title
stringlengths
1
93
url
stringlengths
31
123
text
stringlengths
0
361k
யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம்
https://ta.wikipedia.org/wiki/யாழ்_வைத்தீஸ்வர_வித்தியாலயம்
thumb|300px|வைத்தீஸ்வர வித்தியாலயத்தின் முன்புறத் தோற்றம் யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் அல்லது வைத்தீஸ்வராக் கல்லூரி எனப்படும் இப் பாடசாலை 1913 ஆம் ஆண்டில் நாகமுத்து என்னும் சமூகப் பற்றாளர் ஒருவரால் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான கட்டிடமொன்றில் ஆரம்பிக்கப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் இது இராமகிருஷ்ண மிஷனின் முகாமைத்துவத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. அக்காலத்தில், விபுலானந்த அடிகள் போன்றவர்களின் மேலாண்மையின் கீழ் இயங்கிய பெருமை இப் பாடசாலைக்கு உண்டு. பிரித்தானியர் ஆட்சியின் கீழ், பாடசாலைகளைத் துவங்கி நடத்திவந்த கிறிஸ்தவ மிஷன்கள், தங்கள் மதத்துக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவந்த ஒரு காலகட்டத்தில், யாழ்ப்பாணத்தவரின் சொந்தப் பண்பாடுகளைத் தழுவிய கல்வித் தேவைகளை நிறைவேற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட பாடசாலைகளில் இதுவும் ஒன்று. இது ஆண், பெண் இருபாலாருக்கும் கல்வி புகட்டுகின்ற ஒரு கலவன் பாடசாலை ஆகும். இலங்கையில் பாடசாலைகள் அனைத்தும் தேசிய மயமாக்கப்பட்ட பின்னர் இலங்கை கல்வித் திணைக்களத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. அமைவிடம் thumb|300px|வைத்தீஸ்வர வித்தியாலயம், முதன்மை வாயிலின் அண்மைத் தோற்றம் யாழ்ப்பாண நகரத்திலுள்ள வண்ணார்பண்ணைப் பகுதியில் இருக்கும் சிவன் கோயிலுக்கு அருகில் உள்ள சிவன் கோயில் வடக்கு வீதியில் இது அமைந்துள்ளது. யாழ் மாவட்டத்தின் முக்கிய சாலையான காங்கேசந்துறை வீதிக்கு மிகவும் அண்மையில் உள்ளதால் இவ்விடத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்திலிருந்து இங்கு வந்து செல்வதற்கு வசதியாக உள்ளது. இதனால், அயலிலுள்ளவர்கள் மட்டுமன்றி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கே கல்வி கற்கின்றனர். இப் பாடசாலை பெருமளவில் இந்துக்கள் வாழும் பகுதியில் அமைந்திருந்த போதும், சோனக தெரு என அழைக்கப்படுகின்ற, முஸ்லிம்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதிக்கும் அண்மையில் இருப்பதால். இராமகிருஷ்ண மடத்தின் மேலாண்மையின் கீழ் இருந்த காலத்திலேயே இப் பாடசாலையில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மாணவர்களும் கல்வி பயின்றனர். ஆறுமுக நாவலரால் தொடங்கப்பட்ட நாவலர் மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி என்பனவும் இப் பாடசாலைக்கு அண்மையிலேயே அமைந்திருக்கின்றன. கல்லூரிப் பாடல் இராமகிருஷ்ண மடத்தின் கீழ் இயங்கிய காலத்தில் இப்பாடசாலையின் கல்லூரிப் பாடல் இயற்றப்பட்டது. இதனால் இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் கொள்கைகளை முன்னெடுக்கும் இதன் நோக்கம் இப் பாடலில் வலியுறுத்தப்படுவதைக் காணலாம். அத்துடன் இப் பாடசாலையைத் தொடக்கிய நாகமுத்து, இதன் வளர்ச்சிக் கட்டங்களில் முக்கிய பணியாற்றிய சுவாமி சர்வானந்தர், சுவாமி விபுலானந்தர் ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அண்மையில் உள்ள சிவன் கோயிலின் இறைவனான வைத்தீஸ்வரப் பெருமானின் அருள் வேண்டி இப்பாடல் நிறைவெய்துகிறது. பாடல் வரிகள் வீறுகொண்ட விவேகானந்த வேதஞான களஞ்சியத்தைப் பேறுகொண்ட ராமகிருஷ்ண பேரருட்செல் வத்துடனே சாறுகொண்டு பார்முழுதும் தானஞ்செய்து வேறுளகைம் மாறுகொள்ளா வைத்தீஸ்வராக் கல்லூரி வாழியவே. சாதிமத பேதமற்ற சமரசசன் மார்க்கநெறி மேதினியில் கால்கொளவே மெச்சுகாவி பச்சைநீலம் நீதிவளர் மூவர்ண நீள்கொடியும் குண்டெலியென் றாதியுள இலாஞ்சனையும் அடிகளாரும் வாழியவே. நன்னெறியோர் ஏத்துகின்ற நாகமுத்து செய்தவமும் தன்னடிசேர் சர்வானந்தர் விபுலானந்தர் இதயபூர்வப் பொன்னருளும் கல்லூரி பொலிவெய்த முதல்வருடன் இன்றருளும் வைத்தீஸ்வரன் இருங்கருணை வாழியவே. இவற்றையும் பார்க்கவும் யாழ்நகரப் பாடசாலைகள் பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகள்
வைத்திலிங்கம் செட்டியார்
https://ta.wikipedia.org/wiki/வைத்திலிங்கம்_செட்டியார்
வைத்திலிங்கம் செட்டியார் சோழ நாட்டிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசித்துவந்தவரும், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தரிடம் மொழி பெயர்ப்பாளராயிருந்த கொச்சிக் கணேசையர் என்பவரிடம் உத்தியோகம் பார்த்துவந்தவருமான கோபாலச் செட்டியார் என்பவருடைய மகனாவார். ஒரு பொழுது கொச்சிக் கணேசையருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து கோபாலச் செட்டியார் அவர்கள் அவரை விட்டு விலகிச் சொந்தமாக வியாபாரம் செய்து வந்தார். இவ் வியாபாரம் மூலம் செட்டியாருக்கு ஒல்லாந்த தேசாதிபதியின் தொடர்பு கிடைத்தது. செட்டியாரின் நற்பண்புகள் காரணமாகத் தேசாதிபதியின் மனைவியும் செட்டியாரிடம் நல்ல நம்பிக்கை வைத்திருந்தாராம். ஒருமுறை தேசாதிபதியின் மனைவி சிறுவனாயிருந்த வைத்திலிங்கனைக் கோபாலச் செட்டியாரின் கடையிற் காண நேர்ந்த போது அவனைத் தன்னுடன் மாளிகைக்கு அழைத்துச் சென்றாராம். அன்றிலிருந்து வைத்திலிங்கனின் பெரும்பகுதி நேரம் மாளிகையிலேயே கழிந்தது. அங்கே அவர் ஒல்லாந்த மொழியையும் கற்றுக்கொண்டார். இளைஞனாக வளர்ந்த வைத்திலிங்கனுக்கு முத்துச் சலாபம் குத்தகை எடுக்க எண்ணம் ஏற்பட்டது. தேசாதிபதியின் மனைவியுடைய உதவியின் பேரில் முத்துச் சலாபக் குத்தகை வைத்திலிங்கனுக்குக் கிடைத்தது, அதன் மூலம் பெருமளவு வருமானமும் ஈட்டிக்கொள்ளக்கூடியதாக இருந்தது. தொடர்ந்து மூன்று தடவை குத்தகை எடுத்துப் பெரும் இலாபமீட்டிய இவர் சிறந்த சிவ பக்தியுடையவராக விளங்கினார். உரிய வயதில் சோழ நாட்டைச் சேர்ந்த சங்கந்தி என்னும் ஊரிலே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து இனிது வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசித்துவந்தவரும், கோபாலச் செட்டியாருக்கு நண்பரும், வைத்திலிங்கம் செட்டியாருக்குக் குருவுமான கூழங்கைத் தம்பிரான் என்பவருடைய ஆலோசனையின் பேரில், வண்ணார்பண்ணையில் ஒரு நிலத்தை வாங்கி வைத்தீஸ்வரப் பெருமானுக்குக் கோயில் எழுப்புவதற்காக 1787ஆம் ஆண்டில் அத்திவாரம் இட்டார். இக்கோயில் எவ்வித தடையுமின்றி 1790ல் நிறைவு பெற்றது. இதன் பின்னர் சுமார் பதினைந்து ஆண்டுகள் வரை கோயிலை அவரே பரிபாலனம் செய்து வந்தார். பின்னர் தனது இறுதிக் காலத்தில் சிவத் தலங்களுக்கு யாத்திரை செல்ல விரும்பிக் கோயில் பரிபாலனத்தைத் தனது இரு மகன்களிடமும் கையளித்துவிட்டுப் புறப்பட்டார். பல தலங்களையும் தரிசித்தபின் இறுதிக்காலத்தைக் காசியில் கழிக்க விரும்பி அங்கேயே தங்கியிருந்து சிறிது காலத்தில் காலமானார். துணை நூல்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள்
தலைநகரம்
https://ta.wikipedia.org/wiki/தலைநகரம்
ஒரு நாட்டின் தலைநகரம் என்பது, பொதுவாக அந்நாட்டின் நிர்வாகம் அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும். மிகப் பெரும்பாலான நாடுகளில் வணிக முக்கியத்துவம் கொண்ட நகரமாகவும் இதே நகரமே விளங்கும். சில நாடுகளில் நிர்வாகம், வர்த்தகம் இரண்டுக்கும் வேறுவேறான இரண்டு தலைநகரங்கள் இருக்கின்றன. மிகப்பெரிய தேசியத் தலைநகரங்கள் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மிகப்பெரிய தேசியத் தலைநகரங்கள் கீழே பட்டியலிடப் பட்டுள்ளன. ஆப்பிரிக்கா - கெய்ரோ ஆசியா - டோக்கியோ ஐரோப்பா - மாஸ்கோ வட அமெரிக்கா - மெக்ஸிகோ நகரம் ஓசியானியா - வெலிங்டன் தென் அமெரிக்கா - பியூனஸ் அயர்ஸ் இவற்றையும் பார்க்கவும் பன்னாட்டுத் தலைநகரங்களின் பட்டியல் மேற்கோள்கள் பகுப்பு:தலைநகரங்கள்
ஏர்னோ ரூபிக்
https://ta.wikipedia.org/wiki/ஏர்னோ_ரூபிக்
ஏர்னோ ரூபிக் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைப் பேராசிரியர் ஆவார். ரூபிக்ஸ் கியூப் என அறியப்படும் விளையாட்டுப் பொருளைக் உருவாக்கியதன் மூலம் உலகப் புகழ் பெற்றதுடன், பெருமளவு வருவாயையும் பெற்றுக்கொண்டார். பகுப்பு:கட்டிடக்கலை பகுப்பு:1944 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் மேற்கோள்கள்
இலண்டன்
https://ta.wikipedia.org/wiki/இலண்டன்
இலண்டன் (London), ஐக்கிய இராச்சியத்தினதும், இங்கிலாந்தினதும் தலைநகரமாகும். ஏழு மில்லியனுக்கு மேற்பட்ட குடித்தொகையைக் கொண்ட பெருநகர் இலண்டன், மாஸ்கோவுக்கு அடுத்ததாக ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய குடித்தொகை கொண்ட நகர்ப்புறம் ஆகும். உரோம மாகாணமான பிரித்தானியாவின் தலைநகரமான லண்டனியம் ஆக இருந்து, பிரித்தானியப் பேரரசின் மையமாகத் திகழ்ந்த இலண்டன், இன்று ஐக்கிய இராச்சியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 17% ஐப் பங்களிக்கின்றது. இது உலகின் நான்காவது பெரியதாகும். பல நூற்றாண்டுகளாக, இலண்டன், உலகின் முக்கியமான வணிக மற்றும் அரசியல் மையமாகத் திகழ்கின்றது. இலண்டன் ஒரு முக்கியமான உலக நகரமாக இருப்பதுடன், ஐரோப்பாவில் ஆகக்கூடுதலான நகரத்துக்குரிய மொத்த உள்ளுர் உற்பத்தியுடன் உலகின் மிகப் பெரிய நிதி மையமும் திகழ்கின்றது. மைய இலண்டன் ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பெரிய 100 நிறுவனங்களில் பெரும்பாலானவற்றின் தலைமையகங்களைக் கொண்டிருப்பதுடன், ஐரோப்பாவின் மிகப்பெரிய 500 நிறுவனங்களில் 100 நிறுவனங்களின் தலைமையகங்களின் தலைமையகங்களையும் கொண்டுள்ளது. அரசியல், நிதி, கல்வி, பொழுதுபோக்கு, ஊடகம், கலைகள், பண்பாடு போன்ற துறைகளில் இலண்டனின் செல்வாக்கு அதனை உலகில் முக்கியமான ஒரு நிலையில் வைத்துள்ளது. இந்நகரம், உள்நாட்டினரதும், வெளிநாட்டினரதும் சுற்றுலாப் பயணத்துக்குரிய இடமாகவும் விளங்குகின்றது. 1948 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிய விளையாட்டுக்கள் இலண்டனில் நிகழ்ந்தன. மீண்டு இது 2012 ஆம் ஆண்டில் இலண்டனில் நடைபெறவுள்ளது. இலண்டனில் நான்கு உலகப் பாரம்பரியக் களங்கள் அமைந்துள்ளன. இவை, இலண்டன் கோபுரம்; பழங்கால கிரீனிச் குடியிருப்புக்கள்; தாவரவியல் பூங்கா; வெசுட்மின்சுட்டர் அரண்மனை, வெசுட்மின்சுட்டர் மடாலயம், புனித மார்கிரட் தேவாலயம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி என்பனவாகும். இலண்டனில் பல வகையான மக்களுடன், பல பண்பாடுகளும், சமயங்களும் நிலவுகின்றன. இந்நகரத்தின் எல்லைக்குள் 300க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. யூலை 2007 ஆம் ஆண்டில் பெரிய இலண்டனின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 7,556,900 மக்கள் வாழ்ந்தனர். இதலால் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகக் கூடிய மக்கள்தொகை கொண்ட மாநகரப் பகுதியாக விளங்குகிறது. பெரிய இலண்டன் நகர்ப்புறப் பகுதி 8,278,251 என்னும் மக்கள் தொகையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாவது பெரிய நகர்ப்புறப் பகுதியாக உள்ளது. அதே நேரம் இலண்டன் நகர்ப்பெருமப் பகுதி 12 மில்லியனுக்கும் 14 மில்லியனுக்கும் இடைப்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பே உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும். அமைவிடம் "லண்டன்" என்னும் சொல் பல நூறு ஆண்டுகளாகவே வரலாற்றுப் புகழ் பெற்ற மிடில்செக்ஸ், இங்கிலாந்து கவுண்டியிலிருந்த சிறிய நகரமான இலண்டனை மையமாகக் கொண்டிருந்த இணைந்திருந்த தனிநகர்களை (conurbation) ஐக் குறிக்கப் பயன்பட்டு வந்தது. இன்று பொதுவாக இது பெரிய இலண்டன் (Greater London) என் அறியப்படுகின்ற நிர்வாகப் பிரதேசத்தையே குறித்தாலும், சிலவேளைகளில் இலண்டன் தபால் மாவட்டம், 020 என்னும் தொலைபேசிக் குறியீட்டு எண்ணால் குறிக்கப்படும் பகுதிகள், இலண்டனுக்கான முழு-வலயப் போக்குவரத்து அட்டைகள் பயன்படும் பகுதி, எம்25 மோட்டார்வாகனச் சாலைக்குள் அடங்கும் பகுதி போன்றவற்றையும் குறிக்கப் பயன்படுவதுண்டு. இலண்டனின் மையத்தின் அமைவிடம், ((ட்)ரபல்கர் சதுக்கத்துக்கு அண்மையிலுள்ள செயாரிங் சந்தி (Charing Cross)எனக்கூறப்படுகின்றது) அண்ணளவாக 51°30' N, 0°8' W ஆகும். வரலாறு தலைமைக் கட்டுரை: இலண்டனின் வரலாறு சொற்பிறப்பு thumb|250px|left|"இலண்டன் என்னும் பெயர் தேம்சு ஆற்றைத் தழுவி உருவாகி இருக்கலாம். இலண்டன் என்னும் சொல் எப்படி உருவானது என்பது குறித்துத் தெளிவு இல்லை. இது மிகவும் பழைய பெயர். இரண்டாம் நூற்றாண்டிலிருந்தே இப்பெயர் வழங்கி வந்ததைச் சில மூலங்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது. பொ.ஊ. 121 ஆம் ஆண்டில் இது இலண்டனியம் என அழைக்கப்பட்டது. இச்சொல் உரோம-பிரித்தானிய மூலத்தைக் காட்டுகிறது. மான்மவுத் என்னும் இடத்தைச் சேர்ந்த செஃப்ரி (Geoffrey of Monmouth) என்பவர் தனது இசுட்டோரியா ரீகம் பிரிட்டனி (Historia Regum Britanniae) என்னும் நூலில் இச் சொல்லுக்கு விளக்கம் கொடுக்க முயன்றார். இச் சொல்லின் தோற்றம் பற்றிய மிகவும் பழைய விளக்கங்களுள் ஒன்றான இதைத் தற்கால அறிஞர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இப்பகுதியை லுட் என்னும் அரசர் கைப்பற்றி ஆண்டதாகவும், அவரது பெயரைத் தழுவியே இந்நகரத்துக்குப் பெயர் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கினார் 1899 ஆம் ஆண்டிலிருந்து லாண்டினசு என்பவருக்குச் சொந்தமான இடம் என்னும் பொருள் கொண்ட செல்ட்டிய மொழிச் சொல்லிலிருந்து தோன்றியதாகக் கருதப்பட்டது. இந்த விளக்கமும் பின்னர் கைவிடப்பட்டது. 1998 ஆம் ஆண்டில் ரிச்சார்டு கோட்சு (Richard Coates) என்பவர், செல்டியத்துக்கு முந்திய பழைய ஐரோப்பிய மொழிச் சொல்லான "லோவொண்டியா" ((p)lowonida) என்பதிலிருந்தே இலண்டன் என்னும் சொல் தோன்றியதாக விளக்கினார். "லோவொண்டியா" என்னும் சொல் கடக்க முடியாதபடி அகலமான ஆறு என்னும் பொருள் தரும் ஒரு சொல். இச்சொல் தொடக்கத்தில் இலண்டனூடாகச் செல்லும் தேம்சு ஆற்றின் பகுதியைக் குறித்ததாகவும், இதிலிருந்தே இப் பகுதியில் இருந்த குடியேற்றத்துக்கு செல்ட்டிய மொழி வடிவமான லோவொனிடன்யன் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் "கோட்சு" விளக்கினார். வரலாற்றுக்கு முந்திய காலமும் பழமையும் thumb|250px|left|1300 ஆம் ஆண்டளவிலும் இலண்டன் நகரம் சுவர்களால் சூழப்பட்டே இருந்தது|alt= மிகப் பழைய காலத்திலேயே இப்பகுதியில் குடியேற்றங்கள் இடையிடையே இருந்ததற்கான சான்றுகள் இருப்பினும், முதல் குறிப்பிடத்தக்க குடியேற்றம் உரோமர்களால் பொ.ஊ. 43 ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டது. இது 17 ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருந்தது. பொ.ஊ. 61ல், போடிக்கா என்னும் அரசியின் தலைமையிலான ஐசெனி என்னும் பழங்குடியினர் இக் குடியேற்றத்தைத் தாக்கி எரித்து அழித்துவிட்டனர். பின்னர், பொ.ஊ. 100 ஆம் ஆண்டளவில் பெரிய அளவில் திட்டமிடப்பட்ட குடியேற்றம் இப்பகுதியில் நிறுவப்பட்டதுடன், அதுவரை உரோமப் பேரரசின் பிரித்தானிக்கா மாகாணத்தின் தலைநகரமாக இருந்த கால்செசுட்டருக்குப் பதிலாக இது தலைநகரமும் ஆனது. இரண்டாம் நூற்றாண்டில் இதன் உச்ச நிலையில் இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 60,000 வரை இருந்திருக்கக் கூடும் என மதிப்பிட்டுள்ளனர். உரோமப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், இந்த நகரம் கைவிடப்பட்டு, லுண்டென்விக் என்னும் சக்சன் (Saxon) நகரமொன்று மேற்குத் திசையில், ஓரிரு மைல்களுக்கு அப்பால் அல்ட்விச் (Aldwych) பகுதியில் 7 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. இப் பகுதியில் பிளீட் ஆற்றின் கழிமுகப் பகுதியில் மீன் பிடிப்பதற்கும், வணிகத்துக்குமான ஒரு சிறு துறைமுகம் இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. நகரத்தை வைக்கிங்குகள் கைப்பற்றும்வரை இவ் வணிக நடவடிக்கைகள் வளர்ந்து வந்தன. ஆனால் வைக்கிங்குகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக இந் நடவடிக்கைகள் மீண்டும் முன்னர் "லண்டனியம்" இருந்த இடத்துக்கு மாற்றப்பட வேண்டியதாயிற்று. வைக்கிங்குகளின் தாக்குதல்கள் பொ.ஊ. 886 ஆம் ஆண்டுவரை தொடர்ந்ததாயினும், அவ்வாண்டில் பேரரசர் அல்பிரட் இலண்டனைக் கைப்பற்றியதுடன் டேனியத் தலைவர் குத்ரம் என்பவருடன் அமைதி ஒழுங்கும் செய்துகொண்டார். தொடக்ககால "லுண்டன்விக்" நகரத்தின் பெயர் "பழைய நகரம்" என்னும் பொருள்படும் "ஈல்விக்" ஆனது. இதுவே தற்கால நகரமான வெஸ்ட்மின்ஸ்ட்டரில் உள்ள "அல்ட்விக் (Aldwych) ஆகும். நடுக் காலம் thumb|left|வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயம் இலண்டனின் மிகப் பழைமையானதும், முக்கயத்துவம் கொண்டதுமான கட்டிடம் என்பதுடன் இது ஒரு உலக பாரம்பரியக் களமும் ஆகும்.|alt= 1016 ஆம் ஆண்டில் "கனூட்" இங்கிலாந்தின் அரசராகி, 1035 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரை இலண்டன் நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார். இவரது இறப்புக்குப் பின்னர் இவரது மனைவிக்கு முந்திய கணவர் மூலம் பிறந்த மகனான எட்வார்ட் தலைமையில் நாடு மீண்டும் சக்சன்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எட்வார்ட் வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்தை மீண்டும் கட்டியதுடன், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையையும் கட்டினார். இக் காலத்தில் இங்கிலாந்து அரசின் தலைமையிடமாக வின்செசுட்டர் இருந்தபோதும், இலண்டன் இங்கிலாந்தின் மிகப் பெரியதும், வளம் மிக்கதுமான நகரமானது. நோர்மண்டியின் டியூக் ஆக இருந்த வில்லியம் என்பவர் ஆஸ்டிங்ஸ் போரில் வெற்றி பெற்று இங்கிலாந்தின் அரசரானார். புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருந்த வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்தில் 1066 ஆம் ஆண்டு நத்தார் நாளன்று அவர் முடிசூட்டிக்கொண்டார். அவர், இலண்டன் நகர மக்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அவர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கியதுடன், நகரத்தின் தென்கிழக்கு மூலையில் இலண்டன் கோபுரம் எனப்படும் கட்டிடத்தையும் கட்டினார். 1097 ஆம் ஆண்டில், இரண்டாம் வில்லியம் வெஸ்ட்மின்ஸ்டர் மடாலயத்துக்கு அருகில், வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தைக் கட்டினார். இம் மண்டபமே நடுக்காலம் முழுதும் அரசர்களின் வதிவிடமாக அமைந்த புதிய வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் அடிப்படையாக அமைந்தது. வெஸ்ட்மின்ஸ்டர் அரச அவையினதும், அரசினதும் இடமாக அமைந்தபோதும் அதன் அண்மையில் அமைந்திருந்த இலண்டன் நகரம், வணிக நடவடிக்கைகளின் மையமாகத் திகழ்ந்தது. இது இலண்டன் கார்ப்பரேசன் எனப்படும் தனியான நிருவாகத்தின் கீழ் இருந்தது. 1100 ஆம் ஆண்டில் 18,000 ஆக இருந்த இதன் மக்கள்தொகை 1300 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 100,000 ஆகியது. இக் காலத்தில் யூதர்களின் மக்கள்தொகை கூடியிருந்தது, முதலாம் எட்வார்டு அரசர் 1260 ஆம் ஆண்டில் வெளியிட்ட ஒரு ஆணையின் மூலம் அவர்களை இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றினார். "கறுப்புச் சாவு" எனப்பட்ட ஒரு தொற்றுநோய் ஏற்பட்டு 14 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில், இலண்டனின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்து போனார்கள். 1381 ஆம் ஆண்டில் "குடியானவர்களின் புரட்சி"யின்போது இடம்பெற்ற ஆக்கிரமிப்பு ஒன்றைத் தவிர, அக்காலங்களில் இடம்பெற்ற உள்நாட்டுக் குழப்பங்களால் இலண்டன் அதிகம் பாதிப்பு அடையவில்லை. புதுக் காலத் தொடக்கம் thumb|250px|1666 ஆம் ஆண்டின் இலண்டனின் பெரும் தீ விபத்து நகரின் பல பகுதிகளில் பேரழிவை ஏற்படுத்தியது|alt= டியூடர் காலத்தில் சீர்திருத்த இயக்கத்தினால் நகர மக்கள் படிப்படியாகப் புரொட்டஸ்தாந்தத்தின் பக்கம் சென்றனர். இலண்டன் நகரம் திருச்சபையிலிருந்து தனியார் சொத்துடைமை முறைக்கு மாறியது. வணிகவியம் வளர்ச்சியடைந்ததுடன், பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி போன்ற தனியுரிமைக் கம்பனிகள் உருவானதுடன், வணிகம் புது உலகப் பக்கமும் விரிவடைந்தது. இங்கிலாந்திலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் குடியேறிகள் இலண்டனுக்கு வந்தனர். இலண்டன் வட கடல் பகுதியின் முதன்மைத் துறைமுகம் ஆனது. 1530 ஆம் ஆண்டில் 50,000 ஆக இருந்த மக்கள்தொகை 1605 ஆம் ஆண்டில் 225,000 ஆக வளர்ச்சியடைந்தது. 16 ஆம் நூற்றாண்டில் அரங்கக் கலைக்கு எதிர்ப்பு இருந்த காலத்தில் வில்லியம் சேக்சுப்பியரும், அவர் போன்ற பிறரும் இலண்டனில் வாழ்ந்தனர். 1603 ஆம் ஆண்டில் டியூடர் கால முடிவில், இலண்டன் நகரம் இறுக்கமாகச் சிறிய அளவாகவே இருந்தது. 1605 ஆம் ஆண்டி நவம்பர் 5 ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டரில், முதலாம் சேம்சைக் கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலண்டன் நகரம் தொற்று நோயினால் பாதிக்கப்பட்டது. 1665–1666 காலப்பகுதியில் இது தீவிரமாகியது. இதனால் 100,000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது மொத்த மக்கள் தொகையின் ஐந்தில் ஒரு பகுதியாகும். 1666 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் தேதி இடம்பெற்ற இலண்டனின் பெரும் தீ விபத்தில் ஏராளமான மரக் கட்டிடங்கள் எரிந்து சாம்பராயின. இதனைத் தொடர்ந்த மீள் கட்டுமானப் பணிகள் முடிவதற்குப் 10 ஆண்டுகள் பிடித்தன. இப் பணிகள் ராபர்ட் ஊக் (Robert Hooke) என்பவரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன. போக்குவரத்து இலண்டன் மிகவும் வளர்ச்சியடைந்த பொதுப் போக்குவரத்து வலையமைப்பைக் கொண்டுள்ளது. நகரின் பெரும்பாலான தரைவழி போக்குவரத்து லண்டனுக்கான போக்குவரத்து நிறுவனம் [Transport for London – TfL] பொறுப்பாகும். அனேகரது அன்றாடப் பயணங்கள் பாதாளத் தொடர்வண்டி,புகையிரதம், பேருந்து, டீராம் வண்டி போன்ற பொதுப் போக்குவரத்திலேயே நடைபெறுகின்றன. இப் பயணங்களுக்கு ஒய்ஸ்டர் அட்டை எனப்படும் மின்னணுப் பணம் செலுத்தும் அட்டை முறையை, எல்லாப் பாதாள தொடர்வண்டிகள், பேருந்துகள் போன்றவற்றுக்கும் பயன்படுத்தமுடியும் பாதாளத் தொடர்வண்டி சேவை இலண்டன் பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பே உலகின் மிகப்பெரியதும் பழமையானதுமான பாதாளத் தொடர்வண்டி வலையமைப்பு ஆகும். 270 தரிப்பிடங்களை இலண்டன் முழுவதும் கொண்டுள்ள இவ் பாதாளத் தொடர்வண்டி சேவையை தினமும் 3 மில்லியன் இலண்டன் வாசிகள் பயன்படுத்துவதாக அறியப்படுகின்றது. பேருந்து சேவை இலண்டனின் பேருந்து சேவை வலையமைப்பானது உலகில் மிகப்பெரிய பேருந்து சேவை வலையமைப்பாகும். 8000க்கும் மேற்பட்ட 24மணி நேர சேவையை வழங்கக்கூடிய பேருந்துகளையும் 700க்கும் மேற்பட்ட தரிப்பிடங்களையும் கொண்டுள்ள இவ்வலையமைப்பை தினமும் 6 மில்லியன் பயணிகள் பயன்படுத்துகின்றனர். காலநிலை இலண்டனின் சுற்றுலா மையங்கள் thumb|250px|டிரபல்கர் சதுக்கம்முழு அகன்றப்பரப்பு நிழற்படம் கழிவுநீர் சுத்திகரிப்பு|thumb|right|250px இங்கிலாந்து வங்கி பக்கிங்ஹாம் மாளிகை பிரித்தானிய அருங்காட்சியகம் சைனாடவுன் கிளியோபாட்ராவின் ஊசி (Cleopatra's Needle) கொவெண்ட் தோட்டம் டவுனிங் சாலை ஹாம்ப்டன் கோட் மாளிகை குதிரை காவலர் (Horse Guards) இம்பீரியல் போர் அருங்காட்சியகம் கென்சிங்டன் கூரைத் தோட்டங்கள் லீசெஸ்டர் சதுக்கம் இலண்டன் அருங்காட்சியகம் தேசிய காட்சிக்கூடம் (National Gallery) இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பழைய சத்திர சிகிச்சைக்கூட அருங்காட்சியகம் லண்டனின் கண் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை (நாடாளுமன்ற அவைகள் மற்றும் பிக்பென் மணிக்கூண்டு) thumb|150px| பிக்பென் உள்ளிட்ட வெஸ்ட்மினிஸ்டர் மாளிகையின் மணிக்கூண்டு குறிப்புகள் வெளியிணைப்புகள் - ஆங்கிலத்தில் The Open Guide to London - லண்டன் குறித்த அனைத்து தகவல்களையும் விக்கியில் தொகுப்பதற்கான முனைவு London Guide London Guide on Englandguide.co.uk First chapter of the book "London: The Biography" by Peter Ackroyd Mayor of London, the London Assembly and the Greater London Authority official web site for the Mayor of London and the London Assembly. www.london.gov.uk London at தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)'s Earth Observatory "லண்டன்" பெயரின் விரிவுரை - ஆங்கிலத்தில் (PostScript file) லண்டன் உணவகங்களின் விமரிசனங்கள். London from Evening Standard லண்டன் உணவகங்களின் வழிகாட்டி. London Bars and Pubs Guide. London Directory more London Directories Transport for London Site London Underground The Tube லண்டனின் தங்கும் விடுதிகள் லண்டனின் தங்கும் விடுதிகள் 2PL Network விக்கிடிராவல் லண்டன் பயண வழிகாட்டி The Londinium directory of London பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள் பகுப்பு:இங்கிலாந்தின் நகரங்கள்
வி. என். ஜானகி
https://ta.wikipedia.org/wiki/வி._என்._ஜானகி
வைக்கம் நாராயணி ஜானகி (நவம்பர் 30, 1923 – மே 19, 1996) (V. N. Janaki) அல்லது ஜானகி இராமச்சந்திரன் என்னும் வி. என். ஜானகி முன்னாள் திரைப்பட நடிகை , முன்னாள் தமிழ்நாடு முதல்வர் பிரபல நடிகரும் முன்னாள் தமிழக முதல்வருமாகிய ம. கோ. இராமச்சந்திரனுக்கு மூன்றாவது மனைவி ஆவார். பிறப்பு வைக்கம் நாராயணி ஜானகி கேரள மாநிலம் திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட வைக்கம் என்னும் ஊரில் வாழ்ந்த நாயர் குலத்தைச் சேர்ந்த நாணி என்னும் நாராயணம்மாவிற்கு 1924 செப்டம்பர் 23ஆம் நாள் பிறந்தார்.எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.4 இவருக்கு மணி, நாராயணன் என்னும் இரண்டு தம்பிகள் உள்ளனர். கும்பகோணம் வாழ்க்கை முன்னோர்களின் சூதாட்டம் கேளிக்கைகளால் சொத்தை இழந்து வறுமைக்கு ஆளானது ஜானகியின் குடும்பம். எனவே ஜானகி தனது 12ஆவது வயதில், 1936 ஆம் ஆண்டில், தன் தாயாருடன் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். அங்கிருந்த சிறுமலர் உயர்நிலைப் பள்ளியில் (Little Flower High School) சேர்ந்து பயின்றார். அங்கு அவருக்கு ஆசிரியராக இருந்தவர் கவிஞர் பாபநாசம் சிவனின் தம்பியான இராசகோபால ஐயர் ஆவார். சிறிது காலத்திற்குள்ளவாகவே ஜானகிக்கு அம்மாவான நாராயணியம்மாள் இந்த இராசகோபால ஐயருக்கு துணைவி ஆனார். 1936ஆம் ஆண்டில் வெளிவந்த மெட்ராஸ் மெயில் காண்டீபன்; சினிமா டைரி 1962; சுதர்ஸன் பப்ளிகேஷன்ஸ், மைலாப்பூர், சென்னை; பக்.30 திரைப்படத்தில் பாடல்கள் எழுத இராசகோபால ஐயருக்கு வாய்ப்புக் கிடைத்தது. எனவே அவர் தன் குடும்பத்தினருடன் சென்னைக்குக் குடியேறினார். அதனால் ஜானகியும் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். திரை வாழ்க்கை ஜானகி சென்னைக்கு வந்த பின்னர் திரைப்படங்களில் நடிக்க விரும்பினார். ஆனால் நாராயணி அம்மாளுக்கு அதில் விருப்பம் இல்லை. இருப்பினும் இராசகோபாலய்யரின் ஊக்குவிப்பால் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த படங்கள் பின்வருமாறு: வ.எண்ஆண்டுதிரைப்படம்வேடம்குறிப்பு 011937 இன்பசாகரன்நடன மாதுபடப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இப்படத்தின் படிகள் எரிந்து போயின. இதனால் இப்படம் வெளிவரவில்லை.021939மன்மத விஜயம் நடன மாது031940கிருஷ்ணன் தூதுநடன மாது041941கச்ச தேவயானிநடன மாது05 மும்மணிகள் நடன மாது061941 சாவித்திரிநடன மாது07 தெலுங்குப்படம் 1நடன மாது08 தெலுங்குப்படம் 2நடன மாது091942அனந்த சயனம்சிறு வேடம்101942கங்காவதார்சிறு வேடம்111943தேவ கன்யாசிறு வேடம்121944ராஜா பர்த்ருஹரிசிறு வேடம்131945மான சாம்ரட்சனம்சிறு வேடம்141946 பங்கஜவல்லிசிறு வேடம் 151946 சகடயோகம்கதைத் தலைவி161947 சித்ர பகாவலிசிறு வேடம்171947தியாகிசிறு வேடம்181947ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணிகதைத் தலைவி191948சந்திர லேகாஜிப்ஸி பெண்201948ராஜ முக்திகதைத் தலைவி இரண்டாவது கதைத் தலைவனாக நடித்த ம. கோ. இராமசந்திரனின் அறிமுகம் கிடைத்தது.211948மோகினி ம.கோ.இரா.வுடன் நடித்த இரண்டாவது படம்221949லைலா மஜ்னு 23 1949வேலைக்காரிகதைத் தலைவி 241950மருதநாட்டு இளவரசிகதைத் தலைவி ம. கோ. இரா. கதைத்தலைவன்251951தேவகி 26 1953நாம்கதைத் தலைவி ம. கோ. இரா. கதைத்தலைவன் நடனப் பள்ளியில் அனந்த சயனம் திரைப்படத்தை இயக்கிய கே. சுப்பிரமணியம் நடன கலா சேவா என்னும் நாட்டியக் குழுவை அமைத்திருந்தார். ஜானகி இக்குழுவில் 1942-ஆம் ஆண்டில் இணைந்தார். இக்குழுவில் கே. சுப்பிரமணியத்தின் மனைவியும் நடிகையுமான எஸ். டி. சுப்புலட்சுமிக்கு அடுத்த நிலையில் இருந்தார். அவரோடு இணைந்து இந்தியா முழுவதும் பயணம் செய்து இவர்கள் நாட்டிய நாடகங்களை நடத்தினர். வள்ளி திருமணம் நாடகத்தில் ஜான்கி முருகனாகவும் சுப்புலெட்சுமி வள்ளியாகவும் நடித்தனர்.எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.5 மணவாழ்க்கை முதல் திருமணம் ஜானகி திரையுலகில் நுழைந்த சில காலத்திற்குள் நடிகரும் ஒப்பனையாளருமான கண்பதிபட் என்னும் கன்னடமொழிக்காரருக்கு அறிமுகம் ஆனார். அவ்வறிமுகம் காதலாக மாறி, திருமணமாக முடிந்தது இவர்களுக்கு அப்பு என்கிற சுரேந்திரன் என்னும் ஆண்குழந்தை பிறந்தது. இரண்டாவது திருமணம் left|thumb|200px|1948 மோகினி திரைப்படத்தில் ம. கோ. இராமசந்திரனும் வி. என். ஜானகியும் தோன்றும் காட்சி ஜானகி இராஜ முக்தி படத்தில் கதைத் தலைவியாக நடித்தபொழுது, இரண்டாவது கதைத் தலைவனாக ம. கே. ரா. என்னும் ம. கோ. இராமசந்திரன் நடித்தார். ம. கோ. இரா.வுக்கு முதலாவது மனைவியான பார்கவி என்னும் தங்கமணியின் சாயலின் ஜானகி இருந்ததால், ம. கோ. இரா.வுக்கு இவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டது.http://cinema.maalaimalar.com/2009/11/10110341/mgr.html அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950-ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் ஜானகியும் ம. கோ. இரா.வும் காதலிக்கத் தொடங்கினர். அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகிக்கு முதற்கணவரான கண்பதிபட்டின் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரை தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம.கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.எம்.ஜி.ஆர்.; நான் ஏன் பிறந்தேன்; ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர் இத்திருமணத்தை ம. கோ. இரா.வுக்கு அண்ணனும் நடிகருமான ம. கோ. சக்ரபாணியும் குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உடல்நலமில்லாமல் இருந்ததால் அவரை இவர்கள் இருவரும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டனர். 12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் 1962 சூன் 14ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தை பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து கிளம்பி இராமாவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர். குழந்தைகள் ஜானகிக்கு அப்பு என்கிற சுரேந்திரனைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை. எனவே தன் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா, கீதா, சுதா. ஜானு, தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார். அரசியல் வாழ்க்கை முதலமைச்சர் ஜானகி தன் கணவர் ம. கோ. இரா. மும்முரமாக அரசியலில் ஈடுபட்டிருந்த காலங்களில் அதன் நிழல்கூட தன்மீது படாத அளவிற்கு விலகி இருந்தார். ம. கோ. இரா. 1984 ஆம் ஆண்டில் நோய்வாய்ப்பட்ட பின்னர் அவருக்குத் துணையாக அவரோடு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளத் தொடங்கினார். ம. கோ. இரா. 1987 திசம்பர் 24 ஆம் நாள் மரணமடைந்த பின்னர் 1988 சனவரி 7 தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சராகவும் ஆனார். ஆனால் சட்டமன்றத்தில் தனது தலைமை மீதான தனது கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை மெய்ப்பிக்க இயலாததால் 1988 சனவரி 30 ஆம் நாள் ஆட்சிப்பொறுப்பை இழந்தார். தேர்தலில் போட்டி ம. கோ. இரா.வின் மறைவிற்குப் பின்னர் அவரைப் பொதுச்செயலாளராக கொண்டு இயங்கிய அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தது.ஜானகி செயலலிதா இருவரும் 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்டிபட்டித் தொகுதியில் ஜானகி போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். அ. இ. அ. தி. மு. க. இரண்டு அணிகளாகப் பிரிந்து போட்டியிட்டதால் தமிழகத்தை ஆளும் வாய்ப்பை இழந்தது. எனவே அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பெருமுயற்சி செய்து ஜானகி,ஜெயலலிதா தலைமையிலான அணிகளை இணைத்தனர். ஜெயலலிதா கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார்.ஜானகி அரசியலில் இருந்து நிரந்தரமாக விலகினார். மறைவு ஜானகி அரசியலில் இருந்து விலகி ம.கோ.இரா.வின் இராமாவரம் தோட்டத்தில் தன் மகனோடும் வளர்ப்புப் பிள்ளைகளோடும் வாழ்ந்தார். ம.கோ.இரா உருவாக்கிய காதுகேளாதோர் பள்ளியின் நிர்வாகத்தினைக் கவனித்தபடி, தனது இறுதிக் காலத்தைக் கழித்த ஜானகி அம்மையார், 1996 ஆம் ஆண்டு, மே மாதம் 19-ஆம் தேதி, தனது 73-வது வயதில் காலமானார்.http://www.vikatan.com/news/coverstory/73844-vnjanaki-birthday-anniversary-special-article.html தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் வி.என். ஜானகி...பிறந்தநாள் சிறப்பு பகிர்வு! மேற்கோள்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்பு:தமிழ்ப் பெண் அரசியல்வாதிகள் பகுப்பு:தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் பகுப்பு:1924 பிறப்புகள் பகுப்பு:1996 இறப்புகள் பகுப்பு:இந்தியப் பெண் முதலமைச்சர்கள் பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்
ஜெயலலிதா
https://ta.wikipedia.org/wiki/ஜெயலலிதா
REDIRECT ஜெ. ஜெயலலிதா
நீராவி
https://ta.wikipedia.org/wiki/நீராவி
thumb|300px|A temperature-versus-entropy diagram for steamநீரைச் சூடாக்கும் போது அது நீர்ம நிலையில் இருந்து வளிம நிலைக்கு மாறுகின்றது. இந்த வளிம நிலையில் உள்ள நீரே நீராவி எனப்படும். இவ்வாறு நீர்ம நிலையில் இருந்து வளிம நிலைக்கு மாறுதல் ஆவியாக்கம் என்று குறிக்கப்படும். நீர் எல்லா வெப்பநிலையிலும் ஆவியாகலாம். அறை வெப்பநிலை மற்றும் சூழல் வெப்பநிலையில் வளிமண்டலம் நீராவியைக் கொண்டிருப்பது இதற்குச் சான்றாகும். ஆயினும் அதன் கொதிநிலையான 100 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் கொதிநீராவி பெறப்படும். தெவிட்டிய நீராவி தெவிட்டிய நீராவி என்பது நீர்ம நிலையில் இருக்கும் நீரினோடு சமன்பட்ட நிலையில் இருக்கும் நீராவி ஆகும். ஈரம் கொண்ட நீராவிக்கும் மிகைவெப்ப நீராவிக்கும் இடைப்பட்ட எல்லையைக் குறிப்பதாகவும் தெவிட்டிய நீராவி அமைகிறது. மிகைவெப்ப நீராவி நிலவும் அழுத்தத்தில், கொதிநிலைக்கும் அதிகமான வெப்பநிலையைக் கொண்டிருக்கும் நீராவி மிகைவெப்ப நீராவி எனப்படும். மிகைவெப்ப நீராவி உருவாவதற்கு எல்லா நீரும் ஆவியாகியிருக்க வேண்டும். நீர் இருப்பின் மிகைவெப்ப நீராவி உருவாகாது. பகுப்பு:நீராவி ஆற்றல் பகுப்பு:நீரின் வடிவங்கள் பகுப்பு:வளிமங்கள்
வால்மீகி
https://ta.wikipedia.org/wiki/வால்மீகி
வால்மீகி அல்லது வால்மீகி முனிவர் என்பவர் இந்தியாவின் பழம்பெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். இவர் ஒரு வடயிந்தியர் ஆவார். இவர் இராமாயணத்தை வட மொழியில் எழுதினார். இவர் இயற்றிய இராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. வால்மீகி ஆசிரமம் உத்திரப் பிரதேசம் மாநிலம் கான்பூர் நகரத்தின் அருகில் கங்கை ஆறு பாயும் பித்தூரில் வால்மீகி ஆசிரமம் அமைந்துள்ளது. இங்குள்ள வால்மீகி ஆசிரமத்தில் தான் சீதைக்கு இலவன், குசன் எனும் இரட்டையர்கள் பிறந்தனர். வரலாறு வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர். ஒருமுறை நாரதரைக் கொள்ளையிட முயன்றபோது, நாரதரின் வேண்டுகோள்படி நாரதரைக் கட்டிவைத்து விட்டு, வீடு சென்று, யாருக்காக தாம் கொள்ளைத் தொழிலை மேற்கொண்டாரோ அந்த உறவினரிடமெல்லாம், தனது தொழிலால் தனக்கு சேரும் பாவங்களிலும் அவர்கள் பங்கு கொள்வரா என வினவ, அவர்களது மறுப்புரையைக் கேட்டு, "இதுதான் உலகம், யாருக்காகக் கொள்ளை அடித்தேனோ அந்த நெருங்கிய உறவினர்கள் கூட என் விதியில் பங்கேற்கப்போவதில்லை" என்று உணர்ந்து முனிவரிடம் சரண் புகுந்து, அவரது வார்த்தைப் படி இறைவழிபாட்டில் ஈடுபட்டார்.எழுந்திரு! விழித்திரு!; பக்கம் 128-131 எல்லாவற்றையும் துறந்து தியானம் செய்த இளைஞன் நாளடைவில் தன்னைச் சுற்றிலும் கறையான் புற்று கட்டியதும் அறியாமல் பல ஆண்டுகள் தன்னை மறந்த தியானத்தில் ஆழ்ந்தான். கடைசியில் "ஓ முனிவனே எழுந்திரு!" என்ற குரல் அவனை எழுப்பியது. அவனோ, "நான் முனிவனல்ல, கொள்ளைக்காரன்!” என்று திகைத்து பதில் கூற, "இனி நீ கொள்ளைக்காரனும் அல்ல, உனது பழைய பெயரும் மறைந்து விட்டது. வால்மீகி - கறையான் புற்றிலிருந்து தோன்றியவர் என்று வழங்கப்படுவாய்" என்று அக்குரல் கூறியது. திருவான்மியூர் சென்னையின் முக்கியப் பகுதியான திருவான்மியூர், இவரது பெயரில் வழங்கப்படுவதே. திருவான்மீகியூர் என்று இருந்து பின் மருவி திருவான்மியூர் என்று வழங்கப்படலானது. மேலும் இங்கு வான்மீகி முனிவருக்குத் தனிக்கோயிலும் அமைந்துள்ளது. விமர்சனம் இவர் இயற்றிய இராமாயணம் கதையும், அதன் பாத்திரங்களை உண்மையென மக்கள் நம்பும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. அதேவேளை இராமாயணம் நூல் இதிகாசமே என்றாலும், அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் புவியியல் அமைவுகள், விவரிக்கப்பட்டிருக்கும் ஆட்சி முறைமைகள், அரசுகள் போன்றவற்றை ஆய்வுநோக்கில் பார்க்கும் போது, வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைக்க முடியாது என வாதிடுவோரும் உள்ளனர். இது கி.மு 4ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டுள்ளதால், அந்தகாலத் தன்மைகளுக்கு அமைவாக, மந்திரம், மாயை உடன் இதிகாசச் சாயலுடன் எழுதப்பட்ட ஒரு வரலாறாகவும் இருக்கலாம் என கருதுவோரும் உளர். மேற்கோள்கள் பகுப்பு:புலவர்கள் பகுப்பு:சித்தர்கள் பகுப்பு:இராமாயணக் கதைமாந்தர்கள் பகுப்பு:முனிவர்கள்
கம்பன்
https://ta.wikipedia.org/wiki/கம்பன்
REDIRECT கம்பர்
இளங்கோவடிகள்
https://ta.wikipedia.org/wiki/இளங்கோவடிகள்
thumb|150px|இளங்கோவடிகளின் சிலை, பூம்புகார் thumb|left|150px|இளங்கோவடிகள் சிலை, காரைக்குடி. இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள், தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு என்பர்.இவர் சேர மரபைச் சார்ந்தவரென சிலப்பதிகார பதிகம் கூறுகிறது. நூல்வெளி ஆறாம் 27 இவர் சமண சமயத்தைத் தழுவியவராக இருந்தும், தாம் இயற்றிய நூலில் வைணவத் திருமாலையும்,மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற, படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே? ‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே? (சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை) சைவக் கொற்றவையையும் அமரி, குமரி, கவுரி, சமரி, சூலி, நீலி, மால்-அவற்கு இளங்கிளை; ஐயை, செய்யவள், வெய்ய வாள் தடக்கைப் பாய் கலைப் பாவை; பைந் தொடிப் பாவை; ஆய் கலைப் பாவை; அருங்கலப் பாவை; (சிலப்பதிகாரம், வேட்டுவ வரி) போற்றும் பகுதிகள் அந்தந்த சமயத்தவரால் பெரிதும் போற்றப்படுகின்றன. கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத் திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப் பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக் கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும் பந்துங் கழங்குந் தந்தனர் பரசி வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் மேவிய விரையும் ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும் கோடும் குழலும் பீடுகெழு மணியும் கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக் கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் இத்தகைய இரத்தபலி பூசை ஏற்கும் கொற்றவை எங்கனம் சைவ சமய தெய்வமாகும் மேற்கோள்கள் பகுப்பு:சமணத் துறை அறிஞர்கள் பகுப்பு:தமிழ்ப் புலவர்கள் பகுப்பு:தமிழ் மெய்யியலாளர்கள்
திருநாவுக்கரசு நாயனார்
https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசு_நாயனார்
thumb|அப்பர் சுவாமிகள் கட்டமுதுத் திருமண்டபம் thumb|right|திருஞானசம்பந்தரை பல்லக்கில் சுமக்கும் அப்பர் thumb|அப்பர் சுவாமிகள் thumb|அப்பர் சிலை அப்பர் திருநாவுக்கரசு நாயனார் பொ.ஊ. ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவரைத் தேவார மூவருள் இரண்டாமவர் என்றும், இறைவனிடம் பக்தி செலுத்துதலில், தொண்டை அடிப்படையாகக் கொண்டவர் என்றும் புகழ்கின்றனர். இவர் தமிழகத்தில் முதன்முதலாகச் சிவன் கோயில்களில் உழவாரப் பணியை அறிமுகப்படுத்தியவர் ஆவார். இவரைத் திருஞானசம்பந்தர், 'அப்பர்' (தந்தை) என்று அழைத்தமையால் அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். இவர் தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால், இவரைத் தாண்டகவேந்தர் என்றும் அழைக்கின்றனர். பெயர்கள் நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர். இயற்பெயர், மதம் மாறியமையால் பெற்றமை, செயல்களாலும், கவியாலும் பெற்றவை எனப் பல பெயர்கள் இவருக்கு உள்ளன. மருணீக்கியார் - இயற்பெயர் தருமசேனர் - சமண சமயத்தைத் தழுவிய போது கொண்ட பெயர் நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களைப் பாடியமையால் பெற்ற பெயர் அப்பர் - திருஞானசம்பந்தர் அன்போடு அழைத்தமையால் வந்த பெயர் உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியைச் செய்தமையால் பெற்ற பட்டப்பெயர் தாண்டகவேந்தர் - தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் பெற்ற பட்டப்பெயர் இளமைக் காலம் திருநாவுக்கரசர் சோழநாட்டின் திருமுனைப்பாடி பகுதியிலிருந்த கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவாமூர் எனும் ஊரில் குருவலுடையான் கோத்திரத்தில் ஆறுநாட்டு வெள்ளாளர் குலத்தில் புகழனார்பிள்ளை மற்றும் மாதினிஅம்மாள் இணையாருக்குப் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் மருணீக்கியார் ஆகும். இளமையில் சைவ சமயத்தினை விட்டு சமண சமயத்தவரானார். சமண நூல்களைக் கற்று அம்மதத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். அப்போது தருமசேனர் என்று அழைக்கப்பட்டார். தருமசேனரின் தமக்கையார் திலகவதியார். இவர் சிவபக்தராக இருந்தார். அதனால் சமண சமயத்தில் தன்னுடைய தம்பி இணைந்ததை எண்ணி வருந்தி இறைவனிடம் முறையிட்டார். அதனால் தருமசேனருக்குக் கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) ஏற்பட்டது. சமண மடத்தில் செய்யப்பட்ட சிகிச்சைகள் பலனளிக்காமல் போகவும், திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் "கூற்றாயினவாறு விலக்ககலீர்" எனத் தொடங்கும் பாடலைப் பாடினார். இப்பாடலால் நோய் தீர்ந்தது. அதன் பிறகு சைவ சமயத்தவராகி நாவுக்கரசர் என்று அழைக்கப்பட்டார். பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடினார். அத்துடன் சிவாலயங்களைத் தூய்மை செய்யும் பணியையும் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணி செய்து முன்னோடியாக இருந்தமையால், "உழவாரத் தொண்டர்" என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனை தொண்டு வழியில் வழிபட்டமை குறிப்பிடத் தக்கதாகும். சமண சமயத்தைச் சேர்ந்த மன்னன் மகேந்திர பல்லவன் திருநாவுக்கரசரைப் பலவிதங்களில் துன்புறுத்தினான். அத்துன்பங்களைத் திருநாவுக்கரசர் இறைவன் அருளால் வென்றார். இத்தகைய துன்பங்கள் இழைக்கப்பட்டும், இறைவன் அருளால் மீண்டதைக் "கற்றுணைப் பூட்டியோர் கடலினுள் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே" எனும் நமச்சிவாயப் பதிகத்தில் பதிவு செய்துள்ளார். இறுதியில் மகேந்திர பல்லவனும் சைவ சமயத்தைத் தழுவினான். தனது முதிர்ந்த வயதில் சிறுவராயிருந்த திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாருடன் சேர்ந்து தல யாத்திரைகள் செய்தார். மேலும் திருஞானசம்பந்தரால் அப்பர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் பாடிய தேவாரப் பாடல்கள் 4, 5, 6 ஆகிய மூன்று திருமுறைகளில் வகுக்கப்பட்டுள்ளன. சமயத் தொண்டு புரிந்த திருநாவுக்கரசர் 81ஆவது வயதில் திருப்புகலூரில் சித்திரைச் சதயத்தில் இறைவனடி கலந்தார். கரக்கோயில் அவர் பாடிய தலங்களில் முக்கியமான தலம் மேலக்கடம்பூர், அமிர்தகடேஸ்வரர் கோயில் ஆகும். இங்கு அவர் என் கடன் பணி செய்துகிடப்பதே என்னும் வரிகளைப் பாடி அருளினார். மேலும் அவர் கரக்கோயில் என இத்தலத்தினை பாடியுள்ளார். ஒன்பது வகைக் கோயில்களில் கரக்கோயில் எனப் போற்றப்படும் ஒரே தலம் மேலக்கடம்பூர் ஆகும். அற்புதங்கள் சமணர்களாலே, 7 நாட்கள் சுண்ணாம்பு அறையில் அடைத்து வைத்திருந்தும், வேகாது உயிர் பிழைத்தார். சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற்சோற்றை உண்டும், சாகாது உயிர் பிழைத்தார். சமணர்கள் விடுத்த கொலை யானை வலம் வந்து வணங்கிச் சென்றது. சமணர்கள் கல்லிற் சேர்த்துக்கட்டிக் கடலில் விடவும், அக்கல்லே தோணியாகக் கரையேறியது. சிவபெருமானிடத்தே படிக்காசு பெற்றது. வேதாரணியத்திலே திருக்கதவு திறக்கப் பாடியது. விடத்தினால் இறந்த மூத்த திருநாவுக்கரசை உயிர்ப்பித்தது. காசிக்கு அப்பால் உள்ள ஒரு தடாகத்தினுள்ளே (மானசரோவர்) மூழ்கி, திருவையாற்றிலே ஒரு வாவியின் மேலே தோன்றிக் கயிலை காட்சி பெற்றது. திருவங்க மாலை திருப்பதிகம் திருநாவுக்கரசர், 49,000 தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். இவற்றில் சில பதிகங்கள், தாள அமைப்பினைச் சேர்ந்ததாகக் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தாள அமைப்புடன் பாடப்பட்டவற்றைப் பண்ணாங்கப் பாடல்கள் என்றும், தாள அமைப்பு இல்லாத பாடல்கள் சுத்தாங்கப் பாடல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. திருத்தாண்டகம், திருவிருத்தம், திருக்குறுந்தொகை ஆகியவை அப்பர் பாடிய சுத்தாங்கப் பதிகங்கள். அப்பரின் பாடல்கள் தமிழ்ச் சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை. உதாரணத்திற்கு, "மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே" ("Mācil vīṇaiyum mālai matiyamum vīcu těņṛalum vīŋkiḷa vēņilum mūcu vaṇţaṛai pǒykaiyum pōņṛatē īcaņ ěntai iṇaiyaţi nīļalē") ''ஈசனுடைய அடிகளில் சரணடைந்தால், மர நிழல் தரும் குளுமை போன்று இருக்கும்" என்று கூறிய அப்பர் அடிகள், "அந்த நிழலானது குற்றமற்ற வீணை இசை போன்றது; இளம் மாலையில் தோன்றிய நிலவின் குளுமையை ஒத்தது; வீசுகின்ற தென்றல் போன்றது; இளவேனிற் காலத்தின் உயிர்ப்பைக் கொண்டது; தாமரை மலர்களைச் சுற்றும் வண்டுகளைக் கொண்ட குளம் போன்றது" என்கிறார். அவர் உதாரணமாகக் கூறிய "அனைத்தும் மனதுக்கு இனிமை சேர்ப்பவை. அனைத்து இனிமைகளையும் ஒரு சேர அளிப்பது இறைவனது பாத நிழலே" என்கிறார் அப்பர்! திருவதிகை வீரட்டானம் முதற்பதிகப்பாடல்: கூற்றாயின வாறு விலக்ககலீர் கொடுமை பலசெய்தனநான் அறியேன் ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டா னத்துறை யம்பானே. இசை ஞானம் திருநாவுக்கரசர், இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். நான்காவது திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசின் இசைத்திறன் வெளிப்படுகிறது. இவருடைய பாடல்களில், கீழ்க்காணும் பத்து பண்கள் காணப்படுகின்றன. கொல்லி காந்தாரம் பியந்தைக்காந்தாரம் சாதாரி காந்தார பஞ்சமம் பழந்தக்கராகம் பழம் பஞ்சுரம் இந்தளம் சீகாமரம் குறிஞ்சி குரு பூசை திருநாவுக்கரசரின் குருபூசையானது, சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. திருநாவுக்கரசர் நாயனாரின் குருபூஜை ஆண்டுதோறும் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டாரத்தில் உள்ள கரகத்திக்கோட்டை கிராமத்தில் பால்குடம் காவடி எடுப்பது மற்றும் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகிறது. இவற்றையும் பார்க்கவும் உழவாரப் பணி அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் மாணிக்கவாசக நாயனார் தேவாரம் திருவாசகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தரம் 10 சைவநெறி ஆசிரியர் கையேடு இலங்கை திருநாவுக்கரசர் வரலாறு பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள் பகுப்பு:நாயன்மார்கள்
சுந்தரமூர்த்தி நாயனார்
https://ta.wikipedia.org/wiki/சுந்தரமூர்த்தி_நாயனார்
சுந்தரமூர்த்தி நாயனார் அல்லது சுந்தரர் (Sundarar) என்பவர் சைவசமயத்தில் போற்றப்படும் சமயக்குரவர் நால்வரில் ஒருவரும், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார். இவர் புத்தூரில் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்துகொள்ள இருந்தபோது, சிவபெருமான் கிழவனாகச் சென்று தடுத்தார். பின்பு, சுந்தரரின் பிறவி நோக்கம், 'சிவபெருமானைப் புகழ்ந்து பாடுவது' எனப் புரிய வைத்தார். இதனைத் தடுத்தாட்கொள்ளுதல் எனச் சைவர்கள் கூறுகிறார்கள். இவர், இறைவன் மீது, பல தலங்களுக்குச் சென்று பாடியுள்ளார். இப்பாடல்களைத் 'திருப்பாட்டு' என்று அழைக்கின்றனர். திருப்பாட்டினைச் 'சுந்தரர் தேவாரம்' என்றும் அழைப்பர். திருமணத்தினைத் தடுத்து, சுந்தரரை அழைத்துவந்த சிவபெருமானே, பரவையார், சங்கிலியார் என்ற பெண்களைத் திருமணம் செய்துவைத்தார். இவர் வாழ்ந்தது பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டளவிலாகும்.http://temple.dinamalar.com/news_detail.php?id=5683 இவர் பாடிய தேவாரங்கள், 7-ஆம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகை என்னும் நூலில், 60 சிவனடியார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் பற்றியும் குறிப்புகள் உள்ளன. இந்நூலின் துணை கொண்டே, சேக்கிழார், பெரியபுராணம் எனும் நூலை இயற்றினார். அதில் சுந்தரமூர்த்தி நாயனாரையும், அவரது பெற்றோரான சடையனார், இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து, சிவதொண்டர்களின் எண்ணிக்கையை 63 எனக் கையாண்டார். குறிப்பு: இவரை திருமுனைப்பாடி நாட்டை ஆண்டநரசிங்கமுனையர் என்ற மன்னனால் தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர். இவர் 38000 பதிகங்கள்பாடியதாககூறப்படிகிறது. ஆனால் கிடைத்தவை100 மட்டுமே. “வித்தகம் பேச வேண்டா விரைந்து பணி செய்ய வேண்டும்” என்று இறைவன் இவரிடம் கூறினார். சுந்தரர் தேவாரம் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களைச் 'சுந்தரர் தேவாரம்' என்று அழைக்கின்றனர். இப்பாடல்களைத் 'திருப்பாட்டு' என்றும் அழைப்பது வழக்கம். இப்பாடல்களைப் பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள். இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38,000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால், பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன. தேவாரங்களில், 'செந்துருத்திப் பண்' கொண்டு பாடல் பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை. சுந்தரர் அருளிய திருப்பதிகங்களைத் ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம்; அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்; சைவ நூல் அறக்கட்டளை,சென்னை சுந்தரர் வரலாறு சுந்தரமூர்த்தி நாயானார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார். சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். தடுத்தாட்கொள்ளல் மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்குப் புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஓர் ஓலையைக் காட்டி, சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், "பித்தா பிறை சூடி".. என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார். பாடல்களின் மூலமாக இறைவனைத் தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். சிவத் தலங்கள் தோறும் சென்று, தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். "நீள நினைந்தடியேன்".. எனத் தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான்பெற்ற நெல்லைத் தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம். திருமணங்கள் திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார். அவர் பதியிலார் குலத்தினைச் சேர்ந்தவர். சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு, காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு, 'ஞாயிறு' என்ற ஊரில் வேளாளர் ஒருவரின் மகளான 'சங்கிலியார்' எனும் அழகிய பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். சுந்தரரின் நண்பனான சிவபெருமான் அவருக்காகத் தூது சென்று, திருமணத்தினை நடத்திவைத்தார். சிவபெருமான் செயல் அரசரான சேரமான் பெருமாள், இவருக்கு நண்பராயிருந்தார். இறைவனும், இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை. சேரமான் பெருமானை இவர் சந்தித்துத் திரும்பும் போது, அம்மன்னர் பொன், பொருள், மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத் தொடங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான், சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை, இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. முக்தி சுந்தரர் தனது 18-ஆவது வயதில் சிவனடி சேர அடைந்திட, பதிகம் பாடினார். சிவபெருமான் வெள்ளை யானையைச் சுந்தருக்கு அனுப்ப, அதில் ஏறி கைலாயம் சென்றார். அங்கிருந்த சிவனும் பார்வதியும் வரவேற்று முக்தியளித்தனர். அற்புதங்கள் thumb|முதலையுண்ட பாலகனைச் சுந்தரர் பதிகம் பாடி மீட்டல். கோவை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள மரச் சிற்பம் செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது. காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது. அவிநாசியில் முதலை விழுங்கிய பிராமணக் குழந்தையை அம்முதலையின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது. வெள்ளை யானையில் ஏறி, திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது. குருபூஜை சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒவ்வோர் ஆண்டும், ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், குருபூசை சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது.http://temple.dinamalar.com/news_detail.php?id=1363 இவற்றையும் பார்க்கவும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருநாவுக்கரசு நாயனார் மாணிக்கவாசகர் அறுபத்து மூன்று நாயன்மார்கள் தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் சுந்தரமூர்த்தி நாயனார் (1937 திரைப்படம்) சுந்தரமூர்த்தி நாயனார் (1967 திரைப்படம்) உசாத்துணைகள் தரம் 10 சைவநெறி ஆசிரியர் கையேடு இலங்கை National Institute of Education மேற்கோள்கள் பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள் பகுப்பு:ஆதிசைவர்கள் பகுப்பு:நாயன்மார்கள்
மாணிக்கவாசகர்
https://ta.wikipedia.org/wiki/மாணிக்கவாசகர்
மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன: திருவாசகமும் திருக்கோவையாருமாகும். இவர் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியன் காலத்தைச் சேர்ந்தவர். இவர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார். மாணிக்கவாசகர், சிறந்த சிவ பக்தரான இரண்டாம் வரகுணன் (பொ.ஊ. 863–911) காலத்தில் வாழ்ந்தவர்.http://www.thevaaram.org/thirumurai_1/ani/03naalvar3.htm இவர் பாடிய பாடல்கள் "திருவாசகம்" என அழைக்கப்படுகின்றன. பக்திச் சுவையும் மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றது. தமிழ் கற்ற மாணவரான ஜி. யு. போப் இதற்குத் தக்க சான்றாவார். "சிறை பெறா நீர் போல் சிந்தை வாய்ப் பாயும் திருப்பெருந்துறையுறை சிவனே" (பா.392) என்பதாலும், "இமைப் பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க." எனும் அடிகளால் தமிழின் அருட் திறத்தையும் வாதவூரரிற்கும் இறைவனுக்குமான நெருக்கத்தையும் உணரலாம். "நரியைக் குதிரைசெய்" எனும் திருநாவுக்கரசர் பாடல் மூலம் இவர் காலத்தால் அப்பருக்கு முந்தியவர் எனக் கருதப்படுகிறது. ஞான நெறியைப் பின்பற்றிய இவர் 32 ஆண்டுகளே வாழ்ந்து ஆனி மகத்தில் சிதம்பரத்தில் சாயுச்சிய முக்தியடைந்தார் (சிவனடி சேர்ந்தார்). இவருக்கு அருள்வாசகர், மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள், மணிமொழியார், தென்னவன் பிரமராயன் என்ற பெயர்களும் உண்டு. வரலாறு தல புராணத்திலிருந்து திரட்டிய தகவல்களாக அபிதான சிந்தாமணி கூறுவது: "திருவாதவூரார் பாண்டிய நாட்டில் சம்புபாத சரிதருக்கும், சிவஞானவதிக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கல்வி கேள்விகளில் சிறந்து, மன்னன் அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராகப் பதவி அமர்ந்தார். அரிமர்த்தன பாண்டியன் மதுரையை இருப்பிடமாகக் கொண்டு ஆண்டுவந்தான். தன் புலமையால் "தென்னவன் பிரமராயன்" எனும் பட்டத்தையும் பெற்றார். உயர்ந்த பதவி, செல்வம், செல்வாக்கு எல்லாம் இருந்தபோதும் இவை வாழ்வின் இறுதி நோக்கமல்ல என்பதை உணர்ந்த திருவாதவூரார் சைவசித்தாந்தத்தை ஆராய்ந்து சிவ வழிபாடு மேற்கொண்டு ஒழுகி வரலானார். நரியைப் பரியாக்கியது ஒருமுறை மன்னனுக்குச் சோழநாட்டில் நல்ல குதிரைகள் வந்திருக்கின்றன என்று கேள்விப்பட்டு, அமைச்சர் மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து, அந்தக் குதிரைகளை வாங்கி வரும்படி பாண்டிய மன்னன் பணித்தான். மாணிக்கவாசகர், பொன்னோடு திருப்பெருந்துறையை (அறந்தாங்கி அருகே இருக்கும் ஆவுடையார் கோவில்) அடைந்தார். அங்கே, இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானே குருவடிவு எடுத்து அமர்ந்திருந்தார். அவர்முன் சென்று மாணிக்கவாசகர் பணிந்தார். குருவின் திருக்கரத்தில் இருப்பது என்னவென்று மாணிக்கவாசகர் கேட்க, அவர் சிவஞான போதம் என்றார்.(இது மெய்கண்டார் எழுதிய "சிவஞான போதம் அன்று) 'சிவம் என்பதும், ஞானம் என்பதும், போதம் என்பதும் யாது? அடியேனுக்கு இவற்றைப் போதித்தால் நான் உமது அடிமையாவேன்' என்றார் பக்குவமடைந்திருந்த மாணிக்கவாசகர். சிவஞானத்தை அவருக்குப் போதித்துத் திருவடி தீட்சையும் கொடுத்தார் குருமூர்த்தி வடிவத்தில் வந்த சிவபிரான். தன் மந்திரி கோலத்தை அகற்றிக் கோவணம் பூண்டு, வாய்பொத்திக் குருவின் முன் வாய்பொத்தி நின்ற மாணிக்கவாசகரை, அவருடன் வந்த அரசனின் சிப்பந்திகள் அழைத்தனர். உடன் செல்ல மறுத்துவிட்டார் மாணிக்கவாசகர். பாண்டியன் ஒற்றர்களிடம் திருமுகம் (அரசனின் ஆணை தாங்கிய ஓலை) கொடுத்துக் கையோடு மாணிக்கவாசகர் அழைத்துவரக் கட்டளையிட்டான். 'குருமூர்த்தியின் திருமுகம் கண்ட கண்ணால் வேறொரு திருமுகம் காண்பதில்லை' என்று கூறி மாணிக்கவாசகர் அதனைக் குருவிடமே கொடுத்துவிட்டார். அதைப் படித்த குருமூர்த்தி, ஒரு மாணிக்கக் கல்லை ஒற்றர் கையில் கொடுத்துக் 'குதிரைகள் வர நல்ல நாளில்லை. ஆவணிமாத மூல நட்சத்திர நாளன்று மதுரைக்குக் குதிரைகள் வந்து சேருமென்று போய்ச் சொல்' என்று அரசனிடம் திருப்பி அனுப்பினார். சொன்ன நாளும் அருகில் வந்துகொண்டிருந்தது. ஆனால் குதிரைகள் வருவதாகக் காணோம். மன்னனுக்குக் கோபம் வந்தது. மீண்டும் ஒற்றர்களிடம் குதிரைகள் இருக்குமிடத்தை அறிந்துகொண்டு வரச்சொல்லி அனுப்பினான். அவர்கள் 'எங்குமே குதிரைகள் தென்படவில்லை' என்ற செய்தியோடு திரும்பினர். ஆவணி மூலமும் வந்தது. குதிரைகள் வரவில்லை. 'இன்றைக்குள் குதிரைகள் வராவிட்டால் உம்மை வெயிலில் நிறுத்துவேன்' என்று கூறிப் பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை எரிக்கும் வெயிலில் நிறுத்தினான். அதற்கும் மாணிக்கவாசகர் அசையவில்லை. இரும்புக் கிட்டியால் (iron clamps) இறுக்கினர். மாணிக்கவாசகர் சிவனைத் தஞ்சம் அடைந்தார். உடனே சிவபெருமானின் சிவகணங்களைக் குதிரை வீரர்களாகவும், நரிகளைக் குதிரைகளாகவும் மாற்றி மதுரைக்கு அனுப்பி, தாமே அதற்குத் தலைவராக நடத்தி வந்தார். இதனாலே, இறைவனுக்குப் பரிமேலழகர் எனும் கரணியப் பெயர் ஏற்பட்டது. ஏராளமான உயர் ரகக் குதிரைகள் மதுரையை நோக்கி வரும் செய்தியை ஒற்றர்கள் மன்னனுக்குச் சொல்லவே அவன் மகிழ்ந்து அமைச்சரைப் போற்றினான். குதிரை அணிவகுப்புத் தலைவன் அரசனிடம் குதிரைகளை முன்னும் பின்னும் நடத்தி, அவற்றின் உறுப்புச் சிறப்பைக் கூறி, 'இவை உன்னுடையவை' என்று கூறி ஒப்படைத்தான். விலைகூடிய பீதாம்பரம் ஒன்றை அரசன் அவனுக்குப் பரிசாக அளித்தான். அவனோ அதைத் தன் சவுக்கினால் வாங்கிக் குதிரையின் மேல் போட்டுவிட்டு விடைபெற்றான். அன்றிரவே குதிரைகள் மீண்டும் நரியாக மாறி, முதலில் அந்தக் கொட்டடியில் இருந்த குதிரைகளையும் கடித்துவிட்டு ஓடின. இதை அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மிகவும் கோபம் கொண்டான். கொடுத்த பொன்னையெல்லாம் திருப்பித் தரும்வரை திருவாதவூராரை வைகையாற்று சுடுமணலில் நிறுத்தி வைக்குமாறு கூறினான். வைகை வெள்ளமும் வந்தியும் சிவபெருமானுக்கு அடியவரின் துன்பம் பொறுக்கவில்லை. கங்கையை வைகையில் பெருக்கெடுக்கச் செய்கிறார்.கரையை உடைத்துக்கொண்டு ஆறு பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டது. உடனே பாண்டியன் வீட்டுக்கு ஓர் இளைஞன் வந்து கரையை அடைக்கவேண்டும் என்று முரசு அறைவிக்கிறான். வந்திக் கிழவி எனும் ஒரே ஒருத்தி மட்டும் வீட்டிலும் யாருமில்லாமலும், ஏவலாளரும் இல்லாமல் யோசித்துக் கொண்டிருக்கையில் சிவபெருமானே ஓர் இளைஞன் வடிவில் வந்தியிடம் வந்து வேலை செய்யட்டுமா ? என்று கேட்கிறார். "செய், ஆனால் நான் கூலியாக உதிர்ந்த பிட்டு மட்டுமே தருவேன்" என்று வந்தி கூறுகிறாள். அதற்கு உடன்பட்ட சிவபெருமான் தனது 'வேலையைத்' தொடங்குகிறார். அன்றைக்குப் பார்த்து வந்திக்கு எல்லாப் பிட்டும் உதிர்ந்து போகிறது. இளைஞன் மூக்கு முட்டச் சாப்பிட்டுவிட்டு, மரநிழலில் துண்டை விரித்துத் தூங்குகிறான். மன்னன் வந்து பார்க்கிறான். கரையில் மற்றவர் பங்குகள் அடைபட்டிருக்கின்றன. வந்தியின் பகுதி உடைந்தே கிடக்கிறது. கோபம் கொண்ட அரசன் கூலியாளைப் பிரம்பால் அடித்தான். கூலியாளோ ஒரு கூடை மண்ணை உடைப்பில் கொட்ட, அது மாயமாகச் சரியாகிவிட்டது. அவன் மறைந்து போனான். ஆனால் அவன் மீது பட்ட பிரம்படி உலகெல்லாம் உள்ள அனைத்து உயிர்களின் மேலும், கருவில் இருந்த குழந்தை மீதும், படவே பாண்டியன் கலங்கிப் போனான். அப்போது சிவபிரானின் குரல் அசரீரியாய்க் கேட்டது, 'மன்னவா! வாதவூராரின் பொருட்டு இத்திருவிளையாடலை நாம் செய்தோம். இதனை அறியாது நீ கோபம் கொண்டாய்' என்று அக்குரல் சொல்லிற்று. மன்னன் மீண்டும் வாதவூரடிகளைத் தனக்கு மந்திரியாக இருக்க வேண்டினான். அவருக்கு அந்த ஆசை சிறிதும் இல்லாமையால், சிவத்தலங்களுக்குச் சென்று பாடித் துதித்துப் பின் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். இறைவன் எழுதியவை சிதம்பரத்திலும் சிவபிரான் மாணிக்கவாசகர் முன்னர் ஒரு வேதியர் போல வந்தார். அவரை வரவேற்று வணங்கி 'தாங்கள் யாரோ?' என்று வாதவூரார் கேட்டார். 'நான் பாண்டி நாட்டைச் சேர்ந்தவன். உமது புகழைக் கேட்டு நீர் பாடிய பதிகங்களை ஓத வந்தேன்' என்று அந்தணர் கூறினார். 'நான் சொல்கிறேன், நீர் அவற்றை எழுதும்' என்று கூறினார் திருவாதவூரார். அதற்கு ஒப்புக்கொண்ட அந்தணர் பலப்பல செய்யுட்களை எழுதி முடித்தார். இறுதியில் திருச்சிற்றம்பலமுடையார் மீது ஒரு கோவைப் பிரபந்தம் பாடவேண்டும் என்று வேண்டினார். வாதவூரடிகளும் பாடி முடித்தார். முடித்ததும், ஓலைச்சுவடியின் முடிவில் 'மாணிக்கவாசகன் சொற்படி அம்பலவாணன்' என்று கையொப்பமிட்டுத் திருமுறையைக் கோவிலின் திருவாயிற்படியில் வைத்து மறைந்தார். அதைப் பார்த்த ஒருவர் அவ்வேடுகளை எடுத்துப் பார்க்க, அது திருவாசகமும் திருக்கோவையும் கொண்ட சுவடியாய் இருந்தது. மிகவும் மனம் மகிழ்ந்த அவர் தில்லை மூவாயிரவரைக் கூட்டிப் பூசைகள் செய்தார். மூவாயிரவர் நடந்த நிகழ்ச்சிகளின் பொருள் என்ன என்று வாதவூராரைக் கேட்டனர். அவர்கள் அனைவரையும் திருச்சிற்றம்பலத்துக்கு அழைத்துச் சென்ற வாதவூரார் பொருள் இதுவே என்று கூறித் தில்லையம்பலத்தைக் காட்டி மறைந்தார். திருவாசகம் இவரின் படைப்புகள் - திருவாசகம்,திருக்கோவையார் வாழ்ந்த காலகட்டம் மாணிக்கவாசகர் வாழ்ந்த காலகட்டம் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டு என்றும் பொ.ஊ. 13 அல்லது 14-ஆம் நூற்றாண்டு காலகட்டம் என்றும் இருவேறு கருத்துகள் உள்ளன.http://www.tamilvu.org/library/l4180/html/l4180an1.htm சுந்தரருக்குப் பிற்பட்ட காலத்தவர் மாணிக்கவாசகர் என்பது ஆய்வாளர்கள் கருத்து. எனினும் மாணிக்கவாசகர் தேவார மூவருக்கும் முற்பட்டவர் என்றும் சிலரால் கருதப்படுகிறது.http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202135.htm அற்புதங்கள் சிவபெருமானே நரியைக் குதிரையாக்கிக் கொண்டு வரும்படியும் மண்சுமந்து அடிபடும் படியும் நடந்து கொண்டது. பிறவி தொட்டு ஊமையாயிருந்த பெண்ணைப் பேசவைத்தமை.http://www.tamilvu.org/courses/diploma/p202/p2021/html/p2021203.htm தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும் பேறு பெற்றுக்கொண்டது. எல்லாரும் காணத்தக்கதாக திருச்சபையினுள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது. ஜி. யு. போப் கருத்து திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவரான ஜி. யு. போப் மாணிக்கவாசரைப் பற்றி, "உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலைத்த பக்தி ஆகிய பண்புகளுடன் நம் மனத்தைக் கவர்கின்றவர் வேறு யாரும் இல்லை" என்று குறிப்பிடுகின்றார்.தமிழ் இலக்கண நூல்; டாக்டர் ஜீ.யூ.போப்; பக்கம் 7-30 இவற்றையும் பார்க்கவும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருநாவுக்கரசு நாயனார் சுந்தரமூர்த்தி நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்கள் தேவாரம் திருவாசகம் பாடல் பெற்ற தலங்கள் திருவெம்பாவை எளிய விளக்கம் திருப்பள்ளியெழுச்சி எளிய விளக்கம் இருந்தையூர்க் கொற்றன் புலவன் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தரம் 10 சைவநெறி ஆசிரியர் கையேடு இலங்கை National Institute of Education பன்னிரு திருமுறை பாட்டும் பொருளும் தகவல் உதவி-அபிதான சிந்தாமணி பகுப்பு:பன்னிரு திருமுறை அருளாளர்கள் பகுப்பு:நாயன்மார்கள் பகுப்பு:சைவ சித்தாந்தம் பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள் பகுப்பு:சிவத்தொண்டர்கள் பகுப்பு:9வது நூற்றாண்டு இந்திய மக்கள் பகுப்பு:கருநாடக இசை பகுப்பு:பக்தி இயக்கம்
திருஞானசம்பந்தர்
https://ta.wikipedia.org/wiki/திருஞானசம்பந்தர்
Redirect திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
திருநாவுக்கரசர்
https://ta.wikipedia.org/wiki/திருநாவுக்கரசர்
Redirect திருநாவுக்கரசு நாயனார்
அப்பர் அடிகள்
https://ta.wikipedia.org/wiki/அப்பர்_அடிகள்
Redirect திருநாவுக்கரசு நாயனார்
அப்பர்
https://ta.wikipedia.org/wiki/அப்பர்
Redirect திருநாவுக்கரசு நாயனார்
சுந்தரர்
https://ta.wikipedia.org/wiki/சுந்தரர்
Redirect சுந்தரமூர்த்தி நாயனார்
வாதவூரர்
https://ta.wikipedia.org/wiki/வாதவூரர்
REDIRECT மாணிக்கவாசகர்
முதலாம் இராஜராஜ சோழன்
https://ta.wikipedia.org/wiki/முதலாம்_இராஜராஜ_சோழன்
அருண்மொழிவர்மன் அல்லது அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் பொ.ஊ. 985 முதல் பொ.ஊ. 1014 வரையாகும். இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.பொன்னியின் செல்வனான ராஜராஜ சோழன் யார்? சோழ வரலாற்றில் அவரின் பங்களிப்பு என்ன? இவர் பொ.ஊ. 957 முதல் பொ.ஊ. 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவார். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராசகேசரி அருண்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராசராச சோழன் எனப்பட்டார் (988) தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 15 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவர் செத்திரிய முறைபடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இராசராசசோழன் தன்னை அரசர்களுக்கு எல்லாம் அரசன் (சத்திரிய சிகாமணி) என்று புனைபெயர் கொண்டு வாழ்ந்தார். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும். புகழ் பெற்ற இளவரசன் இடது|thumb|200x200px|தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள கல்வெட்டு முதலாம் பராந்தக சோழன் இறந்ததற்கும் முதலாம் இராசராச சோழன் அரியணை ஏறுவதற்கும் இடையேயுள்ள காலப்பகுதி, முப்பது ஆண்டுகளைக் கொண்ட குறுகிய காலப்பகுதியாகும். ஆயினும் அது சோழ வரலாற்றின் மிகக் கடுமையான பகுதியாகும். அப்பகுதிக்கான ஆதாரங்கள், குழப்பமாகவே உள்ளன. இரண்டாம் ஆதித்தன் கொலை thumb|200px|முதலாம் இராசராசன் ஆட்சியில் சோழப் பேரரசு இராசகேசரி இரண்டாம் ஆண்டு கல்வெட்டு மூலம், இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் இப்போதைய கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் தற்போது மேலக்கடம்பூர் என்று அழைக்கப்படும் ஊரில் கொலை செய்யப்பட்டான் என்பது தெரியவருகிறது. இக்கல்வெட்டு 'பாண்டியன் தலைகொண்ட கரிகாலச் சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களை பறிமுதல் செய்து, விற்கும் பணியினை மன்னனின் கட்டளைப்படி சதுர் வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக தெரிவிக்கிறது. இந்த இராசகேசரி கல்வெட்டு, சுந்தர சோழனுக்கும், ஆதித்தனின் தம்பியும் உத்தம சோழனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவனான இராசராச சோழனுக்கும் பொருந்தும். இரண்டாம் ஆதித்தனின் கல்வெட்டுகள் 5 ஆம் ஆண்டு வரை கிடைத்திருப்பதாலும், ஆதித்தன் தன் தந்தைக்கு முன்பே ஆட்சி செய்ததாகக் கூற முடியாததாலும் இக்கல்வெட்டு இராசராச சோழனுடையது என்பது தெளிவாகிறது. உத்தம சோழன் ஆட்சி செலுத்திய பதினாறு ஆண்டுகளில் இரண்டாம் ஆதித்தனைக் கொலை செய்தவர்கள் பழிவாங்கப்படவில்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகிறது. குடும்ப வாழ்வில் ஏற்பட்ட பேரிழப்பால், சுந்தர சோழன் தன் இறுதி நாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். மகனை இழந்த சுந்தர சோழன், தன் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இயலாதவாறு செய்யப்பட்ட சூழ்ச்சிகளைக் கண்டு மனம் வருந்தி இறந்தான்.சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்கம் 212. உத்தம சோழனுக்கு இக்கொலையில் தொடர்பு இல்லையென்று சொல்வதற்கில்லை, உத்தமச் சோழனுக்கு அரியணை ஏறவேண்டும் என்ற ஆசையிருந்தது. மன்னர் பதவி தவிர, அதற்குக் கீழ்ப்பட்ட எப்பதவியையும் அவன் ஏற்க விரும்பவில்லை. அரச குடும்பத்தின் மூத்த கிளையினன் என்ற காரணத்தால் அரியணை தனக்கே என்று அவன் கருதினான். தனக்கு ஆதரவாக ஆட்களைத் திரட்டி, இரண்டாம் ஆதித்தனைக் கொன்று, தன்னை இளவரசனாக்குமாறு சுந்தர சோழனை வற்புறுத்தினான். வேறுவழியின்றி சுந்தர சோழன் இதற்கு சம்மதித்தான் என்றும் திருவாலங்காட்டுப் பட்டயங்களிலும் உடையார்குடிக் கல்வெட்டிலும் உள்ள குறிப்புகளை இணைத்துப் பார்க்கும் பொழுது புலனாகிறது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள், விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் (காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் செத்திரிய தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசப்பதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரசப் பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி வர்மன் அரசப்பதவியை மறுத்துவிட்டான். இதை, அருண்மொழி வர்மனின் அடக்கத்தால், உத்தம சோழனின் பேராசை வெற்றிகண்டது. அருண்மொழியை, கோழை, அரசியல் திறமை இல்லாதவன், சட்டப்படி உரிமை இல்லாதவன் என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, அவன் உத்தம சோழனுக்கு அரியணையை விட்டுக் கொடுத்து, அவன் காலத்திற்குப் பிறகு, தான் பட்டத்திற்கு வருவதற்காக பொறுமையுடன் இசைந்தான் என்று கொள்ளலாம். மேலும், அருண்மொழியின் உடலில் காணப்பட்ட சில அடையாளங்களைப் பார்த்த பொழுது, மூவுலகையும் காக்கும் ஆற்றல் படைத்த திருமாலே, பூஉலகுக்கு வந்திருப்பதாக நினைத்து, மதுராந்தகன் அவனை இளவரசனாக்கி மண்ணுலகை ஆளும் பொறுப்பைத் தானே மேற்கொண்டான் என்றும் தெரிவிக்கின்றன. சோழர்களின் மெய்க்கீர்த்திகள் பாண்டியரும், பல்லவரும் பிறருக்குத் தானங்களை வழங்கிய பொழுது அவ்வறச் செயல்களை, தரும சாத்திரங்களைத் தழுவி செப்பேடுகளில் பொறித்து உரியவர்க்கு அளித்து வந்தனர். இச்செப்பேடுகளில் தம் முன்னோர் வரலாறுகளை முதலில் எழுதுவித்தனர். தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்து நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை இனிய தமிழ் அகவற்பாவில் தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை உண்டாக்கியவன் இராசராச சோழனே. இவருக்குப் பிறகு இவர் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். இவர் மகன் முதலாம் இராசேந்திரனின் ஆட்சித் தொடக்கத்தில் குறைந்த அளவிளான மெய்க்கீர்த்தி, நாளடைவில் விரிந்து அவ்வப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் தன்னுள் சேர்த்துக் கொண்டது. சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் இத்தகைய வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும், கல்வெட்டுகள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும் உதவுகின்றன. இராசராசனின் மெய்க்கீர்த்திகள் சில அரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க் கீர்த்திகளை உடையவராக இருந்தனர். முதலாம் இராசராசன் மூன்று வித மெய்க்கீர்த்திகளை கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவரது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது. கீழ்வருவது இராசராச சோழனின் மெய்க்கீர்த்திகளில் ஒன்று. "ஸ்வஸ்திஸ்ரீ் திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறூத்தருளி வேங்கை நாடும் கங்கைபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும் குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டால் கொண்டதன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசுகொள் ஸ்ரீ்கோவிராஜராஜகேசரி பந்மரான ஸ்ரீராஜராஜ தேவர்." இரண்டாம் வகையான மெய்க்கீர்த்தியிலும் காந்தளூர்ச்சாலை வெற்றிக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவரது 20ஆம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் வகை மெய்க்கீர்த்தியில் இராசராசன் மதுரையை அழித்தார் என்றும். கொல்லம், கொல்ல தேசம், கொடுங்கோளூர் ஆகிய நாட்டு மன்னர்களை வெற்றி கொண்டார் என்றும் கடல் கடந்த பகுதிகளின் மன்னர்கள் அவருடைய பரிவாரமாகப் பணிபுரிந்தனர் என்றும் கூறுகிறது. மேலும் இவன் காலத்திலேயே வட்டெழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களாக மாற்றியமைக்கப்பட்டன.http://www.tamilvu.org/courses/degree/c031/c0314/html/c0314001.htm போர்கள் கேரளப் போர் இராசராசன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான். இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இப்போரின் விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக் கல்வெட்டுக்களில் காணப்படும், 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த' என்ற பட்டத்தால் விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராசராசனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும், பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று தெரிகிறது. இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது. பாண்டிய மன்னன் அமர புயங்கனை சிறைபிடித்தான் என்று கூறும் இக்குறிப்பு, 'சூரிய வம்சத்தின் ஒளிவிளக்கான இந்த தண்டநாதன் பிறகு விழிஞம் என்னும் தவிர்க்க முடியாத கடற்கோட்டையைப் பிடித்தான். வெற்றித் தெய்வத்தின் நிலையான இருப்பிடம் என்று சொல்லத்தக்க சிறப்புடையது அக்கோட்டை. பாண்டிய, கேரள சிங்கள நாடுகளை தென்னாட்டு அரசுகள் மூன்றும் இணைந்திருந்து. இராசராசன் ஆட்சியிலும் இக்கூட்டணி செயல்பட்டது. இம்மன்னனின் தென் திசைப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது. அப்போது சேர மன்னனாக இருந்தவன் பாசுகர ரவிவர்மன் திருவடி (பொ.ஊ. 978–1036). இம்மன்னனின் கல்வெட்டுகள் திருவாங்கூரின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. மலைநாடு பொ.ஊ. 1008ம் ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இப்படையெடுப்பின் பொழுது உதகைக் கோட்டையைத் தாக்கி கைப்பற்றியது முக்கியமான நிகழ்ச்சியாகும். மேற்கு மலைப் பகுதியான மலைநாடு அல்லது குடமலைநாடு இப்போதைய குடகு நாடாகும். உதகைக் கோட்டை குடகின் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலோ அல்லது சிறிது தென் திசையிலோ இருந்ததாகக் கொள்ளலாம். இம்மன்னனின் ஆட்சியைப் பற்றி கூறும் கலிங்கத்துப் பரணி உதகையைக் கைப்பற்றியதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது. சேர நாட்டில் தான் பிறந்த சதய நாள் விழாவைத் தொடக்கி வைத்தான் என்றும் இராசராசனுடைய தூதுவன் அவமதிக்கப்பட்டதால் அந்தப் பழியைத் தீர்க்கும் வகையில் பதினெட்டு காடுகளை இவன் கடந்து சென்று உதகையைத் தீயிட்டு அழித்தான் என்றும் மேலும் இது இராசராச சோழனின் பெரும் சாதனை என்றும் ஒட்டக்கூத்தர் தமது மூன்று உலாக்களிலும் கூறுகிறார். உதகை கோட்டை எனப்படுவது இப்போது தென்குமரி நாட்டில் உள்ள உதயகிரி கோட்டை. இங்கே சோழர் தளபதியாக இருந்த இராசேந்திரசோழன் இரணியசிங்கநல்லூர் தலைமையாக்கி வேணாட்டை ஆண்ட பாசுகர ரவிவர்மனால் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தான். இதனால் கோபம்கொண்ட இராசராசசோழன் பெரும்படையுடன் வந்து வேணாட்டை வென்றான். உதயகிரியை அழித்தான். சேரநாட்டு அதர்வ வேதபாடசாலைகளை அழித்தான். இதையே காந்தளூர்சாலை கலமறுத்தல் என்று தன் மெய்கீர்த்திகளிலில் குறிப்பிடுகிறான். இத்தகவல்களை கே கே பிள்ளை அவர்கள் அவரது தென்னிந்திய வரலாறு நூலில் சொல்கிறார். கவிமணி தேசிகவினாயகம்பிள்ளை காந்தளூர்ச்சாலை பற்றி எழுதிய விரிவான ஆய்வுக்கட்டுரையும் இதைப்பற்றி பேசுகிறது ஈழப் போர் thumbnail|முதலாம் இராசராச சோழன் கால பொன் நாணயம், இலங்கை ஈழம் இராசராசனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் பொ.ஊ. 993ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். 'கொடுமை மிக்க சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது', 'தஞ்சையில் இராசராச சோழன் எடுப்பித்த சிறந்த கோயிலுக்கு ஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன. இப்படையெடுப்பின் பொழுது ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், பொ.ஊ. 981ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராசேந்திரனின் தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராசராசனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. 'மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு (பொ.ஊ. 991) ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னட வீரர்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராசராசன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. thumb|இராசராச சோழனின் சுவர் ஓவியம் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் கிடைத்தது. ஈழப் படையெடுப்பின் விளைவுகள் சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளங்கிய பொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராசராச சோழனுக்கு முன்னர் ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்ற தமிழ் அரசர்களில் தாட்டியன் என்னும் பாண்டிய வேந்தன் தவிர மற்றவர்கள் அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராசராச சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான். ஆனால் இவனின் மகனான இராசேந்திரச் சோழன் காலத்திலேயே ஈழத்தின் தென்பகுதி தாட்டியனுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தமிழர்களுக்குக் கீழ் வந்தது. பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விசயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான். ஈழத்தில் சோழக் கோயில்கள் இராசராசனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராசராசன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது பொ.ஊ. 10 மூதல் 12ம் நூற்றாண்டுகளுக்குள்ளேயே கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே (தஞ்சைப் பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது. பிற வெற்றிகள் கங்கர்களின் கங்கபாடியும், நுளம்பர்களின் நுளம்பபாடியும் சில வேளைகளில் தடிகை வழி என்றழைக்கப்பட்ட தடிகைபாடியும் இராசராச சோழனின் ஆட்சியில் சோழநாட்டுடன் இணைக்கப்பட்டன. இராசராசனின் காந்தளூர்ச் சாலை வெற்றியைத் தொடர்ந்து, கீழைச் சாளுக்கியரை எதிர்த்து வேங்கி நாட்டிற்குள் படையெடுப்பதற்கு முன்னர் மைசூர் நாடு கைப்பற்றப்பட்டதாக கல்வெட்டுகளில் காணப்படும் மெய்க்கீர்த்தியில் இருந்து அறிய முடிகிறது. பின்னர் கொங்கு நாட்டிலிருந்து காவிரி ஆற்றைக் கடந்து தடிகைபாடியையும் தலைக்காட்டையும் முதலில் தாக்கிய பொழுது சோழருக்கு பெரும் வெற்றி கிட்டியது. மேலும் அடுத்த ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக கங்க நாட்டின் மீதான ஆதிக்கமும் சோழருக்குக் கிடைத்தது. மேலைச் சாளுக்கியர் மேலைச் சாளுக்கியர் இராசராசன் தலைமையில் ஏற்பட்ட சோழப்படையெடுப்பை உதாசீனம் செய்யவில்லை. பொ.ஊ. 922ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் இரண்டாம் தைலப்பன் சோழ மன்னனுக்கு எதிராக ஒரு வெற்றி பெற்றதாகவும் அவனிடமிருந்து 150 யானைகளைக் கைப்பற்றியதாகவும் கூறுகிறான். (சில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுபடி பொ.ஊ. 922ல் இந்தப் போர் நடைபெற்றதாகக் கருதப்படுகிறது ஆனால் இதை உண்மையென்று நிரூபிக்கும் ஆதாரங்கள் இல்லை. இராசராச சோழனின் கல்வெட்டுக்களின் படி சாளுக்கியர் மீதான படையெடுப்புக்கள் எதுவும் பொ.ஊ. 994 ஆண்டிற்கு முன் எதுவும் நடக்கவில்லை என்று தெரியவருகிறது.) சத்தியாசிரயனுடன் போர் 922ம் ஆண்டிற்குப் பிறகு சில ஆண்டுகளில் இரண்டாம் தைலப்பன் இறந்தான். அதன் பின்னர் அவனுடைய மகன் சத்தியாசிரயன் சாளுக்கிய மன்னனானான். சத்தியாசிரயனை எதிர்த்துப் போர் புரிந்து வெற்றியடைந்து, அவனிடமிருந்த செல்வத்தில் ஒரு பங்கைத் தஞ்சை பெரிய கோயிலுக்கு என்று இராசராசன் ஆட்சியின் பிற்பாதிக் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மாளவ நாட்டு பாரமாரர் இதே சமயம் சாளுக்கியர்களை வடக்கிலிருந்து தாக்கினர். மேலைச் சாளுக்கியர் இருபெரும் பகைவரை ஒரே நேரத்தில் எதிர்த்துப் போரிட்டுச் சமாளிக்க முடியாமல் திணறினர். ஏறக்குறைய பொ.ஊ. 1003ம் ஆண்டைச் சேர்ந்த இராசராச சோழனின் கல்வெட்டுகள் இச்சோழமன்னன் 'இரட்டப்பாடி' ஏழரை இலட்சம் என்ற நாட்டைப் படையெடுத்து அதைக் கைப்பற்றினான் என்று கூறுகின்றன. ஆனால் இக்கூற்று மிகைப்படுத்தப்பட்டதாகும். சத்தியாசிரயன் இராசராசனது கடல் போன்ற பெரும்படையைக் கண்டு அஞ்சிப் போர்க்களத்தை விட்டு ஓடிவிட்டான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்வது நம்பக்கூடியதாயுள்ளது.சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்கம் 239. இராசேந்திரன் தலைமை தார்வார் மாவட்டம் ஒட்டூரில் பொ.ஊ. 1007ம் ஆண்டைச் சேர்ந்த(929) சத்தியாசிரயனின் கல்வெட்டு ஒன்று, சோழ குலத்திற்கு அணியாக விளங்கியவனும் இராசராச நித்தியாவிநோதனின் மகனுமாகிய, நூர்மடிச் சோழ இராசேந்திர வித்தியாதரன் என்பவன், ஒன்பது நூறாயிரம் வீரர்கள் அடங்கிய பெரும்படையுடன் பீச்சப்பூர் மாவட்டத்திலுள்ள தோனூர் வரையில் வந்து, பெரும்போர் புரிந்து நாட்டைச் சூறையாடிப் பாழ்படுத்தியும் நகரங்களைக் கொளுத்தியும், இளங்குழவிகள், அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும், கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கியும், அந்தச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டு தன்நாட்டுக்குத் திரும்பிச் சென்றான் என்று இக்கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு சத்தியாசிரயன் சோழரை விரட்டியடித்து, அவரிடமிருந்து தன் பொருள் வாகனத்தை மீட்டு தென் பகுதியையும் கைப்பற்றினான் என்று இதே கல்வெட்டு மேலும் கூறுகிறது. பகைவனின் கல்வெட்டுகளில் காணப்படும் நாச வேலைகளையும் கற்பழிப்புக்களையும் சோழ இளவரசன் செய்திருக்கக்கூடுமா என்ற வினா எழுந்தாலும் இராசேந்திரன் மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்று இரட்டபாடியை வென்றான் என்ற செய்தி உறுதிப்படுத்தப்படுகிறது. சாளுக்கியப் போரின் விளைவுகள் சோழர்களின் வடமேற்குப் படையெடுப்பின் மூலம் மைசூரில் கங்கர்களும் நுளம்பர்களும் ஆண்ட பகுதிகளோடு ஏறக்குறைய இப்போதையை பெல்லாரி மாவட்டம் முழுவதும் சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. இராசராசனின் கல்வெட்டோ அல்லது இக்காலச் சாளுக்கிய மன்னரது கல்வெட்டுக்களோ பெல்லாரியில் இதுவரை அகப்படவில்லை. ஆனால் பொதுவாக, சோழ நாட்டின் தூரப் பகுதிகளில் அவர்களுடைய கல்வெட்டுகள் பெரிதும் காணப்படுவதில்லை. கங்கை, வேங்கி மண்டலங்களுக்கென்றே ஒரு மாதண்ட நாயகனை இராசராசன் தன் ஆட்சியின் இறுதியில் அமர்த்தியிருந்தான் என்பதே இவ்விரு மண்டலங்களும் ஒன்றோடொன்று இணைந்திருந்ததோடு சோழநாட்டுடன் சேர்ந்திருந்தன என்பதற்கும் போதுமான சான்றாகும்.சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி. பக்கம் 240. வேங்கி இராசராச சோழன் ஆட்சியின் தொடக்கத்தில் ஏற்பட்ட அரசியலின் தொடர்ச்சியாக, அவன் வேங்கி விவகாரங்களில் தலையிட வேண்டியதாயிற்று, கீழைச் சாளுக்கியரை அவர் தம் தாயாதியினரான மேலைச் சாளுக்கியரிடமிருந்து பிரித்துவிட வேண்டுமென்ற அரச தந்திரத்தின் அடிப்படையில் இத்தலையீடு இருந்தது. சோழ ஏகாதிபத்தியக் கொள்கையின் அடிப்படையிலேயே இராசராசனும் அவனுடைய சந்ததியினரும் தங்கள் வலிமையைத் துங்கபத்திரை ஆற்றின் கிழக்குக் கரையோரத்தில் பரவச் செய்ய முடிந்ததே தவிர, அவ்வாற்றின் மறுபக்கத்தில் தம் வலிமையைப் பரவ செய்ய முடியவில்லை. கீழைச் சாளுக்கியர், மேலைச் சாளுக்கியருக்கிடையேயான வேறுபட்ட நிலைகளே இதற்குக் காரணமாகும். வேங்கியை ஆட்சி செய்த காலத்தில், கீழைச் சாளுக்கியர்கள் மேலைத் தக்காண இராட்டிரகூடர்களுடன் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து போரிட்டதன் விளைவாக வலியிழந்து, சோர்வுற்றதோடு உள்நாட்டுக் குழப்பத்திற்கும் பலியாயினர். சோழரின் வரவினால் கீழைச் சாளுக்கிய மன்னர் குடும்பம் உற்சாகம் பெற்று அடுத்து நூறு ஆண்டுகள் சோழரது அதிகாரத்திற்குற்பட்ட நண்பர்களாய்த் திகழ்ந்து, அதன் பின்னர் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திலும் அவனது சந்ததியினரான சோழ சாளுக்கியர் என்றழைக்கப்பட்டவரின் காலத்திலும் சோழநாடும் மேம்படும் வகையில் உதவிபுரிந்து தங்கள் நன்றிக் கடனைத் தீர்த்தனர். மேலைச் சாளுக்கியரோ பல நூற்றாண்டுகளாக இராட்டிரகூடர்களின் அடிமைகளாக இருந்து அப்போது தான் இரண்டாம் தைலப்பனின் தலைமையில் தன்னுரிமையை நிலைநாட்டித் தனிநாடாக உருவெடுத்து மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். சத்தியாசிரயனின் செப்ரோலு கல்வெட்டு கூறுவது போல, கீழைச் சாளுக்கியரின் வலிமையையும் தம்முடன் இணையச் செய்யும் முயற்சியையும் இவர்கள் மேற்கொண்டனர். ஆனால் வடக்கில் பாராமாரர்களும் தெற்கே சோழர்களும் இவர்களை ஒரே வேளையில் தாக்கியதால் தம் முன்னோரது ஆட்சியில் இருந்த இரட்டப்பாடி ஏழரை இலட்சம் பகுதியை இழக்காமல் பாதுகாப்பதைத் தவிர வேறு முயற்சிகளில் இவர்களால் ஈடுபடமுடியவில்லை. வேறு நாடுகளைத் தம் கீழ்க் கொண்டுவரும் முயற்சிக்கு இவர்களுக்கு நேரம் கிடைக்காததோடு, உற்சாகமும் இல்லாமல் போயிற்று. இந்நிலைக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கம் கூறமுடியாது என்றாலும் பொதுவாக எந்த அரச வமிசத்திலும் முதல் மன்னர்களே சிறந்த ஆட்சியாளர்களாய் விளங்கினாலும் இத்தகைய அரச வமிசங்கள் தொடர்ந்து சில தலைமுறைகள் சிறந்து விளங்குகின்றன. வடக்கில் சோழர் ஆட்சி பரவுதல் முதல் பராந்தகன் ஆட்சியில் சோழநாடு வடக்கே நெல்லூர் வரையில் பரவியிருந்தது. இராட்டிரகூடரின் படையெடுப்பின் பொழுது வடபகுதிகளை இழக்க நேரிட்டது. பின்னர் முதலாம் பராந்தகனின் வழி வந்தோரால் ஒரு சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டன. இவர்கள் காலத்தில் சென்னைக்கு அருகேயுள்ள திருவொற்றியூர் உட்பட்டிருந்த வடபகுதி அனைத்தையும் மீட்கும் பொருட்டு இராசராசன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே ஒரு படையை வடக்கு நோக்கிச் செலுத்தினான். வேங்கிப் போர் கீழைச் சாளுக்கியரின் இன்னல்கள் பொ.ஊ. 945–970 காலத்தில் ஆட்சி செய்த இரண்டாம் அம்மன் காலத்தில் தொடங்கின இவ்வின்னல்களுக்குப் பேராசை கொண்ட இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டிணனுக்கும் கீழைச் சாளுக்கியரின் இளைய குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பூசல்களே காரணம். பொ.ஊ. 945ம் ஆண்டில் தன் ஒன்றுவிட்ட அண்ணனைப் புறக்கணித்துவிட்டு, இரண்டாம் அம்மன் அரியணையைப் பெற்றான். இளையவன் வழிவந்தவர்களான பாடபனும் இரண்டாம் தாழனும் ஆட்சியைக் கைப்பற்ற தகுந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர். முதலாம் பராந்தகச் சோழனை வென்ற இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்டிணன், வேங்கி நாட்டின் மீதும் தன் கவனத்தைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய இளவரசர்களுக்கிடையே உண்டான உட்பகைகள் இம்மன்னனுக்குச் சாதகம் ஆயின. இரண்டாம் அம்மன் பேடகல்லு மன்னனான செடாசோட வீமனின் சகோதரியை மணந்தான். இக்காலத்தில் புகழ்பெற்று நிலவிய வீமன் தன் மைத்துனனுக்குப் பெரிதும் உதவிபுரிந்தான். இரண்டாம் அம்மனின் ஆட்சி இருபத்தைந்து ஆண்டுகள் அதாவது 970 வரை நிலவினாலும், இது நிலையற்றதாகவே இருந்தது. இம்மன்னன் அரியணை ஏறிய பொழுது இரண்டாம் யுத்தமல்லன் என்பவனோடு போரிட்டு வெற்றியடைந்தான். ஆனால் யுத்தமல்லனின் தோல்வி, அவனது புதல்வர்களான பாடபனாலும் இரண்டாம் தாழனாலும் பழிவாங்கப்பட்டது. வேங்கி நாட்டிலிருந்த சிலர், மற்றும் இராட்டிரகூட மன்னன் கிருட்டிணன் உதவியுடன் இரண்டாம் அம்மனை நாட்டை விட்டே விரட்டி, அவனது அரியணையையும் கைப்பற்றினர். பாடபன், தாழன் ஆகியோரது செப்புப் பட்டயங்களில் கூறப்பட்டுள்ள கிருட்டிணனின் உதவி, இவர்களுக்கு இச்சமயங்களில் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்திற்கு ஓடிவிட்ட அம்மன், கொலனு நாட்டுத் தலைவனான நிருபகாமாவின் உதவியுடன் நாடு திரும்பி 955க்கு முன்னர் தாழனது ஆட்சியை முடித்தான். கொலனுத் தலைவனின் மகளை மணந்த அம்மன், தாழனுடன் செய்த போரில் தாழனைக் கொன்றான். இது அம்மன் தன் தாயாதியான ஒரு மன்னனை விண்ணுலகத்திற்கு அனுப்பினான் என்று சக்திவர்மனுடைய படிப்பற்று பட்டயம் கூறுவதிலிருந்து புலனாகிறது. ஆனால் விரைவிலேயே மூன்றாம் கிருட்டிணன் வேங்கி நாட்டின் மீது மீண்டும் படையெடுக்க, அம்மன் இரண்டாம் முறையாக கலிங்கத்திற்குத் தப்பி ஓடவேண்டியதாயிற்று. இந்நிகழ்ச்சி அம்மனுடைய பதினோராம் ஆண்டிற்குப் பிறகே நடைபெற்றது என்று மாங்கல்லுப் பட்டயங்கள் கூறுகின்றன. வேங்கி நாட்டில் அம்மனுக்கு விரோதமான ஒரு கூட்டத்தின் ஆதரவைப் பெற்ற தானார்ண்ணவனிடம் ஆட்சிப் பொறுப்பை கிருட்டிணன் அளித்தான். ஆனால் இராட்டிரகூடர் வேங்கியை விட்டு அகன்றவுடன், மீண்டும் அம்மன் தன் நாட்டை அடைந்து தானார்ணவனுடன் சமாதானம் செய்துகொண்டு, சிலகாலம் அந்நாட்டை ஆட்சி செய்தான். முடிவில் தானார்ணவன் மீண்டும் அம்மனுக்கு எதிராகக் கிளம்பி அம்மன்னனைப் போரில் கொன்று தானே அரியணையைப் பற்றினான். வீமன், மூன்றாம் கிருட்டிணனின் அதிகாரத்திற்குட்பட்டவனாயிருந்து, இம்மன்னன் வேங்கி நாட்டைக் கைப்பற்ற உதவியிருக்கக்கூடும். ஆனால், கிருட்டிணனின் மரணத்திற்குப் பிறகு தனியுரிமையைப் பெற்று, அம்மன் மீது வெற்றிகொண்ட தானார்ணவனை எதிர்த்து, பொட்டாடி என்ற பகுதியைத் தாக்கி கைப்பற்றினான். இச்சண்டையில் வீமன், தானார்ணவனைக் கொன்று, அவனது குழந்தைகளை விரட்டியதோடு, வேங்கி நாட்டை முழுவதையும் கைப்பற்றினான். தானார்ணவனின் மரணத்திற்கும், இவன் மகன் முதலாம் சக்திவர்மனின் ஆட்சி தொடங்கியதற்கும் இடையேயான 25 ஆண்டுகள்(973 – 999) ஓரு இடையீட்டுக் காலம் என்றும் ஊழ்வினையால் ஏற்பட்ட தீயுழிக்காலம் என்றும் கீழைச் சாளுக்கியர் தம் சாசனங்களில் குறிப்பிடுகின்றனர். இராசராச சோழன் அரியணையேறிய பொழுது, இரண்டாம் தைலன், சத்தியாசிரயன் ஆகியோரது தலைமையில் மேலைச் சாளுக்கியர் எழுச்சியுற்றனர். தானர்ணவனின் மக்கள் சோழநாட்டில் தங்கியிருந்ததே மேலைச் சாளுக்கியருக்கு எதிராக கடைபிடிக்க வேண்டிய கொள்கையை உருவாக்க இராசராசனுக்கு பெரிதும் உதவியது. இவர்களையே கருவியாகக் கொண்டு, வேங்கிநாட்டின் விவகாரங்களில் தலையிட இராசராச சோழன் துணிந்தான். அதே வேளையில் செடாசோட வீமனும் மேலைச் சாளுக்கியரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். 999ம் ஆண்டிலோ அல்லது அதற்குச் சற்று முன்னரோ, சக்திவர்மனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் எண்ணத்துடன் இராசராசன் வேங்கிநாட்டின் மீது படையெடுத்தான். இதை எதிர்க்க வீமன் அனுப்பிய ஏகவீரன் என்ற பெரும் வீரனை இராசராசன் கொன்றான் என்றும் பின்னர் பட்தேமன், மகாராசன் என்ற பலம் வாய்ந்த இரு தலைவர்களையும் கொன்றான் என்றும் முடிவாக செடாசோடன் என்னும் பேரும் மரத்தை வேருடன் களைந்தான் என்றும் அதாவது வீமனையும் தோல்வியுறச் செய்தான் என்று சக்திவர்மன் சாசனங்கள் கூறுகின்றன. ஆயினும் இப்போர் கடுமையாகவும் பல ஆண்டுகள் நீடித்ததாகவும் இருந்தது. 1011ம் மே திங்கள் 10ம் நாள் விமலாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்தான் என்று கல்வெட்டு ஆதாரங்கள் கூறுகின்றன. இவனுக்கு முன் இவனது சகோதரன் சக்திவர்மன் பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். இதிலிருந்து சக்திவர்மன் பொ.ஊ. 999ல் அரியணையில் அமர்ந்தான் என்றும் அதே ஆண்டில் 'இடையீட்டுக் காலம்' முடிவுற்றது என்பதும் தெளிவாகிறது. வீமனின் வீழ்ச்சியையும் வேங்கி நாடு இராசராசனுடைய அதிகாரத்திற்கு உட்பட்டதையும் சத்தியாசிரயனால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இப்போது முதல் அடுத்த 135 ஆண்டுகளுக்கு சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியருக்கும் வேங்கி நாட்டைக் குறித்து அடிக்கடி போர் நிகழத் தொடங்கியது. மாலத் தீவுகளைக் கைப்பற்றல் இராசராசனது போர்களுள் இறுதியில் நிகழ்ந்தது, இவன் 'முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரம்' எனப்படும் மாலத் தீவுகளை கைப்பற்றும் பொருட்டு படையெடுத்ததேயாகும். கடல் கடந்து சென்ற இப்படையெடுப்பைப் பற்றி விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை. எனினும் இராசேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராசராசன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது. தஞ்சைப் பெருவுடையார் கோயில் இராசராச சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராசராசேச்சரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தென்னிந்திய கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராசராசனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது. இராசராசன் காலத்தில் இராசராசேச்சரம் என்று அழைக்கப்பட்ட இக்கோவிலின் பெயரானது பெருவுடையார் கோவில் என்ற தமிழ்ப் பெயரின் வடமொழி வடிவமாகும். இராசேந்திரன் இளவரசுப் பட்டம் பெறுதல் இராசராச சோழன் தன் ஆட்சி முடிவில் தன் மகன் இராசேந்திரனை அரசாங்க அலுவல்களில் தன்னுடன் கலந்து கொள்ளச் செய்தான். இராசராசனின் நான்காம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுகள் இராசேந்திரனை இளம் அரசகுமாரன் என்று குறிப்பிடுவதால், இளவரசுப் பட்டம் பெற்ற பொழுது இவன் குறைந்தது இருபத்தைந்து வயதினனாக இருந்திருக்க வேண்டும். இராசராச சோழனின் 29-ம் ஆண்டுக் கல்வெட்டுகள் தஞ்சையில் ஏராளமாகக் கிடைப்பதால், இம்மன்னனின் சிறந்த ஆட்சி பொ.ஊ. 1014ல் முடிவுற்றது என்று தெரியவருகிறது. நிர்வாகம் thumb|இராசராச சோழனின் சிலை நிலவரியை நிர்ணயிக்க வேண்டி நாடெங்கும் நிலங்களை அளந்து, நிலத்திற்கேற்ப வரி விதித்து, இப்போதைய நிர்வாகத்தில் உள்ளது போல் செயலாளர்களைக் கொண்ட மத்திய அரசை இராசராச சோழன் நன்கு அமைத்தான். மேலும் நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை ஆங்காங்கு மேற்பார்வைக்காக அமர்த்தி, கிராம சபைகளையும் மற்றப் பொதுக்குழுக்களையும் பொதுக் குழுக்களையும் தணிக்கையின் மூலம் கட்டுப் படுத்தினான். அதனால் நிறைந்த நிலைப்படையை உருவாக்கி, இராசேந்திரனின் கீழ் மேலும் பல வெற்றிகளை அடைந்த பெரும் கப்பற்படையை நிறுவி, தென் இந்தியாவின் வரலாற்றிலேயே இராச்சியங்களை நிர்மாணிப்பதில் ஒப்பற்றவனாகத் திகழந்தான். சமயக் கொள்கை ஆழ்ந்த சிவபக்தனான இராசராசன் இந்தியாவின் பெரும் இராசதந்திரிகளைப் போன்று, எல்லா சமயங்களிடத்தும் பொது நோக்குடையவனாய் அவற்றை ஆதரித்து வந்தான். தஞ்சைப் பெருங் கோயிற் சுவர்களில் காணப்படும் அழகிய சிற்பங்களிலிருந்து இம்மன்னன் கல்வெட்டுகளில் இவனால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் விட்டுணு ஆலயங்களிலிருந்தும் இராசராசன் தனது சமயக் கொள்கைகளில் தாராள மனப்பான்மை உடையவனாகவே இருந்தான் என்று தெரியவருகிறது. நாகப்பட்டினத்தில் சிரீவிசயம், கடாரம் ஆகியவற்றின் அரசன் சைலேந்திர மன்னன் திருமாற விசயோதுங்க வர்மனால் சூடாமணி விகாரம் கட்டப்பட்டபொழுது அம்மன்னனை பெருதும் ஊக்குவித்தான் என்று புகழ் வாய்ந்த லெய்டன் பட்டயங்கள் கூறுகின்றன. பட்டங்கள் இராசராசனின், மும்முடிச் சோழன், செயங்கொண்டான், அருண்மொழி என்ற பெயர்கள் நகரங்களின் பெயர்களாக மாறியதோடு, வளநாடுகளும் மண்டலங்களும் இம்மன்னனின் பெயராலேயே அறியப்பட்டன. அழகிய சோழன் மும்முடிச்சோழன் காந்தளூர் கொண்டான். சோழநாராயணன். அபயகுலசேகரன் அரித்துர்க்கலங்கன். அருள்மொழி இரணமுக பீமன் ரவி வம்ச சிகாமணி ராச பாண்டியன். ராச சர்வக்ஞன். இராசராசன் இராச கேசரிவர்மன் சோழேந்திர சிம்மன். இராச மார்த்தாண்டன். இராசேந்திர சிம்மன். இராச விநோதன். உத்தம சோழன். உத்துக துங்கன். உய்யக் கொண்டான். உலகளந்தான். கேரளாந்தகன். சண்ட பராக்கிரமன் சத்ருபுசங்கன். சிங்கனாந்தகன் சிவபாத சேகரன். சோழகுல சுந்தரன். சோழ மார்த்தாண்டன். திருமுறை கண்ட சோழன். தெலிங்க குலகாலன். நித்ய விநோதன். பண்டித சோழன். பாண்டிய குலாசனி பெரிய பெருமாள். மூர்த்தி விக்கிரமா பரணன் சென நாதன். செயங்கொண்ட சோழன். சத்திரிய சிகாமணி. கீர்த்தி பராக்கிரமன். தைல குலகாலன். மேற்கண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பெயர்களில் இராசராச சோழன் அழைக்கப்பட்டுள்ளார். குடும்பம் இராசராசன் பல பெண்களை திருமணம் செய்திருக்கிறார். அவருடைய பட்டத்து அரசியாக உலகமகாதேவியார் என்பவர் இருந்துள்ளார். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் இராசராசன் திருவாயிலிலுள்ள ஒரு கல்வெட்டில் இராசராசனின் பட்டத்து அரசியான உலகமகாதேவியாரும், சோழமகாதேவியார், அபிமானவல்லி, திரைலோக்கிய மகாதேவி, பஞ்சவன்மாதேவி, பிருத்வி மகாதேவி, இலாடமாதேவி ஆகிய மனைவிமார்களும் கோயிலுக்கு கொடைகள் அளித்திருப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம் - தஞ்சை வெ.கோபாலன் September 25, 2010 இராசராசனுக்கு மனைவிமார் பலராவர். கல்வெட்டுகளில் மட்டும் 15 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர் உலகமகா தேவியார், திட்டைப்பிரான் மகள் சோழ மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார், பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார், காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் முதலியோர் ஆவர். இவர்களை இராசராசன் ‘நம் பெண்டுகள்’ என்று கல்வெட்டில் குறித்தனன். இவருள் உலகமாதேவியார் பெயரே கல்வெட்டுகளில் முதலில் குறிக்கப்பட்டுள்ளது. திருவிசலூரில் இராச ராசன் துலாபாரம் புக்கபோது பட்டத்தரசியான தந்திசக்தி விடங்கியார் இரணியகருப்பம் புக்கனர்; திருவிச நல்லூர்ப் பெருமானுக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்ய 45 பொற் காசுகள் தானமளித்தார்42 of 1907. இந்த அம்மையாரே திருவையாற்றில் கற்றளி ஒன்று எடுத்து அதற்கு ‘உலகமாதேவீச்சரம்’ எனத் தம் பெயரிட்டார். இதனைக் குறிக்கும் கல்வெட்டில், உடையார் இராசராச தேவர் நம்பிராட்டியார் தந்திசக்தி விடங்கியாரான பூர் உலக மகா தேவியார்...635 of 1902 என்பது காணப்படலால், இரணியகருப்பம் புக்கவர் உலக மகாதேவியாரே என்பது வெளிப்படை தஞ்சைப் பெரிய கோவிலில் இராசராசன் பிரதிமமும் உலகமகாதேவியார் பிரதிமமுமே எழுந்தருளப் பெற்றனS.I.I. Vol. 2. part 2. p. 155. இவற்றால், இவரே இராசராசன் முதற் பெருந்தேவியார் என்பது விளங்கும். இராசராசன் பல மனைவியருடன் வாழ்ந்தாலும், குறைந்த அளவிலான மக்களைப் பெற்றிருந்தான். பல கோயில்களுக்கு நிவந்தங்கள் அளித்ததாக கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படும் இவனது மனைவிமார்களின் எண்ணிக்கை ஏறக்குறைய பதினைந்து, ஆயினும் உலக மகாதேவி என்று அழைக்கப்பட்ட தந்திசக்தி விடங்கி என்பவளே பட்டத்தரசியாக விளங்கியவள். இராசராச சோழனின் ஆட்சியின் 29ம் ஆண்டில் திருவிசலூரில் இம்மன்னனுடன் இருந்தாள், திருவிசலூர்க் கோயிலில் இம்மன்னன் துலாபாராம் புகுந்த பொழுது தந்திசக்தியும் இரணிய கருப்பம் புகுந்தாள். இராசராசனின் ஒரே மகனான இராசேந்திரனின் தாயார், திருபுவன மாதேவி என்றழைக்கப்பட்ட வானவன் மாதேவி ஆவாள். இராசராசனின் மகள் குந்தவை, சாளுக்கிய விமலாதித்தனை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராசராசன் பெருமதிப்பு வைத்திருந்தான் தான் எடுப்புவித்த தஞ்சைப் பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்தவற்றை நடு விமானத்தின் கல்மீது, தான் கொடுத்தவற்றைப் பற்றி வரைந்துள்ள இடத்திற்கு அருகே வரையச் செய்ததோடு, தன் மனைவிமார்களும் அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான். இராசராசன் மூன்று புதல்விகளைப் பெற்றிருத்தல் வேண்டும், ஏனெனில் திருவலஞ்சுழியிலுள்ள ஒரு கல்வெட்டு சாளுக்கிய விமலாதித்தனை மணந்த இளைய குந்தவையைத் தவிர, மாதேவடிகள் என்பாளை நடு மகளாகக் குறிப்பிட்டுள்ளது. இராசராசனின் படைப்பிரிவுகள் இராசராசனின் படையில் பல்வேறு படைப்பிரிவுகள் இருந்துள்ளன என்பது தஞ்சை கோயில் கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது. அந்தப் படைப்பிரிவுகளின் பெயர்கள்;திருஅசுபதி (மார்ச் 2013) மாத இதழில் வெளியான சோழ சாம்ராஜ்ஜியத்தில் ராஜராஜீஸ்வரம் கட்டுரை பெருந்த நாட்டு ஆனையாட்கள் பண்டித சோழ தெரிந்த வில்லிகள் உத்தம சோழ தெரிந்த வில்லிகள் நிகரிலி சோழ தெரிந்த உடநிலை குதிரைச் சேவகர் மும்மடி சோழ தெரிந்த ஆணைப்பாகர் வீர சோழ அனுக்கர் பராந்தக கொங்காவலர் மும்மடி சோழ தெரிந்த பரிவாரத்தார் கேரளாந்தக தெரிந்த பரிவாரத்தார் செனநாத தெரிந்த பரிவாரத்தார் சிங்களாந்தக தெரிந்த பரிவாரத்தார் சிறுதநாட்டு வடுக காவலர் வலங்கை வேலைக்காரர் பெருந்தநாட்டு வலங்கை வேலைக்காரப் படைகள் அழகிய சோழ தெரிந்த வலங்கை வேளைக்காரர் அரிதுகலங்கன் தெரிந்த வலங்கை வேளைக்காரர் சண்டபராகிரம தெரிந்த வலங்கை வேளைக்காரர் திரய சிகாமணி தெரிந்த வலங்கை வேளைக்காரர் மூர்த்த விக்கிரமபரண தெரிந்த வலங்கை வேளைக்காரர் நித்த வினோத தெரிந்த வலங்கை வேளைக்காரர் இராச கந்திரவ தெரிந்த வலங்கை வேளைக்காரர் இராசராசன் தெரிந்த வலங்கை வேளைக்காரர் இரானாமுக பீம தெரிந்த வலங்கை வேளைக்காரர் விக்கிரமபரண தெரிந்த வலங்கை வேளைக்காரர் கேரளாந்தக வாசல் திருமெய்க்காப்பாளர் அனுக்க வாசல் திருமெய்க்காப்பாளர் பரிவார மெய்க்காப்பாளர்கள் பலவகை புறம்படிகாவலர் அதிகாரிகளும் திறை செலுத்திய குறுநில மன்னர்களும் இராசராசன் சோழனுடைய அதிகாரம் கங்க, வேங்கி மண்டலங்களிலும் கங்க நாட்டு மன்னனுக்குத் திறை செலுத்திய குறுநில மன்னர்கள் மீதும் பரவியிருந்தது. மும்முடிச் சோழன் என்றழைக்கப்பட்ட பரமன் மழபாடியார் என்னும் படைத்தலைவன் சீத்புலி, பாகி ஆகிய நாடுகளை வென்றவன். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், பழுவூரைச் சுற்றியுள்ள சிறுபகுதி ஒன்றின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்தவர் பழுவேட்டரையர் என்பவர்களாவார். இவர்கள் சோழ குடும்பத்திற்கு நெருங்கிய உறவினராக இருந்தனர். முதலாம் பராந்தக சோழன் பழுவேட்டரையரின் இளவரசியை மணந்திருந்தான். இராசராசனுக்குத் திறை செலுத்திய பழுவூர்க் குறுநில மன்னனான அடிகள் பழுவேட்டரையன் கண்டன்மறவன் என்பவன் குறுநில மன்னர்களுக்கு உரிய சிறப்புக்களையும் பெற்று ஆட்சி செய்து வந்தான். மதுராந்தகன் கண்டராதித்தன் உத்தம சோழனின் மகன் ஆவான், இராசராசன் ஆட்சியில் இவன் கோயில்களைக் கண்காணித்து, அவற்றில் தவறிழைத்தவர்களை விசாரித்து, தண்டித்து, எதிர்காலத்தில் தவறிழைக்காதபடி நல்ல நிலையில் பாதுக்காகும் ஏற்பாடுகளைச் செய்தான். வைதும்பர்களைப் போன்று, முதலாம் பராந்தகனிடம் தோல்வியுற்ற வாணர்களும், சோழர்களுக்குக் கட்டுப்பட்டு அவர்களது நிர்வாகத்தில் முக்கிய அதிகாரிகளாகப் பங்கேற்றனர். மாறவன் நரசிம்மவர்மன் என்ற வாண மன்னன் தென் ஆற்காடு மாவட்டத்தில் செம்பையை அடுத்த பகுதிகளை இராசராசனது இறுதிக் காலத்தில் ஆட்சி செய்தான். thumb|பெருவுடையார் கோவிலில் இராசராச சோழனின் சிலை thumb|தஞ்சைப் பெரிய கோயில், ஒரு தோற்றம் இராசராசன் பற்றிய புனைவு ஆக்கங்கள் இராஜராஜ சோழன் - கலைமாமணி ஆர்.ராமநாதன் என்பவரால் எழுதப்பட்ட நாடக பிரதி. இந்த மேடை நாடகபிரதியே பின்னர் சிவாஜி கணேசன் நடிப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்நாடகப்பிரதி நூல்வடிவாக பிரேமா பிரசுரம் சென்னை-24 ஆல் வெளியிடப்பட்டுள்ளது. தென்னிந்திய பல்கழைக்கழகங்களில் அங்கீகரிக்கப்பட்ட Study Material ஆகவும் இந்நூல் காணப்படுகின்றது. பொன்னியின் செல்வன் - கல்கி கிருஷ்ணமூர்த்தியால் எழுதப்பட்ட வரலாற்று நாவல் இதில் அருண்மொழிதேவன் எனும் இயற்பெயருடன் இராச இராசனின் இளமைப்பருவம் பற்றிய தகவல்களுடன் நாவல் எழுதப்பட்டுள்ளது. உடையார் – பாலகுமாரனால் எழுதப்பட்டது. இராச இராசன் பேரரசனான பின்னர் நடந்த நிகழ்வுகளைப்பற்றி குறிப்பிடுகின்றது. காந்தளூர் வசந்தகுமாரன் கதை - சுஜாதாவால் எழுதப்பட்டது. இராசராசன் காலத்தில் காந்தளூர் சாலையில் இடம்பெற்ற போர் பற்றிய நிகழ்வுகளை குறிக்கின்றது. சேரர் கோட்டை (புதினம்) - கோகுல் சேஷாத்ரியால் எழுதப்பட்ட இந்த வரலாற்று நாவல், இராசராசனின் முதற் போரான சேரநாட்டுக் காந்தளூர்ச் சாலை படையெடுப்பை விரிவாகச் சித்தரிக்கின்றது ராஜா ராஜா சோழன் - ச .ந .கண்ணன் எழுதிய புத்தகம் , கிழக்கு பதிப்பகம் வெளியீடு காவிரி மைந்தன் (அனுஷா வெங்கடேஷ்) இராஜகேசரி - கோகுல் சேஷாத்ரியால் எழுதப்பட்ட இந்த வரலாற்று நாவல், இராசராசர் தஞ்சைப் பெரிய கோயிலை கட்டிக்கொண்டிருக்கும் காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது வேங்கையின் மைந்தன் (அகிலன்) இராச இராசன் சமாதி முதலாம் இராச இராச சோழனின் நினைவிடம் (பள்ளிப்படை) தஞ்சாவூர் மாவட்டம், பட்டீச்சரம் அருகே உள்ள உடையாளூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சவன்மாதேவீச்சரம் முதலாம் இராசராச சோழனின் தேவியும், பழுவேட்டரையரின் திருமகளுமாகிய பஞ்சவன்மாதேவியார் சிவனடி சேர்ந்தபின்பு அவ்அம்மையாரை பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளியே பஞ்சவன்மாதேவீச்சரமாகும். இராசேந்திர சோழன் எடுத்த இக்கற்கோயில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.குடவாயில் பாலசுப்பிரமணியன், பழையாறை மாநகர், பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999 மரபுரிமை பேறுகள் thumb|இராஜராஜ சோழன் அஞ்சல் தலை, 1995 கவிஞர் மற்றும் எழுத்தாளர் பாலகுமாரன் இராஜராஜ சோழனின் வரலாற்றை உடையார் எனும் புதினமாக படைத்துள்ளார். 1995ஆம் ஆண்டில் இந்திய அஞ்சல் துறை இராஜராஜ சோழனின் அஞ்சல் தலை வெளியிட்டது. 2014இல் இராஜராஜ சோழன் முடிசூட்டிக் கொண்ட 1000வது ஆண்டை நினவு கூற இந்தியக் கடற்படை விழா கொண்டாடியது. Navy to commemorate Tamil King Rajendra Chola's 1000th-year of coronation இராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு அரசு 2022ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடுகிறது. இராஜராஜ சோழன் பிறந்தநாள் 2022ஆம் ஆண்டு முதல் அரசு விழாவாகும் இவற்றையும் பார்க்கவும் உத்தம சோழன் இராசேந்திர சோழன் சோழ நாடு சோழர் பஞ்சவன்மாதேவீச்சரம் மேற்கோள்கள் வெளி இணைப்புக்கள் பகுப்பு:இடைக்காலச் சோழ அரசர்கள் பகுப்பு:சோழர் பகுப்பு:1014 இறப்புகள் பகுப்பு:947 பிறப்புகள் பகுப்பு:இந்தியப் பேரரசர்கள்
தஞ்சைப் பெரிய கோயில்
https://ta.wikipedia.org/wiki/தஞ்சைப்_பெரிய_கோயில்
வழிமாற்று தஞ்சைப் பெருவுடையார் கோயில்
உத்தம சோழன்
https://ta.wikipedia.org/wiki/உத்தம_சோழன்
உத்தம சோழன், பொ.ஊ. முதல் பொ.ஊ. வரை சோழ நாட்டை ஆண்ட கண்டராதித்த சோழனின் மகனாவார். கண்டராதித்தர் இறந்தபின், இவருக்குப் பதிலாகக் கண்டராதித்தரின் தம்பி அரிஞ்சய சோழனின் மகன், இரண்டாம் பராந்தகன் என அழைக்கப்பட்ட சுந்தர சோழன் பதவிக்கு வந்தார். 16 ஆண்டுகள் ஆட்சி புரிந்த பராந்தகனின் இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது. இவர் ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தார். இவர் மதுராந்தகன் என்று மற்றொரு பெயரிலும் அழைக்கப்பட்டார். இவரைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழ அரசன் இராசராச சோழன் அரியணை ஏறினார். இவர் அரசுக்கட்டில் ஏறுவதற்கு முன்பே காஞ்சி வரையுள்ள தொண்டைமண்டலம் சோழர் ஆட்சிக்குட்பட்டு விட்டது. ஆதித்த கரிகாலனுடைய கல்வெட்டுகள் உத்திரமேரூர், காஞ்சிபுரம், தக்கோலம், ஆரணி, திருவண்ணாமலை முதலிய இடங்களில் மிகுதியாகக் கிடைத்துள்ளன. இக் கல்வெட்டுகள் நிலவிற்பனை, அறச்செயல், திருப்பணி, அரசியல் தொடர்பானவையாகக் காணக்கிடத்தலின், ஆதித்தன் காலத்திலேயே தொண்டை நாட்டில் அமைதி உண்டாகி விட்டதென்பதை அறியலாம். உத்தம சோழன் காலத்திய கல்வெட்டுகள் பலவும் செப்பேடு ஒரு தொகுதியும் கிடைத்துள்ளன. இவர் பரகேசரி என்னும் பட்டம் பெற்றவர். பெயரின்றிப் ‘பரகேசரி’ என்பது மட்டுமே கொண்டுள்ள கல்வெட்டுகள் எல்லாம் இவர் காலத்தனவே என்று சில சான்றுகள் கொண்டு ஆராய்ச்சியாளர் துணிகின்றனர். சோழர் நாணயங்களில் இவர் காலத்தவைவே பழைமையானவையாகும். இவர் காலத்து பொற்காசு ஒன்று கிடைத்தது. அதன் இருபுறங்களும் ஒருபடித்தாகவே இருக்கின்றன, நடுவில் ஒரு புலி உட்கார்ந்து கொண்டு வலப்புறமுள்ள மீனை நோக்குகிறது. நாணயத்தைச் சுற்றிலும் உத்தம சோழன் பெயர் கிரந்த எழுத்துகளிற் குறிக்கப்பட்டுள்ளது. அப்பொற்காசு 40 முதல் 60 குன்றிமணி நிறையுள்ளது என்று நாணய ஆராய்ச்சியாளரான எலியட் கூறியுள்ளார்.Vide his ‘coins of Southern India’ p. 132, No. 151. கொங்குமண்டலத்தில் படைத்தலைவன் கொங்கு நாட்டில் இவருக்குப் படைத்தலைவனாக விளங்கிய ஒருவருக்கு இந்த வேந்தன் தன் பெயரை விருதுப் பெயராக அணிந்துகொள்ள ஒப்புதல் வழங்கினார். மேலும் பட்டவர்த்தனன் என்னும் பட்டப்பெயரையும் வழங்கினார். இதனால் இப் படைத்தலைவன் பெயர் பட்டவர்த்தனன் உத்தமச்சோழன் என வழங்கப்படலாயிற்று.இத்தரை மீதினில் சேனாபதியாய் இருந்து வெற்றி ஒத்து வரப்பெற்றதற்காத் தனக்கு இங்குறு பெயராம் உத்தமச்சோழன் என்று அன்பாத் தரப்பெறும் ஓங்கு பட்ட வர்த்தனன் வாழ்வுறும் ஆணூர் திகழ் கொங்கு மண்டலமே. 87 கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்கு மண்டல சதகம், சாரதா பதிப்பகம், 2008, முனைவர் ந. ஆனந்தி தெளிவுரை இறப்பு உத்தம சோழன் பொ.ஊ. 985-ஆம் ஆண்டில் இறந்தார். அவருக்கு குறைந்தபட்சம் ஒரு மகனாவது (மதுராந்தகன் கண்டராதித்தன்) இருந்தார். இருந்தாலும் ஆட்சி உரிமை இரண்டாம் பராந்தக சோழன் குடும்பத்திற்கு சென்று விட்டது. உத்தம சோழனுக்குப் பின்னர் இராசராச சோழன் அரசன் ஆனார். மதுராந்தக கண்டராதித்தர் இராசராச சோழன் அவையில் அதிகாரியாக பணி செய்தார். கதைகள் இவரது கதாபாத்திரத்தைக் கொண்ட கதைகளில் புகழ் பெற்றவை பொன்னியின் செல்வன். மேற்கோள் பகுப்பு:இடைக்காலச் சோழ அரசர்கள் பகுப்பு:985 இறப்புகள் பகுப்பு:இந்திய அரசர்கள்
திருவாசகம்
https://ta.wikipedia.org/wiki/திருவாசகம்
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.https://web.archive.org/save/http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202135.htm இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன. திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது இதன் சிறப்பை உரைக்கும் பழமொழி. அமைப்பு திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன. இந்நூலில் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன. சிவபுராணம், கீர்த்தித் திருவகவல், திருவண்டப்பகுதி, போற்றித் திருவகவல் என்னும் நான்கு பெரும் பகுதிகள் இதில் உள்ளன. இவற்றைத் தொடர்ந்து திருச்சதகம் 100 பாடல்களும், நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களையும், திருவெம்பாவை 20 பாடல்களையும், திருவம்மானை 20 பாடல்களையும் கொண்டது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரையுள்ள ஆறு பகுதிகள் 20 பாடல்களைக் கொண்டுள்ளன. மற்றவை பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகங்களாக உள்ளன. சிறப்பு மாணிக்கவாசகரின் இந்நூலினைப் பல சமயத்தவரும் புகழ்ந்துள்ளனர். மாணிக்கவாசகர் எழுதி தில்லையில் இறைவனிடம் வைக்க அவரே கையெழுத்தினை இட்டதாகக் கூறுவர். தமிழில் திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் எனும் பழமொழி உள்ளது. மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம்; தெய்வம் (கண்ணன்) மனிதனுக்கு (அர்ச்சுனன்) கூறியது கீதை; மனிதன் (திருவள்ளுவர்) மனிதர்களுக்குக் கூறியது திருக்குறள் என்றொரு மூதுரையும் தமிழில் உள்ளது. "பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் சிறப்புடையது. (10-ஆவது திருமுறை). ஆனால், அதைவிட சிறப்புடையதும் சிகரமானதும் திருவாசகமே' - திருமுருக கிருபானந்த வாரியார்.https://web.archive.org/save/http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=11390 இசை வடிவில் இந்நூல், மனிதனின் உள்ளத்தில் புகுந்துள்ள சிற்றியல்புகள், அவற்றைக் களையும் முறைகள், இறையாகிய பரம்பொருளை நாடுகிறவர்கள் பெறவேண்டிய பேரியல்புகள், அவற்றை வளர்க்கும் முறைகள், அருள் வேட்கை கொள்ளல், அருளைப் பெறல், அதில் ஆழ்ந்து தோய்தல், இறைவனைக் காணல், அவனோடு தொடர்பு கொள்ளல், அவனிடமிருந்து பெறவேண்டியதைப் பெறுதல், பக்தியைப் பெருக்குதல், அது இறை பக்தியாக வடிவெடுத்தல், இறையுடன் இரண்டறக் கலத்தல் ஆகியவற்றை முறையாகக் கூறுகிறது. திருவாசகத்திற்குத், தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார் இளையராஜா. இவற்றையும் காண்க சிவபுராணம் மேற்கோள்கள் Thiruvasagam (Tamil) by Manikkavasaga Swamigal (Author) வெளி இணைப்புகள் மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள திருவாசகத் தொகுப்பு-1தொகுப்பு-2 திருவாசக உரை திருவாசக உரை - விக்கி நூல்கள் திருவாசகம் ஆன்டிராய்டு இயங்குதளத்தில் பகுப்பு:சைவத் திருமுறைகள் பகுப்பு:பக்தி இயக்கம்
ஐக்கிய தேசியக் கட்சி
https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_தேசியக்_கட்சி
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க, United National Party, ) இலங்கையின் மிகப் பழைய அரசியல் கட்சிகளில் ஒன்றும், தற்போது ஆட்சி அமைக்கக்கூடிய நிலையிலுள்ள இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்றுமாகும். 1948 இலங்கை விடுதலை பெற்ற பின்னர் முதலாவது அரசை அமைத்ததுடன் பின்னரும் பல தடவைகளில் ஐ.தே.க. ஆளும் கட்சியாக இருந்துள்ளது. இக் கட்சியின் முதல் தலைவரும், முதல் சுதந்திர அரசின் பிரதமராகவும் இருந்தவர் டி. எஸ். சேனாநாயக்க ஆவார். கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். இவரின் தலைமையின் கீழேயே கட்சி 2002 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. ஆயினும் அதற்குப்பின் வந்த இரண்டு தேர்தலிலும் கட்சி தோல்வி அடைந்தது. மேற்கோள்கள் பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்
மகாவம்சம்
https://ta.wikipedia.org/wiki/மகாவம்சம்
மகாவம்சம் (Mahawamsa or Mahawansa) (பாளி மொழி: மஹாவம்ச அல்லது மஹாவங்ச) சுருக்கமாக. Mhv.Malalasekera, Dictionary of Pali Proper Names: Pali-English, p. xvi, retrieved Sept. 19, 2010, from "Google Books" at http://books.google.com/books?id=LEn9i9pnRHEC&pg=PR16&lpg=PR16&dq=Mhv+%2BMahavamsa&source=bl&ots=5Yuh9FVCCy&sig=D-jBgZuXw8chZovrlwBfXtywCdY&hl=en&ei=FUGWTN-uG8Pflgfb1aCkCg&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CBcQ6AEwAA#v=onepage&q=Mhv%20%2BMahavamsa&f=false . அல்லது Mhvs.Rhys Davids & Stede (1921–25), Pali Text Society's Pali English Dictionary, "B. List of Abbreviations," retrieved Sept. 19, 2010, from "U. Chicago" at http://dsal.uchicago.edu/dictionaries/pali/frontmatter/abbreviations.html . என்பது இலங்கை வரலாற்று தகவல்களை உள்ளடக்கி, அதேவேளை பௌத்த மதத்தை முதன்மைப் படுத்தி பௌத்த பிக்குகளினால் பாளி மொழியில் ஏட்டுச்சுவடிகளில் செய்யுள் வடிவில் காலவரிசையாக குறித்து வைப்பட்டவற்றை மூலமாகக்கொண்டு, தொகுக்கப்பட்ட இலங்கையின் பழமையான தொகுப்பு நூலாகும். இது இதற்கு முந்திய தொகுப்பு நூலான தீபவம்சம் எனும் நூலை தழுவி தொகுக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த நூல் பொ.ஊ. 6ம் நூற்றாண்டளவில், பாளி மொழியில், மகாநாம தேரர் எனும் பௌத்த பிக்குவினால் தொகுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. அதனடிப்படையில் மகாவம்சம் நூலின் உரிமையாளர் மகாநாம தேரர் ஆகும். இதனை இலங்கையின் வரலாற்று ஆவணமாக சிங்கள பௌத்த பெரும்பாண்மை மக்கள் கூறிவந்தாலும், முழுமையான ஒரு வரலாற்று ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனும் கருத்து வரலாற்றாசிரியர்களிடையே உள்ளன. அதேவேளை இலங்கையில் வரலாற்று குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றிருப்பதனால், மகாவம்சம் நூலைத் தவிர்த்துவிட்டு இலங்கையில் வரலாற்றை ஆய்வுசெய்ய முடியாது எனும் கருத்தும் வரலாற்றாசிரியர்களிடையே உள்ளன. இந்த நூல் மகத நாட்டில் உருவெல எனும் இடத்தில் அரச மரத்தடியில் கௌதம புத்தர் அமர்ந்திருந்த வேலை; "பௌத்தம் வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கை என்றும், இலங்கையின் பூர்வக் குடிமக்களான இயக்கர்களை அங்கிருந்து அகற்றி, இலங்கையில் பௌத்த மதத்தை தோற்றுவித்து புனிதப்படுத்த வேண்டும் என்றும் எண்ணம் புத்தருக்கு புலனாகுகிறது" எனும் பௌத்த கற்பனைக் கருத்துருவாக்கத்தில் இருந்து தொடங்குகிறது. இப்படியான கற்பனை கருத்துருவாக்கங்கள் மகாவம்சத்தில் நிறையவே உள்ளன. இவ்வாறான கருத்துருவாக்கங்களே இலங்கை தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது எனும் எண்ணக்கரு சிங்கள மக்களின் மனங்களில் ஆழப்பதிந்து போயுள்ளமைக்கான காரணமாகவும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கான ஆணிவேராகவும் பார்க்கப்படுகின்றது. அத்துடன் பொ.ஊ.மு. 543ம் ஆண்டு இந்தியாவில் இருந்து விஜயன் எனும் ஒரு இளவரசன் வந்தான் என்பது முதல், பொ.ஊ. 361ம் ஆண்டு மகாசேனனின் என்பவன் ஆட்சி செய்தான் என்பது வரை இலங்கையின் வரலாற்று குறிப்புகளையும் காலவரிசையாக மகாவம்சம் விவரிக்கின்றது. மகாநாம தேரரால் பாளி மொழியில் தொகுக்கப்பட்ட மகாவம்சம் நூலினை மூலமாகக் கொண்டு, ஆங்கில மொழியில் 1837ம் ஆண்டு முதல் அச்சுப் பதிப்பு வெளியிடப்பட்டது. இந்த அச்சுப்பதிப்பு இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தகாலத்தில் இருந்த, சிலோன் சமூக பணியகம் எனும் பணியகத்தில் பணிப்புரிந்த பணியாளரும் வரலாற்றாசிரியரும் ஆன ஜோர்ஜ் டேனர் என்பவர் வெளியிடப்பட்டார். அதன்பின்னர் 1912ம் ஆண்டு வில்ஹெய்ம் கெய்கர் என்பவர், மாபெல் ஹெய்னஸ் போட் என்பவரின் உதவியுடன் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்ப்பு ஒன்றை செய்தார். அதேவேளை வில்ஹெய்ம் கெய்கர் அதற்கு முன்னதாகவே பாளி மூலத்தில் இருந்து ஜெர்மன் மொழிக்கு மொழிப்பெயர்ப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாறு பொ.ஊ.மு. 247-207 வரை இலங்கையை ஆட்சி செய்த தேவநம்பிய தீசன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டே ஆட்சி செய்தான். அவனது ஆட்சி காலத்திலேயே பௌத்தம் இலங்கையில் அறிமுகமானது. அவனால் பௌத்த பிக்குகளுக்காக ஒரு மகாவிகாரை நிறுவப்பட்டது. அந்த மகாவிகாரையில் இருந்த பௌத்த பிக்குகளும் ஏனைய விகாரைகளில் இருந்த பிக்குகளும்; பௌத்தத்தின் தோற்றம், இலங்கையில் பௌத்தத்தின் வளர்ச்சி, பௌத்ததிற்கு ஆதரவளித்த அரசர்கள், மற்றும் அவர்கள் பௌத்த மதத்திற்கு ஆற்றிய பணிகள் போன்ற தகவல்களை காலவரிசையாக செய்யுள் வடிவில் ஏட்டுச்சுவடிகளில் குறித்தும், அவற்றை வாய்மொழியாக பேணியும் வந்துள்ளனர். அவற்றையே அட்டகத்தா என்றழைக்கப்பட்டது. பின்னர் இவ்வாறு பல்வேறு விகாரைகளில் இருந்த ஏட்டுச்சுவடிகளை (அட்டகத்தாக்களை) மகாவிகாரையில் இருந்த பௌத்தப்பிக்குகள் ஒருங்கிணைத்து அதனை அட்டகத்தா மகாவம்சம் என அழைக்கலாயினர். இந்த அட்டகத்தா மகாவம்சத்தை மூலமாகக் கொண்டே பொ.ஊ. 4ம் நூற்றாண்டளவில் தீபவம்சமும், பொ.ஊ. 6ம் நூற்றாண்டளவில் மகாவம்சமும் தொகுக்கப்பட்டுள்ளன. தீபவம்சம் மகாவம்சம் அட்டகத்தாக்களை மூலமாகக்கொண்டு ஒருங்கிணைத்தே தீபவம்சம் 4ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டுள்ளது என்றாலும், அதன் காலம் குறித்து அறுதியிட்டு கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் தீபவம்சம், அது 4ம் நூற்றாண்டளவில் முற்றுப்பெற்றிருக்க வேண்டும் என வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்த தீபவம்சம் யாரால் தொகுக்கப்பட்டது எனும் தகவல்கள் இல்லை. அதனால் அதன் ஆசிரியர் யார் என்றும் கூறமுடியாமல் உள்ளது. இருப்பினும் இந்த தீபவம்சத்தை மூலமாகக் கொண்டே மகாவம்சம் உருவாகியுள்ளதாக வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தீபவம்சத்தில் 37 பகுதிகள் இருப்பது போன்றே, மகாவம்சமும் 37 பகுதிகளைக் கொண்டுள்ளன. அதேவேளை மகாவம்சத்தில் காணப்படும் "விஜயனின் வருகையுடன் தொடர்புடைய குவேனி பாத்திரம்" தீபவம்சத்தில் இல்லை என்பதை கலாநிதி க. குணராசா தனது மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார். மகாநாம தேரரின் மகாவம்சம் இந்த தீபவம்சத்தை தழுவியே மகாநாம தேரர் எனும் பௌத்த பிக்குவினால் மகாவம்சம் தொகுக்கப்பட்டுள்ளதாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர். அதேவேளை மகாவம்சம் நூல் தீபவம்சம் நூலையும் விட எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் காலவரிசைப்படி செய்யுள்களாக தொகுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மகாவம்சம் 6ம் நூற்றாண்டளவில் தொகுக்கப்பட்டதாக கருதப்படுகின்றது. ஆங்கில மொழிப்பெயர்ப்பு இதனையே வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிப்பெயக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டதாகும். பௌத்தம் போற்றல் மகாவம்சம் நூலை வரலாற்று நூலாக ஏற்க முடியாமைக்கான காரணங்களை பல மேற்கத்தைய, சிங்கள, தமிழ் வரலாற்றாசிரியர்கள் முன்வைத்துள்ளனர். அத்துடன் மகாவம்சம் நூலை தொகுத்தவரான மகாநாம தேரர் எந்தவொரு இடத்திலும் தன்னை வரலாற்று ஒரு ஆசிரியராகக் குறிப்பிடவில்லை என்றும் அவர் ஒரு பௌத்தப் பிக்குவாக பௌத்த மதத்தை ஆதரிக்கும் நோக்குடனேயே தொகுத்துள்ளாகவும் கூறப்படுகின்றது.http://www.youtube.com/watch?v=K2F_YqAqqtw&feature=related விஜயனின் வருகை விஜயன் எனும் ஒருவரின் வருகைத் தொடர்பான சான்றுகளோ, அப்படி ஒருவன் இலங்கையை ஆட்சி செய்தமைக்கான எவ்வித ஆதாரங்களோ எங்கும் இல்லை. அதேவேளை இலங்கையின் முதல் அரசனாக சித்தரிக்கும் அதே மகாவம்ச தொகுப்பு நூலில், விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் அரசமைத்து இயக்கர் நாக இனத்தவர்கள் (அரவர்கள்~தமிழர்கள்) வாழ்ந்ததான குறிப்புகள், இலங்கையின் முதல் அரசன் விஜயன் எனும் கூற்றை நம்பகமற்றதாக செய்கின்றது என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். மகாவிகாரைச் சார்ந்த பௌத்தபிக்குகள் பொ.ஊ.மு. 3ம் நூற்றாண்டிலிருந்து இலங்கையில் நிகழும் வரலாற்றுச் சம்பவங்களை தினக்குறிப்பேடு போன்று எழுதி பராமரித்து வந்தனர்.இவ் ஏடே பொ.ஊ. 5ம் நூற்றாண்டில் 'மகானாம' எனும் பௌத்தபிக்குவால் ஒன்றுபடுத்தி தொகுத்து மகாவம்சம் எனும் நூலாக வெளிப்பெற்றது. இவர் இலங்கை அரசன் தாதுசேனனின் சகோதரராவார். இவருடைய காலத்துக்கு ஐந்து நூற்றாண்டுகள் முந்திய வரலாற்று நூலான தீபவம்சத்தை சார்ந்தே நூலை தொகுத்துள்ளார். இந் நூல் முழுமையாக பௌத்தமத கண்ணோட்டத்திலே இலங்கையின் வரலாற்றை கூறிச்செல்கின்றது. மகாவம்சத்தின் தொடர்ச்சியாக பல பௌத்தபிக்குகளால் எழுதப்பட்ட சூள வம்சம் எனும் நூல் பொ.ஊ. 4ம் நூற்றாண்டு முதல் பிரித்தானியர் முழு இலங்கையை கைப்பற்றிய ஆண்டான 1815 வரை நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களை விபரிக்கின்றது. மகாவம்சம் ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவற்றையும் பார்க்கவும் இலங்கையின் வரலாறு இலங்கை வரலாற்று நூல்கள் தீபவம்சம் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் மகாவம்சம் சுருக்க மொழிபெயர்ப்பு - தமிழில் மகாவம்சம், நூலகத் திட்டத்தில், தமிழில்: எஸ். சங்கரன், 1962, சென்னை மகாவம்சம் - தமிழ் நூல் பகுப்பு:மகாவம்சம் பகுப்பு:தமிழர் பற்றி உள்ள அயல்நாட்டார் ஆவணங்கள் பகுப்பு:இலங்கையில் பௌத்தம் பகுப்பு:பௌத்த இலக்கியங்கள்
ஏர்
https://ta.wikipedia.org/wiki/ஏர்
right|thumb|353px|ஏர் right|thumb|353px|மரபு முறையில் ஏர் உழும் இரு இங்கிலாந்து ஷைர் குதிரைகள் right|thumb|மரபான ஏர் உழவு: உழவர் குதிரைகளையும் ஏரையும் பயன்படுத்தி மண்ணைப் பண்படுத்துகிறார் thumb|13 ஆம் நூறாண்டில் உழவர் ஏருழுதல் ஓவியம், எசுபானிய அரசு நூலகம் thumb|மாடுபூட்டிய ஏருழவு thumb|தென்னாப்பிரிக்காவில் ஏருழும் இழுபொறி. இதி ஐந்து திரும்பவியலாத வார்பலகைகள் உள்ளன. ஐந்தாவதாக இடதே உள்ள காலியான சால் அடுத்த எதிருழவின் முதல் சாலின்போது நிரப்பப்படும். ஏர் அல்லது கலப்பை () (plough) அல்லது plow இரண்டுமே ) என ஒலிக்கும். ஏர் என்பது ஒரு கருவி அல்லது உழவுக்கருவியாகும். இது உழவுத்தொழிலில் தொடக்கநிலையில் வயலின் மண்ணை உழுது அல்லது பதப்படுத்தி (பண்படுத்தி) விதைப்பின் முன்பும் நடவின் முன்பும் மண்ணைத் தளர்வாக்கி கீழ்மேலாகக் கிளறப் பயன்படுகிறது. மரபாக ஏர் மாடுகளை அல்லது குதிரைகளைப் பூட்டி உழப்பட்டன. ஆனால் அண்மையில் இழுபொறிகளால் இயக்கப்படுகின்றன. ஏர் மரத்தாலோ இரும்பாலோ அல்லது எஃகுச் சட்டத்தாலோ செய்து, அதில் கூரிய அலகைப் பூட்டி மண்ணை கிண்ட பயன்படுத்தப்படுகிறது. இது பல எழுத்தறிந்த வரலாறுகளில் அடைப்படைக் கருவியாக இருந்தும், ஆங்கிலத்தில் இது கி.பி1100 க்குப் பின்னரே வழங்கிவருகிறது. அதற்குப் பிறகு இது அடிக்கடி வழக்கில் புழங்கியுள்ளது. ஏர் மாந்தரின் வரலாற்றைப் புரட்சிகரமாக மாற்றிய வேளாண்கருவி ஆகும். ஏர்கள் வேளாண்மைக்கு மட்டுமன்றி கடலடி கம்பிவடங்கள் பதிப்பதற்கும் எண்ணெய்வளங்கள் கண்டுபிடிப்பதற்கும் உதவுகின்றன. ஏர்கொண்டு உழுதலின் நோக்கமே மேல்மண்ணை புரட்டி வளமான சத்துமிக்க அடிமண்ணை மேற்பரப்புக்குக் கொண்டுவருவதேயாகும். அதேநேரத்தில் உழுதல் களையையும் முன்பயிரிட்ட எச்சங்களை அடியில் புதைத்து அவற்றைச் சிதையச் செய்கிறது. ஏரால் உழும்போது ஏற்படும் உழவு சால்களில் வளமண் பொதிந்தமையும். உழுத வயல் உலரவிடப்படும். பின்னர் நடவுக்கு முன் பரம்படிக்கப்படும். உழுது பண்படுத்தல் மண்ணை ஒருசீராக்கி மேலே அமைந்த 12 முதல் 25 செ.மீ ஆழ உழுத அடுக்கு மண்ணை நடவுக்கு முன் உருவாக்கும். பலவகை மண்களில் பயிரின் வேர்கள் உழுத அடுக்கு மேல்மண்னிலேயே அமையும். முதலில் மாந்தரே ஏரை இழுத்து உழுதாலும் பின்னர் விலகுகளைப் பூட்டி உழவு செய்யப்பட்டதும் ஏருழவு திறம்பட நடந்த்து. முதலில் எருதுகளைப் பூட்டி எரால் உழவு செய்துள்ளனர். பின்னர் குதிரைகள், கோவேறு கழுதைகளைப் பூட்டியும் உழவு நடந்துள்ளது. பிறகு இதற்கு பலவகை விலங்குகளை இடத்திற்கு ஏற்ப பூட்டி உழவு செய்யப்பட்டுள்ளது. தொழில்மயமாகிய நாடுகளில், முதல் எந்திரவகை ஏர் நீராவிப் பொறிகளைப் பூட்டிய இழுபொறிகளால் உழப்பட்டுள்ளது. ஆனால் இவை மெல்ல மெல்ல உள்ளெரி பொறிகள் பூட்டிய இழுபொறிகளால் பதிலீடு செய்யப்பட்டன. அயர்லாந்தில் உழவுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் தரப்படுகின்றன. மண்சரிவும் அரிப்பும் ஏற்படும் பகுதிகளிலும் மேல்மண் உழவு நுட்பங்கள் பயன்படும் பகுதிகளிலும் வர வர ஏர் உழவு குறைந்துகொண்டே வருகிறது. மரத்தினால் செய்யப்பட்ட இக்கருவி நுகம், கருவுத்தடி, மேழி, முட்டி, கலப்பைக்கயிறு, கன்னிக்கயிறு (கழுத்துக்கயிறு) எனும் பகுதிகளால் ஆனது. இரண்டு எருதுகளால் (மாடுகளால்) இழுத்துச் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது கலப்பை. பல நூற்றாண்டுகளாக உழவர்களால் கலப்பை பயன்படுத்தப்படுகிறது. கலப்பையால் ஓர் அடி ஆழம் வரை உழ முடியும். கலப்பைகள் மூன்று வகைப்படும்: மரத்தினாலான கலப்பை (நாட்டுக் கலப்பை), இரும்பு அல்லது மண் புரட்டும் கலப்பை (வளைப்பலகைக் கலப்பை, சட்டிக் கலப்பை, ஒரு வழிக் கலப்பை) மற்றும் சிறப்பு கலப்பைகள் (ஆழக்கலப்பை, உளிக்கலப்பை, சால் கலப்பை, சுழல் கலப்பை, குழிப்படுக்கை அமைக்கும் கருவி). தொழிற்புரட்சி ஏற்பட்டு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு உழுவுந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. சொற்பிறப்பியல் thumb|ஏரால் உழுதல். பழைய ஆங்கிலத்திலும், பிற ஜெர்மானிய மொழிகளிலும் மரபாக ஏருக்குப் பல பெயர்கள் வழங்குகின்றன. எடுத்துகாட்டாக, பழைய ஆங்கிலத்தில் சுல்கு ( sulh) எனவும் பழைய உயர்ஜெமானியத்தில் மெடெலா ( medela) கீசா ( geiza) குவோகிலின் ( huohilī(n)) ஆகிய பெயர்களாலும் பழைய நோர்சு மொழியில் ஆர்திர் ( arðr) எனவும் சுவீடிய மொழியில் ஆர்தெர் ( årder) எனவும் கோதிக மொழியில் கோகா ( hōha0 எனவும் ஏர் (ard )(plough) வழங்கப்படுகிறது. இன்று வழக்கில் உள்ள plough அல்லது plow எனும் சொற்கள் 1700 வரை ஏர் எனும் சொல்லுக்கு வழங்கவில்லை. ஏருக்கான plough எனும் ஆங்கிலச் சொல் தமிழில் " பள்ளு" என்ற தமிழ் சொல்லில் இருந்தே பிறந்தது.பள்ளு என்றால் "உழவு". உழவன் இப்பூமியில் ஏறி உழுவதால்,பள்ளம் தோண்டுவதால் அது "ஏர்" எனப்பட்டது. ஆனால் ஐரோப்பியர் பழைய நோர்சு சொல்லாகிய plógr என்பதில் இருந்து வந்ததாகவும் இது ஒரு ஜெர்மானியச் சொல்லாகும் கருதுவர். இது அவர்களுக்கு மிகவும் பின்னால் வழக்குக்கு வந்த சொல்லாகும். கோதிக மொழியில் இது இல்லாமையால் இது வட இத்தாலிய மொழிகளில் இருந்து பெற்ற கடன்சொல்லாகக் கருதப்படுகிறது. இதன் வேர்ச்சொல் plaumorati , "wheeled heavy plough" என்ற பொருளைக் குறித்துள்ளது (பிளினிPliny இயற்கை வரலாறு 18, 172). இது இலத்தீன மொழியில் plaustrum "farm cart", plōstrum, plōstellum "cart", and plōxenum, plōximum "cart box" என்ற பொருளில் வழங்கியுள்ளது.C.T. Onions, ed., Oxford Dictionary of English Etymology, s.v. "plough" (Oxford: Clarendon Press, 1996).Webster's Encyclopedic Unabridged Dictionary of the English Language, s.v. "plow" (NY: Gramercy Books, 1996).இச்சொல் முதலில் வடமேற்கு ஐரோப்பாவில் உரோமானியரிடம் ஐந்தாம் நூற்றாண்டில் பெருவழக்கில் இருந்த wheeled heavy plough ஐக் குறித்திருக்கவேண்டும் .Dr. Judith A. Weller, "Agricultural Use", in Roman Traction Systems: accessed 20 April 2012, available at ஓரெல் (2003) என்பார்Orel, Vladimir (2003). A Handbook of Germanic Etymology. Leiden, Netherlands: Brill. s.v. "*plōȝuz". plough எனும் சொல் முந்து இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல்லாகிய *blōkó- என்பதோடு தொடர்புபடுத்துகிறார். இது ஆர்மேனிய மொழியில் peɫem "தோண்டு" எனவும் வேல்சு மொழியில் bwlch "உடை" எனவும் மாறியுள்ளது என்கிறார். உண்மையில் இந்தோ-ஐரோப்பிய சொல். ஏரின் உறுப்புகள் thumb|நிகழ்கால ஏரின் விளக்கப்படம் விளக்கப்படம் (வலது) ஏரின் அடிப்படை உறுப்புகளைக் காட்டுகிறது: நுகம் அல்லது கிடை விட்டம் ஏர்க்கால் குத்துநிலைக் கட்டுபடுத்தி அல்லது சீராக்கி துளறு (கத்தித் துளறு காட்டப்பட்டுள்ளது, ஆனால் வட்டுத் துளறே பெரு வழக்கில் உள்ளது) உளி (முன்கொழு) கலப்பை அல்லது கொழு (முதன்மைக்கொழு) பரம்பு அல்லது வார்பலகை குறிப்பிடப்படாத ஏரின் உறுப்புகளாக சட்டம் பின்வாரி, மண்வாரி, shin, களைப்பலகை, கைப்பிடிகள் ஆகியனவும் உள்ளடங்கும். அண்மை ஏர்களிலும் சில பழைய ஏர்களிலும் கொழுவும் பின்வாரியும் வார்பலகையில் இருந்து பிரித்து வைக்கப்படுகின்றன. எனவே முன்னவற்ரை வார்பலகையை மாற்றாமலே பதிலீடு செய்து மாற்றலாம். சிராய்ப்பு நாட்பட நாட்பட மண்ணோடு தொடர்புள்ள அனைத்து ஏரின் உறுப்புகளும் சிதைகின்றன. வரலாறு thumb|சீனாவின் குபேயில் எருமை பூட்டி ஏருழுதல் கொழுவால் கிளறல் வேளாண்மை முதலில் உருவாகும்போது தோண்டுகழிகளும் கொழுக்களும் (கொளுறுகளும்) பயன்படுத்தி உயர் வள மேல்மண்ணைத் தோண்டிக் கிளறினர். நைல்நதி ஒவ்வோராண்டும் வெள்ளம் வடியும்போதும் மண்னை வளமாக்கியது. இது சால் உழவு வேளாண்மையை வளர்த்தது. இவை ஓரிட்த்தில் மட்டும் தோன்றவில்லை. வேளாண்மை நடந்த அனைத்துப் பகுதிகளிலும் இவை ஒருங்கே உருவாக்கப்பட்டு வழக்கில் இருந்துள்ளன. கொழுவால் உழுத வேளாண்மை வெப்ப, மிதவெப்ப மண்டலங்களில் மரபாக நடைபெற்றுள்ளது. இங்கு கற்பரல் மண்ணிலும் (மணலிலும்) செஞ்சரிவு சாரல்களிலும் கிழங்குப் பயிர்களும் பருமணி கூலங்களும் சற்ரு இடைவெளி விட்டு நட்டுப் பயிரிடப்பட்டன. இப்பகுதிகளுக்கே (குறிஞ்சிப் பகுதிக்கே) மிகப்பொருத்தமானது என்றாலும் இது அனைத்துப் பகுதிகளும் கூட பரவலாகப் பின்பற்றப்பட்டது. கொழுவுக்கௌ மாற்ரக பன்றிகளை விட்டு மேல்மண்ணைக் கிளறிப்போட்டும் சில பண்பாடுகளில் தொடக்கநிலை வேளாண்மை நடந்தேறியது. தமிழகத்தில் இந்த இருவகை வேளாண்மைக்கான செவ்வியல் காலப் பாடல் சான்றுகள் உள்ளன. கீறல்வகை ஏர் thumb|பண்டைய எகுபதியக் கீறல்வகை ஏர், c. கி.மு 1200 . சென்னெதுயெம்மின் கல்லறை மிகப்பழைய வில்வகைக் கீறியில் ஓர் இழுகழி (அல்லது விட்டம்/நுகம்) pierced by a thinner vertical pointed stick called the தலை (அல்லது உடல்) எனும் மெல்லிய குத்துநிலைக் கழி குத்திட்டு அமைய இதன் ஒருமுனையில் பிடி (கைப்பிடி)யும் மறுமுனையில் ஒரு கொழு (அல்லது வெட்டலகு)ம் அமைந்திருக்கும். இந்த வெட்டலகு தினைகளுக்கு ஏற்ற மேல்சாலோட்ட மேல்மண்னில் இழுத்துச் செல்லப்படும். கீறிவகை ஏர் புதுமண்னை நன்கு உழ ஏற்றதல்ல. எனவே கொழு அல்லது துளறு புற்பூண்டுகளை அகற்றும்ப்டி, கொழுவுக்கு முன் ஆழ்சாலோட்ட கையால் கொத்தும் துளறு பயன்படுத்தப்படும்.கீறி சால்களுக்கிடையே கிளறாத மண்னை விட்டுச் செல்வதால், இவ்வகை வயல்கள் நெடுக்குவாட்டிலும் குறுக்கவாட்டிலும் குறுக்கு மறுக்காக உழப்படும். இது கெல்டிக் வகை அல்லது சதுரவகை உழவு எனப்படும்.Lynn White, Jr., Medieval Technology and Social Change (Oxford: University Press, 1962), p. 42. கீறல்வகை உழவு வெள்ளத்தால் ஒவ்வோராண்டும் வெள்லத்தால் வளமாக்கப்படும் மணற்பாங்கான அல்லது களிமட்பாங்கான வயல்களுக்கு ஏற்றதாகும். இவ்வகை உழவு நைல்நதிப் படுகையிலும் செம்பிறை வளமண்ணிலும் ஓரளவு தினைகள் பயிரிட ஏற்ற மெல்லிய மேல்மண் பகுதிகளிலும் கீரல்வகை ஏர் உழவு நடைமுறையில் உள்ளது. பிந்தைய இரும்புக் காலத்தில் கீறல் ஏரோடு துளறுகள் பொருத்தப்பட்டன. வார்பலகை ஏர் thumb|ஏரின் உறுப்புகள்: 1) நுகம்; 2) மும்முனை ஏர்க்கால்; 3) குத்துநிலைச் சீராக்கி; 4) துளறு; 5) உளி; 6) கொழு; 7) வார்பலகை. thumb|இலாவோசின் சை பன் டன் பகுதியில் நீரெருமை பூட்டி ஏரால் உழுதல் ஏர் (நிலப் பரப்பளவை) நில அளவையில்ஏர் என்ற சொல் பயன்படுகிறது. பதின்ம முறையில் நிலப் பரப்பளவின் அலகு ஏர் (are) ஆகும். 1 ஏர் - 2.47 செண்ட் 1 ஏர் - 100 சதுர மீட்டர் (sq.m.) தற்போது ஏர் என்ற அலகு அதிகப் பயன்பாட்டில் இல்லாமல், எக்டேர் என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது. காட்சி மேடை மேற்கோள்கள் மேலும் படிக்க Brunt, Liam. "Mechanical Innovation in the Industrial Revolution: The Case of Plough Design". Economic History Review (2003) 56#3, pp. 444–477. . Hill, P. and Kucharski, K. "Early Medieval Ploughing at Whithorn and the Chronology of Plough Pebbles", Transactions of the Dumfriesshire and Galloway Natural History and Antiquarian Society, Vol. LXV, 1990, pp 73–83. Nair, V. Sankaran. Nanchinadu: Harbinger of Rice and Plough Culture in the Ancient World. Steven Stoll, Larding the Lean Earth: Soil and Society in Nineteenth-Century America (New York: Hill and Wang, 2002) வெளி இணைப்புகள் The Rotherham Plough  — the first commercially successful iron plough History of the steel plough  — as developed by John Deere in the United States Breast Ploughs and other antique hand farm tools "Tractor Guide Saves Labor for the Farmer", Popular Mechanics, December 1934. பகுப்பு:வேளாண் எந்திரங்கள் பகுப்பு:பண்ணைக் கருவிகள் பகுப்பு:வேளாண்மை வரலாறு பகுப்பு:நிகழ்படக் கட்டுரைகள் பகுப்பு:வேளாண் கருவிகள் பகுப்பு:தோட்டக் கருவிகள் பகுப்பு:கையாற்றல் கருவிகள்
கன அளவு
https://ta.wikipedia.org/wiki/கன_அளவு
கன அளவு () அல்லது கனவளவு அல்லது கொள்ளளவு (volume) என்பது ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணிய அளவாகும். அனைத்துலக முறை அலகுகளில் கனவளவின் அலகு கன மீட்டர் ஆகும். திண்மப் பொருளொன்றின் கனஅளவு முப்பரிமாணத்தில் எவ்வளவு இடம் எடுத்துள்ளது என்பதை விளக்கும் ஒரு எண் அடிப்படையிலான ஒரு பெறுமானமாகும். கோடுகள் போன்ற ஒரு-பரிமாணப் பொருட்களும், சதுரம் போன்ற இரு-பரிமாணப் பொருட்களும், முப்பரிமாணத்தில் கனஅளவு அற்றவை. கனஅளவுக்கான சூத்திரங்கள் உருவம் கனஅளவுக்கான சூத்திரம் மாறிகள்கனக் குற்றி a = ஒரு பக்கத்தின் அல்லது விளிம்பின் நீளம்உருளை r = வட்ட அடித்தளத்தின் ஆரை, h = உருளையின் உயரம்உயரம் வழியே மாறாத குறுக்குவெட்டைக் கொண்ட யாதேனுமொரு அரியம்**B = அடிப்பரப்பளவு, h = உயரம்நீள் சதுர அரியம்l = நீளம், w = அகலம், h = உயரம்உருண்டை r = கோளத்தின் ஆரை அதாவது கோளத்தின் மேற்பரப்பளவின் தொகையீடுநீளுருண்டை a, b, c = நீளுருண்டையின் அரைஅச்சு நீளங்கள்பிரமிடு (சதுரக் கூம்பு)B = அடிப்பக்கப் பரப்பளவு, h = அடியின் மத்தியிலிருந்து கூம்பும் முனை வரையான உயரம்கூம்பு (வட்ட அடி கொண்ட பிரமிடு)r = அடிப் பகுதி வட்டத்தின் ஆரை, h = அடியிலிருந்து நுனி வரையான தூரம் (உயரம்)நான்முகிCoxeter, H. S. M.: Regular Polytopes (Methuen and Co., 1948). Table I(i).விளிம்பின் நீளம் இணைகரத்திண்மம்a, b, and c are the parallelepiped edge lengths, and α, β, and γ are the internal angles between the edgesAny volumetric sweep(calculus required)h = any dimension of the figure,A(h) = area of the cross-sections perpendicular to h described as a function of the position along h. a and b are the limits of integration for the volumetric sweep.(This will work for any figure if its cross-sectional area can be determined from h).Any rotated figure (washer method)(calculus required) and are functions expressing the outer and inner radii of the function, respectively. யாதேனுமொரு உருவம்(தொகையீடு அவசியம்): (இங்கு h என்பது எடுத்துக்கொண்ட உருவத்தின் ஏதேனும் ஒரு அளவு; A(h) என்பது அவ்வுருவின் h -க்குச் செங்குத்தாக அமையும் குறுக்குவெட்டு; இது h -ன் சார்பாக அமைந்துள்ளது.). கனஅளவின் அலகுகள் -மெட்ரிக் அலகுகள் கொள்ளளவிற்கான பொதுவில் பயன்படும் சர்வதேச அலகு லீட்டர் ஆகும். ஆயிரம் லீட்டர் என்பது ஒரு கன மீட்டரின் கொள்ளளவாகும். இது முன்னர் ஸ்டீயர் என அறியப்பட்டது. ஒரு கன சென்டிமீட்டரின் கொள்ளளவு ஒரு மில்லிலீட்டர் ஆகும். கனஅளவின் அலகுகள் -ஐக்கிய அமெரிக்கா கன அளவிற்கு ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் வழமையான அலகுகள்: US பாய்ம அவுன்சு: 29.6 மில்லிலிட்டர் கனவளவுடைய நீரின் திணிவு = ஒரு அவுன்சு (ounce) US பிண்ட்டு: 16 அவுன்சுகள் அல்லது கிட்டத்தட்ட 473 மிலி கனவளவுடைய நீரின் திணிவு = ஒரு பிண்ட்டு (pint) US குவார்ட்டு: 32 அவுன்சுகள் அல்லது இரண்டு பிண்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 946 மிலி கனவளவுடைய நீரின் திணிவு = ஒரு குவார்ட்டு (quart) US கேலன்: 128 அவுன்சுகள் அல்லது நான்கு குவார்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 3.785 லி ஏக்கர் அடி (acre foot) எனப்படுவது பெரும்பாலும் ஒரு நீர்ப்படுகையிலுள்ள நீரின் கனவளவை அளக்கப் பயன்படும். இது ஒரு ஏக்கர் பரப்பும் ஒரு அடி ஆழமும் உடைய கனவளவைக் கொண்ட நீருக்குச் சமனானது. இது அண்ணளவாக 43,560 கன அடிகளுக்குச் சமனானது.. கனஅளவு அலகுகள் -ஐக்கிய இராச்சியம் கனவளவுக்கான இம்பீரியல் அலகுகள்: UK பாய்ம அவுன்சு = கிட்டத்தட்ட 28.4 மிலி (இந்தக் கனவளவையுடைய நீரின் திணிவு 28.3 கி, அல்லது அண்ணளவாக, 28.4 கி) UK பிண்ட்டு = 20 பாய்ம அவுன்சுகள் அல்லது கிட்டத்தட்ட568 மிலி UK குவார்ர்ட்டு = 40 அவுன்சுகள் அல்லது 2 UK பிண்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 1.136 லி UK கேலன் = 160 அவுன்சுகள் அல்லது 4 UK குவார்ட்டுகள் அல்லது கிட்டத்தட்ட 4.546 லி கனஅளவு அளவுகள் -சமையல் சமையலின் போது பயன்படும் கொள்ளளவு அலகுகள்: 1 தேக் கரண்டி = 1/6 அவுன்ஸ் 1 மேசைக் கரண்டி = 1/2 அவுன்ஸ் அல்லது 3 தேக்கரண்டி 1 கப் = 8 அவுன்ஸ் அல்லது 1/2 பைன்ட் அடர்த்தியுடனான தொடர்பு ஒரு பொருளின் திணிவை அதன் சராசரி அடர்த்தியால் வகுக்கும் போது பெறப்படுவது அப்பொருளின் கொள்ளளவு ஆகும். மேற்கூறியது, ஒரு அலகு கொள்ளளவில் உள்ள திணிவு, ஒரு பொருளின் அடர்த்தியைச் சுட்டும் எனும் சமன்பாட்டின் மாறுபட்ட வடிவம் ஆகும். இவற்றையும் பார்க்கவும் திணிவு அடர்த்தி மேற்கோள்கள் பகுப்பு:அளவியல்
சுஜாதா (எழுத்தாளர்)
https://ta.wikipedia.org/wiki/சுஜாதா_(எழுத்தாளர்)
சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953-ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர் வாழ்க்கைக் குறிப்பு சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி தூய வளனார் கல்லூரியில் பி.எஸ்சி. (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பி.இ. (மின்னணுவியல்) கற்றார். திருச்சி தூய வளனார் கல்லூரியில், அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள். அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார். டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டுகள், அரசுப் பணியில் இருந்த சுஜாதா, பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும், மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார். அறிவியலை, ஊடகம் மூலமாக, மக்களிடம் கொண்டு சென்றதற்காக, அவரைப் பாராட்டி, 'தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம்' அவருக்கு 1993-ஆம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது. மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா. இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது. சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி, அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது. புனைபெயர் இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962-ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். எனும் பெயரிலும் எழுதி வந்தார். ஆக்கங்கள் சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார். புதினங்கள் அகரவரிசையில் . . . அப்ஸரா அனிதா இளம் மனைவி, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. அனிதாவின் காதல்கள் அனுமதி ஆ..! ஆதலினால் காதல் செய்வீர் ஆயிரத்தில் இருவர் இருள்வரும் நேரம்; 1988; கல்கியில் வெளிவந்த தொடர் உன்னைக் கண்ட நேரமெல்லாம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. எதையும் ஒருமுறை எப்போதும் பெண் என்றாவது ஒரு நாள் ஏறக்குறைய சொர்க்கம் என் இனிய இயந்திரா ஒருத்தி நினைக்கையிலே ஒரு நடுப்பகல் மரணம் ஓடாதே! கணேஷ் x வஸந்த் கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001 கம்ப்யூட்டர் கிராமம் கரையெல்லாம் செண்பகப்பூ கனவுத்தொழிற்சாலை காசளவில் ஓர் உலகம், வாசகர் வட்டம், சென்னை. காந்தளூர் வசந்தகுமாரன் கதை காயத்ரி, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. கொலையுதிர்காலம் கொலை அரங்கம் சில வித்தியாசங்கள், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. சில்வியா செப்டம்பர் பலி சொர்க்கத்தீவு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. திசைகண்டேன் வான்கண்டேன் தேவன் வருகை, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. நிலா நிழல் நிர்வாண நகரம் நில் கவனி தாக்கு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. நில்லுங்கள் ராஜாவே நைலான் கயிறு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. பதவிக்காக பதினாலு நாட்கள், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. பாதிராஜ்யம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. பிரிவோம் சந்திப்போம் (நூல்) ப்ரியா, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. மறுபடியும் கணேஷ், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. பெண் இயந்திரம் பேசும் பொம்மைகள் மாயா, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. மீண்டும் ஜீனோ மூன்றுநாள் சொர்க்கம் மூன்று நிமிஷம் கணேஷ் மேகத்தைத் துரத்தினவன், மாலைமதி, நவம்பர் 1979 மேற்கே ஒரு குற்றம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. யவனிகா ரத்தம் ஒரே நிறம் வசந்தகாலக் குற்றங்கள் வண்ணத்துப்பூச்சி வேட்டை வஸந்த்!வஸந்த்! வாய்மையே - சிலசமயம் - வெல்லும் விடிவதற்குள் வா விபரீதக் கோட்பாடு, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. வைரம் (புதினம்) ஹாஸ்டல் தினங்கள் ஜன்னல் மலர் ஜே.கே., குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. 24 ரூபாய் தீவு 6961, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. குறும்புதினங்கள் தீண்டும் இன்பம் குரு பிரசாத்தின் கடைசி தினம் ஆகாயம் காகித சங்கிலிகள் மண்மகன் மெரினா மோதாமல் ஒரு நாளும் இரக்க வேண்டாம் டி.என்.ஏ; 1995, குமுதம் தொடர் சிறுவர் இலக்கியம் "பூக்குட்டி" சிறுகதைத் தொகுப்புகள் அப்பாவின் ஆஸ்டின் இரயில் புன்னகை ஓலைப்பட்டாசு சில சிறுகதைகள் சில வித்தியாசங்கள் தூண்டில் கதைகள் நகரம், குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001 நிஜத்தைத் தேடி மத்திமர் மீண்டும் தூண்டில் கதைகள் வானமென்னும் வீதியிலே, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம்-611001. ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் சிறுகதை மற்றும் குறும்புதினத் தொகுப்புகள் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் கவிதைத் தொகுப்பு நைலான் ரதங்கள் நாடகங்கள் நீள்நாடகங்கள் அடிமைகள் அன்புள்ள அப்பா ஊஞ்சல் கடவுள் வந்திருந்தார் சிங்கமைய்யங்கார் பேரன் டாக்டர். நரேந்திரநாத்தின் வினோத வழக்கு பாரதி இருந்த வீடு குறுநாடகங்கள் ஆகாயம் இடையன் மகள் கதைகேளு பெண்ணே, கதைகேளு கிருஷ்ணா! கிருஷ்ணா! சரளா சேகர் பிரயாணம் பெட்டி மந்திரவாதி மறுமணம் மாறுதல் முதல் நாடகம் (ஒரு கொலை) முயல் வந்தவன் வாசல் கட்டுரைத் தொகுப்புகள் இன்னும் சில சிந்தனைகள் உயிரின் ரகசியம் எழுத்தும் வாழ்க்கையும் கணையாழியின் கடைசி பக்கங்கள் கற்றதும் பெற்றதும் [பாகம் 1,2,3,4] கடவுள்; 2008 கடவுள் இருக்கிறாரா? கடவுள்களின் பள்ளத்தாக்கு சுஜாதா'ட்ஸ் செய்தி சொல்லும் செயற்கைக்கோள்கள் தமிழ் அன்றும் இன்றும்; உயிர்மை பதிப்பகம், சென்னை தலைமை செயலகம் திரைக்கதை எழுதுவது எப்படி? நானோ டெக்னாலஜி மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம் ஜீனோம் சிலிகான் சில்லு புரட்சி வினா விடை ஏன் ? எதற்கு ? எப்படி ?'' [பாகம் 1,2] சுஜாதா பதில்கள் (பாகம் 1, 2, 3) திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள் அனிதா இளம் மனைவி (இது எப்படி இருக்கு - திரைப்படம்) காயத்ரி கரையெல்லாம் செண்பகப்பூ ப்ரியா விக்ரம் வானம் வசப்படும் ஆனந்த தாண்டவம் சைத்தான்(திரைப்படம்) பணியாற்றிய திரைப்படங்கள் ரோஜா இந்தியன் ஆய்த எழுத்து அந்நியன் பாய்ஸ் முதல்வன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஜீன்ஸ் உயிரே விசில் கன்னத்தில் முத்தமிட்டால் சிவாஜி த பாஸ் எந்திரன் வரலாறு செல்லமே மறைவு உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29. பெப்ரவரி 2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன.,எழுத்தாளர் சுஜாதா மரணம் (தட்ஸ்டமில்.காம்) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அம்பலம் (சுஜாதா நிர்வகித்த இணைய இதழ்) சுஜாதாவின் வாழ்க்கைக் குறிப்பு தமிழ் நண்பர்களில் சுஜாதா சுஜாதா - சிறுகதைகள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள் பகுப்பு:1935 பிறப்புகள் பகுப்பு:2008 இறப்புகள் பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள் பகுப்பு:திருச்சி மக்கள் பகுப்பு:சென்னை எழுத்தாளர்கள் பகுப்பு:திருச்சிராப்பள்ளி எழுத்தாளர்கள்
வெண்பா
https://ta.wikipedia.org/wiki/வெண்பா
வெண்பா மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றாகும். தமிழில் மரபுப் பாக்கள், ஒலிப்பியல் அடிப்படையில் அடி, சீர், அசை முதலியவற்றைக் கொண்டு வகை பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பன பரவலாக ஆளப்பட்டுள்ள பழம் பெரும் பாவினங்கள். வெண்பாவினை வன்பா என்றும், ஆசிரியப்பாவினை மென்பா என்றும், கலிப்பாவினை முறற்கை என்றும் வழங்குவர். அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 173 அவற்றுள் வெண்பா என்னும் வகையில் ஒவ்வொரு பாடலும் இரண்டு முதல் பன்னிரண்டு அடிகள் வரை கொண்டிருக்கும். வெண்பாக்களுக்கான யாப்பிலக்கணம் ஒரு கட்டுக்கோப்பான இடம் சாரா இலக்கணம் என்று நிறுவப்பட்டுள்ளது. இலக்கணம் வெண்பாவின் பொது இலக்கணம்: ஈற்றடி  முச்சீராய் ஏனைய அடிகள்  நாற்சீராய் வரும் . இயற்சீர் ( மாச்சீர், விளச்சீர்), வெண்சீர் (காய்ச்சீர்) வரும். பிற சீர்கள் வாரா. இயற்சீர் வெண்டளையும் (மாமுன் நிரை, விளமுன் நேர்) வெண்சீர் வெண்டளையும் (காய்முன் நேர்) வரும். பிற தளைகள் வாரா. ஈற்றடியின்  ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்ற வாய்பாடுகளுள்  ஒன்றுகொண்டு முடியும். செப்பலோசை பெற்று வரும் இரண்டடி முதல் 12 அடி வரை வரும் குறிப்பிடத்தக்க வெண்பா நூல்கள் தமிழ் மரபுப்பா வகைகளில் மிகப் பழைய வடிவம் என்பதால் வெண்பாவில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் (அல்லது) தொகுப்புகளின் எண்ணிக்கை மிகுதி. ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிடலாம். திருக்குறளின் ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களும் வெண்பாக்களே. அவை வெண்பாக்களுள் ஏழு சீர்களே கொண்டு ஈரடியில் உள்ள குறள் வெண்பா வகையைச் சார்ந்தவை. நாலடியார் அல்லது நாலடி நானூறு என்பது நானூறு வெண்பாக்களால் ஆனதும், திருக்குறளை ஒத்ததுமான நீதிநூல் வகையைச் சேர்ந்தது. முத்தொள்ளாயிரம் என்பது வெண்பாக்களால் ஆன, காலத்தால் மிகவும் முற்பட்ட தொகை நூல். கிடைத்திருக்கும் 109 வெண்பாக்களில் மிகப் பெரும்பான்மையும் (ஏறத்தாழ முழுமையும்) நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை. நள வெண்பா மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும். நீதி வெண்பா மற்றுமொரு வெண்பாவாலான நூலாகும். திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை வெண்பா யாப்பில் வாரா என்ற போதிலும் முற்றிலும் வெண்டளையாக அமைந்து 'ஏலோர் எம்பாவாய்' என்ற ஈற்றுச் சீர்களை நீக்கினால், 'பாரோர் புகழப் படிந்து' போன்ற முச்சீர்களால் கச்சிதமாக அமைந்த பஃறொடை வெண்பா யாப்புக்கு முற்றிலும் பொருந்தியிருப்பதைக் காணலாம். மூதுரை என்ற நூலில் முப்பது வெண்பாக்கள் உள்ளன. ஒவ்வொரு வெண்பாக்களும் தனித்தனிக் கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இதில் நேரிசை வெண்பாக்களும், இன்னிசை வெண்பாக்களும் உள்ளன.http://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012231.htm நல்வழி என்பது 40 நேரிசை வெண்பாக்களில் அறக்கருத்துக்களைக் கொண்ட நூலாகும்.http://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012232.htm இவற்றைத் தவிர, பலவகையான வெண்பாக்களில் அமைந்துள்ள பழைய/புதிய தமிழ் நூல்கள் ஏராளமானவை. வகைகள் குறள் வெண்பா சிந்தியல் வெண்பா நேரிசை வெண்பா இன்னிசை வெண்பா பஃறொடை வெண்பா கலிவெண்பா வேறு வகைப் பிரிவு இந்த வேறு வகை வெண்பாக்களைக் குறிப்பிடும் இலக்கணப் பாடல்கள் இரண்டு தரப்பட்டுள்ளன. 1 பண்பு ஆய்ந்து அடங்கிய பாநிலை தெரியின் வெண்பா மூவிசை விரிக்குங் காலே 2 செப்பல் வெண்பா வெண்கூ வெண்பா அகவல் வெண்பா என்றனர் முறையே செப்பல் வெண்பா வெண்கூ வெண்பா அகவல் வெண்பா வெண்பா (தழுவல்) தமிழ் மரபுக் கவிதைகளின் அடிப்படைக் கூறுகள் உயிர் எழுத்துகளும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்துக் குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து மற்றும் நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். அசை என்பது முழுச்சொல்லாக இருக்க வேண்டும் என்பதல்ல, சொல்லின் பகுதிகளாகவும் இருக்கலாம். நேரசை மற்றும் நிரையசை என்று அசைகள் இரண்டு வகையாகும். குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ (ஒற்று = புள்ளி வைத்த எழுத்து) வருதல் நேரசையாகும். எடுத்துக்காட்டாக நேர், என், நீ, தேன் முதலான சொற்கள் நேரசைச் சொற்கள். இவ்வாறில்லாது இருகுறிலிணைந்து வருதலும், குறிலுக்குப் பின் நெடிலிணைந்து வருதலும், அல்லது இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். நிரை, படம், புறா முதலான சொற்கள் நிரையசை யாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. வசதிக்காக அசைகள் பின்வருமாறு பெயரிடப்படுகிறது. {| class="wikitable" |- |நேர்நேர் |தேமா |- |நிரைநேர் |புளிமா |- |நேர்நிரை |கூவிளம் |- |நிரைநிரை |கருவிளம் |- |நேர்நேர்நேர் |தேமாங்காய் |- |நேர்நேர்நிரை |தேமாங்கனி |- |நேர்நிரைநேர் |கூவிளங்காய் |- |நேர்நிரைநிரை |கூவிளங்கனி |- |நிரைநேர்நேர் |புளிமாங்காய் |- |நிரைநேர்நிரை |புளிமாங்கனி |- |நிரைநிரைநேர் |கருவிளங்காய் |- |நிரைநிரைநிரை |கருவிளங்கனி |- |} அசைகளின் தொடர் சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும். மேற்கோள் விளக்கம் வெண்பாவுக்கான யாப்பிலக்கணம் யாப்பிலக்கண நெறிமுறைகள் மிகவும் கட்டுக்கோப்பானவை என்றும் அதனால் அவற்றை ஓர் இடம் சாரா இலக்கண முறையில் எழுத முடியும் என்றும் நிறுவப்பட்டுள்ளது. அந்நெறிமுறைகள் பின்வருவன: சீர்களுக்கான நெறிகள் வெண்பா ஈரசைச் சீர்களான மாச்சீரையும், விளச்சீரையும் பெற்று வரும். மூவசைச் சீர்களில் காய்ச்சீர் மட்டுமே வெண்பாவில் வரும்; கனிச்சீர் வராது. நிலைமொழியீற்றசையைப் பொருத்து வருமொழி முதலசை அமைய வேண்டுமென வலியுறுத்தும் தளை நெறிகள் வெண்பாவுக்கான தளைகள் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை ஆகும். இயற்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் மாச்சீர் வர வருமொழி முதலில் நிரையசையே வர வேண்டும்; நிலைமொழி ஈற்றில் விளச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும். வெண்சீர் வெண்டளை - நிலைமொழி ஈற்றில் காய்ச்சீர் வர வருமொழி முதலில் நேரசையே வர வேண்டும். வெண்பா செப்பலோசை பெற்று வரும். வெண்பாவுக்கான மேலே தரப்பட்டுள்ள யாப்பிலக்கண நெறிகளுக்கு இணையான இடம் சாரா இலக்கணம் பின்வருமாறு:கீழ்கானும் இ.சா.இ.யில் சில இலக்கண உருவகங்களைக் (productions) குறைக்க முடியுமென்றாலும் தமிழ்மொழி யாப்பிலக்கணத்திற்கு இணையாக இருக்கும் பொருட்டு இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. {| class = “wikitable” |- |align="right"|<வெண்பா> |→ |<அடி>{1,11}{1,11} என்பது இடம் சாரா இலக்கணங்களை எழுத உதவும் பேக்கஸ்-நார் முறையில் இல்லாவிட்டாலும் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பெர்ள் நிரலாக்க மொழிக் (Perl) குறியீடாகும். அதன் பொருள் ஒன்றிலிருந்து பதினொரு முறை வரை வரலாம் என்பதாகும். பார்க்க: பெர்ள் மொழி விளக்கம்<ஈற்றடி> |- |align="right"|<அடி> |→ |<சீர்> <சீர்> <சீர்> <சீர்> |- |align="right"|<ஈற்றடி> |→ |<சீர்> <சீர்> <ஈற்றுச்சீர்> |- |align="right"|<சீர்> |→ ||<ஈரசை> | <மூவசை> |- |align="right"|<ஈற்றுச்சீர்> |→ ||<நாள்> | <மலர்> | <காசு> | <பிறப்பு> |- |align="right"|<ஈரசை> |→ ||<தேமா> | <புளிமா> | <கருவிளம்> | <கூவிளம்> |- |align="right"|<மூவசை> |→ ||<தேமாங்காய்> | <புளிமாங்காய்> | <கூவிளங்காய்> | <கருவிளங்காய்> |- |align="right"|<தேமா> |→ |<நேர்> <நேர்> |- |align="right"|<புளிமா> |→ |<நிரை> <நேர்> |- |align="right"|<கருவிளம்> |→ |<நிரை> <நிரை> |- |align="right"|<கூவிளம்> |→ |<நேர்> <நிரை> |- |align="right"|<தேமாங்காய்> |→ |<தேமா> <நேர்> |- |align="right"|<புளிமாங்காய்> |→ |<புளிமா> <நேர்> |- |align="right"|<கருவிளங்காய்> |→ |<கருவிளம்> <நேர்> |- |align="right"|<கூவிளங்காய்> |→ |<கூவிளம்> <நேர்> |- |align="right"|<நாள்> |→ |<நேர்> |- |align="right"|<மலர்> |→ |<நிரை> |- |align="right"|<காசு> |→ |<நேர்> <நேர்> |- |align="right"|<பிறப்பு> |→ |<நிரை> <நேர்> |- |align="right"|<நேர்> |→ ||<குறில்> | <நெடில்> | <நேர்> <ஒற்று> |- |align="right"|<நிரை> |→ ||<குறில்> <குறில்> | <குறில்> <நெடில்> | <நிரை> <ஒற்று> |- |align="right"|<குறில்> |→ |{குறுகிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து} |- |align="right"|<நெடில்> |→ |{நெடிய ஒலியுடைய உயிர் எழுத்து அல்லது உயிர்மெய் எழுத்து} |- |align="right"|<ஒற்று> |→ |{மெய்யெழுத்து} |- |} தளைகளுக்கான இலக்கண நெறிகள்: இயற்சீர் வெண்டளை (மா முன் நிரை, விள முன் நேர்) <வெண்பா> → <X> | <Y> <X> → <தேமா> <Y> <X> → <கூவிளம்> <X> <Y> → <புளிமா> <Y> <Y> → <கருவிளம்> <X> <X> → <நாள்> | <காசு><காசு>, <பிறப்பு> ஆகியன நேர்பு, நிரைபு எனவும் வழங்கப்படும். நேரசை நிரையசையைத் தொடர்ந்து, கு, சு, டு, து, பு, று ஆகியவற்றுள் ஒன்று வந்தால் அந்த அசைகள் நேர்பு, நிரைபு ஆகும். பார்க்க: வெண்பாவின் ஈற்றடி இலக்கணம் <Y> → <மலர்> | <பிறப்பு> வெண்சீர் வெண்டளை (காய் முன் நேர்) <X> → <தேமாங்காய்> <X> <X> → <கூவிளங்காய்> <X> <Y> → <புளிமாங்காய்> <X> <Y> → <கருவிளங்காய்> <X> எடுத்துக்காட்டு ஒரு திருக்குறள் உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. ஜி.யூ.போப் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு: "As hand of him whose vesture slips away, Friendship at once the coming grief will stay. (True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly)."'' 500px|thumb|left|யாப்பிலக்கணப் பத்தியில் தரப்பட்டுள்ள இலக்கண நெறிமுறைகளிற்கேற்ப எடுத்துக்காட்டு குறட்பாவிற்காக வரையப்பட்ட இலக்கண பகுப்பாய்வுப் படிநிலை (parse tree) வரைபடம் - குறிப்பு: 0 குறிலையும், 1 நெடிலையும், 2 ஒற்றையும் குறிக்கிறது 400px|thumb|left|எடுத்துக்காட்டுக் குறட்பாவின் தளை சார்ந்த நெறிமுறைகளுக்கான இலக்கண உருவகங்கள் (productions) குறிப்புகளும் மேற்கோள்களும் வெளி இணைப்புகள் பகுப்பு:தமிழ்க் கணிமை நிரல் எடுத்துக்காட்டுக்கள் உள்ள கட்டுரைகள்
திருவள்ளுவர்
https://ta.wikipedia.org/wiki/திருவள்ளுவர்
திருவள்ளுவர் (Thiruvalluvar) (சுருக்கமாக வள்ளுவர்) பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். கடைச்சங்ககால புலவரான இவர் பொ.ஊ.மு 400க்கும் பொ.ஊ. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தார் எனக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டு அரசு இவர் பிறந்த ஆண்டாக பொ.ஊ.மு 31ஐ அறிவித்து அதன் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டை கணக்கிடுகிறது. right|thumb|கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர், திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு, மதுரையில் அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. சங்ககால புலவரான ஔவையார், அதியமான் மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இதன் மூலம் சங்ககால புலவர் மாமூலனாரே முதன் முதலில் திருவள்ளுவரைப் பற்றிய செய்தியைத் தருகிறார். ஆகையால் மாமூலனாருக்கு முன்பே ஔவையார் என்ற பெயருடைய மற்றொரு புலவர் இருந்திருக்கலாம் என்றே தெரியவருகிறது. மாமூலனார் பொ.ஊ.மு. 4 ஆம் நூற்றாண்டு செய்தியைக் கூறுவதால், திருவள்ளுவர் பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவராக இருக்க வேண்டும். ஆனாலும் மாமூலனார் பாடல் இடம்பெற்றுள்ள திருவள்ளுவமாலை தொகுக்கப்பட்ட காலம் (பொ.ஊ. 11ஆம் நூற்றாண்டு) மிகவும் பிந்தையது என்பதால், சங்க கால மாமூலனாரும் திருவள்ளுவமாலையில் இடம் பெறும் மாமூலனாரும் ஒருவர் அல்லர் என்னும் கருத்து நிலவுகிறது. திருவள்ளுவர், அனைத்துத் தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார். thumb|சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை வாழ்க்கை திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் பொ.ஊ.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்ததாகக் கூறப்படுகிறது. ஆங்கில ஆண்டுடன் முப்பத்தொன்றைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு கிடைக்கும். காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது.The Tamil Plutach: containing a summary account of the lives of the poets and poetesses of southern India and Ceylon from the earliest to the present times, with select specimens of their compositions, Page 102, Simon Casie Chitty – January 1, 1859. Ripley & Strong, printers – Publisher மா. இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் பல்வேறு சான்றுகள் மூலம் மணிமேகலை எழுதப்பட்ட காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்கிறார். சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளை தக்க சான்றுகளுடன் மறுத்தும் கூறியுள்ளார். சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வெவ்வேறு காலங்களில் எழுதப்பட்டது என்று பல்வேறு சான்றுகளை தமிழ் ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் முன் வைக்கின்றனர். சிறப்புப் பெயர்கள் thumb|சென்னை மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் திருக்கோயில் திருவள்ளுவர் பல சிறப்புப் பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவை: தேவர் நாயனார் தெய்வப்புலவர் செந்நாப்போதர் பெருநாவலர் பொய்யில் புலவர் பொய்யாமொழிப் புலவர் மாதானுபங்கி முதற்பாவலர் புலவர்களின் பாராட்டுகள் பல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம். இவரை, "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என பாரதியாரும், "வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர். நூல்கள் திருக்குறள் இது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை: ஞான வெட்டியான் பஞ்ச ரத்னம் இதற்கான காரணம் இந்த பாடல் வரிகள் தாம்: "அகமகிழுமம்பிகைப் பெண்ணருளினாலே யவனிதனில் ஞானவெட்டியருள யானும் நிகழ்திருவள்ளுவனயனாருரைத்தவேத நிரஞ்சனமாநிலவுபொழிரவிகாப்பமே" இவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை. இவை போக இன்னமும் சில அற்புதமான நூல்களின் ஆசிரியர் பெயர் வள்ளுவர் எனத் தெரிய வருகிறது. அந்த நூல்களில் முக்கியமானவை: சுந்தர சேகரம் இந்த சுந்தர சேகரம் ஒரு முக்கியமான சோதிட (ஜியோதிஷ) நூல் ஆகும். இதில், பாரதத்தின் பண்டைய சோதிட நூல்களும், அதன் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் இல்லாத பல அரிய சூத்திரங்களும் உள்ளன. திருவள்ளுவரும் சமயமும் திருவள்ளுவரும் சமணமும் திருவள்ளுவர், திருக்குறளில், குறிப்பிட்ட கடவுள்கள் குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. திருக்குறளில் கூறப்பட்டுள்ள அறக் கோட்பாடுகள், சமண சமய நீதி நெறிகளை நெருங்கி உள்ளதால், திருவள்ளுவர் ஒரு சமணராக இருந்திருக்கக் கூடும் என்றே வரலாற்றாளர்கள் கருதுகிறார்கள். திருவள்ளுவரும் சைவமும் திருவள்ளுவரை, திருவள்ளுவநாயனார் என சைவர்கள் அழைக்கின்றனர்.சைவ நற்சிந்தனைகள் - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை இவரை சைவர் என்றும், இவருடைய திருக்குறளை, சைவ நூல் என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். திருவாவடுதுறை ஆதீனமாகிய, கொரடாச்சேரி சிவத்திரு வாலையானந்த அடிகள், 'திருவள்ளுவர் சித்தாந்த சைவர்' எனும் நூலை எழுதியுள்ளார். அதில், திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதைப் பற்றி எழுதியுள்ளார். அழுக்காறாமை எனும் அதிகாரத்திலும்அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். பொருள்: பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்., ஆள்வினையுடைமைமடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். பொருள்: ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள். எனும் அதிகாரத்திலும் திருவள்ளுவர், திருமகளையும் அவளுடைய மூத்தவளான தவ்வையையும் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு குறள்களிலுமே, தற்போது வழக்கில் இருக்கும் திருமகளின் தன்மையும், மூதேவியின் தன்மையும் ஒத்துப் போகின்றன. thumb|கோயிலில் திருவள்ளுவர் சன்னதி thumb|180px|புட்லூர் அம்மன் கோயிலில் வள்ளுவர் சன்னதி திருவள்ளுவர் கோயில் திருவள்ளுவர் மயிலாப்பூரில், பிறந்த இடத்தில் மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் என்பது கட்டப்பட்டுள்ளது. இக்கோயில், புகழ்பெற்ற முண்டகக் கண்ணியம்மன் கோயிலுக்கு அருகே அமைந்துள்ளது. வள்ளுவரின் உருவம் thumb|1960இல் இந்திய அரசு வெளியிட்ட, திருவள்ளுவர் நினைவு அஞ்சல் தலை thumb|19ஆம் நூற்றாண்டில் திருவள்ளுவரின் உருவப்படம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் முயற்சிகள் துவங்கிவிட்டன. பலர் திருவள்ளுவருக்கு உருவம் கொடுக்கும் செயல்களில் ஈடுபட்டனர். 1950களின் பிற்பகுதியில், தற்போது காணும் வெள்ளுடை தரித்த வள்ளுவரை வரைவதற்கான முயற்சிகள் துவங்கின. இந்த முயற்சியைத் துவங்கியவர் கவிஞர் பாரதிதாசன் ஆவார். அவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இராமச்செல்வன் என்பவருடன் சேர்ந்துவந்து, ஓவியர் வேணுகோபால் சர்மாவைச் சந்தித்தார். மூன்று பேரும் சேர்ந்து திருவள்ளுவர் படத்தை உருவாக்க திட்டமிட்டனர். இதற்கான செலவுகளை இராமச்செல்வன் ஏற்றுகொண்டார். பிபிசி தமிழ் (நவம்பர் 06, 2019) பின்னர் வேணுகோபால் சர்மா தான் வரைந்த படத்தை முடித்த பிறகு, நாகேசுவரபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்தப் படத்தை வைத்தார். அப்போது காமராஜர், கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் இந்தப் படத்தைப் பார்வையிட்டு பாராட்டிச் சென்றனர். பிறகு இந்தப் படம், 1960இல் கா. ந. அண்ணாதுரையால், காங்கிரஸ் மைதானத்தில் வெளியிடப்பட்டது. பின்பு 1964 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில், வேணுகோபால் சர்மா வரைந்த, திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. தமிழக முதல்வரான அண்ணாதுரை இவருக்கு "ஓவியப் பெருந்தகை" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். பிறகு இதே படம், இந்திய அரசால் அஞ்சல் தலையாகவும் வெளியிடப்பட்டது. 1995 இல் தஞ்சாவூரில் நடந்த எட்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை ஒட்டி இந்திய அரசால் இதே படத்தை அடிப்படையாக கொண்ட இந்திய இரண்டு ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது. நினைவுச் சின்னங்கள் thumb இந்தியாவின் தென் கோடியில் மு.கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு, 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது. இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர் சிற்பி கணபதி ஸ்தபதி என்பவர். சென்னையில் வள்ளுவர் நினைவாக வள்ளுவர் கோட்டம் என்ற நினைவிடம் ஒன்று தமிழ்நாடு அரசால் 1973-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு திருவாரூர் கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவுச் சின்னமும் உள்ளது. 1960இல் இந்திய அரசு திருவள்ளுவரின் நினைவாக ஒரு அஞ்சல் தலை வெளியிட்டது. இவற்றையும் பார்க்கவும் வள்ளுவர் கோட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் ஆண்டு திருவள்ளுவர் நாள் திருவள்ளுவர் கோவில் குறிப்புகள் a. வள்ளுவரின் காலம் பொ.ஊ.மு. நான்காம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டு என்று பாரம்பரியமாகவும் மொழியியல் பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு பகுப்பாய்வு முறைகளின் அடிப்படையிலும் கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இவரது காலம் பொ.ஊ.மு. 31 என்று தமிழக அரசால் 1921-ல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் வள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. மேற்கோள்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திருக்குறள் விக்கிபுத்தகம். Tamilnation.orgல் திருவள்ளுவர் பற்றிய அறிமுகக் கட்டுரை பகுப்பு:தமிழ்ப் புலவர்கள் திருவள்ளுவர் பகுப்பு:தமிழ் மெய்யியலாளர்கள்
சிலப்பதிகாரம்
https://ta.wikipedia.org/wiki/சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றினையும் காணலாம். பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது. பெயர்க் காரணம் "சிலப்பதிகாரம்" என்ற சொல் சிலம்பு, அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. கதை சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும். (சிலப்பதிகாரம் நூல் கட்டுரை) நற்றிணைப் பாடல் கண்ணகி வரலாற்றைக் குறிப்பிடுகிறது.:எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண், ஏதிலாளன் கவலை கவற்ற, ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக் கேட்டோர் அனையராயினும், வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே. (மருதன் இளநாகனார் நற்றிணை 216) மலையாள மொழிமலையாளம் பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டில் தோன்றியது. மணிமேகலை வஞ்சி மூதூர் சென்று பல்வேறு சமயங்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தது மலையாளத்தில் அன்று. தமிழில். எனவே மணிமேகலை காலம் ஆறாம் நூற்றாண்டுக்கு முந்தையது. புகார் நகரத்தில் சிவன்கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும், (சிலப்பதிகாரம், இந்திர விழவு ஊர் எடுத்த காதை 169) 276 ஊர்களிலிருந்த சிவன்கோயில்களைக் குறிப்பிடும் தேவாரம் இதனைக் குறிப்பிடவில்லை. எனவே புகார் நகரைக் கடல் கொண்டது தேவாரம் தோன்றிய 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது. புகார் நகரத்தில் பலராமனுக்கும், கண்ணனுக்கும் தனித் தனிக் கோயில்கள் இருந்ததைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.வால் வளை மேனி வாலியோன் கோயிலும், நீல மேனி நெடியோன் கோயிலும், (சிலப்பதிகாரம், இந்திர விழவு ஊர் எடுத்த காதை 171-172) 108 திருப்பதிகளைக் காட்டும் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் இந்தக் கோயில் பற்றிய செய்தியே இல்லை. இதனாலும் சிலப்பதிகாரம் 7 ஆம் நூற்றாண்டுக்கு முந்தியது என்பது உறுதியாகிறது. கண்ணகி விழாவுக்குச் சென்றிருந்த இலங்கை மன்னன் கயவாகு தன் நாட்டு இலங்கையில் எழுப்பப்போகும் கோயிலிலும் எழுந்தருளும்படி, கண்ணகி தெய்வத்தை வேண்டிக்கொள்கிறான்.அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும், பெரும் சிறைக்கோட்டம் பிரிந்த மன்னரும், குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும், கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும், ‘எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின் நல்நாள் செய்த நாள் அணி வேள்வியில் வந்து ஈக’ என்றே வணங்கினர் வேண்ட (சிலப்பதிகாரம், வரந்தரு காதை 157-163) இந்தக் கயவாகு காலம் பொ.ஊ. 114-136கயவாகு தேவாரம், திவ்வியப் பிரபந்தம், கம்பராமாயணம், சீவகசிந்தாமணி முதலான நூல்கள் விருத்தப்பா என்னும் பா வகையைத் தோற்றுவிப்பதற்கு முன்னர் வழக்கில் இருந்த ஆசிரியப்பா 'ஏ' என்னும் அசை கொண்டு முடியாமல் 'என்' என்னும் அசை கொண்டு முடியும் ஆசிரியப்பா நடையில் அமைந்துள்ள சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அந்த நூல்களுக்கு முந்தியவை.பொ.ஊ. 6 ஆம் நூற்றாண்டினதாகக் கணிக்கப்படும் பெருங்கதை என்னும் நூலைத் தவிர வேறு எந்தக் காப்பியமும் ஆசிரியப்பாவால் அமையவில்லை. எனவே இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களின் காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு. சான்றுடன் மணிமேகலை காலம் : 1. நாகார்ச்சுனரால் உண்டாக்கப்பட்ட மகாயான பௌத்த மதக் கொள்கைகள் மணிமேகலையில் கிடையாது. ஆனால் ஈனயான பௌத்த மதக்கொள்கைகள் நிரம்பி இருப்பதனால் மணிமேகலை காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டு என்கின்றனர். 2. கிருதகோடி ஆசிரியர் பற்றி குறிப்பிடுவதால் மணிமேகலை பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டின் ஆரம்பம் என்றனர் ஆய்வாளர்கள். பல்வேறு சான்றுகளை ஒப்பீடு செய்து கால ஆராய்ச்சி என்னும் தன் நூலில் சி. இராசமாணிக்கனார் மணிமேகலை காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பு என்றார். 3. சங்கப் புலவர் மாமூலனார் பிறந்த காலம் பொ.ஊ.மு. நான்காம் நூற்றாண்டின் மத்திய பகுதி என கல்வெட்டு மற்றும் ஓலைச் சுவடி பாடல்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாமூலனார் காலத்தின் மூலம் கணக்கிட்டதில் மணிமேகலை காலம் பொ.ஊ. முதல் நூற்றாண்டின் ஆரம்ப காலம் என சந்தேகம் இல்லாமல் நிரூபிக்கபட்டுள்ளது தற்காலத்தில். இளங்கோவடிகள் இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார். தன் அண்ணன் செங்குட்டுவனுடன் மலை வளம் காணச் சென்றபோது, கண்ணகியைப் பற்றிய செய்தியை சீத்தலைச் சாத்தனார் எனும் புலவர் மூலமாக அறிந்தார் இளங்கோ. கண்ணகியின் கற்பொழுக்கமும், பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் நேர்மையும் அரசியல் நடுநிலைமையும் அவரை மிகவும் கவர, மூவேந்தர்களுக்கும் உரிய தமிழின் உயர் காவியமாக சிலப்பதிகாரத்தை கவிபுனைந்தார் அவர். சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி மற்றும் கோவலனின் துணைவி மாதவி ஆகியோரது வரலாற்றை விவரிக்கின்றது. இதன் இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை, ஆடலரசி மாதவியின் மகள் மணிமேகலையின் வரலாற்றை உரைக்கும் காவியமாகும். இதனை எழுதியவர் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் என்னும் புலவர் ஆவார். நூலமைப்பு காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு அனைத்தும் பொருந்தி வரும்படி இயற்றப்பட்ட காப்பியமாகும். காவிரி, வைகை முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை, வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து முதலிய கூத்துகளும், திருமால் முதலிய தெய்வங்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன. அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிக்கின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர், இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையது. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நூல் இதுவேயாகும். சிலப்பதிகாரம், நூல் முகத்தில் உரைப் பாட்டினையும், கானல் வரி, வேட்டுவ வரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புகுவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது. புகார்க் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது. காண்டங்கள் புகார்க் காண்டம் மதுரைக் காண்டம் வஞ்சிக் காண்டம் காலமும் சமயமும் காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன். இவன் கலையுணர்வும், வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாயகனின் மகள் கண்ணகி. இவள் திருமகள் போன்ற அழகும், அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும், கற்புத்திறமும் கொண்டவள். இவ்விருவரும் மனையறம் பூண்டு, இன்புற்று வாழ்ந்தனர். கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தான். அவன் மாதவி இல்லத்திலேயே தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். மாதவி இந்திர விழாவில் கானல் வரிப் பாடலைப் பாடினாள். பாடலின் பொருளைத் தவறாகப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை விட்டுப் பிரிந்தான், பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான். தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணினான். வணிகம் செய்தற்பொருட்டு கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான். அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவியும் சென்றார். அவர், மதுரை நகர்ப்புறத்தில் மாதரி என்னும் இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார். கோவலன் சிலம்பு விற்று வர மதுரை நகரக் கடை வீதிக்குச் சென்றான். விலை மதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றை கோவலன் விற்பதைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்லன் அறிந்தான். பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன், பொய்யான பழியைக் கோவலன் மேல் சுமத்தினான். அதனை , சிலம்பைக் கொணர்க என்று ஆணையிட்டான். கோவலன் கொலை செய்யப்பட்ட செய்தியை மாதரி மூலம் அறிந்த கண்ணகி; பெருந்துயருற்றாள். அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள். மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி " நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?" என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, "ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். "புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகார் நகரமே, யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர் " என்று கூறினாள். பாண்டிய மன்னன் கண்ணகியிடம்" கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது" என்றாள். அதற்கு அரசன் "நீ கூறியது, நல்லதே! எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே" என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான். வைத்த அச்சிலம்பினைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், "பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்" என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி, கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள். புகார்க்காண்டம் இது 10 காதைகளைக் கொண்டது.அவை, மங்கல வாழ்த்துப் பாடல் மனையறம் படுத்த காதை. அரங்கேற்று காதை. அந்தி மாலைச் சிறப்பு செய் காதை. இந்திர விழவு ஊர் எடுத்த காதை. கடல் ஆடு காதை. கானல் வரி வேனிற்காதை கனாத் திறம் உரைத்த காதை. நாடு காண் காதை மங்கல வாழ்த்துப் பாடல் புகார் நகரிலே, கோவலனின் தந்தையான மாசாத்துவானும், கண்ணகியின் தந்தையான மாநாய்கனும், தம் மக்கள் இருவருக்கும் மணஞ்செய்வித்த சிறப்பும், மணமகளை மாதர்கள் பலர் சூழ்ந்து நின்று மங்கல வாழ்த்து உரைத்தலும், இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது. திருமணத்தின் போது கண்ணகிக்கு வயது பன்னிரண்டாண்டு ஆகும். கோவலன் திருமணத்தின் போது பதினாறு ஆண்டு பருவத்தை உடையவன். வானத்து அருந்ததியைப் போலும் தகைமையுடைய கண்ணகியைக் கோவலன், மிகவும் வயது முதிர்ந்த பார்ப்பான் மறைவழிகளைக் காட்டி ஒன்று சேர்க்க மணந்து, அவளுடன் தீயினையும் வலம் வந்த காட்சியைக் கண்டவர் கண்கள் தவம் செய்தவை ஆகும். மங்கல மகளிர் மணமக்களையும் தம் மன்னன் செம்பியனையும் வாழ்த்தினர். மனையறம் படுத்த காதை திருமணத்தால் ஒன்றுபட்ட கோவலனும் கண்ணகியும் தம்முட்கூடி இல்லறம் நிகழ்த்திய செய்திகள் பலவும் இதன்கண் கூறப்படுகின்றன. சில ஆண்டுகளாக அவர்களின் இல்வாழ்வும் இன்பமுடனேயே கழிந்தது என்பதனையும், அவர்களைத் தனி மனைக்கண் பெற்றோர் இருத்தியதையும், அவர்கள் தனிக் குடும்பமாக வாழத்தொடங்கியதையும் இக் காதை கூறுகிறது. அரங்கேற்று காதை மாதவி என்னும் ஆடல்மகள் சேர மன்னர்த் தன் நாட்டியத் திறம் எல்லாம் தோன்ற ஆடிக் காட்டினாள். அவள் தலையரங்கேறித் தலைக்கோலம் பெற்றாள். அவள் ஆடலைக் கண்டு மகிழ்ந்த காவல் மன்னன், அந்நாட்டு நடைமுறையான இயல்பிலிருந்து வழுவாமல், அரசனின் பச்சை மாலையையும், 'தலைக்கோலி' என்ற பெயரையும் மாதவி பெற்றனள். தலையரங்கிலே ஏறி ஆடிக்காட்டி, 'நாடக கணிகையர்க்குத் தலைவரிசை' என நூல்கள் விதித்த முறைமையின்படி, ஆயிரத்து எட்டுக் கழஞ்சுப்பொன்னை ஒருநாள் முறையாகப் பெறுபவள், என்ற பெருமையையும் பெற்றனள். நகரத்து இளைஞர்கள் பலரும் திரிந்து கொண்டிருக்கிற பெருந்தெருவிலே, கூனி, மாதவியின் மாலையை விலை கூறுவாள்.கோவலன் அதற்குரிய ஆயிரம் பொன்னையும் தந்து வாங்கினான். கூனியுடனே, தானும் மாதவியின் மணமனைக்குச் சென்றான். குற்றமற்ற சிறப்பினையுடைய தன் மனைவியின் நினைவையே தன் உள்ளத்திற் சிறிதும் கொள்ளாதவனாகி, தன் வீட்டை, கண்ணகியை, அறவே மறந்து மாதவி வீட்டினிலேயே மாலைத் தங்குவானுமாயினன் என்பதைக் கூறும் பகுதியே அரங்கேற்றுக் காதை. அந்தி மாலைச் சிறப்புச்செய் காதை மாலை நேரத்திலே, தம்முள் கூடினார் இன்பத்திலே திளைத்து மயங்குவதும், பிரிந்தவர் அளவுகடந்த வேதனையால், நைந்து அயர்வதும் இயல்பு ஆகும். கோவலனோடு கூடியிருந்த மாதவியும், அவனால் கைவிடப்பட்ட கண்ணகியும், ஒருநாள் மாலை வேளையிலே இருந்த இருவேறு மயக்கநிலைகளையும் விளக்கிக்காட்டி, மாலைக்காலத்தின் தகைமையை இப்பகுதியில் கூறுகின்றனர். தம்மோடு கலந்து உறவாடுபவர்களுக்கு நிழலாகியும், தம்முடன் கூடாது பிரிந்து வாழ்பவர்களுக்கு வெய்யதாகவும், காவலனின் வெண்கொற்றக் குடைபோல, முழுநிலவும் வானிலே விளங்கிற்று. வானத்திலே ஊர்ந்து செல்லும் நிலவு தான் கதிர்விரிந்து அல்லிப்பூக்களை மலர்விக்கும் இரவுப் பொழுதிலே, மாதவிக்கும் கண்ணகிக்கும் அவ்வாறு நிழலாகவும் வெய்யதாகவும் விளங்கி, அவர்களை முறையே இன்பத்திலும் துன்பத்திலும் ஆழ்த்திற்று என்பது இக்காதை கூறும் செய்தியாகும். இந்திரவிழவு ஊர் எடுத்த காதை புகார் நகரின் அமைப்பும், அங்கு வாழ்ந்த பல்வேறு வகையினரான குடியினர்களும், அவ்வூரார் இந்திர விழாக் கொண்டாடிய சிறப்பும் பற்றிச் சொல்லும் சிறந்த பகுதி இது. புகார் நகரின் மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் ஆகிய இடங்களின் சிறப்பையும், ஐவகை மன்றங்களாகிய தெய்வமன்றம், இலஞ்சிமன்றம், ஒளிக்கல் மன்றம், பூத சதுக்க மன்றம், பாவை மன்றம் ஆகியவிற்றில் அரிய பல்வேறு பலிகளையும் இட்டு மக்கள் பலரும் வழிபட்டுப் போற்றிய நிகழ்ச்சியையும் எடுத்துரைக்கின்றது. வழிபாடுகளும் விழாக்களும் எங்கனும் நிகழ்கின்றன. விழாக்களிப்பிலே மனம் தளர்ந்த தம் கணவரோடு மனைவியர் சினந்து ஊடுகின்றனர். உட்புறத்திலே நறுந்தாது நிறைந்து இருத்தலால், மேலேயிருக்கும் கட்டு அவித்து, தேன் சொரிய நடுங்கும் கழுநீர் மலரினைப்போலக், கண்ணகியின் கருங்கண்ணும் மாதவியின் செங்கண்ணும் தத்தம் உள்ளத்தின் நினைவை மறைத்துத் தத்தம் எண்ணத்தை அகத்தே ஒளிக்க முனைந்து, விண்ணவர் கோமானின் விழவு நாட்களிலே நீர் உகுத்தன. அவ்வேளையில் கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடிக்கின்றன. பிரிவுத்துயரால் கண்ணகிக்கும், ஆனந்த மிகுதியால் மாதவிக்கும் கண்கள் நீரைச் சொரிந்தன. கடல் ஆடு காதை விஞ்சையர் வேரன் ஒருவன், தன் காதலியுடன் புகாருக்கு இந்திர விழாக் காணவந்தான். மாதவியின் பதினொரு வகை ஆடல்களையும் தன் காதலிக்குக் காட்டி மகிழ்ந்தான். விழா முடிந்ததும் கோவலன் மாதவியோடு ஊடினான். மாதவி அவன் ஊடல் தீர்த்துக் கூடினாள். பின்னர்க் கடலாட விரும்பினாள். இருவரும் கடற்கரைச் சென்றனர். களித்திருக்கும் பிற மக்களோடு தாமும் கலந்தவராக அவர்கள் மகிழ்ந்திருந்தனர் என்பதை எடுத்துரைக்கும் பகுதி இது. கானல் வரி கோவலனும் மாதவியும் யாழிசையுடன் சேர்ந்து கானல்வரிப் பாடல்களைப் பாடுகின்றனர். இறுதியிலே, கோவலனின் மனம் மாறுகின்றது அவனுடைய ஊழ்வினை சினந்துவந்து அவன் பாற் சேரத் தொடங்கிற்று. முழுநிலவினைப் போன்ற முகத்தினளான மாதவியை, அவளோடு கைகோர்த்து இணைந்து வாழ்ந்த தன் கைப்பிணைப்பை, அந்நிலையே நெகிழவிட்டவனும் ஆயினான். மாதவியுடன் செல்லாது, தன் ஏவலாளர் தன்னைச் சூழ்ந்துவர, கோவலன், மாதவியைவிட்டுப் பிரிந்து, தான் தனியாகவே சென்று விட்டான். செயலற்ற நெஞ்சினளானாள் மாதவி. தன் வண்டியினுள்ளே சென்றும் அமர்ந்தாள். காதலன் தன்னுடன் வருதல் இல்லாமலேயே, தனியாகவே, தன்மனைச் சென்று புகுந்தாள். கானல் விழாவின் முடிவில் மன்னனை வாழ்த்தும் மரபும் பேணப்பட்டது. ஊழ்வினை வந்து உருத்தது என்பதனைக் காட்டும் உருக்கமான பகுதி இது. வேனிற்காதை இளவேனிற் பருவமும் வந்தது. கோவலனின் பிரிவாலே துயரடைந்த மாதவி, தன் தோழி வசந்தமாலையைத் தூது அனுப்பினாள். தன்பால் வந்த தூதினைக் கோவலன் மறுத்தான். வசந்தமாலையிடம், ஆயிழையே! அவளோர் ஆடல் மகள்! ஆதலினாலே, என்பாற் காதல் மிகுந்தவளேபோலே நடித்த நாடகமெல்லாம், அவளுடைய அந்தத் தகுதிக்கு மிகவும் பொருத்தம் உடையனவே! தன்மேல் அவளுக்கு உண்மையான காதல் எதுவும் இல்லை எனக் கூறி மாதவியை நாடி வர மறுத்தான். அதனால் மாதவி மனம் துடித்தாள். இளவேனிற்கு முந்திய பருவத்தே பிரிந்தவன், இளவேனிற் காலத்திலாவது வருவானென மயங்கியிருந்த அவள் மனம், இளவேனிற்காலம் வரவும் அவன் வாராமை கண்டு, நிலை கொள்ளாது தவிக்கின்றது என்பதையும் காணலாம். இளவேனில் பற்றிய ஏக்கமே, கோவலனிடம் கண்ணகி நினைவையும் தூண்டிற்று என்பதும் இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது. கனாத்திறம் உரைத்த கதை கண்ணகி, தேவந்தியிடம் "யான், இனி என் கணவனுடன் கூடுதலைப் பெறவே மாட்டேன். என் நெஞ்சம் ஏனோ வருந்துகின்றது! கனவிலே நேற்றிரவு கோவலன் வந்தான். என் கைப்பற்றி'வருக! என அழைத்தான். இருவரும் வீட்டைவிட்டுப் போய், ஒரு பெரிய நகரினுள் சென்றோம். சேர்ந்த நகரிலே என் மீது தேளினைப் பிடித்து இட்டவரைப்போலக், 'கோவலனுக்கு ஒரு தீங்கு விளைந்தது' என்று எங்கட்கு ஏலாத்தோர் வார்த்தையினைச் சொல்லினர். அது கேட்டுக் காவலன் முன்னர்ச் சென்று யானும் உண்மையைக் கூறி வழக்கு உரைத்தேன். காவலனோடு, அவ்வூருக்கும் நேரிட்ட தீங்கு ஒன்றும் உண்டாயிற்று. அந்நிலையே யான் பேச்சற்றேன்" என்று தான் கண்ட கனவை எடுத்துரைத்தாள். கோவலன் கண்ணகியிடம் மீண்டும் வந்தான். தன் மனைவியின் வாடிய மேனியும் வருத்தமும் கண்டான். தம் குலத்தவர் தந்த மலைபோலும் பெரிய பொருட்குவைகள் எல்லாமே தொலைந்து போயின; அதனால் வந்த இல்லாமை நிலை தனக்கு வெட்கத்தைத் தருவதாகவும் கூறினான். கண்ணகியோ தன் திருமுகத்திலே முறுவலினைக் காட்டி "சிலம்புகள் உள்ளன; எடுத்துக் கொள்ளும்" என்றாள். காதலியான கண்ணகியானவள் கண்ட தீய கனவு, கரிய நெடுங் கண்களையுடைய மாதவியின் பேச்சினையும் பயனற்றுப் போகச் செய்தது. பழவினை வந்து கோவலனின் நெஞ்சினைத் தன் போக்கிலே ஒருப்படுத்தப், பொழுது விடியுமுன் இருவரும் தம் வீட்டைவிட்டும், புகாரை விட்டும் வெளியேறி, மதுரை நோக்கிப் பயணமாயினர். இப்பகுதியில் கண்ணகியின் கனவு விளக்கப்பட்டுள்ளது. நாடுகாண் காதை வீட்டைவிட்டும், புகாரை விட்டும் வெளியேறிய கோவலனும் கண்ணகியும், கவிந்தியடிகளுடன் மதுரையை நோக்கி நடந்ததனர். திருவரங்கத்தைக் கடந்து, அம்மூவரும் சோணாட்டு உறையூர் வரையும் சென்றது பற்றிக் கூறுவது இப்பகுதியாகும். இத்துடன் புகார்க் காண்டம் முடிவுற்றது. மதுரைக் காண்டம் இது 13 காதைகளைக் கொண்டது. அவை, காடு காண் காதை, வேட்டுவ வரி, புறஞ்சேரி இறுத்த காதை, ஊர் காண் காதை, அடைக்கலக் காதை, கொலைக்களக் காதை, ஆய்ச்சியர் குரவை, துன்ப மாலை, ஊர் சூழ் வரி, வழக்குரை காதை, வஞ்சின மாலை, அழற்படுகாதை, கட்டுரை காதை என்பவை ஆகும். காடுகாண் காதை கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் என்னும் மூவரும், தென்திசை நோக்கி நடையைத் தொடர்ந்தனர். இடைவழியிலே மாங்காட்டு மறையோனைச் சந்தித்து, வழியின் இயல்புகளை அவன் மூலம் கேட்டு அறிந்தனர். கானுறை தெய்வம் வசந்த மாலையின் வடிவிலேத் தோன்றிக் கோவலனின் மதுரைப் போக்கைத் தடுக்க முயல்கிறது. 'வசந்தமாலையின் வடிவிலே தோன்றினால், மாதவியின் பேரிலுள்ள காதலினால் இவன் நமக்கு இசைவான்' என்று கருதிய அத்தெய்வம் கோவலனின் பாதங்களின் முன் வீழ்ந்து கண்ணீரும் உகுத்தது. வசந்தமாலை, ஏதோ பிழைபட்ட சொற்களைக் கோவலனிடம் சொன்னதால்தான் கோவலன், தன்னைக் காண வராமல் கொடுமை செய்து விட்டான் என்று மாதவி கூறி மயங்கியும் வீழ்ந்தாள் என்றும் மாதவி, கணிகையர் வாழ்வு, என்றும் கடைப்பட்ட வாழ்வே போலும்! என்று சொல்லி வருந்திக் கண்ணீர் உகுத்ததாகவும் வசந்தமாலையின் வடிவில் தோன்றிய கானல் தெய்வம் கூறியது. மயக்கும் தெய்வம் இக்காட்டிலே உண்டு என்று வியக்கத்தக்க மறையவன் முன்னரே கோவலனிடம் சொல்லியிருந்தனன். கோவலன் கூறிய மந்திரத்தால் வசந்தமாலை வடிவில் தோன்றியக் கானுறை தெய்வம் "யான் வனசாரிணி; நினக்குமயக்கம் விளைவித்தேன்; புனத்து மயிலின் சாயலினையுடைய நின்மனைவிக்கு, புண்ணிய முதல்வியான கவுந்தியடிகளுக்கும் என் செயலைக் கூறாது போய் வருக' என்று சொல்லி, அத்தெய்வம், அவ்விடத்து நின்றும் மறைந்து போய்விட்டது. அதன்பின்னர் மூவரும் ஐயையின் திருக்கோயிலைச் சென்றடைகின்றனர். வேட்டுவ வரி ஐயைக் கோட்டத்திலே ஒரு பக்கமாகச் சென்றிருந்து கோவலன், கண்ணகி, கவுந்தி ஆகிய மூவரும் இளைப்பாறுகின்றனர். அங்கே 'சாலினி' தெய்வமேற்று, கண்ணகி வாழ்வின் பின்நிகழ்வுகளைக் கூறுகின்றாள். பின், வேட்டுவர் வரிப்பாட்டுப் பாடி கூத்து ஆடுகின்றனர். புறஞ்சேரி இறுத்த காதை பகல் நேர வெய்யிலோ கடுமையாயிருந்தது. அதனால் பகலிற் செல்லாது, இரவில் நிலவு வெளிச்சத்திலேயே அவர்கள் வழிநடந்தனர். இடையே, ஓரிடத்திலே, கௌசிகன் மாதவியின் ஓலையுடன் வருகின்றான். தன் பெற்றோர் அருமணி இழந்த நாகம் போலும் இன்னுயிர் இழந்த யாக்கை போன்றும் துயருற்ற சம்பவத்தையும், உற்றோரும் துயர்க் கடல் வீழ்ந்ததையும், மாதவியின் துயரத்தையும் கௌசிகன் கொண்டுவந்த, மாதவியின் கடிதத்தின் மூலம் அறிந்தான். மாதவியும் குற்றமற்றவளே என்பதை உணர்ந்து, அக்கடிதத்தையே தன் பெற்றோரிடம் கொண்டுபோய் கொடுக்கும்படியாக கோவலன், கௌசிகனை வேண்டினான். கௌசிகனை மீண்டும் புகாருக்கு அனுப்பிவிட்டுக் கோவலன், அவ்வழியிடையே வந்து தங்கிய பாணருடன் கூடி யாழிசைக்கின்றான். அவர்பால் மதுரையின் தூரத்தினைக் கேட்டறிந்து, வைகையாற்றை மரத்தெப்பத்தாற் கடந்து செல்லும் போது வைகையாறு கண்ணகிக்கு ஏற்படப்போகும் துன்பத்தைத் தான் முன்னரே அறிந்தவளைப்போலப், புண்ணிய நறுமலர் ஆடைகளால் தன் மேனி முழுவதும் போர்த்துத், தன்கண் நிறைந்த மிகுந்த கண்ணீர் வெள்ளத்தையும் உள்ளடக்கிக்கொண்டு, அவள் அமைதியாகவும் விளங்கினாள். பின்னர் இனிய மலர்செறிந்த நறும்பொழிலின் தென்கரையினைச்சென்று அவர்கள் சேர்ந்தனர். பகைவரைப் போரிலே வென்று வெற்றிக் கொடியானது, 'நீவிர், இவ்வூருக்குள்ளே வாராதீர்' என்பது போல, மறித்துக் கைகாட்டியபடியே பறந்து கொண்டிருந்தது. அறம்புரியும் மாந்தர் அன்றிப் பிறர் யாரும் சென்று தங்காத, புறஞ்சிறை மூதூரினை நோக்கி அவர்கள் மூவரும் விரும்பிச் சென்றனர். ஊர்காண் காதை புறஞ்சிறை மூதூரிலே, கவுந்தியும் கண்ணகியையும் தங்கியிருக்க வைத்துவிட்டுக் கோவலன் மதுரை நகருக்குள் சென்று அங்குள்ள செல்வர், அரசர் வீதி, எண்ணெண் கலையோர் வீதி, அங்காடி வீதி, இரத்தினக் கடைத் தெரு, பொன்கடை வீதி, அறுவை வீதி, கூல வீதி ஆகிய பல்வேறு வீதிகள் வழியாகச் சென்று அவற்றின் சிறப்புகளையும் கண்டு, மீண்டும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேரும் செய்தியைக் கூறும் பகுதி இது. அடைக்கலக் காதை புறஞ்சேரிக்குத் திரும்பிய கோவலன், மதுரையிலே கண்டவெல்லாம், கவுந்தியிடம் வியப்போடு எடுத்துக் கூறினான். 'தென்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என்னிலை உணர்த்தி' என்று சொல்லி மதுரை சென்றவன், அதுபற்றி ஏதுங் கூறவில்லை. கவுந்தியம்மை கவலையடைகின்றார். அவ்வேளை, 'மாடலன்' அங்கே வருகின்றான். கோவலனின் சிறப்புகளைக் கூறுகின்றான். துறந்தோருக்குரிய அவ்விடத்தை விட்டுப் பொழுது மறைவதற்குள் மதுரை நகருட் செல்லுமாறு மாடலனும் கவுந்தியும் கோவலனைத் தூண்டுகின்றனர். அவன் செயலற்று இருக்கவே, அவ்வழியாக வந்த மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக அளிக்கின்றார் கவுந்தியடிகள். அவளும், கண்ணகியுடன் கோவலனும் பின்வரத் தன்வீட்டிற்கு அவளை அன்போடு அழைத்து போகின்றாள். கொலைக்களக் காதை கோவலன் கண்ணகியருக்கு ஒரு புது மனையிலே இடந்தந்து, பல்வகைப் பொருளும் தருகின்றாள் மாதரி. தன் மகளையும் கண்ணகிக்குத் துணையாக அமைக்கின்றாள். கண்ணகி சோறாக்கித் தன் கணவனை உண்பிக்க, அவனும் அவளைப் பாராட்டி, தன் நிலைக்கு வருந்துகின்றான். கண்ணகியின் காற்சிலம்புகளுள் ஒன்றைக் கையிலே எடுத்துக்கொண்டு மதுரை நகருக்குப் போய் விலை மாறி வருவதாகக் கூறிச் சென்றான். கடைவீதி வழியே செல்லும்போது பொற்கொல்லன் ஒருவன் தன் பின்னே நூற்றுக்கணக்கான பொற்கொல்லர் தொடர்ந்துவர முன்னால் நடந்து வந்தான். அவனை அரண்மனைப் பொற்கொல்லன் என்று கருதி கோவலன் தான் கொண்டுவந்த காற்சிலம்பை அவனிடம் கொடுத்து விற்றுத் தருமாறு வேண்டுகின்றான். தன் குடிலில் கோவலனை இருத்திவிட்டு அக்காற்சிலம்பை மன்னருக்கு அறிவித்து வருவதாகச் சொல்லிச் சென்றான். பொற்கொல்லனின் சூழ்ச்சியால் கோவலன் கொல்லப்பட்டு இறந்தான். ஆய்ச்சியர் குரவை ஆயர் சேரியிலே பல தீய நிமித்தங்கள் தோன்றின. குடத்திலிட்டு வைத்த பாலோ உறையவில்லை. ஏற்றின் அழகிய கண்களிலிருந்து நீர் சொரிகின்றன. வெண்ணெயோ உருக்கவும் உருகாது போயிற்று. ஆநிரைகளின் கழுத்து மணிகள் நிலத்திலே அறுந்து வீழ்கின்றன. ஆட்டுக்குட்டிகள் துள்ளியாடாவாய் முடங்கிக் கிடக்கின்றன. அதனால் தீமை நேரும் என்று அஞ்சிய ஆயமகளிர்கள், தம் குலதெய்வமான கண்ணனை வேண்டிக் குரவைக் கூத்து ஆடுகின்றனர். துன்ப மாலை கண்ணகியின் துன்பத்தை உணர்த்துவதால் துன்ப மாலை என அழைக்கப்படுகிறது. குரவையின் முடிவிலே, மாதரி வைகையிலே நீராடிவிட்டுவரப் போயினாள். கோவலன் கொலையுண்ட செய்தியைக் கேட்டுக் கண்ணகி புலம்பினாள். இப்பகுதியில் கண்ணகியின் அவல மிகுதியைக் காண்கின்றோம். அவள் காய்கதிர்ச் செல்வனை விளித்துக் கேட்டாள். "நின் கணவன் கள்வனல்லன்; இவ்வூரினைப் பெருந்தீ உண்ணப்போகின்றது" என்ற குரல் ஒன்று எழுந்தது. ஊர்சூழ் வரி எழுந்து ஒலித்த அக்குரலை அனைவருமே கேட்டனர். கண்ணகியும், தன்பாலிருந்த மற்றொரு சிலம்பினைத் தன் கையிலே எடுத்துக் கொண்டவளாகத், தன் கணவனின் உடலினை காணப் புறப்பட்டாள். அவன் கிடந்த நிலையைக் கண்டு அரற்றினாள். அவன் வாய் திறந்து பேசவும் கேட்டாள். குலமகளாகப் பொறுமையின் வடிவமாகத் துயரங்களைத் தாங்கி அமைதியோடிருந்தவள், கொதித்துப் பலரும் அஞ்சி ஒதுங்க, வம்பப் பெருந்தெய்வம்போல ஆவேசித்து, மன்னன் அரண்மனை நோக்கி அறம் கேட்கப் போகும் நிலையையும் காண்கின்றோம். இந்த நிலைமாற்றம் பெண்மையின் தெய்வீகப் பேரியல்பு என்றும் உணர்கின்றோம். வழக்குரை காதை கண்ணகி அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள். மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி " நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?" என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, "ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். "புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகார் நகரமே, யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசாத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர்" என்று கூறினாள். பாண்டிய மன்னன் கண்ணகியிடம் "கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது"என்றாள். அதற்கு அரசன் "நீ கூறியது, நல்லதே!எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே" என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான். வைத்த அச்சிலம்பைனைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், "பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்" என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி, கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள்.வாழியெம் கொற்கை வேந்தே வாழி தென்னம் பொருப்பின் தலைவ வாழி செழிய வாழி தென்னவ வாழி பழியொடு படராப் பஞ்சவ வாழி அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை அல்லள் அறுவர்க் கிளைய நங்கை இறைவனை ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன் வஞ்சின மாலை பாண்டியன் உயிர்விட்ட அக்காட்சி கண்ணகியைத் திகைப்படையச் செய்தது. கோப்பெருந்தேவியது கற்பின் செவ்வி அவளைப் பெரிதும் வியப்படையவும் செய்தது. எனவே, தானும் கற்புடை மகளிர் பலர் பிறந்த நகரிலே பிறந்தவள் என்றும், பத்தினியே என்றும், அரசோடு மட்டும் அமையாது மதுரை நகரினையும் அழிப்பேனென்றும் வஞ்சினம் கூறிச் சென்று, தீக்கடவுளையும் மதுரை மீது ஏவுகின்றாள். அழற்படு காதை தீத் தெய்வத்தைக் கண்ணகி மதுரை மீது ஏவினாள். அதன் பயனாக மதுரை மூதூரினை எரிபற்றி உண்ணத் தொடங்கியது. நால்வகை வருணபூதங்களும் பிறவும் நகரைவிட்டு விலகிப்போயின. கணவனை இழந்துவிட்ட பிரிவுத் துயரோடு உள்ளம் கொதித்து, உலைக்களத்துத் துருத்திமுனைச் செந்தீயைப் போலச் சுடுமூச்செறிந்தனள் கண்ணகி. அங்ஙனம் சுடுமூச்செறிந்தவளாகத் தெருக்களிலெ கால்போன இடமெல்லாம் அவள் சுழன்று திரிந்தாள். குறுந்தெருக்களிலே கவலையுடன் நிற்பாள். போய்க்கொண்டும் இருப்பாள். மயங்கிச் செயலழிந்தும் நிற்பாள். இவ்வாறு பெருந்துன்பம் அடைந்த வீரபத்தினியின் முன்னர், மலர்ந்த அழலின் வெம்மைமிக்க நெருப்பினைப் பொறாதவளான 'மதுரபதி' என்னும் மதுரைமாதெய்வம் வந்து தோன்றினாள். கட்டுரைக் காதை மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன்னால் தோன்றுகிறது. அவளது பண்டைய வரலாறும், கோவலன் செய்த பழைய பழியும் கூறுகின்றது. கண்ணகியும் மதுரையை விட்டு வெளியேறித் திருச்செங்குன்றினைச் சேர்ந்து, மதுராபதி கூறியபடியே, தன் கணவனுடன் ஒன்றுபடுகிறாள். இத்துடன் மதுரைக் காண்டம் முற்றுப்பெற்றது. வஞ்சிக் காண்டம் குன்றக் குரவை காட்சிக் காதை கால்கோள் காதை நீர்ப்படைக் காதை நடுகற் காதை வாழ்த்துக் காதை வரம் தரு காதை ஆகிய ஏழு காதைகளைக் கொண்டது. குன்றக் குரவை திருச்செங்குன்றினைச் சேர்ந்த கண்ணகியாள், மலர் நிறைந்த ஒரு வேங்கை மரத்தின் அடியிலே சென்று நின்றனள், மதுரைமா தெய்வம் கூறியதைப் போலவே, கோவலன் இறந்ததன்பின் பதினான்கு நாட்கள் கழிந்திருந்தன. வானுலகத்திலிருந்து தேவருடன் அவர் வர, அவனுடன் அவளும் விமானம் ஏறி வானகம் நோக்கிச் சென்றனள். அக் காட்சியைக் குறவர் குடியினர் கண்டனர். அவர்கள் அடந்த வியப்போ பெரிது!அதனால், அவளைத் தம் குலதெய்வமாகவே கொண்டு வழி பட்டுப் பணிந்து போற்றலாயினர். காட்சிக் காதை சேர வேந்தனான செங்குட்டுவன் மலைவளம் காணச் சென்றான். கண்ணகி வேங்கை மரத்தடியில் நின்றதும், தாம் கண்ட அதிசயமும் குன்றக் குறவர் அவனுக்குக் கூறினர். அப்போது அங்கே அவ்விடத்தே இருந்த சாத்தனார், கண்ணகி வழக்கு உரைத்ததும், மதுரை தீயுண்டதும் பற்றி அவர்கட்குக் கூறினார். செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல் நட்டு வழிபட எண்ணினான். வடநாட்டு வேந்தர் சிலரின் வீராப்பான பேச்சு இமயத்திற்கே செல்ல அவனைத் தூண்டியது பற்றிய அரசாணையும் எழுந்தது என்பது இது. கால்கோட் காதை செங்குட்டுவன் படைப்பெருக்கோடு வடநாடு நோக்கிச் சென்றான். எதிர்த்த ஆரிய மன்னர்கள் பலரையும் வென்றான். இமயத்திலே பத்தினிக்குக் கல்லும் தோண்டிக் கொண்டான். நீர்படைக் காதை கண்ணகிப் படிவத்திற்கான கல்லினைத் தோண்டிக் கொணர்ந்து, நீர்ப்படை செய்தது முதல், மீண்டும் செங்குட்டுவன் வஞ்சிமா நகரம் திரும்பியது வரை கூறுவது. நடுகற் காதை பத்தினியாளான கண்ணகிக்கு இமயத்திலேயிருந்து கொணர்ந்த கல்லிலே படிவம் சமைத்து, அதனை முறைப்படி, விழாக்கோலத்துடன் தெய்வமாக போற்றிக் கொண்டாடிய செய்திகளைக் கூறுவது இப்பகுதி. வாழ்த்துக் காதை கண்ணகிப் படிமத்தின் கடவுள் மங்கலம் நடைபெற்றது. செங்குட்டுவன் வந்திருந்தான். பல சிற்றரசர்களும் வந்து திறை செலுத்தினர். தேவந்தி முதலியோர் கண்ணகி கோயிலுக்கு வந்து அரற்றினர். கண்ணகி தேவ வடிவிலே தோன்றுகின்றாள்; செங்குட்டுவனையும் வாழ்த்துகின்றாள். வரந்தரு காதை மணிமேகலை துறவைப்பற்றி தேவந்தி சொன்னாள். அவள் மேல் சாத்தன் ஆவேசித்துப் பேசுகிறான். கண்ணகியின் தாய், கோவலனின் தாய், மாதரி என்பவர், தம் அடுத்த பிறப்பிற் சிறுகுழந்தைகளாக அங்கு வந்து, தாம் மீண்டும் பிறந்ததன் காரணம் பற்றிக் கூறுகின்றனர். பத்தினிக்குப் பூசை செய்யத் தேவந்தி அனுமதி பெறுகிறாள். பல நாட்டு மன்னரும் வணங்கி விடைபெறுகின்றனர். வேள்விச் சாலைக்குச் செங்குட்டுவன் செல்லுகின்றான். நூலாசிரியருக்குக் கண்ணகி அவர்தம் முன்வரலாறு உரைக்கின்றாள். முடிவில் உலகோர்க்கான அறிவுரைகளுடன் சிலப்பதிகாரம் முடிவடைகிறது. கதை மாந்தர்கள் கண்ணகி - பாட்டுடைத் தலைவி. கோவலனது மனைவி. களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் கற்புநெறியின் அளவுகோலாகவும் படைக்கப்பட்டவள். தெய்வம் தொழாள் கொழுனன் தொழுவாள் என வள்ளுவர் உரைத்த மங்கை. கணவன் போற்றா ஒழுக்கம் புரிந்தபோதும் அதை மாற்றா உள்ள வாழ்கையே ஆனவள். கணவனுக்காக மதுரை மாநகரையே எரித்தவள். கோவலன் - பெரும் செல்வந்தர் மாசாத்துவானின் மகன். பிற ஒழுக்கங்கள் அனைத்தும் நிறைந்திருந்தாலும் மோகத்தால் அழிந்தவன். ஊழ்வினை காரணமாக உயிரிழந்தவன். மாதவி - பேரழகி. ஆடற்கலையின் ஆழமுணர்ந்தவள். கணிகையர் குலத்தோன்றலெனினும் கற்புநெறி வழுவாமல் கோவலனுக்கென்றே வாழ்ந்தவள். மணிமேகலையின் தாய். சிலம்பு செல்வர் ம. பொ. சிவஞானம் சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமை ம. பொ. சியைச் சாரும்.இக்காப்பியத்தின் மேல் கொண்ட ஆழ்ந்த காதலால் தன் மகள்களுக்கு கண்ணகி, மாதவி என பெயர் சூட்டினார்.ரா. பி. சேதுப்பிள்ளை மூலம் 'சிலம்பு செல்வர்' என்னும் பட்டம் பெற்றார். சிலப்பதிகாரம் பற்றி ம. பொ. சி எழுதிய நூல்கள் சிலப்பதிகாரமும் தமிழரும் [1947] கண்ணகி வழிபாடு [1950] இளங்கோவின் சிலம்பு [1953] வீரக்கண்ணகி [1958] நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் (உரை) [1961] மாதவியின் மாண்பு [1968] கோவலன் குற்றவாளியா? [1971] சிலப்பதிகாரத் திறனாய்வு [1973] சிலப்பதிகார யாத்திரை [1977] சிலப்பதிகார ஆய்வுரை [1979] சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு [1980] சிலப்பதிகாரத்தில் யாழும் இசையும் [1990] சிலம்பில் ஈடுபட்டதெப்படி? [1994] இவற்றையும் பார்க்கவும் தமிழிசை ஆதாரங்கள் பட்டியல் பழமையான இசைநூல்களும் காலங்களும் சிலப்பதிகாரம், பாவமைதி சிலப்பதிகாரத்தில் சமூகவியல் செய்திகள் சிலப்பதிகாரத்தில் அரசு முறை செய்திகள் சிலப்பதிகாரத்தில் சமயக் கோட்பாடுகள் உசாத்துணைகள் ஆர். கே. சண்முகம் செட்டியார். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட உரை. புதுமலர் நிலையம் -வெளியீடு- 1946 வி. ஆர். இராமச்சந்திர தீட்சிதர். சிலப்பதிகாரம். புகார்க் காண்ட மதிப்புரை. புதுமலர் நிலையம் வெளியீடு -:1946 எஸ். வையாபுரிப்பிள்ளை. தமிழ் ஆராய்ச்சித்துறைத்தலைவர். சென்னைப் பல்கலைக்கழகம்- சிலப்பதிகாரப் : புகார்க்காண்டம் முன்னுரை. புதுமலர் நிலையம் வெளியீடு- 1946 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சிலப்பதிகாரம் - முழுமையும் - சென்னைநூலகம்.காம் சிலப்பதிகாரம் - புகார்க்காண்டம்.pdf சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம்.pdf சிலப்பதிகாரம் - வஞ்சிக்காண்டம்.pdf Tamil Nadu's Silapathikaram Epic of the Ankle Bracelet: Ancient Story and Modern Identity by Eric Miller Tamil Culture, Kannagi and the Ankle Bracelet சிலப்பதிகாரம் வலைத்தளம் * பகுப்பு:பரதநாட்டிய நூல்கள் பகுப்பு:ஐம்பெருங் காப்பியங்கள் பகுப்பு:பௌத்த தமிழ் இலக்கியங்கள்
திருச்சிராப்பள்ளி
https://ta.wikipedia.org/wiki/திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி (Tiruchirappalli அல்லது TrichinopolyTrichinopoly என்று பிரித்தானிய வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்படுகிறது.), இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த மாநகரமாகும். இது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இது தமிழ்நாட்டின் பெருநகரங்களுள் ஒன்றாகும். இந்நகரம் தமிழ்நாட்டின் பரப்பளவு அடிப்படையில் மூன்றாவது பெரிய மாநகரமும் மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய மாநகரமும் ஆகும். இந்த நகரம் தென்னிந்தியாவின் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், கோயம்புத்தூர், கொச்சிக்கு அடுத்த ஆறாவது மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் இது உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி எனும் தகுதி பெற்றது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாகவும், தற்போதைய தமிழகத்தின் முக்கியமான நான்காவது பெரிய நகரமாகவும் உள்ளது. இதைப் பொதுவாகத் திருச்சி (Trichy) என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி என்பதன் பொருளானது, திரு - சிராய் - பள்ளி, அதாவது சிராய் (சிராய் என்பது பாறை என்று பொருள்படும்) பள்ளி கொண்ட இடம். பிரசித்தி பெற்ற மலைக் கோட்டை இந்தப் பாறையின் மேல் பகுதியில் இந்தியாவில் எவ்விடத்திலும் இல்லாத இந்து சமயத்தின் முழு முதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கு உச்சிப் பிள்ளையார் என்ற பெயரில் தனிக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவின் தூய்மையான 10 நகரங்களில், திருச்சியும் ஒன்றாகும். முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் (1980–1984) ஆட்சி காலத்தில் அரசியல் தலைமையிடமாக திருச்சிராப்பள்ளியை தமிழ்நாட்டின் தலைநகரமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு அத்திட்டம் நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் இன்றளவும் திருச்சியைத் தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக்க தகுதி உடைய நகரமாக மாற்ற கோரிக்கை மக்கள் மத்தியில் ஓர் ஏக்கமாகவே காணமுடிகிறது. மற்றும் திருச்சிராப்பள்ளி பெறுநகர மாநகராட்சி என்று தரம் உயர்த்தி கூடிய விரைவில் அறிவிக்கபட இருக்கிறது. பெயர்க்காரணம் திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. "சிரா" துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு-சிலா-பள்ளி (பொருள்: "புனித-பாறை-ஊர்)" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. வேறு சில அறிஞர்கள் "திரு-சின்ன-பள்ளி" (புனித-சிறிய-ஊர்) என்பதிலிருந்தும் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர். வரலாறு thumb|left|120px|கர்நாடகப்போரின் போது திருச்சி, 1751 thumb|left|120px|திருச்சி,1955 முதன்மைக் கட்டுரை: திருச்சிராப்பள்ளியின் வரலாறு திருச்சிராப்பள்ளி, தமிழ்நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இந்நகரத்தின் வரலாறு பொ.ஊ.மு. இரண்டாயிரம் ஆண்டு காலத்துக்கு முந்தையது.Thani Nayagam, p 324 முற்கால சோழர்களின் தலைநகராக, பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 3-ஆம் நூற்றாண்டு வரை விளங்கிய உறையூர்Sastri, p 22 தற்போதைய திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.Sastri, p 19Beck, p 40உறையூர் சோழர் தலைநகரம் - தி இந்து கரிகால் சோழன் கட்டிய உலகின் பழைய அணையான கல்லணை பிரித்தானிகா கல்லணை கட்டப்பட்டது 2 ஆம் நூற்றாண்டு உறையூரில் (உறையூருக்கு கோழியூர் என்ற பெயரும் உண்டு) இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. பொ.ஊ. 5-ஆம் நூற்றாண்டில் இந்நகரம் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 6-ஆம் நூற்றாண்டில் தென்இந்தியாவை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மன் மலைக்கோட்டையில் பல குடைவரைக் கோவில்களைக் கட்டினார்.Kuppuram, p 105Sastri, p 105Beck, p 42Beck, p 92 பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பிற்கால சோழர்கள் இந்நகரை 13-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தார்கள்.Sastri, p 438 சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின், இந்நகரம் பாண்டியர்களின் ஆளுகைக்கு கீழ் வந்தது. 1216 முதல் 1311 வரை அவர்கள் ஆண்டார்கள். 1311ல் மாலிக் காபூர் பாண்டியர்களைத் தோற்கடித்து இந்நகரைக் கைப்பற்றினார்.Aiyangar, p 99Lal, pp 251-252 மாலிக் காபூரின் டில்லி சுல்தானின் படை பல விலைமதிக்க முடியாத பொருட்களைக் கைப்பற்றினார்கள். இவர்கள் அரங்கநாதன் கோவிலைக் களங்கப்படுத்தினதால், அக்கோயில் 60 ஆண்டுகளுக்கு மூடப்பட்டு இருந்தது.http://www.templenet.com/Tamilnadu/df001.html வீதி உலாவிற்கு எடுத்துச்செல்லப்படும் அரங்கன் திருவுருவம் மாலிக்காபூரின் படையெடுப்பின் காரணமாகத் திருமலையில் பாதுகாக்கப்பட்டது.http://news.oneindia.in/2006/07/16/srirangam-temple-to-honour-tirupathi-temple-with-vasthirams-1153040574.html முசுலிம்களின் ஆட்சிக்குப்பிறகு இந்நகரம் விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. பின்பு அவரின் இப்பகுதியின் ஆளுநர் மதுரை நாயக்கர்களின் கீழ் 1736 வரை இருந்தது.Sathianathaier, p 234. திருச்சிராப்பள்ளியிலுள்ள அரண்மனை மதுரை நாயக்கர்களின் வழியில் வந்த இராணி மங்கம்மாள் திருச்சி மலைக்கோட்டை பகுதியில் கட்டிய அரண்மனை அரசு அருங்காட்சியகமாகச் செயல்பட்டு வருகின்றது. மக்கள் வகைப்பாடு இந்திய 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்நகரின் மக்கள்தொகை 8,47,387 ஆகும். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருச்சிராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 91.38% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.85% , பெண்களின் கல்வியறிவு 88.01% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதாகும். திருச்சிராப்பள்ளி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தமிழ்நாட்டில் நான்காவது மிகப்பெரும் மாநகரப்பகுதியாக விளங்கும் திருச்சிராப்பள்ளி, இந்தியளவில் 51வது இடத்தில் உள்ளது. 2011இல் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் துவக்கநிலை மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 8,47,387 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 10,22,518 ஆகவும் உள்ளது. திருச்சிராப்பள்ளியில் 1,62,000 மக்கள் 286 குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கணிசமான அளவில் கிறித்தவர்களும் முசுலிம்களும் வாழ்கின்றனர். குறைந்த எண்ணிக்கையில் சீக்கியர்களும் சமணர்களும் இங்குள்ளனர். மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியாகத் தமிழ் விளங்கினாலும்Sen, p 606 கணிசமான மக்கள் தெலுங்கு,Ramappa and Sudershan, p 116 சௌராட்டிர மொழி மற்றும் கன்னட மொழிMuthanna, Preface, p iii பேசுகின்றனர். சௌராட்டிர மொழியை 16வது நூற்றாண்டில் குசராத்திலிருந்து குடிபெயர்ந்து வாழும் பட்டு நூல்காரர்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். மேலும் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் நகரத்தின் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் முகாம்களில் வாழ்கின்றனர். இங்குள்ள தென்னக இரயில்வேயின் மண்டல தலைமையகத்தையொட்டி கணிசமான ஆங்கிலோ இந்தியர்கள் வாழ்கின்றனர். புவியியலும் வானிலையும் thumb|left|250px|மலைக்கோட்டையின் மேலிருந்து திருச்சி மாநகரின் வான்வழித் தோற்றம் திருச்சிராப்பள்ளி என்ற புவியியல் ஆள்கூறுகளில் அமைந்துள்ளது. நகரத்தின் சராசரி உயரம் ஆகும். இது தமிழ்நாட்டின் புவியியல் மையத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இதன் தரைப்பகுதி பெரும்பாலும் தட்டையாகச் சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குன்றுகளுடன் காணப்படுகிறது; இந்தக் குன்றுகளிலேயே உயரமான குன்றாக மலைக்கோட்டை விளங்குகிறது.Imperial Gazetteer of India, Vol 24, p 26 வடக்கில் சேர்வராயன் மலைக்கும் தெற்கு-தென்மேற்கில் பழனி மலைக்கும் இடைப்பட்ட பரப்பளவில் இந்த நகரம் அமைந்துள்ளது.Abram, p 489 திருச்சியின் மேற்கே தொலைவில் காவிரியின் கழிமுகம் தொடங்குகிறது.Sharma, p 117 இப்பகுதியில் காவேரி ஆறு இரண்டாகப் பிரிந்து திருவரங்கத் தீவு உண்டாகி உள்ளது.Moore, p 61 காவேரி ஆற்றையொட்டிய பகுதிகளில் அமைந்துள்ள வயல்பகுதிகளில் காவேரி ஆறும் அதன் கிளையாறான கொள்ளிடம் ஆறும் செழிப்பான வண்டல் மண்ணைக் கொண்டு சேர்த்துள்ளன.Imperial Gazetteer of India, Vol 24, p 32 தெற்கில், செழிப்பு குறைந்த கருமண் நிலமாக உள்ளன. வண்டல் வளமிகு நன்செய் நிலங்களில் ராகியும் சோளமும் பயிரிடப்படுகின்றன.Imperial Gazetteer of India, Vol 24, p 33 வட-கிழக்கில் திருச்சிராப்பள்ளி வகை என்றழைக்கப்படும் கிரீத்தேசிய பாறைகள் காணப்படுகின்றன.Geological Survey of India, p 104 தென்-கிழக்குப் பகுதியில் மெல்லிய லாடரைட்டு பாறைகளின் கீழாகக் கிரானைட்டுக் கற்கள் கிடைக்கின்றன. நகரத்தின் வட பகுதியில் தொழிற்பேட்டைகளும் வசிப்பிடங்களும் நெருக்கமாக அமைந்துள்ளன. நகரத்தின் தென்பகுதியிலும் குடியிருப்புப் பகுதிகள் நிறைந்துள்ளன. நகரைச் சுற்றிலும் வயல்வெளிகள் சூழ்ந்துள்ளன. கோட்டைக்குள் அடங்கியுள்ள பழைய நகரம் திட்டமிடப்படாததாகவும் நெரிசல்மிக்கதாகவும் விளங்குகிறது. புதிய நகர்ப்புறப்பகுதிகள் திட்டமிடப்பட்டுக் கட்டமைக்கப்பட்டுள்ளன.Superintendent, Census Operations, p 215 ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பல வீடுகள் தொன்மையான இந்து சமய கோவில் வடிவமைப்புக்களுக்கான சிற்ப சாத்திரங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.Ayyar, p 453 தமிழ்நாடு நகர மற்றும் ஊரகத் திட்டச்சட்டம் 1974 இக்கு இணங்க ஏப்ரல் 5, 1974 இல் திருச்சிராப்பள்ளி நகர திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது. காவேரி ஆற்றிலிருந்து நகரத்திற்கு 1,470 நிலத்தடி நீரேற்றிகள், 60 வழங்கல் நீர்த்தொட்டிகள் மூலமாகக் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆண்டின் எட்டு மாதங்களுக்காவது திருச்சி வெப்பமிகுந்து ஈரப்பதம் குறைந்து காணப்படுகின்றது.Annesley, pp 62-64 மார்ச்சு முதல் சூலை வரை மிகவும் வெப்பமான வானநிலை நிலவுகிறது.Moore, p 88 ஆகத்து முதல் அக்டோபர் வரை பெருங்காற்றுடன் கூடிய இடிமழையுடன் மிதமான வானிலை நிலவுகிறது. நவம்பர் முதல் பெப்ரவரி வரை குளிர்காலமாக விளங்குகிறது. பனிமூட்டமும் பனித்துளிகளும் அரிதானவை; அவை குளிர் மாதங்களில் ஏற்படலாம். தலைநகராக்க முயற்சி thumb|right|250px|ஸ்ரீரங்கம் தீவின் வான்வழி புகைப்படம் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த போது அதன் தலைநகரமாகத் திருச்சியை மாற்றும் திட்டத்தினை வழிவகுத்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பினாலும் அரசியல் சூழ்நிலையாலும் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தின் ஒரு முனையில் இருக்கும் சென்னையின் தலைமைச் செயலகத்துக்குத் தெற்குபகுதியில் உள்ள மக்கள் வருவது சிரமமாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தலைமைச் செயலகத்துக்கு எளிதாக வரத் தமிழகத்தின் நடுமையத்தில் இருக்கக்கூடிய திருச்சியைத் தலைநகரமாக மாற்றவேண்டும் என்று எம்.ஜி.ஆர் கருதினார். இதற்காக 1983 இல் திருச்சியைத் தலைநகரமாக்கும் திட்டத்தை அறிவித்தார்.தமிழகத்தின் புதிய தலைநகரம் "திருச்சி': எம்.ஜி.ஆர்., கனவை நிறைவேற்றுவரா ஜெ மாநகராட்சி நிர்வாகம் right|thumb|திருச்சிராப்பள்ளி மாநகராட்சி திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 100 வார்டுகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் பகுதிகள் வீதம் பொன்மலை, அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், துவாக்குடி, திருவெறும்பூர் என ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு மாநகராட்சித் தலைவர் (மேயர்) தலைமையிலான மாநகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் பேணுதல், சாலைகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் போன்ற இன்றியமையாத அடிப்படை வசதிகள் (மாநகராட்சிப் பணிகள்) மாநகராட்சி ஆணையரின் வழியாக, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களால் செயல்படுத்தப்படுகிறது. பொருளாதாரம் 250px|thumb|கேப்ஜெமினி மென்பொருள் நிறுவனம், கரூர் ரோடு, திருச்சி பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் திருச்சிராப்பள்ளி எண்ணெய் செக்குகள், தோல் பதனிடும் தொழில் மற்றும் சுருட்டு தயாரிப்பிற்குப் புகழ் பெற்றிருந்தது.Imperial Gazetteer of India, Vol 24, p 36 உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆண்டுக்கு12 மில்லியன் சுருட்டுகள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாயின. பதனிடப்பட்ட தோல்கள் இங்கிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி ஆயின. திருச்சி நகரில் ஏராளமான சில்லறை மற்றும் மொத்த வணிகக் கூடங்கள் அமைந்துள்ளன; இவற்றில் மகாத்மா காந்தி சந்தை எனப்படும் காய்கறி சந்தை மிகவும் அறியப்பட்டதாகும் திருவரங்கத்தில் உள்ள பூக்கடைத் தெருவும் மாம்பழச்சாலையின் மாம்பழச் சந்தையும் குறிப்பிடத்தக்கன. சுற்றுப்புற நகரான மண்ணச்சநல்லூரில் அரிசி ஆலைகளில் மெருகேற்றப்பட்ட பொன்னி அரிசி தயாராகிறது. இங்குள்ள நடுவண் அரசின் துப்பாக்கித் தொழிற்சாலையில் இந்திய படைத்துறைக்காக எறி குண்டுகள் உந்துகருவிகள், பல குண்டுகள் உந்து கருவிகள், துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இதே வளாகத்தில் கனத்த கலவைமாழை ஊடுருவு திட்ட (HAPP) வசதியும் நடுவண் அரசின் துப்பாக்கி தொழிற்சாலைகள் வாரியத்தால் நடத்தப்படுகிறது. 1980 ஆண்டுகளில் நிறுவப்பட்ட இந்த வசதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக நெகிழ்வுறு தயாரிப்பு அமைப்பு (FMS), பயன்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி தமிழ்நாட்டின் பொறியியல் சாதனங்கள் தயாரிக்கும் முனையமாக விளங்குகிறது. 1928 ஆம் ஆண்டில் தொடர்வண்டி பணிப்பட்டறை நாகப்பட்டினத்திலிருந்து திருச்சிராப்பள்ளியின் கோல்டன் ராக் (பொன்மலை)கிற்கு மாற்றப்பட்டது. தமிழ்நாட்டின் மூன்று பட்டறைகளில் இஃது ஒன்றாகத் திகழ்கிறது. இந்தப் பட்டறையிலிருந்து 2007-08 ஆண்டில் 650 வழமையான மற்றும் குறைந்த மட்ட சரக்கு வண்டிகள் தயாரிக்கப்பட்டன. இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறை பொறியியல் நிறுவனமாக மே 1965 இல் உயரழுத்த கொதிகலன்கள் தயாரிக்கும் பாரத மிகு மின் நிறுவனம் (BHEL), நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து 58 கோடி (US$13 மில்லியன்) செலவில் ஒட்டற்ற எஃகு ஆலையும் கொதிகலன் துணைஉதிரிகள் தொழிற்சாலையும் நிறுவப்பட்டன. இவை மூன்றும் இணைந்து பரப்பளவில் பிஎச்ஈஎல் தொழிற்சாலை வளாகமாக அறியப்படுகிறது. இங்கு நிலக்கரியைப் பயன்படுத்தி 6.2 MW மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மேலும் 1961இல் திருச்சி எஃகு உருட்டல் ஆலைகள் (Trichy Steel Rolling Mills) துவங்கப்பட்டது. மற்ற முகனையான தொழிற்சாலைகளில் ஒன்றாகத் திருச்சி வடிமனை மற்றும் வேதிப்பொருள் வரையறுக்கப்பட்டது (TDCL) 1966ஆம் ஆண்டில் செந்தண்ணீர்புரத்தில் நிறுவப்பட்டது. இங்கு தெளிந்த சாராவி, அசிடால்டெஹைடு, அசிட்டிக் காடி, அசிடிக் அன்ஹைடிரைடு மற்றும் இதைல் அசிடேட்டு தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரும் தனியார்துறை வடிமனைகளில் மிகப் பெரியதான ஒன்றாக விளங்குகிறது; திசம்பர் 2005இலிருந்து நவம்பர் 2006க்கு இடையில் 13.5 மில்லியன் லிட்டர்கள் சாராயம் தயாரிக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளி இந்தியாவின் "ஆற்றல் திறன் மற்றும் கட்டுருவாக்கத் தொழில் தலைநகரம்" (Energy Equipment & Fabrication Capital of India) என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டலத்திலிருந்து ஏற்றுமதியாகும் மென்பொருட்களின் ஆண்டு வருமானம் 26.21 கோடிகளாக (US$5.8 மில்லியன்) உள்ளது. திசம்பர் 9, 2010இல் 60 கோடிகள் (US$13.5 மில்லியன்) செலவில் எல்காட் தகவல்தொழில்நுட்ப பூங்கா திறக்கப்பட்டது. தமிழ்நாடு மின்னணுக்கழகம் வரையறையால் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகம் சிறப்பு பொருளாதார மண்டலமாக விளங்குகிறது. இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ், திருச்சிராப்பள்ளியில் தனது செயற்பாட்டைத் துவக்கத் திட்டமிட்டுள்ளது..திருச்சி மண்டல ஜி.எஸ்.டி. ஆணையர் ஜே.எம்.கென்னடி. திருச்சி மாநகர் பகுதிகள் உறையூர் தில்லைநகர் தென்னுர் புத்தூர் ஸ்ரீனிவாசன் நகர் உய்யகொண்டான் திருமலை நாச்சிக்குறிச்சி ராஜகாலனி கருமண்டபம் பிராட்டியூர் எடமலைப்பட்டிபுதூர் பஞ்சப்பூர் கேகே. நகர் மன்னார்புரம் சுப்பிரமணியப்புரம் கல்லுக்குழி பொன்மலைப்பட்டி பொன்மலை கோல்டன் ராக் டிவிஎஸ் டோல்கேட் l கீழ் கல்கண்டார்கோட்டை மேல் கல்கண்டார்கோட்டை காட்டுர் திருவெறும்பூர் துவாக்குடி குவளைக்குடி அரியாமங்கலம் பால்ண்ணை வராகனேரி சங்கிலியாண்டப்புரம் காந்தி மார்க்கெட் பாலக்கரை அண்ணாநகர் மேலப்புதூர் ஒத்தக்கடை பீமநகர் ஆழ்வார் தோப்பு மரக்கடை கோட்டை பெரியக்கடைவீதி சின்னக்கடைவீதி NSBசாலை தேவதானம் கோஹினுர் கீழசிந்தமணி மேலசிந்தமணி முத்தரசாநல்லூர் கம்பரசம்ம்பேட்டை ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் திருவளர்ச்சோலை மாம்பழச்சாலை அம்மாமண்டபம் No 1 டோல்கேட் பிச்சைண்டவர்கோவில் உத்தமர்கோவில் தாளக்குடி கூத்தூர் திருச்சி புறநகர் பகுதிகள் துவாக்குடி குமாரமங்கலம் மாத்தூர் சோமரசம்பேட்டை அல்லித்துறை வயலூர் வண்ணாங்கோவில் இனாம்குளத்தூர் நவலூர் குட்டப்பட்டு சமயபுரம் மாடக்குடி மண்ணச்சநல்லூர் நொச்சியம் தாளக்குடி வாளாடி சர்கார்பாளையம் கல்லணை குழுமணி ஜீயபுரம் திருப்பராய்த்துறை பெருகமணி சிறுகமணி பெட்டவாய்த்தலை சாலை மற்றும் பேருந்து போக்குவரத்து மாநகர தொடர்பேருந்து, சத்திரம்பேருந்து நிலையம்|thumb|right மத்திய பேருந்து நிலையம்|thumb|right திருச்சிராப்பள்ளி சாலை, தொடருந்து, வான்வழியாக, இந்தியாவின் பல நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. பேருந்து போக்குவரத்து தேசிய நெடுஞ்சாலைகள் தேநெ 45, தேநெ 45பி, தேநெ 67, தேநெ 210, தேநெ 227, ஆகியவை இதன் வழியாகச் செல்கின்றன. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் தலைமையிடமாக கொண்ட திருச்சி மண்டலம் சார்ந்த பேருந்துகள் என தமிழ்நாட்டின் மையபகுதியான திருச்சியிலிருந்து "மத்திய பேருந்து நிலையம்" மற்றும் "சத்திரம் பேருந்து நிலையம்" ஆகிய இரண்டு பெரிய பேருந்து நிலையங்களில் இருந்து பல ஊர்களுக்கு பல அண்டை மாநிலங்களுக்கும் பேருந்து போக்குவரத்து நடைபெறுகின்றது. திருச்சி - திருவண்ணாமலை வழியாக திருப்பதி செல்லலாம் திருச்சி - தஞ்சாவூர் மார்க்கமாக : திருவெறும்பூர், துவாக்குடி, செங்கிப்பட்டி, வல்லம், தஞ்சாவூர், பாபநாசம், சுவாமிமலை, கும்பகோணம், ஆடுதுறை, மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி, கொள்ளிடம், சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, பூம்புகார், திருக்கடையூர், பேரளம், திருநள்ளார், காரைக்கால், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மனோரா, நீடாமங்கலம், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, எட்டுக்குடி, நாகப்பட்டினம், திருக்குவளை, சிக்கல், நாகூர், வேளாங்கண்ணி, வேதாரண்யம் வரை திருச்சி - கரூர்–கோவை மார்க்கமாக : பெட்டவாய்த்தலை, குளித்தலை, மாயனூர், புலியூர், கரூர், காங்கேயம், ஈரோடு, தாராபுரம், திருப்பூர், பல்லடம், கோயம்புத்தூர், கோபிச்செட்டிப்பாளையம், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் பாலக்காடு வரை (கேரளா - கருநாடகா மாநிலங்கள்) வரை திருச்சி - பெரம்பலூர்–சென்னை மார்க்கமாக : சமயபுரம், பாடாலூர், சிறுவாச்சூர், பெரம்பலூர், இலப்பைகுடிக்காடு, திட்டக்குடி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்ப்பேட்டை, திருக்கோவிலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூர், செஞ்சி, ஆரணி, வேலூர், காட்பாடி, சித்தூர், திருப்பதி மற்றும் ஆந்திர பிரதேசம், வட மாநிலங்கள் வரை திருச்சி - மதுரை மார்க்கமாக : இலுப்பூர்,அன்னவாசல், புதுக்கோட்டை,பொன்னமராவதி,விராலிமலை, துவரங்குறிச்சி, நத்தம், மேலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், குற்றாலம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோயில், கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் வரை திருச்சி - மணப்பாறை–திண்டுக்கல் மார்க்கமாக : மணப்பாறை, சிங்கம்புனரி, வையம்பட்டி, அய்யலூர், திண்டுக்கல், வத்தலகுண்டு, கொடைக்கானல், பெரியகுளம், தேனி, போடி, கம்பம், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, கொச்சின் துறைமுகம் கேரளா மாநிலங்கள் வரை திருச்சி - அரியலூர்–பாண்டிச்சேரி மார்க்கமாக : லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, கீழப்பழுர், அரியலூர், செந்துறை, பெண்ணாடம், விருத்தாசலம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம், கங்கைகொண்ட சோழபுரம், காட்டு மன்னார் கோவில், சிதம்பரம், பிச்சாவரம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, கடலூர், புதுச்சேரி வரை திருச்சி - புதுக்கோட்டை–இராமேஸ்வரம் மார்க்கமாக : இலுப்பூர்,கீரனூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி, திருமயம், காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, திருவாடானை, தொண்டி, தேவிபட்டினம், இராமநாதபுரம், ஏர்வாடி, இராமேஸ்வரம் வரை திருச்சி - முசிறி–சேலம் மார்க்கமாக : குணசீலம், முசிறி, தொட்டியம், காட்டுபுத்தூர், தாத்தையங்கார்ப்பேட்டை, மேட்டுப்பாளையம், புளியஞ்சோலை, நாமக்கல், கொல்லி மலை, திருச்செங்கோடு, ஈரோடு, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், இராசிபுரம், எடப்பாடி, சங்ககிரி, சேலம், ஏற்காடு, மேட்டூர், தருமபுரி, ஒகேனக்கல், கிருஷ்ணகிரி, ஒசூர் மற்றும் பெங்களூரு கர்நாடகா மாநிலம், வட மாநிலங்கள் வரை திருச்சி - துறையூர் மார்க்கமாக : மண்ணச்சநல்லூர், புலிவலம், துறையூர், தம்மம்பட்டி, பச்சைமலை, ஆத்தூர், வாழப்பாடி, சேலம் வரை திருச்சி - தோகைமலை மார்க்கமாக : உய்யகொண்டான் திருமலை, சோமரசம்பேட்டை, வயலூர், நங்கவரம், அல்லிதுறை, நெய்தலூர் காலணி, ராச்சாண்டார் திருமலை, காவக்காரன்பட்டி, தோகைமலை, வீரப்பூர், படுகளம், பாலவிடுதி, கடவூர், அய்யர்மலை, பாளையம், தரகம்பட்டி, குவாரிசைட், குஜிலியம்பாறை, அரவக்குறிச்சி வரை திருச்சி - திருவையாறு மார்க்கமாக : திருவானைக்கோவில், கல்லணை, பூண்டி மாதாகோயில், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, திங்களுர், கும்பகோணம், ,கதிராமங்கலம்,அஞ்சாறுவார்த்தலை,மயிலாடுதுறை,மனக்குடி,கருவிபூம்புகார் வரை திருச்சியில் இருந்து தினசரியாக இந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயங்குகின்றன. தேசிய நெடுஞ்சாலை எண் தொடங்கும் இடம் முடியும் இடம் தேசிய நெடுஞ்சாலை 45 சென்னை - திருச்சி திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை 45பி திருச்சி தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை 67 நாகப்பட்டினம் குண்டல்பேட் தேசிய நெடுஞ்சாலை 210 திருச்சி இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை 227 திருச்சி சிதம்பரம் பேருந்து நிலையங்கள் thumb|right|மத்திய பேருந்து நிலையத்தின் வரைப்படம் திருச்சியைப் பொறுத்தவரை நான்கு முக்கிய நிலையைங்களாகவும் நகரில் பகுதி பேருந்து நிலையங்களாக மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன. பஞ்சாப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்:இது நகரின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது தமிழகத்தில் மிகப்பெரிய பேருந்து முனையம் ஆகும். மத்திய பேருந்து நிலையம்: இது நகரின் தென்மேற்கு பகுதியில் இருக்கிறது. வெளியூர் பேருந்துகளுக்கு மட்டும் வந்து புறப்படும் இடமாக உள்ளது. இங்கிருந்து தொடருந்து நிலையமும், விமான நிலையமும் அருகாமையில் இருக்கிறது. சத்திரம் பேருந்து நிலையம்: இது நகரின் வடகிழக்குப் பகுதியில் இருக்கிறது. மலைக்கோட்டைக்கு அருகிலுள்ளது. இது நகரப்பேருந்துகள் மற்றும் திருச்சியின் அண்மையில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயங்கும் நிலையமாக உள்ளது. புதிய பேருந்து நிலையம் ஸ்ரீரங்கம்:இது வடக்கு பகுதியில் ஸ்ரீரங்கம் தீவில் இருக்கிறது ஸ்ரீரங்கம்அருகில் உள்ளது திருவெறும்பூர் பேருந்து நிலையம்:இது மாநகர் கிழக்கு பகுதியில் அரியமங்கலம் கோட்டம் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. K.K நகர் பேருந்து நிலையம்: இது நகரின் தெற்கு பகுதியின் kk நகரில் அமைந்துள்ளது. துவாக்குடி பேருந்து நிலையம்:இது நகரின் கிழக்கு பகுதியில் துவாக்குடி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. பேருந்து போக்குவரத்து மாற்றம் திருச்சி தமிழகத்தின் நடுவில் இருப்பதாலும், மக்கள் தொகை நெருக்கத்தாலும், நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகவும் பேருந்து நிறுத்தங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி, நகரின் தெற்கிலும், மேற்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், பெரும்பாலும் மத்திய பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர். அதேபோல, வடக்கிலும், கிழக்கிலும் இருந்து வரும் வெளியூர் பேருந்துகள், சத்திரம் பேருந்து நிலையத்தை இறுதி நிறுத்தமாகக் கொள்வர். இங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு ஏறத்தாழ 7 கி.மீ. இடைவெளியுள்ளது. இதனால் மாநகரில், வெளியூர் பேருந்துகளால் ஏற்படும் நெரிசல் குறைகிறது. பயணிகளும், தங்களது பயணங்களுக்கு ஏற்ப, பேருந்தைத் தேர்ந்தெடுத்துச் செல்வர். இதனால், நகரில் வாழ்வோருக்கு, இயல்பு வாழ்க்கை எளிதாக்கப்படுகிறது. வெளியூர் பயணிகள் மட்டும், ஒரு பேருந்து நிலையத்தில் இறங்கி, மற்றொரு நிலையத்திற்கு வர, சில நேரங்களில் சிரமப்படும் வாய்ப்பு இருக்கிறது. நகருக்குள் புகுந்து, மறுபக்கம் பயணிக்கும் பேருந்துகள் புறவழிச்சாலையையும் பயன்படுத்த, நெடுஞ்சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இப்புறவழிச்சாலையை சுமையுந்துகளும்(lorry), மகிழுந்துகளும் (cars) அதிகம் பயன்படுத்துகின்றன. இதனால், தமிழகத்தின் இருகோடியிலிருந்து பயணிக்கும் வண்டிகள், இடரில்லாமல் பயணிக்கின்றன. இரயில் போக்குவரத்து 250px|thumbnail|வலது|திருச்சிராப்பள்ளி தொடருந்து நிலைய சந்திப்பு திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தென்னக இரயில்வேயின் ஆறு கோட்டங்களில் ஒன்றாகும். 1868ம் ஆண்டு திருச்சிராப்பள்ளிக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே தொடருந்து சேவை தொடங்கியது. சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, தஞ்சாவூர், மதுரை, விழுப்புரம், ஸ்ரீ கங்காநகர், ஜோத்பூர், ஜெய்ப்பூர், புனே, வதோதரா, நாக்பூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், சிதம்பரம், ஈரோடு, ஹைதராபாத், கொல்லம், இராமேசுவரம், தென்காசி, திருப்பதி, பெங்களூரு, மைசூரு, மங்களூர், கொல்கத்தா, குவஹாத்தி, கொச்சி ஆகிய இடங்களுக்குத் தொடருந்து வசதி உண்டு. தினசரி 37+ தொடருந்துகள் திருச்சியில் இருந்து மாநில தலைநகர் சென்னைக்குச் செல்கின்றன. இதில் சோழன், மலைக்கோட்டை விரைவு வண்டி திருச்சியில் இருந்து புறப்படுகிறது, மற்ற தொடருந்துகளான வைகை, பல்லவன், அனந்தபுரி மற்றும் இதர இரயில்கள் தென் மாவட்டங்களில் இருந்து திருச்சி வழியாகச் சென்னை செல்லுகின்றன. மேலும் திருச்சியில் வழிதட இரயில் நிலையங்களான திருச்சிராப்பள்ளி டவுன் ஸ்டேசன் திருச்சி–சென்னை வழிதடத்தில் மலைக்கோட்டை திருக்கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த இரயில் நிலையத்தில் திருச்சி மாநகர பகுதியில் உள்ளவர்கள் சென்னை, விழுப்புரம், கடலூர், (திருப்பதி/ஆந்திர மாநிலம்), தெலுங்கானா மாநிலம்) மற்றும் வடமாநில மார்க்கமாக செல்லும் இரயில்களில் பயணிகள் செல்வதற்கு வசதியாக இந்த டவுன் ஸ்டேசன் இரயில் நிலையம் உதவியாக உள்ளது. திருச்சியின் மைய நகர பகுதியில் திருச்சி–ஈரோடு வழித்தடத்தில் திருச்சிராப்பள்ளி கோட்டை ஸ்டேசன் ஈரோடு, கோவை, சேலம் மற்றும் கேரள மாநிலம், கர்நாடக மாநிலம் மற்றும் பிற வடமாநில மார்க்கமாக செல்லும் இரயில்களில் பயணிகள் செல்வதற்கு இந்த கோட்டை ஸ்டேசன் உதவியாக உள்ளது. சந்திப்பு மற்றும் தொடர்ந்து நிலையங்கள் திருச்சிராப்பள்ளி சந்திப்பு.திருவரங்கம் தொடருந்து நிலையம், கோட்டை தொடருந்து நிலையம்,திருவெறும்பூர் தொடருந்து நிலையம், பொன்மலை தொடருந்து நிலையம்,டவுன் தொடருந்து நிலையம், பாலக்கரை தொடருந்து நிலையம்மஞ்சுத்திடல் தொடருந்து நிலையம் முத்தாரசாநல்லூர் தொடருந்து நிலையம்பிச்சாண்டவர் கோவில் தொடருந்து நிலையம் வாளடி தொடருந்து நிலையம்குமாரமங்கலம் தொடருந்து நிலையம் தினசரி திருச்சிராப்பள்ளி வழியாகச் செல்லும் தொடருந்துகள் கிளியர்டிரிப் தளத்தில் திருச்சி வழியாக சென்னை செல்லும் தொடருந்துகளை தேடும் பொழுது கிடைத்த முடிவுகள். வண்டியின் பெயர் வண்டி எண் புறப்படும் இடம் சேருமிடம் அனந்தபுரி விரைவு வண்டி 16724 திருவனந்தபுரம் சென்னை பொதிகை அதிவிரைவு வண்டி 12662 செங்கோட்டை சென்னை பல்லவன் அதிவிரைவு வண்டி 12606 காரைக்குடி சென்னை வைகை அதிவிரைவு வண்டி 12636 மதுரை சென்னை சேது அதிவிரைவு வண்டி 22661 இராமேசுவரம் சென்னை குருவாயூர் விரைவு வண்டி 16127 குருவாயூர் சென்னை சென்னை 06804 செங்கோட்டை சென்னை மங்களூர் விரைவு வண்டி 16159 மங்களூர் சென்னை மலைக்கோட்டை அதிவிரைவு வண்டி 16178 திருச்சிராப்பள்ளி சென்னை திருச்செந்தூர் விரைவு வண்டி 16736 திருச்செந்தூர் சென்னை நெல்லை அதிவேக விரைவு வண்டி 12632 திருநெல்வேலி சென்னை கன்னியாகுமரி அதிவேக விரைவு வண்டி 12634 கன்னியாகுமரி சென்னை முத்துநகர் (பேர்ல் சிட்டி) அதிவேக விரைவு வண்டி 12694 தூத்துக்குடி சென்னை சோழன் விரைவு வண்டி 16854 திருச்சிராப்பள்ளி சென்னை பாண்டியன் அதிவேக விரைவு வண்டி 12638 மதுரை சென்னை போட்மெயில் விரைவு வண்டி 16851 இராமேசுவரம் சென்னை மைசூர் விரைவு வண்டி 16231 மயிலாடுதுறை மைசூர் மைசூர் விரைவு வண்டி சேலம், ஓசூர், பெங்களூரு வழியாக மைசூரை அடைகிறது. விமான போக்குவரத்து 200px|thumbnail|வலது|திருச்சி வானூர்தி நிலையம் திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையம் தேசிய நெடுஞ்சாலை 210ல் அமைந்துள்ளது. இவ்வானூர்தி நிலையம் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து இரண்டாவது பெரியவிமான நிலையமாகும். 1938ல் டாடா ஏர்லைன்சின் கராச்சி-கொழும்பு தடத்தில் செல்லும் வானூர்திகள் இங்கு நின்று சென்றன. இங்கிருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு வானூர்திகள் செல்லுகின்றன. சிங்கப்பூர், கொழும்பு, துபாய், அபுதாபி, கோலாலம்பூர், தோஹா, மஸ்கட் மற்றும் குவைத் ஆகிய வெளிநாட்டு நகரங்களுக்கும் வானூர்திகள் செல்லுகின்றன. திருத்தலங்கள் அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோயில், திருச்சி மலைக் கோட்டை, திருச்சி அருள்மிகு உச்சிப் பிள்ளையார் திருக்கோயில், மலைக்கோட்டை, திருச்சி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு வெக்காளி அம்மன் திருக்கோயில், உறையூர் அருள்மிகு சம்புகேசுவரர் திருக்கோயில், திருவானைக்காவல் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருள்மிகு பஞ்சவர்ண சுவாமி திருக்கோயில், உறையூர் அருள்மிகு ஆம்ரனேஸ்வர சுவாமி திருக்கோயில், மாந்துறை அருள்மிகு உத்தமர் கோயில் அருள்மிகு பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோயில் குணசீலம் அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்ஞீலி அருள்மிகு பொன்னேஸ்வரி அம்மன் திருக்கோயில், பொன்மலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பொன்மலை அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், பொன்மலை அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், அன்பில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில், அன்பில் சீரடி சாய் பாபா கோவில் (மேக்குடி) மகா மாரியம்மன் திருக்கோவில், (கோப்பு). அருள்மிகு உஜ்ஜிவநாத சுவாமி திருக்கோவில், (உ.கொ.திருமலை). ஸ்ரீ வள்ளலாள கண்ட அய்யனார் திருக்கோவில், (குண்டூர்). அருள்மிகு ஸ்ரீ மத்தியஜுனேஸ்வரர் திருக்கோவில், (தேவஸ்தானம்), பெட்டவாய்த்தலை. அருள்மிகு ஸ்ரீ சோமகாளியம்மன் திருக்கோவில், (தேவஸ்தானம்), பெட்டவாய்த்தலை. அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்பட்டுர். சுற்றுலாத் தலங்கள் திருச்சி மலைக் கோட்டை (Rock fort, Trichy) ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் இராணி மங்கம்மாள் கொலு மண்டபம் முக்கொம்பு கல்லணை வயலூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முதலாம் உலகப்போர் நினைவுச்சின்னம் (திருச்சிராப்பள்ளி) வண்ணத்துப்பூச்சி பூங்கா சமயபுரம் மாரியம்மன் கோயில் கோளரங்கம் ஆடிப்பெருக்கு விழா ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாகத் திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர். கல்வி கல்லூரிகள் thumb|துவாக்குடியில் உள்ள திருச்சி தேசிய தொழிற்நுட்பக் கழகம் திருச்சியிலும் அதன் புறநகர் பகுதியிலுமாக 30க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பாவேந்தர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி தேசியக் கல்லூரி, திருச்சி அரசினர் கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி* பாரதிதாசன் பல்கலைக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாத்தூர் ஜமால் முகம்மது கல்லூரி பிஷப் ஹீபர் கல்லூரி புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி பெரியார் ஈ. வெ. ரா. அரசினர் கலைக்கல்லூரி ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி உருமு தனலட்சுமி கல்லூரி குறிஞ்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஏ. ஏ. அரசு கலைக்கல்லூரி கலைக் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி காவேரி மகளிர் கல்லூரி கிருத்துராஜ் கல்லூரி சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி செட்டிநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தூய சிலுவைக் கல்லூரி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி M.I.E.T. கலை மற்றும் அறிவியல் கல்லூரி சட்டப் பல்கலைக்கழகம்/ கல்லூரிகள் தமிழ் நாடு தேசிய சட்டப்பள்ளி பல்கலைக்கழகம், திண்டுக்கல் நெடுஞ்சாலை, நவலூர் குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி. அரசு சட்டக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. பொறியியல் கல்லூரிகள் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி (முன்பு மண்டலப் பொறியியற் கல்லூரி) அங்காளம்மன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சிறுகனூர், ஜெயராம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி சாரநாதன் பொறியியல் கல்லூரி ஜெ.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி திருச்சி பொறியியல் கல்லூரி MAM பொறியியல் கல்லூரி K. ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரி ( சமயபுரம்)and technology சிவானி பொறியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி M.I.E.T பொறியியல் கல்லூரி. SRM-TRP பொறியியல் கல்லூரி. வேளாண்மைக் கல்லூரிகள் அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மகளிர் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வேளாண்மை கல்வி நிறுவனம் குமுளுர், திருச்சி. கல்வியியல் கல்லூரிகள் மருத்துவக் கல்லூரிகள் கி. ஆ. பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி ஜோசப் கண்மருத்துவ கல்லூரி பள்ளிகள் திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பாய்லர் பிளாண்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஈ.ஆர். மேனிலைப் பள்ளி பிசப் ஈபர் மேனிலைப்பள்ளி ஈ.வே.ரா. மேனிலைப்பள்ளி புனித சிலுவைப் பெண்கள் மேனிலைப்பள்ளி புனித வளனார் மேனிலைப்பள்ளி தேசிய மேனிலைப்பள்ளி கேம்பியன் மேனிலைப்பள்ளி ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி காஜா மியான் மேனிலைப்பள்ளி திரு இருதய மேல்நிலைப்பள்ளி பொன்னையா மேல்நிலைப்பள்ளி இரயில்வே இருபாலர் மேல்நிலைப்பள்ளி, பொன்மலை புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்திய மேல்நிலைப்பள்ளி அரசு ஆதி திராவிடர் நல ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, காட்டூர் பாப்பாகுறிச்சி படைக்கல தொழிற்சாலை மேல்நிலைப்பள்ளி கேந்திரிய வித்யாலயா(CBSE) (K.V-NO:1) O.F.T கேந்திரிய வித்யாலயா(CBSE) (K.V-NO:2) H.A.P.P விக்கிக்காட்சியகம் குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் திருச்சி மலைக் கோட்டை(Rock fort,Trichy) ஒரு பார்வை திருச்சி நகரின் சிறப்பு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில் திருச்சி மாநகராட்சியின் வலைப்பக்கம் திருச்சி மாவட்டம் பற்றிய அரசின் வலைப்பக்கம் திருச்சி மாவட்டம் பற்றிய வலைப்பக்கம் பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்
ஒராதேயா
https://ta.wikipedia.org/wiki/ஒராதேயா
ஒராதேயா (அங்கேரியம் Nagyvárad, இடாய்ச்சு Großwardein) என்பது உருமேனியா நாட்டில் திரான்சில்வேனியாவிலுள்ள பிஹோர் கவுண்டியைச் சேர்ந்த ஒரு நகரமாகும். 2002 ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நகரத்தில் 206,527 பேர் உள்ளனர். இது மாநகரசபைக்கு வெளியேயுள்ள பகுதிகளை உள்ளடக்கவில்லை. இப் பகுதிகளையும் சேர்த்தால் மொத்த நகர் சார்ந்த மக்கள் தொகை அண்ணளவாக 220,000 ஆகும். ஒரேடெயா ருமேனியாவின் மிகவும் வளம் பொருந்திய நகரங்களில் ஒன்றாகும். thumb|250px|ஒராதேய நகர மண்டபம் புவியியல் இந்த் நகரம் ஹங்கேரிய எல்லையை அண்டி கிரிசுல் ரெபேடே(Crişul Repede) நதிக்கரையில் அமைந்துள்ளது. வரலாறு வராடியம் என்னும் லத்தீன் மொழிப் பெயரில், 1113 இல் முதல் முதலாக ஒராடெயா குறிப்பிடப்படுகின்றது. இன்றும் அழிந்த நிலையில் காணப்படும் ஒராடெயா Citadel 1241ல் முதல் தடவையாகக் குறிப்பிடப்படுகின்றது, எனினும் 16 ஆம் நூற்றாண்டின் பின்னரே இப்பகுதி ஒரு நகராக வளரத்தொடங்கியது. 1700 ல் வியன்னாவைச் சேர்ந்த பொறியியலாளரான பிரான்ஸ் அன்டன் ஹில்லெபிராண்ட் (Franz Anton Hillebrandt) பரோக் பாணியில் நகரத்தை வடிவமைத்தார். 1752லிருந்து ரோமன் கத்தோலிக்க தேவாலயம், பேராயர் மாளிகை, கிரிஸ்(Criş) மண்ணின் அரும்பொருட் காட்சியகம் (Muzeul Ţării Crişurilor) போன்ற முக்கிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. பொருளாதாரம் ஹங்கேரிய எல்லையில் மேற்கு ஐரோப்பாவுக்கான நுழைவாயிலில் அமைந்திருந்ததால் ஒராடெயா நீண்ட காலமாகவே ருமேனியாவின் வளமிக்க ஒரு நகரமாக விளங்கி வந்தது. 1989 இன் பின்னர் ஒராடெயா, தொழில் வளர்ச்சி அடிப்படையிலன்றிச் சேவைத்துறை வளர்ச்சிமூலம் ஓரளவு பொருளாதாரப் புத்துயிர் பெற்றது. ஒராடெயாவின் வேலையின்மை விகிதமான 6%, ருமேனியாவின் சராசரியைவிடக் குறைவாக இருப்பினும், பிஹோர் கவுண்டியின் 2% வேலையின்மை விகிதத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாகும். பிஹோர் கவுண்டியின் 34.5% குடித்தொகையைக் கொண்ட ஒராடெயா, அக் கவுண்டியின் 63% தொழில்துறை உற்பத்திக்குக் காரணமாக உள்ளது. இதன் முக்கியமான உற்பத்திகள், தளபாடங்கள், புடவை, ஆடை உற்பத்தி, காலணிகள் மற்றும் உணவு வகைகளாகும். 2003 ல் நகரின் முதலாவது பெரிய கொள்வனவு மையமான லோட்டஸ் சந்தை வர்த்தக மையம் ஒராடெயாவில் திறந்து வைக்கப்பட்டது. இனங்கள் வரலாறு 1910: 69.000 (ரோமானியர்கள்: 5.6%, ஹங்கேரியர்கள்: 91.10%) 1920: 72.000 (R: 5%, H: 92%) 1930: 90.000 (R: 25%, H: 67%) 1966: 122.634 (R: 46%, H: 52%) 1977: 170.531 (R: 53%, H: 45%) 1992: 222.741 (R: 64%, H: 34%) Present 2002 ஆன் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மொத்த மக்கட் தொகையின் இனவாரியான விபரம் பின்வருமாறு அமைந்துள்ளது: ருமேனியர்: 145,295 (70.4%) மக்யர்கள்: 56,830 (27.5%) ரோமா: 2,466 (1.2%) ஜெர்மானியர்: 566 (0.3%) ஸ்லோவாக்கியர்: 477 (0.2%) யூதர்: 172 உக்ரேனியர்: 76 பல்கேரியர்: 25 ரஷ்யர்: 25 செர்பியர்: 17 செக் மக்கள்: 9 துருக்கியர்: 9 பகுதிகள் இந்த நகரம் "குவாட்டர்ஸ்" என அழைக்கப்படும் பின்வரும் வட்டாரங்களாகப் (districts) பிரிக்கப்பட்டுள்ளது: மத்திய ஒராடெயா வியை (Vie) தவிரோசா/தவிரோசம் (Nufărul) உரொசோரியம் (Rogerius) வாலேன்சா (Velenţa) கண்டெமிர் (Cantemir) அயோசியா (Ioşia) வெளியிணைப்புகள் ஒராடெயா சுற்றுலா ஒராடெயா ஆன்லைன் ஒராடெயா அதிகாரப்பூர்வ இணையதளம் Oradea Jurnal Bihorean Site Oradea Realitatea Bihoreana Site See beautiful pictures from Oradea at The Real Transylvania பகுப்பு:ரோமானிய நகரங்கள்
Main Page
https://ta.wikipedia.org/wiki/Main_Page
REDIRECT முதற் பக்கம்
தமிழில் இடைக்கால இலக்கியம்
https://ta.wikipedia.org/wiki/தமிழில்_இடைக்கால_இலக்கியம்
தமிழில் இடைக்கால இலக்கியம் என்பது தமிழ் நாட்டில் பல்லவர் குலத் தொடக்கம் முதலாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை உள்ள இலக்கியம் எனக் கொள்ளலாம். இந்நூல்களில் பெரும்பாலானவை பக்தி இலக்கியங்களும் அரசர்களையும் போர்களையும் பற்றிப் பாடும் சிற்றிலக்கியங்களும் ஆகும். இக்கால கட்டத்தில் பல மருத்துவ, தொழில் மற்றும் அறிவியல் சார்ந்த நூல்களும் இயற்றப்பட்டன. எனினும் அவற்றை இலக்கியம் எனக் கொள்தல் தகாது. இடைக்கால இலக்கியங்களுள் சில: கம்ப இராமாயணம் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் கலிங்கத்துப்பரணி குற்றாலக் குறவஞ்சி பகுப்பு:தமிழ் இலக்கியம்
பின்னம்
https://ta.wikipedia.org/wiki/பின்னம்
240px|மூன்றேமுக்கால்-இதில் முக்கால் என்பது பின்னம்|thumb|right பின்னம் (fraction) என்பது முழுப்பொருள் ஒன்றின் பகுதி அல்லது பகுதிகளைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு பொருளை நான்கு சமப் பங்குகளாகப் பிரித்தால், அதில் 3 பங்குகள் (அதாவது நான்கில் மூன்று பங்கு) 3/4 எனக் குறிக்கப்படும். பின்ன அமைப்பில், கிடைக்கோட்டிற்குக் கீழுள்ள எண் பகுதி எனவும், மேலுள்ள எண் தொகுதி எனவும் அழைக்கப்படும். எடுத்துக்கொள்ளப்படும் சம பங்குகளின் எண்ணிக்கையைத் தொகுதியும், எத்தனை சம பங்குகள் சேர்ந்து முழுப்பொருளாகும் என்பதைப் பகுதியும் குறிக்கின்றன. ஒரு பின்னத்தின் பகுதி பூச்சியமாக இருக்க முடியாது. எடுத்துக்காட்டு: ஒரு முழுப்பொருளானது நான்கு சம பங்குகளாகப் பிரிக்கப்பட்டால், அதிலுள்ள மூன்று சம பங்குகள் 3/4 எனக் குறிக்கப்படும். இப்பின்னத்தின் தொகுதி - 3, பகுதி - 4. பின்னமானது பிள்வம் அல்லது பிள்ளம் என்றும் அழைக்கப்படும். தமிழில் இதற்குக் கீழ்வாய் எண்கள் என்பது பெயர். பின்ன எண்களைத் தொகுதி-பகுதி வடிவில் மட்டுமல்லாது, தசம பின்னங்களாக, சதவீதங்களாக, எதிர்ம அடுக்கேற்ற எண்களாகவும் எழுதலாம். எடுத்துக்காட்டு, 1/100 என்ற பின்ன எண்ணின் மாற்று வடிவங்கள்: 0.01, 1%, 10−2 எந்தவொரு முழுஎண்ணையும், பகுதி 1 ஆகக் கொண்ட பின்னமாகக் கொள்ளலாம்: 7 = 7/1. விகிதங்களையும், வகுத்தலையும் குறிப்பதற்கும் பின்னங்கள் பயன்படுகிறது.H. Wu, The Mis-Education of Mathematics Teachers, Notices of the American Mathematical Society, Volume 58, Issue 03 (March 2011), page 374 3/4 என்பது 3:4 என்ற விகிதத்தையும், 3 ÷ 4 என்ற வகுத்தலையும் குறிக்கும். a, b முழு எண்கள் எனில், a/b என்ற வடிவில் எழுதப்படக்கூடிய எண்களின் கணம் விகிதமுறு எண்களின் கணம் எனப்படும். விகிதமுறு எண்கள் கணத்தின் குறியீடு Q. ஒரு எண்ணைப் பின்ன வடிவில் எழுத முடியுமா இல்லையா என்பதைக் கொண்டு அவ்வெண் விகிதமுறு எண்ணா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம். விகிதமுறு எண்களைத் தவிர வேறுசில கணிதக் கோவைகளுக்கும் பின்னங்கள் என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டுகள்: இயற்கணித பின்னங்கள்: , விகிதமுறா எண்கள் கொண்ட கோவைகள்: √2/2 , π/4 பின்ன வகைகள்: பின்னங்களைத் தகு பின்னம், தகாபின்னம், கலப்பு பின்னம் என மூன்று வகையாகக் கூறலாம். தகு பின்னம் : தொகுதி பகுதியை விடச் பெரியதாக இருந்தால், அது தகு பின்னம்(முறைமை பின்னங்கள்). தகாபின்னம் : தொகுதி பகுதியை விட சிறியதாக இருந்தால் தகாபின்னம்.(முறையில்லா பின்னங்கள்) கலப்பு பின்னம் : இயல் எண்ணும் தகு பின்னமும் சேர்ந்து வருவது கலப்பு பின்னம். இதனை தகாபின்னமாக மாற்றி திட்ட வடிவில் எழுதலாம். பின்னங்களின் வடிவங்கள் எளிய பின்னங்கள் a/b அல்லது , (a , b இரண்டும் முழு எண்கள்) என்ற வடிவில் எழுதப்படும் விகிதமுறு எண்களெல்லாம் எளிய பின்னங்கள் எனப்படுகின்றன. ஏனைய பின்னங்களைப் போன்றே இவற்றிலும் பகுதியின் (b) மதிப்பு பூச்சியமாக இருக்க முடியாது எடுத்துக்காட்டுகள்: , , , , 3/17. எளிய பின்னங்கள் நேர்மமாகவோ, எதிர்மமாகவோ, தகு அல்லது தகா பின்னங்களாகவோ அமையலாம். கூட்டு பின்னங்கள், கலப்பு எண்கள், தசமங்கள் ஆகியவற்றை எளிய பின்னமாக மாற்ற முடியுமென்றாலும் அவை எளிய பின்னங்கள் ஆகா. முறைமை பின்னங்களும் முறையில்லா பின்னங்களும் எளிய பின்னங்களை தகு அல்லது தகா பின்னங்களாக வகைப்படுத்தலாம். பகுதியும் தொகுதியும் நேர்ம எண்களாகக் கொண்ட ஒரு பின்னத்தின் தொகுதியானது, அதன் பகுதியை விடச் சிறியதாயின் அப்பின்னம் தகு பின்னம் எனப்படும். மாறாக, அதன் தொகுதியானது, பகுதியை விடப் பெரியதாயின் அப்பின்னம் தகா பின்னம் எனப்படும். பொதுவாக, ஒரு பின்னத்தின் தனி மதிப்பு 1 ஐ விடச் சிறியதாக இருந்தால் (-1 ஐ விடப் பெரியது, 1 ஐ விட சிறியது) அது ஒரு தகு பின்னமாகும். ஒரு பின்னத்தின் தனி மதிப்பு 1 க்குச் சமமாகவோ அல்லது பெரியதாக இருந்தால் அது ஒரு தகா பின்னமாகும் எடுத்துக்காட்டுகள்: தகு பின்னங்கள்: 2/3, -3/4, 4/9 தகா பின்னங்கள்: 9/4, -4/3, 3/3.முறைமை கலப்பு பின்னங்கள் கலப்பு பின்னம் அல்லது கலப்பு எண் என்பது, ஒரு பூச்சியமற்ற முழுஎண் மற்றும் தகுபின்னம் இரண்டின் கூடுதலாக அமையும். முழுஎண்ணுக்கும் தகுபின்னத்துக்கும் இடையே "+" குறியீடு எழுதப்படுவதில்லை. எடுத்துக்காட்டு: . இயற்கணிதத்தில் இரு கோவைகளின் பெருக்கலை எழுதும்போது அவற்றுக்கிடையே பெருக்கல் குறியானது இல்லாமலே எழுதுவது வழக்கில் உள்ளது. எடுத்துக்காட்டாக, இயற்கணிதத்தில் என்பது ஒரு கலப்பு பின்னம் அல்ல, அது a, b/c ஆகிய இரு கோவைகளின் பெருக்கலாகும்: . இக்குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு, பெருக்கல் குறி வெளிப்படையாகக் குறிக்கப்படுகிறது: , , . கலப்பு பின்னத்தைத் தகா பின்னமாகவும் தகா பின்னத்தைக் கலப்பு பின்னமாகவும் மாற்றலாம்: கலப்பு பின்னம்: . இதிலுள்ள முழுஎண் 2 ஐ, தகுபின்னத்தின் பகுதியான நான்கைப் பகுதியாகக் கொண்ட சமான தகா பின்னமாக மாற்றிக் கொள்ளவேண்டும்: . பின் அவ்விரு பின்னங்களையும் கூட்ட, . இதேபோல ஒரு தகா பின்னத்தை கலப்பு பின்னமாக மாற்றலாம்: தகாபின்னம்: தொகுதியைப் பகுதியால் வகுத்து ஈவு, மீதி இரண்டையும் கணக்கிட வேண்டும். 11 ÷ 4 : ஈவு =2 , மீதி = 3. இந்த ஈவு தேவையன கலப்பு பின்னத்தின் முழுஎண் பகுதியாகக் கொள்ளப்படுகிறது. மீதியைத் தொகுதியாகவும், எடுத்துக்கொள்ளப்பட்ட தகாபின்னத்தின் பகுதியைப் பகுதியாகவும் கொண்ட தகுபின்னமானது பின்னப்பகுதியாகவும் கொண்டு கலப்பு பின்னம் காணப்படுகிறது. . கலப்பு பின்னங்கள் எதிர்ம எண்களாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டு: விகிதங்கள் ஒரு விகிதம் என்பது, இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட எண்களுக்கு இடையேயுள்ள தொடர்பைக் குறிக்கும். எடுத்துக்கொள்ளப்பட்ட பொருட்களை குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுவிலும் இருக்கும் பொருட்களின் எண்ணிக்கையின் வாயிலாக, அவை எண்ணளவில் ஒப்பீடு செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஓரிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள 12 தானுந்துகளில் அவற்றின் நிற வகைப்பாடு பின்வருமாறு உள்ளது: 2 வெள்ளை 6 சிவப்பு 4 மஞ்சள் வெள்ளை, சிவப்பு, மஞ்சள் தானுந்துகளின் விகிதம்: 2:6:4 = 1:3:2 வெள்ளை, சிவப்பு தானுந்துகளின் விகிதம்: 2:6 = 1:3 வெள்ளை, மஞ்சள் தானுந்துகளின் விகிதம்: 2:4 = 1:2 சிவப்பு, மஞ்சள் தானுந்துகளின் விகிதம்: 6:4 = 3:2 குறிப்பிட்ட பாகத்திற்கும் முழுவதற்குமான விகிதங்களைப் பின்ன வடிவில் எழுதலாம். மொத்த தானுந்துகளில் வெள்ளை தானுந்துகளின் விகிதம்: 2:12 = 1:6. இதன் பின்ன வடிவம் = 1/6. அதாவது மொத்த தானுந்துகளில் ஆறில் ஒரு பங்கு வெள்ளை தானுந்துகள் உள்ளன. மொத்த தானுந்துகளில் சிவப்பு தானுந்துகளின் விகிதம்: 6:12 = 1:2 இதன் பின்ன வடிவம் 1/2. அதாவது மொத்த தானுந்துகளில் இரண்டில் ஒரு பங்கு சிவப்பு தானுந்துகள் உள்ளன. மொத்த தானுந்துகளில் மஞ்சள் தானுந்துகளின் விகிதம்: 4:12 = 1:3. இதன் பின்ன வடிவம் = 1/3. அதாவது மொத்த தானுந்துகளில் மூன்றில் ஒரு பங்கு மஞ்சள் தானுந்துகள் உள்ளன. எனவே அந்தத் தானுந்து நிறுத்தத்திலிருந்து, ஒருவர் சமவாய்ப்பு முறையில் ஒரு தானுந்தைத் தேர்ந்தெடுக்கும்போது அது வெள்ளையாக இருப்பதற்கான வாய்ப்பு (நிகழ்தகவு) 1/6; சிவப்பாக இருப்பதற்கான வாய்ப்பு 1/2; மஞ்சளாக இருப்பதற்கான வாய்ப்பு 1/3. தலைகீழிகள் ஒரு பின்னத்தின் தலைகீழி மற்றொரு பின்னமாகும். மூலப் பின்னத்தின் தொகுதி, பகுதிகளைப் பரிமாற்றி அதன் தலைகீழியைப் பெறலாம். இன் தலைகீழி . ஒரு பின்னத்தையும் அதன் தலைகீழியையும் பெருக்கக் கிடைக்கும் விடை 1 ஆகும். எனவே ஒரு பின்னத்தின் தலைகீழியானது அப்பின்னத்தின் பெருக்கல் நேர்மாறு ஆகும். ஒரு தகு பின்னத்தின் தலைகீழி தகாபின்னமாக இருக்கும்: இன் தலைகீழி எண் 1 க்குச் சமமில்லாத தகாபின்னத்தின் (பகுதியும் தொகுதியும் சமமாக இல்லாதவை) தலைகீழி தகுபின்னமாக இருக்கும். இன் தலைகீழி எந்தவொரு முழு எண்ணையும் எண் 1 ஐ பகுதியாகக் கொண்ட பின்னமாக எழுதலாம். எடுத்துக்காட்டாக, 5 ஐ என எழுதலாம். இங்கு எண் 1 ஆனது "கண்ணுக்குத்தெரியாத பகுதி" (invisible denominator) எனப்படும். எனவே பூச்சியம் தவிர்த்த அனைத்து முழுஎண்களுக்கும் தலைகீழி உண்டு. 5 இன் தலைகீழி . சிக்கல் பின்னங்கள் சிக்கலெண்களாலான பின்னங்களோடு இவற்றை குழப்பிக்கொள்ளக் கூடாது ஒரு சிக்கல் பின்னத்தின் (complex fraction) தொகுதி, பகுதி இரண்டுமே ஒரு பின்னமாக அல்லது கலப்பு பின்னமாக இருக்கும். அதாவது, ஒரு சிக்கல் பின்னமானது, இரு பின்னங்களின் வகுத்தலாக அமையும். எடுத்துக்காட்டுகள்: , இரண்டும் சிக்கல் பின்னங்களாகும். ஒரு சிக்கல் பின்னத்தைச் சுருக்குவதற்கு, அதன் தொகுதிக்கும் பகுதிக்கும் இடைப்பட்ட அதிநீள பின்னக் கோட்டை வகுத்தல் குறியாக எடுத்துக்கொள்ள வேண்டும். . ஒரு சிக்கல் பின்னத்தில் எந்த பின்னக்கோடு முதன்மையானது எனத் தெளிவாகத் தரப்பட்டிருக்காவிட்டால், அப்பின்னம் சரியான முறையில் அமைக்கப்படாத ஒன்றாகும். எடுத்துக்காட்டாக 5/10/20/40 என்பது சரியான முறையில் அமைக்கப்படாத கணிதக்கோவையாகும். மேலும் இதன் மதிப்பும் பலவிதங்களில் கணிக்கிடக்கூடியதாக அமையும். கூட்டு பின்னங்கள் ஒரு கூட்டு பின்னம் (compound fraction) என்பது ஒரு பின்னத்தின் பின்னமாக இருக்கும். பெருக்கலின் மூலம், ஒரு கூட்டு பின்னத்தை எளிய பின்னமாகச் சுருக்கலாம். எடுத்துகாட்டு: இன் பங்கு என்பது கூட்டு பின்னம் ஆகும். இதனைச் சுருக்கி, என எழுதலாம். சிக்கல் பின்னமும் கூட்டு பின்னமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையன. தசம பின்னங்களும் விழுக்காடுகளும் ஒரு தசம பின்னத்தில் (decimal fraction) அதன் பகுதியானது பத்தின் முழுஎண் அடுக்குகளாக இருக்கும். எனினும் தசம பின்னத்தின் பகுதி வெளிப்படையாக எழுதப்படுவதில்லை. தசம பின்னங்கள் தசமக் குறியீட்டில் எழுதப்படுகின்றன. அக்குறியீட்டில் தசம புள்ளிக்கு வலப்புறமுள்ள இலக்கங்களின் எண்ணிக்கையே வெளிப்படையாக அமையாத பகுதியின் பத்தின் முழுஎண் அடுக்கைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக, 0.75 இல் தசமப் புள்ளிக்கு வலப்புறம் இரண்டு இலக்கங்கள் உள்ளதால் அதன் பகுதி 10 இன் அடுக்கு இரண்டாக, அதாவது 100 ஆக இருக்கும். 1 விடப் பெரிய தசம பின்னங்களை தகா பின்னங்களாக அல்லது கலப்பு பின்னங்களாக எழுதலாம். அறிவியல் குறியீட்டைப் பயன்படுத்தி தசமபின்னங்களை எதிர்ம அடுக்குகளைக் கொண்டு எழுதலாம். 0.0000006023 = . ஆனது பகுதி ஐத் தருகிறது. ஆல் வகுக்கும்போது தசமபுள்ளியானது இடப்புறமாக ஏழு இடங்கள் நகர்கிறது. தசமபுள்ளிக்கு வலப்புறம் முடிவிலா எண்ணிக்கையிலான இலக்கங்களைக் கொண்ட தசமபின்னமானது ஒரு தொடரைக் குறிக்கும். எடுத்துக்காட்டு: 1/3 = 0.333... = 3/10 + 3/100 + 3/1000 + ... . பகுதிகளை வெளிப்படையாகக் கொண்டிராத மற்றொரு வகைப் பின்னங்கள் விழுக்காடுகள் ஆகும். இவற்றின் பகுதிகள் எப்போதும் 100 ஆகவே இருக்கும். எடுத்துக்காட்டாக, 51% = 51/100 100 ஐ விட அதிகமான அல்லது பூச்சியத்தை விடக் குறைவான விழுக்காடுகளும் உண்டு. அவையும் பகுதிகளை 100 ஆகவே கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக 311% = 311/100 −27% = −27/100. சாதாரண பின்ன அல்லது தசமபின்ன வடிவங்கள் இரண்டில் எதனைப் பயன்படுத்தலாம் என்பது சூழலின் தேவையைப் பொறுத்தும் கணக்கிடும் நபரின் விருப்பத்தையும் பொறுத்தது. பின்னத்தின் பகுதி சிறிய எண்ணாக இருக்கும்போது சாதாரண பின்ன வடிவம் தேர்ந்தெடுக்கப்படலாம். மனதிலேயே கணக்கிட அது உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டாக: 16 ஆல் 3/16 ஐப் பெருக்க வேண்டுமானால், 3/16 ஐ தசமபின்ன வடிவில் எடுத்துக்கொள்வதைவிட, சாதாரண பின்ன வடிவத்தில் எளிதாகக் கணக்கிட முடியும். 1/3 ஐ 15 ஆல் பெருக்கும் போது சாதாரண பின்னமாகக் கொண்டு பெருக்கினால் விடை 5 என முழு எண்ணாகக் கிடைக்கும். ஆனால் 1/3 ஐ தசம வடிவிற்கு (1/3=0.3333...) என மாற்றி இப்பெருக்கலுக்கு விடை காண்போமானால் விடை முழு எண்ணாகக் கிடைக்காது. பணமதிப்புகள் பொதுவாக தசமபின்ன வடிவில், இரண்டு தசமத்தானங்கள் கொண்டவையாக எழுதப்படுகின்றன. இந்தியாவில் ரூ 85.50 எனவும் அமெரிக்காவில் $3.75 எனவும் எழுதப்படுகின்றன. தசமபின்னங்கள் பழக்கத்திற்கு வருமுன்னர் பிரித்தானியப் பணம் 3 ஷில்லிங் மற்றும் 6 பென்சு என்பது, 3/6 ("மூன்று மட்டும் ஆறு" என வாசிக்கவும்) என எழுதப்பட்டது. இதற்கும் சாதாரண பின்னம் 3/6 க்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாது. . பின்னங்களின் கணிதம் முழுஎண்களைப் போல பின்னங்களும் பரிமாற்றுத்தன்மை, சேர்ப்புப் பண்பு, பங்கீட்டு விதிகள், பூச்சியத்தால் வகுத்தல் விதி ஆகியவற்றை நிறைவு செய்கின்றன. சமவலு பின்னங்கள் ஒரு பூச்சியமற்ற எண் எனில், ஆகும். எனவே ஆல் பெருக்குவது என்பது 1 ஆல் பெருக்குவதற்குச் சமம். 1 ஆல் பெருக்கப்படுவதால் எந்தவொரு எண்ணும் அதன் மதிப்பில் மாறுவதில்லை. எனவே ஆல் பெருக்குவதாலும் எந்த எண் அல்லது பின்னத்தின் மதிப்பு மாறாது. அதாவது, ஒரு பின்னத்தின் தொகுதியையும் பகுதியையும் ஒரே எண்ணால் பெருக்குவதால் அப்பின்னத்தின் மதிப்பு மாறாது. அவ்வாறு ஒரு பின்னத்தின் தொகுதி, பகுதியை ஒரே எண்ணால் பெருக்கக் கிடைக்கும் பின்னமானது மூல பின்னத்தின் சமவலு பின்னம் (equivalent fraction) என அழைக்கப்படும். ஒரு பின்னத்தின் தொகுதி மற்றும் பகுதிகளை பூச்சியமற்ற ஒரே எண்ணால் பெருக்கி அதன் சமான பின்னத்தைக் காணலாம். எடுத்துக்காட்டு: பின்னத்தின் தொகுதி, பகுதிகளை 2 ஆல் பெருக்கக் கிடைக்கும் பின்னம் . ஒரு பொருளை இரண்டாகப் பிரித்து அதில் ஒரு பங்கு எடுப்பதும், அதே பொருளை நான்காகப் பிரித்து அதில் இரண்டு பங்குகளை எடுப்பதும் ஒரே அளவாக இருக்கும். எனவே இவ்விரு பின்னங்களும் ஒரே மதிப்பைக் குறிக்கும் (முழுப்பொருளில் பாதி). இன் ஒரு சமவலு பின்னம் ஒரு பின்னத்தின் தொகுதி, பகுதியை பூச்சியமற்ற ஒரே எண்ணால் வகுத்தும் அப்பின்னத்தின் சமவலு பின்னத்தைப் பெறலாம். இது பின்னச் சுருக்கம் எனப்படும். பின்னங்களை ஒப்பிடல் ஒரே பகுதிகளைக் கொண்ட பின்னங்களை அவற்றின் தொகுதிகளை ஒப்பிடுவதன் மூலம் ஒப்பிடலாம். பகுதிகள் ஒன்றாக இருக்கும்போது பெரிய தொகுதியுடைய பின்னமே சிறிய தொகுதி கொண்ட பின்னத்தை விடப் பெரியதாகும். இரு பின்னங்கள் ஒரே தொகுதி கொண்டிருந்தால், சிறிய பகுதி கொண்ட பின்னமே பெரிய பகுதி கொண்ட பின்னத்தைவிடப் பெரியதாகும். இரு பின்னங்களை ஒப்பிடுவதற்கு, அவற்றின் பகுதிகளைச் சமமானவைகளாக மாற்றுவது ஒரு வழிமுறையாகும். , இரண்டையும் ஒப்பிடுவதற்கு அவை பின்வருமாறு சமான மாற்றப்படுகின்றன: இரண்டின் பகுதிகளும் ஒன்றாக உள்ளன. எனவே தொகுதிகளான ad , bc இரண்டையும் ஒப்பிடுவதன் மூலம் இவ்விரு பின்னங்களில் எது பெரியது, எது சிறியது எனத் தீர்மானிக்கலாம். எடுத்துக்காட்டு: , சம பகுதிகளைக் கொண்டச் சமான பின்னங்களைக் காண: ; இரண்டு பின்னங்களையும் ஒன்றின் தொகுதி, பகுதிகளை மற்றதன் பகுதியால் பெருக்கி, இரு பின்னங்களின் பகுதிகளை ஒரே எண்ணாகக் கொண்ட சமான பின்னங்களாக மாற்றலாம்: ; ஒரு பின்னத்தின் தொகுதி, பகுதிகளை இன்னொன்றின் பகுதியால் பெருக்க: ? 5×17 (= 85) > 4×18 (= 72), . எதிர்ம பின்னங்கள் உட்பட ஒவ்வொரு எதிர்ம எண்ணும் பூச்சியத்தை விடச் சிறியவை; நேர்ம பின்னங்கள் உட்பட ஒவ்வொரு நேர்ம எண்ணும் பூச்சியத்தை விடப் பெரியவை. எனவே ஒவ்வொரு எதிர்ம பின்னமும் ஒரு எந்தவொரு நேர்ம பின்னத்தை விடவும் சிறியதாகும். கூட்டல் இரு பின்னங்களைக் கூட்டுவதற்கு முக்கிய தேவையாக அவற்றின் பகுதிகள் சமமானவையாக இருக்க வேண்டும். . கூட்ட வேண்டிய பின்னங்களின் பகுதிகள் ஒரே எண்ணாக இல்லையெனில், முதலில் அவற்றை ஒரே பகுதிகளைக் கொண்ட சமான பின்னங்களாக மாற்றிக் கொண்டு, பின் கூட்ட வேண்டும். thumb|right|270px|படத்திலுள்ள உணவுப் பண்டத்தின் இரண்டில் ஒரு பங்கையும் () நாலில் ஒரு பங்கையும் () கூட்ட வேண்டுமானால் அவை இரண்டும் ஒப்பிடக்கூடிய ஒரே மாதிரியான (எட்டின் அல்லது நான்கின்) பங்குகளாக மாற்றிக்கொள்ளப் படவேண்டும். எடுத்துக்காட்டுகள்: . . பின்னங்களின் கூட்டலின் இயற்கணித விளக்கம்: மூன்று பின்னங்களின் கூட்டல்: கூட்ட வேண்டிய பின்னங்களை ஒரே பகுதி கொண்டவையாக மாற்றுவதற்கு மேலுள்ள எடுத்துக்காட்டுகளில் தரப்பட்டுள்ளது போல ஒன்றின் பகுதியால் மற்றொன்றின் தொகுதி, பகுதிகளைப் பெருக்குவதற்குப் பதிலாக, இரு பின்னங்களின் பகுதிகளை அவற்றின் மீச்சிறு பொது மடங்காக மாற்றுவதற்குத் தேவையான எண்களைக் கொண்டு முறையே அந்த இரு பின்னங்களின் தொகுதி, பகுதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டுகள்: , இவ்விரு பின்னங்களின் பகுதிகள் முறையே 4, 12. இவற்றின் மீசிம=12. எனவே முதல் பின்னத்தின் தொகுதி, பகுதிகளை மட்டும் எண் 3 ஆல் பெருக்கிக் கொண்டால் போதும். , இவ்விரு பின்னங்களின் பகுதிகள் முறையே 9, 15. இவற்றின் மீசிம=45. எனவே முதல் பின்னத்தின் தொகுதி, பகுதிகளை மட்டும் எண் 5 ஆலும், இரண்டாவது பின்னத்தின் தொகுதி, பகுதிகளை 3 ஆலும் பெருக்க வேண்டும். கழித்தல் கூட்டலைப் போன்றதே பின்னங்களின் கழித்தலும். இரு பின்னங்களைக் கழிப்பதற்கு அவற்றின் பகுதிகள் ஒன்றாக இருக்க வேண்டும். கழிக்க வேண்டிய இரு பின்னங்களின் பகுதிகள் ஒரே எண்ணாக இல்லையெனில், அவற்றை ஒரே பகுதி கொண்ட பின்னங்களாக மாற்றிக் கொண்ட பின் கழிக்கலாம். எடுத்துக்காட்டு: பெருக்கல் ஒரு பின்னத்தை மற்றொரு பின்னத்தால் பெருக்குதல் இரு பின்னங்களைப் பெருக்குவதற்கு அவற்றின் தொகுதியைத் தொகுதியாலும், பகுதியைப் பகுதியாலும் பெருக்க வேண்டும்: விளக்கம்: முழுமையான ஒரு பொருளின் காற்பங்கை (நான்கில் ஒரு பங்கு-1/4) எடுத்துக்கொண்டு அதனை மூன்று சம பங்குகளாகப் பிரிக்க, அந்த மூன்று சிறு சம பங்குகளில் ஒரு துண்டைப் போன்ற 12 பங்குகள் சேர்ந்து முழுப்பொருளுக்குச் சமமாக அமையும். அதாவது காற்பங்கின் மூன்றில் ஒரு பங்கு என்பது பனிரெண்டில் ஒரு பங்காகும் (1/12) (1/4 இன் 1/3 பங்கு = 1/12). காற்பங்கில் மூன்றிலொரு பங்கு என்பது பனிரெண்டிலொரு பங்கு (1/12) என்பதால், காற்பங்கில் மூன்றிலிரு பங்கு என்பது பனிரெண்டிலிரு பங்கு (2/12). 3/4 என்பது காற்பங்கின் மூன்று மடங்கு என்பதால் 3/4 இன் மூன்றிலிரு பங்கின் மதிப்பு 2/12 இன் மூன்று மடங்காக (6/12) இருக்கும். அதாவது 2/3 x 3/4 = 6/12. பின்னத்தை முழுஎண்ணால் பெருக்குதல் எந்தவொரு முழுஎண்ணையும் பகுதி 1 கொண்ட பின்னமாகக் கருதலாம் என்பதால் இரு பின்னங்களைப் பெருக்குவதைப் போன்றதே முழுஎண்ணால் பின்னத்தைப் பெருக்குவதும். எடுத்துக்காட்டு: கலப்பு பின்னங்களைப் பெருக்குதல் கலப்பு பின்னம் (பின்னங்களை) தகா பின்னங்களாக மாற்றிக்கொண்டு இரு பின்னங்களைப் பெருக்குவதைப் போல இவற்றையும் பெருக்க வேண்டும். எடுத்துக்காட்டு: வகுத்தல் ஒரு பின்னத்தை ஒரு முழு எண்ணால் வகுப்பதற்கு, பின்னத்தின் தொகுதியை அந்த முழுஎண்ணால் வகுக்கலாம் அல்லது பகுதியை அந்த முழுஎண்ணால் பெருக்கலாம். எடுத்துக்காட்டு: . ஒரு முழுஎண்ணை (அல்லது பின்னம்) ஒரு பின்னத்தால் வகுப்பதற்கு அந்த எண்ணை பின்னத்தின் தலைகீழியால் பெருக்கலாம். எடுத்துக்காட்டு: பின்னத்தை தசம பின்னமாக மாற்றுதல் ஒரு பின்னத்தை தசமபின்னமாக மாற்றுவதற்கு, அப்பின்னத்தின் தொகுதியை பகுதியால் வகுக்க வேண்டும். சரியாக வகுபடாவிட்டால் தேவையான இலக்கங்களுக்குத் தோராயப்படுத்திக் கொள்ளலாம். எடுத்துக்காட்டுகள்: 1/4 =0.25 0.25 4)1.00 8 20 20 0 1/3 = 0.333... 0.333... 3)1.00 9 10 10 1 தசமபின்னத்தை சாதாரண பின்னமாக்கல் ஒரு தசமபின்னத்தை சாதாரண பின்னமாக்க, தசமபுள்ளிக்கு வலப்புறம் எத்தனை இலக்கங்கள் உள்ளனவோ அத்தனை பத்தின் நேர்ம அடுக்கால் அத்தசமபின்னத்தைப் பெருக்கி வகுக்க வேண்டும். எடுத்துக்காட்டு: மீளும் தசமபின்னத்தை சாதாரண பின்னமாக்கல் கணக்கிடுதலுக்கு சாதாரண பின்னங்களைவிட மீளும் தசமங்கள் எளிதானவை என்றாலும், சில சூழல்களில் சாதாரண பின்னங்கள் போன்று இவை துல்லியமான விடைகளைத் தருவதில்லை. அவ்வாறான நிலைகளில் மீளும் தசமங்களை சாதாரண பின்னங்களாக மாற்றிக்கொள்ள வேண்டியதாகிறது. பொதுவாக மீளும் தசமங்கள், அவற்றின் சுழலும் தசமங்களின் மேல் ஒரு கோடிடப்பட்டு குறிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 0. = 0.789789789… தசமபுள்ளிக்கு அடுத்தபடியாகவே மீள்கை தொடங்கும் மீள் தசமங்களில், அவற்றின் சாதாரண பின்னவடிவின் தொகுதி அந்த மீள் இலக்கங்களாகவும், பகுதியானது எத்தனை இலக்கங்கள் மீள்கின்றனவோ அதனை 9 -கள் கொண்ட எண்ணாகவும் அமையும். 0. = 5/9 0. = 62/99 0. = 264/999 0. = 6291/9999 தசமபுள்ளிக்கும் மீள்தசம இலக்கங்களின் தொடக்கநிலைக்கும் இடையே பூச்சியங்கள் இருக்குமானால் அப்பூச்சியங்களின் எண்ணிக்கைக்குச் சமமான பூச்சியங்கள், மேற்காணும் முறையில் பகுதியில் எழுதப்படும் 9 களுக்கு அடுத்து எழுதப்படும் 0.0 = 5/90 0.000 = 392/999000 0.00 = 12/9900 மீள் தசமபின்னங்களின் தசமப்பகுதியில் மீளாத இலக்கங்களும் இருக்குமானால் பின்வரும் முறையில் அவற்றின் சாதாபின்னவடிவம் அமையும். 0.1523) 0.1523 + 0.0000 1523/10000 + 987/9990000 = 1522464/9990000 இயற்கணிதமுறை Let x = மீள்தசமம் x = 0.1523 மீளா இலக்கங்களின் எண்ணிக்கைக்குச் சமமான 10 இன் அடுக்கால இருபுறமும் பெருக்கினால் தசமபுள்ளியை அடுத்து மீள்தசம இலக்கங்கள் மட்டுமே இருக்கும் வடிவம் கிடைக்கும். (இக்கணக்கிற்கு 104) 10,000x = 1,523.--------(1) மீளும் தசம இலக்கங்களின் எண்ணிக்கைக்குச் சமமான 10 இன் அடுக்கால் இருபுறமும் பெருக்க வேண்டும். (இதில் 103) 10,000,000x = 1,523,987.--------(2) (2) - (1) 10,000,000x − 10,000x = 1,523,987. − 1,523. மீள்தசமங்கள் நீங்கும்வரை கழித்தலைத் தொடர வேண்டும் 9,990,000x = 1,523,987 − 1,523 9,990,000x = 1,522,464 x = 1522464/9990000 0.1523 = 1522464/9990000 நுண்புலக் கணிதத்தில் பின்னம் நடைமுறை வாழ்க்கையில் பின்னங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோடு, கணிதவியலாளர்களாலும் சீர்பார்க்கப்பட்டு மேல்தரப்பட்ட விதிகள் சரியானவையே என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் கணிதவியலாளர்கள் பின்னத்தை கீழுள்ளவாறு இரு முழுவெண்களின் வரிசைப்படுத்தப்பட்ட ஒரு இரட்டையாக வரையறுக்கின்றனர். இரண்டும் முழு எண்கள்; மற்றும் பின்னத்தைன் இவ்வகை வரையறைக்கான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் செயல்களின் வரையறைகள்: கணிதச் செயல்களின் இந்த வரையறைகள் கட்டுடையின் மேற்பகுதியில் தரப்பட்ட வரையறைகளோடு எல்லாவிதத்திலும் ஒத்திருக்கின்றன; குறியீட்டளவில் மட்டுமே வேறுபடுகிறது. கழித்தலையும் வகுத்தலையும் செயலிகளாக வரையறுப்பதற்குப் பதிலாக கூட்டல் மற்றும் பெருக்கலின் நேர்மாறு பின்னங்களாக கீழ்வருமாறு வரையறுக்கலாம்: மேலும், என்ற உறவு, பின்னங்களின் சமான உறவாக உள்ளது. இயற்கணித பின்னங்கள் இரு இயற்கணிதக் கோவைகளின் வகுத்தலாக அமைவது ஒரு இயற்கணித பின்னமாகும். எடுத்துக்காட்டுகள்: . இயற்கணித பின்னங்களும் சாதரண எண்கணித பின்னங்களின் விதிமுறைகளுக்குட்பட்டவையாகும். தொகுதியும் பகுதியும் பல்லுறுப்புக்கோவைகளாகக் கொண்ட இயற்கணிதப் பின்னமானது விகிதமுறு கோவை அல்லது விகிதமுறு பின்னம் எனப்படும். எகா: தொகுதி அல்லது பகுதியிலுள்ள இயற்கணிதக் கோவையானது பின்ன அடுக்குகொண்ட மாறியில் அமைந்திருந்தால் அந்த இயற்கணித பின்னமானது விகிதமுறா பின்னம் எனப்படும்.. எகா: சாதாரண பின்னங்களைப் போன்றே இயற்கணித பின்னத்தின் தொகுதி, பகுதி கோவைகளுக்கு பொதுக் காரணிகள் இல்லாத இயற்கணிதப் பின்னங்கள் எளிய வடிவில் அமைந்துள்ளதாகக் கருதப்படும். தொகுதி அல்லது பகுதியில் அல்லது இரண்டிலும் பின்னக் கோவைகளைக் கொண்டவை சிக்கல் பின்னம் எனப்படும். எகா: ஒரு இயற்கணித பின்னத்தை விகிதமுறு கோவைகளின் கூட்டலாக எழுதும் போது அந்த விகிதமுறு கோவைகள் பகுதி பின்னங்கள் என அழைக்கப்படுகின்றன. தரப்பட்டு இயற்கணித பின்னத்தின் பகுதியாகவுள்ள கோவையின் படியை விடக் குறைந்த படியுள்ள கோவையைப் பகுதியாகக் கொண்ட விகிதமுறு கோவைகளின் கூடுதலாக மூல பின்னம் எழுதப்படுகிறது. எடுத்துக்காட்டு: + தமிழில் கீழ்வாய் எண்கள் 15/16 = 0.9375 = முக்காலே மூன்று வீசம் 3/4 = 0.75 = முக்கால் 1/2 = 0.5 = அரை 1/4 = 0.25 = கால் 1/5 = 0.2 = நால்மா/நான்மா 3/16 = 0.1875 = மூன்று வீசம் 3/20 = 0.15 = மூன்றுமா 1/8 = 0.125 = அரைக்கால் 1/10 = 0.1 = இருமா 1/16 = 0.0625 = வீசம் 1/20 = 0.05 = மா 3/64 = 0.046875 = முக்கால் வீசம் 3/80 = 0.0375 = முக்காணி 1/32 = 0.03125 = அரை வீசம் 1/40 = 0.025 = அரை மா 1/64 = 0.015625 = கால் வீசம் 1/80 = 0.0125 = காணி 3/320 = 0.009375 = அரைக்காணி முந்திரி 1/160 = 0.00625 = அரைக் காணி 1/320 = 0.003125 = முந்திரி 3/1280 = 0.00234375 = கீழ் முக்கால் 1/640 = 0.0015625 = கீழ் அரை 1/1280 = 0.00078125 = கீழ்க் கால் 1/1600 = 0.000625 = கீழ் நால்மா 3/5020 = 0.000597609 = கீழ் மூன்று வீசம் 1/2560 =0.000390625 = கீழ் அரைக்கால் 1/3200 = 0.0003125 = கீழ் இருமா 1/5120 = 0.000195312= கீழ் மாகாணி 1/6400 = 0.00015625 = கீழ் மா 3/25600 = 0.000117187 = கீழ் முக்காணி 1/12800 = 0.000078125 = கீழ் அரைமா 1/25600 = 0.000039062 = கீழ்க்காணி 1/51200 = 0.000019531 = கீழ் அரைக்காணி 1/102400 = 0.000009765 = கீழ் முந்திரி} 1/2,150,400= இம்மி 1/23,654,400= மும்மி 1/165,580,800= அணு 1/1,490,227,200= குணம் 1/7,451,136,000= பந்தம் 1/44,706,816,000= பாகம் 1/312,947,712,000= விந்தம் 1/5,320,111,104,000= நாகவிந்தம் 1/74,481,555,456,000= சிந்தை 1/1,489,631,109,120,000= கதிர்முனை 1/59,585,244,364,800,000= குரல்வளைப்பிடி 1/3,575,114,661,888,000,000= வெள்ளம் 1/357,511,466,188,800,000,000= நுண்மணி 1/2,323,824,530,227,200,000,000= தேர்த்துகள் மேற்கோள்கள் மேலும் விவரங்களுக்கு mathsisfun-Fractions ! தமிழ் மின் நூலகம் பகுப்பு:பின்னங்கள் பகுப்பு:தமிழ்க் கணிதம் பகுப்பு:வகுத்தல் (கணிதம்)
தகவல் தொழில்நுட்பம்
https://ta.wikipedia.org/wiki/தகவல்_தொழில்நுட்பம்
தகவல் தொழினுட்பம் (Information technology) என்பது தகவல் அல்லது தரவுகளைக் கணினியைப் பயன்படுத்தித் தேக்குதல், ஆய்தல், மீட்டல், செலுத்தல், கையாளல் சார்ந்த அறிவியல் தொழில்நுட்பப் புலமாகும். இங்குத் தகவல் என்பது வழக்கமாகத் தொழில்வணிகம் அல்லது பிற நிறுவனம் சார்ந்ததாக அமையும். தகவல் தொழினுட்பம் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் ஓர் உட்பிரிவாகும். சுப்போ என்பார் 2012 இல் தகவல், தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தின் படிநிலைகளை வரையறுத்தார். இந்தப் படிநிலைகளின் ஒவ்வொரு மட்டமும் ஓரளவு சில பொதுமைகளைக் கொண்டமைந்துள்ளன. இப்பொதுமைகள் "தகவல் பரிமாற்றத்தையும் மின்னணுவியலானத் தொடர்பாடல்களையும் உள்ளடக்கிய தொழிநுட்பங்களைச் சார்ந்திருந்தன." இச்சொல் ஓரளவு கணினிகளையும் கணினி வலையமைப்பையும் குறித்தாலும், இதில் தகவலைப் பரப்பும் தொழில்நுட்பங்களாகிய தொலைக்காட்சியும் தொலைபேசிகளும் உள்ளடங்குவனவாகும். தகவல் தொழில்நுட்பத்தில் பல கணினித் தொழிலகங்கள் இணைந்து செயல்படுகின்றன. இத்தொழிலகங்களில் கணினி வன்பொருள், மென்பொருள், மின்னணுவியல், குறைகடத்திகள், இணையம், தொலைத்தொடர்புக் கருவிகள் (:en:telecommunications equipment), மின்வணிகம் ஆகியன உள்ளடங்கும். தகவல் தொழில்நுட்பத்தின் வரலாறு கி.மு. 3000 இல் கூம்பு வடிவ எழுத்துமுறையை உருவாக்கிய மெசபடோமியாவின் சுமேரியர்கள் காலத்தில் இருந்தே தகவல் தேக்குதலும் மீட்டலும் கையாளலும் பரிமாறலும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. என்றாலும், தகவல் தொழினுட்பம் எனும் சொல் புத்தியல் காலப் பொருளில் 1958 இல் ஆர்வார்டு வணிக மீள்பார்வை எனும் கட்டுரையில் முதலில் தோன்றியது எனலாம். இந்தக் கட்டுறையின் ஆசிரியர்களாகிய அரோல்டு ஜே. இலெவிட், தாமசு எல். விசிலர் எனும் இருவரும் "இந்தப் புதிய தொழில்நுட்பத்துக்கு ஒரே பெயர் இன்னும் உருவாகவில்லை. நாம் இதைத் தகவல் தொழினுட்பம் என அழைப்போம். " என்று கருத்துரைத்துள்ளனர். இவர்களின் வரையறையில் மூன்று பகுதிகள் அமைகின்றன. அவை செயலாக்க நுட்பங்கள், முடிவு எடுப்பதில் கணித, புள்ளியியல் முறைகளின் பயன்பாடு, கணினி நிரல் வழியாகௌயர்சிந்தனையை ஒப்புருவாக்கம் செய்தல் என்பனவாகும். நாம் தகவல் தேக்குதல் சார்ந்தும் தகவல் செயலாக்க நுட்பங்கள் சார்ந்தும் தகவல் தொழில்நுட்ப வரலாற்றினைப் பின்வருமாறு பிரிக்கலாம்: எந்திரமயமாக்கத்திற்கு முன்கட்டம் (Premechanical) 3000 B.C. - 1450 A.D. எந்திரமயமாக்கக் கட்டம் (Mechanical) 1450 - 1840 மின் எந்திரவியல் இயக்கக் கட்டம் (ElectroMechanical) 1840 - 1940. மின்னணுவியல் இயக்கக் கட்டம் (Electronic) 1940 இக்கட்டுரை 1940 இல் தோன்றிய மின்னணுவியல் கட்டத்தை மட்டுமே கருதுகிறது. கணினித் தொழில்நுட்ப வரலாறு thumb|upright=1.35|மூனிச்சில் டாயிட்சு அருங்காட்சியகத்தில் காட்சியில் உள்ள சூசு Z3 மீள்படிமம். சூசு Z3 என்பது முத நிரலாக்கக் கணினி. பல்லாயிரம் ஆண்டுகளாகவே கணிப்புக்கு உதவ சரிபார்ப்புக் குச்சிகள் பயன்பாட்டில் உள்ளன. கி.பி முதல் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்ட எதிர்கைத்தெரா இயங்கமைப்புதான் முதல் எந்திர வகை ஒப்புமைக் கணினி ஆகக் கருதப்படுகிறது. இது தான் மிகத் தொடக்கநிலைப் பல்லிணை பூட்டிய எந்திரவியல் இயங்கமைப்பும் ஆகும். இதோடு ஒப்பிடத்தக்க ஒப்புமைக் கணினிகள் ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டு வரை உருவாகவில்லை மேலும் 1645 வரை நான்கு கணித வினைகளையும் ஆற்றக்கூடிய முதல் எந்திரவகை கணிப்புக் கருவியேதும் உருவாக்கப்படவில்லை உணர்த்திகளையோ அல்லது கவாடங்களையோ பயன்கொள்ளும் மின்னணுவியல் கணினிகள் 1940 களில் தோன்றின. மின் எந்திரக் கணினி சூசு Z3 1941 இல் செய்து முடிக்கப்பட்டது. இதுதான் உலகின் முதல் நிரலாக்கக் கணினியாகும். புத்தியல் காலச் செந்தரப்படி, இதுவே முழுமை வாய்ந்த கணிப்பு எந்திரம் ஆகும். இரண்டாம் உலகப்போரின்போது நாசி செருமானியத் தகவல் குறிமுறைகளை உடைக்க உருவாக்கப்பட்ட கொலோசசு கணினி (:en:Colossus computer) முதல் எண்ணியல்/இலக்கவியல் கணினியாகும். இதில் நிரலாக்கம் செய்ய முடியுமென்றாலும் பொதுப் பயன்பாட்டுக்கு உரியதல்ல. இது நிரலை ஒரு நினைவகத்தில் தேக்கிவைக்க வல்லதல்ல. அதோடு இது ஒரே ஒரு பணியை மட்டுமே செய்யவல்லதாக அமைந்தது; இதில் நிரலாக்கம் செய்ய, உள்ளிணைப்பை மாற்றும் முளைகளையும் நிலைமாற்றிகளையும் பயன்படுத்தியது. முதல் மின்னணுவியலான நிரல்தேக்க எண்ணியல் கணினி மான்செசுட்டர் சிற்றளவு செய்முறை எந்திரம் (SSEM) ஆகும். இது தன் நிரலாக்கப் பணியை 1948 ஜூன் 21 இல் இயக்கியது. பிந்தைய 1940 களில் பெல் ஆய்வகங்கள் திரிதடையங்களை உருவாக்கியதும் மின்திறன் நுகர்வு குறைந்த புதிய தலைமுறைக் கணினிகள் வடிவமைக்கப்பட்டன. முதல் வணிகவியலான நிரல்தேக்கக் கணினியாகிய பெராண்டி மார்க் 4050 கவாடங்களை 25 கி.வா மின் நுகர்வுடன் பயன்படுத்தியது. தன் இறுதி வடிவமைப்பில் திரிதடையங்களைப் பயன்படுத்தி மான்செசுட்டர் பல்கலைக்கழகம் உருவாக்கி 1953 நவம்பரில் இயங்கத் தொடங்கிய கணினியில் 150 வா மின் நுகர்வே தேவைப்பட்டது. மின்னணுவியல் தரவுகள் செயலாக்கம் தரவுகள் தேக்கல் கொலோசசு கணினி போன்ற தொடக்கநிலைக் கணினிகள் துளைத்த நாடாக்களைப் பயன்படுத்தின. இந்த நீண்ட தாள்வகை நாடாக்களில் தொடர்ந்த துளைகளால் தரவுகள் குறிக்கப்பட்டன. இத்தொழில்நுட்பாம் இப்போது காலாவதியாகி விட்டது. மின்னணுவியலான தரவுகளின் தேக்கல் இரண்டாம் உலகப்போரின்போது தோன்றியது. இதற்கு தாழ்த்தத் தொடராலான நினைவகம் உருவாக்கப்பட்டது. இந்நினைவகம் இராடார் குறிகைகளின் அடிப்போசையை அகற்றியது. இதற்கு முதலில் இதள் (பாதரசத்) தாழ்த்தத் தொடர் பயன்பட்டது. முதல் தற்போக்கு அணுகல் நினைவகம் அல்லது தற்போக்கு எண்ணியல் தேக்கல் அமைப்பு வில்லியம் குழல் ஆகும். இது செந்தர எதிர்முணைக்கதிர்க் கழலால் ஆனதாகும். தாழ்த்த்த் தொடரிலும் இதிலும் தேக்கும் தகவல் வியைவாக அழிந்துவிடும். எனவே இவற்ரை அடிக்கடி புத்துயிர்ப்பிக்கவேண்டும். இது மின் தடங்கலின்போது முழுமையாக அகன்றுவிடும். அழியாத முதல் கணினி நினைவகம் காந்த உருள்கல நினைவகமாகும். இது 1932 இல் புதிதாகப் புனையப்பட்டது இது பெராண்டி மார்க்1 எனும் முதல்வணிகவியலான பொதுநோக்கு மின்னணுவியல் கணினியில் பயன்படுத்தப்பட்டது. ஐ பி எம் 1956 இல் முதல் வன்வட்டு இயக்கியை 305 ராமாக் கணினியில் அறிமுகப்படுத்தியது. பெரும்பாலான எண்ணியல் தரவுகள் காந்த முறையில் வன்வட்டில் தேக்கப்படுகிறது அல்லது ஒளியியலாக CD-ROM களில் தேக்கப்படுகிறது. 2002 ஆம் ஆண்டு வரை ஒப்புமைக் கருவிகளில் பெரும்பாலான தகவல் தேக்கப்பட்டது ஆனால் அந்த ஆண்டில் ஒப்புமைக் கருவிகளை விட எண்ணியல் தேக்க்க் கொள்ள்ளவு கூடிவிட்டது. ஆனால் 2007 ஆம் ஆண்டளவில் 94% அளவு உலகளாவிய தரவுகள் எண்ணியலாகத் தேக்கப்பட்டன: இதில் 52% அளவு வன்வட்டிலும் 1% அளவு காந்தமுரையிலும் தேக்கப்பட்டன. உலகளாவிய மின்னணுக் கருவியில் தேக்கும் அளவு 1986 இல் 3 எக்சாபைட்டுகளில் இருந்து 2007 இல் 295 எக்சாபைட்டுகள் வரை வளர்ந்து பெருகியுள்ளது. அதாவது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இருமடங்காகப் பெருகியுள்ளது. தரவுத்தளங்கள் பேரளவு தரவுகளை விரைந்து துல்லியமாகத் தேக்கவும் மீட்கவும் தரவுத்தள மேலாண்மை அமைப்புகள் 1960 களில் தோன்றின இத்தகைய மிகத் தொடக்க கால அமைப்பு ஐ பி எம் உருவாக்கிய தகவல் மேலாண்மை அமைப்பு ஆகும். 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் இது பரவலாகப் பயனில் இருந்தது. இது தரவுகளைப் படிநிலை அமைப்பில் தேக்குகிறது. ஆனால் 1970 களில் டெடு கோடு என்பார் மாற்று முறையான உறவுசார் தேக்கப் படிமத்தைக் கணக்கோட்பாடு, பயனிலை அளவைமுறை (தருக்க முறை) ஆகியவற்றின் அடிப்படையில் முன்மொழிந்தார். இதில் பழக்கமான அட்டவணைகளும் நிரல்களும் நிரைகளும் பயன்கொள்ளப்பட்டன. ஒராக்கிள் குழுமம் முதல் வணிகவியலான உறவுசார் தரவுத்தள மேலாண்மை அமைப்பை 1980 இல் உருவாக்கியது. அனைத்து தரவுத்தள மேலாண்மை அமைப்புகளிலும் பல உறுப்புகள் உள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்து தேக்கிய தரவுகளைப் பல பயனர்களால் அணுகிப் பெறும்வகையிலும் அதேவேளையில் அதன் ஒருமைக் குலையாதபடியும் தரவுகளைஅனைவருக்கும் தருகின்றன. அனைத்துத் தரவுத்தளங்களின் பான்மை, அவற்றில் உள்ளத் தரவுகளின் கட்டமைப்பைத் தனியாக வரையறுத்து, தரவுகள் தேக்கப்பட்டுள்ள பகுதியில் இருந்து பிரித்து, வேறு பகுதியில் தேக்கி வைத்தலாகும் இவை தரவுத்தள வரிசைகள் எனப்படுகின்றன. தரவுகள் மீட்டல் உறவுசார் இயற்கணிதவியலைப் பயன்படுத்தி, உறவுசார் தரவுத்தளப் படிமம்கட்டமைப்பு வினா மொழி சாராத நிரலாக்க மொழியை அறிமுகப்படுத்தியது. தரவு என்பதும் தகவல் என்பதும் ஒத்தபொருள் வாய்ந்த சொற்கள் அல்ல. தேக்குமனைத்தும் தரவுகளே. இது தகவல் ஆக, பொருள்மைந்த ஒருங்கமைப்போடு தரப்படவேண்டும். உலகின் பெரும்பாலான எண்ணியல் தரவுகள் கட்டமைப்பற்ரவை. இவை பல்வேறு புறநிலைப் படிவங்களில் தேக்கப்படுகின்றன. ஒரே நிறுவனத்திலும் இந்நிலை அமைகிறது.தனித்தனியாக உள்ள தரவுகளை ஒருங்கிணைக்க 1980 களில் தகவல் கிடங்குகள் தோன்றின. இவற்றில் பல வாயில்களில் இருந்து திரட்டிய தரவுகள் தேக்கப்பட்டுள்ளன. இவ்வாயிகளில் வெளி வாயில்களும் இணையமும் கூட உள்ளன. இவற்ரில் உள்ள தகவல்கள் முடிவு எடுக்கும் அமைப்புகளுக்கு பயன்படும் வகையில் ஒருங்கமைக்கப்பட்டு உள்ளன. தரவுகள் பரிமாற்றம் தகவல் பரிமாற்றத்தில் மூன்று கூறுகள் உள்ளன. அவை செலுத்தல், பரப்புதல், பெறுதல் என்பனவாகும். இதைப் பொதுவாக ஒலி/ஒளி பரப்பல் எனலாம். இதில் தகவல் ஒரேதிசையில் செலுத்தும் அலைவரிசையிலோ அல்லது தொலைத்தொடர்பைப் போல இருதிசையிலும் செலுத்தும் அலைவரிசையிலும் பெறும் அலைவரிசையிலுமோ பரப்பப்படுகின்றன. இத்துறையிலுள்ள பிரிவுகள் கணினி அறிவியல் கணினி வலையமைப்பு (Computer Networking) தகவல் அறிவியல் தகவல் பாதுகாப்பு இணையம் (website) மின் நூலகம் அங்கீகார முறை (Pattern recognition) தரவு மேலாண்மை தரவு செயலாக்கம் (Data processing) தரவு அகழ்தல் மேனிலைத் தரவு (Metadata) தரவு சேமிப்பு தரவு தளம் தரவு வலையம் (Data networking) தொழில்நுட்ப மதிப்பீடு (Technology assessment ) இரகசிய எழுத்து (Cryptography) தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நூலகம் மின் அரசு Telematics மேற்கோள்கள் மேலும் படிக்க Gleick, James (2011).The Information: A History, a Theory, a Flood. New York: Pantheon Books. Shelly, Gary, Cashman, Thomas, Vermaat, Misty, and Walker, Tim. (1999). Discovering Computers 2000: Concepts for a Connected World. Cambridge, Massachusetts: Course Technology. Webster, Frank, and Robins, Kevin. (1986). Information Technology – A Luddite Analysis. Norwood, NJ: Ablex. வெளி இணைப்புகள் யுனிகோடு கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல் பகுப்பு:தகவல் தொழினுட்பம் பகுப்பு:ஊடகத் தொழினுட்பம்
தஞ்சாவூர்
https://ta.wikipedia.org/wiki/தஞ்சாவூர்
தஞ்சாவூர் (Thanjavur அல்லது Tanjore) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தமிழ் பாரம்பரிய மிக்க தொன்மையான நகரமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும். இது தஞ்சை என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த தஞ்சாவூர் நகராட்சி 10 ஏப்ரல் 2014 அன்று தமிழ்நாட்டின் 12-வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 250 ஆண்டுகள் இடைக்கால சோழ பேரரசின் தலைநகரான விளங்கியது. புகழ் பெற்ற தமிழ் சோழ மன்னர்களான விசயாலய சோழன் முதல் முதலாம் இராசராச சோழன் வரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த நகரமாகும். சோழ பேரரசின் பின் தஞ்சாவூர் நாயக்கர் மற்றும் தஞ்சாவூர் மராத்திய அரசுகளின் தலைநகரமாக தஞ்சாவூர் விளங்கியது. தஞ்சை என்பது குளிர்ந்த அழகிய வயல்கள் மற்றும் அழகிய பனை மரங்கள் நிறைந்த பகுதி என பொருள். தஞ்சை மாவட்டத்தில் முக்கிய தொழில் விவசாயம் என்பதால் நெல் பயிர் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த தஞ்சையில் தான் அதிக அளவில் நெல் பயிர் விளைகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமாகவும், உலக புகழ் பெற்றதாகவும் தஞ்சைப் பெரிய கோவில் விளங்குகிறது. பெயர்க் காரணம் தஞ்சை என்பதற்கு "குளிர்ந்த வயல்கள் நிறைந்த பகுதி" என்று பொருள். தஞ்சாவூர் எட்டாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட ஒரு நகராகும். அப்போது இப்பகுதியினை வளமையோடு ஆண்டு வந்த தனஞ்சய முத்தரையர் பெயரையே, இந்நகரம் பெயராகப் பெற்றது. தனஞ்சய ஊர் என்பது மருவி தஞ்சாவூர் என்று நிலைபெற்றது என்றும் கூறப்படுகிறது. மற்றொரு கூற்றின்படி புராணக்கதை மூலம் பெயர் வந்ததாக கருதப்படுகிறது. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்திவந்தான். மக்களைக் காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும், சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இத்திருக்கோயில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்கிரகாரத்திற்கு அருகில் இருக்கிறது. வைணவச் சம்பிரதாயத்தில் இதே புராணம் சிறிது மாற்றப்பட்டு மகாவிட்டுணுவே தஞ்சனை அழித்தார் என்றும், அதனால் தஞ்சை மாமணி நீலமேகப்பெருமாளாய் கோயில் கொண்டு இருக்கிறார் என்றும் நம்பப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி, மேற்கூறிய நீலமேகப்பெருமாள் கோயில் தஞ்சபுரீசுவரரின் கோயிலுக்கு நேரெதிரில் உள்ளது. வரலாறு 200px|left|thumb|1955-இல் தஞ்சாவூர் நகரத்தின் வரைபடம் தஞ்சாவூரை பல அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். பொ.ஊ. 250 – பொ.ஊ. 600 வரை தஞ்சாவூரை களப்பிரர்கள் ஆட்சி செய்தனர். இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. இவர்கள் காலத்தில் சைன சமயம், பௌத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பின்னர் பொ.ஊ. 600 முதல் பொ.ஊ. 849 வரை முத்தரையர்கள் என்ற மன்னர்கள் ஆட்சி செய்தனர். பின்னர் இடைக்கால சோழ மன்னரான, விசயாலய சோழன் பொ.ஊ. 848 முதல் பொ.ஊ. 878 வரை ஆட்சி செய்தார். முத்தரைய மன்னரான இளங்கோ முத்தரையரிடமிருந்து, தஞ்சாவூரை கைப்பற்றிய விசயாலய சோழன் நிசும்பசுதானி கோவிலைக் கட்டினார். இவரது மகன் ஆதித்த சோழன் (பொ.ஊ. 871-901) நகரத்தின் மீதமுள்ள பகுதியை பலப்படுத்தினார். பிற்காலச் சோழர்களின் தலைநகராகத் தஞ்சாவூர் திகழ்ந்தது. இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் (பொ.ஊ. 985-1014) தஞ்சாவூர் நகர் மிக்க புகழ் எய்தியது. 1025இல் கங்கைகொண்ட சோழபுரம் தோன்றும் வரை தஞ்சாவூர் சோழ பேரரசின் மிக முக்கியமான நகரமாக இருந்தது. பதினொன்றாம் நூற்றாண்டின், சோழ மன்னனான முதலாம் இராசராச சோழன் (985-1014) தஞ்சாவூரில், பெருவுடையார் கோவிலைக் கட்டினார். இந்த கோயில் தமிழ் கட்டிடக்கலைக்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இராசராச சோழனின் மகனரான இராசேந்திர சோழன் சுமார் பொ.ஊ. 1025இல் தனது தலைநகரைத் தஞ்சாவூரிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதுரைப் பாண்டிய மன்னர்களின் எழுச்சியால் தஞ்சைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பாண்டியரின் வீழ்ச்சிக்குப்பின் தஞ்சாவூர் விசயநகர அரசின் ஆட்சிக்குட்பட்டது. பொ.ஊ. 1532-இல் தஞ்சையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி தொடங்கிற்று. திருச்சியைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த மதுரை நாயக்க மன்னர் சொக்கநாதர் பொ.ஊ. 1673-இல் தஞ்சாவூர் மீது படையெடுத்தார். இப்போரில் விசயராகவன் தோல்வியுற்று போர்க்களத்தில் வீரமரணமடைந்தார். தஞ்சை அரசு மதுரை நாயக்க அரசுடன் இணைக்கப்பட்டது.தமிழாய்வு - தஞ்சாவூர் 250px|thumb|left|1869-இல் தஞ்சாவூர் நகரம் பொ.ஊ. 1676இல் மராட்டிய சிவாசியின் சகோதரர் வெங்காசி தஞ்சையில் தஞ்சாவூர் மராத்தியர் ஆட்சியை நிறுவினார். இரண்டாம் சரபோசி (1798–1832) ஆங்கில கவர்னர் செனரல் வெல்வெசுலி பிரபுவுடன் பொ.ஊ. 1799-இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தஞ்சைக் கோட்டையைத் தவிர மற்ற தஞ்சை பகுதிகள் ஆங்கிலேயர் வசம் கொடுக்கப்பட்டன. இரண்டாம் சிவாசி (1832–1855) மன்னனுக்குப் பிறகு ஆண்வாரிசு இல்லாமையினால், ஆங்கிலேயர்கள் வசம் பொ.ஊ. 1856-இல் தஞ்சைக் கோட்டையும் வந்தது. தஞ்சாவூர் 1866-ஆம் ஆண்டுமுதல் நகராட்சியாக இருந்து வந்த தஞ்சை 2014-ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.தமிழாய்வு - தஞ்சாவூர் பண்பாட்டுச் சின்னங்களும் மக்கள்தொகை இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 222,943 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 109,199 ஆண்கள், 113,744 பெண்கள் ஆவார்கள்.தஞ்சாவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 91.27% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.80%, பெண்களின் கல்வியறிவு 87.92% ஆகும். தஞ்சாவூர் மக்கள் தொகையில் 18,584 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.தஞ்சாவூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல் 2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, தஞ்சாவூரில் இந்துக்கள் 82.87%, முஸ்லிம்கள் 8.34%, கிறிஸ்தவர்கள் 8.58%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.06%, 0.11% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சமயமில்லாதவர்கள் 0.01% பேர்களும் உள்ளனர். பொருளாதாரம் thumb|right|தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் வயல் இங்குள்ளவர்கள் பாரம்பரியமாக விவசாயத்தை தொழிலாக செய்து வருகின்றனர். தஞ்சாவூர் ஆனது "தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு நெல் பயிர் மற்றும் உளுந்து, வாழை, தேங்காய், இஞ்சி, கேழ்வரகு, துவரை, பாசிப் பயறு, கரும்பு மற்றும் மக்காச்சோளம் போன்ற பயிர்களும் பயிரிடப்படுகிறது. தஞ்சாவூரில் விவசாயத்திற்கு மூன்று பருவங்கள் உள்ளன - குறுவை (சூன் முதல் செப்டம்பர் வரை), சம்பா (ஆகத்து முதல் சனவரி வரை) மற்றும் தலாடி (செப்டம்பர், அக்டோபர் முதல் பிப்ரவரி, மார்ச் வரை) ஆகியவை ஆகும்.Mukhopadhyay 1990, pp. 370–371 இங்கு பாயும் காவிரி ஆறு நீர் பாசனத்திற்காகவும், மக்களின் அன்றாடத்தேவைகளுக்காகவும் முதன்மையாக விளங்குகிறது.புதிய தலைமுறை (06 ஏப்ரல், 2018) தமிழ்நாட்டில் பட்டு நெசவு செய்யும் முக்கியமான நகரம் தஞ்சாவூர் ஆகும். 1991 ஆம் ஆண்டில் நகரத்தில் 200 பட்டு நெசவு அலகுகள் இருந்தன, அவற்றில் 80,000 பேர் பணிபுரிந்தனர். தஞ்சாவூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் தயாரிக்கப்படும் புடவைகள் தஞ்சாவூர் மற்றும் அண்டை நகரங்களில் விற்கப்படுகின்றன. ஆனால் உற்பத்தி செலவுகள் மற்றும் பெரிய அளவிலான உற்பத்தியாளர்களிடமிருந்து வரும் போட்டி ஆகியவையால், உற்பத்தியில் ஈடுபடும் நபர்களின் எண்ணிக்கையானது குறைந்துள்ளது. இந்நகரில் வீணை, தம்புரா, வயலின், மிருதங்கம், தவில், மற்றும் கஞ்சிரா போன்ற இசைக்கருவிகள் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் மாநகராட்சி அதிகாரிகள்மாநகர முதல்வர்ஆணையர்தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்சட்டமன்ற உறுப்பினர்டி. கே. ஜி. நீலமேகம்மக்களவை உறுப்பினர்எஸ். எஸ். பழனிமாணிக்கம் தஞ்சாவூர் மாநகராட்சியானது தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். 2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த எஸ். எஸ். பழனிமாணிக்கம் வென்றார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியை திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த டி. கே. ஜி. நீலமேகம் வென்றார். போக்குவரத்து பேருந்து போக்குவரத்து thumb|right|தஞ்சாவூர் நகரில் புதுக்கோட்டை சாலை thumb|right|தஞ்சாவூர் நகரில் பேருந்து ஒன்று இங்கிருந்து நாகப்பட்டினம், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருப்பூர், வேலூர், ஆரணி, பெரம்பலூர், அரியலூர், மைசூர், சேலம், கடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, கும்பகோணம், மயிலாடுதுறை, மானாமதுரை, திருநெல்வேலி, பெங்களூரு, எர்ணாகுளம், நாகர்கோயில், திருப்பதி, திருவனந்தபுரம் மற்றும் ஊட்டி ஆகிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். இங்கு புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் என இரு பேருந்து நிலையங்கள் உள்ளன. புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளும் மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அருகிலுள்ள நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைக்க 1997 ஆம் ஆண்டில் மன்னர் சரபோசி கல்லூரி அருகே புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. தொடருந்து போக்குவரத்து தஞ்சாவூரில் இரயில் நிலையம் ஒன்று உள்ளது. இது திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையத்தையும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம் உடன் தஞ்சாவூர் வழியாக இணைக்கும் முக்கிய இரயில் பாதையாகும். இது தென் இந்திய ரயில்வே கம்பெனியில் 1879 இல் நிறுவப்பட்ட பாதையாகும். இந்தியாவின் மிக முக்கியமான நகரங்களுடன் தஞ்சாவூர் ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சென்னை, மைசூர், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கரூர், மதுரை, திருநெல்வேலி, இராமேசுவரம், திருச்செந்தூர், கடலூர், தருமபுரி, விழுப்புரம் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய நகரங்களுக்கு தினமும் மற்றும் பாண்டிச்சேரி, நாகர்கோயில், கன்னியாகுமரி, திருப்பதி, நெல்லூர், இட்டார்சி, விசாகப்பட்டினம், ஊப்பிளி, வாசுகோட காமா, கோவா, வாரணாசி, விசயவாடா, சந்திரபூர், நாக்பூர், மற்றும் புவனேசுவர் ஆகிய நகரங்களுக்கு வாரத்திற்கு ஒருநாள் இரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த இரயில் நிலையத்திலிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருச்சிராப்பள்ளி, கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் நாகூர் போன்ற நகரங்களுக்கு அடிக்கடி பயணிகள் இரயில்கள் இயக்கப்படுகிறது. வானூர்தி போக்குவரத்து 1990களில் தஞ்சாவூர் சென்னையுடன் வாயுதூத் சேவைகளால் இணைக்கப்பட்டிருந்தது; போதுமான ஆதரவில்லாமையால் இச்சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது விமானப்படை நிலையம் செயல்பட்டு வருகிறது. வான்படை நிலையம் 2012க்குள் ஒரு முக்கிய விமான தளமாக மாறியது. இது போர் விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்களை கையாள்வதற்காக அமைக்கப்பட்டது. இருப்பினும், விமான தளத்தை நிறுவுவதும், செயல்படுத்துவதும் மார்ச் 2013 வரை தாமதமானது. தென்னிந்தியாவில் முதல் முறையாக முற்றிலும் போர் விமானங்களைக்கொண்ட புதிய விமானப்படைத் தளம் தமிழகத்தில் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் 55 கி.மீ தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் ஆகும். சிறப்புகள் thumb|தலையாட்டி பொம்மை தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது. உலக புகழ் பெற்ற பாரம்பரிய சின்னமான பெரிய கோவில் உள்ளது. உலகப் புகழ் பெற்ற தஞ்சை சரசுவதிமகால் நூலகத்தை தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் உள்ளது. புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் ஓவியங்களும், கலைத்தட்டுக்களும் உலகப் புகழ் பெற்றவை. புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை உலக புகழ் பெற்றது. புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் வீணை உலக புகழ் பெற்றது. அதிகளவில் கோயில்கள் உள்ள மாவட்டமாக உள்ளது. கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நடுவண் அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளம், மற்றும் கர்நாடகம் ஆகிய நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவின் தலைமை மையமாகும். மெல்லிசைக் கருவிகளான வீணை, மிருதங்கம், தபேலா, தம்புரா போன்றவை இங்கு தான் செய்யப்படுகின்றன. தஞ்சாவூர் வீணை புவிசார் குறியீடு பெற்றதாகும். சுற்றுலாத் தலங்கள் உலக பாரம்பரிய சின்னமான தஞ்சைப் பெரிய கோயில் தஞ்சை சரசுவதிமகால் நூலகம்(ஆசியாவின் பழமையான நூலகம்) கல்லணை (உலகின் பழமையான அணை) தர்பார் மண்டபம் தஞ்சை அரண்மனை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆறு படை வீடுகளில் ஒன்றான நான்காம் படை வீடு சுவாமிமலை முருகன் கோயில் தஞ்சாவூர் அருகே திட்டை என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலின் கற்பகத்தின் மேல் ஒரு கல் உள்ளது. அந்த கல்லீலிருந்து 24 நிமிடத்திர்கு ஒரு துளி என சிவலிங்கத்தின் மேல் தண்ணீர் விழும், இந்த கல் உலகில் அரிய வகையான எங்கும் கிடைக்காத கல்லாகும். தென்னக பண்பாடு மையம் திருநாகேஸ்வரம் கோவில். பூண்டி மாதா கோவில் (தமிழகத்தின் முக்கியமான கிறிஸ்தவ கோயில்) சிவகங்கை பூங்கா. உலக பாரம்பரிய சின்னமான தாராசுரம் ஐராவதேசுவரர் கோவில் (சிற்பிகளின் கனவு). தஞ்சபுரீஸ்வரர் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை மாமணி நீலமோக பெருமாள் கோவில். பட்டுகோட்டை நாடியம்மன் கோவில் பிரபலமான கோவிலாகும். பருத்தியப்பர் கோயில் உள்ளது. திருமங்கலகுடி சூரியனார் கோயில் இந்தியாவிலே இந்த கோவிலில் மட்டுமே சூரிய பகவான் சிவனின் எதிரில் இருப்பார். மல்லிப்பட்டிணம் மனோரா கோட்டை உள்ளது.ஆங்கிலேயர்கள் நெப்போலியனை வீழ்த்தியததன் நினைவாக கட்டியதாகும். மல்லிப்பட்டிணம் மீன் பிடி துறைமுகம். கும்பகோணம் மகாமகம் குளம். அதிராம்பட்டிணம் கடல் அலை ஆத்தி காடு. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில். திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயில்(பிரம்மகத்தி தோஷம் நிவர்த்தி). திருவையாறு ஐயாரப்பர் கோயில். தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில். திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில். நவகிரக கோயில் - குரியனார் கோயில் சிவசூரியர் கோயில் (சூரிய பகவான் தலம்) நவகிரக கோயில் - திங்களூர் கைலாசநாதர் கோயில்(சந்திர பகவான் தலம்) நவகிரக கோயில் - திருகஞ்சனூர் அக்னிஸ்வரர் கோயில்(சுக்கிர பகவான் தலம்) நவகிரக கோயில் - திருநாகேஸ்வரம் நாகநாதர் கோயில்(இராகு பகவான் தலம்) திருச்சோறை சாரபரமேஸ்வரர் கோயில் (கடன் நிவர்த்தி தலம்) திருச்சோறை சாரநாதபெருமாள் கோயில் (108 திவ்ய தேசம்). திருகருகாவூர் முல்லைவனநாதர் கோயில் (குழந்தை வரம்) புன்னைநல்லுர் முத்து மாரியம்மன் கோயில்(தோல் நோய் நிவர்த்தி). கும்பகோணம் சாரங்கபாணி கோயில்(108 திவ்ய தேசம்). கும்பகோணம் சக்கரபாணி கோயில். கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில். கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில். திருவலஞ்சுழி வெள்ளை பிள்ளையார் கோயில். முள்ளி வாய்க்கால். திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் கோயில்(தென் திருப்பதி 108 திவ்ய தேசம்). திருப்பனந்தாள் அருணஜடஸ்வரர் கோயில். அனைக்கரை கீழணை. திருகண்டியூர் பிரம்மசிரகண்டிசுவரர் கோயில்(பிரம்மன் கோயில்). திருகண்டியூர் சாப விமோசன பெருமாள் கோயில்(108 திவ்ய தேசம்). திருச்சோறை சாரநாதபெருமாள் கோயில். கோவிலடி அப்பகுடத்தான் அப்பல ரெங்கநாதர் கோயில்(பஞ்சரங்க தலம் 108 திவ்ய தேசம்) பட்டீஸ்வரம் தேனுபுரிஸ்வரர் கோயில் (துர்க்கை அம்மன் சன்னதி). திருநரையூர் நாச்சியார் கோயில் கல்கருடன் சேவை(108 திவ்ய தேசம்). அய்யவாடி பிரத்தியங்கிரி தேவி கோயில்(பில்லி சுனியம் நிங்குதல்). கதிராமங்கலம் வனதுர்கை கோயில்(இராகு கால பூஜை). கல்லூரிகள் தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி திருவையாறு அரசர் கல்லூரி அருள்மிகு வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புட்பம் கல்லூரி பூண்டி கரந்தைத் தமிழ்க் கல்லூரி அடைக்கலமாதா   கல்லூரி  பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகர் சங்க மனலி இராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரி அன்னை வேளாங்கன்னி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொன்னையா இராமஜெயம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் (PRIST) விழாக்கள் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழா மே 23 இராஜராஜ சோழன் சதய விழா புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆடி பூச்செரிதல் ஆவணி பெருந்திருவிழா புரட்டாசி தெப்பத்திருவிழா திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா ஏகௌரியம்மன் கோயில் ஆடி தீமிதி திருவிழா பருதியப்பர் கோவில் பங்குனி உத்திரம் பெருவுடையார் கோவில் சித்திரை தேர் திருவிழா கோடியம்மன் கோவில் காளியாட்ட திருவிழா வைகாசியில் வெள்ளை விநாயகர் கோவில் மற்றும் 15 மேற்பட்ட கோவில்களின் முத்துப்பல்லாக்கு விழா தஞ்சை ராஜவீதிகளில் 24 கருடசேவை ஆடிப்பெருக்கு விழா ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, காவிரித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர் அருகில் உள்ள கோவில்கள் தாராசுரம் ஐராதீஸ்வரர்கோவில் திருவையாறு ஐயாறப்பர் கோயில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் சுந்தரபெருமாள் கோவில்‎ சுவாமிமலை முருகன் கோவில் பருதியப்பர் கோவில் திட்டை குரு ஸ்தலம் திங்களூர் சந்திரன் கோவில் திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலம் ஆடுதுறை சூரியனார் கோவில் தஞ்சை மாமணி கோவில் கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் உப்பிலியப்பன் கோயில் பட்டீசுவரம் துர்கையம்மன் கோயில் திருக்கருகாவூர் கர்ப்பரச்சாம்பிகை கோவில் அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயில் திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில் நாச்சியார் கோவில் கல்கருட ஸ்தலம் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் இதனையும் காண்க தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூர் மராத்தியர்கள் தஞ்சாவூர் மாநகராட்சி மேற்கோள்கள் உசாத்துணை குடவாயில் பாலசுப்ரமணியன், அஞ்சனா பதிப்பகம், தஞ்சாவூர், 1997, 362+18 பக்கங்கள் வெளி இணைப்புகள் 360டிகிரி கோணத்தில் பிரகதீஸ்வரர் கோயில் தஞ்சை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தஞ்சாவூர் ஓவியங்கள் பற்றிய கட்டுரை தஞ்சை மாவட்டம் பற்றிய வலைப்பக்கம் தஞ்சை சமையல் பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டம் பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள்
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்
https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_நாடுகள்_கல்வி,_அறிவியல்,_பண்பாட்டு_நிறுவனம்
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள், மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந்நிறுவனம் இயங்கி வருகின்றது. இவ்வகையான ஒத்துழைப்பினால் உலகில் அமைதியையும், பாதுகாப்பையும் ஏற்படுத்தி, அதன் மூலம் இன, மொழி, மத, பால் வேறுபாடின்றி, உலக மக்கள் அனைவருக்குமான நீதி, சட்ட விதிமுறைகள், மனித உரிமைகள் மற்றும் ஐக்கிய நாடுகள் உரிமை ஆவணத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றிற்கு உலகளாவிய ரீதியில் கிடைக்கும் மதிப்பை உறுதி செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும். கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டின் மூலமாக உலக அளவில் உயர்த்திட ஒத்துழைப்பை நல்கி உலக அமைதிமற்றும் மனித உரிமைகளைக் காக்க உரிய பங்களிப்பைச் செய்வது இதன் நோக்கம் ஆகும். ஐக்கிய நாடுகளின் அதிகார பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி இதன் செயல்பாடு அமைந்துள்ளது. இது அனைத்துலக அறிவார்ந்த கூட்டமைப்பு மற்றும் ஆணைக் குழுவின் வழித் தோன்றல் ஆகும். இது 193 உறுப்பு நாடுகளையும் 7 கலந்துகொள்ளும் உறுப்பினர்களையும் கொண்டது. இது களப்பணி அலுவலகங்கள் மூலமாகவும், 3 அல்லது அதற்கு மேலான நாடுகளின் கூட்டு அலுவலகங்கள் மூலமாகவும் செயல்படுகிறது. கல்வி, இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், பண்பாடு, செய்தி தொடர்பு போன்ற 5 முக்கிய நிரல்கள் மூலமாக இதன் நோக்கங்கள் நிறைவேற்றப்படுகிறது. எழுத்து அறிவித்தல் அனைத்துலக அறிவியல் நிகழ்ச்சிகள் நடத்துதல், ஊடகங்கள், அச்சமைப்புகள் ஆகியவற்றின் சுகந்திரத்தைப் பாதுகாத்தல், அந்தந்தப் பகுதியின் பண்பாடு மற்றும் வரலாற்றுத் திட்டங்களை உயர்த்துதல் உலக பண்பாடு மற்றும் இயற்கை மரபுரிமை இவற்றை பாதுகாக்க உலகளாவிய ஒத்துழைப்பு ஆகியவை இதன் திட்டங்கள் ஆகும். இது உலக நாடுகளின் முன்னேற்ற குழுவின் ஒரு அங்கம் ஆகும். நோக்கம் மற்றும் முன்னுரிமை சமாதானத்தை ஏற்படுத்துதல், வறுமையைக் குறைத்தல், தொடர் முன்னேற்றத்தை மேம்படுத்துதல்.கல்வி, அறிவியல், பண்பாடு, செய்தித் தொடர்பு ஆகியவற்றின் வாயிலாக உள் கலாச்சார உரையடல்களை மேம்படுத்துதல். ஆகியவை இந்நிறுவனத்தின் நோக்கம் ஆகும். செலுத்தக்கூடிய முன்னுரிமைகள் முக்கியக் கவனம் செலுத்தக்கூடிய முன்னுரிமைகள் – ஆப்ரிக்காவும் பாலின சமத்துவமும் ஆகும். வரலாறு உலக நாடுகளின் சங்கம் 21.9 1921 அன்று அனைத்துலக அறிவுசார் ஒத்துழைப்புக்காக ஆணைக்குழு ஒன்றை உருவாக்கத் தீர்மானம் எடுத்தது. அதன் விளைவே யுனெஸ்கோவின் தோற்றமும் அதன் அதிகாரமும் ஆகும். 4.1.1922 அன்றுஅறிவுசார் ஒத்துழைப்புக்காக அனைத்துலக குழு (சிஐசிஐ) ஒன்று தோற்றுவிக்கப்பட்டது9.8.1925 அன்று பாரிஸில் அறிவார்ந்த ஒத்துழைப்புக்கானஅனைத்துலக நிறுவனம் (ஐஐசிஐ) விளைவே நிறுவப்பட்டது இது சிஐசிஐன் செயலாக்க நிறுவனமாக செயல்பட நிறுவப்பட்டது.18.12.1925 அனைத்துலக கல்வி அலுவலகம் ஒரு அரசு சார நிறுவனமாக, அனைத்துலக முன்னேற்றத்திற்காக தன் பணியைத் தொடங்கியது. இந்த முன்னோடி நிறுவனங்களின் செயல்பாடுகள் இரண்டாம் உலகப்போரின் விளைவால் மிகவும் தடைபட்டது. அட்லாண்டிக் அதிகாரப்பத்திரத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய நாடுகளின் அறிவிப்பிற்குப் பின்னர் ஒப்பந்தத்தின் மூலம் ஓன்றிணைந்த கல்வி அமைச்சர்களின் மாநாடு தனது கூட்டங்களை 16.11.1942 அன்று லன்டனில் ஆரம்பித்தது அது 5.12.1945வரை தொடர்ந்தது. மாஸ்கோ அறிவிப்பில் அனைத்துலக அமைப்பு அமைய வேண்டியதின் அவசியத்தை சைன,ஐக்கிய அமெரிக்க நாடு, ஐக்கிய அரசாங்கம், ஸோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளின் அனுமதியோடு தெரிவிக்கப்பட்டது. சிஏஎம் இ ன் உத்தேச திட்டத்தினாலும், அனைத்துலக அமைப்புக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு பரிந்துரைக்கு இணங்கவும் சான் பிரான்ஸிஸ்கோவில் ஏப்ரல் – ஜூன் 1945ல் நடந்த மாநாடு கல்வி, ப்ண்பாட்டு அமைப்பு (இசிஓ) அமைக்க 1-16 நவம்பர்1945 லண்டனில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதில் 44 நாடுகள் கலந்து கொண்டன. இசிஓ மாநாட்டில்,37 நாடுகள் கையெழுத்திட்டு,யுனெஸ்கோவின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதற்கான ஆயத்த ஆணைக் குழுவும் நிறுவப்பட்டது. 16-11-1945 முதல் 04-11-1946 வரை ஆயத்த ஆணைக்குழு பணியாற்றியது.04-11-1946 அன்று யுனெஸ்கோவின் அரசியலமைப்பு,உறுப்பு நாட்டின் இருபதாவது ஓப்புதலோடும் நிதியோடும் நடமுறைக்கு வந்தது. 19 நவம்பர் – 10 டிசம்பர் 1946 வரை நடந்த முதல் பொது மாநாட்டில் டாக்டர் ஜூலியன் ஹக்ஸ்லி (Dr. Julian Huxley) பொது இயக்குனராகத் தேர்ந்து எடுக்கப்பட்டர்நிர்வாகக் குழுவில் தனி நபர் தகுதியில் எவரும் உறுப்பினராக முடியாது என்றும்,உறுப்பு நாடுகளின் அரசியல் பிரநிதிகள் தாம் கலந்து கொள்ள முடியுமென,யுனெஸ்கோவின் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. பனிப் போர்,குடியேற்ற நாடுகளின் விடுதலை,மற்றும் சோவியத் ஒன்றியம் கலக்கப்பட்ட போதும் உறுப்பு நாடுகள் ஒன்றாக இணைந்து பணிபுரிந்து ,யுனெஸ்கோவின் ஆணை அறிக்கையை நிறைவேற்றப் பாடுபட்டனர்1950 முதல் 19788 வரை இன வெறிக்கு எதிராக யுனெஸ்கோ பாடுபட்டது.1956ல்தென் ஆப்ரிக்க குடியரசு,தங்களது நாட்டின் இனப் பிரச்சினையில் யுனெஸ்கோ தலையிடுகிறது என்று கூறி அதிலிருந்து விலகிக் கொண்டது. 1994ல். நெல்சன் மண்டேலா தலைமையில் தென் ஆப்ரிக்கா மீண்டும் யுனெஸ்கோவுடன் இணைந்தது.2015க்குள் அனைத்து உறுப்பு நாடுகளும் அடிப்படைக் கல்வியை தங்களது நாட்டில் உள்ள அனைவருக்கும் வழங்கியிருக்க வேண்டும் என்று டகார் (செனகல்) ல் நடைபெற்ற அனைத்துலகக் கல்வி மாமன்றம் கேட்டுக் கொண்டது. 1968ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டின் விளைவால்"மனிதன் மற்றும் உயிர்க்கோளத் திட்டம் உருவானது. 1989ல் உலகளாவிய வலைத்தளம் தொடங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் செய்தி மற்றும் தகவல் திட்டத் தேவை உணரப்பட்டு அதற்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. நடவடிக்கைகள் யுனெஸ்கோ தனது நடவடிக்கைகளை அதன் ஐந்து திட்டப் பரப்பாகிய கல்வி,இயற்கை அறிவியல், சமூக மற்றும் மனித அறிவியல், கலாச்சாரம், தொடர்பாடல் மற்றும் தகவல் மூலம் நடைமுறைப்படுத்துகிறது. கல்வி: யுனெஸ்கோ அனைத்து கல்வி வாய்ப்புகளை கற்றல் சங்கங்கள் உருவாக்குவதில் அனைத்துலக தலைமை வழங்குகிறது; இந்த அமைப்பு தேசிய கல்வி தலைமை மற்றும் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க நாடுகளின் திறனை வலுப்படுத்த ஒப்பீட்டு கல்வியில் ஆராய்ச்சியை ஆதரித்தல், நிபுணத்துவம் வழங்குதல் மற்றும் கூட்டணியை வலுப்படுத்துதல்ஆகியவற்றை செய்கிறது. இது கீழ்கண்டவற்றை உள்ளடக்குகிறது. மாறுபட்ட துறை தலைப்புகளில் எட்டு சிறப்பு நிறுவனங்கள். யுனெஸ்கோ நாற்காலிகள், 644 யுனெஸ்கோ நாற்காலிகளைக் கொண்ட ஒரு அனைத்துலக வலையமைப்பு. இது 126 நாடுகளில் 770 நிறுவனங்கள் மீது ஈடுபடுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு. வயது வந்தோர் கல்வி குறித்த அனைத்துலக மாநாடு (CONFINTEA) ஒன்றை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்கிறது. அனைத்து உலக கண்காணிப்பு அறிக்கை கல்வி வெளியீடு. யுனெஸ்கோ ASPNet (தொடர்புடைய பள்ளிகளின் திட்ட வலையமைப்பு), 170 நாடுகளில் 8,000 பள்ளிகளின் அனைத்துலக வலையமைப்பு. யுனெஸ்கோ உயர் கல்வி நிறுவனங்களை அங்கீகரிப்பது இல்லை. யுனெஸ்கோ பொது "அறிக்கைகள்" வெளியிடுவதன் மூலம் பொதுமக்களுக்கு கற்றுத்தருகிறது. செவில்லி வன்முறை அறிக்கை:மனிதர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறையில் உயிரியல்ரீதியாக ஏதுவான நிலையில் உள்ளனர் என்பதை மறுக்க 1989 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அறிக்கை. திட்டங்களையும் கலாச்சார மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் யுனெஸ்கோ அறிவிக்கிறது. உதாரணம்: புவிப்பூங்காக்களின் அனைத்துலக வலையமைப்பு. உயிர்க்கோள இருப்புக்கள் (மனிதன் மற்றும் உயிர்க்கோளம் (MAB) திட்டத்தின் மூலம்). இலக்கிய நகரம்; 2007 ல், இந்த தலைப்பு கொடுக்கப்பட்ட முதல் நகரம் எடின்பரோ, ஸ்காட்லாந்தின் முதல் சுற்றும் நூலகம் இங்கு இருந்தது. 2008 இல், அயோவா நகர், அயோவா இலக்கிய நகரம் ஆனது. அழியும் மொழிகள் மற்றும் மொழி வேறுபாடு திட்டங்கள். மனிதகுலத்தின் வாய்வழி மற்றும் புலனாகா பாரம்பரியத்தை சேர்ந்த தலைசிறந்த படைப்புகள். உலகின் நினைவு என்ற அனைத்துலக பதிவேடு. அனைத்துலக ஹைட்ராலஜிகல் திட்டம் (IHP) மூலம் நீர் வள மேலாண்மை. உலக பாரம்பரிய தளங்கள். படங்கள் மற்றும் வார்த்தைகளால் கருத்துக்களின் சுதந்திரமான ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம்: கருத்து சுதந்திரதை ஊக்குவித்தல்,அனைத்துலக தொடர்பாடல் மேம்பாட்டு திட்டம் மற்றும் தொடர்பாடல் மற்றும் தகவல் திட்டம் மூலமாக பத்திரிகை சுதந்திரம் மற்றும் தகவல்களை அணுகல். அனைவருக்கும் தகவல் திட்டம் (IFAP) மூலமாக ICTs க்கு உலகளாவிய அணுகலை ஊக்குவித்தல். ஊடகங்களில் பல்பதவியாண்மையையும் கலாச்சார பன்முகத்தன்மையையும் ஊக்குவித்தல். கீழ்வருவனவற்றைப் போன்ற நிகழ்வுகளை ஊகுவித்தல்: உலக குழந்தைகளுக்கான அமைதி மற்றும் அகிம்சை கலாச்சாரம வளர்ச்சிக்கான அனைத்துலக பத்தாண்டு: 2001–2010, 1998 இல் ஐ. நா. மூலம் அறிவித்து. ஒவ்வொரு ஆண்டும், கருத்து சுதந்திரத்தையும் பத்திரிகை சுதந்திரத்தையும் ஒரு அடிப்படை மனித உரிமை என்றும் எந்த ஆரோக்கியமான, ஜனநாயக மற்றும் இலவச சமூகத்தின் முக்கிய கூறுகள் என்றும் ஊக்குவிக்க 3 மே உலக பத்திரிகை சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்டது, அனைத்துலக எழுத்தறிவு தினம். அமைதி கலாச்சார அனைத்துலக ஆண்டு. திட்டங்களை நிறுவுதலும் நிதி உதவிகளும்: புலம்பெயர்வு அருங்காட்சியகங்கள் முனைப்பு: குடியேறிய மக்கள்தொகை கொண்ட கலாச்சார உரையாடல்களை அருங்காட்சியகங்கள் அமைத்து ஊக்குவித்தல். யுனெஸ்கோ – CEPES, உயர்கல்வி ஐரோப்பிய மையம்: ஐரோப்பா அத்துடன் கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் உயர்கல்விக்கான அனைத்துலக ஒத்துழைப்பை ஊக்குவிக்க ஒரு பரவலாக்கப்பட்ட அலுவலகமாக, புக்கரெஸ்ட், ருமேனியா 1972 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஐரோப்பாவில் உயர்கல்வி அதன் அதிகாரப்பூர்வ பத்திரிகை ஆகும். இலவச மென்பொருள் பட்டியல்: 1998 முதல் யுனெஸ்கோ மற்றும் கட்டற்ற மென்பொருள் இயக்கம் கூட்டாக இந்த திட்டத்திற்கு நிதியளித்த நிலையில் இலவச மென்பொருலட்கள் பட்டியலிடப்படுகின்றன. சிறந்த பள்ளி சுகாதாரம் மீது வளங்களால் கவனம் செலுத்துதல் (FRESH). OANA, ஆசியா பசிபிக் செய்தி நிறுவனங்களின் அமைப்பு. அறிவியல் அனைத்துலக குழு. யுனெஸ்கோ நல்லெண்ண தூதர்கள். மூலிகை தாவரங்கள் மற்றும் மசாலா பொருள்கள் மீது ஆசிய ஆய்வரங்கு, ஆசியாவில் நடைபெற்ற அறிவியல் ரீதியான மாநாடுகளின் தொடர். அதிகாரபூர்வமான யுனெஸ்கோவின் அரசு சாரா நிறுவனங்கள் யுனெஸ்கோ 322 அனைத்துலக அரசு சாரா நிறுவனங்களுடன் உத்தியோகபூர்வ உறவுகளை அனுபவிக்கிறது. அனைவருக்கும் தரம் வாய்ந்த கல்வி, வாழ்நாள் முழுவதும் கல்வி, செய்தித் தொடர்பு மூலமாக அறிவார்ந்த சமூகத்தை ஏற்படுத்துதல் ஆகியவை யுனெஸ்கோவின் ஏனைய முன்னுரிமைகளாகும் அனைத்துலக இளங்கலை (IB) அனைத்துலக தன்னார்வ தொண்டு சேவை ஒருங்கிணைப்பு குழு (CCIVS) கல்வி அனைத்துலகம் (ஈஐ) பல்கலைக்கழகங்கள் அனைத்துலக சங்கம் (IAU) திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் Audiovisual தொடர்பாடல் அனைத்துலக கவுன்சில் (IFTC) டயோஜெனெஸ் வெளியிடுகிறது இது தத்துவம் மற்றும் மனித நேய ஆய்வுகள் அனைத்துலக கவுன்சில் (ICPHS) அறிவியல் அனைத்துலக கவுன்சில் (ICSU) நூதனசாலைகள் அனைத்துலக கவுன்சில் (ICOM) விளையாட்டு அறிவியல் மற்றும் உடற்கல்வி அனைத்துலக கவுன்சில் (ICSSPE) சென்னை அனைத்துலக கவுன்சில் (ICA) நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்கள் அனைத்துலக கவுன்சில் (ICOMOS) ஊடகவியலாளர்களின் அனைத்துலக கூட்டமைப்பு (IFJ) நூலக சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலக கூட்டமைப்பு (IFLA) கவிதைகள் சங்கங்கள் அனைத்துலக கூட்டமைப்பு (IFPA) அனைத்துலக இசை கவுன்சில் (ஐஎம்சி) தீவு அபிவிருத்தி அனைத்துலக அறிவியல் கவுன்சில் (தீவம்) அனைத்துலக சமூக அறிவியல் கவுன்சில் (ISSC) அனைத்துலக திரையரங்கு நிறுவனம் (ITI) இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்புக்கான அனைத்துலக ஒன்றியம் (ஐயுசிஎன்) தொழினுட்ப சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலக ஒன்றியம் அனைத்துலக சங்கம் (UIA) செய்திதாள்களின் உலகக் கூட்டமைப்பு (WAN) பொறியியல் நிறுவனங்களின் உலகக் கூட்டமைப்பு (WFEO) யுனெஸ்கோ கிளப், மையங்கள் மற்றும் சங்கங்கள் உலகக் கூட்டமைப்பு (WFUCA) யுனெஸ்கோவின் நிறுவனங்கள் மற்றும் மையங்கள் கூட்டு மற்றும் தேசிய அலுவலகங்களுக்கு முக்கியமான ஆதரவளித்து, யுனெஸ்கோவின் நிகழ்ச்சிகளுக்கு ஆதரவாக இயங்கும் துறைகளே, யுனெஸ்கோ அமைப்பின் நிறுவனங்கள் ஆகும். பிரித்தானிய வெர்ஜின் தீவுகளில் யுனெஸ்கோ மையம். யுனெஸ்கோ அனைத்துலக கல்வி பணியகம் (IBE); ஜெனீவா (சுவிற்சர்லாந்து). இது கல்விசார் கருத்துகள், முறைகள் மற்றும் கட்டமைப்புகளில் சிறப்புக் கவனம் செலுத்துகிறது. கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்த (ஐபிஈ) தனது நிபுணத்துவத்தை பங்களிப்பு செய்கிறது. பாடத்திட்டங்கள் வடிவமைப்பு, மற்றும் செயற்படுத்துதல் ஆகியவற்றில் புதுமையான அணுகுமுறைகளை அறிமுகப்படுத்துவதும், செயல்முறைத் திறன்களை மேம்படுத்துவதும், கல்வி கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் மீதான பன்னாட்டுப் பேச்சுவாரத்தைகளுக்கு உதவுவதும் இதன் நோக்கம் ஆகும். வாழ்நாள் கல்விக்கான யுனெஸ்கோவின் நிறுவனம்-ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கியவர்களுக்கு கல்வி கற்க மாற்று வாய்ப்புகளை ஏற்படுத்துதல், எழுத்தறிவித்தல், முறைசாரா கல்வி ஆகியவற்றின் மீது சிறப்புக் கவனமும், வயது வந்தோர் கல்வி பெற வழிவகுத்து, வாழ்நாள் முழுவதும் கல்வி கற்பதற்கான கொள்கைகள் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்துவது இதன் நோக்கம் ஆகும். கல்வித் திட்டத்திற்கான யுனெஸ்கோவின் பன்னாட்டு நிறுவனம் பாரிசிலும் பியுனோஸ் அயர்சிலும் கல்வி முறைகளை திட்டமிடுவதிலும், நிர்வகிப்பதிலும் நாடுகளின் திறனை வலுப்படுத்துவதற்கான பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாக இந்நிறுவனம் செயல்படுகிறது. யுனெஸ்கோவின் கல்வியில் தகவல் தொழில் நுட்பத்திற்கான நிறுவனம் (ஐஐடிஈ) மாஸ்கோ (ரசியக் கூட்டமைப்பு) இது கல்வியில் தகவல் பயன்பாடு குறித்த தொழில் நுட்ப உதவியையும்,நிபுணத்துவத்தையும் வழங்கும் சிறப்பு நிறுவனம் ஆகும். ஆப்பிரிக்காவின் திறன் – வளர்ப்பிற்கான யுனெஸ்கோவின் அனைத்துலக நிறுவனம் – இந்நிறுவனம், தனி நபர் மற்றும் நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, மின்னணு ஊடகங்களை, வலையமைப்பு மற்றும் கல்விசார் தேவைகளுக்காகப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடையும் வாய்ப்பினை வழங்கி, ஆப்பிரிக்காவின் பிராந்திய, தேசிய மற்றும் உள்ளூர் அளவிலான கல்விசார் நிறுவனங்களின் திறனை மேம்படுத்த உழைக்கிறது. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் உயர் கல்விக்கான யுனெஸ்கோ அனைத்துலக நிறுவனம் (IESALC) கேராகஸ் (வெனிசுலா). இது ஒரு வலுவான செயல் திட்டத்தின் மூலம் மூன்றாம் நிலை கல்வியின் மேம்பாட்டிற்காகவும்,மாற்றத்திற்காகவும் பங்களிப்பு செய்கிறது. இப் பகுதியில் உயர்கல்வி (மூன்றாம் நிலைக் கல்வி) யில் மாற்ற மேலாண்மை,மற்றும் மாற்றத்திற்கு ஆதரவு அளித்து, உலகமயமாக்கல் என்ற இந்த காலகட்டத்தில், நீதி, நேர்மை, சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயகம், மனித உரிமைகளை மதித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதனின் நிலையான வளர்ச்சியை சாத்தியமாக்கிட முயல்கிறது. தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வி மற்றும் பயிற்சிக்கான யுனெஸ்கோ அனைத்துலக மையம் (UNEVOC); பான் (ஜெர்மனி) நாடுகளில் தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி (TVET) அமைப்புகளை வலுப்படுத்தி மேம்படுத்த உழைக்கிறது. உயர் கல்விக்கான யுனெஸ்கோ ஐரோப்பிய மையம் (CEPES); புகரெச்ட் (ருமேனியா) இந்நிறுவனம், மத்திய, கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகளில் உயர் கல்வி துறையில் தொழில் நுட்ப உதவியை வழங்குவதோடு, அவற்றிற்கிடையே ஒத்துழைப்பையும் மேம்படுத்துகிறது. நீர் கல்விக்கான யுனெஸ்கோ-IHE நிறுவனம் (யுனெஸ்கோ – IHE); டெல்ஃப்ட் (நெதர்லாந்து) ஐ. நா. அமைப்பிற்கு உட்பட்ட இந்த ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே நீர் கல்வி வசதி உடையதும் அங்கீகரிக்கப்பட்ட முதுநிலை பட்டம் வழங்கும் அதிகாரம் படைத்ததும் ஆகும். கருத்தியல் இயற்பியல் அனைத்துலக மையம் (ICTP); ட்ரிஸ்டியிலிருந்து (இத்தாலி) இயற்பியல் மற்றும் கணித அறிவியலில் மேம்பட்ட ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை வளர்ச்சியடையச் செய்வது இதன் நோக்கம் ஆகும். குறிப்பாக வளரும் நாடுகளில் ஆராய்ச்சியை மேற்கொள்வதுடன் உயர்மட்ட திட்டங்களை மேம்படுத்துகிறது. யுனெஸ்கோ புள்ளியியல் நிறுவனம் (யுஐஎஸ்); மாண்ட்ரீல் (கனடா) கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பண்பாடு மற்றும் தொடர்பு ஆகிய துறைகளில் இன்றைய தேதி வரையிலான புள்ளிவிவரங்களை குறிப்பிடத் தக்க வகையில் தொகுத்து வழங்குகிறது. யுனெஸ்கோ பரிசுகள் அதிகரப் பட்டியல் யுனெஸ்கோ தற்போது கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் அமைதிக்காக 22 பரிசுகள் வழங்குகிறது ஃபெளிக்ஸ் – ஹிப்ஹோப் – பாய்க்னி அமைதி விருது அறிவியலில் பெண்களுக்கு எல்'ஒரியல் யுனெஸ்கோ விருது யுனெஸ்கோ – செஜாங் மன்னர் எழுத்தறிவுவிருது யுனெஸ்கோ – கன்ஃப்யூசியஸ் எழுத்தறிவு விருது யுனெஸ்கோ எமிர் ஜாபர் அல் அஹமது அல் ஜபர் அல் ஜாபார் விருது பரிசு – அறிவுசர் குறைபாடு உள்ளவர்களுக்கு தரமிகுந்த கல்வியை வழங்க யுனெஸ்கோ – அரசர் ஹமது பின் இஸால் அல்-ஹலிஃபா விருது – செய்தி மற்றும் தகவல் தொழில் நுட்பத்தைக் கல்வியில் பயன்படுத்துதலுக்காக. யுனெஸ்கோ – ஹம்தான் பின் ரஷித் அல் மக்தூம் விருது – ஆசிரியர்களின் தகுதியை மேம்படுத்த அளிக்கும் பயிற்சிக்காக யுனெஸ்கோ கலிங்கா விருது – அறிவியலைப் பிரபலமாக்க யுனெஸ்கோ இன்ஸ்டிடூட் பாஸ்டர் பதக்கம் – மனித நலத்திற்கு பலனளிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அறிவியல் அறிவு வள்ர்ச்சிக்கு யுனெஸ்கோ – சுல்தன் கபூஸ் விருது – சுற்றுச்சூழல் பாதுகாத்தலுக்கு உலகளாவிய நீர் பரிசு மனிதனல் உருவாக்கப்பட்ட ஆறுகள் – வறண்ட பகுதிகளில் நீராதார்த்தைப் பெறுக்க யுனெஸ்கோவால் வழங்கப்படுகிறது (இப்பரிசின் பெயர் பரிசீலனையில் உள்ளது) மைக்கேல் பாடிஸ் விருது – உயிர்க்கோளப் பாதுகாப்பு மேலாண்மைக்காக யுனெஸ்கோ விருது – சமதானக் கல்விக்காக யுனெஸ்கோ மதன் ஜீட் சிங் விருது – சகிப்புத்தன்மை மற்றும் அஹிம்சையை மேம்படுத்துதலுக்காக. யுனெஸ்கோ பில்போவ் விருது – பண்பாடு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தலுக்காக யுனெஸ்கோ – உலகளாவிய ஜொஸெ மாற்டி விருது யுனெஸ்கோ அவிசென்ன விருது – அறிவியல் நெறிமுறைகளுக்காக யுனெஸ்கோ ஜுஅன் பொஸ்ச் விருது – சமூக அறிவியல் ஆராய்ச்சியை லத்தீன், அமெரிக்க மற்றும் கரீபியன்: பகுதிகளில் ஊக்குவிக்க ஷார்ஜாஹ் விருது – அரபு கலச்சாரத்திற்காக ஐபிடிசி-யுனெஸ்கோ விருது – கிராமப்புற தகவல் தொடர்புக்கு யுனெஸ்கோ குல்லெர்மொ கனொ உலக பத்திரிகைத்துறை விருது யுனெஸ்கோ – ஜிக்ஜி உலக நினைவு விருது யுனெஸ்கோ உறுப்பு நாடுகள் 193 உறுப்பு நாடுகளையும் 1955ல் ஐக்கிய நாடுகளின் அஞ்சலக நிர்வாகம், யுனெஸ்கோவைப் பெருமைப்படுத்தும்விதமாக இந்த பரிசு அஞ்சல் தலைகளை வெளியிட்டது ஏழு இணை உறுப்பினர்களையும், இரண்டு பார்வையாளர்களையும் கொண்டது. சில உறுப்பு நாடுகள் சுவாதீனமற்றவை. தங்களைச் சார்ந்துள்ள பகுதிகளில் இருந்து கூடுதல் தேசிய அமைப்பு குழுக்களைக் கொண்ட உறுப்பினர்களும் உள்ளனர். அஞ்சல் தலைகள் யுனெஸ்கோ அஞ்சல் தலைகளைப் பல நாடுகள் வெளியிட்டுள்ளன. யுனெஸ்கோ அமைப்பின் முத்திரையும், இதன் தலைமை அலுவல அமைப்பும் ஒரே கருவை அடிப்படையாகக் கொண்டுள்ளன. 1955ல் ஐக்கிய நாடுகளின் அஞ்சலக நிர்வகம், யுனெஸ்கோவைப் பெருமைப்படுத்தும் விதமாக அஞ்சல் தலைகளை வெளியிட்டது யுனெஸ்கோ தனியாக அஞ்சல் தலைகள் எதுவும் அஞ்சலக பயன்பாட்டிற்கு வெளியிடவில்லை. தனது செயல்பாட்டிற்காக 1955–1966 வரை தொடர்ச்சியான 41 பரிசு அஞ்சல் தலைகளை வெளியிட்டுப் பணம் திரட்டியது. இவை பல்வேறு நாடுகளின் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டு நியூ யார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள யுஎன்பிஎ முகப்பு மேஜையில் வைத்து விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஐக்கிய நாடுகள் வசம் இவை இருப்பு இல்லை எனினும், சிறப்பு அஞ்சல் தலை விற்பனையாளர்களிடம் குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. பொது நிர்வாக இயக்குநர்கள் ஜூலியன் ஹக்ஸ்லி (Julian Huxley) (1946–1948) ஜைம் டோரஸ் போடெட் (Jaime Torres Bodet) (1948–1952) ஜான் வில்கின்சன் டெய்லர் (John Wilkinson Taylor) (நடிப்பு 1952–1953) லூதர் எவன்ஸ் (Luther Evans) (1953–1958) விட்டொரினொ வெரொனெஸ் (Vittorino Veronese) (1958–1961) ரெனே மஹே (René Maheu) (1961–1974; நடிப்பு 1961) ஆமடொவ்-மஹ்டர்ம்'பொவ் (Amadou-Mahtar M'Bow) (1974–1987) பெட்ரிகோ மேயர் சகோஸா (Federico Mayor Zaragoza) (1987–1999) கொசிரொ மட்ஸூரா (Koïchiro Matsuura) (1999–2009) இரினா பொகொவா (Irina Bokova) (2009–) யுனெஸ்கோ அலுவலகங்கள் யுனெஸ்கோ உலகின் பல பகுதிகளிலும் தன் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.இதன் தலைமையகம் ஃப்ரான்ஸில் உள்ள பாரிஸில் உள்ளது. தேசிய அதிகாரிகள், மற்றும் பிற கூட்டாளிகள் ஆலோசனையுடன் யுனெஸ்கோ தன் களப்பணி அலுவலகங்கள் மூலமாக பல உத்திகள், திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறது. யுனெஸ்கோவின் களப்பணி அலுவலகங்கள், செயல்பாடு, மற்றும் புவியியல் பரப்பு, அடிப்படையில் நான்கு முதன்மை அலுவலக பிரிவுகளாக வகைப்படுத்தபட்டுள்ளன. அவை கூட்டு அலுவலகங்கள், தேசிய அலுவலகங்கள், பிராந்திய அலுவலகங்கள் மற்றும் தொடர்பு அலுவலகங்கள் ஆகும். யுனெஸ்கோவின் களப்பணியில் மைய அங்கமாக, பல நாடுகளை உள்ளடக்கிய கூட்டு அலுவலகங்கள் திகழ்கின்றன. இதை சுற்றிலும் ஒழுங்கமைக்கப்பட்ட தேசிய அலுவலகங்களும், பிராந்திய அலுவலகங்களும் இயங்குகின்றன. யுனெஸ்கோ செயலகத்தை வழி நடத்தும் முக்கிய பிரதிநிதியாக 148 நாடுகளை உள்ளடக்கிய, 27 கூட்டு அலுவலகங்கள் இயங்குகின்றன. இவை தவிர, ஒரு உறுப்பு நாட்டிற்கு சேவை செய்ய ஒரு தேசிய அலுவலகம் என்ற ரீதியில் 21 தேசிய அலுவலகங்கள் உள்ளன. 9 அதிக மக்கள் தொகை நாடுகளில் சச்சரவுக்குப் பிந்திய சூழ்நிலைகளில் அல்லது மாறுதல் நிலையில் உள்ள நாடுகளுக்கு கூட்டு அலுவலகத்திலிருந்து விதிவிலக்கு உண்டு வட்டாரவாரியான யுனெஸ்கோவின் களப்பணி அலுவலகங்கள் கீழ்க்கண்ட புவியமைப்பு அடிப்படையில் உறுப்பு நாடுகள் மற்றும் இணை உறுப்பினர்களுக்கு சேவை செய்வதற்காக இயங்கும் யுனெஸ்கோவின் களப்பணி அலுவலகங்களின் பட்டியல்- ஆப்ரிக்கா அபுஜா – நைஜீரியாவிற்கான தேசிய அலுவலகம். அக்ரா – பெனின், கோட் டிவார், கானா, லைபீரியா, நைஜீரியா, சியேரா லியோனி மற்றும் டோகொ போன்ற நாடுகளுக்கான கூட்டு அலுவலகம். அடிஸ் அபாபா – சிபூட்டி மற்றும் எதியோப்பியா நாடுகளுக்கு ஒருகூட்டு அலுவலகம். பமாக்கோ – புர்க்கினா பாசோ, கினி, மாலி மற்றும் நைஜர் இந்த கூட்டுஅலுவலகம். பிரசாவில் – கொங்கோ குடியரசுக்காக தேசிய அலுவலகம். புசும்புரா – புருண்டிக்காக தேசிய அலுவலகம். டக்கார் – கல்விக்காக – பிராந்திய அலுவலகங்கள் ஆப்பிரிக்காவுக்கும் கேப் வேர்ட், காம்பியா, கினி-பிசாவு, மற்றும் செனிகல் நாடுகளுக்கு கூட்டுஅலுவலகமும் தாருஸ்ஸலாம் – கொமொரோசு, மடகாஸ்கர், மொரிசியசு, சீசெல்சு மற்றும் டான்சானியா ஆகிய நாடுகளுக்கான கூட்டு அலுவலகம். ஹராரே – போட்சுவானா, மலாவி, மொசாம்பிக், சாம்பியா மற்றும் சிம்பாப்வே போன்ற நாடுகளுக்கான கூட்டு அலுவலகம். கின்ஷாசா – காங்கோ ஜனநாயக குடியரசுக்காக தேசிய அலுவலகம். லிப்ரேவில்லே – காங்கோ, எக்குவடோரியல் கினி, காபோன் மற்றும் சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி ஆகியவற்றிற்காக கூட்டு அலுவலகம். மபுடோ – மொசாம்பிக்கிற்கான தேசிய அலுவலகம். நைரோபி – புருண்டி, எரித்திரியா, கென்யா, ருவாண்டா, சொமாலியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளுக்குகான கூட்டு அலுவலகம்,ஆப்பிரிக்காவில் உள்ள அறிவியல் பிராந்திய செயலகம். வைண்ட்ஹோக் – அங்கோலா, லெசோத்தோ, நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் சுவாசிலாந்து ஆகிய நாடுகளுக்குகான கூட்டு அலுவலகம் யாவுண்டே – கேமரூன், மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கான கூட்டு அலுவலகம். அரபு நாடுகள் ஈராக் தலைமையகம் யுனெஸ்கோ அலுவலகம் ஈராக் – ஈராக் தேசிய அலுவலகம். அம்மான் – ஜோர்தான் தேசிய அலுவலகம். பெய்ரூத் – அரபு நாடுகள் கல்விக்கான பிராந்திய செயலகம் மற்றும் லெபனான், சிரியா, ஜோர்தான், ஈராக் மற்றும் பாலஸ்தீன பகுதிகள் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். கெய்ரோ – அரபு நாடுகள் அறிவியல் பிராந்திய செயலகம் மற்றும் எகிப்து, லிபிய அரபு ஜமாஹிரியா மற்றும் சூடான் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். தோகா – பக்ரைன், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் யெமன் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். கர்த்தூம் – சூடான் தேசிய அலுவலகம். ரபாத் – அல்ஜீரியா, மவுரித்தேனியா(Mauritania),மொரோக்கோ மற்றும் துனீசியா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். ரமல்லாஹ் – பாலஸ்தீன அதிகார தேசிய அலுவலகம். ஆசியா மற்றும் பசிபிக் அல்மேட்டி – கசக்ஸ்தான், கிர்கிசுத்தான், தஜிகிஸ்தான் மற்றும் உசுபெக்கிசுத்தான் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். அபியா – ஆஸ்திரேலியா, குக் தீவுகள், பிஜி, கிரிபட்டி,மார்ஷல் தீவுகள், மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள், நவூரு, நியூசிலாந்து, நியுவே, பலாவு, பப்புவா நியூ கினி, சமோவா, சாலமன் தீவுகள், தொங்கா, துவாலு, வனுவாட்டு மற்றும் டோக்கெலாவ் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். பேங்காக் – ஆசியா மற்றும் பசிபிக் கல்விக்கான பிராந்திய செயலகம் மற்றும் தாய்லாந்து, மியான்மர், லாவோஸ், சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் கம்போடியா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். பெய்ஜிங் – வடகொரியா, ஜப்பான், மங்கோலியா, சீன மக்கள் குடியரசு மற்றும் தென் கொரியா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். டாக்கா – வங்காளம் தேசிய அலுவலகம். ஹனோய் – வியட்நாம் தேசிய அலுவலகம். இஸ்லாமாபாத் – பாக்கிஸ்தான் தேசிய அலுவலகம். ஜகார்த்தா – ஆசியா மற்றும் பசிபிக் அறிவியல் பிராந்திய செயலகம் மற்றும் புரூணை, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, மற்றும் கிழக்குத் திமோர் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். காபூல் – ஆப்கானித்தான் தேசிய அலுவலகம். காட்மாண்டூ – நேபாளம் தேசிய அலுவலகம். புது தில்லி – வங்காளம், பூட்டான், இந்தியா, மாலைத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கை ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். புனோம் பென் – கம்போடியா தேசிய அலுவலகம். தாஷ்கந்து – உசுபெக்கிசுத்தான் தேசிய அலுவலகம். தெஹ்ரான் – ஆப்கானித்தான், ஈரான், பாக்கித்தான் மற்றும் துருக்மெனிஸ்தான் ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரசெல்சு – பிரசல்சில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் துணை அமைப்புகள் ஆகியவற்றிற்கான தொடர்பு அலுவலகம். ஜெனீவா – ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் தொடர்பு அலுவலகம். நியூயார்க் நகரம் – நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகளின் தொடர்பு அலுவலகம். மாஸ்கோ – ஆர்மீனியா, அசர்பைஜான், பெலருஸ், மொல்டோவா மற்றும் உருசியா ஆகியவற்றிற்கான க்ளஸ்டர் அலுவலகம். வெனிசு – ஐரோப்பாவில் அறிவியல் மற்றும் கலாச்சார மண்டல பீரோ. லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரித்தானிய வெர்ஜின் தீவுகளில் யுனெஸ்கோ மையம். பிரசிலியாவில் – பிரேசில் தேசிய அலுவலகம். குவாதமாலா சிட்டி – குவாத்தமாலா தேசிய அலுவலகம். அவானா – இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் கலாச்சார மண்டல அலுவலகம் மற்றும் கியூபா, டொமினிக்கன் குடியரசு, எயிட்டி மற்றும் அருபா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். கிங்ஸ்டன் – ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம், பகாமாசு, பார்படோசு, பெலீசு, டொமினிக்கா, கிரெனடா, கயானா, ஜமைக்கா, செயிண்ட் கிட்சும் நெவிசும், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்செண்ட் கிரெனேடின்ஸ், சுரிநாம் மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ அத்துடன் இணை உறுப்பு நாடுகள் பிரித்தானிய கன்னித் தீவுகள், நெதர்லாந்து அண்டிலிசு மற்றும் கேமன் தீவுகள். லிமா – பெரு தேசிய அலுவலகம். மெக்சிகோ நகரம் – மெக்சிகோ தேசிய அலுவலகம். மொண்டிவிடியோ – இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரிபியன் அறிவியல் பிராந்திய செயலகம் மற்றும் அர்ச்சென்டினா, பிரேசில், சிலி, பாரகுவே மற்றும் உருகுவே ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். போர்ட்-ஓ-பிரின்ஸ் (Port-au-Prince) – ஹெய்டியில் தேசிய அலுவலகம். கியூடோ – பொலிவியா, கொலொம்பியா, எக்குவடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். சான் ஜோஸ் – கோஸ்ட்டா ரிக்கா, எல் சல்வடோர், குவாத்தமாலா, ஹொண்டுராஸ், மெக்சிகோ, நிக்கராகுவா மற்றும் பனாமா ஆகியவற்றிற்கான கூட்டு அலுவலகம். சாண்டியாகோ டி சிலி – லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் கல்விக்கான பிராந்திய செயலகம் மற்றும் சிலி தேசிய அலுவலகம். தேர்தல் 7.9.2009 முதல் 23.9.2009 வரை பொது இயக்குனர் பதவியைப் புதுப்பிக்க பாரிசில் தேர்தல் நடந்தது.8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 58 நாடுகள் ஓட்டளித்தன. நிர்வக சபை 7.9.2009 முதல் 23.9.2009 வரை தொடர்ந்தது 17ம் தேதி ஓட்டளிப்பது ஆரம்பமானது. ஈரினா பொகொவா யுனெஸ்கோவின் புதிய பொது இயக்குனர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சை மற்றும் சீர்திருத்தம் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளுக்கும் யுனெஸ்கோவுக்குமான உறவில் யுனெஸ்கோ சர்ச்சையின் மையமாக இருந்தது. 1970 மற்றும் 1980ல் புதிய உலகத் தகவல் தொடர்பு ஆணை ஊடகங்களை சனநாயகத் தன்மைக்கு உட்படுத்தி தகவல்களைப் பெறுதல், சமத்துவ உரிமை ஆகியவை பத்திரிகை சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என்பதால் மாக் பிரைட் அறிக்கையின் அழைப்பிற்கு மேற்கூறிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன உள் சீர்திருத்தம் கடந்த 10 ஆண்டுகளில் யுனெஸ்கோவில் நடமுறைப்படுத்தப்பட்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள்,அதன் நிலைப்பாட்டில் மாறுதலைக் கொண்டுவந்தது. உலக அளவில் 2000 ஊழியர்கள் இருந்தனர். இயக்குநர்கள் 200லிருந்து 100 ஆகக் குறைக்கப்பட்டனர். யுனெஸ்கோவின் களப் பிரிவுகளும் பாதியாகக் குறைக்கப்பட்டன. 1998ல் உச்சகட்டமாக 1287 களப்பணி அலுவலகங்கள் இருந்தன. இன்று 93 அலுவலங்கள் மட்டுமே உள்ளன. இணை மேலாண்மை அமைப்பு, அமைச்சரவை அந்தஸ்துள்ள முக்கிய ஆலோசனை நிலைகள் ஒழிக்கப்பட்டன. 1998–2009க்கு இடையில் 245 ஒப்பந்த ஊழியர்கள் வெளியேறியதால் சுமார் 12 மில்லியன் டாலர் ஊழியர் செலவுப் பற்றாக்குறை நீங்கியது. உயர் பதவிகள் பாதியாக்கப்பட்டன. பல பதவிகளை அதற்குக் கீழ் நிலைக்கு கொண்டு வந்ததன் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மிக அதிகமான ஊழியர் செலவு குறைக்கப்பட்டது. பயிற்சி அளித்தல்,களப்பணியில் திறந்த வெளி போட்டித் தேர்வின் மூலம் ஊழியரைத் தேர்ந்து எடுத்தல்,ஊழியர்களின் சாதனை பற்றிய மதிப்பீடு, மேலாளர்களுக்கு சுழற்சி,ஆகியவற்றை அமுலுக்குக் கொண்டு வந்து,ஊழியர் தரம் மேம்படுத்தப்பட்டது. வரவு செலவு மற்றும் திட்டமிடுவதில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டது. திட்ட மதிப்பீட்டிலிருந்து கற்றுக் கொண்ட படிப்பினை மூலம் ஓட்டு மொத்த சீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. யுனெஸ்கொ அமைப்பின் செயல் திறனை மேம்படுத்த உட்புற மேற்பார்வை சேவை (ஐஓஎஸ்) 2001ல் நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் அலுவலகங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு,நிர்வாகம் சீரிய முறையில் நடை பெறுகிறதா என்பதை (ஐஓஎஸ்) தொடர்ந்து தணிக்கை செய்யும். (ஐஓஎஸ்), யுனெஸ்கோவின் செயல்பாடுகள், மற்றும் திட்டங்களின் பயன் பற்றி மதிப்பீடு செய்யாது.மேற்கு நாடுகளைத் தாக்க பொது உடமைவாதிகள் மற்றும் மூன்றாம் உலக சர்வாதிகாரிகளின் தளமாக யுனெஸ்கோ செயல்படுகிறது என்று உணரப்பட்டது. இசுரேல் 1949ல் யுனெஸ்கோவில் இசுரேல் இணைந்தது. ஜெருசலேமில் உள்ள டெம்பில் மவுண்ட்டில் ஏற்படுத்தப்பட்ட அகழ்வாரய்ச்சியில் விளைந்த சேதத்தைக் காரணம் காட்டி இஸ்ரேலை, யுனெஸ்கோ விலக்கியது. யுனெஸ்கொ தனது 1974 மற்றும் 1975 ஆகிய ஆண்டுகளின் அறிக்கைகள் மூலம், தான் இசுரேலை விலக்கியது சரியே என்றது. இஸ்ரேலுக்கு ஆதரவாக, ஐக்கிய நாடுகள் 40 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி விடுவதாக பயமுறுத்தியதால், 1977ல் இஸ்ரேலின் உறுப்பினர் தகுதி புதுப்பிக்கப்பட்டது. யுனெஸ்கோவின் நிர்வாக வாரியம் அக்டோபர் 2010ல் மேற்குக் கரையில் உள்ள பெத்லகேம் நகரில் அமைந்துள்ள ரேச்சல் கல்லறையை பிலால் பின் ரபாஹ் மசூதியாக அங்கீகரித்து வாக்களித்தது. முக்ரபி கேட் பாலத்தை இடித்து புதியதாகக் கட்ட இசுரேல் முடிவெடுத்தது. இதனை 28/06/2011ல் கூடிய யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு கண்டித்தது. "பண்பாட்டுப் பன்முகத்தன்மை" என்ற கருத்தை பல நடுநிலை அமைப்புகளாலும், யுனெஸ்கோவுக்கு உள்ளேயும் எதிரொலித்தாலும், ஐக்கிய நாடுகளும், ஆஸ்திரேலியாவும், இஸ்ரேலும் ஏற்றுக்கொள்ளவில்லை. அடிக்குறிப்புகள் பகுப்பு:யுனெஸ்கோ பகுப்பு:நில மேலாண்மை
பல்லவர்
https://ta.wikipedia.org/wiki/பல்லவர்
thumb|இரண்டாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்ட மகாபலிபுரத்திலுள்ள கடற்கரைக் கோயில் பல்லவர் (Pallavas) என்போர் தென்னிந்தியாவில் பொ.ஊ. 275 முதல் பொ.ஊ. 897 வரை சுமார் ஐந்நூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் எனும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை.வின்சென்ட் ஸ்மித் என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார்.தமிழக வரலாறும் பண்பாடும், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், பக் 79 சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப்பகுதியை ஆளத் தொடங்கினர்.The journal of the Numismatic Society of India, Volume 51, p.109Alī Jāvīd and Tabassum Javeed. (2008). World heritage monuments and related edifices in India, p.107 Ancient India, A History Textbook for Class XI, Ram Sharan Sharma, National Council of Educational Research and Training, India pp 209 போதிய வலிமை பெற்றதும் தொண்டை நாட்டையும், களப்பிரர்களையும், சிற்றரசர்களாக இருந்த சோழர்களையும் வென்று புதுக்கோட்டை வரை சென்று தமிழகத்தின் வட பகுதியை ஆளத் தொடங்கினர். thumb|பல்லவர் காலக் குடைவரைக் கோயில் சிலை பல்லவரின் தோற்றம்பற்றிய கூற்றுகள் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தமிழ் நாட்டில் பொ.ஊ. நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை ஏறத்தாழ 700 வருடங்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது ஆட்சி தமிழகத்தின் வரலாற்றில் பல்வேறு அம்சங்களில் திருப்புமுனையாக அமைந்தது எனலாம். எனினும் இவர்களுடைய வரலாறு பற்றி நம்பத்தகுந்த தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை. இவர்கள் தமிழர்களேயென ஒரு பிரிவினர் நிறுவ முயல, வேறு சிலர் இவர்கள், தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்த தமிழரல்லாத இனத்தவர்கள் என்கின்றனர். இவர்கள் மூலத்தைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றி பாரசீகம், ஈழம் போன்ற பகுதிகளிலும் ஆய்வாளர்கள் தேடியுள்ளார்கள். முற்காலப் பல்லவர்கள் வெளியிட்ட சாசனங்களின் மொழி மற்றும் அவற்றின் உள்ளடக்கங்களை வைத்து, இவர்கள் இந்தியாவின் வடபகுதியிலிருந்து வந்த ஒரு பிராமணக்குடியினர் என்று சிலர் கருதுகிறார்கள்.KR Subramanian. (1989). Buddhist remains in Āndhra and the history of Āndhra between 224 & 610 A.D, p.71: The Pallavas were first a Telugu and not a Tamil power. Telugu traditions know a certain Trilochana Pallava as the earliest Telugu King and they are confirmed by later inscriptions. பல்லவர்களின் மிகப் பண்டைய கல்வெட்டுக்கள் பெல்லாரி, குண்டூர் மற்றும் நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.KR Subramanian. (1989). Buddhist remains in Āndhra and the history of Āndhra between 224 & 610 A.D, p.71 பிற்காலத்தில் அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பல்லவர்கள் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. தென்னிந்தியர் இந்திய வரலாற்று நூலாசிரியரான 'வின்சென்ட் சுமித்' என்பவர், தமது 'பண்டைய இந்திய வரலாறு' என்னும் நூலின் முதற்பதிப்பில், 'பல்லவர் என்பவர் பஹலவர் என்னும் பாரசீக மரபினர்' என்றும், இரண்டாம் பதிப்பில் 'பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே உரியவர்' என்றும் குறிப்பிடுகிறார். இவர்கள் கோதாவரிக்கும் கிருஷ்ணா ஆற்றுக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராகலாம்' என்றும், மூன்றாம் பதிப்பில், பஹலவர் என்னும் சொல்லைப் பல்லவர் என்னும் சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து பாரசீகரெனக் கூறல் தவறு. 'பல்லவர் என்பவர் தென் இந்தியரே ஆவர்' என்றும் முடிவு கூறியுள்ளார். ஆயினும், ரைஸ் என்னும் ஆராய்ச்சியாளர், 'பகலவர்கள் மரபினரே பல்லவர்' என்று முடிவு செய்தார். பேராசிரியர் துப்ராய் என்பவர், 'பொ.ஊ. 150 இல் 'ருத்ர தாமன்' என்னும் ஆந்திரப் பேரரசன் அமைச்சனான கவிராகன் என்பவன் பஹலவன். அவன் மரபினரே ஆந்திரப் பேரரசு அழிவுறுங்காலத்தில் அதன் தென்பகுதியை தமதாக்கி ஆண்டவராவர். கிடைத்துள்ள பட்டயங்களில் காணப்படுபவர் முதற் பல்லவ அரசர் அல்லர். ஆந்திரப் பேரரசின் தென் மேற்கு மாகாணங்களை ஆண்டு வந்த சூட்டுநாகர் பெண்ணை மணந்து பட்டம் பெற்றவனே முதற்பல்லவன். அவனே பல்லவர் பட்டயங்களில் கூறப்படுபவன்' என்று வரைந்துள்ளார்.The Sangam work, Perumbanatruppadai]], traces the line of the younger Tiriyan (aka Ilam Tiriyan) to the Solar dynasty of Ikshvakus, while the later Tamil commentators identify him as the illegitimate child of a Chola king and a Naga princess. இங்ஙனம் பல்லவர் என்பர் பஹலவர் மரபினரே என்று முடிவு கொண்டவர் பலர். இலங்கையர் இலங்கையிற் சிறந்த ஆராய்ச்சியாளராக இருந்த இராசநாயகம் என்பவர். 'இலங்கையை அடுத்துள்ள மணிபல்லவம் (காரைத்தீவு) பல்லவர் பிறப்பிடமாகும். மணிமேகலையில் கூறப்பட்டுள்ள சோழனை மணந்த பீலிவளை என்பவர் நாகர் மகள் ஆவாள். அவன் பெற்ற மைந்தனே திரையால் கடத்தப்பட்டுக் கரை சேர்ந்த முதல் பல்லவன். அவன் தொண்டைக் கொடியால் உந்தப்பட்டு வந்தமையின் 'திரையன்' என்றும் வழங்கப்பெற்றான். அவன் மரபினரே தம் தாயகம் தாங்கிப் (மணிபல்லவம்) பல்லவர் எனப்பட்டனர். பல்லவர் முதல் அரசன் பெரும்பாணாற்றுப்படையில் புகழ்பெற்ற தொண்டைமான் இளந்திரையன் ஆவான்' என விளக்கியுள்ளார். யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களால் 'மணிபுரம்' எனப்படுகிறது. அங்கு நாகரும் இருந்தமையால் 'மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து - sprout) போலக்காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன. யாழ்ப்பாணத்திலிருந்து போந்தவர் ஆதலின், தம்மைப் 'போத்தர்' என்றும், 'பல்லவர்' என்றும் பல்லவ அரசர் கூறிக்கொண்டனர். 'மணிபல்லவம்' என்னும் தீவு மணிமேகலையில் குறிக்கப்பட்டிருத்தலால் மணிமேகலை காலத்து மக்கட்கு விளங்கி இருத்தல் புலனாகும். 'வீரகூர்ச்சன் நாகர் மகளை மணந்து அரசு பெற்றான்' என்று பல்லவர் பட்டயம் கூறுதலும், கிள்ளிவளவன் நாகர் மகளை மணந்து பெற்ற இளந்திரையன், தொண்டை மண்டலம் ஆண்டான் என்பதும் ஆராய்ச்சிக்கு உரியன. மேலும், பல்லவர், இன்ன இடத்திலிருந்து வந்ததாக ஒரு பட்டயத்திலும் கூறப்படவில்லை. 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர்களே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர்., ஆராய்ச்சியாளராகிய எலியட் செவேல் முதலியோர் 'தொண்டைமண்டலத்துப் பழங்குடியினரான குறும்பர் மரபினரே பிற்காலப் பல்லவர்' என்றும் முடிவு செய்தனர். - பல்லவர் யாவர்? மா.இராசமாணிக்கனார் http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=323 . Also published in the monthly archaeological journal Varalaaru பல்லவர் தமிழர் அல்லர் வின்செண்ட் சுமித் தமது மூன்றாம் பதிப்பில் கூறியதே பெரிதும் பொருத்தமுடையதாகத் தெரிகின்றது. பிராகிருத மொழியில் வெளியிடப்பட்ட பல்லவப் பட்டயங்களோ, அல்லது வடமொழியில் எழுதப்பெற்ற பல்லவர் பட்டயங்களோ, பிற கல்வெட்டுகளோ 'பல்லவர் பஹலவர் மரபினர்' என்றோ, வேற்று நாட்டவர் என்றோ, 'திரையர் மரபினர்' என்றோ, 'மணிபல்லவத் தீவினர்' என்றோ குறிக்கவில்லை. சங்ககாலத்தில் தொண்டை மண்டலத்தை ஆண்ட இளங்கிள்ளி, இளந்திரையன் என்பார்க்கும் சிவஸ்கந்தவர்மன், 'புத்தவர்மன்' வீரகூர்சவர்மன் என்பார்க்கும் தொடர்பு ஏதும் இருந்திருத்தல் இயலாது. மேலும் பல்லவர் பட்டயங்கள் அனைத்தும் பிராக்ருத மொழியிலும் பெரும்பாலானவை வடமொழியிலும் இருக்கின்றன. பல்லவர் காலத்தில் வடமொழி தொண்டை மண்டலத்தில் பேரரசு செலுத்தியது எனலாம். பாரவி, தண்டி முதலிய வடமொழிப் புலவர்கள் பல்லவர் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பது தெரிகிறதேயன்றி, எந்தத் தமிழ்ப் புலவரும் பொ.ஊ. எட்டாம் நூற்றாண்டுவரை பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை. மேலும், பல்லவர், தம்மைப் 'பரத்வாச கோத்திரத்தார்' என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர்; இன்ன பிற காரணங்களால், பல்லவர் தமிழரின் வேறுபட்டவர் என்பதைத் தெளிவுறக் காணலாம். பல்லவர் - பஹலவர் மரபினர் பகலவர்கள் முன்பு பார்த்தியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவர்கள் தொண்டை மண்டலமாக இன்று அறியப்படும் ஆந்திர கடல் கரை பிரதேசம், காஞ்சி பிரதேசத்தில் தங்கி அங்கிருந்து தங்களது பல்லவ சாம்ராஜ்யத்தை நிறுவினர்.http://www.iranchamber.com/history/articles/india_parthian_colony1.php பஹலவ மன்னர்கள் தங்கள் சின்னமாக நெருப்பைக் கொண்டிருந்தார்கள். ஒரு பாத்திரத்தில் நெருப்பு எரிவதை தங்களது சின்னமாகவும் தங்களது சிற்பங்களிலும் வடித்து வைத்திருந்தனர். அதுவே பல்லவர்களும் செய்தது. பல்லவர்களது சின்னமாக இருந்ததும் நெருப்பு சட்டியே. பல்லவர்கள் பெர்சியா (ஈரான்) நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கூற்றும் நிலவுகிறது.இந்தியாவின் பெர்சியக் காலனி தொண்டை நாடும் சங்க நூல்களும் thumb|இரண்டாம் நரசிம்ம வர்மன் காலத்தில் பாறையைக் குடைந்து கட்டப்பட்ட பஞ்சபாண்டவர் இரதங்கள்,மாமல்லபுரம். வடபெண்ணையாற்றைத் தென் எல்லையாகவும் சோணையாற்றை வடஎல்லையாகவும் அரபிக்கடலை மேற்கு எல்லையாகவும் கலிங்கத்தையும் வங்க மாகாணத்தையும் கிழக்கு எல்லையாகவும் கொண்ட ஆந்திரப் பெருநாடு பொ.ஊ.மு. 184 முதல் பொ.ஊ. 260 வரை செழிப்புற்று இருந்தது. வடபெண்ணை முதல் தென்பெண்ணை வரை இருந்த நிலப்பரப்பே அக்காலத் 'தொண்டை மண்டலம்' எனப்பட்டது. அஃது அருவாநாடு, அருவாவடதலைநாடென இரண்டு பிரிவுகளாக இருந்தது - முன்னதில் காஞ்சிநகரம் உட்பட்டது. பின்னது காஞ்சி முதல் வடபெண்ணை வரை இருந்த நாடாகும். இது குன்றுகளும் காடுகளும் சூழ்ந்த இடமாகும். காளத்தி முதலிய மலையூர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்விடம் இன்றும் 'தொண்டைமான் மாகணி' (மாகாணம்) எனப்படுகிறது. வடக்கே இருந்த அருவாவடதலை நாட்டில் திருப்பதியைத் தன் அகத்தே கொண்ட மலைநாட்டுப் பகுதியைத் திரையன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் தலைநகரம் 'பாவித்திரி' என்பது. அஃது இப்பொழுதைய கூடூர் தாலுக்காவில் உள்ள ரெட்டிபாளையம் என்னும் ஊராகும். இந்நிலப்பகுதி முன்னாளில் காகந்திநாடு எனப்பெயர் பெற்றது. காகந்தி என்பது புகாரின் மறுபெயர் ஆகும். இங்ஙனம் தொண்டை மண்டலம் கரிகால் சோழன் காலத்தில் சோழர் ஆட்சிக்கு வந்ததெனப் பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில் காணக்கிடைக்கின்றது. 'திரையன்' அருவாவடதலை நாட்டை ஆண்டபோது, 'இளந்திரையன்' அருவா நாட்டை ஆண்டனன். தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான். இந்த அளவே அகநானூறு முதலிய சங்க நூல்களால் பல்லவர் ஆட்சிக்கு முன்னிருந்த தொண்டை நாடுபற்றி அறிய முடிகிறது. மூன்று பிரிவுப் பல்லவர்கள் thumb|300px|காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில். பல்லவர்களில் முற்காலப் பல்லவர்கள் இடைக்காலப் பல்லவர்கள் பிற்காலப் பல்லவர்கள் என்ற மூன்று பிரிவினர் உண்டு. முற்காலப் பல்லவர்கள் முற்காலப் பல்லவர்களில் பப்பதேவன், சிவகந்தவர்மன், விசய கந்தவர்மன், இளவரசன் புத்தவர்மன், புத்யங்குரன் ஆகிய ஐவரது பெயர்கள் மயித ஹோலு, ஹீரஹதகல்லி, குணபதேய என்ற மூன்று இடங்களில் கிடைத்த படயங்களின் மூலம் வெளிப்பட்டன.name="earlygrant">Now referred to as the Mayidavolu, Hirahadagalli and the British Museum plates – Durga Prasad (1988) இவர்கள் காலத்தில் ஆந்திரப் பகுதியும் தொண்டை நாட்டின் வடபகுதியும் பல்லவ நாடாக விளங்கின.'பப்ப' என்பது 'அப்பன்' என்னும் பொருளது. இச்சொல் பல பட்டயங்களில் வருதல் கண்கூடு ஆதலின், இஃது ஒரு மனிதன் பெயரன்று. எனவே, சிவஸ்கந்தவர்மனின் தந்தை பெயர் இன்னதென்பது தெரியவில்லை. Vide. D. Sircar's Successors of the Satavahanas, p.183-184, and Dr. G. Minzkshi's "Administration and Social Life under the Pallavas" pp.6-10 இடைக்காலப் பல்லவர்கள் இடைக்காலப் பல்லவர்களின் காலம் பொ.ஊ. 340 முதல் பொ.ஊ. 615 வரை நீண்டது. முதலாம் குமாரவிட்ணு முதலாம் கந்தவர்மன் வீரகூர்ச்சவர்மன் கந்தசிஷ்யன் எனப்பட்டஇரண்டாம் கந்தவர்மன் இளவரசன் விட்ணுகோபன் புத்தவர்மனாகிய இரண்டாம் குமாரவிட்ணு இரண்டாம் சிம்மவர்மன் மூன்றாம் கந்தவர்மன் மூன்றாம் குமாரவிட்ணு எனப் பதின்மூன்று பேர்களின் விவரங்கள் கிடைக்கின்றன. பிற்காலப் பல்லவர்கள் மரபு பிற்காலப் பல்லவர்களில் சிம்மவிஷ்ணுவின் மரபில் வந்த முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவரவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன், அவன் மகன் மூன்றாம் மகேந்திரவர்மன் என ஒரு மரபு நீள்கிறது. பிற்காலப் பல்லவர்களின் பிந்தைய தலைமுறையினரில் பரமேசுவரவர்மனும், இராஜசிம்மன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் நரசிம்மனும் சிறப்புற்ற மன்னர்களாவர். இவர்கள் காலத்தில் தான் இன்றும் நிலைத்திருக்கும் மாமல்லபுரத்துக் கலைச் செல்வங்கள் உருவாக்கப்பட்டன. எல்லைப்போர்கள் 180px|thumb|களப்பிரர் கால பல்லவ நாடு. (சிவப்பு நிறம்) பொ.பி. 3-5 நூற்றாண்டு. பல்லவர் ஆட்சிக் காலம் தொடக்கத்திலிருந்தே ஓயாதபோர்கள் நிகழ்ந்தன. வடக்கில் குப்தர்கள், கதம்பர்கள், வாகாடகர்கள், சோழர்கள், சாளுக்கியர்கள் மற்றும் இராட்டிரகூடர்களின் இடைவிடாத தாக்குதல்களை பல்லவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. இவை தவிர காவிரிக்குத் தெற்கே குடகு நாட்டை ஆண்ட கங்கர்கள், கீழைச் சாளுக்கியர், பாண்டியர் போன்றோரும் பல்லவர்களுக்குத் தலைவலியாக இருந்து வந்தனர். தொண்டை நாட்டைச் சேர்ந்த சீமாறன் சீவல்லபனும் தனது பெரும் எதிர்ப்பைப் பிற்காலத்தில் காட்டினார். ஆட்சியைத் துவக்கும்போதே பல்லவர்கள் களப்பிரர்களை வேரறுத்துத் தான் துவக்கினர். அவ்வாறே பல்லவ மரபு முடியும்போதும், பாண்டியர்களின் போர் அவர்களுக்கு முற்றுப் புள்ளியாய் அமைந்தது. பல்லவர் காலமும் சமுதாய மாற்றமும் பல்லவர்கள் காலத்தில் ஏற்பட்ட சமுதாய மாற்றங்கள் பற்பல. அவற்றுள் முதன்மையானது சங்க கால மன்னர்களுக்குப் பின் மக்களின் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதில் பல்லவர்கள் காட்டிய அக்கறையாகும். பல பேரேரிகளையும் குளங்களையும், கிணறுகளையும் ஆற்று வாய்க்கால்களையும் வெட்டியவர்கள் பல்லவர்கள். பல்லவர்கள் காலத்தில் வரிச்சுமை அதற்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் கூடுதலாகவே அமைந்தது. வேளாண்மை வரி, தொழில்வரி என்று தனித்தனியே பிரித்து வரி வசூலித்தனர். அவர்கள் காலத்தில் வடமொழிக் கல்வியே ஊக்குவிக்கப்பெற்றது. இக்காலத்தில் சமண, பௌத்த, வைணவ சமயங்கள் நிலவிய போதும் சைவமே தழைத்தோங்கி செல்வாக்கு பெற்றது. பல்லவர் ஆட்சி முறை பல்லவ நாடு பல இராட்டிரங்களாகப் (மண்டலங்களாக) பிரிக்கப்பட்டது. ஒவ்வோர் இராட்டிரமும் பல விஷயங்களாகப் (கோட்டங்களாக) பிரிக்கப்பட்டிருந்தது. முண்டராட்டிரம், வெங்கோராட்டிரம் (வெங்கிராட்டிரம்), துண்டகராட்டிரம் (தொண்டை மண்டலம்) எனபன பல்லவர் பட்டயங்களில் குறிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பல்லவர் கோட்டம், நாடு, ஊர் போன்ற ஆட்சிப்பிரிவுகளை அமைத்தனர். நாட்டின் ஆட்சிக்குப் பொறுப்பாளர்கள் நாட்டார் என்றும் ஊரின் ஆட்சிக்குப் பொறுப்பானவர்கள் ஊரார் என்றும் அழைக்கப்பட்டனர். மன்னர் நாடாளும் பொறுப்பு முழுவதும் மன்னன் கைகளில் இருந்தது. அரசனாகும் உரிமை பரம்பரை வழி உரிமையாக வந்தது. சில சமயங்களில் மக்களே மன்னனைத் தேர்ந்தெடுத்தனர் என்பதை இரண்டாம் பரமேசுவரன் மகன் சித்திரமாயன் அரசனாக ஆவதற்குத் தகுதியற்றவனெனக் கருதப்பட்டு, பல்லவ மன்னன் இரண்டாம் நந்தி வர்மன் என்ற பட்டப் பெயருடன் மன்னனாக ஆனதைக் குறிப்பிடலாம். பல்லவ மன்னர்கள் கல்வி, அறிவு, கலையறிவு, பண்பாடு, ஆட்சித்திறன், வீரம் ஆகியவற்றில் சிறப்புற்று விளங்கினர். சமயத்திலும் இறைவழிபாட்டிலும் பல்லவ மன்னர் அளவிலாத ஈடுபாடு கொண்டனர். thumb|பல்லவர் கோயில் சிலை அரசு அலுவலர்கள் பல்லவ மன்னர்களுக்கு ஆமாத்தியர்கள் என்ற அமைச்சர்கள் இருந்தனர் என்பதற்கும், அமைச்சர் குழு இருந்தது என்பதற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்மனது தலைமை அமைச்சர் பிரம்மஸ்ரீ ராஜன், மூன்றாம் நந்திவர்மனது அமைச்சன் நண்பன் இறையூர் உடையன், தமிழ்ப்பேரரையன் என்ற அமைச்சர் பெயர்களால் தகுதியுடைய பிராமிணர்களும் வேறு பெருமக்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர் என்று அறிகிறோம்.பல்லவ வேந்தர்களிடம் உள்படு கருமத்தலைவர், வாயில் கேட்பார், கீழ்வாயில் கேட்பார் போன்ற அதிகாரிகள் ஆட்சி நடத்த உதவி புரிந்தனர். பொற்கொல்லர், பட்டய எழுத்தாளர், காரணீகர் போன்றோர் அரண்மனை அலுவலராக விளங்கினர். சின்னம் பல்லவ வேந்தர் நந்தி இலச்சினை கொண்டனர். சில பட்டயங்களில் சிங்கச் சின்னம் காணப்படுகின்றது. இச்சிங்கச்சின்னம் பட்டயங்கள் பல்லவ மன்னர்களால் போர்க்களங்களிலிருந்து விடப்பட்டவையாகும். பல்லவர் நாணயங்களிலும் நந்திச் சின்னம் பொறித்தனர். நீதி காஞ்சி போன்ற பெருநகரங்களில் நடைபெற்ற நீதிமன்றங்களுக்கு அதிகரணம் என்று பெயர் வழங்கப்பட்டது. அந்நீதிமன்றத் தலைவர்கள் 'அதிகரண போசகர்' என்று அழைக்கப்பட்டார். சிற்றூரில் உள்ள நீதிமன்றங்கள் 'கரணங்கள்' எனவும் அதன் தலைவர் 'கரண அதிகாரிகள்' என்றும் அழைக்கப்பட்டனர். இவ்வதிகரணங்கள், குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் எனவும் 'தருமாசனம்' எனப்படும் உயர்நீதிமன்றம் அரசனது நேரான மேற்பார்வையில் பிற வழக்குகளை விசாரிக்கும் எனவும் ஒருவாறு உணரலாம். சிற்றூர்களில் இருந்த அரங்கூர் அவையத்தார் வழக்குகளை ஆட்சி(அநுபோக பாத்தியர்), ஆவணம்(எழுத்து மூலமான சான்றுகள்), அயலார் காட்சி, கண்டார் கூறு ஆகிய சான்றுகளின் அடிப்படையில் விசாரித்து முடிவு கூறினர். பல்லவர் படை வலிமை பல்லவர் பண்பட்டதும், திறனுடையதுமான படை வைத்திருந்தனர் என்பது அவர்கள் கதம்பர், சாளுக்கியர், கங்கர், இராஷ்டிரகூடர் போன்ற வடபுலத்து மன்னர்களோடும், பாண்டிய சோழ, களப்பிரரோடும் போரிட்டதிலிருந்து அறியலாம். சிம்மவர்மன், நரசிம்மன் காலத்தில் பரஞ்சோதி (சிறுத்தொண்ட நாயனார்), இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் வில்வலம் என்னும் ஊருக்கும் வேகவதியாற்றுக்கும் தலைவனான பூசான்மரபினைச் சேர்ந்த உதயசந்திரன், மூன்றாம் நந்திவர்மன் காலத்தின் பூதிவிக்கிரமகேசர் என்னும் கொடும்பாளுர் சிற்றரசன் ஆகியோர் சிறந்த படைத்தலைவர்களாக விளங்கிப் பல்லவ நாட்டைக் காத்தனர். பல்லவர் மிக வலிமையுடைய கடற்படை வைத்திருந்தனர் என்ற செய்தியை மாமல்லனாகிய நரசிம்மவர்மன் இலங்கை நாட்டு மானவன்மனுக்கு அரசுரிமை கிடைக்க ஈழத்தின்மீது படையெடுத்ததிலிருந்தும், நிருதுபங்கவர்மன் காலத்தில் சீமாறன் சீவல்லபன் என்ற பாண்டியன், பல்லவனின் கடற்படை கொண்டு ஈழத்தின் மீது படையெடுத்ததிலிருந்தும் அறியலாம். மேலும் சீனம், சயாம் போன்ற கடல் கடந்த நாடுகளுடன் கடல் வாணிகம் செய்த செய்திகளையும் அறிகிறோம். கப்பலை நாணயத்தில் பொறித்து வெளிட்ட தமிழக மன்னர்களில் முதல்வர் பல்லவர்களே. போர்கள் மணிமங்கலம் போர் புள்ளலூர்ப் போர் வாதாபிப் போர் ஊராட்சி முறை ஊரின் ஆட்சி ஊரவைப் பெருமக்களால் நடைபெற்றது. ஊரவைகள், ஏரிவாரியம், தோட்டவாரியம் போன்ற பல வாரியங்கள் வாயிலாக மக்களாட்சி நடத்தியது. ஆளுங்கணத்தார் என்போர் சிற்றூர்களை நேரே பொறுப்பாக அரசியலுக்குட்பட்டு ஆண்டவர்களாவர். கோயில் தொடர்புற்ற பல்வகை செயல்களையும் கவனித்துக் கோயில்களைப் பாதுகாத்தவர் 'அதுர்கணத்தார்' எனப்பட்டனர். இவர்கள் கோயில் தொடர்பான செய்திகளில் ஊரவைக்குப் பொறுப்பானவர்களாவர். சிற்றூர்களின் எல்லைகள் அளக்கப்பட்டுக் குறிக்கப்பட்டன. கிணறுகள், குளங்கள், கோயில்கள், ஓடைகள் முதலியன ஊருக்குப் பொதுவாக விளங்கின. நெல் அடிக்கும் களத்துகு வரியாக, நிலத்துச் சொந்தக்காரர் குறிப்பிட்ட அளவு நெல்லைச் சிற்றூர்க் களஞ்சியத்துக்குச் செலுத்தினர். பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட சிற்றூர்கள் பிரமதேயச் சிற்றூர்கள் எனப்பட்டன. இவை எவ்வித வரியும் அரசுக்குச் செலுத்த வேண்டியதில்லை.Foulkes T (Oct 1889) The Early Pallavas of Kánchípura, Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, New Series, Volume 21, Number 4, pp. 1111–1124 சில உரிமைகள் வழங்கப்பட்டதோடு நிலங்கள் தானமாக அளிக்கப்படுவதற்கு முன்னர் அவற்றின் மேலிருந்த தனிப்பட்ட குடிமக்களின் உரிமை அடையாளங்கள் மாற்றப்பட்டன. தானம் அளிக்க விரும்பும் ஒருவன் தானமாக வழங்கப்பட இருக்கும் நிலத்தின் உரிமையாளரிடமிருந்து விலைக்கு வாங்கி தன் சொந்தமாக்கிக் கொண்டபிறகே தானமாக வழங்குவான். பிராமணர்களுக்கு அளிக்கப்பட்ட பிரமதேயம், கோயில்களுக்கு வழங்கப்படும் தேவபோகம் தேவதானமாகப் பௌத்த, சமண சமய மடங்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிச்சந்தம் ஆகியவை இம்முறையைப் பின்பற்றியே தானமாக வழங்கப்பட்டன. இக்கிராமங்களின் நிர்வாகத்தினை நாடுகாப்பாணும்,அதன்பணியை தானம் பெற்றவர்களும் அவர்கள் மரபு வழியினரும் கவனித்து வர வேண்டும் என்பது தானத்தில் நிபந்தனையாகும். வரிகள் வேளாண்மை வரிகள் தென்னை, பனை, பாக்கு ஆகிய மரங்களைப் பயிரிடும் உரிமை பெற அரசாங்க வரி விதிக்கப்பட்டது. கள் இறக்கவும், சாறு இறக்கவும், பனம்பாகு காய்ச்சவும், கடைகளில் பாக்கு விற்கவும் வரி விதிக்கப்பட்டது, கல்லால மரம் பயிரிட, சித்திரமூலம் என்னும் செங்கொடி பயிரிட, கரிசலாங்கண்ணி என்னும் மூலிகை பயிரிட உரிமை பெறக் கல்லாலக்காணம், செங்கொடிக்காணம், கண்ணிட்டுக் காணம் ஆகிய தொகைகள் அரசாங்க உரிமை பெறச் செலுத்தப்பட்டன. மருக்கிழுந்து பயிரிட மருக்கொழுந்துக் காணம், நீலோற்பலம், குவளை ஆகியவை நடுவதற்கு உரிமை பெற குவளை நடுவரி, விற்பனை செய்யக் குவளைக் காணம் ஆகியன அரசாங்கத்தால் பெறப்பட்டன. பிரம்மதேயம், தேவதானச் சிற்றூர்கள் இவ்வரிகளிலிருந்து விலக்குப் பெற்றன. தொழில் வரிகள் ஆடு, மாடு ஆகிய காலநடைகளால் பிழைப்பவர், புரோகிதர், வேட்கோவர்(குயவர்), பலவகைக் கொல்லர், வண்ணார், ஆடைநெய்வோர், நூல் நூற்போர், வலைஞர், பனஞ்சாறு எடுப்போர், மணவீட்டார், ஆகிய தொழிலாளரும், பிறரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்தினர். பண்டாரம் ஊர்மன்றங்களில் வழக்காளிக்கு விதிக்கப்பட்ட தண்டம் "மன்றுபாடு" எனப்பட்டது.பல்லவர் அரசாங்கப் பண்டாரத்தைத் தகுதியுடைய பெருமக்களே காத்துவந்தனர். இவர்கள் பேரரசுக்குரிய பண்டாரத்தலைவர் எனப்பட்டனர். இவர்களுக்குக் கீழ் மாணிக்கம் பண்டாரம் காப்போர், பண்டாரத்திலிருந்து பொருள் கொடுக்கும்படி ஆணையிடும் அலுவலர்கள் ஆகிய கொடுக்கப் பிள்ளைகள் எனபோரும் இருந்தனர். அளவைகளும் நாணயங்களும் நில அளவை பல்லவர் காலத்தைல் விளங்கிய நில அளவைகள் குழி, வேலி என்பன. மேலும் கலப்பை, நிவர்த்தனர், பட்டிகாபாடகம் என்பனவும் நில அளவைகளாக வழங்கின. முகத்தலளவை முகத்தல் அளவைகளாகக் கருநாழி, நால்வாநாழி, மாநாய நாழி, பிழையாநாழி, நாராய(ண)நாழி என்பனவும் உழக்கு (விடேல் விடுகு உழக்கு), சிறிய அளவையான பிடி, சோடு, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் என்பனவும் பயன்பட்டன. நிறுத்தலளவை கழஞ்சு மஞ்சாடி என்பன பொன் நிறுக்கும் அளவைகள் நாணயங்கள் thumb|180px|பொ.ஊ. 300 பல்லவர் காலத்துக் கப்பல் பொறிக்கப்பட்ட நாணயம் பல்லவர் காசுகள் செம்பாலும் வெள்ளியாலும் பொன்னாலும் செய்யப்பட்டவை. அவை நந்தி, பாய்மரக் கப்பல், சுவஸ்திக், கேள்விக்குரிய சங்கு, சக்கரம், வில், மீன், குடை, கோயில், குதிரை, சிங்கம் ஆகிய உருவங்களைப் பொறித்தும் வழங்கப்பட்டன. நீர்ப்பாசன வசதிகள் காடுகளை அழித்து உழுவயல்களாகப் பல்லவர்கள் மாற்றியதால், அவர்களுக்குக் காடுவெட்டிகள் என்ற பெயரும் உண்டுபக் 43, . காடு வெட்டிகளான பல்லவர்கள் நாடு திருத்த நீர்ப்பாசன வசதிகள் நிரம்பச் செய்தனர். பல்லவ அரசர்களும், சிற்றரசர்களும், பொதுமக்களும் ஏரிகள், கூவல்கள்(கிணறுகள்), வாய்க்கால்கள், மதகுகள் அமைத்து நீர்ப்பாசன வசதிகளைச் செய்து வளம் பெருக்கினர். ஏரிகள் இராச தடாகம், திரளய தடாகம்(தென்னேரி), மகேந்திர தடாகம்(மகேந்திரவாடி ஏரி),சித்திரமேக தடாகம்(மாமண்டூர் ஏரி), பரமேசுவர தடாகம்(வரம் ஏரி), வைரமேகன் தடாகம்(உத்திரமேரூர் ஏரி), வாலிவடுகன் ஏரி, மாரிப்பிடுகன் ஏரி(திருச்சி ஆலம்பாக்கம்), வெள்ளேரி, தும்பான் ஏரி, மூன்றாம் நந்திவர்மன் காலத்தி அவனி நாராயண சதுர்வேதி மங்கலத்து ஏரி(காவேரிப்பாக்கத்து ஏரி, மருதநாடு ஏரி வந்த வாசிக் கூற்றம்), கனகவல்லி தடாகம்(வேலூர்க்கூற்றம்) ஆகியன பல்லவர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரிகளாகும்.தமிழக வரலாறும் பண்பாடும்,தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம் பக்.113 கிணறுகளும், கால்வாய்களும் பல்லவர்கள் காலத்தில் ஏராளமான கிணறுகளும் கால்வாய்களும் வெட்டப்பட்டன. திருச்சிராப்பள்ளி திருவெள்ளறையில் தோண்டப்பட்ட கூவல் என்னும் மார்ப்பிடுகு பெருங்கிணறு முப்பத்தேழு சதுர அடிகொண்ட சுவஸ்திக் வடிவத்தில் விளங்குவது. அது இக்காலத்திய கிணறுகளுக்குச் சான்றாகும். மேலும் பாலாறு, காவிரி முதலிய ஆறுகளிலிருந்து நீரைக் கொண்டு செல்லும் கால்வாய்கள், ஆற்றுக்கால், நாட்டுக்கால் எனப்பெயர் பெற்றன. வைரமேகம் வாய்க்கால், பெரும்பிடுகு வாய்க்கால், கணபதிவாய்க்கால், ஸ்ரீதரவாய்க்கால் என்பன அவற்றுள் சில. பஞ்சங்கள் பல்லவர் காலத்தில் இடைவிடாத பல போர்கள் காரணமாகப் பஞ்சங்களும் தோன்றின. இராசசிம்மன் காலத்துப் பஞ்சம் பற்றி அவைக்களத்துப் புலவர் தண்டி விளக்கமாக எடுத்துரைக்கிறார். மூன்றாம் நந்திவர்மன்காலத்துத் தெள்ளாற்றுப் போர் போன்ற போர்களின் காரணமாக உண்டான பஞ்சம் பற்றிப் பெரிய புராணம் கூறுகிறது.சேக்கிழார்,பெரிய புராணம்,(கோட்புலி நாயனார் புராணம் நடுகல் பல்லவர் காலத்தில் ஒருவர் செய்த சிறப்பு மிக்க செயலுக்காகப் பாராட்டி அவர் பெயரால் கோவிலுக்குப் பொன் கொடுத்து விளக்கேற்றச் சொல்லுதலோ, வேறு நற்செயலோ நடைபெறச் செய்தல் வழக்கமாகும். சிறந்த செயல் செய்தோ, போரிலோ ஒருவர் இறந்துவிட்டால் அவர் நினைவாக வீரகற்கள் நடுவதும் சில இடங்களில் பள்ளிப்படைக் கோயில்கள் கட்டுவதும் அக்காலத்து வழக்கமாகும். பல்லவர் காலத்துக் கல்வியும் சமுதாய நிலையும் thumb|250px|பல்லவ எழுத்து முறை கல்வெட்டு காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்-இல் உள்ளது. இது பல்லவப் பேரரசின் காலத்தில் c. 700s CE -இல் கட்டப்பட்டது. பல்லவர் காலக் கல்விநிலை என்பது சமயம் சார்ந்ததாக இருந்தது. சமயக் கல்விதான் கல்வியோ என்று ஐயுற வேண்டிய வகையில் வடமொழியிலும் தமிழ் மொழியிலும் கல்வி கற்பிக்கப்பட்டது.name = "கோபாலன்,பக். 114". கல்வி மக்கள் வடமொழியும், தமிழ்மொழியும், பல்வேறு கலையறிவும் பெற உதவியாகக் கல்வியமைப்பு இருந்தது.Rajan K. (Jan-Feb 2008). Situating the Beginning of Early Historic Times in Tamil Nadu: Some Issues and Reflections, Social Scientist, Vol. 36, Number 1/2, pp. 40-78 காஞ்சி மாநகரில் வடமொழியில் வேதங்கள் போன்ற உயர் ஆராய்ச்சிக்கல்வி அளிக்கும் கடிகைகள் இருந்தன. மேலும் கடிகாசலம் எனப்படும் சோழசிங்கபுரம் கடிகை, தென்னாற்காடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் வடமொழிக்கல்லூரி, தேவாரம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகிய நூல்கள் படைக்கும் ஆற்றலளிக்கும் தமிழ்க்கல்வி இருந்தது. அவை அக்காலக் கல்வி மேம்பாட்டுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். சமயநிலை துவக்கத்தில் சமணர்களாக இருந்த பல்லவர்கள், சைவ சமயத்தில் ஈடுபாடு காட்டினர். சைவ சமய உட்பிரிவுகளான பாசுபதம், காபாலிகம், காளாமுகம், ஆகியவை இவர்கள் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்தன.சைவர்களே ஆனாலும் பல்லவர்கள் வைணவம் தழைக்கவும் வழி செய்தனர்.இவர்கள் காலத்தில் தேவாரப் பதிகங்களும் திவ்வியப் பிரபந்தமும் பாராயணம் செய்யப்பட்டன. கலை இலக்கிய வளர்ச்சி பல்லவர்கள் காலத்திலேயே தமிழ் நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியும், சிற்பம்,இசை, ஓவியம், கட்டிடக்கலை முதலிய கலை வளர்ச்சியும் இலக்கியமும் அவர்கள் காலத்தில் உச்ச நிலையடைந்தன.கா. சிவத்தம்பி. தமிழ் இலக்கிய வரலாறு. http://noolaham.net/library/books/01/50/50c.htm கலை ஆர்வலர்களான பல்லவர்கள் எல்லாக் கலைகளிலும் ஒருமித்த ஆர்வம் காட்டினார்கள். தாமே பண்களைத் தொகுத்தும் பாடியும் மகிழ்ந்தனர். நாயன்மார்களும், ஆழ்வார்களும், பாடிய பாடல்கள் பலவற்றிற்கு அவர்கள் காலத்தில் பண்கள் அமைக்கப்பட்டிருந்ததன. அவை கடவுள் உலாக்களின் போது பாடப்பட்டன. இசைக்கருவிகளிலும் புதிய மாற்றங்களைப் பல்லவர்கள் செய்து அறிமுகப்படுத்தினர். ஓவியக் கலையில் பல்லவர்களுக்கு இருந்த ஈடுபாடு சித்தன்னவாசல் ஓவியங்களின் முலம் நன்கு வெளிப்படுகிறது. பல்லவர்கள் காலம் கட்டடக்கலைக்கு உலகப் புகழ் தேடித்தந்த காலமாகும். அவர்களது குடைக் கோயில்களும் மாமல்லபுரத்துச் சிற்பங்களும் குடைவரைக் கோயில்களும் இன்றளவும் உலக மக்களின் போற்றுதலுக்கு உரியனவாகும். இலக்கியம் தமிழிலக்கியங்கள் பல்லவர் காலத்துப் பக்தி இயக்கம் தமிழுக்குப் புதிய வகை இலக்கியத்தினை அளித்தது. ஆழ்வார்களும் நாயன்மார்களும் அருளிச்செய்த பக்திப் பாடல்கள் அக்கால சமுதாய நிலை சமய, மொழி நிலையையும், கலைச் சிறப்பையும் உணர்த்துவன. பழைய அகப்பாடல் மரபுகள் இப்பாடல்களில் புது உருவம் பெறினும், வட சொல்லாட்ட்சி மிகுந்து காணப்படுகின்றன. மேலும் நந்திக் கலம்பகம், பெருந்தேவனார் பாடிய பாரதம், பெருங்கதை, இறையனார் களவியலுறை திருமந்திரம், சங்க யாப்பு, பாட்டியல் நூல், மகாபுராணம், முத்தொள்ளாயிரம், புராண சாகரம், கலியாண கதை, அணியியல், அமிர்தபதி, அவிநந்த மாலை, காலகேசி, இரணியம், சயந்தம், தும்பிப் பாட்டு முதலிய நூல்களும் பல்லவர் காலத்தில் தோன்றியனவே. காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன், சேரமான் பெருமாள் ஆகியோரும் பல்லவர் காலத்தில் வாழ்ந்தவர்களே.அ. ஜெயம், சந்திரலேகா வைத்தியநாதன், தமிழிலக்கிய வரலாறு, ஜனகா பதிப்பகம். 1997 வடமொழி இலக்கியங்கள் பல்லவர்களில் பலர் சிறந்த வடமொழியறிஞர்களாக விளங்கினர். லோக விபாகம், அவந்தி சுந்தரி கதை, காவியதர்சம் முதலான நூல்கள் தோன்றின. முதலாம் மகேந்திர வர்மன் மத்தவிலாசப் பிரகசனம் எனும் நகைச்சுவை நாடகத்தை வடமொழியில் எழுதினான். மேலும் பாரவி, தண்டி போன்ற புலவர்களும் இருந்தனர். அவந்தி சுந்தரி, கதா போன்ற வடமொழிப்பாடல்கள் தோன்றின. வடமொழிப் பட்டயங்கள் அழகிய இலக்கிய நடையில் எழுதப்பட்டன. காஞ்சியிலும் கடிகாசலத்திலும், பர்கூரிலும் வடமொழிக் கல்லூரிகள் இருந்தன. கடிகாசலத்தில் மயூரசன்மன் மாணவனாக இருந்தான். தர்மபாலர் என்னும் பெரியார் இங்கிருந்து நாளந்தாப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். இசைக்கலை பல்லவர்காலத்தில் தமிழகத்தில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசைக்கருவிகளுடன், அடியார்கள் புடை சூழ தேவர் மூலருக்கும் பாடல்கள் பாடிக்கொண்டு ஆலயங்கள் தோறும் சென்று சைவத்தையும் வைணவத்தையும் வளர்த்தனர். தாளத்தோடு கூடிய இன்னிசையைப் பரப்பினர். நாயன்மார்களது பதிகங்களில் சாதாரி, குறிஞ்சி, நட்டபாடை, இந்தளம், வியாழக் குறிஞ்சி, சீகாமரம், பியந்தைக் காந்தாரம், செவ்வழி, கொல்லி, பாலை போன்ற பண்கள் பயன்படுத்தப்பட்டன தோற்கருவி, துளைக்கருவி நரம்புக்கருவி, கஞ்சக்கருவி போன்ற வகையினைச் சார்ந்த யாழ், குழல், வீணை, தமருகம், சக்கரி, கொக்கரி, கரடிகை, மொந்ந்தை, முழவம், தக்கை, துந்துபி, குடமுழா, உடுக்கை, தடி, தாளம் முதலிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டன, திருநீலகண்ட யாழ்ப்பாணர், ஆனாயானார் போன்ற இசைப் பேரறிஞர்கள் கருவியிசை மூலமாகச் சமயம் வளர்த்தனர். சதுரஸ்ரம், திஸ்ரம், மிஸ்ரம், கண்டம், சங்கீரணம் எனும் தாள வகைகள் கடைசியான சங்கீரணம் என்பதனைப் புதியதாகக் கண்டு அதன் வகைகளையும் ஒழுங்குகளையும் அமைந்த காரணத்தால் மகேந்திரவர்ம பல்லவன் சங்கீரண சாதியென அழைக்கப்பட்டான். இசை நுட்பம் உணர்ந்த மகேந்திரவர்மன் காலத்தில், புதுக்கோட்டையைச் சேர்ந்த குடுமியா மலையில் இசை மாணவர் நன்மைக்காகப் பண்களை வகுத்துத் தந்தவர் உருத்திராச்சாரியார் என்பவர் ஆவார். மாணவனான அரசன் கட்டளைப்படி இங்கு இசைக்கல்வெட்டு அமைக்கப்பட்டது. எட்டு நரம்புகளைக் கொண்ட வீணைக்கும் பயன்படுமாறு கண்டறிந்த பண்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது. பரிவாதினி எனும் வீணையில் வல்லவனாக இம்மன்னன் திகழ்ந்தான். ஆடற்கலை மகேந்திரவர்மன் காலத்துச் சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர்கள் காலத்தில் நடனக் கலை பெற்றிருந்த ஏற்றத்தினை விளக்குகின்றன. பரமேசுவர விண்ணகரம் எனப்படும் வைகுந்தப் பெருமாள் கோவிலில் ஆடவரும் பெண்டிரும் அணி செய்து கொண்டு ஆடி நடிக்கும் காட்சி சிற்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பல்லவர் காலத்துக் கோயில்களுள் இசையும், கூத்தும் வளர்க்க அடிகள்மார், மாணிக்கத்தார், கணிகையர் என்னும் பெண்மக்கள் இருந்தனர். இது தேவாரம் போன்றா சிற்றிலக்கியங்கள் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவும் தெரிய வருகிறது. காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சிவபெருமான் ஆடிய நாதாந்த தூக்கிய திருவடி(குஞ்சித பாதம்) நடனம் சிற்பவடிவத்தில் செதுக்கப்பட்டுள்ளது. கட்டடக்கலை மகேந்திரவர்மனால் தமிழகத்தில் கட்டப்பட்ட குகைக்கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை. சிம்மவிஷ்ணுவால் கட்டப்பட்டன என்று கருதப்படும் ஆதிவராகர் கோயில் குகைக்கோயிலாகும். மகேந்திரவர்மன் கட்டிய குகைக் கோயில்கள் அனைத்தும் மலைச் சரிவுகளில் குடைந்து அமைத்தவையாகும்.name="HM & PMI 109-130">Marilyn Hirsh (1987) Mahendravarman I Pallava: Artist and Patron of Māmallapuram, Artibus Asiae, Vol. 48, Number 1/2 (1987), pp. 109-130 இத்தகைய குகைக்கோயில்கள் சீயமங்கலம், பல்லாவரம், வல்லம், தளவானூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் சிவன் கோயில்களாக அமைந்தன. மாமண்டூர், மகேந்திரவாடி, சிங்காவரம், நாமக்கல் ஆகிய இடங்களில் பெருமாள் கோயில்களாக அமைந்தன. மண்டகப்பட்டில் குடைந்துள்ள குகைக்கோயிலில் பிரமன், சிவன், திருமால் ஆகிய மூவருக்கும் ஒவ்வொரு அறை வீதம் மூன்று அறைகளோடு அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள தருமராசர் மண்டபமும், கொடிக்கால் மண்டபமும் மகேந்திரவர்மனால் அமைக்கப்பட்டவை. இங்கு நரசிம்மவர்மனால் அமைக்கப்பட்ட பஞ்சபாண்டவர் தேர்கள் என்றழைக்கப்படுபவை ஒரே கல்லைக் கோயிலாக அமைத்துக் கொண்ட கட்டடக்கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். திரௌபதியம்மன் தேர் என்றழைக்கப்படும் கோயில் தூங்காணை மாடம் என்று பிற்காலத்தில் அழைக்கப்பட்ட கட்டடக் கலை அமைப்பைச் சேர்ந்ததாகும். இது பண்டைக் காலத்து பௌத்த சைத்தியத்தை ஒத்தது. பரமேசுவரவர்மன், கூரம் என்னும் சிற்றூரில் அமைத்த சிவன் கோயில் தமிழகத்து முதற் கற்கோயில் ஆகும்தமிழக வரலாறும் பண்பாடும் பக்.126 thumb thumb|Temple main view|தளவானூர் குடைவரைக்கோவில் சிற்பக்கலை thumb|right|துவாரபாலகர் என்னும் வாயில்-வரவேற்பாளர், வராக-மண்டபம், மாமல்லபுரம் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன் ஆகிய பல்லவ மன்னர்கள் தாம் அமைத்த குகைக் கோயில்களில் வாயிற்காவலர் (துவாரபாலகர்), விஷ்ணு, சிவன், லிங்கம், இசைவாணர்(கந்தர்வர்), முயலகன், ஆதிவராகர், மகிஷாசுரமர்த்தினி, வராக அவதாரம், வாமன அவதாரம், கங்கைக் காட்சி, அர்ச்சுனன் தவம் அல்லது பகீரதன் தவம், கோவர்த்தன கிரியைக் கண்ணன் குடையாகப் பிடித்தது போன்ற காட்சிகளைச் சிற்பங்களாக அமைத்துள்ளனர். பல்லவர் அமைத்த கோயில்களின் தூண்களும், சுவர்களும், போதிகைகளும், விமானங்களும் கண்கவரும் சிற்பங்களைக் கொண்டு திகழ்கின்றன. மகாபலிபுரம் பல்லவரின் சிற்பக்கலைக் கூடமாகவே திகழ்கின்றது. ஓவியக்கலை ஓவியக் கலையில் பல்லவர்களுக்கு இருந்த ஈடுபாடு சித்தன்னவாசல் ஓவியங்களின் மூலம் நன்கு வெளிப்படும். 1400 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட அந்த ஓவியங்கள் வண்ணக்கலவை மாறாது அவற்றின் தனிச்சிறப்பை உணர்த்துவன. இவ்வோவியங்கள் சமண சமயத்தைச் சார்ந்தவை. மேலும் காணலாம் பல்லவ அரசர் கால நிரல் மேற்கோள்கள் உசாத்துணை வெளியிணைப்புகள் பல்லவர் வரலாறு - இராசமாணிக்கனார் பகுப்பு:பல்லவர் பகுப்பு:தமிழ்நாட்டு அரச வம்சங்கள் பகுப்பு:இந்தியப் பேரரசுகள் பகுப்பு:இந்துப் பேரரசுகள் பகுப்பு:இந்திய அரச மரபுகள் பகுப்பு:ஆசியாவின் முன்னாள் முடியாட்சிகள் பகுப்பு:ஆந்திரப் பிரதேச வரலாறு பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு பகுப்பு:தமிழ் அரச வம்சங்கள்
ஈழம்
https://ta.wikipedia.org/wiki/ஈழம்
தற்காலத்தில் இலங்கை என அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட 'ஈழத்துணவு', 'ஈழத்துப் பூதந்தேவனார்' போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களும் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தின. பெயர்த் தோற்றம் தமிழ்ச்சொல் ஈழம் என்னும் சொல் கீழம் என்பதன் மற்றொரு வடிவம்கிழக்கிடும் பொருளோடு ஐந்தும் ஆகும். (கிழக்கு = தாழ்வு) – தொல்காப்பியம் உவமவியல் 5 இழிதரும் அருவி (இழி = தாழ்) புறநானூறு 154, 399, திருமுருகாற்றுப்படை 316 கிழி < > கீழ் (கிழி = கிழிந்த துணி, கீழ் = கிழிந்த துணியாலான கோவணம்) உழி < > ஊழ் (உற்றுழி = துன்பம் வந்தபோது – புறம் 183, ஊழ் = தோன்றுதலை உணர்த்தும் வினைச்சொல், இணர் ஊழ்த்தும் – திருக்குறள் 650 கழி < > காழ் (கழி = வயிரம் பாய்ந்த மூங்கில், காழ் = வயிரம் – திருக்குறள் ‘காழ்த்தவிடத்து’ 879) ஆழ் < > காழ் (ஆழ் = அழுந்து, காழ் = அழுத்தம் கொண்ட வயிரம்) ஈ = பொருளைப் பிறருக்குத் தாழ்த்துதல் இவற்றால் ஈழம் என்பது தாழ்திசையாகிய கிழக்குத் திசையிலுள்ள நிலம் என்பது தெளிவு. (ஈழம் < கீழம் – சொல்விரிவு) இதனை மரூஉ என்றும் கொள்ளலாம். “கீழ் என் கிளவி உறழத் தோன்றும்” என்பது தொல்காப்பியம்.புள்ளிமயங்கியல் 100 கீழ் என்னும் சொல் இரண்டு பொருளில் வரும். ஒன்று தாழ்வைக் குறிக்கும். மற்றொன்று கிழக்குத் திசையைக் குறிக்கும். தமிழ்நாடு பொதுவாகப் பார்த்தால் கிழக்கில் தாழ்ந்த நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. தாழ்வை இழிவு என்கிறோம். இது மனப்பாங்குப் பார்வை. நிலச்சரிவுப் பார்வையில் இலங்கை தமிழ்நாட்டின் சரிவாக உள்ளது. நீரிழிவு என்னும்போது இழிவு என்னும் சொல் இறங்குதலைக் குறிக்கிறது. இழிவு < > ஈழ் < ஈழம். இது தமிழர் வழங்கிய தமிழ்சொல். பிறசொல் ஈழம் என்ற பெயர்த் தோற்றம் பற்றிப் பொதுக் கருத்து இல்லை இது பற்றிய வாதங்களும், எதிர் வாதங்களும் இன்னும் தொடர்ந்து வருகின்றன. ஈழம் என்ற பெயர் இத் தீவைக் குறிக்கும் பாளிமொழிச் சொல்லான 'சிஹலம்' என்பதிலிருந்து திரிந்தது எனக் கிருஷ்ணசாமி ஐயங்கார் போன்றவர்கள் கருதினார்கள். வேறு சிலரோ ஈழம் என்ற சொல்லே 'சிஹலம்' என்று திரிபடைந்தது என்பர். இந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே நிலை இப்படியாயின், இவ்வாறான ஆய்வுகள் அரசியல் பின்னணியால் பாதிக்கப்படுகின்ற தற்காலத்தில் முரண்பாடுகள் குறையும் வாய்ப்பு இல்லை. 'தமிழு'ம் 'ஈழ'மும் ஈழம் என்ற சொல்லுக்குப் பாலி அல்லது சிங்கள மூலம் காட்டுகின்ற அதேவேளை சில ஆய்வாளர் 'தமிழ்' என்ற சொல்லும் ஈழம் என்ற சொல்வழியாக, 'சிஹலம்' என்பதிலிருந்தே உருவானதாகக் காட்ட முயல்கின்றனர். தற்காலத்தில் 'ஈழம்' இலங்கையில் இன முரண்பாடுகள் அதிகம் கூர்மையடையாதிருந்த காலத்தில் ஈழகேசரி, ஈழநாடு போன்ற பெயர்கள் செய்திப் பத்திரிகைகளின் பெயர்களாகப் பிரபலம் பெற்றிருந்தன. அரசியலில் இன வேறுபாடுகள் விரிவடைந்துவந்தபோது, அரசியல் அரங்கில், இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் குறிக்கத் 'தமிழீழம்' என்ற சொல்லைப் பயன் படுத்திவந்தனர். இலங்கையில் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டுமென்ற கோரிக்கையைச் சில அரசியல் கட்சிகள் முன்வைத்தபோது, கோரப்பட்ட அந்நாட்டுக்கும் 'தமிழீழம்' என்ற பெயரையே பயன்படுத்தினார்கள். காலப்போக்கில், பேச்சு வழக்கிலும், சிங்கள இனத்தவர் மத்தியிலும் 'தமிழீழம்' சுருங்கி ஈழம் ஆகியது. ஒரு காலத்தில் முழு இலங்கைத் தீவையும் குறிக்கப் பயன்பட்ட சொல், இன்று அதன் ஒரு பகுதியை மட்டுமே குறிக்கும் சொல்லாக மாறியுள்ளது. இலக்கியத்தில் ஈழம் தமிழின் சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில், ஈழத்து உணவும், காழகத்து ஆக்கமும், அரியவும், பெரியவும், நெரிய ஈண்டி, வளம் தலைமயங்கிய நனந் தலை மறுகின் நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் ஏமாப்ப இனிது துஞ்சி. என்ற பாடலில் ஈழத்து உணவு என்ற சொல்லாடல் மூலம் ஈழம் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிக்குறிப்பு வெளி இணைப்புகள் A Short History of the Words Ilam and Ilavar, Prof. Peter Schalk பகுப்பு:தமிழீழம் பகுப்பு:இலங்கை
குறுந்தொகை
https://ta.wikipedia.org/wiki/குறுந்தொகை
குறிஞ்சி - தலைவன் கூற்று யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே. -செம்புலப் பெயனீரார். (குறுந்தொகை - பா.40 குறிஞ்சி) குறுந்தொகை எட்டுத்தொகையில் உள்ள நூல்களுள் ஒன்று. இந்நூல் எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்துச் சுட்டும் பழம்பாடலில் "நல்ல குறுந்தொகை" எனச் சிறப்பித்து உரைக்கப்படுகிறது. இந்நூல் குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை எனப் பெயர் பெற்றது. ஏனைய பழந்தமிழ் நூல்களைப் போல் இதுவும் 400 பாடல்களின் தொகுப்பாகவே இருந்திருக்க வேண்டுமென்றும் ஒரு பாடல் இடைச் செருகலாக இருக்கக்கூடுமென்றும் சிலர் கருதுகிறார்கள். உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக அதாவது 235 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ஆதலால் இந்நூலே முதலில் தொகுக்கப்பட்ட தொகை நூலாகக் கருதப்படுகிறது. இது பலவகையிலும் நற்றிணை, அகநானூறு ஆகிய பாடல் தொகுப்புகளை ஒத்தது. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ எனினும் தொகுப்பித்தவர் பெயர் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். சங்க இலக்கிய பாடல் நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தா ரேத்துங் கலியோடு அகம் புறம் என் றித்திறத்த எட்டுத் தொகை முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி- மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து பாடியோர் இத்தொகுப்பில் அமைந்துள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். இந்நூலில் அமைந்துள்ள 10 பாடல்களுக்கு ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் அப்பாடல்களின் சிறப்பு நோக்கி அதில் அமைந்த சிறப்புத் தொடர்களையே ஆசிரியர் பெயர்களாக அமைத்து வழங்கினர். அவர்களில் 'அணிலாடு முன்றிலார்' (குறுந்.பா.41), 'செம்புலப்பெயல் நீரார்' (குறுந். பா.40), 'குப்பைக் கோழியார்'(குறுந்.பா.305), 'காக்கைப் பாடினியார்'(குறுந்.பா.210), 'விட்ட குதிரையார்'(குறுந்.பா.74) 'மீனெறி துாண்டிலார்'(குறுந்.பா.54) ' ஓரேருழவனார்' (குறுந்.பா.131.), 'காலெறி கடிகையார்' (குறுந்.பா.267),கல்பொரு சிறுநுரையார்' (குறுந்.பா.290), முதலானோர் உவமைச் சிறப்பால் பெயர் பெற்ற ஆசிரியர்கள் 18 பேர் இந்நூலில் காணப்படுகிறார்கள். கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். நூலமைப்பு குறுந்தொகை நான்கு முதல் எட்டு வரையான (307,391-ஆம் பாடல்கள் 9 அடிகளால் ஆனது) அடிகளைக் கொண்டமைந்த 401 பாடல்களின் தொகுப்பு ஆகும். இந்நூல் அகப்பொருள்களை அகவற்பாக்களால் கூறுகின்ற போதும் முதற்பொருள் மற்றும் கருப்பொருட்களை விட உரிப்பொருளுக்கே சிறப்பிடம் தந்துள்ளது. இதில் வருணனைகள் குறைந்தும் உணர்வு மிகுந்தும் காணப்படுகின்றன. பொருளுக்கேற்ற பொருத்தமான உவமைகள் கொண்டு கருப்பொருளின் பின்னணியில் மாந்தர்களின் அகத்தெழும் உணர்ச்சிகளைச் சிறந்த முறையில் சித்தரித்துக் காட்டுபவை குறுந்தொகைப் பாடல்களாகும். குறுந்தொகை பழைய உரைகள் இந்த நூலின் முதல் 380 பாடல்களுக்குப் ‘பேராசிரியர்’ உரை எழுதியுள்ளார். பேராசிரியர் உரை எழுதாத அடுத்த 20 பாடல்களுக்கு ‘நச்சினார்க்கினியர்’ உரை எழுதிச் சேர்த்துள்ளார்.இதனை விளக்கும் பழம்பாடல் நல் அறிவுடைய தொல் பேராசான் கல்வியும் காட்சியும் காசினி அறிய பொருள் தெரி குறுந்தொகை இருபது பாட்டிற்கு இது பொருள் என்று அவன் எழுதாது ஒழிய இது பொருள் என்று அதற்கு ஏற்ப உரைத்ததும்- நச்சினார்க்கினியர் தாம் எழுதிய தொல்காப்பிய உரையில் (அகத்திணையியல் நூற்பா 46) பேராசிரியரின் குறுந்தொகை உரையை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளார். இந்த இரண்டு உரைகளும் இன்று கிடைக்கவில்லை. குறுந்தொகை காட்டும் செய்திகள் குறுந்தொகைப் பாடல்களில் சோழன் கரிகால்வளவன், குட்டுவன், திண்தேர்ப் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்கள் மற்றும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன் போன்ற சிற்றரசர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. 'கொங்குதேர் வாழ்க்கை' என்ற இரண்டாம் பாடல் இறையனார் பாடி, தருமி என்ற புலவருக்குப் "பொற்கிழி" வழங்கச் செய்தது சிறந்த வரலாற்றுச் சான்றாகும். நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தெனிழைக்கும் நாடனோடு நட்பே. (குறுந்.பா.3.) என்ற பாடல் தலைவனின் அன்பின் ஆழத்தையும் தலைவியின் நம்பிக்கையையும் எடுத்துரைக்கிறது."வினையே ஆடவர்க்கு உயிரே"- என்ற தொடர் ஆண்களின் கடமையைக் கூறுகிறது. பதிப்பு வரலாறு சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது, பல சுவடிகளைச் சோதித்து முதன்முதலில் திருக்கண்ணபுரத்தைச் சேர்ந்த திருமாளிகைச் சௌரிப் பெருமாளரங்கன், தான் இயற்றிய புத்துரையுடன் 1915-ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்."சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 33 இவற்றையும் பார்க்க குறுந்தொகை பாடிய புலவர் வரிசை குறுந்தொகை உரை வெளி இணைப்புகள் குறுந்தொகை நூல் உரை - எட்டுத்தொகை நூல்கள் குறுந்தொகைப் பாடல்கள் - பாடல் மூலம், பாடல்களின் செய்தி, தமிழ் மற்றும் ஆங்கில விளக்கத்துடன் குறுந்தொகை - இலக்கியம் குறுந்தொகை PDF குறுந்தொகை - அறிமுகம் - காயத்திரி குறுந்தொகை மூலமும் எளிய உரையும் அடிக்குறிப்புகள் பகுப்பு:தொகை நூல் பகுப்பு:எட்டுத்தொகை
குறுந்தொகை பாடிய புலவர் வரிசை
https://ta.wikipedia.org/wiki/குறுந்தொகை_பாடிய_புலவர்_வரிசை
பாரதம் பாடிய பெருந்தேவனார் - கடவுள் வாழ்த்து திப்புத்தோளார் 1 இறையனார் 2 தேவகுலத்தார் 3 காமஞ்சேர்குளத்தார் 4 நரிவெரூஉத்தலையார் 5 பதுமனார் 6 பெரும்பதுமனார் 7 ஆலங்குடி வங்கனார் 8, 45 கயமனார் 9 ஓரம்போகியார் 10, 70 மாமூலனார் 11 ஓதலாந்தையார் 12, 21 கபிலர் 13, 18, 25, 38, 42, 87 தொல்கபிலர் 14 ஔவையார் 15, 23, 28, 29, 39, 43, 80 பாலை பாடிய பெருங்கடுங்கோ 16, 37 பேரெயின் முறுவலார் 17 பரணர் 19, 24, 36, 60, 73, 89 கோப்பெருஞ் சோழன் 20, 53 சேரமான் எந்தை 22 கொல்லன் அழிசி 26 வெள்ளிவீதியார் 27, 44, 58 கச்சிப்பேட்டு நன்னாகையார் 30 ஆதிமந்தி 31 அள்ளூர் நன்முல்லையார் 32, 67, 68 படுமரத்து மோசிகீரன் 33, 75 கொல்லிக் கண்ணன் 34 கழார்க் கீரன் எயிற்றி 35 செம்புலப் பெயனீரார் 40 அணிலாடு முன்றிலார் 41 மாமிலாடன் 46 நெடுவெண்ணிலவினார் 47 பூங்கணுத்திரையார் 48 அம்மூவனார் 49 குன்றியனார் 50, 51 பனம்பாரனார் 52 மீனெறி தூண்டிலார் 54 நெய்தற் கார்க்கியர் 55 சிறைக்குடி ஆந்தையார் 56, 57, 62 மோசிகீரனார் 59, 84 தும்பிசேர் கீரன் 61 உகாய்க்குடி கிழார் 63 கருவூர்க் கதப்பிள்ளை 64 கோவூர் கிழார் 65 கோவர்த்தனார் 66 கடுந்தோட் கரவீரன் 69 கருவூர் ஒதஞானி 71 மள்ளனார் 72 விட்ட குதிரையார் 74 கிள்ளிமங்கலங் கிழார் 76 மதுரை மருதன் இளநாகனார் 77 நக்கீரனார் 78 குடவாயிற் கீரனக்கன் 79 வடம வண்ணக்கன் பேரிசாத்தன் 81 கடுவன் மள்ளன் 82 வெண்பூதன் 83 வடம வண்ணக்கன் தாமோதரன் 85 வெண்கொற்றன் 86 மதுரைக் கதக்கண்ணன் 88 மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் 90 பூதந்தேவனார் இன்னும் உண்டு பகுப்பு:சங்கப் புலவர்கள்
கலை வரலாறு
https://ta.wikipedia.org/wiki/கலை_வரலாறு
thumb|300px|மைக்கலாஞ்சலோவின் ஆதாமின் உருவாக்கம் (1508-1512) (வத்திக்கான் நகர்) சிறு தேவாலயத்தில். கலை என்பது பொதுவாக காட்சிக் (visual) கலைகளின் வரலாற்றையே குறிக்கின்றது. எண்ணங்களையும், உணர்வுகளையும் பிறருக்கு விளக்கும் நோக்குடனோ; அழகியல் நோக்கங்களுக்காகவோ; காட்சிக்குரிய வடிவத்தில் மனிதர்களால் உருவாக்கப்படும் ஒரு செய்பொருளே காட்சிக்கலை எனலாம். நீண்ட காலமாகவே கலையைப் பல்வேறு விதமாக வகைப்படுத்தி வந்துள்ளனர். மத்திய காலத்தில் தாராண்மக் கலை (liberal arts), இயந்திரம்சார் கலை (mechanical arts) என்ற வகைப்பாடு இருந்தது. எனினும் அக்காலத்தில் கலை என்பதில், இன்று அறிவியல், வேளாண்மை, பொறியியல் போன்ற துறைகளைச் சார்ந்த விடயங்களும் அடங்கியிருந்தன. தற்காலத்தில் நுண் கலைகள், பயன்படு கலைகள் என்ற வகைப்பாடு உள்ளது. தற்காலத்தில் மனித ஆக்கத்திறனின் வெளிப்பாடே கலை என்று வரைவிலக்கணம் கூறுகின்றனர். 20 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் கலைகளை ஒன்பதாக வகுத்தனர். கட்டிடக்கலை, நடனம், சிற்பம், இசை, ஓவியம், கவிதை, திரைப்படம், ஒளிப்படவியல், வரைகதை என்பன இவை. பெரும்பாலோர், சிறப்பாக மேலை நாட்டினர், கலை வரலாறு, ஐரோப்பியக் கலை வரலாற்றையே குறிப்பதாகக் கருதி வந்தனர். எனினும் கலை வரலாறு என்பது கற்கால மனிதர்களின் கலைகள் தொடக்கம், உலகின் பல நாகரீகங்களின் கலை வரலாற்றையும் உள்ளடக்குகின்றது. கலை வரலாற்றின் துணைப் பிரிவுகள் வரலாற்றுக்கு முந்திய காலக் கலை வரலாற்றுக்கு முந்திய கால ஐரோப்பியக் கலை வரலாற்றுக்கு முந்திய கால ஆசியக் கலை ஆபிரிக்கச் சுதேசக் கலைகள் அமெரிக்கச் சுதேசக் கலைகள் ஓசானியச் சுதேசக் கலைகள் பண்டைய உலகின் கலைகள் பண்டைய மெசொபொத்தேமியக் கலைகள் சுமேரியக் கலைகள் பபிலோனியக் கலைகள் அசிரியக் கலைகள் பண்டைய எகிப்தியக் கலைகள் பண்டைய எஜியன் கலைகள் மினோவன் நாகரீகம் மைசனியன் நாகரீகம் கிரேக்கக் கலைகள் கிரேக்கோ-பௌத்தக் கலைகள் ரோமப் பண்பாடு ஆரம்பகாலக் கிறிஸ்தவக் கலை ஐரோப்பியக் கலை வரலாறு கிறிஸ்தவக் கலை மத்தியகாலக் கலை மறுமலர்ச்சிக் காலம், தொடக்க மறுமலர்ச்சி ஓவியங்கள், மற்றும் மறுமலர்ச்சிச் செவ்வியம் Mannerism, பரோக், மற்றும் ரோகோகோ புதுச்செவ்வியம், Romanticism, Academic art, Realism நவீன கலை இந்தியத் துணைக் கண்டம் இந்தியக் கலை தமிழர் கலை மொகலாயக் கலை இலங்கைக் கலை சிங்களக் கலை இலங்கைத் தமிழர் கலை இஸ்லாமியக் கலை தூரகிழக்கு நாடுகளின் கலைகள் பௌத்த கலை சீனக் கலை ஜப்பானியக் கலை திபேத்தியக் கலை தாய் கலை லாவோஸ் கலை அமெரிக்க நாடுகளின் கலைகள் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் கலைகள் மெக்சிக்கோவின் கலை மத்திய அமெரிக்கக் கலைகள் தென் அமெரிக்கக் கலைகள் தற்காலக் கலை ஊடகக் கலை பின் வருவனவற்றையும் பார்க்கவும் கலை கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள் அழகியற் கலைகள் பண்பாட்டு இயக்கங்கள் ஓவியத்தின் வரலாறு கலைப் பொருட்களின் பட்டியல் ஓவியர்களின் பட்டியல் பழைய கற்காலம் கற்காலத்தில் ( 15,000-8000 கி.மு. ± ) கலை தொடங்கப்பட்டதாற்கான ஆதாரங்கள் கிடைததால் அதுவே கலையின் தொடக்ககாலமாக விளங்குகிறது. 25,000 கி.மு.வே கலையின் முதல் வெளிப்பாடாக இருந்தது . மனிதனால் பொருட்கள் செய்யப்பட்டதற்கான முதல் தடயங்கள் தெற்கு ஆப்பிரிக்கா, மேற்கு மத்திய தரைக்கடல் , மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ( அட்ரியாடி கடல் ) , சைபீரியா ( பைக்கால் ஏரி ) , இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முதல் தடயங்கள் பொதுவாக கல் (பிளின்ட், obsidian ) , மரம் அல்லது எலும்பு கருவிகளில் செய்யப்பட்ட வேலைகளாகும்.ஓவியங்களில் சிவப்பு வண்ணம் பெற இரும்பு ஆக்சைடும், கருப்பு நிறங்களைப் பெற மாங்கனீசு ஆக்சைடும் களிமண்ணும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலத்தில் இருந்து கலை வாழ்ந்துகொண்டிருக்கிறதுGardner, pp.3-4.மனிதர்கள் தனிமையான இடங்களில் உயிர்வாழ கல் அல்லது எலும்பு மற்றும் குகை ஆகியவற்றில் ஓவியம் மற்றும் சிற்பங்கள் செய்துவந்துள்ளனர். பிரான்ஸ் பகுதியில் இருந்து சிறிய சிற்பங்கள் கண்டுபிடித்துள்ளனர் . பழையகற்காலத்தில் வறையப்பட்ட லாஸ்காக்ஸ் குகைகள் படங்கள் தமது இயற்கை உணர்வுகளை வெளிப்படும்படியாக வரைந்ந்துள்ளனர். குறிப்பாக அங்கு மந்திர மத தன்மை கொண்ட படங்கள் மற்றும் விலங்குகள் சித்தரிக்கபட்டுள்ளன. வீனஸ் கடவுளின் சிலகளும் , பெண்களின் சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.வீனஸ் கடவுளின் சிலை வளத்தைக்குறிப்பதற்காக வரையப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர் Honour, Fleming. A World History of Art p. 25 .Honour-Fleming (2002), p. 36-44. . கற்கால கலை கி.மு 8000 வாக்கில் மனிதர்கள் ஆடுமாடுகள் பழக்கப்படுத்துதலிலும், விவசாயம் மேற்கொள்வதிலும்,மதங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளனர்.லிபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களில் சிறு சிறு மனித உருவங்கள் வறையப்பட்டுள்ளன.இவ்வோவியம் ஜிம்பாவே, ஆப்ரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களுடன் ஒத்ததாக உள்ளதாக அறிஞர்கள் கண்டுபிடித்தனர். பின்டுராஸ் நதி படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்களும் இதுபோல் வரலாற்று சிறப்புகளைக் கூறுவதேயாகும்Onians (2008), p. 20-25.. மேற்கோள்கள் மேலும் படிக்க Adams, Laurie. Art across Time. 3rd ed. Boston: McGraw-Hill, 2007. Gardner, Helen, and Fred S. Kleiner. Gardner's Art through the Ages: A Global History. 13th ed. Australia: Thomson/Wadsworth, 2009. Gombrich, E. H. The Story of Art. 15th ed. Englewood Cliffs, N.J.: Prentice-Hall, 1990. Honour, Hugh, and John Fleming. The Visual Arts: A History. 5th ed. New York: Henry N. Abrams, 1999. Honour, Hugh, and John Fleming. A World History of Art. 7th ed. Laurence King Publishing, 2005, , Janson, H. W., and Penelope J. E. Davies. Janson's History of Art: The Western Tradition. 7th ed. Upper Saddle River, NJ: Pearson Prentice Hall, 2007. Oliver Grau (Ed.): MediaArtHistories, Cambridge/Mass.: MIT-Press, 2007. La Plante, John D. Asian Art. 3rd ed. Dubuque, IA: Wm. C. Brown, 1992. Miller, Mary Ellen. The Art of Mesoamerica: From Olmec to Aztec. 4th ed, World of Art. London: Thames & Hudson, 2006. Pierce, James Smith, and H. W. Janson. From Abacus to Zeus: A Handbook of Art History. 7th ed. Upper Saddle River, NJ: Pearson Prentice Hall, 2004. Pohl, Frances K. Framing America: A Social History of American Art. New York, NY: Thames & Hudson, 2002. Stokstad, Marilyn. Art History. 3rd ed. Upper Saddle River, NJ: Pearson Education, 2008. Thomas, Nicholas. Oceanic Art, World of Art. New York, N.Y.: Thames and Hudson, 1995. Wilkins, David G., Bernard Schultz, and Katheryn M. Linduff. Art Past, Art Present. 6th ed. Upper Saddle River, NJ: Pearson Education, 2008. வெளியிணைப்புகள் நியூ யார்க் பெருநகர அருங்காட்சியகத்தின் கால வரிசைப்படியான கலை வரலாறு தமிழ் ஆயகலைகள் தொகுப்பு: கலை வரலாறு (பகுதி): Ars Summum Project பகுப்பு:கலை வரலாறு
கலைப் பாணிகள், காலம் மற்றும் இயக்கங்கள்
https://ta.wikipedia.org/wiki/கலைப்_பாணிகள்,_காலம்_மற்றும்_இயக்கங்கள்
கலை இயக்கம் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட காலப்பகுதியுள், ஒரு குறிப்பிட்ட கலைஞர் குழுவால் பின்பற்றப்படுகின்ற, ஒரு குறிப்பிட்ட பொதுத் தத்துவத்தை அல்லது நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, கலையின் ஒரு போக்கு அல்லது பாணியாகும். கலை இயக்கங்கள் சிறப்பாக நவீன கலைகள் (Modern Art) தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்தவை. இங்கே தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு இயக்கமும், ஒரு புதிய முழு வளர்ச்சி பெற்ற குழுவாகக் கருதப்பட்டது. individualism மற்றும் பன்முகத் தன்மை நிலை பெற்றிருக்கும் தற்காலக் கலையில் இயக்கங்கள் ஏறத்தாழ முற்றாகவே மறைந்துவிட்டன எனலாம்.Mel Gooding, Abstract Art, Tate Publishing, London, 2000Man of his words: Pepe Karmel on Kirk Varnedoe — Passages – Critical Essay Artforum, Nov, 2003 by Pepe KarmelThe Originality of the Avant Garde and Other Modernist Myths Rosalind E. Krauss, Publisher: The MIT Press; Reprint edition (July 9, 1986), Part I, Modernist Myths, pp.8–171 கலை இயக்கங்கள் மேலைத்தேசக் கலைகளுக்கேயுரிய தோற்றப்பாடாகவே பெரிதும் காணப்படுகின்றன. இச் சொல், காண்போர் கலை, கட்டிடக்கலை சிலசமயம் இலக்கியம் ஆகியவற்றின் போக்குகள் தொடர்பிலேயே பயன்படுத்தப் படுகின்றது. கலை இயக்கங்களின் பட்டியல் பண்பியல் ஓவியம் (Abstract art) பண்பியல் வெளிப்பாட்டுவாதம் (Abstract expressionism) Action painting எதிர்-யதார்த்தவியம் (Anti-realism) அராபெஸ்க் (Arabesque) ஆர்ட் டெக்கோ ஆர்ட் நூவோ (Art Nouveau) ஆர்ட்டே பொவேரா (Arte Povera) கலை மற்றும் கைப்பணி இயக்கம் (Arts and Crafts Movement) குப்பைத்தொட்டி சிந்தனைக்குழு (Ashcan School) பார்பிசோன் சிந்தனைக்குழு (Barbizon school) பரோக் (Baroque) பௌஹவுஸ் (Bauhaus) நிறப்புலம் (Colour Field) கருத்துரு ஓவியம் (Conceptual art) கட்டமைப்புவாதம் (Constructivism) கியூபிசம் (Cubism) டாடாயியம் (Dadaism) டி ஸ்டெயில் (De Stijl) (also know as Neo Plasticism) கட்டவிழ்ப்பியம் (Deconstructivism) வெளிப்பாட்டியம் (Expressionism) விசித்திர யதார்த்தவியம் (Fantastic realism) போவியம் (Fauvism) உருவோவியம் (Figurative) பிளக்சஸ் (Fluxus) எதிர்காலவியம் ஆர்லெம் மறுமலர்ச்சி (Harlem Renaissance) உணர்வுப்பதிவுவாதம் (Impressionism) பன்னாட்டு கோதிக் (International Gothic) லெஸ் நாபீ மனரியம் (Mannerism) Massurrealism மீவியற்பிய ஓவியம் (Metaphysical painting) சிறுமவியம் (Minimalism) நவீனவியம் (Modernism) புதுச்செந்நெறியியம் (Neoclassicism) புதுவெளிப்பாட்டியம் (Neo-expressionism) புதுத்தொல்பாணியியம் (Neoprimitivism) கண்மாய ஓவியம் (Op Art) ஆர்பியம் (Orphism) நிழற்பட இயல்பியம் (Photorealism) புள்ளிப்படிமவியம் (Pointillism) மக்கள் ஓவியம் (Pop art) பின்-உணர்வுப்பதிவியம் (Post-impressionism) பின் நவீனத்துவம் (Postmodernism) தொல்பாணியியம் (Primitivism) இயல்பியம் (Realism) மறுமலர்ச்சி (Renaissance) மறுமலர்ச்சிச் செந்நெறியியம் (Renaissance Classicism) ரோக்கோகோ (Rococo) ரோமனெஸ்க் (Romanesque) புனைவியம் (Romanticism) சமூகவாத இயல்பியம் (Socialist Realism) உருவகவியம் (Stuckism) கலையுணர்வியம் (Suprematism) அடிமனவெளிப்பாட்டியம் Surrealism குறியீட்டியம் (கலை) (Symbolism (arts)) பின் வருவனவற்றையும் பார்க்கவும் ஓவியத்தின் வரலாறு கலை வரலாறு பண்பாட்டு இயக்கங்கள் இலக்கிய இயக்கங்கள் இசை இயக்கங்கள் மேற்கோள்கள் பகுப்பு:கலை இயக்கங்கள் பகுப்பு:கலை வரலாறு பகுப்பு:காட்சிக் கலைகள்
மறுமலர்ச்சி (ஐரோப்பா)
https://ta.wikipedia.org/wiki/மறுமலர்ச்சி_(ஐரோப்பா)
நவீன ஐரோப்பிய வரலாற்றின் தொடக்கத்தில் மறுமலர்ச்சி (Renaissance) என்பது அறிவியற் புரட்சியையும், கலைசார் மாற்றங்களையும் கொண்டுவந்த ஒரு பெரும் பண்பாட்டு இயக்கமாகும். இது மத்தியகாலத்தின் முடிவுக்கும், நவீன காலத்தின் தொடக்கத்துக்கும் இடையிலான மாறுநிலைக் காலத்தைக் குறித்து நிற்கின்றது. அறிவாற்றல் ரீதியாகப் புதியதொரு மீட்சி இலக்கியத்திலும் கலைத்துறையிலும் இக்காலகட்டத்தில் உருவெடுத்தது. இச்சமயத்தின்போது அறிவியல் கண்டுபிடிப்புகள் பல நிகழ்ந்தன. அரசியல் ரீதியாக நிலமானிய முறை ஒழிந்து தேசிய அரசுகள் தோன்றின. தனிமனித உணர்வும் சமூகப்பண்பும் தழைத்தோங்கின. அக்காலத்தில் தோன்றிய சமயச்சீர்திருத்த இயக்கமும் மறுமலர்ச்சியின் வெளிப்பாடே ஆகும். மறுமலர்ச்சிக் காலம் பொதுவாக, இத்தாலியில் 14 ஆம் நூற்றாண்டிலும், வட ஐரோப்பாவில் 16 ஆம் நூற்றாண்டிலும் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது. மறுமலர்ச்சி தோன்றக் காரணம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது பண்டைய இலக்கியங்களும் கலைகளும் அங்கு புறக்கணிக்கப்பட்ட அதே நேரத்தில் கான்ஸ்டாண்டினொபிளைத் தலைநகராகக் கொண்ட கிழக்கு ரோமானியப் பேரரசில் அவை பாதுகாக்கப்பட்டு வந்தன. 1453 ம் ஆண்டு ஆட்டோமன் துருக்கியர்கள் கான்ஸ்டாண்டினொபிளைக் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்த பைசாண்டிய கிரேக்க அறிஞர்கள் ரோமாபுரிக்குத் தப்பியோடினர். அவர்கள் தங்களுடன் கிரேக்க-ரோமானியப் பாரம்பரியச் சிறப்புகளையும் கொண்டு சென்றனர். மீண்டும் பண்டைய இலக்கியங்கள் இத்தாலியில் புத்துயிர் பெற்றமையால் கேள்வி கேட்டு விடை பெறும் மனப்பாங்கு மக்களிடம் பெருகியது. இவ்வுணர்வின் விளைவால் அறிவியல் , புவியியல், சமயம், இலக்கியம், கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம் போன்றவற்றில் ஒரு எழுச்சி உண்டானது. வரலாற்று வரைவியல் ரெனைசான்ஸ் (Renaissance) என்ற சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து பெறப்பட்டது. இதனை பிரெஞ்சு வரலாற்றாளரான ஜூல்ஸ் மிச்செலெட் (Jules Michelet) என்பவர் முதலின் பயன்படுத்தினார். இது 19 ஆம் நூற்றாண்டில் சுவிஸ் வரலாற்றாளரான ஜக்கோப் புர்க்கார்ட் (Jacob Burckhardt) என்பவரால் விரிவாக்கம் பெற்றது. இதன் நேரடிப் பொருள் மறுபிறப்பு என்பதாகும். மறுபிறப்பு என்பது இரண்டு வகையில் விளக்கம் பெறுகின்றது. ஒன்று பழைய classical நூல்களினதும், படிப்பினைகளினதும், மீள் கண்டுபிடிப்பும், கலை அறிவியல் முதலிய துறைகளில் அவற்றின் பயன்பாடும் என்ற பொருளைத் தருகிறது. மற்றது இத்தகைய அறிவுசார் நடவடிக்கைகளின் விளைவுகள், ஐரோப்பியப் பண்பாடு தொடர்பில் ஒரு பொதுவான புத்தூக்கத்தை ஏற்படுத்தியது எனப் பொருள் படுகின்றது. எனவே மறுமலர்ச்சி என்பதை இரண்டு வித்தியாசமான ஆனால் பொருள் பொதிந்த வழிகளில் பேசமுடியும்: பண்டைய நூல்களின் மீள் கண்டுபிடிப்பினூடாக செந்நெறிக்காலப் (classic) படிப்பினைகளினதும், அறிவினதும் மறுபிறவி என்பதும், ஐரோப்பியப் பண்பாட்டின் பொதுவான மறுபிறவி என்பதுமாகும். right|thumb|180px|லியனார்டோ டா வின்சியின் விட்ருவிய மனிதன், மறுமலர்ச்சிக் காலத்தின் கலை அறிவியல் ஆகியவற்றின் கலப்புக்கு ஒரு உதாரணம். பல் மறுமலர்ச்சிகள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலாண்டில், பல அறிஞர்கள், மறுமலர்ச்சி என்பது, பல அவ்வகையான இயக்கங்களில் ஒரு வகை மட்டுமே என்ற நோக்கைக் கொண்டிருந்தனர். இது பெருமளவுக்கு, "12 ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி" என்பது தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களை முன்வைத்த சார்ள்ஸ் ஹெச் ஹஸ்கின்ஸ் (Charles H. Haskins) என்பவரின் ஆய்வுகளாலும், "கரோலிங்கியன் மறுமலர்ச்சி" (Carolingian renaissance) தொடர்பான வாதங்களை முன்வைத்த வரலாற்றாளர்களினாலும் ஏற்பட்டது. இவ்விரு கருத்துக்களுமே தற்போதைய அறிஞர் சமூகத்தினால் பரவலாக ஏற்கப்பட்டிருப்பதன் காரணமாக, மறுமலர்ச்சி எனப்படுவதை குறிப்பான சொற்களின் மூலம், உதாரணமாக இத்தாலிய மறுமலர்ச்சி, ஆங்கில மறுமலர்ச்சி முதலியன மூலம், குறிப்பிடுவது தற்கால வரலாற்றாளரிடையே ஒரு போக்காக இருந்து வருகிறது. மருத்துவத் துறையில் பாரிய புரட்சி வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட கால கட்டம் வரை மதமும், மருத்துவமும் பின்னிப்பிணைந்திருந்தது என்பது மறுக்க இயலாத உண்மையாகும். ஆனால் இது ஒரு காலகட்டம் வரை மட்டும்தான். அறிவியல் வளர வளர மதத்திற்கும் மருத்துவத்திற்கும் இடையே இருந்த தொடர்பு மெதுவாக அறுபட ஆரம்பித்தது. எனவே இன்று வரை அறிவியல் அடிப்படையில் இயங்கி வருவது நவீன மருத்துவம், அலோபதி மருத்துவம் என்ற பெயரில் எல்லாம் வழங்கப்படும் ஆங்கில மருத்துவ முறையே ஆகும். மருத்துவம் (ணிலீனீiணீinலீ) என்ற ஆங்கிலச் சொல் இலத்தீன் மொழியில் உள்ள ஆர்ஸ் மெடிசினா (திrs ணிலீனீiணீina) என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் ‘குணப்படுத்தும் கலை’ என்பதாகும். கிரேக்க மருத்துவ அறிஞரான ஹிப்போ கிரடீஸ் என்பவரின் மருத்துவக் குறிப்புகளே சிறந்ததாகவும் ஓரளவிற்கு அறிவியல் தன்மை வாய்ந்ததாகவும் காணக் கிடைக்கின்றன. எனவே இவரே ‘மருத்துவத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். இவர் மருத்துவத்தை ஓரளவிற்கு மதத்திலிருந்து பிரித்து அதை ஒரு தனிக்கலையாக வளர்த்தார். ‘அதற்கு ஒரு தனியான நடைமுறை அறிவுடன் கூடிய நடைமுறையை ஏற்படுத்தியவர் இவரே. நோயாளிகளை பரிசோதிப்பதன் மூலமாகவும் அவர்களுடைய நடவடிக்கைகளை கூர்ந்து கவனிப்பதன் மூலமாகவும் நோய்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம் என்பதை முதன் முதலில் கூறியவர் இவர். நோய்க்கான காரணத்தை அவனுடைய உடலில் இருந்து அல்லது அவனுடைய சூழ்நிலையில் இருந்து அறிந்து கொள்ள இயலும் என்பதை முதன் முதலில் தெளிவுபடுத்தியவரும் இவரேயாவார். மேலும் மருத்துவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், நோயாளிகளுக்கு எவ்விதம் சிகிச்சை அளித்தல் வேண்டும் என்பது குறித்தெல்லாம் தெளிவாகவும் ஒரு திட்டவட்டமான வரையறுப்புடனும் எழுதிய முதல் மருத்துவரும் இவரே. இவருடைய புகழ்வாய்ந்த ‘ஹிப்போகிரடீஸ் உறுதிமொழி’ மருத்துவ உலகின் தொன்மையான செம்மையான ஆவணங்களுள் ஒன்று. ஒவ்வொரு மருத்துவரும் தம்முடைய மருத்துவப் படிப்பை முடித்தவுடன் இந்த உறுதிமொழியின் பெயரிலேயே தன்னுடைய தொழிலைத் தொடங்க வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே இன்றும் இருந்து வருகிறது. இவருக்குப் பிறகு கேலன் என்ற கிரேக்க அறிஞர் மருத்துவத் துறைக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளார். மனிதனுடைய உள் உடம்பின் அமைப்பை அறிவதற்கு இறந்து போனவர்களின் உடலை அறுத்து அதில் இருந்து கற்றுக்கொள்ளும் முறையை முதன் முதலில் ஏற்படுத்தியவர் இவரே. இதை அவர் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையேயும் தொடர்ந்து செய்துள்ளார். இன்றைக்கு உள்ள மனித உடலமைப்பு பற்றிய புரிதலுக்கு வித்திட்டு வைத்தவர் கேலன் ஆவார். ஐரோப்பாவின் மறுமலர்ச்சி காலம் (14, 15 நூற்றாண்டு) மதம், மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பாவில் புதிய புதிய சிந்தனையாளர்களும், அறிவியல் ஆய்வாளர்களும், மருத்துவ அறிஞர்களும் தோன்றினர். மருத்துவத்தைப் பற்றிய கருத்துக்களில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. அந்த கட்டத்தில் கொடுமையான நோய்களான பிளேக் போன்றவை ஐரோப்பா கண்டத்தை ஆட்டிப் படைத்தன. கறுப்பு மரணம் என்று அழைக்கப்படும் பிளேக் நோயினால் இரண்டு நூற்றாண்டுகள் ஐரோப்பிய நாடுகள் சொல்லொணா துயர் அனுபவித்து வந்தன. ஆனால் அரேபிய நாடுகள் இந்த நோய்களில் இருந்து விடுபட்டே காணப்பட்டன. இந்த உண்மை மேலை நாட்டு அறிஞர்களிடத்தில் புது வகை எண்ணங்களைத் தோற்றுவித்தது. தாங்கள் இதுவரை கொண்டிருந்த கருத்துகளைக் குறித்து மறு ஆய்வு செய்யத் தொடங்கினர். இதனால் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் தொடங்கியது. கிரேக்க ரோமானிய கருத்துகளின் அடிப்படையில் அதுவரை ஆட்சிபுரிந்து வந்த மருத்துவக் கருத்துகள் புறந் தள்ளப்பட்டன. இபேன் அல் நபிஷ், வேஸேலியஷ் போன்ற அரேபிய இஸ்லாமிய, மருத்துவ அறிஞர்களின் கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இது பழைமை வாதத்தில் இருந்த மருத்துவவியல் அறிவியலை நோக்கி எடுத்து வைத்த இரண்டாவது அடியாகும். மருத்துவத் துறையில் பல சோதனைகள் செய்யப்பட்டன. கிரேக்க அறிஞர்களின் ‘திரவக் கோட்பாடு’ மறுக்கப்பட்டது. வில்லியம் ஹார்வி என்பவர் இரத்தம் ஒரே இடத்தில் தங்கி இருக்கிறது என்ற கருத்தினை மறுத்து அது உடல் முழுதும் சுற்றி வருகிறது என்ற கருத்தினை முன் வைத்தார். முன் வைத்தது மட்டுமல்லாமல் அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவும் செய்தார். விலங்குகளின் மீது அறுவைச் சிகிச்சை செய்வதன் மூலமாக இரத்தம் உடலில் பல பாகங்களிலும் சுற்றிக்கொண்டு இருக்கிறது என்பதை நிரூபித்தார். 1880 இல் ராபர்ட் கோக் குறிப்பிட்ட சில வகை நோய்கள் பக்டீரியா என்ற நுண்ணுயிர்களால் ஏற்படுகின்றன என்பதை அறிவியல் முறையில் நிரூபித்தார். அவை ‘காக்ஸ் கோட்பாடுகள்’ என்று அழைக்கப்பட்டு இன்றும் மருத்துவத் துறையில் போற்றப்பட்டு வருகின்றன. 18 ஆம் நூற்றாண்டிற்குப் பின் மருத்துவ வளர்ச்சியானது மேலை நாடுகளை குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை மையமிட்டே நடந்து வருகிறது. ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் மருத்துவத் துறையைச் செழுமைப்படுத்தும் விதமாக பல மருத்துவக் கண்டுபிடிப்புகளையும் கோட்பாடுகளையும் நிறுவினர். ஜோசப் லிஸ்டர் என்பவர் நமது கைகளில் உள்ள நுண்ணுயிர் கிருமிகள் வழியாக நோயாளிகளுக்கு தொற்று ஏற்படக் கூடும் என்று முதன் முதலில் கூறினார். எனவே மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்த பிறகு தூய நீரினால் அல்லது சவர்க்காரத்தினால் கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பிறகுதான் மற்ற நோயாளிகளை பரிசோதிக்க வேண்டும் என்ற முறையை ஏற்படுத்தினார். இது குறிப்பாக பிரசவம் பார்க்கும் மருத்துவ அறிஞர்களுக்கு பொருந்தும் என்பது அவருடைய வாதம். மறுமலர்ச்சி பரவல்  15ஆம் நூற்றாண்டில், மறுமலர்ச்சி இத்தாலியின் பிளோரசன்சில் இருந்து ஐரோப்பாவின் மற்ற இடங்களுக்கு வேகமாக பரவியது. அச்சடிக்கும் இயந்திரத்தின் கண்டுபிடிப்பு புதிய புதிய யோசனைகள் வேகமாக பரவ வழிவகுத்தது. 20 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் மறுமலர்ச்சியை தேசிய மற்றும் மத இயக்கங்களாக பிரித்தனர்.  வடக்கு ஐரோப்பா  வடக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி வடக்கு மறுமலர்ச்சி என்று வழங்கப்பட்டது. இத்தாலியில் இருந்து மறுமலர்ச்சி யோசனைகள் வடக்கு நோக்கி நகர்ந்த பொழுது இசையில் பெரிய அளவில் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஓவியங்களை பொறுத்தவரை இத்தாலிய ஓவியங்கள் மதச்சார்பற்று உருவாக்கப்பட்டன ஆனால் வடக்கு ஐரோப்பாவில் முதலில் மதம் சார்ந்த ஓவியங்களே வரையப்பட்டன. பின்னாட்களில் பீட்டர் பிருகள் போன்றவர்கள் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளை ஓவியங்களாக தீட்டினர். வடக்கு மறுமலர்ச்சியின் பொழுதே பல ஆண்டுகள் நீடித்திருக்கும் எண்ணெய் ஓவியங்கள் முழுமைபெற்றன.  இங்கிலாந்து 16ஆம் நூற்றாண்டில் ஆங்கில மறுமலர்ச்சி தொடங்கிற்று. ஷேக்ஸ்பியர், சர் தாமஸ் மோர், பிரான்சிஸ் பேகன் போன்ற எழுத்தாளர்கள், இண்டிகோ ஜோன்ஸ் போன்ற கட்டட வடிவமைப்பாளர்கள் தாமஸ் டாலிஸ் போன்ற இசை மேதைகள் ஆங்கில மறுமலர்ச்சிக்கு வித்திட்டனர். பிரான்ஸ் மறுமலர்ச்சியை குறிப்பிடும் வார்த்தையான "Renaissance" ஒரு பிரெஞ்சு சொல்லாகும். இதன் பொருள் மறுபிறப்பு என்பதாகும். 18 ஆம் நூற்றாண்டில் பயன்படுத்தபட்ட இந்த சொல் பின்னாளில் பிரான்ஸின் வரலாறு என்ற புத்தகத்தின் மூலம் பிரபலமடைந்தது.  ஜெர்மனி  15ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் மறுமலர்ச்சி ஜெர்மனிக்கு பரவத்துடங்கியது. இவற்றில் அச்சகங்களின் பங்கு அலாதியானது.  நெதர்லாந்து 15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாலியின் மறுமலர்ச்சி நெதர்லாந்தையும் சென்றடைந்தது. இதற்கு பெல்ஜியதில் இருந்த டச்சு மொழி பேசும் பிளாண்டர்கள் ப்ருகஸ் நகர் வழியாக மேற்கொண்ட வணிகம் பெரிய அளவில் உதவியது. பிளாண்டர்கள் ஐரோப்பா முழுவதும் அறியப்பட்ட பெரிய கலைஞர்களை நெதர்லாந்துக்கு அழைத்துவந்தனர். அறிவியலில் உடற்கூற்றியல் துறை நிபுணர் ஆண்ட்ரீயஸ் போன்றவர்கள் மறுமலர்ச்சியை முன்னெடுத்து சென்றனர்.  போர்ச்சுக்கல் இத்தாலிய மறுமலர்ச்சியின் தாக்கம் போர்ச்சுகளை குறைவாக தாக்கியதாகவே கருதப்படுகிறது. போர்ச்சுக்கல் மறுமலர்ச்சி செல்வந்த இத்தாலி மற்றும் பிளண்டர்களின் முதலீடுகளால் சாத்தியப்பட்டது. போர்ச்சுக்கலின் தலைநகரான லிஸ்பன் 15 ஆம் நூற்றாண்டில் தழைத்தோங்கியது. காரணம் கண்டுபிடிப்புக்காலம் என்று போற்றப்படும்  பூகோளத்தின் வரைபடத்தை உருவாக்கிய பல கடல் பயணங்கள் போர்ச்சுக்கல் மூலமே செயல்படுத்தப்பட்டது.  ஹங்கேரி இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சி அடுத்து பரவிய இரண்டாம் நாடு ஹங்கேரி எனலாம். இதற்கு இத்தாலி மற்றும் ஹங்கேரி இடையே ஏற்கனவே நிலவிய பல கட்டங்களிலான ஒத்துழைப்பும் ஒரு காரணம்.  ரஷ்யா இத்தாலிய மறுமலர்ச்சியின் தாக்கம் ரஸ்சியாவிலும் எதிரொலித்தது ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய அதே வேகத்தில் அல்ல. காரணம் ஐரோப்பா மற்றும் ரஷ்யா இடையேயான தூரம் அதிகம். ஈவான் III என்ற இளவரசர் இத்தாலியின் பின்வருவனவற்றையும் காண்க மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை அறிவியற் புரட்சி வெளி இணைப்புக்கள் A NEW LIGHT ON THE RENAISSANCE , by Harold Bayley, 1909 பகுப்பு:ஐரோப்பிய வரலாறு பகுப்பு:வரலாற்றுக் காலப்பகுதிகள்
இராசேந்திர சோழன்
https://ta.wikipedia.org/wiki/இராசேந்திர_சோழன்
thumb|280px|இராசேந்திர சோழர் போரில், கோலராமமா கோயில், கோலார் இராசேந்திர சோழன் (Rajendra Chola) சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டியவருமான இராசராச சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமாவார். விசயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராசேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராசேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராசேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார். இவர் ஆட்சி செய்த பகுதிகள் தென் இந்தியா பகுதிகள் ஆன தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கருநாடகா, கேரளம், தெலுங்கானா, சத்தீசுகர், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளும், தென் கிழக்கு ஆசியா நாடுகள் அனைத்தும் இவர் ஆட்சி காலத்தில் இருந்தது. இராசேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இந்தியா இலங்கை, மாலத்தீவு, கடாரம், சிரீவிசயம், மலேயா (சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராசேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார். அங்கே சிவபெருமானுக்காக இராசேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது. இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளகத்தி கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது. சோழப் படைத்தலைவன் இராசேந்திரன் இராசேந்திரன் இளவரசனாக இருந்த பொழுதே சோழர் படைகளுக்குத் தலைமை வகித்து மேற்குப் பகுதிகளில் போர்களை நடத்தியவன். தொடர்ந்து வேங்கி, கங்கை மண்டலங்களுக்கு மாதண்ட நாயகனாக அமர்த்தப்பட்டான். 'பஞ்சவன் மாராயன்' என்ற பட்டமும் இவனுக்குக் கொடுக்கப்பட்டது. 'மும்முடிச் சோழனின் களிறு' என்ற சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இராசேந்திரன், கொங்கணம், துளுவம் முதலான நாடுகளை வென்று கைப்பற்றியதோடு, சேரனை அவனுடைய மலை நாட்டை விட்டு ஓடும்படி செய்து, தெலுங்கரையும் இராட்டிரரையும் வென்றான். இணை அரசனாக நிர்வகித்தல் இராசராச சோழரின் ஆட்சிக் காலத்திலேயே (பொ.ஊ. 1012), இராசேந்திர சோழன் இணை அரசனாகப் பொறுப்பேற்றுக் கொண்டான். இராசராசரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராசேந்திர சோழன், இராசராச சோழனின் படைகளுக்குப் பொறுப்பேற்று வெற்றியைத் தேடித் தந்தான். முடி சூடுதலும் தொடக்ககால ஆட்சியும் இராசராச சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராசேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராசாதிராச சோழனை இளவரசனாகப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராசாதிராச சோழன் பொ.ஊ. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகள் இருவரும் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர். நாட்டின் பரப்பும் அமைப்பும் தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும் ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இராசராசன், இராசேந்திரனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன், பெரு நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற் குழுக்கள் ஆகியோரது உரிமைகளைப் பாதுகாக்கவும், அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமும் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புகளை அழிக்கவும், வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவிபுரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றியபின் அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறும் செய்ய இராசேந்திரன் ஒரு சிறந்த கடற்படையையும் வைத்திருந்தான். இக்கடற்படையின் உதவியுடன் கிழக்கிந்தியத் தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி தான் ஆட்சி செய்த முப்பத்து மூன்று ஆண்டுகளில் இராசேந்திரன் தன் நாட்டை தமிழ் அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும், மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக் கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப் பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான். ஆட்சியின் முற்பகுதிகளில், இராசேந்திரன் மேற்கொண்ட எண்ணற்ற போர்களைப் பற்றியும், கைப்பற்றிய நாடுகளைப் பற்றியும் தன் தந்தை போன்றே இராசேந்திரனும் எண்ணற்ற கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளதால் அறிய முடிகிறது. இராசேந்திரனுடைய இராணுவச் சாதனைகள், வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகள் ஆகியவை பற்றித் திருவாலங்காடு, கரந்தை(தஞ்சை)ச் செப்பேடுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. படையெடுப்பு தொடக்க காலம் சோழ தேசத்துக்கான இராசேந்திர சோழனின் பங்களிப்பு, இராசராச சோழனின் படையில் பட்டத்து இளவரசனாகக் பொ.ஊ. 1012-இல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராட்டிரகூடர்களுக்கு எதிரான இராசராசனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும் ஆகும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராசேந்திரன் துங்கபத்திரை ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான். ஈழத்தின் மீதான படையெடுப்பு முதலாம் இராசராச சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டுக் கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் சிங்கள அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்ததாக கருதப்படும் இரத்தினக் கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டின் மீது பொ.ஊ. 1018-இல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பில் பெரும் வெற்றி பெற்று இராசேந்திரன் ஈழத்தின் முக்கிய இடங்களை கைப்பற்றிhttp://books.google.co.in/books?id=5qkVLVpJmyoC&pg=PA12&dq=Rajendra+chola+rules+sri+lanka&hl=en&ei=rRi1Ts-mAYH4rQesltXVAw&sa=X&oi=book_result&ct=result&resnum=4&sqi=2&ved=0CD4Q6AEwAw#v=onepage&q&f=false சிங்கள பட்டத்து அரசன், அரசி, இளவரசி ஆகியோரைச் சிறைப்படுத்திச் சோழநாட்டிற்குக் கொண்டுவந்தான். சிங்கள அரசன் ஐந்தாம் மகிந்தா பன்னிரெண்டு ஆண்டுக்காலச் சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி சிங்கள சுயசரிதைக்கு ஒப்பான "மகா வம்சமும்" கூறுகிறது. பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு ஈழப்படையெடுப்பைத் தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராசேந்திரன் பொ.ஊ. 1018-இல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களைக் கவர்ந்தான் என்றும், தொடர்ச்சியாகக் கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராசராச சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராசேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களைப் படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம். இராசேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை சடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்தச் சோழ-பாண்டியன் இராசேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட இல்லை. சாளுக்கியர் படையெடுப்பு இராஜேந்திரன் பொ.ஊ. 1021-இல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்குக் பொ.ஊ. 1015-இல் ஐந்தாம் விக்ரமாதித்தனுக்கு பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய இரண்டாம் ஜெயசிம்மன் பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் காலத்தில் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும் பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் ஜெயசிம்மன் இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான். இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும், தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் ஏழாம் விஜயாதித்தனை (VII) ஆதரித்துக் குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதிச் சண்டையில் இராஜேந்திரன், இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் - இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான். இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன், இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரை ஆற்றின் கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு பொ.ஊ. 1022-இல் மணம்முடித்துச் சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் இரண்டாம் ஜெயசிம்மன் பொ.ஊ. 1031-இல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனைக் கீழைச் சாளுக்கிய மன்னனாக்கினான் இதன் காரணமாக மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்துக் பொ.ஊ. 1035-இல் விஜயாதித்தனையும், அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரேந்திரனை வேங்கி மன்னனாக அறிவித்தான். கங்கையை நோக்கிய படையெடுப்பு மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனைக் கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. பொ.ஊ. 1019-இல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரிக் கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்துப் புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது. திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில், வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும், அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும், தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியின்நீரைச் சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது. இராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளைச் சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் ஒன்று கடல்கடந்த படையெடுப்புக்கள் கடாரம் படையெடுப்பு thumb thumb|இந்தியப் பெருங்கடல் மற்றும் இராசேந்திர சோழன் உருவம் பொறித்த இந்திய அஞ்சல் தலை, ஆண்டு 2015 இராஜராஜனின் ஆட்சியின் 14-ஆவது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில வரிகளில் கூறிமுடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ் மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது. "அலை நிறைந்த கடலின் நடுவே பல கப்பல்களை இராஜேந்திரன் அனுப்பினான்; கடாரத்தை ஆண்ட சங்கிராம விஜயோத்துங்க வர்மனையும், புகழ் படைத்த அவனுடைய படையில் இருந்த யானைகளையும் பிடித்துக் கொண்டான். நியாயமான வழியில் அந்த அரசன் சேமித்து வைத்திருந்த எண்ணற்ற செல்வங்களையெல்லாம் இவன் எடுத்துக் கொண்டான்; பரந்துவிரிந்திருந்த இந்த நகரத்தின் "போர் வாயில்" அருகேயுள்ள வித்தியாதரதோரணம் என்ற வளைவை வெற்றி முழக்கத்துடன் கைப்பற்றினான். நகைகள் பதித்த சிறுவாயிலை உடைய ஸ்ரீவிஜயன், பெரிய நகைகள் கொண்ட வாயிலையும் அழகுபடுத்தி அலங்கரித்துக் கொண்டான். பண்ணையில் தீர்த்தக் கட்டங்களில் நீர் நிறைந்திருந்தது. பழமையான மலையூர், வலிமையான மலைக்கோட்டையாகவும் திகழ்ந்தது. மாயிருடிங்கம், ஆழ்கடலால் அழகாகச் சூழப்பட்டு பாதுகாப்படுகிறது. எத்தகையபோரிலும் அஞ்சா நெஞ்சனாக விளங்கிய இலங்காசோகன் (லங்காசோக), மாபப்பாளம், ஆழமான தண்ணீரைப் பாதுகாப்பாகக் கொண்டிருந்தது. மே விளிம்பங்கம், அழகிய சுவர்களை பாதுகாப்பு அரணாகக் கொண்டிருந்தது. " வலைப்பந்தூரு" என்பதுதான் வளைப்பந்தூரு போலும்; தலைத்தக்கோலம், அறிவியல் புலமை உடையோரால் செய்யுள்களில் புகழப்பட்டிருக்கிறது. பெரிய போர்களிலும், அதுவும் கடுமையான போர்களில் தன் நிலைகுலையாத மாடமாலிங்கம்; போரால் தன் வலிமையான ஆற்றல் மேலும் உயர்ந்த பெருமையுடைய இலாமுரித்தேசம்; தேன்கூடுகள் நிறைந்த மானக்கவாரம்; மற்றும் ஆழ்கடலால் பாதுகாக்கப்பட்டதும் மிகவும் சக்தி வாய்ந்ததுமான கடாரம்" பொ.ஊ. 1025-இல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயோத்துங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயோத்துங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்காலச் சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும், இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன்தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக் கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது. நீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும், சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தைத் தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தைச் சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்தப் படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாகச் சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்ட கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் நியமிக்கப்பட்டான் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது. பண்ணை இராஜேந்திரனுடைய மெய்க்கீர்த்தியில் ஸ்ரீவிஜயத்திற்குப் பிறகு பண்ணை என்ற இடம் குறிக்கப்படுகிறது. பண்ணை என்பது சுமத்திராவின் கீழ்க்கரையில் உள்ள பனி அல்லது பன்னெய் என்ற ஊராகும். மலையூர் என்பது மலேயா தீபகற்பத்தின் தென்கோடியில் பழைய சிங்கப்பூர் ஜலசந்திக்கு வடக்கே மலாயூர் ஆற்றுக்கு அருகில் உள்ளது. இலாமுரி தேசம் இலாமுரி தேசம் என்பது, சுமத்திராவின் வடபகுதியிலுள்ள நாடாகும். இதனை அரேபியர்கள் லாமுரி என்றும், மார்க்கோபோலோ லம்பரி என்றும் அழைத்தனர். சௌஜுகுவா இதனை லான்வூரி என்றார். மாநக்கவாரம் என்பது நிக்கோபார் தீவுகளாகும். இந்த இடங்களைக் காணும் பொழுது, சுமத்திராவிலுள்ள ஸ்ரீவிஜய இராச்சியத்தையும், அதன் அதிகாரத்திற்கு உட்பட்ட மலேயா நாடுகளையுமே, இராஜேந்திரன் கைப்பற்றினான் என்பது தெளிவாகிறது. இராஜேந்திரன் ஆட்சியின் இறுதி ஆண்டுகள் கடாரம் படையெடுப்பிற்குப் பின் இராஜேந்திரன் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். போர் முதலியன நடவாத அமைதிக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் இக்காலப் பகுதியை சிறப்பித்துள்ளனர். ஆனால் இராஜேந்திரனின் மக்களின் கல்வெட்டுகள் இதனை மறுக்கின்றன. இவற்றின் மூலம் நாட்டில் பல பகுதிகளில் இவர்கள் போரிட வேண்டியிருந்தது எனத் தெரியவருகிறது. தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே திக் விஜயம் செய்த இராஜேந்திரன், இதன் பின்னர் ஏற்பட்ட போர்களில் தானே கலந்து கொள்ளாமல், தன் மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்ததான். இதன் மூலம் அவர்கள் வெற்றி பெற்றுப் புகழடையச் செய்தான். எனினும் இராஜாதிராஜனின் கல்வெட்டுகள் அனைத்தும் இராஜேந்திரனின் ஆட்சிக் காலத்திற்குட்பட்டனவாக உள்ளதால், இவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் விவரங்களும் முக்கியமாகின்றன. தெற்கில் குழப்பம் பாண்டிய, கேரள நாடுகளில் குழப்பங்கள் ஏற்பட்டதை ஒடுக்க வேண்டியிருந்தது. எனவே இராஜாதிராஜன் ஒரு நீண்ட படையெடுப்பை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடி உண்டாயிற்று. ஆனால் பாண்டிய, கேரள நாடுகளின் மீதான படையெடுப்பு எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது என்பது சரிவரத் தெரியவில்லை. இக்காலத்திய பாண்டியர் கல்வெட்டுக்கள் இதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. வெற்றிகொண்ட சோழர்களின் கல்வெட்டுகள் மூலமே இதனை நாம் அறிகிறோம். நடுநிலைச் சான்றுகள் கிடைக்கவில்லை, எண்ணற்ற சோழ பாண்டிய கல்வெட்டுகளும் இதைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சுந்தரபாண்டியனே இக்கலகத்தை நடத்திய இயக்கத்தின் தலைவனாயிருக்கவேண்டும். 'திங்களேர்' என்று தொடங்கும் இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தியின் ஒரு கூற்று, மூன்று பாண்டியர்களுடன் இம்மன்னன் செய்த போரை விவரிக்கும் பொழுது, தன் தந்தையை எதிர்த்த ('தாதை முன்வந்த') விக்கிரம நாராயணனுடன் போரிட்டு அவனை வென்றதாகக் கூறுகிறது. பத்துநாள் நடைபெற்ற போரின் முடிவில் இராஜாதிராஜன் பூபேந்திரச் சோழன் என்ற பட்டத்தைச் சூடிக் கொண்டான். விக்கிரம நாராயணன் ஒரு தென்னாட்டு மன்னனாகவே இருத்தல் வேண்டும். ஆனால், இந்த மெய்க்கீர்த்தியிலேயே பின்பகுதியில் கூறப்படும் சாளுக்கியருடனான இரண்டாம் போரில், இவனே சக்கரவர்த்தி விக்கிரம நாராயணன் என்று குறிப்பிடப்படுவதால், இவன், சாளுக்கிய படைத்தலைவனாகயிருக்க வேண்டும். பாண்டிய நாட்டுப் படையெடுப்பைத் தொடர்ந்து இராஜாதிராஜன் காந்தளூருக்குச் செல்லும் வழியில் வேணாடு மன்னனை 'விண்ணுலகத்திற்கு அனுப்பினான்'. பின்னர் தென் திருவாங்கூரைச் சேர்ந்த கூபகர்களின் தலைவனைப் பலம் இழக்கச் செய்தான் என்றும் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சோழப்பேரரசின் கருணை சோழர்களால் கைப்பற்றப்பட்ட பிறகும், பாண்டிய நாட்டிலும், கேரள நாட்டிலும் பழமையான பரம்பரை மன்னர்களே தொடர்ந்து ஆட்சி செய்து வந்தனர் என்பதும், சோழப் பிரதிநிதிகள் அந்நாடுகளில் இருந்தும்கூட, இவர்கள் சோழ மன்னர்களுக்குத் தொல்லை கொடுத்தனர் என்பதும், சோழர் ஆட்சி இந்நாடுகளில் எதேச்சாதிகாரமற்றிருந்தது என்பது விளங்குகிறது. இராஜேந்திரனின் கடைசி ஆண்டுகள் இராஜேந்திரன் ஆட்சியின் கடைசி ஆண்டுகள், விஜயாலய சோழ வமிசத்தின் வரலாற்றின் பொற்காலமாக அமைந்தன. சோழநாடு மிகப் பரந்து விரிந்தது; சோழருடைய பெரும் படையின் வல்லமையும் கடற்போரின் விளைவால் உண்டான மதிப்பும் வானோங்கி நின்றன. புதிதாய்ச் சேர்க்கப்பட்ட நாடுகளில் ஆங்காங்கு ஏற்பட்ட குழப்பங்களை அடக்க வேண்டியிருந்தது. திறமை படைத்த புதல்வர்கள் அப்பணியைச் செவ்வனே செய்தனர். சுந்தர பாண்டியனையும், அவனுடைய நண்பர்களையும் பாண்டியரோடு நடைபெற்ற போரில் தோற்கடித்தும் ஆகவமல்லனுக்கு எதிராக சாளுக்கியப் போரில் ஈடுபட்டும் சோழர்கள் தொடர்ச்சியாக அப்பகுதிகளைக் கைவசப்படுத்தியிருந்தார்கள். இவ்விரு போர்களிலும் பட்டத்து இளவரசனான இராஜாதிராஜன் தலைமை ஏற்றான். மைசூரிலும் நம்பிஹல்லி என்ற பகுதியிலும் சோரியருடன் ஏற்பட்ட சிறு பூசல்களைச் சமாளிக்கக் குறுநில மன்னர்கள் பலர் சோழருக்கு உதவினர். இராஜேந்திர சோழனின் மரணம் ராஜேந்திர சோழன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள நாட்டேரி என்ற ஊரின் அருகில் பிரம்மதேசம் கிராமத்தில் இறந்தார். இதற்குச் சான்றாக பிரம்ம தேசத்திலுள்ள சந்திர மெளலீஸ்வரர் கோவிலில் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன ராசேந்திர சோழன் கல்லறையை சீரமைத்து விழா: ஆயிரமாவது ஆண்டு விழாக் குழுவினர் தகவல் இரண்டு அடுக்கு கோபுரம் கொண்ட பல்லவர் கால கோவிலில் அமைந்துள்ளது. விருதுகள் இராஜராஜ சோழனைப் போன்றே இராஜேந்திரனும் சிறந்த விருதுகள் பலவற்றைப் பெற்றான். இவற்றில் குறிப்பிடத்தக்கவை, முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என்பன. இவன் ஒருமுறை வீர ராஜேந்திரன் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறான். இவற்றையெல்லாம் விட, இம்மன்னனே விரும்பிச் சிறந்த விருதாகக் கருதி ஏற்றது, 'கங்கை கொண்ட சோழன்' என்பதாகும். இவ்விருது இம்மன்னன் புதிதாக நிறுவிய தலைநகரின் பெயரைக் கொண்டது. பட்டத்தரசிகள் திருபுவன அல்லது வானவன் மாதேவியார், முக்கோலான், வீரமாதேவி என்போர் இராஜேந்திரனின் மனைவியர் ஆவர். வீரமாதேவி என்பாள், இம்மன்னனுடன் உடன்கட்டை ஏறி உயிர்துறந்தாள். இவன் புதல்வர்களில் மூவர் இராஜாதிராஜன், இராஜேந்திரன், வீர இராஜேந்திரன் ஆகியோர் இவனுக்கு அடுத்தடுத்துச் சோழ அரியணையில் அமர்ந்தனர். இம்மூவரில் யார் சோழபாண்டிய பிரதிநிதியான ஜடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்று கூற இயலாது. இம்மூவரைத் தவிர வேறு புதல்வர்களும் இருந்தனர். இராஜேந்திரனின் மகள் அருண்மொழி நங்கையார் என்ற பிரானார், தன் சகோதரன் இராஜாதிராஜனின் ஆட்சியின் தொடக்கத்தில் திருமழவாடிக் கோயிலுக்கு விலையுயர்ந்த முத்துக்குடை அன்பளிப்பாக அளித்தாள். இம்மன்னனின் மற்றொரு மகள், புகழ் மிக்க அம்மங்காதேவி ஆவாள். இவள் கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் இராஜராஜனின் மனைவியும், முதலாம் சாளுக்கிய மன்னர்களில், குலோத்துங்கனின் தாயும் ஆவாள். இராஜேந்திரனின் கல்வெட்டுகளில் காணப்படும் இவனுடைய ஆட்சி ஆண்டுகளில் 33-ஆம் ஆண்டே கடைசியானது. இராஜாதிராஜனின் ஆறாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று, இராஜேந்திரன் இறந்ததைக் கூறுகிறது. ஆகையால் இராஜேந்திரன் பொ.ஊ. 1044-இல் காலமாயிருக்க வேண்டும். மெய்க்கீர்த்தி இராசேந்திரசோழனது மெய்க்கீர்த்தி "திருமன்னி வளர இருநில மடந்தையும்/ போர்ச்செயப் பாவையும் சீ்ர்த்தனிச் செல்வியும்/ தன்பெருந் தேவிய ராகி இன்புற" எனத் தொடங்குகின்றது. இம்மெய்க்கீர்த்தி இவன் ஆட்சியின் மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுக்களில்தான் முதன்முதலில் காணப்படுகின்றது என்று தி.வை. சதாசிவ பண்டாரத்தார் கூறியுள்ளார். முழு மெய்க்கீர்த்தி திருவன்னி வளர விருநில மடந்தையும் போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந் தன்பெருந் தேவிய ராகி யின்புற நெடிதிய லூழியு ளிடைதுறை நாடும் தொடர்வன வேலிப் படர்வன வாசியும் சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப்பாக்கையும் நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் பொருகட லீழத் தரசர்த முடியும் ஆங்கவர் தேவய ரோங்கெழின் முடியும் முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த (10) சுந்தர முடியு மிந்திர னாரமும் தொண்டிரை யீழ மண்டல முழுவதும் எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும் குலதன மாகிய பலர்புகழ் முடியும் செங்கதிர் மாலையும் சங்கதிர் வேலைத் தொல்பெருங் காவற் பல்பழந் தீவும் செருவிற் சினவி யிருபத் தொருகால் அரசுகளை கட்ட பரசு ராமன் மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் (20) பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட் டொளித்த சயசிங்க னளப்பரும் புகழொடு பீடிய லிரட்ட பாடி யேழரை யிலக்கமு நவநிதிக் குலப்பெரு மலைகளும் விக்கிரம விரர் சக்கரக் கோட்டமு முதிர்பட வல்லை மதுரை மண்டலமும் காமிடை வளைஇய நாமணைக் கோணமும் வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும் பாசடைப் பழன மாசுணி தேசமும் அயர்வில்லண் கீர்த்தி யாதிநக ராகவையிற் (30) சந்திரன் றொல்குலத் திந்திர ரதனை விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப் பலதனத் தொடுநிறை குலதனக் குவையும் கிட்டரஞ் செறிமிளை யொட்ட விஷயமும் பூசுரர் சேருநற் கோசல நாடும் தன்ம பாலனை வெம்முனை யழித்து வண்டுறை சோலைத் தண்ட புத்தியும் இரண சூரனை முரணறத் தாக்கித் திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும் கோவிந்த சந்தன் மாவிழிந் தோடத் (40) தங்காத சாரல் வங்காள தேசமும் தொடுகழற் சங்குகொ டடல்மகி பாலனை வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளி ஒண்டிறல் யானையும் பெண்டிர்பண் டாரமும் நித்தில நெடுங்கட லுத்தர லாடமும் வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம விசையோத் துங்க வர்ம னாகிய கடாரத் தரசனை வாகையும் பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் (50) துரிமையிற் பிறக்கிய பருநிதிப் பிறக்கமும் ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில் விச்சா திரத்தோ ரணமு மொய்த்தொளிர் புனைமணிப் புதவமுங் கனமணிக் கதவமும் நிறைசீர் விசயமுந் துறைநீர்ப் பண்ணையும் வன்மலை யூரெயிற் றொன்மலை யூரும் ஆழ்கட லகழ்சூழ் மாயிரு டிங்கமும் கலங்கா வல்வினை இலங்கா சோகமும் காப்புறு நிறைபுனல் மாப்பப் பாளமும் காவலம் புரிசை மேவிலிம் பங்கமும் (60) விளைப்பந் தூருடை வளைப்பந் தூரும் கலைத்தக் கோர்புகழ் தலைத்தக் கோலமும் தீதமர் பல்வினை மாதமா லிங்கமும் கலாமுதிர் கடந்திற லிலாமுரி தேசமும் தேனக்க வார்பொழில் மானக்க வாரமும் (65) தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும் மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்க்கு யாண்டு..." கற்றளி மாமன்னன் இராஜராஜசோழனின் தேவியும், பழுவேட்டரையரின் திருமகளுமாகிய பஞ்சவன்மாதேவியார் சிவனடி சேர்ந்தபின்பு அவ்வம்மையாரை பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளியே பஞ்சவன்மாதேவீச்சரமாகும். இராசேந்திர சோழன் எடுத்த இக்கற்கோயில் திருமலைராயன் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது.குடவாயில் பாலசுப்பிரமணியன், பழையாறை மாநகர், பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999 இவற்றையும் பார்க்கவும் வானவன் மாதேவி ஈச்வரம் பஞ்சவன்மாதேவீச்சரம் மேற்கோள்கள் உசாத்துணைகள் Nilakanta Sastri, K.A. (1935). The CōĻas, University of Madras, Madras (Reprinted 1984). Nilakanta Sastri, K.A. (1955). A History of South India, OUP, New Delhi (Reprinted 2002). South Indian Inscriptions வெளி இணைப்புகள் ராஜேந்திர சோழனின் 25 பெயர்கள் (25 Names of Rajendra chola) பகுப்பு:இடைக்காலச் சோழ அரசர்கள் பகுப்பு:இந்தியப் பேரரசர்கள் பகுப்பு:சோழ தளபதிகள்
சிங்கைநகர்
https://ta.wikipedia.org/wiki/சிங்கைநகர்
சிங்கைநகர் என்பது ஒருகாலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்தது எனக் கருதப்படும் ஒரு நகரைக் குறிக்கும். யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதல் அரசனின் பெயர் "சிங்கையாரியன்" எனவும் அவனைத் தொடர்ந்து கிபி 1478 வரை அரசாண்ட கனகசூரிய சிங்கையாரியன் ஈறாக எல்லா அரசர்களும் சிங்கையாரியன் என்னும் பட்டத்தைக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் வந்த இரண்டு அரசர்கள் இப்பட்டத்தைச் சுருக்கிச் சிங்கைப் பரராசசேகரன், சிங்கைச் செகராசசேகரன் என்னும் பெயர்களுடன் ஆட்சி புரிந்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது.யாழ்ப்பாண வைபவமாலை, 1995, பக். 50. இப்பட்டப் பெயரே சிங்கைநகர் என்னும் ஒரு நகர் இருந்தது என்ற கருத்து உருவானதற்கான அடிப்படை ஆகும். மேலும் தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் மேற்குத்தொடர்ச்சி மலைப்ஒபகுதியை ஒட்டி அமைந்துள்ள கொங்கு நாட்டின் இருபத்தி நான்கு நாடுகளில் ஒன்று காங்கேயம். இதன் பழைய பெயரும் "சிங்கைநகர்" என்பதே. இந்நாட்டின் முதன்மை ஆட்சியாளர்களாக கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமுதாயத்து "பெருங்குடி குலத்தார்" இருந்தனர். பிற்காலத்தில் சோழர் ஆட்சி வீழ்ந்தபின் சோழ தேசத்து வளநாடுகளில் ஒன்றான இராஜகம்பீரவளநாட்டை ஆண்ட அரசகுடியினரான செங்கண்ணக் குலத்தார் இவ்வூரில் மணவினைப்பூண்டு சிங்கையை சீதனமாக கொண்டு இப்பகுதியிலேயே குடியேறி காங்கேய நாட்டு சபையில் முன்னுரிமையும் பெற்ற இவர்கள் "பல்லவராயன்" பட்டம் தாங்கியவர்கள். பின்னர் இப்பகுதியில் பதினெண் வேளிரில் இருவரான தூரம்பாடி தூரன் மற்றும் திருஆவிநன்குடி பதுமன் குலத்தாரும், வணிகர் பெருந்தகையோரும் வெள்ளோடு காணியாளருமான உலகுடைய சாத்தந்தை குலத்தாரும், பதரி, வேந்தன், வாணி ஆகிய குலத்தாரும் இவ்வூரில் குடியமர்த்தப்பெற்றனர். பல்வேறு கருத்துக்கள் சிங்கைநகர் என்னும் நகரம் எது என்பது குறித்து யாழ்ப்பாண வரலாறு தொடர்பாக ஆராய்ந்த அறிஞரிடையே ஒருமித்த கருத்து இல்லை. இருக்கக்கூடிய மிகக் குறைவான வரலாற்று மூலங்களைச் சான்றாகக் கொண்டு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு. சிங்கைநகர் என்பது நல்லூரே. சிங்கைநகர் இன்றைய வல்லிபுரப் பகுதியில் இருந்தது. இது நல்லூருக்கு முன்னர் தலைநகராக இருந்தது. சிங்கைநகர் யாழ் குடாநாட்டுக்குத் தெற்கே தலைநிலத்தில் இருந்தது. சிங்கைநகர் என்பது கொங்கு நாட்டு காங்கேயமே. சிங்கைநகர் என்பது நல்லூரே சிங்கைநகர் என்பது நல்லூரே என்பது இன்னொரு சாரார் கருத்து. கலாநிதி கா. இந்திரபாலா போன்றோர் இக்கருத்தை வலியுறுத்தி வந்தனர். யாழ்ப்பாண வைபவமாலை போன்ற யாழ்ப்பாண வரலாற்று நூல்களும் நல்லூர் தவிர்ந்த இன்னொரு நகரம் தலைநகரமாயிருந்தது பற்றிப் பேசவில்லை. சிங்கைநகர் என்பது வல்லிபுரமே சிங்கைநகர் என்பது யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையோரமாக அமைந்துள்ள இடமான வல்லிபுரம் என்ற இடமே என்பது சில வரலாற்றாளர்களின் கருத்து. செ. இராசநாயகம் போன்றோர் இக்கருத்துடையவர்கள். இவ்விடத்தில் பழங்காலத்தில் கட்டிடங்கள் இருந்ததற்கான தொல்பொருள் சான்றுகளை வைத்தும், தென்னிலங்கையிலுள்ள கோட்டகம என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டொன்றில், .... பொங்கொலி நீர்ச் சிங்கைநக ராரியனைச் சேராவனுரேசர்..., என்று வரும் தொடரில் பொங்கொலி நீர்ச் சிங்கைநகர் எனச் சிங்கைநகருக்கு அடைமொழி தரப்பட்டிருப்பதால், இந்நகரம், பொங்கி ஒலிக்கின்ற அலைகளோடு கூடிய கடற்கரையில் அமைந்திருந்திருக்க வேண்டுமென்ற அடிப்படையிலும் இக் கருத்து முன்வைக்கப் படுகின்றது. சிங்கைநகர் குடாநாட்டுக்குத் தெற்கே மிக அண்மைக்காலத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் சிங்கை நகரத்தைக் குடாநாட்டுக்கு வெளியே அடையாளம் காணவும் முயன்றுவருகின்றனர். தமிழ்நாட்டுச் சிங்கைநகர் சிங்கைநகர் என்னும் ஒரு நகரம் கொங்கு நாட்டில் இருந்தது. இது காங்கேயம் என "கொங்கு நாட்டு காணி பாடல்கள்" மூலம் அறியலாம். மேலும் பெருங்குடி போன்ற குலத்தார்களின் காணி பாடல்கள் யாவும் காங்கேயத்தை சிங்கைநகர் என்றே குறிக்கின்றன. குறிப்புகள் உசாத்துணைகள் மயில்வாகனப் புலவர், யாழ்ப்பாண வைபவமாலை குல. சபாநாதன் பதிப்பு, இந்துசமய அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 1995. வெளி இணைப்புகள் சிங்கை நகர் பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும் பகுப்பு:யாழ்ப்பாண வரலாறு
அல்வார் ஆல்ட்டோ
https://ta.wikipedia.org/wiki/அல்வார்_ஆல்ட்டோ
அல்வார் ஆல்ட்டோ, எனப் பரவலாக அறியப்பட்ட, "ஹியூகோ அல்வார் ஹென்றிக் ஆல்ட்டோ" (பெப்ரவரி 3, 1898 - மே 11, 1976) இருபதாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞர் வரிசையில் குறிப்பிடத்தக்கவர். இவர்பின்லாந்து நாட்டிலுள்ள குவொர்தானே (Kuortane) என்னுமிடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு நில அளவையாளர். இவர் 1921 ல், ஹெல்சிங்கி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலைத் துறையில் பட்டம் பெற்றார். இதன் பின்னர் இவர் சொந்தத் தொழிலில் ஈடுபட்டார். 1924 ஆம் ஆண்டு, தன்னிலும் நான்கு வயது மூத்த கட்டிடக்கலைஞரான ஐனோ மார்சியோ என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். 1949ல் ஐனோ இறந்த பின்னர் 1952 ஆம் ஆண்டு தன்னிலும் 25 வயது இளையவரான இன்னொரு கட்டிடக்கலைஞர் எல்சா கைசா மக்கினியேமி என்பவரை மணந்தார். 1946 தொடக்கம் 1948 வரையில் MIT இல் கட்டிடக்கலைத் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், 1963 தொடக்கம் 1968 வரை பின்லாந்து அக்கடமியின் தலைவராகவும் பதவி வகித்தார். இவர் ஹெல்சிங்கி நகரில் தனது 78 ஆவது வயதில் காலமானார். அல்வார் ஆல்ட்டோவின் கட்டிடங்களின் வடிவமைப்பு, ஒரு பொருளின் வடிவம் (form) அப் பொருளின் செயற்பாட்டின் (Function) அடிப்படையிலேயே தீர்மானிக்கப் படுகின்றது என்ற கொள்கையை அடியொற்றி அமைந்தது. மனிதன், இயற்கை, கட்டிடம் ஆகிய மூன்றையும் சிறப்பாகக் கையாண்டு அவற்றுக்கிடையிலான தொடர்புகளை அழகுணர்ச்சியோடு வெளிப்படுத்தும் வகையில் அவருடைய கட்டிடங்கள் அமைந்திருந்தன. குறிப்புகள் பகுப்பு:1898 பிறப்புகள் பகுப்பு:1976 இறப்புகள் பகுப்பு:பின்லாந்து கட்டிடக் கலைஞர்கள்
நவரத்தினங்கள்
https://ta.wikipedia.org/wiki/நவரத்தினங்கள்
thumb|200px|right|நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட கழுத்தணி அல்லது சரடு. நவரத்தினங்கள் எனப்படுபவை ஒன்பது வகையான இரத்தினக் கற்களாகும். இவை ஆபரணத் தயாரிப்பில் பயன்படுகின்றன. இந்து, சமணம், பௌத்தம், சீக்கியம் மற்றும் பிற மதங்களில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. வைரம் Diamond வைடூரியம் Cat's eyeமுத்து Pearlமரகதம் Emeraldமாணிக்கம் Rubyபவளம் Coralபுட்பராகம் Topazகோமேதகம் Garnetநீலம் Sapphire வெளி இணைப்புக்கள் Graha-anukul-ratna-vishesajna-parishad: Non-profit academic organization on Navaratna-based 'Planetary Gemology' பகுப்பு:நவரத்தினங்கள்
விருதுநகர்
https://ta.wikipedia.org/wiki/விருதுநகர்
பாரதிராஜா
https://ta.wikipedia.org/wiki/பாரதிராஜா
பாலு மகேந்திரா
https://ta.wikipedia.org/wiki/பாலு_மகேந்திரா
பாலு மகேந்திரா (Balu Mahendra, 20 மே 1939 - 13 பெப்ரவரி 2014) இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர். பிறப்பு 1939 மே 20 ஆம் தேதி இலங்கையில் மட்டக்களப்பு அருகே அமிர்தகழி என்ற சிற்றூரில் பிறந்தவர் பாலநாதன் மகேந்திரன் என்ற பாலு மகேந்திரா. இயற்பெயர், மகேந்திரா. அவரது தந்தை பாலநாதன் ஒரு சிறந்த கணித ஆசிரியர், கல்லூரி அதிபர். தனது ஆரம்ப கல்வியை புனித மிக்கேல் கல்லூரியில் பயின்றார். லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்தார். பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக்கலை பயின்ற பாலு மகேந்திரா 1969 இல் தங்கப்பதக்கம் பெற்றார். முதல் தாக்கம் தான் பாடசாலையில் படித்த போது பார்த்த பதேர் பாஞ்சாலி திரைப்படம் தனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார். பின்னர் ப்ரிட்ஜ் ஒப் ரிவெர் க்வாய்(Bridge of river kwai) திரைப்படத்தின் ஒரு பகுதி இலங்கையில் படமாக்கப்படும் போது பாலகன் பாலு மகேந்திரா அதனை காண நேர்கின்றது. அந்த தாக்கமே அவரை திரைப்படத்துறையில் ஈடுபாடுடையவராக்குகியது.http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yWSj9HoG_a0#t=160 திரைப்பட நுழைவு அவரது பட்டயப்படிப்பு திரைப்படத்தைக் கண்டு அவரை 'செம்மீன்' படப்புகழ் ராமு காரியத் அவரது 'நெல்லு' படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய அழைத்தார். அப்படத்துக்கு 1972இல் சிறந்த ஒளிப்பதிவுக்கு கேரள மாநில விருது பெற்றார். அதைத் தொடர்ந்து பல மலையாள திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார். கெ. எஸ். சேதுமாதவனின் 'சுக்கு',' ஜீவிக்கான் மறந்நு போய ஸ்தீரி' 'சட்டக்காரி' பி என் மேனோனின் 'பணிமுடக்கு' போன்றவை முக்கியமான படங்கள். தெலுங்கில் பிரபலமான சங்கராபரணம் படத்தை ஒளிப்பதிவு செய்தார். ஒளிப்பதிவில் தனக்கு என்று ஒரு புதிய பாணியினை அமைத்துக் கொண்டார். இயற்கை ஒளியினை அதிகமாக பயன்படுத்துவது இவருடைய தனித்துவம். முதலில் ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக மாறியவர். 1977இல் பாலு மகேந்திரா அவரது முதல் படமான 'கோகிலா'வை கன்னட மொழியில் இயக்கினார். பாலுமகேந்திரா ஒளிப்பதிவுசெய்த முதல் தமிழ்படம் முள்ளும் மலரும் 1977இல் வெளியாயிற்று. 1978இல் தமிழில் அவரது முதல் படமான 'அழியாத கோலங்கள்' வெளியாயிற்று. பாலு மகேந்திரா மணிரத்தினம் போன்ற பல முக்கியமான இயக்குநர்களின் முதல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சின்னத்திரையில் பாலு மகேந்திரா கதை நேரம் எனும் தொலைக்காட்சி தொடரினை சன் தொலைக்காட்சிக்காக பாலு மகேந்திரா இயக்கினார். இத்தொடர்கள் 52 கதைகளை கொண்டிருந்தன அவற்றில் 10 கதைகள் எழுத்தாளர் சுஜாதாவினுடையதாகும்.http://kirukkal.com/2006/07/balu-mahendras-kathai-neram/ நுண்ணுணர்வும் படைப்பாற்றலும் பாலு மகேந்திரா தனது பேச்சுக்களின் போது படைப்பாற்றல், நுண்ணுணர்வு பற்றி பின்வருமாறு கூறுவார் "ஒரு படைப்பாளிக்கு அடிப்படைத்தேவை நுண்ணுணர்வு. அந்த நுண்ணுணர்வு இல்லையென்றால் அவன் படைப்பாளியே அல்ல. மற்றவர்களால் பார்க்க முடியாத விடையங்களை உன்னால் பார்க்க முடிகிறதே எதனால்? உன்னிடம் நுண்ணுணர்வு உள்ளது. எந்த நுண்ணுணர்வு உனது படைப்பை உன்னதப்படுத்துகின்றதோ அதே நுண்ணுணர்வு உனது தனிப்பட்ட வாழ்வை நாறடித்துக் கொண்டிருக்கும். ஏனெனில் நீ அதிகம் எதிர்வினை புரிபவனாய் இருப்பாய். உலகில் உள்ள படைப்பாளிகளுக்கு இருக்கக்கூடிய சாபக்கேடுதான் இது."http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=5kStXpK8B28#t=408. விருதுகளும் பாராட்டுகளும் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ண பூக்கள். சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது. இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவராவார். தேசிய திரைப்பட விருதுகள் ஆண்டு திரைப்படம் மொழி துறை1978கோகிலாகன்னடம்ஒளிப்பதிவு1983மூன்றாம் பிறைதமிழ்ஒளிப்பதிவு1988வீடுதமிழ்இயக்கம்1990சந்தியா ராகம்தமிழ்இயக்கம்1992வண்ண வண்ண பூக்கள்தமிழ்இயக்கம் மாநில அரசு விருதுகள் ஆண்டு திரைப்படம் மாநில அரசு துறை1974நெல்லுகேரளம்ஒளிப்பதிவு1975பிரயாணம்கேரளம்ஒளிப்பதிவு1977கோகிலாகர்நாடகம்திரைக்கதை பிலிம்பேர் விருதுகள் ஆண்டு திரைப்படம் மொழி துறை1983மூன்றாம் பிறைதமிழ்இயக்கம்1983ஓலங்கள்மலையாளம்இயக்கம்1988வீடுதமிழ்இயக்கம் நந்தி விருதுகள் ஆண்டு திரைப்படம் மொழி துறை1978மனவூரி பண்டவலுதெலுங்குஒளிப்பதிவு1982நீர்க்காசனாதெலுங்குஒளிப்பதிவு பாராட்டாக கிடைத்த காட்சிக் காணி பாலு மகேந்திராவின் திறமையை பாராட்டி சத்யஜித் ராயின் ஒளிப்பதிவாளரும், இந்திய சினிமாவின் தலை சிறந்த ஒளிப்பதிவாளருமாக கருதப்படும் சுப்ரதா மித்ரா தனது காட்சிக் காணியை பரிசாக வழங்கியுள்ளார்.http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yWSj9HoG_a0#t=218 இயக்குனரான உதவியாளர்கள் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். "சேது", "நந்தா", "பிதாமகன்" போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவின் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.சீனுராமசாமி, ராம், வெற்றி மாறன், சுகா போன்றவர்கள் மற்ற உதவியாளர்களாவர். பாலு மகேந்திரா படிக்கும் காலத்திலேயே பாலி மிஸ்திரி, ஜி.கே.மூர்த்தி, சுப்ரதோ முகர்ஜி ஆகியோரின் ஒளிப்பதிவால் கவரப்பட்டவர். ஆனால் அவர் எவரிடமும் உதவியாளராக வேலை செய்யவில்லை. பாலு மகேந்திரா இயக்கிய 'கதைநேரம்' தமிழின் முக்கியமான பல படைப்பாளிகளின் ஆக்கங்களை சின்னத்திரை வழியாக காட்சிப்படுத்தி தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டுசென்றது. உந்தப்பட்டவர்கள் சந்தோஷ் சிவன்http://www.outlookindia.com/article.aspx?281021, ரவி கே.சந்திரன்http://www.behindwoods.com/features/Interviews/interview-5/cinematographer/ravi-k-chandran.html ஆகியோர் இவரால் உந்தப்பட்ட சில பிரபல ஒளிப்பதிவாளர்கள் ஆவர். பணியாற்றிய திரைப்படங்கள் இயக்குநராக கோகிலா (1977; கன்னடம்) அழியாத கோலங்கள் (1979) மூடுபனி (1980) மூன்றாம் பிறை (1982) இயக்குநராகவும் தொகுப்பாளராகவும் ஓலங்கள் (1982; மலையாளம்) நிரீக்சனா (1986; தெலுங்கு) ஊமக்குயில் (1983; மலையாளம்) சாத்மா (1983; இந்தி) நீங்கள் கேட்டவை (1984) உன் கண்ணில் நீர் வழிந்தால் (1985) யாத்ரா (1985; மலையாளம்) ரெட்டை வால் குருவி (1987) வீடு (1988) சந்தியா ராகம் (1989) வண்ண வண்ண பூக்கள் (1992) சக்கரவியூகம் (1992) மறுபடியும் (1993) சதிலீலாவதி (1995) ஓர் எக் பிரேம் ககனி (1996; இந்தி) ராமன் அப்துல்லா (1997) என் இனிய பொன்னிலாவே (2001) ஜூலி கணபதி (2003) அது ஒரு கனாக்காலம் (2005) தலைமுறைகள் (2013; நடித்தும் உள்ளார்) ஒளிப்பதிவாளராக பனிமுடக்கு (1972; மலையாளம்) மாயா (1972; மலையாளம்) நிர்த்தசாலா (1972; மலையாளம்; ஒரு பாடல்) சாத்திரம் ஜெயிச்சு மனுசன் தோத்து (1973; மலையாளம்) அபிமனவந்துலு (1973; தெலுங்கு) கலியுகம் (1973; மலையாளம்) சுக்கு (1973; மலையாளம்) நெல்லு (1974; மலையாளம்) ராஜகம்சம் (1974; மலையாளம்) சட்டக்காரி (1974; மலையாளம்) ஜீவிகன் மரன்னு போயா ஸ்திரீ (1974; மலையாளம்) மக்கள் (1974; மலையாளம்) ராகம் (1975; மலையாளம்) பிரயாணம் (1975; மலையாளம்) டூரிஸ்ட் பங்களா (1975; மலையாளம்) சுவன்ன சந்தியாக்கல் (1975; மலையாளம்) அனுராகாலு (1975; தெலுங்கு) சீனவாலா (1975; மலையாளம்) மிசி (1976; மலையாளம்) பொன்னி (1976; மலையாளம்) சென்னாயா வளர்த்திய குட்டி (1976; மலையாளம்) அமெரிக்க அம்மாயி (1976; தெலுங்கு) தாரம் மரிண்டி (1977; தெலுங்கு) பந்துலம்மா (1977; தெலுங்கு) லம்பதொல்ல ராமதாசு (1978; தெலுங்கு) முள்ளும் மலரும் (1978) மனவூரி பண்டவுலு (1978; தெலுங்கு) இரு நிலவுகள் (1979; தெலுங்கு) உள்கத்தல் (1979; மலையாளம்) சங்கராபரணம் (1980; தெலுங்கு) கலியுக ராவணசுருது (1980; தெலுங்கு) எச்சில் இரவுகள் (1982) பல்லவி அனுபல்லவி (1983; கன்னடம்) உறங்காத நினைவுகள் (1983) தொலைக்காட்சி கதை நேரம் (2000) மறைவு பாலு மகேந்திரா 2014 பெப்ரவரி 13 அன்று சென்னையில் மாரடைப்பால் காலமானார்.. துணுக்குகள் பாலு மகேந்திரா இலங்கை வானொலி நாடகங்களில் நடித்தவர். இவர் புனேயில் திரைப்படக்கல்லூரியில் பயின்றுவிட்டு, இலங்கை திரும்பி சிங்களப் படங்களில் சந்தர்ப்பம் வேண்டி, தனது குறும்படமான "செங்கோட்டை" யை கொழும்பு "சவோய்" திரையரங்கில் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு திரையிட்டும் காண்பித்தார். சந்தர்ப்பம் கிடைக்காததினால் இந்தியா திரும்பினார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பாலு மகேந்திரா - சர்வதேச திரைப்பட தரவுத்தளம் "கேமராக் கண்களுடன் இயல்பாகக் கதை சொன்னவர் பாலு மகேந்திரா" பிபிசி தமிழோசை தமிழ் சினிமாவை புதிய பரிணாமத்திற்கு அழைத்து சென்ற பாலுமகேந்திரா காலமானார் - கமல், பாரதிராஜா கண்ணீர் அஞ்சலி!! தினமலர் பாலுமகேந்திரா மறைவு: கவிஞர் வைரமுத்து இரங்கல் தினமணி ‘Cinematography has changed, so also the way films are made’ In a first, Balu Mahendra faces the camera ஒளிப்படங்களின் தொகுப்பு Naturalism was his signature - ஒரு அஞ்சலிக் கட்டுரை பகுப்பு:1939 பிறப்புகள் பகுப்பு:2014 இறப்புகள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பகுப்பு:மலையாளத் திரைப்பட இயக்குநர்கள் பகுப்பு:இந்தித் திரைப்பட இயக்குநர்கள் பகுப்பு:கன்னடத் திரைப்பட இயக்குநர்கள் பகுப்பு:மட்டக்களப்பு மாவட்ட நபர்கள் பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள் பகுப்பு:இலங்கை இந்துக்கள் பகுப்பு:தேசிய திரைப்பட விருது வென்றவர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைப்படத் தொகுப்பாளர்கள்
மணிரத்னம்
https://ta.wikipedia.org/wiki/மணிரத்னம்
ஆதவன் (எழுத்தாளர்)
https://ta.wikipedia.org/wiki/ஆதவன்_(எழுத்தாளர்)
ஆதவன் (Aadhavan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவரது இயற்பெயர் கே.எசு.சுந்தரம் ஆகும். 1942 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 ஆம் நாள் இவர் பிறந்தார். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தினார். முதலில் இரவு வரும் என்ற சிறுகதை நூலுக்கு 1987 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது ஆதவனுக்கு வழங்கப்பட்டது. வாழ்க்கைச் சுருக்கம் ஆதவன் 1942 ஆம் ஆண்டில் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், பிள்ளைகள் சாருமதி, நீரஜா. இந்திய இரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தில்லியில் உள்ள 'நேஷனல் புக் டிரஸ்டின்' தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987, சூலை 19ஆம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது "முதலில் இரவு வரும்" என்ற சிறுகதைக்காக வழங்கபட்டது. இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு" என்கிற கதை ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமானது. படைப்புகள் குறும்புதினம் இரவுக்கு முன்பு வருவது மாலை (1974) சிறகுககள் மீட்சியைத் தேடி கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன் நதியும் மலையும் பெண், தோழி, தலைவி (1982) சிறுகதை கனவுக்குமிழிகள் (1975) கால் வலி (1975) ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் (1980) புதுமைப்பித்தனின் துரோகம் (1981) முதலில் இரவு வரும் (1985) நிழல்கள் புதினம் காகித மலர்கள் (1977) என் பெயர் ராமசேஷன் (1980), வித்தாலி பூர்ணிகாவினால் உருசிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாயின. நாடகம் புழுதியில் வீணை மேற்கோள்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:1987 இறப்புகள் பகுப்பு:1942 பிறப்புகள் பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட நபர்கள் பகுப்பு:தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்
தி. ஜானகிராமன்
https://ta.wikipedia.org/wiki/தி._ஜானகிராமன்
பொருளியல்
https://ta.wikipedia.org/wiki/பொருளியல்
பொருளியல் (economics) என்பது மக்கள் பயன்படுத்தும் அல்லது ஆக்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் பற்றிய உற்பத்தி, பகிர்வு, நுகர்வு, என்பன பற்றி ஆராயும் சமூக அறிவியல் ஆகும்.உற்பத்தி, பகிர்வு என்பன பற்றிய கருத்துருவாக்கங்கள் வரலாற்றில் நீண்ட காலத்திற்கு முன்பாக உருவாக்கப்பட்டபோதினும் 1776 ல் வெளிவந்த ஆடம் இசுமித் என்பாரின் வெல்த் ஆஃப் நேஷன்ஸ் (The Wealth of Nations, நாடுகளின் செல்வம்) எனும் நூலில் இசுமித் அனைத்து பொருளியல் கருத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்து பொருளியல் என முறைபடுத்தப்பட்ட அறிவியல் துறையாக புத்தாக்கம் பெற்றது. இவர் அரசியல் பொருளியலின் தந்தை என அறியப்படுகிறார். பொருளியல் என்ற சொல் மிகவும் பழமையான ஆய்க்கனோமிக்ஸ் என்னும் கிரேக்க மொழி சொல்லில் இருந்து பெறப்பட்டது. பொருளியல் பல துணைப் பகுப்புக்களாக பலவித அடிப்படையிலும் பிரிக்கப்படுள்ளது. இவற்றுள் முக்கிய பெரும்பகுப்பாக கருதப்படக் கூடியன சிற்றினப்பொருளியல் (microeconomics), பேரினப்பொருளியல் (macroeconomics). என்பனவாகும். இவைதவிர நிறுவனங்களின் பொருளியல் (Institutional economics), கார்ல் மார்க்ஸிய பொருளியல் (Marxian economics), சூழல்நலம் போற்றும் பொருளியல் (Green economics). எனப் பலவிதமாக பிரிக்கப்பட்டுள்ளது. பொருளியல் பகுப்பாய்வை சமுதாயத்தின் அனைத்துத் தரப்புகளுக்கும் பயன்படுத்தலாம்; வழமையான வணிகம், நிதியம், உடல்நல கவனிப்பு, மற்றும் அரசுத்துறை மட்டுமன்றி குற்றங்கள், <ref>Friedman, David D. (2002). "Crime," The Concise Encyclopedia of Economics.'.' Retrieved October 21, 2007.</ref> கல்வி,உலக வங்கிக் குழுமம் (2007). "Economics of Education.". Retrieved October 21, 2007. குடும்பம், சட்டம், அரசியல், சமயம்,Iannaccone, Laurence R. (1998). "Introduction to the Economics of Religion", Journal of Economic Literature, 36(3), pp. 1465–1495.. சமூக நிறுவனங்கள், போர்,Nordhaus, William D. (2002). "The Economic Consequences of a War with Iraq", in War with Iraq: Costs, Consequences, and Alternatives, pp. 51–85. American Academy of Arts and Sciences. Cambridge, Massachusetts. Retrieved October 21, 2007. அறிவியலுக்கும் Arthur M. Diamond, Jr. (2008). "science, economics of", The New Palgrave Dictionary of Economics, 2nd Edition, Basingstoke and New York: Palgrave Macmillan. Pre-publication cached ccpy. பயன்படுத்தப்படுகிறது. 21வது நூற்றாண்டில், சமூக அறிவியலில் பொருளியலின் தாக்கத்தை ஒட்டி இது பொருளியல் பேராதிக்கமாகக்கருதப்படுகிறது.• Lazear, Edward P. (2000|. "Economic Imperialism", Quarterly Journal Economics, 115(1)|, p. 99–146. Cached copy. Pre-publication copy(larger print.)   • Becker, Gary S. (1976). The Economic Approach to Human Behavior. Links to arrow-page viewable chapter. University of Chicago Press. பொருளியலுக்கான வரைவிலக்கணங்கள் thumb|400px|1990 முதல் 2007 வரையிலான நாடுகளின் ஜிடிபி வளர்ச்சியை காட்டும் உலகப்படம். பொருளியலுக்கான வரைவிலக்கணம் பலராலும் பலவிதமாக முன்வைக்கப்பட்ட போதிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டும் பின்னர் மறுக்கப்பட்டும் வந்துள்ளது. ஆதம் இசுமித், இலயனல் இராபின்சு, பவுல் சாமுவேல்சன் என்பாரின் வரைவிலக்கணங்கள் முதன்மையானவை. செல்வம் பற்றி ஆராயும் இயல் துவக்க காலத்தில் தொழிற்புரட்சியால் நாட்டில் பண முதலீடுகளாலும் இயந்திரப் பயன்பாட்டினாலும் செல்வம் பெருகியதால் ஆதம் இசுமித் வரையறுத்த பொருளியலில் செல்வம் முதன்மை பெற்றது. இங்கு செல்வம் எனப்படுவது மனித விருப்பங்களை நிறைவு செய்யும் அனைத்துப் பண்டங்களையும் குறிக்கும். இருப்பினும் காற்று, நீர் போன்ற அளவிலா அளிப்பு உள்ள பண்டங்கள் செல்வமாக கருதப்படுவதில்லை. செல்வ உற்பத்தி மற்றும் செல்வப் பகிர்வு சார்ந்த செயல்முறை அறிவியல் என்று வரையறுக்கப்பட்டது. பொருள்சார் நலன் பற்றி ஆராயும் இயல் 1890ஆம் ஆண்டில் ஆல்பிரடு மார்ஷல் பொருளாதாரக் கோட்பாடுகள் என்ற நூலை வெளியிட்டார். அதில் மனித இனத்தின் செயல்பாடுகளை பொருளியல் ஆராய்வதாக புதிய கருத்தை வெளியிட்டார். செல்வத்தை ஆராய்வதுடன் கூடுதலாக மனிதன் பல்வேறு பொருளியல் காரணிகளாக (வாங்குபவர்-விற்பவர், உற்பத்தியாளர் – நுகர்வோர், சேமிப்பாளர் – முதலீட்டாளர், முதலாளி – தொழிலாளி) ஆற்றும் வினைகளை ஆய்வதே பொருளியல் கற்கை என இவர் வரையறுத்தார். சுருக்கமாக பொருள்சார் நலனை எவ்வாறு உயர்த்துவது என்பதைப்பற்றிய கல்வியாக பொருளியலைக் கருதினார். இவரது வரைவிலக்கணம் நலப் பொருளாதாரம் எனப்பட்டது. இது ஆதம் இசுமித்தின் வரைவிலக்கணத்தை விட மேம்பட்டதாக இருப்பினும் இதுவும் பருப்பொருட்களை மட்டுமே கருத்தில் கொள்வதாக விமரிசிக்கப்பட்டது. கிடைப்பருமை பற்றிய இயல் பேராசிரியர் லயனல் ராபின்ஸ் அவர்களினால் பொருளியலின் இயல்பும் உட்கருத்துக்களும் பற்றிய கட்டுரைகள் (1932) என்ற நூலில் முன்வைக்கப்பட்ட பின்வரும் வரைவிலக்கணம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது: "பொருளியல் என்பது மாற்றுபயன்பாடு உள்ள, கிடைத்தற்கு அருமையான வளங்களைக் கொண்டு, மாந்தர்கள் தமது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும் நடப்புகளை ஆராயும் அறிவியலாகும்". இங்கு கிடைத்தற்கு அருமை (கிடைப்பருமை) எனப்படுவது கிடைக்கின்ற வளங்கள் யாவும் எல்லாத் தேவைகளையும் பற்றாக்குறையினையும் தீர்க்க முடியாமல் போவதை குறிக்கும். கிடைப்பருமை இல்லாதபோதும், வளங்களுக்கு மாற்றுப்பயன்பாடு இல்லாத போதும் அங்கு பொருளியல் கேள்விகள் எழாது. இந்த வரைவிலக்கணம் கிடைப்பருமை அல்லது பற்றாக்குறை இலக்கணம் எனப்படுகிறது. புதுக்கெய்னீசிய பொருளியல் தற்போதைய காலகட்டத்தில் புதுக்கெய்னீசிய பொருளியலாக சாமுவேல்சனின் பொருளியல் வரைவிலக்கணம் அமைந்துள்ளது. இதன்படி மாற்றுப் பயன்பாடுடைய பற்றாக்குறையான வளங்களை மாந்தர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் பண்டங்களையும் பணிகளையும் தற்கால மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக எவ்வாறு உற்பத்தி செய்கின்றனர் என்பதைக் குறித்த ஆய்வாக பொருளியலை வரையறுக்கிறார். இது இராபின்சனை ஒத்ததாக இருப்பினும் நிகழ்காலத் தேவைகளுக்காக மட்டுமின்றி எதிர்காலத் தேவைகளுக்காகவும் உற்பத்தி செய்யப்படுவதை கருத்தில் கொள்கிறது. தவிர சேவைப்பணிகள் எனப்படும் பருப்பொருள் உற்பத்தி செய்யாத துறைகளையும் பொருளியல் நடவடிக்கைகளாகக் கொள்கிறது. சில முக்கிய கருதுகோள்கள் thumb|300px|பொருளியலாளர்கள் ஒரு சந்தையில் எவ்வாறு மக்கள் முடிவெடுக்கின்றனர் என ஆராய்கின்றனர்.|alt=A vegetable vendor in a marketplace. சில பொதுவான எடுகோள்கள்: அனைத்து மாந்தரும் தங்கள் விருப்பத்தேர்வுகளை முடிவு செய்ய வேண்டும். ஒரு பண்டத்தின் விலை அதற்கு ஒருவர் கொடுக்கத்தயாராக உள்ள பணமாகும். ஒரு பண்டத்தைப் பெற ஒருவர் பணம் அல்லது மாற்றுப் பண்டத்தை தர முனையும்போது அவற்றால் அவர் பெறக்கூடிய மாற்றுத் தேவைகளை இழக்கிறார். எனவே ஒரு பண்டத்தின் உண்மையான விலை அதைப் பெற ஒருவர் இழக்கும் பண்டத்தின் மதிப்பாகும். இது சந்தர்ப்பச்செலவு எனப்படும். ஊக்கத்தொகைகளுக்கு மாந்தர் எதிர்வினை யாற்றுகின்றனர். ஒரு கவர்ச்சிகரமானத் திட்டம் கூடுதல் மக்களை வாங்கச் செய்யும். பொருளியல் வாழ்விற்கான சரியான அமைப்பாக சந்தைகள் விளங்குகின்றன. அனைவரும் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற முயன்றால் ஆடம் சிமித் கொள்கைப்படி, சந்தையின் “புலனாகா கை” அனைவரும் நலனுடன் இருக்குமாறு வைத்திருக்கும். சிலநேரங்களில் விலைகள் குமுகத்திற்கு ஏற்படுத்தும் நன்மை / தீமைகளை காட்டுவதில்லை. காட்டாக, காற்று மாசடைதல் குமுகத்திற்கு தீமையும் கல்வி குமுகத்திற்கு நன்மையும் விளைவிக்கின்றன. குமுகத்திற்கு தீமை விளைவிக்கும் பண்டங்கள்/சேவைகளுக்கு அரசு கூடுதல் வரி விதித்து விற்பனையைக் கட்டுப்படுத்தலாம்.அதேபோல நன்மை பயக்கும் விற்பனையை ஆதரிக்கலாம். ஒரு நாட்டின் வாழும் தரம் அந்நாட்டு மக்கள் உற்பத்தி செய்யும் அல்லது சேவைகளை வழங்கும் திறன்களைப் பொறுத்து உள்ளது. உற்பத்தி திறன் என்பது மொத்தம் உற்பத்தியான பண்டங்களை அதை உற்பத்தி செய்ய எடுத்துக்கொண்ட நேரத்தால் வகுத்து கிடைப்பதாகும். மொத்த பண நிரம்பல் கூடுதலாகும்போது அல்லது உற்பத்திச் செலவு கூடும்போது விலைகள் ஏறுகின்றன. இது பணவீக்கம் எனப்படுகிறது. மதிப்பு மதிப்பு என்பதை ஒரு மனிதத்தேவையை நிறைவு செய்ய ஒருவர் கொடுப்பதற்கு தயாராக உள்ள செலவு ஆகும். ஒரு பண்டத்தின் மதிப்பு சார்புத் தன்மை உடையது. இது காலம், இடம், மற்றும் பொருள்களுக்கிடையேயான தொடர்புகளை வெளிப்படுத்துகிறது. மதிப்பு, பயன்பாட்டு மதிப்பு, மாற்று மதிப்பு என இருவகையாக பகுக்கப்படுகிறது. அளவில்லா அளிப்புள்ள காற்று, நீர், சூரிய ஒளி இவற்றிற்கு பயன்பாட்டு மதிப்பு உண்டு. ஆனால் கிடைப்பரிய பண்டங்களுக்கு மற்ற பண்டங்களை மாற்றாக தர முனையும் மாற்று மதிப்பே பொருளியலில் ஆயப்படுகிறது. மாற்று மதிப்பைப் பெற அப்பண்டம் பயன்பாடு உள்ளதாகவும் பற்றாக்குறையானதாகவும் பரிமாற்றம் செய்யக்கூடியனவாகவும் இருக்க வேண்டும். மதிப்பை பணம் என்ற அலகால் அளவிடும்போது அது விலை எனப்படுகிறது. கேள்வியும் நிரம்பலும் சந்தையில் ஒரு பண்டத்தின் விலையை தீர்மானிக்கப் பயன்படும் பொருளியியல் மாதிரிகளில் ஒன்றாக கேள்வியும் நிரம்பலும் (அல்லது தேவையும் அளிப்பும்) காணப்படுகிறது. ஒரு பண்டத்தை வாங்குவதற்கான விருப்பத்தையும், வாங்கும் சக்தியையும்,வாங்கிவிட வேண்டும் என்ற முடிவையும் கேள்வி (தேவை) குறிக்கிறது. ஒன்றை வாங்கவியலா நபரின் தேவை விருப்பமாகவே அமையும்; அது பொருளியலில் தேவையாகக் கொள்ளப்படாது. பண்டங்களின் விலைக்கும் தேவைக்கும் உள்ள தொடர்பை தேவைக்கோடு தீர்மானிக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட விலையில் விற்கப்படும் பண்டங்களின் அளவு நிரம்பல் அல்லது அளிப்பு எனப்படுகிறது. பல விலைகளில் உற்பத்தியாளர்கள் வழங்க தயாராக உள்ள அளிப்பின் அளவை அளிப்புக்கோடு வெளிப்படுத்துகிறது. தேவைக்கோடும் அளிப்புக்கோடும் எதிர் எதிரானவை. இவை இரண்டும் ஒரு குறிப்பிட்ட விலையில் வெட்டிக்கொள்ளும். இந்தக் குறிப்பிட்ட விலையில் வாங்குபவர்களின் விருப்பமும் விற்பவர்களின் விருப்பமும் சமமாகும். இது சமநிலை விலை எனப்படுகிறது. கிடைப்பருமை எண்ணிலடங்காத தேவைகளை முழுமையாக நிறைவுசெய்யும் அளவிற்கு போதியளவு வளங்கள் இல்லாமையே பொருளியலில் கிடைப்பருமை (Scarcity) எனப்படும். ஒரு குமுகத்தின் இலக்குகள் யாவும் ஒரே சமயத்தினில் நிறைவு செய்யமுடியாது என்பதனைக் கிடைப்பருமை விளக்குகின்றது. ஆகவே ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கு இன்னொரு பண்டத்தின் உற்பத்தியினை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. "அருமையானதும் மாற்று பயன்பாடு உடையதுமான வளங்களை பயன்படுத்தி எண்ணற்ற மனித தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்யலாம் என ஆய்வு செய்கின்ற ஒரு சமூக அறிவியல் பொருளியல்" ஆகும் என லயனல் ராபின்ஸ் கூறியுள்ளார். சில புகழ்பெற்ற பொருளியல் அறிஞர்கள் ஆடம் சிமித் (பொருளியலின் தந்தை எனக் கருதப்படுபவர்; திறந்த சந்தைகளை ஆதரித்தவர்). தாமஸ் மால்துஸ் (கூடுதல் மக்கள்தொகை எவ்வாறு பொருளாதாரத்தை பாதிக்கிறது எனக் காட்டியவர்). காரல் மார்க்சு ( பொதுவுடைமை அறிக்கையை இயற்றியவர்; பொதுவுடைமையை ஆதரித்தவர்). ஜான் மேனார்ட் கெயின்ஸ் (கெயின்சியப் பொருளியல் என்ற பரவலானக் கொள்கையை உருவாக்கியவர்). மில்ட்டன் ஃப்ரீட்மன் (பண வழங்கலைக் குறித்தும் நாணயக் கொள்கைகள் குறித்தும் விரிவாக எழுதியவர்]]. அமர்த்தியா சென் (இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞர்). மேற்கோள்கள் மேலும் அறிய McCann, Charles Robert, Jr., 2003. The Elgar Dictionary of Economic Quotations, Edward Elgar. முன்தோற்றம். வெளி இணைப்புகள் பொதுவான தகவல் Economic journals on the web Economics at பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்'' Intute: Economics: Internet directory of UK universities Research Papers in Economics (RePEc) Resources For Economists: American Economic Association-sponsored guide to 2,000+ Internet resources from "Data" to "Neat Stuff", updated quarterly. நிறுவனங்களும் அமைப்புகளும் Economics Departments, Institutes and Research Centers in the World Organization For Co-operation and Economic Development (OECD) Statistics United Nations Statistics Division World Bank Data கல்வி வளங்கள் A guide to several online economics textbooks Economics at About.com Economics textbooks on Wikibooks Introduction to Economics: Short படைப்பாக்கப் பொதுமங்கள்-licensed introduction to basic economics MERLOT Learning Materials: Economics: US-based database of learning materials MIT OpenCourseWare: Economics : Archive of study materials from மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம் courses Online Learning and Teaching Materials UK Economics Network's database of text, slides, glossaries and other resources Schools of Thought : Compare various economic schools of thought on particular issues The Library of Economics and Liberty (Econlib): Economics Books, Articles, Blog (EconLog), Podcasts (EconTalk) * பகுப்பு:பொருளாதாரக் கோட்பாடுகள்
திருக்குறள்
https://ta.wikipedia.org/wiki/திருக்குறள்
இளையராஜா
https://ta.wikipedia.org/wiki/இளையராஜா
இளையராஜா (Ilaiyaraaja, பிறப்பு: சூன் 2, 1943) இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு, இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான, பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இளையராஜாவுக்கு, இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 25 சனவரி 2018 அன்று, இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில், புலமையும், முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.[refhttps://cinema.maalaimalar.com/cinema/cinehistory/2017/05/10221323/1084642/cinima-history-ilayaraja.vpf தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்ற இளையராஜா] 2022 சூலை 6 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் இவரை நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமித்தார். PT Usha, Music composer Ilaiyaraaja, philanthropist Veerendra Heggade, screenwriter VV Prasad Garu nominated to Rajya Sabhaஇளையராஜா எம்.பி ஆகிறார் வாழ்க்கைச் சுருக்கம் thumb|இசைஞானி இளையராஜா இளையராஜாவின் இயற்பெயர் "ஞானதேசிகன்" என்பதாகும். அவர் ஆரம்ப காலத்தில் பல மேடை கச்சேரிகளில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து இசையமைத்த போது பொதுவான கிராமிய பெயராக ராசய்யா என்று மாற்று பெயரை வைத்து கொண்டார். இவர் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் இராமசாமி–சின்னத்தாய் இணையாருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவரது மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன், தாவீது டேனியல் பாஸ்கர் (ஆர். டி. பாஸ்கர்), கங்கை அமரன் என்ற அமர் சிங் ஆகிய மூவரும் இவரது உடன்பிறந்தவர்கள் ஆவார். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா இவர்களுக்கு கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் பவதாரிணி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா), யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் திரைப்பட இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும், நாடகங்களிலும் பங்கு கொண்டார். பின்பு 1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் மாஸ்டர் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கித்தார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார். பிறகு 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினைப் பெற்றன. நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில், இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில், பத்ரகாளி திரைப்படத்தில் "கண்ணன் ஒரு கைக்குழந்தை", மற்றும் ரீதி கௌளை ராகத்தில் கவிக்குயில் திரைப்படத்தில் "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" போன்றன இவருக்கு மேலும் புகழினைத் தேடித்தந்தன. முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார். இராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார். இளையராஜா புதிதாக 'இசை ஓடிடி' என்ற பிரத்தியேக இணையம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். இசைப்பயணம் இளையராஜா ஒரு கிராமப்புறத்தில் வளர்ந்தார், பலவிதமான தமிழ் நாட்டுப்புற இசையை வெளிப்படுத்தினார். தனது 14 வயதில், தனது மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் தலைமையிலான "பாவலர் பிரதர்ஸ்" என்ற பயண இசைக் குழுவில் சேர்ந்தார், அடுத்த தசாப்தத்தை தென்னிந்தியா முழுவதும் நிகழ்த்தினார். குழுவுடன் பணியாற்றிக் கொண்டிருக்கையில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு மறைவினால் தமிழ் கவிஞரான கண்ணதாசன் எழுதிய இரங்கற்பாவிற்கு இவர் தனது முதல் இசைத்தொகுப்பு ஒரு இசை தழுவல் எழுதினார். 1968 ஆம் ஆண்டில், இளையராஜா மெட்ராஸில் (இப்போது சென்னை) பேராசிரியர் தன்ராஜுடன் ஒரு இசைப் பாடத்தைத் தொடங்கினார் ,இதில் மேற்கத்திய பாரம்பரிய இசையின் கண்ணோட்டம், எதிர்நிலை போன்ற நுட்பங்களில் தொகுத்தல் பயிற்சி மற்றும் கருவி செயல்திறன் பற்றிய ஆய்வு ஆகியவை அடங்கும். இளையராஜா லண்டனின் டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக் தொலைதூர கற்றல் சேனல் மூலம் பாடநெறியை முடித்த பின்னர் பாரம்பரிய கிதாரில் தங்கப்பதக்கம் வென்றவர். டி.வி.கோபாலகிருஷ்ணனிடமிருந்து கர்நாடக இசையைக் கற்றுக்கொண்டார் . அமர்வு இசைக்கலைஞர் மற்றும் திரைப்பட இசைக்குழு thumb|2018 ஆம் ஆண்டில் நடிகர் சங்க ஆர்ப்பாட்டத்தில் கமல்ஹாசன் (இடது) மற்றும் ரஜினிகாந்த் (வலது ) ஆகியோருடன் இளையராஜா (மையம்) 1970 களில் சென்னையில், இளையராஜா ஒரு இசைக்குழுவில் கிட்டார் வாசித்தார், மேலும் ஒரு அமர்வு கிதார் கலைஞர் , கீபோர்டிஸ்ட் மற்றும் திரைப்பட இசையமைப்பாளர்கள் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சலில் சௌதுரி போன்ற இயக்குநர்களுக்கான அமைப்பாளராக பணியாற்றினார். இளையராஜா இந்தியாவில் சிறந்த இசையமைப்பாளராகப் போகிறார் என்று சவுத்ரி ஒருமுறை கூறினார். கன்னட திரைப்பட இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் இசை உதவியாளராக பணியமர்த்தப்பட்ட பின்னர், பெரும்பாலும் கன்னட சினிமாவில் 200 திரைப்படத் திட்டங்களில் பணியாற்றினார். ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராக, இளையராஜா ஆர்கெஸ்ட்ரேட் செய்வார். இது வெங்கடேஷ் உருவாக்கிய மெல்லிசைக் கோடுகளை ஜி.கே.வெங்கடேஷின் வழிகாட்டுதலின் கீழ் இசையமைப்பதைப் பற்றி இளையராஜா அதிகம் கற்றுக்கொண்ட நேரமாகும். இந்த காலகட்டத்தில், இளையராஜாவும் தனது சொந்த இசைக்குறிப்புகளை எழுதத் தொடங்கினார். இவரது இசையமைப்புகளைக் கேட்க, வெங்கடேஷின் அமர்வு இசைக்கலைஞர்களை அவர்களின் ஓய்வு நேரங்களில் இவரது இசைக்குறிப்புகளிலிருந்து சில பகுதிகளை இசைக்க வழியுறுத்தினார். திரைப்பட இசையமைப்பாளர் 1975 ஆம் ஆண்டில், திரைப்பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி என்ற தமிழ் மொழி திரைப்படத்திற்கான பாடல்களையும் திரைப்பட பின்னணி இசை இசையமைக்க இவரை நியமித்தார். ஒலிப்பதிவுக்காக, இளையராஜா நவீன பிரபலமான திரைப்பட இசை இசைக்குழுவின் நுட்பங்களை தமிழ் நாட்டுப்புற கவிதை மற்றும் நாட்டுப்புற பாடல் மெல்லிசைகளுக்குப் பயன்படுத்தினார், இது மேற்கத்திய மற்றும் தமிழ் மொழிகளின் இணைவை உருவாக்கியது. இளையராஜா தனது திரைப்பட பின்னணி இசையில் தமிழ் இசையைப் பயன்படுத்தியது இந்திய திரைப்பட பின்னணி இசை சூழலில் புதிய செல்வாக்கை செலுத்தியது. 1980 களின் நடுப்பகுதியில், இளையராஜா தென்னிந்திய திரையுலகில் ஒரு திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் இசை இயக்குனராக வளர்ந்து வருகிறார். இவர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து, ஓ. என். வி. குறுப்பு, சிறீகுமாரன் தம்பி, வெட்டூரி சுந்தரராம மூர்த்தி, ஆச்சார்யா ஆட்டாரியா, சிறிவெண்ணிலா சீதாராம சாஸ்த்ரி, சி. உதய சங்கர் மற்றும் குல்சார் போன்ற இந்தியக் கவிஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களுடன் பணியாற்றியுள்ளார். பாரதிராஜா, எஸ். பி. முத்துராமன், மகேந்திரன், பாலு மகேந்திரா, கே. பாலச்சந்தர், மணிரத்னம், சத்யன் அந்திக்காடு, பிரியதர்சன், ஃபாசில், வம்சி, கே. விஸ்வநாத், சிங்கீதம் சீனிவாசராவ், பாலா, சங்கர் நாக், மற்றும் ஆர். பால்கி போன்ற இயக்குனர்களின் நன்றான காட்சிகளில் இவரின் இசை நன்கு அறியப்படுகிறது. இசை நடை மற்றும் தாக்கம் thumb|left| இளையராஜா பத்ம விபூஷனை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து பெறுகிறார்.|alt=|220x220px இந்திய திரைப்படங்களில், மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில், இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியால் இளையராஜாவுக்கு, இசைஞானி என்ற பட்டம் சூட்டப்பட்டது. இவர் பெரும்பாலும் "மேஸ்ட்ரோ" என்று குறிப்பிடப்படுகிறார், இது லண்டனின் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவால் வழங்கப்பட்ட மதிப்புமிக்க தலைப்பு. இந்திய திரைப்பட இசையில் மேற்கத்திய பாரம்பரிய இசை இசைக்கருவிகள் மற்றும் சரம் ஏற்பாடுகளைப் பயன்படுத்திய ஆரம்பகால இந்திய திரைப்பட இசையமைப்பாளர்களில் ஒருவர். இது படங்களுக்கான ஒலிகளின் சிறந்த ஒலியை உருவாக்க இவரை அனுமதித்தது, மேலும் இவரது கருப்பொருள்கள் மற்றும் பின்னணி இசை இந்திய திரைப்பட பார்வையாளர்களிடையே கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. இந்திய திரைப்பட இசையில் வெளிப்படையான சாத்தியக்கூறுகளின் வரம்பு இளையராஜாவின் ஒழுங்குமுறை, பதிவு நுட்பம் மற்றும் இசை பாணிகளின் பன்முகத்தன்மையிலிருந்து இவரது கருத்துக்களை வரைவதற்கான முறையான அணுகுமுறையால் விரிவாக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டில், விக்ரம் தமிழ்த் திரைப்படத்தில் கணினி மூலம் திரைப்படப் பாடல்களைப் பதிவு செய்த முதல் இந்திய இசையமைப்பாளர் ஆவார் . இவர் 7,000 க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியவர், 1,000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைப்பட பின்னணி இசையை வழங்கியவர் மற்றும் 20,000 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் நிகழ்த்திய உலகின் மிகச் சிறந்த இசையமைப்பாளர் ஆவார். இளையராஜா இசையமைத்தது, சிம்பொனியில் (2006) ஆகும். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திருவாசகம் முதல் இந்திய சொற்பொழிவு ஆகும் . இசையமைப்பாளர் பி. கிரீனின் கூற்றுப்படி, இளையராஜாவின் "பலவிதமான இசை பாணிகளைப் பற்றிய ஆழமான புரிதல், ஒருங்கிணைந்த, ஒத்திசைவான இசை அறிக்கைகளில் மிகவும் மாறுபட்ட இசை முரண்களை இணைத்து ஒத்திசைவான இசையை உருவாக்க அவரை அனுமதித்தது". இளையராஜா இந்தியத் திரைப்பட பாடல்களைப் என்று வருகிறது ஆப்பிரிக்க-பழங்குடி, அதனால் வகைப்பட்ட ஒருங்கிணைப்பில் கூறுகள் போஸ்ஸா நோவா , நடன இசை (எ.கா., டிஸ்கோ ), டூ-கட்டுடல் , ஃபிளெமெங்கோ , ஒலி கிட்டார் -propelled மேற்கத்திய நாட்டுப்புற , பங்க் , இந்திய கிளாசிக்கல் , இந்திய நாட்டுப்புற / பாரம்பரிய , ஜாஸ் , அணிவகுப்பு ,பாத்தோஸ் , பாப், சைகெடெலியா மற்றும் ராக் அண்ட் ரோல் . இந்த வகையின் காரணமாகவும், மேற்கத்திய, இந்திய நாட்டுப்புற மற்றும் கர்நாடகக் கூறுகளை ஒன்றிணைப்பதன் மூலமும், இளையராஜாவின் இசையமைப்புகள் இந்திய கிராமப்புறவாசிகளுக்கு அதன் தாள நாட்டுப்புற குணங்களுக்காகவும், கர்நாடக ராகங்களின் வேலைவாய்ப்புக்காக இந்திய கிளாசிக்கல் இசை ஆர்வலர்களிடமும் , நகர்ப்புறவாசிகளுக்கு அதன் நவீன, மேற்கத்திய-இசை ஒலி. இசையமைப்பதற்கான காட்சிப்படுத்தல் உணர்வை இளையராஜா எப்போதும் இயங்கும் திரைப்படத்தின் கதைக் கோடுடன் பொருத்துவதோடு, அவ்வாறு செய்வதன் மூலமும், பார்வையாளர்களுக்கு தனது இசை மதிப்பெண் மூலம் சுவையான உணர்ச்சிகளை உணர சிறந்த அனுபவத்தை உருவாக்குகிறார். இசையுடன் கலக்கும் இந்த கலையை அவர் தேர்ச்சி பெற்றார், மிகச் சிலரே நீண்ட காலத்திற்கு தங்களைத் தழுவிக்கொள்ள முடிந்தது. இளையராஜா சிக்கலான தொகுப்பு நுட்பங்களைப் பயன்படுத்துகிறார் என்றாலும், அவர் பெரும்பாலும் தன்னிச்சையான முறையில் படங்களுக்கான அடிப்படை மெல்லிசைக் கருத்துக்களை வரைகிறார். இந்தியன் பெர்ஃபாமிங் ரைட் சொசைட்டியின் குழு உறுப்பினர் அச்சில்லே ஃபோலர் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளில் இளையராஜா உருவாக்கிய நட்சத்திர அமைப்பு, அவரை உலகின் சிறந்த 10 பணக்கார இசையமைப்பாளர்களில் ஒருவராக வைத்திருக்க வேண்டும், எங்காவது ஆண்ட்ரூ லாயிட் வெபருக்கு இடையில் (1.2 பில்லியன் டாலர்) ) மற்றும் மிக் ஜாகர் (million 300 மில்லியனுக்கும் அதிகமானவை). இசை பண்புகள் thumb|இந்தியாவின் 46 வது சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் இளையராஜா|alt= இளையராஜாவின் இசை மேற்கத்திய, இந்திய கருவிகளின் தொகுப்பான ஒரு ஆர்கெஸ்ட்ரேஷன் நுட்பத்தால் வகைப்படுத்தப்படுகிறது. இவர் மின்னணு இசை தொழில்நுட்பம் பயன்படுத்தும் கூட்டிணைப்பு, மின்சார கிட்டார், விசைப்பலகைகள், டிரம் இயந்திரங்கள், ரிதம் பெட்டிகள் மற்றும் மிடி போன்ற பாரம்பரிய கருவிகள் கொண்டிருக்கும் பெரிய ஆர்கெஸ்ட்ராவில் வீணை, வேணு, நாதஸ்வரம், டோலக்கின், மிருதங்கம் மற்றும் தபலா அத்துடன் மேற்கத்திய முன்னணி கருவிகள் சாக்ஸபோன்கள் மற்றும் புல்லாங்குழல் ஆகியவைகளால் ஒருங்கிணைக்கிறது. இவரது பாடல்களில் உள்ள பாஸ்லைன்கள் மெல்லிசை மாறும், உயரும் மற்றும் வியத்தகு முறையில் விழும். பாலிரிதம் கூட தெளிவாகத் தெரிகிறது, குறிப்பாக இந்திய நாட்டுப்புற அல்லது கர்நாடக தாக்கங்களைக் கொண்ட பாடல்களில். இந்தியாவின் மரியாதைக்குரிய பாடகர்கள் மற்றும் பின்னணிப் பாடகர்களை தனது பாடல்களின் இனிமைக்காகவும் அமைப்பு கணிசமான குரல் கற்பு கோருவது போன்றவைகளுக்காக, பல்வேறு மொழிகளில் பாடும் பாடகர்களில் சிலரை பயன்படுத்தியுள்ளார் அதில், டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி, பி. சுசீலா, கே. ஜே. யேசுதாஸ், கே.எஸ் சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன், மனோ, எம். ஜி. ஸ்ரீகுமார், ராஜ்குமார், ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர்,ஜெயச்சந்திரன், உமா ரமணன், எஸ். பி. சைலஜா, ஜென்சி, ஸ்வர்ணலதா, மின்மினி, சுஜாதா மோகன், கவிதா கிருஷ்ணமூர்த்தி, ஹரிஹரன், உதித் நாராயண், சாதனா சர்கம் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோராவர். இளையராஜா தனது சொந்த 400 இசையமைப்புகளை படங்களுக்காக பாடியுள்ளார், மேலும் இவரது முழுமையான, ஆழமான குரலால் அடையாளம் காணப்படுகிறார். இவர் தமிழில் தனது சில திரைப்படங்களுக்காக ஒருசில பாடல்களை தானே இயற்றியுள்ளார். தமிழில் இளையராஜா இயற்றிய முழு முதற்பாடல் மணிரத்னம் இயக்கிய இதய கோவிலில் இதயம் ஒரு கோயில் எனும் பாடலாகும். ஏறும் குறிப்புகளில் மட்டுமே ஒரு பாடலை இயற்றிய ஒரே இசையமைப்பாளர் இவர்தான் என்று பரவலாக நம்பப்படுகிறது. சினிமா அல்லாத வெளியீடு thumb|left|91 வது இசை அகாடமி நிகழ்ச்சிகள் மற்றும் மாநாடுகளின் தொடக்க விழாவில் இளையராஜா இளையராஜாவின் முதல் இரண்டு திரைப்படம் அல்லாத ஆல்பங்கள் இந்திய மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசையின் இணைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். முதல், அதை எப்படி பெயரிடுவது? (1986), கர்நாடக மாஸ்டர் தியாகராஜர் மற்றும் யோகான் செபாஸ்தியன் பாக் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . இது கர்நாடக வடிவத்தின் இணைவு மற்றும் பாக் பார்ட்டிடாஸ் , ஃபியூக்ஸ் மற்றும் பரோக் இசை அமைப்புகளுடன் ராகங்களை கொண்டுள்ளது . இரண்டாவது, நத்திங் பட் விண்ட் (1988), ஃப்ளூடிஸ்ட் ஹரிபிரசாத் சௌரசியா மற்றும் 50-துண்டு இசைக்குழு ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது மற்றும் தலைப்பில் பரிந்துரைக்கப்பட்ட கருத்தியல் அணுகுமுறையை எடுக்கிறது music இசை என்பது "பல்வேறு வகையான காற்று நீரோட்டங்களுக்கு ஒத்த இயற்கையான நிகழ்வு" . இளையராஜாவின் கிளாசிகல்ஸ் ஆன் தி மாண்டோலின் (1994) ஆல்பத்திற்காக மின்சார மண்டலவியலாளர் உ. ஸ்ரீநிவாஸ் பதிவுசெய்த கர்நாடக கிருதிகளின் தொகுப்பை அவர் இயற்றியுள்ளார் . இளையராஜா மத / பக்தி பாடல்களின் ஆல்பங்களையும் இயற்றியுள்ளார் . அவரது குரு ரமணா geetam (2004) இந்து மதம் மறைபொருள் ஈர்க்கப்பட்டு பிரார்த்தனை பாடல்களை ஒரு சுழற்சி உள்ளது ரமணா மகரிஷி , தன் Thiruvasakam : ஒரு குறுக்கு (2005) ஒரு உள்ளது oratorio பண்டைய தமிழ் கவிதைகள் அமெரிக்கன் பாடலாசிரியர் ஆங்கில சிறிதளவிலான படியெடுக்கப்படுவதோடு இசுடீபன் சுவார்ட்சு மற்றும் நிகழ்த்த புடாபெஸ்ட் சிம்பொனி இசைக்குழு .இளையராஜாவின் மிக சமீபத்திய வெளியீடு தி மியூசிக் மெசியா (2006) என்ற உலக இசை சார்ந்த ஆல்பமாகும் . அவர் தனது 'இசை ஓடிடி' விண்ணப்பம் விரைவில் தொடங்கப்படும் என்று தனது பிறந்தநாளில் அறிவித்துள்ளார், மேலும் அவரது பாடல்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு கருத்தரிக்கப்பட்டன, தயாரிக்கப்பட்டன, வழங்கப்பட்டன மற்றும் பிற இசைக்கலைஞர்களுடன் ஒத்துழைப்பு. குறிப்பிடத்தக்க படைப்புகள் இளையராஜா, ஒரு நிறுவனத்திற்கான தனது முதல் இசையமைப்பில், 2019 இல் இந்துஸ்தான் கோகோ கோலா பானங்கள் (எச்.சி.சி.பி) க்காக ஒரு கீதத்தை இயற்றினார். இந்தியாவின் பெங்களூரில் நடைபெற்ற 1996 உலக அழகி அழகுப் போட்டி போன்ற நிகழ்வுகளுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார் . 1996 இல் இந்தியா 24 ஹவர்ஸ் என்ற ஆவணப்படத்திற்கு இசையமைத்தார் . இளையராஜா 'பஞ்சமுகி' என்று பிரபலமாக அறியப்படும் ஒரு புதிய கர்நாடக ராகத்தை கண்டுபிடித்தார், இது இசைத்துறையில் அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஸ்டீரியோஸ்கோபிக் 3 டி திரைப்படமான 1984 ஆம் ஆண்டு மலையாள மொழி மொழி மை டியர் குட்டிச்சாத்தானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் இவரால் இசைக்கப்பட்டது. நாயகன் (1987) திரைப்படத்திற்கான பாடல்களை உருவாக்கினார், இது இந்திய திரைப்படமான டைம் பத்திரிகையால் எல்லா நேரத்திலும் 100 சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகும், அவர் இந்தியாவின் அதிகாரபூர்வ பட்டியல்களில் ஆஸ்காருக்கு தகுதியான சுவாதி முத்யம் (1986), நாயகன் (1987), தேவர் மகன் (1992), அஞ்சலி (1990 திரைப்படம்), குரு (1997) மற்றும் ஹே ராம் (2000) போன்ற பல திரைப்படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார், மற்றும் இந்திய கலைத் திரைப்படத்துக்கான அடூர் கோபாலகிருஷ்ணனின் FIPRESCI பரிசு வென்ற நிழல்குத்து ( "நிழல் கொலை") (2002) இத்திரைப்படத்திற்கும் இசையமைத்தார். கோவிட்-19 பெருந்தொற்றுகளுக்கு மத்தியில் கணிசமாக பணியாற்றி வரும் காவலர்கள், ராணுவம், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவலாளிகள் போன்றவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 2020 மே மாதம் அவர் பாரத் பூமி என்ற தலைப்பில் ஒரு பாடலை இயற்றினார். இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடச் செய்தார், மேலும் காணொளிப் பாடலை இளையராஜா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் கணக்கு மூலம் 2020 மே 30 அன்று தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். விருதுகள் மற்றும் கௌரவிப்பு thumb|46 வது சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருதை ஸ்ரீ அருண் ஜெட்லி வழங்குகிறார் இளையராஜாவுக்கு ஐந்து தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன - சிறந்த இசை இயக்கத்திற்கான மூன்று மற்றும் சிறந்த பின்னணி இசைக்காக இரண்டு. 2010 இல், இவருக்கு பத்ம பூசண் விருது, இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருது வழங்கப்பட்டது மற்றும் 2018 ஆம் ஆண்டு, இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம விபூசண் விருது வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில், இசைத்துறையில் அவரது படைப்பு மற்றும் சோதனை படைப்புகளுக்காக, பயிற்சி பெற்ற கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட மிக உயர்ந்த இந்திய அங்கீகாரமான சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார். டிரினிட்டி காலேஜ் ஆஃப் மியூசிக், லண்டன், தொலைதூர கற்றல் முறையில் கிளாசிக்கல் கிதாரில் தங்கப் பதக்கம் வென்றவர். தரவரிசை 2013 ஆம் ஆண்டில் 100 ஆண்டு இந்திய சினிமாவைக் கொண்டாடும் சிஎன்என்-ஐபிஎன் நடத்திய கருத்துக் கணிப்பில், இளையராஜா இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்பட-இசை இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்க உலக சினிமா போர்டல் "டேஸ்ட் ஆஃப் சினிமா" சினிமா வரலாற்றில் 25 சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களின் பட்டியலில் 9 வது இடத்தைப் பிடித்தது, இந்த பட்டியலில் உள்ள ஒரே இந்தியராவார். 2003 ஆம் ஆண்டில், நடத்திய ஒரு சர்வதேச இந்தக் கணக்கெடுப்பில் பிபிசி 165 நாடுகளில் இருந்து அரை மில்லியன் மக்கள் பங்கெடுத்த நிகழ்வில் இவரது இசையமைப்பான 1991 தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற "அடி ராக்கம்மா கையத்தட்டு" பாடல் எல்லா காலத்துப் பாடல்களிலும் முதல் பத்து இடத்தில் மிகவும் பிரபலமான நான்காவது பாடலாக தேர்வானது. ட்ரிவியா ஒரு இசை நிகழ்ச்சியின் போது தனது ஸ்டுடியோவில் அல்லது மேடையில் ஒரு பாடலை இசையமைக்கும்போது, இளையராஜா தனது பழைய ஹார்மோனியத்தை இன்னும் பயன்படுத்துகிறார். ​​இவர் தனது வாழ்க்கையில் 7000 க்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கியுள்ளார். 1986 ஆம் ஆண்டில், விக்ரம் படத்திற்காக கணினி மூலம் இந்திய திரைப்பட பாடல்களை பதிவு செய்த முதல் இந்திய இசையமைப்பாளர் இளையராஜா ஆவார். அகாடமி விருது பெற்ற இசைக்கலைஞர் ஏ. ஆர். ரகுமான் இளையராஜாவின் குழுவில் ஒரு பியானோ கலைஞராக பணியாற்றினார், மேலும் அவரது குழுவில் கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு பணிபுரிந்தார். இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி ஒருமுறை, "இளையராஜா இந்தியாவில் சிறந்த இசையமைப்பாளராக மாறப்போகிறார் என்று நான் நினைக்கிறேன்" என்று கூறினார். இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தனது செம்பருத்தி (1992) படத்திற்காக இளையராஜா வெறும் 45 நிமிடங்களில் ஒன்பது பாடல்களுக்கு இசையமைத்துள்ளார், இது ஒரு பதிவு என்று கூறுகிறார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இளையராஜா திரைப்படத்தின் முழு இசைத்தடத்திற்காக உருவாக்கும் நிறைவு செய்துவிட்டதாகவும் கூற்றுக்கள் தளபதி "அரை நாள்" குறைவான. ஆர்.டி.பர்மனின் இசைக்குழுவுடன் மும்பையில் தளபதி திரைப்படத்தின் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாடலுக்கான பதிவின் போது, ​​இளையராஜா அவர்களுக்கு குறிப்புகளைக் கொடுத்தபோது, ​​அவை மிகவும் நகர்த்தப்பட்டு இசையமைப்பால் எடுக்கப்பட்டன, இதனால் அனைத்து இசைக்கலைஞர்களும் பிரமிப்புடன் கைகளை தட்டினர். இளையராஜாவுக்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக எழுந்துநின்று பேசினர். மரபு பிளாக் ஐட் பட்டாணி ஸ்ரீ ராகவேந்திராவின் (1985) இளையராஜா இசையமைப்பான "உனக்கும் எனக்கும்" மாதிரியை , எலிஃபங்க் (2003) இல் " தி எலிஃபங்க் தீம் " பாடலுக்காக மாதிரி செய்தது . பிரபல அமெரிக்க ராப்பர் மீக் மில் இந்தியன் பவுன்ஸ் படத்திற்காக இளையராஜாவின் ஹிட் பாடல்களில் ஒன்றை மாதிரி செய்தார் . இருந்து பெறப்பட்ட அவரது பாடல் "மெல்ல மெல்ல Ennaithottu" வாழ்க்கை பாடல் முயல் மேக் மூலம் மாதிரியாக இருந்தது Sempoi . மாற்று கலைஞர் மியா படத்திலிருந்து பெறப்பட்ட "Kaatukuyilu" மாதிரிகளாக தளபதி தன் பாடலான "மூங்கில் பங்கா" ஆல்பத்திற்காக க்கான (1991) கலா (2007). ஆல்பாரண்ட் தனது இந்திய கனவு பாடலுக்காக இளையராஜாவின் இசையை மாதிரி செய்தார் . கோட்ஜாசுபி, சத்மா திரைப்படத்திலிருந்து இளையராஜாவின் "யே ஹவா யே பிசா" மாதிரி எடுத்தார் . 1981 ஆம் ஆண்டு வெளியான 'ராம் லக்ஷ்மன்' திரைப்படத்தின் இளையராஜாவின் 'நாந்தன் உங்கப்பாண்டா' பாடல் 2012 கோடைகால ஒலிம்பிக்கின் தொடக்க விழாவிற்கான பிளேலிஸ்ட்டில் ஒரு பகுதியாக இருந்தது . இசைக்குப் தளபதி உள்ளடக்கப்பட்டிருந்தது கார்டியன் ' ங்கள் நீங்கள் மரணிப்பதற்கு முன் கேளுங்கள் 100 ஆல்பங்கள் . 2003 ஆம் ஆண்டில், நடத்திய ஒரு சர்வதேச இந்தக் கணக்கெடுப்பில் பிபிசி , அரை மில்லியன் 165 நாடுகளில் இருந்து மக்கள் அவரது கலவை வாக்களித்தனர் அடி ராக்கம்மா கையத்தட்டு 1991 படத்தில் இருந்து தளபதி எல்லா காலத்திலும் உலகின் முதல் 10 மிகவும் பிரபலமான பாடல்களில் நான்காவது போன்ற. நள்ளிரவில் (2020) இளையராஜாவின் "ஒரு கிளி" ஒலிப்பதிவு திரைப்பட அமைக்கப்படாத ஒரு பிரிவு திகழ்கிறது ஆனந்த கும்மி அதன் அதிகாரப்பூர்வ டிரெய்லரில் பின்னணி இசையாக (1983). நேரடி நிகழ்ச்சிகள் இளையராஜா தனது இசையை நேரலையில் நிகழ்த்துவதில்லை. அறிமுகமானதிலிருந்து அவரது முதல் பெரிய நேரடி நிகழ்ச்சி 2005 அக்டோபர் 16 அன்று இந்தியாவின் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உட்புற ஸ்டேடியத்தில் நடைபெற்ற நான்கு மணி நேர இசை நிகழ்ச்சி. அவர் 2004 இல் இத்தாலியில் டீட்ரோ கொமுனலே டி மொடெனாவில் நிகழ்த்தினார். எல்'ஆல்ட்ரோ சுயோ விழாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்ட ஃபெஸ்டிவல் இன்டர்நேஷனலே டி மியூசிகாவின் ஏஞ்சலிகாவின் 14 வது பதிப்பிற்காக வழங்கப்பட்ட இசை நிகழ்ச்சி. அக்டோபர் 23, 2005 அன்று, மெலிண்டா மற்றும் பில் கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு ஏஜென்சிகளால் நிதியுதவி செய்யப்பட்ட "எ டைம் ஃபார் ஹீரோஸ்", ஹாலிவுட் நட்சத்திரம் ரிச்சர்ட் கெர், தமிழ் மற்றும் தெலுங்கு நட்சத்திரங்கள் "இன்ஃபோடெயின்மென்ட்" ஒரு மாலை நேரத்தில் நகரத்தில் கூடிவருவதைக் கண்டார்கள் - அவர்கள் ஒன்றில் பேசினர் எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த குரல். அக்டோபர் 22, 2005 சனிக்கிழமையன்று ஹைதராபாத்தில் உள்ள கச்சிப ow லி உட்புற ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, பாடகர் உஷா உதூப் வழங்கிய மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையமைப்போடு தொடங்கியது. இது இளையராஜா ("இது இளையராஜா") என்ற தலைப்பில் ஒரு தொலைக்காட்சி பின்னோக்கி தயாரிக்கப்பட்டது, இது அவரது வாழ்க்கையை விவரிக்கிறது. அவர் கடந்த படத்தின் ஆடியோ வெளியீடு விழாவில் நேரலை நிகழ்ச்சி டோனி மற்றும் அதற்கு முன், என்ற தலைப்பைக் நடத்திய மற்றும் ஜெயா டிவி ஒளிபரப்பு செய்யப்பட்டது என்று ஒரு திட்டத்தை செய்யப்படுகிறது என்றென்றும் ராஜா டிசம்பர் 2011 28 ம் தேதி ( "நித்திய ராஜா") ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் , சென்னை. 23 செப்டம்பர் 2012 அன்று, அவர் பெங்களூரில் தேசிய உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நேரலை நிகழ்ச்சியை நடத்தினார் . 16 பிப்ரவரி 2013 அன்று, இளையராஜா கனடாவின் டொராண்டோவில் உள்ள ரோஜர்ஸ் மையத்தில் வட அமெரிக்காவில் தனது முதல் தோற்றத்தை வெளிப்படுத்தினார். டொராண்டோ கச்சேரி இந்தியாவில் விஜய் டிவியின் டிரினிட்டி நிகழ்வுகளால் விளம்பரப்படுத்தப்பட்டது மற்றும் பிஏ + உடன் சாண்டி ஆடியோ விஷுவல் எஸ்ஏவி புரொடக்ஷன்ஸ் தயாரித்தது. டொராண்டோ தனது நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இளையராஜா மேலும் பாடினார் ப்ருடென்ஷியம் மையத்தைத் நெவார்க், 23 பிப்ரவரி 2013 நியூ ஜெர்சி மற்றும் மணிக்கு சான் ஜோஸ் ஹெச்பி பெவிலியன் 1 மார்ச் 2013 சுற்றுப்பயணம் இவர் வெளியிட்ட நேரடி நிகழ்ச்சியை நடத்தினார் அவரது வட அமெரிக்கா பிறகு O2 அரங்கம் லண்டனில் 24 ஆகஸ்ட் 2013 அன்று, கமல்ஹாசன் மற்றும் அவரது மகன்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோருடன் . இளையராஜாவும் அவரது குழுவும் 2016 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவில் நேரலை நிகழ்ச்சியை நடத்தினர். அக்டோபர் 2017 இல், முதன்முறையாக ஹைதராபாத்திலும், நவம்பரில் மலேசியாவின் கோலாலம்பூரிலும் நேரடி நிகழ்ச்சியை நடத்தினார். மார்ச் 2018 இல், ஹூஸ்டன், டல்லாஸ், சிகாகோ, சான் ஜோஸ், கனெக்டிகட், வாஷிங்டன் டி.சி மற்றும் டொராண்டோவில் மீண்டும் நேரடி நிகழ்ச்சியை நடத்தினார். தனது வாழ்க்கையில் முதல்முறையாக, இளையராஜா 11 ஆகஸ்ட் 2018 அன்று ஹில்சாங் கன்வென்ஷன் சென்டரில் தனது இசைக்குழுவுடன் சிட்னியில் நிகழ்த்தியுள்ளார். மேலும், தனது 75 வது பிறந்த நாளை கொண்டாடும் அதே மாதத்தில், சிங்கப்பூர் ஸ்டார் பெர்பார்மிங் ஆர்ட்ஸ் தியேட்டரில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெற்றது 18 ஆகஸ்ட். இளையராஜா தனது 76 வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2019 ஜூன் 2 ஆம் தேதி சென்னையில் இசையை கொண்டாடுகிறார் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். வழக்கமாக மேஸ்ட்ரோவின் குழுவில் நாற்பது முதல் ஐம்பது இசைக்கலைஞர்கள் உள்ளனர், ஆனால் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொண்ட நிலை. நான்கு மணி நேர நேரடி இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் மீண்டும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ராயல்டி பிரச்சினைகளை வீழ்த்திய பின்னர் மீண்டும் இணைந்தார் . இந்த நிகழ்வு சினி இசைக்கலைஞர்கள் சங்கத்திற்கான நிதி திரட்டும் முயற்சியாகும். முதன்முறையாக, இசைஞானி இளையராஜா 9 ஜூன் 2019 அன்று கோயம்புத்தூரில் ஒரு நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தினார். ராஜாதி ராஜா என்ற தலைப்பில், இந்த நிகழ்வு கோடிசியா மைதானத்தில் நடைபெற்றது. இளையராஜாவுடன், பாடகர்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம், மனோ, உஷா உதூப், ஹரிசரண், மது பாலகிருஷ்ணன், மற்றும் பவதாரினி ஆகியோரும் ஹங்கேரியிலிருந்து ஒரு இசைக்குழுவின் ஆதரவுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோரும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக இருந்தனர். கச்சேரியிலிருந்து கிடைத்த வருமானம் அமைதிக்கான குழந்தைகளுக்கான நன்கொடை , முன்னாள் இயங்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம். சட்ட சிக்கல்கள் 2017 ஆம் ஆண்டில், இளையராஜா தனது பாடல்களின் பதிப்புரிமைக்காக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அவர் எஸ்.பி.க்கு சட்ட அறிவிப்புகளை அனுப்பினார். பாலசுப்பிரமணியம் மற்றும் சித்ரா, அவரது பாடல்களைப் பாடத் தடை விதித்தனர். தனது பதிவுகளை தயாரித்த பல்வேறு இசை நிறுவனங்களுக்கு 2015 ஆம் ஆண்டில் சட்ட அறிவிப்புகளை தாக்கல் செய்ததாக அவர் கூறுகிறார். திரைப்படமல்லாத மற்ற இசையாக்கங்கள் இளையராஜா, "பஞ்சமுகி" என்ற கருநாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார். "How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார். "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரிபிரசாத் சௌரசியாவுடன் இணைந்து வெளியிட்டார். "India 24 Hours" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக, இசை அமைந்திருந்தது சிறப்பாகும். 1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார். "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது. "இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார். ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். "மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார். சாதனைகள் இளையராஜா, இதுவரை ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்குப் பின்னணி இசை கோர்த்துள்ளார். லண்டன் ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ராவில், சிம்பொனிக்கு இசையமைத்து, ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருஞ்சிறப்பை 1993 ஆம் ஆண்டு பெற்றார். (அந்தச் சிம்பொனியை ராயல் ஃபில்ஹார்மானிக் ஆர்க்கெஸ்ட்ரா, இன்னும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது). விருதுகளும் பட்டங்களும் தமிழக அரசின் கலைமாமணி விருது-1981 1988 ஆம் ஆண்டு மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது 1995 ஆம் ஆண்டு கேரள அரசின் விருது இசையில் சாதனை புரிந்ததற்காக 1994ஆம் ஆண்டு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகமும் 2022ஆம் ஆண்டு திண்டுக்கல் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகமும் முனைவர் பட்டம் வழங்கினhttps://patrikai.com/music-director-ilayaraja-umayalpuram-sivaraman-awarded-honorary-doctorate-prime-minister-modi-presented-at-gandhi-grama-university-function/. (டாக்டர் - Degree of Doctor of Letter) பத்ம பூஷண் விருது - 2010 பத்ம விபூஷண் விருது- 2018 https://selliyal.com/archives/160635 இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார். அவருக்கு விருதினைப் பெற்றுத் தந்த படங்கள் : 1985இல் - சாகர சங்கமம் (தெலுங்கு) 1987இல் - சிந்து பைரவி (தமிழ்) 1989இல் - ருத்ர வீணை (தெலுங்கு) 2009இல் - பழஸிராஜா (மலையாளம்) 2016இல் - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)தேசிய விருதுகள்: சிறந்த தமிழ்ப் படம் 'விசாரணை', இளையராஜா, சமுத்திரக் கனிக்கு விருதுகள் தி இந்து தமிழ் 28 மார்ச் 2016 இயேசுவின் உயிர்த்தெழுதல் விமர்சனம் இளையராஜா, 'இயேசுவின் உயிர்த்தெழுதல் இடம்பெறவில்லை' என்றும், உயிர்த்ததெழுந்த ஒரே ஒரு நபர் ரமண மகரிஷி ஒருவரே எனவும், தன் கருத்தினை வெளியிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேச்சுப் பொருளாக இருந்ததுடன், கிறிஸ்தவ குழு ஒன்றினால் தங்களின் அடிப்படை விசுவாசத்திற்கு எதிரான பேச்சு என்பதால், காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. பங்குபெறும் பிற துறைகள் இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய புத்தகங்கள் : சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்) வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு) வழித்துணை துளி கடல் ஞான கங்கா பால் நிலாப்பாதை உண்மைக்குத் திரை ஏது? யாருக்கு யார் எழுதுவது? என் நரம்பு வீணை நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை, இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு) பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள் இளையராஜாவின் சிந்தனைகள் பயன்படுத்திய ராகங்கள் சில கீரவாணி - என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் (வள்ளி), காற்றில், எந்தன் கீதம் (ஜானி) கல்யாணி - ஜனனி ஜனனி (தாய் மூகாம்பிகை) பந்துவராளி - ஓம் சிவோஹம் (நான் கடவுள்) ரசிகரஞ்சனி - அமுதே, தமிழே, அழகிய மொழியே, (கோயில் புறா) இவற்றையும் பார்க்க இளையராஜா இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இளையராஜா - சர்வதேச திரைப்படத் தரவுத்தளம் பகுப்பு:1943 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:தேனி மாவட்ட நபர்கள் பகுப்பு:இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் பகுப்பு:தமிழ் பாடலாசிரியர்கள் பகுப்பு:தமிழகப் பாடலாசிரியர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்றவர்கள் பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள் பகுப்பு:பத்ம விபூசண் விருது பெற்ற தமிழர்கள் பகுப்பு:மாநிலங்களவை உறுப்பினர்கள் பகுப்பு:தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பகுப்பு:மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள்
சதுரம்
https://ta.wikipedia.org/wiki/சதுரம்
thumb|250px|right|சதுரம் சதுரம், கேத்திரகணித அடிப்படை வடிவங்களில் ஒன்று. இது, நான்கு உச்சிகளையும், சம அளவிலான நான்கு கோட்டுத்துண்டுகளை பக்கங்களாகவும் கொண்ட, ஒரு இரு பரிமாண உருவமாகும். சதுரம் ஓர் ஒழுங்கு நாற்கரம் ஆகும். அடிப்படை உண்மைகள் சதுரம் நான்கு சமபக்கங்களுடைய ஒரு பல்கோணமாகும். ABCD சதுரத்தில் நான்கு கோணங்களின் அளவுகள் சமமாகவும் ஒவ்வொன்றும் 90 பாகை அளவாகவும் இருக்கும். பாகைகள். சதுரத்தின் இரு மூலைவிட்டங்களும் (கோணல் கோடுகள்) சமநீளமுள்ளவை. ஒரு சதுரத்தின் ஒரு பக்கத்தின் நீளம் a எனில், அதன் சுற்றளவு a யின் நான்கு மடங்கு ஆகும். மூலைவிட்டத்தின் நீளம்: விளக்கம்: சதுரத்தின் ஒவ்வொரு கோணமும் செங்கோணம் என்பதால் இரு அடுத்துள்ள பக்கங்களும் ஒரு மூலைவிட்டமும் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கின்றன. சதுரத்தின் பக்க அளவு a, மூலைவிட்டத்தின் நீளம் d எனில், பித்தகோரசு தேற்றத்தின்படி: சதுரத்தின் பரப்பு 150px|right|thumb|சதுரத்தின் பரப்பளவு கணக்கிடல் ஒரு சதுரத்தின் பரப்பளவு அதன் ஒரு பக்க அளவின் வர்க்கத் தொகையால் தரப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு சதுரத்தின் பக்க அளவு 5 மீட்டர் என்றால், அதன் பரப்பளவு 5 x 5 = 25 சதுர மீட்டர் ஆகும். 5 மீட்டர் பக்க நீளமுள்ள சதுரத்தை 1 மீட்டர் பக்க நீளமுள்ள சிறுசிறு சதுரங்களாகப் பிரித்தால் மொத்தம் 25 சிறு சதுரங்கள் கிடைக்கின்றன. பொதுவாகச் சதுரத்தின் பரப்பு a எனில்: மூலைவிட்டத்தின் மூலமாகவும் சதுரத்தின் பரப்பளவைக் காணலாம். சதுரத்தின் மூலைவிட்டத்தின் நீளம் d எனில் அச்சதுரத்தின் பரப்பளவு: சதுரத்தின் சுற்றுவட்ட ஆரம் R எனில், எனவே சதுரத்தின் பரப்பளவு: சதுரத்தின் உள்வட்ட ஆரம் r எனில், எனவே சதுரத்தின் பரப்பளவு: அடுக்கு இரண்டு என்பது சதுரத்தின் பரப்பளவாக எடுத்துக் கொள்ளப்பட்டதால்தான் அடுக்கு இரண்டானது ஆங்கிலத்தில் ஸ்கொயர் என அழைக்கப்பட்டது. சமன்பாடுகள் thumb|right| கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் ஆதிப்புள்ளியை மையமாகவும் 2 அலகுகள் பக்கநீளமும் கொண்ட சதுரத்தின் உச்சிகளின் ஆயதொலைவுகள்: (±1, ±1). சதுரத்தின் உட்புறம் அமையுமொரு புள்ளிகளின் ஆயதொலைவுகள் (xi, yi) , , ஆகும். இச் சதுரத்தின் சமன்பாடு: , அதாவது "x2 அல்லது y2, இரண்டில் எது பெரியதோ அதன் மதிப்பு 1 ஆக இருக்கும்." இச்சதுரத்தின் சுற்றுவட்டத்தின் ஆரம் மூலைவிட்டத்தின் நீளத்தில் பாதியாக இருக்கும். அதாவது சுற்றுவட்டத்தின் ஆரம்: . சுற்றுவட்டத்தின் சமன்பாடு: சதுரத்தின் மற்றொரு சமன்பாடு: சதுரத்தின் மையம்: (a, b) மற்றும் கிடைமட்ட அல்லது குத்து ஆரம் r எனில் அச்சதுரத்தின் சமன்பாடு: பண்புகள் சதுரம் என்பது சாய்சதுரம், பட்டம், இணைகரம், நாற்கரம் மற்றும் செவ்வகம் ஆகியவற்றின் சிறப்பு வகையாகும். எனவே இவ்வடிவவியல் வடிவங்களின் பண்புகள் சதுரத்திற்கும் உண்டு:http://www.mathsisfun.com/quadrilaterals.html/ சதுரத்தின் எதிரெதிர் பக்கங்கள் இணையாகவும் சமமாகவும் இருக்கும். சதுரத்தின் நான்கு கோணங்களும் சமம். (ஒவ்வொன்றும் 360°/4 = 90° க்குச் சமம்.) சதுரத்தின் நான்கு பக்கங்களும் சமம். இரு மூலைவிட்டங்களும் சம நீளமுள்ளவை. சதுரத்தின் இரு மூலைவிட்டங்களும் ஒன்றையொன்று இருசமக் கூறிடும். மேலும் செங்குத்தாக வெட்டிக்கொள்ளும். சதுரத்தின் கோணங்களை அதன் மூலைவிட்டங்கள் இருசமக்கூறிடும். பிற விவரங்கள் ஒரு சதுரத்தின் மூலைவிட்டங்கள் ஒவ்வொன்றின் நீளமும் அச்சதுரத்தின் பக்கநீளத்தைப்போல் (கிட்டத்தட்ட 1.414) மடங்காகும். விகிதமுறா எண் என நிறுவப்பட்ட முதல் எண் கோணங்களை இருசமக்கூறிடும் சம நீளமுள்ள மூலைவிட்டங்கள் கொண்ட இணைகரமாகச் சதுரத்தை வரையறுக்கலாம். செவ்வகமாகவும் சாய்சதுரமாகவும் அமையக்கூடிய வடிவவியல் வடிவமாகச் சதுரத்தைக் கருதலாம். சதுரத்தைச் சுற்றி அதன் நான்கு உச்சிகளின் வழியாகச் செல்லும் வட்டத்தின் (சுற்று வட்டம்) பரப்பளவு சதுரத்தின் பரப்பைப்போல் (கிட்டத்தட்ட 1.571) மடங்காகும். சதுரத்துக்குள் அதன் பக்கங்களைத் தொட்டவாறு வரையப்பட்ட வட்டத்தின் (உள்வட்டம்) பரப்பளவு சதுரத்தின் பரப்பளவைப்போல் (கிட்டத்தட்ட 0.7854) மடங்காகும். ஒரு சதுரத்துடன் சம சுற்றளவுடைய எந்தவொரு நாற்கரத்தின் பரப்பளவையும் விட சதுரத்தின் பரப்பளவு பெரியது.http://www2.mat.dtu.dk/people/V.L.Hansen/square.html சதுரம் அதிக சமச்சீருள்ள ஒரு வடிவம். ஒரு சதுரத்திற்கு நான்கு பிரதிபலிப்பு சமச்சீர் அச்சுகளும் நான்கு கிரம சுழற்சி சமச்சீரும் (through 90°, 180° , 270° கோண சுழற்சிகள்) உள்ளது. சதுரத்தின் சமச்சீர் குலம், ஒரு இருமுகக் குலம் ( D4). ABCD சதுரத்தின் பக்கங்கள் AB, BC , CD, DA ஆகியவற்றை உள்வட்டம் தொடும் புள்ளிகள் முறையே E , F , G , H மற்றும் உள்வட்டத்தின் மேலுள்ள ஒரு புள்ளி P எனில்http://gogeometry.com/problem/p331_square_inscribed_circle.htm: தமிழ்ப் பெயர் நாலாரம்  ( நாலு + ஆரம் ) நாலியாரம் ( நாலி+ ஆரம் ) நால்வாரி ( வரி -> வாரி ) நால்வாரிகை  ( வரி -> வாரி ) வரைதல் thumb|right|கவராயமும் நேர்விளிம்பும் மட்டும் கொண்டு சதுரம் வரைதல் கவராயமும் நேர்விளிம்பும் மட்டும் கொண்டு சதுரம் வரையும் விதம் இங்குள்ள அசைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. வரைமுறை நேர்விளிம்பு கொண்டு ஒரு நேர்கோடு வரைக. கவராயம் கொண்டு இக்கோட்டின் மீதமைந்த ஏதேனுமொரு புள்ளியை மையமாகவும் ஒரு குறிப்பிட்ட ஆரமும் கொண்ட வட்டம் வரைக. இவ்வட்ட மையத்துக்கும் வட்டமையம் கோட்டை வெட்டும் புள்ளிக்கும் இடைப்பட்ட தூரத்தை ஆரமாகவும், வட்டம் கோட்டை வெட்டும் புள்ளியை மையமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைக. இந்த இரண்டாவது வட்டம் முதல் வட்டத்தை வெட்டும் இரு புள்ளிகளை இணைத்து ஒரு கோட்டுத்துண்டு வரைக. இந்த கோட்டுத்துண்டு முதலில் வரைந்த கோட்டை சந்திக்கும் புள்ளியை மையமாகவும், இப்புள்ளிக்கும் முதல் வட்டத்தின் மையத்துக்கும் இடைப்பட்ட தூரத்தை ஆரமாகவும் கொண்டு மூன்றாவது வட்டமொன்று வரைக. இந்த வட்டம் கோட்டுத்துண்டை இரு புள்ளிகளில் சந்திக்கும். இந்த இரு புள்ளிகள் ஒவ்வொன்றையும் முதலில் வரைந்த வட்ட மையத்துடன் இணைத்து வரையப்படும் கோட்டை இருபுறங்களிலும் நீட்டித்தால், அக்கோடுகள் இரண்டும் முதல் வட்டத்தைச் சந்திக்கும் நான்கு புள்ளிகளும் ஒரு சதுரத்தை உருவாக்கும். மேற்கோள்கள் பகுப்பு:நாற்கரங்களின் வகைகள்
அம்பை
https://ta.wikipedia.org/wiki/அம்பை
அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லட்சுமி (C. S. Lakshmi, பிறப்பு:1944) தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 1960களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர். ​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாக படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் ​பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன. இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் சி. எஸ். லட்சுமி என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார். இவர் எழுதிய "சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை" என்ற சிறுகதை நூலுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது. வாழ்க்கை வரலாறு 1944 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் இவர் பிறந்தார். 1976இல் விஷ்ணு என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.. திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார். பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி படைப்பு, மற்றும் தான் தேர்ந்தெடுத்த சமூகப் பணிகளுக்குக் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு தடையாக இருக்கும் என்பது இவரது கருத்தாக இருந்தது. வரலாற்றில் முதுகலை பட்டமும் அமெரிக்கக் கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் கன்னடத்தில் புலமை பெற்றவர். ‘தங்கராஜ் எங்கே’ என்ற சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார். வெளிவந்த நூல்கள் அந்தி மாலை (புதினம்) ஒரு கறுப்புச் சிலந்தியுடன் (1988) அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு (2014) சிறகுகள் முறியும் (1976) - (முதலாவது தொகுதி - ஓர் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் பலவிதமான சம்பவங்களை சம்பிரதாயங்களை பேசும் கதைகள்) வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை (1988) காட்டில் ஒரு மான் (2000) சக்கர நாற்காலி ஸஞ்சாரி தண்ணியடிக்க வற்றும் ஏரியின் மீன்கள் (2007) பயணப்படாத பாதைகள் (ஓவியம், நாடகம், பாரம்பரிய நடனத்துறைகளில் ஈடுபட்ட பெண்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு) சொல்லாத கதைகள் (சுதந்திரப் போராட்டத்தில் பங்குபற்றிய பெண்கள், தலித்எழுத்தாளர்கள் ஆகியவர்களின் வாய்மொழி வரலாற்றுப்பதிவு) ஆங்கில மொழிபெயர்ப்பில் A Purple Sea (1992), In a Forest A Deer (2006) The Face Behind the Mask of Women in Tamil literature and Society and Women Writers (1984) - (ஆராய்ச்சி நூல்) Fragrance of Peace (இரோம் சர்மிளா)- தமிழில் "அமைதியின் நறுமணம்" (2010) சாகித்திய அகாதமி விருது 1960-ஆண்டிலிருந்து எழுதி வரும் அம்பையின் “சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை” என்ற சிறுகதை நூலுக்கு 2021-ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.2019 ஆண்டு வெளிவந்த இந்நூல் 244 பக்கங்களையும் 13 சிறுகதைகளையும் கொண்டுள்ளது.சாகித்திய அகாதமி விருதுடன் ரூபாய் 1 இலட்சம் மதிப்புள்ள காசோலை வழங்கப்பட்டது. எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புக்கள் அம்பை-காலச்சுவடு நேர்காணல் சிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல் அம்பையின் படைப்புகள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் பகுப்பு:1944 பிறப்புகள் பகுப்பு:இயல் விருது பெற்றவர்கள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்
அசோகமித்திரன்
https://ta.wikipedia.org/wiki/அசோகமித்திரன்
அசோகமித்திரன் (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்குப் பிறகு தனது 21-ஆம் வயதில் சென்னைக்குக் குடியேறினார் அசோகமித்திரன் 10 . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது . தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன், ஐக்கிய அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர். 1996-இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஐதராபாத்தைக் கதைக்களமாகக் கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துகளை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்து உண்டு.இவர் 2017 மார்ச்சு 23 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தன் மகன் வீட்டில் 86 ஆம் அகவையில் இறந்தார். ஆக்கங்கள் அசோகமித்திரன் 1957-ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினார். இவர் எழுதிய நாடகத்தின் முடிவு என்னும் சிறுகதை முதன்முறையாக கலைமகள் இதழில் 1957 ஆம் ஆண்டில் அச்சேறியது. 9 நாவல்கள் 16 சிறுகதைத் தொகுப்புகள் 2 குறுநாவல் தொகுப்புகள் 14 கட்டுரைத் தொகுப்புகள் 3 மொழிபெயர்ப்பு நூல்கள் 1 ஆங்கில நூல் சிறுகதைத் தொகுப்புகள் அப்பாவின் சிநேகிதர்; நர்மதா பதிப்பகம், சென்னை. உண்மை வேட்கை, நர்மதா, சென்னை; (உண்மை வேட்கை, பாதுகாப்பு, போட்டியாளர்கள், உயிர், சுந்தர், வண்டிப்பாதை, மெளனம், தெளிவு, மழை, புண் உமிழ் குருதி, புதுப்பழக்கம், மாறுதல், தொப்பி, சார்! சார்!, நானும் ஜே. ராமகிருஷ்ணராஜூவும் சேர்ந்து எடுத்த சினிமாப்படம், மகாமகம், ஒரு நாள் அதிகாலைப்போதில்) காலமும் ஐந்து குழந்தைகளும் தந்தைக்காக நாடகத்தின் முடிவு பிப்லப் சௌதுரியின் கடன் முறைப்பெண் வாழ்விலே ஒருமுறை; நர்மதா பதிப்பகம், சென்னை. விமோசனம், 1982, நர்மதா பதிப்பகம், சென்னை. அசோமித்திரன் கதைகள் : மூன்று தொகுதிகள்; கலைஞன் பதிப்பகம், சென்னை அசோகமித்திரன் கதைகள் தொகுப்பு 1&2 காலவரிசைப்படி சிறுகதைகள் அசோகமித்திரன் சிறுகதைகள் (1956 முதல் 1966 வரை எழுதிய 25 சிறுகதைகள்); நந்மதா பதிப்பகம், சென்னை. விரிந்த வயல்வெளிக்கப்பால் (1966 முதல் 1971 வரை எழுதிய 12 சிறுகதைகள்); நர்மதா பதிப்பகம், சென்னை. காந்தியும் புலிக்கலைஞனும் (1972 முதல் 1977 வரை எழுதிய 17 சிறுகதைகள்); கவிதா பப்ளிகேஷன், சென்னை. புண் உமிழ் குருதி (1978 முதல் 1981 வரை எழுதிய 27 கதைகள்); 2000 சூலை; கவிதா பப்ளிகேஷன், சென்னை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் Colours of Evil A Most Truthful Picture நாவல்கள் ஆகாசத்தாமரை; 1980; கலைஞன் பதிப்பகம், சென்னை; பக்.188 இன்று; செப்டம்பர் 1984; நர்மதா பதிப்பகம், சென்னை. ஒற்றன் கரைந்த நிழல்கள் (* திரைப்பட நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது.) 1969 (தீபம் மாத இதழில் வெளிவந்த தொடர்); இ.பதி. 1977; மூ.பதி. 1985, அன்னம், சிவகங்கை, பக்.156. தண்ணீர்; சென்னை கிறித்துவ இலக்கியச் சங்கம்; 1973 18-வது அட்சக்கோடு; 1975; கலைஞன் பதிப்பகம், சென்னை. பக்.268 (கணையாழியில் வெளிவந்த தொடர்) (செகந்தராபாத்தைப் பின்னணியாகக் கொண்ட நாவல், தேசப் பிரிவினை சமயத்தில் அங்கு இந்து - முஸ்லீம் இடையே நடந்த கலவரங்களை மையமாகக் கொண்டது.) மானசரோவர் யுத்தகளுக்கிடையில்...; 2010 பிப்ரவரி, பக்.160, நர்மதா பதிப்பகம், சென்னை. குறுநாவல்கள் இருவர் இரு ஒற்றர்கள் (மணியன் இதழில் வெளிவந்தது) விடுதலை; நர்மதா பதிப்பகம், சென்னை. தீபம் விழா மாலைப் போதில் அசோகமித்திரன் குறுநாவல்கள்: இரு தொகுதிகள்; கலைஞன் பதிப்பகம், சென்னை. கட்டுரைத் தொகுதிகள் அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2; கிழக்குப் பதிப்பகம், சென்னை. இருட்டிலிருந்து வெளிச்சம் எவை இழப்புகள்?; நர்மதா பதிப்பகம், சென்னை. காலக்கண்ணாடி காலப்பதிவு சில இந்திய மொழிகளில் முதல் நாவல்கள்: தோற்றமும் வளர்ச்சியும்; 2001, பக்.176, ராஜராஜன் பதிப்பகம், சென்னை. நினைவோடை:27 கட்டுரைகள்; 2009 செப்டம்பர், நர்மதா பதிப்பகம், சென்னை. படைப்பாளிகளின் உலகம் பார்வைகள் பிரதிபலிப்பு தகைமைகளும் விருதுகளும் இவருக்குப் பல தகைமைகளும் விருதுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் சில:- இவருக்குத் தமிழ்நாடு அரசு பரிசுகள் மும்முறையும் இலக்கியச் சிந்தனை விருதுகள் 1977 இலும் 1984 இலும் இருமுறையும் கிடைத்தன. இவருக்கு இந்திய இலக்கியத்தை ஒப்பீடு செய்யும் ஆய்வுக்கு கே.கே. பிர்லா நல்கை கிடைத்தது. மேலும் 1973–74 இல் அயோவா பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கிய நல்கையும் கிடைத்தது. லில்லி நினைவுப் பரிசு, 1992 இவருக்கு 1993 இல் இராமகிருஷ்ணா ஜெய்தயாள் அமைதி விருது டால்மியா அறக்கட்டளையால் தரப்பட்டது. அக்ட்சரா விருது, 1996. இவரது அப்பாவின் சிநேகிதர் எனும் சிறுகதை தொகுப்புக்கு 1996-இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. 2007 ஜனவரியில் எம்.ஜி.ஆர் விருது இவர் 2012 மே மாதத்தில் ''என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருதை என்.டி.ஆர். அறிவியல் அறக்கட்டளையில் இருந்து பெற்றார். 2013 பிப்ரவரி 10 இல் சென்னையில் நடந்த விழாவொன்றில் தொடக்கநிலை க.நா.சு. விருது 2013 மார்ச்சு 30 இல் கொல்கத்தாவில் உள்ள பாரதீய பாஷா அறக்கட்டளையின் விருது மேற்கோள்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:1931 பிறப்புகள் பகுப்பு:2017 இறப்புகள்
இட்லி
https://ta.wikipedia.org/wiki/இட்லி
இட்லி (இட்டலி) () என்பது அரிசியினால் செய்யப்படும் ஓர் உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவான இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வரலாறு இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார். பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி குறித்து, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை ஆண்ட இந்து சமய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறை தான் இப்போது பின்பற்றப்படுவதாக, உணவு நிபுணர் அட்சயா தனது பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். K. T. Achaya (May 12, 1994). Indian Food: A Historical Companion. Oxford University Press, USA. . பக்கம் 90 பரிமாறும் முறை thumbnail|வலது|சட்னியுடன் இட்லி பொதுவாக இட்லியை தனியாக உண்ணமாட்டார்கள், ஏனெனில் சற்றே வெற்று சுவை கொண்டது. ஆதலால், உணவில் சுவையினைக் கூட்டுவதற்காக சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. தென் இந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும் பெறும்பாலான உணவுகள் சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி. சில நேரங்களில் குழம்பு வகைகளும் சேர்த்துக் கொள்ளப்படும். செய்முறை இதனையும் பார்க்க : விக்கிநூல்களில் இட்லி thumb|அரிசி மற்றும் உளுந்தை அரைக்கும் பாரம்பரிய அரவை இயந்திரம் தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி - 400 கிராம் உளுத்தம் பருப்பு - 100 கிராம் உப்பு - தேவையான அளவு ஒரு பங்கு உளுத்தம்பருப்புக்கு நான்கு பங்கு அரிசி அல்லது அரிசி அளவில் நான்கில் ஒரு பங்கு உளுத்தம்பருப்பு என்பது கணக்கு. உளுத்தம்பருப்பு புதிதாக இருப்பின் சிறிது குறைத்தும் போடலாம். அரிசியையும் உளுத்தம்பருப்புவையும் தனித்தனியாக ஊறவைக்கவும். சுமார் 3 மணிநேரம் ஊறவைக்கவும். முழு உளுத்தம்பருப்பாக இருப்பின் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் போதுமானது. அரிசியையும், உளுத்தம்பருப்பினையும் தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். கெட்டியாக வெண்ணெய் பதத்தில் இருக்குமாறு அரைத்துக்கொள்ளவும். பிறகு, இரண்டு மாவினையும் ஒன்றாகக் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 3 மணி நேரம் புளிக்க விடவும். இட்லிக்கு 3 அல்லது 4 மணிநேரம் புளிக்க வைத்தலே போதுமானது என்றாலும், பலர் முதல்நாள் இரவே மாவினை அரைத்து வைத்து மறுநாள் காலை பயன்படுத்துகின்றனர். புளித்த மாவினை இட்லிதட்டில் ஊற்றி, வேகவைத்து எடுக்கவும். வேகவைக்கும் நேரம் நாம் பயன்படுத்தும் உபகரணத்தினைப் பொறுத்து வேறுபடும். வகைகள் இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில: செட்டிநாடு இட்லி மங்களூர் இட்லி காஞ்சிபுரம் இட்லி (செய்முறை ) ரவா இட்லி சவ்வரிசி இட்லி சேமியா இட்லி (செய்முறை ) சாம்பார் இட்லி - இட்லி சாம்பார் நிரப்பப்பட்ட கிண்ணத்தில் பரிமாறப்படும். குஷ்பு இட்லி - கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தில் இது முக்கியத்துவமுடையது. குட்டி இட்லி (மினி இட்லி)(fourteen idly/Mini Idly) - சின்ன சின்னதாக 14 இட்லிகள், ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும். சாம்பார் இட்லி - ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்திலோ சாம்பார் நிரப்பப்பட்டு பரிமாறப்படும். பொடி இட்லி - இட்லி மீது மிளகாய்பொடி தூவப்பட்டு பரிமாறப்படும். இட்லிச் சட்டி thumb|right|250px|இட்டலித் தட்டும் இட்டலிக் கொப்பரையும். இட்டலிக்க் கொப்பரையில் நீரிட்டு அந்த நீராவியில் வேகும் இட்டலி மாவு இட்டலியாகின்றது. இட்லி செய்ய அதற்கென வடிவமைக்கப்பட்ட சட்டி தேவை ஆகும். வட்ட வடிவத்தில் குழிகள் கொண்ட தட்டுக்களை கொண்ட, நீர் ஆவி மூலம் வேக வைக்க என தயாரிக்கப்பட்ட சட்டி, அதற்கான மூடி ஆகியவைகளைக் கொண்டது இட்லி சட்டி. இட்லி குறித்த சர்ச்சை டிவிட் பிரிட்டனை சேர்ந்த வரலாற்றுத் துறைப் பேராசிரியர் எட்வர்ட் ஆண்டர்சன், இந்திய உணவான இட்லியை சலிப்பு மிக்கது என்றும் மக்கள் இதை ஏன் மிகவும் விரும்புகிறார்கள் என்றும் புரிந்துகொள்ளவே முடியவில்லை என்று தனது டவிட்டரில் குறிப்பிட்ட நிகழ்வு, இட்லிப் பிரியர்கள் நடுவில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பி உள்ளது. இட்லி பிரியர்கள் பலர் தங்களுக்கு விருப்பமான உணவை தவறாக விமர்சிக்கப்படுவதை கண்டு விரக்தியடைந்து, ட்விட்டரில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர். ’இட்லியை தவறாக பேசுவதா?’ - ட்விட்டரில் கொதித்தெழுந்த இட்லி பிரியர்கள் மேலும் பார்க்க தமிழர் சமையல் தோசை அப்பம் பொங்கல் இடியப்பம் வெளி இணைப்புகள் தமிழ்குடும்பம்.காம் அறுசுவை.காம் கீற்று இதழில் இட்லியில் உள்ள சத்துக்கள் பற்றிய கட்டுரை ஆதாரங்கள் பகுப்பு:தமிழர் சமையல் பகுப்பு:சிற்றுண்டி உணவுகள் பகுப்பு:ஆந்திர சமையல் பகுப்பு:கேரள சமையல்
நீர்ப்பாசனம்
https://ta.wikipedia.org/wiki/நீர்ப்பாசனம்
thumb|பாத்திக்கு நீர்பாய்ச்சும் நீர்ப்பாசனத் தெளிப்பி thumb|துருக்கி ஓசுமேனியாவில் உள்ள நீர்ப்பாசனக் கால்வாய் thumb|300px|நீர் தெளிக்கும் தலைப்பகுதிக் கருவி, தெளிப்பு நீர்ப் பாசனம் நீர்ப்பாசனம் (Irrigation) என்பது வேளாண்மையில், ஒழுங்கான இடைவெளிகளில் பயிர் களுக்குக் கட்டுபடுத்திய அளவு நீரை வழங்கும் முறையாகும். நீர்ப்பாசனம் வேளாண்பயிர் வளர்க்கவும் நிலக்கட்டமைப்பைப் பேணவும் மழை பொய்த்த காலத்தில் உலர்பகுதிகளின் மண்வளம் பேணவும், மீள்பசுமையூட்டவும் பயன்படுகிறது. மேலும் பயிரிடும்போது பயிர்களைப் பனிப்படர்வில் இருந்து காக்கவும் இது பயனாகிறது. மேலும் களைகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தவும், மண் கடினமாதலைத் தடுத்தல் போன்ற செயல்களுக்கும் உதவுகிறது. நீர்ப்பாசன அமைப்புகள் தூசை அடக்கவும், கழிவு வெளியேற்றவும், சுரங்கத்தில் கனிமக் கரைந்தூற வைக்கவும் பயன்படுகின்றன. மாறாக, நேரடி மழையை நம்பி விளையும் பயிர் மானாவாரிப் பயிரிடல் அல்லது மானாவாரி வேளாண்மை அல்லது கொல்லை வேளாண்மை எனப்படுகிறது. நீர்ப்பாசனம் வடிகாலுடன் இணைந்தே ஆய்வு செய்யப்படுகிறது. இந்த வடிகால் குறிப்பிட்ட பரப்பில் இயற்கையானதாகவோ அல்லது செயற்கையானதாகவோ, அதேவேளை மேற்பரப்புநீரை வடிப்பதாகவோ அல்லது கீழ்நீரை வடிப்பதாகவோ அமையலாம். நீர்ப்பாசனம் 5000 ஆண்டுகளாக வேளாண்மையில் அடிப்படை ஏந்தாக நிலவி வருகிறது. இது பல பண்டைய பண்பாடுகளின் விளைவாகும். வரலாற்றியலாக, நம்புவியின் பொருளியலுக்கும், சமூகங்களுக்கும் ஆசியா முதல் வட அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதி வரை வாழ்க்கை வளமாகியது. வரலாறு thumb|upright|விலங்கு பூட்டிய நீர்ப்பாசனம், எகிப்து, கி.பி. 1846 thumb|சிங்கியாங்கின் தர்ப்பானில் அமைந்த கரேழ் எனும் சுருங்கை நீர்ப்பாசனம் thumb|இந்தியாவில் தமிழ்நாட்டின் நீர்ப்பாசனம் thumb|கலிபோர்னியாவின் இரியோ விசுட்டா அருகே உள்ள பயிர்த்தெளிப்பான் thumb|அமெரிக்க ஒன்றிய நாட்டின் அரிசோனாவில் உள்ள போனிக்சு பகுதி வீட்டு வெள்ள நீர்ப்பாசனம். மழை சார்ந்த வேளாண்மையில் போதுமான நீர் கிடைக்காதபோது நீர்ப்பாசனப் பயன்பாடு நிலவியமை தொல்லியல் அகழாய்வுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. தொடர் நீர்ப்பாசனம் மெசபடோமியச் சமவெளியில் பயிர்களின் வளர்பருவத்தில் ஒழுங்காக வயல்களில் கட்டப்பட்ட பாத்திகளூடாக நடைமுறையில் இருந்துள்ளது.Hill, Donald: A History of Engineering பண்டைய எகிப்திய மக்கள் நைல் ஆற்றின் வெள்ளநீரைப் பயன்படுத்தி வடிநில நீர்ப்பாசன முறையால் வயல்களுக்கு நீரைப் பாய்ச்சியுள்ளனர். இந்த வயல்களைச் சுற்றிலும் தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தன. வெள்ளநீர் வயல்களில் செழிப்பான வண்டல் படியும் வரை நிறுத்திப், பின்னர் ஆற்றுக்கு வடிய விடப்பட்டுள்ளது.p19 Hill பண்டைய எகிப்திய பன்னிரண்டாம் பேரரசின் பரோவா ஆகிய மூன்றாம் அமனமெது (கி.மு 1800 ) பையூம் பாலைவனச்சோலையில் இருந்த இயற்கை ஏரியைப் பயன்படுத்தி மிகநீர்வரத்தைத் தேக்கி வறண்ட காலங்களில் வேளாண்மைக்குப் பயன்படுத்தியுள்ளமைக்கன சான்றுகள் உள்ளன. வெள்ளக் காலங்களில் இந்தத் தேக்கம் நைல்நதியின் நீர்ப்பெருக்கால் கரைபுரண்டுள்ளது. பண்டைய நியோபியர்கள் சாகியா நீராழியைப் பயன்படுத்தி கி.மு மூன்றாம், இரண்டாம் ஆயிரங்களில் நீர்ப்பாசனத்தை மேற்கொண்டுள்ளனர். இப்போது சூடானில் உள்ள ஆறுகளோடு நைல்நதியின் வெள்ளப் பெருக்கைப் பெரும்பாலும் இந்தவகை நீர்ப்பாசனம் பயன்கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள சகாரா உட்பகுதியில் நைகர் ஆற்றங்கரைப் பண்பாடுகளில் கி.மு இரண்டாம், முதலாம் ஆயிரங்களில் பருவமுறை வெள்ளத்தைப் பயன்படுத்தி நீர்ப்பாசனம் நடைபெற்றுள்ளது. மேட்டு அடுக்குநிலைப் பாசனம் முன்பு கொலம்பியா, அமெரிக்காவிலும், இந்தியாவிலும் சீனாவிலும் நடப்பில் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பெருவில் அமைந்த ஆந்தெசு மலைத் தொடர்களில் உள்ள சானா பள்ளத்தாக்கில், தொல்லியலாளர்கள் மூன்று நீர்ப்பாசனக் கால்வாய்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பின்படி, கி.மு நான்காம், கி.மு மூன்றாம், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டகளைச் சார்ந்தவையாகும். புத்துலகப் பகுதியில் கிடைத்த மிகப்பழைய பாசனக் கால்வாய்களாகும். மேலும் கி.மு நான்காம் நூற்றாண்டுக் கால்வாய்க்கடியில் கி.மு ஐந்தாம் நூற்றாண்டுக் கால்வாய்க்கான சுவடுகளும் கிடைத்துள்ளன. இப்போதைய பாக்கித்தானிலும் வட இந்தியாவிலும் அமைந்திருந்த சிந்துவெளி நாகரிகம் நுட்பம் வாய்ந்த நீர்த்தேக்க அமைப்புகளையும் பாசன முறைகளையும் வளர்த்தெடுத்துள்ளது. இதில் கி.மு 3000 அளவில் கிர்னாரில் அமைதிருந்த அணைகளும், கி.மு 2600 இல் உருவாக்கபட்ட பாசனக் கால்வாய் அமைப்புகளும் உள்ளடங்கும்.Rodda, J. C. and Ubertini, Lucio (2004). The Basis of நாகரிகம் – Water Science? pg 161. International Association of Hydrological Sciences (International Association of Hydrological Sciences Press 2004). இங்கு பேரளவு வேளான்மைக்கான பாசனக் கால்வாய் வலையமைப்புகள் வழியாக நீர்ப்பாசனம் நடைபெற்றுள்ளது. பண்டைய பாரசீகத்தில் (இன்றைய ஈரானில்) கி.மு 6000 ஆண்டுகளிலேயே பார்லி அரிசி இயற்கையான மழையளவு குறைவாக இருந்தபோதும் பயிரிடப்பட்டுள்ளது. பண்டைய பாரசீகத்தில் கி.மு 800 இல் உருவாக்கப்பட்ட குவானாத் பாசனமுறைகள் மிகப்பழைய பாசனமுறைகளாக அமைதலோடு இன்றளவும் அவை நடைமுறையில் நிலவி வருகின்றன. இம்முறைகள் இன்றும் ஆசியாவிலும் நடுவண் கிழக்கிலும் வட ஆப்பிரிக்காவிலும் பயன்பாட்டில் உள்ளன. இந்த அமைப்பில் செங்குத்தான மலைகளில் செங்குத்தான சுவர்களும் அவற்றில் இருந்து மலைச் சாரலின் முகப்புவரை சாய்வாக இறங்கும் கால்வாய்கள் அமைந்த சுருங்கைகளும் நிலத்தடி நீரை மடுத்து பயன்படுத்திப் பாசனத்தை மேற்கொண்டன. இதே கால அளவில் வட ஆப்பிரிக்காவில் குடியேறிய உரோமானியர்களால் உருவாக்கப்பட்ட விளிம்பில் களிமட்பானைகள் பூட்டப்பட்ட நோரியா எனும் நீராழி ஆற்று நீரில் நீரோட்டத் திறனாலும் தேங்கிய நீரில் விலங்குகளின் ஆற்றலாலும் இயங்கியுள்ளது. கி.மு 150 அளவில், இந்தப் பானைகள், நீரில் வேகமாக இறங்கும்போது, நீரை மெதுவாக முகக்க, அவற்றில் கவாடங்கள் பூட்டப்பட்டுள்ளன.Encyclopædia Britannica, 1911 and 1989 editions பண்டைய இலங்கையில் கிமு 300 அளவில் பாண்டுகப்பாயா ஆட்சியில் வளர்த்தெடுக்கப்பட்ட பாசனப் பணிகள் அமைவு, பண்டைய உலகின் மிகச்சிக்கலான பாசனமுறைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இவர்கள் நிலத்தடிக் கால்வாய்களை உருவாக்கிக் கட்டியமைத்ததோடு பெருமளவு நீரைத் தேக்கிடவல்ல அணைகளையும் கட்டியெழுப்பினர். இந்த அவர்களது திறமைக்காக அவர்கள் பாசன வல்லுனர்கள் எனவும் போற்றப்பட்டனர்.<!—இந்த மேற்கோள் சிறிலங்காவின் சிங்கள ஆசிரியரால் எழுதப்பட்டது– இது சிங்களத் தேசியப் பரப்புரை போல அமைகிறதே தவிர வரலாறாகத் தோன்றவில்லை --> பெரும்பாலான இந்தப் பாசன அமைப்புகள் அனுராதபுரத்திலும் பொலனருவையிலும் அவற்றின் முன்னேறிய பொறியியல் வல்லமையாலும் துல்லியமான நடைமுறையாலும் இன்றும் அழிவின்றி நிலவுகின்றன. இந்தப் பாசன அமைப்புபராக்கிரம பாகு எனும் அரசர் காலத்தில் (கி,பி 1153–1186 ) மீட்டு மேலும் விரிவாக்கப்பட்டன. இன்றைய நீர்ப்பாசனப் பரவலும் அளவும் thumb|left|சுட்டிராபெரி முகட்டுச் சாலைக்குச் சற்றே தொலைவில் அமைந்தபென்னிசில்வேனியாவின் மாண்டவர் கவுண்ட்யில் இருந்த பாசனக் கால்வாய் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பெருகிய டீசல்-எக்கி அணிகளும் மின்னோடி-எக்கி அணிகளும் நிலத்தடி நீரை வேகமாகப் பாசனத்துக்காக இறைப்பதால், மிகப்பெரிய நீரகங்களும் அவை மழைவடிகால்களால் நிறையும் வேகத்தை விட வேகமாக வற்றிவருகின்றன. இதனால் நீரகத் தேக்களவு நிலையாக குறைக்கவும் நீரின் தரத்தைக் குறைக்கவும் நிலப்பரப்பு குலையவும் வேறுபிறச் சிக்கல்கள் உருவாகவும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிகழ்வால் வடசீனச் சமவெளி, பஞ்சாப் சமவெளி, அமெரிக்க ஒன்றிய நாடுகளின் பெருஞ்சமவெளிகளின் உணவு விளைச்சல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. 2000 ஆம் ஆண்டளவில், புவிக்கோள முழுவதிலும், 2,788,000 km² (689 மில்லியன் ஏக்கர்கள்) அளவுக்குச் செழிப்பான நிலப் பரப்பு பாசன அமைப்புகளைப் பெற்றுள்ளன. இதில் 68% பரப்பு ஆசியாவிலும், 17% பரப்பு அமெரிக்காவிலும் 9% பரப்பு ஐரோப்பாவிலும் 5% பரப்பு ஆப்பிரிக்காவிலும் 1% பரப்பு ஓசியானாவிலும் அமைந்துள்லது. உலகின் உயர்பாசனச் செறிவுள்ல பகுதிகள் கீழ்வருமாறு: கங்கை, சிந்து ஆற்ருச் சமவெளிகளில் அமைந்த பாக்கித்தான் வட இந்தியப் பகுதிகள் சினாவின் கை கே, குவாங் கே, யாங்ட்சே வடிநிலங்கள் (படுகைகள்) எகிபது, சூடானில் உள்ள நைல் ஆற்றங்கரைச் சமவெளி மிசிசிப்பி-மிசிசோரி ஆற்ருச் சமவெளி, கலிபோர்னியாவின் சில பகுதிகள் சிறுசிறு பாசனப் பகுதிகள் மக்கள் வாழும் உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளன. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு. 2008 இல் பாசன நிலப் பரப்பளவு 3,245,566 km² அளவுக்கு உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (802 million acres)இது இந்தியாவின் பரப்பளவுக்குச் சமமாகும். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு. 2008 இல் பாசன நிலப் பரப்பளவு 3,245,566 km² அளவுக்கு உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (802 million acres)இது இந்தியாவின் பரப்பளவுக்குச் சமமாகும். நீர்ப்பாசன வகைகள் thumb|கோதுமைக்கான வடிநில வெள்ள நீர்ப்பாசனம் thumb|பாக்கித்தானப் பஞ்சாபில் உள்ள நீர்ப்பாசனம் நீர் உரிய வாயில்களில் இருந்து வயலுக்கு எவ்வாறு பரவச்செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து பல்வேறு நீர்ப்பாசனம் நுட்பங்கள் வேறுபடுகின்றன. பொதுவாக, பாசனத்தின் இலக்கு வயலுக்கு சீராக நீரைப் பாய்ச்சுவதாகும். நீரளவு போதுமானதாக கூடவோ குறையவோ அமையாமல் இருத்தல் வேண்டும். மேற்கோள்கள் மேலும் படிக்க Elvin, Mark. The retreat of the elephants: an environmental history of China (Yale University Press, 2004) Hallows, Peter J., and Donald G. Thompson. History of irrigation in Australia ANCID, 1995. Howell, Terry. "Drops of life in the history of irrigation." Irrigation journal 3 (2000): 26-33. the history of sprinker systems online Hassan, John. A history of water in modern England and Wales (Manchester University Press, 1998) Vaidyanathan, A. Water resource management: institutions and irrigation development in India (Oxford University Press, 1999) வெளி இணைப்புகள் Royal Engineers Museum : 19th century Irrigation in India International Commission on Irrigation and Drainage (ICID) When2Water.com Tutorial and online calculators related to agricultural irrigation Irrigation at the Water Quality Information Center, U.S. Department of Agriculture AQUASTAT: FAO's global information system on water and agriculture Irrigation Supplies: Principles of Water Irrigation Systems Irrigation & Gardening: Future Of Irrigation Needs "Lamp Wick Solves Problem of Citrus Irrigation" Popular Mechanics, November 1930 World Bank report on Agricultural water management Irrigation is discussed in chps. 1&4.
தேன்
https://ta.wikipedia.org/wiki/தேன்
thumb|ஒளி ஊடுருவும் செம்பழுப்பு நிறத்தில் கண்ணாடி புட்டியில் தேன் thumb|அறுகோண வடிவில் தனித்தனி அறைகள் கொண்ட தேனடை அல்லது தேன் கூடு. தேன்கூடு என்பது தனி ஒரு அறையையும் குறிக்கும் thumb|தேன்கலயம் தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது. நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, நுண்ணுயிர்களை (கிருமிகளை) வளர விடுவது இல்லை. பதப்படுத்தப்படாத தேனில் 14%-18% ஈரத்தன்மை உள்ளது. 18%க்கு கீழே ஈரத்தன்மை உள்ள வரை தேனில் நுண்ணுயிர்கள் (கிருமிகள்) வளர இயலாது. தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிலிருந்து கொண்டு வரும் குளுக்கோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சள் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும். தேன், கலோரி ஆற்றல் மிகுந்த ஒர் உணவாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய சர்க்கரை நீரின் எடையைவிட இருமடங்கு அதிக எடையாகும். உலகில் தேன் வழி நிகழும் பொருளியல் ஈட்டம் பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 94 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.(1985 ஆம் ஆண்டுக் கணக்கு)World book Encyclopedia, 1985 Edition, கனடாவில் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. அறுகோன இருக்கும் தேன் அறைகள் ஒரு இயற்கை அற்புதம். இயற்கை வழி கட்டும் அறிவை தெரிந்து கொண்டுள்ள தேனீக்கள் இந்த வடிவத்தில் பரப்பளவை துல்லியமாகப் பயன்படுத்துகின்றன. பயன்கள் தேன் ஒரு உணவு சமையல், ரொட்டி தயாரிப்பு மற்றும் ரொட்டியின் மீது தடவப்படும் பரவல்,தேநீர் போன்ற பல்வேறு வகையான பானங்களுடன் கலக்கப்படும் கூடுதல் பானம், வணிக பானங்களில் சேர்க்கப்படும் ஒரு இனிப்பு என பல்வகைகளில் தேன் உபயோகமாகிறது. தேசிய தேன் வாரியத்தின் வரையறையின்படி ”தேன் என்பது ஒரு தூய்மையான பொருள். தூய தேனில் தண்ணீரோ வேறு இனிப்பூட்டும் திரவங்களோ கலக்கக் கூடாது.பொதுவாக தேன் விருந்து,தேன் கடுகு போன்ற துணை இனிப்புச் சாறுகள் வணிக உலகில் பிரபலமாக உள்ளன. தேன்மது அல்லது தேன் பீர் போன்ற தேன் – நீர் கலவையான மதுவகையின் முக்கிய உட்பொருளாக தேன் உள்ளது. இயற்கையாகத் தேனிலிருந்து கிடைக்கும் புளிப்பூட்டும் நொதிதான் வரலாற்று ரீதியாகத் தேன்மதுவை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பர். இம்மது வகைகளை தயாரிக்க தேனும் நீரும் சேர்ந்த கலவையுடன் சிறிதளவு புளிப்பு நொதி ஈச்டு சேர்த்து ஊறவைக்கவேண்டும். நாற்பது நாட்களில் முதலாவது நொதித்தல் நிகழ்ந்த பிறகு ஊறலை இரண்டாவது நொதித்தல் கலத்திற்கு மாற்றி மீண்டும் 35 முதல் 40 நாட்களுக்கு நொதிக்க விடவேண்டும். இவை சரியாக நிகழும் நேர்வுகளில் நொதித்தல் முழுமையடைகிறது. தேவைப்படின் சர்க்கரை சேர்த்தி மீண்டும் சில நாட்களுக்கு நொதித்தலுக்கு விடப்படுகிறது. தேன் ஒரு ஊட்டச்சத்து சக்கரை மற்றும் இதர சில கூட்டுப்பொருள்களின் கலவையாக தேன் உள்ளது. மாவுச்சத்துகள் என்ற அடிப்படையில் தேனை பகுக்கும்போது தேனில் பிரதானமாக பிரக்டோச் 38.5 சதவீதமும் குளுக்கோச் 31.0 சதவீதமும் கலந்துள்ளதாக அறியப்படுகிறது. செயற்கையான ஒரு சர்க்கரை திரவமாக தயாரிக்கும்போது அதில் தோராயமாக 48% பிரக்டோச், 47% குளுக்கோச் மற்றும் 5% சுக்ரோச் கலக்கப்படுகிறது. எஞ்சியுள்ள தேனில் மாவுச்சத்துகளான மால்டோச், சுக்ரோச் மற்றும் இதர சிக்கலான மாவுச்சத்துகள் அடங்கியுள்ளன. பிற சத்துள்ள இனிப்புச் சாறுகளைப் போலவே தேனும் அதிக அளவிளான சர்க்கரையும் சிறிய அளவில் உயிர்சத்துக்கள் அல்லது கனிமங்களைக் கொண்டுள்ளது.மேலும் தேனில் சிறிதளவு கலந்துள்ள பல்வேறு கூட்டுப்பொருள்கள் ஆக்சிச்னேற்ற எதிர்ப்பிகளாக செயலாற்றுகின்றன. தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனின் கூட்டுப்பொருள்கள் தேனீக்களுக்கு கிடைக்கும் பூக்களின் தன்மையை பொறுத்தே அமைகிறது. தேன் – ஆய்வும் பகுதிப்பொருட்களும்: பிரக்டோச்: 38.2% குளுக்கோச்: 31.3% மால்டோச்: 7.1% சுக்ரோச்: 1.3% நீர்: 17.2% சர்க்கரை: 1.5% சாம்பல்: 0.2% மற்றவை : 3.2% ஆப்பிரிக்கா நாட்டில், அறுவை சிகிச்சை முடித்து தையல்கள் போட்டபின் காயம் ஆறுவதற்காக சுத்தமான தேனைத் தடவுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. காயங்களின் மீது தேனைத் தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தேன் பாதுகாப்பு தேனின் தனிப்பட்ட அமைப்பு மற்றும் அதன் இரசாயன பண்புகள், தேனை நீண்ட காலம் சேமிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மேலும் நீண்ட கால சேமிப்பிற்குப் பிறகும் தேன் எளிதில் உட்கிரகிக்கப்பட்டு செரிக்கச் செய்கிறது. தேன், மற்றும் தேனின் உள்ளடக்கப் பொருட்கள், பத்தாண்டுகள் ஏன் நூற்றாண்டுகளாகக் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வரம்பிற்குட்பட்ட ஈரப்பதமே தேனைப் பாதுகாப்பதிலுள்ள முக்கிய நுணுக்கமாகும். தூயநிலையில் தேன் போதிய உயர் சர்க்கரை உள்ளடக்கம் கொண்டு நொதித்தலை தடுக்கும் தன்மையை கொண்டுள்ளது. ஈரமான காற்று தேனின் மீது படும்பொழுது , அதன் நீர்கவர் பண்புகள் ஈரப்பதத்தை இழுத்து தேனை நீர்த்துப் போகச் செய்து இறுதியில் நொதித்தல் தொடங்கி விடக்கூடும். தேனைப் படிகமாக்கி காலப்போக்கில் அதனை சூடாக்கி கரைத்தும் பயன்படுத்தலாம். தேன் தரப்படுத்துதல் அமெரிக்க விவசாயத் துறை நிர்ணயித்துள்ள தரஅளவுகோலின் அடிப்படையில் தேன் தரப்படுத்துதல் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படுகிறது (யுஎஸ்டிஏ "இணையதள வழியாகவோ அல்லது நிறைய ஆய்வு மேற்கொண்டோ ஒரு கட்டணச் சேவை அடிப்படையில் தரம் பிரிக்கிறது). நீர் உள்ளடக்கம், சுவை மற்றும் மணம், குறைபாடுகள் இல்லாமை மற்றும் தெளிவாக இருத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு தேன் தரப்படுத்தப்படுகிறது. தர அள்வுகோலில் நிறம் ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றாலும் நிறத்தின் அடிப்படையிலும் தேன் வகைபடுத்தப்படுவது உண்டு. தேன் தர அளவுகோல்:- தரம் நீர் உள்ளடக்கம் சுவை மற்றும் நறுமணம் குறைகளில்லாமை தெளிவு அ < 18.6% நல்லது — சாதாரண சுவை மற்றும் நறுமணம் கொண்டிருக்கும். இனிப்பூட்டும் மலர்களிடமிருந்து உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். புகை, நொதி , இரசாயணங்கள் மற்றும் பிற வாசனைகள் இல்லாமலிருக்கும். பயன்பாட்டிற்கு உகந்தது. — பயன்படுத்த ஏதுவாய் குறைகளின்றி பார்ப்பதற்கும் உண்பதற்கும் உகந்ததாக இருக்கும் தெளிவு — தோற்றத்தைப் பாதிக்காத அளவில் காற்றுக் குமிழ்கள், மகரந்தத் தூள் முதலியன கலந்து இருக்கலாம். ஆ > 18.6% and < 20.0% சுமார் — நடைமுறையில் காரச்சுவை புகை, நொதிகள் , இரசாயணங்கள் மற்றும் பிற வாசனைகள் இல்லாமலிருக்கும். ஓரளவுக்கு சுமார் — தோற்றம் மற்றும் உண்ணும் தன்மையை பாதிக்காமல் இருக்கும். சுமாரான தெளிவு — தோற்றத்தைப் பாதிக்காத அளவில் காற்றுக் குமிழ்கள், மகரந்தத் தூள் முதலியன கலந்து இருக்கலாம். இ < 20.0% பரவாயில்லை — நடைமுறையில் காரச்சுவை புகை, நொதிகள் , இரசாயணங்கள் மற்றும் பிற வாசனைகள் இல்லாமலிருக்கும். குறைகளிருப்பது போல் தோன்றலாம் — ஆனால் தோற்றம் மற்றும் உண்ணூம் தன்மையில் பாதிப்பு இருக்காது. தெளிவில் ஐயம் — தோற்றத்தைப் பாதிக்காத அளவில் காற்றுக் குமிழ்கள், மகரந்தத் தூள் முதலியன கலந்து இருக்கலாம். தரத்திற்கு கீழ் > 20.0% தரம் இ யைக் காட்டிலும் தாழ்ந்தது. தரம் இ யைக் காட்டிலும் தாழ்ந்தது. தரம் இ யைக் காட்டிலும் தாழ்ந்தது. மற்ற நாடுகளில் தேன் தரம் பிரித்தலுக்கு வெவ்வேறு வகையான அளவீடுகளை கடைபிடிக்கின்றன. உதாரணாமாக இந்தியா போன்ற நாடுகளில் இதர அனுபவ அளவீடுகள் மற்றும் சில சோதனை முடிவுகளின் அடிப்படையில் தேன் தரம் பிரிக்கப்படுகிறது. கிளாஸ்டிரீயம் நச்சேற்றம் தேனில் இயற்கையாகவே உள்ள சிறிதளவு காரச்சுவை ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளைப் பாதிக்கும். அதனால் அக்குழந்தைகளுக்கு தேன் உணவைக் கொடுப்பதில்லை. வளர்ச்சியடைந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் முதிர்ந்த செரிமான அமைப்பு பொதுவாக நுண்ணுயிரிகளின் ஸ்போர்களை அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும். கைகுழந்தைகளுக்கு தேனில் உள்ள இந்த ஸ்போர்கள் பாதிப்பை உண்டாக்குகின்றன. காமா கதிர் வீச்சுக்குட்படுத்தப்பட்ட மருத்துவ தரமுள்ள தேனில் கிளாஸ்டிரிய நச்சேற்றத்திற்கான ஸ்போர்கள் மிகக் குறைந்த அளவே காணப்படுவதால் பாதிப்பு குறைவாகவே இருக்கும். காமா கதிவீச்சு தேனின் பாக்டிரியா எதிர்ப்பு தன்மையை சிறிதும் பாதிக்காது. குழந்தை கிளாஸ்டிரீயம் நச்சேற்றம் புவியின் நிலப்பரப்பில் பல்வேறு மாறுபாடுக்ளைக் காட்டுகிறது. பிரிட்டனில், 1976 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஆறே ஆறு குழந்தை கிளாஸ்டிரீய நச்சேற்றப் பாதிப்புகள் இருந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது, அமெரிக்காவில் இப்பாதிப்பு ஒரு இலட்சம் குழந்தைகளுக்கு 1.9 என்ற அளவில் உள்ளது. இந்த அளவிலும் 47.2% கலிபோர்னியா குழந்தைகளிடம் காணப்படுகிறது. தேனின் இந்த ஆபத்து விகிதம் சிறியதாக உள்ளது என்றாலும் கைக்குழந்தைகளுக்கு . சுகாதார நோக்கில் தேன் பரிந்துரைக்கப்படுவதில்லை. நச்சு தேன் அரளிப்பூ, பசுமைமாறச் செடிவகையைச் சேர்ந்த பெரிடிய மலர்கள், புன்னை மலர்கள், புதராக வளரும் சில செடி இனப்பூக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேன் நச்சு ஏற்படுகிறது. தலை சுற்றல், பலவீனம், அதிக வியர்வை, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இத்தேனை உண்பதால் ஏற்படலாம். அரிதான நிகழ்வுகளில் குறைந்த இரத்த அழுத்தம், நிலைகுலைவு, இதய துடிப்பில் ஏற்றத்தாழ்வுகள் படை நோய் மற்றும் வலிப்பு நோய் முதலியவற்றால் இறப்பும் ஏற்படலாம். பாரம்பரிய முறைகளில் உற்பத்தி செய்யப்படும் தேன் மற்றும் விவசாயிகளால் குறைவான தேன் கூட்டுப்பெட்டிகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் தேன் முதலியன பதப்படுத்தப்படாத நிலையில் நச்சு தேன் உண்டாகிறது. தேன்-உற்பத்தி மற்றும் உபயோகிக்கும் நாடுகள் thumb|left|270px|2005 தேன் உறபத்தி செய்யும் நாடுகள் + முதல் ஐந்து இடங்களில் உள்ள தேன் உற்பத்தி செய்யும் நாடுகள் ( ஆயிரம் மெட்ரிக் டன்களில்)தரம்நாடுகள்200920102011 1 407,367 409,149 446,089 2 82,003 81,115 94,245 3 74,100 70,900 70,300 4 66,413 80,042 67,294 5 53,598 51,535 60,010 — உலகம் 1,199,943 1,212,586 1,282,102 <center> Source: UN Food & Agriculture Organization 2012 ஆம் ஆண்டில், சீனா, துருக்கி, மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் தேன் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களில் இருந்தன.FAO statistics. faostat.fao.org பிராந்திய அளவிளான தேன் உற்பத்தியில் அமெரிக்கா (உலகளவில் நான்காவது இடம்) மற்றும் உருசியா (உலகளவில் ஐந்தாவது இடம்) வகிக்கின்றன. மெக்சிகோ உலகளவில் உற்பத்தி செய்யப்படும் தேனில் 4 சதவீதம் அளவிற்கு அளிக்கும் மற்றொரு முக்கியமான நாடாகும்.Where Honey Comes From . Wherefoodcomesfrom.com (2012-11-09). Retrieved on 2013-08-02. மெக்சிகோவின் தேன் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு யுகாட்டின் தீபகற்பம் ல் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும் மெக்சிகோவினரின் தேன் உற்பத்தி பாரம்பரிய முறைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. தேன் வகைகள் தேனில் பலவகைகள் உள்ளது. துளசித் தேன், இஞ்சித் தேன், நெல்லித் தேன், முருங்கைத் தேன், நாவல் தேன் என தேனில் பலவகைகள் உள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த ஒரு குறிப்பிட்ட மரங்கள் மற்றும் அதன் பூக்கள் அதிகமாக உள்ளதோ அதற்கேற்ப தேனின் நிறம், சுவை மற்றும் ஊட்டச் சத்துக்களும் மாறுபடும். பலவகை பூக்கள் நிறைந்த இடங்களில் இருந்து கிடைக்கும் தேனும் ஒருவகை பூக்களில் இருந்து கிடைக்கும் தேனும் மருத்துவகுணத்திலும் கூட வேறுபாடும். குறிப்புகள் பகுப்பு:உணவுப் பொருட்கள் பகுப்பு:தேன் பகுப்பு:விலங்குப் பொருட்கள்
உரம்
https://ta.wikipedia.org/wiki/உரம்
thumb|உரம் பரப்பப்டுகிறது thumb| பெரிய தற்கால உரம் பரப்பி அல்ல்லது தூவி thumb|மென்தட வேளாண் உரப் பரப்பி, ஒரு வேளாண்காட்சியில் உரம் (fertilizer) என்பது தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாத, சுண்ணாம்பு தவிர, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட தாவர ஊட்டங்களை நிலத்துக்கு தாவர இழையங்களுக்குத் தரும் இயற்கை அல்லது செயற்கைத் தொகுப்புவழிப் பொருட்களைக் குறிப்பிடும். பல இயற்கை அல்லது தொழிலக உரங்கள் நடப்பில் உள்ளன. உரம் () (fertiliser) என்பது விளை நிலத்தில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பெருக்கும் பொருட்டு இடப்படுவதாகும். மண்ணில் குறைந்து வரும் இயற்கையான சத்துப் பொருட்களை ஈடு செய்யும் பொருட்டு செயற்கையான சத்துப் பொருளை மண்ணுக்கு ஊட்டுவது 'உரம் இடுதல்' ஆகும். சாதாரணமாக மண்ணில் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கந்தகம், இரும்பு முதலிய வேதியல் பொருட்கள் கலந்துள்ளன. இவையே தாவரங்களுக்குத் தேவையான வேதியியல் சத்துப் பொருட்கள் ஆகும். காற்றிலிருந்தும் கூட சத்துப் பொருட்களைத் தாவரங்கள் சேமித்து வளர்கின்றன. மண்ணில் உள்ள இவ்வியற்கைச் சத்துப் பொருட்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நிலையிலும் உறுதுணை புரிகின்றன. தாவரத்தின் தண்டும் இலைகளும் நன்கு வளர்ச்சி பெற நைட்ரஜன் பொருட்கள் பெருந்துணை புரிகிறது. தாவரங்களுக்கு நோய் ஏதும் வராமல் காக்கும் கேடயமும் இதுவேயாகும். பூக்கள் பூத்துக் குலுங்கவும் காய்கள் நன்கு திரட்சியடையவும் விதைகள் முதிர்ச்சி பெறவும் பாஸ்பேட்டுகள் அவசியம். அதே போன்று வேரும் பழமும் வித்தும் திரட்சி பெற பொட்டாஸ் என்னும் சாம்பல் சத்து இன்றியமையாத தேவையாகும். மண்ணிற்கு மேலும் வளமூட்ட பொதுவாக மாட்டுச் சாணம், இலை, தழை, எரு, ஆட்டுப் புழுக்கை போன்று இயற்கைக் கழிவுப் பொருட்கள் நிலத்திற்கு உரமாக இடப்படுகின்றன. இவையும் இயற்கை உரங்களே ஆகும். அன்றாடம் கூட்டிப் பெருக்கும் குப்பைக் கூளங்களை குழியிட்டு கழிவு நீரைப் பாய்ச்சி உரமாக்குவதும் உண்டு. இது கலப்பு உரம் அல்லது தொழு உரம் (கம்போஸ்ட்) என அழைக்கப்படுகிறது. சத்திழக்கும் மண்ணுக்கு மேலும் வளமூட்ட இயற்கை உரங்களின் தன்மைகளைக் கொண்ட செயற்கை உரங்களை வேதியியல் அடிப்படையில் தொழிற்சாலைகளில் தயாரிக்கிறார்கள். இவற்றை செயற்கை உரங்கள் என்கிறோம். இவ்வகை உரங்கள் நைட்ரசன் (தொழிற்சாலையிலும்), பாஸ்பரஸ், பொட்டாசியம் (சுரங்கத்திலுருந்து வெட்டியெடுக்கப்பட்டவைகளிருந்து) போன்ற வேதியியல் பொருளினின்றும் தயாரிக்கப்படுகிறது. இயற்கை உரம், கலப்பு உரம் இவற்றோடு வேதியியல் உரங்களும் மண்ணிற்குச் சத்தூட்டி தாவரப் பயிர்கள் செழித்து வளர வழி கோலுகின்றன. அறிவியலின் வளர்ச்சி காரணமாக உற்பத்தியைப் பெருக்க, நல்ல தரமான விளைபொருட்கள் கிடைக்க, செயற்கை உரங்கள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. உரம் தழை (நைட்ரசன்) மணி (பாஸ்பரஸ்), சாம்பல் (பொட்டாசியம்), ஆகிய முக்கிய முதல் நிலை பேரூட்டக் கனிம சத்துகளையும் கால்சியம், மக்னீசியம், கந்தகம் ஆகிய இரண்டாம் நிலை ஊட்டச் சத்துக்களையும் இரும்பு, துத்தநாகம், போரான், மாலிப்டினம், தாமிரம், மாங்கனீசு போன்ற தாதுப்பொருட்களையும் நிலத்திற்குத் தருகிறது. நிலத்தின் தன்மை விளைவிக்கப்படும் பயிரின் இயல்பு, தட்பவெப்ப சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து தேவைப்படும் சத்தை எவ்வகை உரத்தின் மூலம் பெறுவது என்பதைத் தீர்மானித்து அவ்வகை உரத்தை நிலத்திற்கு இடவேண்டும். அப்போதுதான் விரும்பிய பலன் கிட்டும். உரமிடுவதற்கென தனி எந்திரங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. அளவுக்கு மீறிய உரமிடுவதால், நிலம், பயிர் மற்றும் உணவு ஆகியவை நச்சுத் தன்மையடைவதுடன் அதிகப்படியான உரங்கள் அல்லது உரங்களிலுள்ள தேவையற்ற பொருட்கள் பாசன நீரால் கழுவிச்செல்லப்பட்டு ஆறுகளிலும் நீர் நிலைகளிலும் தேங்குகிறது. அவற்றிலுள்ள வேதியியற் கனிமங்களினால் நீர் நிலைகளும் நச்சுத் தன்மை அடைகின்றன. மேலும், கழிவிலுள்ள நைட்ரேட் நைதரசன் மற்றும் அதிகப்படியான ஊட்டச் சத்துக்கள் நீர் நிலைகளில் பாசிப் பெருக்கதிற்கும் (algal bloom) அதனால் ஏற்படும் ஆக்சிஜன் குறைவிற்கும் (eutrophication) காரணமாகின்றது. உரங்களில் இருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களை நீர்நிலைகளில் சேர்ப்பதற்கு முன், உயிரியல் முறையில் நைட்ரேட்டுகளாக மாற்றியோ அல்லது நைதரசனை அகற்றியோ சூழல் மாசடையாது ஓரளவு காக்கமுடியும். வரலாறு thumb| எசுப்பானிய நாட்டில் உள்ள சலமங்கா நகரில் 1812 இல் மீரட்டில் நிறுவிய மிகப் பழைய உரத் தொழிலகம். மண்வள மேலாண்மை உழவர்களால் பல்லாயிரம் ஆண்டுகளகவே மேற்கொள்ளப்பட்டுவருகிறது. எகுபதியர்களும் உரோம்ர்களும் பாபில்லோனியர்களும் மிகமுந்திய கிரேக்கர்களும் பண்ணைகளுக்கு அவற்றின் விளைச்சல்திறனைக் கூட்ட, கனிமங்க அல்லது உரங்களைப் பயன்படுத்தியதாகப் பதிவுகள் செய்துள்ளனர். தாவர் ஊட்டம் சார்ந்த் அறிவியல் 19 ஆம் நூற்றாண்டில் செருமானிய வேதியியலாளர் யசுட்டசு வான் இலய்பிகு என்பவராலும் பிறராலும் தோன்றியது. பிரித்தானியத் தொழில்முனைவோராகிய ஜான் பென்னட் இலாவேசு 1837 இல் பானைகளில் வளர்த்த தாவரங்களுக்கு பலவகை உரங்களை இட்டு தரங்களின்பால் அவற்றின் விளைவுகளை அறியும் செய்முறைகளை மேற்கொண்டார், ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் செய்முறையை வயலில் உள்ள பயிர்களிலும் மேற்கொண்டார். இதன் விளைவாக, 1842 இல் ஓர் உரத்துக்குப் பதிவுரிமம் பெற்றார். இந்த உரம் பாசுவேற்றுகளைக் கந்தக அமிலத்துடன் வேதிவினை புரியச் செய்து உருவக்கப்பட்டது. இதுவே முதலில் உருவாகிய செயற்கை உரமாகும். அடுத்த ஆண்டே தான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக உரோதசுட்டெடு வறள்பயிர்கள் அராய்ச்சி நிறுவனத்ஹ்தில் உடனிருந்து பணிபுரிந்த யோசாப்பு என்றி கில்பர்ட்டு பணிகளைப் பட்டியலிட்டு வெளியிட்டார். தழைச்சத்துவகை (காலகவகை) உரமாக்கத்தின் தொடக்கத்தில் பர்க்கிலாந்து-அய்தே வேதிவினைமுறை வல்லமை வாய்ந்த தொழிலகச் செயல்முறையாக விளங்கியது.இந்தச் செயல்முறை வளிமண்டலக் காலக(N2) வளிமத்தை நைட்ரிக் அமிலத்துடன்) (HNO3) வினைபுரியவைத்தார். இம்முறை காலக நிலைப்படுத்தலுக்கான பல வேதிவினைகளில் ஒன்றாகும்மிதன் விளைபொருள் நைட்டிரேற்றுnitrate (NO3−) ஆக்க வாயிலாக அமைந்தது. நார்வேயில் இயியுகானிலும் நோட்டோடென்னிலும் இந்தச் செயல்முறையை வைத்து ஒரு தொழிலகம் நைட்டிரேற்று உரமாக்க்கத்துக்க்காக உருவாக்கப்பட்டது. இது அங்கு கட்டியமைக்கப்பட்ட பெரிய புனல்மின்நிலையத்துடன் கூட்டாக அமைக்கப்பட்டது. 1910 களிலும் 1920 களிலும் ஏபர் வேதிவினை முறையும் ஆசுட்டுவால்டு வேதிவினை முறையும் உருவாகின. ஏபர்முறை அம்மோனியாவை (NH3) மீத்தேன் (CH4) வளிமத்தில் இருந்தும் மூலக்கூற்று காலகத்தில் (N2) இருந்தும் தொகுத்தது. ஏபர்முறையில் இருந்து உருவாகிய அம்மோனியா பிறகு நைட்டிரிக் அமிலமாக(HNO3)றஆசுட்டுவால்டு முறைமூலம் மாற்றப்படுகிறது. தொகுப்புர வளர்ச்சி உலக மக்கள்தொகையைப் பேரளவில் வளர்த்தது; பெரும்பாலும் புவியின் அரைமடங்கு மக்கள் தொகுப்புக் காலக உரத்தால் ஊட்டப்படுகிறது என மதிப்பிடப்பட்டுள்ளது. யூரியாவையும் பார்மால்டிகைடையும் இணைத்து உருவாக்கும் பலபடி உரம்வழி கட்டுபட்ட முறையில் காலகத்தை வெளியிடும் தொழில்நுட்பங்கள் முதலில் 1936 இல் அறிமுகமாகி, 1955 இல் வணிகமுறை படுத்தப்பட்டன. முதலில் வெளியிட்ட உரத்தில் 100% தண்ணீரில் கரைந்த காலகத்தில் 60% அளவை வெளியிடவல்லதாகவும் 15% க்கும் குறைந்த அளவில் வினைபுரியாத பகுதியாகவும் எஞ்சியது. மெத்திலீன் யூரியா 1960 களிலும் 1970 களிலும் வணிகமுறைப் பயனுக்கு வந்தது. இதில் 25% முதல் 60% காலகம் தண்ணீரில் கரையாததாகவும் 15% முதல் 30% அளவுக்கு வினைபுரியாத யூரியா காலகமும் அமைந்தது. இயங்குமுறை thumb| வளங்குன்றிய மணல்/களிமண் நிலத்தில் நைட்டிரேற்று உஅரமிட்டும் இடாமலும் ஆறுவகைத் தக்காளிகள் பயிரிடப்பட்டன. வளங்குன்றிய நிலத்தில் பயிரிட்ட ஒருவகைத் தக்களி இறந்துவிட்டது. உரங்கள் தாவர வளர்ச்சியைக் கூட்டுகிறது. இந்த இலக்கு இருவழிகளில் அடையப்படுகிறது. ஒன்று மரபான முறையில் கூடுதல் ஊட்டங்களை அளிப்பது; மற்றொன்று உரங்கொண்டு மண்வளத்தைக் கூட்டுவதும் நீர்தங்கி நிற்றலையும் காற்றூட்டத்தையும் மிகுப்பதுமாகும். உரங்கள் பல்வேறு விகிதங்களில் பின்வரும் ஊட்டங்களைத் தருகின்றன:Wilfried Werner "Fertilizers, 6. Environmental Aspects" Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH, Weinheim. மூன்று முதன்மைப் பேரூட்டங்கள்: காலகம் (நைட்டிரசன்) (N): இலை வளர்ச்சி அவிர்வம் ( [[பாசுவரசு])] (P): வேர்,பூ,விதை, பழ வளர்ச்சி; எரியம் (பொட்டாசியம்) (K): வலிவான தண்டு வளர்ச்சி, தாவர நீரியக்கம், பூத்தலையும் பழுத்தலையும் மேம்படுத்தல்; மூன்று துணைப் பேரூட்டங்கள்: கால்சியம் (Ca), மகனீசியம் (Mg), கந்தகம் (S); நுண்ணூட்டங்கள்: செம்பு (Cu), இரும்பு (Fe), மாங்கனீசு (Mn), மாலிபிடெனம் (Mo), நாகம் (Zn), போரான் (B). சில அரிய சிறப்பினவாக சிலிக்கான் (Si), கோபால்ட்டு (Co), and [[வனடியம்] (V) ஆகியன அமைகின்றன. மேலும் காண்க இயற்கை உரம் பசுந்தாள் உரம் செயற்கை உரம் மண்புழு உரம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Nitrogen for Feeding Our Food, Its Earthly Origin, Haber Process International Fertilizer Industry Association (IFA) Agriculture Guide, Complete Guide to Fertilizers and Fertilization டெக்சாஸ் காய்கறி உற்பத்தியாளர்களின் கைநூல் - உரங்கள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் - * பகுப்பு:தோட்டக்கலை பகுப்பு:காலநிலை மாற்றம் பகுப்பு:வேளாண்மை
சிதம்பரம் (நகரம்)
https://ta.wikipedia.org/wiki/சிதம்பரம்_(நகரம்)
சிதம்பரம் (Chidambaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சி ஆகும். இவ்வட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராசர் கோயில் உலகப்புகழ் பெற்றது. மக்கள் வகைப்பாடு 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 15,166 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 62,153 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.9% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,032 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5869 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 963 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,232 மற்றும் 56 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 89.73%, இசுலாமியர்கள் 8.22%, கிறித்தவர்கள் 1.18%, தமிழ்ச் சமணர்கள் 0.43%, மற்றும் பிறர் 0.44% ஆகவுள்ளனர்.சிதம்பரம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல் வரலாறு தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். சிதம்பரம், ஆலயநகர் என்றும் நாட்டிய நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகரம் சிதம்பரம் ஆகும். சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூசை பண்ணியதால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித் - ஞானம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித் + அம்பரம் - சிதம்பரம். காலப்போக்கில் அந்த ஊர் பேர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக மாறிவிட்டது.கிருபானந்த வாரியார் எழுதிய “செஞ்சொல் உரைக்கோவை” நூல் பக்:127 திருசிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் உள்ள ஆலயம் உலகப்புகழ் பெற்றது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது. ஆலயங்கள் சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கியக் கடவுளான சிவபெருமானின் நடராசர் ஆலயமும், வைணவர்களின் முக்கியக் கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாள், புண்டரீகவல்லித் தாயாருடன் வீற்றிருக்கும் சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராசன் ஆலயமும் இந்த நகருக்கு பெருமை சேர்க்கிறது. மேலும் இங்கு தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இருப்பதால் இந்நகரம் ஆலய நகரம் என்று அழைக்கப்படுகின்றது. மேலும் பார்க்க சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராசன் கோயில் சிதம்பரம் நடராசர் கோயில் ஆதாரம் பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள் பகுப்பு:கடலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பகுப்பு:இந்து புனித நகரங்கள் பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்
மதுரை மீனாட்சியம்மன் கோயில்
https://ta.wikipedia.org/wiki/மதுரை_மீனாட்சியம்மன்_கோயில்
வழிமாற்று மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்
கடலூர் மாவட்டம்
https://ta.wikipedia.org/wiki/கடலூர்_மாவட்டம்
கடலூர் மாவட்டம் (Cuddalore district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கடலூர் ஆகும். இந்த மாவட்டம் 3,703 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. சோழர் கால வரலாற்றுப் புதினத்தின் (பொன்னியின்செல்வன்) படி அக்காலத்தில் இவ்வூரின் பெயர் கடம்பூர் என்று அழைக்கப்பட்டது. அந்த பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது. இம்மாவட்டத்திற்கு திருப்பாதிரிப்புலியூர் என்ற பெயரும் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த பெயரை உச்சரிக்க அவர்களுக்கு கடினமாக இருந்ததால் இவ்வூருக்கு 'கடலூர்' என பெயரிட்டனர். வரலாறு முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் பெயர் தென்னாற்காடு மாவட்டம் என இருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டமும் இம்மாவட்டத்திலேயே அடங்கி இருந்தது. இந்நிலையில் 1993 செப்டம்பர் 30 அன்று தென் ஆற்காடு மாவட்டமானது, தென் ஆற்காடு வள்ளளார் மற்றும் விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என இரு மாவட்டங்களாக உருவாக்கப்பட்டன. மற்ற மாவட்டங்கள் அப்போது பெரும்பாலும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு மாவட்டங்களுக்குப் பெரியோரின் பெயர்களைச்சூட்டி அழைக்கும் முறையால், சில சிக்கல்கள் ஏற்பட்டதால் மீண்டும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்படும் மாற்றம் வந்ததையடுத்துத் தற்போது கடலூர் மாவட்டம் என அழைக்கப்படுகிறது. சுமத்ரா அருகே 2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப்பேரலை, இந்தியாவின் கிழக்கு கடற்கரையை 2004, டிசம்பர் 26 அன்று தாக்கியது, இதன் விளைவாக 572 பேர் உயிரிழந்தனர். பல மீன்பிடி குக்கிராமங்கள் காணாமல் போயின, அதே நேரத்தில் வெள்ளி கடற்கரை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடலூர் துறைமுகம் பெரியளவில் பாதிக்கப்பட்டது. செயின்ட் டேவிட் கோட்டை சேதமின்றி உயிர் தப்பியது. 2012-ஆம் ஆண்டில் ஏற்பட்ட தானே புயல் பயிர்கள் மற்றும் கட்டிடங்களுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தியது. மாநகராட்சி நிர்வாகம் மாநகராட்சி மேயர் சுந்தரி துணை மேயர் தாமரைச்செல்வன் மாநகராட்சி கமிஷனர் ப.கிருஷ்ணமூர்த்திthumb|right|240px|கடலூர் மாவட்ட வட்டங்கள் கடலூர் மாவட்டம் 3 வருவாய் கோட்டங்களையும், 10 வருவாய் வட்டங்களையும், 905 வருவாய் கிராமங்களையும் கொண்டது. Revenue Administration கடலூர் மாநகராட்சி 1 நகராட்சிகள் 6 வருவாய் கோட்டங்கள் 3 வட்டங்கள் 10 பேரூராட்சிகள் 14 ஊராட்சி ஒன்றியங்கள் 14 ஊராட்சிகள் 683 வருவாய் கிராமங்கள் 905 சட்டமன்றத் தொகுதிகள் 9 மக்களவைத் தொகுதிகள் 2 கடலூர் வருவாய் வட்டங்கள் கடலூர் பண்ருட்டி விருத்தாச்சலம் சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் திட்டக்குடி குறிஞ்சிப்பாடி வேப்பூர் புவனகிரி ஸ்ரீமுஷ்ணம் right|thumb|250px|கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகம் கடலூர் மாவட்ட உள்ளாட்சி அமைப்பில் 8 நகராட்சிகளும், 14 பேரூராட்சிகளும் கொண்டது. இம்மாவட்ட ஊரக வளர்ச்சி அமைப்பில் 13 ஊராட்சி ஒன்றியங்களையும், 683 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், ஊராட்சிகளும் மாநகராட்சிகள் கடலூர் நகராட்சிகள் சிதம்பரம் விருத்தாச்சலம் பண்ருட்டி நெல்லிக்குப்பம் வடலூர் திட்டக்குடி பேரூராட்சிகள் அண்ணாமலை நகர் புவனகிரி குறிஞ்சிப்பாடி கங்கைகொண்டான் கிள்ளை லால்பேட்டை காட்டுமன்னார்கோயில் மங்களம்பேட்டை மேல்பட்டாம்பாக்கம் பரங்கிப்பேட்டை பெண்ணாடம் சேத்தியாத்தோப்பு ஸ்ரீமுஷ்ணம் தொரப்பாடி ஊராட்சி ஒன்றியங்கள் கடலூர் மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கடலூர் ஊராட்சி ஒன்றியம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம் பண்ருட்டி குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி ஒன்றியம் மங்களூர் ஊராட்சி ஒன்றியம் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் குமராட்சி காட்டுமன்னார்கோயில் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றியம் பெரிய நகரங்கள் கடலூர் பண்ருட்டி நெய்வேலி குறிஞ்சிப்பாடி சிதம்பரம் விருத்தாச்சலம் நெல்லிக்குப்பம் வடலூர் காட்டுமன்னார்கோயில் ஸ்ரீமுஷ்ணம் மக்கள்தொகை பரம்பல் 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 2,605,914 ஆகும். அதில் ஆண்கள் 1,311,697 ஆகவும்; பெண்கள் 1,294,217 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 14.02% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 704 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 79.04% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 279,950 ஆகவுள்ளனர்.Cuddalore District : Census 2011 data இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 91.78% ஆகவும், கிறித்தவர்கள் 3.20 % ஆகவும், இசுலாமியர்கள் 4.75% ஆகவும், மற்றவர்கள் 0.29% ஆகவும் உள்ளனர். அரசியல் இம்மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளையும், இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.Constituencies சட்டமன்றத் தொகுதிகள் திட்டக்குடி (தனி) விருத்தாச்சலம் நெய்வேலி பண்ருட்டி கடலூர் குறிஞ்சிப்பாடி புவனகிரி சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் (தனி) நாடாளுமன்றத் தொகுதிகள் கடலூர் மக்களவைத் தொகுதி சிதம்பரம் மக்களவைத் தொகுதி தொழில்வளம் மேலும் நெய்வேலி நகரியமும் இம்மாவட்டத்தில் உள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையானது. மாவட்டத்திற்கு தேவையான உணவு பொருட்கள் பெரும்பாலும் விவசாயத்தின் மூலம் இங்கேயே, உற்பத்தி செய்யப்படுகிறது. கரும்பு, நெல் இங்கு முக்கிய பயிராக நடவு செய்யப்படுகிறது. இம்மாவட்டத்தின் நெல்லிக்குப்பம், பெண்ணாடம் ,நல்லூர் மற்றும் சேத்தியாத்தோப்பு ஆகிய இடங்களில் 3 தனியார் சர்க்கரை ஆலைகளும், ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலையும் உள்ளது. பெண்ணாடத்தில் ராம்கோ சிமெண்ட் ஆலை உள்ளது. பண்ருட்டி மற்றும் நெய்வேலி பகுதியில் முந்திரி, பலா அதிகளவில் விளைகிறது மற்றும் கொய்யா, சப்போட்டா பழ வகைகளும் பயிர் செய்யப்படுகிறது. எல்லைகள் மேற்கே கள்ளக்குறிச்சி மாவட்டமும், தெற்கே மயிலாடுதுறை மாவட்டமும், தென்மேற்கே தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டமும், கிழக்கே வங்காள விரிகுடா கடலும், வடமேற்கே விழுப்புரம் மாவட்டமும், வடக்கே புதுச்சேரி மாநிலமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. புவியியல் ஆறுகள் thumb|தமிழக ஆறுகள் பெண்ணையாறு,கெடிலம் ஆறு,பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு,வெள்ளாறு (வடக்கு) ஆகிய ஆறுகள் பாய்கின்றன. அணைக்கட்டுகள் சொர்ணாவூர்அணை,திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை சேத்தியாதோப்பு அணை பெலாந்துறை ஆகிய அணை கள் அமைந்துள்ளன. அலையாத்திக் காடுகள் பிச்சாவரம், கெடிலம் ஆகிய கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகள் (Mangrove) உள்ளன. சிதம்பரம் நடராசர் கோயில் thumb|நடராசர் கோயிலின் வடக்கு பக்க கோபுரம் மற்றும் குளத்தின் காட்சி நடராசர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் முதன்மை தலமாகும். இக்கோவிலில் நான்கு ராஜகோபுரங்கள் உள்ளன. இவை ஏழு நிலைகளைக் கொண்டவையாகும். கோபுரத்தின் அடிப்பகுதி 90 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டதாகவும், 135 அடி உயரம் உடையதாகவும் அமைந்துள்ளது. இக்கோபுரத்தின் வாசல் 40 அடி உயரம் உடையவையாகும். இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்களுக்குகாணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. போக்குவரத்து கடலூர் மாவட்டம் தொடருந்து மற்றும் சாலைகள் மூலமாக பெரு நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சாலைப் போக்குவரத்து புதுச்சேரி, சிதம்பரம், திருவண்ணாமலை, ஆரணி, வேலூர் மற்றும் விழுப்புரம் போன்ற அருகிலுள்ள நகரங்களில் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சிராப்பள்ளி, சேலம் போன்ற முக்கிய நகரங்கள் செல்ல அடிக்கடி பேருந்துகள் உள்ளன. சாலை வழியாக அனைத்து மாவட்டத்தின் பெரு நகரங்களுடன் இணைக்கபட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் முக்கிய சாலைகள்: மாநில நெடுஞ்சாலை 9 - கடலூர் முதல் சித்தூர் வரை செல்லும் சாலை (கடலூர் - நெல்லிக்குப்பம் - மேல்பட்டாம்பாக்கம் - பண்ருட்டி - திருக்கோவிலூர் - திருவண்ணாமலை - போளூர் - கண்ணமங்கலம் - வேலூர் - காட்பாடி - சித்தூர்) மாநில நெடுஞ்சாலை 10 - கடலூர் முதல் சேலம் வரை செல்லும் சாலை (கடலூர் - வடலூர் - நெய்வேலி - விருத்தாசலம்- வேப்பூர் - சேலம்) எஸ்.எச்.68 - :கடலூர் - பாலூர் - பண்ருட்டி - அரசூர் - திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலை. கிழக்குக் கடற்கரைச் சாலை - சென்னை முதல் கடலூர் வழியாக தூத்துக்குடி வரை செல்லும் சாலை. தொடருந்துப் போக்குவரத்து 210px|thumb|கடலூர் துறைமுகம் சந்திப்பு கடலூரில் இரண்டு தொடருந்து நிலையங்கள் உள்ளன. தென்னக இரயில்வேயின் மெயின் லைன் எனப்படும் சென்னை, விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி தொடருந்து பாதையில் கடலூர் உள்ளது . இப்பாதை பயணிகள் போக்குவரத்துக்கு 1877 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கடலூர் துறைமுகம் சந்திப்பில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலத்திற்கு ஒரு தொடருந்து பாதை உள்ளது. சுற்றுலாத் தலங்கள் thumb|right|பிச்சாவரம் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் (கி.பி.1110ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது), பிச்சாவரம், கெடிலம் ஆற்றின் கழிமுகம், கடலூர் தீவு, வெள்ளி கடற்கரை, புனித டேவிட் கோட்டை, கடலூர் துறைமுகம், சிதம்பரம் நடராசர் கோயில், வடலூரில் வள்ளலார் அமைத்த சத்ய ஞான சபை, விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயில், திருமுட்டம் ஆதிவராக சுவாமி கோயில், மேல்பட்டாம்பாக்கம் 400 வருட சிவன் கோவில் சரபேசுவரர், திருக்கண்டேஸ்வரம் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் நடனபாதேஸ்வரர் மற்றும் தமிழ்நாட்டில் ஆறு கரம் கொண்ட பைரவர் திருக்கோயில், பள்ளிவாசல் மசூதி போன்றவை கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் ஆகும். மேலும் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள மேலக்கடம்பூர் சிவன் கோயில் மிக பிரசித்தி பெற்ற தலம், கரக்கோயில் எனப்படும் தேர் வடிவ கோயில் இங்கு மட்டுமே உள்ளது. மா. ஆதணூர் கிராமத்தில் திருநாளை பாேவார் திருத்தலம் உள்ளது, திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். காவல் துறை கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் பழமை வாய்ந்த சோழ, பல்லவ மன்னவர்களால் கட்டப்பட்ட புகழ்பெற்ற சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலும், நெய்வேலியில் மத்திய அரசின் பழுப்பு நிலக்கரி சுரங்கமும் அமையப்பெற்றுள்ளது. கடலுார் காவல் மாவட்டத்தில் 7 காவல் உட்கோட்டங்கள், 46 காவல் நிலையங்கள், 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 4 போக்குவரத்து காவல் நிலையங்கள் மற்றும் 4 மதுவிலக்கு அமல் பிரிவுகள் உள்ளடங்கிய 3,678 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. கடலுார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் அதிகம் வசிப்பதால் இவ்விரு சமூகத்தினரிடயே ஏற்படும் பிரச்சனைகள் அதிமுக்கியம் வாய்ந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையாகும். இப்பிரச்சனைகளை காவல் துறையும் மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து பிரச்சனைகளை பேசி தீர்த்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்ததின் பேரில் சட்டம் ஒழுங்குப்பிரச்சனை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் அவ்வப்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தால் நிலம் கையகப்படுத்தல் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனைகள் எழும்போதும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து பிரச்சனைகளை சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் மாவட்டத்தில் 48 முக்கிய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2017-ம் வருடத்தில் பதியப்பட்ட குற்றவழக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நடவடிக்கை எடுத்ததின்பேரில் 78 சதவிகித வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றில் 65 சதவிகித வழக்கு சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 2017-ம் வருடத்தில் நடந்த 46 கொலை வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டும், 29 பாரி குற்றவழக்குகளில் 62 சதவிகித வழக்குகள் அதாவது 18 குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.50,26,500/- மதிப்புள்ள வழக்குச்சொத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடலுார் மாவட்டத்தில் இடதுசாரி மற்றும் மதம் சார்ந்த தீவிரவாதம் இல்லை. நான்கு இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. மேற்படி முகாம்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தணிக்கை செய்யப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் ஏற்படும் சாலைவிபத்துகளை குறைப்பதற்காக காவல் துறை சார்பில் கடந்த ஆண்டு பள்ளி, கல்லுாரி மாணவர்களை கொண்டு நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சாலை விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு 6 முக்கிய மோட்டார் வாகனப்பிரிவுகளின் கீழ் 22,670 வாகன அற்ப வழக்குகளும், 82,280 வழக்குகளில் தலைகவசம் மற்றும் இருக்கை வார் அணியாமல் சென்றவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. சாலை போக்குவரத்து விதிகளை மீறிய 10,149 ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டு, அதில் 3,333 உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதன் மூலமாக 2016-ம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 567-லிருந்து, 2017-ம் ஆண்டு 527-ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தின் அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடத்தப்படும் அயல் நாட்டு மதுபான வகைகள், எரிசாராயம் மற்றும் புதுச்சேரி சாராயம் ஆகியவைகளை மாவட்டத்தில் 9 இடங்களில் அமைக்கப்பட்ட முக்கிய எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு கடத்தல் நடவாமல் தடுக்கப்படுகிறது. இது குறித்து கடலுhர் மாவட்ட மற்றும் புதுச்சேரியை சேர்ந்த காவல் துறையினர் இணைந்து மாதம்தோறும் எல்லைப்பகுதி ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மதுவிலக்கு சம்மந்தப்பட்ட குற்றங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு 2017-ம் ஆண்டு 3,247 வழக்குகள் பதியப்பட்டும், அதில் 37,297 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி குற்றங்களில் சம்மந்தப்பட்ட 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வாகன ஏல நடவடிக்கையின் மூலமாக ரூ.19,743/- வசூலிக்கப்பட்டு அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மதுவிலக்கு குற்ற நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்ட 18 கள்ளச்சாராய வியாபாரிகள் மீது பிரிவு 14-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை அதிக முக்கியத்துவம் கொடுத்து விசாரணை செய்ய குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்படுவதன் முலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கட்டுப்படுத்தபட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகள் பாரபட்சமின்றி புலன்விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலுார் மாவட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் அனைவரும் தங்களது பணியினை செவ்வனே செய்து மாவட்டத்தில் குற்றங்கள், பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் ஏற்படாமலும், அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் நடந்து கொள்ள உறுதி பூணுகிறோம். மத்திய சிறைச்சாலை கடலூரில், 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மத்திய சிறைச்சாலை உள்ளது. செப்டம்பர் 1918 முதல் திசம்பர் 14, 1918 வரை விடுதலைப் போராட்டத்தின் போது கவிஞரான சுப்பிரமணிய பாரதி இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கடலூர் மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம் பகுப்பு:தமிழ்நாடு மாவட்டங்கள்
நா. பார்த்தசாரதி
https://ta.wikipedia.org/wiki/நா._பார்த்தசாரதி
thumb நா.பார்த்தசாரதி (Na. Parthasarathy, டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் பொன் விலங்கு தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய "சாயங்கால மேகங்கள்" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார்.திருப்பூர் கிருஷ்ணன், நா.பா. என்றொரு தீபம்.., தினமணி தமிழ்மணி, 2011 மார்ச் 6 பிறப்பு வலது|300px தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம் , சிவகாசி வட்டத்தில் உள்ள நரிக்குடி என்னும் சிற்றூரில் 1932 திசம்பர் 18 ஆம் நாள் பிறந்தார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து படித்து பண்டிதர் பட்டம் பெற்றார். 1977 - 1979 ஆம் ஆண்டுகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் முனைவர் தி. முத்துகண்ணப்பரை வழிகாட்டியாகக்கொண்டு பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தார். 1987ஆம் ஆண்டில் ஆய்வேட்டை சமர்பித்தார். ஆனால் அப்பட்டத்தை வாங்காமலேயே மறைந்துவிட்டார். பணி பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். . 1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார். 1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமணிக் கதிர் வார இதழுக்கும் கலைக்கதிர் இதழுக்கும் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். வெளிநாட்டுப் பயணம் நா.பா. ரஷ்யா, இங்கிலாந்து, போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச் சென்று வந்தார். விருதுகள் சமுதாய வீதி என்னும் நெடுங்கதைக்காக சாகித்ய அகாதமி பரிசு துளசி மாடம் என்னும் நெடுங்கதைக்காக ராஜா சர் அண்ணாமலை பரிசு தமிழ்நாடு பரிசு கம்பராமாயணத் தத்துவக் கடல் அரசியல் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த காமராஜருக்கும் அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது இதனால் காங்கிரஸ் இரண்டாக உடைந்தது. பழம் தலைவர்கள் காமராஜர் தலைமையில் சிண்டிகேட் என்னும் ஸ்தாபன காங்கிரஸ் கட்சியில் இயங்கினர். நா. பார்த்தசாரதி அக்கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். அக்கட்சியை ஆதரித்து பொதுக்கூட்டங்களில் சொற்பொழிவாற்றினார். அப்பொழுது, தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் என்னும் சிற்றூரில் காவல்துறை சார்பு ஆய்வாளரால் தாக்கப்பட்டார். அந்நிகழ்வு அக்கால சட்டமன்றத்தில் விவாதப் பொருளாக மாறியது. மறைவு இதய நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நா.பா. 1987 திசம்பர் 13ஆம் நாள் மரணமடைந்தார். நா.பார்த்தசாரதியின் படைப்புகள் நெடுங்கதைகள் குறிஞ்சி மலர் பொன் விலங்கு நிசப்த சங்கீதம் கபாடபுரம் சாயங்கால மேகங்கள் மணிபல்லவம் பருவம் : 1 2 3 4 5 ஆத்மாவின் ராகங்கள் ராணி மங்கம்மாள் சமுதாய வீதி துளசி மாடம் பாண்டிமாதேவி நித்திலவல்லி வஞ்சிமாநகரம் சத்தியவெள்ளம் வெற்றி முழக்கம் சுந்தரக்கனவுகள் நெஞ்சக்கனல் பிறந்த மண் நெற்றிக் கண் வெற்றி முழக்கம் (உதயணன் கதை) நிசப்த சங்கீதம் அநுக்கிரகா சுலபா முள்வேலிகள் புதுமுகம் மூலக்கனல் மலைச் சிகரம் பொய் முகங்கள் பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது கற்சுவர்கள் நினைவின் நிழல்கள் மூவரை வென்றான் நீல நயனங்கள் மனக் கண் கோபுர தீபம் அனிச்ச மலர் பட்டுப் பூச்சி மகாத்மாவைத் தேடி சிறுகதைகள் நா.பா.வின் சிறுகதைகள் தமிழ் இலக்கியக் கதைகள் கவிதைகள் மணிவண்ணன் கவிதைகள் கட்டுரைகள் மொழியின் வழியே தலையங்கங்கள் மணிவண்ணன் தலையங்கங்கள் (தொகுத்தவர்: கமலம் சங்கர்) கேள்வி பதில்கள் மணிவண்ணன் பதில்கள் (தொகுத்தவர்: கமலம் சங்கர்) பயணக்கட்டுரைகள் புதுஉலகம் கண்டேன் ஏழுநாடுகளில் எட்டு வாரங்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்  மணிபல்லவம் (சரித்திர நாவல்)-1  மணிபல்லவம் (சரித்திர நாவல்)-2  மணிபல்லவம் (சரித்திர நாவல்)-3  மணிபல்லவம் (சரித்திர நாவல்)-4  மணிபல்லவம் (சரித்திர நாவல்)-5  ஆத்மாவின் ராகங்கள்  Aatmana Aalap-(GUJARATHI)  JINDAGINA RANGA ANEKA-(GUJARATHI)  குறிஞ்சி மலர்  மகாபாரதம் அறத்தின் குரல்  மூலக்கனல்  முள்வேலிகள் (சிறுநாவல்)  நா.பார்த்தசாரதி-சிறுகதைகள்-1  நா.பார்த்தசாரதி-சிறுகதைகள்-2  நெஞ்சக்கனல்  நெற்றிக்கண்  நிசப்த சங்கீதம்  நித்திலவல்லி  பாண்டிமாதேவி (சரித்திர நாவல்)  பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்  பொன்விலங்கு  சத்திய வெள்ளம்  வஞ்சிமா நகரம் (சரித்திர நாவல்)  மூவரை வென்றான்  மொழியின் வழியே  பிறந்த மண்  பொய்முகங்கள்  புதிய பார்வை  புறநானூற்றுச் சிறுகதைகள்  இராணி மங்கம்மாள் (சரித்திர நாவல்)  சமுதாய வீதி  சாயங்கால மேகங்கள்  சிந்தனை மேடை  சுலபா  SWAPN-SURAKHI - GUJARATI (KURIJJIMALAR)  தமிழ் இலக்கியக் கதைகள்  திறனாய்வுச் செல்வம்  THITHALI  துளசிமாடம்  TULSI CHAURA  வெற்றி முழக்கம்  YEH GALI BIKAU NAHIN  அனிச்ச மலர்  அநுக்கிரகா  பூமியின் புன்னகை  புத்த ஞாயிறு  சிந்தனைவளம்  தீபம்  கலித்தொகை பரிபாடல் காட்சிகள்  கபாடபுரம்  கற்சுவர்கள் சான்றடைவு வெளி இணைப்புக்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள் பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் பகுப்பு:1932 பிறப்புகள் பகுப்பு:1987 இறப்புகள் பகுப்பு:விருதுநகர் மாவட்ட நபர்கள்
எட்டயபுரம்
https://ta.wikipedia.org/wiki/எட்டயபுரம்
எட்டயபுரம் (ஆங்கிலம்:Ettayapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர். மேலும் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்து மறைந்துள்ளார்.உமறுப் புலவர் தர்கா, முத்துசாமி தீட்சிதர் நினைவிடம், பாரதி பிறந்த வீடு முதலியவற்றின் புகைப்படங்கள் அமைவிடம் தூத்துக்குடிக்கும் - கோவில்பட்டிக்கும் இடையே அமைந்த எட்டயபுரம், தூத்துக்குடியிலிருந்து 43 கிமீ தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ளது. பேரூராட்சி அமைப்பு 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,646 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 12,772 ஆகும்பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்Ettayapuram Town Panchayat 17.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 88 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.விளாத்திக்குளம் பேரூராட்சியின் இணையதளம் வரலாறு எட்டயபுரத்தின் இயற்பெயர் இளச நாடு என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று.எட்டயபுரம் 1565-ம் ஆண்டு இப்பெயர் பெற்றது . தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர். மக்கள் தொழில் இங்குள்ள மக்கள் பெரும்பாலும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் வேளாண்மையும் செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறிய அனைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் பலசரக்குக் கடை, போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர். நெசவுத் தொழில் thumb|right|250px|கைத்தறி நெசவு இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பருத்தி இழைகளைக் கொண்டு கைத்தறி ஆடை நெசவு செய்கின்றனர். கைத்தறிகளில் அதிக வேலைப்பாடுகளுடன் நெசவு செய்ய முடிவதில்லை. தற்போது தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனத்தார் இவர்களுக்கு ஜக்கார்டு தறிகளைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்து வருகின்றனர். இத்தறிகளில் துளையிடப்பட்ட அட்டைகளின் (Punched cards) துணையுடன் அதிக வேலைப்பாடுகளுடைய ஆடைகளை உருவாக்க முடியும். நெசவு சார்ந்த பிற பணிகளான சாயமிடுதல், பருத்தி நூலைப் பண்படுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். தீப்பெட்டித் தொழில் நெசவிற்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தீப்பெட்டிகளைத் தயாரிப்பதிலும், எரிமருந்தை குச்சிகளில் ஏற்றுவதிலும், மருந்துடன் கூடிய குச்சிகளை பெட்டிகளில் அடைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் பெரும்பாலும் மகளிரும் சிறார்களும் பணி புரிகின்றனர். தானியங்கி தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் வருகையினாலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்துள்ளதாலும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை thumb|right|200px|எட்டயபுரத்தின் காய்ந்த நிலப்பரப்பின் ஒரு தோற்றம்தொடர்ச்சியான வறட்சி மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தி, சூரிய காந்தி போன்ற பயிர்கள் விளையும் கருப்பு மண் வகை நிலம் இங்கு அதிகம். பாரதியின் பிறப்பிடம் left|thumb|250px|பாரதியார் பிறந்த வீடு மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி இங்கு 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அவர், இங்குள்ள "இராசா மேல்நிலைப் பள்ளி"யில் பயின்று வந்த பொழுது தன்னுடைய 11-ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலைக் கொண்டிருந்தார். அதன் பின்னர், அவர் தனது வாழ்வின் பல கட்டங்களில் எட்டயபுரத்து பாளையக்காரரால் ஆதரிக்கப்பட்டார். எட்டப்பன் 250px|right|thumb|எட்டப்பன் அரண்மனை எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் எட்டப்பன் என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் வழிவந்தவர்கள் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர்,Write-up on patronage of Muthuswami Dikshitar by Ettappan பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு. சுற்றுலா வரலாற்றுச் சிறப்புடைய இவ்வூருக்கு தொடர்வண்டி மூலமாகச் சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் கோவில்பட்டி வரை வந்து பிற்பாடு சாலை வழியாக (15 கி.மீ. தொலைவு) வரலாம். மதுரை (82 கி.மீ. தொலைவு) , தூத்துக்குடி (50 கி.மீ. தொலைவு) மற்றும் திருநெல்வேலி (கோவில்பட்டி வழியாக) நகரங்களுடன் சாலை இணைப்பும் உள்ளது. இவ்வூரில் காணத்தக்க இடங்கள் thumb|எட்டயபுரம் அரண்மனை பாரதி நினைவு மணி மண்டபம் பாரதி பிறந்த வீடு முத்துசாமி தீட்சிதர் நினைவிடம் உமறுப் புலவர் தர்கா எட்டப்பன் அரண்மனை மாவீரன் அழகுமுத்துக்கோன் அரண்மனை அருகாமையிலுள்ள பார்க்கக் கூடிய இடங்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி. எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் - எப்போதும் வென்றான். கட்டபொம்மன் நினைவிடம் - கயத்தாறு. அருள்மிகு சோலைசாமி திருக்கோவில் - எப்போதும் வென்றான் எட்டயபுரத்துக்கு பெருமை சேர்த்தவர்கள் எட்டயபுரம் பாரதி ஆய்வாளர் - பத்திரிகை ஆசிரியர் தி.முத்து கிருஷ்ணன் 'பாரதியார் வாழ்க்கைச் சரித்திரம்', பாரதியின் இசைஞானம் குறித்து 'நல்லதோர் வீணை' நூல்களும், தினமலர் பத்திரிகை நிறுவனர் டி.வி. இராமசுப்பையர் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் 'கடல் தாமரை' என்ற நூலும் எழுதியுள்ளார். நல்ல மேடைப் பேச்சாளர். கே.கே.ராஜன், சிறுகதை எழுத்தாளர். வார இதழ், மாத இதழ்களில் எல்லாவற்றிலும் நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியுள்ளார். இவர் சகோதரர் கே. கருணாகரப் பாண்டியன் எட்டயபுரம் வரலாறு (History of Ettayapuram) என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றார் "எட்டயபுரம் வரலாறு" என்ற நூலை முதுபெரும் எழுத்தாளர் வே.சதாசிவன், மா.இராஜாமணி, இளசை மணியன் ஆகியோர், 400 ஆண்டுக் காலப் பழமையைத் தொகுத்து மக்களுக்கு அளித்துள்ளனர். எட்டயபுரத்தில் பிறந்த பெண்பாற்புலவர் சுப்பம்மாள் 'குமாரகீதம்' என்ற நூலை இயற்றியுள்ளார். 'இந்தியா' பத்திரிகையின் மூலப் பிரதிகளை ஆய்வு செய்து, 'பாரதி தரிசனம்' என்ற நூலை இளசை மணியன் எழுதியுள்ளார். ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் 'மண்வெறி' என்ற சிறுகதைக்கு முதல் பரிசு பெற்றவர் வே. சதாசிவன். அதே விகடனில் 'ஆசைப்பந்தல்' என்ற கதைக்கு முத்திரை பெற்றவர் சீதாலட்சுமி. இவரின் சுமார் 63 சிறுகதைகள் பல பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. மேலும் இவர் 'கலைஞர் பாமலர் நூறு' என்ற ஒரு வரலாற்று நூலை மரபுக் கவிதைகளாக எழுதி, மேழிச் செல்வி என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். எட்டயபுரத்தைச் சேர்ந்த குருகுகதாஸ்பிள்ளை, 'திருநெல்வேலி சீமைச் சரித்திரம்' என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார். இவர் மகன் கு.பக்தவத்சலம், கவிஞர். எட்டயபுரத்தில் தோன்றிய எச்.ஏ. அய்யர், இந்திய தேசிய இராணுவத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். இவர் நேதாஜி பற்றி ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இராஜாமணி, 'வீரன் அழகுமுத்து யாதவ்' என்ற நூலை எழுதிப் பெருமை சேர்த்துள்ளர். இளசை அருணா என்பவர் எழுதிய 'கரிசல் மண்' என்ற புத்தகத்தில் மண்ணின் மைந்தர்களின் வரலாற்றை எழுதியுள்ளார். எட்டயபுரம் கோபி கிருஷ்ணன், சோதிடத்தில் நிறைய புத்தககள் எழுதியவர். பல வார இதழ்களில் சோதிடக் குறிப்புகள் எழுதியவர். எட்டயபுரம் ஸ்ரீலஸ்ரீ நாகலிங்க ஜோதி ஸ்ரீ சுப்பையா சுவாமிகள் - இன்னும் இளசை சுந்தரம், இளசை ஜமால், இளசை கணேஷ், மரிய செல்வம், புலவர் பார்வதி மாரியப்பன், ஜீவா திலகம், சோலைச் சாமி. ஆகிய எழுத்தாளர்கள் இந்த மண்ணுக்குச் சொந்தம். எட்டயபுரம் என்ற நூலைக் கவிஞர் கலாப்பிரியா எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் மட்டுமல்ல,பொறியாளர் மு.மலர்மன்னன், மா.முத்து, சங்கர வாத்தியார், எஸ். ராமசுப்பு, மாறன், கண்ணன் ஆகிய ஓவியர்களும் இந்தக் கரிசல் மண்ணுக்குச் சொந்தமானவர்கள். அந்தக் காலத்தில் வானொலியில் நிறையப் பாடிய எட்டயபுரம் நரசிம்மன் இந்த ஊர்க்காரர்தான் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தமிழ்நாடு அரசு இணைய தளம் சுற்றுலா தொடர்பான தகவல் பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள் பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் பகுப்பு:பாளையங்கள்
சுப்பிரமணிய பாரதி
https://ta.wikipedia.org/wiki/சுப்பிரமணிய_பாரதி
மெரீனா கடற்கரை
https://ta.wikipedia.org/wiki/மெரீனா_கடற்கரை
thumb|1913-ஆம் ஆண்டில் கடற்கரையின் உலாவும் சாலை மெரீனா அல்லது மெரீனா கடற்கரை (Marina Beach) இந்தியாவின் சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு நகர்ப்புறக் கடற்கரை ஆகும். இதன் நீளம் 13 கி.மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். மும்பை நகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல், மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால், இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்குப் பிறகு இங்கு அனுமதியின்றிப் போராட்டங்கள் நடத்துவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.http://www.vikatan.com/news/tamilnadu/78988-no-more-protest-in-marina-beach-informs-police.art வரலாறு சென்னைத் துறைமுகம் கட்டப்படும் முன்பு, மெரீனா கடற்கரை வெறும் களிமண் தொகுப்பை உடையதாக இருந்தது. மெரீனாவைக் காப்பாற்ற சுவாமி விவேகானந்தரின் சென்னை இல்லறச் சீடர்களில் ஒருவர் கிருஷ்ண சுவாமி அய்யர். இவர் 1890களில் தென்னக ரயில்வே, மயிலாப்பூரையும், கிண்டியையும் மெரினா வழியாக இணைத்து ஒரு இரயில் தடம் செல்ல தீர்மானம் நிறைவேற்றி, 1903இல் வேலை தொடங்கும் சமயம் அதனை எதிர்த்து மாபெரும் கூட்டம் கூட்டினார். "இந்தக் கடற்கரைதான் சென்னை நகரத்தின் நுரையீரல்; இதை அழித்தோமானால் நம்மை வருங்கால சந்தியினர் மன்னிக்க மாட்டார்கள்" என்று கூறினார். மெரீனாவைக் காப்பாற்றுவதற்காகக் கூடிய மக்கள் கூட்டத்தைக் கண்டு ஆங்கிலேய அரசும் அஞ்சியது. இதனை அடுத்து அரசாங்கமும் அத்திட்டத்தினைக் கைவிட்டது.கிருஷ்ண சுவாமி அய்யர் என்ற மாமனிதர் நிகழ்வுகள் சென்னையின் முக்கிய பகுதியான இக்கடற்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன. இந்தியாவின் பெரிய ஓட்டமாகிய சென்னை மாரத்தானும் இங்கு நடைபெறும். ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்பர். பொங்கல் திருநாளில் மக்கள் தங்கள் உறவினர்களுடன் கூடி மகிழும் இடமும் இதுவே. சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில் அரசுத் துறைகளின் அணிவரிசை நடைபெறும். போக்குவரத்து மெரீனா கடற்கரையை ஒட்டிய காமராசர் சாலை ஆறுவழிப் பாதையாகும். கடற்கரையின் எதிர்புறம் கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய தொடர்வண்டி நிலையங்களும், விவேகானந்தர் இல்லம், சாந்தோம் ஆகிய பேருந்து நிறுத்தங்களும் உள்ளன. அண்ணா சதுக்கத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு பேருந்து வசதிகளும் உள்ளன. சுற்றுலா பேருந்துகள் இங்கு நின்றே செல்லும். எழில்மிகு காட்சிகள் பகுப்பு:சென்னைக் கடற்கரைகள் பகுப்பு:சென்னைச் சுற்றுலா மையங்கள் பகுப்பு:தமிழ்நாட்டுக் கடற்கரைகள் பகுப்பு:சென்னையின் புவியியல் மேற்கோள்கள்
தமிழ் இலக்கணம்
https://ta.wikipedia.org/wiki/தமிழ்_இலக்கணம்
தமிழ் மொழி 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்,' என மூன்று பிரிவுகளை உடையது. இவையே 'முத்தமிழ்' என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாகத் தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை, எழுத்து சொல் பொருள் யாப்பு அணி அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று வகை இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர். எழுத்து முதலெழுத்து 'அ' முதல் 'ஔ' வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும் உயிரெழுத்துகள்: உயிரெழுத்துகள் 12 அவை அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ மெய்யெழுத்துகள்: மெய்யெழுத்துகள் 18 அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன் உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும். மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும். சார்பெழுத்துகள் சார்பு எழுத்து மூன்று என்பது மரபு என்கிறார் தொல்காப்பியர் அவை குற்றியலிகரம் குற்றியலுகரம் மற்றும் ஆய்தம் ஆனால் பிற்காலத்தில் நன்னூலார் அதை விரிபு படுத்தி : உயிர்மெய் எழுத்து ஆய்த எழுத்து உயிரளபெடை ஒற்றளபெடை குற்றியலுகரம் குற்றியலிகரம் ஐகாரக் குறுக்கம் ஔகாரக் குறுக்கம் மகரக்குறுக்கம் ஆய்தக்குறுக்கம் எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்றன. இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12, மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய் எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல் ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216), ஆய்தம் ஆகிய 247 எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும். தமிழ் இலக்கியங்களுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும் ஆகும். அதில் ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள். அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளைப் பற்றியும் கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள். எழுத்து குறித்த இலக்கணச் செய்தி எழுத்தெண்ணிச் சீரும் அடியும் வரையறுக்கும் நிலையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. வஞ்சியுரிச்சீர், குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழி நெடிலடி போன்றவை எழுத்தடிப்படையில் எழுத்தெண்ணி சீர்களும் அடிகளுமாகும். வஞ்சியுரிச்சீர் நேர் இறுதி ஐந்து எழுத்து நிரை இறுதி ஆறு எழுத்து சிறுமை மூன்று எழுத்து பெருமை ஆறு எழுத்து 4 முதல் 6 எழுத்து வரை - குறளடி 7 முதல் 9 எழுத்து வரை - சிந்தடி 10 முதல் 14 எழுத்து வரை - அளவடி 15 முதல் 17 எழுத்து வரை - நெடிலடி 18 முதல் 20 எழுத்து வரை - கழி நெடிலடி மெய்யெழுத்து உயிரில் எழுத்து என்று குறிக்கப் பெறுகிறது. ஓரடிக்கு 4 முதல் 20 எழுத்து வரை ஆசிரியப்பா வருமென்றும், 7 முதல் 16 எழுத்து வரை வெண்பா வருமென்றும், 13 முதல் 20 எழுத்து வரை கலிப்பா வருமென்றும் தொல்காப்பியர் குறிக்கிறார். சொல் ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும். எ.கா: வீடு, கண், போ, சொல்லின் வகைகள் பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் பொருள் பொருள் இரண்டு வகைப்படும். அவை, அகப்பொருள் புறப்பொருள் தமிழ் இலக்கியங்களுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும். ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள். அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள். யாப்பு யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும். யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் இவை யாவும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும். யாப்பின் உறுப்புகள் யாப்பு வேறு, செய்யுள் வேறு; அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை எழுத்து அசை சீர் தளை அடி தொடை உயிர் எழுத்துகளும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து குறில் அல்லது நெடில் என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். நேரசை, நிரையசை ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. அசைகளின் கூட்டு சீர் எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் தளைகள் உண்டாகும். தளை என்னும் சொல்லுக்குக் கட்டுவது, பொருந்துவது என்பது பொருளாகும். நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றியும், ஒன்றாமலும் வருவது தளையாகும். இவ்வாறாக சீர்கள் இணைந்த தளைகள் பொருந்தி நின்று அடுத்து நடப்பது அடி எனப்படும். அடிகளும் அவ்வடிகளில் உள்ள சீர்களும் பொருத்தமுற தொடுக்கப்படுவது தொடையாகும். தொடை என்பது காரணப்பெயராகும். யாப்பின் அடிப்படையில் பா வகைகள் வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா அணி அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணி பலவகைப்படும். அவற்றுள் சில, தன்மையணி உவமையணி உருவக அணி பின்வருநிலையணி தற்குறிப்பேற்ற அணி வஞ்சப் புகழ்ச்சியணி வேற்றுமை அணி இல்பொருள் உவமையணி எடுத்துக்காட்டு உவமையணி இரட்டுறமொழிதலணி மேலும் காண்க தமிழ் இலக்கண விரிவு ஆங்கில இலக்கியம் ஆங்கில இலக்கணம் பிரெஞ்சு இலக்கணம் பிரெஞ்சு இலக்கணம் எசுபெரந்தோ வேற்றுமையுருபு மேற்கோள்கள் வெளியிணைப்புகள் நூலகம் இணையத்தில் தமிழிலக்கணத்திற்கான வலைவாசல். இலக்கணப் பாடபுத்தகம் - தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்தின் பள்ளிகளுக்கான இலக்கணப் புத்தகம். *
உருசியா
https://ta.wikipedia.org/wiki/உருசியா
உருசியா (Russia) அல்லது இரசியா என்பது வடக்கு யூரேசியாவில் அமைந்துள்ள உலகிலேயே நிலப்பரப்பில் யாவற்றினும் மிகப்பெரிய நாடாகும். இந்நாட்டின் முறைப்படியான பெயர் உருசியக் கூட்டமைப்பு என்பதாகும். தமிழில் ரஷ்யா, ருஷ்யா என்னும் பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு. உருசிய மொழியில் இது Росси́йская Федера́ция (Rossiyskaya Federatsiya அல்லது ரசீஸ்க்கய ஃபெதராத்சியா) அல்லது சுருக்கமாக உருசியா (உருசிய மொழியில்: Росси́я, ஆங்கில ஒலிபெயர்ப்பு: Rossiya அல்லது Rossija) என அழைக்கப்படுகிறது. ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களின் பெரு நிலப்பரப்பில் மிகவிரியும் ஒரு பெரும் நாடாக விளங்கும் இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 17,075,200 சதுர கிலோமீட்டர். பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியலைப் பார்த்தால், உருசியாவின் பரப்பளவு அடுத்த பெரிய நாடான கனடாவின் நிலப்பரப்பைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும். உருசியா, மக்கள்தொகை அடிப்படையில் உலகில் எட்டாவது இடம் வகிக்கிறது. ஏறத்தாழ 143-145 மில்லியன் மக்கள் (2002-இன் கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 145,513,037) இந்நாட்டில் வாழ்கிறார்கள். ஏறக்குறைய வட ஆசியா முழுவதையும் மற்றும் 40% ஐரோப்பா பகுதிகளையும் உள்ளடக்கியது. 11 விதமான கால வேறுபாடுகளை (Time zone) யும், பரந்த வேறுபட்ட நிலப்பரப்பையும் கொண்டது. உருசியா உலகிலேயே அதிகமான அளவு காட்டு ஒதுக்கங்களைக் (8,087,900 ச.கிமீ.) கொண்டுள்ளதுடன், இங்குள்ள ஏரிகள் உலக நன்னீர் நிலைகளின் பரப்பளவில் நான்கில் ஒரு பாகமாகவும் உள்ளன. உலகின் மிகக் கூடிய கனிம வளங்களும் ஆற்றல் வளங்களும் உருசியாவிலேயே உள்ளதுடன் உலகின் மிகப் பெரிய எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நாடாகவும் விளங்குகிறது.International Energy Agency – Oil Market Report 18 January 2012. Retrieved 20 February 2012.Country Comparison :: Natural gas – production . CIA World Factbook. Retrieved 17 February 2012. உருசியா, பின்வரும் நாடுகளுடன் தன் நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது (வடமேற்கிலிருந்து தென்கிழக்கு முகமாக): நார்வே, பின்லாந்து, எஸ்டோனியா, லத்வியா, லித்துவானியா, போலந்து, பெலாரஸ், உக்ரைன், ஜார்ஜியா, அசர்பைஜான், கசகஸ்தான், சீனா, மங்கோலியா மற்றும் வட கொரியா. உருசியாவின் வரலாறு, பொ.ஊ. 3-ஆம் முதல் 8-ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க ஒரு குழுவினராக உருவாகிய கிழக்கு சிலேவ் என்னும் பூர்வகுடிமக்களுடன் தொடங்குகிறது. அதன் பிறகு இப்பகுதியில், வைக்கிங் என்னும் மறக் குடியினர் 9-ஆவது நூற்றாண்டில் "ருஸ்" என்னும் நடுக் கால நாட்டை உருவாக்கி ஆண்டு வந்தனர். 988-ஆம் ஆண்டில், இந்த அரசு பைசன்டியப் பேரரசிடம் இருந்து பெற்ற பழமைக் கோட்பாட்டுக் கிறித்தவத்தைத் தழுவிக்கொண்டது. இது, பைசன்டியப் பண்பாடும், சிலாவியப் பண்பாடும் இணைந்து, அடுத்த ஆயிரவாண்டு காலத்தில் இடம்பெற்ற உருசியப் பண்பாட்டு வளர்ச்சியின் தொடக்கமாக அமைந்தது. சில காலங்களின் பின் "ருஸ்" நாடு பல சிறிய நாடுகளாகச் சிதைவுற்றது. இவற்றுட் பலவற்றைக் கைப்பற்றிக்கொண்ட மங்கோலியர் அவற்றைத் தமது சிற்றரசுகளாக ஆக்கிக்கொண்டனர்.The Mongol empire: its rise and legacy, By Michael Prawdin, Gérard Chaliand, (2005) page 512-550 பின்னர், மாசுக்கோ பெரும் டச்சி (Grand Duchy of Moscow) படிப்படியாக அருகில் இருந்த "ருஸ்" சிற்றரசுகளையும் ஒன்றிணைத்து விடுதலை பெற்றுக்கொண்டு "கீவிய ருஸ்" பகுதியின் பண்பாட்டு, அரசியல் மரபுகளின் முன்னணிச் சக்தியாக உருவானது. பிற நாடுகளைக் கைப்பற்றுவது மூலமும், பிற நிலப் பகுதிகளை இணைத்துக் கொள்வதன் மூலமும் பெருமளவு விரிவடைந்த இது 18-ஆம் நூற்றாண்டில் உருசியப் பேரரசாக உருவானது. வரலாற்றில் மூன்றாவது பெரிய பேரரசான இது, ஐரோப்பாவின் போலந்து முதல் வட அமெரிக்காவில் உள்ள அலாசுக்கா வரை பரந்து இருந்தது.Peter Turchin, Thomas D. Hall and Jonathan M. Adams, "East-West Orientation of Historical Empires ", Journal of World-Systems Research Vol. 12 (no. 2), pp. 219–229 (2006). உருசியா கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உருசியப் பேரரசாகவும், சோவியத் ஒன்றியம் மூலமாகவும் உலகின் வல்லரசுகளில் ஒன்றாக வளர்ந்தது. 1917-இல் உருசியப் புரட்சியைத் தொடர்ந்து உலகின் முதல் அரசியல் சட்ட சோசலிச நாடாக உருவான 15 குடியரசுகளை உள்ளடக்கிய சோவியத் யூனியனில் பெரிய பகுதியாகவும் முன்னணி உறுப்பாகவும் உருசியா இருந்தது. சோவியத் ஒன்றியம் உலகின் முதல் மற்றும் பெரிய ஜனநாயக சோசலிச நாடாகும். அப்போதைய இரண்டு வல்லரசுகளில் ஒன்றாகவும் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் கூட்டுப் படைகளின் வெற்றியில் சோவியத் ஒன்றியத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.Rozhnov, Konstantin, Who won World War II?. BBC. சோவியத் ஒன்றியக் காலத்தில் 20-ஆம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டன. உலகின் முதலாவது மனித விண்வெளிப் பறப்பும் இவற்றுள் அடங்கும். 1991-இல் சோவியத் யூனியன் கலைக்கப்படடதால் பிறகு மீண்டு உருசியா குடியரசாக உருவானது. எனினும், உருசியாவே கலைக்கப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் சட்டத் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உருசியப் பொருளாதாரம் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஒன்பதாவது பெரியதாகவும், வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையில் ஆறாவது பெரியதாகவும் உள்ளது. இதன் படைத்துறைக்கான பெயரளவு வரவு செலவு உலகின் மூன்றாவது பெரிதாகும். இது உலகில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார சக்திகளுள் ஒன்று. உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணுவாயுத நாடுகளில் ஒன்றான உருசியா உலகின் மிகப் பெரிய பேரழிவு ஆயுதச் சேமிப்பையும் கொண்டுள்ளது. உருசியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளுள் ஒன்றாக உள்ளதுடன், ஜி8, ஜி20, ஐரோப்பிய அவை, ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு, சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, யூரேசிய பொருளாதாரச் சமூகம், ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றிலும் உறுப்பு நாடாக இருந்து வருகிறது. மக்கள் பரம்பல் உருசியாவின் மக்கள் தொகை 143 மில்லியன் ஆகும். பாரிய பரப்பளவு கொண்ட நாடு என்பதால் மக்கள் அடர்த்தி 8.3/கிமீ2 ஆகும். பொதுவாக 78% மக்கள் ஆங்காங்கே இருக்கும் பெரிய நகரங்களிலேயே செறிவாக வாழ்கின்றார்கள். உருசியாவின் 80% மக்கள் உருசிய இன மக்கள் ஆவார்கள். இவர்களை தவிர பல சிறுபான்மை இன மக்கள் அவர்களுக்குரிய பாரம்பரிய நிலப்பகுதிகளில் வாழ்கின்றார்கள். வரலாறு முற்காலம் thumb|left|குர்கன் கொள்கை:இந்தோ- ஐரோப்பிய மக்களின் தாயகமாக தென் ருசியா 35000 வருடங்கள் பழமையான நவீன மனிதனின் எலும்புகள் ரசியாவின் கொஸ்டெங்கி பகுதியிலுள்ள டொன் நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 41000 வருடங்களுக்குமுன் வாழ்ந்த டெனிசோவா ஹோமினின் என்ற மனித இனத்தின் எச்சங்கள் தென் சைபீரியாவின் டெனிசோவா குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் தென் ரசியாவின் ஸ்டெப்பீஸ் புல்வெளிகள் நாடோடி இடையர்களின் தாயகமாக இருந்தது. ஸ்டெப்பீஸ் நாகரிகத்தின் எச்சங்கள் இபடோவோ, சின்தாஸ்டா, ஆர்கெய்ம், மற்றும் பசிரிக், ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை நாடோடி வாழ்க்கையின் முக்கிய அம்சமான குதிரைப் படையை வைத்திருந்தமைக்கான சான்றுகளைத் தருகின்றன. கிரேக்க, ரோமக் குறிப்புகளில் பொன்டிக் ஸ்டெப்பீ புல்வெளி சின்தியா எனக் குறிப்பிடப்படுகிறது. பொ.ஊ.மு. 8ம் நூற்றாண்டிலிருந்து, பண்டைய கிரேக்க வணிகர்கள் தமது நாகரிகத்தை டனைஸ் மற்றும் பனகோரியா ஆகிய இடங்களிலுள்ள தமது வணிக நிலையங்களுக்கு கொண்டுவந்தனர். பொ.ஊ. 3ம்-4ம் நூற்றாண்டுகளில் ஒய்யமின் கோதிக் பேரரசு தென் ரசியாவில் காணப்பட்டது. ஹூணர்களால் அழிக்கப்படும் வரை இது நிலைத்திருந்தது. பொ.ஊ. 3ம் நூற்றாண்டுக்கும், 6ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கிரேக்க அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பொஸ்போரன் பேரரசு ஆட்சிக்கு வந்தது. இதுவும் பின்னர் ஹூணர்கள் மற்றும் யுரேசிய அவார்கள் போன்ற போர் நாட்டமுள்ள நாடோடிகளின் ஆக்கிரமிப்பினால் வெற்றிகொள்ளப்பட்டது. 10ம் நூற்றாண்டு வரை, கசார்கள் எனப்பட்ட துருக்கிய மக்கள் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட கீழ் வொல்கா புல்வெளியில் ஆட்சி செலுத்தினர். நவீன ரசியர்களின் மூதாதையர்கள், மரங்கள் அடர்ந்த பின்ஸ்க் சதுப்பு நிலத்தைத் தாயகமாகக் கொண்ட ஸ்லாவியக் குழுக்கள் என சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர். கிழக்கு ஸ்லாவியர்கள் மேற்கு ரசியாவில் இரண்டு தடவைகளிலாகக் குடியேறியுள்ளனர்: அவை, கீவிலிருந்து இன்றைய சுஸ்டால் மற்றும் முரோம் நோக்கிய ஒரு நகர்வும், பொலோட்ஸ்க்கிலிருந்து, நோவோகொரட் மற்றும் ரொஸ்டோவ் நோக்கிய இன்னொரு நகர்வுமாகும். 7ம் நூற்றாண்டிலிருந்து கிழக்கு ஸ்லாவியர்களின் சனத்தொகை மேற்கு ரசியாவில் அதிகரித்ததோடு, அங்கு வாழ்ந்த மெர்யா, முரோமியன் மற்றும் மெச்செரா போன்ற ஃபின்னோ-உக்ரிக் மக்களைத் தம்முள் மெதுவாக உள்வாங்கிக் கொண்டனர். கீவிய ரசியா thumb|11ம் நூற்றாண்டில் கீவிய ரசியா 9ம் நூற்றாண்டில் முதலாவது கிழக்கு ஸ்லாவிய நாடுகளின் நிறுவுகை, பால்டிக் கடல் பகுதியினரான போர்வீரர்களும், வர்த்தகர்களும், குடியேறிகளுமான வராங்கியர்களின் வருகையுடன் மேற்பொருந்துகிறது. ஆரம்பத்தில் இவர்கள் ஸ்கண்டிநேவியாவிலிருந்த வைக்கிங்குகளுடன் தொடர்புற்றிருந்தனர். இவர்கள் கிழக்கு பால்டிக் கடலிலிருந்து கருங்கடல் மற்றும் கஸ்பியன் கடல் வரை பயணம் மேற்கொண்டனர். ஆரம்ப வரலாற்றுக் குறிப்புகளின் படி ரூரிக் எனப்பட்ட வராங்கியன் இனத்தவன் 862ல் நோவோகொரட்டின் ஆட்சியாளனாகத் தெரிவு செய்யப் பட்டான். இவனுக்குப் பின் வந்த ஒலெக் என்பவன் தென் பகுதிக்குப் படையெடுத்து கசார்களின் தலைமையிடமான கீவைக் கைப்பற்றி கீவிய ரசியாவைத் தோற்றுவித்தான். ஒலெக், ரூரிக்கின் மகனான இகோர் மற்றும் இகோரின் மகனான ஸ்வியாடொஸ்லாவ் ஆகியோர் தொடர்ச்சியாக கீவின் ஆட்சியாளர்களானதோடு, கிழக்கு ஸ்லாவிய மக்களையும் கீழடக்கினர். மேலும் இவர்கள் கசார்களின் அரசை அழித்ததுடன் பைசாந்தியம், பாரசீகம் போன்ற இடங்களுக்கும் படையெடுப்புகளை மேற்கொண்டனர். 10ம் நூற்றாண்டு முதல் 11ம் நூற்றாண்டு வரை, கீவிய ரசியா ஐரோப்பாவின் பாரிய, வளமிக்க பேரரசாக உருவாகியது. மகா விளாடிமிர் (980–1015) மற்றும் அவனது மகனான புத்தியுள்ள யரோஸ்லாவ் (1019–1054) ஆகியோரின் ஆட்சிக் காலங்கள் கீவின் பொற்காலமாகக் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் பைசாந்தியத்தில் நிலைபெற்றிருந்த பழமைவாதக் கிறிஸ்தவத்தை இவர்கள் தழுவிக்கொண்டதுடன், முதலாவது எழுதப்பட்ட ஸ்லாவிய சட்டக் கோவையான ரஸ்கயா ப்ராவ்டாவையும் உருவாக்கினர். 11ம் மற்றும் 12ம் நூற்றாண்டுகளில், கிப்சக்க்குகள் மற்றும் பெச்செனெக்குகள் போன்ற துருக்கிய குழுக்களின் தொடர் தாக்குதல்களால் ஸ்லாவிய மக்கள் பாதுகாப்பான, காடுகளால் சூழப்பட்ட சலெஸ்யே போன்ற வடக்குப் பகுதிகளுக்குப் பாரியளவில் குடிபெயர்ந்தனர். left|thumb|க்லாவ்டி லெபெடேவினால் வரையப்பட்ட கிவியர்களின் ஞானஸ்நானம் கீவிய ரசியாவை ஆண்ட ரூரிக் வம்சத்தினரிடையேயான தொடர்ச்சியான உட்போர்கள் காரணமாக மானியமுறைமையும் அதிகாரப் பரவலாக்கமும் ஏற்பட்டது. கீவின் அதிகாரம் நலிவடைந்ததால் வடகிழக்கில் விளாடிமிர்-சுஸ்டால், வடமேற்கில் நோவோகொரட் குடியரசு, தென்மேற்கில் கலிசியா-வொல்கினியா போன்ற சுயாதீன அரசுகள் உருவாகின. இறுதியாக 1237–40ல் மொங்கோலியரின் படையெடுப்பினால் கீவிய ரசியா பிளவடைந்தது. இது கீவின் அழிவுக்கும், ரசியாவின் அரைவாசி மக்களின் அழிவுக்கும் காரணமானது. தாத்தார்கள் எனப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் கோல்டன் ஹோர்ட் எனப்பட்ட நாட்டை உருவாக்கினர். இவர்கள் ரசியச் சிற்றரசுகளைக் கொள்ளையடித்ததோடு, ரசியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆண்டனர். கலிசியா-வொல்கினியா போலிய-லிதுவேனிய பொதுநலவாயத்தினுள் உள்வாங்கிக்கொள்ளப்பட்டதோடு, கீவின் எல்லைப்புறத்தில் அமைந்திருந்த விளாடிமிர்-சுஸ்டால் மற்றும் நோவோகொரட் குடியரசு ஆகிய பகுதிகளில் மொங்கோலியர் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு பகுதிகளுமே நவீன ரசிய நாட்டுக்கான அடிப்படையாகும். மொங்கோலியப் படையெடுப்பின்போது நோவோகொரட் மற்றும் ஸ்கோவ் ஆகியன சிறிதளவு சுயாட்சி அதிகாரம் உடையனவாக இருந்தன. மேலும் இவை நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெற்ற அட்டூழியங்களிலிருந்தும் தப்பிக்கொண்டன. அலெக்சாண்டர் நெவ்ஸ்கி என்ற இளவரசனால் வழிநடத்தப்பட்ட நோவோகொராடியர்கள் 1240ல் நடைபெற்ற நேவா போரின் மூலம் சுவீடிய ஆக்கிரமிப்பையும், 1242ல் நடைபெற்ற ஐஸ் போரின் மூலம் ஜெர்மானிய சிலுவைப் போராளிகளின் ஆக்கிரமிப்பையும் தடுத்து, வடக்கு ரசியாவை ஆக்கிரமிக்கும் அவர்களது முயற்சியையும் முறியடித்தனர். மொஸ்கோவின் பெரும் டச்சி thumb|270px|குலிகோவோ போருக்கு முன், ரடோனெசின் செர்கியஸ், டிமித்ரி டொன்ஸ்கோயை, ட்ரினிடி செர்கியஸ் லவ்ராவில் வைத்து ஆசீர்வதிக்கிறார். ஏர்னஸ்ட் லிஸ்னரால் வரையப்பட்ட ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது. கீவிய ரசியாவின் வழிவந்த, மிகவும் பலம்வாய்ந்த அரசு மொஸ்கோவின் பெரும் டச்சி ஆகும் (மேலைத்தேய குறிப்புகளில் "மொஸ்கோவி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது). ஆரம்பத்தில் இது விளாடிமிர்-சுஸ்டாலின் ஒரு பகுதியாக இருந்தது. மொங்கோலிய-தாத்தார்களின் ஆதிக்கத்தின் கீழ் காணப்பட்டாலும், அவர்களின் உதவியுடன் 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மத்திய ரசியாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தது. மேலும், படிப்படியாக, ரசியாவின் ஒன்றிணைவு மற்றும் விஸ்தரிப்புக்கான பிரதான சக்தியாகவும் இது உருவெடுத்தது. மொங்கோலிய-தாத்தார்களின் தொடர் தாக்குதல்களாலும், பனிக்காலத் தொடக்கத்தினால், விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களாலும் துன்பப்பட்டது. ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளைப் போலவே, பிளேக் நோய் ரசியாவையும் பாதித்தது. 1350இலிருந்து 1490 வரை ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசியாவின் பகுதிகள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டன. எவ்வாறாயினும், குறைந்த சனத்தொகை அடர்த்தி, சிறந்த சுகாதார நடைமுறைகள் (பரவலான, ஈர ஆவிக் குளியல் நடைமுறை) காரணமாக,The history of banya and sauna பிளேக் நோயினால் ஏற்பட்ட இழப்புகள், மேற்கு ஐரோப்பாவில் காணப்பட்டது போன்று பெரியளவில் ஏற்படவில்லை. 1500 ஆகும்போது ரசியாவின் சனத்தொகை பிளேக் நோய்க்கு முன்னரான அளவுக்கு உயர்ந்தது."Black Death". Joseph Patrick Byrne (2004). p. 62. மொஸ்கோவின் டிமித்ரி டொன்ஸ்கோயினால் வழிநடத்தப்பட்டதும், ரசிய பழமைவாத திருச்சபையினால் உதவி வழங்கப்பட்டதுமான ரசியப் பகுதிகளின் ஐக்கிய இராணுவம், 1380இல் நடைபெற்ற குலிகோவோ போரில் மொங்கோலிய-தாத்தார்களைத் தோற்கடித்து சாதனை படைத்தது. சிறிது சிறிதாக அருகிலிருந்த பகுதிகளும் மொஸ்கோவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டன. இவற்றுள் மொஸ்கோவின் முன்னைய எதிரிகளான ட்வெர் மற்றும் நோவ்கோகொரட் போன்றனவும் அடங்கும். மூன்றாம் இவான் (தி கிரேட்) இறுதியாக கோல்டன் ஹோர்டை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, முழு மத்திய மற்றும் வட ரசியாவையும் மொஸ்கோவின் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தான். இவனே முதலாவது "முழு ரசியாவினதும் பெரும் டியூக்" பட்டத்தைப் பெற்றவனாவான். 1453ல் கொன்ஸ்தாந்திநோபிளின் வீழ்ச்சிக்குப் பின், மொஸ்கோ கிழக்கு ரோமப் பேரரசின் ஆட்சியுரிமையை எதிர்த்தது. மூன்றாம் இவான், இறுதிப் பைசாந்தியப் பேரரசரான 11ம் கொன்ஸ்தாந்தைனின் மைத்துனியான சோபியா பலையோலொகினாவைத் திருமணம் செய்துகொண்டான். மேலும் பைசாந்தியத்தின் குறியீடான இரட்டைத் தலைக் கழுகை தனதும் ரசியாவினதும் சின்னமாக்கிக் கொண்டான். ரசியாவில் சார் ஆட்சி thumb|upright|left|விக்டர் வாஸ்னெட்சோவால் வரையப்பட்ட சார் பயங்கர இவான் மூன்றாம் ரோமச் சிந்தனைகளில் ஏற்பட்ட வளர்ச்சியால், பெரும் டியூக்கான 4ம் இவான் ("மிகச்சிறந்த"Frank D. McConnell. Storytelling and Mythmaking: Images from Film and Literature. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 1979. ; p. 78: "But Ivan IV, Ivan the Terrible, or as the Russian has it, Ivan Groznyi, "Ivan the Magnificent" or "Ivan the Awesome," is precisely a man who has become a legend") 1547ல், ரசியாவின் முதல் சார் ("சீசர்") ஆக உத்தியோகபூர்வமாக முடிசூட்டப்பட்டான். சார் மன்னன் ஒரு புதிய சட்டத் தொகுப்பை (1550ன் சுடெப்னிக்) வெளியிட்டான். இதன் மூலம் முதலாவது ரசிய மானியமுறை அமைப்பு (செம்ஸ்கி சொபோர்) உருவாக்கப்பட்டதோடு கிராமியப் பகுதிகளுக்கு உள்ளூர் சுயாட்சி அமைப்பொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. இவனது நீண்ட ஆட்சிக்காலத்தின்போது, மூன்று தாத்தார் கானேட்டுகளான (கோல்டன் ஹோர்டின் சிதறிய பகுதிகள்), வொல்கா நதிக்கருகில் இருந்த கசான் மற்றும் அஸ்ட்ராகான் என்பவற்றையும், தென்மேற்கு சைபீரியாவிலிருந்த சைபீரியன் கானேட்டையும் இணைத்த பயங்கர இவான், ஏற்கனவே பெரிதாக இருந்த ரசியப் பகுதியை கிட்டத்தட்ட இருமடங்காக்கினான். இதனால், 16ம் நூற்றாண்டின் முடிவில் ரசியாவை பல்லின, பல்சமய மற்றும் கண்டம் கடந்த ஒரு நாடாக்கினான். எவ்வாறாயினும், பால்டிக் கரையைக் கைப்பற்றுவதற்கும், கடல் வணிகம் மேற்கொள்வதற்கும், போலந்து, லிதுவானியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட நீண்ட, தோல்விகரமான லிவோனியப் போரின் காரணமாக சார் ஆட்சி வலுவிழந்தது. இதேவேளை, கோல்டன் ஹோர்டின் எச்சமான கிரிமியன் கானேட்டின் தாத்தார்கள், தென்ரசியாவில் தொடர்ச்சியான கொள்ளையடிப்புக்களை மேற்கொண்டனர்.. Eizo Matsuki, Mediterranean Studies Group at Hitotsubashi University. 1571ல், வொல்கா கானேட்டை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கிரிமியர்களும் அவர்களது ஒட்டோமான் கூட்டணியினரும் மத்திய ரசியாவை ஆக்கிரமித்து மொஸ்கோவின் பகுதிகளை எரியூட்டினர். ஆனாலும்,அடுத்த ஆண்டே மொலோடி போரில், இப்பாரிய ராணுவம் ரசியர்களால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் ரசியாவில் ஒட்டோமன்-கிரிமியன் பரவலை தடுத்துக்கொண்டனர். கிரேட் அபாடிஸ் லைன் போன்ற பாரிய கோட்டைகள் கட்டியெழுப்பப்பட்டு எதிரிப் படையெடுப்புக்கான பகுதிகள் குறுக்கப்பட்டன. ஆயினும், 17ம் நூற்றாண்டு வரையில் கிரிமியர்களின் கொள்ளையடிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை. upright|thumb|மொஸ்கோவிலுள்ள, மினின் மற்றும் பொசார்க்கி ஆகியோருக்கான நினைவுச்சின்னம் இவானின் மகன்களின் மரணம் காரணமாக 1598ல் பண்டைய ரூரிக் வம்சம் முடிவு பெற்றது. மேலும் 1601–03 பஞ்சம் உள்நாட்டுக் கலகத்துக்கு வழிகோலியது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், குழப்ப காலத்தின் போது, ஆட்சி உரிமையாளர்களினதும், வெளிநாட்டினரினதும் குறுக்கீடுகள் ஏற்பட்டன. போலிய-லிதுவேனிய பொதுநலவாயம் மொஸ்கோ உள்ளிட்ட ரசியாவின் பகுதிகளை ஆக்கிரமித்தது. 1612ல் இரண்டு தேசிய வீரர்களான குஸ்மா மினின் என்ற வணிகனாலும், திமித்ரி பொசார்கி என்ற இளவரசனாலும் வழிநடத்தப்பட்ட ரசியத் தொண்டர் படையினால் போலியர்கள் பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். செம்ஸ்கி சொபோரின் தீர்மானம் காரணமாக 1613ல் ரோமனோவ் வம்சம் அதிகாரத்துக்கு வந்தது. இதனால் நாடு நெருக்கடியிலிருந்து சிறிதுசிறிதாக மீண்டது. 17ம் நூற்றாண்டில் கொசக்குகளின் காலத்தில் ரசியா தனது நிலப்பரப்பை தொடர்ந்தும் விஸ்தரிக்கத் தொடங்கியது. கொசக்குகள் என்போர், கொள்ளையர் மற்றும் புதுநில ஏகுனர்கள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ சமூகங்கள் ஆவர். 1648ல், கெமெல்நைட்ஸ்கி கிளர்ச்சியின்போது போலந்து-லிதுவானியாவுக்கு எதிராக, உக்ரேனின் விவசாயிகள் சபோரோசியன் கொசக்குகளில் இணைந்து கொண்டனர். இதற்குக் காரணம், போலிய ஆட்சியின்கீழ் சமூக, மத அடக்குமுறைகளுக்கு உள்ளானமையேயகும்.1654ல் உக்ரேனிய தலைவரான போடான் கெமெல்நைட்ஸ்கி, உக்ரேன் ரசிய சார் மன்னரான முதலாம் அலெக்சியின் பாதுகாப்பில் இருப்பதற்கு சம்மதித்தார். அலெக்சி இதற்கு சம்மதித்ததால், இன்னொரு ரசிய-போலிய யுத்தம் (1654–1667) ஏற்பட்டது. இறுதியில், நீப்பர் நதியை எல்லையாகக் கொண்டு உக்ரேன் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேற்குப்பகுதி (அல்லது வலது கரை) போலிய கட்டுப்பாட்டிலும், கிழக்குப்பகுதி (அல்லது இடதுகரை மற்றும் கீவ்) ரசிய கட்டுப்பாட்டிலும் இருந்தன. பின்பு, 1670–71ல் ஸ்டென்கா ரசினால் வழிநடத்தப்பட்ட டொன் கொசக்குகள் வொல்கா பகுதியில் பாரிய கிளர்ச்சியொன்றை ஆரம்பித்தனர். ஆயினும் சாரின் படைகள் கலகத்தை வெற்றிகரமாக அடக்கின. கிழக்குப் பகுதியில், பெரும்பாலும் கொசக்குகளால், சைபீரியாவின் பல பகுதிகளில் விரைவான ரசிய கண்டுபிடிப்புகளும் குடியேற்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. இவை பெரும்பாலும், பெறுமதிமிக்க, விலங்குகளின் தோல் மற்றும் தந்தத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே நடத்தப்பட்டன. ரசிய கண்டுபிடிப்பாளர்கள் சைபீரிய நதித் தடங்கள் வழியே மேலும் கிழக்கு நோக்கி பயணித்தனர். 17ம் நூற்றாண்டளவில் கிழக்கு சைபீரியாவின், சூச்சி தீபகற்பம், அமுர் நதிக்கரை, மற்றும் பசுபிக் கரையோரங்களில் ரசியக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1648ல், ஆசியாவுக்கும், வட அமெரிக்காவுக்கும் இடையிலான பெரிங் நீரிணை, ஃபெடோட் போபோவ் மற்றும் செம்யோன் டெஸ்ன்யோவ் ஆகியோரால் முதன்முதலில் கடக்கப்பட்டது. ரசியப் பேரரசு left|thumb|upright|மகா பீட்டர், ரசியாவின் முதலாவது பேரரசன் 1721ல், மகா பீட்டரின் கீழ், ரசியா ஒரு பேரரசானதுடன், அறியப்பட்ட உலக வல்லரசானது. 1682இலிருந்து 1725 வரை அரசாண்ட பீட்டர், பெரும் வடக்குப் போரில் சுவீடனைத் தோற்கடித்தான். மேலும், மேற்கு கரேலியா, இங்கிரியா (குழப்பகாலத்தின் போது ரசியாவால் இழக்கப்பட்ட இரு பிரதேசங்கள்), எஸ்ட்லாந்து மற்றும் லிவ்லாந்து ஆகியவற்றை பெற்றுக்கொண்டான். இதன்மூலம் ரசியாவுக்கு கடல் வழிப் போக்குவரத்தும், கடல் வணிகமும் மேற்கொள்ள முடியுமாயிருந்தது. பால்டிக் கடற்கரையில் பீட்டர் புதிய தலைநகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை நிறுவினான். இது பிற்காலத்தில் ரசியாவின் ஐரோப்பாவுக்கான நுழைவாயில் என அழைக்கப்பட்டது. பீட்டரின் பாரிய மறுசீரமைப்புக்கள் ரசியாவில் குறிப்பிடத்தக்க மேற்கு ஐரோப்பிய கலாசாரத் தாக்கங்களை ஏற்படுத்தின. 1741–62 வரை, முதலாம் பீட்டரின் மகளான எலிசபெத்தின் ஆட்சிக்காலத்தில் ரசியா ஏழாண்டுப் போரில் பங்கேற்றது (1756–63). இந்த போராட்டத்தின்போது, ரசியா கிழக்குப் பிரசியாவையும், மேலும் பெர்லினையும் சிறிதுகாலம் இணைத்திருந்தது. எவ்வாறாயினும், எலிசபெத்தின் மரணத்தின் பின், கைப்பற்றப்பட்ட அனைத்துப் பிரதேசங்களும், ரசியாவின் மூன்றாம் பீட்டரினால் பிரசியப் பேரரசுக்கு திருப்பி வழங்கப்பட்டது. 1762–96 வரை ஆண்ட இரண்டாம் கத்தரீன் ரசிய அறிவொளிக் காலத்துக்கு தலைமை தாங்கினார். இவர் போலிய-லிதுவானிய பொதுநலவாயத்தின் மீது ரசியாவின் ஆதிக்கத்தை நிலை நாட்டியதோடு, போலந்து பிரிவினையின் போது, இதன் பெரும்பாலான பகுதிகளை ரசியாவுடன் இணைத்துக்கொண்டார். இதன்மூலம் ரசியாவின் மேற்கெல்லை மத்திய ஐரோப்பா வரை பரந்தது. ஒட்டோமன் பேரரசுக்கெதிரான ரசிய-துருக்கியப் போர்களின் வெற்றியின் பின் கிரிமியன் கானேட்டைத் தோற்கடித்ததன் மூலம் அவர் ரசியாவின் தென் எல்லையை கருங்கடல் வரை விரிவு படுத்தினார். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஒட்டோமன்களுக்கெதிரான வெற்றிகளைத் தொடர்ந்து, ட்ரான்ஸ்காக்கேசியாவின் சில பகுதிகளையும் பெற்றுக்கொண்டது. முதலாம் அலெக்சாண்டரின் (1801–25), 1809ல், பலவீனமான சுவீடனிடமிருந்தான பின்லாந்தின் பறித்தெடுப்பு, 1812ல், ஒட்டோமன்களிடமிருந்தான பெஸ்ஸராபியாவின் பறித்தெடுப்பு என, இவ் விரிவுபடுத்தல் தொடர்ந்தது. இதேவேளை ரசியர்கள் அலாஸ்காவில் தமது குடியேற்றங்களை ஏற்படுத்தியதோடு, கலிபோர்னியாவிலும் கூட (ஃபோர்ட் ரொஸ்) தமது குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர். 1803–06 வரை முதலாவது ரசிய உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. பிற்காலத்திலும் குறிப்பிடத்தக்க கடற்பயணங்கள் சிலவும் மேற்கொள்ளப்பட்டன. 1820ல் ஒரு ரசிய நாடுகாண் பயணத்தின் மூலம் அண்டார்டிக்கா கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. thumb|1866ல் ரசியப் பேரரசும், அதன் செல்வாக்குக்கு உட்பட்ட பிரதேசங்களும். பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் துணையுடன் ரசியா, நெப்போலியனின் பிரான்சுக்கெதிராகப் போராடியது. 1812ல் உச்ச நிலையிலிருந்த நெப்போலியனின் ஐரோப்பிய சேனை, ரசியர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் ரசியாவின் கொடூரமான குளிர்காலம் என்பன காரணமாக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. இப் போரில் நெப்போலியனின் 95%மான படை அழிந்தது. மிகெய்ல் குட்டுசோவ் மற்றும் பார்கிளே டி டொலி ஆகியோரால் வழிநடத்தப்பட்ட ரசியப்படை, ஆறாம் கூட்டணியின் போரின் மூலம், நெப்போலியனின் படையை ரசியாவிலிருந்து வெளியேற்றியதோடு, ஐரோப்பா வழியாக இறுதியில் பாரிஸ் நகர் வரை துரத்தியடித்து நகருக்குள் நுழைந்தன. ரசியாவின் சார்பில் முதலாம் அலெக்சாந்தர் வியன்னா மாநாட்டில் கலந்துகொண்டார். இம்மாநாடு நெப்போலியனுக்குப் பின்னான ஐரோப்பாவின் எல்லைகளை வரையறுத்தது. நெப்போலியப் போர்களில் கலந்துகொண்ட அதிகாரிகள் தாராளவாதம் பற்றிய சிந்தனையை ரசியாவுக்கு எடுத்து வந்தனர். 1825ல் நடத்தப்பட்ட, வெற்றிபெறாத, டிசம்பர் புரட்சியின் மூலம் சார் மன்னரின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் இவர்கள் முயற்சித்தனர். முதலாம் நிக்கலசின் (1825–55) பழமைவாத ஆட்சியின் முடிவில், கிரிமியன் போரில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ரசியாவின் ஐரோப்பா மீதான அதிகாரமும், செல்வாக்கும் தகர்ந்தது. 1847க்கும், 1851க்குமிடையில் ரசியா முழுவதும் பரவிய ஆசியக் கொலரா ஒரு மில்லியன் உயிர்களைக் காவு கொண்டது.Geoffrey A. Hosking (2001). "Russia and the Russians: a history". Harvard University Press. p. 9. நிக்கலசின் பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் அலெக்சாண்டர் (1855–81) நாட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார். இவற்றுள் 1861ன் அடிமைத்தன விடுதலை மறுசீரமைப்பு குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பாரிய மாற்றங்கள் கைத்தொழில்மயமாக்கத்தை ஊக்குவித்ததுடன், ரசிய ராணுவத்தையும் நவீனமயப் படுத்தியது. இதன் மூலம் ரசிய ராணுவம் 1877–78 ரசிய-துருக்கிய யுத்தத்தின் போது, பல்கேரியாவை ஒட்டோமன் ஆதிக்கத்திலிருந்து வெற்றிகரமாக விடுவித்தது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு சோசலிச இயக்கங்கள் ரசியாவில் தோற்றம் பெற்றன. 1881ல் இரண்டாம் அலெக்சாண்டர் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார். அவரது மகனான மூன்றாம் அலெக்சாண்டர் (1894–94) ஆட்சிக்காலம் மிகவும் சமாதானமானதும், தாராளமயம் குறைந்ததுமாக இருந்தது. கடைசி ரசியப் பேரரசரான இரண்டாம் நிக்கலஸ் (1894–1917) 1905ன் ரசியப் புரட்சியைத் தடுக்க முடியாதவராக இருந்தார். இப்புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்தது ரசிய-சப்பானியப் போரில் ரசியாவின் தோல்வியாகும். இப்புரட்சி நிகழ்வுகள் இரத்த ஞாயிறு என அழைக்கப்படுகிறது. கிளர்ச்சி கைவிடப்பட்டது. ஆனால், அரசாங்கம் பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், அரசியல் கட்சிகளை சட்டபூர்வமாக்கல் மற்றும் சட்டவாக்கக் கழகமொன்றை உருவாக்குதல் (ரசியப் பேரரசின் டூமா) போன்ற பாரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஸ்டொலிபின் விவசாயச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து, சைபீரியாவுக்கான குடிபெயர்வு வேகமாக அதிகரித்தது. 1906க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான குடியேற்றக்காரர்கள் இந்தப்பகுதிக்கு வந்தனர்.N. M. Dronin, E. G. Bellinger (2005). "Climate dependence and food problems in Russia, 1900–1990: the interaction of climate and agricultural policy and their effect on food problems". Central European University Press. p. 38. 1914ல் ரசியாவின் கூட்டாளியான செர்பியாவுக்கு எதிராக ஆஸ்திரியா-ஹங்கேரி போர்ப் பிரகடனம் செய்ததையடுத்து, ரசியா முதலாம் உலக யுத்தத்தினுள் பிரவேசித்தது. இதன் முக்கூட்டு நட்பு அணிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், பல்வேறு போர்முனைகளில் போராடவேண்டியிருந்தது. 1916ல் ரசிய ராணுவத்தின் பிரசிலோவ் தடுப்பு நடவடிக்கை மூலமாக ஆஸ்திரியா-ஹங்கேரியின் ராணுவம் கிட்டத்தட்ட முற்றாகவே அழிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், போர்ச் செலவுகள், உயர் இழப்புகள், ஊழல் பற்றிய வதந்தி மற்றும் தேசத்துரோகம் என்பன காரணமாக ஆட்சியாளருக்கெதிரான மக்களின் அவநம்பிக்கை அதிகரித்தது. இத்தகைய நடவடிக்கைகள் 1917ல் இரு தடவைகளில் நடந்த ரசியப் புரட்சிக்கான சூழலை உருவாக்கியது. பெப்ரவரி புரட்சி காரணமாக இரண்டாம் நிக்கலஸ் பதவி துறந்தான். ரசிய சிவில் போரின்போது, இவனும் இவனது குடும்பமும் சிறைப்பிடிக்கப்பட்டு, பின்னர் கொலைசெய்யப்பட்டனர். முடியாட்சி, பலவீனமான, அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்ட தற்காலிக அரசாங்கத்தால் பிரதியிடப்பட்டது. பெட்ரோகிராட் சோவியத்தில் மாற்று சோசலிச ஆட்சி இடம்பெற்றது. இதன் அதிகாரம் சனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் சபையிடம் இருந்தது. இச்சபை சோவியத் எனப்பட்டது. புதிய அதிகார சபைகளின் ஆட்சி நாட்டின் நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் தீவிரப்படுத்தியது. தொடர்ந்து, போல்செவிக் தலைவர் விளாடிமிர் லெனினால் நடத்தப்பட்ட அக்டோபர் புரட்சியின் மூலம், இடைக்கால அரசாங்கம் தூக்கியெறியப்பட்டு, உலகின் முதல் சோசலிச நாடு உருவாகியது. சோவியத் ரசியா thumb|முன் சோவியத் யுகத்தின் குறியீடு:டட்லினின் கோபுரம் திட்டம் மற்றும் வேலையாளும் கோல்கோஸ் பெண்ணும் செதுக்கற் சிற்பம். அக்டோபர் புரட்சியை அடுத்து கொம்யூனிச எதிர்ப்பு வெள்ளை இயக்கத்துக்கும், செஞ்சேனையுடனான புதிய சோவியத் ஆட்சிக்குமிடையில் சிவில் போர் ஒன்று தொடங்கியது. பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் ஒப்பந்தம் மூலம், ரசியா, முதலாம் உலகப்போரில் மைய சக்திகளை எதிர்த்த அதன் உக்ரேனிய, போலிய, பால்டிக் மற்றும் ஃபின்னியப் பகுதிகளை இழந்தது. கொம்யூனிச எதிர்ப்புப் படைகளுக்கு ஆதரவாக, நேச நாடுகள் ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டன. எனினும் அது வெற்றியளிக்கவில்லை. இதேவேளையில், போல்செவிக்குகளும், வெள்ளை இயக்கமும் மாறிமாறி நாடுகடத்தல்களையும் மரண தண்டனைகளையும் மேற்கொண்டன. இச் செயற்பாடுகள் முறையே செம் பயங்கரம் மற்றும் வெண் பயங்கரம் என அழைக்கப்பட்டன. சிவில் போரின் முடிவில், ரசியப் பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் மிகவும் பாதிப்படைந்தன. மில்லியன்கணக்கான மக்கள் அகதிகளாயினர்.Transactions of the American Philosophical Society. James E. Hassell (1991), p. 3. மேலும், 1921ன் பொவொல்ஸ்யே பஞ்சத்தால் 5 மில்லியன் பேர் இறந்தனர்.Famine in Russia: the hidden horrors of 1921 , International Committee of the Red Cross டிசம்பர் 30, 1922ல், ரசிய சோவியத் கூட்டாட்சிச் சோசலிசக் குடியரசு (அந்த நேரத்தில் ரசிய சோசலிச கூட்டாட்சி சோவியத் குடியரசு என அழைக்கப்பட்டது), உக்ரேனிய, பெலாரசிய மற்றும் ட்ரான்ஸ்காக்கேசிய சோவியத் சோசலிசக் குடியரசுகளுடன் இணைந்து சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் அல்லது சோவியத் ஒன்றியத்தை உருவாக்கிக் கொண்டன. சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்கிய 15 குடியரசுகளில், ரசிய சோவியத் சோசலிசக் கூட்டுக் குடியரசே பரப்பளவில் மிகவும் பெரியதாகும். மேலும், இது சோவியத் ஒன்றியத்தின் மொத்த சனத்தொகையின் அரைவாசியிலும் மேலதிகமான சனத்தொகையையும் கொண்டிருந்தது. இதுவே 69-வருடகால ஒன்றிய வரலாற்றில் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது. 1924ல் லெனினின் இறப்பைத் தொடர்ந்து, ட்ரொய்க்கா எனப்பட்ட குழுவொன்று சோவியத் ஒன்றியத்தை ஆட்சி புரிய அமர்த்தப்பட்டது. எவ்வாறாயினும், கொமியூனிசக் கட்சியின் தெரிவுசெய்யப்பட்ட பொதுச்செயலாளரான ஜோசப் ஸ்டாலின், அனைத்து எதிர்ப்புக் குழுக்களையும் தனது கட்சிக்குள் இணைத்துக்கொண்டு, பெரும்பாலான அதிகாரங்களைத் தன்வசப்படுத்திக் கொண்டார். 1929ல், உலகப் புரட்சியின் முக்கிய ஆதரவாளரான, லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் ஸ்டாலினின் ஒரு நாட்டில் சோசலிசம் எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. பெரும் துப்பரவாக்கத்தின்போது, போல்செவிக் கட்சிக்குள் காணப்பட்ட உட்பூசல் உச்சநிலையை அடைந்தது. 1937–38 வரையான இந்த அடக்குமுறை வாய்ந்த காலகட்டத்தில், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பலாத்கார ஆட்சி மாற்றத்துக்கு திட்டம் தீட்டிய இராணுவத் தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.Abbott Gleason (2009). A Companion to Russian History. Wiley-Blackwell. p. 373. thumb|left|லெனின்கிராட்டின் பாதுகாவலர்கள் ஸ்டாலினின் தலைமைத்துவத்தின் கீழ், அரசாங்கம் திட்டமிட்ட பொருளாதாரம், பெரும்பாலும் கிராமிய நாடாக இருந்த ரசியாவில் கைத்தொழில்மயமாக்கம் மற்றும் விவசாயக் கூட்டுப் பண்ணைகள் என்பவற்றைச் செயற்படுத்தியது. விரைவான பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் நிறைந்த இக்காலப்பகுதியில், மில்லியன் கணக்கான மக்கள் தொழிலாளர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.Getty, Rittersporn, Zemskov. Victims of the Soviet Penal System in the Pre-War Years: A First Approach on the Basis of Archival Evidence. The American Historical Review, Vol. 98, No. 4 (Oct. 1993), pp. 1017–49. இவர்களுள் ஸ்டாலினின் ஆட்சியை எதிர்த்த அரசியல் கைதிகளும் அடங்குவர். மேலும் மில்லியன் கணக்கானோர், சோவியத் ஒன்றியத்தின் ஒதுங்கிய பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டனர். கடுமையான சட்டங்கள் மற்றும் வறட்சி ஆகியவற்றுடன் நாட்டின் விவசாயத்தில் ஏற்பட்ட இடைக்காலச் சிதைவு காரணமாக 1932–33 காலப்பகுதியில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது.R.W. Davies, S.G. Wheatcroft (2004). The Years of Hunger: Soviet Agriculture, 1931–33, pp. 401. எவ்வாறாயினும், பாரிய இழப்புக்களுடன், குறுகிய காலத்தில், சோவியத் ஒன்றியம் பாரிய விவசாயப் பொருளாதாரச் சமூகத்திலிருந்து, முக்கிய கைத்தொழிற் சக்தியாக மாறியது. அடோல்ப் ஹிட்லரின் ரூர், ஆஸ்திரியா, மற்றும் இறுதியாக செக்கோசிலோவாக்கியா ஆகியவற்றின் இணைப்பின் மீதான பெரிய பிரித்தானியாவினதும், பிரான்சினதும் அமைதிக் கொள்கை காரணமாக நாசி ஜெர்மனியின் பலம் அதிகரித்தது. இதனால், சோவியத் ஒன்றியத்தின் மீது போர் அச்சுறுத்தல் காணப்பட்டது. இதேவேளை ஜெர்மன் ரெய்க், சப்பானியப் பேரரசுடன் கூட்டுச் சேர்ந்தது. 1938–39 வரையான சோவியத்-சப்பானியப் போர்களின் மூலம் சப்பான் தூரக் கிழக்கில், சோவியத் ஒன்றியத்தின் முக்கிய எதிரியாக இருந்தது. ஆகத்து 1939ல், பிரித்தானியா மற்றும் பிரான்சுடன் நாசிச எதிர்ப்புக் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தோல்வியடைந்ததாலும், மேற்கத்திய சக்திகளின் நாசி ஜெர்மனியுடனான அமைதிக் கொள்கை காரணமாகவும், சோவியத் அரசாங்கம் ஜெர்மனியுடன் அமைதியான தொடர்புகளைக் கட்டியெழுப்ப முடிவு செய்தது. இதன்படி, இரு நாடுகளுக்கிடையிலும் போர் ஏற்படாதிருத்தல் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் தமது செல்வாக்குக்குட்பட்ட பிரதேசங்களை பிரித்துக்கொள்ளல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதமாக மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில், ஹிட்லர் போலந்து, பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளை கைப்பற்றிய வேளை, சோவியத் ஒன்றியம் தனது இராணுவத்தை கட்டியெழுப்புவதிலும், குளிர்காலப் போர் மற்றும் போலந்தின் சோவியத் படையெடுப்பு ஆகியவற்றின்போது இழந்த ரசியப் பேரரசின் முன்னைய பகுதிகளைப் பெற்றுக்கொள்வதிலும் வெற்றி கண்டது. சூன் 22, 1941ல், நாசி ஜெர்மனி ஆக்கிரமிக்கா ஒப்பந்தத்தை உடைத்து, மனித வரலாற்றிலேயே மிகப் பெரியதும், மிகவும் பலமிக்கதுமான படையுடன் சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்தது. இது இரண்டாம் உலகப்போரின் முக்கிய களமாக மாறியது. ஜெர்மனிய ராணுவம் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், மொஸ்கோ போரின் போது அவர்களது தாக்குதல் தடைப்பட்டது. தொடர்ந்து, 1942–43 குளிர்காலத்தில் நடைபெற்ற ஸ்டாலின்கிராட் போரிலும், 1943 கோடைகாலத்தில் நடைபெற்ற குர்ஸ்க் போரிலும் பாரிய தோல்வியைச் சந்தித்தனர். லெனின்கிராட் முற்றுகையும் ஜெர்மனியரின் இன்னொரு தோல்வியாகும். இதன்போது, அந்நகரம் 1941–44வரை ஜெர்மனிய, ஃபின்னியப் படைகளால், முற்றுகையிடப்பட்டது. பட்டினியால் வாடியபோதும், ஒரு மில்லியன் பேர் இறந்தபோதும், இந்நகரம் சரணடையவில்லை. The Legacy of the Siege of Leningrad, 1941–1995. Cambridge University Press. ஸ்டாலினின் நிர்வாகத்தின் கீழும், ஜோர்ஜி சுகோவ் மற்றும் கொன்ஸ்டான்டின் ரொகோஸ்சோவ்ஸ்கி போன்ற இராணுவத் தலைவர்களின் கீழும், சோவியத் படைகள், ஜெர்மனியரை 1944-45வரை கிழக்கைரோப்பா வழியாக விரட்டி, மே 1945ல் பெர்லினைக் கைப்பற்றின. ஆகஸ்ட் 1945ல் சோவியத் ராணுவம், சீனாவின் மன்சூக்குவோ மற்றும் வட கொரியாவிலிருந்து சப்பானியரை வெளியேற்றி, சப்பானுக்கெதிரான நேச நாடுகளின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தது. இரண்டாம் உலகப்போரின் 1941–45 காலப்பகுதி ரசியாவில் பெரும் நாட்டுப்பற்றுப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. மனித வரலாற்றில் மிகவும் கொடூரமான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்ற இப்போரில், 10.6 மில்லியன் ராணுவத்தினரும், 15.9 மில்லியன் மக்களும் கொல்லப்பட்டனர். இது இரண்டாம் உலகப்போரின் மொத்த இழப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். சோவியத் மக்களின் மொத்த மக்கள் இழப்பு இதனிலும் அதிகமாகும்.Geoffrey A. Hosking (2006). "Rulers and victims: the Russians in the Soviet Union". Harvard University Press. p. 242. சோவியத் பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் பாரிய அழிவுக்குள்ளானது. ஆயினும் சோவியத் ஒன்றியம் மாபெரும் வல்லரசாக எழுச்சி பெற்றது. போருக்குப் பின், செஞ்சேனை, கிழக்கு ஜெர்மனி உட்பட கிழக்கு ஐரோப்பாவையே ஆக்கிரமித்துக் கொண்டது. தங்கியிருக்கும் சோசலிச அரசாங்கங்கள் கிழக்குப்பகுதிக் கண்காணிப்பு நாடுகளில் ஏற்படுத்தப்பட்டன. உலகின் இரண்டாவது அணுவாயுத நாடாக உருவான சோவியத் ஒன்றியம், வார்சோ உடன்படிக்கையை உருவாக்கிக் கொண்டது. இதன் மூலம் ஐக்கிய அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆகியவற்றுடன் பனிப்போர் என அறியப்பட்ட, உலக ஆதிக்கத்துக்கான போட்டியுள் இறங்கியது. உலகெங்குமுள்ள புரட்சிகர இயக்கங்களுக்கு, சோவியத் ஒன்றியம் தனது ஆதரவை வழங்கியது. இவற்றுள் புதிதாக உருவான சீன மக்கள் குடியரசு, கொரிய சனநாயக மக்கள் குடியரசு மற்றும் கியூபக் குடியரசு போன்றனவும் அடங்கும். குறிப்பிடத்தக்களவு சோவியத் வளங்கள், ஏனைய சோசலிச நாடுகளுக்கு, உதவியாக ஒதுக்கப்பட்டது.Foreign trade from A Country Study: Soviet Union (Former). Library of Congress Country Studies project. ஸ்டாலினின் மரணத்துக்குப்பின், குறுகியகால கூட்டுத்தலைமையின் கீழ், புதிய தலைவரான நிக்கிட்டா குருசேவ், ஸ்டாலினின் கொள்கைகளை விமர்சித்ததோடு, ஸ்டாலின்மய ஒழிப்புக் கொள்கைகளைச் செயற்படுத்தினார். தொழிலாளர் வதை முகாம்கள் ஒழிக்கப்பட்டன. பல சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டனர் (இவர்களுல் பலர் இறந்திருந்தனர்). பொதுவான அடக்குமுறைக் கொள்கைகளின் தளர்வு, பின்பு குருசேவ் தளர்வு என அழைக்கப்பட்டது. இதேவேளை, துருக்கியில் ஐக்கிய அமெரிக்காவின் ஜூபிட்டர் ஏவுகணைகள் வைக்கப்பட்டமை மற்றும் கியூபாவில் சோவியத் ஏவுகணைகள் வைக்கப்பட்டமை காரணமாக ஐக்கிய அமெரிக்காவுடனான முறுகல்நிலை அதிகரித்தது. left|thumb|சோவியத் மற்றும் ரசிய விண்வெளி நிலையமான மிர். 1957ல், சோவியத் ஒன்றியம் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் 1ஐ ஏவியதன் மூலம் விண்வெளி யுகத்தை ஆரம்பித்தது. ரசிய விண்வெளி வீரரான யூரி ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று, வாஸ்ட்டாக் 1 விண்கலத்தில் புவியை வலம்வந்து, விண்வெளியை வலம்வந்த முதல் மனிதரானார். 1964ல் குருசேவின் ஓய்வைத் தொடர்ந்து, மீண்டும் கூட்டுத் தலைமை ஆட்சி நடைபெற்றது. இறுதியில் லியோனிட் பிரெஷ்னெவ் தலைவராக ஆனார். 1970கள் மற்றும் முன் 1980கள், தடங்கல் யுகம் என அழைக்கப்படுகிறது. இக்காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்ததோடு, சமூகக் கொள்கைகள் தடங்கலுற்றன. சோவியத் பொருளாதாரத்தைப் பகுதியளவில் பன்முகப்படுத்தல் மற்றும் பெருங் கைத்தொழில் மற்றும் ஆயுத உற்பத்தியை, சிறுகைத்தொழில் மற்றும் நுகர்வோர் பண்டங்களாக மாற்றுதல் என்பவற்றை நோக்காகக் கொண்ட, 1965ன் கோசிஜின் சீர்திருத்தம் பழைமைவாத கொம்யூனிசத் தலைமையால் தடுக்கப்பட்டது. 1979ல், ஆப்கானிஸ்தானில் கொம்யூனிஸ்டுகள் தலைமையிலான புரட்சியின் பின், புதிய தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானினுள் நுழைந்தன. இதனால் ஆப்கானிஸ்தானின் வளங்கள் சுரண்டப்பட்டதோடு, எந்தவிதமான கருதத்தக்க அரசியல் திருத்தங்களும் ஏற்படவில்லை. இறுதியாக, சர்வதேச எதிர்ப்பு (அமெரிக்க ஆதரவுடனான), கொம்யூனிச எதிர்ப்பு கெரில்லாப் போர் மற்றும் சோவியத் மக்களின் ஆதரவின்மை என்பன காரணமாக 1989ல் சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தானிலிருந்து பின்வாங்கியது. 1985இலிருந்து, சோவியத் முறைமையில் தாராளவாத சீர்திருத்தங்களை ஏற்படுத்த விரும்பிய , இறுதி சோவியத் தலைவரான மிக்கைல் கோர்பச்சோவ், கிளாஸ்னொஸ்ட் (திறந்தநிலை) மற்றும் பெரஸ்ட்ரோயிகா (மீள்கட்டமைப்பு) ஆகிய கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத் தடங்கல் நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும், அரசாங்கத்தை சனநாயக மயப்படுத்தவும் அவர் முயற்சித்தார். எவ்வாறாயினும், இக்கொள்கைகள் காரணமாக வலுவான தேசியவாத மற்றும் பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றின. 1991க்கு முன், சோவியத் பொருளாதாரம் உலகளவில் இரண்டாவது நிலையில் காணப்பட்டது. எனினும், அதன் இறுதிக் காலத்தில், பலசரக்குக் கடைகளில் பொருள் பற்றாக்குறையாலும், பாரிய பாதீட்டுப் பற்றாக்குறையாலும், பாரிய பணச்சுற்றோட்டம் காரணமாக பணவீக்கத்தாலும் அல்லலுற்றது. 1991ன் போது, பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் ஏற்படத் தொடங்கின. இதனால் பால்டிக் குடியரசு நாடுகள் ஒன்றியத்திலிருந்து விலகிச் செல்லத் தீர்மானித்தன. மார்ச் 17ல், பொது வாக்கெடுப்பொன்று நடைபெற்றது. இதில் பங்குபற்றிய பெரும்பாலான மக்கள் சோவியத் ஒன்றியத்தை புதிய கூட்டரசாகத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆகஸ்ட் 1991ல், கோர்பச்சேவுக்கு எதிராக, சோவியத் ஒன்றியத்தின் கொம்யூனிசக் கட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்க, கோர்பச்சேவின் அரசாங்க உறுப்பினர்கள் புரட்சியொன்றை நடத்தினர். மக்களின் விருப்பத்துக்கு மாறாக டிசம்பர் 25, 1991ல் சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாகச் சிதறியது. ரசியக் கூட்டரசு thumb|கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மொஸ்கோ சர்வதேச வர்த்தக மையம் ரசிய வரலாற்றிலேயே முதலாவதாக, சூன் 1991ல் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில், போரிஸ் யெல்ட்சின் சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சோவியத் ஒன்றியத்தின் சிதறலின் போதும், அதன் பின்னரும் தனியார்மயமாக்கல் மற்றும் சந்தை மற்றும் வர்த்தகத் தாராளமயமாக்கல் ஆகியவை உட்பட பாரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள் ஐக்கிய அமெரிக்காவாலும், சர்வதேச நாணய நிதியத்தினாலும் பரிந்துரைக்கப்பட்ட, அதிர்ச்சி வைத்தியம் எனப்பட்ட விரைவான பொருளாதார மாற்றமும் அடங்கும். இம் மாற்றங்கள் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், 1990–95 காலப்பகுதியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், கைத்தொழில் விளைபொருட்களிலும் 50% வீழ்ச்சி ஏற்பட்டது. தனியார்மயமாக்கலால், வணிக நிறுவனங்களின் கட்டுப்பாடு, அரசாங்க முகவர்களிடமிருந்து, அரச முறைமையில் தொடர்புகளைப் பேணிய தனியாரிடம் சென்றடைந்தது. பல புதிய செல்வந்த வணிகர்கள் பில்லியன் கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் நாட்டுக்கு வெளியில் எடுத்துச் சென்றமையால் பாரிய மூலதன வெளியேற்றம் ஏற்பட்டது. நாட்டினதும் பொருளாதாரத்தினதும் வீழ்ச்சியால், சமூக சேவைகள் சீர்குலைந்தன. பிறப்பு வீதம் குறைவடைந்து, இறப்பு வீதம் அதிகரித்தது. பிந்திய சோவியத் யுகத்தில் 1.5%மாக இருந்த வறுமை மட்டம், 1993ன் நடுப்பகுதியில் 39-49%மாக ஆகியது. இதனால் மில்லியன் கணக்கானோர் வறுமையில் மூழ்கினர். 1990களில் கடுமையான ஊழல் மற்றும் ஒழுங்கீனம், குற்றவியல் குழுக்களின் எழுச்சி மற்றும் வன்முறைகள் என்பன காணப்பட்டன. 1990களில், வட காக்கசசில் உள்நாட்டு இனக்கலவரங்கள் மற்றும் இசுலாமியக் கிளர்ச்சி ஆகியவற்றால் ஆயுதப் போராட்டங்கள் ஏற்பட்டன. 1990களின் ஆரம்பத்தில் செச்சென் பிரிவினைவாதிகள் சுதந்திரப் பிரகடனம் செய்ததையடுத்து, போராளிகளுக்கும், ரசிய ராணுவத்துக்குமிடையில் கெரில்லாப் போர் நடைபெற்றது. பிரிவினைவாதிகளால், மக்களுக்குக்கெதிராக பயங்கரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. மொஸ்கோ திரையரங்குப் பணயக் கைதிகள் பிரச்சினை மற்றும் பெஸ்லான் பாடசாலை முற்றுகை என்பன குறிப்பிடத்தக்கன. இதனால் நூற்றுக்கணக்கானோர் இறந்ததோடு உலகத்தின் கவனமும் ரசியா நோக்கித் திரும்பியது. சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின்போது, ரசியாவின் மக்கள்தொகை சோவியத் ஒன்றிய மக்கள்தொகையின் அரைப்பங்காக இருந்த போதிலும், ரசியா சோவியத் ஒன்றியத்தின் வெளிக்கடன்களைத் திருப்பிச் செலுத்தும் முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டது. உயர் பாதீட்டுப் பற்றாக்குறை காரணமாக 1998ல் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் வீழ்ச்சியடைந்தது. டிசம்பர் 31, 1999ல் யெல்ட்சின் சனாதிபதிப் பதவியிலிருந்து விலகி ஆட்சிப்பொறுப்பை அண்மையில் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த விளாடிமிர் புட்டினிடம் ஒப்படைத்தார். 2000ம் ஆண்டு சனாதிபதித் தேர்தலிலும் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார். வட காக்கசஸ் பகுதிகள் சிலவற்றில் வன்முறைகள் இடம்பெற்றாலும், செச்சென் கிளர்ச்சியை புட்டினால் அடக்கக் கூடியதாயிருந்தது. உள்நாட்டுத் தேவை, நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவற்றிலான உயர்வு, உயர் எண்ணெய் விலை மற்றும் நாணயப் பெறுமதி வீழ்ச்சி ஆகியன காரணமாக அடுத்த ஒன்பது வருடங்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இதன் மூலம் ரசியாவின் வாழ்க்கைத்தரமும், அதன் உலகளவிலான ஆதிக்கமும் அதிகரித்தது. புட்டினின் பதவிக்காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பல சீர்திருத்தங்கள் மேற்கத்தேய நாடுகளால் சனநாயக முறையற்றது என விமர்சிக்கப்பட்டாலும், புட்டினின் தலைமைத்துவத்தின் கீழான நாட்டின் உறுதிநிலை மற்றும் வளர்ச்சி காரணமாக ரசியா முழுவதும் புடினின் செல்வாக்கு அதிகரித்தது. மார்ச் 2, 2008 அன்று, திமித்ரி மெட்வெடெவ் ரசிய சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதோடு, புட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2012 சனாதிபதித் தேர்தலையடுத்து, புடின் சனாதிபதியானதுடன், மெட்வடேவ் பிரதமராக நியமிக்கப்பட்டார். அரசியல் உருசிய அரசியலமைப்பின் படி அந் நாடு சனாதிபதியை நாட்டுத் தலைவராகவும், பிரதம அமைச்சரை அரசுத் தலைவராகவும் கொண்ட ஒரு கூட்டாட்சி, அரை-சனாதிபதி முறைக் குடியரசு ஆகும். உருசியக் கூட்டமைப்பு அடிப்படையில் பல கட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி ஆகும். இதில் கூட்டாட்சி அரசு மூன்று பிரிவுகளைக் கொண்டது: சட்டவாக்கம், நிறைவேற்றல், நீதி. ஆறு ஆண்டுகள் பதவிக் காலத்தைக் கொண்ட சனாதிபதியை மக்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்கின்றனர். ஒருவர் இரண்டாவது முறையும் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்படலாம் எனினும், தொடர்ச்சியாக மூன்று முறை சனாதிபதியாக இருக்க முடியாது. அரசின் அமைச்சுக்களில் பிரதமர், அவரது துணை அமைச்சர்கள், அமைச்சர்கள், தெரிவு செய்யப்பட்ட பிறர் என்போர் அடங்குவர். பிரதமரின் ஆலோசனைக்கு இணங்க சனாதிபதி அமைச்சர்களுக்குப் பதவி வழங்குகிறார். பிரதமர் பதவிக்கு "டூமா"வின் சம்மதம் தேவை. உருசியாவில் உள்ள கட்சிகளுள், ஐக்கிய உருசியக் கட்சி, பொதுவுடைமைக் கட்சி, உருசியத் தாராண்மைவாத மக்களாட்சிக் கட்சி, நீதிமுறை உருசியா ஆகியன அடங்கும். உருசியாவின் உள் ஆளுகைப்பிரிவுகள் உலகின் அதிக பரப்பளவு கொண்ட உருசிய நாடு 85 ஆளுகைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. அவை 21 உட்குடியரசுகள் 47 ஓப்லாஸ்துகள் 8 பிரதேசங்கள் 6 தன்னாட்சி வட்டாரங்கள் 1 தன்னாட்சி ஓப்லஸ்துகள் 2 கூட்டமைப்பு நகரங்கள் குறிப்புகள் வெளி இணைப்புகள் ரஷ்யா குறித்த 6 சுவாரஸ்ய தகவல்கள் 59 fascinating things you didn't know about Russia பகுப்பு:உருசியா பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
திசுள்
https://ta.wikipedia.org/wiki/திசுள்
REDIRECT உயிரணு
கட்டிடக்கலைப் பாணி
https://ta.wikipedia.org/wiki/கட்டிடக்கலைப்_பாணி
கட்டிடக்கலைப் பாணி என்பது பெரும்பாலும் அமைப்பு அடிப்படையில், வடிவம், தொழினுட்பம், கட்டிடப் பொருட்கள் போன்றவற்றின் அடிப்படையில், கட்டிடக்கலையை வகைப்படுத்தும் முறையைக் குறிக்கின்றது. எனினும் இது கட்டிடக்கலையை முழுமையாக விளங்கிக்கொள்வதற்கு ஏற்ற ஒரு வழியல்ல. பொதுவாகப் பாணி பற்றிய எண்ணக்கரு கட்டிடக்கலையின் படிமுறை வளர்ச்சி, அதன் வரலாறு என்பனபற்றிய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதென்பதுடன், சில அம்சங்களில் பாணியென்பது வரலாற்றுடன் ஒத்த இயல்புடையதாகவும் அமைகின்றது. எனினும் அவை கட்டிடக்கலை தொடர்பான சிறிது வேறுபட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. எடுத்துக்காட்டாக கோதிக் கட்டிடக்கலையை (Gothic Architecture) வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, அது அந்தக் கட்டிடக்கலையின் உருவாக்கத்துக்கு காரணமான எல்லாப் பண்பாட்டுச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்கிறது. அதே சமயம் "கோதிக்" கட்டிடக்கலைப் பாணியெனும்போது அது அக்கட்டிடக்கலையின் சில சிறப்பியல்புகளை மட்டுமே கருத்தில் கொள்கிறது. கட்டிடக்கலைப் பாணிகள் சிலவற்றின் பட்டியலைக் கீழே காணலாம். இவற்றையும் பார்க்கவும் கட்டிடக்கலை வரலாறு பகுப்பு:கட்டிடக்கலை பகுப்பு:கட்டிடக்கலைப் பாணிகள்
விக்டோறியா நீர்வீழ்ச்சி
https://ta.wikipedia.org/wiki/விக்டோறியா_நீர்வீழ்ச்சி
REDIRECT விக்டோரியா அருவி
ஆலிசு இன் வொண்டர்லாண்ட்
https://ta.wikipedia.org/wiki/ஆலிசு_இன்_வொண்டர்லாண்ட்
ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் (Alice in Wonderland, அற்புத உலகில் ஆலிஸ்) 1865 இல் லூயிஸ் கரோலினால் எழுதப்பட்ட ஒரு புதினம். முயல் குழிக்குள் விழுந்து அங்கொரு அற்புத உலகத்தைக் காணும் ஆல்ஸ் என்ற சிறுமியின் கதையை இப்புதினம் சொல்கிறது. ”அற்புத உலகில் ஆலிசின் சாகசங்கள்” (Alice's Adventures in Wonderland) என்ற முழுப்பெயர் கொண்ட இது, வெளியாகி சுமார் 150 ஆண்டுகள் ஆன பின்னரும் பெரியவர்கள் குழந்தைகள் என அனைத்து அகவையினரின் குறையா வரவேற்பைப் பெற்றுள்ளது. இலக்கியப் பிதற்றல் பாணியின் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. விந்தையான மாந்தவுருவக விலங்குகள் நிறைந்த ஆலிசின் அற்புத உலகம், புதினத்தின் கதை வடிவம், கதை கூறும் தன்மை ஆகியவை கனவுருப்புனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தான் பணிபுரிந்த கல்லூரி முதல்வரின் இளைய மகளுக்கு 1862 சூலை 4-இல் இவர் சொல்லத்துவங்கிய கதையே ஆலிசின் விந்தை உலகமாக விரிவு கொண்டது. ஆலிஸ் என்ற பெண் தோட்டத்தில் கடிகாரத்தைப் பார்த்து கொண்டே ஓடுகின்ற ஒரு முயலைக் காண்கிறாள். அது நுழைந்து ஓடிய ஒரு மரத்தடி பொந்தைத் தேடிப் பார்க்கையில் அவளறியாமல் உள்ளே விழுந்து விட்டாள். அவள் நேராக எங்கே விழுந்தாள் என்ன செய்தாள் என்பதே மீதி கதை. ஆலீஸின் அற்புத உலகம், லூயிகரோல், தமிழில் எஸ். ராமகிருஷ்ணன், முதல் பதிப்பு, அக்டோபர் 2008, விஜயா பதிப்பகம், கோவை-1. இதில் ஊடும் மெல்லிய நகைச்சுவையும், வாழ்க்கையின் அடிப்படைக் கோட்பாட்டை அறியத்துடிக்கும் கேள்விகளை பூடகமாக வெளிப்படுத்துவதாலும், இது ஒரு செவ்விலக்கியமாகக் கருதப்பட்டு, அனைத்து வயதினராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது.Schwab, Gabriele (1996) "Chapter 2: Nonsense and Metacommunication: Alice in Wonderland" The mirror and the killer-queen: otherness in literary language Indiana University Press, Bloomington, Indiana, pp. 49–102, Lecercle, Jean-Jacques (1994) Philosophy of nonsense: the intuitions of Victorian nonsense literature Routledge, New York, page 1 and following, BBC's Greatest English Books list மேற்கோள்கள் சுட்டிகள் குட்டன்பெர்க் திட்டத்தில் ஆலிஸின் அற்புத உலகம் பகுப்பு:செவ்விலக்கிய நூல்கள்
லூயிஸ் கரோல்
https://ta.wikipedia.org/wiki/லூயிஸ்_கரோல்
லூயிஸ் கரோல் (Lewis Carroll, ஜனவரி 27, 1832 - ஜனவரி 14, 1898) என்ற புனைபெயர் கொண்டவர் சார்ல்ஸ் லுட்விக் டாக்ஸ்டன் (Charles Ludwidge Dogston). இவர் பிரித்தனில் வசித்த ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் மற்றும் புகைப்படக் கலைஞர். இவர் எழுதிய சிறுவர்களுக்கான இலக்கிய நூல்கள், தீவிர இலக்கியவாதிகளான ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் ஜார்ஜ் லூயி போர்ஹே போன்றவர்களிடத்தும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. படைப்புகள் ஆலிஸின் அற்புத உலகம் (Alice's Adventure in the wonderland) என் கண்ணாடியின் ஊடே (Through my Looking-Glass) The Hunting of the Snark Euclid and his Modern Rivals The Alphabet Cipher பகுப்பு:பிரித்தானிய புகைப்படக் கலைஞர்கள் பகுப்பு:1832 பிறப்புகள் பகுப்பு:1898 இறப்புகள் பகுப்பு:ஆங்கிலேயக் கணிதவியலாளர்கள் பகுப்பு:ஆங்கிலேய எழுத்தாளர்கள்
சார்லி சாப்ளின்
https://ta.wikipedia.org/wiki/சார்லி_சாப்ளின்
சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் (Sir Charles Spencer Chaplin, ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. இளமைப் பருவம் சாப்ளின், இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப்ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார். 1896-ஆம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் அநாதை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஹான்வெல் பள்ளி என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையில், சாப்ளினின் தந்தை குடிப் பழக்கத்தால் உடல் நலம் குன்றி சாப்ளினின் பன்னிரண்டாவது வயதில் இறந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த கேன் ஹில் அசைலம் (Cane Hill Asylum) என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். பின்பு இவரும் 1928-ஆம் ஆண்டில் இறந்தார். சாப்ளின் ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894-ஆம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சிறுவனாக பல நாட்கள் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த பொழுது சிட்னி இலண்டன் ஹிப்போட்ரோமில் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். 1903-ஆம் ஆண்டில் "ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்" (Jim, A Romance of Cockayne) நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவரது முதல் நிரந்தர வேலை கிடைத்தது - செர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம். இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ் (Casey's Court Circus) நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், ஃப்ரெட் கர்னோவின் Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார். அமெரிக்காவின் குடிபெயர்வுப் பதிவுகளின்படி கார்னோ குழுவுடன் அக்டோபர் 2, 1912 - அன்று அமெரிக்கா வந்தடைந்தார். கார்னோ குழுவிலே ஆர்த்தர் ஸ்டான்லே ஜெப்பர்சனும் இருந்தார் - இவரே பின்னர் ஸ்டான் லாரலாக பிரபலமானார். இருவரும் சிறிது காலம் ஒரே அறையில் தங்கினர். திரையுலக வாழ்க்கை thumb|right|250px| "தி கிட்" திரைப்படத்தில் ஜாக்கி கூகனுடன் சாப்ளின் (1921) தயாரிப்பாளர் மாக் செனட் சாப்ளினின் திறமையைக் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார். முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று கடினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னைப் பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். இவரது கிடுகிடு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும், நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப்பட்ட உரிமையுமாகும். இவரது வளர்ச்சியையும், இவரது நிருவாகியாக பணிபுரிந்த சிட்னியின் ஆற்றலையும் சாப்ளினின் சம்பளப் பட்டியல் எடுத்துக்காட்டியது. காலம்; நிறுவனம் சம்பளம் 1914 கீஸ்டோன் வாரத்துக்கு $150 1914-1915 எசானே ஸ்டூடியோஸ் (Essanay Studios), இலினாய்ஸ், சிகாகோ வாரத்துக்கு $1250 மற்றும் $10,000 சேர்வதற்கான ஊக்கத் தொகை 1916-1917 மியூச்சுவல் (Mutual) வாரத்துக்கு $10000 மற்றும் $150,000 சேர்வதற்கான ஊக்கத் தொகை 1917 பர்ஸ்ட் நேஷனல் (First National) $1 மில்லியன் ஒப்பந்தம் (ஒரு மில்லியன் டாலர் ஊதியம் பெற்ற முதல் நடிகர்) இவர் 1919-ஆம் ஆண்டில் மேரி பிக்போர்ட், டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ், கிரிபித்துடன் இணைந்து யுனைட்டடு ஆர்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோவைத் துவங்கினார். 1927-ஆம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும் 1930-ஆம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். சாப்ளின் சினிமாவின் பல துறைகளில் கை தேர்ந்தவராகத் திகழ்ந்தார். 1952-ஆம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928-ஆம் ஆண்டுத் திரைப்படம் "தி சர்க்கஸ்" படத்தின் தலைப்பு இசை அமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது ஸ்மைல். தி கிரேட் டிக்டேடர் thumb|right|250px|டிக்டேட்டராக சாப்ளின் இவரது முதல் டாக்கீஸ் 1940-ஆம் ஆண்டில் வெளியான "தி கிரேட் டிக்டேடர்" (The Great Dictator). இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் புகுவதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இதில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார் - ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இரு முறை பார்த்தார். போர் முடிந்த பிறகு, ஹோலோகாஸ்ட்டின் கொடுமை உலகிற்கு தெரியவந்த பிறகு சாப்ளின் இக்கொடுமைகள் எல்லாம் தெரிந்திருந்தால் ஹிட்லரையும், நாசியர்களையும் கிண்டல் செய்திருக்க முடியாது என்றார் இவரது கடைசி திரைப்படங்கள் "தி கிங் இன் நியூ யார்க்" (1957), "தி சாப்லின் ரெவ்யூ" (1959) மற்றும் சோஃபியா லாரென், மார்லன் ப்ராண்டோ நடித்த "அ கௌண்டஸ் ஃப்ரம் ஹாங்காங்". கம்யூனிச சிந்தனைகளும் குற்றச்சாட்டுகளும் சாப்ளினின் அரசியல் சிந்தனைகள் இடது சார்புடையதாகக் கருதப்படுகிறது. இதனையே இவரது திரைப்படங்களில், முக்கியமாக "மாடர்ன் டைம்ஸ்" (Modern Times) பிரதிபலித்தன. இப்படம் பாட்டாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையை சித்தரித்தது. "மெக்கார்த்திச காலங்களில்" இவர் அமெரிக்க கொள்கைகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கம்யூனிஸ்ட்-எனவும் சந்தேகிக்கப்பட்டார்; ஜே.எட்கார் ஹூவர் எஃப்.பி.ஐ-யிடம் இவரை கண்காணிக்குமாறு உத்தரவிட்டு, அமெரிக்காவில் சாப்ளின் வாழும் உரிமையை நீக்க முயற்சித்தார். சாப்ளினின் வெற்றிகள் அனைத்துமே அமெரிக்காவில் அமைந்தாலும், அவர் பிரித்தானிய குடியுரிமையினையே நீட்டித்தார். 1952-ஆம் ஆண்டில் சாப்ளின் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதனை தெரிந்துகொண்ட ஹூவர் ஐ.என்.எஸ் (Immigration and Naturalization Service)-உடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாப்ளின் அமெரிக்கா திரும்பும் அனுமதிச் சீட்டை ரத்து செய்தார். ஆதலால் அவர் ஐரோப்பாவிலேயே தங்கும்படி நேர்ந்தது - பெரும்பாலும் வெவே, சுவிஸர்லாந்தில் வாழ்ந்தார். இவர் 1972-ஆம் ஆண்டில் சிறிது காலம், தனக்கு அளிக்கப்பட்ட கௌரவ ஆஸ்கார் விருதைப் பெறுவதற்காக அமெரிக்கா திரும்பினார். திருமணங்கள் இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ், பலமுறை தன் தனிப்பட்ட வாழ்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அக்டோபர் 23 1918-இல் இருபத்தியெட்டு வயது சாப்ளின் பதினாறு வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தது. இவர்களது திருமண வாழ்க்கை 1920-ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. முப்பத்தி ஐந்து வயதில் "தி கோல்ட் ரஷ்" திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுது, பதினாறு வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். நவம்பர் 26 1924-இல் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் $825,000 ஒப்பந்தத்துடன் விவாகரத்தில் முடிந்ததது. இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இவரது தலைமுடி நரைக்கத் துவங்கியது.சாப்ளின் விவாகரத்தும் நரைமுடி குறித்தும் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி மேலும் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப் பற்றிய பல அந்தரங்க செய்திகள் இடம்பெற்றது. இதனால் இவரை எதிர்த்து பிரச்சாரங்கள் நடைபெற்றன. சாப்ளினின் நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936-இல் ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகரத்தில் முறிந்தது. இக்காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது; ஆனால், பேரி சாப்ளினை துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார். ஆனால் மே 1943-ஆம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார். இரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும், அக்காலத்தில் இரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை; குழந்தை 21 வயது வரும் வரை வாரம் $75 வழங்குமாறு உத்தரவிடப்பட்டார். சில நாட்கள் கழித்து, ஐகன் ஓ'நீலின் மகள், ஓனா ஓ'நீலை சந்தித்தார். இவரை ஜூன் 16, 1943 அன்று மணந்தார். சாப்ளினின் வயது அப்பொழுது 54, ஓ'நீலின் வயது 17. இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தனர். சாப்ளினின் மரணம் சாப்ளின், 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட் (Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். மார்ச்சு 1, 1978-ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர். விருதுகளும் பெருமைகளும் சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் தி சர்க்கஸ் திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, தி ஜாஸ் சிங்கர் படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972-ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார். சாப்ளின் Monsieur Verdoux திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான விருதுக்காகவும், தி கிரேட் டிக்டேடர் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை ஆகிய விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டாலும், விருதுகள் பெறவில்லை. 1972-ஆம் ஆண்டில் சிறந்த இசையமைப்புக்கான விருதை கிளயர் புளூம் நடித்திருந்த லைம்லைட் (1952) திரைப்படத்திற்காக பெற்றார். 1952-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டாலும் மெக்கார்த்திசத்தினால் சாப்ளினுக்கேற்பட்ட பிரச்சனைகளால் லாஸ் ஏஞல்சில் வெளிவரவில்லை. 1972-ஆம் ஆண்டிலேதான் விருதுக்குத் தேர்வாவதற்கான கட்டுப்பாடுகளை நிறைவு செய்தது. "லைம்லைட்" திரைப்படத்தில் பஸ்டர் கீட்டனும் நடித்திருந்தனர். இதுவே இவ்விரு நகைச்சுவை மேதைகளும் முதலும் கடைசியுமாக சேர்ந்து தோன்றிய திரைப்படம். மார்ச் 4, 1975 அன்று பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் அரசி சாப்ளினுக்கு "சர்" பட்டம் அளித்தார். இவருக்கு இந்தப் பெருமையை வழங்கக் கோரி 1956ஆம் ஆண்டே பரிந்துரைத்திருந்தாலும், இதனை பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக எதிர்த்தது. சாப்ளின் ஒரு பொதுவுடைமையாளர் என்றும், அவரைச் சிறப்பிப்பதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஏற்கனவே விரிசல் விட்டிருந்த உறவு பாதிக்கப்படும் என்றும் கருதினார்கள். அக்காலத்தில்தான் பனிப் போர் அதன் உச்சக்கட்டத்தில் இருந்தது; மேலும் சூயஸ் கால்வாயினை கைப்பற்றும் முயற்சியும் இரகசியமாக திட்டமிடப்பட்டு வந்தது. சாப்ளின் "ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில்" இடம் பெற்றார். 1985-ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு, இவரது உருவத்தை அஞ்சல் தலை ஒன்றில் வெளியிட்டு பெருமை சேர்த்தது. 1994-ஆம் ஆண்டு அல் ஹிர்ஸ்ஃபெல்ட் வடிவமைத்த அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார். 1992-ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை "சாப்ளின்" என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. இதனை இயக்கியவர் ஆஸ்கார் விருது பெற்ற சர். ரிச்சர்ட் அட்டன்பரோ. இதில் நடித்தவர்கள் ராபர்ட் டௌனி ஜூனியர், டான் ஐக்ராய்ட், ஜெரால்டின் சாப்ளின் (சாப்ளினின் மகள் சாப்ளினின் தாயாக நடித்திருந்தார்), சர் அந்தோனி ஹாப்கின்ஸ், மில்லா ஜோவோவிச், மொய்ரா கெல்லி, கெவின் கிலைன், டயானா லேன், பெனிலோப் ஆன் மில்லர், பால் ரைஸ், மரீசா டோமை, நான்சி டிராவிஸ் மற்றும் ஜேம்ஸ் வுட்ஸ். 2005-ஆம் ஆண்டு நடைபெற்ற "நகைச்சுவையாளர்களின் நகைச்சுவையாளர்" கருத்துக் கணிப்பில் உலகத்தின் தலை சிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக சாப்ளினைத் தேர்ந்தெடுத்தார்கள். சாப்ளினைப் பற்றிய சுவையான செய்திகள் thumb|கேலிச்சித்திரம் ஒன்றில் சார்லி சாப்ளின் சாப்ளினின் கண்கள் நீல நிறத்தில் இருந்தன. கருப்பு வெள்ளைப் படங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருந்த ரசிகர்கள், அவரை நேரில் பார்க்கும்பொழுது பெரிதும் வியப்புற்றனர். சாப்ளின் நல்ல சதுரங்க ஆட்டக்காரர். இதனை பிரபல ஆட்டக்காரர் சாமி ரிஷவெஸ்கியிடம் பயின்றார். சாப்ளினின் புகழினால் சாப்ளினைப் போல் தோற்றம் அளிப்போருக்கான போட்டிகள் பலவற்றை நடத்தினார்கள். ஒரு முறை அப்போட்டி ஒன்றில் சாப்ளின் இரகசியமாகப் பங்கு பெற்றார். இதில் இவரால் மூன்றாம் பரிசையே வெல்ல முடிந்தது! திரையாக்கங்கள் நடிகராக நடித்த குறும்படங்கள் 1914 பிட்வின் ஷவர்ஸ் எ பிஸி டே காட் இன் எ கேபரே காட் இன் தி ரெய்ன் க்ரூயல், க்ரூயல் லவ் டோ அண்ட் டைநமைட் தி பேஸ் ஆன் தி பார்ரூம் ஃப்ளோர் தி ஃபேடல் மால்லட் எ பிலிம் ஜானி ஜென்டில்மேன் ஆஃப் நெர்வ் கெட்டிங் அக்வின்டட் ஹர் ஃப்ரிண்டி தி பாண்டிட் ஹிஸ் ஃபேவரைட் பாஸ்டைம் ஹிஸ் மியூசிகல் கேரீர் ஹிஸ் நியூ புரொஃபெஷன் ஹிஸ் ப்ரீஹிஸ்டோரிக் பாஸ்ட் ஹிஸ் ட்ரைஸ்டிங் பிளேஸ் கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ் தி நாக்ஓவர் லாஃபிங் கியாஸ் மேபெல் அடி தி வீல் மேபெல்ஸ் பிஸி டே மேபெல்ஸ் மேரிட் லைஃப் மேபெல்ஸ் ஸ்ட்ரேஞ்ச் பிரிடிகமெண்ட் மேக் எ லிவிங் தி மாஸ்குரேடர் தி நியூ ஜேனிடர் தி பிராபர்டி மேன் ரிக்ரியேஷன் தி ரௌண்டர்ஸ் தி ஸ்டார் போர்டர் டாங்கோ டாங்கில்ஸ் தோஸ் லவ் பேங்க்ஸ் டிவெண்டி மினிட்ஸ் ஆஃப் லவ் 1915 தி பாங்க் சார்லி சாப்ளின்ஸ் பர்லெஸ்கியூ ஆன் கேமென் பை தி சீ தி சாம்பியன் ஹிஸ் நியூ ஜாப் ஹிஸ் ரீஜெனரேஷன் இன் தி பார்க் எ ஜிட்னி எலோப்மெண்ட் மிக்சட் அப் எ நைட் அவுட் எ நைட் இன் தி ஷோ ஷாங்கேய்ட் தி டிராம்ப் எ வுமன் வர்க் 1916 பிஹைண்ட் தி ஸ்கிரீன் தி கௌண்ட் தி ஃபையர்மேன் தி ஃப்ளோர்வாக்கர் ஒன் ஏ.எம். தி பான்ஷாப் போலீஸ்! தி ரிங்க் தி வாகபாண்ட் 1917 தி அட்வென்சுரர் தி கியூர் ஈஸி ஸ்ட்ரீட் தி இமிகிரண்ட் 1918 தி பாண்ட் சேஸ் மீ சார்லீ எ டாக்ஸ் லைஃப் டிரிப்பிள் டிரபள் 1919 எ டேஸ் பிளஷர் சன்னிசைட் 1921 தி ஐடில் கிளாஸ் 1922 பே டே 1923 தி பில்கிரிம் திரைப்படங்கள் டில்லிஸ் பங்க்சர்ட் ரோமான்ஸ் (1914) (நடிகராக மட்டும்) ஷோல்டர் ஆர்ம்ஸ் (1918) தி கிட் (1921) தி நட் (1921) (கௌரவ வேடம்) சோல்ஸ் ஃபார் சேல் (1923) (கௌரவ வேடம்) எ வுமன் ஆஃப் பாரிஸ் (1923) (கௌரவ வேடம், இயக்குநர்) தி கோல்ட் ரஷ் (1925) எ வுமன் ஆஃப் தி ஸீ (1926) (தயாரிப்பாளர்) தி சர்கஸ் (1928) ஷோ பீப்பிள் (1928) (கௌரவ வேடம்) சிட்டி லைட்ஸ் (1931) மாடர்ன் டைம்ஸ் (1936) தி கிரேட் டிக்டேட்டர் (1940) மோன்சியர் வெர்டாக்ஸ் (1947) லைம்லைட் (1952) எ கிங் இன் நியூயார்க் (1957) எ கௌண்டஸ் ஃப்ரம் ஹாங் காங்'' (1967) (கௌரவ வேடம் மற்றும் இயக்குநர்) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப் பூர்வமான சாப்ளின் இணையத் தளம் சார்லி சாப்ளின் மன்றம் - அவரது இரசிகர்கள் கலந்துரையாட ஒரு இணைய தளம் சாப்ளினைப் போற்றும் பக்கங்கள் ஐ. எம். டி .பி-இல் சாப்ளின் பக்கம் சாப்ளினைப் பற்றி ஏரான் ஹேல் எழுதிய கட்டுரை கிளௌன் மினிஸ்ட்ரி எழுதிய சாப்ளினின் வரலாறு சாப்ளின் அருங்காட்சியகம் பகுப்பு:ஆங்கிலத் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:1889 பிறப்புகள் பகுப்பு:1977 இறப்புகள் பகுப்பு:சிறப்பு அகாதமி விருதை பெற்றவர்கள்
வேடுவர் (இலங்கை)
https://ta.wikipedia.org/wiki/வேடுவர்_(இலங்கை)
வேடுவர் (Veddas, Veddahs, , வெத்தா), எனப்படுவோர் இலங்கைக் காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்களும் ஆவர். இவர்கள் இலங்கைக்கு ஆரியரின் வருகைக்கு முன்னரே, இலங்கையின் வரலாற்றுக் காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மைக்கொண்டவர்கள் என்றும் வில்ஹெய்ம் கெய்கர் தெரிவித்துள்ளார். இலங்கைக் காடுகளில் வசிக்கும் இவர்கள் சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு பண்படாதவர்களாக, காடுகளில் வேட்டையாடி வாழப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் வேடுவர் என அழைக்கப்பட்டாலும், அண்மையக் காலங்களாக சாதாரண மனித வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொண்டு இலங்கையில் வாழும் ஏனைய சமுதாயத்தினரைப் போன்று வாழும் நிலைக்கு மாறி வருகின்றனர். இருப்பினும் தற்போதும் காட்டு வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்களாக வேடுவராக வாழ்வோரும் உள்ளனர் எனும் செய்திகள் உள்ளன.இலங்கை: ஆதிகுடி வேடுவர் பேசும் மொழி தற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாக இவர்கள் கருதப்படுகிறார்கள். சிங்களவர்கள் இவர்களை வேடுவர் என்னும் பொருள்பட "வெத்தா" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" (Wanniyala-Aetto) என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர் ஆகியோரிடமிருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிப் பிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்குக் கரையோரப் பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் போன்ற ஒரு மொழி பேசுகின்றார்கள். இவர்கள் பேசும் மொழி ஆரிய மொழிகள் அல்ல என்று கருத்து தெரிவிக்கும் வில்ஹெய்ம் கெய்கர், அதேவேளை ஆரிய மொழிகளின் சாயல் இவர்களது பேச்சில் இருக்கின்றன எனவும், அவை அண்மைக்காலங்களில் இவர்களது பேச்சில் கலந்தவைகள் என்றும் தெரிவித்துள்ளார். வரலாறு thumb|left|1890களில் எடுக்கப்பட்ட படம் இவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த புதிய கற்காலச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்கள் இயக்கர் பழங்குடியினரின் மரபினர் என சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இலங்கையின் பழம்பெரும் தொகுப்பு நூலான மகாவம்சத்தை மேற்கோள் காட்டி பௌத்தப் பிக்குகளும், இலங்கையின் பௌத்த மகாவம்சக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களும், இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயன் இலங்கை வந்தடைந்தப் போது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றியும் சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் கூறிவருகின்றனர். தென்னிலங்கையில் பெருமளவில் வசித்துவந்த இவர்களுடைய வாழ்க்கை முறை, கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி நடைபெற்ற ஆரியர் குடியேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் இவர்கள், ஒன்று இந்தியாவிலிருந்து வந்த குடியேற்ற வாசிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் அல்லது காடுகளின் உட்பகுதிகளுக்குள் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இலங்கையின் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவர்கள் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருடனும், கிழக்கு மாகாணத்தில் தமிழருடனும் கலந்துவிட்டனர். ஆரம்பக் காலங்களில் மட்டுமன்றி தொடர்ந்து இன்றுவரை தங்கள் வாழ்க்கை முறையையும், அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்குப் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக நாடு விடுதலை பெற்றபின்னர், அரசாங்கம் முன்னெடுத்த நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இவர்களுடைய வாழ்நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம் இவர்களுடைய வேட்டைக்கும் உணவு சேகரிப்புக்கும் உரிய பெருமளவு காட்டுப்பகுதிகளை இல்லாதாக்கியது. அண்மையில், 1978க்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எஞ்சியிருந்த பகுதிகளும் பறிபோயின. இத் திட்டத்தின்கீழ் இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளில் பெரும்பகுதி நீர்தாங்கு பகுதிக்குள் வந்துவிட்டன அல்லது புதிய குடியேற்றத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன. இதில் எஞ்சிய பகுதியான சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள, வன்னியலா எத்தோக்களின் பாரம்பரியக் காட்டுப்பகுதி மாதுறு ஓயா தேசியப் பூங்கா என்ற பெயரில் தேசியப் பூங்காவாகப் பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வாழ்ந்த வன்னியலா எத்தோக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது என்ற போர்வையில், அவர்களுடைய எதிப்புகளுக்கும் மத்தியில் அவர்களுக்கு விவசாய நிலங்கள் ஒதுக்கப்பட்டுக் குடியேற்றத்திட்டங்களில் இடங்கள் வழங்கப்பட்டன. இதைக் குறித்து ஒரு வன்னியலா எத்தோ முதியவர் பேசியபோது, "எங்களுடைய வேட்டைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு எங்களுக்கு மண்வெட்டிகளைத் தந்திருக்கிறார்கள், எங்கள் புதை குழிகளை நாங்களே வெட்டிக்கொள்ள" என்று குறிப்பிட்டாராம். பிரேமதாசா ஆட்சி இலங்கையின் முன்னாள் சனாதிபதிகளில் ஒருவரான ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சியின் போது பெருமளவான வேடுவர்களைச் சாதாரண குடிமக்களாக மாற்றி அவர்களுக்கு குடியுரிமைத் தகுதிகளையும் வழங்கினார். பண்பாடு மற்ற இனத்தவர்களால் இவர்கள் பிற்பட்டவர்களாகவும், முன்னேற்றமடையாத காட்டு வாசிகளாகவும் கருதப்பட்டாலும், இவர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களாகவும், நல்ல மனிதப் பண்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என இவர்களுடைய பண்பாட்டை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் எந்தப் பொருட்களையும் எண்ணுவதற்கு விரல்களுக்குப் பதில் காடுகளில் கிடைக்கும் சிறிய குச்சுகளைச் சேகரித்து அதன் மூலம் கணக்கிடுகிறார்கள். வகுப்பறைக்கு வெளியே: விரல் விட்டு எண்ண ஆயிரம் ஆண்டுகள் தி இந்து தமிழ் 05 அkடோபர் 2016 இவற்றையும் பார்க்கவும் இலங்கை பழங்குடி மக்கள் கரையோர வேடர்கள் வேடர்கள் மேற்கோள்கள் வெளியிணைப்புக்கள் A great deal of information on them can be found at Vedda.org Survival International profile on the Wanniyala-Aetto Sri Lankan history Vedda lore East coast Veddas Veddas - now only a household name பகுப்பு:இலங்கையின் பழங்குடிகள் பகுப்பு:இலங்கை இனக்குழுக்கள்
ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்கள்
https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பிய_மொழிகளில்_வழங்கும்_தமிழ்ச்_சொற்கள்
பண்டைய மற்றும் தற்கால ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச் சொற்களை மூலங்களாகக் கொண்ட சொற்கள் பல காணப்படுகின்றன. மேற்படி மொழிகளுக்கான அகராதிகள் அவ்வாறான சில சொற்களுக்கான மூலங்களாகத் தமிழ் மொழியைக் குறிப்பிடுகின்றன. அவ்வாறான மேலும் பல சொற்கள் காணப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். இவ்வாறு ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச் சொற்களின் கலப்பு பல்வேறு காலகட்டங்களிலும், பல காரணங்களால் நிகழ்ந்துள்ளன. கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னரே தமிழகத்துக்கும், ஐரோப்பிய நாகரீகங்களுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகள் காரணமாக சில வணிகப் பொருட்களின் பெயர்கள் தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுள் புகுந்துள்ளன. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் இவ்வாறான தமிழ்ச் சொற்கள் சில எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. ஆங்கில மொழியிலும் அதனையொத்த ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் உள்ள ரைஸ் (Rice) என்னும் சொல் அரிசி என்னும் தமிழ்ச் சொல்லை மூலமாகக் கொண்டதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது இலத்தீன், கிரேக்கம் போன்ற பண்டைய மொழிகளின் வழியாக நவீன மொழிகளுக்கு வந்து சேர்ந்தது என்பது அவர்கள் கருத்து. அண்மைக் காலங்களிலும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பியர் ஆட்சி நடைபெற்ற போது சில தமிழ்ச் சொற்கள் ஐரோப்பிய மொழிகளுக்குச் சென்றுள்ளன. ஆங்கில மொழி அகராதிகளில் காணப்படும், mammoty (மமொட்டி - தமிழ் மண்வெட்டி இலிருந்து), cooly (கூலி - தமிழ் கூலி இலிருந்து) போன்ற சொற்கள் இத்தகையவை. தமிழ்ச் சொல்லான கட்டுமரம் ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் கடமரன் (Katamaran) என வழங்கப்படுவதும் இன்னொரு எடுத்துக்காட்டு. பிற மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்களின் பட்டியல் {|border="1" !தமிழ்ச் சொல்!!பிறமொழிச் சொல்!!மொழி!!வழி |- |கட்டுமரம்||katamaran||ஆங்கிலம்||தமிழ் --> ஆங்கிலம் |- |கஞ்சி||Congee||ஆங்கிலம்||தமிழ் --> ஆங்கிலம் |- |மண்வெட்டி||Mamotty||ஆங்கிலம்||தமிழ் --> ஆங்கிலம் |- |மாங்காய் ||mango ||ஆங்கிலம்||தமிழ் --> ஆங்கிலம் |- |அரிசி||rice||ஆங்கிலம்||தமிழ் --> ஆங்கிலம்} பகுப்பு:ஆங்கிலம் பகுப்பு:தமிழ்ச் சொற்கள் பகுப்பு:பிற மொழிகள்
குருத்துத் திசுள்
https://ta.wikipedia.org/wiki/குருத்துத்_திசுள்
REDIRECT குருத்தணு
இயக்கர்
https://ta.wikipedia.org/wiki/இயக்கர்
thumb|200px|டோக்கியோ தேசிய அருங்காட்சியகத்தில் உள்ள 3ஆம் நூற்றாண்டின் இந்திய இயக்கர் இயக்கர்கள் (Yaksha), ( http://www.britannica.com/EBchecked/topic/651312/ yaksha உருவமற்ற, மனிதரல்லாதவர்கள் என்று கருதப்பட்டனர். இயற்கை வணக்கத்தைக் கொண்டவர்கள் இயக்கர்கள். பண்டைய சமஸ்கிருத நூல்கள், இவர்களை ஆரியரின் எதிரிகளாகக் குறிப்பிடுகின்றன. ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்னர் இயக்கர்கள் இந்தியாவில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கை வரலாற்று நூல்களும் இவர்களை அத்தீவின் பழங்குடிகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன. இலங்கையின் முதல் வரலாற்று நூலான மகாவம்சம், இயக்கர்கள் இலங்கையின் பல இடங்களில் நகரங்கள் அமைத்து அரசாண்டு வந்ததாக குறிப்பிடுகின்றது. இந்த நூலின்படி சிங்கள இனத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் எனப்படும் கலிங்க இளவரசன் இலங்கையில் இறங்கி இயக்க இளவரசியான குவேனியை மணம் செய்து கொண்டான். அவனுடன் வந்த 700 நண்பர்களும் இயக்கப் பெண்களையே மணந்து கொண்டனர். முற்காலத்தில் இலங்கைக்கு வந்த நாடு காண் பயணிகள் பலரும் இயக்கர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். இப்போது இலங்கையில் சிறு தொகையினராகக் காணப்படும் வேடுவர் (வேடர்) இவர்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகின்றார்கள். படக்காட்சியகம் மேற்கோள்கள் உசாத்துணை க. தங்கேஸ்வரி,(ப 7) ஈழ மன்னர் குளக்கோட்டனின் சமய,சமுதாயப் பணிகள் Dictionary of Hindu Lore and Legend () by Anna Dhallapiccola இயக்கர் EBC: இயக்கர் பகுப்பு:இந்து தொன்மவியல் பகுப்பு:இலங்கையின் பழங்குடிகள்
ஜெயகாந்தன்
https://ta.wikipedia.org/wiki/ஜெயகாந்தன்
thumb|ஜெயகாந்தன் ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது. வாழ்க்கைக் குறிப்பு ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில், ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் பிள்ளை,மகாலெட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார் http://www.tamilvu.org/courses/degree/p101/p1011/html/p1011661.htm. இவரது இயற்பெயர் முருகேசன். பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துகளுக்கும் அறிமுகப்படுத்தினார். அரசியல் வாழ்க்கை ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்குப் பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ-யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப் பட்டது. ஆதலால் சில திங்கள்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராசருடைய தீவிரத் தொண்டனாக மாறித் தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இலக்கியவாழ்க்கை அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினமாக உருப் பெற்றது. வேலை ரயிலில் டிக்கெட் இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்... மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர், பத்திரிகை புரூஃப் ரீடர்,உதவி ஆசிரியர். பின் முழு நேர எழுத்தாளர்! படைப்புகள் தன் வரலாறு ஒர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் (அக்டோபர் 1974 ) ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள் (செப்டம்பர் 1980 ) ஓர் இலக்கியவாதியின் பத்திரிகை அனுபவங்கள் (டிசம்பர் 2009) ஓர் இலக்கியவாதியின் ஆன்மீக அனுபவங்கள் வாழ்க்கை வரலாறுவாழ்விக்க வந்த காந்தி 1973 (ரொமெயின் ரொலேண்ட்டின் ஃப்ரெஞ்சு மொழியில் வந்த காந்தியின் தன்வரலாற்றின் தமிழாக்கம் )ஒரு கதாசிரியனின் கதை (மே 1989 ( முன்ஷி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாறு) நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957)கைவிலங்கு (ஜனவரி 1961)யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962)பிரம்ம உபதேசம் (மே 1963)பிரியாலயம் (ஆகஸ்ட் 1965)கருணையினால் அல்ல (நவம்பர் 1965 )பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966)கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967)சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970)ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971)ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973)ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977)கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978)ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979)பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979)எங்கெங்கு காணினும்... (மே 1979)ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979)கரிக்கோடுகள் (ஜூலை 1979)மூங்கில் காட்டினுள்ளே (செப்டம்பர் 1979)மூங்கில் காட்டு நிலா (கல்பனா இதழ்)ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும் (டிசம்பர் 1979)ஒவ்வொரு கூரைக்கும் கீழே... (ஜனவரி 1980)பாட்டிமார்களும் பேத்திமார்களும் (ஏப்ரல் 1980)அப்புவுக்கு அப்பா சொன்ன கதைகள் (ஆகஸ்ட் 1980)இந்த நேரத்தில் இவள்... (1980)காத்திருக்கா ஒருத்தி (செப்டம்பர் 1980)காரு (ஏப்ரல் 1981)ஆயுத பூசை (மார்ச் 1982)சுந்தர காண்டம் (செப்டம்பர் 1982)ஈஸ்வர அல்லா தேரே நாம் (ஜனவரி 1983)ஓ, அமெரிக்கா! (பெப்ரவரி 1983)இல்லாதவர்கள் (பெப்ரவரி 1983)இதய ராணிகளும் ஸ்பெடு ராஜாக்களும் (ஜூலை 1983)காற்று வெளியினிலே... (ஏப்ரல் 1984)கழுத்தில் விழுந்த மாலை (செப்டம்பர் 1984)அந்த அக்காவினைத்தேடி... (அக்டோபர் 1985)இன்னும் ஒரு பெண்ணின் கதை (ஜூலை 1986)ரிஷிமூலம் (செப்டம்பர் 1965)சினிமாவுக்குப் போன சித்தாளு (செப்டம்பர் 1972)உன்னைப் போல் ஒருவன்ஹர ஹர சங்கர (2005)கண்ணன் (2011) சிறுகதைகள் தொகுப்புஒரு பிடி சோறு (செப்டம்பர் 1958)இனிப்பும் கரிப்பும் (ஆகஸ்ட் 1960)தேவன் வருவாரா (1961)மாலை மயக்கம் (ஜனவரி 1962)யுகசந்தி (அக்டோபர் 1963)உண்மை சுடும் (செப்டம்பர் 1964)புதிய வார்ப்புகள் (ஏப்ரல் 1965)சுயதரிசனம் (ஏப்ரல் 1967)இறந்த காலங்கள் (பெப்ரவரி 1969)குருபீடம் (அக்டோபர் 1971)சக்கரம் நிற்பதில்லை (பெப்ரவரி 1975)புகை நடுவினிலே... (டிசம்பர் 1990) சுமைதாங்கிபொம்மை கட்டுரைத்தொகுதிகள் நானும் எனது நண்பர்களும் (1994) ஜெயகாந்தனின் சிறுகதைப்பட்டியல் (கால முறைப்படி) வ.எண் கதையின் பெயர் வெளியான காலம் இதழின்பெயர் தொகுப்பின் பெயர் வெளியீட்டாளர் பெயர் 1 ஆணும் பெண்ணும் -/-/1953 - ஆணும் பெண்னும் எட்டு பிரசுரம், 1953 2 பட்டணத்து வீதியிலே -/-/1953 - ,, ,, 3 பேசும் புழுக்கள் 15/9/1953 பிரசண்ட விகடன் எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை - 4 காலம் தோற்றது -/12/1953 காவேரி ,, ,, 5 சாந்தி பூமி - - உதயம் விஜயா பிரசுரம், 1954 6 சுமை பேதம் - - உதயம் ,, 7 கண்ணன் பிறந்தான் - - உதயம் ,, 8 உதயம் - - ,, ,, 9 பிழைப்பு - - உதயம் - 10 மீனாட்சி ராஜ்யம் - - ,, ,, 11 காந்தி ராஜ்யம் - - ,, ,, 12 சொக்குப்பொடி 16/05/1954 சமரன் எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை 13 சட்டம் வந்த நள்ளிரவில் 23/05/1954 சமரன் உதயம் விஜயா பிரசுரம், 1954 14 மரணவாயில் 30/05/1954 சமரன் ,, ,, 15 சாந்தி சாகரம் 13/06/1954 சமரன் ,, ,, 16 எச்சரிக்கை 20,27/06/1954 சமரன் ,, ,, 17 தத்துவச் சொறி 04/07/1954 சமரன் எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை 18 இவர்களும் இருக்கிறார்கள் 11,18/07/1954 சமரன் உதயம் ,, 19 இலட்சியச் சிலுவை -/-/1954 சமரன் ,, ,, 20 யாசனம் -/05/1955 சரஸ்வதி ,, ,, 21 தேரைப்பழி -/06/1955 சரஸ்வதி ,, ,, 22 ஆலமரம் ---- - மாலை மயக்கம் மீனாட்சி புத்தக நிலையம் 1962 23 பித்துக்குளி -/07/1955 சரஸ்வதி உண்மை சுடும் ,, 1964 24 பேதைப்பருவம் -/08/1955 சரஸ்வதி தேவன் வருவாரா ,, 1961 25 தனிமனிதன் -/-/1955 - ஒரு பிடி சோறு ,, 1958 26 பொறுக்கி -/-/1955 - ,, ,, 1958 27 தமிழச்சி -/-/1955 - ,, ,, 1958 28 சலிப்பு -/03/1956 சாந்தி உண்மை சுடும் ,, 1964 29 வேலைகொடுத்தவன் -/08/1956 சரஸ்வதி ஒரு பிடி சோறு ,, 1958 30 பூ வாங்கலியோ பூ -/09/1956 ,, ,, ,, 1958 31 தீபம் -/11/1956 ,, எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை 32 தாம்பத்தியம் -/2/1957 சரஸ்வதி இனிப்பும் கரிப்பும் மீனாட்சி புத்தக நிலையம் 1960 33 திரஸ்காரம் -/3/1957 ,, புதிய வார்ப்புகள் ,, 1965 34 ரிக் ஷாகாரன் பாஷை -/4/1957 ,, ஒரு பிடி சோறு ,, 1958 35 பெளருஷம் -/5/1957 ,, சுமை தாங்கி ,, 1962 36 சினம் எனும் தீ 6/6/1957 ,, எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை 37 பால் பேதம் -/8/1957 ,, இனிப்பும் கரிப்பும் மீனாட்சி புத்தக நிலையம் 1958 38 எது, எப்போது -/09/1957 ,, ,, ,, 39 ஒருபிடி சோறு -/10/1957 ,, ,, ,, 40 ராசா வந்துட்டாரு -/11/1957 சரஸ்வதி ஒரு பிடி சோறு ,, 41 ஒரு பிரமுகர் -/12/1957 ,, இனிப்பும் கரிப்பும் ,, 1960 42 முச்சந்தி -/01/1958 ,, தேவன் வருவாரா ,, 1961 43 தாலாட்டு -/03/1958 ,, இனிப்பும் கரிப்பும் ,, 1961 44 டிரெடில் -/04/1958 ,, ஒரு பிடி சோறு மீனாட்சி புத்தக நிலையம் 1958 45 சாளரம் -/06/1958 ,, புதிய வார்ப்புகள் ,, 1965 46 கண்ணம்மா -/08/1958 ,, எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை 47 நந்தவனத்தில் ஒரு ஆண்டி -/09/1958 ,, இனிப்பும் கரிப்பும் ,, 1960 48 பிணக்கு -/10/1958 ,, இனிப்பும் கரிப்பும் ,, 1960 49 போர்வை -/12/1958 ,, புதிய வார்ப்புகள் ,, 1965 50 யந்திரம் -/12/1958 தாமரை தேவன் வருவாரா ,, 1961 51 பட்டணம் சிரிக்கிறது -/-/1958 - ஒருபிடி சோறு ,, 1958 52 அபாயம் -/-/1959 - புதிய வார்ப்புகள் ,, 1965 53 ஓவர்டைம் -/02/1959 ஆனந்த விகடன் இனிப்பும் கரிப்பும் ,, 1960 54 பற்றுகோல் -/03/1959 சரஸ்வதி ,, ,, 55 தர்க்கம் -/04/1959 சரஸ்வதி ,, ,, 56 செக்சன் நம்பர் 54 -/07/1959 கல்கி சுமைதாங்கி மீனாட்சி புத்தக நிலையம், 1962 57 புகைச்சல் -/07/1959 ஆனந்த விகடன் இனிப்பும் கரிப்பும் ,, 1960 58 இனிப்பும் கரிப்பும் -/07/1959 கங்கை இனிப்பும் கரிப்பும் ,, 1960 59 நிந்தாஸ்துதி -/09/1959 கல்கி இனிப்பும் கரிப்பும் ,, 1960 60 போன வருசம் பொங்கலப்போ -/10/1959 கல்கி சுமை தாங்கி ,, 1962 61 சர்வர் சீனு -/10/1959 கல்கி சுமை தாங்கி ,, 1962 62 ராஜா -/10/1959 கல்கி ,, ,, 1962 63 கேவலம் ஓரு நாய் -/10/1959 கல்கி ,, ,, 1962 64 உண்ணாவிரதம் -/11/1959 - மாலை மயக்கம் ,, 1962 65 துறவு -/-/1959 சரஸ்வதி தேவன் வருவாரா ,, 1962 66 நீ இன்னா சார் சொல்றே -/-/1959 - மாலை மயக்கம் ,, 1961 67 இரண்டு குழந்தைகள் -/-/1959 புதுமை தேவன் வருவாரா மீனாட்சி புத்தக நிலையம், 1962 68 குறைப்பிறவி -/-/1959 ஆனந்த விகடன் தேவன் வருவாரா ,, 1961 69 தேவன் வருவாரா -/-/1959 அமுத சுரபி தேவன் வருவாரா ,, 70 அன்புக்கு நன்றி 14/01/1960 தாமரை உண்மை சுடும் ,, 1964 71 சுய ரூபம் -/01/1960 ஆனந்த விகடன் மாலை மயக்கம் ,, 1962 72 வெளிச்சம் 07/04/1960 தாமரை சுமைதாங்கி ,, 1962 73 துர்க்கை 27/03/1960 ஆனந்த விகடன் ,, ,, 74 சிலுவை -/05/1960 தாமரை ,, ,, 75 இதோ, ஒரு காதல் கதை 08/05/1960 ஆனந்த விகடன் மாலை மயக்கம் ,, 1962 76 சீட்டாட்டம் 17/07/1960 ,, ,, ,, 77 புதிய கதை -/-/1960 தாமரை புதிய வார்ப்புகள் ,, 1965 78 வாய்ச்சொற்கள் 14/08/1960 ஆனந்த விகடன் மாலை மயக்கம் ,, 1962 79 இது என்ன பெரிய விஷயம் 11/09/1960 ,, ,, ,, 80 பொம்மை 30/10/1960 ஆனந்த விகடன் தேவன் வருவாரா ,, 1961 81 தொத்தோ -/-/1960 ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) தேவன் வருவாரா மீனாட்சி புத்தக நிலையம் , 1961 82 உடன்கட்டை 11/12/1960 ஆனந்த விகடன் யுகசந்தி ,, 1963 83 பத்தினிப் பரம்பரை -/12/1960 தாமரை உண்மை சுடும் ,, 1964 84 நிறங்கள் -/-/1960 அமுத சுரபி தேவன் வருவாரா ,, 1961 85 உறங்குவது போலும் -/-/1960 - மாலை மயக்கம் ,, 1962 86 மே--20 -/-/1960 - சுமை தாங்கி ,, 1962 87 மூக்கோணம் 09/01/1961 ஆனந்த விகடன் எத்தொகுப்பிலும் இடம் பெறவில்லை 88 மூங்கில் 26/05/1961 ,, யுகசந்தி மீனாட்சி புத்தக நிலையம் , 1963 89 கற்பு நிலை 21/05/1961 ,, ,, ,, 90 நான் இருக்கிறேன் 30/07/1961 ,, ,, ,, 91 என்னை நம்பாதே -/-/1961 ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) உண்மை சுடும் ,, 1964 92 தர்க்கத்திற்கு அப்பால் 5/11/1961 ஆனந்த விகடன் யுகசந்தி மீனாட்சி புத்தக நிலையம் , 1963 93 லவ் பண்ணூங்கோ ஸார் 17/12/1961 ,, ,, ,, 94 சோற்றுச்சுமை -/-/1961 கல்கி தேவன் வருவாரா ,, 1961 95 மாலை மயக்கம் -/-/1962 - மாலை மயக்கம் ,, 1962 96 சுமைதாங்கி -/-/1962 - சுமைதாங்கி ,, 1962 97 கருங்காலி 3/2/1962 ஆனந்த விகடன் யுகசந்தி ,, 1963 98 அடல்ட்ஸ் ஒன்லி -/4/1962 ,, ,, ,, 99 மெளனம் ஒரு பாஷை -/5/1962 ,, ,, ,, 100 ஒரெ நண்பன் 10/06/1962 ,, ,, ,, 101 பிம்பம் -/-07/1962 கல்கி உண்மை சுடும் ,, 1964 102 முன்நிலவும் பின்பனியும் 26/08/1962 ஆனந்த விகடன் யுகசந்தி ,, 1963 103 இல்லாதது எது 07/10/1962 ,, ,, ,, 104 பூ உதிரும் 16/12/1962 ஆனந்த விகடன் யுகசந்தி மீனாட்சி புத்தக நிலையம் , 1963 105 கிழக்கும் மேற்கும் 21/07/1963 ,, ,, ,, 106 தரக்குறைவு 16/06/1963 ,, ,, ,, 107 யுகசந்தி 21/07/1963 ,, ,, ,, 108 உண்மை சுடும் 22/09/1963 ,, உண்மை சுடும் ,, 1964 109 ஆளுகை 00/00/1963 ஆனந்த விகடன்(தீபாவளி மலர்) ,, ,, 110 பொய் வெல்லும் 10/11/1963 ஆனந்த விகடன் ,, ,, 111 சாத்தானும் வேதம் ஓதட்டும் 29/12/1963 ,, ,, ,, 112 இருளைத் தேடி 08/03/1964 ,, ,, ,, 113 ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் 12/04/1964 ,, ,, ,, 114 எத்தனை கோணம் எத்தனை பார்வை 21/06/1964 ,, புதிய வார்ப்புகள் ,, 115 ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில் 28/08/1964 ,, புதிய வார்ப்புகள் மீனாட்சி புத்தக நிலையம் , 1965 116 விளக்கு எரிகிறது 09/11/1964 ,, ,, ,, 117 புதிய வார்ப்புகள் 14/03/1965 ,, ,, ,, 118 அந்தக் கோழைகள் 16/05/1965 ,, சுயதரிசனம் ,, 1967 119 சட்டை 03/10/1965 ,, ,, ,, 120 சுயதரிசனம் 00/00/1965 ,, ,, ,, 121 முற்றுகை 00/00/1965 ,, ,, ,, 122 இருளில் ஒரு துணை 14/08/1966 ,, ,, ,, 123 லட்சாதிபதிகள் 0/0/1966 ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) ,, ,, 124 அக்கினிப் பிரவேசம் 20/11/1968 ஆனந்த விகடன் ,, ,, 1969 125 பாவம் பக்தர்தானே! 03/05/1967 ,, இறந்த காலங்கள் ,, 126 நான் ஜன்னலருகே உட்கார்ந்து இருக்கிறேன் 17/03/1968 ,, ,, ,, 127 அக்ரஹாரத்துப் பூனை 09/11/1968 ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) இறந்த காலங்கள் மீனாட்சி புத்தக நிலையம் , 1969 128 நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ 19/01/1969 ஆனந்த விகடன் ,, ,, 129 ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது 13/04/1969 ,, குரு பீடம் ,, 1971 130 தவறுகள் குற்றங்களல்ல 05/10/1969 ,, ,, ,, 131 டீக்கடை சாமியாரும் டிராக்டர் சாமியாரும் 07/11/1969 ,, ,, ,, 132 கண்ணாமூச்சி 0/0/1969 தினமணிக் கதிர் (திபாவளி மலர்) இறந்த காலங்கள் ,, 1969 133 அந்த உயிரின் மரணம் 0/0/1969 ,, குரு பீடம் ,, 1971 134 அந்தரங்கம் புனிதமானது 0/0/1969 ஆனந்த விகடன் இறந்த காலங்கள் ,, 1969 135 இறந்த காலங்கள் 0/0/1969 ,, ,, ,, 136 விதியும் விபத்தும் 0/0/1969 ,, குரு பீடம் மீனாட்சி புத்தக நிலையம், 1971 137 எங்கோ, யாரோ, யாருக்காகவோ 2,3/04/1970 ஞானரதம் ,, ,, 138 குரு பீடம் 0/0/1970 ,, ,, ,, 139 நிக்கி 0/0/1970 ,, ,, ,, 140 புதுச் செருப்பு கடிக்கும் 02/05/1970 ஆனந்த விகடன் ,, ,, 141 சீசர் 16/09/1971 ,, சக்கரம் நிற்பதில்லை ,, 1975 142 அரைகுறைகள் 0/0/1971 ஆனந்த விகடன் (தீபாவளி மலர்) ,, ,, 143 சக்கரம் நிற்பதில்லை 15/11/1974 தினமணி கதிர் ,, ,, 144 இந்த இடத்திலிருந்து 0/0/1975 ஆனந்த விகடன் ,, ,, 145 குருக்கள் ஆத்து பையன் 0/0/1975 ,, தினமணி கதிர் ,, கட்டுரை பாரதி பாடம் இமயத்துக்கு அப்பால் தொகுப்பு ஜெயகாந்தன் பேட்டிகள் (கபிலன் பதிப்பகம்) திரைப்படமாக்கப்பட்ட இவருடைய கதைகள் சில நேரங்களில் சில மனிதர்கள் (இயக்குநர் : பீம்சிங்) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (இயக்குநர் : பீம்சிங்) ஊருக்கு நூறு பேர் (இயக்குநர் : லெனின்) உன்னைப் போல் ஒருவன் யாருக்காக அழுதான் புதுச்செருப்பு கடிக்கும் ஜெயகாந்தன் இயக்கிய திரைப்படம் உன்னைப் போல் ஒருவன் யாருக்காக அழுதான் புதுச்செருப்பு கடிக்கும் இதழ்கள் ஜெயகாந்தன் இதழ்கள் சிலவற்றிற்கு ஆசிரியராக இருந்தார். அவை: கல்பனா - மாதநாவல் - 1979 மே முதல் ஜெயபேரிகை சிந்தனைச் சிதறல்கள் "முதலில் எழுதுகிறவன் என்ற முறையில், எதை எழுதுவது என்று தீர்மானிப்பவன் நானே" "ஒரு பாத்திரத்தின் மீது அர்த்தமில்லாத வெறுப்பு அல்லது அசட்டுத்தனமான அனுதாபம் கொள்ளுகின்ற வாசகர்கள், இலக்கியத்தின் மூலம் வாழ்க்கையினைப் புரிந்து கொள்ள மறந்துவிடுகிறார்கள்" "மகாபாரதம் என்பது ஒருத்திக்கு ஐந்து கணவர்கள் என்கிற ஒரு விஷயத்தை மட்டும் எனக்குச் சொல்லவில்லை. மேலும் அது மகாபாரதம் என்ற கலாசாரப் பொக்கிஷத்தில் ஒரு விஷயமாகவோ, சிபாரிசாகவோ எனக்குப் படவேயில்லை. அந்த விஷயத்தைப் புரிந்துகொள்கிற பக்குவம், திரௌபதி அம்மன் கோவிலின் முன்னால் சாமியாடுகிற ஒரு பாமரனுக்கு இருக்கிற அளவுக்குக் கூட நமது பகுத்தறிவுச் சிங்கங்களுக்கு இல்லாமல் போனது நமது துரதிர்ஷ்டமே" "அரசாங்க அலுவலகங்களில் மகான்களின் மரணத்துக்காக கொடிகள் தாழப்பறக்கட்டும். அவர்கள் நினைவாகப் பிரார்த்தனைகள் நடக்கட்டும். ஆனால், எது குறித்தும் எல்லாரும் கும்பல் கூடி அழவேண்டா. ரேடியோக்காரர்கள் தங்களது பொய்த்துயரத்தை காற்றில் கலப்படம் செய்யாதிருக்கட்டும்" "நான் பிழைப்புக்காக என்னென்ன செய்திருக்கிறேன் என்றொரு நினைவுப் பட்டியல் போட்டால்... மளிகைக் கடைப் பையன், ஒரு டாக்டரின் பை தூக்கும் உத்தியோகம், மாவு மெஷின் வேலை, கம்பாசிடர், டிரெடில்மேன், மதுரை சென்டிரல் சினிமாவில் வேலைக்காரி சினிமா பாட்டுப் புத்தகம் விற்றது, கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸில் இருந்து பத்திரிக்கைகள், புத்தகங்கள் விற்றது, ஃபவுண்ட்ரியில் எஞ்சினுக்கு கரி கொட்டுவது, சோப்பு ஃபாக்டரியில், இங்க் ஃபாக்டரியில் கைவண்டி இழுத்தது....ஃபுரூஃப் ரீடர், பத்திரிக்கை உதவி ஆசிரியர்... " thumb|ஜெயகாந்தனுக்கு ரஷ்ய விருது விருதுகள் 1972 சாகித்திய அகாதமி விருது சில நேரங்களில் சில மனிதர்கள் புதினம் 2002-ம் ஆண்டுக்கான ஞான பீட விருது http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/03/050320_jeyagandhan.shtml-ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது -- பிபிசி தமிழ் 2009-ம் ஆண்டின் இலக்கியத்துறைக்கான பத்ம பூஷன் விருது http://in.news.yahoo.com/43/20090126/812/tnl-list-of-padma-awardees.html ரஷ்ய விருது - இமயத்துக்கு அப்பால் மற்ற எழுத்தாளர்களின் கருத்துகள் "ஜெயகாந்தன், எத்தகைய பாத்திரங்களைப் படைத்தாலும் அந்தப் பாத்திரங்களின் சிறந்த அம்சங்களைக் குறிப்பிடத் தவறுவதில்லை. துவேஷத்தைப் பரப்புவது, அவருடைய இயல்புக்குச் சற்றும் ஒவ்வாதது. அவர் அரசியலில் தொடர்ந்து பங்கு பெறாமல் போனதற்கு இதுகூட காரணமாக இருந்திருக்கலாம்" - அசோகமித்திரன் "மனதைக் கிள்ளி மோகலாகிரியைத் தூவும் சொற்கள் பல தமிழில் உண்டு. ‘ஜெயகாந்தன்’ என்ற பெயரே அப்படிப்பட்டதுதான். இந்தப் பெயர் அறிமுகமாகி என்னளவில் நாற்பத்தைந்து வருடங்களாவது இருக்கும். ஆனாலும், இந்தப் பெயர் தரும் கவர்ச்சியும், அதன் மீதான பிரேமையும் அப்படியே இருக்கின்றன. யதார்த்தத்தின் மற்றொரு பெயர் ‘தத்ரூபம்’ என்றால், ஜெயகாந்தனின் கதைகள் எல்லாம் அவ்வளவு தத்ரூபமாக இருந்தன. ஜெயகாந்தன் என்ற மேதாவிலாசமிக்க படைப்பாளியின் ஊற்றுக்கண் எங்கே இருந்து புறப்படுகிறது என்று அனுமானிப்பது கடினம். நதிமூலம், ரிஷிமூலம் தேடுகிற மாதிரியான சமாச்சாரம்தான் இது. என்றாலும், ஜெயகாந்தனே தன்னைப் புதுமைப்பித்தனின் வாரிசு என்பதுபோல் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டது ஞாபகத்துக்கு வருகிறது. இதுதான் நிஜமும். " - வண்ணநிலவன் "பாரதியார் வாழ்ந்த காலங்களில் கௌரவிக்கப்பட்டதில்லை. லியோ டால்ஸ்டாய் நோபல் பெறாதவர். போர்ஹே நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர். விருதும் கௌரவமும் சரியான நேரத்தில், சரியான நபருக்கு, சரியான அமைப்புகளால் வழங்கப்படுவது ஒரு போதும் நிகழ்வதில்லை. அதற்காக விருதுகளால் மட்டுமே எழுத்தாளர்கள் கௌரவம் அடைவதுமில்லை. ஜெயகாந்தன் எல்லா விருதுகளுக்கும் தகுதியானவர். எல்லா விருதுகளைத் தாண்டியும் மிகுந்த ஆளுமையும் உயர்வும், தனித்துவமும் கொண்டவர்." - எஸ். ராமகிருஷ்ணன் " ஜெயகாந்தன் ஒரு நீராவி என்ஜின் போல ஆற்றலும் வேகமும் கொண்ட படைப்பாளி என்பதில் சற்றும் சந்தேகமில்லை. ஆனால் நீராவி என்ஜின்கள் கடந்த காலத்தின் அடையாளம். " - மாலன் விமர்சனம் எழுத்தாளர் ஜெயமோகன் தனது முன்னோடிகள் விமர்சன வரிசையில், மண்ணும் மரபும் எனும் நூலில் ஜெயகாந்தனின் படைப்புலகை குறித்து விவாதித்துள்ளார். மேலும் சில கட்டுரைகளை அவரது தளத்தில் எழுதியுள்ளார்http://jeyamohan.in/?s=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+#.WLht_W997IU-ஜெயமோகன் கட்டுரைகள்,பதில்கள். விமர்சகர் எம். வேதசகாயகுமார் தனது முனைவர் பட்ட ஆய்வை புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஓர் ஒப்பாய்வு எனும் நூலாக்கியுள்ளார். 2009ல் முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஜெயகாந்தனின் குறுநாவல்களில் ஆய்வு செய்துள்ளார்http://shodhganga.inflibnet.ac.in/handle/10603/106462-ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஆய்வு. ஜெயகாந்தன் இலக்கியத்தடம், ஜெயகாந்தன் ஒரு பார்வை ஆகிய நூல்களை முறையே ப.கிருஷ்ணசாமி, கே.எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் எழுதியுள்ளனர். ரவிசுப்பிரமணியன் எல்லைகளை விஸ்தரித்த எழுத்து கலைஞன்'' என்ற பேரில் ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். ஜெயகாந்தனின் மறைவிற்கு பிறகு அவர் பற்றி எழுத்தாளர்கள் ஆற்றிய உரைகளும் தொகுக்கப்பட்ட நூல்களும் முக்கியமானவை. மறைவு ஜெயகாந்தன் 08.04.2015 அன்று இரவு 9.00 மணிக்கு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஜெயகாந்தன் - Life and Works - பகுப்பு:1934 பிறப்புகள் பகுப்பு:2015 இறப்புகள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் பகுப்பு:ஞானபீட விருது பெற்றோர் பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்‎ பகுப்பு:கடலூர் மாவட்ட நபர்கள் பகுப்பு:பத்ம பூசண் விருது பெற்ற தமிழர்கள் பகுப்பு:தமிழ்ச் சமூகப் போராளிகள் பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள் பகுப்பு:தேசிய திரைப்பட விருது வென்றவர்கள் பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்
புதுமைப்பித்தன்
https://ta.wikipedia.org/wiki/புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் என்ற புனைபெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் மிக அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 2002இல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது. வாழ்க்கைக் குறிப்பு thumb|right|200px|மணிக்கொடி இதழ் புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றார். 1932 சூலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலாவை மணந்தார்.Puthumaipithan - His Contribution to Modern Tamil Literature இவரது முதல் படைப்பான குலோப்ஜான் காதல் காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார். இந்தக் காலகட்டத்தில் அவர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளிலும் பிரசுரமாயின. 1940ல் புதுமைப்பித்தனின் கதைகள் என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார். Remembering Pudumaippithan - Frontline Magazine 08-21 April 2006 இவர் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ஜெமினி நிறுவனத்தின் அவ்வை மற்றும் காமவல்லி படங்களில் பணிபுரிந்தார். பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்" -ஐத் துவங்கி வசந்தவல்லி என்ற படத்தைத் தயாரிக்க முயன்று தோல்வியுற்றார். எம். கே. தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி சூன் 30, 1948-இல் காலமானார். படைப்புகளும் சிந்தனைகளும் புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின. அவர் கையாண்ட விஷயங்களும் கதாபாத்திரங்களும் தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன. தமிழ் இலக்கிய உலகம் சில எழுதப்படாத விதிகளால் முடக்கப்பட்டிருப்பதாக அவர் கருதினார்.A Foreword to Pudhumaipithan katturaigal by M.A. Nuhman - Part 2 (in Tamil) தன் கட்டுரை ஒன்றில் இவ்வாறு கூறுகிறார்: தனது சமகால எழுத்தாளர்களின் எதிர்விமர்சனங்களைப் புறந்தள்ளி பின்வருமாறு கூறுகிறார்: சிறுகதைகள் புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை அவர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். கு. ப. ராஜகோபாலன், பி. எஸ்.ராமையா, வ. ராமசாமி ஆகியோர் மணிக்கொடி இயக்கத்தின் மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர். மொழிபெயர்ப்புகள் புதுமைப்பித்தன் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிபெயர்த்த எழுத்தாளர்களில் சிலர்: மொலியர், கே பாயில், மேக்சிம் கார்க்கி, சின்கிளெயயர் லூயிஸ், எர்னஸ்ட் டோலர், வில்லியம் ஷேக்ஸ்பியர், இ. எம். டேலாஃப்ல்டு, வில்லியம் சரோயன், இ. வி. லூகாஸ், மோஷே ஸ்மிலான்ஸ்கி, ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்ஸன், பிரட் கார்ட், ஜான் கால்ஸ்வொர்த்தி, அலெக்ஸாண்டர் குப்ரின், ஆன்டன் செக்கோவ், பிராண்ஸ் காஃப்கா, இல்யா எக்ரன்பர்க், கை டி மாப்பாசான், வலெரி பிர்யுசொவ், அனாடோல் பிரான்ஸ், லியோனிட் ஆண்டிரியேவ், ஹென்ரிக் இப்சன், நாத்தேனியல் ஹாத்தோர்ன், எட்கர் ஆலன் போ, ராபர்ட் முரே கில்கிரிஸ்ட், பிரான்ஸிஸ் பெல்லர்பி, லியோனார்ட் ஸ்ட்ராங், ஜேக் லண்டன், பீட்டர் எக்கி, மிக்கெயில் அலெக்ஸாண்ட்ரோவிச் ஷோலோகோவ், தாமஸ் வுல்ஃப் மற்றும் ஜேம்ஸ் ஹேன்லி ஆவர்.108 short stories and 57 translated stories of Pudhumaipithan (in Tamil) அவருக்கு மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் குறித்து தெளிவான கருத்து இருந்தது. தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்றும் பிறமொழி படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவர மொழிபெயர்ப்பே சிறந்த வழியெனவும் கருதினார். 1937ல் மொழிபெயர்ப்பா, தழுவலா என்ற பிரச்சனையில் அவருக்கும் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே காட்டமான இலக்கியச் சண்டையொன்று நிகழ்ந்தது.Ilakkiyathil Sandai, An essay on literary feuds by Sa. Kandasamy (in Tamil) கவிதைகள் புதுமைப்பித்தன் 15 கவிதைகள் எழுதியுள்ளார். அவரது முதல் கவிதையான திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம், 1934ல் வெளிவந்தது. அவரது கவிதைகள் பெரும்பாலும் அவரது நண்பர் தொ. மு. சிதம்பர ரகுநாதனுக்கு வெண்பா வடிவில் எழுதப்பட்ட கடிதங்களாக அமைந்திருந்தன. அவரது 15 கவிதைகளும் அவர் இறந்த பின்பு தான் பிரசுரமாயின. அவரது சிறுகதைகளைப்போலவே அவரது கவிதைகளும் நையாண்டியும், நக்கலுமாக இருந்ததன. மூனாவருணாசலமே மூடா, அவரது கவிதைகளுள் புகழ் பெற்றது. அது மணிக்கொடி இயக்கத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட்ட ஒரு தமிழ் புத்தகத்தினைச் (மு. அருணாசலத்தின் இன்றைய தமிழ் வசன நடை) சாடும் விமரிசனமாக எழுதப்பட்டிருந்தது. அரசியல் புத்தகங்கள் புதுமைப்பித்தன் அடிப்படையில் சோஷியலிச கருத்துகளைக் கொண்டவர். அவரது அரசியல் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை நான்கு. அவை ஃபாசிஸ்ட் ஜடாமுனி, (முசோலினியின் வாழ்க்கை வரலாறு) கப்சிப் தர்பார், (ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு) ஸ்டாலினுக்குத் தெரியும் மற்றும் அதிகாரம் யாருக்கு (இரண்டும் கம்னியூசத்தையும் ஸ்டாலினின் கொள்கைகளையும் விவரிப்பவை). நான்கு புத்தகங்களுமே ஃபாசிசத்தை எதிர்த்தும் ஸ்டாலினிய கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எழுதப்பட்டன. எழுத்துநடை சென்னை, தஞ்சாவூர்த் தமிழ் அல்லாது பிற வட்டார வழக்குத் தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன். பெரும்பாலும் இவரது கதாபாத்திரங்கள் நெல்லைத் தமிழில் பேசினர். அவரது கதைகள் அவர் வாழ்ந்த இடங்களான சென்னை மற்றும் திருநெல்வேலியைக் களமாகக் கொண்டிருந்தன. அவரது நடையில் பேச்சுத்தமிழ் மற்றும் செந்தமிழ் இரண்டும் கலந்திருந்தன. சிக்கலான விஷயங்களைக் கையாளும்போது கூட அவரது எழுத்துக்களில் நையாண்டி இழைந்தோடுவது அவரது சிறப்பு. கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற இலக்கிய எதிராளிகளுடன் விவாதம் செய்தபோது கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நூல் விமரிசனங்களில் வசைபாடல்களையும் எழுதியுள்ளார். பிரபலமான எடுத்துக்காட்டுகள் புதுமைப்பித்தனின் தனித்துவ நடைக்கு அவரது கதைலிருந்து சில எடுத்துக்காட்டுகள்:{{Quotation|சென்னையிலே தர்ம சிந்தனை ஒரு போக வஸ்து.|நம்பிக்கை}} புனைபெயர்கள் புதுமைப்பித்தனின் பிற புனைபெயர்கள்: சொ.வி, ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுக்ராச்சாரி மற்றும் இரவல் விசிறிமடிப்பு. புதுமைப்பித்தன் என்ற பெயரே அவருக்குப் பிடித்தமானதாக இருந்தது. அவரது கதைகளின் கவர்ச்சிக்கு அப்பெயர் தான் ஓரளவு காரணம் என்று அவர் கருதினார். தனது கவிதைகளை வேலூர் வே. கந்தசாமிப் பிள்ளை என்ற புனைப்பெயரில் எழுதினார். அவரது படைப்புகளில் தழுவல்கள் உள்ளன என எழுந்த குற்றச்சாட்டால் அவரது புனைபெயர்கள் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தொ. மு. சிதம்பர ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறான புதுமைப்பித்தன் கதைகள்: சில விமரிசனங்களும் சில விஷமங்களும் என்ற புத்தகத்தில் நந்தன் என்ற புனைப்பெயரில் எழுதப்பட்டவை யாவும் தழுவல் படைப்புகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.A.R. Venkatachalapathy - Pudumaippithan Stories in the eyes of the publisher (in Tamil) சர்ச்சைகள் தழுவல் கதைகள் மாப்பாசான் என்ற பிரெஞ்சு கதாசிரியரின் படைப்புகளின் தழுவல்களாகப் புதுமைப்பித்தனின் சில கதைகள் அமைந்துள்ளன என்று அவரது சம காலத்து எழுத்தாளர்களான பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) மற்றும் சோ. சிவபாதசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளனர். இலக்கிய ஆய்வாளர் காரை கிருஷ்ணமூர்த்தியும் பின்னர் இதே கருத்தினைக் கூறினார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தொ. மு. சிதம்பர ரகுநாதன் சமாதி, நொண்டி, பயம், கொலைகாரன் கதை, நல்ல வேலைக்காரன், அந்த முட்டாள் வேணு ஆகிய கதைகள் மாப்பாசான் கதைகளின் தழுவல்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். பித்துக்குள்ளி என்ற கதை ராபர்ட் பிரௌனிங் கவிதையொன்றின் தழுவல் எனவும் கூறியுள்ளார். டாக்டர் சம்பத், நானே கொன்றேன், யார் குற்றவாளி, தேக்கங்கன்றுகள் போன்ற கதைகளும் தழுவல்களாக இருக்கலாம் எனக் கருத்துகள் உள்ளன. தமிழ் படித்த பொண்டாட்டி என்ற கதையைப் புதுமைப்பித்தன் தானே வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் அது மாப்பாசான் கதையின் தழுவல் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தழுவல்கள் எனக் குற்றச்சாட்டிற்கு உள்ளான பிற கதைகள் அவர் இறந்தபின் பிறரால் வெளியிடப்பட்டுள்ளன. அவரது ஆதரவாளர்கள், அவர் வெளியிட்டிருந்தால் கண்டிப்பாகத் தழுவல் என்பதைக் குறிப்பிட்டிருப்பார் எனக் கூறுகின்றனர். மேலும் அவர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் மாப்பாசானின் கதைகள் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவருக்கோ பிரெஞ்சு மொழி தெரியாது. எனவே அக்கதைகள் எவ்வாறு தழுவல்களாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகின்றனர். அவரது தழுவல் கதைகள் அனைத்தும் 1937க்கு முன்னதாக எழுதப்பட்டவை. அவ்வாண்டுதான் அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் பிறமொழி படைப்புகளிலிருந்து தழுவி எழுதுவது குறித்து கடுமையான இலக்கியச் சண்டை நடத்தினார். தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.A.R. Venkatachalapathy, Foreword to Annai itta thee (in Tamil) பிற விமர்சனங்கள் புதுமைப்பித்தன் சிந்தனை செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார், ஆனால் அவற்றுக்கான தீர்வைப் பற்றிக் கூற முயற்சிக்கவே இல்லை என விமர்சிக்கப் படுகிறார். அவரது படைப்புகளில் பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன; தீர்வுகளை வாசகர்களின் வசம் விட்டுவிடுகிறார். சில சமயங்களில் அவர் கதை நடைபெறும் களத்தையும் கதாபாத்திரங்களின் தன்மையையும் விவரிக்கும் அளவு மையக்கருத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறார். சமீபத்தில் தமிழ் விமர்சகர் அ. மார்க்ஸ் தலித்துகள், மறவர்கள், கிருத்துவர்கள் மற்றும் புலால் உண்பவர்களை புதுமைப்பித்தன் இழிவு படுத்தியுள்ளார் என விமரிசனம் செய்துள்ளார். 2014ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின் துன்பக்கேணி, பொன்னகரம்'' ஆகிய இரு சிறுகதைகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது. பல்கலைக்கழக ஆட்சிக்குழு இக்கதைகள் தலித்துகளை இழிவுபடுத்துகின்றன என்று கருதியதால் அவற்றை நீக்கியது.Pudumaipithan’s 2 short stories removed from Madras University curriculum கவிதைகள் திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம் மூனாவருணாசலமே மூடா இணையற்ற இந்தியா செல்லும் வழி இருட்டு அரசியல் நூல்கள் ஃபாசிஸ்ட் ஜடாமுனி கப்சிப் தர்பார் ஸ்டாலினுக்குத் தெரியும் அதிகாரம் யாருக்கு சிறுகதைகள் சாபவிமோசனம் செல்லம்மாள் கோபாலய்யங்காரின் மனைவி இது மிஷின் யுகம் கடவுளின் பிரதிநிதி கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் படபடப்பு ஒரு நாள் கழிந்தது தெரு விளக்கு காலனும் கிழவியும் பொன்னகரம் இரண்டு உலகங்கள் மனித யந்திரம் ஆண்மை ஆற்றங்கரைப் பிள்ளையார் அபிநவ ஸ்நாப் அன்று இரவு அந்த முட்டாள் வேணு அவதாரம் பிரம்ம ராக்ஷஸ் பயம் டாக்டர் சம்பத் எப்போதும் முடிவிலே இன்பம் ஞானக் குகை கோபாலபுரம் இலக்கிய மம்ம நாயனார் புராணம் 'இந்தப் பாவி' காளி கோவில் கபாடபுரம் கடிதம் கலியாணி கனவுப் பெண் காஞ்சனை கண்ணன் குழல் கருச்சிதைவு கட்டிலை விட்டிறங்காக் கதை கட்டில் பேசுகிறது கவந்தனும் காமனும் கயிற்றரவு கேள்விக்குறி கொடுக்காப்புளி மரம் கொலைகாரன் கை கொன்ற சிரிப்பு குப்பனின் கனவு குற்றவாளி யார்? மாயவலை மகாமசானம் மனக்குகை ஓவியங்கள் மன நிழல் மோட்சம் 'நானே கொன்றேன்!' நல்ல வேலைக்காரன் நம்பிக்கை நன்மை பயக்குமெனின் நாசகாரக் கும்பல் நிகும்பலை நினைவுப் பாதை நிர்விகற்ப சமாதி நிசமும் நினைப்பும் நியாயம் நியாயந்தான் நொண்டி ஒப்பந்தம் ஒரு கொலை அனுபவம் பால்வண்ணம் பிள்ளை பறிமுதல் பாட்டியின் தீபாவளி பித்துக்குளி பொய்க் குதிரை 'பூசனிக்காய்' அம்பி புரட்சி மனப்பான்மை புதிய கூண்டு புதிய கந்த புராணம் புதிய நந்தன் புதிய ஒளி ராமனாதனின் கடிதம் சாப விமோசனம் சாளரம் சாமாவின் தவறு சாயங்கால மயக்கம் சமாதி சாமியாரும் குழந்தையும் சீடையும் சணப்பன் கோழி சங்குத் தேவனின் தர்மம் செல்வம் செவ்வாய் தோஷம் சிற்பியின் நரகம் சித்தம் போக்கு சித்தி சிவசிதம்பர சேவுகம் சொன்ன சொல் சுப்பையா பிள்ளையின் காதல்கள் தனி ஒருவனுக்கு தேக்கங் கன்றுகள் திறந்த ஜன்னல் திருக்குறள் குமரேச பிள்ளை திருக்குறள் செய்த திருக்கூத்து தியாகமூர்த்தி துன்பக் கேணி உணர்ச்சியின் அடிமைகள் உபதேசம் வாடாமல்லிகை வாழ்க்கை வழி வெளிப்பூச்சு வேதாளம் சொன்ன கதை விபரீத ஆசை விநாயக சதுர்த்தி மொழிபெயர்ப்பு சிறுகதைகள் ஆஷாட பூதி ஆட்டுக் குட்டிதான் அம்மா அந்தப் பையன் அஷ்டமாசித்தி ஆசிரியர் ஆராய்ச்சி அதிகாலை பலி சித்திரவதை டைமன் கண்ட உண்மை இனி இந்தப் பல் விவகாரம் இஷ்ட சித்தி காதல் கதை கலப்பு மணம் கனவு காரையில் கண்ட முகம் கிழவி லதீபா மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள் மணிமந்திரத் தீவு மணியோசை மார்க்ஹீம் மிளிஸ் முதலும் முடிவும் நாடகக்காரி நட்சத்திர இளவரசி ஓம் சாந்தி! சாந்தி! ஒரு கட்டுக்கதை ஒருவனும் ஒருத்தியும் பைத்தியக்காரி பளிங்குச் சிலை பால்தஸார் பொய் பூச்சாண்டியின் மகள் ராஜ்ய உபாதை ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு சாராயப் பீப்பாய் சகோதரர்கள் சமத்துவம் ஷெஹர்ஜாதி - கதை சொல்லி சிரித்த முகக்காரன் சூனியக்காரி சுவரில் வழி தாயில்லாக் குழந்தைகள் தையல் மிஷின் தந்தை மகற்காற்றும் உதவி தெய்வம் கொடுத்த வரம் தேசிய கீதம் துன்பத்திற்கு மாற்று துறவி உயிர் ஆசை வீடு திரும்பல் ஏ படகுக்காரா! யாத்திரை எமனை ஏமாற்ற யுத்த தேவதையின் திருமுக மண்டலம் மேற்கோள்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:1906 பிறப்புகள் பகுப்பு:1948 இறப்புகள் பகுப்பு:கடலூர் மாவட்ட நபர்கள் பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் பகுப்பு:பிறமொழி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் பகுப்பு:தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பாளர்கள் பகுப்பு:தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்
விட்டம்
https://ta.wikipedia.org/wiki/விட்டம்
thumb|250px|right|விட்டம் ஒரு வட்டத்தின் விட்டம் (diameter) என்பது வட்டத்தின் மேல், எதிரெதிரே உள்ள எந்த இரு புள்ளிகளையும் வட்டத்தின் மையப் புள்ளி வழியாக இணைக்கும் கோட்டுத்துண்டு ஆகும். விட்டம் என்பதை வட்டத்தின் மிக நீளமான நாண் எனவும் வரைவிலக்கணம் கூறலாம். ஒரு கோளத்தின் விட்டத்துக்கும் இதே வரைவிலக்கணம் பொருந்தும். விட்டம் என்ற சொல் மேலே வரையறுக்கப்பட்ட நேர்கோட்டின் நீளத்தையும் குறிக்கும். ஒரு வட்டத்தின் அனைத்து விட்டங்களும் ஒரே அளவுடையதாக இருக்கும். விட்டத்தின் அளவு வட்டத்தின் ஆரத்தின் இரு மடங்கு அளவாக இருக்கும். மேற்காட்டிய சமன்பாடுகளில் "d" விட்டத்தையும், "r" ஆரத்தையும் குறிக்கும். குவி வடிவங்களின் விட்டமானது அவ்வடிவங்களின் எல்லைக் கோட்டில் எதிரெதிராக அமைந்த இரு புள்ளிகளுக்குத் தொடலியாக உள்ள இணைகோடுகளிடையே அமையக்கூடிய அதிகூடிய தூரம் ஆகும். இவ்வாறு அமையக்கூடிய மிகக் குறைந்த தூரம் அவ்வடிவத்தின் அகலம் ஆகும். இவ்விரண்டையும் ’சுழல் காலிப்பர்ஸ்’ கொண்டு அளக்க முடியும் மாறா அகலங்கொண்ட வளைவரைகளின் அகலமும் விட்டமும் சமமாக இருக்கும். பொதுமைப்படுத்தல் மேலே தரப்பட்ட விட்டத்தின் வரையறைகள் வட்டம், கோளம் மற்றும் குவி வடிவங்களுக்கு மட்டுமே பொருந்தும். எனினும் அதிகனசதுரம் அல்லது பரவலாக அமைந்த புள்ளிகளின் கணம் போன்ற n-பரிமாண குவி மற்றும் குவிவற்ற வடிவங்களுக்கான விட்டத்தின் வரையறையின் சிறப்பு வகையாக அவ்வரையறைகளைக் கருதலாம். ஒரு மெட்ரிக் வெளியின் (metric space) உட்கணத்தின் விட்டம் என்பது அந்த உட்கணத்திலுள்ள எந்த இரு புள்ளிகளுக்கும் இடையேயுள்ள தூரங்களின் மேன்மம் (supremum) ஆகும். உட்கணம் A இன் விட்டம்: sup{ d(x, y) | x, y ∈ A } . தொலைவுச் சார்பு d இன் இணையாட்களம் R (அனைத்து மெய்யெண்களின் கணம்) எனக் கொண்டால் வெற்றுக் கணத்தின் () விட்டம் −∞ ஆகும். சில நூலாசிரியர்கள் வெற்றுக் கணத்தினை சிறப்பு வகையாக எடுத்துக்கொண்டு அதன் விட்டத்தைப் பூச்சியம் எனக் கொள்கின்றனர்,Re: diameter of an empty set இதில் தொலைவுச் சார்பின் இணையாட்களம் எதிரிலா மெய்யெண் கணமாக அமையும். n-பரிமாண யூக்ளிடிய தளத்தில் எந்தவொரு திடப்பொருள் அல்லது புள்ளிகளின் கணத்தின் விட்டமானது அப்பொருள் அல்லது புள்ளிகளின் கணத்தின் குவி மேற்தளத்தின் (convex hull) விட்டமாகும். தள வடிவவியலில் ஒரு கூம்பு வெட்டின் விட்டமானது அக் கூம்பு வெட்டின் மையத்தின் வழிச் செல்லும் நாணாக வரையறுக்கப்படுகிறது. வட்ட விலகல் e = 0 கொண்ட வட்டத்தின் விட்டங்கள் சம நீளமுடையவை; ஏனைய கூம்பு வெட்டுகளின் விட்டங்கள் வெவ்வேறு நீளங்களுடையவையாக அமைகின்றன. மேற்கோள்கள் பகுப்பு:வட்டங்கள்
ஆரம், வடிவியல்
https://ta.wikipedia.org/wiki/ஆரம்,_வடிவியல்
thumb|right|வண்டிச் சக்கரத்தின் ஆரைக்கால் right|thumb|ஆரம் என்னும் ஆரை வடிவவியலில், ஆரம் () அல்லது ஆரை (radius) என்பது வட்டம் அல்லது கோளம் ஒன்றின் சுற்றளவில் உள்ள எந்த ஒரு புள்ளியிலிருந்தும் அதன் மையப் புள்ளிக்கு வரையப்படும் நேர்கோட்டுத் துண்டின் நீளத்தைக் குறிக்கும்.Definition of Radius at dictionary.reference.com. Accessed on 2009-08-08. ஒரு வட்டத்தில் எண்ணற்ற ஆரங்களை வரையறுக்க இயலும். அவை ஒத்த அளவுடையதாக இருக்கும். மாட்டு வண்டியில் இருக்கும் மரத்தால் செய்யப்பட்ட சக்கரத்தில் அதன் மையப்பகுதியாகிய குடத்திலிருந்து சக்கர விளிம்பிலுள்ள வட்டையை தாங்கி நிற்கும்படி நிறுத்தப்பட்டுள்ள கால்-மரத்தை ஆரை என்பர்.ஆரை வேய்ந்த அரைவாய் சகடம் (பெருமாணாற்றுப்படை 50), (அகநானூறு 301),ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன் (புறநானூறு 60) ஆரை பொதுவாக r என்ற எழுத்தால் குறிக்கப்படும். இது விட்டத்தின் (d) அளவில் பாதியாக இருக்கும்.:Definition of radius at mathwords.com. Accessed on 2009-08-08. சுற்றளவில் இருந்து ஆரை வட்டம் ஒன்றின் சுற்றளவு C எனின், அதன் ஆரை பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்: பரப்பளவில் இருந்து ஆரை வட்டம் ஒன்றின் பரப்பளவு A எனின், அதன் ஆரை: . மூன்று புள்ளிகளில் இருந்து ஆரை P1, P2, P3 எனும் மூன்று புள்ளிகளூடாகச் செல்லும் வட்டம் ஒன்றின் ஆரை பின்வருமாறு தரப்படும்: இங்கு θ என்பது கோணம் ஆகும். இச்சமன்பாடு சைன் விதியைப் பயன்படுத்துகிறது. மூன்று புள்ளிகளும் , , ஆகிய ஆள்கூறுகளால் தரப்படின், பின்வரும் சமன்பாட்டைப் பயன்படுத்தலாம்: சீரான பல்கோணங்களுக்கான சமன்பாடுகள் பின்வரும் சமன்பாடுகள் n பக்கங்களைக் கொண்ட சீரான பல்கோணங்களுக்கானது. s பக்கத்தைக் கொண்ட பல்கோணம் ஒன்றின் ஆரை:     இங்கு    மேற்கோள்களும் குறிப்புகளும் பகுப்பு:வட்டங்கள் பகுப்பு:வடிவவியல்
மீட்டர்
https://ta.wikipedia.org/wiki/மீட்டர்
thumb|150px|துடுப்பாப்பாட்ட மட்டையுடன் மீட்டர்க்கோல் மீட்டர் (metre அல்லது meter, இலங்கை வழக்கு: மீற்றர்) என்பது அனைத்துலக முறை அலகுகளில் நீள அளவின் அடிப்படை அலகு ஆகும். மீட்டரின் ஆங்கிலக் குறியீடு m ஆகும். தமிழ்க் குறியீடு மீ என்பதாகும். இப்படி வரையறுக்கப்படும் ஒரு மீட்டரானது 10000/254 அங்குலங்களுக்குச் சமமாகும் (தோராயமாக 39.37 அங்குலங்கள்) துவக்கத்தில் புவியின் நிலநடுக் கோட்டிலிருந்து வட துருவம் (கடல் மட்டத்தில்) வரையிலான தொலைவில் ஒன்றில் ஒரு கோடி பங்காக வரையறுக்கப்பட்டது. அளவியல் குறித்த அறிவு மேம்பட்டதை அடுத்து இது படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டு வந்தது. 1983 ஆம் ஆண்டு முதல் மீட்டர் என்னும் நீளத்தைத் கீழ்க்காணுமாறு துல்லியமாக வரையறுக்கிறார்கள்: வெற்றிடத்தில் ஒளியானது நொடியில் கடக்கும் தொலைவு ஒரு மீட்டர். வரலாறு மீட்டர் என்னும் பெயர் thumb|பெல்ஃபரி, டன்கிர்க்—நெடுவரை வளைவின் வடமுனை thumb|மொன்சூவிக் கோட்டை—நெடுவரை வளைவின் தென்முனை நீளத்தை அளக்க பத்தின் அடிப்படையிலான பதின்ம முறை (decimal system) ஒன்று உலகம் தழுவிய முறையாக இருக்கவேண்டும் என்று முதல் முதல் 1668 ஆம் ஆண்டு சான் வில்க்கின்சு (John Wilkins) என்னும் ஆங்கிலேய மெய்யியலாளர் தன் முன்மொழிவைப் பதிவு செய்தார்.An Essay towards a Real Character and a Philosophical Language (Reproduction)An Essay towards a Real Character and a Philosophical Language (Transcription) 1675 ஆம் ஆண்டு டிட்டோ லிவியோ புராட்டினி (Tito Livio Burattini) என்னும் இத்தாலிய அறிவியலாளர், தன்னுடைய மிசுரா யுனிவெர்சாலே (Misura Universale "பொது அளவீடு") என்னும் உரையில் மீட்ரோ கட்டோலிக்கோ (metro cattolico) என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்; இச்சொல் கிரேக்க மொழிச்சொல்லாகிய மெட்ரோன் கத்தோலிக்கோன் (καθολικόν}} (métron katholikón) என்னும் சொல்லில் இருந்து பெற்றது. இதனைப் பிரான்சிய மொழியில் மெட்ரே (mètre) என்று அழைக்கின்றார்கள். பிரான்சிய மொழியில் இருந்து 1797 ஆண்டு முதல் ஆங்கிலத்திலும் இது எடுத்தாளப்பட்டு வருகின்றது.Oxford English Dictionary, Clarendon Press 2nd ed.1989, vol.IX p.697 col.3. பிரித்தானிய ஆங்கிலேயர்கள் metre என்றும், அமெரிக்கர்கள் meter என்றும் எழுத்துக்கூட்டல்கள் கொண்டு பயன்படுத்துகின்றனர். இலங்கையில் மீற்றர் என்று பயன்படுத்துகின்றனர். நெடுவரை அடிப்படையில் அமைந்த வரையறை பிரெஞ்சுப் புரட்சியின்போது பிரெஞ்சு அறிவியல் அகாதமியால் அனைத்து அலகுகளுக்கும் ஒரே ஒப்பளவை தீர்மானிக்க ஒருங்கிணைக்கப்பட்ட குழு, பதின்ம அமைப்பில் அமைய வேண்டும் என்ற பரந்துரையை அக்டோபர் 27, 1790இலும் நீளத்திற்கான அடிப்படை அலகாக வட துருவத்திற்கும் நிலநடுக் கோட்டிற்கும் இடையேயான தொலைவில் கோடியில் ஒரு பங்காகவும்('decimalization is not of the essence of the metric system; the real significance of this is that it was the first great attempt to define terrestrial units of measure in terms of an unvarying astronomical or geodetic constant.) The metre was in fact defined as one ten millionth of one quarter of the earth's circumference at sea-level.' Joseph Needham, Science and Civilisation in China, Cambridge University Press, 1962 vol.4, pt.1, p.42. அது 'அலகு' (பிரெஞ்சு மொழியில் mètre)என் பெயரிட்டு மார்ச் 19, 1791இலும் பரிந்துரைத்தது.Paolo Agnoli,Il senso della misura: la codifica della realtà tra filosofia, scienza ed esistenza umana, Armando Editore, 2004 pp.93-94,101.Paolo Agnoli and Giulio D’Agostini,'Why does the meter beat the second?,' December, 2004 pp.1-29. இதனை 1793இல் கூடிய தேசிய மாநாடு ஏற்றுக் கொண்டது. மீட்டர் துண்டு முன்மாதிரி thumb|right|250px|1889 ஆம் ஆண்டுமுதல் 1960 ஆம் ஆண்டு வரை, அனைத்துலக மீட்டர் அலகுக்கு அடிப்படையான முதல் ஒப்பீட்டுத் தர அலகாக பாதுகாத்து வைத்து இருந்த பிளாட்டினம், இரிடியம் ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்ட மீட்டர்க் கோல். 1870களில் ஏற்பட்ட துல்லிய தொழில்நுட்பங்களின் பின்னணியில் புதிய மீட்டர் சீர்தரத்தை நிலைநிறுத்த பல பன்னாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டன. 1875இல் நடந்த மீட்டர் மாநாட்டில் (Convention du Mètre) பாரிசின் தென்மேற்குப் புறநகர்ப் பகுதியான செவ்ரெயில் நிரந்தரமாக பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம் (BIPM: Bureau International des Poids et Mesures) அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீட்டர் மற்றும் கிலோகிராமிற்கான சீர்தரங்களின் முன்மாதிரிகள் கட்டமைக்கப்படும்போது அவற்றை பாதுகாப்பதுடன் தேசிய அளவிலான சீர்தர முன்மாதிரிகளை வழங்கவும் அவற்றிற்கும் மெட்ரிக் அல்லாத அளவை சீர்தரங்களுக்கிடையான ஒப்பளவுகளை பராமரிக்கவும் இந்த புதிய அமைப்பு நிறுவப்பட்டது. இதன்படி 1889இல் எடைகள் மற்றும் அளவைகளுக்கான முதல் பொது மாநாட்டில் இந்த அமைப்பு புதிய முன்மாதிரி மீட்டர் துண்டை வெளிப்படுத்தியது. தொன்னூறு விழுக்காடு பிளாட்டினமும் பத்து விழுக்காடு இரிடியமும் கொண்ட கலப்புலோக சீர்தர துண்டின் இரு கோடுகளுக்கு இடையே பனிக்கட்டியின் உருகுநிலையில் அளக்கப்பட்ட தொலைவு பன்னாட்டு முன்மாதிரி மீட்டர் எனப்பட்டது.National Institute of Standards and Technology 2003; Historical context of the SI: Unit of length (meter) 1889ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நிலையிலேயே இன்றும் பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட முன்மாதிரித் துண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. சீர்தர மீட்டர் துண்டு அளவைகள் குறித்தும் இதனைக் கொண்டு அளப்பதால் ஏற்படும் பிழைகள் குறித்தும் தேசிய சீர்தரங்கள் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் (NIST) ஆவணங்களில் காணலாம்.Beers & Penzes 1992 கிருப்டான்-86 உமிழ்வின் சீர்தர அலைநீளம் 1893இல், முதன்முதலாக ஓர் சீர்தர மீட்டர் அளவை ஆல்பர்ட் ஏ. மைக்கல்சன் ஓர் குறுக்கீட்டுமானி மூலம் அளந்தார். இந்தக் கருவியை உருவாக்கிய மைக்கல்சன் ஒளியின் ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தை நீளத்தின் சீர்தரமாகக் கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்தவராவார். 1925 வாக்கில் பிஐபிஎம்மில் குறுக்கீட்டுமானம் மூலம் அளப்பது வழமையாயிற்று. இருப்பினும் பன்னாட்டு முன்மாதிரி மீட்டர் 1960 வரை சீர்தரமாக இருந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற பதினோராவது மாநாடு புதிய அனைத்துலக முறை அலகுகள் (SI) முறையில் வெற்றிடத்தில் கிருப்டான்-86 அணுவின் மின்காந்த நிழற்பட்டையில் ஆரஞ்சு-சிவப்பு உமிழ்கோட்டின் 1,650,763.73 அலைநீளங்களை ஒரு மீட்டராக வரையறுத்தது. ஒளியின் வேகம் உறுதியின்மையை குறைக்கும் நோக்குடன் 1983இல் கூடிய அளவைகள் மாநாடு மீட்டரின் வரையறையை மாற்றி ஒளியின் வேகத்தையும் நொடியையும் கொண்டு தற்போதுள்ள வரையறை அறிமுகப்படுத்தியது : மீட்டர் என்பது வெற்றிடத்தில் ஒளியால் நொடி இடைவெளியில் செல்லும் பாதையின் நீளமாகும். இந்த வரையறை வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தை சரியாக நொடிக்கு 299,792,458 மீட்டர்களாக நிலைநிறுத்தி உள்ளது. இந்த வரையறுப்பின் மற்றொரு துணைப்பகுதியாக அறிவியல் அறிஞர்கள் தங்கள் சீரொளிகளை துல்லியமாக அலையதிர்வுகள் மூலம், அலைநீளங்களின் நேரடி ஒப்பிடுதல்களை விட ஐந்தில் ஒருபங்கு குறைவான உறுதியின்மையுடன், ஒப்பிட முடிகிறது. ஆய்வகங்களிடையே ஒரே முடிவுகளைப் பெறுவதை உறுதி செய்யும் வண்ணம் இந்த மாநாட்டில் ஐயோடினால்-நிலைநிறுத்தப்பட்ட ஈலியம்–நியான் சீரோளி மீட்டரை உருவாக்க "பரிந்துரைக்கப்பட்ட கதிர்வீச்சாக" அறிவிக்கப்பட்டது. மீட்டரை வரையறுக்க பிஐபிஎம் தற்போது ஈலிநியான் சீரொளி அலைநீளத்தை பின்வருமாறு கணக்கிடுகிறது: மதிப்பிடப்பட்ட சார்பு சீர்தர உறுதியின்மை (U) of உடன் .கலைச்சொல் 'சார்பு சீர்தர உறுதியின்மை' அவர்கள் வலைத்தளத்தில் விவரிக்கப்பட்டுள்ளது: National Research Council 2010 இந்த உறுதியின்மை ஆய்வகங்களில் மீட்டரை நிலைநிறுத்துவதில் ஓர் தடையாக உள்ளது. அணுக் கடிகாரத்திலிருந்து பெறப்படும் நொடி அளவில் இருக்கும் உறுதியின்மையை விட பலமடங்கு கூடுதலான உறுதியின்மையுடன் உள்ளது.National Institute of Standards and Technology 2011. இதனால், ஆய்வகங்களில் மீட்டர் ஈலிநியான் சீரொளியின் அலைநீளங்களாக ஏற்றுக் கொள்ளபடுகிறது (வரையறுக்கப்படுவதில்லை). இதில் அலை அதிர்வைக் கண்டறிவதில் உள்ள பிழையே உள்ளது. SI அளவுகளில் மீட்டரின் கீழ்வாய், மேல்வாய் அலகுகள் மீட்டரின் ஒன்றுக்கும் கீழான பதின்ம முறை அளவுகளும் (பதின்ம கீழ்வாய் அலகுகள்), ஒன்றைவிட மேலான பதின்ம முறை அலகுகளும் (பதின்ம மேல்வாய் அலகுகள்) சீரான SI முன்னொட்டுச் சொற்கள் கொண்டு குறிக்கப்பெறுகின்றன. அவற்றைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம். அடுக்குபெயர்குறியீடுஅடுக்குபெயர்குறியீடு10−1டெசிமீட்டர் (டெசிமீ)dm101டெக்காமீட்டர் (டெமீ)dam10−2சென்டிமீட்டர் (செமீ) (அ) சதம மீட்டர் cm102எக்டோமீட்டர் (எக்மீ)hm 10−3மில்லிமீட்டர் (மிமீ)mm103கிலோமீட்டர் (கிமீ)km10−6மைக்ரோமீட்டர் (மைமீ)µm106மெகாமீட்டர் (மெமீ)Mm10−9நானோமீட்டர் (நாமீ)nm109கிகாமீட்டர் (கிகாமீ)Gm10−12பைக்கோமீட்டர் (பைமீ)pm1012டெர்ராமீட்டர் (டெர்மீ)Tm10−15ஃபெம்டோமீட்டர் (ஃபெர்மி)fm1015பேட்டாமீட்டர் (பேமீ)Pm10−18அட்டோமீட்டர் (அமீ)am1018எக்சாமீட்டர் (எக்மீ)Em10−21செப்டோமீட்டர் (செப்மீ)zm1021சேட்டாமீட்டர் (சேமீ) Zm10−24யொக்டோமீட்டர் (யோக்மீ)ym1024யொட்டாமீட்டர் (யோட்மீ) Ym மற்ற அலகுகளின் சமநிலை மெட்ரிக் அலகு மற்ற அலகுகளில்மற்ற அலகுமெட்ரிக் அலகுகளில் 1 மீட்டர் ≈ 1.0936 யார் (நீள அலகு)கள் 1 யார் (நீள அலகு)≡ 0.9144 மீட்டர்கள் 1 மீட்டர் ≈ 39.370 அங்குலங்கள் 1 அங்குலம்≡ 0.0254 மீட்டர்கள் 1 சென்டிமீட்டர் ≈ 0.39370 அங்குலம் 1 அங்குலம்≡ 2.54 செ.மீ 1 மில்லிமீட்டர் ≈ 0.039370 அங் 1 அங்≡ 25.4 மி.மீ 1 மீட்டர் ≡ 1×10அங்குசுட்ராம் 1 அங்குசுட்ராம்≡ 1×10 மீட்டர் 1 நனோமீட்டர் ≡ 10அங்குசுட்ராம் 1 அங்குசுட்ராம்≡ 100 பிக்கோமீட்டர்கள் இந்த அட்டவணையில் , "அங்" மற்றும் "யார்" முறையே "பன்னாட்டு அங்குலத்தையும்" "பன்னாட்டு யாரையும்" குறிக்கின்றனAstin & Karo 1959. "≈" எனில் "ஏறத்தாழ சமமான"; "≡" எனில் "வரையறைப்படி சமன்" அல்லது "மிகச்சரியாக சமன்." ஒரு மீட்டர் மிகச்சரியாக அங்குலத்திற்கும் யார்டுகளுக்கும் சமன். ஒன்றிலிருந்து மற்றது பெற மூன்று "3" கொண்டு எளிய நினைவி ஒன்றுள்ளது. 1 மீட்டர் ஏறத்தாழ 3அடி–அங்குலங்களுக்கு சமனானது.Well-known conversion, publicised at time of metrication. இதிலுள்ள பிழை 0.125மிமி கூடுதலாகும். சான்றுகோள்கள் மேலும் படிக்க Alder, Ken. (2002). The Measure of All Things : The Seven-Year Odyssey and Hidden Error That Transformed the World. Free Press, New York பகுப்பு:SI அடிப்படை அலகுகள் பகுப்பு:நீள அலகுகள்
திசுள் உயிரியல்
https://ta.wikipedia.org/wiki/திசுள்_உயிரியல்
REDIRECT உயிரணு
கோணம்
https://ta.wikipedia.org/wiki/கோணம்
thumb|right|ஒரே புள்ளியிலிருந்து தொடங்கும் இரு கதிர்களால் அடைவுபெறும் கோணம் thumb|right|கோணத்தின் குறியீடு ∠ இன் ஒருங்குறி U+2220. ஒரே புள்ளியில் இருந்து கிளம்பும் இரண்டு கதிர்கள் உருவாக்கும் வடிவம் கோணம் (Angle) எனப்படுகிறது. வெட்டிக்கொள்ளும் இரண்டு கோடுகளின் சாய்வுகளின் வித்தியாசம் காண கோணம் உதவுகிறது. கோணங்களை அளக்கும் அலகுகளுள் பாகை ஒரு வகையாகும். இதன் குறியீடு °. ஒரு தளத்திலமைந்த இரு கதிர்களால் கோணம் உருவாகிறது. இத்தளம் யூக்ளிடிய தளமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. யூக்ளிடிய வெளியிலும், பிற வெளிகளிலும் இரு தளங்கள் வெட்டிக் கொள்வதால் கோணங்கள் உருவாகின்றன. இக்கோணங்கள் இருமுகக் கோணங்கள் (dihedral angles) எனப்படுகின்றன. தளத்திலமைந்த இரு வளைகோடுகளுக்கு இடையே உருவாகும் கோணம், அவை வெட்டிக்கொள்ளும் புள்ளிகளில் அவ்வளைகோடுகளுக்கு வரையப்படும் தொடுகோடுகளுக்கு இடைப்பட்ட கோணமாகும். இதேபோல, ஒரு கோளத்தின் இரு பெரு வட்டங்களுக்கு இடையே உருவாகும் கோளக் கோணமானது அவ்விரு பெருவட்டங்களால் தீர்மானமாகும் தளங்களுக்கு இடைப்பட்ட இருமுகக் கோணம் ஆகும். கோணங்களின் குறியீடுகள் பொதுவாக கோணங்களின் அளவைக் குறிக்கும் மாறிகளைக் குறிப்பதற்கு கிரேக்க எழுத்துக்கள் (α, β, γ, θ, φ, ...) பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கில எழுத்துக்களாலும் கோணங்கள் குறிக்கப்படுகின்றன. வடிவவியல் வடிவங்களில் கோணங்களை வரையறுக்கும் மூன்று புள்ளிகளோடு இணைக்கப்படும் குறியீடுகளாலும் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, AB , AC கதிர்களால் உருவாகும் கோணத்தின் குறியீடு: ∠BAC அல்லது சில சமயங்களில், கோணத்தின் முனையை மட்டும் குறிப்பிடும் ஒற்றை எழுத்தால் மட்டும் (∠A) குறிக்கப்படுகிறது. கோண வகைகள் தனிப்பட்ட கோணங்கள் செங்கோணம், குறுங்கோணம், விரிகோணம், நேர்கோணம், சாய்வுக் கோணம், பின்வளைகோணம் ஆகியன சில கோணவகைகளாகும். பூஜ்ஜிய கோணம் ஒரே புள்ளியில் ஆரம்பிக்கும் இரு கதிர்களுக்கு இடைப்பட்ட தூரம் 0 பாகை எனில் அக்கோணம் பூஜ்ஜிய கோணம் எனப்படும். செங்கோணம் thumb|left|150px|செங்கோணம். 90 பாகை அளவுள்ள கோணம், செங்கோணம் எனக் குறிப்பிடப்படுகின்றது. இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது அவற்றுக்கு இடைப்பட்ட கோணம் சரியாக 90 பாகையாக இருந்தால் அது செங்கோணம் எனப்படும். குறுங்கோணம் thumb|left|150px|குறுங்கோணம் இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது 90 பாகைக்கும் குறைவாக இருந்தால் அது குறுங்கோணம் ஆகும். எடுத்துக்காட்டு : 15°, 30°,60°,75° கோணங்கள் விரிகோணம் thumb|left|150px|விரிகோணம் இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது 90 பாகைக்கு அதிகமாகவும் 180 பாகைக்கும் குறைவாக இருந்தால் அது விரிகோணம் ஆகும். x° = விரிகோணம் எனில்: 90° <x° < 180° ஆக அமையும். நேர் கோணம் thumb|left|150px|நேர் கோணம் இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது சரியாக 180 பாகையாக இருந்தால் அது நேர் கோணம். ஒரு கோணத்தின் கதிர்கள் , எதிர்க்கதிர்களாக உருவாகும்போது நேர்கோடு உருவாகிறது . பின்வளை கோணம் 180° க்கும் 360° க்கும் இடைப்பட்ட அளவுகளைக் கொண்ட கோணம் பின்வளை கோணம் (reflex angles) அல்லது மடக்கு கோணம் ஆகும். முழுக் கோணம் thumb|left|150px|முழுக்கோணம் 360° அல்லது 2π ரேடியன் அளவுள்ள கோணம் முழுக் கோணம். சாய்வுக் கோணம் 90° ஆகவும் 90° இன் மடங்காகவும் இல்லாத கோணங்கள் சாய்வுக் கோணங்கள். நிரப்புக்கோணங்கள் இரண்டுகோணங்களின் கூடுதல் 90 என்றால் அந்த இரண்டு கோணங்களும் நிரப்புக்கோணங்கள் ஆகும் . ஒவ்வொரு கோணமும் மற்றோரு கோணத்தின் நிரப்பு கோணம் ஆகும் . 30° இன் நிரப்புக்கோணம் 60° ஆகும் . மற்றும் 60° இன் நிரப்புக்கோணம் 30° மிகை நிரப்புக்கோணம் இரண்டுகோணங்களின் கூடுதல் 180 என்றால் அந்த இரண்டு கோணங்களும் நிரப்புக்கோணங்களும் மிகை நிரப்புக்கோணம் ஆகும் . ஒவ்வொரு கோணமும் மற்றோரு கோணத்தின் மிகை நிரப்பு கோணம் ஆகும் . 120° இன் மிகை நிரப்பு கோணம் 60°, 60° இன் மிகை நிரப்பு கோணம் 120 அட்டவணை கோணங்களின் பெயர்கள், இடைவெளிகள், அலகுகள் கீழே அட்டவணப்படுத்தப் பட்டுள்ளன: பெயர்   குறுங்கோணம் செங்கோணம் விரிகோணம் நேர்கோணம் பின்வளைகோணம் முழுக்கோணம் Units இடைவெளி சுற்றுகள்   ரேடியன்கள் பாகைகள்   (0,90)° 90° (90,180)° 180° (180,360)° 360° சமான கோணச் சோடிகள் சமவளவுள்ள கோணங்கள், சம கோணங்கள் அல்லது சர்வசமக் கோணங்கள். சுற்றின் முழுஎண் மடங்கான சுற்றுகளில் அளவில் வேறுபாடு கொண்டவையாகவும், ஒரே கதிரை தங்களது முடிவுப் பக்கங்களாகவும் கொண்ட இரு கோணங்கள் ஒருமுடிவுக் கோணங்கள் (coterminal angles). ஒரு கோணத்தின் குறுங்கோண வடிவம் அதன் குறிப்பீட்டுக் கோணம். எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு கோணத்தின் அளவிலிருந்து தேவைக்கேற்பத் தொடர்ந்து நேர்கோண மதிப்பைக் (1/2 சுற்று, 180°, π ரேடியன்) கூட்டுவது அல்லது கழிப்பதன் மூலம் பெறப்படும் குறுங்கோண வடிவமானது (0 - 1/4 சுற்று, 90°, அல்லது π/2 ரேடியன்), அதன் குறிப்பீட்டுக் கோணம்http://www.mathwords.com/r/reference_angle.htm. எடுத்துக்காட்டாக, 30° இன் குறிப்பீட்டுக் கோணம் 30° 150° இன் குறிப்பீட்டுக் கோணம் 30° (180°-150° = 30°) 750° இன் குறிப்பீட்டுக் கோணம் 30° (750 - 4x180°) = 30°) 45° இன் குறிப்பீட்டுக் கோணம் 45° 225° இன் குறிப்பீட்டுக் கோணம் 45° (225°-180°=45°) 405° இன் குறிப்பீட்டுக் கோணம் 45° (405°-2x180=45°) எதிர் கோணங்களும் அடுத்துள்ள கோணங்களும் thumb|150px|left|கோணங்கள் A, B இரண்டும் ஒரு சோடி எதிர் கோணங்கள்; C, D இரண்டும் ஒரு சோடி அடுத்துள்ள கோணங்கள். இரு கோடுகள் ஒரு புள்ளியில் வெட்டிக்கொள்ளும்போது நான்கு கோணங்கள் உருவாகின்றன. இவை ஒன்றுக்கொன்று அமைந்திருக்கும் விதத்தைக் கொண்டு எதிர் கோணங்கள், அடுத்துள்ள கோணங்கள் எனச் சோடிகளாகப் பிரிக்கப்பட்டு அழைக்கப்படுகின்றன. எதிர் கோணங்கள் ஒன்றுக்கொன்று எதிராக அமையும் ("X"-வடிவிலமையும்) கோணச் சோடிகள், குத்துநிலை கோணங்கள், எதிர் கோணங்கள், குத்தெதிர் கோணங்கள் என அழைக்கப்படுகின்றன. ஒரு சோடி எதிர் கோணங்கள் சமமானவை. இக்கூற்று குத்துக்கோணத் தேற்றம் ஆகும். இத்தேற்றம் தேலேசால் நிறுவப்பட்டது. Proposition I:13.William G. Shute, William W. Shirk, George F. Porter, Plane and Solid Geometry, American Book Company (1960) pp. 25-27 இருசோடி எதிர் கோணங்களும் அடுத்துள்ள கோணங்களுக்கு மிகைநிரப்பிகளாக அமைவதால் எதிர் கோணங்கள் சமவளவானவை எனக் காட்டப்பட்டுள்ளது. ஒரு வரலாற்றுக் குறிப்பின்படி, தேலேசு எகிப்திற்குச் சென்றபோது, இரு வெட்டிக்கொள்ளும் கோடுகளை வரைந்தபோதெல்லாம் அவற்றின் எதிர் கோணங்களை அளந்து அவை சமமாய் இருப்பதை எகிப்தியர்கள் உறுதி செய்துகொண்டதைக் கண்டார். அதனால், நேர்க்கோணங்கள் எல்லாம் சமமானவை என்பதாலும், சமமானவற்றோடு சமமானவற்றைக் கூட்டுவதலோ கழிப்பதலோ கிடைக்கக்கூடியவையும் சமமானவையாகவே இருக்கும் என்ற பொதுக் கருத்தின்படியும், அனைத்து எதிர் கோணங்களும் சமம் எனத் தேலேசு நிறுவினார் என அறியப்படுகிறது. மேலுள்ள படத்தில் கோணம் A = x எனக் கொள்ளலாம். இரு அடுத்துள்ள கோணங்கள் ஒரு நேர்கோட்டை அமைப்பதால் அவை மிகைநிரப்பு கோணங்கள். கோணங்கள் A , C இரண்டும் அடுத்துள்ள கோணங்களாக இருப்பதால், C = 180 − A = 180 − x. இதேபோல A , D இரண்டும் அடுத்துள்ள கோணங்கள் என்பதால்.D = 180 − A = 180 − x. எனவே எதிர் கோணங்கள் C , D இரண்டும் சர்வசமம். இதேமுறையில் எதிர் கோணங்கள் A , B இரண்டும் சர்வசமம் என நிறுவலாம் அடுத்துள்ள கோணங்கள் right|thumb|225px|கோணங்கள் A , B இரண்டும் அடுத்துள்ள கோணங்கள். ஒரே உச்சியையும் ஒரு பொதுப் பக்கத்தையும் கொண்ட கோணங்கள் அடுத்துள்ள கோணங்கள் ஆகும். அடுத்துள்ள கோணங்களுக்கு வேறு உட்புள்ளிகள் எதுவும் பொதுவாக இருக்காது. அதாவது அடுத்துள்ள கோணங்கள் அடுத்தடுத்து ஒரு பொதுக்கரத்துடன் இருக்கும். இரு அடுத்துள்ள கோணங்களின் கூடுதல் 90° எனில் அவை நிரப்பு கோணங்கள்; இரு அடுத்துள்ள கோணங்களின் கூடுதல் 180° எனில் அவை மிகைநிரப்புக் கோணங்கள் இரு கோடுகளை (பொதுவாக இணை கோடுகள் ஒரு குறுக்கு வெட்டி வெட்டும்போது, உருவாகும் கோணங்கள் உட்கோணங்கள், வெளிக்கோணங்கள், ஒத்த கோணங்கள், ஒன்றுவிட்ட உட்கோணங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. கோணங்களை அளத்தல் பொதுவாக ஒரு கோணத்தின் அளவு, அக்கோணத்தின் ஒரு கரத்தை மற்றொன்றுடன் பொருந்தச் செய்யத் தேவையான சுழற்சியின் அளவாகக் கொள்ளப்படுகிறது. சமவளவு கொண்ட கோணங்கள் சமகோணங்கள், சர்வசம கோணங்கள் அல்லது சமவளவுள்ள கோணங்கள் என அழைக்கப்படுகின்றன. கோணங்களின் முக்கிய அலகுகள் பாகைகள், ரேடியன்கள், சுற்று இன்னும் சில ஆகும். கோணத்தின் அலகுகள் 1. பாகை பாகை என்பது கோணத்தை அளப்பதற்குரிய ஒரு அலகு ஆகும். இது 60 கலைக்குச் சமனானது ஆகும். இது ° என்னும் குறியீட்டினால் குறிக்கப்படுவது வழக்கம். 60° என எழுதும்போது அது 60 பாகை என்பதைக் குறிக்கும். ஒரு தளத்தில் அதிலுள்ள ஒரு புள்ளியை முழுவதுமாகக் சுற்றி அமையும் கோணம் 360 பாகை (360°) ஆகும். பொதுவான தேவைகளுக்கு ஒரு பாகை என்பது போதுமான அளவு சிறிய அலகு ஆகும். ஆனால் வானியல் போன்ற தொலை தூர நிகழ்வுகளைக் கையாளும் துறைகளில் ஒரு பாகை என்பது ஒப்பீட்டளவில் சிறியது அல்ல. 2.ரேடியன் ஆரையம் என்பது ஒரு கோண அளவு. இதனை ரேடியன் என்றும் கூறுவர். ஒரு வட்டத்தின் வளைவு வெட்டின் (வில்லின்) நீளம் அவ் வட்டத்தின் ஆரத்திற்கு (ஆரைக்கு) சமம் என்றால் அவ் வளைவு வெட்டானது (வில்லானது) வட்டத்தின் நடுவே வடிக்கும் கோணம் ஓர் ஆரையம் ஆகும். வட்டத்தின் ஒரு சுற்றின் மொத்தக் கோணத்தின் அளவு இந்த 2π ஆரையம் (ரேடியன்) (கிட்டத்தட்ட 6.28318531 ஆரையம்). ஆரையத்தின் ஆங்கிலச் சொல்லாகிய ரேடியன் என்னும் அலகை rad எனக் குறிப்பர். தமிழில் ஆரையம் அல்லது ரேடி எனக் குறிக்கப்படும். பாகைக் கணக்கில் ஓர் ஆரையம் என்பது அல்லது 57.2958 பாகை ஆகும கோணத்தை அளக்கும் கருவிகள் 1.கோணமானி (Angle Dekker) 'கோணமானியானது தானிணை ஒளிமானியின் அடிப்படையில் செய்யப்பட்டது ஆகும். இதில், இணை ஆடியின் குவிமையத்தில், ஒரு குறுக்குக் கம்பிக்கு பதிலாக, ஒரு அளவுகோல் பதியப்பட்டிருக்கும். இது ஒளிக் கதிரோடு சென்று எதிரொளிக்கும் பரப்பின் மேல் பட்டு, விழியாடியின் பார்வை தளத்தில் வைக்கப்பட்டுள்ள இன்னொரு அளவு கோலின் மேல் செங்குத்தாக விழும். இந்த இரண்டு அளவு கோல்களும் எவ்வாறு இணைகின்றன என்பதைப் பொறுத்து, கோணத்தை அளக்கபயன்படுகிறது'. 2. சரிவு கோண அளவிகள் (Bevel Protractors) கோணத்தை வரைவதற்கும், அளப்பதற்கும் அரைவட்ட அல்லது முழுவட்ட கோண அளவிகளைப் பயன்படுத்துவோம் . ஒரு முழு வட்ட கோண அளவியின் மையத்தில் சுற்றும் வகையில் ஒரு வட்டத் தட்டைப் பொருத்தி, அதில் ஒரு வெர்னியர் அளவுகோலை அமைத்துவிட்டால், இந்த வட்டத்தட்டு, எவ்வளவு கோணத்துக்கு சுற்றுகிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டுவிடலாம்.சரிவு கோணஅளவியின் அடிப்பாகத்தில் ஒரு சட்டத்தை நிலையாகப் பொருத்திவிட்டு, சுற்றும் வட்டத் தட்டில் ஒரு நீண்ட சட்டத்தை பொருத்திவிட்டால், இச்சட்டம் சுற்றும் போது அதற்கும் அடிச்சட்டத்துக்கும் இடையில் உள்ள கோணத்தை எளிதாக அளந்து விடலாம். இதன் அடிப்படையில் அமைக்கப்பட்டதே சரிவு கோண அளவிகள் ஆகும். 3. சாய்வுமானி (Clino meter) சாய்வாக இருக்கும் கோணத்தை துல்லியமாக அளக்க கோணஅளவியோ, சாராய மட்டமோ பயன்படாது. ஏனென்றால் கோணஅளவிக்கு கோணத்தை அளக்கும் இரண்டு பரப்புகள் தேவை. சாராய மட்டமோ குறைவான கோணத்தையே அளக்கவல்லது. இக்குறையை போக்க கோணமானியையும், சாராய மட்டத்தையும் இணைத்து ஒரு புதிய கருவி உருவாக்கப்பட்டது. இதற்கு பெயர் தான் சாய்வுமானி ஆகும். 4. கோண கடிகைகள் (Angle gauges) கோண அளவுக்கு ஏற்ப நிலையாக இருப்பது தான் கோண கடிகைகள் ஆகும்.இவை செவ்வக வடிவத்தில், பல கோண அளவுகளில் செய்யப்பட்ட கலப்பு எஃகினால் ஆனது ஆகும். இதன் அளக்கும் பரப்பு வழவழப்பாக, ஒன்றன் மேல் ஒன்றை வைத்து நகர்த்தினால், பற்றிக் கொள்ளும் வகையில் இருக்கும். நேர்கோணமும், எதிர்கோணமும் கோணத்தின் வரையறையில் எதிர்கோணக் கருத்துரு இல்லையென்றாலும், திசைப்போக்கு, எதிர் திசை சுழற்சியைக் குறிப்பதற்கு நேர், எதிர் கோண கருத்துரு உதவியாய் அமையும். இருபரிமாண கார்ட்டீசிய ஆள்கூற்று முறைமையில், ஆதிப்புள்ளியை உச்சியாகவும், நேர் x-அச்சைத் தொடக்கப் பக்கமாவும் கொண்டு கோணம் வரையறுக்கப்படுகிறது. தொடக்கப் பக்கத்திலிருந்து பாகை, ரேடியன் அல்லது சுற்றில் அளக்கப்படும் கோண அளவைக் கொண்டு முடிவுப்பக்கம் அமைகிறது. நேர் x-அச்சிலிருந்து நேர் y-அச்சை நோக்கி நிகழும் சுழற்சி நேர் கோணங்கள்; நேர் x-அச்சிலிருந்து எதிர் y-அச்சை நோக்கி நிகழும் சுழற்சி எதிர் கோணங்கள்; கார்டிசியன் ஆள்கூறுகளின் திட்ட வடிவில் (x-அச்சு வலப்புறமும் y-அச்சு மேற்புறமாகவும் அமைதல்) நேர் சுழற்சியானது எதிர்க் கடிகாரத்திசையாகவும், எதிர் சுழற்சியானது கடிகாரத்திசையாகவும் இருக்கும். பல இடங்களில் −θ கோணம் என்பது, ஒரு முழுச் சுற்றுக் கோணத்திலிருந்து θ'' கோணவளவைக் கழித்தபின் கிடைக்கும் கோணத்திற்குச் சமானமானது. எடுத்துக்காட்டாக,  −45° என்பது or 315° க்குச் (360° − 45°) சமானம். எனினும்  −45° சுழற்சியும் 315° சுழற்சியும் ஒன்றாகாது. முப்பரிமாணத்தில் கடிகாரத் திசை, எதிர் கடிகாரத் திசை என்பதற்குப் பொருளில்லை. எனவே நேர் கோணம், எதிர் கோணங்களின் திசையை வரையறுப்பதற்கு, கோணத்தின் உச்சிவழியாக, கோணத்தின் பக்கங்கள் அமையும் தளத்திற்குச் செங்குத்தான திசையன் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேற்கோள்கள் சுட்டிகள் கோணம் மற்றும் பிற அலகுகள் மாற்றப் பொறி பகுப்பு:முக்கோணவியல் பகுப்பு:கோணங்கள்
புள்ளி
https://ta.wikipedia.org/wiki/புள்ளி
புள்ளி (Point) என்பது கனஅளவு, பரப்பளவு மற்றும் நீளமற்று, இருப்பிடம் (Location) மட்டுமே கொண்டு ஒரு வெளியில் வரையறுக்கப்பட்ட வடிவவியல் கோட்பாடு ஆகும். இக்கோட்பாடு இயற்பியல், திசையன் வரைகலை (Vector graphics) ஆகியவற்றில் பயன்படுகிறது. கணிதத்தில் எந்த ஒரு வடிவமோ, வெளியோ புள்ளிகளால் ஆனதாகக் கருதப்படுகிறது. நவீன கணிதத்தில் வெளி என்ற கணத்தின் ஒரு உறுப்பாகப் புள்ளி கருதப்படுகிறது. குறிப்பாக யூக்ளிடிய வடிவவியலில் புள்ளியை அடிப்படைக் கருத்துருவாகக் கொண்டு பிற வடிவவியல் கோட்பாடுகள் எழுப்பப்பட்டுள்ளன. அடிப்படைக் கருத்துருவானதால் புள்ளியை ஏற்கனவே வரையறுக்கப்பட்டவற்றைக் கொண்டு வரையறுக்க முடியாது. எனவே, அதன் பண்புகளை அடிக்கோள்களாக வரையறுப்பதன் மூலம் புள்ளியானது வரையறுக்கப்படுகிறது. யூக்ளிடிய வடிவவியலில் thumb|இருபரிமாண யூக்ளிடிய வெளியில் குறிக்கப்பட்டுள்ள புள்ளிகள் (நீலம்). யூக்ளிடிய வடிவவியலில் மிக முக்கியமான அடிப்படை வடிவவியல் பொருட்களில் ஒன்றாக புள்ளி கருதப்படுகிறது. யூக்ளிடின் புள்ளிக்கான வரையறையானது அதனை "எதுவும் இல்லாத ஒன்று" ("that which has no part") என்கிறது. இருபரிமாண யூக்ளிடிய வெளியில் ஒரு புள்ளி, இரு எண்களைக் கொண்ட வரிசைச் சோடியால் (x, y) குறிக்கப்படுகிறது. முதல் எண் x கிடைமட்டத்தையும், இரண்டாவது எண் y செங்குத்துமட்டத்தையும் குறிக்கின்றன. முப்பரிமாண யூக்ளிடிய வெளியில் இதே கருத்து பொதுமைப்படுத்தப்படுகிறது. முப்பரிமாண வெளியிலமைந்த புள்ளி, மூன்று எண்களைக் கொண்ட வரிசைப்படுத்தப்பட்ட மும்மையால் (x, y, z) குறிக்கப்படுகிறது. n பரிமாண வெளியில் அமையும் புள்ளி, n வரிசைப்படுத்தப்பட்ட உறுப்புகளைக் கொண்ட (a1, a2, … , an) எனக் குறிக்கப்படுகிறது. மேற்கோள்கள் Clarke, Bowman, 1985, "Individuals and Points," Notre Dame Journal of Formal Logic 26: 61–75. De Laguna, T., 1922, "Point, line and surface as sets of solids," The Journal of Philosophy 19: 449–61. Gerla, G., 1995, "Pointless Geometries " in Buekenhout, F., Kantor, W. eds., Handbook of incidence geometry: buildings and foundations. North-Holland: 1015–31. Whitehead A. N., 1919. An Enquiry Concerning the Principles of Natural Knowledge. Cambridge Univ. Press. 2nd ed., 1925. --------, 1920. The Concept of Nature. Cambridge Univ. Press. 2004 paperback, Prometheus Books. Being the 1919 Tarner Lectures delivered at Trinity College. --------, 1979 (1929). Process and Reality. Free Press. வெளி இணைப்புகள் Definition of Point with interactive applet Points definition pages, with interactive animations that are also useful in a classroom setting. Math Open Reference பகுப்பு:வடிவவியல்
பரப்பளவு
https://ta.wikipedia.org/wiki/பரப்பளவு
right|thumb|மூன்று வடிவங்களின் சேர்ந்த பரப்பு 15 மற்றும் 16 சதுரங்களுக்கு இடையில் அமைகிறது. கணிதத்தில் பரப்பளவு அல்லது பரப்பு (Area) என்பது இருபரிமாண மேற்பரப்புகள் அல்லது வடிவங்கள் ஒரு தளத்தில் எவ்வளவு பரவி உள்ளது என்பதைத் தருகின்ற ஓர் அளவை. ஒரு வடிவத்தின் மாதிரியைக் குறிப்பிட்ட அளவில் அமைப்பதற்குத் தேவைப்படும் மூலப்பொருளின் அளவாக அவ்வடிவத்தின் பரப்பைக் கருதலாம். ஒரு-பரிமாணத்தில் ஒரு வளைகோட்டின் நீளம் மற்றும் முப்பரிமாணத்தில் ஒரு திண்மப்பொருளின் கனஅளவு ஆகிய கருத்துருக்களுக்கு ஒத்த கருத்துருவாக இருபரிமாணத்தில் பரப்பளவைக் கொள்ளலாம். ஒரு வடிவத்தின் பரப்பளவை நிலைத்த பரப்பளவு கொண்ட சதுரங்களின் பரப்பளவுகளுடன் ஒப்பிடுவதன் மூலம் காணலாம். அனைத்துலக முறை அலகுகளில் பரப்பளவின் திட்ட அலகு (SI) சதுர மீட்டர் (மீ2) ஆகும். ஒரு சதுர மீட்டர் என்பது ஒரு மீட்டர் பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பினைக் குறிக்கிறது.Bureau International des Poids et Mesures மூன்று சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதொரு வடிவத்தின் பரப்பளவு, ஒரு மீட்டர் பக்க நீளம் கொண்ட மூன்று சதுரங்களின் பரப்பளவுகளுக்குச் சமம். கணிதத்தில்ஓரலகு சதுரம் என்பது ஓரலகு பரப்பளவு கொண்ட சதுரமாக வரையறுக்கப்படுகிறது. எந்தவொரு வடிவத்தின் பரப்பளவும் ஒரு மெய்யெண்ணாகும். முக்கோணங்கள், செவ்வகங்கள் மற்றும் வட்டங்கள் போன்ற எளிய வடிவங்களின் பரப்பளவு காணும் வாய்ப்பாடுகள் பல உள்ளன. பலகோணத்தை முக்கோணங்களாகப் பிரித்து, முக்கோணத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாட்டினைப் பயன்படுத்தி பலகோணத்தின் பரப்பினைக் காண முடியும். நுண்கணிதம் மூலம், வளைந்த வரம்பு கொண்ட வடிவங்களின் பரப்பு காணலாம். தள வடிவங்களின் பரப்பு காணும் நோக்கம் நுண்கணிதம் வளர வழி வகுத்துள்ளது. கோளம், கூம்பு, அல்லது உருளை போன்ற திண்மப் பொருள்களின் வரம்பாக அமையும் மேற்தளங்களின் பரப்பளவு அவற்றின் மேற்பரப்பளவென அழைக்கப்படும். பண்டைய கிரேக்க கணிதவியலாளர்கள் எளிய வடிவங்களின் மேற்பரப்பு காணும் வாய்ப்பாடுகளைக் கண்டறிந்துள்ளனர். எனினும் சிக்கலான வடிவங்களின் மேற்பரப்பு காண பலமாறி நுண்கணிதம் தேவைப்படுகிறது. தற்கால கணிதத்தில் பரப்பளவு முக்கிய பங்கு வகிக்கிறது. வடிவவியல் மற்றும் நுண்கணிதம் இரண்டிலும் பரப்பளவின் முக்கியத்துவமுடையதாய் உள்ளது. நேரியல் இயற்கணிதத்தில் அணிக்கோவையின் வரையறை பரப்பளவுவின் தொடர்புடையதாய் அமைகிறது. வகையீட்டு வடிவவியலில் பரப்பளவு ஒரு அடிப்படைப் பண்பாக உள்ளது.do Carmo, Manfredo. Differential Geometry of Curves and Surfaces. Prentice-Hall, 1976. Page 98. பொதுவாக உயர்கணிதத்தில், இருபரிமாணப்பகுதிகளின் கனஅளவின் சிறப்புவகையாகப் பரப்பளவு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அலகுகள் நீளத்தின் ஒவ்வொரு அலகிற்கும் ஒரு பரப்பளவு அலகு உள்ளது. எடுத்துக்கொள்ளப்பட்ட நீளத்தைப் பக்க அளவாகக் கொண்ட சதுரத்தின் பரப்பாக அந்தப் பரப்பளவு அலகு அமையும். எனவே பரப்பளவின் அலகுகள் சதுர மீட்டர் (மீ2), சதுர செண்டிமீட்டர் (செமீ2), சதுர மில்லிமீட்டர் (மிமீ2), சதுர கிலோமீட்டர் (கிமீ2), சதுர அடி (அடி2), சதுர கெஜம் (கெஜம்2), சதுர மைல் (மைல்2), என்றவாறு அமைகின்றன. நீள அலகுகளின் வர்க்கங்களாகப் பரப்பளவின் அலகுகள் உள்ளன. பரப்பளவின் திட்ட அலகு (SI unit) சதுர மீட்டராகும். அலகு மாற்றம் thumb|right|320px|ஒரு செண்டிமீட்டரில் 10 மிமீ உள்ளது. ஆனால் 1 செமீ2 -ல் 100மிமீ2 உள்ளது. பரப்பளவின் இரு அலகுகளுக்கிடையேயான மாற்றம் அவற்றின் ஒத்த நீள அலகுகளின் மாற்றத்தின் வர்க்கமாகும். எடுத்துக்காட்டுகள்: 1 சதுர அடி = 144 (122) சதுர அங்குலம் (1 அடி = 12 அங்குலம்) 1 சதுர கிமீ = 1,000,000 சதுர மீட்டர் 1 சதுர மீ = 10,000 சதுர செண்டிமீட்டர் = 1,000,000 சதுர மில்லிமீட்டர் 1 சதுர செமீ = 100 சதுர மில்லிமீட்டர் 1 சதுர கெஜம் = 9 சதுர அடி 1 சதுர மைல் = 3,097,600 சதுர கெஜம் = 27,878,400 சதுர அடி மேலும் 1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர் 1 சதுர அடி = சதுர மீட்டர் 1 சதுர கெஜம் = சதுர மீட்டர் 1 சதுர மைல் = சதுர கிலோமீட்டர் 1 ஏக்கர் = 100 செண்ட் 1 ஏர் = 2.47 செண்ட் 1 குறுக்கம் = 90 செண்ட் பிற அலகுகள் மெட்ரிக் முறையில் பரப்பளவின் மூல அலகு ஏர் (are) ஆகும். 1 ஏர் = 100 சதுர மீட்டர் 1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர் தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது. நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும். 1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர் 1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர் ஒரு ஏக்கர் என்பது தோராயமாக ஒரு ஹெக்டேரில் 40% அடிப்படைப் பரப்பளவு வாய்ப்பாடுகள் செவ்வகம் thumb|right|180px|இச்செவ்வகத்தின் பரப்பு . பரப்பளவு வாய்ப்பாடுகளிலேயே அடிப்படையானது ஒரு செவ்வகத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாடாகும். ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் , எனில் அச்செவ்வகத்தின் பரப்பளவு வாய்ப்பாடு:  (செவ்வகம்). இதன் சிறப்பு வகையாகச் சதுரத்தின் பரப்பளவு வாய்ப்பாட்டைக் கொள்ளலாம். செவ்வகம் போல அல்லாது சதுரத்தில் நீளம் மற்றும் அகலம் இரண்டுமே சமமாக அமைவதால் ஒரு சதுரத்தின் பக்க நீளம் எனில் அதன் பரப்பளவு காணும் வாய்ப்பாடு:  (சதுரம்). வெட்டு வாய்ப்பாடு thumb|right|180px|சமபரப்புள்ள உருவங்கள். பெரும்பாலான பிற பரப்பு வாய்ப்பாடுகள் வெட்டு முறையில் காணப்படுகிறது. இம்முறையில் எடுத்துக்கொள்ளப்பட்ட வடிவம் சிறு சிறு துண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. இச்சிறுதுண்டுகளின் பரப்புகளின் கூடுதல் மூல வடிவின் பரப்பளவிற்குக் கூடுதலாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டு: படத்தில் உள்ளது போல ஓர் இணைகரத்தை ஒரு சரிவகம் மற்றும் முக்கோணமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். பிரிக்கப்பட்ட முக்கோணத்தைச் சரிவகத்தின் மற்றொரு பக்கத்தில் பொருத்தினால் ஒரு செவ்வகம் கிடைக்கிறது. இதிலிருந்து மூல இணைகரத்தின் பரப்பளவும் இப்புது செவ்வகத்தின் பரப்பளவும் சமமாக இருப்பதைக் காணலாம். எனவே எடுத்துக்கொள்ளப்பட்ட இணைகரத்தின் பரப்பு:  (இணைகரம்). thumb|right|180px|இரண்டு சமமான முக்கோணங்கள் இதே இணைகரத்தை மூலைவிட்டத்தின் வழியாக இரு சர்வசம முக்கோணங்களாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றின் பரப்பளவும் இணைகரத்தின் பரப்பளவில் சரி பாதியாக இருக்கும். எனவே முக்கோணத்தின் பரப்பு:  (முக்கோணம்). இந்த வெட்டு முறையில் சரிவகம், சாய்சதுரம் மற்றும் பல பலகோணங்களின் பரப்பளவைக் காண முடியும். வட்டங்கள் thumb|right|ஒரு வட்டத்தை சிறு சம வட்டக்கோணத்துண்டுகளாகப் பிரித்து அவற்றை அடித்தடுத்து ஒட்டினாற்போல அடுக்கினால் தோராயமானதொரு இணைகரம் கிடைக்கிறது. படத்தில் உள்ளதுபோல எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு வட்டத்தைச் சிறிய வட்டக்கோணத்துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வட்டக்கோணத்துண்டும் தோராயமாக ஒரு முக்கோணம்போல அமையும். இத்துண்டுகளை வரிசையாக அடுத்தடுத்து ஒட்டினாற்போலக் கிடைமட்டமாக அடுக்கினால் தோராயமாக ஒரு இணைகரம் உருவாகிறது. இந்த இணைகரத்தின் உயரம் வட்டத்தின் ஆரமாகவும் () மற்றும் இணைகரத்தின் அகலம் வட்டத்தின் சுற்றளவில் பாதியாகவும் () இருக்கும். எனவே இணைகரத்தின் பரப்பளவு:  (இணைகரம்). இங்கு இணைகரம் மற்றும் வட்டம் இரண்டின் பரப்பளவும் சமம் என்பதால் வட்டத்தின் பரப்பளவு:  (வட்டம்). இம்முறையில் வெட்டப்படும் வட்டக்கோணப்பகுதிகளின் எண்ணிக்கையை மேலும் மேலும் அதிகரித்து வட்டத்தின் பரப்பளவில் ஏற்படக்கூடிய தோராயப்பிழையைக் குறைத்து விடலாம். வட்டத்தின் பரப்பை வரையறுத்தத் தொகையீடாகவும் காணலாம்:  (வட்டம்). மேற்பரப்பளவு right|thumb|180px|ஒரு கோளத்தின் மேற்பரப்பளவும் கனஅளவும் முறையே அக்கோளத்தைச் சுற்றி வெளியே அமையும் உருளையின் மேற்பரப்பளவு மற்றும் கனஅளவில் 2/3 பங்காக அமையும் என ஆர்க்கிமிடீசு காட்டியுள்ளார். ஒரு வடிவத்தின் மேற்பரப்பினை வெட்டி அதனைத் தட்டையாக்குவதன் மூலம் அவ்வடிவத்தின் மேற்பரப்பளவைக் கணக்கிடலாம். எடுத்துக்காட்டு: ஓர் உருளையின் வளைந்த மேற்தளத்தை நீளவாக்கில் வெட்டித் தட்டையாக்கினால் ஒரு செவ்வகம் கிடைக்கும். இச்செவ்வகத்தின் நீளம் உருளையின் அடிப்பகுதியாக அமைந்த வட்டத்தின் சுற்றளவாகவும் செவ்வகத்தின் அகலம் உருளையின் உயரமாகவும் இருக்கும். எனவே இச்செவ்வகத்தின் பரப்பளவு:  (உருளை). ஒரு கூம்பின் வளைந்த மேற்தளத்தை ஒரு பக்கவாட்டில் வெட்டித் தட்டையாக்கினால் ஒரு வட்டக்கோணப்பகுதி கிடைக்கும். இந்த வட்டக்கோணப்பகுதியின் ஆரம் கூம்பின் சாய்வு உயரத்திற்குச் சமமாகவும் வட்டக்கோணப்பகுதியின் வில்லின் நீளம் கூம்பின் அடிப்பகுதியாக அமைந்த வட்டத்தின் சுற்றளவாகவும் அமையும். கூம்பின் அடி ஆரம் r மற்றும் சாய்வு உயரம் h எனில்: வட்டக்கோணப்பகுதியின் பரப்பளவுக்குச் சமமாக அமையும் கூம்பின் மேற்பரப்பளவு:  (கூம்பு). ஆனால் ஒரு கோளத்தைத் தட்டையாக்குவது எளிதில் முடியாதது. ஒரு கோளத்தின் மேற்பரப்பளவின் வாய்ப்பாடு முதல்முறையாக ஆர்க்கிமிடீசால் கண்டுபிடிக்கப்பட்டது. கோளம் மற்றும் உருளைபற்றி (On the Sphere and Cylinder) என்ற அவரது படைப்பில் கோளத்தின் மேற்பரப்பளவிற்கான வாய்ப்பாடு காணப்படுகிறது. வாய்ப்பாடு:  (கோளம்). இங்கு , கோளத்தின் ஆரம். பரப்பளவு வாய்ப்பாடுகளின் பட்டியல் வடிவம் பரப்பளவு வாய்ப்பாடு மாறிகள்சமபக்க முக்கோணம் சமபக்க முக்கோணத்தின் பக்க அளவு.முக்கோணம் முக்கோணத்தின் அரைச்சுற்றளவு; , மற்றும் முக்கோணத்தின் பக்கங்களின் நீளங்கள்.முக்கோணம் மற்றும் முக்கோணத்தின் இரு பக்க நீளங்கள்; அவ்விரு பக்கங்களுக்கு இடையேயுள்ள கோணம்.முக்கோணம், முக்கோணத்தின் அடிப்பக்கம்; குத்துயரம்.சதுரம், சதுரத்தின் பக்க நீளம்.செவ்வகம், செவ்வகத்தின் நீளம்; செவ்வகத்தின் அகலம்.சாய்சதுரம் மற்றும் சாய்சதுரத்தின் மூலைவிட்டங்களின் நீளங்கள்.இணைகரம், இணைகரத்தின் அடிப்பக்க நீளம்; குத்துயரம்.சரிவகம் மற்றும் சரிவகத்தின் இரு இணைபக்கங்களின் நீளங்கள்; , அவ்விரு இணைபக்கங்களுக்கு இடையேயுள்ள தூரம்.ஒழுங்கு அறுகோணம் அறுகோணத்தின் பக்க நீளம்.ஒழுங்கு எண்கோணம் எண்கோணத்தின் பக்க நீளம். ஒழுங்குப் பலகோணம், பலகோணத்தின் பக்க நீளம்; பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை.ஒழுங்குப் பலகோணம், பலகோணத்தின் சுற்றளவு; பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை. ஒழுங்குப் பலகோணம், பலகோணத்தின் சுற்றுவட்டத்தின் ஆரம்; உள்வட்ட ஆரம்; , பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை. ஒழுங்குப் பலகோணம் பலகோணப்பக்கத்தின் நடுக்கோடு (அல்லது பலகோணத்தின் உள்வட்ட ஆரம்); பலகோணத்தின் சுற்றளவு.வட்டம், வட்டத்தின் ஆரம்; வட்டத்தின் விட்டம்.வட்டக்கோணப்பகுதி வட்டத்தின் ஆரம்; வட்டக்கோணப்பகுதியின் கோணம்.நீள்வட்டம் மற்றும் முறையே நீள்வட்டத்தின் அரை நெட்டச்சு, அரைக் குற்றச்சு நீளங்கள்.உருளயின் மொத்த மேற்பரப்பளவு மற்றும் முறையே உருளையின் ஆரம் மற்றும் உயரம்.உருளையின் வளைந்த மேற்பரப்பளவு மற்றும் முறையே உருளையின் ஆரம் மற்றும் உயரம்.கூம்பின் மொத்த மேற்பரப்பளவு மற்றும் முறையே கூம்பின் ஆரம் மற்றும் சாய்வு உயரம்.கூம்பின் வளைந்த மேற்பரப்பளவு மற்றும் முறையே கூம்பின் ஆரம் மற்றும் சாய்வு உயரம்.கோளத்தின் மேற்பரப்பளவு மற்றும் முறையே கோளத்தின் ஆரம் மற்றும் விட்டம்.பிரமிடின் மொத்த மேற்பரப்பளவு, பிரமிடின் அடிப்பகுதியின் பரப்பளவு; அடிப்பகுதியின் சுற்றளவு; , சாய்வு உயரம்.சார்பு f(x)-ன் வளைவரையை x-அச்சைப் பொறுத்து சுழற்றுவதால் உருவாகும் திண்மப்பொருளின் மேற்பரப்பளவுசார்பு f(x)-ன் வளைவரையை y-அச்சைப் பொறுத்து சுழற்றுவதால் உருவாகும் திண்மப்பொருளின் மேற்பரப்பளவு ஒழுங்கற்ற பலகோணங்களின் பரப்பளவை "நில ஆய்வாளரின் வாய்ப்பாட்டின்" மூலம் காணலாம். நுண்கணிதத்தில் பரப்பளவு right|thumb|280px|f(x) -ன் வளைவரையின் கீழ் இரு புள்ளிகளுக்கு (a மற்றும் b) இடைப்பட்ட பரப்பளவை தொகையீடாகக் கணக்கிடலாம். thumb|287px|இரு வளைவரைகளுக்கு இடைப்பட்ட பரப்பளவு அவற்றின் தொகையீடுகளின் வித்தியாசமாகக் கணக்கிடப்படுகிறது. ஒரு வளைவரையின் நேர் -மதிப்புப் பகுதி, x-அச்சு, நிலக்குத்துக்கோடுகள் x = a மற்றும் x = b (b>a) ஆகிய நான்கு வரம்புகளுக்கும் இடைப்பட்டப் பரப்பளவு: . f(x) மற்றும் g(x) ஆகிய இரு சார்புகளின் வளைவரைகளுக்கு இடைப்பட்ட பகுதி, x-அச்சு, நிலக்குத்துக்கோடுகள் x = a மற்றும் x = b (b>a) ஆகிய நான்கு வரம்புகளுக்கும் இடைப்பட்டப் பரப்பளவு: . போலார் ஆயதொலைவுகளில் வளைவரையின் சார்பு r = r(θ) எனில் பரப்பளவு: . சுட்டிகள் அலகு மாற்றப் பொறி மேற்கோள்கள் பகுப்பு:அளவியல் பகுப்பு:வடிவவியல் வடிவங்கள்
2003
https://ta.wikipedia.org/wiki/2003
2003 ஆம் ஆண்டு (MMIII) கிரிகோரியன் நாட்காட்டியின் படி புதன் கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கிபி 2003ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்பட்டது. இது மூன்றாம் ஆயிரவாண்டின் 3ஆம் ஆண்டும், 21ஆம் நூற்றாண்டின் 3ஆம் ஆண்டும், 2000களின் 4ம் ஆண்டும் ஆகும். இவ்வாண்டு அனைத்துலக நன்னீர் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. நிகழ்வுகள் ஜனவரி 8 - யூஎஸ் ஏர்வேய்சு விமானம் 5481 சார்லட் டக்லசு விமான நிலையத்தில் வீழ்ந்ததில் அனைத்து 21 பேரும் கொல்லப்பட்டனர். ஜனவரி 16 - கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. ஜனவரி 18 - கான்பரா நகரில் காட்டுதீ பரவியதில் 4 பே கொல்லப்பட்டனர். ஜனவரி 23 - நாசாவின் பயனியர் 10 விண்கலத்தில் இருந்து கடைசிக் குறிப்பு 7.5 பில்லியன் மைல் தூரத்தில் இருந்து பெறப்பட்டது. பெப்ரவரி 1 - கொலம்பியா விண்ணோடம் பூமிக்குத் திரும்ப் வரும் வழியில் டெக்சசுக்கு மேல் வெடித்ததில் அனைத்து 7 விண்ணோடிகளும் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 9 - தார்ஃபூர் போர் ஆரம்பமானது. Conflict in Darfur பெப்ரவரி 18 - தென் கொரியாவில் தொடருந்து ஒன்றில் தீ பரவியதில் 190 பேர் கொல்லப்பட்டனர். மார்ச் 19 - ஈராக் போர் ஆரம்பமானது. ஏப்ரல் 14 - மனித மரபணுத்தொகைத் திட்டம் முடிவடைந்தது. சூலை 22 - சதாம் உசைனின் இரு மகன்கள் அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டனர். அக்டோபர் 15 - சீனா தனது முதலாவது மனித விண்வெளிப்பறப்பை ஆரம்பித்தது. அக்டோபர் 24 - கான்கோர்டு விமானம் தனது கடைசிப் பறப்பை மேற்கொண்டது. டிசம்பர் 5 - உருசியாவின் தெற்கே இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர். டிசம்பர் 13 - சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 26 - ஈரானின் தென்கிழக்கே இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 40,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பிறப்புகள் இறப்புகள் பெப்ரவரி 1 - கல்பனா சாவ்லா, அமெரிக்க விண்வெளி வீராங்கனை (இ. 1961) சூலை 30 - கே. பி. சிவானந்தம், வீணை வாத்திய கலைஞர் (பி. 1917) ஆகஸ்டு 16 - இடி அமீன், உகாண்டா முன்னாள் அரசுத்தலைவர் (பி. 1924) செப்டம்பர் 9 - எட்வர்ட் டெல்லர், அங்கேரிய இயற்பியலாளர் (பி. 1908) அக்டோபர் 8 - வீரமணி ஐயர், ஈழத்துக் கலைஞர், பாடலாசிரியர் (பி. 1931) அக்டோபர் 9 - ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (பி. 1928) நோபல் பரிசுகள் இயற்பியல்: அலெக்சி ஆப்ரிகோசொவ், உருசியா, ஐக்கிய அமெரிக்கா வித்தாலி கீன்ஸ்புர்க், உருசியா அந்தோனி லெகெட், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா இரசாயனவியல்: பீட்டர் ஏக்ரே, ஐக்கிய அமெரிக்கா ரொடெரிக் மெக்கினன், ஐக்கிய அமெரிக்கா மருத்துவம்: பவுல் லாட்டர்புர், ஐக்கிஅய் அமெரிக்கா சர் பீட்டர் மான்ஸ்ஃபீல்ட், ஐக்கிய இராச்சியம் இலக்கியம்: ஜே. எம். கோட்ஸி, தென்னாபிரிக்கா அமைதி: சீரீன் இபாதி, ஈரான் பொருளியல் ராபர்ட் எங்கில், ஐக்கிய அமெரிக்கா கிளைவ் கிராஙர், ஐக்கிய இராச்சியம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் 2003ஆம் ஆண்டு ஒரு பார்வை கூகுல் தளத்தின் 2003 ஆம் ஆண்டு பதிவுகள் *
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
https://ta.wikipedia.org/wiki/பட்டுக்கோட்டை_கல்யாணசுந்தரம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram, 13 ஏப்ரல் 1930 – 8 அக்டோபர் 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. வாழ்க்கைக் குறிப்பு பிறப்பு வளர்ப்பு குடும்பம் தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு, தாமரங்கோட்டை என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதிசுந்தரம் என்கிற மூத்த சகோதரரும் வேதநாயகி என்கிற இளைய சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் சுயமரியாதை இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவம்மாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார். எழுத்தாற்றல் பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். பொதுவுடைமை ஆர்வம் இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சி(கம்யூனிஸ்ட் கட்சி)யிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டவர். இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ. ஏ. கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகியும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டு இறுதியில் கவிஞராக உருவானார். கல்யாணசுந்தரம் அவர்களின் பன்பரிமாணங்கள் விவசாயி மாடுமேய்ப்பவர் மாட்டு வியாபாரி மாம்பழ வியாபாரி இட்லி வியாபாரி முறுக்கு வியாபாரி தேங்காய் வியாபாரி கீற்று வியாபாரி மீன், நண்டு பிடிக்கும் தொழிலாளி உப்பளத் தொழிலாளி மிஷின் டிரைவர் தண்ணீர் வண்டிக்காரர் அரசியல்வாதி பாடகர் நடிகர் நடனக்காரர் கவிஞர் மறைவு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடிந்த ஐந்து வருடங்களில் தனது 29-வது அகவையில் 1959 அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார். இவர் இறக்கும் போது இவருக்கு 5 மாத குழந்தை இருந்தது. இவரது மறைவுக்கு கலைஞர் மு. கருணாநிதி இவரது அஞ்சலியில் "கண்களை மூடுகிறேன்; கல்யாணம் தெரிகிறார் -- ஒளி தெரிகிறது! கண்களைத் திறக்கிறேன்: கல்யாணம் இல்லை - கலையுலகு இருட்டாயிருக்கிறது" எனத் தெரிவித்தார். மணி மண்டபம் தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைத்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையாரின் முத்திரைக் கேள்வி சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும் புத்தரோடு ஏசுவும் உத்தமர் காந்தியும் எத்தனையோ உண்மைகளை எழுதிஎழுதி வச்சாங்க எல்லாந்தான் படிச்சீங்க என்னபண்ணிக் கிழிச்சீங்க? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய திரைப்பட பாடல்கள் : கருப்பொருள்:இயற்கை பாடல் - படம் - வெளிவந்த ஆண்டு 1.ஆடுமயிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 2.ஓ மல்லியக்கா ( மக்களைப் பெற்ற மகராசி 1957 ) 3.வம்புமொழி ( பாண்டித்தேவன்1959 ) 4.வா வா வெண்ணிலவே ( செளபாக்கியவதி 1957 ) 5.கனியிருக்கு ( எதையும் தாங்கும் இதயம் 1962 ) 6.கொக்கரக் கொக்கரக்கோ சேவலே ( பதிபக்தி 1958 ) 7.சலசல ராகத்திலே -கங்கையக்கா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) 8.துணிந்தால் துன்பமில்லை ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) 9.காக்காய்க்கும் ( பிள்ளைக் கனியமுது ) 10.வா வா சூரியனே ( பாண்டித்தேவன் 1959 ) 11.என்னருமை காதலிக்கு வெண்ணிலவே ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 ) கருப்பொருள்:சிறுவர் 12.குழந்தை வளர்வது அன்பிலே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 13.அன்புத் திருமணியே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 14.அமுதமே என் அருமைக்கனியே ( உலகம் சிரிக்கிறது 1959 ) 15.செங்கோல் நிலைக்கவே - மகுடம் காக்க ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 16.சின்னஞ்சிறு கண்மலர் ( பதிபக்தி 1958 ) 17.அழாதே பாப்பா ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958) 18.ஆனா ஆவன்னா ( அன்பு எங்கே 1958 ) 19.இந்த மாநிலத்தை பாராய் மகனே ( கல்யாணிக்குக் கல்யாணம் 1959) 20.சின்னப்பயலே...சின்னப்பயலே ( அரசிளங்குமரி 1958) 21.தூங்காதே தம்பி தூங்காதே ( நாடோடி மன்னன் 1958 ) 22.திருடாதே பாப்பா திருடாதே ( திருடாதே 1961 ) 23.ஏட்டில் படித்ததோடு இருந்துவிடுதே ( குமாரராஜா 1961 ) 24.உன்னைக் கண்டு நானாட ( கல்யாண பரிசு ) கருப்பொருள்: காதல், மகிழ்ச்சி, சோகம் 25. பக்கத்திலே இருப்பே (தேடிவந்த செல்வம் 1958) 26. வாடாத சோலை (படித்த பெண் 1956) 27. புது அழகை - ஆணும் பெண்ணும் (அவள் யார் 1959) 28. படிக்க படிக்க நெஞ்சிருக்கும் (இரத்தினபுரி இளவரசி 1959) 29. காலம் எனுமொரு ஆழக்கடலில் (அமுதவல்லி 1959) 30. உள்ளங்கள் ஒன்றாகி (புனர்ஜென்மம் 1961) 31. இன்று நமதுள்ளமே (தங்கப்பதுமை 1958) 32. கழனி எங்கும் கதிராடும் (திருமணம் 1958) 33. ஆசை வைக்கிற இடந்தெரியணும் (கலையரசி 1963) 34. என்னைப் பார்த்த கண்ணு (குமாரராஜா 1961) 35. அன்புமனம் கனிந்தபின்னே (ஆளுக்கொரு வீடு 1960) 36. நீயாடினால் ஊராடிடும் (பாண்டித் தேவன் 1959) 37. வாடிக்கை மறந்ததும் ஏனோ (கல்யாணப் பரிசு 1959) 38. நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு (இரும்புத் திரை 1960) 39. வருஷத்திலே ஒருநாளு தீபாவளி (கல்யாணிக்குக் கல்யாணம் 1959) 40. ஆசையினாலே மனம் (கல்யாணப் பரிசு 1959) 41. துள்ளி துள்ளி அலைகளெல்லாம் (தலை கொடுத்தான் தம்பி) 42. பெண்ணில்லே நீ (ஆளுக்கொரு வீடு 1960) 43. ஆண்கள் மனமே அப்படித்தான் (நான் வளர்த்த தங்கை) 44. மஞ்சப்பூசி பூ முடிச்சு (செளபாக்கியவதி 1957) 45. கன்னியூர் சாலையிலே (பொன் விளையும் பூமி 1959) 46. போட்டுக்கிட்டா ரெண்டு பேரும் -தாலி (வீரக்கனல் 1960) 47. அடக்கிடுவேன் (அவள் யார் 1959) 48. எழுந்தென்னுடன் வாராய் (தங்கப்பதுமை 1958) 49. ஆடைகட்டி வந்த நிலவோ (அமுதவல்லி 1959) 50. மானைத் தேடி மச்சான் வர (நாடோடி மன்னன் 1958) கருப்பொருள்: காதல் 51. துள்ளாத மனமும் துள்ளும் (கல்யாணப் பரிசு 1959) 52.அழகு நிலாவின் பவனியிலே ( மஹேஸ்வரி 1955 ) 53.உனக்காக எல்லாம் உனக்காக ( புதையல் 1957 ) 54.கண்ணுக்கு நேரிலே ( அலாவுதினும் அற்புத விளக்கும் 1957 ) 55.முகத்தில் முகம் பார்க்கலாம் ( தங்கப்பதுமை 1959 ) 56.கற்பின் இலக்கணமே ( நான் வளர்த்த தங்கை 1958 ) 57.எதுக்கோ இருவிழி ( செளபாக்கியவதி 1957 ) 58.உன்னை நினைக்கையிலே ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 ) 59.உன்னைக் கண்டு நானாட ( கல்யாணபரிசு 1959 ) 60.ஆசை கொண்ட நெஞ்சிரண்டு ( இரும்புத் திரை 1960 ) 61.மொகத்தைப் பார்த்து முறைக்காதிங்க ( விக்கிரமாதித்தன் 1962 ) 62.இல்லாத அதிசயமா ( கற்புக்கரசி 1957 ) 63.துடிக்கும் வாலிபமே ( மர்மவீரன் 1958 ) 64.கன்னித் தீவின் ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 65.வேல் வெல்லுமா ( மஹாலட்சுமி 1960 ) 66.ஐயா நானாடும் நாடகம் ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 67.மாந்தோப்பு வீட்டுக்காரி ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 68.பார் முழுவதுமே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 69.கண்கள் ரெண்டும் வண்டு ( அமுதவல்லி 1959 ) 70.ஊரடங்கும் வேளையிலே ( ரங்கோன் ராதா 1956 ) 71.சின்னக் குட்டி நாத்துனா ( அமுதவல்லி 1959 ) 72.இன்ப முகம் ஒன்று ( நான் வளர்த்த தங்கை 1958 ) 73.அன்பு அரும்பாகி ( தலை கொடுத்தான் தம்பி 1959 ) 74.ஒன்றுபட்ட கணவனுக்கு ( தங்கப்பதுமை 1959 ) 75.பறித்த கண்ணைப் பார்த்துவிட்டேன் ( தங்கப்பதுமை 1959 ) 76.ஓ...சின்ன மாமா ( செளபாக்கியவதி 1957 ) 77.ஓ...கோ கோ மச்சான் ( செளபாக்கியவதி 1957 ) 78.சிங்கார பூங்காவில் ஆடுவோமே ( செளபாக்கியவதி 1957 ) 79.என்றும் இல்லாமல் ( கலைஅரசி 1963 ) 80.நினைக்கும்போது நெஞ்சம் ( கலைஅரசி 1963 ) 81.கண்ணாடிப் பாத்திரத்தில் ( புனர் ஜென்மம் 1961 ) 82.உருண்டோடும் நாளில் ( புனர் ஜென்மம் 1961 ) 83.மருந்து விக்கிற ( தங்கப்பதுமை 1959 ) 84.மச்சான் உன்னைப் பாத்து ( பாசவலை 1956 ) 85.சிங்கார வேலவனே ( செளபாக்கியவதி 1957 ) 86.காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் ( கல்யாணபரிசு 1959 ) 87.காதலிலே தோல்வியுற்றான் கன்னியொருத்தி ( கல்யாணபரிசு 1959 ) 88.மங்கையரின்றி தனியாக ( குமார ராஜா 1960 ) 89.கண்ணோடு கண்ணு ( நாடோடி மன்னன் 1958 ) 90.மணமகளாக வரும் ( குமார ராஜா 1960 ) 91.நான் வந்து சேர்ந்த இடம் ( குமார ராஜா 1960 ) 92.ஆனந்தம் இன்று ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 ) 93.சின்னப் பொண்ணாண ( ஆரவல்லி 1957 ) கருப்பொருள்:நகைச்சுவை 94.நந்தவனத்திலோர் ஆண்டி ( அரசிளங்குமரி 1958) 95.மாமா மாமா பன்னாடெ ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 ) 96.காப்பி ஒண்ணு எட்டணா ( படித்த பெண் 1956 ) 97.கோபமா என்மேல் ( குல தெய்வம் 1956 ) 98.கையாலே கண்ணைக் கசக்கிக்கிட்டு ( குல தெய்வம் 1956 ) 99.கோழியெல்லாம் கூவையிலே ( குல தெய்வம் 1956 ) 100.காயமே இது மெய்யடா ( கற்புக்கரசி 1957 ) 101.ராக் ராக் ராக் ராக் இண்ட்ரோல் ( பதிபக்தி 1958 ) 102.சீவி முடிச்சிக்கிட்டு ( பிள்ளைக்கனியமுது 1958 ) 103.இந்தியாவின் ராஜதானி டில்லி ( நான் வளர்த்த தங்கை 1958 ) கருப்பொருள்: கதைப்பாடல் 104.நாட்டுக்கு ஒரு வீரன் ( ரங்கோன் ராதா 1956 ) 105.அடியார்கள் உள்ளத்தில் ( குலதெய்வம் 1956 ) கருப்பொருள்: நாடு 106.எங்கே உண்மை என் நாடே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 107. துள்ளி வரப் போறேன் ( திருமணம் 1958 ) 108.ஒற்றுமையில் ஓங்கிநின்ற ( மர்ம வீரன் 1958 ) 109.தஞ்சமென்று வந்தவரைத் ( கலையரசி 1965 ) 110.மூளை நெறஞ்சவங்க ( உத்தம புத்திரன் 1958 ) கருப்பொருள்: சமூகம் 111.வீடு நோக்கி ஓடுகின்ற ( பதிபக்தி 1958 ) 112.வீடு நோக்கி ஓடிவந்த ( பதிபக்தி 1958 ) 113.ஒரு குறையும் செய்யாம - இருக்கும் ( கண் திறந்தது 1959 ) 114.உருளுது பொரளுது ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 ) 115.ஆம்பிளைக் கூட்டம் ( புதுமைப் பெண் 1959 ) 116.பாடுபட்டு காத்த நாடு ( விக்கிரமாதித்யன் 1962 ) 117.தாயில்லை தந்தையில்ல ( ஆளுக்கொருவீடு 1960 ) 118.சூதாடி மாந்தர்களின் ( உலகம் சிரிக்கிறது 1959 ) 119.அண்ணாச்சி வந்தாச்சி ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) 120.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960)ஸ்ரீ கருப்பொருள்: அரசியல் 121.மனிதரை மனிதர் ( இரும்புத் திரை 1960 ) 122.எல்லோரும் இந்நாட்டு மன்னரே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) 123.படிப்பு தேவை அதோடு உழைப்பும் ( சங்கிலித் தேவன் 1960 ) 124.சொல்லுறதைச் சொல்லிப்புட்டேன் ( பாண்டித் தேவன் 1959 ) 125.மனுசனைப் பாத்துட்டு ( கண் திறந்தது 1959 ) 126.விஷயம் ஒன்று சொல்ல ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 ) 127.தேனாறு பாயுது செங்கதிரும் ( படித்த பெண் 1954 ) கருப்பொருள்: தத்துவம் 128.ஔவிதியென்னும் குழந்தை ( தங்கப்பதுமை 1959 ) 129.ஏனென்று கேட்கவே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 130.கல்லால் இதயம் ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 131.இரை போடும் மனிதருக்கே இரையாகும் ( பதிபக்தி 1958 ) 132.நீ கேட்டது இன்பம் ( ஆளுக்கொருவீடு 1960 ) 133.ஈடற்ற பத்தினியின் - ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே ( தங்கப்பதுமை 1959 ) 134.தர்மமென்பார் - இந்த திண்ணைப் பேச்சு ( பதிபக்தி 1958 ) 135.உனக்கெது சொந்தம் ( பாசவலை 1956 ) 136.சூழ்ச்சியிலே - குறுக்கு வழியில் ( மகாதேவி 1957 ) 137.எல்லோரும் - அது இருந்தால் ( நல்ல தீர்ப்பு 1959 ) 138.உறங்கையிலே - பொறக்கும் போது ( சக்கரவர்த்தி திருமகள் 1957 ) 139.இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் ( பாசவலை 1956 ) 140.கருவில் உருவாகி ( செளபாக்கியவதி 1957 ) கருப்பொருள்: பாட்டாளிகளின் குரல் 139.செய்யும் தொழிலே தெய்வம் ( ஆளுக்கொரு வீடு 1960 ) 140.பள்ளம் மேடுள்ள பாதையிலே ( கன்னியின் சபதம் 1958 ) 141.கொடுமை - சோகச் சுழலிலே ( பாண்டித் தேவன் 1959 ) 142.சின்னச் சின்ன இழை ( புதையல் 1957 ) 143.டீ டீ டீ ( கல்யாண பரிசு 1959 ) 144.எதிரிக்கு எதிரி ( பெற்ற மகனை விற்ற அன்னை 1958 ) 145.என் வீட்டு நாய் ( உலகம் சிரிக்கிறது 1959 ) 146.நாட்டுக்குப் பொருத்தம் - விவசாயம் ( எங்கள் வீட்டு மகாலெட்சுமி ) 147.வெங்கிமலை உச்சியிலே ( வாழவைத்த தெய்வம் 1959 ) 148.என்றும் துன்பமில்லை ( புனர் ஜன்மம் 1961) 149.பொங்காத பெருங்கடல் நீதி ( புதுமைப் பெண் 1959 ) 150.உண்மை ஒரு நாள் ( பாதை தெரியுது பார் 1960 ) 151.ஏற்றமுன்னா ஏற்றம் ( அரசிளங்குமரி 1958) 152.நன்றிகெட்ட மனிதருக்கு ( இரும்புத் திரை 1960 ) 153.உலகத்தில் இந்த மரணத்தில் - கலங்காதே ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) 154.உண்மையை -இன்ப உலகில் ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) 155.கரம்சாயா ( ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1960) 156.குட்டுகளைச் சொல்லணுமா ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 ) 157.தை பொறந்தா வழி பொறக்கும் ( கல்யாணிக்கு கல்யாணம் 1959 ) 158.சட்டையிலே தேச்சிக்கலாம் -சரக்கு ( சங்கிலித் தேவன் 1960 ) 159.சும்மா கெடந்த ( நாடோடி மன்னன் 1958 ) கருப்பொருள்: இறைமை 160.பார்த்தாயா மானிடனின் லீலையை ( நான் வளர்த்த தங்கை 1958 ) 161.ஓங்கார ரூபிநீ -அம்பிகையே ( பதிபக்தி 1958 ) 162.தேவி மனம் போலே ( இரத்தினபுரி இளவரசி 1959 ) 163.அறம் காத்த தேவியே ( மஹேஸ்வரி 1955 ) 164.ஊருக்கெல்லாம் ஒரே சாமி ( ஆளுக்கொரு வீடு 1960 ) 165.ஓ மாதா பவானி ( செளபாக்கியவதி 1957 ) 166.ஆனைமுகனே -புள்ளையாரு கோயிலுக்கு ( பாகப்பிரிவினை 1959 ) 167.கண்டி கதிர்காமம் -எட்டுஜான் குச்சிக்குள்ளே ( அரசிளங்குமரி 1958) 168.அம்மா துளசி ( நான் வளர்த்த தங்கை 1958 ) 169.கங்கை -தில்லையம்பல நடராஜா ( செளபாக்கியவதி 1957 ) கருப்பொருள்: பொது 170.தூங்காது கண் தூங்காது ( கற்புக்கரசி 1957 ) 171.வரும் பகைவர் படைகண்டு ( அம்பிகாபதி 1957 ) 172.பாசத்தால் எனையீன்ற ( அமுதவல்லி 1959 ) 173.ஜிலு ஜிலுக்கும் - சிட்டுக் குருவியிவ ( அமுதவல்லி 1959 ) 174.அள்ளி வீசுங்க காசை ( மஹேஸ்வரி 1955 ) 175.சவால் சவாலென்று ( கலைவாணன் 1959 ) 176.அடியார்க்கு - அன்பும் அறிவும் ( ஆளுக்கொரு வீடு 1960 ) 177.மங்கையருக்கு -அக்காளுக்கு வளைகாப்பு ( கல்யாணப் பரிசு 1959 ) 178.ஆட்டம் ( பாகப்பிரிவினை 1959 ) 179.கையில வாங்கினேன் ( இரும்புத் திரை 1960 ) 180.பிஞ்சு மனதில் - கோடி கோடி ( எல்லோரும் இந்நாட்டு மன்னர் 1960 ) 181.ஓரொண்ணு ஒண்ணு ( மகனே கேள் 1965 ) 182.ஆறறிவில் ஓரறிவு ( மகனே கேள் 1965 ) 183.கலைமங்கை உருவம் ( மகனே கேள் 1965 ) 184.ஆட்டம் பொறந்தது ( மகனே கேள் 1965 ) 185.மட்டமான பேச்சு ( மகனே கேள் 1965 ) 186.லால லால - பருவம் வாடுது ( மகனே கேள் 1965 ) 187.மணவரையில் - சூதாட்டம் ( மகனே கேள் 1965 ) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய பிரத்தியேக இணையத்தளம் Tamilnation.orgல் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய கட்டுரை https://web.archive.org/web/20091019230034/http://geocities.com/Athens/5180/pkalyan.html பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் Poet Pattukottai Kalyanasundaram, 80th birthday remembrance (சச்சி சிறீ காந்தா) - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தந்த பாட்டுக்கோட்டை பாடல்கள் பகுப்பு:1930 பிறப்புகள் பகுப்பு:1959 இறப்புகள் பகுப்பு:கவிஞர்கள் பகுப்பு:பாடலாசிரியர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள் பகுப்பு:தமிழகக் கவிஞர்கள் பகுப்பு:தமிழகப் பாடலாசிரியர்கள்
வைரமுத்து
https://ta.wikipedia.org/wiki/வைரமுத்து
வைரமுத்து (Vairamuthu, பிறப்பு: 13 சூலை 1953) ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் 2009 சனவரி மாதம் வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ.ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கிய பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன. வாழ்க்கைக் குறிப்பு இவர் தமிழ்நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமி - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980இல் "நிழல்கள்" திரைப்படத்தில் இது ஒரு பொன்மாலைப் பொழுது எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர்.https://tamil.oneindia.com/news/tamilnadu/vairamuthu-met-karunanidhi-235543.html படைப்புகள் கவிதைத் தொகுப்புகள் வைகறை மேகங்கள் திருத்தி எழுதிய தீர்ப்புகள் இன்னொரு தேசியகீதம் எனது பழைய பனையோலைகள் கவிராஜன் கதை இரத்த தானம் இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல தமிழுக்கு நிறமுண்டு பெய்யெனப் பெய்யும் ம‌ழை "எல்லா நதிகளிலும் எங்கள் ஓடங்கள்" கொடி மரத்தின் வேர்கள் தன்வரலாறு இதுவரை நான் கட்டுரைகள் கல்வெட்டுக்கள் என் ஜன்னலின் வழியே நேற்று போட்ட கோலம் ஒரு மெளனத்தின் சப்தங்கள் சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் வடுகபட்டி முதல் வால்கா வரை இதனால் சகலமானவர்களுக்கும் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் கொஞ்சம் தேனீர் நிறைய வானம் தமிழாற்றுப்படைhttps://books.dinamalar.com/details.asp?id=25477 புதினம் thumb|வைரமுத்துவும் ஜெயகாந்தனும் வானம் தொட்டுவிடும் தூரம்தான் மீண்டும் என் தொட்டிலுக்கு வில்லோடு வா நிலவே (வரலாற்று நாவல்) சிகரங்களை நோக்கி ஒரு போர்களமும் இரண்டு பூக்களும் காவி நிறத்தில் ஒரு காதல் தண்ணீர் தேசம் கள்ளிக்காட்டு இதிகாசம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது) கருவாச்சி காவியம் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது) மூன்றாம் உலகப்போர் (ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது) ஒலி நாடாக்கள் கவிதை கேளுங்கள் தேன் வந்து பாயுது விருதுகள் கலைமாமணி விருது - 1990. சாகித்ய அகாதமி விருது -2003. (நாவல்: கள்ளிக்காட்டு இதிகாசம்) பத்ம பூசன் விருது (2014) சிறந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருது (ஆறு முறை). விருது பெற்ற பாடல்கள் அனைத்துப் பாடல்களுக்கும் (திரைப்படம்: முதல் மரியாதை) - 1985. சின்னச்சின்ன ஆசை (திரைப்படம்: ரோஜா) - 1992. போறாளே பொன்னுத்தாயி (திரைப்படம்: கருத்தம்மா), உயிரும் நீயே (திரைப்படம்: பவித்ரா) - 1994 முதன் முறை கிள்ளிப் பார்த்தேன் (திரைப்படம்: சங்கமம்) - 1999. நெஞ்சில் ஜில் ஜில் ஜில் (திரைப்படம்: கன்னத்தில் முத்தமிட்டால்) - 2002. கள்ளிக்காட்டில் பிறந்த தாயே (திரைப்படம்: தென்மேற்கு பருவக்காற்று'') - 2010. எந்தப்பக்கம் காணும்போதும் வானம் ஒன்று (திரைப்படம்: தர்மதுரை) - 2016 வருடம் விருது படைப்பு திரைப்படங்(கள்) குறிப்பு1981 தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது அலைகள் ஓய்வதில்லை 1986 சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது அனைத்துப் பாடல்களுக்கும் முதல் மரியாதை 1990 கலைமாமணி விருது — — தமிழக அரசால் வழங்கப்பட்டது1993 சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது "சின்ன சின்ன ஆசை " ரோஜா 1995 சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது "போறாளே பொண்ணுத்தாயி ", "உயிரும் நீயே " கருத்தம்மா, பவித்ரா 1995 தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது கருத்தம்மா 1996 தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது முத்து, பம்பாய் 2000 சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது "முதல் முறை கிள்ளிப்பார்த்தேன்" சங்கமம் 2000 தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது சங்கமம் 2003 பத்மசிறீ — — இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது2003 சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது நெஞ்சில் ஜில் ஜில் ஜில் கன்னத்தில் முத்தமிட்டால் 2006 தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது அந்நியன் 2008 தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருது பெரியார் 2011 சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது "கள்ளிக் காட்டில்" தென்மேற்கு பருவக்காற்று சிறப்புகள் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக கவிஞர் வைரமுத்து நியமிக்கப்பட்டார். மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தப் பதவியின் காலம் மூன்றாண்டுகள் ஆகும்.மத்திய பல்கலை. செனட் உறுப்பினராக வைரமுத்து நியமனம் (தினமணி செய்தி) திரைப்படப் பட்டியல் வைரமுத்து திரை வரலாறு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வைரமுத்து பற்றி தெற்காசிய இலக்கியக் காட்சியகத்தில் உள்ள கட்டுரை வைரமுத்து எழுதிய தண்ணீர்தேசம் பாகம் 1 வைரமுத்து எழுதிய தண்ணீர்தேசம் பாகம் 2 தமிழ்நேஷன்.காம் தளத்தில் வைரமுத்து பற்றிய கட்டுரை பகுப்பு:1953 பிறப்புகள் பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:தேனி மாவட்ட எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:தேனி மாவட்ட நபர்கள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் பகுப்பு:தமிழ்க் கவிஞர்கள்‎ பகுப்பு:தமிழகக் கவிஞர்கள்
ஆரை
https://ta.wikipedia.org/wiki/ஆரை
REDIRECT ஆரம்
கண்ணதாசன்
https://ta.wikipedia.org/wiki/கண்ணதாசன்
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர். வாழ்க்கைக் குறிப்பு கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ்நாட்டில் உள்ள காரைக்குடி அருகே சிறுகூடல்பட்டி என்ற ஊரில் இந்து மதத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபில் சாத்தப்ப செட்டியார், விசாலாட்சி ஆச்சி இணையாருக்கு 8வது மகனாக பிறந்தார். (மறைவு 4-2-1955திராவிடநாடு (இதழ்) நாள்:13-2-1955, பக்கம் 6 ). இவருடன் உடன்பிறந்தோர் 10 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958) திராவிடநாடு (இதழ்) 4-1-1959, பக்.16 என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைபெயர் கண்ணதாசன் குடும்பம் கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது.கைக்கு வந்த கண்ணதாசன் கல்யாணப்பரிசு இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர்கண்ணதாசன் மனைவி பொன்னம்மா ஆச்சி காலமானார் , தினகரன், மே 31, 2012, , மாலைமலர், மே 31, 2012. கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள் கண்ணதாசன் பார்வதி மகன் அண்ணாதுரையின் கூற்று இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அரசியல் ஈடுபாடு அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். ஈ.வி.கே.சம்பத்துடன் இணைந்து தமிழ் தேசிய கட்சியை துவக்கினார். பின்னர் தமிழ் தேசிய கட்சி காங்கிரசுடன் இணைந்தது. காங்கிரஸ் பிளவு பட்ட போது இந்திராகாந்தி பக்கம் நின்றார். அது தான் இன்றைய காங்கிரஸ் கட்சி . தான் இருந்த கட்சிகளின் தலைவர்களை , அவர்களது உண்மை சொரூபம் தெரிய வந்ததும் அந்தக் கட்சியில் இருந்து விலகிவிடுவார். " " உதவாத பல பாடல் உணராதோர் மேற்பாடி ஓய்ந்தனையே பாழும் மனமே " என்று தன் தவறுகளை ஒப்புக் கொண்டவர்.அரசியலை வெறுத்த அரசியல்வாதிகண்ணதாசன் காலத்தின் வெளிப்பாடுவனவாசம்ஈ.வே.கி. சம்பத்தும் திராவிட இயக்கமும் அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆரை கண்ணதாசன் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். தம்மைப் பற்றி கண்ணதாசன் விமர்சித்தபோதிலும் தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கண்ணதாசனை 1978இல் எம்.ஜி.ஆர் நியமித்தார். மறைவு உடல்நலக் குறைவு காரணமாக 1981, ஜூலை 24இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்திய நேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது. மணிமண்டபம் தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம்கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. https://cinema.dinamalar.com/kannadasan/https://www.dinamani.com/ungalukku-theriyuma/2019/oct/17/did-you-know-history-of-kannadhasan-3256189.html விருதுகள் சாகித்ய அகாதமி விருது (சேரமான் காதலி படைப்பிற்காக) திரைத்துறைக்கான பங்களிப்புகள் திரையிசைப் பாடல்கள் கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஐந்துதொகுதிகள் வசனம் எழுதிய திரைப்படங்கள் நாடோடி மன்னன் (1958) கதை, வசனம் எழுதிய திரைப்படங்கள் மதுரை வீரன் 1956 நானே ராஜா 1956 ராஜா தேசிங்கு மகாதேவி|(1957) மாலையிட்ட மங்கை(1958) கறுப்புப் பணம்(1964) தெனாலி ராமன்(1957) தெய்வத் திருமணங்கள் மன்னாதி மன்னன்(1960) திருடாதே ``(1961) ராணி சம்யுக்தா ``(1962) இல்லற ஜோதி(1954) லட்சுமி கல்யாணம் (1970) தயாரித்த படங்கள் கவிஞர் ஆறு திரைப்படங்களைத் தயாரித்தார்.கேள்வியின் நாயகன்!, ராம.கண்ணப்பன், தினமலர் வாரமலர் 2002 சூன் 23, பக். 21 அவை: சிவகங்கை சீமை கவலை இல்லாத மனிதன் கறுப்புபணம் (1964) வானம்பாடி மாலையிட்ட மங்கை (1958) ரத்தத்திலகம் பாடலாசிரியர் பணி மூன்றாம் பிறை திரைப்படத்தில் கண்ணே கலைமானே இவரது கடைசிப்பாடலாகும் இலக்கியப் படைப்புகள் கவிதை நூல்கள் காப்பியங்கள் ஆட்டனத்தி ஆதிமந்தி இயேசு காவியம் ஐங்குறுங்காப்பியம் கல்லக்குடி மகா காவியம் கிழவன் சேதுபதி பாண்டிமாதேவி பெரும்பயணம் (1955), அருணோதயம், சென்னை - 14. மலர்கள் மாங்கனி முற்றுப்பெறாத காவியங்கள் தொகுப்புகள் கண்ணதாசன் கவிதைகள் (1959), காவியக்கழகம், சென்னை-2; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968 கண்ணதாசன் கவிதைகள்: இரண்டாம் தொகுதி, (1960) காவியக்கழகம், சென்னை; வானதி பதிப்பக முதற்பதிப்பு 1968 கண்ணதாசன் கவிதைகள்: முதலிரு தொகுதிகள் கண்ணதாசன் கவிதைகள்: மூன்றாம் தொகுதி (1968) வானதி பதிப்பகம், சென்னை. கண்ணதாசன் கவிதைகள்: நான்காம் தொகுதி (1971), வானதி பதிப்பகம், சென்னை. கண்ணதாசன் கவிதைகள்: ஐந்தாம் தொகுதி (1972), வானதி பதிப்பகம், சென்னை. கண்ணதாசன் கவிதைகள்: ஆறாம் தொகுதி (1976), வானதி பதிப்பகம், சென்னை. கண்ணதாசன் கவிதைகள்: ஏழாம் தொகுதி (1986) , வானதி பதிப்பகம், சென்னை. பாடிக்கொடுத்த மங்களங்கள் சிற்றிலக்கியங்கள் அம்பிகை அழகுதரிசனம் கிருஷ்ண அந்தாதி கிருஷ்ண கானம் கிருஷ்ண மணிமாலை கோபியர் கொஞ்சும் ரமணன், 1978 சனவரி முதல், கண்ணதாசன் இதழ் ஸ்ரீகிருஷ்ண கவசம் ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி ஶ்ரீவெங்கடேச சுப்ரபாதம் தைப்பாவை கவிதை நாடகம் கவிதாஞ்சலி மொழிபெயர்ப்பு பொன்மழை (ஆதிசங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ்ப்பாடல் வடிவம்) பஜகோவிந்தம் புதினங்கள் அதைவிட ரகசியம் அரங்கமும் அந்தரங்கமும் அவளுக்காக ஒரு பாடல் அவள் ஒரு இந்துப் பெண் ஆச்சி (வானதி பதிப்பகம், சென்னை) ஆயிரங்கால் மண்டபம் ஆயிரம் தீவு அங்கயர்கண்ணி, 1956, அருணோதயம், சென்னை. ஊமையன்கோட்டை என்னோட ராவுகள், 1978 நவம்பர், கண்ணதாசன் இதழ் ஒரு கவிஞனின் கதை கடல் கொண்ட தென்னாடு காமினி காஞ்சனா சரசுவின் செளந்தர்ய லஹரி சிவப்புக்கல் மூக்குத்தி, காமதேனு பிரசுரம், சென்னை 17 சிங்காரி பார்த்த சென்னை சுருதி சேராத ராகங்கள், காமதேனு பிரசுரம், சென்னை 17 சேரமான் காதலி (சாகித்யா அகாதெமி விருதுபெற்றது) தெய்வத் திருமணங்கள் நடந்த கதை பாரிமலைக்கொடி பிருந்தாவனம் மிசா முப்பது நாளும் பவுர்ணமி ரத்த புஷ்பங்கள், காமதேனு பிரசுரம், சென்னை 17 விளக்கு மட்டுமா சிவப்பு? வேலங்குடித் திருவிழா ஸ்வர்ண சரஸ்வதி சிறுகதைகள் ஈழத்துராணி (1954), அருணோதயம், சென்னை. ஒரு நதியின் கதை கண்ணதாசன் கதைகள் காதல் பலவிதம் - காதலிகள் பலரகம் குட்டிக்கதைகள் பேனா நாட்டியம் மனசுக்குத் தூக்கமில்லை, (வானதி பதிப்பகம், சென்னை) செண்பகத்தம்மன் கதை செய்திக்கதைகள் தர்மரின் வனவாசம் தன்வரலாறு எனது வசந்த காலங்கள் வனவாசம் (பிறப்பு முதல் தி.மு.க.விலிருந்து பிரியும் வரை) எனது சுயசரிதம் (வனவாசத்தின் விடுபட்ட பகுதிகள்) மனவாசம் (காங்கிரசு கட்சியில் இருந்த காலத்தின் வாழ்க்கை) கட்டுரைகள் அந்தி, சந்தி, அர்த்தஜாமம் இலக்கியத்தில் காதல், 1956, அருணோதயம், சென்னை. இலக்கிய யுத்தங்கள் எண்ணங்கள் 1000 கடைசிப்பக்கம் கண்ணதாசன் கட்டுரைகள் (1960) காவியக்கழகம், சென்னை கண்ணதாசன் நடத்திய இலக்கிய யுத்தங்கள் காதல் பலவிதம் காதலிகள் பல ரகம், 1978 ஏப்ரல், கண்ணதாசன் இதழ் கூட்டுக்குரல்; அருணோதயம், சென்னை. குடும்பசுகம் சந்தித்தேன் சிந்தித்தேன் சுகமான சிந்தனைகள் செப்புமொழிகள் ஞானமாலிகா ஞானரஸமும் காமரஸமும், 1978 பிப்ரவரி, கண்ணதாசன் இதழ் தமிழர் திருமணமும் தாலியும், 1956, அருணோதயம், சென்னை. தென்றல் கட்டுரைகள் தெய்வதரிசனம் தேவதாசிமுறை மீண்டும் வேண்டும், 1978 சூலை, கண்ணதாசன் இதழ் தோட்டத்து மலர்கள் நம்பிக்கை மலர்கள் (வானதி பதிப்பகம், சென்னை) நான் இறைவனைச் சந்திக்கிறேன் நான் பார்த்த அரசியல் - முன்பாதி நான் பார்த்த அரசியல் (பின்பாதி) நான் ரசித்த வர்ணனைகள், 1978 மார்ச், கண்ணதாசன் இதழ் பயணங்கள் புஷ்பமாலிகா போய் வருகிறேன், (1960) காவியக்கழகம், சென்னை மனம்போல வாழ்வு (வானதி பதிப்பகம், சென்னை) ராகமாலிகா வாழ்க்கை என்னும் சோலையிலே சமயம் அர்த்தமுள்ள இந்து மதம் 1 : அர்த்தமுள்ள இந்து மதம் 2 : அர்த்தமுள்ள இந்து மதம் 3 : அர்த்தமுள்ள இந்து மதம் 4 : துன்பங்களிலிருந்து விடுதலை அர்த்தமுள்ள இந்து மதம் 5 : ஞானம் பிறந்த கதை அர்த்தமுள்ள இந்து மதம் 6 : நெஞ்சுக்கு நிம்மதி அர்த்தமுள்ள இந்து மதம் 7 : சுகமான சிந்தனைகள் அர்த்தமுள்ள இந்து மதம் 8 : போகம் ரோகம் யோகம் அர்த்தமுள்ள இந்து மதம் 9 : ஞானத்தைத்தேடி அர்த்தமுள்ள இந்து மதம்10 : உன்னையே நீ அறிவாய் நாடகங்கள் அனார்கலி சிவகங்கைச்சீமை ராஜ தண்டனை, 1956, அருணோதயம், சென்னை. உரை நூல்கள் கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்: அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதி ஆடவர் மங்கையர் அங்க இலக்கணம் ஆண்டாள் திருப்பாவை எதையும் நான் கேலி செய்வேன்: காளமேகம் பாடல்கள், 1978, கண்ணதாசன் இதழ் கண்ணே கதவைத்திற!: கலிங்கத்துப்பரணி - கடைதிறப்புக் காட்சி, 1977 செப்டம்பர், கண்ணதாசன் இதழ் சங்கர பொக்கிஷம் சுப்ரதீபக் கவிராயரின் கூழப்பநாயக்கன் காதல் தாசிவீடு சென்ற ஒருவனின் அனுபவங்கள்: சுப்ரதீபக் கவிராயரின் விறலிவிடு தூது, 1977 நவம்பர், கண்ணதாசன் இதழ் திருக்குறள் காமத்துப்பால் பகவத் கீதை மதுவும் மங்கையரும்: கம்பராமாயணம் உண்டாட்டுப் படலம், 1977, கண்ணாதசன் இதழ் பேட்டிகள் கண்ணதாசன் பேட்டிகள் - தொகுப்பாசிரியர்: ஆர்.பி.சங்கரன், (மாசிலாமணி பதிப்பகம், சென்னை-4) சந்தித்தேன் சிந்தித்தேன் வினா-விடை ஐயம் அகற்று கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Tamilnation.org கண்ணதாசன் பற்றிய கட்டுரை பகுப்பு:1927 பிறப்புகள் பகுப்பு:1981 இறப்புகள் பகுப்பு:சிவகங்கை மாவட்ட நபர்கள் பகுப்பு:கவிஞர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழகக் கவிஞர்கள் பகுப்பு:தமிழ் பாடலாசிரியர்கள் பகுப்பு:தமிழகப் பாடலாசிரியர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்படக் கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்