title
stringlengths
1
93
url
stringlengths
31
123
text
stringlengths
0
361k
கோள்
https://ta.wikipedia.org/wiki/கோள்
140px|புதன்130px|வெள்ளி 126px|பூமி130px|செவ்வாய் 123px|வியாழன்148px|சனி 138px|Uranus138px|நெப்டியூன்சூரியக் குடும்பத்தின் எட்டுக் கோள்கள் புவிநிகர் கோள்கள் புதன், வெள்ளி, பூமி, மற்றும் செவ்வாய் பெருங்கோள்கள் வியாழன் சனி (வளிமக் கோள்கள்) யுரேனஸ் நெப்டியூன் (பனிப் பெருங்கோள்கள்) சூரியனில் இருந்துள்ள வரிசையிலும் உண்மை நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன. உருவங்கள் அளவுகோலின்படி அமையவில்லை. கோள் (planet) விண்மீனைச் சுற்றிவரும் வான்பொருளாகும் இது. தனது ஈர்ப்பு விசையாலுருண்டையாகத் திரளத் தக்க அளவு பொருண்மை மிக்கதாகும்; வெப்ப அணுக்கருப் பிணைவு நிகழ்வை உருவாக்க இயலாத அளவு பொருண்மை கொண்டதாகும்; மேலும் இது தன் வட்டணையின் வட்டாரத்தில் கோளெச்சம் ஏதும் அமையாமல் நீக்கியிருக்கவேண்டும்.இந்த வரையறை, பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் இரண்டு தனிதனியான அறிவிப்புகளில் இருந்தும் அது 2006 இல் ஏற்ற முறையான வரையறையில் இருந்தும் 2001/2003 இல் சூரியக் குடும்பத்துக்கு அப்பாலான வான்பொருள்களுக்கு நிறுவிய முறைசாராத பயன்பாட்டு வரையறையில் இருந்தும் பெறப்பட்டதாகும். 2006 இல் உருவாக்கிய வரையறை சூரியக் குடும்பத்துக்கு மட்டுமே உரியதாகும்; ஆனால், 2003 இல் உருவாக்கிய வரையறை, பிற விண்மீன்களைச் சுற்றி அமையும் கோள்களுக்கு உரியதாகும். சூரியக் குடும்ப வரையறை 2006 ஆம் ஆண்டுக் கருத்தரங்கில் முழுமையாகத் தீர்க்கமுடியாத அளவுக்குச் சிக்கலானதாக விளங்கியது. கோள் எனும் சொல் வரலாறு, கணியவியல், அறிவியல், தொன்மவியல், சமயம் சார்ந்த பண்டைய சொல்லாகும். சூரியக் குடும்பத்தில் உள்ள பல கோள்களை வெற்றுக் கண்ணால் பார்க்கலாம். இவை பல பண்டைய நாகரிகங்களால் தெய்வீகத் தன்மையோடும் தெய்வங்களால் அனுப்பப்பட்டனவாகவும் உணரப்பட்டன. அறிவியல் அறிவு வளர்ந்ததும், கோள்கள் பற்றிய கண்ணோட்டம் மாறலானது. பன்னாட்டு வானியல் ஒன்றியம் 2006 ஆம் ஆண்டில் சூரியக் குடும்பக் கோள்களுக்கான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தது. இந்த வரையறை எங்கு, எவற்றை வட்டணையில் சுற்றிவருகின்றன என்பதைப் பொறுத்து கோல்பொருண்மை உடைய பல வான்பொருள்களைத் தவிர்க்கிறது. இக்கால வரையறைப்படி, 1950 க்கு முன்பு கண்டுபிடித்த எட்டு கோள்கள் மட்டுமே கோள்களாகக் கருதப்படுகின்றன; இந்த வரையறையின்கீழ் சீரெசு, பல்லாசு, யூனோ, வெசுட்டா (குறுங்கோள்பட்டையில் உள்ள வான்பொருள்கள்), புளூட்டோ (முதல் நெப்டியூனுக்கு அப்பால் கண்டறிந்த கோள்) ஆகியவை முன்பு கோள்களாகக் கருதப்பட்டு வந்திருந்தாலும், இப்போதும் இனியும் அவ்வாறு கருதப்படவியலாது. கோள்கள் புவியைச் சுற்றி வேறுபட்டப் புறவட்டிப்பு இயக்கங்களில் உள்ளதாகத் தாலமி கருதியுள்ளார். பலமுறை சூரிய மையக் கருதுகோள் பரிந்துரைக்கப்பட்டு வந்திருந்தாலும், நோக்கீட்டு வானியல்வழியாகத் தொலைநோக்கி கொண்டு கலீலியோவால் நிறுவப்பட்ட 17 ஆம் நூற்றாண்டுவரை அது ஏற்கப்படவில்லை. அப்போது டைக்கோ பிராகேவும் யோகான்னசு கெப்ளரும் தொலைநோக்கிக்கு முந்தைய நோக்கீட்டுத் தரவுகளை திரட்டிப் பகுத்தாய்ந்து கோள்கள் வட்டமான வட்டணையில் இயங்காமல், நீள்வட்டமான வட்டணையில் இயங்குகின்றன எனக் கண்டறிந்தனர். நோக்கீட்டுக் கருவிகள் மேம்பட்ட்தும், வானியலாளர்கள் புவியைப் போலவே பிறகோள்களிலும் பனிக்கவிப்பும் பருவகால மாற்றங்களும் அமைதலையும் அச்சுகள் சாய்வாக உள்ளதையும் கண்டனர். விண்வெளி ஊழி வளர்ந்ததும், விண்கல நோக்கீடுகள் அனைத்துக் கோள்களிலும் எரிமலை உமிழ்வு, கடுஞ்சூறாவளிகள், கண்டத்தட்டு நகர்வு நீரியல் பான்மைகள், ஆகியவற்றைக் கண்ணுற்றனர். கோள்கள் பொதுவாக இருமுதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை, தாழ் அடர்த்திப் பெருங்கோள்கள் அல்லது வியாழன்நிகர் கோள்கள், சிறிய பாறையாலான புவிநிகர் கோள்கள் ஆகும். பன்னாட்டு வானியல் ஒன்றிய வரையறைகளின்படி, சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உண்டு. சூரியனில் இருந்து தொலைவு கூடக்கூட முதலில் புவிநிகர் கோள்களான புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகியவை அமைகின்றன. அடுத்து பெருங்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை அமைகின்றன. முதல் இரண்டு கோள்களில் நிலா ஏதும் இல்லை. ஆறுகோள்களில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட நிலாக்கள் உள்ளன. நம் பால்வழியில் உள்ள விண்மீன்களைப் பல்லாயிரம் கோள்கள் அல்லதுப் புறக்கோள்கள் சுற்றிவருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புறக்கோள்களைப் பொறுத்தவரை, நிலாவைவிடச் சற்றே பெரிய அளவுடைய கெப்ளர்-37b முதல் வியாழனைப் போல இருமடங்கு பெரிய வாசுப்-17b போன்ற வளிமக் கோள்கள் வரையிலானவை தனிக் கோளமைப்புகளிலும் பன்மைக் கோளமைப்புகளிலும் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் நூறு புறக்கோள்கள் புவியின் அளவு கொண்டவை; இவற்றில் ஒன்பது தன் விண்மீனில் இருந்து, சூரியனில் இருந்து புவி அமையும் தொலைவில், உள்ளவை. கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கிக் குழு 2011 திசம்பர் 20 இல் புவிநிகர் புறக்கோள்களாக, கெப்ளர்-20e, கெப்ளர்-20f ஆகிய இருகோள்கள் சூரியநிகர் விண்மீனாகிய கெப்ளர்-20 ஐ வட்டணையில் சுற்றிவருவதைக் கண்டுபிடித்துள்ளதாகக் கூறுகிறது.. 2012 ஆம் ஆய்வு, ஈர்ப்பு நுண்வில்லைத் தரவைப் பகுத்தாய்ந்து, நம் பால்வழியில் உள்ள ஒவ்வொரு விண்மீனுக்கும் 1.6 கட்டுண்ட கோள்கள் அமைந்துள்ளதாக மதிப்பிடுகிறது. ஐந்துச் சூரியநிகர் விண்மீன்கள் ஒன்றில் புவியின் உருவளவுள்ள planet in its habitableவட்டாரம் அமைவதாகக் கருதப்படுகிறது. பொதுவாக, ஒரு விண்மீனைச் சுற்றிவரும் அனைத்துக் கோள்களும், பெரும்பாலும் அவ்விண்மீன் சுழலும் திசையிலேயே அதன் கோள்களின் நீள்வட்டப்பாதையில் செல்லும். ஆனால், தற்போது அவ்வாறல்லாமல் எதிர்த் திசையில் கோள்கள் சுழலும் ஒரு சூரியக் குடும்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆகத்து 18, 2013 அன்று சயன்சு ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். கெப்லர் விண்கலம் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கெப்லர்-56 என்ற இந்த விண்மீன் நமது சூரியனை விட சற்று அதிக எடையுள்ளது. இதனை இரண்டு கோள்கள் சுற்றி வருவதாக 2012 ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது.First tilted solar system found, நியூ சயன்சு, அக்டோபர் 18, 2013.Stellar Spin-Orbit Misalignment in a Multiplanet System, சயன்சு, Vol. 342 no. 6156 pp. 331-334 DOI: 10.1126/science.1242066, அக்டோபர் 18, 2013. சூரியக் குடும்பம் சூரியக் குடும்பத்தில் எட்டுக் கோள்கள் உள்ளன. 14px|☿ புதன் 14px|♀ வெள்ளி 14px|🜨 பூமி 14px|♂ செவ்வாய் 14px|♃ வியாழன் 14px|♄ சனி 14px|♅ யுரேனஸ் 14px|♆ நெப்டியூன் இவற்றில் வியாழன்தான் மிகப்பெரிய கோளாகும். இது 318 மடங்கு புவிப்பொருண்மையக் கொண்டுள்ளது. இவற்றில் புதன் எனும் அறிவன் கோள்தான் மிகவும் சிறிய கோளாகும். இது புவியைப் போல 0.055 பங்கு பொருண்மையைக் கொண்டுள்ளது. சூரியக் குடும்பக் கோள்களை அவற்றின் உள்ளியைபுக்கு ஏற்பக் கீழ்வருமாறு பிரிக்கலாம்: புவிநிகர் கோள்கள்: இவை புவியைப் போன்றவை.இவற்றின் உட்கூறு பெரும்பாலும் பாறைகளால் ஆயதாகும். எ. கா. : புதன், வெள்ளி, புவி, செவ்வாய். புதன் மிகச்சிறிய புவிநிகர் கோள்ளாகும். இவ்வகைக் கோள்களில் புவி தான் மிகப் பெரியதாகும். பெருங்கோள்கள் (வியாழன்நிகர் கோள்கள்): இவை புவிநிகர் கோள்களைவிட கணிசமான அளவு பெரியவை. எ. கா. : வியாழன், சனி, யுரேனசு, நெப்டியூன். வளிமப் பெருங்கோள்கள் : வியாழனும் சனியும் நீரகமும் எல்லியமும் செறிந்த மிகப்பெரிய சூரியக் குடும்பக் கோள்களாகும். வியாழன் 318 புவிப் பொருண்மைகளும் சனி 95 புவிப் பொருண்மைகளும் கொண்டுள்ளன. பனிப்பெருங்கோள்கள்: யுரேனசிலும் நெப்டியூனிலும் நீர், மீத்தேன், அம்மோனியா போன்ற தாழ் கொதிநிலைப் பொருள்களும் தடிப்பான நீரக, எல்லிய வளிமண்டலங்களும் அமைந்துள்ளன. இவை வளிமப் பெருங்கோள்களைவிடக் குறைந்த பொருண்மையைக் (14, 17 மடங்கு புவிப் பொருண்மையைக்) கொண்டுள்ளன. பெயர் நடுவரைவிட்டம்Measured relative to Earth. பொருண்மை அரைப் பேரச்சு (வானியல் அலகு) வட்டணை அலைவுநேரம்(ஆண்டுகள்); சூரிய நடுவரைக்குச்சரிவு (°) வட்டணைமையப்பிறழ்வு சுழற்சி நேரம்(நாட்கள்) உறுதியானநிலாக்கள் {refn|group=lower-alpha|name=Confirmed|சூரியக் குடும்பத்தில் வியாழனில்தான் அனைத்து நிலாக்களும் (67) சரிபார்க்கப்பட்டுள்ளன.}} அச்சு சாய்வு வலயங்கள் வளிமண்டலம் 1. புதன் 0.382 0.06 0.39 0.24 3.38 0.206 58.64 0 0.04° இல்லை சிறுமம் 2. வெள்ளி 0.949 0.82 0.72 0.62 3.86 0.007 −243.02 0 177.36° இல்லை CO2, N2 3. பூமி;(a) 1.00 1.00 1.00 1.00 7.25 0.017 1.00 1 23.44° இல்லை N2, O2, Ar 4. செவ்வாய் 0.532 0.11 1.52 1.88 5.65 0.093 1.03 2 25.19° இல்லை CO2, N2, Ar 5. வியாழன் 11.209 317.8 5.20 11.86 6.09 0.048 0.41 67 3.13° உண்டு H2, He 6. சனி 9.449 95.2 9.54 29.46 5.51 0.054 0.43 62 26.73° உண்டு H2, He 7. யுரேனஸ் 4.007 14.6 19.22 84.01 6.48 0.047 −0.72 27 97.77° உண்டு H2, He, CH4 8. நெப்டியூன் 3.883 17.2 30.06 164.8 6.43 0.009 0.67 14 28.32° உண்டு H2, He, CH4 Color legend:    (both are giant planets). (a) Find absolute values in article புவி குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் International Astronomical Union website Photojournal NASA NASA Planet Quest – Exoplanet Exploration Illustration comparing the sizes of the planets with each other, the Sun, and other stars "Regarding the criteria for planethood and proposed planetary classification schemes." article by Stern and Levinson Planetary Science Research Discoveries (educational site with illustrated articles) மேலும் காண்க புறக்கோள் பகுப்பு:நோக்கீட்டு வானியல் பகுப்பு:கோள் அறிவியல்
புதன் (கோள்)
https://ta.wikipedia.org/wiki/புதன்_(கோள்)
புதன் கோள் (Mercury) சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது. புவியிலிருந்து காணும்போது இது 116 நாட்கள் எடுத்துக் கொள்வதைப் போலத் தோன்றும். இதற்கு இயற்கை நிலவுகள் எதுவும் அறியப்படவில்லை. இந்தக் கோளுக்கு மேற்கத்தியப் பண்பாட்டில் உரோமை தூதுக் கடவுளான மெர்க்குரியின் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியப் பண்பாட்டில் அறிவுக்கு காரணமாகும் புதன் என்ற கடவுளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை (angular separation from the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.3oதான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது. எனவே தான் நம் சான்றோர் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறுவர். காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம். புதனில் சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் மற்றெந்தக் கோள்களையும் விட புதனின் கோள்பரப்பு பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது; கோள்நடுக்கோடு அருகே பகல் நேரத்தில் ஆகவும் இரவுநேரத்தில் ஆகவும் உள்ளது. முனையங்களில் (துருவங்களில்) எப்போதுமே குளிர்ச்சியாக கீழுள்ளது. புதனின் அச்சு சூரியக் குடும்பத்திலேயே மிகக் குறைந்த சாய்வைக் (ஏறத்தாழ பாகை) கொண்டுள்ளது. ஆனால் இதன் சுற்றுப்பாதையின் வட்டவிலகல் மிகக் கூடியதாக உள்ளது. பெரும்பாலான மற்றக் கோள்களைப் போல இங்கு பருவங்கள் ஏற்படுவதில்லை. புதன் ஞாயிற்று அண்மைநிலையில் சூரியனிடமிருந்து இருக்கும் தொலைவை விட ஞாயிற்றுச் சேய்மைநிலையில் 1.5 மடங்குத் தொலைவில் உள்ளது. புதன் சூரியக் குடும்பத்திலேயே மிகவும் தனித்துவமான முறையில் சூரிய ஈர்ப்பில் பிணைந்து சுற்றுகின்றது. நிலைத்த விண்மீன்களிலிருந்து காணும்நிலையில் தனது சுற்றுப்பாதையில் இரண்டு சுற்றுக்கள் வரும் காலத்தில் தன்னைச் சுற்றி மூன்று முறை சுற்றிக் கொள்கின்றது. சுற்றுப்பாதையில் சுழலும் குறியீட்டச்சு கொண்டுள்ள சூரியனிலிருந்து காணும்போது, இரண்டு புதனாண்டுகளுக்கு ஒருமுறை தன்னைச் சுற்றிக் கொள்கின்றது. புதனில் இருக்கும் கூர்நோக்கருக்கு ஒருநாள் இரண்டு ஆண்டுகளாகும். தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக் (craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது. ஆனால், புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு. புதனைப்பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். புதனை நெருங்கிய இரண்டு விண்கலங்களில் முதலாவது மாரினர் 10 (Mariner 10). இது 1974–1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்தது (mapped). இரண்டாவதாக அனுப்பப்பட்ட மெசஞ்சர் 2008 சனவரியில் புதனருகில் பறந்த போது மேலும் 30% படமெடுத்தது. இது மீண்டும் 2009ல் புதனை நெருங்கியது. அதன்பின் 2011 மார்ச் 18 இல் புதனின் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு (Orbital insertion) புதனின் துணைக்கோளாக மாறியது. உட்கட்டமைப்பு thumb|left|புவிநிகர் கோள்கள்: புதன், வெள்ளி, புவி, செவ்வாய் thumb|upright|left|புதனின் உட்கட்டமைப்பு: 1. மேலோடு: 100–300 கிமீ தடிப்பு 2. மூடகம்: 600 கிமீ தடிப்பு 3. உட்புறம்: 1,800 கிமீ ஆரை புதன் கோள் சூரியக் குடும்பத்தின் நான்கு புவிநிகர் கோள்களில் ஒன்றாகும். புவியைப் போன்றே பாறைகளால் ஆனது. சூரியக் குடும்பத்தின் மிகச்சிறிய கோள் இது வாகும். இதன் நிலநடுக் கோட்டின் ஆரம் 2,439.7 கிமீ. புதனில் அண்ணளவாக 70% உலோகமும், 30% சிலிக்கேட்டுப் பொருளும் காணப்படுகிறது. சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய அடர்த்தியான கோளான இதன் அடர்த்தி 5.427 கி/செமீ3. இது புவியின் அடர்த்தியான 5.515 கி/செமீ3. ஐ விட சிறிது குறைவாகும். காந்தப் புலமும் காந்தமண்டலமும் thumb|upright=1.25|புதனின் காந்தப் புலத்தின் சார்புவலிமையைக் காட்டும் படிமம். சிறிய அளவினதாக இருந்தாலும் மெதுவான 59-நாள்-தன்சுற்றுகையைக் கொண்டிருந்தாலும் புதனில் குறிப்பிடத்தக்க, பரப்பெங்குமான, காந்தப் புலம் நிலவுகின்றது. மாரினர் 10 எடுத்த அளவைகளின்படி புதனின் காந்தப்புலம் புவியினுடையதை விட 1.1% வலிமையுள்ளதாக இருக்கிறது. புதனின் கோள்நடுக்கோட்டில் உள்ள காந்தப் புலத்தின் வலிமை ஆகும். புவியைப் போலவே, புதனின் காந்தப் புலமும் இருமுனையி. ஆனால் புவியைப் போலன்றி புதனின் காந்த முனையங்கள் கோளின் சுழல் அச்சுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்துள்ளன. மற்றும் மெசஞ்சர் விண்துருவிகளிலிருந்து பெறப்பட்ட அளவைகளிலிருந்து இந்தக் காந்தப் புலத்தின் வலிமையும் வடிவமும் நிலையாக உள்ளன. புவியைப் போன்றே இங்குள்ள காந்தப் புலமும் மின்னாக்கி விளைவால் உருவாகியுள்ளது. இந்த மின்னாக்கி விளைவு கோளின் இரும்புமிக்க நீர்ம கருவகத்தின் சுற்றோட்டத்தால் ஏற்படுகின்றது. கோளின் மிகுந்த சுற்றுப்பாதை விலகலின் காரணமாக ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கருவகத்தை நீர்மநிலையில் வைத்திருக்க உதவுகின்றது. புதனின் வலிதான காந்தப்புலம் சூரியக்காற்றை கோளைச் சுற்றி திசைவிலகிச் செல்ல வைக்கின்றது. இதனால் கோளைச் சுற்றிலும் காந்தமண்டலம் ஒன்று உருவாகியுள்ளது. இது சிறிய அளவினதாக இருந்தாலும் சூரியக் காற்றை பிடிக்க போதுமானதாக உள்ளது. இது கோளின் மேற்பரப்பு விண்வெளியால் தேய்தலுக்கு வழிவகுக்கின்றது. எடுத்த கூர்நோக்குகளின்படி கோளின் இரவுப் பகுதியில் உள்ள காந்த மண்டலத்தில் குறைந்த ஆற்றல் பிளாசுமா கண்டறியப்பட்டுள்ளது. கோளின் காந்த வால்பகுதியில் ஆற்றலுள்ள துகள்களின் திரள்கள் கண்டறியப்பட்டுள்ளன; இது கோளின் காந்த மண்டல செயற்பாட்டுத் திறனை சுட்டுகின்றது. அக்டோபர் 6, 2008இல் தனது இரண்டாவது முறை பறப்பின்போது மெசஞ்சர் புதனின் காந்தப் புலம் மிகவும் "கசிவுடையதாக" கண்டது. புவியில் இருந்து புவியில் இருந்து புதனை பார்க்கும் போது அது அதிக நீட்சியின் பகுதியில் இருக்கும் போது பார்த்தால் தெளிவாகத் தெரிய வாய்ப்புண்டு. மேற்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு மேற்கில் இருக்கும் போது சூரிய உதய்த்துக்கு முன்னரும், கிழக்கதிக நீட்சியின் போது சூரியனுக்கு கிழக்கில் இருக்கும் போது சூரிய அஸ்தமனத்துக்கு பின்னரும் மட்டுமே புவியில் இருந்து இதன் அதிக பகுதிகளை (அரைப் பகுதியிலேயே சூரிய ஒளிப்படும். புவியில் இருந்து பார்க்கும் போது ஒளிப்படும் பகுதியிலும் பாதியையே பார்க்க முடியும்.) நோக்க முடியும் என்பது இயற்பியல் வழக்கு. ஆனால் இந்த இயற்பியல் வழக்கின் படிப் பார்த்தாலும் புதனின் அதிகப் பகுதிகளை தெளிவாகப் பார்க்க முடியாது. அதன் காரணம் புதனின் தோற்ற ஒளிர்மையே ஆகும். அதனால் புதனின் குவிகோடுகள் வளைந்த நிலையில் இருக்கும் போதே புதனை எளிதாக பார்க்க முடியும். அதாவது கிழக்கதிக நீட்சிக்கு சில நாட்கள் முன்னரும், மேற்கதிக நீட்சிக்கு சில நாட்கள் பின்னருமே இதை தெளிவாக மானிடர்களின் வெற்றுக் கண்களால் நோக்க முடியும். புதனில் மானிடக் குடியேற்றத்தின் சாத்தியங்கள் நிலவை ஒத்த புதன் thumb|right|360px|மானிடர் புதனில் ஒருவேளைக் குடியேறினால் இப்படத்தில் ஒளிபடும் இடங்களின் விளிம்புகளை ஒட்டியே நகர்ந்து கொண்டிருப்பது போல் நகரங்களை உருவாக்க வேண்டும் மானிடர் குடியேற்றம் என்ற நோக்கில் பார்க்கும் போது நிலவில் மானிடர் குடியேறுவதற்கு தேவைப்படும் விடயங்களே இங்கும் தேவைப்படுகின்றன. மேலதிகமாக சூரியனின் வெப்பத்தில் இருந்து தப்புவதற்கான வெப்பக் கேடயங்களும் தேவைப்படும். இதற்கான கண்க்கிடப்பட்ட நகரும் குடியேற்றத்தையும் உருவாக்க வேண்டும். (வலது பக்கம் இருக்கும் படத்தைப் பார்க்க) இங்கு இருக்கும் சூரிய எரிசக்தி மிகவும் அதிகம் என்பதால் மின்சாரத்தை எளிதாக பெற முடியும். புவியில் சூரிய மின்தடுகளை வைத்து பெரும் மின்சாரத்தை விட இங்கு ஆறரை மடங்கு அதிகமாக மின்சாரத்தைப் பெற முடியும் என்பது இதன் அனுகூலமாகும். நீராதாரம் புதன் கிரகத்தில் நீர் பனிக்கட்டியாக அதன் துருவங்களில் உள்ளது. இவை பல கோடி ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் இல்லாத இடங்களாக இருந்ததால் இன்றும் ஆவியாகாமல் உள்ளது. புதன் கிரகத்தின் வட துருவத்தில் உள்ள ஆழமான பள்ளங்களில் காணப்படுகின்ற ஏராளமான அளவிலான பனிக்கட்டிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் நட்சத்திரங்களால் வந்து விழுந்த "பனிக்கட்டி உருண்டைகள்" என்று கருதப்படுகிறது. தடைகள் இதில் மானிடர் குடியேற்றம் நடக்க அதிக நுட்பங்களை உருவாக்குதல், இதற்கான வெப்பக் கேடயங்களை தயாரிக்கும் முறையை கண்டறிந்து உருவாக்குதல், இக்கோளில் இருந்து வேறு கோளுக்கு செல்ல மிக அழுத்தமும் வேகமும் தரக்கூடிய விண்கலன்களை உருவாக்குதல் போன்றவை புதனில் மானிடர் குடியேறுவதற்கு பெரும் தடைகளாய் உள்ளன. குறிப்புகள் மேற்கோள்கள் உசாத்துணைகள் வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், . வெளியிணைப்புகள் Mariner 10 Atlas of Mercury – NASA Mercury nomenclature and map with feature names from the USGS planetary nomenclature page MESSENGER Mission web site Mercury QuickMap from MESSENGER web site SolarViews.com – Mercury Astronomy Cast: Mercury Geody Mercury World's search engine that supports நாசா வேல்ட் வின்ட், Celestia, and other applications. A Day On Mercury flash animation Mercury articles in Planetary Science Research Discoveries 'BepiColombo', ESA's Mercury Mission 5 சூன் 2013 MESSENGER False Color Mercury Globe Spin – APOD பகுப்பு:கோள்கள் பகுப்பு:புவியொத்த கோள்கள் பகுப்பு:சூரியக் குடும்பம் பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
வெள்ளி (கோள்)
https://ta.wikipedia.org/wiki/வெள்ளி_(கோள்)
வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். நம் இரவு வானத்தில் நிலவுக்கு அடுத்து வெள்ளியே ஒளி மிகுந்ததாகும்.. சூரியனின் உதயத்துக்கு முன்னும், மறைவிற்குப் பின்னும் வெள்ளி தன் உச்ச ஒளிநிலையை அடைகிறது. எனவே இது காலை நட்சத்திரம் , விடிவெள்ளி மற்றும் மாலை நட்சத்திரம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இது கூடுதலான பைங்குடில் விளைவால் ஏற்பட்டதாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது. வெள்ளி பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் ஆகும். வெள்ளி ஞாயிறை ஒவ்வொரு 224.7 புவி நாட்களில் சுற்றி வருகின்றது. இக்கோளிற்கு இயற்கைத் துணைக்கோள் ஏதுமில்லை. ஐரோப்பிய வழக்குகளில் இதற்கு உரோமைத் தொன்மவியலில் அழகிற்கும் காதலுக்குமான பெண்கடவுள் வீனசின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் இந்தியத் தொன்மவியலில் அசுரர்களின் குருவான சுக்கிரனின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியில் இக்கோளின் தோற்ற ஒளிப்பொலிவெண் −4.6 ஆக உள்ளதால் இதன் ஒளியினால் நிழல்கள் உருவாகும். வெள்ளிக்கோள் புவியிலிருந்து சூரியனை நோக்கிய உட்புறக் கோளாக இருப்பதால் எப்போதுமே சூரியனுக்கு அருகாமையில் இருப்பதாகத் தோன்றுகின்றது. வெள்ளிக்கோள் ஒரு புவியொத்த கோள் ஆகும். இது புவியை ஒத்த அளவு, ஈர்ப்புவிசை, உள்ளடக்கம் கொண்டிருப்பதால் சிலநேரங்களில் வெள்ளி புவியின் "சகோதரிக் கோள்" எனப்படுகின்றது. இக்கோள் புவிக்கு மிக அருகிலுள்ள கோளும் ஒத்த அளவை உடைய கோளும் ஆகும். அதேநேரத்தில் இது பலவகைகளில் புவியிலிருந்து வேறுபட்டுள்ளதும் சுட்டப்படுகின்றது. தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் மிக அடர்த்தியான வளிமண்டலம் உள்ள கோள் வெள்ளியாகும். இந்த வளிமண்டலம் 96%க்கும் கூடிய காபனீரொக்சைட்டு அடங்கியது. கோளின் தரைப்பரப்பில் வளிமண்டல அழுத்தம் புவியை விட 92 மடங்காக உள்ளது. சூரியக் குடும்பத்தின் மிகவும் வெபமிகுந்த கோளாக விளங்கும் வெள்ளியின் தரைமட்ட வெப்பநிலை ஆக உள்ளது. இங்கு கார்பன் சுழற்சி நடைபெறாமையால் பாறைகளோ தரைப்பரப்பு மேடுபள்ளங்களோ உருவாகவில்லை; தவிரவும் உயிர்த்திரளில் கரிமத்தை உள்வாங்கிட எவ்வித கரிம உயிரினமும் இல்லை. வெள்ளியின் வளிமண்டலத்தில் சல்பூரிக் அமில மேகங்களின் எதிரொளிப்பால் கீழுள்ள தரைப்பரப்பை ஒளி மூலம் காணவியலாது உள்ளது. முன்னொரு காலத்தில் வெள்ளியில் பெருங்கடல்கள் இருந்திருக்கலாம்;David Shiga Did Venus's ancient oceans incubate life?, New Scientist, 10 ஒக்டோபர் 2007 ஆனால் இவை பைங்குடில் விளைவின் வெப்பநிலைகளால் ஆவியாகியிருக்கலாம்.B.M. Jakosky, "Atmospheres of the Terrestrial Planets", in Beatty, Petersen and Chaikin (eds,), The New Solar System, 4th edition 1999, Sky Publishing Company (Boston) and Cambridge University Press (Cambridge), pp. 175–200 ஆவியான நீர் ஒளிமின்பிரிகையால் பிரிக்கப்பட்டிருக்கலாம்; கோளில் காந்தப்புலங்கள் இல்லாமையால் கட்டற்ற ஐதரசன் சூரியக் காற்றால் கோள்களிடையேயான விண்வெளிக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம். வெள்ளியின் தரைப்பகுதி வறண்ட பாலைவனமாக, அவ்வப்போதைய எரிமலை வெடிப்புகளால் புதிப்பிக்கப்பட்ட வண்ணம், உள்ளது. 2020 செப்டம்பரில் பாஸ்பீன் வளிமம் வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை அறியப்பட்ட இயற்கை மூலங்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்று நம்பப்படுவதை விட சுமார் பத்தாயிரம் மடங்கு அதிகமான செறிவுகளில் கோளின் வளிமண்டலத்தில் இவ்வாயு உள்ளது. வெள்ளியின் வளிமண்டலத்தில் பாஸ்பீன் கண்டறியப்பட்டமை, அக்கோளின் வளிமண்டலத்தில் கரிம வாழ்வின் சாத்தியக்கூறுகள் இருப்பதற்கான ஊகத்திற்கு வழிவகுத்துள்ளது. பௌதிகப் பண்புகள் இது புவியைப் போல கற்கோளத்தைக் கொண்ட கோளாகும். இதன் திணிவும் ஆரை நீளமும் கிட்டத்தட்ட புவியினுடையதை ஒத்துப் போவதால் இக்கோளானது புவியின் தங்கை எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் ஆரை 12092 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்டது. புவியியல் வெள்ளியின் மேற்பரப்பில் 80 சதவீதம் சமவெளியாய் உள்ளது. அதில் 10 சதவீதம் மென்மையான லோபடே சமவெளியும் 70 சதவீதம் மென்மையான, ​​எரிமலை சமவெளியும் அடக்கம். இதில் வடதுருவத்தில் ஒரு கண்டமும் வெள்ளியின் நிலநடுக்கோட்டிற்கு சற்று தெற்கில் ஒரு கண்டமும் அமையப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா கண்டத்திற்கு இணையான பரப்பளவு கொண்ட வடக்கு கண்டம் பாபிலோனியக் காதல் தெய்வமான இசுதாரின் பெயரில் அழைக்கப்படுகிறது. மேக்ஸ்வெல் மோன்டசு, வெள்ளியின் மிக உயர்ந்த மலையாகும். அதன் சிகரம் சராசரி மேற்பரப்பு உயரமான 11 கி.மீ. தொலைவில் உள்ளது. பரப்பளவில் இரண்டு தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இணையான தெற்குக் கண்டம் அப்ரோடிட் டெர்ரா கிரேக்க காதல் தெய்வத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. காந்தப் புலமும் மையக்கருவும் 1967இல் செலுத்தப்பட்ட வெனரா 4 என்ற விண்கலம் வெள்ளியில் உள்ள காந்தப்புலம் புவியினுடையதை விட மிக வலிவற்றதாக இருப்பதைக் கண்டறிந்தது. இந்தக் காந்தப் புலமும் அயனிமண்டலத்திற்கும் சூரியக் காற்றுக்குமிடையேயான இடைவினையால் தூண்டப்பட்டதாகும்;Dolginov, Nature of the Magnetic Field in the Neighborhood of Venus, COsmic Research, 1969 பொதுவாக கோள்களின் கருவத்தில் காணப்படும் உள்ளக மின்னியற்றி போன்று வெள்ளியில் இல்லை. வெள்ளியின் சிறிய தூண்டப்பட்ட காந்த மண்டலம் அண்டக் கதிர்களிலிருந்து வளிமண்டலத்திற்கு எவ்வித பாதுகாப்பும் வழங்குவதில்லை. இந்தக் கதிர்களால் மேகங்களுக்கிடையே மின்னல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. புவியை ஒத்த அளவினதாக இருப்பினும் வெள்ளியில் காந்தப்புலம் இல்லாதிருப்பது வியப்பளிப்பதாக உள்ளது. உள்ளக மின்னியற்றி இயங்கிட மூன்று முன்தேவைகள் உள்ளன: கடத்துகின்ற நீர்மம், தற்சுழற்சி, மற்றும் மேற்காவுகை. வெள்ளியின் கருவம் மின்கடத்தும் தன்மையதாக கருதப்படுகின்றது; வெள்ளியின் சுழற்சி மிக மெதுவாக இருப்பினும் ஆய்வகச் சோதனைகளில் இந்த விரைவு மின்னியக்கி உருவாகப் போதுமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளியில் மின்னியக்கி இல்லாதிருப்பதற்கு மேற்காவுகை இல்லாதிருக்கலாம் என நம்பப்படுகின்றது. புவியில் மையக்கருவின் வெளிப்புற அடுக்குகளில் உள்ள நீர்மத்தின் வெப்பநிலையை விட உட்புற அடுக்குகளில் மிகக் கூடுதலாக இருப்பதால் மேற்காவுகை நிகழ்கின்றது. வெள்ளியில் ஏதேனும் மேற்புற நிகழ்வினால் தட்டுநிலப் பொறைக் கட்டமைப்பை மூடி கருவத்தில் குறைந்த வெப்பச்சலனத்தை உண்டாக்கி இருக்கலாம். இதனால் மேலோட்டு வெப்பநிலை உயர்ந்து உள்ளிருந்து வெப்பப் பரவலை தடுத்திருக்கலாம். இக்காரணங்களால் புவிசார் மின்னியக்கி செயற்பாடு இல்லாதிருக்கலாம். மாற்றாக, கருவத்தின் வெப்பத்தால் மேலோடு சூடுபடுத்தப்படலாம். மற்றொரு கருத்தாக, வெள்ளியில் திண்மநிலை உட்கருவம் இல்லாதிருக்கலாம் அல்லது அந்தக் கருவம் குளிரடையவில்லை என முன்வைக்கப்படுகின்றது. இதன் காரணமாக முழுமையான நீர்மப்பகுதி அனைத்துமே ஒரே வெப்பநிலையில் இருக்க வாய்ப்புள்ளது. வெள்ளியின் கருவம் முழுமையுமே திண்மமாக மாறிவிட்டது என்ற மாற்றுக் கருத்துக்கும் வாய்ப்புள்ளது. உட்கருவத்தில் உள்ள கந்தகத்தின் அடர்வைப் பொறுத்து கருவத்தின் நிலை இருக்கும்; ஆனால் கந்தக அடர்த்தி குறித்து இதுநாள் வரை அறியப்படவில்லை. thumbnail|1990க்கும் 1994க்கும் இடையே மெகல்லன் துருவியால் பிடிக்கப்பட்ட மேகங்களால் மூடப்படாத வெள்ளியின் காட்சி வெள்ளியில் காந்தப்புலம் வலிவற்றதாக இருப்பதால் அதன் வெளிப்புற வளிமண்டலத்துடன் சூரியக்காற்று நேரடியாகவே இடைவினையாற்றுகின்றது. இங்கு புற ஊதாக்கதிர்களால் நடுநிலை மூலக்கூறுகள் பிரிக்கப்பட்டு ஐதரசன், ஆக்சிசன் அயனிகள் உருவாகின்றன. இந்த அயனிகளுக்கு வெள்ளியின் ஈர்ப்புப் புலத்திலிருந்து விடுபட சூரியகாற்று தேவையான ஆற்றலை வழங்குகின்றது. இந்த அரித்தலால் குறைந்த நிறையிலுள்ள ஐதரசன், ஹீலியம், ஆக்சிசன் அயனிகள் இழக்கப்படுகின்றன; உயர்நிறை உள்ள மூலக்கூறுகளான கார்பன் டைஆக்சைடு போன்றவை தக்க வைத்துக்கொள்ளப்படுகின்றன. இத்தகைய சூரியக்காற்றின் செய்கையால் வெள்ளியில் அது உருவானபோது இருந்திருக்கக்கூடிய நீர் முதல் பில்லியன் ஆண்டுகளில் இழக்கப்பட்டிருக்கலாம். தவிரவும் இச்செய்கையால் உயர்ந்த வளிமண்டலத்தில் நிறை குறைந்த ஐதரசனுக்கும் நிறையான தியூட்டிரியத்திற்குமான விகிதம் உட்புற வளிமண்டலத்தில் நிலவும் விகிதத்தை விட 150 மடங்கு குறைந்துள்ளது. புறத் தோற்றம் புவியில் இருந்து மானிடர் நோக்கும் போது வெள்ளிக் கோளே எந்த விண்மீனை (சூரியனைத் தவிர்த்து) விடவும் வெளிச்சமாக உள்ளது. வெள்ளி பூமியின் அருகில் இருக்கும் போது அதன் பிரகாசம் அதிகமாகவும், தோற்றப்பருமன் -4.9 ஆகவும், பிறை கட்டத்திலும் காணப்படுகிறது. சூரியன் பின்னோளி வீசும் போது இதன் பிரகாசம் -3 ஆக மங்குகிறது. இக்கோள் நடுப்பகலிலும் காணத்தக்க பிரகாசமாக இருப்பதுடன் சூரியும் கீழ் வானில் இருக்கும் போது எளிதில் காணக் கூடியதாகவும் இருக்கிறது. இதன் சுற்றுப்பாதை சூரியனுக்கும் புவியின் சுற்றுப்பாதைக்கும் நடுவில் இருப்பதால் புவியில் இருந்து பார்க்கும் போது சூரியனின் நிலநடுக்கோட்டில் இருந்து 47 டிகிரி சாய்வு வரை அதிகமாக செல்வது போல் தோற்றம் அளிக்கிறது. மானிடக் குடியேற்றத்தின் சாத்தியம் thumb|360px|right|மானிடர் இதைப் போன்று பெரிய அளவில் மிதக்கும் நகரங்களை வெள்ளியின் விண்ணில் அமைக்க வாய்ப்புண்டு. வெள்ளிக் கோள் பரப்பின் சூழல் தற்போது மானிடர் வாழும் சூழலை பெறவில்லை. ஆனால் வெள்ளிக் கோள் பரப்பில் இருந்து ஐம்பது கிலோமீட்டர்களுக்கு மேல் உள்ள வளி மண்டலம் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை வாயுக்களான நைட்ரசனையும் ஆக்சிசனையும் பெற்றுள்ளது. அதனால் வெள்ளியின் வானில் மானிடர் மிதக்கும் நகரங்களை உருவாக்க வாய்புள்ளது. காற்றினும் எடை குறைந்த மிதக்கும் நகரங்களை (வலது பக்கத்தில் உள்ள மிதக்கும் விண்கலன் போல்) உருவாக்கி அதில் நிரந்தரக் குடியேற்றங்களை அமைக்க முடியும். ஆனால் இதில் மிகப்பெரிய அளவுக்கு பொறியியல் தொழில்நுட்பச் சவால்களும், இந்த உயரத்தில் உள்ள கந்தக அமிலத்தின் அடர்த்தியும் இதற்கு தடைகள் ஆகும். சூரியனைக் கடக்கும் போது 200px|வலது முதன்மைக் கட்டுரை - வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு வெள்ளிக் கோளின் சூரியக்கடப்பு அல்லது வெள்ளியின் இடைநகர்வு என்பது சூரியக் குடும்பத்தில் உள்ள வெள்ளி கோளானது சுற்றுப்பாதையில் வரும்போது சூரிய வட்டத்தைக் கடப்பதைக் குறிப்பதாகும். அதாவது, வெள்ளிக்கோள் சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் செல்வதைக் இது குறிக்கும். இந்த இடைநகர்வின் போது வெள்ளி சூரிய வட்டத்தில் ஒரு சிறு கரும் புள்ளியாகக் கண்ணுக்குத் தெரியும். இந்த இடைநகர்வு இடம்பெறும் காலம் பொதுவாக மணித்தியாலங்களில் கூறப்படுகிறது. இந்த இடைநகர்வு நிலவினால் ஏற்படும் சூரிய கிரகணத்தை ஒத்தது. வெள்ளி பூமியில் இருந்து அதிக தூரத்தில் இருப்பதனால் (நிலவுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள தூரத்தை விடவும், வெள்ளிக்கும் பூமிக்குமிடையிலுள்ள தூரம் கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகம்), வெள்ளியின் விட்டம் நிலவை விட 3 மடங்கு அதிகமானதாக இருந்தாலும்கூட, வெள்ளி இடைநகர்வின்போது, வெள்ளி மிகச் சிறியதாகத் தெரிவதுடன், மிக மெதுவாக நகர்வதையும் காணலாம். அவதானிப்பு thumb|alt=A photograph of the night sky taken from the seashore. A glimmer of sunlight is on the horizon. There are many stars visible. Venus is at the center, much brighter than any of the stars, and its light can be seen reflected in the ocean.|வெள்ளிக் கிரகமானது அனைத்து விண்மீன்களிலும் பிரகாசம் கூடியது வெள்ளிக் கோள் / சுக்கிரன் வெள்ளிக் கோள் / சுக்கிரன் வெள்ளிக் கோள் / சுக்கிரன் thumb|right|200px|பூமியிலிருந்து சுக்கிரனின் சுற்றுப்பாதையைப் பார்த்தால், அது ஒரு ஐங்கோண வடிவமாக அமையும். thumb|right|200px|மாலை வேளையில் சந்திரனும் சுக்கிரனும். thumb|right|200px|சுக்கிரனின் சுற்றுப்பாதை ( சுக்கிரன், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சூரியனைச் சுற்றிவருகிறது ) thumb|right|200px|சுக்கிரனின் அடையாளச்சின்னம். thumb|right|200px|ஒப்பீட்டுக்காக சுக்கிரனும் பூமியும் thumb|right|200px|வானக்கோளான சுக்கிரன் கதிரவனைக்கடந்து செல்கிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Venus profile at NASA's Solar System Exploration site Missions to Venus and Image catalog at the National Space Science Data Center Soviet Exploration of Venus and Image catalog at Mentallandscape.com Image catalog from the Venera missions Venus page at The Nine Planets Transits of Venus at NASA.gov Geody Venus, a search engine for surface features Interactive 3D gravity simulation of the pentagram that the orbit of Venus traces when Earth is held fixed at the centre of the coordinate system Gazetteer of Planetary Nomenclature: Venus by the International Astronomical Union Venus crater database by the Lunar and Planetary Institute Map of Venus by Eötvös Loránd University Google Venus 3D, interactive map of the planet பகுப்பு:புவியொத்த கோள்கள் பகுப்பு:சூரியக் குடும்பம்
புவி
https://ta.wikipedia.org/wiki/புவி
புவி (), கதிரவனிலிருந்து மூன்றாவதாக உள்ள கோள். விட்டம், நிறை மற்றும் அடர்த்தி கொண்டு ஒப்பிடுகையில் சூரிய மண்டலத்தில் உள்ள மிகப் பெரிய உட் கோள்களில் புவியும் ஒன்று. இதனை உலகம், நீலக்கோள் ,நீலக்கோள் என்பது பல படங்களின் பெயராக Blue Planet மற்றும் The Blue Planet என பயன்படுத்தப்பட்டுள்ளது, லைப் (பத்திரிக்கை) (Life) என்பதன் நம்பமுடியாத ஆண்டு '68 (The Incredible Year '68) என்ற இதழில் புவி உதயத்தின் படத்தை போடும் போது ஜேம்ஸ் டிக்கே என்ற கவியின் வரிகளாக Behold. The blue planet steeped in its dream/Of reality என குறிப்பிடப்பட்டுள்ளது http://yalepress.yale.edu/yupbooks/excerpts/poole_earthri. e.pdf பக்கம் 7-8 http://www.northjersey.com/entertainment/books/36520714.html மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகாமின் அறிக்கையின் தலைப்பாக 'நீலக் கோளத்தின்' நீர் சுழற்சியை ஆய்ந்தறிதல் (Exploring the water cycle of the 'Blue Planet') http://www.esa.int/esapub/bulletin/bulletin137/bul137b_drinkwater.pdf என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவும் குறிப்பிடுகின்றனர். மாந்தர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடமான இந்தப் புவி, அண்டத்தில் உயிர்கள் இருப்பதாக அறியப்படும் ஒரே இடமாகக் கருதப்படுகின்றது. இந்தக் கோள் சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது, மேலும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் அதன் மேற்பரப்பில் உயிரினங்கள் தோன்றின. அதுமுதல் புவியின் உயிர்க்கோளம் குறிப்பிடும் வகையில் அதன் வளிமண்டலம் மற்றும் உயிரற்ற காரணிகளை மாற்றியுள்ளது. அதனால் பல வளி சார்ந்த உயிரினங்கள் பெருகின. ஓசோன் மண்டலம் உருவாகி புவியின் காந்த மண்டலத்தோடு அகிலத்திலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களைத் தடுத்து உலகில் உயிர்கள் தழைப்பதற்கு வழி ஏற்பட்டது. இக்காலகட்டங்களில் புவியின் பௌதிகத் தன்மையினாலும் புவி சூரியனைச் சுற்றி வந்தமையினாலும் உலகில் உயிர்கள் நிலைபெற்றன. உயிர்களுக்கு ஏதுவான தற்போதுள்ள சூழல் மேலும் 1.5 பில்லியன் ஆண்டுகளுக்கு நிலவும் எனவும், பிறகு வளரும் சூரியனின் வெப்ப ஒளிர்வுத் தன்மைகளால் புவியின் உயிர்க்கோளம் அழிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. புவியின் மேற்பரப்பு பல இறுக்கமான பிரிவுகளாக, அல்லது டெக்டோனிக் பலகைகளாக அமைந்துள்ளது. அவை புவியின் மேற்பரப்பில் சிறிது சிறிதாக பல மில்லியன் வருடங்களாக நகர்ந்து வருகிறது. புவியின் சுமார் 71% மேற்பரப்பு உப்பு நீருள்ள பெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள் கண்டங்கள், தீபகற்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் அதிமுக்கியமான திரவ நீராலும் நிரப்பப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் அதிக வெப்பமாகவோ அல்லது குளிர்ந்தோ காணப்படுவதால் இந்த கிரகங்களில் திரவ நீர் காணப்படவில்லை. எனினும் செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பில் மட்டும் திரவ நீர் இருப்பதாக உறுதியாக அறியப்படுகின்றது. மேலும் இன்று கூட அங்கு நீர் காணப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் எனலாம். அடர்ந்த திட மூடகம் (Mantle) அடுக்கு, காந்த மண்டலத்தை உருவாக்கும் திரவ வெளி மையம் மற்றும் திட உள் மையம் ஆகியவற்றால் புவியின் உட்பகுதி மிகுந்த ஆற்றலுடன் இயங்குகிறது. புவி, ஞாயிறு மற்றும் நிலா உட்பட பரவெளியில், உள்ள மற்ற பொருட்களுடன் ஊடாடுகிறது. தற்போது புவி தனது அச்சில் சுழல்வதோடு தோராயமாக 366.26 முறை கதிரவனையும் சுற்றி வருகின்றது. இதற்கான மொத்த கால அளவு ஒரு விண்மீன் ஆண்டு (sidereal year), இது 365.26 சூரிய நாட்களுக்குச் (solar day) சமம்.சூரிய நாட்களின் எண்ணிக்கை, விண்மீன் நாட்களை விட ஒன்று குறைவாகும், ஏனெனில் புவி சூரியனை சுற்றும் போது தனது அச்சில் ஒன்று கூடுதலாக சுழலுகிறது. புவியின் அச்சு சுழற்சி அதன் கோளப் பாதையிலிருந்து,யோடர், சார்லஸ் எப். (1995:8). 23.4° செங்குத்தாக விலகி சாய்ந்து இருப்பதால், கோளின் மேற்பரப்பில் கால மாறுபாடுகளை ஒரு வெப்ப ஆண்டுக்குத் (tropical year) தோற்றுவிக்கிறது (365.24 சூரிய நாட்கள்). புவியின் நாமறிந்த ஒரே இயற்கையான செயற்கைக்கோள் நிலா, 4.53 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அதனைச் சுற்ற ஆரம்பித்தது, இது கடலில் அலைகளை உருவாக்குவதோடு, புவியின் அச்சு சாய்வை நிலைப்படுத்தி, அதன் சுழற்சியையும் சிறிது சிறிதாகக் குறைக்கிறது. தோராயமாக 4.1 மற்றும் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கும் இடையே காலம் தாழ்ந்த பலத்த தாக்குதல் (Late Heavy Bombardment) நடந்த வேளையில் பெரு விண்கற்களின் (asteroid) தாக்கம் புவியின் சுற்றுச் சூழலில் குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்தியது. புவியின் கனிம வளங்கள் மற்றும் உயிர்க் கோளத்தில் உருவான பொருட்கள் இரண்டுமாக உலக மக்கள்தொகை பெருக்கத்திற்கு துணை புரியும் வகையில் வளங்களை அளித்தது. அங்கு வாழ்பவர்கள் 200 தனித்த ஏகாதிபத்திய நாடுகளாக குழுவாக்கப்பட்டு, அரசியல், பயணம், வணிகம் மற்றும் இராணுவ செயல்பாடுகள் மூலமாக தொடர்பு கொண்டனர். தெய்வ வழிபாடு உட்பட, தட்டையான புவி அல்லது அண்டத்தின் மையத்தில் புவி உள்ளது போன்ற நம்பிக்கைகள், நவீன உலகப்பார்வையில் ஒருமைப்பாட்டுடன் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழும் இடம் என மக்கள் கலாச்சாரம் இக்கோளை பற்றி பல்வேறு விதமான தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காலவரிசை அறிவியல் அறிஞர்கள் புவியின் கடந்த கால வரலாற்றை பற்றி விரிவாக வரையறுத்துள்ளனர். சூரிய மண்டலத்தில் காணப்படும் மிகப் பழமையான பொருள் 4.5672 ± 0.0006 பில்லியன் வருடங்களுக்கு முந்தியது. கடந்த 4.54 பில்லியன் வருடங்களுக்குள் (1% ஐயப்பாட்டுடன்) பரிதி உருவாகி, எஞ்சிய வாயு மற்றும் தூசுப்பொருட்களால் ஆகிய தட்டு வடிவத்தில் இருந்த சூரிய நெபுலாவிலிருந்து புவி மற்றும் மற்ற கோள்கள் தோன்றின. இவ்வாறு இயற்கையான சேர்மானத்தால் 10–20 மில்லியன் வருடங்களுக்குள் புவியின் பெரும்பான்மையான பகுதி உருவாகியது. வளிமண்டலத்தில் நீர் சேர ஆரம்பித்தவுடன் முதலில் உருகிய நிலையில் இருந்த புவியின் மேற்பரப்பு குளிர்ந்து இறுகத் தொடங்கியது. இதற்குப்பின் புவியின் இயற்கை துணைக்கோள் நிலா உருவானது. நிலா, செவ்வாய் கிரகத்தின் பரப்பை ஒத்த ஒரு விண் வெளி பொருள் (தீயா என்று சில சமயம் அழைக்கப்படும்), புவியின் பத்தின் ஒரு பங்கு திண்மத்தை கொண்டதுமாகிய அப்பொருள் புவியின் மீது கொண்ட தாக்கத்தால் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வேற்றுலக பொருளின் ஒரு பகுதி புவியுடன் கலந்திருக்கலாம் எனவும் மற்ற பகுதிகள் விண் வெளியில் சிதறியும், புவியின் காந்த விசையால் புவியை சுற்றும் பாதையை அடைந்து சந்திரனாகவும் மாறியிருக்கலாம் எனவும் எண்ணப்படுகிறது. எரிமலை சீற்றம் மற்றும் வாயுக்களின் வெளிக்கொணர்வு ஆகியன ஆதிகால புவியின் வளிமண்டலத்தை உருவாக்கின. விண் பெருகற்கள், வால் நட்சத்திரம், பெரிய முன்கிரகங்கள் மற்றும் நெப்ட்டியூனைத் தாண்டி உள்ள சூரிய மண்டலத்திலுள்ள விண் வெளிப் பொருட்களிலிருந்து பெறப்பட்ட பனிக்கட்டி, நீர் ஆகியனவும் வளிமண்டலத்திலிருந்து சுருங்கும் நீராவியினாலும், சமுத்திரங்கள் உருவாகின. கண்டங்களின் படிப்படியான வளர்ச்சியை விவரிக்க இரு மாதிரிகள் விவரிக்கப்பட்டுள்ளன: இன்றுவரை நிலையான மாற்றத்தினால் அவை உண்டானது என்பதும் மற்றொன்று புவியின் ஆரம்பகாலத்திலேயே துரித மாற்றத்தினால் அவை ஏற்பட்டன என்பதுவாகும். தற்போதைய ஆய்வின்படி இரண்டாவது கூற்றே, அதாவது புவியின் ஆரம்பத்திலேயே துரித வளர்ச்சியுடன் கண்டங்களின் ஓடு உருவாகிவிட்டதென்றும், பிறகு அவை நிரந்தர கண்ட பரப்பாக உருவாகியதே ஏற்கக்கூடியதாக உள்ளது. பல நூறு மில்லியன் வருட கால அளவில் நோக்கும் போது, புவியின் மேற்பரப்பு கண்டங்கள் தொடர்ச்சியாக உருவாவதாலும் அழிவதாலும் மாறிக்கொண்டு வந்துள்ளது. இதனால் கண்டங்கள் புவியின் மேற்பரப்பில் நகர்ந்து எப்போதாவது ஒன்றோடு ஒன்று இணைந்து மகா கண்டங்கள் உருவாகின. தோராயமாக 750 மில்லியன் வருடங்களுக்கு முன் (மிமு), அப்போதறிந்த மகாகண்டம் ரோடினியா (Rodinia), உடைய ஆரம்பித்தது. அது பின்னர் இணைந்து பென்னசியா (Pannotia) என்ற கண்டமாக உருமாறி பின், 600–540 மிமுவின், பின் இறுதியில் பான்சியா (Pangaea) என்ற கண்டமாக உருவடைந்து, பின் 180 மிமுவில் மீண்டும் உடைந்து பிரிந்தது. உயிர்களின் பரிணாம வளர்ச்சி இன்றைய நிலையில், புவியில் மட்டுமே உயிர்களின் பரிணாம வளர்ச்சி ஏற்பட ஏதுவான சூழல் உள்ளது. நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆற்றல் மிகு வேதியியல் வினைகளால் சுயமாக உருவாகும் மூலக்கூறுகள் ஏற்பட்டன, பிறகு அரை பில்லியன் வருடங்களுக்குள் எல்லா உயிரினங்களின் பொது மூதாதையரான உயிரினம் உருவாகியது. தாவர உயிரினங்களின் ஒளிச்சேர்க்கைத் தன்மையினால் சூரிய ஆற்றலை உபயோகப்படுத்தின; இந்த வேதி வினையினால் ஏற்பட்ட பிராணவாயு (ஆக்சிஜன்) வளிமண்டலத்தை நிரப்பியது. மேலும் ஓசோன் (ஆக்சிசன் மூலக்கூறின் ஒருவடிவம் [O3]) படலம் மேல் வளி மண்டலத்தில் உருவாக உதவியது. பல சிறு செல்கள் பெரிய செல்களுடன் சேர்ந்ததினால் நுணுக்கமான செல்கள் யூகேர்யோட்டுகள் (eukaryotes) உருவாகின. இப்படிப்பட்ட காலனிகளில் அடங்கிய செல்கள் தனித்தன்மையுடன் செயல்படத் தொடங்கியபோது உண்மையான பல செல் படைத்த உயிரினங்கள் உருவாகின. மேலும் வளி மண்டலத்தின் மேற்பரப்பில் அமைந்த ஓசோன் மண்டலம் வெளியிலிருந்து புவிக்கு வரும், கேடு விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சியதால் பூவுலகில் உயிர்கள் தழைத்தன. 1960 ஆம் ஆண்டு முதல் ஆய்வாளர்கள், நியோபுரோட்டிசோயிக் காலத்தில் அதாவது 750 மற்றும் 580 மிமுவில் புவியின் பெரும்பகுதி பனியால் மூடியிருந்ததென்றும் மற்றும் மிகப்பல பனிக்கட்டியாறுகள் ஓடியதென்றும் அறிவிக்கின்றனர். அந்தக் காலத்திய புவியை "பனிப்பந்து புவி" என அழைக்கின்றனர். அந்த காலகட்டம் மிகவும் இன்றியமையாததாக கருதப்படுகிறது ஏனெனில் இது பல செல் உயிரினங்கள் தோன்றி பரவிய கேம்ப்ரியன் விரிவாக்க காலத்திற்கு முன்னால் வந்தது. கேம்ப்ரியன் காலத்து விரிவாக்கத்தைத் தொடர்ந்து, 535 மில்லியன் வருடங்களில் புவியில் ஐந்து பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. கடைசியாக ஏற்பட்ட பேரழிவு 65 மில்லியன் வருடங்களுக்கு முன் ஒரு பெரிய விண்கல் புவியில் வந்து விழுந்ததால் ஏற்பட்டிருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. இந்த தாக்கத்தினால் டைனோசர் உட்பட பல ராட்சத பல்லிகள் மற்றும் பறவையினங்களைத் தவிர்த்து மற்ற எல்லாமுமே கூண்டோடு அழிந்து போனது. இதில் தப்பியது எலியைப் போன்ற சுரூ என்றழைக்கப்படும் பாலுண்ணிகளே. கடந்த 65 மில்லியன் வருடங்களில் பாலுண்ணிகள் பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளன, சில மில்லியன் வருடங்களுக்கு முன், ஆப்பிரிக்கா கண்டத்தில் மனிதக்குரங்கைப் போன்ற ஓர் மிருகம் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்தது. அவ்வாறு நின்றதால் கருவிகளை உபயோகிக்கவும் தகவல் பரிமாறவும் முடிந்தது, இதுவே மூளையின் வளர்ச்சிக்கு வித்திட்டது. இவ்வாறு அதிவிரைவாக வளர்ந்த மனிதனே முதலில் புவியில் விவசாயம் மற்றும் நாகரீகத்தையும் அறிமுகப்படுத்தினான். இதனால் ஏற்பட்ட தாக்கம் மற்ற புவி வாழ் உயிரினங்களின் வாழ்க்கை மற்றும் போக்கு இவற்றை மாற்றியமைத்தது. இப்போதுள்ள பனிக்கால சுழற்சி 40 மில்லியன் வருடங்களுக்கு முன் ஏற்பட்டதென்றும் மூன்று மில்லியன் வருடங்களுக்கு முன் பிளாய்டோசீன் காலத்தில் தீவிரமடைந்தது என்றும் கூறப்படுகிறது. அது முதல் துருவப் பகுதிகளில் உள்ள பனி 40–100,000 ஆண்டுகளுக்கொரு முறை உருகியும், உறைந்தும் ஏற்படுகின்றது. கடைசி பனிக்காலம் 10,000 வருடங்களுக்கு முந்தி முடிவடைந்தது. எதிர்காலம் பரிதியின் வாழ்க்கைச் சுழற்சி புவியின் எதிர்காலம் சூரியனைச் சார்ந்துள்ளது. சூரியனின் உட்கருவில் சேர்ந்து வரும் ஈலியம் வாயுவினால், அதன் மொத்த ஒளிர்வுத்தன்மை மெல்ல வளரும். சூரியனின் இந்த ஒளிர்திறன் அடுத்த 1.1 கிகா ஆண்டுகளில் (1.1 நூறு கோடி வருடங்கள்) 10 சதவிகிதமும் அடுத்த 3.5 கிகா ஆண்டுகளில் 40 சதவிகிதமும் அதிகரிக்கும். காலநிலை கணிப்பின்படி புவியை வந்தடையும் அதிக கதிர்வீச்சு, கடல் இழப்பு போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். புவியின் மேற்பரப்பு வெப்பம் அதிகரிப்பதால் அசேதன CO2 சுழற்சியை துரிதப்படுத்தி, அடுத்த 900 மில்லியன் வருடங்களில் தாவரங்களுக்கு அத்தியாவசியமான கரியமலவாயு (C4 ஒளிச்சேர்க்கைக்குத் 10 பிபிஎம்) வளிமண்டலத்தில் குறையும். தாவரங்கள் அழிவதால் அது வெளியிடும் ஆக்சிசன் தடைப்படும், அதனால் மற்ற உயிரினங்கள் சில மில்லியன் ஆண்டுகளிலேயே முழுவதுமாக அழிந்து விடும்.வார்ட் மற்றும் பிரவுன்லே (2002) சூரியன் அழிவில்லாத மற்றும் நிலையான ஒன்றாக இருந்தாலும், குறைந்த எரிமலையாக்கத்தின் காரணமாக புவியின் உட்புற குளிர்ச்சி பெரும்பான்மையான வளி மண்டலத்தையும் கடற் பரப்பையும் குறைத்திருக்ககூடும். அடுத்த நூறு கோடி வருடங்களில் புவியின் மேற்பரப்பில் உள்ள தண்ணீர் அனைத்தும் மறைந்திருக்கும். மேலும் புவியின் சராசரி வெப்பநிலை 70 °C யை வந்தடையும். அந்தக் கால கட்டத்திலிருந்து அடுத்த 500 மில்லியன் வருடங்களுக்கு புவி வாழ்வதற்கு ஏற்றதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் வளிமண்டலத்தில் உள்ள நைதரசன் நீக்கப்படுமானால் இது மேலும் 2.3 பில்லியன் ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம். சூரியன் அதன் பரிணாம வளர்ச்சியில் மற்றும் 5 பில்லியன் வருடங்களில் ஒரு மாபெரும் சிகப்பு நட்சத்திரமாக மாறும். சூரியன் தற்போதைய அரைவிட்டத்தை போல தோராயமாக 250 மடங்கு விரிவடையும் என்று உருமாதிரிகள் கணிக்கின்றன. இதனையும் பார்க்கவும் புவியின் தலைவிதி தெளிவாகத் தெரியவில்லை. மாபெரும் சிகப்பு நட்சத்திரமாகிய சூரியன், தன்னுடைய அதிகபட்ச ஆரத்தை எட்டும் போது, சூரியன் தன் எடையில் 30% த்தை இழக்கும் அப்போது அலைகளினால் ஏற்படும் தாக்கம் இன்றியே, புவி சூரியனிலிருந்து அளவு கொண்ட சுற்றுப்பாதைக்குத் தள்ளப்படலாம். அவ்வாறு தள்ளிப்போவதால், சூரியனின் வெளி மண்டலத்தின் தாக்கத்திலிருந்து புவி தன்னைக் காத்துக் கொள்ளும், ஆனால் சூரியனின் அதிகமாகும் ஒளிர்வுக் கதிர்களால், எல்லா உயிரினங்களும் அழிந்து போகும். எனினும், சமீபத்திய ஆராய்ச்சியின்படி அலைகளால் ஏற்படும் தாக்கத்தால், புவி அதன் சுற்றுப்பாதையிலிருந்து விலகி, மாபெரும் சிகப்பு நட்சத்திரமான சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்த முழுவதுமாக கரைந்து போகலாம். புவியின் சேர்மானமும் கட்டமைப்பும் புவி ஒரு திடமான கிரகம், அதாவது முழுவதும் காற்றாலே ஆன மாபெரும் வாயுக்கிரகமான வியாழன் போலல்லாது கடினமான உடலால் ஆனது. இது சூரியக் குடும்பத்திலுள்ள நான்கு திட கிரகங்களுள் உருவத்திலும் திண்மத்திலும் மிகப் பெரியது. இந்த நான்கு கிரகங்களில், புவி அதிக அடர்த்தியானதும், மிகுந்த மேற்பரப்பு புவியீர்ப்பு விசையைக் கொண்டதும், வலிமையான காந்தப் புலனைக் கொண்டதும் மற்றும் வேகமான சுழற்சியைக் கொண்டதுமாகும். திடக் கிரகங்களிலேயே புவியில் மட்டுமே டெக்டோனிக் தட்டுகளின் நகர்தல் காணப்படுகிறது. வடிவம் thumbnail|right|upright=1.5|உட்கிரகங்களின் அளவு ஒப்பீடு (இடமிருந்து வலமாக): புதன், வெள்ளி, புவி மற்றும் செவ்வாய் புவியின் உருவம் துருவங்களில் தட்டையாகவும் நிலநடுக் கோட்டிற்கு அருகில் விரிவடைந்தும் உள்ள நீள்வட்ட கோளத்தைப் போல் காணப்படுகின்றது. புவியின் சுழற்சியால் இந்த இடை விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது, மேலும் விட்டங்களை ஒப்பிடுகையில் நிலநடுக்கோடு துருவங்களை விட 43 கிமீ அதிகமாயுள்ளது. இக் கோளத்தின் சராசரி விட்டம் 12,742 கிமீ (7,918 மைல்) அதாவது 40,000 கிமீ/π, ஏனென்றால் மீட்டரை முதலில் வரையறுக்கும் போது அது பூமத்திய ரேகையிலிருந்து வட துருவத்திற்கு பிரான்சில் உள்ள பாரிசு நகர வழியாக கணக்கிடும் தூரத்தில் 1/10,000,000 ஈடாக கொள்ளப்பட்டது. புவி அதன் இடவமைப்பான (topography) சிறு மேடு பள்ளங்களை வைத்து காணும் போது கோள வடிவிலிருந்து புவி மாறுபடும் ஆனால் மொத்தத்தில் இந்த வேறுபாடு மிகவும் சிறியது: உண்மையான கோளத்தோடு ஒப்பிடுகையில் புவி 584 அல்லது 0.17% விலகியுள்ளது, இது பில்லியர்ட்ஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பில்லியர்ட் பந்திற்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய 0.22% மாற்றத்தை விட சிறியதே. புவியின் மேற்பரப்பில் மிக அதிகமாக கோள வடிவிலிருந்து விலகியுள்ள இரு இடங்கள் எவரஸ்ட் சிகரம் (கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம்) மற்றும் மரியானா ட்ரென்ச் (கடல் மட்டத்திலிருந்து 10,911 மீ கீழுள்ளது). புவி, நிலநடுக்கோட்டருகே விரிந்திருப்பதால் பூமியின் நடுவிலிருந்து மிகவும் தள்ளி உள்ள இடம் நில நடுக்கோட்டருகே உள்ள ஈக்வெடார் நாட்டின் (Ecuador) சிம்போராசோ சிகரமாகும். +எப்.டபிள்யூ. கிளார்க்கின் ஆக்சைடு அட்டவணைசேர்மம்சூத்திரம்சேர்மானம் சிலிக்காSiO259.71% அலுமினாAl2O315.41% சுண்ணாம்புCaO4.90% மெக்னீசியாMgO4.36% சோடியம் ஆக்சைடுNa2O3.55% இரும்பு (II) ஆக்சைடுFeO3.52% பொட்டாசியம் ஆக்சைடுK2O2.80% இரும்பு(III) ஆக்சைடுFe2O32.63% நீர்H2O1.52% டைட்டானியம் டை ஆக்சைடுTiO20.60% பாசுபரசு பென்டாக்சைடு P2O50.22%மொத்தம்99.22% புவியின் இரசாயன சேர்மானம் பூமியின் நிறை ஏறக்குறைய 5.98 கி.கி. ஆகும். பூமி, இரும்பு (32.1%), ஆக்சிஜன் (30.1%), சிலிக்கன் (15.1%), மெக்னீசியம் (13.9%), சல்பர் (2.9%), நிக்கல் (1.8%), கால்சியம் (1.5%), மற்றும் அலுமினியம் (1.4%); மீதமுள்ள 1.2% மிகவும் குறைந்த அளவிலுள்ள தனிமங்களால் ஆனது. நிறை பிரிவினால் புவியின் உட்கரு பிரதானமாக இரும்பினாலும் (88.8%) சிறிதளவு நிக்கல் (5.8%) மற்றும் சல்பர் (4.5%) ஆகியவற்றாலும், மேலும் ஒரு விழுக்காடு அரிதான தனிமங்களாலும் ஆகியுள்ளது. புவியியலாளர் எப். டபிள்யூ. கிளார்க் 47 விழுக்காட்டுக்கு சிறிது கூடதலான பிராணவாயு இருப்பதாக கணக்கிட்டுள்ளார். பூமியின் மேற்பரப்பில் பரவியிருக்கும் கற்கள் பெரும்பாலும் ஆக்சைடுகளாலேயே ஆனது. மற்ற குளோரின், சல்பர், ப்ளூரின் இவை 1% க்குள் அடங்கும். இவற்றில் முதன்மையான ஆக்சைடுகள் சிலிக்கா, அலுமினா, இரும்பு ஆக்சைடு, சுண்ணாம்பு, மெக்னீசியா, பொட்டாசியம் மற்றும் சோடா ஆகும். சிலிகா அமிலத்தைப் போல் செயல்பட்டு சிலிக்கேட்டுகளை உருவாக்குகின்றது. பெரும்பாலும் தீப்பாறையில் காணப்படும் எல்லா கனிமங்களும் இதைப் போலவே செயல்படுகின்றன. ஏறத்தாழ 1,672 வகையான பாறைகளை ஆராய்ந்து பார்த்ததில் புவியியலாளர் கிளார்க் 11 வகையான ஆக்சைடுகள் (வலது பக்கம் உள்ள அட்டவணையைப் பார்க்க) 99.22% இருப்பதாக கண்டறிந்துள்ளார். இதர எல்லா தனிமங்களும் வெகு சிறிதளவே இவற்றில் அடங்கியுள்ளது. புவியின் உள்கட்டமைப்பு புவியின் உட்பகுதி மற்ற திட கோள்களைப் போல் அதன் வேதியியல் அல்லது இயற்பியல் (பாய்வு) பண்புகளின் திடப்பொருட்களின் ஓட்டம் கொண்டு பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புவியின் வெளி வடிவம் சிலிக்கேட்டால் ஆன திட மேல் ஓடு, இதனடியே பாகு நிலையிலுள்ள திட மூடகம் உள்ளது. புவியின் மேலோடு மூடகத்திலிருந்து மோஹோரோவிசிக் தொடர்பின்மையினால் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மேலோட்டின் தடிமன் சமச்சீராக இல்லை: கடல்களுக்கு அடியில் சராசரியாக 6 கி.மீட்டரும் நிலப்பரப்பில் 30–50 கி.மீ. வரையிலும் உள்ளது. புவியின் மேலோடு மற்றும் குளிர்ந்த, கடினமான மேல் மூடகம் இணைந்தது லித்தோ அடுக்கு (lithosphere) ஆகும்; நிலவியல் பலகைகள் இந்த லித்தோ அடுக்கிலேயே அமைந்துள்ளது. லித்தோ அடுக்கிற்கு கீழே இருப்பது அஸ்த்னோ அடுக்கு (asthenosphere), ஒப்பிடுகையில் குறைந்த பாகு நிலையில் உள்ள இந்த படிவத்தின் மேலே லித்தோ அடுக்கு நகர்கின்றது. மூடகத்தினூடே முக்கியமான பளிங்கு கட்டமைப்பு மாறுதல்கள் 410 முதல் 660 கிமீ ஆழத்திலேயே உருவாகின்றது, இந்த மாறுதல் வளையம் மேல் மற்றும் அடி மூடக படிவங்களைப் பிரிக்கின்றது. மூடகத்தினூடே மிகவும் குறைந்த பாகுநிலையில் வெளிக்கருவும் அதனடியில் திடமான உட்கருவும் உள்ளது. உட்கருவானது மற்ற புவியின் பகுதிகளை விட அதிகமான கோண வேகத்தில் சுழல்கிறது, அதாவது ஒவ்வொரு வருடமும் 0.1–0.5° அதிகமாகிறது. +புவியின் பல்வேறு அடுக்குகளின் தோற்றம்frameless|centerஉட்கரு முதல் எக்சோ அடுக்கு வரையிலான புவியின் குறுக்கு வெட்டு தோற்றம்.ஆழம் கிமீபுவியின் பல்வேறு அடுக்குஅடர்த்திகி/செமீ30–60 லித்தோ அடுக்கு5 முதல் 200 கி.மீ. வரை மாறுபடும்.—0–35 ...மேல் ஓடு5 முதல் 70 கி.மீ. வரை மாறுபடும்.2.2–2.935–60மேல் மூடகம்3.4–4.4100–700 மூடகம்3.4–5.635–2890 அஸ்த்னோ அடுக்கு—2890–5100 வெளிக்கருவம்9.9–12.25100–6378 உட்கருவம்12.8–13.1 பூமியின் வெப்பம் பூமியின் உட்புற வெப்பம் கிரகச் சேர்க்கையினால் உண்டாகும் மீத வெப்பத்தாலும் (சுமார் 20%) மற்றும் அணுச் சிதைவுகளாலும் (80%) உருவானது. பூமியில் அதிகமான வெப்பத்தை உருவாக்கும் ஐசோடோப்புகள் பொட்டாசியம்-40, யுரேனியம்-238, யுரேனியம்-235 மற்றும் தோரியம்-232 ஆகும். பூமியின் மத்தியில் வெப்பம் 7,000 கெல்வினையும் மற்றும் அழுத்தம் 360 கிகாபா (GPa)-வையும் அடையலாம். பூமியின் வெப்பம் பெரும்பாலும் அணுச்சிதைவிலிருந்து உருவாவதால், அறிவியலாளர்கள் பூமியின் ஆரம்பகால கட்டத்தில், குறைந்த அரை வாழ்வு கொண்ட ஐசோடோப்புகள் மறையுமுன், புவியின் வெப்பம் அதிகமாயிருந்திருக்கும் என்றும் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன் தற்போதைய வெப்பத்தை விட இருமடங்கு வெப்பம் உற்பத்தி ஆகிய போது, பூமியின் வெப்பம்சார் தன்மைகள் மாறியிருக்கும், அதிகமான மூடக பரப்பலும், டெக்டோனிக் பலகை நகர்தலும், மேலும் கோமடைட்ஸ் (komatiites) என்ற தீப்பாறைகள் உருவானதும் (இவை இன்று உருவாவதில்லை) ஏற்பட்டிருக்கும் என்று நம்புகின்றனர். +தற்போது அதிக வெப்பத்தை உருவாக்கும் ஐசோடோப்புகள்ஐசோடோப்வெளியிடும் வெப்பம் [வா/கிகி ஐசோடோப்]அரை வாழ்வு [ஆண்டு]சராசரி மூடக அடர்த்தி [கிகி ஐசோடோப்/கிகி மூடகம்]வெளியிடும் வெப்பம் [வா/கிகி மூடகம்] 238U 235U 232Th 40K பூமியிலிருந்து ஏற்படும் மொத்த வெப்ப இழப்பு 163 உட்கருவின் வெப்ப ஆற்றலில் ஒரு பகுதி மூடக ஆழ் கிணறுகளின் (mantle plumes) மூலமாக மூடகத்திற்கு கடத்தப்படுகிறது; இது ஒருவகை அதி வெப்பப் பாறை எனலாம். இந்த வெப்ப ஆழ் கிணறுகள் வெப்ப மையங்களையும் வெப்ப பாறை வெள்ளத்தையும் ஏற்படுத்தவல்லது. பூமியின் மிகையான வெப்ப இழப்பு டெக்டோனிக் பலகை நகர்வதாலும் நடுக்கடல் மேடுகளுடன் சேர்ந்து மூடகங்கள் மேல்நோக்கி நகர்வதாலும் ஏற்படுகின்றது. இறுதியாக மிக அதிக வெப்ப இழப்பு, லித்தோ அடுக்கின் வெப்ப கடத்தலால் ஏற்படும், அதாவது பெரும்பாலும் அவை கடல் வழியே ஏற்படும் ஏனெனில் தரையை விட கடலினடியில் உள்ள லித்தோ அடுக்கின் பருமன் குறைவு. நிலப்பலகைத் தட்டு + புவியின் முக்கிய தட்டுகள் framelessதட்டின் பெயர்பரப்பளவு106கி.மீ.² ஆப்பிரிக்க தட்டுசோமாலியத் தட்டு உட்பட, இது தற்போது ஆப்பிரிக்க தட்டிலிருந்து தோன்றும் செயலில் உள்ளது. பார்க்க:78.0 அண்டார்க்டிக் தட்டு60.9 ஆத்திரேலியத் தட்டு47.2 யுரேசியத் தட்டு67.8 வட அமெரிக்கத் தட்டுத் தட்டு75.9 தென் அமெரிக்கத் தட்டு43.6 பசுபிக் தட்டு103.3 மிகவும் இறுக்கமான புவியின் மேல் பரப்பு, லித்தோ அடுக்கு எனப்படும் இது, நிலப்பலகைத் தட்டுகளாக உடைந்து பிரிந்திருக்கின்றது. இந்தத் தட்டுகள் இறுக்கமான அமைப்புகளைக் கொண்டது மேலும் அவை ஒன்றோடொன்று நகர்ந்து மூன்று வகைத் தட்டுளாக எல்லைகளை உருவாக்குகின்றன: அவை முறையே குறுகும் எல்லைகள், இரண்டு தட்டுகள் ஒன்றை நோக்கி மற்றொன்று நகர்தல், விலகும் எல்லைகள், பலகைகள் ஒன்றைவிட்டு மற்றொன்று விலகுதல் மற்றும் உருமாறும் எல்லைகள், இரண்டு தட்டுகள் ஒன்றோடு ஒன்று பக்கவாட்டில் உரசிச் செல்வது என்பனவாம். இந்த செயல்களால் தட்டுகளின் எல்லைகளில் பூகம்பம், எரிமலைகள், மலைகள் உருவாக்கம் மற்றும் ஆழ் கடலடிப் படுபள்ளங்கள் உருவாகுகின்றன. நிலப்பலகைத் தட்டுகள் அசுதனோ அடுக்கின் மேல் நகர்ந்துச் செல்கின்றது, அதாவது இவ்வடுக்கின் பாகு நிலையிலுள்ள ஆனால் திடமான மேல் மூடகத்தின் பகுதிகள் நிலப்பலகைத் தட்டுகளுடன் நகரக்கூடிய தன்மையைக் கொண்டதாய் உள்ளது, மேலும் இவற்றின் இயக்கம் புவியின் மூடகத்தின் உள்ளே ஏற்படும் இயக்க மாதிரிகளை சார்ந்தே அமைகின்றது. நிலப்பலகை தட்டுகள் கோளின் மேற்பரப்பில் நகர்வதால், குறுகும் எல்லைகளில் உள்ள பெருங்கடல் தரைகள் உள்ளிழுத்துக் கொள்ளப்படுகின்றது. அதே சமயம், தட்டுகளில் விலகு எல்லைகளால் மூடகப் பொருட்கள் வெளியேறி நடுப் பெருங்கடல் அகழிகள் உருவாகின்றன. இந்த இரு செயல்களாலும் பெருங்கடல் கீழ் புவியின் மேலோடு தொடர்ச்சியாக மூடகத்தோடு மீள் சுழற்சியில் ஈடுபடுகின்றது. இந்த மீள் சுழற்சியால், பெரும்பாலான பெருங்கடல் கீழ் புவியின் மேலோடு 100 மில்லியன் ஆண்டுகளுக்கு உட்பட்டவையே. உலகிலேயே பழமையான பெருங்கடல் கீழ் புவியின் மேலோடு சராசரியாக 200 மில்லியன் ஆண்டுடையது. இது மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. ஒப்பிட்டுப் பார்க்கையில் பழமையான கண்டங்களின் மேலோடு 4030 மில்லியன் வருடம் பழமையானது. மற்ற முக்கிய தட்டுகள், இந்தியத் தட்டு, அரேபியத் தட்டு, கரீபியத் தட்டு, தென் அமெரிக்காவின் வடகரையில் இருக்கும் நாசுகாத் தட்டு மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள சுகோசியத் தட்டு என்பனவாம். ஆஸ்திரேலியத் தட்டு இந்தியத் தட்டுடன் 50 முதல் 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இணைந்தது. பெருங்கடல் தட்டுகளிளே மிகவும் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பவை, இதில் கோகோசுத் தட்டு வருடத்தில் 75 மீட்டரும் மற்றும் பசிபிக் பெருங்கடல் தட்டு ஆண்டிற்கு 52–69 மி.மீ. வரையிலும் நகர்கின்றன. மறுபுறத்தில் மிகவும் மெதுவாக நகரும் தட்டுகளில் யுரேசியன் தட்டு ஆகும், இது வருடத்திற்கு 21 மீட்டர் தூரம் நகர்கின்றது. மேற்பரப்பு பூமியின் நிலம் இடத்திற்கு இடம் மிக வேறுபட்டுள்ளது. பூமியின் மேற்பகுதி 70.8% நீரினால் சூழப்பட்டுள்ளது மேலும் கண்டங்களின் அடுக்குப் பகுதிகள் கடலுக்கடியே உள்ளன. நீரால் மூழ்கப்பட்ட இடங்களில் மலை போன்ற அமைப்புகள், பூமி முழுவதும் பரவியுள்ள நடுப்பெருங்கடல் மலைத்தொடர், எரிமலைகள், பெருங்கடல் அகழிகள், ஆழ்கடல் படுபள்ளங்கள், பெருங்கடல் பீடபூமிகள் மற்றும் ஆழமான கணக்கிலடங்கா சமவெளிகள் இவையாவும் அடங்கும். இதைத் தவிர்த்து பூமியின் மீது தண்ணீருக்கு வெளியே உள்ள 29.2% இடத்தில் மலைகள், பாலைவனங்கள், சமவெளிகள், பீடபூமிகள் மற்றும் நிலப்பரிமாண அமைப்புகளும் அடங்கும். பூமியின் மேற்பரப்பு டெக்டோனிக் செயல்கள் மற்றும் அரித்தலால் காலப்போக்கில் உருமாறிக் கொண்டே இருக்கிறது மேற்பரப்பில் டெக்டோனிக் பலகை நகர்தலால் ஏற்படும் குவிந்த மற்றும் தகர்ந்த அமைப்புகள் மேலும் மழைகளால் (precipitation) சிதைவதும் வெப்ப சுழற்சி மற்றும் ரசாயனங்களாலும் தாக்கப்படுகின்றன. பனியாறு உருவாதல், கடற்கரை அரிப்பு, பவளப்பாறைகள் ஏற்படுதல் மற்றும் பெரும் விண்கற்களின் தாக்கம் ஆகியவற்றாலும் பூமியின் மேற்பரப்பு மாற்றியமைக்கப்படுகின்றது. left|thumbnail|பூமியின் தற்போதைய உயரம் மற்றும் ஆழம் தேசிய பௌதிக தகவல் மையத்தின் நிலம் சார்ந்த டிஜிட்டல் நில மாதிரி. கண்டங்களின் மேலோடு குறைந்த திண்மத்தையுடைய தீப்பாறைகள், கிரானைட் மற்றும் அன்டிசைட்களால் (andesite) ஆனது. பசால்ட் எனப்படும் அதிக திண்மத்தைக் கொண்ட தீப்பாறைகள் அரிதாக காணப்படுகின்றன. மேலும் இவையே கடற்கரையில் காணப்படும் முக்கிய பாறைவகையாம். படிவுப்பாறைகள் வண்டல்கள் அழுத்தத்தினால் உருமாறி ஒன்று சேர்ந்து தோற்றுவிக்கப்படுகின்றன. படிவுப்பாறைகள் பூமியின் மேலோட்டில் 5% உள்ளது எனினும் அவை கண்டங்களின் மேற்பரப்பில் 75% மாக உள்ளது. பூமியின் மீது காணப்படும் மூன்றாவது வகைப் பாறைகள் உருமாறிப்பாறைகள், இவை மற்ற பாறைகள் அதிக அழுத்தம், அதிக வெப்பம் அல்லது இரண்டினாலும் உருப்பெயருவதால் ஏற்படுபவை. பூமியில் மிக அதிகமாகக் காணப்படும் சிலிக்கேட்டுகள் குவார்ட்ஸ், பெல்ட்ஸ்பார் (feldspar), ஆம்பிபோல் (amphibole), மைக்கா, பைராக்சீன் (pyroxene) மற்றும் ஒலிவைன் (olivine) ஆகும். பொதுவாக காணப்படும் கார்பனேட்டுகள் கால்சைட்டு (சுண்ணாம்பு கற்களில் காணப்படுவது), அராகோனைட்டு மற்றும் டோலோமைட்டு ஆகும். புவியில் எல்லாவாற்றிற்கும் மேலே உள்ள பரப்பு பீடோ அடுக்கு (pedosphere). இது மண்ணால் ஆனது மற்றும் இது மண் உருவாகும் செயலுக்கும் உட்பட்டது. இது லித்தோ அடுக்கு, வளிமண்டலம், நீர்க்கோளம் மற்றும் உயிர்க்கோளத்திற்கு இடையே உள்ளது. தற்போதைய நிலையில் பூமியின் மேற்பரப்பில் 13.31% மட்டுமே காற்றோட்டமான நிலமாகும் மற்றும் இதில் 4.71% இல் மட்டுமே நிரந்தர விவசாயம் செய்ய ஏற்றதாக இருக்கிறது. பூமியின் நிலப்பரப்பில் 40% இடம் விவசாயத்திற்கும், மேய்ச்சல் நிலத்திற்கும் பயன்படுகின்றது, அதாவது, தோராயமாக விவசாயத்திற்கு 1.3 கிமீ² நிலமும், மேய்ச்சலுக்கு 3.4 கிமீ² நிலமும் பயன்படுத்தப்படுகின்றது. பூமியின் மேற்பரப்பிலிருந்து நிலத்தோற்றத்தைக் காணும் போது மிகவும் தாழ்வான இடம் −418 மீ ஆழத்தில் உள்ள சாக்கடல் (Dead Sea), மற்றும் 2005 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மிகவும் உயரமான இடம் 8,848 மீட்டர் அளவு கொண்ட எவரெஸ்ட் சிகரம் ஆகும். நிலத்தின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து 840 மீட்டர் ஆகும். நீர்க்கோளம் thumbnail|புவியின் மேற்பரப்பு பக்கத்தோற்ற வரைபடம். புவியின் மேற்பரப்பு தோராயமாக 71% நீரால் சூழப்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர் அதன் தனித் தன்மையாகும் மற்றும் இதுவே நம் "நீலக்கிரகத்தை" சூரிய மண்டலத்திலுள்ள மற்ற கிரகங்களிலிருந்து வேறுபடுத்துகிறது. பூமியின் நீர்க்கோளம் முதன்மையாக பெருங்கடல்களால் ஆனது. ஆனால் முழுதாக கணக்கிலெடுத்தால் உள்நாட்டுக் கடல்கள், ஏரிகள், ஆறுகள் மற்றும் 2,000 மீட்டர் வரையுள்ள நிலத்தடி நீரும் இதிலடங்கும். அதிக ஆழமான நீருக்கடியில் இருக்கும் இடம் -10,911.4 மீட்டரில் பசிபிக் பெருங்கடலிலுள்ள மரியானா அகழியில் அமைந்திருக்கும் சாலஞ்சர் ஆழமாகும்.இந்த அளவீடு கைக்கோ (Kaikō) என்பதால் மார்ச் 1995 ஆம் ஆண்டில் எடுத்தது, இன்று வரை இதுவே மிகத்துல்லியமான அளவீடாக நம்பப்படுகிறது. மேலும் தகவலுக்கு சாலஞ்சர் ஆழம் என்ற கட்டுரையைப் பார்க்கவும். பெருங்கடல்களின் சராசரி ஆழம் 3,800 மீட்டர் ஆகும், இது கண்டங்களின் சராசரி உயரத்தைவிட நான்கு மடங்கு அதிகம். பெருங்கடல்களின் சராசரி நிறை 1.35 மெட்ரிக் டன்கள், அல்லது பூமியின் மொத்த நிறையில் 1/4400, மற்றும் 1.386கிமீ3 கனஅளவு இடத்தைப் பிடித்துள்ளது. பூமியின் நிலப்பரப்பு முழுவதும் சமமாக பரவியிருக்குமானால் நீரின் மட்டம் நிலத்தின் மீது 2.7 கி.மீ. உயர்ந்து இருக்கும்.புவியின் கடலின் மொத்த கொள்ளளவு 1.4கிமீ3. புவியின் மொத்த மேற்பரப்பு 5. 1கிமீ². எனவே, சராசரி ஆழம் இந்த இரண்டின் விகிதம் அல்லது 2.7 கி.மீ. மொத்த நீரில் 97.5% உப்பு நீராகும் மற்ற 2.5% தூய நீராகும். இதில் பெரும்பான்மையான தூயநீர், அதாவது 68.7% தற்போது பனிக்கட்டிகளாக உள்ளது. பெருங்கடல்களின் மொத்த நிறையில் 3.5% உப்பாலானது. இந்த உப்பானது எரிமலை நிகழ்வுகளாலும் மற்றும் குளிர்ந்த தீப்பாறைகளிலிருந்தும் வெளிப்பட்டதாகும். வளிமண்டலத்திலுள்ள பல வாயுக்கள் பெருங்கடலில் கரைந்து அதில் வாழும் உயிரினங்களுக்கு ஆதாரமாய் உள்ளது. கடல் நீர் உலகின் பெரிய வெப்ப தேக்கமாக செயல்படுவதால் புவியின் வானிலையில் முக்கிய அங்கம் வகிக்கின்றது. பெருங்கடல்களில் வெப்பப் பங்கீட்டில் மாற்றம் நேரும் போது குறிப்பிடும் வகையில் வானிலை மாற்றங்கள் ஏற்படுவதால் எல் நினோ தெற்கு திசை ஊசலாட்டம் (ElNiño – Southern Oscillation) போன்றவை ஏற்படும். வளிமண்டலம் இந்த புவியின் மேற்பரப்பில் உள்ள வளி மண்டல அழுத்தம் சராசரியாக 8.5 கி.மீ. அளவு உயரம் வரை 101.325 கிலோபா (KPa) ஆக இருக்கிறது. இது 78% நைட்ரஜன், 21% ஆக்சிஜன் மற்றும் சிறிய அளவில் நீராவி, கரிமிலவாயு போன்ற மற்ற வாயு மூலக்கூறுகளையும் கொண்டுள்ளது. அடிவளிமண்டல (Troposphere) உயரமானது பூமியின் கிடைமட்ட பரப்பை பொறுத்து மாறும். தட்பவெப்ப மற்றும் காலநிலை மாறுபாட்டின் காரணமாக இது துருவங்களில் 8 கி.மீ. முதல் பூமத்தியரேகையில் 17 கி.மீ. வரை இருக்கும். புவியின் உயிர்கோளம் வளிமண்டலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 2.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பிராணவாயு ஒளிச்சேர்க்கை முதன்முதலில் தற்போதுள்ள நைட்ரஜன் - ஆக்சிஜன் வளி மண்டலத்தை உருவாக்கியது. இந்த மாற்றமானது வளி சார்ந்த உயிரினங்கள் வளர்ச்சி மற்றும் ஓசோன் படலத்தையும் உருவாக்கியதோடு, புவியின் காந்தபுலம் புற ஊதாக் கதிர்கள் சூரியனின் கதிர்வீச்சு ஆகியவற்றை தடுத்து, புவியில் உயிரினங்கள் வாழ வழிசெய்கிறது. புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான நீராவி பரிமாற்றம், வாயுக்கள், சிறிய விண்கற்களை புவியை தாக்கும்முன் எரியசெய்தல் மற்றும் மிதமான வெப்பநிலை போன்றவற்றை அளிப்பதில் வளி மண்டலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இறுதியாக குறிப்பிட்ட வளிமண்டல வெப்பநிலை மாற்றத்தை கிரீன் ஹவுஸ் மாற்றம் என குறிப்பிடுவர் (Greenhouse Effect): இது நிலத்தில் இருந்து வெளிவரும் வெப்ப ஆற்றலை வளிமண்டலத்தில் உள்ள சிறிதளவிலான மூலக்கூறுகள் சிறைப்படுத்தி அதன் மூலம் வளி மண்டலத்தின் சராசரி வெப்பத்தை உயர்த்துவதை குறிக்கும். கார்பன் டை ஆக்சைடு, நீராவி, மீத்தேன் மற்றும் ஓசோன் போன்றவை புவியின் வளி மண்டலத்தில் உள்ள பிரதான கிரீன் ஹவுஸ் வாயுக்கள் ஆகும். இந்த வெப்பம் தக்கவைத்தல் நடக்காவிடில் புவியின் மேற்புற வெப்பம் −18° செ ஆக இருந்திருக்கும் மற்றும் உயிரினங்கள் வாழ ஏதுவாய் இருந்திருக்காது. வானிலை மற்றும் பருவ நிலை புவியின் வளிமண்டலத்திற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை கிடையாது, அது உயரே செல்ல செல்ல மெலிந்து அண்ட வெளியில் மறைந்து போகின்றது. வளி மண்டலத்தின் மொத்த நிறையில் மூன்றில் ஒரு பகுதி பூமியின் மேற் பரப்பிலிருந்து முதல் 11 கி.மீ.ரிலேயே அடங்கி விடுகின்றது. இந்த அடியில் உள்ள அடுக்கே அடிவளிமண்டலம் ஆகும். சூரியனிலிருந்து வரும் வெப்ப சக்தி இந்த அடுக்கை மற்றும் இதனடியில் உள்ள பூமியின் மேற்பரப்பையும் சூடு படுத்தி பிறகு இதனுடன் தொடர்புள்ள காற்றை விரிவாக்குகின்றது. இந்த குறைந்த அடர்த்தியுடைய காற்று மேலெழுகிறது, அவ்விடத்தை அதிக அடர்த்தியுள்ள குளிர்ந்த காற்று நிரப்புகின்றது. இவ்வாறு ஏற்படும் செயல் வளிமண்டலத்தில் சுழற்சியை ஏற்படுத்துகின்றது அதனால் வெப்ப சக்தி நகர்ந்து வானிலை மற்றும் பருவநிலை ஏற்பட காரணமாகின்றது. முதன்மை வளிமண்டல சுழற்சியின் தடத்தில் நிலநடுக்கோட்டிலிருந்து 30° பாகைகள் உருவாகும் வியாபாரக் காற்றுகள் மற்றும் மேற்கத்திய காற்றுகள் இவை மத்திய-நில நேர்ககோட்டில் 30° மற்றும் 60° பாகைக்குள் உருவாகின்றன. பெருங்கடல்களின் ஓட்டமும் வானிலை மாற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன, முக்கியமாக வெப்ப ஹேலைன் சுழற்சி பூமத்திய கடல்களில் இருந்து துருவக்கடல்களுக்கு வெப்ப ஆற்றலைப் பரப்புகிறது. பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நீராவி, சுழற்சியான முறையில் வளிமண்டலத்தை சென்றடைகிறது. வளிமண்டலத்தின் நிலை அனுமதிக்கும் போது சூடான ஈரப்பதம் மிக்க காற்று மேலெழும்பி, பிறகு குளிர்ந்து, மழையாகி, பூமியை அடைகின்றது. இது பெரும்பாலும் ஆற்றின் மூலமாக பெருங்கடல் அல்லது ஏரிகளை சென்றடைகிறது இந்நீரின் சுழற்சி பூமியில் உயிரினங்கள் வாழ மிக முக்கியமானது மற்றும் வெகு காலமாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் புவியின் மேற்புற அமைப்புகளின் அரிப்புகளுக்கும் காரணமாகின்றது. மழை பொழிவது இடத்திற்கு இடம் வெகுவாக வேறுபடுகின்றது, அது பல மீட்டரில் இருந்து சில மில்லி மீட்டர் வரை மாறுபடுகின்றது. ஒவ்வொரு இடத்திலும் காணப்படும் வளிமண்டல சுழற்சி, மேற்புற அமைப்பு மற்றும் வெப்ப மாற்றத்தை பொறுத்தே அவ்விடத்து மழை அமையும். பூமியின் பகுதிகளை அதன் நில நேர்க்கோட்டின் படி சராசரியான ஒரே தட்பவெப்ப நிலைகள் உள்ளவைகளாக பிரிக்கலாம். பூமத்திய ரேகையிலிருந்து துருவங்கள் வரையிலான தட்பவெப்பத்தை வெப்ப வளையம் (அல்லது ஈக்வடோரியல்), மிதவெப்ப வளையம், மிதமான வளையம் மற்றும் துருவ வளைய தட்பவெப்பம் என பிரிக்கலாம். தட்பவெப்பத்தை வெப்பம் மற்றும் பெய்யும் மழையைக்கொண்டும் வகைப்படுத்தலாம், அதாவது அவ்வவ்விடத்தின் சீரான காற்றின் அடர்த்தியைக் கொண்டும் பிரிக்கலாம். பொதுவாக உபயோகத்தில் உள்ள கோப்பெனின் தட்பவெப்ப முறையின் படி (விளாடிமிர் கோப்பெனின் மாணாக்கர் ருடால்ப் கைகர் மாற்றியமைத்தது) தட்பவெப்பங்களை ஐந்து பெரும் பிரிவுகளாக (ஈரப்பதம் மிக்க வெப்ப பகுதி, வறண்ட பகுதிகள், ஈரப்பதம் மிக்க மத்திய நில நேர்க்கோட்டு பகுதிகள், மிதமான குளிர் பகுதிகள் மற்றும் மிகக்குளிர் துருவ பகுதிகள்) பிரித்துள்ளார், மேலும் இவை குறிப்பிட்ட உட்பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. மேல் வளிமண்டலம் thumbnail|right|இந்த சுற்றுப் பாதையிலிருந்து பார்க்கும் போது, புவியின் வளிமண்டலம் முழுநிலவை பாதி மறைக்கிறது. நாசா படம். வளிமண்டலத்தில், அடி வளிமண்டலத்தின் மேற்பகுதி, வழக்கமாக ஸ்ட்ரடோ அடுக்கு (stratosphere), மீசோ அடுக்கு (mesosphere), வெப்பஅடுக்கு என பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு அடுக்கும், அதன் உயரத்திற்கு ஏற்ப, தோன்றும் வெப்ப மாறுபாட்டிற்கு ஏற்றாற்போல் வெவ்வேறு இழப்பு விகிதத்தைக் கொண்டிருக்கும். இவற்றை தாண்டி, எக்சோ அடுக்கு எனப்படும் வெளி அடுக்கு மெலிந்து காந்த அடுக்கில் கலந்துவிடுகிறது. இந்த அடுக்கில்தான், பூமியின் காந்த புலம் சூரியக் கதிர் காற்றுடன் ஊடாடுகிறது. பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு தேவையான ஒரு பகுதி வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் அடுக்கு ஆகும், இது ஸ்ட்ரடோ அடுக்கில் இருந்துகொண்டு பூமியின் மேற்பரப்பை புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாக்கிறது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கார்மன் கோடு வளிமண்டலத்திற்கும் விண்வெளிக்கும் இடையே உள்ள எல்லையை நிர்ணயிக்கிறது. வெப்ப ஆற்றலால், வளிமண்டலத்தின் வெளி விளிம்பில் உள்ள சில மூலக்கூறுகளின் வேகம் அதிகரித்து ஒரு சமயம் அவை புவியின் ஈர்ப்பு சக்தியிலிருந்த விடுபடுகின்றது. இதன் விளைவாக நிதானமாக அதே சமயம் நிலையாக வளிமண்டலம் விண்வெளியில் நுழைகிறது. ஏனெனில், நிலையற்ற ஹைட்ரஜன் மூலக்கூறு நிறை குறைவாக இருப்பதால், அது மிக விரைவிலேயே விடுபடும் வேகத்தை அடைகிறது. மேலும் மற்ற வாயுக்களை விட மிக வேகமாக விண்வெளிக்குள் நுழைகிறது. இதுவே பூமி ஆரம்ப ஒடுக்க நிலையிலிருந்து தற்போதைய ஆக்சிஜனேற்ற நிலையை அடைவதற்கு காரணமாகும். ஒளிச்சேர்க்கை ஆக்சிஜன் மிகுதியாக கிடைக்க வழி செய்கிறது. அதே சமயத்தில், ஒடுக்கும் காரணியான ஹைட்ரஜன் குறைவதற்கும் காரணமாகிறது. வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அதிகமாக பரவுவதற்கு இதுவே காரணமாக இருந்திருக்கும் என நம்பப்படுகிறது. எனவே, பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறக்கூடிய ஹைட்ரஜனின் தன்மை, பூமியில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழி வகுத்திருக்கிறது. தற்போதைய ஆக்சிஜன் நிறைந்த வளிமண்டலத்தில், ஹைட்ரஜன் வளிமண்டலத்தை விட்டு வெளியேறும் முன்னரே, நீராக மாற்றப்படுகிறது. அதற்கு பதிலாக, வளிமண்டலத்தின் மேல்பகுதியில் ஏற்படும் மீத்தேனின் அழிவே, ஹைட்ரஜன் இழப்பிற்கு காரணமாகிறது. காந்தப்புலம் thumbnail|right|புவியின் காந்தப்புலம், இருதுருவங்களை ஒத்திருக்கிறது. புவியின் காந்தப்புலத்தின் காந்த இரு துருவங்கள், அதன் இரு புவியியல் துருவங்களுக்கு அருகில் தற்போது அமைந்திருப்பதாக தோராயமாக கருதப்படுகிறது. இயக்கவியல் கொள்கையின்படி, காந்தப்புலமானது, பூமியின் உருகிய நிலையில் உள்ள வெளிக்கருவில், வெப்பம் கடத்தும் பொருள்களின் கடத்துத் திறனை உருவாக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இடத்தில், உருவாக்கப்படுகிறது. இதுவே, பூமியின் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. வெளிக்கருவில், வெப்ப கடத்துத் திறன் ஒழுங்கற்ற நிலையில் இருக்கும். மேலும், அது அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும். இந்த காந்தப்புல மாற்றம் ஒவ்வொரு மில்லியன் வருடத்திற்கு சில முறை ஒழுங்கற்ற இடைவெளியில் மாறிக்கொண்டேயிருக்கும். இறுதியாக இந்த மாற்றம் 700,000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. இந்த புலமானது காந்த அடுக்கை (magnetosphere) ஏற்படுத்தி, சூரியக் கதிர் காற்றுக்கு அருகில் உள்ள துகள்களை விலக்குகிறது. சூரிய கதிரின் பௌ ஷாக் (bow shock) நுனி புவியின் ஆரத்தை போன்று 13 மடங்கைக் கொண்டது. காந்தப்புலதிற்கும் சூரிய காற்றுக்கும் நிகழும் மோதலினால் வான் ஆலன் கதிர்வீச்சு வளையம் உண்டாகிறது. அது பொது மையமாகக்கொண்ட, டாரஸ் (torus) வடிவமுள்ள மின்னூட்டதுகள்கள் கொண்ட பகுதியாகும். பிளாஸ்மா புவியின் வளிமண்டலத்தில் காந்த துருவங்களில் நுழையும்போது கனல் (அரோரா) ஆக மாறுகிறது. பூமியின் கோளப்பாதை மற்றும் சுழற்சி சுழற்சி thumbnail|right|புவியின் சாய்ந்த அச்சுக்கும் (அல்லது சாய்நிலை) அதன் சுழலும் அச்சு மற்றும் கோளப்பாதைக்கும் இடையே உள்ள தொடர்பு. பூமியின் சுழலும் காலம் சூரியனை ஒப்பிடுகையில்-அதன் சராசரி சூரிய நாள்-அதாவது சராசரி சூரிய நேரத்தில் 86,400 விநாடிகளாகும். இந்த ஒவ்வொரு வினாடியும் எஸ்.ஐ (SI) முறை வினாடியை விட சிறிது கூடுதல். ஏனெனில் 19 ஆம் நூற்றாண்டை ஒப்பிடும் போது தற்போதைய பூமியின் சூரிய நாள் அலை முடுக்கத்தால் சிறிதே நீண்டிருக்கிறது. புவியின் சுழற்சிக் காலத்தை நிலையான விண்மீன்களுடன் ஒப்பிடுவதை, அதன் ஸ்டெல்லர் நாள் என சர்வதேச புவி சுழற்சி மற்றும் ஒப்பிடு காரணி அமைப்பு (IERS) கூறுகிறது, இது சராசரி சூரிய நேரத்தில் (UT1) அல்லது இந்த எண்களின் மூலத்தில், "சராசரி சூரிய நேர நிமிடங்கள்" என்பதற்குப் பதிலாக "UT1 நிமிடங்கள்" என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.— பூமியின் சுழற்சிக் காலத்தை அதன் ஈர்ப்பு விசையால் உந்தப்பட்ட மாற்றம் அல்லது சராசரி வெர்னல் இஃகுவினாக்ஸ் உடன் ஒப்பிடுவதை, ஒரு விண்மீன் நாள் என தவறாக பெயரிடப்பட்டது, இது சராசரி சூரிய நேரம் (UT1) ஆகும். எனவே ஒரு விண்மீன் நாள் ஸ்டெல்லர் நாளை விட 8.4 ms. சிறியது. SI நிமிடங்களில் 1623–2005—இறுதியில் உள்ள வரைபடம். மற்றும் 1962–2005 காலங்களுக்கு சராசரி சூரிய நேரம் IERS -லிருந்து கிடைக்கப் பெறும். வளிமண்டலத்துள் விண் கற்கள் (meteor) தாழ் சுழற்சி விண்கலங்கள் மற்றும் அனைத்து விண்ணுலக பொருட்களையும் பூமியின் மீதிருந்து பார்க்கும் போது மேற்கு நோக்கி மணிக்கு 15° = நிமிடத்திற்கு 15' என்ற அளவில் போவது போல் தோன்றும். இந்நகர்தல் இரு நிமிடத்தில் சூரியன் அல்லது சந்திரன் அடையும் விட்டமாகும்; நம் கண்களுக்கு சூரியனும் சந்திரனும் ஒரே அளவினவாகத் தோன்றும்.—சூரியன் மற்றும் சந்திரன் பக்கங்களில் உள்ள விட்டத்தைப் பார்க்கவும். கோளப்பாதை பூமி சூரியனைச் சுற்றி தன் கோளப்பாதையில் சராசரியாக 365.2564 சூரிய நாட்களில் 150 மில்லியன் கி.மீ. அல்லது ஒரு விண்மீன் ஆண்டை (sidereal year) கடக்கின்றது. இதனால் சூரியன், நட்சத்திரங்களை ஒப்பிடுகையில் கிழக்கு நோக்கி நாளொன்றுக்கு 1° நகர்வதாக அல்லது சூரியன் அல்லது சந்திரன் விட்டத்தை 12 மணி நேரத்தில் கடப்பதாகத் தோன்றுகிறது. இந்தச் செயலால் சராசரியாக ஒரு சூரிய நாள் அல்லது 24 மணி நேரத்தில் பூமி தன் அச்சிலேயே ஒருமுறை சுழன்று சூரியன் அதன் ஆரம்ப நிலை மெரிடியனை வந்தடைகின்றது. பூமி தன்னைத்தானே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் சுழல்கிறது, இது பூமியின் விட்டத்தை (ஏறத்தாழ 12,600 கி.மீ.) ஏழு நிமிடங்களிலும், சந்திரனுக்கு செல்லும் தூரத்தை (384,000 கி.மீ.) நான்கு மணி நேரத்திலும் கடக்க ஏதுவான வேகமாகும். சந்திரன் பூமியுடன் சேர்ந்து பொதுவான ஒரு பேரி மையத்தை (barycenter), அதன் பின் காணப்படும் விண்மீன்களை ஒப்பிடுகையில் 27.32 நாட்களில் சுழன்று வருகிறது. சூரியனைச் சுற்றி, பூமி மற்றும் சந்திரன் ஆகியவற்றின் பொதுவான சுழற்சியைச் சேர்த்தால், சைனோடிக் மாத காலமாகும், பௌர்ணமியிலிருந்து பௌர்ணமி வரை 29.53 நாட்களாகும். விண்வழி வட துருவத்திலிருந்து காணும் போது பூமி, சந்திரன் மற்றும் அவற்றின் அச்சு சுழற்சி, எதிர்மறை சுழற்சியாக தோன்றும். பூமி மற்றும் சூரியன் ஆகியவற்றின் வட துருவத்திலிருந்து காணும் போது பூமி சூரியனை எதிர்மறையாக சுழன்று வருவது தெரியும். பூமியின் கோளப்பாதையும் அச்சுத் தட்டும் ஒன்றி அமையவில்லை: பூமி சூரிய தட்டின், செங்குத்தான கோட்டிலிருந்து 23.5 கோணங்கள் பூமியின் அச்சு சாய்ந்து காணப்படுகிறது மற்றும் பூமி சந்திரன் தட்டு பூமி சூரிய தட்டிலிருந்து ஐந்து கோணங்கள் பெயர்ந்து உள்ளது. இந்தச் சாய்வான அமைப்பு இல்லையென்றால் சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் இருவாரங்களுக்கு ஒருமுறை ஏற்படும் அமைப்பு இருக்கும். ஹில் அடுக்கு (Hill sphere) அல்லது புவியீர்ப்பு அடுக்கு பூமியிலிருந்து 1.5 கிகா மீட்டர் (அல்லது 1,500,000 கிலோமீட்டர்கள்) ஆரமுடையதாகும்.புவிக்கு, ஹில் ஆரம் என்பது , m என்பது புவியின் நிறை, a என்பது வானியல் அலகு மற்றும் M என்பது சூரியனின் நிறை. A.U. வில் உள்ள ஆரம்: . பூமியின் புவியீர்ப்பு விசை மற்ற விண் பொருட்களாகிய சூரியன் மற்றும் மற்ற கிரகங்களின் ஈர்ப்பு விசையை விட அதிகமாக இருக்கும் மற்றும் அதிகபட்ச தொலைவில் இருக்கும் இடமுமாகும். பூமியின் கட்டில் இருக்கும் அனைத்து பொருட்களும் இந்த தொலைவுக்குள் இருக்க வேண்டியது அவசியம் மீறினால் அவை சூரியனின் ஈர்ப்பு விசையினால் பூமியை விட்டு வெளியேறி விடும். thumbnail|சூரியனின் இடத்தைக் காட்டும், பால்வெளி மண்டல விளக்கப்படம். பூமி சூரிய மண்டலத்தோடு பால்வெளி (Milky Way) கேலக்ஸியில் (galaxy) அதன் மையத்தை 28,000 ஒளி ஆண்டுகளில் சுழலும் பாதையில் அமைந்துள்ளது. இது தற்போது இந்த மண்டலத்தின் நில நடுதட்டிலிருந்து (equatorial plane) 20 ஒளி ஆண்டுகள் மேலேயும் ஓரியன் மண்டலத்தின் சுழல் கையிலும் (Orion spiral arm) அமைந்துள்ளது. பூமி அச்சின் சாய்வும் காலங்களும் பூமியின் அச்சு சாய்ந்திருப்பதால், பூமியின் மேற்பரப்பில் விழும் சூரிய ஒளியின் அளவு வெவ்வேறு இடங்களில் பெரிதும் வேறுபடுகின்றது. இது பல காலம் சார்ந்த தட்பவெப்பநிலை மாற்றங்களை, ஏற்படுத்துகின்றது, வடதுருவம் சூரியனை நோக்கி உள்ள போது வட கோளார்தத்தின் கோடை காலமும், அதுவே சூரியனை விட்டு விலகி உள்ள போது குளிர்காலமாகவும் ஏற்படுகின்றது. கோடை காலத்தின் நாட்கள் நீண்டும் சூரியன் வானில் உயரேயும் காணப்படுகின்றது. குளிர் காலத்தில், தட்பவெப்ப நிலை பொதுவாக குளிர்ச்சியாகவும் மற்றும் நாட்கள் குறுகியும் காணப்படும். ஆர்க்டிக் வளையத்திற்கு மேல் ஓர் அதீதமான செயல் காணப்படுகின்றது, அங்கே வருடத்தின் ஒரு பகுதி காலத்தில் வெளிச்சமே இருப்பதில்லை - இது துருவ இரவு என்றழைக்கப்படுகின்றது. தென் துருவம் வடதுருவத்திற்கு எதிர்புறம் அமைந்திருப்பதால், தென் கோளார்த்த காலங்கள் வட கோளார்த்த காலங்களுக்கு எதிர்மறையாக அமைந்திருக்கிறது. thumbnail|left|செவ்வாயிலிருந்து புவி மற்றும் சந்திரன், செவ்வாய் உலக ஆய்வாளரால் எடுக்கப்பட்ட படம். விண்வெளியிலிருந்து காணும் போது, சந்திரன் வெவ்வேறு தோற்றங்களை பெறுவதைப் போல பூமியும் மாறுபட்ட தோற்றங்களை பெறுவதைக் காணலாம். வானியல் மரபுப்படி, நான்கு பருவ காலங்களும், புவி தனது கோளப் பாதையில் சூரியனை நோக்கி அல்லது சூரியனிலிருந்து விலகும் அதிகபட்ச அச்சு சாய்வுப் புள்ளியான சால்ஸ்டிஸ் (solstice) என்பதையும், இஃவினாக்ஸ் (equinox) சாயும் திசை சூரியனை நோக்கிச் செங்குத்தாக இருக்குமானால், இவை இரண்டையும் வைத்து நிர்ணயிக்கப்படுகிறது. குளிர் கால சால்ஸ்டிஸ் டிசம்பர் 21 அன்று ஏற்படும், கோடை கால சால்ஸ்டிஸ் ஜூன் 21 தேதி வாக்கில் ஏற்படும், வசந்தகால இஃவினாக்ஸ் மார்ச் 20 ஆம் தேதி வாக்கில் ஏற்படும், இலையுதிர்கால இஃவினாக்ஸ் செப்டம்பர் 23 ஆம் தேதி வாக்கில் ஏற்படும். புவியின் சாய்வு கோணம் பல காலங்களுக்கு நிலையாக இயங்கக்கூடியது. இருப்பினும் இந்தச்சாய்வும் சிறிதளவு ஒழுங்கற்ற இயக்கம் (nutation) கொண்டிருக்கிறது, அதாவது மிகச்சிறிய ஒழுங்கற்ற இயக்கம் 18.6 ஆண்டுகளில் ஏற்படுகின்றது. புவி அச்சின் நிலையும் (கோணமல்லாது) காலவாக்கில் மாறுகின்றது, 25,800 ஆண்டு காலம் ஒரு முழு வட்டப்பாதையில், சிறிய ஆனால் தொடர்ச்சியான ஈர்ப்பு விசையால் உந்தப்பட்ட மாற்றத்துடன் (precessing) சுழன்று வருகிறது; இந்த மாற்றமே விண்மீன் ஆண்டு மற்றும் வெப்ப ஆண்டிற்கு இடையே உள்ள வேறுபாட்டிற்கான காரணமுமாகும். இந்த இரண்டு நகர்தலும் புவியின் நிலநடுக்கோட்டைச் சார்ந்த வீக்கத்தின் மீது சூரியன் மற்றும் சந்திரனின் வேறுபட்ட கவர்ச்சியினால் ஏற்படுகிறது. புவியிலிருந்து காணும் போது, துருவங்கள் கூட சில மீட்டர் தூரம் மேற்பரப்பில் நகர்கிறது. இந்த துருவ நகர்தல் பல சுழற்சி பகுதிகள் அடங்கியதாகும், இந்த பல பகுதிகள் மொத்தமாக பகுதி கால நகர்தல் என்றழைக்கப்படுகின்றது. இந்த நகர்தலுக்கு ஒரு வருட சுற்றோடு 14 மாத சுற்றும் உள்ளது, அதை சாண்ட்லேர் தள்ளாட்டம் என குறிப்பிடுகின்றனர். பூமியின் சுழல் வேகமும் தின நேர மாற்றம் என்ற செயலால் பாதிக்கப்படுகின்றது. இந் நாட்களில் புவியின் சூரிய சிறும வீச்சு ஜனவரி மூன்றாம் தேதியும் சூரிய பெரும வீச்சு ஜூலை நான்காம் தேதியும் ஏற்படுகின்றது. இந்த நாட்கள் நிலையானதல்ல, இவை காலப்போக்கில் புவியின் சுழற்சியாலும் ஈர்ப்பு விசையால் உந்தப்பட்ட மாற்றங்களாலும் மாறிக்கொண்டே இருக்கின்றது மேலும் இது மிலன்கோவிட்ச் சுற்று எனும் சுழல் அமைப்பை பின்பற்றுகின்றது. சூரியன் மற்றும் பூமிக்கிடையே ஆன தூரம் அதிகமாகிக்கொண்டிருப்பதால் சூரிய சிறும வீச்சுக்கும் பெரும வீச்சுக்கும் இடையே பூமியை அடையும் கதிர் வீச்சில் 6.9% சூரிய பெரும வீச்சு, சூரிய சிறும வீச்சிலிருந்து 103.4% தூரத்தில் உள்ளது. இன்வர்ஸ் ஸ்குயர் விதியால், சூரிய சிறும வீச்சிலிருந்து வரும் கதிர்வீச்சு, சூரிய பெரும வீச்சிலிருந்து வரும் ஆற்றலிலிருந்து 106.9% மாக இருக்கும். வேறுபாடு உள்ளது. பூமி சூரியனின் மிக அருகே செல்லும் போது அதன் தென் துருவம் சூரியனை நோக்கி இருப்பதால் அதற்கு சூரிய சக்தி வட துருவத்தை ஒப்பிடுகையில் ஒரு வருடத்தில் அதிகமாகக் கிடைக்கின்றது. ஆனால் தென் துருவம் இந்த வகையில் அடையும் சக்தி அது புவி அச்சின் சாய்வு மற்றும் அதிக ஆற்றலை உறிஞ்சும் தென் துருவ நீரினால் கிடைக்கும் மொத்த சக்தியை விட மிக குறைவே ஆகும். நிலா + சிறப்பியல்புகள் விட்டம் 3,474.8 கி.மீ.2,159.2 mi நிறை 7.349கிகி8.1 (குறுகிய டன்கள்) அரை-முதன்மை அச்சு 384,400 கிமீ238,700 mi சுற்றிவரும் காலம் 27 நா 7 ம 43.7 நி சந்திரன் பூமியை விட பெரிய, நிலம் சம்பந்தப்பட்ட, செயற்கைக்கோள் போன்ற ஒரு கோளாகும், இதன் விட்டமானது பூமியின் விட்டத்தைப் போன்று கால் மடங்கு பெரியதாகும். அதன் கோளோடு ஒப்பிடுகையில் சந்திரன்தான் சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரியதாகும். (சாரன் (Charon) என்பது சிறிய கோளான ப்ளூடோவை விட பெரியதாகும்) மற்ற கோள்களைச் சுற்றி வரும் இயற்கையான செயற்கைக்கோள்கள் பூமியினுடையதைப் போலவே "சந்திரன்கள்" என்று அழைக்கப்படுகின்றன. புவிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள புவிஈர்ப்பு சக்திதான் புவியில் பேரலைகள் உண்டாகக் காரணமாக இருக்கிறது. இதுவே சந்திரனில் பேரலை நிறுத்தத்திற்கும் காரணமாகிறது: இதன் சுழற்சிக் காலமானது அது பூமியைச் சுற்றி வரும் காலத்திற்குச் சமமாகும். இதன் காரணமாகவே, இது பூமிக்கு எப்பொழுதும் ஒரே பகுதியைக் காட்டுகிறது. சந்திரன் பூமியைச் சுற்றி வருவதால், அதன் வெவ்வேறு பகுதிகள் சூரியனால் ஒளிரச் செய்யப் படுகின்றன. மேலும், இது சந்திரனின் முகங்களைக் காட்டுகிறது; சந்திரனின் இருள் பகுதிகள் ஒளிர்கின்ற பகுதியிலிருந்து சூரியனின் ஒளிக்கற்றைகளால் பிரிக்கப்படுகிறது. இந்தப் பேரலைகள் ஊடாடுவதன் காரணமாக, சந்திரன் பூமியை விட்டு வருடத்திற்கு 38 மி.மீ. விலகிச் செல்கிறது. பல மில்லியன் வருடங்களுக்கு மேலாக, இந்த சிறு மாற்றங்களும்-ஒரு வருடத்திற்கு 23 µs வீதம் பூமியின் ஒரு நாள் நீள்வதும், பல குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, தேவோனியன் காலத்தின் பொழுது, (தோராயமாக 410 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) ஒரு வருடத்திற்கு 400 நாட்களும், ஒரு நாளுக்கு 21.8 மணிநேரமுமாக இருந்தது. பூமியின் தட்பவெப்பநிலையை மாற்றுவதன் மூலம் சந்திரன் பூமியில் வாழ்க்கையின் முன்னேற்றத்தை பெரிதும் பாதித்திருக்கிறது. தொல்லுயிர் ஆராய்ச்சியின் முடிவுகளும் மற்றும் கணினியின் மாதிரிகளும் பேரலைகளுக்கு சந்திரனுடன் உள்ள கவர்ச்சியினால்தான் பூமியினுடைய அச்சின் சாய்வு நிலையாக உள்ளது என்பதை நமக்கு காட்டுகிறது. சூரியனும் இதர கோள்களும் பூமியின் நிலநடுக்கோட்டைச் சார்ந்த வீக்கத்திற்கு கொடுக்கும் உந்து அழுத்தத்திற்கு எதிராக இந்த நிலைப்புத்தன்மை இல்லையெனில் பூமியின் சுழலும் அச்சு ஒரு நிலையிலன்றி குழப்பமானதாக இருந்திருக்கும், மேலும் செவ்வாய் கோளில் நடப்பதைப் போல மில்லியன் வருடங்களுக்கு மேல் நிலைமாறான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கும் என சில கொள்கையாளர்கள் நம்புகிறார்கள். பூமியின் சுழலும் அச்சு நீள்வட்டப்பாதையை அடைய நேர்ந்தால் உயர்ந்தபட்ச காலநிலை மாறுபாடுகளினால் உயர்ந்தபட்ச மோசமான தட்பவெப்ப நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு துருவம் கோடைக்காலத்தில் சூரியனை நோக்கியும் குளிர்காலத்தில் சூரியனுக்கு எதிர் திசையிலும் அமைந்திருக்கும். இதனை ஆராய்ந்த வான் கோள் அறிவியலாளர்கள் இது எல்லா பெரிய விலங்குகளையும் மற்றும் உயர்ந்த தாவரங்களையும் அழிக்கக்கூடும் என கருதுகின்றனர். எனினும் இது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாகும், மேலும் பூமியைப் போலவே சுழற்சியையும் சுழலும் காலத்தையும் உடைய ஆனால் பெரிய சந்திரனும் திரவ உட்கருவும் இல்லாத செவ்வாய் கோளை பற்றிய ஆராய்ச்சி இதற்கு ஒரு தீர்வைக் கொடுக்கலாம். பூமியிலிருந்து பார்க்கும்பொழுது, சந்திரன் வெகு தொலைவில் இருப்பது போலவும் சூரியனைப் போன்றே சிறிய கோள வடிவத்திலும் காட்சியளிக்கிறது. இந்த இரண்டின் கோண அளவும் (அல்லது திட கோணம்) ஒத்திருக்கிறது ஏனெனில், சூரியனுடைய விட்டம் சந்திரனுடையதைப் போல 400 மடங்கு பெரியதாக இருந்தாலும், அது சந்திரனை விட 400 மடங்கு அதிக தொலைவிலும் இருக்கிறது. இது பூமியில் முழு மற்றும் வருடாந்திர கிரகணம் ஏற்பட காரணமாகவும் இருக்கின்றது. thumbnail|center|upright=4|புவி மற்றும் சந்திரனுக்கு இடையிலான தூரத்தின் அளவீட்டு மாதிரி சந்திரனின் தோற்றம் பற்றிய உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தாக்க விதியின்படி (giant impact), செவ்வாயின் அளவை ஒத்த தேயியா (Theia) எனப்படும் மாதிரி கோளும் ஆதிகால பூமியும் மோதிக்கொண்டதனால் ஏற்பட்டது. இந்தக் கூற்றின்படி (மற்றவைகளுடன்) சந்திரனில், பூமியை ஒப்பிடுகையில் குறைந்த அளவு இரும்பு மற்றும் ஆவியாகக்கூடிய தனிமங்கள் இருப்பதும் மற்றும் அதனுடைய கட்டமைப்பு ஏறக்குறைய பூமியின் மேலோட்டை ஒத்திருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. பூமிக்கு குறைந்தது இரண்டு துணை-சுற்று பெரு விண்கற்கள், 3753 க்ருதினே மற்றும் 2002 AA29 என இருக்கிறது. புவியில் உயிர்களின் புழக்கம் ஒரு கோள், உயிர்களை தக்க வைத்துக் கொள்ளுமானால் உயிர்கள் அங்கே தோன்றாவிடினும் அது உயிர்கள் புழங்கத்தக்கதாக கருதப்படுகிறது. பூமி (தற்போதைய கூற்றுகளின் படி) உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய திரவ நீர், சுற்றுச் சூழலில் கடினமான உயிர் வேதியல் மூலக்கூறுகள் உருவாகும் தன்மை மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு தேவையான சக்தி ஆகியவற்றைப் பெற்றிருக்கிறது. பூமி சூரியனிலிருந்து உள்ள தூரம், அதன் சுழற்சியில் காணப்படும் முரண், சுழலும் வேகம், அச்சுச் சாய்வு, புவியின் வரலாறு, வளிமண்டல தக்க வைத்துக் கொள்ளல் மற்றும் பாதுகாக்கும் காந்தப்புலன் இவையாவும் இந்த கிரகத்தில் உயிர்கள் உருவாக மற்றும் தக்க வைத்துக் கொள்ள காரணிகளாகச் செயல்பட்டுள்ளன. உயிர்க்கோளம் புவியின் உயிர்கள் சேர்ந்து அதன் "உயிர்க்கோள"த்தை அமைக்கின்றது. இந்த உயிர்க்கோளம் பூமியில் 3.5 மில்லியன் வருடங்களுக்கு முன் உருவாகி பரிணாம வளர்ச்சி அடையத் தொடங்கியது. அண்டத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் இருப்பதாக தற்போது நாமறிவோம். சில அறிவியலாளர்கள் பூமியைப் போன்ற உயிர்க்கோளம் அரிதானது என நம்புகின்றனர். இந்த உயிர்க் கோளம் பல உயிர்க்கட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது, அதாவது ஒத்த தாவர மற்றும் விலங்கு வகைகளை வைத்து பிரிக்கப்பட்டுள்ளது. நிலத்தில் நிலநீர்க்கோடு மற்றும் கடல் மட்டத்திற்கு மேல் உள்ள உயரம் இரண்டும் உயிர்க்கட்டுகளைப் பிரிக்கிறது. ஆர்க்டிக், அண்டார்க்டிக் வளையங்களுக்குள் அல்லது அதிக உயரமான இடங்களிலும் காணப்படும் நில உயிர்க்கட்டுகளில் மிக அரிதாகவே தாவரங்களும் விலங்குகளும் காணப்படுகின்றன, ஆனால் பூமத்திய ரேகை அருகே காணப்படும் உயிர்க்கட்டில் நீண்ட பலவகை உயிரினங்கள் காணப்படுகின்றன. இயற்கை வளங்கள் மற்றும் நிலம் பயன்பாடு பூமி, பயனுள்ள பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் வகையில் பல வளங்களை மனிதனுக்கு அளிக்கிறது. இவற்றில் சில புதுப்பிக்க இயலாத வளங்கள் (non-renewable), அதாவது தாது எரிபொருள் போன்றவை குறுகிய காலத்தில் உருவாவதில்லை. அதிக அளவிலான தொல்லுயிர் படிம எரிபொருட்கள் பூமியின் மேலோட்டிலிருந்து கிடைக்கின்றது, அவை நிலக்கரி, பெட்ரோல், இயற்கை வாயு மற்றும் மீத்தேன் கிளாத்ரேட்டுகளாம். இந்த எரிபொருட்களை ஆற்றல் உருவாக்குதலுக்கும், வேதி பொருட்கள் உருவாக்க முன்னோடியாகவும் பயன்படுத்தப்படுகிறது. பூமியின் மேலோட்டில் கனிம தாதுக்கள் படிமங்களாக தாது உருவாக்கல் மூலம் மற்றும் அரித்தல், பலகை டெக்டோனிக் மூலம் உருவாகி படிந்துள்ளன. இவை உலோகம் மற்றும் உபயோகமுள்ள தனிமங்கள் உருவாக்குவதற்கு ஒருநிலைப்பட்ட மூலமாக பயன்படுத்தப்படுகிறது. புவியின் உயிர்க்கோளம் மனிதனுக்குத் தேவையான பல உயிர் பொருட்களை உருவாக்குகின்றது, இவை உணவு, மரம், ஆக்சிஜன், மருந்துப் பொருட்கள் மற்றும் உயிர்க்கழிவுகளின் மறுசுழற்சி ஆகியவையாகும். நில ஆதாரமான சூழலமைப்பு மேல்மண் மற்றும் தூயநீரை சார்ந்தும் மற்றும் கடல் சூழலமைப்பு நிலத்திலிருந்து கரைந்து கடலை அடையும் ஊட்ட பொருட்களைச் சார்ந்தும் உள்ளது. மனிதர்களும் நிலத்தில் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு குடில்கள் அமைத்து வாழ்கின்றனர். 1993 கணக்கெடுப்பின் படி, மனிதர்கள் உபயோகப்படுத்தும் நிலம் தோராயமாக: நில உபயோகம்விழுக்காடு விவசாயம்: 13.13% நிலையான பயிர்: 4.71% நிலையான மேய்ச்சல் நிலம்: 26% காடுகள் மற்றும் வனப்பகுதி: 32% நகரங்கள்: 1.5% மற்றவை: 30% 1993 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி விவசாயம் செய்யப்படும் நிலம் 2,481,250 சதுர கி.மீ. இயற்கை மற்றும் சுற்றுச் சூழல் அபாயம் பூமி மீதுள்ள பல இடங்கள் அதீதமான வானிலையால் அதாவது புயல், சூறாவளி, சுழல்காற்று ஆகியவற்றால் பாதிப்படைகின்றன. மேலும் பல இடங்களில் நில நடுக்கம், நில சறுக்கம், ஆழிப் பேரலைகள், எரிமலைகள், சுழற்காற்று, புதைகுழிகள், பனிப்புயல், வெள்ளம், வறட்சி மற்றும் விபத்துகளும் பேரழிவுகளும் ஏற்படுகின்றன. பல இடங்களில் மனிதனால் உருவாக்கப்பட்ட சுற்றுப்புற மாசு, காற்று மற்றும் நீரை பாதித்ததோடல்லாமல், அமில மழை, நச்சுப்பொருட்கள், பயிரழித்தல் (மிகையான மேய்ச்சல், காட்டை அழித்தல், பாலைவனமாக்கல்), வன உயிர்கள் அழித்தல், உயிரினங்களின் மறைவு, மண் அழிப்பு, மண் மறைவு, மண் அரிப்பு மற்றும் ஆக்கிரமிக்கும் உயிரினங்களை அறிமுகப்படுத்தல் போன்றவற்றையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு அறிவியல் அமைப்பு மனிதனால் ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கரியமில வாயுவினால் கோள வெதும்பல் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது. இதனால் பனிக்கட்டியாறு மற்றும் பனிக்கட்டி மலை (ice sheet) உருகுதல், அதீதமான வெப்பநிலை மாற்றங்கள், வானிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மற்றும் கடல் மட்ட அளவு உயருதல் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் எனக் கண்டறிந்துள்ளனர். பூமியின் மேல் வளிமண்டலத்தில் மனிதனால் அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களில் 3,000 தான் தற்சமயம் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரை 8,000 செயற்கைக்கோள்களை உலக நாடுகள் அனுபிவைத்துள்ளன. இவை அனைத்தும் பூமிக்கு மேலே 250 கிலோ மீட்டர் முதல் 850 கிலோ மீட்டர்கள் உயரத்தில் சுற்றிக்கொண்டு இருக்கின்றன.விண்வெளி? இந்து தமிழ் பார்த்த நாள் ஏப்ரல் 22 2015 புதன் மனிட புவியியல் வரைபடவியல், வரைபடங்களைப் பற்றி அறிந்து, அவற்றை உருவாக்கும் முறை மற்றும் புவியியல் இவை இரண்டும் புவியை வரையறுக்க உதவியாய் இருந்தன. ஆய்வின் மூலம் இடங்கள் மற்றும் தூரங்களை தீர்மானிப்பதும் மற்றும் சிறு அளவில் பயண திசை தீர்மானம் செய்தல், மேலும் ஒன்றின் நிலையையும் அதன் திசையும் கண்டறிதல் யாவும் வரைபடவியல் மற்றும் புவியியலோடு சேர்ந்து வளர்ந்து தேவையான மற்றும் பொருந்தக்கூடிய விளக்கங்களை அளித்திருக்கின்றது. நவம்பர் 2008 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி புவியில் 6,740,000,000 மனிதர்கள் வாழ்கின்றனர். உலக மக்கள் தொகை 2013 ஆம் ஆண்டுக்குள் 7 பில்லியனை எட்டும் எனவும் 2050 ஆம் ஆண்டுக்குள் 9.2 பில்லியனை எட்டும் எனவும் நம்பப்படுகிறது. இந்த வளர்ச்சி வளர்ந்து வரும் நாடுகளிலேயே ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் நெருக்கம் உலகில் வெவ்வேறு விதமாக உள்ளது, ஆனால் பெரும்பான்மையினர் ஆசியாவில் வாழ்கின்றனர். 2020 ஆம் ஆண்டிற்குள், உலக மக்கள் தொகையில் 60% மக்கள் கிராமபுரங்களில் அல்லாமல் நகரங்களில் வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புவியின் மேற்பரப்பில் எட்டில் ஒரு பங்கு மட்டுமே மனிதன் வாழ உகந்ததாக கணக்கெடுப்பு காட்டுகின்றது மேலும் மூன்றில் ஒரு பங்கு நீராலும் மற்றும் நிலத்தில் பாதி பாலைவனமாகவோ,(14%) உயர்ந்த மலைகளாகவோ (27%), அல்லது குறைந்த தகுதி உடைய இடங்களாகவோ உள்ளன. புவியின் வடகோடியில் இருக்கும் நிரந்தர குடியிருப்பு கனடா நாட்டிலுள்ள நுனாவட் (Nunavut) மாகாணத்திலுள்ள, எல்லெஸ்மியர் தீவிலுள்ள (Ellesmere) அலர்ட் (Alert) நகரமாகும்.(82°28′N) அதே போன்று தென் கோடியில் இருக்கும் குடியிருப்பு, அண்டார்க்டிகாவில் தென் துருவத்திலிருக்கும், அமண்ட்சன் - ஸ்காட் தென் துருவ நிலையம் ஆகும். (90°S) upright=2|right|thumbnail|புவியின் இரவுத் தோற்றம், DMSP/OLS என்ற சேர்மத்தின் உதவியால் இரவு நேர உலகின் மாதிரியை வடிவமைத்து எடுத்த நிலத்தின் ஒளிர்வு படம். இந்த படம் நிழற்படம் அல்ல, நேரடியாக பார்ப்பவருக்கு இதில் உள்ள பல அம்சங்கள் மிகவும் பிரகாசமாக காணப்படலாம். சுதந்திர ஏகாதிபத்ய நாடுகள் அன்டார்ட்டிகாவின் சில பகுதிகளைத் தவிர்த்து, பூமியின் மொத்த நிலப்பரப்பையும் ஆக்ரமித்துள்ளன. 2007 ஆம் ஆண்டின் படி பூமியில் 201 ஏகாதிபத்திய நாடுகள் உள்ளன இதில் 192 ஐக்கிய நாடுகளின் அங்கத்தினராக இருக்கும் நாடுகளும் அடங்கும். இதைத்தவிர 59 சார்ந்த இடங்களும், பல தனித்தியங்கும் இடங்களும் மற்றும் சர்ச்சைக்குரிய இடங்களும் இவற்றில் அடங்கும். புவியின் வரலாற்றில் அதன் மொத்த பரப்பும் ஓர் ஏகாதிபத்திய அரசின் கீழ் இருந்ததில்லை, ஆனால் பலமுறை பல நாடுகள் மொத்த உலக அதிகாரத்தையும் பெற முயற்சித்து தோல்வியுற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய அரசாங்கங்களுக்கிடையிலான அமைப்பு, இது நாடுகளுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளை போர்கள் மூலமல்லாது சுமுகமான முறையில் தீர்த்துக் கொள்ள நிறுவப்பட்டது. இருந்தாலும் இது ஓர் உலக அரசாங்கமன்று. ஐ.நா சபை சர்வதேச சட்டத்தை அளித்து, பொதுவான விதிகளைக் கடைபிடிக்கின்றது, மேலும் அங்கத்தினர்களால் ஒரு சேர தீர்மானிக்கும் போது ஆயுதமேற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கின்றனர், ஐநா சபை பெரும்பாலும் சர்வதேச அரசாங்க விவகாரங்களைத் தீர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. பூமியை சுற்றிய முதல் மனிதர் யூரி காகரின் ஆவார், இவர் ஏப்ரல் 12, 1961 அன்று இதைச் செய்தார். 2004ஆம் ஆண்டு வரை மொத்தம் 400 மனிதர்கள் வெளி அண்டத்திற்குச் சென்று மீண்டும் பூமியை அடைந்துள்ளனர், மேலும் இதில் அப்போலோ திட்டத்தின் கீழ் பனிரெண்டு பேர் சந்திரனில் நடந்துள்ளனர். பொதுவாக விண்வெளியில் வாழக்கூடிய மனிதர்களாக இருப்பவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் வசிப்பவர்கள் தான். இந்த மையத்தில் இருக்கும் மூன்று நபர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்படுகின்றனர். இதுவரையில் பூமியிலிருந்து அதிகமான தூரத்தை மனிதர்கள் 1970 ஆம் ஆண்டில் அப்போல்லோ 13 விண்கலத்தில் பூமியிலிருந்து 400,171 கி.மீ. தூரத்தில் கடந்துள்ளனர். கலாச்சார பார்வை frameless|upright=0.35|left|🜨 thumbnail|right|விண்வெளி வீரர்களால் அப்போலோ 8-லிருந்து எடுக்கப்பட்ட முதல் "புவி உதய", நிழற்படம் புவியின் வானியல் சின்னம் ஒரு வட்டத்தைச் சார்ந்த கூட்டல் குறியை உள்ளடக்கி இருந்தது. தமிழில், ஆர்(பெரியது) → தர் → தரை(terra) என்றாகும். மற்றும், ஓலா → உலா → நெலா → நிலா → நிலம் என்றும் ஆகும். புவியை ஒரு தெய்வமாக, குறிப்பாக ஒரு பெண் தெய்வமாக உருவகப்படுத்தி வழிபடுகின்றனர். பல கலாச்சாரத்தில் பெண் தெய்வத்தை, தாய் மண் என்று அழைப்பதோடு, மனித வள தெய்வமாக உருவகப்படுத்துகின்றனர். பல மதங்களின் படைப்பு இதிகாசங்களில் புவி உருவான வரலாறு பற்றி கூறும் போது புவி அதிக சக்தி வாய்ந்த ஒரு தெய்வம் அல்லது தெய்வங்களால் உருவாக்கப்பட்டதாக உள்ளது. பல்வேறு சமயப் பிரிவுகள், அடிப்படைவாத பிராட்டஸ்டண்ட் பிரிவினர் அல்லது இஸ்லாம் சமயத்தவர், புனித உரைகளில் படைப்பு இதிகாசத்தை பற்றிய தமது விளக்கங்கள் உண்மையானவை அவை உலகம் உருவான விதம் மற்றும் உயிர்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய அறிவியல் விளக்கங்களுடன் அல்லது அவற்றிற்கு பதிலாக அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இத்தகைய வாதங்களை அறிவியல் சமூகம்அறிவியல், பரிணாமம் மற்றும் படைப்பியல் தேசிய அகாடமி பிரஸ், வாஷிங்க்டன், டிசி 2005 மற்றும் மற்ற சமய குழுக்கள் எதிர்க்கின்றன. இதற்கு பிரபலமான எடுத்துக்காட்டு படைப்பு பரிணாம விவாதம். பண்டைய காலத்தில் பூமி தட்டையானது ; இதனையும் பார்க்கவும் காஸ்மஸ் இண்டிகோப்லூஸ்டஸ் (Cosmas Indicopleustes) என்ற நம்பிக்கை வெவ்வேறு நிலைகளில் நிலவியுள்ளது ஆனால் இதுவே மனிதன் உலகை சுற்றி வந்து பார்த்த பிறகு உலகம் உருண்டையானது தான் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியது. விண்வெளி கலங்களில் வெளியே பறந்து அண்டத்திலிருந்து பூமியை பார்க்கும் போது அதன் பரிமாணம் வேறுபட்டதாய் தெரிந்தது, அதாவது தற்போது புவியின் உயிர்க்கோளம் என்பது உலகளாவிய நோக்கிலேயே கருதப்படுகின்றது. இதன் பிரதிபலிப்பு வளரும் சுற்றுசூழ் பாதுகாப்பு அமைப்புகள் மனிதரால் புவிக்கு ஏற்படும் மாறுதல்கள் மற்றும் கேடுகளைப் பற்றி கவலையை வெளிப்படுத்தியுள்ளன.உதாரணத்திற்கு: குறிப்புகள் மேற்கோள்கள் ஆதார தொகுப்பு புற இணைப்புகள் பூமிக்கு இவ்வளவு தண்ணீர் எங்கிருந்து வந்தது? விண்வெளி அதியசியங்கள் யுஎஸ்ஜிஎஸ் புவிகாந்தவியல் (Geomagnetism) திட்டம் நாசா (NASA) புவி கண்காணிப்பு மையம் நாசாவின் சூரிய அமைப்பு ஆய்வில் இருந்து புவி குறிப்பு பருவநிலை மாறுபாடு புவியின் உருவத்தில் மாறுபாட்டை ஏற்படுத்துகிறது - நாசா விண்வெளி வீரரின் புவி நிழற்பட நுழைவாயில் 400 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பே உயிர்கள் தோன்றக் காரணம்: நாசா பகுப்பு:புவியியல் பகுப்பு:நிலவியல் * பகுப்பு:புவியொத்த கோள்கள் new:बँग्वारा
செவ்வாய் (கோள்)
https://ta.wikipedia.org/wiki/செவ்வாய்_(கோள்)
செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது.இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது. மேனாட்டினர் இக்கோளுக்கு போர்க்கடவுளின் பெயரைச் சூட்டியுள்ளனர். இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது. ஒரு புவிசார் கோளான இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் கிண்ணக் குழிகளையும், புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளுள் ஒன்றான மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயிலேயே உள்ளன. 1965 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு அண்மையாக மரினர் 4 வெற்றிகரமாகப் பறந்து செல்லும்வரை, செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நீர்ம நீர் இருக்கும் என நம்பினர். கோளின் துருவப் பகுதிகளுக்கு அருகில் குறித்த கால அடிப்படையில் மாற்றம் அடைகின்ற கறுப்பு, வெள்ளை அடையாளங்களே இவ்வாறான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தன. இவை கடல்களும், கண்டங்களுமாக இருக்கலாம் என எண்ணினர். மேற்பரப்பில் காணப்பட்ட நீண்ட கருமையான கீறல்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. பின்னர் இதை ஒரு ஒளியியல் மாயத்தோற்றம் என விளக்கினர். ஆனாலும், ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவியற் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் காட்டுகின்றன. இது, போபோசு, டெய்மோசு என்னும் இரண்டு நிலவுகளைக் கொண்டுள்ளது. இவை சிறிய, ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை. செவ்வாயின் டிரோசான் சிறுகோளான 5261 யுரேக்காவைப்போல் இவை செவ்வாயின் ஈர்ப்பினால் கவரப்பட்ட சிறுகோள்களாக இருக்கலாம். thumb இயற்பியல் பண்புகள் செவ்வாயின் விட்டம் புவியின் விட்டத்தின் அரைப்பங்கு அளவு கொண்டது. இதன் அடர்த்தி புவியினதைக் காட்டிலும் குறைவானது. செவ்வாய் புவியின் கனவளவின் 15%க்குச் சமமான கனவளவையும், புவியின் திணிவின் 11%க்குச் சமமான திணிவையும் கொண்டது. இதன் மேற்பரப்பின் பரப்பளவு, புவியின் உலர் நிலப்பகுதியின் பரப்பளவைக் காட்டிலும் சற்றே குறைவானது. செவ்வாய் புதன் கோளிலும் பெரியதும் திணிவு கூடியதும் ஆகும். ஆனால், புதன், செவ்வாயிலும் கூடிய அடர்த்தி கொண்டது. நிலவியல் thumb|left|சூரியனிலிருந்து 230 மில்லியன் கிலோ மீற்றர்கள் தொலைவில் (143,000,000 mi) செவ்வாய் கிரகம் உள்ளது. இது சூரியனை ஒரு தடவை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இப்படத்தில் நீல நிறம் பூமியையும், சிகப்பு நிறம் செவ்வாயையும் குறிக்கிறது. செவ்வாய், சிலிக்கன், ஆக்சிசன், உலோகங்கள், இன்னும் பிற பாறைகளை உருவாக்கும் தனிமங்களைக் கொண்ட கனிமங்களாலான ஒரு புவிசார் கோள். செவ்வாயின் மேற்பரப்பு பெரும்பாலும் தோலெயிட்டிக் பசாற்றுக் கற்களால் ஆனது. எனினும் சில பகுதிகள் பொதுவான பசாற்றுக் கற்களிலும் கூடிய சிலிக்காச் செறிவு கொண்டது. இது புவியின் எரிமலைப் படிகப் பாறையைப் போலவோ, சிலிக்காக் கண்ணாடியைப் போலவோ இருக்கக்கூடும். குறைவான ஒளிதெறிதிறன் கொண்ட பகுதிகளில் சரிவுவகை களிக்கற் செறிவுகளும், குறிந்த ஒளிதெறிதிறன் கொண்ட வடபகுதியில் வழமையான செறிவில் தகட்டுச் சிலிக்கேற்றுகளும், உயர்-சிலிக்கன் கண்ணாடியும் காணப்படுகின்றன. தென்பகுதி மேட்டு நிலங்களின் சில பகுதிகளில் கண்டறியக்கூடிய அளவில் உயர்-சிலிக்கன் பைரொட்சீன்கள் காணப்படுகின்றன. ஆங்காங்கே ஏமட்டைட்டு, ஆலிவைன்கள் என்பனவும் உள்ளன. மண் thumb|left thumb பீனிக்சு இறங்குகலம் அனுப்பிய தகவல்கள், செவ்வாயின் மண் காரத்தன்மை கொண்டது எனவும், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், குளோரைடு போன்ற தனிமங்களைக் கொண்டது எனவும் காட்டுகின்றன. புவியிலுள்ள தோட்டங்களில் காணப்படும் இவை தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இறங்குகலச் சோதனைகளின் படி மண் பி.எச் 8.3 கொண்டதுடன், பேர்குளோரேட்டு உப்புக்களையும் கொண்டது எனத் தெரிகிறது. செவ்வாயில் கீறல்கள் பொதுவாகக் காணப்படுவதுடன், கிண்ணக்குழிகள், பள்ளத்தாக்குகள் என்பவற்றின் சரிவுகளில் புதிய கீறல்களும் தோன்றுகின்றன. முதலில் கடுமையான நிறத்துடன் காணப்படும் இக்கீறல்கள் காலம் செல்லச் செல்ல மங்கலான நிறத்தை அடைகின்றன. சில வேளைகளில் சிறியனவாகத் தோன்றும் இக்கீறல்கள் பின்னர் பல நூறு மீட்டர்களுக்கு விரிவடைகின்றன. இக்கீறல்கள் தமது பாதையில் காணும் பாறைகள், பிற தடைகள் போன்றவற்றின் விளிம்போடு செல்வதையும் காண முடிகிறது. நீரியல் தாழ்வான பகுதிகளில் குறைந்த நேரத்துக்கு நீர் திரவ நிலையில் இருக்கக்கூடுமாயினும், குறைந்த வளியமுக்கம் காரணமாகச் செவ்வாயின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பது சாத்தியம் இல்லை. இரண்டு துருவங்களிலும் காணப்படும் பனி மூடிகள் பெரும்பாலும் நீரினால் ஆனதாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. தென் துருவப் பனி மூடியில் உள்ள பனிக்கட்டி உருகினால் உருவாகக்கூடிய நீர் செவ்வாயின் முழு மேற்பரப்பையும் 11 மீட்டர்களுக்கு மூடுவதற்குப் போதுமானதாக இருக்கும். செவ்வாயில் தெரியும் நிலத்தோற்றங்கள், ஒரு காலத்தில் அதன் மேற்பரப்பில் நீர்ம நீர் இருந்திருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. வெளிப்போக்குக் கால்வாய்கள் என அறியப்பட்ட பாரிய நீள்வடிவ நீரரிப்பு நிலங்கள், சுமார் 25 இடங்களில் செவ்வாய் மேற்பரப்புக்குக் குறுக்கே வெட்டிச் செல்கின்றன. நிலத்தடி நீத்தேக்கங்களில் இருந்து வெளியேறிய, பேரழிவை ஏற்படுத்திய நீர் வழிந்தோடியபோது ஏற்பட்ட மண்ணரிப்புத் தடங்களே இவை என நம்பப்படுகின்றது. எனினும் சிலர் இவை பனியாறுகள் அல்லது எரிமலைக் குழம்புகளினால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்புகின்றனர். இவற்றுள் மிகப் பிந்திய கால்வாய்கள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றின. பிற பகுதிகளில் காணப்படும் இத்தகைய காய்வாய் வலையமைப்புக்களில் வடிவத்தில் இருந்து, செவ்வாயின் தொடக்க காலத்தில் பெய்த மழையினால் அல்லது பனிக்கட்டி மழையினால் ஏற்பட்ட வழிந்தோடிய அடையாளங்களாக இவை இருக்கலாம் எனக் கருதுகின்றனர். செவ்வாயின் தட்பவெப்பம் செவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் -126 டிகிரி வரை உள்ளது. (பூமியில் +58 முதல் -88.3 வரை). ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்பநிலை -48 டிகிரி சென்டிகிரேடு. இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது, பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது. டெலஸ்கோப்பில் பார்த்தால் மிகச் சிவப்பாகத் தெரியும். அதனால் தான் செவ்வாய் என்றும் ஆங்கிலத்தில் the red planet என்றும் அழைக்கப்படுகிறது. பூமியைப் போன்றே துருவங்கள் பனிப்பிரதேசங்களாக இருக்கின்றன. இங்கு ஐஸ் என்பது பெரும்பாலும் 'ட்ரை ஐஸ்' எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடாகும். மேலும் செவ்வாய் கிரகத்தின் வட துருவத்தில் மிகப்பெரிய பனிப்பள்ளம் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் (டிசம்பர்-2018) இந்த பனிப்பள்ளத்தில் 5,905 அடி தடிமன் உள்ள பிரம்மாண்ட ஐஸ்பாறைகளைச் சுற்றி தண்ணீரும் உள்ளது16. பனிப்பாறை ஐரோப்பாவைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியின்போது இந்த பனிப்பாறை கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் வடதுருவத்தில் தனது ஆய்வினை மேற்கொள்ளும் போது இந்த பனிப்பாறையானது இதன் கேமராவில் சிக்கியிருக்கிறது.16. வட துருவத்தில் சுமார் 50.1 மைல் நீளமும் 1.2 மைல் அகலமும் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கு ஒன்று அமைந்திருக்கிறது. இதற்கு கொரோலோவ் (Korolev crater) பள்ளத்தாக்கு என்று பெயரிடப்பட்டிருக்கிறது. புகழ்பெற்ற விண்வெளித்துறை பொறியாளரான Sergei Korolev வின் நினைவாக இந்தப்பெயர் சூட்டப்பட்டது. ஸ்புட்னிக், வோஸ்டாக் போன்ற விண்வெளி ஆராய்ச்சித்துறையில் மைல்கல் பதித்த திட்டங்களில் தலைமை ராக்கெட் ஏவுதளப் பொறியாளராகப் பணியாற்றியவர் கொரோலோவ். பீகிள்2 - பிரிட்டனின் செவ்வாய் பயணம் ஏற்கனவே 1997ம் ஆண்டு அமெரிக்காவின் பாத்ஃபைண்டர் வாகனம் செவ்வாயில் இறக்கிவிடப்பட்டுள்ளது. பிரிட்டனின் பீகிள்2 வாகனம், செவ்வாயில் பழமையான குன்றுகளுக்கும், வடக்கு சமவெளிக்கும் இடைப்பட்ட 'இசிடிஸ் ப்ளானிட்டியா' என்ற சமதளப் பிரதேசத்தில் இறக்கிவிட ஐரோப்பிய வான்வெளி ஏஜன்சி (ESA) டிசம்பர் 2000ல் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பீகிள்2வை ESAவின் 'மார்ஸ் எக்ஸ்பிரஸ்' என்கிற ராக்கெட் ஜூன் 2003ல் கஜகஸ்தானில் உள்ள (ரஷ்ய) பைக்கானூர் காஸ்மோடிரோம் தளத்தில் இருந்து ஏவப்படும். பீகிள்2-வின் குறிக்கோள் செவ்வாயில் உயிர்கள் இருக்கின்றதா அல்லது எப்போதாவது இருந்ததா? என்ற கேள்விக்கு முடிவான விடை காண்பதே. அதற்கு 'இசிடிஸ் ப்ளாண்டியா' தான் மிகச் சிறந்த இடம், முன்பு எப்போதாவது செவ்வாயில் உயிர்கள் இருந்தால் அதன் பாஸில்கள் கிடைக்க இங்கு அருமையான வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். பீகிள்2 செவ்வாயில் பாதுகாப்பாக தரையிறங்க 'ஏர் பேக்குகள்' உபயோகிக்கப்படும். செவ்வாயில் தரையில் படும் போது இந்த ஏர் பேக்குகள் பந்து போல் எம்பி விழுந்து நிலைத்து நின்ற பின் அதனுள் இருக்கும் வாயு வெளியேற்றப்பட்டு வாகனம் சேதமின்றி வெளிவரும். ரோவர் - அமெரிக்காவின் மற்றொரு செவ்வாய் ஆய்வுத் திட்டம் thumb|400px|பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து ஹப்பிள் மூலம் செவ்வாயைப் பார்த்தல். பீகிள்2 திட்டம் ஒரு புறமிருக்க, அமெரிக்கா இரண்டு ரோபோட்களை 2004ம் ஆண்டு செவ்வாயில் இறக்கிவிடத் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு 'ரோவர்'களுமே முக்காலத்தில் அங்கு நீர், அதாவது திரவ வடிவில் நீர் ஆதாரங்களைத் தேடும் உபகரணங்களைப் பெற்றிருக்கும். திரவ வடிவில் நீரென்றால் அது நிச்சயம் 0 – 100 டிகிரிக்குள் தான் இருக்க முடியும். மேலும் நீரில் ஆக்ஸிஜனும் இருக்குமென்பதால் அதில் உயிர்கள் (ஒரு செல் உயிர்கள், பாக்டீரியாக்கள் முதல் பல வித உயிரினங்கள்) உண்டாகி வாழந்திருக்ககூடிய சாத்தியங்கள் அதிகமாக உண்டு. பூமியில் உயிரினம் முதன்முதலில் தோன்றியதே நீரில் தான் என்று நம்பப்படுகிறது. செவ்வாயில் தரையிறங்க வாய்ப்பான 185 இடங்கள் பட்டியலில் தொடங்கி தற்போது 30 மிக முக்கியமான இடங்கள் பட்டியலாகக் குறுக்கப்பட்டுள்ளது. இதில் சேதமின்றித் தரையிறங்க வாய்ப்பான இடம் என்பதை விட விஞ்ஞான ரீதியாக சான்றுகள் கிடைக்க வாய்ப்பான இடம் என்பதற்குத்தான் முக்கியத்துவம் அளிப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஏவுவதற்கு ஒரு வருடம் முன்பாக இறங்கும் இடம் பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும். தற்போது செவ்வாயைச் சுற்றிக் கொண்டிருக்கும் 'மார்ஸ் க்ளோபல் சர்வேயர்' எனும் விண்கலம் அனுப்பும் தகவல்கள் இதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பதாகள் அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ரோவர் பயணத் திட்டங்கள் thumb|center|700px|செவ்வாயின் குசேவ் கிரேட்டர் எனுமிடத்திலிருந்து எடுக்கப்பட்ட சூரிய மறைவுத் தோற்றம். மே 19, 2005. அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தில் கேப் காணவெரல் தளத்திலிருந்து முதல் ரோவர் ரோபோட் மே 30, 2003 லும், இரண்டாவது அதே வருடம் ஜூன் 27லிலும் ஏவப்படும். செவ்வாயில் முறையே 2004ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதியிலும், பெப்ரவரி 8ம் தேதியிலும் தரையிறங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரோவர்கள் தற்போது MER-A மற்றும் MER-B என்றும் அழைக்கப்படுகிறது. (MER – Mars Exploration Rover). இரண்டு ரோவர்களும் ஒரு செவ்வாய் தினத்திற்கு (24.62 மணிகள்) 100 மீட்டர் தூரம் வரை பயணம் செய்யும். ஆரோக்கியம் நல்லபடியாக இருந்தால் இவை 2004 ஏப்ரல் மாதத்தைத் தாண்டிக் கூட வேலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்புகள் உசாத்துணை வெளி இணைப்புகள் செவ்வாய்க்கிரகத்தின் நாசா ஆய்வுக்கலம் புதிய சாதனை நிலா முற்ற கட்டுரை 68 நாட்களுக்கு மேல் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது: ஆய்வில் புதிய தகவல் செவ்வாய் கிரகத்தில் பனிப்பாறைகள் கண்டுபிடிப்பு பகுப்பு:புவியொத்த கோள்கள் பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
வியாழன் (கோள்)
https://ta.wikipedia.org/wiki/வியாழன்_(கோள்)
வியாழன் (Jupiter) என்பது கதிரவனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோளும் கதிரவ அமைப்பிலேயே மிகப்பெரிய கோளும் ஆகும். இதன் நிறை கதிரவனின் நிறையில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவே ஆகும். எனினும் அது கதிரவ அமைப்பில் உள்ள மற்ற கோள்களை இணைத்தால் கிடைக்கும் நிறையை விட இரண்டரை மடங்கு அதிகமானதாகும். வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டும் வளிமப் பெருங்கோள்கள் ஆகும்; மற்ற இரு பெருங்கோள்களான யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய இரண்டும் பனிப் பெருங்கோள்கள் ஆகும். பழங்காலத்திலேயே வியாழன் கோளைப் பற்றி வானியலாளர்கள் அறிந்து வைத்திருந்தனர். கதிரவ ஒளியை எதிரொளிக்கும் திறமை காரணமாக நிலவு மற்றும் வெள்ளியை அடுத்து வியாழனே இரவு வானில் புலப்படும் மூன்றாவது வெளிச்சமான பொருளாக உள்ளது. இது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் மிக அதிக காந்த புலத்தை கொண்டுள்ளது. புறக்கோள்களில் ஒன்றான வியாழன் ஒரு வாயுக்கள் திரண்ட கோளம் ஆகும். இது கனமான உலோகங்கள் நிறைந்த பாறை உட்கருவைக் கொண்டிருந்தாலும், மற்ற பெருங்கோள்களைப் போல் இதன் மேற்பரப்பும் திடமின்றி உள்ளது. வியாழனுக்கு 79 அறியப்பட்ட நிலவுகள் உள்ளன, அவற்றுள் பெரிய நிலவான கனிமீடின் விட்டம் புதன் கோளை விடப் பெரியதாகும். புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது நொடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது. கதிரவ சுற்றுப்பாதையில், சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சுமார் 12 புவி ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் கதிரவனைச் சுற்றி வருகிறது.புவியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் கதிரவனைச் சுற்றும் வியாழன், புவியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை புவியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. இது புவியீர்ப்பு விசையை விட 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது. இந்த வளிமம் பெருங்கோளின் நடுவரை விட்டம் சுமார் 88,700 மைல். சற்று சப்பையான துருவ விட்டம் சுமார் 83,000 மைல். வாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் (9 மணி 50 நிமிடம்) தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்று்வதால் தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் உள்ளன. சூரிய மண்டலத்தின் பாதிப் பளுவை வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டு, சிறுகோள்கள், வால் விண்மீன்கள் போன்ற வான் பொருள்களைத் தனது அபார ஈர்ப்பு விசையால் இழுத்து அடிமையாக்கிக் கொண்டு, தன்னைச் சுற்றும்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது. ஹைட்ரஜன் வாயுவால் முதன்மையாகவும் மேலும் ஹீலியத்தாலும் நிரப்பப்பட்டுள்ள வியாழன், இவ்வளிமங்களின் கடும் அழுத்ததால் அழுத்தப்பட்ட நிலையில் சில தனிமப்பாறைகளாலான உள்ளகமும் கொண்டது. வியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம் உருவானது. இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது. வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதி உள்ளது. தவிர, மிகவும் வலிமையான காந்தப்புல மண்டலம் உள்ளது. கலீலியோவால் 1610ல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பெரிய கலீலிய நிலவுகளுடன் சேர்ந்து மொத்தம் 67 நிலவுகள் வியாழனுக்கு உள்ளன. சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய நிலவான கானிமீடு புதன் கோளை விடவும் பெரியது. வியாழன் தானியங்கி விண்கலங்களால் பலமுறை ஆயப்பட்டுள்ளது; குறிப்பாக துவக்க கால பயனியர், வொயஜெர் பறப்புகளின் வழியிலும் பின்னதாக கலிலியோ திட்டத்திலும் ஆராயப்பட்டுள்ளது. மிகவும் அண்மையில் புளூட்டோவிற்கு அனுப்பப்பட்ட நியூ ஹரைசன்ஸ் விண்கலத்தால் 2007 பெப்ரவரியின் பிற்பகுதியில் ஆராயப்பட்டது. இந்தத் தேடுகலம் வியாழனின் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி முடுக்கம் பெற்றது. வருங்கால வியாழ அமைப்புகளின் தேடாய்வுகளில் இதன் துணைக்கோள் ஐரோப்பாவிலுள்ள பனிபடர்ந்த நீர்மக் கடல்களை ஆராய்வதும் அடங்கியிருக்கும். கட்டமைப்பு வியாழன் முதன்மையாக வளிமப், நீர்ம்ப் பொருட்களால் ஆனது. நான்கு வளிமக்கோள்களில் இதுவே மிகப்பெரியதாகும்; தவிரவும் சூரியக் குடும்பக் கோள்களிலேயே மிகப்பெரும் கோளாகவும் விளங்குகின்றது. இதன் விட்டம் நிலநடுக்கோட்டில் ஆக உள்ளது. 1.326 கி/செமீ3 அடர்வுள்ள வியாழன் வளிமக் கோள்களில் மிகவும் அடர்த்தியான இரண்டாவது கோளாக உள்ளது. இருப்பினும் தரைப்பரப்புள்ள நான்கு கோள்களில் எவற்றையையும் விட இதன் அடர்வு குறைவாகும். thumb|720px|center|வியாழனின் உட்புறத்தை விளக்கும் வெட்டுக்காட்சிப் படிமம். பாறையான உட்கருவையும் நீர்ம ஐதரச மாழை படலத்தையும் கொண்டுள்ளது.|alt=Diagram of Jupiter's moons, surface, and interior வளிமண்டலம் வியாழனின் வளிமண்டலம் உயரத்திற்கு பரவியுள்ளது; இதுவே சூரிய குடும்பத்தில் கோளத்திற்கான மிகப்பெரும் வளிமண்டலம் ஆகும். வியாழனுக்கு தரைப்பரப்பு என்பது இல்லாமையால் வளிமண்டல அழுத்தம் இருக்குமிடம் வளிமண்டலத்தின் துவக்கமாகக் கொள்ளப்படுகின்றது. இது புவியில் தரைமட்ட அழுத்தத்தைப் போல பத்து மடங்கு ஆகும். மேகப் படலங்கள் thumb|right|பெப்ரவரி 25, 1979இல் வொயேஜர் 1 மூலம் பெறப்பட்ட வியாழனின் பெருஞ்சிவப்புப் பிரதேசம் மற்றும் அதனை அடுத்துள்ளப் பகுதிகளின் காட்சி. படமெடுத்த சமயத்தில் வொயேஜர் 1 வியாழனிலிருந்து 9.2 மில்லியன் கிமீ (5.7 மில்லியன் மைல்) தொலைவில் இருந்தது. பெருஞ்சிவப்புப் பிரதேசத்திற்கு நேரடிக் கீழாக உள்ள வெள்ளை வண்ண நீள்வட்ட புயல் ஏறத்தாழ புவியின் விட்டத்தை ஒத்த அளவிலானது. வியாழனைச் சுற்றிலும் எப்போதும் அம்மோனியா படிகங்களும், அம்மோனிய ஐதரோசல்பைடும் அடங்கிய மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த மேகங்கள் வெப்பநிலை மாறு மண்டல எல்லையில் அமைந்துள்ளன; பல நிலநேர்க்கோடுகளில் பட்டைகளாக அமைந்துள்ளன. இவை வெளிர்வண்ண மண்டலங்களாகவும் கருவண்ண பட்டைகளாகவும் வகைப் பிரிக்கப்பட்டுள்ளன. முரண்படும் சுற்றுகை உள்ள இவற்றின் இடைவினைகளால் புயல்களும் கொந்தளிப்பு ஓட்டங்களும் ஏற்படுகின்றன. மண்டல வளித்தாரைகளில் வளிவேகங்கள் 100 மீ/சவி (360 கிமீ/ம) ஆக உள்ளன. இந்த மண்டலங்களின் அகலம், வண்ணம், தீவிரம் ஆண்டுக்காண்டு மாறுபடுவதாக கவனிக்கப்பட்டுள்ளது; ஆனால் இவை ஒரே இடத்தில் அமைந்திருப்பதால் வானியலாளர்களால் இவற்றை அடையாளப்படுத்துமுகமாக பெயர்கள் வழங்க இயன்றுள்ளது. left|thumb|இந்த அசைவூட்டப் படத்தில் வியாழனின் எதிரெதிர் சுழற்சி மேகப் படலங்களைக் காணலாம். வேறு அளவுகளில் இந்த அசைவூட்டத்தைக் காண: 720 pixels, 1799 pixels. மேகப்படலம் ஆழம் மட்டுமே உள்ளது; இவை குறைந்தது இரண்டு அடுக்குகளிலாவது உள்ளன: அடர்த்தியானக் கீழ்ப்பகுதியும் அடர்த்தி குறைவான, தெளிந்த மேற்பகுதியும். அம்மோனியாப் படலங்களுக்கு கீழே மெல்லிய நீர் மேகப் படலம் இருக்கலாம்; வியாழனில் அவதானிக்கப்பட்டுள்ள மின்னல் கீற்றுக்கள் இதற்கு வாய்ப்புள்ளதற்கு சான்றாக அமைகின்றன. இது நீரின் முனைவுத்தன்மையால் ஏற்படுகின்றது; மின்மங்கள் பிரிக்கப்பட்டு மின்னல்கள் ஏற்பட ஏதுவாகின்றது. வியாழனினில் காணப்படும் மின்னல்கள் புவியில் காணப்படுபவற்றை விட ஆயிரமடங்கு வலுவானவை. உட்புறத்திலிருந்து வெளிப்படும் வெப்பத்தினால் நீர் மேகங்களில் இடிமின்னற்புயல்கள் ஏற்படலாம். வியாழனின் மேகங்களில் காணப்படும் இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு வண்ணங்கள் அவற்றிலுள்ள சேர்மங்களில் சூரியனின் புறஊதாக்கதிர் பட்டு ஏற்படுகின்றன. சேர்மங்களின் அளவுகள் சரியாக மதிப்பிடப்படவிட்டாலும் இவற்றில் பாசுபரசு, கந்தகம், மற்றும் நீரகக்கரிமங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இந்த வண்ணமிகு சேர்மங்கள் கீழுள்ள மேக அடுக்கில் கலக்கின்றன. அம்மோனியா படிகமாகும் போது கீழுள்ள மேகங்கள் மறைக்கப்படுவதினால் மண்டலங்கள் உருவாகின்றன. வியாழனின் குறைந்த அச்சுச் சாய்வினால் இதன் முனையங்களில் எப்போதுமே குறைந்த சூரிய ஒளிதான் கிடைக்கின்றது. கோளின் உட்புற மேற்காவுகையால் ஆற்றல் முனையப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மேகப்படலங்களுக்கிடையேயான வெப்பத்தை சமப்படுத்தப்படுகின்றது. கோள் வளையங்கள் thumb|வியாழனின் வளையங்கள் வியாழன் கோளுக்கு மூன்று அங்கங்களாகப் பிரிக்கப்படும் மெல்லிய வளையங்களைக் கொண்டுள்ளது: உட்புறத்தில் துருத்துகின்ற பொருட்களடங்கிய வளையம் பரிதிவட்டம் எனப்படுகின்றது, சற்றே ஒளிர்மை மிக்க முதன்மை வளையம், வெளிப்புற சிலந்திவலை இழையடுக்கு வளையம். இந்த வளையங்கள் சனிக்கோளின் பனியாலான வளையங்களைப் போலன்றி தூசியாலானவை. முதன்மை வளையம் அட்ராசுட்டீயா மற்றும் மெட்டிசு நிலவுகளிலிருந்து வெளியேறிய பொருட்களால் ஆகியிருக்கலாம். நிலவிற்கு பொதுவாக உள்ளிழுக்கப்ப வேண்டிய பொருட்கள் வியாழனின் வலிய ஈர்ப்பு சக்தியால் வெளியே இழுக்கப்பட்டிருக்கலாம். இந்தப் பொருட்கள் வியாழனைச் சுற்றி வருகையில் கூடிய தாக்கங்களால் புதிய பொருட்கள் சேருகின்றன. இதேபோல தேபெ, அமால்தியா நிலவுகளின் பொருட்களால் இரண்டு குறிப்பிடத்தக்க அங்கங்களை உடைய தூசான சிலந்தி வலையடுக்கு வெளிப்புற வளையம் உருவாகியிருக்கக் கூடும். அமால்தியா நிலவைச் சுற்றியும் அதன் மீது தாக்கியப் பொருட்களாலான பாறையாலான வளையமொன்று கண்டறியப்பட்டுள்ளது. மேற்கோள்கள் உசாத்துணைகள் வெளி இணைப்புகள் —A simulation of the 62 Jovian moons. June 2010 impact video பகுப்பு:வெளிக்கோள்கள் பகுப்பு:கோள்கள் பகுப்பு:வளிமப் பெருங்கோள்கள் பகுப்பு:வியாழன்
சனி (கோள்)
https://ta.wikipedia.org/wiki/சனி_(கோள்)
சனி (Saturn) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சனி கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன. சனிப் பெயர்ச்சி சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும். இதன் சராசரி ஆரம் புவியினுடையதை விட ஒன்பது மடங்காகும். புவியின் அடர்த்தியில் எட்டில் ஒருபங்கே இருந்தபோதும் தனது பெரிய அளவினால் புவியை விட 95 மடங்கு நிறையுடையதாக உள்ளது. சனிக்கோள் ஐதரசன் வளிமத்தால் முதன்மையாகவும் ஈலியம் மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. இதன் உள்ளகம் இரும்பு, நிக்கல் மற்றும் பாறைகளும் (சிலிக்கான், ஆக்சிஜன் சேர்மங்கள்) கொண்ட கருவைச் சுற்றி தடிமனான மாழை நிலையிலான ஐதரசன், ஈலியம் அடுக்குகளும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது. இக்கோளின் வளிமண்டலத்தில் அம்மோனியா படிகங்கள் இருப்பதால் வெளிர் மஞ்சள் சாயை கொண்டுள்ளது. மாழைநில ஐதரசன் அடுக்கில் ஏற்படும் மின்னோட்டத்தால் சனிக்கோளிற்கு காந்தப் புலம் உருவாகின்றது. இந்தக் காந்தப்புலம் புவியினுடையதை விட வலிமை குறைந்து காணப்படுகின்றது; ஆனால் சனிக்கோளின் பெரிய விட்டத்தின் காரணமாக இதன் காந்தத் திருப்புத்திறன் புவியை விட 580 மடங்காக உள்ளது. சனியின் காந்தப்புலத்தின் வலிமை வியாழனின் காந்தப் புலவலிமையில் இருபதில் ஒன்றாக உள்ளது. சனியின் வெளிப்பரப்பு எவ்வித மேடுபள்ளங்களும் இல்லாது உள்ளது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்; ஆனால் நெப்டியூனில் நிலவும் காற்று வேகங்களை விடக் குறைவாகும். சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியின் நன்கறிந்த நிலவுகள் மொத்தம் 61. இதைத்தவிர, சுமார் 200 நிலவுக்குட்டிகள் (moonlets) சனிக்கு உள்ளன. சனிக்கோளின் மிகப்பெரிய நிலவான டைட்டன் (Titan), புதன் கோளை விடவும் பெரியது. சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய நிலவான வியாழனின் நிலவான கானிமீடுக்கு அடுத்தது இந்த டைட்டன். சனி சூரியனில் இருந்து 1.400.000.000 கிமீ (869,000,000 மைல்) தூரத்தில் உள்ளது. இது சூரியனின் சுற்றுப்பாதையில் ஒருமுறை சுற்றி முடிக்க அல்லது ஒரு சனி ஆண்டு என்பது பூமியின் 29.6 ஆண்டுகள் ஆகும். சனி கிரேக்கப் புராணங்களில் குரோநோசு (KRONOS) என அழைக்கப்பட்டது. உரோமானிய வேளாண்மைக் கடவுளான சாட்டர்னஸ் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. எனவே சனி கோளின் சின்னம் அரிவாள் சின்னம் (♄) ஆகும். இந்து தொன்மவியலில் சனிக் கடவுளின் பெயர் இக்கோளிற்கு சூட்டப்பட்டுள்ளது. இயல்பு பண்புகள் left|thumb|சனியின் அளவை புவியின் அளவோடு ஒப்பிடும் படிமம் சனியின் புறப்பரப்பு பெரும்பாலும் வளிமங்களால் ஆனதால் அது வளி அரக்கக்கோள் எனப்படுகின்றது. இருப்பினும் சனிக்கு திண்மையான உள்ளகம் இருக்கலாம். சனி தன்னைத்தானே சுற்றுவதால் அதற்கு பருநடு நீளுருண்டை வடிவம் அமைந்துள்ளது; அதாவது, முனையங்களில் தட்டையாகவும் நடுப்பகுதியில் பருத்தும் காணப்படுகின்றது. நடுக்கோட்டு ஆரத்திற்கும் முனைய ஆரத்திற்கும் 10% வரையிலான வேறுபாடுள்ளது: முறையே 60,268 கிமீ எதிர் 54,364 கிமீ. சூரியக் குடும்பத்தின் மற்ற வளி அரக்கக்கோள்களான வியாழன், யுரேனசு, நெப்டியூனும் இதே போன்று பருத்தநடுவத்தைக் கொண்டுள்ள போதிலும் அவற்றில் இந்தளவிற்கு வேறுபாடில்லை. சூரியக் குடும்பத்தில் நீரை விட குறைவான அடர்த்தி உள்ளக் கோள் சனி மட்டுமே ஆகும்—ஏறத்தாழ 30% குறைவு. சனியின் கருவம் நீரை விட அடர்த்திக் கூடுதலாக இருப்பினும் வளிநிறைந்த புறப்பரப்பால் சராசரி சாரடர்த்தி 0.69 கி/செமீ3 ஆக உள்ளது. வியாழனின் நிறை புவியினுடையதை விட 318 மடங்காகும், ஆனால் சனியினுடையது 95 மடங்கே ஆகும். சூரியக் குடும்பத்தில் உள்ள மொத்த கோள்களின் நிறையில் 92% வியாழன்,சனிக் கோள்களினதாகும். சனவரி 8, 2015இல் சனிக்கோளின் மையத்தையும் அதன் நிலவுகளின் மையங்களையும் துல்லியமாக கண்டறிந்துள்ளதாக அறிவித்தது. சனியின் வளையங்கள் கிரக வளையங்களைக் கொண்ட சனி நம் சூரிய குடும்பத்தில் ஒரு குறிப்பிடத்தக்க கிரகமாக விளங்குகிறது . இவ்வளையங்கள் சனியின் பூமத்திய ரேகைக்கு மேல் சுமார் 6630 கி.மீ.இலிருந்து 120700 கி.மீ வரை நீண்டிருக்கிறது , அதன் சராசரி தடிமன் 20 மீட்டர் , மற்றும் தோலின் மாசுக்கள் கொண்ட 93 சதவிகிதம் நீர்-பனி உள்ளது . மீதமுள்ள 7சதவிகிதம் பளிங்குருவில்காபன் உள்ளது . வளையங்களில் சிறு புள்ளியிலிருந்து ஒரு வாகனத்தின் அளவு கொண்ட துணிக்கைகள் உள்ளன.சனியின் வளையங்களின் உருவாக்கம் குறித்து இருவேறு கோட்பாடுகள் உள்ளன . சனியின் அழிந்த நிலவின் எஞ்சிய பாகங்களே இவ்வளையங்கள் என்பது ஒரு கோட்பாடு . சனி உருவாகிய வான்புகையுருவின் எஞ்சிய பொருட்களே இவ்வளையங்கள் என்கிறது இன்னொரு கோட்பாடு. அக்டோபர் 6, 2009 அன்று சனியின் பூமத்திய தட்டிலிருந்து 27 கோணலாக , போஎபெயின் வட்டப்பாதையில் ஒரு வெளி வட்டு வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலம் சனியின் வளிமண்டலத்தின் வெளி பகுதியில் 3% ஹீலியம், 0.4% மீத்தேன் மற்றும் 0.01% அம்மோனியா, மற்றும் 96% ஹைட்ரஜன் கொண்டது. மற்றும் அசிடிலின்,ஈதேன் மற்றும் பாஸ்பீன் மிக சிறிய அளவில் உள்ளன. சனியின் மேகங்கள் வியாழன் காணப்படும் மேகப்பட்டைகள் போன்ற, ஒரு பட்டை முறையில் பூமத்தியரேகையில் பரந்துள்ளன. சனி குறைந்த மேக அடுக்கு நீர் பனி சேர்ந்து 10 கிமீ (6 மைல்) தடித்தது. இங்கு வெப்பநிலை மிகவும் குறைவாக உள்ளது.மேல் அடுக்கு, 77 கிமீ (48 மைல்) தடித்த, அம்மோனியம் ஹைட்ரோ சல்பைடு பனியால் உருவாக்கப்பட்டது.அதற்கு மேலே உயர்ந்த அடுக்கு ஹைட்ரஜனால் உருவாக்கப்பட்டது துணைக்கோள்கள் சனியைச் சுற்றி அறுபத்தி ஒன்று நிலவுகள் சுழல்கின்றன. இதில் தொண்ணூறு விழுக்காட்டை (இடை அளவில்) மிக பெரிய நிலவான டைட்டன் பங்களிக்கிறது. சனியின் இரண்டாவது பெரிய நிலவு ரியாவுக்கு சுற்றுவலயம் இருக்கிறது. மற்ற நிலவுகள் மிகவும் சிறியவை: 10 கிமீ விட்டத்தின் கீழ் முப்பத்து நான்கு நிலவுகள் மற்றும் 50 கிமீ விட்டத்தின் கீழ் பதினான்கு நிலவுகளும் இருக்கின்றன. சம்பிரதாயமாக, அனைத்து சனியின் நிலவுகளுக்கும் கிரேக்கக் கடவுள்களான டைடன்களின் பெயர்களே சூட்டப்படுகின்றன. சனியின் வரலாறு 1610 ல் கலிலியோ கலிலி தனது முதல் தொலைநோக்கி மூலம் அதன் வளையங்களை கண்டுபிடித்தார். அதைபார்த்து கலிலியோ வளையங்களை ஒன்றை மற்றொரு தொட்ட மூன்று தனித்தனி கிரகங்கள் என்று நினைத்தார்.1655 ஆம் ஆண்டில், கிறிஸ்டியன் ஹிகென்ஸ் சனியை சுற்றிய வளையங்களை கண்டறிந்த முதல் அதிகாரபூர்வ நபராவார். கலிலி காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம், அவர் சனி "எங்கும் தொட்டு, ஒரு மெல்லிய, தட்டையான,வளையத்தால் சூழப்பட்டுள்ளது என கண்டறிந்தார். சனியில் தண்ணீர் சனி கிரகத்தில் தண்ணீர் உள்ளதா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில ஜெர்மனியைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானிகள் பால் ஹார்டாக் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சனி கிரகத்தில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தனர். சனி கிரகத்தை சுற்றி பல சந்திரன்கள் உள்ளன. அவற்றில் அக்கிரகத்தின் மேல் பகுதியில் ஆறாவது மிகப்பெரிய சந்திரன் உள்ளது. அது முழுவதும் ஐஸ் கட்டினால் மூடப்பட்டுள்ளது. இதனால் சனிகிரகத்தில் மழை பெய்து அதன் மூலம் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் அங்கு ஆவி நிலையில் தண்ணீர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இவை சனி கிரகத்தை சுற்றி வட்டவடிவில் உள்ளது. இது அந்த கிரகத்தின் சுற்றளவை விட 10 மடங்கு பெரியதாக உள்ளது. இதனால் இங்கு தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளி ஆய்வு thumbnail|right|காசினி விண்கலத்தில் எடுக்கப்பட்ட படம் சனி முதன்முதலில் செப்டம்பர் 1979 ல் பயனீர் 11 விண்கலம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.கிரகத்தின் மேகத்தின் மேலே 20,000 கி.மீ. ( 12,427 மைல்) உயரத்தில் பறந்தது.இது கிரகத்தின் மற்றும் அதன் சந்திரன்களை ஒரு சில புகைப்படங்கள் எடுத்தது ஆனால் தரம் குறைவாக இருந்தன.இதன்மூலம் F வளையம் என்று ஒரு புதிய , மெல்லிய வளையம் கண்டுபிடிக்கப்பட்டது. இது சன் நோக்கி பார்த்தபோது இருட்டில் மோதிரத்தை இடைவெளிகளை விட பிரகாசமான தோன்றும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.இது இடைவெளிகள் காலியாக இல்லை காட்டுகிறது. நவம்பர் 1980 இல் , வாயேஜர் 1 சனியை அடைந்தது.இந்த புகைப்படங்கள் நிலவுகள் மேற்பரப்பில் அம்சங்கள் காட்ட முடிந்தது.வாயேஜர் 1 டைட்டன் அடைந்தது.மற்றும் அதன் வளிமண்டலம் பற்றி நிறைய தகவல் கிடைத்தது. ஜூலை 1 , 2004 அன்று , காசினி ஹூவாஜன்ஸ் சனி சுற்றுப்பாதையில் நுழைந்தது. டிசம்பர் 25 , 2004 அன்று , ஹிகென்ஸ் டைட்டன் மேற்பரப்பில் நுழைந்து ஜனவரி 14 , 2005 அன்று அங்கு தரையிறங்கியது. இது ஒரு உலர் மேற்பரப்பில் இறங்கியது.மேலும் டைட்டனின் வடக்கு துருவத்தில் அருகே ஹைட்ரோகார்பன் ஏரிகள் அமைந்துள்ளது என்று ஜூலை 2006 ல் நிரூபிக்கப்பட்டது. காசினி 2005 ஆம் ஆண்டின் முற்பகுதியில் சனியில் நிகழும் மின்னல் பதிவுசெய்யப்பட்டது.இந்த மின்னகளின் சக்தி பூமியில் சக்தி வாய்ந்த மின்னலை விட 1,000 மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் படிக்க கலீலியோ கலிலி - 1610-இல் சனி கிரகத்தின் வளையங்களை முதன் முதலில் கண்டறிந்தவர். மேற்கோள்களும் குறிப்புகளும் குறிப்புகள் மேற்சான்றுகள் வெளி இணைப்புகள் சனி கிரகத்தின் துணைக்கோள் என்ஸலாடஸ் - சீன வானொலிக்கட்டுரை சனியின் சந்திரன் (TITAN) - நிலா முற்றம் கட்டுரை சனியில் நீர் https://simple.wikipedia.org/wiki/Saturn_planet சனிப் பெயர்ச்சி என்பது என்ன? சனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020 * பகுப்பு:வளிமப் பெருங்கோள்கள்
யுரேனசு
https://ta.wikipedia.org/wiki/யுரேனசு
இராகு (Uranus) சூரியக் குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் இயுரேனசின் நினைவாகப் பெயரிடப்பட்டது. கண்ணுக்குப் புலப்படும் கோளாயினும், அதன் மிகுந்த மெதுவான கோளப்பாதையாலும் மங்கலான தோற்றத்தாலும் பண்டைய கால மக்கள் அதனை ஒரு கோளாகக் கருதவில்லை. இயுரேனசு ஒரு பெரிய வளிக்கோளம் ஆகும். இதன் வளிமண்டலத்தில் ஐதரசன், ஈலியம், மீத்தேன் போன்ற வளிகள் உள்ளன. இதன் வெப்பநிலை -197 பாகை செல்சியசு. இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உண்டு. இக்கோள் ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 84 புவி ஆண்டுகள் ஆகும். இது தன்னைத் தானே சுற்றி வர 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். அப்படியென்றால் இயுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாள்கள் ஆகும். வரலாறு இக்கோள் 1781 ஆம் ஆண்டு வில்லியம் செருசல் என்ற வானியலாளரால் கண்டறியப்பட்டது. இது கண்டறியப்படும் வரை சனிக் கோளோடு சூரிய மண்டலம் முடிவடைந்து விட்டதாகவே கருதினர். இக்கோள் சூரிய மண்டலத்தின் விட்டத்தை இரண்டு மடங்கு பெரிதாக்கியது. அதன் காரணம் சூரியனுக்கும் சனிக் கோளுக்கும் இடைப்பட்ட தூரமே, சனிக் கோளுக்கும் இயுரேனசுக்கும் இருந்தது. தன்மைகள் இதனுடைய வளி மண்டலத்தில் 83 விழுக்காடு ஐதரசனும், 15 விழுக்காடு ஈலியமும் மீதி அளவில் மீத்தேனும் ஐதரோ கார்பன்களும் உள்ளது. அதனால் இது வளிக்கோள்களில் மூன்றாவது பெரிய அளவுடையது ஆகும். முதல் இரண்டு பெரிய வளிக்கோள்கள் வியாழனும், சனியும் ஆகும். உருளும் கோள் சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கோள்கள் குறைவான சுழற்கோணத்தைக் கொண்டிருந்தாலும் இக்கோள் மட்டும் ஏறத்தாழ படுத்துக் கொண்டே சுழற்கிறது. அதனால் இதன் ஒரு பகுதி இரவாகவும் மற்றொரு பகுதி பகலாகவும் 42 வருடங்கள் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புண்டு. மற்ற கோள்கள் ஓரளவுக்கு செங்குத்து நிலையில் சுழல இக்கிரகம் மட்டும் படுத்துக் கொண்டே உருளும் காரணம் பற்றி ஆராய்ந்த வானியலாளர்கள் இக்கிரகம் முதலில் ஓரளவு செங்குத்தாக சுற்றியிருந்து பிறகு ஒரு மிகப்பெரும் விண்கல் மோதியதால் இது உருளும் நிலையில் சுழல ஆரம்பித்திருக்கலாம் என்று கருதுகின்றனர். வளையங்கள் இக்கோளைச் சுற்றி 11 பெரு வளையங்களும் 2 நடுத்தர வளையங்களும் மேலும் சில சிறு வளையங்களும் உள்ளன. 1977 ஆம் ஆண்டில் இவ்வளையங்கள் கண்டறியப்பட்டன. இவ்வளையங்கள் நீர்ப்பனிக் கட்டிகளாலும், தூசிகளாலும், கற்பாறைகளாலும் ஆனவை. உள்ளிருந்து வெளியாக 1986U2R/ζ, 6, 5, 4, α, β, η, γ, δ, λ, ε, ν and μ. என்ற பெயரில் இவை அறியப்படுகின்றன. இந்த வளையங்களில் சில 2500 கிலோமீட்டர்கள் அகலம் கொண்டவையாகவும் உள்ளன. இந்த வளையங்கள் இயுரேனசு கோளின் வயதை விட வயதில் இளையதாய் இருப்பதால் இவை இயுரேனசு கோள் தோன்றிய போது உருவாகவில்லை. அதனால் இது முன்பு இயுரேனசின் நிலவாக இருந்த ஒரு துணைக்கோள். இயுரேனசின் ஈர்ப்பு விசையால் நொறுக்கவோ வேறு துணைக்கோள்களின் மீது மோதப்பட்டு பொடி ஆக்கப்பட்டிருக்கலாம். இப்பொடிகளே நாளடைவில் வளையங்களாக மாறின என்று ஆய்வாளர் கருதுகின்றனர். நிலவுகள் இக்கோளுக்கு உள்ள நிலவுகளுள் 27 கண்டறிந்து பெயரிடப்பட்டுளள்ளன. இவற்றுக்கு வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் அலெக்சாண்டர் போப் ஆகியோரின் படைப்புகளில் உள்ள கதைமாந்தர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளன. மிராண்டா, ஏரியல், அம்ப்ரியேல், டைட்டானியா ஆகியவை ஐந்து பெரிய நிலவுகளாகும். கார்டிலியா மற்றும் கப்டிலியா என்ற இரண்டு நிலவுகள் மற்ற நிலவுகள் போல் தனிச் சுற்றுப்பாதை இல்லாமல் மேற்கொடுத்த வளையங்கள் ஊடாக சுற்றி வருவதால் அவை யுரேனசு வளையங்களின் மேய்பான்கள் என்று கூறப்படுகிறது. இன்னும் பல நிலவுகள் கண்டறியப்படாமல் இருந்தன. யுரேனசின் நிலவுகள் கண்டறியப்பட்ட வரலாறு நிலவின் பெயர் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு(கி. பி. களில்) கண்டறிந்தவர். குறிப்புகள் இடைட்டனியா 1781 கெர்சல். மேலும் நான்கு நிலவுகள் இருக்கலாம் எனவும் கூறினார். ஒபெரோன் 1781 கெர்சல். மேலும் நான்கு நிலவுகள் இருக்கலாம் எனவும் கூறினார். ஏரியல் 1851 லேசல் அம்ரியல் 1851 லேசல் மிரண்டா 1948 கியூப்பர் பக்கு 1985 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். சூலியட்டு 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். போர்ட்டியா 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். கிரசுடியா 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். டெசுடமோனா 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். ரோசலின்டு 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். பெலிண்டா 1986 சையனோட்டு, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். கார்டலியா 1986 இடெரயில், வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். ஒபலியா 1986 இடெரயில், வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். பியங்கா 1986 சுமித்து, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். பெர்டிடா 1986 கர்கோசா, வாயேசர் 2 விண்கலத்தின் மூலம் கண்டறிந்தார். கலிபான் 1997 கிளாட்மேன், நிக்கோல்சன், பர்ன்சு, கவிலார்சு. சைக்கோரக்சு 1997 கிளாட்மேன், நிக்கோல்சன், பர்ன்சு, கவிலார்சு. செடபோசு 1999 கவிலார்சு, கிளாட்மேன், கோல்மன், பெடிட்டு, சுகால். சுடவன்னோ 1999 கிளாட்மேன், கோல்மன், கவிலார்சு, பெடிட்டு, சுகால். பிராசுபெரோ 1999 கோல்மன், கவிலார்சு, கிளாட்மேன், பெடிட்டு, சுகால். இடிரின்குலோ 2001 கால்மன், கவிலார்சு, மிலிசவிலிஜவிக்கு. பெர்டினான்டு 2001 கால்மன், கவிலார்சு, மிலிசவிலிஜவிக்கு. பிரான்சிசுக்கோ 2001 கால்மன், கவிலார்சு, மிலிசவிலிஜவிக்கு, கிளாடுமேன். மேப் 2003 சோவால்டரு, இலிசாவுவரு. கியூபிட் 2003 சோவால்டரு, இலிசாவுவரு. மார்கரட்டு 2003 இசெப்பர்டு, ஜெவிட்டு. வாயேஜர் 2 1986 ஆம் ஆண்டில் நாசாவின் வாயேஜர் 2 யுரேனசை கடந்து சென்ற போது எடுத்த புகைப்படங்கள் இக்கோளைப் புரிந்து கொள்ள உதவியுள்ளன. இந்த விண்கலம் 145 கிலோமீட்டர்கள் விட்டமுடைய ஒரு நிலாவையும் 27 கிலோமீட்டர்கள் விட்டமுடைய ஒரு நிலாவையும் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. மேகங்கள் யுரேனசு நீல நிற மேகங்களால் சூழப்பட்டுள்ளது. இம் மேகங்கள் மீத்தேனால் ஆனவை. யுரேனசில் மானிடக் குடியேற்றத்தின் சாத்தியம் சூரியக்கோள்களில் மிகப்பெரும் நான்கு வாயுக்கோள்களில் இந்த யுரேனசு கோளே குறைந்த விடுபடு வேகத்தைக் கொண்டது. அதனால் இக்கோளுக்கான துணைக்கோள்களில் மானிடர் வசிக்க முடியுமா என ஆய்வுகள் நடந்து வருகிறது. ஒருவேளை அது சாத்தியப்படவில்லை என்றால் மானிடர் அக்கோளைச் சுற்றி வருமாறு மிதக்கும் நகரங்களை கட்டமைக்க நேரும். அப்போது மானிடர் செயற்கைக்கோள் 1 பார் அழுத்தத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Uranus at European Space Agency NASA's Uranus fact sheet Uranus Profile at NASA's Solar System Exploration site Planets – Uranus A kid's guide to Uranus. Uranus at Jet Propulsion Laboratory's planetary photojournal. (photos) Voyager at Uranus (photos) Uranus (Astronomy Cast homepage) (blog) Uranian system montage (photo) பகுப்பு:வளிமப் பெருங்கோள்கள்
நெப்டியூன்
https://ta.wikipedia.org/wiki/நெப்டியூன்
நெப்டியூன் (Neptune) சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளாகும். நெப்டியூன் (Neptune) என்பதன் கருத்து கடல்களின் ரோமானியக் கடவுள் என்பதாகும்.J. Toutain, Les cultes païens de l'Empire romain, vol. I (1905:378) securely identified Italic Neptune as a saltwater sources as well as the sea. சூரியக்குடும்பத்தில் விட்டத்தின் அடிப்படையில் இது நான்காவது மற்றும் நிறை அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகும். நெப்டியூன் பூமியைப்போல 17 மடங்கு நிறை கொண்டது. மற்றும் பூமியைவிட 15 மடங்கு பெரிய (ஆனால் அடர்த்தி குறைந்த) யுரேனஸ்-ஐ விட சற்று பெரியது. சராசரியாக நெப்டியூன் சூரியனை 30.1 வாஅ தூரத்தில் சுற்றுகிறது. நெப்டியூன் ஒரு வாயுக்கோளாகும். இது சூரியக் குடும்பத்தில் விண்கள் பட்டைக்கு வெளியே உள்ளது. இதனைச் சுற்றி வாயுவினால் ஆன ஒரு வளையம் உள்ளது. நெப்டியூனின் பண்புகள் நெப்டியூன் திணிவின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகவும் விளங்குகின்றது. நெப்டியூன் சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4 498 252 900 கி.மீ அல்லது 30.07 AU தூரத்தில் அமைந்துள்ளது. நெப்டியூன் பூமியை விட பருமனில் 4 மடங்கு அதிகமும் திணிவில் 17 மடங்கு அதிகமும் உடையது. நீல நிறக் கோளான நெப்டியூனின் பெயர் ரோமானியர்களின் கடல் கடவுளின் பெயரை ஒத்தது. இது நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் போது மிக மங்கலான கோள் ஆகும். இதனால் வெறும் கண்களால் இதைக் காண முடிவதில்லை. நெப்டியூனில் ஒரு நாள் கிட்டத்தட்ட 16 மணித்தியாலங்கள் நீடிக்கும். மேலும் நெப்டியூனில் ஒரு வருடம் என்பது அதாவது அது சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் 165 புவி வருடங்களாகும். நெப்டியூன் சூரியனிடமிருந்து மிக அதிக தூரத்திலுள்ள கிரகம் என்பதும் அது சூரியனைச் சுற்றி வரும் வேகம் குறைவு என்பதனாலுமே அதன் ஒரு வருடம் புவியின் ஒரு வருடத்தின் 165 மடங்காக உள்ள காரணமாகும். மேலும் நெப்டியூனின் சுற்றுப்பாதை ஏனைய கிரகங்களைப் போல் அல்லாது கிட்டத்தட்ட வட்டப் பாதையாகும். நெப்டியூனைச் சுற்றி இதுவரை 13 துணைக் கோள்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானது ட்ரைட்டன் எனும் நிலவாகும். இந்நிலவு நெப்டியூனைப் பின்பக்கமாகச்சுற்றி வருகின்றது. மேலும் ட்ரைட்டனில் வறண்ட நிலங்களும் நைட்ரஜன் திரவ நிலையிலும் வெந்நீர் ஊற்றுக்களும் நிறைந்துள்ளன. சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களை அவதானித்த வண்ணம் அதைத் தாண்டிச் செல்லும் நோக்கத்துடன் நாசாவால் செலுத்தப்பட்ட வொயேஜர் 2 செய்மதி இறுதியாகக் கட்டுப்பாட்டு மையத்துக்குத் தகவல் அனுப்பியது நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தே ஆகும். மேலும் அது நெப்டியூனையும் அதன் துணைக்கோள் ட்ரைட்டனையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது. கண்டுபிடிப்பு பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன். நெப்டியூன் கிரகம் கணித ரீதியான கணிப்புக்களினூடாகவே முதன் முறையாகக் கண்டு பிடிக்கப்பட்டது. அதாவது அதிக பார்க்கும் திறன் உள்ள தொலைக் காட்டிகள் இல்லாத காலமான 1846 ஆம் ஆண்டு யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப் பாதையில் அதன் ஈர்ப்பு நடுக்கம் காரணமாக அதன் அருகில் அதை ஒத்த கோளொன்று இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் வில்லியம் எர்ச்செல் என்ற விஞ்ஞானி, மார்ச் 13, 1781-ல் தற்செயலாக சனிக்கு அடுத்தபடியாக உள்ள யுரேனஸ் எனும் கோளினை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார். யுரேனஸ் பற்றி மேலும் ஆராய்ந்ததில், அதனுடைய பாதையில் மேலும் கீழுமான அசைவு தெரிந்தது. ஒரு பொருள் மீது ஈர்ப்புச் சக்தியைச் செலுத்தி, அதனை ஈர்த்தால் மட்டுமே இவ்வாறு தள்ளாட்டம் இருக்கமுடியும். அப்படியானால் யுரேனஸுக்கு அப்பால் ஒரு பெரிய கோள் இருப்பதாலே... அதன் ஈர்ப்புச் சக்தியின் காரணமாக யுரேனஸில் தள்ளாட்டம் ஏற்படுகிறது என கணித்தனர் வானவியலாளர்கள். சிறந்த வானவியலாளர் எய்ரி என்பவரிடம் தனது கணக்கை எடுத்துச் சென்றார். இளைஞரான ஆடம்ஸ் கூற்று சரியாக இருக்காது என நினைத்த எய்ரி, இதைச் சட்டை செய்யவில்லை. அந்த ஆய்வு முடிவுகளை லெவெரியா ஜெர்மனியில் உள்ள பெர்லின் தொலைநோக்கிக் கூடத்துக்கு அனுப்பினார். அதன் இயக்குநரும் ஆர்வம் காட்டவில்லை. பிறகு, அங்கே பணியாற்றிய ஜான்கால், ஹைன்ரிடீ தஜேஸ்ட் எனும் ஆய்வாளர்களின் வேண்டுகோளுக்குச் செவி மடுத்த இயக்குநர், நெப்டியூன் கோளினை லெவெரியா கணித்த இடத்தில் தேட, ஒரு சில நாட்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கினார். 1846-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் நாள், சரியாக இரவு 12 மணிக்கு லெவெரியா கணக்கிட்டுச் சொன்ன இடத்தில் நெப்டியூன் தென்பட்டது. அடுத்த சில நாட்கள் அதன் இயக்கத்தைச் சரிபார்த்து, இது கோள்தான் என உறுதி செய்தனர். இவ்வாறு கணிதம் கொண்டு பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்டது நெப்டியூன். இதனைத் தொடர்ந்து கணித மற்றும் வானியல் அறிஞர்களான உர்பைன் லெ வெர்ரியர், ஜான் கூச் ஆடம்ஸ், யோகன் காத்ரிபைட் கால் ஆகியோரால் நெப்டியூனின் துணைக் கோளான ட்ரைட்டனும் கண்டு பிடிக்கப்பட்டது. இப்படி 1846-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட தினத்தில் இருந்து நெப்டியூன்,2011 ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதிதான் சூரியனை ஒரு முறை வலம் வந்துள்ளது. தன்னைத்தானே 19.1 நாளில் சுற்றும் நெப்டியூன், சூரியனை ஒரு முறை சுற்றி வர 164.8 வருடங்கள் ஆகும். இதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் சொவால்டர் கண்டுபிடித்தார் என்று கூறுவோறும் உளர். குறிப்புகள் உசாத்துணை வெளி இணைப்புக்கள் NASA's Neptune fact sheet Neptune from Bill Arnett's nineplanets.org Neptune Astronomy Cast episode No. 63, includes full transcript. Neptune Profile at NASA's Solar System Exploration site Planets – Neptune A children's guide to Neptune. பகுப்பு:வளிமப் பெருங்கோள்கள்
புளூட்டோ
https://ta.wikipedia.org/wiki/புளூட்டோ
புளூட்டோ (Pluto, வழமையான குறியீடு: 134340 புளூட்டோ; சின்னங்கள்: 16px|⯓ மற்றும் 16px|♇) அல்லது சேணாகம் என்பது கதிரவ அமைப்பில் (ஏரிசுவை அடுத்து) இரண்டாவது பெரிய குறுங்கோளும் கதிரவனை நேரடியாகச் சுற்றிவரும் ஒன்பதாவது பெரிய விண்பொருளும் ஆகும். இது பெருசிவல் லோவெல் என்பவரால் 1915-இல் கணிக்கப்பட்டு 1930-இல் கிளைடு டோம்பா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. புளூட்டோ ஆரம்பத்தில் கதிரவனின் ஒன்பதாவது கோள் எனக் கருதப்பட்டு வந்தது. நெப்டியூனுக்கு வெளியேயுள்ள கைப்பர் பட்டையில் உள்ள பல பெரும் விண்பொருட்களில் ஒன்றே புளூட்டோ எனக் கண்டுபிடிக்கப்பட்டதால் இது குறுங்கோள் ஆகவும் புளூட்டாய்டு ஆகவும் வகைப்படுத்தப்பட்டது. புளூட்டோவிற்கு சாரோன் எனும் ஒரு பெரிய நிலா உட்பட ஐந்து நிலாக்கள் உள்ளன. கைப்பர் பட்டையில் உள்ள ஏனைய விண்பொருட்கள் போலவே புளூட்டோவும் பாறைகள், மற்றும் பனிக்கட்டிப் பாறைகளைக் கொண்டுள்ளது. புவியின் நிலவின் ஆறில் ஒரு மடங்கு நிறையையும், மூன்றில் ஒரு மடங்கு கனவளவையும் கொண்டுள்ளது. இது மிக அதிக சாய்வான பிறழ்மையச் சுற்றுப்பாதை விலகலை (சூரியனில் இருந்து 30 முதல் 49 வானியல் அலகு (4.4–7.4 பில்லியன் கிமீ)) உடையது. இதனால் புளூட்டோ நெப்டியூனை விட அடிக்கடி சூரியனுக்குக் கிட்டவாக வருகிறது. 2011 ஆம் ஆண்டின் படி, புளூட்டோ சூரியனில் இருந்து 32.1 வாஅ தூரத்தில் இருந்தது வகைப்பாடு கோள் என்பதற்கான அனைத்துலக வானியல் கழகத்தின் வரையறை: கதிரவ அமைப்பில் உள்ள விண்பொருள் ஒன்று கோள் என்றழைக்கப்பட வேண்டும் எனில்: அப்பொருள் கதிரவனை ஒரு சுற்றுப்பாதையில் சுற்றிவர வேண்டும். நிலைநீர் சமநிலையை (கிட்டத்தட்ட கோள வடிவம்) எட்டுவதற்குத் தகுந்த நிறையைப் பெற்றிருக்க வேண்டும். தன் சுற்றுப்பாதைச் சூழலில் ‘அண்மையிலுள்ள பொருள்களை நீக்கியிருக்க வேண்டும்’. புளூட்டோவும் அதையொத்த குறுங்கோள்களும் முதலிரண்டு நிபந்தனைகளை எட்டியிருந்தாலும் மூன்றாவது ‘அண்மைப் பொருள்களை நீக்குதல்’ நிபந்தனையை எட்டாததால், அவற்றை கோள் எனக்கூற முடியாது. thumb|left|100px|புளூட்டோவின் சரோனும் சூரியனும் thumb|right|புளூட்டோவின் சுற்றுப்பாதை புளூட்டோவின் துணைக்கோள்கள் கீழ்வருவன புளூட்டோ மற்றும் அதன் துணைக்கோள்களின் அளவைகள் ஆகும். + புளூட்டோவும் அதன் துணைக்கோள்களும் பெயர் கண்டுபிடித்த ஆண்டு விட்டம் (கிலோமீட்டர்கள்) நிறை (நிலவின் கிலோகிராம்கள்) சுற்றாரம் (கிலோமீட்டர்கள்) சுற்றுக்காலம் (d) பருமன் (mag) புளூட்டோ 1930 2,306 (66% நிலவு) 1.305 (18% நிலவு) 2,035 6.3872 (25% நிலவு) 15.1 சரோன் 1978 1,205 (35% நிலவு) 1.52 (2% நிலவு) 17,536 (5% நிலவு) 6.3872 (25% நிலவு) 16.8 எஸ் 2012 2012 10–25 ? ~42,000 +/- 2,000 20.2 +/- 0.1 27 நிக்சு 2005 91 4 48,708 24.856 23.7 எஸ் 2011 2011 13–34 ? ~59,000 32.1 26 ஐடுரா 2005 114 8 64,749 38.206 23.3 இவை தவிர்த்து புளுட்டோவின் அரைகுறை துணைக்கோளாக (15810) 1994 ஜே.ஆர்.1 உள்ளது. இது ஏற்கனவே புளூட்டோவின் ஒரு துணைக்கோளாக 10 இலட்சம் ஆண்டுகள் இருந்துள்ளது. இன்னும் இருபது இலட்சத்திலிருந்து இருபத்தியைந்து இலட்சம் ஆண்டுகள் இது புளூட்டோவின் துணைக்கோளாக இருக்கும். மூல நூல் வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், . குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் புளூட்டோவை நெருங்கியது நியூ ஹொரைசான் விண்கலம்: காணொளி காட்சி புளூட்டோவைக் கடந்து சென்று நெருக்கத்தில் படம்பிடித்தது ஆய்வுக் கலன்: காணொளி காட்சி பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள்
ஸ்டீவன் ஹாக்கிங்
https://ta.wikipedia.org/wiki/ஸ்டீவன்_ஹாக்கிங்
ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking, ஜனவரி 8 , 1942 -14 மார்ச்சு 2018) ஒன் இந்தியா தமிழ். பார்த்த நாள் (மார்ச்சு 14, 2018) ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோட்பாட்டில் புவியீர்ப்பு அருநிலைத் தேற்றங்களை நிறுவியமை, ஆக்கிங்கு கதிரியக்கம் என அழைக்கப்படும் கருந்துளைகளின் கதிர்வீச்சு உமிழ்தலை எதிர்வுகூறியமை போன்ற அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெரிதும் அறியப்படுகிறார். இவரே முதன் முதலில் அண்டவியலுக்கான கோட்பாட்டை உருவாக்கி, பொதுச் சார்புக் கோட்பாடு, குவாண்டம் இயங்கியல் ஆகியவற்றின் மூலம் விளங்கப்படுத்தினார். குவாண்டம் இயங்கியலின் பல-உலகங்களுக்கான விளக்கத்திற்குத் தீவிர ஆதரவாளராக விளங்கினார்.Gardner, Martin (September/October 2001). "Multiverses and Blackberries". "Notes of a Fringe-Watcher". Skeptical Inquirer. Volume 25, No. 5.Price, Michael Clive (February 1995). "THE EVERETT FAQ" . Department of Physics, Washington University in St. Louis. Retrieved 17 December 2014. ஆக்கிங்கு ஐக்கிய அமெரிக்காவின் உயர்ந்த குடிமகனுக்கான விருதைப் பெற்றார். 2002 ஆம் ஆண்டில், பிபிசி நடத்திய பிரித்தானியாவின் 100 பெரும் புள்ளிகள் கணிப்பில் 25வதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1979 முதல் 2009 வரை கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் தான் உருவாக்கிய கோட்பாடுகளைப் பற்றியும், அண்டவியல் தொடர்பிலும் பிரபலமான அறிவியல் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றார். இவரது காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற புகழ்பெற்ற கட்டுரைத் தொடர் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் சண்டே டைம்சு இதழில் 237 வாரங்களாக வெளிவந்து சாதனை புரிந்தது. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இவரது அறிவியல் நூல்கள் பலரையும் கவர்ந்தன. 21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் தசையூட்டமற்ற பக்க மரப்பு நோய் எனவும் அழைக்கப்படும் இயக்கு நரம்பணு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, படிப்படியாகக் கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்த நிலையில், கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவே இருந்தார். இவர் 2018 மார்ச் 14 இல் தனது 76-வது அகவையில் காலமானார். அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்கு எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இந்தச் சிறந்த படைப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால் 2000 ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. ஆரம்ப வாழ்வும் கல்வியும் ஆரம்ப வாழ்வு இங்கிலாந்தில் மருத்துவமனை ஒன்றில் 1963 ஆம் ஆண்டு 21 வயது இளைஞர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவத்திற்குப் பின் அவர் இன்னும் ஒரு சில தினங்களை உயிர் வாழ்வார் என்றும் விரைவில் இறந்து விடுவார் எனவும் மருத்துவர்கள் அறிக்கை தந்தனர். பக்கவாதம் (ameotropic lateral sclerosis) என்னும் நரம்பு நோய் பாதிப்புடன் அவர் மருத்துவ உலகே மிரண்டு போகும் அளவுக்கு 53 ஆண்டுகள் வாழ்ந்து காட்டினார். 1985இல் மூச்சு குழாய் தடங்கலால் பேசும் திறனை இழந்தார் .இறுதியாக எஞ்சியது கன்னத்தின் தசையசைவும் கண் சிமிட்டலும் மட்டுமே. உடலில் மீதியுள்ள அத்தனை உறுப்புகளும் செயலிழந்து விட்டன. தசையளவு மூலம் தன் கருத்தை கணினியில் தட்டச்சு செய்து வெளிப்படுத்தினார். அவரின் ஆய்வுகளுக்கு துணையாக செயற்கை நுண்ணறிவு கணினி செயல்பட்டது. . ஆரம்பக் கல்வி 1950 இல், அவரது தகப்பனார், தேசிய மருத்துவ ஆய்வு நிலையத்தில், ஒட்டுண்ணியியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றதனால், அவரது குடும்பத்தினர் அனைவரும் செயிண்ட் அல்பான்சு என்ற இடத்திற்குச் சென்று வாழ்ந்தனர். அவரது குடும்பத்தினர் படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். அவரது தகப்பனார், ஆக்கிங்கை பிரபலமான Westminster School இல் சேர்ப்பதற்கு ஆசைப்பட்டார். ஆனால் புலமைப் பரிசிலுக்கான பரீட்சைக்குப் போக முடியாமல் ஆக்கிங் நோயுற்றிருந்தமையாலும், அந்தப் பாடசாலைக்கான செலவை உதவித்தொகையின்றி குடும்பத்தினரால் சமாளிக்க முடியாதென்பதனாலும், ஆக்கிங் செயிண்ட் அல்பான்சு பள்ளியிலேயே தனது கல்வியைத் தொடர்ந்தார். ஆனாலும் அவருக்கு அதில் நேர்மறையான விளைவும் கிடைத்தது. அவருடன் சேர்ந்து அவருக்குப் பிடித்தமான விளையாட்டுகளில் பங்கெடுக்கக் கூடிய, வான்வெடிகள் / விமான மற்றும் படகு ஒப்புருக்கள் உற்பத்தியில் சேர்ந்து பங்களிக்கக் கூடிய, கிறிஸ்தவம் மற்றும் புலன் புறத்தெரிவு போன்றவை பற்றி நீண்ட உரையாடல்களை நிகழ்த்தக்கூடிய நெருங்கிய நண்பர்கள் அவருக்குக் கிடைத்தார்கள். 1958 இல், அவர்களது கணித ஆசிரியரின் உதவியுடன், கடிகாரத்தின் பகுதிகள், பழைய தொலைபேசி ஒன்றின் மின்தொடர்பு இணைப்புப் பலகை, மற்றும் மீளுருவாக்கப் பாகங்களைக் கொண்டு ஒரு கணினியை உருவாக்கினார்கள். பட்டப்படிப்பு பாடசாலையில் அவர் ஐன்ஸ்டைன் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டிருந்தாலும், ஆரம்பத்தில் அவர் வெற்றி பெற்றவராக இருக்கவில்லை. ஆனால் பின்னர் நாட் செல்லச் செல்ல, அறிவியல் பாடங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்து, அவரது கணித ஆசிரியரால் உந்தப்பட்டு, பல்கலைக்கழகத்தில் கணிதத்தைத் தெரிவு செய்தார். அவரது தந்தையார், கணித்துறையில் மிகக் குறைந்தளவே வாய்ப்புக்கள் இருப்பதனால், ஆக்கிங் மருத்துவத் துறையைத் தெரிவு செய்ய வேண்டும் என்றும், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் கற்க வேண்டும் என்றும் விரும்பினார். அந்த நேரத்தில் கணிதவியல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இல்லாதபடியால், அவர் இயற்பியலையும், வேதியியலையும் தெரிவு செய்தார். மார்ச் 1959 இல், புலமைப் பரிசிலில் சித்தியடைந்து, தனது 17 ஆவது வயதில், அக்டோபர் 1959 இல், ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பை ஆரம்பித்தார். முதல் 18 மாதங்கள் அவருக்குப் படிப்பு மிகவும் இலகுவானதாக இருந்தமையால், அது சலிப்பூட்டுவதாகவும், தனிமைப்படுத்துவதாகவும் அமைந்தது. அவரது இயற்பியல் ஆசிரியரின் கூற்றுப்படி, இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில், அவர் ஏனையோருடன் இணைந்து கொண்டார். பழம்பெரும் இசை, அறிவியல் புனைவு போன்றவற்றில் ஈடுபாட்டைக் காட்டி, கல்லூரியின் உற்சாகமூட்டும், பிரபலமான ஒரு உறுப்பினராக மாறினார். அவரது ஒரு மகுதி மாற்றத்துக்குக் காரணமாக அவர் கல்லூரியின் படகுக் குழு, படகு வலித்தல் குழுமம் போன்றவற்றில் தன்னை இணைத்துக் கொண்டமை அமைந்தது. அவர் ஆக்சுபோர்டு பல்கலைகழகத்தில் படித்த 3 ஆண்டுகளில், தான் 1000 மணித்தியாலங்கள் படித்திருப்பதாகக் கணித்ததுடன், இதனால் தனக்கு இறுதிப் பரீட்சை, சவாலானதாக அமையும் என்றும் கணித்து, தான் நிகழ்வுசார் அறிவைவிட, கோட்பாட்டு இயற்பியல் பகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் விரும்பியவாறு, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில், அண்டவியல் துறையில் பட்டப் படிப்பைத் தொடர வேண்டுமெனின், அதற்கு முதலாம் பிரிவில் நன்மதிப்பு பெற்றிருக்க வேண்டும். அந்தக் கவலையினால், அவரால் முதல்நாள் இரவு சரியாகத் தூங்க முடியாமல், அவரது இறுதிப் பரீட்சை முடிவு முதலாம், இரண்டாம் நிலைகளுக்கு இடையில் வந்திருந்ததனால், அவர் ஒரு நேர்முகப் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியிருந்தது. நேர்முகப் பரீட்சையில், அவரது திட்டத்தைக் கூறும்படி கேட்கப்பட்டபோது, 'முதலாம் பிரிவு கிடைத்தால் தான் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம் போக எண்ணியிருப்பதாகவும், இரண்டாவது நிலையானால், ஆக்சுபோர்ட்டிலேயே தொடர்ந்து படிப்பதாகவும், அதனால் நீங்கள் முதலாவது பிரிவை அளிப்பீர்கள் என நினைக்கிறேன்' என்றும் பதிலளித்தார். நேர்முகப் பரீட்சையில் இருந்தவர்களுக்கு ஆக்கிங் மிகுந்த அறிவாளி என்பதனை உணர முடிந்ததனால், அவருக்கு முதலாம் பிரிவு நன்மதிப்பை அளித்தார்கள். இயற்கை அறிவியலில் தனது முதல்நிலை பட்டப்படிப்பை முடித்த அவர், தனது ஒரு நண்பருடன் ஈரானுக்குப் போய்விட்டு வந்து, ஒக்டோபர் 1962 இல் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். அங்கு அவருக்கு முதலாவது ஆண்டு சிறிது கடுமையாக அமைந்தது. அவருக்கான மேற்பார்வையாளராக, பரவலாக அனைவராலும் அறியப்பட்ட வானியல் வல்லுநர் பிரெட் ஆயில் என்பவர் அல்லாமல், நவீன அண்டவியல் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான Dennis William Sciama என்பவர் கிடைத்ததில், ஆக்கிங் ஏமாற்றமடைந்தார். அத்துடன், பொதுச் சார்புக் கோட்பாடு மற்றும் அண்டவியல் தொடர்பான வேலைகளுக்குத் தனக்கு அங்கு கிடைக்கும் கணிதவியல் பயிற்சி போதாது என்று நினைத்தார். அவருக்கு இயக்க நரம்பணு நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டபோது, மருத்துவர்கள் அவர் தொடர்ந்து படிக்கலாம் என்று கூறினால், இனிப் படிப்பதில் என்ன பயன் என்றெண்ணி மனத் தளர்ச்சிக்கு உள்ளானார். மருத்துவர்கள் எதிர்வு கூறியதைவிட மிக மெதுவாகவே அவரது நோய் கூடிக்கொண்டு சென்றது. அவருக்கு உதவியின்றி நடப்பதில் சிரமம், மற்றும் சரியாகப் பேசுவதில் சிரமம் என்பன இருந்தாலும், அவர் இன்னும் இரு ஆண்டுகளுக்கே உயிர் வாழ்வார் என்ற கூற்று சரியானதாக இருக்கவில்லை. 1964 ஜூனில் ஒரு விரிவுரையின்போது, பிரெட் ஆயில் மற்றும் அவரது ஒரு மாணவர் இருவரினதும் வேலை தொடர்பில் ஆக்கிங் பகிரங்கமாக சவால் விட்டபோது, அவரது அறிவு தொடர்பான நன்மதிப்பு கூடிக்கொண்டு போனது. ஆக்கிங் தனது பட்டப்படிப்பில் இருந்த சூழ்நிலையில், இயக்கவியல் சமூகத்தில், அண்டத் தோற்றப்பாட்டில் அப்போதிருந்த பெரு வெடிப்புக் கோட்பாடு, போன்ற கோட்பாடுகள் தொடர்பில் பெரிய விவாதங்கள் நிகழ்ந்தன. உரோசர் பென்ரோசு என்பவரின் கருந்துளை]]யின் மையத்திலுள்ள, [[வெளிநேர சிறப்பொருமை (singularity) தொடர்பான கோட்பாட்டால் உந்தப்பட்டு, அதே கோட்பாட்டை முழு அண்டத்திற்கும் பயன்படுத்தி அது தொடர்பான தனது ஆய்வுக்கட்டுரையை 1965 இல் எழுதினார். அந்தக் கட்டுரை 1966 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் Gonville and Caius College, Cambridge இல் ஒரு சக ஆய்வாளராக இணைந்தார். பின்னர், மார்ச் 1966 இல், செயல்முறைக் கணிதவியல், இயக்கவியல் கோட்பாடுகளில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதில் பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவியலை முக்கிய பிரிவாகக் கொண்டிருந்தார். தொழில் வாழ்க்கை 1966–1975 1975–1990 1990–2000 2000–2018 thumb|left|alt=Stephen Hawking sitting in his wheelchair inside|upright|Hawking at the to inaugurate the Laboratory of Astronomy and Particles in Paris, and the French release of his work God Created the Integers, 5 May 2006 ஆக்கிங் பொது மக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், இலகு நடையில், பரவலாக அதிகமானோருக்குக் கிடைப்பதற்காக முதலே வெளியிடப்பட்டிருந்த காலத்தின் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்ற நூலின் மேம்படுத்திய பதிப்பு என்னும் நூல்களை முறையே 2001, 2005, 2016 ஆம் ஆண்டுகளில் வெளியிட்டார். ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் இருக்கும் Thomas Hertog, மற்றும் Jim Hartle உடன் இணைந்து, 'மேலிருந்து-கீழான அண்டவியல்' கொள்கை ஒன்றை 2006 ஆம் ஆண்டிலிருந்து உருவாக்கி வந்தார். அந்தக் கொள்கையானது பேரண்டமானது ஒரு தனித்துவமான ஆரம்ப நிலையை மட்டுமே கொண்டதாக இராமல், பல்வேறு நிலைகளைக் கொண்டிருப்பதனால், தற்போதைய பேரண்டத்தின் வடிவமைப்பை, ஒரு தனியான ஆரம்ப நிலையை வைத்து எதிர்வுகூறல் பொருத்தமானதல்ல என்கின்றது. மேலும் இக்கொள்கை கடந்தகாலத்தின் பல மேல்நிலையிலுள்ள வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய அமைப்பைத் தெரிவு செய்வதனால், துல்லிய ஒத்தியைவு பேரண்டம் என்ற சாத்தியமான நுணுக்கத்தை அறிவுறுத்துகிறது. ஆக்கிங் தனது தொழில்சார் தேவைகளுக்காகவும், விருதுகளைப் பெறிவதற்காகவும் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து வந்தார். அவரது உடலியக்கப் பாதிப்புக் காரணமாக அவரது பயணங்கள் தனிப்பட்ட தாரை வானூர்தி மூலமாகவே நிகழ்ந்தன. 2011 ஆம் ஆண்டுக்குப் பின்னர், அது மட்டுமே அவரது வெளிநாடுகளுக்கான பயண முறையாக அமைந்தது. 2003 ஆம் ஆண்டளவில், கருந்துளைத் தகவல் இழப்புத் தொடர்பாக ஆக்கிங்கின் கருத்துக்கள் ஏற்கத்தக்கவையல்ல என்ற கருத்து பல இயற்பியலாளர்களிடையே அதிகரித்து வந்தது. 2004 இல் டப்லின் செய்த விரிவுரை ஒன்றில் இதனை ஆக்கிங் ஏற்றுக்கொண்டார். தான் 1997 இல் செய்திருந்த பந்தயத்திலிருந்த முரண்பாட்டையும் ஏற்றுக்கொண்டார். ஆனாலும், தகவல் இழப்பு தொடர்பான பிரச்சனைக்கு, கருந்துளைகள் ஒன்றுக்கு மேற்பட்ட இடவியலைக் கொண்டிருப்பதற்கான சாத்தியமுண்டு என்பதனை உட்படுத்தித், தனது சொந்தத் தீர்வொன்றையே முன்வைத்தார். 2005 இல் ஆக்கிங் வெளியிட்ட இந்த விடயம் தொடர்பான ஆய்வுக் கட்டுரையொன்றில், பேரண்டம் தொடர்பான மாற்று வரலாறுகள் அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்தியதன் மூலம் தகவல் முரண்பாடு விளக்கப்பட்டுள்ளதாக விவாதித்துள்ளார். 2014 இல் தன்னுடைய கருந்துளையில் தகவல் இழப்புத் தொடர்பான தனது கருத்து தவறென ஒத்துக்கொண்டார். thumb|left|Hawking holding a public lecture at the Stockholm Waterfront congress centre, 24 August 2015 இன்னுமொரு நீண்ட காலமாக நடந்து வந்த அறிவியல் சர்ச்சையின் பகுதியாக, ஆக்கிங் ஹிக்ஸ் போசான் என்ற ஒரு துகள் எப்போதும் கண்டுபிடிக்கப்படப் போவதில்லை என்று அழுத்தமாக விவாதித்தும், பந்தயம் செய்தும் வந்துள்ளார். 1964 இல், பீட்டர் ஹிக்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட கொள்கையின்படி, இவ்வாறான ஒரு துகள் இருக்கலாம் என்று முன்மொழியப்பட்டது. இது தொடர்பில் 2002 இலும், மீண்டும் 2008 இலும் இது தொடர்பாக ஆக்கிங், ஹிக்ஸ் ஆகிய இருவருக்குமிடையில் மிகவும் சூடான விவாதம் நிகழ்ந்தது. அப்போது பெரும்புகழ் கொண்டவராக ஆக்கிங் இருப்பதனால், ஏனையோருக்குக் கிடைக்காத நம்பகத்தன்மை, அவரது கருத்துக்களுக்கு உடனடியாகக் கிடைப்பதாகக் குற்றஞ்சாட்டினார். 2012 இல், ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் பெரிய ஆட்ரான் மோதுவி அமைக்கப்பட்ட பின்னர், இந்தத் துகள் கண்டறியப்பட்டது. தான் தனது பந்தயத்தில் தோற்றுவிட்டதாக ஆக்கிங் விரைவாகவே ஒத்துக்கொண்டதுடன் ஹிக்ஸ்சிற்கு இயற்பியலாளருக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் எனக் கூறினார். 2013 இல் ஜிக்ஸ்சிற்கு இந்த நோபல் பரிசு கிடைத்தது. 2007 இல் ஆக்கிங்கும், அவரது மகள் லூசியும் இணைந்து சிறுவர் நூலை வெளியிட்டார்கள். அதில் ஆக்கிங் குடும்பத்தினரை ஒத்த கதாபாத்திரங்கள் கொண்ட தோற்றங்களை அமைத்து, அணுகக்கூடிய வகையில் இயற்பியல் கொள்கைகளை விளக்கி, அந்த நூலை வடிவமைத்தார்கள். 2009, 2011, 2014, 2016 ஆண்டுகளில் இதன் தொடர் நூல்கள் வெளியிடப்பட்டன. 2002 இல் ஐக்கிய இராச்சிய மட்டத்தில் நிகழ்ந்த வாக்கெடுப்பின் அடிப்படையில், ஆக்கிங், 100 சிறந்த பிரித்தானியர்கள் பட்டியலில் இடம்பெற்றார். 2006 இல் அரச கழகத்திடமிருந்து கொப்லே பதக்கத்தையும் (கோப்ளி பதக்கம்), 2009 இல் அமெரிக்காவின் மிகவும் மதிப்புள்ள என்ற விருதையும் , 2013 இல் உருசியாவின் விருதையும் பெற்றார். சான் சல்வடோரில் உள்ள ஸ்டீவன் ஹாக்கிங் அறிவியல் அருங்காட்சியகம், கேம்பிரிட்ச்சில் உள்ள ஸ்டீவன் ஹாக்கிங் கட்டடம், கனடாவிலுள்ள ஸ்டீவன் ஹாக்கிங் நிலையம், ஆகிய கட்டடங்கள் உட்பட ஆக்கிங்கின் பெயரில் பல கட்டடங்கள் அமைந்துள்ளன. நேரம் தொடர்பில் ஆக்கிங் கொண்டுள்ள கருத்துக்கள் காரணமாக, கேம்பிரிட்ச்சில் திறந்து வைத்தார். விண்வெளிப் பயண அறிவிப்பு alt=Hawking, without his wheelchair, floating weightless in the air inside a plane|thumb|upright=1.15|Hawking taking a zero-gravity flight in a reduced-gravity aircraft, 2007 2006 இல், பி.பி.சி க்கு அளித்த பேட்டியொன்றில், விண்வெளிக்குச் செல்வது தனது நிறைவேறாத ஆசைகளில் ஒன்று என்று கூறினார். இதைக் கேட்ட ரிச்சர்டு பிரான்சன், இலவசமாக விண்வெளிப்பயணம் ஒன்றை ஒழுங்கு செய்ய முடியும் என்று கூறியபோது ஆக்கிங் அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டார். தன்னுடைய தனிப்பட்ட ஆசையுடன், விண்வெளிப் பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், உடற்குறை உள்ளவர்களுடைய ஆற்றலை எடுத்துக்காட்டவும் விரும்பினார். 26 ஏப்ரல் 2007-இல், இவருக்கென்று வடிவமைக்கப்பட்ட Boeing 727–200 தாரை வானூர்தியில், புளோரிடாவின் கரையோரப் பகுதியில் எடையற்ற நிலையை அனுபவத்தில் கண்டார். ஜனவரி 8, 2007-இல் இவருடைய 65-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் அன்று, தான் விண்வெளிப் பயணம் செய்யப் போவதாக அறிவித்தார். பெருஞ்செல்வர் ரிச்சர்டு பிரான்சன் அவர்களுடைய செலவில் வர்ஜின் காலாக்டிக் விண்வெளிப் போக்குவரத்துச் சேவையின் துணையால், 2009-ஆம் ஆண்டு ஈர்ப்பற்ற வெளியில்(அதாவது, புவி ஈர்ப்பு இல்லாத இடத்தில்) நிலவுருண்டையைச் சுற்றி வர இருப்பதாகக் கூறினார்.டெய்லி டெலிகிராஃவ், இங்கிலாந்து இறக்கும் வரையிலும் என்றாவது ஒருநாள் விண்வெளிக்குப் பயணம் செய்துவிடும் நம்பிக்கையோடுதான் இருந்தார்.ஸ்டீபன் ஹாக்கிங் மறைவு ஸ்டீபன் ஹோக்கிங் 14 மார்ச்சு 2018 அன்று தனது 76 ஆவது வயதில் காலமானார். அதிகாலையில் கேம்பிரிட்ஜில் உள்ள அவரது வீட்டில் மரணம் நிகழ்ந்தது. அவரது குடும்பத்தினர் அவர் அமைதியாக உயிர் துறந்ததாக அறிவித்துள்ளனர். மேற்கோள்கள் மூலங்கள் வெளியிணைப்புகள் ஸ்டீபன் ஹாக்கிங் இணையதளம் பகுப்பு:அறிவியல் எழுத்தாளர்கள் பகுப்பு:1942 பிறப்புகள் பகுப்பு:2018 இறப்புகள் பகுப்பு:பிரித்தானிய எழுத்தாளர்கள் பகுப்பு:பிரித்தானிய இயற்பியலாளர்கள் பகுப்பு:மாற்றுத்திறனாளிகள் பகுப்பு:ஆங்கிலேயக் கணிதவியலாளர்கள் பகுப்பு:அண்டவியலாளர்கள் பகுப்பு:ஆங்கிலேய வானியலாளர்கள் பகுப்பு:ஆங்கிலேய இயற்பியலாளர்கள் பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள் பகுப்பு:இருபத்தொராம் நூற்றாண்டு ஆங்கிலேய எழுத்தாளர்கள்
சாக்கிரட்டீசு
https://ta.wikipedia.org/wiki/சாக்கிரட்டீசு
சாக்கிரட்டீசு (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15 ) பண்டைக் கிரேக்கத்தின், ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். இவர் எப்போது பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீசு போற்றப்படுகிறார். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீசு என்பது இவருடைய சிறப்பாகும். சாக்ரடீசு நன்னெறித் துறையில் அவரது பங்களிப்புக்கு புகழ்பெற்றவராக விளங்குகிறார் என்பது பிளாட்டோவின் உரையாடல்கள் மூலம் சித்தரிக்கப்படுகிறது. சாக்ரடீசு முரண்நகை மற்றும் சாக்ரடீசு வழிமுறை ஆகிய தத்துவக் கருத்துகளுக்காக தத்துவ அறிஞர் சாக்ரடீசு அறியப்படுகிறார். பிந்தைய கருத்து பொதுவாக பரவலான விவாதங்களில் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது, இது ஒரு வகையான கற்பித்தலும் ஆகும், இம்முறையில் தொடர்ச்சியான கேள்விகளுக்கு தனிப்பட்ட பதில்களைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அடிப்படை நுண்ணறிவை ஊக்குவிப்பதற்காகவும் கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒளிர்வுக் கோட்பாடு தொடர்பான முக்கியமானதும் நிலையானதுமான கோட்பாடுகளுக்கு பிளாட்டோவின் சாக்ரடீசு பங்களித்திருக்கிறார். மேலும் இவருடைய கருத்தியலும் அணுகுமுறையும் தொடர்ந்து வந்த மேற்கத்திய தத்துவத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அளித்துள்ளன. சாக்ரடீசு புதிர் சாக்ரடீசு எழுதிய படைப்புகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் அவரைப்பற்றியும், அவருடைய தத்துவங்கள் பற்றியுமான தகவல்கள் இரண்டாம்நிலை ஆதாரங்களில் தங்கியிருக்கின்றன. மேலும், இந்த ஆதாரங்களின் உள்ளடக்கங்களுக்கு இடையிலான நெருக்கமான ஒப்பீடு சில முரண்பாடுகளை அம்பலப்படுத்துகிறது, இதனால் உண்மையான சாக்ரடீசைப் பற்றிய ஆழமான உண்மைகளை அறிந்துகொள்ளும் சாத்தியக்கூறுகள் பற்றிய கவலைகள் உருவாகின்றன. இந்த ஐயமே சாக்ரடீசு புதிர் அல்லது சாக்ரடீசு வினா எனப்படுகிறது. சாக்ரடீசு மற்றும் அவரது சிந்தனைகளைப் புரிந்து கொள்ள விரும்பும் ஒருவர், முதலில் பிளாட்டோவின் படைப்புகளைப் படித்துத் தெளிய வேண்டும். இவையே சாக்ரடீசின் வாழ்க்கை மற்றும் தத்துவங்களுக்கு முக்கியமான மூலங்களாக உள்ளன. செனொபானின் படைப்புகளும் இத்தகையதே ஆகும்.catalogue of Harvard University Press - Xenophon Volume IV. Retrieved 2015-3-26. இந்தப் படைப்புகள் சாக்ரடிகோய் லோகோ அல்லது சாக்ரடிக் உரையாடல்கள் எனப்படுகின்றன. இவற்றில் சாக்ரடீசு சம்பந்தமான வெளிப்படையான உரையாடல்களின் அறிக்கைகள் உள்ளன.Kahn, CH', Plato and the Socratic Dialogue: The Philosophical Use of a Literary Form, Cambridge University Press, 1998, p. xvii.Many other writers added to the fashion of Socratic dialogues (called Sokratikoi logoi) at the time. In addition to Plato and Xenophon, each of the following is credited by some source as having added to the genre: Aeschines of Sphettus, Antisthenes, Aristippus, Bryson, Cebes, Crito, Euclid of Megara, and Phaedo. It is unlikely Plato was the first in this field (Vlastos, p. 52). சாக்ரடீசின் வாழ்க்கை தொடர்பான உண்மைகளை கண்டுபிடிப்பதற்கு கிடைக்கும் பண்டைய ஆதாரங்களில் செனொபான் தவிர பெரும்பாலும் தத்துவ மற்றும் வியத்தகு நூல்களாகவே இருக்கின்றன. சாக்ரடீசின் சமகாலத்திய எந்தவொரு நேரடியான வரலாறும் இல்லை. கிடைக்கபெற்ற ஆதாரங்களின் வேறுபாடுகள் விளைவித்த அனைத்து கருத்துகளுக்கும் இடையில் இரண்டு காரணிகள் சாக்ரடீசு தொடர்பான அனைத்து மூலங்களிலிருந்தும் வெளிப்படுகின்றன. அவர் அசிங்கமானவராக இருந்திருக்கலாம் என்றும், சாக்ரடீசு ஒரு புத்திசாலித்தனமான அறிவைக் கொண்டவராக இருந்தார் என்றும் தெரிகிறது . சாக்ரடீசின் பிறப்பு மற்றும் ஆரம்ப காலம் சாக்ரடீஸ் எப்போது பிறந்தார் என்பதற்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை . 2450 ஆண்டு களுக்கு முன்பு அதாவது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ். இவர் கிரேக்க நகரமான ´ஏதென்சில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு சிற்பி. இவரது தாயார் ஒரு மருத்துவச்சி. உலகில் எந்த மதமும் தோன்றாத அந்த காலகட்டத்திலேயே தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகின்றார். கேள்விகேட்கும் திறன் சிறுவனாக இருந்தபோதே சாக்ரடீஸ் கேள்விகள் கேட்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். எதைப்பற்றியும் கேள்வி கேட்டு, அது பற்றிய உண்மையை அறிந்துகொள்வதே சாக்ரடீசின் வழக்கமாகும். நீதி, நியாயம், ஆத்மா, கடவுள், சமூகம், அரசு, வழக்கம் என எல்லாவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தினார் சாக்ரடீஸ். சாக்ரடீஸ் பொது இடங்களில் மக்களைச் சந்திப்பதிலும், அவர்களோடு உரையாடுவதிலும், அதிக நேரங்களை செலவிட்டார். ஆனால் மற்றவர்கள் சக்ரடீசிடம் கேள்வி கேட்டால் அதற்கு நேரடியாகப்பதில் அளிக்காமல் சாக்ரடீஸ் கேள்வி எழுப்புவார். ஏதாவது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டு மக்களிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, அவர்களிடமிருந்தே பதிலைக் கேட்டு, அந்தப் பிரச்சினையை எழுப்பியவர்களே காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு செய்வார் சாக்ரடீஸ். பிரச்சினையின் காரணத்தைத் தமது கேள்வியின் மூலம் உணரச்செய்த சாக்ரடீஸ், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் கேள்விகளைக் கேட்டார். இதுபோன்ற செயல்களால் பொதுமக்கள் தெளிவு பெற்றனர்; பிரச்சினையைப் புரிந்தனர். அதற்கான காரணத்தையும் அறிந்தனர். அதைப் போக்குவதற்குச் செய்ய வேண்டியவற்றையும் அவர்கள் உணர்ந்தனர். இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீசிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். சாக்ரடீசின் எழுத்துக்களும், சொற் பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது; செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது சாக்ரடீசின் மாணவர் சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் முறை ஏதென்ஸ் நகர இளைஞர்களைக் கவர்ந்தது. இளைஞர்கள் மத்தியில் சாக்ரடீஸ் எப்போதும் காட்சி தந்தார். சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. அவரின் கேள்வி கேட்கும் பழக்கம் இளைஞர்களிடமும் தொற்றிக் கொண்டது.கிரேக்க சமூகத்தில் காலகாலமாக கடைப்பிடித்து வந்த மூடக் கொள்கைகளையெல்லாம் சாக்ரடீசை சிந்திக்க வைத்த தல்லாமல், மெல்ல இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்திருந்தது.இதுபோல் சாக்ரடீசின் கொள்ககளால் ஈர்க்கப்பட்டு பிளேட்டோவும் சாக்ரடீசுடன் சேர்ந்தார். பின் நாளில் இவரும் உலக புகழ் பெற்ற தத்துவஞானி ஆனார். right|thumb|150px|வாடிகன் அருங்காட்சியகத்தில் உள்ள சாக்ரடீசின் சிலை சாக்ரடீசின் மீது பழி இளைஞர்களையும் மாற்ற ஆரம்பித்தது ஏதென்ஸ் அரசுக்கு தெரியவந்தது. சாக்ரடீஸ் இருங்குமிடங்களில் எப்போது இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருப்பது சிலருக்கு எரிச்சலைத் தந்தது. சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களி டம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது. அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது வழக்குத் தொடுத்தனர். இதற்கு சாக்ரடீஸ் மீது அவர்கள் கொண்டிருந்த வெறுப்பே காரணமாகும். இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தனக்குப் பெருமை சேர்ப்பதற்காக சாக்ரடீஸ் தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காகவும், அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் சாக்ரடீஸ் மீது அனிடஸூம், லைகோனும், மெலிட்டஸூம் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர். மரண தண்டனை எண்ணற்ற குற்றச்சாட்டுகளையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மெலிடஸ் என்பவன் சாக்ரடீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இளைஞர்களைக் கெடுக்கிறார், கிரேக்கர்கள் தொழுது வணங்கும் கடவுள்களைத் தூற்றி, ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார், வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் (ஏனெனில் அக்காலகட்டத்தில் கிரேக்கர்கள் இயற்கையையே கடவுளாக வழிபட்டனர்). சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார். புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார். சாக்ரடீஸ் மிகவும் தீயவர். இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் . இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ், 'என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்கு விசாரணை செய்ய நான் விரும்பவில்லை. என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான். நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்து விடுவார்களோ என்று பயப்படுவது அதை விட நாத்திகம்' என்றார். இதன் பின்னர் நீதி மன்றத்தில் தீர்ப்பு கூறும் தருணம் வந்தது. மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டன . நீதிக் குழுவின் உறுப்பினர்கள் 501பேர் வாக்குப்பதிவு செய்யத் தொடங்குகின்றனர். 220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர். நீதிபதிகள் சாக்ரடீஸ் குற்றவாளி தான் என்று தீர்ப்புக்கூறி அவருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை சாக்ரடீஸையே அறிவிக்கும்படி அறிவித்தனர். தாம் எந்தவிதக் குற்றமும் செய்யவில்லை என்றும்; தம் தாய் திரு நாட்டிற்குத் தமது செயல்களின் மூலம் நன்மையே செய்ததாகவும், அதன் பொருட்டு இந்த நீதிமன்றம் தமக்குத் தண்டணைக்குப் பதிலாக பாராட்டும், பரிசும்தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் வாதிட்டார் சாக்ரடீஸ். ஆனால் தண்டனை வழங்குவதாக இந்த நீதி மன்றம் முடிவு செய்தால், அது அபராதத் தொகையாக இருக்க வேண்டும் என்றும்; அந்த அபராதத் தொகையைத் தமது நண்பர்கள் அரசுக்குச் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சாக்ரடீஸ் முழங்கினார். சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலையே ஊட்டியது. அதனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று கி.மு. 339ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இறப்பு சில காரணங்களினால் 30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும், அதுவரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்து வைக்க வேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.பின் தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது .விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார். அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும. குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும். உங்கள் கால்கள் செயல் இழக்கும் போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன். கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர். thumb|left|சாக்ரடீசின் இறக்கும் தருவாய் ஓவியம் “பெண் மக்களைப் போன்று நீங்களும் ஏன் கண்ணீர் சிந்துகிறீர் கள்?” என்று சிரித்தபடி கேட்டுவிட்டு,சாக்ரடீஸ் நடக்கத் தொடங்கினார். சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின. சாக்கிரட்டீசின் முறை சாக்ரட்டீசிய முறை அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இந்த முறையை அவர் பெரும்பாலும் முக்கியமான நல்லொழுக்க எண்ணக்கருக்களை மெய்த்தேர்வு செய்வதில் (பரிசோதிப்பதில்) பயன்படுத்தினார். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினது தந்தையுமாக, ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டுவருகிறார். மேற்கோள்கள் புற இணைப்புகள் Greek Philosophy: Socrates Original Fresque of Socrates in Archaeological Museum of Ephesus Socrates Narrates Plato's The Republic Project Gutenberg e-texts on Socrates, amongst others: The Dialogues of Plato (see also Wikipedia articles on Dialogues by Plato) The writings of Xenophon, such as the Memorablia and Hellenica. The satirical plays by Aristophanes Aristotle's writings Voltaire's Socrates A free audiobook of the Socratic dialogue Euthyphro at LibriVox பகுப்பு:கிமு 399 இறப்புகள் பகுப்பு:கிமு 470 பிறப்புகள் பகுப்பு:கிரேக்க மெய்யியலாளர்கள் பகுப்பு:குடியியற் சட்டமறுப்பு பகுப்பு:பண்டைய கிரேக்க நபர்கள்
பிளேட்டோ
https://ta.wikipedia.org/wiki/பிளேட்டோ
பிளேட்டோ (Plato, (/ˈpleɪtoʊ/; Greek: Πλάτων Plátōn, பழமையான உச்சரிப்பு [plá.tɔːn] கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். இவர் சாக்கிரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் வல்லுனர். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவத் தர்க்கங்களை எழுதியுள்ளார். இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் கல்விக்கூடம் நிறுவினார். இவர் தனது ஆதரவாளர் சாக்கிரட்டீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டில் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இவரைப்பற்றி ஆய்வாளரான ஏ. என். ஒயிட்ஹெட் பின்வருமாறு கூறியுள்ளார்: ஐரோப்பிய தத்துவப் பாரம்பரியத்தின் பாதுகாப்பான பொதுவான குணாதிசயம் என்னவென்றால் அது பிளேட்டோவின் அடிக்குறிப்பு வரிசையைக் கொண்டிருப்பதுதான். அவர் எழுதியவற்றின் சாராம்சங்களை அறிஞர்கள் சந்தேகத்துடன் எடுத்துக் கொண்ட சிந்தனையின் முறையான திட்டம் என்ற பொருளில் நான் சொல்லவில்லை. நான் அவற்றில் பரவியுள்ள பொதுவான கருத்துக்களின் செறிவைத்தான் சொல்கிறேன். பிளேட்டோவின் இளமைக் காலம் பிளேட்டோவின் இளமைக் காலம் குறித்து விரிவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. எனினும் அவரின் இளமைக் காலம் குறித்த தகவல்கள் சிறிய அளவில் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, பிளேட்டோ மிகவும் செல்வ செழிப்புமிக்க அரசியல் பாரம்பரியமுள்ள குடும்பத்தில் பிறந்திருக்கிறார். மேலும், கல்வியில் மிகச் சிறந்து விளங்கியுள்ளார். பிளேட்டோ கல்வி கற்பதற்கு அவரின் தந்தை மிகவும் உதவியிருக்கிறார். பிளேட்டோவிற்கு அவரின் தந்தை பல புகழ் பெற்ற கல்வியியலாளர்களைக் கொண்டு இசை, இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகியவற்றைக் கற்பித்திருக்கிறார். பிறப்பு மற்றும் குடும்பம் பிளேட்டோவின் பிறந்த சரியான நேரத்தையும் இடத்தையும் பற்றிய சரியான தகவல்கள் இல்லை. ஆனால் அவர் ஓர் உயர்குடியில் பிறந்தவர் என்பது தெளிவாகத் தெரிகிறது. பண்டையக் கால ஆதாரங்களின் அடிப்படையில், பெரும்பாலான நவீன அறிஞர்கள் அவர் ஏதென்ஸில் அல்லது ஏஜினாவில் கி மு 429 மற்றும் 423 க்கு இடையில் பிறந்ததாக நம்பப்படுகிறது.Diogenes Laertius, Life of Plato, III • • பிளாட்டோவின் தாய் பெக்கிக்சே ஆவார், இவர் சார்மிசின் சகோதரி ஆவார். பிளேட்டோவின் பிற்கால வாழ்கை தன் வாழ்நாளில் பிளேட்டோ இத்தாலி, சிசிலி, எகிப்து, சைரின் போன்ற நாடுகளுக்குச் சென்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. தனது நாற்பதாவது வயதில் ஏதென்ஸ் நகருக்கு வந்த போது கெக்காடமஸ் என்ற பெயரில் மேற்கத்திய பள்ளி ஒன்றை நிறுவினார். இது மேற்கத்திய நாடுகளில் தோற்றுவிக்ககப்பட்ட முதல் பள்ளியாகக் கருதப்படுகிறது. அரசியல் கோட்பாடுகள் பிளேட்டோ சாக்கிரட்டீசின் மாணவர். இவருடைய அரசியல் கருத்துகள் மக்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்தது. இவர் பல்வேறு துறைகளில் வல்லுநராக இருந்தார். கி.மு 387 ஆம் ஆண்டில் அத்தீனியன் என்ற பள்ளி ஒன்றைத் தொடங்கினார். இதன் மூலம் சிறந்த தத்துவவாதிகளை உருவாக்க வேண்டும் என விரும்பினார். இவருடைய அரசியல் கருத்துகள் செரக்யூஸை ஆண்டு வந்த டைனீஸஸ் போன்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவருடைய அரசியல் கருத்துக்களைக் குடியரசு (நூல்) மற்றும் சட்டங்கள் (Laws) என்ற நூலில் எழுதியுள்ளார். பிளேட்டோவின் அரசியல் பாகுபாடு பிளேட்டோவின் அரசியல் பாகுபாட்டின் விளக்கங்கள் மிகவும் கற்பனை நிறைந்தது. இவருடைய கற்பனையான விளக்கத்தைத் தன்னுடைய நூலான குடியரசுவில் தெளிவாகக் கூறியுள்ளார். இவருடைய அரசியல் பாகுபாட்டினை அரிஸ்டாட்டில் மற்றும் கால்வின் போன்றவர்களுடன் ஒப்பிடலாம். பிளேட்டோவின் கருத்தின்படி ஒரு நாட்டின் தலைவன் என்பவன் மெய்யியல் தெரிந்த மன்னனேயாகும். (Republic 475c) இவருடைய கோட்பாடுகளின் படி மன்னன் சட்டத்திற்கும் , தன்னலத்திற்கும் அப்பாற்பட்டவன். அவ்வாறு இருப்பவனே ஒரு தலை சிறந்த தலைவனாக இருக்க முடியும் எனக் கருதினார். இவருடைய கருத்தின்படி மன்னன் என்பவன் முழு அதிகாரம் பெற்றவனாகவும், அவனை எதிர்த்து எவரும் வினா எழுப்ப இயலாது எனவும் கூறுகிறார். ஒரு நாட்டின் அமைதிக்கும் , நல்லாட்சிக்கும் நீதியே முக்கியமானதாக இருக்கவேண்டும் எனக் கூறுகிறார். இவரது கற்பனையின் படி மன்னன் வரம்பிற்கு மீறிய அதிகாரங்களுடன் இருந்தாலும் இயற்கைக்கு எதிராகச் செயல்பட இயலாது. பிளேட்டோ சமூக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் ஏழை - பணக்காரர் என்ற பிரிவு, நாட்டின் அளவு, நீதியின் தன்மை, கல்வி இவற்றையெல்லாம் விளக்கி உள்ளார். இவரது குடியரசு எனும் நூலில் பலவகையான அரசாங்கங்களைப் பற்றி எழுதியுள்ளார். மேலும் அவை மாற்றங்களுக்கு உட்பட்டது எனவும் கூறியுள்ளார். இவர் ஐந்து வகையான அரசாங்கங்கள் உள்ளன எனக் கூறியுள்ளார். அவையாவன, அரச ஆட்சி (Aristocracy) செல்வர் ஆட்சி (Timocracy)Plato, குடுயரசு 8.547e சிலவர் ஆட்சி (Oligarchic) மக்களாட்சி(Democratic கொடுங்கோலாட்சி (Tyrannic) இவற்றில் முதலாவதாக இருப்பதும் மற்றும் கடைசியாக இருப்பதும் ஒருவரிடம் இருக்கும் அதிகாரத்தைக் குறிக்கும். இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருசிலரிடம் இருக்கும் ஆட்சியையும் , நான்காவதாக இருப்பது பலபேரிடம் இருக்கும் ஆட்சியையும் குறிக்கிறது. இவற்றில் முதலாவதாக இருப்பது நல்ல ஒரு மனிதரிடம் இருப்பது . அவரே பிளோட்டோவின் தத்துவ மன்னர் ஆவார். இந்த அரசன் நீதியின் அடிப்படையிலேயே ஆட்சி செய்வான். ஆனால் காலப்போக்கில் அவன் தன்னுடைய பெருமைக்காகவும் ஆடம்பரத்திற்காகவும் ஆட்சி செய்வான். அவன் நீதியின் வழியில் செல்வதையும் மறந்து விடுவான். இவாறு ஆட்சி செலுத்தும் தனி மனிதனைப் பதவியில் இருந்து நீக்கி சொத்து (தத்துவம்) உள்ளவர்கள் மட்டும் அரசாங்கம் நடத்துவது செல்வர் ஆட்சி (Timocracy) என்று பிளேட்டோ கூறுகிறார். பிளேட்டோ - எழுத்தாளர் பிளேட்டோ ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது அவர் எழுதியுள்ள சாக்ரடீஸின் கேள்வி பதிலில் இருந்து தெரிகிறது. இதில் முப்பத்தாறு உரையாடல், பதிமூன்று கடிதங்களை இவர் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிளேட்டோவின் எழுத்துக்கள் பல வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பிளேட்டோ எழுதியவற்றுக்குப் பெயரிடுதல் மற்றும் குறிப்பிடுதலை பற்றி விவாதிக்கும் பல்வேறு கூட்டங்கள் நடைபெற வழிவகுத்தது. பிளேட்டோவின் உரையாடல்கள் தத்துவம், தர்க்கம், நெறிமுறைகள், சொல்வளம் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல துறைகளைக் கற்பிக்கப் பயன்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Works available online:  – Greek & English hyperlinked text Internet Encyclopedia of Philosophy Stanford Encyclopedia of Philosophy Other resources: பகுப்பு:கிரேக்க மெய்யியலாளர்கள் பகுப்பு:பிளாட்டோனியக் கல்விக்கழக மெய்யியலாளர்கள் பகுப்பு:கிமு 4 ஆம் நூற்றாண்டு மெய்யியலாளர்கள் பகுப்பு:பண்டைய கிரேக்க நபர்கள்
அரிசுட்டாட்டில்
https://ta.wikipedia.org/wiki/அரிசுட்டாட்டில்
thumb|250px|அரிசுட்டாட்டில் அரிசுட்டாட்டில் (ஆங்கிலம்: Aristotle) (கி. மு. 384 - கி. மு. 322) ஒரு கிரேக்க மெய்யியலாளரும் பல் துறைப் புலமையாளரும் ஆவார். அவரது எழுத்துகளில் இயற்பியல், கவிதை, நாடகம், இசை, அளவையியல்(தருக்கம்), சொல்லாட்சி, மொழியியல், அரசியல், ஒழுக்கவியல், உயிரியல், விலங்கியல் ஆகிய பலதுறை அறிவு பொதிந்திருக்கும். பிளேட்டோவும், இவரும் மேற்கத்திய சிந்தனையில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள்.அரிசுட்டாட்டில் மேற்கத்திய மெய்யியலின் மிக முதன்மையான நிறுவுனர் ஆவார். அரிசுட்டாட்டிலின் படைப்புகள் மேற்கத்திய மெய்யியல், அறவியல், அழகியல், அளவையியல், அறிவியல், அரசியல் ஆகியவற்றின் ஒரு முதல் விரிவான அமைப்பை உருவாக்கின. அரிசுட்டாட்டிலின் இயற்பியல் கருத்துகள், ஆழ்ந்த அறிவைத் தரும் இடைக்கால வடிவ இயற்பியல் கோட்பாடுகளாக அமைந்தன. நியூட்டனின் இயற்பியல் கோட்பாடுகள் அரிசுட்டாட்டில் கோட்பாட்டின் ஒரு நீட்சியே ஆகும். அரிசுட்டாட்டிலின் நோக்கீடுகள்(அவதானிப்புகள்) விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை, 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரிசுட்டாட்டிலின் கோட்பாடுகள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன. பிளாட்டோவும் அரிசுட்டாட்டிலும், சாக்கிரட்டீசும் முப்பெரும் கிரேக்க மெய்யியலாளர்களாவர். பிளேட்டோ, அரிசுட்டாட்டிலின் குரு. சாக்கிரட்டீசின்(கி. மு. 470-399) சிந்தனைகள் மற்ற இருவரின் மீதும் ஆழமான தாக்கம் கொண்டிருந்தன. அலெக்சாண்டர் இவருடைய ரிசுட்டாட்டிலின் சீடர் ஆவார். அரிசுட்டாட்டிலின் சிந்தனைகள் இடைக்காலத்திய இசுலாமிய, யூத மரபுகளில் தத்துவ, இறையியல் சிந்தனையில் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அதுவும் குறிப்பாகக் கிறித்தவர்களின் இறையியலில் அவரின் தாக்கம் அதிகமாக இருந்தது. அரிசுட்டாட்டிலை இடைக்கால முசுலீம் அறிவாளிகள் "முதல் ஆசிரியர்" ( 'المعلم الأول') எனப் போற்றினர். அரிசுட்டாட்டில் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 170 என்று ஒரு பண்டையப் பட்டியல் கூறுகிறது. அரிசுட்டாட்டிலின் சிந்தனைகள் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், சிரியாக், அரபு, இத்தாலியம், பிரான்சியம், எபிரேயம், செருமானியம் போன்ற பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. வாழ்க்கை thumb | left | அரிசுட்டாட்டிலின் பள்ளி, மீசா, மாசிதோனியா, கிரீசு அரிசுட்டாட்டில் என்றால் "சிறந்த நோக்கம்," என்று பொருளாகும்.இவர் பண்டைய சுத்தாகிரா நகரத்தில் செல்சிதிசிலில் கி.மு. 384 இல் பிறந்தார் தற்கால தெசாலோனிகியில் இருந்து 55 கி.மீ. (34 மைல்) கிழக்கே. அவரது தந்தை நிக்கோமாக்கசு, மாசிதோனியாவின் மன்னர் அமயிந்தாசின் தனிப்பட்ட மருத்துவர் ஆவார். அரிசுட்டாட்டிலின் குழந்தை பருவத்தைப் பற்றி அதிக தகவல்கள் இல்லை என்றாலும், ஒருவேளை அவர் மாசிதோனிய மாளிகையில் சிறிது காலம் கழித்திருப்பார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பதினெட்டு வயது நிரம்பிய அரிசுட்டாட்டில் பிளேட்டோவின் கல்விக்கழ்கத்தில் சேர்ந்து கல்வி பயில ஏதென்சுக்குச் சென்றார். அரிசுட்டாட்டில் கி.மு. 348/47 இல் ஏதென்சை விட்டுச் செல்வதற்கு முன் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் அங்கு கல்வி கற்றார். பிளேட்டோ இறந்தவுடன் பள்ளி பிளேட்டோவின் மருமகனிடம் சென்றது. அதைத் தொடர்ந்து அரிசுட்டாட்டில் அப்பள்ளியை விட்டு நீங்கினார்.பின் அவர் தன் நண்பனுடன் ஆசியா மைனருக்கு பயணத்தை மேற்கொண்டார். பயணத்தின்போது இலெசுபோசு என்னும் தீவின் விலங்கியல், தாவரவியல் ஆய்வுகளை மேற்கொண்டார். அரிசுட்டாட்டில் எர்மியாசின் வளர்ப்பு மகள் பிதியாசைத் திருமணம் செய்துக்கொண்டார். அரிசுட்டாட்டில் கி.மு. 343 அன்று மாசிதோனிய மன்னன் இரண்டாம் பிலிப் அழைக்க, அவரது மகன் அலெக்சாந்தருக்கு பாடம் கற்பிக்கச் சென்றார்.அரிசுட்டாட்டில் மாசிதோனியா அரசு கல்விக்கழக்த்தின் தலைவராக அமர்த்தப்பட்டார்.கி.மு. 335 அவர் ஏதென்சுக்குத் திரும்பினார், அங்கு இலைசியம் எனப்பட்ட தனது சொந்த பள்ளியை நிறுவினார். அரிசுட்டாட்டில் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள் அங்கு அப்பள்ளியை நடத்திக்கொண்டிருந்தார். தம் மாணவர்க்கு மெய்யியல் கொள்கைகளைக் கற்பிப்பதற்காக ஏதென்சு நகரத்திலிருந்த ஒரு தோட்டத்தில் இதை அவர் நிறுவினார். இதற்கு உலாப் பள்ளி என்ற பெயரும் உண்டு. அரிசுட்டாட்டில் இங்கு உலாவிக் கொண்டே பாடம் சொல்வது வழக்கமாக இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது என்பர். ஏதென்சில் அரிசுட்டாட்டில் இருந்த போது, அவரது மனைவி பிதியாசு இறந்தார்.அரிசுட்டாட்டிலின் பல படைப்புகள் இயற்றப்பட்டது அவர் ஏதென்சில் இருந்த கி.மு. 335 முதல் 323 வரையான காலகட்டத்தில் என்று நம்பப்படுகிறது.அலெக்சாந்தர் இறந்த அதே ஆண்டில் இயற்கை காரணங்களால் இயுபோஇயாவில் அரிசுட்டாட்டிலும் இறந்தார். அரிசுட்டாட்டிலிற்கு அடுத்து அவரது மாணவர் ஆன்டிபாத்தரர் அவரின் இடத்திற்கு வர வேண்டும் என்றும் தன்னைத் தன் மனைவிக்கு அடுத்து புதைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு உயில் விட்டு சென்றாரம் அரிசுட்டாட்டில். அலெக்சாந்தர் தன் ஆசிரியரின் ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்ட நிதி உதவிகள் அனைத்தையும் தாராளமாக வழங்கினார். ஓர் அறிவியலளர் தம் ஆராய்ச்சிக்காக அரசிடமிருந்து பெருமளவில் நிதியுதவி பெற்றது உலக வரலாற்றில் இதுவே முதல் தடவை ஆகும். ஆனால்,அலெக்சாந்தருடன் அரிசுட்டாட்டில் கொண்டிருந்த தொடர்புகள் சில ஆபத்துகளையும் தோற்றுவித்தன. அலெக்சாந்தரின் சர்வாதிகார முறை ஆட்சியை அரிசுட்டாட்டில் கொள்கையளவில் எதிர்த்தார். அரசத் துரோகக் குற்றம் செய்ததாக ஐயத்தின் பேரில் அரிசுட்டாட்டிலின் மருமகனை அலெக்சாந்தர் தூக்கிலிட்டார். அரிசுட்டாட்டிலின் மக்களாட்சி ஆதரவுக் கொள்கையை அலெக்சாந்தர் விரும்பவில்லை. அதே சமயத்தில் அவர் அலெக்சாந்தருடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தமையால் ஏதென்சு மக்களும் அவரை நம்ப மறுத்தனர்.அதன் பின் அவர்கள் இருவரும் பிரிந்தனர். அலெக்சாந்தர் இறந்த பின்பு மாசிதோனிய அரசியல் நிலைமை மாறியது. மாசிதோனியாவை எதிர்க்கும் குழுவினர் ஏதென்சில் ஆட்சிக்கட்டிலில் ஏறினர் . ஆட்சியாளர்கள், சமயத்தை அவமதித்ததாக ஏதென்சில் 76 ஆண்டுகளுக்கு முன்பு சாக்ரட்டீசுக்கு நஞ்சு கொடுத்ததை நினைவு கூர்ந்த அரிசுட்டாட்டில், உடனே 'தத்துவத்திற்கு எதிரான இரண்டாவது பாவத்தைச் செய்ய ஏதென்சுக்கு நான் இடமளிக்கப் போவதில்லை' என்று கூறி அந்த நகரிலிருந்து தப்பி ஓடினார். நம்முடைய நற்பண்புகளுக்கும் , நம்முடைய அறிவாற்றலுக்கும் ஏற்றபடிதான் நாம் அடையும் மகிழ்ச்சி இருக்கும் -அரிசுட்டாட்டில் அரிசுட்டாட்டில், பிளேட்டோ,சாக்கிரட்டீசு ஆகிய மூவரும் ஆசிரியர் , மாணவர் உறவு பூண்டவர்கள். ஆனால் இவர்கள் மூவரும் ஒன்றாக இருப்பது போல் ஒரு ஓவியம் வாட்டிகன் மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டுவருகிறது. காட்சிசார் மெய்யியல் அளவையியல் (தருக்கம்) அளவைநெறித் தொகை இயற்பியல் உயிரியல் மகளிர் பற்றிய பார்வைகள் அரிசுட்டாட்டில் மாந்தரின இனப்பெருக்கம் செயலற்ற, முடக்கநிலை பெண்பால் கூறுடன் உயிர்ப்புமிக்க ஆண்பால் கூறு இணைந்து நிகழ்வதாகக் கூறுகிறார். இந்த அடிப்படையில், பெண்ணிய மெய்யியலாளர்கள் அரிசுட்டாட்டிலைப் பாலியல் சம்னின்மைக்காக குறைகூறுகின்றனர். என்றாலும், அரிசுட்டாட்டில் தன் பேச்சுக்கலை நூலில் மகளிர் ம கிழ்ச்சிக்கும் ஆடவர் மகிழ்ச்சிக்கும் சமநிலை ஆதரவைத் தெரிவிக்கிறார். தகைமை உருவகிப்புகள் பல நூற்றாண்டுகளாக பல பெயர்பெற்ற கலைஞர்கள் அரிசுட்டாட்டிலின் ஓவியங்களைத் தீட்டியுள்ளனர்; சிலைகளைச் செய்துள்ளனர். அவைகளில் உலூக்காசு கிரனச் முதுவல், யசுட்டசு வான் கெண்ட், இராபயேல், பாவொலோ வெரோனீசு, யூசெப்பே தெ இரேபேரா, இரெம்பிராந்தித்,, பிரான்சிசுக்கோ ஆயேசு]] ஆகியோர் அடங்குவர் . இவற்றில் மிகச் சிறந்த கலைச் செம்மை வாட்டிகன் அரண்மனையில் அமைந்த இராபயேல் சுதையில் தீட்டிய ஏதென்சு பள்ளி (The School of Athens) படிமத்தைச் சொல்ல்லாம். இதில் பிளாட்டோவும் அரிசுட்டாட்டிலும் படிமத்தின் நடுவில் உள்ளனர். இது அவர்களின் சிறப்பு த்கைமையைச் சுட்டுகிறது இரெம்பிராந்தித் செதுக்கிய ஓம்ர் சிலியுடன் உள்ள அரிசுட்டாட்டிலின் கலப்படைப்பும் பெரிதும் போற்றுதலுக்கு உரியதாகும்; இது பார்வையற்ற ஓமரின் சிலையுடன் மெய்யீயலாளர் அரிசுட்டாட்டில் காட்டப்பட்டுள்ளார்: க்லித் திறனய்வளரும் இதழியலாளரும் ஆகிய சொனாதன் சோன்சு பின்வருமாறு எழுதுகிறார். " இந்த வண்ண ஓவியம் உலகிலேயே மாபெரும் மருமப் படைப்பாக என்றென்றும் நிலவும்; இது எக்காலத்துக்கும் சுடரும் கருவண்ண அறிவுலகப் படைப்பாக உறுதியாக விளங்கும்." வண்ண ஓவியங்கள் சிலைகள் தகைமைப் பெயர்கள் அண்டார்க்டிகாவின் மலைகளில் ஒன்று அரிசுட்டாட்டில் மலைகள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவர் முதன்முதலில் தனது வானிலையியல் நூலில் தென் உயர் அகலாங்குகளில் அமைந்த நிலப்பகுதியைக் கண்டறிந்து அதற்கு அண்டார்க்டிகா என்ப் பெய்ரிட்டார். நிலாவின் ஒரு குழிப்பள்ளத்துக்கு அரிசுட்டாட்டிலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேற்கோள்கள் குறிப்புகள் சான்றுகள் மேலும் படிக்க J. L. Ackrill (1997). Essays on Plato and Aristotle, Oxford University Press, USA. A popular exposition for the general reader. }} These translations are available in several places online; see External links. Bakalis Nikolaos. (2005). Handbook of Greek Philosophy: From Thales to the Stoics Analysis and Fragments, Trafford Publishing Barnes J. (1995). The Cambridge Companion to Aristotle, Cambridge University Press. Bolotin, David (1998). An Approach to Aristotle's Physics: With Particular Attention to the Role of His Manner of Writing. Albany: SUNY Press. A contribution to our understanding of how to read Aristotle's scientific works. Myles Burnyeat|Burnyeat, M. F. et al. (1979). Notes on Book Zeta of Aristotle's Metaphysics. Oxford: Sub-faculty of Philosophy. Chappell, V. (1973). Aristotle's Conception of Matter, Journal of Philosophy 70: 679–696. Code, Alan. (1995). Potentiality in Aristotle's Science and Metaphysics, Pacific Philosophical Quarterly 76. Frede, Michael. (1987). Essays in Ancient Philosophy. Minneapolis: University of Minnesota Press. Eugene Gendlin (2012). Line by Line Commentary on Aristotle's De Anima, Volume 1: Books I & II; Volume 2: Book III. Spring Valley, New York: The Focusing Institute. Available online in PDF. Gill, Mary Louise. (1989). Aristotle on Substance: The Paradox of Unity. Princeton: Princeton University Press. Halper, Edward C. (2007). One and Many in Aristotle's Metaphysics, Volume 1: Books Alpha — Delta, Parmenides Publishing, . Halper, Edward C. (2005). One and Many in Aristotle's Metaphysics, Volume 2: The Central Books, Parmenides Publishing, . Terence Irwin (1988). Aristotle's First Principles. Oxford: Clarendon Press, . Alberto Jori. (2003). Aristotele, Milano: Bruno Mondadori Editore (Prize 2003 of the "International Academy of the History of Science") . Knight, Kelvin. (2007). Aristotelian Philosophy: Ethics and Politics from Aristotle to MacIntyre, Polity Press. Lewis, Frank A. (1991). Substance and Predication in Aristotle. Cambridge: Cambridge University Press. G. E. R. Lloyd (1968). Aristotle: The Growth and Structure of his Thought. Cambridge: Cambridge Univ. Pr., . Lord, Carnes. (1984). Introduction to The Politics, by Aristotle. Chicago: Chicago University Press. Loux, Michael J. (1991). Primary Ousia: An Essay on Aristotle's Metaphysics Ζ and Η. Ithaca, NY: Cornell University Press. [Reprinted in J. Barnes, M. Schofield, and R. R. K. Sorabji, eds.(1975). Articles on Aristotle Vol 1. Science. London: Duckworth 14–34.] Pangle, Lorraine Smith (2003). Aristotle and the Philosophy of Friendship. Cambridge: Cambridge University Press. Aristotle's conception of the deepest human relationship viewed in the light of the history of philosophic thought on friendship. Reeve, C. D. C. (2000). Substantial Knowledge: Aristotle's Metaphysics. Indianapolis: Hackett. A classic overview by one of Aristotle's most prominent English translators, in print since 1923. Scaltsas, T. (1994). Substances and Universals in Aristotle's Metaphysics. Ithaca: Cornell University Press. Strauss, Leo (1964). "On Aristotle's Politics", in The City and Man, Chicago; Rand McNally. For the general reader. வெளி இணைப்புகள் At the Internet Encyclopedia of Philosophy: At the Internet Classics Archive From the Stanford Encyclopedia of Philosophy: Collections of works At Massachusetts Institute of Technology Perseus Project at Tufts University At the University of Adelaide P. Remacle The 11-volume 1837 Bekker edition of Aristotle's Works in Greek (PDFDJVU) பகுப்பு:கிமு 384 பிறப்புகள் பகுப்பு:கிமு 322 இறப்புகள் பகுப்பு:கிரேக்க மெய்யியலாளர்கள் பகுப்பு:கிரேக்க இயற்பியலாளர்கள் பகுப்பு:அண்டவியலாளர்கள் பகுப்பு:கிரேக்க கணிதவியலாளர்கள் பகுப்பு:கிரேக்க உயிரியலாளர்கள் பகுப்பு:விலங்கியலாளர்கள் பகுப்பு:கிமு 4 ஆம் நூற்றாண்டு மெய்யியலாளர்கள் பகுப்பு:பிளாட்டோனியக் கல்விக்கழக மெய்யியலாளர்கள்
நெப்போலியன்
https://ta.wikipedia.org/wiki/நெப்போலியன்
நெப்போலியன் என்ற தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன: முதலாம் நெப்போலியன் - நெப்போலியன் பொனபார்ட், பிரான்ஸ் நாட்டையாண்ட மன்னன் இரண்டாம் நெப்போலியன் - நெப்போலியன் பொனபார்ட்டின் மகன், ரோம் மன்னன் மூன்றாம் நெப்போலியன் - பிரான்ஸ் நாட்டின் தலைவன் (1849-1852), பிரான்ஸ் மன்னன் (1852-1870) நெப்போலியன் - தமிழ்த் திரைப்பட நடிகர்.
லியொனார்டோ டா வின்சி
https://ta.wikipedia.org/wiki/லியொனார்டோ_டா_வின்சி
thumb|லியொனார்டோ டா வின்சி|alt=ஏ ழயூழட மற்றும் பழுது லியொனார்டோ டா வின்சி (Leonardo da Vinci) அல்லது இலியனார்தோ தா வின்சி (ஏப்ரல் 15, 1452 - மே 2, 1519) ஒரு புகழ் பெற்ற இத்தாலிய மறுமலர்ச்சிக் கட்டிடக்கலைஞரும், கண்டுபிடிப்பாளரும், பொறியியலாளரும், சிற்பியும், ஓவியரும் ஆவார். ஒரு பல்துறை மேதையாகக் கருதப்பட்டவர். குறிப்பாக இவரது, சிறப்பான ஒவியங்களுக்காகப் பரவலாக அறியப்பட்டவர். "கடைசி விருந்து" (The Last Supper), "மோன லிசா" (Mona Lisa) போன்ற ஒவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. உரிய காலத்துக்கு மிக முன்னதாகவே செய்யப்பட்ட பல கண்டுபிடிப்புக்கள் தொடர்பிலும் இவர் பெயர் பெற்றவர். எனினும் இவரது காலத்தில் இவை எதுவும் வெளியிடப்படவில்லை. அத்துடன் இவர், உடற்கூற்றியல், வானியல், குடிசார் பொறியியல் ஆகிய துறைகளின் வளர்ச்சியிலும் பெரும்பங்கு ஆற்றியுள்ளார். இவர் தணியாத ஆர்வம் கொண்டவராகவும் தீவிர கற்பனை வளம் கொண்டவராகவும் இருந்துள்ளார் Gardner, Helen (1970). Art through the Ages. pp. 450–456. உலகில் இது வரை வாழ்ந்த மிகச்சிறந்த ஒவியர்களில் ஒருவராகவும், பண்முக ஆற்றல் கொண்டவராகவும் இருந்துள்ளார்.See the quotations from the following authors, in section Fame and reputation: Vasari, Boltraffio, Castiglione, "Anonimo" Gaddiano, Berensen, Taine, Fuseli, Rio, Bortolon. லியனார்தோ டா வின்சி அடிப்படையில் ஒரு ஒவியராக அறியப்படுபவர். இவருடைய "மோனா லிசா" (Mona Lisa) ஒவியம் உலகில் மிகவும் புகழ் பெற்ற ஒவியமாக கருதப்படுகிறது.John Lichfield, The Moving of the Mona Lisa , The Independent, 2005-04-02 (accessed 2012-03-09) இலியனார்தோ தா வின்சி தொழில் நுட்பவியல் சார்ந்த அறிவாற்றலுக்காக பெரிதும் மதிக்கப்படுபவர். நிலவியல் உட்பட பல துறைகளில் தன்னுடைய அறிவார்ந்த எண்ணங்களை பகிர்ந்து கொண்ட இவர் தன்னுடைய காலத்தில் நினைத்து பார்க்க முடியாத பல புதுமைப் புனைவுகளைச் செய்துள்ளார்.Modern scientific approaches to metallurgy and engineering were only in their infancy during the Renaissance. இவர் உடற்கூறியல், கட்டிடக்கலை, ஒளியியல், நீர்ம இயக்கவியல் ஆகிய துறைகளில் புதுமைப் புனைவு களை நிகழ்த்தியுள்ளார். எனினும், அவற்றைத் தன் சம காலத்தில் வெளியிடாததால், இந்ந துறைகளில் இவருடைய நேரடி தாக்கம் இல்லை.Capra, pp.5–6 வாழ்க்கை இளமை thumb| டா வின்சி வரைந்த தற்படம், ca. 1513 இவருடைய வாழ்க்கை ஜார்ஜியோ வாசரியின், விட்டே என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. இலியனார்தோ, இத்தாலியிலுள்ள, வின்சி என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் செர் பியரோ தா வின்சி, ஒரு நல்ல நிலையிலிருந்த நில உரிமையாளர் அல்லது கைப்பணியாளர்; தாய் கத்தரீனா ஒரு உழவர் குடும்பப் பெண். கத்தரீனா, பியரோவுக்குச் சொந்தமாயிருந்த, மத்திய கிழக்கைச் சேர்ந்த ஒரு அடிமை என்ற கருத்தும் நிலவினாலும் இதற்கான வலுவான சான்றுகள் இல்லை. இவர் தனது தந்தையாருடன் புளோரன்சில் வளர்ந்தார். இவர் வாழ்க்கை முழுதும் ஒரு சைவ உணவுக்காரராகவே இருந்தார். இவர் புளோரன்சில் ஒரு ஒவியரின் கீழ் பயிற்சியாளராக இருந்து, பின்னர் தற்சார்பான ஒவியர் ஆனார். இவரது காலம் ஐரோப்பாவில் நவீன பெயரிடு முறை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகும். இதனால் இவரது முழுப்பெயர், "இலியனார்தோ தி செர் பியெரோ தா வின்சி" என்பதாகும். இது, "வின்சியைச் சேர்ந்த பியரோவின் மகன் இலியனார்தோ" என்ற பொருளுடையது. இவர் தன்னுடைய ஆக்கங்களில், "இலியனார்தோ" என்றோ அல்லது "நான் இலியனார்தோ" (Io, Leonardo) என்றோதான் கையெழுத்திட்டார். இதனால் இவரது ஆக்கங்கள் பொதுவாக "தா வின்சிகள்" என்றில்லாமல், "இலியொனார்தோக்கள்" என்றே குறிப்பிடப்படுகின்றன. இவர் ஒரு முறைதவறிப் பிறந்த பிள்ளை என்பதால், தந்தை பெயரைப் பயன்படுத்தாமல் விட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. thumb|right|இலியொனார்தோவினதாக அறியப்பட்ட மிகப் பழைய ஓவியம், ஆர்னோ பள்ளத்தாக்கு, (1473) - உஃபிசி லியொனார்டோவின் தொடக்க காலம் பெரும்பாலும் வரலாற்று ஊகங்களே. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், மறுமலர்ச்சிக் கால ஓவியர்களைப் பற்றிய வரலாறுகளை எழுதியவருமான வாசரி என்பவர், லியொனார்டோ குறித்த ஒரு குறிப்பை எழுதியுள்ளார். ஒரு உள்ளூர் குடியானவன், லியனார்டோவின் தந்தையிடம் வந்து, திறமையான அவரது மகனைக் கொண்டு ஒரு வட்டமான பலகையில் படமொன்று வரைந்து தருமாறு கோரினானாம். இதற்கிணங்க லியொனார்டோ அப்பலகையில் பாம்புகள் தீயை உமிழ்வது போன்ற படமொன்றை வரைந்து கொடுத்தாராம். பார்ப்பதற்குப் பயத்தைக் கொடுத்த அந்த ஓவியத்தை, லியொனார்டோவின் தந்தை புளோரன்சின் கலைப்பொருள் விற்பனையாளரிடம் விற்றுவிட்டார். அவ்விற்பனையாளர் அதனை மிலானின் டியூக்கிடம் விற்றார். இதன் மூலம் நல்ல இலாபம் பெற்ற லியொனார்டோவின் தந்தை இதயத்தை அம்பு துளைப்பது போன்ற இன்னொரு படத்தை விலைக்கு வாங்கிவந்து குடியானவனுக்குக் கொடுத்ததாக அக் குறிப்புச் சொல்கிறது. வெரோச்சியோவின் பணிக்கூடம், 1466-1476 thumb|left|220px|கிறிஸ்துவின் ஞானஸ்நானம் (1472–1475)—உஃபிசி, வெரோக்கியோவும், இலியொனார்தோவும் வரைந்தது. 1466 இல், 14ஆம் அகவையிலேயே, அக்காலத்தில் மிகவும் வெற்றிகரமான ஓவியராக விளங்கியவரும், வெரோக்கியோ என அறியப்பட்டவருமான ஆந்திரே தி சீயோன் என்பவரிடம் இலியொனார்தோ தொழில் பழகுவதற்காகச் சேர்ந்தார். வெரோக்கியோவின் பணிக்கூடம் புளோரன்சின் அறிவுசார் பகுதியில் இருந்ததால், இலியொனார்தோவுக்கு கலைத்துறை தொடர்பான அறிவு கிடைத்தது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ, பொட்டிச்செல்லி, லொரென்சோ டி கிரெடி போன்ற புகழ்பெற்ற ஓவியர்களும் இதே பணிக்கூடத்தில் தொழில் பழகுவோராகவோ, வேறு வகையில் தொடர்பு உள்ளவர்களாகவோ இருந்துள்ளனர். இலியொனார்தோவுக்குப் பல வகையான தொழில் நுட்பத் திறன்களின் அறிமுகம் கிடைத்ததோடு, வரைவியல், வேதியியல், உலோகவியல், உலோகவேலை, சாந்து வார்ப்பு, தோல் வேலை, பொறிமுறை, தச்சுவேலை போன்றவற்றோடு வரைதல், ஓவியம், சிற்பம் முதலிய பல திறமைகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. வெரோக்கியோவின் பணிக்கூடத்தில் உருவானவற்றுள் பல அவரிடம் வேலை செய்தவர்களால் செய்யப்பட்டவை. வாசரியின் கூற்றுப்படி, கிறிஸ்துவின் ஞானஸ்நானம் என்னும் ஓவியத்தை, வெரோக்கியோவும், இலியொனார்தோவும் இணைந்து வரைந்தனர். யேசுவின் உடையை இளம் தேவதை ஏந்தியிருப்பதை இலியொனார்தோ வரைந்த விதம், அவரது குருவையும் விஞ்சியதாக இருந்ததால், வெரோக்கியோ தனது தூரிகையைக் கீழே வைத்துவிட்டு அதன் பின்னர் வரைவதையே நிறுத்திவிட்டார். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம். நெருக்கமாக ஆராயும்போது, இவ்வோவியம் இலியொனார்தோவின் கைவண்ணமாகவே தோன்றுகிறது. 1472 ஆம் ஆண்டளவில், இலியொனார்தோ 20 ஆம் அகவையில், மருத்துவர்களினதும், கலைஞர்களினதும் குழுவான சென். லூக் குழுவில், வல்லுனராகத் தகுதி பெற்றார். ஆனால், இலியொனார்தோவின் தந்தையார் இவருக்குத் தனியான பணிக்கூடம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தும், வெரோக்கியோவுடன் இருந்த நெருக்கம் காரணமாகத் தொடர்ந்து அவருடன் இணைந்து வேலை செய்தார். இலியொனர்தோ வரைந்ததாக அறியப்படும் மிகப் பழைய ஓவியம், பேனாவாலும், மையினாலும் வரையப்பட்ட ஆர்னோப் பள்ளத்தாக்கு ஓவியம் ஆகும். இது 1473 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதியிட்டு வரையப்பட்டுள்ளது. தொழில் புரிந்த காலம் thumb|250px|The Adoration of the Magi, (1481)—உஃபிசி, புளோரன்ஸ், இத்தாலி. லியொனார்டோ மிலானுக்குச் சென்றிருந்தபோது இந்த முக்கியமான வேலை தடைப்பட்டது. நீதிமன்றப் பதிவுகளின்படி, 1476 ஆம் ஆண்டில் சில குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்மேல் வழக்குத் தொடரப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 1476 முதல் 1481 ஆம் ஆண்டுவரை இவர் புளோரன்சில் தனது சொந்த பணிக்கூடத்தை நடத்திவந்ததாகக் கொள்ளப்படினும், 1476 முதல் 1478 ஆம் ஆண்டுவரை இவர் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. 1478ல், புனித பர்னாட் சிற்றாலயத்தில் The Adoration of the Magi என்ற ஓவியத்தை வரையும் பணி இவருக்குக் கிட்டியது. 1482 இலிருந்து, 1499 வரை மிலானின் "டியூக்"கான லுடோவிக்கோ ஸ்போர்ஸா என்பவரிடம் வேலை பார்த்துவந்ததுடன், பல பயிற்சியாளர்களுடன் கூடிய பணிக்கூடம் ஒன்றையும் நடத்திவந்தார். 1495 இல், சார்ள்ஸ் VIII இன் கீழான பிரெஞ்சுப் படைகளின் தாக்குதலிலிருந்து மிலானைக் காப்பதற்காக, இலியனார்தோவின், "கிரான் கவால்லோ" என்னும் குதிரைச் சிலைக்காக ஒதுக்கப்பட்ட எழுபது தொன் வெண்கலம், ஆயுதங்கள் வார்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. 1498ல் பிரான்சியர், லூயிஸ் XIII இன் கீழ் திரும்பி வந்தபோது, மிலான் எதிர்ப்பெதுவுமின்றி வீழ்ச்சியடைந்தது. ஸ்போர்ஸா பதவியிழந்தார். ஒரு நாள், தனது "கிரான் காவல்லோ"வுக்கான முழு அளவு களிமண் மாதிரியை, பிரான்சிய வில்வீரர்கள், குறிப்பயிற்சிக்குப் பயன்படுத்தியதைக் காணும்வரை, இலியனார்தோ மிலானிலேயே தங்கியிருந்தார். பின்னர் அவர் சாலையுடனும், அவரது நண்பரான லூக்கா பக்கியோலியுடனும் மந்துவாவுக்குச் சென்று இரண்டு மாதங்களுக்குப் பின் வெனிஸ் சென்றடைந்தார். 1500 ஏப்ப்ரலில் மீண்டும் புளோரன்சுக்கு வந்தார். புளோரன்சில் செஸாரே போர்கியா (போப் அலெக்சாண்டர் VI இன் மகன், "டூக்கா வலெண்டீனோ" என்றும் அழைக்கப்பட்டார்) என்பவரிடம் ஆயுதப்படைக் கட்டிடக்கலைஞராகவும், பொறியியலாளராகவும் பணியில் அமர்ந்தார். 1506 இல் மீண்டும், சுவிஸ் கூலிப்படைகளினால் பிரான்சியர் துரத்தப்பட்ட பின், மக்சிமிலியன் ஸ்போர்ஸா வின் வசம் வந்துவிட்ட, மிலானுக்குத் திரும்பினார். அங்கே அவர், இறக்கும்வரை அவரது தோழனாகவும், பின்னர் வாரிசாகவும் அமைந்த பிரான்சிஸ்கோ மெல்ழியைச் சந்தித்தார். பிற்காலம் 1513 இலிருந்து 1516 வரை அவர் ரோம் நகரில் வாழ்ந்தார். அக்காலத்திலேயே, அங்கே ரபாயேலோ சண்டி மற்றும் மைக்கல் ஆஞ்சலோ போன்ற ஓவியர்கள் செயற்பட்டுக்கொண்டிருந்தார்கள். எனினும் இவருக்கு அவர்களுடன் அதிகத் தொடர்பு இருக்கவில்லை. 1515ல் பிரான்சின் பிரான்சிஸ் I மிலானைத் திரும்பக் கைப்பற்றிக் கொண்டான். பிரான்சின் அரசருக்கும், போப் லியோ Xக்கும் பொலொக்னாவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக ஒரு இயந்திரச் சிங்கமொன்றைச் செய்வதற்கு லியொனார்டோ அமர்த்தப்படார். அப்பொழுதுதான் அரசரை லியொனார்டோ முதன் முதலில் சந்தித்திருக்கவேண்டும். 1516ல், அவர் பிரான்ஸிசின் பணியில் அமர்ந்தார். அரசரின் வாசஸ்தலத்துக்கு அருகில் குளொஸ் லுகே என்னும் மனோர் வீடு அவரது பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டதுடன், தாராளமன ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. அரசர் அவருக்கு நெருங்கிய நண்பரானார். 1519 ல், பிரான்சிலுள்ள, குளோக்ஸ் என்னுமிடத்தில், லியொனார்டோ காலமானார். அவருடைய விருப்பப்படி 60 பிச்சைக்காரர்கள் அவரது பிணப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ் கோட்டையிலுள்ள, சென்-ஹியூபெர்ட் சப்பலில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். தொடர்புகளும் செல்வாக்குகளும் புளோரன்ஸ் - லியொனார்டோவின் கலை மற்றும் சமூகப் பின்னணி லியொனார்டோ வெரோக்கியோவிடம் தொழில் பழகுவதற்குச் சேர்ந்த 1466 இலேயே வெரோக்கியோவின் ஆசிரியரான டொனெடெல்லோ (Donatello) இறந்தார். நிலத்தோற்ற ஓவியங்களின் வளர்ச்சிக்கு உதவிய ஓவியங்களை வரைந்த உக்கெல்லோ (Uccello) மிகவும் வயது முதிர்ந்தவராக இருந்தார். ஓவியர்களான பியெரோ டெல்லா பிரான்சிஸ்கா (Piero della Francesca), பிரா பிலிப்போ லிப்பி (Fra Filippo Lippi), லூக்கா டெல்லா ரோபியா (Luca della Robbia) என்போரும் கட்டிடக்கலைஞரும் எழுத்தாளருமான ஆல்பர்ட்டியும் அறுபது வயதைத் தாண்டியவர்களாகவும் இருந்தனர். அடுத்த தலைமுறையின் வெற்றிகரமான ஓவியர்களாக, லியொனார்டோவின் குரு வெரோக்கியோ, ஆன்டோனியோ பொலையுவோலோ (Antonio Pollaiuolo), சிற்பியான மினோ டா பியெசோலே (Mino da Fiesole) ஆகியோர் இருந்தனர். லியொனார்டோவின் இளமைக்காலம் மேற்படி ஓவியர்களால் அலங்கரிக்கபட்ட புளோரன்சிலேயே கழிந்தது. பொட்டிச்செல்லி, கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் லியொனார்டோவுக்குச் சமகாலத்தவர்கள். இவர்களை லியொனார்டோ வெரோக்கியோவின் வேலைத்தலத்திலும், மெடிசி அக்கடமியிலும் சந்தித்திருக்கக்கூடும். பொட்டிச்செல்லி மெடிசி குடும்பத்தால் விரும்பப்பட்டவராக இருந்ததால், ஒரு ஓவியராக அவரது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. கிர்லாண்டாயோ, பெருஜீனோ ஆகியோர் வசதி மிக்கவர்கள் பெரிய வேலைத்தலங்களை நடத்திவந்தனர். இவர்கள் இருவரும் மிகத் திறமையுடன் பணிசெய்து தமக்கு வேலை கொடுப்போரைத் திருப்திப்படுத்தினர். லியொனார்டோவுக்குக் கிடைத்த முதல் வேலை Adoration of the Magi என்னும் ஓவியமாகும். ஆனால் இது நிறைவடையவில்லை. கலை thumb|லியோனார்டோ டா வின்சி: கடைசி விருந்து (1498) லியோனார்டோ டா வின்சி, 1498ல் வரையப்பட்ட கடைசி விருந்து, மற்றும் 1503-1506ல் வரையப்பட்ட மோனா லிசா போன்ற ஒவியங்களுக்காகப் பெயர் பெற்றவர். இவருடைய 17 ஓவியங்கள் மட்டுமே இன்று தப்பியுள்ளன. சிற்பங்கள் எதுவும் அறியப்படவில்லை. அயர்லாந்தின் லிமெரிக்கிலுள்ள ஹண்ட் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள, வீடொன்றின் சிறிய சிற்பமொன்று இவர் செய்ததாகக் கருதப்படுகிறது. தப்பியுள்ள ஒவியங்களில் ஒன்று வட அமெரிக்காவில் உள்ளது. லியொனார்டோ, பெரும்பாலும் பெரும் ஓவியங்களாகவே திட்டமிட்டார். அதனால் இத்திட்டங்கள் முற்றுப்பெறாமல் இடையிலேயே நிற்கவேண்டியேற்பட்டது. மிலானில் நிறுவுவதற்கு, 7 மீட்டர் (24 அடி) உயரமுள்ள வெண்கலத்திலான குதிரைச் சிற்பமொன்றைச் செய்வதற்காக, மாதிரிகளும், திட்டங்களும் வகுப்பதில் பல வருடங்கள் செலவு செய்யப்பட்டன. எனினும் பிரான்சுடனான போர் காரணமாகத் திட்டம் முற்றுப்பெறவில்லை. தனிப்பட்ட முயற்சி காரணமாக, டாவின்சியின் திட்டங்கள் சிலவற்றின் அடிப்படையில் இதைப்போன்ற சிலையொன்று 1999ல் நியூயோர்க்கில் செய்யப்பட்டு, மிலானுக்கு வழங்கப்பட்டு அங்கே நிறுவப்பட்டது. thumb|லியோனார்டோ டா வின்சி: மோனா லிசா (1503-6) புளோரன்சில், அங்கியாரிப் போர் என்ற தலைப்பில் பொது சுவரோவியம் ஒன்றைச் செய்வதற்காக இவர் அமர்த்தப்பட்டார். இதற்கு நேரெதிர்ச் சுவரில், இவரது போட்டியாளரான மைக்கலாஞ்சலோ ஒவியம் வரைவதாக இருந்தது. பலவிதமான, சிறப்பான ஆரம்ப ஆய்வுப்படங்களை வரைந்த பின்னர் அவர் நகரிலிருந்து வெளியேறிவிட்டார். தொழில்நுட்பக் காரணங்களால் சுவரோவியம் பூர்த்திசெய்யப்படவில்லை. அறிவியலும், பொறியியலும் இவருடைய கலைப்பணிகளிலும் பார்க்க, அதிக கவர்ச்சியுடையனவாக, இவரது, அறிவியல், பொறியியல் ஆய்வுகள் அமைந்தனவெனலாம். இவ்வாய்வுகள் குறிப்புகளாகவும் படங்களாகவும் சுமார் 13,000 பக்கங்களில், குறிப்புப் புத்தகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இடதுகையால் எழுதுபவர், வாழ்நாள் முழுதும் கண்ணாடி உருவ எழுத்துக்களையே பயன்படுத்திவந்தார். அறிவியல் தொடர்பான இவரது அணுகுமுறை நோக்கிடுகள் சார்ந்தது. விவரிப்பதன் மூலமும், அவற்றை மிக நுணுக்கமான விவரங்களுடன் வெளிப்படுத்துவதன் மூலமுமே, புறத்தோற்றப்பாடுகளை அவர் விளங்கிக்கொள்ள முயன்றார். செய்முறைகளுக்கும், கோட்பாட்டு விளக்கங்களுக்கும் அவர் முதன்மை கொடுக்கவில்லை. தனது வாழ்நாள் முழுவதும், எல்லாவற்றுக்குமான விரிவான வரைபடங்களைக் கொண்ட ஒரு கலைக்களஞ்சியமொன்றை உருவாக்கத் திட்டமிட்டுவந்தார். இவருக்கு இலத்தீனிலும், கணிதத்திலும் முறையான கல்வி இல்லாமையால், இவர் அக்கால அறிவியலாளர்களால் புறக்கணிக்கப்பட்டார். thumb|விட்ருவியன் மனிதன்: இலியொனார்தோ தா வின்சி மாந்த உடலை வரைதல் உடற்கூற்றியலும் உடலியக்கவியலும் thumb|கையின் உடற்கூற்றியல் ஆய்வு() இவர் ஆந்திரியா வெரோச்சியின் கீழான பயிற்சி வழி மாந்த உடலின் உடற்கூற்றியல் ஆய்வைத் தொடங்கினார். வெரோச்சி தம் மாணவர்கள் இந்தக் கருப்பொருளில் ஆழ்ந்த அறிவு பெறுவதில் கண்ன்ங் கருத்துமாய் இருந்துள்ளார். ஓவியராக விரைவில் தா வின்சி தசைகள், தசைநாண்கள், கட்படும் உடற்கூற்றியல் கூறுபாடுகளை வரைந்து உடலுருவவியலில் தேர்ந்தார். ஓவியராக வெற்றிகண்ட தாவின்சி புளோரன்சில் உள்ள சாந்தா மரியா நுவோவா மருத்துவ மனையில் மாந்த உடல்களை வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டார். பின்னர் இவர் உரோம் நகரம், மிலான் மருத்துவமனைகளிலும் இதற்கு ஒப்புதல் பெற்றுள்ளார். இவர் 1510 முதல் 1511 வரை மருத்துவர் மார்க்கந்தோனியோ தெல்லா தோரேவுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டார். இலியனார்தோ 240 விரிவான வரைபடங்களை வரைந்து 13,000 சொற்கள் அடங்கிய உடற்கூற்றியல் பாடநூலை இயற்றியுள்ளார்.Alastair Sooke, Daily Telegraph, 28 July 2013, "Leonardo da Vinci: Anatomy of an artist", accessed 29 July 2013. இவற்றை தன் உறவினராகிய பிரான்சிசுகோ மெல்ழியிடம் வெளியிட கொடுத்துள்ளார். இப்பணி தா வின்சியின் தனித்த பாணி நடையாலும் அதன் புலமை விரிவாலும் மிக அரிய பணியாக விளங்கியுள்லது. இத்திட்டம், மெல்ழி 50 ஆண்டுகள் கழித்து இறக்கந் தறுவாயிலும் முடிவுறவில்லை; இவரது ஓவியப் பெருநூலில் உடற்கூற்றியலின் சிறிதளவு பகுதியே 1632 இல் வெளியிடப்பட்ட்து. மெல்ழி பாடப்பொருளை இயல்களாக ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தபோது இவை பல உடற்கூற்றியலாளர்களாலும் வசாரி, செல்லினி, ஆல்பிரெக்ட் தூரர் உட்பட, பல ஓவியர்களாலும் பார்வையிடப்பட்டு, அவற்றில் இருந்து பல வரைபடங்கள் வரைந்துகொள்ளப்பட்டுள்ளன. thumb|left|மாந்த மூளை, மண்டையோட்டின் தா வின்சியின் உடலியக்கவியல் உருவரை () பொறியியலும் புதுமைப் புனைவுகளும் thumb|பறக்கும் எந்திர வடிவமைப்பு (), இன்சுத்தியூத் தெ பிரான்சு, பாரீசு புகழும் வெற்றியும் இவரது புகழ் இவரது வாழ்நாளிலேயே பிரான்சு அரசர் இவரை வெற்றிக்கோப்பையைப் போல அவரது கையால் தூக்கிச் செல்ல வைத்துள்ளது, மேலும், அரசர் இவரை முதுமைக்கால முழுவதும் பேணிப் பாதுகாத்துள்ளார். இறந்த பிறகும் அரசர் இவரைக் கையால் ஏந்திக் கொண்டிருந்துள்ளார். thumb|அம்பாயிசேவில் உள்ள இலியனார்தோ தா வின்சியின் கல்லறை இருப்பிடம் இவரது பணிகள் பேரிலான ஆர்வம் குன்றவே இல்லை. இவரது நன்கறிந்த கலைப்பணிகளைப் பார்க்க இன்றும் மக்கள் குழுமுகின்றனர்; T-சட்டைகள் இன்றும் இவரது ஓவியங்கள் சுடர்விடுகின்றன; எழுத்தாளர்கள் தொடர்ந்து இவரது அறிவுத்திறனைப் பாராட்டித் தனிவாழ்க்கையைப் படம்பிடிக்க ஆர்வம் கொண்டுள்ளனர். [[ஜியார்ஜியோ வசாரி, அவருடைய விரிவாக்கிய கலைஞர்களின் வாழ்க்கைகள், 1568 எனும் நூலில்,Vasari, p. 255 இலியனார்தோ தா வின்சியைப் பின்வரும் சொற்களால் அறிமுகப்படுத்துகிறார்: thumb|பிரான்சின் பிராங்காயிசு I இலியனார்தோ தா வின்சியின் கடைசி மூச்சின்போது, இங்கிரசு வரைந்த ஓவியம், 1818 பல்வகைத் தகவல்கள் தாவின்சைட் எனும் அன்மையில் புதிதாக விவரிக்கப்பட்டகனிமத்துக்கு 2011இல் பன்னாட்டுக் கனிமவியல் கழகம் இவரது நினைவாகப் பெயரிட்டுள்ளது. கலைச் சந்தை thumb|இலியனார்தோ தா வின்சி, அண்.1500, சaல்வதார் முண்டி, வாதுமையில் நெய்வன ஓவியம், 45.4 செமீ × 65.6 செமீ சால்வதார் முண்டி எனும் இலியனார்தோ ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு விற்று , நியூயார்க் கிறித்தி ஏலத்தில் 2017 நவம்பர் 15 இல் உலகிலேயே உயர்ந்த விலைக்கு விற்ற கலைப்பொருளாக பதிவாகியுள்ளது. முன்பு மிக உயர்ந்த விலைக்கு பாப்ளோவின் இலெசு பெம்மெசு தா அல்கர் (Les Femmes d'Alger) எனும் ஓவியம் 2015 மேவில் அதே நியூயார்க், கிறித்தி ஏலத்தில் 179.4 மில்லியன் டாலருக்கு விற்றுள்ளது. 300 மில்லியன் டாலருக்கு வில்லியம் தெ கூனிங்கின் இடைமாற்றம் எனும் ஓவியம் தனியாருக்கு 2015 செப்டம்பரில் டேவிட் கெஃபன் அறக்கட்டளை விற்றுள்ளது. இதுவே முன்னர் விற்ற கலைப்பொருளில் மிக உயர்ந்த விலை பெற்றதாகும்.Leonardo da Vinci painting 'Salvator Mundi' sold for record $450.3 million, Fox News, 16 November, 2017 thumb|இலியனார்தோ தா வின்சி வரைந்த பல்கோணகம். அடிக்குறிப்புகள் மேற்கோள்கள் நூல்தொகை volume 2: . A reprint of the original 1883 edition. [The chapter "The Graphic Works" is by Frank Zollner & Johannes Nathan]. வெளி இணைப்புகள் Complete text & images of Richter's translation of the Notebooks The Notebooks of Leonardo da Vinci Leonardo da Vinci at BBC Science Leonardo da Vinci: Anatomist The Queen's Gallery, Buckingham Palace, Friday, 4 May 2012 to Sunday, 7 October 2012. High-resolution anatomical drawings. Leonardo da Vinci, Master Draftsman, Catalog of an exhibition held at the Metropolitan Museum of Art, New York, 22 Jan. – 30 March 2003. நிலாச்சாரல்.காம்-ல் லியொனார்டோ டா வின்சி நிலாமுற்றம் கட்டுரை பகுப்பு:மறுமலர்ச்சி அறிவியலாளர்கள் பகுப்பு:1452 பிறப்புகள் பகுப்பு:1519 இறப்புகள் பகுப்பு:இத்தாலிய உடற்கூற்றியலாளர்கள் பகுப்பு:இத்தாலியக் கட்டிடப் பொறியாளர்கள் பகுப்பு:இத்தாலிய உடலியக்கவியலாளர்கள் பகுப்பு:இத்தாலிய மறுமலர்ச்சி ஓவியர்கள் பகுப்பு:இத்தாலிய மறுமலர்ச்சி சிற்பிகள் பகுப்பு:கணிதவியல் கலைஞர்கள் பகுப்பு:மறுமலர்ச்சி கட்டிடக் கலைஞர்கள் பகுப்பு:மறுமலர்ச்சி ஓவியர்கள் பகுப்பு:பாய்ம இயங்கியலாளர்கள் பகுப்பு:ந.ந.ஈ.தி நபர்கள்
ஞாயிறு (விண்மீன்)
https://ta.wikipedia.org/wiki/ஞாயிறு_(விண்மீன்)
ஞாயிறு, கதிரவன் அல்லது சூரியன் (Sun) என்பது கதிரவ அமைப்பின் மையத்தில் உள்ள விண்மீன் ஆகும். இது கிட்டத்தட்ட கோள வடிவில் இருக்கும் சூடான பிளாசுமா ஆகும். இதன் உட்புற வெப்பச்சலன இயக்கமானது இயக்கவியல் செய்முறை மூலம் காந்தப்புலத்தை உருவாக்குகிறது. புவியில் உயிர்கள் வாழ்வதற்கான ஆற்றல் மூலமாகக் கதிரவன் விளங்கி வருகிறது. புவியை விட 109 மடங்கு பெரியதாக உள்ள கதிரவனின் விட்டம் சுமார் 1.39 மில்லியன் கிலோமீட்டர்கள் ஆகும். இதன் நிறை புவியை விட 330,000 மடங்கு அதிகமானதாகும். இது கதிரவ அமைப்பின் மொத்த நிறையில் தோராயமாக 99.86 விழுக்காட்டினைக் கொண்டுள்ளது. கதிரவ நிறையில் மூன்றில் ஒரு பங்கு ஐட்ரசனும் (~73%) மீதமுள்ள பங்கில் பெருமளவு ஈலியமும் (~25%) உள்ளன. அவற்றுடன் சிறிய அளவில் ஆக்சிஜன், கரிமம், இரும்பு மற்றும் நியான் உள்ளிட்ட கனமான தனிமங்களும் உள்ளன. நிறமாலை வகைப்பாட்டின் அடிப்படையில் ஞாயிறு என்பது ஒரு G-வகை முதன்மை வரிசை விண்மீன் (G2V) ஆகும். எனவே இது மஞ்சள் குறுமீன் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் அதன் ஒளி மஞ்சளை விட வெள்ளை நிறத்திற்கே நெருக்கமானதாகும். சுமார் 4.568 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய மூலக்கூறு மேகத்தின் ஒரு பகுதியின் உள்ளே இருந்த பருப்பொருளின் ஈர்ப்புவிசைச் சுருக்கத்தில் இருந்து ஒரு பருப்பொருள் உருவானது. அதன் பெரும்பகுதி, மையப் பகுதியில் ஒன்றுசேர்ந்து கதிரவனாக உருவெடுத்தது. மீதமிருந்த பகுதிகள் சுற்றுப்பாதை வட்டுக்களாகத் தட்டையடைந்து கதிரவ அமைப்பாக உருமாறின. கதிரவனின் மையப்பகுதி மிகுந்த வெப்பமும் அடர்த்தியும் கொண்டதாக மாறி, அதன் உள்ளகத்தில் அணுக்கரு இணைவைத் தொடக்கியது. பெரும்பாலும் அனைத்து விண்மீன்களும் மேற்கண்ட நிகழ்வின் மூலமே உருவானதாகக் கருதப்படுகிறது. தற்போது கதிரவன் கிட்டத்தட்ட தனது நடுத்தர வயதில் இருக்கிறது; நான்கு பில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகள் கழிந்த பிறகும் வியத்தகு முறையில் மாற்றமடையாது இருப்பதுடன், இன்னும் ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மிகவும் நிலைத்தன்மையுடன் இருக்கும். தற்போது வினாடிக்கு சுமார் 600 மில்லியன் டன்கள் ஐட்ரசனை இணைத்து ஈலியமாக மாற்றி வருவதன் மூலம் வினாடிக்கு 4 மில்லியன் டன்கள் கொண்ட பருப்பொருளை ஆற்றலாக மாற்றிக் கொண்டிருக்கிறது. கதிரவனின் ஒளி மற்றும் வெப்பத்திற்கு மூலமாக உள்ள இந்த ஆற்றல், கதிரவ உள்ளகத்தில் இருந்து விடுபட 10,000 முதல் 170,000 ஆண்டுகள் வரை எடுக்கும். தோராயமாக 5 பில்லியன் ஆண்டுகளுக்குள் கதிரவ உள்ளகத்தில் நிகழும் ஐட்ரசன் இணைவு குறைந்து, நீர்நிலைச் சமநிலையற்ற நிலைக்கு கதிரவன் வந்துவிடும். இதனால் கதிரவ மையத்தின் அளவும் வெப்பமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும். அதேநேரம் அதன் வெளிப்புற அடுக்குகள் விரிவடைந்து இறுதியில் ஒரு செம்பெருமீனாக மாற்றமடையும். அதன் அளவு தற்போது உள்ள புதன் மற்றும் வெள்ளியின் சுற்றுப்பாதையை விழுங்கிவிடுகின்ற அளவிற்கு பெரியதாக இருக்கும் என கணக்கிடப்பட்டு உள்ளது. எனவே அப்போது புவி வாழத்தகாத இடமாக மாறிவிடும். அதன்பிறகு கதிரவன் தனது வெளி அடுக்குகளை இழந்து வெண் குறுமீன் எனப்படும் அடர்த்தியான குளிரும் விண்மீனாக மாற்றமடையும்; இனி கதிரவனால் இணைப்பின் மூலம் ஆற்றலை உற்பத்தி செய்ய இயலாது. எனினும் அது ஒளிர்வுடனும் முந்தைய இணைப்புகளில் இருந்து கிடைத்த வெப்பத்தை வெளியிட்டுக் கொண்டும் இருக்கும். பெயர்க்காரணம் கதிரவன் என்றால் ஒளிக்கதிர்களை உடையவன் என்று பொருள். ஞாயிறு என்பது நாயிறு என்ற சொல்லின் மரூஉ ஆகும். இதற்கு கோள்களின் தலைவன் என்று பொருள்.http://www.tamilvu.org/slet/lA100/lA100pd2.jsp?bookid=187&pno=41 இதுதவிர பகலவன், அனலி, வெய்யோன், ஆதவன், பரிதி, இரவி போன்ற பல தமிழ்ப்பெயர்கள் கதிரவனுக்கு உண்டு. சூரியன் என்பது கதிரவனின் வடமொழிப் பெயராகும். பண்புகள் கதிரவன் என்பது ஒரு G-வகை முதன்மை வரிசை விண்மீன் ஆகும். இது கதிரவனின் அமைப்பின் நிறையில் 99.86 விழுக்காட்டினைக் கொண்டுள்ளது . +4.83 என்ற தனி ஒளி அளவைக் கொண்டுள்ள கதிரவன், பால் வழியில் உள்ள ஏறக்குறைய 85% விண்மீன்களை விட ஒளிர்வுமிக்கதாகும். அந்த விண்மீன்களில் பெரும்பாலனாவை செங்குறுமீன்கள் ஆகும். கதிரவன் ஒரு உலோகசெறிவு மிக்க விண்மீன் வகையை சார்ந்தது. கதிரவன் உருவாக அதன் அருகில் இருந்த மீயொளிர் விண்மீன் வெடிப்புகளின் (supernova) அதிர்ச்சி அலைகளே காரணமாய் இருக்கக் கூடும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இத்தகைய விளைவுகள் வேதியியல் தனிமங்கள் மிகுந்த கதிரவன் போன்ற விண்மீன்களை எளிதாக உருவாக வைக்கிறது. புவியின் வானில் தெரியும் வானியல் பொருட்களில் கதிரவனே ஒளிமிக்கதாகும். வானில் 2வது ஒளிர்வுமிக்க விண்மீனான சீரியசை விட இது 13 பில்லியன் மடங்கு ஒளிர்வுமிக்கதாகும். புவியின் மையத்தில் இருந்து கதிரவ மையத்தின் சராசரி தூரம் 1 வானியல் அலகு ஆகும். எனினும் இந்தத் தொலைவின் அளவு, சனவரி மாதத்தில் கதிரவ அண்மைநிலையிலும் சூலை மாதத்தில் கதிரவச் சேய்மைநிலையிலும் புவி இருக்கும்போது வேறுபடும். இந்த சராசரி தொலைவில் கதிரவ கிடைமட்டத்தில் இருந்து புவியின் கிடைமட்டத்திற்கு ஒளி 8 நிமிடங்கள் 19 நொடிகளில் வந்தடைகிறது. அதேநேரம் கதிரவன் மற்றும் புவியின் அண்மைப்பகுதியில் இருந்து ஒளி சென்றடைய இரு நொடிகளுக்கும் குறைவாகவே எடுத்துக்கொள்கிறது. இந்தக் கதிரவ ஒளியின் ஆற்றல் பெரும்பாலும் புவியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் முதன்மைத் தேவையாக உள்ள ஒளிச்சேர்க்கைக்கு உதவுகிறது. மேலும் இது புவியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவற்றையும் இயக்குகிறது. கதிரவன் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கொண்டிருக்கவில்லை. எனினும் ஒளிக்கோளத்தின் மேல் உள்ள உயரம் அதிகரிப்பதால் அதன் அடர்த்தி மிக வேகமாகக் குறைந்து வருகிறது. கதிரவன் அதன் முனைகளை விட நடுக்கோட்டில் வேகமாகச் சுழல்கிறது. இந்த வேறுபட்ட சுழற்சிக்கு வெப்பப் பரிமாற்றத்தால் ஏற்படும் வெப்பச்சலன இயக்கம் மற்றும் கதிரவ சுழற்சியால் ஏற்படும் கோரியாலிஸ் விளைவு ஆகிய இரண்டும் காரணம் ஆகும். கதிரவனைச் சுற்றிவரும் புவியில் இருந்து காணும்போது நடுக்கோட்டில் கதிரவனின் முழு சுழற்சிக்காலம் 28 நாட்களாகும். வகைப்பாடு விண்மீன் வகைப்பாட்டில் கதிரவன் G2V வகையை சார்ந்ததாக குறிக்கப்படுகிறது. G2 வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5 ,500 °செ ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். புவிக்கு வந்தடையும் கதிரவ ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறத்தினைக் கொண்டிருப்பதாக சர் சி.வி.இராமன் கண்டறிந்த இராமன் விளைவு விளக்குகிறது. உண்மையில் அண்டவெளி கருமை நிறத்தினைக் கொண்டது. கதிரவன் புவியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு நிறம் ஒளிச்சிதறல் விளைவால் கதிரவனை செம்மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் காட்டுகிறது G2V என்ற குறியிட்டில் V என்ற எழுத்து மற்ற பல விண்மீன்களை போன்று கதிரவனும் தனது ஆற்றலை அணுக்கரு இணைவின் மூலம் பெறுவதை குறிக்கிறது. கதிரவனில் ஐட்ரசன் கருவும் ஈலியம் கருவும் சேர்வதால் ஆற்றல் உருவாகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் சுமார் 100 மில்லியன் G2 வகை விண்மீன்கள் உள்ளன. அவற்றில் கதிரவனும் ஒன்று. கதிரவன் பால் வழியில் (நமது விண்மீன் மண்டலம்) உள்ள பல சிவப்பு குறுமீன்களை விட 85% வெளிச்சமானது. இது தோராயமாக 24 ,000 to 26 ,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பால்வெளி மையத்தை 225–250 மில்லியன் வருடங்களுக்கு ஒருமுறை என்ற வேகத்தில் சுற்றி வருகிறது. இக்காலம் ஒரு பால்வெளி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. கதிரவனின் சுழற்சி வேகம் (orbital speed) சுமார் 251 கிமீ/வினாடி "பால் வழியின் வேகம்" , New Scientist 13 Aug., 2008, p. 8.. இந்த அளவீடுகள் இப்போதைய அறிவின்படி, நவீன கணித யுத்திகளால் கணிக்கப்பட்டது. இவை வருங்காலத்தில் மாற வாய்ப்புள்ளது. மேலும் கதிரவன் சுற்றி வரும் நமது பால்வழியும் அண்ட மையத்தை கொண்டு வினாடிக்கு 550 கிலோமீட்டர் என்ற வேகத்தில் சுற்றி வருவது வியப்பூட்டும் தகவலாகும்."பால் வழியும் சுற்றுகிறது " Kogut, et al Astrophysical Journal, 1993 thumb|left| நிலவு கதிரவனைக் கடப்பதை சூரிய ஆராய்ச்சிக் கலமான STEREO B பதிந்துள்ள குறும்படம் புவியின் மீது கதிரவனின் ஆற்றல் கதிரவ ஒளியே புவியில் கிடைக்கும் ஆற்றலின் மூல ஆதாரமாகும். கதிரவ மாறிலி (solar constant) என்பது ஒரு குறிப்பிட்ட பரப்பளவில் கதிரவ ஒளியின் காரணமாக கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். கதிரவ மாறிலி, கதிரவனில் இருந்து ஒரு வானியல் அலகு தூரத்தில் கிடைக்கும் ஆற்றலை குறிக்கும். இது தோராயமாக 1368 வாட்/சதுர மீட்டர் ஆகும். கதிரவ ஒளி புவியின் மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன்பு வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப் படுகிறது. இதனால் குறைந்த அளவிலான வெப்பமே தரைக்கு வந்தடைகிறது. ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் கதிரவ ஒளி ஆற்றலை வேதியல் ஆற்றலாக மாற்றுகின்றன. கதிரவ மின்கலனில், கதிரவ ஒளியாற்றல்/வெப்பம் மின்சார ஆற்றலாக மாற்றப்படுகிறது. பெட்ரோலியம் சார்ந்த எரிபொருள்களில் இருந்து கிடைக்கும் ஆற்றலும் கதிரவ ஒளியில் இருந்து மறைமுகமாக, (மக்கிய தாவரங்களில்) இருந்து கிடைக்கும் ஆற்றலே ஆகும். கதிரவனில் இருந்து வரும் புறஊதாக் கதிர்கள் நுண்ணுயிர் கொல்லியாகும். மேலும் இக்கதிர்கள் மாந்தர்களிடம் வேனிற்கட்டி போன்ற தீய விளைவுகளையும், மற்றும் உயிர்ச்சத்து D (விட்டமின் D) உற்பத்தி ஆகிய நன்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. புறஊதாக் கதிர்கள் புவியை சூழ்ந்துள்ள ஓசோன் படலம் மூலம் மட்டுப்படுத்தப்படுகிறது. இக்கதிர்களே மனிதரின் வேறுபட்ட தோல் நிறத்துக்கும் காரணமாக அறியப்படுகிறது. கட்டமைப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தி thumb|568x568px|கதிரவனின் கட்டமைப்பு கதிரவனின் உள்கட்டமைப்பு பின்வரும் அடுக்குகளைக் கொண்டது. உள்ளகம் (core) கதிரவ ஆரத்தின் 20-25% உட்புற பகுதியில் உள்ள வெப்பம் (ஆற்றல்) மற்றும் அழுத்தம், ஐட்ரசன் மற்றும் ஈலியம் இடையே அணுக்கரு இணைவு நிகழப் போதுமானதாக இருக்கும். இதன்மூலம் கதிரவ ஆற்றல் வெளிப்படும். ஈலியம் படிப்படியாக உள்ளகத்தின் உள்ளே படிந்து ஈலியத்தின் உள்ளகத்தை உருவாக்குகிறது. கதிர்வீச்சுப் பகுதி (radiative zone) கதிரவனின் மேற்பரப்பு மிகவும் நெருக்கமாக இருக்கும் வரையில் வெப்பசலனம் ஏற்படாது. எனவே 20-25% ஆரம் மற்றும் 70% ஆரம் ஆகியவற்றிற்கு இடையே, ஒரு கதிர்வீச்சுப் பகுதி உள்ளது. அங்கு கதிர்வீச்சு (ஃபோட்டான்கள்) மூலம் ஆற்றல் பறிமாற்றம் நிகழ்கிறது. வேகச்சரிவு (tachocline)- கதிர்வீச்சு மற்றும் வெப்பசலனம் ஆகிய இரு பகுதிகளுக்கு இடையே உள்ள எல்லைப்பகுதி. வெப்பச்சலனப் பகுதி (convective zone) கதிரவனின் வெளி அடுக்குகளில் (தோராயமாக 70% கதிரவ ஆரம்), கதிரவ பிளாஸ்மாவின் அடர்த்தி மிகக் குறைவாக காணப்படுவதால், இப்பகுதியில் கதிர்வீச்சு வழியே வெப்பம் கடத்தப்படுவது இயலாததாகிறது. அதனால் வெப்பச்சலனம் மூலம் வெப்பம் கடத்தப்படுகிறது. . ஒளிக்கோளம் (photosphere)- கதிரவனின் ஆழமான பகுதி. கதிரவ வெளிச்சத்தைக் கொண்டு இதை நேரடியாகக் காண இயலும். கதிரவன் ஒரு வாயுப்பொருள் என்பதால் தெளிவாக வரையறுக்கப்பட்ட மேற்பரப்பு இல்லை. அதன் காணக்கூடிய பகுதிகள் பொதுவாக 'ஒளிக்கோளம்' மற்றும் 'வளிக்கோளம்' என்று இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. வளிக்கோளம் (atmosphere)- கதிரவனைச் சுற்றியுள்ள ஒரு வாயு 'ஒளி', நிறக்கோளம், கதிரவ நிலைமாற்றப் பகுதி, கொரோனா மற்றும் கதிரவக்கோளம் ஆகியவற்றை உள்ளடக்கியது. கதிரவனின் முக்கியப் பகுதி மறைக்கப்படும் போது இவற்றைக் காண இயலும். உள்ளகம் கதிரவ உள்ளகம், என்பது மையத்திலிருந்து 20-25% கதிரவ ஆரம் வரை பரவியுள்ளது. இது சுமார் 150g/cm3 வரையிலான அடர்த்தியும் (நீரின் அடர்த்தியில் சுமார் 150 மடங்கு) 15.7 மில்லியன் கெல்வின் அளவிலான வெப்பமும் கொண்டுள்ளது. இதற்கு மாறாக, கதிரவனின் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 5,800 கெல்வின் அளவில் இருக்கிறது. SOHO திட்டத் தரவுகளின் அண்மைய பகுப்பாய்வுகள் மூலம் கதிரவனின் மேல் உள்ள கதிர்வீச்சுப் பகுதியை விட அதன் மையத்தில் சுழற்சி விகிதம் வேகமாக இருப்பது தெரியவந்தது. கதிரவன் தனது வாழ்க்கையின் பெரும்பகுதியில் புரோட்டான்-புரோட்டான் சங்கிலி என்றழைக்கப்படும் தொடர்ச்சியான வழிமுறைகளால் மையப் பகுதியில் அணுக்கரு இணைப்பின் மூலம் ஆற்றல் உற்பத்தி செய்கிறது; இந்த செயல்முறை ஐட்ரசன் அணுக்களை ஈலியமாக மாற்றுகிறது. கதிரவனில் உருவாக்கப்பட்ட ஆற்றலில் 0.8% மட்டுமே CNO சுழற்சியில் இருந்து வருகிறது. இருப்பினும் இந்த விகிதம் கதிரவனின் வயதைப் பொறுத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கதிரவனில் உள்ளகப் பகுதி மட்டுமே அணுக்கரு இணைவு மூலம் கணிசமான வெப்ப ஆற்றலை உருவாக்குகிறது. கதிரவ உள்ளகத்தில் மட்டுமே நடைபெறும் அணுக்கரு இணைவின் விளைவாக உருவாகும் ஆற்றல் கதிரவனின் மற்ற அடுக்குகளில் படிப்படியாகப் பரவுகிறது.Garcia R. A. et al. "சூரிய உள்ளகம்", அறிவியல், American Association for the Advancement of Science, 316, 5831, 1591–1593 (2007) ஒவ்வொரு வினாடியிலும் தோராயமாக 3.4 புரோட்டான்கள் (ஐட்ரசன் அணுக்கரு) ஈலியம் அணுக்கருவாக மாற்றப்படுகின்றன. கதிரவனில் சுமார் 8.9 புரோட்டான்கள் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கதிரவன் ஒரு வினாடிக்கு சுமார் 383 யோட்டா வாட் அளவு ஆற்றலை வெளியிடுகிறது. இது 9.15 மெகா டன் TNT அளவுள்ள வெடிபொருளை வெடிப்பதற்கு சமமாகும். உயர் ஆற்றல் கொண்ட ஒளித்துகள் (ஃபோட்டான்)கள் (காமாக் கதிர்கள்) அணுக்கருப் புணர்ச்சி விளைவால் கதிரவ உள்ளகத்தில் உருவாகப்படுகின்றன. மிகக் குறைந்த அளவில் கதிரவ பிளாஸ்மாவால் உட்கிரகிக்கப் படும் ஒளித்துகள்கள் மீண்டும் குறைந்த ஆற்றலில் பல திசைகளிலும் எதிரொளிக்கப் படிகின்றன. இவ்வாறு திருப்பி அனுப்பப்படும் ஒளித்துகள்கள் கதிரவனின் மேல்பகுதியை கதிரியக்கம் விளைவாக அடைய சுமார் 10 ,000 முதல் 170 ,000 வருடங்கள் ஆகிறது. வெப்பச்சலனப் பகுதியை கடந்து ஒளி மண்டலத்தை அடையும் ஒளித்துகள்கள் காண்புறு ஒளியாக கதிரவ அமைப்பில் பயணிக்கிறது. கதிரவ உள்ளகத்தில் உருவாகும் ஒவ்வொரு காமாக் கதிரும் பல மில்லியன் ஒளித்துகள்களாக மாற்றப்படுகிறது. காமா கதிர்களைப் போன்று நியூட்ரினோ துகள்களும் அணுக்கருப் புணர்ச்சியின் விளைவாக உருவாக்கப்படுகின்றன. ஒளித்துகள்களை போலன்றி இவை பிளாசுமாவினால் பாதிக்கப்படாததால் இவை கதிரவனை உடனடியாக வெளியேறுகின்றன. கதிர்வீச்சுப் பகுதி உள்ளகத்தில் இருந்து சுமார் 0.7 கதிரவ ஆரங்கள் வரை, ஆற்றல் பரிமாற்றத்தின் முதன்மையான வழிமுறையாக வெப்பக் கதிர்வீச்சு இருக்கிறது. மையத் தொலைவு அதிகரிக்கும் போது சுமார் 7 மில்லியன் முதல் 2 மில்லியன் கெல்வின் வரை வெப்பநிலை குறைகிறது. இந்த வெப்பநிலைச் சரிவு மாறாவெப்பக் குறைவு விகிதத்தை விட குறைவாக இருப்பதால் வெப்பசலனத்தை இயக்க முடியாது. எனவே இப்பகுதி வழியாக நடைபெறும் வெப்பப் பறிமாற்றம் வெப்பசலனம் மூலம் இல்லாமல் கதிர்வீச்சு மூலம் நடைபெறுகிறது. வேகச்சரிவு கதிர்வீச்சு பகுதியும் வெப்பச்சலனப் பகுதியும் வேகச்சரிவு என்ற நிலைமாற்ற அடுக்கு ஒன்றால் பிரிக்கப்பட்டுள்ளது. இது கதிர்வீச்சுப் பகுதியின் நிலையான சுழற்சி மற்றும் வெப்பசலனப் பகுதியின் மாறுபட்ட சுழற்சி ஆகிய இரண்டிற்கும் இடையே திடீர் மாற்றம் ஏற்படும் பகுதி ஆகும். இதன் விளைவாக சறுக்குப் பெயர்ச்சி எனப்படும் தொடர்ச்சியான கிடைமட்ட அடுக்குகள் ஒன்றையொன்று கடந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. தற்போது இந்த அடுக்கினுள் உள்ள காந்த இயக்கயவியல் கதிரவனின் காந்தப்புலத்தை உருவாக்குவதாகக் கருதப்படுகிறது. வெப்பச்சலனப் பகுதி கதிரவனின் வெளி அடுக்குகளில் (தோராயமாக 70% கதிரவ ஆரம்), கதிரவ பிளாஸ்மாவின் அடர்த்தி மிகக் குறைவாக காணப்படுவதால், இப்பகுதியில் கதிர்வீச்சு வழியே வெப்பம் கடத்தப்படுவது இயலாததாகிறது. அதனால் வெப்பச்சலனம் மூலம் வெப்பம் கடத்தப்படுகிறது. வெப்பச்சலனம் என்பது வளி அல்லது நீர்மம் அல்லது பிளாஸ்மா ஆகியவற்றின் அழுத்த வேறுபாடு மூலமாக வெப்பம் கடத்தப்படுதலை குறிக்கும். கதிரவனில் வெப்பப் படுத்தப்பட்ட பிளாஸ்மா குறைந்த அடர்த்தியை கொண்டிருப்பதால் அது சூரியனின் வெளிபுறம் நோக்கி நகர்வதாலும், அவ்விடத்தை நிறைக்க குறைந்த வெப்பத்தை கொண்ட பிளாஸ்மா உள்நோக்கி நகர்வதாலும் நடக்கும் சுழற்சியின் வழியாக வெப்பம் கடத்தப்படுகிறது. இத்தகைய சுழற்சி மூலம் வெப்பம் கதிர்வீச்சுப் பகுதியில் இருந்து ஒளி மண்டலத்திற்கு கடத்தப்படுகிறது. வெப்பச்சலன விளைவினால் அடுக்கடுக்காக வெளி நோக்கி தள்ளப்படும் பிளாஸ்மா தனித்தனி பரல்களாக சூரியனின் மேல்பரப்பில் தோன்றுகிறது. இதனை கதிரவ பரலாக்கம் என்பர். ஒளிக்கோளம் கதிரவனின் பார்க்கக்கூடிய மேற்பரப்பு ஒளி மண்டலம் என்று அறியப்படுகிறது. இப்பகுதில் இருந்து வெளியேறும் ஒளி ஆற்றல் எந்த வித தடங்கலும் இன்றி விண்ணில் பயணிக்க இயலும். ஒளி மண்டலம் பல நூறு கிலோமீட்டர் தடிமனானது. ஒளி மண்டலத்தின் வெளிப்பகுதி உள்பகுதியை விட சற்றே குளிர்ச்சியானது. ஒளி மண்டலத்தின் துகள் அடர்த்தி தோராயமாக 1023 m−3 (அதாவது புவியின் கடல் மட்டத்தில் காணப்படும் வளி மண்டத்தின் அடர்த்தியில் 1% அடர்த்தி ) . பெரும் அறிவியல் முன்னேற்றம் கண்டிராத காலத்தில் கதிரவனின் ஒளி மண்டலத்தின் ஒளி அலைமாலையை ஆய்ந்த அறிவியலாளர்கள் கதிரவனில் புவியில் இல்லாத ஒரு வேதியியல் தனிமம் இருப்பதாக உணர்ந்தனர். 1868 ஆம் ஆண்டு, ஆய்வாளர் நோர்மன் லோக்கர் இத்தனிமத்திற்கு கிரேக்க கதிரவக் கடவுளான ஈலியோசு நினைவாக ஈலியம் என்று பெயர் சூட்டினார். இதன் பிறகு 25 வருடங்கள் கடந்தபின் ஈலியம் புவியில் ஆய்வாளர்களால் பிரித்து எடுக்கப்பட்டது. வளிக்கோளம் thumb|left| முழு கதிரவ மறைபின் உச்சக்கட்டத்தின் போது, வெறும் கண்களால் கொரோனாவை எளிதாக பார்க்க இயலும், thumb|right|350px|கதிரவ தொலைநோக்கி வழியாக சனவரி 12, 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பிளாஸ்மாவின் காந்த புலத்தை விளக்கும் கதிரவனின் புகைப்படம். முழுமையான கதிரவ மறைப்பின் போது நிலவு கதிரவனை முழுமையாக மறைக்கிறது. அப்போது கதிரவனைச் சுற்றியுள்ள வளிக்கோளத்தின் பகுதிகளைக் காண இயலும். இது நிறக்கோளம், நிலைமாற்றப் பகுதி, கொரோனா மற்றும் கதிரவக்கோளம் என்று நான்கு தனித்தனி பகுதிகளைக் கொண்டது. இப்பகுதியை மின்காந்த அலைமாலையைக் காண உதவும் தொலைநோக்கி வழியாகவோ, காண்புறு ஒளியில் இருந்து காமாக் கதிர்கள் வரை அடங்கியுள்ள ரேடியோ கதிர்களை ஆய்வதன் மூலமோ காணலாம். கதிரவனின் குறைந்த வெப்பப் பகுதி ஒளிக்கோளத்தில் இருந்து சுமார் 500 கிமீ மேலே அமைந்துள்ளது. இப்பகுதியின் வெப்பம் சுமார் 4,000 கெல்வின் ஆகும். இப்பகுதியின் வெப்பக்குறைவு காரணமாக இப்பகுதியில் தனிமங்கள் மட்டுமல்லாது கார்பன் மோனாக்சைடு, நீர் ஆகிய சில மூலக்கூறுகளும் காணப்படுகின்றன. குறைந்த வெப்ப பகுதிக்கு மேலே சுமார் 2 ,500 கிமீ தடிமனில் உள்ள மெல்லிய அடுக்கு நிறக்கோளம் என்று அறியப்படுகிறது. இப்பகுதியின் நிறமாலை உமிழ்வு காரணமாக இப்பெயர் பெற்றது. காந்தப் புலமும் செயல்பாடுகளும் கதிரவன், அதன் மேற்பரப்பு முழுவதும் மாறுபடும் ஒரு காந்த புலத்தை கொண்டுள்ளது. ஆண்டு தோறும் மாற்றமடைகின்றதும் ஒவ்வொரு 11 ஆண்டும் திசை மாற்றம் அடைவதுமான வலுவான காந்தப் புலம் கதிரவனுக்கு உண்டு. கதிரவனின் காந்தப்புலம், ஒருங்கே கதிரவ செயல்பாடுகள் என்று அழைக்கப்படும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றுள் கதிரவ மேற்பரப்பில் இருக்கும் கதிரவ புள்ளிகள், கதிரவ தீக்கொழுந்து, கதிரவ அமைப்பின் வழியாக பல்வேறு பொருட்களை எடுத்துச் செல்லும் கதிரவ காற்று ஆகியவை அடங்கும். இடை முதல் உயர் குறுக்குக்கோடு வரையிலான பகுதிகளிலான துருவ ஒளி, வானொலித் தொடர்புகளிலும், மின்சாரத்திலும் ஏற்படும் இடையீடுகள் என்பன கதிரவ செயல்பாடுகள் புவியில் ஏற்படும் தாக்கங்கள் ஆகும். கதிரவ அமைப்பின் உருவாக்கத்திலும் படிவளர்ச்சியிலும் கதிரவ செயல்பாட்டிற்குப் பெரும் பங்கு உண்டு என்று கருதப்படுகிறது. இது புவியின் வெளி வளிமண்டலத்தில் அமைப்பையும் மாற்றுகிறது. உயர்ந்த வெப்பநிலையினால் கதிரவனில் உள்ள எல்லாப் பொருட்களும் வளிமம், அல்லது பிளாசுமா வடிவிலேயே உள்ளன. இதனால், கதிரவனின் நடுக்கோட்டுப் பகுதியின் வேகம் உயர் குறுக்குக் கோட்டுப் பகுதியின் வேகத்திலும் கூடிய வேகத்தில் சுழல்கிறது. நடுக்கோட்டுப் பகுதியில் சுழற்சி 25 நாட்களுக்கு ஒரு முறையும், துருவப்பகுதிகளில் 35 நாட்களுக்கு ஒரு முறையாகவும் காணப்படுகிறது. கதிரவ காந்தப்புலம் கதிரவனுக்கு வெளியிலும் பரந்துள்ளது. காந்தமாக்கப்பட்ட கதிரவக் காற்றுப் பிளாசுமா கதிரவக் காந்தப் புலத்தை வான்வெளிக்குள் கொண்டு சென்று கோளிடைக் காந்தப் புலத்தை உருவாக்குகிறது. பிளாசுமா காந்தப் புலக் கோடுகள் வழியே மட்டுமே செல்ல முடியும் என்பதால், தொடக்கத்தில், கோளிடைக் காந்தப்புலம் கதிரவனில் இருந்து ஆரைப்போக்கில் வெளிப்புறமாக விரிந்து செல்கிறது. வாழ்க்கைச் சுழற்சி thumb|662x662px|கதிரவனின் வாழ்க்கை சுழற்சி தற்போது கதிரவன் கிட்டத்தட்ட தன் வாழ்வின் மிக நிலையான பகுதியில் பாதியளவைக் கடந்துவிட்டது; இது நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக வியத்தகு முறையில் மாற்றம் அடையாமல் இருப்பதுடன், இன்னும் ஐந்து பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் மிகவும் நிலைத்தன்மையுடன் இருக்கும். இருப்பினும், அதன் மையத்தில் நடைபெறும் ஐட்ரசன் இணைவு நின்றுவிடும் போது, கதிரவனின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் வியத்தகு மாற்றங்கள் ஏற்படும். விண்மீன்களும் வாழ்க்கைச் சுழற்சிக்கு உட்பட்டவையே. உலோகச்செறிவு மிக்க விண்மீன்கள் வகையைச் சார்ந்த கதிரவன் தோராயமாக 4.57 பில்லியன் வருடங்களுக்கு முன் ஐட்ரசன் மூலக்கூறு மேகங்களின் மோதலால் பால் வழியில் தோன்றியது. தோராயமாக வட்டவடிவில் இருக்கும் கதிரவனின் கோளப் பாதை பால் வழி விண்மீன் மண்டல மையத்திலிருந்து சுமார் 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. கதிரவ உருவாக்கத்தைக் கணிக்க இரு வகையான கணக்கீடுகள் பயன் படுத்தப்படுகின்றன. முதல் முறையில் கதிரவனின் பரிணாம வளர்ச்சியில் தற்போதய நிலை, கணிப்பொறி உருவகப்படுத்துதல் முறையில் கணிக்கப்படுகிறது. இம்முறையில் கதிரவனின் நிறை, வெப்ப ஆற்றல், ஒளியின் மூலம் அறியப்படுகின்ற தனிமங்களின் அளவு ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுகின்றன. இம்முறை மூலம் கதிரவனின் வயது 4.57 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது . மற்றொரு முறையான கதிரியக்க அளவியல் முறையில் கதிரவ அமைப்பின் மிகமுந்தைய துகள்களை ஆய்வதன் மூலம் கதிரவனின் வயதை கண்டறிவதாகும். இம்முறையில் கதிரவனின் வயது 4.567 பில்லியன் வருடங்கள் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது . ஆயிரக்கணக்கான விண்மீன்களின் வாழ்க்கைச் சுழற்சியை ஆய்வாளர்கள் ஆய்ந்ததில் கதிரவன் தனது நடுவயதை அடைந்து விட்டதைக் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் கதிரவனில் உள்ள ஐட்ரசன் அணுக்கள் அணுக்கரு புணர்வு விளைவினால் ஈலியம் அணுக்களாக மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு வினாடியும் சுமார் 4 மில்லியன் டன் எரிபொருள் ஆற்றலாக மாற்றப்படுகின்றது. இவ்வாற்றலையே நாம் கதிரவ ஒளியாகவும், வெப்பமாகவும் பெறுகிறோம். கதிரவன் தோன்றியதில் இருந்து இதுவரை சுமார் 100 புவியின் எடையுள்ள பருப்பொருள் ஆற்றலாக மாற்றப்பட்டுள்ளது. அளவில் பெரிய விண்மீன்கள் தம் பரிணாம வளர்ச்சியின் முடிவில் அவற்றில் உள்ள எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் தம் ஈர்ப்பு விசையில் மாற்றம் ஏற்படுவதனால் நியூட்ரான் விண்மீனாகவோ அல்லது கருங்குழியாகவோ மாறுகின்றன. இம்மாற்றத்தை அடையும் முன் அவற்றின் வெளிப்பகுதி ஈர்ப்பு நிலை ஆற்றலால் வெடித்து சிதறுகின்றது. இந்நிகழ்வை மீயொளிர் விண்மீன் வெடிப்பு என்று கூறலாம். கதிரவனின் நிறை மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) ஏற்படப் போதுமானது அன்று. எனவே 5 பில்லியன் வருடங்களுக்கு பின், கதிரவன் ஒரு செம்பெருமீனாக (red giant) மாறும். அதன் வெளி அடுக்குகள் விரிவடைந்து உள்பகுதியில் உள்ள ஐட்ரசன் எரிபொருள் அணுக்கரு இணைவு விளைவுக்கு உட்பட்டு ஈலியமாக மாறும். வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து 100 மில்லியன் கெல்வின் என்ற நிலையில் ஈலியம் இணைவு விளைவு தொடக்கப்படும். இவ்விளைவின் விளைவுப் பொருள் கார்பன் ஆகும். . இந்நிலையில் புவியின் உள்ளகத்தின் நிலை ஐயத்துக்குரியது. ஏனெனில், செம்பெருமீனாக கதிரவனின் மாற்றம் பெறும்போது அதன் ஆரம் தற்போதய ஆரத்தை விட சுமார் 250 மடங்கு பெரியதாக விரிவடையும். அத்தகைய விரிவடைதல் புவியின் சுற்றுவட்ட பாதையை முழுவதுமாக கதிரவனுக்குள் இழுத்து விடும்.See also ஆனால் கதிரவனின் நிறை பெரிதும் குறைந்திருப்பதால் கோள் பாதைகள் விரிவடைய வாய்ப்பு உண்டு. நவீன ஆராய்ச்சி முடிவுகளின்படி கதிரவன் புவியை முழுவதுமாக விழுங்கி விடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது. சில இயற்பியல் விதிமுறைகளின் படி புவி கதிரவனால் விழுங்கப்படாமல் இருப்பினும் அதிக வெப்பத்தினால் புவியில் உள்ள அனைத்து நீரும் ஆவியாகி வெளியேறி விடும். மேலும் காற்று மண்டலம் முழுவதுமாக அழிக்கப்பட்டு உயிரினங்களின் வாழ்க்கை முற்றுப்பெறும். ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் கதிரவனின் வெப்பம் 10% அதிகமாகிறது. செம்பெருமீன் நிலையினைத் தொடர்ந்து கதிரவனின் வெளி அடுக்குகள் வீசி எறியப்படும். அவை கோள் விண்மீன் படலத்தை (planetary nebula) உருவாக்க கூடும். மீதம் இருக்கும் கோள் மெதுவாகக் குளிர்ந்து வெண் குறுமீனாக (white dwarf) மாறும். இதே விண்மீன் பரிமாணமே சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறையுள்ள விண்மீன்களிடம் காணப்படுகின்றது. இயக்கம் மற்றும் அமைவிடம் நமது விண்மீன் பேரடையான பால்வீதியின் உள்வட்டத்தில் அமைந்துள்ள ஓரியன் சுருள்கையில் கதிரவன் அமைந்துள்ளது. கதிரவன் அமைந்துள்ள இடத்தில் இருந்து பால்வெளி மையம் சுமார் 24 ,800 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கலாம் எனறு கணிக்கப்படுகிறது. கதிரவன் அமைந்துள்ள ஓரியன் சுருள்கைக்கும், அருகில் உள்ள பெர்சியசு சுருள்கைக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 6 ,500 ஒளியாண்டுகள் ஆகும். கதிரவ உச்சி (solar apex) என்ற பதம் கதிரவன் பால் வழியில் பயணிக்கும் திசையை கூற பயன்படுத்தப்படுகிறது. தற்பொழுது கதிரவன், வேகா என்ற விண்மீனை நோக்கி பயணம் செய்கிறது. வேகா விண்மீன் எர்குலசு விண்மீன் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. கதிரவனின் சுழற்சி நீள்வட்ட பாதையில் அமைந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கதிரவ அமைப்பு ஒருமுறை பால் வீதியைச் சுற்றி வர சுமார் 225–250 மில்லியன் வருடங்கள் ஆகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இக்காலம் ஒரு பால்வெளி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது இதன் மூலம், கதிரவன் தன் தோன்றியதில் இருந்து தோராயமாக 20–25 முறை பால்வீதியைச் சுற்றி வந்துள்ளது என்பதை அறியலாம். பால்வெளி மையத்தில் இருந்து நோக்கினால் கதிரவனின் சுழற்சி வேகம் தோராயமாக 251 km/s ஆகும். இந்த வேகத்தில் கதிரவ அமைப்பு 1 ஒளியாண்டு தொலைவு வரை பயணிக்க 1,190 ஆண்டுகள் ஆகும். கதிரவ விண்வெளி திட்டங்கள் 1959 முதல் 1968 வரையிலான காலகட்டத்தில் ஏவப்பட்ட நாசாவின் பயனியர் 5, 6, 7, 8 மற்றும் 9 ஆகியவை கதிரவனைக் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள்கள்கள் ஆகும். இந்த ஆய்வுக்கலங்கள் புவியைப் போல கதிரவனை ஒரு குறிப்பிட தொலைவில் சுற்றி வந்து முதன்முறையாகக் கதிரவக் காற்று மற்றும் கதிரவ காந்தப் புலம் ஆகியவற்றை விரிவாக அளவீடுகள் செய்தன. இதுவரையிலான கதிரவ திட்டங்களில் கதிரவ மற்றும் கதிரவக்கோள ஆய்வுக்கலம் (SOHO) மிக முக்கியமான திட்டமாகும். ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் நாசா ஆகியவை இணைந்து உருவாக்கிய இந்த விண்கலம் 2 டிசம்பர் 1995 அன்று ஏவப்பட்டது. இது புவி மற்றும் கதிரவன் இடையேயான லெக்ராஞ்சிய புள்ளியில் இருந்துகொண்டு கதிரவனின் நிலையான காட்சியை பல அலைநீளங்களில் வழங்கியுள்ளது. இதுதவிர, பெரிய அளவிலான வால்வெள்ளிகளையும் கண்டறிய உதவியது. அவற்றில் பெரும்பாலும் கதிரவனுக்கு அருகில் செல்வதால் எரியும் வகையைச் சேர்ந்த சிறிய வால்வெள்ளிகள் ஆகும். கதிரவ காற்றின் ஒரு மாதிரியை எடுத்து வர நாசாவால் அனுப்பப்பட்ட ஜெனிசீஸ் என்ற விண்கலம், கதிரவ மூலப்பொருட்களின் கலவையை நேரடியாக அளவீடு செய்ய வானியலாளர்களுக்கு உதவியது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், 1475 கிலோ எடை கொண்ட ஆதித்தியா எல் 1 என்ற விண்கலத்தை PSLV C57 ஏவூர்தியால் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 2 அன்று இசீநே 11:50 அளவில் விண்ணில் ஏவியுள்ளது. வின்கலம் இசிநே 12:54 அளவில் ஏவூர்தியால் புவித் தாழ் வட்டணையில் செலுத்தியுள்ளது. இது கதிரவ கொரோனாவின் இயக்கவியல் குறித்து ஆய்வு செய்யவுள்ளது. வெயில் thumb|200px|left|நிலத்தில் பாயும் வெயில் புவியில் படும் கதிரவனின் ஒளிக்கதிர்கள் வெயில் என்று அழைக்கப்படுகிறது. முப்பட்டக ஆடியின் மூலம் இந்த வெயிலைப் பகுத்து அதன் 7 நிறங்களைக் காணமுடியும். குவியாடி மூலம் குவித்து வெயிலின் வெப்பத்தை அதிகமாக்க முடியும். கோள் அமைப்பு கதிரவன் எட்டு அறியப்பட்ட கோள்களைக் கொண்டுள்ளது. இதில் நான்கு புவியொத்த கோள்கள் (புதன், வெள்ளி, புவி, மற்றும் செவ்வாய்), இரண்டு வாயு அரக்கர்கள் (வியாழன் மற்றும் சனி) மற்றும் இரண்டு பனி அரக்கர்கள் (யுரேனசு மற்றும் நெப்டியூன்) ஆகியவை அடங்கும். மேலும் கதிரவ அமைப்பில் குறைந்தது ஐந்து குறுங்கோள்கள், ஒரு சிறுகோள் பட்டை, எண்ணற்ற வால்வெள்ளிகள், மற்றும் நெப்டியூன் சுற்றுப்பாதைக்கு அப்பால் இருக்கும் பெரிய அளவிலான பனிப் பொருட்கள் ஆகியவை உள்ளன. இவற்றையும் பார்க்க வானியல் தலைப்புகள் பட்டியல் குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Earth's Sun: Facts About the Sun's Age, Size and History
விண்வீழ்கல்
https://ta.wikipedia.org/wiki/விண்வீழ்கல்
right|thumb|1868ல் விஸ்கொன்சினில் விழுந்த விண்கல்முழுப் படிமம் thumb|நமீபியாவில் உள்ள 60-டன் எடை, 2.7 மீ நீளம் (8.9 அடி) நீளமுள்ள ஹோபா விண்கல் தான், இதுவரை அறியப்பட்ட மிகப்பெரிய விண்கல் ஆகும். விண்வீழ்கல் அல்லது உற்கை (meteorite) என்பது ஒப்பீட்டளவில் சிறிய, பூமிக்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். விண்வெளியில் இருக்கும்போது இது விண்கல் என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்திற் கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் (எரி வெள்ளி) என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனையும் பாருங்கள் விண்கல் மழை வால்மழை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன் புவியைத் தாக்கிய இராட்சத விண்கல் பகுப்பு:விண்வெளி அறிவியல் பகுப்பு:புவி இயற்பியல்
வால்வெள்ளி
https://ta.wikipedia.org/wiki/வால்வெள்ளி
[[படிமம்:Lspn comet halley.jpg|right|250px|கருப்பகுதி இடதுபக்கமிருந்து சூரியனால் ஒளியூட்டப்பட்டுள்ளது. பல்வேறு பொலிவான வளிம், தூசிச் சீறல்கள் தெரிகின்றன.]] வால்வெள்ளி (comet) பனிக்கட்டியாலான சிறிய சூரியக் குடும்பப் பொருளாகும். இது சூரியனுக்கு நெருக்கமாக கடக்கும்போது சூடாகி வளிமங்களை வெளியிடும். இந்நிகழ்வு வளிமவீசல் அல்லது தாரை எனப்படுகிறது. இது கண்ணுக்குப் புலப்படும் வளிமண்டலம் அல்லது கருப்புறணியை உருவாக்குகிறது. சிலவேளைகளில், இது வால்வெள்ளியின் "வால்" எனப்படுகிறது. இந்நிகழ்வுகள் சூரியக் கதிர்வீச்சும் சூரியக் காற்றும் வால்வெள்ளியின் உட்கரு மீது செலுத்தும் விளைவுகளால் ஏற்படுகின்றன. வால்வெள்ளி உட்கரு சில நூறு மீட்டர்களில் இருந்து பல பத்து கிமீ குறுக்களவில் அமைகிறது. இதில் பனிக்கட்டி, தூசு, சிறிய பாறைத் துகள்கள் ஆகியவை தளர்வாகக் கலந்திருக்கும். வால்வெள்ளியின் கருப்புறணி, புவியின் விட்டத்தைப் போல 15 மடங்காக அமைய, வால் ஒரு வானியல் அலகு அளவுக்குக் கூட நீண்டிருக்கும். போதுமான பொலிவுள்ள வால்வெள்ளியைப் புவியில் இருந்து தொலைநோக்கி இல்லாமலே பார்க்கலாம். வானில் அது 30° வட்டவில்லை (60 நிலாக்கள்) வெட்டும். பல நாகரிகங்களில் தொல்பழங்கால முதலே வால்வெள்ளிகள் நோக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் வட்டணை அல்லது சுற்றுப்பாதை, புளூட்டோவையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வட்ட வட்டணையைக் கொண்டுள்ளன. "தூசுப் பனிப்பந்துகள் (dirty snowballs)" என்று பெரும்பாலும் விளிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டும், மீத்தேனும் நீரும் தூசியும் கனிமத்திரளைகளும் கலந்து உருவானவை. வால்வெள்ளிகள் மிகவும் மையம்பிறழ்ந்த நீள்வட்ட வட்டணைகளைக் கொண்டுள்ளன. இவற்றின் வட்டணை அலைவுநேரம் அகன்ற நெடுக்கம் கொண்டதாகும். இந்நெடுக்கம் பல ஆண்டுகளில் இருந்து பல மில்லியன் ஆண்டுகள் வரை அமையும். சிற்றலைவுநேர வால்வெள்ளிகள் நெப்டியூன் வட்டணைக்கு அப்பால் உள்ள கைப்பர்பட்டையில் இருந்து அல்லது அதைச் சார்ந்த சிதறிய வட்டிலில் இருந்து தோன்றுகின்றன. நெட்டலைவுநேர வால்வெள்ளிகள் கைப்பர்பட்டையின் வெளிப்புறத்தில் இருந்து அடுத்த விண்மீனின் பாதி தொலைவு வரை விரிந்தமையும் ஊர்த் முகிலில் இருந்து தோன்றுவதாகக் கருதப்படுகின்றன. இவை ஈர்ப்பு குற்றலைவுகளால் ஊர்த் முகிலில் இருந்து சூரியனை நோக்கி இயக்குவிக்கப்படுகின்றன, இந்த குற்றலைவுகள் அருகாமையில் உள்ள கடந்தகால, எதிர்கால, அல்லது கடந்துசெல்லும் விண்மீன்களால் உருவாக்கப்படுகின்றன. மீவலைய வால்வெள்ளிகள் உடுக்கன இடைவெளிக்குள் பரந்துபோகும் முன் உட்புறச் சூரியக் குடும்பத்தின் ஊடாகக் கடக்கலாம். அலைவுநேர வால்வெள்ளியின் தோற்றம் வால்வெள்ளியின் மீட்சி எனப்படுகிறது. சூரிய ஒண்முகில்கள் ஒடுங்கும்போது எஞ்சிய கழிவுகளே வால்வெள்ளிகள் என்று கருதப்படுகின்றன. இத்தகைய ஒண்முகில்களின் வெளி விளிம்புகள், நீர்ம, வளிம நிலையிலன்றித் திண்ம நிலையில் இருக்கக்கூடியதாகவும் போதிய அளவு குளிர்ந்த நிலையில் இருப்பதாகவும் வாதிடப்படுகிறது. வால்வெள்ளிகளைப் பனியால் சூழப்பட்ட சிறுகோள் என வரையறுப்பது சரியல்ல. வால்வெள்ளிகளின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த் திசையிலேயே காணப்படும். மற்றைய வான்பொருட்கள் போலவே வால்வெள்ளிகளும் சூரியனைச் சுற்றுகின்றன. இதற்கு ஒரு எடுத்துகாட்டு ஆல்லே வால்வெள்ளி ஆகும். இதனை புவியில் இருந்தபடி 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை நோக்கலாம்/அவதானிக்கலாம். விண்வெளியில் மிதக்கிற எரிகல் தூசிகளும், மீத்தேன், சயனோஜன், கரியமில வளிமம், அம்மோனியா, நீராவி ஆகியவை அந்தக் கல்துண்டுகளைச் சுற்றி ஒட்டிக் கொண்டு உறைந்து விடுகின்றன. வால்வெள்ளி சூரியனை அணுகும்போது வால்வெள்ளியிலுள்ள பொருள்கள் ஆவியாகின்றன. சூரியனிலிருந்து வீசுகிற சூரியக் காற்று அந்த ஆவிகளைச் சூரியனுக்கு எதிர்ப்புறமாகத் தள்ளுகிறது. அந்த ஆவிதான் வாலாகத் தோற்றமளிக்கிறது. பல முறை சூரியனைச் சுற்றி வந்தபின் வால்வெள்ளிகளின் மேற்பரப்பு படலங்களெல்லாம் ஆவியாகிப்போய் வெறும் பாறைத்துண்டு மட்டும் மிஞ்சும். அந்தப் பாறைத்துண்டும் உடைந்து பூமியிலும் மற்ற கோளிலும் எரிகற்களாகப் போய்விழும்.. குறுங்கோள்கள் வால்வெள்ளிகளைப் போல வெளிப்புறச் சூரியக் குடும்பத்துக்குள் தோன்றாமல், வியாழனின் வட்டணைக்கும் உள்ளே அமைந்த பகுதியில் தோன்றுகின்றன. முதன்மைப்பட்டை வால்வெள்ளிகளின் கண்டுபிடிப்பும் முனைப்பான செண்டார் வகை சிறுகோள்களின் கண்டுபிடிப்பும் குறுங்கோளுக்கும் வால்வெள்ளிகளுக்கும் இடையில் அமைந்த வேறுபாட்டை மழுங்கடித்து விட்டன. 2014 நவம்பர் மாதம் வரை 5,253 வால்வெள்ளிகள் அறியப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை வளர்ந்துகொண்டே வருகிறது. வாய்ப்புள்ள மொத்த வால்வெள்ளிகளை ஒப்பிடும்போது இது மிகச் சிறிய திரளேயாகும். வெளிப்புறச் சூரியக் குடும்பத்தில் (ஊர்த் முகிலில்) வால்வெள்ளிபோன்ற வான்பொருள்கள் டிரில்லியன் அளவில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளன. ஓராண்டில் ஒரு வால்வெள்ளி கண்ணுக்குப் புலப்படுகிறது. பல மங்கிய வால்வெள்ளிகள் நமக்குப் புலப்படுவதில்லை. இவற்றில் பொலிவுமிக்கவை "பெருவால்வெள்ளிகள்" எனப்படுகின்றன. வால்வெள்ளிகளைப் பல ஆளில்லாத விண்கலங்கள் சென்று ஆய்ந்துவருகின்றன. எடுத்துகாட்டாக, ஐரோப்பிய முகமையின் உரோசெட்டா திட்டத்தைக் குறிப்பிடலாம். இத்திட்டம் தான் முதன்முதலில் மனிந்திர விண்கலத்தை ஒரு வால்வெள்ளிக்கு அனுப்பியது.European Space Agency, Rosetta's Philae probe lands on comet. நாசாவின் ஆழ்மொத்தல் விண்கலம் தெம்பெல் 1 வால்வெள்ளியில் உள்ள குழிப்பள்ளத்தை உட்புறக் கூறுபாட்டு ஆராய்ச்சிக்காக தகர்த்தது. சொற்பிறப்பியல் comet எனும் சொல் பழைய ஆங்கிலச் சொல்லாகிய cometa என்பதில் இருந்து வந்தது. இது இலத்தீனச் சொல்லான comēta அல்லது comētēs என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இதுவும் பண்டைய கிரேக்கச் சொல்லான κομήτης ("wearing long hair") என்பதன் இலத்தீன் வடிவம் ஆகும். ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி'' (ἀστὴρ) κομήτης எனும் ஏற்கெனவே கிரேக்க மொழியில் "நீளமுடி விண்மீன், வால்வெள்ளி" என்ற பொருள்வாய்ந்த சொல்லினைச் சுட்டுகிறது. Κομήτης என்பது κομᾶν ("நீள முடியணிதல்") என்பதில் இருந்து கொணரப்பட்டதாகும். இது κόμη ("தலைமுடி") என்பதில் இருந்து வந்ததாகும். இதன் பொருள் "வால்வெள்ளியின் வால்" என்பதாகும். வால்வெள்ளிகளுக்கான வானியல் குறியீடு ☄ ஆகும். இது மூன்று மயிரிழை நீட்சிகள் கொண்ட சிறிய வட்டு ஆகும். புறநிலைப் பான்மைகள் உட்கரு thumb| 103P/ஆர்ட்லேவின் உட்கரு, பிளையே விண்கலம் எடுத்த படிமம். உட்கருவின் நீளம் 2 கிமீ ஆகும். thumb|81P/வைல்டு வால்வெள்ளியின் ஒளிப்பக்க, இருள்பக்கத் தாரைகளும் கூர்ம்பொறுக்கும் உலர்வாக உள்ளன. வால்வெள்ளியின் திண்ம அகடு உட்கரு எனப்படுகிறது. உட்கருவில் பாறையும் தூசும் பனிக்கட்டியும் கரிம ஈருயிரகி, கரிம ஓருயிரகி, மீத்தேன், அம்மோனியா போன்ற உறைவளிமங்களும் அமைகின்றன. இவை பிரெடு [விப்புள்] படிமம் உருவாகிய பிறகு தூசிப் பனிப்பந்துகள் எனப்படுகின்றன. உயர்தூசு உள்ளடங்கியவை "பனித் தூசுப் பந்துகள்" எனப்படுகின்றன. 2014 இல் நடத்திய ஆய்வுகள் வழியாக வறுத்த பனிக்கட்டிபோல வால்வெள்ளிகள் அமைதல் அறியப்பட்டது. அதாவது இவற்றின் மேற்பரப்பு கரிமச் சேர்மங்களோடு அடர்பனிப் படிகங்களாலும் உள்பனிப்பகுதி மிகவும் குளிர்ச்சியாகவும் குறைந்த அடர்த்தியுடனும் அமைகின்றன என கூறுகின்றன. thumb|left|போரெல்லி வால்வெள்ளியின் தாரைகள். ஆனால் மேற்பரப்பில் பனிக்கட்டி இல்லை. உட்கருவின் மேற்பரப்பு பொதுவாக உலர்ந்த தூசு அல்லது பாறையால் ஆகியிருக்கும். எனவே பனிக்கட்டிகள் பல மீட்டர் தடிப்பான மேலோட்டுக்கு அடியில் பொதிந்திருக்கும். இவை ஏற்கெனவே குறிப்பிட்ட வளிமங்களோடு, பலவகை கரிமச் சேர்மங்களையும் கொண்டுள்ளன. இவற்றில் மெத்தனால், நீரகச் சயனைடு, பார்மால்டிகைடு, எத்தனால், ஈத்தேன் போன்றனவும் மேலும் சிக்கலான நெடுந்தொடர் மூலக்கூறுகள் அமைந்த நீரகக் கரிமங்களும் அமினோ அமிலங்களும் அடங்கும். 2009 இல் நாசாவின் விண்மீன் தூசு விண்கலம் கொணர்ந்த வால்வெள்ளித் தூசில் கிளைசைன் எனும் அமினோ அமிலம் இருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. புவியில் கண்டறிந்த விண்கற்களைப் பற்றிய நாசாவின் ஆய்வுகளில் இருந்து 2011 ஆகத்து மாதம் வெளியாகிய அறிக்கையில், மரபன் (டி. என். ஏ) முன்மரபன் (ஆர். என். ஏ) ஆகிவற்றின் உட்கூறுகளான அடினைனும் குவானைனும் சார்ந்த பிற கரிமச் சேர்மங்களும் குறுங்கோள்களிலும் விண்கற்களிலும் உருவாகியுள்ளன என முன்மொழியப்பட்டுள்ளது. வால்வெள்ளி உட்கருவின் வெளிப்பரப்புகள் மிகத் தாழ்ந்த தெறிப்புக் கெழுவை அல்லது எதிர்பலிப்புக் கெழுவைப் பெற்றுள்ளன. சூரியக் குடும்பத்திலேயே இவைதாம் மிகவும் குறைந்த தெறிப்புக் கெழு அமைந்த வான்பொருள்களாகும். கியோட்டோ விண்வெளி ஆய்கலம் ஆலே வால்வெள்ளி உட்கரு தன் மீது விழுந்த ஒளியில் 4% மட்டுமே தெறித்து அனுப்புவதாகவும் ஆழ்விண்வெளி 1 விண்வெளி ஆய்கலம் போரெலி வால்வெள்ளியின் மேற்பரப்பு தன் மீது விழும் ஒளியை 3% அளவுக்குத் தெறித்து அனுப்புவதாகவும் கண்டுபிடித்துள்ளன; நிலக்கீல் தன்மீது விழும் ஒளியை 7% அளவுக்குத் தெறித்து அனுப்புகிறது என்பதோடு இம்மதிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம். எனவே, வால்வெள்ளி உட்கருக்களின் கருநிற மேற்பரப்பு சிக்கலான கரிமச் சேர்மங்களைக் கொண்டு அமையலாம். அவற்ரின் மேற்பரப்பில் இருந்து சூரியச் சூடேற்றம் எடைகுறைவான ஆவியாகும் வேதிச் சேர்மங்களை வெளியேற்றி விடுவதால் பெரியக் கரிமச் சேர்மங்கள் மட்டும் எஞ்சுகின்றன. இவை நிலக்கீல் அல்லது பெட்ரோல் அல்லது கரட்டு எண்ணெய் போல அடர்கருப்பாக காணப்படுகின்றன. வால்வெள்ளி மேற்பரப்பின் தாழ் தெறிப்புக் கெழு, அவற்றைச் சூரிய வெப்பத்தை உறிஞ்சவைத்து தாரை உமிழ்வு நிகழ்வை உருவாக்குகிறது. 30 கிமீ ஆரமுள்ள வால்வெள்ளி உட்கருக்களும் நோக்கப்பட்டுள்ளன என்றாலும் அவற்றின் சரியான அளவைக் கண்டுபிடிப்பது அரிதாகும். 322பி/சோகோ வால்வெள்ளீயின் உட்கரு 100 முதல் 200 மீ விட்டத்துடன் அமைகிறது. 100 மீ விட்டத்தை விட சிறிய வால்வெள்ளிகள் நிலவவில்லை எனக் கூருணர்திறக் கருவிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Known comets have been estimated to have an average density of . வால்வெள்ளிகளின் பொருண்மை மிகக் குறைவாக அமைவதால், தம்முள் ஈர்ப்பால் கோளமாக ஒடுங்காமல் பல வடிவங்களில் அமைகின்றன. புவியண்மைச் சிறுகோள்களில் 6% சிறுகோள்கள் வளிம உமிழ்வு நின்றுவிட்ட காலாவதியான வால்வெள்ளிகளே எனக் கருதப்படுகின்றன, இவற்றில் 14827 கிப்னோசு, 3552 தான் குவிக்சோட் ஆகிய சிறுகோள்களும் அடங்கும். உரோசெட்டா, பிளையே விண்கலங்களின் ஆய்வு முடிவுகள், 67பி/சூர்யமோவ்- கெராசிமென்கோ வால்வெள்ளியில் காந்தப்புலம் ஏதும் இல்லையென உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, இந்த வான்பொருள்களின் தொடக்கநிலை உருவாக்கத்தில் காந்தவிசைகள் பங்கேதும் ஆற்றவில்லை என்பது தெளிவாகிறது. +சில வால்வெள்ளிகளின் இயல்புகள் பெயர் அளவுகள்(கிமீ) அடர்த்தி(கி/செமீ3) பொருண்மை(கிகி)ஆலே: 15×8×8 கிமீ நீள்வட்டப் பருமனையும்* 0.6 கி/செமீ3 கரட்டுக் குத்தூண்அடர்த்தியையும் பயன்படுத்த (m=d*v), 3.02E+14 கிகி பொருண்மை கிடைக்கிறது. தெம்பெல் 1: 6.25 கிமீ கோளப் பருமனையும்]] * 0.62 g/ கி/செமீ3 அடர்த்தியையும் பயன்படுத்த 7.9E+13 கிகி பொருண்மை கிடைக்கிறது . 19பி/போரெலி: 8x4x4 கிமீ நீள்வட்டப் பருமனையும் * 0.3 கி/செமீ3 அடர்த்தியையும் பயன்படுத்த 2.0E+13 கிகி பொருண்மை கிடைக்கிறது. 81பி/வைல்டு: 5.5x4.0x3.38x4x4கிமீ நீள்வட்டப் பருமனையும் * 0.6  கி/செமீ3 அடர்த்தியையும் பயன்படுத்த 2.28E+13  கிகி பொருண்மை கிடைக்கிறது.Refs ஆலே வால்வெள்ளி 15 × 8 × 8 0.6 3 தெம்பெல் 1 7.6 × 4.9 0.62 7.9 19பி/போரெலி 8 × 4 × 4 0.3 2.0 81பி/வைல்டு 5.5 × 4.0 × 3.3 0.6 2.3 67பி/சூர்யமோவ்–கெராசிமென்கோ 4.1 × 3.3 × 1.8 0.47 1.0 கருப்புறணி thumb|அபுள் விண்வெளி தொலைநோக்கி சூரிய அண்மைநிலைக்கு முன் எடுத்த ஐசோன் வால்வெள்ளியின் படிமம். வால்கள் தாரைகள் வட்டணைப் பான்மைகள் சிற்றலைவுநேர வால்வெள்ளி நெட்டலைவுநேர வால்வெள்ளி காட்சிக்களம் காணொலிப்படங்கள் மேலும் காண்க ஆல்லே வால்வெள்ளி ஏல்-பாப் வால்வெள்ளி மேற்கோள்கள் நூல்தொகை மேலும் படிக்க வெளி இணைப்புகள் நிலா முற்ற கட்டுரை Comets Page at NASA's Solar System Exploration International Comet Quarterly How to Make a Model of a Comet audio slideshow – National High Magnetic Field Laboratory Catalogue of the Solar System Small Bodies Orbital Evolution Information about comets and asteroids *
சிறுகோள்
https://ta.wikipedia.org/wiki/சிறுகோள்
thumb|right|300px|இந்தப் படம் ஈராசின் ஒருமுனையில் இருந்து அதன் கீழே அமைந்த எதிர்முனை நோக்கிய கடிகையால் பிடிக்கப்பட்டுள்ளது. இதில் 35 மீ (120 அடி) குறுக்களவுகொண்ட கூறுபாடுகளும் தெளிவாகத் தெரிகின்றன. சிறுகோள் அல்லது (Asteroid ) என்பது சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் சூரியனைச் சுற்றிவரும் கோள் வட்டமையாத கோள்களினும் மிகச் சிறியனவாகிய. வால்வெள்ளியின் பான்மையேதும் இல்லாத, சூரியக் குடும்ப உருவாக்கத்தின்போது கோள்களுக்குள் சேர்த்துக்கொள்ளப்படாத முற்கோளாக்க வட்டின்(protoplanetary disc) எச்சங்களாய வான்பொருள்கள் ஆகும். இவற்றில் பெரியனவும் கோளினும் சிறியனவும் ஆக அமையும் வான்பொருள்கள் கோள் போன்றவை எனப்பொருள்படும் கோள்போலிகள் (போலிக்கோள்கள்) (Planetoid) எனப்படுகின்றன. மிகப் பெரும்பான்மையான சிறுகோள்கள், சிறுகோள் பட்டைப் (asteroid belt) பகுதியிலேயே காணப்படுகின்றன. இவை செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில், நீள்வட்ட வட்டணையிலேயே உள்ளன. சில சிறுகோள்களுக்கு, சிறுகோள் நிலாக்களும் அமைவதுண்டு. சூரியக் குடும்பத்தின் வெளிப்புறப் பகுதியில் உள்ள சிறுகோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் மேற்பரப்புகள் வால்வெள்ளிகளைப் போல ஆவியாகும் தன்மையோடு அமைந்திருந்த்தால், இவை சிறுகோள்பட்டையில் உள்ள சிறுகோள்களில் இருந்து பிரித்துணரப்படுகின்றன. இந்தக் கட்டுரை சூரியக் குடும்ப உட்புறச் சிறுகோள்களையும் வியாழனைச் சுற்றிவரும் சிறுகோள்களை மட்டுமே கருதுகிறது. thumb|upright=1.35|253 மதில்டே, 50 கிமீ குறுக்களவுள்ள, இதில் அரைப்பங்களவுக் குழிப்பள்ளங்களால் நிரம்பிய சி வகை சிறுகோள். ஒளிப்படம் 1997 இல் நியர் சூமேக்கர் ஆய்கலனால் எடுக்கப்பட்டது. சிறுகோளுக்கான சரியான வரைவிலக்கணம் தெளிவாக இல்லை. வியாழனின் அரைப் பேரச்சுகளுக்கு(semi-major axes) அப்பாலுள்ள, பனிக்கட்டியினாலான சிறிய கோள்கள், வால்வெள்ளிகள், செண்டார்கள் (Centaur), அல்லது நெப்டியூனுக்கு அப்பாலுள்ள பொருள்கள். விண்கற்கள், கோளிடை வெளியிலுள்ள திண்மப் பொருட்கள் ஆகியவை சிறுகோள்களிலும் குறிப்பிடத்தக்க அளவு சிறியவை (1 கிமீ இலும் மிகச் சிறிய விட்டம் உள்ளவை). விண்கற்கள் பொதுவாக பாறைஅளவு அல்லது அதனினும் சிறியவை. 1801 ஆம் ஆண்டுக்குப் பிறகு வானில் பல நுண்ணிய பொருள்கள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் நடுவிலுள்ள வட்டணைகளில் சூரியனைச் சுற்றி வருவதாகக் கண்டுபிடிக்கபட்டது. அவை சூரியனைச் சுற்றுவதால் அவற்றைக் கோளாகத்தான் மதிக்க வேண்டும். ஆனால் அவை மிகமிகச் சிறியவை. இந்தப் பொருள்கள் புள்ளியாகளாகத் தெரிகின்றன. அவை விண்மீன்களைப் போலவே புள்ளி புள்ளியாகத் தெரிகின்றன. அதனால் அவற்றுக்கு விண்மீண்களைப் போல வடிவமுள்ளவை என்று பொருள்படும் அஸ்டிராய்டு (asteroid) என்ற பெயர் இடப்பட்டது. ஆனால் சில அறிவியலாளர்கள் கோள்களை ஒத்தவை என்ற பொருள்படுகிற பிளானடாய்டு (planetoid) என்ற பெயரைப் பயன்படுத்துகிறார்கள். இவை சில வேளைகளில் புவியின் வளிமண்டலத்தில் புகுந்து விடுவதுண்டு. அவை காற்றுடன் உராய்ந்து சூடாகி எரிந்து விடும். அவற்றை விண்கொள்ளிகள் (meteors) என்கிறார்கள். சில விண்கொள்ளிகள் முழுவதுமாக எரிந்து விடாமல் அவற்றின் ஒரு பகுதி தரையில் வந்து விழுவதுண்டு. அவற்றை விண்தாது (meteorite) என்பார்கள். அது புவியின் வளிமண்டலத்தில் நுழையாமல் விண்வெளியிலேயே இருந்தால் அதை விண்கல் (meteroid) எனக் குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலான சிறுகோள்கள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் அமைந்த வட்டணைகளிலும் வியாழனைச் சுற்றி வியாழத் திரோயன்களாகவும் அமைகின்றன. புவியண்மை வாட்டணைச் சிறுகோள்கள் உட்பட, வேறு வட்டணைக் குடும்பச் சிறுகோள்களும் கணிசமான எண்ணிக்கையில் நிலவுகின்றன. இவை அவற்றின் உமிழ்வுக் கதிர்நிரல் பான்மையை வைத்துப் பின்வரும் மூன்று முதன்மைக் குழுக்களாகப் பகுக்கப்படுகின்றன: C வகை, M வகை, S வகை. சி வகை கரிமம் செறிந்ததாகும். எம் வகை பொன்மம் (உலோகம்) செறிந்ததாகும். எஸ் வகை சிலிகேட் கல் செறிந்ததாகும். இவற்றின் அளவுகள் பெரிதும் வேறுபடுகின்றன. இவற்றில் 1000 கிமீ அளவு குறுக்களவு அமைந்தவையும் உண்டு. இவை விண்வீழ்கற்களில் இருந்தும் வால்வெள்ளிகளில் இருந்தும் வேறுபட்டவை. வால்வெள்ளிகளின் இயைபுக் கூறுகள் பனிக்கட்டியும் தூசும் ஆகும். ஆனால் சிறுகோள்களின் உட்கூறுகள் கனிமங்களாலும் பாறையாலும் ஆனவை. மேலும் சிறுகோள்கள் சூரியனுக்கு அருகாமையில் உருவாகியவை. எனவே இவற்றில் வால்வெள்ளிகளில் உள்ளதைப்போல பனிக்கட்டி அமைவதில்லை. சிறுகோள்களும் விண்வீழ்கற்களும் அளவில் மட்டுமே வேறுபடுகின்றன. விண்வீழ்கற்கள் ஒரு மீட்டரினும் சிறியன. ஆனால் சிறுகோள்கள் ஒரு மீட்டரினும் பெரியவையாகும். கடைசியாக, விண்கற்கள் சிறுகோள் பொருள்களையோ வால்வெள்ளிப் பொருள்களையோ பெற்றிருக்கலாம். 4 வெசுட்டா எனும் சிறுகோள் மட்டுமே ஒளித்தெறிப்புப் பரப்பைக் கொண்டுள்ளது. எனவே இதைச் சரியான இருப்பில் உள்ளபோது, வெற்றுக்கண்ணாலேயே மிக இருண்ட வானில் பார்க்கலாம். அரிதாக புவியருகே வரும் சிறுகோள்கள் குறுகிய நேரத்துக்கு வெற்றுக்கண்ணுக்குப் புலப்படுவதுண்டு. 2016 மார்ச்சு வரை சிறுகோள் மையம் 1.3 மில்லியன் வான்பொருள்களை உள்புற, வெளிப்புற சூரியக் குடும்பத்தில் பதிவு செய்துள்ளது. இவற்றில் 750,000 பொருள்களுக்குப் போதுமான தகவல்கள் கிடைத்து எண்ணிட்டு பெயரிடப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் சிறுகோள்களைப் பற்றிப் பரப்புரை செய்ய ஜூன் 30 ஆம் நாளைச் பன்னாட்டுச் சிறுகோள் நாளாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நாள் உருசியக் குடியர்சில் உள்ள சைபீரியாவைத் துங்குசுக்கா சிறுகோள் 1908 ஜூன் 30 இல் மோதிய நாளை வைத்து ஒவ்வோராண்டும் கொண்டாடப்படுகிறது. கண்டுபிடிப்பு thumb|243 இடாவு அதன் நிலாவான டாக்டிலும். டாக்டில் தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளின் நிலாவாகும். கியூசெப்பே பியாசி எனும் வானியலாளரே 1801 ஆம் ஆண்டில், முதன் முதலில் சிறுகோளைக் கண்டறிந்தார். அதன் பெயர் சீரெசு (குறுங்கோள்) ஆகும். இதுவே சிறுகோள்களில் மிகவும் பெரியது. இது முதலில் கோளாகவே கருதப்பட்டது.For example, the Annual of Scientific Discovery for 1871, page 316, reads "Professor J. Watson has been awarded by the Paris Academy of Sciences, the astronomical prize, Lalande foundation, for the discovery of eight new asteroids in one year. The planet Lydia (No. 110), discovered by M. Borelly at the Marseilles Observatory [...] M. Borelly had previously discovered two planets bearing the numbers 91 and 99 in the system of asteroids revolving between Mars and Jupiter". ஆனால், இப்போது இது கோள்குறளியாகக் (குறுங்கோளாகக்)(dwarf planet) கருதப்படுகிறது. வால்வெள்ளிகள், செண்டார்கள், சிறிய நெப்டியுனியக் கடப்புப் பொருள்கள் அடங்க, அனைத்து பிற சிறுகோள்களும் இப்போது சிறிய சூரியக் குடும்பப் பொருள்களாக வகைபடுத்தப்படுகின்றன. இதற்குப் பின்னர் விண்மீன் போன்ற ஒளிப்புள்ளிகளாகத் தோன்றும் பிற சிறுகோள்வட்டு அமையாத வான்பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை அவற்றின் தோற்ற இயக்கங்களால் விண்மீன்களில் இருந்து வேறுபடுத்தப்பட்டன இதைவைத்து வானியலாளர் வில்லியம் எர்செல் விண்மீன்போலி அல்லது விண்மீன்போன்ற எனும் பொருள்வாய்ந்த "asteroid" எனும் ஆங்கிலச் சொல்லை அறிமுகப்படுத்தினார்.In an oral presentation (), Clifford Cunningham presented his finding that the word has been coined by Charles Burney, Jr., the son of a friend of Herschel, see . See also இது கிரேக்கச் சொல்லான ἀστεροειδής, அல்லது ஆங்கிலத்தில் asteroeidēs என ஒலிக்கப்படும் 'விண்மீன்போன்ற, விண்மீன்வடிவ' எனும்பொருள் அமைந்த சொல் கொணரப்பட்டது. பண்டைய கிரேக்கத்தில் astēr என்றால் 'விண்மீன், கோள்' எனப் பொருள்படும். இவற்றுக்கு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைத் தொடக்க காலத்தில், சிறு எனும் முன்னடையில்லாமலே "asteroid" "planet" எனும் இருசொற்களுமே மாற்றிமாற்றி அறிவியல் நடைமுறையில் வழங்கப்பட்டு வந்தன. எடுத்துக்காட்டாக Annual of Scientific Discovery for 1871, page 316, reads "Professor J. Watson has been awarded by the Paris Academy of Sciences, the astronomical prize, Lalande foundation, for the discovery of eight new asteroids in one year. The planet Lydia (No. 110), discovered by M. Borelly at the Marseilles Observatory [...] M. Borelly had previously discovered two planets bearing the numbers 91 and 99 in the system of asteroids revolving between Mars and Jupiter". வரலாற்று முறைகள் கடந்த இருநூற்றாண்டுகளில் சிறுகோள் கண்டுபிடிப்பு முறைகள் பேரளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. சர் வில்லியம் எர்செல் 1781 இல் வருணனைத் (யுரேனசைத்) திசியசு போடின் விதியால் கண்டுபிடித்ததால், பதினெட்டாம் நூற்றண்டின் கடைசி ஆண்டுகளில் பாரன் பிரான்சு சேவர் வான் சாக் என்பார் 24 வானியலாளர்களை அழைத்துச் சூரியனில் இருந்து 2.8 வானியல் அலகு தொலைவுக்குள் அமைய வாய்ப்புள்ள, கண்டுபிடிக்கத் தவறிய, கோள்களைத் தேடிக் கண்டுபிடிக்கச் சொன்னார். இதற்கு அந்தக் குறிப்பிட்ட ஓரைப் பட்டைக்குள் அமைந்த அனைத்து விண்மீன்களையுமே ஏற்கப்பட்ட மிக அருகிய மங்கலான பொலிவு வரை அட்டவணைப்படுத்திய வான்வரைபடம் தேவையாகும். இதை வரைந்த்தும், பிறகு, பின்வரும் இரவுகளில் இப்பட்டைக்குள் அமையும் இயங்கும் பொருள்களைத் தேடல் வேண்டும். கண்டுபிடிக்கத் தவறிய கோளின் இயக்கம் ஒரு மணி நேரத்தில் 30 நொடி வட்டவில்லாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதை நோக்கீட்டாளர்கள் எளிதாக கண்டறியலாம். thumb|right|200px|முதல் குறுங்கோள் படிமம்: (சசீரெசுவும், வெசுட்டாவும்) செவ்வாயில் இருந்து கியூரியாசிட்டி தரையூர்தியால் பார்க்கப்பட்ட காட்சி, (20 ஏப்பிரல் 2014). முதல் வான்பொருள், சீரெசு, இந்தக் குழு உறுப்பினர் எவராலும் கண்டறியப்படவில்லை. ஆனால் அது தற்செயலாக, சிசிலியில் உள்ள பலெர்மோ வான்காணக இயக்குநராகிய கியூசெப்பே பியாசியால் 1801 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தாரசு விண்மீன்குழுவில் விண்மீன்போன்ற புதிய வான்பொருளைக் கண்டார். பின் அதன் இடப்பெயர்ச்சியைப் பல இரவுகளாகக் கண்காணித்தார். அதே ஆண்டில் பிறகு, கார்ல் பிரீடுரிக் காசு இந்த நோக்கிடுகளைப் பயன்படுத்தி, இந்த அறியப்படாத பொருளின் வட்டணையைக் கணக்கிட்டார். இது செவ்வாயின் வட்டணைக்கும் வியாழனின் வட்டணைக்கும் இடையில் அமைவதைக் கண்டுபிடித்தார். கியூசெப்பே பியாசி இதற்கு உரோம வேளாண்கடவுளான சீரெசுவின் பெயரை இட்டார். பிற மூன்று குறுங்கோள்களான (2 பல்லசுவும் 3 யூனோவும் 4 வெசுட்டாவும்) அடுத்த சில ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் வெசுட்டா 1807 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த எட்டு ஆண்டுகள் தேட்ட்த்தில் புதிய குறுங்கோள் ஏதும் கிடைக்காமல் போகவே, அனைவரும் மேலும் தொடர்ந்து தேடுவதை நிறுத்திக்கொண்டனர். என்றாலும், கார்ல் உலூத்விக் என்கே 1830 இல் தொடங்கி, தொடர்ந்தும் குறுங்கோள் வேட்டையில் ஈடுபட்டார். பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் கடந்த 38 ஆண்டுகளில் முதன்முதலாக, 5 அசுட்டிரேயியாவைக் கண்டுபிடித்தார். அடுத்த இரண்டாண்டுகட்குள், இவர் 6 கெபேவைக் கண்டுபிடித்தார். இதற்குப் பிறகு, பல வானியலாளர்கள் இத்தேடலில் கலந்துகொண்டனர். எனவே 1945 ஐத் தவிர, ஒவ்வோராண்டும் குறைந்தது ஒரு குறுங்கோளாவது கண்டுபிடிக்கப்பட்டது.. இக்காலக் குறுங்கோள் வேட்டையாளர்களாக ஜான் இரசல் இந்த், அன்னிபேல் தெ கசுபாரிசு, கார்ல் தியோடோர் இராபர்ட் உலூதர், எர்மன் மேயர் சாலமன் கோல்டுசுமித், ழீன் சாகோர்னாக், ஜேம்சு பெர்கூசன், நார்மன் இராபர்ட் போகுசன், எர்னெசுட்டு வில்கெல்ம் இலெபெரச்ட் டெம்பெல், ஜேம்சு கிரைகு வாட்சன், கிறித்தியான் என்றிச் பிரீடுரிக் பீட்டர்சு, அல்போன்சு உலூயிசு நிகோலசு போரெலி, யோகான் பாலிசா, பவுல் என்றி, பிராசுபர் என்றி எனும் என்றி உடன்பிறப்புகள், ஆகத்தே சார்லோயிசு ஆகியோரைக் குறிப்பிடலாம். மேக்சு வுல்ஃப் என்பார் 1891இல் முன்னோடியாக குறுங்கோள்களைக் கண்டுபிடிக்கும் வானொளிப்படவியலை அறிமுகப்படுத்தினார். இம்முறைய்ல் ஒளிப்பட்த்தட்டில் குறுங்கோள்களின் இயக்கம் வெண்கீறைகளாக அமையும். பழைய கட்புல நோக்கீட்டு முறையை விட இது குறுங்கோள்களின் கண்டுபிடிப்பு வீதத்தை வியப்புறும் வகையில் கூட்டியது: வுல்ஃப் மட்டுமே 323 புரூசியாவில் தொடங்கி 248 குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். மேலும் அதுவரையில் ஏறத்தாழ, 300 குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு மேலும் பல இருக்க வாய்ப்பிருந்தாலுக் அவை வானப் புழுக்கள் எனக்கொண்டு வானியலாளர்கள் அவற்றின் கண்டுபிடிப்பில் ஆர்வம் கொள்லவில்லை. இச்சொற்றொடரைக் கூறியவர் எடுவார்டு சூயசு ஆவார் எனக் கருதப்படுகிறது. மேலும் ஒரு நூற்றாண்டு கழிந்தபிறகும், சில ஆயிரம் குறுங்கோள்களே கண்டுபிடிக்கப்பட்டு எண்ணும் பெயரும் இடப்பட்டுள்ளன. 1900 களின் முறைகளும் புத்தியல் கால அறிக்கைகளும் குறுங்கோள்களின் கண்டுபிடிப்பு 1998 வரை நான்கு படிநிலை நிகழ்வால் கண்ட்றியப்பட்டன: முதலில் வானின் ஒருபகுதி அகல்புலத் தொலைநோக்கியால் ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. இவை வான்வரைபடங்கள் எனவும் அழைக்கப்பட்டன. இவை ஒருமணி நேர இடைவெளிகளில் எடுக்கப்பட்டன. பல நாட்கள் தொடர்ந்து இதுபோல ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன. இரண்டாம் படிநிலையாக, ஒரே வான்பகுதி சார்ந்த இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் ஒரு பருநோக்கியால் நோக்கப்பட்டன. சூரியனை வட்டணையில் சுற்றிவரும் எந்த வொரு வான்பொருளும் தொடர்ந்த இரு ஒளிப்படங்களில் சற்றே நகர்ந்திருக்கம். பருநோக்கியில் அந்த வான்பொருளின் தோற்றம் விண்மீன்களின் பின்னணியில் மெல்ல மிதப்பதுபோல அமையும். மூன்றாம் படிநிலையாக, அப்படி நகரும் வான்பொருள் இனங்காணப்படும். பின்னர் அர்ஹன் இருப்பு துல்லியமாக, இலக்கவியல் நுண்ணோக்கியால் அளக்கப்படும். இந்த வான்பொருளின் இருப்பு விண்மீன் இருப்புகள் சார்ந்து அளக்கப்படும். முதல் மூன்று படிநிலைகள் மட்டுமே குறுங்கோள் கண்டுபிடிப்பை முழுமையாக்கி உறுதிபடுத்தாது: நோக்கீட்டாளர் ஒப்ர் ஒதுக்கீட்டைட்த்தை மட்டுமே கண்டுள்ளார். இதற்கு தற்காலிகமாக, கண்டுபிடித்த ஆண்டையும் அரைமாத கண்டுபிப்பு கடிதத்தையும் இறுதியாக கண்டுபிடிப்பின் வரிசைமுறை எண்ணையும் வைத்து ஒரு பெயரீடு தரப்படும் (எ. கா.: 1998 FJ|74). கடைசிப் படிநிலையாக, இதன் இருப்புகளும் நோக்கீட்டு நேரமும் சிறுகோள் மையத்துக்கு அனுப்ப்ப்படும். அங்கு ஒற்றை வட்டணையில் தரப்பட்ட முந்தiyய ஒதுக்கீட்டிடங்களுடன் ஒப்பிட்டு கணினி நிரல்கள் அவற்ரில் எந்த இருப்பில் இந்த புது இருப்பை வைப்பது என்பதைத் தீர்மானிக்கும்.அப்போது இதற்கு ஓர் அட்டவணை எண் தரப்படும். பின்னர் இந்த வான்பொருளின் வட்டணையைக் கணக்கிட்டு, இந்த வான்பொருளுக்குப் பெயரிடும் உரிமை பன்னாட்டு வானியல் ஒன்றிய ஒப்புதலுடன் கண்டுபிடிப்பாளருக்கு வழங்கப்படும். கணினிவழி முறைகள் framed|right|2004 FH மையப்புள்ளியாகவும் வரிசைநிரலாக அமையும் ஒளிவீச்சு நகர்வு செயற்கோளாகவும் அமைதல். குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பல்வேறு சிறுகோள்களின் நிகழ்படத் தொகுப்பு முரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுலவி புலர்ச்சி, சி. ஜெயபாரதன் *
விண்மீன்
https://ta.wikipedia.org/wiki/விண்மீன்
thumb|250px|right|தனு நட்சத்திர மேகம் அபிள் விண்வெளித் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட, பால்வெளி விண்மீன் பேரடையிலுள்ள, தனு நட்சத்திர மேகத்தின் இப் படத்தில் நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் தெரிகின்றன. விண்மீன், உடு, நாள்மீன், அல்லது நட்சத்திரம் (star) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இவை பாரிய அளவு வளிகளாலும் பிளாசுமாகளினாலும் ஆக்கப்பட்டுள்ளன. பூமிக்கு மிகவும் அண்மையிலுள்ள விண்மீன் சூரியன் ஆகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது பூமியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினால் ஆகும். பூமிக்கு அருகிலுள்ள நட்சத்திரம் சூரியன் ஆகும். எனினும் சூரியன் பூமிக்கு மிக அண்மையில் உள்ளதால் மற்றைய விண்மீன்களைப் போலல்லாது வட்டமான தட்டுப்போல் தெரிகிறதோடு மட்டுமன்றி பகலில் வெளிச்சமும் தருகிறது. அணுக்கரு இணைவு வினை நிகழும் பொழுது விண்மீன்களில் இருந்து எராளமான ஆற்றல் வெளிவிடப்படுன்றது; பொதுவாக அனைத்து விண்மீன்களும் ஒளி, வெப்பம், புற ஊதாக் கதிர்கள், ஊடு (எக்சு ரே) - கதிர்கள் மற்றும் வேறு பல கதிர் வீச்சுக்களை உற்பத்தி செய்கின்றன. உடுக்களில் அதிகமாக ஐதரசனும், ஈலியமுமே காணப்படுகின்றது. அங்கு ஐதரசன் அணுக்கரு இணைவு மூலம் ஈலியமாக மாறும் செயற்பாடு இடம்பெறும். அண்டத்தில் பல பில்லியன் கணக்கான விண்மீன் பேரடைகள் (Galaxy) உள்ளன. ஒவ்வொரு விண்மீன் பேரடையிலும் 100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன. சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம் புரொக்சிமா செண்டோரி என்பதாகும். இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள் (4 இலட்சம் கோடி கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் ஆகும். அறியப்பட்டுள்ள அண்டவெளியில் 70 கோடி கோடி கோடி (70,00,00,00,00,00,00,00,00,00,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று ரீதியாக முக்கியமான உடுக்கள் அனைத்தும் உடுத்தொகுதிகளாகவும், கதிர்வங்களாகவும் (asterisms) குழுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் மிகத் தெளிவான இரவு வானில் ஒரு மனிதனுடைய வெற்றுக்கண்ணுக்கு 600 - 3,000 தென்படும். விண்மீன்கள் தம் வாழ்க்கையின் இறுதி நிலையை அடையும் போது ஈலியத்தை காபன், ஒட்சிசன் போன்ற வேறு சில பாரிய இரசாயன மூலகங்களாக மாற்ற முற்படும். இதன்போது அணுக்கரு இணைவு வினை அளவுக்கு அதிகமான ஆற்றலை உற்பத்தியாக்கும். இந்த ஆற்றல் விண்மீனை மிகவும் வெப்பமாக்கச் செய்யும். விண்மீன்களால் உற்பத்தி செய்யப்பட்ட சக்தி கதிர்வீச்சாக மாறிச்செல்லும். இவ்வாரு மாறிச்செல்லும் சக்தி அல்லது ஆற்றல் மின்காந்தக் கதிவீச்சு என அழைக்கப்படும். விண்மீனின் வாழ்க்கை thumb|right|150px|அபிள் தொலைநோக்கியின் பார்வையில் “ஆக்கத்தின் தூண்கள்” - கழுகு விண்முகிலில் விண்மீன்கள் உருவாகும் இடம். விண்மீன்கள் தம் வாழ்க்கையில் முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளன. அவை, ஒண்முகிலிலிருந்து முகிழ்மீன் உருவாதல் நிலையான விண்மீனாக மாறுதல் தளர்தல் நெபுலாவிலிருந்து முகிழ் மீன் உருவாதல் விண்மீன் உருவாதல் விண்மீன்களின் பிறப்பு விண்மீன் பேரடைகளினால் அண்டத்தில் சிதற விடப்படும் பாரிய மூலக்கூற்று முகில்களில் இருந்து ஆரம்பமாகின்றது. இப்பாரிய மூலக்கூற்று முகில்கள் நெபுலா (nebulae) என அழைக்கப்படும். இந்த நெபுலாக்கள் ஈர்ப்புவிசையினால் தாமாகவே நீண்டு ஒடுங்குகின்றன. அவை சிறியதாய் வந்தபின் வேகமாக சுழல்வதோடு மட்டுமின்றி வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றன. இதற்கு கோண உந்த அழிவின்மை (Conservation of angular momentum) என்பதே காரணம் ஆகும். இவ்வாறே ஒரு புதிய விண்மீன் உருவாகின்றது. ஒரு புதிய விண்மீனில் அழுத்தம் (Pressure) உருவாதலே விண்மீனுடைய வெப்பநிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது. இப்பருவம் முகிழ்மீன் (Protostar) என அழைக்கப்படுகின்றது. நெபுலாக்கள் நெபுலாக்கள் பிரதானமாக ஐதரசன்,ஈலியம் முதலான வாயுக்களைக் கொண்டதாகவும், பல ஒளியாண்டுகள் நீள அகலம் கொண்டதாயுமிருக்கும். நிலையான விண்மீனாதல் ஒரு முகிழ்மீன் ஒன்று அன்னச்சூழவுள்ள பாரிய மூலக்கூற்று முகில்களின் மிகுதிகளை வைத்துத் தன் பருமனை அதிகரிக்க முயற்சிக்கும் இப்பருவமே நிலையான விண்மீன் எனப்படும். முகிழ்மீன் ஒரு நிலையான விண்மீனாவதற்கு அதன் இரு முக்கிய விசைகளும் சமன்பட வேண்டும். முகிழ்மீன் தன் சுய ஈர்ப்பு விசையால் சுருங்கத் தொடங்கும். முகிழ்மீனில் உள்ள ஐதரசன் அணுக்கள் இணைந்து ஈலியம் அணுக்களாக மாறும் போது பெருமளவு ஆற்றல் உண்டாகி முகிழ்மீன் விரிவடையவும் முயற்சிக்கும். சில கோடி ஆண்டுகளில் இரண்டு விசைகளும் சமமானவுடன் அளவில் பெருமளவு மாற்றம் ஏற்படாது. அவ் விண்மீன் பில்லியன் வருடங்களாக ஐதரசனை ஈலியமாக மாற்றும் செயற்பாட்டை மேற்கொண்டு ஒளியை வெளிவிட்டுக்கொண்டே இருக்கும். விண்மீனின் அளவைப் பொறுத்து எண்பது முதல் தொண்ணூறு சதவீதம் ஐதரசன் அணுக்கள் தீரும் வரை இதே அளவு நீடிக்கும். விசை சமன்பட்டதில் இருந்து இந்நிலையை அடையும் வரையே நிலையான விண்மீனாக இருக்க முடியும். சூரியன் ஒரு நிலையான விண்மீன் ஆகும். தளர்ச்சியும் அழிவும் விண்மீனின் அளவைப் பொறுத்து எண்பது முதல் தொண்ணூறு விழுக்காடு ஐதரசன் அணுக்கள் தீர்ந்த பிறகு விண்மீனின் வீங்கும் ஆற்றல் குறைவதால் சுய ஈர்ப்பு விசையின் மூலம் சுருங்கும் ஆற்றல் அதிகரிக்கும். இவ்வாறு இது சுருங்கும் போது அந்த விண்மீனின் மொத்த எடையை பொருத்து அது பல்வேறு நிலைகளை அடைகிறது. அவை, சூரியன் அளவுக்கு எடையுள்ள விண்மீன்கள் சில கோடி வருடங்கள் சிவப்பு அரக்கனாக இருந்து விட்டு பின்பு வெண் குறுமீனாக மாறிவிடும். அதுவே சூரியன் அளவுக்கு எடையுள்ள விண்மீன் இரட்டை விண்மீன்களில் ஒன்றாக இருந்தால் அதில் குறுமீன் வெடிப்பு ஏற்பட்டு பிற்பாடு வெண் குறுமீனாக மாறிவிடும். சூரியனை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு எடையுள்ள விண்மீன்கள் கருங்குழியாக மாறிவிடும். சூரியனை விட ஐந்தில் இருந்து எட்டு மடங்கு எடையுள்ள விண்மீன்கள் மீயொளிர் விண்மீன் வெடிப்பை நிகழ்த்திவிட்டு நொதுமி விண்மீனாக மாறிவிடும். சூரியனை விட பத்தில் இருந்து நாற்பது மடங்கு எடையுள்ள விண்மீன்கள் மீயொளிர் விண்மீன் வெடிப்பை நிகழ்த்திவிட்டு கருங்குழியாக மாறிவிடும். எனினும் பொதுவாக சூரியன் போன்ற விண்மீன்களின் தளர்ச்சியை எடுத்துக்கொண்டால்; ஐதரசன் தீர்ந்து கொண்டு செல்ல ஈலியம் அதிகரித்துச் செல்லும். இறுதியில் ஈலியம் விண்மீனின் உள் அகணிவரை (Core) நீடிக்கும். இதன் போது விண்மீனினுடை வெப்பநிலை மேலும் பலமடங்காக அதிகரிக்க அதனுடைய பருமனும் பலமடங்காக (250 மடங்கு) அதிகரிக்கும். உதாரணமாக நம் சூரியன் செவ்வாய்க் கோள் இருக்கும் இடம் வரை அதிகரிக்கும். இந்நிலை சிவப்பு அரக்கன் (Red giant) அல்லது செவ்வசுரன் என அழைக்கப்படும். சில காலத்தின் பின் சிவப்பு அரக்கன் வெடித்துச் சிதறி அகிலத்தில் விடப்படும். இவ்வாறு வெடித்துச் சிதறிய செவ்வசுரனின் வெளிப்பகுதி கோள் நெபுலா (planetary nebula) என அழைக்கப்படும். இக்கோள் நெபுலா உதிர்ந்து போய் ஒரு சிறிய விண்மீனாக தோற்றம் பெறுகின்றது. அச்சிறு உடுவின் மத்திய பகுதி வெண் குறுமீன் (White dwarf) அல்லது வெண்ணிறக் குள்ளன் என அழைக்கப்படும். இவை பல ஆண்டுகளுக்குப் பின் மிகவும் குளிர்மையாக இருக்கும். இறுதியில் அவை கறுப்பு நிறமாக வந்து எவ்விதமான ஆற்றலையும் வெளிவிடாது. இதற்கு கருப்பு விண்மீன் (Black dwarf) அல்லது கருங்குள்ளன் என அழைக்கப்படும். இவ்வாறு இல்லாமல் சூரியனை விட பருமனில் அதிகமாய் உள்ள விண்மீன்கள் மேலே குறிப்பிட்டது போன்று, சூரியன் போன்ற விண்மீன்களின் பரிணாமப் பாதையில் அன்றி வெவ்வேறு பரிணாமப் பாதைகளைக் கொண்டுள்ளன. கருப்பு விண்மீன்கள் thumb|right|அண்டத்தில் கரும்பொருள் விண்மீன்களின் பங்கு கருங்குழியாக மாறிய விண்மீன்கள் அண்டத்தில் குறிப்பிட்ட அளவில் அறியப்பட்டுள்ளன. காட்சிக்குட்பட்ட பேரண்டத்தில் தற்போதைய கருப்பு விண்மீன்கள் இருபத்து மூன்று விழுக்காடு உள்ளன. இதுவே இன்னும் 1,300 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் அறுபத்து மூன்று விழுக்காடாக மாறிவிடும். தோற்றம் பிரகாசம் கி.மு 150 ஆம் ஆண்டில் கிரேக்க வானியலாளரான இப்பார்க்கசு உடுக்களின் பிரகாசத்தை வைத்து அவற்றை ஆறு பிரிவுகளாகப் பிரித்துள்ளார். இதற்கு மேக்னியூட் அளவு முறை என்று பெயர். மேற்கோள்கள் மூல நூல் வான சாஸ்திரம், வேங்கடம், விகடன் பிரசுரம், . வெளி இணைப்பு கணேஷ் அரவிந்த் எழுதிய நட்சத்திரமே...! நட்சத்திரமே...!! கட்டுரை தமிழ் மொழி விண்வெளி தகவல் பகுப்பு:விண்மீன்கள் * பகுப்பு:வானியல்
விளையாட்டுப் பொருட்கள் பட்டியல்
https://ta.wikipedia.org/wiki/விளையாட்டுப்_பொருட்கள்_பட்டியல்
லெகோ (LEGO) பார்பி பொம்மை (Barbie Doll) டெடி கரடிக்குட்டி (Teddy Bear) ரூபிக்ஸ் கியூப் (Rubik's Cube) போளை (Marbles) தொலைக் கட்டுப்பாட்டு விளையாட்டுப் பொருட்கள் விளையாட்டு ஆயுதங்கள் விளையாட்டு இசைக் கருவிகள் பம்பரம் மாதிரித் தொடர்வண்டி பந்து பொம்மை பொம்மை வீடு ஆடு குதிரை பகுப்பு:விளையாட்டுப் பொருட்கள்
லெகோ
https://ta.wikipedia.org/wiki/லெகோ
right|thumb|லெகோ சின்னம் thumb|Lego Duplo right|thumb|2x4 லெகோ குற்றி லெகோ என்பது, டென்மார்க்கைச் சேர்ந்த விளையாட்டுப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனமாகும். பிளாஸ்டிக்கினாலான ஒன்றுடனொன்று பொருத்தக்கூடிய குற்றிகளைத் தயாரிப்பதன் மூலம் பெரிதும் அறியப்பட்ட நிறுவனம் இது. "லெகோ" எதிர் "லெகோஸ்" லெகொ நிறுவனத்தின் பிரபல விளையாட்டுப்பொருளான பொருத்தும் பிளஸ்டிக்குற்றிகளைக் குறிப்பதற்கும் பலர் "லெகோ" அல்லது "லெகோக்கள்" என்ற வார்த்தையையே பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமன்றி, வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் இது போன்ற குற்றிகளையும் இச் சொற்களாலேயே குறித்து வருகிறார்கள். ஆனால் லெகோ நிறுவனம், தங்களுடைய வணிகப் பெயர் பொதுப்பெயாராகி வருவதை விரும்பவில்லை. 1970 மற்றும் 1980 களில், இந்நிறுவனத்தின் உற்பத்திப் பட்டியல்களில், தங்கள் உற்பத்தியை "லெகோ குற்றிகள்" அல்லது "லெகொ விளையாட்டுப் பொருட்கள்" என அழைக்கும்படியும், "லெகோக்கள்" என அழைக்கவேண்டாமெனவும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். லெகோவின் வரலாறு "லெகோ" இன்றிருப்பதைப்போல், எக்காலத்திலும் உயர்தரமான பொருத்தும் குற்றிகளாக இருந்ததென்று சொல்லிவிடமுடியாது. டென்மார்க்கிலுள்ள, பில்லண்ட் என்னுமிடத்தில், ஓலே கிர்க் கிறிஸ்டியன்சென் என்னும் ஏழைத் தச்சன் ஒருவரின் பட்டடையில் மிக எளிமையாக இது ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் புதுமையான குடும்பத் தொழில் இன்று வளர்ந்து, உலகின் மிகவும் மதிக்கப்படுகின்ற விளையாட்டுப் பொருள் நிறுவனங்களில் ஒன்றாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர் 1934ல் கிறிஸ்டியன்சென்னால் உருவாக்கப்பட்டது. "நன்றாக விளையாடு" என்னும் பொருளையுடைய, டேனிஷ் மொழித் தொடரான leg godt என்பதிலிருந்து பெறப்பட்டதே "LEGO" என்னும் வணிகப் பெயர். பகுப்பு:விளையாட்டுப் பொருட்கள் பகுப்பு:பொம்மை வகைக்குறிகள் da:LEGO
டெடி கரடிக்குட்டி
https://ta.wikipedia.org/wiki/டெடி_கரடிக்குட்டி
thumb|300px|டெடி கரடிக்குட்டி thumb|டெடி கரடிக்குட்டி thumb|300px|பரிமானுடைய (Barryman's) மூலக் கேலிச் சித்திரம் (1902) டெடி கரடிக்குட்டி (Teddy bear) என்பது குழந்தைகளுக்கான பஞ்சாலான ஒரு விளையாட்டுப் பொருளாகும். இது குழந்தைகளை மகிழ்விக்கப் பயன்படுகிறது. உலகின் முதல் டெடி கரடி அருங்காட்சியகமானது இங்கிலாந்தில் 1984 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. டெடி என்ற பெயர் அமெரிக்க குடியரசுத் தலைவரான தியோடோர் ரூஸ்வெல்ட் அவர்களின் நினைவாகப் பெயரிடப்பட்டது. அவரது செல்லப்பெயர் டெடி என்பதாகும். பகுப்பு:குழந்தை விளையாட்டுப் பொருட்கள்
ரூபிக்கின் கனசதுரம்
https://ta.wikipedia.org/wiki/ரூபிக்கின்_கனசதுரம்
right|thumb|ரூபிக்ஸ் கியூப் thumb|250px|ரூபிக்ஸ் கியூப் ரூபிக்கின் கனசதுரம் (ரூபிக்ஸ் கியூப், Rubik's Cube) அங்கேரிய சிற்பியும், கட்டிடக்கலைப் பேராசிரியருமான ஏர்னோ ரூபிக் என்பவரால் 1974ல் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு பொறிமுறைப் புதிர் ஆகும். இதன் ஒவ்வொரு பக்கத்திலும் ஒன்பது சிறு சதுரங்கள், ஆறு வித்தியாசமான வண்ணங்களால் இது உருவாக்கப்பட்டது. பொதுவாக இதில் வெள்ளை வண்ணத்தின் எதிர்ப்பக்கம் மஞ்சள் வன்ணமும், நீல வண்ணத்தின் எதிர்ப்பக்கம் பச்சை வண்ணமும், சிகப்பு வண்ணத்தின் எதிர்ப்பக்கம் ஆரஞ்சு வண்ணமும் அமைந்திருக்கும். thumb|தற்போதைய ரூபிக்ஸ் க்யூபின் வண்ண அமைப்பு தொடக்கத்தில் இது மேஜிக் கியூப் என்றே அழைக்கப்பட்டது. பிறகு 1980-ம் ஆண்டில் ‘ரூபிக்ஸ் கியூப்’ எனப் பெயர் மாற்றப்பட்டது. ஜனவரி 2009 வரை 35 கோடிக்கு மேற்பட்ட ரூபிக் கியூப்புகள் உலகம் முழுதும் விற்பனையாகியிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே உலகிலேயே மிக அதிக அளவில் விற்பனையாகியுள்ள புதிர் விளையாட்டும் பொம்மைப் பொருளுமாகும்.Marshall, Ray. Squaring up to the Rubchallenge. icNewcastle. Retrieved August 15, 2005. ஹங்கேரியில் 1982 ஆம் ஆண்டு முதன்முதலாக ரூபிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மின்ஹதாய் என்பவர் 22.95 நொடிகளில் ரூபிக் கியூபுக்குத் தீர்வு கண்டு சாதனை படைத்தார். 2003 ஆம் ஆண்டிலிருந்து ஹங்கேரியில் தொடர்ச்சியாக உலக ரூபிக் வாகையர் போட்டிகளை ரூபிக் நிறுவனம் நடத்தி வருகிறது. 2007-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திபாட் ஜாக்னாட் என்பவர் ரூபி புதிரைச் சரி செய்து புதிய உலகச் சாதனை செய்தார். 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில் (9.86 நொடிகள்) இந்தச் சாதனையைப் படைத்தார். 1980-களில் ரூபிக் கியூப் பிரபலத்தின் உச்சத்தை எட்டியது. இதன் வெளியீட்டுக்குச் சற்றுப் பின்னர், Rubik's Revenge, ஒரு 4 x 4 x 4 பதிப்பு உட்பட இதையொத்த புதிர்கள் பல ரூபிக்கினாலும் பிறராலும் வெளியிடப்பட்டன. 2 x 2 x 2 மற்றும் 5 x 5 x 5 அளவுக் குற்றிகளும் வெளியிடப்பட்டன. அவை முறையே சட்டைப்பைக் குற்றி, பேராசிரியருடைய குற்றி என அறியப்பட்டன. பிரமிட் வடிவ பிரமிங்க்ஸ் ™, போன்ற பல்வேறுவடிவங்களிலும் கூட இவை வெளிவந்தன. "Rubik's Cube" செவன் டவுன்சு லிட். இன் வணிகக்குறியாகும். ஏர்னோ ரூபிக், இதன் இயங்கு முறைக்கான உரிமத்தைப் பெற்றுள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் உலகப் புகழ் "ரூபிக்" பகுப்பு:விளையாட்டுப் பொருட்கள் பகுப்பு:புதிர்கள்
மொழிகளும், மொழிக் குடும்பங்களும்
https://ta.wikipedia.org/wiki/மொழிகளும்,_மொழிக்_குடும்பங்களும்
thumb|400px|மொழிக்குடும்பங்களின் பரவல் பெரும்பாலான மொழிகள், ஏதாவதொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. ஒரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எல்லாம் ஒரு பொதுமொழியிலிருந்தே தோன்றின. இத்தகைய பொதுமொழிகள் பல இன்று வழக்கிழந்து போய்விட்டன. அவற்றிலிருந்து தோன்றித் தற்போது வழக்கிலுள்ள மொழிகள் மூலமாகவே மேற்படி குடும்பப் பொது மொழிகளின் தன்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது. மொழிக்குடும்பங்கள், மேலும் பல துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்படுள்ளன. அவை "கிளைகள்" எனப்படுகின்றன. மொழிக்குடும்ப வரலாறு பொதுவாக ஒரு "மர"மாகச் சித்தரிக்கப்படுவதாலேயே மூலத்திலிருந்து பிரிந்தவை கிளைகள் எனப்படுகின்றன. ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு கிளையின் பொது மூல மொழி, அவற்றின் "முதல்நிலை மொழி" என்று அழைக்கப்படுகின்றது. உதாரணமாகத் திராவிட மொழிக் குடும்பத்தின் மூலமொழி முதல்நிலைத் திராவிட மொழி எனவும், இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் மூலமொழி முதல்நிலை இந்தோ-ஐரோப்பிய மொழி எனவும் குறிப்பிடப் படுகின்றன. இயற்கை மொழிகள் முக்கிய மொழிக் குடும்பங்கள் (குடும்பங்களிடையேயான தொடர்புகளைக் கருதாது, புவியியல் ரீதியில் வகைப்படுத்தப்பட்டவை இங்கே "புல்லட்" குறிகளுடன் தரப்பட்டுள்ளவை அறியப்பட்ட மொழிக்குடும்பங்களின் பெயர்களாகும். அவற்றின் மேலே தரப்பட்டுள்ள புவியியல் ரீதியான தலைப்புக்கள் புரிந்துகொள்வதற்கு எளிதாக சிறு பகுதிகளாகப் பிரிக்கும் வசதிக்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மேற்படி மொழிகளடங்கிய பெருங் குடும்பங்களாகக் கொள்ளப்படக்கூடாது. ஆபிரிக்கா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் மொழிக்குடும்பங்கள் ஆபிரிக்க-ஆசிய மொழிகள் நைகர்-கொங்கோ மொழிகள் ஐரோப்பா, வட ஆசியா,மேற்காசியா மற்றும் தென்னாசியாவைச் சேர்ந்த மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் காக்கேசிய மொழிகள் (பொதுவாக இது வட காக்கேசிய மொழிகள், தென் காக்கேசிய மொழிகள் என இரு வேறு மொழிக்குடும்பங்களாகவும் கருதப்படுவதுண்டு). அல்ட்டாயிக் மொழிகள் உராலிக் மொழிகள் யுக்காகிர் மொழிகள் (சிலர் இதனை யுராலிக் குடும்பத்தில் சேர்ப்பர்.) சுக்கோத்கோ-கம்சத்கான் மொழிகள் யெனிசேய்-ஒஸ்த்யக் மொழிகள் திராவிட மொழிகள் (சிலர் இதனை பெரிய எலாமோ-திராவிட மொழிக் குடும்பத்தில் உள்ளடக்குவார்கள்.) அந்தமான் மொழிகள் கிழக்காசியா, தென்கிழக்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளைச் சேர்ந்த மொழிக்குடும்பங்கள் ஆத்திரோஆசிய மொழிகள் ஆத்திரோனீசியன் (மலாயோ-பாலினீசியன்) மொழிகள் சீன-திபெத்திய மொழிகள் (சிலர் தாய்-கடை மற்றும் இமொங்-மியென் மொழிகளையும் இக் குடும்பத்துள் சேர்த்துக்கொள்வர்) தாய் மொழிகள் இமொங்-மியென் மொழிகள் ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மொழிகள் (பல் குடும்பங்கள்) பப்புவன் மொழிகள் அமெரிக்காக்களைச் சேர்ந்த மொழிகள் சுதேசி அமெரிக்க மொழிகள் (பல் குடும்பங்கள்) துபி மொழிகள் எசுகிமோ-அலெயுத் மொழிகள் முன்மொழியப்பட்டுள்ள மொழிப் பெருங்குடும்பங்கள் யூரல்-அல்ட்டாயிக் மொழிகள் முதல்நிலை பொண்டிக் மொழிகள் ஐபீரிய-காக்கேசிய மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளை உள்ளடக்கக்கூடிய பெருங்குடும்பங்கள் இயூரேசியாட்டிக் நொசுற்றேசியன் நொஸ்ட்ராட்டிக் மொழிகள் முதல்நிலை-உலக மொழிகள் கிரயோல் மொழிகள், பிட்கின்கள் மற்றும் வணிக மொழிகள் பிசுலாமா சினூக் அவாய் கிரயோல் எயிட்டிய கிரயோல் கிரி மோட்டு பிசின் (மொழி) சங்கோ தோக் பிசின் தனித்த மொழிகள் சைகை மொழிகள் அமெரிக்க சைகை மொழி ஒசுலான், அவுத்திரேலியாவில் பயன்படுத்தப்படுவது. பிரித்தானியச் சைகை மொழி (BSL) ஒல்லாந்தச் சைகை மொழி (NGT) கியூபெக் சைகை மொழி (LSQ) பிரான்சிய சைகை மொழி (LSF) செருமானியச் சைகை மொழி (DGS) செருமானிய-சுவிசு சைகை மொழி (DSGS) ஐரிசு சைகை மொழி (ISL) நிக்கராகுவா சைகை மொழி (LSN) தாய்வானியச் சைகை மொழி (TSL) விசேட ஆர்வம் சார்ந்த ஏனைய இயற்கை மொழிகள் அழிவை எதிர்நோக்கும் மொழிகள் இல்லாதொழிந்த மொழிகள் இயற்கை மொழிகளல்லாத மொழிகள் உருவாக்கப்பட்ட மொழிகள் மொழிகள் மற்றும் மொழிக் குடும்பங்கள் பற்றிய மேலதிக தகவல்கள் http://www.ethnologue.com/web.asp * பகுப்பு:மொழிக் குடும்பங்கள் பகுப்பு:வகைப்படுத்தல்
இந்திய-ஐரோப்பிய மொழிகள்
https://ta.wikipedia.org/wiki/இந்திய-ஐரோப்பிய_மொழிகள்
இந்திய-ஐரோப்பிய மொழிகள் (Indo-European languages) சுமார் 300 கோடி மக்களால் பேசப்படும் 150 மொழிகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பெரும்பாலான முக்கிய மொழிக்குடும்பங்கள் அடங்கும். இந்தப் பெருமொழிக்குடும்பத்தில் பிரபல மொழிகளான ஆங்கிலம், ஸ்பானிய மொழி, பிரெஞ்சு மொழி, போர்த்துக்கீசம், ஜெர்மன் மொழி, இத்தாலிய மொழி, ரஷ்ய மொழி, பார்சி, ஹிந்தி, உருது என்பனவும் அடங்குவன. மேற்படி தொடர்பு பற்றிய எடுகோள், வில்லியம் ஜோன்ஸ் என்னும் மொழியியலறிஞரால் முதன் முதலில் முன்வைக்கப்பட்டது. இவர் அக்காலத்தில் மிகத்தொன்மையான மொழிகளாகக் கருதப்பட்ட, இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் மற்றும் பாரசீக மொழி என்பவற்றுக்கிடையில் ஒற்றுமைகள் இருப்பதைக் கவனித்தார். பிரான்ஸ் பொப் என்பவரின் மேற்சொன்ன நான்கு மொழிகள் மற்றும் பல பழைய மொழிகள் தொடர்பான முறையான ஒப்பீட்டு ஆய்வுகள், மேற்படி கோட்பாட்டுக்குச் சான்றாக அமைந்தன. 19 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் இக் குழுவை "இந்தோ-ஜெர்மானிய மொழிகள்" அல்லது "ஆரியம்" என அழைத்துவந்தனர். பின்னர் மேற்படி தொடர்பு ஐரோப்பாவின் பெரும்பாலான மொழிகளுக்கும் பொருந்துவது அறியப்பட்டதும், இதன் பெயர் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என விரிவாக்கப்பட்டது. இதற்கு உதாரணமாக சமஸ்கிருதத்துக்கும், லித்துவேனிய மொழிகளுக்கும் இடையிலான வலுவான தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் கூறலாம். இவற்றுக்குப் பொதுவான முதல் மொழி முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழி (PIE) என அழைக்கப்படுகிறது. இது தோற்றம் பெற்ற புவியியல் அமைவிடம் ("Urheimat" என அழைக்கப்படுகின்றது), தொடர்பாகக் கருத்துவேறுபாடு நிலவுகிறது. ஆர்மீனியாவை உள்ளடக்கிய கருங்கடலின் வடக்கு அல்லது மேற்குப் பகுதிகள் அத்தகைய அமைவிடத்துக்காக முன்மொழியப்படும் முக்கிய இடமாகும். இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் துணைக் குழுக்களுள் பின்வருவன அடங்கும். இந்திய-ஈரானிய மொழிகள் இத்தாலிய மொழிகள் (லத்தீன் மொழி, அதன் வழிவந்தவை, ரோமன்ஸ் மொழிகள் என்பன இதில் அடங்கும்) ஜெர்மானிய மொழிகள் (ஆங்கிலம் அடங்கலாக) செல்ட்டிய மொழிகள் பால்ட்டிய மொழிகள் சிலாவிய மொழிகள் அல்பானிய மொழி, இது பெரும்பாலும், இல்லீரிய மொழிகள் துணைக்குழுவைச் சேர்ந்த பல வழக்கொழிந்த மொழிகளுள் வைக்கப்படுகிறது. தராசிய மொழி (வழக்கொழிந்தது) டாசிய மொழி (வழக்கொழிந்தது) பிரிஜிய மொழி (பண்டைய பிரிஜியாவின் வழக்கொழிந்த மொழி) அனத்தோலிய மொழிகள் (வழக்கொழிந்தது, ஹிட்டைடின் மொழி இவற்றுள் குறிப்பிடத்தக்கது.) தொச்சாரிய மொழிகள் (தொச்சாரியர்களின் வழக்கொழிந்த மொழி) கிரேக்க மொழிகள் அருமானிய மொழி மேலும் காண்க மொழிகளும், மொழிக் குடும்பங்களும் ஓகஸ்ட் ஷ்லீச்செர், (A Compendium of the Comparative Grammar of the Indo-European Languages) (1861/62) இந்தோ-ஐரோப்பிய வேர்களின் பட்டியல் வெளியிணைப்புகள் Indo-European Roots, from the American Heritage Dictionary. Indo-European Documentation Centre at the University of Texas Say something in Proto-Indo-European (by Geoffrey Sampson) பகுப்பு:மொழிக் குடும்பங்கள் பகுப்பு:இந்திய-ஐரோப்பிய மொழிகள்
இந்திய-ஈரானிய மொழிகள்
https://ta.wikipedia.org/wiki/இந்திய-ஈரானிய_மொழிகள்
இந்தோ-ஈரானிய மொழிகள் வழக்கிலிருக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுள், கிழக்கு எல்லையில் உள்ளவையாகும். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் சார்ந்த மிகப் பழைய பதிவுகளில் இம் மொழிகளுக்கு நல்ல இடம் உண்டு. யூரல்களின் தென்பகுதியைச் சூழவுள்ள பகுதிகளில் இவை தோற்றம் பெற்றன. இவர்கள் கஸ்பியன் கடலின் கிழக்கிலும், தெற்கிலும் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற இடங்களில் குடியேறியபோது மொழி பிரிவடைந்தது. இவர்களுடைய பரவல் தேரின் கண்டுபிடிப்புடன் தொடர்புபட்டிருப்பதுபோல் தெரிகிறது. முக்கிய இந்தோ-ஆரிய மொழிகள்: சமஸ்கிருதம் அஸ்ஸாமிய மொழி வங்காள மொழி குஜராத்தி மொழி ஹிந்தி மொழி மைதிலி மொழி மராட்டி மொழி நேபாளி மொழி ஒரியா மொழி பாளி பஞ்சாபி மொழி உரோமானி மொழி - ஜிப்சிகளின் மொழி சிந்தி மொழி திவெயி மொழி சிங்கள மொழி உருது முக்கிய தார்டிக் மொழிகள்: தாமேலி மொழி தொமாக்கி மொழி கவார்-பாட்டி மொழி கலாசா மொழி காஷ்மீரி மொழி கோவார் மொழி கோஹிஸ்தானி மொழி நிங்கலாமி மொழி பஷாயி மொழி பலூரா மொழி ஷினா மொழி ஷுமாஸ்தி மொழி முக்கிய நூரிஸ்தானி மொழிகள்: அஷ்குன் மொழி கம்விரி மொழி கதி மொழி (பஷ்காலி) பிரசுனி மொழி (வசி-வெரி) ட்ரெகாமி மொழி வைகாலி மொழி (கலஷா-ஆலா) முக்கிய ஈரானிய மொழிகள்: பாரசீக மொழி அவெஸ்தான் மொழி (வழக்கொழிந்தது) பஹ்லவி மொழி - "மத்திய பாரசீகம்" பாஷ்தூ மொழி டாரி மொழி தாஜிக் மொழி ஒஸ்ஸிட்டிக் மொழி குர்தி மொழி பலூச்சி மொழி தாலிஷ் மொழி தாத் மொழி பின்வருவனவற்றையும் பார்க்கவும் மொழிகளும், மொழிக் குடும்பங்களும் பகுப்பு:மொழிக் குடும்பங்கள் பகுப்பு:இந்திய-ஈரானிய மொழிகள்
பாளி
https://ta.wikipedia.org/wiki/பாளி
பாளி (Pali) எனப்படுவது ஒரு மத்திய இந்தோ-ஆரிய அல்லது பிராகிருத மொழியாகும். பௌத்த சமயத்தின் பழம்பெரும் நூல்களைக் கொண்ட மொழி என்ற சிறப்பையும் பெருமையையும் கொண்டது. தேரவாத பௌத்தத்தின் சமய நூல்கள் இம்மொழியில் எழுதப்பட்டிருப்பதன் காரணமாக இம் மொழி மிகவும் பிரபலமானது. பாளி பல்வேறு வரிவடிவங்களில் எழுதப்பட்டு வந்துள்ளது. தேவநாகரியிலிருந்து லாவோ வரையும், பல்வேறு இந்திய எழுத்து வடிவங்களிலும், பாளி நூற் சபையைச் (Pali Text Society) சேர்ந்த தொமஸ் வில்லியம் றீஸ் டேவிட் என்பவரால் உருவாக்கப்பட்ட ரோமனாக்கம் செய்யப்பட்ட எழுத்து முறையிலும் பாளி எழுதப்படுகிறது. சில தேரவாத பௌத்தர்கள் புத்தர் பேசிய மொழி பாளியே என்று கருதுகிறார்கள். எனினும் பாளி மொழி பற்றிப் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. சமஸ்கிருதம் உயர் குடியினரதும், படித்தவர்களதும் மொழியாயிருந்தபோது, பாளியே சாதாரண மக்களது மொழியாயிருந்ததெனக் கூறுவோர் ஒருபுறமிருக்க, பாளி எக்காலத்திலும் பேசப்பட்டதில்லை எனக் கருதுவோரும் உள்ளனர். பௌத்த நூல்களைக் கற்பதற்கும் ஓதுவதற்குமாகவே பாளி தற்காலத்தில் பயிலப்பட்டு வருகிறது. ஐக்கிய இராச்சியத்திலுள்ள பாளி நூற் சபை, 1881ல் அது நிறுவப்பட்டதிலிருந்து, மேல் நாட்டறிஞர்களின் பாளி மொழி ஆய்வை ஊக்குவிப்பதில் முக்கிய உந்து சக்தியாக உள்ளது. இவற்றையும் பார்க்கவும் தமிழ் சமஸ்கிருதம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் The Pali Text Society's Pali-English Dictionary Pali Text Society Pali Canon தமிழில் பாளிமொழிச் சொற்கள் பகுப்பு:பாளி பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள் பகுப்பு:இந்திய மொழிகள்
சிங்களம்
https://ta.wikipedia.org/wiki/சிங்களம்
சிங்களம் இலங்கையில் வாழும் பெரும்பான்மையான மக்களான சிங்களவர்களால் பேசப்படும் மொழியாகும். இது இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. வங்காள மொழி, பாளி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது. தென்னிந்தியாவிலும், இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளிலும் வழங்கிவரும் திராவிட மொழியான தமிழிலிருந்தும் பல சொற்களைச் சிங்களம் பெற்றுக்கொண்டுள்ளது. சிங்கள எழுத்துக்கள், கிமு 2ம் - கிமு 3ம் நூற்றாண்டளவில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட, சிங்கள பிராகிருதம் வரிவடிவங்களிலிருந்து வளர்ச்சியடைந்ததாகும். சிங்களம் மாறுபட்ட பேச்சு வழக்குகளை கொண்டிருந்தாலும், ரொடி குலத்தவராலும், இலங்கையின் வேடுவராலும் பேசப்படும் சிங்களம் மிகவும் வேறுபட்டதாகும். இலங்கை வேடுவரின் மொழியிலுள்ள பல சொற்கள் சிங்களம் தவிர்ந்த மூலத்தை கொண்டுள்ளது. சிங்களமானது தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன், இலங்கையின் யாப்பினால் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகும். வரலாறு கி.மு ஐந்தாம் நூற்றாண்டளவில் வட மேல் இந்தியாவில் இருந்து இலங்கையில் இளவரன் விஜயன் உட்பட்டவர்கள் குடியேறுகின்றனர். இவர்களுடன் இந்தோ ஆரிய மொழிகளும் இலங்கைக்கு வந்து சேர்கின்றது. அடுத்த சில நூற்றாண்டுகளில் வட கிழக்கு இந்தியாவில் இருந்து கணிசமான அளவில் குடியேற்றவாசிகள் வந்து குடியேறுகின்றனர்(கலிங்கம், மகந்த). இதன் விழைவாக கிழக்கு பிரகிரிட்ஸ்சின் ஆதிக்கத்தையும் சிங்கள மொழிமேல் கொண்டுவருகின்றது. காலத்துடன் சிங்கள மொழியின் விருத்தி சிங்கள பிரகிரித் (கி.பி 3ம் நூற்றாண்டு வரை) பிரதோ-சிங்களம் (கி.பி 3 – 7ம் நூற்றாண்டு வரை) மத்திய சிங்களம் (கி.பி 7 – 12ம்் நூற்றாண்டு வரை) புதிய சிங்களம் (12ம் நூற்றாண்டு முதல் தற்போது வரை) பேச்சு வழக்கு சிங்களத்தில் பொதுவாக இரண்டு வகையான பேச்சு வழக்கு உள்ளது. தென் பகுதியில் உள்ள சிங்களவர் ஒருமாதிரியும், ஏனைய பகுதியில் உள்ள சிங்களவர் வேறுமாதிரியும் பேசுகின்றனர். இலங்கையில் உள்ள வேடர் இனமும் வித்தியாசமான மொழி ஒன்றைப் பேசுகின்றது. இந்த மொழியில் சிங்களத்தின் ஆதிக்கம் இருந்தாலும், வேறெந்த மொழியிலும் இல்லாத பல சொற்கள் இவர்கள் மொழியில் உள்ளன. பேச்சுச் சிங்களம் எண்கள் 1 එක - எக்க (க் சேர்ந்து ஒலிக்கும் எழுதுவதில்லை) அல்லது எக்காய் - ஒன்று 2 දෙක - தெக்க (க் சேர்ந்து ஒலிக்கும் எழுதுவதில்லை) அல்லது தெக்காய் - இரண்டு 3 තුන - துண அல்லது துணாய் - மூன்று 4 හතර - ஹத்தற (த் எனபது சிங்களத்தில் எழுப்படவில்லையெனினும் அச்சத்ததுடனேயே ஒலிக்கவேண்டும்) அல்லது ஹத்தறாய் - நான்கு 5 පහ - பஹ அல்லது பஹாய் - ஐந்து 6 හය - ஹய அல்லது ஹயாய் - ஆறு 7 හත - ஹத்த அல்லது ஹத்தாய் - ஏழு 8 අට - அட்ட அல்லது அட்டாய் - எட்டு 9 නමය - நமய அல்லது நமயாய் - ஒன்பது 10 දහය - தஹய அல்லது தஹயாய் - பத்து 11 එකොළහාය් - எக்கொளஹாய் - பதினொன்று 12 තොළහ - தொலஹ -தொளஹாய் - பன்னிரண்டு 13 දහතුන - தஹாத்துணாய் - பதின்மூன்று 14 දාහතර - தாஹத்தறாய் - பதினான்கு 15 පහළව - பஹளவ - பதினைந்து 16 දහසය - தாசயாய் - பதினாறு 17 දාහත - தாஹத்தாய் - பதினேழு 18 තහාඅට - தாஅட்டாய் - பதினெட்டு 19 තහනමය - தாநமயாய் - பத்தொன்பது 20 විස්ස - விஸ்ஸாய் - இருபது 21 විසි එක - விசி எக்க - இருபத்து ஒன்று 22 විසි දෙක - விசி தெக - இருபத்தி இரண்டு 23 විසි තුන - விசி துண - இருபத்தி மூன்று 24 විසි හතර - விசி ஹத்த - இருப்பத்தி நான்கு 25 විසි පහ - விசி பஹ - இருபத்தி ஐந்து 26 විසි හය - விசி ஹய - இருபத்தி ஆறு 27 විසි හත - விசி ஹத்த - இருபத்தி ஏழு 28 විසි අට - விசி அட்ட - இருபத்தி எட்டு 29 විසි නමය - விசி நமய - இருபத்தி ஒன்பது 30 තිහ - திஹாய் - முப்பது 40 හතළිය - ஹத்தலியாய் - நாற்பது 50 පනහ - பணஹாய் - ஐம்பது 60 ஹட்டாய் - அறுபது 70 ஹத்தாவாய் - எழுபது 80 அசுவாய் - எண்பது 90 அணுவாய் - தொண்ணூறு 100 சீயாய் - நூறு 200 தெசிய்ய - இருநூறு 300 துன்சிய்ய - முந்நூறு 400 ஹாரசிய்ய - நானூறு 500 பன்சிய்ய - ஐந்நூறு 600 ஹயசிய்ய - அறுநூறு 700 ஹத்சிய்ய - எழுநூறு 800 அட்டசிய்ய - எண்ணூறு 900 நமசிய்ய - தொள்ளாயிரம் 1000 தாஹய் - ஆயிரம் 2000 தெதாஹய் - இரண்டாயிரம் 3000 துன்தாஹய் - மூவாயிரம் 4000 ஹத்தர தாஹய் - நாலாயிரம் 5000 பன் தாஹய் - ஐயாயிரம் 6000 ஹய தாஹய் - ஆறாயிரம் 7000 ஹத் தாஹய் - எழாயிரம் 10 000 தஹதாஹய் - பத்தாயிரம் 100 000 லக்சயய் - இலட்சம் 10 000 000 கோட்டிய - கோடி சொற்கள், சொற்றொடர்கள் ஆயுபோவன் - வணக்கம் நமுத் - ஆனால்(but) மார்க - வழி பார - பாதை மில - விலை ஒபட்ட சிங்கள தன்னவத? - உங்களுக்கு சிங்களம் தெரியுமா? ஒயாட தெமழ தேரெனவாத? - உங்களுக்குத் தமிழ் தெரியுமா? (ஒயா - உங்களுக்கு, தெமழ - தமிழ், தேரனவாத அல்லது தன்னவாத - தெரியுமா?) ஒயாட்ட டிரைவிங் லைசன்ஸ் தியனவாத? - உங்களிடம் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளதா? ஒயாட்ட வாகன பலபத்ர தியனவாத? - உங்களிடம் வாகனத்திற்கான அனுமதிப்பத்திரம் உள்ளதா? ஒவ் - ஆம் தண்ணவா - தெரியும். டிக்க டிக்க - கொஞ்சம் கொஞ்சம் ஒச்சர தமய் புளுவன்- அவ்வளவுதான் தான் முடியும் (ஒச்சரதமய் - அவ்வளவுதான், புளுவண் - முடியும்) கொஹேத யன்னே? - எங்கே போறீங்க? கெவல் கொஹேத - வீடு எங்கே? (கெவல் - வீடு, கொஹேத - எங்கே)? வெள்ளவத்த - வெள்ளவத்தை (குறிப்பு: சிங்களத்திலும் தமிழிலும் இடப்பெயர்கள் உச்சரிப்பில் மட்டுமே சிறிதளவு மாறுபடும்) ஒயா கொஹேத வெட கரண்ணே - நீங்கள் எங்கே வேலை செய்கின்றீர்கள். மங் திருக்குணாமலே வெட கரண்ணே - நான் திருகோணமலையில் வேலை செய்கின்றேன். கொஹொமத செப சனீப்ப? - நீங்கள் எப்படி சுகமாயிருக்கின்றீர்களா? கொழும்பட்ட கொஹொமத யன்னே? - கொழுப்புக்கு எப்படி போறது? கமக் நே - பரவாயில்லை வரதக் நே- பிரச்சினையில்லை பொஹொம ஹொந்தய் - மிகவும் நன்று. (பொஹொம - மிகவும், ஹொந்தாய் - நல்லது) ஸ்தூதி - நன்றி கேவத? - சாப்பிட்டிங்களா? மங் கேவா - நான் சாப்பிட்டேன் (மங் - நான், கேவா - சாப்பிட்டேன்) தே பொனவத - தேநீர் குடிப்பீர்களா? ஆண்டுவ - அரசாங்கம் பட்டங்கத்தத? - ஆரம்பித்துவிட்டீர்களா? கீயத - எவ்வளவு? இத்துறு சல்லி தென்ன - மீதிப் பணத்தைத் தாருங்கள்.(இத்துறு - மிச்சம், சல்லி - காசு, தென்ன - தாங்க) மே பாறென் அம்பேபுஸ்ஸ யன்ன புளுவண்த - இந்தப் பாதையால் அம்பேபுஸ்ஸ போக இயலுமா? (மே - இந்த, பாற - பாதை, யன்ன- போக, புளுவண்த - இயலுமா?) மம ஓயாட்ட ஆதரே - நான் உங்களுக்கு அன்புசெலுத்துகின்றேன் மம ஓயாட்ட கமதி - நான் உங்களை விரும்புகின்றேன். விநாடியக் இன்ன- ஒரு நிமிடம் நில்லுங்கள் உறவுச் சொற்கள் தாத்தா, தாத்தி, அப்பாச்சி - அப்பா அம்மே (அல்லது அம்மா) - அம்மா ஆச்சி - அம்மம்மா அல்லது அப்பம்மா சீயா - அப்பப்பா அல்லது அம்மப்பா ஐயா - அண்ணா அக்கா - அக்கா மல்லி - தம்பி நங்கி - தங்கை சகோதரயா - சகோதரன் புத்தா - மகன் துவ - மகள் பேனா - மருமகன் மல்லி கே புத்தா - தம்பியின் மகன் அக்கா கே துவ - அக்காவின் மகள் மச்சாங் - இது தற்போதைய சிங்களப் பாவனையில் நெருக்கமான நண்பர்களைக் குறிக்கப் பயன்படுகின்றது. லொக்கு அம்மா - பெரியம்மா லொக்கு தாத்தா - பெரியப்பா மாமா - மாமா மசினா - மச்சான் நேனா - மச்சாள் பிரிந்த,பவுல - மனைவி மித்துரா - நண்பன் மித்துரி - நண்பி கொல்லா - இளைஞன்/பையன் பிரிமி - ஆண் கெஹெனு - பெண் கெல்ல - இளம் பெண் லமயா - பிள்ளை யாளுவோ - நண்பர்கள் காலங்கள் உதே - காலை தவல் - பகல் ஹவச - பிற்பகல், சாயுங்காலம், பின்னேரம் ராத்ரிய - இரவு அத - இன்று ஈயே - நேற்று ஹெட்ட - நாளை அவ்ருது - ஆண்டு கிழமைகள் இரிதா - ஞாயிறு சந்துதா - திங்கள் அங்கஹருவாதா - செவ்வாய் பதாதா - புதன் பிரஹஸ்பதிந்தா - வியாழன் சிக்குராதா - வெள்ளி செனசுராதா - சனி நோய்கள் உண - காய்ச்சல் கஸ - இருமல் ஹெம்பிரிஸ்ஸாவ - தடிமன் ஹிபுகும் - தடிமல் ஒலுவ அமாறு - தலை வலி படே அமாறு - வயிற்று வலி செம - சளி பப்புவே அமாறு - நெஞ்சு வலி அதும - வீஸிங் ருத்ர பீடனய - இரத்த அழுத்தம் அஸ் அமாறுவ - கண் வருத்தம் இடங்களின் பெயர்கள் றோகல - வைத்தியசாலை நகர சபாவ - நகர சபை விஸ்வவித்யாலய - பல்கலைக்கழகம் பாசல - பாடசாலை கோவில - கோவில் கம - கிராமம் நகரைய - நகரம் பலாத - மாகாணம் டிசாவ - மாவட்டம் பன்சல - விகாரை பல்லிய - பள்ளிவாசல் பஸ் நேவதும்போல - பஸ் தரிப்பிடம் வேளந்தசெல - கடை (விற்பனை நிலையம்) போல - சந்தை வேவ - குளம் கங்காவ - ஆறு பலாத் சபாவ - பிரதேச சபை மரங்களின் பெயர் கும்புக் (කුඹුක්) - மருது அம்ப (අඹ) - மா கொஹொம்ப (කොහොඹ) - வேம்பு நுக (නුග) - ஆல் கொஸ் (කොස්) - பலா கெஸெல் (කෙසෙල්) - வாழை பெபொல் (පැපොල්) - பப்பாசி சியம்பலா (සියඹලා) - புளி மிருகங்கள் කපුටා - கப்புடா - காகம் කුරුල්ලා - குறுல்லா - குருவி මොණරා - மொனறா - மயில் නරියා - நரியா - நரி අලියා - அலியா - யானை ලෙනා - லேனா - அணில் එළුවා - எலுவா - ஆடு இலக்கணம் தமிழ் மொழியைப் போன்று சிங்கள மொழியில் உயர் திணை அஃறிணை வேறுபாடுகள் கிடையாது. எடுத்துக்காட்டாக சிங்களத்தில் அவர் வந்தார். பூனை வந்தார். தமிழ் மொழி பொன்றல்லாமல் உயிர் எழுத்துக்கள் வாக்கியத்தின் இடையில் வரலாம். நிகழ்காலம் நிகழ்காலம் நவா சத்ததுடன் முடிவடையும். வாக்கியத்தின் இடையில் நவா என்ற சத்தம் வராது. ஆண்பால் பெண்பால் வேறுபாடு நிகழ்காலத்தில் கிடையாது. நவா என்பதை நீக்கிவருவது சொல்லின் அடியாகும். எடுத்துக்காட்டாக கடனவா என்பதன் அடி கட ஆகும். கணவா இன் அடி க ஆகும். மம என்று வந்தால் மியும் *அப்பி வந்தால் மு உம் *நும்ப/ஒப வந்தால் ஹி யும் *நும்பலா/ஒபலா வந்தால் ஹூ உம் சேர்க்கவேண்டும். ஒபலா/நும்பலா ஒருமையில் வந்தால் யி உம் பன்மையில் வந்தால் தி உம் சேர்க்கவேண்டும். உயிரற்ற பன்மைச் சொல் எழுவாய் ஆகவரும்போது பயனிலை ஒருமையில் முடிக்கவேண்டும். ஓ சத்தம் பன்மையைக் குறிக்கும். பியா - பியானோ புத்தா - புத்தணுவோ சித்தா - சீத்தாவோ பியதாச - பியதாசவோ லிபிகுணு ராசிய - உயிரற்றது எனவே ஒருமையில் முடித்தல் வேண்டும் எனவே லிபிகுணு ராசிய என மாற்றம் இன்றி வரும். பெண்பால் ஒருமையில் வந்தால் ய சேர்க்க வேண்டும். கியா+ய = கியாய ஆவா+ய =ஆவாய குறுத்துமி ஆவாய இறந்தகாலம் இறந்தகாலம் ஆ சத்ததுடன் முடிவடையும். இதன் அடியைக் காண்பதற்கு படர்க்கை ஒருமையைக் காணவேண்டும். அதிலிருந்துதான் அடி பெறப்பட வேண்டும். இதற்கு ஒருமைக்கு ஏய என்ற சத்தத்தையும் பன்மைக்கு ஓய என்ற சத்ததையும் சேர்க்கவேண்டும். கியா+ஏய = கியேய ஆவா+ஏய = ஆவேய இதன் அடியைக் காண்பதற்கு கடைசி எழுத்தை நீக்கி அதற்கு முன்னுள்ள குற்றை நீக்குதல் வேண்டும். கியேய = கியெ அவேய = ஆவெ கடுவேய = கடுவெ மம கியே+மி = மம கியமி (மம எனவருவதால் மி ஐச் சேர்ந்தல் வேண்டும். சிங்கள மொழியில் எது பயனில்லைக்கு அண்மையில் உள்ளதோ அதுதான் எழுவாய் ஆகக் கணிக்கப்படும். எடுத்துக்காட்டாக அவன் அல்லது அவள் வந்தான்/ள் என்ற சொல் சிங்களத்தில் ஆவாய என்றே வரும் (அவள் பயனில்லைக்கு அண்மையில் இருப்பதால்) உயிருடைய சொல்லுடன் ஏதாவது ஒரு சொல் அச்சொல்லிற்குப் பிறகு வந்தால் அச்சொல் பன்மைச் சொல். செயற்பாட்டு வினை வாக்கியத்தின் விசின் வரும். இதன் கருத்து ஆல். அவன் மரத்தை வெட்டுகிறான் - செய்வினை. அவனால் மரம் வெட்டப்பட்டது - செயற்பாட்டு வினை. எழுவாய் செயப்படுபொருள் தன்மையில் எழுவாய் செயப்படுபொருள் கீழுழ்ழவாறு அமையும் எழுவாய் எழுவாயின் சிங்கள உச்சரிப்பு செயப்படுபொருள் செயப்படுபொருள் உச்சரிப்பு மம மா அப்பி அப்ப முன்னிலையில் எழுவாய் செயப்படுபொருள் கீழுழ்ழவாறு அமையும் எழுவாய் எழுவாயின் சிங்கள உச்சரிப்பு செயப்படுபொருள் செயப்படுபொருள் உச்சரிப்பு ஒப ஒப நும்ப நும்ப தோ தா ஒபலா ஒபலா நும்பலா நும்பலா தொப்பி தொப்ப தெப்பி தெப்ப படர்க்கையில் எழுவாய் செயப்படுபொருள் கீழுழ்ழவாறு அமையும் எழுவாய் எழுவாயின் சிங்கள உச்சரிப்பு செயப்படுபொருள் செயப்படுபொருள் உச்சரிப்பு ஒஃகு ஒகு மினிஹா மினிஹா ஹச ஹச கஸ் கஸ் கம்கறுவோ கம்கறுவன் குறுவறு குறுவறுன் உயிரற்ற ஒருமை பன்மைச் சொல் எழுவாய் ஆகவும் செயற்படுபொருளாகவும் மாற்றம் இன்றி வரும். உயிரற்ற ஒருமை பன்மைச் சொல் எழுவாய் ஆக வரும்போது செயப்படுபொருள் ஒருமையில் முடித்தல் வேண்டும். எழுவாய் எழுவாயின் சிங்கள உச்சரிப்பு செயப்படுபொருள் செயப்படுபொருள் உச்சரிப்பு ஹச ஹச கஸ் கஸ் உயிருடைய ஒருமைச் சொல் எழுவாய் ஆக வரும்போது பயனிலை ஒருமையிலும், எழுவாய் எழுவாயின் சிங்கள உச்சரிப்பு செயப்படுபொருள் செயப்படுபொருள் உச்சரிப்பு மினிஹா மினிஹா எழுவாய் ஆக பன்மைச் சொல் வரும்போது பயனிலை பன்மையிலும் முடித்தல் வேண்டும். உயிருடைய பன்மைச் சொல் செயப்படுபொருளாக்கும் போது மாற்றங்கள் ஏற்படுகின்றது. முதலாம் விதி று சத்துடன் முடிவடையும் சொற்களுக்கு ன் சேர்க்கவேண்டும் எழுவாய் எழுவாயின் சிங்கள உச்சரிப்பு செயப்படுபொருள் செயப்படுபொருள் உச்சரிப்பு குறுவறு குறுவறுன் ஹொறு ஹொறுன் இரண்டாம் விதி வோ சத்தத்துடன் வரும் சொற்களுக்குன் வன் என்றவாறு வரும் எழுவாய் எழுவாயின் சிங்கள உச்சரிப்பு செயப்படுபொருள் செயப்படுபொருள் உச்சரிப்பு கம்கறுவோ கம்கறுவன் மூன்றாம் விதி ன், த் கடைசியில் இருந்து இரண்டாவதாக வரும் சொற்களுக்கு சத்தத்துடன் வரும் சொற்களுக்குன் ன், த் ஐநீக்கி ன் ஐச் சேர்க்கவேண்டும். எழுவாய் எழுவாயின் சிங்கள உச்சரிப்பு செயப்படுபொருள் செயப்படுபொருள் உச்சரிப்பு கொன்னு கொனுன் சத்து சதுன் (த் ஒலிக்கும் அதாவது சத்துன் என்றவாறு உச்சரிக்கவேண்டும்) நான்காம் விதி ய் கடைசியில் வரும் சொற்களுக்கு ன் சேர்க்கவேண்டும் எழுவாய் எழுவாயின் சிங்கள உச்சரிப்பு செயப்படுபொருள் செயப்படுபொருள் உச்சரிப்பு லமாய் லமாய்ன் பெண்பால் விதி பெண்பாலுக்கு க சேர்க்கவேண்டும். எழுவாய் எழுவாயின் சிங்கள உச்சரிப்பு செயப்படுபொருள் செயப்படுபொருள் உச்சரிப்பு கெல்லக் கெல்லக்க குறுத்திமியக் குறுத்துமியக்க செயப்படுபொருள் எழுவாய் இது எழுவாய் இலிருந்து செயற்படுபொருளாக மாற்றுவதன் மறுதலையாகும். செயப்படுபொருள் செயப்படுபொருள் உச்சரிப்பு எழுவாய் எழுவாயின் சிங்கள உச்சரிப்பு தறுவன் தறுவோ கம்கறுவன் கம்கறுவோ மவ்வறுன் மவ்வறு மொனறுன் மொனறு பழலுன் பழல்லு கொனுன் கொன்னு ஒவுன் ஒஃவு கீரிட்டகயன் கீரிட்டகயோ கியேய கியோய அறிவுறுத்தல்,செய்தி, ஆலோசனை, கட்டளை, பிராத்தனை அவவாதய - அறிவுறுத்தல் இது ஏற்கனவே வழங்கப்பட்ட ஒன்று. இதில் எப்பா நொக்கறனு போன்ற சொற்கள் வரும். உபதேசய - அறிவுரை இதில் பழமொழிகள் வரும். ஒருவருக்கு சொல்லும் உபதேசங்கள் இதில் வரும். பிராத்தனய - வாழ்த்துக்கள் இதில் வாழ்த்துக்கள் வரும் ஜயவேவா, உபந்தினவேவா. இதில் பொதுவாக வேவா என்ற சொல் இறுதியில் வரும். வினய - ஒழுங்கு அல்லது கட்டளை இது உடனுக்குடன் வழங்கப்படுவது. இதில் வினைச்சொல்லுடன் இன்ன சேர்ந்துவருவதை அவதானிக்கலாம். அகராதிகள் ஆங்கிலச் சிங்கள அகராதி அணுகப்பட்டது நவம்பர் 29, 2006 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Charles Henry Carter. A Sinhalese-English dictionary. Colombo: The "Ceylon Observer" Printing Works; London: Probsthain & Co., 1924. Simhala Sabdakosa Karyamsaya. Sanksipta Simhala Sabdakosaya. Kolamba : Samskrtika Katayutu Pilibanda Departamentuva, 2007–2009. Madura Online English-Sinhala Dictionary and Language Translator Kapruka Sinhala dictionary Sinhala dictionary resources online Sinhala Dictionary Sinhala Script Sinhala dictionary (Beta) Sinhala for iOS Sinhala Dictionary for Android பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள் பகுப்பு:சிங்களம் பகுப்பு:இலங்கையின் மொழிகள்
உருது
https://ta.wikipedia.org/wiki/உருது
<table border="1" cellpadding="2" cellspacing="0" align="right" width="300"> Urdu (اردو) பேசப்படுவது:பாகிஸ்தான், இந்தியா மற்றும் 19 வேறு நாடுகள் பேசுபவர்கள் தாய்மொழி: 10.4 கோடி மொத்தம்: 48 கோடி பொதுபகுப்பு:இந்திய-ஐரோப்பியம்  இந்திய-ஈரானியம்   இந்திய-ஆரியம்    மத்திய வலயம்       உருது உத்தியோகபூர்வ நிலை அரசகரும மொழி:பாகிஸ்தான், இந்தியா ஒழுங்குபடுத்தப் படுவது: ஒழுங்குபடுத்தப் படுவதில்லை</td></tr> மொழிக்கான குறியீடு ISO 639-1:ur ISO 639-2:urd SIL:URD </table> உருது (Urdu'') 13-ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழியாகும். உருது, இந்தியுடன் சேர்த்து இந்துசுத்தானி என அழைக்கப்படுகின்றது. மண்டரின், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக மூன்றாவது கூடிய அளவு மக்களால் புரிந்து கொள்ளப்படக்கூடியது இந்துஸ்தானியேயாகும். தாய் மொழியாகப் பேசுபவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உருது உலகின் 20-ஆவது பெரிய மொழியாகும். 6 கோடி மக்கள் இதனைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளார்கள். இரண்டாவது மொழியாகக் கொண்டுள்ளவர்கள் உட்பட 11 கோடிப் பேர் இதனைப் பேசுகிறார்கள். உருது பாகிஸ்தானின் அரசகரும மொழியாகவும், இந்தியாவின் அரசகரும மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. முகலாய அரசர்கள் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த காலகட்டத்தில் அவர்களின் படையிலிருந்த பார்சி, அரபி, துருக்கி மொழிகளைப் பேசிய படை சிப்பாய்களுக்கும், அப்படையில் இணைந்த கடிபோலி (ஹிந்தியின் ஒரு கிளை மொழி) பேசிய ஹிந்து சிப்பாய்களுக்குமிடையே ராணுவக் கூடாரங்களில் ஏற்பட்ட மொழி பரிவர்த்தனையில் தோன்றிய மொழி. ராணுவக் கூடாரங்களில் தோன்றி, பரவி செழிப்படைந்ததால் 'உருது' என்று பெயர் பெற்றது. துருக்கி மொழியில் ராணுவம் தற்காலிகமாக தங்கும் இடங்களை (army camps) ஒர்து என்று அழைப்பர். உருது மொழி பேசப்படும் நாடுகள் ஆப்கானிஸ்தான் பாகாரேயின் வங்காளதேசம் - 3,00,000 (2008) பொட்ஸ்வானா பிஜி ஜெர்மனி கயானா இந்தியா - 5,07,72,631 (2011) பாகிஸ்தான் - 1,47,06,159 முதல் 3,00,00,000 வரை (2017 & 2013) மலாவி மொரீசியஸ் - 64,000 நேபாளம் - 4,13,785 (2021) நோர்வே ஓமான் கட்டார் சவூதி அரேபியா, தென்னாபிரிக்கா - 1,70,000 தாய்லாந்து ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம் - 2,70,000 (2016) ஐக்கிய அமெரிக்கா - 3,97,502 (2013) சாம்பியா ஆஸ்திரேலியா - 69,131 (2016) கனடா - 2,10,815 (2016) மேற்கோள் வெளி இணைப்புகள் பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள் பகுப்பு:பாக்கித்தானின் மொழிகள் பகுப்பு:இந்திய மொழிகள் பகுப்பு:உருது மொழி
பண்பாடு
https://ta.wikipedia.org/wiki/பண்பாடு
right|200px|thumb|பண்டைய எகிப்து நாட்டைச் சேர்ந்த ஓவியம். பண்பாடு (கலாச்சாரம் அல்லது கலாசாரம்) என்பது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும், அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது. பண்பாடு ஒரு பலக்கியக் கருப்பொருள். அதற்குப் பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றைச் சுட்டி நிற்கின்றது.Tylor, Edward. (1871). Primitive Culture. Vol 1. New York: J.P. Putnam's Son மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும். பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். இது, பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கிறது எனலாம். 1952-இல் அல்பிரட் எல். குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய 'பண்பாடு: எண்ணக் கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள். வரலாற்று நோக்கில் வரைவிலக்கணங்கள் 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளின் மேலைத்தேச அறிஞர்களும், இன்றைய அறிஞர்கள் சிலரும் பண்பாடு என்பதை நாகரிகம் (civilization) என்பதோடு அடையாளம் கண்டு அதை இயற்கைக்கு எதிரான ஒன்றாகக் கருதினார்கள். "உயர் பண்பாட்டை"க் குறைவாகக் கொண்டுள்ளவர்கள் கூடுதல் இயல்பானவர்களாகக் கருதப்பட்டனர். அத்துடன் உயர் பண்பாட்டின் சில அம்சங்கள் மனித இயல்புகளை அழுத்தி வைப்பதாகவும் சிலரால் விமர்சிக்கப்பட்டது. thumb|200px|அசர்பைஜானின் கோபஸ்தானில் உள்ள பாறை ஓவியம். இது கி.மு 10,000 ஆண்டு காலப்பகுதியில் எழுச்சி பெற்றிருந்த பண்பாட்டைக் குறிக்கிறது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மானிடவியலாளர்கள், பல்வேறு சமூகங்களுக்கும் பயன்படத் தக்க வகையிலான, பண்பாடு என்பதன் பரந்த வரைவிலக்கணம் ஒன்றின் தேவையை உணர்ந்தார்கள். படிமலர்ச்சிக் கோட்பாட்டைக் கவனத்துக்கு எடுத்துக்கொண்ட பிராண்ஸ் போவாஸ் முதலிய மானிடவியலாளர்கள், மனிதர் எல்லோரும் சமமாகவே படிமலர்ச்சி அடைந்துள்ளனர் என்றும், எல்லா மனிதரும் பண்பாட்டைக் கொண்டிருப்பதனால் அது மனிதனின் படிமலர்ச்சியின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதினர். பண்பாடு என்பது மனித இயல்பு எனவும், அது அநுபவங்களைப் பகுத்துக் குறீயீடாக்கிக் குறியீட்டு முறையில் வெளிப்படுத்துவதற்கான மனிதனுடைய தகுதியை மூலவேராகக் கொண்டது எனவும் அவர்கள் வாதித்தார்கள். இதன் விளைவாக, ஒன்றிலிருந்து ஒன்று விலகி வாழுகின்ற மக்கள் குழுக்கள், தங்களுக்கெனத் தனித்துவமான பண்பாடுகளை உருவாக்கிக் கொள்ளுகின்றன. எனினும் வெவ்வேறு பண்பாடுகளின் அம்சங்கள் ஒரு குழுவிலிருந்து இன்னொன்றுக்கு இலகுவாகப் பரவ முடியும். எனவே வழிமுறை நோக்கிலும், கோட்பாட்டுக் கோணத்திலும் பயனுள்ள வரைவிலக்கணங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய தேவை மனிதவியலாளருக்கு ஏற்பட்டது. அவர்கள் பொருள்சார் பண்பாடு என்பதற்கும் குறியீடுசார் பண்பாடு என்பதற்குமிடையே வேறுபாடு கண்டார்கள். இவையிரண்டும் வெவ்வேறு வகையான மனிதச் செயற்பாடுகளை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, இரண்டும் வெவ்வேறு வகையான வழிமுறைகள் தேவைப்படும் வெவ்வேறுவகைத் தரவுகளையும் உள்ளடக்கியுள்ள காரணத்தால் இந்தப் பகுப்பு தேவையாக இருந்தது. பண்பாடு என்பதை விளங்கிக் கொள்ளும் இன்னொரு பொதுவான முறை மூன்று மூலகங்களை உள்ளடக்கியுள்ளது: அவை, 'பெறுமானம் (எண்ணங்கள்)', 'நெறிமுறைகள் (நடத்தை)', மற்றும் 'பொருட்கள் (அல்லது பொருள்சார் பண்பாடு)' என்பவை ஆகும். வாழ்வில் முக்கியமானது எது என்பது பற்றிய எண்ணங்களே 'பெறுமானம்' ஆகும். அவை பண்பாட்டின் ஏனைய அம்சங்களை வழிநடத்துகின்றன. 'நெறிமுறைகள்' என்பன, வெவ்வேறு நேரங்களில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகும். ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவும் இந்தப் பொது வழக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளது. சமூகம் நடைமுறைப்படுத்தும் இந்த நெறிமுறைகள் சட்டங்கள்' எனப் பொதுவாக வழங்கப்படுகின்றன. மூன்றாவது அம்சமான 'பொருள்கள்', பண்பாட்டின் 'பெறுமானங்கள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றது. பண்பாட்டுக் கருத்துருக்கள் பண்பாடும் மானிடவியலும் thumb|150px|left|19 ஆம் நூற்றாண்டின் மானிடவியலாளர் எட்வார்ட் டெயிலர். பண்பாடானது இசை, இலக்கியம், வாழ்க்கைமுறை, உணவு, ஓவியம், சிற்பம், நாடகம், திரைப்படம் போன்ற மனிதருடைய கலைப் பொருள்களிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுகின்றது. சில அறிஞர்கள் பண்பாட்டை நுகர்வு, நுகர் பொருட்கள் என்பவற்றின் அடிப்படையில் அடையாளம் காண்கின்றனர். ஆனால், மானிடவியலாளர், பண்பாடு என்பது நுகர் பொருள்களை மட்டுமல்லாது அவற்றை உருவாக்குவனவும், அவற்றுக்குப் பொருள் கொடுப்பனவுமான வழிமுறைகளையும்; அப்பொருள்களும், வழிமுறைகளும் பொதிந்துள்ள சமூகத் தொடர்புகள், செயல்முறைகள் என்பவற்றையும் குறிப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை பண்பாடு என்பது கலை, அறிவியல், நெறிமுறைகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. பண்பாடும் உலகப்பார்வையும் புனைவியக் காலத்தில் செருமனியைச் சேர்ந்த அறிஞர்கள், சிறப்பாகத் தேசியவாத இயக்கங்களோடு தொடர்புடையவர்கள், பண்பாடு என்பது உலகப்பார்வை என்னும் எண்ணக்கருத்து ஒன்றை உருவாக்கினர். இவர்களுள் பல்வேறு சிற்றரசுகளைச் சேர்த்து "செருமனி" ஒன்றை உருவாக்குவதற்காகப் போராடியோரும், ஆஸ்திரிய-ஹங்கேரியப் பேரரசுக்கு எதிராகப் போராடிய தேசியவாத சிறுபான்மை இனக்குழுக்களைச் சார்ந்தோரும் அடங்குவர். இத்தகைய சிந்தனைப் போக்கு, ஒவ்வொரு இனக்குழுவையும் தனித்துவமான உலகப்பார்வை வேறுபடுத்துகின்றது என்னும் கருத்தை முன்வைத்தது. எனினும், பண்பாடு குறித்த இந்த நோக்கும் 'நாகரிகமடைந்தோர்', 'நாகரிகமற்றோர்' அல்லது 'பழங்குடியினர்' முதலிய வேறுபாடுகளுக்கு இடமளித்தது. சமுதாயமொன்றினுள் காணப்படும் பண்பாடுகள் பெரிய சமுதாயங்கள் பெரும்பாலும் துணைப் பண்பாடுகளை அல்லது அவர்கள் சார்ந்த பெரிய பண்பாடுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடிய தனித்துவமான நடத்தைகளையும், நம்பிக்கைகளையும் உடைய குழுக்களைக் கொண்டவையாக இருக்கின்றன. இத் துணைப் பண்பாடுகள், அவற்றின் உறுப்பினரின் வயது, இனம், வகுப்பு, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடலாம். அழகியல், சமயம், தொழில், அரசியல் போன்ற பண்புகளும் துணைப் பண்பாடுகளில் தனித்துவத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும். இவற்றில் ஒவ்வொன்றும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவை இணைந்தோ துணைப் பண்பாடுகளை உருவாக்கலாம். வருகுடியேற்றக் குழுக்களையும், அவர்கள் பண்பாடுகளையும் கையாள்வதில் பல அணுகுமுறைகள் காணப்படுகின்றன. அடிப்படைப் பண்பாடு (core culture): இது செருமனியில் பஸ்ஸாம் திபி என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு மாதிரி ஆகும். இதன்படி சிறுபான்மையினர் தமக்கான அடையாளங்களை வைத்திருக்கலாம், ஆனால் அவர்கள் முழுச் சமுதாயத்தினதும் அடிப்படையான பண்பாட்டின் கருத்துருக்களை ஆதரிப்பவர்களாக இருக்கவேண்டும். கலப்புப் பண்பாடு (Melting Pot): ஐக்கிய அமெரிக்காவில் மரபுவழியாக இத்தகைய நோக்கு இருந்து வருகிறது. இதன்படி எல்லா வருகுடியேற்றப் பண்பாடுகளும் அரசின் தலையீடு இல்லாமலேயே கலந்து ஒன்றாகின்றன எனக் கருதப்படுகிறது. ஒற்றைப்பண்பாட்டியம் (Monoculturalism): சில ஐரோப்பிய நாடுகளில், பண்பாடு என்பது தேசியவாதத்துடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இதனால், வருகுடியேற்றப் பண்பாடுகளைப் பெரும்பான்மைப் பண்பாட்டுடன் தன்வயமாக்குவது அவ்வரசுகளின் கொள்கையாக இருக்கிறது. எனினும், சில நாடுகள் பல்பண்பாட்டிய வடிவங்கள் தொடர்பாகவும் சோதனை செய்து வருகிறார்கள். பல்பண்பாட்டியம் (Multiculturalism): வருகுடியேற்றப் பண்பாட்டினர் தமது பண்பாடுகளைப் பேணிக்கொள்ள வேண்டும் என்றும், பல்வேறு பண்பாடுகள் ஒரு நாட்டுக்குள் அமைதிவழியில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதும் இதன் கருத்து ஆகும். நாட்டின அரசுகள் வருகுடியேற்றப் பண்பாடுகளை நடத்தும் விதம் மேற்சொன்ன ஏதாவதொரு அணுகுமுறையுடன் சரியாகப் பொருந்தும் என்பதற்கில்லை. ஏற்கும் பண்பாட்டுக்கும் (host culture) வருகுடியேற்றப் பண்பாட்டுக்கும் இடையிலான வேறுபாட்டின் அளவு, குடியேறுவோரின் எண்ணிக்கை, ஏற்கனவே இருக்கும் மக்களின் மனப்பாங்கு, அரசின் கொள்கைகள், அக்கொள்கைகளின் செயற்படுதிறன் என்பன விளைவுகளைப் பொதுமைப்படுத்துவதைக் கடினமாக்குகின்றன. இதுபோலவே, சமுதாயத்தில் அடங்கியுள்ள துணைப் பண்பாடுகள், பெரும்பான்மை மக்களின் மனப்பாங்கு, பல்வேறுபட்ட பண்பாட்டுக் குழுக்களிடையேயான தொடர்புகள் என்பன விளைவுகளைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன. ஒரு சமுதாயத்துள் அடங்கியுள்ள பண்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்வது சிக்கலானது. ஆய்வுகள் பலவகையான மாறிகளைக் கவனத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். நிலப்பகுதி அடிப்படையில் பண்பாடு உலகின் நிலப்பகுதிக்குரிய பண்பாடுகள் நாட்டினங்களாலும், இனக்குழுக்களாலும் உருவாகின்றன. பண்பாடுகளுக்கு இடையேயான ஒத்ததன்மை பெரும்பாலும் புவியியல் அடிப்படையில் அருகருகே வாழும் மக்கள் நடுவே காணப்படுகின்றது. பல நிலப்பகுதிக்குரிய பண்பாடுகள் பிற பண்பாடுகளின் தொடர்பினால் ஏற்படக்கூடிய செல்வாக்கின் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இத்தகைய தொடர்புகள், குடியேற்றம், வணிகம், புலப்பெயர்வு, மக்கள் ஊடகம், சமயம் போன்றவற்றினால் ஏற்படுகின்றன. பண்பாடு இயக்கத்தன்மை கொண்டதாக இருப்பதுடன், காலப்போக்கில் மாறுபாடும் அடைகின்றது. இவ்வாறு மாறும்போது, பண்பாடுகள் வெளிச் செல்வாக்குகளுக்கு உட்பட்டு; மாறுகின்ற சூழலுக்கும், தொழில்நுட்பங்களுக்கும் ஏற்றவகையில் தன்னை இசைவாக்கிக் கொள்கிறது. இதனால், பண்பாடு தொடர்புகளில் தங்கியுள்ளது எனலாம். பண்பாடுகளிடையே மக்களினதும், எண்ணக்கருக்களினதும் கூடிய நகர்வுகளுக்கு இடமளிக்கும் புதிய தொடர்புத் தொழில் நுட்பங்களும், போக்குவரத்துத் தொழில்நுட்பங்களும் உள்ளூர்ப் பண்பாடுகளில் விரைவான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நம்பிக்கை முறைமைகள் thumb|left|250px|இன்று கம்போடியாவின் பண்பாட்டின் அடையாளமாகப் பயன்படும் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கூர் வாட் கோயில் சமயமும், பிற நம்பிக்கை முறைமைகளும் பண்பாட்டுடன் ஒன்றிணைந்தவையாக உள்ளன. மனித வரலாறு முழுவதுமே சமயம் பண்பாட்டின் ஓர் அம்சமாக விளங்கிவருகிறது. கிறிஸ்தவத்தின் பத்துக் கட்டளைகள், புத்தசமயத்தின் ஐந்து நோக்குகள் போன்றவற்றினூடாகச் சமயம் நடத்தைகளை முறைப்படுத்துகின்றது. சில சமயங்களில் இது அரசுகளுடனும் தொடர்புள்ளதாக இருக்கின்றது. இது கலைகளின் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்றது. மேனாட்டுப் பண்பாடு ஐரோப்பாவிலிருந்து மிகவும் வலுவாக ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பரவியது. இப்பண்பாடு, பண்டைக் கிரேக்கம், பண்டைய ரோம், கிறிஸ்தவம் முதலியவற்றின் செல்வாக்குக்கு உட்பட்டது. மேனாட்டுப் பண்பாடு, பிற பண்பாடுகளைக் காட்டிலும் கூடிய அளவில் தனிமனிதனுக்கு முதன்மை கொடுப்பதாக உள்ளது. அத்துடன் இது, மனிதன், இறைவன், இயற்கை அல்லது அண்டம் ஆகியவற்றைக் கூடுதலாக வேறுபடுத்திப் பார்க்கிறது. இது, பொருட்செல்வம், கல்வியறிவு, தொழில் நுட்ப முன்னேற்றம் என்பவற்றினால் குறிக்கப்படுகின்றது. எனினும் இவை மேனாட்டுப் பண்பாட்டுக்கு மட்டும் உரித்தான இயல்புகள் அல்ல. ஆபிரகாமிய சமயங்கள் 'யூதாயிசம்' அறியப்பட்ட ஓரிறைக் கொள்கை உடைய முதற் சமயங்களுள் ஒன்றும், இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்ற சமயங்களுள் மிகப் பழையனவற்றுள் ஒன்றுமாகும். யூதர்களின் விழுமியங்களும், வரலாறும் கிறிஸ்தவம், இஸ்லாம், பஹாய் போன்ற பிற ஆபிரகாமிய சமயங்களின் அடிப்படைகளின் பெரும் பங்காக உள்ளன. இவை, ஆபிரகாமின் மரபுவழியைப் பொதுவாகக் கொண்டிருந்தபோதும், ஒவ்வொன்றும் அவற்றுக்கே தனித்துவமான கலைகளையும் கொண்டுள்ளன. உண்மையில் இவற்றுட் சில அச்சமயங்கள் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலப்பகுதிகளின் செல்வாக்கினால் உண்டானதாக இருந்தாலும், சமயங்களால் வலியுறுத்தப்படும் பண்பாட்டு வெளிப்பாடுகளும் இருக்கின்றன. ஐரோப்பா, புதிய உலகம் ஆகியவற்றின் பண்பாடுகளைப் பொறுத்தவரை கடந்த 500 முதல் 1500 ஆண்டுகளாகக் கிறிஸ்தவம் முக்கியமான பங்கை வகித்துவருகிறது. தற்கால மெய்யியல் சிந்தனைகளில், சென். தாமஸ் அக்குவைனஸ், எராஸ்மஸ் போன்ற கிறிஸ்தவச் சிந்தனையாளர்களின் செல்வாக்குப் பெருமளவு உள்ளது. தவிர, கிறிஸ்தவப் பேராலயங்களான நோட்ரே டேம் டி பாரிஸ், வெல்ஸ் பேராலயம், மெக்சிக்கோ நகர மெட்ரோபோலிட்டன் பேராலயம் போன்றவை கட்டிடக்கலை முக்கியத்துவம் கொண்டவை. இஸ்லாம் வட ஆப்பிரிக்கா, மையக்கிழக்கு, தூரகிழக்கு ஆகிய பகுதிகளில் 1,500 ஆண்டுகளாகச் செல்வாக்குடன் விளங்குகிறது. நாடுகளின் பண்பாடுகள் அல்பேனியா அவுஸ்திரேலியா பெல்ஜியம் பிரேசில் கனடா சிலி சீனா டென்மார்க் எகிப்து பிரான்ஸ் இந்தியா ஜப்பான் கொரியா மெக்ஸிக்கோ நெதர்லாந்து நியூசிலாந்து பெரு போர்த்துக்கல் ஐக்கிய இராச்சியம் வேல்ஸ் ஐக்கிய அமெரிக்கா தமிழர் பண்பாடு இவற்றையும் பார்க்கவும் பண்பாட்டு மாற்றம் பண்பாட்டு அதிர்ச்சி மேற்கோள்கள் பகுப்பு:தமிழர் பண்பாடு பகுப்பு:பண்பாடு diq:Portal:Zagon
விளையாட்டுகளின் பட்டியல்
https://ta.wikipedia.org/wiki/விளையாட்டுகளின்_பட்டியல்
பின்வருவது வகைப்படுத்தப்பட்ட விளையாட்டுகளின் பட்டியல் ஆகும். இது விளையாட்டு எவ்வாறு விளையாடப்படுகிறது என்ற அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இன்னும் பல விளையாட்டுகளை இதிலே சேர்த்துக்கொள்ள முடியும். இதிலுள்ள சில விளையாட்டுகள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளுள் அடங்கக்கூடியனவெனினும் ஒரு பிரிவில் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. தமிழர் விளையாட்டுகள் முதன்மைக் கட்டுரை: தமிழர் விளையாட்டுக்கள் அனைத்துலக அளவிலான விளையாட்டுகள் தட கள விளையாட்டுகள் சீருடற்பயிற்சிகள் சண்டை விளையாட்டுகள் விலங்குகள் தொடர்புள்ள விளையாட்டுகள் ஒட்டகச் சவாரி புறா விளையாட்டு குதிரை விளையாட்டுக்கள் நாய் விளையாட்டுகள் மஞ்சு விரட்டு மாட்டுவண்டிச் சவாரி துவிச்சக்கர வண்டி மிதிப்பு துவிச்சக்கர வண்டிகளை அல்லது ஒரு சில் வண்டிகளைப் பயன்படுத்தும் விளையாட்டுகள். BMX Cycloball Cyclocross Mountain bicycling Mountain unicycling சாலைத் துவிச்சக்கர வண்டியோட்டம் தடகளத் துவிச்சக்கர வண்டியோட்டம் Unicycle trials Extreme விளையாட்டுகள் BASE jumping Bodyboarding பங்கீ ஜம்பிங் உடல் நலத்தகுதி மோட்டர் கிராசு தாண்டோட்டம் (பர்க்கூர்) பாறை ஏற்றம் Skateboarding Snowboarding Wakeboarding மோட்டாரியக்க வாகன விளையாட்டுகள் மோட்டார் வாகன விளையாட்டு மோட்டார் படகு ஒட்டம் மோட்டார் சைக்கிள் ஓட்டம் வேறு மேற்படி எதிலும் இல்லாதவை அமெரிக்கக் கைப்பந்தாட்டம் சிறுவர் கள விளையாட்டு ரோபோ சண்டை நடன விளையாட்டு ஊனமுற்றோர் விளையாட்டுக்கள் வெளிக்கள விளையாட்டுகள் Sports not based on a specific field. Aerobatics Aeromodelling Ballooning Casting Canyoning Flying disc Gliding Hang gliding மலையேற்றம் Orienteering Parachuting Paragliding Scuba diving Skydiving Sled-dog sports விளையாட்டு மீன்பிடித்தல் Zorbing வலு விளையாட்டுகள் உடல் வலுவை சார்ந்த விளையாட்டுகள். உடற்கட்டாக்கம் Powerlifting கயிறிழுத்தல் பாரந்தூக்குதல் மட்டை விளையாட்டு பந்து அல்லது வேறு பொருட்களை அடித்து விளையாடுதல். பட்மிண்டன் Racquetball Real tennis மென் டென்னிசு ஸ்குவாஷ் டேபிள் டென்னிஸ் டென்னிஸ் skating Sports in which skates are used. Figure skating Roller hockey Roller skating, Inline skating Short-track speed skating பனிச்சறுக்கு விரைவோட்டம் Synchronized skating Skiing / Snowsports Sports in which skis or snowboards are used. மலைச்சரிவு பனிச்சறுக்கு (also known as Downhill skiing) Backcountry skiing (also known as Off Piste skiing) Biathlon Cross country skiing (together with ski jumping and nordic combined also known as Nordic skiing) Firngleiten Freestyle skiing Grass skiing Nordic combined Roller skiing Skibob Skijoring Ski jumping Ski touring Speed skiing Telemark skiing Snowboarding Freestyle snowboarding Extreme snowboarding Sleighing Sports that use sleighs. Bobsleigh Land luge லூஜ் Skeleton இலக்கு விளையாட்டுகள் Sports where the main objective is to hit a certain target. அம்பெய்தல் Kyudo Atlatl கோல்மேசை(பில்லியாட்ஸ்) Bar billiards Bocce பௌலிங் Croquet சுருள்வு (விளையாட்டு) Darts குழிப்பந்தாட்டம் (கோல்ப்) Disc golf Horseshoe throwing Laser Tag Lawn bowls Petanque அமெரிக்க கோல்மேசை(Pool) துப்பாக்கி சுடுதல் Skittles இந்திய கோல்மேசை(ஸ்னூக்கர்) குழு விளையாட்டுக்கள் Airsoft அமெரிக்கக் கால்பந்தாட்டம் அவுஸ்திரேலியக் காற்பந்தாட்டம் Bandy பேஸ்பால் கூடைப்பந்தாட்டம் Basque pelota Camogie கனேடியக் கால்பந்தாட்டம் Canoe Polo துடுப்பாட்டம் சுருள்வு (விளையாட்டு) Eton Wall Game Faustball Floorball கால்பந்தாட்டம் Gaelic football கைப்பந்தாட்டம் ஹொக்கி Hornusser Hurling பனி ஹொக்கி சடுகுடு Korfball Lacrosse வலைப் பந்தாட்டம் Paintball Petanque போலோ Roller Hockey Royal Shrovetide Football Rugby செபாக் டக்ரோ Shinty Skittles மென்பந்து வாலிபோல் Ultimate (Frisbee) மூளை விளையாட்டு பிரிட்ஜ் சதுரங்கம் (Chess) Checkers (draughts) போக்கர் Go சொல்லாக்க ஆட்டம் Shogi நீர் விளையாட்டுகள் மேற்கோள்கள் பகுப்பு:விளையாட்டுகள் தொடர்பான பட்டியல்கள்
சிந்துவெளி எழுத்து
https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_எழுத்து
வழிமாற்று சிந்துவெளி வரிவடிவம்
வட மாகாணம், இலங்கை
https://ta.wikipedia.org/wiki/வட_மாகாணம்,_இலங்கை
வட மாகாணம் (Northern Province) இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வட கோடியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு, அதன் மேற்கிலுள்ள தீவுகள் மற்றும் தலை நிலத்தின் ஒரு பகுதியான வன்னி என அழைக்கப்படும் பகுதியும் சேர்ந்து இம்மாகாணத்தை உருவாக்குகின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்கள் இந்த மாகாணத்துள் அடங்கியுள்ளன. வட மாகாணத்தின் தலைநகரம் யாழ்ப்பாணம் ஆகும். இலங்கை மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நடைமுறையில் உள்ளன. ஆனாலும், 1987 ஆம் ஆண்டில் இலங்கை யாப்பின் 13வது திருத்தத்தின் மூலம் மாகாண சபைகள் நிறுவப்பட்டதை அடுத்து மாகாணங்கள் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெற்றன. ஈழப் போர் இம்மாகாணத்திலேயே ஆரம்பித்தது. இது இலங்கையின் தமிழ் நாடு எனவும் அழைக்கப்படுகிறது. வரலாற்றுப் பின்னணி யாழ்ப்பாண அரசு காலத்தில் தற்போதைய வடமாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகள் அனைத்தும் பெரும்பாலும் அவ்வரசின் மேலாதிக்கத்தின் கீழேயே இருந்துவந்தது. எனினும் வன்னிப்பகுதி பல வன்னியச் சிற்றரசுகளாகவே செயற்பட்டுவந்தது. யாழ்ப்பாண அரசு ஆரியச் சக்கரவர்த்திகளிடமிருந்து ஐரோப்பியரான போர்த்துக்கீசரிடமும் பின்னர் ஒல்லாந்தரிடமும் கைமாறியபோதும் கூட வன்னிப்பகுதியில் இவ் வன்னியர்கள் ஓரளவு அதிகாரத்துடனேயே இருந்து வந்தார்கள். ஆங்கிலேயர் காலத்திலேயே வன்னிப்பகுதி முற்றிலுமாக மத்திய அரசின் நேரடியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. புவியியல் left|thumb|250px|யாழ் மாவட்டத்தில் உள்ள ஒரு பாலம் வட மாகாணம் இலங்கையின் வடக்கே இந்தியாவில் இருந்து 35 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இது இந்தியத் துணைக்கண்டத்துடன் தொன்மை வாய்ந்த ஆதாம் பாலம் (சேது பாலம், அல்லது இராமர் பாலம்) ஊடாக இணைக்கப்பட்டுள்ளது. இம்மாகாணத்தின் பரப்பளவு 8884 கிமீ2 ஆகும். இம்மாகாணம் மேற்கே மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவற்றாலும், வடமேற்கே பாக்கு நீரிணையாலும், வடக்கு மறூம் கிழக்கே வங்காள விரிகுடாவினாலும், தெற்கே கிழக்கு, வடமத்திய, வடமேல் மாகானங்களினாலும் சூழப்பட்டுள்ளது. வட மாகாணம் யாழ்ப்பாணக் குடாநாடு, வன்னி ஆகிய இரண்டு வெவ்வேறு நிலப்பரப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீர்ப்பாசனம் கிணறுகளின் உதவியுடன் நிலத்தடி நீர்ப்படுகையில் இருந்து பெறப்படுகிறது. வன்னிப் பகுதியில், குளங்கள், மற்றும் வற்றா ஆறுகள் உள்ளன. உங்குள்ள் முக்கிய ஆறுகள்: அக்கராயன் ஆறு, அருவி ஆறு, கனகராயன் ஆறு ஆகியனவாகும். இம்மாகாணத்தில் கடற் காயல்கள் பல உள்ளன. இவற்றில் கச்சாய் கடல் நீரேரி, நந்திக் கடல் போன்றவை முக்கியமானவை ஆகும். இலங்கையின் பெரும்பாலான தீவுகள் இம்மாகாணத்தின் மேற்கே அமைந்துள்ளன. இவற்றில் பெரியவை: ஊர்காவற்துறை, நெடுந்தீவு, காரைதீவு, புங்குடுதீவு, மண்டைதீவு ஆகியனவாகும். முக்கிய நகரங்கள் thumbnail|left|250px|இலங்கையின் வடமாகாணத்தின் மாவட்டரீதியான படம் வடமாகாணத்தின் மிக முக்கியமானதும், பெரியதுமான நகரம் யாழ்ப்பாணமாகும். இது யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. இதைவிட வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி நகரங்களும் மாவட்டத் தலைநகரங்களாகும். பின்வரும் நகரங்களும் வடமாகாணத்திலுள்ள முக்கிய சேவை மையங்களாகத் திகழ்கின்றன. காங்கேசன்துறை பருத்தித்துறை சாவகச்சேரி சுன்னாகம் பண்டத்தரிப்பு குடித்தொகை பரம்பல் வட மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் 55% ஆனோர் 11% நிலப்பரப்பைக்கொண்ட யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே செறிந்து வாழ்ந்து வந்தார்கள். 1995 இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக பெருமளவில் மக்கள், குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிப் பகுதியிலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் சென்று குடியேறிவிட்டதனால் இந்த விகிதாசாரம் இன்று பெருமளவு மாற்றமடைந்துள்ளது. வடமாகாணத்தின் பெரும்பான்மை மக்கள் தமிழர்களாவர். இவர்களைவிட முஸ்லிம்களும், சிங்களவர்களும் சிறுபான்மையாக உள்ளனர். வட மாகாணத்தில் மன்னார் மாவட்டத்திலேயே முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள். யாழ்ப்பாண நகரப்பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் அவர்கள் வாழ்கிறார்கள். இம் மாகாணத்தின் தெற்கு எல்லைப் பகுதிகளிலேயே சிங்களவர்கள் வாழ்கின்றனர். வவுனியாவிலும், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவர்கள் குடியேற்றங்கள் உண்டு. நிருவாகமாவட்டம் பிசேபிரிவுகள் கி.அபிரிவுகள் மொத்தப்பரப்பு(கிமீ2) நிலப்பரப்பு(கிமீ2) மக்கள்தொகை (2012) மக்கள்அடர்த்தி(/கிமீ2)இலங்கைத் தமிழர் சோனகர் சிங்களவர் இந்தியத் தமிழர்ஏனையோர் Totalயாழ்ப்பாணம் 15 435 1,025 929 577,246 2,139 3,366 499 128 583,378 569கிளிநொச்சி 4 95 1,279 1,205 109,528 678 962 1,682 25 112,875 88மன்னார் 5 153 1,996 1,880 80,568 16,087 1,961 394 41 99,051 50முல்லைத்தீவு 5 127 2,617 2,415 79,081 1,760 8,851 2,182 73 91,947 35வவுனியா 4 102 1,967 1,861 141,269 11,700 17,191 1,292 59 171,511 87மொத்தம் 33 912 8,884 8,290 987,692 32,364 32,331 6,049 326 1,058,762 119 மேற்கோள்கள் பகுப்பு:வட மாகாணம், இலங்கை
கிழக்கு மாகாணம், இலங்கை
https://ta.wikipedia.org/wiki/கிழக்கு_மாகாணம்,_இலங்கை
thumb|right|260px|பெரு வெள்ளத்தின் போது மட்டு வாவி இலங்கையின் கிழக்கு மாகாணம் (Eastern province) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் தலைநகர் திருகோணமலை ஆகும். மட்டக்களப்பு கிழக்கு மாகாணத்தின் பெரிய நகர் ‌ஆகும். தமிழீழத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இம் மாகாணமானது இலங்கைத் தீவின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. வடக்கே, வட மாகாண எல்லையிலிருந்து, தெற்கே, தென் மாகாண எல்லைவரையுள்ள நீண்ட கரையோரம் இம் மாகாணத்தின் கீழ் வருகின்றது. இலங்கை பிரித்தானியரிடமிருந்து அரசியல் விடுதலை பெற்ற பின்னர் உருவான இன அரசியலில் கிழக்கு மாகாணம் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. விடுதலைக்குப் பின் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களினால் நடைமுறைப் படுத்தப்பட்ட அரசுசார்புக் குடியேற்றத்திட்டங்கள், தமிழ்ப் பெரும்பான்மை மாகாணமாக இருந்துவந்த கீழ் மாகாணத்தின் இனப்பரம்பலில் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்குச் சார்பான நிலையைக் கொண்டுவர முயற்சிப்பதாகக் கூறித் தமிழ் மக்களிடையே அதிருப்தியைத் தோற்றுவித்தது. 1987 இல் ஏற்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தம் கிழக்கு மாகாணத்தை, வட மாகாணத்துடன் தற்காலிகமாக இணைத்து வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற ஒரே மாகாணசபை நிவாகத்தின் கீழ் கொண்டு வந்தது. அத்துடன் இணைந்த மாகாணங்களின் நிர்வாக மையமும், கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலையிலேயே அமைக்கப்பட்டது. இந்தத் தற்காலிக இணைப்பு 2006 அக்டோபர் 16 ஆம் நாள் இலங்கை உச்சநீதிமன்றத்தினால் நீக்கப்பட்டு இரண்டு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன. இந்த மாகாணம் தொடர்பில் தமிழர், சிங்களவர்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஒருபுறமிருக்க, நாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் முக்கிய பகுதியாகவும் கிழக்கு மாகாணமே விளங்குவதாலும், மாகாணத்தின் சனத்தொகையில் அண்ணளவாக 30% முஸ்லிம்களாக இருப்பதாலும் தீர்வு விடயத்தில் சிக்கல்கள் அதிகமாக உள்ளது. புவியியல் கிழக்கு மாகாணம் கிட்டத்தட்ட 9.996 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இது வடக்கே வட மாகாணம், கிழக்கே வங்காள விரிகுடா, தெற்கே தென் மாகாணம், மற்றும் மேற்கே ஊவா மாகாணம், மத்திய மாகாணம், வடமத்திய மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம்மாகாணத்தின் கரைப்பகுதிகள் பெரும்பாலும் கடற் காயல்களைக் கொண்டுள்ளன. இவற்றில் மட்டக்களப்பு வாவி, கொக்கிளாய் வாவி, உப்பாறு, உல்லைக்கழி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. நிருவாக அலகுகள் கிழக்கு மாகாணம் 3 மாவட்டங்களாகவும், 45 பிரதேச செயலாளர் பிரிவுகளாகவும், 1,085 கிராமசேவகர் பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. + புள்ளிவிபரம்மாவட்டம்பி.செ பிரிவுகள்கி.சேபிரிவுகள்பரப்பளவு(கிமீ2)மக்கள்தொகைமொத்தம்(2007 அண்.)அடர்த்தி(/கிமீ2)அம்பாறை205074,415610,719138.33மட்டக்களப்பு143482,854515,857180.75திருகோணமலை112302,727334,363122.61மொத்தம்451,0859,9961,460,939146.15 முக்கிய நகரங்கள் நிலை நகரம் மாவட்டம் மக்கள்தொகை(2012 அண்.) 1 கல்முனை அம்பாறை மாவட்டம் 106,783 2 திருக்கோணமலை திருகோணமலை மாவட்டம் 99,135 3 மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டம் 92,332 4 காத்தான்குடி மட்டக்களப்பு மாவட்டம் 40,883 5 ஏறாவூர் மட்டக்களப்பு மாவட்டம் 25,582 6 வாழைச்சேனை மட்டக்களப்பு மாவட்டம் 21,209 7 அம்பாறை அம்பாறை மாவட்டம் 20,309 8 செங்கலடி மட்டக்களப்பு மாவட்டம் 19,604 மேற்கோள்கள்
தொலைத்தொடர்பு
https://ta.wikipedia.org/wiki/தொலைத்தொடர்பு
தொலைத்தொடர்பு (Telecommunication) என்பது ஒரு தகவலை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் (இருவழித் தொடர்பு உட்பட) கடத்துகின்ற ஒரு நுட்பமாகும். தொலைத்தொடர்பு என்ற சொல், வானொலி, தந்தி, தொலைபேசி, தொலைக்காட்சி, தரவுத் தொடர்பு, கணினி வலையமைப்பு போன்ற எல்லாத் தொலைதூரத் தொடர்புகளையும் உள்ளடக்குகின்றது. தொலைத்தொடர்பு முறைமையொன்றின் மூலகங்களாவன, பரப்பி, ஓர் ஊடகம் (கம்பி), ஓர் அலைவரிசை, ஒரு வாங்கி என்பனவாகும். பரப்பியென்பது ஒரு தகவலை, சைகை எனப்படும் பௌதிகத் தோற்றப்பாடாக உருமாற்றுகின்ற அல்லது குறியீடாக்குகின்ற கருவியாகும். பரப்புகின்ற ஊடகம், அதன் பௌதிக இயல்பு காரணமாக, பரப்பியிலிருந்து வாங்கிக்குக் கடத்தப்படும் சைகைகளில் மாற்றத்தையோ தரக்குறைவையோ ஏற்படுத்துகின்றது. இந்தத் தரக்குறைபாட்டு எல்லைகளுக்கு உட்பட்டு, சைகைகளை மீண்டும் உரிய வடிவத்தில் தகவல்களாக மாற்றும் வல்லமைகொண்ட பொறிமுறை பரப்பிகளில் உண்டு. சில சந்தர்ப்பங்களில் இறுதி "வாங்கி"யானது மனிதர்களுடைய கண்ணாகவோ காதாகவோ இருக்கக்கூடும். வேறு சில சந்தர்ப்பங்களில் கண், காது தவிர்ந்த ஏனைய புலன்கள் கூட இப்பணியைச் செய்கின்றன. இவ்வேளைகளில் தகவல்களை மீள்வித்தல் மூளையிலேயே நடைபெறுகின்றது. தொலைத்தொடர்பு, ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு, ஓரிடத்திலிருந்து பல இடங்களுக்கு அல்லது கடைசியாகக் குறிப்பிடப்பட்டதன் ஒரு வேறுபாடான, பரப்பியிலிருந்து வாங்கிக்கு ஒரு வழியாக மட்டும் செல்லும் ஒலிபரப்பாகக் கூட இருக்கக்கூடும். தொலைத்தொடர்புப் பொறியாளர் ஒருவருடைய திறமை, பரப்பும் ஊடகத்தினுடைய பௌதிக இயல்புகளையும் தகவல்களின் புள்ளி விபர இயல்புகளையும் பகுத்தாய்ந்து பொருத்தமான குறியீடாக்கும் (encoding), குறியீடவிழ்க்கும் (decoding) பொறிமுறைகளை வடிவமைப்பதிலேயே தங்கியுள்ளது. மனிதப் புலன்களினூடான (பெரும்பாலும் பார்வை, கேள்விப் புலன்கள்) தொடர்புகளுக்கான முறைமைகளின் வடிவமைப்பின்போது, மனித உணர்தன்மை தொடர்பான உடலியல், உளவியல் அமிசங்கள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இது பொருளியல் அடிப்படையில் முக்கியத்துவம் பெறுவதால், பொறியாளர்கள், மக்களுடைய பார்க்கும், கேட்கும் அனுபவங்களில் கூடிய பாதிப்பை உண்டாக்காமல் எந்த அளவுக்குச் சைகைக் குறைபாடுகளைப் பொறுத்துக் கொள்ளலாம் என்று ஆராய்கிறார்கள். மனிதத் (தொலைத்)தொடர்பு - உதாரணம் எளிமையான உதாரணமாக, உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும் இடையிலான உரையாடலொன்றை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மூளையில் உருவாகும், நீங்கள் உங்கள் நண்பருக்குச் சொல்லவிரும்பும் வசனமே, தகவலாகும். மூலையிலுள்ள மொழி தொடர்பான பகுதிகள், motor cortex, குரல் நாண்கள், larynx மற்றும் பேச்சு எனப்படும் ஒலிகளை எழுப்பும் உங்கள் வாய் என்பனவே பரப்பி (transmitter) ஆகும். பேச்சு எனப்படும் ஒலியலைகளே சமிக்ஞைகள். இவ்வாறான ஒலியலைகளையும், எதிரொலி, பகைப்புலச் சத்தங்கள் (ambient noise), தெறிப்பலைகள் (reverberation) என்பவற்றைக் காவிச்செல்லும் காற்றே சனல் ஆகும். உங்களுக்கும், வாங்கியாகிய உங்கள் நண்பருக்குமிடையில், சமிக்ஞைகளில் திரிபுகளை ஏற்படுத்தக்கூடிய அல்லது ஏற்படுத்தாத வேறு தொழில்நுட்பக் கருவிகளும் (உம்: தொலைபேசி, அமெச்சூர் வானொலி முதலியன) இருக்கக்கூடும். உங்கள் நண்பருடைய காது, கேள்வி நரம்பு, உங்கள் குரலுக்கும் அருகேசெல்லும் வாகனத்தின் சத்தத்துக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொண்டு உங்கள் பேச்சை நீங்கள் சொல்லவிரும்பிய அதே வசனமாக மாற்றக்கூடிய அவருடைய மூளையின் மொழிப்பகுதிகள் என்பனவே இறுதியான வாங்கியாகச் செயல்படுகின்றன. அருகே செல்லும் வாகனத்தின் சத்தம், சனலின் முக்கிய இயல்புகளிலொன்றான noise என்பதற்கு உதாரணமாகும். சனலின் இன்னொரு முக்கியமான அம்சம் bandwidth என்பதாகும். ஏனைய பின்னணிகள் பெல் சோதனைச் சாலையைச் சேர்ந்த விஞ்ஞானி குளோட் ஈ ஷனோன் என்பவர், 1948ல், தொடர்பின் கணிதவியற் கோட்பாடு (A Mathematical Theory of Communication) என்பதி வெளியிட்டார். இந்த முக்கியத்துவம்வாய்ந்த வெளியீடு, தகவற் கோட்பாடு என வழங்கப்படும் தொடர்பு முறைமைகளை விபரிப்பதற்குப் பயன்படும் கணித மாதிரியுருக்களை உருவாக்க விழைந்தது. வரலாறு மத்தியகாலத்தில் இருந்து அமைப்புகள் 1792 ஆம் ஆண்டு பிரான்சியப் பொறியியலாளரான கிளவுடே சப்பே என்பவர் முதலாவது நிலைத்த காட்சியுடன் கூடிய தந்தி முறையை லீலிற்கும் பாரிசிற்கும் இடையில் வடிவமைத்தார். திறமை மிக்க இயக்குபவர்கள் தேவைப்பட்டதாலும் 10-30 கிலோமீற்றர்கள் (6–20 மைல்கள்) இடைவெளியில் விலை உயர்ந்த கோபுரங்களை அமைக்க வேண்டியிருந்ததாலும் இந்த அமைப்பு முறை பாதிக்கப்பட்டது. மின்சாரத் தந்தியின் கண்டுபிடிப்பால் ஏற்பட்ட போட்டியின் விளைவாக சுவீடனிலிருந்த ஐரோப்பாவின் இறுதி வர்த்த்க சேமாஃபோர் வரிசை 1880 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. தந்தி மற்றும் தொலைபேசி மின்சாரத்துடன் கூடிய தொலைத்தொடர்பு முறை மீதான பரிசோதனைகள் 1726 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தோல்வியடைந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்டன. அறிவியலாளர்களான பியர் சிமோன் இலப்லாசு, அம்பியர், கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் ஆகியோர் இப்பரிசோதனைகளில் ஈடுபட்டனர். நவீன தொலைத்தொடர்பு உலகளாவிய உபகரணங்கள் விற்பனை காட்னர் மற்றும் ஆர்ஸ் டெக்னிகாவால் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் நுகர்வோரின் முக்கிய தொலைத்தொடர்பு உபகரணங்களின் விற்பனை மில்லியன் அலகுகளில்; உபகரணம் / வருடம் 1975 1980 1985 1990 1994 1996 1998 2000 2002 2004 2006 2008 கணனிகள் 0 1 8 20 40 75 100 135 130 175 230 280 செல்லிடத் தொலைபேசிகள் கி/இ கி/இ கி/இ கி/இ கி/இ கி/இ 180 400 420 660 830 970 குறிப்பு: கி/இ என்பது கிடைக்கப்பெறவில்லை என்பதைக் குறிக்கின்றது. தொலைபேசி அனலாக் தொலைபேசி வலையமைப்பில் அழைப்பவர் அழைப்பினை மேற்கொள்ள வேண்டிய நபரை தொலைபேசி பரிமாற்றங்களின் ஊடாக அடைகின்றார். இக்கருவியை அலெக்சாண்டர் கிரகாம் பெல் கண்டுபிடித்தார். இக்கருவி ஒலி அலைகளால் அதிரும் ஒரு தகட்டிலிருந்து அவ்வதிர்வுகளை மின் குறிப்பலைகளாக மாற்றிப் பின்னர் இம்மின்னலைகளை மின் கம்பியின் வழியே செலுத்தி மறு முனையில் மீண்டும் ஒலியலைகளாக மாற்றப்படுவதன் மூலம் இயங்குகின்றது. இன்று இக்கருவி கம்பியில்லாமலே மின் குறிப்பலைகளை கடத்தும் வகையில் தொழில் நுட்ப வளரச்சி அடைந்துள்ளது. எடுத்துக்காட்டுகள் டிஜிட்டல் சனல் coding முறைமைகளுக்கான எடுத்துக்காட்டுகள்: Hamming coding, Gray coding, இருமக் coding, Turbo coding. தொலைத்தொடர்பு முறைமைகளுக்கான எடுத்துக்காட்டுகள்: Semaphore தந்தி Radioteletype உலகத் தொலைபேசி வலையகம் (பொது Switched தொலைபேசி வலையகம் அல்லது PSTN எனவும் அழைக்கப்படுவதுண்டு) வானொலி தொலைக்காட்சி தொலைத்தொடர்புச் செய்மதிகள் ஈதர்நெட் இணையம் பின்வருவனவற்றையும் பார்க்கவும் வெளி இணைப்புகள் Ericsson's Understanding Telecommunications International telephone directories and zip codes பகுப்பு:தொலைத்தொடர்பு
சதுரங்கம்
https://ta.wikipedia.org/wiki/சதுரங்கம்
thumbnail|250px|right|விஸ்வநாதன் ஆனந்த் முன்னாள் உலக சதுரங்க வெற்றிவீரர் அரசர்களின் விளையாட்டு என கருதப்படும் சதுரங்கம் அல்லது செங்களம் அல்லது வல்லாட்டம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டுக்குத் தமிழில் ஆனைக்குப்பு என்ற பெயரும் உண்டு. ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ்விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம். விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த மொத்தமாக 64 கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாகக் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். செங்களம் அதிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அன்று. மதியூகமும், தந்திரமும் இவ்விளையாட்டுக்கு முக்கியமானவையாகும். தற்காலங்களில் இவ்விளையாட்டானது பாடசாலைப் பாடவிதானத்திலும் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் பூராகவுமுள்ள பல மில்லியக்கணக்கான மக்களால் வீடுகளில், பூங்காக்களில், கழகங்களில், இணையத்தளத்தில், கணினியிலும் போட்டித்தொடர்களாகவும் விளையாடப்பட்டு வருகிறது. செங்களம் மனித இனத்தின் பிரபல விளையாட்டுகளில் ஒன்றாகும். இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. இது சில சமயம் ஒரு போர் விளையாட்டாகவும், "மூளை சார்ந்த போர்க்கலை"யாகவும் பார்க்கப்படுவதுண்டு. பல விதமான சதுரங்க விளையாட்டுகளும், அதனுடன் தொடர்புடைய சில விளையாட்டுகளும் உலகமெங்கிலும் விளையாடப்படுகின்றன. சீனாவின் சியாங்கி, சப்பானின் சோகி, நேபாளத்தின் புத்தி சல் என்பன இவற்றுள் புகழ் வாய்ந்தவை. ஒருவருடைய பகுதியில் (வெள்ளை/ கறுப்பு) ஓர் அரசன், ஓர் அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு யானைகள் மற்றும் எட்டு சிப்பாய்கள் காணப்படும். ஒவ்வொரு வகையான காயும் விதம் விதமாக நகரக்கூடியவை. விளையாடும் வழிமுறை செங்களம் இருவரால் விளையாடப்படும் ஆட்டமாகும். தனது அரசனை பாதுகாத்துக்கொண்டு, எதிரியின் அரசனைப் பிடிப்பதே ஆட்டத்தின் சூட்சமம். எதிரி அரசனை, எதிரி தனது அரசனை பிடித்துவிடுவதற்கு முன்பு பிடித்துவிட்டால் வெற்றி கிடைத்துவிடும். விளையாட்டும் முடிவடைந்து விடும். செங்களம் ஒரு சதுரப்பலகையில் விளையாடப்படும். இந்தச் சதுரப்பலகை படத்தில் காட்டப்பட்டுள்ளது போல வெள்ளை கறுப்பு என மாறி மாறி 8x8=64 சதுரங்களை கொண்டிருக்கின்றது. அதாவது 8 நிரைகளையும் 1, 2, 3, 4, 5, 6. 7, 8 (கீழிருந்து மேலாக), 8 நிரல்களையும் a, b, c, d, e, f, g, h (இடத்திலிருந்து வலமாக) கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சதுரத்தையும் இயற்கணித குறியீட்டுக்கமைய தனித்துவமாக குறிக்கலாம். முதலாவது சதுரம் (a, 1), இரண்டாவது சதுரம் (a, 2) என்று 64வது சதுரம் (h, 8) என்று அமையும். இந்த விளையாட்டில் இரு அணிகள் அல்லது படைகள் உண்டு. அவை முறையே வெள்ளைப் படை, கறுப்புப் படை என்று அழைக்கப்படும். ஒவ்வொரு படையிலும் 16 காய்கள் உண்டு. ஒவ்வொரு படையிலும் ஒரு அரசன், ஒரு அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள், எட்டு படைவீரர்கள் ஆகிய காய்கள் இருக்கும். ஆரம்ப நிலை படத்தில் காட்டப்பட்டவாறு ஆரம்ப அடுக்கல் அமையவேண்டும். முதல் நிரலில் அல்லது வரிசையில் வெள்ளைப் படையின் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு வெள்ளை அரசி (d, 1) வெள்ளைச் சதுரத்திலும் வெள்ளை அரசன் (e, 1) கறுப்புச் சதுரத்திலும் நிற்கவேண்டும். இரண்டாவது நிரலில் எட்டு வெள்ளைப் படைவீரர்களும் நிற்கும். இதைப் போலவே எதிர் திசையில் அதாவது எட்டாவது நிரலில் கறுப்புப் படையின் கோட்டை, குதிரை, மந்திரி, அரசி, அரசன், மந்திரி, குதிரை, கோட்டை என்று அமையும். இங்கு கறுப்பு அரசி (d, 8) கறுப்புச் சதுரத்திலும் கறுப்பு அரசன் (e, 8) வெள்ளைச் சதுரத்திலும் நிற்க வேண்டும். ஏழாவது நிரலில் எட்டு கறுப்புப் படைவீரர்களும் நிற்கும். காய்கள் நகர்வு முறைகள் அரசன் அரசன் அல்லது ராஜா தான் இருக்கும் இடத்திலிருந்து எத்திசையிலும் ஒரு சதுரத்துக்கு மட்டுமே நகரமுடியும். e4 கட்டத்தில் உள்ள வெள்ளை ராஜா ஒரே ஒரு கட்டம் மட்டும் நகர்ந்து e3,e5.d3,d4,d5,f3,f4,f5 ஆகிய எட்டு கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்திற்கு செல்ல முடியும். ஆனால் ஒரு சிறப்பு வகை நகர்த்தலில் மட்டும் ராஜாவை இரண்டு சதுரங்கள் நகர்த்தலாம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நகர்விற்கு கோட்டை கட்டுதல் (castling) என்று பெயர். இப்படி ராஜா இரு கட்டங்கள் நகரும்பொழுது, கோட்டை அரசரைத்தாண்டி அடுத்தக் கட்டத்தில் இடப்புறமோ வலப்புறமோ நிற்கும். இப்படி ஒரு ஆட்டத்தில் அரசரும் யானையும் ஒரே நேரத்தில் நகருவதை கோட்டை கட்டுதல் என்பர். இவ்வாறு கோட்டை கட்டுவதற்கு முன்பாக ராஜா, கோட்டை என்ற இரண்டு காய்களில் ஒன்றைக் கூட நகர்த்தி இருக்கக்கூடாது. அப்படி நகர்த்தி இருந்தால் கோட்டை கட்டும் நகர்வை செய்ய முடியாது. மேலும் ராஜாவுக்கு ஆபத்து (check) இருக்கும் போதும், கோட்டை கட்டலின் விளைவாக ராஜா நிற்கும் இடத்தில் ஆபத்து (check) இருந்தாலும் கோட்டை கட்டும் நகர்வை செய்ய முடியாது. ராணி இருக்கும் பக்கமாக கோட்டை கட்டிக்கொள்வதை நீண்ட கோட்டை கட்டுதல் என்பர். ராஜா தன் பக்கத்தில் கோட்டை அமைத்துக் கொள்வதை குறுகிய கோட்டை கட்டுதல் என்பர். ராணி அரசியால் தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் நெடு வரிசையிலோ, கிடைவரிசையிலோ மூலைவிட்டமாகவோ எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படத்தில் படத்தில் காட்டப்படும் ராணியை நாம் தேவைக்கேற்ப காட்டப்பட்ட ஏதாவது ஒரு கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ள இயலும். மந்திரி மந்திரி அல்லது தேர்' 'நகர்வு முறை: மந்திரி அல்லது தேர் மூலைவிட்டமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் மந்திரியை நாம் தேவைக்கேற்ப f5,g6,h7,d5,c6,b7,a8,f3,g2,h1,d3,c2,b1 ஆகிய 13 கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ள இயலும் குதிரை குதிரை: தான் இருக்கும் இடத்தில் இருந்து எத்திசையிலும் ’ட’ வடிவில் நகர முடியும் (ஒரு கட்டம் மேல்-கீழாகவோ அல்லது இடம் வலமாகவோ நகர்ந்த பின் இரு கட்டங்கள் செங்குத்தான திசையில் நகரும்). குதிரை மட்டும் காயைத்தாண்டிச் செல்லும் திறம் கொண்டது. படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் குதிரையை நாம் தேவைக்கேற்ப f6,d6,g5,g3,f2,d2,c3,c5 ஆகிய எட்டு கட்டங்களில் ஏதாவது ஒன்றில் நகர்த்திக் கொள்ள இயலும்.குதிரை கருப்புக் கட்டத்தில் இருக்குமேயானால் வெள்ளைக் கட்டத்திற்கும் வெள்ளைக் கட்டத்தில் நிற்குமேயானால் கருப்புக் கட்டத்திற்கும் நகர்ந்து செல்லும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். யானை யானை: தான் இருக்கும் இடத்தில் இருந்து நேராக எத்திசையிலும் முன்னே பின்னே அல்லது இட வலமாக எத்தனை சதுரத்துக்கும் நகரமுடியும். ஆனால் கோட்டையால் ஒரு காயைத் தாண்டிச் செல்ல முடியாது. படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் கோட்டையை நாம் தேவைக்கேற்ப e5,e6,e7,e8,e3,e2,e1,f4,g4,h4,d4,c4,b4,a4 ஆகிய 14 கட்டங்களில் ஏதாவது ஒன்றில் நகர்த்திக் கொள்ள இயலும். சிப்பாய் படைவீரர்: தான் இருக்கும் இடத்தில் இருந்து நேரே முன்நோக்கி மட்டும் ஒரு சதுரம் நகர முடியும். ஆனால் ஆரம்பநிலையில் மட்டும் தான் இருக்கும் இடத்தில் இருந்து முன்நோக்கி இருசதுரங்கள் விளையாடும் வீரர் விரும்பினால் நகர்த்த்திக் கொள்ளலாம். படைவீரர் தன் தாக்குதலை முன்நோக்கிய மூலைவிட்டமாக மட்டுமே மேற்கொள்ளலாம். ஆனால், தாக்குதலில் இருந்து தப்பும் நோக்கில் ஆரம்ப நிலையில் இருந்து இரு சதுரங்கள் நகரமுடியாது.போகும் போது பிடித்தல் வெள்ளைப் படைவீரர் 5ம் வரியில் இருக்கும் போது கறுப்பு படைவீரர் வெள்ளைப் படைவீரருக்கு பக்கத்தில் நகர்த்தினால் கறுப்பு படைவீரரை வெள்ளைப் படைவீரர் தாக்கலாம். இதனை எம்பஸ் (Enpassant) என்று கூறுவார்கள். படைவீரரை படிப்படியாக நகர்த்திக் கொண்டு கடைசிப் பெட்டியை அடைந்தால் அப்படைவீரனை பதவி உயர்வு கொடுத்து ராணி, மந்திரி, குதிரை மற்றும் கோட்டை ஆகியவற்றில் ஒன்றாக மாறிக்கொள்ளலாம். படத்தில் e4 கட்டத்தில் நிற்கும் படைவீரன் e5 கட்டத்திற்கு மட்டுமே முன்னேறிச் செல்ல முடியும். ஆனால் இவ்வீரனால் f5, d5 கட்டங்களில் உள்ள எதிரியின் காயைத் தாக்கி வெட்ட முடியும. ஒரு வேளை எதிரியினால் வெட்டுப்படாமல் படிப்படியாக முன்னேறி e8 கட்டத்தை இவ்வீரன் அடைந்தால் அவன் பதவி உயர்வு அடைவான்.. ஆட்டம் வெள்ளைப் படையணியே முதலில் நகரவேண்டும். யார் வெள்ளைப் படையணி என்பதை ஆடுபவர்கள் தீர்மானிக்கவேண்டும். முதலில் யார் நகர்த்துகின்றார்களோ அவர்களுக்கு ஆட்டத்தில் ஒருவித இலாபம் இருக்கும் என்று கருதுகிறார்கள். கருப்புப் படையணியைக் கொண்டிருப்பவன் இந்த ஆரம்ப முன்னிலையை சமன் செய்ய கூடுதலாக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். . வரலாறு thumbnail|அவர்கள் வெளியில் செங்களம் விளையாட வேண்டும் போது பல மக்கள் பயன்படுத்தப்படும் ஹோபார்ட், டாஸ்மேனியா படம் பெரிய சதுரங்க தொகுப்பு. செங்களத்தின் தோற்றம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், ஏழாம் நூற்றாண்டு அளவில் இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த சதுரங்கம் என்னும் விளையாட்டிலிருந்தே இது வளர்ச்சியடைந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து.Hindi and the origins of chess | Chess News இங்கிருந்து மேற்கே ஐரோப்பாவுக்கும், கிழக்கே கொரியா வரையும் பல வேறுபாடுகளுடன் பரவியது. இது மங்கோலியா வழியாக ரஷ்யாவுக்குப் பரவியது. அங்கே ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விளையாடப்பட்டதாகத் தெரிகிறது. இந்தியாவிலிருந்து பாரசீகத்துக்குப் பரவிய இவ்விளையாட்டு, பாரசீகத்தை இஸ்லாமியர்கள் கைப்பற்றிய பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிலும் பரவியது. முஸ்லிம்களால் பத்தாம் நூற்றாண்டு அளவில் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில், காஸ்ட்டில்லின் அல்போன்சோ X-இன் ஆதரவில், சதுரங்கம், பாக்கம்மொன், டைஸ் என்னும் விளையாட்டுக்கள் தொடர்பான நூலொன்று எழுதப்பட்டுள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் செங்களம் இங்கிலாந்தை எட்டியது. அங்கே அது கூரியர் முதலிய வேறுபட்ட வடிவங்களாக உருவெடுத்தது. 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சதுரங்கக் காய்களின் நகர்த்தல்களுக்கான வரைமுறைகள் இத்தாலியில் பயன்பாட்டுக்கு வந்தன. "போன்"கள் (வீரர்) முதல் நகர்த்தலின்போது இரண்டு கட்டங்கள் முன் நகரலாம் என்ற விதி ஏற்பட்டது, "பிஷப்" திறந்த கட்டங்களின் மூலைவிட்டம் வழியாக எவ்வளவு தூரமும் செல்லலாம் என்ற விதியும் புழக்கத்துக்கு வந்தது. முன்னர் இவை மூலைவிட்டம் வழியாக இரண்டு கட்டங்கள் மட்டுமே நகர அனுமதிக்கப்பட்டது. ஆனால் கட்டங்களைப் பாய்ந்து செல்ல இவற்றுக்கிருந்த அனுமதி நீக்கப்பட்டது. மூலை விட்டம் வழியாக ஒருகட்டம் மட்டுமே நகரலாம் என "இராணி"க்கிருந்த சக்தி கூட்டப்பட்டு திறந்த கட்டங்களினூடாக எத்திசையிலும், எவ்வளவு தூரமும் நகரலாம் என அனுமதிக்கப்பட்டு "இராணி" ஒரு மிகச் சக்திவாய்ந்த காயாக ஆக்கப்பட்டது. மேற்படி மாற்றங்கள் சதுரங்கத்தை கூடுதலாகப் பகுப்பாய்வு செய்வதற்கு வழிவகுத்ததின் மூலம், பல ஈடுபாடுள்ள சதுரங்க ஆர்வலர்களை உருவாக்கியது. அக்காலம் தொட்டு ஐரோப்பாவில் செங்களம் அதிகம் மாற்றமில்லாது இன்று விளையாடப்படுவது போலவே இருந்துவருகிறது. சமநிலைக்கான நிபந்தனைகள் தவிர்ந்த ஏனைய, தற்போது புழக்கத்திலுள்ள வரைமுறைகள் யாவும் 19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் முடிவு செய்யப்பட்டன. "ஸ்டவுண்டன்" தொகுதி எனப்படும் மிகப் பிரபலமான காய் வடிவமைப்பு நத்தானியேல் குக் என்பவரால் 1849 இல் வடிவமைக்கப்பட்டு, அக்காலத்தில் முன்னணிச் செங்களம் விளையாட்டு வீரரான ஹோவார்ட் ஸ்டவுண்டன் என்பவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டபின், 1924 இல் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு ஆல் உத்தியோக பூர்வமாகப் புழங்க விடப்பட்டது. ஒரு காலத்தில் சதுரங்க விளையாட்டுக்கள் விபரிப்பு செங்களம் குறியீடுகள் (descriptive chess notation) மூலம் பதிவு செய்யப்பட்டன. இது இன்னும் சில விளையாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டுவரினும், புதிய, சுருக்கமான அட்சரகணித சதுரங்கக் குறியீடுகளால் இவை படிப்படியாக மாற்றீடு செய்யப்பட்டு வருகின்றன. காவத்தக்க விளையாட்டுக் குறியீடு (Portable Game Notation – PGN) முறையே கணிணிப் பயன்பாட்டு வடிவில் அமைந்த மிகப் பொதுவான குறியீட்டு ஒழுங்கு ஆகும். மனித மூளைக்கு மட்டுமே உரித்துடையதாகக் கருதப்பட்ட சதுரங்க விளையாட்டை இப்பொழுது, மனிதர்கள் மட்டுமன்றி இயந்திரங்களும் விளையாடத் தொடங்கிவிட்டன. ஆரம்பகாலங்களில் வெறும் ஆர்வம் காரணமாகப் பயன்பட்டுவந்த ஒன்றாக இருந்த போதிலும், கணினி செங்களம் விளையாடும் கணினிகள் வளர்ந்து திறமையான மனிதர்களுக்கே சவால்விடக்கூடிய, சிலசமயம் தோற்கடிக்கக்கூடிய அளவுக்குச் சக்தி மிக்கவையாகிவிட்டன. அக்காலத்தில் சதுரங்க விளையாட்டில் உலகில் முதல் நிலையிலிருந்த காரி காஸ்பரோவ், 1996ல், 6 விளையாட்டுகள் கொண்ட சதுரங்க ஆட்டத்தை ஐபிஎம் சதுரங்கக் கணினியான டீப் புளூ (ஆழ் நீலம்) வுக்கு எதிராக விளையாடினார். முதல் விளையாட்டில் (டீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1) காஸ்பரோவை வென்றது லம் கணினி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும் 3 விளையாட்டுக்களை வென்றது மூலமும், ஏனைய இரண்டிலும் சமநிலையை அடைந்தது மூலமும் காஸ்பரோவ் வெற்றிபெற்றார். 1997 இல் மறுபடியும் நடைபெற்ற 6 விளையாட்டுகள் கொண்ட ஆட்டத்தில் கணினி வெற்றிபெற்றது. அக்டோபர் 2002ல் விளாமிடிர் கிராம்னிக் எட்டு விளையாட்டுகள் கொண்ட ஆட்டத்தில் டீப் பிரிட்ஸ் என்னும் கணினி நிரல் உடன் சமநிலை பெற்றார். 2003 பெப்ரவரியில், டீப் ஜூனியர் எனும் கணினி நிரல் உடன் விளையாடிய 6 விளையாட்டு ஆட்டத்திலும், பின்னர் நவம்பரில் X3D பிரிட்ஸ் உடன் விளையாடிய 4 விளையாட்டு ஆட்டத்திலும் காஸ்பரோவ் சமநிலையையே பெற்றார். தவறு நடந்து விட்டது இங்கே வியூகம் என்பது ஒரு விளையாட்டிற்கான ஒரு நீண்ட நேர இலக்குக்கான வழிமுறையையும், உத்தி என்பது உடனடியான நகர்த்தலுக்கான தந்திரங்களையும் குறிக்கிறது. சதுரங்க விளையாட்டில் நீண்ட நேர வழிமுறைகளையும், உடனடி உத்திகளையும் வேறுபடுத்தமுடியாது. ஏனெனில் வியூகம் சார்ந்த இலக்குகளை உத்திகள் மூலமே அடையமுடியும். அதே வேளை முன்னைய வியூகங்களே பின்னைய நகர்த்தல்களின் போது உத்திகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குகின்றன. வேறுபட்ட வியூகம் மற்றும் உத்தி வழிமுறைகள் காரணமாக ஒரு சதுரங்க விளையாட்டை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். முதலாவது "தொடக்க ஆட்டம்", வழக்கமாக இப்பிரிவு ஆட்டம் 10 முதல் 25 நகர்த்தல்களைக் கொண்டிருக்கும். இக் கட்டத்தில் விளையாடுபவர்கள் தங்கள் படைகளை வரப்போகும் போருக்குத் தயார் படுத்துவர். அடுத்தது "நடு ஆட்டம்" இது விளையாட்டின் முதிர்நிலை. இறுதியாக "முடிவு ஆட்டம்", இக் கட்டத்தில் பொதுவாகப் பெரும்பாலான காய்கள் வெளியேறியிருக்கும். அதனால், அரசனுக்கு விளையாட்டில் முக்கிய பங்கு இருக்கும். தொடக்க ஆட்டம் சதுரங்க விளையாட்டின் தொடக்க ஆட்டம், ஆரம்ப நடவடிக்கைகளான சில திறப்பு நகர்வுகளை அடிப்படையாக கொண்டு ஆரம்பமாகிறது. இத்திறப்பு நகர்வுகள் அனுபவங்களின் அடிப்படையில் திட்டமிடப்பட்டு சிறு சிறு தொகுப்புகளாக பெயரிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ரூயி லோப்பஸ் திறப்பு, சிசிலியன் தடுப்பாட்டம் என்பன சில உதாரணங்களாகும். இவ்வாறு பெயரிடப்பட்ட பல்வேறு திறப்பு நகர்வுகள் குறிப்புதவி நூலான திறப்பு நகர்வுகளின் கலைக் களஞ்சியம் திரட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. இப்பட்டியலில் அமைதியான முற்றுகை உத்தி முதல் தீவிர தாக்குதல் உத்தி வரையிலான ஏராளமான திறப்பு நகர்வு வரிசைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வரிசைகள் இரு தரப்பினருக்குமான முப்பது நகர்வுகள் வரை நீண்டுள்ளவையாக தொகுக்கப்பட்டுள்ளன. தொழில் முறை சதுரங்க வீரர்கள் இத்திறப்பு கோட்பாடுகளை படித்து ஆராய பல ஆண்டுகள் வரை செலவழித்து தெளிவடைய முயல்கிறார்கள். பெரும்பாலான திறப்பு நகர்வுகளின் அடிப்படை நோக்கம் ஒரேமாதிரியாகவே காணப்படுகிறது. முன்னேற்றம்: எதிரியின் காய்களை நம்முடைய பிரதேசத்தில் ஊடுறுவாமல் தடுக்கவும் அதே நேரத்தில் நம் காய்கள் முன்னேறி எதிரியின் பகுதியில் நுழையவும் திட்டமிடும் நுட்பம் முதலாவது நோக்கமாகும். இந்நுட்பமானது நம்முடைய காய்களை, குறிப்பாக குதிரை மற்றும் மந்திரியை உபயோகமான இடத்தில் நிறுத்தி ஆட்டத்தின் போக்கை நமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதை கற்பிக்கிறது. மத்திய சதுரங்கள் கட்டுப்பாடு: சதுரங்க பலகையின் மத்திய சதுரங்கள் நம் காய்களின் கட்டுப்பாட்டில் இருந்தால், நம் காய்களை இலகுவாக எந்த பகுதிக்கும் நகர்த்தமுடியும் என்பது மற்றொரு நோக்கமாகும். மத்திய சதுரங்களை நம் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது எதிரியின் காய்களை முன்னேற விடாமல் தடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசனின் பாதுகாப்பு: அபாயகரமான தாக்குதல்களில் இருந்து அரசனை பாதுகாப்பது மூன்றாவது நோக்கமாகும். உரிய நேரத்தில் கோட்டை கட்டிக் கொள்ளுதல் அரசனின் பாதுகாப்பிற்கு சற்று உதவும் என்பது இந்நோக்கத்தின் அடிப்படையாகும். சிப்பாய்கள் அணிவகுப்பு: ஆதரவாக தோள் கொடுக்கும் வீரர்கள் துணையிருந்தால் ஒரு சிப்பாய் வீரனால் எளிமையாக முன்னேறிச் செல்லமுடியும் என்ற அடிப்படை நான்காவது நோக்கமாகும். தனிமைப்படுத்தப்பட்ட சிப்பாய், ஒரு சிப்பாயின் முதுகின் பின்னால் மறைந்து நிற்கும் சிப்பாய் போன்ற பலவீனங்களை உருவாக்குவதை தவிர்ப்பதும், இப்பலவீனங்களை எதிரியின் சிப்பாய்களுக்கிடையில் ஏற்படுத்த கட்டாயப்படுத்துவதும் இந்நோக்கத்திலுள்ள நுட்பங்களாகும். நடு ஆட்டம் திறப்பு நகர்வுகளின் வரிசையில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஆட்டத்தை தொடங்கிய பிறகு சதுரங்க விளையாட்டின் முக்கியப் பகுதியாக திகழ்வது நடு ஆட்டமாகும். சதுரங்கப் பலகையில் உள்ள பெரும்பாலான காய்கள் தடையின்றி முன்னேற வழிகள் கிடைத்தவுடன் நடு ஆட்டம் துவங்குவதாக கருதப்படுகிறது. தொடக்கம் மற்றும் நடு ஆட்டங்களுக்கு இடையே தெளிவான வரிசைத் தொகுப்புகள் வரையறுக்கப்படவில்லை. ஏனெனில், திறப்புக் கோட்பாடுகளை முடித்துக் கொள்ளும் வீரர்கள், தங்கள் காய்களின் அமைவிடம், பலம், பலவீனம் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் சுயசிந்தனையில் தனித்துவமான திட்டங்களை அமைக்க முற்படுவர். இந்நிலையில் வீரர்கள் தங்கள் எதிரியைத் தாக்குதல், கைப்பற்றுதல், முன்னேறுதல், பலிகொடுத்தல் முதலான தந்திரங்களை கையாளும் சாத்தியக்கூறுகளை ஆராய்வர். ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய சேர்க்கை நகர்வுகள் படலம் நடு ஆட்டங்களில்தான் தோற்றம் பெறுகின்றன. சேர்க்கை நகர்வுகள் என்பன ஆதாயத்தை அடிப்படையாக கொண்ட சில தந்திர நகர்வுகளின் தொடர் ஆகும். திட்டமிடப்பட்ட இத்தொடர் நகர்வுகள் எதிரி ராசாவின் மீது தாக்குதல் தொடுக்கும் உத்தியோடு இணைக்கப்படுகின்றன. குறிப்பிட்ட சில பொதுவான நகர்த்தல் முறைகள் அவற்றைக் கண்டறிந்தவர்கள் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, போடென் மேட் அல்லது லஸ்கர்-பார் சேர்க்கைகள். வியூகத்தின் அடிப்படைகள் சதுரங்கத்தின் வியூகம்; காய்களின் நிலைகளை மதிப்பிடல், இலக்குகளை முடிவு செய்தல், விளையாட்டுக்கான நீண்ட நேரத் திட்டங்களை உருவாக்குதல் என்பவற்றோடு தொடர்புடையது. மதிப்பீடு செய்யும்போது, விளையாடுபவர்கள் பலகையில் உள்ள காய்களின் மதிப்பு, போர்வீரர் அமைப்பு, அரசனின் பாதுகாப்பு, வெளிகள், முக்கிய கட்டங்களினதும் கட்டத் தொகுதிகளினதும் கட்டுப்பாடு ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். காய்களின் நிலைகளை மதிப்பிடுவதில் முக்கியமானது இரு தரப்பினதும் மொத்தப் பெறுமதியைக் கணக்கிடுவதாகும். இதற்காகப் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டுப் புள்ளிகள் அநுபவத்தினால் பெறப்படுபவை. பொதுவாகப் படைவீரர்களுக்கு ஒரு புள்ளியும்; குதிரைக்கும், மந்திரிக்கும் மூன்று புள்ளிகள் வீதமும், கோட்டைக்கு ஐந்து புள்ளிகளும், அரசிக்கு ஒன்பது புள்ளிகளும் வழங்கப்படுகின்றன. விளையாட்டின் முடிவுக் கட்டத்தில், அரசனுக்கு, குதிரை அல்லது மந்திரியிலும் மதிப்புக் கூடுதலாக இருக்கும் ஆனால் கோட்டையிலும் குறைவான மதிப்பே அரசனுக்கு வழங்கப்படுகிறது. இதனால் அரசனுக்கு போரிடும் மதிப்பாக நான்கு புள்ளிகள் வழங்கப்படுவது உண்டு. இந்த அடிப்படை மதிப்புகள், காய்களின் நிலை, காய்களுக்கு இடையிலான தொடர்புகள், நிலையின் வகை'' போன்ற பிற சூழ்நிலைகளைப் பொறுத்து மாற்றம் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, முன்னேறி இருக்கும் படைவீரர்களுக்குத் தொடக்க நிலையில் இருக்கும் படைவீரரிலும் மதிப்பு அதிகம். இரண்டு மந்திரிகள் இருப்பது ஒரு மந்திரியும் ஒரு குதிரையும் இருப்பதிலும் கூடிய மதிப்பு உள்ளது. அதே வேளை பல படைவீரர்களுடன் கூடிய மூடிய நிலைகளில் குதிரைக்கு மதிப்பு அதிகம். படைவீரர்கள் குறைவாக இருந்து திறந்த நிலை காணப்படுமானால் மந்திரிக்குக் கூடுதல் மதிப்பு உண்டு. சதுரங்க நிலைகளை மதிப்பீடு செய்வதில் இன்னொரு முக்கிய அம்சம் "படைவீரர் அமைப்பு". படைவீரர்களே சதுரங்கப் பலகையில் உள்ள காய்களில் நகர்திறன் குறைந்தவை. இதனால் இவை ஒப்பீட்டளவில் நிலையானவை என்பதுடன், இவை பெரும்பாலும் விளையாட்டின் வியூகம் சார்ந்த இயல்புகளைத் தீர்மானிக்கின்றன. தனிமையான, இரட்டையான, பின்தங்கிய, படைவீரர்களைக் கொண்ட அல்லது வெளிகொண்ட படைவீரர் அமைப்புக்கள் வலுக்குறைவானவை. ஒரு முறை உருவாகிவிட்டால் பொதுவாக அதுவே நிலைபெற்று விடுகிறது. இதனால், தாக்குதலுக்கான வாய்ப்பு முதலிய வேறு வாய்ப்புக்கள் இருந்தாலன்றி, இவ்வாறான நிலை ஏற்படாதவாறு பாதுகாத்துக்கொள்வது வழக்கம். உத்திகளின் அடிப்படைகள் உத்திகள் குறுகிய நேரத்துக்குரிய நடவடிக்கைகளைக் குறிக்கின்றன. இவை குறுகிய நேரத்துக்கானவை என்பதால், மனித மூளையோ அல்லது கணினியோ இலகுவில் அதன் விளைவுகளைக் கணிக்கக்கூடியதாக இருக்கும். எனினும் இக் கணிப்பின் ஆழம் விளையாடுபவரின் திறமையையோ, கணினியின் ஆற்றலையோ பொறுத்தது. இரண்டு தரப்பிலும் நகர்த்தலுக்கான வாய்ப்புக்கள் அதிகம் இருக்கும்போது அதிகம் ஆழமான கணிப்பு இலகுவானதல்ல. ஆனால் சிக்கலான வேளைகளில், குறைந்த அளவு வய்ப்புக்கள் இருக்கும்போது, ஆழமாக, தொடர்ச்சியான பல நகர்வுகளைக் கணிக்க முடியும். எளிமையான, ஒன்று அல்லது இரண்டு நகர்த்தல்களுக்குள் அடங்கும் உத்திசார்ந்த செயற்பாடுகள் - பயமுறுத்தல்கள், காய்களைக் கொடுத்து எடுத்தல், இரட்டைத் தாக்குதல் போன்றவற்றை - ஒன்று சேர்த்து மேலும் சிக்கலான உத்திகளாகப் பயன்படுத்தலாம். வழமையாக இது ஒரு தரப்பிலிருந்தோ அல்லது சில சமயங்களில் இரு தரப்பிலும் இருந்தோ வரக்கூடும். கோட்பாட்டாளர்கள் பல அடிப்படையான உத்தி முறைகளையும், வழமையான நகர்வுகளையும் விளக்கியுள்ளனர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சதுரங்க விளையாட்டில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள், அதற்கான நுட்பங்கள் - செங்களம் தினமலர் செங்களம் ஒரு அறிமுகம் http://www.chathurangam.com/index.asp http://www.chess-mate.com/ http://www.tamilchess.ch (தமிழில்) http://tamilchess.com/ http://www.indianchessfed.org/ செங்களம் விளையாட பன்னாட்டு நிறுவனங்கள் FIDE – பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு ICCF – [International Correspondence Chess Federation] செய்திகள் Chessbase news The Week in Chess பகுப்பு:தனிநபர் விளையாட்டுக்கள்
செஸ்
https://ta.wikipedia.org/wiki/செஸ்
வழிமாற்று சதுரங்கம்
டீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1
https://ta.wikipedia.org/wiki/டீப்_புளூ-_காஸ்பரோவ்,_1996,_விளையாட்டு_1
டீப் புளூ- காஸ்பரோவ், 1996, விளையாட்டு 1 ஒரு உலகப் பிரசித்தி பெற்றசெஸ் விளையாட்டாகும். செஸ் விளையாடும் கணினியொன்று வழக்கமான சுற்றுப்போட்டி விதிகளின்கீழ் (விசேடமாக நேரக் கட்டுப்பாடு) அக்காலத்திய உலக சம்பியன் ஒருவரை வென்ற முதலாவது விளையாட்டு இதுவாகும். டீப் புளூ காரி காஸ்பரோவை வெல்வதற்காக ஐபிஎம்-இனால் உருவாக்கப்பட்டதாகும். "டீப் புளூ" இந்த விளையாட்டை வென்றது. எனினும் மிகுந்த ஐந்து விளையாட்டுக்களில் 3 வெற்றிகளையும், 2 சமநிலைகளையும் பெற்றதுமூலம் 1996ல் காஸ்பரோவ் வெற்றிபெற்றார். 1997ல் மீண்டும் விளையாடியபோது இரண்டு விளையாட்டுக்களை மேலதிகமாக வென்றதுடன், முழு "மாட்ச்"சையும் வென்றது. எனினும் காஸ்பரோவ் உலகின் தலைசிறந்த செஸ் விளையாட்டு வீரராகவே கருதப்படுகிறார். இவ் விளையாட்டு பெப்ரவரி 2, 1996 ல் பிலடெல்பியா, பென்சில்வேனியாவில் விலையாடப்பட்டது. கணினி வெள்ளைக் காய்களைப் பெற்றது. கீழே இயற்கணிதக் குறியீட்டு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. 1. e4 c5 2. c3 2..... d5 3. exd5 Qxd5 4. d4 Nf6 5. Nf3 Bg4 6. Be2 e6 7. h3 Bh5 8. O-O Nc6 9. Be3 cxd4 10. cxd4 Bb4 11. a3 Ba5 12. Nc3 Qd6 13. Nb5 Qe7 14. Ne5! Bxe2 15. Qxe2 O-O 16. Rac1 Rac8 17. Bg5 17.... Bb6 18. Bxf6 gxf6 19. Nc4! Rfd8 20. Nxb6! axb6 21. Rfd1 f5 22. Qe3! 22... Qf6 23. d5! 23... Rxd5 24. Rxd5 exd5 25. b3! Kh8? 26. Qxb6 Rg8 27. Qc5 d4 28. Nd6 f4 29. Nxb7 29.... Ne5 30. Qd5 30.... f3 31. g3 Nd3 32. Rc7 Re8 33. Nd6 Re1+ 34. Kh2 Nxf2 35. Nxf7+ Kg7 36. Ng5+ Kh6 37. Rxh7+ 1-0 உசாத்துணைகள் Burgess, Graham, John Nunn, and John Emms. The Mammoth Book of the World's Greatest Chess Games. 1998. New York: Carroll and Graf Publishers, Inc. . Eade, James. Chess for Dummies. 1996. Foster City, CA: IDG Books Worldwide, Inc. . Wheeler, David A. Deep Blue - Kasparov, 1996, Game 1. http://www.dwheeler.com/misc/deepblue-kasparov.txt (in Portable Game Notation) பகுப்பு:சதுரங்கப் போட்டிகள் பகுப்பு:1996 நிகழ்வுகள் பகுப்பு:சதுரங்க ஆட்டங்கள்
எட்டுக்கோடு
https://ta.wikipedia.org/wiki/எட்டுக்கோடு
எட்டுக்கோடு சிறுவர்களால் விளையாடப்படுகிறது. விசேடமாகச் சிறுமிகளே பெரும்பாலும் விளையாடுவது வழக்கம். இது பொதுவாக வெளியிலேயே விளையாடப்படுவதாயினும், இட வசதி இருந்தால், உள்ளக விளையாட்டாகவும் விளையாடப்படலாம். இந்த விளையாட்டை விளையாடுபவர்களுடைய எண்ணிக்கைக்கு வரையறை இல்லை. பங்கேற்பவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனிப் போட்டியாளராகவே பங்குபற்றுவது வழக்கம். தேவையானவை thumb|150px|right|எட்டுக்கோடு விளையாடுவதற்கான கட்டம் இதை விளையாடுவதற்கான களத்தில் 8 கட்டங்கள் அமையக்கூடியவாறு கோடுகள் வரையப்பட்டிருக்கும். (அருகிலுள்ள படத்தைப் பார்க்கவும்) கட்டங்களின் அளவு ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்குக் கெந்திப் பாய்வதற்கு (ஒற்றைக் காலில் பாய்தல்) வசதியாக அமைந்திருக்கும். இவ் விளையாட்டுக்கு அண்ணளவாக ஒரு அங்குல விட்டமுள்ள சிறிய, தடிப்புக் குறைந்த மட்பாண்டத் துண்டொன்று பயன்படுகின்றது. இதைச் "சில்லி" என்று அழைப்பார்கள். இது பல மட்டங்களாக விளையாடப்படுகிறது. எட்டுச் சதுரங்கள் கொண்ட இப்பெட்டியில் இடது பக்கம் நான்கு பெட்டிகளும், வலது பக்கம் நான்கு பெட்டிகளும் இருக்கும். விளையாட்டை இடது பக்கம் இருந்தே தொடங்க வேண்டும். இடது பக்கமாகப் போகும் போது ஐந்தாவது பெட்டி அதாவது வலது பக்கத்தின் மேற்பெட்டி வீடு. இங்கு காலாறி ஓய்வெடுக்கலாம். விளையாடும் முறை முதல் கட்டம் சிப்பியை இடது பக்க முதற் பெட்டியில் போட வேண்டும். போடும் போது சிப்பி கண்டிப்பாகப் பெட்டிக்குள் விழ வேண்டும். கோடுகளில் வீழ்ந்து விடக் கூடாது. ஒற்றைக்காலால் கெந்தி, அந்தச் சிப்பியை மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்துக் கொண்டு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பெட்டிகளுக்குள் கெந்தி ஐந்தாவது பெட்டிக்குள் இரண்டு கால்களையும் வைத்து நின்று விட்டு மீண்டும் ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் கெந்தி வெளியில் போக வேண்டும். இதே முறையில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போட்டு இதே ஒழுங்கில் சென்று மிதித்து, எடுத்துக் கொண்டு வெளியில் போக வேண்டும். ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போடும் போது இடது பக்க மூலையில் நின்றே போட வேண்டும். எட்டுப் பெட்டிகளும் விளையாடி முடிந்தால் அடுத்த கட்டம் இப்போது சிப்பியை முதற் போலவே போட்டு, ஒற்றைக்காலால் கெந்தி மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்து, தூக்கி வைத்திருக்கும் கால் பாதத்தில் விரல்களின் மேல் வைத்துக் கொண்டு கெந்த வேண்டும். கெந்தும் போது சிப்பி கீழே வீழ்ந்து விடக் கூடாது. எட்டாவது பெட்டிக்கு வந்ததும் சிப்பியை பெட்டிக்கு வெளியில் போட்டு விட்டு கெந்தி அதை மிதிக்க வேண்டும். மூன்றாவது கட்டம் சிப்பியை தலையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு பெட்டிகளில் நடக்க வேண்டும். ஒற்றைக்கால் முதற்பெட்டியிலும் மற்றையகால் இரண்டாவது பெட்டியிலும்.. என்று வைத்து நடக்க வேண்டும். முகம் மெதுவாக மேலே தூக்கப் பட்டிருக்க வேண்டும். நடக்கும் போது "சரியோ? சரியோ?" என்று கேட்க வேண்டும். கால் விரல்கள் கோடுகளில் பட்டு விடக் கூடாது. பட்டுவிட்டால் "பிழை" என்பார்கள். 5வது பெட்டியில் இரண்டு கால்களையும் வைத்து நின்று கண்களைத் திறந்து பார்த்து விட்டு மீண்டும் ஆறாவது ஏழாவது பெட்டிகளைக் கடந்து எட்டாவது பெட்டிக்கு வந்ததும் தலையில் உள்ள சிப்பியை கண்களை மூடிய படி நின்று வெளியில் வீழ்த்தி விட்டு கண்களைத் திறக்க வேண்டும். பின் கெந்தி மிதிக்க வேண்டும். நான்காவது கட்டம் சரியாகச் சிப்பியில் மிதித்து விட்டால், சிப்பியை கையில் எடுத்து எட்டுக்கோட்டுக்கு புறமுதுகு காட்டி நின்று கொண்டு, சிப்பியை தலைக்கு மேலால் எட்டுக்கோட்டுக்குள் எறிய வேண்டும். சிப்பி கோடுகளிலோ, வெளியிலோ, ஐந்தாவது பெட்டிக்குள்ளோ விழக் கூடாது. மூன்று சந்தர்ப்பங்கள் உங்களுக்குத் தரப்படும். சிப்பி எந்தப் பெட்டிக்குள் விழுகிறதோ அந்தப் பெட்டி உங்களுக்குச் சொந்தம். அது உங்கள் பழம். நீங்கள் அதற்குள் காலாறிப் போகலாம். மற்றவர்கள் அதைக் கடந்துதான் போகலாம். அவர்கள் அதற்குள் கால் வைக்க முடியாது. அடுத்த பழத்துக்கு மீண்டும் முதலிலிருந்து விளையாட வேண்டும் இரண்டு பேருக்கு அடுத்தடுத்த பெட்டிகளில் பழம் வந்து விட்டால் மற்றவர்கள் எப்படியாவது பாய்ந்து இரண்டு பெட்டிகளையும் கடக்க வேண்டும். யார் கூடிய பழங்கள் எடுக்கிறாரோ அவர் வென்றவர் ஆகிறார். பகுப்பு:வெளியக தமிழர் விளையாட்டுக்கள் பகுப்பு:தமிழர் விளையாட்டுகள்
கேரளக் கட்டடக்கலை
https://ta.wikipedia.org/wiki/கேரளக்_கட்டடக்கலை
கேரளக் கட்டடக்கலை என்பது இந்தியாவின் தென் மாநிலங்களிலொன்றான கேரளாவில் உருவாகி வளர்ந்த கட்டடக்கலைப் பாணியாகும். இந்தியாவின் பெரும்பாலான கட்டடக்கலைப் பாணிகளோடு ஒப்பிடும்போது கேரளக் கட்டடக்கலை தனித்தன்மை வாய்ந்ததாகத் திகழ்கிறது. இப்பாணியில் மரம், ஓடு என்பவற்றின் தாராள உபயோகமும், கூரைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதன் வடிவமும், நேபாள, சீன மற்றும் பல்வேறு தென்கிழக்காசியக் கட்டடக்கலைப் பாணிகளுக்கு நெருங்கியவையாகத் தெரிகின்றன. பண்டைய தமிழ் அரசுகளிலொன்றான சேர நாடான இன்றைய கேரளம், மலைகள் முதலிய இயற்கை அரண்களினால் அயல் பிரதேசங்களிலிருந்து வேறாக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அவ்வாறான பிரதேசங்களின் கட்டடக்கலைப் பாணிகளின் தாக்கம் குறைவாக இருந்ததால், கேரளம் தனித்துவமான பாணியொன்றை வளர்த்துக்கொள்ளக் கூடியதாக இருந்ததெனலாம். மர வளங்களைப் பெருமளவில் கொண்ட இந்த மாநிலத்தின் கட்டடக்கலையில் மரத்தின் பெருமளவிலான பயன்பாடு இருந்தது விளங்கத் தக்கதே. கேரளக் கட்டிக் கலையின் முக்கியமான பகுதி அதன் கோயில் கட்டடக்கலை ஆகும். அது தென்னிந்தியக் கோயில் கட்டடக்கலையில் இருந்து வேறுபட்டு உள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் போன்ற சில மட்டும் தென்னிந்தியக் கட்டிக் கலையைச் சார்ந்ததாக உள்ளன. கேரளத்தின் மற்ற கோயில்கள் அதன் தனித்தன்மை வாய்ந்த கட்டடக்கலையைப் பிரதிபலிப்பவை. தமிழ்நாட்டுக் கட்டடக்கலையில் கோயில்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. என்றாலும் தமிழ்நாட்டு வீடுகள் கோயில் கட்டடக்கலையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. ஆனால் கேரளத்தின் வீடுகள் கோயில் கட்டடக் கலையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவை. கேரள வீட்டுக் கட்டடக்கலையில் பிரபலமானது நாலுகெட்டு வீடு ஆகும். பின்வருவனவற்றையும் பார்க்கவும் கட்டடக்கலை வெளிச் சுட்டிகள் http://www.templenet.com/Kerala/kerala_archi.html மேற்கோள்கள் பகுப்பு:கேரளக் கட்டிடக்கலை பகுப்பு:கேரளக் கலைகள்
பெங் சுயி
https://ta.wikipedia.org/wiki/பெங்_சுயி
thumb|250px|பெங் சுயி திசை காட்டி பெங் சுயி (சீனம்: 风水 ஃபங் ஷுவெய் அல்லது ஃபங் ஷுயி, என்னும் "காற்று நீர்" or )) என்பது சூழலுடன் இசைந்து வாழ்வது தொடர்பாக சீனாவில் புழக்கத்திலிருக்கும் பாரம்பரிய அறிவுத்துறையாகும். இது இந்தியாவின் வாஸ்து சாஸ்திரம் போன்றதாகும். வாஸ்து சாஸ்திரத்திலிருந்தே பெங் சுயி தோன்றியிருக்கக்கூடுமென்றும் கருதப்படுகிறது. தற்காலத்தில் பெங் சுயி, சீனாவின் எல்லைகளைத் தாண்டி உலகின் பல பகுதிகளிலும் பின்பற்றுபவர்களைக் கொண்டுள்ளது. பெங் சுயி என்பதன் பொருள் பெங் சுயி என்பதன் நேரடியான பொருள், காற்றும், நீரும் என்பதாகும். மனிதனதும் ஏனைய உயிரினங்களதும் வாழ்க்கைக்குக் காற்றும் நீரும் இன்றியமையாதன. பூமியிலுள்ள காற்றுடனும், நீருடனும் இசைந்து வாழ்வது மனிதனுக்கு அதிட்டத்தையும், வளத்தையும் கொண்டுவரும் என்று பண்டைய சீனர்கள் நம்பினார்கள். அதனால்தான் அதிட்டத்தையும், வளத்தையும் கருதிக் கையாளப்பட்டுவரும் இந்த அறிவுத்துறைக்கு பெங் சுயி என்ற பெயர் வந்தது. மேற்கோள்கள் பகுப்பு:சீனப் பண்பாடு
மைக்கலாஞ்சலோ
https://ta.wikipedia.org/wiki/மைக்கலாஞ்சலோ
thumb|150px|மைக்கலாஞ்சலோ மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும், கட்டடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார். மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம். thumb|250px|left|1498ல் மைக்கலாஞ்சலோ தனது 23ஆம் வயதில் செதுக்கிய, ஆறு அடி (180 சமீ) உயரம் உடைய பியேட்டா சிலை மைக்கலாஞ்சலோவின் புகழ் பெற்ற படைப்புகளான, பியேட்டா (Pietà), டேவிட் ஆகியவை 16ஆம் நூற்றாண்டின் இருபதுகளின் பிற்பகுதியிலும், முப்பதுகளின் ஆரம்பத்திலும் உருவாக்கப்பட்டவை. ஒவியம் தொடர்பாக இவருக்கு உயர்ந்த அபிப்பிராயம் இல்லாதபோதும், மேற்கத்திய ஓவியக் கலைத் துறையில் பெரும் செல்வாக்குச் செலுத்திய இரண்டு ஓவியங்களையும் இவர் படைத்துள்ளார். இவை ரோம் நகரிலுள்ள சிசுடைன் சிற்றாலய உட்கூரையிலும் அதன் பீடத்தின் பின்னுள்ள சுவரில் வரையப்பட்டுள்ள கடைசித் தீர்ப்பு ஓவியங்களாகும். இவருடைய வாழ்வின் பிற்பகுதியில் வத்திக்கானின் புனித பேதுரு பேராலயத்தின் குவிமாடத்தை (dome) வடிவமைத்தார். இவர் வாழ்ந்த காலத்திலேயே இவரது இரண்டு வாழ்க்கை வரலாறுகள் வெளியிடப்பட்டது. இவற்றில் ஒன்றை எழுதிய ஜோர்ஜியோ வசாரி (Giorgio Vasari), இவரை, மறுமலர்ச்சிக் காலச் சாதனைகள் அனைத்துக்கும் சிகரம் போன்றவர் எனப் புகழ்ந்துள்ளார். இக்கருத்து, பின்வந்த நூற்றாண்டுகளில், கலைத்துறையில் ஆமோதிக்கப்பட்டது. ஆரம்ப காலம் thumb|மைக்கலாஞ்சலோவின் மோசே. மைக்கலாஞ்சலோ, மத்திய இத்தாலியப் பிரதேசமான தஸ்கனியிலுள்ள (Tuscany) அரெஸ்சோ (Arezzo) மாகாணத்தில் காப்ரெஸ் (Caprese) எனும் ஊரில் 1475 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தையார், லொடோவிகோ டி லியனார்டோ டி புவனரோட்டி டி சிமோனி (Lodovico di Leonardo di Buonarotti di Simoni) ஒரு நீதிபதியாக இருந்தவர். இவரது தாய் பிரான்செஸ்கா டி நேரி டெல் மினியாட்டோ டி சியேனா (Francesca di Neri del Miniato di Siena) என்பவர். புவனரோட்டி குடும்பம் தஸ்கனியின் பிரபுத்துவ குடும்பத்தின் வழிவந்தது. எனினும் மைக்கலாஞ்சலோவின் காலத்தில் இவர் குடும்பம் ஒரு முக்கியத்துவமற்ற பிரபுத்துவ குடும்பமாகவே கணிக்கப்பட்டனர். ஆரம்பகாலத்தில் மைக்கலாஞ்சலோ புளோரன்சிலேயே வளர்ந்து வந்தார். பின்னர், இவரது தாயார் நீண்டகாலம் நோய்வாய்ப் பட்டிருந்தபோதும், அவர் இறந்த பின்னரும், மைக்கலாஞ்சலோ, செட்டிக்னானோ (Settignano) என்னும் நகரத்தில் ஒரு கல் வெட்டுபவரின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். இந்த நகரத்தில் இவர் தந்தைக்கு ஒரு பளிங்குக்கல் அகழ்விடமும் (quarry), ஒரு சிறிய பண்ணையும் சொந்தமாக இருந்தது. சிலகாலம் இலக்கணம் படித்த மைக்கலாஞ்சலோ, அவரது தந்தையாரின் விருப்பத்துக்கு மாறாக, டொமினிக்கோ கிர்லாண்டாயியோ (Domenico Ghirlandaio) என்பவரிடம் ஓவியத்துறையிலும், பெர்ட்டோல்டோ டி கியோவன்னி (Bertoldo di Giovanni) என்பவரிடம் சிற்பத்துறையிலும் பயிற்சி பெற்றார். 1488 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியன்று, ஒரு பிரபல ஓவியரிடம் வேலை செய்வதற்காக மூன்று ஆண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவரது திறமையால் கவரப்பட்ட இவரது பயிற்சியாளரான டொமெனிக்கோ, இவரை அந் நகரத்து ஆட்சியாளரான லொரென்சோ டி மெடிசிக்குச் (Lorenzo de' Medici) சிபாரிசு செய்தார். 1489 இல், தனது பயிற்சித் தலத்திலிருந்து விலகிய மைக்கலாஞ்சலோ, 1490 இலிருந்து 1492 வரை லொரென்சோவின் பாடசாலையில் படித்து வந்தார். இக்காலத்தில் அவர் பல பிரபலமானவர்களைச் சந்தித்தார். அவர்கள் மூலம் இவரது கலை பற்றிய எண்ணங்கள் மாற்றம் பெற்றதுடன், விரிவாக்கமும் பெற்றது. மைக்கலாஞ்சலோவின் படைப்புத்திறன் மைக்கலாஞ்சலோ, தான் ஓவியம் வரைவதற்கு முன்பயிற்சியாக சற்றேறக்குறைய பன்னிரண்டு ஆண்டு காலம் மனித உடற்கூறு இயல் (ANATOMY) குறித்து நன்குக் கற்றுத் தேர்ந்தார். அவரது ஓவியப் படைப்புகளை இக்கற்றல் அனுபவமும் நுட்பமும் உயிர்ப்புடையதாக ஆக்கின. இதன் காரணமாக, அவருடைய ஓவியம் மற்றும் சிற்பப் படைப்புகளில் மனித உடலின் எலும்பு அமைப்பு, உடல் தசையின் தோற்ற அமைப்பு, தோலின் வடிவமைப்பு முதலியவை துல்லியமான முறையில் உருவாகின. மேலும், ஓவியத்திற்கான வண்ணக் கலவைகளை மைக்கலாஞ்சலோவே உருவாக்கிக் கொண்டார். இந்த வேலைக்குத் தம்மிடம் பணிபுரியும் பணியாட்களையோ, தம்முடைய மாணாக்கர்களையோ அவர் அனுமதிப்பதை விரும்பவில்லை. படைப்புக்கள் ரோமில் அவரது படைப்புக்கள் மைக்கேலேஞ்சலோ தன் 21 வயதில் 1496-ஆம் ஆண்டு ஜூன் 25 இல் ரோம் வந்தடைந்தார். அதே ஆண்டு ஜூலை 4, அவர் கார்டினல் ராஃப்யேல் ரியாரியோவுக்காக ரோமானிய மது கடவுள் பாக்கஸின் சமஅளவு சிலைக்கான வேலையைத் தொடங்கினார். பின் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் கார்டினலால் நிராகரிக்கப்பட்டது, பின்னர், வங்கி அதிபர் ஜாகோபொ காலி தனது தோட்ட சேகரிப்புக்காக அதை வாங்கிக்கொண்டார். நவம்பர் 1497 இல், பிரஞ்சு புனித தூதுவர் பியாடா, இயேசு உடல் மீது கன்னி மேரி வருத்தப்படுவதைக் காட்டும் ஒரு சிற்பம் செதுக்க அவரை நியமித்தார், மைக்கேலேஞ்சலோ அதன் முடிந்த நேரத்தில் அவர் வயது 24ஆக இருந்தது. இந்தச் சிற்பம் உலகின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. மைக்கேலேஞ்சலோ ரோமில், சாண்டா மரியா டி லொரேட்டோ தேவாலயம் அருகே வசித்து வந்தார். இங்கே, அவர் வெட்டோரியாவா க்ளோனா என்ற கவிஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரின் லொகோன் மற்றும் அவரது மகன்கள் என்ற சிற்பம் தற்காலத்தில் வாடிகனில் உள்ளது. பியட்டா சிலையின் சிறப்புகள் பியட்டா (Pieta) என்னும் சொல்லுக்கு இத்தாலிய மொழியில் இரக்கம் என்பது பொருள் ஆகும். இந்த பியட்டா சிலையானது சலவைக் கல் கொண்டு மைக்கலாஞ்சலோவால் உருவாக்கப்பட்டதாகும். இந்த பியட்டா சிலையின் தோற்றத்தில் அன்னை மேரியின் மடியில் இயேசு படுத்திருக்கும் காட்சி வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அதில், அன்னை மேரியின் ஒரு கரம் இயேசுவின் உடலைத் தாங்கிப் பிடித்திருக்கும். அவரது பிறிதொரு கரமானது ஆகாயத்தை நோக்கித் திரும்பிக் காணப்படும். ஏஞ்சலோ அன்னை மேரியினை இங்கு இளம்பெண்ணாகச் சித்திரித்து இருப்பார். அச் சித்திரிப்பானது அன்னை மேரியின் கன்னித்தன்மையை உலகுக்கு உணர்த்துவதாகக் காணப்படுகின்றது. செயின்ட் பீட்டர் பஸிலிக்காவில் இப்பியட்டா சிலையானது பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்த ஒரு சிலையில் மட்டுமே மைக்கலாஞ்சலோவின் கையொப்பம் இடம்பெற்றுள்ளது. டேவிட் சிலை மைக்கேலேஞ்சலோ 1499-1501 இல் புளோரன்ஸ் திரும்பினார்.1498 இல் குடியரசு எதிர்ப்பு மறுமலர்ச்சி பூசாரி மற்றும் புளோரன்ஸ் கிரோலாமோ தலைவர் சவோனரோலான் வீழ்ச்சி மற்றும் கோந்ஃபாலொனிரெ பைரோ சொடெரினியின்(gonfaloniere Piero Soderini) எழுச்சி பின்னர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது, எனவே புளோரன்ஸ் சுதந்திரச் சின்னமாக டேவிட்ஐ சித்தரித்து ஒரு மாபெரும் சிலையை அகோச்டினோ டி டுச்சியோ மூலம் 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது ஒரு முடிக்கப்படாத திட்டத்தை முடிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டார். மைக்கேலேஞ்சலோ 1504 இல் டேவிட் சிலையை முடித்தார். சிஸ்டின் சேப்பல் மேற்கூரை 1505 இல், மைக்கேலேஞ்சலோ புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் இரண்டாம் ஜூலியஸால் மீண்டும் ரோமிற்கு அழைக்கப்பட்டார். அவருக்குப் போபின் கல்லறையை கட்ட அனுமதி வழங்கப்பட்டது. மைக்கேலேஞ்சலோ போபின் பல்வேறு பணிகளை நிறைவேற்றியதன் பொருட்டு கல்லறையில் அவரது பணி தொடர்ந்து குறுக்கீடுகளை சந்தித்தது. அந்த சிக்கல்கள் காரணமாக அவர் 40 ஆண்டுகள் கல்லறையில் பணியாற்றினார். இதே காலத்தில், மைக்கேலேஞ்சலோ சிஸ்டின் சேப்பல் மேற்கூரையை முடிக்க சுமார் நான்கு ஆண்டுகள் (1508-1512) பிடித்தன. மைக்கேலேஞ்சலோ முதலில் விண்மீன்கள் வானத்தின் பின்னணியில் பன்னிரண்டு அப்போஸ்தலர்களை வரைவதற்கு நியமித்தது, ஆனால் பின் மனிதனின் உருவாக்கம்,மற்றும் தீர்க்கதரிசிகள் வாக்குறுதிபடி வீழ்ச்சி, மற்றும் கிறிஸ்துவின் மரபுவழி குறிக்கும் ஆகியவற்றை வரையுமாறு ஒரு வேறுபட்ட மற்றும் மிகவும் சிக்கலான திட்டம் முன்மொழியப்பட்டது.கத்தோலிக்க திருச்சபை கொள்கையை மிகவும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக தேவாலயத்தில் உள்ள அலங்காரம் உள்ளதாக கூறப்படுகிறது. கூரை மீது மிகவும் பிரபலமான ஓவியங்களான ஏதேன் தோட்டத்தின் மத்தியில் ஆடம், ஆதாம் மற்றும் ஏவாள் உருவாக்குதல், பெரிய வெள்ளம், நபி ஏசாயா ஆகியவை உள்ளன. சாளரத்தை சுற்றி கிறிஸ்துவின் முன்னோர்கள் வரையப்பட்டிருந்தது. கடைசி தீர்ப்பு ( 1534-41 ) சிஸ்டின் மண்டபத்தில் பலிபீடத்தின் சுவரில் கடைசி தீர்ப்பு சுவரோவியம் பால் III மைக்கேலேஞ்சலோ மூலமாக தொடங்கியது. மைக்கேலேஞ்சலோ 1534 முதல் அக்டோபர் 1541 வரை வரைதலில் ஈடுபட்டிருந்தனர். சிஸ்டின் மண்டபத்தில் பலிபீடத்தின் பின்னால் முழு சுவரிலும் பரவியிருக்கின்றது. கடைசி தீர்ப்பு மற்றும் கிறிஸ்து வெளிப்படுத்தல் சித்திரம் உள்ளது. அது முடிந்தவுடன், கிறிஸ்து மற்றும் கன்னி மேரி ஓவியம் நிர்வாண சித்தரிக்கப்பட்டிருந்தது புனிதத்துவத்தை பாழடிக்கிற குற்றமாக கருதப்படுகிறது, மைக்கேலேஞ்சலோ மரணத்திற்கு பிறகு அதன் பிறப்புறுப்புக்களை மறைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு அசல் தணிக்கை நகல், நேபிள்ஸ் காபோடிமொண்டே அருங்காட்சியகத்தில் காண முடியும் . மேற்கோள்கள் பகுப்பு:1475 பிறப்புகள் பகுப்பு:1564 இறப்புகள் பகுப்பு:இத்தாலிய ஓவியர்கள் பகுப்பு:இத்தாலியக் கட்டிடக் கலைஞர்கள் பகுப்பு:இத்தாலியக் கவிஞர்கள்
ராபர்ட் வெஞ்சூரி
https://ta.wikipedia.org/wiki/ராபர்ட்_வெஞ்சூரி
இராபர்ட் வெஞ்சூரி (Robert Venturi, சூன் 25, 1925 – செப்டம்பர் 18, 2018) பிலடெல்பியாவைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். இவர் ஒரு சிறந்த கட்டிடக்கலைஞராக மட்டுமன்றி, திறமையான எழுத்தாளராகவும், ஓவியராகவும், ஆசிரியராகவும், ஒரு தத்துவஞானியாகவும்கூட விளங்கினார். ஒரு கட்டிடக்கலைஞன் என்றவகையில், பழக்கங்களினால் வழிநடத்தப்படுவதிலும், உணர்வுபூர்வமான கடந்தகால அனுபவங்களினால் வழி நடத்தப்படுவதையே விரும்புவதாகக் குறிப்பிட்டார். கட்டிடக்கலையில் சிக்கல்தன்மையையும், முரண்பாடுகளையும் அவர் விரும்பினார். நவீன கட்டிடக்கலை அளவுக்கதிகமாக எளிமைப்படுத்தப்பட்டுவிட்டதாகக் குறைப்பட்ட அவர், பிரபல கட்டிடக்கலைஞரான மீஸ் வான் டெர் ரோவினுடைய "குறைவே நிறைவு" ( Less is more.) என்ற கூற்றுக்குப் பதிலாகக் "குறைவு சுவாரசியமற்றது" (Less is Bore) என்று கூறினர். இவர் ஈரோ சாரினென் மற்றும் லூயிஸ் கான் ஆகிய பிரபல கட்டிடக்கலைஞர்களின் கீழ் பணிபுரிந்தார். பின்னர் ஜோன் ராவுஸ்ச் என்பவருடன் சேர்ந்து தனது தனியான நிறுவனத்தைத் தொடங்கினார். வெஞ்சூரியின் மனைவி டெனிசே ஸ்கொட் பிரவுனும் ஒரு கட்டிடக்கலைஞராவார். இவரும் 1969 ஆம் ஆண்டில் வெஞ்சூரியின் நிறுவனத்தில் பங்காளராக இணைந்தார். 1991 ஆம் ஆண்டுக்கான பிறிட்ஸ்கர் பரிசை வெஞ்சூரிக்கு வழங்கப்பட்டது. இவர் ஒரு பின்நவீனத்துவம் எனக் கருதப்படினும், இவரை இவ்வாறு வகைப்படுத்த முடியாது என்று சிலர் கருதுகிறார்கள். தனது தாயாருக்காக பிலடெல்பியாவில் இவர் வடிவமைத்த வீடு மூலம் கட்டிடக்கலைஞர் மத்தியில் இவரது திறமை முதலில் வெளிப்பட்டது. இவரது நிறுவனத்தின் முக்கிய வேலைகள்: கில்ட் ஹவுஸ், பிலடெல்பியா, பென்சில்வேனியா புத்தகம்: Learning from Las Vegas மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Venturi, Scott Brown and Associates, Inc. firm web site Online profile of Venturi, Scott Brown and Associates, Inc. Stories of Houses: The Vanna Venturi House in Philadelphia, by Robert Venturi Design Strategies of Robert Venturi and Denise Scott Brown Robert Venturi interview பகுப்பு:1925 பிறப்புகள் பகுப்பு:2018 இறப்புகள் பகுப்பு:அமெரிக்கக் கட்டிடக்கலைஞர்கள்
நாற்சார் வீடு
https://ta.wikipedia.org/wiki/நாற்சார்_வீடு
நாற்சார் வீடு என்பது, நடுவில் கூரையிடப்படாத திறந்த வெளியைச் சுற்றி அறைகளும், கூடங்களும் அமைத்துக் கட்டப்படும் வீடுகளாகும். நடுவிலுள்ள இத் திறந்த வெளி முற்றம் என அழைக்கப்படுகின்றது. இவ்வாறு நடுவில் முற்றம் அமையக் கட்டப்படுகின்ற வீடுகள் உலகின் பல பாகங்களிலும் காணப்படுகின்றன. எனினும் அவற்றிடையே பல விதமான வேறுபாடுகள் உள்ளன. உள் நோக்கிய வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட கலாச்சாரங்களிலேயே இத்தகைய வீடுகள் பரவலாகக் காணப்படுகின்றன. தமிழ் நாடு, இலங்கை ஆகிய தமிழர் வாழுமிடங்களிலே கட்டப்படும் இத்தகைய வீடுகளையே தமிழர் நாற்சார் வீடுகள் என அழைக்கிறார்கள். கேரள மாநிலத்தில் இவற்றை நாலுகெட்டு என வழங்குவர். தமிழ் நாட்டில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் வாழும் பகுதிகளில் காணப்படும் நாற்சார் வீடுகள் பெயர் பெற்றவையாகும். தற்காலத்தில் இப் பாணியிலமைந்த வீடுகள் கட்டப்படுவது குறைவு. மேற்கத்தியப் பாணி வீடுகளுக்கு இடம் கொடுத்து இந்தப் பாரம்பரிய வீடுகள் மறைந்து வருகின்றன. இவற்றையும் பார்க்கவும் திண்ணை நடை பகுப்பு:கட்டிடக்கலை பகுப்பு:வீட்டு வகைகள்
நாட்டுக்கோட்டை நகரத்தார்
https://ta.wikipedia.org/wiki/நாட்டுக்கோட்டை_நகரத்தார்
நாட்டுக்கோட்டை நகரத்தார் என்றும் நாட்டுக்கோட்டை செட்டியார் என்றும் அழைக்கப்படும் சாதியினர் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், முற்பட்ட சாதியினர் பிரிவில் உள்ளனர். இவர்கள் நகரத்தார் என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டின் தற்போதைய சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள 76 ஊர்களைப் பூர்வீகமாகக் கொண்ட வணிகச் சமுதாயத்தினரான இவர்கள் வாழும் இந்தப் பகுதி செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. நகரத்தார்கள் வாணிபம் மட்டுமல்லாது சைவ சமயத்தையும் வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். இச்சமுதாயத்தினரின் பெரும்பங்கினால் இன்று ஆசியா முழுவதும் இந்துக் கடவுளான முருகனின் கோயில்களை நம்மால் காணமுடியும். இச்சாதியினரின் திருமணங்கள் மிகவும் சிறப்பு பெற்றவை. இவர்கள் சமையலில் தங்களுக்கென்று ஒரு தனி இடம் பிடித்தவர்கள். நகரத்தார்களின் வீடுகள் மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் இவ்வீீீடுகள் செட்டிநாட்டு வீடுகள் என்று அழைக்கப்படுகிறது வரலாறு சோழ நாட்டின் காவிரிபூம்பட்டினமே இம்மக்களின் பூர்வீகம் ஆகும். திசையாயிரத்து ஐநூற்றுவர், நானாதேசிகள் எனப்பல்வேறு வணிகக்குழுவின் பெயரால் கல்வெட்டுக்களால் அறியப்படுகிறார்கள் பின்னர் சில காரணங்களால் பாண்டிய நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னர் அளித்த காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிய 96 கிராமங்களில் குடியேறினர். அப்பகுதிகளே இன்று செட்டிநாடு என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் 96 ஊர்கள் 76 ஊராக மாறியது பாண்டிய மன்னனால் 9 சிவன் கோயில்கள் நகரத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அக்கோயில்களின் அடிப்படையில் 9 பிரிவுகள் உருவாக்கப்பட்டன. நகரத்தார்களில் ஒரே கோவிலைச் சார்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் பங்காளிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். ஆகவே திருமண உறவுகள் ஒரே கோயிலைச் சார்ந்தவர்களுக்குள் கிடையாது. செட்டிநாடு என்று சொல் வழக்கில் இந்த 76 கிராமங்கள் அமைந்த பகுதி தனித்த கட்டிடக் கலையையும், பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர். இவர்கள் வணிகத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள். வட்டித்தொழிலில் அதிக முனைப்போடு இருந்த இவர்கள் ஆலைத்தொழில், மருந்து வணிகம், தாள் வணிகம் முதலான பெரும் வணிகங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சைவத்தொண்டு ஆற்றுவதிலும் தமிழ்த்தொண்டு ஆற்றுவதிலும் விருப்பமுடைய இவர்கள் சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்கச் செய்வதையே தங்கள் நோக்கமாகக் கொண்டவர்கள். உறவுமுறைப் பெயர்கள் ஒவ்வொரு இனக்குழுவினரிடமும் அவர்களின் முறைப்பெயர்கள் தனித்த அமைப்புடன் காணப்பெறுகின்றன. நகரத்தார் இனத்தில் இடம்பெறும் முறைப்பெயர்கள் மரியாதை கலந்த நிலையில் காணப்பெறுகின்றன. அதாவது தன்னைவிட வயதில் குறைந்தவர்களையும், மரியாதையுடன் அழைக்கும் பாங்கு இவர்களின் முறைப்பெயர்களில் காணலாகின்றது. மேலும் தமிழ்ச்சொற்கள் தக்கபடி இணைவு பெற்று முறைப்பெயர்கள் உருவாக்கப்பெற்றுள்ளன. இப்பெயர்களைப் பொதுப் பெயர்கள் குடும்பப் பெயர்கள், நெருங்கிய உறவினர் பெயர்கள், தூரத்து உறவினர் பெயர்கள் என்ற நிலையில் பகுத்துக்காண இயலுகின்றது. பார்க்க முதன்மைக் கட்டுரை: நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள் தொழில்துறை வளர்ச்சி 1950ல் தமிழ்நாட்டிலுள்ள தொழில்களில் மூன்றில் ஒரு பகுதி நாட்டுக் கோட்டை செட்டிமார் கையிருந்ததாகச் செய்தி. நாட்டுக்கோட்டை செட்டிமாருடைய மொத்த ஜனத்தொகை அன்று 1½ லட்சம். 3 கோடி ஜனத்தொகையுள்ள தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதி தொழிலை ஒன்றரை லட்சம் ஜனத் தொகையுள்ள செட்டிமார் பெற்றது எப்படி? அவர்கள் குடும்பங்களில் அன்று ஒரு பழக்கம் இருந்தது. எவ்வளவு பணக்காரனானாலும் தன் பிள்ளைகளை மற்றவர்கள் கடைகளில் விட்டுப் பயிற்சி கொடுப்பது வழக்கம். முதல் பயிற்சி முடிந்தால் பையன் அரைக்கால் ஆள் ஆகிறான். அதிலிருந்து 8 கட்டம் தாண்டி முழு ஆளான பின் தன் சொந்தக்கடைக்கு வருகிறான். பிறரிடம் வேலை செய்வதால், செல்லம் கொடுக்க வழியில்லை. பயிற்சியில் எல்லா கட்டங்களும் உண்டு. பணம், பொருள், நிர்வாகம், கீழ்ப்படிதல், கணக்கு, வாடிக்கை, கொள்முதல் என எல்லாப் பகுதிகளுக்கும் பயிற்சியுண்டு. இது போன்ற முறையான பயிற்சியை தங்கள் நிறுவனத்தை விட்டு அகன்று பிள்ளைகள் பெற ஏற்பாடு செய்தது இந்தச் சமூகம் ஒன்றுதான். அவர்களுடைய நிறுவனங்கள் திவாலாவதில்லை. அவர்கள் செல்வம் அளவு கடந்து பெருகியதற்கு இப்பயிற்சியை ஏற்றுக் கொண்டதே காரணம். அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது இப்பயிற்சியாகும். ஒன்பது நகரக் கோயில்கள் இளையாற்றங்குடி கோயில் மாத்தூர் கோயில் வைரவன் கோயில் இரணிகோயில் பிள்ளையார்பட்டி நேமங்கோயில் இலுப்பைக்குடி சூரக்குடி வேலங்குடி இந்த ஒன்பது கோயில்களும் நகரக் கோயில் என்று அழைக்கப்படும். இவை பாண்டியனால் நகரத்தார்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய அளவில் சுட்டசெங்கலால் ஆன கோயிலாக இருந்து வந்துள்ளது. பின்னர் நகரத்தாரால் பெரிய கற்றளி கோயிலாக கட்டப்பட்டுள்ளது. ஒரு கோயிலை சேர்ந்தவர்கள் பங்காளிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இக்கோயிற்களுள் சிலவற்றில் உட்பிரிவுகளும் உண்டு. அவை, இளையாற்றங்குடி கோயில் : ஒக்கூருடையார், பட்டணசாமியார், பெருமருதூருடையார், கழனி வாசல்குடியார், கிங்கிணிக்கூருடையார், பேரசெந்தூருடையர், சிறுசெந்தூருடையர். மாத்துர் கோயில் : உறையூர், அரும்பாக்கூர், கண்ணூர், கருப்பூர், குளத்தூர், மண்ணூர், மணலூர். வைரவன் கோயில்: பெரிய வகுப்பு, பிள்ளையார் வகுப்பு, தெய்யானர் வகுப்பு. நகரத்தார் சமுதாய ஊர்கள் right|thumb|250px|செட்டி நாடு அரண்மனை, காரைக்குடி நாட்டுக்கோட்டை நகரத்தார் வாழும் 76 ஊர்கள்(ஒரு காலத்தில் 96 ஊராக இருந்தது)பின்வருமாறு. அலவாக்கோட்டை தேவகோட்டை நாட்டரசன்கோட்டை அரியக்குடி ஆத்தங்குடி காரைக்குடி கீழப்பூங்குடி பலவான்குடி பனங்குடி ஆவினிப்பட்டி உலகம்பட்டி கடியாபட்டி என்னும் இராமச்சந்திரபுரம் கண்டவராயன்பட்டி கல்லுப்பட்டி கீழச்சிவல்பட்டி குருவிக்கொண்டான்பட்டி கொப்பனாபட்டி சிறுகூடற்பட்டி பனையப்பட்டி பொன்புதுப்பட்டி மகிபாலன்பட்டி மதகுப்பட்டி மிதிலைப்பட்டி தேனிப்பட்டி நற்சாந்துபட்டி நேமத்தான்பட்டி வலையபட்டி வேகுப்பட்டி வேந்தன்பட்டி பிள்ளையார்பட்டி அமராவதிபுதூர் சொக்கலிங்கம்புதூர் ஆ.தெக்கூர் ஒக்கூர் கண்டனூர் கோட்டையூர் செம்மபனூர் செவ்வூர் பள்ளத்தூர் வெற்றியூர் பாகனேரி கருங்குளம் தாணிச்சாவூரணி(சொர்ணநாதபுரம்) அரண்மனை சிறுவயல் ஆறாவயல்(சண்முகநாதபுரம்) உ. சிறுவயல் சிறாவயல் புதுவயல் காளையார்மங்கலம் கொத்தமங்கலம் பட்டமங்கலம் ராயவரம் கொத்தமங்கலம் லட்சுமிபுரம் க.சொக்கனாதபுரம் சோழபுரம் நடராஜபுரம் நாச்சியாபுரம் வி. லட்சுமிபுரம் குழிபிறை விராமதி பில்லமங்களம். அளகாபுரி கொல்லங்குடி. அழகாபுரி கோட்டையூர். அழகாபுரி மேலச் சிவபுரி விரையாச்சிலை பூலாங்குறிச்சி அரிமழம் கண்டரமாணிக்கம் கல்லல் கானாடுகாத்தான் கோனாபட்டு சக்கந்தி நெற்குப்பை ஆ.முத்துப்பட்டணம் மானகிரி இராங்கியம் நகரத்தார் சத்திரங்கள் வட இந்தியாவில் thumb|ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரம் காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் அலகாபாத் நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரம் கயா நாட்டுகோட்டை நகரத்தார் சத்திரம் குறிப்பிடத்தகுந்த நகரத்தார்கள் அரசியல் பங்களிப்பாளர்கள் ப. சிதம்பரம், இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர். இராஜா சர் முத்தையா செட்டியார், சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் , இந்தியன் வங்கி நிறுவனர் கா.சண்முகம் என்கிற காசிவிசுவநாதன் சண்முகம், சட்ட, உள்துறை அமைச்சர், சிங்கப்பூர். ராம நாராயணன் பழ. கருப்பையா கல்வியாளர்கள் இராஜா சர் அண்ணாமலைச் செட்டியார், நிறுவனர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ராம. அழகப்பச் செட்டியார், நிறுவனர், அழகப்பா பல்கலைக்கழகம் கருமுத்து.தியாகராசன் செட்டியார், நிறுவனர் தியாகராசர் கல்லூரி சேவுகன் அண்ணாமலை செட்டியார், நிறுவனர், சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரி நாகப்பன், துணைவேந்தர், அழகப்பா பல்கலைக்கழகம் கதிரேசன், துணைவேந்தர், அண்ணாமலை பல்கலைக்கழகம். சட்டத் துறையினர் நீதியரசர் அரு. இலட்சுமணன், தலைவர், இந்திய சட்ட கமிஷன்; இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. நீதியரசர் மெ. சொக்கலிங்கம், மெட்ராஸ் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி. விளையாட்டுத் துறை மு. அ. சிதம்பரம் செட்டியார், தொழிலதிபர், முன்னாள் தலைவர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். (சென்னையின் சேப்பாக்கம் கிரிக்கெட் ஆடுகளம் இவர் பெயரால் அழைக்கப்படுகிறது.) திரைப்படத் துறையினர் ஏ. வி. மெய்யப்ப செட்டியார், நிறுவனர், ஏ.வி.எம். திரைப்பட நிறுவனம். கவியரசு கண்ணதாசன், திரைப்படப் பாடலாசிரியர். இயக்குநர் எஸ். பி. முத்துராமன், 75-க்கும் மேற்பட்ட ஜனரஞ்சக திரைப்படங்கள் இயக்கியவர் இயக்குநர் வசந்த், ஏறத்தாழ 25 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியவர். இயக்குநர் கரு.பழனியப்பன் தயாரிப்பாளர் அழகப்பன் இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்இராம.இராநாராயணன் திரைக்கதை ஆசிரியர் , கவிஞர் மற்றும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் ஊடகத் துறையினர் சத்தி வை.கோவிந்தன் , சத்தி காரியாலயம். தமிழ் பதிப்புலக தந்தை என போற்றக்கூடியவர். தமிழ்வாணன், எழுத்தாளர் (ம) பொறுப்பாசிரியர், கல்கண்டு இதழ். கண முத்தையா தமிழ் பதிப்பகத் துறை முன்னோடி சின்ன அண்ணாமலை ,தமிழ் புத்தகாலயம். எஸ். ஏ. பி. அண்ணாமலை, நிறுவனர், குமுதம் வார இதழ். லேனா தமிழ்வாணன், இணை ஆசிரியர், கல்கண்டு இதழ். சுதந்திர போராட்ட வீரர்கள் சின்ன அண்ணாமலை தேவகோட்டை ஆர்ச் அண்ணாமலை தேவகோட்டை கம்பன் அடிப்பொடி சா.கணேசன் காரைக்குடி பிற துறையினர் ரோஜா முத்தையா செட்டியார் சோம வள்ளியப்பன் பொருளாதார நிபுணர் நா வள்ளி , நகரத்தாரியல் ஆய்வாளர். சு.இராசகோபால், கல்வெட்டு ஆய்வாளர். செட்டிநாட்டு நகைகள் thumb|கழுத்திரு (நகரத்தார் தாலி) கழுத்திரு கௌரிசங்கம் அஞ்சல் தலைகள் thumb|ராஜா சர் அண்ணாமலை செட்டியார் 1980 இந்திய அஞ்சல் தலை thumb|வள்ளல் அழகப்ப செட்டியார் thumb|ராஜா சர் முத்தையா செட்டியார் thumb|ஏவிஎம்.மெய்யப்ப செட்டியார் thumb|கவியரசர் கண்ணதாசன் thumb|அ.மு.மு.முருகப்ப செட்டியார் thumb|மு.வெ.அருணாச்சலம் செட்டியார் இவற்றையும் காண்க செட்டிநாடு நகரத்தார் சமுதாய ஊர்கள் நகரத்தார் உறவுமுறைப் பெயர்கள் மேலும் வாசிக்க Rajeswary Brown. (1993). Chettiar capital and Southeast Asian credit networks in the inter-war period. In G. Austin and K. Sugihara, eds. Local Suppliers of Credit in the Third World, 1750-1960. New York: St. Martin's Press. David Rudner. (1989). "Banker's Trust and the culture of banking among the Nattukottai Chettiars of colonial South India". Modern Asian Studies 23(3), 417-458. David West Rudner. (1994). "Caste and Capitalism in Colonial India: The Nattukottai Chettiars". University of California Press. Heiko Schrader. (1996). "Chettiar finance in Colonial Asia". Zeitschrift fur Ethnologie 121, 101-126. Nishimura, Yuko Gender. (1998). Kinship and Property Rights: Nagarathar Womanhood in South India. Oxford University Press. . வெளியிணைப்புகள் நகரத்தார் மரபும் பண்பாடும் - காணொலி Caste and Capitalism in Colonial India: The Nattukottai Chettiars, A Research by David W. Rudner submitted to University of California Adaikkammai Appathal Padaippu Veedu (Nachandupatti) website is a No.1 website for padaippu veedu Nagarathar History Researched and Compiled by PL. Chidambaram PDF FILE - Chettiars in Burma by Sean Turnell a research paper Classic Chettinad: Home Alone by Outlook traveler Dt: JUL 2004 Centenary celebrations of Dr Sir Rajah Muttiah Chettiar by "Daily life" Dt , Nov 25 History of a trading community by "The Hindu" Dt 06/08/2002 Life Sketch of SIR M.Ct. Muthiah Chettiar 1887-1929 in Hindu high school Rituals & Customs - Tamil Chettiar on Shaadi online நகரத்தார் உறவுமுறைப்பெயர்கள் - திண்ணை இணைய இதழில் முனைவர் மு.பழனியப்பன் கட்டுரை வட அமெரிக்க நகராத்தார் சங்கம் ஐக்கிய அரபு நகரத்தார் சங்கம் UK நகரத்தார் சங்கம் முத்துக்கமலம் இணைய இதழில் வெளியான "நகரத்தார் குலம் செழிக்கச் செய்யும் ஐந்து பாடல்கள்"கட்டுரை காந்திய கிராமங்கள் வலைப்பூவில் வெளியான நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு நகரத்தார் குல தெய்வங்கள் நகரத்தார் திருப்பணி செய்த கோயில்கள் உயர்ந்த மனிதர்கள் மேற்கோள்கள் * பகுப்பு:தமிழரில் சாதிகள்
மேல் மாகாணம், இலங்கை
https://ta.wikipedia.org/wiki/மேல்_மாகாணம்,_இலங்கை
மேல் மாகாணம் அல்லது மேற்கு மாகாணம் (Western Province, ) இலங்கையின் ஒன்பது மாகாணங்களில் ஒன்று. இலங்கையில் மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நிருவாக அலகுகளாக இருந்து வந்த போதும், 1987 இல் இலங்கை யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போதே இவற்றுக்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைத்தது. இதன் மூலம் மாகாணசபைகள் அமைக்கப்பட்டன. மேல் மாகாணம் இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் ஆகும். இம்மாகாணத்திலேயே சட்டபூர்வத் தலைநகர் சிறீ ஜெயவர்தனபுர கோட்டை, மற்றும் நிருவாக, வணிகத் தலைநகர் கொழும்பும் அமைந்துள்ளன. இலங்கைத்தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இது, கொழும்பு, கம்பகா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. வடக்கே வடமேல் மாகாணத்தையும், தெற்கே தென் மாகாணத்தையும், கிழக்கில் சப்ரகமுவா மாகாணத்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது. முக்கிய நகரங்கள் நகரம் மாவட்டம் மக்கள்தொகை(2001கணக்கெடுப்பு) கொழும்பு கொழும்பு 647,100 தெகிவளை-கல்கிசை கொழும்பு 210,546 மொறட்டுவை கொழும்பு 177,563 சிறீ ஜெயவர்தனபுர கோட்டை கொழும்பு 116,366 நீர்கொழும்பு கம்பகா 127,754 கம்பகா கம்பகா 9,889 களுத்துறை களுத்துறை 37,451 மேற்கோள்கள் பகுப்பு:மேல் மாகாணம், இலங்கை
மத்திய மாகாணம், இலங்கை
https://ta.wikipedia.org/wiki/மத்திய_மாகாணம்,_இலங்கை
இலங்கையின் ஒன்பது மாகாணப் பிரிவுகளில் மத்திய மாகாணமும் ஒன்று. இது இலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. கண்டி இதன் தலை நகரமாகும். இது மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. வரலாறு பிரித்தானிய ஆட்சியின் கீழ் மத்திய மாகாணமானது 1833இல் உருவானது. விடுதலை பெற்ற பின்னர், 1987ஆம் ஆண்டு வரை சட்டப்பூர்வ அங்கீகாரம் அல்லது அதிகாரமும் இதற்கு வழங்கப்படவில்லை. சனத்தொகை எண்ணிக்கை நூ.வீதம் மொத்தம் xxxx 100% சிங்களவர் xxxx xx% தமிழர் xxxx xx% முஸ்லீம்கள் xxxx xx% பிறர் xxxx xx% பரப்பளவு பரப்பு xxxx மாகாணசபைமுதலமைச்சர் சி.பி.ரத்னாயக்காஉறுப்பினர் எண்ணிக்கை xxxx நகராக்கம் நகர் xxxx xx% கிராமம் xxxx xx% மேற்கோள்கள் பின்வருவனவற்றையும் பார்க்கவும் இலங்கை * பகுப்பு:கண்டி இராச்சியம்
வடமத்திய மாகாணம், இலங்கை
https://ta.wikipedia.org/wiki/வடமத்திய_மாகாணம்,_இலங்கை
வடமத்திய மாகாணம் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் பெரும்பகுதியும் நாட்டின் உலர்வலயப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. இலங்கையின் பண்டைய தலைநகரங்களான அனுராதபுரம், பொலநறுவை என்பன இம் மாவட்டத்திலேயே உள்ளன. எனினும் இப் பகுதிகள் மிகக்குறைந்த சனச் செறிவுள்ள பகுதிகளாகவே இன்று காணப்படுகின்றன. 1977 ஆம் ஆண்டுக்குப் பின் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப் பிரதேசங்களில் பெருமளவு குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாகாணத்தின் பரப்பளவு 10,472 km2 இதன் மக்கள் தொகை 1,266,663 ஆகும். இந்த மாகாணம் மக்கள் தொகை அடிப்படையில் மூன்றாவது பெரிய மாகாணம் ஆகும். சனத்தொகை எண்ணிக்கை நூ.வீதம் மொத்தம் 1,105,663 100% சிங்களவர் 1,002,009 91% இலங்கைத் தமிழர் 12249 1.1% இந்தியத் தமிழர் 664 0.1% முஸ்லீம்கள் 88,775 8.0% பிறர் 1,966 xx% பரப்பளவு மொத்தம் 10,472 ச.கிமீ நிலப்பரப்பு 9,741 ச.கிமீ நீர்நிலைகள் 731 ச.கிமீ மாகாணசபைமுதலமைச்சர் xxxxஉறுப்பினர் எண்ணிக்கை xxxx நகராக்கம் நகர் xxxx xx% கிராமம் xxxx xx% பின்வருவனவற்றையும் பார்க்கவும் இலங்கை மேற்கோள்கள் பகுப்பு:வடமத்திய மாகாணம், இலங்கை பகுப்பு:கண்டி இராச்சியம்
தென் மாகாணம், இலங்கை
https://ta.wikipedia.org/wiki/தென்_மாகாணம்,_இலங்கை
தென் மாகாணம் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று நிருவாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. மேற்கே, மேல்மாகாண எல்லையிலிருந்து கிழக்கே, கீழ் மாகாண எல்லை வரையுள்ள இலங்கைத் தீவின் தென் கரையோரம் முழுவதும் இம் மாகாணத்தினுள்ளேயே அடங்கியுள்ளது. மேல் மாகாணம், சபரகமுவா மாகாணம், ஊவா மாகாணம், கீழ் மாகாணம் என்பவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது இம் மாகாணம். மாவட்டங்கள் + தென் மாகாணத்தின் நிர்வாக அலகுகள் மாவட்டம் பரப்பளவு மக்கட்டொகை காலி 1,075,000 அம்பாந்தோட்டை 596,617 மாத்தறை 831,000 முக்கிய விபரங்கள் சனத்தொகை எண்ணிக்கை நூ.வீதம் மொத்தம் 2,277,145 100% சிங்களவர் 2,161,224 94.9% இலங்கைத் தமிழர் 18,344 0.8% இந்தியத் தமிழர் 25,779 1.1% முஸ்லிம்கள் 63,230 2.8% பிறர் 8,568 0.38% பரப்பளவு மொத்தம் 5,544 ச.கிமீ நிலப்பரப்பு 5,383 ச.கிமீ நீர்நிலைகள் 161 ச.கிமீ மாகாணசபைமுதலமைச்சர் xxxxஉறுப்பினர் எண்ணிக்கை xxxx நகராக்கம் நகர் xxxx xx% கிராமம் xxxx xx% பின்வருவனவற்றையும் பார்க்கவும் இலங்கை சகோதர மாகாணங்கள் ஹைனான் மாகாணம், சீனா மேற்கோள்கள் வெளி இணைப்புகள் *
வடமேல் மாகாணம், இலங்கை
https://ta.wikipedia.org/wiki/வடமேல்_மாகாணம்,_இலங்கை
இலங்கையின் மாகாணப் பிரிவுகளில் ஒன்றான வடமேல் மாகாணம் குருநாகல், புத்தளம் சிலாபம் ,கம்பஹா ஆகிய நிர்வாக மாவட்டங்களைத் தன்னுள் அடக்கியுள்ளது. வட மாகாணத்துக்கும், மேல் மாகாணத்துக்கும் இடைப்பட்ட மேற்குக் கடற்கரையை அண்டி அமைந்துள்ள இது, மேல் மாகாணம், சப்ரகமுவா மாகாணம், வட மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டு அமைந்துள்ளது. சனத்தொகை எண்ணிக்கை நூ.வீதம் மொத்தம் 2,157,711 100% சிங்களவர் 1,852,756 85.9% இலங்கைத் தமிழர் 65,680 3.0% இந்தியத் தமிழர் 4,893 0.2% முஸ்லீம்கள் 229,642 10.6% பிறர் 4,740 0.2% பரப்பளவு மொத்தம் 7,888 ச.கிமீ நிலப்பரப்பு 7,506 ச.கிமீ நீர்நிலைகள் 382 ச.கிமீ மாகாணசபைஉறுப்பினர் எண்ணிக்கை xxxx நகராக்கம் நகர் xxxx xx% கிராமம் xxxx xx% பின்வருவனவற்றையும் பார்க்கவும் இலங்கை பகுப்பு:வடமேல் மாகாணம், இலங்கை
சப்ரகமுவா மாகாணம்
https://ta.wikipedia.org/wiki/சப்ரகமுவா_மாகாணம்
சப்ரகமுவா மாகாணம் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. மேல் மாகாணம், வடமேல் மாகாணம், மத்திய மாகாணம், ஊவா மாகாணம், தென் மாகாணம் ஆகிய 5 மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. பின்வருவனவற்றையும் பார்க்கவும் இலங்கை மேற்கோள்கள் பகுப்பு:சபரகமுவா மாகாணம், இலங்கை பகுப்பு:கண்டி இராச்சியம்
ஊவா மாகாணம்
https://ta.wikipedia.org/wiki/ஊவா_மாகாணம்
ஊவா (Uva, ) இலங்கையில் பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாகானத்தின் தலைநகர் பதுளை ஆகும். இது 1896 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மத்திய மாகாணம், தென் மாகாணம், கிழக்கு மாகாணம், ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியில் இது இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள்தொகை 1,259,880 ஆகும். இது இலங்கை மாகாணங்களில் இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணம் ஆகும். இம்மாகாணத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்கள் துன்கிந்தை அருவி, தியலுமை அருவி, இராவணன் அருவி, யால தேசிய வனம் (தெற்கு, கிழக்கு மாகாணங்களுடனும் இணைந்துள்ளது) கல்லோயா தேசியப் பூங்கா (கிழக்குடன் இணைந்தது) ஆகியவை ஆகும். கல்லோயா குன்றுகள், மற்றும் மத்திய குன்றுகள் இம்மாகாணத்தின் முக்கிய மலைப்பகுதிகள் ஆகும். மகாவலி, மெனிக் ஆறுகள், மற்றும் சேனநாயக்கா சமுத்திரம், மாதுரு ஓயா ஆகியன இங்குள்ள முக்கியமான நீர் நிலைகள் ஆகும். வரலாறு இராமாயணக் கதாபாத்திரமான இராவணன் பதுளையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்ததாக நம்பப்படுகிறது. இராவணன் அருவி, ஸ்த்ரீபுரம் வளைவு சுரங்கம், ஹக்கலை மலை, தியூரும்வலை கோயில் ஆகியன இராவணனின் கதையுடன் தொடர்புள்ளவையாகும். கதிர்காமம் முருகன் கோயில் ஊவா மாகாணத்திலேயே அமைந்துள்ளது. பிரித்தானியப் பேரரசுக்கு எதிராக இடம்பெற்ற 1818 கிளர்ச்சி ஊவா மாகாணத்திலேயே ஆரம்பமானது. பிரித்தானியர் இக்கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.Sri Lanka is to revoke British Governor’s infamous Gazette Notification , Asian Tribune, Sat, 2011-03-12 மாவட்டங்கள் ஊவா இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: பதுளை மாவட்டம் 2,861கிமீ2 மொனராகலை மாவட்டம் 5,639கிமீ2 முக்கிய நகரங்கள் பதுளை (மாநகர சபை) பண்டாரவளை (மாநகரசபை) அப்புத்தளை (நகரசபை) மொனராகலை வெலிமடை பசறை எல்லா மகியங்கனை தியத்தலாவை ஆலிஎலை பிபிலை வெல்லவாயா பெரகலை லுணுகலை புத்தளை மதுல்லை கதிர்காமம் தனமல்விலை பதல்கும்புரை சியாம்பலந்துவை ஓக்கம்பிட்டி படக்காட்சியகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஊவா மாகாணத்திலுள்ள நகரங்கள் பகுப்பு:ஊவா மாகாணம்
இலங்கை வம்சாவழித் தமிழர்
https://ta.wikipedia.org/wiki/இலங்கை_வம்சாவழித்_தமிழர்
REDIRECT இலங்கைத் தமிழர்
இலங்கை முஸ்லீம்கள்
https://ta.wikipedia.org/wiki/இலங்கை_முஸ்லீம்கள்
வழிமாற்று இலங்கைச் சோனகர்
பிறிட்ஸ்கர் பரிசு
https://ta.wikipedia.org/wiki/பிறிட்ஸ்கர்_பரிசு
பிறிட்ஸ்கர் கட்டிடக்கலைக்கான பரிசு வாழ்ந்துகொண்டிருக்கும் கட்டிடக்கலைஞர்களைக் கௌரவிப்பதற்காக, பிறிட்ஸ்கர் குடும்பத்தால் நடத்தப்படும் ஹையாத் பவுண்டேஷன் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும். கட்டிடக்கலைத்துறைக்கான உலகின் முன்னணிப் பரிசு இதுவே. இது 1977ல், ஜே ஏ. பிறிட்ஸ்கர் என்பவரால் உருவாக்கப்பட்டது. பெரிதும் நோபல் பரிசைத் தழுவி உருவாக்கப்பட்டதனால், சில சமயங்களில் இது, "கட்டடக்கலையின் நோபல் பரிசு" எனக் குறிப்பிடப்படுவதுண்டு. இப் பரிசு பெற்றவர்களின் முழுமையான பட்டியல் ஆண்டு விருதாளர் நாடு 1979 பிலிப் ஜோன்சன் (1906–2005) 1980 லூயிஸ் பராகன் (1902–1988) 1981 ஜேம்ஸ் ஸ்டேர்லிங் (1924–1992) 1982 கெவின் ரோச் / 1983 இயோ மிங் பே (Chinese born) 1984 ரிச்சர்ட் மெயர் 1985 ஹான்ஸ் ஹொலீன் 1986 கொட்பிறீட் போயெம் 1987 கென்சோ டாங்கே (1913–2005) 1988 கோர்டன் பன்ஷாப்ட் (1909–1990) ஒஸ்கார் நிமெயர் 1989 பிராங்க் கெரி / 1990 அல்டோ ரொஸ்ஸி (1931–1997) 1991 ராபர்ட் வெஞ்சூரி 1992 அல்வாரோ சிஸா 1993 பியூமிஹிக்கோ மாக்கி 1994 கிறிஸ்டியன் டி போட்சம்பார்க் 1995 தடாவோ அண்டோ 1996 ராபேல் மோனியோ 1997 ஸ்வேரே பெஹ்ன் 1998 ரென்ஸோ பியானோ 1999 சேர் நோர்மன் பொஸ்டர் 2000 ரெம் கூல்ஹாஸ் 2001 ஜக்கீஸ் ஹெர்ஸொக் மற்றும் பியெரே டி மெயுரோன் 2002 கிளென் முர்க்கட் 2003 ஜோர்ன் அட்சன் 2004 ஸாஹா ஹடித் / 2005 தொம் மாயின் 2006 பவுலோ ரோச்சா 2007 ரிச்சார்ட் ரொஜர்ஸ் 2008 ஜீன் நூவெல் 2009 பீட்டர் ஜும்தோர் 2010 கசுயோ செஜிமா, ரியு நிஷிஜாவா 2011 எடுராடோ சௌட்டோ டி மௌரா 2012 வாங் சு மேற்கோள்கள் வெளி இணைப்புக்கள் பிறிட்ஸ்கர் உத்தியோகபூர்வ தளம் பகுப்பு:கட்டிடக்கலை பகுப்பு:பரிசுகளும் விருதுகளும்
ஜோர்ன் உட்சன்
https://ta.wikipedia.org/wiki/ஜோர்ன்_உட்சன்
thumb|250px|right|சிட்னி ஓபெரா மண்டபம் ஜர்ன் ஓபெர்க் ஊட்சன் (Jørn Oberg Utzon, ஏப்ரல் 9, 1918 - நவம்பர் 29, 2008[ சிட்னி ஓபெரா மண்டப வடிவமைப்பாளர் ஜர்ன் ஊட்சன் இறப்பு ]), டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றான ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ஓபெரா மண்டபத்தை வடிவமைத்தவர். மேலும் கோப்பன்ஹேகன் நகருக்கு அருகில் உள்ள பாக்ஸ்வெர்ட் தேவாலயம், குவைத் நாடாளுமன்றக் கட்டடம் முதலியவற்றையும் வடிவமைத்தவர். நவீன கட்டிடக்கலையில் உலக அளவில் குறிப்பிடத்தக்கப் பங்களித்த ஒரே டேனிய கட்டிடக்கலைஞர் என டென்மார்க்கின் கிம் டிர்கின்க்-ஹோம்ஃபெல்டால் புகழப்பட்டவர்.Kim Dirkinck-Holmfeld, Dansk Arkitektur: 1960-1995, Arkitektens Forlag, 1995, p. 18–20. வாழ்க்கை இவர் டென்மார்க்கிலுள்ள கோப்பன்ஹேகனில் ஒரு கப்பல் வடிவமைப்பாளருக்கு மகனாகப் பிறந்தார். டென்மார்க்கின் தொழில் நகரமான அல்போர்கில் வளர்ந்து டேனிய முடியரசின் நுண்கலைக் கல்லூரியில் பயின்றார். பின் ஸ்வீடன், அமெரிக்கா நாடுகளில் பணியாற்றி இரண்டாம் உலகப்போருக்குப் பின் மீண்டும் கோப்பன்ஹேகனுக்கு வந்தார். 1957ல் சீனா, யப்பான், இந்திய நாடுகளில் பயணமேற்கொண்டு வடிவமைப்பில் இணக்கம், அகம் புறங்களுக்கிடையேயான தொடர்பு முதலியனவற்றைக் கற்றார். ஓபெரா மண்டப வடிவமைப்பு 1957 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஓபெரா மண்டபத்தை வடிவமைப்பதற்கான போட்டியில் பங்கேற்று முதற்பரிசு வென்றார். இவருடைய இந்தக் கட்டிடத்தின் கப்பற் பாய்களை நினைவுபடுத்தும் கூரையைக் கட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இரண்டு வருடங்கள் வரை முயன்று கட்டிடத்திலுள்ள இரண்டு பெரிய மண்டபங்களை மூடும் மேற்படி கூரைகளை அமைக்கும் முறையொன்றை உருவாக்கினார். இக்கட்டிடத்தின் உள்ளக அலங்காரத்துக்கான கவர்ச்சிகரமான திட்டமொன்றையும் உருவாக்கியிருந்தார். ஆனால், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு, புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட, நியூ சவுத் வேல்ஸின் அரசாங்கம், ஊட்சனுக்கான கொடுப்பனவுகளை நிறுத்தியது. 1966ல், அவர் நிறைவு பெறாத கட்டிடத்தையும் ஆஸ்திரேலிய நாட்டையும் விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளானார். எனினும் ஓபெரா மண்டபம், 1973ல் கட்டி முடிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய நாட்டின் அடையாளச் சின்னமான இது உலகில் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகும். பிற படைப்புகள் இவருடைய மற்ற கட்டிடப்படைப்புகளில் சில பிளானட்ஷ்டாட்டண் வீடமைப்புத் திட்டம் - லுண்ட், சுவீடன் (1958) கிங்கோ வீடமைப்புத் திட்டம் - எல்சிங்கர் (1960) குவைத் நாடாளுமன்றக் கட்டடம் (1972) பட்டம் ஓபெரா மண்டபத்தை வடிவமைத்ததற்காக, சிட்னி பல்கலைக்கழகம் ஊட்சனுக்கு மார்ச் 2003ல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. உடல்நலக் குறைவு காரணமாக ஊட்சன் ஆஸ்திரேலியா வர முடியாமையினால், அவரது மகன் ஊட்சனின் சார்பில் இந்த பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். மேற்கோள்கள் பகுப்பு:டென்மார்க் கட்டிடக்கலைஞர்கள் பகுப்பு:சிட்னி பகுப்பு:1918 பிறப்புகள் பகுப்பு:2008 இறப்புகள்
பௌத்த சமயம்
https://ta.wikipedia.org/wiki/பௌத்த_சமயம்
REDIRECT பௌத்தம்
கௌதம புத்தர்
https://ta.wikipedia.org/wiki/கௌதம_புத்தர்
கௌதம புத்தர் (Gautama Buddha) என்பவர் கி.மு 563க்கும், கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். இவரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கிறித்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவரது இயற்பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் "சாக்கிய முனி" என்றும் அழைக்கப்பட்டார்.பக். 22, அத். 2, பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வாழ்க்கையையும், வழி காட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்த பிக்குகள் மனனம் செய்துவந்தார்கள். அவற்றுள் மிக முக்கியமானதாக தம்மபதம் விளங்குகிறது, பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் சாதாரண பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது. மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம் ஆகும். குரு - சீட பரம்பரையூடாக வாய்மொழி மூலம் கடத்தப்பட்டு வந்த இத்தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது. புத்தரின் வரலாறு right|250px|thumb|மாயாதேவி கோயில், லும்பினி, நேபாளம் சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார். இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர், சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாரின் கனவில் ஒரு வெள்ளை யானை மீது தான் பயணிப்பதாகவும், அதில் வெள்ளைத் தாமரை சுமந்து செல்வதாகவும் கனவில் தோன்றியது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே இவரை இவரது தாயின் தங்கையும், சிற்றனையுமான மகாபிரஜாபதி கௌதமி வளர்த்தார். சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன். சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித் தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர். அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் வாய்க்கப் பெற்றார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. அவை; ஒரு வயதான தள்ளாடும் கிழவர் ஒரு நோயாளி அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம் நாலாவதாக ஒரு முனிவன் இக்காட்சிகளினூடாக மனித வாழ்க்கையின் துன்பங்களை முதன் முதலில் உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், வாழ்வின் இரகசியத்தைக் காண கானகம் நோக்கிப் பயணித்தார். அவர் துறவறம் பூணவில்லை, மாறாக வாழ்வின் ரகசியத்தைக் காண்பதே அவரின் நோக்கம். கானகம் நோக்கிச் சென்ற சித்தார்த்தர், அப்போதைய வழக்கப்படி பட்டினி கிடந்து பல நாட்கள் குளிக்காமல் யோக நெறியில் தவத்தில் அமர்ந்தார். இவரின் தவத்தைக் கண்டு சில சீடர்கள் அவருக்குக் கிடைத்தனர். வாரணாசி அருகே உள்ள சாரநாத் எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரைச் சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு நல்லறம் புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவாத்தனம் அல்லது அறவாழி உருட்டுதல் என புத்தச் சமய நூல்களில் அழைக்கப்படும். பலநாட்கள் கழித்து ஒரு இசைக்கலைஞன் அவர் தவம் புரிந்து கொண்டு இருந்த வழியாகச் சென்ற போது, தனது சீடனிடம் யாழ் பற்றியும் அதன் நுணுக்கம் பற்றியும் கூறிச் சென்றான். “ஒரு நாணை யாழில் இணைக்கும் பொழுது அதை அதிகமாக இழுத்துக் கட்டினால் நாண் அறுந்து விடும் என்றும், மிகத் தளர்வாகக் கட்டினால் இசை மீட்ட முடியாது என்றும் கூறிக் கொண்டு சென்றான்". சித்தார்த்தாவின் அறிவு அப்போது வேலை செய்ய ஆரம்பித்தது. தனது கடந்த காலத்தில் போதையிலும், பெண் போகத்திலும், செல்வச் செழிப்பிலும் வாழ்ந்த தான் இப்போது அதற்கு மிக மாறாக தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறேன் என்றும், இதே நிலை நீடிக்குமானால் தனது உடல் இறந்து விடும் என்றும்; தான் தேடி வந்த ஞானம் அடையும் முன்னமே தான் இறந்து விடுவோம் என்றும் உணர்ந்தார். எனவே கடுந்தவம் இருப்பதைக் கைவிட எண்ணினார். எனவே அதிக போக வாழ்க்கை, ஞானத்தினைக் கொண்டுவராது என்றும், மிக நெடிய தவமும் ஞானத்தினைக் கொண்டு வராது என்றும், நெடிய தவம் இருந்தால் இவ்வுடல் அழிந்து விடும் என்றும் யோசிக்கத் தொடங்கினார். எனவே முதன் முறையாக அவர் அருகே இருந்த ஆற்றில் சென்று குளிக்க வேண்டுமென முடிவு செய்தார். ஆற்றில் இறங்கும் பொழுது அந்த ஆற்றின் இழுப்பைத் தன்னால் ஈடு கொடுக்க முடியாமையை உணர்ந்தார். அவ்வாறு ஆற்றில் குளித்து விட்டு வரும் பொழுது, அங்கே இருந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுமி இவரின் நிலையைக் கண்டு தான் கொண்டு வந்த சோற்றை அவருக்கு ஊட்டி விட்டார். தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுஜாதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில் அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திராமல் நிகழ்வுகளைக் கவனிப்பது என தீர்மானித்தார். ஒரு வாரம் தனது மிக நுண்ணிய கவனிப்பின் பலனாக முதன் முறையாகக் கவலைக்கும், துன்பத்திற்குமான காரணம் பற்றியும், தான் முதன் முறையாக மிக மகிழ்ச்சியாக அப்போது இருப்பதையும் உணர்ந்தார். புரிந்துணர்வே ஞானத்தின் அடிக்கல் என்பதை உணர்ந்தார். இந்நிலையே ததாகதர் நிலை என்று (அதாவது 'எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலையை உணர்ந்து கொண்டார்.பக்கம் 35, அத்தியாயம் 2, பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்தகயா என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது. அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர். இறப்பு கௌதம புத்தர் குசிநகரத்துக்குச் செல்லும் வழியில் பாவாவில் உள்ள மாந்தோப்புக்குச் சென்றபோது அவரது கடைசி உணவான ஸூகர மத்தவத்தை (பன்றி இறைச்சி) அவருக்குப் பிச்சையாக அளித்த ஸுந்த கம்மாரபுத்த ஒரு கம்மாளர் மகன் ஆவார் . ஸுந்தவின் பிச்சையை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, புத்தர் கொடிய ரத்த பேதியால் அவதிப்பட்டார் .  உயர் புரத (இறைச்சி) உணவின் காரணமாக இந்த நிலை க்ளோஸ்ட்ரிடியல் நெக்ரோடைசிங் என்டரிடிஸாக இருந்திருக்கலாம். மாமிசம் தேரவாதத்தில் உயர் நிலையில் உள்ள பிக்குகளை மதிக்கும் அடையாளமாக பிச்சையாக வழங்கப்படுகிறது . பரிநிர்வாணத்திற்குள் நுழைவதற்கு முன் , புத்தர் ஆனந்தரிடம் ஸுந்தவைப் பார்க்கச் சொன்னார். மேலும் அவரது உணவுக்கும் அவர் நோய்வாய்ப்பட்டதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அதனால் எந்தப் பழியோ வருத்தமோ உணர வேண்டாம் என்றும் கூறினார்; மாறாக, ததாகதவுக்கு மரணம் அடையும் முன் அவரது கடைசி உணவை வழங்குவது, புத்தத்தை அடைவதற்கு முன் அவரது முதல் உணவை அவருக்கு வழங்குவதற்கு சமமான பலனைத் தந்தது , இதனால் அவர் மகிழ்ச்சியடைய வேண்டும் என்றும் கூறினார். புத்தரின் பிறப்பு மற்றும் குழந்தைப் பருவச் சிற்பங்கள் பெயர் விளக்கம் சித்தார்த்தர், மெய்ஞானம் பெற்றது "புத்தர்" அல்லது ஒளிபெற்றவர் என்றும் "ததாகதர்" (உண்மையை அறிந்தவர்) என்றும், சாக்கிய முனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்டார். "புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள் ஆகும். தன் ஆசையையும், அகந்தையையும் புத்தர் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "விடுதலை" அல்லது "நிர்வாண நிலை" என்றுரைப்பர். வரலாற்று ரீதியான சித்தார்த்த கௌதமர் புத்தரின் வாழ்க்கையின் வரலாற்று உண்மைகள் குறித்து தகுதியற்ற கூற்றுக்களைக் கூற அறிஞர்கள் தயங்குகிறார்கள். பெரும்பாலானவர்கள் புத்தர் வாழ்ந்து, பயிற்றுவித்து, மகாஜனபத சகாப்தத்தின் போது பிம்பிசாரரின் (, அல்லது அண். கி. மு. 400) ஆட்சியின் போது துறவற ஒழுங்கை நிறுவினார் என்பதை ஒத்துக் கொள்கின்றனர்.Rawlinson, Hugh George. (1950) A Concise History of the Indian People, Oxford University Press. p. 46.Muller, F. Max. (2001) The Dhammapada And Sutta-nipata, Routledge (UK). p. xlvii. .India: A History. Revised and Updated, by John Keay: "The date [of Buddha's meeting with Bimbisara] (given the Buddhist 'short chronology') must have been around 400 BCE." பிம்பிசாரர் மகத நாட்டின் ஆட்சியாளர் ஆவார். அஜாதசத்ருவின் ஆட்சியின் ஆரம்ப காலங்களின் போது புத்தர் இறந்தார். அஜாதசத்ரு பிம்பிசாரருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். இவ்வாறாக சமண தீர்த்தங்கரரான மகாவீரருக்குப் பிந்தைய காலத்தில் புத்தர் வாழ்ந்தார். "பிறப்பு, முதிர்ச்சி, துறவு, தேடல், விழிப்புணர்வு மற்றும் விடுதலை, கற்பித்தல், இறப்பு" ஆகியவற்றின் பொதுவான வரிசை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பாரம்பரிய சுயசரிதைகளில் உள்ள பல விவரங்களின் உண்மைத்தன்மை பற்றி குறைவான அளவே ஒருமித்த கருத்து உள்ளது. கௌதமரின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய காலங்கள் பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் போது பெரும்பாலான வரலாற்றாளர்கள் கௌதமரின் வாழ்க்கையை அண். கி. மு. 563 முதல் கி. மு. 483 வரை என்று வரையறுத்தனர். தற்போது சிறிது காலத்திற்கு முன்னர் இவரது இறப்பு பிந்தைய நாட்களில் கி. மு. 411 மற்றும் கி. மு. 400க்கு இடையில் நிகழ்ந்தது என குறிப்பிடப்பட்டது. 1988 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இந்த கேள்வி கேட்கப்பட்ட போது, பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கி. மு. 400 க்கு 20 வருடங்கள் முன்னர் அல்லது பின்னர் ஆகிய ஆண்டுகளில் புத்தர் இறந்திருக்கலாம் என்று அறுதியிட்டு கூறினர். எவ்வாறாயினும், இந்த மாற்று காலவரிசைகளை அனைத்து வரலாற்றாசிரியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. வரலாற்றுச் சூழல் right|thumb|upright=1.15|புத்தரின் (அண். கி. மு. 500) காலத்தின் போது இந்தியாவின் பண்டைய ராஜ்யங்கள் மற்றும் நகரங்கள். ஆரம்ப கால நூல்களில் உள்ள ஆதாரங்களின்படி சித்தார்த்த கௌதமர் சாக்ய இனத்தில் பிறந்தார். இந்த இனம் புவியியல் ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் கி. மு. 5 ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்திய துணைக்கண்டத்தில் இருந்தது. இவரது பொதுவான பெயர் "சகமுனி" அல்லது "சாக்யமுனி" ("சாக்கியர்களின் முனிவர்"). அது ஒரு சிறிய குடியரசு அல்லது தன்னல குழுவாக இருந்தது. இவரது தந்தை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்லது தன்னல குழுவின் தலைவராக இருந்தார். புத்த மத பாரம்பரியத்தின் படி கௌதமர் லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். அந்த இடம் தற்கால நேபாளத்தில் உள்ளது. சாக்ய தலைநகரான கபிலவஸ்துவில் வளர்க்கப்பட்டார். கபிலவஸ்துஎன்பது தற்கால நேபாளத்தில் உள்ள திலௌராகோட் அல்லது இந்தியாவில் உள்ள பிப்ரவா என கூறப்படுகிறது. வார்டர் என்ற வரலாற்றாளர் பின்வருமாறு கூறுகிறார்: "புத்தர் [...] சாக்ய குடியரசில் பிறந்தார். அது கபிலவஸ்துவின் நகர அரசு ஆகும். அது வட இந்திய எல்லைக்கு அப்பால் தற்கால நேபாள எல்லைக்குள் இருந்த ஒரு மிகச்சிறிய அரசு ஆகும்". வால்ஷே என்ற வரலாற்றாளர் பின்வருமாறு கூறுகிறார்: "இமயமலைகளின் ஓரத்தில் வாழ்ந்த சாக்ய இனத்தை சேர்ந்தவர் புத்தர். இவரது உண்மையான பிறந்த இடம் நேபாளத்தில் வட இந்திய எல்லைக்கு சில மைல்கள் வடக்கே அமைந்துள்ளது. இவரது தந்தை உண்மையில் அரசர் கிடையாது. மாறாக, இனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார். பிற்காலத்தில் இவரது தந்தை அரசர் என்று புனையப்பட்டது. அவரும் ராஜா என்ற பட்டத்தை கொண்டிருந்தார். ஆனால் ராஜா என்ற பட்டத்தை கொண்டிருந்தவர்கள் பகுதி அளவிற்கே அரசருக்கு ஒப்பானவர்கள் ஆவர். அந்த நேரத்தில் வட இந்தியாவில் இருந்த சில அரசுகள் ராச்சியங்களாகவும் மற்றவை குடியரசுகளாகவும் இருந்தன. சாக்ய குடியரசானது தெற்கே இருந்த கோசலை அரசின் சக்தி வாய்ந்த அரசருக்கு கட்டுப்பட்டு இருந்தது". பண்டைய கபிலவஸ்து அமைந்திருந்த உண்மையான இடம் எது என்று தெரியவில்லை. அது வட இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் உள்ள பிப்ரவா, அல்லது தற்கால நேபாளத்தில் உள்ள திலௌராகோட்டாக இருக்கலாம். இந்த இரண்டு நகரங்களும் ஒன்றுக்கொன்று 15 மைல் தொலைவில்தான் அமைந்துள்ளன. புராணம் கலந்த வாழ்க்கை பிறப்பும், ஆரம்ப வாழ்க்கையும் thumb|upright=1.35|லும்பினி மற்றும் இந்தியாவில் உள்ள பிற முக்கிய பௌத்த தளங்களை காட்டும் ஒரு வரைபடம். தற்போதைய நேபாளத்தில் உள்ள லும்பினி புத்தரின் பிறந்த இடமாகும். புத்த மதத்தை சாராத பலருக்கும் இது ஒரு புனிதத் தலமாக விளங்குகிறது. thumb|லும்பினியில் புத்தரின் பிறந்த இடத்தை குறித்துக் காட்டும் மாயாதேவி கோயில். thumb|இந்த இடம் புத்தரின் பிறந்த இடம் என்று குறிப்பிடும் கல்வெட்டை கொண்ட லும்பினி தூண். பௌத்த மரபின் படி, கௌதமர் லும்பினியில் பிறந்தார். இந்த இடம் நவீன கால நேபாளத்தில் உள்ளது. இவர் கபிலவஸ்துவில் வளர்க்கப்பட்டார். பண்டைக் கால கபிலவஸ்து அமைந்திருந்த சரியான தளமானது அறியப்படவில்லை. தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேசத்திலுள்ள பிப்ரவா அல்லது தற்கால நேபாளத்தில் உள்ள திலௌராகோட் ஆகியவற்றில் ஓர் இடமாக இது இருந்திருக்க வேண்டும். இந்த இரண்டு இடங்களுமே சாக்கியர்களின் நிலப்பரப்புக்குள் அமைந்திருந்தன. இவை இரண்டும் வெறும் 24 கிலோமீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளன. பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் பேரரசர் அசோகர் லும்பினி தான் கௌதமர் பிறந்த இடம் என்று உறுதியுடன் குறிப்பிட்டார். அங்கு பின் வரும் கல்வெட்டை கொண்ட ஒரு தூணை நிறுவினார்: "இங்கு தான் சாக்கியர்களின் முனிவரான (சாக்கியமுனி) புத்தர் பிறந்தார்". மகாவஸ்து மற்றும் லலிதவிஸ்தாரா போன்ற பிந்தைய வாழ்க்கை வரலாற்று நூல்களின் படி, சுத்தோதனரின் மனைவியும், இவரது தாயுமான மாயா (மாயாதேவி) தேவதகாவைச் சேர்ந்த ஓர் இளவரசி ஆவார். தேவதகா என்பது கோலியர்களின் இராச்சியத்தின் பண்டைக் கால தலைநகரம் ஆகும். இது நேபாளத்தின் ரூபந்தேஹி மாவட்டத்தில் அமைந்துள்ளது. புராணத்தின் படி, சித்தார்த்தர் தன் தாயின் வயிற்றில் கருவுற்ற இரவில் ஆறு வெள்ளை தந்தங்களை உடைய ஒரு வெள்ளை யானையானது தன் வலது பக்கத்தில் உட்புகுந்ததாக இராணி மாயா கனவு கண்டார். 10 மாதங்கள் கழித்து சித்தார்த்தர் பிறந்தார். சாக்கியர்களின் மரபின் படி இவரது தாய் இராணி மாயா இவரை தன் வயிற்றில் சுமந்த போது குழந்தை பிறப்புக்காக தனது தந்தையின் இராச்சியத்திற்கு சொல்வதற்காக கபிலவஸ்துவிற்கு சென்றார். பயணம் செல்லும் வழியில் லும்பினியில் ஒரு தோட்டத்தில் ஒரு குங்கிலிய மரத்தின் அடியில் புத்தர் பிறந்தார் என்று குறிப்பிடப்படுகிறது. ஆரம்ப கால பௌத்த நூல்கள் கௌதமர் (சமக்கிருதம்: கௌதமர்) என்று அழைக்கப்பட்ட ஒரு மேற்குடி சத்திரிய (பளி: கட்டியர்) குடும்பத்தில் புத்தர் பிறந்தார் என்று குறிப்பிடுகின்றன. கௌதமர்கள் சாக்கியர்களின் ஒரு பிரிவினராக இருந்தனர். இந்தியா மற்றும் நேபாளத்தின் நவீன கால எல்லைக்கு அருகில் வாழ்ந்த அரிசி விவசாயிகளின் ஒரு பழங்குடியினமாக சாக்கியர்கள் திகழ்ந்தனர். இவரது தந்தை சுத்தோதனர் "சாக்கிய இனத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக" இருந்தார். இவரது தலை நகரம் கபிலவஸ்து ஆகும். புத்தரின் காலத்தின் போது விரிவடைந்து கொண்டிருந்த கோசல இராச்சியத்தால் கபிலவஸ்துவானது பிற்காலத்தில் இணைக்கப்பட்டது. ஆரம்ப கால பௌத்த நூல்கள் கௌதம புத்தரின் பிறப்பு மற்றும் இளம் வயது குறித்து மிகவும் சிறிய தகவல்களையே கொண்டுள்ளன. பிந்தைய வாழ்க்கை வரலாறுகள் இளம் வயது கௌதம புத்தரின் வாழ்வில் ஓர் இளவரசராக மற்றும் இவர் சந்தித்த பிரச்சினைகளை கவனத்தை ஈர்க்கும் வகையில் குறிப்பிட்டுள்ளன. இசுவாகுவின் (பாளி: ஒக்ககம்) சூரிய குலத்தைச் சேர்ந்த ஒரு மரபு வழி முடியரசராக புத்தரின் தந்தை சுத்தோதனரை இவை குறிப்பிட்டன. இதை ஏற்றுக் கொள்ள சில வரலாற்றாளர்கள் மறுக்கின்றனர். சுத்தோதனர் வெறுமனே ஒரு சாக்கிய மேற்குடி சத்திரிய (பாளி: கட்டியர்) இனத்தை சேர்ந்தவர் என்கின்றனர். சாக்கிய குடியரசானது மரபு வழி முடியாட்சியாக இல்லை என்று பல அறிஞர்கள் எண்ணுகின்றனர். சிரமண சைன மற்றும் புத்த சங்கங்களின் வளர்ச்சி மீது, அதிகப் படியான சமத்துவ கொள்கையுடைய கன சங்க அமைப்பு அரசாங்கமானது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த அமைப்பானது இந்திய முடியரசுகளுக்கு ஒரு மாற்று அரசியல் அமைப்பாக இருந்தது. பெரும்பாலான இந்திய முடியரசுகள் அக்காலத்தில் பண்டைய வேத சமயத்தையே ஆதரித்தன. புத்தரின் பிறப்பு, ஞானம் பெற்ற மற்றும் இறப்பு ஆகிய நாட்கள் தேரவாத பௌத்த நாடுகளில் வைசாகம் எனவும், இவர் தன் தாயின் வயிற்றில் உருவான நாளை போசோன் என்றும் பரவலாக கொண்டாடுகின்றன. நேபாளம், வங்கதேசம் மற்றும் இந்தியாவில் புத்தரின் பிறந்த தினமானது புத்த பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது. ஒரு பௌர்ணமி நாளில் புத்தர் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. பிந்தைய வாழ்க்கை வரலாற்று புராணங்களின் படி, இவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எதிர் காலத்தை கணித்து கூறும் துறவியான அசிதர் தன்னுடைய மலை வாழ்விடத்தில் இருந்து பயணித்து புத்தரைக் காண வந்தார். "ஒரு மகா மனிதனுக்குரிய 32 அறிகுறிகள்" குழந்தையிடம் உள்ளதா என்று ஆராய்ந்தார். பிறகு புத்தர் ஒரு மகா மன்னன் (சக்கரவர்த்தி) அல்லது ஒரு மகா சமயத் தலைவர் ஆகிய இருவரில் ஒருவராக ஆவார் என்று கூறினார். புத்தர் பிறந்த 5ஆம் நாளில் ஒரு பெயர் சூட்டும் விழாவிற்கு சுத்தோதனர் ஏற்பாடு செய்தார். புத்தரின் எதிர் காலத்தை கணித்து கூறுவதற்காக எட்டு பிராமண அறிஞர்களை வருமாறு வேண்டினார். அனைவரும் இதே போன்ற கணிப்பை கூறினர். இதில் மிகவும் இளையவரான கௌந்தேயன் என்பவர் மட்டுமே தீர்க்கமாக சித்தார்த்தர் ஒரு புத்தராக மாறுவார் என்று கணித்து கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தரைத் தவிர்த்த முதல் அருகதராகவும் கௌந்தேயன் உருவானார். தன்னுடைய சமய தேடலுக்காக வெளியேறும் வரையில் தன் காலத்தில் இருந்த ஆதிக்கமிக்க சமய போதனைகளை கௌதமர் அறிந்திருக்கவில்லை என்று ஆரம்ப கால நூல்கள் பரிந்துரைக்கின்றன. இவரது தேடலானது மனிதர்களின் துன்பத்திற்கு எது காரணமாக அமைகிறது என்பதனால் தூண்டப்பட்டதாக கூறப்படுகிறது. பல்வேறு பௌத்த சமய பிரிவுகளைச் சேர்ந்த ஆரம்ப கால பௌத்த நூல்களின் படியும், இந்திய நூல்களின் மொழி பெயர்ப்பாக கிழக்காசியாவில் எழுதப்பட்ட ஏராளமான நூல்களின் படியும், கௌதமருக்கு யசோதரை என்ற ஒரு மனைவியும், ராகுலன் என்ற ஒரு மகனும் இருந்தனர். இது தவிர ஆரம்ப கால நூல்களில் புத்தர் "(எனது பெற்றோரின் வீட்டில்) நான் செல்லமாக, மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டேன் துறவிகளே" என்று குறிப்பிட்டுள்ளார். புராணங்கள் கலந்த வாழ்க்கை வரலாறுகளான லலிதவிஸ்தாரா போன்றவை இளம் கௌதமரின் சிறப்பான போர் ஆற்றல் குறித்த கதைகளையும் குறிப்பிடுகின்றன. பிற சாக்கிய இளைஞர்களுக்கு எதிராக பல்வேறு போட்டிகளில் இவர் கலந்து கொண்டார் என்றும் குறிப்பிடுகின்றன. துறவு thumb|upright=1.35|சித்தார்த்த கௌதமரின் "மகா புறப்பாடு". இவரின் தலைக்குப் பின்னால் ஒளி வட்டம் காணப்படுகிறது. இவரை சுற்றிலும் ஏராளமான காவலர்களும், இவருக்கு மரியாதை செலுத்த வந்த தேவர்களும், தேவதைகளும் காணப்படுகின்றனர். ஓவிய இடம் காந்தாரதேசம், குசானர் காலம். கௌதமர் ஓர் உயர்ந்த ஆன்மிக இலக்கை தேடியது மற்றும் சமய குருவுக்குரிய வினை முறை பயிற்சி அளிக்கப்படாத வாழ்க்கையால் விரக்தியடைந்தது ஆகியவற்றுக்கு பிறகு, ஒரு துறவி அல்லது சிரமனராக உருவானதை ஆரம்ப கால நூல்கள் வெறுமனே குறிப்பிடும் அதே நேரத்தில், பிந்தைய புராணம் கலந்த வரலாறுகள் புத்தர் எவ்வாறு ஒரு யாசகராக ஆனார் என்பதை ஒரு விரிவான, விளக்கங்களுடன் கூடிய, கவனத்தை ஈர்க்கக்கூடிய கதையாக குறிப்பிடுகின்றன. பாளி மொழி ஆரியபரியேசன-சுத்தா ("உன்னதமான தேடல் குறித்த விவாதம்," மச்சிம நிகயம் 26) நூல் மற்றும் அதன் சீன இணை நூலான மத்தியம ஆகமத்தின் 204ஆம் பத்தி போன்றவற்றில் புத்தரின் ஆன்மீக தேடல் குறித்த ஆரம்ப கால குறிப்புகள் காணப்படுகின்றன. தன்னுடைய வாழ்வும் முதுமை, நோய் மற்றும் இறப்பு ஆகியவற்றை அடையும், மற்றும் இவற்றை விட சிறந்த ஒன்று (அதாவது விடுதலை, நிர்வாணம்) இருக்கும் ஆகியவை குறித்த எண்ணமே கௌதமர் துறவு மேற்கொள்வதற்கு இட்டுச் சென்றன என்று இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. தான் ஒரு சிரமனராக வந்ததற்கு புத்தர் கொடுத்த விளக்கத்தை இந்த ஆரம்ப கால நூல்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன: "இல்லற வாழ்க்கை, இந்த தூய்மையற்ற இடம் என்பது குறுகலானது - சமண வாழ்க்கையானது சுதந்திரமான வெட்ட வெளி காற்று போன்றது. பிழையற்ற, மிகவும் தூய்மையான மற்றும் பிழையற்ற புனித வாழ்வை ஓர் இல்லற வாழ்க்கை உடையவரால் வாழ்வது என்பது எளிதானது கிடையாது." மச்சிம நிகயம் 26, மத்தியம ஆகமம் 204, தர்மகுப்தக வினயம் மற்றும் மகாவஸ்து ஆகிய அனைத்து நூல்களுமே புத்தரின் இந்த முடிவை அவரது தாய் மற்றும் தந்தை எதிர்த்தனர் என்பதை ஒப்புக் கொள்கின்றன. புத்தர் துறவு வாழ்க்கையை தேர்ந்தெடுத்து வீட்டை விட்டு வெளியேறிய போது அவர்கள் "கண்ணீர் உடைய முகங்களுடன் அழுக" ஆரம்பித்தனர். thumb|தன்னுடைய தலை முடியை எடுத்து விட்டு ஒரு சமணராக மாறும் இளவரசர் சித்தார்த்தர். இடம் போரோபுதூர், ஆண்டு 8ஆம் நூற்றாண்டு. தன்னுடைய அரண்மனையை விட்டு முதன் முறையாக வெளியுலகத்தை காண்பதற்காக கௌதமர் எவ்வாறு வெளியேறினார், மனிதர்கள் அடையும் துன்பங்களை இவர் கண்ட போது எவ்வாறு அதிர்ச்சி அடைந்தார் என்ற கதையையும் புராணம் கலந்த வரலாறுகள் குறிப்பிடுகின்றன. ஒரு பெரிய சமயத் தலைவராக மாறுவதற்கு பதிலாக ஒரு மகா மன்னனாக கௌதமர் வர வேண்டும் என்பதற்காக சமய போதனைகள் மற்றும் மனிதர்கள் அடையும் துன்பங்கள் குறித்த நிகழ்வுகளை கௌதமர் காணாமல் இருக்க கௌதமரின் தந்தை எவ்வாறு இவரை மறைத்து வளர்த்தார் என்பதையும் இந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. பொ. ஊ. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜாதக கதைகள் கௌதமர் ஒரு முதியவரைக் கண்டார் என்று குறிப்பிடுகின்றன. அனைவரும் ஒரு நாள் முதுமை அடைவார்கள் என்பதை கெளதமரின் தேரோட்டியான சந்தகன் விளக்கி கூறிய போது அரண்மனையைத் தாண்டி மேற்கொண்ட பயணங்களை இளவரசர் கௌதமர் மேற்கொண்டார். இத்தகைய ஒரு பயணத்தில் கௌதமர் ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதன், ஓர் அழுகிக் கொண்டிருந்த பிணம் மற்றும் தனக்கு அகத்தூண்டுதலாக விளங்கிய ஒரு துறவியையும் கண்டார். இவ்வாறு "நான்கு காட்சிகளை" கண்ட கதையானது விபசி என்ற ஒரு முந்தைய புத்தரை சித்தரித்திருந்த திக நிகயம் (திக நிகயம் 14.2) என்ற நூலின் முந்தைய பதிப்பில் இருந்து பெறப்பட்டதாக ஒரு சிலர் கருதுகின்றனர். விபசி என்ற ஒரு முந்தைய புத்தரின் இள வயது வாழ்க்கையை இந்நூல் சித்தரித்திருந்தது. தன்னுடைய அரண்மனையிலிருந்து கௌதமர் வெளியேறியதை இந்த புராணம் கலந்த வரலாறுகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன. நான்கு காட்சிகளை கண்டதற்கு பிறகு சீக்கிரமே கௌதமர் ஓரிரவில் தூக்கத்தில் இருந்து எழுந்தார். காண்பதற்கு இனியதற்ற பிணம் போன்ற நிலையில் தன்னுடைய வேலை பெண்கள் இருப்பதை கண்டது இவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தான் ஞானம் பெற்ற போது மிகவும் ஆழமாக பின்னர் தான் புரிந்து கொண்ட துக்கம் ("நிலையற்ற," "மனநிறைவின்மை") மற்றும் துக்கத்தின் முடிவு ஆகியவற்றை இவ்வாறாக கண்டறிந்தார். தான் கண்ட அனைத்து காட்சிகளாலும் மனமாற்றமடைந்த கௌதமர் தன்னுடைய தந்தையின் விருப்பத்திற்கு எதிராக ஒரு நள்ளிரவில் அரண்மனையிலிருந்து வெளியேறி ஓர் அலைந்து திரியும் துறவியின் வாழ்க்கையை வாழ முடிவு செய்தார். தன்னுடைய குதிரை கந்தகா மற்றும் சந்தகனுடன் கௌதமர் அரண்மனையை விட்டு வெளியேறினார். தன்னுடைய மகன் ராகுலன் மற்றும் மனைவி யசோதரை ஆகியோரை விட்டு விட்டுச் சென்றார். அனோமியா ஆற்றுக்கு பயணித்தார். தன்னுடைய முடியை வெட்டினார். தன்னுடைய பணியாள் மற்றும் குதிரையை விட்டு விட்டு வனப் பகுதிக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு துறவிகளுக்குரிய அங்கியை மாற்றிக் கொண்டார். எனினும், இக்கதையின் சில மாறுபட்ட பதிப்புகள், அனோமியா ஆற்றின் கரையில் பிரம்மாவிடமிருந்து அங்கிகளை கௌதமர் பெற்றார் எனக் கூறுகின்றன. புராணம் கலந்த வரலாறுகளின் படி, துறவி கௌதமர் முதன் முதலில் ராஜககத்திற்கு (தற்கால ராஜகிரகம்) தெருக்களில் யாசகம் வேண்டுவதற்காக சென்றார். மகதத்தின் மன்னனான பிம்பிசாரர் கௌதமரின் இந்த தேடல் குறித்து அறிந்தார். தன்னுடைய இராச்சியத்தின் ஒரு பகுதியை அளிக்க முன் வந்தார். கௌதமர் இந்த வாய்ப்பை நிராகரித்தார். ஆனால், தான் ஞானம் பெற்றவுடன் முதன் முதலில் பிம்பிசாரரின் இராச்சியத்திற்கு வருகை புரிவேன் என்று உறுதியளித்தார். துறவு வாழ்வும், விழிப்படைதலும் thumb|பேங்காக்கின் வத் சுதத்தில் உள்ள புத்தரின் துறவின் ஒரு நிலையை சித்தரிக்கும் தங்க முலாம் பூசப்பட்ட "இளைத்த உடலுடைய புத்தர் சிலை" thumb|புத்தகயையில் உள்ள சிறீ மகா போதி கோயிலின் மகாபோதி மரம் thumb|புத்தகயையில் உள்ள புத்தரின் ஞானம் பெற்ற அரியணை. பொ. ஊ. மு. 3ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகரால் உருவாக்கப்பட்டதன் மறு உருவாக்கம் thumb|நைரஞ்சன ஆற்றின் மீது கௌதம புத்தர் நடக்கும் அதிசயம். இதில் புத்தர் தெரிவதில்லை (அருவ வழிபாடு). நீரின் மீது உள்ள ஒரு வழியாகவும், கீழ் வலது பக்கம் இவரது வெற்று அரியணையாகவும் மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ளார். இடம் சாஞ்சி. தன்னை வருத்தி கடு முயற்சி செய்து ஆன்மிகத் தேடலில் ஈடுபட்ட ஆண்டுகளின் போது கெளதர் தொலை தூரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் வாழ்ந்தார் என்றும், காடுகளில் வாழும் போது தான் அடைந்த பயத்தை இவர் கட்டுக்குள் கொண்டு வர வேண்டி இருந்தது என்றும் மச்சிம நிகயம் 4 குறிப்பிடுகிறது. நிகய-நூல்கள் துறவி கௌதமர் இரண்டு ஆசிரியர்களுக்கு கீழ் யோக தியானத்தை பயின்றார் என்றும் கூறுகின்றன. ஆரியபரியேசன-சுத்தா (மச்சிம நிகயம் 26) மற்றும் அதன் சீன இணை நூலான மத்தியம ஆகமம் 204 ஆகியவற்றின் படி ஆலார காலமரின் பயிற்சியை முழுவதுமாக கற்றதற்குப் பிறகு அவர்களின் ஆன்மிக சமூகத்தின் ஒரு சமமான தலைவராக வரவேண்டும் என்று புத்தரை ஆலாரர் கேட்டுக் கொண்டார். ஆலரார் புத்தருக்கு "ஏதுமின்மையின் கோளம்" என்று அழைக்கப்பட்ட ஒரு தியான அடைதலை பயிற்றுவித்தார். கெளதமர் இந்த பயிற்றுவிப்பில் திருப்தி அடையவில்லை. ஏனெனில், இது (உலக வாழ்வு மீதான) கடும் வெறுப்புணர்ச்சிக்கோ, நிர்ச்சலனத்திற்கோ, அற்றுப் போதலுக்கோ, அமைதி நிலைக்கோ, அறிவாற்றலுக்கோ, விழிப்படைதலுக்கோ, நிப்பானத்திற்கோ (நிர்வாணம்) இட்டுச் செல்லவில்லை. பிறகு உத்தக ராமபுத்திரரின் ஒரு மாணவனாக பயில ஆரம்பித்தார். இவர் மூலமாக உயர் நிலை தியான உணர்வு நிலைகளை புத்தர் அடைந்தார். இந்த உணர்வு நிலையானது "உணர்ந்தறியும் ஆற்றல் அல்லது உணர்ந்தறியா ஆற்றலின் கோளம்" என்று அழைக்கப்பட்டது. இந்த முறையும் தன்னுடைய ஆசிரியரால் அவருடன் இணைந்து கொள்ளுமாறு புத்தருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் ஒரு முறை, ஏற்கனவே தான் கொண்ட அதே காரணங்களுக்காக புத்தர் திருப்தி அடையவில்லை. மீண்டும் தனது பயணத்தை புத்தர் தொடர ஆரம்பித்தார். சில சூத்திரங்களின் படி, தனது தியான ஆசிரியர்களிடம் இருந்து விலகியதற்கு பிறகு கௌதமர் துறவிகளின் உத்திகளைப் பின்பற்ற ஆரம்பித்தார். ஆரம்ப கால நூல்களில் விளக்கப்பட்டுள்ள புத்தர் கேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ள துறவு உத்திகளில் மிகக் குறைவான அளவே உணவை எடுத்துக் கொள்ளுதல், வேறுபட்ட வகையிலான மூச்சுக் கட்டுப்பாடு மற்றும் கட்டாயப்படுத்தப்பட்ட மனக் கட்டுப்பாடு ஆகியவையும் அடங்கும். புத்தர் மிகவும் இளைத்ததன் காரணமாக இவரது எலும்புகள் தோல் வழியாக தெரிய ஆரம்பித்தன என்று இந்நூல்கள் குறிப்பிடுகின்றன. மகசச்சக-சுத்தா மற்றும் பெரும்பாலான அதன் இணை நூல்கள் துறவை அதன் மட்டு மீறிய உச்ச நிலைகளுக்கு கொண்டு சென்றதற்கு பிறகு நிர்வாணத்தை அடைவதற்கு இந்த உத்திகள் உதவில்லை என்பதை கௌதமர் உணர்ந்தார் என்றூ குறிப்பிடுகின்றன. தன்னுடைய இலக்கைத் தொடர்வதற்காக வலிமையை மீண்டும் பெற வேண்டும் என்ற தேவையை புத்தர் உணர்ந்தார். ஒரு பிரபலமான கதையானது சுஜாதா என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமப் பெண்ணிடமிருந்து பாலையும், அரிசி பாயாசத்தையும் புத்தர் எவ்வாறு ஏற்றுக் கொண்டார் என்பதை கூறுகிறது. துறவில் இருந்து சற்றே இடை நிறுத்தத்தை புத்தர் எடுத்ததானது, இவரது ஐந்து தோழர்கள் இவரிடமிருந்து விலகுதற்கு வழி வகுத்தது என்று கூறப்படுகிறது. தன்னுடைய தேடலை கைவிட்டு விட்டு, ஒழுக்கமற்றவராக புத்தர் உருவாகிவிட்டார் என்று அவர்கள் நம்பியதால் இவ்வாறு விலகினர். இந்நிலையில் தன்னுடைய தந்தை வேலையில் ஈடுபட்டிருந்த போது தான் ஒரு குழந்தையாக ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்த போது தான் அடைந்த ஒரு முந்தைய தியான அனுபவத்தை கௌதமர் மீண்டும் ஞாபகம் கொண்டார். விடுதலை பெறுவதற்கான வழியானது தியானமே என்று உணர்ந்து கொள்ள இந்த நினைவானது இவருக்கு வழி வகுத்தது. புத்தர் அனைத்து நான்கு தியானங்களையும் கற்றார் என்றும், அதற்குப் பிறகு "மூன்று உயர்ந்த அறிவுகளையும்" (தெவிஜ்ஜா) பெற்றார் என்றும், இறுதியாக நான்கு உயர்ந்த உண்மைகள் குறித்த முழுவதுமான புரிதலையும் பெற்றார் என்றும், இவ்வாறாக மீண்டும் மீண்டும் பிறக்கும் முடிவற்ற சுழற்சியான பிறவிச்சுழற்சியில் இருந்து விடுதலை பெற்றார் என்றும் நூல்கள் குறிப்பிடுகின்றன. தம்மசக்கபவத்தன சுத்தா (சம்யுத்த நிகயா 56) நூலானது ததாகதர், இன்பம் கொள்வது மற்றும் ஊனுருக வைப்பதின் மட்டு மீறிய நிலைகளாக இல்லாது ஒரு மிதமான வழியான "நடு வழி" அல்லது உன்னதமான எண்வகை மார்க்கங்களை உணர்ந்தார் என்று குறிப்பிடுகிறது. இந்த ததாகதர் என்ற சொல்லைத் தான் கௌதமர் பெரும்பாலும் அடிக்கடி தன்னைத் தானே குறிப்பிட்டுக் கொள்ள பயன்படுத்தினார். பிந்தைய நூற்றாண்டுகளில் தான் கௌதமர் புத்தர் அல்லது "விழிப்படைந்த ஒருவர்" என்று இவர் அறியப்பட ஆரம்பித்தார். புத்தர் என்ற இந்த பட்டமானது "தூங்கி கொண்டிருக்கும்" பெரும்பாலான மக்களிலிருந்து வேறுபடுத்தி, ஒரு புத்தர் என்பவர் நடைமுறையின் உண்மையான இயல்புக்கு "விழிப்படைந்த ஒருவரென்றும்", உலகம் 'எவ்வாறு உள்ளதோ அவ்வாறே' (யுத-புதம்) அதைக் காண்பவர் என்றும் குறிக்கிறது. துன்ப சுழற்சி மற்றும் மறு பிறப்பு ஆகியவற்றை தொடர வைக்கும் ஆசை, வெறுப்பு மற்றும் அறியாமை ஆகிய "நெருப்புகளை" அணைத்ததாக அறியப்படுகிற விடுதலை (விமுத்தி) அல்லது நிர்வாணத்தை அடைந்த ஒருவராக ஒரு புத்தர் அறியப்படுகிறார். தன்னுடைய தியான ஆசிரியர்களிடமிருந்து விலகிச் செல்லும் தன்னுடைய முடிவைத் தொடர்ந்து மத்தியம ஆகமம் 204 மற்றும் பிற ஆரம்ப இணை நூல்களில் குறிப்பிட்டுள்ள படி, முழுமையான விழிப்படைதலை (சம்ம-சம்போதி) அடையும் வரை தான் எழுந்திருக்கக் கூடாது என்ற முடிவுடன் கௌதமர் அமர்ந்தார். ஆரியபரியேசன-சுத்தா நூலானது "முழுமையான விழிப்படைதலை" பற்றி குறிப்பிடவில்லை. ஆனால், இவர் நிர்வாணத்தை அடைந்தார் என்று மட்டும் குறிப்பிடுகிறது. இந்நிகழ்வானது பீகாரின் புத்தகயையில் உள்ள, "போதி மரம்" என்று தற்போது அறியப்படும் ஓர் அரச மரத்தின் கீழ் நடந்தது என்று கூறப்படுகிறது. பாளி திரு முறையைச் சேர்ந்த பல்வேறு நூல்களில் குறிப்பிட்டுள்ள படி, போதி மரத்தின் கீழ் புத்தர் ஏழு நாட்களுக்கு அமர்ந்திருந்தார். "விடுதலையின் நிறைவான மகிழ்ச்சியை" உணர்ந்தார். இவர் தொடர்ந்து தியானம் செய்தார் என்றும், நைரஞ்சன ஆற்றின் அருகில் வாழ்ந்து தம்மத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றி சிந்தித்தார் என்றும் பாளி நூல்கள் மேலும் குறிப்பிடுகின்றன. இந்த அம்சங்களில் ஒரு தம்மமானது மற்றொரு தம்மத்திலிருந்து உருவாகிறது, ஐந்து ஆன்மிக புலன்கள் மற்றும் துன்பம் (துக்கம்) ஆகியவையும் அடங்கும். மகாவஸ்து, ஜாதக கதைகள் மற்றும் லலிதாவிஸ்தாரா போன்ற புராணம் கலந்த வரலாறுகள், ஆசைகள் உலகின் மன்னனான மாறன் புத்தர் நிர்வாணம் அடைவதை தடுப்பதற்காக மேற்கொண்ட ஒரு முயற்சியையும் குறிப்பிடுகின்றன. அவன் புத்தரை மயக்குவதற்காக தன்னுடைய மகள்களை அனுப்பினான், தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றான், இராட்சதர்களின் இராணுவத்தைக் கொண்டு புத்தரைத் தாக்கினான். எனினும், புத்தர் இதனால் சலனம் அடையவில்லை. தன்னுடைய முதன்மை நிலையை பூமி அறிந்து கொள்வதற்காக பூமியை அழைத்து தரையை தொட்டார். புராணங்களின் சில பதிப்புகளின் படி, பிருத்வியை அழைத்தார் என்று குறிப்பிடப்படுகிறது. பிறகு தியானத்தை மேற்கொண்டார். இது தவிர பிற அதிசயங்கள் மற்றும் மந்திர நிகழ்வுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. முதல் சமயச் சொற்பொழிவும், சங்கம் உருவாக்கப்படுதலும் thumb|இந்தியாவின் சாரநாத்தில் உள்ள தாமேக் தூபி. புத்தர் முதல் போதனையை போதித்த தளம் இது தான். இங்கு தான் தன் முதல் ஐந்து சீடர்களுக்கு நான்கு உயர்ந்த உண்மைகளை புத்தர் போதித்தார். மச்சிம நிகயம் 26இன் படி, தன்னுடைய விழிப்படைதலுக்கு பின் உடனடியாக, தன் தம்மத்தை பிறருக்கு போதிக்கலாமா அல்லது வேண்டாமா என்ற தயக்கம் புத்தருக்கு ஏற்பட்டது. "நுட்பமான, ஆழமான மற்றும் பின்பற்ற கடினமான" ஒரு பாதையை அறியாமை, பேராசை மற்றும் வெறுப்பால் ஆட்கொள்ளப்பட்டுள்ள மனிதர்களால் ஏற்றுக் கொள்ள இயலுமா என்ற கவலை ஏற்பட்டது. எனினும், கடவுள் பிரம்ம சகம்பதி புத்தரை இணங்க வைத்தார். குறைந்தது "தம் கண்களில் சிறு தூசி" உள்ள யாரேனும் இதை புரிந்து கொள்வார்கள் என்று வாதிட்டார். புத்தர் தணிந்தார். போதிக்க ஒப்புக் கொண்டார். மச்சிம நிகயம் 26, மத்தியம ஆகமம் 204 ஆகியவற்றுக்கு இணை சீன நூலான அனலயோவின் நூலில் இக்கதை காணப்படவில்லை. ஆனால், லலிதவிஸ்தாராவின் கதுஸ்பரிசத்-சூத்திரத்தின் எகோத்தரிக-ஆகம கருத்தாடல் போன்ற பிற இணை நூல்களில் இந்நிகழ்வு காணப்படுகிறது. மச்சிம நிகயம் 26 மற்றும் மத்தியம ஆகமம் 204இன் படி, போதிக்க முடிவு செய்ததற்கு பிறகு புத்தர் ஆரம்பத்தில் தன்னுடைய முந்தைய ஆசிரியர்களான ஆலார காலமர் மற்றும் உத்தக ராமபுத்திரர் ஆகியோரை சந்திக்க விரும்பினார். தன்னுடைய போதனைகளின் தன்மையை அவர்களுக்கு கூற எண்ணினார். ஆனால், அவர்கள் ஏற்கனவே இறந்து இருந்தனர். எனவே, தன்னுடைய ஐந்து முன்னாள் தோழர்களை சந்திக்க இவர் முடிவு செய்தார். மச்சிம நிகயம் 26 மற்றும் மத்தியம ஆகமம் 204 ஆகிய இரு நூல்களுமே புத்தர் தான் வாரணாசிக்கு (பனாரசு) செல்லும் வழியில் மற்றொரு அலைந்து திரிந்த துறவியை சந்தித்தார். அவர் ஆசீவகத் துறவியான உபகர் ஆவார். இது மச்சிம நிகயம் 26இல் குறிப்பிடப்பட்டுள்ளது. தான் முழுமையான விழிப்படைதலை அடைந்து விட்டதாக புத்தர் தெரிவித்தார். ஆனால் உபகர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, அவர் "மாற்று (ஆன்மிக) பாதையை" தேர்ந்தெடுத்தார். மச்சிம நிகயம் 26 மற்றும் மத்தியம ஆகமம் 204 ஆகியவை புத்தர் சாரநாத்தின் மான் பூங்காவை அடைந்ததுடன் தொடர்கின்றன. இவ்விடம் மிரிகவதம் மற்றும் ரிஷிபட்டணம் என்றும் அழைக்கப்பட்டது. ரிஷிபட்டணம் என்பதன் பொருள் "துறவிகளின் சாம்பல் விழும் தளம்" என்பதாகும். இது வாரணாசிக்கு அருகில் அமைந்திருந்தது. இங்கு புத்தர் ஐந்து துறவிகளின் குழுவை சந்தித்தார். அத்துறவிகளை தான் உண்மையில் முழுமையான விழிப்படைதலை அடைந்ததை நம்புமாறு செய்தார். மத்தியம ஆகமம் 204லும் (மச்சிம நிகயம் 26இல் இது குறிப்பிடப்படவில்லை), மேலும் தேரவாத வினயம் எனும் ஓர் எகோத்தரிக-ஆகம நூல், தருமகுப்தக வினயம், மகிசசக வினயம், மற்றும் மகாவஸ்து ஆகியவற்றின் படி, புத்தர் இவர்களுக்கு "முதல் சமயச் சொற்பொழிவை" போதித்தார். இது "பனாரசு சமயச் சொற்பொழிவு" என்றும் அறியப்படுகிறது. இதன் பொருள், "இன்பம் கொள்வது மற்றும் ஊனுருக வைப்பதின் மட்டு மீறிய நிலைகளில் இருந்து விலகி உன்னதமான எண்வகை மார்க்கங்கள் எனும் ஒரு நடு வழியை போதிப்பதாகும். முதல் சமயச் சொற்பொழிவுக்கு பிறகு துறவி கௌந்தேயன் முதல் அருகதராகவும் (விடுதலை பெற்ற மனிதன்), முதல் பௌத்த பிக்குவும் ஆனார் என பாளி நூல் குறிப்பிடுகிறது. பிற துறவிகளுக்கு போதிப்பதை பிறகு புத்தர் தொடர்ந்தார். பௌத்த துறவிகளின் குழுவான முதல் சங்கத்தை இவர்கள் நிறுவினர். மகாவஸ்து, தேரவாத வினயத்தின் மகாகந்தகம் மற்றும் கதுஸ்பரிசத்-சூத்திரம் போன்ற பல்வேறு நூல்கள் இவர்களுக்கு புத்தர் "தான்-அற்ற" (அனாத்மலக்சண சூத்திரம்) என்ற தன் இரண்டாவது கருத்தாடலையும் இந்நேரத்திலோ அல்லது ஐந்து நாட்கள் கழித்தோ போதித்தார் என்று குறிப்பிடுகின்றன. இந்த இரண்டாவது சமயச் சொற்பொழிவை கேட்டதற்கு பிறகு மீதமிருந்த நான்கு துறவிகளும் அருகதர் நிலையை அடைந்தனர். தேரவாத வினயம் மற்றும் கதுஸ்பரிசத்-சூத்திரம் ஆகியவையும் யசா என்ற ஓர் உள்ளூர் கழக எசமானர் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் மதம் மாறியதை குறிப்பிடுகின்றன. மதம் மாறி பௌத்த சமூகத்துக்குள் நுழைந்த முதல் உபாசகர்களில் இவர்களும் முதன்மையானோர் ஆவர். கசப்பா என்ற பெயருடைய மூன்று சகோதரர்கள் இதைத் தொடர்ந்து மதம் மாறினர். முன்னர் "சடை முடி துறவிகளாக" இருந்த ஐநூறு பேரை இவர்கள் தங்களுடன் அழைத்து வந்தனர். இந்த ஐநூறு பேரின் முந்தைய ஆன்மீக வழக்கமானது நெருப்பு பலியிடலாக இருந்தது. தேரவாத வினயத்தின் படி, கயைக்கு அருகில் இருந்த கயாசிசா குன்றில் பிறகு புத்தர் தங்கினார். ஆதித்தபரியாய சுத்தா (நெருப்பு கருத்தாடல்) என்ற தன் மூன்றாவது கருத்தாடலை புத்தர் ஆற்றினார். இந்த உலகில் உள்ள அனைத்தும் உணர்ச்சி ஆர்வத்தால் தூண்டப்பட்டுள்ளன என்றும், எண் வகை மார்க்கங்களை பின்பற்றுவோர் மட்டுமே விடுதலை பெறுவர் என்றும் இதில் போதித்தார். மழைக் காலத்தின் முடிவின் போது புத்தரின் சமூகமானது சுமார் 60 விழிப்படைந்த துறவிகள் அளவுக்கு வளர்ந்த போது அவர்களை தனியாக அலைந்து திரியுமாறு புத்தர் அறிவுறுத்தினார். பௌத்த சமூகத்துக்குள் மக்களை போதித்து சேர்க்குமாறு கூறினார். இதை உலகின் "நன்மைக்காகவும், அனுகூலத்திற்காகவும்" செய்யுமாறு கூறினார். பயணங்களும், சங்கத்தின் வளர்ச்சியும் thumb|right|வேத காலத்துக்கு பிந்தைய கோசலை மற்றும் மகத நாடுகள் thumb|புத்தரின் முதன்மை சீடர்களான மௌத்கல்யாயனர் (உளவியல் ஆற்றலில் முதன்மையானவர்) மற்றும் சாரிபுத்திரர் (மெய்யறிவில் முதன்மையானவர்) தன் வாழ்வின் எஞ்சிய 40 அல்லது 45 ஆண்டுகளுக்கு தற்போதைய உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் தெற்கு நேபாளத்தை உள்ளடக்கியிருந்த சிந்து-கங்கை சமவெளியில் புத்தர் பயணம் மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. பல்வேறு வகைப்பட்ட மக்களுக்கு இப்பயணத்தில் புத்தர் போதித்தார். உயர்குடியினர் முதல் பணியாளர்கள் வரை, துறவிகள் முதல் இல்லற வாழ்வைப் பின்பற்றியவர் வரை, அங்குலிமாலா போன்ற கொலைகாரர்கள் முதல் ஆலவகன் போன்ற நரமாமிசம் உண்பவர்கள் வரை புத்தர் போதித்தார். சூமன் என்கிற வரலாற்றாளரின் கூற்றுப் படி, "யமுனை ஆற்றங்கரையில் அமைந்திருந்த கோசாம்பி (பிரயாக்ராஜுக்கு தென் மேற்கே 25 கி. மீ.) முதல் கம்பா (பாகல்பூருக்கு கிழக்கே 40 கி. மீ.) வரையிலும்" மற்றும் "கபிலவஸ்து (கோரக்பூருக்கு வட மேற்கே 95 கி. மீ.) முதல் உருவேலா (கயைக்கு தெற்கே) வரையிலும் புத்தரின் பயணமானது நடைபெற்றிருந்தது. இது 600 மற்றும் 300 கிலோமீட்டர் பரப்பளவுடைய ஒரு பகுதியாகும். கோசல மற்றும் மகத நாட்டு மன்னர்களின் புரவ்லத் தன்மையை இவரது சங்கமானது பெற்றிருந்தது. இவ்வாறாக இந்நாடுகளின் தலைநகரங்களான முறையே சவத்தி மற்றும் இராஜககம் ஆகியவற்றில் ஏராளமான நேரத்தை புத்தர் செலவழித்தார். புத்தர் என்ன மொழி பேசினார் என்பது தொடர்ந்து அறியப்படாமலேயே உள்ள போதிலும், நடு இந்தோ-ஆரிய மொழி வழக்குகளுடன் நெருங்கிய தொடர்புடைய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வகை மொழிகளில் இவர் போதித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதில் தரப்படுத்தப்பட்டதாக பாளி இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சங்கமானது ஆண்டு முழுவதும் அலைந்து திரிந்தது. இதில் விதி விலக்கு வச்சா மழைக் காலத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே ஆகும். இந்நேரத்தில் அனைத்து சமயத்தைச் சார்ந்த துறவிகளும் அரிதாகவே பயணம் மேற்கொண்டனர். இதற்கு ஒரு பங்கு காரணமானது தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு துன்பம் விளைவிக்காமல் பயணம் மேற்கொள்வது என்பது மழைக்காலத்தில் மிகவும் கடினமானதாக இருந்தது ஆகும். துறவிகளின் உடல் நலம் குறித்த ஐயப்பாடும் இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.Bhikkhu Khantipalo (1995). "Lay Buddhist Practice, The Shrine Room, Uposatha Day, Rains Residence " ஆண்டின் இந்த நேரத்தின் போது சங்கமானது மடாலயங்கள், பொதுப் பூங்காக்கள் அல்லது காடுகளில் நடத்தப்பட்டது. இவ்விடங்களுக்குத் துறவிகளைத் தேடி மக்கள் வந்தனர். சங்கம் தொடங்கப்பட்ட போது முதல் மழைக் காலமானது வாரணாசியில் கழிக்கப்பட்டது. பாளி நூல்களின் படி சங்கம் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு சீக்கிரமே புத்தர் மகத நாட்டின் தலைநகரமான இராஜககத்திற்கு பயணம் மேற்கொண்டார். மன்னர் பிம்பிசாரரை சந்தித்தார். பிம்பிசாரர் சங்கத்திற்கு ஒரு மூங்கில் வன பூங்காவை பரிசளித்தார். புத்தரின் சங்கமானது வட இந்தியாவில் இவருடைய ஆரம்ப கால பயணங்களின் போது தொடர்ந்து வளர்ந்தது. எளிதில் நம்பிக்கை கொள்ளாத சிரமனரான சஞ்சய பெலத்திப்புத்தரின் மாணவர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோரை அசாஜி எவ்வாறு மதம் மாற்றி புத்தரின் முதன்மையான சீடர்களாயினர் என்ற கதையை ஆரம்ப கால நூல்கள் குறிப்பிடுகின்றன. புத்தர் கபிலவஸ்துவில் உள்ள தனது பழைய வீட்டிற்கு வருகை புரிந்த போது புத்தரின் மகனான இராகுலன் எவ்வாறு தன்னுடைய தந்தையுடன் ஒரு பிக்குவாக இணைந்தார் என்ற கதையையும் இவை கூறுகின்றன. புத்தரின் உறவினரான ஆனந்தர், அனுருத்தர், முடி திருத்துபவரான உபாலி, புத்தரின் ஒன்று விட்ட சகோதரரான நந்தர் மற்றும் தேவதத்தன் போன்ற பிற சாக்கியர்களும் எவ்வாறு புத்தரின் சங்கத்தில் பிக்குகளாக காலப்போக்கில் இணைந்தனர் என்பதையும் குறிப்பிடுகின்றன. அதே நேரத்தில், புத்தரின் தந்தையான சுத்தோதனர் தன்னுடைய மகனின் போதனைகளை பற்றிய தகவல் அறிந்ததால் பௌத்த மதத்திற்கு மதம் மாறினார். தம்மத்தை அறிந்த, முதல் மூன்று பிணைகளிலிருந்து விடுபட்ட சொதபன்னர் ஆனார். ஆரம்ப கால நூல்கள் ஒரு முக்கியமான உபாசக சீடரான வணிகர் அனாதபிண்டிகனை பற்றியும் குறிப்பிடுகின்றன. புத்தருக்கு ஒரு வலிமையான உபாசக ஆதரவளிப்பவராக இவர் உருவானார். ஒரு பெரும் பணம் செலவழித்து (தேரவாத வினயமானது ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களை பற்றி கூறுகிறது) சங்கத்திற்கு ஜேதவனத்தை பரிசாகக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது. பிக்குணி அமைப்பை உருவாக்குதல் thumb|புத்தரின் சிற்றன்னையும், முதல் பிக்குணியுமான மகாபிரஜாபதி சேர்த்துக் கொள்ளப்படுதல் புத்தரின் சமூகத்தின் வளர்ச்சியின் மற்றொரு முக்கிய பங்காக ஆண் பிக்குகளை ஒத்த பெண் துறவிகளுக்குமான (பிக்குணி) ஓர் இணையான அமைப்பு உருவாக்கப்பட்டதை கூறலாம். இந்த தலைப்பு குறித்த அனலயோவின் ஒப்பீட்டு ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள படி, வேறுபட்ட ஆரம்ப கால புத்த நூல்களில் இந்நிகழ்வை பற்றிய குறிப்பானது பல்வேறு பதிப்புகளாக உள்ளது. அனலயோவால் ஆய்வு செய்யப்பட்ட அனைத்து முதன்மையான பதிப்புகளின் படியும், புத்தரின் சிற்றன்னையான மகாபிரஜாபதி கௌதமி தனக்கும், சில பிற பெண்களுக்கும் புத்த சங்கத்தில் இணைத்துக் கொள்ள வேண்டுதலை வைத்த போது ஆரம்பத்தில் புத்தரால் அது நிராகரிக்கப்பட்டது. மகாபிரஜாபதியும், அவரது ஆதரவாளர்களும் பிறகு தமது முடியை மழித்து விட்டு, அங்கிகளை அணிந்து கொண்டு புத்தரை அவரது பயணங்களின் போது பின் தொடர ஆரம்பித்தனர். ஆண் மற்றும் பெண் துறவிகளின் புதிய அமைப்புக்கு இடையிலான உறவு முறையை கவனக் குவியலாகக் கொண்ட கருதம்மத்தின் (சமக்கிருதம்: குருதர்மம்) எட்டு நிபந்தனைகளை மகாபிரஜாபதி ஒப்புக்கொண்டால் அவரை பிக்குணி அமைப்பில் இணைத்துக் கொள்ளலாம் என ஆனந்தர் இறுதியாக புத்தரை இணங்கச் செய்தார். அனலயோவின் ஆய்வுப் படி, அனைத்து பதிப்புகளிலும் பொதுவாக காணப்படும், ஆனந்தரால் புத்தரை இணங்கச் செய்ய பயன்படுத்தப்பட்ட வாதமானது விழிப்படைதலின் அனைத்து நிலைகளையும் அடைய ஆண்களைப் போன்ற அதே ஆற்றலை பெண்களும் கொண்டுள்ளனர் என்பதாகும். பல்வேறு முரண்பாடுகள் காரணமாக எட்டு கருதம்மங்களை அவற்றின் தற்போதைய வடிவில் ஏற்றுக் கொள்வதை சில நவீன அறிஞர்கள் கேள்விக்கு உள்ளாகின்றனர் என்பதையும் அனலயோ குறிப்பிட்டுள்ளார். தற்போதைய எட்டு கருதம்மங்களின் பட்டியலின் வரலாற்று தன்மையானது சந்தேகத்திற்குரியதாக உள்ளது என்பதை அவர் குறிப்பிடுகிறார். ஆனால், இவை ஒருவேளை புத்தரால் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இருக்கலாம் என்றும் கருதுகிறார். ஓர் அலைந்து திரியும் சிரமண வாழ்வானது, தம் ஆண் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பின் கீழ் இல்லாத பெண்களுக்கு, பாலியல் தாக்குதல் மற்றும் கடத்தப்படுதல் போன்ற ஆபத்துகளை விளைவிக்கலாம் என்ற காரணமே பெண்களை சங்கத்தில் இணைத்துக் கொள்ள புத்தருக்கு தயக்கத்தை ஏற்படுத்தியதாக பல்வேறு பத்திகள் புலப்படுத்துகின்றன என அனலயோ குறிப்பிடுகிறார். இதன் காரணமாக, "ஓர் உபாசக பெண் தன் ஆண் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்க்கும் சாத்தியப்படக் கூடிய பாதுகாப்பை முடிந்த வரை ஒத்த, உறவு முறையை ஆண் பிக்குகளுடன் புதிதாக உருவாக்கப்பட்ட பிக்குணி அமைப்பில் உள்ளவர்களும் பெற வேண்டும்" என்பதை உறுதிப்படுத்தும் ஒரு வழியாக கருதம்ம வழி முறைகள் இருந்திருக்கலாம் என கருதபப்டுகிறது. பிந்தைய ஆண்டுகள் thumb|புத்தரை வழிபடும் அஜாதசத்ரு. கொல்கத்தாவின் இந்திய அருங்காட்சியகத்தில் உள்ள பர்குட் தூபியில் உள்ள புடைப்புச் சிற்பம் யோவான் இசுடிராங் என்ற அமெரிக்க வரலாற்றாளரின் கூற்றுப் படி, தான் போதித்த ஆண்டுகளில் முதல் 20 ஆண்டுகளுக்கு பிறகு புத்தர் கோசல இராச்சியத்தின் தலைநகரான சிரவஸ்தியில் மெதுவாக வாழ ஆரம்பித்தார் என்று தோன்றுகிறது. தன்னுடைய பிந்தைய ஆண்டுகளில் பெரும்பாலானவற்றை இந்த நகரத்தில் கழித்தார். சங்கம் அதன் அளவில் வளர்ந்த போது, சங்கத்திற்கான ஒரு தரப்படுத்தப்பட்ட விதிமுறைகளின் அமைப்பிற்கான தேவையானது ஏற்பட்டது. சங்கத்திற்கான ஒரு குறிப்பிட்ட அளவிலான வழிமுறைகளை புத்தர் உருவாக்கினார் என்றும் தோன்றுகிறது. "பிரதிமோச்சம்" என்று அழைக்கப்படும் பல்வேறு நூல்களில் இவை பாதுகாக்கப்பட்டுள்ளன. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை புத்த சமூகத்தால் இந்நூல்கள் போதிக்கப்பட்டன. பொதுவான அற நெறி விதிமுறைகள், மேலும் கிண்ணங்கள் மற்றும் அங்கிகள் போன்ற துறவற வாழ்வுக்கு இன்றியமையாத பொருட்கள் குறித்துமான விதிகளை பிரதிமோச்சம் உள்ளடக்கியிருந்தது. இவரது பிந்தைய ஆண்டுகளில் புத்தரின் புகழானது அதிகரித்தது. சாக்கியர்களின் புதிய அரசவை மண்டபத்தின் திறப்பு விழா (மச்சிம நிகயம் 53) மற்றும் இளவரசர் போதியின் ஒரு புதிய அரண்மனை திறப்பு (மச்சிம நிகயம் 85) போன்ற முக்கியமான அரச குல நிகழ்வுகளுக்கு இவர் அழைக்கப்பட்டார். புத்தரின் முதுமை காலத்தின் போது எவ்வாறு மகத இராச்சியத்தின் அரியணையானது அஜாதசத்ரு எனும் ஒரு புதிய மன்னனால் நேர்மையற்ற முறையில் கைப்பற்றப்பட்டது என்பதையும் ஆரம்ப கால நூல்கள் பேசுகின்றன. அஜாதசத்ரு தனது தந்தை பிம்பிசாரரை பதவியில் இருந்து தூக்கி எறிந்து ஆட்சிக்கு வந்தார். சமன்னபால சுத்தா நூலின் படி, புதிய மன்னர் வேறுபட்ட துறவி ஆசிரியரிடம் பேசினார். இறுதியாக புத்தரிடம் தஞ்சமடைந்தார். எனினும், சைன நூல்களும் அஜாசத்ரு தங்களது நம்பிக்கைக்கு ஆதரவளித்தார் என்று குறிப்பிடுகின்றன. அஜாதசத்ரு புத்தரின் சங்கத்திற்கு மட்டுமே ஆதரவளிக்காமல், வேறுபட்ட சமய குழுக்களுக்கும் ஆதரவளித்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புத்தர் பயணித்து, போதிப்பதை தொடர்ந்த போது பிற சிரமண பிரிவுகளின் உறுப்பினர்களுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இதில் சில நபர்களை புத்தர் சந்தித்தார் என்றும், அவர்களது கொள்கைகளின் நிறை குறைகளை சுட்டிக் காட்டினார் என்றும் ஆரம்ப கால நூல்களில் சான்றுகள் காணப்படுகின்றன. சமன்னபால சுத்தா நூலானது இத்தகைய ஆறு சமயப் பிரிவுகளை அடையாளப்படுத்துகிறது. ஆரம்ப கால நூல்கள் முதுமை காலத்தில் புத்தர் எவ்வாறு முதுகு வலியுடன் இருந்தார் என்பதையும் குறிப்பிடுகின்றன. தனது உடல் தற்போது மேற்கொண்ட ஓய்வை வேண்டியதால் தன்னுடைய முதன்மையான சீடர்களிடம் போதிக்கும் பணியை அளித்தார் என்று பல்வேறு நூல்கள் குறிப்பிடுகின்றன. எனினும், புத்தர் தானும் தொடர்ந்து தன்னுடைய முதுமைக் காலம் வரை போதித்தார். புத்தரின் முதுமைக் காலத்தின் போது மிகுந்த இடர்பாடு ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்றாக தேவதத்தன் பிரிந்து சென்றது திகழ்ந்தது. புத்தரின் மைத்துனனான தேவதத்தன் புத்த அமைப்பின் தலைமைத்துவத்தை கைப்பற்ற எவ்வாறு முயற்சித்தான் என்று ஆரம்ப கால நூல்கள் பேசுகின்றன. பிறகு பல்வேறு புத்த துறவிகளுடன் சங்கத்திலிருந்து பிரிந்து ஓர் எதிர்ப் பிரிவை உருவாக்கினான். இந்த பிரிவானது மன்னன் அஜாதசத்ருவால் ஆதரவளிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. பாளி நூல்கள் புத்தரை கொல்லவும் தேவதத்தன் திட்டமிட்டான் என்பதை குறிப்பிடுகின்றன. ஆனால், இந்த திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தன. தன்னுடைய இரண்டு முதன்மையான சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோரை பிரிந்து சென்ற சமூகத்துடன் பேசுவதற்காக புத்தர் அனுப்பியதையும் குறிப்பிடுகின்றன. தேவதத்தனுடன் சென்ற துறவிகளை இணங்க வைத்து திரும்ப அழைத்து வருவதற்காக இரு சீடர்களும் சென்றனர். அனைத்து முதன்மையான ஆரம்ப கால பௌத்த வினய நூல்களும் புத்த சமூகத்தை பிரிக்க முயற்சித்த ஒரு பிரிவினைவாத நபராக தேவதத்தனை குறிப்பிடுகின்றன. ஆனால், புத்தருடன் அவன் எந்தெந்த விஷயங்களில் முரண்பட்டான் என்பது குறித்து இந்து நூல்களுக்கிடையே வேறுபாடு உள்ளது. இசுதவிர நிகய நூல்கள் "ஐந்து கருத்துகள்" எனப்படும் மட்டு மீறிய துறவற பழக்கங்களின் மீது பொதுவாக பிரச்சினைக்குக் காரணம் என கவனம் கொள்கின்றன. மகாசங்கிக வினயமானது அதே நேரத்தில் ஒரு மிகுந்த விரிவான அனைத்தையும் உள்ளடக்கிய முரண்பாட்டை பற்றி பேசுகிறது. புத்தரின் போதனைகள் மற்றும் மேலும் துறவற ஒழுங்குகளையும் தேவதத்தன் மாற்றியதாக குறிப்பிடுகின்றன.Bhikkhu Sujato (2012), "Why Devadatta Was No Saint, A critique of Reginald Ray's thesis of the 'condemned saint'" தேவதத்தன் பிரிந்த இதே நேரத்தின் போது அஜாதசத்ருவால் தலைமை தாங்கப்பட்ட மகத இராச்சியத்திற்கும், அவரை விட வயது முதியவரான மன்னர் பசேனதியால் தலைமை தாங்கப்பட்ட கோசல இராச்சியத்திற்கும் இடையில் ஒரு போர் ஏற்பட்டது. அஜாதசத்ரு இதில் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது. இந்த நிகழ்வுகள் புத்தருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. கடைசி நாட்களும், பரிநிர்வாணமும் thumb|upright=1.35|தன்னுடைய முதன்மையான உதவியாளர் ஆனந்தருடன் தன் கடைசி நாட்களில் புத்தர். கிழக்கு சாவகத்தைச் சேர்ந்த புடைப்புச் சிற்பம். |alt=Metal relief புத்தரின் கடைசி நாட்கள், இறப்பு மற்றும் இவரது இறப்பை தொடர்ந்த நிகழ்வுகளின் முதன்மையான விளக்கமானது மகாபரினிப்பன சுத்தா (திக நிகயம் 16) மற்றும் அதன் பல்வேறு சமக்கிருத, சீன மற்றும் திபெத்திய மொழி இணை நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனலயோவின் கூற்றுப் படி, இதில் சீன நூலான திர்க ஆகமம் 2, "மகாபரிநிர்வாண சூத்திரத்தின் சமக்கிருத துணுக்குகள்" மற்றும் "சீன மொழியில் தனி மொழிபெயர்ப்பாக பாதுகாக்கப்பட்டுள்ள மூன்று கருத்தாடல்களும்" இதில் அடங்கும். மகாபரினிப்பன சுத்தா நூலானது போர் காலத்தின் போது புத்தரின் கடைசி ஆண்டை குறிப்பிடுகிறது. வஜ்ஜி நாடு மீது போர் தொடுக்க அஜாதசத்ரு முடிவு எடுத்ததுடன் இது தொடங்குகிறது. புத்தரிடம் ஆலோசனை கேட்பதற்காக ஒரு மந்திரியை அஜாதசத்ரு அனுப்புவதற்கு இது இட்டு சென்றது. ஏழு நியதிகளை தொடர்ந்து செய்யும் வரையில் வஜ்ஜி நாட்டவர் செழிப்படைந்து வருவார்கள் என்ற பதிலை புத்தர் கூறுகிறார். பிறகு, இந்த ஏழு நியதிகளை புத்த சங்கத்தில் பின்பற்றுமாறு கூறுகிறார். புத்த சங்கத்தின் எதிர் கால நலன் குறித்து புத்தர் அக்கறை கொண்டார் என்பதை இது காட்டுகிறது. "வாடிக்கையாக அடிக்கடி நடைபெறும் கூட்டங்கள், ஒத்திசைவுடன் நடைபெறும் சந்திப்பு, பயிற்சியின் நியதிகளை மாற்றாமல் இருப்பது, தங்களுக்கு முன்னர் சங்கத்தில் இணைந்த அனுபவசாலிகளுக்கு மரியாதை செலுத்துதல், உலக ஆசைகளுக்கு இரையாகாமல் இருத்தல், காட்டில் துறவியாக வாழும் முறைக்கு உண்மையாக இருத்தல் மற்றும் தங்களது சொந்த விழிப்புணர்வை தக்க வைத்துக் கொள்ளுதல்" ஆகிய நியதிகளை கடைபிடிக்கும் வரையில் சங்கமானது தொடர்ந்து செழிப்படையும் என்று புத்தர் கூறினார். சங்கத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கியமான அறநெறி நடத்தைகளின் பட்டியலையும் புத்தர் மேலும் அளித்தார். புத்தரின் இறப்பிற்கு சற்று முன்னர் புத்தரின் இரண்டு முதன்மையான சீடர்களான சாரிபுத்திரர் மற்றும் மௌத்கல்யாயனர் ஆகியோர் இறந்தனர் என்பதை ஆரம்ப கால நூல்கள் குறிப்பிடுகின்றன. மகாபரினிப்பன சுத்தா நூலானது தன்னுடைய வாழ்வின் கடைசி மாதங்களின் போது புத்தர் எவ்வாறு உடல் நலம் குன்றியதை உணர்ந்தார் என்று குறிப்பிடுகிறது. ஆனால், தொடக்கத்தில் இவர் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டார். தனக்குப் பிந்தைய தலைவராக யாரையும் கூற இயலாது என புத்தர் கூறியதாகவும் இது குறிப்பிடுகிறது. ஆனந்தர் இதற்காக வேண்டிய போது புத்தர் கூறிய பதிலாக மகாபரினிப்பன சுத்தா நூலானது பின்வருவனவற்றை பதிவிட்டுள்ளது: thumb|புத்தரின் மகா பரிநிர்வாணம். இடம் காந்தாரம், ஆண்டு பொ. ஊ. 3ஆம் அல்லது 4ஆம் நூற்றாண்டு, சாம்பல் கனிம படுகை பாறை சிற்பம் thumb|அஜந்தா குகைகளைச் சேர்ந்த மகாபரிநிர்வாண நிகழ்வு பயணம் செய்து சில மேற்கொண்டவர்களுக்கு போதித்ததற்கு பிறகு புத்தர் தனது கடைசி உணவை உண்டார். சுந்தா கம்மரபுத்தா என்று பெயருடைய ஓர் இரும்பு கொல்லரிடமிருந்து யாசகமாக இந்த உணவை இவர் பெற்றார். இதன் பிறகு இவருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தன்னுடைய இறப்பிற்கு சுந்தாவின் இடத்தில் தான் உண்ட உணவு காரணமல்ல என்று அவருக்கு கூறுமாறு ஆனந்தரிடம் புத்தர் கூறினார். புத்தருக்கு கடைசி உணவாக இது அமைந்ததன் காரணமாக இந்த உணவானது உயர் நிலையை அடைந்தது என்றும் கூறுமாறு கூறினார். பிக்கு மெத்தனந்தோ மற்றும் செருமானிய இந்தியவியலாளர் ஆசுகர் வான் இனுபெர் ஆகியோர் உணவு விடமாக மாறியதால் அல்லாமல் வயது முதிர்வின் ஓர் அறிகுறியான மிகையான குடலுரிசார் குருதிக் குழாய் திசு இறப்பால் புத்தர் இறந்தார் என்று வாதிடுகின்றனர். புத்தரின் கடைசி உணவின் துல்லியமான உணவு பொருட்கள் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. இதற்கு காரணம் வேறுபட்ட புனித நூல் மரபுகள் மற்றும் சில முக்கிய வார்த்தைகளின் மொழிபெயர்ப்பில் உள்ள தெளிவற்ற தன்மை ஆகியவை காரணமாகும். தேரவாத பௌத்த மரபானது புத்தருக்கு ஒரு வகை பன்றி இறைச்சி கொடுக்கப்பட்டது என்று பொதுவாக நம்புகிறது. அதே நேரத்தில், மகாயான பௌத்த மரபானது புத்தர் ஒரு வகை பூங்கிழங்கு அல்லது பிற காளான்களை உண்டார் என்று நம்புகிறது. பௌத்த சைவம் மற்றும், பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கான நியதிகள் ஆகியவற்றின் மீதான வேறுபட்ட மரபு வழி பார்வைகளை இவை பிரதிபலிக்கின்றன. நவீன அறிஞர்கள் கூட இந்த நிகழ்வில் முரண்படுகின்றனர். இது பன்றி இறைச்சியாகவோ அல்லது பன்றிகள் விரும்பி உண்ணும் ஒரு வகை தாவரமாகவோ அல்லது காளானாகவோ இது இருந்திருக்கலாம் என்று வாதிடுகின்றனர். எது எவ்வாறு இருந்தாலும், கடைசி உணவை குறிப்பிடும் எந்த ஓர் ஆதாரங்களும் புத்தரின் உடல் நலக்குறைவிற்கு இந்த கடைசி உணவு தான் காரணம் என குறிப்பிடவில்லை. மகாபரினிப்பன சுத்தா நூலின் படி, சுந்தாவுடனான உணவிற்கு பிறகு புத்தர் மிகவும் பலவீனமானதால் புத்தரும், அவரது சீடர்களும் பயணத்தை நிறுத்தினர். இதனால் குசி நகரத்தில் அவர்கள் தங்க வேண்டியிருந்தது. அங்கு குங்கிலிய மரங்களின் ஒரு தோப்பில் புத்தர் தங்குவதற்கு ஆனந்தர் ஓர் இடத்தை உருவாக்கினார். சங்கத்தில் உள்ள அனைவருக்கும் தான் கடைசி நிர்வாணத்திற்குச் செல்வேன் என்று அறிவித்ததற்குப் பிறகு, சங்கத்திற்கு ஒரு கடைசி பிக்குவை தானாகவே புத்தர் இணைத்தார். இந்த பிக்குவின் பெயர் சுபத்தா ஆகும். பிறகு சங்கத்திற்கான தனது கடைசி அறிவுரையாக, தன்னுடைய இறப்பிற்கு பிறகு தம்மமும், வினயமும் அவர்களுக்கு ஆசிரியராக இருக்கும் என்று புத்தர் மீண்டும் கூறினார். தன்னுடைய போதனை குறித்து யாருக்கேனும் சந்தேகங்கள் இருக்கின்றனவா என்று கேட்டார். ஆனால், ஒருவரும் சந்தேகம் உள்ளதாக கூறவில்லை. புத்தரின் கடைசி வார்த்தைகளாக "அனைத்து சங்கரங்களும் (ஒன்றாக இணைக்கப்பட்ட அமைப்புகள்) படிப்படியாக அழிவுறுகின்றன. தளரா ஊக்கத்துடன் (அப்பமதம்) உங்களுடைய இலக்குகளுக்காக கடும் முயற்சி செய்யுங்கள்" (பாளி: 'வயதம்ம சங்கர அப்பமதேன சம்பதேதா') என்றார் என்று குறிப்பிடப்படுகிறது. பிறகு புத்தர் தனது கடைசி தியானத்தில் மூழ்கினார். பிறகு இறந்தார். பரிநிர்வாணம் என்று அறியப்படும் நிலையை அடைந்தார். பரிநிர்வாணம் (உடலின் இறப்பிற்கு பிறகு பிறவி சுழற்சி மற்றும் துன்பத்தின் முடிவை அடைவதை இது குறிக்கிறது) என்பதன் பொருள் கடைசி நிர்வாணம் என்பதாகும். நான்கு தியான நிலைகளுக்குள் அடுத்தடுத்து நுழைந்ததற்கு பிறகு, நான்கு பொருட்படுத்த வேண்டியதல்லாத அடைதல்களையும், இறுதியாக நிரோத-சம்பத்தி என்று அறியப்படும் தியான நிலைக்குச் சென்று, தன்னுடைய இறப்பின் தருணத்தின் போது நான்காவது தியானத்திற்கு மீண்டும் வந்தார் என்று மகாபரினிப்பன சுத்தாவானது குறிப்பிடுகிறது. thumb|புத்தர் எரியூட்டப்பட்ட தூபி, இடம் குசிநகர் (குசிநரா) thumb|புத்தருடன் தொடர்புடைய பொருட்களுடன் காணப்படும் பிப்ரவா மலர் குவளை. இதிலுள்ள பொறிப்பானது பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது: ...சலிலனிதனே புத்தச பகவதே... (பிராமி எழுத்துமுறை: ...𑀲𑀮𑀺𑀮𑀦𑀺𑀥𑀸𑀦𑁂 𑀩𑀼𑀥𑀲 𑀪𑀕𑀯𑀢𑁂...) "பிரபு புத்தருடன் தொடர்புடைய பொருட்கள்". மறைவிற்கு பிந்தைய நிகழ்வுகள் மகாபரினிப்பன சுத்தாவின் படி புத்தரின் இறப்பை தொடர்ந்து வந்த நாட்களை குசி நகரின் மல்லர்கள் இவரது உடலுக்கு பூக்கள், இசை மீட்டுதல் மற்றும் வாசனை திரவியங்களால் மரியாதை செலுத்தினர். உடலை எரியூட்டுவதற்கு முன்னர் மதிப்பிற்குரிய மூத்தவரான மகாகாசியபர் வருகை புரிந்து தனது மரியாதையை செலுத்தும் வரை சங்கமானது காத்திருந்தது. பிறகு புத்தரின் உடலானது எரியூட்டப்பட்டது. இவரது எலும்புகள் உள்ளிட்டவை இவரின் வாழ்வுடன் தொடர்புடைய பொருட்களாக பாதுகாக்கப்பட்டன. மகதம், சாக்கியம் மற்றும் கோலியம் போன்ற பல்வேறு வட இந்திய இராச்சியங்களுக்கு மத்தியில் இவை பகிர்ந்தளிக்கப்பட்டன. தாது கோபுரங்கள் என்று அழைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் அல்லது மேடுகளில் இந்த பொருட்கள் வைக்கப்பட்டன. அந்நேரத்தில் இருந்த ஒரு பொதுவான இறுதிச் சடங்கு பழக்க வழக்கமாக இது இருந்தது. நூற்றாண்டுகள் கழித்து இவை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, மௌரியப் பேரரசு முழுவதும் பல புதிய தூபிக்களில் அசோகரால் இவை புனிதப்படுத்தப்பட்டன. புத்த மதம் பரவிய நேரத்தில் புத்தருடன் தொடர்புடைய பொருட்கள் என்று கூறப்பட்டப் பொருட்களின் வரலாற்றை சுற்றிலும் பல்வேறு இயற்கைக்கு மீறிய புராணக் கதைகள் சுற்றியிருந்தன. இதை வைத்திருந்த ஆட்சியாளர்களின் ஆட்சியின் முறைமையை அதிகமாக்கின. பல்வேறு புத்த நூல்களின் படி புத்தரின் இறப்பிற்கு பிறகு இவரது போதனைகளை சேகரித்து, ஒப்புவித்து, மனனம் செய்வதற்காக புத்த மாநாடுகள் சீக்கிரமே நடத்தப்பட்டன. சபையின் தலைவராக சங்கத்தால் மகாகாசியபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், முதல் சபையின் வரலாற்றுத் தன்மை குறித்து மரபு வழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நவீன அறிஞர்கள் விவாதத்துக்கு உள்ளாக்குகின்றனர்.Harvey, Peter (2013), An Introduction to Buddhism: Teachings, History and Practices (PDF) (2nd ed.), New York: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம், p. 88, குடும்பம் கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனர் - மாயா தேவிக்கும் பிறந்த கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் ஆகும். புத்தர் பிறந்த ஏழு நாளில் மாயாதேவி இறந்ததால், சிற்றன்னை மகாபிரஜாபதி கௌதமி புத்தரை வளர்த்தார்.கௌதம புத்தரின் வாழ்க்கை சித்தார்த்தர் யசோதரையை மணந்து ராகுலன் என்ற மகனை பெற்றெடுத்தார். புத்தரின் சிற்றன்னையான மகாபிரஜாபதி கௌதமியின் மகன் நந்தன், மகள் நந்தா ஆவார். மற்ற பிற நெருங்கிய உறவினர்கள் ஆனந்தர், தேவதத்தன் ஆவார். புத்தரின் கூற்றுக்கள் புத்தர் என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும், புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும் என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார். மேலும் புத்தர், ஆத்மாவைப் புறந்தள்ளி, அநாத்மா என்ற உடல் மற்றும் உலகத்திற்கு அதிகம் பொருள் தருகிறார். மேலும் வேதங்களையும், கடவுள் இருப்பையும் மறுக்காமல், அது குறித்து பேசாது விட்டார். புத்தரின் கொள்கைகள் thumb|காந்தார நாட்டுச் சிற்பம்கௌதம புத்தரின் மகாபரிநிர்வாணத்தை விளக்கும் காந்தார நாட்டுச் சிற்பம், காலம் 2-3-ஆம் நூற்றாண்டு கௌதம புத்தர், வாரணாசியின் அருகிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா"வில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் காசி, கோசலம், மகதம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் மக்களுக்கும், அரசப் பெருமக்களுக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை எடுத்துரைத்து வெற்றிகண்டார். கபிலவஸ்துவில் தன் மகன் ராகுலன் மற்றும் சிற்றனை மகாபிரஜாபதி கௌதமி ஆகியோரை சங்கத்தில் இணைத்துக் கொண்டார். மகத நாட்டு மன்னர்களான பிம்பிசாரன், அஜாதசத்ரு ஆகியோர்களைப் பௌத்த சமயத்தைத் தழுவும்படி பணித்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தைப் பின்பற்றிட வழிகோலினார். இந்த இடங்களிலெல்லாம் புத்தர் அவருடைய நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", பஞ்ச சீலங்களையும் மற்றும் "எண்வகை மார்க்கங்களையும்" பின்பற்றி வாழும்படி கூறினார். பௌத்த இல்லறத்தார்களான உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய அறங்களை கூறினார்ர். பிறகு தனது 80-வது வயதில்,குசி நகரத்தில் கி.மு. 483-ல் பரிநிர்வாணம் அடைந்தார். குசி நகரத்தைச் சேர்ந்தவர்கள் இவருடைய உடலுக்கு இறுதிக் கடன் ஆற்றினர். எரியூட்டப்பட்டு எஞ்சிய இவரது சாம்பலும் எலும்பும் எண்வகைப் பகுதிகளாக்கப்பட்டு எட்டு ஊர்களில் புதைக்கப்பட்டு,பின் அவற்றின் மீது சைத்தியங்கள் எழுப்பப்பட்டன. துறவிகளாகிய பிக்குகளும் பிக்குணிகளும் பின்பற்றி ஒழுக வேண்டிய நெறிமுறைகளை வகுத்துத் தந்ததோடு அவர்களுக்கென பிக்குகளின் சங்கத்தையும் உருவாக்கினார். அரசர்களும் நில பிரபுக்களும் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் தங்குவதற்கு விகாரைகள் மற்றும் குடைவரைகள் அமைத்துக்கொடுத்து நிலபுலங்களைத் தானம் தந்தனர். பௌதத சமய உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய பஞ்ச சீலங்கள் கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவியது. கி.பி.முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது. இதற்கு அசோகர், கனிஷ்கர் முதலானோர் பேருதவிப் புரிந்தனர். புத்தரின் சீடர்கள் புத்தருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சாரிபுத்திரர், மௌத்கல்யாயனர், மகாகாசியபர், சுபூதி, பூரணர், காத்தியாயனர், அனுருத்தர், உபாலி, ராகுலன், ஆனந்தர் மற்றும் மகதநாட்டின் அரசர் பிம்பிசாரரும், கோசலத்தின் அரசர் பிரசேனஜித் என்கிற பசேனதியும் இவருடைய சீடர்களாக இருந்து பௌத்த சமயம் பரவ அடிகோலினர். பெண் சீடர்களில் மகாபிரஜாபதி கௌதமி தலைமையானவர். புத்தரும் பிற மதங்களும் சமணமும் பௌத்தமும் சமகாலத்தவை.பல்வேறு மதங்கள் புத்தர் காலத்தில் இருந்துவந்தாலும் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:சைனம்(சமணம்), ஆசீவகம், வைதீகம் (பிராமணம்) ஆகியவை. மேலும்,இவரது கால கட்டத்தில் இந்திய மெய்யியல் தத்துவங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரம்மம், ஆத்மா, அநாத்மா போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை குறித்து முற்றிலும் வேறுபட்ட கருத்துகளை முதன் முதலில் எடுத்துரைத்தவர் புத்தர் ஆவார். புத்தரின் மற்ற பெயர்கள் ததாகதர் சமசுகிருத மொழியில் கௌதம புத்தரை ததாகதர் என்று அழைப்பர். ததாகதர் எனும் சமஸ்கிருதச் சொல் தத ஆகத என்ற சொற்களின் சந்தியினால் தோன்றும் சொல். "அவ்வாறு சென்றவர்" என்று பொருள் படும். இது கௌதம புத்தரை குறிக்கும் காரணப்பெயர். புத்தர் பிறவிச்சுழற்சியை கடந்து சென்றவர் என்ற காரணத்தைக்கொண்டு இப்பெயர் அவருக்கு சூட்டப்பட்டது. மற்ற மதங்களில் புத்தர் பாகவதத்தில் புத்தரை விஷ்ணுவின் 9வது அவதாரமாக போற்றுகிறது. ஸ்ரீமத் பாகவதம் ஆனால் தமிழகத்தில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் வழியே வந்த சைவ சித்தாந்தமும், ஶ்ரீ வைஷ்ணவமும் சாக்கியமுனி புத்தரை பரம விரோதியாக பாவிப்பது, பதிகங்களில் தெளிவாக பாடப்பட்டுள்ளது. பாகவத புத்தர் அந்தணர் குலத்தில் கீகட நகரத்தில் உதித்தவர் எனக்குறிப்பிடுவதால், சாக்கிய புத்தரை மற்றொருவராகக் கருதும் வழக்கமுள்ளது. சமணர் கழுவேற்றத்திற்கு முன், தன்னுடன் வாதிட்ட பௌத்தர் பெயர்களும் ஞானசம்பந்தரால் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதி சங்கரரது அத்துவித ஸ்மார்த்தர்களும், அவரது வழியில் புத்தரை ஐற்பதில்லை. பக்தி காலத்திற்கு முன்பான சங்க இலக்கியங்களில், பத்து அவதாரங்களில் புத்தர் இல்லை. பலராமர்தான் அதற்குமாறாக உள்ளார் இந்திய புத்தர் கோயில்கள் இந்தியாவில் புத்தருக்கு பல கோயில்கள் இருப்பினும், புத்தர் ஞானம் அடைந்த, பிகார் மாநிலத்தின் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயில், பன்னாட்டு பௌத்தர்களுக்கு தலைமைக் கோயிலாக திகழ்கிறது. panorama|900px|குசிநகரில் பரிநிர்வாணம் அடைந்த கௌதம புத்தர் சிற்பம் இதனையும் காண்க புத்தர் பௌத்த யாத்திரைத் தலங்கள் புத்தக் கோயில்கள் போதிசத்துவர் ததாகதர் மேற்கோள்கள் துணை நூற்கள் பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 பௌத்தமும் தமிழும்,மயிலை சீனி.வேங்கடசாமி,2007, பாவை பப்ளிகேஷன்ஸ்,இராயப்பேட்டை, சென்னை-14 குறிப்புகள் குறிப்புகள் வெளி இணைப்புகள் எட்வின் அர்னால்ட் இயற்றிய Light of Asia -- குட்டென்பர்க் திட்டத்தில் இலவச மின் நூல் e-text புத்தரின் முதல் பேருரை பகுப்பு:புத்தர்கள் பகுப்பு:சமயத் தலைவர்கள் பகுப்பு:தசவதார மூர்த்திகள் பகுப்பு:சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள் பகுப்பு:சமயங்களைத் தோற்றுவித்தோர் பகுப்பு:பீகார் வரலாறு
இலங்கையின் அரசியல் கட்சிகள்
https://ta.wikipedia.org/wiki/இலங்கையின்_அரசியல்_கட்சிகள்
இலங்கையில் பல அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பல தசாப்தங்களாக ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு முக்கிய கட்சிகளே ஆட்சியில் இருந்து வந்துள்ளன. தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையில் எந்த ஒரு கட்சியும் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற முடியாத நிலையில், சிறிய கட்சிகளுடன் இப்பெரும் கட்சிகள் கூட்டணி அமைத்து வந்துள்ளன. இலங்கைத் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் மட்டும் தமிழ்க் கட்சிகள் வெற்றி பெற்று வந்துள்ளன. கூட்டணிகள் நாடாளுமன்றக் கூட்டணிகள் கூட்டணி சின்னம்/கொடி உறுப்பினர்கள் அமைப்பு தலைவர் நாஉசனநாயகத் தேசியக் கூட்டணி Trophy சனநாயக ஐக்கிய தேசிய முன்னணிமக்கள் விடுதலை முன்னணிமக்கள் தமிழ் காங்கிரஸ் 2010 சரத் பொன்சேகா 7 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவுமில்லை(இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டி) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ் அணி)இலங்கைத் தமிழரசுக் கட்சிதமிழீழ விடுதலை இயக்கம் 2001இரா. சம்பந்தன் நாஉ 13ஐக்கிய தேசிய முன்னணி எதுவுமில்லை(ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சில்லத்தில் போட்டி) தேசிய அபிவிருத்தி முன்னணிநமது தேசிய முன்னணிஐக்கிய தேசியக் கூட்டணிஐக்கிய தேசியக் கட்சி 20012009 (மீள உருவாக்கம்)ரணில் விக்கிரமசிங்க நாஉ 42ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி() வெற்றிலை அகில இலங்கை முசுலிம் காங்கிரசுஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ்பிரஜைகள் முன்னணிஇலங்கை கம்யூனிஸ்ட் கட்சிசனநாயக இடது முன்னணிதேச விமுக்தி மக்கள் கட்சி (தேசிய விடுதலை மக்கள் கட்சி)ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்ஜாதிக எல உறுமயதேசிய சுதந்திர முன்னணிலங்கா சமசமாஜக் கட்சிலிபரல் கட்சிமகாஜன எக்சத் பெரமுனதேசிய காங்கிரஸ்தொழிலாளர் தேசிய ஒன்றியம்தேசப்பற்றுள்ள தேசிய முன்னணிமக்கள் விடுதலை ஐக்கியத்துக்கான முன்னணிருகுணு மக்கள் கட்சிசிங்கள மகாசம்மத பூமிபுத்திர கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சிசிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுஇலங்கை தேசிய முன்னணிஇலங்கை மக்கள் கட்சிஇலங்கை முன்னேற்ற முன்னணிதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்ஐக்கிய தேசியக் கட்சி (சனநாயக அணி)மலையக மக்கள் முன்னணிதொழிலாளர் விடுதலை முன்னணி 2003 அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச 163 மேலதிக-நாடாளுமன்றக் கூட்டணிகள் கூட்டணி சின்னம் உறுப்பினர்கள் நிறுவல் தலைவர் இடது முன்னணி(முன்னாள் புதிய இடது முன்னணி)(இடது விடுதலை முன்னணி) குடை இலங்கை சமசமாசக் கட்சி (மாற்றுக் குழு)தேசிய சனநாயக இயக்கம்நவ சமசமாசக் கட்சிபுதிய சனநாயகக் கட்சி 1998விக்கிரமபாகு கருணாரத்தினசனநாயக தமிழ் தேசியக் கூட்டணி(தமிழ் சனநாயக தேசியக் கூட்டணி) பித்தளை விளக்கு சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா அணி)தமிழர் விடுதலைக் கூட்டணி வீரசிங்கம் ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஈருருளி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 2010கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முக்கிய கூட்டணிகளுடனான கூட்டணிகள் கூட்டணி சின்னம் உறுப்பினர்கள் நிறுவல் தலைவர் மக்கள் கூட்டணி() கதிரை 1994 சோசலிசக் கூட்டணி களிமண் விளக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிசனநாயக இடது முன்னணிதேச விமுக்தி மக்கள் கட்சிலங்கா சமசமாஜக் கட்சிஇலங்கை மகாசன கட்சிஅனைத்து உறுப்பினர்களும் ஐமசுகூ உறுப்பினர்கள். *
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
https://ta.wikipedia.org/wiki/அகில_இலங்கைத்_தமிழ்க்_காங்கிரஸ்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகஸ்ட் 29, 1944 ல், இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மூத்த தமிழ்த் தலைவரான ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களால் தொடங்கப்பட்டது. 1945ல் பிரித்தானிய அரசினால் அமைக்கப்பட சோல்பரி ஆணைக்குழுவின் முன், இலங்கையில் சிறுபான்மையினருக்கு ஐம்பதுக்கு ஐம்பது எனப் பரவலாக அறியப்பட்ட, சமபல பிரதிநிதித்துவம் கோரி இக்கட்சி வாதாடியது. எனினும் இது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1947ல் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் இக் கட்சி சில ஆசனங்களை வென்றது. எக்கட்சியும் அரசு அமைப்பதற்குரிய பெரும்பான்மையைக் கொண்டிராத நிலையில், கூடிய ஆசனங்களைக் கொண்ட தனிக்கட்சி என்ற நிலையிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றாக அரசாங்கமொன்றை அமைக்கும் முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தமிழ்க் காங்கிரஸ் முடிவு செய்தது.November 1948 , Peace and Conflict TimelineResult of Parliamentary General Election 1947, Department of Elections Result of Parliamentary General Election 1952, Department of Elections பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள் பகுப்பு:1944இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் மேற்கோள்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி
https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழரசுக்_கட்சி
இலங்கைத் தமிழரசுக் கட்சி (Illankai Tamil Arasu Kachchi, ITAK, முன்னாள் சமஷ்டிக் கட்சி, Federal Party) இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை அரசியற் கட்சியாகும். இக்கட்சி 1949 ஆம் ஆண்டில் இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சியில் இருந்து பிரிந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் உருவாக்கப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் இக்கட்சி தமிழ்க் காங்கிரசு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரில் கூட்டணி அமைத்தது. பின்னர் இக்கூட்டணியின் பெயர் தமிழர் விடுதலைக் கூட்டணி என மாற்றப்பட்டது. 2004 ஆம் ஆண்டில் கூட்டணியில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் அப்போதைய தலைவராக இருந்த வீ. ஆனந்தசங்கரி பிரிந்து சென்றதை அடுத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது இக்கட்சி இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் பலமான ஓர் அரசியல் கட்சியாக விளங்கி வருகிறது. இக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பின் முக்கிய உறுப்புக் கட்சியாகவும் தற்போது உள்ளது. வரலாறு மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்த இலங்கை குடியுரிமைச் சட்டத்தை ஏற்றுக் கொண்டது தொடர்பான கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில், எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசிலிருந்து வெளியேறிய அணியினரால், டிசம்பர் 1949ல் யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தில் உருவாக்கப்பட்டதே இலங்கைத் தமிழரசுக்கட்சியாகும். ஒற்றையாட்சி முறை இலங்கையில் தமிழர் உரிமையுடன் வாழ்வதற்கு உகந்ததல்ல என்றுகூறி தமிழரசுக்கட்சி கூட்டாட்சிக் கோரிக்கையை முன்வைத்தது. தேர்தல்கள் 1956 தேர்தலில் தமிழரசுக்கட்சி தமிழ்ப் பகுதிகளில் பெரும்பான்மை இடங்களை வென்று, தமிழர் அரசியலில் முன்னணிக்கு வந்தது. தாய்க்கட்சியான தமிழ்க் காங்கிரஸ், ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் இணைந்திருந்தும், மொழிக்கொள்கை முதலான முக்கிய பிரச்சினைகளில் தமிழரின் விருப்பங்களை நிறைவு செய்யும் எவ்வித முன்னேற்றத்தையும் கொண்டுவரமுடியாமற் போனது தமிழரசுக்கட்சியின் எழுச்சிக்கு வாய்ப்பாக அமைந்தது. 1956ல் இலங்கையின் ஆட்சியைப் பிடித்த எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்கா அவர் சிங்கள மக்களுக்கு உறுதியளித்தபடி சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்தபோது அதற்கு எதிராகச் அகிம்சை முறையில் தமிழரசுக்கட்சி போராட்டங்களை அறிவித்தது. இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் அரசினால் அடக்கப்பட்டன. 1958ல் தமிழருக்கு எதிராக நடந்த இனக்கலவரமும், பின்னர், தமிழ் மக்களின் குறைகளை ஓரளவு தீர்க்கும் நோக்கில் செல்வநாயகம், பண்டாரநாயக்கா ஆகியோரிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம், சிங்களவரின் கடும் எதிர்ப்புக் காரணமாகக் கிழித்தெறியப்பட்டதும், இலங்கையில் ஒரு இன ரீதியான முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்தியது. ஒற்றையாட்சிக் கொள்கை மீது நம்பிக்கை வைத்து ஆட்சியிலிருக்கும் சிங்கள அரசாங்கங்களோடு ஒத்துழைக்க விரும்பிய தமிழ்க் காங்கிரசுக்கு எதிராகத் தமிழரசுக்கட்சியின் செல்வாக்கு மேலும் அதிகரித்துவந்தது. இது 1960 மார்ச், 1960 ஜூன், 1965, 1970 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களிலும் பிரதிபலித்தது. 1965ல் நடைபெற்ற தேர்தலின்பின் ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த அரசாங்கத்தில் தமிழரசுக்கட்சி இணைந்து கொண்டு ஒரு அமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டது. எனினும் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக ஐ.தே.க அரசாங்கம், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமையினால் தமிழரசுக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகிக் கொண்டது. 1970ல் நடந்த தேர்தல் சிரிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, மற்றும் இடதுசாரிக் கட்சிகள் இணைந்த ஐக்கிய முன்னணியைப் பதவிக்குக் கொண்டுவந்தது. இந்தப் பதவிக்காலத்தில் புதிய குடியரசு அரசியல் சட்டத்தை உருவாக்கிய ஐக்கிய முன்னணி அரசு, முன்னைய அரசியல் சட்டத்தில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்புகளை நீக்கியதுடன், சிங்கள பௌத்தர்களின் அதிகாரத்தை வலுப்படுத்தியதாகக் கூறித் தமிழரசுக் கட்சியும் எனைய தமிழ்க் கட்சிகளும் எடுத்த நடவடிக்கைகள் பயனற்றுப் போயின. இந்த நிலையில் தங்களுடைய எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு ஒண்றிணைந்து போராடத் தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற தமிழ்க் கட்சிகளும் முன்வந்தன. விளைவாகத் திருவாளர்கள் எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோரைக் கூட்டுத் தலைவர்களாகக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தாபிக்கப்பட்டது. இதன் பின்னர் சகல அரசியல் நடவடிக்கைகளும் மேற்படி கூட்டணியின் சார்பிலேயே நடைபெற்றன. இதனால் தமிழரசுக்கட்சி பெயரளவிலேயே இருந்துவந்தது. மேற்கோள்கள் பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள் பகுப்பு:1949இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் பகுப்பு:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
தமிழர் விடுதலைக் கூட்டணி
https://ta.wikipedia.org/wiki/தமிழர்_விடுதலைக்_கூட்டணி
1972 ஆம் ஆண்டில் இலங்கையின் முக்கிய தமிழ்க் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பவை சேர்ந்து தமிழர் கூட்டணி என்னும் கூட்டமைப்பை உருவாக்கின. மேற்படி கட்சிகளின் தலைவர்களாக இருந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் ஆகியோர் கூட்டுத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். 1976 ல் இவ்வமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணி (சிங்களம்: ද්රවිඩ එක්සත් විමුක්ති පෙරමුණ ஆங்கிலம்: Tamil United Liberation Front) எனப் பெயர் மாற்றம் பெற்றதுடன், வட்டுக்கோட்டையில் நடந்த அதன் மாநாட்டில், "வட்டுக்கோட்டைத் தீர்மானம்" என்று பரவலாக அறியப்படும் தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இத் தீர்மானம் இலங்கையில் தமிழ்த் தேசத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற, சோசலிசத் தமிழீழ நாட்டை மீள்விக்க வேண்டுமெனப் பிரகடனம் செய்தது. 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், சுதந்திரத் தமிழீழக் கொள்கைக்கு மக்கள் ஆணை கோரிப் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றி பெற்று, இலங்கைப் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சியாக அமரும் வாய்ப்பைப் பெற்றது. கூட்டணித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார். 70 களின் ஆரம்பத்திலிருந்தே சிறு சிறு குழுக்களாக இயங்கிவந்த தீவிரவாத இளைஞர்கள், படிப்படியாகப் பலம் பெற்றுவந்தார்கள். அதனால் 1983க்குப் பின்னர் தமிழர் அரசியலில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள் பகுப்பு:தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகுப்பு:1972இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
பாரதிய ஜனதா கட்சி
https://ta.wikipedia.org/wiki/பாரதிய_ஜனதா_கட்சி
பாரதிய சனதா கட்சி (மொழிபெயர்ப்பு: இந்திய மக்கள் கட்சி; சுருக்கமாக பா. ச. க) இந்திய அரசியலின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றாகும். 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கட்சி, நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டமன்றங்களிலும் பெற்றிருக்கும் இடங்களின் அடிப்படையில் இந்தியாவின் முதலாவது பெரிய அரசியல் கட்சியாகத் திகழ்கிறது. இதை பாரதிய சனதா கட்சி அல்லது சுருக்கமாக பாசக என்றும் அழைப்பார்கள். பாரதிய சனதா கட்சி, தீனதயாள் உபாத்தியாயாவால் 1965 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு புத்தகத்தின் அடிப்படையில், ஒருங்கிணைந்த மனிதநேயம் என்ற தத்துவத்தை தனது அதிகாரப்பூர்வ கொள்கையாகக் கொண்டுள்ளது. "இந்து தேசியவாதக் கட்சி" என்று கூறப்படும் இக்கட்சி, சுதேசி இயக்கத்தால் சுட்டிக்காட்டப்பட்ட சுயச் சார்புக் கொள்கையும், தேசியவாதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையையும் கொண்டது. இந்திய அரசியலில் வலதுசாரிக் கொள்கையுடைய கட்சிகளில் இதுவும் ஒன்று. பா.ச.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி, அடல் பிகாரி வாச்சுபாயைப் பிரதமராகக் கொண்டு 1998 முதல் 2004 வரை இந்தியாவை ஆண்டது. காங்கிரசு அல்லாத ஒரு அரசு தனது முழு ஐந்து வருட காலத்தையும் பூர்த்தி செய்தது அதுவே முதல் முறையாகும். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, பா.ச.க நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கியது. 2014 மக்களவை தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று நரேந்திர மோதி தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலிலும் பெரும்பான்மையைப் பெற்று தொடர்ந்து இரண்டுமுறை ஆட்சி அமைத்த காங்கிரசு அல்லாத முதல் கட்சி ஆனது. கட்சி அமைப்பு thumb|350x350px|பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பின் வரைபடம் கட்சியின் தலைவரே கட்சியில் உயர்ந்த அதிகாரம் உடையவராவார். அவரது பதவிக்காலம் மூன்றாண்டுகளாகும். ஒருவர் தலைவர் பதவியில் அதிக பட்சம் இரண்டு முறை மட்டுமே செயல்பட முடியும்.Compare Article XXI of the 6 February 2004 version of the BJP constitution with that in the September 2012 version . Retrieved on 4 April 2014."BJP amends constitution allowing Nitin Gadkari to get a second term". The Times of India. Sep 28, 2012. Retrieved on 4 April 2014. தலைவருக்கு அடுத்து துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் செயலாளர்கள் என பலர் உள்ளனர். கட்சியின் உயர்ந்த அதிகாரமுடைய அமைப்புகள் வருமாறு: தேசியத் தலைவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்றக் குழு பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு பா.ஜ.க வின் பல தலைவர்கள் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்திலிருந்து இருந்தவர்கள். விசுவ இந்து பரிசத், அகில பாரத வித்தியார்த்தி பரிசத், சுதேசி ஜாக்ரன் மஞ்ச் போன்ற இன்ன பிற சங் பரிவார் அமைப்புகளோடு பா.ஜ.க நட்புறவு கொண்டுள்ளது. பா ஜ க அணிகள் இளைஞர் அணி மகளிர் அணி சிறுபான்மையினர் அணி பட்டியல் சமூகத்தினர் அணி பட்டியல் பழங்குடியினர் அணி இதர பிற்படுத்தப்பட்டோர் அணி வரலாறு பாரதிய ஜன சங்கம் thumb|250px|right|சியாமா பிரசாத் முகர்ஜி சியாமா பிரசாத் முகர்ஜியால் இந்து தேசியவாத கொள்கையை வளர்ப்பதற்காக, 1951 ஆம் ஆண்டு பாரதிய ஜன சங் நிறுவப்பட்டது. காங்கிரசை கடுமையாக விமர்சித்த இக்கட்சி, தேசிய மற்றும் கலாசார அடையாளம், ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் சமரசம் கூடாது என்ற கருத்துடையதாக விளங்கியது. இக்கட்சி, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின் அரசியல் பிரிவு என்று பரவலாகக் கருதப்பட்டது.Guha, p. 136 ஜம்மு கஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க நடந்த கலவரத்தின்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த சியாமா பிரசாத் முகர்ஜி, 1953 ஆம் ஆண்டு மறைந்ததை அடுத்து, கட்சியின் பொறுப்புகள் அனைத்தும் தீனதயாள் உபாத்யாயாவிடம் வந்து சேர்ந்தன. அவர், பதினைந்து வருடங்கள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வளர்த்தார். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இளைஞர்களைக் கொண்டு கட்சியின் கொள்கைகளை செதுக்கினார். வாஜ்பாய், அத்வானி போன்ற அரசியல்வாதிகளுக்கு இவரே வழிகாட்டியாக விளங்கினார். கட்சியின் பெரும்பான்மையான தொண்டர்கள் (உபாத்யாயாவையும் சேர்த்து) ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கில் இருந்து வந்தவர்களாதலால், இயற்கையாகவே தேசப் பற்றும், ஒழுக்கமும் கொண்டவர்களாக விளங்கினர். இக்கட்சி 1952 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மூன்று இடங்களில் மட்டுமே வென்றது. இருப்பினும் தொடர்ந்து வளர்ந்த இக்கட்சி, 1962 ஆம் ஆண்டு இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றாகத் திகழ்ந்தது. அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான சட்டம், பசுவதைத் தடை, ஜம்மு கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெறுவது, இந்தி மொழியை வளர்ப்பது போன்ற கொள்கைகள் கொண்ட இக்கட்சி,Guha, p. ?? பல வட மாநிலங்களில் காங்கிரசின் அதிகாரத்திற்கு பெறும் சவாலாகத் திகழ்ந்தது. இக்கட்சி, 1967க்குப் பிறகு ஒத்த கொள்கையுடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, உத்திரப் பிரதேசம், தில்லி போன்ற சில மாநிலங்களில் ஆட்சி அமைத்தது.Guha, pp. 427–428 இந்திரா காந்தியால் 1975 முதல் 1977 வரை அமல் படுத்தப்பட்ட அவசர காலத்தின் போது நடந்த அரசியல் கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்ததினால், இக்கட்சியின் பல தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். இக்கட்சியும் வேறு சில கட்சிகளும் ஜனதா கட்சியுடன் இணைந்து, 1977 ஆம் ஆண்டு காங்கிரசிற்கு எதிராக களமிறங்கின. 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வென்று, மொரர்ஜி தேசாயைப் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது. உபாத்யாயாவின் மரணத்திற்குப் பிறகு ஜன சங்கின் தலைவரான அடல் பிகாரி வாஜ்பாய், புதிய அரசாங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த அரசு அதிக நாள் நீடிக்கவில்லை. மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகு, ஜனதா கட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ள ஜன சங் பெறும் முயற்சி செய்தது. உட்கட்சிப் பூசலால் பாரதிய ஜன சங் கட்சி பெறும் நலிவுற்றது.Guha, pp. 538–540 பாரதிய ஜன்தா கட்சி உருவாக்கம் (1980–) பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களும் தொண்டர்களும் இணைந்து, அடல் பிகாரி வாஜ்பாயைத் தலைவராகக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினர்.Guha, pp. 563–564 காங்கிரஸ் அரசை வன்மையாகக் கண்டித்த பா.ஜ.க, பஞ்சாப்பில் நிலவிய சீக்கிய பயங்கரவாதத்திற்கு காங்கிரஸ் அரசின் ஊழலும் பாரபட்சமும் மிகுந்த ஆட்சியே காரணம் என்றது. 'இந்து - சீக்கிய ஒற்றுமைக்கு வித்திட்டவர் வாஜ்பாய்' என்று சீக்கியத் தலைவர் தாராசிங் கூறியுள்ளார். பா. ஜ. க புளூஸ்டார் நடவடிக்கையை எதிர்த்த முக்கியக் கட்சிகளுள் ஒன்றாகும். இந்திரா காந்தியை அவரது சீக்கிய மெய்க்காப்பாளர் சுட்டுக் கொன்றதால் தில்லியில் 1984 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை பா.ஜ.க வெளிப்படையாகக் கண்டித்தது. பா.ஜ.க விடம் 1984இல் இரண்டு நாடாளுமன்ற இடங்களே இருந்த போதிலும் தனது கொள்கைகள் மூலமாக இளைஞர்களைக் கவர்ந்து, விரைவிலேயே இந்திய அரசியலில் முக்கிய இடத்தைப் பிடித்தது. அப்போது வாஜ்பாய், கட்சியில் முக்கிய இடத்திலும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் திகழ்ந்தார். இந்து தேசியவாத கொள்கையுடைய பலர் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டனர். right|thumb|150px|அடல் பிகாரி வாஜ்பாய், பா.ஜ.க விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பிரதமர் (1998–2004) விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ராம் ஜென்மபூமி மந்திர் இயக்கத்திற்கு உறுதுணையாக பா,ஜ.க விளங்கியதோடு, அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமருக்குக் கோயில் கட்டப்பட வேண்டும் என்றும் கூறியது. அயோத்தியில் பாபர் மசூதி இருக்கும் இடம் ராமர் பிறந்த இடம் எனவும், வெகு காலத்திற்கு முன் அங்கு ராமர் கோயில் இருந்தது எனவும் ஏராளமான மக்கள் நம்புகின்றனர். எனவே இந்துக்களின் புனித இடமான அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று கோரப்படுகிறது. லால் கிருஷ்ண அத்வானி கட்சியின் தலைவராக இருந்த போது, பல்வேறு ரத யாத்திரைகள் மேற்கொண்டு, இந்துக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். திசம்பர் 6, 1992 அன்று விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் அமைதியான போராட்டத்திலிருந்து கலவரத்தில் இறங்கி, பாபர் மசூதியை இடித்தனர். இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் இந்துகளுக்கும் இசுலாமியர்களுக்கும் நடந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். விஷ்வ இந்து பரிஷத் இயக்கம் அரசால் தடை செய்யப்பட்டது. அத்வானி உட்பட பல பா.ஜ.க தலைவர்கள் கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அயோத்தி விவகாரத்தை அரசியலாக்கியதாகக் கூறி பலரால் விமர்சனம் செய்யப்பட்டலும், கோடிக் கணக்கான இந்துக்களின் ஆதரவை பா.ஜ.க வென்று தேசிய முக்கியத்துவம் பெற்றது. தில்லியில் 1993 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், 1995 ஆம் ஆண்டு குஜராத்திலும், மகாராஷ்டிராவிலும் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க வென்றது. திசம்பர் 1994 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலிலும் கணிசமான இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் தேசிய அரசியலில் பெறும் முக்கியத்துவம் பெற்றது. மும்பையில், நவம்பர் 1995 இல் நடைபெற்ற பா.ஜ.க பொதுக் கூட்டத்தில், மே 1996 இல் நடக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பா.ஜ.க வென்றால் வாஜ்பாய் பிரதமராவார் என்று அக்கட்சியின் தலைவர் அத்வானி அறிவித்தார். அத்தேர்தலில், பா. ஜ. க வெற்றி பெற்று அமைத்த அரசில் வாஜ்பாய் பிரதமரானார். இருப்பினும் பா.ஜ.க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதால், 13 நாட்களில் வாஜ்பாய் தனது பதவியை ராஜினாமா செய்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணி, 1998 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்றது. இம்முறை பா.ஜ.க ஏற்கனவே இருந்த கூட்டணிக் கட்சிகளான சமதா கட்சி, சிரோமனி அகாலி தளம், சிவ சேனா போன்றவற்றோடு சேர்த்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகளோடும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இவற்றுள் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிவ சேனா மட்டுமே பா.ஜ.க வுடன் ஒத்த கொள்கையுடைய கட்சியாகும்.Sen, p. 254 தெலுங்கு தேசம் கட்சி இக்கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தது. மெலிதான பெரும்பான்மை பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வாஜ்பாயைப் பிரதமராகக் கொண்டு ஆட்சி அமைத்தது. ஆனால், அ. இ. அ. தி. மு. க தலைவர் ஜெயலலிதா அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால் கூட்டணி உடைந்து மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. கார்கில் போரில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து வாஜ்பாய்க்கு கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாக, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 1999 ஆம் நடந்த பொதுத் தேர்தலில் 303 இடங்களில் வென்றது. பா. ஜ. க மட்டுமே 183 இடங்களில் வென்றது. வாஜ்பாய் மூன்றாவது முறையாகப் பிரதமராகவும், அத்வானி துணைப் பிரதமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். இம்முறை, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலமான ஐந்து ஆண்டுகளும் நீடித்தது. வாஜ்பாய் தலைமையில் யஷ்வந்த் சின்காவை நிதி அமைச்சராகக் கொண்ட இந்த அரசு, பி. வி. நரசிம்ம ராவ் அரசு தொடங்கிய பொருளாதாரக் கொள்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தியது. இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பல அரசுடைமை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கியதோடு, உலக வர்த்தக அமைப்பின் வழிகாட்டுதல்களையும் நடைமுறைப்படுத்தியது. விமான நிறுவனங்களுக்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கியது, அந்நிய முதலீடுகளை அனுமதித்தது போன்ற கொள்கைகள் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாகத் துணை புரிந்ததோடு, புதிய துணை நகரங்கள் உருவாகவும், உள்கட்டமைப்பு சிறக்கவும், உற்பத்தியும் ஏற்றுமதியும் உயரவும் வழிவகுத்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி, 2004 இல் நடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் எதிர்பாராத விதமாகத் தோல்வியைத் தழுவியது. இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வென்று, டாக்டர். மன்மோகன் சிங்கைப் பிரதமராகக் கொண்டு அரசமைத்தது. கர்நாடகாவில், மே 2008 இல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வென்றது. இதுவே தென்னிந்திய மாநிலமொன்றில் பா.ஜ.க வென்றது முதல் முறையாகும். ஆனால் 2013 ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா. ஜ. க தோற்று தனது ஆட்சியைக் காங்கிரசிடம் இழந்தது. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் பா. ஜ. க மீண்டும் தோற்றதனால், மக்களவையில் அதன் பலம் 116 ஆகக் குறைந்தது. ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தராகண்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறைந்த செயல்பாடே அக்கட்சியின் தோல்விக்குக் காரணம் என்று கூறப்பட்டது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 மக்களவைத் தொகுதிகளில் வென்றது. பா. ஜ. க. மட்டுமே 282 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் 10 இடங்கள் மிகுதியாக வென்றதால் தனிப்பெரும்பான்மையோடு கூட்டணிக் கட்சிகளின் துணை இல்லாமலே தனித்து ஆட்சி அமைத்தது. பொதுத் தேர்தல்களில் + வருடம் பொதுத் தேர்தல் வென்ற இடங்கள் இடங்களில் மாற்றம் வாக்குகளின் சதவிகிதம் வாக்குகளின் மாற்றம் இந்தியப் பொதுத் தேர்தல், 1984 8வது மக்களவை 2 2 7.74% 7.74 இந்தியப் பொதுத் தேர்தல், 1989 9வது மக்களவை 85 83 11.36% 3.62 இந்தியப் பொதுத் தேர்தல், 1991 10வது மக்களவை 120 37 20.11% 8.75 இந்தியப் பொதுத் தேர்தல், 1996 11வது மக்களவை 161 41 20.29% 0.18 இந்தியப் பொதுத் தேர்தல், 1998 12வது மக்களவை 183 21 25.59% 5.30 இந்தியப் பொதுத் தேர்தல், 1999 13வது மக்களவை 189 6 23.75% 1.84 இந்தியப் பொதுத் தேர்தல், 2004 14வது மக்களவை 144 45 22.16% 1.69 இந்தியப் பொதுத் தேர்தல், 2009 15வது மக்களவை 116 22 18.80% 3.36 இந்தியப் பொதுத் தேர்தல், 2014 16வது மக்களவை 282 166 31.00% 12.2 இந்தியப் பொதுத் தேர்தல், 2019 17வது மக்களவை 303 21 கொள்கையும் அரசியல் நிலையும் பாரதிய ஜனதா கட்சி, ஒருங்கிணைந்த மனிதநேயம், இந்துத்துவம் மற்றும் கலாசார தேசியவாதம் போன்ற கொள்கைகளைக் கொண்டது. பா.ஜ.க பலமான பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் கட்சியாகும். இந்துத்துவம் வினாயக் தாமோதர் சாவர்க்கர் என்கிற அரசியல்வாதியால் உருவாக்கப்பட்ட கொள்கையான இந்துத்துவத்தை பா.ஜ.க பலமாக ஆதரிக்கிறது. இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் நாகரிகம் ஆகியவற்றுக்கு மேற்கத்தியக் கொள்கைகளைவிட இந்துத்துவமே உகந்தது என்பது பா.ஜ.க வின் நிலைப்பாடு. பா. ஜ. க வின் கொள்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று பலரால் விமர்சிக்கப்பட்டாலும், கலாசார தேசியவாதம் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் பொருந்தும் கொள்கையே என்பது பா. ஜ. க வின் வாதம். காங்கிரஸ் கட்சி, போலியான மதசார்பின்மை கொள்கையை வைத்து அரசியல் செய்து மக்களை ஏமாற்றுகிறது என்றும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் இந்திய கலாசாரத்திற்கு எதிராக மேற்கத்தியக் கலாசாரத்தைப் பரப்புகிறது என்றும் பா.ஜ.க, காங்கிரஸ் மீது குற்றம் சாட்டுகிறது. காங்கிரஸ் கட்சி, சிறுபான்மையினரின் வாக்குகளுக்காகவே அவர்களை ஆதரிக்கிறது என்றும் பா. ஜ. க கூறுகிறது. அடல் பிகாரி வாஜ்பாயின் கருத்துப்படி, ஐரோப்பிய மதசார்பின்மைக் கருத்தியல் என்பது இந்தியாவின் கலாசாரத்திற்குப் பொருந்தாத ஒன்றாகும். மோகன்தாஸ் காந்தியால் முன்மொழியப்பட்டக் கோட்பாடான சர்வ தர்ம சம்பவ என்பதே இந்தியாவின் பாரம்பரியத்திற்கு உகந்த மதசார்பின்மை என்பது பா. ஜ. க வின் கருத்து.Constitution and Rules (as amended by the National Council at Gandhinagar, Gujarat, on 2nd May 1992) of the Bharatiya Janata Party, p.3-4. வாஜ்பாய், இந்திய மதசார்பின்மையைப் பின்வருமாரு விளக்குகிறார்: அனைத்து மதங்களையும் சமமாக பாவிப்பதே காந்தியின் சர்வ தர்ம சம்பவ கோட்பாடாகும்.Atal Bihari Vajpayee. "The Bane of Pseudo-Secularism". In C. Jaffrelot (ed.), Hindu Nationalism: A Reader. Delhi: Permanent Black, 2007. இக்கோட்பாடு எந்த மதத்திற்கும் எதிரானதல்ல; அனைத்து மதங்களையும் சமமானதாகவே பார்க்கிறது. எனவே, இக்கோட்பாடே இந்தியாவிற்குகந்த கொள்கை; இதுவே மேற்கத்தியக் கொள்கைகளைவிட சிறந்தது. பா.ஜ.க வின் கொள்கைகளுள் "ஒருங்கிணைந்த மனிதநேயம்" என்பது முக்கியமானதாகத் திகழ்கிறது. வலதுசாரி கொள்கை நிலைப்பாடுடைய பா.ஜ.க, சமூக பாதுகாப்பு மற்றும் முற்போக்கு ஆகிய கொள்கைகளுடையது. இக்கட்சியின் பெரும்பான்மையான கொள்கைகள் இந்தியாவின் பாரம்பரிய கலாசாரத்தைத் தழுவியே அமைந்துள்ளன. இக்கட்சியின் சாசனத்தில் அதன் குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: இக்கட்சி, இந்தியாவை வளமான மற்றும் பலமான தேசமாக வளர்க்க உறுதி பூண்டுள்ளது. பண்டைய கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட நவீன மற்றும் அறிவார்ந்த இந்தியாவை உருவாக்குவோம். சாதி, சமய மற்றும் பாலின வேறுபாடின்றி ஒரு ஜனநாயக நாட்டை உருவாக்கி அதில் அனைவருக்கும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நீதி, சம வாய்ப்பு, கருத்து மற்றும் நம்பிக்கைக்கான சுதந்திரம் கிடைக்க இக்கட்சி பாடுபடும். இக்கட்சி, இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையும் பற்றும் கொண்டு அதன் கொள்கைகளான மதசார்பின்மை, நேர்மை, ஜனநாயகம், ஒருமைப்பாடு மற்றும் தேசத்தின் உரிமைகளைக் காக்கும். பா.ஜ.க அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று கோரி வருகிறது. இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் பசுவைக் கொல்வதையும் உண்பதையும் தடை செய்ய வேண்டும் என்றும் இந்திய கலாசாரத்தை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதிக்க வேண்டும் என்றும் பா. ஜ. க கோரி வருகிறது. வாஜ்பாய் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி, கல்லூரி பாடத்திட்டத்தில் வேத சோதிடத்தையும் சேர்க்க உத்தரவிட்டதோடு வரலாற்றுப் பாடத்திட்டத்தில் சில சர்ச்சைக்குரிய மாற்றங்களையும் செய்தார். பா.ஜ.க கர்நாடகத்தில் ஆட்சி செய்த போது இந்துகளின் புனித நூலான பகவத் கீதையை பள்ளிகளின் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. மேலும் பா.ஜ.க மதமாற்றங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற கருத்திற்கும் ஆதரவளிக்கிறது. பா.ஜ.க இந்திய அரசியலமைப்பை மதிப்பதாகக் கூறினாலும், சில பா.ஜ.க தலைவர்கள், இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மாற்றுக் கருத்துடைய கட்சிகளும் அடங்கியுள்ளதால் பா.ஜ.க தனது இந்துத்துவா கொள்கையை தளர்த்தியது. இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவை பா.ஜ.க, இசுலாமியர்களுக்கு ஆதரவான போக்கு, கஷ்மீர் விவகாரத்தைத் தீர்ப்பதில் செய்த தவறுகள் போன்றவற்றிற்காகக் கடுமையாக விமர்சித்தது. ஆயினும், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேலை, இந்தியாவை ஒருமைப்படுத்தியதற்காக பா. ஜ. க பாராட்டியுள்ளது. டாக்டர். பீமாராவ் ராம்ஜி அம்பேத்கரின் நினைவு நாளை பா.ஜ.க அதிகாரப்பூர்வமாக அனுசரித்தாலும், நரேந்திர மோடி போன்றவர்கள் கட்சியின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தாலும், மேல் சாதி இந்துக்களின் கட்சியே பா.ஜ.க என்று விமர்சிக்கப்படுகிறது. ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கின் மீது எழுந்த, "இசுலாமியர்களுக்கு எதிரானது", "பாசிசக் கொளகையுடையது", "மதக் கலவரத்தைத் தூண்டுகிறது" போன்ற விமர்சனங்களால் பா.ஜ.க வும் பாதிக்கப்பட்டுள்ளது. வினாயக் தாமோதர் சாவர்க்கரின் கொள்கைகளை பா.ஜ.க பின்பற்றுவதால் அது காந்திக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் மீதுள்ள காந்தியின் கொலைப் பழி பா.ஜ.க வையும் பாதித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், காந்தியின் இசுலாமியர்களுக்கு ஆதரவான போக்கையும், இந்தியப் பிரிவினைக்கு அவர் ஒப்புதல் அளித்ததையும் கடுமையாகக் கண்டித்தது. பா. ஜ. க காந்திக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரானது என்கிற வாதத்தை அக்கட்சி முழுமையாக மறுக்கிறது. அதுமட்டுமின்றி, தங்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் சிறுபான்மையினரை அவர்களது வாக்குகளுக்காகவே ஆதரிக்கின்றனர் என்று பா.ஜ.க கூறுகிறது. பொருளாதாரக் கொள்கைகள் பா.ஜ.க வும் அதன் வழி வந்த கட்சிகளும், மார்க்சிசத்தையும், இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரசின் சமூகவுடைமைப் பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்தன. சுதேசிக் கொள்கையையும், உள்நாட்டு நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் பா.ஜ.க பலமாக ஆதரித்ததோடு, வெளிநாட்டிலிருந்து செய்யப்படும் இறக்குமதியைக் குறைக்க வேண்டுமென்றது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில், வாஜ்பாய் அரசு 1991 இல் ஆரம்பிக்கப்பட்ட சந்தை சீர்திருத்தங்கள், பொருளாதார தாராளமயமாக்கல் போன்றவற்றைத் தொடர்ந்ததால், தேக்கத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்தது. பா.ஜ.க தலைமையிலான அரசு, தங்க நாற்கர சாலை முதலிய சில முக்கியமான உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களில் முதலீடு செய்ததோடு, அந்நிய முதலீட்டை ஈர்க்க கட்டற்ற வர்த்தகத்தையும் அறிமுகப்படுத்தியது. பா. ஜ. க ஆட்சியில் நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தாலும், இந்தியாவின் ஏழை மக்களைவிட தொழில் முனைவோருக்கும், வர்த்தகர்களுக்குமே ஆதரவாக இருந்தது என்ற விமர்சனத்தால் 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் அக்கட்சித் தோற்றது. பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் பா.ஜ.க, இந்திய பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்குதல், பலமான அணு ஆயுதத் தற்காப்பு போன்ற பலமான தேசியப் பாதுகாப்புக் கொள்கையை ஆதரிக்கும் கட்சியாகும். இந்திய அரசியலமைப்பால் ஜம்மூ கஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தைப் பயன்படுத்தி அதை முழுமையாக இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்ற கொள்கையை பா.ஜ.க ஆதரிக்கிறது. வாஜ்பாய் அரசின் ஆட்சிக்காலத்தில், பொக்ரான்-II என்ற பெயரில் மே 1998 இல் ஐந்து அணு வெடிப்புச் சோதனைகள் நிகழ்த்தப்பட்டது மட்டுமின்றி பல முக்கிய ஏவுகணைகளும் சோதனை செய்யப்பட்டது. வாஜ்பாய் அரசு, இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரை ஆக்கிரமத்த பாகிஸ்தான் ராணுவத்தை வெளியேற்ற அனைத்து வழிகளையும் கையாள இந்திய ராணுவத்திற்கு உத்தரவிட்டது. இதுவே தற்போது கார்கில் போர் என்று அறியப்படுகிறது. பாகிஸ்தானின் ஊடுருவலை காலதாமதமாகக் கண்டறிந்தமைக்காக அரசின் உளவுப் பிரிவு விமர்சிக்கப்பட்டாலும், அதன் பின்னர் அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளும் அதில் ராணுவம் கண்ட வெற்றியும் வாஜ்பாய் அரசுக்குப் புகழ் சேர்த்தது.http://indiatoday.intoday.in/story/narendra-modis-popularity-eclipsing-atal-bihari-vajpayee/1/339629.html இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001 இல் தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது, வாஜ்பாய் அரசு, ராணுவத்தை இந்திய-பாகிஸ்தான் எல்லையில் குவித்தது. திசம்பர் 2001 இல் இந்திய நாடாளுமன்றத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடந்த பிறகு, பா.ஜ.க அரசு தீவிரவதத் தடை சட்டம் (POTA) என்ற சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் உளவு நடவடிக்கைகளை விரிவுபடுத்தியதோடு, காவல் துறைக்கும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கியது. இச்சட்டம் காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளால் இசுலாமியர்களுக்கு எதிரான சட்டமாகப் பார்க்கப்பட்டது. இதனால் இந்த மசோதாவை சட்டமாக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூட்டப்பட்டது. பின்னர் வந்த காங்கிரஸ் அரசால் இச்சட்டம் நீக்கப்பட்டது. காங்கிரஸ் அரசின் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் வலுவானதாக இல்லை என்று பா.ஜ.க தொடர்ந்து விமர்சித்து வருகிறது. வெளியுறவுக் கொள்கை right|thumb|முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் (வலது) மற்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் (இடது). வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டதோடு பல முக்கிய ராணுவ ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவு பாராட்டிய காங்கிரஸ் அரசை பா.ஜ.க அடிக்கடி விமர்சித்து வந்துள்ளது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுடனான உறவை இந்தியா பலப்படுத்திக்கொண்டது. இந்திய-அமெரிக்க உறவுகள், 2000 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளின்டனின் இந்திய வருகையின்போது மேலும் முன்னேற்றமடைந்தன. அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001 இல் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் அல் காயிதா மற்றும் தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கெதிரான நடவடிக்கைகளிலும் அமெரிக்காவிற்கு இந்தியா தனது ஒத்துழைப்பை நல்கியது. இதற்குப் பிரதியாக அமெரிக்கா, இந்தியாவிற்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் உதவியது. இந்தியாவின் எதிரிகளாகக் கருதப்படும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவுகளையும், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இந்தியா மேம்படுத்திக் கொண்டது. வாஜ்பாய், 1998 இல் பாகிஸ்தான் சென்று தில்லி-லாகூர் பேருந்துப் போக்குவரத்து சேவையைத் துவக்கி வைத்தார். 1998 அணு வெடிப்புச் சோதனைக்குப் பிறகு நலிவடைந்திருந்த இந்திய-பாகிஸ்தான் உறவுகளைப் புதிப்பித்துக்கொள்ள, இரு நாடுகளும் லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. ஆனாலும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது. சில வருடங்கள் நீடித்த பதட்டத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அதிபராக விளங்கிய பர்வேஸ் முஷரஃபை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் துவங்கப்பட்ட போதிலும் அவை எந்த ஒரு முடிவையும் எட்டவில்லை. மீண்டும் 2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் போர் நிறுத்தத்தை அறிவித்து அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்கினார். பாரதிய ஜனதா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பிரதமர்கள் - எண் பிரதமர் படம் ஆட்சிக்காலம் மொத்த நாட்கள் 1 அடல் பிகாரி வாச்பாய் 100px 1996, மார்ச் 1998 - மே 2004 6 ஆண்டுகள் 80 நாட்கள் 2 நரேந்திர மோதி 100px மே 2014 - தற்போது வரை மாநிலங்களில் பா.ஜ.க right|thumb பா.ஜ.க, டிசம்பர் 2018 நிலவரப்படி 13 மாநிலங்களில் (குஜராத், மகாராட்டிரம், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், உத்தராகண்ட், அசாம், கோவா, ஜார்கண்ட், அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா) பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ளது. பீகார், சிக்கிம் மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க வின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இதற்கு முன்பு பா.ஜ.க, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை ஆட்சி செய்துள்ளது. பா.ஜ.க வின் தற்போதைய மாநில முதல்வர்கள் புபேந்திர படேல் - (குஜராத்) பிரமோத் சாவந்த் - (கோவா) யோகி ஆதித்தியநாத் - (உத்தரப்பிரதேசம்) புஷ்கர் சிங் தாமி - (உத்தரகாண்ட்) ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா - (அசாம்) ந. பீரேன் சிங் - (மணிப்பூர்) மாணிக் சாகா - (திரிபுரா) பசவராஜ் பொம்மை - (கர்நாடகா) சிவ்ராஜ் சிங் சௌஃகான் - (மத்தியப் பிரதேசம்) மனோகர் லால் கட்டார் - (ஹரியானா) பெமா காண்டு - (அருணாச்சலப் பிரதேசம்) கட்சித் தலைவர்கள் பதவிக் காலம் பெயர் பிறப்பிடம் மற்றவை 1980–1986 லக்னௌ, உத்தரப் பிரதேசம் 1986–1991 75px லால் கிருஷ்ண அத்வானி கராச்சி, பிரித்தானிய இந்தியா முதல் முறையாக 1991–1993 75px முரளி மனோகர் ஜோஷி புது தில்லி முதல் முறை 1993–1998 75px லால் கிருஷ்ண அத்வானி கராச்சி, பிரித்தானிய இந்தியா இரண்டாவது முறையாக 1998–2000 குஷபாவு தாக்கரே மத்தியப் பிரதேசம் 2000–2001 பங்காரு லட்சுமண் ஆந்திரப் பிரதேசம் 2001–2002 75px ஜனா கிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு 2002–2004 75px வெங்கையா நாயுடு நெல்லூர், ஆந்திரப் பிரதேசம் 2004–2006 75px லால் கிருஷ்ண அத்வானி கராச்சி, பிரித்தானிய இந்தியா மூன்றாவது முறையாக 2006–2009 75px ராஜ்நாத் சிங் வாரணாசி, உத்தரப் பிரதேசம் முதல் முறையாக 2009–2013 75px நிதின் கட்காரி நாக்பூர், மகாராட்டிரம் 2013–2014 75px ராஜ்நாத் சிங் வாரணாசி, உத்தரப் பிரதேசம் இரண்டாவது முறையாக 2014-2020 அமித் சா நாரயண்புரா, குஜராத் இரண்டாம் முறை 2020 முதல் 75px ஜெகத் பிரகாஷ் நட்டா பாட்னா, பீகார் முதல் முறை சர்ச்சைகள் தெஹல்கா போலி ஆயுத பேரம் இந்திய ராணுவத்திற்கு வெப்ப பிம்பக் கருவிகள் வாங்க பாதுகாப்புத் துறைக்குப் பரிந்துரை செய்ததற்காக 100000 கையூட்டு வாங்கியதாக, 2001இல் பா.ஜ.க வின் தலைவராக இருந்த பங்காரு லட்சுமண் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, கட்சியின் விதிகளுக்குட்பட்டு அவர் தலைவர் பதவியில் இருந்து பலவந்தமாக நீக்கப்பட்டார். அவர் மீது குற்றவியல் வழக்குப் பதியப்பட்டு, ஏப்ரல் 2012 இல் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. லிபேரான் குழுவின் அறிக்கை மன்மோகன் சிங் லிபேரானால் 2009 இல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, அயோத்தியில் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமான 68 நபர்களில் சில பா.ஜ.க பிரமுகர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர்களுள் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கட்சியின் அப்போதைய நாடாளுமன்றத் தலைவரான லால் கிருஷ்ண அத்வானி, உத்திரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வரான கல்யாண் சிங் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். தனக்கு சாதகமான அதிகாரிகளை அயோத்தியில் நியமித்ததாக கல்யாண் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது. முன்னாள் கல்வித் துறை அமைச்சரான முரளி மனோகர் ஜோஷியின் மீதும் அத்வானியின் மீதும், உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் குற்றம் சட்டப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அன்று அத்வானியின் காவலுக்குப் பொறுப்பேற்றிருந்த காவல் துறை அதிகாரியான அஞ்சு குப்தா அவ்வழக்கில் சாட்சி கூறினார். இதனையும் காண்க பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் தமிழக பா.ஜ.க வின் இணையதளம் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியின் இணையதளம் பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி இணையதளம் பாரதிய ஜனதா கட்சியின் முகநூல் பக்கம் பாரதிய ஜனதா கட்சியின் யூட்யூப் பக்கம் பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள் பகுப்பு:1980இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்‏ பகுப்பு:இந்துத்துவம் பகுப்பு:ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் பகுப்பு:ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் துணை அமைப்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
https://ta.wikipedia.org/wiki/இந்திய_தேசிய_காங்கிரசு
இந்திய தேசிய காங்கிரசு (Indian National Congress; சுருக்கமாக இதேகா பொதுவாக காங்கிரசு கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885–இல் தொடங்கப்பட்ட இக்கட்சி இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது. இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது. வரலாறு இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் வரலாற்றை விடுதலைக்கு முன்பு, விடுதலைக்கு பின்பு என இரு காலப் பகுதிகளாகப் பிரிக்கலாம். விடுதலைக்கு முன்பான காலப் பகுதி 1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான். உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதல் தலைவராக, பம்பாயில் 1885 திசம்பரில் நடந்த கூட்டத்தில் உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் பிளேக் என்னும் கொள்ளை நோய் புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது. இதன் இரண்டாம் கூட்டம் 1886 திசம்பர் 27-ல் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி அறிவிக்கப்பட்டார். இவரின் முயற்சியால் "Indian National Congress" என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜியின் "Indian National Union" காங்கிரசுடன் இனைக்கப்பட்டது. முன்றாவது மாநாடு சென்னையில் 1887 திசம்பர் 27-ல் நடைபெற்றது. பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரசின் கொள்கையில் மாற்றம் கண்டது, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907 -ல் காங்கிரசில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரசு இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது. இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது. இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை காங்கிரசு கட்சி உருவாக்கியது. காங்கிரசின் வரலாற்றை பட்டாபி சித்தராமையா எழுதி உள்ளார். இவா் காங்கிரசின் தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது என்று கூறிப்பிட்டுள்ளார். உமேசு சந்திர பானர்ஜி காங்கிரசின் தோற்றம் பற்றி "The Saftey Wall Theory"-யில் கூறினார். இதன் படி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காக "ஆலன் ஆக்ட வின் ஹியூம் உதவியுடன் காங்கிரசை உருவாக்கினர் என்று கூறுகிறார். காந்தியின் கால பகுதி காந்தி 1915 ல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். தென்னாப்பிரிக்காவில் வெள்ளையருக்கு எதிராக அறவழிப்போர் நடத்தியதால் காந்தியின் புகழ் இந்தியாவிலும் பரவியிருந்தது. தாயகம் திரும்பியதும் தன்னை இந்திய விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டார். அறவழிப்பாதையை ஆதரித்தாலும் முதலாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். காங்கிரசு இயக்கம் அன்னி பெசன்ட் அவர்களின் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. இந்து முசுலிம் ஒற்றுமை வேண்டி காலிபத் இயக்கத்தை ஆதரித்தார். திரும்பர் 1917ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக காந்தி ஓராண்டிற்குத் தெரிவானார். விடுதலைக்கு பிந்தைய காலப் பகுதி இந்திரா காந்தி காலப் பகுதி நேருவின் மறைவுக்குப் பின் இவர் லால் பகதூர் சாசுத்திரியின் அரசில் இந்திய மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தகவல் மற்றும் செய்திதுறை அமைச்சராகப் பணியாற்றினார். லால் பகதூர் சாசுத்திரியின் திடீர் மறைவை ஒட்டிப் பிரதமர் ஆனார். அதற்கு அப்போதைய காங்கிரசு தலைவர் கு. காமராசின் முயற்சியும் காரணமாகும். பின் 1967 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று காங்கிரசை ஆட்சியில் அமர்த்தினார். காங்கிரசு கொள்கைகளுக்கு மாறாக நடந்ததாகக் கூறி காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். இடதுசாரிக் கொள்கையுடன் இருந்த அவர்கள் பொருளாதாரக் திட்டத்தை நிறைவேற்ற முயன்றது வலதுசாரி தலைவர்களுக்கு பிடிக்காததும் பிளவுக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. இதனால் காங்கிரசு இரு குழுக்களாக இந்திரா காங்கிரஸ் ,எனவும் நிறுவன காங்கிரசு எனவும் பிரிந்தது.மாநில காங்கிரசு நிருவாகிகள் இந்திரா குழுவுக்கு ஆதரவளித்ததால் இந்திய தேர்தல் ஆணையம் இந்திரா தலைமையிலான குழுவே உண்மையான இந்திய தேசியக் காங்கிரசு என அறிவித்தது. அதனால் எதிர்க் குழுவான நிறுவன காங்கிரசு தனி கட்சியானது. 1970ம் ஆண்டு இவரது ஆட்சியில் பசுமைப் புரட்சி நடந்தது. 1971ல் நடந்த தேர்தலில் இவர் தலைமையிலான காங்கிரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1972 டிசம்பர் மாதம் பாக்கித்தானுடன் நடந்த போரில் வெற்றி பெற்று வங்காள தேசம் உருவாகக் காரணமாக இருந்தார். 1974ல் சிரிக்கும் புத்தர் என்ற பெயரில் அணு சோதனை நடத்தினார். இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் 1971 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரண்டாவது முறை வெற்றி பெற்றுப் பிரதமரான போதிலும் காங்கிரஸ் கட்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல மாநில கட்சிகளின் ஆதரவு அளித்தனர். அரசாங்க அதிகாரிகளை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தி கொண்ட தவறான முறைகேடு செயல்களால். நீதிமன்றம் இந்திரா காந்திக்கு எதிராக பிரதமர் பதவியில் இருந்து விலகி சிறை தண்டனை பெற வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்திரா காந்தி தான் மீதுள்ள தவறுகளை மறைப்பதற்கு இந்திய நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். ஆனால் அதை காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும் தலைவர்களும் அக்கட்சிக்கு கூட்டணியில் இருந்து ஆதரவு கொடுத்த சில கட்சிகளும் இணைந்து பலமான எதிர்கட்சியான பாரதிய ஜன சங்கம், பாரதிய லோக் தளம் போன்ற கட்சிகளின் தலைவர்கள் இணைந்து ஜனதா கட்சி என்ற ஒரு புதிய கட்சியை உருவாக்கினார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் முதல் முதலாக காங்கிரஸ் கட்சியையும் இந்திரா காந்தியையும் தொற்கடிக்கபட்டு ஜனதா கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர்களில் ஒருவரான மொரார்ஜி தேசாய் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். 1980 ஆம் ஆண்டு எதிர்கட்சியான ஜனதா கட்சியில் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் மூன்றே வருடங்களில் ஆட்சி கவிழ்ந்தது. பின்பு 1980 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இந்திரா காந்தி மூன்றாவது முறையாக பிரதமரானார். ஆனால் அக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அவர்கள் முந்தைய ஆட்சி காலத்தில் வங்காள மொழி பேசும் இஸ்லாமியர்க்கு கிழக்கு பாகிஸ்தான் என்ற பங்களாதேஷ் தனிநாடு பெற்று கொடுத்ததை போல் பஞ்சாப் தனிநாடு சுதந்திரம் கேட்டு சீக்கியர்கள் காலிஸ்தான் அமைப்பை கொண்டு ஆயுதம் ஏந்திய போராடிய போராளிகள் இந்திரா காந்தி நோக்கி பஞ்சாப் தனிநாடு கேட்டு பெரும் போராட்டம் செய்தனர். ஆனால் பஞ்சாப் தனிநாடு கேட்டு போராடிய சில சீக்கிய போராளிகளை இந்திரா காந்தி வன்மையாக கண்டித்தார். சீக்கியர்களின் புனித வழிபாட்டு தலமான அமிர்தசரஸ் பொற்கோயில்க்குள் இந்திய ராணுவ படையை ஏவி சில காலிஸ்தான் போராளிகளை கொன்ற கோபத்தால். ஒட்டுமொத்த பஞ்சாப் சீக்கியர்களின் கோபம் பிரதமர் இந்திரா காந்தி நோக்கி இருந்ததால். அவரது மெய்க்காப்பாளர் ஒருவரால் இந்திரா காந்தி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். சின்னம் பூட்டிய இரட்டை மாடுகள் இதன் சின்னமாக 1969 பிளவுக்கு முன் வரை இருந்தது. பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்திரா பிரிவுக்கு இரட்டை மாடு சின்னத்தை ஒதுக்கியது. இதை எதிர்த்து ஸ்தாபன காங்கிரசு (சிண்டிகேட் என இதை அழைப்பார்கள்) பிரிவு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இச்சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் இருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.320 Million Judges By G.G. Mirchandani பக்கம் 45President Shankar Dayal Sharma, the scholar and the statesman பக்கம் 80 இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு பசுவும் கன்றும் சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ராட்டை சுற்றும் பெண் சின்னமும் கிடைத்தன. நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரும் தோல்வி கண்டதையடுத்து. ஆளும் எதிர்கட்சியான ஜனதா கட்சி 1979ல் இரண்டாக பிளவுபட்டது. இதில் ஜனதா கட்சி பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் செயல்பட்டது. ராஜ் நாராயணன் தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா கட்சி சார்பாக சரண் சிங் பிரதமராக பதவி வகித்தார். அதற்கு இந்திரா தலைமையிலான பிரிவை 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சரண் சிங் தலைமையிலான பிரிவை 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். பிரதமர் சரண் சிங் தலைமையிலான குழுவுக்கு பசுவும் கன்றும் சின்னம் கிடைத்தது. பின்பு சரண் சிங் அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்டதால். இது பின்பு சரண் சிங் தலைமையில் ஜனதா கட்சி (எஸ்) என அழைக்கப்பட்டது. பின்பு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த கை சின்னம் ஆனது காங்கிரஸ் கட்சியின் பிரதான தேர்தல் சின்னமாக மாறியது. அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பிற மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வென்றுள்ளது.Indira: the life of Indira Nehru Gandhi - பக்கம் 425 கொள்கை மாற்றம் காங்கிரஸ் கட்சி இந்தியாவிற்கு அகிம்சா முறையில் சுதந்திரம் பெற்று கொடுத்த சோசலிசம் கட்சி என்று பார்த்தாலும் அதன் அடிப்படை கொள்கையானது இந்தியாவின் அடிப்படை மதமான இந்து மதம் சார்ந்த இந்து தேசியம் கொள்கை உடையது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் பிரதமர் நேருவின் மரணத்திற்கு பிறகு அவரது மகள் இந்திரா காந்தி பிரதமர் பதவியில் இருந்த போது காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு எதிராக பல செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதும் வாரிசு அரசியல் சர்வதிகார போக்கில் இந்திரா காந்தி நடந்து கொண்டதால், காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுபட்டு காமராஜர் தலைமையில் நிறுவன காங்கிரஸ் என்றும் இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரசு என்று செயல்பட்டபோது பிரதமர் இந்திரா காந்தி தனது கட்சியின் ஆட்சிக்கு பிற கட்சிகளின் ஆதரவு பலத்தை பெறுவதற்கு தனது கட்சியின் கொள்கைகளான சமூக மக்களாட்சி, பழமைவாதம், இந்து தேசியம் கொள்கை உடன் மதச்சார்பின்மை என்ற கொள்கையை சேர்த்து கொண்டு அன்றைய காங்கிரசின் பிரதான எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை பெறுவதற்கு அவ்வாறு இந்திரா காந்தி கொள்கை சமரசம் செய்து கொண்டார். மாநில அரசுகளில் காங்கிரஸ் thumb|இந்தியாவில் தற்போது ஆளும் கட்சிகள் இந்தியாவில் தற்போது காங்கிரஸ் கட்சி இமாச்சல பிரதேசம், கர்நாடகம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் நேரடியாக ஆளும் கட்சியாக உள்ளது. மேலும் தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் அசாத்தியமான வெற்றிக்கு காரணமானது கடந்த 2014 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய காங்கிரஸ் ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் அன்றைய அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவி சோனியா காந்தி அவர்கள் அன்றைய ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலுங்கின மக்களின் வெகுநாள் கோரிக்கை போராட்டமான தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை ஏற்று ஆந்திரா பிரதேசத்தில் இருந்து வடக்கு மாகாணமான தெலுங்கானாவை தனி மாநிலமாக அங்கிகாரம் கொடுத்ததால். தற்போது காங்கிரஸ் கட்சி பலமான வெற்றி பெற்றுள்ளது. அதனால் முதல் முறையாக தெலுங்கானா மாநிலத்தில் 10 வருடங்கள் கழித்து காங்கிரஸ் கட்சி தனிபெரும்பான்மையோடு அம்மாநில மக்கள் வெற்றி பெற வைத்து சோனியா காந்தியை அன்னை பராசக்தியாகவும், மகாகாளி, துர்காதேவியாக போற்றி வணங்கி வருகின்றனர். மேலும் ஜார்க்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சி அம்மாநில கட்சிகளுடன் கூட்டணியில் ஆட்சி செய்துவருகிறது. மேலும் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி தற்போது பல மாநிலங்களில் ஆளும் கட்சியான பாஜகவிற்கும், பிற மாநில கட்சிகளுக்கும் பலமான எதிர்கட்சியாக செயல்பட்டுவருகிறது. இந்திய விடுதலை பெற்றது முதல் காங்கிரஸ் கட்சி இதுவரை பெரும்பான்மையான மாநிலங்களில் ஆட்சி புரிந்துள்ளது. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியில் பிரதமர்களான ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி காலத்தில் காங்கிரஸ் ஒரு சில மாநிலங்களில் சறுக்கலை கண்டது. குறிப்பாக மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் நடந்த கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் இந்திய அரசியலில் அதுவரை இல்லாத நாட்டின் பொருளாதார குறைப்பாடுகள் மற்றும் கூட்டணி ஆட்சி முறையால் பல நல்ல திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு செயல்படுத்த முடியாமல் அந்த ஆட்சி காலத்தில் போனதால் இன்று தற்போது பல மாநிலங்களிலும் இந்திய அளவிலும் காங்கிரஸ் கட்சி பலமான பின்னடைவும், தேர்தல்களில் தொடர் தோல்வியும் அடைந்து வருகிறது. தற்போது காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் வரிசை எண் மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் முதலமைச்சர் கட்சி / கூட்டணி கட்சி பதவியேற்ற நாள் சட்டமன்ற பலம் / காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் தேர்தல் காலம்1 இமாச்சலப் பிரதேசம் சுக்விந்தர் சிங் சுகு (இதேகா) இதேகா (40) 11 டிசம்பர் 2022 40/68 11 டிசம்பர் 2027 2 கர்நாடகம் சித்தராமையா (இதேகா) இதேகா (135) 20 மே 2023 135/224 13 மே 20283 தெலுங்கானா அனுமுலா ரேவந்த் ரெட்டி (இதேகா) இதேகா (64) சிபிஐ (1) 7 டிசம்பர் 2023 65/119 3 டிசம்பர் 2028 காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவில் ஆளும் மாநிலங்கள் + வரிசை எண் மாநிலங்கள் மாநில முதலமைச்சர்கள் கூட்டணி கட்சிகள் பதவியேற்ற நாள் சட்டமன்ற பலம் / காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் தேர்தல் காலம் 1 ஜார்க்கண்ட் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 நவம்பர் 2019 16/81 நவம்பர் 2024 2 தமிழ்நாடு மு. க. ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகம் 7 மே 2021 18/234 மே 2026 காங்கிரசின் பிரதான எதிர்கட்சிகள் + வரிசை எண் ஆளும் கட்சி பிரதான எதிர்கட்சிகள் வருடங்கள் 1 காங்கிரஸ் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1947–1971) (24–வருடம்) 2 இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (1964–1996) (32–வருடம்) 3 நிறுவன காங்கிரஸ் (1969–1977) (8–வருடம்) 4 ஜனதா கட்சி (1977–1988) (11–வருடம்) 5 ஜனதா தளம் (1988–1996) (8–வருடம்) 6 பாரதிய ஜனதா கட்சி (1996–இன்று வரை) காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர்கள் + இந்தியாவில் 54 வருடங்களாக அதிக காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக 7 பிரதமர்களை வழங்கியுள்ளது. வரிசை எண்பிரதமர்ஆட்சிக்காலம்ஆட்சி நிலவரம்ஆண்டுகள்1 ஜவஹர்லால் நேரு 1947 முதல் 1964 முடிய 1947 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக தேர்வு 1951, 1957, 1962 நாடாளுமன்ற தேர்தலை சேர்த்து நான்கு முறையும் பெரும்பான்மையான அரசு 17–வருடம்2 குல்சாரிலால் நந்தா 1965 மே மற்றும் ஜீன், மீண்டும் ஜனவரி 11, 1966 முதல் ஜனவரி 24, 1966 முடிய இடைக்கால பிரதமராக இரண்டு முறை பெரும்பான்மையான அரசு 26–நாட்கள்3 லால் பகதூர் சாஸ்திரி ஜூன் 9, 1964 முதல் ஜனவரி 11, 1966 முடிய இடைக்கால பிரதமர் பெரும்பான்மையான அரசு 2–வருடம்4 இந்திரா காந்தி ஜனவரி 24, 1966 முதல் மார்ச் 24, 1977 முடிய மீண்டும் ஜனவரி 14, 1980 – அக்டோபர் 31, 1984 1966 நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று 1967, 1971, 1980 மூன்று நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான அரசு 15–வருடம்5 ராஜீவ் காந்தி அக்டோபர் 31, 1984 முதல் டிசம்பர் 2, 1989 முடிய 1984 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையான அரசு 5–வருடம்6 பி. வி. நரசிம்ம ராவ் ஜீன் 21 1991 முதல் மே 16 1996 முடிய 1991 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க அறுதிபெரும்பான்மை பெறாததால் மற்ற மாநில கட்சிகளின் ஆதரவில் கூட்டணி அரசு 5–வருடம்7 மன்மோகன் சிங் 22 மே 2004 முதல் 25 மே 2014 முடிய 2004, 2009 இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் இருமுறையும் ஆட்சி அமைக்க அறுதிபெரும்பான்மை பெறாததால் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) தலைமையில் முதல் ஆட்சி காலத்தில் இரண்டு இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற மாநில கட்சிகள் ஆதரவிலும் இரண்டாவது ஆட்சி காலத்தில் பிற மாநில கட்சிகளின் ஆதரவில் கூட்டணி அரசு 10–வருடம் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவில் பிரதமர்கள் + காங்கிரஸ் கட்சி சார்பில் 7 பிரதமர்கள் 54 வருடமும் அதன் பிறகு காங்கிரஸ் கூட்டணி ஆதரவில் 3 கட்சிகளை சார்ந்த 4 பிரதமர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் தலா 1 வருடத்திற்கு மொத்தமாக 4 வருடம் ஆண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவுடன் சேர்த்து 58 வருடங்கள் இந்தியாவை ஆண்டுள்ளது. வரிசை எண்ஆதரவுகாங்கிரஸ் கட்சி ஆதரவு தலைவர்கள்கூட்டணி ஆதரவில் ஆண்ட கட்சிகள்கூட்டணி நிலைப்பாடுபிரதமர்கள்ஆண்டுகள்1 காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி மதச்சார்பற்ற ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சி+சிபிஐ+பிற மாநில கட்சிகள் சரண் சிங் (1979–1980) 1–வருடம்2 இராஜீவ் காந்தி சமாஜ்வாடி ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சி+பாஜக+பிற மாநில கட்சிகள் சந்திரசேகர் (1990–1991) 1–வருடம்3 சீதாராம் கேசரி/சோனியா காந்திஜனதா தளம் (ஐக்கிய முன்னணி) தலைமையிலான காங்கிரஸ் கட்சி+சிபிஐ+சிபிஎம்+பிற மாநில கட்சிகள் தேவ கவுடா (1996–1997) 1–வருடம்4 ஐ. கே. குஜ்ரால் (1997–1998) 1–வருடம் (மேலும் இந்த பட்டியலில் உள்ள 4 பிரதமர்களும் மக்களால் நேரடியாக தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படாமல் காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஎம் என இரண்டு இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற மாநில கட்சிகளின் ஆதரவு நிலைபாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் ஆவர்) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மீட்சி பெறுமா காங்கிரஸ்? பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள் பகுப்பு:1885இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்டம் பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ்
திராவிட முன்னேற்றக் கழகம்
https://ta.wikipedia.org/wiki/திராவிட_முன்னேற்றக்_கழகம்
திராவிட முன்னேற்றக் கழகம் (Dravida Munnetra Kazhagam, திமுக) என்பது ஓர் இந்திய அரசியல் கட்சி ஆகும். குறிப்பாக இக்கட்சி தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் செயற்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, இந்திய அளவில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பில் ஒரு கட்சியாக செயல்படுகிறது. திராவிடக் கட்சிகளில் ஒன்றான திமுக அறிஞர் அண்ணாதுரை, பெரியார் ஆகியோரின் சமூக-சனநாயக, சமூக நீதிக் கொள்கைகளை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்டுள்ளது. பெரியாரினால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்திலிருந்து (1944 வரை நீதிக் கட்சி என அழைக்கப்பட்டது) அண்ணாதுரையும், வேறு சில தலைவர்களும் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 1949 செப்டம்பர் 17 இல் சென்னை, ஜார்ஜ் டவுன், இல. 7, பவளக்காரத் தெருவில் கூடித் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை உருவாக்குவது என்று முடிவெடுத்தனர்.In Search of 7, Coral Merchant Street, தி இந்து, மே 4, 2011 1947 செப்டம்பர் 18 இல் ராயபுரம் ராபின்சன் பூங்காவில் பேரணி நடத்தப்பட்டு, கட்சியின் முதல் பொதுச்செயலராக அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டார். கருப்பு, சிவப்பு வண்ணம் கொண்ட கொடி, திமுகவின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டது. அண்ணாதுரை 1949 முதல் 1969 பெப்ரவரி 3 இல் அவர் இறக்கும் வரை கட்சியின் பொதுச் செயலராக பணியாற்றினார். 1967 முதல் 1969 வரை அவர் தமிழக முதலமைச்சராகவும் இருந்தார். அண்ணாதுரையின் காலத்தில், 1967 இல், திமுக இந்திய தேசிய காங்கிரசுக்கு அடுத்தபடியாக, முதல் தடவையாக இந்திய மாநிலம் ஒன்றில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த முதலாவது அரசியக் கட்சி என்ற சாதனையையும் ஏற்படுத்தியது. அண்ணாதுரையின் மறைவை அடுத்து மு. கருணாநிதி 1969 முதல் 2018 ஆகத்து 7 இல் அவர் இறக்கும் வரை கட்சித் தலைவராகப் பதவியில் இருந்தார். மு. கருணாநிதி ஐந்து தடவைகள் முதலமைச்சராகப் பதவியில் இருந்தார். இவற்றில் இரண்டு இந்திய ஒன்றிய அரசினால் கலைக்கப்பட்டது. தற்போது, கருணாநிதியின் மகன் மு. க. இசுட்டாலின் கட்சித் தலைவராக உள்ளார். இசுட்டாலின் 2017 இல் கட்சியின் செயல் தலைவராகவும், பின்னர் 2018 இல் கருணாநிதி இறந்த பின்னர் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், திமுக 24 இடங்களைக் கைப்பற்றி, மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக செயல்பட்டு வருகிறது. திமுக தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஐந்து தடவைகள் ஆட்சியில் இருந்து, ஆறாவது தடவையாகத் தற்போது ஆட்சியில் உள்ளது. அண்ணா அறிவாலயம் என அழைக்கப்படும் கட்சியின் தலைமையகம் சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா சாலையில் அமைந்துள்ளது. புதுவை, காரைக்கால், கருநாடகம், ஆந்திரம், மும்பை, அந்தமான் ஆகிய மாநிலங்களில் இக்கட்சிக்கு கிளைகள் உண்டு. திமுக.வின் அதிகாரப்பூர்வ ஏடாக ‘முரசொலி’ வெளிவந்து கொண்டிருக்கிறது. வரலாறு 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.மு.க. பங்கேற்கவில்லை. “திராவிடர்களின் கருத்தையறியாமலும் திராவிடர்களின் ஜீவாதார உரிமைக்கு ஊறு செய்யும் வகையிலும் ஒரே கட்சியரின் எதேச்சாதிகார முறைப்படியும் தயாரிக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை தி.மு.க. கண்டிப்பதன் அறிகுறியாக தேர்தலில் தி.மு.க. தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை” என்று அக்கட்சி அறிவித்தது. இருப்பினும் “ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய திராவிட இன மொழிவழி மாநிலங்களை உள்ளடக்கிய தனியாட்சி பெற்ற திராவிட நாடு” கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளர்களை ஆதரிப்பதாக அக்கட்சி அறிவித்தது. 1953 சூலை 14, 15இல் அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்துக்கு எதிர்ப்பு, “டால்மியாபுரம்” பெயரை “கல்லக்குடி” என பெயர் மாற்றக்கோரி போராட்டம், தமிழ்நாட்டு மக்களை ‘நான்சென்ஸ்’ என நேரு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் ஆகிய மும்முனைப் போராட்டங்களை தி.மு.க. நடத்தியது. 1956 மே 17, 18, 19, 20 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. 2ஆவது மாநில மாநாட்டில் தேர்தலில் பங்கேற்பது என அக்கட்சி முடிவெடுத்தது. எந்த ஒரு மாநிலமும் எப்பொழுது வேண்டுமானாலும் இந்திய யூனியனில் இருந்து பிரிந்து சென்று தனித்து இயங்கும் உரிமையை தானே பெற்றிருக்க அரசியல் அமைப்பு “திருத்தம் வேண்டும்” என்று அத்தேர்தலில் தி.மு.க. கூறியது. மொத்தம் 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் அக்கட்சி வென்றது. 1958 மார்ச் 2இல் தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு உதயசூரியன் தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டது. https://twitter.com/DinakaranNews/status/1631085933297823745 1959இல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் 90 இடங்களில் வென்ற தி.மு.க. முதன்முறையாக மாநகராட்சி மேயர் பொறுப்பேற்றது. ஏப்ரல் 19, 1961இல் அக்கட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சியை உருவாக்கினார். இது தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு. இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 1961இல் திமுக பேரணி நடத்தியது. 1962இல் நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையை முன் வைத்து பிரச்சாரம் செய்தது தி.மு.க. இராஜாஜியின் சுதந்திராக் கட்சி, முஸ்லீம் லீக் ஆகியவற்றுடன் இணைந்து போட்டியிட்ட தி.மு.க. 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை, காஞ்சிபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் தோல்வியுற்றார். 1963இல் “பிரிவினை” பேசுவோர் தேர்தலில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் “பிரிவினைத் தடுப்புச் சட்ட மசோதா”-வை இந்திய அரசு அறிவித்தது. இதையடுத்து 1963 சூன் 8, 9, 10 தியதிகளில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் அக்கட்சியின் முக்கியக் கொள்கையான “திராவிட நாடு” விடுதலை கோரிக்கையில் மாற்றம் செய்யப்பட்டது. “தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய நான்கு மொழிவழி மாநிலங்களும் இந்திய அரசுரிமை, ஒருமைத் தன்மை, அரசியல் அமைப்புச் சட்டம் ஆகியவற்றுக்குள் இயன்ற அளவு கூடுதலான அதிகாரங்களைப் பெற்று நெருங்கிய திராவிடக் கூட்டமைப்பாக நிலவப் பாடுபடுவது” என்று அக்கட்சியின் ‘குறிக்கோள்’ பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் 17இல் இந்தியை, இந்தி பேசாத மக்களின் மீது இந்தியை திணிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 17-ஐ எரிப்பதாக தி.மு.க. அறிவித்தது. 1965 சனவரி 26 முதல் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து “சனவரி 26-இந்திய குடியரசு நாளை” துக்கநாளாக அறிவித்து கிளர்ச்சி நடத்தியது தி.மு.க. தி.மு.க.வினர் ஆட்சி செய்த காலமும், சில நிகழ்வுகளும் 1967-ல் நடைபெற்ற மூன்றாவது தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தி.மு.க. 138 இடங்களை வென்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1967 மார்ச் 6-ல் அக்கட்சிப் பொதுச்செயலாளர் அண்ணாதுரை தமிழ்நாட்டின் முதல்வரானார். அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா. அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 சூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது. அண்ணாவிற்கு பிறகு அண்ணாதுரை 1969 பிப்ரவரி 3ஆம் நாள் மறைந்ததை அடுத்து, அண்ணா அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே தி.மு.க சார்பில் அடுத்த முதல்வர் யார் என்பதில் கருணாநிதிக்கும், கல்வியமைச்சர் இரா. நெடுஞ்செழியனுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. பெரியார் தலையிட்டு சமரசம் ஏற்படுத்தி கருணாநிதியை போட்டியின்றி முதல்வராக்க முயற்சி செய்தும் நெடுஞ்செழியன் சம்மதிக்கவில்லை. பின்னர் கருணாநிதி சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நெடுஞ்செழியன் அமைச்சரவையில் இருந்து விலகிக்கொண்டார். மு. கருணாநிதி, தமிழ்நாட்டு முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 657-661 1969- சூன் மாதத்தில் மு. கருணாநிதி தி.மு.க. தலைவராகவும், இரா. நெடுஞ்செழியன் பொதுச்செயலராகவும் தேர்வுசெய்யப்பட்டனர். 1971இல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் 203 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 184 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. திமுகவின் இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றிச் சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. மு. கருணாநிதி, 2ஆவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றார். 1972 அக்டோபர் 14இல் கட்சிப் பொருளாளராக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர் தி.மு.க.விலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை உருவாக்கினார். தி.மு.க.வில் ஏற்பட்ட மிகப் பெரிய பிளவாக இது கருதப்பட்டது. 1974 ஏப்ரல் 20இல் ‘மாநில சுயாட்சி’ கோரும் தீர்மானத்தை தி.மு.க. அமைச்சரவை சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. 1975 சூன் 25இல் இந்திய அரசால் அவசரநிலை அறிவிக்கப்பட்டதையடுத்து 1976 ஜனவரி 31-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 1976 முதல் 1976 வரை ஆட்சிப் பொறுப்பிலிருந்த தி.மு.க.வின் செயல்பாடுகளில் அனைத்து சாதியினர் அர்ச்சகராதல் சட்டம் (1971 சனவரி 12), அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் (1970) ஆகியவை முக்கியமானவையாகும். 1977 சூலை 4இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில் வென்று எதிர்க்கட்சியாக அமைந்தது. 1976 அவசரநிலை காலத்தில் அதிக பாதிப்புக்குள்ளானது தி.மு.க.. 1976 முதல் 1980 வரை அமைந்த நிலையற்ற மத்திய அரசுகளால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், நெருக்காடி கால நடவடிக்கைகளுக்காக, இந்திராகாந்தி அவர்கள் சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் திமுகவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாலும், 1980இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் தி.மு.க. போட்டியிட்டது. நாடாளுமன்றத்துக்கான தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 16 இடங்களிலும் சட்டப் பேரவையில் 114 இடங்களில் போட்டியிட்டு 38 இடங்களிலும் வென்றது. 1976 முதல் 1989 வரை 13 ஆண்டு காலம் அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சியாகவும், தி.மு.க. எதிர்க்கட்சியாகவும் செயல்பட்டன. எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. தமிழீழத் தமிழர் போராட்டம், ஆதரவு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு காட்டியது. 1983 ஆகத்து 10-ல் தமிழீழத் தமிழர் பிரச்சினையில் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பொதுச் செயலர் பேராசிரியர் க. அன்பழகன் ஆகியோர் தங்களது சட்டப்பேரவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். 1984-ல் நடைபெற்ற தேர்தலிலும் தி.மு.க. 24 இடங்களை மட்டும் பெற்று எதிர்க்கட்சியாக இருந்தது. இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக 1986 டிசம்பர் 9-ல் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். 1987 திசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர் மறைந்ததையடுத்து நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 203 இடங்களில் போட்டியிட்டு 151 இடங்களை வென்ற திமுக 1991 சனவரி 30 வரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. 1989 திசம்பர் 29-ல் பெண்களுக்கும் சொத்துரிமை வழங்கும் சட்டத்தை தி.மு.க. அரசு நிறைவேற்றியது. இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறி தி.மு.க. அரசு 1991-ல் பதவி நீக்கம் செய்யப்பட்டது. 1991 மே 21-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்தபோது நடைபெற்ற தேர்தலில் 174 இடங்களில் போட்டியிட்ட தி.மு.க. 2 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 1991 முதல் 1996 வரை நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் (அக்கட்சியின்) ‘முரசொலி’ ஏடு ஒடுக்குமுறைக்குள்ளானது. 1993 அக்டோபர், 11-ல் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வை. கோபால்சாமி நீக்கப்பட்டார். இதையடுத்து, தி.மு.க.வில் 2-வது பெரிய பிளவு உருவானது. 1995-ல் தமிழீழத் தமிழர்களுக்கான ஆதரவுப் பேரணியை திமுக நடத்தியது. 1996 ஏப்ரல் 27-ல் நடைபெற்ற தேர்தலில் 166 இடங்களில் வெற்றி பெற்ற தி.மு.க. மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. “மெட்ராஸ்” என்று ஆங்கிலத்தில் சென்னை அழைக்கப்படுவதை “சென்னை” என்றே ஆங்கிலத்திலும் எழுத வேண்டும்; வாகன பதிவு எண்கள், விளம்பரப் பலகைகள், கோவில்கள் ஆகியவற்றில் தமிழை நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2017 சனவரியில் செயல் தலைவர் பதவியில் மு. க. இசுதாலின் செயல்படுவார் என கருணாநிதி அறிவித்தார். தலைமை அவைத் தலைவர்கள் ஈ. வெ. கி. சம்பத் (1949 - 1963) இரா. நெடுஞ்செழியன் (1963 - 1969) தலைவர்கள் மு. கருணாநிதி (1969 - 2018) மு. க. ஸ்டாலின் (2018 முதல்) செயல் தலைவர்கள் மு.க. ஸ்டாலின் (2017 முதல் 2018 வரை ) பொதுச்செயலாளர்கள் கா. ந. அண்ணாதுரை (1949 முதல் 1957 வரை) இரா. நெடுஞ்செழியன் (1957 முதல் 1962 வரை) கா. ந. அண்ணாதுரை (1962 முதல் 1969 வரை) இரா. நெடுஞ்செழியன் (1969 முதல் 1977 வரை) க. அன்பழகன் (1977 முதல் 2020 வரை துரைமுருகன் (2020 முதல்) பொருளாளர்கள் காஞ்சி மணிமொழியார் (1949 - 1957) கே. கே. நீலமேகம் (1957 - 1962) மு. கருணாநிதி (1960 - 1969) ம. கோ. இராமச்சந்திரன் (1969 - 1972) க. அன்பழகன் (1972 - 1977) எஸ். ஜே.சாதிக்பாட்சா (1977 - 1994) ஆற்காடு நா. வீராசாமி (1994 - 2008) மு. க. ஸ்டாலின் (2008 முதல் 28 ஆகத்து 2018 வரை) துரைமுருகன் (28 ஆகத்து 2018 – 3 செப்டம்பர் 2020) த. ரா. பாலு (2020 செப்டம்பர் 3ஆம் நாள் முதல்) அணிகள் தி.மு.க.வில் பல்வேறு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன இலக்கிய அணி இளைஞர் அணி தி.மு.க. இளைஞர் அணி 1980 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் அமைப்பாளராக 1980 முதல் 1984 வரை மு.க.ஸ்டாலின் பொறுப்பு வகித்தார். பின்னர் அவ்வணியின் செயலாளராக 1984 முதல் 2017 - சனவரி - 6ஆம் நாள் வரை பொறுப்பு வகித்தார். அவருக்குப் பின்னர் 2017 - சனவரி - 6 ஆம் நாள் முதல் ???? வரை மு.பெ.சாமிநாதன் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.தி இந்து, 7-1-2017, மதுரை பதிப்பு, பக்.7 மகளிர் அணி மாணவர் அணி சுற்றுச்சூழல் அணி மாநாடுகள் மாநில மாநாடுகள் திமுக. பல்வேறு மாநில மாநாடுகளை நடத்தியிருக்கிறது. அவை: முதல் மாநில மாநாடு 1951ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 13, 14, 15, 16ஆம் நாள்களில் சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ.திடலில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.திராவிடநாடு (இதழ்) நாள்:28-10-1951, பக்கம் 12 இரண்டாவது மாநில மாநாடு 1956ஆம் ஆண்டு மே மாதம் 17, 18, 19, 20ஆம் நாள்களில் திருச்சி பந்தயத்திடலில் இரா. நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.திராவிடநாடு (இதழ்) நாள்:22-4-1956, பக்கம் 20 மூன்றாவது மாநில மாநாடு 1961ஆம் ஆண்டு நாள்களில் மதுரை திருப்பரங்குன்றத்தில் சூலை 13, 14, 15, 16ஆம் நாள்களில் கா. ந. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.,, நான்காவது மாநில மாநாடு 1966ஆம் ஆண்டு திசம்பர் 29ஆம் நாள் முதல் 1967 சனவரி 1ஆம் நாள் வரை சென்னை விருகப்பாக்கத்தில் நடைபெற்றது. ஐந்தாவது மாநில மாநாடு மு. கருணாநிதி தலைமையில் 1975 திசம்பர் 25, 26, 27, 28ஆம் நாள்களில் கோயமுத்தூரில் நடைபெற்றது,, ஆறாவது மாநில மாநாடு 1990 பிப்ரவரி 9, 10, 11ஆம் நாள்களில் திருச்சியில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. ஏழாவது மாநில மாநாடு 1993 மார்ச் 26, 27, 28ஆம் நாள்களில் கோவையில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது., எட்டாவது மாநில மாநாடு 1996 சனவரி 26, 27, 28ஆம் நாள்களில் திருச்சியில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. ஒன்பதாவது மாநில மாநாடு 2006 மார்ச் 3, 4, 5ஆம் நாள்களில் திருச்சியில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது., பத்தாவது மாநில மாநாடு 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 15, 16 ஆம் நாள்களில் திருச்சியில் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.திருச்சியில் திமுகவின் 10ஆவது மாநில மாநாடு நாள்:22-4-1956, பக்கம் 20. இம்மாநாடு திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பிராட்டியூர் அருகே நடைபெற்றது. பதினோராவது மாநாடு 2021 ஆம் ஆண்டு மார்ச் 14 தேதி திருச்சியில் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.இம்மாநாடு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே நடைபெறவுள்ளது. மண்டல மாநாடுகள் தென்மண்டல மாநாடு தி.மு.க.வின் தென்மண்டல மாநாடு விருதுநகர் மாவட்டம் சத்திரெட்டியபட்டியில் 2004 பிப்ரவரி 21, 22ஆம் நாள்களில் நடைபெற்றது. ஆ.ராசா கொடியேற்றினார். வரவேற்புக்குழுத் தலைவர் சாத்தூர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வரவேற்றார். மாநாட்டுப்பந்தலை சரத்குமார் திறந்துவைத்தார். பொதுச்செயலாளர் க. அன்பழகன், தலைவர் மு.கருணாநிதி ஆகியோர் உரையாற்றினர். போலீசு கண்ணன் என்பவரின் கலைஞரின் பொற்காலம் என்ற நாட்டிய நாடகம் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க.வின் தேர்தலறிக்கை வெளியிடப்பட்டது.மாலைமலர், 2004 பிப்ரவரி 21, 22 வடமண்டல மாநாடு வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருட்டிணகிரி ஆகிய நான்கு மாவட்டங்கள் அடங்கிய தி.மு.க.வின் வடமண்டல மாநாடு வேலூர் பெருமுகை - புதுவசூரில் 2005 ஆகத்து 27, 28ஆம் நாள்களில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்கமாக எசு.பி.சற்குணபாண்டியன் கொடியேற்றினார். வரவேற்புக்குழுத் தலைவர் சண்முகம் வரவேற்றார். பொன்முடி மாநாட்டுப் பந்தலைத் திறந்துவைத்தார். பொதுச்செயலாளர் க.அன்பழகன், தலைவர் மு.கருணாநிதி ஆகியோரை உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.மாலைமலர் 2003 08 26 பக்.1 மாநாட்டின் முதல்நாள் நிகழ்வுகளுக்கு வீரபாண்டி ஆறுமுகம் தலைமை வகித்தார்.மாலைமலர் 2005 08 27, பக்.1 மாவட்ட மாநாடுகள் திருச்சி மாவட்டம் திருச்சி மாவட்ட இரண்டாவது திமுக மாநாடு 26-4-1953ஆம் நாள் லால்குடி பாண்டியனார் அரங்கில் நடைபெற்றது, மாநாட்டிற்கு ஈ.வெ.கி.சம்பத் தலைமை வகித்தார்; மாநாட்டை கே. ஏ. மதியழகன் திறந்து வைத்தார். அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, என்.எஸ்.இளங்கோ, எஸ்.கே.சாமி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, க. அன்பழகன், என்.வி.நடராசன், இராசு-தங்கப்பழம், தில்லை வில்லாளன், அரங்கண்ணல், தாமரைச்செல்வன், இளம்வழுதி, கண்ணதாசன், சத்தியவாணி முத்து, பூங்கோதை, அருண்மொழி ஆகியோர் உரையாற்றினர். தேர்தல் வரலாறு நாடாளுமன்றத் தேர்தல்கள் 1957-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. முதன்முறையாகப் போட்டியிட்டது. போட்டியிட்ட 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதேபோல் 1971-ல் 23 இடங்கள், 77-ல் 19, 80-ல் 16, 84-ல் 27, 89-ல் 31, 91-ல் 29, 96-ல் 17, 98-ல் 6 இடங்களை திமுக பெற்றது. 1989-ல் இந்தியாவில் உருவான தேசிய முன்னணியில் முக்கியப் பங்கு வகித்த திமுக அம்முன்னணி அமைத்த அமைச்சரவையிலும் பங்கேற்றது. 1996-ல் உருவான ஐக்கிய முன்னணி அமைச்சரவையிலும் திமுக பங்கேற்றது. இக்கட்சியின் சார்பில் இந்திய மக்களவையில் 1998 ஆம் ஆண்டு 6 பேர், மாநிலங்களவையில் 7 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். பின்னர் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்டு 11 உறுப்பினர்களை பெற்றது. இந்த தேர்தலில் திமுக, தனது அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான பாரதிய ஜனதாவுடனும் தன்னிடமிருந்து வெளியேறி புதிய கட்சியை உருவாக்கிய மதிமுகவுடனும் தேர்தல் உடன்பாடு வைத்தது. 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் திமுக, பாரதிய ஜனதா, தலித் அமைப்புகளுடன் தேர்தலை சந்தித்து தோல்வியை எதிர்கொண்டது. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க உள்ளிட்ட ஏழு கட்சிகளுடன் தி.மு.க கூட்டணி அமைத்து வரலாறு காணாத விதமாக போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றனர். மத்திய ஆட்சியில் பல முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக தி.மு.க உருவானது. தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல்கள் + ஆண்டு தேர்தல் கட்சித் தலைவர் வென்ற இடங்கள் மாற்றம் வாக்கு வீதம் மொத்த வாக்குகள் முடிவு 1957 சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1957கா. ந. அண்ணாதுரை 9 – – 1962 சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1962கா. ந. அண்ணாதுரை 1 18.64% 2,315,610 1967 சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1967கா. ந. அண்ணாதுரை 18 51.79% 7,996,264 1971 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1971மு. கருணாநிதி 2 55.61% 8,869,095 1977 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1977மு. கருணாநிதி 22 37.84% 6,758,517 1980 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1980மு. கருணாநிதி 15 55.89% 10,290,515 1984 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1984மு. கருணாநிதி 14 37.04% 8,006,513 1989 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1989மு. கருணாநிதி 2 33.78% 8,918,905 1991 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1991மு. கருணாநிதி மாற்றமில்லை 27.64% 6,823,581 1996 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996மு. கருணாநிதி 17 54.96% 14,940,474 1998 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1998மு. கருணாநிதி 11 42.72% 10,937,809 1999 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1999மு. கருணாநிதி 6 46.41% 12,638,602 2004 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2004மு. கருணாநிதி 4 57.40% 16,483,390 2009 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2009மு. கருணாநிதி 2 42.54% 12,929,043 2014 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2014மு. கருணாநிதி 18 26.8% 10,243,767 2019 தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019மு. க. ஸ்டாலின் 24 1% புதுச்சேரியில் நாடாளுமன்றத் தேர்தல்கள் ஆண்டு தேர்தல் வாக்குகள் வென்ற இடங்கள் 1984 8-வது மக்களவை 97,672 0 1989 9-வது மக்களவை 157,250 0 1991 10-வது மக்களவை 140,313 0 1996 11-வது மக்களவை 183,702 0 1998 12-வது மக்களவை 168,122 1 சட்டமன்றத் தேர்தல்கள் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் + ஆண்டு தேர்தல் கட்சித் தலைவர் வென்ற இடங்கள் மாற்றம் வாக்கு வீதம் மொத்த வாக்குகள் முடிவு 1957 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957கா. ந. அண்ணாதுரை 15 – – 1962 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962கா. ந. அண்ணாதுரை 37 27.10% 3,435,633 1967 சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967கா. ந. அண்ணாதுரை 87 40.69% 6,230,556 1971 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971மு. கருணாநிதி 47 48.58% 7,654,935 1977 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977மு. கருணாநிதி 136 24.89% 4,258,771 1980 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980மு. கருணாநிதி 11 22.1% 4,164,389 1984 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984மு. கருணாநிதி 13 29.3% 6,362,770 1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989மு. கருணாநிதி 116 37.89% 9,135,220 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991மு. கருணாநிதி 148 22.5% 5,535,668 1996 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996மு. கருணாநிதி 171 53.77% 14,600,748 2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001மு. கருணாநிதி 142 30.90% 8,669,864 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006மு. கருணாநிதி 65 26.50% 8,728,716 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011மு. கருணாநிதி 73 22.40% 8,249,991 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016மு. கருணாநிதி 66 31.39% 13,670,511 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021மு. க. ஸ்டாலின் 4439.7%17,430,100 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் ஆண்டு தேர்தல் வாக்குகள் வென்ற இடங்கள் 1974 3-வது சட்டமன்றம் 47,823 2 1977 4-வது சட்டமன்றம் 30,441 3 1980 5-வது சட்டமன்றம் 68,030 14 1985 6-வது சட்டமன்றம் 87,754 5 1990 7-வது சட்டமன்றம் 101,127 9 1991 8-வது சட்டமன்றம் 96,607 4 1996 9-வது சட்டமன்றம் 105,392 7 2001 10-வது சட்டமன்றம் 83,679 7 2006 11-வது சட்டமன்றம் 7 2011 12-வது சட்டமன்றம் 3 2016 13-வது சட்டமன்றம் 2 2021 14-வது சட்டமன்றம் 154,858 6 வெளியீடுகள் சட்டதிட்டங்கள், 1952 திராவிடநாடு (இதழ்) நாள்:6-4-1952, பக்கம் 12 தீர்மானங்கள், 1952 நம்நாடு என்னும் நாளிதழ் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதழாக 1953 சூன் 15 முதல் அண்ணாதுரையை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்தது.திராவிடநாடு (இதழ்) நாள்:7-6-1954, பக்கம் 2 The Answer என்னும் ஆங்கில வெளியீடு. 15-சூன் -1953ஆம் நாள் நடைபெற்ற மும்முனைப்போராட்டத்தில் சென்னையில் கைதுசெய்யப்பட்ட கா. ந. அண்ணாதுரை, இரா. நெடுஞ்செழியன், ஈ. வெ. கி. சம்பத், என். வி. நடராசன், கே. ஏ. மதியழகன் ஆகியோர் நீதிமன்றத்தில் தந்த வாக்குமூலங்கள்.திராவிடநாடு (இதழ்) நாள்:18-10-1953, பக்கம் 11 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தி. மு. க. அதிகாரப்பூர்வ இணையத்தளம் தி.மு.கவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் - இணையத்தில் முரசொலி நாளிதழின் வலைதளம் தி. மு. க. தலைவர் கருணாநிதி அவர்களின் வாழ்க்கை வரலாறு பகுப்பு:திராவிட முன்னேற்றக் கழகம் பகுப்பு:தமிழ்நாட்டு திராவிட அமைப்புகள் பகுப்பு:1949இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் பகுப்பு:மு. கருணாநிதி பகுப்பு:புதுச்சேரி அரசியல் கட்சிகள் பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
https://ta.wikipedia.org/wiki/அனைத்திந்திய_அண்ணா_திராவிட_முன்னேற்றக்_கழகம்
யாழ்ப்பாணப் பொது நூலகம்
https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணப்_பொது_நூலகம்
thumbnail|right|300px|யாழ் பொது நூலகத்தின் நுழைவாயில் யாழ்ப்பாணப் பொது நூலகம் யாழ்ப்பாணத்திலுள்ள நிறுவனங்களுள், 1981 ஆம் ஆண்டிற்குப் பின்னர் அனைத்துலக அளவில் அதிகமாகப் பேசப்பட்ட ஒரு நூலகம் ஆகும். 20 ஆம் நூற்றாண்டின் முப்பதுகளின் ஆரம்பத்தில் தொடங்கிப் பல ஆர்வலர்களுடைய அயராத உழைப்பினாலும், பொது மக்களினதும், பல உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களினதும் தாராளமான ஆதரவினாலும் வளர்ச்சி பெற்றிருந்த இந்த நிறுவனம் அதன் அரை நூற்றாண்டு நிறைவை அண்மித்துக் கொண்டிருந்தபோது 1981 சூன் 1 இல் எரிக்கப்பட்டுச் சாம்பலானது.யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், எரிந்துபோன பல நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் திரும்பப் பெறமுடியாதவை. வரலாறு இந்த நிறுவனத்துக்கான கரு யாழ்ப்பாணம், புத்தூரைச் சேர்ந்த கே. எம். செல்லப்பா (கனகசபை முதலித்தம்பி செல்லப்பா, 24 பெப்ரவரி 1896 – 14 ஏப்ரல் 1958) என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது. நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்திவந்த நூல் நிலையமே இது.NOTE ON HISTORY OF JAFFNA PUBLIC LIBRARY இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன. thumbnail|right|300px|நூலகக் கட்டிடத்தின் இன்னொரு தோற்றம் thumbnail|right|300px|நூலகம் 1981 இல் எரிக்கப்படும் முன்னர் இருந்த தோற்றம் 1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது. நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இக்குழு இது தொடர்பில் இந்திய நிபுணர்களினதும் உதவிகளைப் பெற்றுக்கொண்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணியும் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. திராவிடக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்றை இவர் வடிவமைத்தார். கட்டிடத்தை இரண்டு கட்டங்களில் கட்டிமுடிக்கத் தீர்மானித்து, முதற்கட்டமாக கட்டிடத்தின் முன்பகுதிக்கான அடிக்கல் 1953 மார்ச் மாதத்தில் நாட்டப்பட்டது. கட்டிடவேலைகள் தாமதமாகவே நடைபெற்றன. 1959 இல் கட்டிடவேலைகள் முற்றாக முடிய முன்னரே, அப்போது யாழ்ப்பாண மேயராக இருந்த அல்பிரட் துரையப்பா நூலகத்தின் திறப்புவிழாவை நடத்தினார். நூலக எரிப்பு உசாத்துணை இவற்றையும் பார்க்கவும் யாழ் பொது நூலகம் எரிப்பு வெளி இணைப்புகள் யாழ்ப்பாணப் பொது நூலகம் ஒரு வரலாற்றுத் தொகுப்பு யாழ்ப்பாண நூல் நிலையம் பகுப்பு:யாழ்ப்பாண மாவட்ட நிறுவனங்கள் பகுப்பு:தமிழர் கல்வி பகுப்பு:தமிழ் நூலகங்கள் பகுப்பு:இலங்கை நூலகங்கள் பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும் பகுப்பு:தமிழ்ச் சுவடிக் காப்பகங்கள்
மின்னணுவியல்
https://ta.wikipedia.org/wiki/மின்னணுவியல்
right|thumb|200px|ஹிட்டாச்சி ஜே100 (Hitachi J100) மாற்றவல்ல அதிர்வு செலுத்த அடிச்சட்டம். thumb|right|260px|மேற்பரப்பில் அமைந்த மின்னணுவியல் உறுப்புகள் மின்னணுவியல் (Electronics) மின்னணுக்கள் அல்லது மின்னன்கள் வழி மின் ஆற்றலைக் கட்டுபடுத்தும் அறிவியல் புலமாகும். இலத்திரனியல் அல்லது மின்னணுவியல் மின்குமிழ், கடிகாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி போன்ற அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்குப் பயன்படும் அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். மின்னணுவியல் தகவல்களைத் தேக்கவும் கையாளவும் பயன்படுகிறது. அதாவது, மின்ஆற்றலைக் கொண்டு மின்குறிகைகளை உருவாக்கலாம். மின்குறிகைகளால் தகவல்களை பதிலீடு செய்யலாம். இந்த மின்குறிகைகளை அல்லது தகவல்களை மின்னணுவியல் கருவிகளால் தேக்கலாம் அல்லது கணிக்கலாம். இந்தப் புலத்தில் வெற்றிடக் குழல்கள், திரிதடையங்கள், இருமுனையங்கள், நுண் தொகுப்புச்சுற்றுக்களும் ஒளிமின்னன் கருவிகளும் உணரிகளும் போன்ற செயல்படு மின்கூறுகளும் மின்தடையம், மின்தேக்கி, மின்தூண்டிகள் போன்ற செயலறு மின்கூறுகளால் ஆகிய மின்சுற்றுகளும் பெரும் பங்காற்றுகின்றன. எனவே பொதுவாக மின்னனியல் கருவிகளில் செயல்முனைவான அரைக்கடத்திகளும் செயலறு மின்சுற்று உறுப்புகளும் அமையும். இந்தச் சுற்றே மின்னணுவியல் சுற்று எனப்படுகிறது. மின்னணுவியல் இயற்பியலின் பிரிவாகவும் மின்பொறியியலின் பிரிவாகவும் கருதப்படுகிறது. செயல்படு மின்கூறுகளின் நேர்பாங்கற்ற நடத்தையும் அவற்றின் மின்னன்களின் பாய்வைக் கட்டுப்படுத்தும் பண்பும் மிக நலிவுற்ற குறிகை அலைகளைக் கூட வலுப்படுத்த உதவுகின்றன; இப்பயன்பாடு தகவல் பதப்படுத்தல், தொலைத்தொடர்பு, குறிகைச் செயலாக்கம் அல்லது பதப்படுத்தல் ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இக் கருவிகளை நிலைமாற்றிகளாகவும் பயன்படுத்தலாம்; இப்பயன்பாடு எண்ணிமத் தகவல் பதப்படுத்தலில் பயனாகிறது. ஒருங்கிணைப்புச் சுற்றுத் தொழில்நுட்பங்கள், பொதியல்சுற்றுத் தொழில்நுட்பங்கள், பல்வேறு இணைப்புத் தொழில்நுட்பங்கள் ஆகியவை, மின்சுற்றுப் பலகை]]களின் மின்சுற்றுச் செயல்பாட்டை முழுமையாக்கிக் கலவையான மின்கூறுகள் வழியாக ஓர் ஒருங்கியமாக அல்லது ஓர் அமைப்பாகச் (System) செயல்படச் செய்கின்றன. மின்னியல், மின்பொறியியல், மின்னணுவியல் மின்னணுவியல் என்பது மின்னியல், மின்பொறியியல் ஆகியவற்றிலிருந்து வேறுபட்ட து; மின்பொறியியல் பொதுவாக மின்னாக்கம், மின்செலுத்தம், மின்பகிர்மானம் ஆகியவற்றையும் மின்னழுத்தம் அல்லது மின்னோட்டம்ஆகியவற்றின் நிலைமாற்றல், தேக்கிவைத்தல் பற்றியும் மின் ஆற்றலை பிற ஆற்றல் வடிவங்களுக்கும் மற்ற ஆற்றல் வடிவங்களிலிருந்து மின் ஆற்றலுக்கும் மாற்றுவதைப் பற்றியும் கருப்பொருளாக்க் கொண்டுள்ளது. இவற்றின் கூறுகளாக மின்கம்பிகள், மின் இயக்கிகள், மின்னியற்றிகள், மின்கலங்கள், நிலைமாற்றிகள், உணர்த்திகள், மின்மாற்றிகள், மின்தடையங்கள் அமைகின்றன. மின்னியலில் இருந்தான மின்னணுவியலின் பிரிவினை மின்னணுவியல் மிகைப்பிகள் நலிவுற்ற குறிகைகளின் வீச்சையும் திறனையும் மிகுக்கப் பயன்படுத்தத் தொடங்கிய 1906 இல் இருந்து தொடங்கியது எனலாம். 1950 வரை இதன் முதன்மைப் பயன்பாடு வானொலி சார்ந்த அலைபரப்பிகள், அலைவாங்கிகள் ஆகியவற்றிலும் அதற்குப் பயன்பட்ட வெற்றிடக் குழல்களிலும் மட்டுமே இருந்தமையால் இத்துறை தொடக்கத்தில் "வானொலி தொழில்நுட்பம்" என்றே அழைக்கப்பட்டு வந்தது. இன்று, பெரும்பாலான மின்னணுவியல் கருவிகள் குறைக்கடத்திகளைப் பயன்படுத்தி மின்னன்களைக் கட்டுப்படுத்துகின்றன. குறைகடத்திக் கருவிகளின் அறிவியலும் தொழில்நுட்பமும் திண்மப்பொருள் இயற்பியலின் பிரிவாகக் கருதப்படுகிறது; நடைமுறை இடர்களுக்குத் தீர்வாக மின்னனியல் மின்சுற்றுக்களின் வடிவாக்கமும் உருவாக்கமும் மின்னணுவியல் பொறியியல் துறையாக உருமாறியது. மின்னணுவியல் கிளைப்பிரிவுகள் மின்னணுவியல் கீழுள்ள கிளைப்பிரிவுகளாக அமைகிறது: எண்ணிம அல்லது எண்ணியல் மின்னணுவியல் ஒப்புமை மின்னணுவியல் நுண்மின்னணுவியல் சுற்றதர் வடிவமைப்பு ஒருங்கிணைந்த மின்சுற்றதர்கள் ஒளிமின்னணுவியல் செங்கடத்திக் (அரைக்கடத்திக்) கருவிகள் பொதியல் சுற்றதர்கள் மின்னனியல் உறுப்புகளின் வரலாறு தொடக்கநிலை மின்னனியல்உறுப்புகளாக வெற்றிடக் குழல்கள் (வெம்மின்னணுக் கவாடங்கள்) அமைந்தன. இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் இவைதாம் மின்னனியல் புரட்சிக்கு வழிவகுத்தன. இவை வானொலி, தொலைக்காட்சி, இசைத்தட்டுகள், இராடார் (வீவாணி-வீச்சும் வாக்கும் காணி), நெடுந்தொலைவுத் தொலைபேசி ஆகிய தொழில்நுட்ப அமைப்புகளுக்கும் மேலும் பல நுட்பங்களுக்கும் வழிவகுத்தன. இவை 1980 கள் வரை நுண்ணலை உயர்திறன் செலுத்த்த்துக்கும் தொலைக்கட்சி அலைவாங்கிகளுக்கும் அடிப்படை உறுப்புகளாக அமைந்தன. 1980 களில் இவற்றின் இடத்தைத் திண்மநிலைக்கருவிகள் கைப்பற்றின. சிறப்புப் பயன்பாடுகளான உயர்திறன் வானொலி அலைவெண் மிகைப்பிகளிலும் எதிர்முனைக் கதிர்க்குழல்களிலும் சிறப்பு ஒலியியல் கருவியாகிய கிதார் மிகைப்பிகளிலும் குழிக்காந்த மிகைப்பி போன்ற நுண்ணலைக் கருவிகளிலும் வெற்றிடக் குழல்கள் தாம் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. 1955 ஏப்பிரலில் IBM 608 எனும் கணக்கீட்டுக் கருவியில் IBM நிறுவனம் முதலில் திரிதடையங்களைப் பயன்படுத்தியது. வணிகச் சந்தையில் புழங்கிய முதல் அனைத்துத் திரிதடையக் கணக்கீட்டுக் கருவி இதுவேயாகும். IBM 608 கணக்கீட்டுக் கருவியில் 3000 க்கும் மேற்பட்ட ஜெர்மேனியத் திரிதடையங்கள் பயன்பட்டன. தாமசு ஜே. வாட்சன் இளவல் IBM பொருள்களில் திரிதடையங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற ஆணையை வழங்கினார். அப்போதிலிருந்தே கணினி தருக்கத்திலும் பிற இணைகருவிகளிலும் திரிதடையங்கள் மட்டுமே பயன்படலாயின. மின்னணுவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கருவியான திரிதடையம். கண்டுபிடித்த பின்னரே இத்துறை மாபெரும் வளர்ச்சி பெற்றது.கீழே சில மின்னனியல் வரலாற்று நிகழ்வுகள் தரப்படுகின்றன. 1897 - அணுத் துகள்களில் ஒன்றான மின்னனைக் (electron) ஜெ. ஜெ. தாம்சன். கண்டுபிடித்தார். 1904 - ஜான் அம்புரோசு பிளெமிங் வெப்பமின்னணுக் குழலைக் கண்டுபிடித்தார். இது செயற்பாட்டில் திரிதடையங்ளை ஒத்த மும்முனையம் ஆகும். 1947 - வில்லியம் ஷாக்லி, ஜான் பர்டீன், வால்டர் பிராட்டைன் ஆகியோர் திரிதடையத்தைக் கண்டுபிடித்தனர். 1940-1950 - கணினி உருவாக்கம் 1959 - ஜாக் கில்பி ஒருங்கிணைந்த சில்லு கண்டுபிடித்தார். 2000 - மீநுண் திரிதடையம் மின்னணுவியல் கருவிகளும் உறுப்புகளும் thumbnail|மின்னணு உறுப்புகள் thumb|அமெரிக்க Abraham Lincoln (CVN 72) எனும் வானூர்திக் கலத்தில் கருவி அறையில் ஒரு திறன்சுற்றதர் அட்டையில் மின்னணுநுட்பர் மின்னழுத்தத்தைச் சரிபார்த்தல். மின்னணுக் கூறு என்பது ஒரு இலத்திரனியல் அமைப்பில் எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அவ்வமைப்பு செயல்பட ஏதுவாக இலத்திரன்களையோ அதன் தொடர்புடைய புலங்களையோ பாதிக்கின்ற உளதாம் பொருளாகும். இக்கூறுகள் பொதுவாக மற்றக்கூறுகளுடன் குறிப்பிட்ட செயற்பாட்டை (காட்டாக பெருக்கி, வானொலி பெறும் கருவி, அல்லது அலையியற்றி) நிகழ்த்துமாறு இணைக்கப்பட்டிருக்கும். (பொதுவாக மின்சுற்றுப் பலகையில் பற்றவைக்கப்பட்டிருக்கும்.) மின்னணுக்கூறுகள் தனியாகவோ அல்லது சற்றே சிக்கலான ஒருங்கிணைந்த சில்லு போன்ற தொகுதிகளாகவோ பொதியப்படலாம். சில பரவலான மின்னணுக்கூறுகள்: மின்தேக்கிகள், மின்தூண்டிகள், மின்தடையங்கள், இருமுனையங்கள், திரிதடையங்கள் ஆகியனவாகும். மின்னணுக்கூறுகளை செயல்படு கூறுகள் என்றும் ( திரிதடையங்கள்,இருமுனையங்கள்) செயலறு கூறுகள் (மின்தடையங்கள்,மின்தேக்கிகள்) வகைப்படுத்தப்படுகின்றன. வெற்றிடக் குழல்கள் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலத்திரனிய கூறுகளில் ஒன்றாகும். இவை நடு1980கள் வரை முதன்மை செயல்படு கூறுகளாக இருந்தன. 1980களிலிருந்து திண்மநிலைக் கருவிகள் இவற்றிற்கு மாற்றாக அமைந்துள்ளன. இன்றும் வெற்றிடக் குழல்கள் உயராற்றல் பெருக்கிகள், எதிர்முனைக் கதிர்க்குழாய்கள், வல்லுநர் ஒலிக்கருவிகள், நுண்ணலைக் கருவிகள் போன்ற சில சிறப்புப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. மின்சுற்று வகைகள் மின்சுற்றுக்களும் இலத்தினியக் கூறுகளும் இருவகையாகப் பிரிக்கப்படலாம்: அலைமருவி மற்றும் எண்மருவி. ஒரு குறிப்பிட்ட கருவியில் இவற்றில் ஏதேனும் ஒருவகையிலோ அல்லது இரண்டும் கலந்துமோ பயன்படுத்தப்படலாம். ஒப்புமை மின்சுற்றுக்கள் வானொலிப் பெட்டிகள் போன்ற பெரும்பாலான அலைமருவி இலத்தினிய சாதனங்கள் சில அடிப்படையான மின்சுற்றுக்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவற்றில் மின் அழுத்தத்தின் வீச்சு எவ்வித இடைவெளியும் இன்றி தொடர்ந்திருக்கும். எண்ணிம முறை (எண்மருவி)யில் மின் அழுத்தம் படிப்படியாக இடைவெளியுடன் இருக்கும். ஒரேஒரு இலத்தினியக் கூறு கொண்ட அலைமருவிச் சுற்றிலிருந்து பல கூறுகளை அடக்கிய சிக்கலான சுற்றுக்கள் வரை பல்லாயிரக்கணக்கான அலைமருவிச் சுற்றுக்கள் உள்ளன. இவை சில நேரங்களில் நேரியல் சுற்றுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இருப்பினும் மின்னதிர்வு கலக்கிகள், அலைமாற்றிகள் போன்றவற்றில் இவை நேரியல் அல்லாத தன்மையைக் கொண்டுள்ளன. அண்மைக்கால சுற்றுக்களில் முழுமையும் அலைமருவி சுற்றுக்கள் காணப்படுவதில்லை. பெரும்பாலும் எண்மச் சுற்றுக்களே காணப்படுகின்றன.சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே அலைமருவி முறையில் அமைக்கப்படுகின்றன; இவை கலப்பு மின்சுற்றுக்கள் எனப்படுகின்றன. எண்ணிம மின்சுற்றுக்கள் எண்மருவி சுற்றுக்களில் மின்னழுத்தம் பலதனித்தனி மதிப்புகளில் இருக்கும். காட்டாக, 1 வோல்ட், 1.5 வோல்ட், 2 வோல்ட் என்று பயன்படுத்தப்படும். இவற்றிற்கு இடையேயான 1.25 வோல்ட் போன்றவை இருக்காது. பூலியன் ஏரணம் என்ற கணிதவகையின் நிகழ் சார்பாள அமைப்பாக இவை விளங்குகின்றன. அனைத்து எண்ணிம கணினிகளும் இந்த ஏரணத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. பல எண்ணிம மின்சுற்றுக்கள் ஈரியல் எண்முறையில் இரண்டு மின்னழுத்த நிலைகளுடன், "0" மற்றும் "1" இயங்குகின்றன. பெரும்பாலும் ஏரணம் "0" கீழ்நிலை மின்னழுத்தமாகவும் ( "தாழ்" எனப்படும்) ஏரணம் "1" உயர்நிலை மின்னழுத்தமாகவும் ( "உயர்" எனப்படும்) உள்ளது. கணினிகள், இலத்திரனிய கைக்கடியாரங்கள், நிரலேற்பு தருக்கக் கட்டுப்படுத்திகள் எண்ணிம முறை மின்சுற்றுக்களைக் கொண்டு உருவாக்கப்படுவன ஆகும். எண்ணிமச் சுற்றதரின் கட்டமைப்புக் கூறுகள்: தருக்க அல்லது அளவையியல் வாயில்கள் கூட்டிகள் Flip-flopகள் எண்ணிகள் செயலாக்கப் பதிவகங்கள் பன்மைப்படுத்திகள் சுகிமிடு தொடங்கிகள் எண்ணிம உயர்நிலை ஒருங்கிணைப்புக் கருவிகள்: நுண்செயலிகள் நுண்கட்டுபடுத்திகள் சிறப்புப் பயன்பட்டு ஒருங்கிணைந்த சுற்றதர்கள் (ASIC) எண்ணிமக் குறிகைச் செயலாக்கி (DSP) கள நிரலாக்க வாயில் அணிகள் (FPGA) வெப்பச் சிதர்வும் மேலாண்மையும் இவற்றையும் பாக்க இலத்திரனியல் கலைச்சொற்கள் மின்காந்தவியல் தலைப்புகள் பட்டியல் மேற்கோள்கள் பகுப்பு:மின்னணுவியல்
மலேசியா
https://ta.wikipedia.org/wiki/மலேசியா
மலேசியா (மலாய்: Malaysia; ஆங்கிலம்: Malaysia) ( ); என்பது தென்கிழக்காசியாவில் கூட்டாட்சி; அரசியல்சட்ட முடியாட்சி கொண்ட ஒரு நாடாகும். 13 மாநிலங்களையும்; மூன்று நடுவண் மண்டலங்களையும் கொண்டுள்ளது. மலேசியத் தீபகற்பம், கிழக்கு மலேசியா (மலேசிய போர்னியோ) என இரண்டு பிராந்தியங்களாக, தென்சீனக் கடலினால் பிரிக்கப்பட்டு உள்ளது. மலேசியத் தீபகற்பத்தின் வடக்கே தாய்லாந்து நாட்டுடன் நிலம்; கடல் எல்லைகளையும்; தெற்கே சிங்கப்பூர்; வடகிழக்கே வியட்நாம்; மேற்கே இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடல் எல்லைகளையும் கொண்டுள்ளது. மலேசியாவின் கிழக்கு மலேசியா பகுதி; புரூணை, இந்தோனேசியா நாடுகளுடன் நில, மற்றும் கடல் எல்லைகளையும்; பிலிப்பீன்சு, வியட்நாம் நாடுகளுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது. பொது மலேசியாவின் தலைநகரம்; மற்றும் மலேசியாவின் மிகப்பெரிய நகரம் கோலாலம்பூர் ஆகும். புத்ராஜெயா நடுவண் அரசின் நிருவாகத் தலைநகரம் ஆகும். 32 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டுள்ள மலேசியா உலகின் 44-வது மக்கள் அடர்த்தி கொண்ட நாடாகும். ஐரோவாசியா கண்டத்தின் தென்முனையான தஞ்சோங் பியாய் மலேசியாவில் தான் அமைந்து உள்ளது. வெப்ப வலயத்தில் அமைந்துள்ள மலேசியா 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான மலேசியாவில் இனப் பெருக்க உயிரினங்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. மலேசியாவின் மொத்த பரப்பளவு 329,847 சதுர கிலோமீட்டர்கள் (127,350 சதுர மைல்கள்). மக்கள் தொகை 32 மில்லியன் தீபகற்ப மலேசியாவின் மக்கள் தொகை மட்டும் 20 மில்லியன். தற்போது மலேசியாவின் மக்கள் தொகை 3.2 கோடி. இவர்களில் பெரும்பான்மையினர் மலாய் மக்கள். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாம் சமயத்தைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாம் மதம் மலேசியாவின் தேசிய சமயம் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும். 1957-ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றது. மலேசியாவின் மாமன்னரை யாங் டி பெர்துவான் அகோங் என்று அழைக்கிறார்கள். இப்போது பகாங் மாநிலத்தின் ஆறாவது மன்னர் சுல்தான் அப்துல்லா மாமன்னராக உள்ளார். இருபதாம் நூற்றாண்டில் கூடுதலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடுகளின் பட்டியலில், மலேசியா இரண்டாவது இடம் பிடித்தது. வரலாறு வரலாற்றுக்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தைய காலச் சான்றுகள் மலேசியாவில் அதிகமாகக் கிடைத்து இருக்கின்றன. 2 இலட்சம் வருடங்களுக்கு முந்தைய கல்லாயுதங்கள் புக்கிட் சாவாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மலேசியாவின் சரவாக்கில் அமைந்துள்ள நியா குகைகளில் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எச்சங்கள் காணப் படுகின்றன. பூர்வகுடி செமாங்கு இனத்தவர்களின் மூதாதையர்கள் சுமார் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆப்பிரிக்கர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மலேசியத் தீபகற்பத்தின் மிக முந்தைய எலும்புக் கூடான பேராக் மனிதன் எலும்புக்கூடு; 11000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இது லெங்கோங் எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப காலம் கி.மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்த வணிகர்களும் குடியேற்றக்காரர்களும் வணிகத் துறைமுகங்களையும் நகரங்களையும் உருவாக்கினர். பிற்பகுதியில் மலேசியா சிறீ விசயப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது. 11ஆம் நூற்றாண்டில் சோழ அரசன் இராசேந்திர சோழன் கடாரம் எனப்படும் இடத்தைப் போரில் வென்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன. அடுத்த 20 வருடங்களில் சுமத்திரா மற்றும் மலாயாத் தீபகற்பத்தில் சோழர்களால் தொடர்ச்சியான படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சோழர்களின் வருகையும் போர்களும் சிறீ விசய ஆட்சியை வலுவிழக்கச் செய்தது. சுல்தான்கள் பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலிருந்து பல்வேறு சுல்தான்கள் ஆட்சி புரிந்தார்கள். சிறீ விசயப் பேரரசின் இளவரசனான பரமேசுவரா மலாயாத் தீபகற்பத்தின் முதல் சுதந்திர இராச்சியமாகக் கருதப்படும் மலாக்கா சுல்தானகத்தை நிறுவினார். இக்கால கட்டத்தில் இசுலாமிய சமயம் தீவிரமாகப் பரவியது. மேலும் இக்காலப் பகுதியில் மலாக்கா முக்கிய வாணிப மையமாகவும் விளங்கியது. ஐரோப்பிய குடியேற்ற ஆட்சிகள் 1511-ஆம் ஆண்டில் மலாக்கா போர்த்துக்கீசர் வசமானது. பின் 1641-ஆம் ஆண்டில் இடச்சுக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. 1786-ஆம் ஆண்டில் கெடாவின் சுல்தான் பினாங்கைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிக்கு குத்தகைக்குக் கொடுத்தார். இதனால் பிரித்தானியப் பேரரசு மலாயாவில் காலூன்றியது. பிரித்தானியர் 1819-ஆம் ஆண்டில் சிங்கப்பூரைக் கைப்பற்றினர்ர். மேலும் 1824-ஆம் ஆண்டில் ஆங்கில-இடச்சு ஒப்பந்தப்படி மலாக்காவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 1826-ஆம் ஆண்டில் பிரித்தானியர் பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர், இலபுவான் தீவுகள் ஆகியவற்றை நேரடியாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் அவற்றைத் தமது முடிக்குரிய குடியேற்ற நாடாக்கினர். இரண்டாம் உலகப்போரின் போது 1943–1945 வரை சப்பான் ஆட்சி செலுத்தியது. இந்தக் காலப் பகுதியில் இனப் பிரச்சினைகள் உருவாகியதோடு தேசியவாதமும் மேலோங்கியது. போருக்குப்பின் மீண்டும் பிரித்தானியா அதிகாரத்திற்கு வந்தது. மேலும் பிரித்தானியா மலாயாவின் நிருவாகத்தை ஒருங்கிணைத்து அதனை மலாயாக் கூட்டமைப்பு என்ற ஒரே முடிக்குரிய குடியேற்ற நாடாக்கியது. எனினும் மலாயர் இதனை எதிர்த்தனர். மேலும் மலாயாப் பொதுவுடைமைக் (கம்யூனிசு) கட்சியின் எஸ்.ஏ.கனபதி, பி.வீரசேனன் போன்றவர்கள் தலைமையில் ஒன்றிணைந்த போராளிகள் பிரித்தானியப் படைகளுக்கு எதிராகக் கொரில்லாப் போர் தொடுத்தனர். சமகாலம் 1957 ஆகத்து 31 அன்று விடுதலை அடைந்த மலேசியா 1963ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது. 1965-ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகியது. 1969-ஆம் ஆண்டு நடந்த இனக் கலவரத்திற்குப் பிறகு பூமிபுத்திரா எனப்படும் பூர்வகுடிமக்களுக்கு பொருளாதார வளர்ச்சியில் சம பங்கு வழங்கும் நோக்கோடு ஆராய்ச்சிக்குட்பட்ட புதிய பொருளாதார கொள்கை கொண்டுவரப்பட்டது. அண்மைய காலங்களில் சிறுபான்மை இந்தியர்கள் தாங்கள் புறக்கணிக்கப் படுவதாகக் கூறிப் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 2007; பிப்பரவரி 2008 ஆகியக் காலக் கட்டங்களில் பெருந்திரளான இந்தியர் மக்கள் ஒன்றுகூடிப் போராட்டம் செய்தனர். அப்போது காவல் துறையினரால் கண்ணீர் புகை குண்டு வீசிக் கலைக்கப் பட்டனர். ஆட்சி பிரிவுகள் 300px|center|thumb|மலேசியாவின் மாகாணங்கள் மலேசியா 13 மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டாட்சிப் பகுதிகளின் கூட்டமைப்பாகும். இவை இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தீபகற்ப மலேசியாவில் 11 மாநிலங்களும் இரண்டு கூட்டாட்சிப் பகுதிகளும் கிழக்கு மலேசியாவில் இரண்டு மாநிலங்களும் ஒரு கூட்டாட்சிப் பகுதியும் உள்ளன. மாநிலங்களின் ஆளுகை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் கூட்டாட்சிப் பகுதிகளின் நிர்வாகத்தையும் மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறது. 13 மாநிலங்களும் வரலாற்று முறையான மலாய் இராச்சியங்களை மையமாகக் கொண்டவை. தீபகற்ப மலேசியாவிலுள்ள 11 மாநிலங்களில் 9 மாநிலங்கள், அவற்றின் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்படுகின்றன. அவை மலாய் மாநிலங்கள் எனவும் அறியப் படுகின்றன. ஒன்பது ஆட்சியாளர்களின் மன்றத்தில் இருந்து ஒரு மாமன்னர் தேர்ந்து எடுக்கப் படுகிறார். ஐந்தாண்டுகளுக்கு மாமன்னராகச் சேவையாற்றுகிறார். ஒவ்வொரு மாநிலமும் மாநிலச் சட்டமன்றம் எனப்படும் ஒற்றைச் சபையைக் கொண்டுள்ளன. கிழக்கு மலேசியா மாநிலங்கள் கிழக்கு மலேசியாவில் உள்ள மாநிலங்கள் (சபா மற்றும் சரவாக்); தமக்கு எனத் தனியான குடிவரவுக் கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன. இதன்படி மலேசியாவின் ஏனைய பகுதிகள்(தீபகற்ப மலேசியா) குடிவரவுச் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் மேலும் முக்கிம்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சபாவிலும் சரவாக்கிலும் மாவட்டங்கள், பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. எல்லா மாநிலங்களுக்கும் சீரான நீதியை வழங்குவதற்காக மலேசிய நாடாளுமன்றம் நிலம், இஸ்லாமிய சமயம், உள்ளூராட்சி போன்ற பிரிவுகளில் எழும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. மேலும் மாநிலம் ஒன்றின் வேண்டுகோளின் பேரில் அந்த மாநில நிர்வாகத்தில் தலையீடு செய்யவும், மலேசிய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. சில நிலம் தொடர்பான சட்டங்களைத் தவிர, மாநிலங்களுக்குள் நிகழும் பிரச்சினைகளை அந்த மாநிலங்களே கவனித்துக் கொள்கின்றன. நாட்டின் சட்டத்துக்கு அமைவாக, இஸ்லாமிய மதம் தொடர்பற்ற பிரச்சினைகள் மலேசிய ஒப்பந்தத்தைப் பேணும் வகையில் தேசிய மட்டத்திலேயே நிர்வகிக்கப் படுகின்றன. புவியியல் thumb|alt=A view from Low's peak, with a smaller peak to the right of the photo, with forested mountains in the background|கினபாலு மலையின் மிக உயரமான சிகரம், லோ சிகரத்திலிருந்து காட்சி மலேசியா 3,29,847 சதுர கிலோமீட்டர்கள் மொத்த நிலப்பரப்பைக் கொண்டு 67வது பெரிய நாடாக விளங்குகிறது. இதனுடன் நில எல்லைகளை மேற்கு மலேசியாவில் தாய்லாந்தும் கிழக்கு மலேசியாவில் இந்தோனேசியாவும் புருணையும் பகிர்கின்றன. சிங்கப்பூருடன் ஒரு குறுகிய தரைப் பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. கடல்சார் எல்லையை வியட்நாமுடனும் பிலிப்பைன்சுடனும் பகிர்கிறது. நில எல்லைகள் பெரும்பாலும் பெர்லிசு ஆறு, கோலோக் ஆறு மற்றும் பகலயன் கால்வாய் போன்ற புவியிடக் கூறுக்களால் வரையறுக்கப் பட்டுள்ளன. ஆனால் கடல்சார் எல்லைகள் இன்றும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. சரவாக் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் புருணை மலேசியாவினால் முழுதும் சூழப்பட்டுள்ளது. ஆசிய நிலப் பகுதியிலும் மலாய் தீவுக் கூட்டங்களிலும் ஆட்சிப்பகுதி கொண்ட ஒரே நாடாக மலேசியா இலங்குகிறது. ஜொகூர் மாநிலத்தின் தெற்குக் கடைசியில் உள்ள தஞ்சோங் பியாய், ஆசியாக் கண்டத்தின் தெற்கு முனையாக உள்ளது. சுமாத்திராவிற்கும் மலேசியத் தீபகற்பத்திற்கும் இடையில் உள்ள உலகின் 40 சதவீத சரக்குகள் செல்லும் மலாக்கா நீரிணை உலக வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. பொருளியல் மலேசியா பொதுவாகத் திறநிலை மற்றும் அரசுசார் பொருளாதார நாடாகவும் புதியதாகத் தொழில்மயமான சந்தைப் பொருளாதார நாடாகவும் விளங்குகிறது. பொருளியல் செயல்பாடுகளில் பேரளவு பொருளாதாரத் திட்டங்கள்மூலம் முக்கிய பங்காற்றும் அரசு தனது பங்காற்றலை படிப்படியாகக் குறைத்து வருகிறது. ஆசிய நாடுகளில் சிறந்த பொருளியல் தரவுக் கூற்றுகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ள மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1957 முதல் 2005 வரை ஆண்டுக்கு ஏறத்தாழ 6.5 % உயர்ந்து வந்துள்ளது. 2010இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்க டாலரில் $414,400 பில்லியனாக இருந்தது; இது ஆசியான் நாடுகளில் 3-வது மிகப்பெரிய மதிப்பாகும். உலகளவில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 29வதாக உள்ளது. மக்கள் தொகையியல் 2010 கணக்கெடுப்பின்படி மலேசிய மக்கள் தொகை 28,334,135 ஆகும். இது உலகளவில் 43-ஆவது மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக அறியப்பட்டுள்ளது. இந்நாட்டில் பல இனக் குழுக்கள் வாழ்கின்றன. மலாய் இனக் குழுவினர் 50.4 % விழுக்காடும், மலாய் இனம் அல்லாத மற்ற பூமிபுத்திராக்கள் 11 விழுக்காடும் உள்ளனர். மலேசிய சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர். அவர்கள் மலாய் இனப் பண்பாட்டைப் பின்பற்றுபவர்கள். மலாய் இன மக்களே மலேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்துபவர்கள். பூமிபுத்திரா என்ற தகுதி மலாய் இனம் அல்லாத தாய், கெமர், சாம் மக்களுக்கும் சபா, சரவாக் மாநிலப் பழங்குடி மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சரவாக் மாநில மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர். பூமிபுத்திராக்கள் சபா மாநிலத்தில் மூன்றுக்கு இரண்டு பேர் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர். மலேசிய தீபகற்பத்தில் தொல்குடி மக்கள் சிறிய அளவில் வாழ்கிறார்கள். யார் பூமிபுத்திரா என்பதை வரையறுக்கும் சட்டம் மாநிலத்துக் மாநிலம் வேறுபடும். மலேசியா மக்கள் தொகையில் சீன வம்சாவளியினர் 23.7 விழுக்காடும்; இந்திய வம்சாவளியினர் 7.1 விழுக்காடும் உள்ளனர். இவர்களுக்குப் பூமிபுத்திரர்கள் என்ற தகுதி கிடையாது. சீனர்கள் மலேசிய வணிகத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர். 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவாரியான இந்தியர்கள் மலேசியாவுக்கு பிரித்தானியர்களால் தோட்ட வேலை செய்ய அழைத்து வரப்பட்டனர் . இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர் மலேசியாவில் பிறந்தால் மட்டும் ஒருவர் மலேசியக் குடியுரிமை பெற முடியாது. வெளிநாட்டில் இருந்தாலும் இரண்டு மலேசியர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்படும். மலேசியா இரட்டை குடியுரிமை வழங்குவதில்லை . கிழக்கு மலேசியா மற்றும் மேற்கு மலேசியாவில் இருப்பவர்களுக்குக் குடியுரிமையில் சிறிய வேறுபாடு உண்டு. இது குடி நுழைவு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. சமயம் thumb|alt=The wooden Kampung Laut mosque with its minaret and an onion-shaped dome on its tiled roof.|18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கோட பாருவில் கட்டப்பட்ட பள்ளிவாசலே மலேசியாவில் மிகவும் பழையதாகும் மலேசிய நாட்டின் அதிகாரபூர்வமான சமயமாக இசுலாம் இருந்தபோதிலும் மற்ற சமயங்களை சுதந்திரமாகப் பின்பற்றச் சட்டம் அனுமதிக்கிறது. தோராயமாக 61.3% பேர் இசுலாம் சமயத்தையும் 19.8% பேர் புத்த சமயத்தையும் 9.2% பேர் கிறித்தவ சமயத்தையும் 6.3% பேர் இந்து சமயத்தையும் 1.3 பேர் தாவோ சமயம், கன்பூசிய சமயம் மற்ற சீன சமயங்களையும் 0.7% பேர் எச் சமயத்தையும் சாராதவர்களாகவும் 1.4% பேர் மற்ற சமயங்களைப் பின்பற்றுவர்களாகவும் உள்ளனர் . சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர் . 2010 மக்கள் தொகை கணக்கின் படி சீன வம்சத்தவர்களில் 83.6% பேர் பௌத்த சமயத்தையும் 3.4 % பேர் தாவோ சமயத்தையும் 11.1% பேர் கிறுத்துவ சமயத்தையும் சிறிய அளவில் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். இந்திய வம்சத்தவர்களில் 86.2% பேர் இந்து சமயத்தையும் 6.0% பேர் கிறுத்துவ சமயத்தையும் 4.1% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். மலாய் இனம் அல்லாத பூமிபுத்திரர்களில் 46.5% பேர் கிறுத்துவ சமயத்தையும் 40.4% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள் . முசுலிம்களின் சமயம் தொடர்பான சிக்கல்களைச் சரியா நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன. குறிப்பாக மணமுறிவு, திருமணம், வாரிசு உரிமை, மத மாற்றம், மதத்திலிருந்து விலகல் போன்றவற்றை அது விசாரிக்கும். குற்ற வழக்குகளும் உரிமையியல் குடிசார் வழக்குகளும் இதன் வரம்புக்குள் வராது. முசுலிம் அல்லாதவர்களின் சிக்கல்கள் சரியா நீதிமன்ற வரம்புக்குள் வராது. உரிமையியல் நீதிமன்றங்கள் இசுலாம் தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் அவற்றைச் சரியா நீதிமன்றங்களிடம் அனுப்பிவிடும் . மொழி மலேசியாவின் அதிகாரப்பூர்வ மொழி மலேசிய மொழி ஆகும். இது மலாய் மொழியின் தரப்படுத்தப்பட்ட வடிவமாகும். ஆங்கிலம் நிர்வாக மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. 1969-இல் நடந்த கலவரத்துக்குப் பின் மலேசிய மொழி முதன்மைப்படுத்தப்பட்டது . ஆங்கிலம் இரண்டாவது மொழியாகத் தொடர்ந்து உள்ளது. பொதுப் பள்ளிக்கூடங்களில் கணிதம், அறிவியல் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது . பிரித்தானிய ஆங்கிலத்திலிருந்து தருவிக்கப்பட்ட மலேசிய ஆங்கிலம் வணிகத்தில் பெரும்பாலும் பயன்படுத்தபடுகிறது. மேங்கிலிசும் வணிகத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேங்கிலிசு என்பது மலாய், சீனம், தமிழ் கலந்த கொச்சைபடுத்தப்பட்ட ஆங்கிலம் ஆகும் . மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன இவற்றில் தீபகற்ப மலேசியாவில் 41 மொழிகள் பேசப்படுகின்றன. கிழக்கு மலேசியாவில் உள்ள பழங்குடியின மக்கள் மலாய் மொழி அல்லாத தங்களின் மொழியைப் பேசுகின்றனர். இதை எளிதில் மலாய் அல்ல என்பதை உணரமுடியும். சரவாக் மாநில மக்கள் இபான் மொழியையும் சபா மக்கள் டுசுனிக் மொழியையும் பேசுகின்றனர் . மலேசியாவிலுள்ள சீனர்கள் தென் சீனத்தின் பல வட்டார மொழிகளைப் பேசுகின்றனர். கண்டோனீசு, மாண்டரின், ஓக்கியன், கேசிய மொழி போன்றவை. தமிழர்கள் தமிழ் பேசுகின்றனர். தமிழர்களே இங்குள்ள இந்தியர்களில் பெரும்பான்மையினர் ஆவர். இவர்கள் மலேசியத் தமிழர் என்று அறியப் படுகின்றனர். பண்பாடு thumb|180px|upright|alt=A cook making Murtabak, a type of pancake, in an outdoor stall. He is pictured leaning over his custom-made flattened wok filled with pieces of murtabak.|கோலாலம்பூரில் சமையற்காரர் முட்டைகள், இறைச்சி மற்றும் வெங்காயத் துண்டுகள் கலந்த முர்டாபாக் எனப்படும் ஒருவகை தோசையைச் சுடும் காட்சி. thumb|220px|alt=A cook making Char Kuey Teow, a type of flat noodles fried with fish cakes, cockles and bean sprouts.| தட்டை நூடுல்களுடன் மீன் கேக், கிளிஞ்சல்கள், முளைவிட்ட பீன்சு ஆகியவற்றை வறுத்துச் சமைக்கப்படும் சார் குவே டியோவ் மலேசியாவில் மிகவும் பரவலானது. மலேசியாவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த, பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மற்றும் பல்வேறு மொழிபேசும் மக்கள் உள்ளனர். இப்பகுதியின் துவக்கநிலை பண்பாடு இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள், இங்கு இடம் பெயர்ந்த மலாய் இனத்தவரால் உருவானது. வெளிநாட்டு வணிகம் துவங்கிய வரலாற்றுக் காலத்திலேயே சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்பட்டன. பாரசீகர், அராபியர் மற்றும் பிரித்தானியர் பண்பாட்டுத் தாக்கங்களைப் பின்னதாக உள்வாங்கியது. அரசமைப்பு, சமூக உடன்பாடு போன்றவை காரணமாக இனச் சிறுபான்மையினரின் பண்பாடு தன்வயமாகவில்லை. 1971இல் மலேசிய அரசு "தேசிய பண்பாட்டுக் கொள்கை"யை அறிவித்தது; இதன்படி மலேசியப் பண்பாடு பழங்குடியினரின் பண்பாட்டின்படி அமையும் என்றும் பிற பண்பாடுகளிலிருந்து பொருத்தமானக் கூறுகளை உள்வாங்கும் என்றும் இசுலாம் பெரும் பங்கு வகிக்கும் என்றும் வரையறுத்தது. மேலும் மலாய் மொழியே மற்ற மொழிகளை விடப் பரப்பப்படும் எனக் கூறியது. இவ்வாறான அரசின் தலையீட்டை மலாய் அல்லாத சிறுபான்மையினர் தங்கள் பண்பாட்டுச் சுதந்தரத்தைக் குறைப்பதாக எதிர்த்தனர். சீனர்களின் சங்கங்களும் இந்தியச் சங்கங்களும் தங்கள் எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் மனு ஒன்றை அளித்தனர். மலேசியாவிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே (குறிப்பாக இந்தோனேசியா) பண்பாட்டுச் சண்டைகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் ஒன்றையொத்த பாரம்பரியமும் வழைமையான பழக்கங்களும் உள்ளன. இருப்பினும் உணவுப் பொருள்களிலிருந்து மலேசியாவின் நாட்டுப்பண் வரை பல பிணக்குகள் எழுந்துள்ளன. இந்தப் பிணக்குகளைக் குறைக்க இரு நாட்டு அரசுகளும் பலமுறை முயன்றுள்ளன. மலேசியப் புலி மலேசியாவின் தேசிய விலங்காகும். விளையாட்டு மலேசியாவில் பரவலாக விளையாடப் படுபவையாகக் காற்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம், பௌல்ஸ், டென்னிசு, ஸ்குவாஷ், தற்காப்புக் கலைகள், குதிரையேற்றம், பாய்மரப் படகோட்டம், மற்றும் ஸ்கேட் பலகையோட்டம் ஆகியன . இறகுப்பந்தாட்ட போட்டிகள் பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன; 1948-ஆம் ஆண்டு முதல் தாமசு கோப்பையைத் தக்க வைத்துள்ள மூன்று நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது. மலேசிய புல்தரை பௌல்ஸ் கூட்டமைப்பு 1997-இல் பதிவு செய்யப்பட்டது. பிரித்தானிய படைத்துறை அதிகாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாஷ் விளையாட்டில் முதல் போட்டி 1939-இல் நடத்தப்பட்டது. ஸ்குவாஷ் பந்தடி மட்டைச் சங்கம் சூன் 25, 1972இல் உருவானது. மலேசியா தென்கிழக்கு ஆசியாவிற்கான ஓர் கால்பந்துக் கூட்டிணைவைப் பரிந்துரைத்துள்ளது. ஆகத்து 2010-இல் மலேசியாவின் ஆடவர் வளைதடிப் பந்தாட்ட அணி உலகத் தரவரிசையில் 15வதாக இருந்தது. கோலாலம்பூரில் உள்ள மெர்டெக்கா விளையாட்டரங்கில் வளைதடிப் பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் மூன்றாவது மற்றும் பத்தாவது போட்டிகள் நடத்தப்பட்டன. மலேசியாவில் பார்முலா 1 தடம்– செபாங் பன்னாட்டு சுற்றுகை உள்ளது. தொலைவுள்ள இச்சுற்றுகையில் முதல் கிராண்ட் ப்ரீ போட்டி 1999இல் நடந்தது. thumb|left|மலேசியாவின் பார்முலா 1 தடம், செபாங் பன்னாட்டு சுற்றுகை. 1953-இல் உருவான மலேயா ஒலிம்பிக் குழுவிற்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அங்கீகாரம் 1954-இல் கிடைத்தது. மலேசியா 1956 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்றது. 1964-இல் இக்குழுவிற்கு மலேசியா ஒலிம்பிக் குழு என மறுபெயரிடப்பட்டது. தொடங்கிய காலத்திலிருந்து ஒன்றைத் தவிர அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. 1972-ஆம் ஆண்டில் மியூனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு மிக உயர்ந்தளவில் பங்கேற்பாளர்களை(57) அனுப்பி உள்ளது. மலேசிய போட்டியாளர்கள் ஒலிம்பிக்கில் இதுவரை நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்; இவை அனைத்துமே இறகுப்பந்தாட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுநலவாய விளையாட்டுக்களில் 1950 முதல் மலாயா என்றும் 1966 முதல் மலேசியா என்றும் பங்கெடுத்து வந்துள்ளது. 1998-இல் இந்த விளையாட்டுக்கள் கோலாலம்பூரில் நடத்தப்பட்டன. தற்காப்புக் கலைகளில் மலேசியாவில் சிலாட் மற்றும் டோமோய் என்னும் இரு வகைகள் பயிலப்படுகின்றன. ஊடகம் மலேசியாவின் முதன்மை செய்தித்தாள்கள் அரசுடமை அல்லது ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகளின் உடமையாக உள்ளன. இருப்பினும் சில பெரிய எதிர்க்கட்சிகளும் நாளிதழ்களின் உரிமையாளர்களாக உள்ளனர். நாட்டின் இரு பகுதிகளிலிருந்து வெளியாகும் ஊடகங்களிடையே பிளவு உள்ளது. தீபகற்ப ஊடகங்கள் கிழக்குப் பகுதி செய்திகளுக்குக் குறைந்த முன்னுரிமை வழங்குகின்றனர்; அப்பகுதியை தீபகற்ப மலேசியாவின் குடியேற்றப் பகுதியாகக் காண்கின்றனர். மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே வளரும் சிக்கல்களுக்கு ஊடகங்கள் குறை சொல்லப் படுகின்றன. இந்தோனேசியர்களைக் குறித்து தாழ்வான கருத்து நிலவவும் அவர்களே காரணமாக்கப் படுகின்றனர். மலேசியாவில் மலாய், சீனம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் வெளியாகின்றன. ஊடகச் சுதந்திரம் மிகக் குறைவாக உள்ள காரணத்தால் அரசிற்கு பொறுப்புடைமை குறைவாக உள்ளது. அரசு தேர்தல்களுக்கு முன்னர் எதிர்கட்சி நாளிதழ்களை அடக்க முயன்றுள்ளது. 2007-இல் எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சுக்களை ஒளிபரப்ப வேண்டாமென்று அனைத்து தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டன; இதனை எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சி கண்டித்துள்ளது. சபாவில் ஒன்றைத் தவிர அனைத்து நாளிதழ்களும் தனியார் வசமுள்ளன. இப்பகுதியே மலேசியாவில் மிகவும் சுதந்திரமான ஊடகங்கள் இருக்குமிடமாகும். அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம் போன்றவை கருத்துச் சுதந்திரத்திற்கு தடங்கலாக இருப்பதாகச் சுட்டப்படுகிறது. உள்கட்டமைப்பு thumb|left|alt=A dual highway with greenery on either side|வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, மலேசியா மலேசியாவின் உள்கட்டமைப்பு ஆசிய நாடுகளிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. 4.7 மில்லியன் நிலைத்த இடத் தொலைபேசி இணைப்புகளையும் 30 மில்லியன் நகர்பேசி இணைப்புக்களையும் கொண்டுள்ள இதன் தொலைத்தொடர்பு பிணையம் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் உள்ளது. மலேசிய நாட்டில் ஏழு பன்னாட்டு வணிகம் புரியும் துறைமுகங்கள் உள்ளன; முக்கியமான துறைமுகமாகக் கிளாங் துறைமுகம் உள்ளது. 200 தொழிற் பேட்டைகளும் டெக்னாலஜி பார்க், மலேசியா மற்றும் குலிம் ஹ-டெக் பார்க் போன்ற சிறப்பு கட்டமைப்புக்களும் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கின்றன. 95% மக்களுக்குத் தூய குடிநீர் வழங்கப்படுகிறது. குடிமைவாத காலங்களில் பொருளியல் தாக்கமுள்ள நகரங்களிலும் பாதுகாப்பிற்கு வழிகோலும் இடங்களிலுமே மேம்பாட்டு கட்டமைப்புக்கள் உருவாகியிருந்தன. விடுதலைக்குப் பின்னதாக ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியைக் குவியப்படுத்தி வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்ட போதும் அவை இன்னமும் தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை விடப் பின்தங்கி உள்ளன. தொலைத்தொடர்பு சேவைகளும் நகரப்பகுதிகளில் சிறப்பாக இருந்தபோதும் உள்நாட்டுப் பகுதிகளில் அணுக்கம் குறைவாகவே உள்ளது. மலேசியாவில் தொலைவிற்கு சாலைகள் இடப்பட்டுள்ளன; இவற்றில் தொலைவு விரைவுச் சாலைகளாகும். நாட்டின் மிக நீண்ட நெடுஞ்சாலையாக விளங்கும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தாய்லாந்தின் எல்லை முதல் சிங்கப்பூர் வரை தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவில் சாலைகள் நன்கு அமைக்கப்படவில்லை. தீபகற்ப மலேசியச் சாலைகளைப் போல் இல்லாது அவற்றின் தரமும் குறைந்த நிலையில் உள்ளன. மலேசியாவில் 38 நன்கு பேணப்பட்ட நிலையங்கள் உட்பட 118 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நாட்டின் அரசுசார் மலேசியா ஏயர்லைன்சுடன் மேலும் இரு வான்பயண சேவை நிறுவனங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வான்பயணச் சேவைகளை நல்குகின்றன. தொடர்வண்டிச் சேவைகள் அரசுமயமாக்கப்பட்டுள்ளது; தொலைவிற்கு சேவை அளிக்கின்றன. கோலாலம்பூர் போன்ற சில நகரங்களில் ஒப்புநோக்கில் குறைந்த செலவான உயரத்தில் செல்லும் இலகு தொடருந்து போக்குவரத்து அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. ஆசியான் விரைவுத் தொடருந்து (Asean Rail Express) கோலாலம்பூரை பாங்காக்குடன் இணைக்கும் தொடர்வண்டிச் சேவையாகும். இச்சேவை மூலம் எதிர்காலத்தில் சிங்கப்பூரையும் சீனாவையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வழமையாக, மலேசியாவின் ஆற்றல் உற்பத்தி பாறைஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பியே உள்ளது. நாட்டின் மின் உற்பத்தித் திறன் 13 GW ஆக உள்ளது. இன்னமும் 33 ஆண்டுகளுக்கான இயற்கை எரிவாயு இருப்பும் 19 ஆண்டுகளுக்கான எண்ணெய் இருப்புமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆற்றல் வளங்களைப் பயன்படுத்த அரசு முயன்று வருகிறது. 16 சதவீதம் நீர்மின்நிலையங்கள் மூலமும் மற்ற 84 சதவீதம் அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அரசுடமை நிறுவனமான பெட்ரோனாசு பெரும்பங்கு வகிக்கிறது. மின்சார ஆணையம் சட்டம், 2001இன்படி மலேசிய ஆற்றல் ஆணையம் (Energy Commission of Malaysia) தீபகற்ப மற்றும் சாபாவில் ஆற்றல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி வருகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மலேசிய அரச இணையத்தளம் பிரதம மந்திரியின் இணையத்தளம் Department of Statistics Malaysia என்சைக்கிளோபீடியா பிரித்தானிக்காவில் மலேசியா பகுப்பு:தென்கிழக்கு ஆசிய நாடுகள் பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
தொழிற்றுறை
https://ta.wikipedia.org/wiki/தொழிற்றுறை
thumb|தொழிற்துறை thumb|எஸ்தோனியாவிலுள்ள ஒரு சீமெந்துத் தொழிற்சாலை தொழிற்றுறை (industry) என்பது கிடைக்கும் வள ஆதாரங்களுக்கேற்ப மனிதர்கள் ஈடுபடும் பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றிய துறை ஆகும். புவியில் மனிதர்களின் தொழிலைப் பல்வேறு இடங்களில் கிடைக்கும் வள ஆதாரங்களே தீர்மானிக்கின்றன. அவற்றுள் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், சுரங்கத்தொழில், உதிரிப் பாகங்களை ஒன்றிணைத்தல், வணிகம் போன்ற பல தொழில்கள் அடங்கும். இத்தகைய தொழில்களால் மனிதர்கள் பயனை அடைகின்றனர். எனவே, இத்தகைய மனிதர்களின் நடவடிக்கைகள் பொருளாதார நடவடிக்கைகள் என அழைக்கப்படுகின்றன. பொருளாதார உற்பத்தியின் ஒரு பகுதியாகும். பல தொழிற்றுறைகளில் இலாபம் ஈட்டுவதற்கு முன் பெருமளவு பண முதலீடு தேவைப்படுகின்றது. மென்பொருள், ஆய்வு போன்ற துறைகளில் அறிவும் திறனும் முதலீடாகப் பயன்படுகின்றன. தொழிற்றுறைகளை வகைப்படுத்தல் தொழில்களை அவற்றின் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் முதல் நிலைத்தொழில்கள் இரண்டாம் நிலைத்தொழில்கள் மூன்றாம் நிலைத்தொழில்கள் நான்காம் நிலைத்தொழில்கள் ஐந்தாம் நிலைத்தொழில்கள் என வகைப்படுத்தலாம். முதன்மைத் தொழில் முதன்மைத்தொழில்களில் மனிதர்கள் இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து செயல்படுவர். இவற்றை பழைமையான தொழில்கள் என அழைக்கலாம். இத்தொழில்களில் ஈடுபடுபவர்களை " சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் " ( Red collar workers) என அழைக்கிறோம். உணவு சேகரித்தல் வேட்டையாடுதல் மரம் வெட்டுதல் வேளாண்மை மீன்பிடிப்பு சுரங்கத் தொழில் காடுகள் பராமரிப்பு இரண்டாம்நிலை தொழில் மனிதர்கள் மூலப்பொருள்களை உற்பத்தி முறைகளுக்கு உட்படுத்தி அவற்றை முடிவுற்ற பொருளாக மாற்றுவதன் மூலம் மூலப்பொருள்களின் பயன்பாட்டினையும், மதிப்பினையும் பெருக்குகின்றனர். இந்த உற்பத்தித் தொழில்கள் இரண்டாம் நிலைத்தொழில்கள் என அழைக்கப்படுகின்றன. இரண்டாம் நிலைத்தொழில் புரியும் பணியாளர்கள் "நீல கழுத்துப்பட்டை தொழிலாளர்கள்" (Blue collar workers) என அழைக்கப்படுகின்றனர். உற்பத்தி கட்டுமானம் மூன்றாம் நிலைத் தொழில் இரண்டாம் நிலைத் தொழில்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் தொழில்கள் மூன்றாம் நிலைத் தொழில்கள் ஆகும். தொழில்நுட்பத்தில் சிறப்பு மிக்க தொழில்நுட்பப் பணியாளர்களும், வங்கிப் பணியாளர்களும் மூன்றாம் நிலைத் தொழில் புரிவோர் ஆவர். இவர்கள் "வெளிர் சிவப்புக் கழுத்துப்பட்டைப் பணியாளர்கள்" ( pink collar workers ) என அழைக்கப்படுகின்றனர். வணிகம் போக்குவரத்து தகவல் தொடர்பு சேவைகள் நான்காம் நிலைத் தொழில் தனித்தன்மை கொண்ட சூழல்களில் பணிபுரிவோர் நான்காம் நிலைத்தொழிலாளர்கள் என அழைக்கப்படுவர். பொதுவாக இத்தொழில்கள் நகரங்களில் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் வெள்ளை கழுத்துப்பட்டை தொழிலாளர்கள் (White collar workers ) என அழைக்கப்படுகிறார்கள். மருத்துவம் சட்டம் கல்வி பொழுது போக்கு கேளிக்கை நிர்வாகம் ஆய்வு மற்றும் வளர்ச்சி ஐந்தாம் நிலைத்தொழில் ஆலோசனை வழங்குவோர் மற்றும் திட்டமிடுவோர் போன்ற உயர் நிலையில் உள்ளவர்கள் இவ்வகையில் அடங்குவர். இவர்கள் தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் ( Gold collar workers )என அழைக்கப்படுவர். அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள தீர்மானிக்கும் திறன் கொண்ட அறிவுரை வழங்குவோர்]] சட்டப்பூர்வமான அதிகாரிகள் (நீதிபதி) வளர்ந்து வரும் நாடுகளில் முதல் மற்றும் இரண்டாம் நிலைத் தொழில்களிலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நிலைத்தொழில்களிலும் மக்கள் ஈடுபடுகின்றனர். வரலாறு தொழில்துறை, தொழிற்புரட்சியின் போது, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் முக்கிய துறையாக உருவானது. இது முந்தைய வணிக, நிலப்பிரபுத்துவப் பொருளாதார முறைமைகளைப் பல்வேறு விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் நிலைகுலைய வைத்தது. நீராவி இயந்திரங்கள், மின்தறிகள், உருக்கு நிலக்கரி பெரும்படித் தயாரிப்பு, என்பன இவ்வாறான தொழில்நுட்பங்களுள் சிலவாகும். இரயில் பாதைகளும், நீராவிக் கப்பல்களும், முந்திய காலங்களில் நினைத்துப்பார்க்க முடியாத அளவு தூரத்திலிருந்தது. உலகம் தழுவிய சந்தை வாய்ப்புக்களை ஒருங்கிணைத்ததால், தனியார் நிறுவனங்கள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு எண்ணிக்கையிலும், செல்வத்திலும் வளர்ச்சியடைந்தன. தொழிற்புரட்சிக்குப் பின்னர், உலகப் பொருளாதார உற்பத்தியின் மூன்றிலொரு பங்கு அளவு, தொழில் துறையிலிருந்தே பெறப்பட்டது. இது விவசாயத்துக்கான உற்பத்திப் பங்கை விடக் குறைவானதாகும். ஆனால், இப்பொழுது சேவைத் துறையின் பங்கு, தொழில் துறையின் பங்கிலும் அதிகமாகும். சமூகம் ஒரு தொழில்துறை சமூகத்தைப் பல வழிகளில் வரையறுக்க முடியும். இன்று, தொழிற்துறை பெரும்பாலான சமூகங்கள் மற்றும் நாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. ஒரு அரசாங்கமானது தொழில்துறை வேலை வாய்ப்பு, தொழில்துறை மாசடைதல், நிதி மற்றும் தொழில்துறைத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும், தொழில்துறைக் கொள்கைகள் சிலவற்றைக் கொண்டிருக்க வேண்டும். தொழில்துறைத் தொழிலாளர் ஒரு தொழில்துறை சமுதாயத்தில், தொழிற்துறைத் தொழிலாளர்கள் முழு அங்கத்தவர்களில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளனர். இது உற்பத்தி துறையிலும் பொதுவாகக் காணப்படுகின்றது. தொழிலாளர் சங்கம் என்பது சம்பளம், வேலைசெய்யும் மணிநேரம், மற்றும் வேலை நிலைமைகள் போன்ற முக்கிய பகுதிகளில் பொதுவான இலக்குகளைக் கொண்டுள்ள தொழிலாளர்களின் அமைப்பாகும். ஊதிய உழைப்பு ஊதிய உழைப்பு (அமெரிக்க ஆங்கிலத்தில் wage labor) ஒரு தொழிலாளி மற்றும் ஒரு முதலாளிக்கு இடையேயான சமூக பொருளாதார உறவு ஆகும், அங்கு தொழிலாளி தனது உழைப்பு சக்தியை முறையான அல்லது முறைசாரா வேலை ஒப்பந்தத்தில் விற்கிறார். : "All labor contracts were/are designed legally to bind a worker in one way or another to fulfill the labor obligations the worker has undertaken. That is one of the principal purposes of labor contracts." இந்த பரிவர்த்தனைகள் பொதுவாக தொழிலாளர் சந்தையில் நிகழும் ஊதியங்கள் சந்தை தீர்மானிக்கப்படுகின்றன. ., defines wage labour succinctly as "the labour of the worker who sells his own labour-power." செலுத்தப்பட்ட ஊதியங்களுக்கு ஈடாக, வேலை தயாரிப்பு பொதுவாக அமெரிக்காவில் உள்ள அறிவுசார் சொத்துரிமை காப்புரிமைகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளைத் தவிர்த்து, கண்டுபிடிப்பிற்காக தனிப்பட்ட முறையில் பொறுப்பாளியாக பொறுப்பேற்கப்பட்ட காப்புரிமை உரிமைகள் வழக்கமாக வழங்கப்படும். ஒரு கூலித் தொழிலாளி என்பது ஒரு நபர், இதன் மூலம் அவரது உழைப்பு சக்தியை விற்பதன் மூலம் வருமானம் முதன்மையானதாக இருக்கிறது. வகைகள் சம்பள உழைப்பின் மிகவும் பொதுவான வடிவம் தற்பொழுது நேரடி அல்லது முழுநேரமாக வேலை (உழைப்பு) உள்ளது.இது ஒரு வேலையாள் தனது வேலைக்கு ஒரு காலவரையற்ற காலம் (ஒரு சில ஆண்டுகளில் இருந்து தொழிலாளி முழு வாழ்க்கை வரை),பணம் சம்பளம் அல்லது சம்பளத்திற்காகவும், பொதுவாக ஒப்பந்த தொழில்லாளர்கள் அல்லது பிற ஒழுங்கற்ற பணியாளர்களிடமிருந்தும் பணியமர்த்தியுடனான தொடர்ச்சியான உறவுக்கு பதிலாக விற்கும் வேலை அல்லது உழைப்பு.இருப்பினும், ஊதிய உழைப்பு பல வேறு வடிவங்களை எடுத்துக் கொள்கிறது, மற்றும் வெளிப்படையான (அதாவது உள்ளூர் தொழிலாளர் மற்றும் வரிச் சட்டத்தால் நிர்வகிக்கப்படும்) போன்ற வெளிப்படையான ஒப்பந்தங்கள் அசாதாரணமானது அல்ல. பொருளாதார வரலாறு பல்வேறு வகையான வழிகளைக் காட்டுகிறது, இதில் தொழிலாளர் வர்த்தகம் மற்றும் பரிமாற்றம் செய்யப்படுகிறது வேறுபாடுகள் பின்வரும் வடிவத்தில் காண்பிக்கப்படுகின்றன: வேலைவாய்ப்பு நிலை - ஒரு தொழிலாளி முழுநேர, பகுதி நேர அல்லது ஒரு சாதாரண அடிப்படையில் வேலை செய்ய முடியும். ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்காக அல்லது ஒரு நிரந்தர அடிப்படையில் மட்டுமே அவர் தற்காலிகமாக வேலை செய்ய முடியும். பகுதிநேர ஊதிய உழைப்பு பகுதி நேர சுயாதீனத்துடன் இணைந்திருக்கலாம். தொழிலாளி ஒரு பயிற்சி தொழிலாளியாகவும் பயன்படுத்தப்படலாம். சிவில் (சட்ட) நிலை - தொழிலாளி உதாரணமாக ஒரு இலவச குடிமகன், ஒரு ஒப்பந்தத் தொழிலாளர், கட்டாய உழைப்பு (சில சிறைச்சாலை அல்லது இராணுவ உழைப்பு உட்பட);ஒரு தொழிலாளி அரசியல் அதிகாரிகளால் ஒரு பணிக்காக நியமிக்கப்படுவார், அவர்கள் ஒரு அடிமை அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் பணியமர்த்தப்பட்ட நிலத்திற்கு அடிமை கட்டப்படுகிறது.எனவே, உழைப்பு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தன்னார்வ அடிப்படையில் அல்லது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இல்லாத நிலையில், இதில் பல தரநிலைகள் உள்ளன. பணம் செலுத்தும் முறை (ஊதியம் அல்லது இழப்பீடு)- வேலை செய்யப்படும் பணம் (பணம்-ஊதியம்) அல்லது "வகையான" (பொருட்கள் மற்றும் / அல்லது சேவைகளை பெற்றுக் கொள்வதன் மூலம்) அல்லது " துண்டுகள்" வடிவத்தில், ஊதியம் தொழிலாளி உற்பத்தியை நேரடியாக சார்ந்துள்ளது. பணியமர்த்தல் முறை- தொழிலாளி தனது சொந்த முயற்சியில் தொழிலாளர் ஒப்பந்தத்தில் ஈடுபடலாம், அல்லது அவர் ஒரு குழுவின் பகுதியாக தமது பணியை அமர்த்தலாம். ஆனால் அவர் அல்லது அவள் ஒரு மூன்றாம் தரப்பினருக்கு (ஒரு வேலைவாய்ப்பு நிறுவனம் போன்ற) ஒரு இடைத்தரகராக பணியாற்றலாம். இந்த வழக்கில், அவர் அல்லது அவர் இடைத்தரகர் பணம், ஆனால் இடைத்தரகர் செலுத்தும் ஒரு மூன்றாம் தரப்பு வேலை. சில சந்தர்ப்பங்களில், பல இடைத்தரகர்களுடனான, துணைக்குழுவில் பல முறை. இன்னொரு சாத்தியம் என்னவென்றால், தொழிலாளி ஒரு அரசியல் அதிகாரியால் பணிபுரிபவராகவோ அல்லது இடுகையிடப்படுவதிலோ அல்லது ஒரு நிறுவனம் ஒரு நிறுவனத்துடன் ஒன்றாக உற்பத்தி செய்வதற்கு ஒரு பணியாளரை பணியமர்த்துவதாக உள்ளது. விமர்சனங்கள் பல பொதுவுடைமைக்கார்கள் பார்வையில் கூலி தொழிலாளி வர்க்கத்தின் ஒரு அம்சமாக வரையறுக்கப்படவில்லை என்றால், நிறுவனத்தின் பெரும்பாலான எதிர்ப்பாளர்கள் தொழிலாளி சுய நிர்வகிப்பு மற்றும் பொருளாதார ஜனநாயகம் இருவரும் ஊதிய உழைப்புக்கும் முதலாளித்துவத்திற்கும் மாற்றுகளாக ஆதரிக்கின்றனர்.ஊதிய உழைப்பின் பெரும்பாலான எதிர்ப்பாளர்கள் உற்பத்தியின் முதலாளித்துவ உரிமையாளர்களை அதன் இருப்புக்காக குற்றம்சாட்டியுள்ள நிலையில், பெரும்பாலான அராஜகவாதிகள் மற்றும் பிற சுதந்திரவாத பொதுவுடைமைக்கார்கள் மாநிலத்திற்கு ஒரே ஒரு கருவியாக இருப்பதுடன், முதலாளித்துவவாதிகள் தங்களை மானியப்படுத்தி, உற்பத்தி முறையின் தனியார்மயமாக்கலின் தனியார் உடைமை நிறுவனத்தை பாதுகாக்கின்றன.இது ஒரு செல்வந்த உயரடுக்கின் மூலதனத்தை செறிவூட்ட அனுமதிக்காது. கூலி தொழிலாளர்கள் சில எதிர்ப்பாளர்கள் மார்க்சிச முன்மொழிவுகளிலிருந்து செல்வாக்கு செலுத்துகையில், பலர் தனியார் சொத்து எதிர்க்கிறார்கள், ஆனால் [[தனிப்பட்ட சொத்துக்களுக்கு] மரியாதை காட்ட வேண்டியுள்ளது. அதேபோல், வேதியியல் பொருளாதாரம் இல் உள்ள பல அறிஞர்கள், ஊதிய உழைப்பு மீது மிகுந்த கவனம் செலுத்துகின்றனர், பெரும்பாலான ஆண்கள் வேலைக்கு பணம் செலுத்துகின்றனர், பெரும்பாலான பெண்களுக்கு வேலை கிடைக்காத நிலையில், விரிவான ஆய்வுகள் காட்டியுள்ளன. https://www.bls.gov/tus/ இந்தத் துறையில் உள்ள அறிஞர்கள், செலுத்தப்படாத பெண்களின் வேலைகள் பொருளாதார மதிப்பின் உற்பத்தியையும், சமூக இருப்புக்கான இனப்பெருக்கம் மற்றும் உற்பத்திக்கு ஆதரவளிப்பதையும் வாதிடுகின்றன. name = "(Hartmann, 1979)" http://journals.sagepub.com/doi/abs/10.1177/030981687900800102 உலகில் தொழில்துறையின் பரம்பல் தொழில்மயமழிதல் வரலாற்றில், வெவ்வேறு பொருளியல் காரணிகளினால், உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் குறைந்தோ அல்லது அழிவடைந்தோ போய்விடுகின்றன. ஈடுசெய்யும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுவதனாலோ, அல்லது மேம்பாட்டில் ஏற்படும் போட்டியில் தோற்றுப் போவதனாலோ இது நிகழக்கூடும். eடுத்துக் காட்டாக தானுந்துkஅள் அதிகளவில் உற்பத்தியாகத் தொடங்கியது, குதிரை வண்டிகளின் உற்பத்தி குறைந்து போனது. தொழில்துறை உற்பத்தியின் அடிப்படையில் நாடுகள் பட்டியல் மேற்கோள்கள் பகுப்பு:தொழிற்துறை
உயிரியல்
https://ta.wikipedia.org/wiki/உயிரியல்
alt=microscopic view of E. Coli|135pxalt=a Thompson's Gazelle in profile facing right|140pxalt=a Goliath beetle facing up with white stripes on carapace|135pxalt=A tree fern unrolling a new frond|140px உயிரியல், வாழும் உயிரிகளைப் பற்றிய அறிவியல்புலம் ஆகும். மேலே: ஈ. கோலி குச்சுயிரியும் கசெல்லேவும் கீழே: கோலியாத் வண்டும் பெரணி மரமும் thumb|300px|உயிரியல் உயிரியல் என்பது வாழ்க்கை மற்றும் உயிரினங்கள் பற்றிய இயற்கை அறிவியலாகும். உயிரியலில் அனைத்து உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு அல்லது படிமலர்ச்சி, பரம்பல், உயிரியல் வகைப்பாடு போன்றவை ஆராயப்படுகின்றன.Based on The Free Dictionary The Free DictionaryBased on definition from Aquarena Wetlands Project glossary of terms. . இப்புலம் உயிரினங்களுடைய இயல்புகளையும் நடத்தைகளையும், எப்படி தனிப்பட்ட உயிரினங்களும், உயிரின இனங்களும், தோற்றம் பெற்றன என்பதையும் அவை தங்களுக்குள்ளும், ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகளையும் பற்றிக் கருத்தில் கொள்கிறது. உயிரியலின் வரலாறு நவீன உயிரியல் ஒப்பீட்டளவில் சமீபத்திய வளர்ச்சி அடைந்து இருப்பினும், உயிரியலை உள்ளடக்கியதும் அதனுடன் தொடர்பானதுமான அறிவியல் தொல்பழங்காலத்தில் இருந்தே கற்கப்பட்டது. இயற்கை தத்துவம் மொசப்பத்தேமிய, எகிப்திய, சிந்துவெளி, சீன நாகரிகங்களில் இருந்தே கற்கப்பட்டது. இருப்பினும், நவீன உயிரியலும் இயற்கை ஆய்வும் அதன் அணுகுமுறை தோற்றம் என்பன பெரும்பாலும் பண்டைய கிரேக்க இயற்கை மெய்யியலோடு பெரிதும் தொடர்பு கொண்டுள்ளமை தெளிவாகிறது. அதேவேளை மருத்துவ முறையான கல்வி இப்பொகிரேட்டசு (Hippocrates) காலம் (கி.மு.460-கி.மு.370) வரை பின்னோக்கி செல்கிறது. அரிஸ்டாடில் உயிரியல் வளர்ச்சிக்கு மிகவும் பங்களித்துள்ளார். இடைக்கால இசுலாமிய உலக அறிஞர்களான அல்-சாகிசுவும் (al-Jahiz) (781–869), அல்-தினவாரும் (Al-Dinawari) (828–896) தாவரவியல் பற்றியும் , இராசெசு (Rhazes) (865–925) உடற்கூறியல் பற்றியும் உடலியங்கியல் பற்றியும் நூல்களை எழுதினர். குறிப்பாக கிரேக்க மெய்யியல் அறிவு மரபுகளை ஆய்வு செய்த இஸ்லாமிய அறிஞர்களால் மருத்துவம் சிறப்பாக கற்கப்பட்டது. அந்தோனி வான் இலியூவன்கோக் (Antony van Leeuwenhoek) நுண்ணோக்கியை மேம்படுத்திய பின் உயிரியல் விரைவில் விரிவாக வளரத் தொடங்கியது. இதன் பின்னரே விந்தணுக்களும் பாக்டீரியா எனும் குச்சுயிரியும் நுண்ணோக்கி அங்கிகளின் பாகுபாடும் கண்டுபிடிக்கப்பட்டன. நுண் நோக்கியியல் முன்னேற்றங்கள் உயிரியல் சிந்தனையில் மேலும் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உயிரியலாளர்கள் பலர் உயிர்க்கலத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினர். 1838 மற்றும் 1839 இல், செல்டியனும் சுவானும் பின்வரும் கருத்துக்களை ஊக்குவிக்கத் தொடங்கினர். 1) உயிரினங்களின் அடிப்படை அலகு உயிர்க்கலம் ஆகும் 2) தனிப்பட்ட உயிர்க்கலங்களில் வாழ்வின் அனைத்து பண்புகளும் உண்டு 3) அனைத்து உயிர்க்கலங்கள் மற்ற உயிர்க்கலங்களின் பகுப்பில் இருந்தே உருவாகின்றன. இவை பின்னர் உயிர்க்கலக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டன . உயிரியல் புலங்கள் உயிரியல் ஒரு பரந்த அளவிலான, தனித்தனித் துறைகளாகக் கருதப்படுகின்ற, பல்வேறு கல்வித் துறைகளை உள்ளடக்கிய ஒன்றாகும். அவையனைத்தும் ஒட்டுமொத்தமாகப் பல படிநிலை மட்டங்களில் உயிரினங்கள் பற்றியும், அவை வாழும் சூழல் பற்றியும் ஆய்வு செய்வதோடு, உயிரின வகைகளும் அவற்றை ஆயும் சிறப்பு முறைகள் பற்றியும் கூட ஆய்வு செகின்றன. உயிரினங்களுள் நிகழும் வேதியியல் வினைகள் பற்றிய கற்கைத்துறை உயிர்வேதியியல் ஆகும். உயிரியல் மூலக்கூறுகளின் சிக்கலான ஊடாட்டங்களினை குறித்த ஆய்வு மூலக்கூற்று உயிரியல் ஆகும். அனைத்து உயிர்களின் அடிப்படை அலகான உயிரணு எனும் உயிர்க்கலம் பற்றிய அறிவியல் உயிரணு உயிரியல் அல்லது உயிர்க்கல உயிரியல் எனப்படுகிறது. இழையம் அல்லது திசுக்களின் இயற்பியல், வேதியியல் செயல்பாடுகளைப் பற்றிய அறிவியல் உடலியங்கியல் ஆகும். உயிரினங்களின் உடலின் அமைப்புப் பற்றிய கற்கை உடற்கூற்றியல் ஆகும். அதுவே இழையங்கள் மட்ட ஆய்வு இழையவியல் ஆகும். உயிரிகளில் இழையம், உறுப்புகள், உறுப்புகள் இணைந்த தொகுதிகள் ஆகியவற்றில் நிகழும் இயற்பியல், வேதியியல் தொழிற்பாடுகள் பற்றிய அறிவு உடலியங்கியல் ஆகும். தனி உயிரினத்தின் தோற்றமும், வளர்ச்சியும் (Ontogeny) பற்றிய அறிவு வளர்ச்சி உயிரியல் (Developemental Biology) ஆகும். பல தலைமுறைகளுக்கு இடையிலான பரம்பரை அல்லது கால்வழித் தொடர்புகள் பற்றிய அறிவு மரபியல் ஆகும். விலங்குகளின் நடத்தைகள் பற்றிய அறிவு நடத்தையியல் ஆகும். முழு மக்கள்தொகை மட்டத்தில் மக்கள்தொகை மரபியல் ஊடாகவும், பல்வகை உயிரினங்களில், பல தலைமுறைகளூடாகவும் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய ஆய்வு படிமலர்ச்சி உயிரியல் ஆகும். அதன் வழியாக உயிரினப் பன்மையையும் உயிரினங்களை வகைப்படுத்தலையும் பற்றிய ஆய்வு உயிரியல் வகைப்பாடு ஆகும். புவிக்கு அப்பாலுள்ள உயிர்கள் மட்டத்திலான ஆய்வு புறவெளி உயிரியல் ஆகும். உயிரிகளுக்கும் அதன் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவுகள் பற்றிய ஆய்வு சூழலியல் ஆகும். இவ்வாறே, மேலும் பல கற்கைத்துறைகளின் ஊடாக, உயிரியல் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகின்றது. நவீன உயிரியலின் அடிப்படைகள் உயிரியலில் பல கோட்பாடுகள் இருந்தாலும், நவீன உயிரியலுக்கு அடிப்படையாக முதன்மை வாய்ந்த ஐந்து கோட்பாடுகள் கீழே கருதப்படுகின்றன: கலக்கோட்பாடு - உயிர்க்கலங்களுடன் தொடர்புடைய அனைத்துக் கற்கைகளும் கலக்கோட்பாட்டில் அடங்கும். அனைத்து உயிரினங்களும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவகை உயிர்க்கலங்களைக் கொண்டிருக்கும். உயிரிகளின் கட்டமைப்பு வகையிலும் தொழிற்பாட்டு வகையிலுமான அடிப்படை அலகு உயிர்க்கலமாகும். அனைத்து உயிர்க்கலங்களும் முதலிலுள்ள கலங்களிலிருந்தே தோன்றும். படிமலர்ச்சிக் கோட்பாடு - மரபணுவில் ஏற்படும் மாற்றங்களாலும், இயற்கைத் தேர்வினாலும், ஒரு மக்கள்தொகையின் மரபுபேற்றுப் பண்புகள் தலைமுறைக்குத் தலைமுறை மாற்றமடையும். இதனால் புதிய இனங்களும், பரம்பரையாகக் கடத்தப்படக்கூடிய இயல்புகளும் உருவாகின்றன என படிமலர்ச்சிக் கோட்பாடு கொள்கிறது. ஆற்றல் - அனைத்து உயிரினங்களின் நிலைப்பாட்டிற்கும் ஆற்றல் தேவைப்படுகின்றது. அந்த ஆற்றலை ஒரு வடிவத்தில் உள்ளெடுத்து, தமக்குத் தேவையான வடிவத்தில் உருமாற்றம் செய்துகொள்ளும் தன்மையை உயிரினங்கள் கொண்டிருக்கின்றன. அகநிலைப்புக் கோட்பாடு - அனைத்து உயிரினங்களும் தமது உடற்சூழலை நிலையாகவும், மாறாமலும் பேணிச் சீரமைக்கும் தன்மையைக் கொண்டிருக்கும் என அகநிலைப்புக் கோட்பாடு கொள்கிறது.. மரபனியல் கோட்பாடு – மரபன் எனும் மரபணுவே மரபுபேற்றுக்கான அடிப்படை அலகாகும் என மரபனியல் கோட்பாடு கருதுகிறது.. ஓர் உயிரினத்தின் பண்புகள் அனைத்தும் டி.என்.ஏ எனும் மரபனில் இருக்கும். உயிரியலில் படிநிலை அமைப்பு right|175px உயிரியல் அமைப்பானது, பல்வேறு படிநிலைகளில் ஒழுங்குபடுத்தப்படுகின்றது. வாழ்வின் மிக அடிப்படையான கூறிலிருந்து, சிக்கலான அமைப்புக்கள்வரை இந்தப் படிநிலைகள் விரிந்து செல்கின்றன. இந்தப் படிநிலைகளில் மிகவும் அடிப்படையான படிநிலையாக அணுவும், மிக உயர்ந்த படியாக சூழலியல் அமைப்பும் இருக்கின்றன. அணுவின் துணையான பகுதிகள் - இலத்திரன், நியூட்ரான், புரோட்டான் அணு - தனிமத்தின் இயல்புகளைத் தக்க வைத்திருக்கக்கூடிய, அதன் மிகச் சிறிய அலகு அணுவாகும். (எ.கா. ஐதரசன் அணு, ஆக்சிசன் அணு. மூலக்கூறு - ஒரு தனித்த தனிமத்தினதோ, அல்லது வேறுபட்ட தனிமங்களினதோ இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் இணைந்து உருவாகும் மிகச் சிறிய அலகு மூலக்கூறு ஆகும். எ.கா. இரு ஐதரசன் அணுக்களும் ஒரு ஆக்சிசன் அணுவும் இணைந்து நீர் மூலக்கூறு உருவாகும். பெருமூலக்கூறு - இவ்வாறு பல அணுக்கள் இணைந்து உருவாகும் பெரிய, சார்பில் அதிக மூலக்கூற்று நிறை கொண்ட, சிக்கலான மூலக்கூறுகள் பெருமூலக்கூறு எனப்படும். எ.கா. கருவமிலம், புரதம், காபோவைதரேட்டு, லிப்பிடு உயிர்க்கலம் - பல மூலக்கூறுகள் சேர்ந்து தன்னைத்தானே இனப்பெருக்கம் செய்து வாழக்கூடிய ஒரு சிறிய அலகை உருவாக்கும்போது, அந்த அலகு உயிரணு அல்லது உயிர்க்கலம் எனப்படும். உயிரணுவானது தனியாகவோ, அல்லது பல்கல உயிரினங்களின் ஒரு பகுதியாகவோ காணப்பட்டு உயிர்வாழக் கூடிய நிலையில் இருக்கும். இழையம் - ஒரே அமைப்பைக் கொண்ட பல உயிரணுக்கள் ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டிற்காக ஒன்றாக இணைந்து, ஒரு குழுவாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்போது, அது இழையம் அல்லது திசு எனப்படும். எ.கா. புறவணியிழையம், தசையிழையம். உறுப்பு - சில செயல்களைப் புரிவதற்காக பல வேறுபட்ட இழையங்கள் ஒன்றாக இணைந்து தொழிற்படும்போது, அது உறுப்பு எனப்படும். எ.கா. இதயம், நுரையீரல், கண் போன்ற உறுப்புக்களில் தசையிழையம், நரம்பிழையம் போன்ற வேறுபட்ட பல இழையங்கள் ஒன்றாக இணைந்து தொழிற்படும். தொகுதி - ஒரு குறிப்பிட்ட உடலியக்கச் செயற்பாட்டிற்காக பல உறுப்புக்கள் ஒன்றாக இணைந்து ஒரு குழுவாக இருக்கும்போது அது உடல் தொகுதி எனப்படும். எ.கா. மனிதர்களில் வாய், உணவுக்குழாய் (களம்), இரைப்பை, கணையம், கல்லீரல், பித்தப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலவாய் (குதம்) போன்ற உறுப்புக்கள் இணைந்து, மனித உடல் தொகுதிகளில் ஒன்றான, உடலின் சமிபாட்டுச் செயல்முறைக்கான சமிபாட்டுத்தொகுதியை உருவாக்கும். உயிரினம் - தனியான உயிரணுவைக் கொண்ட அல்லது பல உயிரணுக்களைக் கொண்ட தனித்து வாழக்கூடிய தனியன்களின் குழுமல் உயிரினம் எனப்படும். மக்கள்தொகை - ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் வாழும் ஒரு குறிப்பிட்ட இனத்தின் குழுவே மக்கள்தொகை எனப்படும். சமூகம் - ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் வாழும் வேறுபட்ட இனங்களின் மக்கள்தொகைகளைக் கூட்டாகச் சேர்த்து சமூகம் எனலாம். சூழல் மண்டலம் - ஒரு வரையறுக்கப்பட்ட இடத்தில் இருக்கும் ஒரு சமூகமும், அது சார்ந்திருக்கும் அனைத்து சூழலியல் காரணிகளும் இணைந்து சூழல்மண்டலம் எனப்படும். எ.கா. காடு, காட்டில் வாழும் விலங்குகள், தாவரங்கள், அங்கே ஒளி தரும் சூரியன், மண், நீர் அனைத்தும் இணைந்ததே சூழல்மண்டலம். உயிர்க்கோளம் - புவியில் உள்ள அனைத்து சூழல் மண்டலங்களும் இணைந்த தொகுப்பையே உயிர்க்கோளம் என்கின்றோம். உயிரியல் கிளைப்பிரிவுகள் பின்வருவன உயிரியலின் கிளைப்பிரிவுகள் ஆகும்: காற்றுயிரியல் – காற்றுவழி பிறக்கும் கரிமத் துகள்களைப் பற்றிய ஆய்வு வேளாண்மை – நடைமுறைப் பயன்பாடுகளுக்காக, பயிரிடலும் கால்நடை வளர்ப்பும் பற்றிய ஆய்வு உடற்கூற்றியல் – நிலைத்திணைகள் (தவரங்கள்), விலங்குகள், பிற உயிரிகள் குறிப்பாக மாந்தர்கள் ஆகியவற்ரின் வடிவமும் செயல்பாடும் பற்றிய ஆய்வு இழையவியல் – உயிர்க்கலங்கள், இழையங்களைப் (திசுக்கள்) பற்றிய ஆய்வு. இது உடற்கூற்றியலின் நுண்ணோக்கிவழி ஆய்வாகும். விண்ணுயிரியல் (புறவெளி உயிரியல், புறவெளித் தொல்லுயிரியல், உயிர்வானியல்) – புடவியில் உயிரின் படிமலர்ச்சி, பரவல், வருங்காலம் பற்றிய ஆய்வு உயிர்வேதியியல் – உயிர் நிலவவும் செயல்படவும் தேவைப்படும் உயிர்க்கல மட்ட வேதிவினைகளைப் பற்றிய ஆய்வு உயிரிப் பொறியியல் – the study of biology through the means of engineering with an emphasis on applied knowledge and especially related to biotechnology புவியுயிர்ப்பரப்பியல் – the study of the distribution of species spatially and temporally உயிரித் தகவலியல் – the use of information technology for the study, collection, and storage of genomic and other biological data உயிரின மொழியியல் – the study of the biology and evolution of language. கணித உயிரியல் (or Mathematical biology) – the quantitative or mathematical study of biological processes, with an emphasis on modeling உயிரியக்கவியல் – often considered a branch of medicine, the study of the mechanics of living beings, with an emphasis on applied use through prosthetics or orthotics உயிர்மருத்துவ ஆராய்ச்சி – the study of health and disease மருந்தியல் – the study and practical application of preparation, use, and effects of drugs and synthetic medicines உயிரிசையியல் – the study of music from a biological point of view. உயிரியற்பியல் – the study of biological processes through physics, by applying the theories and methods traditionally used in the physical sciences உயிர்சார் குறியியல் – the study of biological processes through semiotics, by applying the models of meaning-making and communication உயிரித் தொழினுட்பம் – the study of the manipulation of living matter, including genetic modification and synthetic biology தொகுப்புயிரியல் – research integrating biology and engineering; construction of biological functions not found in nature கட்டிட உயிரியல் – the study of the indoor living environment தாவரவியல் – the study of plants உயிர்க்கலவியல் – the study of the cell as a complete unit, and the molecular and chemical interactions that occur within a living cell அறிதல்சார் உயிரியல் – the study of cognition as a biological function பேணல் உயிரியல் – the study of the preservation, protection, or restoration of the natural environment, natural ecosystems, vegetation, and wildlife தாழ்வெப்ப உயிரியல் – the study of the effects of lower than normally preferred temperatures on living beings வளர்ச்சி உயிரியல் – the study of the processes through which an organism forms, from zygote to full structure கருவியல் – the study of the development of embryo (from fecundation to birth) சூழலியல் – the study of the interactions of living organisms with one another and with the non-living elements of their environment சுற்றுச்சூழல் உயிரியல் – the study of the natural world, as a whole or in a particular area, especially as affected by human activity கொள்ளை நோயியல் – a major component of public health research, studying factors affecting the health of populations படிமலர்ச்சி உயிரியல் – the study of the origin and descent of species over time மரபனியல் – the study of genes and heredity. புறமரபியல் – the study of heritable changes in gene expression or cellular phenotype caused by mechanisms other than changes in the underlying DNA sequence குருதியியல் (also known as Haematology) – the study of blood and blood-forming organs. தொகுநிலை உயிரியல் – the study of whole organisms நன்னீரியல் – the study of inland waters கடல் உயிரியல் (or Biological oceanography) – the study of ocean ecosystems, plants, animals, and other living beings நுண்ணுயிரியல் – the study of microscopic organisms (microorganisms) and their interactions with other living things குச்சுயிரியல் – the study of bacteria பூஞ்சையியல் – the study of fungi ஒட்டுண்ணியியல் – the study of parasites and parasitism நச்சுயிரியல் – the study of viruses and some other virus-like agents மூலக்கூற்று உயிரியல் – the study of biology and biological functions at the molecular level, some cross over with biochemistry மீநுண் உயிரியல் – the study of how nanotechnology can be used in biology, and the study of living organisms and parts on the nanoscale level of organization நரம்பியல் – the study of the nervous system, including anatomy, physiology and pathology மக்கள்தொகை உயிரியல் – the study of groups of conspecific organisms, including உயிர்த்திரள் சூழலியல் – the study of how population dynamics and extinction மக்கள்தொகை மரபனியல் – the study of changes in gene frequencies in populations of organisms தொல்லுயிரியல் – the study of fossils and sometimes geographic evidence of prehistoric life நோயியல் – the study of diseases, and the causes, processes, nature, and development of disease உடலியங்கியல் – the study of the functioning of living organisms and the organs and parts of living organisms Phytopathology – the study of plant diseases (also called Plant Pathology) உள உயிரியல் – the study of the biological bases of psychology குவைய உயிரியல் – the study of quantum mechanics to biological objects and problems. சமூக உயிரியல் – the study of the biological bases of sociology கட்டமைப்பு உயிரியல் – a branch of molecular biology, biochemistry, and biophysics concerned with the molecular structure of biological macromolecules விலங்கியல் – விலங்கின வகைபாடு,உடலியங்கியல், வளர்ச்சி, நடத்தை ஆகியவற்றைப் பற்றிய ஆய்வு . இதில் பின்வரும் புலங்கள் அடங்கும். நடத்தையியல் – விலங்கு நடத்தையைப் பற்றிய ஆய்வு பூச்சியியல் – பூச்சிகளைப் பற்றிய ஆய்வு ஊர்வனவியல் – ஊர்வன பற்றிய ஆய்வு and amphibians மீனியல் – மீன்களைப் பற்றிய ஆய்வு பாலூட்டியியல் – பாலூட்டிகளைப் பற்றிய ஆய்வு பறவையியல் – பறவைகளைப் பற்றிய ஆய்வு குருத்தணுவியல் ஆராய்ச்சிகளில் மனித நகலெடுப்பதற்கும், நோயாலோ அல்லது காயப்பட்டு சிதைந்து போவதாலோ அழியும் திசுக்களைத் திரும்ப வளரச் செய்வதற்கும், குருத்துத் திசுக்களை பயன்படுத்தலைப் பற்றி ஆராய்ந்து வருகிறார்கள். படங்களின் தொகுப்பு மேற்கோள்கள் பகுப்பு:உயிரியல் துறைச்சொற்கள்
கட்டிடம்
https://ta.wikipedia.org/wiki/கட்டிடம்
right|thumb|250px|சாவோ பாவுலோ - பிரசில் கட்டிடம் அல்லது கட்டடம் (Building) என்பது பல கூறுகளை இணைத்து உருவாக்கப்படும் ஒன்றாகும். மனிதனால் உருவாக்கப்படும் இது பெரும்பாலும் நிலத்துடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டிருக்கும். கட்டிடம் ஒரு தனிக் குடியிருப்பாளரை மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கூரை மட்டும் கொண்ட ஒரு குடிசையாகவோ அல்லது வெப்பநிலை, காற்றோட்டம், வெளிச்சம், வாயுக் கொள்ளளவு, பக்டீரியா நடமாட்டம், அமுக்கம், மக்கள் நடமாட்டம் மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வசதிகளைக் கொண்ட, சிக்கலான, மருத்துவ மனைகள் போன்ற கட்டிடங்களாகவோ இருக்கக்கூடும். சிக்கலான அமைப்புகளும், வசதிகளும் தேவைப்படும் கட்டிடங்கள், கட்டிடக்கலைஞர்கள், அமைப்புப் பொறியாளர்கள், கட்டிடச் சேவைகள் பொறியாளர்கள் உட்படப் பல்வேறு தொழில் வல்லுநர்களின் உதவியுடன் கட்டப்படுகின்றன. எனினும் வீடுகள் போன்ற சிறிய, எளிமையான கட்டிடங்களில் நிபுணர்களின் பங்களிப்புகள் குறைவாகவேயிருக்கும். வளர்ந்துவரும் நாடுகளில் மிகக் குறைந்த வீதமான மக்களே கட்டிடம் கட்டுவதற்குத் தொழில் நிபுணர்களின் பங்களிப்பை நாடுகின்றார்கள்.Building def. 2. Whitney, William Dwight, and Benjamin E. Smith. The Century dictionary and cyclopedia. vol. 1. New York: Century Co., 1901. 712. Print.Structure. def. 2. Merriam-Webster's dictionary of synonyms: a dictionary of discriminated synonyms with antonyms and analogous and contrasted words.. Springfield, Mass: Merriam-Webster, 1984. 787. Print. பொதுவாக எல்லா நாடுகளிலும் பெரு நகரப்பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்களில் உரிய நிபுணர்களின் பங்களிப்பு இன்றிக் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை அதற்குரிய அதிகாரம் பெற்ற நிறுவனங்களிலிருந்து பெறமுடியாது. கட்டிடம் கட்டப்படுகின்ற சூழல், உரிமையாளர்களின் நிதி நிலை, நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகள் என்பவற்றைப் பொறுத்துக் கட்டிடங்களில் கட்டிடப் பொருட்களின் பயன்பாடு அமைகின்றது. கட்டிடங்களின் வகைகள் கட்டிடங்கள் அவற்றின் அமைவிடம், பயன்பாடு, அமைப்பு, பயன்படுத்தும் கட்டுமான பொருள், ஆகியவற்றைப் பொருத்து பல வகைகளில் பிரிக்கப்படுகிறது . பயன்பாட்டை பொருத்து கட்டிடங்களின் வகைப்பாடு குடியிருப்பு கட்டிடங்கள் சட்டசபை கட்டிடங்கள் கல்விசார்ந்த கட்டிடங்கள் தொழில் சார்ந்த கட்டிடங்கள் சுமைதாங்கும் விதத்தை பொருத்து கட்டிடங்களின் வகைப்பாடு கட்டுமான பொருட்களை பொருத்து வகைப்பாடு வலுவூட்டப்பட்ட காங்கிறீற்று கட்டிடங்கள் இரும்புக் கட்டிடங்கள் கலவை கட்டிடங்கள் கட்டிட உறுப்புக்கள் ஒரு கட்டிடம் பல வகையான கட்டிடக் கூறுகள் சேர்ந்து அமைந்த ஒன்று. இத்தகைய கூறுகள் சிலவற்றைக் கீழேயுள்ள பட்டியல் காட்டுகின்றது. அத்திவாரம் சுவர் தூண் கதவு சாளரம் கூரை படிக்கட்டு விதானம் தரை பீடம் சாய்வுப் பாதைகள் கட்டமைப்பு சுமைகள் ஒரு கட்டிடமானது பலவகை சுமைகளுக்கு உட்படுகிறது . நிலைச்சுமைகள் சுமத்திய சுமைகள் காற்று சுமைகள் பனி சுமைகள் நிலஅதிர்வு சுமைகள் இவற்றையும் பார்க்கவும் ஒளியமைப்பு கட்டிடச் சக்தி மேலாண்மை முறைமை மேற்கோள்கள் பகுப்பு:கட்டிடக்கலை பகுப்பு:கட்டிடங்கள்
கட்டிடப் பொருள்
https://ta.wikipedia.org/wiki/கட்டிடப்_பொருள்
கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்கள் பொதுவாகக் கட்டிடப் பொருள்கள் என வழங்கப்படுகின்றன. பல்வேறு வகையான கட்டிடப் பொருட்கள் இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டிலுள்ளன. மிகப்பழைய காலத்தில் கட்டிடம் கட்டப்படும் இடங்களுக்கு அண்மையில் கிடைக்கக் கூடிய பொருட்களையே கட்டிடங்கள் கட்டப் பயன்படுத்தினார்கள். போக்குவரத்து வசதிகள் குறைந்த அக் காலத்தில், அரசர்களும், பெருந் தனவந்தர்களும் மட்டுமே தூர இடங்களிலிருந்து பொருட்களை எடுத்துவந்து கட்டிடங்களைக் கட்ட இயலும். பெரும்பான்மையான சாதாரண பொது மக்கள், தமது வாழிடங்களையும், பிற கட்டிடங்களையும் சூழலில் கிடைக்கக் கூடிய பொருட்களைப் பயன்படுத்தியே கட்டிக் கொண்டார்கள். காட்டுமரக் கிளைகள், இலைகுழைகள், புற்கள், கற்கள், மண், விலங்குகளின் தோல், ஏன் பனிக் கட்டிகள் கூடக் கட்டிடப் பொருட்களாகப் பயன்படுகின்றன. மேலே குறிப்பிட்ட பொருட்கள் மனிதர்கள் கட்டிடங்களைக் கட்டத் தொடங்கிய ஆரம்ப காலங்களிலேயே உபயோகத்திலிருந்தும், இன்றுவரை உலகின் பல பகுதிகளிலும் இவை உபயோகத்திலிருந்து வருகின்றன. முக்கியமான கட்டிடப் பொருள்கள் மண் சிறிய குடிசைகளை மட்டுமன்றிப் பெரும் நகரங்களையே கூட உருவாக்கிய பெருமை மண்ணுக்கு உண்டு. மண்ணால் கட்டப்படும் கட்டிடங்கள் நிரந்தரமானவையல்ல என்ற கருத்தே பொதுவாக நிலவினாலும், மண்ணால் கட்டப்பட்ட கட்டிடங்கள் பல ஆயிரக்கணக்கான வருடங்கள்கூட நிலைத்திருந்ததற்குச் சான்றுகள் உண்டு. பல நவீன கட்டிடப் பொருட்கள் போலன்றி, மண், புதுப்பிக்கப்படக்கூடியது. கட்டிடங்கள் அழிந்து போகும்போது மீண்டும் மண்ணுடனேயே கலந்துவிடக்கூடியது. கல் இயற்கையில் கிடைக்கும் பல்வேறு வகையான கற்கள் மிகப் பழங் காலத்திலிருந்தே கட்டடப் பொருளாகப் பயன்பட்டு வருகின்றது. சுண்ணாம்புக் கற்கள், மாபிள் கல், கருங்கல், மணற்கல் என்பவை இவற்றுள் முக்கியமானவை. நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டுமென விரும்பிய கட்டிடங்கள் இவ்வாறான ஏதாவதொரு கல்லைப் பயன்படுத்தியே கட்டப்பட்டன. மரம் தூண்கள், உத்தரங்கள், கூரைக்கான சட்டகங்கள், கதவுகள், யன்னல்கள், தளம், அலங்காரத்துக்குரிய கட்டிடக் கூறுகள் எனப் பலவாறாகக் கட்டிடங்களில் மரம் பயன்படுகின்றது.உலகின் பல பாகங்களில் மரம் இலகுவாகக் கிடைக்கக் கூடிய பொருளாக இருந்து வந்தது. இது ஒரு புதுப்பிக்கப்படக்கூடிய கட்டடப்பொருளுமாகும். எனினும், கட்டிடம் கட்டுதல், தளபாட உற்பத்தி, விறகு போன்ற பல்வேறு தேவைகளுக்காகவும், விவசாய விரிவாக்கம், நகராக்கம் என்பவற்றாலும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டமையால் மரம், பல நாடுகளில் ஒரு விலைகூடிய பொருளாக இருந்துவருகிறது. சுற்றுச் சூழல் காரணங்களுக்காகக் காடுகள் அழிவதைத் தடுக்கும் நோக்கிலும், பலத் தேவைகளுக்காகவும் மரத்துக்குப் பதிலாக வேறு கட்டிடப் பொருட்கள் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டிலுள்ளன. ஆனாலும் மரம் இன்றும் ஒரு முக்கியமான கட்டிடப் பொருளே. சுண்ணாம்பு சீமெந்து சீமைக்காரை அல்லது சீமெந்து என்பது மிக முக்கியமான கட்டுமான பொருளாகும் .இந்த சீமைக்காரையே கட்டுமானத்தின் அனைத்து வேலைப்பாடுகளிலும் முக்கியமானதாகும் காங்கிறீற்று இரும்பு உருக்கு கண்ணாடி பிளாஸ்ட்டிக்கு கண்ணாடியிழைப் பிளாஸ்ட்டிக்கு கண்ணாடியிழைக் காங்கிறீற்று இவற்றையும் பார்க்கவும் பசுமைக் கட்டிடப் பொருள் பகுப்பு:கட்டிடப் பொருட்கள் பகுப்பு:கட்டிடக்கலை
கண்ணாடி
https://ta.wikipedia.org/wiki/கண்ணாடி
thumb|மால்டவைட். இது பொகீமியாவில் விண்கல் தாக்கத்தினால் உருவான இயற்கைக் கண்ணாடி. thumb|இங்கிலாந்தின் வைசிலி கார்டன் என்னும் இடத்திலுள்ள நவீன பசுங்குடில் (greenhouse). மிதப்புக் கண்ணாடியால் ஆனது. thumb|right|தெளிவான கண்ணாடியாலான மின்விளக்கு கண்ணாடி என்று பொதுவாகக் குறிப்பிடும்போது இது, சாளரங்கள், போத்தல்கள், மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றின் உற்பத்தியில் பயன்படுவதும்; கடினத்தன்மை கொண்ட, உடையக்கூடிய, ஒளியை ஊடுசெல்ல விடக்கூடிய, பளிங்குருவற்ற திண்மமுமான பொருளொன்றைக் குறிக்கிறது. தொழில்நுட்ப அடிப்படையில், கண்ணாடி என்பது குளிர்ந்து பளிங்காகாமல் திண்மமாகிய கனிமப் பொருட் கலவை ஆகும். பெரும்பாலான கண்ணாடிகள் சிலிக்காவை முக்கிய கூறாகவும், கண்ணாடி உருவாக்கியாகவும் கொண்டுள்ளன. அறிவியல் அடிப்படையில் கண்ணாடி என்பது நெகிழிகள், பிசின்கள், பிற சிலிக்காவைக் கொண்டிராத பளிங்குருவற்ற திண்மங்கள் போன்ற எல்லாப் பளிங்குருவற்ற திண்மங்களையும் குறிக்கப் பயன்படுவதுண்டு. இது தவிர மரபு வழியான உருக்கும் நுட்பங்கள் தவிர்ந்த வேறு முறைகளையும் கவனத்துக்கு எடுத்துக் கொள்வது உண்டு. எனினும், கண்ணாடி அறிவியல் கனிம பளிங்குருவற்ற திண்மங்களை மட்டுமே உள்ளடக்குகின்றது. கரிம பளிங்குருவற்ற திண்மங்கள் பல்பகுதிய அறிவியல் துறையுள் அடங்கும். கண்ணாடி இன்று பல்வேறு அறிவியல் துறைகளிலும், தொழில் துறைகளிலும் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் ஒளியியல் இயல்புகளும், பிற இயற்பியல் இயல்புகளும் இதனைத் தட்டைக் கண்ணாடி, கொள்கலக் கண்ணாடி, ஒளியியல் மற்றும் ஒளிமின்னணுவியல் சார்ந்த பொருட்கள், சோதனைச்சாலைக் கருவிகள், வெப்பக்காவலிகள், வலிதாக்கல் கண்ணாடி இழைகள், கலைப் பொருட்கள் போன்றவற்றுக்கு உகந்த பொருளாக ஆக்குகின்றது. இது இன்று ஒரு முக்கியமான கட்டிடப் பொருளாக விளங்குகிறது. கண்ணாடி கிறித்துவுக்கு முன் 4000 ஆண்டுகளிலேயே அறியப்பட்டிருந்ததாகக் கருதப்படினும், கட்டிடப் பொருள் என்ற அளவில் இதன் பயன்பாடு 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. கடந்த நூற்றாண்டிலேயே இது பெருமளவு வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை அடைந்ததெனலாம். கண்ணாடி, இன்றைய கட்டிடங்களில், நவீனத்துவத்தின் பிரதிபலிப்பாக விளங்குகிறது. கண்ணாடியின் வரலாறு பண்டைக்கால எகிப்தின் அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபரணங்கள் செய்யப் பயன்பட்ட கண்ணாடி மணிகள் கிமு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையெனக் கருதப்படுகின்றது. சிலிக்காக் கலவையினால் செய்யப்பட்ட சிறு அச்சுகளை உருகிய கண்ணாடிக்குள் தோய்த்து சிறு கண்ணாடிக் குவளைகள் செய்யும் முறை கிமு 1500ஐ அண்மித்த ஆண்டுகளில் உபயோகத்திலிருந்ததும் அறியப்பட்டுள்ளது. நீண்ட குழாய்களை உருகிய கண்ணாடிக் குழம்பினுள் தோய்த்து ஊதுவதன் மூலம் பல்வேறு பொருட்களைச் செய்யும் முறை கிமு 3ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பபிலோனியாவில் கண்டுபிடிக்கப்பட்டதன் பின் கண்ணாடியில் பாத்திரங்கள் செய்வது இலகுவானது. thumb|சுவீடனில் உள்ள 1742 ஐச் சேர்ந்த மிகப் பழைய வாயால் ஊதிச் செய்யப்பட்ட சாளரக் கண்ணாடி. நடுவில் உள்ள அடையாளம் ஊதுபவரின் குழாயினால் ஏற்பட்டது. உரோமன் காலத்தைச் சேர்ந்த அரை அங்குலம் தடிப்புள்ள பெரிய கண்ணாடிப் பலகையொன்று அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எனினும் மேற்பரப்பைத் தேய்த்து அவற்றை ஒளிபுகவிடும் கண்ணாடியாக மாற்றும் முறையை அவர்கள் அறிந்திராததால் இவ்வாறான கண்ணாடித் தகடுகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை. 1700கள் வரை கண்ணாடித் தகடுகளைச் செய்யும் முறை வளர்ச்சிபெறவில்லை. 17 ஆம் நூற்றாண்டில், கண்ணாடிக் குழம்பை ஊதும் முறையைப் பயன்படுத்திச் சிறிய தகடுகளைச் செய்யும் முறையொன்றைப் பிரான்சு நாட்டில் உருவாக்கினார்கள். இதன்படி ஓரளவு பெரிதாக ஊதிய குமிழ்களை மீள இளகவைத்துச் சுழற்றுவதன் மூலம் வட்டமான கண்ணாடித் தகடுகள் உருவாகின. இவ்வாறு உருவாக்கப் பட்ட கண்ணாடித் தகடுகளே ஆரம்பகாலக் கண்ணாடி யன்னல்களில் பயன்படுத்தப்பட்டன. வட்டக் கண்ணாடிகளிலிருந்து சதுரமான அல்லது நீள்சதுரமான சிறிய தகடுகள் வெட்டப்பட்டன. கிடைக்கக் கூடிய கண்ணாடிகளின் அளவு சிறிதாக இருந்ததால் ஒரு யன்னலில் அல்லது கதவில் பல கண்ணாடித் தகடுகளைப் பொருத்தவேண்டியிருந்தது. இத்தகைய யன்னல்கள் இன்றும் "பிரெஞ்ச் யன்னல்"கள் என்றே அறியப்படுகின்றன. மேற்படி முறையில் செய்யப்பட்ட கண்ணாடிகள் அளவிற் சிறியனவாக இருந்தது மட்டுமன்றி, பல குறைபாடுகளையும் கொண்டிருந்தன. குமிழை ஊதும்போது குழாய் பிணைக்கப்பட்டிருந்த இடமும், சுழற்றியபோது ஏற்பட்ட மையப்பகுதியைச் சுற்றி உருவாகிய வளையம் வளையமான அடையாளங்களும் கண்ணாடித் தகடுகளில் காணப்பட்டன. இத்தகைய கண்ணாடிகளைத் தேய்த்து மட்டமாக்கும் முறை பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மட்டமான ஓரளவு தெளிவான கண்ணாடிகளை உருவாக்கக் கூடியதாக இருந்தது. ஆனாலும் இவற்றின் விலை சாதாரண மனிதருக்கு எட்டாத உயரத்திலேயே இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் முதற் காலாண்டில் முன்னரிலும் பெரிய கண்ணாடித் தகடுகளை உருவாக்கும், "உருளை முறை" என அறியப்பட்ட முறையொன்று பயன்பாட்டுக்கு வந்தது. இதிலும் ஊதலே அடிப்படையாக இருந்தாலும், குமிழை உதியபின் ஊசல் ஆடுவதுபோல் ஆட்டி நீளமான உருளைவடிவமாக ஆக்கப்பட்டது. இதனை இளக்கி இரண்டு அந்தங்களையும் வெட்டி நீக்கியபின்னர், நீளவாக்கில் வெட்டி விரிப்பதன் மூலம் தகடுகள் ஆக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட கண்ணாடித் தகடுகள் "உருளைக் கண்ணாடி"கள் எனப்பட்டன. பிரான்சில் முதலில் புழக்கத்துக்கு வந்த இம்முறை பிரித்தானியாவில் மேலும் விருத்தி செய்யப்பட்டது. இந்த முறையில் பிரித்தானியாவில் உற்பத்திசெய்யப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்தியே புகழ்பெற்ற பளிங்கு அரண்மனை எனப்படும் கண்காட்சிகளுக்கான கட்டிடம் 1851 இல் கட்டப்பட்டது. பின்னர் கண்ணாடி உற்பத்தி விரைவாக வளர்ச்சியடைந்தது. கண்ணாடியைச் சட்டகங்களில் உருக்கி வார்த்து உருளைகளால் உருட்டி மட்டமாக்கப்பட்டது. பின்னர் இரண்டு பக்கங்களையும் இயந்திரங்களிலிட்டுத் தேய்த்து மட்டமாக்கி, மினுக்கம் செய்யப்பட்டது. இது "பிளேட்" கண்ணாடி என வழங்கப்பட்டது. இதன் மூலம் ஓரளவு பெரிய கண்ணாடித் தகடுகளைச் செய்யக்கூடியதாக இருந்ததுடன், தெளிவான, நல்ல ஒளியியற் தன்மைகளுடன்கூடிய கண்ணாடிகளையும் பெறக்கூடியதாக இருந்தது. உருக்கப்பட்ட கண்ணாடியைக் கொண்ட தொட்டியிலிருந்து, பல்வேறு மட்டங்களில் அமைக்கப்பட்ட உருளைகளினூடு இழுப்பதன் மூலம் தொடர்ச்சியாகக் கண்ணாடியை உருவாக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட கண்ணாடி "இழுக்கப்பட்ட" கண்ணாடி எனப்பட்டது. இதன் மூலம் மிகவும் பெரிய கண்ணாடித் தகடுகளைச் செய்வது சாத்தியமானதெனினும், இதையும் தேய்த்து மட்டமாக்கவேண்டிய தேவை இருந்தது. 1960களின் ஆரம்பத்தில் இவ்வாறு தேய்த்து மட்டமாக்கவேண்டிய தேவையில்லாத கண்ணாடி உற்பத்திமுறையொன்று அறிமுகமானது. இது "மிதப்புக்" கண்ணாடி எனப்பட்டது. இதில் உருகிய கண்ணாடியை, உருகிய தகரத்தின் மீது மிதக்கவிடுவதன் மூலம் தொடர்ச்சியான மிகவும் நீளமான கண்ணாடித் தகடுகள் செய்யப்பட்டன. இந்த முறையில் கண்ணாடிகளின் இரண்டு பக்கங்களும் முதலிலேயே மட்டமாக இருப்பதனால் தேய்த்து மட்டமாக்கவேண்டிய தேவை கிடையாது. இது அறிமுகமானதிலிருந்து இன்றுவரை இதுவே கண்ணாடி உற்பத்தியின் நியமமாக இருந்துவருகின்றது. கண்ணாடி உற்பத்தி கண்ணாடி மூலப் பொருட்கள் thumb|கண்ணாடி உற்பத்திக்குப் பயன்படும் முக்கிய மூலப் பொருளான குவாட்ஸ் மணல் (சிலிக்கா). தூய சிலிக்கா (SiO2), 10 பசுக்கால் செக்கன் பாகுநிலையில், 2300 °ச (4200 °ப) "கண்ணாடி உருகு நிலை"யைக் கொண்டது. தூய சிலிக்கா சில சிறப்புக் கண்ணாடித் தேவைகளுக்குப் பயன்படுகின்றது. ஆனால், சிலிக்காவுடன் பிற பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் உற்பத்தி முறைகளை எளிமையாக்கலாம். இவற்றுள் சோடியம் காபனேட்டும் (Na2CO3) ஒன்று. இது சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடியில் உருகு நிலையை 1500 °ச (2700 °ப) க்குக் குறைக்கின்றது. ஆனாலும், இது கண்ணாடியை நீரில் கரையக் கூடியது ஆக்குகிறது. இது விருப்பத்துக்கு உரியது அல்ல என்பதால், சுண்ணாம்புக்கல்லில் இருந்து பெறப்படும் கல்சியம் ஒட்சைட்டு (CaO), சிறிதளவு மக்னீசியம் ஒட்சைட்டு (MgO), அலுமீனியம் ஒட்சைட்டு போன்றவற்றைச் சேர்ப்பதன் மூலம் வேதியியல் உறுதிப்பாடு பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் கண்ணாடி, நிறை அடிப்படையில் சுமார் 70 தொடக்கம் 74% சிலிக்காவைக் கொண்டிருக்கும். இது சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடி எனப்படும். உற்பத்தியாகும் கண்ணாடிகளில் 90% ஆனவை சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடிகள் ஆகும். சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடிகள் உட்படப் பொதுவாக உற்பத்தி செய்யப்படும் கண்ணாடிகளுக்கு அவற்றின் இயல்புகளை மாற்றுவதற்காக வேறும் பல பொருட்களைச் சேர்ப்பது உண்டு. ஈயப் பளிங்குக் கண்ணாடி அல்லது தீக்கண்ணாடி எனப்படும் ஈயக் கண்ணாடிகள் அவற்றின் கூடிய முறிவுக் குணகம் காரணமாகக் கூடுதலாக ஒளிர்கின்றன. போரான் (boron) சேர்ப்பதன் மூலம் கண்ணாடிகளின் வெப்ப இயல்புகள், மின்னியல்புகள் என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். பைரெக்ஸ் (Pyrex) எனப்படும் கண்ணாடி இத்தகையது. பேரியமும் கண்ணாடியின் முறிவுக் குணகத்தைக் கூட்டவல்லது. தோரியம் ஒட்சைட்டு கண்ணாடியின் முறிவுக் குணகத்தைக் கூட்டுவதுடன், ஒளிச் சிதறலையும் குறைப்பதால் முன்னர் தரமான கண்ணாடி வில்லைகளைச் செய்வதற்கு இதனைப் பயன்படுத்தினர். ஆனால் இச் சேர்வை கதிரியக்கம் கொண்டதால் தற்கால மூக்குக் கண்ணாடி வில்லைகளில் லந்தனம் ஒட்சைட்டு பயன்படுத்தப்படுகின்றது. அகச் சிவப்புக் கதிர்களை உறிஞ்சும் திறன் கொண்ட கண்ணாடிகளைச் செய்வதற்கு கண்ணாடிகளில் இரும்பு சேர்க்கப்படுகின்றது. செரியம்(IV) ஒட்சைட்டுச் சேர்ப்பதன் மூலம் புறஊதாக் கதிர்களை உறிஞ்சக்கூடிய கண்ணாடிகள் செய்யப்படுகின்றன. மேலே குறிப்பிடப்பட்ட வேதிப் பொருட்களைத் தவிர மீள்பயன்பாட்டுக் கண்ணாடிகளையும் மூலப் பொருட்களுடன் சேர்ப்பது உண்டு. இது மூலப் பொருட்களைச் சேமிக்க உதவுவது மட்டுமன்றி உலைகளில் ஆற்றலைச் சேமிப்பதற்கும் உதவியாக உள்ளது. ஆனால், இவற்றில் இருக்கக்கூடிய மாசுப் பொருட்கள் உற்பத்திப் பொருட்களின் தரத்தைக் குறைப்பதுடன், கருவிகள் பழுதுபடுவதற்கும் காரணமாக அமையக்கூடும். கண்ணாடியில் இருக்கக்கூடிய குமிழிகளின் அளவைக் குறைப்பதற்கு சோடியம் சல்பேட்டு, சோடியம் குளோரைடு, அந்திமனி ஒட்சைட்டு என்பவை பயன்படுகின்றன. சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடி உற்பத்தியில் "கலுமைட்டு" (calumite) என்னும் மூலப் பொருளும் பயன்படுத்தப்படுவது உண்டு. இது இரும்பு உற்பத்தித் தொழிற்சாலைகளில் துணை உற்பத்தியாகக் கிடைப்பது. கண்ணாடி போன்ற சிறு மணிகளாகக் காணப்படும் இப்பொருளில் சிலிக்கா, கல்சியம் ஒட்சைட்டு, அலுமினா, மக்னீசியம் ஒட்சைட்டு, சிறிய அளவில் இரும்பு என்பன உள்ளன. சிலிக்கா இல்லாக் கண்ணாடிகள் சிலிக்காவைத் தவிரப் பல வகையான கரிமச் சேர்வைகளில் இருந்தும், கனிமச் சேர்வைகளில் இருந்தும் கண்ணாடி செய்ய முடியும். இவற்றுள், நெகிழிகள், கரிமம், உலோகங்கள், காபனீரொட்சைட்டு, பொசுபேட்டுகள், போரேட்டுகள், சல்க்கோஜெனைட்டுகள், புளோரைட்டுகள், ஜேர்மனேட்டுகள், தெலுரைட்டுகள், அந்திமனேட்டுகள், ஆர்சனேட்டுகள், டைட்டனேட்டுகள், தந்தலேட்டுகள், நைத்திரேட்டுகள், காபனேட்டுகள் என்பன அடங்கும். கண்ணாடி இயற்பியல் கண்ணாடியின் வரைவிலக்கணப்படி, அது உருகிய நிலையில் இருந்து சடுதியான வெப்பத்தணிப்பு மூலம் திண்மநிலைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதனால் கண்ணாடி பளிங்காகாமல் திண்மமாவதற்குப் போதிய அளவு விரைவாக மிகக்குளிர்ந்த திரவநிலைக்குக் கொண்டுவரப்படும். பொதுவாகக் கண்ணாடியின் கட்டமைப்பு அதன் பளிங்கு நிலையுடன் ஒப்பிடும்போது சிற்றுறுதி நிலையிலேயே இருக்கும். கண்ணாடியும், மிகைக்குளிர்ச்சியுற்ற நீர்மமும் கண்ணாடி ஒரு பளிங்குருவற்ற திண்மம் என்பதேயன்றி நீர்மமாகக் கொள்ளப்படுவது இல்லை. கண்ணாடி ஒரு திண்மத்துக்கு உரிய எல்லாப் பொறிமுறை இயல்புகளையும் கொண்டுள்ளது. நீண்ட காலப்பகுதியில், கண்ணாடி பார்க்கக்கூடிய அளவுக்கு வழிந்தோடக் கூடியது என்னும் கருத்து சோதனை முறையிலோ, கோட்பாட்டு அடிப்படையிலான பகுப்பாய்வுகள் மூலமோ நிரூபிக்கப்படவில்லை. அன்றாட அனுபவங்களுக்கு ஏற்பக் கண்ணாடி இறுக்கமாக இருபதனால் பொது அறிவு நோக்கில் இதனை ஒரு திண்மமாகவே கொள்ள வேண்டும். இதற்கு முதல்வரிசை நிலை மாற்றம் இல்லாதிருப்பதால் கண்ணாடியை ஒரு நீர்மம் எனச் சிலர் கருதுகின்றனர். இந் நிலை மாற்றத்தின்போது சில வெப்பஇயக்கவியல் மாறிகளான கனவளவு, இயல்பாற்றல் (entropy), வெப்ப அடக்கம் (enthalpy) என்பன தொடர்ச்சியாகவே இருக்கின்றன. ஆனால், வெப்ப இயக்கவியல் மாறிகளான வெப்பக் கொள்ளளவு போன்றவை தொடர்ச்சியற்றவை ஆகக் காணப்படுவதால் கண்ணாடியின் நிலைமாற்ற வெப்பநிலையை ஒரு இரண்டாம் வரிசை நிலை மாற்றமாகக் கொள்ளமுடியும். இருந்தாலும், வெப்ப இயக்கவியலின் நிலைமாற்றக் கோட்பாடு கண்ணாடியின் நிலை மாற்றத்துக்கு முழுமையாகப் பொருந்துவதில்லை. இதனால் கண்ணாடி நிலை மாற்றத்தை உண்மையான வெப்பஇயக்கவியல் நிலை மாற்றமாகக் கொள்ள முடியாது. பழைய கண்ணாடிகளின் நடத்தை பழங்காலத்து சாளரக் கண்ணாடிகள் அடிப்பகுதியில் தடிப்புக் கூடியனவாக இருப்பது, நீண்ட காலத்தில் கண்ணாடி வழிந்தோடக் கூடியது என்னும் கருத்துக்குச் சான்றாக முன்வைக்கப்படுவது உண்டு. தொடக்கத்தில் அக் கண்ணாடித் தகடுகள் சீரான தடிப்புடன் இருந்தன என்றும் காலப்போக்கில் நீர்மங்களைப் போல் வழிந்ததால் அடிப்பகுதி தடிப்புக் கூடியதாக உள்ளது என்பதும் இதற்கான வாதம் ஆகும். ஆனால் அக்காலத்துக் கண்ணாடி உற்பத்தி முறை மூலம் சீரான தடிப்புள்ள கண்ணாடித் தகடுகளை உற்பத்தி செய்ய முடிவதில்லை. அக் கண்ணாடிகளைச் சாளரங்களின் சட்டங்களில் பொருத்தும்போது தடிப்பான பக்கம் அடிப்பகுதியில் இருக்கும்படி பொருத்துவது வழக்கம். சில சமயங்களில் கவனக் குறைவினால் தடிப்பான பக்கம் மேற்பகுதியிலோ அல்லது பக்கங்களிலோ இருக்கப் பொருத்தப் பட்டிருப்பதும் காணப்பட்டுள்ளது. thumb 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சாளரக் கண்ணாடிகள் பெரும்படியாக உற்பத்தி செய்யப்பட்ட போதும் இத்தகைய விளைவுகள் ஏற்பட்டன. உருகிய கண்ணாடி பெரிய குளிரூட்டும் மேசையில் ஊற்றப்பட்டுப் பரவ விடப்பட்டது இதனால் ஊற்றப்படும் இடத்தில் கண்ணாடி தடிப்புக் கூடியதாகக் காணப்பட்டது. பிற்காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மிதப்புக் கண்ணாடிகள் சீரான தடிப்புக் கொண்டவை. மேற்கோள்கள் பகுப்பு:கட்டிடக்கலை பகுப்பு:மூலப்பொருள்கள் பகுப்பு:கண்ணாடிகள் பகுப்பு:சிற்பக்கலைப் பொருட்கள்
பறவை
https://ta.wikipedia.org/wiki/பறவை
'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் பறவை எனக் கூறுவர்இந்தியாவில் பறவையியலின் தந்தை எனப்படும் சலிம் அலி இப்படிக் கூறுவார். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளைக் குறிக்கும். பறவைகள்பறவை என்பது ஒரு சிறப்பான பொருளில் இங்கு ஆளப்பட்டுளது. பறவை என்பது பறக்கும் எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் என்றாலும் பொதுவாக இறகுகளால் ஆன சிறகுகளைக் கொண்ட, பொள்ளெலும்புகள் கொண்ட முதுகெலும்புடைய காக்காய்,குருவி, கழுகு போன்ற பறவையினங்களைக் குறிக்கும் பொதுச்சொற்களுள் ஒன்று. பறவை என்பது பிற இடங்களில் பறக்கும் பூச்சிகளாகிய பட்டாம்பூச்சி வண்டுகள் முதலிவற்றையும் குறிக்கும். இக்கட்டுரையில் உள்ள பறக்கும் விலங்குகளின் சிறப்பான பெயர் புள் என்பதாகும். மற்றொரு சிறப்பான சொல் குரீஇ என்பதாகும். புள் = பறவைப் பொது (கழகத் தமிழ் அகராதி), குரீஇ = பறவை (கழகத் தமிழ் அகராதி, சென்னை பல்கலைக்கழக அகராதி , பிங்கல நிகண்டு). எ.கா: குன்றத் திறுத்த குரீஇயினம் (புறநானூறு 19) இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குகள் ஆகும். முன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன் உறுப்புகளாய் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, பொள் எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள்தான். விலங்குகளில் பறவை என்னும் வகுப்பில் மொத்தம் 9672 பறவையினங்கள் உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்து குறிப்புகள் எழுதியுள்ளார்கள்.Sibley, Charles G. and Monroe, Burt, L, Distribution and Taxonomy of Birds of the World, Yale University Press, New Haven and London, 1990 அறிமுகம் thumb|பட்டாணிக்குருவி (grey tit, Parus major) மனிதர்தம் விரல் நீளமும் (5 செ.மீ அல்லது இரண்டேகால் அங்குலம்) 1.8 கிராம் எடையுமே உள்ள மிகச் சிறிய பறவையான ஒரு வகை தாரிச்சிட்டு (ஓசனிச்சிட்டு) களிலிருந்து, 9 அடி உயரமும் 156 கிலோகிராம் எடையும் கொண்ட (பறக்காத) பெரிய தீக்கோழி மற்றும் ஈமியூ வரை, பறவைகள் பல பரும அளவுகளிலும் உள்ளன. அதிக எடையுள்ள 'பறக்கும்' பறவையான 'கானமயில்' (Great Indian Bustard) 18 கிலோ வரை பெருக்கும். பறவைகளில் மணிக்கு 160 கி.மீ விரைவில் பறக்கும் இனமும் உண்டு. நிலம், நீர், வானம் இவற்றில் விரைந்து நகரக்கூடிய விலங்கினங்கள் யாவற்றினும் மிக விரைந்து செல்லக்கூடியது பறவையினத்தைச் சேர்ந்த பொரி லகுடு (அ) அலையும் வல்லூறு(Falco peregrinus) என்னும் பறவையே. சில பறவைகள் நெடுந்தொலைவு ( 17,000 கி.மீ வரை) செல்ல வல்லன. பல பறவைகள், பறப்பதையே முக்கியமான சிறப்பியல்பாகக் கொண்டிருப்பினும், சில பறவைகள் பறக்க முடியாதவையாகும். மற்றும் பல இனங்கள், குறிப்பாகத் தீவுகளில் வசிப்பவை பறக்குமியல்பை இழந்துவிட்டன. பறக்கமுடியாத பறவைகளுள், பென்குயின்கள், தீக்கோழிகள், நியூசிலாந்தின் கிவிகள், அழிந்துபோன டோடோக்கள் என்பன அடங்குகின்றன. பாலூட்டிகள் இன்மை அல்லது குறைவு என்ற சூழலில் (நியூசிலாந்து முன்பிருந்தது போன்ற சூழலில்) பறவைகள் பாலூட்டிகளின் சூழற்கூறை நிரப்பத் துவங்குகின்றன. இந்தப்படிமலர்ச்சியின்போது பறக்கும் தன்மையை அவை விடுக்கக்கூடும். மனிதர்கள் அல்லது மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படும் விலங்குகள் பறக்கமுடியாத பறவைகளின் வாழிடங்களுக்குள் வரும்போது, இப்பறவைகள் அழிந்து போவதற்கான வாய்ப்புகள் மிகுதி. பெரிய ஓக், பறக்கமுடியாத ரெய்ல் எனப்படும் ரால்லிடேக்கள் (Rallidae) கள், நியூசிலாந்தின் மோவாக்கள் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். பறவைகளின் உள்ளமைப்பு மற்ற வகைகளின் கலவையாக உள்ளது. பறவைகள் முதுகெலும்புள்ளவை. பாலூட்டிகளைப் (Mammals) போல நான்கு அறை இதயத்தையும் வெதுவெதுப்பான இரத்தத்தையும் கொண்டவை. இதன் காரணமாக சீரான தன் உடல் வெப்பத்தையும், வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் தன்மையும் பெறுகின்றன. ஆனால் ஊர்வன (Reptiles) போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. உடலமைப்பு thumb|left|300px|பறவையின் புற உறுப்புகளும் அமைப்பும்:1 அலகு, 2 தலை, 3 பாப்பா (கருவிழி) (Iris), 4 கண்மணி(Pupil), 5 Mantle, 6 புன் முன்னிறகு (Lesser coverts) 7 தோளிறகு (Scapulars), 8 நடு முன்னிறகு (Median coverts), 9 (துணையிறகு)Tertials, 10 பின்புறம் (Rump), 11 பறக்கும் இறகு (Primaries), 12 கழிவாய் (Vent), 13 தொடை (Thigh), 14 முட்டு (Tibio-tarsal articulation), 15 அடிக்கால் (Tarsus), 16 அடி (பாதம்) , 17 முன்னங்கால் (Tibia), 18 வயிறு (Belly), 19 பக்கம் (Flanks), 20 மார்பு (Breast), 21 கழுத்து (Throat), 22 அதள் (அல்) மணி (Wattle) சிறகுகள் பறவைகளின் சிறகுகளில் உள்ள முக்கிய பொருள் 'கெரோட்டின்'. நமது தலைமுடி, விரல் நகம் அகியவற்றில் உள்ள அதே கெரோட்டின், ஆனால் நமது தலைமுடி, நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன் நின்று விடும். இதனால் பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக் கொள்ளும். இந்த சிறகுகள் எடை குறைவான ஆனால் வலுவான பறப்பதற்கேற்ற 'ஏரோடைனமிக்' மேற்பரப்பை பறவைகளுக்கு அளிக்கிறது. பறக்கும் போது சிறகுகள் இடையே சிறு சிறு காற்று பொட்டலங்கள் ஏற்பட்டு மிக வெப்பம், குளிர் அகியவற்றிலிருந்து பறவைகளைக் காக்கிறது. கண்கள் பறவைகள் பெரும்பாலும் கூரிய பார்வை உடையன. ஒரு கண்ணுக்கு மூன்று இமைகள் இருக்கும். மேல் இமை மனிதர்களின் கண் இமையைப் போன்றது. கீழ் இமை தூங்கும் போது மட்டும் மூடிக் கொள்ளும். இது தவிர பக்கவாட்டில் அலகின் அருகிலிருந்து துவங்கும் ஒரு மெலிதான தோல் உண்டு. இது ஒளி ஊடுருவக்கூடிய தோல், கண்களை ஈரப்படுத்தவும், காற்று, அதிக வெளிச்சத்திலிருந்து காக்கவும் உதவுகிறது. காது பறவைக்கு காது மிக முக்கியமானது. ஆனால் முழுவதும் உள்புறமாகவே அமைந்துள்ளது. கண்ணுக்குச் சற்று கீழே சிறிய துளை இருக்கும். பெரும்பாலும் சிறிய இறகுகளால் மூடப்பட்டிருக்கும். பறவைகளுக்கு காது ஒலியைக் கேட்பதற்காக மட்டுமல்லாமல் பறக்கும் போது ஈடான உடல் நிலைக்காகவும் தேவைப்படுகிறது. மூளை பறவைகளின் மூளை பலவிதங்களில் முழுமை பெற்றது. பறக்கும் போது விமானத்தைப் போல உடலில் அனைத்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பு, உள்ளுணர்வு, உடனடியாக உணர்ந்து கொண்டு திசை மாறுதல் போன்றவற்றை செயல்படுத்துகிறது. பறவைகளின் அறிவுத் திறனும் வியப்பூட்டுமாறு சிறப்பாக உள்ளது. மனித மூளையில் உள்ள சிந்திக்கும் பகுதியான பெருமூளைப் புறணி (Cereberal Cortex) பறவைகளில் மிகப் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது. ஆனால் மாந்தர்களுக்கும், பிற பாலூட்டிகளுக்கும் இல்லாத மீயடுக்கு மூளை (Hyperstriatum) என்னும் ஒரு பகுதி பறவைகளில் மூளையில் உள்ளது. பொதுவாக அறிவுத்திறனுக்கு உதவுவதாகக் கருதும் பெருமூளைப் புறணிக்கு மாறாக பறவைகளில் இந்த மீயடுக்கு மூளை இத்திறமைக்கு உறைவிடமாக இருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர், ஏனெனில் அறிவுத்திறம் கொண்டாதாகக் கருதப்படும் பறவைகளில் இப்பகுதி பெரிதாக இருக்கின்றது. இந்தப் பகுதியே பாடும் பறவைகள் பாட்டுக்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. பறவைகளின் அறிவுத்திறனுக்கும் இதுவே காரணமாக இருக்கலாமென்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். அலகு thumb|500px|பல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற அலகுகள் பறவைகளின் உணவுமுறைக்கேற்ப அலகுகள் அமைந்துள்ளன. வானம்பாடி போன்ற மலர்களில் தேன் குடிக்கும் பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. கழுகு, ஆந்தை போன்ற ஊன்தின்னிப் பறவைகளுக்கு சதையைப் பிய்த்து உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு வாழும் வாத்து போன்ற பறவைகளுக்கு வழுக்கவல்ல இரையை பிடித்துக் கொள்ள வாகான ரம்பம் போன்ற விளிம்புடைய அலகு. பழக்கொட்டைகளை உடைக்க உறுதியான அலகு, மரங்கொத்திப் பறவைக்கு உளி போன்ற உறுதியும் கூர்மையும் கொண்ட அலகு. இரை பறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை இரை தேடவும், உண்ணவுமே செலவழிக்கின்றன. அதிக எடை பறப்பதற்கு இடைஞ்சல் என்பதால் பறவைகளால் உடலில் உணவைச் சேமித்து வைக்க இயலாது. சிறிய பறவைகள் அடிக்கடி உண்பது அவசியமாகிறது. பறவைகளில் சைவமும் அசைவமும் உண்டு. காக்கை போன்றன இரண்டையுமே உண்கின்றன. சில பறவைகள் சிறப்பாக குறிப்பிட்ட இரைகளை மட்டுமே உண்ணும். எடுத்துக்காட்டாக, எவர்கிளேட் கைட் என்ற பறவை நத்தைகளை மட்டுமே உண்ணும். பறவைகளின் வயிறு சிறப்புத் திறன் பெற்றது. கடினமான கொட்டைகள், செல்பிசு போன்றவற்றைக் கூட நொறுக்கி செரிமானம் செய்துவிடும். சில பழக்கொட்டை தின்னும் பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்து தின்கின்றன. இவை வயிற்றில் கொட்டைகளை நொறுக்க உதவுகின்றன. குஞ்சுகளுக்கு இரை எடுத்துச் செல்ல பல பறவைகள் வாய்க்குள் சிறிய பை போன்ற உறுப்புக்களைக் கொண்டுள்ளன. உறைவிடம் இரவில் வேட்டையாடும் ஆந்தை போன்றவற்றைத் தவிர பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில் உறங்குகின்றன. குஞ்சு பொரிக்கும் காலங்களில் மட்டுமே கூட்டில் உறங்குகிறது. மற்ற நேரங்களில் கிளையோ, மரப்பொந்தோ, சில சமயம் ஒற்றைக் காலிலோ கிடைத்த இடத்தில் உறங்கிக் கொள்ளும். அவைகளுக்கு மனிதனைப் போல நீண்ட நேரத்தூக்கம் தேவைப்படுவதில்லை, மூளைக்கு ஓய்வளிப்பதற்காக் உறங்குவதுமில்லை. தசைகளை தளர்த்தவும், சக்தியைச் சேமிக்கவும் மட்டுமே தூக்கம் தேவைப்படுகிறது. உருமறைப்பு பல பறவையின் சிறகுகள் அவை வாழும் நிலத்திற்கு ஏற்றவாறும், அங்குள்ள மரஞ்செடி கொடிகளுக்கு ஏற்றவாறும், நிறத்திலும் சாயலிலும் ஒத்து உருமறைப்பு தன்மையைக் கொண்டிருப்பதால் அவற்றின் நிறமே அவற்றிற்கு தற்காப்பு அளிப்பதாக உள்ளன. உள்ளான், கானாங்கோழி போன்ற பறவைகள் மரங்களிலிருந்து விழும் தழைகளின் இடையிலும், புல் பூண்டு இவற்றின் இடையிலும் வாழ்கின்றன. அவற்றின் உடல் அமைப்பு வளைந்த கோடுகளையும் திட்டுக்களையும் கொண்டதாய் எளிதில் கண்டு கொள்ள முடியாதவாறு இருக்கின்றது. வேட்டையாடப்படுகின்ற கவுதாரி, காடை போன்ற பறவைகளின் நிறம் அவை வாழ்கின்ற வயல் மண்ணின் நிறம்போலப் பழுப்பாகவும் அங்கங்கே கரும்புள்ளிகள் உடையதாகவும் இருப்பதால், பக்கத்தில் போகும்போது கூட அவற்றை எளிதில் கண்டு கொள்ள முடியாது. கதிரவன் ஒளி பளிச்சென்று வீசும் பசுமையான தழைகள் அடர்ந்த இடங்களில் வாழும் பறவைகள் கரு நீலம், பச்சை , மஞ்சள், சிவப்பு, ஆகிய நிறங்களைக் கொண்டிருக்கின்றன. பகைவர்களின் கண்கள் கூசும்படியாக இந்த நிறங்கள் அமைந்துள்ளன. வலிமையற்ற சில பறவைகளின் உருவம் வலிமையுள்ள வேறு இனத்தைச் சேர்ந்த பறவைகளின் உருவத்தை ஒத்திருப்பதாகவும் உள்ளன. வைரிபோலத் தோன்றும் கொண்டைக் குயில் இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஆகும். இணை பெரும்பாலான பறவைகள் வாழ்நாளில் அல்லது குறைந்தது ஒரு கூடல்காலத்திற்காவது ஒரே இணையுடன் வாழ்பவை. வழக்கம் போல் இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. பாடுகின்ற பறவைகள் பாட்டாலேயே தங்கள் துணையைப் பிடிக்கின்றன. பெரும்பாலும் சத்தமாக நீளமாக பாடும் ஆணின் பாட்டிற்குத் தான் பெண் மயங்கி வந்து சேரும். மற்ற பறவைகள் தங்கள் இறகு அலங்காரத்தால் துணையை அசத்துகின்றன. ஆண், பெண் இரண்டுமே முட்டையை அடைகாப்பதுண்டு. வெளிவரும் குஞ்சுகளில் பொதுவாக 10% மட்டுமே ஓர் ஆண்டு தாண்டி உயிர் வாழ்கிறது. இடப்பெயர்ச்சி உணவுத் தேவைகளுக்காகவும் மிக வெப்பம், மிகவும் குளிர் கால நிலைகளை தவிர்ப்பதற்காகவும் பறவைகள் வருடாந்த இடப்பெயர்ச்சி செய்கின்றன. கடல் பறவைகள் மிக அதிக தூரம் (சில வகைகள் ஒரு வருடத்தில் 32,000 கிமீ வரை) பயணிக்கின்றன. இடப்பெயர்ச்சி செய்யும் போது அது பல அடையாளங்களைக் கொண்டு சரியான இடத்திற்கு சென்று சேர்கிறது. பகலில் சூரியனின் திசையைக் கொண்டும், இரவில் சில நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டும், பூமியின் காந்த அலைகளைக் கொண்டும், சில நில அடையாளங்களைக் கொண்டும், சில தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளைக் கொண்டும் பாதையை உணர்ந்து கொள்கின்றன. பறவைகள் கூட்டமாகச் செல்லும் போது 'V' போன்ற வடிவத்தில் பறப்பதைப் பார்த்திருக்கலாம். இவ்வாறு செல்லும் போது முதல் பறவையைத் தவிர மற்ற எல்லாப் பறவைகளும் முன்னால் செல்லும் பறவையின் இறக்கை வீச்சில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக எளிதாக பறக்கிறது. தனியே பறந்து செல்லும் முன்னனுபவமில்லாத (முன்துய்ப்பில்லாத) சில இளம் பறவைகள் சமயங்களில் வழி தப்பி அதன் இனம் செல்லும் வழக்கமான வழியை விட ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தள்ளி வந்து விடுவதையும் காணலாம். படிமலர்ச்சி thumb|தொல்சிறகியின் ஒரு மாதிரி ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானிகள் தொன்மாக்களிலிலிருந்து பறவைகள் தோன்றினவா என்று ஆய்ந்திருக்கிறார்கள். டினோசாரின் ஒரு வகையான தெரொபோட் (Theropod) இனத்திலிருந்து பறவைகள் தோன்றின என்று ஒரு சாராரும், அதற்கு முன்பே தெகோடோன்ட்லிருந்து (Thecodont) (இது டினோசாரின் மரபுவழி முன்னோடி) பறவைகள் உருவானது என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். பறவைகளின் படிமலர்ச்சி (பரிணாம வளர்ச்சி) பற்றிய ஆய்வுகளில் தொல்லுயிர் படிவங்கள் பெரிதும் துணையாயிருக்கின்றன. இவற்றுள் 1861-ம் ஆண்டு செருமனியிலுள்ள பவேரியாவில் ஒரு சுண்ணாம்புக் காளவாயில் கிடைத்த புதைபடிவம் குறிப்பிடத்தக்கது. அது 14 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வா்ழ்ந்த தொல்சிறகி (Archeopteryx) என்ற பறவையினுடையது. வாயில் பற்கள், அசைக்கத்தக்க மூன்று விரல்கள், சிறகில் நகங்கள் என மரக்கிளைகளில் தொற்றித்தாவும் வசதிகளையும் பெற்றிருந்த அவ்விலங்கு தொன்மாக்களுக்கும் இன்றைய பறவைகளுக்கும் இடைப்பட்ட படிமலர்ச்சிநிலையில் இருந்திருக்கக் கூடும். பறப்பதைப் பற்றியும் இரு கருத்துக்கள் உள்ளன. பறவைகளின் முன்னோர்கள் மரத்துக்கு மரம் தாவி அப்படியே பறக்கத் துவங்கினர் என்று சிலர் சொன்னாலும், நிலத்திலிருந்து இரைக்காகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் தாவித் தாவி பறக்கத் துவங்கியதாக பொதுவாக நம்புகின்றனர். இவ்வாறு இரு கருத்துக்கள் இருந்தாலும் 'கிரெடாசியசு' (Cretaceous) யுகத்தில், அதாவது 138 மில்லியன் ஆண்டுகள் முன்பிலிருந்து 65 மில்லியன் வருடங்கள் முன்பு வரை உள்ள காலகட்டத்தில், பறவைகள் இருந்ததற்கான சான்றுகள் கிட்டியுள்ளன. பறவை இனங்கள் முக்குளிப்பான் வரிசை- Order Podicipediformes கூழைக்கடா வரிசை- Order Pelecaniformes நாரை வரிசை - Order Ciconiformes வாத்து வரிசை - Order Anseriformes வைரி வரிசை - Order Falconiformes கோழி வரிசை - Order Galliformes உள்ளான் வரிசை - Order Charadmiiformes புறா வரிசை - Order Columbiformes கிளி வரிசை - Order Psittaciformes குயில் வரிசை - Order Cuculiformes ஆந்தை வரிசை - Order Strigiformes சாவுக்குருவி வரிசை - Order Caprimulgiformes முன்னி வௌவால் வரிசை - Order Apodiformes மனிதனும் பறவைகளும் பண்டைக்காலம் தொட்டே பறவைகள் கடவுளாக வணங்கப்பட்டும் கடவுளரின் ஊர்தியாக உருவகப்படுத்தப் பட்டும் வந்துள்ளன. மேலும் கோழி, வாத்து போன்ற பறவைகள் மனிதனுக்கு உணவாகவும் பயன்படுகின்றன. மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் வெளி இணைப்புகள் பின்வருவனவற்றையும் பார்க்கவும் பறவைகள் பட்டியல் அழிந்த பறவைகள் பறவைகள் புலப்பெயர்வு பறவைக் காய்ச்சல் * பகுப்பு:முதுகெலும்பிகள் பகுப்பு:பறக்கும் விலங்குகள்
பென்குயின்
https://ta.wikipedia.org/wiki/பென்குயின்
பென்குயின் (வரிசை: Sphenisciformes, குடும்பம்: Spheniscidae) என்பது நீரில் வாழும் பறக்காத பறவை ஆகும். இவை பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே வாழ்கின்றன. எனினும் ஒரே ஒரு பென்குயின் இனம் மட்டும் நடுநிலக்கோட்டின் வடக்குப் பகுதியில் வாழ்கின்றது. இவை தங்களின் துடுப்பு போன்ற இரு இறகுகள் மூலம் கடலில் நீந்தும் திறன் பெற்றுள்ளன. இவை தங்கள் வாழ்வில் பாதியை நிலத்திலும் மீதியைக் கடலிலும் கழிக்கின்றன. பென்குயின் வகைகளில் மிகப் பெரியது பேரரசப் பென்குயின் (Emperor Penguin) ஆகும். இது சுமார் 1.1 மீட்டர் உயரம் வரை வளருவதுடன், 35 கிலோகிராம் அல்லது அதை விட சற்று கூடிய எடையையும் கொண்டிருக்கும். சிறிய நீலப் பென்குயின் அல்லது தேவதைப் பென்குயின் என்பது மிகச் சிறிய பென்குயின் வகையாகும். இது சாதாரணமாக 35 செ.மீ தொடக்கம் 40 செ.மீ வரையான உயரத்தையும் சுமார் ஒரு கிலோகிராம் எடையையும் கொண்டிருக்கும். பொதுவாகப் பெரிய பென்குயின்கள், சிறப்பாக வெப்பத்தை உள்வைத்துக்கொள்ளக் கூடியவையாக இருப்பதால், அதிக குளிர்ப்பகுதிகளில் வாழக்கூடியவையாக உள்ளன. சிறிய பென்குயின் வகைகள் மிதவெப்பக் காலநிலைப் பகுதிகள் அல்லது வெப்பக் காலநிலைப் பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. உடற்கூறு பென்குயின்கள் நீர்வாழ்வுக்கு தக்கபடி இசைவாக்கம் பெற்றுள்ளன. துடுப்புகளாக மாற்றம் பெற்றுள்ள இவற்றின் இறகுகள், பறப்பதற்குப் பயனற்றவை. எனினும் அவற்றைத் துடுப்புகள் போன்று பயன்படுத்தி நீரில் பென்குயின்கள் வியக்கத்தக்க வகையில் விரைவாகவும், இலகுவாகவும் நீந்தவல்லவை. இவை நீந்தும் போது ஒரு பறவை பறப்பது போல் இருக்கும். எனவே நீரில் பென்குயின் நீந்தும்போது அவற்றின் பின்னால் தொடராக நீர்க்குமிழிகளைக் காணலாம். இறகின் கீழுள்ள காற்றுப் படலம், அட்லாண்டிக் கடல் குளிரில் இருந்து உடல் வெப்பத்தைப் பாதுகாக்க உதவுகிறது. வெப்ப மற்றும் மிதவெப்ப வலயங்களில் வாழும் பென்குயின்களின் இறகுகள் ஒப்பீட்டளவில் தடிப்புக் குறைந்தவை ஆகும். அனைத்துப் பென்குயின்களின் உடலும் வெண்ணிறக் கீழ்ப்பகுதியையும், இருண்ட நிறம் (பெரும்பாலும் கறுப்பு) கொண்ட மேற்பகுதியையும் கொண்டவை. இது உருமறைப்புக்கு உதவுகிறது. கொல்லும் திமிங்கிலம் அல்லது சிறுத்தை நீர்நாய் போன்ற, பென்குயின்களைக் கொன்று தின்னக்கூடிய விலங்குகள் நீரிலிருந்து பார்க்கும்போது, வெண்ணிற வயிற்றுப் பகுதியை கொண்ட பென்குயினையும், ஒளி தெறிக்கும் நீர்ப்பரப்பையும் வேறுபடுத்திக் கண்டுகொள்வது சிரமம். நீந்தும் போது பென்குயின்களின் வேகம் மணிக்கு ஆறு தொடக்கம் 12 கிலோமீட்டர் வரை இருக்கும். 27 கிமீ.மணி வரை வேகம் அவதானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. சிறிய பென்குயின்கள் அதிக ஆழத்தில் நீந்துவதில்லை. அவை தங்கள் உணவுகளை நீர் மேற்பரப்புக்கு அருகிலேயே பிடித்துக்கொள்வதுடன், ஒவ்வொரு நீச்சலும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கின்றது. தேவையேற்படின் கூடிய ஆழத்துக்கு நீந்தவும் அவற்றால் முடியும். பெரிய பேரரசப் பென்குயின்கள் 267 மீட்டர் ஆழம் வரை சென்றது பதியப்பட்டுள்ளதுடன் இதன் கால அளவும் 18 நிமிடங்களாக அவதானிக்கப்பட்டுள்ளது. நிலத்தில் பென்குயின்களின் நடத்தை லாவகமற்றது. அவை காலால், இருபுறமும் அசைந்து அசைந்து நடக்கின்றன அல்லது அவற்றின் வயிற்றினால் பனிக்கட்டியின் மீது வழுக்கிச் செல்கின்றன. ஆனாலும், உண்மையில் பெரும்பாலான மனிதர்களுக்கு ஈடாக அல்லது அவர்களிலும் வேகமாக ஓடுவதற்கும் பென்குயினால் முடியும். சக்தியைச் சேமிப்பதற்காகவும் அதேவேளை வேகமாக நகர்வதற்காகவும் இவை வயிற்றினால் வழுக்கிச் செல்கின்றன. இது ஆங்கிலத்தில் tobogganing என அழைக்கப்படுகின்றது. இவற்றின் செவிப்புலன் மிகச் சிறப்பானது. கண்கள் நீர்க் கீழ்ப் பார்வைக்கு ஏற்ப இசைவாக்கம் பெற்றுள்ளன. இவையே உணவைப் பிடிப்பதற்கும், பிற விலங்குகளிடமிருந்து தப்புவதற்குமான, பென்குயின்களின் முதன்மையான வழியாகும். காற்றில் இவைகளால் நீண்டதூரம் பார்க்க முடியாது. இவற்றின் மணக்கும் சக்தி பற்றி அதிக தகல்வல்கள் தெரிய வரவில்லை. வகைபிரிப்பு குடும்பம் Spheniscinae அரச பென்குயின், (Aptenodytes patagonicus) பேரரசப் பென்குயின், (Aptenodytes forsteri) கெண்டூ பென்குயின், (Pygoscelis papua) அடேலி பென்குயின், (Pygoscelis adeliae) தாடியுள்ள பென்குயின், (Pygoscelis antarctica) ராக்ஹோப்பெர் பென்குயின், (Eudyptes chrysocome) பியோர்லாண்ட் பென்குயின், (Eudyptes pachyrhynchus) ஸ்னேர்ஸ் பென்குயின், (Eudyptes robustus) நிமிர்-கொண்டை பென்குயின், (Eudyptes sclateri) மக்கரோனி பென்குயின், (Eudyptes chrysolophus) மஞ்சட்கண் பென்குயின், மெகாடைப்டெஸ் அண்டிபோடெஸ் (Megadyptes antipodes) சிறிய பென்குயின் (அல்லது தேவதை பென்குயின்), (Eudyptula minor) ஆபிரிக்கப் பென்குயின், (Spheniscus demersus) மகெலனிக் பென்குயின், (Spheniscus magellanicus) ஹும்போல்ட் பென்குயின், (Spheniscus humboldti) கலப்பகொஸ் பென்குயின், (Spheniscus mendiculus) வெளி இணைப்புகள் Two new fossil penguin species found in Peru. news.nationalgeographic.com Information about penguins at pinguins.info Integrated Taxonomic Information System Penguin research projects on the web Penguin videos and photos on the Internet Bird Collection Penguin World Penguins in Te Ara: The Encyclopedia of New Zealand the Encyclopedia of New Zealand Seaworld Penguin Information "Lessons in a Land of Wind and Ice" from National Wildlife Magazine 1/15/2010 Live 24/7 camera inside a penguin habitat பகுப்பு:பென்குயின்கள் பகுப்பு:பறக்காத பறவைகள்
தீக்கோழி
https://ta.wikipedia.org/wiki/தீக்கோழி
தீக்கோழி அல்லது நெருப்புக்கோழி (Ostrich, Struthio camelus) வாழும் பறவைகளுள் மிகப்பெரியது ஆகும். இது 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளரக்கூடியது. பறக்காத ரடீட் எனப்படும் ஒப்பீட்டளவில் பழமையான பறவைக் குழுவைச் சேர்ந்தது. இக் குழுவைச் சேர்ந்த ஏனையவை ரியாக்கள், எமுக்கள், கசோவரிகள் எக்காலத்திலும் அறிந்தவரை மிகப்பெரிய பறவையான, இன்று அழிந்துபோன எபியோர்னிக்ஸ் (Aepyornis) என்பவையாகும். தீக்கோழிகள் நீண்ட கழுத்தையும், கால்களையும் கொண்டவை. 70 கிமீ/மணி (43 மைல்/மணி) வேகத்தில் ஓடக்கூடியவை. தீக்கோழிகள் இயற்கையில், ஆபிரிக்காவின் பூமத்திய ரேகைக் காட்டு வலயங்களில், வடக்கு, தெற்கு ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள சவான்னாக்கள், அரைப் பாலைவனங்களில் காணப்படுகின்றன. மத்திய கிழக்கு இனமான எஸ். சி. சிரியாக்கஸ் இப்பொழுது அழிந்துவிட்டது. தீக்கோழிகளின் இறகுகள் பெண்களின் தொப்பிகளை அலங்கரிப்பதற்காக உபயோகப்பட்டு வந்தன. சிறிய உடலமைப்புள்ள மனிதர்கள் சவாரிசெய்யக் கூடிய அளவுக்குத் தீக்கோழிகள் பெரியவையாகும். இதனால் வட ஆபிரிக்காமற்றும் அரேபியாவின் சில பகுதிகளில் இவை ஓட்டப் பந்தயங்களில் பயன்படுத்தப்பட்டன. சுவீடன் போன்ற குளிர்ப் பிரதேசங்களிற் கூட இவை இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இறைச்சி கொழுப்பற்ற மாட்டிறைச்சி போன்ற சுவை கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆபத்தை உணரும்போது, தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்ளும் என்ற கதை மிகவும் பிரபலமானது. இத்தகைய நடைமுறையைக் காட்டும் அவதானிப்புப் பதிவுகள் எதுவும் இல்லையெனினும், எதிரி விலங்குகள் அண்மையிலுள்ளபோது, தான் தெளிவாகக் காணப்படாமலிருப்பதற்காகத், தீக்கோழி, தனது கழுத்தையும், தலையையும் நிலத்தில், படுக்கை நிலையில், வைத்துக்கொண்டிருப்பது அறியப்பட்டுள்ளது. பயமுறுத்தப்பட்டால், தீக்கோழி தனது வலுவான கால்களால் உதைத்துக் கடும் காயத்தை உண்டாக்கக்கூடியது. தீக்கோழிகளுக்கு பற்கள் இல்லை. எனவே உணவை அரைத்து உண்பதற்காகவே கூடவே கற்களையும் விழுங்குகிறது. தீக்கோழிகளில் கூட்டுக் கூடமைப்பு அவதானிக்கப்பட்டுள்ளது. பல பெண் தீக்கோழிகள் தங்கள் முட்டைகளை ஒரே கூட்டில் இடுகின்றன. இம் முட்டைகள் பகலில் பெண் தீக்கோழிகளாலும் இரவில் ஆண்களாலும் அடைகாக்கப் படுகின்றன. தீக்கோழிகளின் முட்டைகளே உலகில் பெரிய முட்டைகளாகும். உசாத்துணை பகுப்பு:பறக்காத பறவைகள் பகுப்பு:பறவைகள் பகுப்பு:ஆப்பிரிக்கப் பறவைகள்
கிவி (பறவை)
https://ta.wikipedia.org/wiki/கிவி_(பறவை)
கிவி (Kiwi) என்பது நியூசிலாந்தில் வாழும், அப்டெரிக்ஸ் (அப்டெரிகைடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரே இனம்) இனத்தைச் சேந்த சிறிய, பறக்காத, ஏதாவதொரு வகைப் பறவையைக் குறிக்கும். ஒரு வீட்டுக் கோழியின் அளவைக் கொண்ட கிவிகளே வாழுகின்ற றட்டைட்களில் மிகச் சிறியனவாகும். இவை கசோவரிகள் அல்லது மோவாக்களுக்கு நெருக்கமான உறவையுடையனவாகக் கருதப்பட்டாலும், இவற்றின் பரிணாமத் தோற்றம் உறுதியாகத் தெரியவரவில்லை. பல கிவி வகைகள் அழியும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளன. சுமார் 1300 CE அளவில், மனிதர்கள் வருவதற்குமுன், நியூசிலாந்தில் முள்ளந்தண்டுள்ள விலங்குகள் எதுவும் இருக்கவில்லை. உலகின் ஏனைய பகுதிகளில், குதிரைகள், ஓநாய்கள், எலிகள் எனப் பல்வேறுபட்ட பிராணிகளால் நிரம்பியிருந்த ecological niches, நியூசிலாந்தில், பறவைகளால் (குறைந்த அளவு ஊர்வனவற்றாலும்) நிரம்பியிருந்தன. கிவிகள் வெட்கம் கொண்ட, nocturnal பிராணிகளாகும். இவை சிறப்பாக வளர்ச்சி பெற்ற முகர்ச்சிப் புலனைக் கொண்டுள்ளதுடன், பறவைகளில் வழமைக்கு மாறாக இவற்றின் மூக்குகள் கூரான சொண்டின் நுனியில் அமைந்துள்ளன. இவை தங்கள் சொண்டுகளை நிலத்துக்குள் செலுத்திப் புழுக்கள், பூச்சிகள், முள்ளந்தண்டற்ற ஏனைய பிராணிகள் முதலியவற்றைத் தேடி உண்கின்றன. இவை பழங்களையும் கூட உண்கின்றன. சந்தர்ப்பம் ஏற்பட்டால், இவை, சிறிய crayfish, நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணிகள் மற்றும் eels போன்றவற்றையும் உணவாகக் கொள்கின்றன. கிவிகளில் நிலத்தில் வாழ்வதற்கான இசைவாக்கம் விரிவானது. ஏனைய எல்லா ratites போலவே, மார்பெலும்புகளில், சிறகுத் தசைகளைப் பொருத்துவதற்கான keel மற்றும் சிறகுகளோகூட இல்லை. சிறகுகள் இருந்ததற்கான அடையாளம் கூட, மிகவும் சிறிதாக, கிவியின் உரோமங்களைப் போன்ற, இரண்டாகக் கிளைத்த இறகுகளுக்கு அடியில் மறைவாக உள்ளது. பொதுவாகப் பறவைகளுக்குப் பறப்பதற்கு வசதியாக, நிறையைக் குறைப்பதற்காக, உள்ளீடற்ற எலும்புகளே காணப்படுகின்றன. கிவியில், பாலூட்டிகளைப்போல எலும்புகளில் மச்சை (marrow) உண்டு. கிவிகளில் மூன்று வகைகளும், அவற்றிலொன்றில் ஒரு துணை வகையும் உண்டு: வட தீவு மண்ணிறக் கிவி அப்டெரிக்ஸ் அவுஸ்திரேலிஸ் மண்டெல்லி (Apteryx australis mantelli) , வடதீவின் மூன்றிலிரண்டு பகுதியில் பரந்துள்ளது. சுமார் 35,000 மீந்துள்ள இக் கிவியே மிகவும் பொதுவான கிவியாகும். இவற்றில் பெண் கிவிகள் 400 மிமீ உயரமும், 2.8 கிகி நிறையும் கொண்டவை. ஆண்கள் 2.2 கிகி நிறையுள்ளவை. இக் கிவிகள் குறிப்பிடத்தக்க resiliance ஐ வெளிப்படுத்துகின்றன. இவை பலதரப்பட்ட வாழிடங்களுக்குத் தங்களை இசைவாக்கிக் கொண்டுள்ளன. பெண் கிவிவிகள் பொதுவாக இரண்டு முட்டைகலை இடுகின்றன. இவற்றை ஆண் கிவிகள் அடைகாக்கின்றன. ஒக்காரிட்டோ மண்ணிறக் கிவி அப்டெரிக்ஸ் அவுஸ்திரேலிஸ் அவுஸ்திரேலிஸ் (Apteryx australis australis), வட தீவு மண்ணிறக் கிவியின், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு துணை வகையாகும். கொஞ்சம் அளவிற் சிறியது. உடம்பில் சாம்பல் நிறச் சாயை கொண்டதுடன் சிலசமயம் முகத்தில் வெண்ணிற இறகுகளும் இருக்கும். பெண், ஒரு முட்டையிடும் காலத்தில் மூன்று முட்டைகளையிடும். ஒவ்வொன்றும் வெவ்வேறு கூடுகளில் இடப்படுகின்றன. ஆண், பெண் இரண்டுமே அடைகாக்கின்றன. பிராண்ஸ் ஜோசேப்பின் (Franz Josef) வடபகுதியின் தாழ்நிலக் காட்டுப்பகுதியில் சுமார் 140 பறவைகள் மட்டுமே வாழ்கின்றன. பெரிய புள்ளிக் கிவியே அப்டெரிக்ஸ் ஹாஸ்தீ (Apteryx hastii) மிகப் பெரிய கிவியாகும். பெண், 450 மிமீ உயரமும், 3.3 கிகி நிறையும் உடையது. ஆண் கிவிகள் 2.4 கிகி நிறையுள்ளவை. இவை சாம்பல் கலந்த உடல் நிறமும், மங்கலான பட்டைகளையும் கொண்டவை. பெண் ஒரு முட்டை மட்டுமேயிட, ஆணும், பெண்ணும் அடைகாக்கின்றன. வடமேற்கு நெல்சனின் மலைப்பகுதிகள், வடபகுதியின் மேற்குக் கரை, மற்றும் தென் அல்ப்ஸ் பகுதிகளில் சுமார் 20,000 கிவிகள் வரை பரந்துள்ளன. சிறிய புள்ளிக் கிவி அப்டெரிக்ஸ் ஓவெனீ (Apteryx owenii) மிகவும் சிறியது. இறக்குமதி செய்யப்பட்ட பன்றிகள், stoats மற்றும் பூனைகளினால் வேட்டையாடப்பட்டு, தலை நிலத்தில் முற்றாக அழிந்துவிட்டது. எல்லாக் கிவிகளிலும் கூடிய அபாய நிலையிலுள்ளது இதுவே. சுமார் 1000 வரை கப்பிட்டி தீவில் மீந்துள்ளன. ஊனுண்ணும் விலங்குகளில்லாத வேறு தீவுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, ஓரளவு நிலைபெற்று வருவது போல் தெரிகின்றது. 250 மிமீ உயரம்கொண்டது. பெண் பறவை 1.3 கிகி நிறையுள்ளது. பெண் ஒரு முட்டை மட்டுமேயிட ஆண் பறவை அடைகாக்கின்றது. உசாத்துணை வெளி இணைப்புகள் . . . . . . . . . பகுப்பு:பறக்காத பறவைகள்
பெரிய ஆக்கு
https://ta.wikipedia.org/wiki/பெரிய_ஆக்கு
75 சதம மீட்டர் நீளமுள்ள, பறக்காத, பெரிய ஆக்கு அல்லது பெரிய ஓக் (Great Auk) பிங்குயினஸ் இம்பென்னிஸ் (அல்லது அல்கா இம்பென்னிஸ்), எல்லா ஆக்குகளிலும் பெரியதாகும். அற்றுப்போன இனமான இந்தப் பெரிய ஆக்குகள் வேல்சு மொழியில், அவற்றின் தலையிலுள்ள வெள்ளை நிறத்தை வைத்து, "வெண் தலை" எனப் பொருள்படும் பென் க்வின் (pen gwyn) என அழைக்கப்பட்டன. எனவும் இதுவே பின்னர் "பென்குயின்" என்ற பறவையின் பெயருக்கு அடிப்படையாக அமைந்தது எனவும் நம்பப்படுகின்றது. தென்னரைக் கோளத்தில் பெரிய ஆக்கை ஒத்த (தற்போது பென்குயின் என அறியப்படும்) பறவைகளைக் கண்ட கடற்பயணிகள், இவ்விரு பறவைகளுக்கிடையிலும் காணப்படும் ஒற்றுமை காரணத்தால், தாம் புதிதாகக் கண்ட பறவைகளையும் அதே பெயரில் அழைத்தனர்.. பெரிய ஆக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடுகின்றன. இவை நன்றாக நீந்தக் கூடியவை. தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. பெரிய ஆக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, அயர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன. ஏனைய ஆக்குகளைப் போல, பெரிய ஆக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப் பறவைகள் மனிதருக்கு இலக்காகக்கூடியனவாக இருந்தன. கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து இப் பறவைகள், உணவுக்காகவும், மெத்தைகள் செய்வதற்காகவும் வேட்டையாடப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசி இணைகள், 1844, ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன. மேற்கோள்கள் பின் வருவனவற்றையும் பார்க்கவும் அழிந்த பறவைகள் வெளியிணைப்புகள் Great Auks described in The Birds of North America பகுப்பு:அழிந்த பறவைகள் பகுப்பு:பறக்காத பறவைகள் பகுப்பு:ஆக்குகள்
இந்திய மயில்
https://ta.wikipedia.org/wiki/இந்திய_மயில்
மயில் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற, இந்திய மயில் (பாவோ கிரிசுடேடசு), அல்லது நீல மயில் என்பது இந்தியத் துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு பறவை இனமாகும். இது இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய மயில்கள் பால் ஈருருமை கொண்டிருக்கின்றன. ஆண் மயில்கள் வண்ணமயமான கண் போன்ற புள்ளிகள் கொண்ட இறக்கைகளாலான பெரிய தோகைகளை கொண்டிருக்கின்றன. பெண் மயில்களை கவர முற்படும்போது இந்த தோகைகளை உயர்த்தி ஒரு பெரிய விசிறி போல காட்டுகின்றன. மயிலின் விரிவான தொகையின் செயல்பாடு பற்றி அறிஞர்களிடையே வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. 19 ஆம் நூற்றாண்டில், சார்லஸ் டார்வின், இது ஒரு புரியாத புதிர் என்றும், சாதாரணமான இயற்கைத் தேர்வு மூலம் விளக்குவது கடினம் என்றும் குறிப்பிட்டார். பெண் மயில்கள் பெரிய தோகைகளை கொண்டிருப்பதில்லை. அவை பெரும்பாலும் வெள்ளை நிற முகம், பச்சை நிற கீழ் கழுத்து, மற்றும் மந்தமான பழுப்பு அல்லது சாம்பல் நிற இறகுகளைக் கொண்டிருக்கின்றன. மயில்கள் பெரிய தோகைகளைக் கொண்டிருந்தாலும் பறக்கும் திறன் கொண்டவை. இந்திய மயில்கள் திறந்த காடுகளில் அல்லது பயிரிடப்பட்ட வயல்வெளிகளில் வாழ்கிறது, அங்கு இவை பழங்கள், தானியங்கள் போன்றவற்றை உண்கின்றன. இவை பாம்புகள், பல்லிகள் மற்றும் சிறிய கொறித்துண்ணிகளை வேட்டையாடுகின்றன. மயில்களின் அகவல் இவற்றைக் கண்டறிவதை எளிதாக்குகின்றன. இந்த அகவல் சத்தமானாது வனப் பகுதிகளில் புலி போன்ற வேட்டையாடும் விலங்குகள் இருப்பதை மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக பயன்படுகின்றன. இந்த பறவை இந்து மற்றும் கிரேக்க புராணங்களில் பரவலாக காணப்படுகின்றது. தமிழ் கடவுளாக அறியப்படுகின்ற முருகனின் வாகனமாக கருதப்படுகின்றது. இது இந்தியாவின் தேசியப் பறவையாகும். தோற்றம் thumb|left|ஒரு ஆண் மயிலின் கழுத்து இந்திய மயில்கள் பால் ஈருருமை கொண்டிருக்கின்றன. ஆண் மயில்கள் உருவில் பெரியவை. மயிலின் அலகின் முனையில் இருந்து வால் சிறகு வரை ஏறத்தாழ 100-115 செ. மீ. நீளமும், நன்கு வளர்ந்த முதிர்ந்த பறவைகளில் முழுவதுமாக வளர்ந்த தோகையின் கடைசி முனை வரை கணக்கிட்டால் ஏறத்தாழ 195-225 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். இதன் எடை ஏறத்தாழ 2.5 முதல் 4 கிலோ வரை இருக்கும். இந்திய மயில்கள் பறவை இனத்தின் பெரிய மற்றும் கனமான உறுப்பினர்களில் ஒன்றாகும். ஆண் மயில்கள் நீல நிற தலை மற்றும் கழுத்தைக் கொண்டிருக்கின்றன. தலையில் உள்ள இறகுகள் குறுகியதாகவும் சுருண்டதாகவும் இருக்கும். தலையில் உள்ள விசிறி வடிவ கொண்டை கருப்பு நிற தண்டுகளுடன் நீல-பச்சை நிற இறகுகளால் ஆனது. கண்ணுக்கு மேலே ஒரு வெள்ளைக் கோடும், கண்ணுக்குக் கீழே ஒரு பிறை வடிவ வெள்ளைத் திட்டும் காணப்படுகின்றன. தலையின் ஓரங்களில் பச்சை கலந்த நீல நிற இறகுகள் உள்ளன. பின்புறம் கருப்பு மற்றும் செம்பு நிற இறகுகள் உள்ளன. ஆண் மயில்கள் வண்ணமயமான கண் போன்ற புள்ளிகள் கொண்ட இறக்கைகளாலான பெரிய தோகைகளை கொண்டிருக்கின்றன. தோகையில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறகுகள் இருக்கும். பெண் மயில்களை கவர முற்படும்போது இந்த தோகைகளை உயர்த்தி ஒரு பெரிய விசிறி போல காட்டுகின்றன. thumb|left|தோகைகளை உயர்த்திய ஒரு ஆண் மயில் வயது முதிர்ந்த பெண் மயில்கள் ஒரு முகடு கொண்ட பழுப்பு நிற தலையைக் கொண்டுள்ளன. முகடின் நுனிகள் பச்சை நிறத்தில் உள்ளன. இதன் மேல் உடல் பழுப்பு நிறத்திலுள்ளது. கீழ் கழுத்து பச்சை நிறமாகவும், மார்பக இறகுகள் பச்சை நிறம் கலந்த அடர் பழுப்பு நிறத்தில் பளபளப்பாகவும் இருக்கும். அடிப்பகுதி வெண்மையாகவும், வால் சிறகுகள் அடர் பழுப்பு நிறத்திலும் இருக்கும். மயில் குஞ்சுகள் இளஞ்சிவப்பு கண்களுடன் கழுத்தில் கரும்பழுப்பு நிற அடையாளத்துடன் காணப்படுகின்றன. மயில்கள் உரத்த அகவல் ஒலிகளை எழுப்புகின்றன. மயில்களின் அகவல் இவற்றைக் கண்டறிவதை எளிதாக்குகின்றன. இந்த அகவல் சத்தமானாது வனப் பகுதிகளில் புலி போன்ற வேட்டையாடும் விலங்குகள் இருப்பதை மற்ற விலங்குகளுக்கு எச்சரிக்கை செய்வதற்காக பயன்படுகின்றன. திரிபுகள் மற்றும் கலப்பினங்கள் thumb|கருப்பு நிற தோள்பட்டை கொண்ட ஒரு இந்திய மயில் இந்திய மயில்களில் பல நிறமாற்றங்கள் உள்ளன. இவை காடுகளில் மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் இவற்றைப் பொதுவானதாக ஆக்கியுள்ளது. கருப்பு தோள் கொண்ட திரிபுகள் ஆரம்பத்தில் இந்திய மயில்களின் ஒரு கிளையினமாகக் கருதப்பட்டது. இயற்கையியலாளர் மற்றும் உயிரியலாளர் சார்லஸ் டார்வின் (1809-1882) இது தனி கிளையினம் அல்ல என்றும், வளர்ப்பதற்காக உருவான ஒரு வகையானது என்பதற்கான உறுதியான ஆதாரங்களை முன்வைத்தார்.van Grouw, H. & Dekkers, W. 2023. The taxonomic history of Black-shouldered Peafowl; with Darwin’s help downgraded from species to variation. Bulletin of the British Ornithologists' Club, 143(1): 111–121. https://doi.org/10.25226/bboc.v143i1.2023.a7 இந்த பிறழ்வில், வயது முதிர்ந்த ஆண் மயில்கள் கறுப்பு இறக்கைகளுடைய கருநிறமிகளாக உள்ளன. thumb|left|தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் உருவான வெள்ளை மயில் இந்திய மயிலின் பிற நிற வடிவங்களில் வெள்ளை நிற திரிபுகள் அடங்கும். இவை தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு மாறுபாட்டின் விளைவாகும். இந்த வெள்ளை நிற மயில்கள் பெரும்பாலும் விலங்குக் காட்சிச்சாலைகள் மற்றும் உயிரியல் பூங்காக்களில் பரவலாகக் காணப்படுகின்றன. ஒரு ஆண் பச்சை மயில் (பாவோ மியூட்டிகசு) மற்றும் ஒரு பெண் இந்திய மயில் (பாவோ கிரிசுடேடசு) இடையேயான சேர்க்கை "சுபால்டிங்" எனப்படும் ஒரு கலப்பினத்தை உருவாக்குகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் உருவாக்கப்பட்ட அறியப்படாத வம்சாவளியைச் சேர்ந்த இந்த கலப்பின பறவைகள் காடுகளுக்குள் விடுவிக்கப்பட்டால் சிக்கல்கள் ஏற்படலாம், ஏனெனில் அத்தகைய கலப்பினங்கள் மற்றும் அவற்றின் சந்ததிகளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகின்றன. வாழ்விடம் thumb|ஒரு பெண் மயில் தனது குஞ்சுகளுடன் இந்திய மயில் இந்திய துணைக்கண்டம் முழுவதும் வசிக்கும் ஒரு பறவையினமாகும். இது பொதுவாக வறண்ட தாழ்நிலப் பகுதிகளில் வாழ்கிறது. இந்திய மயில்கள் திறந்த காடுகளில் அல்லது பயிரிடப்பட்ட வயல்வெளிகளில் வாழ்கிறது. இந்தியாவின் பல பகுதிகளில், அவை பாதுகாக்கப்படுவதால், மக்கள் வசிக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சுற்றி காணப்படுகின்றன. இந்திய மயில் ஐரோப்பாவில் கி.மு. 450 வாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இது பிறகு உலகின் பல பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. நடத்தை மற்றும் சூழலியல் thumb|left|மரக் கிளையில் அமர்ந்திருக்கும் ஆண் மயில் ஆண் மயில்கள் அதன் ஆடம்பரமான தோகைகளை விரித்து காட்டும் காட்சிகளுக்கு மிகவும் பிரபலமானது. இந்த தோகை இறகுகள் மயில்களின் முதுகில் இருந்து வளர்ந்தாலும், உயிரியலில் ரீதியாக வாலின் ஒரு பகுதியாக கருதப்படுகின்றது. தொகையின் நிறங்கள் எந்த நிறமிகளாலும் ஏற்படுவதில்லை மாறாக இறகுகளின் நுண்ணிய அமைப்பு மற்றும் அதன் விளைவாக ஒளியியல் நிகழ்வுகளால் வண்ணமயமாக தெரிகின்றன. ஆண் மயிலின் நீண்ட தோகை இறகுகள் இரண்டாவது வயதுக்கு பிறகு வளரத் தொடங்கும். நான்கு வயதாகும் போது முழுமையாக வளர்ந்த தோகைகள் காணப்படுகின்றன. இவை ஆண்டுதோறும் பெரும்பாலும் பிப்ரவரி மாதத்தில் முழுதாக உருவாகி பின்னர் ஆகத்து மாத இறுதியில் உதிர்க்கப்படுகின்றன. பொதுவாக மயில்கள் சிறிய குழுக்களாக தரையில் உண்ணும். இந்த குழு ஒரு ஆண் மயில் மற்றும் 3 முதல் 5 பெண் மயில்கள் மற்றும் குஞ்சுகளைக் கொண்டிருக்கும். இனப்பெருக்க காலத்திற்குப் பிறகு, மந்தைகளில் பெண் மயில்கள் மற்றும் குஞ்சுகள் மட்டுமே இருகின்றன. இவை அதிகாலையில் திறந்த வெளியில் காணப்படுகின்றன. பகல் நேரத்தில் வெப்பத்தின் போது மர நிழல்களில் ஓய்வெடுக்க முனைகின்றன. அந்தி வேளையில், குழுக்களாக நீர் பருகுவதற்காக நீர்நிலைகளுக்கு செல்கின்றன. இடையூறு ஏற்படும் போது, ​​மயில்கள் ஓடுவதை வழக்கமாக கொண்டுள்னன, சில அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே பறந்து தப்பிச்செல்கின்றன. மயில்கள் உயரமான மரங்களில் இரவில் குழுக்களாக கூடுகின்றன. சில நேரங்களில் பாறைகள், கட்டிடங்கள் அல்லது தூண்களைப் பயன்படுத்துகின்றன. thumb|மயிலின் அகவல் மயில்கள் குறிப்பாக இனப்பெருக்க காலத்தில் உரத்த அகவல் குரல்களை எழுப்புகின்றன. பொதுவாக இரு பாலினத்தாலும் ஆறு எச்சரிக்கை அழைப்புகளைத் தவிர ஏறக்குறைய ஏழு வெவ்வேறு அழைப்பு வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இனப்பெருக்கம் thumb|ஒரு பெண் மயிலிடம் தோகையை விரித்து காண்பிக்கும் ஆண் மயில் மயில்கள் பொதுவாக அணைத்து பருவங்களிலும் இனப்பெருக்கம் செய்தாலும், பெரும்பாலும் மழைக் காலத்தில் பரவலாக இனப்பெருக்கம் செய்கின்றன. மயில்கள் பொதுவாக 2 முதல் 3 வயதில் பாலியல் முதிர்ச்சியை அடைகின்றன. பல ஆண் மயில்கள் பெண் மயில்களை ஈர்ப்பதற்காக ஒரே தளத்தில் கூடலாம். ஆண் மயில்கள் தனக்கென ஓர் இடத்தை பராமரிக்கின்றன. அந்த இடத்தை பெண் மயில்களை பார்வையிட அனுமதிக்கின்றன. ஆண் மயில்கள் தனது பெரிய தோகையை விசிறி போல உயர்த்துகின்றன. இறகுகளை அவ்வப்போது அதிரவைத்து, ஒரு சலசலப்பான ஒலியை உருவாக்குகின்றன. ஒரு ஆண் மயில் பெண் மயிலை எதிர்கொள்ளும் போது அதன் தோகை அமைப்பைக் காட்டுவதற்காக பெண் மயிலை சுற்றி வருகிறது. பெண் மயில்கள் இல்லாவிட்டாலும் சில நேரங்களில் ஆண் மயில்கள் தோகைகளை விரித்துக் காட்சியளிக்கலாம். ஒரு ஆண் மயில் காட்சியளிக்கும் போது, ​​பெண் மயில்கள் எந்த ஒரு ஆர்வமும் இல்லாதது போல தனது வேலையே தொடர்கின்றன. thumb|left|மயில் முட்டை ஒரு மயிலின் கூடு என்பது இலைகள், குச்சிகள் மற்றும் பிற குப்பைகளால் தரையில் அமைக்கப்படுவதாகும். கூடுகள் சில சமயங்களில் கட்டிடங்களில் மீது அல்லது முந்தைய காலங்களில் கழுகுகளின் பயன்படுத்தப்படாத கூடுகளில் அமைக்கப்பட்டன. பெண் மயில் நான்கு முதல் எட்டு முட்டைகளை இடுகின்றது. பொதுவாக முட்டைகளை பெண் மயில்கள் அடை காக்கின்றன. ஒரு ஆண் மயில் முட்டையை அடைகாக்கும் அசாதாரண நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முட்டைகள் அடை காக்கப்பட்டால் குஞ்சு பொரிக்க ஏறத்தாழ 28 நாட்கள் ஆகும். முட்டை பொரித்த பிறகு வெளிவரும் குஞ்சுகள் தாயைப் பின்தொடர்கின்றன. குஞ்சுகள் சில சமயங்களில் தங்கள் தாய்மார்களின் முதுகில் ஏறிக்கொள்ளும். பெண் பறவைகள் அவற்றை பாதுகாப்பான மரக்கிளைக்கு கொண்டு செல்ல இது உதவுகின்றது. உணவு மயில்கள் அனைத்துண்ணிகளாகும். இவை விதைகள், பழங்கள், தானியங்கள், பூச்சிகள், புழுக்கள், சிறிய பாலூட்டிகள், தவளைகள், கொறிப்பான்கள் மற்றும் பல்லிகள் போன்ற ஊர்வன ஆகியவற்றை உண்கின்றன. இவை சிறிய பாம்புகளை உண்கின்றன. இவை பூ மொட்டுகள், இதழ்கள், புல் மற்றும் மூங்கில் தளிர்களையும் உண்ணும். பயிரிடப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் மயில்கள் நிலக்கடலை, தக்காளி, நெல், மிளகாய், வாழை போன்ற பலதரப்பட்ட பயிர்களை உண்ணும். ஆயுட்காலம் மற்றும் இறப்பு காரணிகள் thumb|குஞ்சுகள் பெரும்பாலும் தாயுடனேயே இருக்கின்றன. மயில் குஞ்சுகளை பல விலங்குகள் மற்றும் பறவைகள் வேட்டையாடுகின்றன. சிறுத்தை, செந்நாய், நரி மற்றும் புலி போன்ற பெரிய விலங்குகள் வயது வந்த மயில்களை பதுங்கியிருந்து தாக்க வல்லவை.Chourasia, Pooja, et al. "Food habits of golden jackal (Canis aureus) and striped hyena (Hyaena hyaena) in Sariska Tiger Reserve, Western India." World Journal of Zoology 7.2 (2012): 106-112. இருப்பினும் வழக்கமாக இந்த விலங்குகள் சிறிய மயில்களை மட்டுமே வேட்டையாடுகின்றன, ஏனெனில் வயது வந்த மயில்கள் பொதுவாக மரங்களுக்குள் பறப்பதன் மூலம் தரையில் வேட்டையாடுபவர்களிடமிருந்து தப்பிக்க முடியும்.Hayward, M. W., W. Jędrzejewski, and B. Jedrzejewska. "Prey preferences of the tiger P anthera tigris." Journal of Zoology 286.3 (2012): 221-231.Gurjar, Raju Lal, Ramesh Pratap Singh, and Ashok Mishra. "Density of the Indian Peafowl Pavo cristatus in Satpura Tiger Reserve, India." Journal homepage: www. wesca. net 8.1 (2013). சில சமயங்களில் பருந்து மற்றும் ஆந்தை போன்ற பெரிய வேட்டையாடும் பறவைகளாலும் நெயில் குஞ்சுகள் வேட்டையாடப்படுகின்றன. வயது வந்த பறவைகளை விட குஞ்சுகள் வேட்டையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சில சமயங்களில் இவை தெருநாய்களால் கொள்ளப்படுகின்றன. நாட்டுப்புற வைத்தியங்களுக்காக சில சமயங்களில் மனிதர்களால் இவை வேட்டையாடப்படுகின்றன. குழுக்களாக உணவு உண்பது பாதுகாப்பாக கருதப்படுகின்றது. நிலப்பரப்பில் வேட்டையாடும் விலங்குகளைத் தவிர்ப்பதற்காக இவை உயரமான மரங்களின் உச்சிகளில் கூடுகின்றன. இந்தப் பறவைகள் ஏறத்தாழ 23 ஆண்டுகள் வரை வாழ்கின்றன, ஆனால் காடுகளில் பெரும்பாலும் சராசரியாக 15 ஆண்டுகள் மட்டுமே வாழ்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் நிலை thumb|பாதுகாக்கப்பட்ட சரணாலயத்தில் உள்ள ஒரு ஆண் மயில் இந்திய மயில்கள் தெற்காசியா முழுவதும் காடுகளில் பரவலாக காணப்படுகின்றன. பல பகுதிகளில் கலாச்சார ரீதியாகவும் இந்தியாவில் சட்டத்தாலும் இவை பாதுகாக்கப்படுகின்றன. ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பறவைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. மயில்கள் எளிதில் இனப்பெருக்கம் செய்கின்றன. உலகெங்கிலும் உள்ள உயிரியல் பூங்காக்கள், பூங்காக்கள், பறவை ஆர்வலர்கள் இவற்றை வளர்க்கின்றனர். இருப்பினும் இறைச்சிக்காக சட்டவிரோத வேட்டையாடுதல் இந்தியாவின் சில பகுதிகளில் தொடர்கிறது. பூச்சிக்கொல்லி விதைகளை உண்பதன் மூலம் பரவும் விஷம் காட்டு பறவைகளுக்கு அச்சுறுத்தலாக அறியப்படுகிறது. இறகுகள் பறிக்கப்பட்டதா அல்லது இயற்கையாக உதிர்க்கப்பட்டதா என்பதைக் கண்டறியும் முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன, ஏனெனில் இந்தியச் சட்டம் உதிர்ந்த இறகுகளை மட்டுமே சேகரிக்க அனுமதிக்கிறது. இந்தியாவின் சில பகுதிகளில், மயில்கள் பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயத்திற்கு தொந்தரவாக இருக்கின்றன. இருப்பினும், வெட்டுக்கிளிகள் போன்ற பூச்சிகளை அபரிமிதமான அளவில் உட்கொள்வதன் மூலம் அது வகிக்கும் நன்மையான பங்கால் ஈடுசெய்யப்படுவதாகத் தெரிகிறது. தோட்டங்கள் மற்றும் வீடுகளில் அவை தாவரங்கள் மற்றும் கண்ணாடிகள் போன்றவற்றை சேதப்படுத்துகின்றன. பல நகரங்களில் மயில் மேலாண்மைத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பண்பாடு thumb|தமிழ் கடவுளான முருகன் மயில் வாகனத்தின் மீதமர்ந்து வள்ளி மற்றும் தெய்வானை உடன் காட்சியளிக்கிறார் பல கலாச்சாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பறவையான இது, 1963 இல் இந்தியாவின் தேசியப் பறவை என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கோவில் கலை, புராணங்கள், கவிதைகள், நாட்டுப்புற இசை மற்றும் மரபுகளில் அடிக்கடி சித்தரிக்கப்படுகிறது. பல இந்து தெய்வங்கள் மயில்களுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. விஷ்ணுவின் அவதாரமான கிருட்டிணன் தலையில் ஒரு மயில் இறகுடன் சித்தரிக்கப்படுகிறார். தமிழ் கடவுளான முருகன் பெரும்பாலும் மயில் வாகனத்தின் மீதமர்ந்தவாறு சித்தரிக்கப்படுகிறார். "இராமாயணத்தில்" தேவர்களின் தலைவன் இந்திரன், ராவணனை தோற்கடிக்க முடியாமல், மயிலின் இறக்கையின் கீழ் தஞ்சமடைந்ததை விவரிக்கிறது. பௌத்த தத்துவத்தில், மயில் ஞானத்தை குறிக்கிறது. மயில் இறகுகள் பல சடங்குகள் மற்றும் அலங்காரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. மயில் உருவங்கள் இந்திய கோயில் கட்டிடக்கலை, பழைய நாணயங்கள், துணிகள் ஆகியவற்றில் பரவலாக உள்ளன மற்றும் பல நவீன கலை மற்றும் பயன்பாட்டு பொருட்களில் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. கிரேக்க புராணங்களில் மயிலின் இறகுகளின் தோற்றம் பல கதைகளில் விளக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கல் மயில் உருவங்களைப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பறவைகள் பெரும்பாலும் பெரிய தோட்டங்களில் காட்சிக்காக வளர்க்கப்பட்டன. இடைக்காலத்தில், ஐரோப்பாவில் வீரர்கள் தங்கள் தலைக்கவசங்களை மயில் இறகுகளால் அலங்கரித்தனர். பல கதைகளில், வில்லாளர்கள் மயில் இறகுகளால் பொறிக்கப்பட்ட அம்புகளைப் பயன்படுத்துகின்றனர். மயில் இறகுகள் வைக்கிங் வீரர்கள் இறந்த பிறகு அவர்களுடன் புதைக்கப்பட்டன. பறவையின் சதை பாம்பு விஷம் மற்றும் பல நோய்களை குணப்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இவற்றின் பல பயன்பாடுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மயில் ஒரு பகுதியை பாம்புகள் இல்லாமல் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் BirdLife Species Factsheet இந்திய மயில் இந்திய மயில் படங்கள் பகுப்பு:இந்திய தேசியச் சின்னங்கள் பகுப்பு:மயில்கள்
இலங்கைக் காட்டுக்கோழி
https://ta.wikipedia.org/wiki/இலங்கைக்_காட்டுக்கோழி
thumb| Gallus lafayettii இலங்கைக் காட்டுக்கோழி (Srilankan Junglefowl)(கல்லசு இலபாயெட்டீ) பேசண்ட் குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினமாகும். இது இலங்கையில் மட்டும் வாழக்கூடிய அகணிய உயிரி ஆகும். இது வீட்டில் வளர்க்கும் கோழிகளை உருவாக்கிய காட்டுக்கோழியான, இந்தியாவின் சிவப்புக் காட்டுக்கோழி எனப்படும் கல்லசு கல்லசு சிற்றினத்திற்கு நெருங்கிய உறவுள்ளது. இவை அளவிற் பெரிய பறவைகள். ஆண் பறவைகள் பல நிறம் கொண்ட இறகுகளைக் கொண்டவை. எனினும் அடர்த்தியான காடுகளில் இவற்றைக் கண்டுகொள்வது கடினம். இவை காடுகளிலும், பற்றைகளிலும் வாழுகின்றன. இலங்கையில் இவற்றை, கித்துல்கல, யால, சிங்கராஜ ஆகிய இடங்களில் காணலாம். இது கல்லது பேரினத்தைச சேர்ந்த நான்கு வகைப் பறவைகளில் ஒன்று. இது நிலத்தில் கூடு கட்டும் பறவை. ஒரு கூட்டில் 2 முதல் 4 முட்டைகள் வரை இடும். பெசண்ட் குடும்பத்தைச் சேர்ந்த பல பறவைகளைப் போலவே இவ்வகையிலும், ஆண் பறவைகள், அடைகாப்பதிலோ அல்லது பொரிக்கும் குஞ்சுகளை வளர்ப்பதிலோ எவ்வித பங்கும் வகிப்பதில்லை. இவ்வேலைகளை மங்கலான நிறத்துடன், சிறப்பான உருமறைப்புக்கான உடலைக் கொண்ட பெண் பறவைகளே செய்கின்றன. ஆண் இலங்கைக் காட்டுக்கோழி சுமார் 66 முதல் 73 செ.மீ. வரை நீளம் கொண்ட பறவையாகும். இது நாட்டுக் கோழி போன்ற உடலமைப்பும், செம்மஞ்சள் கலந்த சிவப்பு நிற உடலும், கடும் ஊதா நிற சிறகுகளையும், வாலையும் கொண்டது. தலையின் பின்பகுதியும், கழுத்தும் பொன்னிறமானவை. முகம் வெறுமையான சிவப்புத் தோலையும், முகப்பகுதியிலிருந்து மடிந்து நீண்டு தொங்கும் செந்நிறத் தோற் பகுதியையும் கொண்டது. உச்சியிலமைந்துள்ள "கொண்டை" யும், மஞ்சளான மையப் பகுதியுடன் கூடிய சிவப்பு நிறமானதே. பெண் மிகவும் சிறியது, 35 செ.மீ. நீளம் மட்டுமே உடையது. இவை அடிவயிற்றிலும், மார்பிலும் வெள்ளை நிறம் அமைந்த, மண்ணிற உடலை கொண்டவை. பெரும்பாலான பெசண்ட் குடும்பப் பறவைகளைப் போலவே இலங்கைக் காட்டுக்கோழியும் நிலத்தில் வாழும் வகையாகும். இவை நிலத்தைக் கால்களால் கிளறி, பல்வேறு விதைகள், விழுந்த பழங்கள், மற்றும் பூச்சிகள் போன்றவற்றை எடுத்து உண்கின்றன. இந்தக் காட்டுக்கோழி இலங்கையின் தேசியப் பறவையாகப் அறிவிக்கப்பட்டுள்ளது. உசாத் துணை Birds of India by Grimmett, Inskipp and Inskipp, பகுப்பு:காட்டுக்கோழி பகுப்பு:இலங்கையின் தேசிய சின்னங்கள்
எண்கணிதம்
https://ta.wikipedia.org/wiki/எண்கணிதம்
எண் கணிதம் (Arithmetic) என்பது கணிதத்தின் ஒரு பிரிவு (அல்லது அதன் முன்னோடி) ஆகும். இது எண்களின் மீது செய்யப்படும் செய்முறைகளின் அடிப்படை இயல்புகளை விளக்குகிறது. வழமையான செய்முறைகள், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பனவாகும். வர்க்கம், வர்க்கமூலம் போன்ற உயர்நிலைச் செய்கைகளும் இவற்றுடன் சேர்க்கப்படுவதுண்டு. எண்கணிதக் கணிப்பு ஒரு செய்முறை ஒழுங்குக்கு அமையச் செய்யப்படுகின்றது. இயற்கை எண்கள், முழு எண்கள், விகிதமுறு எண்கள் (பின்ன வடிவிலானவை) மற்றும் உண்மை எண்கள் (தசம எண்கள்) என்பவை தொடர்பான எண்கணிதம் பொதுவாக ஆரம்ப வகுப்பு மாணவர்களால் கற்கப்படுகின்றது. நூற்றுவீத அடிப்படையில் எண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முறைகளும் இந் நிலையிலேயே கற்கப்படுகின்றன. பொதுவாகப் பெரும்பாலான நாடுகளில் ஆரம்பநிலை மாணவர்கள் கூட்டல் வாய்பாடு, பெருக்கல் வாய்பாடு என்பவற்றை மனனம் செய்வது கட்டாயமானது. இது வாழ்நாள் முழுவதும் எண் கணிதச் செய்கைகளைச் செய்வதற்கு அம் மாணவனுக்கு வேண்டியது. தற்காலத்தில் பெரும்பாலான வளர்ந்தவர்கள் எல்லா எண் கணிதக் கணிப்புகளுக்கும் கணிப்பொறி அல்லது கணினிகளையே உபயோகிக்கிறார்கள். வரலாறு எண்கணிதத்தின் முற்பகுதி வரலாறு பற்றி ஒரு சிறிய அளவில் தான் ஆதாரங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று மத்திய ஆப்பிக்காவில் உள்ள கொங்கோ குடியரசு நாட்டில் 20,000 மற்றும் 18,000 கி.மு. இடைப்பட்ட காலத்தை கொண்ட ஈசாங்கோ எழும்பு கிடைத்துள்ளது. கி.மு 2000 ஆம் ஆண்டுகளுக்கு முற்பகுதியிலேயே அனைத்து அடிப்படை எண்கணித நடவடிக்கைகளையும் எகிப்தியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் முதன்முதலில் பயன்படுத்திய ஆதாரங்கள் கிடைக்கப்பட்டுள்ளது. அந்த ஆதாரங்கள் அவர்கள் கண்க்குகளில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு எந்த செயல்முறையை பயன்படுத்தினர் என்பதுப் பற்றிய எந்த ஒரு குறிப்பும்மில்லை. ஆனால் குறிப்பிட்ட எண் அமைப்பு முறையின் பண்புகளைப் பற்றியும் மற்றும் சிக்கலான தன்மையை குறித்தும் ஆதாரக் குறிப்புகள் உள்ளது. முந்தைய எண் அமைப்புகள், நிலைப்படுத்தப்பட்ட குறிமுறையை கொண்ட தசம எண்கள் அடிப்படையில் இல்லை. குறிப்பாக பாபிலோனிய கண்க்கீடு முறைகள் அறுபது (அடிப்படை 60) எண்களின் அடிப்படையிலும் மற்றும் மாயா எண்கள் இருபது (அடிப்படை 20) எண்களின் அடிப்படையிலும் உள்ளதாக இருந்திருககிறது. இந்த இட மதிப்பு கருத்தின் காரணமாக, வெவ்வேறு மதிப்புகளுக்கு அதே இலக்கங்களை மறுபரிசீலனை செய்வது, எளிதான மற்றும் திறமையான கணக்கீட்டு முறைகளுக்கு வழிவகுத்தது. நவீன கணித தொடர்களின் தொடர்ச்சியான வரலாற்று வளர்ச்சி என்பது பண்டைய கிரேக்கத்தின் ஹெலனிசி நாகரீகத்தில் இருந்து ஆரம்பமாகிறது. இது பாபிலோனிய மற்றும் எகிப்திய உதாரணங்களைவிட மிகப் பிற்பாடு தோன்றியது. சுமார் 300   கி.மு. யுசிலிட் படைப்பிற்கு முன்னர், கணிதத்தில் கிரேக்க தத்துவ படிப்பு, ஆன்மீக நம்பிக்கையுடன் இணைந்திருந்தது. உதாரணமாக, நிகோமாச்சஸ், எண்களுக்கு முந்தைய பித்தேகோரியன் அணுகுமுறை மற்றும் அவரது படைப்பான எண்கணிதம் அறிமுகம் ஆகியவற்றில் ஆன்மீக நம்பிக்கையுடன் உள்ள உறவுகளை சுருக்கமாகக் குறிப்பிட்டார். thumb|200px|இலிபினிட்சு Stepped Reckoner, இதுவே முதன் முதலில் உருவாக்கப்பட்ட கண்க்கிடும் கால்குலேட்டர். ஆர்க்கிமெடெசு, திபோபாண்டசு பயன்படுத்திய கிரேக்க எண்கள் மற்றவர்கள் பயன்படுத்திய நிலைநிறுத்தக் குறிப்பு எண்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவை அல்ல. பூர்வ கிரேக்கர்கள் 0 பூச்சியத்திற்கான சின்னத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால் (எலனிசிடிக்கு காலம் வரை), அவை மூன்று தனித்தனி சின்னங்களைக் கொண்டிருந்தன. பத்தாவது இடத்திற்கு ஒன்று, நூறுக்கு ஒன்று. பின்னர் ஆயிரம் இடத்திற்கு அவை அலகு இடத்திற்கான சின்னங்களை மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தினர். அவற்றின் கூட்டல் வழிமுறை நம்முடையது போலவே இருந்தது, அவற்றின் பெருக்கல் வழிமுறை மிகவும் சற்று வித்தியாசமானது இருந்திருக்கிறது. ஆனால் வகுத்தல் வழிமுறை நம்முடையது போலவே இருந்திருக்கிறது மற்றும் ஆர்க்கிமிடீசுக்கு சதுர ரூட் கண்க்கிடும் முறை அறிந்திருக்கவும் மற்றும் கண்டுபிடித்திருக்கவும் வாய்ப்பிருந்திருக்கிறது. அவர் ஈரோ முறையை அதற்கு அடுத்தடுத்த தோராயமாக பயன்படுத்த விரும்புகிறார். ஏனெனில், ஒரு முறை கணக்கிடப்பட்டால், ஒரு எண் மாறாது, மற்றும் 7485696 போன்ற சரியான சதுரங்களின் சதுர ரூட், 2736 என உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.The Works of Archimedes, Chapter IV, Arithmetic in Archimedes, edited by T.L. Heath, Dover Publications Inc, New York, 2002. பண்டைய சீனர்கள் இதேபோன்ற கண்க்கிடும் முறையை பயன்படுத்தினர். ஏனென்றால் அவரிகலிடத்தில் 0 பூச்சியத்திற்கான சின்னம் இல்லாதிருந்ததால், அவை ஒரு அலகு இடத்திற்கு ஒரு தொகுப்பு அடையாளமும், பத்தாவது இடங்களுக்கான இரண்டாவது தொகுப்பு அடையாளமும். நூறாவது இடத்திற்கு அடையாளங்களை மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தினர். அவர்களின் சின்னங்கள் பண்டைய எண்ணும் தண்டுகள் அடிப்படையிலானவை. சீனர்கள் நிலையான குறியீடுகள் எப்போது பயன்படுத்த தொடங்கினர் என்பது தெறியாது ஆனால் கி.மு. 400 க்கு முன்பே நிச்சயமாக இருந்திருக்கும்.Joseph Needham, Science and Civilization in China, Vol. 3, page 9, Cambridge University Press, 1959. சிரியாவின் பிசப்பு, செவரஸ் செபோக் (650 கி.மு.), "இந்தியர்கள் கண்க்கிடும் முறையைப் பற்றி பாராட்ட எந்த வார்த்தையையும் போதுமானதாக இல்லை ஏனென்றால் அவர்கள் ஒரு சிறந்த கணக்கிடுவதற்கான முறையை கொண்டிருக்கிறார்கள்." Reference: Revue de l'Orient Chretien by François Nau pp.327-338. (1929) லியனார்டோ பிசா பிபநோசி, 1200 ஆம் ஆண்டில் லிபர் அபாசியில் இவ்வாறு எழுதினார். "இந்தியர்களின் கணக்கிடும் முறை எந்த அறியப்பட்ட முறையும் விஞ்சிவிட்டது. இது ஒரு அற்புதமான முறை. ஒன்பது குறியீடுகள் மற்றும் 0 பூச்சியம் குறியீடு ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்கள் கணக்கிடுகிறார்கள்." Reference: Sigler, L., "Fibonacci's Liber Abaci", Springer, 2003. இந்து-அரேபிய எண்களின் படிப்படியான வளர்ச்சி, இட மதிப்புத் தன்மை மற்றும் நிலைநிறுத்த குறிமுறை ஆகியவற்றை சுயாதீனமாக உருவாக்கியது, இது தசம கணக்கிடுதலுக்கான அடிப்படையான எளிமையான முறைகள் மற்றும் ஒரு இலக்கத்தின் 0 பூச்சியத்தைக் குறிக்கும் பயன்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இந்த முறையானது ஒரு பெரிய மற்றும் சிறிய முழு எண்களை குறிப்பதற்கு ஒரு நிலையான அமைப்பை அனுமதித்துள்ளது. இந்த அணுகுமுறை இறுதியில் மற்ற அனைத்து அமைப்புகளையும் மாற்றியது. 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய கணிதவியலாளர் ஆர்யபட்டா இந்த அமைப்பின் தற்போதைய பதிப்பில் தனது ஆராய்ச்சிகளை தொட்ர்ந்தார், மேலும் பல்வேறு குறிப்புகளுடன் பரிசோதனைகளையும் செய்துள்ளார். 7 ஆம் நூற்றாண்டில், பிரம்மகுப்தா 0 பூச்சியத்தைப் ஒரு தனி எண்ணாக பயன்படுத்தி, பூச்சியம் மற்றும் அனைத்து பிற எண்களின் பெருக்கல், பிரிவு, கூட்டல் மற்றும் கழித்தல் ஆகியவற்றின் முடிவுகளை நிர்ணயித்ததுள்ளார். ஆனால் 0 பூச்சியத்தால் வகுப்படும் எண்ணின் முடிவை அவரால் கூறமுடியவில்லை. எண்கணித செயல்பாடுகள் அடிப்படை எண்கணித செயல்பாடுகளை கூடுதலாக, கழித்தல், பெருக்கம் மற்றும் வகுத்தல் ஆகியவையாகும், இருப்பினும் இது மேலும் மேம்பட்ட செயல்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது, இது சதவிகிதம் கையாளுதல், சதுர வேர்கள், விரிவாக்கம் மற்றும் மடக்கை செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. ஒரு நிலையான செயல்பாடுகளின் படி எண்கணித செய்ல்படுகிறது. அனைத்து நான்கு கணித செயல்களும் (0 ஆல் வகுக்கப்படுவதைத் தவிர) எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம், இந்த நான்கு செயல்பாடுகள் வழக்கமான விதிகளுக்குள் உள்ளடங்கி, ஒரு களமாக அல்லது ஒரு துறையாக அழைக்கப்படுகின்றன. கூட்டல் (+) கூட்டல் என்பது கணிதத்தின் அடிப்படை செயல்பாடு ஆகும். அதன் எளிய வடிவத்தில், கூடுதலாக இரண்டு எண்கள், எண்களின் கூட்டுத்தொகை (2 + 2 = 4 அல்லது 3 + 5 = 8) ஒரு ஒற்றை இலக்கமாக எண் கிடைப்பது, கூட்டல் ஆகும். இரண்டு எண்களை விட அதிகமான எண்களை மீண்டும் மீண்டும் சேர்த்துக் கூட்டல்; இந்த நடைமுறை கூட்டுத்தொகை என அறியப்படுகிறது மற்றும் எண்ணற்ற எண்ணற்ற எண்ணை எண்ணற்ற வரிசையில் சேர்க்க வழிகள் உள்ளன; எண் 1 இன் தொடர்ச்சியான எண்ணிக்கையின் கணக்கிடுதல் மிக அடிப்படை வடிவம் ஆகும். கூட்டல் என்பது கூடுதலாக வகை மாற்று மற்றும் கூட்டுப்பண்புகள் கொண்டதாகவும் இருக்கிறது அதாவது ஒரு தொடரில் எண்ணின் நிலையை எப்படி மாற்றினாலும் அந்த எண்ணின் தொகை மாறாமல் இருக்கும். கூடுதலாக அடையாளம் உறுப்பு (கூடுதல் சேர்க்கை) 0 என்பது, எந்த எண்னுடன் கூட்டலின் போது அந்தக் கூட்டப்படும் எண்ணின் தொகை மாறாமல் அளிக்கிறது & nbsp; 0. கூடுதலாக, நேர்மாறு உறுப்பு (கூட்டல் நேர்மாறானது) கூட்டப்படும் எண்ணின், அதாவது அந்த எண்ணின் எதிர் எண்ணுடன் சேர்த்துக்கொள்ளும் போது 0 பூஜ்ஜியம் கிடைக்கப்பெறும். உதாரணமாக, 7-ன் எதிர் -7, எனவே . கழித்தல் (-) கழித்தல் என்பது கூட்டலின் தலைகீழ் ஆகும். கழித்தல் இரண்டு எண்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டைக் காண்கிறது, அதாவது கழிக்கப்படும் எண் கழிபடும் எண்னை விட சிறியதாக இருந்தால் வேறுபாடு நேர்மறையாக இருக்கும் மாறாக கழிக்கப்படும் எண் கழிபடும் எண்னை விட பெறியதாக இருந்தால் வேறுபாடு எதிர்மறையாக இருக்கும். இரண்டு எண்களும் சமமாக இருந்தால் வேறுபாடு 0 பூஜ்ஜியமாக கிடைக்கும். பெருக்கல் (× or · or *) பெருக்கல் என்பது கணிதத்தின் இரண்டாவது அடிப்படை செயல்பாடு ஆகும். பெருக்கல் இரண்டு வேறு வேறு முழு எண்களை ஒற்றை எண்ணின் தொடர் கூட்டுத்தொகையாக உருவாக்குகிறது. இரண்டு பெருக்கப்படும் அசல் அல்லது முழு எண்களை பெருக்கிகள் என்றும் , சில நேரங்களில் இரண்டு காரணிகள் என அழைக்கப்படுகின்றன. பெருக்கல் ஒரு அளவிடுதலுக்கு பயன்ப்டுகிறது . எண்களை ஒரு வரிசையில் நிற்பதாக கற்பனை செய்தால், அந்தப் பல எண்களின் பெருக்கல், x எனக் கூறினால், அந்த் x 1 ஐ விட அதிகமாக இருக்க வேண்டும். இப்போது அந்த எண்கள் X எனற எண்ணின் எண்ணிக்கையில் சமமாக் அந்த வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை x ஆகும். a மற்றும் b பெருக்கல் இவ்வாறு எழுதப்படுகிறது or . கணினி நிரலாக்க மொழிகளிலும், மென்பொருள் தொகுப்புகளிலும், ஒரு விசைப்பலகையில் பொதுவாக காணக்கூடிய எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த முடியும், இது பெரும்பாலும் ஒரு நட்சத்திரத்துடன் எழுதப்படுகிறது: a * b. வகுத்தல் (÷ or /) வகுத்தல் என்பது பெருக்கத்தின் தலைகீழ் ஆகும். இது இரண்டு முழு எண்களை வகுப்பதால் ஈவு கிடைக்கப்பெறும். இதில் வகுபடும் எண், வகு எண்னை விட பெரியதாக இருந்தால் வகுத்தல் போது ஒரு நேர்மறை எண் ஈவாகக் கிடைக்கும். இதுவே வகுபடும் எண், வகு எண்னை விட சிறியதாக இருந்தால் வகுத்தல் போது ஒரு எதிர்மறை எண் ஈவாகக் கிடைக்கும். இப்போது ஈவை அந்த வகு எண்ணால் பெருக்கினால் வகுபடும் எண் கிடைக்கும். ஒரு முழு எண்னை 0 பூஜ்ஜியத்தால் வகுத்தால் ஈவு என்பது ஒரு முடிவில்லா ஒன்றாகும். வகுத்தல் என்பது வகை மாற்று பண்போ அல்லது கூட்டுப்பண்புகள் கொண்டதாகவோ இருக்கிறது. மேலும் கழித்தலை கூட்டலாக பார்க்கவும், வகுத்தலை பெருக்கலாகப் பார்க்க இது பயனுள்ளதாக இருக்கும். வகுபடும் a எண்னை வகு b எண்னின் தலைகீழ் பெருக்கினால் கிடைக்கும் விடை சமமாகும் . மேலும் பெருக்கலின் அனைத்து பண்புகளையும் கொண்டிருக்கிறது. மேற்கோள்கள் பகுப்பு:எண்கள் பகுப்பு:எண்கணிதம்
ஆந்தை
https://ta.wikipedia.org/wiki/ஆந்தை
ஆந்தை,() ஸ்ட்றைஜிபோர்மெஸ் வரிசையைச் சேர்ந்த, தனித்த, இரவில் திரியும் 200 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள், பூச்சிகள், மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும். ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், சொண்டையும், மற்றும் facial disk என அழைக்கப்படும், தெளிவாகத் தெரியும், கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது. ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது. இது தனது தலையை இரு திசைகளிலும் 270 பாகைகள் வரை திருப்ப வல்லது. ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை, அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாது. எனினும், அவற்றின் பார்வை, விசேடமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது. பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. facial diskகள், கொறிணிகளிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன. அவற்றின் தோற்ற ஒற்றுமைக்குப் புறம்பாக, இவை, பாறுகள் மற்றும் ஏனைய இரவிற் திரியும் ஊனுண்ணிகளைவிட, whippoorwills மற்றும் ஏனைய பக்கிகள் அல்லது கேப்ரிமுல்கிபார்மஸ் என்பவற்றுக்கு நெருங்கிய உறவுள்ளவை. சில taxonomists, nightjarகளையும் ஆந்தையிருக்கும் அதே order இலேயே சேர்த்துள்ளார்கள். (Sibley-Ahlquist taxonomy ஐப் பார்க்கவும்). ஆந்தைகளின் வலுவான நகங்களும், கூரிய சொண்டும், உண்பதற்குமுன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப்பதற்கு உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும், மங்கலான இறகுகளும், அவை சத்தமின்றியும், காணப்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன. உணவின் சமிக்கப்படமுடியாத எலும்புகள், செதில்கள், மற்றும் இறகுகள் போன்றவற்றை, உருண்டை வடிவில் வெளிவிடும் இதன் நடத்தை, இவற்றின் உணவுப் பழக்கம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றது. உயிரியல் பாடங்களின்போது பகுத்தாய்வதற்கு மாணவர்களுக்கு உதவுவதால், சில நிறுவனங்கள், இந்த உருண்டைகளைச் சேகரித்துப் பாடசாலைகளுக்கு விற்பனை செய்கின்றன. ஆந்தை முட்டைகள் கிட்டத்தட்ட கோளவடிவம் கொண்டவை. ஆந்தைகள் அவற்றின் வகையைப் பொறுத்து, ஒரு சிலவற்றிலிருந்து பன்னிரண்டு வரையிலான முட்டைகளை இடுகின்றன. இவற்றின் கூடுகள் செம்மையற்றவை, மரங்கள், நிலத்தின் கீழான வளைகள், குகைகள் போன்ற இடங்களில் காணப்படும். பழங்கதைகளும், கிராமியக் கதைகளும் இந்தியாவில் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித்தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தையும் முக்கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டில் ஆந்தையின் அலறல், பயத்துக்குரியதாகவும், கெட்ட சகுனமாகவுமே கருதப்பட்டது. காகங்களும் வேறு பல பறவைகளும் அதிக புத்திக்கூர்மையுள்ளவையாக இருந்தும், ஆந்தைகள், பாரம்பரியமாகப் புத்திக்கூர்மையுடனும், ஆதெனா தெய்வத்துடனும் சம்பந்தப்படுத்தப்பட்டு வந்தது. பண்டைய எகிப்தியரின் எழுத்து வரிவடிவங்களில் "ம்" ஒலியைக் குறிக்க ஆந்தை உருவமே பயன்பட்டது. எனினும், ஊனுண்ணியான இது உயிர்பெற்றுத் தாக்குவதைத் தடுக்க, அதன் கால்கள் முறிந்த நிலையிலேயே வரைந்து வந்தார்கள். ஜப்பானியப் பண்பாட்டில், ஆந்தை இறப்பின் குறியீடாகக் கருதப்பட்டதுடன், இதனைக் காண்பதும் கெடுதியாகக் கருதப்பட்டது. ஹோபி பண்பாட்டில், இவை அழுக்கானவையாகவும், கஷ்டத்தைக் கொண்டுவருபவையாகவும் கருதப்பட்டன. 2003ல் அமெரிக்கப் பாடசாலைகளில் புழக்கத்திலுள்ள, மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களின் உள்ளீடுகளை, பல் பண்பாட்டு உணர்வுகளின் அடிப்படையில் மீளாய்வு செய்தபோது, பாம்புகள், தேள்கள் போன்ற பயத்தைக் கொடுக்கும் விலங்குகளுடன், ஆந்தைகளைப் பற்றிய கதைகள், கேள்விகளுக்கான உரைப்பகுதிகள் போன்றவற்றையும் நீக்கிவிட முடிவு செய்யப்பட்டது. தென்மேற்கு அமெரிக்க இந்தியப் பண்பாட்டைச் சேர்ந்த மாணவர்களை, ஆந்தை பற்றிய கேள்விகள் பயமுறுத்திப் பரீட்சையிலிருந்து திசைதிருப்பக் கூடுமென்பதால் இம் முடிவு எடுக்கப்பட்டதாம். மேற்கோள்கள் North American Owls: Biology and Natural History by Paul A. Johnsgard, , Smithsonian Institution Press, 1997 வெளி இணைப்புகள் விலங்கு Diversity இணையப் பக்கம்: ஆந்தைகள் Australian Owls and Frogmouths Owls of the World பகுப்பு:ஆந்தைகள்
செனிகல்
https://ta.wikipedia.org/wiki/செனிகல்
செனிகல் குடியரசு (Republic of Senegal) மேற்கு ஆப்பிரிக்காவில், செனிகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். மேற்கில் அத்லாந்திக் சமுத்திரமும், வடக்கில் மௌரித்தானியாவும், கிழக்கில் மாலியும், தெற்கில் கினியாவும், கினி-பிசாவும் எல்லைகளாக உள்ளன. செனிகல் கிட்டத்தட்ட அனைத்துப் பக்கத்தாலும் காம்பியா நாட்டைச் சூழ, கடற்கரையிலிருந்து 300 கிமீ வரை உள்ளே நீண்டு செல்லும் ஒடுங்கிய நிலப் பகுதியாக அமைத்துள்ளது. கேப் வேர்டே தீவுகள் செனகல் கரையிலிருந்து 500 கிமீ க்கு அப்பால் அமைந்துள்ளது. வெளியிணைப்புகள் Gouvernement du Sénégal - உத்தியோகபூர்வ அரசாங்கத் தளம் (பிரெஞ்சு மொழியில்) பகுப்பு:மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் பகுப்பு:செனிகல் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
கிளி
https://ta.wikipedia.org/wiki/கிளி
கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த சொண்டைக் (அலகு) கொண்டன. ஆஸ்திரேலியாவிலும், தென் அமெரிக்காவிலுமே மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் (Rose Ringed parakeet). உணவு விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவு. கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் மற்றும் அழுகியவற்றை தின்பவை. வாழ்வியல் கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள்.கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்கா பகுதிகளில் காணப்படுவனவற்றுள் அதிக வேறுபாடுகளைக் காணமுடிகிறது. பத்து கிராம் அளவில் இருந்து 4 கிலோ வரையிலான எடையிலும், 8 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளிலும் காணப்படுகின்றன. பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும். கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை. உசாத்துணை அமுதம் தகவல் களஞ்சியம்
காகம்
https://ta.wikipedia.org/wiki/காகம்
வலது|thumb|இங்கிலாந்தின் டோர்செட் கடற்கரையில், கரியன் காகம் காகம் (crow) என்பது கோர்வசு பேரினத்தினைச் சார்ந்த பறவையாகும். "காகம்" என்ற சொல் கோர்வசு பேரினத்தின் பல சிற்றினங்களைக் குறிக்கின்ற ஒரு பொதுப்பெயராக உள்ளது. கோர்வசு பேரினத்திலுள்ள பல்வேறு சிற்றினங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: கோர்வசு அல்பசு - பைட் காகம் (மத்திய ஆப்பிரிக்க கடற்கரைகள் தென்னாப்பிரிக்காவுக்கு) கோர்வசு பென்னெட்டி - சிறிய காகம் (ஆஸ்திரேலியா) கோர்வசு பிராச்சிரைன்கோஸ் - அமெரிக்க காகம் (அமெரிக்கா, தெற்கு கனடா, வடக்கு மெக்சிகோ) கோர்வசு காரினசு - கேப் காகம் அல்லது கேப் ரூக் (கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்கா) கோர்வசு கோர்னிக்சு - வடமேற்கு காகம் (ஒலிம்பிக் தீபகற்பம் முதல் தென்மேற்கு அலாஸ்கா வரை) கோர்வசு கரோனே - ஹூட் காகம் (வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா) கோர்வசு கொரோன் - கரியன் காகம் (ஐரோப்பா மற்றும் கிழக்கு ஆசியா) கோர்வஸ் எடித்தே - சோமாலிய காகம் அல்லது குள்ள காக்கை (கிழக்கு ஆப்பிரிக்கா) கோர்வசு என்கா - மெல்லிய பில் காகம் (மலேசியா, போர்னியோ, இந்தோனேசியா) கோர்வசு புளோரென்சிசு - புளோரஸ் காகம் (புளோரஸ் தீவு) கோர்வசு புசிகாபில்லசு - பழுப்பு-தலை காகம் (நியூ கினியா) கோர்வசு ஹவாயென்சிசு (முன்னர் சி. டிராபிகசு ) - ஹவாய் காகம் (ஹவாய்) கோர்வசு இம்பாரட்டசு - தமாஉலிபசு காகம் (மெக்சிகோ வளைகுடா கடற்கரை) கோர்வசு இன்சுலாரிசு - பிசுமார்க் காகம் (பிசுமார்க் தீவுக்கூட்டம், பப்புவா நியூ கினியா) கோர்வஸ் ஜமைக்காசென்சிஸ் - ஜமைக்கா காகம் (ஜமைக்கா) கோர்வசு குபரி - மரியானா காகம் அல்லது ஆகா (குவாம், ரோட்டா) கோர்வசு இலுகோக்னாபலசு - வெள்ளை கழுத்து காகம் (ஹைட்டி, டொமினிகன் குடியரசு, புவேர்ட்டோ ரிக்கோ) கோர்வசு மேக்ரோஹைன்கோசு - காட்டு காகம் (கிழக்கு ஆசியா, இமயமலை, பிலிப்பைன்ஸ்) கோர்வசு மேக்ரோஹைன்கோசு மேக்ரோஹைன்கோஸ் - பெரிய பில் காகம் கோர்வசு மேக்ரோரைன்கசு லெவெலண்டி - கிழக்கு காட்டு காகம் (இந்தியா, பர்மா) கோர்வசு மேக்ரோஹைன்கோசு குல்மினடசு - இந்திய காட்டுக் காகம் கோர்வசு மீக்கி - பூகேன்வில் காகம் அல்லது சாலமன் தீவுகள் காகம் (வடக்கு சாலமன் தீவுகள்) கோர்வசு மோனெடுலோயிட்சு - புதிய கலிடோனிய காகம் (புதிய கலிடோனியா, விசுவாச தீவுகள்) கோர்வசு நாசிகசு - கியூபா காகம் (கியூபா, இஸ்லா டி லா ஜுவென்டுட், கிராண்ட் கைகோஸ் தீவு) கோர்வசு ஓரு - டொரேசிய காகம் அல்லது ஆஸ்திரேலிய காகம் (ஆஸ்திரேலியா, நியூ கினியா மற்றும் அருகிலுள்ள தீவுகள்) கோர்வசு ஆஸிஃப்ராகஸ் - மீன் காகம் (தென்கிழக்கு அமெரிக்க கடற்கரை) கோர்வசு பால்மரம் - பனை காகம் (கியூபா, ஹைட்டி, டொமினிகன் குடியரசு) கோர்வசு சினலோவா - சினலோவா காகம் (சோனோராவிலிருந்து கொலிமா வரை பசிபிக் கடற்கரை) கோர்வசு ஸ்ப்ளென்டென்ஸ் - வீட்டுக் காகம் அல்லது இந்திய வீட்டு காகம் (இந்திய துணைக் கண்டம், மத்திய கிழக்கு, கிழக்கு ஆப்பிரிக்கா) கோர்வஸ் டொர்குவடசு - காலர் காகம் (கிழக்கு சீனா, தெற்கே வியட்நாமில்) கோர்வசு ட்ரிசுடிசு - சாம்பல் காகம் அல்லது வெற்று முகம் கொண்ட காகம் (நியூ கினியா மற்றும் அண்டை தீவுகள்) கோர்வசு டைபிகசு - பைப்பிங் காகம் அல்லது செலிபசு பைட் காகம் (சுலவேசி, முனா, புட்டுங்) கோர்வசு யூனிகலர் - பாங்கை காகம் (பாங்காய் தீவு) கோர்வசு வேலிடசு- நீண்ட அலகு காகம் (வடக்கு மொலுக்காஸ்) கோர்வசு வயலசெசு - வயலட் காகம் (செரம்) - மெல்லிய பில்ட் காகத்திலிருந்து சமீபத்திய பிளவு கோர்வசு வூட்ஃபோர்டி - வெள்ளை பில் காகம் அல்லது சாலமன் தீவுகள் காகம் (தெற்கு சாலமன் தீவுகள்) மேலும் காண்க ரூக் மேலும் படிக்க பகுப்பு:காக்கைகள்
கரியன் காகம்
https://ta.wikipedia.org/wiki/கரியன்_காகம்
கரியன் காகம் (Carrion Crow), கோர்வஸ் கொரோனேயை Raven இலிருந்து அதன் அளவாலும், Hooded காகத்திலிருந்து அதன் உடல் நிறத்தாலும் வேறுபடுத்தி அறியமுடியும். எனினும், இதற்கும் Rookக்குமிடையே வேறுபாடு காண்பதில் அடிக்கடி குழப்பம் உண்டாவதுண்டு. காகத்தின் சொண்டு கனமானதாக இருப்பதால் கட்டையாகத் தோற்றும். முதிர்ந்த Rook இல் மூக்குத் துவாரம் வெறுமையாக இருக்கும், ஆனால் காகத்தில் அதன் எல்லா வயதிலும் மூக்குத்துவாரம் தும்பு போன்ற இறகுகளினால் மூடப்பட்டிருக்கும். thumb|left|பரவலைக் காட்டும் உலகப்படம் இந்த வகை, கிழக்காசியாவில் காணப்படும், தொடர்புள்ள C. c. ஒரியெண்டலிஸ் உடன், மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழுகின்றது. இந்த இரண்டு வகைகளுக்கிடையிலான பிரிவு கடைசி பனி உலகில் இடம் பெற்றதாக நம்பப்படுகின்றது. இவையிரண்டுக்குமிடையிலான இடைவெளியை, நெருக்கமான தொடர்புள்ள Hooded Crow (தற்போது தனி "வகை" அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது) நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு வடிவங்களுக்குமிடையிலான எல்லைகளில், இவற்றுக்கிடையிலான கலப்பினங்கள் உருவாவது, இவை இரண்டுக்குமிடையிலான பரம்பரையியல் தொடர்புகளைக் காட்டுகின்றது. கரியன் காகத்தின் உடல் நிறம், பச்சை அல்லது ஊதாப் பளபளப்புடன் கூடிய கறுப்பாகும். ஆனால் பளபளப்பு பனி யுகம்Rook இலும் கூடிய பச்சையானது. சொண்டு, கால்கள், பாதங்கள் என்பனவும் கறுப்பு நிறமே. Rook பொதுவாகச் சேர்ந்து வாழ்வது. கரியன் காகம் தனிமையில் வாழ்வது. ரூக்குகள் எப்போதாவது தனியான மரங்களில் கூடு கட்டுகின்றன. காகங்கள் Rookகுகளுடன் சேர்ந்து உணவுண்ணக்கூடும். மேலும், காகங்கள் குளிர்காலத் தங்குமிடங்களில் சேர்ந்து வாழுகின்றன. இவற்றிடையே முக்கிய வேறுபாடு இவற்றின் குரலாகும். Rookகுகள் "கா" என்று கரைய, காகங்கள் pawk, pawk என்று சத்தம் எழுப்புகின்றன. அடித்தொண்டையிலிருந்து வரும் சிறிது அதிர்வுள்ள சத்தம், Rookகுகளின் சத்தங்களிலிருந்து வேறானது. இப் பறவை அதிகம் சத்தம் எழுப்பிக்கொண்டிருப்பது. மரக்கிளையில் இருந்துகொண்டு தொடராகக் கரையும். ஒரு தொடரில் விரைவாக அடுத்தடுத்து மூன்று அல்லது நான்கு முறை ஒலியெழுப்பும், அடுத்தடுத்த தொடர்களிடையே சிறிது இடைவெளியிருக்கும். சிறகடிப்பு, ரூக்இன் சிறகடிப்பைக் காட்டிலும் மெதுவாகவும், நிதானமானதாகவும் இருக்கும். எல்லாவித அழுகும் உடல்களையும் தின்னும் வழக்கமுள்ளதாயினும், அதனால் பிடிக்கக்கூடிய சிறிய விலங்குகளைக் கொன்றும் தின்னக்கூடியது, அத்துடன் முட்டைகளைத் திருடித் தின்பதையும் வழக்கமாகக் கொண்டது. காகங்கள் இயற்கையில் தோட்டிகள், இதனால்தான், வீட்டுக் கழிவுகளை உண்பதற்காக மனிதர்கள் வாழும் இடங்களில் அடிக்கடி காணப்படுகின்றன. மலையுச்சிகளின் தொங்குபாறைகளில் இவை கூடுகட்டுகின்றன, ஆனால் உள்நாடுகளில் மரங்களிலேயே கூடுகளை அமைக்கின்றன. இக் கூடுகள் raven களுடையதிப் போலவே இருந்தாலும், அளவிற் சிறியவை. நான்கு முதல் ஐந்து வரையிலான முட்டைகளைப் பெரும்பாலும் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரே இடுகின்றன. முட்டைகள், நீல அல்லது பச்சைப் பின்னணியில் மண்ணிறப் புள்ளிகளைக் கொண்டவையாக உள்ளன. முட்டையிலிருந்து வெளிவந்து ஆறு வாரகாலத்துக்குள், குஞ்சுகள் சிறகு முளைத்துப் பறக்கத் தயாராகிவிடுகின்றன. முன்னைய வருடங்களில் பொரித்த குஞ்சுகள் அவ்விடத்திலேயே இருந்து புதிய குஞ்சுகளை வளர்க்க உதவுகின்றன. அவை உணவு சேகரித்துக் குஞ்சுகளுக்குக் கொடுப்பதில் பெற்றோருக்கு உதவுகின்றன. புகைப்பட இணைப்புகள்: Good profile shot புகைப்பட வரிசை கரியன் காகம் கரியன் காகத்தின் மண்டையோடு மேற்கோள்கள் பகுப்பு:காக்கைகள் பகுப்பு:ஐரோவாசியப் பறவைகள்
சாதாரண மைனா
https://ta.wikipedia.org/wiki/சாதாரண_மைனா
thumb|Acridotheres tristis சாதாரண மைனா [Common myna (Acridotheres tristis)] அல்லது நாகணவாய் என்பது தென்னாசியாவில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா, இலங்கை வரையான நாடுகளில் காணப்படும் நாகணவாய் இனமாகும். இது மனிதக் குரலில் அளவம் (குரல்போலி) செய்யக்கூடியது என்பதால் 'பேசும் மைனா' எனவும் அழக்கப்படுகிறது. வகைப்பாடு இது இரண்டு துணையினங்களாக அங்கிகரிக்கபட்டுள்ளது: இந்திய மைனா (A. t. tristis) (லின்னேயஸ், 1766) – இது தெற்கு கசக்கஸ்தான், துருக்மெனிஸ்தான் கிழக்கு ஈரானில் இருந்து தெற்கு சீனா, இந்தோசீனா, மலாய் தீபகற்பம், தென்னிந்தியா வரை காணப்படுகிறது. இது ஹவாய் மற்றும் வட அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வாழிட எல்லையின் வடமேற்கே உள்ளவை சில சமயங்களில் ஒரு தனித்த கிளையினமாகப் பிரிக்கபட்டது, A. t. neumanni, நேபாளம் மற்றும் மியான்மரில் காணப்படுபவை A. t. tristoides. இலங்கை மைனா (A. t. melanosternus) லெக், 1879 – இலங்கை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சாதாரண மைனா காணொளிகள், படிமங்கள் மற்றும் ஒலி இந்திய மைனா சாதாரண மைனா காணொளி ANU இந்திய சாதாரண மைனா பகுப்பு:மைனா பகுப்பு:தெற்காசியப் பறவைகள் பகுப்பு:இந்தியப் பெருங்கடல் பறவைகள் பகுப்பு:மத்திய கிழக்குப் பறவைகள்
கோராசீபோர்மெஸ்
https://ta.wikipedia.org/wiki/கோராசீபோர்மெஸ்
கொராசீபோர்மெஸ்கள், மீன்கொத்திகள், கொண்டலாத்தி, தேனீ உண்ணிகள், காடைகள், இருவாய்ச்சிகள் என்பவற்றை உள்ளடக்கிய, வழக்கமாகப் பல நிறம் கொண்ட பறவைகளாகும். இந்த வரிசை ஒரு கலவை போலத் தெரிகின்றது. டி. என். ஏ. பகுப்பாய்வு புழக்கத்துக்கு வந்தபின்னர், பல குழுக்கள் திருத்தப்பட்ட பட்டியல் ஒழுங்குகளில் வைக்கப்படுகின்றன. பகுப்பு:பறவைகள்
மைனா
https://ta.wikipedia.org/wiki/மைனா
மைனா ஸ்டார்லிங் (ஸ்ட்டேண்டிடே) குடும்பத்து பறவையாகும். பசரீன் பறவைகள் குழுவைச் சேர்ந்த இவை, இயற்கையாகக் கிழக்காசியாவில் மட்டுமே வாழ்கின்றன, எனினும் இவற்றின் பல வகைகள், வட அமெரிக்காவுக்கும், சாதாரண மைனா தென்கிழக்கு அவுஸ்திரேலியாவுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மைனாக்கள் வலுவான பாதங்களைக் கொண்ட, நடுத்தர அளவிலான பசரீன்களாகும். இவற்றின் பறப்பு வலுவானதும் நேரானதுமாகும். இவை கூட்டமாக வாழ்வன. இவை விரும்பும் வாழிடம் ஓரளவு திறந்த வெளிகளாகும். இவை பூச்சிகளையும், பழங்களையும் உண்ணுகின்றன. பல வகைகள் மனித வாழிடங்களுக்கருகில் வசிப்பதுடன், எல்லாவகை உணவுகளையும் உண்ணக்கூடியன. உடல் நிறம் பொதுவாகக் கடுமையானது, அதிகம் மண்ணிறம். சில வகைகள் மஞ்சள் நிறத்திலான தலை அலங்காரங்களைக் கொண்டுள்ளன.பெரும்பாலான வகைகள் பொந்துகளிலேயே கூடு கட்டி வாழுகின்றன. மேற்கோள்கள் பகுப்பு:மைனா
மரம்
https://ta.wikipedia.org/wiki/மரம்
thumb|right|250px|மேப்பிள் மரம் 300px|thumb|பவோபாப் மரம் தென்னாபிரிக்காவிலுள்ளது thumb|கலிபோர்னியா மாநிலத்தில் வளரும் செம்மரம். மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம். இது நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை ஆகும். இதற்கான அளவு குறித்த வரையறை எதுவும் கூறப்படாவிடினும், பொதுவாக முதிர்ந்த நிலையில் 4.5 மீட்டர் (15 அடி) உயரமும், ஒரு தனி அடிமரத்தில் தாங்கப்பட்ட கிளைகளையும் கொண்டிருக்கும். மரங்கள், இயற்கை நிலத்தோற்றத்தில் முக்கியமான அம்சமாக இருப்பதுடன் நிலத்தோற்றக்கலையில் ஒரு முக்கியமான கூறுமாகும். ஏனைய வகைகளைச் சேர்ந்த செடிகொடி போன்ற நிலத்திணை வகைகளை விட, மரங்கள் நீண்டகாலம் வாழக்கூடியவை. சிலவகை மரங்கள் 100 மீ. (300 அடி), உயரம் வரை வளரக்கூடியவை, சில ஈராயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலும் வாழக்கூடியவை. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள செம்மரம் என்னும் வகை இப்படிப்பட்டன. இதே போல தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகர பட்டினம் என்னும் ஊரில் கடற்கரை அருகில் அமைந்துள்ள ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட "பவோபாப் மரம்" இன்றும் ஆயிரம் ஆண்டுகளை கடந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறது. இந்த மரம் தமிழர்கள் ஆதிகாலத்தில் கடல் வணிகத்தில் உலகின் முன்னோடிகளாக இருந்தனர் என்பதற்கு நல்ல உதாரணமாக கூறலாம். காரணம் தமிழர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கப்பல் வழி வணிகம் செய்ய போகும் போது இந்த மரத்தின் விதைகளை அங்கிருந்து எடுத்து வந்து இங்கு விதைத்து இருகின்றனர். உருவவியல் (Morphology) வேர்கள், அடிமரம், கிளைகள், சிறுகிளைகள், இலைகள் என்பவை மரத்தின் பகுதிகளாகும். மரத் தண்டு, தாங்குவதற்கானதும், நீர், உணவு முதலியவற்றைக் கடத்துவதற்குமான மென்சவ்வுகளைக் (காழ் (xylem) மற்றும் உரியம் (phloem)) கொண்டது. மரம் (மூலப்பொருள்), காழ்க் கலங்களைக் கொண்டது, மரப்பட்டை முக்கியமாக உரியங்களால் ஆனது. மரம் வளரும்போது இது ஆண்டு வளையங்களை உருவாக்குகின்றது. மிதவெப்ப மண்டலக் (temperate) காலநிலைப் பிரதேசங்களில் இந்த வளையங்களை எண்ணுவதன் மூலம் மரத்தின் வயதைக் கணிக்க முடியும். மரத்தின் வேர்கள் பெரும்பாலும் நிலத்திற்கு அடியிலேயே காணப்படும். இவை மரம் நிலத்தைப் பற்றிப் பிடித்துக்கொள்ள உதவுவதுடன், மண்ணிலிருந்து நீர் மற்றும் போஷாக்குப் பொருட்களை உறிஞ்சவும் பயன்படுகின்றன. தாவரங்கள் உணவைத் தயாரிப்பதற்குச் சூரிய ஒளி தேவை. இலைகளின் மூலமே இச் செயற்பாடு நடைபெறுகின்றது. மரங்கள் அடர்த்தியாகவுள்ள இடங்களில் ஒளிக்காக மற்றத் தாவரங்களுடன், போட்டியிடவேண்டியுள்ளது. இதற்கு உதவும்பொருட்டுத், தண்டுகள், இலைகளைக் கொண்டுள்ள கிளைகளை உயரத்தில் வைத்திருக்க உதவுகின்றன. பல தாவரங்களில், இலைகள் கூடிய அளவு சூரிய ஒளியைப் பெறத்தக்கவகையில், கிளைகளின் ஒழுங்கு அமைந்திருக்கும். எல்லா மரங்களும் முன் கூறிய பாகங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. உதாரணமாகப் பன்னங்கள் கிளைகளைக் கொண்டிருப்பதில்லை. வட அமெரிக்காவில் வளரும் சாகுவாரோ கக்டஸ்களுக்குச் செயற்பாடுள்ள இலைகள் இல்லை. மரப் பன்னங்கள் பட்டைகளைக் கொண்டிருப்பதில்லை. அவற்றின் பருமட்டான வடிவத்தையும், அளவையும், அடிப்படையாக வைத்து இவையனைத்தும் மரங்களாகவே கொள்ளப்படுகின்றன. சில சமயம் அளவே முக்கியமாகக் கருதப்படுகின்றது. பல கிளைகள் அல்லது தண்டுகளுடன் கூடிய, மரத்தைப் போலவே வடிவமுடைய தாவரமொன்று, அளவில் மிகவும் சிறிதாக இருக்கக்கூடும். இது செடியென்று அழைக்கப்படுகின்றது. எனினும் மரத்துக்கும், செடிக்கும் இடையில் சரியான வேறுபடுத்தும் எல்லை கிடையாது. சிறியனவாக இருப்பதால் "பொன்சாய்"கள் மரங்கள் என்று கொள்ளப்படமுடியாது, எனினும் மரவகைகளின் வடிவத்தைக் கருதும்போது, தனியொரு specimen இன் வடிவத்தோடு குழப்பிக்கொள்ளக்கூடாது. மூங்கில்கள் மரங்களின் பல இயல்புகளைக் கொண்டிருந்தாலும், அவை மரங்களென அழைக்கப்படுவதில்லை. ஒன்றாக வளரும் சிறு கூட்டம் மரங்கள் தோப்பு எனப்படுகின்றன, பெரியதொரு நிலப்பரப்பில் மரங்கள் அடர்ந்திருக்கும்போது அது காடு எனப்படுகின்றது. பெரிய ஆனால் ஐதாக இருக்கும் மரங்களையும் இடையில் புல்வெளிகளையும் (வழக்கமாக மேய்ச்சலுக்கு விடப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட) கொண்ட பகுதி வெப்பப் புல்வெளி (savanna) எனப்படுகின்றது. மேலும்.. முக்கிய மரவகைகள் (genera) மரங்கள் பல்வேறுபட்ட தாவரக் குடும்பங்களுள் அடங்குகின்றன. அதனால், இவை பல்வேறுவகையான இலை வகைகள், வடிவங்கள், பட்டைகள், பூக்கள், பழங்கள், முதலியவற்றைக் கொண்டவையாக உள்ளன. ஆரம்பகால மரங்கள், பெரிய காடுகளில் வளரும் மரப் பன்னங்களாக இருக்கக்கூடும். பின்னர் ஊசியிலை மரங்கள், கிங்க்கோக்கள், சைக்காட்டுகள் மற்றும் எனைய வித்துமூடியிலிகள் (gymnosperm) போன்றவை தோன்றின. இன்று பெரும்பாலான மரங்கள் பூக்கும் தாவரங்களும், ஊசியிலைத் தாவரங்களுமாகும். கிழேயுள்ள பட்டியல் பெரிதும் அறியப்பட்ட மரங்களின் பெயர்களையும், அவை பொதுவாக எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் காட்டுகின்றது. பூக்கும் தாவரங்கள் (Magnoliophyta) thumb|கட்டிடத்தின் மேலே வளர்க்கப்படும் மரங்கள் இருவித்திலைத் தாவரங்கள் (Magnoliopsida) அனக்காடியேசியே (மரமுந்திரி குடும்பம்) மரமுந்திரி, அனக்காடியம் ஒக்சிடென்தலே மா, மங்கிபேரா இந்திகா பசுங்கொட்டை, பிஸ்தாசியா வேரா (Pistacia vera) Toxicodendron, டொக்சிகோடென்றன் வேர்ணிசிபு(f)ளூவா (Toxicodendron verniciflua) Aquifoliaceae (Holly குடும்பம்) Holly, Ilex வகை அரலியேசியே (Ivy குடும்பம்) Kalopanax, கலோபானக்ஸ் பிக்டஸ் (Kalopanax pictus) Betulaceae (Birch குடும்பம்) Alder, Alnus வகை Birch, Betula வகை பொ(b)ம்பாகேசியே (பெருக்க மரம் குடும்பம்; sometimes included in மால்வேசியே) பெருக்க மரம், அடன்சோனியா வகை முள்ளிலவு, பொ(b)ம்பா(b)க்ஸ் சீபா(b) (Bombax ceiba) Kapok, சீபா பெண்டந்திரா (Ceiba pentandra) துரியான், துரியோ ஸிபெத்தினஸ் (Durio zibethinus) பல்சா, ஒகுரோமா லகோ(g)பஸ் (Ochroma lagopus) பர்சரேசியே கார்வேம்பு, கரூகா பின்னாட்டா (Garuga pinnata) கக்டாசியே (கள்ளி குடும்பம்) உயரக் கற்றாழை, கார்னேஜியே ஜைஜண்டியா (Carnegiea gigantea) கோர்னாசேசியே (Dogwood குடும்பம்) Dogwood, கோர்னஸ் (Cornus) வகை கோரிலேசியே (ஹஸெல் குடும்பம்) Hornbeam, கார்பினஸ் (Carpinus) வகை Hazel, கோரிலஸ் (Corylus) வகை பா(f)பே(b)சியே (பட்டாணி குடும்பம்) Honey locust, Gleditsia triacanthos Black locust, Robinia pseudoacacia Laburnum, லபூர்னம் (Laburnum) வகை Pau Brasil, Brazilwood, Caesalpinia echinata பா(f)கே(g)சியே (பீ(b)ச் குடும்பம் ) செசுநட், Castanea வகை பீ(b)ச், Fagus வகை Southern beech, Nothofagus வகை Tanoak, Lithocarpus densiflorus ஓக், Quercus வகை Fouquieriaceae (Boojum குடும்பம்) Boojum, போர்குவேரியா கொலம்னாரிஸ் (Fouquieria columnaris) Hamamelidaceae (Witch-hazel குடும்பம்) Sweet-gum, லிக்குயிடம்பர் (Liquidambar) வகை Persian ironwood, பரோட்டியா பேர்ஸிக்கா (Parrotia persica) ஜக்லண்டேசியே (வாதுமைக் கொட்டை குடும்பம்) வாதுமைக் கொட்டை, ஜக்லான்ஸ் (Juglans) வகை Hickory, Carya வகை லோரேசியே (Laurel குடும்பம்) கறுவா சினமோமம் ஸெலனிக்கம் (Cinnamomum zeylanicum) Bay laurel லோரல் நொபிலிஸ் (Laurus nobilis) அவகாடோ பேசியா அமெரிக்கானா (Persea americana) லைத்திரேசியே Loosestrife குடும்பம் Crape myrtle Lagerstroemia வகை மக்னோலியேசியே (Magnolia குடும்பம்) Tulip tree, Liriodendron species Magnolia, Magnolia வகை மல்வேசியே (திலியேசியே உள்ளடங்கியது) (Mallow குடும்பம்.) Linden (Basswood, Lime), Tilia வகை மெலியேசியே (மலைவேம்பு குடும்பம்) வேம்பு, Azadirachta indica (A. Juss) Bead tree, மெலியா அஸெடராச் (Melia azedarach) மலை வேம்பு, சுவீதெனியா மககோனி (Swietenia mahagoni) மோராசியே ஆல், பை(f)க்கஸ் பெ(b)ங்காலென்சிஸ் (Ficus benghalensis) அரசு, பை(f)க்கஸ் ரிலிஜியோசா (Ficus religiosa) மைரிஸ்டிகேசியே (சாதிக்காய் மரம் குடும்பம்) சாதிக்காய் மரம், மைஸ்ரிஸ்டிகா பி(f)ராகிரன்ஸ் (Mysristica fragrans) மிர்ட்டேசியே (Myrtle குடும்பம் ) யுகலிப்டஸ், யுகலிப்டஸ் வகை Myrtle, Myrtus வகை கொய்யா, சிடியம் குவாஜாவா (Psidium guajava) நாவல், Syzygium cumini படிமம்:Davidia1.jpg நைசாசியே (Nyssaceae):பூத்திருக்கும் ஒரு புறா மரம் நைசாசியே (Tupelo குடும்பம்; சிலசமயம் Cornaceaeல் உள்ளடக்கப்படுகின்றது) Tupelo, Nyssa வகை புறா மரம், தாவிதியா இன்வொலுகிராட்டா (Davidia involucrata) ஒலியேசியே (ஒலிவ் குடும்பம்) ஒலிவ், Olea europaea Ash, பிரக்ஸினஸ் (Fraxinus) வகை பப்பிலியோனேசியே புங்கை, பொங்கமியா பின்னாட்டா (Pongamia pinnata) முருக்கு, முள்முருக்கு, எரித்ரைனா இந்திக்கா (Erythrina indica) பிளாட்டனேசியே (Plane குடும்பம்) Plane, பிளாட்டனஸ் வகை ரிஸோபோராசியே (அலையாத்தித் தாவரங்கள் குடும்பம்) Red Mangrove, ரிஸோபோரா மங்கிள் (Rhizophora mangle) ரோசேசியே (ரோஜா குடும்பம்) Rowan, Sorbus வகை Hawthorn, Crataegus வகை பேரி, Pyrus வகை அப்பிள், Malus வகை வாதுமை, புரூணஸ் துல்ஸிஸ் (Prunus dulcis) பீச், புரூணஸ் பேர்ஸிக்கா (Prunus persica) பிளம், புரூணஸ் டொமெஸ்ட்டிக்கா (Prunus domestica) செர்ரி, புரூணஸ் வகை காஃபி குடும்பம் (Bedstraw குடும்பம்) காப்பி, காபி(f)யா அராபிக்கா Rutaceae (Rue குடும்பம்) தோடை, Citrus aurantium எலுமிச்சை, Citrus limon Cork-tree, Phellodendron வகை Euodia, Tetradium வகை Salicaceae (Willow குடும்பம்) Aspen, Populus வகை Poplar, Populus வகை Willow, Salix வகை Sapindaceae (including Aceraceae, Hippocastanaceae) (Soapberry குடும்பம்) மேப்பிள், Acer வகை Buckeye, Horse-chestnut, Aesculus வகை Mexican buckeye, Ungnadia speciosa விளச்சிப்பழம், Litchi sinensis Golden rain tree, Koelreuteria paniculata Sapotaceaefamily Tambalacoque, or dodo tree, Sideroxylon grandiflorum, previously Calvaria major Simaroubaceae குடும்பம் Tree of heaven, Ailanthus வகை Sterculiaceae குடும்பம் Cacao (cocoa), Theobroma cacao அல்மேசீ (எல்ம் குடும்பம்) Hackberry, Celtis வகை எல்ம், Ulmus வகை ஒருவித்திலைத் தாவரங்கள் (Liliopsida) அகாவேசியே (அகாவே குடும்பம்) Cabbage palm, கோர்டிலைன் அவுஸ்திரேலிஸ் (Cordyline australis) Dragon மரம், ட்றசீனா ட்றாக்கோ (Dracaena draco ) Joshua மரம், Yucca brevifolia அரெகேசியே (Palmae) (Palm குடும்பம்) கமுகு, அரெக்கா காட்டெச்சு தென்னை கோகோஸ் நியூசிபெ(f)ரா பேரீந்து Palm, Phoenix dactylifera Chusan Palm, Trachycarpus fortunei போவாசியே (புல் குடும்பம்) மூங்கில்கள் Poaceae subfamily Bambusoideae வாழைகள், மரத்தன்மையற்றதாலும், பல்லாண்டுத் தாவரமல்லாததாலும், உண்மையில் மரங்களல்ல என்பதைக் கவனிக்கவும். ஊசியிலை மரங்கள் Public domain புகைப்படம் www.nps.gov/redw/ இலிருந்து கலிபோர்னியா செம்மரம், உலகின் அதி உயரமான மர வகை; ஒரு ஊசியிலை மரம் Araucariaceae (ஆராக்கேரியா குடும்பம்) ஆராக்கேரியா, அரொகேரியா வகை Kauri, அகாதிஸ் வகை குப்பிரசாசியே (சைப்பிரஸ் குடும்பம்) சைப்பிரஸ், குப்பிரசெஸ் வகை சைப்பிரஸ், Chamaecyparis வகை Juniper, Juniperus வகை Alerce or Patagonian cypress, Fitzroya cupressoides Sugi, Cryptomeria japonica கலிபோர்னியா செம்மரம், Sequoia sempervirens பெரு மரம், Sequoiadendron giganteum Dawn redwood, Metasequoia glyptostroboides Bald சைப்பிரஸ், Taxodium distichum பைனாசியே (பைன் குடும்பம்) வெண் பைன், பைனஸ் வகை Pinyon பைன், பைனஸ் வகை பைன், பைனஸ் வகை Spruce, பீசியா வகை Larch, லாரிக்ஸ் வகை டக்லஸ்-பே(f)ர், Pseudotsuga வகை பே(f)ர், Abies வகை செடார், Cedrus வகை Podocarpaceae (Yellow-wood குடும்பம்) African yellow-wood, Afrocarpus falcatus Totara, Podocarpus totara Taxaceae (Yew குடும்பம்) Yew, Taxus வகை Ginkgos Ginkgoaceae (Ginkgo குடும்பம்) Ginkgo, Ginkgo biloba சைக்கட்டுகள் (வித்துமூடியிலித் தாவரங்கள்) சைக்கடேசியே குடும்பம் Ngathu சைக்காட், சைக்கஸ் ஆங்கிலாட்டா (Cycas angulata) Zamiaceae குடும்பம் Wunu cycad, Lepidozamia hopei பன்னங்கள் (Fern) Cyatheaceae and Dicksoniaceae families மரப் பன்னங்கள், Cyathea, Alsophila, Dicksonia (ஒரு monophyletic கூட்டமல்ல) வாழ்வுக் கட்டங்கள் மரங்களின், விசேடமாக ஊசியிலை மரங்களின், வாழ்க்கை வட்டம், காடு வளர்ப்புத் துறையில், கணக்கெடுப்பு மற்றும் ஆவணப்படுத்தும் நோக்கங்களுக்காக பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது: விதை நாற்று: விதையிலிருந்து முளைத்துவரும், முளையத்தின் நிலத்துக்கு மேலுள்ள பகுதி. Sapling: முளையம் வளர்ந்து 1மீ உயரத்திலிருந்து அதன் தண்டு 7 சமீ விட்டமுள்ளதாக ஆகும் வரையுள்ள கட்டம். Pole: 7 தொடக்கம் 30 சமீ விட்டமுள்ள இளம் மரங்கள். முதிர்ந்த மரம்: 30 சமீ க்கு மேற்பட்ட விட்டம், இனப்பெருக்கக் காலத்தின் தொடக்கம். முதிய மரம்: பழைய வளர்ச்சிக் காடுகளில் அதிகம்; உயர வளர்ச்சி பெருமளவு குறைந்துவிடும், அதிகரித்த விதை உற்பத்தி. அளவுமீறிய முதிர்ச்சி: dieback மற்றும் பழுதடைதல் சாதாரணம். Snag: நிற்கும் இறந்த மரங்கள் மரக்குற்றி/கழிவு: விழுந்த மரக்குற்றிகள் மரத்தின் விட்டம், அதன் அடியில், நிலத்தின் அதியுயர்ந்த புள்ளியிலிருந்து 1.3 – 1.5 மீட்டர் உயரத்தில் அளக்கப்படுகின்றது. 7 சமீ விட்ட வரையறை பொருளாதார ரீதியிலானது. இதுவே கடதாசி உற்பத்தி போன்றவற்றுக்காக விற்கப்படக்கூடிய அதி குறைந்த விட்டமாகும். 30 சமீ விட்டமே அரியப்படும் மரங்களுக்கான ஆகக்குறைந்த விட்டம். ஒவ்வொரு கட்டமும் may be uniquely perceptive to different pathogens and suitable for especially adapted arboreal animals. பண்பாடு மரங்கள் வழக்கமாக பழங்கதைகளிலும், சமயத்திலும் முக்கிய குறியீடுகளாக இருந்துவருகின்றன. உதாரணமாக நோர்ஸ் பழங்கதைகளில்Yggdrasil, ஜெர்மானிக் பழங்கதைகளிலிருந்து பெறப்பட்ட நத்தார் மரம், யூதாயிசத்தினதும், கிறிஸ்துவத்தினதும் அறிவு மரம், பௌத்தத்தின் போதி மரம் மற்றும் இந்துப் பழங்கதைகள் கூறும் கற்பகதரு என்பவற்றைக் கூறலாம். பின்வருவனவற்றையும் பார்க்கவும் மரங்களின் பழமொழி நத்தார் மரம் காடு வளர்ப்பு காடழிப்பு மரப் பண்ணை பொன்சாய் பகுப்பு:மரவேலை
நல்லூர் கந்தசுவாமி கோவில்
https://ta.wikipedia.org/wiki/நல்லூர்_கந்தசுவாமி_கோவில்
thumb|நல்லூர் கந்தசுவாமி கோவிலில் உள்ள தேர் வீடு நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்ததாக அறியப்படுகிறது. வரலாறு யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக்கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது. ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டை அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி எனும் பட்டத்தைக்கொண்ட புவனேகபாகு எனப்பெயர் கொண்டு கோட்டை அரசரான, செண்பகப் பெருமாள் என்பவரால் கட்டப்பட்டதாகும். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக்கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது: திருவருள் பொருந்திய தெய்வயானையுடனும், வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின் திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள். முன்னரே சிறியதாக இருந்த கோயிலைத் தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து. உண்மையில் நல்லூர் இப்போது உள்ள அமைப்பானது முன்றாவது கோயில் கட்டுமானம் ஆகும். இந்த 3 வது கோயிலின் அமைப்பில் அது வரை இருந்த பழைய ஆலயத்தின் எந்த கட்டுமானங்களும் சமந்தப்படாத புதிய கட்டுமானம் தான் இப்போதுள்ள நல்லூர்கந்தன் ஆலயம் அகும்.    யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இது இருந்த இடத்தில் போத்துக்கீசர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் ஒல்லாந்தர் இதனைத் தாங்கள் சார்ந்த புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658–1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள். மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இவ்வாலயத்தை, ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும், சிற்ப சாத்திர விதிக்கமைந்த கட்டட முறைக்கும் மாற்றியமைத்து, இன்றைய நிலைக்குக் கொண்டுவர வித்திட்டவர் ஆறுமுக நாவலர் ஆவார். அவரைத் தொடர்ந்து, அவரது மாணவர்கள் இவ்வாலய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள். ஆலய அமைப்பு center|800px இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிலாவிக்கிருகத்திற்குப் பதிலாக வேல் அமைக்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி பிள்ளையார் முதலான பரிவாரத் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாலயம் கிழக்கிலும், தெற்கிலும் வாசல்களைக் கொண்டுள்ளது. இவற்றின் மேல் பெருங்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் தெற்குப் புறத்தில் உள்ள தீர்த்தக்கேணி நன்கு திட்டமிடப்பட்டு, படிக்கட்டுகளும் மண்டபங்களும் கொண்டதாய் அமைக்கப்பட்டுள்ளது. முருகனின் மூர்த்தங்களில் ஒன்றான தண்டாயுதபாணிக்கு அங்கு சிறு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் மடாலயங்கள் உள்ளன. பூசைகளும் மகோற்சவமும் இவ்வாலயத்தில் நித்திய, நைமித்திய பூசைகள் காலந் தவறாது நடைபெறுகின்றன. தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜை இடம்பெறுகின்றமையும், மாலையில் பள்ளியறைப் பூஜை இடம்பெறுகின்றமையும் இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். திருவிழா காலங்களில் மட்டுமல்லாமல் தினமும் மாலையில் முருகப் பெருமானை ஊஞ்சற் பாட்டுப்பாடி, அழகிய சிறு மஞ்சத்தில் ஏற்றி பள்ளியறையில் துயில்கொள்ளச் செய்வதும், மறு நாள் அதிகாலையில் திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி பாடி, முருகனைத் துயிலெழுப்பி அதே சிறு மஞ்சத்தில் அழைத்து வந்து மூலஸ்தானத்தில் அமர்த்துவதும் சிறப்பான மரபாகும். இங்கு, ஆவணி அமாவாசையைத் தீர்த்தமாகக் கொண்டு இருபத்தைந்து நாட்களுக்கு மகோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆடி அமாவாசையின் ஆறாம் நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகிறது. மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடியாட்டம்|காவடி எடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர். இக்காலத்தில் புராண படனம் செய்தல், சமயப் பிரசங்கம் செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன. ஆலயம் பற்றிய நூல்கள் கூழங்கைத் தம்பிரான் பாடிய நல்லைக் கலிவெண்பா. இருபாலைச் சேனாதிராச முதலியாரின் நல்லை வெண்பா. நல்லையந்தாதி. நல்லைக் குறவஞ்சி. நல்லை நகர்க் கந்தன் பேரில் திருவூஞ்சல். "" திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி" உடுப்பிட்டி சிவசம்புப் புலவரின் நல்லை கந்தசுவாமி விஞ்சதி. நல்லை சரவணமுத்துப் புலவரின் நல்லை வேலவருலா'. ஆறுமுக நாவலரின் தனி நிலைச் செய்யுள் ஒன்று. உசாத்துணை நூல்கள் உமாச்சந்திரா பிரகாஷ், நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில், 2016 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் https://www.youtube.com/channel/UCmKSl9nBdK-3SRzJEpERINQ பகுப்பு:நல்லூரில் உள்ள கோயில்கள் பகுப்பு:இலங்கையிலுள்ள முருகன் கோவில்கள் பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும்
இசையமைப்பாளர்களின் பட்டியல்
https://ta.wikipedia.org/wiki/இசையமைப்பாளர்களின்_பட்டியல்
இந்திய மொழித் திரைப்படங்களில், பாடல்களின் பங்கு இன்றியமையாத ஒன்று. அதுபோலத் தான் அப்பாடல்களை உருவாக்கும் இசையமைப்பாளர்களின் பங்கும். இவர்களுள் ஒருசிலர் சிறந்த பாடகர்களாகவும் விளங்குகின்றனர். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் 1930களில் இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம் பாபநாசம் சிவன் சீதா கல்யாணம் 1934 - 1973 1940களில் இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம் ஜி. ராமநாதன் சத்யசீலன் 1940 - 1963 கே. வி. மகாதேவன் மனோன்மணி 1942 - 1992 எம். எஸ். விஸ்வநாதன் பணம் (இராமமூர்த்தியுடன்) 1945 - 2013 சி. ஆர். சுப்புராமன் பைத்தியக்காரன் 1948 - 1952 சுந்தரம் பாலச்சந்தர் இது நிஜமா 1948 - 1990 1950களில் இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம் டி. ஆர். பாப்பா ராஜா ராணி 1956 - 2004 வேதா மர்ம வீரன் 1956 - 1971 ஏ. எம். ராஜா கல்யாணப் பரிசு 1959 - 1989 1960களில் இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம் சங்கர் கணேஷ் மகராசி 1964 - தற்போது வி. குமார் நாணல் 1965 - 1976 டி. கே. ராமமூர்த்தி பணம் (விசுவநாதனுடன்)சாது மிரண்டால் 1966 - 1986 குன்னக்குடி வைத்தியநாதன் வா ராஜா வா 1969 - 2008 1970களில் இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம் இளையராஜா அன்னக்கிளி 1976 - தற்போது சந்திரபோஸ் மதுரகீதம் 1977 - 2010 கங்கை அமரன் ஒரு விடுகதை ஒரு தொடர்கதை 1979 - தற்போது 1980களில் இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம் டி. இராஜேந்தர் ஒரு தலை ராகம் 1980 - தற்போது எஸ்.பி. பாலசுப்பிரமணியம் துடிக்கும் கரங்கள் 1983 - 2020 வி. எஸ். நரசிம்மன் அச்சமில்லை அச்சமில்லை 1984 - தற்போது தேவேந்திரன் மண்ணுக்குள் வைரம் 1987 - தற்போது எஸ். ஏ. ராஜ்குமார் சின்னபூவே மெல்லபேசு 1987 - தற்போது எல். வைத்தியநாதன் பேசும் படம் 1987 - 2007 ஹம்சலேகா பருவ ராகம் 1987 - தற்போது கே. பாக்கியராஜ் இது நம்ம ஆளு 1988 - தற்போது தேவா மனசுக்கேத்த மகராசா 1988 - தற்போது வித்தியாசாகர் பூ மனம் 1989 - தற்போது 1990களில் இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம் கலைப்புலி எஸ். தாணு புதுப்பாடகன் 1990 - தற்போது எஸ். பாலகிருஷ்ணா எம். ஜி. ஆர் நகரில் 1991 - தற்போது மரகதமணி நீ பாதி நான் பாதி 1991 - தற்போது ஆதித்யன் அமரன் 1992 - தற்போது ஏ. ஆர். ரகுமான் ரோஜா 1992 - தற்போது கார்த்திக் ராஜா பாண்டியன் (ஒரு பாடல்)மாணிக்கம் 1992 - தற்போது சிற்பி கோகுலம் 1993 - தற்போது மகேஷ் மகாதேவன் நம்மவர் 1994 - 2002 சுரேஷ் பீட்டர்ஸ் கூலி 1995 - தற்போது யுவன் சங்கர் ராஜா அரவிந்தன் (திரைப்படம்) 1997 - தற்போது பரத்வாஜ் காதல் மன்னன் 1998 - தற்போது பரணி பெரியண்ணா 1999 - தற்போது 2000களில் இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம் ஸ்ரீகாந்த் தேவா டபுள்ஸ் 2000 - தற்போது தினா அன்னை 2000 - தற்போது ஹாரிஸ் ஜயராஜ் மின்னலே 2001 - தற்போது மணிசர்மா ஷாஜகான் 2001 - தற்போது சபேஷ் முரளி சமுத்திரம் 2001 - தற்போது பிரவீன் மணி லிட்டில் ஜான் 2001 - தற்போது ஷங்கர் - எசான் - லாய் ஆளவந்தான் 2001 - தற்போது ரமேஷ் விநாயகம் ஏய் நீ ரொம்ப அழகாய் இருக்கே 2002 - தற்போது டி. இமான் தமிழன் 2002 - தற்போது தேவி ஸ்ரீ பிரசாத் இனிது இனிது காதல் இனிது 2003 - தற்போது ஏ. ஆர். ரைஹானா மச்சி 2004 - தற்போது ஜோசுவா சிறீதர் காதல் 2004 - தற்போது விஜய் ஆண்டனி சுக்ரன் 2005 - தற்போது நிரு கலாபக் காதலன் 2005 - தற்போது பவதாரிணி அமிர்தம் 2006 - தற்போது சுந்தர் சி. பாபு சித்திரம் பேசுதடி 2006 - தற்போது கஸ்தூரி ராஜா இது காதல் வரும் பருவம் 2006 - தற்போது ஜி. வி. பிரகாஷ் குமார் வெயில் 2006 - தற்போது தரண் குமார் பாரிஜாதம் 2006 - தற்போது யுகேந்திரன் வீரமும் ஈரமும் 2007 - தற்போது பிரேம்ஜி அமரன் தோழா 2008 - தற்போது ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம் 2008 - தற்போது எஸ். எஸ். குமரன் பூ 2008 - தற்போது அச்சு இராஜாமணி என்னைத் தெரியுமா 2008 - தற்போது வி. செல்வகணேஷ் வெண்ணிலா கபடிகுழு 2009 - தற்போது எம். ஜி. ஸ்ரீகுமார் காஞ்சிவரம் 2009 - தற்போது வசந்த் செல்லதுறை இளம்புயல் 2009 - தற்போது கருணாஸ் ராஜாதி ராஜா 2009 - தற்போது போபோ சசி குளிர் 100 2009 - தற்போது எஸ். தமன் மாஸ்கோவின் காவிரி 2009 - தற்போது சுருதி ஹாசன் உன்னைப்போல் ஒருவன் 2009 - தற்போது சதீஸ் சக்கரவர்த்தி லீலை 2009 - தற்போது 2010களில் இசையமப்பாளர்களின் பெயர் பணியாற்றிய முதல் படம் பணியாற்றிய காலம் குரு கல்யாண் மாத்தியோசி 2010 - தற்போது தேவன் ஏகாம்பரம் பலே பாண்டியா 2010 - தற்போது என். ஆர். ரகுனந்தன் தென்மேற்கு பருவக்காற்று 2010 - தற்போது கிருஷ்ண குமார் யுத்தம் செய் 2011 - தற்போது ஜிப்ரான் வாகை சூட வா 2011 - தற்போது விஜய் எபிநேசர் கண்டேன் 2011 - தற்போது அருள்தேவ் போட்டா போட்டி 2011 - தற்போது சி. சத்யா எங்கேயும் எப்போதும் 2011 - தற்போது ஆர். பிரசன்னா வழக்கு எண் 18/9 2011 - தற்போது சந்தோஷ் நாராயணன் அட்டகத்தி 2012 - தற்போது சித்தார்த் விப்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2012 - தற்போது கிரிஷ் கோபாலகிருஷ்ணன் மெரினா 2012 - தற்போது பேரரசு திருத்தணி 2012 - தற்போது நடராஜன் சங்கரன் மூடர் கூடம் 2013 - தற்போது சைமன் ஐந்து ஐந்து ஐந்து 2013 - தற்போது ஜஸ்டின் பிரபாகரன் பண்ணையாரும் பத்மினியும் 2014 - தற்போதுஷான் ரோல்டன் வாயை மூடி பேசவும் 2014 - தற்போது சிவமணி அரிமா நம்பி 2014 - தற்போது சுதர்சன் எம். குமார் பர்மா 2014 - தற்போது அர்ஜுன் ஜன்யா ஜெய்ஹிந்த் 2 2014 - தற்போது விஷால் சந்திரசேகர் அப்புச்சி கிராமம் 2014 - தற்போதுதர்புகா சிவாகிடாரி (2016 திரைப்படம்)2015- தற்போது வரை 2020களில் +இசையமைப்பாளர்களின் பெயர்கள்பணியாற்றிய முதற்படம்பணியாற்றிய ஆண்டுகள்அனிருத் ரவிச்சந்திரன்32013-தற்போது வரையுவன்ஸ்ரீ தயாநிதிஉன் நினைவுகள்2022-தற்போது வரைஹிப் ஹாப் தமிழாஆம்பள2015-தற்போது வரை மேற்கோள்கள் +
இந்துக் கோயில்களின் பட்டியல்
https://ta.wikipedia.org/wiki/இந்துக்_கோயில்களின்_பட்டியல்
இந்துக் கோயில்கள் இந்தியக் கோவில்கள் பிருஹதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர், தமிழ்நாடு மீனாட்சியம்மன் கோவில், மதுரை, தமிழ்நாடு இலங்கைக் கோவில்கள் திருக்கேதீஸ்வரம் திருக்கோணேஸ்வரம், திரிகோணமலை கதிர்காமக் கந்தன் ஆலயம், கதிர்காமம் நல்லூர்க் கந்தசுவாமி கோவில், நல்லூர் செல்வச் சந்நிதி, தொண்டமனாறு வைத்தீஸ்வரர் ஆலயம், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் நாகபூஷணி அம்மன் கோயில், நயினாதீவு மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், மாவிட்டபுரம் துர்க்கை அம்மன் கோயில், தெல்லிப்பழை கருணாகரப் பிள்ளையார் கோவில், உரும்பிராய் இணுவில் கந்தசுவாமி கோயில், இணுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில், மட்டுவில் சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயம், வரணி பெருமாள் கோயில், யாழ்ப்பாணம் வரதராஜ பெருமாள் ஆலயம், பொன்னாலை மண்டூர்க் கந்தசுவாமி கோயில், மண்டூர் சித்தாண்டி முருகன் கோவில், சித்தாண்டி வல்லிபுர ஆழ்வார் கோயில், வல்லிபுரம் மருதடி விநாயகர் ஆலயம், மானிப்பாய் ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரம், ஒட்டிசுட்டான் வற்றாப்பளை அம்மன் கோயில், வற்றாப்பளை, முல்லைத்தீவு மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், மாத்தளை றம்பொட ஆஞ்சநேயர் ஆலயம், றம்பொட, நுவரெலியா கல்முனை தென்பத்திரகாளி அம்மன் கோயில் கோண்டாவில் மேற்கு காளி கோவில் மலையாளன் காடு ஐயனார் அராலி கிழக்கு யாழ்ப்பாணம் சிங்கப்பூர் கோயில்கள் செண்பக விநாயகர் ஆலயம் மகா மாரியம்மன் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் தண்டாயுதபாணி கோயில் வடபத்திர காளியம்மன் கோயில் வீரமாகாளியம்மன் கோயில் அவுஸ்திரேலியக் கோயில்கள் பெயர் ஊர் மாநிலம்/நாடு பாணி வடஇந்தியப் பாணி விஸ்வநாதர் கோயில்காஜுராஹோமத்தியப்பிரதேசம்-- முக்தேஸ்வரர் கோயில்புபனேஸ்வர்ஒரிசாகி.பி 9ம் நூ.ஆ சூரியன் கோயில்மோதேராகுசராத்து- இலக்குமணர் கோயில்சிர்பூர்மத்தியப்பிரதேசம்- பரசுராமேஸ்வரர் கோயில்-ஒரிசாகி.பி 7ம் நூ.ஆ- லிங்கராஜர் கோயில்புபனேஸ்வர்ஒரிசாகி.பி 11ம் நூ.ஆ ஜகந்நாதர் கோயில்புரி-ஒரிசாகி.பி 12ம் நூ.ஆ சூரியன் கோவில்கொனராக்-கி.பி 13ம் நூ.ஆ கட்டேஸ்வரர் கோயில்படோலி-கி.பி 10ம் நூ.ஆ கலகநாதர் கோயில்பட்டடக்கல்கர்நாடகம்கி.பி 8ம் நூ.ஆ ஜஸ்மல்நாத் மகாதேவர் கோயில்அசோடாகுசராத்துகி.பி 12ம் நூ.ஆ கண்டாரியா மகாதேவர் கோயில்காஜுராஹோ-கி.பி 11ம் நூ.ஆ உதயேஸ்வரர் கோயில்உதயபூர்மத்தியப்பிரதேசம்கி.பி 11ம் நூ.ஆ கொண்டேஸ்வரர் கோயில்சின்னார்மகாராஷ்டிரம்கி.பி 12ம் நூ.ஆ மகாதேவர் கோயில்ஜோட்காமகாராஷ்டிரம்கி.பி 12ம் நூ.ஆ மகாநலேஸ்வரர் கோயில்மேனல்ராஜஸ்தான்கி.பி 11ம் நூ.ஆ சென்னகேஸ்வரர் கோயில்பேலூர்கர்நாடகம்கி.பி 12ம் நூ.ஆ திராவிடப் பாணிமாமல்லபுரம் கடற்கரைக் கோயில்கள் மாமல்லபுரம் தமிழ் நாடு கி.பி. 8ம் நூ.ஆ. கைலாசநாதர் கோயில்காஞ்சிபுரம்தமிழ் நாடு- நடராஜர் கோயில்சிதம்பரம்தமிழ் நாடு- ரங்கநாதர் கோயில்சிறீரங்கம்தமிழ் நாடு- மூவர் கோயில்கொடும்பாளூர்தமிழ் நாடுகி.பி 9ம் நூ.ஆ விஜயசோழீஸ்வரர் கோயில்நாற்றாமலை-கி.பி 9ம் நூ.ஆ விருபக்ஷ கோயில்பட்டடக்கல்கர்நாடகம்கி.பி 8ம் நூ.ஆ ஐராவதேஸ்வரர் கோயில்தாராசுரம்-கி.பி 12ம் நூ.ஆ கைலாசநாதர் கோவில்எல்லோராமகராட்டிரா-கி.பி 8ம் நூ.ஆ பிருஹதீஸ்வரர் கோயில்தஞ்சாவூர்தமிழ் நாடுகி.பி 11ம் நூ.ஆ கங்கைகொண்ட சோழபுரம்-தமிழ் நாடுகி.பி 11ம் நூ.ஆ கேதாரேஸ்வரர் கோயில்பெல்காவே-கி.பி 12ம் நூ.ஆ கேசவர் கோயில்சோம்நாத்பூர்கர்நாடகம்கி.பி 13ம் நூ.ஆ ஏகாம்பரேஸ்வரர் கோயில்காஞ்சிபுரம்தமிழ் நாடு- மீனாட்சியம்மன் கோயில்மதுரைதமிழ் நாடுகி.பி 17ம் நூ.ஆ சோமநாதபுரம் (குசராத்து)சோமநாதபுரம் (குசராத்து)]]குசராத்து இவற்றையும் பார்க்கவும் இந்துக் கோயில் கட்டிடக்கலை பகுப்பு:இந்து சமய கோயில்களின் பட்டியல் கட்டுரைகள்
யாழ்ப்பாண இராச்சியம்
https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாண_இராச்சியம்
REDIRECT யாழ்ப்பாண அரசு
கைலாய மாலை
https://ta.wikipedia.org/wiki/கைலாய_மாலை
கைலாயமாலை என்பது யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் முதல் நூலாகக் கொள்ளும் நூல்களில் ஒன்றாகும். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில், யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர் தான் பயன்படுத்திய முதனூல்களில் ஒன்றாகக் கைலாய மாலையையும் குறிப்பிட்டுள்ளார். இது யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது. நல்லூர் கைலாசநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள கைலாசநாதப் பெருமான் மேல் பாடப்பட்டதாகத் தோன்றினும், யாழ்ப்பாண அரசன் செகராசசேகரனின் புகழ் பாடுவதற்கான நூலே இதுவென்று கருதப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்துக்குமுன் எழுதப்பட்டு இன்றும் கிடைக்ககூடிய மிகச் சில நூல்களில் இதுவும் ஒன்றாகும். இது ஆறுமுக நாவலரின் தமையனார் மகன் த. கைலாசபிள்ளை அவர்களால் அச்சிடப்பட்டது. காலம் யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர் ஆட்சி தொடங்குவதற்கு முன்பே இந்நூல் எழுதப்பட்டது என்பது யாழ்ப்பாண வரலாற்றாளர்களின் பொதுக் கருத்தாக இருந்தாலும், துல்லியமாக இதன் காலத்தை அறுதியிட்டுச் சொல்வதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்குச் சற்று முன்னர், 1604 ஆம் ஆண்டுக்கும் 1619 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டு, இந்நூலும் எழுதப்பட்டிருக்கலாம் என்பது இராசநாயக முதலியாரின் கருத்து. காசி நகரத்துக் கங்காதரரை அனுப்பும்படி சேதுபதிக்குச் செய்தி அனுப்பிய தகவல் நூலில் காணப்படுகிறது. நாயக்க அரசன் முத்துக்கிருட்டின நாயக்கர், 1604 ஆம் ஆண்டில், உடையான் சேதுபதி எனப்படும் சடையப்ப தேவரை முதன் முதலாக இராமநாதபுரத்துக்குத் தலைவராக நியமித்தார் என்பதால், இந்நூல் அந்த ஆண்டுக்குப் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது அவரது வாதம்.நடராசன், பி., முத்துராச கவிராயரின் கைலாயமாலை, செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம், 1983, பக். vi. ஆனாலும், சேதுபதி என்னும் விருதுப் பெயர் நீண்ட காலமாகவே இருந்து வருவதாகவும், 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலேயே சேதுபதிகளுக்கும், யாழ்ப்பாணத்து அரசர்களுக்கும் தொடர்புகள் இருந்தன என்றும் பிற அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். கிபி 1260 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி காலத்திலேயே இந்நூல் எழுந்திருக்கலாம் என்று சி. பத்மநாதன் கருத்து வெளியிட்டுள்ளார். அமைப்பு இந்நூல் செய்யுள் வடிவில் அமைந்தது. வெண்பா வடிவில் அமைந்துள்ள காப்புச் செய்யுள் நீங்கலாக, இரண்டிரண்டு அடிகளால் ஆன 310 கண்ணிகளால் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பாடுபொருளையும், யாப்பிலக்கணத்தையும் பொறுத்தவரை இந்நூல் மெய்க்கீர்த்திமாலை, உலா ஆகிய சிற்றிலக்கிய வகைகளின் கலவையாக அமைந்துள்ளது.நடராசன், பி., முத்துராச கவிராயரின் கைலாயமாலை, செட்டியார் அச்சகம், யாழ்ப்பாணம், 1983, பக். v. கைலாயமாலையை அதன் உள்ளடக்க அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதற் கண்ணி தொடக்கம் 46 ஆவது கண்ணி வரையிலான முதற் பகுதி, செகராசசேகர மன்னனுக்கு முற்பட்ட கால நிகழ்வுகளைக் கூறுகிறது. கதிரமலையில் இருந்து அரசாண்ட வாலசிங்கன், நரசிங்கராசன் ஆகிய மன்னர்கள் குறித்தும், நரசிங்கராசனின் முன் யாழ்ப்பாணன் ஒருவன் யாழ் இசைத்து நகரொன்றைப் பரிசாகப் பெற்றது குறித்தும், அதனால் அந்நகர் யாழ்ப்பாணம் எனப் பெயர் பெற்றது குறித்தும், அந்நகரை யாழ்ப்பாணன் அரசாண்டு இறந்ததன் பின்னர் அது அரசனின்றித் தளம்பியது குறித்ததுமான செய்திகள் இப்பகுதியில் சுருக்கமாக இடம்பெறுகின்றன. 47 ஆம் கண்ணியிலிருந்து 211 ஆம் கண்ணி வரையிலான இரண்டாம் பகுதியில் செகராசசேகரனின் பெருமைகள், அவனை யாழ்ப்பாணத்தை ஆள அழைத்து வந்தமை, நல்லூர் நகரத்தை அமைத்து ஆட்சி செய்தது ஆகிய விடயங்கள் கூறப்படுகின்றன. இதற்குப் பிற்பட்ட மூன்றாம் பகுதி, செகராசசேகர மன்னன் கைலாயநாதர் கோயிலைக் கட்டிக் குடமுழுக்குச் செய்வித்தது தொடர்பான விடயங்களை உள்ளடக்குகிறது. உசாத்துணை வெளியிணைப்பு கைலாய மாலை - மின்னூல் பகுப்பு:ஈழத்து நூல்கள் பகுப்பு:யாழ்ப்பாண வரலாறு
வண்ணார்பண்ணை வைத்தீசுவரர் ஆலயம்
https://ta.wikipedia.org/wiki/வண்ணார்பண்ணை_வைத்தீசுவரர்_ஆலயம்
யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வைத்திலிங்கம் செட்டியார் என்பவரால் கட்டுவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துத் தமிழரசர் காலத்துக்குப் பின், இந்துக் கோயில்கள் அனைத்தும் போத்துக்கீசரால் இடித்துத் தள்ளப்பட்டபின்னர், சுமார் 160 ஆண்டுகள் கழித்துக் கட்டப்பட்ட முதல் கோயில்களில் இதுவும் ஒன்று. இது வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் எனவும் பரவலாக அறியப்படுகின்றது. இக்கோயில், காங்கேசந்துறை வீதியில், தற்கால யாழ்ப்பாண நகரின் மத்தியிலிருந்து சுமார் ஒரு கிமீ தூரத்துக்குள்ளேயே அமைந்துள்ளது. தோற்றம் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில், சோழ நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் கோபாலச் செட்டியார். இவர் அங்கே வியாபாரம் செய்து வந்தார். இவ்வியாபாரம் மூலம் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த ஒல்லாந்த தேசாதிபதியின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. இவருடைய மகன் வைத்திலிங்கன். இவர் சிறுவனாக இருந்தபோது இவரைக்கண்ட தேசாதிபதியின் மனைவி அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாமையால் தேசாதிபதியின் மனைவி அவரைத் தம் மாளிகையிலேயே வளர்த்து வந்தார். வளர்ந்து பெரியவனான பின்னர், தேசாதிபதியின் பரிந்துரையின்படி மூன்று முறைகள் முத்துக்குளிக்கும் குத்தகையைப் பெற்றுத் திறம்பட நடத்தி நல்ல இலாபம் பெற்றார். இவ்வாறு சம்பாதித்த செல்வத்தின் ஒரு பகுதியை, இவருடைய நண்பராயிருந்த கூழங்கைத் தம்பிரான் என்பவரின் ஆலோசனைப்படி, சிவபெருமானுக்குக் கோயிலமைப்பதில் செலவிட எண்ணினார். 1787 ல் இக்கோயில் அமைந்திருக்கும் நிலத்தை வாங்கி கோயில் திருப்பணியைத் தொடங்கினார். 1790 ஆம் ஆண்டில் கோயில் கட்டிடப்பணி நிறைவேற்றப்பட்டு வைத்தீஸ்வரப் பெருமானையும், தையல்நாயகி அம்மனையும் பிரதிட்டை செய்து வைத்தார். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலிலேயே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் தமது முதலாவது பிரசங்கத்தை 31 டிசம்பர் 1847 ஆம் ஆண்டு நிகழ்த்தினார். வெளி இணைப்புகள் வண்ணார்பண்ணை வைதீசுவரன் கோயில் பகுப்பு:வண்ணார்பண்ணையில் உள்ள கோயில்கள்
சிந்துவெளி நாகரிகம்
https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளி_நாகரிகம்