text
stringlengths
57
183k
தீராக் கனா – 01 – தமிழ்\nPosted on நவம்பர் 28, 2016 நவம்பர் 27, 2016 by தமிழ்\nஇதை நெடுங்கதையாகத் தொடர விருப்பம். நாளொரு அத்தியாயமாகக் கொண்டு வர எண்ணம். தகவல் பிழைகள் ஏதுமிருப்பின் சொல்லுங்கள். திருத்தம் செய்யத் தயார்.\nஅவரை எதற்காக சந்திக்க வந்தேன் என்பதை யோசித்தபடியே வராந்தாவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவரிடம் சொன்னால் எனக்கு தீர்வு கிட்டுமா என்பதையெல்லாம் இப்போது வரை யோசிக்கவில்லை. அவர் ஒரு மருத்துவர். ஒருவேளை அவரால் எனக்கு தீர்வு கிடைக்கலாம். கிடைக்காமல் போகவும் ஒரு வாய்ப்பு உண்டு. எனக்கு உடலில் பிரச்சினை இல்லை. ஒருவேளை மனதில் இருக்கலாம் என்றொரு ஐயம். அதுவும் அத்தனை உறுதியில்லை.\nஉறுதியே இல்லாமல்தான் அவருடைய வீட்டில், அவருடைய அறையில் காத்திருந்தேன். ஒரு விடுமுறை நாளின் காலை நேரத்து தேநீர் கோப்பை ஒன்று எனக்கு முன் இருந்தது.\nடாக்டர்! அதிகபட்சம் கால்மணிநேரம் எடுத்துக்குவேன். நான் கடகடனு எனக்கு மனசில பட்டத இங்க சொல்லிடறேன். அது பிரச்சினைனா அதுக்கு தீர்வு சொல்லுங்க.\nஅவர் நிதானமாக தலையசைத்தார்.\nநான் அவரிடம் முழுமையாக மனதில் தோன்றிய ஒரு வார்த்தையையும் விட்டுவிடாமல் விவரித்து சொல்லத் துவங்கினேன்.\nஅது ஒரு பெரிய வரவேற்பறை. அதாவது ஒரு பெரிய வரவேற்பறை போல காட்சி தந்தது. அந்த அறை முழுக்க குளுமை நிரம்பியிருந்தது. அதைச் சுற்றிலும் மூன்று சிறிய அறைகள். மூன்று அறைகளிலும் ஒரே நேரத்தில் மூவருக்கு நேர்காணல்கள் நடந்து கொண்டிருந்தன. யாரோ ஒருவர் நேர்காணல் முடிந்து ஒரு அறையின் கதவைத் திறந்து வெளியே வந்தார். எனக்கு முன்னிருந்த வரிசையில் அவரின் எனக்கு முன்னிருக்கும் ஒருவர், அவரிடம் கேட்டார்.\n’உள்ள என்ன கேள்வி கேட்டாங்க?’\n‘ஜேஎஸ்பி சர்வ்லெட் பத்தி கேட்டாங்க.. அப்புறம் ப்ராஜெக்ட்..’\nவேறென்னமோ உரையாடல் அவர்களிருவருக்கும் இடையே நடந்தது. ஆனால் எனக்கு அது ஏதும் செவியில் விழவே இல்லை.\nசட்டென அவர் வெளியேறிவிட்டார்.\nசர்வ்லெட் குறித்து என் நினைவில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என யோசிக்கத் துவங்கினேன். முன்னவர் வெளியேறும் அறைக்குள் நான் நுழையக் கூடாது என்றொரு பயம். அந்த அறைக்குள் இருந்த நேர்காணல் செய்யும் அதிகாரியை நோக்கினேன். வயதானவர். தொலைபேசியில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். கண்ணாடிக் கதவு. வெளியே ஒலி கேட்கவில்லை. எந்த அறைக்கதவு எப்போது திறக்குமென ஒவ்வொரு நொடியும் வெப்பம் கூட்டியது. யாருடைய பெயரை எப்போது அழைப்பார்கள் என்கிற அச்சம் உள்ளுக்குள் இருந்தது. அங்கு காத்திருந்த ஒவ்வொருவருமே அந்த எண்ணத்தில் இருந்திருக்கலாம். நிலைமை அப்படித்தான் இருந்தது.\nஎன் பெயரேதான். நான் உடனே எழ வேண்டும். எழ வேண்டும் என நினைக்கிறேனே தவிர என்னால் எழ முடியவில்லை. அதற்குள் என் பெயரை இரண்டு முறை அழைத்து விட்டார்கள். சுற்றி அமர்ந்த பிறரும் என்னையே பார்க்கிறார்கள். என்னால் எழவே முடியவில்லை. கால்கள் இறுகிக்கொள்கின்றன. கண்கள் திறக்க முடியவில்லை.\nஇம்முறை என்னால் தாங்கமுடியாமல் எழுந்தே விட்டேன்.\nஅறை குளுமையாகவே இருந்தாலும் இருள் கவிந்து கிடந்தது. உடல் கொஞ்சம் சோர்வாக இருக்கிறது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவன் உறக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தேன்.\nஅடச்சே.. இது கனவா?\nஅம்மாதான் அழைத்துக் கொண்டிருக்கிறார். ‘எழுந்திரிடா செழியா.. எவ்ளோ நேரம் தூங்குவ?’\nஇன்னொரு முறை கண்ணை மூடி சற்று நேரம் கழித்து திறந்தேன். கனவின் எச்சங்கள் கண்ணுக்குள் மாறி மாறி எழுந்தன. சட்டென்று அழிந்து விட்டன. நேர்காணல் மட்டும் நினைவிற்குள் நின்றது. ஒருமுறை ஆழமாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தேன்.\nகொஞ்சம் தடுமாற்றத்துடன் வீட்டின் வெளிப்புறத்தை வந்தடைந்தேன். நிகழ்காலம் புரிய எப்போதும் கொஞ்சம் நேரமெடுக்கிறது. கனவில் எதிர்காலம் என்பது அற்ப சந்தோஷமாகவே நிகழ்கிறது. கண் விழித்த சில நொடிக்குள் காற்றுடைத்த சோப்புக் குமிழாகி விடுகிறது கனவின் எதிர்காலம்,\nமுகம் கழுவி விட்டு, அன்றைய நாளிதழைப் புரட்டினேன். அம்மா தேநீர் கொண்டு வந்து வைத்தார். வீட்டில் எனக்கு மட்டுமே தேநீர் என்பதால் காலையில் சீக்கிரம் எழச் சொல்லி அம்மா தினமும் எழுப்புகிறார்.\nஎந்தவொரு நாளிலும் உறக்கத்தில் இருப்பவனை அதனின்று எழுப்பி விடுவது ஒரு கஷ்டமான விஷயம்தான். அப்படி ஒருவனை உறக்கத்திலிருந்து எழுப்புவது பாவமென்றும் கூட கருத்து உண்டு. அம்மாக்கள் மட்டும் அதில் விதிவிலக்கு. மகனை எப்படி எழுப்புவது என்பதை எல்லா அம்மாக்களும் அறிவர். என்ன ஒன்று, எல்லா அம்மாக்களின் வியூகங்கள்தான் வேறு வேறாக இருக்கும். ஆனால் நோக்கம் ஒன்றே ஒன்றுதான்.\nரொம்ப நாள் தள்ளி இன்னைக்கு ஒரு கனவும்மா.. இண்டர்வியூக்கு வெயிட் பண்ணும்போது நீ எழுப்பிட்டம்மா… பகல் கனவு பலிக்கும்ல..\nஅம்மா சிரித்துக் கொண்டார்.\nஎன் நிலைமை அப்படியாகி விட்டது.
ஆறுமுகன் தொண்டமான் இளம் வயதில் எம்மை விட்டு பிரிந்து போனாலும் அவரது சேவைகள் வியக்கத்தக்கது - ரவூப் ஹக்கீம் - News View\nHome உள்நாடு ஆறுமுகன் தொண்டமான் இளம் வயதில் எம்மை விட்டு பிரிந்து போனாலும் அவரது சேவைகள் வியக்கத்தக்கது - ரவூப் ஹக்கீம்\nஆறுமுகன் தொண்டமான் இளம் வயதில் எம்மை விட்டு பிரிந்து போனாலும் அவரது சேவைகள் வியக்கத்தக்கது - ரவூப் ஹக்கீம்\nஅமரர் தொண்டமான் ஒரு சிறந்த அரசியல் ஞானியாக காணப்பட்டார். ஆறுமுகன் தொண்டமான் இளம் வயதில் எம்மை விட்டு பிரிந்து போனாலும் இவரின் சேவைகளை பார்த்தால் வியப்பானது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் நேற்று அமரர் ஆறுமுகன் தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் குடும்பம் இந்திய வம்சாவளி மக்களுக்கு அளப்பரிய சேவையை செய்துள்ளது. அமரர் ஆறுமுகன் தொண்டமானும் நானும் ஒரே சந்தர்ப்பத்தில் தான் பாராளுமன்றத்திற்கு வந்திருந்தோம். சிறந்த முறையில் பாராளுமன்றில் பணியாற்றியிருந்தோம். அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஒரு சிறந்த அரசியல் ஞானியாக காணப்பட்டார். அவரின் அரசியல் தீர்மானங்கள் மூலம் பலரை ஈர்த்திருந்தார். அவருடைய பேரன் ஜீவன் தொண்டமான் இந்த அரசியல் இடைவெளியை நிரப்ப வந்துள்ளார்.\nஅமரர் ஆறுமுகன் தொண்டமான் அவருடைய மக்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அனைத்து அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளார். அவரை எதிர்கட்சியில் பார்ப்பது மிகவும் கஷ்டமாகும்.\nஆனால், கடந்த நல்லாட்சியில் அவர் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தார். கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரச்சினைகள் வரும் சந்தர்ப்பத்தில் மக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். தொழிற்சங்க அரசியலில் அவர் தமது முதிர்ச்சி தன்மையை காட்டியிருந்தார். பேரம் பேசும் தன்மையில் சிறந்தவராக காணப்பட்டார்.\nபிரிவினை வாதத்திலிருந்து மலையக மக்களை காப்பாற்றியிருந்தார். ஆறுமுகன் தொண்டமான் இளம் வயத்தில் எம்மைவிட்டு பிரிந்து போனாலும் இவரின் சேவைகளை பார்த்தால் வியப்பானது. கூட்டு ஒப்பந்தம் செய்யும் போதும் சரி ஆட்சித் தலைவர்களுடன் தமது அமைச்சு பொறுப்புகள் குறித்து வாதாடும் போதும் சரி மிகவும் துணிகரமாகச் செயற்பட்டுள்ளார்.\nஅரசியல் ரீயாக அவரை அச்சப்படுத்தும் வகையில் செயற்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் துணிவுடன் செயற்பட்டிருந்தார். சௌமியமூர்த்தி தொண்டமானின் சிலை முன்னாள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ளது.\nபெரும் தேசிய தலைவர்களுடன் இந்த சிலை அமையப்பெற்றுள்ளது.\nதொண்டமான் நாமம் இலங்கையின் தேசிய வீரர்களின் பட்டியில் அடங்கியதாகும். அந்த நீண்ட பாரம்பரியத்தின் அடுத்த வாரிசாக வந்துள்ள ஜீவன் தொண்டமான் மீது ஒரு பாரம் சுமத்தப்பட்டுள்ளது. என்றாலும் மலையக மக்களுக்காக அவர் சேவையாற்றுவார் என நம்புகின்றோம் என்றார்.
புத்தகத்தின் பெயர் பண்டாரநாயக்க கொலை | Book name pandaranayak kolai - fnewsnow.com\nபுத்தகத்தின் பெயர் பண்டாரநாயக்க கொலை\n*Reading Marathon 2022-50*\n*ID 22RM 246 *13/50*\n* புத்தகத்தின் பெயர்:- *பண்டாரநாயக்க கொலை *\n* ஆசிரியர் :- *என். சரவணன் * **\n* நூல் வெளியீடு . *குமரன் புத்தக இல்லம் * *\n* விலை:- ' *375/-* (இலங்கை ரூபா)\n* பக்கம்:- *91*\n* பெறுவதற்கு :- *பாத்திமாபுக்ஸ், ஏறாவூர்,\nமாற்றம் என்பது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும். அதனைத் தடுத்து நிறுத்த முடியாது. இந்த உலக மக்களின் துன்பங்களை மாற்றி அமைக்கப் பல சிந்தனையாளர்கள் வந்தாலும், அதில் ஒரு சிலரே தங்கள் சிந்தனைகளை மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைத்தனர். அதிலும் இந்த உலகத்தையே ஒரு உலுப்பு உலுப்பி, அப்படியே திகைக்க வைத்தவர் என்றால் *பகவான் புத்தர்* அவரது கொள்கைகள், கோட்பாடுகள், சிந்தனைகள், எல்லாவற்றையும் இந்த மக்களுக்கு எடுத்துக் கூறும் *பிக்கு* அதாவது *சோமராம தேரர்* என்பவரின் துப்பாக்கிக்கு இரையானவர் தான் *S. W. R. D பண்டாரநாயக்க*.\nஇங்கே ஆசிரியர் *என். சரவணன் அவர்கள், இக் கொலை சம்பந்தமாக ஒரு ஆய்வினை ஆவணபடுத்தியுள்ளார் என்றே சொல்லலாம். அவருடைய தேடல் மிக ஆழமாக, இதுவரை நாம் கேள்விப்பட்ட வதந்திகளுக்கு மாறாக, தனது தெளிவான கருத்துக்களை எங்கள் முன் நிறுத்துகிறார்.\nகண்டிப்பாகத் தமிழ் மக்கள் வாசிக்க வேண்டிய புதினம். காரணம், மிகைப்படுத்தப்பட்ட செய்திகளுக்கும், சந்தேகங்களுக்கும் தனது உறுதியான பதிலைத் தருகிறார் ஆசிரியர் *என். சரவணன் அவர்கள்.\n25.09.1959 ஆம் ஆண்டு *சோமராம தேரர் * அவர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட *பண்டாரநாயக்க* , வெறும்3வருடங்களே இலங்கையை ஆட்சி செய்துள்ளார். இலங்கை சுதந்திரம் அடைந்தபின் முதல்முதலாக *ஒரு அரசியல் தலைவர்* கொலை செய்யப்பட்டது *பண்டாரநாயக்க* என்றும், அதனைத் தொடர்ந்து பின் வரும் ஆண்டுகளில் பல அரசியல் கொலைகள் நடந்தேறின, அதனை நாம் காணக்கூடியதாக உள்ளது என்கிறார் ஆசிரியர்.\nஇங்கே ஆசிரியர்7சிறிய தலைப்புகளில் இப் புதினத்தை சிறப்பாக நகர்த்துகிறார்.\n1* பண்டாரநாயக்க கொலையின் மர்ம முடிச்சுகள்.\n2* புத்த ரக்கித்த தேரர்.. பண்டாரநாயக்க கொலையின் சூத்திரதாரி.\n3* பண்டாரநாயக்கவைக் கொன்ற பண்டாரநாயக்கவாதிகள்.\n4* இலங்கையை ஆளும் விஜேவர்தன பரம்பரை.\n5*பண்டாரநாயக்க கொலையில் CIA.\n6*பண்டாரநாயக்கவின் வர்க்க, வம்சாவளிப் பின்புலம்.\n7*அவரது காலத்தின் முக்கிய நிகழ்வுகள்.\n*தூக்குத் தண்டனை இலங்கை நாட்டில் இனிக் கிடையாது * என்ற சட்டத்தினை பாரளுமன்றத்தில் 09.05.1958 அன்று கொண்டுவருகிறார் பண்டாரநாயக்க, (மரணதண்டனையொழிப்பு) அதனை நிறைவேற்றியும் விடுகிறார். ஆனால் அச்சட்டம் கொண்டுவந்தது2வாரங்களில் அவர் சுடப்படுகிறார். மீண்டும் *தூக்குத் தண்டனைக்கு * உயிர் கொடுக்கப்பட்டு, தேரர் தூக்கிலிடப்படுகிறார்.\nநண்பர்களே, எதற்காக அவர் சுடப்பட்டார், இதன் மிக மிக்கிய புள்ளி யார்?, உண்மையில் சுட்டவருக்கு அப்படியொரு தீர்மானம் இருந்ததா? இதன் பின்னணியில், *பண்டாரநாயக்க* சுடப்படும் போது ஏதும் நோய்த் தாக்கத்தால் இறந்தாரா? இப்படியான பல கேள்விகளுக்கு ஆசிரியர் *என். சரவணன் அவர்களின் பதில்கள் உங்களை வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.. வாசியுங்கள்.\n*பண்டாரநாயக்கவின் கொலையை மட்டுமன்றி, அவரது *வம்சாவளி* பற்றியும் பல விரிவான தகவல்களை நாம் தெரிந்து கொள்ள முடியும். அத்துடன் இலங்கையைத் தன் வசம் வைத்திருக்கும் *விஜேவர்தன**குடும்பங்களையும் ஆசிரியர் குறிப்பிடத் தவறவில்லை என்றே கூறலாம்.\nஇலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரும் *புத்த பிக்குகளின்* அதிகாரம் தொடர்ந்தும் (இன்றும் கூட) அரசியலிலும், பொருளாதாரத்திலும் எவ்வளவுக்குத் தங்கள் *கை* ஓங்கியிருக்கிறது என்பதனை *புத்த ரக்கித்த தேரர்* மூலமாகக் காட்டுகிறார் ஆசிரியர் *என். சரவணன்.\nஇறுதியாக *சோமராம தேரர்* ருக்கு *மரணதண்டனை* நிறைவேற்றப்பட்டபோது, அவர் புத்த மதத்திலிருந்து விலகி கிறிஸ்தவ சமயத்தில் *(தூக்கில் தொங்குவதற்கு முதல்நாள்)* *பீற்ரர்* என்ற பெயருடன் அவர் இதனை ஏற்றுக் கொண்டார், என்று ஆவணப்படுத்துகிரார்.\nஎதற்காக அவர் இறுதி நேரத்தில் தனது மதத்தை மாற்றினார் என்பது ஒரு புதிரான விடையமாகத்தான் உள்ளது. ஒருவேளை அவர் *புத்தரைக்* காப்பாற்ற முயற்சித்திருக்கலாம் அல்லது, தான் ஒரு *துறவி* என்பதனையும், *பண்டாரநாயக்க * இறப்பதற்கு முன் சுட்டவரைத் தண்டிக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார்,.இதனையும் *தாண்டி* அங்குள்ள *பண்டாரநாயக்கவாதிகளின்* தொடர்ச்சியான வன்மக் குகரலுக்காக இருக்கலாம் எனத் தோன்றுகின்றது.\nஇதில், உலக மறைமுக கெடுபிடிகளின் தலைவராகிய *CIA* யின் தொடர்பு இருப்பதை *Who is Who CIA*என்ற புத்தகத்தின் மூலம் உறுதிப்படுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது.\nநண்பர்களே, சிறந்த முறையில் ஆவணப்படுத்தியுள்ள இப் புதினம், உங்களையும் ஒரு தரம் 1959 ம் ஆண்டிற்குக் கூட்டிச் செல்லும் என்று உறுதியாகக் கூறுகிறேன்.. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய *புதினம். ஆசிரியர் *என். சரவணன்* அவர்களது மற்றுமொரு படைப்பான *அறிந்தவர்களும் அறியாதவைகளும் * என்ற புதினம், பல அறியாத இலங்கைத் தகவல்களைக் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது..\nபொன் விஜி - சுவிஸ்
காதலர்கள் தற்கொலை முயற்சி ! 16 வயது காதலி உயிரிழந்தார் ! காதலன் அவசர சிகிச்சைப்பரிவில் - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site\nHome › காதலர்கள் தற்கொலை முயற்சி ! 16 வயது காதலி உயிரிழந்தார் ! காதலன் அவசர சிகிச்சைப்பரிவில்
ஷௌக்கத் சித்திக் Archives - தமிழ்ஹிந்து\nTag: ஷௌக்கத் சித்திக்\nஇலக்கியம் கதைகள் புத்தகம்\nபாகிஸ்தான் சிறுகதைகள் [புத்தக விமர்சனம்]\nவெங்கட் சாமிநாதன் July 18, 2011\t16 Comments ஆஸிஃப் ஃபரூக்கிஇந்தஜார் ஹுஸேன்இந்திய-பாகிஸ்தான் பிரிவினைஇந்தியாஇலக்கியம்இஸ்மெய்ல் கௌஹர்எழுத்துரிமைகதைகள்சிறுகதைகள்தக்ஷசீலம்பாகிஸ்தான்புத்தக விமர்சனம்முஸ்லீம்ஷௌக்கத் சித்திக்ஸதத் ஹஸன் மண்டோ\nSome of the side effects you may experience with cephalexin 250 mg dosage can be classified as serious. In clomid pills at dischem price israel, girls like her had their lives mapped out for them. If you want to buy clomid online there is not much to do and the prices are quite low compared to the costs of buying from the drugstores.\nClomid 50 mg online delivery for many years it was believed that the only way to maintain the immune system is by taking multivitamins, but the reality is it is possible to improve the immune function of the body without any additional supplements. Generic bactrim without prescription http://blog.bitsense.com.ar/2013/10/30/adios-2013-ultimas-fechas-del-biac/ in australia. The patient has to pay for the medicine, even if it is not effective in.\nEach child was seen byadifferent doctor to be assessed for the presence of scabies and treated accordingly. There are however sites available that will give clomiphene citrate pregnancy price Timizart youaquick answer for your query. This gives you the clomid and serophene research that we know is the most credible and most reliable on the internet.\nபாகிஸ்தான் சிறுகதைகள் தொகுப்பு இது.\nபாகிஸ்தான், இந்தியாவிலிருந்து மத அடைப்படையில் பிரிந்து அறுபது வருடங்களுக்கு மேலாகிறது. முஸ்லீம்கள் என்றும் மத அடிப்படையில் மாத்திரம் ஹிந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள் இல்லை. அவர்கள் கலாசாரமும் வாழ்நோக்கும் சரித்திரமும் வேறு. என்றுமே அவர்கள் ஹிந்துக்கள்\nபெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினராக இருந்துகொண்டு அவர்களது வாழ்வையும் அடையாளங்களையும் காத்துக்கொள்ள முடியாது என்றும் வாதித்து, கலவரங்கள் செய்து பிரிந்து சென்றார்கள். அறுபது வருட காலம்- இரண்டு தலைமுறைக்கும் மேற்பட்ட காலம்தான். இன்று அறுபது வயதாகிவிட்ட எந்த பாகிஸ்தானியும் அவன் பயந்த ஹிந்து அரசின் கீழும் வாழாதவன்தான். தன் சக மதத்தினராலேயே ஆளப்படுகிறவன்தான். அந்த வாழ்க்கை, அந்த மனிதர்கள் உலகம், அவன் கண்ட கனவுகள் பற்றி இந்தக் கதைகள் சொல்லும் அல்லவா?\nநமக்கு தோப்பில் முகம்மது மீரானோ, ஜாகீர் ராஜாவோ, சல்மாவோ காட்டும் உலகம், ஏதோ வேற்று நாட்டவர் உலகம் அல்ல. வாஸ்தவம், அவர்கள் வாழ்க்கை நியதிகள் கட்டுப்படும் தர்மங்கள், அவர்கள் நம்மிலிருந்து வேறுபட்டவை. எந்த சிறு பிரிவுகளுக்கும் இடையே இந்த வேறுபாடு காணப்படும்தான். ஆனால் அவை நமக்குப் பரிச்சயமானவை. பரிச்சயம் என்ற நிலையிலிருந்து இன்னும் கொஞ்சம் ஆழமாக நமக்கு உணர்த்துபவை. அத்தகைய புரிதலிலிருந்து வேறுபட்டவை அல்ல, பாகிஸ்தானில் வாழும் சிந்திகளின் வாழ்க்கையோ பஞ்சாபிகளின் வாழ்க்கையோ. அதே போலத்தான் பங்களாதேஷில் வாழும் வங்க முஸ்லீம்களின் வாழ்க்கையும். அவை நமக்குப் பரிச்சயமானவை தான். சாதத் ஹஸன் மண்டோ இந்தியாவிலிருந்து கொண்டு எழுதுவதும் பின்னர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து எழுதுவதும் பின்னப்பட்டு விடுமா என்ன? பலூச்சிஸ்தானிலும் எல்லைப்புறப் பிரதேசங்களிலும் வாழும் மனிதர்களின் வாழ்க்கை வேண்டுமானால் நமக்குப் பரிச்சயமில்லாததாக இருக்கலாம்\nபாகிஸ்தான் பிரிவினைக்கு முன் லாகூர் பெரிய திரைப்படக் கேந்திரமாக இருந்தது. அந்த இடத்தை பிரிவினைக்குப் பின் மும்பை பறித்துக் கொண்டது. நிகழ்ந்தது இடமாற்றம்தான். பம்பாய் ஹிந்திப் படங்கள் என்றால் பாகிஸ்தானில், ஒரு வெறிபிடித்த வரவேற்பு என்றுதான் சொல்ல வேண்டும். எவ்வளவுதான் அரசு தடைகள் விதித்திருந்தாலும், பாகிஸ்தானியர்களின் பம்பாய் ஹிந்தி பட வேட்கையை ஒன்றும் செய்ய முடிவதில்லை. திருட்டு விஸிடி எந்தத் தடையுமில்லாமல் இங்கிருக்கும் அமீர், சல்மான், ஷாருக் கான்களையும், மாதுரி தீக்ஷித்தையும் பாகிஸ்தானின் அடிமட்ட திரைப்பட ரசிகனையும் கவர்ந்த நக்ஷத்திரங்களாக்கியுள்ளன. (ஒரு ஜோக் பரவலாக எந்த பாகிஸ்தானியும் சொல்வது, “மாதுரி தீக்ஷித்தைக் கொடுத்தால், கஷ்மீரை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்”) எந்த பாகிஸ்தானி அதிகாரியோ, மந்திரியோ ப்ரெசிடெண்டோ எவனானாலும் அவனது இந்தியாவுக்கு எதிரான பகை உணர்வு எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் அவன் இங்கு காலடி வைத்ததும் பார்க்க விரும்புவது மொகலே ஆஸம் படம்தான். அதோடு அவன் மிக எளிதாக ஆர்வத்தோடு தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ள முடிகிறது.\nஇது ஒரு காட்சி. ஒரு தரத்து மக்களின் ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் என்றும் சொல்லவேண்டும். இது சாதாரண மக்களின் ரசனையையும் சந்தோஷத்தையும் சொல்கிறது. ஆனால் பாகிஸ்தான் என்று முஸ்லீம்களுக்கான ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும் என்று முனைந்தவர்கள் இந்திய மண்ணின் பண்பாட்டிலிருந்தும் கலாசாரத்திலிருந்தும் வரலாற்றிலிருந்தும் வேறுபட்ட ஒன்றை பாகிஸ்தான் மக்களின், நாட்டின், அடையாளமாகக் காணவிரும்பினர்கள். அப்படி ஒன்று இருப்பதாகவும் அதைக் கண்டெடுத்து வளர்க்கவும் விரும்பினார்கள். பாகிஸ்தான் 1947-இல் உருவானதாக, அறுபது வருடங்களே ஆன ஒரு புதிய நாடாக நமது சரித்திரம் சொல்லும். ஆனால் பாகிஸ்தானியர் தம் வரலாற்றை இஸ்லாம் தோற்றம் கொண்ட கணத்திலிருந்து தொடங்குவார்களா அல்லது முதல் இஸ்லாமியப் படையெடுப்பை தன் வரலாற்றுத் தொடக்கமாகக் கொள்வதா என்பதில்தான் அவர்களுக்குள் சர்ச்சை. படையெடுத்து தன் முன்னோர்களையும் நாட்டையும் நாசப்படுத்தியவர்களை, பலவந்தமாக மதம் மாற்றியவர்களை, தம் தேச ஸ்தாபகர்களாகக் கொள்ளும் விசித்திரம் அது. அவர்கள் தம்மை இந்தியத் துணைக்கண்ட பண்பாட்டையும் வரலாற்றையும் பகிர்ந்து கொண்டவர்கள்தாம், பின்னர் மதம் காரணமாகப் பிரிந்தவர்கள் என எண்ணுவதில்லை. அவர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்வது மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளோடு. உலக முஸ்லீம் இனத்தோடு சேர்ந்தவர்களாகவே அவர்கள் தம்மைக் காண்கிறார்கள், அல்லது காண விரும்புகிறார்கள், காணத் தொடங்கியுள்ளார்கள் என்று சொல்ல வேண்டும்.\nஅதிகார வர்க்கமும் அது சார்ந்த அறிவுஜீவிக் கூட்டமும் மதத் தலைமைகளும் விரும்புவதும் திட்டமிட்டுச் செயல்படுவதும்- ஆனால் சாதாரண மக்கள் தம் இயல்பான வாழ்க்கையை காண்பதும் நேர் எதிரானதாக உள்ளன. முதலில் சொன்னது லதா மங்கே‌ஷ்கரையும் ஹிந்தி சினிமாவையும் உள்ளே வர அனுமதிக்காது. ஹிந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதக் கலைஞர்கள் பெரும்[பாலோர் முஸ்லீம்களாக இருந்த போதிலும் அங்கு அந்த சங்கீதத்துக்கு இடமில்லை. ஆனால் ஹிந்திப் படங்களையும் லதா மங்கேஷ்கரின் பாடல்களையும் தாங்கிய திருட்டு டிவிடிக்கள் லாகூரிலிருந்து பெஷாவர் வரை எல்லா பஜார்களிலும் தடையின்று எளிதாகக் கிடைக்கும். காபூலில் கூட கிடைத்து வந்தது இடையில் தடை செய்யப்பட்டு இப்போது மறுபடியும் கிடைக்கத் தொடங்கியுள்ளன.\nபாகிஸ்தான் சிறுகதைகளைத் தொகுத்துத் தந்துள்ள இந்தஜார் ஹுஸேனுக்கு இந்தப் பிரச்சினைகள் முன்னின்றன. அதைப் பற்றியும் தன் முன்னுரையில் விரிவாக எழுதியுள்ளார்.\nபிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தான் என்ற ஒரு தனி நாடு உருவான பிறகு, ஒரு புதிய தேசிய உணர்வு பிறக்க வேண்டும். அப்படி ஓர் உணர்வு இருப்பதாகச் சொல்லி, தானே தனியாகப் பிரிந்து செல்ல சண்டையிட்டனர். மேலும் பிரிவினைக்குப் பிறகு அதன் சரித்திரமும் அரசியல் சூழலும் தனியாகத் தான் உருவெடுக்கத் தொடங்கின. ஜனநாயகம் என்பது அவ்வப்போது பேருக்கு எட்டிப் பார்த்தாலும், பெரும்பாலும் இராணுவ சர்வாதிகார ஆட்சிதான் பாகிஸ்தானில் நிலவியது. உறவுகளும் மத்தியக் கிழக்கு நாடுகளோடு தான் விரும்பபட்டது.. மத உணர்வு ஓர் உச்சகட்ட தீவிரத்திற்குப் புகட்டப்பட்டது. எழுப்பப்பட்டது. ஹிந்துக்களும் சீக்கியர்களும் இரண்டாம்தரக் குடிகளாகி ஒதுக்கப்பட்டனர். கிறித்துவர்களும் அப்படியே. ஹிந்துக் கோயில்கள் ஒவ்வொன்றாக மறைந்தன. ஆனால் தக்ஷசீலம் இன்றும் ஒரு புராதன சின்னமாக பாதுகாக்கப் பட்டு வருகிறது. தக்ஷசீலத்தின் வரலாறு 500 கி.மு.விலிருந்து தொடங்குகிறது. அந்தப் புராதன நகரம், நாலந்தா போல் ஒரு புராதனப் பல்கலைக் கழகத்துக்குப் பிரசித்தி பெற்ற பௌத்தர்களையும் ஹிந்துக்களையும் வரலாற்றோடு பிணைக்கும் நகரம். அது பாகிஸ்தான் அரசு சொல்வது போல, முகம்மது நபி தோன்றி உலகிற்கு ஒளி வீசும் முன் இருந்த இருண்ட யுகத்தைச் சேர்ந்தது. ஹிந்துக் கோயில்களை விட்டு வைக்காத அரசு இதை ஏன் பாதுகாக்கிறது என்பது புரியவில்லை. ஒருவேளை பாமியான் புத்தரை வெடிகுண்டு வைத்துத் தகர்த்த தாலிபான்களின் வருகைக்குக் காத்திருக்கிறார்களோ என்னவோ.\nஇந்த மாதிரியான குழப்பமான ஊஞ்சலாட்டத்தில், யதார்த்தத்திற்கும் மத அதிகார அரசியலுக்கும் .இடையேயான இழுபறியில் எழுத்தாளர்கள் உலகம் என்னவாக இருந்திருக்கும்? இருக்க அரசும் மதஸ்தாபனங்களும் விரும்பும்? எது பாகிஸ்தானின் இலக்கியமாக, தேசிய இன அடையாளம் கொண்ட எழுத்தாகக் கருதப்படும்? பாகிஸ்தான் உருவான அதற்கு முந்தியும் பின்னரும் ஆன சமீப காலகட்டத்தை ஒதுக்கிவிட வேண்டும். அது இந்திய தேசிய உணர்வுகளின் எச்ச சொச்சங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை ஒதுக்கி, பின்னர் எழும் எழுத்துகளை\nமாத்திரம் எடுத்துக்கொள்ள வேண்டும், அதாவது பாகிஸ்தான் தேசிய உணர்வுடன் பாகிஸ்தானின் இன்றைய சூழலிலிருந்து எழுந்த எழுத்துகளை மாத்திரம் தேர்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தொகுப்பாளர் இந்தஜார் ஹுஸேனின் அணுகலாக இருந்திருக்கிறது என்று அவரே எழுதியிருக்கிறார். இன்னமும் அவர் சொல்கிறார், பிரிவினையை ஒட்டியும் அதன் பின் சற்றுக் காலம் யதார்த்த வகை எழுத்துகளே எழுதப்பட்டன என்றும் அதன்பின் விட்டு விட்டுத் தொடர்ந்த இராணுவ யதேச்சார அரசுகளின் கட்டுப்பாட்டில் யதார்த்த வகை எழுத்துகள் சாத்தியமில்லாமல் போயின என்றும். காரணம் இராணுவ அடக்குமுறையில் படும் துன்பங்களை, ஏமாற்றங்களை வெளிப்படையாகச் சொல்லும் யதார்த்த வகை எழுத்துகள் எப்படி எழக்கூடும்?. யாருக்கு அந்தத் தைரியம் இருக்கும்? எனவே எதையும் நேரடியாகச் சொல்லாத எழுத்து முறை கையாளப் பட்டது. ”குறியீடுகளும், அருவுருவங்களும் ஒன்றோடென்று கொளுவிக்கொண்டு ஒரு புதிய அவதாரம் எடுத்தது” என்கிறார் கதைகளைத் தேர்ந்தெடுத்த தொகுப்பாளர் இந்தஜார் ஹுச்ஸேன் சொல்கிறார். அதுவும் கண்டனங்களுக்கும் வரவேற்புக்கும் ஆளாகியது என்றும் சொல்கிறார். இருந்தாலும் தான் அனேக சிறந்த கதைகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், பாகிஸ்தானின் 50 ஆண்டு கால சிறுகதை வளர்ச்சியை இது பிரதிபலிக்கும் என்றும் சொல்கிறார்.\nஇத்தொகுப்பில் பாகிஸ்தானில் பேசப்படும், உருது, பஞ்சாபி, சிந்தி, புஷ்டோ, சரைக்கி, பலூச்சி ஆகிய எல்லா மொழிகளிலிருந்தும் கதைகள் உள்ளன. மொத்தம் 32 கதைகளில், 23 உருது,3சிந்தி,2பஞ்சாபி, புஷ்டோ, சரைக்கி இரண்டிலும் ஒவ்வொன்று, பலூச்சியிலிருந்து இரண்டு. உருது மொழியில் எழுதியவர்கள் எந்தப் பிராந்தியத்தையும் சேர்ந்தவராக இருக்கலாம்.. அது எல்லோராலும் பேசப்படும், புரிந்து கொள்ளப்படும் அதிகார மொழியும் ஆகும்.\nமிகுந்த எதிர்பார்ப்புடன் இத்தொகுப்பைப் படிக்கத் தொடங்கிய எனக்கு இது மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. இந்தஜார் ஹுஸேனும் சிறுகதை எழுதுபவர்தான். எனினும் தன்முனைப்போடு அவர் செயல்படவில்லை. ஆஸிஃப் ஃபரூக்கி என்பவருடன் கூட்டாகவே இத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஇந்தஜார் ஹுஸேனின் கதையையே எடுத்துக்கொள்வோமே. அவர் தந்தது இந்தக் கதையை தன் எழுத்தின் சிறந்த அடையாளமாக, பாகிஸ்தானின் இன்றைய தேச உணர்வுகளின் பிரநிதித்துவப் படுத்தும் ஒன்றாகத் தான் கருதியிருப்பார். படகு என்று அந்தக் கதையின் தலைப்பு.. அந்தக் கதை எங்கோ ஆரம்பித்து எங்கோவெல்லாமோ தன்னிஷ்டத்துக்குப் பயணம் செய்கிறது. பயணிகள். ஒயாது பெய்யும் மழை. எப்போது தம் பயணத்தைத் தொடங்கினார்கள் என்று நினைத்துப் பார்க்கிறார்கள். மழை பெய்யத் தொடங்காத அன்றுதான் கிளம்பியிருப்பார்கள். வீடுகள் அடித்துச் செல்லப்படுகின்றன. அடுத்து கில்காமேஷும் தன் சக பயணிகளுடன் பேசுகிறான். உத்னாபிஷ்டமிடம் கடவுள் சொன்னாராம். ”நீ தப்ப விரும்பினால் வீட்டை இடி, படகைக் கட்டு” என்றாராம். “ஒவ்வொரு உயிரினத்திலிருந்து ஒன்றைப் படகில் ஏற்றிக்கொள், தப்பிச் செல்” என்றாராம். பின் லாமாக் வருகிறான். நோவா வருகிறான். அடுத்து “ஒரு பிரும்ம முகூர்த்தத்தில் தொட்டியில் ஒரு மீன் வளர்ந்து தொட்டியை விடப் பெரிதாகிறது. அது மனு முந்தின நாள் தர்ப்பணம் செய்தபோது ஆற்றில் கிடந்த மீனாம். அது அடைக்கலம் கேட்டு முதலில் தன் கமண்டலத்தில் அடைக்கலம் தந்து எடுத்துவரப்பட்டு, வளர்ந்து பின் தொட்டியில் விடப்பட்டு பின் தொட்டியையும் மீறி வளரவே கங்கையில் விடப்பட்டு பின்னும் அது ஆற்றையும் மீறி வளரவே அதை சமுத்திரத்தில் விடுகிறார் மனு. மீன் இப்படி வளர்வது விஷ்ணு குள்ளனாக வடிவெடுத்து பின் திரிவிக்கிரமனாக உலகை அளந்த நினைவு வருகிறது. மனு பயந்து போய் இறைவனை வேண்டுகிறார். இறைவன் ஒரு பிரளயம் வரப் போகிறதென்றும், அதிலிருந்து தப்ப “ஒரு படகைக் கட்டு. ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒன்றாக படகில் ஏற்றித் தப்பித்துக்கொள்” என்றாராம். ஒரு பெரிய சர்ப்பம் தோன்ற, இந்தச் சர்ப்பத்தால் இந்தப் படகை மீசையோடு இறுக்கிக் கட்டு” என்று இறைவன் பணிக்க, அடுத்த பாராவில் ஹஸரத் நோவாவின் மனைவி அவனை நோக்கி வருகிறாள். அவள் முகத்தில் சாம்பல் துகள். கைகளில் கோதுமை மாவு…… இப்படி கதை போகிறது. “போதுமடா சாமீ”…. என்று கதறத்தான் தோன்றுகிறது. கஜினி முகம்மதுவிலிருந்து பாகிஸ்தான் வரலாற்றைத் தொடங்குகிறவர்கள் கற்பனையில் விஷ்ணுவும், மனுவும், தர்ப்பணமும், பிரும்ம முகூர்த்தமும் கில்காமேஷும் நோவாவும் வந்து தொந்திரவு செய்வது வேடிக்கைதான்.\nஇது போன்றுதான் பெரும்பாலான கதைகள் இத்தொகுப்பில் நிறைந்துள்ளன. என் எளிய மூளைக்கு இதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. நம்ம ஊர் ஸ்ட்ரக்சுரலிஸ்டுகள், போஸ்ட் மாடர்னிஸ்டுகள், மந்திர யதார்த்தவாதிகளுக்கு புரியலாமோ என்னவோ. யதார்த்தம் மீறிய கற்பனை, கதை புனைவு என்பது நம் மரபில் உள்ளதுதான். பல நூற்றாண்டுகளாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக. நமது புராணங்கள், பஞ்ச தந்திரக் கதைகள், நமது பழம் காவியங்கள், (பகுத்தறிவாளர்கள் கோஷமிடும் சிலப்பதிகாரத்தையும் சேர்த்து) விக்கிரமாதித்தன் கதைகள் என நிறைய உண்டு. அவற்றை நாம் சலிப்பில்லாது படிக்க முடியும். அவை யதார்த்தம் மீறிய ஓர் உலகை சிருஷ்டித்தாலும் அவற்றின் பேச்சிலும் சம்பவங்களிலும் நடப்பிலும் ஓர் அர்த்தம் இருக்கும்; தர்க்கம் இருக்கும்.\nஇராணுவ அடக்கு முறைகளை மீறி எழுத வந்தவர்கள் இப்படி கற்பனைகளில் ஆழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்றால், இவை என்ன அர்த்தத்தில் இராணுவ அரசின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி, நமக்கு ரகசியமாக என்ன செய்தியைச் சொல்கின்றன என்று தெரியவில்லை. இம்மாதிரியான ஜாலங்களே கதையாக உள்ளவை அனைத்தையும் நான் ஒதுக்கிவிடுகிறேன். மாதிரிக்கென ஒன்றைச் சொல்லியாயிற்று. உருது மொழியில்தான் இம்மாதிரியான கதைகள் நிரம்பத் தரப்பட்டிருக்கின்றன. மொத்தம் 503 பக்கங்களைக் கொண்ட இப்புத்தகத்தைப் படிப்பது ரொம்பவும் பொறுமையைச் சோதிக்கிற காரியமாகப் பட்டது. கடைசியில் 32 கதைகள் தேர்ந்தெடுக்கப் பட்டவை படித்தும் பாகிஸ்தான் பற்றி ஏதும் பிம்பமோ உணர்வோ எழவில்லை.\nஆனால் எனக்குப் பிடித்திருந்த, படிக்க சுவாரஸ்யமாக இருந்த, இன்றைய, நேற்றைய பாகிஸ்தானைப் பற்றிச் சொன்ன கதைகளும் இருந்தன. முதலில் “ஸதத் ஹஸன் மண்டோ“-வின் “ஜன்னலைத் திறங்கோ”. பிரிவினையின் போது நிகழ்ந்த கலவரத்தில் அம்ரித்ஸரிலிருந்து தன் மகளோடு தப்பி ஓடி வந்த சிராஜ்ஜுதீன் பாகிஸ்தானில் தன் அகதி முகாமில் சந்திப்பவர்களையெல்லாம் சகீனாவின் அடையாளம் சொல்லி சகீனாவைப் பார்த்தீர்களா என்று கேட்டு அலைகிறார். தடியும் லாரியுமாக அலையும் ஒரு வாலிபர் கூட்டத்திடமும் சொல்கிறார். அவர்கள் உதவுவதாகச் சொல்கிறார்கள். பின்னர் அம்ரித்ஸரில் வயல் வெளியில் பயந்து ஒடுங்கிக் கிடக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கிறார்கள். அவளுக்கு உணவும் ஆறுதலும் அளித்து லாரியில் எடுத்துச் செல்கிறார்கள். முகாமுக்குப் பக்கத்தில் ரயில் பாதைக்கருகில் ஒரு பெண் மூச்சற்றுக் கிடப்பதைப் பார்த்த சிலர் அவளை முகாமின் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். தன் மகளெனத் தெரிந்து பார்க்க, சிராஜ்ஜுதீன் அங்கு வர, டாக்டர் ஜன்னலைத் திறந்து வெளிச்சத்தில் பார்க்க, அவள் விரல்கள் அசைய, நல்ல வேளை உயிருடன் இருக்கிறாள் என்று சொல்கிறார். அந்தப் பெண்ணின் விரல்கள் அசைந்தது தன்னையறியாது தன் பாவாடை நாடாவைத் தளர்த்தத்தான். வெறி பிடித்த கும்பல் மதமும் அறியாது, மனிதாபிமானமும் அறியாது என்று மண்டோ யாரை நோக்கிச் சொல்கிறார்? ஹிந்துக்களையா முஸ்லீம்களையா?\nபிரிவினைக்கு முன்னும் பின்னும், இந்தியாவிலிருந்தும் பாகிஸ்தானிலிருந்தும் எழுதியவர் மண்டோ. அவர் யார்?\nஇந்தஜார் ஹுஸேன் மண்டோ பாகிஸ்தானுக்குப் போனபின் எழுதிய கதையிலிருந்துதான் பாகிஸ்தானிய கதை என்று ஒன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இந்தக் கதையிலிருந்து மண்டோ எந்த வகைப்படுத்தலில் அகப்படுகிறார்?\nபகவன் தாஸ் மேஸ்திரி என்று ஒரு கதை ஷௌக்கத் சித்திக் என்பவர் எழுதியது. யார் நிலத்துக்குத் தண்ணீர் திறந்து விடுவது என்பது ஒரு கிராமத்துக் கலவரப் பிரசினை. கலவரம் வெட்டு குத்து என்று வளரும் ஒன்று. இரண்டு தரப்புகளும் மோதிக்கொள்ளும் போது பகவன் தாஸ் மேஸ்திரி எந்த அதிகாரமும் இல்லாத போதும் தன் எளிமையும் இல்லாமையுமே தன் தார்மீக பலமாக அவர்களைச் சமாதானப் படுத்துகிறார். இவர்கள் ஜீலம், சிந்து நதிக்கரையில் வாழும் நிலப் பிரபுக்கள் இல்லை. மலைப் பகுதிகளில் வாழும் இனக்குழு மக்கள். அவர்களுக்கு ஒரு பெரிய மனுஷர்; நீதிமன்றமாக இருப்பவர்; சர்தார் மஜாரி. அவர் எந்த வழக்கையும் தள்ளிப் போடும் சுபாவத்தவர். ஒரு பழைய வழக்கைத் தீர்த்தே ஆகவேண்டும். எத்தனை காலம்தான் தல்ளிப் போடுவது? இரண்டு தரப்பையும் அபராதம் கட்டச் சொல்லி, அதை, அந்த அபராதத்தை பகவான் தாஸ் மேஸ்திரிக்குக் கொடுக்கிறார். இதுவும் ஒரு மாதிரியான கட்டைப் பஞ்சாயத்துதான். அதில் சர்தார் மஜாரியிடம் பாதுகாப்பு பெறுவது, அங்கு அந்த மலைப் பிரதேச இனக் குழு முஸ்லீம்களிடையே தனித்து விடப்பட்ட பலமற்ற ஹிந்து மேஸ்திரி.\nகதவு எண் 34, ஒரு சிந்தி கதை. சக்கர் அணைக்கட்டை பார்வையிட வந்த காவலாளி அங்கு ஒரு கதவில் பிணம் ஒன்று கிடப்பதைப் பார்த்து ரொம்ப விசுவாசமாக, நல்ல பிரஜையாக போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்கிறான். அங்குள்ள போலீஸும் நம்மூர் போலீஸ் மாதிரிதான். நீண்ட வாதத்திற்குப் பின், அதைத் தள்ளிவிட முடியாது, ஓர் ஆளை அனுப்பிப் பார்த்து வரச் சொல்கிறான். பார்த்தவன் அது கதவு 35-ல் தொங்குவதால் தன் ஆணைக்குட்பட்டதல்ல என்று இன்னொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி விடுகிறான். அத்தோடு அந்தப் பிணத்தை அடுத்த கதவில் தொங்கவிடச் செய்து விடுகிறான். இதே கதை அடுத்த போலீஸ் ஸ்டேஷனிலும் நடக்கிறது. அதைப் பார்வையிடச் சென்றவன் அது கதவு என் 34-ல் தொங்குவதால் தன் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல என்று சொல்லி அந்தப் பிணத்தை மறுபடியும் கதவு 34-லிருந்து 35-க்கு எடுத்துச் சென்று தொங்கவிடுகிறான். எந்த போலீஸும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாத அந்தப் பிணம் கடைசியில் ஆற்றில் தூக்கி எறியப்பட்டு கேஸ் க்ளோஸ் செய்யப்படுகிறது விசாரணை இல்லாமலேயே. இவர்கள் நல்லவர்கள் என்று தோன்றுகிறது. நம்மூரில் புகார் சொல்லவந்தவன் கொலைகாரனாவான், எந்தக் கட்சிக்காரன் என்று விசாரித்து. அல்லது அவனிடம் பணம் பிடுங்கலாமா என்று பார்ப்பான்.\nஇஸ்மெய்ல் கௌஹரின், ‘அப்பா’ கதை புஷ்டோ கதை. பட்டாணிய இன மக்களைத்தான் நமக்குத் தெரியுமே. ஒரு நிலத் தகராறு. வெளியில் வீட்டு வாசலில் சத்தம் கேட்டதும் துப்பாக்கி எடுத்து வெளியே வருகிறார் அப்பா. மனைவி தடுக்கிறாள். இரண்டு மகன்களும் அழுகிறார்கள். வெளியேவந்த அப்பா தகராறு செய்த குல்மீரின் இரண்டு மகன்களையும் சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பி ஓடிவிடுகிறார். பின்னர் வெகுநாட்கள் கழித்து பிடிபட்டதும் அவர் கோபம் தணிந்து கிராமத்துப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்கு பணிவதாகச் சொல்கிறார். பஞ்சாயத்து பெரியவர்கள் தீர்ப்பு சொல்கிறார்கள். ஒரு லக்ஷம் பணம் நஷ்ட ஈடாகவும் அத்தோடு ஒரு பெண்ணையும், அப்பா .குல்மீருக்குக் கொடுக்கவேண்டும். கொடுப்பதற்கு அப்பாவிடம் இருக்கும் பெண் அவர் மனைவிதான். அப்பா தன் இரு மகன்களோடு தனித்து விடப்படுகிறார். குல்தீனுக்கு ஒரு லக்ஷம் பணமும் ஒரு பெண்ணும் கிடைக்கிறது. பஞ்சாயத்துத் தீர்ப்பை கிராமமே ஒத்துக்கொண்டு சமாதானமடைகிறது.\nநீறு பூத்த நெருப்பு– சரைக்கி இலாகாவைச் சேர்ந்த கதை. இன்றைக்கான கதை. என்றைக்குமான கதை. தால் பாலைவனத்தில் தலைமறைவில் வாழும் ஓர் இரகசியப் புரட்சியாளர் கூட்டம். ஹூஸ்னி தலை மறைவாக வாழ் இடம் தேடி வருகிறார். கடைசியில் விசாரித்து வந்த இடம், இரண்டு பெண்கள் தனித்து வாழும் ஒரு குடிசை. ஒரு பெண் ஆசிரியை. இன்னொருத்தி இளையவள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தகவல் எடுத்துச் செல்பவள். கதை நிகழ்வுகள் என்று ஏதும் இல்லை. அவர்கள் அங்கு வாழும் சூழ்நிலையைச் சொல்கிறது. இரண்டு பெண்கள். ரகசிய வாழ்வில். பேப்பரில் ஹூஸ்னியின் பெயர் வந்து விடுகிறது. ஹூஸ்னி அந்த இடத்தை விட்டு மறுபடியும் வெளியேறுகிறார். வழியில் தான் வழி கேட்ட பக்கிரி ஹூஸ்னியைக் கடிந்து கொள்கிறார்.\nஇப்படி இன்னும் ஒரு சில கதைகள் உள்ளன. இன்றைய பாகிஸ்தானின் காட்சிகள் சிலவற்றை நமக்குச் சித்திரித்துக் காட்டுபவை.\nஆனால் மொத்தத்தில் 500 பக்கங்களில் ஒரு பெரும்பகுதி வெறும் மாயாஜாலங்கள். நாம் அவை எதுவும் சொல்கின்றனவா என்று தலையைச் சொரிந்து கொள்ளவேண்டியதுதான். அப்படி என்ன இந்த மாயா ஜாலங்கள் இராணுவ அரசை எதிர்த்து இரகசிய மொழியில் என்ன சொல்ல முயல்கின்றன, தெரியவில்லை.\nதொகுப்பு: இந்தஜார் ஹுஸேன்.\nதமிழாக்கம்: மா. இராமலிங்கம் “எழில் முதல்வன்”\nவிலை ரூ 220\nஜம்முவின் ஹிந்து எழுச்சி - சோதிக்கப்பட்ட பொறுமையின் கதை!
அதிமுக வேட்பாளர்கள் புதிய பட்டியல்! « site4any\n« தேமுதிக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்!\nதி.மு.க – அ.தி.மு.க., நேரடியாக மோதும் தொகுதிகள்! »\nஅதிமுக வேட்பாளர்கள் புதிய பட்டியல்!\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் புதிய பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார்.\n1. ஸ்ரீரங்கம் (139) : ஜெயலலிதா\nஅதிமுக பொதுச் செயலர்\n2. பொன்னேரி (தனி) (2) : பொன். ராஜா,\nதிருவள்ளூர் மாவட்ட மாணவர் அணிச் செயலர்\n3. திருவள்ளூர் (4) : ரமணா,\nதிருவள்ளூர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்\n4. பூவிருந்தவல்லி (தனி) (5) : இரா. மணிமாறன்,\nகாஞ்சிபுரம் மேற்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்\n5. ஆவடி (6) : எஸ். அப்துல் ரஹீம்\nஆவடி நகரக் கழகச் செயலர், நகர மன்ற துணைத் தலைவர்\n6. அம்பத்தூர் (8) : எஸ். வேதாச்சலம்\nஅம்பத்தூர் நகரக் கழகச் செயலர்\n7. மாதவரம் (9) : வி. மூர்த்தி\nதிருவள்ளூர் மாவட்டக் கழகச் செயலர்\n8. திருவொற்றியூர் (10) : கே. குப்பன்,\nதிருவொற்றியூர் நகரக் கழகச் செயலர்\n9. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (11) : பி. வெற்றிவேல்,\nவட சென்னை மாவட்டக் கழகப் பொருளாளர்\n10. கொளத்தூர் (13) : சைதை சா. துரைசாமி\nதென் சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலர்\n11. வில்லிவாக்கம் (14) : பிரபாகர்,\nகழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலர்\n12. வி.க. நகர் (தனி) (15) : வ. நீலகண்டன்\nவட சென்னை மாவட்டக் கழக அவைத் தலைவர்\n13. ராயபுரம் (17) : டி. ஜெயக்குமார்,\nவட சென்னை மாவட்டக் கழகச் செயலர்\n14. துறைமுகம் (18) : பழ. கருப்பையா\nகழக கொள்கை பரப்பு இணைச் செயலர்\n15. ஆயிரம்விளக்கு (20) : திருமதி பா. வளர்மதி,\nகழக அமைப்புச் செயலர்\n16. அண்ணாநகர் (21) : திருமதி எஸ். கோகுல இந்திரா,\nகழக மகளிர் அணிச் செயலர்\n17. சைதாப்பேட்டை (23) : ஜி. செந்தமிழன், .,\nதென் சென்னை மாவட்டக் கழகச் செயலர்\n18. தியாகராயநகர் (24) : வி.பி. கலைராஜன்,\nகழக இளைஞர் பாசறை,\nஇளம் பெண்கள் பாசறை செயலர்\n19. மயிலாப்பூர் (25) : திருமதி ஆர். ராஜலட்சுமி,\nகழக இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை\n20. வேளச்சேரி (26) : எம்.கே. அசோக்,\nவேளச்சேரி பகுதிக் கழகச் செயலர்\n21. சோழிங்கநல்லூர் (27) : கே.பி. கந்தன்\nகாஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலர்\nபெருங்குடி பேரூராட்சி மன்றத் தலைவர்\n22. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) : மொளச்சூர் இரா. பெருமாள்,\nஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்\n23. பல்லாவரம் (30) : ப. தன்சிங்,\nபல்லாவரம் நகரக் கழகச் செயலர்\n24. தாம்பரம் (31) : சின்னையா,\nதாம்பரம் நகரக் கழகச் செயலர்\n25. திருப்போரூர் (33) : தண்டரை கே. மனோகரன்\nதிருப்போரூர் ஒன்றியக் கழகச் செயலர்\nஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்\n26. செய்யூர் (தனி) (34) : வி.எஸ். ராஜி,\nலத்தூர் ஒன்றியக் கழகச் செயலர்\nவேட்டக்காரகுப்பம் ஊராட்சி மன்றத் தலைவர்\n27. மதுராந்தகம் (தனி) (35) : திருமதி எஸ். கணிதா சம்பத்,\nகாஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலர்\n28. உத்திரமேரூர் (36) : வாலாஜாபாத் பா. கணேசன்\nவாலாஜாபாத் ஒன்றியக் கழகச் செயலர்\n29. காஞ்சிபுரம் (37) : வி. சோமசுந்தரம்,\nகாஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலர்\n30. அரக்கோணம் (தனி) (38) : சு. ரவி,\nவேலூர் கிழக்கு மாவட்டக் கழகப் பொருளாளர்\n31. காட்பாடி (40) : எஸ்.ஆர்.கே. அப்பு (எ) ராதாகிருஷ்ணன்,\nவேலூர் கிழக்கு மாவட்ட இளைஞர் பாசறை,\n32. ராணிப்பேட்டை (41) : அ. முஹம்மத்ஜான்,\nவேலூர் கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர்\nநலப் பிரிவுச் செயலர்\n33. ஆற்காடு (42) : ஆர். சீனிவாசன்\nஆற்காடு நகரக் கழகச் செயலர்\n34. வேலூர் (43) : டாக்டர் வி.எஸ். விஜய்,\nவேலூர் கிழக்கு மாவட்ட மருத்துவ அணிச் செயலர்\n35. வாணியம்பாடி (47) : கோவி. சம்பத்குமார்\nஆலங்காயம் ஒன்றியக் கழகச் செயலர்\n36. ஜோலார்பேட்டை (49) : கே.சி. வீரமணி,\nவேலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலர்\nஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்\n37. திருப்பத்தூர் (50) : கே.ஜி. ரமேஷ்\nகந்திலி ஒன்றியக் கழகச் செயலர்\n38. ஊத்தங்கரை (தனி) (51) : திருமதி மனோரஞ்சிதம் நாகராஜ்\nகிருஷ்ணகிரி மாவட்டக் கழக இணைச் செயலர்\n39. பர்கூர் (52) : கே.இ. கிருஷ்ணமூர்த்தி\nகிருஷ்ணகிரி மாவட்ட இலக்கிய அணிச் செயலர்\nமாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்\n40. கிருஷ்ணகிரி (53) : கே.பி. முனுசாமி,\nகிருஷ்ணகிரி மாவட்டக் கழகச் செயலர்\n41. பாலக்கோடு (57) : கே.பி. அன்பழகன்,\nதருமபுரி மாவட்டக் கழகச் செயலர்\n42. பாப்பிரெட்டிப்பட்டி (60) : பி. பழனியப்பன்,\nதருமபுரி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்\n43. திருவண்ணாமலை (63) : எஸ். இராமச்சந்திரன்\nதிருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழக அவைத் தலைவர்\n44. கீழ்பென்னாத்தூர் (64) : ஏ.கே. அரங்கநாதன்\nதுரிஞ்சாபுரம் ஒன்றியக் கழகச் செயலர்\n45. கலசபாக்கம் (65) : அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ,\nதிருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலர்\n46. போளூர் (66) : திருமதி எல். ஜெயசுதா லட்சுமிகாந்தன்,\nபோளூர் ஒன்றிய மகளிர் அணிச் செயலர்\n47. செய்யார் (68) : முக்கூர் என். சுப்பிரமணியன்,\nதிருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழகச் செயலர்\n48. வந்தவாசி (தனி) (69) : செய்யாமூர் வே. குணசீலன்\nஅனக்காவூர் ஒன்றியக் கழகச் செயலர்\n49. மைலம் (71) : கே.பி. நாகராஜன்,\nமைலம் ஒன்றியக் கழகச் செயலர்\n50. திண்டிவனம் (தனி) (72) : டாக்டர் த. அரிதாஸ்,\nவிழுப்புரம் வடக்கு மாவட்ட மருத்துவ அணி இணைச் செயலர்\n51. வானூர் (தனி) (73) : ஐ. ஜானகிராமன்,\nவிழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர்\n52. விழுப்புரம் (74) : சி.வி. சண்முகம்,\nவிழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலர்\n53. உளுந்தூர்பேட்டை (77) : இரா. குமரகுரு\nவிழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலர்\n54. சங்கராபுரம் (79) : ப. மோகன்,\nவிழுப்புரம் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலர்\n55. கள்ளக்குறிச்சி (தனி) (80) : திருமதி பா. அழகுவேல் பாபு,\nவிழுப்புரம் தெற்கு மாவட்ட மகளிர் அணித் தலைவர்\nகள்ளக்குறிச்சி நகர மன்றத் தலைவர்\n56. ஆத்தூர் (தனி) (82) : எஸ். மாதேஸ்வரன்,\nசேலம் புறநகர் கிழக்கு மாவட்ட\nஎம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலர்\n57. ஏற்காடு (ளுகூ) (83) : செ. பெருமாள்\nஏற்காடு சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலர்\n58. ஓமலூர் (84) : பல்பாக்கி சி. கிருஷ்ணன்\nசேலம் புறநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலர்\n59. எடப்பாடி (86) : எடப்பாடி கே. பழனிசாமி,\nசேலம் புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலர்\n60. சங்ககிரி (87) : திருமதி விஜயலட்சுமி பழனிச்சாமி\n61. சேலம் (மேற்கு) (88) : ஜி. வெங்கடாஜலம், எம்.சி.,\nசேலம் மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்\n62. சேலம் (தெற்கு) (90) : எம்.கே. செல்வராஜ்,\nசேலம் மாநகர் மாவட்டக் கழகச் செயலர்\n63. வீரபாண்டி (91) : எஸ்.கே. செல்வம்\nசேலம் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலர்\n64. ராசிபுரம் (தனி) (92) : ப. தனபால்,\nநாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர்\n65. நாமக்கல் (94) : கே.பி.பி. பாஸ்கர்,\nநாமக்கல் நகரக் கழகச் செயலர்\n66. குமாரபாளையம் (97) : பி. தங்கமணி,\nநாமக்கல் மாவட்டக் கழகச் செயலர்\n67. ஈரோடு (மேற்கு) (99) : கே.வி. ராமலிங்கம்,\nஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலர்\n68. மொடக்குறிச்சி (100) : ஆர்.என். கிட்டுசாமி\nஈரோடு மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர்\n69. தாராபுரம் (தனி) (101) : கே. பொன்னுசாமி,\nஈரோடு மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்\n70. காங்கேயம் (102) : என்.எஸ்.என். நடராஜ்,\nகாங்கேயம் ஒன்றியக் கழகச் செயலர்\n71. பெருந்துறை (103) : தோப்பு என்.டி. வெங்கடாச்சலம்,\nஈரோடு புறநகர் மாவட்டக் கழகச் செயலர்\n72. பவானி (104) : பி.ஜி. நாராயணன்,\nகழகப் பொதுக்குழு உறுப்பினர், ஈரோடு புறநகர் மாவட்டம்\n73. அந்தியூர் (105) : எஸ்.எஸ். ரமணீதரன்,\nஅந்தியூர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலர்\n74. கோபிசெட்டிப்பாளையம் (106) : கே.ஏ. செங்கோட்டையன்\nகழக தலைமை நிலையச் செயலர்\n75. உதகமண்டலம் (108) : புத்தி சந்திரன்,\nகுந்தா ஒன்றியக் கழகச் செயலர்\n76. மேட்டுப்பாளையம் (111) : ஓ.கே. சின்னராஜ்\nகோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர்\n77. அவினாசி (தனி) (112) : ஏ.ஏ. கருப்புசாமி\nஅவினாசி ஒன்றிய மீனவர் பிரிவுச் செயலர்\n78. திருப்பூர் (வடக்கு) (113) : எம்.எஸ்.எம். ஆனந்தன்\nதிருப்பூர் நகரக் கழகச் செயலர்\n79. பல்லடம் (115) : பல்லடம் கே.பி. பரமசிவம்\nபல்லடம் ஒன்றியக் கழகச் செயலர்\n80. கவுண்டம்பாளையம் (117) : வி.சி. ஆறுக்குட்டி\nசர்க்கார்சாமக்குளம் ஒன்றியக் கழகச் செயலர்\nவிளாங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர்\n81. கோயம்புத்தூர் (வடக்கு) (118) : தா. மலரவன்\nகோவை மாநகர் மாவட்டக் கழகச் செயலர்\n82. தொண்டாமுத்தூர் (119) : எஸ்.பி. வேலுமணி,\nகோவை புறநகர் மாவட்டக் கழகச் செயலர்\n83. கோயம்புத்தூர் (தெற்கு) (120) : சேலஞ்சர் துரை (எ) ஆர். துரைசாமி,\nகோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர்\n84. சிங்காநல்லூர் (121) : ஆர். சின்னசாமி\nஅண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலர்\n85. கிணத்துக்கடவு (122) : செ. தாமோதரன்\nபொள்ளாச்சி வடக்கு ஒன்றியக் கழகச் செயலர்\n86. பொள்ளாச்சி (123) : எம்.கே. முத்துகருப்பண்ணசாமி,\nகிணத்துக்கடவு ஒன்றியக் கழகச் செயலர்\nமெட்டுபாவி ஊராட்சி மன்றத் தலைவர்\n87. உடுமலைப்பேட்டை (125) : பொள்ளாச்சி ஏ. ஜெயராமன்\nகழக தேர்தல் பிரிவுச் செயலர்\n88. மடத்துக்குளம் (126) : சி. சண்முகவேலு,\nதிருப்பூர் மாவட்டக் கழகச் செயலர்\n89. பழனி (127) : கே.எஸ்.என். வேணுகோபாலு,\nதிண்டுக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர்\n90. ஒட்டன்சத்திரம் (128) : பி. பாலசுப்பிரமணி\nஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலர்\n91. நத்தம் (131) : இரா. விசுவநாதன்,\nதிண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலர்\n92. வேடசந்தூர் (133) : ச. பழனிச்சாமி,\nவேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலர்\n93. அரவக்குறிச்சி (134) : வி. செந்தில்நாதன்,\nகரூர் மாவட்ட இளைஞர் பாசறை,\n94. கரூர் (135) : வி. செந்தில்பாலாஜி,\nகரூர் மாவட்டக் கழகச் செயலர்\n95. கிருஷ்ணராயபுரம் (தனி) (136) : எஸ். காமராஜ்,\nகரூர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்\n96. குளித்தலை (137) : ஹ. பாப்பாசுந்தரம்\nகரூர் மாவட்டக் கழக அவைத் தலைவர்\n97. மணப்பாறை (138) : ஆர். சந்திரசேகர்\nமருங்காபுரி ஒன்றியக் கழகச் செயலர்\n98. திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140) : என். மரியம்பிச்சை,\nதிருச்சி மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலர்\n99. திருச்சிராப்பள்ளி கிழக்கு (141) : ஆர். மனோகரன்,\nதிருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலர்\n100. மணச்சநல்லூர் (144) : பூனாட்சி\nதிருச்சி புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர்\n101. முசிறி (145) : என்.ஆர். சிவபதி,\nகழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி முன்னாள் செயலர்\n102. துறையூர் (தனி) (146) : திருமதி கூ. இந்திராகாந்தி,\nதிருச்சி புறநகர் மாவட்டக் கழக இணைச் செயலர்\n103. பெரம்பலூர் (தனி) (147) : இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்,\nபெரம்பலூர் மாவட்ட மாணவர் அணிச் செயலர்\n104. அரியலூர் (149) : துரை. மணிவேல்\nபெரம்பலூர் மாவட்டக் கழக இணைச் செயலர்\n105. ஜெயங்கொண்டம் (150) : பா. இளவழகன்,\nபெரம்பலூர் மாவட்டக் கழகச் செயலர்\n106. நெய்வேலி (153) : எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன்,\nநெய்வேலி சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலர்\n107. கடலூர் (155) : எம்.சி. சம்பத்,\nகடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலர்\n108. குறிஞ்சிப்பாடி (156) : சொரத்தூர் இரா. இராஜேந்திரன்,\nஅனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலர்\n109. புவனகிரி (157) : திருமதி செல்வி ராமஜெயம்\nகடலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலர்\n110. காட்டுமன்னார் கோயில் (தனி) (159)\n: என். முருகுமாறன்,\nகடலூர் மேற்கு மாவட்டக் கழக துணைச் செயலர்\n111. சீர்காழி (தனி) (160) : திருமதி ம. சக்தி,\nநாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணிச் செயலர்\nகொள்ளிடம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்\n112. பூம்புகார் (162) : எஸ். பவுன்ராஜ்\nசெம்பனார்கோவில் தெற்கு ஒன்றியக் கழகச் செயலர்\n113. நாகப்பட்டினம் (163) : கே.ஏ. ஜெயபால்,\nநாகப்பட்டினம் மாவட்டக் கழகப் பொருளாளர்\n114. வேதாரண்யம் (165) : என்.வி. காமராஜ்\nகழகப் பொதுக்குழு உறுப்பினர், நாகப்பட்டினம் மாவட்டம்\n115. மன்னார்குடி (167) : சிவா. ராஜமாணிக்கம், ,\nமன்னார்குடி நகர மன்ற முன்னாள் தலைவர்\n116. திருவாரூர் (168) : குடவாசல் எம். இராசேந்திரன்\nதிருவாரூர் மாவட்டக் கழக முன்னாள் செயலர்\n117. நன்னிலம் (169) : ஆர். காமராஜ்,\nதிருவாரூர் மாவட்டக் கழகச் செயலர்\n118. திருவிடைமருதூர் (தனி) (170) : கூ. பாண்டியராஜன்\nதிருநறையூர் ஊராட்சிக் கழகச் செயலர்\n119. கும்பகோணம் (171) : இராம. இராமநாதன், ஆ.ஊடிஅ.,\nமுன்னாள் சட்டமன்ற உறுப்பினர்\n120. பாபநாசம் (172) : இரா. துரைக்கண்ணு,\nபாபநாசம் ஒன்றியக் கழகச் செயலர்\n121. திருவையாறு (173) : எம். ரெத்தினசாமி\nபூதலூர் ஒன்றியக் கழகச் செயலர்\n122. தஞ்சாவூர் (174) : எம். ரெங்கசாமி,\nதஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலர்\n123. ஒரத்தநாடு (175) : ஆர். வைத்திலிங்கம்,\nதஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலர்\n124. கந்தர்வகோட்டை (தனி) (178) : ந. சுப்ரமணியன்,\nகுளத்தூர் ஊராட்சிக் கழகச் செயலர்\n125. விராலிமலை (179) : டாக்டர் சி. விஜயபாஸ்கர்,\nகழக மருத்துவ அணி துணைச் செயலர்\n126. திருமயம் (181) : பி.கே. வைரமுத்து\nபுதுக்கோட்டை மாவட்டக் கழக முன்னாள் செயலர்\n127. ஆலங்குடி (182) : கு.ப. கிருஷ்ணன்,\n128. அறந்தாங்கி (183) : மு. ராஜநாயகம்\nசிறுமருதூர் கிளைக் கழகச் செயலர்\nஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்\n129. காரைக்குடி (184) : சோழன் சித. பழனிச்சாமி\nசிவகங்கை மாவட்டக் கழகச் செயலர்\n130. திருப்பத்தூர் (185) : ஆர்.எஸ். ராஜகண்ணப்பன்,\n131. மானாமதுரை (தனி) (187) : ம. குணசேகரன்,\nமானாமதுரை ஒன்றியக் கழகச் செயலர்\n132. மேலூர் (188) : ஆர். சாமி\nகழகப் பொதுக்குழு உறுப்பினர், மதுரை புறநகர் மாவட்டம்\n133. மதுரை கிழக்கு (189) : கே. தமிழரசன்\nமதுரை புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்\n134. சோழவந்தான் (தனி) (190) : எம்.வி. கருப்பையா,\nஅலங்காநல்லூர் ஒன்றிய மீனவர் பிரிவுச் செயலர்\n135. மதுரை வடக்கு (191) : ஏ.கே. போஸ்,\nமதுரை மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலர்\n136. மதுரை மேற்கு (194) : செல்லூர் கே. ராஜூ,\nமதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலர்\n137. திருமங்கலம் (196) : ம. முத்துராமலிங்கம்\nமதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலர்\n138. ஆண்டிபட்டி (198) : தங்க தமிழ்செல்வன்,\nதேனி மாவட்டக் கழகச் செயலர்\n139. போடிநாயக்கனூர் (200) : ஓ. பன்னீர்செல்வம்\n140. ராஜபாளையம் (202) : கே. கோபால்சாமி,\nவிருதுநகர் மாவட்ட இலக்கிய அணிச் செயலர்\n141. சாத்தூர் (204) : சு.க்ஷ. உதயகுமார்,\nகழக மாணவர் அணிச் செயலர்\n142. சிவகாசி (205) : மு.கூ. ராஜேந்திர பாலாஜி\nவிருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலர்\nதிருத்தங்கல் நகர மன்ற துணைத் தலைவர்\n143. அருப்புக்கோட்டை (207) : வைகைச்செல்வன்,\nகழக இலக்கிய அணிச் செயலர்\n144. பரமக்குடி (தனி) (209) : டாக்டர் எஸ். சுந்தர்ராஜ்,\nராமநாதபுரம் மாவட்டக் கழகப் பொருளாளர்\n145. முதுகுளத்தூர் (212) : மு. முருகன்\nமுதுகுளத்தூர் பேரூராட்சிக் கழகச் செயலர்\n146. விளாத்திகுளம் (213) : ஜி.வி. மார்க்கண்டேயன், க்ஷ.ஹ.,க்ஷ.டு.,\nவிளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலர்\n147. தூத்துக்குடி (214) : ஏ. பால்,\nதூத்துக்குடி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலர்\n148. திருச்செந்தூர் (215) : பி.ஆர். மனோகரன்,\nகழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலர்\n149. ஸ்ரீவைகுண்டம் (216) : எஸ்.பி. சண்முகநாதன்\nதூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலர்\n150. கோவில்பட்டி (218) : கடம்பூர் செ. ராஜு\n151. சங்கரன்கோவில் (தனி) (219) : சொ. கருப்பசாமி\n152. வாசுதேவநல்லூர் (தனி) (220) : டாக்டர் எஸ். துரையப்பா,\nதிருநெல்வேலி புறநகர் மாவட்ட மருத்துவ அணிச் செயலர்\nபுளியங்குடி நகர மன்றத் தலைவர்\n153. கடையநல்லூர் (221) : பி. செந்தூர்பாண்டியன்\nதிருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலர்\n154. ஆலங்குளம் (223) : பி.ஜி. ராஜேந்திரன்,\nதிருநெல்வேலி புறநகர் மாவட்ட\nஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்\n155. திருநெல்வேலி (224) : நயினார் நாகேந்திரன்,\nகழக ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்\n156. அம்பாசமுத்திரம் (225) : இசக்கி சுப்பையா,\nதிருநெல்வேலி புறநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலர்\n157. கன்னியாகுமரி (229) : மு.கூ. பச்சைமால்\nகன்னியாகுமரி மாவட்டக் கழகச் செயலர்\n158. நாகர்கோவில் (230) : நாஞ்சில் ஏ. முருகேசன்\nகன்னியாகுமரி மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலர்\n159. குளச்சல் (231) : பி. லாரன்ஸ்\nகன்னியாகுமரி மாவட்ட மீனவர் பிரிவு இணைச் செயலர்\nகுருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்\n160. கிள்ளியூர் (234) : ஆர். ஜார்ஜ்,\nகிள்ளியூர் ஒன்றியக் கழகச் செயலர்\nThis entry was posted on March 22, 2011 at 9:09 AM\tand is filed under Hot News.
இயற்கை எழிலும் மிரட்டல் த்ரில்லும் கலந்த பரம்பிக்குளம் சுற்றுலா உங்களை வரவேற்கிறது..\nMonday, July 29, 2019 06:30 PM\nஇயற்கை எழிலும் மிரட்டல் த்ரில்லும் கலந்த சுற்றுலா உங்கள் சாய்ஸா..? பரம்பிக்குளம் உங்களை வரவேற்கிறது. பொள்ளாச்சியில் இருந்து 39 கி.மீ தொலைவில், கேரள எல்லையில் பரவிப் படர்ந்து இருக்கிறது இந்த அழகிய பசுமைப் பிரதேசம்.\nஆணைப்பாடி என்ற இடத்தில் அமைந்து இருக்கும் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயத்துக்கு, பேருந்து வசதி உண்டு. காடு முழுமைக்கும் ஏசி போட்டது போல, ஆண்டு முழுவதும் குளுகுளு சூழல். மது, சிகரெட், பிளாஸ்டிக் பை என சுற்றுச்சுழலைப் பாதிக்கும் பொருட்களுக்கு இங்கு தடா!\nவனத் துறை அலுவலகத்தினரே சுற்றுலா வழிகாட்டியாக நம்மை வழிநடத்து கிறார்கள். காட்டுக்குள் கூடாரக் குடில் வீடுகள் உண்டு. உள்ளே குளியல் அறை, படுக்கை அறை, கட்டில், பீரோ வசதிகள் உண்டு. விடுமுறை நாட்களில் இரண்டு நபர்கள் அங்கு தங்குவதற்கு 4,000 கட்டணம். மற்ற நாட்களில் 3,500. மூன்று வேளை உணவு, தேநீர், படகுச் சவாரி அனைத்தும் அந்தக் கட்டணத்தில் அடக்கம்.\nஎன்ன... கிளம்பிட்டீங்களா பரம்பிக்குளத்துக்கு!
iMove முற்றிலும் பயனற்றதா? அல்லது ஓர் இன்சைடர் உதவிக்குறிப்பா?\niMove : நெட்வொர்க்கில் உள்ள மூட்டுகளை மேம்படுத்துவதற்கு வேறு ஏதாவது பொருத்தமான உதவி இருக்கிறதா?\n4.8/10 0:19 Emin Weiss\niMove அதிசயங்களைச் செய்கிறது என்று நீங்கள் கிட்டத்தட்ட நினைக்கலாம். குறைந்தபட்சம், இந்த அனுமானம் வருகிறது, இந்த தயாரிப்பைப் பயன்படுத்தி பல நேர்மறையான சான்றுகளை ஒருவர் கவனிக்கிறார், அவை சமீபத்தில் ஆர்வமுள்ள பயனர்களால் பகிரப்படுகின்றன.\nநூற்றுக்கணக்கான பயனர் மதிப்புரைகளை இணையத்தில் காணலாம், எனவே iMove மிகவும் துணைபுரிகிறது என்ற எண்ணத்தை நீங்கள் விரைவில் பெறுவீர்கள். எனவே நீங்கள் கண்மூடித்தனமாக நம்ப வேண்டியதில்லை, பயன்பாடு, அளவு மற்றும் பக்க விளைவுகள் ஆகியவற்றில் கருத்தில் கொள்ள வேண்டிய அனைத்தையும் பின்வரும் அனுபவ அறிக்கையில் காண்பீர்கள்.\niMove பற்றி நீங்கள் என்ன புரிந்து கொள்ள iMove?\nமூட்டு வலியைப் iMove உற்பத்தி நிறுவனம் iMove. உங்கள் நோக்கங்கள் என்ன என்பதைப் பொறுத்து, தயாரிப்பு நீண்ட அல்லது எப்போதாவது பயன்படுத்தப்படும். மிகவும் திருப்திகரமான இறுதி பயனர்கள் தங்கள் பெரிய முன்னேற்றத்தைப் பற்றி iMove உடன் iMove. நீங்கள் அதை வெப் ஷாப்பில் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?\niMove உற்பத்தியாளர் நன்கு அறியப்பட்டவர் மற்றும் நீண்ட காலமாக அதன் தயாரிப்புகளை ஆன்லைனில் விற்பனை செய்து வருகிறார் - தயாரிப்பாளர்கள் பல ஆண்டு அனுபவத்தை குவிக்க முடிந்தது. நீங்கள் மிகச்சிறந்த iMove என்று iMove அதன் இயல்பான இயல்பு.\niMove டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது அசாதாரணமானது. அனைத்து துன்பங்களுக்கும் ஒரு பீதி என்று போட்டி வழிகள் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன. இது மிகப்பெரிய சிரமம் மற்றும் தர்க்கரீதியாக அரிதாகவே செயல்படுகிறது. இதன் விரும்பத்தகாத விளைவு என்னவென்றால், முக்கிய பொருட்களின் அளவு மிகக் குறைவாகவே உள்ளது, இதனால் மொத்த நேர விரயமும் பயன்படுத்தப்படுகிறது.\nகூடுதலாக, iMove உற்பத்தியாளர் iMove வழியாக தயாரிப்புகளை iMove. எனவே இது மிகவும் மலிவானது.\niMove எந்த பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன?\niMove மூலப்பொருட்களை நீங்கள் iMove, இந்த பிரதிநிதிகள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கிறார்கள்:\nமொத்தத்தில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொருட்களின் வகை மட்டுமே விளைவுக்கு தீர்க்கமானதாக இருக்காது, ஆனால் ஒவ்வொரு அளவின் அளவும். இது Zotrim விட சிறந்தது.\nஅதிர்ஷ்டவசமாக, iMove உள்ள நுகர்வோர் iMove பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக எதிர்: இந்த மற்றும் அந்த கூறுகள் ஆய்வுகளில் மிகவும் சக்திவாய்ந்தவை.\niMove இன் அனைத்து நிலையான நன்மைகளும் வெளிப்படையானவை:\nமூட்டுகளின் தேர்வுமுறைக்கான தீர்வு குறித்த மருந்தாளர் மற்றும் சங்கடமான உரையாடலுக்கான வழியை நீங்கள் சேமிக்கிறீர்கள்\niMove உதவும் கருவிகள் பெரும்பாலும் ஒரு மருத்துவரின் பரிந்துரை மூலம் தனியாக ஆர்டர் செய்யப்பட வேண்டும் - iMove எளிமையாகவும் மிகவும் மலிவாகவும் iMove வாங்க முடியும்\nதொகுப்பு மற்றும் முகவரி எளிய மற்றும் அர்த்தமற்றது - ஏனென்றால் நீங்கள் ஆன்லைனில் வாங்குகிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக ஆர்டர் செய்கிறீர்கள்\niMove எவ்வாறு iMove\nமருத்துவ ஆய்வுகள் மற்றும் பொருட்கள் அல்லது செயலில் உள்ள பொருட்கள் பற்றிய தகவல்களைப் படிப்பதன் மூலம் iMove செயல்படும் வடிவத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.\nஇந்த பணியில் நாங்கள் ஏற்கனவே பணியாற்றியுள்ளோம். பயனர் அனுபவத்தை விரிவாக ஆராய்வதற்கு முன் உற்பத்தியாளரின் தகவல்களைப் பார்ப்போம்.\nஇந்த வழியில், iMove இன் இந்த மதிப்புமிக்க பயனர்களிடமிருந்து குறைந்தபட்சம் இந்த கருத்துக்கள்\nபின்வரும் மக்கள் குழுக்கள் iMove ஐப் பயன்படுத்தக்கூடாது\nஇந்த தயாரிப்பை நம்பகத்தன்மையுடன் பயன்படுத்த போதுமான அளவு தீர்மானிக்க முடியுமா என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா? இந்த விஷயத்தில் நான் ஒரு முயற்சிக்கு எதிராக அறிவுறுத்துகிறேன். அடிப்படையில், நீங்கள் உங்கள் சொந்த உடல் ஆரோக்கியத்தில் முதலீடு செய்ய தயாராக இருக்க மாட்டீர்கள், மேலும் உங்கள் கூட்டு செயல்பாட்டை அதிகரித்தால், நீங்கள் உண்மையில் அலட்சியமாக இருக்கிறீர்களா? இந்த வழக்கில், நீங்கள் பயன்பாட்டை புறக்கணிக்க விரும்புகிறீர்கள். நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இல்லாவிட்டால் , நீங்கள் நிச்சயமாக முறையைப் பயன்படுத்தக்கூடாது.\nஇந்த எந்த புள்ளிகளிலும் நீங்கள் உங்களைக் கண்டுபிடிக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள், உங்கள் பிரச்சினை மற்றும் இந்த காரியத்தைச் செய்ய நிறைய. உங்கள் வணிகத்தை தீர்க்க வேண்டிய நேரம் இது!\nநான் உறுதியாக நம்புகிறேன்: iMove பெரும்பாலும் ஒரு பெரிய ஆதரவாக இருக்கலாம்!\nபாதுகாப்பான இயற்கை பொருட்களின் இந்த கலவையின் காரணமாக, ஒரு மருந்து இல்லாமல் தயாரிப்பு வாங்க முடியும்.\nபயனர்களின் மதிப்புரைகளை நீங்கள் விரிவாகப் பார்த்தால், அவர்கள் எந்த விரும்பத்தகாத சூழ்நிலைகளையும் அனுபவிக்கவில்லை என்பதை நீங்கள் கவனிக்கிறீர்கள்.\nதயாரிப்பு மிகப்பெரிய விளைவுகளைக் கொண்டிருப்பதால், அதன் பயன்பாட்டிற்கான பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டை நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்தால் மட்டுமே இந்த உத்தரவாதம் போதுமானது.\nஎனவே, நீங்கள் தயாரிப்பாளர்களை நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் - எங்கள் சேவையைப் பின்பற்றுங்கள் - சாயல்களைத் தடுக்க (போலிகள்). அத்தகைய கள்ள தயாரிப்பு, முதல் பார்வையில் குறைந்த விலை உங்களைத் தூண்டினாலும், பெரும்பாலும் சிறிய விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் நிச்சயமற்ற விளைவுகளுடன் மோசமான நிலையில் இருக்கலாம்.\nநிச்சயமாக, கருத்தில் கொள்ள வேண்டிய அல்லது விவாதிக்க வேண்டிய பொருளின் பயன்பாட்டின் எளிமை குறித்து எந்த சந்தேகமும் அக்கறையும் இல்லை.\nதயாரிப்பு யாரும் கவனிக்காமல் எப்போதும் மொபைல்.\nதயாரிப்பை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் திருப்திகரமான முடிவுகளை அடைவது என்பது கூடுதல் ஆவணங்களின் உதவியுடன் விளக்கப்பட்டுள்ளது - எனவே அதிக முயற்சி இல்லாமல் உங்கள் இலக்கை அடைவீர்கள்\nடஜன் கணக்கான பயனர்கள் தாங்கள் ஒரு மாற்றத்தை முதன்முதலில் பயன்படுத்தியதாக பதிவு செய்ததாகக் கூறுகிறார்கள். ஒப்பீட்டளவில் குறுகிய நேரத்திற்குப் பிறகு சுவாரஸ்யமான அனுபவங்களை பதிவு செய்ய முடியும் என்பது அசாதாரணமானது அல்ல.\nஆய்வுகளில், iMove பெரும்பாலும் நுகர்வோரால் கடுமையான விளைவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது, அது குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். நிரந்தர பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன, இதனால் பயன்பாடு நிறுத்தப்பட்ட பின்னரும் கூட, காலத்தின் விளைவுகள்.\nநுகர்வோர் தயாரிப்பைப் பற்றி மிகவும் ஆர்வமாக உள்ளனர், சில வருடங்களுக்குப் பிறகும் ஒரு நேரத்தில் சில வாரங்களுக்கு அதை எடுத்துக்கொள்கிறார்கள், அதனால் பேச.\nஆகவே, ஒற்றை அறிக்கைகளைத் தவிர, விரைவான முடிவுகளுக்கு சாட்சியமளிக்கும், தயாரிப்பை சிறிது நேரம் பயன்படுத்துவதற்கும், விடாமுயற்சியுடன் பழகுவதற்கும் இது நியாயமானதே. மேலும் தகவலுக்கு எங்கள் வாடிக்கையாளர் சேவையை கவனத்தில் கொள்க.\niMove போன்ற ஒரு கட்டுரை அதன் நோக்கத்திற்கு iMove என்பதை அங்கீகரிக்க, வலைத்தளங்களில் திருப்தியடைந்த பயனர்களின் அனுபவங்களையும் கருத்துகளையும் நீங்கள் பார்க்கலாம். Bioslim ஒப்பிடும்போது அது குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் மிகக் குறைவான அறிவியல் அறிக்கைகள் உள்ளன, ஏனெனில் வழக்கமாக அவை பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.\niMove பற்றிய iMove பெற, மருத்துவ ஆய்வுகள், மதிப்புரைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சாதனைகள் ஆகியவற்றை நாங்கள் உள்ளடக்குகிறோம். எனவே நம்பிக்கைக்குரிய சாத்தியக்கூறுகளைப் பார்ப்போம்:\niMove சிறந்த முடிவுகளைக் கொண்டுள்ளது\niMove அனுபவங்கள் சுவாரஸ்யமாக முழுமையானவை. காப்ஸ்யூல்கள், தைலம் மற்றும் மாறுபட்ட தீர்வுகள் போன்ற வடிவங்களில் இந்த பொருட்களுக்கான தற்போதைய சந்தையை நாங்கள் சில காலமாக பின்பற்றி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆலோசனைகளைப் பெற்றுள்ளோம், மேலும் நம்மீது சோதனை செய்துள்ளோம். iMove, iMove போன்ற தெளிவற்ற ஆய்வுகள் அரிதானவை.\nபோதைப்பொருளை சோதனைக்கு உட்படுத்திய கிட்டத்தட்ட அனைவரின் முன்னேற்றமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மைதான்:\nஎங்கள் முடிவு - முயற்சி செய்வதற்கான வழிமுறைகள் கட்டாயமாகும்!\niMove போன்ற சலுகை நம்பகமானதாக இருக்கும் சந்தர்ப்பங்களில், இது விரைவில் சந்தையிலிருந்து iMove, ஏனெனில் இயற்கை முகவர்கள் சில உற்பத்தியாளர்களால் பயன்படுத்த தயங்குகிறார்கள். எனவே வாய்ப்பை இழப்பதற்கு முன்பு நீங்கள் சரியான நேரத்தில் வேலைநிறுத்தம் செய்ய வேண்டும்.\nஎங்கள் பார்வை: எங்கள் இணைக்கப்பட்ட மூலத்திலிருந்து iMove ஐ iMove மற்றும் iMove ஐ மலிவாகவும் சட்டபூர்வமாகவும் iMove முடியும் வரை அதன் செயல்திறனை நீங்களே iMove.\nஇந்த செயல்முறையை முழுமையாக முடிக்க உங்களுக்கு போதுமான பொறுமை இல்லை என்றால், அதை கூட முயற்சி செய்யாதீர்கள்.இங்கு, என் கருத்துப்படி, பெரிய படைப்புகள் வலிமையுடன் செய்யப்படுவதில்லை, ஆனால் விடாமுயற்சியுடன். இருப்பினும், உங்கள் நிலைமை உங்களைத் தூண்டுவதற்கான வாய்ப்புகள் நல்லது, இந்த தயாரிப்புக்கு உங்கள் திட்ட நன்றியை உணர அனுமதிக்கிறது.\niMove வாங்க முக்கிய பரிந்துரை\nநான் அடிக்கடி அதை வலியுறுத்த முடியாது: நான் சுட்டிக்காட்டிய வழங்குநரின் மூலம் எப்போதும் தயாரிப்பு வாங்கவும். iMove காரணமாக iMove ஐ iMove என் ஆலோசனையின் பின்னர் என்னுடைய ஒரு சக ஊழியர் நினைத்தார், ஆனால் ஒரு முறை நீங்கள் முரட்டு விற்பனையாளர்களுடன் கூட உண்மையான வழிமுறையைப் பெறுவீர்கள். இதன் விளைவாக வெறுப்பாக இருந்தது.\nகட்டுரையை வாங்கும் போது பயனற்ற கலவைகள், ஆபத்தான கூறுகள் அல்லது அதிக விலை நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தியாளர் விலைகளைத் தவிர்ப்பதற்காக, எங்கள் ஆதாரங்களுடனான இந்த சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தற்போதைய தயாரிப்பு வரம்பை நாங்கள் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.ஈபே அல்லது அமேசான் போன்ற கடைகளில் இருந்து இதுபோன்ற தயாரிப்புகளை நீங்கள் வாங்க விரும்பினால், எங்கள் அனுபவ அறிக்கைகளில் நம்பகத்தன்மையும் விவேகமும் எந்த சூழ்நிலையிலும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.\nஎனவே இந்த கடைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே எங்கள் பரிந்துரை. உங்கள் மருந்தாளருக்காக நீங்கள் அதை முயற்சி செய்ய வேண்டியதில்லை. iMove உற்பத்தியாளரின் இணைய iMove ஆபரேட்டர் ஒரு கவலையற்ற, தெளிவற்ற மற்றும் நம்பகமான செயல்முறையை வழங்குகிறது.\niMove ஐ முயற்சிக்க நீங்கள் iMove, எந்த தொகையை வாங்குவது என்பதுதான் கேள்வி. நீங்கள் ஒரு பெரிய எண்ணை வாங்கினால், தொகுதி தள்ளுபடியைப் பயன்படுத்த உங்களுக்கு விருப்பம் உள்ளது, மேலும் நீங்கள் சிறிது நேரம் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. தயாரிப்பு நிரப்பப்படுவதற்கு காத்திருக்கும்போது சில முன்னேற்றங்களை குறைப்பது முற்றிலும் வெறுப்பாக இருக்கிறது.
காங்கிரசின் தோல்வி நாட்டின் வெற்றி | Dinamalar\nபதிவு செய்த நாள்: மே 17,2014 23:37\nசமீப காலமாக, அமைச்சர்கள் மட்டுமே வெற்றி பெற்று வந்த லோக்சபா தேர்தலில், இப்போது தான் மக்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். எப்படிப் பார்த்தாலும், இது தான் உண்மை.\nஐ.மு.கூ., ஆட்சி என்று சொல்லப்பட்ட, சோனியாவின் சர்வாதிகார ஆட்சியில் ஊழல், விலைவாசி உயர்வு, ஒட்டாத தலைவர்கள் என்று நொந்து போயிருந்தனர் மக்கள்.உழைப்பு, எளிமை, தன்னலமின்மை, ஊழலற்ற ஆட்சி என்ற தகுதிகளுக்காகவே, மோடி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கட்சி எல்லைகளைத் தாண்டி விஸ்வரூபம் எடுத்திருந்தது, இவரது ஆளுமை. அதனால்தான், மக்கள் இவருக்குத் தனிப் பெரும்பான்மை அந்தஸ்தைத் தந்திருக்கின்றனர்.\nகூட்டணி என்றால், இவரும் தவித்துப் போவார். நாடும் தடுமாறும்.தேர்தல் பிரசாரத்தின் போது, மோடியை, 'மதவாதி' என்று கூறினர் எதிர்க்கட்சித் தலைவர்கள். 'பெண்டாட்டியுடன் வாழத் தெரியாதவர், நாட்டைக் காப்பாற்றுவாரா?' என்று கேட்டனர் காங்கிரசார். வேதனை என்னவெனில், அந்தக் கட்சியைச் சேர்ந்த, 67 வயதுத் தலைவர் விரைவில் விவாகரத்தாக இருக்கும் ஒரு நடிகையை மணக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். தவறான தொடர்பினால், தான் பெற்ற மகன் வழக்காடி வென்ற பின், அந்த மகனைப் பெற்றுதந்த பெண்மணியை இரண்டு நாட்களுக்கு முன் மணந்தார். அதே கட்சியின், 89 வயதுத் தலைவர்.நாற்பது ஆண்டு காலமாக, கல்யாணம் செய்தும் பிரம்மசாரியாக இருந்தபடி அரசியல், சமூக பணியைத் தன்னலமில்லாமல், தனிப்பட்ட வாழ்க்கையில் இடம் கொடாமல் செய்துவந்துள்ள நரேந்திர மோடியை, இவர்கள் என்னென்னவெல்லாமோ சொன்னார்கள். மோடி எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, புயலென நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து, கட்சி வெற்றி பெறப் பாடுபட்டார். சொந்த மாநிலத்தில் வதோதரா தொகுதியில், 5.70 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். சுதந்திர இந்தியாவில், இதுவரை இல்லாத சாதனை இது.தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னதாகவே, வெற்றி பற்றி பா.ஜ.,வினர், மிகுந்த நம்பிக்கையுடன் இருந்து வந்தனர். அத்துடன் தங்கள் ஆசான் போன்ற நிலையில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களைச் சந்தித்தனர். அதே நேரம் தோல்வி பயம் வந்துவிட்ட காங்கிரசுக்கு, ஓட்டு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே, தேர்தல் தோல்விக்கு ராகுலை குறைசொல்லக்கூடாது என்று கட்சியினருக்கு அறிவித்தது.\nஇதற்கிடையே நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., சொல்வதுபடி ஆட்சி செய்வார் என்று, ஆருடம் சொல்லியிருக்கிறார் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான, தமிழகத்தில் டி.ராஜா. கம்யூனிஸ்டுகள், சீனாவிடமிருந்தும், ரஷ்யாவிடமிருந்தும் உத்தரவுக் பெற்றதில்லை, பெறுவதில்லை என்பதை நம்புவோம். எளிமை, தொண்டு, தேச பக்தி என்ற கொள்கை களுடன் இயங்கும், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் அரவணைப்பில் வளர்ந்துள்ள மோடி, ஆர்.எஸ்.எஸ்., ஆலோசனைகளைக் கேட்டால் நாடு கெட்டுப் போய்விடுமா என்ன? ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ., தொடர்பை நேரடியாக வெளிக்காட்டும் நேரம் வந்துவிட்டது. அது பொய்மை மதச்சார்பின்மையின் முகத் திரையைக் கிழிக்கும்.தன் வெற்றிக்குப் பின், வதோதராவில் மக்கள் முன்னிலையில் நன்றியுரையாற்றிய நரேந்திர மோடி, 'தேர்தலுடன் போட்டிகள் எல்லாம் முடிந்து விட்டன. எனக்கு எதிராக இருந்தவர்களுடன் சேர்ந்து, நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவேன்' என்றார். அது வெறும் சம்பிரதாய வாசகம் அல்ல, சொன்னதை நிறைவேற்றுவார் மோடி என்று எதிர்க்கட்சிக்காரர்களும் நம்பலாம். எனவே, ஆர்.எஸ்.எஸ்., ராமர் கோவில் போன்ற விஷயங்கள் பற்றி, இப்போதைக்கு யாரும் சிறிதும் கவலைப்பட வேண்டாம். அதை தேர்தல், 'அஜெண்டா'வாக பா.ஜ., சொல்லவில்லை. பா.ஜ., பெற்ற ஓட்டுக்களும் ராமர் கோவிலுக்கு ஆதரவான ஓட்டுகள் அல்ல.\nடில்லி, குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், பா.ஜ., முழுமையாக எல்லா இடங்களிலும் வென்றிருக்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில், தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி .?காண்டது. கடைசி நேரத்தில், கூட்டணி முறிந்துவிடுமோ என்ற இக்கட்டு எழுந்தபோது, பிரச்னையை சாமர்த்தியமாகத் தீர்த்தது பா.ஜ., தலைமை. இதனால், தெலுங்குதேசமும், பா.ஜ.,வும் நன்மையடைந்துள்ளன.மோடியின் வரலாறு காணாத வெற்றிக்கு, தமிழகத்தின் பங்கு ஒரே ஒரு எம்.பி., என்று வெறும் அடையாளபூர்வமாகி விட்டது. இந்த நிலைமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும், தமிழகத்தில் பா.ஜ., அதிக இடங்களை வென்றிருக்க முடியாது. இந்த நிலையில், தமிழகத்தில் கூட்டணி என்பது பா.ஜ.,வுக்கு தேவையில்லாத சுமை. ஒரு தொகுதியில் வெல்வதற்கா பல மாதங்களாக கூட்டணி பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தியது?பா.ஜ., தமிழகத்தில் சமுதாய வாழ்வுடன் கலக்காமல், தண்ணீர் மீது மிதக்கும் எண்ணெய்ப் படலமாகவே இருக்கிறது. மோடிக்கு ஆதரவாக சென்னையிலும், பிற நகரங்களிலும் வெவ்வேறு வகைகளில் பிரசாரம் செய்த அனுதாபிகளை, மாநிலக்கட்சி நிர்வாகிகள் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவர்களை மாநில பா.ஜ., பயன்படுத்திக் கொள்ளவில்லை. தமிழகத்தில் பா.ஜ.,வை வளர்ப்பது பற்றி, மோடி இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.\nதமிழகம், ஒப்புக்காக ஒரே ஒரு பா.ஜ., - எம்.பி.,யைத் தேர்ந்தெடுத்துள்ளது என்றாலும், தமிழகத்தை பொறுத்தவரையில், காங்கிரஸ் ஆட்சியைப் போல பா.ஜ., மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்ளாது. எனவே, தமிழகம் பாதிக்கப்படாது. அதற்கு காரணம், மோடியின் பண்பு.தமிழகத்தின் பிற கட்சிகளைப் பற்றி சொல்வதற்கு பெரிதாக எதுவும் இல்லை. ஊழல் செய்தவர்களையே களத்தில் இறக்கியது தி.மு.க., இவர்கள் வெற்றி பெற்றால், ஒரு குடும்பம் தான் நன்மை பெறும், தாமல்ல என்ற எண்ணம் தி.மு.க., தொண்டர்களிடம் ஆழப்பதிந்துவிட்டது. அதனால், தி.மு.க., ஒரு இடம்கூடப் பெறமுடியவில்லை.காணாமல் போன தி.மு.க.,வைப் போல, தே.மு.தி.க., ஓரிரு இடங்களில் வெற்றி பெறுவது கூடக்கடினம் என்று, மாநில பா.ஜ.,வுக்கு முன்பே தெரியும். தேசியத் தலைமையிடம், அதைப் பக்குவமாக எடுத்துச் சொல்லி, தனியாகவே தேர்தலைச் சந்திக்க யோசனை சொல்லியிருக்கலாம். பா.ஜ., தமிழகத்தில், அப்படி கவுரவம் காக்கவில்லை.கூட்டணி அமைவதற்கும், கூட்டணி அமைந்த பின் என்னென்னவோ ஆட்டங்கள் ஆடினாரே தே.மு.தி.க.,வின் விஜயகாந்த். மோடி தன்னை கேட்டுக்கொண்டுதான், ரஜினிகாந்தைச் சந்தித்திருக்க வேண்டும் என்று பொருமினாரே, அவருக்குப் புரியாத விஷயம் பண்ருட்டி ராமச்சந்திரன் என்று விலகினாரோ, அன்றே அந்தக்கட்சியில் இருந்த பெருங்காய வாசனையும், காற்றில் கரைந்து விட்டது. இன்று, தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க.,வின் பலம் என்ன என்பதை, இந்தத் தேர்தல் உணர்த்தி விட்டது.\nகுடும்பக்கட்சி என்ற நிலையிலிருந்து தி.மு.க.,வும், குழப்பவாதிகள் கட்சி என்ற நிலையிலிருந்து, தே.மு.தி.க.,வும், சில ஜாதிகளுக்கு எதிரானது, அரசியல் தோழமையில் அடிக்கடி நிறம் மாறுகிறது என்ற நிலைமையிலிருந்து பா.ம.க.,வும், மாறுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்பதையும், நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் உறுதிப்படுத்தியிருக்கிறது.'யாருக்கு நன்மை கிடைத்தால் என்ன, தலைவி சொன்னதையெல்லாம் செய்வோம்' என்று எதைப் பற்றியும் யோசித்துப் பார்க்காத, அ.தி.மு.க., தொண்டர்களே ஜெ.,யின் பலம். அவர்களின் உழைப்பும், ஜெ.,யின் பிரசாரமும் கட்சி மகத்தான வெற்றிக்கு காரணம். பணம் விளையாடுவது என்கின்றனர். ஆனால், இதற்காக எந்த ஒரு கட்சியை மட்டும் தனியாகக் குறை சொல்லிவிட முடியாது.'நீங்களே பிரதமராவீர்கள்' என்று கட்சிக்காரர்களும், பிறரும் ஜெ.,வை உசுப்பி விட்டதனால், தேர்தலுக்கு முன் அவர் கணக்கு போட்டார். யாருக்கும் மெஜாரிட்டி இல்லையென்றால், அதிர்ஷ்டக்காற்று தன் பக்கம் வீசும், தான் பிரதமராகலாம் என்று நினைத்து தனியே நின்றார். அமோக வெற்றி பெற்றார். மோடியா, லேடியா என்று தேர்தல் கூட்டங்களில் உரக்கக்குரல் கொடுத்துக் கேட்டார் ஜெ., இங்கே லேடி அங்கே மோடி என்று சொல்லிவிட்டனர் மக்கள். இனி, இந்த லேடியின் தயவு இல்லாமலேயே, மோடியின் ஆட்சி நடைபெறும். அது லேடிக்கு நல்லதோ இல்லையோ, மோடிக்கு நல்லது. 'அம்மா தாயே' என்று வாஜ்பாய் போல அடிக்கடிக் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nதேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே, காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது, டிபாசிட் தேறுவதே கடினம் என்று பேசப்பட்டது அது கட்சித் தலைவர்களுக்கும் தெரியும். இருந்தும் தேர்தலில் நின்றனர். பூஜ்யத்திற்கு மதிப்புக் கொடுப்பதற்காக! நாடளாவிய நிலையிலே, 10 சதவீத தொகுதிகளில் கூட, காங்கிரஸ் வெல்ல முடியவில்லை என்கிற போது தமிழகத்தில், அந்தக் கட்சியின் தோல்வி பற்றிப் பெரிதாக பேசவேண்டிய அவசியமில்லை.மாநிலக்கட்சிகள், குறிப்பிட்ட அளவு வெற்றி பெற்றும், உத்தரப் பிரதேசத்தில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், பூஜ்யத்தைப் பெற்றிருக்கிறது. இருந்தாலும் நாடு நெடுகப் படுகேவலமான தோல்வியை கண்டது காங்கிரஸ் தான். இவ்வளவு மோசமான நிலையை, காங்கிரஸ் இதுவரை சந்தித்ததில்லை. இந்த அடி வாங்கிய பின், சோனியா, ராகுல் என்றபடி நேரு வம்சத்தினர், இனி ஆட்சிக்கு வரமுடியுமா என்பது சந்தேகமே.இந்தத் தேர்தல், காங்கிரசுக்கு முடிவு கட்டிவிட்டது என்று சொல்லிவிட முடியாது. ஆனால், நேரு குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டது. நேரு குடும்பமே கட்சிக்குத் தொடர்ந்து தலைமை தாங்கினால், ஆட்சி கைநழுவியது போல, கட்சியும் கரைந்து விடும் ஆபத்து இருக்கிறது. காங்கிரஸ் மீது, இப்போதைக்கு யாருக்கும் அனுதாபம் வரவில்லை. காந்திஜி கட்சியைக் கலைக்க சொன்னாரே, அதைத்தான் சோனியா செய்கிறாரோ என்ற சந்தேகம் வந்துவிட்டது.\nபெரும்பான்மை பலம் கொண்ட பா.ஜ., ஆட்சியில், நரேந்திர மோடி அடுத்த ஐந்து ஆண்டுகள் ஊழலற்ற ஆட்சி தருவார் என்பதனால், அடுத்தடுத்து ஆட்சிக்கு வரக்கூடும். தங்கள் ஆட்சியின் தோல்விக்குத் தலைமையே காரணம் என்பதைத் தாமதமாகாவாவது புரிந்து கொண்டால் அடுத்த தேர்தலில் பலிவாங்க எதிர்க்கட்சியாக தேர்ந்தெடுக்கப்படும் அளவுக்குக் காங்கிரஸ் வளர முடியும். இப்போதைக்கு, அது சோனியாவின் குடும்பக் கட்சிதான். ஆட்சியை சோனியாவிடமிருந்து மீட்டு, மோடியிடம் கொடுத்துவிட்டனர் மக்கள். ஆனால் கட்சியை சோனியாவிடம் இருந்து மீட்டு தலைமை தாங்கி நடத்தும் தகுதியுள்ளவர்கள் தாங்கள் என்று, இதுவரை அந்தக் கட்சியில் யாரும் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளவில்லை இனி எப்படியோ?அது சரி... மோசமான ஆட்சியைத் தந்துள்ள அந்தக்கட்சி எப்படியாவது உருப்படவேண்டும் என்று ஏன் சிலர் நினைக்கின்றனர். காரணம் உண்டு. ஒரு காலத்தில், அதாவது முன்னொரு காலத்தில் நல்லவர்கள் இருந்த கட்சி. இப்போது, அதைப் பற்றி அரசியல் விமர்சகர்கள் கவலைப்படுவதற்குக் காரணம், தேசிய ஆளும் கட்சிக்கு, ஒரு தேசிய எதிர்க்கட்சி இருக்க வேண்டும் என்பதனால் தான்.\n- ஆர்.நடராஜன் --\nகட்டுரையாளர், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்
மெட்ராஸ் தமிழன்: சலாம் பம்பாய்-7\nவாழ்க்கையில் சில வித்யாசமான மனிதர்களையும் அவர்களின் வித்யாசமான செயல்களையும் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. அப்படி ஒரு அனுபவம் தான் நான் பம்பாயில் வேலை செய்யும் போது எனக்கு கிடைத்தது.\n(இதற்கு முந்தைய பதிவுகளை இங்கே வாசிக்கலாம்). பம்பாயில் வேலைக்கு சேர்ந்திருந்த நேரம். நான் வேலை செய்து கொண்டிருந்த அந்த‌ மிக பெரிய நிறுவனம் குஜராத்தில் ஒரு பெரிய ஆலையை நிறுவுவதாக இருந்தது. அந்த ஆலையில் மின்சார உற்பத்திக்காக மிக பெரிய ஜெனரேட்டர்களை கொண்ட power plant - ஐ நிறுவுவதற்கான ஆயத்த பணிகள் நடந்து கொண்டிருந்தன.\nஒரு ஆலையை நிறுவ வேண்டும் என்றால், ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசாங்க துறைகளில் இருந்து அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு துறையிலிருந்தும் அனுமதி வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிடும். உண்மையிலேயே இது போன்ற அறத பழசு சட்டங்கள் இருப்பதனால் தான் ஊழலே ஆரம்பமாகின்றது.\nஅப்படி ஒரு துறை தான் மத்திய அரசுக்கு சொந்தமான Central Electricity Authority (CEA) என்ற துறை. ஒரு power plant நிறுவ வேண்டும் என்றால் பிரதானமாக இவர்களிடம் இருந்து அனுமதி பெற வேண்டும். ஒரு ஆலையை நிறுவ‌ என்னென்ன தடைகள் எல்லாம் முடியுமோ அவை அனைத்தும் இவர்களின் சட்டதிட்டங்களில் உள்ளன. இதில் மிகவும் வேடிக்கையான ஒரு சட்டம் Section 48 என்பது தான். அப்படி என்ன விசேஷம் என்கிறீர்களா?\nஇந்த Section 48 சட்டத்தின் படி, ஒரு ஊரில் நீங்கள் ஒரு power plant-ஐ நிறுவ வேண்டும் என்றால் அந்த ஊரில் உள்ள ஒரு செய்தித்தாளில் ஒரு விளம்பரம் கொடுக்க வேண்டும். அந்த விளம்பரத்தில், "நாங்கள் இந்த இடத்தில் ஒரு power plant-ஐ அமைக்க போகிறோம். பொது மக்கள் யாருக்காவது ஆட்சேபணை இருந்தால் இந்த விளம்பரம் வந்த 30 நாட்களுக்குள் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்ற வாசகங்கள் இருக்க வேண்டும். 30 நாட்களுக்குள் யாராவது ஆட்சேபணை தெரிவித்தால் அதை CEAவிடம் தெரிவிக்க வேண்டும்.\nஇதில் கூத்து என்னவென்றால், எங்களது நிறுவனம் தேர்வு செய்த இடம் யாருக்குமே பயன்படாத ஒரு வெற்று இடம். அங்கு விவசாயமோ வேறு எந்த தொழிலோ செய்ய முடியாது. தண்ணீர் பற்றாக்குறை வேறு. வானம் பார்த்த பூமி. "யாராவது இங்கு வந்து ஏதாவது ஆலையைஆரம்பித்து வேலை வாய்ப்பு கொடுக்க மாட்டார்களா" என்று மக்கள் ஏங்கி கொண்டிருந்த இடம்.\nஎங்களது நிறுவனம், யாருமே படிக்காத ஒரு செய்தித்தாளில், கடைசி பக்கத்தில் சிறிய எழுத்தில் ஒரு மிக சிறிய விளம்பரத்தை வெளியிட்டார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அரசாங்க துறையிடம் அனுமதி பெறுவதற்கு வெறும் ஒரு formalityக்காக எதற்கு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம். இரண்டாவது, தேவையில்லாமல் எதற்கு விளம்பரம் என்ற எண்ணம்.\nவிளம்பரம் கொடுத்த 28 நாட்கள் வரை யாருமே ஆட்சேபணை செய்யவில்லை. சரி, வழக்கம் போல 30 நாட்கள் கழிந்த பிறகு CEAவிடமிருந்து அனுமதி வாங்கி விடலாம் என்ற எண்ணத்தில் நாங்கள் இருந்த நேரத்தில் யாருமே எதிர்பாராதவிதமாக 29ம் நாள் எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது.\nஊர், பெயர் தெரியாத ஒரு வக்கீல், "மக்கள் ஜனநாயக முன்னணி" என்று ஏதோ ஒரு பெயரை letter padல் அடித்து எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். "இந்த ஊரில் நீங்கள் ஒரு power plant நிறுவுவதால் எங்கள் வாழ்வாதாரமே முறிந்து போய் விடும். சுற்றுப்புற சூழல் பாதிக்கும். நிலத்தடி நீர் முற்றிலும் உறிஞ்சப்பட்டு விடும்" என்றெல்லாம் இருந்தது. இல்லாத தண்ணீருக்கு இத்தனை பில்டப். என்ன செய்வது?\nஅரசாங்கத்திடம் பொய் சொல்ல முடியாதே. யாருமே ஆட்சேபணை செய்யவில்லை என்று கூறிவிட முடியாது. அப்படி சொன்னால் இந்த வக்கீல் நீதிமன்றத்துக்கு போய் பல வருடங்கள் இழுத்தடிப்பானே. உடனே எங்களது நிறுவனத்தில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். உடனடியாக டெல்லிக்கு சென்று CEAவின் பெரிய அதிகாரிகளை சந்தித்து பேசினார்கள்.\nஅவர்கள் அரை மனதோடு கடைசியில் எங்களுக்கு ஒரு சலுகை தந்தார்கள். அதாவது, "15 நாட்கள் அவகாசம் கொடுக்கிறோம். அதற்குள் இந்த வக்கீல் மனது மாறி தனது ஆட்சேபணையை திரும்ப வாங்கி கொண்டால் உங்களுக்கு அனுமதி கொடுக்கிறோம்" என்றார்கள்.\nவழக்கே இல்லாத வக்கீல்களுக்கு இது போன்ற சந்தர்ப்பங்கள் ஒரு மிக பெரிய வரப்பிரசாதம். எப்படியாவது பணத்தை கறந்து விட இதே தொழிலாக இன்றும் பலர் உள்ளனர். இதே போல சாலை விபத்துகளில் யாருக்காவது அடி பட்டுவிட்டால் நஷ்ட ஈடு வாங்கி தருகிறேன் பேர்வழி என்று ஒரு வக்கீல் கூட்டமே அலைகிறது. இவர்களை Ambulance Chasers என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். சரி, நம் விஷயத்துக்கு வருகிறேன்.\nஅந்த வக்கீலை தேடி எங்கள் நிறுவனத்தில் மேலதிகாரிகள் சிலர் சென்றனர். பெரு முயற்சிக்கு பிறகு அவரை கண்டு பிடித்தனர். ஆரம்பத்தில் மிகவும் பந்தா காண்பித்த வக்கீல் கடைசியில் பேரம் பேச ஆரம்பித்தார். தனக்கு ரொக்கமாக பணம் வேண்டும், தனது உறவினர்கள் இரண்டு பேருக்கு வேலை வேண்டும், என்றெல்லாம் கோரிக்கை வைத்தார்.\nஅதிகாரிகள் தான் இதற்கு தயாராக இருந்தார்களே. "நீங்கள் கேட்கும் அளவிற்கு நாங்கள் பணம் கொண்டு வரவில்லை. ஆனால் கண்டிப்பாகவே நாங்கள் திரும்பி சென்ற பிறகு அதற்கு ஏற்பாடு செய்கிறோம். அதே போல இந்த இருவருக்கும் நிச்சயம் வேலை உண்டு" என்று உறுதி அளித்து நைசாக பேசினர். வக்கீலோ, இதை எல்லாம் என்னால் நம்ப முடியாது. எழுத்து பூர்வமாக கொடுங்கள்" என்றார். அதிகாரிகளோ, "இது போன்ற விஷயங்களை நாங்கள் எழுத்து பூர்வமாக கொடுக்க முடியாது. அப்படி செய்தால் நீங்களும் மாட்டி கொள்வீர்கள்" என்றார்கள். வெகு நேரம் பேரம் பேசிய பிறகு சில ஆயிரங்கள் அன்பளிப்பு அளித்த பின் அரை மனதோடு வக்கீல் "நாட்டு நலனை கருதி (!) நான் எனது ஆட்சேபணையை வாபஸ் வாங்கி கொள்கிறேன்" என்று எழுதி கொடுத்தார்.\nஅதை வாங்கிய கையோடு நேராக CEA விடம் சென்று சமர்பித்து அனுமதியை வாங்கி விட்டார்கள்.\nகதை இத்துடன் முடிந்து விடவில்லை. ஒரு 15 நாட்களுக்கு பிறகு எங்களது நிறுவன Chairmanக்கு அந்த வக்கீல் ஒரு கடிதம் அனுப்பினார். மிக மிக பணிவுடன் "மேதகு ஐயா" என்றெல்லாம் பீடிகையோடு ஆரம்பித்து இரண்டு பேருக்கு வேலை தருவதாக உங்களது அதிகாரிகள் கூறினார்கள். அதை எப்போது தருவீர்கள்" என்று கேட்டு எழுதியிருந்தார். அந்த கடிதம் கடைசியில் எனது மேலதிகாரிக்கு வந்து அதை என்னிடம் அவர் அனுப்பி file செய்யுமாறு கூறி விட்டார்.\nஇதே போல அடுத்த இரண்டு மாதங்களில் அந்த வக்கீல் இரண்டு கடிதங்கள் அனுப்பினார். எதற்கும் பதிலே அளிக்காமல் file செய்து விட்டோம். கடுப்படைந்த வக்கீல் அடுத்த கடிதத்தில் "மேதகு ஐயா"விலிருந்து வெறும் "ஐயா", அதன் பின் "சார்", என்று படிப்படியாக மரியாதையை குறைத்து கொண்டே விடாமல் கடிதம் மேல் கடிதம் போட்டு கொண்டே இருந்தார். ஒவ்வொரு கடிதமும் முந்தைய கடிதத்தை விட சற்றே கடுமையாக இருந்தது. 'அமைதி படை' சத்யராஜ் மாதிரி தான் கதையே.\nகடைசியில் "டேய் மடையா" என்ற லெவலுக்கு மனிதர் போய் விட்டார். "உடனடியாக உங்களது அதிகாரிகள் கூறியபடி இருவருக்கு வேலை கொடுக்க போகிறீர்களா, இல்லையா? இல்லையென்றால் நான் மீண்டும் ஆட்சேபணை செய்வேன்" என்று எழுதினார். பாவம், அவருக்கு தெரியாது ஏற்கனவே அனுமதி வாங்கியாகி விட்டது என்று.\nஅவர் ஒழுங்காக கேட்டிருந்தால் கூட கண்டிப்பாகவே அந்த இருவருக்கும் வேலை கிடைத்திருக்கும். ஏனென்றால், கடைநிலை ஊழியர்கள் அனைவரும் அந்த ஊரில் உள்ளவர்களுக்கே வேலை கொடுக்கப்பட்டது. இவர் கூறிய அந்த இருவரை தவிர அனைவருக்குமே வேலை கிடைத்தது.\nநான் கற்றுக்கொண்ட மிக பெரிய Management Lesson: "பெரிய முதலைகளிடம் வீணாக மோதாதே. அப்படி மோதினால் விலை போகாதே" என்பது தான். இந்த அனுபவம் எனக்கு வேடிக்கையாகவும் வித்யாசமான ஒன்றாகவும் இருந்தது.\nPosted by Expatguru at 7:40 pm\nஉங்களின் ஒவ்வொரு அனுபவமும் ஒரு சிறு கதை வாசிப்பது போலவே உள்ளது . அழகான நடை கருத்தோட்டமுள்ள அனுபவம் இரண்டும் நல்ல செய்தியைத் தருகிறது . பூமி உள்ளவரை இந்தியாவில் லஞ்சம் ஒழிக்க முடியாது . நாம் நிறைய பேசினாலும் கோபப்பட்டாலும் நமது தேவைக்கு நாம் லஞ்சத்தின் பின்னே போக வேண்டிய சூழல் இருக்கத்தான் செய்கிறது .\nநன்றி சார்ல்ஸ். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.\nMANYSTRATEGIES HAVE TO BE WORKED OUT BY EVERY ONE OF US TO KEEP THINGS GOING CORRECTLYTHE ABOVE INCIDENT SHOWS THAT\nYou are right, Nat Chander. Life isacat and mouse game, after all.\ncea ஊழல் இல்லாதது ஆச்சரியம் தான்.\nஅரசு ஊழியர்களில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள், துரை. ஆனால் அவர்கள் மிக அரிதானவர்களே.
Why You Should Not Eat Spinach In Excess | Indian Express Tamil\nஆரோக்கியம் நிறைந்த கீரையை, ஒரே நாளில் அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.\nJanuary 28, 2022 7:31:18 am\nஆரோக்கியமான உணவுத் திட்டத்தில் இலை பச்சை காய்கறிகள் எப்போதும் ஒரு சிறப்பு இடத்தைப் பெறுகின்றன. அதிலிருக்கும் அதிகப்படியான ஊட்டச்சத்து காரணமாக இலை கீரைகள் ஆரோக்கியமான காய்கறிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அதற்காகவே, ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடலாம் என்று கிடையாது. கீரையில் கிடைக்கும் நன்மையை அடைய அதனை அளவுடனும் உடலுக்கு தீங்கும் ஏற்படாத வகையில் சாப்பிட வேண்டும். கீரையை அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.\nகீரையை சூப்பர்ஃபுட் என்று அழைக்க பல காரணங்கள் உள்ளன. ஏனெனில், அதில் கலோரிகள் குறைவாகவும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இதில் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.\nஇதனை உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வது புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும், ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும்,எடையைக் குறைக்கவும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உதவுகிறது. கீரையில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) இருப்பதால், இது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவும்.\nகீரை அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்?\nதினமும் குறைந்த அளவில் கீரை உட்கொள்வதால், உடலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. தினமும் அதிகளவில் கீரை சாப்பிட்டால், உடலில் பல பாதிப்புகள் ஏற்படும்.\nஊட்டச்சத்து குறைபாடு: கீரையில் உள்ள ஆக்சாலிக் அமிலம், தாவரங்களில் இயற்கையாக நிகழும் கலவை ஆகும். இந்த கலவையின் அளவு சாதாரண அளவை விட அதிகமாகும் போது மற்ற தாதுக்களை உறிஞ்சும் உடலின் திறனை பாதிக்கத் தொடங்குகிறது. ஆக்ஸாலிக் அமிலம் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் கால்சியத்துடன் பிணைக்கப்படுவது தாதுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.\nஒவ்வாமை: இலை பச்சை காய்கறியில் ஹிஸ்டமைன் உள்ளது. இது உடலின் சில செல்களில் காணப்படும் வேதிப்பொருள் ஆகும். சில சமயங்களில் சிறியளவில் ஒவ்வாமை விளைவை ஏற்படுத்தும்.\nநச்சு எதிர்வினை: ஒரே நேரத்தில் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் அதிகமாக கீரை உட்கொள்வது உடலில் நச்சு விளைவை ஏற்படுத்தும்.\nவயிற்றுப் பிரச்சினை: கீரையில் உள்ள அதிக நார்ச்சத்து வாயு, வீக்கம், பிடிப்புகள், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.\nகீரை உட்கொள்வதில் யார் கவனமுடன் இருக்க வேண்டும்\nசிறுநீரகக் கல் பாதிப்பு இருப்பவர்கள், அதிகளவில் கீரை உட்கொள்ளும் போது, உடலில் அதிக ஆக்ஸாலிக் அமிலம் உருவாகி, ​​அதனை உடலில் இருந்து வெளியேற்றுவது கடினமாகிவிடும்.\nமூட்டு பிரச்சினை இருப்பவர்கள், ஆக்ஸாலிக் அமிலத்துடன், கீரையில் ப்யூரின், ஒரு வகை கலவையும் நிறைந்துள்ளது. இந்த இரண்டு இணையும் போது, ஒரு வகை கீல்வாதத்தைத் ஏற்படுத்தலாம். ற்கனவே மூட்டு வலி, வீக்கம் மற்றும் வீக்கத்தால் அவதிப்படுபவர்களுக்கு, அதிகப்படியான கீரை உட்கொள்வது அறிகுறிகளை மோசமாக்கும்.\nஒருவேளை நீங்கள் ரத்தத்தை மெலிக்கும் மருந்தை உட்கொள்பவராக இருந்தால், வைட்டமின் கே நிறைந்த கீரை ரத்தத்தை மெலிக்கும் நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஆன்டிகோகுலண்ட் மருந்துடன் எதிர்வினையாக மாறலாம். ரத்தத்தில் உள்ள மற்ற உறைதல் காரணிகளையும் பாதிக்கலாம்.\nWeb Title: Why you should not eat spinach in excess
ரியல்மி6சீரிஸ் மாடல்களுக்கு இந்தியாவில் திடீர் விலை குறைப்பு அறிவிப்பு || realme6and realme 6i getaprice cut in India, now start at Rs. 13999\nரியல்மி6சீரிஸ் மாடல்களுக்கு இந்தியாவில் திடீர் விலை குறைப்பு அறிவிப்பு\nபதிவு: செப்டம்பர் 09, 2020 11:22 IST\nரியல்மி நிறுவனத்தின் ரியல்மி6சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nரியல்மி நிறுவனம் தனது ரியல்மி7மற்றும் ரியல்மி7ப்ரோ ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து ரியல்மி6மற்றும் ரியல்மி 6ஐ ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nபுதிய விலை குறைப்பின் படி ரியல்மி66ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13999 என்றும்6ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14999 என மாறி உள்ளது. முன்னதாக இரு மாடல்களின் விலை முறையே ரூ. 14,999 மற்றும் ரூ. 15,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.\nஇதேபோன்று6ஜிபி + 128 ஜிபி விலை ரூ. 16999 இல் இருந்து ரூ. 15999 ஆகவும், 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 17999 இல் இருந்து ரூ. 16999 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் ரியல்மி6அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ. 1000 குறைக்கப்பட்டு உள்ளது.\nரியல்மி 6ஐ6ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 13999 என மாறி இருக்கிறது. முன்னதாக இதன் விலை ரூ. 14999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. ரியல்மி 6ஐ4ஜிபி + 64 ஜிபி மாடல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மாற்றப்பட்ட புதிய விலை ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் அப்டேட் செய்யப்பட்டுவிட்டது.
பசுமை நினைவு! | Dinamalar\nமதுரை, பு.மு.மாரிமுத்து நாடார் உயர்நிலைப் பள்ளியில், 1953ல், 6ம் வகுப்பில் சேர்வதற்கு நுழைவு தேர்வு எழுத போனேன். சுற்றியுள்ள, 15 கிராமங்களுக்கும் ஒரே பள்ளி அதுதான். அதனால், மாணவர் கூட்டம் அதிகமாக இருந்தது.\nஒருவன், தேர்வு எழுத போதிய வெள்ளைத்தாள் எடுத்து வரவில்லை. ஆசிரியர் மரிய பொன்னையாவிடம் அதுபற்றி கூறினான். கூடுதல்தாள் வைத்திருப்பவர் கொடுக்கும்படி வேண்டினார். போட்டி மனப்பான்மையுடன் யாரும் கண்டு கொள்ளவில்லை.\nஎன் அருகில் வந்து உதவ கோரினார். இரண்டு தாள்களை தந்தேன். தேர்வு முடிந்து, பள்ளியில் சேர அனுமதி கிடைத்தது.\nஇடைநிலை வகுப்பை முடித்து, 9ம் வகுப்புக்கு பிரிவு மாற்றம் செய்தனர்; சிறப்பு கணிதம் தேர்ந்தெடுத்திருந்தேன். கோவிந்தன் என்ற மாணவன் என் பிரிவில் சேர்ந்து, முதல் நாளே நெருங்கிய நண்பனாகி விட்டான். மூன்று ஆண்டுகள் சேர்ந்து படித்தோம்.\nஎஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிந்தது. விடைபெறும் நேரம் வந்த போது என் கைகளை பற்றி, 'அன்று நுழைவுத் தேர்வின் போது வெள்ளைத்தாள் தந்து நீ உதவாமல் இருந்திருந்தால் இங்கு அட்மிஷன் கிடைத்திருக்காது...' என விழிகள் பனிக்க கூறினான் அந்த நண்பன்.\nதற்போது, என் வயது, ௭௯; சிறு உதவியை மனதில் சுமந்த அந்த நண்பனுடன் தொடர்பு அறுந்து, பல ஆண்டுகளாகி விட்டன. ஆயினும், நினைவு பசுமையாகவே உள்ளது!\n- வெ.சுந்தரராஜன், மதுரை.
Current Affairs in Tamil Medium Date: 08-09 August 2020. - TNPSC Master -->\nCurrent Affairs in Tamil Medium Date: 08-09 August 2020.\nடெல்லியில் பிரமாண்ட தேசிய தூய்மை மையம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nபிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று, ‘தூய்மை இந்தியா’. தேசப்பிதா மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா கனவை நனவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று இந்த திட்டத்தை 2014-ம் ஆண்டு தொடங்கியபோது பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்த நிலையில் டெல்லியில் மகாத்மா காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில் ‘ராஷ்ட்ரீய சுவச்சதா கேந்திரா’ என்ற பெயரில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள தேசிய தூய்மை மையத்தை பிரதமர் மோடி அவர்கள் 08.08.2020 அன்று திறந்து வைத்தார். இது ஒரு கலந்துரையாடல் மையம் ஆகும்.\nவங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ரூ.6,399 கோடி ஒதுக்கீடு: நிா்மலா சீதாராமன்\nநிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ரூ.6,399 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.\nகூடுதல் தகவல்: நாட்டின் பொருளாதாரத்தை வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லும் நோக்கில் 'சுயசாா்பு இந்தியா' என்ற பெயரில் ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு சலுகைத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களுக்கும் ரூ.30,000 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.\nபொருளாதார வளா்ச்சி: தமிழகம் தொடா்ந்து முன்னேற்றம் மத்திய புள்ளியியல் தகவல்\n2019-20-ஆம் ஆண்டில் தேசிய பொருளாதார வளா்ச்சி விகிதம் 4.2 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தின் வளா்ச்சி விகிதம் 8.03 ஆக இருக்கிறது. இது ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாகும். பொருளாதார வளா்ச்சி விகிதம் பற்றிய மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் கணக்கெடுப்பை அண்மையில் மத்திய அரசு இறுதி செய்திருந்தது. 2011-12-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு கணக்கிடப்பட்டது. அதன்படி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் தமிழகம் தொடா்ந்து நீடிக்கிறது. மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. வேளாண்மை, அதன் சாா்புத் தொழில்கள், சுரங்கத் தொழில் ஆகியன முதன்மைத் தொழில்களாகப் பாா்க்கப்படுகின்றன. இந்தத் தொழில்கள் 6.08 சதவீத வளா்ச்சியையும், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சேவைத் தொழில்கள் அடங்கிய துறையானது 6.63 சதவீத வளா்ச்சியையும் கண்டுள்ளன. இவற்றின் முந்தைய ஆண்டு வளா்ச்சி முறையே 8.49 சதவீதம் மற்றும் 7.83 சதவீதமாக இருந்தது.\nஉற்பத்தி மற்றும் கட்டுமானத் தொழில் ஆகிய இரண்டு முக்கிய துறைகளும் முறையே 10.27 சதவீதம் மற்றும் 10.49 சதவீதம் என்ற இரட்டை இலக்கத்தைக் காட்டும் அளவிற்கு வளா்ச்சி பெற்றுள்ளன. முதன்மைத் துறைகளில் தமிழகம் ஒவ்வொரு நிதியாண்டிலும் கூடுதலான வளா்ச்சியைப் பெற்று வருகின்றன. வேளாண்மையில் 2018-19-ஆம் ஆண்டு ஏற்பட்டிருந்த 5.8 சதவீத வளா்ச்சி விகிதம், 2019-20-ஆம் ஆண்டில் 7.43 சதவீதமாக வளா்ந்திருக்கிறது.\nகூடுதல் தகவல்: கடைசி மூன்று நிதியாண்டுகளில் தமிழகத்தின் வளா்ச்சி விகிதம், தேசிய வளா்ச்சி விகிதத்தைவிட தொடா்ந்து அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\n2017-18-ஆம் ஆண்டில் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பு ரூ.11 லட்சத்து 26 ஆயிரம் கோடியாகவும், வளா்ச்சி விகிதம் 8.59 சதவீதமாகவும் இருந்தது. இந்த காலகட்டத்தில், தேசிய வளா்ச்சி விகிதம்7சதவீதமாக இருந்தது.\n2018-19-ஆம் ஆண்டில் உற்பத்தி மதிப்பு ரூ.12 லட்சத்து 15 ஆயிரம் கோடியாகவும், வளா்ச்சி விகிதம் 7.95 சதவீதமாகவும் இருந்தது. இதே காலகட்டத்தில், தேசிய வளா்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக இருந்தது.\n2019-20-ஆம் ஆண்டில் உற்பத்தி மதிப்பு ரூ.13 லட்சத்து 13 ஆயிரம் கோடி, வளா்ச்சி விகிதம் 8.03 சதவீதம் இருந்தது. இந்த காலகட்டத்தில் தேசிய வளா்ச்சி விகிதம் 4.2 சதவீதமாக அமைந்துள்ளது.\nதலைமை கணக்கு தணிக்கையாளராக கிரீஷ் சந்திர முா்மு பதவியேற்பு\nஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச முன்னாள் துணைநிலை ஆளுநா் கிரீஷ் சந்திர முா்மு, இந்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியாக 08.08.2020 அன்று பதவியேற்றாா். தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். கிரிஷ் சந்திர முர்முக்கு 20.11.2024 வரை பதவிக்காலம் நீடிக்கும். முன்னதாக, ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் கிரீஷ் சந்திர முா்மு தனது பதவியை கடந்த 05.08.2020 அன்று ராஜிநாமா செய்தாா். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.\nகூடுதல் தகவல்: தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி பதவி என்பது அரசியலமைப்புச் சட்ட பதவியாகும். மத்திய அரசு, மாநில அரசுகளின் வரவு செலவு கணக்குகளை தணிக்கை செய்வது சிஏஜியின் பொறுப்பாகும். அவ்வாறு சிஏஜி தணிக்கை செய்த கணக்குகள் அனைத்தும் மாநில சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை மையமாக கொண்ட திட்டங்கள்: துணைநிலை ஆளுநா் சின்ஹா\nஜம்மு-காஷ்மீரில் இளைஞா்களை மையமாக கொண்ட திட்டங்கள் ஊக்குவிக்கப்படும் என்று அந்த யூனியன் பிரதேசத்தின் புதிய துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்தாா்.\nகுப்பைகள் இல்லாத இந்தியா: ஒரு வார பிரசாரத்தை தொடக்கினாா் பிரதமா் மோடி\nகுப்பைகள் இல்லாத இந்தியா என்னும் ஒரு வாரகால பிரசாரத்தை பிரதமா் நரேந்திர மோடி, தில்லியில் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி ஸ்மிருதி, தா்ஷன் சமிதி ஆகிய இடங்களில் தூய்மை இந்தியாவுக்கான சேவை மையத்தையும் அவா் தொடக்கி வைத்தாா்.\nஉலகின் நான்காவது முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானி\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான முகேஷ் அம்பானி உலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் வெளியிட்ட அறிக்கையின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஐரோப்பாவின் பணக்காரர் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தி உலகின் நான்காவது பணக்காரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நடப்பாண்டில் 220 கோடி அமெரிக்க டாலர்களைப் பெற்ற அம்பானி தற்போது 806 கோடி அமெரிக்க டாலர் சொத்துமதிப்பு கொண்டவராக உயர்ந்துள்ளார். பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் ஆகியோரைத் தொடர்ந்து அம்பானி அதிக சொத்துப் பட்டியல் உள்ள நபராக உள்ளார்.\nசீனாவில் தேசிய உடற்தகுதி தினம்\n2008ஆம் ஆண்டின் ஆகஸ்டு 8ஆம் நாள் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதற்குப் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 8ஆம் நாள் தேசிய உடற்தகுதி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. சிறந்த ஒருவர், செழுமையான அறிவுகளுடன் ஆரோக்கியமான எழுச்சி மற்றும் வலுவான உடலையும் கொண்டிருக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.\nகூடுதல் தகவல்: 2022-ஆம் ஆண்டில் குளிர்கால பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்குப் பெய்ஜிங் முழுமையாக ஆயத்தம் செய்து வருகின்றது. இது, சர்வதேச ஒலிம்பிக் விளையாட்டு வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றும் என்று குறிப்பிடத்தக்கது.\nசுற்றுச்சூழல் அவசரநிலையை அறிவித்த மொரீஷியஸ்\nகடலில் மூழ்கும் கப்பலில் இருந்து எரிபொருள் கசிவது மோசமடைவதால் மொரீஷியஸ் சுற்றுச்சூழல் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் கப்பல் 3800 டன் எரிபொருளுடன் எம்.வி.வகாஷியோ, ஜூலை 25 அன்று இந்தியப் பெருங்கடல் தீவுக்கு வெளியே பயணித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு முன் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தளமாக அறியப்படும் பாயிண்ட் டி எஸ்னி பகுதியில் எதிர்பாராத விதமாக ஒரு பாறையில் மோதி நின்றது. சேதமடைந்த கப்பலில் இருந்த குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மேலும் பாறையில் மோதியதால் கப்பலில் இருந்த எரிபொருள்கள் கடலில் கசியத் தொடங்கின. கப்பலில் இருந்து எரிபொருள் கசிவதைத் தடுக்கும் முயற்சியில் மொரீஷியஸ் இறங்கியது. எனினும் எண்ணெய் கசிவு நெருக்கடி மோசமடைவதால் மொரீஷியஸ் அரசு அவசர நிலையை அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவிலும் சீனாவின் 'டிக்-டாக்', 'விசாட்' செயலிகளுக்கு தடை\nஇந்தியாவைத் தொடா்ந்து அமெரிக்காவிலும் சீன நிறுவனங்களின் டிக்-டாக், விசாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான இரு தனித்தனி உத்தரவுகளில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டாா். இந்த இரு செயலிகளும் அமெரிக்காவின் தேசப் பாதுகாப்பு, பொருளாதாரப் பாதுகாப்புக்கு எதிராக இருப்பதாக அதிபரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, இதே காரணத்துக்காக டிக்-டாக், விசாட் என மொத்தம் 106 சீன செயலிகளுக்கு கடந்த இரு மாதங்களில் இந்தியா தடை விதித்தது\nபிரதமர் மோடி நாட்டின் மிகச்சிறந்த பிரதமர்: 'MOTN' ஆய்வில் தகவல்\nஇந்தியாவின் மிகச்சிறந்த பிரதமர் நரேந்திர மோடி என்று 'Karvy Insights Mood of The Nation' என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.ஆய்வு முடிவில் 44 சதவீத இந்தியர்கள் நரேந்திர மோடியை சிறந்த பிரதமர் என்று ஓட்டளித்துள்ளனர். மோடிக்கு அடுத்தபடியாக 14 சதவீத ஓட்டுகளுடன் வாஜ்பாய் இரண்டாம் இடத்தில் உள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா 12 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும், மன்மோகன்சிங்7சதவீத ஓட்டுகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர். மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு5சதவீத ஓட்டுகளுடன் 5ம் இடம் கிடைத்துள்ளது.\nமத்திய பிரதேசம் கவர்னராக லட்சுமிகாந்த்பாஜ்பாய் நியமனம்.\nமத்திய பிரதேச மாநிலத்தின் கவர்னராக இருந்து வந்த லால்ஜி டாண்டன் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் லக்னோவில் காலமானார். இதனையடுத்து உத்திரப் பிரதேச மாநில கவர்னராக இருந்து வரும் ஆனந்தி பென் படேல் மத்திய பிரதேச கவர்னராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனிடையே உத்திரப் பிரதேச மாநில பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் மத்திய பிரதேசமாநிலத்தின் புதிய கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கல்யாணம் வரை நான் கன்னி தான் காம கதை - தமிழ் செக்ஸ் கதைகள், Tamil Kamakathaikal, Tamil Dirty Stories, காம கதைகள், Tamil Sex Stories, தமிழ் ஆபாச படங்கள், tami maja stories, tamil sex kathai, காம லீலைகள், அந்தரங்க காம கதை\nகல்யாணம் வரை நான் கன்னி தான் காம கதை\nஎன் பெயர் ரம்யா. என் வயசு இருபத்தி ஒண்ணு. சீக்கிரம் கல்யாணம். என் கணவருக்கோ வயசு நாப்பது. என் குடும்பம் ஏழைக் குடும்பம் அதனால வயசு வித்தியாசத்த பத்தி கவலைப்படாம எங்க வீட்ல கல்யணம் பண்ணி வைச்சுட்டாங்க. இவர் வசதியானவர். எனக்கும் இந்த வசதியான வாழ்கை பிடிச்சுத்தான் இருக்கு. ஆனா கல்யாண வாழ்வின் முக்கிய அம்சத்தில் நான் திருப்தியடையவில்லை. அதைப்பற்றி சொல்லும் முன்….நான் வயசுக்கு வந்ததுல இருந்து நிறைய காமக் கதைகள் படிச்சுருக்கேன்.எனக்கு காம உணர்வுகள் ரொம்ப அதிகம். பள்ளியில் எனக்கு கிடைச்ச நண்பர்கள் அப்படி (ம்ம்ம்…அப்படியும் என்ன எல்லாம் பெண் நண்பர்கள் தான்…ஆண்களோடு தவறாக பழகும் அளவுக்கு எனக்கு துணிச்சல் இருந்ததில்லை). அதனால் கல்யாணம் வரை நான் கன்னி பெண்ணாகவே இருந்தேன்.\nஆனால் பல ஆண்கள் (காலேஜில் ஸ்டுடண்ட்ஸ் முதல் புரஃபஸர் வரை) என்னோடு பேசும்பொது என் கண்களைப் பார்த்து பேச முடியாமல் திணறுவதை பார்த்து ரசித்திருக்கிறேன் (என் சைஸ் அப்படி!! 36-26-36…சின்ன வயசிலேயே எனக்கு பெரிய ஆனா நல்ல டைட்டான மார்புகள்). என்னோடு பேசும் எந்த ஆணுக்கும் கொஞ்ச நேரத்தில் அடக்க அடக்க முடியாமல் கண்கள் தானக அங்கே மேயத் தொடங்கும். நான் லேசாக முறைத்த உடன் (முறைப்பது போல் நடிப்புத்தான் !!), பார்வையை திருப்பி விடுவர். நான் நடக்கும்பொது கூந்தல் இடிக்க இடிக்க அசைந்தாடும் என் பின்னழகுளை பார்த்து மயங்கிய எந்த ஆணுக்கும் அவர்கள் பார்ப்பதை நானும் உள்ளுர உணர்ந்து எஞ்சாய் பண்ணுவது தெரியாது.\nஇப்படியாக ஆண் கை படமால் நான் கல்யாணம் வரை என் உணர்ச்சிகளை அடக்கியபடி காத்திருந்தேன். ஆனால் முதலிரவிலேயே என் கணவன் லட்சணம் புரிந்துவிட்டது. அவனால் என்னை திருப்திப்படுத்த முடியவில்லை (அவனுக்கு இன்னும் என்ன மரியாதை…:-) ). முதல் ஆண் மகன் ஸ்பரிசம் எனக்கு இன்பம் தந்தாலும் அவனுக்கு ரொம்ப சீக்கிரம் வந்து விடும். என்னையும் சந்தோஷப்படுத்த அவன் எந்த முயற்சியும் செய்யவில்லை. அவனால் ஒரு முறை கூட என் புண்டை உச்சம் அடைந்து தண்ணி கொட்டியதில்லை. இதற்கு மேல் இந்த சோகக்கதை எதற்கு. என் இன்பக்கதையைத் தொடரலம்.\nஎன்னுடைய இந்த நிலையால், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சி என்னை கடுமையாக பாதித்தது. என் கணவரின் உறவுக்காரப் பையன் ஒருத்தன் கொஞ்ச நாளக எங்க வீட்டில்தான் தங்கி படிக்க்கிறான். நல்ல ஸ்மார்ட். எக்சர்ஸைஸ் எல்லாம் செய்வான். ஆனா அதே சமயம் ரொம்ப முரட்டுத்தனமா பாடி பில்டர் மாதிரி இல்லாம சாக்லேட் பையனா அழகா இருப்பான். அவன் இங்க வந்ததுல இருந்து எனக்கு அவன் மேல ஒரு கண்ணு. அவனும் என்னை வித்தியாசமா பார்ப்பது எனககுத் தெரியும். அவன் ஸார்ட்ஸ் பனியன் போட்டு காலைல எக்சர்ஸைஸ் அல்லது ஜாக்கிங் பண்ணும்போது பாத்து ஏக்கப் பெருமூச்சு விடுவேன் (முந்த்தின நாள் ராத்திரி முழு திருப்தி இல்லாத செக்ஸ்னால நான் காலைல எவ்ளோ ஹார்னியா இருப்பேன்னு உங்களுக்கு சொல்ல தேவையில்லை). இந்த மாதிரி ஒரு அழகான, இளமையான பையன கட்டிக்கிட்டு எஞ்சாய் பண்ண வேண்டிய வயசுல…ம்ம்ம்…(கொடுமையிலும் கொடுமை…இளமையினில் வறுமை..)\nநேத்து காலைல அதே மாதிரி அவன பார்த்து உடமபுக்குள்ள என்னென்னவோ பண்ண, உடனே பாத்ரூம் உள்ளே போனேன் (வேற வழி…ம்ம்ம்..என் உணர்ச்சிகளை தணிச்சுக்க அது ஒண்ணு தானே வழி..). இதுவர அவன் பேர சொல்லலியே, அவன் பேர் ரமேஷ். ரமேஷின் பரந்து விரிஞ்ச மார்புகளையும், தோள்களையும் நினைச்சுக்கிட்டு உடனே நைட்டியை அவுத்துட்டு, பிராவுக்கு மேலேயே என் மார்புகளை பிசைஞ்சுக்க்ட்டேன். ஒரு கையால ஏற்கனவே ஈரமா இருந்த பேண்டிக்கு மேலேயே நல்லா தேச்சேன். கொஞ்சம் கொஞ்சமா சுகம் அதிகரிக்க லேசா முனக ஆரம்பிச்சேன். தற்ச்செயலா மேலே பார்த்த போது, அதிர்ச்சியா இருந்திச்சு. பாத்ரூமின் மேல் பகுதி ஜன்னலில் கண்ணாடி (வெளியிலிருந்து எதையும் பார்க்க முடியாமல் தடுக்கும் சரிவாக வைக்கப்படும் கண்ணாடிகளில் ஒன்று) உடைஞ்சிருந்துது. அது வழியாக ஒரு ஜோடி கண்ணு என்னையே பார்த்துக்கிட்டு இருப்பது தெரிஞ்சுது. முதல்ல யாருடா நம்ம பாத்ரூம்ல எட்டிப் பார்க்கறதுன்னு அதிர்ச்சியா இருந்தாலும், யாரோ ஒரு ஆம்பளை நான் தனியா எஞ்சாய் பண்ணறதை பாக்கறாங்கற ஃபீலிங் நல்லா இருந்தது. தொடர்ந்து பண்ணிக்கிட்டே ஒரக்கண்ணால பார்த்த போது, அந்த கண்கள் என் ரமேஷ் தான்னு எனக்குப் புரிஞ்சது.\n(அவனத் தவிர வேற யாருக்கும் ஜன்னல் விழயமோ, நான் எப்போ பாத்ரூம் போறேங்கிறதோ தெரிய வாய்ப்பில்லை. அதோட இத்தன நாள அவன ஸைட்டடிக்கிறேன், அவன் கண்ண என்னால கண்டுபிடிக்க முடியாதா?)\nரமேஷ் பாத்துக்கிட்டு இருக்காங்கிற எண்ணமே எனக்கு ஃபீலிங்க்ஸை அதிகரிச்சது. அதுவும் தினசரி என்னை இந்த மாதிரி பார்த்துக்கிட்டு இருக்காங்கிற எண்ணம், எனக்கு கன்னா பின்னானு உணர்ச்சிகளை ஏத்தியது. உடனே பிராவையும், பேண்டியையும் கழட்டிப்போட்டேன். வலது கைல ரெண்டு விரல புண்டைக்குள்ள விட்டு ஆட்டிக்கிட்டே கட்ட விரலால கிளிட்டை நல்லா தேச்சேன். இடது கை நிப்பிள்ஸ தடவிக்கிட்டு இருந்துந்துச்சு. ஒரக்கண்ணால அவன் கண்ணுல தெரிஞ்ச காமத்தைப் பார்த்து எனக்கு வெறி ஏறிச்சு. வேகவேகமா செய்ய, சீக்கிரமே சொர்க்கத்தை www.orutamilsex.website நேக்கி போக ஆரம்பிச்சேன். எனக்கு வேர்த்துக் கொட்டியது. ஒரக்கண்ணால அவன் பார்த்து வெறியாவதை பார்த்தேன். அவன் என் புண்டைய நக்குற மாதிரி கற்பனை பண்ணி பார்த்தேன். ஒன்னுக்க அடக்கற மாதிரி செஞ்சு, விரல இருக்கிப்பிடிச்சுக்கிட்டு, விரலை லெஃப்ட் ரைட்டுன்னு திருப்பினேன். எனக்கு மூச்சு வாங்க ஆரம்பிச்சுது. அப்பிடியே க்ளிட்டை நல்லா தேச்சேன். இன்னோரு கையால அந்த ஏரியா எல்லாம் நல்லா தடவிக்கிட்டேன். என்னால அதுக்கு மேல கட்டுப்படுத்த முடியல…அடி வயுத்துல இருந்து அந்த உச்சகட்ட ஃபீலிங்க் வந்து, அடக்க முடியாத வெள்ளமா தண்ணி பெருக்கெடுத்து என் கையெல்லாம் நனைஞ்சது. அப்படியே டயர்டாகி கிழே உட்கார்ந்தேன்.\nகொஞ்ச நேரத்துல டிரேஸ்ஸ போட ஆரம்பிச்சேன். ரமேஷின் கண்கள் ஜன்னல்ல இருந்து விலகறத பார்த்தேன். டிரஸ்ஸப் போட்டுட்டு வெளிய வந்து, கிச்சன் நோக்கிப் போனேன். பின்பக்க வாசல் வழியா ரமேஷ் உள்ள வர்ரதை பார்த்தேன். ஒரு நிமிஷம் வெட்கத்துல தலைய குனிஞ்சுக்கிட்டேன் (அவன் பாக்கிறான்னு தெரிஞ்சும் எல்லாம் பண்ணும்போது வெட்கப்படலைன்னாலும், நேருக்கு நேரா முகம் பார்க்கும்போது வெட்கம் வரத்தான் செய்தது). இருந்தாலும் உடனே சமாளிச்சுக்கிட்டு கேட்டேன் “என்ன ரமேஷ்? எங்க போய்ட்டு வர? டிஃபன் சாப்படறியா?”. அவனும் ஒரு செகண்ட் தடுமாறினான். நான் பாத்துருப்பேனோனு அவனுக்கு சந்தேகம் வந்துருக்கும். இருந்தாலும் உடனே சமாளிச்சு “பின்னால போய் எகசர்ஸைஸ் பண்ணிட்டு வரேன் அக்கா” என்றான். (எனக்கு தெரியாதா அவன் பண்ணற எக்ஸர்ஸைஸ் என்னன்னு…) . அப்புறம், அவனுக்கும் எனக்கும் ஒரு வயசுதான் வித்தியாசம் ஆனாலும் அவன் என்னை அக்கான்னுதான் கூப்பிடுவான். (அவ்ளோ மரியாதை!!)\nபாத்ரூம்ல அனுபவிச்ச சொகத்துல கொஞ்சம் உணர்ச்சிகள் கொறஞ்சு நார்மல் ஆனேன். வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிச்சேன். ரமேஷிடமும் நார்மலாக எதுவும் தெரியாத மாதிரி பழகினேன். என் புருஷனும், ரமேஷும் சாப்பிட்டு போன உடனே வீட்டுக்குப் பின்னால் வழியா ஸைட்ல பாத்ரூமுக்கு அந்தப் பக்கம் இருக்கிற இடத்துக்குப் போனேன். அங்க கொஞ்சம் புதரா, குப்பையா இருக்கும். யாரும் அந்த பக்கம் வருவது கிடையாது. அங்கே எங்க வீட்ட ஸ்டோர் ரூம்ல யூஸ் இல்லாம இருந்த ஸ்டூல் ஜன்னலுக்கு கீழ வசதியா போட்டு இருந்தது. ரமேஷ் புத்திசாலி பையன் தான் ஸ்டூலையும் இந்த இடத்தையும் பாத்ரூம் ஜன்னலையும் வைச்சு அழகா ப்ளான் பண்ணி இருக்கான்னு நினைச்சிக்கிட்டேன். (பின்ன சும்மாவா …நல்ல காலேஜூல எஞ்சினியரிங் படிச்சிட்டு இப்போ M.B.A படிக்கிற பையனாச்சே!!).\nதிரும்ப வந்து டிவியைப் போட்டு பாக்க ஆரம்பிச்சேன். “சிறகடிக்க ஆசை” படம் ஓடிக்கிட்டு இருந்திச்சு. படிக்கிற வயசுல இன்ஃபாக்ஸுவேஷன்ல மாட்டிக்கிட்டு காதல்னு நினைச்சு குழப்பிக்க கூடாதுன்னு மெஸேஜ் சொல்ற நல்ல படம்தான். ஆனா அந்த மெஸேஜ்ஜ விட, ஹீரோயின், அந்த டின் ஏஜ் பொண்ணு, காம உணர்ச்சிகளோட அவஸ்தைப் படற காட்சிகள்தான் அதிகம். எப்போதும் போல மெஸேஜ்ஜுக்குப் பதிலா அதுதான் மக்கள் மனசுல பதியும். அந்த பொண்ணும் அவ ஃப்ரெண்ட்ஸும் செக்ஸ் பத்தி பேசற டயலாக்ஸ், அவங்க ப்ளு ஃப்லிம் பாக்கற காட்சின்னு எல்லாமே லேசா அடங்கி இருந்த என் உணர்சிகளுக்கு நல்லா தீனி போட்டுச்சு.\nபடம் முடிஞ்சதும் வந்து பெட்ல படுத்தேன். செக்ஸ் ஃபீலிங்க்ஸ் இருந்தாலும், மாஸ்டர்பேட் பண்ண இப்போ மூட் இல்ல. எவ்ளோ நாள்தான் நம்ம வாழ்க்கையை இப்படியே ஒட்டறதுனு யோசிச்சுப் பார்த்தேன். ரமேஷிக்கு என்னுடய அந்தரங்கம் எல்லாம் இப்போ தெரியும். அவனுக்கும் என் மேல ஒரு கண்ணுங்கறது இப்போ தெளிவாயிடுச்சு. அவனோட பேசாம ஜாலியா இருந்தா என்னன்னு தோணிச்சு. ஆனா வெளில மட்டும் தெரிஞ்சா என் மானமே போயிடுமேனு பயமாவும் இருந்திச்சு. இவ்ளோ நாளா (கல்யாணத்துக்கு முன்னாடியும் அப்புறமும்) ஆசையெல்லாம் அடக்கிக்கிட்டு காப்பத்தின நல்ல பொண்ணு இமேஜ் என்னாகிறதுன்னு பயமா இருந்தது. அப்படியே யோசிச்சுக்கிட்டே நல்லா தூங்கிட்டேன்.\nகனவெல்லாம் ரமேஷ் என்னை இறுக்க கட்டிப்பிடிச்சு உதட்டோட உதடு முத்தம் கொடுக்கிற மாதிரியும், என் புண்டையை நக்குகிற மாதிரியும் வந்தது. எழுந்து பார்க்கும்போது பேன்டி நனைஞ்சு வெட்டா இருந்திச்சு. எழுந்து போய் ஒன்னுக்கு போய்ட்டு, முகம் கழுவிட்டு வந்தேன். கொஞ்சம் தெளிவு பிறந்த மாதிரி இருந்தது. சே!! என்னதான் நியாயமான ஆசைகள் இருந்தாலும் ஒரு தமிழ் குடும்ப பொண்ணு நாம இவ்ளே கேவலமா யோசிக்க கூடாதுனு நினைச்சேன்.\nரமேஷ் காலேஜில்ல இருந்து வந்துட்டான். அவனுக்கு டிஃபன் பண்ணிக் கொடுத்தேன். என்னதான் அவனோடு தப்பு பண்ணிடக் கூடதுங்கற கட்டுப்பாடு வந்து இருந்தாலும், அழகான Nike டி-ஷர்ட், டைட் ஃபேடட் ஜீன்ஸ்ல செம ஸ்மார்ட்டா இருந்த அவனை என்னால ஸைட் அடிக்காம இருக்க முடியல. அவனும் என்னையே முழுங்கற மாதிரி பாக்கிறாங்கிறது இப்போ எனக்கு தெளிவா புரிஞ்சது. ஆனாலும், அவங்கிட்ட எதுவும் தப்பா பேசிடக்கூடாது, தப்பு பண்ணிடக்கூடாதுன்னு என்னை கட்டுப்படுத்திக்கிட்டேன்.\nஇந்த வாரம் பூராவும் என் புருஷன் ஆபிஸ்ல இருந்து லேட்டாத் தான் வரான். அதுலயும் வந்த உடனே டயர்டா இருக்குனு சொல்லி உடனே தூங்கிடறான். எனக்கு அவன் மூலம் இருந்த கொஞ்ச நஞ்ச சுகம் கூட இந்த அஞ்சு நாளா இல்ல. அதனாலதான் என் மனசு இப்படி அலை பாயுதுன்னு யோசிச்சேன். இன்னைக்கி வந்த உடனே எப்படியும் அவனை கம்பல் பண்ணியாவது கொஞ்ச நேரம் ஜாலியா இருக்கணும், இல்லைன்னா நான் ஏதாவது தப்பு பண்ணிடுவேன்னு நினைச்சேன். அவனோட முழு திருப்தி வரலைன்னாலும், மீதிக்கு நம் கையே நமக்கு உதவின்னு நினைச்சேன். என் கணவனுக்காக ஆவலாக காத்திருந்த்தேன்.\nரமேஷ் டிரஸ் மாத்தி லுங்கிக்கு மாறி அவன் ரூம்ல படிச்சுக்கிட்டிருந்தான். வழக்கம்போல என் கணவன் ஆஃபிஸ்ல இருந்து லேட்டா பத்து மணிக்கு வந்தான்.\n“ஆஃபிஸ்ல ரொம்ப வேலை ரம்யா, நான் கேண்டின்லயே சாப்பிட்டேன். நீ சாப்பிட்டியானு” கேட்டான்.\nஇது எப்பவும் வழக்கம்தான். (அவன் வர பெரும்பாலும் லேட்டாகும் அதனால எனக்காக காத்திருக்காதே நீ சாப்பிட்டுடுனு சொல்லுவான். இந்த மாதிரி என்ன பாசமா வைச்சுக்கறதுல எந்தக் குறையும் இல்ல…ஆனாலும் இந்த பாசம் மட்டும் என் இருபத்தி ஒரு வயசுக்குப் பத்தலையே..).\nரொம்ப டயர்டா இருக்குனு சொல்லிக்கிட்டே ரூமுக்குள்ள போய் லுங்கி பனியனுக்கு மாறிட்டு பெட்ல விழுந்தான். நானும் உள்ளே போனேன்.\n“என்ன ரம்யா? தூக்கம் வரலையா? இவ்ளோ நேரமா எனக்காக காத்திருக்கியா?…TV கூட போடலை?” என்றான்.\n(ம்ம்ம்ம்…நான் என்னத்த சொல்றது..நான் TV கூட பாக்கம செக்ஸ் பத்தித்தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன்னு வெட்கத்தை விட்டு சொல்லவா முடியும்..). நான் அமைதியா இருக்க, OK Good Nightனு சொல்லிட்டு திரும்பி படுத்து போர்வைய போத்திக்கிட்டான். நானும் கட்டில்ல பக்கத்துல ஏறி படுத்துக்கிட்டேன்.\nஆனாலும் ஆசைய அடக்கவே முடியல (எனக்கு என்னாச்சுனே புரியல..முன்னாடி இருந்த கன்ரோல் இப்பல்லாம் இல்ல) வெட்கத்த விட்டு அவன் பக்கம் திரும்பி ஒரு காலை தூக்கி லேசா அவன் மேல போட்டு பின்னால இருந்து லேசா கட்டிப்பிடிச்சேன். என் முகத்தை அவன் முகத்து கிட்ட கொண்டு போய் கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்தேன். என் ஆசைப் பெரு மூச்சு அவன் கழுத்தில் மோதியது. என்னுடய நிலை அவனுக்கு புரிஞ்சிருக்கணும். உடனே திரும்பி என்னைக் கட்டிப் பிடிச்சான். (பரவாயில்ல நம்ம ஹஸ்பண்டு ஒண்ணும் impotent இல்ல்யே..தூண்டி விட்டா ஃபிலிங்க்ஸ் வரக்கூடிய ஆளாகத்தானே இருக்கிறான்னு எனக்கு ஒரு சின்ன சந்தோஷம்…). அவன் கைகள் என் முதுகில் அழுத்தமாக தடவிக் கீழே போய் என் குண்டியைக் கசக்க ஆரம்பிச்சது. எனக்கு உணர்ச்கிகள் ஏறி, கிழே ஈரமாக தொடங்கியது (ஏற்கனவே இருந்த அதிகபட்ச ஃபிலிங் வேறு!!).\nகொஞ்ச நேரம் முன்னாடி வரை இருந்த குழப்பம் எல்லாம் தீர்ந்து, நானும் அவனை இறுக்கமா கட்டிப்பிடிச்சு முகம் எல்லாம் முத்த மழை பொழிந்தேன். அவனுக்கு வியர்த்துக் கொட்டியது. கீழே லுங்கிக்கு உள்ளே அவன் சுண்ணி நட்டுக்கிட்டு என் தொடையத் தட்டுவதை என்னால் உணர முடிஞ்சது. நான் அவன் கழுத்தில் அழுத்தமா முத்தமிட்டேன். கீழே இறங்கி மார்பில் பனியனுக்கு மேலே முத்தமிட்டு நக்கிக்கிட்டே கீழே கைய கொண்டு போய் லுங்கிக்கு மேலயே தேச்சேன். டக்குனு என்ன விட்டு விலகி கட்டில்ல இருந்து இறங்கினான்.\nஎனக்கு எதுவும் புரியாம குழப்பமா இருந்தது. உடனே லுங்கி, பனியனை கழட்டினான். ஜட்டியைய்ம் கழட்டினான். சின்ன சுண்ணியா இருந்தாலும் டென்ஷனாகி attention ல இருந்த அவனுடைய கோல பார்த்ததும், எனக்குள்ள ஹார்மோன்ஸ் வேலை செஞ்சு உணர்சிகளை அதிகரிச்சது (ஏற்கனவே பலமுறை பார்த்ததுதான்னாலும் இன்னைக்கு நான் இருந்த நிலமை அப்படி). கொஞ்ச நேரத்துல நல்லா ஒக்கப்ப்டுவோம்கிற எண்ணத்துல என் புண்டை இன்னும் நல்லா ஈரமாகி எதிர்பார்க்க ஆரம்பிச்சது (இதுவரைக்கும் அவன் என்ன சரியா ஒத்ததே இல்ல, மூணு, நாலு ஸ்ட்ரோக்லயே அவனுக்கு தண்ணி வந்துடும். இருந்தாலும் இன்னைக்கு எனக்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு இருந்தது. இல்லைன்னாலும் அந்த மூணு, நாலு குத்தாவது வேணும்னு என் புண்டை துடிச்சுக்கிட்டு இருந்துச்சு.)\nடக்குனு என்னையும் எழுப்பி, கட்டிப் பிடிச்சு பின்னால் கை வைச்சு என் நைட்டி ஸிப்பை அவிழ்த்தான். என் பிராவையும் உடனே கழட்டி எறிஞ்சான். ஆனா, துள்ளி வெளி வந்து நிமிர்ந்து நின்ன என் முலைகளைக் கூட கவனிக்காம, என் பேண்டியையும் அவன் கை வைச்சுத் தள்ள, நான் தடுத்து கட்டி பிடிச்சு காதோரம் ஒரு கிஸ் அடிச்சு என்ன இவ்ளோ அவசரம் என்றேன். ரம்யானு முனகிக்கிட்டே என் முதுகெல்லாம் நல்லா தடவி, என் குண்டியைப் பிசைஞ்சு அப்பிடியே பேண்டி மேலாக என் ஈரமான கூதியைத் தடவினான். இப்போ திரும்பவும் என் பேண்டியைக் கீழே தள்ள, நான் தடுக்கவில்லை. நானே இப்போ அவசரத்தில்தான் இருந்தேன். நானே பேண்டியை அவிழ்த்து அதிலிருந்து வெளிய வந்தேன். கிட்டத்தட்ட என்னால் இனிமேல் காத்திருக்கவே முடியாது என்ற நிலைக்கு வந்தேன். அவனை அப்ப்டியே ப்டுக்கையில் தள்ளி, வயிற்றில் ஆரம்பித்து மார்பு வரை முத்த மழை பொழிந்தேன்.\nதீடிரென்று என் தலையப் பிடித்து கிழே தள்ளி என் வாயறகே அவன் சுண்ணியை வைத்தான். இதுவரை நான் அதை செய்ததில்லை. கதைகளில் எல்லாம் படித்து எனக்கு அதில் எந்த ஆட்சேபணையும் இல்லைன்னாலும், இதுவரை என் புருஷன் கேட்டதில்லை அதனால் செய்ததில்லை. இப்போ என் புருஷனுக்குமா இப்படியெல்லாம் எஞ்சாய் பண்ண ஆசை இருக்குனு ஆச்சரியாம இருந்திச்சி. இருந்தாலும், எனக்கும் ஆசை ஏறி உடம்பில்லாம் என்னவோ பண்ணியது.\nஉடனே அவன் பூலை அழுத்தமா முத்தமிட்டேன். அவனுக்கு வேர்த்துக் கொட்டி மூச்சு வாங்க ஆரம்பிச்சது. நான் ரெண்டு சப்பு சப்பினதுமே, அவன் “ரம்யா ஆஆஆ…” இனு முனகிகிட்டே என் தலைய அழுத்தி வேகமா வாயில் வைச்சு அழுத்தினான். அவனுக்கு உடனே தண்ணி வந்துவிட்டது. என் வாயில்லாம் அவ்னுடய விந்து நிரம்பி வழிந்தது. நான் எல்லாத்தையும் முழுங்கினேன். இவ்வளவு சீக்கிரம் நான் எதிர் பார்க்கவேயில்லை. அவன் அவனுடய உச்ச கட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமா இறங்கி வந்து கொண்டிருந்தான். டயர்டாகி படுத்திருந்தான்.\n“ஸாரி ரம்யா ரொம்ப டயர்டா இருக்கு..என்னால முடியல…ம்ம்ம்…ஆனா ரொம்ப தாங்க்ஸ்” என்றான்.\nஎனக்கு ஒண்ணும் புரியலை. அவன் டக்குனு திரும்பி படுத்துக் கிட்டான். நான் ஊம்பினதுக்கு தாங்க்ஸ் சொல்றானா? ஆனா நான் கொஞ்சம் கூட சந்தேஷப்படலியே…அவனால என்ன சந்தோஷப்படுத்த முடியல. எனக்கு கோபம், வெறுப்பு, காம வெறி எல்லாம ஒரு சேர வந்தது. என் உடம்பெல்லாம் சூடாகி புண்டை ஈரமா ஃபுல் செக்ஸ் மூட்ல இருந்து டக்னு சோகமா அழுகை வர்ர மாதிரி ஆகிடுச்சு. “சே!! என்னடா வாழ்க்கை இதுனு தோணிச்சு” இதுக்கு நான் முதல்லயே அவன தொடமா ஆசைய அடக்கி படுத்திருக்கலாம். இப்படி ஆசைய கன்னா பின்னானு துண்டி விட்டு, ஆனா புண்டைய தொடமலே விட்டா, என்னால உணர்ச்சிகளை அடக்கவே முடியல.என் நிலமை எந்த பொண்ணுக்கும் வரக்கூடாது.\nநேரா ரமேஷ் ரூம்கிட்ட வந்த்தேன். தூங்கியிருப்பான்னு நினைச்சேன். ஆனா இன்னும் லைட் எறிஞ்சது. கதவ தட்டினேன். வந்து திறந்தான். கையில ஒரு புக் வைச்சிருந்தான். ஓ!! படிச்சிட்டிருக்கானா!! சே!! ஒரு நல்ல பையன நம்ம ஆசைக்காக இவனை டிஸ்டர்ப் பண்ணணுமானு யோசிச்சேன். ஆனா, காலையில என்ன அவன் பாத்ரூம்ல பார்த்த போது அவன் கண்ல தெரிஞ்ச காமம், நைட்டியோட அவங்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போது சந்த்தர்ப்பம் கிடைச்சப்பல்லாம் என் கழுத்துக்கு கீழேயே இருந்த அவன் கண்களையேல்லாம் ஏற்கனவே பார்த்துருந்ததாலே எனக்கு தைரியம் வந்தது.\n“என்னக்கா! இந்த நேரத்துல?” என்றான்.\nநான் பேசுற நிலையிலேயே இல்ல. அவன் தோள்கள், பனியனுக்கு மேல காடா தெரிஞ்ச அவன் மார்பு முடிகள் எல்லாத்தையும் பார்துக்கிட்டே அவன் கிட்டப் போய் அவன் ரெண்டு கையையும் என் கைகளால பிடிச்சேன். எப்போதும் அவன் கண்ண மட்டுமே பார்த்து பேசுற நான் இப்போ நடந்துக்கிறதப் பார்த்து அவன் கிட்ட கொஞ்சம் அதிர்ச்சி தெரிஞ்சாலும் என் நிலை அவனுக்கு புரிஞ்சிருக்கணும். நான் அவன லேசா கட்டிப்பிடிச்சு அவன் ரெண்டு கன்னத்திலேயும் கிஸ் பண்ணேன்.\nஅவன் டக்குனு சுதாரிச்சுகிட்ட மாதிரி என்ன தள்ளி “என்னக்கா என்ன பண்றீங்கன்னான்”. ஆனா இதுக்கெல்லாம் பயப்ப்ட்டு பின் வாங்கற நிலையில நான் இல்ல. திரும்பவம் அவனக் கட்டிக்கிட்டு,\n“ரமேஷ்!! நீ காலையில பாத்ரூம்ல என்ன எட்டிப் பார்க்கிறது, எப்போதும் என்ன வித்தியாசமா பார்க்கிறது எல்லாம் எனக்குத் தெரியும். இப்ப நீ எனக்கு வேணும்….ப்ளீஸ் ரமேஷ்!!” என்றேன் கொஞ்சும் குரலில்.\nஎனக்கு எல்லாம் தெரியுங்கிறது அவனுக்கு கொஞ்சம் ஷாக்கா இருந்தாலும் உடனே புரிஞ்சுக்கிட்டான். உடனே என்னைக்கட்டிப்பிடிச்சான். நான் அவன் நெத்தியில அரம்பிச்சு முகமெல்லாம் கிஸ் பண்ணேன். அவனும் என் கன்னங்களில் முத்தம் கொடுத்தான். அவனுடய பிடி கொஞ்சம் கொஞ்சமாக இறுகியது. எனக்கு இப்போத்தான் ஒரு உண்மையான ஆணிண் அழுத்தமான ஸ்பரிசம் புரிஞ்சது. என் மனசுல இருந்த விரக்தியெல்லாம் கொறஞ்சு முழுக்க முழுக்க காம உணர்ச்சியில கிறங்க ஆரம்பிச்சேன். நானும் அவனை நல்லா கட்டிப்பிடிச்சு அவன் முதுகெல்லாம் தடவினேன்.\n“அக்காஆஆ…” னு செக்ஸியா முனகினான்.\n“இன்னும் என்னடா அக்கா…ரம்யானு சொல்லு…” என்றேன் வெட்கத்துடன். என் குண்டிகளைத் தடவிக்கிட்டே\n“ரம்யா குட்டி…இது நிஜம்தானா என்னோட பல நாள் கனவு நிறைவேற போகுதா..” ன்னான்.\nரமேஷ் என்ன அப்பிடியே தூக்கி கட்டிலில் போட்டான். வாவ் என்ன பலம்…ன்னு நான் அசந்து போனேன். என் பக்கத்தில் படுத்து திரும்பவும் கட்டிப் பிடிச்சு என் உதடு பக்கமா முகத்தை வைச்சுக்கிட்டு, கையக் கொண்டு வந்து என் உதடுகளை ரொமான்டிக்காக வருடினான். அவன் முச்சு என் முகத்தில் மோதி என்னை அசத்தியது. நானே அவன் கைகளை விலக்கி விட்டு என் உதடுகளால் அவன் உதடுகளில் அழுத்தமாக கிஸ்ஸடிச்சேன். அவன் சட்டுனு அவன் நாக்கை என் வாய்க்குள் விட்டு என் நாக்கை தடவினான். இது எனக்குப் புதுசாக இருந்திச்சு. என் கணவன் வெறுமனே கிஸ் மட்டும்தான் பண்ணுவான் (அதுவும் பெரும்பாலும் கன்னத்துலதான் நான் தான் வெறியில அவனுக்கு அடிக்கடி லிப் டு லிப் அடிப்பேன்).\nஅவன் நாக்கு என் நாக்க கட்டிப் புரள, எனக்குள்ள மீண்டும் காமத்தீ பற்றி எரிய ஆரம்பிச்சது. அவன் பரந்த ஆண்மையான மார்புகள் என் பெரிய முலைகளை நன்றாக அழுத்த என் நிப்பிள்கள் செக்ஸ் உணர்ச்சியால் நட்டுக்கிட்டு குத்தீட்டியாக நின்றது. அவன் சுண்ணி விரைத்து லுங்கிகுள்ளே திணறியபடி என் தொடைகளைத் தடவி வெறி ஏற்றிக் கொண்டிருந்தது. ரமேஷ் என் நைட்டி ஸிப்பை அவிழ்த்தான். நான் அவன் லுங்கியைப் பிடித்து இழுத்தேன். நைட்டியும் லுங்கியும் விடை பெற்று தரைக்குப் போய் ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சது.\nரமேஷ் தள்ளிப் போய் என்னை அப்ப்டியே முழுங்கற மாதிரி பார்த்தான். என் ரப்பர் போன்ற முலைகள் உணர்ச்சியால் இன்னும் கொஞ்சம் டைட்டாகி பிராவுக்குள் திமிறுவதை ரசித்து சிரித்தபடியே பார்த்தான். அடுத்து அவன் பார்வை, ஃப்ளாட் ஆக துளை கொஞ்சம் ஆழமாக இருந்த தொப்புளை வருடியது. இறுதியாக லேசாக முடிகள் வெளியே தெரியும் என் பேன்டியில் நிலைத்தது. அப்போதான் இன்னும் லைட்டைக் கூட ஆஃப் பண்ணாத என் அவசரம் புரிந்து லேசாக வெட்கப்பட்டு சிரித்தேன்.\n“ஆஹா ரம்யா! இந்த கோலத்தில அதுவும் வெட்கப்படும்போது தேவதை மாதிரி இருக்கே..” என்றான்.\nகொஞ்ச நேரம் முன்னாடி வரை அக்கானு மரியாதையா கூப்பிட்டுக்கிட்டு இருந்த்த பையன் என்னைக் கொஞ்சறது என் ஆசையை ஏத்தியது. நானும் அவன் ஜட்டி முன்னாடி வந்து நிக்கறதைப் பார்த்து ரசிச்சேன். உடனே அவன் கிட்டப் போய் ஜட்டிக்கு மேலே தேச்சேன்.\n“ம்ம்ம்…இரு ரம்யா அதுக்கு இப்போ ஒண்ணும் அவசரமில்லைன்னான்”.\nஎன் நெத்திப் பொட்டில் ஆரம்பிச்சு, வரிசையா முத்தமிட ஆரம்பிச்சான். கன்னங்கள், கண்கள், கழுத்து, பின் கழுத்தில் அழுத்தமான ஒரு கிஸ், பிராவுக்கு மேலே உள்ள மார்புப் பகுதி, பிராவுக்கு மேலேயே நிப்பிள்ஸ்ல, அக்குள், தொப்புள்..என்று மாறி மாறி கிஸ் அடிச்சு, நக்கி, லேசா கடிச்சு என்னை கிறங்க வைச்சான். இவ்வளவும் செய்யும் போது அவன் கைகள் என் தொடையை வருடிக் கொண்டே இருந்தது. ஆனா என் பேன்டியை அவன் தொடவே இல்ல. அதிக பட்ச எதிர்பார்ப்பில், என் பெண்மை நன்றாக சுரந்து,\nஏற்கனவே இன்று பூராவும் ஈரமா இருக்கும் பேன்டியை இன்னும் ஈரமாக்கியது. கீழே போயி என் பாததில் ஆரம்பிச்சு தொடைகள் எல்லாம் முத்த மழை பொழிந்தான். என் தொடைகளின் உட்புறமும் கிஸ்ஸடிச்ச்சான். ஆனா முக்கியாமான இடத்தை மட்டும் நெருங்கவே இல்லை. என் எதிர்பார்ப்பு எல்லைகளை கடக்க, அவன் டக்குனு மேலே வந்து என் தொப்புளில் கிஸ்ஸடிச்சு நக்கினான். நான் கிறங்கினாலும் சற்று ஏமாற்றமாக இருந்தது. ஆனா நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்காத விதத்தில் சட்டுனு பேன்டிக்கு மேலாக என் கூதியில் வாயை வைச்சு ஒரு அழுத்தமான கிஸ் கொடுத்தான். நான் அப்பிடியே பறக்கிற மாதிரி ஃபில் பண்ணேன். பையன் புதுசில்லை நல்லா அனுபவம் உள்ளவன் போலன்னு நினைச்சிக்கிட்டேன்.\nநானும் அவன் உடம்பு முழுக்க அதே மாதிரி கிஸ்ஸடிச்சு, நக்கினேன். எனக்குள்ளே ஹார்மோன்ஸ் என்னென்னவோ பண்ண உணர்ச்சிகளின் உச்சத்தில் இருந்தேன். ரமேஷ்ஷும் அதே நிலையில் இருப்பது எனக்குப் புரிஞ்சது. “திரும்பிப் படு ரம்மி…” ன்னு முனகினான். எனக்கு ஏன்னு புரியெலைன்னாலும் அவன் சொன்னபடி திரும்பி படுத்தேன். என்ன பின்னால இருந்து கட்டிப் பிடிச்சான். அவன் இடது கை என் முலைகளை கசக்க, வலது கை என் தொப்புளை தடவ, பின் கழுத்தில் அழுத்தமாக கிஸ்ஸடிச்சான். நான் இப்படியும் ஒரு இன்பமா என்று அசந்து போனேன். அவன் வலது கை மெல்ல ஊர்ந்த்து என் பேன்டியைத் தடவ ஆரம்பிச்சது. கொஞ்ச நேரத்தில் மேல் வழியா கைய விட்டு உள்ள தடவினான். நான் என்னையே மறந்து “ம்ம்ம்….ரமேஷ்…ஆஆ” என்று முனக ஆரம்பிச்சேன் (இதுவும் எனக்கு புதுசுதான். இதுவரை என் கணவன் தொட்டு நான் முனகும் நிலை வரை வந்ததில்லை. என் இளமைக்கு இந்த அளவு தேவை என்பது தெளிவாக புரிந்தது).\nஎன் உணர்ச்சிகள் அடுத்து நிலைக்குப் போய் எதிர்பார்க்க தொடங்கிருந்தது. ரமேஷ் கில்லாடியாச்சே அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும். பின்னாலிருந்து என் பிராவின் உக்குகளை அவிழ்த்தான். நான் உடனே பிராவைக் கழட்டிப் போட்டேன். அவனும் பனியனையும் ஜட்டியையிம் உடனே கழட்டி எறிஞ்சான். என் பார்வை என்னையும் அறியாமல் கீழே போய் அவன் கோலைப் பார்த்தது. ஆஹா என்று நான் பிரமித்துப் போனேன். என் புருஷனை விட கொஞ்சம் பெரிசு ஆனாலும் அவரேஜ் சைஸ் தான் இருக்கும். ஆனா அந்த திக் நெஸ்…பார்க்கவே எனக்கு கிக் ஏறியது. உடனே கையால் தடவினேன். “ம்ம்ம்..” என்று ரசிச்ச ரமேஷ், கீழே கைய கொண்டு போய் என் பேன்டியை தள்ளினான். அவன் என் புண்டையைத் தடவ, நான் பேன்டியை முழுசாக அவிழ்த்தேன்.\nநான் அவன் சுண்ணியையே தடவ, அவன் கவனம் இப்பொது டைட்டான என் முலைகளின் மேல் இருந்தது. கொஞ்ச நேரத்தில் என் மார்பு முழுக்க கிஸ்ஸடித்து. ஒரு கையால் இடது மார்பை சுகமாக வருடியபடி, வலது நிப்பிள்ஸை சப்ப ஆரம்பிச்சான். எனக்கு ரொம்ப சுகமாக இருந்தது. அவன் கொஞ்ச நேரத்தில் வேகத்தை அதிகரிக்க, நான் முனகினேன். “ம்ம்ம்…ஆஆஆ..ரமேஷ்”. நேரம் ஆக ஆக என் எதிர்பார்ப்புகள் கிளறி விடப்பட்டு, என் புண்டையத் தொட மாட்டானா என்று எனக்கு வெறியே ஏற்பட்டது. (இதைத்தான் புண்டை அரிப்புனு சொல்வாங்களோ என்று நினைச்சேன்). நான் கையை அவன் சுண்ணியிலிருந்து எடுத்து, நானே என் புண்டையை கொஞ்சம் தேச்சிக்கிட்டேன். “என்ன ரம்மிக்குட்டி…அவசரமா…” என்று டக்கென்று என் கூதியை அழுத்தமாக தடவினான்.\nஉடனே திரும்பி படுத்து அவன் கோலை என் முகத்து கிட்ட கொண்டு வந்தான். அவன் முகம் என் புண்டையை நெருங்க…69 போனோம். நான் அவன் பூலைப் பிடித்து நன்றாக இழுத்து விட ஆரம்பிச்சேன். அது இன்னும் பெரிசாக ஆரம்பிச்சது. அவன் என் மன்மத மேட்டில் நான் கொஞ்சம் டிரிம் செஞ்சு வைச்சிருந்த முடிகளையேல்லாம் தடவினான். அப்புறம் என் புண்டை இதழ்களை லேசா விரிச்சு வேகமா என் புண்டை ஒட்டையயும் கிளிட்டையும் நல்லா தேச்சான். ஒரு விரலை உள்ளே விட்டு ஒத்தெடுத்தான். நான் “ஆஆஆ…” னு முனகி நல்லா எஞ்சாய் பண்ணேன். அதே வேகத்துல அவன் சுண்ணியில் என் கைகளால் விளையாடி, அவன் கொட்டைகளையும் தடவினேன்.\nஅவனும் “ம்ம்ம்..” னு முனகிக்கிட்டே டக்குனு என் புண்டையில் வாயை வைச்சான். அவன் நாக்கு என் புண்டை ஒட்டைய மேலிருந்து கீழே ஃபுல்லா நல்லா நக்க..,”ம்ம்ம்…..ஆஆஆ” என் முனகல் இப்போ நல்லா சத்தமாகவே மாறி இருந்திச்சு. நான் அவன் பூலை நல்லா இறுக்கிப்பிடிச்சு கைய முன்னும் பின்னும் வேகமா ஆட்டினேன். அவன் சட்டுனு நிறுத்தி,\n“என்ன ரம்மி டியர்…நான் அடுத்த லெவல் போய்ட்டேன்…நீ இன்னும் கையிலேயே வைச்சிருக்கியே..” ன்னான்.\nநான் உடனே எனக்கு சொர்க்கத்தைக் காட்டப் போகும் அந்த கோலுக்கு அழுத்தமாக கிஸ்ஸடிச்சேன். நல்லா வாயில் வைச்சு சப்பினேன். “ம்ம்ம்…ஆஆஅ” னு முனகிய ரமேஷ், நாக்க என் ஒட்டைக்குள்ள விட்டுட்டு, ஒரு கையால கிளிட்டை அழுத்தமா தேச்சிக்கிட்டே, இன்னோரு கையப் பின்னால கொண்டு போய் குண்டியை கசக்கினான். இதை என்னால தாங்கவே முடியல. என் உடம்பெல்லாம் சிலிர்த்துக்கிச்சு. நான் அவன் பூலை நல்லா வேகமா சப்பினேன். ஒரு சில வினாடிகள்தான் இந்த நிலையில இருக்கோம். ஆனா, இன்னும் ஒண்ணு ரெண்டு செகண்ட் அவன் தொடர்ந்தா எனக்கு தண்ணி வந்துடும் போல இருந்திச்சி. அவனுக்கும் அதே நிலை தான்னு நினைச்சேன்.\n“ஆஆஆ ரமேஷ் ஃபாஸ்ட்ட பண்ணு” என்றேன்.\nஆனா அவன் நிறுத்திட்டு திரும்பினான்.என்னை அப்படியே கட்டிப் பிடிச்சு, லிப் டு லிப் கிஸ்ஸடிச்சான். காம வெறியோடு ரூமுக்கு வந்த என்னை முதல்ல ரொமாண்டிக்கா விளையாடி காதல் மூடுக்கு கொண்டு போய் அப்பறம் ரொம்ப நேரம் காம களியாட்டங்களால திரும்பவும் எனக்கு வெறி ஏத்தி வைச்சிருக்கிற அவனை ரசிச்சு நானும் அழுத்தமா கிஸ்ஸடிச்சேன். அவன் மார்பு என் முலைகளை இறுக்க, எங்க நிப்பிள்கள் ஒன்றொடொன்று தடவின. அவன் தொடைகள் என் தொடைகளை உரச, அவன் சுண்ணியால் என் புண்டையத் தடவினான்.\nஆஹா!!! இதுக்குத்தானே இவ்வளவு நேரமா காத்திருந்தேன். என் கால்கள் தானக விரிந்து கொடுத்தன. கிட்டத்தட்ட அரை மணி நேர முன் விளையாட்டுக்களால், சொதசொதவென்றிருந்த என் கூதியில் அவன் சுண்ணி ஈஸியா போச்சு. முதல் அழுத்தில் பாதி உள்ளே போனது. ரெண்டாவது ஜெர்க்கில் ஃபுல்லா உள்ளே போனது. அவன் தெளிவான ரிதம்மில் மெதுவாக உள்ளே வெளிய ஆட்டத்தை ஆரம்பிச்சான். அப்படியே என் முலைகளை கசக்கினான். அவனுடைய திக்கான சுண்ணி என் புண்டையில், இதுவரை கண்டிராத புதுப்புது உணர்ச்சிகளை தூண்டியது. நான் சொர்க்கத்தில் மிதந்த்தேன். இவ்வளவு நேர விளையாடுக்குப் பிறகும் ரமேஷின் கன்ட்ரோல் என்னை வியக்க வைச்சது (என் புருஷன் இதில் கால் வாசி நேரம் கூட தாக்குப் பிடிக்க மாட்டான்).\nஅவன் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்க, நான் சுகத்தில் சத்தமாக முனகினேன் “ஆஆஆ…அம்மாஆஆ…ம்ம்ம்..,ம்ம்…ம்”. எனக்கு வேர்த்துக் கொட்டியது. என் முனகல் அவனை முழு வேகத்துக்கு கொண்டு வந்தது. இருவருக்கும் முச்சு வாங்கியது. என் புண்டை தசைகள் என் கட்டுப்பாடு இல்லாமல் மூடித் திறந்து, அவன் பூலை பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது. என் மூச்சுத் தடுமாற நான் உச்சம் நோக்கிப் போக ஆரம்பிச்சேன். ரமேஷ் புரிந்து கொண்டு இன்னும் வேகத்தைக் கூட்டி, என் முலைகளைப் பிசைந்து, என்னை இறுக்க, என் உடம்பெல்லாம் சிலிர்த்து, அடி வயிற்றிலிருந்து புண்டை வரை ஒரு இன்ப உணர்வு பரவியது. அடக்க முடியாமல் நான் சத்தமாக “ஆஆஆ…ரமேஷ்….எனக்கு வருதுடா” னு கத்தினேன். என் புண்டை திறந்து, இன்று முழுக்க ஏறிய வெறியெல்லாம் தண்ணியாக வெளியேறி, வெள்ளமாக அவன் சுண்ணியை நனைத்தது. நான் அப்படியே சொர்க்கத்தில் மிதந்தேன்.\nநான் மெல்ல மெல்ல என் இன்ப உலகத்திலிருந்து கீழே இறங்கி வர, ரமேஷின் வேகம் இப்போது மேலும் அதிகரிச்சது. அவன் எனக்கு லிப் டு லிப் கிஸ் அடிச்சு, கைய வைச்சு என் குண்டியைக் கசக்கினான். இதுவரை நான் அறியாத வித்தியாசமான உணர்ச்சியாக நான் மீண்டும் உச்சம் நோக்கிப் போக ஆரம்பிச்சேன். இன்னும் கட்டுப்படுத்தியபடி, ரமேஷ் தொடர, நான் மீண்டும் இரண்டு முறை சொர்க்கத்தை அடைந்து, என் புண்டையிலிருந்து மன்மத ரசம் பொங்கியது. நான் மூன்று ஆர்கசம்களுக்குப் பிறகு, மீண்டும் உச்சம் நோக்கிப் போய், என் புண்டைத் தசைகளை இறுக்கி அவன் சுண்ணியைப் பிடிக்க.., என்னுடைய அந்த தாக்குதலுக்கு ரமேஷின் பூல் கட்டுப்பாட்டை இழந்தது. “ஆஆஆ…” என்று ரமேஷ் முனகியபடி என்னை இறுக்கினான். அவனுடைய விந்து சூடாக எனக்குள் பாய, இருவரும் ஒன்றாக உச்சம் அடைந்த்தோம். அவனுடைய விந்து என் புண்டையை நிரப்பி, மீதி என் காம நீரோடு சேர்ந்து வெளியேறி, என் தொடைகளை நனைத்தது. கொஞ்ச நேரம் அப்படியே என்னைத் தடவிக் கொண்டிருந்து விட்டு, இப்போது சுருங்கிப் போயிருந்த சுண்ணியை அவன் வெளியே எடுத்தான். நான் மெல்ல மெல்ல சுய நினைவுக்கு வர ஆரம்பிச்சேன்.\nசிறிது நேரம் விலகிப் படுத்து ரெஸ்ட் எடுத்தோம். இப்போதுதான் என்னுடைய இளமையின் இனிமையும், இந்தப் பருவம் பெண்களுக்காக ஒளித்து வைத்திருக்கும் சுகங்களின் அருமையும் எனக்குப் புரிந்த்தது. ரமேஷின் சுண்ணி இப்போது சின்னதாகி இருந்தாலும், அப்போதும் அவன் கைகள் என் உடம்பெல்லாம் தடவிக் கொண்டு தான் இருந்தது. கொஞ்ச நேரம் அப்படியே படுத்திருந்தோம். எனக்குப் பாத்ரூம் போக வேண்டும் போல் இருக்க ரமேஷிடம் சொல்ல நினைத்தேன் (என் கணவன் வீட்டுக்கு வருவதற்கு முன்னால் முன்னிரவில் சாப்பிட்ட பிறகு போனதுதான்). ஆனால் அதற்குள் அவன் விளையாட்டுக்கள் வேகம் எடுத்திருந்தன.\nஎனக்கும் ஒன்னுக்குப் போக வேண்டுமென்ற ஃபிலிங்க் குறைந்த்து மீண்டும் செக்ஸ் உணர்வுகள் ஆக்ரமித்தன. மீண்டும் அதிக நேரம் விளையாடினோம். முன்பு போலவே கொஞ்ச நேரம் 69 ல் விளையாடி வெறி ஏற்றினான். ஆனால் இந்த முறை இறுதியில் என்னை நான்கு கால்களில் நிற்க வைத்து, பின்னாலிருந்து doggy style ல் நன்றாக ஒத்தெடுத்தான். இத இரண்டாவது முறை என்பதால், ரமேஷ் முன்பைவிட அதிக கன்ட்ரோலில் இருந்தான். என்னை முன்பைவிட பலமுறை உச்சம் அடையச் செய்தான். பின், மீண்டும் ஒருமுறை அவன் கஞ்சியை என் புண்டையில் இறக்கினான். நான் இன்பத்தில் துடித்தேன்.\nஎவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது. யாரோ என் குண்டியில் தட்டுவது போல் இருக்க, சட்டென்று எழுந்தேன். ரமேஷ் நின்று கொண்டிருந்தான். இப்போது லுங்கி பனியன் எடுத்து போட்டிருந்தான். சிரித்தபடியே,\n“என்ன ரம்யா!! படுக்கையெல்லாம் ஈரமா ஆக்கிட்ட..” என்றான்.\nநான் அப்போதுதான் சுய நினைவுக்கு வந்திருந்தேன். எந்த டிரெஸ்ஸும் இல்லாம, படுக்கையிலயே ஒன்னுக்குப் போய்ட்டு அதுலயே படுத்து தூங்கி இருந்த என் நிலைமை எனக்கே வெட்கத்தை ஏற்படுத்தியது. இதெல்லாம் நானான்னு எனக்கே சந்தேகமா இருந்திச்சு. வெட்கப் பட்டுக்கிட்டே,\n“ஸாரி ரமேஷ்”.. என்றேன்.\n“பரவாயில்லை ரம்யா !!…” என்றான்.\nநான் “தாங்க்ஸ் ரமேஷ்” என்றேன்.\n“எதுக்கு..??” என்றான் விழமப் புன்னகையுடன்.\n“எல்லாத்துக்கும்தான்..” என்றேன் வெட்கச்சிரிப்போடு.\n“சரி நான் இதெல்லாம் கிளீன் பண்றேன்..” என்றேன்.\n“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் அக்கா!! இப்போ மணி எட்டாச்சு…எழுந்து கிளம்புங்க..” என்றான். நான் குழப்பமாக பார்க்க,\n“பகல்ல நீங்க எனக்கு பழய ரம்யா அக்காதான்…நைட்ல என் ரம்யா டார்லிங்க்” என்று சிரித்தான். நானும் சந்தோஷமாக எழுந்து டிரெஸ் போட்டுக் கொண்டேன்.\nரூமை விட்டு மகிழ்ச்சியாக சிரித்தபடி வெளியே வந்தேன். தீடிரென்று என் கணவனுக்கு நேற்று நடந்தது எல்லாம் தெரிந்திருக்குமா இல்லையா என்று ஒரு எண்ணம் வந்தது (ஏனென்றால் நேற்று நான் கிளம்பி வந்த போது அவன் நிச்சயமாக அவன் தூங்கி இருக்க வாய்ப்பில்லை). ஆனால், நேற்றிரவு கிடைத்த சுகத்தின் திருப்தி அதைப் பற்றி எல்லாம் என்னை அதிக நேரம் என்னை சிந்திக்க விடவில்லை.\nஎல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, என் ரூமுக்கு வந்தேன். என் கணவன் இன்னும் தூங்கிக்கோண்டிருந்தான் (ஆஃபிஸிலிருந்து லேட்டாக வருவதால், பகலில் அதிக நேரம் தூங்கி விட்டு லேட்டாக ஆஃபிஸ் போவது அவனுக்கு வழக்கம்தான்). நேற்றைய இன்ப நினைவுகளுடன், ரெடியாவதற்காக பாத்ரூம் உள்ளே போனேன். கண்ணாடியைப் பார்த்த உடன், ரமேஷிடம் சொல்லி முதலில் அந்த ஸ்டுலை எடுத்துட்டு, கண்ணாடியை சரி பண்ணனும். வேற யாரவது பாத்துடப் போறங்கனு நினைச்சு சிரிச்சிக்கிட்டேன் (ரமேஷிக்குத்தான் இனி இதெல்லாம் தேவையில்லையே).
ஜார்கண்ட் மாநிலம் Archives • Seithi Solai\nTag: ஜார்கண்ட் மாநிலம்\nரோப் கார் விபத்து…. ஒன்றோடு ஒன்று மோதல்…. வைரலாகும் வீடியோ….!!!!\nமலை உச்சியில் ரோப் கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் காட்சிகள் தற்போது சமூக தளங்களில் வேகமாக பரவி வருகிறது. ஜார்கண்ட்…\nவாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை நூதன முறையில் திருடியுள்ள ஏமாற்று கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநாட்டில் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடும் கும்பல் ஏராளமாக பெருகி வருகிறது. அந்தவகையில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த2ஏமாற்றுக்காரர்கள், வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர் போல பேசி பலருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூபாய் 82 லட்சம் வரை நூதன முறையில் திருடிவருவது தெரியவந்துள்ளது. கடந்த மாதம் ஜனவரி7ஆம் தேதியன்று ஏமாற்றுக்காரர்களால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஅந்த புகாரின் பெயரில் பாதிக்கப்பட்ட நபர் ‘மேக் மை டிரிப்’ தளத்தில் தனது பணத்தை திரும்ப பெறுவதற்காக வாடிக்கையாளர் சேவை மைய தொலைபேசி எண்ணை ஆன்லைனில் தேடி உள்ளார். அப்போது இந்த போலி ஏமாற்று கும்பலைச் சேர்ந்தவரின் தொலைபேசி எண்ணை வாடிக்கையாளர் சேவை மைய தொலைபேசி எண் என்று பதிவேற்றியுள்ளார். இதனை அடுத்து இந்த விஷயத்தை அறியாத பாதிக்கப்பட்ட நபர், அந்த வாடிக்கையாளர் சேவை மைய எண்ணை தொடர்பு கொண்டு அவரிடம் பேசியுள்ளார். அவரின் அறிவுறுத்தல் படி ஒரு படிவத்தை ஆன்லைனில் நிரப்பி கொடுத்துள்ளார்.\nஅதன்பின் ‘எனி டெஸ்க் மொபைல் ஆப்பை’ அவர் கூறியவாறு பதிவிறக்கம் செய்துள்ளார். மேலும் அவர் அனுப்பிய எஸ்.எம்.எஸ்-ஐயும் திறந்து படித்து, பின் அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து உள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட நபருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ.4 லட்சம் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்ட போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அபிலேஷ்குமார் (22) மற்றும் அவரின் கூட்டாளி ராஜு அன்சாரி (22) ஆகியோரை ஜார்க் கண்ட்டில் கைது செய்துள்ளனர். மேலும் இந்த விசாரணையில், இதேபோல இந்த ஏமாற்று கும்பல் பலரையும் ஏமாற்றி ரூ.22 லட்சம் வரை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குகளில் இருந்து அபகரித்து உள்ளது தெரியவந்தது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியக்காரி என்று கூறி மூதாட்டியை அடித்து தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம்,…\nமனைவியின் கடைசி ஆசை…. 17 லட்சம் ரூபாய் தங்க நகைகளை அள்ளிக்கொடுத்த…. கணவரின் நெகிழ்ச்சி செயல்…!!!\nஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஷ்மி பிரபா என்ற பெண் மகாகாலேஸ்வரரின் தீவிர பக்தர் ஆவார். இவர் அங்குள்ள கோவிலுக்கு தவறாமல் சென்று…\n12 மாம்பழத்திற்கு 1.2 லட்சம் ரூபாயா… 6-ம் வகுப்பு மாணவிக்கு அதிர்ச்சி கொடுத்த தொழிலதிபர்… காரணம் இதுதான்…!!!\nமாம்பழம் விற்ற பெண்ணிடம் இருந்து பன்னிரண்டு மாம்பழங்களை 1.2 லட்சத்திற்கு தொழிலதிபர் வாங்கியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம்,…\nஜூலை 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு… ஜார்க்கண்டில் வெளியான அறிவிப்பு…!!\nஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது.…\nதன் காதலை நிரூபிக்க… சிறுமி எடுத்த விபரீத முடிவு… ஒருதலை காதலால் நேர்ந்த சோகம்… கதறும் பெற்றோர்கள்..!!\nஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவி ஒருவர் தன் காதலை நிரூபிப்பதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…\nமலம் கழிக்க சென்ற விதவை பெண்… தேடி சென்ற உறவினர்கள்… கண்ட கொடூரக்காட்சி…!!\nவிதவை பெண் ஒருவரை3நபர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள ஜார்க்கண்ட்…\nதலைக்கேறிய போதை ” ஒன்றரை வயது குழந்தையை கழுத்தை நெரித்து…” தந்தையின் கொடூர செயல்..!!\nகுடிகார தந்தை ஒருவர் குடித்துவிட்டு வந்து தனது ஒன்றரை வயது மகளை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட்…\nமாதம்9ஆயிரம் சம்பளம்… வாங்க வேலைக்கு போகலாம்… உடன் சென்ற 31 பெண்கள்… இடைத்தரகர் என்ன செய்தார் தெரியுமா?…!!!\nஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 31 பெண்களை தமிழ்நாட்டுக்கு கடத்த முயன்ற இடைத்தரகர் உட்பட3பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில்…
நீங்கள் பரிகாரம் செய்தும் காரியம் நடக்கவில்லையா ? | T.K.Moorthi,(D.H.A)\nநீங்கள் பரிகாரம் செய்தும் காரியம் நடக்கவில்லையா ?\nPosted on February 19, 2015 by tkmoorthi\nநீங்கள் பரிகாரம் செய்தும் காரியம் நடக்கவில்லையா அன்பர்களே.அப்போது நீங்கள் இதை பாருங்கள். அப்பைய தீட்சிதர் என்று ஒரு மகன் இருந்தார்.\nதமிழ்நாட்டில் சிறந்த அத்வைத வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவர். பாமர மக்களுக்கெல்லாம் சிவ தத்துவத்தையும் அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர்.\nபயணங்கள் பல செய்து வேதாந்தத்திலும் இலக்கியத்திலும் வாத-விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய புகழ் வடநாட்டிலும் காசி வரையில் பரவியிருக்கிறது.\nஇந்து சமயத்தின் தூண்களான கருமம், பக்தி, ஞானம் இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே இருந்து மறைந்தவர்.\nதீட்சிதருடைய கடைக்காலத்தில் அவருக்கு ஒருவித வயிற்று வலி (சூளை நோய்) அவரை மிகவும் வாட்டி வதைத்தது. அவர் சிறந்த யோக சக்திகள் உடையவராதலால், தியானம் செய்யவோ அல்லது யாராவது முக்கியப்பட்டவருடன் பேசவேண்டியிருந்தாலோ, ஒரு தர்ப்பை புல்லை அருகே போட்டு அந்த புல்லின் மேல் அந்த வலியை தன் தவ சக்தியால் இறக்கி வைத்துவிட்டு, தன் வேலையில் ஈடுபடுவாராம்.\nஅந்தப் புல் அது பாட்டுக்கு இப்படி அப்படி என்று துள்ளிக்கொண்டே இருக்குமாம். பிறகு வேலை முடிந்தவுடன் புல்லிடமிருந்து அந்த வலியை திரும்ப தனக்குள் வாங்கிக் கொள்வாராம்.\nஒரு பண்டிதருடன் இவ்வாறு ஒருமுறை வாதத்தில் ஈடுபட நேர்ந்தபோது, வழக்கம் போல, தமது வலியை தற்காலிகமாக தர்ப்பை புல்லின் மேல் இறக்கி வைத்துவிட்டு வாதம் புரியலானார். புல்லும் அதுபாட்டுக்கு துள்ள ஆரம்பித்தது.\nஒரு கட்டத்தில் வாதம் மிகவும் தீவிரமடைய, உட்கார்ந்திருந்த இருவரும் நின்றுகொண்டு வாதம் புரியலாயினர். புல் துள்ளுவது அதிகரித்து சற்று உயரமாகவே துள்ள ஆரம்பித்தது.\n“இந்த வயிற்று வலி என் கர்ம வினையால் எனக்கு வந்தது. நமது முந்தைய செயல்களினால் ஏற்படும் கர்ம வினையை எப்படியும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். அதிலிருந்து தப்பிக்க எண்ணக் கூடாது. முற்பிறப்பில் நான் செய்த சிறு பாவத்தின் பலன் தான் இந்த சூளை நோய். இப்போது நான் இதை அனுபவிக்கவில்லை எனில், இதை அனுபவிப்பதற்காக இன்னொரு பிறவி எடுக்க நேரிடும்.\nஅதற்காகத் தான் புல்லின் மீது இறக்கி வைத்துவிட்டு திரும்பவும் ஏற்றுக்கொள்கிறேன்!” என்றாராம்.\nஇதிலிருந்து மிகப் பெரிய தவசீலர்களே கூட கர்மாவிலிருந்து தப்பிக்க நினைக்காமல் அதை அனுபவித்து தீர்க்கவே முனைந்திருக்கிறார்கள் என்பது புரிகிறதா அன்பர்களே\n« செவ்வாய் தோஷ பரிகாரம் – சுலோகம்\nஉங்கள் குழந்தைகள் அதிக மார்க் எடுத்து பாஸ் ஆக »
SOP – School Reopen Instruction in Tamil - Kalvi Tips\nHome Unlabelled SOP – School Reopen Instruction in Tamil\nSOP – School Reopen Instruction in Tamil\nKalvi Tips 2:32 AM\nபள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் –தமிழாக்கம்\nபொங்கல் பிறகு பள்ளி திறப்பது தொடர்பாக பெற்றோரிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படுகிறது . அதில் பள்ளி திறப்பது தொடர்பான நிலையான வழிகாட்டல் அரசு வெளியிடபட்ட தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கும் பொருட்டு தமிழாக்கம் வெளியிடப்படுள்ளது.\nஅதில் உள்ள முக்கியான தகவல் பற்றி சுருக்கம்\nமுதல் கட்டமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் அரசு அறிவிக்கும் நாள் முதல் திறக்கப்பட்டு வாரத்தில்6நாட்கள் செயல்படும்\nஒரு வகுப்பில் 25 க்கு மாணவர்களுக்கு மிகாமல் தொகுதிகள் பிரிக்க வேண்டும்.\nஇணைய வழி மற்றும் தொலைதூர கற்றல் தொடரும் .\nபள்ளி வருவதை விட மாணவர்கள் இணையவழியாக கற்க விரும்பினால் அணுமதிக்கலாம். (பெற்றோர் அனுமதியுடன் )\nபெற்றோர்களின் எழுத்து பூர்வமான இசைவு கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கபடுவார்கள்.\nமாணவர்கள் வருகை கட்டாயபடுத்த கூடாது.அது பெற்றோர் சம்மதம் சார்ந்து இருக்க வேண்டும் .\nஉணவு பொருள்கள் ,குடிநீர் ,முக கவசம் போன்றவை மாணவர்களிடையே பறிமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்\nஉடற்கல்வி ,விளையாடு பாட வேளை , NCC மற்றும் NSS போன்றவை அனுமதி இல்லை.\nவகுப்பறை இருக்கை ஏறபாடு செய்யும் போது குறைந்தபட்சம் இருக்கை இடையே6அடி இடைவெளி பின்பற்ற வேண்டும் .\nஆசிரியர்கள் /பணியாளர்கள் ,மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.\nஆசிரியர் மற்றும் பணியாளர்கள் கட்டயம் அடையாள அட்டை அணிய வேண்டும்.\nஆசிரியர் மற்றும் பணியாளர்கள் தொட்டுணர் வருகை பதிவுக்கு இல்லை . பள்ளி நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்\nSOP for Health, Hygiene & Safety Protocols for schools Tamil Translation Pdf\nPosted by Kalvi Tips at 2:32 AM
தமிழ் ஓவியா: இந்து மதத்தை ஒழிப்பதற்காக இந்தியா படத்தை பொசுக்குங்கள்!\nஇந்து மதத்தை ஒழிப்பதற்காகவாவது யூனியன் ஆட்சியை (மய்ய அரசை) ஓழிக்க இந்தியா படத்தைப் பொசுக்குங்கள்! தோழர்களே! இந்நாட்டுக் குடிமக்களான நாம் (தமிழ்த் திராவிடர்) 100க்கு 90 பேர் இந்து மதம், இந்துமதக் கடவுள், புராண, இதிகாச சாஸ்திர அமைப்புகள் ஆகியவற்றின்படி, ‘சூத்திரர்கள்’. அதாவது மேல் சாதிக்காரர்களாகிய பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாகும். இந்து மதத்தின் கடைசி வேர் இருக்கும்வரை, இந்த நாட்டு மக்களைப் பிடித்துள்ள சூத்திரப் பட்டம் ஒழியாது; நிச்சயம் ஒழியாது.\n5. 50,000 ரூபாய் செலவில் வருஷா வருஷம் ராவணனை எரிக்கும் ‘ராமலீலா’' பண்டிகையில் ஆட்சி பீடத் தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது மத உணர்ச்சியை நன்றாகப் புலப்படுத்திக் கொள்ளுகின்றனர்.\n----------தந்தைபெரியார் - 'விடுதலை' தலையங்கம் 27-05-1960
நாம் தமிழர் - தேர்தல் 2019 - Page5- தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்\nநீங்கள் திரும்பி வந்து மனம் விட்டு கதைச்சதே பெரிய சந்தோசம் ராசா......\nசீமான் வலது சாரி என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் கிருபன்?\nபொருளாதாரத்தை பொறுத்தவரை அவர் சொல்வதெல்லாமே, மாடு மேய்பவனுக்கு அரசுவேலை, மீன்பிடிப்பவனுக்கு அரசவேலை என்று போல் பொட் தனமான அதிதீவிர இடதுசாரிக் கொள்கைகள்.\nநீங்கள் extreme right ஐயும் extreme left குழப்பிக் கொள்கிறீர்கள்.\nவலதுசாரிக் கொள்கைகள், கடும்போக்கு தேசியவாதத்துடன் இணையும் போது right wing nationalism ஆகிறது. இதுவே இடதுசாரிக் கொள்கைகள் கடும்போக்கு தேசியவாததுடன் இணையும் போது அவை left wing nationalism ஆகிறது.\nசீமானையும், நா.த வையும் மேரி லெபென்னின் கட்சி, பிரெக்சிட் பார்டி, AFD யுடன் ஓப்பிடுவதை விட, சின்பெயின், பார்ட்டி கியூபேக்சுவா, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உடன் ஒப்பிடுவதே பொருத்தமானது.\nதமிழ் தேசிய அரசியல் தமிழகத்தில் வேறூன்றுவது எமது (அகண்ட) தமிழ் இனத்தின் எதிர்கால இருப்புக்கு உகந்தது மட்டுமல்ல, இன்றியமையாததும் கூட.\nபெரியார் இப்போது இருந்திருந்தால் அவரே ஒரு தமிழ் தேசியவாதியாகத் இருந்திருப்பார்.\nதிராவிடக் கொள்கை என்பது தனியே தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர், துளுவர் என்போரை இணைக்கும் திராவிட-நாடு கொள்கை மட்டுமில்லை. சாதிய மறுப்பு, இட ஒதுக்கீடு, பிராமணிய அடக்குமுறை எதிர்ப்பு, பெண்ணுரிமை, மதச்சார்பின்மை இப்படி பட்ட, பன்முக திராவிடக் கொள்கையின் ஒரு அங்கம் மட்டுமே திராவிட-நாடுக் கொள்கை.\nதிராவிடக் கொள்கையை, அவர் பின் வந்தவர்கள் செல்லரிக்க வைத்து விட்டார்கள். ஊழல் மயப்படுத்தி விட்டார்கள். தவிர மொழிவழி மாநில பிரிபுக்கு பின் திராவிட-நாடுக் கொள்கையும் காலாவதியாகி விட்டது\nஇதை தமிழ் தேசிய கொள்கைதான் பிரதியீடு செய்திருக்க வேண்டும்.\nசீமான் செய்திருக்க வேண்டியது, திராவிடக் கொள்கையை , தமிழ் தேசியம் கலந்து புதுப்பித்தல் ( reform). ஆனால் அவர், “கழுவிய தண்ணீரோடு குழந்தையையும் தூக்கி எறி” என்பதாக, திராவிடநாட்டுக் கொள்கையுடன் திராவிடக் கொள்கையையும் தூக்கி எறி என்கிறார். இதுவே அவரின் மிகப்பெரிய கொள்கை வழு.\nபொருளாதாரத்தை பொறுத்தவரை அவர் சொல்வதெல்லாமே, மாடு மேய்பவனுக்கு அரசுவேலை, மீன்பிடிப்பவனுக்கு அரசவேலை என்று போல் பொட் தனமான அதிதீவிர இடதுசாரிக் கொள்கைகள்\nசீமான் சொல்வது, நிறுவனமயப்படுத்தலை அடித்தளமாக கொண்டது என்பதே எனது புரிதல்.\nநிறுவனமயப்படுத்தும் போது, அரசியல் மற்றும் பொருளாதார பிரதிநித்துவமும் கிடைப்பதற்கு மிகுந்த வாய்ப்புகள் உண்டு.\nரதி, நாங்கள் யாரும் சீமானுக்காக உயிர்கொடுக்க கிளம்பவில்லை. அவர் பாட்டுக்கு தமிழ் நாட்டு மக்களுக்கும் தமிழ் தேசியத்திற்கும் ஏதாவது நல்லது செய்வம் என்று பாடுபடுகிறார். அவரை தேவையில்லாமல் விமர்சிப்பதை தவிர்த்து அவரை அவர் பாட்டிற்கு அவரது அரசியலை முன்னகர்த்தி செல்ல விடலாமே என்பதுதான். அவரால் எமது தாயக மக்களுக்கு எந்தவித தொல்லையோ, தீமையோ இல்லைதானே!!\nசீமான் மீதான எனது ஆதரவு\nஒன்றுமே இல்லாமற் போவதைவிட\nஇருப்பதை கோர்த்து எழுவதுதான் கடைசி முயற்ச்சி\n(அகண்ட என்ற விடயத்தை நாம் பாவிக்கக்கூடாது\nஇது தான் எம்மை சிங்களமும் இந்தியும்\nகொடூரமாக அழிக்க காரணம்)\nEdited May 28, 2019 by விசுகு\nநான் இங்கு தான் நிற்கின்றேன்\nஎனது அனுபவங்களின் அடிப்படையிலும்\nகாலத்தின் தேவை கருதியும்\nஎமது இனத்தின் இன்றைய நிலையை கருத்தில் கொண்டும்\nவெளியிலும் வேறு இடங்களிலும் எழுத வேண்டிய தேவை இருக்கிறது அண்ணா\nநீங்களும் வெளியில் எனது எழுத்தை பார்த்திருப்பீர்கள்\nஆனால்இந்த கருத்தாடல் பயிற்ச்சியையும்\nதமிழில் எழுதும் திறமையையும் தந்தது யாழ் இணையம்\nசீமான் செய்திருக்க வேண்டியது, திராவிடக் கொள்கையை , தமிழ் தேசியம் கலந்து புதுப்பித்தல் ( reform).\nதிராவிடக் கொள்கையை (அப்படி என்ற ஓர் கொள்கை செயல் முறை வடிவத்தில் பிரோயோகிக்க கூடிய நிலை இருக்குமாயினும்) சீமான் சீர்திருத்தம் செய்யவில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை.\nதிராவிட நாடு இல்லை. மற்ற மாநிலங்கள் எல்லாம் ஆரிய வழி என்கின்ற போது, சீமானின் நிலைப்பாடு, தற்போதுள்ள நிலையில், திரவிடக் கொள்கையின் சீர்திருத்தத்தின் ஓர் வடிவமே.\nதிராவிடக் கொள்கையின் சமூக சீர்திருத்தங்களை சீமான் சில மற்றங்களோடு உள்வாங்கியுள்ளார். திராவிடக் கொள்கையின் மிக முக்கியமான சுயாட்சி பரிமாணத்தை, தமிழ் தேசியமாகவும், அந்தந்த மாநிலங்களை அவர்களேஆட்சி செய்ய வேண்டும் என்றும் புதிய பரிணாமக் கொள்கையை முன்னெடுத்துள் ளார்.\nஎனது புரிதல் இது.\nEdited May 28, 2019 by Kadancha\nக‌ருணா அம்மான் என்ர‌ பெய‌ர் அவ‌ன் த‌ள‌ப‌தியாய் இருக்கும் போது அவ‌னுக்கு கிடைச்ச‌ க‌வுர‌வ‌ பெய‌ர் /\nஇப்போது அந்த‌ துரோகியின் பெய‌ர் ஆபாச‌ பெண்க‌ளுக்கு ம‌ய‌ங்கும் காம‌வெறிய‌ன் /\nக‌ருணாவை துப்பாத‌ ஆட்க‌ளே இல்லை ,\nகூட‌ இருந்து துரோக‌ம் செய்த‌வ‌ன் வ‌ன்ச‌க‌ம் இல்லா அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு , சிங்க‌ள‌வ‌ன் ட‌ங்கிள‌ஸ் தேவான‌ந்தாவை கூட அவ‌ங்க‌ளுக்கு ப‌க்க‌த்தில் எப்போதும் வைச்சு இருப்பாங்க‌ள் / கால‌ம் மாரும் போது க‌ருணாவை சிங்க‌ள‌வ‌னே போட்டு த‌ல்லுவான் அதுக்கான‌ கால‌ம் வ‌ரும் / அது ம‌ட்டும் சிங்க‌ள‌வ‌ன் போடும் எலும்பு துண்டுக்கு விஸ்வாச‌மாய் இருக்க‌ட்டும் அந்த‌ துரோகி/\nக‌ருணாவுக்கு முட்டு குடுத்து அவ‌னை புக‌ழ் பாடுவ‌ர்க‌ளும் த‌மிழ் இன‌த்தில் இருக்க‌ த‌குதி அற்ற‌வ‌ர்க‌ள் /\nஒரு இட‌த்தில் ஒழுங்காய் கையை வைச்சு ஒரு காணொளி போதும் க‌ருணாவை ந‌ர‌க‌த்துக்கு அனுப்புவில் /\nப‌ல‌ரின் ம‌ன‌ம் குமுறிட்டு தான்\nஇருக்குது , ஆனால் அது வெளியில் தெரிவ‌து இல்லை அது தான் த‌மிழீழ‌ ப‌ற்று /\nஅகண்ட என்ற விடயத்தை நாம் பாவிக்கக்கூடாது\nகொடூரமாக அழிக்க காரணம்\nமுன்னாள் யூகோஸ்லாவிய ஜனாதிபதி Slobodan Miloservic ம் அகண்ட சேர்பிய குடியரசை அமைப்போம் என் அறிவித்ததின் பின்னரே சகல பிரச்சனைகளும் ஆரம்பமாகி அனைத்து குடியரசுகளும் பிரிந்து சென்றன.அதன் பின் அந்த சேர்பிய இனத்தை தனிமைப்படுத்தி விட்டார்கள். சும்மா இருந்த கோசவோவைக்கூட பிரித்தெடுத்து விட்டார்கள்.இன்று பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அவர்களால் மீளமுடியவில்லை.எல்லாவற்றுக்கும் காரணம் அவர் கூறய அகண்ட செர்பிய குடியரசு...\nசேர்பிய இனம் ரஷ்யாவின் சகோதர இனம் என கூறுவார்கள். மத ரீதியில் கூட ஒரே மதத்தை கொண்டவர்கள்.மொழி ...எழுத்துக்கள் அனைத்தும் ரஷ்யர்களைப்போலவே இருக்கும். இருந்தும் ரஷ்யாவால் கூட சேர்பியர்களை வளமாக வைத்திருக்க முடியவில்லை. உதவ முடியவில்லை.\nOn 5/27/2019 at 11:55 PM, goshan_che said:\nசீமான் வலது சாரி என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் கிருபன்?\n பொருளாதாரத்தை பொறுத்தவரை அவர் சொல்வதெல்லாமே, மாடு மேய்பவனுக்கு அரசுவேலை, மீன்பிடிப்பவனுக்கு அரசவேலை என்று போல் பொட் தனமான அதிதீவிர இடதுசாரிக் கொள்கைகள்.\nநீங்கள் extreme right ஐயும் extreme left குழப்பிக் கொள்கிறீர்கள்\nராஜன் குறை நீண்ட கட்டுரை ஒன்றை உயிர்மை இதழில் எழுதியுள்ளார். அதில் வெகுஜனவியம், பாஸிஸம் இரண்டுக்குமான வேறுபாடுகளையும், சீமானின் பாஸிஸச் செயற்பாடுகளின் ஆபத்தையும் தெளிவாக எடுத்துச் சொல்லியுள்ளார்.\nசில முக்கிய பந்திகள் கீழே..\nலக்லாவின்சிந்தனையிலிருந்துநாம்புரிந்துகொள்ளவேண்டியதுவெகுஜனவியத்திற்கும், பாசிசத்திற்கும்உள்ளவேறுபாடுஎன்னஎன்பதேயாகும். அதற்குமுன்னால்வெகுஜனவியம்என்பதற்குஇன்றையஊடக, அறிவுலகச்சொல்லாடல்களில்உள்ளபயன்என்ன, மதிப்புஎன்னஎன்பதைநாம்முதலில்புரிந்துகொள்ளவேண்டும்\nஉலகநடப்பும், நாட்டுநடப்பும்சரிவரஅறியஇயலாத, போதுமானகல்வியும், பொதுஅறிதலும்அற்றபெரும்பான்மைஉழைக்கும், உதிரிபாட்டாளிவர்க்கமக்களைஈர்க்கும்விதமாகஅரசியல்செய்வதுஎன்பதுவெகுஜனவியம்எனப்படுகிறது.\nஇவ்விதம்செய்பவர்கள்மக்களிடம்உள்ளஅடையாளம்சார்ந்தஅச்சங்களை, கற்பிதங்களைத்தூண்டிவிட்டுஅவர்கள்ஆதரவைப்பெறுவதால்இதுஉண்மையானமக்களாட்சிக்குஎதிரானது, பாசிசஅம்சங்கள்கொண்டதுஎன்றுகருதுவதாலேயேமேற்கத்தியஊடகங்கள்பாபுலிசம்என்றவெகுஜனவியத்தைஇழிவானவிஷயமாகப்பார்க்கின்றன.\nநகரும்உள்முகஎல்லை, மிதக்கும்வெற்றுக்குறியீடுஆகியவற்றின்மூலம்பல்வேறுகோரிக்கைகளைக்கொண்டமக்கள்தொகுதிகளைஒருங்கிணத்துசமூகமுரண்களைசமன்செய்து, சமூகநீதியினைசெயல்படுத்துவதேவெகுஜனஅரசியல்.\nவெகுஜனவியம்பாசிசமாவதுஎப்படிஎன்பதையும்நாம்பிரித்துப்பார்த்துஅணுகலாம். வெகுஜனவியம்உள்முகஎல்லைஎன்பதைநெகிழ்வாகவும், நகரக்கூடியதாகவும்வைத்துள்ளது. பாசிசம்அதைஇறுக்கமாகநிலைப்படுத்துகிறதுஎன்பதுமுதல்அம்சம். இரண்டாவதுஅம்சம்பல்வேறுமக்கள்கோரிக்கைகளைசமப்படுத்திஒருங்கிணைக்கும்வெற்றுக்குறியீட்டைமிதக்கும்குறியீடாகவைத்துக்கொள்வதுஎன்பதும்முக்கியமானது.\nதிராவிடமுன்னேற்றகழகத்தைப்பரிசீலித்தால்அதன்முற்போக்கானவெகுஜனவியஅரசியலைப்புரிந்துகொள்ளலாம். அதன்உள்முகஎல்லைஎன்பதுஆரியத்தை, திராவிடத்திலிருந்துபிரிப்பது. பார்ப்பனர்கள்ஆரியர்கள்எனஅடையாளப்படுத்தப்பட்டதால், பார்ப்பனரல்லாதோர்இயக்கமாகவேநீதிக்கட்சி, சுயமரியாதைஇயக்கம்ஆகியவற்றின்தொடர்ச்சியாகதிராவிடமுன்னேற்றக்கழகமும்செயல்பட்டது. ஆனால்இந்தஆரிய, திராவிடவேறுபாடுகருத்தியல்மேலாதிக்கம்தொடர்பானமுரணாகவேகருதப்பட்டதேதவிர, பார்ப்பனர்களைத்தனிப்பட்டமுறையில்வெறுப்பதுஎன்பதுமுன்னெடுக்கப்படவில்லை. ஆரிய, பார்ப்பனீயகருத்தியல்என்பதுஜாதீயகருத்தியலாககொள்ளப்பட்டது. திராவிடகருத்தியல்என்பதுஜாதிஏற்றத்தாழ்வைக்கருதாதசமத்துவம்சார்ந்தகருத்தியலாகமுன்வைக்கப்பட்டது.\nபார்ப்பனர்கள்அல்ல, பார்ப்பனீயமேஎதிரிஎன்பதைபெரியாரும், தி.மு.க-.வும்பலமுறைதெளிவுபடுத்தியுள்ளார்கள். நடைமுறையிலும்நிகழ்த்திக்காட்டியுள்ளார்கள். ஆனாலும்தமிழகத்தில்உள்ளமேட்டுக்குடிபார்ப்பனர்களும்சரி, வெளிமாநிலத்தில்குடியேறியபார்ப்பனர்களும்சரி, அவர்கள்தரும்சித்திரத்தைநம்பும்அமெரிக்கஐரோப்பியகல்வியாளர்களும்சரி, பெரியாரும், தி.மு.க-.வும்பார்ப்பனர்களைவெறுத்தகட்சிகள், இயக்கங்கள்என்றுஇன்றளவும்கூறுகிறார்கள். தமிழகத்தில்ஜெயமோகன்என்றபார்ப்பனரல்லாதஇந்துத்துவவாதிஇதைத்தொடர்ந்துகூறிவருகிறார்.\nதி.மு.க. ஆட்சியில்பார்ப்பனர்களானஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்மோசமாகநடத்தப்பட்டார்களா? வருவாய்த்துறைஅதிகாரிகள்பார்ப்பனர்கள்என்பதற்காகப்பழிவாங்கப்பட்டார்களா? திரைத்துறையிலும், ஊடகத்துறையிலும், தொழில்துறையிலும்பார்ப்பனர்கள்ஏதேனும்பெரியசிக்கல்களைசந்தித்தார்களா? அவர்களுக்குஎதிராகதிராவிடமுன்னேற்றக்கழகம்கட்சியாகவோ, ஆட்சியிலோஏதேனும்தீமைகள்புரிந்ததா? சோராமசாமியோ, கே.பாலசந்தரோஏதெனும்நெருக்கடிக்குஉள்ளானார்களா? சங்கரமடம்ஏதேனும்நலிவையோ, நெருக்கடியையோசந்தித்ததா?\nஎதற்காகஇதனைவலியுறுத்தவேண்டியுள்ளதுஎன்றால்ஆரியர்– திராவிடர், பார்ப்பனர்– பார்ப்பனரல்லாதோர்என்றஉள்முகஎல்லைக்கருத்தியல்மேலாதிக்கம்சார்ந்தமுரணாகவகுக்கப்பட்டதேயல்லாமல், அடையாளம்சார்ந்தவெறுப்பாகமாற்றப்படவில்லை.\nமற்றொருபெரியஆபத்துசீமானின்நாம்தமிழர்கட்சி. இதன்முன்னெடுப்பும்கருத்தியல்சார்ந்ததாகஇல்லாமல்அடையாளம்சார்ந்ததாகவேஇருக்கிறது. முக்கியமாக, இதுகலப்பற்றதமிழ்அடையாளத்தைக்கோருகிறது. அதாவதுஎல்லாகாலங்களிலும்தமிழ்மட்டுமேபேசியவர்களேதமிழர்கள், மற்றவர்கள்வந்தேறிகள்என்றுகூறுகிறது.\nதி.மு.க. தமிழைஒருமிதக்கும்வெற்றுக்குறியீடாகக்கொண்டதால்வேறுமொழிகள்பேசுபவர்கள்கூடதமிழர்அரசியலில்பங்கெடுப்பதுசாத்தியமாயிற்று. குறிப்பாக, தெலுங்குமொழிபேசும்சமூகத்தினர்தமிழ்தேசியஅரசியலில்தீவிரபங்கெடுப்பதைஅனைவரும்அறிவார்கள். அறுபத்தைந்தாம்ஆண்டுஇந்திஎதிர்ப்புப்போரில், இந்திபேசும்மார்வாரிஇளைஞர்களும்பங்குகொண்டார்கள்என்பதுகளஆய்வில்அறியக்கிடைக்கிறது. இங்கேதமிழ்என்பதுஒருநிலப்பகுதியின்மக்கள்உரிமைக்கானகுறியீடாகவிளங்குகிறது.\nஆனால்நாம்தமிழர்கட்சிதமிழ்அடையாளத்தைஒருஆதிஅடையாளமாக, ஆதிமூலச்சொல்லாடலாக(Originary Discourse) மாற்றுகிறது. புலம்பெயர்தொழிலாளர்களுக்குஎதிரானடொனால்ட்டிரம்ப்பின்முழக்கங்களுக்கும், சீமானின்வந்தேறிகள்குறித்தமுழக்கங்களுக்கும்வேறுபாடுகிடையாது. அந்தவகையில்தமிழின்முதல்பாசிசக்கட்சியாகவிளங்குகிறதுநாம்தமிழர்கட்சி.\nசீமானின்தலைமைபிம்பம், அவரதுபகுத்தறிவுக்குப்பொருந்தாதபேச்சு, அதன்உணர்ச்சிகரமானஈர்ப்புஎனபலஆபத்தானபாசிசக்கூறுகள்இருந்தாலும், தமிழ்நாட்டின்பொதுப்பிரச்சினைகள்பலவற்றில்அவர்உரக்கக்குரல்கொடுப்பதால்அவரைஒருமுற்போக்குஅரசியல்சக்தியாகஇளைஞர்கள்கருதுகிறார்கள். இதுமிகவும்ஆபத்தானது.\nசீமானின்அரசியலின்அச்சாணியாகஇருப்பதுவிடுதலைப்புலிகளுடன்அவருக்குஇருந்ததாகசொல்லப்படும்தொடர்பு. இலங்கையில்நிகழ்ந்ததுயரம்நம்எல்லோரையும்உணர்வுரீதியாகபாதித்தது. ஆனால்எவ்வளவுதான்தமிழ்ஈழஅனுதாபியாகஇருந்தாலும்விடுதலைப்புலிகள்பின்பற்றியகற்பனாவாதஅணுகுமுறையைவிமர்சிக்காமல்பாராட்டுவதுஆபத்தானது. அரசியலைப்போராகமாற்றியபிறகு, போரையதார்த்தசூழல்களைக்கணக்கில்கொள்ளாமல், கற்பனாவாதநோக்கில்நடத்தினால்எப்படிப்பட்டதுயரைசந்திக்கவேண்டிவரும்என்பதற்கானபாடமேஇலங்கையில்நடந்தது. அந்தரொமாண்டிசிசம்என்றகற்பனாவாதத்தின்உச்சகட்டவெளிப்பாடேசீமான். இறுதிக்கட்டபோரின்போதுஅவர்பேசியஉரைஒன்றின்காணொளியைக்கண்டேன். அதில்அவர்போர்நிறுத்தம்கோருவதுதமிழர்களைக்காப்பாற்றுவதற்குஅல்ல, சிங்களமக்களைஅழிவிலிருந்துகாப்பாற்றவேபோர்நிறுத்தம்கேட்கிறோம்என்றுஆவேசமாகப்பேசினார். அதற்கும்மக்கள்கைதட்டினார்கள்.\nஅந்தக்கற்பனாவாதமும், அடையாளவாதமும்தமிழகத்தில்வேரூன்றாதுஎன்றுதான்நம்புகிறேன். அதன்பொருட்டேதிராவிடமுன்னேற்றக்கழகம்அரசியல்வலுவுடன்அதன்வெகுஜனவியஅரசியலைத்தொடர்ந்துமுன்னெடுக்கவேண்டும்என்றும்விரும்புகிறேன். ஆனால்தேர்தல்அரசியல்சமரசங்கள்இல்லாதஅரசியல்தூய்மைஎன்றபெயரில்பாசிசம்உள்நுழையும்சாத்தியங்களைஅலட்சியப்படுத்தக்கூடாது. அதைநாம்கருத்தியல்ரீதியாகஎதிர்த்துப்போரிடவேண்டும். அதற்கானசிறுபங்களிப்பாகஇந்தக்கட்டுரைஅமையும்எனநம்புகிறேன்.\nஅடடா, நான் அகண்ட என்று சொன்னதுக்கான அர்த்தம் அதுவல்ல.\nஅகண்ட என்பது greater என்ற ஆங்கில சொலாடலின் தமிழ் வடிவம். அகண்ட தமிழ் இனம் என நான் சொல்லியது greater Tamil Nation. என்ற அர்த்ததில். அதாவது, இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, வட அமெரிக்கா எங்கணும் சிதறி வாழும் அத்தனை தமிழர்களின் நலனுக்கும், தமிழ்நாட்டில் தமிழ் தேசியம் வேரூன்றுவது அவசியமாகிறது. என்பதே நான் சொல்வது.\nநீங்கள் நினைக்கும் அகண்ட தமிழ் நிலப்பரப்பு (இலங்கையின் வடகிழக்கு+தமிழ்நாடு) அல்ல.\nமிலோசவிச் - அகண்ட சேர்பியா கொள்கையை மட்டும் கொண்டிருக்கவில்லை.சேர்பியர் அதிகம் இல்லாத குரோசியாவையும், மசிடோனியாவையும், சேர்த்து அகண்ட சேர்பியா அமைக்க முயன்றதே அவரின் வீழ்ச்சிக்கு காரணம். கூடவே பொஸ்னியாவில் நடந்த அத்து மீறல்.\nகொசோவோ சேர்பியாவின் ஒரு பகுதி, ஆனால், மணாலாறு போல, பல நூற்றாண்டுகளாய் ஒட்டமன் சாம்ராஜய காலந்தொட்டு, அல்பேனியர்கள் குடியேறி அதை அல்பேனிய பெரும்பான்மை நிலமாக்கி விட்டார்கள்.\nஇன்றும் சேர்பியர்களின் புனித தலங்கள் பல கொசோவோவில் உண்டு.\nமார்ஷல் டிட்டோவின் யூகோஸ்லாவியா என்பது, சோசலிச கொள்கை அடிப்படையில் பல தேசங்கள் அமைத்த கூட்டு. அதை அப்படியே சேர்பியாவாக மாற்ற முனைந்ததுதான் மிலோசவிச்சின் மடமை.\nசேஎபியா மற்ற எல்லா நாடுகளையும் இழந்து நின்ற போதும், கொசோவா சேர்பியாவின் ஒரு அங்கம் எனும் நிலைப்பாட்டில்தான் மேற்கு 1997 வரை இருந்தது. ஆனால் தன் கடும் போக்கால், கொசொவோவின் கொஞ்ச நஞ்ச சுயாஆட்சியையும் பறித்து, ராணுவத்தை ஏவி, கொசவோ விடுதலைக்கு தானே வழிகோலினார் மிலோசவிச்.\nசேர்பியர்களை மேற்கு ஒதுக்கிவைக்கிறது எனும் வாதமும் பிழை. மொண்டி நீக்ரோ, சேர்பிய பெரும்பான்மை நாடு, ஆனால் மிக விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையப்போகிறது.\nமிலோசவிச்சுக்கு பின் வந்த சேர்பிய தலைமை மேற்க்குக் நேசாமாகவே இருந்தது. ஆனால் அடுத்து வந்த தேர்தல்களில் ரஸ்யாவில் பூட்டின் வலிமை பெற, சேர்பியாவும் ரஸ்யாவின் வட்டத்துக்குள் போய்விட்டது.\nஇந்த கட்டுரையும் இடதுசாரி வெகுஜனவியம் இருபதாய்தானே சொல்கிறது?\n1992 காலப்பகுதியில் சுவிஸ் நாட்டில் நடுநிலை\nசஞ்சிகை என்று கூறி "மனிதம்" என்ற பெயரில் தொடங்கினார்கள்\nஎல்லாம் ஒரே புலிமயமாக இருக்கு என்று நானும் அதற்கு மிகுந்த ஆதரவு கொடுத்து\nஅதை சிலரிடம் விற்று கொடுத்தேன் ....\nஅதை நடத்துபவர்களின் பின்புலம் முன்புலம் என்பது எனக்கு தெரியாது.\nபுலிசார்பு கார்கள் என்னை கண்டித்தார்கள் .. அவர்கள் புளட் காரர்கள்\nஅவர்கள் நோக்கம் புலிவாந்தி தவிர நல்ல எண்ணம் என்று ஒன்றும் இல்லை அது இது என்று சொன்னார்கள்.\nயார் என்ன செய்தாலும் இவங்கள் இப்படித்தானே .. எல்லாம் எமக்கு கீழே இருக்க வேண்டும்\nஎன்றுதான் இவர்கள் எண்ணுவார்கள் என்று விட்டு நானும் விக்கிற வேலையை விடவில்லை.\nபின்பு இரண்டாவது வெளியீடு வந்துது\nஎடுத்து வாசித்தால் 6-7 கட்டுரை எழுதும் பெயர்களை பார்த்தால்\nஉலக பிரசித்தி பெற்ற எழுத்தர்கள் போல பெயர்கள்.\nலெனின் டானியல் ....... மன்னார் காஸ்ட்ரோ ....... ஈவி கவின்\nகட்டுரைகளை வாசித்தால் ........\nபுலிகள் குறுநில ஆடசியாளர்கள் ... உலக உழுங்கு புரியாது\nஇரண்டாம் பக்கம் திருப்ப அதே கட்டுரைதான் தொடர்கிறது ....\nஏகபத்திய புலிகள் அமெரிக்க சார்பு நிலை கொண்டு அமெரிக்க வழியிலேயே\nஇடை இடை யே ... மானே தேனே எல்லாம் போட்டுக்கோ ... என்பதுபோல்.\nசர்வாதிகாரிகள் ...... பாசிஸ்ட்டுக்கள் ...... கொம்யூனிஸ்ட்டுக்கள் ...... காப்பிடலிஸ்ட்டவாதிகள்\nஎன்று எல்லாம் போட்டு கொத்தி\nஒரு ப்ரோட்டா ரொட்டி\nஅடுத்த கட்டுரை ... அதுக்கு அடுத்த கட்டுரை என்று போனால் எல்லாம்\nநான் என்னிடம் விற்க தந்த புத்தகம் எல்லாம் தூக்கிக்கொண்டு சென்று அவர் வீட்டிலேயே\nபோட்டுவிட்டு வந்தேன் அவர்கள் ஏன் என்று கேட்டார்கள்.\nநடுநிலை என்று சொன்னீர்கள் .... உங்களுக்கு புலிகளுக்கு எதிராக கூட ஒரு பந்தி எழுத தெரியாது\nஎன்று சொல்லிவிட்டு வந்தேன்.\nகிருபன் அண்ணா இணைத்த கட்டுரை அதைவிட கேவலம் ....\nஇந்த சேறடிப்பை கிருபன் அவர்கள் கொண்டுவந்து இணைக்கிறார் என்பது\nசீமானுக்கும் என தொடர்பு?\nசீமானின் தமிழ்தேசியத்தை முளையிலேயே கிள்ளி\nதமிழ் நாட்டை தமிழ் இல்லாத நாடு ஆக்க எவ்வளவோ சக்திகள்\nவேலை செய்ய தொடக்கி இருக்கு.\nநீங்கள் சீமானுக்கு எதிராக என்ற போர்வையில் தமிழ் இனத்துக்கு எதிராக\nகிளம்பி இருப்பது அநியாயம்.\nசீமானின் கொள்கையில் எதிர்க்க எவ்ளவோ இருக்கு\nதமிழனே தமிழனை ஆளவேண்டும் என்பது பாசிசம் என்றால்\nஉலகில் நாடுகளுக்கு எல்லை கோடுகள் என்ன வடிவுக்கா இருக்கு?\nதமிழ் மக்கள் சாகும்போது மற்ற மாநிலத்தவர்கள் துடித்தார்களாம்\nஇவர் ஒத்தனம் கொடுத்து ஆற்றினாராம். நம் எல்லாம் இந்தியாவை நேற்றுதான் கேள்வி படுகிறோம் ஆக்கும்.\nஇங்கு இந்தியருக்கு நடுவில்தான் வாழ்கிறோம்\nஇண்டைக்கு ஒரு ரேடியோ நிகழ்சியிலும் இதை கதைத்தார்கள். இந்த பாசிஸ்ட் என்ற பதத்தை எவ்வளவு ஈசியாக பாவிக்கிரார்கள் என்பதை பற்றி.\nடிரம், ஒரு வெகுஜனவியலாளியா? அல்லது பாசிஸ்டா என்ற கருத்தாடல் அது.\nசீமானை இடதுசாரி வெகுஜனவியலாளி என்பதே பொருத்தமானது. ஆனால் அவரது கொள்கைகளுக்கு சொல்லுமாப்போல் வெகுஜன ஆதரவு இல்லை என்பது வேறு விடயம்.\nசீமான் எதிர்கருத்தாளர் மீது வன்முறையை ஏவியதில்லை. வன்முறை அரசியல் செய்யவில்லை. என் இனமே மேலானது எனும் சுப்ரீமிசம் பேசவில்லை. ஆகவே இது எப்படி பாசிசம் ஆகிறது ?\nசீமான் பேசுவது இடதுசாரி, வெகுஜனவியல்-கடும் தேசியவாதம்.\nLeftist, populist, ultra nationalism.\nகிருபன் அண்ணா இணைத்த கட்டுரை அதைவிட கேவலம் ....\nசீமானுக்கும் என தொடர்பு? \nநீண்ட கட்டுரையை வாசித்தால் புரியும்.\nசொந்த இனத்தின் மீதான பற்றைக் காட்டுவதும் இன மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதும் இனப்பற்று, தேசியப்பற்று என்று சொல்லலாம். ஆனால் அதே இனப்பற்று பிற இனங்களின் மீதான வெறுப்பாகவும் வெகுமக்களை பிற இனங்களை வெறுக்க வைக்கச் செய்யும் பிரச்சாரங்களாகவும் மாறும்போது பாஸிஸமாக உருவெடுக்கின்றது.\nவிடுதலைப் புலிகள் பிற இனங்களை வெறுக்கவில்லை, சொந்த இனத்தின் வாழ்வுக்காகவே போராடினார்கள். ஆனால் சீமான் அப்படியல்ல. புலிகளின் போராட்டத்தை தனது அரசியல் வளர்சிக்குப் பாவிக்கும் ஒருவர். அவ்வளவுதான்\nபுலம்பெயர்தொழிலாளர்களுக்குஎதிரானடொனால்ட்டிரம்ப்பின்முழக்கங்களுக்கும், சீமானின்வந்தேறிகள்குறித்தமுழக்கங்களுக்கும்வேறுபாடுகிடையாது. அந்தவகையில்தமிழின்முதல்பாசிசக்கட்சியாகவிளங்குகிறதுநாம்தமிழர்கட்சி\nLeftist, populist, ultra nationalism\nஇப்படிப் பார்த்தால் பிரித்தானியாவின் UKIP இல் இருந்து தற்போது Brexit party தலைவராக இருக்கும் Nigel Farage உம் Leftist என்றாகிவிடும்\nஇல்லையே? Farage ஒரு முன்னாள் stock broker. அன்று முதல் இன்றுவரை அவரினதும் யூகிப்பினதும் கொள்கைகள் முழுதும் சந்தை பொருளாதார, முதாலாளிதுவ அடிப்படையிலானதே.\nநைஜலும் யூகிப்பும் right wing, populist, ultra nationalists.\nஸ்டீவ் பனன், டாமி ரோபின்சனை வேணுமெண்டால் பாசிஸ்ட் எனலாம்.\nகீழே யூகிப்பின் விஞ்ஞாபனத்தின் சாரம்சம் உளது.\nயூகிப் ஒரு tax cutting, low government spending வலதுசாரி என்பதை இது நன்கு கோடிகாட்டுகிறது.\nசீமான் எங்கு பிற இனங்களை வெறுக்கிறார்?\nஆதாரமாக பேச முடியுமா? பொதுவாக பிற இனத்தவர் சீமானை ஆதரிக்கிறார்கள்\nபோலிகள் தமிழ் நாட்டை கெடுக்கிறார்கள் ... உண்மையை பேசுகிறார்.\nஎம்மை நாமே ஆள வேண்டும்.\nபிரிட்டனை ஒரு பிரிடிஸ்த்தான் ஆளவேண்டும் ஆள்கிறார்கள்\nஉலகம் பூரா இதுதான் நடக்குது அரசியல் ரீதியாயக ஆண்டு ஆண்டு காலமாய் ஏமாற்றப்பட்ட்தால்\nஇந்த அடிப்படை உரிமைக்கு கூட போராட வேண்டிய துர்பாக்கிய நிலை.\nபுலிகளை முன்னோடியாகவும் ம் வழிகாட்டியாகவும் கொள்கிறார் இதில் என்ன தவறு?\nபிரபாகரன் சுபாஷ் சந்திரபோஸ் எனது வழிகாட்டி என்று சொன்னதில்லையா?\nசீமானின் கொள்கை தமிழரை தமிழரே ஆளவேண்டும் என்பது\nஇதில் உங்களுக்கு இருக்கும் பிரச்னையை எழுதுங்கள் விவாதிக்கலாம்.\nபிரபாகரனும் உதைத்தானே சொன்னார். தமிழரை சிங்களவர்கள் ஆளக்கூடாது எண்டு....\nகிருபன்... கொஞ்சம் கூடுதலாக யோசிக்கிறார் போல கிடக்குது...\nசீமான் எங்கு பிற இனங்களை வெறுக்கிறார்?\nஆதாரமாக பேச முடியுமா?\nநாம் தமிழர் பாகம் 1 ,2என்று யாழில் இருக்கும் திரிகளில் சீமான் வந்தேறிகள் என்று பிற இனங்கள் மீது உமிழும் வெறுப்புப் பிரச்சாரங்கள் இருக்கின்றனவா என்று இசைக்கலைஞன், நாதமுனி போன்றவர்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் காத்திரமான விமர்சனங்களை எழுதுபவர்கள் சீமான் வந்தேறிகள் என்று முத்திரை குத்துவதை பெரும் ஆபத்தாகவே கருதுகின்றார்கள். இப்படி வெறுப்பை உமிழ்வதை யூரியுப் காணொளிகள் பலவற்றில் காணலாம்.\nஅண்மையில் விகடனில் வந்த கட்டுரை..\nசக்திவேல்Published Date: 20 MAY 2019 2:17PM\nLast Updated Date: 20 MAY 2019 2:17PM\nநீங்கள் பிடித்த முயலுக்கு மொன்று கால் என்று நிற்பதால் .....\nவந்தேறிகளை எப்படி அழைப்பது?\nவந்தேறிகள் வாழ்வுக்காக வரும்போது வாழ வைப்போம் என்று சீமான் கத்தும்போது\nஉங்கள் காதுகளில் பஞ்சை செருகிவிடுவீர்கள்.\nஅவர்களே லாபகமாக எம்மை கூட அழித்தால் போகட்டும் என்று விடலாம் எம் உயிரினும்\nமேலான தமிழை அழித்தால் எழுந்து நிற்பதில் என்ன தவறு?\nசீமான் யாருக்கும் எதிரி அல்ல யாருக்கும் எதிராக பேசுவதும் இல்லை (கொள்கை ரீதியாக)\nநாமே எம்மை லால் வேண்டும் அதன் மூலமே பொருளாதார அடிப்படை முன்னேற்றத்தை பெற்று\nஎமது பாரம் பரியத்தை காக்க முடியும் என்கிறார்.\nஇதில் உங்களுக்கு ஏதும் முரண்பாடு இருந்தால் எழுதுங்கள்....\nஇந்த கட்டுரை நீங்கள் இணைக்கும் முன்னே வாசித்ததால்தான்\nஇது கொத்துரொட்டி கட்டுரை என்று எழுதினேன்.\nஇது எதோ அக்கறை இருப்பதுபோல காட்டி சேறு அடிப்பது ஒரு பழைய தந்திரம்\nஇதை அன்டன் பாலசிங்கம் நல்லவர் பிரபாகரன்தான் சர்வாதிகாரி என்ற மாதிரி\nபுல்லு புடுங்குற கட்டுரைகள் மூலமே வாசிச்சாச்சு ..... புதிதாக ஒன்றும் இல்லை.\nவேறு ஏதாவது இருந்தால் இணையுங்கள்.\nநாம் தமிழர் கட்சியிடமும் சீமானிடமும் நிறைய முதிர்ச்சி தெரிகிறது. மாற்று மொழி பேசுபவர்களை கட்சியில் இணைத்துள்ளார்கள், இது தூய தமிழ்த்தேசியவாதிகளுக்கு பிடிக்கவில்லை.\nஅவர்கள் தெளிவாக குறிப்பிடுகின்றார்கள் தமிழ்நாட்டின் தலைமை தமிழராக இருக்கவேண்டும், அமைச்சுப் பதவிகளில் ஏனைய மொழிபேசுவோருக்கும் இடமுண்டு.\nநாம் தமிழர் கட்சியிடமும் சீமானிடமும் நிறைய முதிர்ச்சி தெரிகிறது. மாற்று மொழி பேசுபவர்களை கட்சியில் இணைத்துள்ளார்கள், இது தூய தமிழ்த்தேசியவாதிகளுக்கு பிடிக்கவில்லை\nஇதைத்தான் middle ground க்கு வருவது என்று சொல்வது.\nநம்பகத்தன்மை மக்களிடம் வரும்வரை கட்டுப்பணத்தை இழக்கும் உதிரிகளாகத்தான் இருப்பார்கள். பலமான கட்சிகள் நாம் தமிழரை தொடர்ந்தும் உதிரிகளாக வைத்திருக்க வேண்டிய தந்திரங்கள் எல்லாம் செய்வார்கள்!\nஅடுத்த தமிழ் நாட்டுத் தேர்தலில் மீண்டும் உரையாடுவோம்..\nஎப்ப பார்த்தாலும் அடுத்த தேர்தல் .. அடுத்த தேர்தல் என்கிறீர்கள்.\nதேர்தலை நம்பி இல்லை என்ற மூலத்தையே மறந்துவிட்டு\nஎப்படி சீமானை விமர்சிக்கிறீர்கள்?\nஉள்ளாட்சித் தேர்தல் வருது அண்ணோய்.\nபுரித‌ல் இல்லாதவ‌ர்க‌ள் ஓட‌ எப்ப‌டி விவாதிப்ப‌து அண்ணா /\nஅண்ண‌ன் சீமானின் 100 மேடை பேச்சை த‌ன்னும் கேட்டு இருக்க‌ மாட்டின‌ம் , ஏதோ தாங்க‌ள் தான் பெரிய‌ அறிவாளி என்ர‌ நினைப்பில் எழுதுவ‌து ச‌ம்ம‌ந்த‌ம் இல்லாம‌ ,\nத‌மிழ் நாட்டில் இய‌ங்கும் ப‌ல‌ ஊட‌க‌ங்க‌ள் திருட்டு திராவிட‌ கும்ப‌ல்க‌ளின் ஊட‌க‌ங்க‌ள் ,\nஅவ‌ங்க‌ள் சீமானுக்கு எதிரா எழுதுங்கோ என்றால் எழுதி போட்டு போவார்க‌ள் ,\nஓசி சோறு சுப‌வீ / ஒரு கால‌த்தில் த‌மிழ் தேசிய‌ம் பேசி விட்டு திராவிட‌த்துக்கு விலை போனா பிற‌க்கு எப்ப‌டி பேசுகிறார் /\nஅண்ண‌ன் சீமானின் ப‌ணியை\nஅண்ண‌ன் சீமானை விம‌ர்ச‌ன‌ம் செய்ப‌வ‌ர்க‌ள் அவ‌ரின் ப‌ணியை ஒரு இர‌ண்டு நாட்க‌ளுக்கும் செய்ய‌ மாட்டின‌ம் இது தான் உண்மை /\nஎத்த‌னையோ கோடி த‌ருகிறோம் 2016ம் ஆண்டு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் போட்டி இட‌ வேண்டாம் என்று திருட்டு திராவிட கும்ப‌ல் அண்ண‌ன் சீமான‌ பேர‌ம் பேசின‌வை ,\nகொள்கையை விட்டுக் கொடுக்காத‌ உன்ன‌த‌ ம‌னித‌ன் அண்ண‌ன் சீமான் /\nஉங்க‌ளின் க‌ருத்துக்கு என‌து ஆத‌ர‌வு எப்ப‌வும் உண்டு தொட‌ர்ந்து எழுதுங்க‌ள் ம‌ருத‌ங்கேனி அண்ணா
கற்கரைப்பிள்ளையார் கோவிலடி: வனுவாட்டு - பகுதி22 -குகைக்குள் பயணம்\nவனுவாட்டு - பகுதி22 -குகைக்குள் பயணம்\nலெலெபா தீவில் எங்களைக் கூட்டி வந்த சுற்றுலா வழிகாட்டி மதிய உணவுக்காகச் சமைக்கத் தொடங்க நான் கடலில் குளிக்கச்சென்றேன்.குளிக்கும் போது கடலின் அடியில் இருப்பதினைப்பார்க்க சுழியோடுபவர் அணியும் கண்ணாடியினை தந்தார்கள். அதனூடாக கடலின் அடியினைப் பார்த்தேன்.\nஅப்பொழுது கடலில் ஒரே ஆரவாரம் கேட்டது. ஒருபடகில் சிலர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். தொலைக்காட்சியில் English survivors, French survivors னைப் பார்த்திருப்போம். படகில் திரிந்தவர்கள் French Survivors. அவர்களினை இத்தீவில் கொண்டு வந்து விடுவார்கள். அவர்கள் கொஞ்சக்காலம் வெளித் தொடர்பற்று இத்தீவில் சீவிக்க வேண்டும்.கனகாலம் இருப்பவருக்கு அதிக பணம் கிடைக்கும்.\nசமைத்து முடிந்ததும் சுற்றுலா வழிகாட்டி, எங்களுக்கு அசைவ,சைவ உணவுகளுடன் சோற்றினையும் பரிமாறினார். அதன் பின்பு பழங்களும் தந்தார். மீன்பிடிக்க படகில் சென்றவர்களைப் பற்றி சென்ற பதிவில் உங்களுக்கு சொல்லியிருந்தேன். அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. எனவே ஏமாற்றத்துடன் கரைக்கு வந்து உணவு உண்டதும் மீண்டும் மீன் பிடிக்கச் சென்றார்கள். அவர்கள் இத்தீவில் சுற்றுலா பார்க்க எங்களுடன் கலந்து கொள்ளவில்லை. மீன் பிடிக்கவே வந்தார்கள்.\nநாங்கள் கிட்டத்தட்ட3மணித்தியாலம் அக்கரையில் இருந்து குளித்து இளைப்பாறியபின்பு( உணவு சமைக்க, அவ்விடத்தைச் சுத்தம் செய்ய சுற்றுலா வழிகாட்டிக்கு3மணித்தியாலம் எடுத்தது)படகின் மூலம் அத்தீவின் இன்னொரு கறைக்கு வந்தோம்.\nஅங்கே5நிமிடங்கள் மரங்களின் ஊடாக நடக்க குகை ஒன்றினை அடைந்தோம்.\nகுகைக்குள் செல்லச் செல்ல ஒரே இருட்டாக இருந்தது.\nசுற்றுலா வழிகாட்டி கொண்டு வந்த மெழுகுதிரி வெளிச்சத்தின் உதவியுடன்,போகும் வழியில் நிலத்தில் இருந்த மெழுகுதிரிகளையும் வெளிச்சமாக்கி அவ் வெளிச்சத்தின் உதவியுடன் நடந்து சென்றோம்.\nகுகைக்குள் செல்லச் செல்ல உடலில் இருந்து வியர்வை பெருக்கெடுத்து ஓடியது. போகப்போக குகையின் உயரம் மிகவும் குறைவாகவும் பாதை ஒடுக்கமாகவும் இருந்தது.\nஇக்குகையில் சிலர் தங்கியிருந்த அடையாளங்கள் இருந்தன. சுற்றுலா வழிகாட்டி, இரவில் இக்குகையில் 'French Survivors' தங்கியிருந்தார்கள் என்று சொன்னார்.\nபடத்தில் தெரியும் கை அடையாளம் இத்தீவில் வாழ்ந்த மூதாதையர்களின் கை அடையாளம் என்று சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குச் சொன்னார்.\nகுகைக்குள் செல்லசெல்ல பாதையின் உயரம் குறையத் தொடங்கியது. இதனால் நாங்கள் தவழ்ந்து தான் செல்ல வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்பட்டது. அத்துடன் பாதையும் வளைந்து வளைந்து போய்க்கொண்டிருந்தது. சில நிமிடங்களில் பாதையின் முடிவில் சிறு துவாரத்தின் ஊடாக வெளிச்சம் தெரிந்தவுடன் மீண்டும் வந்த பாதை வழியாக, ஏற்றி வைத்த வெளிச்சத்தினை அணைத்துக் கொண்டு திரும்பி நடந்தோம். குகையினை விட்டு வந்ததும் அடர் மரங்களின் ஊடாக நடந்து வந்து மீண்டும் படகில் ஏறி, இத்தீவினைச் சுற்றி வரும் போது இன்னுமொரு குகையினையும் கண்டோம்.\nஅக்குகையின் உள்ளேயும் சென்று பார்க்கலாம். ஆனால் முதல் குகை போன்று இதனுள் நடப்பதற்கு ஏற்ற இலகுவான பாதை அங்கு இருக்கவில்லை.\nPosted by Aravinthan at 9:31 PM\nGreat....Greetings! from Norway!\nஉங்கள் கருத்துக்கு நன்றிகள்\nவனுவாட்டு - பகுதி23 -கடலினுள் இருந்த அமெரிக்கா விம...
தருமபுரி மாவட்டத்தில் அனைத்து வியாபாரமும் மந்தம்- Dinamani\nதருமபுரி மாவட்டத்தில் அனைத்து வியாபாரமும் மந்தம்\nதருமபுரி மாவட்டத்தில் தொடர்ந்து பணப்புழக்கத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் நகைக்கடை மற்றும் ஜவுளித் தொழில் உள்ளிட்ட அனைத்து வியாபாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.\nபணத்தாள் மீதான தடை அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரூ. 1,000 மற்றும் ரூ. 500 நோட்டுகளை வாங்குவதில்லை என வணிகர்கள் அறிவித்துவிட்டனர்.\nஎன்றாலும் ஓரிரு கடைகளில் மட்டும் முதல் நாள் அந்தப் பணம் பெறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பணத்தாள் தடை செய்யப்பட்ட 5-ஆம் நாளாக ஞாயிற்றுக்கிழமை தருமபுரி நகரிலுள்ள அனைத்துக் கடைகளும் பெயருக்குத் திறக்கப்பட்டு, மாலையில் சீக்கிரமாகவே பூட்டப்பட்டன.\nஇதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கூறியது:\nவங்கியின் கடன் அட்டை, ஏடிஎம் அட்டை வைத்துள்ளவர்களிடம் மட்டும் வியாபாரம் செய்தோம். வேறு வழியில்லை. மாலையுடன் கடையைப் பூட்டிவிட்டு வந்துவிட்டோம். பெரும்பாலான கடைகளில் இதே நிலைதான் தொடருகிறது. முழுமையாக கணக்குகளை சரியாகப் பராமரிப்போர் ஒரு நிலைப்பாட்டையும், கணக்கை சரிவர பராமரிக்காதோர் ஒரு நிலைப்பாட்டையும் எடுப்பதால், எங்கள் தொழில் சார்ந்த சங்கங்களும் எந்த முடிவையும் எடுக்க முடிவதில்லை.\nஎனவே, அப்படியே சங்கங்கள் அமைதி காக்கின்றன. அரசு தெளிவான நிலை எடுத்தால்தான் தொழில் செய்ய முடியும். மக்களும் பாதிக்கப்படாமல் இருப்பார்கள் என்றார் அவர்.\nசில்லறை விற்பனையும் பாதிப்பு: மொத்த வியாபாரிகளிடம் சென்று அன்றாடம் பொருள்களை வாங்கி வந்து கடையில் வைத்து விற்பனை செய்வோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மொத்த விற்பனையாளர்களும் ரூ. 1,000, ரூ. 500 நோட்டுகளை வாங்காததால், கொள்முதல் செய்வதை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதருமபுரி நகரில் பெரும்பகுதி கடைகள் செவ்வாய்க்கிழமைதான் விடுமுறை என்றாலும், ஞாயிற்றுக்கிழமை சில்லறை விற்பனைக் கடைகள் ஆங்காங்கே மூடப்பட்டிருந்தன. சிகரெட் உள்ளிட்ட ஓரிரு பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது.\nஅதற்கான காரணம் தெரியவில்லை. மொத்தக் கொள்முதல் நடைபெறாமல் போனதால், இங்குள்ள மொத்த வியாபாரிகள் தங்களிடமுள்ள பொருள்களின் விலையை உயர்த்தியிருப்பதாகவும் சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர்.
Puthiyaseithi | புதிய செய்தி: விருப்ப ஓய்வு கடிதம் ஏற்பு: ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பணியில் இருந்து விடுவிப்பு தமிழக அரசு உத்தரவு\nதமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அளித்திருந்த விருப்ப ஓய்வு கடிதத்தை ஏற்று, பணியில் இருந்து அவரை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் யு.சகாயம். கடந்த 1962-ம் ஆண்டு ஜூலை 3-ந்தேதி பிறந்த அவர் 2001-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தமிழக அரசு பணிக்கு நியமிக்கப்பட்டார்.\nநாமக்கல், மதுரை மாவட்ட கலெக்டராக அவர் பணியாற்றி உள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது கிரானைட் கனிமவள முறைகேட்டை வெளியே கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்த முறைகேடு பற்றி விசாரிப்பதற்காக சகாயத்தின் தலைமையில் விசாரணைக்குழுவை சென்னை ஐகோர்ட்டு அமர்த்தியது. கிரானைட் முறைகேடு பற்றி முழுமையாக விசாரித்து அதுபற்றிய அறிக்கையை ஐகோர்ட்டில் அவர் சமர்ப்பித்தார்.ஊழலுக்கு எதிரான அவரது பேச்சு, பல தரப்பினரை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு கிண்டியில் உள்ள அறிவியல் நகர துணைத்தலைவராக சகாயம் நியமிக்கப்பட்டார்.\nஅதன்பிறகு அவருக்கு பணியிட மாற்றம் எதுவும் அளிக்கப்படவில்லை.இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2-ந்தேதியன்று (காந்தி ஜெயந்தியன்று) விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக தமிழக அரசுக்கு சகாயம் ராஜினாமா கடிதம் அளித்தார்.\nஆனால் அரசிடம் இருந்து பதில் கடிதம் எதுவும் அளிக்கப்படாமல் இருந்தது. எனவே அரசுக்கு சகாயம் நினைவூட்டல் கடிதம் எழுதினார். தற்போது அவரது விருப்ப ஓய்வு கடிதத்தை ஏற்று, 2-ந்தேதியிட்ட பணி விடுவிப்பு கடிதத்தை தமிழக அரசு அளித்தது. இன்னும்2ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு இருந்தும் அவர் விருப்ப ஓய்வு பெற்றிருப்பது அரசு வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇளைஞர்களை நல்வழிக்கு ஊக்குவிக்கும் பணியில் சகாயம் இனி ஈடுபடப்போவதாக கூறப்படுகிறது.
9 நாட்களில் ஒரேவொரு கொரோனா பாதிப்பு.. மீண்டு வந்த பில்வாரா!..\nராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள நகரம் பில்வாரா. இந்த நகரைப் பற்றி தான் கடந்த சில நாட்களாக ஆச்சரியப்படும் செய்திகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதாவது கொரோனா வைரஸ் அதிகம் பரவக்கூடிய ஹாட்ஸ்பாட்டாக இருந்த பில்வாரா, நிலைமையை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இங்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன் உதாரணமாக இருக்கின்றது. இந்த நகரில் கடந்த9நாட்களில் ஒரேவொரு கொரோனா வைரஸ் பாதிப்பு மட்டும் ஏற்பட்டுள்ளது.\nFresherslive-online Last Modified: Apr 09,2020 12:29 IST\nஇது கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக மீண்டு வந்துவிடலாம் என்று நம்பிக்கை விதைக்கும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும் ஏப்ரல் 12ஆம் தேதி வரை தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27வது நபர் கடந்த 4ஆம் தேதி கண்டறியப்பட்டார். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சிகிச்சைக்காக வந்த பொழுது நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. இதற்கு முன்பு கடந்த மார்ச் 30ஆம் தேதி ஒருவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு தற்போது வரை ஒரே ஒருவருக்கு மட்டும் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவர்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.\nTags : Coronavirus, India News,covid19, Pilbara News
Incredible Computer Mouse Designs | கியூட்டான கம்ப்யூட்டர் 'மவுஸ்கள்'...! - Tamil Gizbot\n11 min ago எல்லாரும் முகக்கவசம் போட்டா., நாங்க இத பண்றோம்: ட்விட்டர் அதிரடி அறிவிப்பு!\n45 min ago இணையத்தை உலுக்கிய விசித்திரமான உயிரினம்! உண்மையில் இது என்ன தெரியுமா?\nகியூட்டான கம்ப்யூட்டர் 'மவுஸ்கள்'...!\n| Updated: Monday, April 29, 2013, 17:33 [IST]\nநாம் கணினியை பயன்படுத்தும்பொழுது சாதாரணமான சுட்டெலிகள் தான் பயன்படுத்துவோம். தினந்தோறும் இதையே பயன்படுத்தி அலுத்துப்போயிருக்குமல்லவா? உங்களுக்காகவே நாங்கள் இங்கே சில சுவாரஸ்யமான மற்றும் வியக்கவைக்கும் சில சுட்டெலிகளின் படங்களை இங்கே வெளியிட்டுள்ளோம்.\nபின்வரும் சுட்டெலிகள் போல நம்முடையதும் இருந்தால் கணினியைப் பயன்படுத்துவது ஆர்வமாகுமல்லவா? நீங்களே பாருங்கள்! மேலும் சில கியூட்டான கம்ப்யூட்டர் 'மவுஸ்கள்' அடுத்தடுத்த பக்கங்களில்...
panja dhuvaraga | பரவசப்படுத்திய பஞ்ச துவாரகா! www.vikatan.com would like to send you push notifications.\nசெய்திகள் ஆன்மிகம் Advertisement Posted Date : 10:39 (11/07/2013)\tLast updated : 10:03 (11/07/2013)\tபரவசப்படுத்திய பஞ்ச துவாரகா! ஆன்மிக பயணம் 12 - மைதிலி வைத்தியநாதன், கும்பகோணம்\nபஞ்ச துவாரகா- ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் என்று மூன்று மாநிலங்களை சுற்றிவரும் யாத்திரை இது. இந்த அற்புத பயணத்துக்காக 22.9.2012 அன்று கும்பகோணத்தில் இருந்து சென்னை வந்து, மறுநாள் (23-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை, ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் எங்கள் குழுவோடு ஜெய்ப்பூர் பயணமானோம். செவ்வாய்க்கிழமை காலை7மணி அளவில், பிங்க் சிட்டி என்று புகழ்பெற்ற ஜெய்ப்பூர் நகரை அடைந்தோம். எங்களுக்காகப் பயண ஏற்பாட்டாளர் தேர்வு செய்திருந்த ஹோட்டல் அறைக்கு சென்று குளித்து முடித்து, உணவு அருந்திய பின், ஜெய்ப்பூர் நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.\nஜெய்ப்பூர் நகரம் 17-ஆம் நூற்றாண்டில் ராஜா ஜெய்சிங் என்பவரால் வாஸ்து சாஸ்திரபடி நிர்மாணிக்கப்பட்ட நகரம். பெரிய நுழைவாயிலைக் கடந்து சென்றால், அங்கே உள்ள எல்லா கட்டடங்களும் ஒரே மாதிரி பிங்க் நிறத்தில் அமைந்துள்ளன. ராணிகள் தங்கும் இடமான ஹாவா மஹால், ராஜா, ராணியர் கோடை காலத்தில் வாசம் செய்யக் கட்டப்பட்ட வாட்டர் பேலஸ், திதி, வாரம், நட்சத்திரம், கரணம், யோகம், ஜோதிட சாஸ்திரப்படி அமைக்கப்பட்ட கால கடிகாரங்கள் உள்ள ஜந்தர் மந்திர், மகாராஜாக்கள் உபயோகித்த வாட்கள், கேடயங்கள், துப்பாக்கிகள், பீரங்கிகள் மற்றும் சிம்மாசனங்கள், உடைகள் காட்சிப் பொருட்களாக வைக்கப்பட்டுள்ள சிட்டி பேலஸ் உள்ளிட்ட இடங்களைப் பார்த்து வியந்து, ஹோட்டலுக்கு திரும்பினோம்.\n26-ஆம் தேதி, புண்ணியத் திருத்தலமான புஷ்கர் சென்றோம். பிரம்மாவுக்காக தனிக்கோயில் இங்கே இருக்கிறது. இங்குள்ள குளம் பிரசித்திபெற்றது. மகாமகக் குளம் போன்று மிகப் பெரிய குளம். மொத்தம் 54 படித்துறைகள் உள்ளன. பிரளய வெள்ளத்தில்கூட அழியாத தீர்த்தம் இது. காயத்ரி மந்திரம் தோன்றிய இடம், கஜேந்திர மோட்சம் நடந்த இடம் இது என்கிறார்கள். இங்கு குளமே விஷ்ணுவாகப் போற்றப்படுகிறது. விஸ்வாமித்திரர் இங்கு வந்தபோது, தன் காயத்தையே (உடல்) திரித்து ஜோதியாக்கி தபஸ் பண்ணியதால், பிரம்மா காயத்ரி மந்திரத்தை அருளினார் என்பது ஐதீகம். இங்குள்ள மலைமேல் காயத்ரிதேவி கோயில் கொண்டிருக்கிறாள்.\nதொடர்ந்து, புகழ்மிக்க ஆஜ்மீர் தர்கா சென்றோம். காஜா முகமது கரீபே நவாஸ் என்ற இஸ்லாமிய மகானின் ஜீவ சமாதி உள்ள இடமே இந்த தர்கா.\n27-ஆம் தேதி முதல், பஞ்ச துவாரகா தரிசனம் புறப்பட்டோம். முதலில் நாங்கள் தரிசித்தது, கங்ரோலி துவாரகா.\nதுவாரகை மொத்தம் ஒன்பது. அவை: மூல துவாரகா, பேட் துவாரகா, டாக்கூர் துவாரகா, கங்ரோலி துவாரகா, பிரவாச துவாரகா, குசேல துவாரகை, கோமது துவாரகை, நாத் துவாரகை, ருக்மிணி துவாரகை. இவை உதய்பூர் நகரைச் சுற்றி அமைந்துள்ளன. மீராபாய், கபீர்தாஸ், சைதன்ய மஹாபிரபு, வல்லபாச்சார்யர், ராமானுஜர், ஆதிசங்கராச்சார்யர் ஆகியோர் வைத்து பூஜை செய்த விக்ரகங்கள் இந்த பஞ்ச துவாரகையில் உள்ளன.\nருக்மிணி தேவி பூஜை செய்த குழந்தை கிருஷ்ணன் சாளக்ராம விக்ரகம் உள்ள இடமே கங்ரோலி துவாரகை. கண்களைவிட்டு அகலாத கண்ணன் திருவுருவத்தை இங்கே தரிசிக்கிறோம். ருக்மிணி குழந்தை கிருஷ்ணன் விக்ரகத்தை அலங்கரித்து வழிபடும்போது, துர்வாச முனிவர் வருகிறார். அவரை ருக்மிணி கவனிக்கவில்லை. அதனால், 'உனக்குப் பிறகு இந்த விக்ரகத்திற்கு பூஜை இருக்காது’ என்று சாபமிடுகிறார் முனிவர். ருக்மிணி ஓடிவந்து அவருக்குப் பாத பூஜை செய்து, செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்கிறாள். துர்வாசரும் 'கலியுகத்தில் இந்தக் கண்ணன் வெளிப்படுவான்; அப்போது பூஜைகள் நடக்கும்’ என்று ஆசீர்வதிக்கிறார். அதன்படியே வல்லபாச்சார்யர் அந்த விக்ரகத்தைக் கண்டெடுத்து ஸ்தாபிக்கிறார். இங்கே எட்டுக் கால பூஜை உண்டு. அரை மணிக்கு ஒரு முறை பால், வெண்ணெய், ரொட்டி போன்றவற்றை நிவேதனம் செய்கின்றனர்.\nஇரண்டாவதாக, நாங்கள் தரிசித்தது நாத் துவாரகை. தெற்கில் திருப்பதி போல், இங்கு இந்த நாத் துவாரகை உள்ளது. உதய்பூர் மன்னன் கட்டிய கோயில். பிரபந்தங்களை மக்களுக்கு அளித்த ஸ்ரீ நாத முனிகள் நேரில் வந்து தரிசிக்க எண்ணிய கோயில் இது. அவர் வர இயலாத காரணத்தால், அவர் பெயரில் ஸ்ரீநாத் துவாரகை என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள கிருஷ்ணரின் விக்ரகம் கறுப்பு மேஜிக் கல்லினால் (Black Magic Stone) ஆனது. இந்தக் கல்லில் அபிஷேகம் செய்வித்தால், தாமரை இலைமேல் பட்ட நீர்போல் மேலே ஒட்டாது. ரொம்ப அழகான, அலங்காரமான மூர்த்தி இவர். இங்கு தரப்படும் பிரசாதங்கள் மெகா சைஸில் உள்ளன. விலையும் ரொம்ப அதிகம். ரூ.100-க்கு குறைந்து பிரசாதம் கிடைப்பதில்லை. எல்லாமே நெய்யால் ஆனவை.\nஸ்ரீநாத் துவாரகையில் திவ்ய தரிசனம் முடிந்தபின் நீண்ட தூரம் பிரயாணம் செய்து, அபு ரோடில் வந்து தங்கினோம்.\n28-ஆம் தேதி, ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள அற்புதமான கோடை வாசஸ்தலமான மவுண்ட் அபு சென்றோம். அங்கே பார்த்து முடித்து இறங்கும் வழியில் அம்பாஜி சென்றோம். 54 சக்தி பீடத்தில் முதல் பீடம்தான் இந்த அம்பாஜி. இங்கு மலைக் குன்றே அம்பாளாகக் காட்சி தருகிறது. நாங்கள் சென்ற நேரம், எங்களுக்கு முன் சுமார்6லட்சம் மக்கள் தரிசனத்துக்காக காத்திருந்ததால், தூரத்திலிருந்தே மலையையும் கோயிலையும் வணங்கிவிட்டு, நீண்டதூரம் பயணம் செய்து, இரவு ஓர் இடத்தில் தங்கினோம்.\n29-ஆம் தேதி, நாங்கள் சென்ற இடம் மாத்ரு கயா. தந்தைக்கும், முன்னோர்களுக்கும் சிராத்தம் தரும் இடம் கயா. தாய்க்கு சிராத்தம் தரும் இடமே இந்த மாத்ரு கயா. பரசுராமர் தன் தாயைக் கொன்ற பாவத்தை இங்குள்ள பிந்து சரோவரில் நீராடி நீக்கிக்கொண்டதாகச் சொன்னார்கள். எத்தனை பேர் குளித்தாலும் அந்தக் குண்டத்தில் உள்ள நீர் தூய்மையாகவே இருக்கிறது. நாங்கள் அனைவருமே அதில் குளித்தோம். தாயை இழந்தோர் அனைவரும் அங்கு சிராத்தம் கொடுத்தனர்.\nஅடுத்து, நாங்கள் நீண்ட தூரம் பயணம் செய்து, மறுநாள் (30-ஆம் தேதி) துவாரகை வந்து சேர்ந்தோம். இந்த துவாரகையே பிரதான துவாரகா என்றும், கோமதி துவாரகா என்றும் அழைக்கப்படுகிறது. கோமதி நதி கடலுடன் கலக்கும் இடத்தில் அமைந்துள்ள துவாரகாபுரி இது. காலயமுனன் என்ற அரக்கன் மதுராவில் அடிக்கடி தொந்தரவு செய்ததால், கிருஷ்ணர் தாம் ஆட்சி புரிய தேவலோக சிற்பி மயன் உதவியுடன் சொர்ணமயமாக ஒரு நகரை நிர்மானித்தார். அதுவே, சொர்ண துவாரகையாகும். துவாபர யுகம் முடியும்போது, அந்தத் துவாரகையை கடல் கொண்டுவிட்டது. பின்னாளில் கிருஷ்ணனின் பேரன் வஜ்ரநாபன் இந்தத் துவாரகையை நிர்மாணித்தான்.\nகாலையில் கோமதி நதியில் நீராடிய பின், முதலில் நாங்கள் சென்ற இடம் இங்கிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் கடல் நடுவே அமைந்துள்ள பேட் துவாரகா. ரிஷிகள், வெளிநாட்டு தூதுவர்கள், ராஜாக்கள் ஆகியோரைச் சந்திப்பதற்காக கட்டிய அரண்மனை இங்குள்ளது. இங்குதான் குலேசர், கிருஷ்ணனைச் சந்தித்து அவல் வழங்கினார் என்றார்கள். இங்குள்ள கோயிலில் அவல்தான் பிரசாதம். இங்கு சென்றால் நமது வறுமையும் நீங்கும், செல்வம் பெருகும் என்கிறார்கள்.\nமறுநாள் (1.10.12) காலை5மணிக்கெல்லாம் நாங்கள் புறப்பட்டு மூல துவாரகைக்குப் பயணமானோம். ஸ்ரீ கிருஷ்ணர், சத்யபாமா மற்றும் ருக்மிணியுடன் இங்கு தங்கி, துவாரகாபுரியை எப்படி நிர்மாணிக்கலாம் என்று ஆலோசனை நடத்திய இடம் என்பதால் இதற்கு மூல துவாரகா என்று பெயர் வந்தது என்றார்கள். இது ஒரு சிறிய கிராமம்.\nஅடுத்ததாக, நாங்கள் பிரவேசபட்டினம் எனும் ஊரில் புன்னகை தவழும் முகத்துடன் மிக மிக அழகாக காட்சிதரும் கிருஷ்ணனை படுத்திருக்கும் திருக்கோலத்தில் தரிசித்தோம். அவரது தலைப் பக்கத்தில் ஒரு குறா மரம் (அரச மரம்) காணப்படுகிறது. அதன் அடிப் பாகத்தில் அதன் வேர் இயற்கையாகவே கிருஷ்ணன் முகம் மாதிரியே அமைந்துள்ளது. அதனடியில் லிங்கம் அமைந்துள்ளது. கிருஷ்ணனின் கால் பாகத்தில் ஒரு வேடன் அம்புடன் வீற்றிருக்கும் சிற்பம் அமைந்துள்ளது. கிருஷ்ணனின் பாதத்தில் அம்பு தைத்திருப்பதும் வரையப்பட்டுள்ளது. இந்த இடமே கிருஷ்ணன் உயிர்நீத்த இடம் என்றார்கள்.\nபிறகு, சோமநாத் வழியாக வெகுதொலைவு பயணித்து தினமும் இயற்கை அற்புதங்கள் நிகழ்த்தும் கோலியாக்கை அடைந்தோம்.இங்கே தினமும் கடல் உள்வாங்கிச் செல்லும் ஒரு சிறிய தீவில் கொடிமரம் மற்றும் பஞ்சபாண்டவர்கள் விக்ரகங்களைப் பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். தினமும் காலை9மணிக்கு கடல் உள் வாங்க ஆரம்பிக்கிறது. 10 மணிக்குள் சரியாக அந்த தீவு வரை கடல் உள்வாங்கிவிடுகிறது. கரையிலிருந்து 1 மைல் தூரம் இருக்கும் அந்தத் தீவு. நீர் உள்வாங்க, உள்வாங்க எல்லோரும் அதன் பின்னே நடந்து சென்றோம். மிக அற்புதமான தருணம் அது. அங்கே உள்ள கோயில் நிஷ்கலங்க் மஹாதேவ் கோயில் என்று அழைக்கப்படுகிறது.\nமாலை3மணிக்கு மேல் மீண்டும் கடல் வந்து சூழ்ந்துகொள்ளும் என்றார்கள். அதனால், நாங்கள் கரைக்கு திரும்பினோம்.\n2-ஆம் தேதி கோலியாக் தரிசனம் முடித்து, தாக்கூர் துவாரகை சென்றோம். ஸ்ரீ கிருஷ்ணர் துலாபாரம் செய்த இடம் இது என்றார்கள். இங்கே அவர் கல்யாண கிருஷ்ணனாக கோயில் கொண்டுள்ளார்.\nமறுநாள் (3-ஆம் தேதி) காலை6மணிக்கு அங்கிருந்து கிளம்பினோம். அந்த நாள் முழுவதும் பயணம்தான். குஜராத் விட்டு நீங்கி மத்தியப்பிரதேசத்துக்குள் நுழைந்தோம். மகேஷ்வர் என்ற இடத்துக்கு இரவு7மணி அளவில் வந்துசேர்ந்தோம். இங்கே கஜானன் மஹாராஜ் என்பவரின் அருமையான மடம் இருக்கிறது. புல்வெளி, பூச்செடிகளுடன் கூடிய மிகப்பெரிய மடம் இது. நடுவில் அவருக்கு ஓர் அழகிய கோயில் இருக்கிறது. நமது ரமண மகரிஷி மாதிரியான தோற்றம். அவரைப் போலவே நிறைய ஆன்மிக சேவை செய்திருப்பதாகச் சொன்னார்கள். ஆசிரமத்தை மிகவும் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் பராமரிக்கிறார்கள்.\n4-ஆம் தேதி காலை எழுந்து நர்மதை நதிக்கரையை அடைந்து படகில் ஏறி,3நதிகள் சங்கமிக்கும் இடம் வந்து சேர்ந்தோம். அங்கே அருமையாக நர்மதை ஸ்நானம் செய்தோம். நீராடி முடித்து மீண்டும் படகில் ஏறி, ஓங்காரேஸ்வர் கோயில் சென்றோம். இங்குள்ள இறைவன் திருமேனியை நாம் மேலிருந்தே அபிஷேகம் செய்யலாம். பூ சொரியலாம். நாங்களும் அவ்வாறே செய்து மகிழ்ந்தோம்.\nமாலை4மணி அளவில், விக்கிரமாதித்தன் ஆட்சி செய்த உஜ்ஜயினி பட்டினத்தை அடைந்தோம். அங்குள்ள ஹரசித்திமாதா கோயில், மிக அழகான கோயில். பார்வதிதேவியின் மேல் உதடு விழுந்த இடம் இது என்றார்கள். இங்கு தேவியின் திருநாமம் அவந்தீதேவி. விக்கிரமாதித்தன் பூஜித்த தேவி இவள்.\n5-ஆம் தேதி காலை 8 மணிக்குப் புறப்பட்டு, நாங்கள் முதலில் சென்றது உஜ்ஜயினியில் இருக்கும் சந்திபாணி ஆஸ்ரமம். இங்குதான் கிருஷ்ணரும் குசேலரும் குருகுல வாசம் செய்தனர். அவர்கள் இருவருக்கும் சந்திபாணி என்பவர் ஆசிரியராக இருந்து அனைத்தையும் பயிற்றுவித்தார் என்றார்கள்.\nஅடுத்து நாங்கள் சென்றது, ஒயின் அருந்தும் பைரவர் கோயில். இங்கு பூஜைக்கு வருபவர்கள் ஒரு சிறிய பாட்டில் ஒயின் மற்றும் புஷ்பங்கள் நிறைந்த பூஜைத் தட்டை வாங்கி வருகிறார்கள். ஒயினை ஒரு சிறிய வெள்ளித்தட்டில் ஊற்றி பைரவர் வாய் அருகில் கொண்டு செல்கிறார்கள். அதை லேசாக சாய்த்தால்... சரசரவென்று ஒயின் உள்ளே சென்றுவிடுகிறது. பாக்கியை பிரசாதமாகக் கொடுத்துவிடுகிறார்கள். எங்களுக்கு எல்லாமே வியப்பாக இருந்தது.\nஅடுத்து நாங்கள் சென்றது, விக்கிரமாதித்தன் வழிபட்ட காளி கோயில். இதுவும் ஒரு சக்தி பீடமாகும். பார்வதி தேவியின் இடது முழங்கை விழுந்த இடம் இது என்றார்கள். இங்கு தேவியின் திருநாமம் மங்கள சண்டிகர். அவளைத் தரிசித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு அறைக்கு வந்து சேர்ந்தோம். மாலை4மணிக்கு உஜ்ஜயினி கடைத் தெருவைச் சுற்றிவந்து, வேண்டியவற்றை வாங்கி கொண்டு, அங்கிருந்த கோபால கிருஷ்ணன் கோயிலையும் தரிசித்துவிட்டு, இரவு3மணிக்கு ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, சென்னைக்கு பயணமானோம்.\nஎங்கள் பஞ்ச துவாரகா யாத்திரை இனிதே நிறைவுற்றது. சென்ற இடத்தில் எல்லாம் அருமையான தரிசனம் கிடைத்ததும், நினைவிலிருந்து மறையாத கோலியாக் கடற்கரையை பார்த்ததும் மறக்கமுடியாதவை.\nதேடுகிறோம்... கயிலைநாதனை!\tView Comments
அழியாச் சுடர்கள்: கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்-புதுமைப்பித்தன்\nவலையேற்றியது: Ramprasath | நேரம்: 6:26 AM | வகை: கதைகள், புதுமைப்பித்தன்\nமங்குனி அமைச்சர் on September 10, 2016 at 11:44 PM said...\nUnknown on January 3, 2017 at 1:31 PM said...\n1943 இல் எழுதிய சிறுகதை "கடவுளும் கந்தசாமியும்", 2017 இல் மூன்று தலைமுறை தாண்டி படிக்கும்பொழுதும் தரமாக உள்ளது. புதுமைப்பித்தனுக்கு நன்றிகள்\nSudha on December 2, 2017 at 1:57 PM said...\nஅடடா அருமையான கதை !\nYaflie on March 4, 2019 at 5:45 PM said...\nஅருமையான கதை. ஐயா புதுமை பித்தனை பாராட்டும் அளவுக்கு தகுதி இல்லை ஆனால் இரசிக்க இரசனை உள்ளது. தெவிட்டாத இன்பம் தரும் கதைகளை படைத்தமைக்கு நன்றிகள். இக்கதையைப் பதிவேற்றம் செய்தவருக்கு நன்றி.\nYaflie on March 4, 2019 at 5:46 PM said...\nபாஸ்கர் எம். on May 3, 2019 at 5:38 PM said...\nமொழியும், நடையும் கொஞ்சம் சிரமம் தந்தன. தட்டுத்தடுமாறித்தான் படித்தேன். தவறு புதுமைப்பித்தனுடையதல்ல, எனது வாசிப்பு சுருங்கிப்போனதன் விளைவுதான் அது என திடமாக நம்புகிறேன். நான் எப்பவோ செஞ்ச புண்ணியந்தான் கடவுள் என்னை இங்கே கொண்டாந்து இணைத்திருக்கிறார். நன்றிகள்.\nShahraj on March 19, 2020 at 12:36 AM said...\nமகா கதைஞன் புதுமைப்பித்தனின் மகா கதைகளில் ஒன்று,'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்'.என்னைப் பொறுத்தவரை, புதுமைப்பித்தனின் மாஸ்டர்பீஸ்களில் உச்சம் என்றால், அது, 'ஒரு நாள் கழிந்தது' கதைதான். அதற்கு அடுத்தபடியாக இந்தக் கதையைத்தான் சொல்வேன். கடவுளை அன்றைய சமகாலத்துக்கு கொண்டு வந்து, அவருக்கு மானுட தரிசனத்தைக் காட்டிய கதை இது எனலாம்.\nUnknown on June 11, 2020 at 11:41 AM said...\nகடவுளைக் காட்டி விட்டாரே?!\nசிங்காரவேலு on January 23, 2021 at 1:41 PM said...\nஎத்தனை ஆண்டுகள் ஆனாலும் புத்தம் புதிய கதை மாதிரி விறு விறு என்று இருந்தது அருமை
தல வழியில் தளபதி – ஆச்சர்யப்படுத்தும் தொடர்பு! - Cinemapettai\nதல வழியில் தளபதி – ஆச்சர்யப்படுத்தும் தொடர்பு!\nஇப்படத்தின் பட்ஜெட் ரூ. 100 கோடியை தாண்டும் எனவும் மேலும் விஜய் நடித்ததிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படம் இதுதான் எனவும் நாம் ஏற்கனவே பார்த்தோம். இதுபோக இப்படத்தின் 80% படப்பிடிப்பு வெளிநாடுகளில்தான் நடைபெறுமாம்.\nஅஜித் நடிப்பில் சிவா இயக்கிவரும் ‘தல 57’ படத்தின் 80% படப்பிடிப்பு கூட வெளிநாடுகளில் படமாகி வருவது குறிப்பிடத்தக்கது.
கொள்ளை லாபத்தில் மருந்துகளை விற்கும் மருந்துக் கம்பெனிகள்! « site4any\n« இதுதா‌‌ண்டா ‌தீ‌ர்‌ப்பு!\nஊழல்… ஊழல்! நிலக்கரி சுரங்க ஊழல் அரசுக்கு ரூ.10 லட்சம் கோடி இழப்பு »\nThis entry was posted on August 4, 2012 at 8:51 PM\tand is filed under Hot News.\nTagged: இந்திய அரசியல், ஊழல், சமூக பிரச்சனைகள், தமிழ்நாடு பிரச்சனைகள். You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
ஒரு பெண்ணின் பயணம்: எட்டையபுர வரலாறு -2\nஎட்டயபுரம் வரலாறு -2\nசங்கீத உலகின் மும்முர்த்திகள்\nதியாகராஜர் சுவாமிகள், முத்துசாமி தீட்சதர், சாமா சாஸ்த்ரி\nநாடக உலகின் மும்முர்த்திகள்\nசங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், காசிவிஸ்வநாதப்\nமக்கள் திலகமாய்த் திகழ்ந்த எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்கள் நாடக\nஉலகில் வாழ்ந்த காலத்தில், அவருக்கு அன்பளிப்பாக தங்க மோதிரம் அளித்தவர் காசிவிஸ்வநாதப் பாண்டியன் என்பவராகும். எப்படி இது நிகழ்ந்தது? காசி விஸ்வநாதரைப் பற்றி நிச்சயம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர் அவர்கள் அந்த நிகழ்வை மறக்கவில்லை. தன் கதை எழுதும் பொழுது இதனைக் குறித்திருக்கின்றார். அதுமட்டுமல்ல மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் இவர் படத்தைத் திறந்து வைத்துப் பெருமைப் படுத்தினார். டி. கே. எஸ் அவர்கள் நாடக வரலாற்றை எழுதும் பொழுது, தன் கம்பெனி மூழ்க இருந்த தருணத்தில்\nகைதூக்கிக் காப்பாற்றியவர் காசி விஸ்வநாதப் பாண்டியன் என்று குறிப்பிட்டு இருக்கின்றார். அவரைப்பற்றி நாமும் தெரிந்து கொள்ளலாமே!\nஎட்டயபுர மண்ணின் மைந்தர் காசி விஸ்வநாதப் பாண்டியன். உள்ளூரில் பள்ளிப் படிப்பை முடித்து, நெல்லையில் பட்டப் படிப்பைத் தொடர்ந்து,\nஅங்கிருந்து சென்னை சென்று ஓவியக்கல்லூரியில் சேர்ந்து ஓவியமும் கற்றவர். பல மொழிகள் எழுதப் படிக்கத் தெரியும். பல மொழிகள் பேசத் தெரியும். சங்கீதம்,. வீணை, ஹார்மோனியம், தபேலா மூன்றையும் முறைப்படி கற்றவர். அவர் ஒரு நாடகக் கம்பெனி தொடங்கினார். அதற்குப் பெயர் தேவராச ஜெகதீச தியட்டிரிக்கல் கம்பெனி. நாடகத் திரைச் சீலைகள் அனைத்தும் அவரே வரைந்தார். நாடகங்கள் எழுதினார். பலரைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி கொடுத்து நாடகங்களை உள்ளூரிலும் பக்கத்து ஊர்களிலும் நடத்தி வந்தார். வெளியூர் நாடக செட்டுகளையும் உள்ளுருக்கு அழைத்து வந்து நாடகங்களை நடத்தினார். அவரிடம் ஒரு பழக்கம் உண்டு. நாடகத் தொழிளாலர்களுக்குக் கடுக்கன், தங்கச் சங்கிலி , காப்பு அளிப்பார். அவர்களை அன்புடன் அரவணைத்துக் காத்து வந்தார். வெளியூரிலிருந்0து வந்த நாடக செட்டில் இருந்த எம்.ஜி. ஆர் அவர்களுக்கும் தங்க மோதிரம் கிடைத்ததும் அப்படித்தான். அவரது வள்ளல் தனமையைப் புரிந்தவர் எம். ஜி. ஆர் அவர்கள்.\nடி. கே. எஸ் அவர்களால் நாடக கம்பெனியைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. தந்தை பெரியார் அவர்கள் தொடர்ந்து நடத்தும்படி கூறினார்கள். ஆனால் பொருளாதார நெருக்கடியை அவரால் சமாளிக்க முடியவில்லை. அப்பொழுதுதான் காசி விஸ்வநாதன் அவர்கள் தன்னிட மிருந்த அனைத்து நாடகப் பொருள்களையும் கொடுத்து, மேலும் உதவி செய்து உயிர்ப்பித்தார். இதனை டி. கே. எஸ் அவகள் நாடக வரலாற்றில் குறிப்பிட்டிருக்கின்றார். இத்தகைய கலையார்வமும் வள்ளல் தன்மையும் கொண்டவர் யார் தெரியுமா? எட்டயபுர மன்னர்களில் ஒருவர். அவரின் முழுப் பெயர் எட்டப்பன் காசி விஸ்வநாதப் பாண்டியன்\nஅவரிடம் நாடகப் பற்றுமட்டுமல்ல, தேச பக்தியும் அதிகம் இருந்தது. அவர் தோற்றுவித்த திரை அரங்கின் பெயர் பாரதமாதா டாக்கீஸ். படம் ஆரம்பிக்கும் முன் முதலில் பாடப்பட வேண்டிய பாட்டு பக்கிம் சந்திரர் எழுதிய வந்தே மாதரம். ஆங்கில அரசு மிரட்டியும் பணியாது நாட்டுப்பாட்டையே இறைவணக்கமாக ஒலிக்கச் செய்தார்.\nஇலக்கியத்திற்குள்ள இலக்கணப்படி காப்புச் செய்யுள் கடவுள் வணக்கமாக இருக்க வேண்டும். ஆனால் நம் இளங்கோவடிகள் தன் சிலப்பதிகாரத்தில் இயற்கை வழிபாட்டைக் காப்புச் செய்யுளாக வைத்தார். மரபினை மீறி புது அத்தியாயம் படைத்தவர் அடிகளார்.\nதிங்களைப் போற்றுதும் ! திங்களைப் போற்றுதும்\nஞாயிறு போற்றுதும் ! ஞாயிறு போற்றுதும் !\nபூம்புகார் போற்றுதும் ! பூம்புகார் போற்றுதும் !\nஅடிகளாரின் வாழ்த்தும் வணக்கமும் புதியது. அரியது\nநாம் இன்றும் அதை நினைத்துப் பெருமைப் படுகின்றோம். நல்லவைகளை எப்பொழுதும் போற்ற வேண்டும்.\nகாசி விஸ்வநாதரோ அடிமைச் சூழலில் முழங்க வைத்த நாதம்\nஅந்தப் பாட்டின் சில வரிகளைப் பார்ப்போம்\nவந்தேமாதரம் என்போம்- எங்கள்\nமாநிலத்தாயை வணங்குதும் என்போம்\nவேறு குலத்தினராயினும் ஒன்றே\nஅன்னியர் வந்து புகலென்ன நீதி? - ஓர்\nமுப்பதுகோடி முழுமையும் வீழ்வோம்\nபாரதியின் தமிழாக்கம். வார்த்தைகளைச் சொல்லிப் பாருங்கள்.\nஉணர்ச்சிகள் பொங்கி எழவேண்டும். அன்று இவ்வரிகளைக் கேட்டவுடன்\nஎங்கள் இரத்தம் சூடாகும். துடித்து எழுவோம். இந்தப் பாட்டு சினிமாக் கொட்டகையில் முதல் பாட்டு. நாட்டு வணக்கம்\nஅன்றிருந்த துடிப்பு இப்பொழுது எங்கே? அடிமை வாழ்வில் உயிர்ப்புடன் இருந்த உணர்வுகள் சுதந்திரம் கிடைத்தவுடன் மரத்துப் போய் வருகின்றதே !நெஞ்சு பொறுக்குதில்லையே என்று பாடத் தோன்றுகின்றது.\nராஜாவும் பாரதியும் நண்பர்கள்.\nஅதே தியேட்டரில் காங்கிரஸ் கூட்டங்களும் நடக்கும். சுதந்திரப் போராட்டத்திற்கு நிறைய பொருளுதவியும் செய்திருக்கின்றார்\nஎட்டயபுரம் என்றால் பாரதி மட்டும் தான் பலருக்கும் தெரியும். அந்த வரலாற்றைக் கூறும்படி என் மனம் எனக்குக் கட்டளை இடுகின்றது.\nநான் வாழ்ந்த பூமி.. ஓடிப் புரண்ட கரிசல்மண். என் நினைவலைகளில்\nஎன்னைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சும் வரலாற்று உணமைகளை நான்\nமற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவது இயல்புதானே !?\nஎட்டப்ப காசிவிஸ்வநாதப் பாண்டியன் எட்டயபுர மன்னர்களில் ஒருவர்.\nஅவர் மட்டுமல்ல, அவர் பரம்பரையில் எல்லோரும், புலவர்கள், இசை மேதைகள், கலைஞர்கள் இவர்களுக்குப் புரவலராக இருந்திருக்கின்றனர்.\nமதன் கூறிய குற்றச் சாட்டு இங்கு பொருந்தாது. இங்கு பாடிய புலவர்கள்,\nபாடகர்கள் இவர்களின் வரலாற்றைப் பார்க்கலாம்.\nஎட்டயபுர ஆஸ்தான கவிஞர்களில் ஒருவர் கடிகை முத்துப் புலவர். இவருடைய மாணவர் உமறுப்புலவர். ஆம், இஸ்லாமியர்களின் பெருமைக்குரிய காவியம் தீட்டியவர் உமறுப்புலவர். இவரும் பின்னர்\nஎட்டயபுரம் சமஸ்தானப்புலவரானார். இவர் சரிதையை பாவலர் செ.ரா.\nசோமசுந்தரமணியக்காரர் எழுதியுள்ளார். டாக்டர். மா. ராசமாணிக்கனார் முன்னுரையுடன் கவியோகி சுத்தானந்த பாரதியாரின் சிறப்புப்பயிரமும் அப்புத்தகத்தில் காணலாம். நான் சொல்லப் போகும் செய்தி இதன் அடிப்படையில்தான்.\nஉமறு சிறு வயதாக இருக்கும் பொழுதே கடிகை முத்துப் புலவரிடம் மாணாக்கனாகச் சேர்ந்தார். அவருக்கு 12 வயதாக இருக்கும் பொழுது\nஓர் அதிசய நிகழ்ச்சி நடந்தது.\nவடக்கேயிருந்து அமிர்த கவி என்ற ஓர் புலவர் மன்னரிடன் வந்து தன் கடகத்திற்கு எதிர்ப்பாட்டு பாடும் புலவரை அனுப்பச் சொன்னார். கடிகை முத்துப் புலவர் உடல் நிலை அப்பொழுது சரியில்லை. சிறுவன் உமறு தானே போட்டிக்குச் செல்வதாகக் கூறவும் கவலையிருப்பினும் நம்பிக்கையுடன் தன் சீடனை அனுப்பினார்.\nபோட்டி இதுதான். அமிர்தகவி தன் கடகத்தைத் திருகியேற்றுவார். அது பாடும் பாட்டுக்கு எதிர்ப் பாட்டு பாட வேண்டும். கடகம் பாடவும் உமறு எழுந்து வந்துஎழுத்தாணியையும் ஏட்டையும் மேசை மேல் வைத்தார்.\nஎழுத்தாணி துள்ளி எழுந்து பதில்பாட்டு பாடியது. இதனை அவையில் வாசிக்க, கடகம் படீரென்று வெடித்தது. இதனைக் கண்டு அஞ்சிய வட திசைப் புலவர் தமது விருதுகளை உமறுவின் முன் வைத்துத் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். இந்த போட்டியைக் காண இராமனாதபுர மன்னர் சேதுபதியும் அவரது அமைச்சர் சீதக்காதி மரைக்காயரும்\nவந்திருந்தனர். உமறுவின் திறமையைப் பார்த்த சீதக்காதி மரைக்காயர்\nஉமறுவை நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றை எழுதக் கோரினார்\nதெய்வ அருளில்தான் சிறுவனால் அப்படி பாட முடிந்தது என்று மக்கள் பேசினர். இந்தப் பாடலில் மட்டும் எட்டப்ப மன்னரின் குறிப்பு வந்திருக்கின்றது. சீறாப்புராணம் எழுதி அரங்கேற்றிய பிறகு மீண்டும் எட்டயபுரம் திரும்பி வந்து அரசவையில் சமஸ்தானப் புலவரானார்.. அவர்\nசமாதி எட்டய புரத்தில் இருக்கின்றது. ஒளரங்கசீப் காலத்தைச் சேர்ந்தவர்\nகடிகை முத்துப் புலவர் மட்டுமல்ல, நாகூர் முத்துப் புலவரும் கீரைமஸ்தான் புலவரும் எட்டயபுரத்தில் வாழ்ந்தவர்கள்.மன்னர்\nவைணவ பக்தராக இருப்பினும் மத நல்லிணக்கம் கொண்டவர்.\nஉமறுப்புலவர் சமஸ்தானப் புலரவராக இருந்ததுவே மன்னரின்\nகுண நலனைக் காட்டுகின்றது.\nஇன்னொரு புலவர் நாம் எல்லோரும் அறிந்த பாரதி. வணங்காமுடிப் புலவன். நினைப்பததைத்தான் எழுதுவார். அவர் பிறந்த வீடும் , அவர் நினைவாக எழுந்த மணி மண்டபமும் எட்டயபுரத்தில்தான் இருக்கின்றன\nஎட்டயபுரத்தின் ஆஸ்தானக் கவியாகக் கொஞ்ச காலம் இருந்தார். அவருக்கு பாரதி பட்டம் கிடைத்தது எட்டயபுர மன்னன் தாத்தா\nதாய் மொழி தெலுங்கானாலும் தமிழ் கேட்டு இன்புறும் பரம்பரை. தமிழ்\nபோற்றிய புரவலர்கள். புலவர்களுக்கும் இசை வல்லுனர்களுக்கும் கலைஞர்களுக்கும் தாய் வீடு மன்னரின் இல்லம்.\nPosted by சீதாம்மா at 6:18 AM
anil ambani income tax account hacked byaChartered accountant lady student\nஅணில் அம்பானியினுடய வருமான வரி கணக்கு சட்டவிரோதமாக முடக்கிய 21 வயது சி.ஏ மாணவி மீது சைபர் க்ரைம் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது. மும்பையில் உள்ள கணக்கு தணிக்கை நிறுவனம் ஒன்று அனில் திருபாய் அம்பானி குழும தலைவர் திரு.அனில் அம்பானியின் வருமான வரி கணக்கை பராமரித்து வருகிறது. கடந்த 26 ஆம் தேதி ஜூன் மாதத்தில் அனில் திருபாய் அம்பானி குழும நிறுவனத்துக்கு வருமான வரி அலுவலகத்தில் இருந்து ஒரு இமெயில் வந்தது. அந்த இமெயிலில், அனில் அம்பானியின் வருமான வரி இணையதள கணக்கிற்கு உண்டான பாஸ்வோர்ட் மாற்றப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஜூலை மாதம் 12-ம் தேதியன்று மீண்டும் இதே போல் ஈமெயில் ஒன்று வந்தது. இதனால் பீதி அடைந்த அம்பானியின் அலுவலக அதிகாரிகள், அவரது கணக்கை ஆராய முற்பட்டபோது, அது முடக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதனால் முடக்கப்பட்ட தமது நிறுவன இன்டர்நெட் கணக்கு சம்பந்தமாக போலீசில் நிறுவன அதிகாரிகள் உடனடியா புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததில் ஐதராபாத்தில் உள்ள மனோஜ் டகா அண்ட் கம்பெனி எனும் கணக்கு தணிக்கை அலுவலகத்தில் சி.ஏ முடித்து விட்டு பயிற்சியில் இருந்த 21 வயது மாணவி தான் அனில் அம்பானியின் வருமானவரி கணக்கை முடக்கி அதில் உள்ள விபரங்களை கண்டது தெரிய வந்துள்ளது. அந்த மாணவியிடம் நடந்த விசாரணையில் அணில் அம்பானியின் வரி செலுத்திய விவரங்களை காண மற்றும் அவரது வருமானவரி கணக்கு எண் என்ன என்பதை தெரிந்துகொள்ளவே இந்த வருமான வரி கணக்கு முடக்கம் நிகழ்தது என அறியப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சைபர் குற்றத்தின் கீழ், அந்த மாணவி மீது கடந்த 7ம் தேதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த குற்றத்திற்காக அந்த மாணவி கைது செய்ய படலாம் என கருதபடுகிறது.
மேல்முறையீடு செய்யப்போவதில்லை: டிடிவி தினகரன் திட்டவட்டம் - TopTamilNews\nHome அரசியல் மேல்முறையீடு செய்யப்போவதில்லை: டிடிவி தினகரன் திட்டவட்டம்\nமேல்முறையீடு செய்யப்போவதில்லை: டிடிவி தினகரன் திட்டவட்டம்\n31/10/2018 5:07:00 AM\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nமதுரை: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என டிடிவி தினகரன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nதினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் சமீபத்தில் தீர்ப்பளித்தார். இதனையடுத்து தீர்ப்பை எதிர்த்து தினகரன் தரப்பினர் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு வேண்டாம் என்பதால் தேர்தலை சந்திக்க முடிவெடுத்துள்ளோம். மக்களின் கருத்துக்ளை கேட்ட பின்னர் பெரும்பாலான தகுதி நீக்க எம்.எல்.ஏ-க்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர். இதர தகுதி நீக்க எம்எல்ஏ-க்களுடன் ஆலோசித்த பிறகு வருகிற 31-ம் தேதி மதுரையில் அதிகாரப்பூர்வமாக இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றார்.\nஅதன்படி, தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் வழக்கில் மேல்முறையீடு செய்யப்போவதில்லை என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 20 தொகுதிகளிலும் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். 20 தொகுதிகளுக்கான தேர்தலில் அதிமுக டெபாசிட் பெறவே போராடும் என்றார்.\n18mlas disqualification case
சற்றுமுன் Archives - Adrasakka\nஆபத்து விளைவிக்கும் போதை பட்டியலில் இருந்து கஞ்சா நீக்கம்: ஐநா.வில் இந்தியா ஒப்புதல் !!\n“என்னிடம் 12 ஏக்கர் நிலம் இருக்கிறது…” – கங்கனாவுக்கு பதிலடி கொடுத்த மூதாட்டி !! –\n‘இந்தியாவின் 10 முன்னணி நிறுவனங்களின் தேனில் கலப்படம்’ – சர்க்கரைப் பாகு கலந்திருப்பது சோதனையில் அம்பலம்! சிக்கிய பதஞ்சலி !\n17 பேரை காவு வாங்கிய மேட்டுப்பாளையம் ‘தீண்டாமை சுவர்’ மீண்டும் அதே உயரத்தில் கட்டப்பட்டது ! – அதிர்ச்சி தகவல் !!
ரிஷி கபூர் முதல் இர்பான் கான் வரை: உடல்நல பிரச்சனையால் போராடி இறந்த பிரபலங்கள்!-Boldsky-Health-Tamil-WSFDV\nBoldsky | 2nd May, 2020 02:49 PM\nபுகழ்பெற்ற பழம்பெரும் நடிகரான ரிஷி கபூர், 67 வயதில் காலமானார். இந்த நடிகர் 2018 முதலாக லுகேமியாவால் அவஸ்தைப்பட்டு வந்தார். சமீபத்தில் மூச்சு திணறல் பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 30, 2020 அன்று காலையில் காலமானார்.\nபிரபலமான பாலிவுட் நடிகரான இர்ஃபான் கான், தனது 53 வயதில் காலமானார். இந்த நடிகர் மிகவும் அரிய வகை நியூரோஎண்டோகிரைன் புற்றுநோயால் போராடி வந்தார். இந்த வகை புற்றுநோய் இவருக்கு இருப்பது 2018-இல் தான் தெரிய வந்தது. ஏப்ரல் 29 அன்று பெருங்குடல் அழற்சியால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி நிலைமை மோசமாகி மரணமடைந்தார்.\nபழம்பெரும் பாலிவுட் நடிகையான வித்யா சின்ஹா, தனது 71 வயதில் ஆகஸ்ட் 15, 2019 அன்று காலமானார். இவர் ஏற்கனவே நுரையீரல் மற்றும் இதய கோளாறால் அவஸ்தைப்பட்டு வந்தார். மூச்சுத்திணறல் பிரச்சனையால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நிலைமை மோசமாக இருப்பதால் வெண்டேட்டருக்கு மாற்றப்பட்டார். இறுதியாக நுரையீரல் நோய் மோசமானதால், தனது போராட்டத்தை நிறுத்தி காலமானார்.\nபல்திறமைக் கொண்ட மனிதரான இவர் பாலிட்டில் மட்டுமின்றி, தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமின்றி, திரைப்பட தயாரிப்பாளரும் கூட. இவர் ஜூன் 10, 2019 அன்று மரணமடைந்தார். பத்ம பூசன் விருது பெற்ற கர்னாட் தனது 81 வயதில் காலமானார். அவரது மரணத்திற்கு காரணம் பல உறுப்பு செயலிழப்பு நோய்க்குறி என்று கூறப்படுகிறது.\nபுகழ்பெற்ற பாலிவுட் நடிகரான காதர் கான் நீண்ட கால உடல்நல குறைவால் போராடி ஜனவரி 1, 2019 அன்று இயற்கை எய்தினார். அவரது உடல்நல அறிக்கைகளின் படி, அவர் மிகவும் அரிதான மூளை நோயான வாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் 81 வயதில் தனது உயிரை விட்டார்.\nபாலிவுட் திரைப்படங்களில் பல வேடங்களில் நடித்தது மட்டுமல்லாமல், டிவி சீரியல்களின் முக்கிய முகமாகவும் இருந்த ரீட்டா பதுரி, ஜூலை 17, 2018 அன்று தனது வாழ்க்கையை இழந்தார். நீண்ட காலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட அவர் தனது 62 வயதில் மரணமடைந்தார்.\nபழங்கால நடிகரான வினோத் கன்னா ஏப்ரல் 27, 2017 அன்று உயிரை இழந்தார். சிறுநீர்ப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், அதன் முற்றிய நிலையில் இருந்தார். எச்.என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தனது 70 வயதில் உயிரை விட்டார்.\nபாலிவுட் திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த ஓம் பூரி, ஜனவரி 17, 2017 அன்று காலமானார். 66 வயதான இவர் மாரடைப்பால் தனது இல்லத்தில் இருந்த போது இறந்தார். இவர் இறப்பதற்கு ஒரு நாளைக்கு முன்பு வரை ஆரோக்கியமாக இருந்ததால், அவரது மரணம் பலருக்கும் ஒரு அதிர்ச்சியாக இருந்தது.\nசமீபத்தில் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்கள் அடுத்தடுத்து உடல்நல குறைவால் காலமானார்கள். இது திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஏற்கனவே கொரோனாவால் ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவதோடு, இறந்தும் வருகிறார்கள். இந்நிலையில் கடந்த வாரம் உடல்நல குறைவால் திரை பிரபலங்கள் அடுத்தடுத்து மரணித்தது, பலருக்கும் பெரும் மன கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.\nMOST READ: பெருங்குடல் அழற்சி ஏற்படாமல் இருக்கணுமா? அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nஇதுப்போன்று உடல்நல குறைவால் ஏராளமான திரைப் பிரபலங்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இக்கட்டுரையில் உடல்நல பிரச்சனையால் உலகை விட்டு பிரிந்த, நம் மனதில் இடம் பிடித்த சில பிரபலங்களில் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை: செல்லாக் காசா? (கட்டுரை) – நிதர்சனம்\nதிருகோணமலை: செல்லாக் காசா? (கட்டுரை)\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சுற்றி கடந்த பல வாரங்களாகக் காணப்பட்ட பரபரப்பு சற்று அடங்கத் தொடங்கியுள்ள நிலையில், திருகோணமலைத் துறைமுக விவகாரம் முன்னுக்கு வரத் தொடங்கியிருக்கிறது. திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்கி, அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் நடத்தப்படும் பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விரைவில் இந்த உடன்பாடு இறுதி செய்யப்படும் என்றும், இந்த விவகாரத்துக்கு பிள்ளையார் சுழியைப் போட்டு வைத்திருந்தார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.\nஇந்திய வெளிவிவகார அமைச்சின் அனுசரணையில் புதுடெல்லியில் நடந்த ‘ரைசினா’ கலந்துரையாடல் மாநாட்டின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதற்கு முன்னதாக, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யும் திட்டம் உள்ளதாக, கடந்த மாதம் கூறியிருந்தார்.\nஆனால், அவரது தகவலுக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவலுக்கும் இடையில் வேறுபாடு இருந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சீனாவுக்கு வழங்கியது போல, திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கி அபிவிருத்தி செய்யும் திட்டமே இது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம், இலங்கையில் இரண்டு நாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்ற ஒரு சமநிலை உறவைப் பேணும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது என்ற கருத்து ஏற்பட்டது.\nதிருகோணமலைத் துறைமுகம் தொடர்பாக அரசாங்கத்துக்கு வெளியே இருக்கின்ற இரண்டு பேர் அவ்வப்போது எச்சரிக்கைகளை விடுத்து வந்தனர். ஒருவர் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண. அவர், திருகோணமலையில் தளம் அமைக்க அமெரிக்காவுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்று பல மாதங்களாகக் கூறி வருகிறார். ஆனால், அவரது அந்தப் பேச்சை யாரும் கண்டுகொள்வதில்லை. இன்னொருவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். முன்னாள் அமைச்சராக அவரும், திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்க அரசாங்கம் முனைகிறது என்று குற்றம்சாட்டி வந்தார். இவரது இந்தக் கருத்தும் அவ்வளவாக யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை.\nஆனால், புதுடெல்லியில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல், திருகோணமலைத் துறைமுகம் இந்தியாவின் கைக்குள் செல்லப் போகிறதா என்ற பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சரத் பொன்சேகா இதுபற்றிய தகவல் வெளியிட்ட அடுத்த நாள், ‘டாவோஸ்’ மாநாட்டில் பங்கேற்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட, திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யும் திட்டம் பற்றி கூறியிருந்தார். திருகோணமலைத் துறைமுகத்தை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்வது என்பதும், இந்தியாவுக்கு வழங்கி அபிவிருத்தி செய்வது என்பதும் வேறுபட்ட விடயங்களாகும்.\nஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் வழங்கப்பட்டே அபிவிருத்தி செய்யப்படுகிறது. அதுபோல, ஒரு திட்டத்தையே திருகோணமலை விடயத்திலும் அரசாங்கம் செயற்படுத்த முனைந்திருக்கிறது. ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதை இந்தியா ஆதரிக்கவில்லை. அதனை அச்சத்துடன்தான் பார்க்கிறது. ஆனால், அதனை வெளியே பகிரங்கமாகக் கூறவில்லை. இந்தியா வெளிப்படையாக எதிர்க்கவில்லை என்பதற்காக, ஹம்பாந்தோட்டையை சீனாவுக்கு வழங்கும் முடிவை ஆதரிக்கிறது என்று அர்த்தம் கொள்ள முடியாது.\nசீனாவுக்கு ஹம்பாந்தோட்டையை வழங்கியது போல, திருகோணமலையை இந்தியாவுக்கு வழங்கினால், உறவுகளில் சமநிலையை பேணுவதாக இரண்டு நாடுகளிடமும் நல்ல பெயர் எடுத்துக் கொள்ளலாம் என்றே இலங்கை எதிர்பார்க்கிறது. ஆனால், இந்தியா இதுபற்றி வேறு விதமாகச் சிந்திப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை என்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அது அதிகாரபூர்வமானது அல்ல; இந்த விடயத்தில் இந்தியா எந்தக் கருத்தையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nஆசியாவின் மிகமுக்கியமான – கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் இருக்கின்ற, ஆழம்மிக்கதும், விசாலமானதும், இயற்கையாக அமைந்ததுமான திருகோணமலைத் துறைமுகம் எப்போதுமே வல்லரசுகளின் உறுத்தலுக்குரிய இடமாகவே இருந்து வந்திருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் பிரித்தானியாவிடம் இருந்த இந்தத் துறைமுகத்தை ஜப்பான் தேடி வந்து தாக்கியிருந்தது. அதற்குப் பின்னர் அமெரிக்காவும் இந்தியாவும் இதன் மீது ஆதிக்கம் செலுத்தப் போட்டி போட்டன.\nஇப்போது கூட முக்கியமான கடற்படைகளைக் கொண்டுள்ள நாடுகள் எல்லாமே திருகோணமலை மீது கவனம் செலுத்தாமல் இருப்பதில்லை. இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகளின் கடற்படைத் தளபதிகள் ஒருமுறை திருகோணமலைத் துறைமுகத்தை சுற்றிப் பார்க்காமல் திரும்புவதில்லை. அந்தளவுக்கு ஆர்வத்தைத் தூண்டுகின்ற திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதில் இந்தியா தனக்கு நாட்டமில்லை என்று மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை ஆச்சரியமானதே.\nஅதேவேளை, திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியா சில நிபந்தனைகளை விதித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இவற்றில் எது உண்மை? எது பொய் என்று தெரியவில்லை. ஆனால், திருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றி ஓர் இரகசிய பேரமும் இழுபறியும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை மாத்திரம் உணர முடிகிறது. திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை பொறுப்பேற்க இந்தியா ஏன் தயங்குகிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. பாதுகாப்பு ரீதியாக திருகோணமலைத் துறைமுகத்தின் முக்கியத்துவத்தை இந்தியா சரியாக உணரவில்லையா என்று எவரும் சந்தேகித்தால் அது தவறானது.\nஏனென்றால், இந்தியாவை விட, இதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை உணர்ந்த வேறு நாடு ஏதுவும் இருக்க முடியாது. திருகோணமலையின் மீது அமெரிக்கா குறிவைத்த போதும், சீனா குறிவைத்த போதும் அதனை சாதுரியமான முறையில் முறியடித்திருந்தது இந்தியா. அத்தகைய இந்தியாவுக்கு இப்போது திருகோணமலைத் துறைமுகம் கசப்பானதாக மாறி விட்டது என்று கூற முடியாது. திருகோணமலைத் துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்யும் பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கவே இலங்கை அரசாங்கம் முனைகிறது. இன்னொரு பக்கத்தில் கடற்படைத் துறைமுகமாக அதனைப் பலப்படுத்தும் திட்டமும் தனியாக இலங்கை அரசாங்கத்திடம் உள்ளது. அதனை வேறு யாரிடமும் கையளிக்க அரசாங்கம் தயாரில்லை.\nஆனால், வர்த்தக துறைமுகமாக இதனை அபிவிருத்தி செய்வதன் மூலம் நீண்டகால நோக்கில் இந்தியாவுக்கு ஆதாயமாக இருக்காது என்று புதுடெல்லி சிந்திப்பதாகத் தெரிகிறது. இந்தியா இப்போது உள்நாட்டுத் துறைமுகங்களைப் பலப்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் இனயம் துறைமுகத் திட்டம் அதில் முக்கியமானது. பாரிய கொள்கலன் கப்பல்களைக் கையாள முடியாத நிலையில் தான் இந்தியா இன்னமும் இருக்கிறது. அத்தகைய கொள்கலன்கள் இப்போது கொழும்பு துறைமுகம் வழியாகவே கையாளப்படுகின்றன.\nஇதனால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாவை இந்தியா ஆண்டுதோறும் இழக்கின்றது. அந்த நிலைக்கு முடிவு கட்டவே, தமிழ்நாட்டில் இனயம், கேரளாவில் விழிஞ்ஞம் போன்ற ஆழ்கடல் துறைமுகங்களை அவசரமாகக் கட்டும் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. இத்தகைய நிலையில், திருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதை இந்தியா அதிகம் விரும்பவில்லை.\nதிருகோணமலைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்தால், இலங்கைக்கும் இலாபத்தின் பங்கை கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், உள்நாட்டுத் துறைமுகங்களை அபிவிருத்தி செய்து, அந்த இலாபத்தை முழுமையாக அனுபவிக்கலாம் என்று பார்க்கிறது இந்தியா. கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் முதலீடு செய்வதில் இந்தியா முன்னர் ஆர்வம் காட்டியது. அதற்காக, மும்பை நிறுவனங்களை இணைத்து, புதிய நிறுவனம் ஒன்றை உருவாக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.\nஆனால் இப்போது, அதில் இந்தியா ஆர்வம்காட்டவில்லை. ஏனென்றால், கொழும்புத் துறைமுகத்தின் தெற்குப் பகுதி முனையத்தை சீனா ஏற்கெனவே நவீனமயப்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், கிழக்கு முனையத்தை நவீனமயப்படுத்தினால், இந்தியாவில் புதிதாக உருவாக்கப்படும் துறைமுகங்களைத் தேடி கப்பல்கள் வராது. அதைவிட உள்நாட்டுத் துறைமுகங்கள் நவீனமயப்படுத்தப்பட்டால், கொழும்பு ஊடான இந்திய கொள்கலன்களின் பரிமாற்றமும் தடைப்படும். எனவேதான், கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் முதலீடு செய்வதில், சீனாவுடன் போட்டியிட்டு முதலீடு செய்வதில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை.\nகிட்டத்தட்ட அதேநிலைதான் திருகோணமலைத் துறைமுகத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.அதற்காக திருகோணமலையை விட்டுக் கொடுக்க இந்தியா தயாராகிறது என்று கருத முடியாது. திருகோணமலைத் துறைமுகத்தில் தானும் கால் வைக்காமல், வேறு யாரையும் கால் வைக்கவும் விடாமல் தடுக்கின்ற ஓர் உத்தியையே இந்தியா இப்போது கையாள முனைவதாகத் தெரிகிறது. இந்தக் கணிப்பு சரியாக அமையுமேயானால், திருகோணமலைத் துறைமுக அபிவிருத்தி என்பது, இப்போதைக்கு சாத்தியமான ஒன்றாக இருக்கப் போவதில்லை. ஏனெனில், இந்தியாவுடன் முரண்பட்டுக் கொண்டு யாரும் இந்தத் திட்டத்தில் கால்வைக்க முடியாது. இலங்கை அரசாங்கத்தினாலும் இதனை நிறைவேற்ற முடியாது.\nPrevious post ஏமனில் அமெரிக்க ராணுவ படையினரின் தாக்குதலில் 30 அல்-கொய்தா தீவிரவாதிகள் பலி..!!\nNext post தல 57 படத்தின் தலைப்பு இதுவா? குழப்பத்தில் ரசிகர்கள்..!!\nPrevious post:ஏமனில் அமெரிக்க ராணுவ படையினரின் தாக்குதலில் 30 அல்-கொய்தா தீவிரவாதிகள் பலி..!!\nNext post:தல 57 படத்தின் தலைப்பு இதுவா? குழப்பத்தில் ரசிகர்கள்..!!
டிராவில் முடிந்த கான்பூர் டெஸ்ட்: இந்திய - நியூசிலாந்து அணிகளில் அலச வேண்டிய3அம்சங்கள்! | Ind vs NZ3talking points from India dramatic draw vs New Zealand in Kanpur Test | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News\nPublished : 30,Nov 2021 11:26 AM\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்திய அணி வெற்றிப்பாதைக்கு சென்றுகொண்டிருந்த நிலையில், நியூசிலாந்து அணியின் அஜாஸ் படேல் மற்றும் ரச்சின் ரவீந்திரன் இருவரும் இணைந்து தோல்வியின் விளிம்பில் இருந்த அணியை காப்பாற்றினர். கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில், கடைசி 12 ஓவர்களை திறம்பட சமாளித்து ஆட்டத்தை சமன் செய்தனர். குறிப்பாக ரவீந்திரா 91 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து, டிரா ஆனதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.\nமைதானம் சுழலுக்கு சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்ததால் இந்திய அணியில் ஸ்பின்னர்களுக்கு அதிக ஓவர்கள் வழங்கப்பட்டது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் கடைசி செஷனில் சிறப்பாகச் செயல்பட்டு5விக்கெட்டுகளை வீழ்த்தியும், வெளிச்சக் குறைவு காரணமாக ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தப்பட்டதால் வெற்றிபெற முடியவில்லை.இதன் மூலம்2போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-0 என்ற கணக்கில் இரு அணிகளும் உள்ளன. போட்டி டிராவில் முடிந்தது ரசிகர்களுக்கு சிறிய வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் போட்டி மிக சுவாரஸ்யமாக அமைந்தது. இப்போட்டியில் அலசப்பட வேண்டிய சில அம்சங்களும் உள்ளன.\nஅறிமுக வீரராக இடம் பிடித்த ஷ்ரேயாஸ் ஐயர், முதல் இன்னிங்சில் சதம் விளாசி அசத்தினார். அறிமுக டெஸ்டில் சதம் அடித்த 16-வது இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இதையடுத்து 2வது இன்னிங்சிலும் அவர் அரை சதம் அடித்தார். இதன் மூலமாக, அறிமுக டெஸ்டில் சதம் மற்றும் அரை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை ஷ்ரேயாஸ் வசமாகி உள்ளது. இந்த போட்டியில் முதல்2இன்னிங்ஸிலும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சொதப்பிய போது ஷ்ரேயாஸ் ஐயர் தான் காப்பாற்றினார். இதனால் அவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் நிச்சயம் இடம் உள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nதொடரும் ரஹானேவின் சொதப்பல் ஆட்டம்\n2016ஆம் ஆண்டு முதல், டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானேவின் சராசரி வெறும் 36.93 மட்டுமே. கடந்த இங்கிலாந்து தொடரிலிருந்தே அவரின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருந்து வருகிறது. இங்கிலாந்து தொடருக்குச் சென்ற ரஹானே7இன்னிங்ஸில் 109 ரன்கள் மட்டுமே சேர்த்து 15.57 சராசரி வைத்தார். அதிகபட்சமாக 61 ரன்களை ரஹானே சேர்த்தார். ஆனால், ரஹானேவை விட ரவிந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், பும்ராவின் சராசரி இந்தத் தொடரில் அதிகமாக இருந்தது.\nஇங்கிலாந்து தொடருடன் ரஹானே அணியிலிருந்து கழற்றி விடப்பட்டிருப்பார். ஆனால், லாட்ர்ஸ் மைதானத்தில் அரை சதம் அடித்தபின் தேர்வுக் குழுவினரின் நம்பிக்கையை அவர் பெற்றார். மேலும் கேப்டன் விராட் கோலி மற்றும் டி20 கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோருக்கு முதல் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டதால் அணியை தற்காலிகமாக வழிநடத்தும் பொறுப்பு ரஹானேவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியின்2இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமே 39 ரன்கள் எடுத்திருப்பது ரஹானேவின் பேட்டிங் ஃபார்ம் பலவீனமான நிலையில் இருப்பதையே காட்டுகிறது.\nடிசம்பர் 3ஆம் தேதி தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மீண்டும் விராட் கோலி தலைமையில் களமிறங்குகிறது. இந்த போட்டியிலும் ஃபார்முக்கு வராவிட்டால், அணியிலிருந்து ரஹானே ஒதுக்கப்படுவது உறுதியாகிவிடும்.\nநீல் வாக்னரை தேர்வு செய்யாதது ஏன்?\nஇந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். குறிப்பாக அக்சர் பட்டேல் மற்றும் அஷ்வின் இருவரும் தலா6விக்கெட்டுகளையும், ஜடேஜா5விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்கள். மறுபுறம், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு பெரிதாக எடுபடவில்லை. டிம் சவுதி முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில்3விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். கைல் ஜேமிசன் இரண்டு இன்னிங்ஸிலும் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நியூசிலாந்து3சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு விளையாடினாலும் அவர்களிடமிருந்து தரமான பவுலிங் வெளிப்படவில்லை என்பது தெரிந்தது.\nஇப்போட்டியில் அணியின் ஆடும் லெவனில் நீல் வாக்னர் இடம்பெறாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்போதைக்கு நியூசிலாந்து அணியில் நீல் வாக்னர் பவுன்சர்களை வீசித் தாக்குவது போல் வேறு பவுலர்கள் இல்லை. அப்படியொரு துல்லியமாக பவுன்சர்களை வீசும் நீல் வாக்னரை தேர்வு செய்யாததை குறித்து கேன் வில்லியம்சன் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்.\nஇதையும் படிக்க: டிராவில் முடிந்த கான்பூர் டெஸ்ட் - இந்தியாவின் வெற்றியை தடுத்த இரண்டு முக்கிய காரணங்கள்!\nRelated Tags : Ind vs NZ, New Zealand , Kanpur Test, கான்பூர் டெஸ்ட் , இந்தியா, நியூசிலாந்து, கிரிக்கெட் , டெஸ்ட் போட்டி,
ஒரு நாள் பில்லியனர் ஆன டாக்ஸி டிரைவர்... வங்கியின் திடுக் பரிசு! | taxi driver got Rs 9,806 crore in his Jan Dhan account\nPosted Date : 11:32 (29/11/2016)\nLast updated : 11:31 (29/11/2016)\nபல்வீந்தர்சிங்கிற்கு ஒரே ஆச்சரியமாகிப் போனது. ஆனால், அவருக்கு அதில் ஏதோ தவறு இருப்பது தெரிய வந்தது. அதனால் வங்கிக்கு சென்று 'எனது கணக்கில் ஏராளமான பணம் டெபாசிட் ஆகியுள்ளது. அது என்னவென்று பாருங்கள்' என கூறியுள்ளார். ஆனால், வங்கி ஊழியர்கள் வழக்கம் போல அதனைக் கண்டு கொள்ளவில்லை.\nஇது குறித்து பல்வீந்தர்சிங் கூறுகையில், ''நான் பிரதான் மந்திரி ஜன் யோதான் திட்டத்தின் கீழ் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். சாதாரணமாக எனது வங்கிக் கணக்கில்3ஆயிரம்தான் இருக்கும். ஆனால் நசம்பர் 4ம் தேதி எனது கணக்கில் கோடிக்கணக்கானத் தொகை இருந்தது கண்டு அதிர்ச்சியுற்றேன். வங்கிக்கு தகவல் கொடுத்தும் உதாசீனப்படுத்தினர்'' என்கிறார்.\nஇது குறித்து வங்கி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது, ''பல்வீந்தர்சிங்கின் கணக்கில் 200 ரூபாய் வரவு வைப்பதற்கு பதிலாக வங்கியின் துணை மேலாளர் தவறுதலாக 11 டிஜிட் இன்டர்னல் பேங்கிங் பொது கணக்கு எண்ணை பல்வீந்தரின் கணக்கில் பதிவு செய்துள்ளார். அப்படித்தான் பல்வீந்தர்சிங்கின் கணக்கில் 9,806 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது.\nவருவாய்துறை இணைக்கமிஷனர் இதனை பூபேந்திர சிங் இதனை உறுதி செய்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ''வங்கி ஊழியர்கள் தொடர்ந்து இது போன்றத் தவறுகளை செய்து வருகின்றனர். கணக்கு வைத்திருப்பவர்களே முன்வந்து தவறினை சுட்டிக் காட்டினாலும் அதனை சட்டை செய்வதும் இல்லை'' என குற்றஞ்சாட்டியுள்ளார்.\ntaxi driver got Rs 9806 crore,Jan Dhan account,டாக் ஷி டிரைவர்,ரூ. 9,806 கோடி,வங்கிக் கணக்கு,பாட்டியாலா,பஞ்சாப்
சர்ச்சையை கிளப்பும் செரீனா கார்ட்டூன்.. இனரீதியான தாக்குதல் என பிரபலங்கள் கண்டனம் | Australian cartoonist crticized widely for his sketch on serena willams fight in US open - myKhel Tamil\n» சர்ச்சையை கிளப்பும் செரீனா கார்ட்டூன்.. இனரீதியான தாக்குதல் என பிரபலங்கள் கண்டனம்\nசர்ச்சையை கிளப்பும் செரீனா கார்ட்டூன்.. இனரீதியான தாக்குதல் என பிரபலங்கள் கண்டனம்\nPublished: Tuesday, September 11, 2018, 19:09 [IST]\nசிட்னி : அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் செரீனா வில்லியம்ஸ் நடுவரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது ஒரு முடிவை எட்டாமல், பல்வேறு நபர்களால் பல்வேறு கோணங்களில் வளர்ந்து வருகிறது.\nநேற்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்டூனிஸ்ட் ஒருவர் இந்த சர்ச்சையை மையமாக வைத்து வரைந்த கார்ட்டூன் சர்ச்சையில் சிக்கி உள்ளது.\nஅதில் செரீனாவின் சண்டையை இழிவுபடுத்தும் வகையில் மையக்கருத்து இருந்தாலும், சிலர் இந்த கார்ட்டூன் இனரீதியான தாக்குதல் என்ற பார்வையை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் மகளிர் இறுதிப் போட்டியில் ஜப்பானின் ஒசாகாவை சந்தித்தார் செரீனா. இடையில் நடுவர் பார்வையாளர் பகுதியில் இருந்து ஆலோசனை பெற்றதாக கூறி விதித்த பெனால்டியால் கோபமடைந்தார் செரீனா. நடுவரோடு கடும் சண்டை போட்டார். அதற்கு போட்டியின் போதே தண்டனையாக புள்ளிகளை இழந்தார். போட்டி முடிந்த பின் பெரும் சர்ச்சையானது இந்த விவகாரம். அமெரிக்க டென்னிஸ் அமைப்பால் 17000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.\nஆஸ்திரேலியா ஊடகத்தில் வெளியான கார்ட்டூன் ஒன்றில் இந்த விவகாரம் கிண்டல் செய்யப்பட்டு இருந்தது. அதில், செரீனா தன் டென்னிஸ் ராக்கெட்டை போட்டு மிதித்துக் கொண்டு இருப்பது போலவும், நடுவர் மற்றொரு போட்டியாளரான ஒசாகாவிடம், "நீங்கள் அவரை வெல்ல வைத்து விடுங்கள்" என கூறுவது போல சித்தரிக்கப்பட்டு இருந்தது.\nஇந்த கார்ட்டூன் சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினையை பெற்று வருகிறது. அமெரிக்க அரசியல்வாதிகள், பிரபல எழுத்தாளரான ஜே.கே.ரௌலிங் என பலரும் இதை கண்டித்துள்ளனர். ஜே.கே.ரௌலிங் தன் பதிவில், "ரொம்ப நல்லது. தற்போது வாழ்ந்து வருபவர்களில் மிகச்சிறந்த விளையாட்டு வீராங்கனையை இனவாதி, பாலினவாதி என்ற அளவுக்கு சுருக்கிவிட்டீர்கள்" என சாடியுள்ளார்.\nபதில் சொன்ன கார்டூனிஸ்ட்\nஇதற்கு பதில் அளித்த அந்த கார்டூனிஸ்ட் நைட் என்பவர், "இங்கே இனம் பற்றிய பேச்சே இல்லை. எல்லாமே, குணம் பற்றி தான் இருக்கிறது" என தன் கார்ட்டூன் அர்த்தம் பற்றி விளக்கினார். எனினும், பார்ப்பவர்கள் அப்படி நினைக்கவில்லையே?\nMore செரீனா News\nசெரீனாவுக்கு இன்று டும் டும் டும்... காதலரைக் கைப்பிடிக்கிறார்.. கைக்குழந்தை சகிதம்!\nசெரீனா வில்லியம்ஸ் வயிற்றிலுள்ள குழந்தை யாரை மாதிரி இருக்கும்? டென்னிஸ் வீரரின் கேவலமான கமெண்ட்\nசகோதரி வீனசை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார் செரீனா! ஸ்டெபி கிராப் சாதனை தகர்ப்பு\nவிம்பிள்டன் பைனலில் வில்லியம்ஸ் சகோதரிகள் மோதல்\nAustralian cartoonist crticized widely for his sketch on serena willams fight in US open\nStory first published: Tuesday, September 11, 2018, 19:09 [IST]
கம்பராமாயணம் (உரைநடை)/கிட்கிந்தா காண்டம் - விக்கிமூலம்\nகம்பராமாயணம் (உரைநடை)/கிட்கிந்தா காண்டம்\n415226கம்பராமாயணம் (உரைநடை) — கிட்கிந்தா காண்டம்டாக்டர் ரா. சீனிவாசன்\nவானத்தைப் போன்ற பரப்பும், நீல நிறமும் பம்பைப் பொய்கை பெற்றிருந்தது, அப்பொய்கையின் பூக்களும் அதில் படியும் அன்னப் பறவைகளும் சீதையின் நினைவை இராமனுக்கு மிகுதிப்படுத்தின, கயல் பிறழ்ச்சி சீதையின் கண்களை அவன் கண்முன் நிறுத்தியது; அன்னப் பறவை மின்னல் இடையாளான சீதையின் நடையைக் காட்டியது; குவளை விழித்துப் பார்த்தது; ஆம்பல் வாய் திறந்து பேசியது; களிறும், பிடியும் நீராடித் தழுவிக் கொண்டு அவர்கள் பழைய அன்பு வாழ்க்கையை நினைவுகளாகக் கொண்டு வந்து நிறுத்தின. பிடிக்கு முதலில் நீர் ஊட்டிப் பின் உண்ணும் களிற்றின் அன்புச் செயல் அவன் எதையோ இழந்துவிட்டதை எடுத்துக் காட்டியது. பிரிவுத் துயரில் அப்பொய்கைக் காட்சி அவனை ஆழ்த்திவிட்டது. நீடு நினைந்தான்; நீள்கனவுகளில் மிதந்தான். காரிகை தவிர வேறு எதுவும் அவன் கண்முன் நிற்க மறுத்துவிட்டது. தூரிகை கொண்டு எழுதாத அச்சித்திரம் அவனைச் சித்திரவதை செய்தது.\nஇலக்குவன் இராமனை நோக்கினான்; அவன் துன்பக் கனவுகளைக் கலைத்தான்; “பொழுதும் சாய்ந்தது. “நெடியோய்! நீராடி நிமலனை வழிபடு; நடந்ததை மறந்து, நடப்பதனை எண்ணிச் செயல்படுவோம்” என்று மென்மையாய்ச் சொல்லி, அவனைச் செயல்படுத்தினான், அவனும் மாலை மயக்கம் தீர்ந்து, இறைவழிபாடு செய்தான். முனிவர்தங்கியிருந்த சோலையில் ஒரு புறத்தே அவர்கள் உறைவாராயினர். மாலைக் கதிரவனும் வானத்தை இருளில் ஆழ்த்திவிட்டு மேலைக் கடலுள் ஒளிந்து கொண்டான்.\nஇரவு இராமனுக்குத் தனிமையைத் தந்தது; வான் உறங்கியது; வையகம் உறங்கியது; பூ ஒடுங்கின; புள் ஒடுங்கின; உயிர்கள் அனைத்தும் அயர்ந்து உறங்கின; அரவுகளும் கரவு நீங்கி அடங்கி ஒடுங்கின; விலங்குகளும் ஒய்வு கொண்டன; இராமன்மட்டும் உறங்க வில்லை; வைகல் விடிவதை எதிர்நோக்கி இருவரும் விழித்தே இருந்தனர்; விடிந்ததும் சீதையைத் தேடி மலைப் பாதைகளையும், காட்டு வழிகளையும் கடந்து சென்றனர்.\nசபரி காட்டிய வழியில் அவர்கள் கால்கள் சென்றன; ருசிய முகம் என்னும் மலையை அடைந்தனர்; குரங்குகளுக்கு அரசனாகிய சுக்கிரீவன் அவர்களைக் கண்டு அஞ்சினான். மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாகத் தென்பட்டன. பகைவர் எனக் கருதிக் குகைகளில் ஒளிய முற்பட்டன; அனுமனை அழைத்துத் தான் கொண்ட அனுமானத்தை உரைத்தான்; வாலியின் ஏவலை ஏற்று வரிவில் ஏந்தி வந்த வாலிபர்களாய் இவர்கள் தென்படுகிறார்கள், துறவுக் கோலத்தில் துயர் விளைவிக்க வந்திருக்கிறார்” என்று கூறி ‘நீ சென்று ஆராய்ந்து உண்மை தெரிந்து திரும்பிவா’ என்று ஆணையிட்டான்.\nபாற்கடலில் எழுந்த நஞ்சைக் கண்ட அமரர்களைப் போல வானரர் அச்சம் கொண்டனர். அவர்கள் அச்சத்தைப் போக்கி அமைதியாக இருக்குமாறு அனுமன் கூறினான்; அஞ்சனை மகனாகிய அவன், அளுசன வண்ணனாகிய இராமனை மறைவில் இருந்து கவனித்தான்.\n‘மூவர் கடவுளர்; இருவரே வந்துள்ளனர்; அதனால் இவர்கள் கடவுளர் அல்லர், வில்லேந்திய நிலையில் எதையோ தேடுபவராய் உள்ளனர்; சோகம் இவர்களை அணைந்திருக்கிறது; அன்பின் திருஉருவாய்க் காணப்படுகின்றனர்’, என்பதை அறிந்தான். பிரியம் கொள்ளத் தக்க மனிதராய்க் காணப்பட்டனர். அதனால் அஞ்சாமல் அவர்களை அணுகினான் அநுமன். அவர்கள் பார்வைக்கு அவன் விருந்தாயினான்.\n“நீ யார்? எங்கிருந்து வந்தாய்? வந்தது ஏன்? என்ற வினாக்களைத் தொடுத்தனர்.\n“காற்றின் வேந்தனுக்கு அஞ்சனை வயிற்றில் பிறந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்” என்று விரிவாய்ச் சொன்னான் அநுமன்.\n“இம் மலையில் இருந்து வாழும் வேந்தன் சுக்கிரீவன்; அவனுக்கு யான் ஏவல் செய்வேன்; தேவரீர்! நின்வரவு நல்வரவாகுக; நும்மை நோக்கி விரைவில் வந்தேன்; “அனையவன் ஏவலினாலே உம்மை அறிய வந்தேன்” என்று மேலும் தொடர்ந்தான்.\n“அனுமன் அறிவும், ஆற்றலும், கல்வியும், ஞானமும் நிரம்பியவன்” என்பதை அவன் சொல்லால் இராமன் தெரிந்துகொண்டான்.\n“தான் கல்லாத கலையும் அறியாத வேதங்களும் இல்லை என்று கூறும்படி இவன் பேசுகின்றான்; யார் கொல் இச்சொல்லின் செல்வன்?” என்று வியந்தான்; “அவன் அந்தண வடிவத்தில் வந்தான் என்றாலும், சொந்த வடிவம் வேறு இருக்கவேண்டும்” என்பதை இராமன் உணர்ந்தான்.\n“நீ கூறும் தலைவன் சுக்கிரீவனைத்தான் தேடி வந்தோம்; அவன் இருக்குமிடம் அறிவி” என்றான் இராமன்.\nவாய்ப்பை எதிர்நோக்கி இருந்த அனுமன், அங்குச் சுக்கிரீவன் வந்த வரலாற்றை விளக்கினான்; ருசியமுகப் பருவதத்தில் உயிருக்கு அஞ்சி ஓடிவந்து ஒளிந்து கொண்டிருப்பதை உரைத்தான்; இந்திரன் மகனாகிய வாலி, கதிரவன் காவ்முளையாகிய சுக்கிரீவனைத் துரத்திக் கொண்டு வந்ததையும், சுக்கிரீவன் அங்கு வந்து ஒளிந்ததையும் கூறினான்; சுக்கிரீவன் வானரத் துணையோடு தங்கி இருக்கிறான்” என்று விளக்கினான். அவ்வாறே இராமனும்தான் அடைந்த துயரினை அனுமனுக்குச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.\nஅனுமன், தான் அந்தணன் அல்லன் என்றும், வானர இனத்தினன் என்றும் தெரிவித்துத் தன் சுயஉருவை அவர்களுக்குக் காட்ட, வானும் மண்ணு மாய் நின்ற அவன் நெடிய வடிவத்தைக் கண்டு, வியந்தான் இராமன்; அவனை ‘மாவீரன்’ என்று கூறிப் பாராட்டினான்!\nஅப்பொழுதே சுக்கிரீவனைத்தான் அழைத்து வருவதாய்க்கூறி விடைபெற்று நடை காட்டினான் அனுமன்.\nஅனுமன் சுக்கிரீவனை அடைந்து இராம இலக்கு வரைப் பற்றிய செய்திகளை எல்லாம் விரிவாய்க் கூறினான்; “'இராமன் தன் மனைவி சீதையைப் பிடித்து துயருறுகிறான்; இராவணன் அவளைச் சிறைப் பிரித்து, மறைத்து வைத்து இருக்கிறான், சீதை சிறை வைக்கப் பட்டுள்ள இடம் தேட உன் இன்துணையை நாடி வந்துள்ளான்; உன் நட்பை விரும்புகிறான்; அவன் இங்கு வந்தது உனக்கும் நல்லது; துன்பம் விடிவுபெற அவன் உனக்கு உதவுவான்” என்று அனுமன் சுக்கிரீவனிடம் தெரிவித்தான்.\nசெய்தி கேட்டுத் தன் வாழ்வு உய்தி பெறும் என்ற நம்பிக்கையை அடைந்தான் சுக்கிரீவன். வானரத் தலைவனாகிய அவன் மானுடர் தலைவனாகிய இராமனை அடைந்து அடைக்கலம் பெற்றான். இருவரும் இன்னுரையாடி நல்லுறவு கொண்டு, நட்பு உடன்படிக்கை யும் செய்து கொண்டனர். குகனோடு ஐவராய் விளங்கிய தசரதன் மக்கள், சுக்கிரீவனோடு அறுவராயினர்.\n“கடந்தது போகட்டும்; இனி நாம் நடப்பதைக் கவனிப்போம்; சுகதுக்கங்களில் இருவரும் பங்கு பெறுவோம்; உனக்கு வரும் கெடுதி எனக்கு உரியதாய் ஏற்பேன்; எனக்கு வரும் துன்பம் உனக்கு வந்தது ஆகும்; உன்னுடைய பகைவர் எனக்கும் பகைவர்; என் பகைவர் உன்பகைவர்; என் நண்பர் உனக்கு நண்பர்; உன்னுடைய நண்பர் எனக்கு நண்பர்” என்று இராமன் அறிவித்தான். இருவரும் உள்ளம் கலந்து, இனிய நண்பர் ஆயினர்; வானரர் ஆரவாரம் செய்து வாழ்த்துக் கூறினர் அனுமன் மகிழ்ச்சியின் எல்லையை அடைந்தான். சுக்கிரீவன் இராமன் இலக்குவரை விருந்துண்ண அழைத்தான்; காயும் கனியும் கிழங்கும் கொண்டு வந்து வைத்தான்; அவற்றை உண்டு அளவளாவினர்.\n“நீயும் நின் மனையும் சுகமா?” என்று கேட்டான் இராமன்.\nமூடியிருந்த கதவுகள் திறந்தன. அடக்கி வைத்த வேதனை வெளிப்பட்டது; கடந்த காலச் செய்திகளை நடந்தவாறு உரைத்தான்.\n“வாலியும் யானும் உடன் பிறந்தவர்; அண்ணனிடம் அளவில்லாத பாசமும் மதிப்பும் காட்டினேன்; இராவணனும் அவன் வலிமைக்கு அஞ்சி அடங்கி இருந்தான். போரில் மாற்றான் வலிமையும் அவனை வந்துசேரும்; அத்தகைய வரவலிமையும் உரமும் பெற்றிருந்தான்; சிவபக்தனாய் இருந்தான்; சீலம் மிக்க வனாயும் விளங்கினான்.\n“மாயாவி என்ற அசுரன், இவனிடம் வலியப் போருக்கு வந்தான்; வாலிக்கு அஞ்சிய அவன், ஒடி ஒரு பிலத்துள் நுழைந்து ஒளிந்தான்; அவனைத் தேடி வாலி பின்தொடர்ந்தான்; வாலி என்னைப் பார்த்து, “அவன் தப்பி ஓடிவிடக் கூடும்; உன்னை நம்பி நான் உள்ளே செல்கிறேன்; நீ அவனைத் தடுத்து நிறுத்தக் காவல் செய்; இத என் ஏவல்” என்று கூறி அப்பிலத்துள் நுழைந்தான்.\n“திங்கள் இருபதும் எட்டும் சென்றன; வாலி குகையை விட்டு வெளியேறிய பாடில்லை; “மாயாவி அவனைக் கொன்று தின்று முடித்து இருப்பான்” என்ற முடிவுக்கு வந்தோம்; என்னுடைய அமைச்சர் என்னை நாட்டாட்சியை ஏற்குமாறு வேண்டினர்; எனினும் நான் அதற்கு இசையவில்லை; பிலத்துள் யானும் நுழைந்து அசுரனை அழித்து வருவதாய்க் கூறிச் செயல்பட்டேன்; அமைச்சர் என்னைத் தடுத்து நிறுத்தினர்; “கடமையை விட்டு மடமையாய் நடப்பது தகாது” என்று அறிவித்தனர்; நாட்டுக்கு நல்லரசு தேவை என்பதை வற்புறுத்தினர்; வாலி வரமாட்டான்; வந்தாலும், விவரம் சொல்லி அவன் மன்னிப்பைப் பெறமுடியும்” என்று அறிவுரை கூறினர். வேறு வழியில்லாமல் கோல்ஏந்தும் வேந்தனாய் மாறினேன்; ஆட்சி பீடத்தில் அமர்ந்தேன்; மாயாவி வெளியே வாராதபடி அப்பிலத்துள் வழியைக் கற்கள் கொண்டு கதவிட்டேன்; எதிர் பார்க்கவில்லை; வாலி மாயாவியைக் கொன்று, பிலத்துக் கற்களை விலக்கி வெளியே வந்தான்; “யான் அவனை அடைத்து வைத்து ஆட்சியைப்பற்றினேன்” என்று தவறாய் நினைத்தான்.\n“என் தமையன் கால்களில் விழுந்து, தவறு செய்யவில்லை” என்று கூறி மன்னிப்பை வேண்டி னேன்; அவன் அதை நம்புவதாய் இல்லை; சினம் அடங்கவில்லை; சீறிப்பாய்ந்தான்; என்னைப் பிடித்து உடலைப் பிளக்க முற்பட்டான்; பிடியினின்று விடுபட்டு உயிருக்கு அஞ்சி ஒடினேன்; ஒடினேன்; ஒடினேன்; வாழ்க்கையின் கரை ஒரத்துக்கே ஒடினேன்; ருசியமுக பருவத்திற்கு ஓடி வந்து, அங்கு அடைக்கலம் பெற்றேன்; வாலி அந்த மலைக்கு வந்தால் அவன் தலை சுக்கு நூறாகச் சிதையும் என்ற சாபம் இருந்தது; அதை அறிந்திருந்ததால் நான் இங்குச் சேர்ந்தேன்; சாபம் எனக்குப் பாதுகாப்புத் தந்தது; எனக்குத் துணையாக அனுமனும் வானரத் துணைவரும் வந்துசேர்ந்தனர்” என்ற தன் கதையை எடுத்துச் சொன்னான் சுக்கிரீவன்.\n“சுக்கிரீவன் மனைவி உருமை என்பவள் உருவ அழகி, அவளையும் வாலி தன் சுகத்துக்குத் துணையாக்கிக் கொண்டான்; சுக்கிரீவன் நாட்டையும் துறந்தான்; மனைவி யையும் இழந்தான்; அக வாழ்வும், ஆட்சியும் அவனை விட்டு நீங்கின; பாதுகாவல் தேடி அவன் இங்கு வந்து சேர்ந்தான்.” என்று இக்கதை அங்குப் பேசப்பட்டது.\nதம்பிக்கு ஆட்சி தந்து, பாசத்தால் உயர்ந்த இராமனால் இந்த நாசத்தை ஏற்க இயலவில்லை; ம்ற்றும் தம்பியின் தாரத்தைக் கவர்ந்து அவளை ஆரத் தழுவிச் செய்த கொடுமையை அவனால் மன்னிக்க இயலவில்லை; தம்பியைக் கொல்ல முயன்றதும் பின் தாரத்தைக் கவ்வியதும் இரக்கமற்ற செயல்கள் என்பதை அறிந்து, அவன் சினம் இருமடங்கு ஆகியது.\nசுக்கிரீவனிடம் “அஞ்சற்க; வாலியைக் கொன்று, உன் மனைவியை உன்னிடம் சேர்ப்பேன்; ஆட்சியும் உன் கைக்கு வரும் மாட்சியைப் பெறுவாய்” என்று உறுதி கூறினான் இராமன். அனுமன் இதைக்கேட்டு அகம் மிக மகிழ்ந்தான்.\nஎனினும், சுக்கிரீவனுக்கு ஒர் ஐயம் எழுந்தது; அடி பட்ட நாகம் அவன்; பிடிபட்டுத் தப்பியவன்; இடியொத்த அண்ணன் வலியை நன்கு அறிந்தவன்; “மேரு மலையை எதிர்க்கும் ஆற்றல் பெருங்காற்றுக்கு ஏது?” என்று ஐயப்பட்டான்; பாற்கடலைக் கடைந்த பராக்கிரமம் நிறைந்தவன் வாலி, அண்டத்தை அளாவும் வேகம் கொண்டவன்; அத்தகையவனை இராமன் எதிர்க்க முடியும் என்பதில் அவனுக்கு உறுதி ஏற்படவில்லை; அனுமனைத் தனியே அழைத்து, இராமன் ஆற்றலுக்கு எடுத்துக் காட்டுக் கேட்டான்.\nஅனுமன் அவன் ஐயத்தை அறிந்து, தெளிவு படுத்தினான்; “வாலியைக் கொல்லும் ஆற்றல் இராமனிடம் உண்டு” என்று கூறினான்; வேண்டு மனால் அவன் ஆற்றலை அறிய வாய்ப்பினைப் பெறலாம் என்றும் அறிவித்தான்; மராமரங்கள் ஏழையும் ஒரே அம்பால் துளைக்கும் வல்லமை அவனிடம் உண்டு என்பதைக் கூறித் தெளிவுபடுத்தினான்.\nசுக்கிரீவனும் “அதுவே தக்கவழி என்று சிந்தித்த வனாய் மகிழ்ச்சி கொண்டான்; இராமனை அணுகித் தன் கருத்தை அடக்கமாய் அறிவித்தான்.\n“உன்னுடைய வில்லின் ஆற்றலையும் அம்பின் வேகத்தையும் உன் விரத்தையும் எம் வானரர் காண விழைகின்றனர்; இந்த மராமரம் ஏழனுள் ஒன்றைத் துளைத்துக் காட்டினால் எங்களுக்கு ஊக்கமாக இருக்கும்” என்று தெரிவித்தான்.\nஇராமன் அவன் ஏக்கத்தை அறிந்து செயல்பட்டான்; “ஒரு மரம் என்ன ஏழு மரமும் என் ஒரே அம்பால் துளைபடும்” என்று கூறினான். மராமரங்கள் ஏழும் ஒன்றன்பின் ஒன்றாய் வரிசையாய் நின்று கொண்டிருந்தன. இராமன் வில்லை வளைத்து, நாண் ஏற்றி அம்பு தொடுத்தான் அவ் ஒலி ஏழ் உலகும் கேட்டது; அனைவரும் நடுங்கினர்; அவ் அம்பு ஏழு மராமரங்களையும் துளைத்து முடித்து அவனிடம் வந்து சேர்ந்தது; ‘ஏழு’ என்ற எண்ணிக்கை உடைய பொருள்களும் உயிர்களும் “அது தம்மையும் தாக்குமோ?” என்று அஞ்சின.\nஇராமன் வில்லாற்றலைக் கண்டு சுக்கிரீவன் சொல்லொணா மகிழ்வும் நம்பிக்கையும் கொண்டான்; அதற்குமேல் அவர்கள் சிறிதும் தூரம் நடந்து சென்றனர்; வழியில் துந்துபி என்ற அசுரனது எலும்புக் கூடு மலை போல் படிந்து கிடந்தது; அதனைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.\nவற்றி உலர்ந்த அந்த எலும்புக்கூடு வழிமறித்தது. இராமன் தன் தம்பியிடம் அதை அகற்றுமாறு குறிப்புக் காட்டினான். இலக்குவன் தன் கால் நகத்தால் அதை உதைத்துத் துக்கி எறிந்தான். அது சென்ற இடம் தெரியாமல் நெடுந்தொலைவில் விழுந்து மறைந்தது. இலக்குவன் ஆற்றலை அறிய, இது சுக்கிரீவனுக்கு ஒரு வாய்ப்பாய் அமைந்தது.\n“இது என்ன?” என்று இராமன் கேட்டான்.\n“துந்துபி என்பவன் போர்த்தினவு கொண்டு வாலியொடு மோதினான்; வெற்றி தோல்வி இன்றி இருவரும் கட்டிப் புரண்டனர். இறுதியில் வாலி அவனைக்குத்திக் கொன்று தரையில் வீழ்த்தினான். அவன் தசைப் புண்களைக் கழுகும் நரிகளும் தின்று ஒழித்தன; அவன் எலும்பு மட்டும் அசையாமல் இங்குக் கிடந்தது” என்று கூறினான்.\n“துந்துபியின் மாமிசப்பிண்டம் இந்த ருசியமுக பருவதத்தில் வாலியினால் தூக்கி எறியப்பட்டது; இங்கு மதங்க முனிவர் தங்கி இருந்தார். அவர் இதைக்கண்டு அருவெறுப்புக் கொண்டார். “இதை எறிந்தவன் இங்குவந்தால் அவன் தலை சுக்கு நூறாகுக” என்று சாபம் இட்டார்; அந்தச் சாபம்தான் எங்களுக்குப் புகலிடம் தந்தது” என்று விளக்கினான்.\nசீதை சிந்திய கலன்கள்\nஅப்பொழுது வானரக்குலம், இடியும் அஞ்சும்படி வாய் திறந்து ஆரவாரித்தது. தூய நற்சோலையில் இராமனும் சுக்கிரீவனும் அமர்ந்து இன்னுரையாடினான்.\n“நாயக! நான் உணர்த்துவது ஒன்று உண்டு” என்று சுக்கிரீவன் உரையாடினான்.\n“இவ்வழி யாம் இருந்தபோது விண்வழியாய் இராவணன் கையகப்பட்ட அபலை ஒருத்தி, அழுத கண்ணிரோடு தான் முடித்து வைத்திருந்த அணிகலன் களைக் கீழே போட்டுச் சென்றாள்; அவற்றைப் பாதுகாத்து வைத்துள்ளோம்” என்று கூறி அவற்றை அவன்முன் வைத்தான்.\nஅணிகலன் அவனுக்கு உயிர் தரும் அமுதமாய்க் காட்சி அளித்தது; அணிகலன் கண்களினின்று மறைந்தது அதற்கு உரிய அணங்கின் தோற்றம் கண்முன்வந்து நின்றது; அணிகளைக் கண்டதால் மகிழ்ச்சியும், அணிக்கு உரியவள் அருகில் இல்லாததால், அயர்ச்சியும் அடைந்தான். இராமன் தன்னிலை கெட்டுச் சோர்ந்து மயங்கி விழுந்தான்; தான் உயிரோடு இருக்கும்போதே அணிகளைக் களையும் அவலநிலை ஏற்பட்டதே! என்று வருந்தினான். அருகிலிருந்த சுக்கிரீவன் ஆறுதலாய் நல்லுரைகள் தந்து மீண்டும் உணர்வுபெறச் செய்தான். “'கண்டது சீதையின் அணி கலன்களை; கொண்டவன் அரக்கன் இராவணன்” என்பது முடிவு செய்யப்பட்டது; அவன் எங்கிருந் தாலும் அவனைக் கண்டு தெளிந்து, கொண்டுவருவது தன்கடமை என்று சுக்கிரீவன் கூறினான்.\n“இனி முதலில் வாலியைக் கொன்று, பின் சுக்கிரீவனுக்கு முடிசூட்டு; அவன் அரசனாவான்; அவன் ஆணை பிறப்பித்ததும் எழுபது வெள்ளம் எண்ணிக்கை யுள்ள வானரர் ஒன்று சேர்வர்; அவர்களை ஒவ்வொரு இடமாய் அனுப்பினா. காலம் நீட்டிக்கும். ஒரே இடத்துக்குப் பலரையும் அனுப்பி வைப்பது மிகைப்பட்ட முயற்சியாகும். அனைவரையும் ஒரே சமயத்தில் நாலா திக்குகளுக்கும் அனுப்பி வைப்பதுதான் தக்கது; அவ்வாறே இனிச் செயல்பட வேண்டும்” என்று அனுமன் இராமனிடம் கூறினான்.\nஇராமனும் “அவன் சொல்வது சரி” என்று ஏற்றுக் கொண்டான். அனுமன் தன் துணை அமைச்சர்களான தாரன், நீலன், நளன் ஆகியவர்களோடு இராம இலக்குவருக்கு வழிகாட்டச் சுக்கிரீவன் வாலியின் இருப்பிடத்தை நாடிச் சென்றான்.\nசுக்கிரீவனும் அவன் அமைச்சர் நால்வரும் இராம இலக்குவரைத் தொடர்ந்து மலைச்சாரல் இடையே சென்றனர். “தான் செய்யத் தக்கது யாது?” என்று சுக்கிரீவன் இராமனை நோக்கிக் கேட்டான்.\n“நீ வாலியைப் போருக்கு அழை; நீங்கள் இருவரும் போர் செய்யும்போது மறைவிடத்தில் இருந்து அம்பு ஒன்றினால் வாலியைக் கொல்வேன்” என்று வழி வகையைக் கூறினான் இராமன்.\nசுக்கிரீவனுக்கு அச்சம் நீங்கியது; வாலியை அழிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது; ஒர் உயரமான இடத்தில் இருந்து கொண்டு வாலியைப் போருக்கு வருமாறு கூவி அழைத்தான்; யானையின் பிளிறல் கேட்டு எழும் சிங்கம் போல வாலி, சுக்கிரீவனின் அறைகூவலைக் கேட்டு வியந்தான்; போருக்கு அஞ்சிப் புறமுதுகிட்டவன், வலியவந்து அழைத்தது அவனுக்கு வியப்பை அளித்தது. வாலியின் தாரமாகிய தாரை, அவன் போருக்குச் செல்வதைத் தடுத்தாள், “இதில் ஏதோ சூது இருக்கிறது; போக வேண்டா” என்று கூறினாள்; கண்ணிர் வடித்தாள்.\n“அவனே வலிய வந்து வகையாய் மாட்டிக் கொள்ளும்போது நாம் என்ன செய்ய முடியும்? அவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்” என்று கூறி எழுந்தான் வாலி. “அவன் தன் வலிமையை நம்பி வந்தவன் அல்லன், இராமன் அவனுக்குத் துணையாய் வந்திருக்கிறான்; அதனால்தான் அவனுக்கு இவ்வளவு அஞ்சாமை’ என்று தாரை எடுத்து உரைத்தாள்.\nவாலி கடுங்கோபம் கொண்டான்; இராமன் திருப்பெயருக்கு மாசு கற்பிப்பதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “தம்பியரை நேசிப்பவன் இராமன் உடன்பிறந்த சகோதரர்களிடையே அவன் பகையை மூட்ட மாட்டான்; தன்னிகரற்ற வீரனான இராமன், ‘ஒருகுரங்கோடு நட்புக் கொண்டு அவனுக்காகப் பரிந்து துணைக்கு வருவான்’ என்று சொல்வது நம்பத்தக்கது அன்று” என்று கூறித் தாரை தடுத்தும் தயங்காது போருக்குச் சென்றான்.\nஇராமன், வாலியின் தோற்றத்தைக் கண்டு இலக்குவனிடம் அவனைப் பற்றிப் பெருமையாய்ப் பேசினான். இலக்குவன், ‘சுக்கிரீவன் நம்பத்தகுந்தவன் அல்லன்’ என்று எடுத்து உரைத்தான். அண்ணனையே கொல்வதற்கு நம்மை அவன் துணை தேடுகிறான் என்றால், அது துரோகம் அல்லவா? அவனை நம்புவது மண் குதிரையை நம்பி நட்டாற்றைக் கடப்பது போலத் தான் ஆகும்” என்றான்.\n“தம்பியர் எல்லாம் பரதன் ஆகமுடியுமா? ஒருசில குறைகள் இருக்கத்தான் செய்யும்; அதற்காக நாம் அவனை வெறுக்க முடியாது; அவன் எப்படிப் பட்டவன் என்ற ஆராய்ச்சியா நமக்கு முக்கியம்? யார் பக்கம் நியாயம் இருக்கிறது? என்பதை வைத்துத்தான் ஒரு காரியத்தில் இறங்க வேண்டும்.\n“வாலி, சுக்கிரீவனுக்கு உரிய ஆட்சியை எடுத்துக் கொண்டான்; தவறு இல்லை; அவன் மனைவியை ஏன் அவன் கைப்பற்ற வேண்டும்? எந்தத் தவறும் செய்யாத தம்பியை அவன் ஏன் விரட்டி அடிக்க வேண்டும்? வாலி தவறு உடையவன்; அவனை அழிப்பதுதான் அறம்” என்று கூறித் தெளிவுபடுத்தினான் இராமன்.\nபோர் மும்முரமாய் நடந்தது; சுக்கிரீவனை வாலி பந்தாடுவது போலத் துக்கி எறிந்தான். அவன் தாக்குதலுக்கு ஆற்றாமல் சுக்கிரீவன் துவண்டுவிட்டான்; இராமன் மறைந்திருந்த பக்கம் வந்து மெல்லிய குரலில் தன்னைக் காக்குமாறு வேண்டினான் இராமன். “உங்கள் இருவருக்கும் வேறுபாடு காண முடியவில்லை; நீ கொடிப் பூ அணிந்து செல்; அடையாளம் தெரிந்து கொள்கிறேன்; என்று அவன் செவிவில் படுமாறு மெதுவாய் உரைத்தான்.\nஊக்கம் மிகுந்தவனாக வாலியோடு சுக்கிரீவன் போரில் இறங்கினான். அவனை விண்ணில் எறிய வாலி தயாராய் இருந்தான். அந்த நிலையில் இராமன் அம்பு அவன் மார்பில் தொளைக்க, அவன் பிடி நெகிழ்ந் தவனாய்க் கீழே சாய்ந்தான்; மார்பில் பாய்ந்த அம்பைப் பிடுங்கி, “அதனை யார் எய்தது” என்று அறிய விரும்பினான்; அவனால் இயலவில்லை, இறுதியில் தன் வலிமை முழுவதும் பயன்படுத்தி, அதை இழுத்துப் பறித்தான்; “இராம” என்னும் திருப்பெயரைக் கண்டான்; இராமன் தன்மீது அம்பு எய்தியமைக்காக வருந்தவில்லை; சான்றோன் ஒருவன், தன் சால்பு குன்றிய நிலையில் நடந்து கொண்டான் என்பதற்காக வருந்தினான்; “அறம் வளைந்து விட்டதே” எனக்குமுறினான்.\n“பரதனுக்குத் தமையனாய் விளங்கியவன், சகோதர பாசத்துக்கு இடையூறு செய்யலாமா?” என்று கேட்டான்.\n“ஒவியத்தில் எழுத ஒண்ணா உருவத்தாய்! காவிய நாயகனாகிய நீ நடுநிலைமை தடுமாறலாமா? சீதையைப் பிரிந்துவிட்டதால் மனம் தடுமாறி இந்தத் தவறைச் செய்துவிட்டாயா? உலகநெறி என்பது உயர்ந்தவர் செய்கையில் தானே அமைந்து கிடக்கிறது? தலைவன் நீ! தவறு செய்யலாமா? உலகமே உன் செயல், பேச்சு, இவற்றைக் கவனிக்கிறது; அம்பு எய்ய நினைத்திருக்கலாம் அது உன்சொந்த விருப்பு வெறுப்புப் பற்றியது; ஆனால், மறைந்திருந்து அம்பு எய்தியது உன்வீரத்துக்கு இழுக்கல்லவா?” என்று கேட்டான்.\nஅதற்கு இராமன் விடை தரவில்லை; இலக்குவன் இடைமறித்து.\n“சுக்கிரீவன் முதலில் வந்து இராமனைச் சந்தித்தான்; தனக்கு உதவுமாறு வேண்டினான்; அவனுக்கு உதவுவதாகக் கூறிவிட்டு, உன் முன்னால் வந்தால் நீயும் ‘அடைக்கலம்’ என்று கேட்டால் என்ன செய்வது? அதைத் தவிர்ப்பதற்குத்தான் மறைந்து இருந்து அம்பு செலுத்த வேண்டி நேர்ந்தது” என்று பதில் கூறினான்.\n“இராவணனைக் கொல்வதற்கு உறுதுணை தேடி இருக்கலாம்; சிங்கத்தைத் துணையாகக் கொள்வதை விடுத்துச் சிறுமுயலை நம்பிச் செயல்பட்டு இருக்கிறாய்; “உன்னிடம் அறமும் இல்லை; அறிவும் இல்லை” என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது” என்று இராமனிடம் கூறினான்.\n“நீ சொல்வதுபோல் என் தேவைக்காக உன்னைக் கொன்றேன் என்று சொல்வதை ஏற்க முடியாது; தீமையைக் கண்டவிடத்து அதை ஒழிப்பது அரசு நீதியாகும்; நீ எந்தத் தவறும் செய்யாத உன் தம்பியை அலற வைத்தாய்; துரத்தித் துரத்தி அடித்தாய்; தீர விசாரித்து உண்மை காணாது அவனைக் கொல்வதிலேயே நாட்டம் கொண்டாய்; தம்பியை அழிக்க நினைத்திடும் நீ, எனக்குச் சகோதர பாசத்தைப்பற்றிய பாடம் கற்றுத் தருகிறாய்.\n“தம்பியின் தாரத்தைத் தங்கையாக மதிக்க வேண்டிய நீ, அவளைத் துணைவியாக ஆக்கிக் கொண்டாய்; பிறர் மனைவியை விரும்பும் அற்பத் தனம் உன்னிடம் அமைந்துள்ளது; நீ உயிர் வாழத் தக்கவன் அல்லன், பற்களைக் குத்தித் துய்மைப் படுத்தச் சிறுதுரும்பு போதும்; உலக்கை தேவை இல்லை; இராவணனை அழிக்க எனக்கு உன் தம்பிபோதும்; நீ தேவை இல்லை” என்று கூறினான்.\n“ஒழுக்கம் என்பது மானிடர்க்கு விதிக்கப்பட்ட வரையறை, நாங்கள் விலங்குகள்; விலங்குகளுக்குள் கணவன் மனைவி என்ற உரிமை கொண்டாட முடியாது. “கற்பு” என்ற கட்டுத்திட்டத்துக்கு இங்கே இடமே கிடையாது; மேல் மட்டத்தில் நீங்கள் வலிய அமைத்துக் கொண்ட கட்டுப்பாடு அது; எங்களுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு விரும்பியவாறு வாழலாம் என்பதே”.\n“வல்லவன் எதையும் செய்யலாம்; வலிமைதான் நியாய ஒழுங்குக்கு வரையறை; இது எங்களிடை நிலவும் விதி; எங்களிடம் அறநெறியை எதிர்பார்க்க முடியாது; நாங்கள் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்ப வர்கள்; மனிதருக்குச் சொல்லப்பட்ட அளவுகோல்களை வைத்து, எங்களை அளப்பதில் நியாயம் இல்லை” என்று வாலி கூறினான்.\n“மிருகம், மனிதன், என்பது உடலைப் பற்றியது அன்று; மனத்தைப் பற்றியது; மனிதனுக்குரிய அறிவும் ஆற்றலும் சிந்தனையும் உன்னிடம் உள்ளன; விலங்கு என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளமுடியாது” என்று இராமன் அவனைத் திருத்தினான்; வாலி மனம் மாறினான்.\nஅதற்குப் பின் “இராமன் தவறு செய்யமாட்டான்; நீரில் நெருப்புத் தோன்றாது; தவறு தன்னுடையதுதான் என்று உணர்ந்து அடங்கிவிட்டான் வாலி.\n“தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடு” என்று பெருமிதத்தோடு கூறினான்; “நான் கேட்கும் வரம் ஒன்று உள்ளது; அதைத் தரவேண்டும்” என்று கேட்டான்.\n“என் தம்பி மது உண்டு, அம் மயக்கத்தில் கடமை செய்வதில் தவறக்கூடும்; அதைப் பெரிதாகக் கொள்ளாது அவனை மன்னித்துவிடு; என்மீது செலுத்திய அம்பை அவன்மீது செலுத்த வேண்டா, அதைத் தாங்கும் ஆற்றல் அவனுக்கு இல்லை” என்று தம்பியின் மீது கொண்ட பாசம் வெளிப்படும்படி இவ்வரத்தைக் கேட்டான். வாலி சிறியன சிந்தியாதான் என்பதை இராமன் இதனால் அறிய முடிந்தது.\n“மற்றொரு வரம் வேண்டுகிறேன்; என் தம்பியை உன் தம்பிமார்களுள் யாராவது தமையனைக் கொன் றவன், என்று கூறி இகழ்வாராயின், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.\nவாலி இராமன் மதிப்பில் மிக உயர்ந்து நின்றான்.\n“அனுமனை உன் வில்லைப்போல வலிமையுள்ள துணைவனாய் ஏற்றுக்கொள்; சுக்கிரீவனை உன் தம்பி இலக்குவனைப்போல ஏற்றுப் பாசமும் பரிவும் காட்டுக; இவர்கள் துணைகொண்டு சீதையைத் தேடி அடை வாயாக” என்று இறுதியில் கூறினான்.\nதன் தம்பியைப் பார்த்து அவனுக்கு அறிவுரைகள் சில கூறினான்.\n“இராமனுக்கு ஏவல் செய்யும் பேறு பெற்றிருக் கிறாய்; நீ உன் கடமைகளினின்று தவறக் கூடாது; பெரியவர்கள் சவகாசம் நெருப்புப் போன்றது; நீங்கினால் குளிர் காயமுடியாது; நெருங்கினால் சுட்டு எரித்துவிடும்; “மேல் மட்டத்து வாசிகள் அடிமைகள் செய்யும் தவறுகளை மன்னிப்பார், என்று நினையாதே; அவர்களுக்குப் பயன்படாவிட்டால் தூக்கி எறிந்துவிடுவர்; மன்னர்கள் அடிமைகளை மன்னிக்கமாட்டார்கள்; பெரிய இடத்து உறவு கத்தி முனையில் நடப்பது போன்றது; கவனமாய் நடந்துகொள்” என்பது அவன் அறிவுரை.\nவாலி மைந்தனான அங்கதன், தன் தந்தை மரண மறிந்து விரைந்துவந்தான்; சாகும் தருவாயில் இருந்த வாலியைப் பார்த்துப் பலவாறு கூறிப் புலம்பினான்.\n“என் தந்தையே! எமன் வருதற்கு அஞ்சும் உன்னை மரணம் எப்படித் தழுவியது? இனி இராவணன் உன்னைப் பற்றிய அச்சம் நீங்கி நிம்மதியாய் வாழப் போகிறான்; இதுஉறுதி, பாற்கடலைக் கடையத் தேவர்க்கு உன்னைத் தவிர உதவ யார் இருக்கிறார்கள்? அமுதத்தைத் தேவர்களுக்கு ஈந்து, மரணத்தை நீ ஏற்கிறாய் என்றால், உன்னைவிடக் கொடையாளி யார் இருக்க முடியும்?” அங்கதனைத் தழுவிக் கொண்டு “நீ இனி அயர வேண்டா; நாயகன் இராமன் செய்த நல்வினைப்பயன் இது” என்றான் வாலி.\nஇராமனிடம் அங்கதனை அடைக்கலமாய் ஏற்று ஆதரிக்குமாறு வேண்டிக்கொண்டான் வாலி; இராமனும் அங்கதனுக்குத் தன் உடைவாளைத் தந்து அவனைப் பெருமைப் படுத்தினான்.\nவாலி தன் மார்பில் பதிந்திருந்த அம்பினைப் பிடுங்கி வெளியே எடுத்தவுடன் இரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்தது; அவன் உயிரும் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றது; தாரை உயிரற்ற அவன் உடல்மீது விழுந்தாள்; புரண்டாள்; அழுதாள்; அரற்றினாள்.\n“உன் தோளில் துயிலும் நான் இன்று, தரையில் விழுந்து துடிக்கிறேன்; உயிரும் உடம்புமாக இருந்த நாம் இனி எப்படித் தனித்துச் சாக முடியும்?'இந்த வெறும் உடம்பு, நீ இல்லாமல் எப்படி வாழும்? காலையும் மாலையும் சென்று நீ முக்கண்ணனை வழிபடுவாயே! இப்பொழுது நீ என்ன செய்வாய்? எப்படி உன்னால் வாளா இருக்க முடிகிறது? என் மெல்லிய ஆடைமீது சாயும் நீ, எப்படி வன்மையான தரையில் கிடக்கிறாய்? பொய் புகலாத புண்ணியனே! நீ என் உயிர்” என்று புகழ்ந்து பேசுவாயே! உயிரைவிட்டு உயிர் எப்படிப் போக முடியும்? அது பொய்யுரையாகி விட்டதே; உன் உள்ளத்தில் நான் உறைந்தேன் என்பது உண்மையாய் இருந்தால் இந்த அம்பு என்னையும் தாக்கி, என் உயிரையும் போக்கி இருக்க வேண்டுமல்லவா? அமுதத்தைத் தந்த உனக்குத் தேவர், பாராட்டுரை வழங்க, எதிர்கொண்டு அழைத்து உபசரித்தார்களோ? “உன் தம்பிக்கு வாழ்வு தா” என்று இராமன் வாய் திறந்து கேட்டிருந்தால் வள்ளல் ஆகிய நீ, மறுத்துப் பேசி இருப்பாயா? போருக்குச் சென்றபோதே தடுத்தேனே, இராமன் சுக்கீரவனுக்குத் துணையாய் வந்திருக்கிறான் என்று சொன்னேனே, நீ கேட்கவில்லையே! சாவை விரும்பி ஏற்றுக் கொண்டாயே! “அம்பு ஒன்றால் உன் மார்பைப் பிளக்க முடியும்” என்று இதுவரை நான் நம்பிய தில்லை; இது புதுமையாய் இருக்கிறது” என்று புலம்பினாள்.\nதன் மகனை விளித்து, “தம்பியும் தமையனும் உறவு கொண்டிருந்தபோது உயர்ந்திருந்தனர். பகை புகுந்தபோது எவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டுவிட்டது பார்த்தாயா? அறச் செல்வனாகிய இராமனும் அறம் திறம்ப முடியும் என்பதை நீ எண்ணிப் பார்த்ததுண்டா?” என்று கடுமையாய் விமரிசித்தாள்; அதற்குமேல் தொடரவிடாது. அனுமன் இடைநின்று தடுத்துச் தாரையை அந்தப் புரத்துக்கு அனுப்பி வைத்தான்; அங்கதனைக் கொண்டு ஈமக்கடன் செய்வித்தனர்; நடக்க வேண்டியதில் நாட்டம் கொண்டனர்.\nதம்பி இலக்குவனிடம் சுக்கிரீவனுக்கு அவன் கையால் முடி சூட்டும்படி கட்டளை இட்டான் இராமன்.\nசுக்கிரீவனுக்கு முடி சூட்டப்பட்டது; இராமன் பின் வருமாறு அறிவுரை கூறினான்.\n“நீயும் அங்கதனொடு ஒற்றுமையாய் இருந்து நல்லரசு நடத்துவாயாக; அமைச்சரையும், படைத் தலைவரையும் தக்க வகையில் பயன்படுத்திக் கடமை களைச் செய்துமுடிப்பது அறிவுடைமை ஆகும். நூல் அறிவோடு நல்லது கெட்டது அறியும் பகுத்தறிவு கொண்டு தெளிந்து, ஆட்சி செய்ய வேண்டும்; செல்வத்தைக் காத்து தக்க வழியில் செலவு செய்யச் சிந்தனை செலுத்துவாயாக! நண்பர் யார்? பகைவர் யார்? பொது நிலையில் உள்ளவர் யார்? என்று பகுத்தறிந்து செயல்பட வேண்டும்; யாரிடத்தில் எப்படிப் பேச வேண்டுமோ? அந்தப் பாங்கு அறிந்து, அவை அறிந்து பேச வேண்டும்; எளியர் என்று சொல்லி ஒருவரை இகழ்ந்தால், அதனாலும் தீமைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு; கூனியால் யான் அடைந்த தீமைகள், எனக்கு ஒரு பாடமாய் அமைந்துவிட்டன; பெண்டிரால் நன்மையும் உண்டு; தீமையும் உண்டு; வாலியின் இறப்ப்ைப் பார்த்தாய்: எங்களுடைய வாழ்வில் ஏற்பட்ட சரிவுகளும் பெண்களால் ஏற்பட்டவையே; நாட்டு மக்களிடத்துத் தாயினும் அன்பு செலுத்து; கண்ணோட்டம் வேண்டும். அதேசமயம் தீமை செய்பவர்களைக் களை நீக்குவதுபோலத் தண்டிப் பதற்குத் தயங்கக் கூடாது; பிறப்பும் இறப்பும் நல்வினை தீவினைகளை ஒட்டி அமைவன; எனினும், மாந்தர்க்குச் ‘சிறப்பு’ என்பது அவர்கள் சிந்தனையை ஒட்டி அமை வதாகும்; உலகைப் படைத்த பிரம்மாவாய் இருந்தாலும், அறன் அல்லதைச் செய்துவிட்டுத் தப்பித்துக் கொள்ள முடியாது; செல்வமும் வறுமையும்கூட அவரவர் முயற்சிகளை ஒட்டியன ஆகும். முயற்சி திருவினை ஆக்கும்; முயற்சி இன்மை வுறுமைக்குக் காரணம் ஆகிவிடும். என் அறிவுரையினை ஏற்று ஆட்சியை இனிது நடத்து வாயாக; மழைக்காலம் கழிந்த பின்பு கடல் போன்ற நின் சேனையுடன் இங்கு வந்து சேர்வாயாக” என்று சொல்லி அனுப்பினான்.\nசுக்கிரீவன் சில நாள்கள் தங்களோடு தங்கும்படி இராமனைக் கேட்டுக் கொண்டான்.\n“தவ வாழ்க்கையை மேற்கொண்ட நாங்கள் அரண்மனையில் சுகவாசிகளாய் மாறக்கூடாது மேலும் நாங்கள் உங்களோடு இருந்தால், எங்களைக் கவனிப்பதிலேயே உங்கள் காலம் கழிந்துவிடும், உங்களால் கடமைகளைச் செய்யமுடியாது” என்று கூறினான் இராமன்.\nமேலும் தன் மனக் கருத்தை விரித்துரைத்தான்.\n“சீதை இன்றித் தனித்து நான் அடையும் இன்பம் எதுவாய் இருக்கும்? “பெண்டாட்டியைப் பறி கொடுத்து, அரண்மனையில் களித்து இருக்கிறான்” என்று உலகம் பேசாதா? யான் துறவிகளைப்போல நோன்பு நோற்றுத் தனித்து வாழ்வதுதான் தக்கது” என்று கூறினான்.\nசுக்கிரீவன் இராமன் திருவடிகளை வணங்கிக் கண்ணிர் மல்க விடைபெற்றுக் கிட்கிந்தை நோக்கிச் சென்றான். அங்கதனை அழைத்துச் சுக்கரீவனைச் சிறிய தந்தை’ என்று நினைக்காது, பெற்ற தந்தையாய் மதித்து, அவன் ஏவலை ஏற்று, நன்மகனாய் நடந்துகொள்” என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தான் இராமன். சேனைகளைத் திரட்டுதல்\nகார்காலம் கடந்தது, எனினும், குறிப்பட்டபடி குரங்கினத் தலைவனாகிய சுக்கிரீவன் படைகளோடு வந்து சேரவில்லை. அதனால், வெகுண்டு எழுந்த இராமன் இலக்குவனிடம், “சுக்கிரீவன் காலம் தாழ்த்து வது ஏன்? கடமையை மறந்து கள்ளுண்டு மயங்கிக் கிடக்கின்றான் போலும் சொன்ன சொல் தவறியவனைத் தவறாமல் தண்டிப்பது கடமையும் ஆகும்”.\n“பெறுவதற்கு அரிய அரச செல்வம் பெற்றபின் அரசபோகத்தில் ஆழ்ந்து, செய்நன்றி மறந்துவிட்டான், போகட்டும்; நம் வீரம் அவனுக்கு நினைவில் இருக்க வேண்டுமே! சத்தியம் தவறியவனைக் கொன்று அழிப்பது தவறு அன்று, எதற்கும் நீ சென்று அவன் கருத்தினை அறிந்துவா” என்றான்.\n“அறத்தை நிறுவக் கையில் வில்லுண்டு; வில்லில் தொடுப்பதற்கு விறல்மிக்க அம்பு உண்டு; அவன் உயிரைக் கவர, நம்பால் வீரம் உண்டு என்பதைச் சொல்லிவிட்டுவா; அவன் சாவை விரும்பி ஏற்கிறான் என்பது தெரிகிறது”.\n“சீதையைத் தேடுவதற்காக உடனே புறப்பட்டு வரட்டும்; இல்லை என்றால், அவனும் அவ் வானரக்குடியும் அழியும் என்பதை அறிவித்துவிட்டு வா”.\n“அவசரப்பட்டு உன் ஆவேசத்தைக் காட்டாமல் அவன் சொல்லும் பதிலைத் தெரிந்துவா” என்ற சொல்லி அனுப்பினான் இராமன்.\nஇராமன் இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு கிட்கிந்தை நோக்கிப் புறப்பட்டான் இலக்குவன்; மலைகளையும் குன்றுகளையும் கடந்து, குறுக்கு வழியில் கிட்கிந்தையை அடைந்தான்; இலக்குவன் சீற்றத்தோடு வருவதைக் கண்ட அங்கதன், அதிர்ச்சி அடைந்தான்; நேரே சுக்கிரீவன் தங்கியிருந்த அரண்மனையை அடைந்தான்.\nதன் சிற்றப்பன் அற்பத்தனமாய்க் குடித்து மயங்கி ஆழ்ந்த துயிலில் கிடப்பதைப் பார்த்தான். தாழ்ந்த கூந்தலும் மேலாடை நெகிழ்ந்த நிலையும் உடைய இளம் பெண்கள், அவன் கால்களை வருடிக்கொண்டு இருக்க, மென்மையான சுகத்தோடு அவன் மோகத்தில் ஆழ்ந் திருப்பதை அறிந்தான்.\nஉள்ளே நுழைந்து, உரத்த குரலில் இலக்ககுவன் வருகையை அறிவித்தான் இடி இடித்தாலும் அசையாத வனாய் அவன் மயக்கத்தில் கிடந்தான். இவன் சொல்வதை அவன் வாங்கிக்கொள்ளும் மனநிலையில் இல்லை; குடி போதையில எந்த போதமும் ஏற வில்லை; “கடமையைப் பற்றிப் பேசினால் கடலை ஒருபடி விலை என்ன?” என்று கேட்பதுபோல அவன் முணுமுணுப்பு இருந்தது.\nஅங்கதன் அனுமனை அடைந்து, அடுத்து நடப்பது குறித்து ஆலோசனை செய்தான். அன்னை தாரையை அணுகி, நிலைமையைத் தெரிவியுங்கள் என்று அனுமன் அறிவுரை கூறினான்.\nவெள்ளம் பெருக்கெடுத்து வந்துவிட்டது; அணை போடவேண்டிய பொறுப்புத் தாரைக்கே உரியது; அனுமன் அறிவுரையின்படி தாரை, தாரகை போன்ற அழகிகள் சூழ்ந்துவர, இலக்குவன் வரும் வழியில் குறுக்கே எதிர்நோக்கிச் சென்றாள்; அவன் வழியை மறித்தாள்; இலக்குவன் தன்னைப் பெரிய சேனை ஒன்று எதிர்க்கும் என்று எண்ணினானே தவிர, பெண்கள் புடைசூழ வந்து தன்னை மறிப்பர் என்று எதிர்பார்க்கவில்லை.\nதன்மனைவியைத் தவிர, வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்து அறியாதவன் அவன். சிரித்த முகமும், விரித்த கூந்தலும், இனித்த சொல்லும் கனிந்த பார்வையும் கொண்ட மகளிரைக் கண்டு இலக்குவன் நாணினான்.\nஅமைதியாய்த் தான் சொல்ல வந்த கருத்தை அடைக்கமாய்க் கூறினான்; “இராமன் சீதையைப் பிரிந்த துயரத்தில் ஆழ்ந்துகிடக்கிறான்; சுக்கிரீவன் சொன்ன சொல்லைக் காப்பாற்றவில்லை; காலம் தாழ்த்திவிட்டான். அதற்குக் காரணம் அறிந்துவர இராமன் என்னை அனுப்பி இருக்கிறான்” என்று சொன்னான் இலக்குவன்.\n“அவன் காலம் தாழ்த்தவில்லை; தக்க காலம் பார்த்துக்கொண்டு இருக்கிறான்; கடமையில் அவன், அதில் முழுக்கருத்தையும் செலுத்தி இருக்கிறான்; சீதை இருக்கும் இடம் தேட, இங்கு உள்ள வானரப்படைகள் போதா என்பதால் உலகின் எல்லாத் திக்குகளுக்கும் செய்தி அனுப்பி, வீரர்களைத் திரட்டிவர ஆள்களை அனுப்பி இருக்கிறான்; படைகள் வந்து குவியக் கால தாமதம் ஆகிறது. அதனால்தான் இன்னும் அவன் புறப் படவில்லை. சுக்கிரீவன் சொன்ன சொல் தவறமாட்டான்; செய்வதைத் திருந்தச் செய்யும் இயல்பினன்; இராமனுக் காக அவன், தன் உயிரையும் பணயம் வைப்பான்; ‘சீதையை முதலில் கண்டு செய்தி கொண்டு வந்து தருவதே தன் முதல் கடமை’ என்று எந்நேரமும் அதே சிந்தனையில் ஆழ்ந்துகிடக்கிறான்; அவனுக்கு உறக்கமே இல்லை; ‘கடமை கடமை கடமை’ என்று எந்நேரமும் உச்சரித்துக் கொண்டிருக்கிறான்” என்று நயம்படப் பேசி அவன் மனத்தை மாற்றினாள். அனுமனும் தாரை உடன் இருந்து தக்க சொற்களை எடுத்துக் கூறி அவன் சினத்தைத் தணிவித்தான்.\nஅங்கதன் இலக்குவனைக் கண்டு வணங்கி அடி பணிந்தான்; சினம் ஆறிய இலக்குவன், அங்கதனிடம் தன் வருகையைச் சுக்கிரீவனிடம் தெரிவிக்குமாறு சொல்லி அனுப்பினான்.\nஅங்கதன் சுக்கிரீவனை அடைந்து, இலக்குவன் கொண்ட சீற்றத்தையும் தாரையின் கூற்றினால் அவன் அடைந்த மாற்றத்தையும் எடுத்துக் கூறி இலக்குவனைப் போற்றி வரவேற்க அழைத்தான்.\n“ஏன் இலக்குவன் வருகையைத் தன்னிடம் தெரிவிக்கவில்லை” என்று மயக்கம் நீங்கிய நிலையில் வினவினான். அங்கதன், நடந்த செய்தியைச் சொல்லி, இனிக் காலம் தாழ்த்தாமல் இலக்குவனை வந்து காண்க என்று வேண்டினான் சினம் தணிந்த நிலையில் இருந்த இலக்குவனைச் சுக்கிரீவன் தோள்கள் ஆரத் தழுவிக் கொண்டான்; அவனைத் தக்க தவிசு ஒன்றில் அமருமாறு வேண்டினான்.\n“புல்தரையில் இராமன் படுத்திருக்க, நான் இங்கே பொன் தவிசில் எப்படி அமர்வேன்; அவன் கீரை உணவு உண்ண நான் இங்கே சோறும் கறியும் எப்படி அருந்துவேன்? நான் போய்த்தான் அந்தக் கீரை உணவும் சமைக்கவேண்டும்; அதனால், விரைவில் புறப்படுக” என்றான்; அவன் உபசாரங்களை இலக்குவன் ஏற்றுக்கொள்ளவில்லை.\nசுக்கிரீவன் அனுமனிடம் “எஞ்சிய படைகளைத் திட்டிக் கொண்டு உடன் வருக” என்று கூறிவிட்டு இலக்குவனோடு சென்று, உள்ள படைகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.\nஇராமனை அடைந்து, அவன் திருவடிகளை வணங்கிக் கால தாமதத்துக்கும், தான் இன்பத்துள் வைகிக் கடமையில் காலம் கடத்தியமைக்கும் சுக்கிரீவன் மன்னிப்பு வேண்டினான்; அவனைத் தன் தம்பி பரதனாகவே மதித்து அவனிடம் இன்னுரை பேசி, அனுமனைப் பற்றி விசாரித்தான்.\nஅனுமன் பெரும்படையுடன் பின் தொடர்ந்து வருவதாகக் கூறி அவனை மகிழ வைத்தான். இராமனும் அவனை அன்புடன் வரவேற்று ஒருநாள் ஒய்வெடுத்துக் கொண்டு மறுநாள் வந்து சேருமாறு சொல்லி அனுப்பினான்.\nஇராமன் அனைவரும் நீங்கியபின் தானும் தன் தம்பியுமாய்ப் பிரிந்த சீதையின் நினைவோடு கவலை நிரம்பியவனாய் அன்றைய பொழுதைக் கழித்தான்.\nசேனைகள் வருகைக்காக இராமனும் இலக்கு வனும் காத்து இருந்தனர். சதவலி, சுசேடணன், தாரன், கேசரி, துமிரன், காவட்சன், பணசன், நீலன், தரீமுகன், கயன், சாம்பவன், துன்முகன், துமிந்தன், குமுதன், பதுமுகன், இடபன், தீர்க்கபாதன், வினதன், சரபன் முதலிய படைத் தலைவர் பல திசை களிலிருந்தும் வானர சேனைகளைக் கொண்டு வந்து குவித்தனர். அப் படைகளைச் சுக்கீரிவன் இராமனுக்குக் காட்டினான். “இனிச் சீதை இருக்கும் இடத்தைக் காண்பதற்குக் கால தாமதம் செய்யக் கூடாது” என்று இலக்குவன் கூறினான்.\nநான்கு திசைகளுக்கும் தக்க தலைவர்களின்கீழ் சேனைகளை அனுப்பி வைத்தனர். சுக்கீரிவன் தென் திசை நோக்கிச் செல்லும் வீரர்களுக்குச் செல்ல வேண்டிய வழி வகைகளைக் கூறினான்; “'முதலில் விந்திய மலையை அடைதல் வேண்டும்; அதனைக் கடந்து சென்றால் நருமதை ஆறு வரும்; அதனைக் கடந்தால், ஏமகூடம் என்னும் மலை வரும்; அதனைக் கடந்து சென்றால், பெண்ணை ஆற்றங்கரை வரும்; விதர்ப்ப நாட்டைக் கடந்தால், தண்ட காரணியம் வந்து சேரும்; அங்கே முண்டகத்துறை என்ற ஒன்று உள்ளது. அதனைக் கடந்து சென்றால், பாண்டுமலை என்ற மலை ஒன்று உள்ளது; அங்கே கோதாவரி என்னும் நதி உள்ளது. அதனைக் கடந்து சுவணம் என்னும் ஆற்றைத் தாண்டிய பிறகு கொங்கண நாட்டையும் குலிந்த நாட்டையும் காணலாம்; அதன் பின் அருந்ததி மலையை அடையலாம்; ஆற்றை எல்லாம் கடந்து சென்றால் தமிழ் நாட்டின் வட எல்லை யாகிய திருவேங்கட மலையை அடையலாம். தமிழ் நாட்டில் காவிரி யாற்றினனக் கடந்தால், மலை நாடும் பாண்டிய நாடும் வரும்; அவற்றை எல்லாம் கடந்தால் ‘மயேந்திரம்’ என்னும் மலை தென்கருங்கடலை அடுத்து வரும்; அங்கிருந்து இலங்கைக்குச் சென்று விடலாம்” என்று வழி கூறினான்.\nஇராமன், சீதையின் அங்க அடையாளங்களைத் தக்க உவமைகள் கொண்டு அனுமனுக்கு விளக்கினான்; பாதாதி கேசம்வரை அவள் அழகினைப் விவரித்துக் கூறத் தொடங்கினான்.\n“அவள் காலடிகள் தாமரையை ஒக்கும் என்றால், புறவழகு ஆமை போன்றது; கனைக்கால்களுக்கு வரால் மீனும், அம்பறாத் துணியும், சூல்கொண்ட நெற் பயிரும் உவமையாகும்; தொடைகள் வாழைகளைப் போன்றன; சீதையின் இடை வெளிப்படாதது; அதற்கு உவமை கூற இயலாது, வயிற்றுக்கு உவமை ஆலிலை; உந்திச்சுழி கங்கையாற்றின் நீர்ச்சுழி போன்றது; கைகள் காந்தள்மலர் போன்றன; தோளுக்கு மூங்கிலையும் கரும்பையும் கழுத்துக்குப் பாக்கு மரத்தினையும் உவமை கூறலாம்; சங்கும் உவமை யாகலாம்; பச்சோந்தி, எள் பூ, குமிழமலர் அவள் மூக்குக்குச் சரியான உவமைகள் ஆகும். செவிக்கு வள்ளைக் கொடி கண்களுக்குக் கடல்; புருவங்களுக்கு வாள்; நெற்றிற்குப் பிறைச்சந்திரன், ஒரளவு முகத்துக்குத் தாமரை, கூந்தலுக்கு மேகம்; நிறத்துக்குப் பொன் உவமை களாகும். இவ்வாறு அவள் அழகைப் புனைந்துரைத்து, எல்லா வகையிலும் அழகிற் சிறந்த நங்கை ஒருத்தி தென்பட்டால் அவளைச் சீதை என்று தீர்மானிக்கலாம் என்று தெரிவித்தான். மேலும் அடையாளத்துக்காக இந்தச் செய்திகளையும் சொல்லி அனுப்பினான்.\n“விசுவாமித்திரரோடு மிதிலையை அடந்தபோது, கன்னிமாடத்தில் அன்னம் ஆடும் முற்றத்தில் அருகில் அவளைக் கண்டதையும், ‘வில்லை முறித்தவன் முனிவரோடு வந்த வீரனாக இல்லை என்றால் உயிரை விடுவேனே’ என்று அவள் தன்னைப் பார்த்த செய்தியையும், காட்டுக்குப் புறப்பட்டபோது ‘பிரிவினும் சுடுமோ பெருங்காடு’ என்று அவள் கேட்டதையும், “யான் அலாதன எல்லாம் உனக்கு இனியவோ” என்று கேட்டதையும், அயோத்தியை விட்டு நீங்கு தற்கு முன், “காடு வந்துவிட்டதோ” என்று அவள் கேட்டதையும், மற்றைய செய்திகளையும் சொல்லி அனுப்பினான்.\nசாம்பவான், அனுமன் முதலிய படைத்தலைவர் களோடு, பெரும்படையோடும் அங்கதன் தென்திசை நோக்கிச் சென்றான்.\nபிலம்புகுந்து வெளிவந்த கதை\nவிந்தன் என்பவன் ஏனைய திசைகளை நோக்கிச் செல்லும் படைகளுக்குத் தலைமை தாங்கினான். வளமான தமிழ் பேசும் தென்திசை சென்றவர், முதன் முதலில் விந்தமலையை அடைந்தனர்; நருமதை ஆற்றையும், ஏமகூட மலையையும், கடந்து, ஒரு பாலைவனத்தைக் கண்டனர்; அப்பாலையின் வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஒருபிலத்தின் உள்ளே சென்றனர்; “பாலையில் நடந்தால் மடிவது உறுதி; அதனால், பிலத்து வழியே அது காட்டும் புதிய பாதையில் செல்லலாம்” என்று முடிவு செய்தனர்.\nஇருட்டு வழியில் அவர்கள் குருட்டு மனிதர் ஆகி விட்டனர். அனுமன் பேருருக் கொண்டான்; அவன் வாலைப் பிடித்துக்கொண்டு மற்றவர் பின் தொடர்ந்தனர். அனுமன் கையால் தடவிக்கொண்டு விரைந்து நடந்து சென்றான். அந்தப் பிலத்துள் அழகிய நகர் ஒன்றனைக் கண்டனர். அது ஒளி பெற்றுத் திகழ்ந்தது; கவர்ச்சி மிக்கதாய் இருந்தது; அங்கு உண்ண உணவும் தின்னப் பலவகைக் கனிகளும் இருந்தன; குயிலும் மயிலும் ஏனைய வண்ணப் பறவைகளும் இருந்தன; பெண்கள் அழகாய்த் தோற்றமளித்தனர். ஆனால் அவற்றிற்கு உயிர் ஒட்டம் என்பதே காணப் படவில்லை; அனைத்தும் ஒவிய வடிவங்களாய் இருந்தன.\nஅது மயன் என்னும் அசுரத் தச்சனால் நிருமணிக்கப் பட்ட இடம்; அதிலிருந்து தப்பி வெளி யேற முடியாமல் திகைத்தனர்; அனுமன் அவர்களுக்கு ஆறுதல் கூறி எப்படி யும் வெளியேற்றுவதாக உறுதி தந்தான். அப்பொழுது உயிர் ஒட்டம் உடைய அழகிய நங்கை ஒருத்தி, அழகிய சடையுடன் ஒளி பெற்ற உருவத்தோடு காணப்பட்டாள்; அவள் ஒரு மாபெரும் தவசியாய்த் திகழ்ந்தாள்; அவள் பெயர் சுயம்பிரபை என்று அறிந்தனர்.\nஅவள், விசித்திரமான கதை ஒன்றைச் சொன்னாள்.\n“மயன் என்னும் அசுரத் தச்சனுக்கு இந்நகர் பிரமனால் அளிக்கப்பட்டது. அவன் தேவப் பெண் களுள் ஒருத்தியைக் காதலித்தான். அந்தப் பெண் இந்தச் சுயம்பிரபை என்பவளின் உயிர்த் தோழி யாவாள். அந்தத் தெய்வத் தச்சன் தன் காதலியொடு இந்நகருக்கு வந்தான்.\nஅன்றில் பறவை என இணைந்து இன்பம் அடைந்த காதலர் அங்கேயே நிலைத்து வாழ்ந்தனர். இவளும் அவர்களோடு தங்கிவிட்டாள். இந்திரன் அந்தத் தெய்வப் பெண் இருக்குமிடம் தேடி, அங்கு வந்து அந்த அசுரனைக் கொன்று அப்பெண்ணை மீட்டுச் சென்றான்.\nஅவர்களுக்குத் துணையாய் இருந்த சுயம்பிரபை என்பவளை அந்நகரத்துக்குக் காவலாய் இருக்கும்படி ஆணையிட்டு இந்திரன் அந்த இடத்தைவிட்டு நீங்கினான். விமோசனம் அறியாமல் வேதனையில் உழன்ற அவளுக்கு இராமன் தூதுவராய் அனுமன் முதலிய வானரர் வரும் போது வழிபிறக்கும் என்று இந்திரன் சாபவிமோசன் தந்தான்.\nசுயம்பிரபை இராமன் துதுவனாய் அனுமன் வந்தான், என்பதனால் எல்லையற்ற மகிழ்ச்சியை அடைந்தாள், எனினும், அவளும் அங்கிருந்து வெளியேற வழி தெரியாமல் தடுமாறினான்.\nஅனைவரும் அனுமன் உதவியை நாடினர். ‘அஞ்சற்க’ என்று சொன்ன அஞ்சனை மைந்தன் அனுமன், விண்ணுயர வளர்ந்து பேருருவம் கொண்டான்; மேலே திறந்து வெளியே வந்தான்; திருமால் வராக அவதாரம் எடுத்ததுபோலப் பிலத்தைப் பிளந்து மேலே வந்தான். சுயம்பிரபை விடுதலை பெற்றவளாய் விண்ணுலகம் போய்ச் சேர்ந்தாள். வானவர், அனுமன் அளவற்ற ஆற்றலை வியந்து பாராட்டினார்.\nஅங்கிருந்து தொலை தூரம் நடந்து சென்று, குளிர்ந்த பொய்கைக் கரை ஒன்றினை அடைந்தனர். சூரியன் அஸ்தமித்தான். அப்பொய்கையில் குளிர்ந்த நீரைக் கையால் வாரிப் பருகி நீர்வேட்கை தீர்ந்தனர். தேனும் பழமும் அவர்களுக்குத் தெவிட்டாத உணவுகளாயின. பொய்கைக் கரை ஓரம் குளிர்ந்த காற்று வீசியதும் அவர்கள் மெய் மறந்து உறக்கம் கொண்டனர்.\nஅந்தப் பொய்கையைக் காத்து வந்த அசுரன், அதற்கு உரிமை கொண்டாடினான்; நீரைக் குடித்த வானரரைத் தாக்க நினைத்தான்; அங்கதன் மார்பில் ஒரு குத்து விட்டான்; அங்கதன் விழித்து எழுந்து பதிலுக்குத் தாக்கி, அந்த அசுரன் உயிரைப் போக்கினான்.\n‘அவன் யாராக இருக்கக்கூடும்?’ என்று யோசித் தனர். கரடிகளுக்குத் தலைவனான சாம்பவான், “வேற் படையைத் தாங்கிய அவ் அசுரன், துமிரன் என்பவன் ஆவான்; அவன் அப் பொய்கைக்கு உரிமை உடையவன்; இவனைப் போல அசுரர் பலர் ஆங்காங்கே இருப்பர்” என்று கூறினான்.\nபிறகு அவர்கள் சீதையைத் தேடிச் சென்று பெண்ணை நதியை அடைந்தனர்; தசநவம், உசநவம் என்னும் பெயர்களை உடைய நாடுகளைக் கடந்து விதர்ப்ப நாட்டை அடைந்தனர்; அதற்குப் பிறகு தண்ட காரண்யம், முண்டகத்துறை. பாண்டுமலை, கோதாவரி நதி, சுவணகம் நதி, குலிங்க தேசம், அருந்ததி மலை, மரகத மலை ஆகியவற்றை எல்லாம் கடந்து வேங்கடமலையை அடைந்தனர்; அங்குத் தவம் செய்து கொண்டிருந்த அருந்தவ முனிவர் திருவடிகளை வணங்கிப் பின், சான்றோர் நிறைந்த தொண்டை நாட்டை அடைந்தனர். அதன்பின் செந்நெல்லும், பாக்குமரமும். கரும்பும் நிறைந்த காவிரி நாட்டை அடைந்தனர்; அதன்பின் முத்தமிழ் வளர்க்கும் தென் தமிழ் நாடாகிய பாண்டிய நாட்டை அடைந்தனர். அதனையும் கடந்து சுக்கிரீவன் குறிப்பிட்ட மகேந்திர மலையைச் சேர்ந்தனர்.\nஅங்கதன் தலைமையில் தென்திசை நோக்கி நாலாப்பக்கமும் அனுப்பிய சேனைகளும் அந்த மயேந்திர மலையை அடைந்தன. கால் கடுக்க நடந்தும் அவை கண்டது, கலக்கமே தவிரக் கொண்ட இலக்கு அன்று; சீதையைக் காண முடியாதவர்களாய் மனம் நொந்து, வேதனையால் வெந்து, வெதும்பி உள்ளம் சோர்ந்தனர்.\n“'சீதையைத் தேடி மண்முழுவதும் சுற்றினோம். சுக்கிரீவன் விதித்த காலம் திங்கள் ஒன்றும் கடந்துவிட்டது திரும்பிச் சென்று, இயலாமையை இயம்பினால் சுக்கிரீவன் இறப்பான், இராமனும் உயிர் துறப்பான்; அதனால் அங்குத் திரும்பிப் போவதில் பயனில்லை; தோல்வியை ஏற்றுக் கொண்டு இங்கேயே தவம் செய்து காலத்தைக் கழிக்கலாம்; அதுவும் சுமை எனத் தோன்றினால் நஞ்சினை உண்டு உயிர் விடுவோம்” என்று கருத்துத் தெரிவித்தனர்.\nஅங்கதன், சாம்பவன், அனுமன் மூவரும் ‘அடுத்துச் செய்வது யாது?’ என்று யோசித்தனர். உயிர் விடுவதே மேல் என்ற கருத்தை மற்றவர் சொல்ல, அனுமன் அதற்கு இசையவில்லை. “சடாயுவைப் போலப் போராடி. உயிர் துறப்பதுதான் ஆண்மைக்கு அழகு; செயலற்றுத் தற்கொலை செய்து கொள்வது கோழமைச் செயலாகும்; வீரச் செயலை வேண்டி நின்றவர் வேறு ஒன்றையும் எண்ணிப்பார்ப்பரோ? எலி தவளைகள் தான் குழிகளின் பதுங்கிக் கொள்ளும்; புலிகளும் யானைகளும் போன்ற நாம், போரிட்டு வீரமரணம் அடைதல்தான் புகழ் மிக்க செயலாகும்” என்று கூறினான்.\nஇராவணனை எதிர்த்துக் கழுகின் வேந்தனான சடாயு உயிர் விட்டான் என்ற செய்தி அவர்கள் பேச்சில் அடிபட்டது. அதைக் கேட்ட சம்பாதி என்னும் கழுகுக்கு அரசன், அவர்களை அடைந்து, சடாயுவின் மரணத்தைக் குறித்து விரித்து உரைக்குமாறு கேட்டுக் கொண்டான்.\nஇராவணன், தன்வாள் கொண்டு சடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்திய செய்தியை விவரமாக அனுமன் எடுத்துக் கூறினான். சம்பாதி சடாயுவின் தமை யனாவான். இச்செய்தி அவனைச் சோகத்தில் ஆழ்த்தியது.\nதான் சடாயுவின் தமையன் என்பதை வானரர்களுக்குத் தெளிவுபடுத்தினான். ‘இராமனுக் காகச் சடாயு உயிர் விட்டான்’ என்ற செய்தி அவனுக்குப் பெருமையைத் தந்தது. பேருவகை அடைந்தான்; சம்பாதி இறக்கைகள் தீய்ந்து கருகிப் பறப்பதற்கு இயலாமல் மெதுவாய் நடந்து வந்தான். அவன் தன் இறகுகளை இழந்த சிறுமையை அவர்களுக்கு எடுத்து உரைத்தான்; தானும் தன் தம்பியும் விண்ணவர் நாடு அடைய, விண்ணுயரப் பறப்பதில் போட்டி போட்டுக் கொண்டு சென்றதாகவும், சூரியனின் வெப்பம் தாங்காமல் சடாயு இறக்கைகள் தீய உடல் காய வேதனைப்பட்டதாக வும், அவனைக் காப்பதற்காக அவனுக்கு மேலே தான் பறந்து, தன் சிறகுகளை விரித்து, அவனுக்கு நிழல் உண்டாக்கி யதாகவும் தெரிவித்தான். கதிரவன் வெம்மையால் சிறகுகள் தீய்ந்து தரையில் விழுந்தான் என்பதையும் “இராமன் தூதுவனான அனுமனொடு வானரப் படைகள் இராமன் திருப்பெயரைச் சொல்லும் அப்பொழுது சிறகுகள் தளிர்க்கும்” என்று சூரியன் சொல்லி இருந்தான் என்பதை யும் தெரிவித்தான். அதன்படி வானரரை இராமன் திருப் பெயரைக் கூட்டமாகக்கூடி விளிக்குமாறு சம்பாதி வேண்டினான். அவ்வாறே அவர்கள் வாயினிக்க, இராமன் திருப்பெயரைச் சொல்லச் சம்பாதியின் சிறகுகள் தழைத்து வளர்ந்தன. சம்பாதி இழந்த வலிமையை மீண்டும் பெற்றான்; கழுகுகளுக்குத் தலைவனாய் மீண்டும் அவனால் செயல்பட முடிந்தது.\n“எதற்காக அவர்கள் அங்கே வந்தனர்?” என்ற செய்தியைக் கேட்டறிந்தான். அவர்கள் சீதையைத் தேடித் தென்திசை வந்ததாகத் தெரிவித்தனர்.\nசீதையை இராவணன்தான் எடுத்துச் சென்றான், என்பதையும், தென்னிலங்கையில் அசோக வனத்தில் அவனைச் சிறை வைத்திருக்கிறான் என்பதையும் சம்பாதி உறுதியாய்ச் சொன்னான். தான் அதை உயரே இருந்து காண முடிகிறது என்பதையும் கூறினான்.\n“இலங்கைக்கு அனைவரும் செல்வது இயலாது” என்றும், ‘அவர்களுள் ஆற்றல் மிக்க ஒருவன் மட்டும் சென்று சீதையிடம் பேசி ஆறுதல் கூறி அவள் தரும் செய்திகளைக் கேட்டறிந்து வரலாம் என்றும், அதுவும் முடியாவிட்டாலும் யாருமே போகாவிட்டாலும் தான் சொன்ன செய்தியை மட்டும் உறுதியாகக் கொண்டு இராமனிடம் அறிவித்தால் போதும் என்றும் கூறினான். காவல் மிக்கது இலங்கை; அதன் மதிலைக் கடந்து உள்ளே போவது எளிய செயலன்று; நான் சொன்னதைப் போலச் செய்யுங்கள்’ என்று கூறினான்.\n“சடாயு தான் அரசனாய் இருந்து கழுகுகளை வழி நடத்தி வந்தான். அவன் மறைந்ததும் சிறகு இழந்து நான் செயலற்றுக் கிடந்தேன்; இப்பொழுது சிறகுகள் முளைத்து விட்டன; பழைய ஆற்றல் என்னிடம் வந்துவிட்டது; நான் அப்பறவைகளை வழிநடத்திச் செல்லுகிறேன்” என்று கூறி விடை பெற்றுச் சென்றான் சம்பாதி.\nமகேந்திர மலையில் அனுமன்\n“புள்ளரசன் சம்பாதி பொய்யுரை பேசான்; உள்ளங்கை நெல்லிக் கணிபோலத் தெள்ளத் தெளிய உள்ளதை எடுத்து உரைத்தான். இனி, நாம் உயிர்விடத் தேவை இல்லை; செய்ய வேண்டுவனவற்றைத் திறம்படச் செய்வதே தக்கது” என்று வானரர் தம் கருத்தைத் தெரிவித்தனர்.\n“சூரியன் மகனாகிய சுக்கிரீவனையும் சுடர் விற்கை இராமனையும் தொழுது, உற்றது அறைந்தால் நம் கடமை முற்றுப்பெறும்; எனினும், நாமே ஆராய்தல் தெளிவான செயலாகும் என்ற முடிவிற்கு வந்து “நம்மால் கடலைக் கடக்க முடியுமா?” என்று ஆராய்ந்தனர். அவரவர் தம் ஆற்றலையும் திறமையையும் விரித்துரைக்க முயன்றனர்.\nநீலன், “என்னால் கடலைக் கடக்க இயலாது” என்று தெளிவுபடக் கூறினான். அங்கதன் “அக் கரைக்குச் செல்லும் ஆற்றல் எனக்கு உண்டு; திரும்ப இக்கரைக்கு வர முடியும் என்று கூற என்னால் முடியாது” என்றான்.\nசாம்பவானும் தனக்கு ஆற்றல் இன்மையை வெளிப்படுத்தினான்; மேருமலை இடறத் தன்கால் முடம் பட்டுவிட்டது; அனுமனே ஆற்றல் மிக்கவன், செல்லத் தக்கவன் அவனே என அவன் விரித்துக் கூறினான்.\n“அனுமனுக்கு நீண்ட வாழ் நாள் வரம் உள்ளது; அதனால், அவனை யாரும் அழிக்க இயலாது; சாத்திர நூல்களின் நுட்பங்களை அவன் அறிந்தவன்; திறமை யாய்ப் பேசும் சொல்வன்மை உடையவன்; எமனும் அஞ்சும் சினமும், உடல் வலிமையும், சிவனைப் போலக் கடும்போர் செய்யும் திறமும் படைத்தவன்; கடல் கடந்து திரும்பும் ஆற்றலும் அனுமனுக்குத்தான் உண்டு, இராமனும் அனுமனிடமே மிக்க நம்பிக்கை வைத்திருக்கிறான்;\n“எண்ணிச் செயல்படும் நுண்ணறிவும், எதையும் சாதிக்கும் திண்மையும் அனுமனிடமே உள்ளன வயதாலும் சாம்பவானை விட மிகவும் இளஞன் பேருருவம் எடுத்து மண்ணும் விண்ணும் வியாபிக்குப் பேராற்றல் அவனிடமே உள்ளது; அமைச்சனுக்கு உரிய அறிவும், படைத் தலைவனுக்கு உரிய வீரமும், அறிஞர்க்கு உரிய சிந்தனையும், சிங்கம் போன்ற சீற்றமும், அஞ்சாமையும் உள்ளமையால் செல்லத் தக்கவன் அனுமனே” என்று சாம்பவான் கூறினான்.\nஇவ்வாறு சாம்பவான் புகழ்ந்து கூறி முடித்ததும் அறிவிற் சிறந்த அனுமன் சம்மதித்தான்; உறுதியான நெஞ்சோடு தன் உள்ளக் கருத்தை உரைத்தான்.\n“இலங்கையைத் தோண்டி எடுத்து வேரோடு இவ்விடம் கொண்டு வருக என்றாலும், அரக்கரை அழித்து அணங்கனைய சீதையைக் கொண்டு வருக என்றாலும் செய்து முடிப்பேன்; கலங்க வேண்டா; இது உறுதி” என்று கூறினான்.\n“கடலை மிக எளிதில் கடப்பேன்” என்று சொல்லி அனுமன் பேருருவில் நின்றான். திருமாலின் திருவடி உலகளக்கத் தாவியது போல, அநுமன் கடலைக் கடக்கத்தானேயாகி நின்றான்; மகேந்திரமலை மேல் நின்ற அனுமன், கூர்மமாகிய ஆமைமேல் நின்றமந்திரமலை போல் காட்சி அளித்தான்.\nஅனுமன் விண்ணளாவ நின்றான்; மின்னலை உடைய மேகங்கள் அவன் காலில் படிந்து, அவன் காலுக்குக் கட்டிய வீரக் கழல்களைப் போல ஒளி செய்தன. அவன் ஏறி நின்ற மகேந்திரமலை அண்டங்களைத் தாங்கும் பொன்மயமான துணின் அடியில் இட்ட கல்லைப் போலக் காணப்பட்டது.\n"https://ta.wikisource.org/w/index.php?title=கம்பராமாயணம்_(உரைநடை)/கிட்கிந்தா_காண்டம்&oldid=515514" இருந்து மீள்விக்கப்பட்டது\nஇப்பக்கம் கடைசியாக 1 சனவரி 2018, 16:55 மணிக்குத் தொகுக்கப்பட்டது.
SSTA: சுழற்சி முறையில் பயிற்சி: ஆசிரியர்கள் நிம்மதி\nசுழற்சி முறையில் பயிற்சி: ஆசிரியர்கள் நிம்மதி\n'நீட்' வகுப்புக்கு சுழற்சி முறையில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், வகுப்பு எடுப்பதில் உள்ள சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுக்க, இன்று, நீட் பயிற்சி வகுப்பு துவங்குகிறது. வார இறுதி நாட்களில் நடக்கும், இவ்வகுப்புக்கு பயிற்சி அளிக்க, ஒரு பாடத்துக்கு, 30 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டனர்; இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.\nஇதனால், பள்ளிகளில் வகுப்பு கையாள்வதில், சிக்கல் இருப்பதாக புகார் எழுந்தது. முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில், நீட் வகுப்பு பயிற்சி முறையில், மாற்றம் செய்ய வேண்டுமென, கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், நேற்று ராஜவீதி, துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி, மைக்கேல் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில், ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.\nதாவரவியல், விலங்கியல், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட, பாடங்கள் கையாளும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் பங்கேற்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கல்வி அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில், பாடவாரியாக ஆய்வு நடந்தது.\nசந்தேகங்களுக்கு மட்டும் விளக்கம்!\nகல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,'நீட் வகுப்பு கையாள, பழைய முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வகுப்பு எடுக்கும் போது, பணிச்சுமை இருக்காது. குறிப்பாக ஒரு மையத்துக்கு, ஒரு பாடத்துக்கு எட்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். செயற்கைக்கோள் மூலம், சென்னையில் இருந்து, பாட வல்லுனர்கள் வகுப்பு நடத்துவர். வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடக்கும் வகுப்பில், ஏற்படும் சந்தேகங்களை மட்டும், ஆசிரியர்கள் நிவர்த்தி செய்வர்' என்றனர்.
உணவுக்கட்டுப்பாட்டு ஆலோகர் படிப்புக்கு நல்ல வாய்ப்பு!\nishwarya on Tue May 07, 2013 12:30 pm\nவிஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கேற்ப நாளுக்கு ஒரு நோய் மனிதர்களை தாக்குகிறது. பெரும்பாலான நோய்களுக்கு முறையற்ற உணவுப்பழக்கங்களே அடிப்படையாக இருப்பது மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பல வகை நோய்களுக்கு ஆளாகிறோம். நமது உடல்நிலை, நோய் பாதிப்புக்கு ஏற்ற உணவுகள் குறித்து ஆலோசனை வழங்குவதுதான் டயட்டீஷியன் எனப்படும் உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசகரின் பணி. உலகஅளவில் டயட்டீஷியன்களின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஊதியத்தை கொட்டிக்கொடுத்து டயட்டீஷியன்களை பணியமர்த்த ஏராளமான மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன.\nஉடல் உழைப்புக்கு ஏற்ப தேவைப்படும் கலோரி அளவு, அதற்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம், எவற்றை சாப்பிடக்கூடாது என்பதை அறிவுறுத்துவதுதான் இந்த பணியின் தன்மை.தற்போதைய வாழ்க்கை முறையால் இளம் வயதிலேயே இதய நோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள், மருத்துவரை சந்திக்கும் போது, டயட்டீஷியனை சந்திக்க அறிவுறுத்துகின்றனர். டயட்டீஷியன் ஆக விரும்புவோர், உடலியல் மற்றும் உயிரியலில் ஆர்வம் உள்ளவராக இருக்க வேண்டும். உணவு மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் பற்றிய ஆழ்ந்த அறிவு உள்ளவராக இருக்க வேண்டும்.\nஉங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்குப் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் நல்ல ஆலோசகராகவும் இருக்க வேண்டும். இப்படிப்பை முடித்தவர்கள் ஹெல்த் பிட்னஸ் மய்யங்கள், அழகு நிலையங்கள், மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்ற முடியும். விளையாட்டுக்குழு, தனி நபர்களுக்கும் ஆலோசகராக செயல்பட முடியும். தனி கிளினிக் வைத்து நடத்தவும் முடியும். பிளஸ்2முடித்த பின் சேரக் கூடிய ஹோம் சயின்ஸ் படிப்புகளிலும் எம்.எஸ்சி., படிப்பிலும் உணவியல் மற்றும் உணவூட்டம் சிறப்புப் பாடமாக இடம்பெற்றுள்ளன. அத்துடன் நுண்ணூட்டவியலுக்கான தனிப் பட்டயப் படிப்புகளும் உள்ளன.
சந்தோஷம் அருளும் ஸ்படிக லிங்கம்! - Kungumam Tamil Weekly Magazine\nஉலகெங்கும் பலதரப்பட்ட லிங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவை பெரும்பாலும் கல், மரம் மற்றும் உலோகத்தினால் ஆனவை. மரகதம் (பச்சை), ஸ்படிகம், சாளக்கிராமத்தினால் ஆன சிவலிங்கங்கள் சில க்ஷேத்திரங்களில் மட்டும் காணக்கிடைக்கின்றன. பொதுவாக தென்னிந்தியாவில் ஸ்படிக லிங்கங்கள் குறைவு. ராமேஸ்வரத்தில் மிகச்சிறிய ஸ்படிக லிங்கம் இருக்கிறது. சிதம்பரத்தில் உள்ள ஸ்படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் பூசிக்கப்படுகிறது. ஆனால் தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஸ்படிக லிங்கம் கர்நாடக மாநிலத்தில் இருப்பது சிலர் மட்டுமே அறிந்தது.\nஇது உத்தர கன்னடம் ஹாவேரி ஜில்லாவில் ராணிபென்னூரு தாலூகாவில் லிங்கத ஹள்ளி என்ற கிராமத்தில், ஹிரே மடத்தில் உள்ளது. இந்த லிங்கம் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ஸ்படிக லிங்கம் மட்டுமல்ல, உலகின் பத்து பெரிய ஸ்படிக லிங்கங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. ஸ்படிக லிங்கம் ஏன் மற்ற லிங்கங்களைவிடச் சிறப்பானவை? ஸ்படிகத்திற்கு எதிர்மறை அதிர்வுகளைக் களைந்து நேர்மறை அதிர்வுகளை வளர்க்கும் சக்தி இருக்கிறது. விஞ்ஞான ஆய்வுகளும் ஸ்படிகத்திற்கு உடல் மற்றும் மனோரீதியான ஆரோக்கியத்தை அதிகரித்து உடல் உஷ்ணத்தைச் சமநிலையில் வைக்கும் சக்தி இருப்பதாகச் சொல்கின்றன. இதே காரணத்தினால் யோகிகள் மற்றும் சன்னியாசிகள் ஸ்படிக மாலை தரித்து தியானம், ஜபம் செய்கின்றனர்.\nயஜுர் வேதத்தில் ‘ஜ்யோதி ஸ்பாடிக லிங்க’ என்று, சிவன் ஸ்படிக ரூபத்தில் இருப்பதாகச் சொல்கிறது. ‘சுத்த ஸ்படிக சங்காஸம், வித்யா ப்ரதாயகம் சுத்தம் பூர்ண சிதானந்தம் சதாசிவமஹம் பஜே’ என்று ருத்ராத்யாயத்தின் தியானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ‘சுத்தமான ஸ்படிகத்தின் ஒளியுடையவரும், வித்யையைக் கொடுப்பவரும், சுத்தம், பூர்ணத்துவம், சித்தத்தில் ஆனந்தமுமான சதாசிவனைத் துதிக்கிறேன்’ என்பது இதற்கான பொருள்.\nசூர்யோதயம், அஸ்தமன நேரங்களில் ஸ்படிக லிங்க பூஜை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஹிரே மடத்தில் எந்த பேதமுமின்றி அனைத்து மத பக்தர்களுக்கும் ஸ்படிக லிங்கத்தைப் பூஜித்துப் பயனடையும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பெங்களூருவிலிருந்து 320 கி.மீ. தூரத்திலுள்ள லிங்கதஹள்ளிக்கு, நேஷனல் ஹைவே 48 வழியாக ராணிபென்னூரை அடைந்து, அங்கிருந்து 20 கி.மீ. பஸ் அல்லது டாக்சி மூலம் லிங்கதஹள்ளியை அடையலாம்.\n- கே.நிருபமா, பெங்களூரு.
Anadrol உடனான Anadrol - சோதனையில் வெற்றிகரமாக தசை கட்டுமான Anadrol இருந்ததா?\nAnadrol நீண்ட காலத்திற்கு தசை வெகுஜன அதிகரிக்க மிகவும் சிறந்த வழிகளில் ஒன்றாகும், அதனால் ஏன்? பயனர்களின் பயனர் அனுபவங்களில் ஒரு பார்வை தெளிவுபடுத்துகிறது: Anadrol தசையை நன்கு ஆதரிக்கிறது என்று பலர் கூறுகின்றனர். உண்மையில் அது உண்மையில் ஒத்திருக்கிறது? எங்கள் பங்களிப்பு உண்மையை வழங்குகிறது.\nAnadrol பற்றி நீங்கள் எதைப் புரிந்து கொள்ள Anadrol?\nதசை வெகுஜனத்தை அதிகரிப்பதற்கான விருப்பத்துடன் உற்பத்தி நிறுவனம் Anadrol. உங்கள் திட்டங்களை பொறுத்து, தீர்வு நிரந்தரமாக அல்லது ஒரு குறுகிய நேரம் பயன்படுத்தப்படுகிறது. பல பயனர்களின் கருத்துப்படி, இந்த நோக்கத்திற்காக அனைத்துமே சிறந்தது என்று ஒருமித்த கருத்து உள்ளது. எனவே, Anadrol பற்றி அனைத்து முக்கியமான பயனர் Anadrol கீழே Anadrol விரும்புகிறோம்.\nAnadrol தயாரிப்பாளர் நன்கு அறியப்பட்டவர் மற்றும் அதன் தயாரிப்புகளை அதன் பயனர்களுக்கு நீண்ட காலமாக விநியோகித்து வருகிறார் - எனவே நிறுவனம் பல ஆண்டுகளாக எப்படி அறிமுகப்படுத்த முடிந்தது.\nAnadrol உடன் Anadrol பாதுகாப்பாக பயன்படுத்த முடியும் என்று இயற்கை பொருட்கள் ஒரு தயாரிப்பு வேண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தயாரிப்பு செயலில் உள்ள பொருட்கள் ஒரே ஒரு செயலை மட்டுமே செய்கின்றன, ஆனால் இது பற்றாக்குறையாகும் - இது நடக்கும்போது, நடப்பு முறைகள் இன்னும் கூடுதலான பணிகளை மறைக்கும் என்பதால், அவை காப்புரிமை தீர்வு என பரிந்துரைக்கப்படலாம். மிக முக்கியமான செயலில் உள்ள பொருட்களின் மிகச் சிறிய அளவுகள் சேர்க்கப்பட்டு, நேரத்தின் மொத்த கழிவுப்பொருட்களை உபயோகிப்பதை இது இறுதியில் வழிநடத்துகிறது.\nஅதிகாரப்பூர்வ மின் அங்காடியில் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து Anadrol வாங்கப்படுகிறது, இது இலவசம், வேகமான, அநாமதேய மற்றும் அனுப்ப எளிதானது.\nஇதன் விளைவாக, Anadrol அனைத்து நீடித்த பலன்களும் தெளிவாக Anadrol :\nஒரு சரியான பொருந்தக்கூடிய மற்றும் ஒரு இனிமையான பயன்பாடு 100% இயற்கை பொருட்கள் அனுமதிக்க\nநீங்கள் Arneihaus மற்றும் தசை கட்டி ஒரு செய்முறையை பற்றி அடக்குமுறை உரையாடல் இயக்கி தவிர்க்க\nமருத்துவரிடம் மருத்துவ மருத்துவ அறிவுரை தேவைப்படாது, ஏனென்றால் ரெசிப்பி இல்லாமல் தீர்வு மற்றும் எளிதில் இணையத்தில் சாதகமான கோரிக்கைகளை கோரலாம்\nநீங்கள் தசை கட்டிடம் இருந்து இன்பம் கொண்டு மடி? முன்னுரிமை இல்லை? நீங்கள் செய்ய வேண்டியது இல்லை, ஏனெனில் நீ இந்த தீர்வை வாங்க முடியும், அதைப் பற்றி யாரும் கேட்கவில்லை\nAnadrol விளைவுகள், எல்லாவற்றிற்கும் மேலாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளை பார்த்து, பொருட்கள் அல்லது செயலில் உள்ள பொருட்களின் தகவலைப் படித்து புரிந்து கொள்ளலாம்.\nஏற்கனவே நாம் இந்த வேலையைச் செய்துள்ளோம். பயனரின் அறிக்கையை மதிப்பிடுவதில் பின்வரும் விளைவுகளின் விளைவு எங்களிடமிருந்து பொதி துண்டுப்பிரசுரத்தால் கட்டுப்படுத்தப்பட்டது. எனவே இது Revitol Scar Cream விட சிறப்பாக இருக்கும்.\nAnadrol பற்றி குறிப்பிடப்பட்ட விஷயங்கள் உத்தியோகபூர்வ மற்றும் பாதிக்கப்பட்ட இரு கட்சிகளாலும் Anadrol, Anadrol மற்றும் பத்திரிகைகளில் படிக்கப்படலாம்.\nஇந்த உற்பத்தியைப் பயன்படுத்த ஒரு வருங்கால வாடிக்கையாளர் முன்கூட்டியே செய்ய வேண்டும் என்று என்ன அளவுகோல் அர்த்தம்?\nஇந்த பட்டியல்களில் ஒன்றை நீங்கள் காண முடியாவிட்டால், தெளிவாக கூறுங்கள், "தசையின் அளவும் வலிமையையும் நான் மேம்படுத்துவேன், அதைப் பற்றி ஏதும் செய்ய தயாராக இருக்கிறேன்!", உங்கள் சொந்த வழியில் நிற்க வேண்டாம்: இப்போது அது உன்னுடையது செயல்பட நேரம்.\nஇந்த பிரச்சனைக்கான ஒரு கணிசமான ஆதாரத்தை இந்த பரிட்சை பிரதிபலிக்கிறது.\nAnadrol பயன்பாடு Anadrol பக்க விளைவுகளும் Anadrol?\nAnadrol செயல்களின் உதவியுடன் துணைபுரியும் தனித்துவமான செயல்முறைகளில் Anadrol உருவாக்குகிறது.\nபல போட்டியிடும் Anadrol மாறாக Anadrol நமது உயிரினத்துடன் ஒரு அலகு என வேலை செய்கிறது. இது பெரும்பாலும் தோன்றும் பக்க விளைவுகளை நிரூபிக்கிறது.\nநிச்சயமாக. இது சிறிது நேரம் எடுக்கும், மற்றும் அதை பயன்படுத்தி தொடங்க ஒரு அசாதாரண உணர்வு உண்மையில் ஏற்படலாம்.\nAnadrol பக்க விளைவுகள் பெரும்பாலும் இல்லாதவை என்று காட்டுகின்றன.\nபதப்படுத்தப்பட்ட பாகங்களில் ஒரு பரந்த பார்வை மூடுகிறது\nதயாரிப்பு வழக்கில், அது குறிப்பாக முக்கிய பொருட்கள் பகுதியாக முக்கியம், இது போன்ற பொருட்கள், உள்ளது.\nசூத்திரம் முக்கியமாக அடிப்படையாகக் கொண்டது மற்றும் ஒரு பயனுள்ள அடிப்படையாக இருப்பது குறிப்பிடத்தக்க விளைவை உண்மையில் அடைவது என்று கூறுகிறது.\nஇது தசை வளர்ச்சிக்கு வந்தால் முதலில் ஒரு பிட் அசாதாரணமானதாக தெரிகிறது, ஆனால் இந்த கூறு பற்றிய ஆராய்ச்சி நிலையை நீங்கள் பார்த்தால், நீங்கள் ஆச்சரியமான முடிவுகளை காண்பீர்கள்.\nஉணர்வு, நன்கு ஏற்றப்பட்ட பொருள் செறிவு மற்றும் நிலையான தசை கட்டிடம் தங்கள் பங்கை சமமாக செயல்படுத்த கூடுதல் பொருட்கள் வழங்கப்படும்.\nஇது உண்மையிலேயே விரும்பிய முடிவுகளை வழங்கலாமா என்பது பற்றி சந்தேகம் இருப்பின், முற்றிலும் தளர்த்தப்படுவீர்கள்: இரண்டு நிமிடங்களில் நீங்கள் கோட்பாட்டை உள்வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.\nஇந்த கட்டத்தில் வாய்ப்புகள் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயமில்லை. இதன் விளைவாக, Anadrol எளிதில் அன்றாட தினமாக இணைக்கப்படலாம் என்று Anadrol கூற வேண்டும். UpSize ஒப்பிடும்போது அது ஆச்சரியமாக இருக்கும்\nAnadrol தசைச் Anadrol இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஅதனுடன் இணைந்த முகப்புப்பக்கத்தில் மேலும் சிற்றேட்டிலும், எல்லாவற்றையும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு உள்ளது, சரியான உட்கொள்ளல் மற்றும் வேறு என்ன முக்கியத்துவம் வாய்ந்தவை ...\nபொதுவாக, Anadrol முதல் விண்ணப்பத்திற்குப் பிறகு எப்போதுமே Anadrol, ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்குள், தயாரிப்பாளரின் கூற்றுப்படி, சிறிய வெற்றிகளை அடைய முடியும்.\nபடிப்பினைகள், வாடிக்கையாளர்களின் தயாரிப்பு பெரும்பாலும் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது, இது ஆரம்பத்தில் ஒரு குறுகிய நேரத்திற்கு மட்டுமே நீடிக்கிறது. மீண்டும் பயன்படுத்தப்படுவதால் முடிவுகளைத் தொடர்ந்து உறுதிப்படுத்துகிறது, இதன் விளைவாக, விளைவுகளும் நீளமாக இருக்கின்றன.\nஇதற்கிடையில், வாடிக்கையாளர்கள் சில நாட்களுக்கு ஒரு சில நாட்களுக்கு பிறகு Anadrol பற்றி Anadrol தெரிகிறது.\nஎனவே, அனுபவம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நல்ல யோசனை இது. வாடிக்கையாளரை பொறுத்து, உண்மையில் நம்பத்தகுந்த முடிவுகளை வரும்போது இது முற்றிலும் வேறுபட்ட நேரத்தை எடுக்கலாம்.\nதயாரிப்பு மற்ற மக்கள் எப்படி திருப்தி கண்டுபிடிக்க இது அறிவுறுத்தப்படுகிறது. திருப்திகரமான நோயாளிகளின் கருத்துக்கள் செயல்திறனைப் பற்றி உறுதியளிக்கும் அறிக்கையை அளிக்கின்றன.\nதனிப்பட்ட முடிவுகள், சோதனை முடிவுகள் மற்றும் பாரபட்சமற்ற ஆய்வுகள் ஆகியவற்றின் விளைவாக, Anadrol எவ்வாறு நடைமுறையில் Anadrol என்பதை தீர்மானிக்க முடிந்தது:\nAnadrol உதவியுடன் முன்னேற்றங்கள்\nமுடிவுகளை நீங்கள் பார்த்தால், வாடிக்கையாளர்களின் மிக முக்கியமான பகுதியாக அது மகிழ்ச்சியாக இருப்பதாகக் காண எளிது. பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தொடர்ந்து மோசமாகக் கருதப்படுவதால் இது வெளிப்படையாக இல்லை. இதுவரை நான் இன்னும் திருப்திகரமான மாற்றீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை.\nAnadrol - என் தெளிவான சுருக்கம்\nபயனுள்ள பொருள்களின் தொகுப்பு, அதிக அளவு பயனர் அறிக்கைகள் மற்றும் செலவு புள்ளி ஒரு கையகப்படுத்தல் ஒரு சக்தி வாய்ந்த ஊக்கத்தை நிரூபிக்கிறது.\nஎனவே, எங்கள் மதிப்பாய்வு வெளிப்படையாக நேர்மறையான இறுதி மதிப்பீட்டில். எங்கள் அறிக்கை உங்களுக்கு நம்பிக்கை அளித்திருந்தால், தயாரிப்பு வாங்குவதற்கு எங்கள் கூடுதல் பொருட்களை உறிஞ்சுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது, எனவே அசல் விலையில் அசல் விலையை வாங்க நீங்கள் உத்தரவாதம் அளிக்கப்படுவீர்கள். Miracle ஒப்பிடுகையில், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nதயாரிப்பு தன்னை ஒரு முயற்சி மதிப்பு உள்ளது. தீர்வு ஒரு பிரகாசமான விதிவிலக்கு என்று கூறுவதற்கு நான் போதுமான தசை கட்டிடம் பொருட்கள் சோதனை.\nகூடுதலாக, playfully எளிய பயன்பாடு மிகப்பெரிய நன்மை, நீங்கள் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே இழக்க பொருள்.\nவாடிக்கையாளர் கருத்துக்களை யாராவது அங்கீகரிக்கிறார்களோ, அந்த பொருள்களின் கலவை மற்றும் Anadrol நன்மைகள் தொடர்புடைய கருத்தாக்கங்களுடன் ஒப்பிடும்போது, அவர் சந்தேகத்திற்கு இடமின்றி முடிக்க வேண்டும்: Anadrol அனைத்து மட்டங்களிலும் உள்ள வாக்குறுதிகளை வைத்திருக்கிறார்.\nAnadrol வாங்குவது பற்றிய தகவல்\nஅத்தகைய பயனுள்ள முன்மாதிரிகள், வரவிருக்கும் ஒரு குறுகிய நேரத்தோடு, தீர்வுக்காக வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்று நான் கடைசியாக ஒரு முறை சொல்ல வேண்டும்.\nஅனைத்து பட்டியலிடப்பட்ட இணைப்புகள், நான் என் சொந்த பிரதிகள் வாங்கி என் தனிப்பட்ட மதிப்பீடு அடிப்படையில், நான் மட்டுமே முதல் உற்பத்தியாளர் இருந்து பொருட்கள் வாங்க ஆலோசனை. அதன்படி, சரிபார்க்கப்படாத ஆதாரங்களில் இருந்து ஆன்லைனில் பொருட்களை வாங்குவது உங்கள் உடல்நலத்திற்கும் உங்கள் பணப்பாட்டிற்கும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும்.\nநீங்கள் தயாரிப்பு சோதிக்க முடிவு செய்திருந்தால், நாங்கள் பரிந்துரைத்துள்ள ஆன்லைன் கடையைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் - வேறு யாரும் உங்களுக்கு குறைந்த சில்லறை விலை, அதிக நம்பகத்தன்மை மற்றும் விருப்பம், அல்லது உத்தரவாதம் மேலும் உண்மையில் தீர்வு கிடைக்கும்.\nஇதற்காக, சரிபார்க்கப்படாத மற்றும் நிச்சயமாக பாதுகாப்பான இணையதளங்களை தயக்கமின்றி பயன்படுத்த வேண்டும்.\nஷாப்பிங் மீது குறிப்பு: நீங்கள் பங்கு தயாரிப்புக்கு ஆர்டர் செய்யும்போது, உங்களுக்கு மலிவான ஆர்டர் மற்றும் சில மாதங்களுக்கு ஓய்வெடுக்க விருப்பம் உள்ளது. மோசமான வழக்கில், முதல் பெட்டியைப் பயன்படுத்தினால், சில நாட்களுக்கு நீங்கள் Anadrol இல்லை.
Tamil Seithigal News-தமிழ் செய்திகள்: டெசோ தீர்மானங்களை ஐ.நா சபையில் கருணாநிதி சமர்ப்பிக்க வேண்டும்!: சுப.வீரபாண்டியன்\nடெசோ தீர்மானங்களை ஐ.நா சபையில் கருணாநிதி சமர்ப்பிக்க வேண்டும்!: சுப.வீரபாண்டியன்\nதமிழ் ஈழப் பிரச்சினையை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வது கருணாநிதியால்தான் முடியும். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐக்கிய நாட்டு சபையில் உள்ள ஜெனீவாவுக்கு கருணாநிதி நேரில் கொண்டுபோய் கொடுக்க வேண்டும் என்று பேராசிரியர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்\nசென்னையில் நேற்று நடந்த டெசோ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n2009-ல் இலங்கையில் நடந்த போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இப்போது நாம் 3-ம் கட்ட போராட்டத்தில் களத்தையும், யுக்தியையும் மாற்றவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.\nஅதன் தொடக்கம்தான் இந்த மாநாடு. இலங்கையில் நடப்பது தமிழ் ஈழப் பிரச்சினை இல்லை. அது மனித உரிமை சிக்கலாகும். இதனை உலக கவனத்துக்கு கொண்டு சென்றால்தான், நாம் அடுத்த கட்டத்துக்கு செல்லமுடியும்.\nதமிழ் ஈழப் பிரச்சினையை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு செல்வது கருணாநிதியால்தான் முடியும். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐக்கிய நாட்டு சபையில் உள்ள ஜெனீவாவுக்கு கருணாநிதி நேரில் கொண்டுபோய் கொடுக்க வேண்டும் என்றார்.\nவிடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசுகையில்,\nதனி ஈழத்தை வென்றெடுப்பதற்கு முன்பாக3சவால்களை நாம் எதிர்கொள்ளவேண்டி உள்ளது. ஈழத்தில் தமிழர்கள் வசித்து வந்த பகுதிகளில் சிங்களவர்களையும், இராணுவ முகாம்களையும் குடிபெயர வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும்.\n2-வது சவால் தமிழர்கள் மீது இராணுவத்தினர் செய்து வரும் கொடுமைகளை நீக்கி, அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்துத் தரவேண்டும். 3-வது தமிழர்கள் மீது திணிக்கப்படும் கலாசார சீரழிவுகளில் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். இந்த3சவால்களை வென்றெடுக்க வேண்டும்.\nஈழத் தமிழர்கள் பிரச்சினையில் தனி ஈழம்தான் தீர்வு என்பதை சர்வதேச சமூகத்துக்கு கொண்டு செல்லவேண்டும். அதற்கான யுக்திகளையும், செயல் திட்டங்களையும் கலைஞர் வகுத்துத்தர வேண்டும். களம் காண நாங்கள் தயாராக இருக்கிறோம். ஈழம் வெல்லும், காலம் சொல்லும் என்றார்.\nதி.க. தலைவர் கி.வீரமணி பேசுகையில்,\nராம்விலாஸ் பஸ்வான் போன்ற சக்தி வாய்ந்த தலைவர்களை ஒன்று திரட்டி கருணாநிதி தொடக்கியுள்ள `டெசோ' மாநாட்டை வெற்றிகரமாக தொடக்கியுள்ளோம்.\nஇங்கே பேசியவர்கள் காவல்துறை யாரும் இங்கே இல்லை என்று வருத்தப்பட்டனர். தமிழக மக்களின் காவல் தலைவராக கருணாநிதியும், காவலராக நாமும் இருக்கும்போது இங்கு காவலர்கள் தேவையில்லை.\nஇந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதற்கு முன்பாக ஈழப் பிரச்சினையில் உலகத்தின் பார்வையை திருப்பவேண்டும். ஈழப் பிரச்சினையில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் தான் தனி ஈழம் பிறக்கும் என்றார்.
‘பொட்டதாரிகள்’ என்று சொன்னாரா மு.க.ஸ்டாலின்? - FactCrescendo | The leading fact-checking website in India\nApril 1, 2019 January 12, 2022 Harish N\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பட்டதாரிகள் என்பதற்கு பதிலாக, பொட்டதாரிகள், என்று கூறியதாக, ஃபேஸ்புக்கில் ஒரு செய்தியை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். முடிவு உங்கள் பார்வைக்கு:\nபட்டதாரிகளை (****தாரிகள்) என்று உளறிய ஸ்டாலின் தீயாக பரவும் வீடியோ மானம் பறிபோவதாக திமுகவினர் புலம்பல் | Tnnews24\nதேர்தல் பிரசார பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பட்டதாரிகள் என்று சொல்வதற்கு பதில், பொட்டதாரி என்று கூறியதாகவும், இதனால், தி.மு.க தொண்டர்கள் மானம் பறிபோனதாகவும் மேற்கண்ட இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. செய்திக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் வடிவேலு படத்தை ஒன்றாக சேர்த்து பயன்படுத்தியுள்ளனர்.\nஇந்த செய்திக்கு டீக்கடை பெஞ்ச் என்ற ஃபேஸ்புக் குழு பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒன்றையும் ஆதாரமாக அளித்துள்ளனர்.\nஆனால், எங்கே, எப்போது இந்த தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது என்பது பற்றியெல்லாம் இதில் குறிப்பிடவில்லை. இந்த செய்தியை, தங்களது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதால், தி.மு.க எதிர்ப்பு மனநிலையில் உள்ள அ.தி.மு.க, பா.ஜ.க, இந்து அமைப்பினர் இப்பதிவை அதிக அளவில் ஷேர் செய்துள்ளனர்.\nடிஎன்நியூஸ்24 வெளியிட்ட செய்தியில் உள்ள வீடியோவின் உண்மையை ஆய்வு செய்ய முடிவு செய்தோம். அந்த வீடியோவில், நியூஸ்7 லோகோ இருந்தது. மேலும், “கீழடி முக்கியத்துவத்தை ஆரம்பத்திலேயே பேசி கவனத்தை ஈர்த்தவர் சு.வெங்கடேசன்: மு.க.ஸ்டாலின்” என்று இருந்தது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு திமுக கூட்டணி (சிபிஎம்) சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் சு.வெங்கடேசன். அதனால், அவரை ஆதரித்து, மதுரையில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதை எடிட் செய்து, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்பது தெரிந்தது.\nமதுரையில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் என்று டைப் செய்து கூகுளில் தேடினோம். அப்போது, கடந்த மார்ச் 28ம் தேதி மதுரையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் சு.வெங்கடேசனை ஆதரித்து ஸ்டாலின் பேசியது தெரிந்தது. குறிப்பிட்ட அந்த தினத்தில் ஸ்டாலின் பேசிய பேச்சின் வீடியோ நமக்குக் கிடைத்தன. கீழே ஆதாரப் படம் உள்ளது. நம்முடைய கூகுள் தேடலில் நியூஸ்7 வெளியிட்ட வீடியோ கிடைக்கவில்லை என்றாலும், அவர் அன்றைய தினம் மதுரையில் பேசினார் என்பது உறுதியானது.\nஇதையடுத்து, டிஎன்நியூஸ்27 குறிப்பிடும் அந்த வீடியோவை கண்டறிய, மார்ச் 28ம் தேதி, நியூஸ்7 தொலைக்காட்சி சார்பில் ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட வீடியோக்களை ஆய்வு செய்தோம். அப்போது, நாம் தேடிய வீடியோ கிடைத்தது.\nமேற்கண்ட வீடியோவை கிளிக் செய்து பார்த்தபோது, 1.59வது நிமிடத்தில், டிஎன்நியூஸ்24 குறிப்பிட்ட காட்சி வருகிறது. அதில், “தமிழகத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால் இலவச கல்வி” என்று பேசுகிறார் மு.க.ஸ்டாலின்.\nஅவர் ‘பட்டதாரி’ என்று சொல்வது தெளிவாக கேட்கிறது. டிஎன்நியூஸ்24 செய்தியில் உள்ளதுபோன்று, பொட்டதாரி என்று அவர் சொல்லவில்லை என்பது உறுதியாகிறது. வீடியோ இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது.\nஒருவேளை ஸ்டாலின் தவறாக, உச்சரித்திருந்தால் நியூஸ்7 உள்பட தமிழக ஊடகங்கள் அனைத்துமே அதனை சுட்டிக்காட்டியிருக்கும். ஆனால், இந்த செய்தியில் கூறப்படுவதுபோல, ஊடகங்கள் எதிலுமே செய்தி வெளியாகவில்லை.\nஎந்த அடிப்படையில் பட்டதாரி என்ற வார்த்தை இவர்கள் காதில் பொட்டதாரி என கேட்டது என்று தெரியவில்லை. மு.க.ஸ்டாலின் வாய் தவறி பேசிய பல்வேறு செய்திகள் இதற்கு முன், ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக, கடந்த பிப்ரவரி மாதம் திருமண விழாவில் பேசிய பேச்சு மிகப்பெரிய அளவில் சமூக ஊடகங்களில் எதிரொலித்தது.\nதிருமண விழா ஒன்றில் பேசிய மு.க.ஸ்டாலின், “போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் வழித்தடத்துக்கான டெண்டர் தொடர்பாக நான் ஜப்பான் நாட்டிற்குத் துணை முதல்வராக இருந்தபோது அப்போதைய முதல்வர் கருணாநிதியால் ஜப்பான் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டேன்” என்றார். ‘ஜப்பான் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்’ என்று அப்போது அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். ஜப்பான் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பது சமூக ஊடகங்களிலும் டிரெண்ட் ஆனது. இதுதொடர்பான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nஒருவேளை, ஜப்பான் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதுபோல, பட்டதாரிகள் பற்றி மு.க.ஸ்டாலின் வாய் தவறி பேசிவிட்டாரா என்று இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் ஆய்வு செய்தோம். அப்படி எந்த ஒரு செய்தியையும் காண முடியவில்லை.\nஆனால், இந்த தவறான செய்தியை சித்தரித்து வெளியிட்ட TNNEWS24.com மற்றும் அந்த செய்தியை அதிகளவில் ஷேர் செய்பவர்கள் அனைவருமே பகிரங்கமாகு, அ.இ.அ.தி.மு.க, பா.ஜ.க ஆதரவு நிலைப்பாடு உடையவர்கள் என்பதும் நமது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.\nஇந்த செய்தியை பரப்பிய டிஎன்நியூஸ்24.காமின் பின்னணியை ஆய்வு செய்தோம். அந்த இணையதளம் நடுநிலை என்ற பத்திரிகை தர்மத்தை மறந்து, முழுக்க முழுக்க பா.ஜ.க ஆதரவு, தி.மு.க எதிர்ப்பு நிலைப்பாட்டுடன் இருந்தது தெரிந்தது. ஒவ்வொரு செய்தியும் விஷமத்தனமானதாக இருந்தது. ஒவ்வொன்றையும் கூட நம்மால் ஆய்வு செய்து போலி என்று நிரூபிக்க முடியும் என்ற வகையில் இருந்தது வேதனையாக இருந்தது.\nபுனேவில் உள்ள கிறிஸ்தவ கல்லூரியின் கட்டிட திறப்பு விழாவில் ராகுல் காந்தி கலந்துகொண்டாராம். அவரிடம் ரியாசிங் என்ற மாணவி, எனது தந்தைக்கும் உங்களுக்கும் ஒரே வயதுதான் நீங்கள் எப்படி இளைஞர் ஆகமுடியும் என்று கேட்டாராம். பதில் சொல்ல முடியாமல் நொந்து நூடுல்ஸ் ஆன ராகுல் காந்தி வெளியேறினார் என்று கூறப்பட்டுள்ளது. அது மாதிரியான செய்தி இணையத்தில் எங்கேயும் இல்லை. இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. இதற்கான, கூகுள் தேடல் ஆதாரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.\nமற்றொரு செய்தியில், சென்னை ரசிகர்கள் உருட்டுக்கட்டையுடன் சீமானை வரவேற்க திட்டம் என்று வதந்தி பரப்பப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் விட மற்றொரு செய்திதான் அதிர்ச்சி ரகம்.\n“வீரமணி ராமநாதபுரம் வந்தால் வெட்டுங்கள்” என்று ஒரு செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இவ்வளவு வெளிப்படையாக கொலை மிரட்டல் ஒரு ஊடகத்தில் இருந்து வெளிவர முடியுமா என்பதே நம்முடைய அதிர்ச்சிக்கு காரணமாக இருந்தது.\nமற்றொரு செய்தியில் தலைப்பிலேயே தவறு. “சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்தியாவின் ஏசாட் செயற்கைக்கோளில் அப்படி என்ன இருக்கிறது” என்று தலைப்பிட்ட கட்டுரை ஒன்று இருந்தது. உண்மையில், இந்தியா சமீபத்தில் எதிரி செயற்கைக்கோள் அழிப்பு ஏவுகணை சோதனையையே நடத்தியது. இந்த தலைப்பு செயற்கைக்கோளை அனுப்பியது போல குறிப்பிட்டுள்ளது.இதுதவிர இன்னும் ஏராளமான நம்மால் பதிவிடக்கூட முடியாத அளவுக்கு பல்வேறு வன்முறையைத் தூண்டும், அரசியல் காழ்ப்புணர்ச்சி செய்திகள் இந்த இணைய தள பக்கத்தில் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன.\nமேலும், இவர்கள் தங்களுக்கு ஆதரவாக, குறிப்பிடும் டீக்கடை பெஞ்ச் என்ற ஃபேஸ்புக் பக்கமும், அதி தீவிர பாஜக ஆதரவு மற்றும் திமுக எதிர்ப்பு கருத்துகளை பகிர்ந்து வருகிறது. இதுபோன்ற பல பதிவுகளை அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம். அவர்களின் புரொஃபைல் மற்றும் கவர் புகைப்படமே, திமுக.,வை கேலி செய்யும் வகையில் உள்ளது. ஆதார புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.\nமேற்கண்ட ஆதாரங்களின்படி, நமக்குத் தெரியவந்த உண்மையின் விவரம்,\n1) பதிவில் உள்ளது உண்மையான வீடியோதான்.\n2) வீடியோவில் ஸ்டாலின் பேசியதை, திட்டமிட்டு தவறாக சித்தரித்துள்ளனர்.\n3) இந்த TNNews24 இணையதளம் வெளியிட்ட ‘பொட்டதாரி‘ செய்தி போல, ஸ்டாலின் பற்றி வேறு எந்த ஒரு பத்திரிகையோ, தொலைக்காட்சியோ செய்தி வெளியிடவில்லை.\n4) பொட்டதாரிகள் என்று ஸ்டாலின் கூறியதாக இணையத்தில் எந்த ஒரு செய்தியும் இல்லை.\n5) ஃபேஸ்புக்கில் மட்டுமே இந்த வீடியோ தவறாகச் சித்தரிக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. வேறு ஆதாரம் இல்லை.\n6) இந்த வீடியோவை முதன்முதலில் பகிர்ந்த ஃபேஸ்புக் குரூப் மற்றும் இதனை ஆதாரமாக வைத்து செய்தி வெளியிட்ட இந்த இணையதளம், இவற்றை ஷேர் செய்தவர்கள் என அனைவருமே பகிரங்கமாக பாஜகவை ஆதரிப்பவர்களாக உள்ளனர்.\n6) பதிவை வெளியிட்ட இணையதளம் பா.ஜ.க சார்புத் தன்மை கொண்டதாக இருக்கிறது.\n7) பல்வேறு அவதூறான, வன்முறையைத் தூண்டும் பதிவுகளை இந்த இணையதளம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.\nஇதன்படி, மு.க.ஸ்டாலின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இந்த பதிவு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது உறுதியாகிறது.\nநமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, குறிப்பிட்ட வீடியோவில் மு.க.ஸ்டாலின் தவறாக எதுவும் பேசவில்லை. அவர் பேசியதை தவறாகச் சித்தரித்து வெளியிட்டுள்ளனர். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான வீடியோ, செய்தி, புகைப்படங்கள் எதையும் உறுதிப்படுத்தாமல், மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி, நீங்கள் பகிர்ந்த விஷயம் பற்றி யாரேனும் புகார் கொடுத்தால், நீங்கள் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nTitle:‘பொட்டதாரிகள்’ என்று சொன்னாரா மு.க.ஸ்டாலின்?\nFact Check By: Harish N\nTagged BJPDMKElection2019MK StalinTNNews24\nAugust 5, 2021 April 25, 2022 Chendur Pandian\nMarch 3, 2020 January 12, 2022 Chendur Pandian\nFACT CHECK: வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என வாக்குறுதி அளித்ததா தி.மு.க?\nJune 23, 2021 January 12, 2022 Chendur Pandian
வீர மரணம் அடைந்த தமிழக வீரர்: மு.க.ஸ்டாலின் இரங்கல் - MK Stalin condolence for army men Ilaiyaraja who died in Kashmir attack\nMk Stalin Condolence For Army Men Ilaiyaraja Who Died In Kashmir Attack\nவீர மரணம் அடைந்த தமிழக வீரர் இளையராஜா: மு.க.ஸ்டாலின் இரங்கல்\nதமிழக ராணுவ வீரர் இளையராஜா உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன்\nAugust 14, 2017 04:53:10 pm\nதீவிரவாதிகளுடன் நடைபெற்ற இந்த கடும் துப்பாக்கிச் சண்டையில், தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளையராஜா உள்பட இருவர் வீரமரணம் அடைந்தனர். இளையராஜா சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கண்டனி கிராமத்தைச் சேர்ந்தவர். பெரியசாமி, மீனாட்சி தம்பதியரின் மகனான இளையராஜாவுக்கு செல்வி என்ற மனைவி உள்ளார்.\nஇதைத் தொடர்ந்து வீரமரணம் அடைந்த தமிழக வீரர் இளையராஜாவின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்கும் மிக உன்னதமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தமிழக ராணுவ வீரர் இளையராஜா உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். இளையராஜாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.\nதற்போது ராணுவ வீரர் இளையராஜாவின் உடல் அவரது சொந்த ஊரான கண்டனியில், முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. 21 குண்டுகள் முழங்க அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.\nTags: mk stalin, Soldier Ilaiyaraja\nஇந்த ஆண்டின் இறுதிக்குள் 10 லட்சம் தடுப்பூசிகளை தயாரிக்கவும் தயாராகி வருகிறது இந்த அறக்கட்டளை
unearth.com: நீங்கள் ஒன்றுமைப் பட்டது போதும் அச்சுறுத்தல்களை சட்டரீதியிலாவது அணுக முன்வாருங்கள்\nநீங்கள் ஒன்றுமைப் பட்டது போதும் அச்சுறுத்தல்களை சட்டரீதியிலாவது அணுக முன்வாருங்கள்\nCommented by nizamhm1844 on: http://tinyurl.com/klbfuey\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை - தம்மை வளர்ப்பதற்காக, தமது பதவி‌களைத் தக்க வைக்க, தமது ஊழல்க‌ள் வெளிபபடாது காத்துக் கொள்ள அரசின் அடிவருடிகளாக, எவன் பெண்டாட்டி எவனுடன் போனால் என்ன லெப்பைக்கு நாலு பணம் என்ற அடிப்படையில், அரசுக்கு முண்டு கொடுப்பதற்காகவே!\nவட மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக முஸ்லிம் அரசியல்வாதிகளால் சூட்சுமமாக வெளியிடப்படும் கருத்தின் போக்கைக் கவனிக்கும் போது, நடக்கப் போவது என்ன என்பது தெளிவாகிறது. அதாவது, முஸ்லிம் கட்சிகள் அரசைப் பலப்படுத்தும் நோக்கில், வடக்கில் பலப் போராட்டத்தை முன்னெடுக்கும் வாக்கில், அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடல் என்பதன் மூலம் அறியலாம்.\nஅத்தகைய ஒரு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், அது நடந்து முடிந்த அனைத்து இஸ்லாம் விரோத நடவடிக்கைகளுக்கும் அங்கீகாரம் கொடுத்ததாகவே அமையும். அத்தோடு, மேலும் இருக்கும் பள்ளிவாசல்களையும் உடைப்பதற்கு ஊக்குவிக்கும் செயலாகவும் மாறும். அதற்கு மேல் முஸ்லிம்கள் இந்நாட்டில் பூரண சுதந்திரத்துடன் சகல சௌபாக்கியங்களுடனும் அமைதியாக வாழ்வதாக. வெளியுலகை நம்ப வைக்கும் நடவடிக்கையாகவும் அமையும். இதுவே முஸ்லிம் வரலாற்றில் நடக்கப் போகும் மிகப் பெரிய கழுத்தறுப்பும், காட்டிக் கொடுக்கும் செயலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.\nஅத்தோடு தமிழர் கையில் சென்றடைய வேண்டிய வ.மா.சபை அதிகாரத்தை அரசிற்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் தரங்கெட்ட வேலையைச் செய்த தான பழிக்கும் முஸ்லிம் சமூகம் முகங்கொடுக்க வேண்டி வரும். எந்த நிலையிலும், முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பாக உள்ள பிரதேசம் வடக்கும் கிழக்குமே தவிர வேறில்லை. அதையும் பேரின அரசியலுக்குள் சங்மமாக்கி விட்டால் அதற்குப் பின்னர் அவ்விடங்களும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப் பற்ற பிரதேசமாக மாறிவிடும். கிழக்கு மாகாண சபை தேர்தலுக்குப் பினனர் தோன்றியுள்ள நிலை, அதற்கு உதாரணம். .தெற்கில் புத்த கடும் போக்கு வாதிகள் போன்று, கிழக்கில் தமிழ் கடும்போக்கைக் கொண்ட தீவிரவாத அமைப்புக்கள் தோன்றி தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளன. அதே நிலை வடக்கிலும் தோற்றுவிக்கப்படும். அதே வேளை தீரா நிரந்த வடுவை யும், தொல்லையையும் அங்கு வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டி வரும்.\nசில அரசியல் நன்மைகளையும், தற்காலிகமான சில சலுகைகளையும் முன்வைத்து எதிர்கால முஸ்லிம் சந்ததியினரின் வாழ்வுக்குக் குந்தகம் விளைக்கும் அத்திவாரங்களைப் போட்டுச் செல்வதாகவே அமையும். தயவு செய்து, சந்தர்ப்பவாத, சுயநல, ஏமாற்று அரசியல் வித்துவத்தை வடமாகாண சபைத் தேர்தலில் பிரயோகிக்க வேண்டாம் எனக் கோருகிறோம். முடிந்தால் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னலைப் போக்கப் பாருங்கள்.\nபாராளுமன்றிலும், அமைச்சரவையிலும் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லா திருந்திருப்பின் இலங்கையி்ல் நடந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை, இன ஒழிப்பு, மதஅழிப்பு, வியாபார சுதந்திரம் பறிப்பு, சுதந்திரமாக நடமாடும் உரிமை பறிப்பு, அவமதிப்பு, அவதூறு போன்றவை பகிரங்கமாகத் திட்டமிட்டபடி ஒழுங்கு முறையில் தேசிய அளவில் அதிகார ஆசீர்வாதத்துடனும்,அனுசரனையுடனும் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை உலகம் கண்டு கொண்டிருக்கும். உலகு காணமாமல் இருப்ப தற்கு தற்போதைய பதவிகளிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்களுமே தடைக்கற்களாக இருக்கின்றனர். சம்பவங் களின் கனத்தை மறைத்துப் பூசி மெழுகுகின்றார்கள். அத்தோடு அவர்கள் முஸ்லிம்களின் அழிவுகளை வெளியுலகிற்கு தெரியாமல் மறைப்பதற்காகப் பூசப்படும் முலாம்களாக பயன்பட்டுக் கொண்டிருக் கின்றார்கள்.\nPosted by unearth.com at 10:34 PM
அநீதி இழைக்கப்பட்டதால் தான் புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள்! - தமிழ்முரசம் செய்திச் சேவை\nஅநீதி இழைக்கப்பட்டதால் தான் புலிகள் ஆயுதம் ஏந்தினார்கள்!\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் அவர்கள் ஆயுதம் ஏந்தி போரிட தூண்டப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇலங்கையானது பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்த தன்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன.\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.\nதங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் அவர்கள் ஆயுதம் ஏந்தி போரிடார்கள். அதற்கு இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்களே காரணம்.\nஅவர்களை குறை சொல்வதில் பயன் இல்லை. அரசாங்கம் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அது குறித்து கேள்வி கேட்பவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகின்றார்கள்.\n2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அப்பாவி தமிழ் மக்கள் ஆவர்.\nஅவர்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை. இராணுவமே அவர்களை கொலை செய்தது என சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளார்.\nPrevious Postமுல்லைத்தீவில் பொது நோக்கு மண்டபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த3பிள்ளைகளின் தந்தை!!\nNext Postவிக்கியின் பதிலால் வாயடைத்துப் போன கோத்தபாயவின் ஹிரு தொலைக்காட்சி!!\nபிரான்சில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற செஞ்சோலைப் படுகொலை மற்றும் தோழர் செங்கொடி நினைவேந்தல்!\nமீண்டும் பழிபோடும் எரிக் சூல்கைம்!!
Fake call centre scams spread web in Delhi NCR\nமோடி அரசின் கடன் திட்டத்தை பயன்படுத்தி பயங்கர மோசடி... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!\nடெல்லியில் போலி கால் சென்டர் நடத்தி மக்களிடம் பணம் பறித்த கும்பலை போலிஸார் கைது செய்துள்ளனர்.\nUpdated on : 1 September 2021, 09:14 AM\nடெல்லியில் பிரதான் மந்திரி லோன் யோஜனா திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதாகக் கூறி போலியான கால் சென்டர் நடத்தப்பட்டு வருவதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.\nஇதையடுத்து போலிஸார் டெல்லியில் உள்ள ரோகிணி செக்டர் அடிக்குமாடி குடியிருப்பு பகுதிக்குச் சென்று விசாரணை செய்தனர். அப்போது இளைஞர்கள் மற்றும் சில பெண்கள் தொலைபேசிகள் மூலம் தனிநபர் கடன்களை வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வந்தது தெரியவந்தது.\nபின்னர் போலி கால் சென்டர் நடத்தி வந்த தீபக் சைனி உட்பட 11 பேரை போலிஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து லேப்டாப், 29 செல்போன்கள், வைஃபை டாங்கிள் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.\nஇதுகுறித்து போலிஸார் கூறுகையில், ஒன்றிய அரசின் திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அப்பாவிகளைக் குறிவைத்து ஏமாற்றி வந்துள்ளனர். இவர்கள் தொலைபேசி செயலிக்கான கட்டணம் என்ற பெயரில் பணம் செலுத்தும்படி கூறுவார்கள். பின்னர் பணம் வந்த பிறகு தொலைபேசியை அணைத்துவிடுவார்கள்.\nஇப்படியே இந்த கும்பல் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மோசடி செய்து வந்துள்ளார்கள். மேலும் இந்த கும்பலின் முக்கிய தலைவனைப் பிடிப்பதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.\nஒன்றிய அரசின் திட்டத்தின் பெயரை பயன்படுத்தி மக்களிடம் பண மோசடி செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
THE IMITATION GAME (2014) | டூரிங் டாக்கீஸ்\nTHE IMITATION GAME (2014) திரை கடல் ஓடியும் திரைப்படம் தேடு\nThe maximum number of visits was – 2017-12-28:\nall visits – 2468:\nguests – 2450\nbots – 17\nbrowser – Safari 4.0\nwritten by +செந்தில் ஆறுச்சாமி\nONLINE-ல4K ப்ரிண்ட் படம் தேடிட்டு இருக்கும்போது சிக்குனதுதான் “தி இமிடேஷன் கேம்”. படம் பார்க்க மொத காரணம் நம்ம ஹீரோ “BENEDICT CUMBERBATCH“, அப்பறம் தான் மத்ததெல்லாம்!! ஷெர்லாக் ஹோல்ம்ஸ் டிவி SERIES பார்த்த பல பேருக்கு இவரை தெரிஞ்சிருக்கும், NETFLIX-ல இருக்கு முடிஞ்சா பாருங்க!!! சரி, இந்த படத்துக்கு வருவோம், இது 1992 ஆம் ஆண்டு வெளியான ALAN TURING: THE ENIGMA என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் போதுபிரிட்டனில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய கணிதமேதையைப் பற்றியவரலாற்றுப் பதிவே!!!! ஒரு வரலாற்று நிகழ்வை சினிமாவாக எடுப்பது என்பது ரொம்பவே கஷ்டம்!! ஏன்னா, பாதி பேருக்கு மேல கதைதெரிஞ்சிருக்கும் இதனால, ஏகப்பட்ட விமர்சனங்களை எதிர் கொள்ளணும் மற்றும் பல பேரிடம் ஒப்புதலும் (COPY RIGHTS) வாங்கணும். இந்தப்படமும் இதுக்கு விதிவிலக்கல்ல!!!\nஏன்னா, பட ரிலீசிற்கு பிறகு ஏகப்பட்ட விமர்சனங்கள், விவாதங்கள், எதிர்மறை கருத்துக்கள்னு பல வந்துச்சு. BUT, ஒருத்தனும் இதை கண்டுக்கவே இல்லைனு சொல்லணும், ஏன்னா, படம் BOX OOFICE-ல தாறுமாறு ஹிட்டு!!\n1951, இரு போலீஸ் அதிகாரிகள் ஒரு திருட்டு சம்பந்தமாக ஆலன் டூரிங் வீட்டிற்கு விசாரிக்க வருகிறார்கள். ஆலனின் பேச்சும் அவரது நடவடிக்கைகளும் அவர் மீது சந்தேகத்தை வரவழைக்ககின்றன.\nஅவரது முன்னாள் வாழ்க்கையை பற்றிய குறிப்புகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடிக்கிறார்கள். இதனால் ஆலனை சோவியத் ரஷ்யாவின் உளவாளியாக இருக்க கூடும் என்று சந்தேகித்து அவரை பின்தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பிக்கிறது. ஒருநாள் PUB-ல் ஆலன் ஒருவனிடம் பார்சல் ஒன்றைத் தருகிறான், அவனை பிடித்து விசாரணை செய்யும்போது அவன் MALE PROSTITUTE என்றும் ஆலன் அவனது CUSTOMER என்றும் கூறுகிறான் .\nஅந்த சமயத்தில் பிரிட்டனில் ஓரினச் சேர்க்கையாளருக்கு எதிராக சட்டம் இருந்தது. இந்த சட்ட ஒழுங்கு மீறலை காரணமாக வைத்து போலீஸ் ஆலனை கைது செய்து விசாரிக்க ஆரம்பிக்கிறது!! பின் ஆலனின் பார்வையில் படம் விரிகிறது.\n1939, பிரிட்டன் ஜெர்மனியின் மேல் போர் பிரகடனம் அறிவிக்கிறது. ஜெர்மன் தான் தாக்கப்போகும் இடம், நாள், தாக்கும் வழிமுறை போன்றவற்றை சங்கேத குறியீடுகளாக மாற்றி தன் படைக்கு அனுப்புகிறது. இதனால் பிரிட்டனுக்கு போரில் மிகப்பெரிய இழப்பு ஏற்ப்டுகிறது.\nபிரிட்டனால் அவர்கள் அனுப்பும் சங்கேத வார்த்தையை கண்டறிய முடிகிறது ஆனால் அதற்கான அர்த்தங்களை தெரிந்து கொள்ள முடிவதில்லை. அதற்காகவே அவர்கள் BLETCHLEY PARK என்ற இடத்தில் அலாஸ்டர் டென்னிஸ்டன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கண்டறிய முயல்கிறார்கள்.\nஅந்த குழுவில் இணைய BLETCHLEY PARK செல்கிறான் ஆலன். அங்கே HUGH ALEXANDER, JOHN CAIRNCROSS, PETER HILTON, KEITH FURMAN, AND CHARLES RICHARDS போன்றோருடன் சேர்ந்து வேலை செய்கிறான்.\nஆலனின் சிடு சிடு குணமும் யாரையும் மதிக்காத நடவடிக்கையும் மற்றவரை வெறுப்படைய வைக்கின்றன. அனைவரும் ஒவ்வொரு CODE-ற்கும் அர்த்தங்களை கண்டறிய முயல்கிறார்கள் அனால் ஆலனோ அனைத்திற்கும் சேர்த்து ஒரு இயந்திரத்தை கண்டுபிடிக்க முயல்கிறான். ஆனால், அதற்கான பண உதவி டென்னிஸ்டனால் நிராகரிக்கப்படுகிறது.\nஇதனால், ஆலன் வின்ஸ்டன் சர்ச்சிலிற்கு கடிதம் எழுதி தன் கண்டுபிடிப்பிற்கு தேவையான பணம் மற்றும் அந்த குழுவிற்கு தலைவனாகவும் பொறுப்பேற்க்கிறான். அவனும் அவனது குழுவும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு அந்த இயந்திரத்தை கண்டுபிடிக்கிறார்கள். அந்த இயந்திரத்திற்கு “CHRISTOHER” என்று ஆலன் பெயர் சூட்டுகிறான். அவன் ஏன் அந்த MACHINIE-ற்கு “CHRISTOPHER” என்று பெயர் வைத்தான் என்று FLASHBACK காட்சியின் மூலம் பதிலளிக்கிறார்கள்.\n1927, பள்ளிப் பருவத்தில் ஆலனை மற்ற மாணவர்கள் சீண்டி கொடுமைப் படுத்த கிறிஸ்டோபர் அவனை காப்பாற்றுகிறான். அவனுக்கு சங்கேத வார்த்தைகளையும் சொல்லிக்கொடுக்கிறான். இதனால் ஆலனிற்கு கிறிஸ்டோபர் மேல் ஒரு ஈர்ப்பு வருகிறது. பள்ளி விடுமுறை முடிந்து வரும் கிறிஸ்டோபரிடம் இதை தெரிவிக்கலாம் என்று காத்திருக்கிறான். ஆனால் அவனோ காச நோயால் இறந்துவிடுகிறான். அவனது நினைவுகளே அந்த பெயருக்கு காரணம்.\nஅவர்கள் அந்த இயந்திரத்தை முழுமையாக பயன்படுத்தினால் ஜெர்மனுக்கு சந்தேகம் வரும், இதனால் அவர்கள் வேறு சங்கேத வார்த்தைகள் உபயோகிக்க கூடும் என்றெண்ணி சிறிது சிறிதாக செயல்படுத்தி போரில் வெற்றியும் அடைகிறார்கள்.\n1945, ஆலனின் சங்கேத குறியீடுகளை கண்டறியும் கண்டுபிடிப்புகள் மற்றும் அது தொடர்பான அனைத்து காகிதங்களும் தீயிட்டு கொளுத்தப்படுகின்றன. இது தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் வெளியுலகுக்கு தெரியாமல் மறைக்கப் படுகின்றன, அவர்களையும் இதை பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று அறிவுறுத்தப் படுகிறார்கள். ஆலனின் கண்டுபிடிப்பால் உலகெங்கும் ஏறக்குறைய 50 கோடிக்கும் அதிகமான மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் அப்போது யாரும் இது பற்றி அறிந்திருக்கவில்லை!!!\n1951, வெளி உலகுக்குத் தெரியாத இந்த தகவல்கள் அனைத்தையும் விசாரணை அதிகாரியிடம் ஆலன் கூறுகிறான். ஆனாலும் அவன் ஒழுங்கு மீறலுக்கான தண்டனைக்கு ஆளாகிறான். இருவிதமான வாய்ப்புகள் அவனுக்கு தரப்படுகின்றன. ஒன்று,2வருட சிறை தண்டனை இரண்டாமவது,2ஆண்டுகளுக்கு CHEMICAL CASTRATION எனப்படும் மருத்துவ பரிசோதனைக்கு தன்னை ஆட்படுத்தி கொள்வது. அவன் இரண்டாமவதை எடுத்துக்கொள்கிறான். தொடர்ச்சியாக மருந்து எடுத்துக் கொள்வதாலும், தனிமையும் சேர்ந்து அவரது அறிவையும், உடலையும் பாதிப்படைய வைக்கிறது. பல மில்லியன் உயிர்களை காப்பாற்றிய அந்த கணித மேதை 1954-ஆம் ஆண்டு, தன் 41 வயதில், தற்கொலை செய்தி கொள்கிறார் என்ற செய்தியோட படம் நிறைவடைகிறது.\nமுடிந்தவரை படத்தின் கதையமைப்பை உங்களிடம் பகிர்ந்துள்ளேன். இது தவிர்த்து படத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்ய காட்சிகள் உள்ளன. குறிப்பாக படத்தின் வசனங்கள்!!!! உதாரணமாக, ஆலன் வேலை தேடி BLETCHLEY PARK செல்லும்போது அலாஸ்டர் டென்னிஸுடனுடன் நடக்கும் இன்டெர்வியூ காட்சி, தன் குழுவிற்கு ஆள் சேர்ப்பதற்காக ஆலன் நடத்தும் இன்டெர்வியூ காட்சி, இப்படி பல!!!\nஉங்களுக்காக எனக்கு பிடித்த சில வசனங்கள்:\nSometimes it is the people no one imagines anything of who do the things no one can imagine\nWas I god? No…\nBecause god didn’t win the war. We did!!\nWhen people talk to each other, they never say what they mean. They say something else and you’re expected to just know what they mean.\nஅடுத்ததாக படத்தின் மிகப்பெரிய பாசிட்டிவ் அனைவரது நடிப்பு!!! குறிப்பாக BENEDICT CUMBERBATCH!! படத்தை பற்றி பல எதிர் மறை விமர்சனங்கள் வந்திருந்தாலும் ஒருத்தர் கூட இவரது நடிப்பை தப்பா பேசல!!! மனுஷன் ஆலனவே வாழ்ந்திருப்பார்!!\nபடம் தொடர்பான சர்ச்சைகள்:\nஎந்த படத்தை பத்தி BLOG எழுதினாலும், அதப்பத்தி இன்டர்நெட்ல நெறைய படிப்பேன். நெறைய புது விஷயங்களை தெரிஞ்சுக்கலாம். அப்படி, இந்த படத்துல நான் COLLECT பண்ண எல்லாமே இதோட CONTROVERSIES தான்!!!\nபட ரிலீசிற்கு பிறகு எவ்வளவு பாராட்டுக்கள் பெற்றதோ அதே அளவுக்கு கிழித்தும் தொங்கவிடப்பட்டது அப்டி என்ன பிரச்னைனு நெனைக்கறீங்களா?? எழுதப்பட்ட புக்கிற்கும் அதை வச்சு எடுத்த படத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லைங்கிறது தான் பிரச்னையே!!!\nஅப்டி என்னதான் பிரச்சனைனு எனக்கு தெரிஞ்ச அளவுக்கு எழுதி இருக்கேன்,\nபடத்தில் காண்பிக்கப்படும் ஆலன் டூரிங்கிற்கும் நிஜ ஆலன் டூரிங்கிற்கும் நெறைய வேறுபாடுகள்!!! படத்தில் வருபவன் எதற்கும் சிரிக்க மாட்டான், எப்போதும் சிடு சிடுன்னு இருப்பான், மற்றவர்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பான் எனவும் காண்பிக்கப் படுகிறது. ஆனால் நிஜத்திலோ ஆலன் இயல்பிலே மிகவும் HUMOURUS-ஆனவன். அனைவருடனும் நெருக்கமாகவே பழகவும் செய்தான்.\nபடத்தில் ஆலன் “ENIGMA CODE BREAKER மெஷினை கண்டுபிடித்ததாக காண்பித்திருப்பார்கள். ஆனால் நிஜத்தில், 1938-ஆம் ஆண்டு POLISH CRYPTANALYST MARIAN REJEWSKI என்பவர் கண்டுபிடித்த இயந்திரத்தின் மேம்படுத்தப்பட்ட மறு உருவாக்கமே!!\nஆலன், GORDON WELCHMAN என்ற மற்றுமொரு கணிதவியல் அறிஞருடன் இணைந்து தான் மெஷினை கண்டுபிடித்தார். ஆனால் படத்தில் அவரை பற்றிய குறிப்புகள் எதுவும் சொல்லவில்லை!!\nபடத்தில்5பேர் கொண்ட குழு தான் இந்த மெஷினை கண்டுபிடித்ததாக சொல்லியிருப்பார்கள். ஆனால் உண்மையில் 200-ருக்கும் மேற்பட்டவர்கள் இதற்கு உதவியிருந்தார்கள்!!\nஆலன் ENIGMA CODE BREAKER மெஷினிற்கு “CHRISTOPHER” என்று பெயர் வைத்ததாக படத்தில் சொல்லியிருப்பார்கள்!! ஆனால் நிஜத்தில் வைத்த பெயரோ “VICTORY“\nபடம் பார்க்கலாமா வேணாமானு ரொம்ப யோசிக்காம கட்டாயம் பாருங்க!!! மிகவும் அருமையான WAR திரில்லர்!!!\nபல கோடி மக்களின் உயிரை காப்பாற்றிய ஒருத்தன் மக்களாலும் அரசாங்கத்தாலும் கவனிக்கப்படாமலே செத்து போகிறான்!! எப்போதும் போல, இறந்த பின்பு அவனது சாதனைகளை உலகம் கொண்டாடுகிறது !!!!\nஅதற்கு ALAN TURING-ம் ஒரு உதாரணம்!!!\nSeptember 25, 2016\twritten by +செந்தில் ஆறுச்சாமி\tin உலக சினிமா\nPrevious Post 4th PERIOD MYSTERY (South Korean – 2009):\nNext Post THE GAME (1997)\nநாளை என்ன ஆகும்!!!!!! எண்ணி வாழ மாட்டோம்............. காலம் பூரா கவலை கிடையாதே..... நாங்க போற பாத எதுவும் முடியாதே!!!!!!!!\nOne Comment on “THE IMITATION GAME (2014)”\nஇரஞ்சித் September 28, 2016 at 11:19 pm\nமிகவும் அருமையான பதிவு. தாங்கள் தேர்வு செய்யும் திரைப்படமும் அதற்கான காரணங்களும் மற்றும் படத்தின் விரிவாக்கமும் தான் என்னை படிக்க தூண்டுகிறது.\nமீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.\nLeaveaReply to AndrewPelay Cancel reply\nசிலுக்குவார்பட்டி (எ) சில்லுக்கருப்பட்டி\nதிரையரங்கில் நான் ரசித்த கமல்ஹாசன் அவர்களின் திரைப்படங்கள்\nThe Midnight Meat Train (2008) – ரத்தம் தெறிக்க…தெறிக்க… ஒரு Horror சினிமா\nWordPress Blogging Theme by Obox
உருளைக் கிழங்கு – chinnuadhithya\nSeptember 21, 2021 vijikumari\nஉருளைக்கிழங்கு என்பது ஒருவகை செடியின் மாவு நிறைந்த வேர்ப்பகுதி. இதன் அறிவியல் பெயர் சோலானம் டியூபரேசம். இந்த தாவரம் நிழற்செடி குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி கோதுமை சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. உருளைக் கிழங்கு பற்றி சுவாரசியமான தகவல்கள் பல உண்டு.\nதென் அமெரிக்கா லாம்பா கிராமத்தில் விழா ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் ஒரு ஊர்வலம் நடந்தது. முன் பகுதியில் மேளதாளத்துடன் நடனக்குழு சென்றது. பின் பகுதியில் பட்டு நூலில் நெய்த ஆடைகள் அணிந்து வண்ணமயமாக சென்றனர் மக்கள். அதில் ஆறு பேர் ஒரு பெரிய மூட்டையை தாங்கி பிடித்திருந்தனர். அதன் உள்ளே இருந்த வி ஐ பி வேறு யாருமல்ல. உருளைக்கிழங்கே தான். அங்கு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் உருளைக் கிழங்கு நடும் திருவிழாதான் அது.\nதென் அமெரிக்காவில் உள்ளது ஆண்டிஸ் மலைப்பகுதி.. இதுதான் உருளைக்கிழங்கின் தாயகம். இந்த மலைத்தொடரில் தென் அமெரிக்கா நாடுகளான பொலிவியா சிலி பெரு ஆகியவை இணைந்துள்ளன. ஐரோப்பாவிலிருந்து 16ம் நூற்றாண்டில் சென்ற ஸ்பானிஷிய படை தென் அமெரிக்காவை கைப்பற்றியது. அது முதல் உருளைக்கிழங்கின் தலையெழுத்து மாறியது. ஆண்டிஸ் மலைத்தொடரில் உருளைக்கிழங்கு கண்டு வியந்த ஸ்பானியர்கள் அதன் ருசியை அறிந்து ஐரோப்பாவிற்கு கொண்டு வந்தனர். பின் அவர்கள் ஆதிக்கம் செலுத்திய நாடுகளுக்கேல்லாம் கொண்டு சென்றனர்.\nபிறந்த மண்ணில் தான் வளர்வேன் என பிடிவாதம் செய்யாமல் சென்ற இடங்களில் எல்லாம் செழித்து மகசூல் தந்தது உருளைக்கிழங்கு. கொஞ்சம் தண்ணீர் குடித்து வேர் நிறைய புரோட்டீன் பெருக்கி மனிதர்கள் வயிற்றை நிறைத்தது. உலகம் எங்கும் 18ம் நூற்றாண்டில் விவசாயம் வளர்ச்சியடைந்தது. கோதுமை சோளத்துடன் உருளைக்கிழங்கையும் பயிரிட துவங்கினர். இதை ஊக்குவிக்கும் விதமாக ஐரோப்பா கண்டத்தில் விவசாயிகளுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. உலக அளவில் ஆசிய நாடான சீனாவில் அதிக அளவில் உருளைக்கிழங்கு உற்பத்தி நடக்கிறது. அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.\nPrevious postஇனிய பாட்டு
தப்பு பண்ணிட்டு இது வேறையா...? உரிமையாளரின் வாக்குவாதம்... அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை...!! • Seithi Solai\nதடையை மீறி திறந்து வைத்திருந்த ஜெராக்ஸ் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.\nதமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி அரசு மருத்துவமனை சாலை கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள கடைகளை திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தடையை மீறி ஒரு ஜெராக்ஸ் கடை திறந்திருப்பதை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.\nஇதனை அடுத்து கடையை மூடுமாறு தெரிவித்தபோது கடை உரிமையாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஜெராக்ஸ் கடையை பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nTags: #Nilgiris, District News, xerox store close\nஅதனால கொஞ்சம் லேட் ஆகுது… அங்க வந்தா பிடிச்சிருவோம்… வனத்துறையினரின் புது முயற்சி…!!
பிலவ வருட தமிழ் பஞ்சாங்கம் கணிப்பு… 2021 வருடம் எப்படி இருக்கும்…? பேர ழிவு நிச்சயம்… ஜோதிடர்களுக்கே அ தி ர்ச்சி கொடுத்த பஞ்சாங்கம்…!! - Cinecafe.In\nபிலவ வருட தமிழ் பஞ்சாங்கம் கணிப்பு… 2021 வருடம் எப்படி இருக்கும்…? பேர ழிவு நிச்சயம்… ஜோதிடர்களுக்கே அ தி ர்ச்சி கொடுத்த பஞ்சாங்கம்…!!\nஒரு வருட காலம் முடிந்த பிறகும் கூட கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து உலகம் இன்னமும் மீளாத நிலையில் தற்போது புதிய வகை வை ரஸ் ஒன்று இந்தியாவின் வடகிழக்கு திசையில் உள்ள நாடுகளில் இருந்து வேகமாக பரவும் என்று இந்த பிலவ புது வருட தமிழ் பஞ்சாங்கம் தற்போது கணித்துள்ளது.\nசுரங்கம், ஆழ்கடல் ஆராய்ச்சியில் வெற்றி பெற்று பல பொக்கிஷங்களை அரசு கையகப்படுத்தும். இந்தியாவின் வட கிழக்கு திக்கில் உள்ள நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சீனா, மங்கொலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் காய்ச்சல் நோ ய் சென்ற வருடத்தை விட அதிகமாக வேகமாக பரவும்.\nஉலகத்தையே ஆட்டிப்படைக்கும் புதுவகையான வை ரஸ் நோ யினால் ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது. இந்த ஆண்டில் பல விதமான புதிய தொழில்கள் உருவாகும்.\nபெண்களுக்கு எதிரான பல பா லிய ல் குற் றங்கள், பெ ண் க டத் தல்கள் அதிகரிக்கும். திருட்டுகள் அதிகமாகும். சட்டத்தின் பிடியில் திருடர்கள் சிக்குவார்கள். அவர்களுக்கு க டுமை யான எதிர்பார்க்காத வித்தியாசமான தண்டனை கிடைக்கும்.\nசெவ்வாய் மற்றும் சனி தொடர்பு காரணமாக புரட்டாசி, கார்த்திகை, பங்குனி ஆகிய மூன்று மாதங்களில் விபத்துகள், போராட்டங்கள் அதிகம் நடைபெறும். இந்தியாவில் சாலை வி பத் துகள், தீ விப த்து கள் பெருமளவில் நடைபெறும் எனவும் பஞ்சாங்கம் கணித்துள்ளது.
மின்னம்பலம்:ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம்2தமிழர்களா?\nஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் அறவழியில் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் இறுதிநாளில் வன்முறைக் கும்பல் உள் நுழைந்ததாகக் கூறி காவல்துறையினர் தடிஅடி நடத்தி போராட்டத்தைக் கலைத்தனர்.\nஇந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எம்.எஸ்.ராஜ் மெரினா புரட்சி என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். பெரும் போராட்டத்திற்குப் பிறகே இப்படத்திற்கான தணிக்கை சான்றிதழ்கள் கிடைக்கப்பெற்றது.\nஇந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியது. டிரெய்லரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முகநூலில் வெளியிட்டார். விஜய் சேதுபதி, சூரி மற்றும் சமுத்திரக்கனி டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.\nமெரினா புரட்சி டிரெய்லரை பார்க்கும் போது, போராட்டம் எவ்வாறு தொடங்கியது, அதன் பின்னணியில் இருந்தது யார் என்று புலனாய்வு செய்யும் விதமாக இப்படம் இருக்கும் எனத் தெரிகிறது. டிரெய்லரில் இடம்பெறும் வசனங்களைப் பார்க்கும் போது, போராட்டம் குறித்த முக்கியமான கேள்விகளை மெரினா புரட்சி முன்வைக்கிறது. ‘ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் இரண்டு தமிழர்கள்’ என்ற வசனம் கவனம் வைக்கிறது.\nமெரினா புரட்சி படம் குறித்து இயக்குநர் எம்.எஸ்.ராஜ் மின்னம்பலத்திற்கு அளித்த பேட்டியில், “அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், சிங்கப்பூர், டென்மார்க், நார்வே, ஆஸ்திரேலியா, தென் கொரியா என 13 நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் மெரினா புரட்சி திரையிடப்பட்டது. நார்வேயில் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. படம் பார்த்த அனைவரும் மிகவும் உணர்வுப்பூர்வமாக பேசினார்கள். அது படத்திற்கு மிகப் பெரும் கவனத்தைப் பெற்றுத் தந்தது. தென் கொரியாவில் நடைபெற்ற விழாவில் சிறந்த படைப்பாளிக்கான விருதும் கிடைத்தது” என்றார்.\nமுதன் முறையாக தென் கொரியாவில் சிறப்புக் காட்சிக்காக திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் மெரினா புரட்சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. டிரெய்லரில் இடம்பெற்ற ‘ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் இரண்டு தமிழர்களா’ என்ற வசனம் குறித்து கேட்டபோது, இயக்குநர் எம்.எஸ்.ராஜ், “அனைத்திற்குமான பதில் படத்தில் இருக்கும்”எனக் கூறினார். மேலும், படத்தை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் மட்டும் வசனத்தை டிரெய்லரில் இணைக்கவில்லை எனக் கூறுகிறார் மெரினா புரட்சி இயக்குநர்.\n“தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூன்றாம் ஆண்டை நோக்கி நகர்கிறோம். ஆனால், இன்னமும் நம் போராட்டம் பல்வேறு வடிவங்களில் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தி எதிர்ப்பு, நீட் தேர்வு, தற்போது ஐஐடியில் நிகழ்ந்துள்ள மாணவி தற்கொலை என தொடர்ந்து தமிழர்களை கொதிநிலையிலேயே வைத்திருக்கிறார்கள். ஆனாலும், தமிழர்களின் ஒற்றுமையும், போராட்ட குணமும் தொடர்ந்து நம்மை நடைபோட வைத்துக் கொண்டு தான் இருக்கிறது.\nஜல்லிக்கட்டு போராட்டம் ஏற்படுத்திய எழுச்சி, படம் பார்க்கும் அனைவருக்கும் நிச்சயம் ஏற்படும்” என நம்பிக்கையோடு மக்கள் கருத்துக்காக காத்திருக்கிறார் எம்.எஸ்.ராஜ்.\nநவம்பர் 29ஆம் தேதி மெரினா புரட்சி திரைக்கு வரவிருக்கிறது.
நகல் கூட இல்லை; நாட்டை பிரிப்பது பற்றி பேச்சு: ரணில்! - sonakar.com\nHome NEWS நகல் கூட இல்லை; நாட்டை பிரிப்பது பற்றி பேச்சு: ரணில்!\nநகல் கூட இல்லை; நாட்டை பிரிப்பது பற்றி பேச்சு: ரணில்!\nபுதிய அரசியலமைப்பின் நகல் கூட இன்னும் முழுமையடையாத நிலையில் நாட்டைப் பிரிக்கப் போவதாகக் கூறி எதற்காக குழப்பங்களை உருவாக்க வேண்டும் என கேள்வியெழுப்புகிறார் ரணில் விக்கிரமசிங்க.\nஅவரது கூற்றுப்படி, உத்தேச அரசியலமைப்பின் நகல் கூட இதுவரை உருவாகவில்லையென தெரிவிக்கப்படுகிறது. எனினும் இம்மாத முற்பகுதியில் குறித்த நகல் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என முன்னர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.\nஇதேவேளை, உத்தேச அரசியலமைப்பு நாட்டைத் துண்டாடிவிடும் என எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையிலேயே நகல் கூட இன்னும் தயாராகாத நிலையில் நாடு பிரிந்து விடும் என பிரச்சாரம் செய்வது கேலிக் கூத்து என ரணில் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ரஞ்சனின் காதலியுடன் சென்ற எஸ்.பி திஸாநாயக்க! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்\nHome / இலங்கை / செய்திகள் / ரஞ்சனின் காதலியுடன் சென்ற எஸ்.பி திஸாநாயக்க!\nரஞ்சனின் காதலியுடன் சென்ற எஸ்.பி திஸாநாயக்க!\nஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், சிறை தண்டனை அனுபவித்து வருகின்றார்.\nஅங்குணகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர், அங்கிருந்து வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் , ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, சிறைச்சாலைக்குச் சென்று அண்மையில் பார்வையிட்டுள்ளார்.\nஇது குறித்து எஸ்.பி திஸாநாயக்க கூறுகையில்,\n“தான், ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிடுவதற்குச் சென்றிருந்தேன். சுமார் அரை​மணிநேரம் அவருடன் உரையாடியிருந்தேன். இதன்போது நான் தனியாக செல்லவில்லை. ரஞ்சன் ராமநாயக்கவின் காதலியுடன் சென்றிருந்தேன்.\nகாதலி ஒரு வைத்தியர், அவர், தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார். என்னுடன், என்னுடைய ஊடகச் செயலாளரும் வருகைதந்திருந்தார்” என்றும் எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.\nஅத்துடன் “ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென்பது தொடர்பில் கலந்துரையாடவில்லை. எனினும், பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அதன்பின்னரே ஜனாதிபதியிடம் வலியுறுத்தமுடியும் என தெரிவித்த எஸ்.பி.திஸாநாயக் எனினும், இதுதொடர்பில் தான் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக் கோள்கலாம் சாட் V2-வை , இந்தியா விண்ணில் ஏவியுள்ளது | CTR24 உலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக் கோள்கலாம் சாட் V2-வை , இந்தியா விண்ணில் ஏவியுள்ளது – CTR24\nஉலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக் கோள்கலாம் சாட் V2-வை , இந்தியா விண்ணில் ஏவியுள்ளது\nJan 25, 2019, 01:59 am\nஉலகிலேயே மிகவும் எடை குறைவான செயற்கைக் கோள் எனக் கருதப்படும் கலாம் சாட் V2-வை விண்ணில் ஏவியுள்ளது இந்தியா.\nவிண்வெளி கல்வி நிறுவனம் ஒன்றின் மாணவர்கள் உருவாக்கியுள்ள இந்த செயற்கைக் கோளின் எடை 1.26 கிலோ மட்டுமே.\nசென்னை அடுத்த ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவு தளத்தில் இருந்து இரவு இந்திய நேரப்படி 11.37க்கு செலுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி44 ராக்கெட். இது சுமந்து செல்லும் செயற்கைக் கோள்களில் கலாம் சாட்டும் ஒன்று. இஸ்ரோ தலைவர் சிவன் உள்ளிட்டோர் இந்த நிகழ்வின்போது மையத்தில் இருந்தனர்.\nபொழுதுபோக்குக்கு நடத்தப்படும் ரேடியோ சேவைகளான ஹேம் ரேடியோ சேவைகளை நடத்துவோருக்கு இது உதவும். லாப நோக்கமற்ற இந்த ஹாம் ரேடியோ சேவைகளுக்கான தகவல் தொடர்பு செயற்கைக் கோளாக கலாம்சாட் செயல்படும்.\nஇது பள்ளி மாணவர்களுக்கு எதிர்கால விஞ்ஞானிகளாகவும், பொறியாளர்களாகவும் வருவதற்கான ஊக்கத்தை அளிக்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இஸ்ரோ தலைவர் கே.சிவன் இது பற்றிக் கூறுகையில், “இதுவரை கட்டமைத்து, சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட செயற்கைக் கோள்களிலேயே கலாம்சாட்தான் மிக எடைகுறைந்த செயற்கைக் கோள்” என்று தெரிவித்துள்ளார்.\nஇதைவிட எடைகுறைவாக, அதாவது 64 கிராம் எடையில் இந்திய மாணவர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட செயற்கைக் கோள் ஒன்று, கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவில் உள்ள நாசா மையத்தில் இருந்து ஏவப்பட்டது. ஆனால், நான்கு மணி நேரமே நீடித்த இந்த செயற்கைக் கோளின் பயணம் அரைவட்ட பாதையில் சென்றது. அரைவட்டப் பாதையில் செல்லும் செயற்கைக் கோள்கள் விண்வெளிக்கு சென்றாலும் அவை புவியை வட்டப் பாதையில் சுற்றி வருவதில்லை.\nஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற சென்னையில் இருந்து இயங்கும் விண்வெளி கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் கலாம்சாட் V2-வைஉருவாக்கினார்கள்.இதுவரை இந்திய மாணவர்கள் உருவாக்கிய9செயற்கைக் கோள்கள் ராக்கெட்டுகள் மூலம் விண்வெளியை எட்டியுள்ளன.\nமுதல் முறையாக, இந்த செயற்கைக் கோள் ஏவும் நடவடிக்கையின்போது செலுத்தப்பட்ட ராக்கெட் ஒன்றின் பகுதியை மீட்டு மீண்டும் பயன்படுத்தவுள்ளது இஸ்ரோ.\nபாரம்பரியமாக ராக்கெட்டுகள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியவை. ராக்கெட் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், ராக்கெட்டின் ஒரு பகுதி எரிந்து விழுந்துவிடும். இவை விண்வெளிக் குப்பைகளாகவே சேரும். இதுபோல லட்சக்கணக்கான வீசி எறியப்பட்ட உலோகத் துண்டுகளும், மற்ற பொருள்களும் புவியை சுற்றி வருகின்றன.\nபழைய செயலிழந்துபோன செயற்கைக் கோள்கள், ராக்கெட்டுகளின் பாகங்கள், விண்வெளி வீரர்கள் தவறவிட்ட கருவிகள் ஆகியவையும் இவற்றில் அடக்கம். இவற்றால் ஏற்படும் மோதல்கள் பெரிய சேதங்களை ஏற்படுத்துவதோடு, மேலும் அதிக விண்வெளி குப்பைகளைத் தோற்றுவிக்கும்.தற்போதைய இந்த செயற்கைக் கோள் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. என்ற நான்கு கட்டங்கள் கொண்ட 260 டன் எடையுள்ள ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது.\nவழக்கமாக ராக்கெட்டின் முதல் மூன்று கட்டங்கள் ஏவும் நடவடிக்கையின்போது புவியில் கழன்று விழுந்துவிடும். திரவ எரிபொருளை பயன்படுத்தும் ராக்கெட்டின் கடைசி கட்ட எஞ்சின் பல முறை, நிறுத்தி ஸ்டார்ட் செய்யப்பட்டு மிகத் துல்லியமான சுற்றுப் பாதைக்கு சென்று சேர உதவும்.\nவியாழக்கிழமை கலாம் சாட்டை ஏவிய ராக்கெட்டில் பயன்படுத்தப்படும், இந்த நான்காம் கட்ட எஞ்சின், செயற்கைக் கோளை 277 கி.மீ. உயரத்தில் உள்ள சுற்றுப் பாதைக்குக் கொண்டு செல்லும். ஆனால், இந்தமுறை, இந்த எஞ்சினில் புதிய திறனை சேர்த்துள்ளது இஸ்ரோ. இதன் மூலம் இது விண்வெளியிலேயே ஓராண்டுக்கு செயல்பட்டுக்கொண்டிருக்கும்.\n“விலைமதிப்பு மிக்க இந்த செல்வத்தை ஏன் வீணாக்கவேண்டும்? எனவே, இந்த நான்காம் கட்ட எஞ்சினை சோதனைக்கான மேலதிக உயரத்தில் உள்ள ஒரு சுற்றுவட்டப் பாதைக்கு செலுத்தி விண்வெளியில் சின்னச் சின்ன சோதனைகளை மேற்கொள்ள உள்ளோம்” என்றார் இஸ்ரோ தலைவர் சிவன்.\nகிட்டத்தட்ட ஈர்ப்பு விசை பூஜ்யமாக உள்ள சூழலில் ஆராய்ச்சியாளர்கள் சோதனைகள் மேற்கொள்ள இது உதவும். இந்த சுற்றுப்பாதையில் இருந்துதான் கலாம் சாட்டும் செயல்படும்.\nPrevious Postகுற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலான பொறிமுறையை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் காலம் தாழ்த்தக் கூடாது Next Postஏழு தமிழரின் விடுதலைக்கு ஆதரவு கேட்டு அற்புதம்மாள் ஆரம்பித்துள்ள நடைபயணம் !!
செமால்ட் வழங்கும் ஆக்கபூர்வமான ஆலோசனை உங்களை தீம்பொருளிலிருந்து விலக்கி வைக்கும்\nஇணைய உலாவியைப் பயன்படுத்துவதன் மூலம் கணினிகளில் பரவும் பிழைகளை தீம்பொருள் குறிக்கிறது. ஒரு வார்த்தையில், இது தீங்கிழைக்கும் மென்பொருளின் குறுகிய வடிவமாகும், இது கணினியை அழிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. எனவே, இது ஹேக்கர்களால் பரவும் நோயைப் போல செயல்படுகிறது.\nகிட்டத்தட்ட ஐம்பத்தைந்து சதவிகித தீம்பொருள் இணைய உலாவியில் வசிப்பதாக போன்மேன் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. இதன் விளைவாக, நிலுவைத் தொகையை உலாவும்போது ஹேக்கர்கள் தனிப்பட்ட வங்கி விவரங்களை அணுக முடியும். எனவே, பாதிப்பைத் தவிர்க்க கணினி மென்பொருளை தொடர்ந்து புதுப்பிப்பது அவசியம்.\nசெமால்ட் வாடிக்கையாளர் வெற்றி மேலாளரான அலெக்சாண்டர் பெரெசுங்கோ இதை 90 களின் முற்பகுதியில் உள்ள காருடன் நவீன காருடன் ஒப்பிட்டுப் பார்க்க முன்வருகிறார் , நிச்சயமாக இது மிகவும் பாதுகாப்பானது. எனவே, கணினி மென்பொருளுக்கும் இது பொருந்தும், அதற்கு ஒரு குறிப்பிட்ட கால புதுப்பிப்பு தேவை.\nரேச்சலை ஒரு உதாரணமாக கருதுங்கள்\nஅந்த பெண் சிட்னியின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு தாய். அவர் கணினி திறன்களை நன்கு அறிந்தவர், ஆனால் அவரது உலாவி மென்பொருளைப் புதுப்பிக்கத் தவறிவிட்டார். தொடர்ச்சியான தூண்டுதல்களைப் பெற்றிருந்தாலும் தனது கணினி இயக்க முறைமையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தைத் தவிர்ப்பதை அவள் ஒப்புக்கொள்கிறாள். பழைய அமைப்பை வைத்திருப்பதன் விளைவாக, ஹேக்கர்கள் தீம்பொருளை தனது கணினியில் செருகுவதை சாத்தியமாக்கி, அவளது விவரங்களை எடுத்துக் கொண்டாள். கூடுதலாக, தனது அங்கீகாரமின்றி பரிவர்த்தனைகளைக் குறிப்பிடுவதை ஒப்புக்கொள்கிறாள். தீம்பொருளை ஹேக்கர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான பல உண்மையான கதைகளில் அவரது உதாரணம் உள்ளது. உதாரணமாக, ஆஸ்திரேலியா அரசாங்கம் பொருளாதாரத்தின் மீதான சைபர் கிரைம் செலவு 1.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடுகிறது.\nஎப்போதும் ஒரு வழி இருக்கிறது\nசைபர் கிரைம் சவால் இருந்தபோதிலும், உங்கள் தரவு எந்த வகையிலும் சிதைக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த மிகக் குறைந்த விலையில் ஒரு வழி உள்ளது. முதலாவதாக, தீங்கிழைக்கும் மென்பொருளை ஹேக்கர்களை விட நன்றாக புரிந்துகொள்ளும் அடையாள கண்காணிப்பு வல்லுநர்கள் எங்களிடம் உள்ளனர். குற்றவாளிகள் மக்களின் விவரங்களை எடுத்துச் செல்கிறார்களா என்பதைத் தீர்மானிக்க வலையில் விழிப்புடன் இருப்பதன் மூலம் அவை செயல்படுகின்றன. ஆகையால், ஒரு நபர் செய்ய வேண்டியது சில படிகளைப் பின்பற்றுவதே ஆகும், இது இறுதியில் அவரது கணினியை ஹேக்கர்கள் மற்றும் பிற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பாக மாற்றும். எங்கள் பொருட்கள் சிறந்தவை, எனவே உங்கள் கணினி பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் வரை எந்த கவலையும் இல்லை.\nஅடையாள கண்காணிப்பில் பதிவு செய்வதன் மூலம் தொடங்குவது மூன்று முக்கிய படிகள், இது உங்கள் கணினியைப் பாதுகாப்பதற்கான முதல் படியாகும். இரண்டாவதாக, இயக்க முறைமையை உடனடியாக புதுப்பிப்பதன் மூலம் வரிசையைப் பின்பற்றவும், ஆனால் பின்னர் அல்ல. பின்னர், நீங்கள் பயன்படுத்தும் கடவுச்சொல் போதுமான வலுவானது மற்றும் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தவும். குடும்ப உறுப்பினர்களின் பெயர், அல்லது பிறந்த நாள் மற்றும் உங்கள் முகவரிகள் போன்ற பொதுவான கடவுச்சொற்களுக்கு இடமளிக்காததை இது குறிக்கிறது. மூலதன கடிதம், சிறிய எழுத்துக்கள் மற்றும் ஒரு வார்த்தையை யாரும் யூகிக்க முடியாத ஒரு வார்த்தையைப் பயன்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகும். இது உங்கள் கணினி அமைப்பைப் பாதுகாப்பதன் முடிவைக் குறிக்கும்.\nஅடையாள கண்காணிப்பு வாடிக்கையாளர்களுக்கு சமீபத்திய இணைய பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குவதன் மூலம் தங்கள் கணினியைப் பாதுகாப்பதாக உறுதியளிக்கிறது. சமீபத்திய நூற்றாண்டு கணினி குருக்களின் வளர்ச்சியை அனுபவிக்கிறது, மேலும் ஹேக்கர்களும் இருக்கிறார்கள், இதன் பொருள் வேறு எவராலும் புறக்கணிக்க முடியாத சிறந்த பாதுகாப்பை நாங்கள் வழங்க வேண்டும். கடைசியாக, அடையாள கண்காணிப்பில் உள்நுழைவதன் மூலம், ஒருவர் தனது கணினி பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலைப்பட முடியாது.
சன் சூப்பர் குடும்பத்தில் நடனமாடும் நந்திதா! | Nandita dances for 'Super Kudumbam' finale - Tamil Filmibeat\nசன் சூப்பர் குடும்பத்தில் நடனமாடும் நந்திதா!\n| Published: Wednesday, January 8, 2014, 16:42 [IST]\nசன் டிவியில் சின்னத்திரை கலைஞர்கள் பங்கேற்றும் ரியாலிட்டி ஷோ சன் சூப்பர் குடும்பம். இந்த நிகழ்ச்சி சீசன்2தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.\nபிள்ளைநிலா,பொம்மலாட்டம், வாணி ராணி, இளவரசி, என சன் டிவியில் ஒளிபரப்பாகும் 18 சீரியல்களின் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடுகின்றனர்.\nஇப்போது அரையிருதிச்சுற்று நடைபெற்று வருகிறது. இதில் வாணி ராணி, பொம்மலாட்டம் போன்ற சீரியல் குடும்பங்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.\nடி.ராஜேந்தர் - மீனா\nஇந்த நிகழ்ச்சியின் நடுவராக டி.ராஜேந்தர், மீனா பங்கேற்று சின்னத்திரைக் கலைஞர்களின் நடனம், பாட்டு ஆகியவற்றைப் பார்த்து மதிப்பெண்களைப் போடுகின்றனர். கமெண்ட் சொல்கிறேன் பேர்வழி என்று நடனமாடி பக்கத்தில் இருக்கும் மீனாவையும் பார்வையாளர்களை அச்சுறுத்துகிறார் டி.ராஜேந்தர்.\nபாதியில் போன சங்கீதா\nசூப்பர் குடும்பத்தில் மூன்றாவது நடுவராக இருந்த சங்கீதா, புதுயுகம் தொலைக்காட்சியில் நட்சத்திர ஜன்னல் நடத்தப் போய்விட்டார். இதனால் மீனாவும், ராஜேந்தரும் மட்டுமல்லாது அவ்வப் போது சில திரை நட்சத்திரங்களும், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.\nஅசந்து போன டி. ராஜேந்தர்\nசின்னத்திரை கலைஞர்களில் சிறுமிகளின் நடனம்தான் மிகவும் அசத்தலாக உள்ளது. ஒரு சிறுமியின் நடனத்தைப் பார்த்து அசந்து போன டி.ராஜேந்தர், தான் படம் இயக்கும் போது தன்னுடைய படத்தின் நாயகியாக நடிக்க சம்மதிக்க வேண்டும் என்று அந்த சிறுமியிடம் கோரிக்கை விடுத்தார்.\nபிரம்மாண்டமான செட், அசத்தலான தொகுப்பாளர்கள், நடுவர்கள் என இருந்தாலும், அவ்வப்போது நிகழ்ச்சியின் டிஆர்பிஐ உயர்த்த சில டிராமா சண்டைகளும் போடுகின்றனர்.\nஇறுதிச் சுற்றில் சின்னத்திரை நட்சத்திரங்களுடன் பல சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்று நடனமாட உள்ளனர். ‘அட்டகத்தி', ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா' போன்ற படங்களில் நடித்த நந்திதா நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசன் டிவி சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார் நந்திதா. இறுதிப் போட்டி இன்னும் சில தினங்களில் சன் டிவியில் சனிக்கிழமை இரவு9மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.\nRead more about: nandita sun tv television நந்திதா சன் டிவி தொலைக்காட்சி\nActress Nandita who made her K-town debut with Attakathi has danced for the finale of the popular television show 'Super Kudumbam' in Sun TV. The prety actress who was last seen in Vijay Sethupathi starrer 'Idharkuthane Aasaipattai Balakumara' expressed her happiness performing for the show.\nStory first published: Wednesday, January 8, 2014, 16:42 [IST]
கருத்து சுதந்திரத்தில் பேசினாராம்; ஜாமின் கேட்கிறார் பாதிரியார் – Thinasari\nமதுரை: ‘கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டே பேசினேன். எனக்கு ஜாமின் அனுமதிக்க வேண்டும்’ என, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nகன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாதி, மத விரோத உணர்வுகளை துாண்டும் விதமாக பேசியதாக, பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார். அவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:சமூக பணியில் ஈடுபட்டுள்ளேன். என் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப் பட்டு, பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது.\nசிறுபான்மையினருக்கு ஆளுங்கட்சி தந்த தேர்தல் வாக்குறுதிகள் புறக்கணிப்பு, ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டது சட்டவிரோதமல்ல.கருத்து சுதந்திரத்திற்கு உட்பட்டே பேசினேன். எனக்கு இதய பிரச்னை உள்ளது. ஜாமின் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.\nமேலும், தன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, வழக்கை ரத்து செய்யக் கோரி மற்றொரு மனு தாக்கல் செய்து உள்ளார். இது, விரைவில் விசாரணைக்கு வரும்.\nPrevious: வீட்டுக் கடனுக்கான வட்டி 15 வங்கிகளில் குறைவு\nNext: தேக்கடி சுற்றுலா மீண்டும் துவக்கம்
கொரோனா கொடூரத்திலும் குறுக்குசால் ஓட்டும் நோட்டீஸ்... கடமை தவறாத கழக உ.பி.,கள்..! | dmk demands 100 crore donation from bjp issue review\nகொரோனா கொடூரத்திலும் குறுக்குசால் ஓட்டும் நோட்டீஸ்... கடமை தவறாத கழக உ.பி.,கள்..!\nஅந்தக்கட்சிக்கு மக்களை பற்றிய போதிய அக்கறை இல்லை. முக்கிய, தமிழகத்தின் எதிர்கட்சி, 37 மக்களவை எம்.பி களை கொண்ட ஒரு கட்சி இந்த நேரத்தில் எப்படி செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி விமர்சித்தால் நோட்டீஸ் அனுப்புகிறது.\nTamil Nadu, First Published Apr 2, 2020, 6:08 PM IST\nகொரோனா பாதிப்பால் தமிழகம் தவிக்கிறது. திமுக எம்.பி.க்கள் எங்கே? தொகுதிப் பணிக்கு மத்திய அரசு தரும் 1 கோடி விடுத்து, மிக்க வசதி படைத்த எம்.பி.க்களில் பலர், சுயமாக வழங்கிய நிதி என்ன? என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nஅதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கட்சியின் கடமையே கண்ணாயிருக்கிறது கழகம். திமுக விவசாய அணி மாநில செயலாளர் கே.பி.ராமலிங்கம் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிக நீக்கி கொரோனா அதிர்ச்சியைவிட கழக உடன்பிறப்புகளுக்கு ஷாக் கொடுத்திருக்கிறது அக்கட்சி தலைமை.\nஇந்த நேரத்திலும் கட்சி கடைமையை செய்து களையெடுத்து வருவதால், கொரோனாவில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதை விட கட்சியில் பொறுப்புகளை காப்பாற்றிக் கொள்ளும் கவலையில் ஆழ்ந்துள்ளனர் கழக கண்மணிகள்.\nஇது போதாதென்று நோட்டீஸ் அனுப்பி மற்றொரு களேபரத்தை கூட்டியிருக்கிறது அறிவாலயக் கட்சி. அதாவது,’’ தமிழக பாரதிய ஜனதா கட்சி தங்களுடைய அதிகாரபூர்வ சமூகவலை தளப்பக்கங்களின் மூலம் தி.மு.க. குறித்து அவதூறு பரப்பிவருவதாக அக்கட்சி குற்றம்சாட்டி பா.ஜ.கவின் தேசியத் தலைவர், மாநிலத் தலைவர், ட்விட்டர் நிறுவனம் ஆகியோருக்கு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கான @BJP4TamilNadu என்ற கணக்கில் மார்ச் 30ஆம் தேதியன்று தி.மு.க. குறித்த பதிவு ஒன்று வெளியானது. அதில், “தொகுதி வளர்ச்சி நிதியை சொந்தக் காசாகக் காட்டிய @arivalayam; இல்லாத தோரணை உருவாக்க 380 கோடி செலவாக்கும் @mkstalin; சொந்த மக்களுக்கு வெறும் ஒரு கோடி கொடுக்கத்தான் மனசாட்சி உள்ளதா? ஆட்சியில் இருந்து தேன் எடுத்தபோது ஊழல் செய்து புறங்கையை நக்கிய பணத்தை மக்களுக்கும் தாராளமாகக் கொடுக்கலாமே” என்று கூறி விமர்சித்து இருந்தது.\nஇது தொடர்பாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விடுத்துள்ள நோட்டீஸில், ’’இது முழுக்க முழுக்க அவதூறானது. தி.மு.கவின் சார்பில் ஒரு கோடி ரூபாயும், ஒவ்வொரு எம்.எல்.ஏ., எம்.பிக்களும் தங்கள் ஊதியத்தையும் வழங்கியிருப்பதோடு, தி.மு.கவின் தலைமையகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தையும் கொரோனா தனிமைப்படுத்துதலுக்காக வழங்க முன்வந்திருகிறது. பா.ஜ.கவின் சார்பில் கோரோனா நிதிக்கு எந்தத் தொகையும் தரப்படவில்லை.\nகொரோனா போன்ற கொடிய நோய் பரவிவரும் நேரத்தில் மக்களுக்கு உதவாமல் பாஜக அரசியல் செய்து வருகிறது. தற்போது மாநிலத் தலைவராக உள்ள எல்.முருகன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது அந்தப் பதவியைப் பயன்படுத்தி முரசொலி டிரஸ்ட் அமைந்துள்ள கட்டடம் குறித்து பொய் பிரசாரம் செய்ய முயன்றார்.\nஅரசியல் கட்சிகளுக்குப் பணம் கொடுத்ததாக தி.மு.கவின் தேர்தல் பிரசார வியூக வகுப்பாளர் பிராந்த் கிஷோருக்கு பணம் கொடுத்ததாக ஒரு மீமை பகிர்ந்துள்ளது. ஆகவே, உடனடியாக இந்த ட்வீட்களுக்காக பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும், மாநிலத் தலைவர் எல். முருகனும் மன்னிப்புக் கேட்க வேண்டும். கொரோனா தொடர்பான முதல்வரின் நிதிக்கு 100 கோடி ரூபாய் நிதி அளிக்க வேண்டும்’ எனறு அந்த நோட்டீஸில் தி.மு.க. வலியுறுத்தி இருக்கிறது.\nபா.ஜ.கவின் ட்விட்டர் ஐடியை நிர்வகிப்பது யார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். அந்த ஐடியை முடக்க வேண்டும் என்று ட்விட்டரின் தலைமை நிர்வாகிகளிடம் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, ‘’கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து கட்சிகளிலும் பாரபட்சமின்றி மக்களுக்கு சேவையாற்றி வருகின்றன.\nஇந்த நேரத்தில் மக்களுக்கான சேவை பணிகளில் ஈடுபடாமல், தொகுதி நிதியில் இருந்து தொகையை அறிவித்து விட்டு திமுக, எம்.பிக்கள் விலகியே இருக்கின்றனர். அத்தோடு இந்த நேரத்தில் கட்சி நடவடிக்கைகளில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. அதற்கு உதாரணம் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகி கே.பி.ராமலிங்கத்தின் நீக்கம். மக்களை பற்றி கவலையில்லாமல் திமுக வரும் சட்டமன்றத்தேர்தலை குறி வைத்து இந்த இக்கட்டான நிலையிலும் கட்சிப்பணிகளில்தான் தீவிரம் காட்டி வருகிறது.\nஅந்தக்கட்சிக்கு மக்களை பற்றிய போதிய அக்கறை இல்லை. முக்கிய, தமிழகத்தின் எதிர்கட்சி, 37 மக்களவை எம்.பி களை கொண்ட ஒரு கட்சி இந்த நேரத்தில் எப்படி செயல்படுகிறது என்பதை சுட்டிக்காட்டி விமர்சித்தால் நோட்டீஸ் அனுப்புகிறது. இது அக்கட்சியின் சர்வாதிகாரப்போக்கை காட்டுகிறது. பக்குவமின்மையை நிரூபிக்கிறது. இந்த வழக்கை நாங்கள் சட்டப்படி எதிர்க்கொள்வோம். ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு அதனை முதல்வரின் நிதிக்கு கொடுக்கச்சொல்லி இருப்பது தான் உச்சக்கட்ட அரசியல் இந்த அரசியலை மக்கள் உணர்ந்து எத்த்னையோ நாட்களாகி விட்டது என்பதை திமுக உணராமல் இருப்பதுதான் வேதனை’’ எனக் கொட்டித் தீர்த்தார் அந்த நிர்வாகி..!\nLast Updated Apr 2, 2020, 6:14 PM IST
தைப்பூச திருவிழா தமிழகம் முழுவதும் கோலாகலம் - பழனி, திருச்செந்தூரில் தடையை மீறி குவிந்த பக்தர்கள் | Thaipusam festival grand maner across Tamil Nadu - Devotees on Murugan temples - Tamil Oneindia\nPublished: Tuesday, January 18, 2022, 11:00 [IST]\nபழனி: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் முருகன் ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கொரோனா தடை உத்தரவையும் மீறி ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து கிரிவலப்பாதையில் காவடியுடன் வலம் வந்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.\nதமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு விழாக்கள் எடுத்தாலும் தைப்பூசம் தனி சிறப்பம்சம் கொண்டது. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.\nதைப் பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சந்திரனின் வீடான கடகத்திலும், சந்திரனின் ஏழாம் பார்வை சூரியனின் மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்ம பலமும் சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. முருகப் பெருமான், வள்ளியைத் திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வானையை சமாதானம் செய்து வள்ளி, தெய்வானை சமேதராக தைப்பூச நாளில்தான் காட்சியளித்தாராம்.\nமுருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான பழநியில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. எனினும் தினசரியும் பாதையாத்திரையாக பக்தர்கள் கோவிலுக்கு வந்து கொண்டிருகின்றனர். பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் மலைக் கோயில் அடிவாரத்தில் தரிசனம் செய்துவிட்டு திரும்புகின்றனர்.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் பக்தர்கள் பங்கேற்பு இன்றி நேற்றிரவு நடைபெற்றது.\nதைப்பூச தினமான இன்று மாலை கோயில் ஊழியர்களை மட்டும் வைத்து முதன்முறையாக சிறிய மரத் தேரில் தேரோட்டம் நடைபெற உள்ளது\nவழக்கமாக ஆண்டு தோறும் தைப்பூச நாளில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி தேரில் எழுந்தருளி, ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றாலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.\nமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி திருச்செந்தூர் கோவிலில் அதிகாலை5மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது.\nஎனினும் பாதையாத்திரையாக வந்துள்ள பக்தர்கள் துண்டுக்கை விநாயகர் ஆலயத்தில் வழிபட்டு வருகின்றனர். கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் யாரும் செல்ல முடியாத அளவுக்கு ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் மற்றும் கோவில் தனியார் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nDevotees flock to Murugan temples across Tamil Nadu ahead of the Thaipusam festival. In defiance of the Corona Prohibition Order,alarge number of devotees came on foot and marched along the Girivala pathai with Kavadi and worshiped with camphor.
ஒ.பி.எஸ்.’சை சிறை பிடித்த மக்கள்!\nMarch 18, 2021 • M.Divan Mydeen\nதேனி மாவட்டத்தில் உள்ள தன் சொந்த தொகுதியான போடி தொகுதியில் மூன்றாவது முறையாக துணை முதல்வர் ஓபிஎஸ் களமிறங்கியுள்ளார். அவர் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் போடியில் உள்ள குலாலர் பாளையம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில், ஒரு சமுதாய பிரிவினரை சந்தித்து ஆதரவு திரட்டச் சென்றார் ஒ.பன்னீர்செல்வம்.\nஅப்போது அதே சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் திருமண மண்டபத்தின் முன்பு திரண்டு ஓபிஎஸ் க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டு, அப்பகுதியில் தள்ளுமுள்ளு நடந்தது.\nகாவல்துறையினர் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும் சுமுகமான சூழல் ஏற்படாததால் தடியடியில் ஈடுபட்டனர். மேலும் திருமண மண்டபத்தில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது இளைய மகன் ஜெயபிரதீப் ஆகியோர் பிரச்சினைகள் ஏற்படும் முன் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்து மற்றொரு தரப்பினர் கலைந்து சென்றதால், அப்பகுதியில் ஒருமணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது
ஜெய் பீம் ஆஸ்கரை வெல்லுமா? - இன்மதி\nby Chellappa | ஜன 28, 2022 | பொழுதுபோக்கு\nநடிகர் சூர்யா தயாரித்து ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர்2அன்று அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியானது. விமர்சனரீதியாகப் பெரிய வரவேற்பைப் பெற்ற படத்தின் சில காட்சிகள் ஜனவரி 18 அன்று ஆஸ்கரின் அதிகாரப்பூர்வத் தளத்தில் வெளியிடப்பட்டன. ஒரு தமிழ்ப் படத்தின் காட்சிகள் ஆஸ்கர் இணையதளத்தில் வெளிவருவது இதுவே முதன்முறை. இதைத் தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் ஜெய் பீம் ஆஸ்கரால் மதிக்கப்பட்டதை எண்ணிக் கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனால், ஓரிரு நாள்களிலேயே ஆஸ்கருக்கு 5,000 அமெரிக்க டாலர், சுமார்3லட்சத்து 75 ஆயிரம் ரூபாய், பணம் கட்டணம் கட்டியே ஜெய் பீம் திரைப்படக் காட்சிகளை யூடியூபில் வெளியிட்டிருந்த விவரம் தெரியவந்தது. ஆஸ்கர் ’சீன் அட் தி அகாடெமி’ என்ற பெயரில் இந்த வாய்ப்பை வழங்குகிறது. கட்டணம் செலுத்தியதன் பேரில்தான் இந்த வாய்ப்புக் கிடைத்தது என்பதைப் படக் குழுவினர் வெளிப்படையாகத் தெரிவிக்காததால் இது வியாபாரத் தந்திரமாகக் கருதப்பட்டது. இது தொடர்பாக ஆஸ்கர் இணையதள விதிமுறைகளைச் சுட்டிக்காட்டி இந்த வியாபாரத் தந்திரத்தை அம்பலப்படுத்தின சமூக வலைத்தளங்கள்.\nபிபிசி தமிழ் இணையதளத்துக்கு இயக்குநர் ஞானவேல் அளித்திருந்த பேட்டியில்கூட “கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆஸ்கர் குழுவில் இருந்து படத்தின் சில காட்சிகளை இணைத்து என்னுடைய பேட்டியும் கேட்டிருந்தார்கள். இதற்கு முன்பு இப்படி எல்லாம் யாரிடமும் கேட்டிருப்பார்களா எனத் தெரியவில்லை என்றே கூறியிருக்கிறார். ஆஸ்கர் தளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் விதிமுறைகளின் படி, பணம் கட்டியே ஆஸ்கரின் யூடியூபில் ஜெய் பீம் படத்தின் காட்சிகளும் இயக்குநரது பேட்டியும் அடங்கிய வீடியோ பதிவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இது தொடர்பாக இயக்குநர் எதுவும் குறிப்பிடவில்லை.\nஆஸ்கர் விருதுகள் அதன் உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில்தாம் வழங்கப்படுகின்றன. அப்படி வாக்களிப்போருக்கு என்னென்ன படங்கள் உள்ளன என்பதை நினைவுபடுத்தவே ஆஸ்கர் விருதுக் குழுவால் தகுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது.\nஇந்நிலையில் இந்த ஆண்டின் அதிகாரப்பூர்வத் தேர்வுப் பட்டியலில் ஜெய் பீம் படமும் இடம்பெற்றுள்ள தகவல் வந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 1 முதல் டிசம்பர் 31 வரை வெளியான படங்களிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட 276 படங்கள் இந்தப் பட்டியலில் உள்ளன. ஆஸ்கர் விருதுகள் அதன் உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில்தாம் வழங்கப்படுகின்றன. அப்படி வாக்களிப்போருக்கு என்னென்ன படங்கள் உள்ளன என்பதை நினைவுபடுத்தவே ஆஸ்கர் விருதுக் குழுவால் தகுதிப் பட்டியல் வெளியிடப்படுகிறது. அந்தப் பட்டியலில் பிரியதர்ஷன் இயக்கிய மலையாளப் படமான மரைக்காயர்: அரபிக் கடலின் சிங்கம் என்னும் படமும் ஜெய் பீமும் இடம்பெற்றிருந்தது.\nஆஸ்கரின் தகுதிப் பட்டியலில் ஜெய் பீம் இடம்பெற்றிருக்கும் தகவல் வந்த கணம் முதல் பலருக்கும் ஒரு குழப்பம் இருக்கிறது. தமிழிலிருந்து ஆஸ்கருக்குச் சென்ற அதிகாரபூர்வப் படம் கூழாங்கல். இது தகுதிப் பட்டியலுக்குத் தேர்வாகவில்லை. ஜெய் பீம் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டதா என்பதே பரவலாக அறியப்படாத நிலையில், திடீரென ஜெய் பீம் திரைப்படம் எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதே அந்தக் குழப்பம். இதில் குழப்பமடையத் தேவையில்லை. ஃபிலிம் ஃபெடெரேசன் ஆஃப் இந்தியா என்னும் தன்னாட்சி பெற்ற அமைப்பு இந்தியப் படங்களிலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்பிய படம் கூழாங்கல். ஜெய் பீம் திரைப்படமோ ஆஸ்கர் விருதுக்காக சுமார்9லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் (12,500 அமெரிக்க டாலர்) பணம் கட்டியே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட பிபிசி பேட்டியில் ஓபன் கேட்டகிரியில் ஆஸ்கர் விருதுக்குப் படத்தை அனுப்பத் தயாரிப்பு நிறுவனம் முடிவுசெய்திருந்தது என்று இயக்குநர் குறிப்பிட்டுள்ளார். இப்படிப் பணம் கட்டி பெறும் வாய்ப்பையே அவர் ஓபன் கேட்டகிரி என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.\nஒரு திரைப்படம் ஒரு நாட்டிலிருந்து அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் பணம் கட்டி அந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்காக அனுப்பிவைக்க இயலும். ஆஸ்கர் விருதுக் குழுவினர் அந்தப் படங்களையும் பார்த்து வாக்களிப்பார்கள். அப்படி அதிக வாக்கு பெற்றால் அந்தப் படம் விருதுபெறவும் சாத்தியமுண்டு. ஆஸ்கர் விருதுக் குழுவினர் பார்ப்பதற்கான அரங்கில் திரையிடவே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஉண்மையில் இப்படிப் பணம் கட்டி ஆஸ்கர் விருதுக்குப் படத்தைச் சமர்ப்பித்த பின்னரே ஆஸ்கர் யூடியூப்பில் படக் காட்சிகளை வெளியிடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. படத்தின் உருவாக்கம், பின்னணித் தகவல்கள், சிறப்பு ஆகியவை பற்றித் தொழில்நுட்பக் கலைஞர்களது எண்ணம் ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டிய இந்த வீடியோ ஆஸ்கர் விருதுக் குழுவுக்கான ஒரு முன்னோட்டம் போல் அமைந்திருக்க வேண்டும். 15 நிமிட வீடியோ பரிந்துரைக்கப்பட்டாலும் 20 நிமிடங்கள் வரை ஆஸ்கர் அனுமதிக்கிறது. இது தொடர்பான விதிமுறைகள் ஆஸ்கர் தளத்தில் மிகத் தெளிவாக உள்ளன. இந்த உண்மைகள் தெரியாவிட்டால், ஜெய் பீம் படத்தின் சிறப்பை உணர்ந்த ஆஸ்கர் விருதுக் குழு அதைத் தங்கள் பட்டியலில் இணைத்துக்கொண்டதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டுவிடும்.\nஅப்படியொரு தோற்றம் ஏற்கெனவே உருவாகிவிட்டது. இந்தத் தகவலைப் படக் குழுவினர் வெளிப்படையாகத் தெரிவித்திருக்காததாலேயே ஜெய் பீம் ஆஸ்கரில் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்துப் பலர் ஐயங்கொண்டனர். ஆஸ்கர் இப்படி ஒரு வாய்ப்பை வழங்கும்போது, அந்த வழியில் ஆஸ்கருக்கு அனுப்புவது ஒன்றும் பிழையன்று எனும்போது, படக் குழுவினர் ஏன் இதை வெளிப்படுத்தவில்லை? முன்னரே வெளிப்படுத்தியிருந்தால் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்திருக்கலாம். முறைப்படி இந்த விஷயம் வெளிவராததாலேயே ஒரு சந்தேகப் பார்வை விழுந்திருக்கிறது. இந்த நேரத்தில் 2020 ஆம் ஆண்டில் இப்படி வெளியான இறுதிப் பட்டியலில் சூரரைப் போற்று படம் இடம்பெற்றிருந்தது என்பதையும் அது இந்தியாவின் அதிகாரபூர்வத் தேர்வு அன்று என்பதையும் நினைவுபடுத்த வேண்டியதிருக்கிறது.\nஅடித்துப் பிடித்து, பொருள் செலவில் ஆஸ்கருக்குச் சென்றிருக்கும் ஜெய் பீம் ஆஸ்கர் விருதை வெல்லும் வாய்ப்பு இருக்கிறதா? 2020ஆம் ஆண்டில் ஆங்கிலம் அல்லாத பாராசைட் சிறந்த படம், சிறந்த சர்வதேசத் திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர் என நான்கு விருதுகளைக் குவித்தது. இந்தப் படம் அமெரிக்காவில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்றபோதே, ஆஸ்கர் விருதுகளில் இது முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் படமாக இருக்கும் என்று ஊகிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்கர் விருது எந்தெந்தப் படங்களுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்னும் ஊகப் பட்டியலிலும் அது இடம்பெற்றிருந்தது.\nஆஸ்கர் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கும் ஜெய் பீம் காட்சிகளை லட்சக்கணக்கானோர் பார்த்திருக்கிறார்கள். இது மாத்திரமே இப்போதைக்கு நம்பிக்கை தரும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதனாலே படம் ஆஸ்கர் விருதை வென்றிடும் என நம்புவது இயலாது.\nஆனால், ஜெய் பீம் திரைப்படத்தின் நிலை என்ன? ஆஸ்கர் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கும் ஜெய் பீம் காட்சிகளை லட்சக்கணக்கானோர் பார்த்திருக்கிறார்கள். இது மாத்திரமே இப்போதைக்கு நம்பிக்கை தரும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதனாலே படம் ஆஸ்கர் விருதை வென்றிடும் என நம்புவது இயலாது. பலத்த போட்டிக்கு நடுவே விருதுக் குழு உறுப்பினர்கள் ஜெய் பீம் படத்தைப் பார்த்து அதிகப்படியான வாக்களித்தால் மட்டுமே ஜெய் பீம் திரைப்படத்துக்கு விருது கிடைக்க வாய்ப்பிருக்கிறது.\nஆஸ்கர் விருதுக் குழு உறுப்பினர்கள் ஜனவரி 27 முதல் பிப்ரவரி 1 வரை வாக்களிப்பார்கள். அதனடிப்படையில் பரிந்துரைப்பட்டியல் பிப்ரவரி 8இல் வெளியாகும். விருதுக்கான இறுதிக் கட்ட வாக்களிப்பு மார்ச் 17 அன்று தொடங்கி மார்ச் 22இல் நிறைவுறும். மார்ச் 27 அன்று டால்பி தியேட்டரில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என ஒரு பழமொழி சொல்வார்கள். இப்போதைக்கு ஜெய் பீம் அத்தைதான். ஒருவேளை பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்து, ஆஸ்கரையும் வென்றால் அப்போது உண்மையிலேயே ஜெய் பீம் ஒரு சரித்திரம் படைத்துவிடும்.\nUday Padagalingam | ஏப் 28, 2022
பாக்கர் மாமா: கலிமுல்லாவின் விவாத அழைப்பு! ஒப்பந்தம் எப்போது?\nகலிமுல்லாவின் விவாத அழைப்பு! ஒப்பந்தம் எப்போது?\nTuesday, January 10, 2012 4:57 AM Posted by பொய்யன் டிஜே\nஇந்திய நித்யானந்தா ஜமாஅத்தின் மாநில மருத்துவரணிச் செயலாளர் அன்புச் சகோதரர் கலிமுல்லா அவர்களும் ராயப்பேட்டையைச் சேர்ந்த ஒரு நர்சும் கருககக் கருக கடலை வறுப்பதாக நாம் எழுதியிருந்தோம்.\nஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சகோ. கலிமுல்லா அவர்கள், எனக்கு டாக்டருக்கும் இருக்கும் தொடர்பை நிரூபிக்க முடியுமா என எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற பாணியில் அறிக்கை விட்டு அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டார்.\nசும்மா இருந்திருந்தால் கூட இந்த அந்த விவகாரம் அப்படியே போயிருக்கும். ஆனால் எனக்கும் டாக்டருக்கும் உள்ள தொடர்பை நிரூபிக்க முடியுமா எனக் கேட்டு அவரே அதை ஒப்புக் கொண்டு விட்டார். அல்ஹம்துலில்லாஹ்.\nஆனால் அதை மறுக்க வேண்டுமே! அதனால் ஏதாவது சொல்லி உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறது நித்தி ஜமாத் கூட்டம்.\nஆனாலும் அன்புச் சகோதரர் கலிமுல்லா அவர்கள் தன் மீதுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விவாதத்திற்கு அழைத்திருக்கிறார். இதைத் தான் நாமும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அன்று முதல் இன்று வரை நித்தி ஜமாத்துக்கும் டி.என்.டி.ஜேவுக்கும் இடையே உள்ள குற்றச்சாட்டுக்களை ஆதாரப்பூர்வமாகப் பேச வேண்டும். அது வேலூர் கள்ள ரசீதாக இருகட்டும், ரதிமீனா யாத்திரையாக இருக்கட்டும், மதுரவாயல் மர்மங்களாக இருக்கட்டும், ஷகிலா பானு விவகாரம், திருவண்ணாமலை விவாகரம், திற்பரப்பு விவகாரம், நந்தினி விவகாரம், மதுரை ஆட்டோ ராணி விவகாரம், ஒய்கே மேன்சன் விவகாரம், ஐஸ் குச்சி விவகாரம், பித்ரா மோசடி விவகாரம், செங்கியின் 10 ஆயிரம் ரூபாய் திருட்டு விவகாரம் தொடங்கி சமீபத்திய திண்டுக்கல் பண்ணையார் முதல் அன்புச் சகோதரர் கலிமுல்லா காமக் கடலை விவகாரம் வரை\nஅத்தோடு சேர்த்து ஆற்காடு விவகாரம் முதல் குப்ரா விவாகாரம் வரை என அனைத்தையும் பேசலாம்.\nஅதற்கு என்ன செய்ய வேண்டும். முதலில் விவாத ஒப்பந்தம் போட வேண்டும். என்னென்ன தலைப்புகளில் பேசுவது? யார் யார் பேசுவது? எந்த இடம்? எந்த தேதி? இருதரப்பிலும் எத்தனை பேர் கலந்து கொள்வது என்பதை முதலில் இரு தரப்பும் கலந்து பேசி கையெழுத்தாக வேண்டும்.\nமக்கள் மத்தியில் பேசுவதற்கு ஷேம் ஷேம் பப்பி ஷேமாக இருந்தால் தனி அறையில் இருதர்ப்பிலும் குறிப்பிட்ட நபர்கள் கலந்து கொண்டு பேச வேண்டும். அது வீடியோ எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தெரியும் வண்ணம் நெட்டிலும் விண் ரிவியிலும் போட வேண்டும்.\nஎனவே சகோதரர் கலுமுல்லா அவர்கள் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான். எங்கே வேண்டுமானாலும் பேசுவதற்கு இது என்ன டீக்கடை பெஞ்ச் பேச்சா, பேசுற பேச்சு ஒவ்வொன்னும் இடி மாதிரி இறங்கனும். அடிக்கிற அடியில் அத்தோடு சாக வேண்டும். அது எந்த தரப்பாக இருந்தாலும் சரி. எனவே டெலிபோன்ல பேசுவோம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில வச்சி பேசுவோம், அப்ரா பிரியாணிக் கடையில் வச்சி சில்லி பீஃப் சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்கிற பேச்செல்லாம் வேண்டாம். விவாத ஒப்பந்தம் எங்கே எப்போது போடலாம் என்பதை மட்டும் சொன்னால் போதுமானது.\nகாத்திருக்கிறோம்.. கலிபுல்லா…. உங்களால் உங்களின் நித்தி ஜமாத் பெருமையடையட்டும்….\nபதில் சொல்ல முடியாத கேள்விகள்:\nM திண்டுக்கல் பண்ணையார் அவர்கள் இன்னமும் வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன்? மாமா பாக்கர் அவர்கள் இந்த திண்டுக்கல் பண்ணையார் விவகாரத்தை ஏற்றுக் கொள்கிறாரா? அல்லது மறுக்கிறாரா? இது தொடர்பாக பொதுமக்கள் மன்றத்தில் விவாதிக்கத் தயாரா?\nM திண்டுக்கல் உமர் குடும்பத்திற்குள் புகுந்து குடிகெடுத்த பண்ணையார் பாக்கர் பற்றி புரோக்கர் மாமா செங்கிஸ்கான் வாய் திறக்காமல் அமைதி காப்பது ஏன்? மாற்றானின் மனைவியோடு விபச்சாரத்தில் ஈடுபட்டு இன்று வரை தொடர்பில் இருக்கும் பாக்கரை இன்னமும் மாநிலத் தலைவராக வைத்திருப்பது ஏன்?\nM கசமுசா கலிமுல்லா விவகாரத்தில் கலிமுல்லா இன்று வரைக்கும் அந்த நர்சோடு கனெக்சனில் இருக்கிறார் என்ற செய்தியை நிறுபிப்பதற்கு தயாராக இருந்தும் அதுபற்றி கொஞ்சம் கூட சகோ.மாமா புரோக்கர் செங்கிஸ்கான் வாய்திறக்காமல் இருப்பது ஏன்? கலிமுல்லா விவகாரத்தை பொதுமன்றத்தில் வைத்துப் பேசுவதற்கு தயாரா?\nM திருவல்லிக்கேணி கலிமுல்லாவுக்கும் ராயப்பேட்டை நர்சுக்கும் இடையில் இருக்கும் கசமுசா விவகாரம் சகோ.புரோக்கர் செங்கிஸ்கானுக்கு நன்கு தெரியும். இவர் அவருக்கும் பார்சல் பார்சலாய் பிரியாணி கொடுத்து அனுப்பியதும் தெரியும், அவரோடு காமக் கடலை போடுவதும் தெரியும் அப்படித் தெரிந்து இருந்தும் அவரை மாநில மருத்துவரணிச் செயலாளராக வைத்திருப்பது ஏன்?\nM ரதிமீனா யாத்திரை என்ற பெயரில் வசூல் செய்த 34 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு கணக்கு காட்டத் தயாரா? அதையும் பொது விவாதத்தில் வைத்துப்பேசத் தயாரென்று முன்வர வேண்டும்.\nM கடந்த நோன்புப் பெருநாளில் மக்களிடம் தவ்ஹீத் ஜமாஅத் பெயரைச் சொல்லி வசூல் செய்த 20 லட்சத்திற்கும் அதிகமான பித்ரா தொகையை என்ன செய்தீர்கள் என்பதையும் பொதுமக்கள் மன்றத்தில் வைத்து கணக்குக் காட்ட மாமா புரோக்கர் கூட்டம் தயாரா?\nM வேலூரில் கபருஸ்தான் மீட்புக் குழு என்ற பெயரில் இல்லாதை ஒன்றை உருவாக்கி மக்களிடம் லட்சக்கணக்கில் சுருட்டி அது நம் பொய்யன்டிஜே நிருபர் குழுவிற்குத் தெரியவந்ததும் அதை நாம் இன்று வரை ஆதாரத்துடன் கிழி கிழி எனக் கிழித்தும் எவ்வித பதிலும் சொல்லாத இந்த மாமா புரோக்கர் கூட்டம் இன்று வரைக்கும் அந்தக் கள்ள ரசீது அடித்த அயோக்கியர்களை இன்னமும் வேலூர் மாவட்ட நிர்வாகிகளாக வைத்திருக்கிறீர்களா இல்லையா?\nM கள்ளத்தனமாக பதிவு செய்யப்பட்ட உங்களின் மாமா ஜமாத்துக்கு இன்றுவரைக்கும் பைலாவே இல்லையே? அதை எப்ப எழுதுவீங்க?\nPosted in கசமுசா கலிமுல்லா\n0 Response to "கலிமுல்லாவின் விவாத அழைப்பு! ஒப்பந்தம் எப்போது?"\nபதில் சொல்ல மறுக்கும் பத்திர கள்ளன் சைபுல்லாஹ்\nஜாக் மேடையில் பாக்கர் மாமாவை ஏற்றாதது ஏன்?\nஉளறுவது உணர்வா? உணர்வு கெட்டவர்களா?\nபொய்யன்களுக்கு செருப்படி தரும் சகோ.கீழக்கரை நசுருத...\nதிண்டுக்கல்பண்ணையார் திருந்த வாய்ப்பில்லை!\nகலிமுல்லாவின் ராயப்பேட்டை கசமுசா\nகலிமுல்லாவின் ஒப்புதல் வாக்குமூலம்\nகலிமுல்லா காக்கா! எப்ப வச்சிக்கலாம்! எங்க வச்சிக்க...\nபத்திரக்கள்ளன் சைபுல்லா – பாகம் 1\nபண்ணையாரையும், கலிமுல்லாவையும் ஒரே மேடையில் பேசத் ...
சனி கிரகத்தில் ஒரு நாள் எவ்வளவு நேரம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nHome அறிவியல் சனி கிரகத்தில் ஒரு நாள் எவ்வளவு நேரம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசனி கிரகத்தில் ஒரு நாள் எவ்வளவு நேரம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nநமது பூமியை பொறுத்தவரை ஒரு நாள் என்பது 23 மணி, 56 நிமிடம், 4.0196 நிமிடங்கள் ஆகும். அதாவது பூமி அதன் அச்சில் தன்னைத் தானே சுற்ற ஆகும் கால அளவு. இதே போல் சனி கிரகத்தில் ஒரு நாள் என்பது எவ்வளவு நேரம் என்பது குறித்து நிலவி வந்த குழப்பம் தற்போது நீங்கியுள்ளது. சனி கிரகத்தை ஆராய நாசா அனுப்பிய கேசினி விண்கலம் அனுப்பியிருந்த தகவல்களை கொண்டு செய்யப்பட்ட ஆராய்ச்சி முடிவுளின்படி அந்த கோளில் ஒரு நாள் என்பது 10 மணி 33 நிமிடங்கள் மற்றும் 38 நொடிகள் (10:33:38) என விஞ்ஞானிகள் தற்போது கணக்கிட்டுள்ளனர். இந்த தரவுகள் கேசினி விண்கலம் 2017 ஆண்டு கட்டுப்பாட்டை இழப்பதற்கு முன்பு அனுப்பிய தகவல்கள்.\nஒரு கோளின் ஒரு நாள் எவ்வளவு நேரம் என்று கண்டுபிடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபம் கிடையாது. சனி கிரகம் அதன் அச்சில் முழு சுழற்சியை முடிக்க ஆகும் நேரத்தைக் கண்டறிய விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தனர். ஆனாலும் துல்லியமாக கூற முடியவில்லை. ஏனெனில் சனி கிரகம் ஒரு வாயுக் கோள். இதில் திட மேற்பரப்பு இல்லாததால் விஞ்ஞானிகளால் அதன் மேகங்களுக்கு இடையே ஒரு நிலையான அடையாளத்தை கண்டறிந்து அதன் சுழற்சியை ஆராய முடியவில்லை.\nசனி கிரகத்தில் ஒரு நாள் என்பது 10 மணி 33 நிமிடங்கள் மற்றும் 38 நொடிகள்\nபொதுவாக ஒரு கோளின் சுழற்சி விகிதங்களை அறிய அந்த கோளின் காந்த அச்சை ஆய்வு செய்வார்கள். பூமி மற்றும் ஜூபிடர் கிரகங்களின் காந்த அச்சு, அதன் சுழற்சி அச்சுக்கேற்ப சீராக இருப்பதில்லை. இதனால் கோள்கள் சுழலும் போது காந்த அச்சின் சுழற்சியின் மூலம் ரேடியோ அலைகளை அளவிட்டு அந்த கோளின் சுழற்சி விகிதங்களை கணக்கிடுவார்கள். விஞ்ஞானிகள் சனி கிரகத்தின் காந்த புல சாய்வை வைத்து ஒரு நாளின் நேரத்தை கணக்கிட முயற்சித்தனர். ஆனால் சனி கிரகம் வித்தியாசமானது. அதன் காந்த ஆச்சு அதன் சுழற்சி அச்சோடு சரியாக பொருந்தி இருக்கும். இதனால் ஒரு நாளின் நேரம் 10 மணி 36 நிமிடம் முதல் 10 மணி 48 என தோராயமாக கணக்கிடப்பட்டது. ஆனால் இந்த குழப்பத்தை தீர்க்க, சனி கிரகம் தகவல்களை தராத போதும், அதன் வளையங்கள் தருகின்றன என்பதே உண்மை.\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கிறிஸ்டோபர் மன்கோவிச் (Christopher Mankovich) என்ற மாணவர் சனி கோளின் வளையங்களில் இருந்த அலை வடிவங்களை ஆராய்ச்சி செய்தார். சனி கோளின் உள்ளே ஏற்படும் அதிர்வுகளுக்கு வளையங்கள் ரெஸ்பாண்ட் செய்வது தெரிய வந்தது. நிலநடுக்கத்தினால் ஏற்படும் அதிர்விற்கு ஏற்ப நிலநடுக்கமானி (seismometer)செயல்படுவதைப் போலவே வளையங்களும் செயல்படுகின்றன. சனி கிரகத்தின் உள் பகுதி அதிர்ந்து நிலநடுக்கம் ஏற்படும் போது அது அந்த கோளின் ஈர்ப்பு புலத்தில் வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதன் வளையத்தில் பனித்துகள், தூசி, கற்கள் போன்ற பொருட்கள் உள்ளன. இந்த எல்லா துகள்களும் உதவுவதில்லை. ஆனால் அதிர்வு ஏற்படும் போது ஈர்ப்பு புலத்தில் ஏற்படும் அலைவுகள் வளையங்களுக்கும் பரப்படுவதால் அதிர்வுகளை இவற்றால் உணர முடியும்.\nசனி கோளில் ஒரு வருடம் (சூரியனை சுற்ற ஆகும் காலம்) என்பது 29 புவி ஆண்டுகள்\nஇந்த வளையங்களில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஈர்ப்பு புலத்தின் அலைவுகள் வளையத்தில் உள்ள துகள்களுக்கு பரவும். இதன் மூலம் படிப்படியாக உருவாகும் ஆற்றல் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் இதன் மூலம் சனியின் உள் புற இயக்கத்தையும் அதனால் ஏற்படும் சுழற்சியையும் நம்மால் கண்காணிக்க முடியும். வளையங்களில் ஏற்படும் அலைவுகள் தான் சனியின் ஒரு நாளின் நேரத்தை கணக்கிட பெரும் உதவி புரிகின்றன. உண்மையில் இதுவும் மிக துல்லிய கணக்கீடு இல்லை. ஆனால் நேர அளவு என்பது ஒரு நிமிடம் 52 நொடிகள் அதிகம், ஒரு நிமிடம் 19 நொடிகள் குறைவு என்பதற்கு இடையில் தான் இருக்கும். இது முன்பு இருந்த 12 நிமிட சந்தேகத்தை விட குறைவு என்பதே சிறந்த விஷயம்.\nமுந்தய கணக்கீடுகளை தற்போதய ஒரு நாளின் நேரம் குறைவு. 10:39:22 என்ற கணக்கீடு 1981 ஆம் ஆண்டு வொயாஜெர் விண்கலம் மூலம் பெறப்பட்ட காந்த புல தரவுகள் மூலம் கணக்கிடப்பட்டது. தற்போது சனி கோளை மட்டும் அல்லாமல் அதன் வளையங்களிலும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர். இந்த யோசனை 1982 ஆம் ஆண்டே சொல்லப்பட்டிருந்தாலும் அதற்கான தரவுகள் அப்போது கிடைக்கவில்லை.\nஒரு நாள் என்பது பூமியின் நாளில் பாதி நேரம் தான் என்றாலும் இதே முறையில் சனி கோளில் ஒரு வருடம் (சூரியனை சுற்ற ஆகும் காலம்) என்பது 29 புவி ஆண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nPrevious article21 வயதில் Ph.D பட்டம் பெற்ற இயற்பியல் விஞ்ஞானி – கூகுள் டூடுல் வெளியீடு\nNext articleமுதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை அதிகரிப்பு\nஇந்த கோவிலுக்குச் சென்றால் காதல் திருமணம் நிச்சயம்!!\nஒட்டுமொத்த பசிபிக் கடலையும் நடுநடுங்க வைக்கும் சவப்பெட்டி\nஇந்த வார ஆளுமை – ஜஸ்டின் ட்ருடோ – கனடா பிரதமர் – மார்ச்-04,...\nகிருமிநாசினிகள் ஏன் 100% கிருமிகளை அழிப்பதில்லை?\nநிலவில் தனி ஆராய்ச்சி மையம் – சீனா அதிரடி!!
த்ரெட்டிங் செய்த பின் கவனிக்க வேண்டியவை | www.VijayTamil.Net\nத்ரெட்டிங் செய்த பின் கவனிக்க வேண்டியவை\nமுகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு பெண்கள் த்ரெட்டிங் செய்வார்கள். சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க வேக்சிங் இருந்தாலும், பெரும்பாலான பெண்கள் த்ரெட்டிங்கை தான் மேற்கொள்கிறார்கள்.\nஇதற்கு காரணம் வேக்சிங்கை விட த்ரெட்டிங் செய்வதால் வலி சற்று குறைவாக இருப்பது தான். த்ரெட்டிங் புருவங்களில் மட்டுமின்றி, உதட்டிற்கு மேல் மற்றும் நெற்றியிலும் சிலர் செய்வார்கள். சிலருக்கு த்ரெட்டிங் செய்த பின் அவ்விடத்தில் பிம்பிள் வரும். அப்படி பிம்பிள் வருவதற்கு முக்கிய காரணம், சுத்தமில்லாமை மற்றும் முகத்தில் அளவுக்கு அதிகமாக எண்ணெய் இருப்பது தான்.\nத்ரெட்டிங் செய்த பின் பிம்பிள் வருவதை ஒருசில வழிகளின் மூலம் தடுக்கலாம். ரெட்டிங் செய்யும் முன், முகத்தை நீரினால் சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். குறிப்பாக சுடுநீரைப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் சுடுநீர் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கிவிடும். முகத்தை நீரில் கழுவியப் பின், சுத்தமான காட்டன் துணியால் முகத்தைத் துடைக்காமல், ஒற்றி எடுக்க வேண்டும். ஏனெனில் துடைத்தால், சருமம் பாதிக்கப்படக்கூடும் பின் இயற்கையான டோனரைக் கொண்டு முகத்தைத் துடைக்க வேண்டும்.\nஅதிலும் கற்றாழை ஜெல் கொண்டு துடைத்து, உலர விடுங்கள். அதன் பின் பியூட்டிசியனை த்ரெட்டிங் செய்ய அனுமதியுங்கள். த்ரெட்டிங் செய்து முடித்த பின், மீண்டும் டோனரை தடவி, ஒரு ஐஸ் கட்டியால் அவ்விடத்தை ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் சருமத்துளைகள் அமையாகி, பிம்பிள் வருவது தடுக்கப்படும்.\nஒருவேளை உங்களுக்கு முகம் கழுவ வேண்டுமென்பது போல் தோன்றினால், ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துங்கள். இதனால் த்ரெட்டிங் மூலம் ஏற்பட்ட காயங்கள் மற்றும் பிம்பிள் வருவது தடுக்கப்படும். குறிப்பு த்ரெட்டிங் செய்து முடித்த பின்6மணிநேரத்திற்கு அவ்விடத்தைத் தொடக்கூடாது. அதேப்போல் கண்ட க்ரீம்களையும் பயன்படுத்தக்கூடாது. அதுமட்டுமின்றி, குறைந்தது 12 மணிநேரத்திற்கு ஸ்கரப் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.\n1019 - Rates : 0\nஅழகுக் குறிப்புகள் Kalyana Parisu 22-07-2017 – Sun TV Serial Watch Online 121514 - Valli 22-07-2017 – Sun TV Serial Watch Online 184268 - 0%\nChandralekha 22-07-2017 – Sun TV Serial Watch Online 164968 - எங்க அறை பாப்போம்? மல்லுக்கு நின்ற ஓவியா!5- நன்றி கெட்ட ஜூலி! ஓவியாவுக்கு ஆதரவாக பேசிய ஒரே ஒருவர்6- BIGG BOSS 22-07-2017 Vijay tv Show Promo 29 - Thamarai 22-07-2017 – Sun TV Serial Watch Online 130898 - Samayal Samayal with Venkatesh Bhat 22-07-2017 Vijay Tv Show Online 12322 - See all\nகாகத்திற்கு சோறு வைப்பதன் ரகசியம் 366 - பூஜை அறையை மூடும் பொழுது இதை செய்ய மறந்து விடாதீர்கள்.. 83 - எந்த ராசிக்காரர்களுக்கு இல்லற வாழ்க்கையில் யோகம் இருக்கும் 342 - உங்க பெயர் இந்த எழுத்தில் துவங்குகிறதா?? அப்போ நீங்க ரொம்ப ஸ்பெஷல் தான்! 219 - See all\nRaja Rani This Week Promo 24-07-2017 to 28-07-2017 Vijay tv serial Promo 175 - Saravanan Meenakshi 21-07-2017- Vijaytv Serial|Saravanan Meenatchi’ (Meenakshi) season3613883 - Maapillai vijay tv serial 21-07-2017 watch online 331355 - Mouna Raagam 21-07-2017 Vijay tv Serial 13026 - See all
உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக் காலம் நீட்டிப்பு... மசோதா நிறைவேற்றம்! | Local authorities post duration extended for6months\nவெளியிடப்பட்ட நேரம்: 15:34 (24/06/2017)\nகடைசி தொடர்பு:15:34 (24/06/2017)\nஉள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக் காலம் நீட்டிப்பு... மசோதா நிறைவேற்றம்!\nஉள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதனால், அந்தப் பதவிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கான பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்தது. இதையடுத்து, அவர்களின் பதவிக் காலம் மேலும், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.\nஇதனிடையே, அந்த ஆறு மாதக் காலகட்டம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் பதவி காலத்தை நீட்டிக்கும் மசோதாவை அமைச்சர் எஸ்.பி வேலுமணி சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். இதையடுத்து, அந்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதா மூலம், உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகள் பதவிக்காலம், மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும். இதனால், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மேலும் சில மாதங்களுக்கு தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nLocal authorities post extended உள்ளாட்சி அமைப்புகள் தனி அதிகாரிகள் பதவிக் காலம் நீட்டிப்பு மசோதா நிறைவேற்றம்
சென்று வாருங்கள்! - கவிதைப் பூங்காடு - கருத்துக்களம்\nBy வர்ணன், August 8, 2006 in கவிதைப் பூங்காடு\nஉமக்காய் எம்மிடம் எதுவும் இரந்ததில்லை........\nவாசல் வந்து ஒளிதர..........\nவைகறை கலைக்கும் சூரியன் ........\nவரி கேட்குமா என்ன?\nகாலம் ஒன்று எமக்காய் விழி திறக்க...........\nகந்தக அதிர்வில் ..........\nஊரினைதான் பிரிந்து வந்தோம்...\nஉணர்வினை தொலைத்து அல்ல..........\nஅலை ஓய்ந்ததென்று கனவாம் பலருக்கு.......\nகடல் இருக்கும்வரை அலை காணாமல் போகுமா?\nகரிகாலன் படை - இருக்கும்வரை..\nகூலிகள் கருத்து தமிழனை ஆளுமா?\nஉம் வேர்களை சுமந்தவர் வாழ .\nஎன்றுமே நீர் தருவோம்.\nநிம்மதியாய் - உறங்கும்!!\n(மூதூரில் - எமக்காய் கனவுகாண- விழிமூடியவர்களிற்கு)\nஎமக்காக உயிர்தந்த உறவுகளுக்காய் எழுதிய கவிதை நன்று.\nஎமக்காக உயிர் துறந்தவர்களுக்காக மலர்ந்த கவிதை அருமை வர்ணன்.\nகவிதை நல்லா இருக்கு வர்ணன்....\nகவிதை நன்று. வாழ்த்துக்கள் வர்ணன். :wink:\nகவிதை மிகவும் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் வர்ணன்.\nஅருமையான கவிதை வரிகள் பாராட்டுகள்...\nInterests:பிறந்தநாள் கொண்டாட்டம்,மணிஅடித்தல்,உண்டியல் குலுக்கல்,பொதுசேவை\nகவிதை நன்றாக உள்ளது வர்ணன் அண்ண...\nஎமை காக்க உயிரை மதிக்காமல் பொராடி மாவீரர்களாகிய எம் இரத்தங்களுக்கு வீரவணக்கங்கள்...\nதமக்கு என வாழது தமிழரின் உரிமைக்கு உரமாகிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nஎமக்காக உயிர் நீத்த மாவீரார்களுக்காக எழுதிய கவிதை அருமை. பாராட்டுக்கள்.\nநல்ல வரிகள் வர்ணன். பாராட்டுக்கள்.\nமுதலைக்கு இரையாகிய இளைஞன் : உணவு தேடி அலைந்தபோது இடம்பெற்ற சோகம்\nஇலங்கைக்கு உலக வங்கி 128 மில்லியன் டொலர் நிதியுதவி\nமுதலை கூட.... நொந்து போயுள்ள, தமிழனைப் பார்த்துத்தான்.. கடித்து தின்னுது. ஹ்ம்ம்... 😢\nஅவர்களும்..... ட்ரம்மிடம், அடி வாங்கி... நடித்ததற்காக, வேறு இடங்களில்.... நல்ல பணக்கார தொழில் அதிபர்களாக இருப்பார்கள். ட்ரம்பு... நடத்திய நாடகத்தில், அவர்கள் தானே... முக்கிய பாத்திரங்கள். அதனைப் பார்த்த..... அமெரிக்க மக்கள், ஏமாந்து... இவரை, ஜனாதிபதி ஆக்கி விட்டார்கள். 😎 இப்பவும்... அமெரிக்க மக்களிடம், ட்ரம்ப் நல்லவரா? கெட் டவரா? என்று கேட்டால்.... "யெஸ்... ஹீ இஸ், வெறி குட் மான்" என்று தான் சொல்வார்கள். 🤣 ஈழப்பிரியன் நுணாவிலான், மருதங்கேணி, நில்மினி, ஜஸ்ரின் போன்ற... யாழ். களத்து உறவுகள்... என்ன சொல்கிறார்கள் என்று, தெரியவில்லை அண்ணே......\nஆகா சங்கரா??? உந்த விளையாட்டு பிள்ளைகளுடன் முன்பு விளையாடி விளையாடி வெறுத்தே விட்டது. 😃\nஏற்கனவே வெளிநாட்டு நிதிகளில் வாழும் நாடு. அதில் சுனாமி மூலம் பெரும் வருவாயை பெற்றது. அதற்கு பின் 2009 இன அழிப்பின் உலக நாடுகள் கொடுத்த வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு கொடுத்த வருவாய் எண்ணிலடங்காது. இப்போது கொரோனா நிதியுதவி மற்றும் கடன் தள்ளுபடிகள். அழிவுகள் மூலம் வரும் நிதிகளை வைத்து வயிறு வளர்க்கும் நாடு சிறிலங்கா.\nBy மெசொபொத்தேமியா சுமேரியர் · Posted 46 minutes ago\nஇரண்டும் தான். ஆனாலும் ஆண்களின் வாய்கள் அவலாய் என்னை உரலிலிட்டு இடிக்கக் காத்திருக்கின்றன. 😀 அத்தாரை நான் சொன்னேன் என்று சொன்னேனா ????😂 பொட்டுக்குள்ளால முகநூலையும் பாக்கிறியள் போல 🤔😀 சும்மா இருந்தால் ஞானோதயம் வரும் தானே அண்ணா 🤓
ADIRAI NEWS: அரசுப் பள்ளியைத் தத்தெடுத்த முன்னாள் மாணவர்!\nதஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே முன்னாள் மாணவரான டாக்டர் ஒருவர் தான் படித்த அரசுப் பள்ளியைத் தத்தெடுத்துள்ளார்.\nபேராவூரணி அருகே உள்ளது, பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் தன் தொடக்கக் கல்வியை பயின்றவர் டாக்டர் து.நீலகண்டன். பிரபல எலும்பு முறிவு மருத்துவரான இவர் தான் படித்த ஆரம்பப்பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ முடிவு செய்தார். இவரது மனைவி புவனேஸ்வரி கணவரின் கனவை நனவாக்க ஒத்துழைப்பு தந்தார். இவரது மேற்பார்வையில் முதல் கட்டமாக ரூ2இலட்சத்தில் பள்ளி வகுப்பறை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் பணிகள் முடிவடைந்து சீரமைக்கப்பட்ட வகுப்பறை திறப்பு விழா நடைபெற்றது. பள்ளியைத் தத்தெடுத்து ரூ.2 லட்சம் செலவில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை, மேசை, நாற்காலி, வகுப்பறைக்கு டைல்ஸ், நூலக புத்தகங்களை வைக்க அலமாரி, கணினி ஆகியவற்றை டாக்டர் து.நீலகண்டன் வழங்கினார். வரும் ஆண்டுகளில் தொடர்ந்து வகுப்பறைகளை சீரமைத்து தருவதாக தெரிவித்தார்.\nநிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் கோ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரெ.பரமசிவம் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் வீரம்மாள் வரவேற்றார். டாக்டர் து.நீீலகண்டன் சீரமைக்கப்பட்ட பள்ளி வகுப்பறையைத் திறந்து வைத்தார்.\nநிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முருகேசன், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் சிவலிங்கம், நாடிமுத்து, அம்பிகாவதி, வீரையன், ஜெயா, செல்வராணி, ரமேஷ், பள்ளி ஆசிரியைகள் காந்திமதி, ஜெயந்தி, குளோரி, துர்காதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் செ.ராமநாதன் நன்றி கூறினார்.
மரணத்துக்குப் பின் என்ன? : கருட புராணம்\nஅதன் பின் இரண்டாவது மாசிகப் பிண்டத்தை உண்டு, காட்டின் வழியே செல்லும். அப்போது எமதூதர்கள் செய்யும் கொடுமைகளினால் ஜீவன் ஓலமிட்டுக் கொண்டே செல்லும். அதன் பின் மூன்றாம் மாசிகப் பிண்டத்தை உண்டு ‘சௌரி’ எனும் நரகத்தை அடையும். அங்கிருந்து செல்லும் போது கடுமையான குளிரால் ஜீவன் வருந்தும். அதன் பின் நான்காம் மாசிகப் பிண்டத்தை புசித்துவிட்டு ‘குரூரபுரம்’ என்ற பட்டணத்தை அடையும். அங்கு ஐந்தாம் மாசிகப் பிண்டத்தை உண்டு, அங்கிருந்து ‘கிரெஞ்சன்’ என்ற நகரை அடையும். அங்கு ஆறாம் மாசிகப் பிண்டத்தை உண்பான். அங்கு சிறிது ஓய்வெடுத்துப் பின் ஒரு பயங்கரமான பாதையில் செல்ல வேண்டும். அப்போது ஜீவன் தனது பூலோக வாழ்வை எண்ணி வருந்தும். எமதூதர்கள் மீண்டும் ஜீவனை நையப்புடைப்பார்கள். இதன் பிறகு ஜீவன், “வைதரணி” எனும் நதிக் கரையை அடையும். இந்நதி நூறு யோசனை நீளமுள்ளது. இது நீருள்ள நதியல்ல. இரத்தத்தாலும் சீழாலும் ஆன நதி. துர்நாற்றம் வீசும். அதில் பொடிய பிராணிகள் காணப்படும். இங்கு அஞ்சத்தக்க பயங்கர உருவம் கொண்ட பத்தாயிரம் படகோட்டிகள் ஜீவன் முன்பு தோன்றி, “ஜீவனே! நீ கோ தானம் பண்ணி இருக்கிறாயா?” எனக் கேட்டு, அவ்வாறு செய்திருப்பின் வைதரணி நதியைக் கடக்க நாங்கள் உதவுகின்றோம் எனக் கூறும். பசு தானம் செய்யாவிட்டால் ஜீவனை அந்த நதியில் தள்ளி துன்புறுத்துவார்கள். பசு தானம் செய்யாத ஜீவன் இந்நதிக் கரையில் நீண்ட காலம் தவிக்க வேண்டும். வைதரணி நதியைக் கடந்த பின், ஜீவன் விசித்திரன் என்பவனது நகரை அடையும்.\nஏழாம் மாசிகப் பிண்டத்தை உண்ணும் போது பிசாசுகள் தொல்லை ஏற்படும். நாம் பூமியில் வாழ்ந்த காலத்தில் பசி என்று வந்தவர்களுக்கு சோறு அளிக்காவிடின். ஏழாம் நாள் பிண்டத்தை பிசாசுகள் பறித்துண்ணும். இந்நிலையில் பிசாசுகள் பிடுங்கிச் சென்றது போக சிதறிக் கிடப்பவற்றை ஜீவன் உண்ணும். அதன் பின் ஜீவன், ‘பக்குவப் பதம்’ என்ற பட்டினத்தை அடையும். அங்கு எட்டாம் மாசிகப் பிண்டத்தை உண்ணும். பின்னர் ‘துக்கதம்’ என்ற ஊரை அடையும். அங்கு ஒன்பதாம் மாசிகப் பிண்டத்தை உண்ணும். அங்கிருந்து நடந்து சென்று ‘நாதக்கிராந்தம்’ என்ற நகரை அடையும். அங்கு பத்தாம் மாசிகப் பிண்டத்தை உண்ணும். பின்னர் ‘அதப்தம்’ எனும் ஊரை அடையும். அங்கு பதினொராம் மாசிகப் பிண்டத்தை உண்ணும். பின் ‘சீதாப்ரம்’ என்ற நகரை அடைய வேண்டும். பின்னர், பனிரண்டாம் மாத வருஷாப்திப் பிண்டத்தை உண்டு, ‘வைவஸ்தப் பட்டினம்’ என்ற நகரை அடையும். இதுவே யமபுரி. இது நூற்று நாற்பத்து நான்கு காத வழி அகலமுள்ளதாக இருக்கும். இங்கு கந்தர்வர்கள், அப்சரஸ்கள் இருப்பார்கள். இங்கு மேலும் பல்லாயிரக் கணக்கான பிராணிகளும் காணப்படும். ஜீவனின் பாவ புண்ணியங்களை அறிந்து எமதர்மனுக்குக் கூற பன்னிரு சிரவணர் இருப்பர். சித்திரகுப்தன் எமனிடம் ஜீவனின் விவரங்களை கூறுவான். எமன் அதைக் கேட்டு, அதற்கு ஏற்ப தமது கிங்கர்கள் மூலம் தண்டனை நிறைவேற்றுவான்.
மாயத்தூண்டில் | சிறுகதைகள் (Short Stories in Tamil)\nஇரண்டு விடயங்கள்தான் இப்போது என்னைக் கடைந்துகொண்டிருக்கின்றன. ஆறுமாதமாக பணியில்லை. வேலையில் இல்லை என்பதை நான் சமாளித்தாலும் வெளியில் என்னைக் காண்பவர்களுக்கும் போனில் குடையும் மற்றவர்களுக்கும் இதுவே முதன்மையான பேசுபொருளாகவும் பிரச்சனையாகவும் இருக்கிறது.\nஇப்போதான் ஆடத்தொடங்கியிருக்கும் முதற்பல்லை நாக்கால் நிமிண்டிக்கொண்டிருந்ததை நிறுத்திவிட்டு “ உங்களுக்கு ஏம்பா வேலை ” என்றான் கடைக்குட்டி கந்தன்.\n“ வேலைக்குப்போனாத்தானே மகன் காசுகிடைக்கும் ”\n“ அய்யோ அய்யோ, எதுக்கப்பா சும்மா மெனெக்கெட்டு வேலைக்கெல்லாம்போய்………. நேராய் பாங்குக்குப்போய் பேப்பரில கீறிட்டுக்குடுங்கோ………… காசுதருவாங்கள் ”\nஐந்தாவது படிக்கும் அருவியோ மடிக்கணினியை எடுத்துவைத்துகொண்டு “ உங்களுக்கு இன்னா ஜொப் வேணும் சொல்லுங்கோ……………நான் பிடிச்சுத்தாரேன்பா” என்கிறாள்.\nஏதாவது செய்துதான் ஆகணும். எனக்கான வேலையை பத்திரிகைகளிலும், இணையங்களிலும் கடுகித் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்காவிட்டால் ஏதாவது சுயதொழிலாவது இறங்கவேண்டும். சுயதொழில், வியாபாரம்போன்ற சதுரங்கங்களில் இணைவி சாதனாவுக்கு அத்தனை இஷ்டமில்லை.\nஊரிலிருக்கும் என் ஒன்றிவிட்ட சகோதரி தமயந்திக்கு2ஆண்களும்,3பெண்களுமாக ஐந்து பிள்ளைகள். ‘அவர்களுள் ஒருத்தியையாவது கரைசேர்த்துவிடு அண்ணா’ என்று சொல்லி அவளும் பிலாக்கணம் வைத்துக்கொண்டிருக்கிறாள். அவள் பெண்களுள் பெரியவள் ஜெயதாகினியை இப்போ ஆறுமாதத்துக்கு முன்பதாகத்தான் இங்கே இறக்குமதி செய்து வைத்திருக்கிறேன். நல்ல சூட்டிகையான பெண். யாழ் பல்கலையில் பொருளாதாரம் இளநிலை முடித்திருக்கிறாள், கணனி தெரியும். இப்போ ஜெர்மன் தீவிரக்கற்கைநெறியில் சேர்த்துவிட்டிருக்கிறேன். விரைவில் எதையும் பிடித்துக்கொண்டுவிடுவாள். என்னிடமும் சாதனாவிடமும் பிள்ளைகளிடமும் அப்படியொரு ஒட்டுதலும் பாசமும்.\nநானாகவும் தெரிந்தவர்களிடம் சொல்லிவைத்தும் அவளுக்குப் பொருத்தமான ஒரு பையனையும் அதே கதியில் தேடிக்கொண்டிருக்கிறேன். முதலில் எது கிடைத்தாலும் சந்தோஷந்தான்.\nபத்திரிகைகளிலும், இணையங்களிலும் தொடர்ந்த என் தேடலில் அந்த விளம்பரம் கண்ணில் பட்டது PFAFF COMPANY ஒன்று விற்பனைக்கு. குறிப்பிட்ட அவ்விற்பனை நிலையத்தின் முகவரி எங்கள் வீட்டிலிருந்து ஒரே சுரங்கத்தொடருந்தில் அடையக்கூடிய இடமாக இருந்ததால் ஆர்வம் அதிகமாகி அவ்விளம்பரத்தை திரும்பவும் முழுவதுமாகப்படித்தேன். மெல்லமெல்ல உள் மண்டையுள் குறுகுறுப்பு ஏற்படத்தொடங்கிற்று. சாதனாவிடமும் விஷயத்தைப் பகிரலாமெனத்தான் எண்ணினேன். என்ன முதலில் வேண்டாமென்று முன்மறிப்பாள். எனது இத்தகு பரிசோதனை முயற்சிகளை அவள் மறுப்பதற்கான நியாயமும் இல்லாமல் இல்லை. ஒரு ரொட்டியைக்கூட கருகாமல் பதமாகச்சுட்டு எடுக்கத்தெரியாத நான் உணவகம்சார்ந்த வியாபாரத்தில் இறங்கலாமா? Gastronomy யின் அரிச்சுவடியோ, சூட்சுமங்களோ புரியாமல் உணவகம் ஒன்றுக்குள் நீளமாகக்காலைவிட்ட என் முதல் அனுபவம், என்னை எழுந்திருக்க முடியாதவகையில் ஆழஅமிழ்த்தியது. வியாபாரத்தில் தொடர்நஷ்டம், ஒரு பக்கம் அதைமீள விற்கமுடியாத அவஸ்தை, மறுபக்கங்களில் வங்கியும் வட்டியும், காப்பீட்டுக்குழுமமும், ஆதனமுகவரும் (Real Estate) சங்கிலேறி நசுக்க வாஷ்மெஷினுள் தானாய் நுழைந்து மாட்டிக்கொண்ட பூனையாய்த் திணறினேன். அவ் அனுபவம்கூடவே அச்சகடயோக ஓரையில் மாமனிதர்கள் பலரின் சொரூபங்களைத் தரிசிக்க வைக்கவும், வேண்டாமடா சாமியோ வியாபாரம் என்றானது.\nமுதலில் போய் இந்நிலையத்தைப்பார்ப்பது, எமது கணிப்பீட்டுக்குள். அமைந்து வரக்கூடியதாயின் சாதனாவுடன் கலந்து அவளைச் சமாதானப்படுத்தி ஒரு முடிவுக்கு வரலாம் என்கிற எண்ணத்துடன் அடுத்தநாள் நேரில்போய் அவர்களைப் பார்த்துப் பேசினேன்.\nஆகப்பெரிய நிலையம் என்று சொல்லமுடியாது, நீளப்பாங்கான கட்டமைப்பில் அமைந்த வியாபாரஸ்தலம். பின்பக்கமாக அலுவலகமும் கழிப்பறை, காப்பி-மளிகறை (Pantry) என்பன இருந்தன. வீதிப்பக்கமுள்ள சுவர் முழுவதும் ஒரு ஷோறூமுக்குகந்த வகையில் கண்ணாடியால் அமைக்கப்பட்டிருந்தது. PFAFF ஐவிடவும், இதர ஜாதிகளைச்சேர்ந்த தையல் இயந்திரங்களுமாக மொத்தமும் 50 இயந்திரங்கள் வரையில் அங்கிருந்தன. காலனித்துவ நாட்டினரான நமக்கு காரென்றால் AUSTIN, பேனாவென்றால் PARKER, மிதியுந்தென்றால் RALEIGH, கைக்கடிகாரமென்றால் ROMER, என்பதைப்போல் தையல்மிஷினென்றால் SINGER தான் முதலில் எமக்குத் தெரிய வந்ததும் உசத்தியானதுமான இனம்.\nஎன் சின்னவயதில் சாவகச்சேரி- சுன்னாகம் வீதியில் எமது வீட்டைக்கடந்து SINGER குழுமத்தின் பேருந்துகள் எப்போதாவது செல்லும். சில விளம்பரவாசகங்கள் கவிதையின் தரத்தில் இரசிக்கும்படியாக இருக்கும். அப்பேருந்துகளின் பின் பக்கத்தில் எழுதப்பட்டிருக்கும் விளம்பரவாசகம் ஒன்று நிஜமானதாகவும் எனக்குப் பிடித்ததாகவும் இருந்தது.\n‘WE TAUGHT THE WORLD TO SEW’ என்பதே அது.\nஎங்கள் அம்மாவிடமும் காலால் இயக்கும் வகையிலான SINGER மிஷின் ஒன்று இருந்தது, அது தாத்தா அவருக்கு சீதனமாகத் தந்தது என்பதில் அம்மாவுக்கு ஏகப்பட்ட பெருமை. அந்த மிஷினுக்கேயுரியதும் அதுக்கான மெல்லிய மசகெண்ணை வாசமும் நெடுங்காலமாக அது கிடந்த அறையில் இருந்தன. அம்மா பெண்களுக்கான சட்டைகள், பூவேலைப்பாட்டுடனான குழந்தைகளுக்கான ஆடைகளை அழகாகத் தைப்பதில் சுற்றுவட்டத்தில் பெயரெடுத்திருந்தார். ஆறு ஏழுவயதுவரையிலும் அம்மா தைத்துத்தந்த முதுகில் வார்வைத்த தோரணச்சட்டையைத்தான் [Sunsuit] மேலே பெனியனோ, டீ-ஷேர்ட்டோ இல்லாமல் போட்டுக்கொண்டு பள்ளிக்கூடம் போனேன். அம்மா தைப்பது பாட்டிக்கு மட்டும் பிடிக்காது. பெண்கள் சதா தைத்துக்கொண்டிருந்தால் அது வாழ்மனையின் ஐஸ்வர்யத்தை ஊதிவிட்டுவிடுமாம். இதைப்போல் தொன்மங்கள் பலவற்றிலும் பல நுண்ஆய்வுகள்செய்து வாழ்மனைக்கு ஆகாதபல சாங்கியங்களைக் கண்டுபிடித்து யாரும் எதிர்க்கேள்விபோடாதபடிக்கு அவரது பரிபாலனத்தில் அமுல்படுத்திருந்தார், அவ்விதிகளின்படிக்கு இன்னும் எவரும் சதா நாவல்கள் படித்துக்கொண்டிருப்பது, சீட்டாடுவது, கொக்கான் வெட்டுவது, ஒற்றைக்காலில் நிற்பது, முட்டிபோட்டிருப்பது, தலையில் கைவைப்பது, சத்தமாக கொட்டாவிவிடுவது, விரல்சொடக்குப் போடுவது, நெட்டிமுறிப்பது, நெல்லைப்பொரிப்பது, பாற்கஞ்சி காய்ச்சுவது, அந்திக்கருக்கலில் சாப்பிடுவது, இரவானபின் நகம் வெட்டுவது, காசு முட்டை உப்பு கடன்கொடுப்பது எல்லாம் தடைசெய்யப்பட்டிருந்தன.\nநான் அந்த PFAFF குழுமத்துள் நுழைந்ததுவுடன் எங்கள் வீட்டின் SINGER மிஷினில் இருந்து வரும் சுகமான கந்தம் நாசியைத்தாக்கவும் எனக்கு அம்மாவே ‘மகன் இதுதான் உனக்கான இடம், வாங்கடா இக்கம்பனியை’ என்று ஆசீர்வதிப்பதைப்போல் இருந்தது. நேராகப்போய் அதன் முகவரைப் பார்த்தேன்.\nநடுவயதிலிருந்த அந்த ஜெர்மன்காரர் என் கண்களை நேர்கொண்டு பார்த்துப்பேசியவிதம் பிடித்திருந்தது. அவரிடம் தில்லுமுல்லுகள் இருக்காதெனவும் சொல்லியது. குழுமத்தை விற்கவிரும்புவதன் உண்மையான காரணத்தை அவராகவே சொன்னார்: குடும்பத்தில் மணமுறிவு, மனைவி என்னுடன் இல்லை. அதனால் இந்த உழைப்பும், ஓட்டமும் இனி எனக்கு வேண்டியதில்லை, என் கிராமத்தில்போய் ஓய்வாக வாழவிரும்புகின்றேன்.\nநான் கேட்கத்தயங்கிய அந்த ஆண்டுக்குரிய வியாபார விபரங்கள், விற்பனைக்கமைய வரிசெலுத்தியமைக்கான அத்தாட்சிகள் என்பவற்றைத் தன் கணினியிலிருந்து காட்டினார். “நீங்கள் விரும்பினால் அமய அல்லது நிபந்தனை ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டு எம்முடன் ஒரு மாதம் இருந்து வியாபாரத்தை நேரடியாகக் கண்காணிக்கலாம், ஒன்றும் அவசரமுடிவுகள் எடுக்கவேண்டியதில்லை” என்றார். அந்தப்பேரத்திலும் ஒரு கண்ணியமும் நெகிழ்வுத்தன்மையும் இருந்தன.\nஅது ஒரு வசந்தகாலம். சராசரியாக வாரத்தில்5மெஷின்கள்தான் விற்பனையாகுமென்று அம்முகவர் சொல்லியிருந்தும் அம்முதல் வாரத்தில்6மெஷின்கள் விற்பனையாயின. மெஷின்களின் விற்பனை வருஷத்தின் எல்லாமாதங்களும் ஒரேமாதிரி இருக்காது, மாறுபடும். சிறப்பாக டிசெம்பர் பண்டிகை மாதமாதலால் உழைக்கும் மக்களுக்கு விஷேட விழாக்கால சிறப்புப்படிகள் கிடைக்கும். அநேகமானோர் பழைய பண்டங்களைத்தூக்கிக் கடாசிவிட்டுப் புதியவற்றை நுகர்வுறும் காலமும் அதுதான், ஆதலால் விற்பனையிலும் சற்றுத்துடிப்பு இருக்கும்.\nவசந்தம் முடிந்து கோடை விடுமுறைக்காலம் ஆரம்பித்துவிட்டிருந்தது, அநேகமான பெற்றோர்கள் பிள்ளைகளுடன் வெளிநாடுகளுக்கோ வெளியூருக்கோ சென்றிருப்பர். வியாபாரமும் மிகவும் சோர்வாக இருந்தது. அவ்வாரம்3மெஷின்கள் விற்கமுடிந்தாலே சிலாக்கியம் போலிருந்தது. ஒரு நாள் மதியம் கணினியில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது திடுப்பென ஒரு இளைஞன் நிலையத்துள் நுழைந்து ‘Guten Tag’ என்றான். பார்வையில் தமிழன் என்று தெரிந்தது. இருந்தும் கேட்டுவைத்தேன்.\n“Guten Tag…………. தம்பி தமிழா ”\n“ ஆமாண்ணே ”\n“ மெஷின் ஏதும் பார்க்கிறீங்களா ”\n“ இல்லேண்ணே…………… என்பெயர் மோகனரமணன் பாட்ஸிலர், அதோட தற்சமயம் நான் வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்………… இப்படிப்போய்க்கொண்டிருந்தனா இங்கே ஒரு கருப்புத்தலை தெரிஞ்சுது நுழைஞ்சுட்டேன் ”\n“தம்பி நானும் மூன்று மாசமாய்த்தான் இந்த நிலையத்தை ஒரு நிபந்தனை ஒப்பந்தத்தோட எடுத்துப் பரிசோதனை செய்துகொண்டிருக்கிறேன், முன் அனுபவம் இல்லாமல் முன்னரும் ஒருமுறை Gastromie field இல காலைவிட்டுச் செமையடிபட்டுக்கொண்ட அனுபவமும் இருக்கு.”\n“ எப்பிடிப்போய்க்கொண்டிருக்கு ”\n“ மாஜின்லதான் நிக்குது………… இன்னும் இம்புறூவ் பண்ணவேண்டும், புறோகிறெஸ் இருந்தால்தான் தொடர்ந்து செய்யலாம்”\n“ எல்லாம் வெல்லலாம் அண்ணை, வெல்லுவம் என்று நம்பிக்கை வையுங்கோ”\n“ எதை வைச்சுச்சொல்லுறீர் ”\n“ இங்கே ஹேர் சலூனும் இறைச்சிக்கடையும் வைத்திருக்கிற நம்ம ஆட்கள் எல்லாம் என்ன ஊரில ட்றெயினிங் எடுத்திட்டே வந்தவை…………. ஆரம்பத்தில தட்டுத்தடுமாறி நடந்து பிறகு மெல்ல எழும்பி நிற்கேல்ல. முதல்ல இப்படி ஊ-பாண் வாசலோட பிஸினெஸுக்கான ஸ்பொட்டில ஒரு இடம் கிடைச்சிருக்கிறதே அதிஷ்டம் , ஒருநாளைக்கு கடை எத்தனைபேருடைய கண்ணில படக்கூடிய வாய்ப்பிருக்கு……… எனக்கொரு சான்ஸ் தந்துபாருங்கோ, நிச்சயமாய் மேலே கொண்ணந்து காட்டுறன் ”\nமிகவும் தன்னம்பிக்கையுடன் பேசினான்.\n“ மனத்தில இருக்கிறதை தெளிவாய்ச் சொல்லும் ”\n“ என்னை குறைந்தபட்ஷ சம்பளத்தில உங்கட சேல்ஸ் அசிஸ்டென்டாய் இரண்டொரு மாதம் வைத்திருந்து பாருங்கோ………… ஏதும் என்னால புறோகிறெஸ் வந்திச்சா தொடர்ந்து வைச்சுக்கொள்ளுங்கோ, இல்லேன்னா நானாவே கழன்டிடுவன் ”\n“ இந்தமாதிரியான பிஸினெஸில உமக்கு முன் அனுபவம் ஏதாவது இருக்கா………. குறைந்தது துணியில நேராகத்தைக்கவாவது தெரியுமா ”\n“ என்ன அண்ணே இப்பிடிச்சொல்றியள்…………… வந்தபுதிதில லுண்டாவில (Flohmarkt) வாங்கின Stapler மாதிரியான Hand held Sewing மெஷினால சாரம் தைத்து உடுத்திருக்கிறேன், இந்தமாதிரி மொடேர்ண் எலெக்டிறிக் மெஷின்ஸ் பற்றியெல்லாம் தெரியாது, ஊரில கொஞ்சம் மோட்டோர்பைக் றிப்பேருகள் செய்திருக்கிறன், தவிரக்கொம்பியூட்டரும் கொஞ்சம் வரும் ”\nநிஜமாக ஒரு பெண்விற்பனை உதவியாளர் இருந்தால் வாடிக்கையாளர்களுடன் தொடர்பாட நன்றாயிருக்குமென்று என் மனதிலும் ஒரு எண்ணம் இருந்தது. மீறி வந்த அசட்டுத்துணிச்சலில் அவனைச் சேர்த்துக்கொண்டேன்.\nமுதல் நாள் அங்கே இருந்த மெஷின்கள் அனைத்தினதும் திருத்தக்கையேடுகளையும் புரட்டிப்படித்தான். சில மெஷின்களில் நூலைக்கோர்த்துத் தைத்தும் பார்த்தான். எட்டுப்பத்து நிறத்தில் நூல்களைப்பொருத்தி எம்ப்ராய்டறி வேலைகள் செய்யக்கூடிய மெஷின்களிலும் அவனது ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. புதியனவற்றை அறியவேண்டும் என்கிற வேகமும் தேடலும் அவனது செயற்பாடுகளில் இருந்ததைக்கண்டுகொண்டேன்.\nஅன்று ஒரு நடுத்தரமாது உள்ளே வந்தாள். அவளைக் கவனிக்கச்சொல்லி ஜாடை காட்டினேன். மோகனரமணன் குரலில் எக்ஸ்டிரா இனிமையச் சேர்த்துக்கொண்டு அவளுக்கு ‘Guten Tag’ (வந்தனம்) சொல்லி உள் இழுத்தான்.\n“ அல்ட்றா மொடேர்ண் PFAFF மெஷினுகள் வந்திருக்கு பார்க்கிறீங்களா மெடம் ”\nஅவனை அவள் பின் தொடரவும் ஒவ்வொரு மெஷினையும் காட்டிச்சொல்லலானான்.\nதற்போது சந்தையில் கிடைக்கும் மெஷின்களில் PFAFF தான் அதிசிறந்ததென்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை, அதிலும் பாருங்கோ இந்த ஆண்டில வந்திருக்கிற மொடலுகளில என்ன சேஞ்ஜ் என்றால் அவற்றின் பொடியை அவர்கள் இப்போ பியூட்டர் மெட்டலுக்கு மாற்றியிருக்கிறதால பழைய மொடெல்களைவிடவும் இவற்றின் நிறை 12.5 வீதம் குறைக்கப்பட்டிருக்கு, தூக்கிறதோ அல்லது இடம்மாற்றி வைக்கிறது சும்மா குஷன் தலையணைகளைத் தூக்கிறமாதிரி அத்தனை லேசாக இருக்கும் மெடம்.\n“ ஓ………….நிஜமாகவா ”\n“ இரண்டாவதாய்ப் பார்த்தீங்கன்னா இவற்றின் உள்ளேயுள்ள பற்சக்கரங்கள் எல்லாம் ஐம்பதுக்கு : ஐம்பது இப்போ வழுக்குந்தன்மை அதிகரிக்கப்பட்ட பொலி எதிலீனால் பிரதியீட்டப்பட்டிருக்கிறதால அவற்றின் பகுதிகளின் தேய்மானமும் , இரைச்சலும் பாதியாக்கப்பட்டு உங்க ஆயுசுக்கும் மேலாக உழைக்கப்போகுது ”\n“ இதில கிடைக்கிற இன்னொரு முக்கிய அனுகூலம் என்னவென்றால் ”\nஎன்றுவிட்டு நிறுத்தவும் அவரது கண்களில் ஆர்வமும், முகத்தில் மலர்ச்சியும் அரும்பின. “ இம்மெஷினுக்குரிய மின்நுகர்வு பாதியாக்கப்படுது மெடம், இன்றைக்கு சிக்கனமும் முக்கிய விஷயமல்லவா……………. ”\nஇப்போது அவரது மலர்ச்சி தணிவதற்கிடையில் மின்னல்வேகத்தில் சில Zig-Zag தையல்களை அவன் போட்டுக்காட்டவும் மனது குளிர்ந்த மாது ஒரு மெஷினை வாங்கினார்.\nமெஷினைக் கொண்டுபோய் அவரது வண்டியுள் மோகனரமணன் வைத்துவிட்டுவரவும் கேட்டேன்: “ இந்த மெஷினைப்பற்றி இத்தனை விபரங்கள் உனக்கு எப்படி அப்பனே தெரியும்”\n“ அண்ணே இப்பவெல்லாம் தையல்மெஷினுகளை வார்ப்பிரும்பில் எந்தக்கொம்பனியும் செய்யிறேல்ல. எங்க ஆச்சிமார் வைத்துத்தைத்த சிங்கர், ஊஷாவோட அந்தக்காலம் மலையேறிவிட்டுது. இப்போவெல்லாம் பியூட்டர் மெட்டலும், அலுமினியமும் பிளாஸ்டிக்குந்தான். அதைத்தான் ஒரு புதிய விஷயம் மாதிரி எடுத்து கஷ்டமருக்குச்சொன்னன். எதையாவது ஒரு விஷயத்தைப் புதிதுபோலச் சொல்லிக் கஷ்டம்ரைக் கொஞ்சம் குழப்பிவிடுதல் முதல் வியாபார உளவியல்.\nலைஃபோய் சோப் விளம்பரத்தில கேட்டிருப்பியள் நுண்ணுயிர்களைக் கொன்றுவிடும் முதல் கார்போலிக்சோப் இது என்று……………………உலகின் எல்லா சோப்புக்களுமே கார்போலிக் அசிட்டுக்களில்தான் தயாரிக்கப்படுபவை………………….”\n“ ……..……..பொறு பொறு நீயும் ஏதோ பொலி-எதிலீன் என்றியே அது என்னப்பனே ”\n“ அது வேறொன்றும் இல்லை, பிளாஸ்டிக்தான் பொலி எதிலீன், அதையே கொஞ்சம் மாற்றிச்சொன்னால் அது ஏதோ விஷேசமான பொருள் என்று சனம் நினைக்கும், நினைக்கட்டன் நாம பொய்சொல்லலையே, இருந்தாலும் எம் ஐயன்தான் சொல்லிட்டாரே பொய்மையும் வாய்மையுடைத்து புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின், நாமெதுக்குப் பயப்பிடோணும்”\n“ உண்டு உண்டு உண்டு ”\n“ வாடிக்கையாளர்களின் கண்களில் வந்தவுடன படுகிற மாதிரி நாலைந்து சாமான்களின் விலையை குறைச்சு வைக்கவேணும், அதுகள்ல இலாபம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அப்போதான் மற்ற இடங்களிலும் பார்த்துவிட்டு வருகிறவர்களுக்கு ‘இங்கே பொருட்கள் மலிவுதான்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் சின்ன டெக்னிக் அது.” என்றான்.\nசில நூல்வகைகளையும், சற்றில்கள், பொபின்கேஸ்கள், கோலங்கள்வெட்டும் கத்திரிகள் போன்ற தையல் வேலைக்கான பிற உபகரணங்கள் சிலவற்றின் விலைகளையும் குறைத்து வைத்தோம்.\n“அண்ணை நாங்கள் இரண்டுபேரும் நிறப்பட்ஷியள், பார்த்தவுடன வெளிநாட்டுக்காரர் என்று கஸ்டமருக்குத் தெரியத்தான்போகுது, இரண்டொரு எங்கட நாட்டுச்சாமானுகளையும் பக்கத்தில வைத்தால் என்ன.”\n“ என்ன வையன்ன, சினா, குனா சுருட்டுப்பெட்டிகளைப் பரவிவைக்கலாம் என்கிறீரோ ”\n“ இல்லை பாரை, பொம்பிலி, மாசிக்கருவாடுகள் என்றால் இன்னும் எடுபடும், கொஞ்சம் வாசமாயும் இருக்கும்”\nநான் முறைக்கவும் “ ஒரு கோப்பி, தேயிலை, கொக்கோ, கறுவா, வனிலா, ஏலக்காய், கராம்பு இப்படி”\nஅழகான பெண்ணொருத்தி தோட்டத்தில் தேயிலை கொய்யும் படமொன்றையும், மரங்கள் அடர்ந்த கோப்பித்தோட்டத்தின் படம் ஒன்றையும் கடையின் இருபக்க உட்சுவர்களிலும் பொருத்திவைத்த பின் முதல்தரத்திலான கோப்பியையும், தேயிலைகளையும், கோக்கொபவுடர் பெட்டிகளையும் விறாக்கைகளில் வைத்தோம்.\nஎம் நிலையத்துக்குள் வந்த ஒவ்வொரு கஸ்டமருக்கும் அவர் கொஞ்சம் ஊசிகளோ, பொபினோ, கலர்நூலோ வாங்கவந்தவராயினும் அவர்களுக்கு சூடாக ஒவ்வொரு கிளாஸ் பால்கலந்த தேநீரை வழங்கிவிட்டு அது அவர்கள் தொண்டையைத்தடவி உள்ளிறங்கவும் அவர்களிடம் குறிப்பாக பெண்களிடமும் கொஞ்சம் மிதமாகவே இலங்கைத்தேயிலையின் மகாத்மியம் பாடினான். ‘எம் தேயிலையின் சுவை தனித்துவமானதாகவும், இதரநாட்டுத் தேயிலைகளைவிடவும் அதிகமாகவும் இருப்பதன் காரணம் அவை 3700 – 4900 அடிகள் உயரமான உயிர்ச்சத்துக்கள் செறிந்த ஈரமலைச்சரிவுகளில், அச்செடிகளுக்கே உவப்பான சீதோஷ்ணநிலையில் இயற்கையாக மதாளித்து வளர்வதுதான், நாம் நீர்ப்பாய்ச்சுவதோ, செயற்கை உரமிடுவதோ இல்லை’ என்றான்.\nஇவன் சொல்லும் கதைகளை அங்கார்ந்து ரசிக்கும் வாடிக்கையாளர்கள் கடைசி அரைக்கிலோ தேயிலையாவது வாங்கியே செல்வார்கள்.\nஇன்று சாதனா இராசவள்ளிக்கிழங்கு அவித்திருந்தாள். மாமாவுக்கு சூடாகக்குடிப்பதுதான் பிடிக்கும், சுவையாகவும் இருக்குமென்று ஜெயதாகினி அதை ஒரு தேமோ பொக்ஸில் வைத்து சுரங்கத் தொடருந்தில் எடுத்துவந்து தந்தாள். மோகனரமணன் கண்கள் கஸ்டமர்களோடு அவள்மீதும் மீதும் படர்வதைக்கண்டேன்.\nஅடுத்தவாரம் ஜெயதாகினியின் பிறந்தநாள் வந்தபோது எம்நிலையத்தின் பிரதான அங்கமாகிவிட்ட மோகனரமணனைத் தவிர்த்துவிடாமல் அவனையும் அழைத்தோம். அன்று அவன் அவளுக்கு ஒரு ஸ்மார்ட்போனைப் பரிசளித்தான்.\nபொதுவாக ஜெர்மன்காரர்களுக்கு தங்களது உற்பத்திகளை உயர்வாகச்சொன்னால் மனங்குளிரக்கேட்பார்கள். விதிவிலக்காக அன்றைக்கு கோலங்கள் மற்றும் வரைகலைவடிவுகளைத் தைக்கும் மெஷினை வாங்கவந்த ஒருவர் ‘இல்லை NECCHI மெஷின்கள்தான் உயர்ந்தவை’ என்று விவாதித்தார்.\nவிவாதங்களில் ஜெயிப்பது எமது நோக்கம் அல்லவே. மோகனரமணன் குரலில் மேலும் தண்மை கலந்துகொண்டு தாழ் ஸ்தாயியில் அவரைச் சமாளித்தான்.\n“ எங்களிடம் PFAFF மெஷின்கள் அதிகம் இருப்பதால் NECCHI மெஷின்களின் தரத்தை குறைமதிப்பீடு செய்வது எமது நோக்கமல்ல. அவையும் சிறந்த தயாரிப்புக்கள்தான், ஆனால் வரைகலை, கோலங்கள், எம்பிராய்டரி வேலைகளை தைப்பதற்கு NECCHI மெஷினில் பயன்படுத்தப்படும் மெகனிஸம் மிகவும் புராதனமானது. புறொப்பெல்லர் விமானங்களைப்போல , முன்னே அவற்றில்தானே பறந்தோம். ஆனால் அவற்றில் ஓடி உராய்ந்து இயங்கும் பாகங்கள் அதிகமிருப்பதால் தேய்மானமும் அதிகம், எளிமையாகச் சொன்னால் அவை பழுதடைந்தால் திருத்துவதற்கு நேரமும் செலவும் அதிகமாகும். PFAFF , SINGER மெஷின்களில் நவீன எலெக்ரோணிக்-மெகனிஸம் புகுத்தப்பட்டிருக்கிறது. ஜெட் விமானங்களைப்போல. கணனியின் பிறின்டர்களிலுள்ள MEMORY-CHIPகள் கணனிகள் கொடுக்கும் தகவல்களை உள்வாங்கிக்கொண்டு எப்படி வித்தியாசமான மொழிகளையும், கோலங்களையும், சித்திரங்களையும் பிரதி எடுத்துத்தருகின்றனவோ அதேவகையில்தான் எம் நவீன தையலியந்திரங்களில் அமைக்கப்பட்டுள்ள MEMORY-CHIPகளும் உங்கள் விருப்புகளை உத்தரவுகளை உள்வாங்கிக்கொண்டு வேண்டியவிதத்தில் வேண்டிய வடிவத்தில் அவை தைத்துத்தருகின்றன. ஏதாவது பழுதடைவதானால்கூட அநேகமும் அவை MEMORY-CHIPகளாகத்தான் இருக்கும், அவற்றை இலகுவிலும் சிக்கனமாகவும் மாற்றியமைத்துவிடலாம்”\nகண்களை சேர்ச்லைட்டுக்கள் மாதிரிப் பலகோணங்களிலும் சுழற்றி யோசித்தார்.\n“மின் மோட்டோர் மிஷினைப் பட்டியால் இழுத்து இயக்கும் வகையிலான மெகனிஸம் இருந்த காலத்தில் அந்தப்பட்டிக்கே 10 வருஷம் உத்தரவாதம் கொடுத்தவர்கள் PFAFF. ”\nநான் அவன் காதோடருகி “அது எப்பிடிப்பா உனக்குத்தெரியும்” எனவும் என்பக்கம் அலட்சியமாகத் தலையைத் திரும்பி பிரியங்கா சோப்ரா பாணியில் கண்ணடித்தான்.\nகுழம்பித்தெளிந்தவர் கடைசியில் ஒரு PFAFF AMBITION எனும் நவீன மெஷினையே வாங்கிச்சென்றார்.\nஜெயதாகினி இப்போதெல்லாம் “ இந்த ஸ்டேசனைத்தாண்டிப்போனேனா அதுதான் மாமா என்ன செய்கிராறென்று பார்க்கலாமென்று சும்மா இறங்கிவந்தேன்” என்பதுபோன்ற சின்னச்சின்னச் சும்மா ரகச் சாட்டுகள் நேரத்துக்கொன்றாக வைத்துக்கொண்டு அடிக்கடி இங்கே வருகிறாள். அவள் வரும்போதெல்லாம் நம் இருவருக்கும் அவள் கைப்பக்குவத்தில் தேநீரோ கோப்பியோ அமிர்தமாகப்போட்டுத்தருவாள். அவளாக வீட்டில் பாதாம் ஹல்வாவன்ன ஸ்வீட் ஏதாவது புதிதாகப்பண்ணினாலும் தவறாது மோகனரமணனுக்கும் தனியாக எடுத்துவருகிறாள்.\nஅன்று நாலைந்து வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் வந்துவிட குஷியாகிப்போன மோகனரமணன் பலவகையான பீடிகைகளுடனும், குரலை வெவ்வேறு தினுசாக மாற்றிப் பண்பேற்றிக்கொண்டும் ஒரு விரிவுரையாளரைப்போலப் பேசலானான்.\n“ இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்காலத்தில் தயாரிக்கத் தொடங்கப்பட்ட SINGER உம், ஜெர்மனியின் PFAFF தையல் இயந்திரங்களுந்தான் உலகம் முழுவதும் ஆதியில் பரவலாக அறியப்பட்ட இனங்களாகும். அண்மையில் PFAFF, SINGER இரண்டுமே தத்தம் 150 ஆண்டு நிறைவைக்கொண்டாடியுள்ளன. முதலாவது உலகமகாயுத்தம் முடிந்தபின்னால் எழுந்த பெருவாரியான சந்தைவாய்ப்பைக்கருதி இத்தாலி SINGER இயந்திரங்களின் அப்பட்டமான பிரதியெடுப்பாக NECCHI மெஷின்களைத் தயாரித்துச் சந்தைப்படுத்தியது. இறுக்கமான தனிக்காப்புரிமைச் சட்டங்களெல்லாம் அப்போது கிடையாதலால் அது சாத்தியமாயிற்று. இப்போது ஜப்பான், தென்கொரியா, கிழக்கு ஐரோப்பாவிலிருந்தும் பெருவரியான மெஷின்வகைகள் சந்தைக்கு வந்திருக்கின்றன. ஆனாலும் எங்கள் மெஸ்டெஸ்பென்ஸ், பி.எம்.டபிள்யூ, ஔடி கார்களைப்போலும் எம் மெஷின்களின் தரத்தையும் தனித்துவத்தையும் இன்னும் எவரும் விஞ்சிவிடவில்லை. அதிலும் இப்போ அதிநவீனமாக Poly Vinyl Polymeric Propylene என்றொரு சேர்மத்தினால் மெஷின்களின் Case hardening என்கிற புதிய தொழில்நுட்பத்தால் பியூட்டர், பித்தளை உலோகச் சக்கரங்களின் தேய்வடையக்கூடிய பகுதிகளை வைரமேற்றிவிடுகிறோமா அவற்றின் உருளும், வழுக்கும் உராயும் உள்ளகப்பகுதிகள் எவையும் தேய்வடைவதே இல்லை. அதனால்தான் எம் மெஷின்களுக்கு இப்போதெல்லாம் துணிந்து 10 வருஷங்கள் உத்தரவாதம் வழங்குகிறோம்…………………………….” என்று அங்கார்ந்து கேட்டுக்கொண்டிருக்கும் அவ்வாடிக்கையாளர்களை நழுவவிடாதும் லாவகமாகவும் தன் மாயவலையைத் தொடர்ந்து வீசிக்கொண்டிருக்கிறான்.\nமாலைச்சூரியன் வழுக்கி உயர்ந்த கட்டிடங்களுக்குப்பின்னால் ஒளித்துவிட அவற்றில் பட்டுத்தெறிக்கும் கதிர்களின் பிரவாகம் வானத்துக்குப் பலவர்ணங்களை மெழுகிக்கொண்டிருக்கிறது.\nஜெயதாகினி சிக்கென்று அழகாக உடுத்திக்கொண்டு தோளில் போட்ட பெரிய லெதர் பையினுள் சிறிய எவர்சில்வர் பாத்திரத்தினுள் பாலுஷகியோ, பாதாம்ஹல்வாவோ எடுத்துக்கொண்டு மோகனராகவன் மாட்டப்போகும் மாயத்தூண்டிலுடன் படிகளில் ஏறி வந்துகொண்டிருக்கிறாள். அவளிடமும் அதற்கான நளினமும், சாதுர்யமும் இருக்குமென்றால் என்ன நானா வேண்டாங்கறேன்?\n- ஆக்காட்டி மே- ஜூன் 2015 இதழ்.\nமுன்னொரு காலத்தில் அடர்ந்த கானகத்தை ஒட்டி ஒரு குடியானவன் குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்த குடியானவனுக்கு குருவாயூரப்பன்,என்ற பையன் மற்றும் மனைவியும் இருந்தனர். தினமும் அந்த குடியானவன் அடர்ந்த கானகத்துக்குள் சென்று காய்ந்த மரங்களை வெட்டி விறகுகளாக்கி கொண்டு வந்து ஊருக்குள் விற்று வாழ்க்கையை நடத்தி வந்தான். திடீரென்று குடியானவனுக்கு உடல் நிலை சரியில்லாமல்
Kadai Thenkai by Devibala - Read Online\n106 pages35 minutes\nKadai Thenkai - Devibala\nஏற்கனவே பஸ் லேட்டு! அதிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல்! சகலமும் கடந்து ஆபீசுக்குள் நுழைவதற்குள் மணி பத்தரை!\nவங்கியின் ஆரம்ப நேரம் பத்து! அரை மணிநேர தாமதம்!\nபுவனாவுக்கு மூச்சு வாங்கியது!\nதன் இருப்பிடத்துக்கு வந்து உட்கார்ந்தாள்! வியர்வை வழிந்தது! துப்பட்டா எடுத்து துடைத்துக் கொண்டாள்! தண்ணீர் குடித்தாள்!\nஅட்டெண்டன்ஸ் உள்ளே போய்விட்டது!\nமானேஜர் வரச் சொல்றார்!\nபுவனா எதிர்பார்த்ததுதான்! இன்று கேஷ் கவுன்டரில் உட்காரும் வேலை. தாமதமாகி விட்டதால் சுமதி உட்கார்ந்துவிட்டாள். உள்ளே டோஸ் இருக்கு!\nமெதுவாக மானேஜர் அறைக்குள் நுழைந்து வணங்கினாள்.\nதிட்டுவதற்கு பதில் மெதுவாகப் பேசுவதும் பயமாக இருந்தது!\nஸாரி ஸார்! ட்ராபிக் அதிகம்! அதான் லேட்டு!\nபுவனா எதிரே உட்கார்ந்தாள்!\nமானேஜருக்கு காஃபி வந்தது!\nபுவனாவுக்கும் கொண்டு வாங்க!\nபுவனா... ஸாரி டு ஸே! உங்களுக்கு புனேவுக்கு மாற்றல் வந்திருக்கு!\nஎன்ன சார் சொல்றீங்க?\nஇப்பத்தான் ஹெட் ஆபீஸ்லேருந்து ஃபேக்ஸ் வந்தது! உங்களுக்கும் லெட்டர் வரும்! ஒரு வாரத்துல நீங்க அங்கே வேலைல சேரணும் புவனா!\nசார்! இப்பக் குடும்பம் இருக்கற நிலைல இது கஷ்டமாச்சே! இதை நிறுத்த முடியாதா சார்? இங்கியே என்னைத் தக்க வைக்க வழி எதுவும் இல்லையா? நான் யாராவது ஆபீசர்களைப் பார்த்துப் பேசினா பலன் கிடைக்குமா?\nகஷ்டம் புவனா! என்னால முடிஞ்சா, நானே உங்களுக்குச் செய்ய மாட்டேனா! அகில இந்திய அளவுல நம்ம பேங்க்ல இந்த வருஷம் ஏகப்பட்ட மாற்றல் உத்தரவு! இஷ்டத்துக்கு தூக்கி அடிச்சிருக்காங்க! எதுவும் செய்ய முடியலை.\nபுவனா இருண்டு போயிருந்தாள்!\nபுனேல உங்களுக்கு யாராவது இருக்காங்களா புவனா?\nநண்பர்கள் யாரும் இல்லை! உறவுக்காரங்க மும்பையில தான் இருக்காங்க! என் வீட்டுக்காரரை கேட்கணும்!\nகேட்டுப் பாருங்க! இல்லைனா நான் ஏற்பாடு பண்றேன், புவனா!\nஇவருக்கு தமிழ்நாடு அரசாங்கம் தொடர்பான வேலை. அதனால வடநாட்டுக்குப் போக வாய்ப்பே இல்லை. பையன் இப்பத்தான் ரெண்டாவது படிக்கிறான்! வயசான மாமனார், மாமியார்! எப்படி இவங்களை எல்லாம் விட்டுட்டு நான் போவேன்! எதுவுமே புரியலியே?\nஉங்க பிரச்னைகள் புரியுது புவனா! எனக்கே கஷ்டமா இருக்கு! வேற வழியில்லை!\nபுவனா மூட் அவுட்டாகி தன் இருப்பிடம் வந்தாள்!\nஎந்த ஒரு வேலையும் ஓடவில்லை!\nகாலையில் தலையில் விழுந்த இடி! ஆனாலும் வேலை செய்துதானே ஆக வேண்டும்!\nமீனாட்சி அருகில் வந்தாள்!\nஉனக்கு பூனாவா? எனக்கு திருநெல்வேலி!\nதமிழ்நாட்டுக்குள்ளே கிடைச்சது வசதி! இந்தி ஊருக்குப் போய் என்னால குப்பை கொட்ட முடியாது! நீ என்ன செய்யப்போறே புவனா?\nதெரியலை. மூளையே வேலை செய்யலை.\nசரி புவனா! உன் பையனுக்கு ஆறு வயசாகுது இல்லையா? சமாளிச்சுக்க வேண்டியதுதான்! உங்க வீட்டுக்காரர் இருக்காரே?\nஅவரென்ன வீட்லயா இருக்கார்? அவருக்கும் ஆபீசுக்குப் போகணுமே?\nஉன் மாமனார், மாமியார் சும்மாத்தானே இருக்காங்க?\nஇவன் வாலு! அவங்களால சமாளிக்க முடியாது. நானே சமயத்துல ஆடிப்போறேன். அவங்களால என்ன செய்ய முடியும்? பகல்ல நான் ஆபீசுக்கும், அவன் ஸ்கூலுக்கும் வந்துர்றோம்! மற்றபடி என்னைவிட்டு ராத்திரி தூங்க மாட்டான் என் பையன். அவருக்கு ஒரு காஃபி கூட போடத் தெரியாது! மாமியார் துரும்பைக்கூட கிள்ளிப் போட மாட்டாங்க! எனக்கு எதுவுமே புரியலை!\nயாரோ அழைக்க, மீனாட்சி போய் விட்டாள்!\nபுவனா சாய்ந்து உட்கார்ந்தாள்!\nபி.காம் படிப்பை முடித்ததும், புவனாவுக்கு பேங்கில் வேலை கிடைத்துவிட்டது. அப்பாவுக்கு இரண்டு வருஷங்களுக்கு சர்வீஸ் இருந்தது!\nஅக்காவின் கல்யாணக்கடன் நிறைய இருந்தது!\nபுவனாவின் வருமானம் பெரிய அளவுக்கு அவளது பிறந்த வீட்டைத் தாங்கிப் பிடித்தது.\nஅடுத்த வருஷமே வரன் தேடி வந்தது!\nகோபால், மாநில அரசில் ஒரு நல்ல வேலையில்! ஒரு அண்ணன் வெளிநாட்டில்- ஒரு தம்பி பெங்களூரில்! வயதான பெற்றோர்! கல்யாணம் தீர்மானிக்கப்பட்டதும் புவனா சொல்லிவிட்டாள்:\nஇன்னும் மூணு வருஷங்களுக்கு எங்கப்பாவுக்கு பாதி சம்பளத்தை நான் குடுப்பேன்!\nகோபால் ஒப்புக் கொண்டதை தன் அப்பா, அம்மாவிடம் சொல்லவில்லை!\nகல்யாணமும் எளிமையாகத்தான் நடந்தது!\nஅம்மா லக்ஷ்மிக்கு இது பெரிய குறை! குத்தல் பேச்சு நிறையவே இருந்தது! புவனா பொருட்படுத்தவில்லை!\nமுதல் மாதச் சம்பளத்தில் பாதி பெற்றோருக்குப் போக, விவரம் தெரிந்ததும் கடுப்பாகி விட்டார்கள்!\nஏண்டா எங்ககிட்ட சொல்லலை?\nவிடும்மா! அதுவா ஒரு பிரச்னை?\nபேங்க் உத்யோகம்- கை நிறைய சம்பளம் வரும்னுதானே இவளைத் தேர்ந்தெடுத்தோம்?\nபுவனா அவர்களிடம் எதுவும் பேசவில்லை.\nஎன்னங்க! உங்க குடும்பத்துல என்ன பிரச்சனை? யாரைக் கல்யாணம் செஞ்சு குடுக்கணும்? இத்தனை நாளைக்கு உங்க சம்பளம் மட்டும்தானே வந்தது? அதில் குடும்பம் நடக்கலையா? இப்ப மட்டும் என்ன?\nஅப்படி இல்லை புவனா! சம்பாதிக்கற பெண் வாழ வரும்போது நம்மையும் அறியாம ‘கமிட்’ பண்றோமில்லையா? எதிர்பார்த்தது கிடைக்கலைன்னு வந்த ஏமாற்றம்!\nவாழ்க்கை தொடங்கி விட்டது!
'சுரன்': வெளிச்சத்திற்கு வராத கூட்டாளி!\nரபேல் ஊழலை மூடி மறைக்க மோடி அரசு கடைசி முயற்சி!\nசிஏஜியும் சிக்கிக் கொண்டது.\n"ரபேல் பேரத்தில் ரிலையன்ஸ் கம்பெனிக்கு ஆதரவாக நரேந்திர மோடி அரசு நடத்திய வரலாறு காணாத ஊழலை மறைக்கும் நோக்கத்துடன் மத்தியதலைமை கணக்கு தணிக்கை அதிகாரி (சிஏஜி), அரசியல் சாசன அமைப்பு என்பதை மறைந்து முற்றிலும் அரசின் கைப்பாவை போல செயல்பட்டு, அரசுக்கு ஆதரவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் புதனன்று தாக்கல் செய்துள்ளது."\nஇந்த சிஏஜி அறிக்கையில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட11 பாதுகாப்பு ஒப்பந்தங்கள் அடங்கிய விரிவான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.\nமுந்தைய அரசு2007ஆம் ஆண்டு 126 ரபேல் போர் விமானங்களைவாங்க போட்ட ஒப்பந்தத்தைக் காட்டிலும், 2016ஆம்ஆண்டு போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் 36 ரபேல்விமானங்களுக்கான செலவு 2.86 விழுக்காடு குறைவதாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅதேபோல முந்தைய ஒப்பந்தத்தைக் காட்டிலும் குறுகிய காலத்தில் போர் விமானங்களைப் பெறவும்புதிய ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமையுடன் முடிவடைந்தது. பட்ஜெட் கூட்டத்தொடர் மட்டுமல்ல, நாட்டின் 16வது மக்களவை யின் கடைசிக் கூட்டமும் நிறைவு பெற்றது.\nநிறைவுநாளான புதனன்று மக்களவையில், முறைப்படுத்தப்படாத சேமிப்பு திட்ட தடைச் சட்ட மசோதா மற்றும் ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவுச் சின்ன திருத்தச் சட்ட மசோதா ஆகியவை நிறைவேற்றப் பட்டன.\nபின்னர் பிரதமர் நரேந்திர மோடி உள்பட உறுப்பினர்கள் பிரியாவிடை அளித்து உரை யாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.கருணாகரன் உரையாற்றினார்.\nசபாநாயகர் சுமித்ரா மகாஜன் நிறைவுரையாற்றி 16வது மக்களவையை முடித்து வைத்தார்.\nஇதனிடையேதான் ரபேல் பேரம் தொடர்பான சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த அறிக்கை மோசடியானது என்பதை அறிந்த உடனே, இது போலியான அறிக்கை என்று கூறி எதிர்க்கட்சிகள் தரப்பில் மாநிலங்களவையில் நிலவிய கடுமையான அமளியால் நண்பகல் 1 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.\nஅதேபோல மக்களவையும் காலையில் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எதிர்க்கட்சிகளின் அமளியால் மதியம் 12 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.\nஇதன்பின்னர் நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்நிலையில், மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அலுவலகத்தையும் துஷ்பிரயோகம் செய்யும் விதமாக முற்றிலும் தவறாக பயன்படுத்தி, முற்றிலும் குழப்பத்தையும் மோசடியையும் அரங்கேற்றும் நோக்கத்தையும் நிறைவேற்றும் விதமாக ஓர் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.\nநாட்டின் விமானப்படைக்கு மிக அதிக மூலதனத்துடன் விமானங்களை வாங்குவது தொடர்பாக, மத்திய அரசின் கணக்குத் தணிக்கைத் தலைவரால் பொதுத்தேர்தலுக்கு முன்பு, மக்களவையில் புதனன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.\nஇது, மேற்படி பேரம் தொடர்பான விடைகளை அளிப்பதற்குப் பதிலாக மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nஇந்த அறிக்கையானது, இதில் சம்பந்தப் பட்டுள்ள ‘வெளிச்சத்திற்கு வராத கூட்டாளி’ தொடர்பான பிரச்சனையை கண்டுகொள்ளவே இல்லை.\nஇதில் ‘வெளிச்சத்திற்கு வராத கூட்டாளி’ ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம்தான்.\nஅதே போன்று இது தொடர்பாக முன்னதாக 108 போர் விமானங்களை உற்பத்தி செய்திட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தை கூட்டாண்மை நிறுவனம் என்ற இடத்தில் இருந்து எப்படி நீக்கப்பட்டது என்பது குறித்தும் எதுவும் கூறப்படவில்லை.\nஇது தொடர்பாக தனியே கையாளப்படும் என்று கதையளந்திருக்கிறார்கள்.\nசிஏஜி-யின் அறிக்கையானது, 2016இல் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய ரபேல் ஒப்பந்தம் அதற்கு முந்தைய 2007இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தைவிட 2.86 சதவீதம் செலவினம் குறைவு என்று கூறுகிறது.\nஎனினும், 2007 ஒப்பந்தத்தில், 126 விமானங்களுக் கான வடிவம் மற்றும் வளர்ச்சி தொடர்பாக நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு செலவு செய்திட இந்தியஅரசாங்கம் ஒப்பந்தம் செய்திருந்தது.\nஆனால், இதுதொடர்பாக அரசாங்கம் இதுநாள்வரையில் மேற்கொண்டுவந்த அனைத்து நெறிமுறைகளை யும் நடைமுறைகளையும் மோடி அரசாங்கமானது மீறியதுடன், எவ்விதமான காரணமுமின்றி 126 போர் விமானங்களை வாங்குவதற்குப் பதிலாக 36 விமானங்கள் என்று குறைத்தது.\nமேலும் ஒவ்வொரு விமானத்தின் விலையும் 41 சதவீதம் உயர்த்தப்பட்டது.\nமத்திய கணக்குத் தணிக்கைத் தலைவர், ஒரு தணிக்கையாளர் என்ற முறையில், இந்தப் பிரச்சனை குறித்து தன் கருத்துக்களைக் கூறியிருக்க வேண்டும். ஆனால் அதை அவர் செய்திடவில்லை.\nபுதிய ஒப்பந்தத்தில், வங்கி உத்தரவாதம் இல்லை என்பதை சிஏஜி ஒப்புக்கொண்டுள்ள அதேசமயத்தில், இது டசால்ட் ஏவியேசன் நிறு வனத்திற்குத்தான் ஆதாயமே தவிர, இந்திய அரசாங்கத்திற்குக் கிடையாது என்கிறார்.\nஇது தொடர்பாக இன்றைய தி இந்து நாளிதழ், இவ்வாறுவங்கி உத்தரவாதம் இல்லாததன் காரணமாக இந்திய அரசாங்கத்திற்கு சுமார் 574 மில்லியன்ஈரோக்கள் அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டிருப்ப தாக இந்திய பேச்சுவார்த்தைக் குழு கணக்கிட்டி ருக்கிறது என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.\nரபேல் தொடர்பாக சிஏஜி அளித்துள்ள கணக்கு வழக்குகள் முழுமையான விவரங்களுடன் இல்லை.\nஅறிக்கை, சதவீத அடிப்படையிலேயே அனைத்துகுறித்தும் பேசுகிறது.\nஇது வெளிப்படைத்தன்மை யற்றதாக இருப்பதுடன், வழக்கமான தணிக்கை அறிக்கைக்கு விரோதமான ஒன்றாகவும் இருக்கிறது.\nமோடி அரசாங்கத்தின் தரப்பில் அடிக்கடிமுன்வைக்கப்படும் வாதங்களில் ஒன்று, போர் விமானங்கள் உடனடியாகத் தேவைப்பட்டதாகவும், எனவே புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறுவதாகும்.\nஆனாலும் இந்த அறிக்கையானது இந்த 36 விமானங்களில் முதலில் 18 விமானங்கள் 36 மாதங்களுக்கும் 53 மாதங்களுக்கும் இடையே வரும் என்றும், மீதமுள்ளவை 67ஆவது மாத வாக்கில் வரும் என்றும் கூறுகிறது.\n2007 ஒப்பந்தத்தில், மீதமுள்ள 108 போர் விமா னங்களை உற்பத்தி செய்வதற்கு, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு தொழில்நுட்பக் கூறுகளை மாற்றம் செய்வதற்கு வகை செய்யப்பட்டிருந்தது.\nஆனால் மோடி அரசாங்கத்தால் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இதற்கு வழியில்லை.\nஇதன் காரணமாக, விமானங்களின் விலைகள் கணிசமாகக் குறைந்திருக்க வேண்டும். ஆனால் நடந்திருப்பதோ அதற்கு நேர்மாறாகும்.எனவே, மோடி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் அதிக விலை பிடிக்கக்கூடியதே யாகும்.\nமேலும் இந்த ஒப்பந்தத்த்தில் ஊழல் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வரிகளை மோடி அரசு நீக்கியுள்ளது.\nஇதுதான் மோடி யின் பாஜக ஊழலை ஒழிக்கும் முறை.\nஅதேபோல் அது இந்திய விமானப் படை கேட்டுக்கொண்டதற்கிணங்க அவசரமாகவும் விரைவாகவும் விமானங்களை வழங்கிடவும் இல்லை. எனவே, மோடி அரசாங்கத்தால் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் நம் நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்கு ஆபத்தை விளைவித்திருக் கிறது.\nதி இந்து நாளிதழில் வெளியாகியுள்ளதுபடி, இந்திய பேச்சுவார்த்தைக் குழு உறுப்பினர்களால் அளிக்கப்பட்டுள்ள எட்டு பக்க அளவிலான கருத்துவேறுபாட்டுக் குறிப்புகள் குறித்து அரசாங்கத்தின் தரப்பில் பதிலளிக்கப்பட வேண்டியது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வலியுறுத்துகிறது.\nமேலும், அரசாங்கமானது உச்சநீதிமன்றத்திற்கு அனைத்து விவரங்களையும் அளிக்காததுபோலவே, சிஏஜி-க்கும் அளிக்காமல் அவரையும் இருட்டிலேயே வைத்திருந்ததற்கான காரணத்தையும் விளக்கிட வேண்டும்.\nஇந்த ஒப்பந்தம் தொடர்பாகவும் இதில் சம்பந்தப்பட்டுள்ள கூட்டுக்களவாணி முதலாளித்துவம் தொடர்பாகவும் எழுந்துள்ள ஊழல் தொடர்பான எந்தவொரு கேள்விக்கும் சிஏஜி பதிலளிக்க வில்லை.\nஇதற்கான விடைகளை ஒரு பொருத்த மான சுயேச்சையான விசாரணை மன்றத்தால் மட்டுமே அளிக்கப்பட முடியும்.சிஏஜி அறிக்கையானது முழுமையாக குழப்பங் களுடன் இருக்கிறது.\nமோடி அரசாங்கத்தின்கீழ் அரசமைப்புச் சட்ட நிறுவனங்களின் சுதந்திரமும் சுயாட்சியும் எந்த அளவிற்குத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு இந்த சிஏஜியின் அறிக்கை மற்றுமொரு சான்றாக அமைந்திருக்கிறது.\nபடேல் சிலைக்கு ரூ.3ஆயிரம் கோடி-\nஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு ஒரு ரூபாய் கூட இல்லையா?\n1919-ஆம் ஆண்டு, விடுதலைப் போராட்டத்தின்போது, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ளஜாலியன் வாலா பாக்-கில், சுமார்3 ஆயிரம் பேர், காக்கைக் குருவிகளைப் போல சுடப்பட்டனர்.\nஇந்த சம்பவத்தில் பலியானவர்கள் என்று பிரிட்டிஷ் அரசு தெரிவித்த கணக்கே, 379 பேர். இவர்கள் தவிர2 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.\nஇந்த கொத்துப் படுகொலையின்போது, “சுட்டேன்.. சுட்டேன்... குண்டு தீரும் வரை சுட்டேன்” என்றுபிரிட்டிஷ் அதிகாரி ஜெனரல் டயர்கொக்கரித்ததும், அந்த குண்டுகளுக்கு அஞ்சாமல்3ஆயிரம் பேர்நெஞ்சுரம் காட்டியதும், வரலாற் றில் என்றும் மறக்க முடியாத சம்பவமாகும்.\nநாடு விடுதலை அடைந்ததற்குப்பிறகு, ஜாலியன் வாலா பாக்-கில் நினைவிடம் அமைக்கப்பட்டு, அங்கு 1919-ஆம் ஆண்டின் உயிர்த்தியாகத்தை விளக்கும் வகையில் சுமார் 52 நிமிட ஒளி - ஒலி காட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வந்தது.\nஇந்நிலையில்தான், மோடி ஆட்சியில் அண்மையில் இந்த ஒலி-ஒளி காட்சி நிறுத்தப்பட்டு, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.\nமத்திய அரசு போதியநிதி ஒதுக்கீட்டை செய்யாததால், ஒலி- ஒளிக் காட்சி நிறுத்தப் பட்டுள்ளதாக செய்திகளும் வெளியாகியுள்ளன.இதனை தற்போது வெளிச்சத் திற்கு கொண்டுவந்துள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.ராஜேஷ், மோடி அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.\n“வல்லபாய் படேலுக்கு ரூ.3ஆயிரம் கோடியில் சிலை வைக்கும்மோடி அரசு, ஜாலியன் வாலாபாக்கில் உயிர் நீத்த3ஆயிரம் தியாகிகளுக்கு ஒரு ரூபாய் கூடவா செலவழிக்க முடியவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nபிரதமர் மோடி, போதிய நிதியை ஒதுக்கி, ஒலி - ஒளிக் காட்சிதொடர்ந்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.\nஇயக்குனர் பாலுமகேந்திரா நினைவுதினம் (2013).\nஊழல் வளர்ச்சியின் நாயகன்...!\nவளர்ச்சி நாயகன் என வர்ணிக்கப்பட்ட பிரதமர் மோடி, ஊழலை மட்டும் வளர்ச்சியடைய செய்வதில் புதிய மைல் கல்லை தொட்டிருக்கிறார்.\nஇதுவரை இந்தியாவில் எந்த பிரதமரும் செய்யாத வகையில் ஊழல் விதிகளையே ஒழித்து ஊழல் வளர்ச்சியில் புதிய உச்சத்தை தொட வைத்த பெருமை அவரையே சாரும்.லலித் மோடி துவங்கி ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் வரை ஒவ்வொரு ஊழலும், ஒவ்வொரு ரகமானது.\nஅதன் வளர்ச்சி விகிதமும் அளக்க முடியாதது. பொதுத்துறை வங்கியில்ரூ. 30 ஆயிரம் கோடி கடன் வாங்கி, அதனை ரூ.5ஆயிரம் கோடியை கொண்டு அடைப்பது எப்படி என புதிய சூத்திரத்தை அறிமுகப்படுத்தியதும்நம் பிரதமர் நரேந்திரமோடிதான்.\nரிலையன்ஸ் குழுமத்தின் அலோக் டெக்ஸ்டைல் நிறுவனம் 15 வங்கிகளில் ரூ. 30ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தது.\nஆனால்அதனை கட்டாமல் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாக கூறி,5ஆயிரம் கோடி மட்டுமே கட்ட முடியும் என ஏமாற்ற முயன்றது. இதனைதேசிய நிறுவன சட்ட வாரியம் கடன் கொடுத்தவாங்கி அதிகாரிகளிடம் வாக்கெடுப்பிற்குவிட்டது.\nஓட்டெடுப்பில் 72 சதவிகித ஆதரவு மட்டுமே கிட்டியது. ஓட்டெடுப்பில் 75 சதவிகிதம் ஆதரவு இருந்தால்5ஆயிரம் கோடியைஏற்றுக் கொண்டு 30 கோடியை தள்ளுபடி செய்யலாம் என்பது விதி. இதனால் ஏமாற்றம் அடைந்தரிலையன்ஸ் நிறுவனம் மோடியின் உதவியை நாடியது.\nஇதனை தொடர்ந்து மோடி அரசு 72 சதவிகிதம் ஆதரவு தேவை என்ற விதியை , 66 சதவிகிதம் இருந்தாலே போதும் என்று விதியையே மாற்றி அமைத்தது.\nஅதன் மூலம் அலோக் டெக்ஸ்டைல் நிறுவனம் மக்கள் பணம் ரூ. 25 ஆயிரம் கோடியை வாரி சுருட்டி விழுங்கியது.இப்படி ஊழல் செய்ய புதிய திசைவழியை உருவாக்கி ஊழல் வல்லுநர் என்ற பெருமையும் நம்பிரதமர் மோடிக்கே கிடைத்திருக்கிறது.\nஊழலுக்கு எந்த துறையும் விதிவிலக்கல்ல என்ற ரீதியில் ராணுவத்தையும் விட்டுவைக்கவில்லை.\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தனக்கு நெருங்கிய ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் நிறுவனத்தை மோடி அரசு நிராகரித்தது.\nஅதற்காக 8 முக்கிய விதிகளை மாற்றியதோடு, அதிலிருந்த ஊழலுக்கு எதிரான விதியையும் நீக்கியிருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது.\nஇந்த மோசடிமூலம் ரூ.30ஆயிரம் கோடி மக்கள் பணத்தை தூக்கி ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பிரதமர் கொடுத்திருக்கிறார். இப்படி கடந்த5ஆண்டுகளாக மோடி அரசு ஊழல்களை சட்டப்பூர்வமாக மாற்றி நிறுவனமயப்படுத்தியிருக்கிறது.\nநீதிமன்றம் பல முறைதலையிட்ட போதும் லோக்பால் சட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் பாஜக அரசுபார்த்துக் கொண்டது. ஆட்சி நிறைவடையும் தருவாயில் மோடி வடிக்கும் போலிக்கண்ணீருக்கு இந்திய மக்கள் ஒரு போதும் மயங்கமாட்டார்கள்.\nஒரு வேளை லோக்பால் நியாயமான முறையில் அமலானால் முதல் குற்றவாளியாக மோடியே இருப்பார்.
அரியலூர் அருகே சிமெண்ட் ஆலை விபத்தில் ஊழியர் மரணம் || Cement plant crash worker death near ariyalur\nஅரியலூர் அருகே சிமெண்ட் ஆலை விபத்தில் ஊழியர் மரணம்\nபதிவு: நவம்பர் 04, 2018 20:43 IST\nஅரியலூர் அருகே சிமெண்ட் ஆலை விபத்தில் ஊழியர் மரணம் அடைந்தார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூரில் தனியார் சிமெண்ட் ஆலை உள்ளது. இங்கு இருங்கலாக்குறிச்சியை சேர்ந்த சுப்பிரமணியன்(வயது 40) என்பவர் சாம்பல் கிரசர் பெல்ட் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு பணியில் ஈடுபட்டிருந்த அவர், கிரசர் பெல்ட் உரசியதில் தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.\nஇதையடுத்து அவரை ஆலை பணியாளர்கள் மீட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் இறந்தார். இதனிடையே சுப்பிரமணியனின் சாவில் மர்மம் உள்ளது என்றும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி, ஆலத்தியூர் சிமெண்ட் ஆலை முன்பு, சுப்பிரமணியனின் உறவினர்கள் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு தளவாய் போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
புத்தாண்டு கொண்டாட்டம்: ஜனவரி 1 – ஈஸா அலை அவர்களுக்கு விருத்தசேதனம் செய்த நாள்? – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)\nHomeஇஸ்லாம்புத்தாண்டு கொண்டாட்டம்: ஜனவரி 1 – ஈஸா அலை அவர்களுக்கு விருத்தசேதனம் செய்த நாள்?\nபுத்தாண்டு கொண்டாட்டம்: ஜனவரி 1 – ஈஸா அலை அவர்களுக்கு விருத்தசேதனம் செய்த நாள்?\nகிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். மேலும் ஈசா (அலை) அவர்களுக்கு விருத்த சேதனம் செய்த நாளை அதாவது ஜனவரி 1 ஐ ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.\nபிற மத கலாச்சாரத்தை பின் பற்றக் கூடாது என்று நபிகள் நாயகம் பல இடங்களில் கூறியுள்ளார்கள்:\nஅறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவுத் (3512)\nஉங்களுக்கு முன்னால் உள்ளவர்களை நீங்கள் ஜானுக்கு ஜான், முளத்திற்கு முளம் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று கூறியுள்ளார்கள்.\nமேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? . உண்மையில் நமது வாழ்நாளில் 365 நாட்கள் சென்று விட்டதே என்று என்று வருத்தம் தான் பட வேண்டும்.\nபுதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?. கிரீட்டிங்க கார்ட் விற்பனையாளர்களுக்கும் இந்த நாளில் ஓட்டலில் கூத்தாடுவதற்கு கோடிக் கணக்கில் பணம் வாங்கு கூத்தாடிகளுக்கும், புத்தாண்டு என்ற பெயரில் பார்ட்டி நடத்துபவர்களுக்கும் தான் பணம் கிடைப்பதன் மூலம் நன்மை ஏற்படுகின்றுது. பொதுமக்களுக்கு இதில் எந்த நன்மையும் இல்லை மாறாக பண விரையம் தான் ஏற்படுகின்றது.\nகலாச்சார சீர்கேட்டுடன் ஆரம்பிக்கப்படும் ஜனவரி 1\nபுத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது. இரவு நேரங்களில் உறங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு தொந்தரவை ஏற்படுதுகின்றது. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்.\nஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவது தான் மார்க்கத்தில் தடை. நாம் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய அடிப்படையில் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று தவறாக விளங்கிக்கொண்டு இதுவும் தவறாகும்.
விஜய் டிவி-யில் பிப்ரவரி 26 முதல் மேட்னி தொடர்கள்\nவிஜய் டிவியில், இனி மதிய நேரங்களிலும் புத்தம் புதிய தொடரக்ள் ஒளிபரப்பாக உள்ளன.\nவரும் பிப்ரவரி 26 முதல் ‘அவளும் நானும்’ மற்றும் ‘பொன்மகள் வந்தாள்’ ஆகிய இரண்டு தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன.\n‘அவளும் நானும்’, தொடர் நிலா மற்றும் தியா ஆகிய இரட்டை சகோதரிகளைப் பற்றிய ஒரு தொடர்.\nநிலாவின் திருமணம் ப்ரவீனுடன் நிச்சயிக்கப்படுகிறது. பிரவீன் பணக்கார வீட்டைச் சேர்ந்த பையன். ஆனால், நிலா வேறொருவரை விரும்புகிறார், இருந்தும் தன் பெற்றோரை சம்மதிக்க வைக்க முடியாமல் போகிறது. திருமணத்தின் போது ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்று விடுகிறார்.\nகுடும்பப் பெயரைக் காப்பாற்ற தியாவை நிலாவாக நிறுத்தி திருமணம் செய்து வைக்கிறார்கள். நிலாவாக திருமணம் செய்து போகும் தியாவின் வாழ்கை என்ன ஆகிறது ?, பெற்றோர்களை மீறிச் செல்லும் நிலாவின் வாழ்கை என்ன ஆகிறது ?. உருவங்கள் இடம் மாறிய வாழ்கை தடம் மாறியது, என்பதே இந்தக் கதையின் முக்கிய கரு.\nஇத் தொடரை தனுஷ் இயக்கியுள்ளார். நடிகை மௌனிகா இந்த தொடரின் இரட்டை சகோதரிகள் நிலா மற்றும் தியாவாக நடிக்கிறார். மௌனிகா இந்தத் தொடரின் மூலம் தொலைக்காட்சிக்கு அடியெடுத்து வைக்கிறார். ப்ரவீனாக அம்ருத் நடிக்கிறார்.\nவிஜய் டியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1.30 மணிக்கு ‘அவளும் நானும்’ ஒளிபரப்பாக உள்ளது.\nமதியம் ஒளிபரப்பாக உள்ள மற்றொரு தொடர் ‘பொன்மகள் வந்தாள்’.\nசிறிய நகரத்தைச் சேர்ந்த பெண் ரோகிணி. அன்பான பெற்றோர், அழகான சகோதரிகள் என சந்தோஷமான குடும்பம். பணத்தால் இல்லாவிட்டாலும் மனதால் உயர்ந்தவர்கள். ரோகினியின் தந்தை வேலை இழந்துவிடுகிறார். அக்காவின் திருமணம், தங்கையின் படிப்பு என பல கடமைகள் காரணமாக நகரத்துக்கு வருகிறாள் ரோகிணி. தன் குடும்பத்தினருக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார். அப்படிப்பட்ட பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படப் போகும் பல திருப்பங்கள் தான் இந்தத் தொடரின் கதை.\nரசூல் இயக்கும் இத் தொடரில் ரோகிணியாக ஆயிஷா அறிமுகமாகிறார். விக்கி இந்தத் தொடரின் நாயகனாக நடிக்கிறார்.\n‘பொன் மகள் வந்தாள்’ தொடர், திங்கள் முதல் வெள்ளி வரை மதியம்2மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.\nTags: vijay tv avalum nanum ponmagal vandhal\nவிஜய் டிவி – ஜுன் 22 – 26 – திரைப்படங்கள்…\nJodi grand finale on 25th March
அற்புதம்ங்க.. நானும் கொஞ்ச நாள் மின்சாரத்ல போயிருக்கேன்.. எக்மோர் வரை.. மறக்க முடியாத நினைவுகள்.. டைட்டில் குடுத்தீங்க பாருங்க.. அது அபாரம்.. ;-)\nமின்சார ரயிலில் தங்களுடன் சேர்ந்து பயணித்த அனுபவம் கிடைத்தது.\nதங்களின் அனுபவத்தை தங்கள் பாணியிலேயே விவரித்தது அருமை.\nகடைசி வரிகள் நல்லதொரு நகைச்சுவை யான எதார்த்தமான உண்மை தான்.\n.....சில மாதங்களுக்கு முன், மெட்ரோ ரயிலில், இரண்டு குழந்தைகளுடன் சிரிப்பும் பாட்டுமாய் பயணித்துக் கொண்டு இருந்த ஒரு குடும்பத்தின் சந்தோஷத்தை, ஒரு கல்லூரி மாணவ கூட்டத்தினர் "திருடி" சென்றதை பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தீர்களே..... அதுவும் நினைவுக்கு வந்தது.\nசேட்டை இது உங்களோட சிறந்த படைப்புகளில் ஒன்று. வாழ்த்துக்கள்\nநானும் தினமும் பெருகளத்தூர் ல இருந்து பார்க் வரைக்கும் மின்சார ரயிலில் தான் சென்று வருவேன் .... அப்படியே நான் உணர்ந்த விஷயங்களை எழுதி இருக்கீங்க ...\nsimply superb thala......\nஆம் நண்பரே... நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. நம்மைச்சுற்றி ஏராளமான விஷயங்கள் பொதிந்து கிடக்கிறது. ரயில் சம்மந்தமான விஷயங்களைப் பற்றி எழுத என் சேட்டைக்கு நிகர் சேட்டைதான்!...\nவணக்கம் சகோ, இயற்கையை ரசிக்கிறீங்க சகோ! நகைச்சுவைப் பதிவுகளைத் தாண்டி, உங்களின் வழமையான உரையாடல் பதிவுகளையும் தாண்டி ஒரு உரை நடைப் பதிவினைத் தந்திருக்கிறீர்கள்..\nஓரிரு மாதங்களாக புல்லாங்குழல் இசைத்தவாறு வருகிற பார்வையற்ற பிச்சைக்காரருக்கு, நான் அவ்வப்போது சில்லறை போடுவதுண்டு. முதல்முதலாக கோடம்பாக்கம் நிலையத்தில் அவரது குழலிசையைக் கேட்டேன். ’ராஜாதிராஜா’ படத்தின் ’மீனம்மா..மீனம்மா..கண்கள் மீனம்மா,’ பாட்டை அசத்தலாக வாசித்தபடி பெட்டிக்குள் நுழைந்தார். பல்லவிக்கும் சரணத்துக்கும் இடைப்பட்ட சங்கதியைக் கூட அதன் நெளிவுசுளிவுகளுடன் அவர் புல்லாங்குழலிலேயே இசைத்தபோது சற்றுக் கிறங்கித்தான் போனேன்.//\nபிச்சையெடுக்கும் போது இசையினை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தும் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.\n“ஆனால், அவர்கள் அனைவருமே என்றோ ஒருநாள், இந்த இரயில் பயணங்களின்போது எவரது கால்களினாலோ மிதிபட்டிருப்பார்கள். அன்றி நிச்சயம் எவரையாவது ஒருமுறையாவது மிதித்திருப்பார்கள் என்பது மட்டும் சத்தியம்!”\nஅருமையான பதிவு. எனது கல்லூரி காலங்களையும், உரத்தொழிற்சாலையில் பணிபுரிந்த நாட்களையும் அசை போட வைக்கிறது.\nசில சமயங்களில் அவர்களது அபசுரங்கள் அவர்கள் மீது நமக்கு இயல்பாக வர வேண்டிய பச்சாதாபத்தைச் சற்றே குறைத்து விடுகின்றனவோ என்ற சந்தேகம் எனக்கு உண்டு. பிச்சைக்காரர்களிடம் கூட சுத்தத்தை எதிர்பார்க்கிற அபத்தமான குணம் மனிதனுக்கு இருப்பதை என்னவென்று சொல்ல..?//\nஇது மனிதனின் இயல்பு தானே. நாங்கள் மட்டும் நல்லவர்களாக நடித்துக் கொண்டு, மற்றவர்களை இழக்காரமாக, ஏளனத்துடன் பார்ப்பது, மூக்கைச் சுழிப்பது. இப்படி பிச்சைக்காரர்களுடன் பழகும் பலரை எங்களூரிலும் பார்க்கிறேன். நான் உட்பட எல்லோரும் அவர்களின் உடை, உடல் மணம் முதலியவற்றால் ஒரு மாதிரியான உணர்வுடன் தான் நோக்குகிறோம். இவ் இடத்தில் அவர்கள் மீது ஒரு சில் நாணயக் குற்றிகளைப் போட்டு இரங்பட்டாலும், அவர்கள் போன பின்னர் ....\nம் .... மணத்தைப் பாரன் என்று ஏசுவோரையும் கண்டிருக்கிறேன்.\nஅதிலும் பூங்கா ரயில் நிலையம் வரைக்கும்தான் விற்பனை. பிறகு, இருக்கையிருந்தால் அமர்ந்து கொள்வார்கள். அவர்களுக்குள் எதையோ பேசிச் சிரித்துக் கொள்வார்கள். அவர்களது சிரிப்பைப் பார்க்கும்போது யாரோ தொண்டைக்குள் கையை விட்டு இதயத்தைப் பிழிவதுபோல ஒரு மெல்லிய வலியை ஏற்படுத்தும். எழும்பூர் வந்ததும் இறங்கிச்சென்று விடுவார்கள். சில சமயங்களில் அவர்கள் கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்திருப்பேன்.//\nஆகா... ஆகா.. சகோ சொந்தச் செலவிலை சூனியம் வைக்கிறாரு. எழும்பூர், தாம்பரம் கடற்கரையடி என்றெல்லாம் சொல்லி தான் எந்த ரயிலில் போறார் என்பதை குறிப்பால் சொல்லுகிறார். சேட்டை ரசிகர்கள், வாசகர்கள் இப்பொழுதே புறப்பட்டு விடுவார்கள். யார் இந்தச் சேட்டைக்காரன் என்று அறிய. பார்த்து சகோ, நாளைக்கு காலையிலை ஸ்டேசன் புல்லா தேடி அலையப் போறாங்க நம்மாளுங்க.\nஆனால், அவர்கள் அனைவருமே என்றோ ஒருநாள், இந்த இரயில் பயணங்களின்போது எவரது கால்களினாலோ மிதிபட்டிருப்பார்கள். அன்றி நிச்சயம் எவரையாவது ஒருமுறையாவது மிதித்திருப்பார்கள் என்பது மட்டும் சத்தியம்.//\nபதிவு தன் வாவில் தினம் தினம் கண்டவற்றை, கடந்து போன ரயில் பயண அனுபவங்களைச் சுவையாகவும் சுவாரசியாமாகவும் சொல்லிச் செல்கிறது.\nசகோ பதிவுக்குச் சம்பந்தமில்லாத ஒரு சின்ன question.\nரயில் பயணங்களிலை உங்களுக்கு ஒரு சேட்டைக்காரி இன்னமும் மாட்டலையா? யாரோ ஒருவர் உங்களைப் பார்த்து அடிக்கடி புன்னகைப்பதாக அறிந்தேன். உண்மையா?\nச்ச்..........சும்மா ஒரு கிண்டலுக்கு கேட்டேன்.\nமுன்னாள் நினைவு வந்து போனது நண்பா பகிர்வுக்கு நன்றி!\nசேட்டை அண்ணன் செம சீரியசா ஒரு பயணக்கட்டுரை போட்டிருக்கார் போல,,\n>>பிச்சைக்காரர்களிடம் கூட சுத்தத்தை எதிர்பார்க்கிற அபத்தமான குணம் மனிதனுக்கு இருப்பதை என்னவென்று சொல்ல\nவெரிகுட் சைக்கலாஜிக்கல் சர்ச்\n>>அதே சமயம், எவரது கவனத்தையும் ஈர்க்க விரும்பாமல், கூட்டத்தினுள் தனித்திருந்து மவுனம் காத்து, எவருடனும் அல்லது எதனுடனும் தம்மைத் தொடர்புபடுத்திக்கொள்ள விரும்பாமல், மிதந்து கொண்டிருக்கிற நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\n70 சதவீதம் பேர் இந்த சராசரிகள் தான்\n//சென்னையின் இரத்த ஓட்டம் போல ஓடிக்கொண்டிருக்கும் இந்த மின்சார இரயில் பயணங்களில், மாங்குமாங்கென்று உழைக்கிற வர்க்கத்தையும், இரத்தத்தை உறிஞ்சுகிற வர்க்கத்தையும் அடுத்தடுத்த இருக்கைகளில் காண முடிகிறது.//\nதண்டநாளங்கள் உங்கள் ரத்தநாளங்களைப்போல் என்பதை அருமையான பதிவாக்கியுள்ளீர்கள்.தலைப்பே ஒரு வரி ஹைக்கூ கவிதையைப்போல் அமைந்து விட்டது.அருமை. :)\nதினசரி ரயில் பயணங்கள் - மறக்க முடியாத அனுபவங்கள்!!\nநானும் மும்பை'ல நிறைய பேரை மிதிச்சிருக்கேன் மிதியும் வாங்கி இருக்கேன்...\nஅற்புதம்ங்க.. நானும் கொஞ்ச நாள் மின்சாரத்ல போயிருக்கேன்.. எக்மோர் வரை.. மறக்க முடியாத நினைவுகள்.. டைட்டில் குடுத்தீங்க பாருங்க.. அது அபாரம்.. ;-)//\nமுதல் முதலாக வருகையும் புரிந்து, பின்தொடரவும் தொடங்கியிருக்கிறீர்கள். மனம்திறந்து பாராட்டியும் இருக்கிறீர்கள். மிக்க நன்றி!\nமின்சார ரயிலில் தங்களுடன் சேர்ந்து பயணித்த அனுபவம் கிடைத்தது. தங்களின் அனுபவத்தை தங்கள் பாணியிலேயே விவரித்தது அருமை.//\nஇரயில் பயணங்கள் குறித்து பல இடுகைகள் எழுதிவிட்டேன். எனது அன்றாட நடவடிக்கை என்பதால், இயல்பாகவே அமைந்து விடுகிறது போலும்.\n//கடைசி வரிகள் நல்லதொரு நகைச்சுவை யான எதார்த்தமான உண்மை தான்.//\n//.....சில மாதங்களுக்கு முன், மெட்ரோ ரயிலில், இரண்டு குழந்தைகளுடன் சிரிப்பும் பாட்டுமாய் பயணித்துக் கொண்டு இருந்த ஒரு குடும்பத்தின் சந்தோஷத்தை, ஒரு கல்லூரி மாணவ கூட்டத்தினர் "திருடி" சென்றதை பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தீர்களே..... அதுவும் நினைவுக்கு வந்தது.//\nஆம்! அது போன்ற நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெறத்தான் செய்கின்றன. ஒரு நகரத்தின் வளர்ச்சிக்காக சில சமயங்களில் கொடுமையான விலை கொடுத்தாகவும் நேரிடுகிறது என்பது சற்று வேதனை தான்!\nசேட்டை இது உங்களோட சிறந்த படைப்புகளில் ஒன்று. வாழ்த்துக்கள்//\nநன்றி கார்த்தி! வித்தியாசமாக முயலும்போதெல்லாம் இதுபோல உற்சாகப்படுத்த உங்களைப் போன்றவர்கள் இருக்கும்போது என்ன கவலை? :-)\nஇது எலக்ட்ரிக் ட்ரெயினா எலக்கிய ட்ரெயினாண்ணா. சூப்பர்ப்:)) ரியல்லி அமேஸிங் நேரேஷன்.\nநானும் தினமும் பெருகளத்தூர் ல இருந்து பார்க் வரைக்கும் மின்சார ரயிலில் தான் சென்று வருவேன் .... அப்படியே நான் உணர்ந்த விஷயங்களை எழுதி இருக்கீங்க ...//\nஇது சென்னை இரயில் பயணிகளுக்கெல்லாம் பொதுவான, இயல்பான உணர்வுகள்தான் நண்பரே! we are travelling in the same train, perhaps! :-))\nsimply superb thala......keep going....//\nமிக்க நன்றி நண்பரே, எவ்வளவு நாட்களாகி விட்டன உங்களைப் பார்த்து..? :-)\nஆம் நண்பரே... நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. நம்மைச்சுற்றி ஏராளமான விஷயங்கள் பொதிந்து கிடக்கிறது. //\nநிச்சயமாக! இரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களோடு பயணிக்கிறபோது, கண்களைச் சற்று அகலத்திறந்திருந்தாலே போதுமானது.\n//ரயில் சம்மந்தமான விஷயங்களைப் பற்றி எழுத என் சேட்டைக்கு நிகர் சேட்டைதான்!...//\nஉண்மையில், இது எனது தினசரி நடவடிக்கை என்பதால், பார்த்ததை ஒப்பிக்கிற சுலபமான வேலையும் கூட! மிக்க நன்றி நண்பரே! :-)\nஅருமையான பதிவு. எனது கல்லூரி காலங்களையும், உரத்தொழிற்சாலையில் பணிபுரிந்த நாட்களையும் அசை போட வைக்கிறது.//\nஉண்மைதான் நண்பரே! தொடர்ந்து இரயில் பயணங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு, பிறரது அனுபவங்களுடன் ஒத்த தமது அனுபவங்களை நினைவு கூர்வது மிகவும் எளிதானது என நானும் உணர்ந்திருக்கிறேன். மிக்க நன்றி! :-)\nவணக்கம் சகோ, இயற்கையை ரசிக்கிறீங்க சகோ! நகைச்சுவைப் பதிவுகளைத் தாண்டி, உங்களின் வழமையான உரையாடல் பதிவுகளையும் தாண்டி ஒரு உரை நடைப் பதிவினைத் தந்திருக்கிறீர்கள்..//\nவாருங்கள் சகோதரம்! நகைச்சுவை, நையாண்டி தவிரவும் அனுபவம் என்ற குறியீட்டின் கீழ் பல இடுகைகளை எழுத தொடர்ந்து முயன்று வருகிறேன்.\n//பிச்சையெடுக்கும் போது இசையினை ஒரு ஊடகமாகப் பயன்படுத்தும் அவர்களின் முயற்சி பாராட்டத்தக்கது.//\nஉண்மை! இசைக்காகவேனும் இரக்கம் சுரக்கிறதே!\n//இது மனிதனின் இயல்பு தானே. நாங்கள் மட்டும் நல்லவர்களாக நடித்துக் கொண்டு, மற்றவர்களை இழக்காரமாக, ஏளனத்துடன் பார்ப்பது, மூக்கைச் சுழிப்பது. இப்படி பிச்சைக்காரர்களுடன் பழகும் பலரை எங்களூரிலும் பார்க்கிறேன். நான் உட்பட எல்லோரும் அவர்களின் உடை, உடல் மணம் முதலியவற்றால் ஒரு மாதிரியான உணர்வுடன் தான் நோக்குகிறோம். இவ் இடத்தில் அவர்கள் மீது ஒரு சில் நாணயக் குற்றிகளைப் போட்டு இரங்பட்டாலும், அவர்கள் போன பின்னர் ....ம் .... மணத்தைப் பாரன் என்று ஏசுவோரையும் கண்டிருக்கிறேன்.//\nஅதே! நமக்கு ஒவ்வாத ஒன்றை, அதைப் பழிப்பதற்காகவேனும் தற்காலிகமாக உதவி செய்வது போல ஒரு பாவனை செய்து, பின்னர் மட்டம் தட்டி மகிழ்ச்சியடைகிற குரூரமான மனமும் மனித உளவியலின் ஒரு அபாயகரமான அம்சம் தானே?\n//ஆகா... ஆகா.. சகோ சொந்தச் செலவிலை சூனியம் வைக்கிறாரு. எழும்பூர், தாம்பரம் கடற்கரையடி என்றெல்லாம் சொல்லி தான் எந்த ரயிலில் போறார் என்பதை குறிப்பால் சொல்லுகிறார். சேட்டை ரசிகர்கள், வாசகர்கள் இப்பொழுதே புறப்பட்டு விடுவார்கள். யார் இந்தச் சேட்டைக்காரன் என்று அறிய. பார்த்து சகோ, நாளைக்கு காலையிலை ஸ்டேசன் புல்லா தேடி அலையப் போறாங்க நம்மாளுங்க.//\nயாருக்கு அவ்வளவு நேரம் இருக்கிறது சகோதரம்? எனக்குத் தெரிந்த சென்னைப்பதிவர்கள் பலரும் ஒருநாளைக்கு இருபத்திநான்கு மணிநேரம் போதாது என்று ஓடியோடி உழைக்கிறவர்கள் அன்றி பெரிய நிறுவனங்களில் பெரும்பொறுப்பு வகிப்பவர்கள். அவர்களுக்கு சேட்டையின் எழுத்தைப் பிடிக்கும்.\nஇதுதவிர, யார் சேட்டை என்ற ஆராய்ச்சி செய்யுமளவுக்கோ, துப்பறியுமளவுக்கோ இங்கிருக்கிற பதிவர்களுக்கு ஓய்வுமில்லை; எண்ணமுமில்லை. அப்படித் துப்பறிய முனைபவர்களுக்கு வேறு வேலை இல்லை என்றுதான் பொருளாகும்.\n//நிஜம்! பதிவு தன் வாவில் தினம் தினம் கண்டவற்றை, கடந்து போன ரயில் பயண அனுபவங்களைச் சுவையாகவும் சுவாரசியாமாகவும் சொல்லிச் செல்கிறது.//\nதினசரிப் பயணங்களில் திரளும் அனுபவங்களின் ஒரு துளியே இது சகோதரம்!\n//சகோ பதிவுக்குச் சம்பந்தமில்லாத ஒரு சின்ன question. ரயில் பயணங்களிலை உங்களுக்கு ஒரு சேட்டைக்காரி இன்னமும் மாட்டலையா? யாரோ ஒருவர் உங்களைப் பார்த்து அடிக்கடி புன்னகைப்பதாக அறிந்தேன். உண்மையா? ச்ச்..........சும்மா ஒரு கிண்டலுக்கு கேட்டேன்.//\nஎன்னைப் பார்த்துப் புன்னகைக்கிறவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம். ஆம், பெண்கள், இளம்பெண்கள் உட்பட நிறையவே இருக்கிறார்கள். காரணம், நான் பலருக்கு இரயில் சினேகிதன்! :-))\nமிக்க நன்றி சகோதரம், வழக்கம்போல உங்களது தாராளமான பின்னூட்டங்கள் என்னை நெகிழ்விக்கின்றன. :-)\nமுன்னாள் நினைவு வந்து போனது நண்பா பகிர்வுக்கு நன்றி!//\nமிக்க மகிழ்ச்சி நண்பரே! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)\nசேட்டை அண்ணன் செம சீரியசா ஒரு பயணக்கட்டுரை போட்டிருக்கார் போல,,//\nஆமாம் தல, மொக்கை கொஞ்சம் ஓவராயிட்டுதே! ஒரு மாறுதலுக்காக.....\n//வெரிகுட் சைக்கலாஜிக்கல் சர்ச்//\nதன்னிச்சையாக எழுந்த கேள்வி அது!\n//70 சதவீதம் பேர் இந்த சராசரிகள் தான்//\nஇருக்கலாம். என் கணக்குப் படி சற்றுக் குறைவுதான் என்று எண்ணுகிறேன்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல...!\nவருகைக்கும் கருத்துக்கும்மிக்க நன்றி நண்பரே! :-)\nதண்டநாளங்கள் உங்கள் ரத்தநாளங்களைப்போல் என்பதை அருமையான பதிவாக்கியுள்ளீர்கள்.தலைப்பே ஒரு வரி ஹைக்கூ கவிதையைப்போல் அமைந்து விட்டது.அருமை. :)//\nஎனக்கு மட்டுமல்ல, சென்னையில் கூட்டுவண்டியை உபயோகிப்பவர் அனைவருக்கும் இது ரத்தநாளம் போன்றதே! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே! :-)\nதினசரி ரயில் பயணங்கள் - மறக்க முடியாத அனுபவங்கள்!!//\nவாருங்கள் சகோதரி, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! :-)\nநானும் மும்பை'ல நிறைய பேரை மிதிச்சிருக்கேன் மிதியும் வாங்கி இருக்கேன்...//\nஆஹா, நானும் மும்பை இரயில் பயணத்தை அனுபவித்திருக்கிறேன். சென்னையை விட அதில் சுவாரசியம் அதிகம் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். மிக்க நன்றி நண்பரே! :-)\nஇது எலக்ட்ரிக் ட்ரெயினா எலக்கிய ட்ரெயினாண்ணா. சூப்பர்ப்:)) ரியல்லி அமேஸிங் நேரேஷன்.//\nஉங்களுக்குத் தெரியாததா ஐயா? இந்தப் பயணங்களில் கிடைக்கிற செய்திகளில் எதார்த்த வாழ்க்கையின் இயல்பு எளிதாகக் காணக்கிடைக்கிறதே! மிக்க நன்றி ஐயா!\nஎஸ். ராமகிருஷ்னன் கட்டுரை வாசித்த அனுபவம் சேட்டை.\nஒரு நல்ல எழுத்தாளரோட எழுத்துக்களோட எல்லா அம்சமும் இந்த கட்டுரைல இருக்கு சேட்டை.\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து தன்னையும், தன்னை சுற்றியுள்ள சூழலையும் ரசிப்பவர்களால் மட்டுமே, இப்படி எழுத முடியும்.\nவணக்கம் தோழர் சேட்டை,\nகணினியில் நான் இன்றளவும் தத்தக்கா பித்தக்கா. இருப்பினும் நானும் எப்படியோ ஒரு வலையினை ஒப்பேத்தி வருகிறேன். நமக்குப் பிடித்த வலைகளை எப்படி நம் வலை முகப்பில் வைப்பது என்பது தெரியாமல் தவித்து வந்தேன். இப்போது சேட்டைக் காரனும் என் முகப்பில் அடக்கம். பாருங்கள். இனி தொடர்ந்து உங்கள் படைப்புகளோடு பேசுவேன்\nதரமான கட்டுரை சேட்டை, சுகமான வாசிப்பனுபவம்....!\nஎஸ். ராமகிருஷ்னன் கட்டுரை வாசித்த அனுபவம் சேட்டை.//\nஇதற்கு முன்பொருமுறை ஒரு நண்பர் இதையே சொன்னதும், எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். மீண்டும் நினைவூட்டியிருக்கிறீர்கள்.\n//ஒரு நல்ல எழுத்தாளரோட எழுத்துக்களோட எல்லா அம்சமும் இந்த கட்டுரைல இருக்கு சேட்டை.//\nவாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து தன்னையும், தன்னை சுற்றியுள்ள சூழலையும் ரசிப்பவர்களால் மட்டுமே, இப்படி எழுத முடியும்.//\nசுருக்கமாக நம்மைப்போல பாசாங்கின்றி வாழ்கிறவர்களின் இயல்பான வெளிப்பாடு என்று சொல்லியிருக்கலாம் நண்பரே! :-)\n//அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.//\nவணக்கம் தோழர் சேட்டை, கணினியில் நான் இன்றளவும் தத்தக்கா பித்தக்கா. இருப்பினும் நானும் எப்படியோ ஒரு வலையினை ஒப்பேத்தி வருகிறேன்.//\nஉங்களைப் போல பிற திறமைசாலிகள் குடத்திலிட்ட விளக்காக வலையுலகின் கவனத்திற்கு இன்னும் வராமல் இருக்கலாம். ஆனால், இறுதியில் திறமையே வெல்லும் நண்பரே! :-)\n//நமக்குப் பிடித்த வலைகளை எப்படி நம் வலை முகப்பில் வைப்பது என்பது தெரியாமல் தவித்து வந்தேன். இப்போது சேட்டைக்காரனும் என் முகப்பில் அடக்கம். பாருங்கள். //\nஉங்களை ஓராண்டுக்கும் மேலாகப் பின்தொடர்கிறேன் நண்பரே! அதில் எனக்குத்தான் பெருமை. :-)\n//இனி தொடர்ந்து உங்கள் படைப்புகளோடு பேசுவேன்//\nயான் பெற்ற பேறு நண்பரே! இன்னும் எனது படைப்புகளை உங்களைப்போன்ற பன்முகத்திறன் கொண்டவர்கள் வாசித்து ஆதரவளிப்பதே எனக்குக் கிடைத்த பெருமகிழ்ச்சி! மிக்க நன்றி நண்பரே!\nதரமான கட்டுரை சேட்டை, சுகமான வாசிப்பனுபவம்....!//\nபானா ராவன்னா, நல்ல நட்புகளின் தொடரும் ஆதரவே எனது இத்தகைய முயற்சிகளுக்குக் காரணம். அதில் மிக முக்கியமானவர் நீங்கள்...! மிக்க நன்றி!
இளமதியும் - செல்வனும் தெருக்களில் புணரும் நாய்களா? விசிக பிரமுகர் பகீர் ஒப்பீடு! - Times Tamil News\nஇளமதியும் - செல்வனும் தெருக்களில் புணரும் நாய்களா? விசிக பிரமுகர் பகீர் ஒப்பீடு!\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் இளமதி விவகாரத்தை பாமக-வோடு சம்பந்தப்படுத்தி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் எனுமிடம் அமைந்துள்ளது. இதற்கு அருகேயுள்ள கவுந்தம்பாடி எனும் இடத்தை சேர்ந்த செல்வம் என்பவர் அருகே அமைந்துள்ள குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளமதி என்ற பெண்ணை காதலித்து வந்தார். வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் இவர்களுடைய காதலை நிராகரித்தனர்.\nஇந்த செய்தியறிந்த அப்போது திராவிடர் கழகத்தினர் சேலம் மாவட்டத்திலுள்ள காவலாண்டியூர் என்னுமிடத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்தனர். இதனை குறுக்கு வழி மூலம் தெரிந்து கொண்ட இருவீட்டாரும் ஆட்களை குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பினர்.\nஆனால் ஆட்கள் வந்து சேரும் முன்னரே இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அடியாட்கள் அப்பகுதியிலிருந்த 40-க்கும் மேற்பட்டோர் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். திருமணமான அன்றிரவே காதல் ஜோடியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர்.\nஉடனடியாக திராவிடர் கழகத்தினர் அப்பகுதி காவல்நிலையத்திற்கு சென்று நிகழ்ந்தவற்றை கூறி கடத்தப்பட்ட இளம் ஜோடியை மீட்டு தருமாறு புகார் அளித்தனர். இந்த சம்பவமானது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்த சம்பவம் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது "இளமதி மற்றும் செல்வன் ஒரே மில்லில் பணியாற்றி வந்தனர். கடந்த3ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இதனிடையே திராவிட கழக தோழர்கள் இந்த கலப்பு திருமணத்தை நடத்தி வைத்தனர்.\nபாமக மற்றும் கொங்கு மக்கள் இயக்கத்தின் சார்பில் 100 பேர் திருமண ஜோடியையும், அவர்களுடைய உறவினர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் இளமதியை கடத்தி சென்றுள்ளனர். தற்போது வரை இளமதி எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை. பொதுமக்கள் சேர்ந்து காவல்துறையினரிடம் முறையிட்டதால் 18 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். முதலமைச்சர் அதிவிரைவில் இந்த விவகாரத்தில் தலையிட்டு இளமதியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.\nஅக்கட்சியின் துணை பொதுச்செயலாளரான வண்ணியரசு தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவினை மேற்கொண்டுள்ளார். அதாவது, "தெருக்களில் புணரும் மார்கழி மாதத்து நாய்களை பிரம்பெடுத்து வேலைவெட்டி இல்லாமல் விரட்டி அடிக்கும் பொறுக்கிகளை கிராமங்களில் இன்னமும் பார்க்க முடிகிறது. இந்த பதிவுக்கும் கொளத்தூரில் சாதிமறுப்பு செய்த நிகழ்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கூறியுள்ளார்.\nஇந்த சம்பவமானது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 193 பேர் பாதிப்பு || In Chengalpattu district, 193 people were affected by the corona infection inasingle day\nபதிவு: அக்டோபர் 23, 2020 16:22 IST\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 193 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 ஆயிரத்து 63 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 39 ஆயிரத்து 900 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில்4பேர் உயிரிழந்தனர்.\nஇதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 648 ஆக உயர்ந்தது. 1,515 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 170 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 36 ஆயிரத்து 657 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 34 ஆயிரத்து 732 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,314 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 611 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும்4பேர் இறந்துள்ளனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 43 வயதுடைய ஆண், சிறுமாத்தூர் பகுதியை சேர்ந்த 31 வயது ஆண், காவனூர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஆண், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய பெண், ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 99 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 772 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 23 ஆயிரத்து 772 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.\nஇதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்தது. 630 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இன்று மேலும் 1,366 பேருக்கு கொரோனா தொற்று- 15 பேர் உயிரிழப்பு\nகல்லூரிகள் திறப்பு குறித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட 47,209 மையங்கள் தயார் - எம்.பி. ரவீந்திரநாத் பேச்சு
துபாய் கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டியில் அதிரை அணி! - Adirai pirai\nதுபாய் கிரிக்கெட் தொடரில் இறுதி போட்டியில் அதிரை அணி!\nகடந்த இரண்டு மாதமாக துபாயில் நடந்த விளையாட்டில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மற்றும் நமதூரினை சுற்றியுள்ள அதிராம்பட்டினம், மதுக்கூர், காயல்பட்டினம், கடையநல்லூர் மற்றும் சென்னை போன்ற பலமிகுந்த 18 அணிகளுடன் மோதியது.\nஇரண்டு மாதங்களாக விளையாடி வந்த இந்த அணி கடந்த வெள்ளிக்கிழமை (09-01-2014) காலை நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் ஜெஸ்சி XI அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றதால் இறுதி போட்டியில் அதிராம்பட்டினம் அணியுடன் விளையாட தகுதி பெற்றது.\nநாளை வெள்ளியன்று (16-01-2015) காலை இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த அதிரை பாய்ஸ் அணியுடன் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிக்கெட் அணி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுஜராத்தில் கலவரம்!3பேர்கள் பலி மற்றும் 10 பேர்கள் காயம்!\nஅதிரையிலிருந்து சென்னை சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது! அதிரையர் மரணம்!
டில்லி அருகே தொடர்ந்து முகாம் விவசாயிகள் போராட்டம் தீவிரம்| Dinamalar\nAdded : டிச 01, 2020 01:26\nபுதுடில்லி : வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் போராட்டம், ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. டில்லி எல்லையில் முகாமிட்டு, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை அறிவித்தனர். 'டில்லி சலோ' என்ற பெயரில், டில்லியை நோக்கி பேரணி\nபுதுடில்லி : வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் நடத்தும் போராட்டம், ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. டில்லி எல்லையில் முகாமிட்டு, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை அறிவித்தனர். 'டில்லி சலோ' என்ற பெயரில், டில்லியை நோக்கி பேரணி மற்றும் போராட்டத்தை அறிவித்தனர். டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.எதிர்ப்புஇதையடுத்து, டில்லி - ஹரியானா எல்லையில், சிங்கு மற்றும் டிக்ரியில் தொடர்ந்து, ஐந்தாவது நாளாக நேற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅரசு நிர்ணயித்துள்ள புராரி மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.'எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை, டில்லி எல்லையில் போராட்டம் தொடரும்' என, விவசாய சங்கப் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் மற்றும் டில்லி எல்லையில் காஜிபுரில், போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தொடர்ந்து விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் அங்கு குவிந்து வருகின்றனர். இதைஅடுத்து, அங்கு, சிமென்ட் சாலை தடுப்புகள் போடப்பட்டுள்ளன.\nகோரிக்கை : போராட்டம் குறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியதாவது:பேச்சு நடத்துவதற்கு நிபந்தனை விதிப்பதை ஏற்க முடியாது. நாங்கள் இறுதியாகவும், உறுதியாகவும் முடிவெடுத்தே, இந்தப் போராட்டத்தில் களமிறங்கியுள்ளோம். தேவைப்பட்டால், ஆறு மாதங்கள் கூட இங்கு போராட்டத்தை தொடரவும் தயாராக உள்ளோம்.எங்கள் கோரிக்கைகளை ஏற்று, உரிய முறையில் பேச்சு நடத்தாவிட்டால், டில்லி வரும் அனைத்து சாலைகளையும் முடக்கி போராட்டம் நடத்துவோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.\nவைரஸ் பரவும் அபாயம்? விவசாயிகள் போராட்டம் குறித்து, மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதாவது:டி ல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில், கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. இந்நிலையில், டில்லியின் எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர், முக கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியையும் பின்பற்றவில்லை.இதனால், வைரஸ் பரவல் அதிகரிக்கும் அபாயம் அதிகமாகவே உள்ளது. வைரசை பரப்பும் நிகழ்வாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது. தற்போது கடும் குளிரும் நிலவுகிறது.\nஅதனால், உடல்நலம் பாதிக்கும் அபாயமும் உள்ளது. அவ்வாறு பாதிப்பு ஏற்படுவோருக்கு, வைரஸ் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.'வைரஸ் தீவிரம் குறித்து எங்களுக்கு தெரியும். அதைவிட மிகவும் ஆபத்தானதாக, இந்த வேளாண் சட்டங்கள் உள்ளன' என, விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.
எந்தெந்த ராசிக்காரர்கள் எந்தெந்த விஷயத்தில் பலவீனமா இருப்பாங்கன்னு தெரியுமா? | Reasons Why Your Relationships Get Spoilt According To Your Zodiac - Tamil Boldsky\n| Published: Monday, April 23, 2018, 14:20 [IST]\nஉறவுகள் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானவை. தனி மனிதனாக இந்த சமூகத்தில் வாழவே முடியாது. அப்படி இருக்கும்போது, அந்த உறவுகளை சமாளித்து தொடர்ந்து எல்லோரிடமும் அன்பாக பழக வேண்டும் என்பது தான் எல்லோரின் எண்ணமாக இருக்கும். குறிப்பாக கணவன் மனைவி உறவில் பல்வேறு இடர்பாடுகள் தொடரும்போது, சிலர் எவ்வளவு முயன்றும் அந்த உறவை தொடர முடியாமல் போகிறது. அவருக்கு சாதகமாக எந்த ஒரு சூழலும் அமையாமல் போகிறது. இதற்கு காரணம் உங்களுடைய ஜென்ம ராசியாகவும் இருக்கலாம். உறவுகள் நாசமைடைய ராசிகள் எப்படி காரணம் என்று கேட்பவர்களுக்காகத் தான் இந்த பதிவு.\nஒரு தனி நபர் அனுபவிக்கும் எல்லா ஏற்றத்தாழ்வுகளுக்கும் அவருடைய ஜென்ம ராசி காரணமாக இருக்கும். அதே போல் அவருடைய உறவில் விரிசல் ஏற்படவும், இந்த ராசி தான் காரணம். உங்கள் ராசியின்படி உங்களுடைய உறவில் விரிசல் உண்டாவதற்கான காரணங்களை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம். படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் ராசிகளைக் கொண்டு உங்கள் பலவீனங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.\nமேஷம் : மார்ச் 21 - ஏப்ரல் 19\nரிஷபம் : ஏப்ரல் 20 - மே 20\nகடந்த காலத்தைப பற்றி நினைத்துக் கொண்டிருப்பதே உங்கள் கவலை ஆகும். கடந்த காலத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் துணைவரை கஷ்டப்படுத்த நினைக்கிறீர்கள். இதனால் உங்கள் உறவு பாதிப்புக்கு உள்ளாகிறது. வீணான செயல்களில் காலம் கடத்தி, அமைதியான வாழ்க்கையில் சலனத்தை உண்டாக்குகிறீர்கள்.\nமிதுனம் : மே 21 - ஜூன் 20\nஉங்கள் மனது மாறிக் கொண்டே இருக்கும் . ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் மீது உங்கள் பார்வையை செலுத்துவது உங்களுக்கு கடினமாக இருக்கும். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது உங்களுக்கு முற்றிலும் பொருந்தும். இதனால் மட்டுமே உங்கள் உறவு பாதிக்கப்படுகிறது. இதை விட சிறந்த ஒருவர் இருக்கிறார் என்ற எண்ணத்தை நீங்கள் கைவிடும்போது தான் உங்களுக்கு நல்ல காதல் வாழ்க்கை கிடைக்கும். இந்த நிமிடம் உங்கள் கையில் இருப்பதின் மேல் உங்கள் பார்வை இருக்கட்டும். இந்த் நிமிடத்தை சந்தோஷமாக அனுபவியுங்கள்.\nகடகம் : ஜூன் 21- ஜூலை 22\nசிம்மம் : ஜூலை 23 - ஆகஸ்ட் 23\nநீங்கள் சொல்லும்படி தான் எல்லாம் நடக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பதால் மட்டுமே உங்கள் உறவில் சிக்கல் எழுகிறது. உங்கள் யோசனைகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பீர்கள். உங்களைச் சார்ந்தவர்கள் உங்கள் யோசனைப்படி தான் நடக்க வேண்டும் என்று விரும்புவீர்கள் . இல்லையேல், நிலைமை மோசமாகி விடும். உறவுகளுக்கு இடையில் ஒத்துப் போவது எப்படி என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளாமல் இருந்தால் , ஒருநாள் உங்களிடம் எதுவுமே இருக்காது.\nகன்னி : ஆகஸ்ட் 24 - செப்டம்பர் 23\nதுலாம் : செப்டம்பர் 24 - அக்டோபர் 23\nநீங்கள் மிகவும் மென்மையானர் என்பதை சொல்லி அதற்காக உங்களை பாராட்டியே ஆக வேண்டும். சில நேரங்களில் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் இருப்பீர்கள். உங்களை யாரவது கேலி செய்தால் கூட நீங்கள் வேதனைப் படுவீர்கள். உங்கள் உணர்ச்சிவசப்படக் கூடிய குணம் மட்டுமே உங்கள் உறவின் எதிரி. தேவையற்ற இடத்தில் இந்த குணம் சண்டையை இழுத்து விடுகிறது. எப்போதுமே நீங்கள் தாக்கப்படுவதாக எடுத்துக் கொள்வீர்கள். எல்லா நேரத்திலும் உறவுகளை கடினமாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது.\nவிருச்சிகம் : அக்டோபர் 24 - நவம்பர் 22\nஅடுத்தவர் முகத்தில் அடிப்பது போல் இருக்கும் உங்கள் குணம் , யாரையும் உங்களிடம் நெருங்க விடுவதில்லை. நீங்கள் மற்றவரிடம் விரைந்து பழக வேண்டும் . உங்கள் துணைவரை உங்களுக்கு புரிய வைக்க எந்த ஒரு வாய்ப்பையும் நீங்கள் வழங்குவதில்லை. அப்படி வாய்ப்பை வழங்கினாலும், அதனை அவர் பயன்படுத்தும் வரை காத்திருக்காமல் எரிச்சல் அடைவது உங்கள் பண்பு. ஒரு தனி நபராக நீங்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், காதல் வாழ்க்கை என்பது இன்னும் பல நாடகங்களைக் கொண்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.\nதனுசு : நவம்பர் 23 - டிசம்பர் 22\nமகரம் : டிசம்பர் 23- ஜனவரி 20\nஉங்கள் உணர்வுகளை அடக்கத் தெரிந்தவர் நீங்கள். உங்களிச் சுற்றி ஒரு சுவரை எழுப்பிக் கொண்டு இருப்பீர்கள். இதனால் உங்கள் ஆழ் மனதில் உள்ளவற்றை எவராலும் அறிந்து கொள்ள முடியாது. இப்படி செய்வதால் உங்களை யாரும் வேதனைப் படுத்த முடியாது என்று நினைக்கிறீர்கள். ஆனால் மறுபுறம், நீங்கள் வெளிப்படையாக இல்லாத காரணத்தால் உங்கள் உறவில் சிக்கல் ஏற்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் உங்களிடம் இருந்து வெளிக்கொணர உங்கள் துணைவர் மிகவும் கஷ்டப்பட வேண்டியதாக இருக்கும். இதனால் அவரிடம் நீங்கள் பல விஷயங்களை மறைக்க நேரலாம்.\nகும்பம் : ஜனவரி 21- பிப்ரவரி 18\nமீனம் : பிப்ரவரி 19- மார்ச் 20\nகடலை போடுவதும் கலகலப்பாக இருப்பது வாழ்க்கையில் எல்லா நேரத்திலும் சாத்தியப்படாது. உங்கள் கலகலப்பான குணம் உங்கள் துணைவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கலாம். எல்லோரிடமும் அரட்டை அடிக்கும் சுபாவம் உள்ளவராக நீங்கள் இருப்பீர்கள். இது ஒரு நல்ல குணமாக இருந்தாலும், அளவுக்கு மீறும்போது குழப்பத்தை உண்டாக்கும். இதனால் ஏற்படும் கவனக்குறைவால் உங்கள் உறவில் விரிசல் உண்டாகலாம். இவ்வளவு வெளிப்படையாக இருப்பதை உங்கள் துணைவர் விரும்பாமல் இருக்கலாம்.\nRead more about: insync zodiac ஜோதிடம்\nAre you disappointed that everything you try hard to save up on your relationship always seems to be going unnoticed or things are not working in favor of you?\nStory first published: Monday, April 23, 2018, 14:20 [IST]
ஆளுந்தரப்பு 2/3 பெரும்பான்மை பெற ஐ.தே.க தலைமையின் இரகசிய திட்டம்: மனோ கணேசன் அம்பலப்படுத்தினார்! - Onlinejaffna Sri Lankan Tamil News Web Site\nHome › ஆளுந்தரப்பு 2/3 பெரும்பான்மை பெற ஐ.தே.க தலைமையின் இரகசிய திட்டம்: மனோ கணேசன் அம்பலப்படுத்தினார்!\nஆளுந்தரப்புடன் ரணில் தரப்பு இரகசிய இணக்கப்பாடு ஏற்படுத்தி வருவதை அந்த கூட்டணியின் முக்கிய பங்காளிக்கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்.\nஇது தொடர்பில் மனோ கணேசன் இன்று முகப்புத்தகத்தில் வெளியிட்ட குறிப்பில்,\n“யூஎன்பி கட்சிக்குள் புதிய இரத்தம் பாய்ச்ச கட்சி தலைமை தயாரில்லை போல் தெரிகிறது.\nஇக்கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாலும், “எடுத்தேன், கவிழ்த்தேன்” என்ற முதிர்ச்சியற்ற அரசியலை எப்போதும் செய்யாததாலும் இது பற்றி நாமும் அக்கறை கொள்ள வேண்டியுள்ளது.\nஇல்லா விட்டால் “சரிதான் போங்கடா” என நாம் சும்மா இருக்கலாம்.\nஇப்போ பார்த்தால் இவர்களில் சிலர் இரகசியமாக ஆளும் கட்சியுடன் உறவாடி அரசுக்கு 2/3 பெரும்பான்மை பெற்றுத்தர திட்டமிட்டு செயல்படுவதாகவும் தெரிகிறது.\n“பங்காளி சிறுபான்மை கட்சிகள் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். நாம் ஐதேகவாக தனித்து போட்டியிடுகிறோம்” என நவின் திசாநியக்க சொல்லி பார்க்கிறார். “அப்படி சொல்ல வேண்டாம்” என நவீனை திருத்த ரணில் விக்கிரமசிங்க தயாராகவுமில்லை.\nஎல்லோரும் தனித்து போட்டியிட்டால், இது ஆளும் கட்சிக்கு 2/3 சுலபமாக பெற்று தரும். ஆகவே இது ஆளும் கட்சியின் இரகசிய திட்டம்.\nஇப்படி யூஎன்பிகாரர்கள் இரகசியமாக உறவாடுவது, செயற்படுவது, சில சிறுபான்மை பங்காளி கட்சிகள் மத்தியில் ஆளும் கட்சியுடன் பகிரங்கமாகவே பேசுவோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதை என்னால் உணர முடிகிறது.“ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த ஜனாதிபதி தேர்தலின் முன்னதாகவும், சஜித் பிரேமதாசவை தோற்கடிக்க பெரமுன தரப்புடன், ஐ.தே.க தலைமை இரகசிய பேச்சில் ஈடுபட்டு வந்தது தொடர்பில், அப்பொழுது தமிழபக்கம் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்ணியின் அதிகாரத்தை அடக்கினேன் –7- Tamil Sex Stories\nஅந்த இரவு இருவரும் இருக்க கட்டி அனைத்து தூங்கினோம் இரவு ஒரு மணி போல தூக்கம் தெளிந்தது எழுந்து பாத்ரூம் போய் வந்து கட்டிலில் உட்கார்ந்தேன். பேட்ஷிட் இழுத்துப் போட்டு அவ அழகை ரசித்தேன் அப்போது என் மனதில் தோன்றியது தூக்கத்தோடு தூக்கம இவள ஒத்து விடலாம் என்று தோன்றியது சிறிது பயம் வந்தது. மாட்டி கொண்டால் இதுவும் போய்விடும் என்று பயந்தேன்.\nயோசித்து ஒன்றை இழந்தால் தான் ஒன்றை அடைய முடியும் என எண்ணி அவள் அருகில் சென்று அவளை கட்டி பிடித்து முலைய வருடினேன் கசக்க ஆரம்பித்தேன். அவள் ஆசையை துண்ட வேண்டும் என்று நினைத்து என் சுன்னிய அவ புண்டை இதழ்களில் தேய்த்துக் கொண்டே இருந்தேன்.\nதீடீரென அவள் தூக்கத்தில் உள்ளே விடு டா என சொன்னால் நானும் ஆர்வம் தாங்காமல் என் தடி சுன்னிய உள்ளே சொருகினேன். அவள் கத்திக் கொண்டே கண் திறந்து என்னை பார்த்து டைய் என்னடா பண்ற உன்னை பக்கத்தில் படுக்க தான சொன்னேன்.\nஅதுக்குன்னு என்னை ஒத்துறுவியா என சொன்னால். அப்போதும் என் சுன்னி அவ புண்டைல சொறுகிட்டு தான் இருந்தது நான் அவளிடம் அண்ணி நான் உங்கள் புண்டைய தடவினேன். நீங்க தான் உள்ள விடு என சொன்னிங்க அதுக்கு அவ டைய் நான் உங்க அண்ணன் நினைத்து சொன்னேன் டா அந்த ஆளும் இப்படி தான் பண்ணுவான் அவள் எழ முயன்றாள்.\nநான் அவளை இழுத்துக் என் சுன்னிய உள்ளே தள்ளி அவள் வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுத்தேன். அவள் கண்ணை பார்த்தேன் அவள் சுகத்தில் முனக ஆரம்பித்தாள். நானும் இது தான் சமயம் என நினைத்து அவள் புண்டையில் ஒக்க ஆரம்பித்தேன்.\nஅவள் சுகத்தை அனுபவித்து கொண்டு டைய் வேணாம் டா பிலிஸ் டா என கெஞ்சி கொண்ட சுகத்தை அனுபவிக்க அவள் சொல்வதை எதுவும் கேட்காமல் அவளை அனுப வைத்தேன். கஞ்சி வர மாதிரி இருந்தது உடனே எடுத்து அவ தொப்புள் குழியில் விட்டேன்.\nஅவள் என்னை மெல்லாமாக அடித்தால் நான் தான் வேண்டாம் என்று சொல்லி கொண்டே இருந்தேன். அப்படியும் நீ நினைத்த முடித்து விட்டேய டா என கீள்ளினால். அவள் கண்ணில் கண்ணிர் வர நான் அதை தொடைத்து பிரியா இங்கே பாரு உனக்கு ஆசை இருந்ததால் தான் நீ எந்திரிச்சு போகல இல்லான நீ போயிறுப்ப இங்க பாரு இங்கே நாம் மட்டும் தான் ஐ லவ் யூ பிரியா என அவளை பார்த்து சொன்னேன்.\nஅவள் டைய் இது கேட்ட கனவு நினைத்து மறந்து விடலாம் டா என சொல்ல. நான் மறக்க மாட்டேன் என்று சொல்ல அவளை இழுத்துக் கட்டி பிடித்து எனக்கு நீ வேணும் நாம் ஜாலியாக இருக்கனும் என்று சொல்ல அவளிடம் டீல் போட்டேன்.\nஉனக்கு ஆசை இருந்ததால் சொல்லு நான் உனக்கு காதலனாக இருப்பேன் இல்லைன்னா நான் ஒன்னும் இல்லதவன் போல் உன் நினைவுகள் வாழ்வேன். இதை யார்கிட்ட சொன்னால் நான் தூக்கு மாட்டி கொண்டு செத்துறுவேன் என்று சொல்லி நான் தூங்கினேன்.\nஅவள் யோசனையில் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.காலை என்னை எழுப்பினாள். அவசரமாக அவள் என் டிரஸை என் கையில் தந்து உன் ரூமுக்கு போடா என சொல்ல நான் எதற்கு அண்ணி என கேட்க. அவள் டைய் எங்க வீட்ல இருந்து வராங்க ஒழுங்காக ரெடியாகி ஆபிஸ் போ என்று சொல்லி என் ரூமுக்கு அனுப்பி வைத்தாள்.\nநான் குளித்து முடித்து விட்டு வெளியே வந்தேன் அப்போது அவளது குடும்பம் வந்தது அவ அப்பா அம்மா தங்கை என அனைவரும் இருந்தனர். எல்லோரும் பார்த்து பேசி ஆபிஸ் டைம் ஆயிடுச்சு என கிளம்ப பிரியா என்னிடம் டைய் ராம் கார் எடுத்து ஈவ்னிங் எங்க வீட்டுக்கு வந்துவிடு உன் அப்பா அம்மா எல்லாம் அங்கே வராங்க.\nநீயும் வா நைட்டு அங்கே தங்கிவிடு என சொல்ல நான் சரி என சொல்லி கிளம்பினேன். அவள் தங்கை அபியோ வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தால் நானும் அதை பார்த்து கிளம்பினேன்.\nவேலை முடித்து அவள் வீட்டுக்கு சென்றேன் இரவு7ஆயிவிட்டது உள்ளே சென்றதும் அவள் அப்பா வாங்க மாப்பிள்ளை உங்க ரூம் மேல இருக்கு போங்க என அனுப்பி வைத்தார். உள்ளே சென்று என் ரூமில் பை வைத்து மேலே மொட்டை மாடிக்கு சென்றேன் அங்கே நான் வானத்தை பார்த்து கொண்டு இருக்க அபி வந்தால்.\nவந்து என்னை பார்த்து என்ன மாமா என்ன பார்த்து பேச கூட மாட்டிங்கிறங்க என்னை பிடிக்கவில்லையா மாமா என்று கேட்டால். நான் அதற்கு அதெல்லாம் ஒன்னும் இல்லை அபி உன்னை பார்த்த பேச்சே வரவில்லை அது மில்லாமல் உனக்கும் எனக்கும் கல்யாண பேச்சு எடுத்ததிலிருந்து வேறு மாதிரி ஆயிடுச்சு.\nஅதான் மா ஆமாம் என்னை உனக்கு பிடிச்சு இருக்கா இல்லை வீட்ல சொல்றாங்க அப்படின்னு ஓகே சொன்னியா என கேட்க. அவள் அதற்கு அதெல்லாம் இல்லை மாமா அக்கா கல்யாணத்தபா பார்த்த போதே உங்கள் மேல் ஆசைதான் எங்கள் வீட்டில் என் கல்யாண பேச்சு எடுக்கும் போது நான் தான் ராம் மாமா என சொன்னேன்.\nஅக்கா இருப்பதால் எந்த பிரச்சினையும் வராது என்று சொல்லி எங்கள் வீட்டில் சம்மதிக்க வைத்தேன். ஆமாம் மாமா உங்களைப் பற்றி எனக்கும் தெரியாது என்னைப் பற்றி உங்களுக்கு தெரியாது நாம் இனிமேல் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லி என் போன் வாங்கி அவள் நம்பருக்கு கால் செய்தால்.\nஎன் போனை என் கையில் தந்து இதுதான் என் நம்பர் சேவ் பண்ணி கொள்ளுங்கள். என் போனில் கேமரா ஆன் செய்து என் பக்கத்தில் வந்து நின்று செல்ப்பி எடுத்தாள் நல்ல என்னை அனைத்து கொண்டு எடுத்தால் நல்லா ஜாலியா எடுத்தோம். அதை அவள் நம்பருக்கு அப்புறம் அனுப்ப சொன்னால் அப்படியே ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தோம்.\nசிறிது நேரம் கழித்து அப்படியே கீழே சென்றோம் முதலில் அவள் சென்றால் பின் நான் சென்றேன். அப்போது அவள் அம்மா எங்களை பார்த்து சிரித்தாள் நான் கண்டுகொள்ளாத மாதிரி சென்று டிவி பார்த்துக் கொண்டு இருந்தேன்.\nசிறிது நேரம் கழித்து சாப்பிட கூப்பிட்டாங்க எல்லாம் ஒன்றாக சாப்பிட்டு முடித்தோம். பிரியா அவள் அம்மா நான் மூவரும் டிவி பார்த்துக் கொண்டு இருந்தோம். அப்போது அவள் அம்மா பிரியாவிடம் பிரியா நாளை என்ன ஸ்பெஷல் புது மாப்பிள்ளை வேர இருக்கார் என்று கலாய்க்கும் மாதிரி பேசினால்.\nநான் என்ன அத்தை என கேட்க அவ அதெல்லாம் இல்லை மாப்பிள்ளை அபியும் நீங்க அவ்வளவு நேரம் தனிய இருந்தது பார்த்து தான் நான் அதற்கு அதெல்லாம் ஒன்னும் இல்லை. அத்தை அபிக்கு டுவுட் எனக்கு அவளை பிடித்து இருக்கா இல்லை என நாங்கள் பேசும் போது அண்ணி நேற்று நடந்ததை நினைத்து இருப்பாள்.\nபோல ஒரு விதமான கவலையில் இருந்தாள் போல அவள் அம்மா என்னை பார்த்து என்ன மாப்பிள்ளை நீங்க என்ன சொல்றீங்க நான் பிடித்து இருக்கு என்று சொன்னே என்று அவளிடம் சொன்னேன். அவளும் எதோ சொல்லி எழுந்து போய் விட்டாள்.\nநான் அண்ணியை பார்த்து அண்ணி சாரி அண்ணி என சொல்ல அவள் என்னாடா நைட்டு என்னை முடிச்சிட்டு இப்ப ஒன்னும் தெரியாது போல. சாரி கேக்குற அண்ணி என்னை மன்னித்து விடுங்கள் எதோ இதுல பன்னிட்டன் என்ற சொல்ல அவள் கண்ணை கசக்கி கொண்டே ரூமுக்கு ஓடினால்.\nநானும் என் ரூமுக்கு சென்றேன் அப்போது அண்ணி மொபைலுக்கு சாரி என் மெசேஜ் அனுப்பினேன். அப்படியே இன்னொரு மெசேஜ் வந்தது யாரு னு பார்த்தா அபி மாமா போட்டோ அனுப்பு மாமா என கேட்க நானும் அனுப்பி வைத்தேன்.\nஎன் அவ்வளவு அர்ஜன்ட் அதற்கு அவ போன் வால்பேப்பர் நம்ம ஜோடியாக இருக்க போட்ட வைத்த நல்ல இருக்கும் என்று தான். சரி அபி நாளை பேசுவோம் குட் நைட் என சொல்லி படுக்க அண்ணி நியபகம் வர நேற்று இரவு நடந்த சம்பவம் என் மனதில் ஒடியது அதை நினைத்து கொண்டே தலையனை கட்டி பிடித்து தூக்கினேன்.\nநன்றாய் தூங்கி காலை எழுந்து வந்து பார்த்தால் எங்கள் விட்டிருந்தது வந்து இருந்தார்கள். எல்லாம் பேசி அப்படி இப்படி என ஈவ்னிங் வந்தது எல்லாம் பேசி எங்கள் வீடு ஆளுங்க கேலம்ப நான் அண்ணியிடம் கிளம்பளம் என கேட்க.\nஅவள் அம்மா சரி கிளம்புங்க நான் அடுத்த வாரத்திற்கு மேல் வந்து பார்க்கிறேன் என்று சொல்லி என்னை வழி அனுப்ப அபி போன் பண்ணு என சிக்கனல் காட்டினால். மேலே மொட்டை மாடியில் இருந்து என்னை பார்த்து பேளியங் கிஸ் கொடுத்தால்.\nநான் கொஞ்சம் அதிர்ச்சி ஆயிட்டேன் அப்பறம் அப்படியே சமாளித்து விட்டு கிளம்பினோம். வண்டியில் இருவரும் பேசிக் கொள்ளவில்லை அவள் முகம் கோபம் கழந்த சொர்கத்தில் இருந்தது நானும் விட்டுக்கு போய் பேசிக்கொள்ளாலம் என விட்டேன்.\nவீடு வந்தது அவள் உள்ளே சென்றால். நான் அவள் கையை பிடித்து என் அண்ணி இன்னும் கோவம் போகலயா அவள் அதற்கு நீ கொஞ்சமாக செய்து இருக்கிறாய். உன் மேல் கோபம் போக இது பற்றது வேறு என் தங்கச்சி கிட்ட ஜோல்லு விட்ட என சொல்லி அவ ரூமுக்கு சென்றாள்.\nஎன் மனதில் இவளை எப்படி சமாளிப்பது என்று யோசித்து கொண்டே இருந்தேன். அவள் என் ரூம் வந்து டைய் அந்த சம்பவத்தை மறந்து விடலாம். இனிமேல் நீ ஒழுங்கா இரு எல்லாம் என் தப்பு தான் நான் உனக்கு அப்படிலாம் செய்து இருக்க கூடாது.\nஎப்படி டா உனக்கு இந்த மாதிரி ஆசை லாம் வந்துச்சி என கேட்க நான் சொன்னேன். நிறைய கதைகள் அப்புறம் செக்ஸ் கேம் எல்லாம் இன்ஸ்ட் என சொல்ல. அவள் எப்படியாலம் கெட்டுப் போலம் என அனைத்தும் தெரிந்தது வைத்து இருக்கிறாய் ஒழுங்காக இரு என்று சொல்லி அவள் ரூமுக்கு சென்று விட்டால்.\nஎனக்கு இருந்த வேறிக்கு அவளை இழுத்து போட்டு கன்னத்தில் நாலு அறை விட்டு ஒத்து இருப்பேன். அப்படியே நான் பேட்ல படுத்து இருக்க அபியிடம் இருந்து போன் வந்தது அவளிடம் பேசி கொண்டு இருந்தோம். அப்படியே போன் வைத்து பிரியா ரூம் போனேன் போய் பார்த்தால் கதவு லாக் போட்டு விட்டு தூங்கி விட்டாள்.\nநானும் எனது ரூமுக்கு சென்று தூங்க முயன்றேன் ஆனால் எனக்கு காம ஆசை அதிகமாக ஆனாது. உடனே நந்தினிக்கு போன் செய்தேன் அவளிடம் நாளை பீரியா என கேட்க அவள் பிஸி என சொல்ல நான் அடுத்து பவிக்கு போன் செய்தேன்.\nஅவளிடம் நாளை பீரியா என கேட்க அவள் அதற்கு என்னிடம் என்னடா காஜி அதிகமாக ஆயிற்று போல என சொன்னால். நான் ஆமாம் டி எனக்கு எவளை யாது தூக்கி போட்டு கன்னத்தில் அடிச்சி ஓக்கணும் டி என சொல்ல. அவ அதற்கு சரி நான் பிஸி டா நாளை நீ ஒரு3மணிக்கு நான் அனுப்புற லோகேஷன்க்கு போ ஒருத்தி வருவா என்ஜாய் பண்ணு டா எந்த டீடலாயும் கேட்க கூடாது சரியா என சொல்ல.\nநானும் சரி என சொல்லி போன் வைத்தேன். என் மனதில் தோன்றியது. இவ நம்மகிட்ட காசும் வாங்கல நல்ல குடும்ப பெண்கள் வரவேக்கிற எப்படி என நினைத்து தூங்கினேன். அடுத்த நாள் என் வேலையை ஆஃபிஸ் முடித்து ஒரு இரண்டு மணிக்கு அவள் சொன்ன ஓயோ ரூமுக்கு ஒரு பேக்கேட் காண்டம் வாங்கி சென்றேன்.\nஅங்கு கியர் கோடு காண்பித்ததும் ரூம் சாவி தந்தார்கள் நானும் ரூமுக்கு சென்று வேயிட் பண்ண ஒரு போன் வந்தது புதிய நம்பர் நான் ஆட்டேன் பண்ண. அங்கிருந்து ஹாலோ சார் நான் தான் பவி அனுப்பி வைத்த பெண் நீங்க வந்து விட்டர்களா என கேட்க நான் வந்துவிட்டேன் என சொல்ல.\nஅவள் சரி நான் கீழே இருக்கேன் என சொல்ல நான் ரூம் நம்பர் சொல்ல அவ வருகிறேன் என்று சொல்லி கட் செய்தால். நானும் குறல் நன்றாக இருக்கு இன்று வைச்சி செய்யலாம் என நினைத்து என் போனை நோன்டி படுத்துக் கொண்டு இருந்தேன்.\nகதவை திறந்து அவள் உள்ளே வந்து முதுகை காட்டி கதவை மூடிவிட்டு திரும்ப நான் அவளை பார்த்து ஷாக் ஆயிட்டேன். அவளும் என்னை பார்த்து ஷாக் ஆகா இருவரும் நீயா என மாறி மாறி கேட்க. அவள் தான் கல்லூரி நண்பனின் பழைய காதலி திவ்யா அவள் என்னை பாத்து நீ எப்படா கால்பாய் ஆன என கேட்க.\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை அவளிடம் என்னடி சொல்றே பவி கிட்ட எதுனா கேட்பேன். அவ தருவ எந்த காசும் வாங்க மாட்ட நானும் ஜாலியாக இருப்பேன்ஒ அதுக்கு தான் அன்று காண்டம் வாங்கி சென்றயா என கேட்க. நான் அதெல்லாம் இல்லை அது வேற என சொல்லி ஆமாம் நீ என்னடி இப்படி வந்துத்த இதுவரை எத்தனை டைம் என கேட்டேன்.\nஅவள் அதற்கு இதுதான் பஸ்ர்ட் டைம் என் லக் லவ் பண்ணதும் சரில கல்யாண பன்னாதும் சரியில்லை என்னடி என கேட்க. உன் பிரென்ட்க்கு சுன்னிய தூக்காது ஒரு நாள் பாத்து தான் அவன் வேணாம் என நினைத்து என் மாமா வ கல்யாணம் பன்னன் அந்த ஆளு நல்லாதான் இருந்தான்.\nஅப்புறம் ஆக்ஸிடென்ட் ல அவர்நிரம்பு கட் ஆயிடுச்சு எனக்கு வேற அரிப்பு தாங்கல அதுதான் அந்த பவித்ரா பற்றி கேள்வி பட்டேன். அவன் என் ஆபிஸ் தான் அவ கிட்ட சொன்னேன் அவ தான் அனுப்பி வைத்தாள். சரி வந்த வேலையை பார்ப்போம் அ என கேட்க அவள் சொகமாக ஆயிட்டால் நான் அவளை தொடை மேல் கை வைத்து ஆழுகையை துடைத்தேன்.\nஅவளை என் தோல் மேல் சாய்ந்து கொண்டு அவளை தட்டி கொடுக்க. அவள் என் முகத்தில் முகம் வைத்து என்னை கட்டி பிடித்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தால். நன்றாக உறிய நான் அவள் புடவையை கீழே இறக்கி ஜாக்கெட் ஓட கசக்கி பிழிந்து எடுத்துக் இருக்க.\nஅவள் உதட்டில் முத்தம் கொடுத்து கொண்டே என் பெண்ட் கழட்டி ஜட்டிக்குள் இருந்த சுன்னிய கையில கசக்கி பிழிந்து எடுத்தால். நான் அவள் ஜாக்கெட் கழட்டி போட்டு அவள் பிராவை இழுத்துச் கழட்டி அவள் கல்லு முலைய கசக்க அவள் முலையில் வாய் வைத்து காம்பை பிடித்து இழுத்தேன். அவள் கத்தினாள் அவள் எழுந்து அவள் பாவாடை ஜட்டிய கழட்டி போட்டு விட்டாள்.\nநானும் டிரஸ் கழட்டி விட்டேன் இருவரும் நிர்வாணமாக இருக்க. அவள் என்னை கட்டிலில் தள்ளிவிட்டு என் மேல் ஏறி அவ சூத்து என் வாய் கிட்ட வர அவ என் மேல் உட்கார்ந்து என் சுன்னிய ஊம்ப ஆரம்பித்தாள். நானும் அவள் புண்டை மற்றும் சூத்து ஓட்டையில் விரல் விட்டு நோண்டி கொண்டு இருந்தேன் அவள் புண்டைய நக்கினேன். சிறிது நேரம் கழித்து அவள் எழுந்து என்னிடம் காண்டம் போடலாமா என கேட்க.\nநான் உனக்கு எதுக்கு டி நீ என் செல்லம் என சொல்ல ஆமாம் இதுவரை எத்தனை பேரை அவள் அனுப்பி இருக்கிறாள் என கேட்க. நான் அவள் மற்றும் இன்னொரு ஆண்டி அவ்வளவு தான் என சொல்ல அவ என்னை செக்ஸ் பார்ட்டி கூட்டி செல்கிறேன் என்று சொல்லி.\nநான் இதை செய்ய வைத்தாள் என சொல்ல அவ சரி இப்போ என் புண்டைய கிழி டா என்று சொல்லி என் சுன்னிய அவ புண்டைல விட்டு சொருகினேன். அப்படியே அவள் மேல் ஏறி அவ இடுப்பை பிடித்து கட்டி பிடித்து அவளை வேகமாக ஒக்க ஆரம்பித்தேன்.\nநல்ல குத்துடா என்று அவள் சொல்ல இரண்டு முறை அவள் புண்டையில் கஞ்சியை பீச்சி அடிச்சேன். அப்பறம் இருவரும் கட்டி அனைத்து பேசினோம் டைம் ஆறு ஆக இருவரும் ரூம் காலி செய்து அவள் என்னை அவள் வீட்டில் ட்ராப் பண்ண சொன்னாள்.\nஅவள் என்னிடம் இனிமேல் கால் பாய் வேலை வேண்டாம் டா எதுனா மாட்டிக்க போற என்று சொல்லி அவள் வீட்டு கிட்ட நிறுத்தி இறங்கினால். என்னை பார்த்து ரொம்ப நாள் கழித்து இப்ப தான் நல்ல இருக்கு பேசாமல் காலேஜில் உன்னை லவ் பண்ணி இருக்கனும் என்று சொல்லி போன் செய்றேன் வந்து என்னை ருசித்து ரசித்து விட்டு போடா சொல்ல.\nநான் அதற்கு அடுத்த முறை உன்னிடம் உன்னை கன்னத்தில் அடித்து கொண்டு செய்றேன் பாரு டி இன்றே உன்னை அடித்து இருப்பேன். நீ அழுததால் தப்பித்து விட்டாய் அவள் சரி டா பாய் அடுத்த வாரம் என் பர்த்டே எனக்கு நீ தான் கிஃப்ட் ஆ வேணும் நாள் முழுவதும் என்று சொல்லி அவள் கிளம்பி சென்றால்.\nஅப்போது அந்த பவித்ரா மீது எனக்கு கோவம் ஏறியது என்னை இப்படி செய்துவிட்டாலே என்று நினைத்து அந்த தேவிடியா முண்ட கிடைக்கட்டும் அவ புண்டைய கிழிச்சு மிளாகாய் தூள் போடுறேன் டி என்று நினைத்து வீட்டுக்கு சென்றேன்.\nஅடுத்த பாகத்தில் சில பல திருப்பணிகள் ஒட சந்திப்போம். மேலும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி வணக்கம்.\nThe post அண்ணியின் அதிகாரத்தை அடக்கினேன் –7appeared first on Tamil Sex Stories.
"நான் ஹீலி ஸ்டைலை பின்பற்ற முயற்சி செய்யவில்லை, அதேபோல் ரிஷப் பந்த் தோனியின் ஸ்டலை பின்பற்ற முயற்சி செய்யக்கூடாது" என கில்கிறிஸ்ட் அட்வைஸ் செய்துள்ளார்.\nகிரிக்கெட் உலகில் தலைசிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஆடம் கில்கிறிஸ்ட். அவருக்கு முன் ஆஸ்திரேலிய அணியின் நீண்ட கால விக்கெட் கீப்பராக இருந்தவர் இயன் ஹீலி. இருந்தாலும் நான் ஹீலி ஸ்டைலை பின்பற்ற முயற்சி செய்ததில்லை. அதபோல் ரிஷப் பந்த் எம்எஸ் தோனியின் ஸ்டைலை பின்பற்ற முயற்சிக்கக் கூடாது என கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கில்கிறிஸ்ட் கூறுகையில் ‘‘இந்திய ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு என்னுடைய முதல் ஆலோசனை என்னவென்றால், எம்எஸ் தோனியுடன் ரிஷப் பந்தை ஒப்பிடும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதுதான்.தோனியை பற்றி அவர்கள் உருவாக்கிய பிம்பத்திற்கான அச்சு, அப்போதே சிதைக்கப்பட்டு விட்டது. எனவே, அந்த அச்சில் மீண்டும் ஒரு தயாரிப்பை உருவாக்க முடியாது.
ராமன்குட்டை நிரம்பி குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம்| Dinamalar\nராமன்குட்டை நிரம்பி குடியிருப்புகளில் புகுந்த வெள்ளம்\nசேலம்: ராமன்குட்டை நிரம்பி, குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் வீரகனூரில், 50 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கெங்கவல்லி, 36, மேட்டூர், 28.4, ஓமலூர், 27, ஏற்காடு, 10, காடையாம்பட்டி, சேலம் தலா, 8.5, தம்மம்பட்டி, 6, கரியகோவில், 5, ஆணைமடுவு, 4, ஆத்தூர், 3.4, பெத்தநாயக்கன்பாளையம், 2, சங்ககிரியில், 1.4 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த அக்., 1 முதல், நேற்று\nசேலம்: ராமன்குட்டை நிரம்பி, குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் வீரகனூரில், 50 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கெங்கவல்லி, 36, மேட்டூர், 28.4, ஓமலூர், 27, ஏற்காடு, 10, காடையாம்பட்டி, சேலம் தலா, 8.5, தம்மம்பட்டி, 6, கரியகோவில், 5, ஆணைமடுவு, 4, ஆத்தூர், 3.4, பெத்தநாயக்கன்பாளையம், 2, சங்ககிரியில், 1.4 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த அக்., 1 முதல், நேற்று வரை, சேலம் மாவட்டத்தில், 335.9 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இயல்பான அளவு, 254.1 மி.மீ., இத்துடன் ஒப்பிடுகையில், 32 சதவீதம் அதிகம். தொடர் மழையால், சேலத்தில் நேற்று முன்தினம் இரவு ராமன்குட்டை நிரம்பி, உபரிநீர் வெளியேறியது. இதனால், அழகாபுரம், முத்துகவுண்டர் தெரு, அர்ஜூனன் தெரு, சோனா தெரு, கிரீன்வே சாலைகளில் தண்ணீர் புகுந்து பெருக்கெடுத்து ஓடியது. சாரதா கல்லூரி சுவரில் துளையிட்டு, அதன் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேநேரம், சாரதா கல்லூரி வளாகம் முழுதும், குளமாகவே மாறிவிட்டது.\nகமிஷனர் ஆய்வு: நேற்று காலை, மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ், மழைநீரில் இறங்கி ஆய்வு செய்தார். பின், மின்மோட்டார், பொக்லைன் மூலம், தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது.\nசேலம்: ராமன்குட்டை நிரம்பி, குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. சேலம் மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் வீரகனூரில், 50 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. கெங்கவல்லி, 36,\nவிவசாயிகள் போராட முடிவு\nஜருகுமலையில் தொடரும் மண் சரிவு
எழுவர் விடுதலை: மத்திய அரசு புதிய மனு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்\nHome / இந்தியா / செய்திகள் / எழுவர் விடுதலை: மத்திய அரசு புதிய மனு!\nஎழுவர் விடுதலை: மத்திய அரசு புதிய மனு!\nராஜீவ் காந்தி கொலை வழக்கில், மத்திய\nஅரசு புதிய மனு ஒன்றை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எழுவரை விடுதலை செய்ய ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழக சட்டப்பேரவையில் 2014ஆம் ஆண்டு பிப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியது. இக்கடிதத்தை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், எழுவரை விடுவிப்பது தொடர்பாக ஆளுநர் பரிசீலிக்கலாம் என்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எழுவரை விடுவிக்குமாறு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. சமீபத்தில் பிரதமரை ஆளுநர் சந்தித்து வந்தார். அப்போது எழுவர் விடுதலைத் தொடர்பாக விவாதித்ததாகத் தெரிகிறது.\nஇதற்கிடையில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சேர்ந்த, அப்பாஸ் உள்ளிட்டோர் சார்பில் 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. எழுவர் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அந்த மனு தொடர்பாக பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில் ஆளுநர் பிரதமரைச் சந்தித்த சில தினங்களில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை இன்று (டிசம்பர் 10) தாக்கல் செய்துள்ளது. அதில், எழுவர் விடுதலைக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவைக் காலாவதியான மனுவாக அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.\nமேலும், எழுவர் விடுதலைத் தொடர்பாக மத்திய அரசிடம் எந்த மனுவும் நிலுவையில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது
ஃபத்வா குறித்து ஏ.ஆர். ரஹ்மான் உணர்வுபூர்வமான விளக்கம்- Dinamani\nஃபத்வா குறித்து ஏ.ஆர். ரஹ்மான் உணர்வுபூர்வமான விளக்கம்\nBy DN | Published on : 15th September 2015 03:51 PM | அ+அ அ- | |\nமுஹம்மது நபியின் பெயரைத் தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள 'முஹம்மத்: மெஸென்ஜர் ஆஃப் காட்' என்கிற இரானிய மொழி திரைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அந்தப் படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான், பிரபல இயக்குநர் மஜித் மஜிதி உள்ளிட்டோருக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று ஃபத்வா (மார்க்கத்தீர்ப்பு) விதித்தது.\nஃபத்வா விதித்த ராஸா அமைப்பின் தலைவர் சயீத் நூரி இதுபற்றி கூறும்போது, இந்த தலைப்பை நாங்கள் எதிர்க்கிறோம். படம் பிடிக்கவில்லையென்றால் மக்கள் இந்த தலைப்பை கிண்டல் செய்ய வாய்ப்புண்டு. அது நபிகளுக்கு அவமதிப்பாகும் என்றார். இந்தப் படத்தைத் தடை செய்யவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.\nஇதனையடுத்து இந்த சர்ச்சை தொடர்பாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியதாவது:\n‘நான் இந்தப் படத்தை இயக்கவே தயாரிக்கவோ இல்லை. இசை மட்டுமே அமைத்தேன். அந்தப் படத்தில் பணிபுரிந்ததால் எனக்கு கிடைத்த ஆன்மீக அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லை.\nஒருவேளை அல்லாவை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தால், மனித இனத்துக்கு சேவை செய்வது குறித்த கொள்கையை விளக்கும் முகம்மதின் படத்துக்கு ஏன் இசையமைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன செய்வேன்? நல்லெண்ணத்தில் தான் இரானிய படத்துக்கு இசையமைத்துள்ளேன். இரானிய படம் மனித நேயத்தை வலியுறுத்துகிறது.\nநான் இஸ்லாமிய மார்க்கத்தின் அறிஞர் அல்ல. பாரம்பரியத்தையும், பகுத்தறிவையும் ஒரே சீராக நான் பின்பற்றுகிறேன். மத சுதந்தரம் உள்ள நம் நாட்டில் வாழும் அதிர்ஷ்டம் நமக்குக் கிடைத்துள்ளது. இங்கே அனைவரது நோக்கமும் அமைதியான, வன்முறையில்லாத வாழ்க்கையை வாழ்வதே.\nபிரச்னையைக் கருணையோடும், கண்ணியத்தோடும் கையாள்வோம்; வன்முறையால் அல்ல. உலகில் துன்பத்தால் அவதிப்படுபவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். நபிகளின் இயல்பைப் பிரதிபலிப்பது போல பிரார்த்தனை செய்வோம்’ என்று ரஹ்மான் கூறியுள்ளார்.
அவர் வந்து நின்றால் அறையே கிடுகிடுக்கும்.. கிரிமினல் வழக்கின் கிங்.. விடைபெற்றார் ராம் ஜெத்மலானி! | Senior Advocate Ram Jethmalani isaking of Criminal cases,amentor to be followed - Tamil Oneindia\nஅவர் வந்து நின்றால் அறையே கிடுகிடுக்கும்.. கிரிமினல் வழக்கின் கிங்.. விடைபெற்றார் ராம் ஜெத்மலானி!\n| Published: Sunday, September 8, 2019, 10:07 [IST]\nடெல்லி: பல்வேறு முக்கிய கிரிமினல் வழக்குகள், மோசடி வழக்குகளில் ஆஜராகி மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இந்தியா முழுக்க பிரபலம் அடைந்தவர். அவருடைய கடைசி வழக்கு வரை அவரின் வாதங்கள் இந்தியா முழுக்க கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nமூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். ராம் ஜெத்மலானிக்கு வயது 95. மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி பாகிஸ்தானில் உள்ள சிந்து பகுதியில் பிறந்தார். அதன்பின் இந்தியா - பாக் பிரிவினையின் போது, இந்தியாவில் குடியேறினார்.\n17 வயதில் பாம்பே பல்கலைக்கழகத்தில் இவர் எல்எல்பி பட்டம் பெற்று வழக்கறிஞரானர். இவர் கிரினிமல் வழக்கறிஞராக பயிற்சி பெற்றார்.\nஇவருக்கு இரண்டு மனைவிகள், இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் ராணி ஜெத்மலானி, மகேஷ் ஜெத்மலானி ஆகியோர் முக்கிய வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். இவர் கிரிமினல் வழக்கறிஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். பல்வேறு முக்கிய கிரினிமல் வழக்குகளில் இவர் ஆஜர் ஆகி உள்ளார்.\nஇவர் ஆஜர் ஆன 90% சதவிகித வழக்குகள் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தவை. சில வழக்குகள் பெரிய சர்ச்சையானதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் காலப்போக்கில் இவர் அரசியல் சார்ந்த வழக்குகளில் இவர் ஆஜர் ஆனார். அதன்பின் சொத்து குவிப்பு வழக்கு போன்ற வழக்குகளிலும் ஆஜர் ஆனார்.\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் இவர் ஆஜர் ஆகி செய்த வாதங்கள் நாடு முழுக்க பிரபலம். ஜெயலலிதாவை ஆரம்ப காலத்தில் இவர் தீவிரமாக எதிர்த்து வந்தவர். ஆனால் கடைசியில் அவருக்காகவே ஆஜர் ஆகி கர்நாடகாவில் வாதம் செய்தார்.\nஅவர் கடைசியாக வாதம் செய்த வழக்குகளில் இது மிக முக்கியமான ஒரு வழக்காக பார்க்கப்பட்டது. பல இளம் வழக்கறிஞர்களுக்கு இவரின் வாதங்கள் பெரிய பாடமாக இருந்துள்ளது. இவர் வந்து நின்றாலே கோர்ட் அறையே ஆடும் அளவிற்கு இவர் புகழ்பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையில் கடந்த 2017ல் இவர் வழக்கறிஞர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.இவரின் அரசியல் வாழ்க்கை மிக மிக வினோதமானது. பாஜகவில் சேர்வதும், பின் பாஜகவை எதிர்ப்பதும், பாஜகவினருக்கு எதிரான வழக்குகளில் ஆஜர் ஆவதையும் இவர் வழக்கமாக கொண்டுள்ளார்.\nபாஜக மறைந்த தலைவர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் 1996-2000 வரை மத்திய சட்டத்துறை அமைச்சர் மற்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.அதன்பின் 2004ல் இவர் லக்னோ தொகுதியில் வாஜ்பாயை எதிர்த்து நின்று போட்டியிட்டார். ஆனால் மீண்டும் 2010ல் இவர் பாஜகவில் சேர்ந்தார்.\nராஜ்ய சபா எப்படி\nஅதன்பின் ராஜஸ்தானில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டார். இதனால் இவர் அரசியல் கொள்கைகள் விமர்சனம் செய்யப்பட்டது. அதன்பின் கொஞ்சமா கொஞ்சமாக இவர் அரசியலில் இருந்து தன்னை விலகிக் கொண்டார். அதே போல் அரசியல் வாழ்க்கை, பொது வாழ்க்கை இரண்டில் இருந்தும் ஓய்வு பெற்று வீட்டில் நாட்களை கழித்துக் கொண்டார். இன்னும்6நாட்களில் இவருக்கு பிறந்த நாள் வர உள்ள நிலையில் நிலையில் இன்று காலை வயோதிகம் மற்றும் உடல்நல குறைபாடு காரணமாக காலமானார்.\nSenior Advocate Ram Jethmalani isaking of Criminal cases,amentor to be followed by young lawyers.\nStory first published: Sunday, September 8, 2019, 10:07 [IST]
மதுரை: `பசுமாட்டைப் பிரிந்து தவித்த காளை!' - சொந்த செலவில் கோயிலுக்கு வழங்கிய ஓ.பி.எஸ் மகன் |Jayapradeep bought the cow and donated to temple - Vikatan\nமதுரை: `பசுமாட்டைப் பிரிந்து தவித்த காளை!' - சொந்த செலவில் கோயிலுக்கு வழங்கிய ஓ.பி.எஸ் மகன்\nபசுமாட்டை அழைத்துவரும் ஜெயபிரதீப்\nபசுமாட்டை தனது சொந்த பணத்தில் வாங்கி, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப். இதன் மூலம், காளையும் பசுவும் ஒன்றாகச் சேர்ந்துள்ளது.\nமதுரை மாவட்டம் பாலமேட்டைச் சேர்ந்தவர் முனியாண்டி. பசுமாடு ஒன்றை வளர்ந்துவந்த இவர், கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் ஏதும் இன்றி, வாடிபட்டியைச் சேர்ந்த நபருக்கு தனது பசுமாட்டை விற்றுள்ளார். கடந்த காலங்களில் அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சமலை கோயில் காளை, முனியாண்டியின் பசுமாட்டுடன் பழகி வந்துள்ளது. தினமும் முனியாண்டி வீட்டிற்கு வருவதும், பசுமாட்டோடு சேர்ந்து உணவு சாப்பிடுவதும், தண்ணீர் குடிப்பதுமாக இருந்துள்ளது.\nகோயில் காளை என்பதால் முனியாண்டியும் காளையை எதுவும் செய்யாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று, தனது பசுமாட்டை, சரக்கு வண்டியில் ஏற்றி வாடிப்பட்டிக்கு அனுப்ப முனியாண்டி முயற்சி செய்ய, அதைக் கோயில் காளை தடுத்தது. இத்தனை நாள்களாகத் தன்னுடன் பழகிய பசுமாட்டை பிரிய மனம் இல்லாமல், வண்டியை நகர்த்தக்கூட விடாமல் டிரைவரையும் முட்ட முயன்றது.\nவண்டியை மறித்த கோயில் காளை\nசுமார் ஒரு மணி நேரம் சென்ற பின்னர், சாமர்த்தியமாகச் செயல்பட்டு டிரைவர் வண்டியை எடுக்க, அப்போதும், பசுமாட்டை பிரிய முடியாமல் தவித்த காளை, வண்டியின் பின்னால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிவந்துள்ளது. ஒருகட்டத்தில் ஓட முடியாமல் மூச்சுவாங்கி நின்றது. இச்செய்தி ஊடகங்களில் வெளியாகி மதுரை மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nஇந்நிலையில், இச்செய்தியை அறிந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப், உடனடியாக வாடிப்பட்டியில் உள்ள தன் நண்பர்களைத் தொடர்புகொண்டு, விற்கப்பட்ட முனியாண்டியின் பசுமாட்டை தனது சொந்த செலவில் வாங்கினார். தொடர்ந்து, மாட்டைப் பிடித்துக்கொண்டு நேராகப் பாலமேடு வந்தார். சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் உடன் இருக்க, மஞ்சமலை கோயில் கமிட்டியினரை அழைத்துப் பேசிய ஜெயபிரதீப், பசுமாட்டை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.\nபத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயபிரதீப், ``பசுமாட்டைப் பிரிய மனம் இல்லாமல் காளை மாடு வண்டியின் பின்னால் ஓடிவந்தது அனைவரது மனதையும் உருகச் செய்தது. இச்செய்தி துணைமுதல்வர் கவனத்துக்குச் செல்ல, அவரது உத்தரவின்படி, பசுமாட்டை மீட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளோம்” என்றார்.
ஞாயிற்றுக்கிழமை மார்ச் 21, 2021 |\nஞாயிற்றுக்கிழமை மார்ச் 21, 2021\nதலைப்ப — விஷயம்\nகோல்டன் உரை: கோல்டன் உரை: சங்கீதம் 42 : 11\t•\tநடபடிகள் 17 : 28\n“"என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன். ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்."”\nபொறுப்பு ரீதியான வாசிப்பு: ரோமர் 8 : 1-6\n1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.\n2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.\n3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.\n4 மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.\n5 அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.\n6 மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்.\n1. சங்கீதம் 8 : 1, 4-6, 9\n1 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.\n4 மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.\n5 நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.\n6 உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகைதந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.\n9 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது.\n2. யோபு 12 : 10\n3. சங்கீதம் 56 : 4, 13\n13 நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?\nபிரசங்கி3: 14, 15\n14 தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங் கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங் கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.\n15 முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார்.\n4. லூக்கா4: 14, 15, 38-40\n5. லூக்கா5: 12, 13, 18-25\n6. லூக்கா 8 : 41, 42 (க்கு 1st .), 51-56\n1 கொரிந்தியர் 15 : 50-57\nகேள்வி. — இருப்பது பற்றிய அறிவியல் அறிக்கை என்ன?\nபதில். — வாழ்க்கையில் உயிர், உண்மை, புத்திசாலித்தனம், பொருள் எதுவும் இல்லை. எல்லாமே எல்லையற்ற மனம் மற்றும் அதன் எல்லையற்ற வெளிப்பாடு, ஏனென்றால் கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார். ஆவி அழியாத உண்மை; விஷயம் மரண பிழை. ஆவி உண்மையான மற்றும் நித்தியமானது; விஷயம் என்பது உண்மையற்றது மற்றும் தற்காலிகமானது. ஆவி கடவுள், மற்றும் மனிதன் அவருடைய உருவமும் சாயலும். ஆகவே மனிதன் பொருள் அல்ல; அவர் ஆன்மீகம்.\nபொருளை இழக்க வாழ்க்கை இல்லை, ஆவி ஒருபோதும் இறக்கவில்லை. பொருளுடன் மனதின் கூட்டு என்பது சர்வவல்லமையுள்ள மற்றும் சர்வ வல்லமையுள்ள மனதை புறக்கணிக்கும். இது கடவுள், ஆவியிலிருந்து தோன்றியதல்ல, நித்தியமானதல்ல என்பதை இது காட்டுகிறது. எனவே விஷயம் கணிசமான, உயிருள்ள, புத்திசாலித்தனமானதல்ல. தெய்வீக அறிவியலின் தொடக்கப் புள்ளி என்னவென்றால், கடவுள், ஆவி, அனைவருமே, மற்றும் வேறு எந்த சக்தியும் மனமும் இல்லை - கடவுள் அன்பு, எனவே அவர் தெய்வீக கோட்பாடு.\n3. 372 : 1 (விஷயம)-17\nவிஷயம் உடம்பு சரியில்லை, மனம் அழியாது. மரண உடல் என்பது விஷயத்தில் மனதில் தவறான மரண நம்பிக்கை மட்டுமே. நீங்கள் விஷயத்தை அழைப்பது முதலில் தீர்வு, அடிப்படை மரண மனதில் பிழை - மில்டனால் "குழப்பம் மற்றும் பழைய இரவு" என்று ஒப்பிடப்பட்டது. இந்த மரண மனதைப் பற்றிய ஒரு கோட்பாடு என்னவென்றால், அதன் உணர்வுகள் மனிதனை இனப்பெருக்கம் செய்யலாம், இரத்தம், சதை மற்றும் எலும்புகளை உருவாக்க முடியும். இருப்பது தெய்வீக மனம், அல்லது கடவுள் மற்றும் அவரது யோசனை, இந்த யுகத்தில் தெளிவாக இருக்கும், ஆனால் விஷயம் மனிதனின் ஊடகம், அல்லது மனிதன் தனது சொந்த உருவகமான சிந்தனையில் நுழைய முடியும் என்ற நம்பிக்கைக்கு, தன்னை இணைத்துக் கொள்ளுங்கள் அவரது சொந்த நம்பிக்கைகள், பின்னர் அவரது பத்திரங்களை பொருள் என்று அழைக்கவும், அவர்களுக்கு தெய்வீக சட்டம் என்று பெயரிடுங்கள்.\nமனிதன் கிறிஸ்தவ அறிவியலை முற்றிலும் நிரூபிக்கும்போது, அவன் பரிபூரணனாக இருப்பான். அவனால் பாவம் செய்யவோ, துன்பப்படவோ, விஷயத்திற்கு உட்பட்டவனாகவோ, கடவுளுடைய சட்டத்திற்கு கீழ்ப்படியவோ முடியாது. ஆகையால் அவர் பரலோக தேவதூதர்களைப் போல இருப்பார்.\nநோயின் ஆரம்ப அல்லது மேம்பட்ட கட்டங்களுக்கு குருட்டு மற்றும் அமைதியான சமர்ப்பிப்புக்கு பதிலாக, அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி அதிகரிக்கும். மனதின் வலிமையால் நிராகரிக்க முடியாத ஒரு ஊடுருவும் வலியை நீங்கள் அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கையை நீக்குங்கள், இந்த வழியில் உடலில் வலியின் வளர்ச்சியைத் தடுக்கலாம். கடவுளின் எந்த சட்டமும் இந்த முடிவுக்குத் தடையாக இல்லை. உங்கள் சொந்த பாவங்களைத் தவிர வேறொன்றையும் அனுபவிப்பது பிழை. கிறிஸ்து, அல்லது சத்தியம், மற்ற எல்லா துன்பங்களையும் அழித்துவிடும், மேலும் உங்கள் சொந்த பாவங்களுக்கான உண்மையான துன்பங்கள் பாவம் நிறுத்தப்படுவதால் விகிதத்தில் நின்றுவிடும்.\nநீதி என்பது சட்டத்தின் தார்மீக முக்கியத்துவம். அநீதி சட்டம் இல்லாததை அறிவிக்கிறது. "நான் உடம்பு சரியில்லை" என்று உடல் சொல்லும்போது, ஒருபோதும் குற்றத்தை ஒப்புக் கொள்ளாதீர்கள். விஷயம் பேச முடியாது என்பதால், அது பேசும் மரண மனம் இருக்க வேண்டும்; எனவே ஒரு ஆர்ப்பாட்டத்துடன் அறிவிப்பை சந்திக்கவும். "நான் உடம்பு சரியில்லை" என்று நீங்கள் சொன்னால், நீங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் விரோதி உங்களை நீதிபதிக்கு (மரண மனம்) ஒப்படைப்பார், நீதிபதி உங்களுக்கு தண்டனை வழங்குவார். நோய்க்கு தன்னை ஏதாவது அறிவித்து அதன் பெயரை அறிவிக்க புத்திசாலித்தனம் இல்லை. மரண மனம் மட்டும் வாக்கியங்கள். ஆகையால், நோயுடன் உங்கள் சொந்த விதிமுறைகளை உருவாக்கி, உங்களுக்கும் மற்றவர்களுக்கும் மட்டும் இருங்கள்.\nதெய்வீக மனம் நிர்வகிக்கிறது என்பதையும், விஞ்ஞான மனிதன் கடவுளின் அரசாங்கத்தை பிரதிபலிக்கிறது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வதில் உறுதியாக இருங்கள். எந்தவொரு சட்டத்தின் விளைவாக விஷயம் வலிக்கலாம், வீக்கமடையக்கூடும், வீக்கமடையக்கூடும் என்று பயப்பட வேண்டாம், அது தானாகவே வெளிப்படும் போது, விஷயத்திற்கு வலி அல்லது வீக்கம் இருக்காது. உங்கள் உடல் ஒரு மரத்தின் தண்டு அல்லது நீங்கள் நீட்டிய மின்சார கம்பியை விட பதற்றம் அல்லது காயங்களால் பாதிக்கப்படாது, அது மரண மனதுக்கு இல்லையென்றால்.\n"உடலின் ஒளி கண்" என்று இயேசு அறிவிக்கும்போது, நிச்சயமாக அவர் ஒளி என்பது மனதைப் பொறுத்தது, சிக்கலான நகைச்சுவைகள், லென்ஸ்கள், தசைகள், கருவிழி மற்றும் மாணவர் மீது அல்ல, காட்சி உயிரினத்தை உருவாக்குகிறது.\nமனிதன் ஒருபோதும் உடம்பு சரியில்லை, ஏனென்றால் மனம் உடம்பு சரியில்லை, விஷயம் இருக்க முடியாது. ஒரு தவறான நம்பிக்கை என்பது சோதனையாளர் மற்றும் சோதிக்கப்பட்டவர், பாவம் மற்றும் பாவி, நோய் மற்றும் அதன் காரணம். நோயில் அமைதியாக இருப்பது நல்லது; நம்பிக்கையுடன் இருப்பது இன்னும் சிறந்தது; ஆனால் நோய் உண்மையானதல்ல என்பதையும், சத்தியம் அதன் தோற்றமளிக்கும் யதார்த்தத்தை அழிக்க முடியும் என்பதையும் புரிந்துகொள்வது எல்லாவற்றிற்கும் மேலானது, ஏனென்றால் இந்த புரிதல் உலகளாவிய மற்றும் சரியான தீர்வாகும்.\nவாழ்க்கையும் மனிதனும் இந்த உடலைத் தக்கவைத்துக்கொள்கிறார்கள் என்பதை நாம் அறியும்போது, உடல் நிலைமைகளில் வாழ்க்கை தொடர்ந்து இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. தீமை, நோய் அல்லது இறப்பு இரண்டுமே ஆன்மீகமாக இருக்க முடியாது, மேலும் அவற்றில் உள்ள பொருள் நம்பிக்கை ஒருவரின் ஆன்மீக வளர்ச்சியின் விகிதத்தில் மறைந்துவிடும். பொருளுக்கு நனவு அல்லது ஈகோ இல்லாததால், அது செயல்பட முடியாது; அதன் நிலைமைகள் மாயைகள், மற்றும் இந்த தவறான நிலைமைகள் எல்லா நோய்களுக்கும் ஆதாரமாக இருக்கின்றன. பொருளின் இருப்பை ஒப்புக் கொள்ளுங்கள், மேலும் இறப்பு (எனவே நோய்) உண்மையில் ஒரு அடித்தளத்தைக் கொண்டுள்ளது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். பொருளின் இருப்பை மறுக்கவும், பொருள் நிலைமைகளில் உள்ள நம்பிக்கையை நீங்கள் அழிக்க முடியும்.\nமனிதனின் பொருளை மனித உணர்வை இழக்கும் விகிதாச்சாரத்தில், மனிதனாக எல்லா நிறுவனங்களும், அந்த விகிதத்தில் மனிதன் அதன் எஜமானனாக மாறுகிறான். அவர் உண்மைகளைப் பற்றிய ஒரு தெய்வீக உணர்வில் நுழைகிறார், மேலும் நோயுற்றவர்களைக் குணப்படுத்துவதற்கும், இறந்தவர்களை எழுப்புவதற்கும், அலைக்கு மேல் நடப்பதற்கும் இயேசுவின் இறையியலை நிரூபிக்கிறார். இந்த செயல்கள் அனைத்தும், பொருள் பொருள் என்ற நம்பிக்கையின் மீது இயேசுவின் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தியது, அது வாழ்க்கையின் நடுவராகவோ அல்லது எந்தவொரு இருப்பைக் கட்டியெழுப்பவோ முடியும்.\n8. 151 : 18 (தி)-21\nஇரத்தம், இதயம், நுரையீரல், மூளை போன்றவற்றுக்கு, கடவுளுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. உண்மையான மனிதனின் ஒவ்வொரு செயல்பாடும் தெய்வீக மனதினால் நிர்வகிக்கப்படுகிறது.\n9. 125: 31-2 (க்கு 1st.)\nஆகவே, பொருள் ஒரு மரண நம்பிக்கையைத் தவிர வேறொன்றுமில்லை என்று நிரூபிக்கப்படும், ஒரு மனிதனை அதன் கரிம நடவடிக்கை அல்லது இருப்பதாகக் கூறப்படுவதன் மூலம் பாதிக்க முற்றிலும் போதாது.\nஅறிவியலை ஏற்றுக்கொள்வோம், உணர்வு-சாட்சியத்தின் அடிப்படையில் அனைத்து கோட்பாடுகளையும் கைவிடுவோம், அபூரண மாதிரிகள் மற்றும் மாயையான கொள்கைகளை கைவிடுவோம்; ஆகவே, நமக்கு ஒரே கடவுள், ஒரே மனம், மற்றும் ஒரு பரிபூரணர், அவருடைய சிறப்பான மாதிரிகளை உருவாக்குவோம்.\nகடவுளின் படைப்பின் "ஆணும் பெண்ணும்" தோன்றட்டும். ஆவியின் தெய்வீக சக்தியை உணருவோம், நம்மை வாழ்க்கையின் புதிய நிலைக்கு கொண்டு வருவோம், அழிக்கக்கூடிய எந்தவொரு மரண அல்லது பொருள் சக்தியையும் அங்கீகரிக்க மாட்டோம். தெய்வீக "இருக்கும் சக்திகளுக்கு" நாம் உட்பட்டுள்ளோம் என்று மகிழ்வோம். இருப்பது உண்மையான அறிவியல். வாழ்க்கையின் வேறு எந்தக் கோட்பாடும் அல்லது கடவுள் மாயை மற்றும் புராணக் கதை.
தமிழ் இஸ்லாம்: திருப்பூரில் அனைத்து இயக்கம் ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் 1500 பேர் கைது செய்யபட்டார்கள் !!\nஇதானல் அனைவருரையும் கைதி செய்து. திருமண மண்டபத்தில் வைக்கபட்டு பிறகு மாலை7மணிக்கு பிறகு அனைவரையும். விடுதலை செய்யபட்டது.இதற்கான ஏற்பாடுகளை அனைத்து இஸ்லாமிய இயக்க ஜமாத் கூட்டமைப்பு என்ற பெயரில் ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, இந்த கூட்டத்தில் த மு மு க. திருப்பூர் மாவட்ட தலைவர் ஹாலிதீன் தலைமையில் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.\nபதிந்தது முகவைத்தமிழன் நேரம் 5:14 AM\nLabels: அரசியல், திருப்பூர், முஸ்லிம்
Maalaimalar News: Tamil News family in Nagercoil sells home made Harmonium for decades\nநலிந்து வரும் ஆர்மோனியம் செய்யும் தொழில்\nபதிவு: செப்டம்பர் 09, 2021 11:50 IST\nஆரம்ப காலங்களில் இசைக் கலைஞர்கள், கூத்து பட்டறை, நாடகக் குழுக்கள் மத்தியில் ஆர்மோனியத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.\nஇசைக்கு மயங்காத உயிர்கள் இந்த உலகத்திலேயே இல்லைனு சொல்லலாம். ஒரு மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவன் கூட ஏதோ ஒரு ரூபத்தில இசை பயணப்பட்டுக்கிட்டு இருக்கு. இன்னைக்கு இருக்கிற இந்த பரபரப்பான உலகத்தில பலபேரின் நிம்மதிக்கு காரணமா இருக்கிறது இசை தாங்க. சரிகமபதநிங்கிற இந்த ஏழு ஸ்வரங்களையும் இசையா மீட்கிறதுல ஆர்மோனியத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. பல சிறப்புக்கள் வாய்ந்த ஆர்மோனியத்தை ஒரு குடும்பம் பாரம்பரியமா செஞ்சிட்டு வராங்க. அதுல இப்ப மூணாவது தலைமுறையா இருக்கிற எஸ்.எம். கணேஷ் ஆர்மோனியத்தைப் பற்றி பகிர்ந்திக்கிறார்.\nஎன் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மேட்டுக்கடை தக்கலை தான். நாங்க ஆர்மோனியம் செய்யிற தொழிலை கிட்டத்தட்ட நாலு தலைமுறையா செஞ்சிட்டு வரோம். எங்க கடை பேரு ஸ்ரீ முருகன் ஆர்மோனியம் மற்றும் ஆர்கன் தயாரித்தல். எந்த மிஷின் உதவியும் இல்லாம முழுக்க முழுக்க எங்க உழைப்ப மூலதனமா போட்டு ஆர்மோனியத்தை செஞ்சிட்டு வந்தோம், இப்ப சில இயந்திரங்களை பயன்படுத்துறோம்.\nநாங்க செய்யிற இந்த ஆர்மோனியம் 40, 50 வருசம் வரை கூட உழைக்கிறது. அதனாலேயே சுத்துவட்டாரத்துல எங்க ஆர்மோனியத்துக்கு தனி மவுசு உண்டு. உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா! ஆர்மோனியம் நம்ம நாட்டோட இசைக் கருவியே இல்ல. 1842ல ஒரு அலெக்சாண்ட்ரோ ங்கிற ஒரு பிரெஞ்சு நாட்ட சேர்ந்தவர் கண்டுபிடிச்சார். பிரெஞ்சு காரங்க இந்தியா வரும்போது, எடுத்திட்டு வந்தாங்க. அப்படியே நம்ம இசையோடு ஒத்துப் போய் நமக்குள்ள இணைஞ்சிடிச்சு.\nஆரம்ப காலங்கள்ல இசைக் கலைஞர்கள், கூத்து பட்டறை, நாடகக் குழுக்கள் வெச்சிருக்கவங்க மத்தியில ஆர்மோனியத்துக்கு நல்ல வரவேற்பு இருந்திச்சு. ஒரு சின்ன ஆர்மோனியம் பெட்டி 6,000 ரூபாய்ல இருந்து விற்கிறோம். ஆர்மோனியத்தைப் பொறுத்த வரை ஆக்சஸ் கணக்கு வெச்சு தான் விலை நிர்ணயம் பண்றோம்.\nஎன் தாத்தா, அப்பா, நான் இப்ப அடுத்த தலைமுறையா என் மகன் முத்துராஜாவும் இந்த தொழில்ல இறங்கியிருக்கார். ஒவ்வொரு ஆர்மோனியத்தையும் நாங்க பார்த்து பார்த்து செய்யுறோம். ஆனாலும், எலக்ட்ரானிக் கீபோர்டு வந்ததாலயும், நாடகங்கள் குறைச்சிட்டதாலயும் நாங்க செய்யிற ஆர்மோனியத்துக்கு மவுசு குறைஞ்சிடிச்சி.\nகையால செய்யுற எங்க ஆர்மோனியத்துக்கும் இன்னும் சில ரசிகர்கள் இருக்கத்தான் செய்யிறாங்க. துல்லியமான, தெளிவான சப்தங்களை இதில் வாசிக்கும் போது கிடைக்கிறதா வாடிக்கையாளர்கள் சொல்வாங்க. நாங்க ஆர்மோனியம் செய்யிறது மட்டுமில்லாம வீணை, தம்புரா, அக்கார்டின், ரானோ என வேறு இசைக்கருவிகளையும் பழுது பார்க்கனும்னா கூட நாங்க சரி செய்து கொடுப்போம்.\nஇங்கிருந்து வெளிநாட்டுக்கு போறவங்க எங்க ஆர்மோனியத்த விரும்பி வாங்கிட்டு போவாங்க. ஆர்மோனியம் செய்யும் தொழில்ல இருக்கிறதால ஓரளவு எங்களுக்கு இசை ஞானமும் இருக்கு. அது இருந்தால் மட்டும் தான் ஆர்மோனியத்த டியூன் பண்ண முடியும். இப்ப எனக்கு 70 வயசு ஆகுது, எனக்கு பிறகு என் மகன் இந்த தொழில்ல இருப்பார்.\nஇதே துறையில இருந்திட்டதால வேற வேலை எதுவும் கத்துக்கல. இப்ப வயசும் ஆயிடிச்சு, மத்த தொழிலுக்கு போகவும் விருப்பம் இல்ல. இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கு, பழைய மாதிரி ஆர்மோனியம் இசை பிரியர்கள் மத்தியில பிரபலமாகும், விரும்பி வாங்குவாங்கனு நம்புறேன். எங்களுக்கு அரசு கிட்ட இருந்து எந்த ஊக்கத்தொகையும் கிடைக்கல. அரசு கிட்ட கோரிக்கை வெச்சிருக்கேன், கிடைக்கும்னு நம்புறேன்.\nபுதிய தொழில்நுட்பங்கள் வளர வளர நம் மரபு மற்றும் பாரம்பரியங்கள் அழிவதை தடுக்க முடியாது தான், புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்றாற் போல், அடுத்த தலைமுறையினர் அப்டேட் ஆக வேண்டிய கட்டாய சூழல். இதுக்கு அரசும் தன்னாலான உதவிகளை நலிவடையும் கலைகளுக்கு செய்யனும். இசைக் கருவி செய்யும் கலைஞர்களின் வாழ்வில் சந்தோஷ கானம் கேட்கனும் என்றார்.
தமிழகத்தில் நாளைமுதல் ரேஷன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம் || Raion shop time changing\nபதிவு: ஜூன் 07, 2021 22:21 IST\nகொரோனா நிதியின் 2-ம் தவணையாக ரூ. 2000 வழங்குவதற்காகவும், ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டதாலும், ரேசன் கடை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.\nகொரோனா இரண்டாம் அலையின் பரவல் படிப்படியாக குறைந்து வருவதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், ரேஷன் கடைகள் நாளைமுதல் காலை9மணிமுதல் 12.30 மணிவரை மற்றும் மதியம்2முதல்5மணிவரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nமேலும் ஜூன் 11 முதல் 14 வரை முற்பகலில் அத்தியாவசிய பொருள்களும், பிற்பகலில் கொரோனா நிதியின் இரண்டாம் தவணை ரூ. 2,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ananda Vikatan - 06 November 2013 - ராயலசீமா ராமாயி மிரட்டும்... | irandam ragasiyam drama - Vikatan\nபாத்திரம் புரிந்து பிச்சையிட்டு இருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரா. நாடக ஆசிரியர் வெங்கட் கற்பனையில் கண்ட புதிரான ஒரு கதாபாத்திரத்துக்கு உயிரூட்ட ஐஸ்வர்யாவைத் (நடிகை லட்சுமியின் மகள்) தேர்வுசெய்து, நாடக மேடைக்கு அறிமுகம்செய்துள்ள மகேந்திராவுக்கு 10 மார்க்!\nயு.ஏ.ஏ. குழுவின் 'இரண்டாம் ரகசியம்’ நாடகத்தில் மேடைக்கு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் வரவு ஐஸ்வர்யாவுக்கு, ஒரு பூங்கொத்து.\nஆந்திராவில் 'ஏதோ ஒக்க ஊரு’ ரயில்வே ஸ்டேஷனின் வெயிட்டிங் ரூம்தான் கதைக் களம். அறையின் ஜன்னல் வழியே தெரியும் கனகதுர்கா கோயில். தாமதமாக வந்து கொண்டிருக்கும் ஹவுரா மெயில், காத்திருக்கும் மூன்று பயணிகள், ஒரு டாக்டர், ஹோம்மேக்கர் ஒருவர் மற்றும் ஓர் அரசியல்வாதி, பேச்சுத்துணைக்கு அச்சுப்பிச்சு ஸ்டேஷன் மாஸ்டர். 'இந்த ஸ்டேஷன்ல 'ராயலசீமா ராமாயி’ என்கிற பேய் நடமாடிக்கிட்டு இருக்கு’ என்று ஸ்டேஷன் மாஸ்டர் கேஷ§வலாக ஒரு திரியைப் பற்றவைக்க, வெங்கட்டின் கதை, ஆயிரம் வாலா டப்பாஸாக வெடித்து நிறைய சிரிக்கவும், கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கிறது.\nபுதிர் லேடி ஐஸ்வர்யா, டாக்டரின் பழைய கதையைக் (ஆஸ்பத்திரி தில்லுமுல்லு) கிளறிவிட, டாக்டர் திருட்டு முழி! அதேபோல், அந்தப் பெண் குடித்துவிட்டிருந்த தன் கணவனை, கார் ஓட்ட வற்புறுத்தி அவன் சாவுக்குக் காரணமாகி விட்டதை ஐஸ்வர்யா புட்டுவைக்க, அந்தப் பெண் திருதிரு! அதே வழியில், அரசியல்வாதியின் கடந்தகால ஊழல் வெளிப்பட, அ.வா., அம்பேல்!\nமூன்று ஃப்ளாஷ்பேக் சம்பவங்களில் அந்தப் பெண் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு சவசவ! ஆஸ்பத்திரியும் சரி, பெண்ணின் வீடும் சரி... காட்சி அமைப்பு சற்றே அழுக்கு! நீலப்படுதாவுடன் நிறுத்திக்கொண்டுவிடாமல், இந்த விஷயத்தில் மகேந்திரா இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம்.\nஅரசியல்வாதியாக ஒய்.ஜி.எம். கூர்மையான வசனங்களின் துணையுடன், நிகழ்கால அரசியலையும் அரசியல்வாதிகளையும் - மன்மோகன்சிங் உட்பட - சகட்டுமேனிக்கு கலாய்க்கும்போது அரங்கில் சிரிப்பு அனல். ஜோக்குகளில் லேசாக பார்டர் தாண்டவும் செய்கிறார். இல்லாவிட்டால், அவருக்குத் தூக்கம் வராதே!\nஐஸ்வர்யா யார்? பேயா, பிசாசா அல்லது வேறு ஏதாகிலுமா?\nசஸ்பென்ஸ் உடைக்க 'மனசாட்சி’ இடம் தரவில்லை!
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள காடுகளில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, ப்ரீமாண்ட்-வினேமா தேசிய காட்டில் போர்ட்லாந்திலிருந்து தென்கிழக்கில் 300 மைல்கள் வரை கடந்த ஒரு வாரமாக நீடிக்கும் காட்டுத் தீ பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் கலிபோர்னியா மாகாணத்திலும் காட்டுத் தீ ஏற்பட்டு உள்ளது.\nபல கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது. காட்டுத் தீ மேலும் பரவும் பட்சத்தில் அதைக் கட்டுப்படுத்தும் வகையில் மீட்டு படையினரிடம் உதவி கேட்கப்பட்டு உள்ளது. ஆர்கன்சாஸ், நெவாடா, அலாஸ்கா ஆகிய மாகாணங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.\nகாட்டுத்தீ ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு அருகில் 2,000 வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மேலும் 5,000 வீடுகள் அபாயத்தில் உள்ளன. ஏற்கனவே, 70 வீடுகள் மற்றும் 100 கட்டடங்கள் தீயில் சிக்கி சேதமடைந்துள்ளன. உயிர் சேதம் எதுவும் நிகழவில்லை எனக் கூறப்படுகிறது.
குறள் 0636 - திறன்\nகுறள் எண் 0636\n(அதிகாரம்:அமைச்சு குறள் எண்:636)\nபொழிப்பு (மு வரதராசன்): இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன?\nமணக்குடவர் உரை: மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள?\nஇது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது.\nபரிமேலழகர் உரை: மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு - இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கை ஆகிய நூலறிவோடு உடையவராய அமைச்சர்க்கு; அதி நுட்பம் முன் நிற்பவை யாஉள - மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பன யாவையுள?\n('மதி நுட்பம்' என்பது பின்மொழி நிலையல்,அது தெய்வம் தர வேண்டுதலின் முன்கூறப்பட்டது. 'நூல்' என்பதூஉம், 'அதிநுட்பம்' என்பதூஉம் ஆகுபெயர். 'அதி' என்பது வடசொல்லுள் மிகுதிப் பொருளதோர் இடைச்சொல், அது திரிந்து நுட்பம் என்பதனோடு தொக்கது. 'முன் நிற்றல்' மாற்றார் சூழ்ச்சியாயின தம் சூழ்ச்சியால் அழியாது நிற்றல். இனி 'அதினுட்பம்' என்று பாடம் ஓதி, 'அதனின் நுட்பம் யா' என்று உரைப்பாரும் உளர். அவர் சூழ்ச்சிக்கு இனமாய் முன் சுட்டப்படுவது ஒன்றில்லாமையும், சுட்டுப்பெயர் ஐந்தாம் உருபு ஏற்றவழி அவ்வாறு நில்லாமையும் அறிந்திலர். பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து, அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து. இதனான் அவரது சிறப்புக் கூறப்பட்டது.)\nவ சுப மாணிக்கம் உரை: கூரிய அறிவும் நூலறிவும் உடையவர்க்குத் தீர்க்க முடியாத சிக்கல்கள் உளவோ?\nமதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் முன்னிற்பவை யாவுள?\nமதி-அறிவு; நுட்பம்-நுண்மை; நூலோடு-நூல்அறிவோடு; உடையார்க்கு-உடையவர்க்கு; அதி-மிகுதியான; நுட்பம்-நுட்பமுடைய (சூழ்ச்சிகள்); யா-எவை? உள-இருக்கின்றன; முன்-எதிரில்; நிற்பவை-நிற்கக்கூடியவை.\nமதிநுட்பம் நூலோடு உடையார்க்கு:\nமணக்குடவர்: மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு;\nபரிப்பெருமாள்: மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு;\nபரிதி: மதிக்கூர்மையும், கல்வியின் கூர்மையும் உள்ள பேருக்கு;\nகாலிங்கர்: தம் பிறவிக்கண்ணே இயற்கையாக விதி வழி வாய்ந்த மதியின் கூர்மையைப் பின்னும் தெளியக்கற்று உணர்ந்த செயற்கைத் தன்மை நூலோடு கூட இடையவராகிய நுண்ணறிவாளர்க்கு; br /> பரிமேலழகர்: இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கை ஆகிய நூலறிவோடு உடையவராய அமைச்சர்க்கு;\nபரிமேலழகர் குறிப்புரை: 'மதி நுட்பம்' என்பது பின்மொழி நிலையல்,அது தெய்வம் தர வேண்டுதலின் முன்கூறப்பட்டது. 'நூல்' என்பதூஉம்,\n'நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கையாகிய நூலறிவோடு ஒருங்கு பெற்றுள்ள அமைச்சர்க்கு', '(முன்னோர்கள் எழுதி வைத்துள்ள) நூல்களுக்கு ஒத்ததாகத் தம்முடைய சொந்த யோசனைகளையும் சேர்த்துள்ளவர்களை', 'இயற்கையாய் உள்ள நுட்ப அறிவும் அதனோடு செயற்கையாகிய நூலறிவும் உடையவர்க்கு முன்', 'இயற்கையாகிய நுண்ணறிவைச் செயற்கையாகிய நூலறிவோடு உடையார்க்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஇயற்கை அறிவுடன் நூலறிவும் பெற்றுள்ளவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.\nஅதிநுட்பம் யாவுள முன்னிற் பவை:\nமணக்குடவர் ['அதினுட்பம்' பாடம்] : அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள?\nமணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது.\nபரிப்பெருமாள் ['அதினுட்பம்' பாடம்]: அதனினும் நுண்ணிய மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள?\nபரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது.\nபரிதி: யாது நுட்பம் என்றவாறு.\nகாலிங்கர்: மற்று அவை இரண்டுடன் சிறந்த கூர்மையிற் கூரியன யாவை உளவோ; யாவும் இல்லை என்றே முன்னிய நெஞ்சிற்கு வேறுமுன் நிற்பவை என்றவாறு. [முன்னிய நெஞ்சிற்கு-கருதிய உள்ளத்திற்கு]\nபரிமேலழகர்: மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பன யாவையுள?\nபரிமேலழகர் குறிப்புரை: 'அதிநுட்பம்' என்பதூஉம் ஆகுபெயர். 'அதி' என்பது வடசொல்லுள் மிகுதிப் பொருளதோர் இடைச்சொல், அது திரிந்து நுட்பம் என்பதனோடு தொக்கது. 'முன் நிற்றல்' மாற்றார் சூழ்ச்சியாயின தம் சூழ்ச்சியால் அழியாது நிற்றல். இனி 'அதினுட்பம்' என்று பாடம் ஓதி, 'அதனின் நுட்பம் யா' என்று உரைப்பாரும் உளர். அவர் சூழ்ச்சிக்கு இனமாய் முன் சுட்டப்படுவது ஒன்றில்லாமையும், சுட்டுப்பெயர் ஐந்தாம் உருபு ஏற்றவழி அவ்வாறு நில்லாமையும் அறிந்திலர். பகைவர் சூழ்வனவற்றைத் தாம் அறிந்து அழித்து, அவர் அறிந்து அழியாதன தாம் சூழ்வர் என்பது கருத்து. இதனான் அவரது சிறப்புக் கூறப்பட்டது.\n'அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள?' என்ற பொருளில் மணக்குவர், பரிப்பெருமாள் ஆகிய பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இவர்கள் 'அதினுட்பம்' எனப் பாடங்கொண்டனர். 'யாது நுட்பம்' எனப் பரிதியும் 'அவற்றுடன் சிறந்த கூர்மையானவை யாவை?' எனக் காலிங்கரும் 'மிக்க நுட்பத்தையுடைய சூழ்ச்சிகளாய் முன்நிற்பன யாவையுள?' என்று பரிமேலழகரும் பொருள் கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'மிகுந்த நுட்பமுடைய சூழ்ச்சிகளாய் முன்னிற்பவை எவை உள்ளன?', 'எதிர்த்து வெல்லக்கூடிய சூழ்ச்சிகள் என்ன இருக்கின்றன?', 'அதிக நுட்பமான எவ் உபாயந்தான் எதிர் நிற்க வல்லது', 'மிக்க நுட்பத்தை உடையனவாய் முன் நிற்ப யாவை யுள? ஒன்றும் இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nமிக்க நுட்பத்தை உடையனவாய் எதிர் நிற்க வல்லன யாவை? என்பது இப்பகுதியின் பொருள்.\nஇயற்கை அறிவுடன் நூலறிவும் பெற்றுள்ளவர்க்கு மிக்க நுட்பத்தை உடையனவாய் எதிர் நிற்க வல்லன யாவை? என்பது பாடலின் பொருள்.\n'மதிநுட்பம்' என்ற சொல்லின் பொருள் என்ன?\nஇயற்கை அறிவுடன் கல்வியறிவும் உடையவரால் தீர்க்க முடியாதது என்று ஏதும் உண்டா?\nஓர் அமைச்சன் இயற்கையாக அமைந்த நுண்ணறிவுடையவனாக இருப்பான். அவன் சிறந்த கல்வி அறிவும் பெற்றவனாகவும் இருப்பான். இயற்கை, செயற்கை என்ற இருவகை அறிவும் பெற்ற இவனுக்கு மிக அரிதானது என்று முன்னிற்கும் செயல் ஒன்றும் இல்லை; அவனுக்கு எச்செயலையும் முடிக்கும் திறமை எளிதில் கைகூடும்.\nநூல்களைக் கற்பது மட்டும் அறிவிற்கு முழுமையைத் தராது. மனத்தால் நுட்பமாக ஆராய்ந்து தெளிவு கொள்ளும் நுண்ணறிவும் தேவை. ஒரு செய்தியைப் புரிந்துகொள்வதில் இவ்விரு அறிவையும் பயன்படுத்தி அமைச்சன் முடிவுக்கு வருவான். நூலறிவுச் சார்பு இல்லாத நுட்பஅறிவு பயனுடையதன்று. அதுபோலவே மதிநுட்பச் சார்பிலாத நூலறிவால் பயன் இல்லை. கல்வியறிவும் நுண்ணறிவும் இல்லாதவர்கள் நெருக்கடியான சமயங்களில் தடுமாறுவர். இவை இரண்டுடன் சிறந்த கூர்மையிற் கூரியன வேறு இல்லை நல்ல நூல் அறிவும் நுண்ணறிவும் உள்ளவர்க்கு தீர்வு காண முடியாமல் அவர்கள் முன் நிற்கும் நுட்பமான செய்திகள் எவை உள என வினவுகிறது இப்பாடல். ஒன்றும் இல்லை.\nஇயல்பான நுண்ணறிவும், பரந்த நூலறிவும் ஒருங்கே உடையவர்க்கு எதிராக எந்த நுட்பமான சூழ்நிலைகளும் நிற்கமுடியாமல் போகும். அவர்களால் வெல்ல முடியாத சிக்கல்கள் என ஒன்றும் இல்லை.\n'மதிநுட்பம்' என்ற சொல்லுக்கு நுண்ணியதாகிய மதி, மதிக்கூர்மை, பிறவிக்கண்ணே இயற்கையாக விதி வழி வாய்ந்த மதியின் கூர்மை, இயற்கையாகிய நுண்ணறிவு, இயற்கையான நுட்ப அறிவு, இயற்கையாய நுண்ணறிவு, இயல்பாயமைந்த நுண்ணிய அறிவு, கூரிய அறிவு, சொந்த யோசனை, நுண்ணிய அறிவு, இயற்கையாய் உள்ள நுட்ப அறிவு, இயற்கையாக அமைந்துள்ள நுண்ணறிவு, இயற்கையான நுண்மதி என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.\nநுட்பமதி என்பது மதி நுட்பம் என்றாயிற்று. இதில் மதி என்பதே நுட்பத்தின் அடைகொளியாய் நிற்றல் பற்றி இங்ஙனம் கூறப்பட்டது.\n''நுட்பமதி' என்றது செய்யுள் நோக்கி. மதி நுட்பமெனப் பின்முன்னால் புணர்ந்து நின்றது. நுட்பமதி என்பதன்கண் மதி என்னும் பின்மொழியில் பொருள் சிறந்திருத்தலால், மதிநுட்பம் என்பது பின் மொழிநிலையல் ஆயிற்று. பின்மொழிநிலையல்-பின்மொழிக்கண் பொருள் சிறந்து நிற்றல்' என்பது இரா சாரங்கபாணியின் விளக்கம்.\nநுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும் (ஊழ் 373 பொருள்: ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும், ஊழிற்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும்.) என்ற குறளை நினைக்கலாம். நூலறிவு-கட்டிக்கொடுத்த சோறுபோல எஞ்ஞான்றும் பயன்படாத செய்றகையறிவு; மதிநுட்பம் எதனையும் துருவித் துருவி ஆராயும் இயற்கை அறிவு என்பார் தண்டபாணி தேசிகர். மதிநுட்பமே நூலறிவினும் துணைசெய்ய வல்லது.\n'மதிநுட்பம்' என்ற சொல் இயல்பாயமைந்த நுண்ணிய அறிவு என்ற பொருள் தரும்.\nஇயற்கை அறிவுடன் நூலறிவும் பெற்றுள்ளவர்க்கு மிக்க நுட்பத்தை உடையனவாய் எதிர் நிற்க வல்லன யாவை? என்பது இக்குறட்கருத்து.\nஅமைச்சு இயற்கை, செயற்கை அறிவு இரண்டும் நிரம்பியவரயிருப்பார்.\nஇயற்கையான நுண்ணறிவை நூலறிவோடு ஒருங்கு பெற்றுள்ளவர்க்கு மிக்க நுட்பத்தை உடையனவாய் எதிர் நிற்க வல்லன யாவை?
புதிய பயணத்தை தொடர்கிறேன்-வீடியோ வெளியிட்ட ஆலியா பட்..aliabhatt uploadsanew video in instagram – News18 Tamil\nபுதிய பயணத்தை தொடர்கிறேன்-வீடியோ வெளியிட்ட ஆலியா பட்\nபாலிவுட் நடிகை ஆலிய பட்\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆலியா பட் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nLast Updated : January 02, 2021, 19:25 IST\nபாலிவுட்டில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஆலியா பட். இவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் மகள். 2012 ஆம் ஆண்டு ஹிந்தி சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து2ஸ்டேட்ஸ், ஹைவே ஆகிய படங்களில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.\nஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் இருவரும் பிரபல பாலிவுட் காதல் ஜோடிகள் ஆவர். ரன்பீர் கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த கொரோனா ஊரடங்கு இல்லையென்றால் நானும், ஆலியா பட்டும் திருமணம் செய்துக்கொண்டிருப்போம் எனக் கூறியிருந்தார். எனவே இந்த ஆண்டு நிச்சயம் இவர்களின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆலியா பட் தற்போது தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா சென்றுள்ள ஆலியா பட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஹேப்பி நியூ ஜர்னி’ என்று குறிப்பிட்டு safe travels என்ற ஹேஸ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார்.\nஇவரின் இந்த வீடியோவிற்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. மேலும் தற்போது ஆலியா பட் மூன்று படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nFirst published: January 02, 2021, 19:25 IST
யாரும் படிக்காதீங்க !\nவேணா படிக்காதீங்க !\nவளர்மதி வயசுக்கு வந்துடுச்சு :)\nகிறுக்கியது prabha senthamarai at 11:06 AM0பின்னூட்டங்கள்\nகாண துடிக்கிறேன் !\nதேடி அலைகிறேன் !\nஎழுதி தீர்க்கிறேன் !\nவரைந்து பார்கிறேன் !\nஒளியில் ரசிக்கிறேன் !\nஒலியில் கேட்கிறேன் !\nகாற்றில் நுகர்கிறேன் !\nகண் முன் தோன்றி மறைகிறாய் !\nதேடினால் கிடைக்க மறுக்கிறாய் !\nஉன் நிழல் கூட கேலி பேசுதே !\nஎன் திருடு போன இதயத்துடன் தொலைந்து சிரிக்கிறாய் !\nநீ கூட வேண்டாம் உன்னையே பொழுதுக்கும் முனகும்\nஎன் இதயம் வேண்டுமே !\nதேடி அலுத்து வெறுத்து போகிறேன்\nகூட நடக்க கால்கள் தவிக்குதே !\nநொடிக்கொருமுறை கண்முன் தோன்றி இருளில் மறைகிறாய் !\nஅனைத்தையும் தேடும் கூகுளும் தேட மறுக்குதே !\nமுகநூளில் என் ஸ்டேடஸ் உம் மொக்கையாகுதே !\nஎன் கண்களில் ஜூமிங் இல்லையே !\nகூகிள் எர்த்தில் கூட உன்னை காணவில்லையே !\nஇருகைகளும் இயங்க மறுக்குதே\nஉன் விரல் தேடி காற்றில் வண்ணம் தீட்டுதே !\nஅவள் வருவாளா என பாடி திரிகிறேன் !\nஎன் மனமும் என்னை போடா காமெடி பீசு\nஎன ஹர்ட் பண்ணுது !\nசெகண்ட் ஹான்டில் இதயம் வாங்கும் ஆப்ஷன் இல்லையே !\nதினமும் உனையே கூவி திரிகிறேன் !\nஇதை பார்த்து சிரிக்க என்னை சுற்றி கூடம் கூடுது\nகூட்டத்திலும் என் கண்கள் உன்னை தேடுது !\nஅருகில் இருந்த குப்பை தொட்டியில் உன் சத்தம் கேக்குது !\nஓடிசென்று எட்டி பார்கையில் என் இதயம் துடிக்குது\nதூக்கிபோட்ட உடன் சொல்லியிருக்கலாம்\nநீ இல்லையென்றால் இறக்க மாட்டேன் !\nஉன் பக்கத்துக்கு வீட்டில் மலர் இருக்கிறாள் !\nஉன்னை போல் அவளுக்கு அண்ணன் இல்லை !\nஉன்னை போல் அவளுக்கு அழகு இல்லை ,\nஇனி அவளுக்கு உயிராய் நான் இருக்கிறேன்\nஎன் இதயத்தை மட்டும்தான் எடுத்தேன்\nநீ இன்னும் அந்த குப்பையில்தான் !\nஎனக்கு மலர் இருக்கிறாள் !\nஅவளும் கூட தேட வைக்கிறாள்\nஇனியும் எவளும் தேவை இல்லை !\nஇறுதியில் நான் திருந்த போகிறேன்\nபெண்களே வேண்டாம் என முடிவு செய்கிறேன் !\nஇன்று முதல் படிக்க போகிறேன் :)\nஉன்னிடம் நான் கற்ற பாடம் போதுமே\nஒன்பதிற்கு மேல் என் அரியர் இருக்குது !\nஅனைத்தையும் முடிக்க திராணி இருக்குது !\nஇது நாளை முதல் குடிக்க மாட்டேன் போல் ஆகக்கூடாது\nநிச்சயம் ஆகவிடமாட்டேன் !\n"தாத்தா" சொன்ன வசனம் தெரியுமா ?\n"கூட நட்பு கேடாய் முடியும்"\n#நிச்சயம் தவறு இருக்கும்\nஎதுவானாலும் கூறி செல்லவும் !\nமறுமுறை தவிர்க்க முயல்கிறேன் !\nதாத்தா இந்த வசனம் கூறிய இடம் :\nபத்திரிக்கையாளர்கள் கனிமொழி வழக்கு பற்றி கேட்ட கருத்திற்கு கூறியது\nகிறுக்கியது prabha senthamarai at 2:31 PM 1 பின்னூட்டங்கள்\nவகையரா அவள், தாத்தா, திருந்த போகிறேன், தேடி அலைகிறேன்