவர் வீட்டில் மூன்று வேளையும் உட்கார்ந்து உண்ணுவது சங்கடம் உண்டாக்கும் செயல் என்று பேச்சை மாற்றினான். “அதுக்கென்ன செய்றது? கொஞ்சம் அனுசரிச்சுக்கோ. பே பண்றேன்கிண்றேன்னு எதாது சொல்லி வச்சிராதே. நா என்ன பிஜியா நடத்துறேன்னு அவ கோச்சுக்குவா.” அவளும் அவன் பேச்சை ஏற்றுக் கொண்டவள்போல பதிலளித்தாள். தீவிரநிலையிலிருந்து மீள்வதென்பது அதை எளியப்பேச்சுகளால் கடத்து விடுதலேயாகும்.\nஅன்றைய கனவில், பெண்ணென பெருகி வந்து தான் கையளித்ததை அவன் உணர்ந்து அறிவதே ஆட்டத்தின் வெற்றி என்றாள். அவனோ அதை அவளே உணர்த்த வேண்டுமென்பதாக புரிந்துக் கொண்டான். இரவு இருளாகி அது அவன் முகத்திலும் பிரதிபலிக்க, அவள் “அசடு வழியுது.. போய் தொடச்சுக்க..” என்பாள் கேலியாக.\nஅடுத்துவந்த நாட்களும் உலகின் தலையெழுத்தில் மோசமான நாட்களாகவே மாறிக் கொண்டிருந்தன. தொற்றுக்கு மாற்றுமில்லை. மருந்துமில்லை. புழங்கும் கைகளை, நடக்கும் கால்களை, அருகருகே நிற்கும் உடல்களை கழுவிக் கொண்டே இருக்க வேண்டும் என்றனர். யாரும் யார் வீடுகளுக்கும் செல்வதில்லை. விலங்குகள் பம்மி பதுங்கி தலை நீட்டின. விரட்டுவோர் யாருமின்றி திகைத்து, பின் தங்கள் பூர்வபூமியை உணர்ந்து, அலையலையாக வெளிவரத் தொடங்க, அதனை மனிதர்கள் பதுங்கியிருந்தபடியே நேரிடையாகவும் காமிரா கண்களின் வழியாகவும் பார்த்தனர். தலைவர்கள் தங்கள் நாடுகள் சுற்றும் அபிலாஷைகளை ஒதுக்கி விட்டு, நிலைமையை கவனிக்கத் தொடங்கினர். முன்பின் அனுபவமின்மையால் செய்வதறியாது குழம்பி, யாருக்கும் புரியாத கட்டளைகளையும் நலத்திட்டங்களையும் அறிவித்தனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தது மட்டுமே எல்லோருக்கும் புரிந்திருந்தது.\n“அய்யோ… இதென்ன கூத்து…? நீ எப்போதான் வருவே…?” என்று திடுக்கிட்டாள் அவள்.\nஆண்டு பலன்களை கணித்து தந்த நிமித்திகர்களையும், சோதிடர்களையும் ஒருசாரார் தேடிக் கொண்டிருக்க, கடவுளர்கள் மனித தொந்தரவின்றி பூட்டிய கதவுகளுக்குள் மோனநிலையில் ஆழ்ந்திருந்தனர். அறம் பிறழ்வதே கலியுக அறமென கொண்டு இயங்கிய உலகிற்கு அத்தனை விரைவாக தன்னை மாற்றிக் கொள்ள இயலவில்லை. முகக்கவச ஊழல், கிருமிநாசினி ஊழல், கையுறை ஊழல் என தொற்று தொடங்கிய அன்றே ஊழல்களும் தொடங்கியிருந்தன. அரசு, இடநகர்தலுக்கென வகுத்து வைத்த காரணிகளான உடல் நலமின்மை, இறப்பு, பிறப்பு, ஏற்கனவே திட்டமிட்ட திருமணம் போன்றவற்றுக்கான செயற்கை சான்றிதழ்களை சரளமாக உற்பத்தி செய்துக் கொண்டிருந்த ஊழ்வணிகத்தின் துணைக்கொண்டு அவன் நகரமுனைந்தபோது, அவன் அலுவலகம் பெங்களுரூவில் முடிக்க வேண்டிய சில பணிகளை அவனிடம் ஏவியதாக அவளிடம் கூறி வருந்தினான்.\nபொய்யான காரணங்களோடு மக்கள் நகர்ந்துக் கொண்டிருப்பது பூச்செண்டிற்கு பூச்செண்டு கொடுத்து அழைக்கும் செயல் என்று ஆளும்கட்சிக்கு எதிராக, முகக்கவசமிட்ட முகங்களோடு எதிர்கட்சி வழக்குத் தொடுக்க, நீதிமன்றம், இனி இடநகர்வு அனுமதி பெற வேண்டுமெனில், பிறர் குறுக்கீடின்றி, சம்பந்தப்பட்ட இரு முனையமும் சேர்ந்தாற்போல் இசைவு தெரிவிக்க வேண்டுமென்று ஆணையிட்டது. அதற்கேற்ப விண்ணப்பப்படிவம் வடிவமைக்கப்பட்டு இணையத்தில் ஏற்றப்பட்டது. மேலும் இடநகர்வை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.\n“ச்சே.. மூவ் ஆகறதுக்கு நல்ல சான்ஸ் கெடைச்சுது.. அப்டி என்னதான் ஒங்க கம்பெனிக்கு அர்ஜென்ட் வொர்க்கோ தலைபோற வொர்க்..? செரி வுடு.. கவர்மெண்ட் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுட்டும்… மொதவேலையா மைகிரேஷன் பாஸ் அப்ளை பண்ணிட்றேன்.. நீ அக்செப்ட் குடுத்துடு..“ என்றாள் அவனிடம்.\n“ரொம்ப வருத்தமாருக்குடீ ஒங்க ரெண்டுபேரையும் நெனச்சா… இத்தன நாள் கழிச்சு கௌம்பும்போது இந்த வேலைய முடிச்சிட்டு வா.. அந்த வேலைய முடிச்சிட்டு வான்னு சொன்னா என்ன அர்த்தம்..” என்று தோழியும் வருந்தினாள்.\nவல்லரசு, வைரஸ்களின் பல்வேறு உருமாறுதல்கள் குறித்து அந்நாட்டில் ஆராய்ச்சி செய்யப்பட்டு, அவ்வுருமாற்ற கிருமிகள் அங்கேயே பாதுகாக்கப்படுவதாகவும் அப்படி பாதுகாக்கப்பட்டு வந்த கிருமிகளில் ஒன்றுதான் இப்பூச்செண்டு என்றும் இம்மாதிரியான பூச்செண்டுகள் அங்கு நிறைய உண்டு என்றும் அந்நாட்டின் மீது மேலும் குற்றச்சாட்டை எடுத்து வைத்தது. இந்தியாவில், நீட்டிக்கப்பட்ட ஊரடங்கை மக்களே விரும்பாத நிலையில், பாதிப்புகளும் பலிகளும் உயர்ந்துக் கொண்டிருந்தாலும் பொருளாதார சீர்க்கேடுகளை சரிசெய்யும்விதமாக அத்தியாவசியங்களுக்கு தளர்வு அளிக்கும் முடிவுகளையும் இடநகர்வுக்கான தளர்வுகளையும் அரசாங்கம் வெளியிட்டது.\nஅவள் விறுவிறுப்பாக மடிக்கணினியை எடுத்து, அவன் வருகைக்கான இணைய அனுமதிச்சீட்டு விண்ணப்பத்தை நிரப்பத் தொடங்கினாள். சஞ்சு க்விக்.. க்விக்.. என கத்தியது. அதனை அதற்கான சிறு ஊஞ்சலில் ஏற்றி விட, அங்கும் கத்தியது. மேசையின் இழுப்பறை, கொடிக்கயிறு, சன்னல் கம்பிகள் என அதன் விருப்ப இடங்களிலெல்லாம் விட்டபோதும் அது விடாமல் கத்தியது. அதற்கொரு துணை வாங்க வேண்டும். அதற்கு முதலில் வெளியுலக நிலைமை சகஜமாக வேண்டும். அந்நேரம் அவன் காணொலி அழைப்பில் முகம் காட்டினான். “ஹாய்..” என்றான். “பாஸ் அப்ளை பண்ணிட்டுருக்கேன்.. நீ அக்செப்ட் மட்டும் குடுத்துடு..” என்றாள். சஞ்சு மடிக்கணினியில் ஏறி அதன் உச்சியில் நின்றுக் கொண்டு க்வீக்.. க்வீக்.. என்று சத்தமிட்டது. “சஞ்சுவ கூண்டுல விட்டுட்டு நானே லைனுக்கு வர்றேன்..” அவன் இணைப்பை துண்டித்து விட்டு சஞ்சுவை கூண்டில் விட்டபோதுதான் அவன் முகம் பொலிந்து வழிந்திருந்தது சிந்தையிலேறியது. ஒருவேளை அலுவலகமே அவனை வீட்டில் கொண்டு வந்து சேர்த்து விடுமோ..? ஒருவேளை… ஒருவேளை… படபடப்போடு அவனை அழைக்க, அது எடுப்பாரின்றி அடித்து ஓய்ந்தது. மீதமிருந்த ஆன்லைன் விண்ணப்பதை பூர்த்தி செய்து விட்டு, ‘இருதரப்பார் விருப்பம்’ என்ற இடத்தில் அழுத்தியபோது அது சுழன்று உள்ளே சென்று, பின் அவனின் மௌனத்தை காரணம்காட்டி, விண்ணப்பம் நிராகரிக்கபட்டதாக குறுஞ்செய்தி அனுப்பியது.\nபிறகெப்போதோ நிரூபணமாகும் ரகசியம், அது ரகசியம் என்பதனாலேயே கசிந்திருந்தது. வல்லரசும் அது கைக்காட்டும் நாடுமிணைந்து உலக மொத்த வர்த்தகத்தையும் தங்கள் காலடியில் அமர்த்திக் கொள்ளும் நடவடிக்கையின் பொய்த்த வடிவம்தான் அந்த பூச்செண்டு என்பதும் அவ்விரு நாடுகளும் உலகிற்கு பெருந்துரோகம் இழைத்து விட்டதென்றும், அவை எத்திட்டத்தையும் எக்காலமும் கைவிடப்போவதில்லை என்றும் ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வதென்பது வெற்று திசைதிருப்பல்களே என்பதும் அறிவுஜீவிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.\nசஞ்சு விடாமல் க்வீக்.. க்வீக்.. என்று கத்திக் கொண்டிருந்தது.\nPosted in எழுத்து, கலைச்செல்வி, சிறுகதை on June 1, 2020 by பதாகை.2Comments\n← பரியுடை நன்மான் – வளவ.துரையன் கட்டுரை\nமரியாளின் சிலுவைப்பாதை – அ.மலைச்சாமி சிறுகதை →\nஅருமையான கதை காலத்துகேற்ற யதார்த்தமானது. கதையின் ஊடே அவ்வப்போது கரோனாதீநுண்மி தொற்று பற்றியும் அரசின் ஊரடங்கு பற்றியும் பதிவு செய்யப்பட்டது பாராட்டத்தக்கது. ஏதும் பிரச்சாரம் இல்லாமல் மிகச் சிறப்பாக உள்ளகதை\nLeaveaReply to Valavaduraiyan Cancel reply
பட்சணங்களை பகிர்ந்து கொள்ளும் தீபாவளி; கோவர்த்தன கிரி நாயகனுக்கு ஒரு விழா! | diwali- sweets - hindutamil.in\nPublished : 13 Nov 2020 16:25 pm\nUpdated : 13 Nov 2020 16:25 pm\nPublished : 13 Nov 2020 04:25 PM\nLast Updated : 13 Nov 2020 04:25 PM\nபட்சணங்களை பகிர்ந்து கொள்ளும் தீபாவளி; கோவர்த்தன கிரி நாயகனுக்கு ஒரு விழா!\nதீபாவளி நாளில், நாம் பட்சணங்கள் படைக்கிறோம். அக்கம்பக்கத்தாருக்கும் உறவுக்காரர்களுக்கும் வழங்குகிறோம். அவர்கள் நமக்கு வழங்குவதை மகிழ்வுடன் ஏற்கிறோம். இப்படிக் கொடுப்பதும் பெறுவதுமாகவும் இருக்கிற அன்புக்கும் ஈகைக்கும் உகந்த விழாவாகத்தான் தீபாவளியைக் கொண்டாடுகிறோம். இதையே ‘அன்னக்குவியல்’ என்றும் ‘சப்பன் போக்’ என்றும் கொண்டாடுகிறார்கள்.கோகுலத்தின் ஆயர்பாடி மக்கள் பலரும் கொண்டாடுகிற இந்த விழா, தீபாவளியையொட்டித்தான் நடைபெறுகிறது.\n’கோ’ என்றால் பசு. ‘குலம்’ என்றால் கூட்டம். எனவே, அவர்கள் வாழ்ந்த ஊர் கோகுலம். அதாவது ஆயர்பாடி. அதைப் பராமரிப்பவர்கள் ஆயர் இனத்தவர்கள். ஆக்ரா, மதுரா சேர்ந்த தற்போதைய வட மதுரா பிரதேசம்தான் பழைய கோகுலம். அவர்கள் இந்தியின் கிளை மொழியாகிய இலக்கிய வளம் மிக்க ‘வ்ரஜ’ மொழியைப் பேசினர். எனவே, அந்தப் பகுதி ‘வ்ரஜ பூமி’ எனப்படுகிறது.\nஒரு முறை, கோகுலவாசிகள் மழை வேண்டி கோவர்த்தன கிரியை பூஜித்தனர். எனவே, தேவர்களின் தலைவனான இந்திரன் இரவு- பகலாக ஏழு நாட்கள் கடும் மழையைப் பொழியச் செய்தான்.\nஇதனால் எங்கு பார்த்தாலும் மழை. ஊரெங்கும் வெள்ளம். வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க குடை இருந்தால் நன்றாக இருக்குமே? மொத்த ஊரும் பாதுகாக்க வேண்டுமெனில் என்ன செய்வது? இறைவன் தான் ஏதாவது செய்யவேண்டும். கண்ண பரமாத்மா, கோவர்த்தன குன்றைப் பெயர்த்தெடுத்து மக்கள் மற்றும் பசுக்களுக்குக் குடையாகப் பிடித்தான். மொத்த ஆயர்குல மக்களையும் காத்தான். அதனால்தான் கண்ணன் ‘கோவர்த்தன கிரிதாரி’ என்று அழைக்கப்படலானான்.\nஇன்றும் இந்த ஊரில், கோவர்த்தனகிரி பூஜை நடத்தப்படுகிறது. தீபாவளிக்கு மறுநாள் விமரிசையாகவும் கோலாகலமாகவும் நடைபெறுகிறது கோவர்த்தன கிரி பூஜை. கிரிராஜன்தான் மணமகன். தீபாவளியே மணமகள். அவர்களின் திருமண நாளே அது!\nஅன்றைய தின விருந்து பிரமாண்டம். அமர்க்களப்படும். திருமணம் அல்லவா. அந்த விருந்துக்கு ‘அன்னக்குவியல்’ என்று பெயர். அந்த நாளில், மொத்தம் 56 வகை உணவுகள் படைக்கப்படுமாம்! இதை ‘சப்பன் போக்’ என்கிறார்கள். ‘சப்பன்’ என்றால் 56 என்று அர்த்தமாம். ‘போக்’ என்றால் போஜனம், உணவு என்று அர்த்தம்.\nசமைக்கப்பட்டது, சமைக்கப்படாதது, சர்க்கரை சேர்த்தது, சேர்க்கப்படாதது, பாலில் செய்தது, கிழங்கு வகைகள், சில புதிய பழங்கள், உலர்ந்த பழங்கள் என்று பலவிதப் பண்டங்கள் இருக்கும். அதே போல், விழுங்குபவை, கடித்துத் தின்பவை, சப்பிச் சாப்பிடுபவை, நக்கிச் சாப்பிடுபவை... இப்படிப் பல விதத் தயாரிப்புகள் அடங்கியதுதான் இந்த ‘சப்பன் போக்’ என்ற விழாப் படையல்.\nதீபாவளி நாளில், நாம் பட்சணங்கள் படைக்கிறோம். அக்கம்பக்கத்தாருக்கும் உறவுக்காரர்களுக்கும் வழங்குகிறோம். அவர்கள் நமக்கு வழங்குவதை மகிழ்வுடன் ஏற்கிறோம். இப்படிக் கொடுப்பதும் பெறுவதுமாகவும் இருக்கிற அன்புக்கும் ஈகைக்கும் உகந்த விழாவாகத்தான் தீபாவளியைக் கொண்டாடுகிறோம்.\nபட்சணங்களை பகிர்ந்து கொள்ளும் தீபாவளி; கோவர்த்தன கிரி நாயகனுக்கு ஒரு விழா!பட்சணங்கள்பலகாரங்கள்தீபாவளிதீப ஒளித் திருநாள்கிருஷ்ணர்கிருஷ்ண பரமாத்மாகோவர்த்தன கிரிஆயர்குலம்ஆயர்பாடிசப்பன் போக்KrishnarDiwaliDeepavaliSrikrishnarKovardhana giri\nபுதுச்சேரியில் புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று; மேலும் ஒருவர் உயிரிழப்பு: 97.56%...\nதீபாவளியை முன்னிட்டு களை கட்டிய தோவாளை மலர் சந்தை: பூக்கள் விலை 5...\nஅமெரிக்க மக்களின் முடிவை மதிக்கிறோம்: பைடனுக்கு சீனா வாழ்த்து
பேக் டூ பெங்களூரு….. நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்ட காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்….\ncongress and jsd mla back to bangalore\nFirst Published May 18, 2018, 10:34 PM IST\nபாஜகவின் குதிரைப் பேரத்திலிருந்து தப்பிக்க நேற்று ஹைதராபாத் சென்றிருந்த காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பபில் பங்கேற்பதற்காக இன்று மீண்டும் பெங்களூரு புறப்பட்டனர்.\nஅண்மையில் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 இடங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 37 இடங்களையும் பிடித்தது.\nஆட்சி அமைக்க 113 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், திடீரென மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமியை முதலமைச்சராக்க ஒப்புக்கொண்ட காங்கிரஸ் மஜத கட்சியுடன் கூட்டணி அமைத்தது. தொடர்ந்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க குமாரசாமி உரிமை கோரினார்.\nஆனால் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அனுமதி அளித்த கவர்னர் வஜுபாய் வாலா, பெரும்பான்மையை நிருபிக்க 15 நாட்கள் அவகாசமும் அளித்தார். இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், எடியூரப்பா முதலமைச்சராக பதவி ஏற்க தடைவிதிக்க மறுத்தது.\nஇதையடுத்து எடியூரப்பா நேற்று முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். ஆனால் பாஜகவினர் குதிரைப் பேரத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் தங்கள் எம்எல்ஏக்களை பாதுகாக்க, அவர்களை நேற்று ஹைதராபாத் அழைத்துச் சென்றனர்.\nஇந்த வழக்கை இன்று மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்றம் , நாளை மாலை4மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டது.\nஇதையடுத்து நேற்று ஹைதராபாத் சென்ற காங்கிரஸ் மற்றும் மஜக எம்எல்ஏக்கள், நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க இன்று மீண்டும் பெங்களூரு புறப்பட்டனர்.\nஇந்த எம்எல்ஏக்கள் யாரும் அணி தாவி விடக்கூடாது என்பதில் குமாரசாமி தரப்பு மிக கவனமாக உள்ளது.நாளை மாலை4மணிக்கு இந்த எம்எல்ஏக்கள்தான் எடியூரப்பாவின் தலைவிதியை நிர்ணயம் செய்ய உள்ளனர்.\ncongress . jsd mla#departure hydrabad#Bangalore#\nதமிழிசை சவுந்தரராஜன் மீதான வழக்கு ரத்து... திருமாவளவனை அவதூறாக பேசியதாக வழக்கு..!\nவேறு கட்சிக்கு தவிய இளம் தலைவர்... கதறும் கட்சியின் பொதுச்செயலாளர்..!\nராகுல் காந்திக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த சித்து. தலைவர் பதவியை தூக்கி எறிந்து அதகளம்.\nஎம்.ஜி.ஆரும், வைகோவும் திமுகவின் துரோகிகள்... 24 மணி நேரம்தான் தூக்கிடுவோம் ஜாக்கிரதை... துரைமுருகன் பகீர்..!\nவேதனையாக இருக்கிறது.. எப்போதும் நான் ஸ்டுடென்ட்ஸ் பக்கம் தான்!! நீட் தேர்வு குறித்து பேசிய சாய் பல்லவி!!
இவற்றை செய்தால் எப்போதும் ஆரோக்கியம்தான்! | Simple ways for healthy life - The Subeditor Tamil\nby SAM ASIR, Jul 27, 2019, 18:23 PM IST\nஇதைத் தவிர, மனஅழுத்தத்தை சமாளிப்பது, இரவு ஆழ்ந்து உறங்குவது, அதிக நேரம் அசையாமல் ஓரிடத்திலேயே அமர்ந்திருப்பதை தவிர்ப்பது ஆகியவையும் ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியம்.\nவாழும் முறைகளை சிறிது மாற்றுவதால் ஒரே நேரத்தில் உடல் நலம் முழுவதும் சரியாகிவிடாது. ஆனால், சிறிது சிறிதாக மாற்றங்களை செய்து அவற்றை தொடர்ந்து கடைபிடிக்கும்போது, கண்டிப்பாக உடல்நலத்தில் மாற்றம் தெரியும்.\nடிவி, கம்ப்யூட்டருக்கு லீவ்:\nவாரத்தில் ஒருமுறை வீட்டில் தொலைக்காட்சி மற்றும் கணினி ஆகியவற்றை அணைத்து வைத்துவிடுங்கள். அந்த நாள், குடும்பத்தினரோடு சேர்ந்து உடலுழைப்பு தேவைப்படும் வேலைகளை செய்யலாம். ஏதாவது விளையாடலாம்; நடந்து வரலாம். இப்படி உடலை அசைக்கும் பணிகளை செய்வது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.\nநடப்பதற்கு எந்த அளவுக்கு முடியுமா அந்த அளவு வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும். ஏதாவது வேலை முடித்ததும், வீடு இருக்கும் தெருவை சுற்றி வரலாம். வளர்ப்பு நாயை கூட்டிக்கொண்டு சற்று தூரமாகவே நடந்து செல்லலாம். டிரட்மில் போன்ற கருவிகளை வீட்டில் வைத்திருப்பவர்கள் தினமும் தவறாது ஐந்து நிமிடமாவது பயன்படுத்தலாம்.\nவீட்டில் தோட்ட வேலை, வீட்டைச் சுற்றி கூட்டிப் பெருக்குதல், தரையை துடைத்தல் போன்ற வேலைகளை செய்யலாம். இது பெரிய அளவில் உடற்பயிற்சி போன்றவை இல்லையென்றாலும், சிறிதாவது உடலுழைப்பை அளிக்கும். வீடும் சுத்தமாகும்.\nடூ இன் ஒன்:\nமொபைல் போனில் பேச வேண்டிய சூழ்நிலை வருகிறது. சற்று நீண்ட உரையாடலாக இருக்கும் பட்சத்தில், பேசிக்கொண்டே உலவலாம். குப்பைகளை சுத்தம் செய்யலாம். இப்படி கிடைக்கும் வாய்ப்பை நடப்பதற்கும், ஒரே இடத்தில் அமராமல் நகர்வதற்கும் பயன்படுத்தவேண்டும்.\nதினமும் நீங்கள் எவ்வளவு நேரம் அமர்ந்து வேலைகளை செய்கிறீர்கள் என்று ஒரு பட்டியல் தயார் செய்யுங்கள். அதிக நேரம் அமர்வதை தவிர்க்க, அந்த நேரத்தில் என்னென்ன வேலைகளை நடமாடி செய்யலாம் என்றும் பட்டியலிடுங்கள். அதை பழக்கப்படுத்தும்போது, உடலை அசைத்து வேலை செய்வது ஓர் ஒழுங்குக்கு வந்துவிடும்.\nநடமாடுவதால் கிடைக்கும் பலன்கள்\nஇதயநோய், பக்கவாதம், மூளையில் இரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படுதல், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை நடப்பதன் மூலம் தவிர்க்கலாம். மூட்டுகள் வலிமை பெறும். உடல் அதிகமாக நடமாடும் ஆற்றல் பெறும். முதுமையில் நெகிழும் தன்மை உடலுக்கு இருக்கும். எலும்பின் அடர்த்தி பாதுகாக்கப்படும். மனக்கலக்கம், மன சோர்வு போன்ற மனம் சம்மந்தப்பட்ட குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு குறையும். நம்மேல் நமக்கே மதிப்பு, சுயமரியாதை அதிகமாகும். முதியவர்களானால் நினைவு திறன் கூர்மையாகும்.\nநன்றாக நடமாடுவதோடுகூட, பழங்கள், காய்கறிகள் இவற்றை அதிக அளவில் உணவில் சேர்க்கவேண்டும். கொழுப்பு சத்து அதிகம் மிக்க உணவுகளை சாப்பிடுவதை குறைத்துக்கொள்ளவேண்டும்.\nஇதுபோன்று சின்ன சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினால், நாளடைவில் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nவெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ்; பயணிகளை பத்திரமாக மீட்டது பேரிடர் மீட்புப் படை
சிபிஐ அமைப்பிற்கு புதிய இயக்குனர் பணி நியமனம்..!\nமத்திய பணியாளர்த்துறை அமைச்சகம் சிபிஐ அமைப்பிற்கு புதிய இயக்குனராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால்-ஐ நியமித்துள்ளது.\nசுபோத் குமார் ஜெய்ஸ்வால் கடந்த 1985 ஆம் ஆண்டு ஐபிஸ் அதிகாரியாக பணிபுரிந்தார். இவர் மஹாராஷ்டிராவை சேர்ந்தவர். மேலும், இவர் இம்மாநில காவல் டிஜிபி ஆகவும் பணிபுரிந்துள்ளார். இப்போது இவரை இரண்டு ஆண்டுகளுக்கு சிபிஐ அமைப்பின் புதிய இயக்குனராக அறிவித்துள்ளனர். இந்த முடிவை பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன்சவுத்ரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் கலந்தாலோசித்து நியமித்தனர்.\nஆனால், இதில் எதிர்க்கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன்சவுத்ரி இந்த ஆலோசனைக்கூடத்தில் எடுக்கப்பட்ட தேர்வு முறை சரியில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இவர் அளித்த பேட்டியில், சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் கமிட்டியின் விதிமுறைக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது இந்த முடிவு. நான் கடந்த 11ஆம் தேதியே 101 பேர் அடங்கிய பட்டியலை வழங்கினேன். அதில் 10 பேரை மட்டும் பட்டியலிட்டு, அதன் பிறகு அதில் மாலை4மணிக்கு6பேர் மட்டுமே அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். மத்திய பணியாளர்த்துறை அமைச்சகத்தின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளனர்.\nமேலும், கடந்த பிப்ரவரி மாதமே சிபிஐ இயக்குனராக இருந்த ரிஷி குமார் சுக்லா ஓய்வு பெற்று சென்றுவிட்டார். அடுத்த3மாதங்களாக குஜராத் பிரிவின் ஐபிஸ் அதிகாரியான பிரவீன் சின்ஹா பொறுப்பு இயக்குனராக செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வமும் சிவமயம் சகலமும் சிவனருள்: மந்திரக்குகை மர்மம்\n••• “ பொருட்கள் எதுவும் அவை எப்படித் தோற்ற மளிக்கிறதோ அதுபோலவே உண்மையில் இருப்பதில்லை லாப்சாங் . நீ லாசா பள்ளத்தாக்கை மூடி மறைக்கும் அளவுக்கு மிகப் பெரிதாக “ஒம் மா நீ பாட் மீ உம்” என்ற மந்திரத்தை எழுதுகிறாய் என்று வைத்துக் கொள். அதை யாராலும் படிக்க முடியாது. அவர்களால் கைக்கொள்ள முடியாத அளவுக்கு அது பெரிதாக இருக்கும்.\n••• லாமா மிங்கயார் டாண்டப் இப்படிக் கூறி நிறுத்தி விட்டு என்னைப் பார்த்தார் .\n••• “அதுபோலத்தான் நட்சத்திரக் கூட்டங்களும் நம்மால் அவை உண்மையில் எந்த வடிவத்தில் இருகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு அவை பெரிதாக இருக்கின்றன . திபெத் பள்ளத்தாக்கு அளவுக்கு நாம் எழுதும் எழுத்துக்களை யாரும் படிக்க முடியாது . காரணம் அதன் அளவு” என்ற லாமா ...,\n••• “இப்பொது நீ சுருங்கி சுருங்கி ஒரு மணல் துகளை விட சிறியதாகிவிட்டாய் என்று வைத்துக்கொள் . நான் உனக்கு எப்படித் தோன்றுவேன்?\n••• ஒருக்கால் நீ மணல் துகளை விட இன்னும் சிறதாகப் போனால் மணல் துகளே கூட உனக்கு ஒர் உலகமாகத் தோன்றும் , அப்படியானால் நான் உனக்கு எப்படித் தெரிவேன் ? எப்படிக் காட்சி யளிப்பேன்?”\n••• நான் என்ன சொல்வது என்று தெரியாமல் தரையில் தூக்கிப்போட்ட மீனைப் போல வாயைப் பிளந்தேன் ,\n••• இருட்டில் அப்போது தனித்தனியாக ஒன்றுக் கொன்று தொடர்பில்லாத உலகங்கள் மிதப்பதை நீ பார்ப்பாய் லாப்சாங் . உன் சிறுத்த உருவம் காரணமாக எனது மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் தனித்தனி உலகங்களாக மிதப்பதையும் , அவைகளுக்கு இடையே மிகப் பெரிய இடைவெளிகள் இருப்பதையும் நீ பார்பபாய் லாப்சாங் !'\n••• சுழலும் உலகங்களைச் சுற்றி வேறு வேறு உலகங்கள் சுழல்வதைக் காண்பாய் . சூரியன்களைக் காண்பாய் ஒர் பிரபஞ்சத்தையே பார்ப்பாய்!”\n••• என் மூளை கிறீச்சிட்டது . எனது குரு லாமா மிங்கயார் டாண்டப் கூறிய தகவல்களை உள்வாங்கிக் கொள்ள முடியாமல் என் புருவங்களுக்கு மேலிருந்த எனது மூளை திணறித் திக்குமுக்காடியது ...,\n••• நான் சுதாரிப்பதற்காக சற்று நேரம் கொடுத்தபின் லாமா தொடர்ந்தார் ....\n--- புத்தகம் [மந்திரக்குகை மர்மம் ]\nகுறிப்பு : மிக மிக அற்புதமான புத்தகம் வாய்ப்பிருப்பின் படித்துப் பாருங்கள்...,\n••• அகஸ்திய விஜயம் இதழில் கூட வானில் உள்ள கிரகங்கள் நடசத்திர அமைப்புக்கள் , கோள்கள் நம் உடலிலும் உள்ளது என்பார்கள்...,\n••• அகத்தியம் பெருமான் கூட ஜீவ நாடியில்\n"வெறும் புறக் கண்களுக்கு சிலப் புற பொருட்கள் தான் தெரிகிறது.. “ இப் பொழுது நீ அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து இந்த சுவடியை படிக்கின்ற இவன் அமர்ந்திருக்கும் இடைப்பட்ட இடத்திலே பலகோடி உயிரினங்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றன தெரியுமா? "\n••• ஒரு மெல்லிய நீலத் திரையும் மெல்லிய செவ்வண்ண திரையும் இங்கு அறையெங்கும் நிறைந்திருக்கிறது.. யார் கண்ணுக்கும் தெரியாதப்பா ..” எனவே செப்பு என்பது காலகாலமாக இருக்கின்ற பொருள் காந்தம் எனபதும் காலகாலமாக இருக்கின்ற பொருள் ஒன்றோடு ஒன்று தொடர்பு கூடினால் சக்தி கிடைக்கும் என்று புரிந்து கொள்ளவே மனிதனுக்கு கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டது....,\nஎன்னெ இறைவனின் பிரபஞ்ச சிருஷ்டி......!!!\nPosted by புலிப்பாணி சித்தர் அடிமை at 7:31 AM
ருசியியல் - 31 | Pa Raghavan Tamil writer\nஇரு வாரங்களுக்கு முன்னர் என் தந்தை காலமாகிப் போனார். நல்ல மனிதர். எனக்கு நிறைய செய்தவர். அதில் தலையாயது, என்னை முழுச் சுதந்தரத்துடன் வளரவிட்டது. யோசித்துப் பார்த்தால் நான் செய்த எதையுமே அவர் மறுத்ததோ நிராகரித்ததோ இல்லை. இதைச் செய்யாதே என்று சொன்னதும் இல்லை. எத்தனை பேருக்கு அப்படியொரு அப்பா கிடைப்பார் என்று தெரியவில்லை. விடுங்கள், விஷயத்துக்கு வருகிறேன்.\nஅப்பா இறந்த அதிர்ச்சியை உள்வாங்கி ஜீரணித்து சற்று நிலைக்கு வந்த பிற்பாடு, எனக்கு அடுத்த வேளை உணவு குறித்த கலவரம் உண்டானது. நீ சாப்பிடக்கூடாது என்று யாராவது சொன்னால் சரி என்று என்னால் அதிகபட்சம் ஐம்பது மணி நேரங்கள் வரை தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் இன்று முதல் அடுத்த பத்துப் பன்னிரண்டு தினங்களுக்கு நீ இதைத்தான் சாப்பிட வேண்டும் என்று கழுத்தில் துண்டைப் போட்டு வளைத்தால் நான் செத்தேன்.\nபிரச்னை உணவில் அல்ல. என் உணவு முறையில் அது இருந்தது. கடந்த ஓராண்டுக் காலமாக நான் அரிசியைத் தொடுவதில்லை. அரிசி மட்டுமல்ல. பருப்பு உள்ளிட்ட பிற எந்த தானியமும் கிடையாது. நல்லெண்ணெய், கடலெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் வகையறாக்கள் கிடையாது. உருளை, சேப்பங்கிழங்கு ரகங்கள் இல்லை. பீன்ஸ், அவரை, காராமணி இனங்கள் இல்லை. புளி கிடையாது. ரொம்ப முக்கியம், இனிப்பு அறவே கிடையாது.\nஇதெல்லாம் இல்லாமல் எந்த வீட்டில் காரியச் சமையல் நடக்கும்? இதையெல்லாம் நான் சாப்பிட மாட்டேன் என்று அம்மாவிடம் போய்ச் சொல்லவும் தயக்கமாக இருந்தது. ஒரு பேரிழப்பைவிட இது பெரிய விஷயமா என்று எனக்கே தோன்றுகிறபோது அம்மாவுக்கு எப்படித் தோன்றாதிருக்கும்? இருந்தாலும் என்னிடம் ஓர் அஸ்திரம் இருந்தது. அதை ஒரே ஒருமுறை பிரயோகித்துப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.\nஅழுகையெல்லாம் சற்று வடிந்திருந்த தருணத்தில் மெல்லப் பேச்செடுத்தேன். அம்மா, வாழ்நாளில் ஒருபோதும் அப்பா என் சுதந்தரத்தில் தலையிட்டதில்லை. என் உணவு முறை என்பது என் சுய புத்தியுடன் நானே தேர்ந்தெடுத்த ஒன்று. அப்பா நிச்சயமாக இதைத் தனக்காக மாற்றிக்கொள்ளச் சொல்லிக் கேட்கமாட்டார். உனக்கும் ஆட்சேபணை இல்லையென்றால் இந்தக் காரிய தினங்களிலும் நான் என் விரதம் கெடாமல் பார்த்துக்கொள்வேன்.\nசொற்களில் வாழ்பவனால் இதுவா முடியாது? தவிரவும் சொல்லுகிற தொனி. உனக்கு இஷ்டமில்லையென்றால் செய்யமாட்டேன் என்பதைச் சொல்லாமல் புரியவைக்கிற உத்தி. அது உதவும். வேலை செய்யும்.\nசெய்தது. உன் இஷ்டம் என்று அம்மா சொல்லிவிட்டபடியால் ஒரு பிரச்னை தீர்ந்தது என்று எண்ணிக்கொண்டேன். சமையல் பொறுப்பை ஏற்றிருந்தவரிடம் நான் உண்ணக்கூடிய காய்கறிகளின் பட்டியலை அளித்தேன். தினசரிச் சமையலில் இதில் ஏதாவது ஒன்று இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். தனியே அவசரமாக ஒரு பனீர் சமையல். கூடவே இந்தக் காய் இனத்தில் ஒன்றிரண்டு. கொஞ்சம் வெண்ணெய். கொஞ்சம் தயிர். முடிந்தது. வெங்காயம் கிடையாது, பூண்டு கிடையாது. அவ்வளவுதானே? அது ஒரு பிரச்னையே இல்லை எனக்கு.\nஉறவினர்களும் நண்பர்களும் பந்தியில் அமருகிறபோதெல்லாம் இதை வினோதமாகப் பார்த்தார்கள். சரியாக ஒரு வருடம் கழித்து இலை போட்டுச் சாப்பிடுகிறேன். ஆனால் இலையில் சாதம் இல்லை. பருப்பில்லை. சாம்பார், ரசம் இல்லை. அபர காரிய பட்சணங்களான அதிரசம், சுய்யம், சொஜ்ஜியப்பம், பருப்புப் பாயசம் உள்ளிட்ட எதுவும் இல்லை.\n‘சுவாமி, ஒரே ஒரு எள்ளுருண்டை மட்டும்…’\nஅங்கே நான் விழுந்தேன்.\nநான் இனிப்பு சாப்பிட்டுக்கொண்டிருந்த காலத்தில் மிகவும் விரும்பி உண்ட பொருள்களுள் ஒன்று எள்ளுருண்டை. அதைப் போன்றதொரு ருசி மிக்க பட்சணத்தை எதற்காக திவசச் சடங்குகளுக்கு மட்டும் என்று கட்டம் கட்டி ரிசர்வ் தொகுதியில் நிற்க வைத்தார்கள் என்று எப்போதும் நினைப்பேன்.\nபொதுவாகவே நமது வீடுகளில் மாதாந்திர மளிகைப் பட்டியலில் எள் இருக்காது. வாசமிகு கரங்கள் உடைய பெண்கள் மட்டும் மிளகாய்ப் பொடி அரைக்கும்போது பிடி எள்ளை வறுத்து அள்ளிக் கொட்டி அரைப்பார்கள். எள் சேர்த்த மிளகாய்ப் பொடியின் மணமும் ருசியும் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. மிளகாய்ப் பொடிக்கு சகாயம் செய்யப் போகும்போதே அத்தனை ருசிக்கிற வஸ்துவைத் தனியே ஒரு பட்சணமாக்கினால் சும்மாவா இருக்கும்?\nஎள்ளுருண்டை என்பது இனிப்புகளில் ஒரு தனி ரகம். எள்ளில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பதாலோ, அல்லது அதில் வைட்டமின் பி1, பி6, தையாமின், நியாஸின், கால்சியம், மக்னீசியம் போன்ற எக்கச்சக்க சத்து இருப்பதாலோ, மற்ற இனிப்புப் பலகாரங்களுக்குக் கூடாத ஒரு பிரத்தியேக ருசி எள்ளுருண்டைக்குச் சேரும்.\nவெள்ளை எள்ளைக் காட்டிலும் கறுப்பு எள்ளுக்குத்தான் ருசி அதிகம். கொஞ்சம் அலசி உலர்த்தி, கால்வாசி ஈரத்தோடே வாணலியில் போட்டு வறுத்து வெல்லப்பாகில் பிடித்து உருட்டினால் எள்ளுருண்டை தயார். கூடுதல் வாசனைக்குச் சற்று ஏலம். முடிந்தது.\nஒன்று தெரியுமா உங்களுக்கு? மூட்டுவலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ஒரு பிரமாதமான மருந்து. தினசரி இரண்டு உருண்டைகள் சாப்பிட்டு வந்தால் பெரிய நிவாரணம் இருக்கும். [ரத்த சர்க்கரை அளவு ஏறிவிட்டது என்பீரானால் நான் பொறுப்பல்ல.] மாதவிடாய் வருகிற நேரம் சில பெண்களுக்கு மார்பக வலி இருக்கும். உடம்பு திடீரென்று கனமாகிவிட்டாற்போலிருக்கும். தலைவலி, முதுகுப்பக்க வலி, வயிறு உப்புசம் என்று என்னவாவது ஓர் இம்சை இருக்கும். இதற்கெல்லாம் எள்ளுருண்டை ஒரு நல்ல மருந்து.\nமருந்தோ என்னமோ. எனக்கு அது விருந்து. அதனால்தான் பரிமாற வந்தவர் ‘ஒரே ஒரு எள்ளுருண்டை’ என்று எடுத்து நீட்டியபோது சரி என்று சொல்லிவிட்டேன்.\nஎள் ஒரு தானியம். எனவே எனக்கது கூடாது. அதனுள் இருக்கும் எண்ணெயும் எனக்குச் சேராது. அப்புறம் வெல்லம். என்னளவில் அந்த மூன்றுமே கெட்ட பொருள். இலையில் விழுந்த பிறகு என்னடா செய்யலாம் என்று சில வினாடிகள் தவித்தேன். இம்மாதிரி சமயங்களில்தான் சமயத்தைச் சகாயம் பண்ணிக்கொள்ள வேண்டும்.\nஎள் என்பது என்ன? விஷ்ணுவின் வியர்வையில் உதித்ததல்லவா அது? தவிரவும் லட்சுமி வாசம் புரிகிற தானியம். அந்தப் புனிதத்தைப் பேணத்தான் தினசரி சமையலில் அதைத் தவிர்க்கச் சொல்லி, இம்மாதிரியான தருணங்களுக்கு மட்டும் அனுமதிக்கிறார்கள். ஒன்று சாப்பிட்டால் ஒன்றும் தப்பில்லை என்று நினைத்துக்கொண்டு இரண்டு சாப்பிட்டேன். என்ன ருசி! எனக்குத் தெரிந்து ருசியை மூக்காலும் உணரவைக்கிற ஒரே தின்பண்டம் எள்ளுருண்டைதான். இதன் ருசியை இன்னுமே சற்றுக் கூட்ட முடியும். ஆனால் காரியச் சமையல்காரரிடம் அதைச் சொன்னால் அடிக்க வந்துவிடுவார்.\nஉருண்டைக்காக எள்ளை வறுக்கிறபோது கொஞ்சம் கொண்டைக்கடலை உடைத்துச் சேர்த்து வறுத்துப் பாருங்கள். பொட்டுக்கடலையும் போடலாம். ஆனால் கொண்டைக்கடலை அளவுக்கு ருசி கூடாது. அதே மாதிரி ஏலக்காயைப் பொடி செய்து சேர்க்கிறபோது கூடவே இரண்டு கிராம்பையும் இடித்துச் சேர்த்தால் சுவை அள்ளும்.\nஎன் தந்தை நாற்பது வருடங்களுக்கு மேலாக இனிப்பே தொடாமல் வாழ்ந்தவர். இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அவரது சர்க்கரை அளவு 600. அதை நினைத்துக்கொண்டுதான் அந்த எள்ளுருண்டையைச் சாப்பிட்டேன்.
ப்ளூ சட்டை மாறன் பட டைட்டிலை கேட்டு மிரண்ட சென்சார் அதிகாரிகள்.. படத்துக்கு ரெட் கார்டு போட்டுட்டாங்களாமே! - Cinemapettai\nப்ளூ சட்டை மாறன் பட டைட்டிலை கேட்டு மிரண்ட சென்சார் அதிகாரிகள்.. படத்துக்கு ரெட் கார்டு போட்டுட்டாங்களாமே!\nதமிழ் சினிமா உலகம் யாரைப் பார்த்து பயன்படுகிறதோ இல்லையோ பிரபல யூடியூப் சேனலில் புதிய படங்களுக்கு விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறன் என்பவரை கண்டு அஞ்சி கொண்டிருக்கிறது.\nமுன்னணி நடிகர்கள் முதல் சினிமா நடிகர்கள் வரை யாருக்கும் பாரபட்சம் பார்க்காமல் மொக்க படத்தில் நடித்திருந்தால் வச்சு செய்வதில் வல்லவர். ஒரு கட்டத்தில் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான அனைத்து படங்களுக்கும் நெகட்டிவ் விமர்சனங்களை அள்ளி கொடுத்தார்.\nஅப்போதுதான் ரசிகர்களுக்கு புரிந்தது, இவர் வேண்டுமென்றே பிரபல நடிகர்களின் படங்களை கேலி கிண்டல் செய்து விமர்சனம் செய்கிறார் என்று. அப்படிப்பட்ட ப்ளூ சட்டை மாறனுக்கு சிம்புவின் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு சவால் கொடுத்தார்.\nஅதாவது இதுவரை இல்லாத புது விதமான கதையில் ஒரு படத்தை எடுத்து கொடு எனவும், அந்த படத்தை தானே சொந்தமாக தயாரிப்பதாகவும் சவால் விட்டு அந்த படத்தை எடுத்துள்ளனர்.\nமேலும் அந்த படத்திற்கு ஆன்ட்டி இந்தியன் என பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் மொத்த படப்பிடிப்பும் முடிந்து சமீபத்தில் சென்சார் செய்ய அந்த படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஆனால் படத்தின் டைட்டிலில் மத்திய அரசை கிண்டல் செய்ததை விட படத்தில் மத்திய அரசை வச்சு செய்துள்ளாராம் ப்ளூ சட்டை மாறன். இதன் காரணமாக குறிப்பிட்ட ஒரு குரூப் அழுத்தம் கொடுத்த நிலையில் சென்சார்போர்டு அதிகாரிகள் அந்த படத்தை பேண் செய்து விட்டனர் என்பதே தற்போது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nRelated Topics:இன்றைய சினிமா செய்திகள், இன்றைய செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், தமிழ் சினிமா, தமிழ் செய்திகள், தமிழ் நடிகைகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள், ப்ளூ சட்டை மாறன், முக்கிய செய்திகள்
04.09.21 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban\nஇனிய குழந்தைகளே, இப்பொழுது இவ்வுலகம் ஒரு நம்பிக்கையற்ற விடயமாக உள்ளது. அனைவரும் மரணிக்கவுள்ளார்கள், இதனாலேயே அதனுடனான உங்கள் பற்று முடிவடைய வேண்டும். சதா என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள்!\nசேவைக்கான உற்சாகத்தைக் கொண்டிராமைக்;கான காரணம் என்ன?\n1.) உங்கள் நடத்தை நன்றாக இல்லாமலும், நீங்கள் தந்தையை நினைவுசெய்யாமலும் இருப்பின், உங்களால் சேவைக்கான உற்சாகத்தைக் கொண்டிருக்க முடியாது. நீ;ங்கள் தொடர்ந்தும் ஏதோவொரு தவறான செயலைச் செய்வதனால், சேவை செய்ய இயலாதுள்ளது. 2.) தந்தையின் முதலாவது வழிகாட்டல்: நீங்கள் மரணிக்கும்பொழுது, உங்களுக்கு உலகமே மரணிக்கிறது. நீங்கள் இவ்வழிகாட்டலைப் பயிற்சியில் இடுவதில்லை. புத்தியானது சரீரத்திலும், சரீர உறவினர்களிலும் சிக்கிக் கொண்டுள்ள காரணத்தினால், உங்களால் சேவை செய்ய இயலாதுள்ளது.\nநீங்கள் பக்திமார்க்கத்தின் பாடலைக் கேட்டீர்கள். மக்கள் “ஓம் நமசிவாய” எனக் கூறுகிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் சிவனின் பெயரைக் கூறுகிறார்கள். அவர்கள் தினமும் சிவாலயத்துக்குச் சென்று, ஒவ்வொரு வருடமும் உள்ள விழாக்களையெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதிமேன்மையான புண்ணிய மாதமும் (லீப் மாதம்), அதிமேன்மையான புண்ணிய வருடமும் உள்ளன. அவர்கள் தினமும் தொடர்ந்தும் “ஓம் நமசிவாய” எனக் கூறுகிறார்கள். பலர் சிவனை வழிபடுபவர்கள் ஆவர். சிவனே அதிமேன்மையான, கடவுளாகிய படைப்பவர் ஆவார். அவர்கள் “பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனே தூய்மையாக்குபவர்” எனக் கூறுகிறார்கள். அவர்கள் அவரைத் தினமும் பூஜிக்கிறார்கள். இதுவே அனைவரிலும் அதிமேன்மையானவர்கள் ஆகவுள்ள யுகமாகிய சங்கமயுகம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஒரு லௌகீகக் கல்வியிலிருந்து மக்கள் ஏதோவோர் அந்தஸ்தைக் கோருகிறார்கள். எவ்வாறு இலக்ஷ்மியும் நாராயணனும் தங்கள் அந்தஸ்தைக் கோரினார்கள்? எவ்வாறு அவர்கள் உலக அதிபதிகள் ஆகினார்கள்? எவரும் இதனை அறியார். அவர்கள் “ஓம் நமசிவாய, நீங்களே தாயும் தந்தையும்” எனக் கூறுகிறார்கள். அவர்கள் தினமும் இப்புகழைப் பாடுகிறார்கள், ஆனால் அவர் எப்பொழுது வந்து, தாயும் தந்தையுமாகி, எங்களுக்கு எங்களுடைய ஆஸ்தியைக் கொடுக்கிறார் என்பதை அவர்கள் அறிந்துகொள்வதில்லை. உலக மக்கள் எதனையும் அறியார் என்பதை நீங்கள் அறிவீர்கள். பக்திமார்க்கத்தில் அவர்கள் அதிகளவுக்குத் தடுமாறித் திரிகிறார்கள். அமர்நாத்துக்கு பல்வேறு குழுக்களில் மக்கள் செல்கிறார்கள். அவர்கள் அதிகளவுக்குத் தடுமாறித் திரிகிறார்கள்! நீங்கள் அவர்களுக்கு இதனைக் கூறியிருப்பின், அவர்கள் குழப்பம் அடைவார்கள். உங்களில் மிகச்சில குழந்தைகளுக்கே உள்ளுர இச்சந்தோஷம் உள்ளது. “பாபா, உங்களை இனங்கண்ட கணத்திலிருந்து என்னுடைய சந்தோஷத்துக்கு எல்லையேயில்லை” என அவர்கள் தொடர்ந்தும் எழுதுகிறார்கள். சிரமங்கள் உள்ளபொழுதும், நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது தந்தைக்கு உரியவர்கள் என்பதை நீங்கள் ஒருபொழுதும் மறக்கக் கூடாது. நீங்கள் சிவபாபாவை அடைந்து விட்டீர்கள் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள் என்பதனால், உங்கள் சந்தோஷத்துக்கு எல்லை இருக்கக் கூடாது. மாயை உங்களைத் திரும்பத் திரும்ப மறக்கச் செய்கிறாள். உங்களுக்கு நம்பிக்கை உள்ளது எனவும், நீங்கள் பாபாவை அறிவீர்கள் எனவும் நீங்கள் எழுதினாலும், நீங்கள் முன்னேறும்பொழுது பின்தங்கிவிடுகிறீர்கள். சிலர் ஆறு தொடக்கம் எட்டு மாதங்களுக்கு அல்லது இரண்டு தொடக்கம் மூன்று வருடங்களுக்கு வருகை தராதபொழுது, அவர்களின் புத்தியில் முழு நம்பிக்கை இல்லை என்பதையும், அவர்கள் முழுமையாகப் போதையடையவில்லை என்பதையும் பாபா புரிந்துகொள்கிறார். அவர் உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஆஸ்தியைத் தருகின்ற அத்தகையதோர் எல்லையற்ற தந்தை ஆவார். உங்களுக்கு இந்நம்பிக்கை இருந்திருப்பின், அப்பொழுது உங்களுக்குப் பெருமளவு சந்தோஷமும், போதையும் இருந்திருக்கும். ஓர் அரசர் ஒரு குழந்தையைத் தத்தெடுக்க விரும்பும்பொழுது, அரசர் தன்னைத் தத்தெடுக்க விரும்புகிறார் எனவும், தன்னை அவருடைய வாரிசாக்க விரும்புகிறார் எனவும் ஒரு பேச்சு இருப்பதை அக்குழந்தை அறியும்பொழுது, அக்குழந்தை அதிகளவு சந்தோஷம் அடைவார். அவர் உணர்வார்: நான் அரசரின் குழந்தையாக ஆகப்போகின்றேன். அல்லது ஒரு செல்வந்த நபரினால் ஓர் ஏழைக் குழந்தை தத்தெடுக்கப்பட்டால், அவர் அதிகளவு சந்தோஷத்தை உணர்கிறார். தான் இன்னாரினால் தத்தெடுக்கப்படப் போவதை அவர் உணர்ந்துகொள்ளும்பொழுது, ஏழையாக இருக்கின்ற அவரின் உணர்வு மறைந்து விடுகிறது. அது ஒரு பிறவிக்கான விடயமாகும். இங்கு, குழந்தைகளாகிய உங்களுக்கு 21 பிறவிகளுக்கான ஓர் ஆஸ்தியைக் கோருகின்ற சந்தோஷம் உள்ளது. எல்லையற்ற தந்தையை நினைவுசெய்து, ஏனையோருக்கும் பாதையைக் காண்பியுங்கள்: தூய்மையாக்குபவராகிய சிவபாபா வந்துவிட்டார். அவர் உங்களுடைய தந்தை என அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். “நான் உங்களுடைய எல்யைற்ற தந்தை” என மனிதர்களால் கூற முடியாது. தந்தை மாத்திரமே தான் 5000 வருடங்களுக்கு முன்னரும் வந்தார் என்பதை விளங்கப்படுத்துகிறார். அவர் அதே வார்த்தைகளைக் கூறினார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். தூய்மையாக்குபவராகிய தந்தையான என்னை நினைவுசெய்வதனால் மாத்திரமே நீங்கள் தூய்மையாகுவீர்கள். தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவதற்கான வேறு வழி கிடையாது. ஒரு தந்தை மாத்திரமே தூய்மையாக்குபவர் ஆவார். கிருஷ்ணர் கடவுள் என அழைக்கப்பட முடியாது. தூய்மையாக்குபவரே கீதையின் கடவுள், அவர் பிறப்பு, இறப்புக்கு அப்பாற்பட்டவர் ஆவார். நீங்கள் மகக்ளை எழுத வைக்க வேண்டிய முதலாவது விடயம் இதுவேயாகும். இது முக்கிய பிரமுகர்களினால் எழுதப்பட்டுள்ளதை மற்றவர்கள் பார்க்கும்பொழுது, இது சரியானதே என அவர்கள் உணர்வார்கள். இது ஒரு சாதாரண நபரினால் எழுதப்பட்டுள்ளதை அவர்கள் பார்த்தால், பிரம்மகுமாரிகள் அவரில் ஒரு மந்திரவித்தையைப் பிரயோகித்து விட்டார்கள் எனவும், இதனாலேயே அவர் அதனை எழுதினார் எனவும் அவர்கள் கூறுவார்கள். ஒரு முக்கிய பிரமுகரினால் அது எழுதப்பட்டிருப்பின், அவர்கள் அதனைக் கூறுவதில்லை. நீங்கள் எதனையாவது கூறும்பொழுது, உங்களுக்குச் சிறிய செல்வாக்கே உள்ளது எனவும், கடவுள் வந்து விட்டார் எனக் கூறிப் பெரிய விடயங்களைப் பேசுகிறீர்கள் என அவர்கள் கூறுவார்கள். கடவுள் வந்துவிட்டார் எனக் குழந்தைகளாகிய நீங்கள் வெறுமனே கூறக்கூடாது. எவரும் அதனைப் புரிந்துகொள்ள மாட்டார்கள், சிலர் உங்களைப் பார்த்துச் சிரிக்கவும் செய்வார்கள். இரு தந்தையர்கள் உள்ளார்கள் என விளங்கப்படுத்துங்கள். எல்லாவற்றுக்கும் முதலில், உடனடியாக அவர்களுக்குக் கடவுள் வந்து விட்டார் என நேரடியாகக் கூற வேண்டாம்., ஏனெனில், இந்நாட்களில், தங்களைக் கடவுள் என அழைக்கின்ற பலர் உலகில் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் தங்களைக் கடவுளின் அவதாரமாகக் கருதுகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு இரு தந்தையர்களின் இரகசியத்தைச் சாதுரியமாக விளங்கப்படுத்துங்கள். ஒருவர் எல்லைக்குட்பட்ட தந்தையும், மற்றவர் எல்லையற்ற தந்தையும் ஆவார். தந்தையின் பெயர் சிவன் ஆகும். அவரே ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார், ஆகவே நிச்சயமாக அவர் தனது குழந்தைகளுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுக்க வேண்டும். மக்கள் சிவனின் பிறந்ததினத்தைக் கெர்ணடாடுகிறார்கள். அவர் வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். ஆகவே, நரகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். அதன் அடையாளமே மகாபாரத யுத்தம் ஆகும். கடவுள் வந்து விட்டார் என நீங்கள் வெறுமனே கூறும்பொழுது, எவரும் எதனையும் புரிந்துகொள்வதில்லை. நீங்கள் தொடர்ந்தும் முரசுகளை அடிக்கிறீர்கள். இதனைப் போன்று தவறான வழியில் சேவை செய்வதனால், சேவை மேலும் அதிகம் பின்தங்கிவிடுகிறது. ஒருபுறத்தில், கடவுள் வந்துவிட்டார் எனவும், அவர் உங்களுக்குக் கற்பிக்கிறார் எனவும் நீங்கள் கூறுகிறீர்கள், பின்னர் நீங்கள் சென்று திருமணம் செய்கிறீர்கள்! “உங்களுக்கு என்ன நடந்தது? கடவுள் உங்களுக்குக் கற்பிக்கிறார் என நீங்கள் கூறினீர்கள்” என மக்கள் அப்பொழுது வினவுவார்கள். “நாங்கள் கேட்டதையே நாங்கள் உங்களுக்குக் கூறினோம்” என அவர்கள் அப்பொழுது பதிலளிப்பார்கள். என்னுடைய சொந்தக் குழந்தைகளிடமிருந்தே பல்வேறு தடைகள் வருகின்றன. உதாரணமாக, இந்துக்கள் தங்களைத் தாங்களே அறைந்து கொண்டார்கள். உண்மையில், அவர்கள் தேவ தர்மத்துக்கு உரியவர்கள், ஆனால் அவர்கள் தாங்கள் இந்துக்கள் எனக் கூறுகிறார்கள். அவர்கள் இவ்விதமாகத் தங்களைத் தாங்களே அறைந்து கொண்டார்கள். நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாக இருந்தபொழுது, உங்களுக்கு ஒரு மேன்மையான தர்மம் இருந்ததுடன் மேன்மையான செயல்களையும் செய்தீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால், நீங்கள் உங்கள் தர்மத்திலும், செயல்களிலும் சீரழிந்தவர்கள் ஆகினீர்கள். நாங்களே மாயையின் அசுர கட்டளைகளைப் பின்பற்றுவதனால், எங்கள் சொந்த தர்மத்தை அவதூறு செய்ய ஆரம்பிப்பவர்கள் ஆவோம். இதனாலேயே பாபா கூறினார்: அது அசுர சமுதாயம் ஆகும். இதுவே நான் அவர்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்ற தெய்வீக சமுதாயம் ஆகும்.. இப்பொழுது கலியுகமாகும். இந்த ஞானத்தைச் செவிமடுப்பவர்களே அசுரர்களிலிருந்து தேவர்கள் ஆகுகிறார்கள். இந்த ஞானம் தேவர்களாக ஆகுவதற்கானதாகும். ஐந்து விகாரங்களை வெல்வதனால், நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் மத்தியில் எந்த யுத்தமும் இருக்கவில்லை. அவர்கள் இத்தவறைச் செய்தார்கள், ஆனால் கடவுளைத் தங்கள் பக்கத்தில் வைத்துக் கொண்டவர்களே வெற்றியாளர்கள் ஆகினார்கள் என அவர்கள் காண்பித்துள்ளார்கள். அவர்கள் அதில் கிருஷ்ணரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள். உண்மையில், உங்கள் யுத்தம் மாயையுடனேயே உள்ளது. தந்தை இங்கமர்ந்திருந்து உங்களுக்குப் பல்வேறு விடயங்களை விளங்கப்படுத்துகிறார், ஆனால் சிலர் எதனையும் முற்றாகவே புரிந்துகொள்ளாத அளவுக்கு மிகவும் தமோபிரதானாக உள்ளார்கள். அவர்களால் தந்தையை நினைவுசெய்ய இயலாதுள்ளது. தங்கள் புத்தி தமோபிரதானாக உள்ளது எனவும், ஆகவே தங்களால் தந்தையை நினைவுசெய்ய இயலாதுள்ளது எனவும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், இதனாலேயே அவர்கள் தொடர்ந்தும் தவறான செயல்களைச் செய்கிறார்கள். மிகச்சிறந்த குழந்தைகள் கூடத் தந்தையை முற்றாகவே நினைவுசெய்வதில்லை. அவர்கள் முற்றாகவே தங்கள் நடத்தையைச் சீர்திருத்துவதில்லை! இதனாலேயே சேவைக்கான உற்சாகம் இருப்பதில்லை. தந்தை கூறுகிறார்: சரீரத்தையும், சரீர உறவினர்கள் அனைவரையும் கொல்லுங்கள்! அதாவது, அவர்கள் அனைவரையும் மறந்து விடுங்கள்! உண்மையில், “கொல்லுதல்” என்னும் வார்த்தை கூறப்படுவதில்லை. கூறப்பட்டுள்ளது: நீங்கள் மரணிக்கும்பொழுது, உங்களுக்கு உலகமே மரணிக்கிறது. தந்தை இங்கமர்ந்திருந்து இதனை விளங்கப்படுத்துகிறார். உங்கள் புத்தியிலிருந்து அவர்களை அகற்றுங்கள். இப்பொழுது நீங்கள் எனக்குரியவர்கள், அவர்கள் அனைவரையும் மறந்துவிடுங்கள். ஒரு தந்தையை நினைவுசெய்யுங்கள். ஒருவர் தனது நோயின் பொருட்டு, ஒரு நம்பிக்கையற்றவராக இருப்பின், அவர் தனது பற்று அனைத்தையும் துண்டிக்க வேண்டும். அப்பொழுது அவருக்கு இராமரை (கடவுள்) நினைவுசெய்யுமாறு கூறப்படுகிறது. தந்தையும் கூறுகிறார்: இவ்வுலகம் முழுமையாகவே ஒரு நம்பிக்கையற்ற விடயமாகும். உலகம் அழிக்கப்படவுள்ளது. அனைவரும் மரணிக்கவுள்ளார்கள், இதனாலேயே நீங்கள் அதனுடனான உங்கள் பற்றை அகற்ற வேண்டும். அவர்கள் தொடர்ந்தும் இராம நாமத்தைச் செபிக்கிறார்கள். இங்கு, அது ஒருவரைப் பற்றிய கேள்வியல்ல முழு உலகமும் அழிக்கப்படவுள்ளது. இதனாலேயே நான் உங்களுக்கு ஒரு மந்திரத்தையே கொடுக்கிறேன்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள்! அவர் தொடர்ந்தும் உங்களுக்குப் பல்வேறு வித்தியாசமான வழிகளில் விளங்கப்படுத்துகிறார். இப்பொழுது புண்ணிய மாதம் வந்துவிட்டது, ஆகவே நீங்கள் அதிமேன்மையானவர்கள் ஆகுகின்ற, அதிமங்களகரமான யுகத்தைப் பற்றி அவர் தொடர்ந்தும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் இவ்விடயங்களை விளங்கப்படுத்துவதில் மிகவும் திறமைசாலியாக இருக்க வேண்டும். உங்களால் தெய்வீகக் குணங்கள் நன்றாகக் கிரகிக்கப்பட வேண்டும். நீங்கள் எப்பாவச் செயல்களையும் செய்யக் கூடாது. எதையாவது அனுமதியின்றி எடுப்பது அல்லது எதனையாவது அனுமதியின்றி உண்பது என்பனவும் ஒரு மறைமுகமான பாவம் ஆகும். சட்டங்கள் கடுமையானவை ஆகும். ஒருவர் ஒரு பாவத்தைச் செய்து அதனை பாபாவுக்குக் கூறாமல் விட்டால், அப்பாவம் தொடர்ந்தும் அதிகரிக்கும். இங்கு, குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் புண்ணியாத்மாக்களாக ஆகவேண்டும். நான் புண்ணியாத்மாக்களை நேசிக்கிறேன், பாவாத்மாக்களை விரும்புவதில்லை. பக்தி மார்க்கத்திலும், சிறந்த செயல்களைச் செய்வதனால், அவர்கள் சிறந்த பலனைப் பெறுகிறார்கள் என்பதனை அவர்கள் அறிவார்கள். இதனாலேயே அவர்கள் தானமளித்துப் புண்ணியம் செய்வது போன்ற சிறந்த செயல்களைச் செய்கிறார்கள். இது ஒரு நாடகமாகும், இருப்பினும், அவர்கள் கடவுள் சிறந்த செயல்களின் சிறந்த பலனைத் தருகிறார் எனக் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் அமர்ந்திருந்து அவ்வியாபாரத்தைச் செய்வதில்லை. அவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாடகத்துக்கேற்ப, தந்தை நிச்சயமாக வரவேண்டும். தந்தை கூறுகிறார்: நான் வந்து அனைவருக்கும் பாதையைக் காண்பிக்க வேண்டும். இதில் கருணை என்பதற்கான கேள்வியே கிடையாது. “பாபா, எங்களுக்;கு உங்கள் ஆசீர்வாதங்கள் இருந்தால், நாங்கள் உங்களை ஒருபொழுதும் மறக்க மாட்டோம்” எனச் சிலர் எழுதுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் ஆசீர்வாதங்களைக் கொடுப்பதோ அல்லது அவ்விதமாகக் கருணை கொள்வதோ கிடையாது. இவ்விடயங்கள் பக்தி மார்க்கத்துக்கு உரியவையாகும். உங்களில் கருணை கொள்ளுங்கள்! தந்தையை நினைவுசெய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பக்தி மார்;க்கத்தின் விடயங்கள் ஞான மார்க்கத்தில் தொடர்வதில்லை. ஞான மார்க்கம் ஒரு கல்வியாகும். ஓர் ஆசிரியர் எவர் மீதும் கருணை கொள்ள மாட்டார். ஒவ்வொருவரும் கற்க வேண்டும். தந்தை ஸ்ரீமத்தைக் கொடுக்கிறார். ஆகவே, நீங்கள் அதனைப் பின்பற்ற வேண்டும், இல்லையா? எவ்வாறாயினும், உங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவதன் காரணமாக, நீங்கள் எச்சேவையையும் செய்வதில்லை. குழந்தைகள் முழுமையாகவே புண்ணியாத்மாக்களாக ஆகவேண்டும். சிறிதளவு பாவம் கூடச் செய்யப்படக்கூடாது. தாங்கள் செய்துள்ள பாவங்களைப் பற்றிச் சில குழந்தைகள் பேசுவதில்லை. தந்தை கூறுகிறார்: அவர்கள் ஒருபொழுதும் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர மாட்டார்கள். நினைவுகூரப்பட்டுள்ளது: மேலேறுபவர்கள் சுவர்க்கத்தின் இனிமையைச் சுவைப்பார்கள். அந்தஸ்து மிகவும் உயர்ந்தது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் வீழ்ந்தால், உங்களால் முற்றாகப் பயனில்லை. தூய்மையின்மையின் அகங்காரமே முதலாவது இலக்கமாகும். காமம், கோபம், பற்றும் குறைந்தவை அல்ல. பேராசையும், பற்றும் முழுமையாகவே அனைத்தையும் அழிக்கின்றன. உங்களுக்கு உங்கள் குழந்தைகள் மீது பற்று இருக்கும்பொழுது, நீங்கள் தொடர்ந்தும் அவர்களை நினைவுசெய்கிறீர்கள். ஆத்மா கூறுகிறார்: என்னுடையவர் ஒரு சிவபாபாவே அன்றி, எவருமல்லர். வேறு எவரும் நினைவுசெய்யப்படாதளவுக்கு அத்தகைய முயற்சியைச் செய்யுங்கள். அவ்விடயங்கள் அனைத்தும் முடிவடைய வேண்டும். விநாசம் நேர்முன்னிலையில் உள்ளது. அதன்பின்னர், உங்களால் உங்கள் ஆஸ்தியைக் கோர இயலாதிருக்கும். நீங்கள் ஏன் இவ்வுலகில் பற்று வைக்க வேண்டும்? இவ்விதமாக உங்களுடன் பேசுங்கள். உங்கள் புத்தியிலிருந்து முழு உலகையும் அகற்றுங்கள். அவை அனைத்தும் அழிக்கப்படவுள்ளன. அனைத்தையும் முடித்துவிடுமாறு அத்தகைய புயல்கள் வரும். எங்கேயாவது தீப்பற்றி, அங்கு கடுமையான காற்றும் இருப்பின், அனைத்தும் மிக விரைவில் அழிக்கப்படும். அரை மணித்தியாலத்தில், 100 தொடக்கம் 150 குடிசைகள் அழிக்கப்படுகின்றன. வைக்கோற்போர் தீ மூட்டப்படவுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். வேறு எவ்வாறு இம்மனிதர்கள் அனைவரும் மரணிப்பார்கள்? சிறந்த நடத்தையை உடைய சிறந்த குழந்தைகள் சிறந்த சேவையைச் செய்வார்கள். குழந்தைகளாகிய உங்களுக்குப் போதை இருக்க வேண்டும். இறுதியில் நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும்பொழுது, உங்களுக்கு முழுப் போதையும் இருக்கும். எவ்வாறாயினும், அதுவரை, நீங்கள் தொடர்ந்தும் முயற்சி செய்ய வேண்டும். மக்கள் பலரும் பெனாரஸில் உள்ள சிவாலயத்துக்குச் செல்கிறார்கள், ஏனெனில் அவர் அதிமேலான கடவுள் ஆவார். அங்கு அவர்கள் பெருமளவுக்குச் சிவனைப் பூஜிக்கிறார்கள். உங்களை அங்கு சென்று அவர்களுக்கு விளங்கப்படுத்துமாறு பாபா உங்களுக்குத் தொடர்ந்தும் கூறுகிறார்: கடவுள் சிவனே, இலக்ஷ்மி நாராயணனுக்கு இந்த ஆஸ்தியைக் கொடுக்கிறார். அவர்கள் சங்கமயுகத்திலேயே அவரிடமிருந்து தங்கள் ஆஸ்தியைப் பெற்றார்கள். நீங்கள் இதனை அவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, நீங்கள் பிரம்மாவையும் சரஸ்வதிiயும் பற்றிய விளக்கத்தையும் உள்ளடக்க வேண்டும். எவ்வாறு அவர்கள் தங்கள் இராச்சியத்தைப் பெற்றார்கள் எனப் படங்களைப் பயன்படுத்தி உங்களால் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்த முடியும். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியத்தில் பக்திமார்க்கம் இருக்கவில்லை. பக்தி அநாதியாகத் தொடர்ந்து வருகிறது என அவர்கள் கூறுகிறார்கள். நீங்கள் இப்பொழுது போதையடையுமாறு அதிகளவு ஞானத்தைப் பெற்று விட்டீர்கள்: 21 பிறவிகளுக்கான எங்கள் இராச்சிய பாக்கியத்தை எங்களுக்குக் கொடுப்பதற்குக் கடவுள் கற்பிக்கிறார். நீங்கள் மாணவர்கள் ஆவீர்கள். நம்பிக்கையுடையவர்கள் அதிசயிப்பார்கள்: “யாரிடமிருந்து பிரம்மாகுமாரிகள் அனைத்தையும் செவிமடுக்கிறார்களோ, அவர் என்னவாக இருப்பார்? அவரைப் போன்று இருப்பதற்கு எங்களில் நம்பிக்கையைப் பதிய வைப்பவர் யார்?” முதலில் அவர்கள் அத்தகையதொரு தந்தையை வந்து சந்திப்பதற்கு விரும்புவார்கள். அவர்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படும்வரை, அவர்களால் முன்னேற முடியாது. நம்பிக்கையுடையவர்கள் விரைவாக ஓடுவார்கள். “நாங்கள் அத்தகையதொரு தந்தையைச் சென்று சந்திப்போம். நாங்கள் அவரை விட மாட்டோம்.. பாபா, நான் இப்பொழுது உங்களுக்கு உரியவன் ஆவேன். இப்பொழுது நான் வேறெங்கும் செல்ல மாட்டேன்”. ஒரு பாடல் உள்ளது: நீங்கள் என்னை எதிர்த்தாலும் அல்லது நீங்கள் என்னை நிராகரித்தாலும் உங்களைப் பித்துப் பிடித்து நேசிக்கும் இவர் உங்களின் வாசற்கதவை விட்டு நீங்க மாட்டார். அனைவருமே இங்கு தங்க முடியும் என்றில்லை. நீங்கள் சேவைக்கு அனுப்பப்பட வேண்டும். வீட்டில் குடும்பத்துடன் வாழும்பொழுது, ஒரு தாமரையைப் போன்று இருங்கள். சிலர் இதனை எழுத்தில் எழுதுகிறார்கள், ஆனால் அவர்கள் வெளியே செல்லும்பொழுது அவர்கள் மாயையின் சுழலில் அகப்பட்டுக் கொள்கிறார்கள். மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள்! மாயை பல தடைகளை விளைவிக்கிறாள். அதத்கையதொரு சிறிய தீபத்துக்கு மாயையின் பல புயல்கள் உள்ளன! பாபா வந்து உங்களுக்கு இப்பாடல்களின் சாராம்சத்தை விளங்கப்படுத்துகிறார். இது உங்களுடைய அதிமங்களகரமான சங்கமயுகமாகும். பக்தர்களின் புண்ணிய மாதம் கடந்து விட்டது. தந்தை கூறுகிறார்: நான் தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதற்கு இச்சங்கமயுகத்தில் மாத்திரமே வருகிறேன். இவ்விளக்கம் மிகவும் சிறந்ததாகும்! நாளுக்கு நாள், சேவை முன்னேறுவதற்காக, புதிய வழிமுறைகள் தொடர்ந்தும் வெளிப்படும். பல சிறந்த படங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்படும். கூறப்பட்டுள்ளது: ஒரு பணிக்கு நீண்டகாலம் எடுத்தாலும், அது நன்றாக நிறைவேற்றப்படும். எவரும் உடனடியாகவே புரிந்துகொள்ளுமாறு நீங்கள் முன்னரே ஆயத்தமாகவுள்ள (சநயனல-அயனந) விடயங்களைப் பெறுகிறீர்கள். ஏணியின் படம் மிகவும்; சிறந்ததாகும். தாங்கள் தூய்மையானவர்கள் என இந்நேரத்தில் எவராலும் கூற முடியாது. சத்தியயுகம் மாத்திரமே தூய உலகம் என அழைக்கப்படுகிறது. இலக்ஷ்மியும் நாராயணனுமே தூய உலகின் அதிபதிகள் ஆவார்கள். நல்லது.\nஇனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தந்தை தாயாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.\n1. சிறிதளவேனும் சூட்சுமமான அல்லது வெளிப்படையான பாவம் செய்யப்படாதிருப்பதில் பெருமளவு கவனத்தைச் செலுத்துங்கள். எதனையும் இரகசியமாக எடுக்க வேண்டாம். பேராசையையும், பற்றையும் பற்றி அவதானமாக இருங்கள்.\n2. உங்களை முழுமையாகவே முடித்துவிடுகின்ற தூய்மையற்ற அகங்காரத்தைத் துறவுங்கள். வேறு எவரையுமன்றி, ஒரு தந்தையை நினைவுசெய்வதற்கு முயற்சி செய்யுங்கள்.\nஎண்ணங்களின் எந்த சூட்சும பந்தனத்திலிருந்தும் விடுபட்டிருப்பதன் மூலம் பந்தனத்திலிருந்து விடுபட்டு, உயர்ந்ததோர் ஸ்திதியை அனுபவம் செய்வீர்களாக.\nஎந்தளவிற்கு பந்தனத்திலிருந்து குழந்தைகள் விடுபட்டிருக்கின்றார்களோ, அந்தளவிற்கு அவர்களால் உயர்ந்ததோர் அந்தஸ்த்தில் ஸ்திரமாக நிலைத்திருக்க முடியும். ஆகையால் சோதித்துப் பாருங்கள்: எனது எண்ணங்களிலோ, வார்த்தைகளிலோ அல்லது செயல்களிலோ ஏதேனும் இழை இன்னமும் சூட்சும வடிவிலேனும் பற்றிக் கொண்டுள்ளதா? ஒரேயொரு தந்தையை தவிர வேறு எவரையும் நினைவு செய்ய வேண்டாம். உங்கள் சரீரத்தை நினைவு செய்தாலேனும், அப்பொழுது உங்கள் சரீரத்துடன், சரீரத்தின் உங்கள் உறவினர்களையும், உங்கள் பௌதீக உடமைகளையும் அதன் பின்னர் உலகம் என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக பின்தொடரும். நான் பந்தனத்திலிருந்து விடுபட்டிருக்கின்றேன். இந்த ஆசீர்வாதங்களை உங்கள் விழிப்புணர்வில் வைத்திருந்து முழு உலகையும் மாயையின் பொறியிலிருந்து விடுவிக்கின்ற சேவையை செய்யுங்கள்.\nஆத்ம உணர்வு ஸ்திதியினால், தமது சரீரத்தினதும் மனதினதும் பிரச்சினைகளை முடிப்பவர்களால் அசைக்க முடியாதவர்களாக இருக்க முடியும்.
பி.எட்., எம்.எட். படிப்புகளை இனி இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும்! - தமிழக அரசு புதிய உத்தரவு | Hereafter B.ed, M.ed Courses will be2Years - Tamil Careerindia\n» பி.எட்., எம்.எட். படிப்புகளை இனி இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும்! - தமிழக அரசு புதிய உத்தரவு\nPublished: Wednesday, September 9, 2015, 14:39 [IST]\nசென்னை: பி.எட், எம்.எட். படிப்புகள் படிப்புக் காலம் இரண்டாண்டுகளாக மாற்றப்படுகிறது என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதுநாள் வரை பி.எட், எம்.எட். படிப்புக் காலம் ஓராண்டாக இருந்து வந்தது. இந்த நிலையில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய (2014) வழிகாட்டுதல்படி, பி.எட், எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இந்தக் கல்வியாண்டு (2015-16) முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து பி.எட். படிப்புகளுக்கான சேர கவுன்சிலிங் நடைபெறவுள்ளது. வரும் 28-ம் தேதி தொடங்கி6நாட்கள் வரை கவுன்சிலிங் நடைபெறும்.\nமுன்னதாக இரண்டாண்டாக மாற்றும் என்சிடிஇ-யின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் பி.எட் படிப்பை இரண்டாண்டாக மாற்றுவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை.\nஆனாலும் தமிழகத்திலுள்ள சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் இந்தப் புதிய வழிகாட்டுதலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.\nஇந்த நிலையில் தமிழக அரசு பி.எட் படிப்புக்கான காலத்தை இரண்டாண்டு என மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நடப்பாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டா, இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பத்துக்கு முடிவு ஏற்பட்டுள்ளது.\nஇதைத் தொடர்ந்து சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கை நடத்தவுள்ளது.\nபி.எட். படிப்புக்கான கவுன்சிலிங் வரும் 28-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதல் நாள் காலையில் மாற்றுத் திறனாளிகளுக்கும், மதியம் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும்.\nசெப்டம்பர் 29-ஆம் தேதி கணிதப் பாடப் பிரிவினருக்கும், 30-ஆம் தேதி இயற்பியல், வேதியியல் பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும்.\nஅக்டோபர் 1-ஆம் தேதி தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3-ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவினருக்கும், 5-ஆம் தேதி காலையில் வரலாறு, புவியியல் வணிகவியல் பிரிவினருக்கும், மதியத்தில் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும்.\nRead more about: education, bed, med, courses, students, counselling, கல்வி, பிஎட், எம்எட், மாணவர்கள், கவுன்சிலிங்\nTamilnadu Government has annpunced that B.ed, M.ed Course period will be2years and the Counselling for this courses will be started by september 28.\nStory first published: Wednesday, September 9, 2015, 14:39 [IST]
வலைச்சரம்: போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் தங்கமணிக்கே !\nபோற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் தங்கமணிக்கே !\nஇங்கு ஒரு வார காலம் ஆசிரியராக பொறுப்பேற்பதில் மிகவும் மகிழ்ச்சி. வாய்ப்பு கிடைக்க காரணமானவர்களுக்கு மிக்க நன்றிகள். ஆரம்ப காலங்களில் வலைப்பூவில் வெறும் வாசகனாகவே இருந்தேன். இட்லி-வடையைத் தான் நான் முதன்முதலில் சுவைத்துவந்தேன். பிறகுதான் தெரிந்தது, மற்ற கடைகளிலும் வடை கிடைக்குமென்பது.\nநானும், எனது வலைமனையும் - ஓர் அறிமுகம்\nவலைமனையில் நாமும் எழுதலாம் என்பது தெரியாத போது, பெயர் சொல்ல விருப்பமில்லாதவரின் தூண்டுதலில் சொந்தமா கடைய விரிச்சேன். கடை ரெடி சரக்கு வேணுமே ? நாள் பூரா ஆபீசுல வேலை செஞ்ச களைப்போட வீட்டுக்கு போனேன். சாப்பிடலாம்னு தங்கமணிய கூப்புட்டா, "முன்னாலேயே வந்திருக்கப்டாதா.. இன்னும் அரை மணி கழிச்சுத்தான் சாப்பாடு", தங்க்ஸின் பதில். ஒம்பது மணி மெகாத் தொடராம் டிவில. எனக்கு வந்த கடுப்புல கணணிய ஓபன் பண்ணி எழுதினேன் மொதோ மோதலா. அதாவது, நா வலைமனைல எழுத ஆரம்பிச்சதுக்கு தங்கமணியும் ஒரு காரணம், அதான் தலைப்புலயே மரியாதலாம். அந்த போஸ்டுக்கே, "இப்படியும் முதல் இடுகை இடலாமா - பலே பலே, நல்வாழ்த்துகள்", கமெண்டு போட்டு என்னைய பாராட்டுனது, 'அன்பின் சீனா' சார்தான்.\nஅப்புறம் ரெண்டு மாசத்துக்கு சொல்லுறாமாதிரி எதுவும் எழுதலை (சரக்கு இல்லை). குடும்பத்தோட பாத்துட்டு வந்த, அம்சமான 'சர்க்கஸ்' கலைச்சேவைய பாராட்டும் இந்தப் பதிவு விளைந்தது. டீசென்ட்டா எதைவேணாலும் வலைமனைல சொல்லலாம்னு தெரிஞ்சுகிட்டேன். அதனாலதான் இந்த மாதிரி பட்டாம் பூச்சி மேட்டர், எப்பவோ கேட்ட, படிச்ச, பாத்த மேட்டர்லாம், போட்டேன். படப்புதிர் போட எனக்கா ஒரு ஐடியா வந்துச்சு, போட்டேன். அப்புறம் இதே மாதிரி வசந்த், அருண்லாம் போடுறாங்கன்னு தெரிஞ்சதுனால நா விட்டுட்டேன். (ஹி.. ஹி.. அவுங்கள அளவுக்கு நம்மளால முடியலை..).\n"இதே பாணில எழுதினா சரக்குல வீரியம் இருக்காது, மாதவா! மாத்தி யோசின்னு" மனசு சொன்னத இந்த மாதிரிலாம் எழுதினேன் , ப(ழ)டம் வரைய சொல்லிக் கொடுத்தேன்.\nபிரபல பதிவர் டோண்டு ராகவன் தனியார் தொலைக்காட்சியில் ஒரு பேட்டில வந்தாங்க. நம்மளையும் பேட்டி எடுக்க வந்தா எப்படி இருக்கும்னு நான் கற்பனை பண்ணிப் பாத்தேன், அதப் படிச்சுப் பாருங்க.\nகல்விக்கும் கற்பித்தவர்களுக்கும் மரியாதை செய்யறமாதிரி ஒரு பதிவும் குழந்தைகள் தினத்துக்கு ஒரு பதிவும் போட்டேன். 'ஸ்வீட்டா' இருந்திச்சி. குழந்தைகளின் பேச்சே தனிதான். அதனாலதான் என்னோட மூனு வயசுப் பொண்ணு சொன்னத எந்திரன் சினிமா விமர்சனமா பதிவிட்டேன்.\nகதையே எழுதாத என்னை சவால் விட்டு எழுத வச்சாங்க நம்ம பரிசல்கார அண்ணாச்சி. காமெடின்னு நெனைச்சிகிட்டு என்னத்தையோ எழுதி அனுப்பினேன் அந்த சிறுகதை போட்டிக்கு.\nஒரு வழியா நூறாவதா இப்படி எழுதினத அருமை அண்ணன் கே.ஜி.கௌதமன், "உங்களுடைய ஒவ்வொரு பதிவிலும், ஏதாவது புதிய விஷயம் அல்லது புதிய கோணம் இருக்கும். அது உங்கள் படைப்பாற்றலுக்கு ஓர் எடுத்துக்காட்டு... .......பதிவுலகில், மேன் மேலும் புகழ் பெற எங்கள் வாழ்த்துக்கள்", என்று பாராட்டியது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.\nஎன்னைப் பற்றிய அறிமுகம் போதுமென நினைக்கிறேன். வரும் நாட்களில், நான் படித்த பதிவுகளை எனக்கு தோன்றியபடி வகைபடுத்தி அறிமுகம் செய்கிறேன். ஒவ்வொருநாளும், எனது பார்வையில் வித்தியாசமான ஒரு பதிவர் அல்லது பதிவை கடைசியாக சொல்லவிருக்கிறேன்.\nஇன்றைய அறிமுகம் - 'வித்தியாசமான பதிவுகள்', என் பார்வைப் படி.\nஇந்த உத்தமரு பண்ண 'திரை விமர்சனம்' மற்றும் இருபதாயிரம் ரூபாயை மாசம் மிச்சப் படுத்துவது எப்படின்னு இந்த கோகுல வாசரு, தந்த ஐடியா.\nஇந்த ரெண்டு பதிவுகளுக்கும் பக்கத்துல உள்ள படத்துக்கும் உள்ள ஒற்றுமை என்ன ? நாளை சொல்லுகிறேன்..\nடிஸ்கி 1 : வள வள ஆசாமி, நா. பீ கேர்புல் ! (என்னையச் சொன்னேன்)\nடிஸ்கி2: ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கி படிக்க வேண்டிய அவசியம் இல்லை. பாதை மாறி போயிட்டா கம்பெனி பொறுப்பல்ல.\nPosted by Madhavan Srinivasagopalan at 7:39 AM\nஎஸ்.கே Mon Dec 13, 07:51:00 AM\nஎஸ்.கே Mon Dec 13, 07:56:00 AM\nஅந்த படத்துக்கும் இரண்டு பதிவுகளுக்கும் என்ன சம்பந்தம்?\nஒருவேளை அந்த மாடு கன்னுகுட்டியை நக்கிறாப்பில நீங்களும்.......\nஅந்த பதிவுகளை அன்பா பாசமா படிச்சீங்களோ!\nபெசொவி Mon Dec 13, 08:04:00 AM\nஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்!\n//இந்த ரெண்டு பதிவுகளுக்கும் பக்கத்துல உள்ள படத்துக்கும் உள்ள ஒற்றுமை என்ன ? நாளை சொல்லுகிறேன்.. //\nபெசொவி Mon Dec 13, 08:07:00 AM\nமிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல சிந்தனா சக்தி இருக்கிறது.\nஜெயந்த் கிருஷ்ணா Mon Dec 13, 08:07:00 AM\nவாங்க.. வாங்க.. வரவேற்கிறோம்..\nஜெயந்த் கிருஷ்ணா Mon Dec 13, 08:08:00 AM\nபோயும் போயும் வலைச்சரத்திலையும் டிஸ்கி யா...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Mon Dec 13, 08:09:00 AM\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. நல்லவேளை நான் எந்த லிங்கையும் படிக்கலை\nசௌந்தர் Mon Dec 13, 08:57:00 AM\nவணக்கம் மாதவன் சார் வருக வருக வரசரத்தில் சரமாக வெடிக்க...வருக வருக வரவேற்கிறோம்\nவெங்கட் Mon Dec 13, 09:14:00 AM\nவலைசரத்தில் டிஸ்கி போட்றது\nஎன்ன பெரிய சாதனையா..?!!\nடிஸ்கி : நாங்கல்லாம் வலைசர Comment-லயே\nடிஸ்கி போடுற ஆளுங்க..!!\nTERROR-PANDIYAN(VAS) Mon Dec 13, 09:34:00 AM\nஅற்புதமான படைப்பு... வருங்கால சந்ததிகள் இதை பேசட்டும்... :))\nஇப்படிக்கு பதிவைன் முதல் பத்தி மட்டும் படித்து கமெண்ட் போடுவோர் சங்கம்.. :))\nஇம்சைஅரசன் பாபு.. Mon Dec 13, 09:51:00 AM\nஅற்புதமான படைப்புகள் மாதவன் .....\nஇப்படிக்கு கமெண்ட்ஸ் பார்த்து கமெண்ட்ஸ் போடும் சங்கம்\nமாலுமி Mon Dec 13, 09:57:00 AM\nவாழ்த்துக்கள் வளர்க உங்கள் பணி\nஆதி மனிதன் Mon Dec 13, 10:03:00 AM\nகலக்கல் ஆரம்பம் ஆயிடுச்சு. காத்திருக்கிறோம் மேலும் பல புதிர்களுக்கு.\nவெங்கட் Mon Dec 13, 10:09:00 AM\nஅற்புதமான படைப்புகள் மாதவன்..\nஇப்படிக்கு கமெண்ட்சை Copy & Paste\nபன்னிக்குட்டி ராம்சாமி Mon Dec 13, 10:30:00 AM\nகாணாப்போயிடுவேன்னு பயமா இருந்ததுனால, நீங்க சொன்ன மாதிரியே எந்த இணைப்புயும் சொடுக்கிப் படிக்கல....!\nChitra Mon Dec 13, 10:56:00 AM\nஹா,ஹா,ஹா.... ஆரம்பமே கலக்கலாக இருக்குதுங்க... வாழ்த்துக்கள்!\nபெசொவி Mon Dec 13, 11:09:00 AM\n//இப்படிக்கு பதிவைன் முதல் பத்தி மட்டும் படித்து கமெண்ட் போடுவோர் சங்கம்..//\n(சங்கத்துக்கு பங்கம் சேர்க்கும் சங்கம்)\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:16:00 AM\n@ எஸ்.கே //ஒருவேளை அந்த மாடு கன்னுகுட்டியை நக்கிறாப்பில நீங்களும்.......\nஅந்த பதிவுகளை அன்பா பாசமா படிச்சீங்களோ! //\nம்ம்ம் .... நீங்கள் சொன்னதுல க்ளு இருக்கு.. விடை இல்லை..\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:18:00 AM\n//பெயர் சொல்ல விருப்பமில்லை said... "ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்! மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நல்ல சிந்தனா சக்தி இருக்கிறது."//\nஏணி போட்டு முயற்சி பண்ணுங்க.. கெடைச்சிடும்..\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:27:00 AM\n"வாங்க.. வாங்க.. வரவேற்கிறோம்.." //\n----- > நன்றி\n"போயும் போயும் வலைச்சரத்திலையும் டிஸ்கி யா... "\n"டிஸ்கி 1 - வள வள ஆசாமி, நா. "\nஹி.. ஹீ.. அது வந்து.. அடுத்தவங்க நம்மள கிண்டல் பண்ணுறதுக்கு முன்னமே, நாமளா பண்ணிக்கலாமுன்னுதான்....\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:30:00 AM\n//ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... "உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை." //\nகொடுத்த காசுக்கு, மேல நா quote பண்ணத மட்டும் சொன்னாப் போதும்.. (பப்ளிக்... பப்ளிக்....)\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:33:00 AM\n// சௌந்தர் said..."வணக்கம் மாதவன் சார் வருக வருக வரசரத்தில் சரமாக வெடிக்க...வருக வருக வரவேற்கிறோம்" //\nவரவேற்பிற்கு மிகுந்த நன்றி..\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:35:00 AM\n// வெங்கட் said..." வலைசரத்தில் டிஸ்கி போட்றது என்ன பெரிய சாதனையா..?!!\nடிஸ்கி : நாங்கல்லாம் வலைசர Comment-லயே டிஸ்கி போடுற ஆளுங்க..!!" //\nசத்தமா.. 'வெறும்பய' காதுல இது கேக்குறமாதிரி 'இன்னொரு முறை சொல்லுங்க..'\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:37:00 AM\n//TERROR-PANDIYAN(VAS) said..." அற்புதமான படைப்பு... வருங்கால சந்ததிகள் இதை பேசட்டும்... :)) "\n--> அப்படியே ஆகட்டும்\n"இப்படிக்கு பதிவைன் முதல் பத்தி மட்டும் படித்து கமெண்ட் போடுவோர் சங்கம்.. :))"\n--> தலைப்ப மட்டும் படிச்சுட்டு ஓடுறவங்களுக்கு, நீங்கள் எவ்வளவோ பெட்டெர் தல..\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:39:00 AM\n"அற்புதமான படைப்புகள் மாதவன் ..... இப்படிக்கு கமெண்ட்ஸ் பார்த்து கமெண்ட்ஸ் போடும் சங்கம்"//\n'கும்மி'ல இதுலாம் சாதாரணமப்பா..\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:40:00 AM\n" வாழ்த்துக்கள் வளர்க உங்கள் பணி "\nநன்றி உங்கள் வாழ்த்துக்களுக்கு , நண்பரே\nசெல்வா Mon Dec 13, 11:41:00 AM\nநல்ல கனி நல்ல கனி..!!\nஅட ச்சே ., நல்ல அறிமுகம் அண்ணா .!!\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:41:00 AM\n//ஆதி மனிதன் said... " கலக்கல் ஆரம்பம் ஆயிடுச்சு. காத்திருக்கிறோம் மேலும் பல புதிர்களுக்கு." //\n( தினமும் )வாங்க ஆதி..\nமுடிஞ்சவரை சுவையா சொல்ல முயற்சி பண்ணுறேன்.\nசெல்வா Mon Dec 13, 11:42:00 AM\nஉங்களைப் பத்தி ரொம்ப பெரிசாவே அறிமுகம் பண்ணிட்டீங்க ..!!\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:43:00 AM\n//வெங்கட் said "இப்படிக்கு கமெண்ட்சை Copy & Paste\nஎல்.கே.ஜி லேருந்து ஆரம்பிச்ச பழக்கமாச்சே.. விட்டுடுவோமா என்ன ?\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:45:00 AM\n"காணாப்போயிடுவேன்னு பயமா இருந்ததுனால, நீங்க சொன்ன மாதிரியே எந்த இணைப்புயும் சொடுக்கிப் படிக்கல....! "\nநீங்களாவது, நா சொன்னத கேட்டீங்களே.. அதுவே எனக்கு வெற்றிதான்..\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:46:00 AM\n// Chitra said..." ஹா,ஹா,ஹா.... ஆரம்பமே கலக்கலாக இருக்குதுங்க... வாழ்த்துக்கள்! "\nஹி.. ஹி.. ஏதோ என்னால முடிஞ்சா கலைப் பணி..\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:51:00 AM\n// எத்தனை எத்தனை\n--- > அரசியல் ??\n// அதில்தான் எத்தனை\n--> சிங்கம் எப்பவுமே சிங்கிளாத் தான வரும்..... சேர்ந்து வர ஆரம்பிடிச்சா ? என்னதான் இருந்தாலும் 'சிங்கம்டா.....'\nதொரை.. ரொம்ப காஸ்ட்லியாப் பேசுது..\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:52:00 AM\n//கோமாளி செல்வா said..." நல்ல கனி நல்ல கனி..!!\nஅட ச்சே ., நல்ல அறிமுகம் அண்ணா .!! "\nவடையதான தேடுவ.. 'கனி'யா ?\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 11:54:00 AM\nஉங்களைப் பத்தி ரொம்ப பெரிசாவே அறிமுகம் பண்ணிட்டீங்க ..!! //\n--> டிஸ்கி - 1 படிச்சீங்களா இல்லையா ?\n(வெறும்பயல.. . பாத்தீங்களா என்னத்துக்கு டிச்கிலாம் போட வேண்டி இருக்குனு.. )\nசெல்வா Mon Dec 13, 12:06:00 PM\n//வெறும்பயல.. . பாத்தீங்களா என்னத்துக்கு டிச்கிலாம் போட வேண்டி இருக்குனு.. )\nஸ்ரீராம். Mon Dec 13, 12:14:00 PM\nஆரம்பிச்சாச்சா...பலே...போற வேகத்தைப் பார்த்தா ஒரு நாளைக்கு ஒரு பதிவுதானான்னு கேப்பீங்க போலிருக்கே... இன்னொரு பதிவும் இன்னைக்கே வந்துடுமோ...! கலக்குங்க மாதவன்..\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 12:24:00 PM\n//ஸ்ரீராம். said... "ஆரம்பிச்சாச்சா...பலே...போற வேகத்தைப் பார்த்தா ஒரு நாளைக்கு ஒரு பதிவுதானான்னு கேப்பீங்க போலிருக்கே... இன்னொரு பதிவும் இன்னைக்கே வந்துடுமோ...! கலக்குங்க மாதவன்.. "//\nசரியாச் சொல்லனும்னா, ஏழு நாள்ல ஏழு இடுகையாவது வரணும்..\nஇது குறைந்த பட்ஷம். அதிக பட்ஷம், எண்களைப் போன்றது (கணக்கே இல்லை)\nஇருந்தாலும், படிக்கறவங்கள நெனச்சிதான்.. ஒன்னோ ரெண்டோ, தினமும் போடணும்..\nஅளவுக்கு மிஞ்சினா... என்ன ஆகும்..?\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Mon Dec 13, 12:46:00 PM\nகௌதமன் Mon Dec 13, 12:51:00 PM\nஎன்னைக் குறிப்பிட்டதற்கும், 'எங்களு'க்கு சுட்டி கொடுத்ததற்கும் நன்றிகள் பல. வலைச் சரத்தில் ஏழு நாட்களும் கலக்குங்க. வாழ்த்துக்கள்.\nஅருண் பிரசாத் Mon Dec 13, 01:05:00 PM\nநல்ல துவக்கம்... நல்ல அறிமுகங்கள்.... (இப்படித்தான போடனும்... சொல்லுங்கப்பா)\nஅப்புறம், படத்துக்கான் விடை “நக்கல்”\nஅனு Mon Dec 13, 01:31:00 PM\nஇதுல almost எல்லா பதிவும் ஏற்கனவே எனக்கு அறிமுகமான பதிவுன்றதால, இப்போதைக்கு "வருக வருக"ன்னு வாழ்த்து மட்டும் சொல்லிக்கிறேன்.\nஎங்க ஆபிஸ்ல அந்த படம் block ஆகியிருக்கு. அதனால, புதிருக்கு ஆன்ஸர் கண்டுபிடிக்க முடியல. எஸ் கே & அருண் சொல்றத வச்சு பாத்தா, இந்த ரெண்டு போஸ்ட்டும் நக்கல் போஸ்ட்டுன்னு சொல்ல வர்றீங்கன்னு நினைக்கிறேன்..\nNaSo Mon Dec 13, 01:45:00 PM\nவலைச்சரத்துக்கு வருக! வருக!! என உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nNaSo Mon Dec 13, 01:46:00 PM\n//போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் தங்கமணிக்கே !//\nNaSo Mon Dec 13, 01:47:00 PM\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. நல்லவேளை நான் எந்த லிங்கையும் படிக்கலை//\nஏன்னா படிக்கத் தெரியாது.\nNaSo Mon Dec 13, 01:48:00 PM\nஇப்படிக்கு பதிவைன் முதல் பத்தி மட்டும் படித்து கமெண்ட் போடுவோர் சங்கம்.. :))//\nஇதை நான் வழிமொழிகிறேன். இப்படிக்கு பதிவை படிக்காமல் கமெண்ட் போடும் பதிவரைத் தொடருவோர் சங்கம்.\nNaSo Mon Dec 13, 01:49:00 PM\n(சங்கத்துக்கு பங்கம் சேர்க்கும் சங்கம்)//\nசங்கத்துக்கு பங்கம் சேர்க்கும் சங்கதுக்கு பங்கம் வரவழைக்கும் சங்கம்.\nஅனு Mon Dec 13, 01:52:00 PM\nகோமதி அரசு Mon Dec 13, 02:16:00 PM\nவலைச்சர ஆசிரியர் மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!\nGayathri Mon Dec 13, 05:22:00 PM\nவருக வருக மாதவன் சார், ஆரம்பமே நல்லா இருக்கே. அதுலயும் இப்படி படத்த பார்த்து கேஸ் பண்ற போட்டிவேறையா கலக்குக\nMadhavan Srinivasagopalan Mon Dec 13, 05:59:00 PM\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Mon Dec 13, 10:22:00 PM\nநகைச்சுவையான சுய அறிமுகம்.\nகலகலன்னு இருக்கு படிக்க.\nAnonymous Mon Dec 13, 10:53:00 PM\nசில நாட்களா கோமாளிகள் கையில் வலைச்சரம் சிக்கிவிட்டது போலருக்கே.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) Tue Dec 14, 08:04:00 AM\nசில நாட்களா கோமாளிகள் கையில் வலைச்சரம் சிக்கிவிட்டது போலருக்கே.////\nஎலேய் உனக்கு உன் பேரை சொல்றதுக்கே துப்பில்லை. நீ பேசாத.\nபெசொவி Tue Dec 14, 08:09:00 AM\nஒரு வேளை, கோமாளிக்கும் ஜாலி மேனுக்கும் வித்தியாசம் தெரியாதவரா இருப்பாரோ!\nCS. Mohan Kumar Tue Dec 14, 09:46:00 AM\nஆஹா நீங்க எழுத ஆரம்பிச்சதுக்கு காரணம் பெயர் சொல்ல விருப்பமில்லதவரா? ரைட்டு\nபெசொவி Tue Dec 14, 09:54:00 AM\nஇதை ஒரு அனானியா வந்து சொல்ல வேண்டிய அவசியமில்லையே! அது சரி, எத்தனை பேருக்கு தன்னோட கருத்துகளை தைரியமா சொல்ற பக்குவமிருக்கு?\nபெசொவி Tue Dec 14, 09:55:00 AM\nஐ அறுபது! (கோமாளிகள் எனப் போற்றப் படுவோர் சங்கம்)\nMadhavan Srinivasagopalan Tue Dec 14, 10:53:00 AM\n@ // மோகன் குமார் said...\nஆமாம், அவரே எழுதுறப்ப நாமளும் ட்ரை பண்ணலாம்னுதான்....\nMadhavan Srinivasagopalan Tue Dec 14, 10:54:00 AM\nவந்துட்டீங்களா? நகைச்சுவையான சுய அறிமுகம். கலகலன்னு இருக்கு படிக்க. வாழ்த்துக்கள் மாது! //\nஉங்கள் ரசனைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி..\nMadhavan Srinivasagopalan Tue Dec 14, 10:57:00 AM\n// எலேய் உனக்கு உன் பேரை சொல்றதுக்கே துப்பில்லை. நீ பேசாத. //\nநண்பர் ரமேஷ்.. பொறுமை.. பொறுமை..\nஏதோ என்னால் முடிந்தவரை நகைச்சுவையாக எழத முயல்கிறேன். படியுங்கள் .. சரியாக இல்லையென்றால் எது சரியில்லை எனச் சொல்லுங்கள்.. மாற்றிக் கொள்ள முயலுவேனே ?\nTERROR-PANDIYAN(VAS) Tue Dec 14, 11:22:00 AM\nசில நாட்களா கோமாளிகள் கையில் வலைச்சரம் சிக்கிவிட்டது போலருக்கே.//\nI Cordially Invite you to the so called Komalis blog to save valaisaram... :))\nAddress : http://terrorkummi.blogspot.com/\nஐய்யா!! தங்களை எங்கள் வலைதளத்திற்க்கு அன்புடன் அழைக்கிறேன். தங்களை போன்ற மாவீரர்களை எங்கள் தளம் கட்டி அணைத்து வரவேற்க்க காத்து இருக்கிறது... :))\nAnonymous Tue Dec 14, 11:38:00 AM\nஅனானிக்கெல்லாம் பதில் சொல்லி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்களே.. போய் வேலைய பாருங்கப்பா..\nஇன்னொரு அனானி ;)\nAnonymous Tue Dec 14, 11:45:00 AM\n//Anonymous said... "அனானிக்கெல்லாம் பதில் சொல்லி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்களே.. போய் வேலைய பாருங்கப்பா.."\nஇன்னொரு அனானி ;)"\nரெண்டாவது அனானியாரே... படிச்சிட்டு பிரயோஜனமா இருந்தா கமெண்டு போடுங்க.... இந்த மாதிரி கமெண்டு போட்டு உங்க டயத்து வேஸ்டு பண்ணுறீங்களே..\nஅட.. நா யாரா ? நா ரிடையர் ஆயி நாலு வருசம் ஆயிடிச்சி.. அதான் பொழுது போகாம இப்படி அனானிகுலாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கேன்..\nAnonymous Tue Dec 14, 09:46:00 PM\nஹா ஹா ....,மிகவும் அருமையான கமெண்ட் ..,அனானி அவர்களே ...,நீங்கள் தயவு செய்து http://terrorkummi.blogspot.com/ ,இந்த அட்ரஸ்க்கு நீங்கள் வரவும் ,அல்லது thillumullu2011.blogspot.com க்கு வந்து உங்கள் பொன்னான கருத்துகுகளை பின்னுட்டமாக இடவும் ...,உங்களை வாரி அனைத்து அனைத்திற்கும் பதில் சொல்ல கடமைபட்டுளேன்..,உங்களுடைய பெயர் மறந்து விட்டால் பராவில்லை என்பதையும் இந்த நேரத்தில் தெரிய படுத்தி கொள்கிறேன் ...,\nAnonymous Tue Dec 14, 09:57:00 PM\n///// நண்பர் ரமேஷ்.. பொறுமை.. பொறுமை..\nஏதோ என்னால் முடிந்தவரை நகைச்சுவையாக எழத முயல்கிறேன். படியுங்கள் .. சரியாக இல்லையென்றால் எது சரியில்லை எனச் சொல்லுங்கள்.. மாற்றிக் கொள்ள முயலுவேனே ? ////\nஇதில் எல்லாம் பொறுமையாக இருக்க முடியாது ,எழுதிய எழுத்தில் எவரையும் திருப்தி படுத்த முடியாது அது திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில்( நிலப்ரபுதுவ காலத்தில் எழுதப்பட்ட ஆணாதிக்க கருத்து என்று சொல்பவர்கள் உண்டு ) இருந்து தற்போது எழுதும் இலக்கியம் என்கிற பேரில் குப்பையை எழுதி குவித்து புகழை தேடும் எழுத்தாளர்கள் மத்தியில் தாங்கள் எழுதியுள்ள பதிவுகள் நிதர்சன உண்மையானது ,மாற்று கருத்தை தெரிவிக்க அந்த அனானி தன்னுடைய பெயரை வைத்து கொண்டு வந்திருந்தால் நீங்கள் எழுதிய மேலுள்ள பின்னோட்டம் சரியாக இருக்கும் என்பது என் எண்ணம் .\nAnonymous Tue Dec 14, 10:00:00 PM\n///// I Cordially Invite you to the so called Komalis blog to save valaisaram... :)) /////\nஅடிச்சான் பாருயா ..,எங்காளு ....,இன்னாமா இங்க்லிபிசு பேசுறே ...,டெர்ரர் . ஆமா இன்னாய சொல்லிகினே அந்த அனானிக்கு ...,ஒன்னியுமே பிரியல .\nMadhavan Srinivasagopalan Tue Dec 14, 10:20:00 PM\n@ தில்லு முல்லு ...\nஹி.. ஹி.. என்னோடது கொஞ்சம் சாஃப்ட் அப்ரோச்.. அதான்..\nநீங்க போட்ட பின்னூட்டம் எல்லாமே சூப்பர இருக்கு.. நன்றி.. நாளைக்கும் மறக்காம வாங்க..\nsanmugakumar007 Sun Dec 26, 09:52:00 AM
'வல்லரசாகும்" இந்தியா கையேந்தியாகும் மக்கள்\nBack புதிய ஜனநாயகம் 'வல்லரசாகும்" இந்தியா கையேந்தியாகும் மக்கள்\nTuesday, 11 July 2006 07:39\n"இந்தியா ஒரு பொருளாதார மேல்நிலை வல்லரசாக உருவாகி வருகிறது'' என்ற செய்தி, ஊடகங்களில் நிரம்பி வழிகின்றது. குலுக்கித் திறக்கப்பட்ட ""பீர்'' பாட்டிலைப் போல இந்தியப் பொருளாதாரத்தின் ""வளர்ச்சி'' குறித்த மகிழ்ச்சியில் பத்திரிகைகள் புள்ளி விவரங்களால் பொங்கி வழிகின்றன.\nதொடர்ந்து நான்காண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி7சதவீதம். அடுத்தடுத்த மூன்றாண்டுகளாக ஏற்றுமதியின் அதிகரிப்பு 20 சதவீதம். கூட்டுப் பங்கு நிறுவனங்களின் கடன்கள் 30 சதவீதத்திற்கும் மேலாகும்.\nமுதலீடுகளின் அதிகரிப்பு 40 சதவீதம்; புதிய திட்டங்கள் பல்வேறு முக்கிய துறைகளையும் கடந்து பரவுகின்றன. 2006ஆம் ஆண்டுக்கான அடிப்படைக் கட்டுமானச் செலவுகள் 95,000 கோடி ரூபாய்கள் அதாவது இரண்டு மடங்கு.\nகடந்த ஐந்தாண்டுகளில் உச்சபட்சமாக 2005இல் மட்டும் சம்பள உயர்வு 14 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. 20052006 ஆம் ஆண்டில் மிகப் பெரும் அளவிலான வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு, நகர்ப்புறக் குடும்பங்களுக்கான வேலை மற்றும் நிதி உத்திரவாதங்களை அளித்துள்ளன.\nவீட்டு வசதிக் கடன்களின் அதிகரிப்பு 56 சதவீதம்; நுகர்வோர் கடன் அதிகரிப்பு 40 சதவீதம்; பங்குச் சந்தையிலும் வீடு வீட்டுமனைத் தொழிலிலும் ஏற்பட்டுள்ள செழிப்பு, விருப்பம் போல செலவிடச் செய்துள்ளது.\nஉலகிலேயே இரண்டாவது பெரிய சந்தையாக இந்தியாவை மாறச் செய்யுமளவு செல்பேசிகளின் அதிகரிப்பு 53% சதவீதம். விமானச் சேவை மற்றும் மோட்டார் வாகன தொழில்களின் செழிப்பு, உலகிலேயே மிகவும் இளம்பிரிவு உழைப்புச் சக்தியும் இந்த முன்னேற்றத்தை சாதித்துள்ளன.\nஇந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைப் பத்திரிகையாளர்கள் மேற்கண்டவாறு தொகுத்துள்ளனர்.\nஉலகின் முன்னணிப் பன்னாட்டுத் தொழில் கழகங்களின் தலைவர்கள் அனைவரும் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்துப் பிரமித்துப் போயிருக்கிறார்களாம்.\n""கடந்த 15 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இந்தியா காட்டிய வேகம் அசாதாரணமானது'' என்கிறார் உலக வங்கியின் தலைவர் பால் வுல்போ விட்ஜ்.\n""உலகமயமாக்கத்தின் குவி மையமாக இந்தியா மாறுவதற்குத் தகுந்தவாறு அதன் நட்சத்திர பலன்கள் கூடி வருகின்றன'' என்கிறார் சர்வதேச நிதி நிறுவனத்தின் பொருளாதார ஆலோசகர் ரகுராம் ராஜன்.\n""மென்பொருள் தொழில் வித்தகர்களின் பிரமிக்கதக்க மையத்தை இந்தியா கொண்டிருக்கிறது. இதிலிருந்து உலகம் ஆதாயம் பெற வேண்டும்'' என்கிறார், உலக மென்பொருள் ஏகபோக முதலாளி பில்கேட்ஸ்.\n""இந்தியா ஒருநாள் உலகிலேயே அதிவேக வளர்ச்சியுடைய நாடாக இருக்கும்'' என்கிறார் வெர்ஜின் அட்லாண்டிக் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் சர் ரிச்சர்டு பிரான்சன்.\n""இந்தியா மிக வேகமாகப் பொருளாதார வளர்ச்சியுடைய நாடுகளில் ஒன்று; ஆசியாவின் வளர்ச்சியை உந்திச் செல்லக் கூடியது'' என்கிறார், ஜெர்மனியின் சீமன்ஸ் நிறுவனத் தலைவர் லாஸ் லெயின்ஃபீல்டு.\n""உலகின் முன்னணி தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக இந்தியா உருவாகி வருகிறது'' என்கிறார் கணினித் தொழிலில் முன்னணி நிறுவனமான இண்டெல் தலைவர் கிரைக் பேரட்.\n""ஏழை தேசங்களின் வளர்ச்சித் தீர்வுகளின் சோதனைச் சாலையாக இந்தியா விளங்க முடியும்'' என்கிறார் பிலிஃப்சு நிறுவனத் தலைவர் ஜிரார்டு லெய்ஸ்டர்லீ.\n— பன்னாட்டுத் தொழில் கழகங்கள் இந்தியப் பொருளாதாரம் குறித்து இவ்வாறான கருத்துக்கள் வைத்திருப்பதால் அந்நிய நேரடி முதலீடும், அந்நியத் தொழில் முதலீடும் ஏராளமாக வந்து குவிகின்றன. இதனால் பங்குச் சந்தைக் குறியீடு எண் 12,000 அளவைத் தாண்டிவிட்டது.\nஇதோடு அந்நியச் செலாவணிக் கையிருப்பு பல ஆயிரம் கோடி ரூபாயாகக் குவிந்திருக்கிறது. இதுவரை வெளிநாட்டில் வாழும் இந்தியர் அனுப்பி வைக்கும் தொகையே அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கியமாக இருந்தது. இப்போது மொத்தக் கையிருப்பில் இது மிகச் சிறிய அளவாகி விட்டது; ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால் முக்கியமாக அந்நியச் செலாவணி கையிருப்பு மலையளவு உயர்ந்துவிட்டது.\nஇந்த ஆண்டு மட்டும் மென்பொருள் ஏற்றுமதியால் டாடா கன்சல்டன்சி, இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்கள் ஒரு இலட்சம் கோடி ரூபாய் இலாபமீட்டக் கூடும். தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது சார்ந்த தொழில்களில் மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில் 60 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கக் கூடும்.\nஇவையெல்லாம் உலகில் மிக வேகமாக வளரும் பத்து பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளதைக் காட்டுகின்றன.\nஇந்தப் புள்ளிவிவரங்கள் உண்மைதான் என்றாலும், இந்தியா உடனடியாக இல்லாவிட்டாலும், வளரும் நாடுகளில் முதலிடத்தைப் பிடிக்காவிட்டாலும், சீனாவுக்கு அடுத்து இரண்டாம் இடத்துக்கு உயர்ந்துவிடும் என்றாலும் — இந்தியப் பொருளாதார வளர்ச்சி எத்தகையது? அதன் பலன்களை எந்தப் பிரிவினர் அறுவடை செய்து கொள்கின்றனர்? யாருடைய நலன்களுக்காக இந்தியப் பொருளாதாரம் திட்டமிடப்படுகிறது? என்பது முக்கியமானதாகும்.\nகடந்த 2005ஆம் ஆண்டின் நவம்பருக்குள் 2.341 கோடி பேர் புதிதாக செல்பேசி வாடிக்கையாளர்களாகி இருக்கிறார்கள். இணையத் தளங்களில் மேயும் ஏழு இலட்சம் பேர் அகன்ற அலைவரிசை கணினி இணைப்புகள் பெற்றார்கள். 45 இலட்சம் கணினிகள் விற்கப்பட்டன. 53,982 கோடி ரூபாய் அளவு சேமிப்பு உயர்ந்திருக்கிறது. 9,000 பேர் புதிய கோடீசுவரர்களாகியிருக்கிறார்கள். கார்கள், இரண்டு சக்கர வாகனங்களின் உற்பத்தியும் விற்பனையும் பல்கிப் பெருகியுள்ளது.\nதங்க நாற்கரச் சாலைகளால் இந்தியாவின் பெருநகரங்களை இணைப்பதும், விமான நிலையங்கள் நவீனப்படுத்தப்படுவதும், துறைமுகங்கள் விரிவுபடுத்தப்படுவதும் நிறைவுறும் நிலையை எட்டி விட்டன. சுற்றுலா, பொழுதுபோக்கு, ஃபாசன் பொருட்கள், கல்வி, மருத்துவம் எல்லாவற்றிலும் உலகத்தரம் வந்துவிட்டது.\nஎல்லாம் சரி; ஆனால் இவையாவும் நடுத்தர மேட்டுக்குடி மக்களுக்குச் சாதகமானவை, நாட்டின் மிகப்பெரும் தரகு அதிகார முதலாளிகள், பெரும் பண்ணையார்கள் ஆகியவர்களோடு, அந்நிய பன்னாட்டுத் தொழில், வர்த்தக மற்றும் நிதிக் கழகங்களின் கொள்ளையை விரிவுபடுத்தும் வகையிலானவைதாம்.\nசீனா போன்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சி என்பது முதலீடு அடிப்படையிலானதாக இருக்கும் அதேசமயம், இந்தியப் பொருளாதார வளர்ச்சி நுகர்வோர் சந்தை சார்ந்ததாகவே இருக்கிறது. அதாவது, இந்தியாவின் 10 கோடி குடும்பங்களின் ஆண்டு வருமானம் இரண்டு முதல் 10 இலட்சம் ரூபாய் அளவுக்கு உள்ளது! இது பல ஐரோப்பிய நாடுகளின் சந்தையைவிடப் பெரியதாகும். இந்தக் குடும்பங்களின் நுகர்வுத் தேவைக்கான பொருளாதாரத் திட்டமிடுதல்கள் தாம் இப்போது நடக்கின்றன.\nஅதேபோல, கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம்6.5 சதவீதத்திற்கு மேலிருந்தாலும், கிராமப்புற விவசாய வளர்ச்சி2சதவீதம் அளவுக்கு மிகக் குறைவாகவே உள்ளது. நாட்டின் 60 சதவீத உழைப்புச் சக்தியைக் கொண்டிருக்கும் கிராமப்புற விவசாய உற்பத்தி நாட்டின் மொத்த வருவாயில் 21 சதவீதம் மட்டுமேயாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீத அளவுள்ள வங்கி, இன்சூரன்ஸ், தொலைபேசி செல்பேசி, தகவல் தொழில் நுட்பச்சேவை ஆகிய சேவைத்துறையில் 27 சதவீதத்தினரே வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர். ஆனால், விவசாயத் துறையில் இருந்து வேலையிழப்பவர்களை ஈர்க்கக் கூடிய ஆலை உற்பத்தியில் 17 சதவீதத்தினரே ஈடுபட்டுள்ளனர்.\nஇதுமட்டுமல்ல, இந்தியப் பொருளாதார வளர்ச்சி என்பது மக்கள் தொகை அதிகமுள்ள உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா போன்ற மாநிலங்களில் அற்ப அளவுகூட கிடையாது. அவை தொடர்ந்து பின்தங்கிய மாநிலங்களாகவே உள்ளன. ஏற்கெனவே அடிப்படைக் கட்டுமான வசதிமிக்க மாநிலங்களில்தான் முதலீடும், உற்பத்தியும், சந்தையும் உருவாகிக் கொண்டே போகின்றன. குஜராத், மராட்டியம், தமிழகம், ஆந்திரம், கர்நாடகா, அரியானா பஞ்சாப் போன்ற மாநிலங்களின் வளர்ச்சியிலேயே ஆளும் வர்க்கங்களும் பன்னாட்டு முதலாளிகளும் குறியாக உள்ளனர். பீகாரின் சராசரி வருமானம் அரியானா, மராட்டியம் போன்ற மாநிலங்களின் சராசரி வருமானத்தோடு ஒப்பிடும்போது கால்பங்கு கூடக் கிடையாது.\nதகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத்துறையில் வேலைவாய்ப்புகள் பல்கிப் பெருகியுள்ளதாகக் கூறப்படும் அதேவேளையில், வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து வேலைதேடுபவர்களின் எண்ணிக்கை4கோடியாக உள்ளது. அரசு உட்பட அமைப்பு ரீதியிலான துறைகளில் வேலையோ கடந்த பதிமூன்று ஆண்டுகளாக3கோடி என்ற நிலையிலேயே தேங்கிப் போயிருக்கிறது. உலகிலுள்ள 177 நாடுகளில் மனித வளமேம்பாட்டில் இந்தியா 127வது இடத்தில் இருக்கிறது.5வயதுக்கும் குறைவான இந்தியக் குழந்தைகளில் பாதியளவு போதிய உணவின்றிக் கிடக்கின்றன. இந்தியப் பெண்களில் 46 சதவீதமானவர்கள் படிப்பறிவற்றவர்களாக உள்ளனர். அரசுப் புள்ளிவிவரப்படியே 25 கோடி இந்தியர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். அரசு சாரா நிறுவனங்களின் புள்ளி விவரப்படி இதுவே 40 கோடியாகும்.\nஆக, எப்படிப் பார்த்தாலும் இந்தியப் பொருளாதாரம் வட்டார ரீதியாக, வர்க்க ரீதியாக, பாலியல் ரீதியாக, நகர்ப்புறகிராமப்புற வேறுபாடு ரீதியாக ஒரு சார்பாகக் கோணித்துப் போகிறது. அனைத்துத் தரப்புகளின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்கானதாகப் பொருளாதாரம் திட்டமிடப்படுவதில்லை கருணாநிதியோ ஜெயலலிதாவோ, வாஜ்பாயோ மன்மோகன் சிங்கோ அவர்களது அக்கறையெல்லாம் ஒரு சார்பாகவே உள்ளது. இதற்கு ஈடுகட்டும் வகையில்தான் ஏழ்மைக் குறைப்பு, இலவசத் திட்டங்கள் வருகின்றவே தவிர, மக்களின் நலன்களுக்காக அல்ல.
Psalm 101:5 in Tamil - Tamil Christian Songs .IN\nPsalm 101:5 in Tamil\nHome » Bible » Psalm » Psalm 101 » Psalm 101:5 in\nபிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.\nசங்கீதம் 101:5 in English\npiranai Irakasiyamaay Avathoorupannnukiravanaich Sangarippaen; Maettimaik Kannnanaiyum Perunenjullavanaiyum Porukkamaattaen.\nTags பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன் மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்\nPsalm 101:5 in Tamil Concordance Psalm 101:5 in Tamil Interlinear\nRead Full Chapter : Psalm 101\nதேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்.\nநீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.\nஅவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.\nவேறொரு சந்ததியாருமுண்டு; அவர்கள் கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்கள் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகள்.\nபிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.\nஅபாண்டமான சொல்லை ஏற்றுக் கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.\nஉன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.\nஇனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ?\nநீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்துத் தாழ்த்திவிட்டு,\nதுன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.\nகர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.\nஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.\nபகையை மறைக்கிறவன் பொய்உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன்.\nதூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே.\nவடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.\nநரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.\nஇரத்தஞ்சிந்தும்படிக்கு அபாண்டம் பேசுகிறவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; மலைகளின்மேல் சாப்பிடுகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; முறைகேடு செய்கிறவர்கள் உன் நடுவில் இருக்கிறார்கள்.\nஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.\nகன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.\nஅவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.\nநான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.\nஅந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும் எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்வேண்டும்.\nமுதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்,
மகாபாரதம்-அறத்தின் குரல்/3. போர் நிகழ்ச்சிகள் - விக்கிமூலம்\nமகாபாரதம்-அறத்தின் குரல்/3. போர் நிகழ்ச்சிகள்\n< மகாபாரதம்-அறத்தின் குரல்\n←2. சிவேதன் முடிவு\nமகாபாரதம்-அறத்தின் குரல் ஆசிரியர் நா. பார்த்தசாரதி\n3. போர் நிகழ்ச்சிகள்\n4. ஐந்து நாட்களுக்குப் பின்→\n417677மகாபாரதம்-அறத்தின் குரல் — 3. போர் நிகழ்ச்சிகள்நா. பார்த்தசாரதி\nஉத்தரன், சிவேதன் என்று முறையே தன் மக்கள் இருவரையும் முதல் நாள் போரிலேயே இழந்த விராட மன்னனை கண்ணன், தருமன் முதலியவர்கள் ஆறுதல் கூறி மனச் சமாதானம் அடையச் செய்தனர். மறுநாள் அதிகாலையிலேயே அதாவது புலரிப் போதிலேயே இரண்டாம் நாள் போருக்கான அறிகுறிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி விட்டன. கண்ணன் செய்த ஏற்பாட்டின் படி துட்டத் துய்ம்மன் பாண்டவர்கள் சார்பில் படைத் தலைவனாக்கப்பட்டான். இருபுறத்துப் படைகளும் கலந்து ஒன்றொடொன்று மோதிப் போரைத் தொடங்கின. ஒரு காலத்தில் தன் தந்தைக்கு நண்பராக இருந்து பின் பகை கொண்ட துரோணரை நேருக்குநேர் நின்று எதிர்த்தான் துட்டத் துய்ம்மன். துரோணர் விற்கலைக்கென்றே பிறந்த வீரபுருஷராகையால் அவரைத் துட்டத்துய்ம்மனால் முறியடிக்க முடியவில்லை. துரோணருடைய சரமாரியான அம்பு மழையினால் துட்டத்துய்ம்மன் தான் அலுத்துப் போனான். துட்டத்துய்ம்மனுக்கு உதவியாக வீமனும் வந்து சேர்ந்து கொண்டான். இருவருமாகச் சேர்ந்து துரோணரை எதிர்த்தார்கள். வீமன் துட்டத்துய்ம்மனுக்கு உதவி செய்ய வந்ததைக் கண்டு எதிர்ப்பக்கத்தில் கலிங்க வேந்தன் வீமனை எதிர்ப்பதற்காக வில்லை வளைத்துக் கொண்டு வந்து விட்டான். கலிங்க வேந்தனின் படையில் யானைகளின் தொகை சற்றே அதிகம். மனிதப் படைகளை அழிப்பதை விட யானைப் படைகளை அழிப்பதில் தான் வீமனுக்கு அதிக மகிழ்ச்சி. கலிங்க வேந்தனையும் அவன் யானைப் படைகளையும் அழித்துத் துவம்சம் செய்ய ஆரம்பித்தான் வீமன். பின் வாங்குவதைத் தவிர வேறு வழி தோன்றவில்லை கலிங்கனுக்கு. தன்னுடைய யானைகளுடன் மட்டும் அன்றிப் பிறபடைகளிலும் பெரும் பகுதி அழிந்த பின் ‘தோல்வியடைந்தேன், தோல்வியடைந்தேன்’ என்று கூறிக் கொண்டோடுபவன் போல் புறமுதுகிட்டோடினான் கலிங்க வேந்தன்.\nகலிங்கன் ஓடியபின் வீட்டுமன் வீமனை எதிர்த்தான். பாட்டனாராகிய வீட்டுமனுக்கும் வீமனுக்கும் போர் நடந்தது. முன்பு சிவேதன் செய்தது போலவே வீட்டுமனின் வில்லை ஒடித்தும் தேரைச் சிதைத்தும் அவனுக்குத் தொல்லை கொடுத்தான் வீமன். ஒடிந்து விழுந்த வீட்டுமனின் தேர்ச் சட்டம் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு அதனாலேயே அவனுடைய தேரோட்டியை அடித்து வீழ்த்தி விட்டான். முன்பு வீமனுக்குத் தோற்று ஓடிப்போன கலிங்க வேந்தனும் அவனைச் சேர்ந்தவர்களும் வீட்டுமனுக்கு உதவ ஓடி வந்தார்கள். ஓடிப்போன கலிங்கன் திரும்பி வருதலைக் கண்டு வீட்டுமனோடு போரிடுவதை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு அவன் மேல் பாய்ந்தான் வீமன். கலிங்கர் படையை நிர்மூலமாக்கிய பின்பே மீண்டும் அவன் வீட்டுமனிடம் வந்தான். இப்போது அபிமன்னனும் அங்கு வந்து சேர்ந்து கொள்ளவே இருவருமாகச் சேர்ந்து வீட்டுமனை எதிர்த்தார்கள். வீட்டுமனுக்குப் பக்கபலமாக நிற்கும் பொருட்டுப் பல அரசர்களை ஒன்று திரட்டி அனுப்பினான் துரியோதனன். அவனால் அனுப்பப்பட்ட அரசர்கள் வந்து சேர்ந்தவுடன் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு வீமனையும் அபிமன்னனையும் வளைத்துக் கொண்டு விட்டார்கள். இதைப் பார்த்த அர்ச்சுனன் வீமனுக்கும், அபிமன்னனுக்கும் உதவுவதற்காக வில்லோடு வந்தான். அர்ச்சுனனின் திடீர் வரவு போரின் போக்கை எதிர்பாராத விதமாக மாற்றி அமைத்துவிட்டது. வீட்டுமனும் அவன் படைகளும் நிலை தடுமாறிச் சிதறிப் போகும்படி செய்துவிட்டான் அர்ச்சுனன். வீட்டுமனும் பிற கெளரவர்களும் தோற்று ஓடிய அளவில் இரண்டாம் நாள் போர் முடிந்து விட்டது. ‘இரண்டாம் நாள் போரில் அதிகமான ஆள் நஷ்டமும் தோல்வியும் தன் பக்கம்தான்’ என்று உணர்ந்தபோது துரியோதனனுக்கு வருத்தமாகவே இருந்தது. அந்த வருத்தத்தை மறுநாள் வெற்றியால் போக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணித் திருப்தியுற்றான் அவன். மூன்றாவது நாள் காலையில் போர் தொடங்கும்போது இருசாராருமே தத்தம் படைகளைப் புதுமாதிரி வியூகங்களில் அணிவகுத்து நிறுத்தினார்கள். கருடன் சிறகுகளை விரித்துக் கொண்டு பறப்பது போன்ற தோற்றத்தில் கெளரவ சேனைகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. துட்டத்துய்ம்மன் கண்ணன் கூறிய ஆலோசனைப்படி பாண்டவ சேனையைப் பிறைச் சந்திரன் வடிவில் அணிவகுப்பு முடிந்ததும் முதல் நாள் விடுபட்ட இடத்திலிருந்து போர் தொடங்கியது. அர்ச்சுனனையும் அபிமன்னனையும் எதிர்த்து வீட்டுமன், துரோணர் முதலியவர்கள் வளைத்துக் கொண்டு போர் புரிந்தார்கள். வீமனைத் துரியோதனனும் அவன் தம்பிமார்கள் தொண்ணூற்றொன்பதின்மரும் எதிர்த்துப் போரிட்டனர். மாமனான சகுனியும் துரியோதனன் பக்கம் நின்று கொண்டிருந்தான்.\nஇரு திறத்தாருக்கும் போர் முனைப்பாக நடந்து கொண்டிருந்தது. வீமன் மகனான கடோற்கசன் அவனுக்குத் துணை செய்து உதவ வந்திருந்தான். அர்த்த சந்திரவடிவமான நுனியை உடைய அம்புகளைத் தொடுத்துப் போர் செய்தான் கடோற்கசன். அடுத்தடுத்து துரியோதனனுடைய மார்புக் கவசத்தைத் துளைத்த இந்த அம்புகள் இறுதியில் கவசத்தையே பிளந்து மார்பை ஊடுருவிவிட்டன. மார்பைப் பிளந்த அம்பின் வேகமும் வலியும் தாங்க முடியாமல் துரியோதனன் அங்கேயே களத்தில் மயக்கமுற்று விழுந்து விட்டான். துரியோதனனின் தேரோட்டியை அபிமன்னன் ஏவிய அம்பு கீழே தள்ளி வீழ்ச்சியடையச் செய்தன. உடனே துரியோதனன் மூர்ச்சையடைந்த செய்தி வீட்டுமனுக்குத் தெரிவிக்கப் பட்டது. துரியோதனன் உடலைத் தனியே ஒரு தேரின் மேல் எடுத்துக் கொண்டு ஒதுக்குபுறமான ஓர் இடத்திற்குப் போய்த் தக்க சிகிச்சைகளைச் செய்து பிரக்ஞை உண்டாக்கினான். தெளிவான நிலையை அடைந்ததும் அவனைப் பத்திரமான இடத்தில் போய் ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத்தான் மட்டும் போர்க்களத்திற்குச் சென்று மீண்டும் வீமனோடு போரைத் தொடர்ந்தான். உண்மையான ஆத்திரத்தோடு வீட்டுமன் மனங்குமுறிச் செய்த இந்த விற்போரை அர்ச்சுனன், வீமன் முதலியவர்கள் எதிர்த்துச் சமாளிக்க முடியாமல் திணறினார்கள். வீட்டுமனோடு எதிர்த்துப் போர் செய்ய வேண்டும் என்பதையே மறந்து அர்ச்சுனன் அவன் போர் செய்யும் அழகைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். அர்ச்சுனனுடைய தேரை ஓட்டிக் கொண்டிருந்த கண்ணன் இதைக் கண்டு கொண்டான்.\n“உன் பாட்டனார் பெருஞ்சினத்தோடு வில்லை வளைத்துப் போர் செய்கிறார். நீ அவரை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாய்! இதன் விளைவாக யாருக்கு அழிவு வரும் என்பதை நீ யோசித்தாயா?” என்று சினம் பொங்கும் குரலில் கூறிக் கொண்டே அர்ச்சுனனின் தேரிலிருந்து கீழே குதித்து விட்டான் கண்ணன். எப்படியும் தானே வீட்டுமனை எதிர்த்து அழிக்காமல் விடுவதில்லை என்பது கண்ணனின் நோக்கம், கையில் சக்கராயுதத்தை எடுத்துக் கொண்டு வீட்டுமனின் தேரில் தாவிப் பாய்ந்து ஏறிவிட்டான் அவன். கண்ணனின் எண்ணமும் சுலபமாக நிறைவேறிவிடும் போலிருந்தது. வீட்டுமனைத் தேர்த்தட்டின் மேல் கீழே தள்ளிக் கழுத்தில் சக்கராயுதத்தால் அறுத்துத் துளைக்கத் தொடங்கி விட்டான் கண்ணன். அப்போது அர்ச்சுனன் ஓடிவந்து கண்ணன் கைகளைப் பிடித்துத் தடுத்தான்.\n“எல்லாம் தெரிந்த மாயவன் நீ! உனக்கே இத்தகைய கோபம் வரலாமா? இந்த அகில உலகத்திலும் உனக்கு நிகரான எதிரி இல்லையே! வீட்டுமனையா உன் எதிரியாகக் கருதி இப்படித் துன்புறுத்துவது? இது உனக்குத்தகுமா? வேண்டாம். இம்முதியவனை விட்டுவிடு” -என்று அர்ச்சுனன் கெஞ்சினான். வீட்டுமனும் கண்ணன் திருவடிகளை நோக்கித் தன்கைகளை குவித்தான். பலவாறு கண்ணனைப் புகழ்ந்து தோத்திரம் செய்து இறைஞ்சினான். நீண்ட நேர வேண்டுகோளுக்குப் பிறகு கண்ணனுக்கு வீட்டுமன் மேல் இரக்கம் உண்டாயிற்று! சக்கராயுதத்தை அவன் கழுத்திலிருந்து எடுத்தான். வீட்டுமன் விடுதலை பெற்றான். உயிர் பிழைத்தான்.\n“கண்ணா! இனி நீ தேரில் ஏறிக்கொண்டு செலுத்து! என் கடமையை நான் செய்கிறேன். என்னை எதிர்ப்பவர்களை இன்று நடுப்பகலுக்குள் நமனுலகுக்கு அனுப்புகிறேன்” -என்று அர்ச்சுனன் கண்ணனை அழைத்தான். கண்ணன் தேரில் ஏறிச் சாரத்தியத்தை மேற்கொண்டு செலுத்தினான். அர்ச்சுனன் தேர்த்தட்டில் ஏறி நின்று கடுமையான போரை மேற்கொண்டான். அன்று செய்த அந்தப் போரைப் போல் அவ்வளவு ஆத்திரத்துடனே அர்ச்சுனன் அதற்கு முன்பு போரே செய்ததில்லை எதிர் தரப்புப் படையினரில் வீட்டுமன் தவிர அர்ச்சுனனை எதிர்த்த வேறெவரும் உயிருடன் பிழைக்க முடியவில்லை. வருணன், வாயு, அக்கினி, இந்திரன் முதலிய திசைப் பாலகர்களை வழிபடு தெய்வங்களாகக் கொண்ட படை அணிகள் பல அழிந்து விட்டன. துரியோதனாதியர் படையைச் சேர்ந்த யானைகள், குதிரைகள், தேர்கள், காலாட்கள் அநேகம் அழிந்து விட்டன. துரியோதனன் மாடி வீட்டுக்கு இடையில் காவலின் நடுவே இருந்தான். அவன் தரப்பைச் சேர்ந்த மற்ற அரசர்கள் அர்ச்சுனனை எதிர்த்து நிற்க முடியாமல் மூலைக்கு மூலை சிதறி ஓடிவிட்டார்கள். சுளத்தில் அர்ச்சுனனுக்கு எதிரே வீட்டுமன் ஒருவனைத் தவிர வேறு ஆள் இல்லை. இரண்டு பொழுது சாய்ந்தபின் வேறு வழியில்லாமையால் அர்ச்சுனன் போரை நிறுத்தினான். மூன்றாம் நாட் போர் இவ்வளவில் முடிந்தது. பழையபடி கருட வியூகத்திலும் அர்த்த சந்திர வியூகத்திலுமாகப் படைகள் நிறுத்தப்பட்டபின் இரு சாராரும் நான்காம் நாள் போரைத் தொடங்கினர்.\nயானைப் படையினர் வீமனைத் தனியே வளைத்துக் கொண்டு தாக்கலாயினர். வீமனும் விடவில்லை. யானைகளையும் அவற்றின் மேல் வீற்றிருந்தவர்களையும் அடித்துப் புடைத்து அழித்தான். ஒருமுறை வீமனின் தாக்குதலைத் தாங்க முடியாமல் பின்வாங்கி ஓடிய யானைப் படையைத் துரியோதனன் தலைமை தாங்கி முன்னுக்கு இழுத்து வந்தான். இதனால் துரியோதனனுக்கும் வீமனுக்கும் தனித்தனியே நேருக்குநேர் போர் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் அம்புமாரி பெய்து கொண்டனர். ஈசல் புற்று நுனியில் மொய்த்துக் கொண்டிருப்பது போல் துரியோதனன் மார்பில் நூற்றுக்கணக்கான அம்புகள் மொய்த்துப் பாய்ந்திருந்தன, துரியோதனன் வீமன் மேற் செலுத்திய அம்புகளில் பெரும் பாலானவற்றை அவன் முறித்து வீழ்த்திவிட்டாலும் சில அம்புகள் அவன் உடலிலும் தைக்கத்தான் தைத்திருந்தன. நேரம் ஆக ஆகப் போரில் வீமனுக்கு வெறிபிடித்து விட்டது. வீமன் துணையின்றி நலிகின்றானோ என்றெண்ணிப் பல வீரர்கள் அவன் பக்கம் துணையாக உதவ வந்தார்கள். ஆனால் வீமனோ தனியாகவே துரியோதனனின் வில்லை முறித்தான். தேர்க்குதிரைகளைக் கொன்றான். அம்புகளால் அவன் உடலைச் சல்லடைக் கால்களாகுமாறு துளைத்தான். துரியோதனன் திக்கு முக்காடிப் போனான். அவன் நிலைக்கு இரங்கிச் சகுனி, சல்லியன் முதலியவர்கள் உதவிக்கு ஓடிவந்தார்கள். துரியோதனனுடைய தம்பிமார்கள் சிலரும் உதவிக்கு வந்தார்கள். வீமன் போரை நிறுத்தவில்லை. தன்னுடைய வீரமிக்க போரினால் துரியோதனனின் தம்பியர்களில் ஐந்துபேர்களை விண்ணுலகுக்கு விருந்தாளியாக்கினான். துரியோதனன் உண்மையிலேயே தளர்ந்து விட்டான். வீமனும், அபிமன்னனும் அர்ச்சுனனும் நாலா திசைகளிலிருந்தும் தாக்கிக் கெளரவப் படைகளை சின்னாபின்னமாக்கினர். சூறாவளிக்கு நடுவே பஞ்சுபோல் திணறியது அவன் படை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் துரியோதனாதியர் படைகளைப் ‘பகதத்தன்’ என்பவன் சிதறாமல் ஒன்று சேர்த்துக் கொண்டு மீண்டும் பாண்டவசேனையோடு போருக்கு வந்து விட்டான். இவன் உறுதியும் துணிவும் மிக்கவன். எப்படியும் பாண்டவர் படைகளை ஒரு ‘கலக்குக் கலக்குவது’ என்று வந்திருந்தான். யானைப் படையிலிருந்த யானைகளைத் திரட்டிக் கொண்டு, தானும் ஒரு யானை மேல் ஏறிக் கொண்டு, திமுதிமுவென்று பாண்டவ சைனியத்தின் அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டான். இதனால் பாண்டவர்படை அழிந்து ஓடத் தலைப்பட்டுவிட்டது. இதைக் கண்ட கடோற்கசன் தன் வசமிருந்த சில யானைகளையே பல்லாயிரக்கணக்கான யானைகளாகத் தோன்றும்படி மாயம் செய்து கொண்டு பகதத்தனை மோதி எரித்தான். கடோற்கசனைப் போலவே பகதத்தனும் அசுரனே. ஆனால் கடோற்கசனிடமிருந்த அந்தச் சாமர்த்தியம் பகதத்தனிடம் இல்லை. சீக்கிரமே பகதத்தனுக்குத் தோல்வியும் கடோற்கசனுக்கு வெற்றியுமாக அன்றையப்போர் முடிந்தது. நான்காம் நாள் போரில் தன் புதல்வர்களில் ஓர் ஐந்து பேர்கள் வீமன் கையால் இறந்து போனார்கள் என்பதை அறிந்து அரண்மனையிலிருந்த காந்தாரி சோகம் தாங்காது அழுது புலம்பினாள்.\n“பாண்டவர்கள் ஐவரும் இறப்பதற்குப் பதிலாக நீங்கள் நூற்றுவரில் ஐவர் இறந்து போனீர்களே! உங்கள் நல்வாழ்வு கண்டு பொறாமல் அந்தப் பாண்டவர்கள் எண்ணிய பொறாமை எண்ணங்கள் இன்று பலித்து விட்டனவே? இதுவோ உங்கள் விதி?” இவ்வாறு காந்தாரி வெகு நேரம் தன் கதறலை நிறுத்தவே இல்லை. இராம இராவண யுத்தத்தில் இருதரப்படைகளும் நின்றாற்போல் நின்று அணிவகுத்துப் பேரொலிகளுடனும் பேராவாரங்களுடனும், ஐந்தாம் நாள் காலை போர் தொடங்கியது. தேர்ப்பாகனான கண்ணன் அவசர அவசரமாகக் களத்தில் புகுந்து தேரைச் செலுத்த அர்ச்சுனன் வில்லும் கையுமாகப் போருக்குத் தேரில் ஏறினான். அர்ச்சுனன் வீட்டுமனோடு போர் செய்ய வேண்டுமென்பது கண்ணனின் ஆசை. அதற்காக வீட்டுமனுடைய தேருக்கு முன்னால் அர்ச்சனுடைய தேரைப் போருக்கேற்ற முறையில் கொண்டு போய் நிறுத்தினான். இதற்குள் கலிங்கவேந்தனைச் சேர்ந்த படை மக்கள் அர்ச்சுனனை நடுவில் மடக்கிக் கொண்டார்கள். வீட்டுமனை அவன் தாக்குவதற்கு முன்பே அவனை மடக்கிக் கொள்ள வேண்டும் என்பதே கலிங்கர்களின் நோக்கம். அர்ச்சுனன் அவர்களைத் தன் அம்புகளால் துளைத்தான். கலிங்கர்கள் பலர் மடிந்தனர். இதைக் கண்டு வீட்டுமன் தானாகவே அர்ச்சுனனோடு போருக்கு வந்தான். வீட்டுமனுக்கும் அர்ச்சுனனுக்கும் நேரடியாகவே போர் தொடங்கி விட்டது. சரியாக இதே நேரத்தில் போர்க்களத்தில் மற்றோர் பகுதியில் தனியே நின்று கொண்டிருந்த வீமனை எதிரி அரசர்கள் பலர்  சேர்ந்து வளைத்துக் கொண்டனர். துச்சாதனன் முதலிய துரியோதனன் தம்பிமார்கள் சேர்ந்து வீமனை மடக்க முயன்றனர். வீமன் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளும், கதையினால் அடித்த அடிகளும், தம்பிமார்களை இரத்தம் சிந்த வைத்தன. வீமனுக்குப் பயந்து இரத்தம் சிந்திக் கொண்டே ஓடினார்கள் அவர்கள். அதைக் கண்டு துரியோதனனே வில்லை வளைத்துக் கொண்டு வீமனை எதிர்க்க வந்தான்.\n“என் தம்பியர்களை ஓட ஓட விரட்டிய இந்த வீமனை இன்றைக்குக் கொல்லாமல் விடுவதில்லை” என்று கூவிக் கொண்டே களத்தில் ஆரவாரம் செய்தான் அவன். ஆரவாரத்தோடு ஆரவாரமாகப் பத்து அம்புகளை வீமன் மார்பில் தொடர்ந்து செலுத்தி விட்டான். வீமனின் மார்புக் கவசம் அறுந்து துளைபட்டு விட்டது. தன்மார்புக் கவசம் அறுந்தவுடன் வீமனுக்கும் துரியோதனன் மேல் ஆத்திர வெறிமூண்டு விட்டது. வேகமாக ஒரு கணையை எடுத்துத் துரியோதனன் மார்பைக் குறிவைத்துத் தொடுத்து விட்டான். அந்தக் கணை துரியோதனன் மார்பில் ஆழப்புதைந்து தைத்துவிட்டது. துரியோதனனுக்கு வலி வேதனை பொறுக்க முடியவில்லை. அப்படியே கிறங்கிப் போய் ஒன்றும் தோன்றாமல் நின்று விட்டான் அவன். அப்போது கெளரவர் படையைச் சேர்ந்த வேறோர் அரசனாகிய பூரிசிரவா என்பவன் துரியோதனனுக்குப் பதிலாக வீமனோடு போர் செய்ய முன் வந்தான். வந்த வேகத்தில் குறி தவறாமல் வீமன் மேல் இரண்டு அம்புகளையும் எய்து விட்டான். பூரிசிரவாவும், வீமனும் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வீமனுக்கு உதவியாகச் சாத்தகி வந்தான். வாளைக் கொண்டும் வில்லைக் கொண்டும் மாறி மாறிப் போர் செய்தார்கள். பெரிய அளவில் களம் முழுவதும் வியாபகமாக நடந்து கொண்டிருந்தது போர். போரின் இந்த வியாபகத்தினால் அன்றைய தினத்தில் மிகுந்த அழிவும் மிகுந்த சேதமும் ஏற்பட்டிருந்தன.\n"https://ta.wikisource.org/w/index.php?title=மகாபாரதம்-அறத்தின்_குரல்/3._போர்_நிகழ்ச்சிகள்&oldid=954105" இருந்து மீள்விக்கப்பட்டது\nஇப்பக்கம் கடைசியாக 11 திசம்பர் 2018, 17:54 மணிக்குத் தொகுக்கப்பட்டது.
அக்னி தேவி படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்கும் மதுபாலா |\nமதுபாலாவின் முதல் திரை அறிமுகம் மலையாளத் திரைப்படம் ஆகும் தமிழ் திரைப்படங்களில் முதன்முதலாக அழகன் என்னும் திரைப்படத்தில் மம்முட்டி, பானுப்பிரியா மற்றும் கீதா ஆகியோருடன் நடித்தார். தற்போது அக்னி தேவி படத்தில் நடித்து வருகிறார். சென்னையில் ஒரு நாள்2பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனரான சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகிய படம் அக்னி தேவி படம் ஆகும்.\nஅக்னி தேவி படத்தில் பாபி சிம்ஹா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாநாயகியாக அதாவது வில்லியாக மதுபாலா நடித்துள்ளார். டிரைலரில் மதுபாலா பேசிய அரசியல் வசனங்கள் எல்லாம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அக்னி தேவி படம் வருகிற 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜனா ஒளிப்பதிவு அமைத்துள்ளார். சீன்டோ ஸ்டூடியோ சார்பில் ஜே.பி.ஆர் இந்த படத்தை தயாரித்துள்ளார் என கூறப்படுகிறது. அக்னி தேவி படத்தில் நடித்ததின் மூலமாக மதுபாலா ரீஎண்ட்ரி கொடுக்கிறார்.\nஅக்னி தேவி படம்மதுபாலா\nநான்தான் காரணம், கதறி அழுத பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் வெளியிட்ட வீடியோ..!!\nஅஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் தேதி மாற்றம், அப்டேட் கொடுத்த படக்குழு!\nTamilTwin India 19th April 2020 19th April 2020\nயோகாசனத்தில் ரப்புர் போல வளையும் ஐஸ்வர்யா தனுஷ், வைரலாகும் போட்டோ..!
ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் ரத்துக்கு எதிரான ஆ. ராசாவின் சீராய்வு மனு தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nby நண்பன் on Sat 16 Feb 2013 - 6:37\nதொலைத் தொடர்பு நிறு வனங்களின் 122 உரிமங்களை ரத்து செய்ததை எதிர்த்து தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nதொலைத் தொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா பதவி வகித்த 2008ஆம் ஆண்டு வழங்கப்பட்ட 122 உரிமங்களை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ரத்து செய் தது. சட்டத்துக்கு முரணான வகையில் அந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்றம் கூறியது.\nஇந்த உரிமங்கள் ரத்து செய் யப்பட்டதை எதிர்த்து ஆ. ராசா உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதேபோல் உரிமங்கள் ரத்தானத்தை எதிர்த்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
villupuram love marriage, தந்தைதான் முக்கியம்... தாலி காட்டிக்கொண்ட காதலி மனம் மாறியதால் வாலிபர் தற்கொலை - youth commits suicide as the wife changed her mind and went with her father villupuram - Samayam Tamil\nyouth commits suicide as the wife changed her mind and went with her father villupuram\nதந்தைதான் முக்கியம்... தாலி காட்டிக்கொண்ட காதலி மனம் மாறியதால் வாலிபர் தற்கொலை\nDivakar M | Samayam Tamil | Updated: Jan 2, 2022, 7:21 PM\nவிழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட பெண் மனம் மாறி தந்தையுடன் சென்றதால் விரக்தியில் காதலன் கைது.\nவிழுப்புரம்: காதல் திருமணம் செய்து கொண்ட இரண்டாவது நாளே காதல் மனைவி பெற்றோருடன் சென்றதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இளைஞரின் தற்கொலை மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nவிழுப்புரம் அடுத்த வளவனூர் வடக்குதெருவை சேர்ந்த ஓட்டுனரான வெற்றிவேல், அதே பகுதியை சேர்ந்த தரணி ஆகிய இருவரும் கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவரின் காதல் விவகாரம் தரணியின் தந்தையான குமரவேலுக்கு தெரியவரவே உடனடியாக தரணிக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதனையடுத்து தரணி வீட்டை விட்டு வெளியேறி திருவந்திபுரத்தில் வெற்றிவேலுடன் கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டுள்ளார். காதல் திருமணம் செய்த தகவல் தரணியின் தந்தையான குமரவேலுக்கு தெரியவரவே காதல் திருமணம் செய்த ஜோடிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டலையடுத்து திருமணம் செய்து கொண்ட ஜோடி விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது தந்தையிடமிருந்து பாதுகாப்பு வழங்ககோரி தஞ்சமடைந்து புகார் மனு அளித்தனர்.\nஇந்நிலையில், இளம்பெண் தரணி மனம்மாறி தந்தையுடன் சென்றதால் காதல் திருமணம் செய்து கொண்ட வெற்றிவேல் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலை கைப்பற்றி வளவனூர் போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.\nகாதல் திருமணமான இரண்டாவது நாளே காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅடுத்த செய்திஓசூர் பயங்கரம்: முன்விரோதம் காரணமாக ஸ்ரீராம் சேனா நகர செயலாளர் வெட்டிக்கொலை\nWeb Title : youth commits suicide as the wife changed her mind and went with her father villupuram
சிவபெருமானுக்கு ஆதிரை நாளில் களி படையல்\nநமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவபெருமானுக்கு ஆதிரை நாளில் களி படையல் பற்றிய பதிவுகள் :\nமார்கழி மாத திருவாதிரை தினத்தில் சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல துணை கிடைப்பர். மாங்கல்ய பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது. இதை மாங்கல்ய நோன்பு என்று அழைக்கின்றனர்.\nமார்கழி திருவாதிரை நாளில், சுவாமிக்கு களி படைத்து குழந்தைகளுக்கு வழங்கலாம். நாள் முழுவதும் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். இரவில் எளிய உணவு சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று வடிவம் கொண்டவர். இம்மூன்று வடிவங்களிலும் சிவபெருமான் அருள்புரியும் தலம் சிதம்பரம்தான்.\nதில்லை நடராஜருக்குக் களி படைக்க காரணம் :\nமுன்னொரு காலத்தில் தில்லையில் சேந்தனார் என்னும் சிவபக்தர் வாழ்ந்து வந்தார். அவர் விறகு வெட்டி, விற்று தன் குடும்பத்தை நடத்தி வந்தாலும், தினமும் சிவபூஜை செய்ய தவறமாட்டார். அதுமட்டுமல்லாமல் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு விருந்தளித்து மகிழ்வார். சிவனடியார்கள் உணவு உண்பது சிவபெருமானே நேரில் வந்து உண்பதாக நினைத்து மகிழ்வார்.\nஒருநாள் திருவாதிரைத் திருநாளுக்கு முதல் நாள் இரவிலிருந்து கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது, தொடர் மழையால் எங்கும் வெளியில் விறகு வெட்டச் செல்ல முடியாமல் சேந்தனார் தவித்தார். அதனால் வீட்டில் சமைப்பதற்கு எந்த பொருளும் இல்லை. காட்டிற்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு அதை விற்று வந்தால்தான் அன்றைக்கு உணவு.\nஇச்சமயத்தில் சிவனடியார் யாராவது வந்தால் என்ன செய்வது? அவர்களை எப்படி உபசரிப்பது? என்று சேந்தனாரும், அவரது மனைவியும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அவர்கள் வீட்டின் வாசல் முன், திருச்சிற்றம்பலம்! சம்போ மகா தேவா... என்ற குரல் கேட்டது. வெளியில் சிவனடியாரை பார்த்ததும் அவரை மகிழ்வுடன் வீட்டிற்குள் அழைத்து, அவருக்கு ஆசனம் அளித்து பணிவிடை செய்தார்கள்.\nசிவனடியாரின் பசியைப் போக்க வீட்டில் சமைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால், சேந்தனாரின் மனைவி, வீட்டில் இருந்த சிறிதளவு அரிசிமாவில் வெல்லப்பாகு தயாரித்து கலந்து களி கிளறினாள். சிவனடியாரும் அவர்கள் கொடுத்த களியை உண்டு, மகிழ்வுடன் அவர்களை வாழ்த்தி, விடைபெற்றுச் சென்றார்.\nமறுநாள் காலை சேந்தனாரும், அவரது மனைவியும் ஸ்ரீநடராஜப் பெருமானைத் தரிசிக்க சிவாலயம் சென்றார்கள். அங்கு கோவிலைத் திறந்த தில்லை வாழ் அந்தணர்கள், இறைவன் சன்னதியில் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு வியந்தார்கள்.\nசேந்தனாரும், அவரது மனைவியும் இறைவன் முன் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். சேந்தனாரும், தமது வீட்டிற்கு சிவனடியார் வந்ததையும், அவருக்குக் களி கொடுத்து உபசரித்ததையும் அந்தணர்களிடம் கூற, இது நடராஜப் பெருமானின் திருவிளையாடல் என்பதை அறிந்து, சேந்தனாரையும் அவரது மனைவியையும் போற்றி மகிழ்ந்தார்கள்.\nஅன்றிலிருந்து மார்கழி திருவாதிரைத் திருநாளில் களி செய்து ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது என்று புராணம் கூறுகிறது.\nஎனவே திருவாதிரை விரதம் மேற்கொண்டு திருவாதிரைக் களியை உண்பவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்பது நம்பிக்கை.
குடும்பமாக ‘சாயிராம்’ சொல்லுங்கள்; கஷ்டங்களைப் போக்குவார் சாயிபாபா! | baba - hindutamil.in\nPublished : 25 Jun 2020 09:37 am\nUpdated : 25 Jun 2020 09:37 am\nLast Updated : 25 Jun 2020 09:37 AM\nஇந்தப் பூவுலகின் கண்கண்ட தெய்வம்... சாயிபாபா. குழந்தையின் தேவையறிந்து செய்கிற தாயின் கருணைக்கு நிகரானவர் சாயிபாபா என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். தன்னை நம்பி வந்து, தன்னிடம் முறையிடும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார் சாயிபாபா என்று கொண்டாடுகிறார்கள்.\nநம் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், கஷ்டங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் தேவைகள் எனும் எதிர்பார்ப்பு எப்பேர்ப்பட்டதாக இருந்தாலும் குருவுக்கு உகந்த வியாழக்கிழமைகளில், ஞானகுரு சாயிபாபாவை வேண்டிக்கொண்டால் போதும்... மனதாரப் பிரார்த்தனை செய்தால் போதும்... சாயிபாபாவின் அன்பைப் பெறலாம்; அருளைப் பெறலாம்; ஆனந்தமாக வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஉரிய முறையில் வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து பாபாவைத் துதித்தால் நினைத்து நடக்கும். ஆபத்திலிருந்து நம்மை சாயிபாபா காத்தருள்வார்.\nசாயிபாபா விரதத்தை, யார் வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என எவர் வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம். மதங்களுக்கு அப்பாற்பட்டவர் சாயிபாபா. இது விரதத்துக்கும் பொருந்தும்.\nதொடர்ந்து ஒன்பது வாரங்கள், அதாவது ஒன்பது வியாழக்கிழமைகள், சாயிபாபாவை நினைத்து விரதம் மேற்கொள்ளவேண்டும். இந்த விரதம், சக்தி மிக்க விரதம் என்று சொல்லிச் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள். தூய்மையான அன்பும் பக்தியும் மட்டுமே விரதத்துக்குத் தேவை. வேறு எந்த படாடோபத்தையும் ஒருபோதும் பாபா விரும்புவதில்லை.\nமுதலில், வியாழக்கிழமை அன்று குளித்துவிட்டு, பூஜையறையில் சாயிபாபா படத்துக்கு முன்னே அமர்ந்துகொண்டு, சாயிபகவானின் திருநாமத்தைச் சொல்லுங்கள். எந்தக் காரியத்துக்காக, எது தேவை என்று இந்த விரதத்தை மேற்கொள்கிறோமோ அதை மூன்று முறை சொல்லி, பாபாவுக்கு மலர்களைச் சூட்டுங்கள்.\nபாபாவின் படத்தை எடுத்து, ஒரு மணைப்பலகையில் கோலமிட்டு வைத்து பூஜிக்கலாம். கோலத்தின் மீது மஞ்சள் துணியை விரித்து, அதன் மேலே சாயிபாபாவின் படத்தை வைத்துக் கொண்டு பூஜிக்கவேண்டும். வீட்டில் பாபாவின் சிலை இருக்கிறதா? அப்படி இருந்தால், அந்த சிலையை நன்றாக நீராட்டவேண்டும். பிறகு பாபாவின் சிலைக்கு சந்தனம் குங்குமம் இட்டு அலங்கரிக்கவும்.\nபாபாவுக்கு உகந்த நிறம், மஞ்சள். குருவுக்கு உகந்த நிறம் மஞ்சள்தானே. எனவே சாயிபாபாவின் ஆசனத்தில் மஞ்சள் நிற ஆடை விரிப்பதும் பாபாவுக்கு மஞ்சள் நிற மலர்கள் சூட்டுவதும் விசேஷம்.\nவீட்டில் ஒற்றுமை இல்லை, கடன் தொல்லை, குழந்தைகளின் கல்வி, பெரியவர்களுக்கு ஆரோக்கியக் குறைபாடு, நீண்டுகொண்டே இருக்கும் வழக்கு, பிரிந்துவிட்ட தம்பதி என்று என்னென்ன பிரச்சினைகளோ, அந்தக் கவலைகளையெல்லாம் பாபாவிடம் சொல்லி, ஒவ்வொருமுறையும் பூக்களைக் கொண்டு பாபாவை அர்ச்சனை செய்யவேண்டும்.\nகாலையும் மாலையும் வீட்டில் விளக்கேற்றி, பாபாவின் படத்துக்கு மஞ்சள் பூக்களால் அர்ச்சனை செய்து, உங்கள் பிரார்த்தனைகளைச் சொல்லி, ‘சாயிராம் சாயிராம்’ என்று சொல்லிக் கொண்டே இருங்கள். பாபாவுக்கு சர்க்கரைப் பொங்கல், பால் பாயசம், கேசரி என ஏதேனும் ஒன்று நைவேத்தியம் செய்து, அந்தப் பிரசாதத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள்.\nஒவ்வொரு வியாழக்கிழமையும் காலையும் மாலையும் இப்படி சொல்லி பிரார்த்தனை செய்துகொண்டே இருங்கள். பாபாவின் அருளைப் பெறுவீர்கள். உங்கள் இல்லமே, பாபாவின் பேரருளைப் பெறும். பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பஞ்செனப் பறக்கச் செய்வார் சாயிபாபா.\nகூட்டுப் பிரார்த்தனை என்கிற விஷயத்தை சாயிபாபா ரொம்பவே விரும்புவார். எனவே, குடும்பத்தில் உள்ள அனைவரும் அமர்ந்து பாபாவை வழிபடுவது ரொம்பவே சிறப்பானது. குடும்பமாக அமர்ந்து சாயிராம் சொல்லி பாபாவை வணங்குங்கள்; வழிபடுங்கள்; வளம் பெறுங்கள்.\nகுடும்பமாக ‘சாயிராம்’ சொல்லுங்கள்; கஷ்டங்களைப் போக்குவார் சாயிபாபா!ஷீர்டி சாயிபாபாஷீர்டி பாபாகுடும்பமாக பாபா பிரார்த்தனை
aanmigam: காசி மற்றும் இராமேஸ்வரம் யாத்திரை எப்படி செல்வது?\nஇந்துவாக பிறந்த ஒவ்வொருவரது ஆசையும் வாழ்நாளில் ஒருதடவையாவது காசி யாத்திரை செல்வது தான். காசியாத்திரை என்பது காசிக்கு மட்டும் செல்வது கிடையாது. காசியுடன் ராமேஸ்வரமும் செல்வது தான். அப்படியானால் காசி-ராமேஸ்வரம் யாத்திரை செல்வது எப்படி? என்பதை காண்போம்:\nகாசி யாத்திரை செல்ல விரும்புபவர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்குள்ள அக்னி தீர்த்தமாகிய கடலில் நீராடி ஈர உடையுடன் கடலில் மூன்று தடவை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு தடவை மூழ்கும் போதும் ஒவ்வொரு பிடி மணல் எடுக்க வேண்டும். முதல் தடவை மூழ்கி எடுக்கும் மணலை சேது மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், இரண்டாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை பிந்து மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், மூன்றாவது தடவை மூழ்கி எடுக்கும் மணலை வேணு மாதவ என்று கூறி லிங்கமாக பிடித்தும், கரையில் வைக்க வேண்டும். பின்னர் மூன்று லிங்கத்திற்கும் விபூதி சந்தனம் குங்குமம் இட்டு, வில்வ இலை போட்டு ஓம் நம சிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம் கூறி வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத்தியம் வைத்து, பின் சூட தீபாராதனை காட்டி கும்பிட வேண்டும். பின் சேது மாதவ லிங்கத்தை மட்டும் எடுத்து பத்திரமாக நாம் வைத்து கொள்ள வேண்டும்.\nபிந்து மாதவ மற்றும் வேணு மாதவ லிங்கம் இரண்டையும் கடலில் போட்டு விட வேண்டும். அதன் பின் ராமநாதர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் (1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம், 2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன், 3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை 4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி, 5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு, 6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல் 7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல். 8. நள தீர்த்தம், 9. நீல தீர்த்தம்,10.கவய தீர்த்தம்,11.கவாட்ச தீர்த்தம்,12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், 14. கங்கா தீர்த்தம், 15. யமுனை தீர்த்தம், 16. கயா தீர்த்தம், 17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல் 18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல் 19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி 20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல் 21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல் 22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை) நீராடி விட்டு கோடி தீர்த்த்தை மட்டும் ஒரு கேனில் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.\nஅதன் பின் ஈர உடையை மாற்றி கொண்டு ராமநாதர் மற்றும் பர்வதவர்த்தினி அம்மனுக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும். பின் இறைவனை வழிபட்டு காசிக்கு கிளம்ப வேண்டும். உடனே காசிக்கு செல்ல இயலாதவர்கள் தம்முடன் வைத்திருக்கும் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீர்த்தத்தையும் பூஜை அறையில் வைத்து காசி செல்லும் வரை பூஜை செய்ய வேண்டும். காசி செல்லும் போது மறக்காமல் சேது மாதவ லிங்கத்தையும், கோடி தீரத்த்தையும் எடுத்து செல்ல வேண்டும். காசி செல்பவர்கள் முதலில் அலகாபாத் சென்று அங்கு சேது மாதவ லிங்கத்தை திரிவேணி சங்கமத்தில் இட வேண்டும். பின் அங்கிருந்து ஒரு கேனில் தீர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும். பின் காசி சென்று அங்குள்ள விஸ்வநாதருக்கு ராமேஸ்வரத்தில் இருந்து எடுத்து சென்ற கோடி தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து வணங்க வேண்டும். பின்னர் தங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு உணவு பொருளை விட்டு விட வேண்டும். பின்னர் கயா சென்று அங்கு நமது இறந்த மூதாதையருக்கு பித்ருக்கடன் செய்தும், மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட வேண்டும். இதனால் இறந்த மூதாதையரின் பரிபூரண ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும்.\nஅதன் பின் ராமேஸ்வரம் வர வேண்டும். உடனே ராமேஸ்வரம் வர இயலாதவர்கள் 15 நாட்களுக்குள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். அது வரை அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும். ராமேஸ்வரம் செல்லும் போது அலகாபாத்தில் எடுத்த தீர்த்தத்தை ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு காசி ராமேஸ்வர யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும. இப்படி செய்தால் தான் காசி ராமேஸ்வர யாத்திரையின் முழுபலனும் கிடைக்கும்.\nPosted by Sasi Rama at 6:10 PM
யானைகளின் வருகை 7:4பெரிய ஜீவன்கள் மரணத்திற்கு காரணிகள் யார்? | யானைகளின் வருகை 7:4பெரிய ஜீவன்கள் மரணத்திற்கு காரணிகள் யார்? - hindutamil.in\nPublished : 08 Aug 2017 15:17 pm\nPublished : 08 Aug 2017 03:17 PM\nஅதில் ஆண் யானை விடிந்த பிறகே அந்த இடத்தை விட்டு அகன்றது. விடியலில் ரயில்வே மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் எல்லாம் வந்தார்கள். அதற்கு முன்பே தகவல் கிடைத்து அங்கே சென்றிருந்தேன். நான் அங்கே கண்ட காட்சி மனதைப் பிழிய வைப்பதாகவே இருந்தது.\nயானைகள் ரயில்பாதையில் இறங்குவதற்கு முன்பு அதை வேறுதிசையில் விரட்டியிருக்கலாம். அல்லது ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு போன் செய்து சிக்னல் போட்டு ரயிலை நிறுத்தியிருக்கலாம். இந்த விஷயத்தில் இரண்டு துறைகளிலும் அக்கறை இல்லை. இரு தரப்புமே ஈகோ பார்ப்பதாலும், அக்கறையுடன் வேலை பார்க்காததாலும்தான் அநியாயத்திற்கு இத்தனை யானைகள் இப்படி செத்திருக்கின்றன!'' என்பதே அவர்களின் கோபமாக இருந்தது.\nஇதற்கிடைப்பட்ட நேரத்தில் அங்கு குழுமம் மக்கள் யானைகளை தொழுவதும், அதற்கு மாலைகள் இட்டு மரியாதை செய்வதும் நடந்தது. அதே நேரத்தில் சில வனவர்கள் தாங்கள் கண்டதை வெளியே சொல்லமுடியாது சில மீடியாக்களிடம் மட்டும் தம் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.\nஇந்த யானைகள் ஓரிரு வாரங்களாக மட்டுமல்ல;3மாதமாகவே இங்குள்ள தோட்டத்து விவசாய நிலங்களில் விளைபொருட்களை சேதப்படுத்துகிறது. அதற்கு சோலார் மின்வேலிகள் பொருத்தியும் பலனில்லை. அதனால்தான் அதை பட்டாசு விட்டும், வான வெடி விட்டும் விரட்டியிருக்கிறார்கள் சுற்றுப்புற விவசாயிகள். அதனாலயே இது ஊருக்குள் புகுந்து நகரத்திற்குள் புகுந்து கலங்கல் கிராமம் வரை (காட்டிலிருந்து 50 கிலோமீட்டர்) சென்று விட்டது.\nஅவை திரும்ப காட்டிற்கே வருவதற்கு பல கிராமத்து சாலைகளை, மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையை கடக்க வேண்டியிருந்தது. அப்படி எல்லா சாலைகளையும் கடந்து விட்ட நிலையில் நேற்றுதான் இங்கே மதுக்கரை எட்டிமடை பகுதிக்கு கொண்டு வந்து சேர்த்தோம். அவை பழக்கதோஷத்தில் அங்குள்ள வாழைத் தோட்டங்களுக்குள் புகுந்து விட்டது. அதை பட்டாசு வெடித்து விரட்டினர் விவசாயிகள். நாங்கள் சொன்னால் யாரும் கேட்பதாயில்லை. நாங்களும் ரெண்டு மூணு மாதமாக யானை விரட்டியே சோர்ந்து விட்டோம்.\nஅப்படி சோர்ந்திருந்த நிலையில்தான் இவை இங்குள்ள ரயில்வே டிராக்கில் புகுந்திருக்கின்றன. இது எங்களுக்கு தெரியாது. ஆனால் அதை விரட்டிய குறிப்பிட்ட ஊர் விவசாயிகளுக்கு தெரியும். ரயில் அந்த நேரத்தில் வரும் என்று தெரிந்தே இந்த பள்ளத்தாக்கில் விரிட்டி விட்டுள்ளார்கள். ஐந்தறிவே உள்ள விலங்கு அதற்கு என்ன தெரியும். நாங்கள் இது தெரிந்து சுதாரித்து அங்கிருந்து விரட்ட முயற்சித்தோம். ஆனால் நன்றாக அங்கே ரயில்வே தண்டவாளத்தில் விலக முடியாமல் அந்தப் பள்ளத்தில் மாட்டிக் கொண்டது. இப்போ ஐயோ விநாயகக் கடவுள். இப்படியாகிப் போச்சேன்னு கும்பிட்டுட்டு நகர்ற ஜனங்களில் சிலபேரு செஞ்ச கோளாறுதான் இந்த நாலு யானைகளின் சாவு!'' என்று வருத்தத்துடன் தெரிவித்தனர்.\nஅந்த யானைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி, தண்டவாளத்திலிருந்து சரிந்த சக்கரங்களை மீண்டும் தண்டவாளத்திலேயே பொருத்தி திரும்பவும் அந்தப் பாதையில் ரயில் ஓட வைக்க 10 மணி நேரம் ஆனது. அங்குள்ள சமதள இடத்திற்கு இறந்த யானைகள் கிரேன், பொக்லைன் இயந்திரம் மூலம் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. அதே நாளில் இறந்த யானைகளுக்கு பேனர் வைத்து அஞ்சலி செலுத்தும் முகமாக குரும்ப பாளையம், மதுக்கரை, எட்டிமடை, மைல்கல், திருமலையாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் கூடினர். மலர் மாலையிட்டு அவற்றை தொழுதனர். அழுதனர்.\nகோவை மாவட்டத்தில் வயது முதிர்ந்தவர்கள் இறந்துவிட்டால் அதை பெரிய சாவு என்று வர்ணித்து துக்கம் அனுஷ்டிப்பார்கள். அதையும் தாண்டி இந்த பெரிய ஜீவன்களின் மரணம் இந்த சுற்றுப்புற மக்களின் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அதை வெளிப்படுத்தும் முகமாகவோ, அல்லது இந்த யானைகள் மரணத்திற்கு நமக்கும் பங்குண்டு என்ற குற்ற உணர்ச்சி தனக்குள் தன்னையறியாமலே எழுந்ததன் காரணமாகவோ அவர்களிடம் மூலைக்கு மூலை பல்வேறு விதங்களில் துக்கம் பீறிட்டது.\nஇதைத் தொடர்ந்து இருமாநில வனத்துறையினர் இணைந்து எதிர்காலத்தில் ரயிலில் அடிபட்டு யானைகள் இறக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று ஆலோசனைக் கூட்டங்கள் போட்டனர். ரயில்வே நிர்வாகத்திடமும் பேசினர். ரயில்வே பாதையில் யானைகள் கடக்கும் இடங்களில் யானைகள் படம் பொறித்த எச்சரிக்கை பலகையும், அந்த பகுதிகளில் ரயிலின் வேகம் 30 முதல் 40 கிலோ மீட்டருக்குள் இருக்குமாறு பார்த்துக் கொள்வாதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் உத்திரவாதம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து அந்த ரயில்வே பாதையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் யானைகள் கடக்கும் இடம் என்பதற்கான அறிவிப்பு பலகைகள் ரயில்வே நிர்வாகத்தால் வைக்கப்பட்டன. ஆனால் வேடிக்கை என்னவென்றால் இப்படி பலகைகள் வைத்த இடங்களை குறிவைத்தே மறுபடியும் யானைகள் விபத்தில் சிக்கி மரணிக்கும் நிலை தொடர்கதையானது. அதற்கான அச்சாரம் அடுத்த 17-வது மாதத்தில் இதே பகுதியில் நடந்தது...\nராகுல் கார் மீது கல்வீச்சுக்கு எதிர்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட திருநாவுக்கரசர் கைது
’அப்படி’ நடிக்கணுமா? ரெடிதான் ஆனா.. கண்டிஷன் போடும் நடிகை - Dhinasari Tamil\nHomeசினிமாசினி நியூஸ்’அப்படி’ நடிக்கணுமா? ரெடிதான் ஆனா.. கண்டிஷன் போடும் நடிகை\n’அப்படி’ நடிக்கணுமா? ரெடிதான் ஆனா.. கண்டிஷன் போடும் நடிகை\nதமிழ் படங்களில் நடிக்கவில்லை.\nகவர்ச்சியாக நடிக்க ஒரு சம்பளம், நெருக்கமாக நடிக்க ஒரு சம்பளம் என்று தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து வரும் பிரபல நடிகை பூஜாஹெக்டே கேட்பதால் தயாரிப்பாளர்கள் மிரண்டு போய்\nதமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தில் ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை. ‘அருவா’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்க இவரது பெயர் அடிபட்டது. ஆனால் ராஷி\nகன்னா தேர்வாகி உள்ளார். தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.\nநெருக்கமான கவர்ச்சி காட்சிகளில் நடிக்க வேண்டுமானால் ரூ.3 கோடி சம்பளம் வேண்டும் என்று பூஜா ஹெக்டே கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தேர்வு செய்வதா, வேண்டாமா? என்று படக்குழுவினர் யோசிக்கின்றனர். இதேபோல் கவர்ச்சியாக நடிக்க ஒரு சம்பளம், நெருக்கமாக நடிக்க இன்னும் கூடுதல் சம்பளம் என்று கேட்கிறாராம். இதனால் தயாரிப்பாளர்கள் மிரண்டு போய் உள்ளனர்.\nPrevious articleசீசனல் ஃபுட்: மேங்கோ தூத் பேடா!\nNext articleசீசனல் ஃபுட்: மாம்பழ க்ரானிட்டா
லிஃப்டுக்குள் சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்! சிறுமியின் சமயோசித சாகசம்! மலைக்கச் செய்யும் சிசிடிவி பதிவு! - Times Tamil News\nலிஃப்டுக்குள் சிறுவனுக்கு நேர்ந்த பயங்கரம்! சிறுமியின் சமயோசித சாகசம்! மலைக்கச் செய்யும் சிசிடிவி பதிவு!\nதற்காலத்தில் சி.சி.டி.வி.க்கள் சமூக வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு அங்கமாகி உள்ளன.\nகுற்றங்களை கண்டு பிடிப்பது, தடுப்பது உள்ளிட்டவற்றில் சிசிடிவி காட்சிகள் முக்கிய பங்கு வகித்தாலும் சில நேரங்களில் எதிர்பாராத விபத்துகள், பயங்கரங்கள் இயற்கை சீற்றங்கள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து உலகுக்கு காட்டுவதிலும் சிசிடிவி கள் முக்கிய பங்கு வகிக்கின்றன\nஅந்தவகையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் லிஃப்டுக்குள் நேர்ந்த பயங்கரம் தொடர்பான ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. லிஃப்டுக்குள் அந்த சிறுமி இருந்த நிலையில் மேலும் இரு சிறுவர்கள் நுழைகின்றனர். ஒரு சிறுவனின் கையில் ஒரு கயிறு. லிஃப்ட் கதவு மூடி விட்டு புறப்படுகிறது.\nஅப்போது சிறுவனின் கழுத்தில் இருந்த கயிற்றில் ஒரு அசைவு. லிஃப்ட் கதவில் கயிற்றின் மறுமுனையை சிக்கி கொண்டதன் விளைவுதான் அது. லிஃப்ட் நகர நகர அந்த கயிறு நகர்ந்து சிறுவனின் கழுத்தை இருக்கி அவனை மேலே தூக்குகிறது.\nகண நேரம்தான் சிறுமி சற்றும் தாமதிக்காமல் சிறுவனை ஒரு கையால் தாங்கி பிடித்துக் கொண்டு மறுகையால் லிஃப்டின் ஒரு பட்டனை இயக்கி கதவின் இருக்கத்தை விலக்க முயற்சி செய்ய அந்த கயிறு தளர்ந்து கீழே வருகிறது. இதை அடுத்து சிறுவனின் கழுத்தில் இருந்து கயிற்றை விலக்கி அவனை அந்த சிறுமி காப்பாற்றுகிறாள்.\nசில வினாடி நேர காட்சிதான் என்றாலும் சிறுமியின் தீரத்தையும் சமயோசித சாகசத்தையும் விளக்கும் இந்த சிசிடிவி காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது
விஜய் பெரிய ஹீரோ ஆக யார் காரணம் ? - Namma Tamil Cinema\nவிஜய் பெரிய ஹீரோ ஆக யார் காரணம் ?\nMRKVS சினி மீடியா சார்பாக ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார்.\nகதையின் நாயகனாக மொட்ட ராஜேந்திரன். முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.\nராஜ் கே .சோழன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா விழாவில் படத்தின் முன்னோட்டத்தை திரையிட்டனர் . அடர்ந்த காடு பாழடைந்த பங்களா.. எஸ் இதுஒரு பேய்ப்படம் ! படக்குழுவினரை வாழ்த்த இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு, திரையரங்குகள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, கவிஞர் சினேகன், மறைந்த அப்துல் கலாம் அவர்களின் உதவியாளரான பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇசைத்தகட்டை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட திரு. அபிராமி ராமநாதன் பெற்றுக்கொண்டார்.\nஇந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இயக்குனர் ரவிமரியா பேசியதாவது, “இந்தப் படத்தின் இயக்குனர் அருண் அவரது பெயரை அவ்வப்போது விதவிதமாக மாற்றிக்கொள்பவர். சுந்தர்.சி மாதிரி பெரிய இயக்குனராக வரவேண்டும் என இப்போது அருண்.சி என மாற்றியுள்ளார். இந்தப்படத்துல வில்லனா ஆரம்பிச்சு காமெடியில முடிக்கிறோமா என அருணிடம் கேட்டேன். ஆனால் அவர் அதெல்லாம் இல்லை, இந்தப்படத்தில் உங்களுக்கு காமெடியே இல்லை என சொல்லி என்னை இயக்குனர் கேரக்டரிலேயே நடிக்கவைத்து புதிய பாதை போட்டுத்தந்துள்ளார்.\nபேய்க்கு லாஜிக் இருக்கு என்பதை இந்தப்படத்தில் தெளிவாக கூறியுள்ளார்.\nபாலிவுட்டில் சூப்பர் நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான் உட்பட அனைத்து நட்சத்திரங்களும் தங்களது பட புரமோஷன்களுக்காக இருபது நாள்கள் ஒதுக்கி பங்கேற்கின்றனர்.\nஆனால் இந்த படத்தில் நடித்த கதாநாயகி இந்த விழாவிற்கு வரவில்லை. இப்போது நடிகைகளிடம் அவர்கள் நடித்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது என்பது ஒரு நோய் மாதிரி பரவி வருகிறது.\nபுரமோஷன்களில் கலந்துகொள்ளாத நடிகைகளை புறக்கணியுங்கள்” என கூறினார்..\nநடிகர் ஆரி பேசும்போது, “இந்தப்படக்குழுவினர் யாரையும் எனக்கு தெரியாது. சிறிய படங்களின் விழாக்களில் கலந்துகொண்டு ஊக்கப்படுத்துவதற்காக வந்துள்ளேன். அண்ணன் மொட்ட ராஜேந்திரன் இங்கே வரவில்லை. அவரது பி.ஆர்.,ஓவாக வந்துள்ளேன் என சொல்லலாம்.\nசமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளுக்கு சென்று வந்தேன். அங்கே பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் பலரும் காணமால் போய், இறந்துபோய் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.\nபலருக்கு சின்னதாக உதவி செய்வதை விட பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினருக்கு அத்தியாவசிய தேவைகளுக்கான மொத்தமான செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என இங்கே உங்கள் முன் வாக்குறுதி அளிக்கிறேன். இதேபோல ஒவ்வொருவரும் முன்வந்தால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப முடியும். கடலுக்குள் செல்லும் மீனவர்களை கண்காணிக்க, காணாமல் போனால் தேடுவதற்கு என இன்றைக்கு வெளிநாடுகளில் எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அவற்றை இங்கேயும் விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.\nஇயக்குனர் பேரரசு பேசும்போது, பேய் உண்மையிலேயே இருக்கு.. பணப்பேய், பதவிப்பேய், காமப்பேய், மதப்பேய், ஜாதிப்பேய் என இப்படி பல பேய்கள் நமக்குள்ளேயே இருக்கு. இந்த சினிமாவையும் கடந்த ஐந்தாறு வருடங்களாக பேய் பிடித்திருக்கிறது.\nஆனால் இது சினிமாவை வாழவைக்கும் நல்ல பேய். இந்தப்படத்தின் தயாரிப்பாளரையும் இந்த பேய் நிச்சயமாக காப்பாற்றும்” என்றார்.\nஅப்துல் கலாமின் உதவியாளராக பணியாற்றிய பொன்ராஜ் பேசும்போது, “நான் அப்துல் கலாம் ஐயாவுடன் ஒருமுறை வடமாநிலம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது இரவு நேரம் கடற்கரையில் வெள்ளையாக உருவம் நடந்துவந்து மறைந்ததை பார்த்தேன்.\nஎன்னுடன் வந்தவர்கள் சிலரும் அதை பார்த்தனர். இதை அப்துல் கலாம் ஐயாவிடம் சொன்னபோது, அதைப்பற்றி பலபேரிடம் சொல்லி என்னை கிண்டல் செய்துவந்தார்.\nஇங்கே சினிமாத்துறையை அழிக்கும் பேய் என்றால் அது கந்துவட்டி பேய் தான். இனி வரும் காலங்களில் படங்களில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் தங்களது பங்களிப்பாக ஐம்பது சதவீதம் பணத்தை படத்தில் முதலீடு செய்யவேண்டும்.\nபின்னர் வரும் லாபத்தில் தங்களது பங்கை எடுத்துக்கொள்ளும் முறையை கொண்டுவரவேண்டும்.. எனக்கு தெரிந்த சில நண்பர்கள், தங்கள் படங்களுக்கு சரியாக் தியேட்டர் கிடைக்காததால், கிடைத்த தியேட்டர்கள் பலவற்றில் இருந்து வசூல் தொகை வராமல் பாதிக்கப்பட்டதாக கூறினார்கள்.\nஇன்றைக்குள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து தியேட்டர்களையும் அதில் விற்பனையாகும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் இணையதளம் மூலமாக எளிதாக கணக்கிட முடியும். இங்கே வந்திருக்கும் அபிராமி ராமநாதன் சாரிடம் இதுபோன்ற குறைகளை களைய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என பேசினார்.\nதயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும்போது, “இன்று சினிமா தயாரிக்கவேண்டும் என்றாலே பயமாக இருக்கிறது. படத்திற்கு பூஜை போட்டத்தில் ஆரம்பித்து ரிலீஸ் தேதி வரை எந்த திசையில் இருந்து என்ன பிரச்சனை வருமோ என பயந்துகொண்டே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.\nஒரே இந்தியா ஒரே வரி என சொன்னார்கள்.. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் மட்டும் சினிமாவுக்கென தனியாக அதிக வரி விதிக்கிறார்கள். இதை அரசாங்கத்துக்கு எதிரான குரலாக நினைக்கவேண்டாம்..\nநமக்கான கஷ்டங்களுக்கு நாம் குரல் கொடுத்தால் தான் தீர்வு கிடைக்கும். இன்று புதிதாக திரையுலகில் படம் எடுக்க வருபவர்கள் சீனியர்களான பாக்யராஜ், பேரரசு போன்றவர்களிடம் உதவிகளை கேட்கலாம்” என தனது குமுறலை வெளிப்படுத்தினார்.\nஇதை தொடர்ந்து பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், “பேய் இருக்கா இல்லையான்னு கேட்டா இருக்குன்னுதான் சொல்வேன்.. அமானுஷ்யம்னா அது பேயா, இல்ல முனியா எதோ ஒன்னு இருக்குங்க.\nமனுசனால எது ஒன்றை பாக்க முடியாதோ அதை பார்க்கத்தான் ஆசைப்படுவான். இல்லைன்னா நயன்தாரா படத்துக்கு எதுக்கு இவ்வளவு கூட்டம் வருது.\nபொன்ராஜ் பேசும்போது தியேட்டர்காரர்கள் கொளையடிக்கிறார்கள், அதனால் சின்ன படங்கள் சாகிறது என குற்றம் சாட்டினார். கடந்த வருடத்தில் நான் ஐம்பது படங்கள் விநியோகம் பண்ணினேன். அதுல 45 படங்கள் சின்ன படங்கள் தான்.\nஇன்றைக்கு விஜய் பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர் முதன்முதலா நடித்தபோது அது சின்ன படம் தான். எங்களை போன்ற தியேட்டர்காரர்கள் சின்ன படம் என அதை புறக்கணித்திருந்தால் அவர் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியுமா..?\nதியேட்டர்களில் சில சின்ன படங்களுக்கு 15 பேர் கூட வர மாட்டேங்கிறாங்க.. இதுனால எங்களுக்கு ஏசி போடுற காசு கூட கிடைக்காது. அப்படின்னா அந்த படத்தை நிறுத்துறத தவிர எங்களுக்கு வேற வழியில்ல. இதோ இப்ப அருவின்னு சின்ன படம் ஒன்னு வெளியாச்சு. ஆனால் முதல்நாள்ல இருந்து நல்ல கூட்டம்.. அந்தப்படத்துக்கு மட்டும் கூட்டம் எப்படி வந்துச்சு. மக்களுக்கு மட்டும் எப்படியோ அது தெரியுது. அந்த வித்தை மட்டும் எங்களுக்கு தெரிஞ்சிருந்தா அத்தனை சின்ன படங்களையும் ஓட வைச்சிருப்போம். அந்த சக்ஸ் பார்முலாவ கண்டுபிடியுங்க.\nமுதல்ல திருட்டு விசிடி பிரச்சனை இருந்துச்சு. இப்போ படம் ரிலீஸாகி 15 நாட்கள்ல அமேசான்ல படம் வந்துருது. இது லீகலா வருதுன்னாலும் குறைஞ்சது ஒரு மாதத்திற்காவது படங்களை இப்படி அமேசான்ல கொடுக்காம இருங்க.\nதிரையரங்குகள் தான் வசூலை மொத்தமாக அள்ளிக்கொடுக்க முடியும். அமேசனால அப்படி அள்ளிக்கொடுக்க முடியாது. தியேட்டர்கள் பொன்முட்டையிடும் வாத்து. அதை நீங்கள் அழித்து விடாதீர்கள்” என சூடு கிளப்பினார் அபிராமி ராமநாதன்.\nநன்றி தெரிவித்து படத்தின் இயக்குனர் அருண்.சி பேசும்போது, “கடந்த மாதம் ஒரு கனவு வந்தது.. அந்த கனவில் நானும் படத்தின் தயாரிப்பாளரும் பாக்யராஜ் சாரிடம் இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.\nஅதெல்லாம் வர முடியாது என முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிடுகிறார் பாக்யராஜ். ஆனால் இப்போது நிஜத்தில் நாங்கள் சென்று அழைத்தபோது, நீங்க போங்க.. நான் வந்திடுறேன் என ஒரே வார்த்தையில் சொன்னார். இந்தப்படமும் இதுபோல நிறைய ட்விஸ்ட்டுகளுடன் இருக்கும்.\nஎன்னுடைய 12 வருட கனவு நனவாகி இருக்கிறது. மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா இருவருமே பல சிரமங்களை பொறுத்துக்கொண்டு கடுமையான உழைப்பை இந்தப்படத்திற்காக கொடுத்துள்ளார்கள். விஜய் டிவி குரேஷி இந்தப்படத்தின் வசனங்களில் சில கவுன்ட்டர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி கேட்டார்,\nTaggedaaram thinai movieabhirami ramanathanbhagyarajkperarasuravi mariyatamil cinema news\nPrevious Article களவாடிய பொழுதுகள் @ விமர்சனம்\nNext Article விஷால் – சமந்தா நடிக்கும் ‘இரும்புத் திரை’
திருப்பதி ஏழுமலையானை தினமும் விஐபி திட்டத்தில் தரிசிக்க வாய்ப்பு: தேவஸ்தானம் திட்டம்\nதிருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமியை அருகில் சென்று தரிசனம் செய்ய பக்தர்கள் மிகவும் ஆசைப்படுவார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை.\nஇதற்காக தேவஸ்தானம் தற்போது புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. அதாவது வாணி அறக்கட்டளைக்கு ஆன்லைனில் நன்கொடை வழங்கினால் இந்த ஆசை நிறைவேறும்.\nஇந்த திட்டத்தை கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி நேற்று தொடங்கி வைத்து கூறியதாவது: கடந்த3ஆண்டுகளுக்கு முன்பு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு சார்பில் வாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது. புராதனமான கோயில்களை புனரமைக்கவும், பாதுகாக்கவும் தூப தீப நெய்வேத்தியம் சமர்ப்பிக்க, மதமாற்றத்தை தடுக்கவும், வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கட்டுவதற்கும், இந்துமத பிரசாரத்திற்காக இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது.\nஆனால் இந்த அறக்கட்டளைக்கு பக்தர்களிடையே பெரிய அளவில் வரவேற்பு இல்லை. இதையடுத்து இதனை பக்தர்கள் மத்தியில் கொண்டு சென்று நன்கொடையை ஈர்க்கும் விதமாக கடந்த மாதம் 21ம்தேதி இந்த அறக்கட்டளைக்கு ரூ. 10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக ஏழுமலையானை அருகில் சென்று தரிசிக்க (விஐபி தரிசனம்) அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.\nஅன்று முதல் நேற்று முன்தினம் வரை இந்த அறக்கட்டளைக்கு ரூ. 10 ஆயிரம் வீதம் நன்கொடை செலுத்தி விஐபி டிக்கெட்டுக்கான தலா ரூ. 500 கட்டணமும் செலுத்தி 1109 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் பக்தர்கள் சுலபமாக இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை செலுத்தும் விதமாக தேவஸ்தான இணையதள முகவரி ஆன வெப்சைட்டில் நன்கொடை செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டை பெறலாம்.\nநன்கொடை வழங்கிய பக்தர்கள்6மாதத்திற்குள் விஐபி டிக்கெட்டுகளை பெற்று சுவாமி தரிசனம் செய்யலாம்.\nதினமும் விஐபி திட்டத்தில் தரிசனம் செய்ய வேண்டுமானால் அறக்கட்டளைக்கு தினமும் ரூ. 10 ஆயிரம் நன்கொடை செலுத்தியும், ரூ. 500 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக ஆன்லைனில் தினந்தோறும் 500 விஐபி டிக்கெட் முன்பதிவு செய்யும் விதமாக வைக்கப்பட்டு உள்ளது.\nஆகம ஆலோசகராக ரமண தீட்சிதர் நியமனம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தலைமை அர்ச்சகராக பணிபுரிந்து வந்தவர் ரமண தீட்சிதர். முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு ஆட்சியின்போது 60 வயது நிரம்பிய அர்ச்சகர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டு ரமண தீட்சிதர் உட்பட வம்ச பாரம்பரிய அர்ச்சகர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டது.\nஇதனை எதிர்த்து வம்ச பாரம்பரிய அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇந்தநிலையில் உயர்நீதிமன்றம் வம்ச பரம்பரை அர்ச்சகர் கட்டாய ஓய்வில் அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து அவர்கள் விருப்பம் உள்ளவரை அர்ச்சகர் பணியை தொடரலாம் என தீர்ப்பு வழங்கியது. இதனால் மீண்டும் வம்ச பரம்பரை அர்ச்சகர்கள் பணியில் தொடர்வார்கள் என தற்போது உள்ள அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.\nஇதன்படி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம ஆலோசகராக ரமண தீட்சிதர் நேற்று நியமிக்கப்பட்டார்.
பெங்களூரை சுத்திப்பார்க்க ஆசையா.....?\nபெங்களூரின் எழில் கொஞ்சும் அழகிற்கும், பருவ நிலைக்கும் பலர் அடிமை. பெங்களூரை சுத்தி பார்ப்பது மட்டுமின்றி அங்கு வாழ்ந்துப் பார்த்திட விரும்புகின்றனர் பல இளைஞர்கள். இந்தியாவின் பல நகரங்களிலிருந்து இங்கு குடி பெயர்ந்திருக்கும் மக்கள் அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் ஒரு இடமாக பார்க்கின்றனர். பன்மொழி பேசும் மக்களிடம் நட்பு பாராட்டி உணவை பகிர்ந்து ஒற்றுமை பாராட்டி வாழும் வகையில் அமைந்திருக்கும் இடம் நமது பெங்களூரு. ஐடி நிறுவனங்களின் படை சூழ 24 மணிநேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த நகரத்தில் சுற்றிப்பார்க்க அமைந்திருக்கும் இடங்களை பற்றிய ஒரு பார்வை.\nமைசூர் அரச குடும்பத்திற்கு சொந்தமான பெங்களூர் அரண்மனை, பிரசித்திப்பெற்ற சுற்றுலாத்தளமாக இருக்கின்றது. பூக்கள் நிறைந்த பூங்காக்கள் புடை சூழ இந்த பிரம்மாண்டமான அரண்மனை அமைந்திருக்கின்றது.\nகிட்டத்தட்ட 300 ஏக்கர் நிலப்பரப்பில் 6000 மரங்களை கொண்டிருக்கின்றது கப்பன் பூங்கா. இந்த நகரம் இயற்கையை ரசிப்பவர்களுக்கு ஏற்றவாறு பச்சை புல்வெளிகளை கொண்டிருப்பதுடன் அத்தாரா கச்சேரி, கப்பன் பார்க் அருங்காட்சியகம் மற்றும் ஷேஷாத்ரி ஐயர் நினைவு பூங்கா ஆகியவை இங்கு அமைந்திருக்கின்றன. இந்தியாவின் இரண்டாவது பெரிய அக்வாரியமான பெங்களூரு அக்வாரியம் இங்கு இடம் பெற்றிருக்கிறது.\nபெங்களூரில் அமைந்திருக்கும் லால்பாக் பொட்டானிக்கல் கார்டனை தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற தாவரவியல் கலைப்படைப்பு என கூறலாம். இந்த பூங்காவின் முக்கிய குறிக்கோள் தாவரங்களைப் பற்றிய அறிவியல் ஆய்வு மற்றும் தாவர வகைகள் மறைந்துவிடாமால் பேணி பாதுகாப்பதே ஆகும். பெங்களூரு நகரின் மையத்தில் 240 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கின்றது லால்பாக். கிட்டத்தட்ட 1,854 வகையான தாவரங்களைக் கொண்டிருப்பதுடன் பிரஞ்சு, பாரசீக மற்றும் ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அரிய தாவரங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதன் மற்றோரு சிறப்பு 3000 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெற்றிருக்கும் லால் பாக் பாறையே.\nபன்னர்கட்டா தேசிய பூங்கா\nபெங்களூரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பன்னேர்கட்டா தேசிய பூங்கா பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கான சரணாலயமாகும். சுமார் 104.27 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்கா 1971 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதுவே நாட்டின் முதல் பட்டாம்பூச்சி பூங்காவை கொண்டிருக்கும் இடமாகும்.\nபெங்களூரு வனப்பிரிவின் கீழ் இருக்கும் அனேகல் மலைத்தொடரின் பத்து ரிசர்வ் காடுகள், மீன்வளம், மிருகக்காட்சிசாலை, குழந்தைகள் பூங்கா, முதலை பண்ணை, பாம்பு பூங்கா மற்றும் வரலாற்றுக்கு முந்தைய விலங்குகள் பூங்கா ஆகியவையும் இங்கு அமைந்திருக்கின்றது. அதுமட்டுமின்றி ஜங்கிள் சஃபாரி மூலம் இங்குள்ள அதிசய வனவிலங்குகளை நீங்கள் மிக அருகில் காணலாம்.\nபெங்களூர் மகாத்மா காந்தி சாலை என்பது நகரத்திலிருக்கும் மிக பரபரப்பான சாலைகளில் ஒன்று நகரத்தில் பொழுதுபோக்கு மற்றும் அனைத்து விதமான பொருட்களையும் மலிவான விலையில் வாங்குவதற்கான இடமாகவும் திகழ்கின்றது. பாரம்பரிய கைவினைப்பொருட்கள், பட்டு புடவைகள் மற்றும் கட்லரி மற்றும் எலும்பினால் ஆன சீனா பொருட்கள் போன்ற கவர்ச்சிகரமான பொருட்கல் மிக எளிதாகக் கிடைக்கின்றன. பெங்களூரின் பொழுதுபோக்கு மையங்களில் ஒன்று எம்.ஜி.ரோடு. நீங்கள் அவசியம் பார்க்கவேண்டிய இடம்.\nசிபிடி (மத்திய வணிக மாவட்டம்) இல் அமைந்துள்ள இந்த சொகுசு மால் உங்கள் உயர்நிலை தேவைகளுக்கான ஒரே இடமாகும். ஒட்டுமொத்தமாக நான்கு கோபுரங்களை ஒருங்கிணைத்து, இந்த மால் 13 ஏக்கர் பரப்பளவில் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.\nஇதுப்போன்ற பல இடங்கள் நீங்கள் பார்த்து மகிழ இருக்கின்றன.\nTags:bangaloretourist placestourist places in bangaloretravel
பிரபல நாட்டிலும் களைகட்டிய "தைப்பொங்கல்".... கொண்டாடி மகிழ்ந்த தமிழர்கள்....!! • Seithi Solai\nசுவிட்சர்லாந்திலுள்ள தமிழர்கள் தங்களின் பாரம்பரியமிக்க நிகழ்ச்சியான தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள்.\nதமிழர்களின் பாரம்பரிய மிக்க கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக தைப்பொங்கல் திகழ்கிறது. இதனை தமிழர்கள் அனைவரும் புத்தாடை உடுத்தி சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள்.\nஇந்நிலையில் நடப்பாண்டின் தைப்பொங்கலை சுவிட்சர்லாந்திலுள்ள நீட்வால்டன் மாநிலத்தின் தமிழர்கள் மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடியுள்ளார்கள். இந்த தைப்பொங்கலை திரு. முரளிதரன் என்னும் தமிழர் ஒன்றிய தலைவர் தலைமை தாங்கியுள்ளார்.\nTags: உலகச் செய்திகள், பொங்கல், ஸ்விட்சர்லாந்து
ஜடாயு எண்ணங்கள்: கார்த்திகை விளக்கீடு: மன இருள் மாய்ப்போம்!\nஎழுதியவர் ஜடாயு at 5:24 PM\nஅருமை ஜடாயு அவர்களே! விளக்கீடு பற்றிய சம்பந்தர் பாடலை நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி.\nகளப்பிரர் காலத்தை திராவிட நாட்டின் இருண்ட காலம் என்பார்கள். அந்த இருட்டை முதலில் அடித்துத் துரத்தியவர் திருநாவுக்கரசர். அவருக்கு தூண்டுதலாக இருந்தது அவர் தமக்கையார் திலகவதியார்.\nஅதே காலகட்டத்திலேயே அந்த இருள் போய் அரேபியாவைச் சூழ்ந்து கொண்டது. நபி மேல் இறங்கிய வஹிக்கு சர்டிபிகேட் கொடுத்து அவரைத் தூண்டிவிட்டவரும் ஒரு பெண்தான். அவர் மனைவியான கதீஜா அம்மையார்.\nஇதெல்லாம் வளைக்கை மடநல்லார் கையால் நடந்தவைதான். அதனால்தான்\nஆவதும் பெண்ணாலே!அழிவதும் பெண்ணாலே!\nமிக்க நன்றி யாழ்ப்பாணன் அவர்களே. அருமையான பெயர் உங்களுடையது.\n// அந்த இருட்டை முதலில் அடித்துத் துரத்தியவர் திருநாவுக்கரசர். அவருக்கு தூண்டுதலாக இருந்தது அவர் தமக்கையார் திலகவதியார்.\nஅதே காலகட்டத்திலேயே அந்த இருள் போய் அரேபியாவைச் சூழ்ந்து கொண்டது //\nமிக நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் அறிஞர் அனானி அவர்களே.\n// இதெல்லாம் வளைக்கை மடநல்லார் கையால் நடந்தவைதான். அதனால்தான்\nஆவதும் பெண்ணாலே!அழிவதும் பெண்ணாலே! //\nஆமாம். எல்லாம் அந்த மாயை சக்தியின் விளையாட்டு தான்.\nகார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள். உலகெங்கும் இருள் நீங்க அசுர சக்திகளின் ஆக்கிரமிப்பு அகல நாமும் ஏற்றி வைப்போம் அகல் விளக்குகள். ஜடாயு ஐயா அருமையான கருத்துகள். காலத்திற்கு பொருத்தமான விளக்கங்கள்.\n"அந்த இருட்டை முதலில் அடித்துத் துரத்தியவர் திருநாவுக்கரசர்."\nநல்ல observation. திருநாவுக்கரசர் என்ற பெயர் பின்னால் வந்தது. அவருக்கு அம்மா அப்பா வைத்த பெயர் மருள்நீக்கியார். என்ன பொருத்தமான பெயர் பாருங்கள். இந்த மருளைத்தான் நீக்கி அரேபியாவுக்கு பார்சல் செய்துவிட்டாரோ!\n// நல்ல observation. திருநாவுக்கரசர் என்ற பெயர் பின்னால் வந்தது. அவருக்கு அம்மா அப்பா வைத்த பெயர் மருள்நீக்கியார். என்ன பொருத்தமான பெயர் பாருங்கள். //\nஅனானி, அருமையான விளக்கம்.\n// இருள் நீங்க அசுர சக்திகளின் ஆக்கிரமிப்பு அகல நாமும் ஏற்றி வைப்போம் அகல் விளக்குகள். //\nநன்றி நீலகண்டன். அகல - அகல் சொல்லாட்சி நன்றாக இருக்கிறது.\nகார்த்திகை பற்றிய அருமையான தகவல்களைத் தந்ததற்கு நன்றி.\n// இந்த இருளுக்கும், இதனிலிருந்து மீள மனித குலம் தம்மிலிருக்கும் உயரியசக்தியை விழிப்புணர்வை துணைக்கழைத்து மேற்கொள்ளும் போரே தேவ-அசுர யுத்தமாக இந்தியப் பெருங்கதைகளில் சித்தரிக்கவும் படுகிறது . மனித மனத்தின் விழிப்புணர்வின் உச்சமானதொரு தன்மையை இறைவன் இறங்கி அசுரர்களை எதிர்கொள்வதாக புராணங்கள், கதைகள், வழக்குகள் சித்தரிக்கின்றன. //\nதேவ அசுர விளக்கம் பற்றிய ஆழ்ந்த விளக்கம். அசுரன் என்பது கிறித்தவ மதத்தில் வருவது போல சாத்தான் அல்ல. அது அக்ஞானம் அல்லது மன இருள் தான் - இந்தக் கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.\nஒரு அனானியின் மின் அஞ்சல்\nமுதலில் தந்த அந்த தாகூர் கவிதை ரொம்ப நல்லா இருந்ததுங்க.\nஇந்த மன இருளை நாம் மாய்க்க வேண்டும்னு கடைசில சொன்னதை, முதல்ல சொன்ன அந்த கவிதையோட சேத்து நெனச்சுப் பாத்தேன்.\nநாமெல்லாம் அந்த அகல் விளக்கு மாதிரியாவது இருக்கோமா? தெரியல.\nகார்த்திகைய வெச்சு ஒரு நல்ல சிந்தனயத் தூண்டிவிட்ட உங்களுக்கு நன்றி.\nIt is interesting to know that Bharathiyar has written abt the Karthigai festival also. Thanks for the nice passage.\nNesakumar's quote at the end is very thought provoking.\nகார்த்திகை பற்றி சுருக்கமாகவும், அழகாகவும், இன்றைய சூழலுக்குப் பொருத்தமாகவும் எழுதியிருக்கிறீர்கள். நன்றி.\nஎன் இனிய இஸ்லாமிய சகோதரர்களே!\nமனித இனத்தைப் பற்றி இந்து மதத்தின் உயர்ந்த ரிஷிகளில் ஒருவர் கூறுகையில் ....\nபுல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் ...செல்லாஅ நின்ற இத்தாவிர சங்கமத்துளெல்லாப் பிறப்பும்\nஎன்று பரிணாமவியலை உணர்ந்து பாடுகிறார்.\nஇந்துமதம் என்பது மற்ற மதங்களைப் போல இன்று நேற்றுப் பிறந்த மார்க்கமல்ல.. மாறாக இந்த பேரண்டம் தோன்றிய போதே அதுவும் தோன்றி விட்டது. ஒவ்வொரு காலத்திலும் இந்தமதத்தில் பெரும் ரிஷிகளும் ஞானிகளும் தோன்றி அதனைப் பிரகாசிக்கச் செய்து வந்தார்கள். இனிமேலும் இந்த இந்துமதத்தில் இறையருள் பெற்றவர்கள் வருவார்கள். ஒரு சில மதங்களில் இவர்தான் இறுதியானவர் அவர்தான் இறுதியானவர் என்றும், இவரை அனுப்பிய பின்னர் இறைவன் தன் வாயை மூடிக்கொண்டுவிட்டான் என்றும் சொல்லி கற்காலத்திலேயே சமுதாயத்தை வைத்திருக்கவும் வன்முறையை வளர்க்கவும் முயல்வார்கள். அது போலன்றி, அணுவிலும் பேரண்டத்திலும் உறையும் வரையறுக்க முடியாத இறையை வரையறுக்க முடியாது என்றே ஒப்புக்கொள்ளும் இந்துமதம், சமுதாயத்தில் அல்லன நீக்கி நல்லன போற்றும் ஞானியரையும் ரிஷிகளையும் ஒவ்வொரு காலத்திலும் இறையருளால் பெற்றே வந்திருக்கிறது. ஒரு சிலர் இந்தியாவுக்கு மட்டுமே உரியது இந்துமதம் என்றும் கூறுவார்கள். அது உண்மையல்ல. அகிலத்தார் அனைவருக்கும் பொதுவான மார்க்கம் தான் இந்துமதம்.\nஅதாவது இப்பிரபஞ்சம் அனைத்துக்கும் ஒரே இறை தான், அது அணுவிலிருந்து அண்டம் வரை யாவிலும் வியாபித்துள்லது. அதனை வரையறுக்கவோ, ஒரு புத்தகத்துக்குள் அடக்கிவிடவோ முடியாது. அப்படி அடக்கிவிட்டேன் என்று கூறும் மார்க்கங்கள் அஞ்ஞானத்தில் விழுந்து கிடக்கும் மனிதனின் உற்பத்திகள் தானே?\nஉலக சமயங்களைக் கற்பதால் நாம் அடையும் பெரிய இலாபம் யாதெனில் சமயங்களுக்கு மத்தியில் எத்தகைய வேற்றுமைகள் இருந்த போதிலும் அனைத்திலுமே அடிப்படை உண்மை ஒன்றாக இருப்பதைக் காண முடிகின்றது. இந்த அடிப்படை உண்மையின் மூலம் ஏற்படும் ஒற்றுமையானது சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற குரோதம், விரோதம், துவேசம் ஆகியவற்றைப் போக்கி சாத்வீகத்தை உண்டாக்கி மனிதனை மனிதப் புனிதனாக ஆக்கும் நிலையைக் காண முடிகின்றது. தான் என்னும் அகங்காரத்தினை விலக்கி, தான் உருவாக்கிய மதம் என்னும் அகங்காரத்தை விலக்கி, தான் நம்பும் மதம் என்னும் அகங்காரத்தை விலக்கி, யாரை வணங்கினாலும் மனிதன் இறையையே வணங்குகிறான் என்ற பேருண்மையை உணர இந்து மதம் உணர வைப்பதன் மூலம், மதங்களுக்கு இடையேயான குரோதத்தையும், விரோதத்தையும் துவேசத்தையும் போக்குகிறது.\nஉண்மையில் மிகப் பெரும் சமயங்களில் ஒன்று இந்து சமயம். இதில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், முருகனை வணங்குபவர்கள் கணபதியை வணங்குபவர்களை வெட்டிக்கொலை செய்ததுமில்லை. கணபதியை வணங்குபவர்கள் விஷ்ணுவை வணங்குபவர்கள் மீது குண்டு வீசியதுமில்லை. விஷ்ணுவை வணங்குபவர்கள் காளியை வணங்குபவர்களது கோவிலின் உள்ளே சென்று சிலைகளை உடைத்ததுமில்லை. ஏன் எனில், எல்லா இந்துக்களும் அடிப்படையில் எந்த் உருவத்தில் இறைவனை வணங்கினாலும் வணக்கத்தை பெறுவது ஒரே இறைவனே என்ற பேருண்மையை அறிந்திருப்பதுதான். கல்வியை வேண்டுபவன் சரஸ்வதி என்ற உருவில் இறையை வணங்குகிறான். செல்வத்தை வேண்டுபவன் இலக்குமி என்ற வடிவில் இறையை வணங்குகிறான். மனிதனின் வேண்டுதல் மாறலாம். இறை மாறுவதில்லை என்பதை இந்து அறிந்திருக்கிறான்.\nஇருள் சேர் இருவினையும் சேரா இறைவன் என்று இந்துமத வேதங்கள் இறையை குறிப்பிடுகின்றன. நல் வினை தீவினை ஆகிய இரண்டுமே தொடாத இறையை இந்து மதம் கூறுகிறது. இறை வரையறைக்குள் வராது. வரையறுக்கவும் முடியாது.\nஇறை இதுதான் என்று நாம் வரையறுக்கும் எல்லா வரையறைகளும் இறையை கட்டுப்படுத்துகின்றன என்பதை இந்து ரிஷிகள் உணர்ந்திருக்கிறார்கள்.\nதன்னை நம்பாதவர்களோடு தன்னை நம்புபவர்கள் போர் புரிய வேண்டும் என்று கடவுள் கூறியதாக ஒரு சில மதங்கள் கூறும். தனக்கு ஆடுகளை பலிகொடு என்று கடவுள் கேட்டதாக ஒரு சில மதங்கள் கூறும். நான் தான் கடவுள் என்னைப்பற்றி பலரிடம் எடுத்துச்சொல்லி அவர்களை என்னை கும்பிடச்சொல்லு என்று கடவுள் சொன்னதாக சில மதங்கள் சொல்லும். இப்படி மனிதனை இறைஞ்சும் கடவுள் கடவுளாக இருக்க முடியுமா? மனிதனுக்குத்தான் கடவுளின் தேவை இருக்கிறது. என்ன தேவையோ அந்த தேவை காரணமாக கடவுளை ஒரு உருவகப்படுத்திக்கொள்கிறான். சரஸ்வதியாக கடவுளை பார்ப்பவனுக்கு கடவுள் கல்வியை அளிக்கிறார். நீங்கள் யார்? உன் தந்தைக்கு நீங்கள் மகன், உங்கள் அண்ணனுக்கு நீங்கள் தம்பி. உங்கள் மகனுக்கு நீங்கள் தந்தை. உங்கள் மனைவிக்கு நீங்கள் கணவன். ஆள் ஒரே ஆள்தானே? ஒரு சாதாரண மனிதனான உங்களுக்கு இத்தனை முகங்கள் இருக்குமென்றால், இப்பேரண்டத்தை படைத்த,கற்பனைக்கும் எட்டாத இறைக்கு எத்தனை முகங்கள் இருக்கும்? சாதாரண மக்கள் நாம். அந்த பணிவுடன் தான் நாம் இறைக்கு திருமணம் செய்துவிக்கிறோம். பாடல்களை பாடுகிறோம். அது நம்மால் சந்தோஷப்படுகிறதா? அல்ல. நாம் சந்தோஷப்படுகிறோம். நம் சந்தோஷத்துக்காக இவற்றை செய்கிறோம். நம் சந்தோஷமே மக்களின் சந்தோஷமாக சமுதாயத்தின் சந்தோஷமாக விரிகிறது.\nதெய்வமென்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான் என்று கண்ணதாசன் இந்துமதத்தின் ஆணி வேரை சொன்னார்.\nஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுதான் திருமூலரும் சொன்னார்.\nஅசலன், அனாதி, ஆதி, ஏகன் என இந்துப் புராணம் இறைவனை அழைத்தாலும் அது இறைவனை எந்த உருவிலும் வணங்குவதை தடை செய்வதில்லை. தடை செய்வதன் மூலம் வன்முறையே பெருகும். நான் சரி நீ தவறு என்ற வாதமும் பிரதிவாதமுமே வரும். அது வன்முறையிலேயே முடியும். ஏனெனில், ஒரு சாதாரண மனிதனுக்கு பல முகங்கள் இருப்பதுபோல, இறைவனுக்கு எண்ணற்ற உருவங்களில் வணங்கினாலும் ஒரே இறைவனையே அத்தனை வணக்கங்களும் அடைகின்றன என்பதை இந்து ரிஷிகள் கூறி மக்களை வளப்படுத்தி சமுதாயத்தினை வளப்படுத்தியிருக்கின்றனர்.\nஇதனால்தான் இந்து மதத்தை சார்ந்த அம்பேத்கார், காந்தியடிகள் போன்ற பெரியவர்கள், ஞானிகள் இஸ்லாம் கிறிஸ்துவம் ஆகிய மதங்களை பாராட்டவும், அந்த மதங்களை நிறுவியவர்களை பாராட்டவும் அஞ்சியதில்லை. ஏனெனில், எந்த உருவில் வணங்கினாலும் இறை ஒன்றுதான் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், அந்தந்த மதத்தினரோ, தங்கள் மதங்களை பரப்ப விளம்பரங்களாக அவற்றை பயன்படுத்திக்கொள்வதன் மூலம், தங்களது குறுகிய மனத்தையே காட்டுகிறார்கள்.\nஎனதன்பின் இஸ்லாமிய நண்பர்களே..\nஇந்து வேதம் உபநிஷதம், கீதை, திருமந்திரம், திருவாசகம், பிரபந்தம் போன்ற நூல்களில் கடவுளைப் பற்றிய அகமன வெளிப்பாடுகளுக்கும், பல உருவங்களில் இறையை வணங்கும் மக்களுக்கும் எந்த வித்தியாசங்களும் வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். இந்து மூல நூற்களிலும், முந்தைய இந்து மத அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்று நேரமெடுத்து நீங்கள் படிக்க முன் வந்தால் நிச்சயம் உங்களுக்கு இவ்வுண்மை புலப்படும். அப்போது, தனது மதம் மட்டுமே உண்மையான மதம் என்று அறிவிலிகள் பேசுவதையும், தனது நிறுவனரிடம் மட்டுமே இறை பேசினார் என்று பீலா விடும் மதங்களையும் எளிதில் இனங்காண முடியும்.\nஇந்து மதம் ஒர் அறிவுப் பூர்வமான பகுத்தறிவுக்கு ஏதுவான மார்க்கம். மனித சமுதாயம் இவ்வுலகில் சாந்தி சமாதானம் ஒற்றுமையுடன் வாழ்வதற்குரிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டத்தினையே இந்து மதம் தன் அடிப்படையாக உலக மக்களுக்கு முன்வைக்கின்றது. இந்துக்கள் சிலரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் இந்து ஆன்மீக பாரம்பரியத்துக்கு மாற்றமாகக் கூட சில வேளை இருக்கக் கூடும். அதற்காக இந்து மதத்தைக் குறைகூற முடியாது.\nஇந்து மதம் எவரையும் அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டுமென வற்புறுத்துவதில்லை. மற்ற மதங்களை போல அமைதி மதம் என்று பேசிக்கொண்டே அடுத்தவர் வழிபாட்டு தளங்களில் குண்டு வைப்பதில்லை. இம் மார்க்கத்தில் பலவந்தம் கிடையாது என்று பேசிக்கொண்டே, இந்த மதம் தவிர வேறொன்று மனிதனிடமிருந்து ஒப்புக்கொள்ளப்படாது என்று முரண்பாடுடன் பேசுவதில்லை.\nஉங்களது வழிபாட்டை தடுக்காத ஒருவரின் வழிபாடு நிச்சயமாக இறைவனிடமே செல்லும் என்று ஒப்புக்கொள்ளும் அனைவரும் இந்துக்களே. மற்றவர்களது வழிபாட்டை தடுத்து தனது வழிப்பாட்டு முறையையே எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று பேசும் மனிதர்கள் சமுதாயத்தின் மீது வன்முறையை திணிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பெயர் சொல்லாவிடினும் இந்துக்களே என்றாலும், அதிலுள்ள மேலான சிந்தனைகளையும், ஆன்மீக பாரம்பரியத்தையும், ஞானத்தையும் உலக மாந்தர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என விரும்புகின்றது. அழைப்பு விடுக்கின்றது.\nஉங்கள் சிந்தனையைக் கொஞ்சம் தூண்டி விடுங்கள், உங்கள் பகுத்தறிவுக்கு வேலை கொடுங்கள். இந்தியாவில் மனிதர்கள் மலம் அள்ளுவதை கொண்டுவந்தவர்கள், அதற்கு காரணம் இந்துமதம் தான் என்று பிரச்சார மாயை செய்து உண்மையை மறைக்கப்பார்ப்பார்கள். அதன் மூலம், எங்கள் மார்க்கத்திலேயே ஆண்டான் அடிமை போன்ற வித்தியாசம் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து,6வயதுள்ள பெண் பிள்ளைகளை அடிமைப்படுத்தி நாலாந்தாராமாக 60 வயது கிழவனுக்கு மணம் செய்து கொடுப்பதையும், பள்ளி செல்லும் சிறுவன் இடுப்பில் குண்டு கட்டி மார்க்கத்துக்காக தற்கொலை செய்வதையும் நியாயப்படுத்தி பேசுவார்கள்.\nஇந்துமதம் வாருங்கள். இறை வழி சேருங்கள்.\n// இது போன்ற பல கேள்விகளுக்கு இன்று புலப்படும் விடை, இதெல்லாம் குறியீடுகள் என்பதே. அசுரத்தன்மை என்பது நமது மனத்தின் பின் கதவுகள் தாம். கடவுள் கீழிறங்கி வருவது என்பது கடைசியில் நமக்குள் ஏற்படும் விழிப்புணர்வுதான்!" //\nஅருமையான வரிகள். நேசகுமார் அவர்களே, ஆன்மீக விஷயங்களிலும் உங்கள் புரிதல் மிக ஆழமானது, தெளிவானது என்று புரிகிறது.\nநீண்ட பின்னூட்டத்தில் பல நல்ல கருத்துக்களைச் சொல்லியதற்கு நன்றி. இவ்வளவு ஓபனாக இந்து மதத்துக்கு வாருங்கள் என்று அழைப்பு விடும் உங்கள் தைரியம் கண்டு ஒருவித மரியாதையே ஏற்படுகிறது.\nஉங்களை இதுவரை தமிழ்மணத்தில் பார்த்ததில்லை. யார் நீங்கள்?\nநன்றி. எழிலின் பதிவில் உங்களது பின்னூட்டத்தைத் தொடர்ந்து வந்தால், சிறப்பான கட்டுரை. இந்தக் கட்டுரையை எனது பதிவில் பிரசுரிக்காததை இப்போதுதான் கவனித்தேன். உங்களின் கட்டுரை சிறப்பாக இருக்கிறது. மேலே ஒரு பின்னூட்டம் விஷமமான முறையில் எழுதப்பட்டுள்ளது. என்னை விமர்சித்து வந்தால் கவலைப்படமாட்டேன். சம்பந்தா சம்பந்தமில்லாமல் வேறொருவரை சம்பந்தப்படுத்தும் தொணியில் எழுதப்பட்டிருப்பதால் அதை நீக்குவது நல்லது என்று நினைக்கின்றேன். நீக்கினால் மகிழ்வேன்.\n// இந்தக் கட்டுரையை எனது பதிவில் பிரசுரிக்காததை இப்போதுதான் கவனித்தேன். உங்களின் கட்டுரை சிறப்பாக இருக்கிறது. //\nநன்றி நேசகுமார். ஆம், அந்த "இருளும் மருளும்" கட்டுரையை நீங்கள் பதிவில் போடவில்லை. இப்போது கூட போடலாம், it is as relevant now as it was then.\n// வேறொருவரை சம்பந்தப்படுத்தும் தொணியில் எழுதப்பட்டிருப்பதால் அதை நீக்குவது நல்லது என்று நினைக்கின்றேன். நீக்கினால் மகிழ்வேன். //\nநீங்கள் சொல்வது சரி. அந்த மறுமொழி, அதற்கு நான் அளித்த மறுமொழி இரண்டையுமே நீக்கி விட்டேன்.\nசரியான சமயத்தில் நல்லதொரு பதிவு, நன்றி.
Added : நவ 27, 2019 23:17\nசென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், அதிகாரிகளுடன், ஆய்வு கூட்டம் நடத்தினார், கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு. பின், நிருபர்களிடம் அவர் பேசுகையில், 'நாங்கள் எதிரியாக பார்ப்பது, தி.மு.க.,வை மட்டுமே; மற்றவர்கள் எல்லாம் உதிரி தான். அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும் விமர்சிக்க முடியவில்லை. ஆட்சி சிறப்பாக நடக்கிறது' என்றார்.விபரமான அதிகாரி ஒருவர், 'கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலில், நீங்க எதிரின்னு சொல்லும், தி.மு.க.,வினரும், உங்க கட்சியினரும், '60:40' என, மறைமுக ஒப்பந்தம் போட்டு, முக்கிய பதவிகளை பிரிச்சுக்கிட்டாங்க...\nஜெயலலிதா இருக்கும் போது தான், இரு கட்சியினரும் எதிரியாக இருந்தாங்க... இப்போ, நீங்க தி.மு.க.,வை எதிரின்னு சொன்னா, யாரும் நம்ப மாட்டாங்க' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தோர், அதை ஆமோதிப்பது போல் தலை அசைத்தனர்.\n'தமிழருவியை வம்புக்கு இழுக்கிறாரே!'
ராகுல் காந்தி - பா. ரஞ்சித் திடீர் சந்திப்பு ! எதை பற்றி பேசியுள்ளார்கள் தெரியுமா ? போட்டோ உள்ளே ! - Cinemapettai\nராகுல் காந்தி – பா. ரஞ்சித் திடீர் சந்திப்பு ! எதை பற்றி பேசியுள்ளார்கள் தெரியுமா ? போட்டோ உள்ளே !\nஇயக்குனர் என்று அழைப்பதை விட இவரை தோழர் என்றே பலரும் அழைக்கின்றனர். இன்றைக்கு கோலிவுட்டில் மோசட் வான்டட் இயக்குனர்களில் ஒருவர். சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை வைத்து கபாலி, காலா என பேக் டு பேக் ஹிட் கொடுத்தவர்.\nRanjith and Rajinikanth\nஇந்நிலையில் ராகுல் காந்தி தன் ட்விட்டர் பக்கத்தில் கலையரசன் மற்றும் ரஞ்சித் அவர்களை சந்தித்தாக புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.\nRahul Gandhi Kalayarsan\nமேலும் அரசியல், சினிமா, சமுதாயம் பற்றி பேசியதாகவும். தான் மீண்டும் இதுபோல ரஞ்சித்துடன் பேச ஆர்வமாக உள்ளதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nRahul Gandhi Ranjith\nமேலும் ரஞ்சித் தன் ட்விட்டர் பக்கத்தில் “அரசியல் மற்றும் கலை பற்றி பேசினோம். சாதி மற்றும் மத அரசியல் நம் சமுதாயத்திற்கு எவ்வளவு தீங்கை ஏற்படுத்துகிறது. என்னை மீட் செய்ததற்கு நன்றி. நம் பேச்சுக்கள் ஒரு உருவம் எடுக்கும் என நம்புகிறேன். எவ்வளவு பெரிய தலைவர் பல்வேறு சிந்தனை உடைய மனிதர்களை சந்திப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் தான்.” என்று பதிவிட்டுள்ளார்.\nஒரு படைப்பின் மூலம் ஏதாவது தாக்கத்தையோ விளைவையோ ஏற்படுத்த முடியுமா? என்று கேட்பவர்களுக்கு இந்த புகைப்படம் ஒரு உதாரணம்.ஒரு தேசிய கட்சியின் தலைவர் காலா படத்தை பார்த்ததின் விளைவு தான் இந்த சந்திப்பு.அண்ணன் பா.ரஞ்சித்திற்கு கிடைத்த மாபெரும் மரியாதை இது.. @beemji @KalaiActor pic.twitter.com/ibw2XCIzij\n— veer (@venkatesanraman) July 11, 2018
விண்டோஸ் 10: பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் | உங்களுக்காக\nவிண்டோஸ் 10: பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்\nBy Senthil on 14/08/2016\nஇந்த டிஜிட்டல் உலகில் ஒருவர் ஏறத்தாழ குறைந்தது பத்து பாஸ்வேர்ட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டியதுள்ளது. வங்கிகள் 180 நாட்களுக்கு மேல், கட்டாயமாக பாஸ்வேர்டை மாற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்துகின்றன. இதில், வங்கிகள், புரபைல் (Profile) பாஸ்வேர்ட் மற்றும் ட்ரான்ஸாக்சன் (Transaction) என்ற ஒன்றையும் அமைக்கச் சொல்லியும், அவற்றையும் குறிப்பிட்ட காலக் கெடுவில் மாற்றச் சொல்லியும் அறிவுறுத்துகின்றன. சமூக ஊடகங்கள், மின் அஞ்சல் அக்கவுண்ட்டுகள், சில இணைய தளங்கள் என எத்தனை வகை இடங்களில் நாம் பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. வங்கி கணக்குகளில் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்களைக் காட்டிலும், நம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்கள் தான் மிக முக்கியமானவை என்று நான் கருதுகிறேன். ஏனென்றால், வங்கி கணக்கின் பாஸ்வேர்டினை மறந்துவிட்டால், நிதி பரிமாற்றத்தை, ஏ.டி.எம். மையங்கள் அல்லது நேரடியாக வங்கிகளில் மேற்கொள்ளலாம். ஆனால், கம்ப்யூட்டரின் பாஸ்வேர்டை மறந்துவிட்டால், அவ்வளவுதான். எந்த வேலையும் ஓடாது. யாரிடமும் சென்று முறையிட முடியாது.\nவிண்டோஸ் 10 இயக்கத்தில், நாம் செட் செய்த பாஸ்வேர்டை மறந்து விட்டால், அதனை ரீ செட் செய்திட “பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்” ஒன்றை உருவாக்கி வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இதனை எப்படி தயாரித்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். அதற்கு முன்னர், ஒரு சிறு எச்சரிக்கை. இந்த பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் செயல்முறை, விண்டோஸ் 10 சிஸ்டத்தில், நீங்கள் லோக்கல் அக்கவுண்ட் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தால் தான் இயங்கும். மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் கொண்டு அமைத்திருந்தால் இயங்காது.\nபாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் என்பது நாம், யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றில் உருவாக்கும் பைல் ஆகும். இதனை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில், இணைத்துப் பயன்படுத்தினால், விண்டோஸ் 10 லாக் ஸ்கிரீனில் நம் பாஸ்வேர்டை ரீசெட் செய்திட இது உதவிடும். இந்த டிஸ்க்கை ஒரு முறை உருவாக்கி வைத்துக் கொண்டால் போதும். பின்னர், அதனை எப்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். (ஆனால், இந்த யு.எஸ்.பி. ட்ரைவினை எங்கு பத்திரமாக வைத்துக் கொள்கிறோம் என்பதனை நினைவில் வைத்திருக்க வேண்டும்) இனி எப்படி இதனை உருவாக்குவது எனப் பார்க்கலாம்.\n1. யு.எஸ்.பி. ட்ரைவினை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் இணைக்கவும்.\n2. அடுத்து விண்டோஸ் கீ + எஸ் அழுத்தவும். இதஆல் சர்ச் பார் கிடைக்கும்.\n3. அதில் User Accounts என டைப் செய்திடவும்.\n4. தொடர்ந்து User Accounts என்பதில் கிளிக் செய்திடவும்.\n5. அடுத்து Createapassword reset disk என்பதில் கிளிக் செய்திடுக.\n6. அடுத்தபடியாக, Next என்பதில் கிளிக் செய்திடவும்.\n7. அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடுக.\n8. தொடர்ந்து, எந்த சாதனத்தில் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் உருவாக்கப்பட வேண்டுமோ, அதில் கிளிக் செய்திடுக.\n9. இனி, உங்கள் லோக்கல் அக்கவுண்ட் பாஸ்வேர்டை டைப் செய்திடவும். இது உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டருக்குள் நுழைய நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டாக இருக்க வேண்டும்.\n10. அடுத்து Next என்பதில் கிளிக் செய்திடுக. பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் உருவாக்கப்படும். உருவாக்கப்படும் செயல்பாடு எவ்வளவு முடிவடைந்திருக்கிறது என்று காட்டப்படும்.\n11. இந்த நிலை 100% ஐ அடைந்தவுடன், Next என்பதில் கிளிக் செய்திடுக.\n12. தொடர்ந்து Finish என்பதில் கிளிக் செய்து வெளியே வருக.\nஉருவாக்கப்பட்ட யு.எஸ்.பி. ரீசெட் ‘டிஸ்க்கினை’ பேர் ஏதேனும் எழுதி, பத்திரமாக வைக்கவும்.\nஇனி இதனைப் பயன்படுத்தி எப்படி பாஸ்வேர்டை ரீசெட் செய்வது எப்படி என்பது எனப் பார்க்கலாம்.\n1. முதலில், உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் ரீசெட் டிஸ்க்கை இணைத்து, கம்ப்யூட்டரை பூட் செய்திடவும். ரீசெட் டிஸ்க் இருப்பதை உணர்ந்து கொண்ட கம்ப்யூட்டர் அதற்கான பக்கத்தினைக் காட்டும். அதில் உள்ள கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடவும்.\n2. எந்த ட்ரைவில் உங்களுடைய பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் உள்ளது என்பதைக் காட்டவும்.\n3. Reset Password என்பதில் கிளிக் செய்திடவும்.\n4. தொடர்ந்து இருமுறை Next கிளிக் செய்திட வேண்டியதிருக்கும்.\n5. அடுத்து கிடைக்கும் கீழ்விரி மெனுவில் கிளிக் செய்திடவும்.\n6. அடுத்து Next கிளிக் செய்திடவும்.\n7. இங்கு புதிய பாஸ்வேர்ட் ஒன்றை அமைக்கவும்.\n8. மீண்டும் அதே புதிய பாஸ்வேர்டினை உள்ளீடு செய்திடவும்.\n9. அடுத்து Password Hint ஒன்றைத் தர வேண்டும்.\n10. தொடர்ந்து Finish என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.\nஉங்கள் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான பாஸ்வேர்ட் அமைக்கப்பட்டுவிட்டது. இனி, இதனையே பயன்படுத்தி உங்கள் கம்ப்யூட்டரை இயக்கலாம்.
தலைமைக்கு இல்லாத தலை – Meelparvai.net\nதலைமைக்கு இல்லாத தலை\nபள்ளிவாசல்களின் சுதந்திர தினம் தொடர்பாக பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய ரீதியான ஒரு தலைமை நிலையம் இருக்க வேண்டும். அப்போது தான் இது சாத்தியமாகும் என்று\nஇது தான் சமூகத்தின் உண்மையான ஆதங்கம் என்று நினைக்கிறேன். சமூகம் இன்று தான் எதிர்நோக்குகின்ற அன்றாட விடயங்களில் வழிகாட்டுவதற்கான தலைமை யொன்று இன்றித் தவிக்கிறது. பெரும்பாலான அதனது விவகாரங்கள் தொடர்பில் பேச்சு வரும் போதெல்லாம் யாரிடம் போய்ச் சொல்ல என்று ஏக்கத்துடன் மௌனித்துப் போகிறது. இந்த விரக்தி நிலை தான் அரசியல் விவகாரங்களிலும் மார்க்க விவகாரங்களிலும் சமூகமாகச் சிந்திக்காமல் தான்தோன்றித் தனமாகச் சிந்திப்பதற்கு மக்களைத் தூண்டியிருக்கிறது.\nசமூகத்தின் உடனடி ஆளுகை மையமான பள்ளிவாசல்கள் பல்வேறு ஆக்கிரமிப்புச் சக்திகளினாலும் ஆளப்படுகின்றன. ஒவ்வொரு பள்ளிவாசல் என்று சொல்லப்படுபவை எல்லாம் அரசியல் கட்சிகளின் கிளைக் காரியாலயங்கள் போல ஏதோ ஒரு கொள்கையின் கிளைக்\nகாரியாலயமாகவே தொழிற்படுகின் றன. எப்படி ஒரு கட்சியின் கிளைக் காரியாலயத்தில் இன்னொரு கட்சி செயற்பட முடியாதோ அதேபோலத் தான் கொள்கைகளின் கிளைக் காரியாலயங்களிலும் மாற்றுக் கொள்கை உடையவர் களின் நிலைமை. இதனால் ஒரே ஊரில் அவரவர்க்கென பல கட்சிக் காரியாலயங்கள் இருப்பது போலவே பள்ளிவாசல்கள் என்ற பெயரில் பல கொள்கைக் காரியாலயங்கள் ஊர்களிலே இருக்கின்றன.\nஇவற்றை சகலரும் சமமாக மதிக்கப்படுகின்ற, சகலருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுகின்ற இஸ்லாம் காட்டித் தந்த பள்ளி வாசல்களாக உருமாற்றும் வேலை சமூகத்திலே இன்னும் எஞ்சியிருக்கின்றது. இந்த இலக்கை நோக்கி பள்ளிவாசல்களை வழிநடத்துவதற்கான ஒரு தலைமை முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் இருக்க வேண்டும் என்பதைத் தான் சமூகம் ஏக்கத்துடன் எதிர்பார்க்கிறது.\nஇந்தப் பணியை யார் செய்வது ? இலங்கை முஸ்லிம்களின் தலைமையாகக் கருதப்பட்டு வந்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அதனது 90 வருட கால ஆயுளில் இந்தப் பணியை இதுவரை செய்யவில்லை. ஒற்றுமைப் பிரகடனம் என்றதொரு வெற்றுப் பிரகடனத்தை வெளியிட்டு அதனுடன் தனது கடமை முடிந்து விட்டது என்று அது சுருண்டு படுத்து விட்டது. இத்துப் போன அந்தப் பிரகடனத்துக்கு உயிரூட்டி அதனை நடைமுறைப்படுத்துவற்கு\nஆவனவற்றைச் செய்ய வேண்டிய பணியை அது செய்யவில்லை.\nபள்ளிவாசல் ஒன்று எப்படி இயங்க வேண்டும், எந்தெந்த நோக்கங்களை அது அடைய வேண்டும், என்னென்ன விடயங்களை அது செய்ய வேண்டும், சமூகத்தின் வளர்ச்சிக்கு அதனுடைய பங்களிப்பு என்ன என எதுவுமே எங்குமே பதியப்பட்டதாக இல்லை. குறிப்பாகச் சொல்லப்\nபோனால் ஒரு பள்ளிவாசலிடமிருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்ற எந்தக் கடமைப்பாடும் (Mandate) பள்ளிவாசல்களுக்கு குறித்துக் கொடுக்கப்படவில்லை. இப்படிக் குறித்துக் கொடுக்கப்படாததன் காரணமாகத் தான் ஒவ்வொரு பள்ளிவாசல்களும் குறித்த காலப்பகுதியில் பள்ளிவாசலை ஆட்சி செய்கின்ற குறித்த கொள்கையினரின் தேவைக்கேற்றாற்போல வக்பு சபையின் தேவைக்காக யாப்பினை வரைந்து, பின்னர் அதனை வைத்த இடமும் தெரியாமல் மறந்து, தம்மிஷ்டப்படி பள்ளிவாசலை நடத்திச் செல்கின்றனர்.\nஇந்த இடத்தில் தான் பள்ளிவாசல்களிடமிருந்து சமூகக் கடமை ஒதுக்கித் தள்ளப்படுகின்றது. இதுதான் பள்ளிவாசல்கள் பலவாகப் பெருகியிருந்தும் சமூகத்தின் நிலையில் மாற்றமெதுவும் வராமலிருப்பதற்கு, அல்லது இருக்கின்ற நிலையை விட சமூகம் வீழ்ச்சியடைந்து போவதற்குக் காரணமாக இருக்கின்றது. இந்த நிலையில் இருந்து பள்ளிவாசல்களை தூக்கி விடுவதற்கான ஒரு மத்திய தலைமை ஒன்றைத் தான் சமூகம் எதிர்ப்பார்ப்பது மக்களுடைய கருத்துக்களில் இருந்து தெரிகிறது. 90 வருடங்களிலும் ஜம்மியதுல் உலமா இந்தப் பணியைச் செய்யவில்லை. 90 வருடங்களுக்குப் பிறது அது வேறு பாதை யில் பயணிக்கவும் தொடங்கியிருக்கிறது. பாடசாலைகளுக்கு கட்டடம் அமைத்துக் கொடுத்தல், தொண்டர் ஆசிரியர்களை நியமித்தல், ஆசிரியர்களுக்கு குவாட்டர்ஸ் கட்டிக் கொடுத்தல், வெள்ள நிவாரணம் வழங்குதல் என அதனுடைய பணி விஸ்தரித்துச் செல்லும் நிலையில், சமூகத்தின் மார்க்கத் தேவையான\nபள்ளிவாசல்களை இஸ்லாமிய மயப்படுத்துவது தொடர்பில் சிந்திப்பதற்கு உலமா சபைக்கு நேரம் இருக்குமா என்பது தெரியவில்லை.\nஇந்த நிலையில் கிளைக் காரியாலங்களாகத் தொழிற்படு கின்ற நிறுவனங்களை ஒருமுகப்படுத்தப்பட்ட நோக்கில் இயங்கு கின்ற பள்ளிவாசல்களாக மாற்ற வேண்டிய தேவையை சமூகம் தற்போது பேசத் தொடங்கியிருக்கிறது. இதற்கென ஒரு தலைமை நிலையத்தை\nஉருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. எந்தப் பள்ளிவாசலும் தன்னுடைய பணியைச் செய்ய வில்லை என்று விரல் நீட்ட முடியாமல் இருப்பதற்குக் காரணம், அது எந்த வேலையைச் செய்திருக்க வேண்டும் என்ற குறிப்பான விடயங்கள் இல்லாமைதான். ஊர்களிலே கொள்கைகளுக் காக மலிந்திருக்கின்ற இவ்வாறான பள்ளிவாசல்களுக்கு மத்தியில் இஸ்லாத்துக்கென ஒரு பொதுவான பள்ளிவாசலை அமைத்து அவற்றை நாடு முழுவதிலுமுள்ள அதுபோன்ற பள்ளிவாசல்களுடன் ஒருங்கிணைத்து ஒரு நெட்வேர்க்கை உருவாக்கிச் செயற்பட வேண்டியிருக்கிறது. அதற்கு பள்ளிவாசல்களுக்கான மத்திய தலம் ஒன்றை உருவாக்க வேண்டிய\nஊர்களிலே பள்ளிவாசல்கள் என்ற பெயரில் இருக்கின்றவைகள் தான் ஊருக்கான தலைமையாக இருக்கின்றன. அந்தத் தலைமைகளையெல்லாம் இணைக்கக் கூடிய ஒரு தலை இல்லாமல் தான் சமூகம் எனும் உடம்பு தள்ளாடிக் கொண்டிருக்கிறது.\nரணில்-மைத்திரி கூட்டணியின் இயலாமையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றி\nசிரியாவின் கிழக்கு கூதா: பூமியில் ஒரு நரகம்
‘‘செல்வியக்கா சொன்னா சரியாயிருக்கும்’’ - Kalki\nசந்திப்பு : மதுரை ஆர்.கணேசன் -\n‘வாழ்க்கையின் அடிப்படை சுகாதாரம்.\nவீட்டுக்கு ஒரு கழிப்பறை அவசியம்’ என்பதை உணர்த்தும் ஒரு பெண்மணியின் செயல்பாடுகளுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்\nமதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பாக ‘தாற்காலிக வட்டார ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றும்’\nசெல்வி, தூமை இந்தியா திட்டத்தின் கீழ்\nகளமிறங்கி, கழிப்பறைகள் கட்டுவதற்கு வழிகாட்டு தலையும், விழிப்புணர்வையும் பொதுமக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்.\nசெல்விக்கு திருமணமாகிவிட்டது. கணவர் கூலிவேலை செகிறார். ரெண்டு பையன், ஒரு பொண்ணு. படிக்கிறார்கள். தனது குடும்பம் ஏழ்மை நிலைமையில் இருந்தாலும் கழிப்பறைகள் கட்ட உதவிபுரிவதற்காக யாரிடமும் பணமும் கேட்பதில்லை; அப்படிக் கொடுக்க முன்வந்தாலும் தவிர்த்து விடுகிறார்...!\n‘நிர்மல் பாரத் திட்டத்தில்’ சுகாதாரத் தூதுவராகத் தொடங்கி தூமைக் காவலர்களுக்கு முன்னோடி ஊக்குவிப்பாளராகத் திகழும் செல்வி, தூமை இந்தியா திட்டத்தில் இணைந்து சேவை யாற்ற, கிராம ஊராட்சிகளுக்குச் சென்று கழிப்பறையின் அவசியம் குறித்து மக்களிடம் எடுத்துரைத்து, வாழும் கிராமத்தை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றி, ஊர்மக்களிடம் நன்மதிப்பையும் பெற்றிருக்கிறார்.\nஅதன் பலனாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆறா யிரத்துக்கும் மேலான கழிப்பறைகள் கட்டி முடிக்க மேற்பார்வையாளராக இருந்து உதவி புரிந்திருக் கிறார்.\nஇவரது சேவைகளுக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் விருதுகள் உள்பட தமிழகம் மற்றும் பீகார் மாநில, பல்வேறு பொது அமைப்புகளிடமிருந்தும் இதுவரை 37 விருதுகள் பெற்றுள்ளார். பின் மத்திய அரசு 2019ல் ‘மகா உத்சவ் விருது’ வழங்கி கௌரவித்தது.\nகளப்பணியில் இருந்த செல்வியிடம் பேசினோம்...\nஎன்னுடைய சிறுவயது முதலே சமூகசேவையில் ஈடுபட்டு வருகிறேன். கலெக்டர் ஆபீஸ் போனால் மக்களுக்கு யாரைப் போ பார்க்கணும், ஃபார்ம் வாங்கி எங்க என்ன எழுதணும்னு தெரியாது. அவர் களுக்கு உதவி செய்வது மற்றும் ரேஷன் கார்டு, வாக் காளர் அடையாள அட்டை, ஆதார்கார்டு மற்றும் மகளிர் சுய உதவிக்குழு மூலமாக லோன் வாங்கித் தருவது போன்ற உதவிகள் செது வந்தேன்.\nஅப்புறம்தான் தூமை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆர்வம் ஏற்பட்டது. எங்க (சக்கிமங்கலம்) ஊரில் திறந்தவெளியைக் கழிப்பறைகளாகப் பயன் படுத்தியதால் பெண்கள், குழந்தைகள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள்.\nஇதைப் பார்த்து இந்த நிலையை மாற்ற வேண் டும்; ‘வீட்டுக்கு ஒரு கழிப்பறை கட்டுங்கள். அரசு 12,000 மானியம் தருவார்கள்’ என்று பொதுமக் களிடம் எடுத்துச் சொன்னேன். முதலில் தயங்கிய கிராம மக்கள் கழிப்பறை அவசியம் பற்றி உணர்ந்து கட்ட ஆரம்பித்தார்கள்.\nமுதலில் நான் குடியிருக்கும் பகுதியான சக்கி மங்கலம் (எம்.ஜி.ஆர்.நகரில்) உள்ள 160 வீடுகளில் பெரும்பாலான கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு, கழிப்பறைகள் கட்டுவதற்கு உதவி செதேன்.\nஅடுத்ததாக பசும்பொன் நகரில் 175 வீடுகள். அங்கு ஒரு வீட்டில்கூட கழிப்பறை இல்லை. விடி யற்காலையில் திறந்தவெளிக்குச் சென்று விட்டு திரும்பும்போது விசில் அடித்து, ‘திறந்த வெளியில் மலம் கழிக்கக்கூடாது. அந்த மலத்திலிருந்து உட் காரும் ஈ நம் வீடுகளுக்கும் வரும். தொற்று நோ ஏற்படும். கர்ப்பிணிப்பெண்களாக இருந்தால் அதி கம் பாதிக்கப்படுவீர்கள், உங்கள் குழந்தைகளுக்கு கொக்கிப்புழு, நாடாப்புழு உருவாகி உடலில் ஊட் டச் சத்துக் குறைபாடு ஏற்படும்’ என்று கூறுவேன்.\nநான் சொன்ன இந்தத் தகவல் எல்லாம் மக்கள் கேட்டுக்கொண்டதால், எங்க கிராமத்தைச் சுற்றி யுள்ள மேலூர், வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், ஒன்றியங்கள் முழுவதும் எல்லா கிராமங்களிலும் தனிநபர் கழிப்பறை, மற்றும் பொதுக் கழிப்பறை வசதி செயப்பட்டுள்ளது.\nமேலும் ஊர்மக்களிடம் உங்களைத் தேடிவருகின்ற தூமைக் காவலர்களுக்கு, ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்காக ஊர்க்காரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அரசு அதிகாரிகள் அனைவரும் சப்போர்ட் பண்ணுகிறார்கள்.\nஒரு கிராமத்தில் எல்லா மக்களுக்கும் எல்லா அடிப்படைத் தேவைகளும் கிடைப்பதுதான் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடித்தளமாகும். அப்படிக் கிடைத்துவிட்டால் முழுமையான சுகா தாரம் கிடைச்ச மாதிரிதான்..!\nபெரிய நகரங்களில் உள்ள மக்கள் சுற்றுலா போன்ற இடங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, இங்க கிராமப்பகுதிகளுக்கு வரணும். அப்பத்தான் அடிப்படை வசதிகள் என்னென்ன இருக்கின்றன, எப்படி மக்கள் வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். தெரிந்து கொண்டால் அவர்களும் உதவ முன்வருவார்கள்.\n‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று சொல்லுவார்கள். அதுபோல, ‘கழிப்பறை இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது’ என்று நான் சொல்லுவேன்.’\nஇந்த 2021 வருடம் திருமங்கலம் சுற்றி ஆலம்பட்டி, கரிசல்பட்டி, ராயபாளையம், காமாட்சிபுரம் உள்பட கிட்டத்தட்ட 2432 கழிப்பறைகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 250 கழிப்பறைகள் கட்டி முடிச்சுட்டோம். தொடர்ந்து வேலை நடக்குது.\nஎந்த வீட்டுக்குக் கழிப்பறை கட்டப் போகி\nறோமோ அந்த வீட்டுக்காரர்களை வைத்தே பணி நடக்கும். மேற்பார்வையிடுவது மட்டும் என் வேலை.\n‘எங்க கிராமத்திற்குச் செல்வியக்காவால் நல் லது நடந்திருக்கு. தேவையான கழிப்பறைகள் கிடைத்துள்ளது’ என்று மக்கள் பெருமையாச்\nசொல்லுவாங்க. மக்கள் என்னை ‘கழிப்பறை\nசெல்வியக்கா’ன்னுகூட கூப்பிடுவாங்க... ‘செல்வி யக்கா சொன்னா சரியாயிருக்கும்’னு சொல்வாங்க.\nஎன்னோட சேவையில் நான் திருப்தி அடைகிறேன்னா, அதுக்குக் காரணம் எங்க கிராம
மானுடத்தின் மீதான பெருங்காதல்: போரும் அமைதியும் - தமிழினி\nwritten by ரா. செந்தில்குமார் November 18, 2020 1 comment\nஎங்கள் தெருவிற்குப் புதிதாக வந்தாள் துளசி. வங்கிப் பணியில் இருந்த தனது தந்தை மற்றும் தாயுடன் மாற்றலாகி எங்கள் ஊருக்கு வந்திருந்தாள். ஏறக்குறைய, நகரின் அனைத்து இளம்பெண்களும் அப்போது சுடிதாருக்கு மாறியிருக்க, இவள் மட்டும் தாவணியில், தேவதை போல வலம் வந்தாள். ஊரில் இருந்த அனைத்து இளைஞர்களுக்கும், எங்கள் தெருவில், நண்பர்கள் இருப்பது அப்போதுதான் ஞாபகம் வந்தது. ஆனால், தனது அழகு மற்றவர்களை என்ன செய்கிறது என்பதைப் பற்றி கொஞ்சமும் அறியாத குழந்தைபோல், துளசி இருந்தாள். கல்லூரிவிட்டால் வீடு, அவ்வப்போது தனது தாயுடன் பெரிய கோயில் என சிறிய வட்டம். அதிர்ந்து பேசாத தன்மை, படிப்பில் கெட்டி என அவளைப் பற்றி வந்த அனைத்து செய்திகளுமே இனியவையாக இருந்தது.\nஅதே துளசி, பெண்களை வளைப்பதையே தன் வாழ்வின் இலட்சியமாய், எந்த வேலையுமின்றி, தந்தையின் காசில் சுற்றிவரும் அசோக்குடன், பைக்கில் கட்டி அணைத்தபடி, மூவாநல்லூர் சாலையில் செல்கிறாள் என்று சரவணன் சொன்னபோது வாழ்வின் அபத்தத்தை நினைத்து சிரிப்புதான் வந்தது. பிறகு, எத்தனையோ பெண்கள்.. மீண்டும் மீண்டும் காதல் என்ற பேரில், பேசிப்பழகும் வாய்ப்பு கிடைத்த ஒரே காரணத்தினால், எந்த வகையிலும் இந்த உலகில் தமது இருப்பை நியாயப்படுத்திக்கொள்ள முடியாத முட்டாள்களுடன் ஓடிப்போய், வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வந்து நிற்பதைப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.\nபேரழகியும், முன்காலைப்பனி போன்ற புனிதமும் கொண்ட நடாஷாவை, இன்னொருவனுக்கு நிச்சயமானவளை, பொறுப்பற்று சுற்றிவரும் அனடோல் கவர்கிறான். அடுத்தவேளை உணவுக்கான சாத்தியம்கூட இன்றி, ஓடிப்போகத் திட்டமிடுகிறார்கள். ஏற்கனவே திருமணமான அனடோலுடனான கனவு வாழ்க்கையைப் பற்றி கற்பனையில் திளைக்கிறாள் நடாஷா. இது எப்படிச் சாத்தியமாகிறது என்பதை தல்ஸ்தோய் காட்சிப்படுத்துகிறார். ஒரு விருந்தில், நடாஷாவை சந்திக்கும் அனடோல், அவளது அழகு பற்றியே பேசுகிறான். அவளது அழகு தன்னை எப்படி பாதிக்கிறது என்பதைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறான். பிறகு அவனது சகோதரியும் நடாஷாவை சந்திக்கும்போது, எப்படியெல்லாம் அனடோல், நடாஷாவினால் ஈர்க்கப்பட்டுள்ளான் என்று சிரித்துக்கொண்டே சொல்கிறாள்.\nமுட்டாள்களுக்கே உரிய அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையுடன் வலம் வருகிறான் அனடோல். தனது ஊதாரித்தனம் பற்றியோ, பொறுப்பின்மை பற்றியோ ஒருபோதும் அவன் சுயமதிப்பீடுகளுக்கும் சந்தேகங்களுக்கும் ஆளாவதில்லை. அதனாலயே அவனிடம் எந்தத் தயக்கங்களும் இல்லை. அனடோலாகிய நான் இப்படித்தானே இருக்கமுடியும் என்று சுற்றிவருகிற தன்னம்பிக்கை நடாஷாவை ஈர்க்கிறது.\nஇப்போது யோசித்துப் பார்த்தால் அசோக், அனடோல் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகள் புலப்படுகிறது. வாழ்க்கை பற்றி தீர்மானமான முடிவுகளுடன் இவர்கள் இருப்பது போன்ற போலித் தோற்றமே, பெண்களை ஈர்க்கிறது. இவர்கள் வாழ்வில் உள்ள சாகசத்தன்மையே நடாஷாக்களை கனவினில் தள்ளுகிறது. அவர்கள் வெளிப்படையான புகழ்ச்சியுரைகளைப் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். சமூகத்தின் மதிப்பீடுகளை புறந்தள்ளக்கூடிய இவர்களது அலட்சியம், துளசி போன்று சமூகத்தின் மதிப்பீடுகளோடு வளர்க்கப்பட்டிருப்பவர்களுக்கு மயக்கத்தைத் தருகிறது.\nஇவ்வளவு நுட்பமாக தனது போரும் அமைதியும் காவியத்தில், மனித உணர்வுகளை எழுத முடிந்ததாலேயே தல்ஸ்தோய் இவ்வுலகின் மகத்தான நாவலாசிரியனாக போற்றபடுகிறான்.\nநெப்போலியனின் படையெடுப்பைக் கதைக்களனாக வைத்துக்கொண்டு, ரஷ்ய பிரபுக்களை கதைமாந்தர்களாக்கி வாழ்வின் பொருளை, மகத்தான வரலாற்று சம்பவங்களின் பின்னணியில் உள்ள தற்செயல்களை, வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கும் சிறு நிகழ்வுகளை, மனித உணர்வுகளை, ஆன்மீகத் தேடல்களை விவரிக்கிறது தல்ஸ்தோய் 1869ல் எழுதிய போரும் அமைதியும் என்ற காவியம்.\n19ம் நூற்றாண்டில், 1806க்கும், 1813க்கும் இடைப்பட்ட காலகட்டம். நெப்போலியனின் படைகள், ஐரோப்பிய நாடுகளை வெற்றிகொள்ளும் வெறியில், சில நாடுகளை வென்ற வெற்றிக் களிப்பில் ரஷ்யாவுக்குள் நுழைகிறது. ஃபிரெஞ்சுப் படைகளின் படையெடுப்பைப் பற்றியும், நெப்போலியனின் போர்வெறியைப் பற்றியும், ஒரு விருந்தில், ரஷ்ய பிரபுகுடும்பத்தினர் ஃபிரெஞ்சு மொழியில் பேசிக்கொள்ளும் போலித்தனத்தில் ஆரம்பிக்கிறது நாவல்.ஏறக்குறைய அனைத்து ரஷ்ய பிரபுக்களும், ராணுவதளபதிகளும் ஃபிரெஞ்சில் பேசிக்கொள்கிறார்கள். ஃபிரெஞ்சு மொழி மேட்டுக்குடியினரின் மொழியாக மகுடம் சூட்டியிருக்கிறது. நாவல் முழுவதும் நிலப்பிரபுக்கள் விருந்துகள் கொடுக்கிறார்கள், போகத்தில் திளைக்கிறார்கள். ஆடம்பரமான உணவுவகைகளைத் தயாரித்து தங்களது விருந்தினர்களை மகிழ்விக்கிறார்கள். எண்ணற்ற பண்ணையாட்களைக் கொண்டு பண்ணைகளைப் பராமரிக்கிறார்கள்.\nஅவர்களுடைய கடமை உணர்வு, மேன்மை, கீழ்மை, போலித்தனம், கட்டுப்பாடு என அனைத்தையும் விமர்சிக்கிறார் தல்ஸ்தோய். நிலப்பிரபுக்களில் ஒருவராய் தல்ஸ்தோயும் ஏராளமான சொத்துகளை கொண்டிருந்தவர்தான். ஒருகாலகட்டத்தில் இந்த நாவலில் வரும் பியரைப் போலவே, தனது சொத்துகளை பண்ணையாட்களின் நலனுக்குச் செலவழித்தார். பண்ணையாட்களைக் கொத்தடிமையிலிருந்து விடுவித்தார். எப்போதும் அறத்திற்கான குரலாய் தல்ஸ்தோய் இருந்தார். போரும் வாழ்வும் நாவலின் அடித்தளம் அறமும், மானுடத்தின் மீதான நேசமும்தான்.\nதல்ஸ்தோய், தனது சமகாலத்திய இலக்கியங்களை, உலக காப்பியங்களைத் தேடித்தேடிப் படிப்பவராக இருந்திருக்கிறார். பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்த அவரது நூலகத்தில் இருபதாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் இருந்திருக்கின்றன. தல்ஸ்தோய், தமிழ்மொழியின் அறநூலான திருக்குளை நேசித்திருக்கிறார். மகாத்மா காந்திக்கு எழுதிய கடிதத்தில் திருக்குறளை, ஹிந்துகுறள் என்று சொல்லி மேற்கோள் காட்டியிருக்கிறார். கீதையைப் பற்றி பேசியிருக்கிறார். ஆன்மீக சாரத்தைத் தனது பலமாகக் கொண்ட நாடான இந்தியாவை, எண்ணிக்கையில் பலமான இந்தியாவை, எந்தத் தத்துவப் பலமும் இல்லாத இங்கிலாந்து, எப்படி வென்றிருக்க முடியும் என்று ஆச்சரியப்படுகிறார் காந்திக்கான கடிதத்தில். காந்தி தனது பாதையாக அகிம்சையைத் தேர்ந்தெடுத்ததில் மிக முக்கியமான பங்கு தல்ஸ்தோய்க்கு இருந்திருக்கிறது.\nபோரும் அமைதியும் நாவலின் ஆரம்பத்தில், ஆன்னா பாவ்லோனா என்ற மேட்டுக்குடி பெண்மணி ஏற்பாடு செய்துள்ள விருந்தில் விரும்பத்தகாத விருந்தாளியாக நுழைகிறான் பியர். முறைகேடாக பிறந்த மகன் என்பதால் பிரபுக்கள் சமூகத்தில் எந்த மரியாதையும் இல்லாமல் வாழும் பியருக்கு, ஒரு கட்டத்தில் தனது தந்தை மூலம் ஏராளமான சொத்துகள் கிடைக்கப் பெறுகிறது. அதே சமூகம் பியரை தங்கத்தட்டில் வைத்துத் தாங்குகிறது. இந்த நாவல் முழுவதும் வரும் பியர், ஆன்மீகமான தேடல் உடையவனாக இருக்கிறான். பியரால், ஒரே சமயத்தில், ஊதாரியாகச் சுற்றி வரும் அனடோலுடனும், மேலான நெறிகளைக் கொண்டவனான ஆண்ட்ரூவுடனும் நட்பு பாராட்ட முடிகிறது.\nஆண்ட்ரூவின் தந்தை நிக்கலஸ் போல்கன்ஸ்கி மாஸ்கோவை விட்டு வெகுதூரம் தள்ளியுள்ள தனது மாளிகையில் வசிக்கிறார். தனது காலத்தில் இருந்து வெகுவாக மாறிவிட்ட உலகின் மீது உள்ள வெறுப்பை எல்லாம் தனது மகள் மேரியிடம் காட்டுகிறார். அவ்வாறு வெறுப்பைக் காட்டுவதினாலயே குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி, அந்தக் குற்றவுணர்ச்சியைப் போக்குவதற்காக மீண்டும் மேரியின் மீது வெறுப்பைக் கொட்டுகிறார். மாறிவிட்ட உலகின் அனைத்து விஷயங்கள் மீதும் நிக்கலஸுக்கு எள்ளல் இருக்கிறது. மனைவியை இழந்துவிட்ட அவருக்கு பெண்கள் தேவையில்லாத சுமையாகத் தெரிகிறார்கள். அவர்களால் எதையும் சரியாகச் செய்யமுடியாது என்று அலுத்துக்கொள்கிறார். அவருடன் வாழ்க்கை முழுவதும் வேலை பார்த்த உதவியாளன், தனது முதலாளியின் கோச் வண்டியில் நகரத்திற்குப் போகும் போது, ‘ஓ.. இந்தப் பெண்கள்!’ என்று தனது முதலாளியின் பிம்பமாய் அலுத்துக்கொள்கிறான். உலகின் ஒழுங்கின்மை எந்த வகையிலும் தன்னை எதுவும் பாதிக்காத வகையில், மகளுக்குக் கணித வகுப்பு, கட்டிட வேலைகள் என்று தொடர்ந்து இயங்கி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பாடுபடுகிறார் நிக்கலஸ்.\nநாட்டுப்பற்றும் கடமையுணர்வும் கொண்ட ஆண்ட்ரூ, நெப்போலியனைத் தடுத்து நிறுத்துவதற்கான போரில் ஈடுபட, கர்ப்பிணி மனைவியை தனது தந்தை வசம் ஒப்படைத்துவிட்டுச் செல்கிறான். செயற்கரிய செயல்கள் செய்த நெப்போலியனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டவனாய் போரில் ஈடுபடும் ஆண்ட்ரூ காயம்பட்டு விழுகிறான். போரில் மடிந்துகிடக்கும் எண்ணற்றவர்கள் மத்தியில் காயத்துடன் விழுந்துகிடக்கும் ஆண்ட்ரூ, ஆகாயத்தைப் பார்க்கிறான். ‘அங்குதான் எவ்வளவு அமைதி?’ என்று வியக்கிறான். யாரை தனது ஆதர்ச நாயகனாக நினைத்து வாழ்நாள் முழுவதும் ஏங்கினானோ அந்த நெப்போலியன், போர்க்களத்தில் விழுந்து கிடக்கும் தனது அருகே வந்து நிற்கும்போது, ஆண்ட்ரூ ஆகாயத்தின் பேரமைதியை வியந்தபடி கிடக்கிறான்.\nஆண்ட்ரூவுக்கும் நடாஷாவுக்கும் இடையிலான காதல் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இருக்கிறது. முதலில் இருவருக்குமிடையே தீவிரமான காதல் உருவாகிறது. பிறகு, நடாஷாவின் மனமாற்றத்தால் உடைகிறது. அனடோலுடன் வெளியேறுவதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்படுகிறாள் நடாஷா. அனடோல் பற்றிய உண்மைகள் தெரியவர, மனம் உடைந்தவளாய் அறையைவிட்டு வெளியே வராமல் இருக்கிறாள். போரிலிருந்து திரும்பிவரும் ஆண்ட்ரூ நடாஷாவை ஏற்க மறுக்கிறான். அனடோல் இராணுவத்தில் சேர்ந்துவிட்டதை அறிந்து, அவனைத் தண்டிக்க நினைக்கிறான் ஆண்ட்ரூ. ஃபிரெஞ்சுப் படைகளுடனான போரில் படுகாயம் பட்டு மருத்துவமனையில் கிடக்கையில், பக்கத்துப் படுக்கையில் இருக்கும் ஒருவனுக்கு கால் துண்டிக்கப்படுகிறது. அரைகுறை மயக்கத்தில் அவனை உற்றுப் பார்க்கிறான் ஆண்ட்ரூ. அது வேறு யாருமல்ல, அனடோல்தான். அனடோல் தண்டனை பெறுவது மாறா பிரபஞ்ச விதியான அறத்தின் அடிப்படையில் என்றால், ஆண்ட்ரூவும் அதே நிலையில் கிடப்பது எதன் அடிப்படையில்?\nமரணப் படுக்கையில் கிடக்கையில், மாஸ்கோவைவிட்டு வெளியேறும் நடாஷா குடும்பத்தினரிடம் வந்துசேர்கிறான் ஆண்ட்ரூ. நடாஷா இரவு பகல் பாராது அவனுக்குப் பணிவிடை செய்து அவனருகேயே கிடக்கிறாள். மீண்டும் தனது காதலை கண்டுகொள்கிறான் ஆண்ட்ரூ. மரணம் அடையும் தறுவாயில் தனது நடாஷா, தனக்குத் திரும்பக் கிடைத்த விசித்திரத்தை நினைத்தபடி படுக்கையில் கிடக்கிறான். மரணம் ஒரு விடுதலை, சந்தித்தே ஆக வேண்டிய ஒரு எளிய நிகழ்வு என்று புரிந்துகொள்கிறான். இப்போது எந்தக் குழப்பமுமின்றி, சாவை எதிர்நோக்கியபடி காத்திருக்கிறான்.\nபியரின் காதலோ, ஒரு எளிய தற்செயலாக மலர்கிறது. ஒரு விருந்தில் ஹெலனைச் சந்திக்கும் பியர் காமத்தால் உந்தப்படுகிறான். தனது வழக்கப்படி எந்த முடிவும் எடுக்கமுடியாமல் திணறி, தன்னைச் சுற்றி உள்ளவர்களால் உந்தித் தள்ளப்பட்டு, ஹெலனைத் திருமணம் செய்துகொள்கிறான். ஒரு சில நாட்களிலேயே தான் விரும்பியது ஹெலனை அல்ல என்று புரிகிறது. அதையும் மீறி, அவனுடைய ஆன்மீகத் தேடல்களால் அலைக்கழிக்கப்படுகிறான் பியர். ஒரு இரகசிய மதக்குழுவில் இணைந்து கொஞ்ச காலம் செயல்படுகிறான். தன்னுடைய எஸ்டேட்டில் பண்ணையாட்களாக உள்ளவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கல்விக்கூடங்கள் ஏற்படுத்துகிறான். உண்மையில் கல்வியால் அவர்களுக்கு என்ன பயன் என்று குழம்புகிறான். ஒரு சில நாட்களில் அந்தக் குழுவில் இருந்து வெளியேறுகிறன்.\nபியரின் பாத்திரம், ஏறக்குறைய தல்ஸ்தோய்தான். எதிலுமே அமைதியடையாமல் அலைந்து திரியும் பியரின் மீட்சி, பிளாட்டேன் காரடேவ் மூலம் சாத்தியமாகிறது. எளிய குடியானவனான பிளாட்டேன், சந்தர்ப்பச் சூழ்நிலையால் ரஷ்ய இராணுவத்தில் பணியாற்ற நேர்கிறது. பிறகு ஃபிரெஞ்சுப் படையினரிடம் பிடிபட்டு முகாமில் வசிக்கிறான் பிளாட்டேன். ஃபிரெஞ்சுப் படைகள் மாஸ்கோவைக் கைப்பற்றிய பின்னரும் அங்கு இலக்கின்றிச் சுற்றித் திரியும் பியரை, ஃபிரெஞ்சு இராணுவம் கைது செய்து அதே சிறையில் அடக்கிறது. பிளாட்டேன், வாழ்க்கை முழுவதும் கடும் உழைப்பையும் கொடுமையான தனிமையையும் கொண்டவனாக இருக்கிறான். தான் இராணுவத்துக்கு வந்தது மூலம் தனது குடும்பம் நிம்மதியாக வாழ்வதைக் கண்டு, ஒரு எளிமையான விவசாயிக்கு எந்த விதத்திலும் பொருந்தாத, இராணுவப் பணிக்கே மீண்டும் திரும்புகிறான்.\nஅப்படி இராணுவத்துக்கு திரும்புகின்ற நாளில், பிளாட்டேனின் தந்தை, சகோதரர்கள் அனைவரையும் அழைத்து பிளாட்டேனின் காலில் விழச் செய்கிறார். பிளாட்டேனுக்குப் பிறந்த ஒரே பிள்ளையும் சிறுவயதில் இறந்துவிடுகிறது. ஆனால், அவனுக்கு யார் மீதும், எதன் மீதும் எந்தக் குற்றச்சாட்டுமில்லை. வாழ்க்கையை சிறிய புல் போன்ற எளிமையுடன், உண்மையை மட்டும் துணையாகக் கொண்டு எதிர்கொள்கிறான். தனக்கு என்று எதையும் இறுக்கிவைத்துக் கொள்ளாத அவனுக்கு எந்தத் துன்பமுமில்லை. அவனுக்கு என எந்த நண்பர்களுமில்லை. ஆனால் எதிர்ப்படும் எல்லா மனிதர்களுடனும் அவனால் நட்பு பாராட்ட முடிகிறது, உதவ முடிகிறது.\nமுகாமில் பகல் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு இரவுப் பொழுதில் கதை பேசியும் பாடியும் பொழுதைக் கழிக்கிறான் பிளாட்டேன். தனக்குத் தெரிந்த பாடல்களை தனக்கு வருகின்ற ராகத்தில் பாடுகிறான். குற்றமே செய்யாமல், சிறையில் வாழ்நாள் முழுவதும் கழித்து இறுதியில் குற்றமற்றவன் எனத் தெரிந்து விடுதலை செய்தி வருகின்ற போது, சிறையிலேயே இறந்துவிடுகின்ற ஒரு அப்பாவிக் கைதியைப் பற்றிய கதையை, திரும்பத் திரும்பச் சொல்கிறான். அந்த அப்பாவிக் கைதியை அரசாங்கம் விடுவிக்கும் முன், இறைவன் விடுவித்துவிட்டான் என்று சொல்லி அமைதியில் ஆழ்கிறான். இறப்பு என்பது விடுதலை மட்டுமே என்று பிளாட்டேன் சிந்திக்கிறான்.\nமாஸ்கோவை கைப்பற்றிய பிறகு, நீண்ட காலப் போரினால் ஏற்பட்ட மன உளைச்சலினாலும் களைப்பினாலும் ஃபிரெஞ்சுப் படையினர் கட்டுப்பாட்டை இழக்கின்றார்கள். ரஷ்யாவின் படைகள் தொடர்ந்து பின்வாங்கும் தந்திரம் மூலம் ஃபிரெஞ்சுப் படையைச் சோர்வடையச் செய்கிறது. வெற்றியுமில்லாமல், தோல்வியுமில்லாமல், தொடரும் இந்த நீண்டநெடிய போரினால், கடும் மனச்சோர்வுக்கு ஆளாகும் ஃபிரெஞ்சுப் படையினர் தம்மிடம் உள்ள கைதிகளை வேறு இடத்திற்கு நடத்தி அழைத்துச் செல்கிறார்கள். நடக்க முடியாமல் பின் தங்குபவர்களை நாயைச் சுடுவது போல் சுட்டுக்கொல்கின்றனர்.\nபிளாட்டேன், இனி நடக்க விரும்பாது ஒரு மரத்தடியில் அமர்கிறான். அவனிடம் வந்து பேசும் ஃபிரெஞ்சு ராணுவத்தினன், துப்பாக்கியை எடுக்கிறான். அதைப் பார்க்கும் பியர், எந்தச் சிந்தனையுமின்றி முன்செல்கிறான். பிளாட்டேன் சுட்டுக் கொல்லப்பட்ட பின் அவனிடம் வளரும் நாய் ஊளையடுகிறது. எதற்கு இப்படி இந்த முட்டாள் நாய் ஊளையிடுகிறது என்று எண்ணியபடி முன்செல்கிறான் பியர். மரணம் குறித்தல்ல, மரணம் குறித்தான பிளாட்டேனின் கருத்துக்கு அஞ்சியே பியர் அந்தச் சாவைத் தெரிந்துகொள்ள விரும்பாது முன்செல்கிறான். பிளாட்டேன் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டான் என்று அவனுக்கு உரைக்கும்போது, பல ஆண்டுகளுக்கு முன் பெர்சிய அழகியுடன், தனது பங்களாவின் வராந்தாவில் கூடலில் ஈடுபட்டது அவனுக்கு நினைவு வருகிறது. சாவின் மர்மத்துடன் காமத்தை இணைக்கிறார் தல்ஸ்தோய்.\nபியரின் தேடல் முடிவுக்கு வருகிறது. பிளாட்டேனிடம் இருந்து, எல்லையில்லா அன்பைக் கற்கிறான் பியர். சக உயிர்களை நேசிக்க எந்தக் காரணமும் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறான். மனிதர்களைக் கண்டவுடன் அவனுக்குள் அன்பும் பெருங்கருணையும் ஊற்றெடுக்கிறது. இந்த ஞானத்தை அடையாமல், தனது மனைவி ஹெலன் இறந்துவிட்டாளே என்று பரிதாபப்படுகிறான். அதற்குப் பிறகு அவனுக்கு எந்தத் துன்பமுமில்லை. பிளாட்டேன் தன்னை, பியருக்குள் விதைத்துவிட்டு, சென்றுவிடுகிறான்.\nபிளாட்டேன் போன்ற மண்ணுடன் நேரடியான உறவில் இருக்கும் எளிய விவசாயிகளே ஆன்மீக ஞானத்தை எளிதில் அடைவார்கள் என்று தல்ஸ்தோய் காட்டுகிறார்.\nஇளம் வயதிலேயே தாய் தந்தை இறந்துவிட, வயதான பாட்டியுடன் வளர்ந்தார்கள், செண்பகமும் அவளது தம்பி சீனிவாசனும். செண்பகம் மிக எளிமையாக உடை உடுத்துவாள். ஆனால் அந்த எளிமையிலும் அழகு மிளிரும். சீனிவாசன் இளவயதிலேயே தனது குடும்ப நிலையைக் கருத்தில்கொண்டு, படிப்பில் கருத்தாக இருந்தான். பி.காம் முடித்த பிறகு, தொடர்ந்து பல அரசாங்க வேலைகளுக்கு மனு போட்டு, தகுதித் தேர்வுகள் எழுதிக்கொண்டு காத்திருந்தான். ஒவ்வொரு முறையும் சீனிவாசன் தேர்வு எழுதச் செல்லும்போது, செண்பகம் வீட்டுக்கு வருவார். அம்மாவிடம் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, கைமாற்றாக பணம் கேட்பார்.\nபிறகு சீனிவாசனுக்கு வங்கி வேலை கிடைத்தது. வேலை கிடைத்த சில ஆண்டுகளில், தன்னுடன் வேலை பார்த்த பெண்ணைக் காதல் திருமணம் செய்தான். குழந்தைகளை கான்வெண்டில் படிக்க வைத்தான். ஹீரோ ஹோண்டா பைக் வாங்கினான். செண்பகம் மட்டும் அதே சாயம் போன தாவணியுடன், இட்லிக்கு மாவு அரைத்து, குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பி, தம்பி மனைவிக்குப் புடவை தேய்த்துக் கொடுத்து, இருவரையும் வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டு, கிணற்றடியில் உட்கார்ந்து, தம்பி வாங்கிக் கொடுத்த கையடக்க டிரான்சிஸ்டரில், “என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்” பாட்டு கேட்டாள். நாற்பதைக் கடந்தபின்னரும், செண்பகம் தாவணிதான் கட்டுகிறாள். இப்போதெல்லாம், தனியாக உட்கார்ந்து பேசிக்கொள்ள வேறு கற்றுக்கொண்டுவிட்டாள்.\nபோரும் வாழ்வும் சோனியாவின் பாத்திரத்துக்கும் செண்பகத்துக்கும் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. சுயநலமில்லாத உழைப்பை, எந்தக் குற்றவுணர்ச்சியும் ஏற்படுத்தாத வண்ணம் மற்றவர்களுக்கு வழங்க, ஒரு சிலரால் மட்டுமே முடிகிறது.\nநடாஷாவின் சகோதரன் நிக்கோலஸ் ரோஸ்டோவுக்கும் சோனியாவுக்கும் இடையிலான உறவு விசித்திரமானது. ஆதரவற்ற குழந்தையாக நிக்கோலஸ் குடும்பத்தினரிடம் வந்து சேர்ந்தவள் சோனியா. பள்ளிப் பருவத்தில் நிக்கோலஸுக்கும் சோனியாவுக்குமிடையே காதல் மலருகிறது. தனது அன்பை நிக்கோலஸ் பிரதிபலிக்கிறானா என்று முதலில் சந்தேகப்படுகிறாள். இருப்பினும் பிரதிபலன் பாராது நடாஷாவின் குடும்பத்தின் மீது தனது அன்பைப் பொழிகிறாள். விடுமுறைக்கு வீட்டுக்கு வரும் நிக்கோலஸின் நண்பன் டோல்கோவுக்கு சோனியாவின் மீது காதல் மலருகிறது. மிகுந்த பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் நடாஷாவின் குடும்பத்திற்கு இந்தக் காதல் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.\nஆனால், சோனியா அந்தக் காதலை நிராகரிக்கிறாள். இந்தப் பரிசுத்தமான அன்பைக் கண்டு நிக்கோலஸ் நெகிழ்கிறான். நிக்கோலஸுக்கு வசதியான பிரபுகுடும்பத்துப் பெண்ணைத் திருமணம் செய்வதன் மூலம், பொருளாதாரச் சிக்கலில் இருந்து மீள நினைக்கும் அவனது தாய், சோனியாவின் காதலை விட்டுத்தரும்படி கோருகிறாள். அதை ஏற்று இராணுவத்திலிருக்கும் நிக்கோலஸுக்கு கடிதம் எழுதுகிறாள் சோனியா. முதலில் அதை மறுக்கும் நிக்கோலஸ், காலவோட்டத்தில், மிகவும் வசதியான ஆண்ட்ரூவின் தங்கை மேரியைக் காதலித்து மணம் முடிக்கிறான். அவர்களுடனே தங்கி, அந்தக் குடும்பத்திற்குப் பணிபுரியத் தொடங்குகிறாள் சோனியா.\nகுற்றவுணர்ச்சியில் தவிக்கும் மேரி, நடாஷாவிடம் சோனியா பற்றி கேட்கும் போது, நடாஷா மிக எளிதாகச் சொல்கிறாள். சோனியா ஒரு அழகான மலட்டு மலர். மற்றவர்களுக்கு உதவியாக இருப்பதிலேயே சோனியா தனக்கான வாழ்க்கையை வாழ்ந்துமுடிக்கின்றவள். ஒருபோதும் தனக்கு என்று அவள் வாழப்போவதில்லை என.\nநடாஷாவின் உயிர்த்தோழி சோனியா. ஆனால் நடாஷா அனடோலுடன் ஓடிப்போக எத்தனிக்கையில், இரவு முழுவதும் விழித்திருந்து அதைத் தடுக்கிறாள். அவ்வாறு செய்வதன்மூலம் அந்தக் குடும்பத்திற்கும் தனது காதலானான நிக்கோலஸுக்கும் தனது கடமையைச் செய்வதாக நினைக்கிறாள். எந்த நேரமும், அந்தக் குடும்பத்திற்கு உதவுவதிலேயே தனது காலத்தைக் கழிக்கிறாள். ஆனால் அவள் மீது ஒருவருக்கும் உண்மையான அன்பும் கரிசனமும் தோன்றவில்லை. இதை அழகாக இருவரிகளில் சொல்லிச் செல்கிறார் தல்ஸ்தோய். “நமக்கு உதவி செய்பவர்களை, நாம் காதலிப்பதில்லை. நாம் உதவி செய்பவர்களையே, காதலிக்கத் தொடங்குகிறோம்.” எவ்வளவு சரியான தரிசனம்?\nகாலம் முழுவதும் உதவிசெய்யும் சோனியா மறுதலிக்கபடுகிறாள். ஆனால் விவசாயிகளின் கலகத்தில் மாட்டிக்கொள்ளும் மேரியை சரியான நேரத்தில் காக்கிறான் நிக்கோலஸ். மேரி மீது நிக்கோலஸுக்கு காதல் மலருகிறது. உதவியை ஏற்கும் போது நமது தன்னகங்காரம் காயப்படுகிறது. உதவி செய்யும்போது தன்னகங்காரம் திருப்தியடைகிறது. அது காதலாக கனிவு காட்டுகிறது. உண்மையில் தல்ஸ்தோய், காதல் தோல்வியால் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்த தனது அத்தை ஒருவரை மனதில் வைத்தே சோனியா பாத்திரத்தை உருவாக்கியுள்ளார்.\nடோல்கோவின் காதலை, நிக்கோலஸ் மீது கொண்ட பேரன்பினால் மறுக்கிறாள் சோனியா. உடனே டோல்கோவ், நிக்கோலஸை சீட்டாட்டத்திற்கு அழைக்கிறான். நட்பின் அடிப்படையில் என்று நினைத்து அந்தச் சூதாட்ட விடுதிக்குச் செல்லும் நிக்கோலஸை, கொஞ்சம் கொஞ்சமாக மீள முடியாத கடனில் சிக்க வைக்கிறான் டோல்கோவ். கண்ணெதிரே சிறிதுசிறிதாக தனது பணத்தை இழக்கும் நிக்கோலஸின் மனநிலையை ஒரு சிறந்த சூதாடியினால்தான் காட்சிப்படுத்த முடியும். ஆட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் நிக்கோலஸ் எவ்வாறு தன்னை இழக்கிறான் என்று விவரிக்கிறார் தல்ஸ்தோய். நாற்பத்து மூன்றாயிரம் ரூபிள்களை டோல்கோவிடம் இழக்கிறான் நிக்கோலஸ். நாற்பத்து மூன்றாயிரம் என்பதை ஆட்டம் தொடங்கும்போதே மனதில் வைத்துக்கொள்கிறான் டோல்கோவ். ஏன் என்றால், 43 என்பது அவனது வயதையும் சோனியாவின் வயதையும் கூட்டினால் வரும் எண்.\nஏற்கனவே தனது ஆடம்பரத்தால் பொருளாதாரச் சிக்கலில் வீழ்ந்திருக்கும் நிக்கோலஸின் தந்தை, சூதாட்டத்தினால் ஏற்படும் கடனையும் ஏற்கிறார். நிக்கோலஸ் மனம் ஒடிந்து இராணுவத்திற்கே திரும்புகிறான். பிறகு வசதியான மேரியைத் திருமணம் செய்துகொள்கிறான். தன்னிடமுள்ள சொத்துகளை விட இருமடங்கு கூடுதலான கடனுடன் செத்துப்போகிறார் நிக்கோலஸின் தந்தை. தனது தந்தை வழிச்சொத்துகளை மறுதலிப்பதன்மூலம் கடனையும் ஏற்க வேண்டியதில்லை என்று அவனது நண்பர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். அதனை ஏற்காமல், சொத்துகளை ஏற்று, அனைத்து கடன்களையும் அடைக்கிறான் நிக்கோலஸ் .\nஃபிரெஞ்சுப் படைகள் ஒவ்வொரு நகரமாக வெற்றிகொண்டு உள்ளே நுழையும்போது, நிலச்சுவான்தார்களான பிரபுக்கள் தமது பண்ணையைக் கைவிட்டு நகரத்தை விட்டுவெளியேறுகிறார்கள். அப்படி மேரியும் வெளியேற எத்தனிக்கையில் எழும் விவசாயிகளின் கலகத்தை அழகாக சித்தரித்திருக்கிறார் தல்ஸ்தோய். பண்ணையை விட்டு வெளியே செல்லமுடியாதபடி, விவசாயிகள், மேரியைச் சிறைபிடிக்கிறார்கள். ரஷ்ய இராணுவத் தளபதியான நிக்கோலஸ் படைகளும் பின்வாங்கியபடியே உள்ளது. மேரியின் பண்ணைக்குச் செல்லும் நிக்கோலஸ், கூடி நிற்கும் விவசாயிகளிடம் சற்று குரலை உயர்த்தியவுடன், விவசாயிகளே, விவசாயிகளின் கலகத்தை முறியடிக்கிறார்கள். “இதெல்லாம் தப்பு பார்த்தியா?” என்று பேசியபடி கலைந்துசெல்கிறார்கள். மேரியின் பொருட்களை வண்டியில் ஏற்ற உதவுகிறார்கள். “பார்த்து, உடையாம ஏத்துப்பா” என்று குரல் கொடுத்தபடி அக்கறையுடன் பொருட்களை ஏற்றுகிறார்கள். காலங்காலமாக அடிமைத்தனத்தில் வாழ்ந்த அவர்களது கலகம், நொடிப்பொழுதில் உடைந்து விழுகிறது.\nமேரியைத் திருமணம் செய்துகொண்டு, தனது புது வாழ்வைத் துவக்கும் நிக்கோலஸுடன் செல்கிறாள் சோனியா. தனது காதலனது குடும்பத்திற்குச் சேவகம் செய்துகொண்டு, அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை வளர்த்துக்கொண்டு தனது மிச்ச வாழ்வைக் கழிக்கிறாள்.\nவாழ்வின் பொருளின்மையை அல்லது வாழ்வின் பொருளை, புரிந்துகொள்ள முடியாமையின் துயரத்தை, மாபெரும் போரின் பின்னணியில் சொல்லி முடிக்கிறார் தல்ஸ்தோய். கதை, திரைக்கதை ஏதுமற்ற நீண்ட நெடிய நாடகத்தின் ஒரு பகுதியாக நாவலின் பாத்திரங்கள் வருகிறார்கள். அவர்கள் காலங்காலமாக இங்கு வாழ்ந்து மடிந்த மனிதக் கூட்டத்தின் நுட்பமான பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் சண்டையிடுகிறார்கள், சந்தேகம் கொள்கிறார்கள், காதலிக்கிறார்கள், துரோகம் இழைக்கிறார்கள், தியாகம் செய்கிறார்கள், மடிகிறார்கள். நாவல் முடிகையில் ஒரு மாபெரும் வெறுமையை நாம் உணர்கிறோம்.\nLeo TolstoyWar and Peaceஇதழ் 25தல்ஸ்தோய்போரும் அமைதியும்ரா.செந்தில்குமார்\n[…] மானுடத்தின் மீதான பெருங்காதல்: போரும… – ரா. செந்தில்குமார் […]
Cepodem 200 Tablet in Tamil பயன்பாடு, பக்க விளைவுகள், கலவை, மாற்றுகள், முன்னெச்சரிக்கைகள் மற்றும் அறிவுரை - Cepodem 200 Tablet ke fayde, nuksan, use, upyog, price, dose, side effects in Tamil। 1mg\nCepodem Tablet க்கான பயன்கள் (Uses of Cepodem Tablet in Tamil)\nCepodem Tablet இன் பக்க விளைவுகள் (Side effects of Cepodem Tablet in Tamil)\nCepodem Tablet யை எப்படி உபயோகிப்பது (How to use Cepodem Tablet in Tamil)\nஉங்கள் மருத்துவர் அறிவுறுத்திய மருந்தளவு மற்றும் காலத்திற்கு இந்த மருந்தினை எடுத்துக்கொள்ளவும். முழுதுமாக அதை விழுங்கவும். அதை சவைக்கவோ, நொறுக்கவோ அல்லது உடைக்கவோ கூடாது. Cepodem 200 Tablet உணவுடன் உட்கொள்வது மிகச்சிறந்தது.\nCepodem Tablet எப்படி செயல்படுகிறது (How Cepodem Tablet works in Tamil)\nCepodem 200 Tablet ஒரு ஆன்டிபயோடிக். அது பாக்டீரியாவை அவற்றில் செல் சுவரினைத் தாக்குவதன்மூலம் கொல்கிறது. குறிப்பாக, அது பெப்டிடோகிளைகன் என்று அழைக்கப்படுகிற என்று அழைக்கப்படுகிற ஒரு பொருளின் உற்பத்தியைத் அது தடுக்கிறது, அது மனித உடலில் பாக்டீரியா உயிர் வாழ்வதற்கு தேவையான பலத்தை செல் சுவரில் தருகிறது.\nCepodem 200 Tablet பெரும்பாலும் கர்ப்பகாலத்தின்போது பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானது.\nCepodem 200 Tablet தாய்பாலூட்டும் போது பாதுகாப்பானது. மருந்து தாய்ப்பாலுக்குள் குறிப்பிடத்தக்க அளவு புகுவதில்லை அல்லது குழந்தைக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்துவதாக எதிர்பார்க்கப்படவில்லை என்று மனித ஆய்வுகள் காட்டியுள்ளன.\nCepodem 200 Tablet எடுத்துக்கொள்ளும் போது நீங்கள் தலைச்சுற்றலாக, தூக்கம் வருவது போல அல்லது களைப்பாக உணரலாம். இது நிகழ்ந்தால், வாகனம் ஓட்டாதீர்கள்.\nமுற்றிய சிறுநீரக நோயினால் அவதிப்படும் நோயாளிகளில் Cepodem 200 Tablet எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.Cepodem 200 Tabletக்கான மருந்தளவு சரி செய்தல் தேவைப்படலாம். உங்கள் மருத்துவரிடம் அணுகவும்.\nCepodem 200 Tablet கல்லீரல் நோயுடன் கூடிய நோயாளிகளில் பயன்படுத்தப் பாதுகாப்பானது.Cepodem 200 Tabletக்கான மருந்தளவு சரிசெய்தல் ஏதும் பரிந்துரைக்கப்படவில்லை.\nநீங்கள் Cepodem இன் ஒரு டோஸ் தவறவிட்டால்?\nCepodem இவற்றில் எந்த மருந்துடனும் உட்கொள்வதால் இரண்டில் மருந்துகளிலிருந்து ஒன்றின் பொறிமுறைகள் மாறலாம் மற்றும், சில விரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏற்படலாம்.\nCepodem 200 Tablet குறித்து கேள்விகள் உள்ளனவா?\nநீங்கள் Cepodem Tablet எதற்காக பயன்படுத்துகிறீர்கள்?\nCepodem 200 Tablet இன் பயன்படுத்தும் போது என்ன பக்க விளைவுகள் இருந்தன?\n*வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை எதிர்வினை, எந்த பக்க விளைவுகள்\nCepodem Tablet எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?\nCepodem 200 Tablet இன் விலையை மதிப்பிடவும்.
அஞ்சலி – இரா. கதிர்வேல்\nஇரா. கதிர்வேல் தஞ்சையில் உள்ள பேராவூரணி, சித்தாதிக்காடு ஊரைச் சேர்ந்தவர். இன்று காலை ஊரில் வீட்டின் அருகில் உள்ள, அறுந்த மின்கம்பியின் அருகே சென்ற, தன் குழந்தையை காப்பாற்றி , மின்சாரம் தாக்கி, உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு, பேரதிர்ச்சியில் உள்ளேன்.\n30 வயதுகளில் உள்ள இளைஞர். தானாகவே லினக்சு, பைதான் நுட்பங்களைப் படித்தவர். கணியம் தளத்தின் தொடக்கத்தில் இருந்தே பேராதரவு தந்தவர். தாம் கற்றவற்றை தமிழில் பிறர்க்கு பகிர்ந்தவர்.\nகணியம் தளத்தில் “எளிய தமிழில் PHP” தொடரையும், பல கட்டுரைகளையும் எழுதியவர். தனது வலைப்பதிவிலும் பல நுட்பக் கட்டுரைகளை எழுதியவர். கணியம் நிகழ்வுகளில் கலத்து கொண்டு, பெரும் ஊக்கம் தந்தவர். தன் நண்பர்கள் பலருக்கும் பல வகைகளில் உதவியவர்.\nஅறிந்தோர் பலரை கொரோனா தொற்று அள்ளிச்செல்ல, மனம் வெறுத்துப் போன காலத்தில், இவரை இழந்தது இன்னும் பலமாக வலிக்கிறது.\nகண்ணீர் மட்டுமே தர முடிகிறது கதிர்வேல்.
டிஜிபி அலுவலகத்தை குட்கா வேர்ஹவுசாக மாற்றியவர் கைது - The DGP's office was transferred to Gudka Warehouse : Social activist arrested\nகாவல் துறை தலைமை அலுவலகம் முன், ‘குட்கா வேர்ஹவுஸ்’ என்று பேனரை கட்டிய சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் செந்தில் முருகன் கைது செய்யப்பட்டார்.\nசென்னை காமராஜர் சாலையில் உள்ள காவல் துறை தலைமை அலுவலகமான டிஜிபி ஆபிஸ் வாசலில் ‘குட்கா வேர்ஹவுஸ்’ என்ற பேனருடன் போராடிய சமூக ஆர்வலர் கைது செய்யப்பட்டார்.\nதமிழக காவல்துறையின் தலைமை அலுவலகம், காமராஜர் சாலையில் உள்ளது. கடந்த 22ம் தேதி டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த போது, சட்டத்துக்குப் புறம்பாக குட்கா விற்பனைக்கு அனுமதித்ததாகவும், அதற்காக மாதா மாதம் பல லட்சம் பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டது.\nபோலீசாருடன் வாக்குவாதம் செய்யும் செந்தில்முருகன்\nசென்னையடுத்த செங்குன்றத்தில் உள்ள குட்கா அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இந்த விபரம் தெரியவந்தது. மேலும் மற்றுமொரு கமிஷனர் ஜார்ஜ்க்கும் பணம் கொடுத்ததும் தெரியவந்தது. இது குறித்து, தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ், அப்போது டிஜிபியாக இருந்த அசோக் குமார் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் அறிக்கை கொடுத்தனர்.\nஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளான டி.கே.ராஜேந்திரனை டிஜிபியாக நியமித்தது, தமிழக அரசு. இதை எதிர்த்து மதுரை கிளை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வருமான வரித்துறை அறிக்கை கொடுத்ததை மறைத்து தற்போதைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மனு தாக்கல் செய்தது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் இன்று காலை சமூக ஆர்வலர் செந்தில் முருகன் பேனர் ஒன்றுடன் வந்தார். அதை டிஜிபி அலுவலகம் முன்பு கட்டினார். அதில், ‘குட்கா வேர் ஹவுஸ், டி.கே.ராஜேந்திரன் ஐபிஎஸ், டீலர் குட்கா புராடெக்ட்’ என்று எழுதப்பட்டு இருந்தது.\nஇதை கவனித்த அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அந்த பேனரை உடனடியாக அப்புறப்படுத்தினர். சமூக ஆரவலர் செந்தில் முருகனை, மெரினா காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.\nTags: DGP, Guthkha, Socail activist arrested, t.k.rajendran ips, warehouse\nசிலை கடத்தல் புள்ளிகள் யாராக இருந்தாலும் வேடிக்கை பார்க்க முடியாது : நீதிபதி எச்சரிக்கை\nவெகு விரைவில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 21. சர்வேசுரனிடமே இளைப்பாற வேண்டும்\n1. (சீஷன்) “என் ஆத்துமமே, சகலத்துக்கு மேலாகவும், சகல காரியங்களிலும் எப்போதும் ஆண்டவரிடத்தில் இளைப்பாறக் கடவாய். ஏனெனில் அவரே அர்ச்சியசிஷ்டவர்களுடைய நித்திய இளைப்பாற்றியாயிருக்கிறார். மிகவும் மதுரமும் அன்பும் நிறைந்த சேசுவே! சகல சிருஷ்டிகளையும் விட, சகல மகிமை பெருமையையும் விட, சகல அதிகாரத்தையும் பட்டத்தையும் விட, சகல கல்வியையும் புத்தி கூர்மை யையும்விட, சகல திரவியங்களையும் சாஸ்திரங்களையும்விட, சகல சந்தோஷங் களையும் அக்களிப்பையும் விட, சகல கீர்த்தியையும் புகழ்ச்சியையும்விட, சகல நம்பிக்கையையும், வாக்குத்தத்தத்தையும்விட, சகல இன்பங்களையும், ஆறுதல் களையும்விட, என் பேறுபலன்களையும் ஆசைகளையும்விட, நீர் தந்து பொழியக் கூடுமான சகல வரங்களையும் கொடைகளையும்விட, யாதொருவன் நினைக் கவும் அனுபவிக்கவும் கூடுமான சகல இன்பத்தையும் மகிழ்ச்சியையும் விட, கடைசியாய் தூதரையும், அதிதூதரையும் விட, சகல மோட்சவாசிகளையும் விட, காணக்கூடியனவும் காணப்படாதனவுமாகிய சகலத்தையும் விட, என் சர்வேசுரா! நீரல்லாத மற்ற யாவற்றையும் விட உம்மிடத்திலேயே நான் இளைப்பாறும்படி எனக்கு அனுக் கிரகம் செய்தருளும்.\n2. ஏனெனில், என் ஆண்டவராகிய தேவனே! நீர் சர்வத்துக்கு மேலான நன்மையாயிருக்கிறீர்; நீர் ஒருவரே மகா உன்னதமுள்ளவர், நீர் ஒருவரே உமக்குப் போதுமானவரும், கரைகாணாத சம்பூரணரும்; நீர் ஒருவரே சகல இன்பங்களையும் ஆறுதல்களையும் பொழியும் ஊறணியானவர்; நீர் ஒருவரே சர்வ இலட்சணமுடையவர்; சர்வ அன்புக்குரியவர், நீர் ஒருவரே சர்வத்துக்கும் மேலாக உயர்ந்தவர், மகிமைபெற்றவர்; அளவில்லாத சகல நன்மையும் எக்காலத்திலும் நிறைந்தவராய் இருக்கின்றீர். ஆகையினால் உம்மையல்லாத என்ன வரம் நீர் எனக்குத் தந்தபோதிலும், என்ன திருவுளம் செய்தபோதிலும், என்ன வாக்குத்தத்தம் அளித்த போதிலும், அதெல்லாம் எனக்குப் போதாது; உம்மை எனக்குச் சொந்தமாக்கிக்கொண்டு தரிசிப்பதி னாலும், சம்பூரணமாய் அனுபவிப்பதாலும்தான் எனக்குத் திருப்திகர மாகும். என் இருதயம் சகல கொடைகளுக்கும் சகல சிருஷ்டிகளுக்கும் உயர்ந்துபோய் மேலாக உம்மிடம் இளைப்பாறினால்தான் அது உண்மை யான இளைப்பாற்றியையும் முழு திருப்தியையும் அடையும்.\n3. என் ஆத்துமத்தின் மிக்க நேசமுள்ள பத்தாவாகிய சேசு கிறீஸ்துவே! மிகவும் பரிசுத்த அன்பரே! சகல சிருஷ்டிகளையும் ஆள்பவரே! நான் பறந்து வந்து உம்மிடம் இளைப்பாறும்படி மெய் யான மனச் சுயாதீனத்தின் “சிறகுகளை எனக்குக் கொடுப்பவர் யார்?” ஆ! என் ஆண்டவராகிய சர்வேசுரா! உம்மை மட்டும் சிந்தித்து நீர் எவ்வளவு மதுரமுள்ளவரென்று பார்க்க நான் குறையறக் கொடுத்து வைப்பது எப்போது? உமது நேசத்தின் மிகுதியால், நான் என்னையே மறந்து, சகல உணர்வுகளுக்கு மேலாகவும், வெகு கொஞ்சம்பேர் அறியும் உந்நத விதத்திலும் உம்மை மாத்திரமே உணரும்படி உமது மட்டில் நான் போதுமான வரையில் சிந்தையாயிருப்பது எப்போது? இப்போது எனக்குப் புலம்பி அழத்தான் தெரியும், என் நிர்ப்பாக் கியத்தை வருத்தத்தோடு சகித்து வருகிறேன்; ஏனெனில் இந்தத் துன்பக் கணவாயிலுள்ள அநேக பொல்லாங்குகள் அநேக முறை எனக்குக் கலக்கமும் கஸ்தியும் வருவித்து என்னை மயக்கிப் போடுகின்றன. நான் உம் அருகில் தடையின்றி வராதபடிக்கும் மோட்சவாசிகள் எப்போதும் தடையில்லாமல் சுகித்து வருகிற உமது இன்பமான ஐக்கியத்தை நான் சுகிக்காதபடிக்கும், அவை அநேக முறை தடுக்கின்றன, பராக்கை வருவிக்கின்றன, என்னை இழுத்துக் குழப்பத்துக்கு உள்ளாக்குகின்றன. பூலோகத்தில் நான் அழுகிற புலம்பல்களையும் நான் அனுபவிக்கிற திரளான கஸ்திகளையும் கண்டு என்பேரில் இரக்கம் கொள்ளும்.\n4. ஓ சேசுவே! நித்திய ஒளியின் தூய்மையானவரே! பரதேசத்தில் திரியும் ஆத்துமத்துக்கு ஆறுதலானவரே! உமது சந்நிதியில் என் நாவானது வார்த்தையற்றிருக்கிறது; என் மவுனமே உம்மோடு உரையாடுகின்றது! என் ஆண்டவர் எழுந்தருளிவர எது வரையில் தாமதம் செய்வார்? அவருடைய எளிய தாசனாகிய என்னிடம் அவர் வந்து, என்னைச் சந்தோஷப்படுத்தக்கடவார்; அவர் தமது கரத்தை நீட்டி நிர்ப்பாக்கியனான என்னைச் சகல துன்பங்களிலு மிருந்து இரட்சிக்கக் கடவார். வாரும்! வாரும்! ஏனெனில் நீர் வராவிட்டால் ஒரு நாளாவது ஒரு மணி நேரமாவது சந்தோஷமா யிருப்பது இயலாத காரியம்; நீரே என் சந்தோஷம், நீர் இல்லா விட்டால் எனக்குத் திருப்தி கிடையாது. நீர் உமது பிரகாசமுள்ள பிரசன்னத்தால் என்னைத் தேற்றி என்னை விடுதலையாக்கி எனக்கு உமது தயையுள்ள முகத்தைக் காண்பிக்கும் வரையில் நான் நிர்ப்பாக்கியனும், சிறைப்பட்டு விலங்குகளால் பூட்டப்பட்ட வனுமாயிருக்கிறேன்.\n5. மற்றவர்கள் உமக்குப் பதிலாகத் தங்கள் இஷ்டப்படியே எது வேண்டுமோ அதைத் தேடிக்கொள்ளட்டும்! ஆனால் என் சர்வேசுரா! என் நம்பிக்கையே! என் நித்திய ஆனந்தமே! உம்மைத் தவிர மற்ற யாதொன்றும் எனக்குப் பிரியப்படுகிறதுமில்லை, பிரியப் படப் போவதுமில்லை. உமது அநுக்கிரகத்தை நான் திரும்பவும் அடைந்து நீர் என் உள்ளத்தில் “இதோ வந்தோம்” என்று சொல்லுகிற வரையில், நான் மவுனமாய் இருக்க மாட்டேன், உம்மை மன்றாடு கிறதையும் விடமாட்டேன்.\n(கிறீஸ்துநாதர்) ல் “நீ நம்மை அழைத்தபடியால், இதோ உன்னிடம் வந்தோம்.” உன் கண்ணீர்களும், உன் ஆத்துமத்தின் ஆசையும், உன் தாழ்ச்சியும், உன் இருதய மனஸ்தாபமும் நம் மனதை இளகச் செய்து நம்மை உன் அண்டையில் கூட்டி வந்தன.\n(சீஷன்) ல் நான் சொன்னது: ஆண்டவரே! உம்மைப் பற்றிச் சகலத்தையும் வெறுக்க ஆயத்தமாயிருந்து, உம்மை அழைத்தேன், உம்முடன் ஒன்றித்திருக்க ஆசை கொண்டேன். ஆனால் நான் உம்மைத் தேடும்படி நீரே என்னை முந்தித் தூண்டினீர் ஆதலால் ஆண்டவரே! உமது இரக்கத்தின் பெருக்கத்துக்குத் தகுந்தாற்போல, அடியேனுக்கு இந்த உபகாரத்தைச் செய்தீரானதால் வாழ்த்தப் படக் கடவீராக.\nஅடியேன் என் அக்கிரமத்தையும், நீசத்தனத்தையும் ஞாபகப் படுத்திக்கொண்டு உமது சந்நிதியில் என்னை மிகவும் தாழ்த்திக் கொள்ளுவதன்றி வேறு என்ன செய்யக்கூடும்? ஏனெனில் வானத் திலும் பூமியிலுமுள்ள சகல ஆச்சரியமான பொருட்களிலும் உமக்குச் சமமானது ஒன்றுமில்லை. உம் செய்கைகள் மகா உத்தமமானவை, உமது தீர்மானங்கள் உண்மையானவை, உமது திருச்செயலால் சகலமும் நடப்பிக்கப்படுகின்றன. ஆகையால் பிதாவின் ஞானமே! உமக்கு மகிமையும் தோத்திரமும் உண்டாகக்கடவது; என் நாவும், என் ஆத்துமமும், சிருஷ்டிக்கப்பட்ட சகல பொருட்களும் ஒன்றுசேர்ந்து உம்மைப் புகழ்ந்து வாழ்த்தக்கடவன.\nபிரமாணிக்கமுள்ள ஆத்துமம் உலகத்தையும் தன்னையும் விட்டகன்று போகிற அளவுக்கு அது நேசிப்பவரை நோக்கி அதன் சகல ஆசைகளும் தாவுகின்றன. அவர் ஒருவரையே அவ்வாசைகள் நாடுகின்றன. அப்போது தன்னை இவ்வுலகத்தில் கட்டித் தடை செய்து கொண்டிருக்கும் பாசங்களைப் பற்றி அது புலம்பியழுகிறது. வரவர வளரும் தேவசிநேகத்தை முன்னிட்டு தான் ஆசிக்கும் நித்திய கடவுளின் மடியில் சேரவும், அவருடன் நித்தியத் துக்கும் ஜீவிக்கவும் இந்த சாவுக்குரிய சடலத்தை விட்டுப் பிரிந்து போகத் தேடுகின்றது: “புறாக்களுக்குச் சிறகுகள் இருப்பதுபோல எனக்குச் சிறகுகளைக் கொடுப்பவர் யார்? நானும் பறந்துபோய் இளைப்பாறுவேன்.” தான் ஆசிப்பவரிடம் அது சேரும் வரையிலும் தான் தெய்வீக சந்தோஷ அக்களிப்பில் அமிழ்ந்துபோகிற வரையிலும், தான் பரலோக பத்தாவுடன் ஒன்றிக்கிற வரையிலும், “என் நேசர் எனக்குச் சொந்தம், நான் அவருக்குச் சொந்தம்” என்று சொல்லக் கூடுமான காலம் வருகிறவரையிலும், ஆத்துமத்துக்கு மெய்யான இளைப்பாற்றியில்லை. “அப்பாக்கியமான நாள், அந்த இரட்சணியத்தின் நாள், அந்த முடிவில் லாத சந்தோஷத்தின் நாள் எப்போது உதிக்கும்? பரதேசத்தில் தங்கி யிருக்கும் காலம், கண்ணீரின் காலம் எப்போது முடியும்? என் நேசரை என் பார்வையினின்று மறைக்கும் நிழல் கடந்துபோகும் காலத்தை எப்போது காண்பேன்? தாகத்தினால் வருந்தும் கலைமான் ஊற்று களின் தண்ணீரைத் தேடுவதுபோல, என் ஆத்துமம், ஆண்டவரே! உம்மைத் தேடுகிறது. வல்லவரான கடவுளின் மட்டில், சீவனுள்ளவ ரான கடவுளின் மட்டில் என் ஆத்துமம் தாகமாயிருக்கின்றது. ஓ! எப்போது நான் சர்வேசுரனுடைய சமூகத்துக்கு வருவேன்? எப்போது அவர் முன்பாகத் தோன்றுவேன்?”
LENOVO Z6 PRO 5G போன் நான்கு கேமராவுடன் குறைந்த விலையில் அறிமுகமானது. | Digit Tamil\nLENOVO Z6 PRO 5G போன் நான்கு கேமராவுடன் குறைந்த விலையில் அறிமுகமானது.\nஎழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது Nov 20 2019\nLenovo Z6 Pro ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகின் குறைந்த விலையில் இருக்கும்\n8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பிடத்தைப் வழங்குகிறது.\nLenovo Z6 Pro ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உலகின் குறைந்த விலையில் இருக்கும்5ஜி போனாகும் , இது RMB 3,299 (சுமார் ரூ .33,700) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லெனோவா இந்த புதிய சாதனத்தை ஒற்றை மாறுபாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் சாதனத்தில் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பிடத்தைப் வழங்குகிறது. சாதனத்தின் பின்புறத்தில் குவாட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.\nLenovo Z6 Pro 5G5ஜி போன் மற்றும் இது5ஜி +4ஜி டூயல் கார்டு ஸ்டார்டபாய் தொடுதலை ஆதரிக்கிறது, அதாவது நீங்கள் ஒரே நேரத்தில்4ஜி மற்றும்5ஜி சிம் பயன்படுத்தலாம். சாதனம் 2.02Gbps வரை டவுன்லோடு வேகத்தையும் 406Mbps வரை பதிவேற்ற வேகத்தையும் வழங்குகிறது. லெனோவா இசட்6ப்ரோ5ஜி யில் பிளே ஸ்டோரிலிருந்து பெரிய பயன்பாடுகளை நொடிகளில் பதிவிறக்கம் செய்யலாம். Gizchina கூற்றுப்படி, நீங்கள்6விநாடிகளில் 1.6 ஜிபி கேமை பதிவிறக்கம் செய்யலாம்.\nஇதன் சிறப்பம்சத்தை பற்றி பேசினால்,இந்த சாதனத்தில் 6.39 இன்ச் டிஸ்பிளே உடன் வருகிறது.மற்றும் இதன் ரெஸலுசன் 2340 x 1080 பிக்சல் இருக்கிறது.சாதனம் ஒரு வாட்டர் ட்ரோப் நோட்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது.. இந்த போன் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பரிமாறி கேமரா கேமரா, 16 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும்2மெகாபிக்சல் ஆழம் சென்சார் கொண்ட நான்கு கேமராக்கள் உள்ளன. போனில் செல்ஃபி எடுக்க 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. ஸ்மார்ட்போனில் 2.0 லிக்யூட் கூலிங் சிஸ்டம் உள்ளது\nபிளான் அதிகரித்த பிறகும் , புதிய திட்டத்திலிருந்து 25% விலை குறைத்தது ஜியோ .\nMotorola One Hyper 64MP பிரைமரி கேமரா மற்றும் 32 MP செல்பி கேமராவுடன் அறிமுகம்.\nGoogle Photos யில் வந்துள்ள மனதை கவரும் புதிய அம்சம், இனி சேட்டிங் செய்யலாம்.\nஜியோ வின் கட்டணம் 39% உயர்ந்தது, மேலும் இது நாளை முதல் அமல்.\nVivo U20 5000Mah பேட்டரி மற்றும் 18W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.\n5000 mAh பேட்டரி உடன் Redmi 8 இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.\nHiFuture நிறுவனம் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nBSNL யின் ப்ராண்ட் யின் 777ரூபாய் கொண்ட திட்டத்தில் 500GB டேட்டாவுடன் மேலும் பல நன்மைகள்.
Sakthi Vikatan - 17 May 2022 - ராசிபலன்|Rasi palan - Vikatan\nமே3முதல் 16-ம் தேதி வரையிலான ராசிபலன்கள்\nஜோதிடரத்னா முனைவர் கே.பி.வித்யாதரன் கணித்த, மே3முதல் 16-ம் தேதி வரையிலும் பன்னிரு ராசிகளுக்கான துல்லிய பலன்கள்!\nலாப வீட்டில் அமர்ந்ததால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். கணவன் - மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். 14-ம் தேதி வரை சூரியன் ராசிக்குள் தொடர்வதால் தொண்டை வலி, காது வலி, காரிய தாமதம் வந்து செல்லும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். பெற்றோரின் உடல் நலம் பாதிக்கும்.\nசுக்கிரன் சாதகமான வீடுகளில் செலவதால், திடீர் பணவரவு உண்டு. வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. வெளியூர்ப் பயணங்கள் திருப்திகரமாக அமையும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். கலைத் துறையினரின் படைப்புகள் பாராட்டப்படும்.\nவிட்டுக்கொடுக்கும் மனப்பான்மையால் வெற்றி பெறும் காலம் இது.\nபுதன் வலுவான நட்சத்திரங்களில் செல்வதால் புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். புது சொத்து வாங்குவீர்கள். பிரபலங்களின் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பு நிகழும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சுகாதிபதி சூரியன் 12-ல் மறைந்ததால் வீண் செலவு, அலைச்சல், வேலைச்சுமை வந்து போகும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், தடைப்பட்ட வேலைகள் முடியும். வீடு கட்டவோ, வாங்கவோ வங்கிக் கடன் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.\nசெவ்வாய் வலுவாக நிற்பதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். வீடு - மனை விற்பது, வாங்குவது சாதகமாக அமையும். வியாபாரத்தில் லாபம் உயரும். உத்தியோகத்தில் ஓடி ஓடி உழைத்தும் அங்கீகாரம் கிடைக்க வில்லையே என்று அலுத்துக்கொள்ளாதீர்கள். கலைத்துறையினருக்குப் பழைய நிறுவனங்களிலிருந்து புதிய வாய்ப்புகள் வரும்.\nகடின உழைப்பால் முன்னேறும் காலம் இது.\nபுதனும் 14-ம் தேதிவரை சூரியனும் லாப வீட்டில் அமர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். மேல்மட்ட அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகள் தங்கள் தவற்றை உணர்வார்கள். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால், வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும்.\nசெவ்வாய் 9-ல் அமர்ந்திருப்பதால் பணவரவு, திடீர் யோகம் உண்டு. பாக்கிப் பணத்தைத் தந்து புது சொத்துக்குப் பத்திரப் பதிவு செய்வீர்கள் வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்பு கிட்டும்.\nமாறுபட்ட அணுகுமுறையால் விட்டதைப் பிடிக்கும் நேரம் இது.\nசூரியன் 10-ல் நிற்பதால், இழுபறியாக இருந்த வேலைகள் பலவும் பிரபலங்களின் உதவியால் முடிவடையும். அரசாங்கக் காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மகனுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புதனும் சுக்கிரனும் சாதகமாக இருப்பதால் மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆபரணம் சேரும்.\n8-ல் செவ்வாய் மறைந்திருப்பதால் கணவன் - மனைவிக்குள் வாக்கு வாதம் வந்து விலகும். சகோதர வகையில் வீண் செலவுகள் வரும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. வேலையாட்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குங்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்; வீண் டென்ஷன் வந்து போகும். கலைத்துறையினருக்குப் பழைய சம்பளப் பிரச்னை தீரும்.\nஎதிர்ப்புகளைக் கடந்து சாதிக்கும் காலம் இது.\nசூரியன் 8-ல் மறைந்திருப்பதால் திடீர் பயணம் உண்டாகும். பழைய உறவினர்கள், நண்பர்களைச் சந்திப்பீர்கள். புதன் 8-ல் மறைந்திருப்பதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைக்குச் சுமுகத் தீர்வு காண்பது நல்லது. உங்கள் யோகாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால், நீண்டநாள் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் கூடா நட்பு விலகும். அந்நிய நாட்டில் இருப்பவர்கள் உதவுவார்கள்.செவ்வாய் 6-ல் நிற்பதால் புது வீடு, மனை வாங்குவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் கூடும். கலைத்துறையினருக்குப் புது வாய்ப்புகள் வரும்.\nசிக்கனமாகச் செலவு செய்ய வேண்டிய காலம் இது.\nராசிநாதன் சூரியன் உச்சம் பெற்றிருப்பதால், தன்னம்பிக்கை துளிர் விடும். அதிரடியாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நாடாளுபவர்களின் நட்பு கிட்டும். கணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பிள்ளை களால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.\nஉங்களின் யோகாதிபதி செவ்வாய்7- ல் அமர்ந்திருப்பதால் பணவரவு, திடீர் யோகம் உண்டு. பேச்சில் கம்பீரம் பிறக்கும். பாதி பணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்துக்கு, மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். புதனும் சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிக சம்பளத்துடன் புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.\nசாதிப்பவர்களின் பட்டியலில் இடம்பிடிக்கும் காலம் இது.\nசூரியன் 7-ல் தொடர்வதால் வீண் சந்தேகம், குழப்பம், டென்ஷன் வந்து போகும். அரசுக் காரியங்கள் தடைப்பட்டு முடியும். புதன் சாதக மாக இருப்பதால், கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டிலிருக்கும் உறவினர்களால் உதவிகள் உண்டு. உங்கள் ராசிநாதன் சுக்கிரன்6- ல் மறைந்திருப்பதால் வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.\nசெவ்வாய் 5-ல் நிற்பதால் புகழ், கௌரவம் உயரும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வி.ஐ.பிகளின் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள். கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில், புது முயற்சி வெற்றி அடையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தீவிரம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். கலைத் துறையினர் குறித்து வதந்திகள் வரக்கூடும்; கவனம் தேவை.\nசூரியன் 6-ல் வலுவாக இருப்பதால் அதிகாரப் பதவியில் இருப்ப வர்கள் உதவுவார்கள். வீடு வாங்குவதற்கும் கட்டுவதற்கும் லோன் கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.\nசுக்கிரன் சாதகமாக இருப்பதால் பொன், பொருள் சேர்க்கை உண்டு. நீண்ட நாள்களாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவரைச் சந்தித்து மகிழ்வீர்கள். புதன் 6-ல் மறைந்திருப்பதால் நண்பர்கள், உறவினர்களால் பண இழப்பு, மறைமுகப் பகை வரக்கூடும். செவ்வாய் 4-ல் அமர்ந்திருப்பதால் சகோதரிக்கு வேலை கிடைக்கும். நிலம், வீடு வாங்குவது, விற்பது சுமுகமாக முடியும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் வீண் பழி வந்து செல்லும். தலைமைக்கு உதவுவீர்கள். கலைத்துறையினர், நட்பால் மகிழ்ச்சி அடைவார்கள்.\nமன உறுதியுடன் போராடி வெல்லும் நேரம் இது.\nசூரியன் 5-ல் நிற்பதால் வீண் டென்ஷன், உறவினர் பகை, காரிய தாமதம் வந்து செல்லும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். சுக்கிரனும், புதனும் சாதகமாக இருப்பதால் உங்கள் ரசனைக்கேற்றவாறு சொத்து வாங்குவீர்கள். வி.ஐ.பிகள் உதவுவார்கள். புறநகரில் வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.\nசெவ்வாய் வலுவாக அமர்ந்ததால் புதிய யோசனைகள் பிறக்கும். பணவரவு திருப்தி தரும். குடும்பத்தாரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருள்களைக் கொள்முதல் செய்து லாபத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். கலைத்துறையினருக்குப் பரிசு, பாராட்டுகள் கிடைக்கும்.\nசாமர்த்தியத்தால் சாதிக்கும் வேளை இது.\nயோகாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் கடன் கிடைக்கும். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. வீண் டென்ஷன் விலகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும்.\nபுதன் சாதகமாக இருப்பதால் பால்ய நண்பர்கள் தேடி வந்து உதவுவர். தந்தை வழியில் ஆதாயம் அடைவீர்கள். சூரியன் 4-ல் நிற்பதால், புதுத் திட்டங்கள் நிறைவேறும். அரசுக் காரியங்கள் சாதகமாக முடியும். 2-ல் செவ்வாய் இருப்பதால் கண் வலி வந்து போகும். சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சொத்துப் பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் புது ஒப்பந்தங்கள் வரும். உத்தியோகத்தில், உயரதிகாரி ஆதரவு தருவார். கலைத் துறையினர், படைப்புகளை வெளியிடுவதில் சிரமம் இருக்கும்.\nவெற்றிக்கனியைத் தட்டிப்பறிக்கும் நேரம் இது.\nசூரியன் 3-ம் வீட்டில் வலுவாக நிற்பதால் அரசால் ஆதாயம் உண்டு. இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். பழைய மின்னணு சாதனங்களை மாற்றுவீர்கள். வாகனத் தைச் சரி செய்வீர்கள். புதன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். நண்பர்களின் அன்புத்தொல்லை குறையும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வேற்று மொழிக்காரார்களால் நிம்மதி அடைவீர்கள்.\nராசிக்குள் செவ்வாய் தொடர்வதால் ஓய்வே இல்லாமல் உழைக்க வேண்டி வரும். சலிப்பு, சோர்வு வந்து போகும். உடன்பிறந்தவர்களுடன் மோதல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளைப் பற்றிக் குறை கூறாதீர்கள். கலைத் துறையினர் விமர்சனங்களைத் தாண்டி முன்னேறுவார்கள்.\nபொறுமை மற்றும் நிதானத்தால் வெற்றி பெறும் காலம் இது.\nபுதன் 2-ல் நிற்பதால் சாதுர்யமான பேச்சால் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. நண்பர்களின் ஆதரவு கிட்டும். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் வி.ஐ.பிகளின் தொடர்பு கிட்டும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடும். புது சொத்து சேரும். 2-ல் சூரியன் அமர்ந்திருப்பதால் கண் எரிச்சல், நெஞ்சு வலி, படபடப்பு, வீண் அலைச்சல் வந்து போகும்.\nசெவ்வாய் 12 -ல் மறைந்திருப்பதால் வீண் டென்ஷன், மனஇறுக்கம் வந்து போகும். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் போராட்ட நிலை மாறும். நவீன வசதிகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். உத்தியோகத்தில், பொறுப்புகள் தேடி வரும். கலைத்துறையினரின் சம்பளம் உயரும்.\nபணப் புழக்கம் அதிகரிக்கும் காலம் இது.
நிலவில் தெரிந்ததா பாபா �\nFacebook Twitter Make this my homepage Users Online: 33750\nநிலவில் தெரிந்ததா பாபா முகம்\nசென்னையில் நேற்றிரவு நிலவில் பாபாவின் முகம் தெரிவதாக பரவிய வதந்தியினை தொடர்ந்து சென்னை பரபரப்படைந்தது.\nதொடர்ந்து நிலவில் பாபாவின் முகம் தெரிவதனைப்போன்றே சமூகவலைத்தளங்களில் சில புகைப்படங்கள் பரவியதால், நிலவை காண தொலைநோக்கிகளுடன் தங்களது வீட்டு மாடுகளுக்கு விரைந்தனர் சிலர். பொதுமக்களும் ஆங்காங்கே நின்று கொண்டு வானத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.\nசென்னையில் தொடங்கிய வதந்தி, தமிழகம் முழுவதும் பரவ தொடங்கியதால் மக்கள் பரபரப்பு அடைந்தனர். ஆனால், அதற்குள்ளாக மேகங்களுக்காக தன் முகம் மறைந்துகொண்டது நிலவு. உண்மையிலேயே நிலாவில் பாபா முகம் தெரிந்ததா? தெரியவில்லையா? அந்த "நிலாவுக்கே வெளிச்சம்"!
நிலத்தகராறில் தந்தை–மகனுக்கு அரிவாள் வெட்டு – அங்குசம்\nகந்தர்வகோட்டை அருகே நிலத்தகராறில் தந்தை–மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக2பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள கோவிலூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜானகி ராமன் (வயது 47). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (62) என்பவருக்கும், கடந்த சில வருடங்களாக நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் நிலத்தகராறு சம்பந்தமாக ஜானகிராமனுக்கும், ராஜேந்திரனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.\nஇதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், அவரது மகன் பிரவின்குமார் (23) ஆகியோர் சேர்ந்து, ஜானகிராமனை தலையில் அரிவாளால் வெட்டினர். மேலும் இதனை தடுக்க வந்த ஜானகிராமனின் மகன் ராஜராஜன் (18) என்பவருக்கும் தலை மற்றும் கை பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால்2பேரும் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தனர். இதைக்கண்ட ராஜேந்திரன், அவரது மகன் பிரவின்குமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.\nஇதைத்தொடர்ந்து அக்கம், பக்கத்தினர் ஜானகிராமன், ராஜராஜன் ஆகிய2பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர்2பேரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇச்சம்பவம் குறித்த புகாரின்பேரில், கந்தர்வகோட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து தந்தை–மகனை அரிவாளால் வெட்டிய ராஜேந்திரன், பிரவின்குமார் ஆகிய2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் தந்தை–மகனுக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் கந்தர்வகோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து நாசம்
இலங்கை அதிபர் தேர்தலில் விறுவிறு வாக்குப் பதிவு- Dinamani\nஇலங்கை அதிபர் தேர்தலில் விறுவிறு வாக்குப் பதிவு\nகொழும்பு: இலங்கையில் சனிக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில், சுமார் 80 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றதாக அந்த நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாவட்டங்களில் வாக்குப் பதிவு அதிக விறுவிறுப்புடன் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுகுறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகையில், இந்தத் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடந்து முடிந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.\nகடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தத் தேர்தல் நடைபெறுவதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஎனினும், முஸ்லிம் வாக்காளர்களை ஏற்றி வரிசையாக வந்த பேருந்துகளை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது போன்ற வன்முறைச் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்றன. இந்த சம்பவங்கள் தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பையில் முகம் சிதைந்த சடலம்... விரலில் இருந்த அழியாத மை மூலம் துப்பு துலக்கிய போலீஸ் | Mumbai murder case: Victim's finger Vote mark helps - Tamil Oneindia\n1 min ago உலகத்தில் யாருமே போகாத இடத்துக்கு விண்கலம்.. விஞ்ஞானிகளை கை தட்டி பாராட்டிய மழலைகள்\n15 min ago டெல்லியில் உற்சாக வரவேற்பு- நாடாளுமன்ற வளாகத்தில் அண்ணா, காமராஜர் சிலைகளுக்கு வைகோ மரியாதை!\n24 min ago மும்பையில் பயங்கர தீ விபத்து.. 100க்கும் மேற்பட்டோர் கட்டடத்தில் சிக்கியதால் பதற்றம்\n33 min ago ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்தில் வைகோ....நெகிழ்ந்து வாழ்த்திய எம்பிக்கள்\n| Updated: Monday, June 10, 2019, 16:04 [IST]\nமும்பை: முகம் முழுவதும் சிதைந்த நிலையில் யாரென்றே தெரியாத நிலையில் ஒரு சடலத்தை கடந்த மாதம் முதல் வாரத்தில் மும்பை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த சடலத்தில் இருந்த பி கே என்ற அடையாள டாட்டூவையும், விரலில் இருந்த ஓட்டுப்போட அடையாளமான அழியாத மையை வைத்தும் யாருடைய சடலம், எதற்காக கொலை நடந்தது என்று துப்புத்துலக்கி கண்டு பிடித்துள்ளனர். ஒரு மாதம் மண்டையை பிய்த்துக்கொண்டு தேடியதில் கொலையானவர் யார் என்பதை கண்டுபிடித்து சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\nகொலையான நபரின் பெயர் கிரன் வான்கடே என்பதாகும். ஒரு பொது கழிவறையில் முகம் முழுவதும் சிதைக்கப்பட்டு அடையாளம் காண முடியாத அளவிற்கு கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். யார் இவர், எதற்காக கொல்லப்பட்டார் என்பதை கண்டுபிடிக்க மும்பை போலீஸ் திணறித்தான் போனது.\nஅந்த சடலத்தின் கையில் ஒரு சிலுவை குறி இருந்தது. பி, கே என்ற இன்சியல் பச்சை குத்தப்பட்டு இருந்தது. விரலில் ஓட்டுபோட்ட அடையாள மை இருந்தது. பிரேத பரிசோதனையில் கனமான கல்லால் கொடூரமாக தாக்கியதால் இவர் மரணம் நிகழ்ந்ததாக தெரியவந்தது.\nபணத்திற்காகவா அல்லது வேறு எதற்காக இந்த கொலை நிகழ்ந்தது என்று தியோனார் காவல்நிலைய போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் சபியுல்லா குரோஷி, நியாஷ் சவுத்திரி என்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கொலையாளிகளை பிடித்தாகி விட்டது கொலை செய்யப்பட்டவர் யார் என்று கண்டுபிடிக்க வேண்டுமே அது எப்படி என்று யோசித்தனர்.\nகொலை செய்தவர்களுக்கும் அந்த நபர் யாரென்று தெரியவில்லை. போதையில் இருந்த போது அந்தப்பக்கமாக வந்த நபரிடம் பணம் கேட்டு தகராறு செய்தோம் அவர் கொடுக்க முரண்டு பிடித்தார் நாங்கள் அடித்துகொன்றோம் என்று கூலாக வாக்குமூலம் கொடுத்தனர்.\nஇதனையடுத்தே கொலை செய்யப்பட்டவர் யார் என்பதை அடையாளம் காண்பதில் தீவிரம் காட்டியது போலீஸ். ஓட்டுப்போட அடையாளம்தான் முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தது. லோக்கல் டிவி சேனல்களில் விளம்பரம் செய்தும் யாரும் அடையாளம் சொல்ல வரவில்லை. கடைசி முயற்சியாக ஓட்டர்ஸ் லிஸ்ட் மூலம் முயற்சிக்கலாம் என்று சிவாஜி நகர், தியோனர் பகுதியில் வசிக்கும் வாக்காளர்கள் 3.5 லட்சம் பேரில் இருந்து கொலையானவர் யார் என்று கண்டுபிடிப்பது சவாலான காரியமாகவே இருந்தது ஆனாலும் அசரவில்லை.\nஇறந்தது ஆண் என்பதால் பெண்களின் பெயர்களை லிஸ்ட்டில் இருந்து ஒதுக்கினர். சிலுவை குறியீடு இருந்ததால் ஆண்களில் முஸ்லீம் பெயர்களை ஒதுக்கினர். கடைசியாக பி கே என்ற இன்சியல் சடலத்தின் கையில் பச்சை குத்தப்பட்டிருந்ததால் அதை வைத்து தேடினர். ஒரு வழியாக கிரன் வான்கடேதான் அந்த சடலத்திற்குரிய நபர் என்று முடிவுக்கு வந்தது போலீஸ்.\nபிஎன்ஜிபி பகுதியைச் சேர்ந்த கிரன்வான்கடே வீட்டிற்கு சென்று கதவை தட்டியது போலீஸ். அந்த வீட்டில் இருந்து 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கதவை திறக்கவே போட்டோவை காட்டி அடையாளம் சொல்லச்சொன்னார்கள். அதிர்ச்சியடைந்த அந்த பெண்மணி, தனது மகனை சில வாரங்களாகவே காணவில்லை என்று கண்ணீர் மல்க கூறினார். அது தனது மகனின் சடலம்தான் என்றும் கூறி அழுதார். இதனையடுத்து கிரனின் சடலத்தை அந்த பெண்மணியிடம் ஒப்படைத்தனர். அவரது பெயர் கந்தாபாய் வான்கடே என்று விசாரணையில் தெரியவந்தது.\nகிரன் கிருஸ்துவராக இல்லாத நிலையிலும் கையில் சிலுவை போட்டது ஏன் என்று கேட்டதற்கு நண்பர்கள் சேர்ந்து பச்சை குத்தி விட்டதாக கூறினார் அந்த தாய். கே என்பது கிரன், பி என்பது கிரனின் பெண் தோழியின் பெயர் என்றும் கூறி அழுதார். எப்படியோ ஒரு மாதகாலமாக தூக்கத்தை தொலைத்து துப்புத்துலக்கி கொலை செய்யப்பட்ட நபரை கண்டுபிடித்து சடலத்தை உரியவரிடம் ஒப்படைத்தது மும்பை போலீஸ்.\nசமீபத்தில் வெளிநாட்டில் அடையாளம் தெரியாத ஒரு இந்தியரின் சடலத்தை அவரது சட்டைப்பாக்கெட்டில் இருந்த சிகரெட் லைட்டரை வைத்து கண்டுபிடித்து கொலையாளியை கைது செய்தனர். இந்த வழக்கில் ஓட்டு போட்ட அழியாத மை துப்புத்துலக்க உதவியுள்ளது.\nmumbai crime murder மும்பை கிரைம் கொலை\nKiran Wankhede’s body was found nearapublic toilet on the Ghatkopar-Mankhurd Link Road along the city’s western suburbs in the first week of May. His face had been smashed withastone and other than the voting mark, the only other marks on his body were tattoosa‘holy cross’ and the alphabets B and K on his hand. Both turned out to be red herrings.
விஜய் 63 படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர் – Eelam News\nவிஜய் – அட்லி மூன்றாவது முறையாக இணையும் தளபதி 63 படத்தில் பிரபல காமெடி நடிகர் ஒருவர் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Vijay63 #Thalapathy63 #Vivekh\nதெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து விஜய் – அட்லி மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணையவிருக்கின்றனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். விவேக் கடைசியாக விஜய்யுடன் இணைந்து குருவி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. அடுத்த தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு தளங்களை படக்குழுவினர் தேர்வு செய்து வருகின்றனர்.\nதொடர்ந்து படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்களையும் படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா அல்லது சமந்தா நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. #Vijay63 #Thalapathy63 #Vivekh