title
stringlengths
1
93
url
stringlengths
31
123
text
stringlengths
0
361k
செல் (உயிரியல்)
https://ta.wikipedia.org/wiki/செல்_(உயிரியல்)
REDIRECT உயிரணு
மெட்ராஸ்
https://ta.wikipedia.org/wiki/மெட்ராஸ்
REDIRECT சென்னை
பாரதம்
https://ta.wikipedia.org/wiki/பாரதம்
REDIRECT இந்தியா
புதுகை
https://ta.wikipedia.org/wiki/புதுகை
REDIRECT புதுக்கோட்டை
புதுவை
https://ta.wikipedia.org/wiki/புதுவை
REDIRECT புதுச்சேரி
புதுக்கோட்டை மாவட்டம்
https://ta.wikipedia.org/wiki/புதுக்கோட்டை_மாவட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் 240px திருமயம் கோட்டை 240pxபுதுக்கோட்டை மாவட்டம்: அமைந்துள்ள இடம் நாடு மாநிலம்22px தமிழ்நாடு தலைநகரம் புதுக்கோட்டை பகுதி மத்திய மாவட்டம் ஆட்சியர் மெர்சி ரம்யா, இ.ஆ.ப. காவல்துறைக்கண்காணிப்பாளர் - மாநகராட்சிகள் 1 நகராட்சிகள் 1 வருவாய் கோட்டங்கள் 3 வட்டங்கள் 12 பேரூராட்சிகள் 8 ஊராட்சி ஒன்றியங்கள் 13 ஊராட்சிகள் 497 வருவாய் கிராமங்கள் 763 சட்டமன்றத் தொகுதிகள் 6 மக்களவைத் தொகுதிகள் 4 (பகுதிகள்) பரப்பளவு 4663 ச.கி.மீ. மக்கள் தொகை 16,18,345 (2011) அலுவல் மொழி(கள்) தமிழ் நேர வலயம் இ.சீ.நே. (ஒசநே+5:30) அஞ்சல் குறியீடு 621 xxx, 622 xxx, 614 xxx, 613 xxx தொலைபேசிக் குறியீடு 04322 வாகனப் பதிவு TN-55 பாலின விகிதம்ஆண்-50%/பெண்-50% ♂/♀ கல்வியறிவு77.19% சராசரி கோடை வெப்பநிலை சராசரி குளிர்கால வெப்பநிலை இணையதளம்pudukkottai புதுக்கோட்டை மாவட்டம் (Pudukkottai district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் புதுக்கோட்டை ஆகும். சனவரி 14, 1974-இல் திருச்சி மற்றும் தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுகை (புதுக்கோட்டையின் சுருக்கமான பெயர்) மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் புதுக்கோட்டை மாநகராட்சியை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது மாவட்டத்தின் எல்லைகள் புதுகை மாவட்டத்தின் எல்லைகள் வடக்கு மற்றும் வடமேற்கே திருச்சி மாவட்டமும், தெற்கு மற்றும் தென்மேற்கே சிவகங்கை மாவட்டமும், தென்கிழக்கில் இராமநாதபுரம் மாவட்டமும், பாக் நீரிணையான (வங்காள விரிகுடா கடலும்), கிழக்கு மற்றும் தென்கிழக்கே தஞ்சாவூர் மாவட்டமும் புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளது. மாவட்டத்தின் அமைப்பு புதுகை மாவட்டம் கிழக்கு நிலைக்கோட்டில் 78° 25' மற்றும் 79° 15'க்கு இடையேயும் வடக்கு நேர்க்கோட்டில் 9° 50' மற்றும் 10° 40'க்கு இடையேயும் அமைந்துள்ளது. புதுகை ஏறக்குறைய ஒரு கடற்கரை மாவட்டமாகும். கடற்கரையின் நீளம் 42 கிலோமீட்டர் ஆகும். இம்மாவட்டத்தின் மேற்குப் பகுதி கீழ் கடற்கரைப் பகுதியைக் காட்டிலும் கடல் மட்டத்திலிருந்து சரிவாக 600 அடி உயரத்தில் உள்ளது நிலப்பரப்பு ஏறத்தாழ சமமானதாகும். மேலும் பொன்னமராவதி பகுதி மட்டும் சிறிது ஏற்றயிறக்கம் கொண்ட பகுதியாக இருக்கும். முக்கிய அமைவிடங்கள் மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் தென்கிழக்கு பகுதியான மீமிசல் என்ற ஊரின் பாக் நீரிணை கடற்கரையில் இருந்து 30 கி.மீ தொலைவில் இலங்கை நாட்டையும் அதன் வடக்கு மாகாண பெரும் நகரமான யாழ்ப்பாணத்தையும் கடல் வழியில் அடையாளம். மேலும் இந்த மீமிசல் கடற்கரையானது புதுக்கோட்டைக்கும் அதன் அருகில் உள்ள திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை போன்ற தமிழ்நாட்டின் நடுமையமான பெரும் நகரங்களுக்கும் கடற்கரை பகுதியாகவும், கடல் வழி போக்குவரத்திற்கான பகுதியாகவும் உள்ளது. இம்மாவட்டத்தில் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள நார்த்தாமலை குன்றுகள் மற்றும் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள பிரான்மலை தவிர்த்து பெரிய மலைகள் ஏதும் இம்மாவட்டத்தில் இல்லை. இம்மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் மட்டும் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன்வழியாக விவசாயம் செய்யப்படுகின்றது. மேலும் பலாப்பழம் உற்பத்தியில் அந்த பகுதியே மிகவும் சிறந்ததாக உள்ளது. குறிப்பாக வடகாடு, மாங்காடு, அனவயல், கொத்தமங்கலம், செரியலூர் ஊராட்சி, கீரமங்கலம், நெடுவாசல் கிழக்கு ஊராட்சி, புள்ளான்விடுதி குளமங்கலம் போன்ற பகுதிகளாகும். வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ஆதிமனிதன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் கிடைத்துள்ளன. பழைய கற்கால கல்லாயுதம் ஒன்று திருமயம் வட்டம் குருவிக்கொண்டான் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள இயற்கைக் குகைகளும் பாறை இருக்கைகளும் மனிதன் தொன்று தொட்டே இப்பகுதியில் வாழ்ந்து வந்திருக்க வேண்டுமெனபதற்கு மேலும் சான்றுகள் பகர்கின்றன. இந்த பழைய கற்கால கல்லாயுதம் ஒன்றைத் தவிர வேறு ஆயுதங்கள் கிடைக்கவில்லை. மேலும் புதிய கற்கால நாகரீகத் தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் உலோகக்கால நாகரீகச் சுவடுகள் நிறைய கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இக்காலத்தின் பிற்பகுதியான இரும்பு காலத்தில் நிலவிய பெருங்கற்காலத்தில் உபயோகத்திலிருந்த செம்பு, இரும்பு ஆயுதங்கள் மட்பாண்டங்கள், மணிகள், அணிகலன்கள் இறந்தோரைப் புதைத்த புதைக்குழிகள், இறந்தோரின் நினைவுச் சின்னங்களாக பயன்படுத்தப்பட்ட கல்லறைகள் புதைகுழித் தாழிகள் ஆகியன நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இரும்புக்கால - பெருங்கற்கால நாகரீகத்தின் ஆரம்ப காலம் பொ.ஊ.மு. 600 வரை நீளும் என்று கருதப்படுகிறது. இந்த பண்பாடு சங்க காலத்திலும் ஆங்காங்கு நடமுறையிலிருந்ததாக அக்கால இலக்கியங்கள் சான்று பகிர்கின்றன. குறிப்பாக இறந்தோரை தாழியிட்டு புதைக்கும் முறை சங்க காலத்தில் பழக்கத்திலிருந்த செய்தியை புறநானூறு, பதிற்றுப்பத்து, நற்றிணை போன்ற நூல்களிலிருந்து அறிகிறோம். இது முதுமக்கள் தாழி, ஈமாத்தாழி, முதுமக்கள் சாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தோர் நினைவாக பள்ளிப்படை அமைத்த செய்தியும் காணப்படுகின்றது. "மாயிறும் தாழி கவிப்பத் தாவின்று கழிக வெற்கொல்லாக் கூற்றே" என நற்றிணையும்(271) "மன்னர் மறைத்த தாழி வன்னி மரத்து விளங்கிய காடே" எனப் பதிற்றுப்பத்தும்(44) "கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின் அன்னோற் கவிக்கும் கண் அகந்தாழி" எனப் புறநானூறும்(228) கூறுவதைக் காணலாம். "சுடுவோர், இடுவோர், தொடுகுழிப் படுப்போர் தாழ்வயினடைப்போர் தாழியிற் கவிப்போர்" (6-11-66-67) என்று மணிமேகலை ஐந்து வகை ஈம முறைகளைக் குறிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் பெருங்கற்கால புதைகுழிகளில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வுகளில் கிடைத்த தாழிகள், மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், கல்லாயுதங்கள், ஆபரணங்கள், மணி வகைகள், வளையல்கள் ஆகியன புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலே கூறியவற்றிலிருந்து புதுக்கோட்டைப் பகுதியில் வரலாறிற்கு முற்பட்ட காலங்களான பழைய கற்காலம், புதிய கற்காலம், இரும்புக் காலம் போன்ற காலகட்டங்களில் நாகரீகம் படிப்படியாக உயர்ந்து அவ்வப்போது தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் பரவியிருந்த நாகரீக வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. இரும்புக் காலத்திற்கு பிறகு நாகரீகம் துரிதமாக வளம் பெற்று கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்னும் பின்னும் உள்ள நூற்றாண்டுகளில் செம்மையான வரலாறு துவங்குகிறது. பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அசோகருடைய கல்வெட்டு சேர சோழ பாண்டியரைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதுவே தென்னிந்திய வரலாற்றுப் பாதையில் ஒரு முக்கிய காலகட்டமாகும். அதனைத் தொடர்ந்து பாண்டி நாட்டில் கிடைத்துள்ள பிராமிக் கல்வெட்டுகள் வரலாற்றுத் தொடக்க காலத்தின் அறுதியான சான்றாகத் திகழ்கின்றன. தமிழி கல்வெட்டு பிராமி (தமிழி) கல்வெட்டு (எழுத்துகள்) சுமார் பொ.ஊ.மு. 200 முதல் பொ.ஊ. 200 வரை வழக்கிலிருந்ததாக கல்வெட்டு வல்லுநர்கள் கருதுகின்றனர். தமிழ்மொழியை எழுதுவதற்கு பாமர மக்களிடம் இவ்வெழுத்துப் பரவலாக வழக்கத்திலிருந்து இக்கல்வெட்டுகளில் தூய தமிழ்ச் சொற்களும், பிராகிருத மொழிச் சொற்கள் சிலவும் காணப்படுகின்றன. சித்தன்னவாசல் ஏழடிப்பட்டம் என்னும் குகையில் பிராமி எழுத்துக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. கல்வெட்டு குகையின் தரையில் காணப்படும் வழவழப்பான ஒரு படுக்கையின் விளிம்பில் பொறிக்கபபட்டுள்ளது. "எருமியூர் நாடு குழ்ழூர் பிறந்த கவுடு இடன்கு சிறுபாவில் இளையார் செய்த அதிட்டானம்" என்ற இக்கல்வெட்டு படிக்கப்பட்டுள்ளது. அதாவது எருமையூர் நாட்டில் குழுழூர் என்னும் ஊரில் பிறந்த கவுடிகன் என்னும் முனிவருக்கு சிறுபாவில் (அக்காலத்தில் சித்தன்னவாசல் சித்துப்போரில் என அழைக்கப்பட்டது என்றும் இதுவே பின்னர் சிறுபாவில் என மறுவியது). சமணமதம் அக்காலத்திலிருந்தே புதுக்கோட்டைப் பகுதியில் தழைத்தோங்கி இருந்ததற்கான சான்றுகள் இதன் மூலம் தெரியவருகிறது. இக்காலத்திற்கும் பிற்காலத்திலும் எடுக்கப்பட்ட பல சமண சின்னங்களும் சிற்பங்களும் இடிந்து போன சமணப்பள்ளிகளும் இங்கு நிறையக் காணப்படுகின்றன. தொல் பொருட்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுக் குறிப்புகள் செறிந்து காணப்படும் புதுக்கோட்டையின் பன்முக பாரம்பரியத்தை புரிந்து கொள்ள, புதுக்கோட்டையின் அரசியல் வரலாற்றை அறிந்து கொள்வது அவசியமாகிறது. புதுக்கோட்டையின் வரலாறு தென்னிந்திய வரலாற்றுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கருதத்தக்கது. புதுக்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொல் மனிதக் குடியிருப்புகளின் எச்சங்களும் தென்னிந்தியாவில் காணக்கிடைக்கும் மிகப்பழமையான கல்வெட்டுக்களில் சிலவும் காணக்கிடைக்கின்றன. பாண்டியர்கள், சோழர்கள், முத்தரையர்கள், பல்லவர்கள், விஜய நகர ஆட்சியாளர்கள், மதுரை நாயக்கர்கள் மற்றும் ஹொய்சாளர்கள் பல்வேறு கால கட்டங்களில் புதுக்கோட்டையை ஆண்டுள்ளனர். அவர்கள், புதுக்கோட்டையின் வர்த்தக, சமூக அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவியதோடு, தனிச்சிறப்பு வாய்ந்த பல கோயில்களையும் நினைவுச்சின்னங்களையும் அங்கு கட்டினர். சங்ககாலம் சங்ககால இலக்கியங்களில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பல ஊர்ப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. சங்க இலக்கியங்களின் காலம் சர்ச்சைக்குரியதென்றாலும், இவை குறிப்பிடும் வரலாறு பொ.ஊ. முதல் மூன்று நூற்றாண்டுக்குரியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும் இந்த இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளிலிருந்து இந்த மாவட்டத்தின் கோர்வையான் வரலாறைத் தொகுப்பது கடினம் எனினும் சங்க காலத்தில் சிறப்பு பெற்றிருந்த பகுதிகளில் ஒன்றாகப் புதுக்கோட்டை திகழ்ந்தது என்பது விளங்கும். "தென்பாண்டிக்குட்டம் குடங்கற்கா வேண்பூழி பன்றியருவா வதன் வடக்கு நன்றாய சீதமலாடு புனநாடு செந்தமிழ்ச்சேர் ஏதமிழ் பன்னிரு நாடென்" என்ற பழம்பாடலில் கூறப்பட்டுள்ள பன்றிநாடே சங்ககாலத்தில் புதுக்கோட்டைப் பகுதிக்கு பெயராக இருந்தது. தமிழ்நாட்டின் பன்னிரு பகுதிகளில் இதுவும் ஒன்று. பாண்டி நாட்டிற்கு வடக்குப் பகுதியாகவும், புனல் நாடு எனப்பட்ட சோழநாட்டிற்கு தெற்குப் பகுதியாகவும் பன்றிநாடு அமைந்திருந்தது. "ராஜராஜ வள்நாட்டு பன்றியூர் அழும்பில்" என்னும் பிற்காலச் சோழர் காலக்கல்வெட்டு இதனை உறுதிப்படுத்துகிறது. பன்றிநாடானது கோனாடு, கானாடு என இரு பெரும் பிரிவுகளாக விளங்கியது. இது உறையூர் கூற்றம், ஒல்லையூர் கூற்றம், உறத்தூர் கூற்றம், மிழலைக் கூற்றம், கானக் கூற்றம் என ஐந்து கூற்றங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் கோனாடு நான்கு கூற்றங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. வெள்ளாற்றிற்கு வடக்கே இருந்த பகுதி வடகோனாடு என்றும், தெற்குப் பகுதி தென்கோனாடு என்றும் விளங்கின. தென்கோனாட்டில் ஒல்லையூர் கூற்றம் அமைந்திருந்தது. ஒல்லையூரை வெற்றிகொண்ட ஒல்லையூர் தந்த பூத பாண்டியன் என்னும் பாண்டிய மன்னனின் சிறப்பு புறநானூறு 71-ஆவது பாடலில் கூறப்படுகிறது. அகநானூற்றில் 25-ஆவது பாடல் இவன் பாடியதாகும். இவனது மனைவி பெருங்கோப்பெண்டு சிறந்த கற்பினள். பாண்டியன் இறந்த பிறகு இவள் தீயில் விழுந்து மாண்டாள். புறநானூறு 246, 247-ஆவது பாடல் இவள் பாடியதாகும். சங்க காலத்தில் நடந்துவந்த கடல்கடந்த வாணிபத்தில் புதுக்கோட்டைப் பகுதி வணிகர்களும் ஈடுபட்டிருந்தனர். மேற்கு கடற்கரைப் பகுதியிலிருந்து கிழக்குக் கடற்கரை பட்டிணங்களுக்கு ஏற்றுமதிப் பொருட்கள் புதுக்கோட்டைப் பகுதி வழியாகக் கொண்டு செல்லப்பட்டன என்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சங்க இலக்கியத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒலியமங்கலம் (திருமயம் வட்டம்), ஒல்லையூர் என்று புறநானூற்றில் குறிப்படப்பட்டுள்ளது. ஒலியமங்கலம், சங்கக் கவிஞர் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தான் மற்றும் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஆகியோரின் பிறந்த இடமாக விளங்கியுள்ளது. அகநானூற்றிலும் ஒல்லையூர் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டியர் ஆட்சிக் காலத்தில் ஒல்லையூர் முக்கியமான நகரமாகத் திகழ்ந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. இன்னும் 4 ஊர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. அவையாவன: அகநானூறில் குறிப்பிடப்பட்டுள்ள அம்புக்கோவில் (பண்டைய அலும்பில்); ஆவூர்கிழார், ஆவூர் முலம்கிழார் ஆகிய புலவர்களின் ஊரான ஆவூர்; எரிச்சி (பண்டைய எரிச்சலூர்) - புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் உள்ள எரிச்சி கிராமம் (எனினும், அண்மைய ஆய்வுகளின்படி இவ்வூர் இலுப்பூர் அருகே இருப்பதாக கருதப்படுகிறது.) இவ்வூர் மடலன் மதுரைக் குமரனார் என்ற புலவரின் ஊராக இருக்கக்கூடும்; ஔவையாருடன் தொடர்புப்படுத்தி பார்க்கத்தக்க அவயப்பட்டியில் ஔவையார் சிறிது காலம் வாழ்ந்திருக்ககூடும்; பொன்னமராவதி அருகே உள்ள பரம்பு மலையில் (தற்பொழுது பிரான்மலை என்று அழைக்கப்படுகிறது) கடையேழு வள்ளல்களில் முதலாமவரான பாரியின் நிலமாகும். கபிலர், பாரியின் கீழ் அமைச்சராகப் பணியாற்றியவர். இங்கு, செந்தமிழ் கல்லூரி என்ற தமிழ் மொழிக்கான கல்லூரி ஒன்று அமைந்திருக்கிறது. இம்மாவட்டம் சங்க காலத்தில் முதலாம் பாண்டியப் பேரரசின் கீழ் இருந்தாலும், மாவட்டத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய சில பகுதிகள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சோழர்களின் ஆதிக்கத்தில் இருந்தன. சில ஊர்களின் பெயர்களின் தொடக்கத்தில் காணப்படும் கிள்ளி, வளவன் ஆகிய சோழர்களின் பட்டங்களைக் கொண்டு இதனை அறியலாம். புதுக்கோட்டையில் ரோமாபுரி 200px|thumb|left திரைகடலோடி திரவியம் தேடிய பண்டைய தமிழர்களின் வரிசையில் புதுக்கோட்டை வணிகர்களும் இடம் பெருகின்றனர். யவனம் புட்பகம் சாவகம் சீனம் முதலான நாடுகளுடன் தமிழன் வணிக, கலை கலாசாரத் தொடர்பு கொண்டிருந்ததை சங்ககால இலக்கியங்கள் தெரிவிக்கின்றன. பொ.ஊ. முதல், இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட டாலமி, பிலினி போன்ற மேல்நாட்டவரின் குறிப்புகள் தமிழனின் கடல் கடந்த வணிகச் சிறப்பினையும், தமிழகத்து துறைமுகங்களைப் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன. மிளகு, முத்து மணிவகைகள், பருத்தி, பட்டுத்துணி வகைகள் மற்றும் பல பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. புதுக்கோட்டைப் பகுதியிலிருந்து பருத்தியும், பட்டு மெந்துகிலும், நல்லெண்னையும் ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புதுக்கோட்டை வணிகர்கள் ரோமாபுரி வணிகர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் எனபதற்கு ஆதாரமாக ஆலங்குடிக்கு அருகிலுள்ள கருக்காக்குறிச்சியில் ரோம பொன் நாணயங்கள் நிறைய கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் பொ.ஊ.மு. 29க்கும் பொ.ஊ. 79க்கும் இடைப்பட்ட காலத்தவை. ரோம் நாட்டு வரலாற்றில் புகழ்பெற்ற பல மன்னர்களின் நாணயங்கள் இவற்றுள் அடங்கியுள்ளன. இந்த நாணயங்கள் தமிழகத்தில் செலவாணியில் இல்லாவிட்டாலும் தங்கத்தின் மதிப்பிற்காக பாதுகாக்கப்பட்டு வந்தது.(செலாவணியில் இருந்ததாக எட்கார் தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்) இந்த நாணயங்களில் காணப்படும் ரோம நாட்டு மன்னர்களின் விவரம், மன்னர்கள் அகஸ்டஸ் சீசர் (பொ.ஊ.மு. 29 - பொ.ஊ. 14) டைபீரியஸ் சீசர் (பொ.ஊ. 14 - பொ.ஊ. 27) நீரோ ட்ரூசஸ் (பொ.ஊ. 38 - பொ.ஊ. 9) அந்தோனியா (ட்ரூசஸ் மனைவி) ஜெர்மானிக்கஸ் அக்ரிபின்னா (ஜெர்மானிக்ஸ் மனைவி) காலிகுலா (பொ.ஊ. 37 - 41) டைபிரியஸ் க்ளாடியஸ் (பொ.ஊ. 41 - 54) நீரோ (பொ.ஊ. 54 - 68) வெஸ்பாசியானஸ் (பொ.ஊ. 69 - பொ.ஊ. 79) நல்ல நிலையிலிருந்த நாணயங்கள் பெரும்பாலானவை தற்போது இங்கிலாந்து நாட்டு அருங்காட்சியகங்களில் உள்ளன. மீதமுள்ளவை பாதுகாக்கப்பட்டு சென்னை,புதுக்கோட்டை அருங்காட்சியங்களில் வைக்கப்பட்டுள்ளன. களப்பிரர் ஆட்சி(சுமார் பொ.ஊ. 300 - பொ.ஊ. 590) பாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் பொ.ஊ. 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது. முதல் பாண்டியப் பேரரசு புதுக்கோட்டை பகுதி பாண்டியன் கடுங்கோனின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்கள், கோச்சடையன் ரணதீரன் (பொ.ஊ. 710 - 740), மாறன் சடையன் (பொ.ஊ. 765 - 815), ஸ்ரீமாற ஸ்ரீவல்லவன்(இவனது காலத்தில் சித்தன்ன வாசல் ஓவியங்கள் தீட்டப்பட்டன), வரகுணவர்மன் (பொ.ஊ. 862 - 880) வரை ஆட்சி செய்தார்கள். தொடர்ச்சியாக பாண்டியர்களின் ஆளுகைக்குட்பட்டு புதுக்கோட்டை இருந்துவந்தது. பல்லவர் புதுக்கோட்டைப் பகுதியில் பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னர்களின் கல்வெட்டுக்கள் மட்டுமே கிடைக்கின்றன. இரண்டாம் நந்திவர்ம பல்லவனின் (பொ.ஊ. 710 - 765) மூன்றாவது ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்று குன்னாண்டவர்கோவிலிலும் மற்றொன்று ராசாளிப்பட்டியிலும் காணப்படுகிறது. இக்காலத்திலேயே பல்லவர் ஆட்சி புதுக்கோட்டையில் ஏற்பட்டிருக்க வேண்டும். தந்திவர்மன் (பொ.ஊ. 775 - 826), நிருபதுங்கவர்மன் (பொ.ஊ. 849 - 875) என பல்லவர் ஆட்சி பரவியிருந்ததையும் மேலும் பல்லவர் ஆட்சியிலும் பாண்டியர் ஆட்சியிலும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதி மாறிமாறியிருந்ததையும் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சி நிலையை நிர்ணயித்த போர்க்களங்கள் புதுக்கோட்டையில் நிறைய உண்டு என்று கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. முத்தரையர் தமிழகத்து வரலாற்றுக் கதாப்பாத்திரங்களில் முத்தரையர் குறிப்பிடத்தக்கவர். புதுக்கோட்டைப் பகுதியில் பல்லவராட்சி நிலைக்க உறுதுணையாக நின்றவர்கள் இவர்களே. தமிழகத்தின் தொன்மைக் கலைக்கு புத்துயிரூட்டிய இவர்களது புகழுக்கு புதுக்கோட்டைப் பகுதியிலுள்ள முத்தரையர் காலத்து கோயில்களும் கலைச் சின்னங்களும் முத்தாய்ப்பாய் விளங்குகின்றன. முற்காலத்தில் பெருநிலக்கிழார்களாக வாழ்ந்துவந்த முத்தரையர் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் பல்லவ மன்னர்களின் மேலாண்மைக்குட்பட்ட குறுநில மன்னர்களாக ஆளத் தலைப்பட்டனர். புதுக்கோட்டை தொண்டைமான்கள் thumb| சென்னை மாகாணத்தில் 1913-இல் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் பகுதியைக் காட்டும் வரைபடம் இராமநாதபுர மன்னர் இரகுநாத கிழவன் என்ற கிழவன் சேதுபதி, இரகுநாதராயத் தொண்டைமானின் தங்கையை மணந்துகொண்டதால், புதுக்கோட்டைப் பகுதியை, இரகுநாதராயத் தொண்டைமான் தன்னாட்சி உரிமையுடன் ஆட்சி செய்யுமாறு செய்தார். மன்னர் இரகுநாதராயத் தொண்டைமான் இங்கு ஓர் அரண்மனை கட்டியதால், இவ்விடத்திற்குப் புதுக்கோட்டை என்ற பெயர் வழங்கப்பட்டது. இரகுநாதராயத் தொண்டைமானை (1686-1730) அடுத்து விஜயரகுநாதத் தொண்டைமான் (1730-1769). இராய ரகுநாதத் தொண்டைமான் (1769-1789), விஜயரகுநாதத் தொண்டைமான் (1789-1807) ஆகியோர் பதவி வகித்தனர். பொ.ஊ. 18-ஆம் நூற்றாண்டில் திருச்சியைச் சந்தா சாகிப்பும், பிரெஞ்சுக்காரர்களும் முற்றுகையிட்ட பொழுதும், ஆங்கிலேயர்கள் ஐதர் அலியுடன் போர்புரிந்தபொழுதும் புதுக்கோட்டை மன்னர் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உதவியாக இருந்தார். பாஞ்சாலங்குறிச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு (1799), அங்கிருந்து தப்பிவந்த வீரபாண்டிய கட்ட பொம்மனைப் பிடித்து ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாதத் தொண்டைமானின் படைகள் உதவின. பின்னர் மன்னரான விஜயரகுநாதராயத் தொண்டைமான் (1807-1825), தமது 10-ஆவது வயதில் ஆட்சிக்கு வந்ததால் இவருக்கு பிளாக்பர்ன் என்ற ஆங்கில அரசியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டார். விஜயரகுநாதராயத் தொண்டைமானை அடுத்து இரகுநாதத் தொண்டைமானும் (1825-1839), இராமச்சந்திரத் தொண்டைமானும் (1839-1886) புதுக்கோட்டையின் மன்னராக வந்தனர். இராமச்சந்திரத் தொண்டைமான் சிறுவயதினராய் இருந்ததால் புதுக்கோட்டை நகரின் நிர்வாகத்தை சேஷய்ய சாஸ்திரி என்ற திவான் கவனித்தார். இராமச்சந்திரத் தொண்டைமான் அடுத்து மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் புதுக்கோட்டையின் மன்னரானார் (1886). 1912-ஆம் வருடம் புதுக்கோட்டை நகரத்தில் நகராட்சி மன்றம் நிறுவப்பட்டது. 1948-இல் புதுக்கோட்டை சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது. புதுக்கோட்டைப் பகுதிகள், திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுச் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக ஆயிற்று. புதுக்கோட்டையின் கடைசி மன்னராக இருந்தவர் இராஜ இராஜ கோபாலத் தொண்டைமான் ஆவார். மக்கள்தொகை பரம்பல் 4,644 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட புதுக்கோட்டை மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 16,18,345 ஆகும். அதில் ஆண்கள் 803,188 ஆகவும்; பெண்கள் 815,157 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 10.88% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1015 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 960 பெண் குழுந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 348 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 77.19% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,79,688 ஆகவுள்ளனர். Pudukkottai District : Census 2011 data இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 14,28,784 (88.29%), கிறித்தவர்கள் 72,850 (4.50%), இசுலாமியர்கள் 1,14,194 (7.06%) ஆகவும் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் வருவாய் நிர்வாகம் இம்மாவட்டம் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் என மூன்று வருவாய் கோட்டங்களும், 12 வருவாய் வட்டங்களும், 45 உள்வட்டங்களும், 763 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்ட வருவாய் நிர்வாகம் உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் இம்மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களையும் , 497 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களும், கிராம ஊராட்சிகளும் மேலும் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி என இரண்டு நகராட்சிகளையும் மற்றும் 8 பேரூராட்சிகளையும் கொண்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்ட நகராட்சிகளும்; பேரூராட்சிகளும் காலநிலை புதுக்கோட்டை மாவட்டத்தின் அதிகபட்ச சராசரி வெப்பநிலை 41.2 °C மற்றும் குறைந்தபட்ச சராசரி வெப்பநிலை 23.1 °C ஆகும். ஆண்டிற்கு சராசரியாக 887.4 மி. மீ. மழைப்பொழிவை இம்மாவட்டம் பெறுகிறது.புதுக்கோட்டை மாவட்ட விவரம் வேளாண்மை புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன்மையாகப் பயிர் செய்யப்படும் பயிர்கள் அரிசி, சோளம், மக்காச்சோளம், உளுந்து, எள், வேர்க்கடலை, தென்னை, கரும்பு, மா, வாழை மற்றும் முந்திரி ஆகியவை ஆகும். கல்வி 2015-2016 ஆண்டு நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு வகையான கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பணியாற்றும் ஆசிரியர்கள் விவரம் பின்வருமாறு[2] வரிசை எண் கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் மாணவிகள் மொத்தம் ஆண் ஆசிரியர்கள் பெண் ஆசிரியர்கள் மொத்தம் 1 கலை அறிவியல் கல்லூரிகள் 5404 12479 17883 295 437 732 2 பொறியியற் கல்லூரிகள் 9460 4273 13669 619 418 1037 3 பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் 11608 965 12255 641 279 920 4 கல்வியியல் கல்லூரிகள் 404 1189 1593 148 105 263 5 வேளாண் கல்லூரிகள் 87 92 179 12 9 21 6 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 32 449 481 45 25 70 7 செவிலியர் பயிற்சிக் கல்லூரிகள் 33 199 232 2 14 16 8 தொடக்கப்பள்ளிகள் 30070 29469 59539 1176 1688 2864 9 நடுநிலைப்பள்ளிகள் 24086 22359 46445 1093 1166 2259 10 உயர்நிலைப்பள்ளிகள் 33358 32025 65383 1152 2067 3219 11 மேல்நிலைப்பள்ளிகள் 24086 22359 46445 1093 1166 2259 12 சிறப்புப் பள்ளிகள் 50 35 85 5 14 19 13 தொழிற்பயிற்சி நிலையங்கள் 1160 172 1332 104 16 120 மாவட்டத்தில் மொத்தம் 139838 126065 265521 6385 7404 13799 மேலும் இங்கு சிறப்பாக செயல்படகூடிய மகளிர் கல்லுரிகளும் அமைந்துள்ளது.அரசு மகளிர் கலை கல்லூரி புதுக்கோட்டை. பாரதி மகளிர் கல்லூரி, புதுக்கோட்டை. நைனாமுகமது கலை அறிவியல் கல்லூரி, ராஜேந்திரபுரம். அரசியல் இம்மாவட்டம் கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் கரூர், திருச்சி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிகளுக்கு உட்பட்டவை. புதுக்கோட்டை மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள் உணவு முட்டை மாஸ் மற்றும் முட்டை லாப்பா புரோட்டா எனும் உணவு புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த பிரபலமான உணவு ஆகும். சுற்றுலாத் தலங்கள் புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் ஆலயம் குடுமியான்மலை சித்தன்னவாசல் குகை ஓவியங்கள் கொடும்பாளூர் ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கோகர்ணேஸ்வரர் கோயில் ஆவூர் விராலிமலை முருகன் கோயில் திருமயம் பொன்னமராவதி திருவரங்குளம் பொற்பனைக்கோட்டை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் புதுக்கோட்டை மாவட்டத்தின் இணையத்தளம் பகுப்பு:தமிழ்நாடு மாவட்டங்கள்
மே நாள்
https://ta.wikipedia.org/wiki/மே_நாள்
மே நாள் அல்லது மே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே முதலாம் தேதி (மே 1) உலக அளவில் கொண்டாடப்படுவதாகும். மே தின வரலாறு தொழிலாளர் போராட்டம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists) ஆகும். சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கையாகும். பிரான்சில் தொழிலாளர் இயக்கம் 1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைத்தும் தோல்வியில் முடிவடைந்தன. ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் இயக்கம் ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது. ரஷ்யாவில் மே தினம் சார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் அமெரிக்காவில் 1832இல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தம் செய்தனர். அதே போல், 1835இல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். சிக்காகோ பேரெழுச்சி மே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டி‍ அந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கறுப்பு தினம் நவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது. அனைத்து நாடுகளிலும் மே தினம் 1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது. இந்தியாவில் மே தினம் thumb|தொழிலாளர் வெற்றிச் சின்னம் சென்னை மெரினாவில் இந்தியாவில் சென்னை மாநகரில் 1923-ஆம் ஆண்டில் மெரீனா கடற்கரை மற்றும் திருவான்மியூர் பகுதிகளில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில், இந்தியாவின் முதல் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. திருவான்மியூர் கூட்டத்தில், சுப்பிரமணிய சிவா மற்றும் எம்.பி.எஸ்.வேலாயுதம் தலைமையில் இந்தியாவின் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது. மே தினம் - இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் கொண்டாடப்பட்டது எப்படி? இதில் சிங்காரவேலர் பங்கு என்ன? மே தினச் நினைவுச் சின்னங்கள் fearless girl statue,america அமெரிக்க ஐக்கிய நாடுகள் spirit of solidarity statue, america அமெரிக்க ஐக்கிய நாடுகள் haymarket tragety statue, amarica அமெரிக்க ஐக்கிய நாடுகள் உசாத்துணை மே தினம் நூற்றண்டு வரலாறு, சோவியத் வெளியீடு, மாஸ்கோ, 1990 - சாசன இயக்கம், உலகின் முதல் தொழிலாளர் இயக்கம், என். ராமகிருஷ்ணன். சென்னை தொழிலாளர் சங்கம், 60வது ஆண்டு மலர். வெளி இணைப்புகள் Annual listing of May Day events around the world May Day classroom resources May Day in Cuba, a Retrospective Photos by Bill Hackwell, Havana Times Apr 27 2009 Pretanic World Holiday Traditions from England, Scotland, Wales and Ireland that may pre-date the Christian Era "Children Maypole Dancing - Archive Footage" English Heathenism - Roots of May Day in English heathenism. May Day history at The Holiday Spot Mayday in Berlin The history of May Day - Radio France Internationale in English Round-up of 2009 May Day marches - Radio France Internationale in English Website with information on modern Hawaiian Lei Day celebration with information on the lei as a traditional Hawaiian cultural art Website on modern Lei Day and May Day celebrations in Hawai`i ‘Fearless Girl’ Statue to Stay in Financial District (for Now) ‘ The Haymarket Square Riot and Aftermath The Spirit of Solidarity, which was dedicated in 2007 Emma Miller – Mother of the Australian Labor Party Triumph of Labour Physical Labour Stock Photos and Images பகுப்பு:தொழிலாளர் உரிமைகள் பகுப்பு:மே நாள் பகுப்பு:சர்வதேச தொழிலாளர் தினம் பகுப்பு:மே சிறப்பு நாட்கள் பகுப்பு:பொதுவுடைமை
மீயொலி நோட்டம்
https://ta.wikipedia.org/wiki/மீயொலி_நோட்டம்
thumb|right|ஒரு நாயின் இருதயத்திலுள்ள உறுப்பின் நிகழ்படம் புறவொலி அலகீடு (இலங்கை வழக்கு: கழியொலி) அல்லது மீயொலி அலகீடு (Ultra Sound Scan) என்பது எர்ட்சு முதல் எர்ட்சு அலைவெண்ணுக்கு மேற்பட்ட புறவொலிகளைப் பயன்படுத்தி உடலின் உட்பகுதிகளை படிம மாக்கும் கருவியாகும். மருத்துவ புறவொலி வரைவியல் (Medical ultrasound) (அல்லது நோய்நாடல் புறவொலி வரைவியல் (diagnostic sonography) அல்லது எளிமையாக, புறவொலி வரைவியல்) என்பது புறவொலி அல்லது கேளா ஒலியைப் பயன்படுத்திச் செய்யும் மருத்துவப் படிமவியல் நுட்பமாகும், இது உடலகக் கட்டமைப்புகளாகிய தசைநாண்கள், தசைகள், மூட்டிகள், குருதிக்குழல்கள், பிற உள்ளுறுப்புகளைப் படிம ம்க்க உதவுகிறது. இதன் நோக்கம் நோயறிதலும் அதை நீக்கலும் ஆகும். கருதரித்த பெண்களின் கருவைப் புறவொலியால் ஆயும் நடைமுறை கருத்தரிப்புப் புறவொலி வரைவியல் எனப்படுகிறது. இம்முறை பரவலாக நடைமுறையில் உள்ளது.கருத்தரிப்புப் புறவொலி வரைவியல் எனப்படுகிறது. இம்முறை பரவலாக நடைமுறையில் உள்ளது. புறவொலிகள் அல்லது கேளா ஒலிகள் என்பவை 20,000 அலைவெண்ணுக்கும் மேலான அலைவெண்கள் வாய்ந்த ஒலி அலைகளாகும். ஒலிவரைகள் எனப்படும் புறவொலிப் படிமங்கள் புறவொலித் துடிப்புகளைப் புறவொலி ஆய்கோல்களைப் பயன்படுத்தி இழையங்களுக்குள் அனுப்ப்ப்படுகின்றன. இழையங்கள் தம் தன்மையைச் சார்ந்து இந்த புறவொலியைப் பல்வேறு அளவுகளில் எதிரொலிக்கின்றன. இந்த எதிரொலிகளை ஆய்கோல்கள் பதிவுசெய்து கணினிக் காட்சித்திரையில் படிமங்களாகக் காட்டுகிறது. இந்த ஒலிவரைவுக் கருவிகளால் பலவகைப் படிமங்களை உருவாக்கலாம், இவற்றில் மிகவும் பரவலாக எடுக்கப்படும் படிமம் பி-முறைமைப் படிமம் (B-mode image ) ஆகும். இது இழையத்தின் இருபருமான வெட்டுமுகத்தின் ஒலியியல் மறிப்பைக் (acoustic impedance) காட்டுகிறது. பிறவகைப் படிமம், குருதிப் பாய்வையோ நேரஞ்சார்ந்த இழைய இயக்கத்தையோ குருதிபடிந்த இடத்தையோ குறிப்பிட்ட மூலக்கூறுகள் உள்ளமையையோ இழைய விறைப்பையோ உறுப்பு அல்லது உடற்பகுதியின் முப்பருமான உடற்கூற்றியலையோ காட்டும். இம்முறை மற்ற மருத்துவப் படிம முறைகளைவிட பல மேம்படுகளைக் கொண்டுள்ளது. இது நடப்பு நேரப் படிமங்களைத் தருகிறது; இதை எங்கும் கொண்டு செல்லலாம். ஒப்பீட்டளவில் குறைவான செலவுடையது. இது தீங்குதரும் மின்னணுவாக்க்க் கதிர்வீச்சுகளைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் இதற்கு நோயாளிகள் ஒத்துழைப்பு தேவைப்படும்; இதன் காட்சிப்புல வரம்பு குறுகியதாகும்; காற்று, எலும்புக்குப் பின்னுள்ள கட்டமைப்புகளைக் காண முடியாது; இதற்குப் பயிற்சி பெற்ற திறமை வாய்ந்த மருத்துவர்கள் அல்லது தொழில்நுட்பர்கள் தேவைப்படுகின்றனர். உறுப்பு அல்லது அமைப்பு ஆய்வு ஒலிவரைவியல் (புறவொலி வரைவியல்) மருத்த்வத்தில் பரவலாகப் பயன்படுகிறது. புறவொலியின் வழிகாட்டலைக் கொன்டு நோய்நாடலும் மருத்துவ இடையீட்டுச் செயல்முறைகளையும் உயிர்நுள் பிரிப்பு, தேங்கிய பாய்ம வடிப்பு போன்ற இடையீடு வழிமுறைகளையும் மேற்கொள்ளலாம். புறவொலி வரவாளர்கள் ம்ருத்துவ வல்லுனர்கள் ஆவர். இவர்கள் அலகீட்டைச் செய்து அலகீட்டுப் படிமங்களைத் தாமே விளக்குகின்றனர். இப்படிமங்களைக் கதிரியலாளர் அல்லது மருத்துவப் படிமவியலில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்களோ அல்லது இதயவியலாளரோ (எதிரொலி இதயவரைவுப் படிமங்களை) விளக்குவர்ரொலிவரைவியலாளர்கள் வழக்கமாக ஆற்றல்மாற்றி (transducer) எனப்படும் ஆய்கோலை நோயாளி மீது வைத்து அலகீடு செய்வர். மேலும் கூடுதலாக மருத்துவமனையாளரும் உடல்நலத் தொழில் வல்லுனர்களும் புறவொலி வரைவியல் முறையைதங்கள் மருத்துவகங்களிலும் அலுவலகங்களிலும் பயன்படுத்துகின்றனர். உடலின் மென்னிழையங்களுக்கு ஒலிவரைவியல் ஏற்றதாகும். 7 முதல் 16 மெகாஎர்ட்சுகள் வரையிலான உயர் அலைவெண்களில் தசைகள், தசைநாண்கள், விரைகள், மார்பகங்கள், கேடய, இணைகேடயச் சுரப்புகள், புதுக்குழவியின் மூளை ஆகிய மேலீடான உடல் உறுப்புகளை புறவொலியால் அலகிடலாம்; உயர் அலைவெண்களில் செய்யும் அலகீடு உயர்ந்த அச்சுவழி, பக்கவாட்டுக் கோணப் பிரிதிறன்களைப் பெற்றுள்ளது. கணையம், சிறுநீரகம் போன்ற ஆழ் உரூப்புகளை 1 முதல் 6மெகாஎர்ட்சு வரையிலான தாழ் அலைவெண்களில் அலகீடு செய்யலாம்; தாழ் அலைவெண்களில் செய்யும் அலகீடு குறைந்த அச்சுவழி, பக்கவாட்டுக் கோணப் பிரிதிறன்களைத் தந்தாலும் ஆழமாக ஊடுருகின்றன. பெரும்பாலான படிமங்களுக்கு பொதுப்பயன் புறவொலி அலகீட்டுக் கருவியே போதுமானதாகும். சிறப்புப் பயன்பாடுகளுக்குச் சிறப்பு ஆற்றல்மாற்றிகள் (ஆய்கோல்கள்) பய்ன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான புறவொலி அலகீடுகள் உடலின் மேற்பரப்பிலே செய்யப்படுகின்றன; ஆனால், ஆய்கோலை உடலின் உள்ளே வைத்து அலகீடு செய்வது கூடுதலான தன்னம்பிக்கையைத் தரும். இதற்காக, பிறப்பு உறுப்பக, மலக்குடலக, உணவுக் குழலகச் சிறப்பு ஆய்கோல்கள் பயன்படுகின்றன இதைவிட மிக நுட்பமான குருதிக்குழல் அலகீட்டிற்கு மிகச் சிறிய வட்ட ஆய்கோல்கள் குழலில் பொறுத்தி குருதிக்குழல்களில் உள்ளே அனுப்பப்படுகின்றன. இவை குருதிக்குழல் சுவர்களையும் நோய் அறிகுறிகளையும் படிமம் எடுக்கின்றன. உணர்வு மரக்கடிப்பியல் குழல் ஓர்வு (குருதிக் குழல்) right|thumb|Intravascular ultrasound image of a coronary artery (left), with color-coding on the right, delineating the lumen (yellow), external elastic membrane (blue) and the atherosclerotic plaque burden (green). இதயவியல் முதன்மைக் கட்டுரை; எதிரொலி இதயவரைவியல் நெருக்கடிநேர மருத்துவம் இவற்றையும் பார்க்கவும் காந்த அதிர்வு அலை வரைவு வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி வெளி இணைப்புகள் தொடர்புடைய இணையத்தரவுகளின் பட்டியல் மீயொலி வரிக் கண்ணோட்டத்தின் கண்டுபிடிப்பைப் பற்றிய தரவு பகுப்பு:கதிர்வரைவியல் பகுப்பு:மருத்துவக் கருவிகள் பகுப்பு:ஒலியியல்
மீயொலி
https://ta.wikipedia.org/wiki/மீயொலி
thumb|360px|right|Approximate frequency ranges corresponding to ultrasound, with rough guide of some applications மீயொலி (Ultrasound) (இலங்கை வழக்கு: கழியொலி) என்பது ஒலியின் அதிர்வெண் 20,000க்கு மேற்பட்ட ஒலி அலைகளைக் குறிக்கும். மீயொலிகளை மனிதர்களால் கேட்க முடியாது. மாந்தர்கள் தம் செவியால் 20 முதல் 20,000 ஒலி அலைகள் கொண்ட ஒலியலைகளைத்தான் கேட்க இயலும். மீயொலி கேட்கும் திறன் நாய்கள், ஓங்கில் (டால்பின்), வௌவால் போன்ற சில விலங்குகள் மீயொலியைக் கேட்கும் திறன் கொண்டவை. மேலும் குழந்தைகளும் பெரியர்வகளைக் காட்டிலும் உயர் அதிவெண்கள் கொண்ட ஒலிகளைக் கேட்க வல்லவர்கள்.வௌவால் இரவு நேரங்களில் பறந்து பயணம் செய்யும் போது அது உண்டாக்கும் மீயொலிகள் பிற பொருட்களின் மீது பட்டு எதிரொலிக்கும் அளவை உணர்ந்து கொண்டே தம் திசையை நிர்ணயிக்கின்றன. மீயொலிகளின் பயன்கள் thumb|right|An ultrasound examination in East Germany, 1990 மீயொலிகள் நீர்மப்பொருள் வழி சென்று ஒரு பொருளின் மீது ஒட்டியிருக்கும் நுண்ணிய அழுக்குகளை உலுப்பி விடுவிக்க வல்லது. இதனை வேதியியலிலும், குறைக்கடத்தி மின் கருவிகள் செய்வதிலும், வேறு பல துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். குறைக்கடத்தி மின் கருவிகளில், கருவியில் அலுமினியம் போன்ற மின் கம்பிகளை சிலிக்கான் சில்லோடு இணைக்க (ஒட்டுவிக்க) மீயொலிகளைப் பயன்படுத்துகின்றனர். மீயொலி அதிர்ச்சியால் அணுக்கள் அதிரும் பொழுது அணுக்கவையால் ஒட்டுதல் ஏற்படுகின்றது. மீயொலியானது மருத்துவச் சோதனை முறைகள் பலவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றது. கர்ப்பம் தரித்திருக்கும் தாய்மாரின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை அறிதலில் மிகவும் பயன்பாடுள்ளதாக அமைகின்றது. பகுப்பு:ஒலி
தொல்லுயிர் எச்சம்
https://ta.wikipedia.org/wiki/தொல்லுயிர்_எச்சம்
thumb|அம்மோனைட்டு thumb|மரத்தின் எச்சம் thumb|ஆர்க்கியோப்டெரிக்ஸ் தொல்லுயிர் எச்சம் (Fossil) அல்லது புதைபடிவம் என்பது தாதுப்படுத்தப்பட்ட அல்லது தாதுப்பொருளால் நிரப்பப்பட்ட தாவரங்கள், விலங்குகள் மற்றும் அவற்றின் கால்தடங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். அவை, மூலக்கூறு உயிரியலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்களை அளிக்கின்றன. சில சமயங்களில் மரப் பிசினில் சிக்கும் சிறு பூச்சிகள் எச்சங்களாகின்றன (பார்க்கவும்: அம்பர்). வாழும் உயிரினங்களில் சில பழைய தொல்லுயிர் எச்சங்களை ஒத்து இருப்பின் அவற்றை வாழும் தொல்லுயிர் எச்சங்கள் எனக் குறிப்பிடுவர். கண்டெடுக்கப்படும் தொல்லுயிர் எச்சமானது தற்காலத்தில் வாழும் உயிரினமாக இல்லாதவிடத்து அவை இன அழிவுக்குள்ளான இனமாகக் கருதப்படும். thumb|இந்தோனேசியாவின் பண்டுங் புவிச்சரிதவியல் அருங்காட்சியகத்தில் உள்ள மரப் புதை படிவம். இந்தோனேசியாவில் இதுவரை கிடைத்துள்ள மரப் புதைபடிவங்களில் இதுவே மிகப் பெரியது. உலகிலேயே மிகப் பெரிய மரப் புதை படிவமாகவும் இது கருதப்படுகிறது. * பகுப்பு:மூலக்கூற்று உயிரியல்
தொல்லுயிர் எச்சங்கள்
https://ta.wikipedia.org/wiki/தொல்லுயிர்_எச்சங்கள்
REDIRECT தொல்லுயிர் எச்சம்
ஐரோப்பா
https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பா
thumb|250px|உலக வரைபடத்தில் ஐரோப்பாவின் அமைவிடம் thumb|250px|அரசியல் வரைபடம் ஐரோப்பா கண்டம் யுரேசியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது புவியியல் அமைப்பின் படி ஒரு தீபகற்பமாகும். இதன் எல்லைகளாக வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும் மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே மத்தியதரைக் கடலும் கிழக்கே கருங்கடலும் உள்ளன. ஐரோப்பாக் கண்டம், பொருளாதார வகையில் பிற கண்டங்களைக் காட்டிலும் வளர்ச்சியடைந்த பகுதியாகும். ஐரோப்பாவின் கிரீசு நாடே மேற்கத்திய பண்பாட்டின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. ஐரோப்பா கண்டமானது, 10,180,000 ச.கி;மீகள் பரப்பளவைக் கொண்டது. இது உலகின் ஏழு கண்டங்களில் பரப்பளவின் அளவில், இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்த பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவில் 6.8 % ஆகும். உருசியா நாடு ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். வத்திக்கான் நகர் மிகச் சிறிய நாடாகும். மக்கள் தொகை பரவலில் ஆசியா, ஆப்பிரிக்கா விற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ஐரோப்பா காணப்படுகிறது. ஐரோப்பாவில் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்), இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும்."Global: UN Migrants, Population". Migration News. January 2010 Volume 17 Number 1. ஆனால் ஐக்கிய நாடுகளின் கணிப்பின்படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது. ஐரோப்பாவின் ஆளுமை 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து உலக நிகழ்வுகள் மற்றும் அதன் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக ஐரோப்பா விளங்கி வருகின்றது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஸ்பெயின், போர்த்துக்கல் என்பன உலகின் முக்கியமான கடல்வழிப் பாதைகளைக் கண்டறிந்தனர். முக்கிய இடங்களில் கால்வாய்களையும் அமைத்தனர் அதே போலப் பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் ஐரோப்பாவில் நிகழ்ந்தன. இதன் விளைவாகப் பல நாடுகளைப் பிடிக்கும் ஆவலில் ஆப்பிரிக்கா, ஆசியா , அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களிலுள்ள நாடுகளைக் குடியேற்ற நாடுகளாக்கித் தமது ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர். 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரு உலகப்போர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிடையே நடந்தது. இந்தப் பாதிப்பின் விளைவாக ஐரோப்பாவின் உலக ஆளுமை இக்காலகட்டத்தில் வீழ்ந்தது. 20ம்நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து சோவியத் ஒன்றியம் மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகள் முன்னணிச் சக்திகளாக வளர்ந்தன.National Geographic, 534. பனிப்போர்க் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தன. மேற்கு ஐரோப்பிய நாடுகள் ஐக்கிய அமெரிக்காவின் தலைமையிலான "நேட்டோ" எனப்படும் "வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பிலும்", கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சேவியத் ஒன்றியத்தின் தலைமையிலான "வார்சோ ஒப்பந்த" அடிப்படையிலான அணியிலும் இருந்தன. 1991 ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டு முன்னணிச் சக்தியாக வளர்ந்து வருகிறது. இது,முன்னைய வார்சோ ஒப்பந்தநாடுகள்பலவற்றையும்இணைத்துக்கொண்டு விரிவடைந்து வருகிறது. வரைவிலக்கணம் "ஐரோப்பா" என்பதற்கான வரைவிலக்கணம் வரலாற்றினூடாகப்பல மாறுதல்களை அடைந்து வந்துள்ளது. பழைய காலத்தில் கிரேக்க வரலாற்றாளரான ஏரோடாட்டசு (Herodotus), உலகம் யாராலோ ஐரோப்பா, ஆசியா,லிபியா (ஆப்பிரிக்கா) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார். நைல் ஆறும், ஃபாசிசு ஆறும் இவற்றிடையே எல்லைகளாக இருந்தனவாம். அதே வேளை, ஃபாசிசு ஆற்றுக்குப் பதிலாக, டான் ஆறே ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையேயான எல்லை என்று சிலர் கருதுவதாகவும் ஏரோடாட்டசு குறிப்பிட்டுள்ளார்.Herodotus, 4:45 முதலாம் நூற்றாண்டில் புவியியலாளர் இசுட்ராபோ (Strabo) டான் ஆற்றை ஐரோப்பாவின் கிழக்கு எல்லையாக வரையறுத்துள்ளார்Strabo Geography 11.1 யூதர்களின் பழைய மத நூலான "யுபிலீசு நூல்", கண்டங்கள் நோவாவினால் அவரது மூன்று மகன்களுக்குக் கொடுக்கப்பட்டதாகவும், ஆப்பிரிக்காவை அதிலிருந்து பிரிக்கும் சிப்ரால்ட்டர் நீரிணையில் உள்ள ஏர்க்குலீசுத்தூண்களில் இருந்து, ஆசியாவிலிருந்து அதனைப் பிரிக்கும் டான் ஆறு வரையுள்ள பகுதியே ஐரோப்பா எனவும் கூறுகிறது. கிறித்தவ-இலத்தீன் பண்பாட்டின் அடிப்படையிலும், செருமானிய மரபுகளின் அடிப்படையிலும் 8ஆம் நூற்றாண்டில் உருவான பண்பாட்டுக் கூட்டான இலத்தீன்-கிறித்தவ உலகமே ஐரோப்பா என்பது அதற்கான பண்பாட்டு வரைவிலக்கணம். இது பைசன்டியம், இசுலாம் என்பவற்றுக்குப் புறம்பாக வடக்கு ஐபீரியா, பிரித்தானியத் தீவுகள், பிரான்சு,கிறித்தவமாக்கப்பட்ட மேற்கு செருமனி, அல்பைன் பகுதிகள், வடக்கு இத்தாலி, நடு இத்தாலி என்பவற்றை உள்ளடக்கியது.Norman F. Cantor, The Civilization of the Middle Ages, 1993, ""Culture and Society in the First Europe", pp185ff. இந்தக் கருத்துரு "கரோலிங்கிய மறுமலர்ச்சி"யின் நீடித்திருக்கும் மரபுரிமைகளுள் ஒன்று ஆகும். புவியியல் அடிப்படையிலும் பண்பாட்டுஅடிப்படையிலுமான இந்தப் பிரிப்பு முறைபிந்திய நடுக்காலம் வரை தொடர்ந்தது. கண்டுபிடிப்புக் காலத்தில் இதன் சரியான தன்மை பற்றிக் கேள்வி எழுந்தது. ஐரோப்பாவின் எல்லைகளை வரையறுக்கும் பிரச்சினை 1730 ஆம் ஆண்டில் தீர்க்கப்பட்டது.சுவீடியப்புவியியலாளரும் நிலப்பட வரைவாளருமான இசுட்ரகலன்பர்க் (Strahlenberg) என்பவர் ஆறுகளுக்குப் பதிலாக ஊரல் மலைகளைக் கிழக்கு எல்லையாகக் கொள்ள வேண்டும் என முன்மொழிந்தார். இது உருசியாவிலும், ஐரோப்பாவிலும் ஆதரவு பெற்றது. தற்காலப் புவியியலாளர்கள் ஐரோப்பாவை யூரேசியாவின் மேற்கு அந்தலையில் உள்ள தீவக்குறை என வரையறுக்கின்றனர். இதன் வடக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் பெரிய நீர்ப்பரப்புகள் உள்ளன. ஊரல் மலை, ஊரல் ஆறு, காசுப்பியன் கடல் என்பன இதன் கிழக்கு எல்லைகளாக விளங்குகின்றன. தென்கிழக்கில் காக்கசசு மலைகள், கருங்கடல், கருங்கடலையும் நடுநிலக் கடலையும் இணைக்கும் நீர்வழிகள் என்பன எல்லைகளாக உள்ளன. சமூக-அரசியல் வேறுபாடுகள், பண்பாட்டு வேறுபாடுகள் என்பன காரணமாக ஐரோப்பாவின் எல்லைகள் தொடர்பாக வேறுபட்ட விளக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சைப்பிரசு ஏறத்தாழ அனத்தோலியா (அல்லது சின்ன ஆசியா) ஆகும். ஆனால் அது இப்போது ஐரோப்பாவின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுவதுடன், ஐரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்பு நாடாக உள்ளது. இது போலவே, இப்போது ஐரோப்பாவில் உள்ளதாகக் கருதப்படும் மால்ட்டா, பல நூற்றாண்டுகளாக வடக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.Falconer, William; Falconer, Thomas. Dissertation on St. Paul's Voyage, BiblioLife (BiblioBazaar), 1872. (1817.), p 50, These islands Pliny, as well as Strabo and Ptolemy, included in the African sea ஐசுலாந்து, வட அமெரிக்காவின் கிரீன்லாந்துக்கு அண்மையில் இருந்தபோதும் அதுவும் ஐரோப்பாவின் பகுதியாகவே இப்போது உள்ளது. சிலவேளைகளில், ஐரோப்பா என்னும் சொல் குறுகிய புவியரசியல் நோக்கில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையோ அல்லது பண்பாட்டு அடிப்படையிலான ஒரு உட்குழு நாடுகளை மட்டுமோ குறிக்கப்பயன்படுவதுண்டு. ஆனால், ஐரோப்பிய அவையில் 47 நாடுகள் இருந்தாலும், அவற்றில் 27 நாடுகள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ளன. அத்தோடு, அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம், வட அத்திலாந்திய மற்றும் நடுநிலக்கடல் தீவுகள், சில சமயங்களில் இசுக்கன்டினேவிய நாடுகள் ஆகியவற்றில், ஐரோப்பியத் தலை நிலத்தை வெறுமனே "ஐரோப்பா" என்றும் "கண்டம்" என்றும் அழைப்பது வழக்கமாக உள்ளது. ஐரோப்பாவிலுள்ள நாடுகள் நாடுகள் பரப்பளவு(ச.கிமீ) மக்கள் தொகை(1 ஜூலை, 2002) மக்கள் தொகை அடர்த்தி(ச.கிமீ-க்கு) தலைநகரம் கிழக்கு ஐரோப்பா: பெலாரஸ் 207,600 10,335,382 49.8 மின்ஸ்க் பல்கேரியா 110,910 7,621,337 68.7 சோஃபியா செக் குடியரசு 78,866 10,256,760 130.1 பிராக் அங்கேரி 93,030 10,075,034 108.3 புடாபெஸ்ட் மால்டோவா 33,843 4,434,547 131.0 சிஷினோ போலந்து 312,685 38,625,478 123.5 வார்சா ருமேனியா 238,391 21,698,181 91.0 புக்காரெஸ்ட் இரசியா 3,960,000 106,037,143 26.8 மாஸ்கோ சுலோவேகியா 48,845 5,422,366 111.0 பிராத்திஸ்லாவா உக்ரைன் 603,700 48,396,470 80.2 கீவ் வடக்கு ஐரோப்பா: டென்மார்க் 43,094 5,368,854 124.6 கோப்பென்ஹாகென் எத்தோனியா 45,226 1,415,681 31.3 தாலின் பின்லாந்து 336,593 5,157,537 15.3 எல்சின்கி ஐஸ்லாந்து 103,000 307,261 2.7 ரெய்க்யவிக் அயர்லாந்து குடியரசு 70,280 4,234,925 60.3 டப்ளின் இலத்துவியா 64,589 2,366,515 36.6 ரீகா இலித்துவேனியா 65,200 3,601,138 55.2 வில்னியஸ் நார்வே 324,220 4,525,116 14.0 ஓஸ்லோ ஸ்வீடன் 449,964 9,090,113 19.7 ஸ்டாக்ஹோம் ஐக்கிய இராச்சியம் 244,820 61,100,835 244.2 இலண்டன் தெற்கு ஐரோப்பா: அல்பேனியா 28,748 3,600,523 125.2 டிரானா அன்டோரா 468 68,403 146.2 அன்டோரா லா வெல்லா போசுனியா எர்சகோவினா 51,129 4,448,500 77.5 சரஜீவோ குரோசியா 56,542 4,437,460 77.7 சாகிரேப் கிரேக்கம் 131,940 10,645,343 80.7 ஏதென்சு இத்தாலி 301,230 58,751,711 191.6 ரோம் மாசிடோனிய குடியரசு 25,333 2,054,800 81.1 ஸ்கோப்ஜே மால்டா 316 397,499 1,257.9 வலெட்டா மாந்தநெக்ரோ 13,812 616,258 44.6 பொட்கொரிக்கா போர்த்துகல் 91,568 10,084,245 110.1 லிஸ்பன் தூய மரீனோ 61 27,730 454.6 தூய மரீனோ செர்பியா 88,361 9,663,742 109.4 பெல்கிரேடு சுலோவீனியா 20,273 1,932,917 95.3 லியுப்லியானா ஸ்பெயின் 504,851 45,061,274 89.3 மாட்ரிட் வத்திக்கான் நகர் 0.44 900 2,045.5 வத்திக்கான் நகர் மேற்கு ஐரோப்பா: ஆஸ்திரியா 83,858 8,169,929 97.4 வியன்னா பெல்ஜியம் 30,510 10,274,595 336.8 பிரசெல்சு பிரான்ஸ் 547,030 59,765,983 109.3 பாரிசு ஜெர்மனி 357,021 83,251,851 233.2 பெர்லின் லீஷ்டென்ஸ்டைன் 160 32,842 205.3 வாடூஸ் லக்செம்பூர்க் 2,586 448,569 173.5 லக்சம்பர்க் மொனாக்கோ 1.95 31,987 16,403.6 மொனாக்கோ நெதர்லாந்து 41,526 16,318,199 393.0 ஆம்ஸ்டர்டம் சுவிஸர்லாந்து 41,290 7,507,000 176.8 பேர்ண் நடுவண் ஆசியா: கசாகிஸ்தான் 150,000 600,000 4.0 அஸ்தானா மேற்கு ஆசியா: அசர்பெய்ஜான் 7,110 175,200 24.6 பக்கூ ஜார்ஜியா 2,000 37,520 18.8 திபிலீசி துருக்கி 24,378 11,044,932 453.1 அங்காரா மொத்தம் 10,176,246 709,608,850 69.7 குறிப்புகள் வெளி இணைப்புகள் Council of Europe European Union The Columbia Gazetteer of the World Online Columbia University Press "Introducing Europe" from Lonely Planet Travel Guides and Information Historical Maps Borders in Europe 3000BC to the present Geacron Historical atlas Online history of Europe in 21 maps பகுப்பு:கண்டங்கள்
உயிரினம்
https://ta.wikipedia.org/wiki/உயிரினம்
thumb|நண்டுகள் - உயிரினத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு உயிரியியலிலும், சூழ்நிலையியல் அல்லது இயற்கை அறிவியலிலும் (ecology), ஓர் உயிரினம் என்பது நிலம், நீர், காற்றில் காணப்படும் உயிர் வாழும் பண்புடைய அனைத்து வகை நுண்ணுயிர்கள், தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றைக் குறிக்கும். வாழும் உயிர்த்தொகுதிகளனைத்தும் உயிரினங்களாகும். இதுவரை 'உயிர்' என்ற சொல்லுக்கான முறையான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. எனினும் அவற்றுக்கிடையில் காணப்படும் சில பொதுவான பண்புகளைக் கொண்டு அவற்றை உயிரற்ற பொருட்களிலிருந்து இலகுவாக வேறுபடுத்திக் கொள்ள முடியும். உயிரினங்களின் மிக அடிப்படையான பண்புகள் அனுசேபமும் இனப்பெருக்கமுமாகும். இவ்விரு அடிப்படை இயல்புகளைக் காட்டாதவை உயிரினமாகக் கருதப்படுவதில்லை. உதாரணமாக வைரஸ் என்பதை ஒரு மூலக்கூறாகவே அறிவியலாளர்கள் கருதுவர். வைரஸ்களால் சுயமாக அனுசேபத்திலோ இனப்பெருக்கத்திலோ ஈடுபட முடியாது. உயிரினங்கள் ஒருகல உயிரினமாகவோ பல்கல உயிரினமாகவோ காணப்படலாம். பல்கல உயிரியின் ஒவ்வொரு தனிக்கலமும் மற்றைய கலங்களில் தங்கியுள்ளன. ஒவ்வொரு கலத்தாலும் தனித்துச்செயற்பட முடியாது. உயிரினங்களை கலத்தில் கருவுள்ள மெய்க்கருவுயிரிகளாகவும் கலத்தில் கருவற்ற நிலைக்கருவிலிகளாகவும் பாகுபடுத்தலாம். ஆர்க்கியா மற்றும் பக்டீரியா ஆகிய பேரிராச்சியங்கள் நிலைக்கருவிலிகளுக்குள் அடங்குவதுடன் மெய்க்கருவுயிரி தனியான பேரிராச்சியமாக உள்ளது. மனிதன் உட்பட விலங்குகள், தாவரங்கள், புரட்டோசோவாக்கள், பங்கசுக்கள், அல்காக்கள் என்பன மெய்க்கருவுயிரிகளாகும். வரையறை ஒன்றாக தொகுக்கப்பட்ட மூலக்கூறுகள் செயல்பட்டு அதிகமாகவோ அல்லது பகுதியளவோ நிலைப்புத்தன்மையுடையன வாழ்வியல் பண்புகளை வெளிப்படுத்துபவை என உயிரினங்களைக் கருதலாம்.உயிரினங்கள் என்பதற்கு அகராதிகளில் கூறப்படும் வரையறைகள் பரந்து பட்டதாக இருக்கலாம் “தாவரங்கள், விலங்குகள், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியங்கள் போன்ற எந்த எந்தவொரு வாழும் உயிரின அமைப்பும் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றை மேற்கொள்கின்றன” .இது போன்ற பல வரையறைகள் தீ நுண்மங்கள் (வைரஸ்கள்) மற்றும் சாத்தியமான மனிதனால் உருவாக்கப்பட்ட கரிம அல்லாத உயிரினங்களைப் பற்றி விளக்குகிறது, ஏனெனில் வைரஸ்கள் என்றழைக்கப்படும் தீ நுண்மங்கள் இனப்பெருக்கம் மேற்கொள்ள ஒரு ஓம்புயிர் செல்லின் உயிர்வேதியியல் இயங்குமுறையைச் சார்ந்தே உள்ளன.கரையான் உள்ளிட்ட சிறப்புயிரினங்கள் (superorganism) ஒன்றாகச் சேர்ந்து ஒரே பணியைச் செய்யும் ஒவ்வொரு தனிப்பட்ட உயிரினங்களைக் கொண்ட ஒற்றைச் செயல் அலகுகளாகவோ அல்லது சமூக அலகுகளாக செயல்படுகின்றன . உயிரினம் என்ற சொல்லை வரையறை செய்வதில் சிறப்பான முறை எது என்பது பற்றிய சர்ச்சைகள் நீடிக்கின்றன அத்தகைய வரையறை அவசியமா இல்லையா என்பதைப் பற்றிய விவாதங்களும் நடைபெறுகின்றன . உயிரணுசாரா வாழ்க்கை தீ நுண்மங்கள் அல்லது வைரசுகள் (Viruses) தன்னியக்க இனப்பெருக்கம், வளர்ச்சி அல்லது வளர்சிதை மாற்றம் ஆகிய செயல்களைச் செய்ய இயலாமல் இருப்பதால், பொதுவாக அவை உயிரினங்களாக கருதப்படுவதில்லை.இத்தகைய சர்ச்சை சிக்கல் வாய்ந்தது ஏனெனில் சில உயிரணு உயிரினங்கள் (cellular organisms) சுயாதீனமான உயிர்வாழ்வதற்கு இயலாது. (ஆனால் அவை சுயாதீனமான வளர்சிதை மாற்றமும் வளர்ச்சியும் உடையவையாகும்) மற்றும் உயிரணுக்குள்ளே கடமைப்பாடுள்ள ஒட்டுண்ணிகளாக வாழ தகவமைத்துக்கொண்டுள்ளன.வைரசுகள் ஒரு சில நொதிகள் மற்றும் உயிரினங்களின் பண்புக்கூறுகளின் மூலக்கூறுகளைக் கொண்டிருக்கின்றன என்றாலும், அவை அவற்றின் சொந்த வளர்சிதை மாற்றத்தை கொண்டிருக்கவில்லை. மேலும் வைரசுகளால் அவை உருவாக்கப்பட்டிருக்கும் கரிமச் சேர்மங்களை ஒருங்கிணைக்கவோ தொகுக்கவோ முடியாது.வைரசுகள் ஓம்புயிரி உயிரணுக்களில் மட்டுமெ வலிமையாக செயல்பட்டு இனப்பெருக்கம் போன்ற செயல்களைச் செய்கின்றன. ஆனால் ஓம்புயிரி செல்களுக்கு வெளியே ஒரு உயிரற்ற சடப்பொருளாகவே கருதவேண்டியுள்ளது. வைரஸ்கள் சுயாதீனமான வளர்சிதை மாற்றத்தைத் தக்கவைக்கவில்லை ஆதலால் அவை வழக்கமாக உயிரினங்களாக வகைப்படுத்தப்படவில்லை இருப்பினும் அவற்றில் சொந்த மரபணுக்கள் இருக்கின்றன, அவை உயிரினங்களின் பரிணாம வழிமுறைகள் போன்ற இயங்குமுறைகளால் உருவாகின்றன. உயிரினங்களாக வைரஸ்கள் ஆதரிக்கும் மிகவும் பொதுவான வாதம், அவை பரிணாமத்திற்கு உட்பட்ட மற்றும் தன்னியக்கமாக பெருக்கமடையும் திறனுடைவதாகும்.சில விஞ்ஞானிகள் வைரசுகள் உருவாகவுமில்லை சுய-இனப்பெருக்கம் செய்யவுமில்லை என்றும் வாதிடுகின்றனர்.உண்மையில், வைரசுகள் தங்கள் ஓம்புயிர் அல்லது புரவலன் செல்கள் (host cells) மூலம் உருவாகின்றன, அதாவது, இதில் வைரஸ்கள் மற்றும் ஓம்யிபுர் செல்களின் இணை-பரிணாமம் இருப்பதாக அறியப்படுகிறது.ஓம்புயிர் செல்கள் இல்லாவிட்டால், வைரசுகளின் பரிணாமம் சாத்தியமற்றதாக இருக்கும்.இனப்பெருக்கம் செய்வதைப் பொறுத்தவரை, வைரசுகள் பெருமளவில் ஓம்புயில் செல்களின் இயங்கு செயல்முறைகளை நம்பியிருக்கின்றன . பல உயிரினங்களில் காணப்படும் பொதுப் பண்புகள் thumb|right|நிலைக்கருவிலிகளுக்கு உதாரணமாக எஸ்சீரியா கொலி பக்றீரியா thumb|right|175px|மெய்க்கருவுயிரிக்கு உதாரணமாக ஒரு காளான் ஒழுங்கும் ஒழுங்கமைப்பும் இசைவாக்கங்கள் அனுசேபம் அசைவு தூண்டற்பேறு இனப்பெருக்கம் வளர்ச்சியும் விருத்தியும் பாரம்பரியமும் தலைமுறையுரிமை அடைதலும் கூர்ப்பு கட்டமைப்பு வேதியியல் உயிரினங்கள் அனைத்தும் மிகவும் சிக்கலான இரசாயனத் தொகுதிகளாகும். இவை தப்பி பிழைப்பதையும் இனப்பெருக்கத்தையும் நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. புவியிலுள்ள அனைத்து உயிரினங்களும் கார்பனையும் நீரையும் மைய இரசாயனக் கட்டமைப்புப் பொருட்களாகக் கொண்டு கூர்ப்படைந்துள்ளன. கார்பன் மற்றும் நீரின் இரசாயன இயல்புகள் இதற்குக் காரணமாய் அமைந்துள்ளன. கார்பனே ஐதரசனுக்கு அடுத்த படியாக மிக அதிகளவான சேர்வைகளை உருவாக்கும் தனிமமாகும். கார்பனால் ஒற்றை, இரட்டை, மற்றும் முப்பிணைப்புகளை உருவாக்க முடியும். அத்தோடு கார்பன் குறைந்த சார்பணுத்திணிவையும் சார்பளவில் அதிகமாகக் கிடைக்கும் தனிமமாகும். எனவே தான் புவியில் கார்பனை மையமாக வைத்து உயிரினங்கள் கூர்ப்படைந்துள்ளன. நீரின் இரசாயன இயல்புகளும் புவியில் உயிரினங்களின் கூர்ப்பில் பெரும் பங்கு வகித்துள்ளது. உயிரினங்களின் நிலவுகைக்கு உதவிய நீரின் பண்புகளான உயர் தன்வெப்பக் கொள்ளளவு, உயர் உருகல், ஆவியாதல் வெப்பம், ஒட்டற்பண்பு, மயிர்த்துளைமை, மேற்பரப்பிளுவை போன்ற பண்புகளுக்கு நீரில் காணப்படும் ஐதரசன் பிணைப்பு காரணமாகும். நீர் அயனாக்கும் சக்தியையும் கொண்டுள்ளது. எனவே தான் நீரை நேரடியாக உட்கொள்ளாத பாலைவன உயிரினங்களின் உடல்களில் கூட நீர் கணிசமான சதவீதத்தைப் பிடித்துள்ளது. மாமூலக்கூறுகள் உயிரினங்களை புரதங்கள், காபோவைதரேட்டுக்கள், இலிப்பிட்டுக்கள் மற்றும் கருவமிலங்கள் ஆகிய நான்கு பிரதான மாமூலக்கூறுகள் (பெரிய மூலக்கூறுகள்) ஆக்கின்றன. தலைமுறையுரிமைத் தகவல்களைச் சேமிப்பதற்கும (டி.என்.ஏயில்) அத்தகவல்களை ஈடுபடுத்துவற்கும் (ஆர்.என்.ஏயின் மூலம்) கருவமிலங்கள் பயன்படுகின்றன. புரதங்கள் உயிரினத்தில் பல்வேறு செயற்பாடுகளைப் புரிகின்றன. நொதியங்களாகத் தொழிற்பட்டு உயிர்வேதியியல் தாக்கங்களை ஊக்கப்படுத்துகின்றன. கட்டமைப்பு ரீதியான பலத்தை வழங்குகின்றன. கலச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துகின்றன ஹோர்மோன்களாகச் செயற்படுகின்றன. நுண்ணுயிர்களுக்கு எதிராகத் தொழிற்பட்டு, உடலுக்குப் பாதுகாப்பு வழங்கும் பிறபொருளெதிரியாகச் செயற்படுகின்றன. இலிப்பிட்டுகள் கலமென்சவ்வுகளை ஆக்கவும் சக்தி வழங்கவும் பயன்படுகின்றன. பொஸ்போலிப்பிட்டுகளே கலமென்சவ்வை ஆக்கும் பிரதான கூறாகும். பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வு சில வகை (கலத்துக்குத் தேவைப்படும்) பொருட்களை மாத்திரமே உள்ளனுப்பும் ஆற்றலுடையது. சில விலங்குகளிலும் தாவரங்களிலும் சக்தி சேமிக்கும் கூறாகவும் இலிப்பிட்டுக்கள் உள்ளன. காபோவைதரேற்றுகளே உயிரினங்களில் சக்தி வழங்கலுக்குப் பயன்படும் பிரதான மாமூலக்கூறுகளாகும். பௌதிகக் கட்டமைப்பு உயிரினங்களின் அடிப்படைத் தொழிற்பாட்டலகு கலமாகும். ஒருகல உயிரினங்களில் இதுவே முதன்மையானதும் இறுதியானதுமான கட்டமைப்பலகாகும். எனினும் பலகல உயிரினங்களில் கலங்கள் இழையங்களாக, அங்கங்களாக, அங்கத் தொகுதிகளாக இறுதியில் ஒரு பல்கல உயிரினமாக ஒன்று சேருகின்றன. மனிதரில் தனித்தனியான உடலியக்கங்களைக் கொண்ட, அதேசமயம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு இயங்கும் பல உடல் தொகுதிகள் காணப்படுகின்றன. பல்கல உயிரினத்தில் உள்ள அனைத்து கலங்களும் ஒரே மாதிரியான டி.என்.ஏ க்களைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு கலமும் தனக்கென ஒதுக்கப்பட்ட தொழிலைச் செய்கின்றது. கலம் கலக்கொள்கை 1839ஆம் ஆண்டு ஸிச்சுவான் மற்றும் ஸ்க்லெய்டன் ஆகியோரால் முன்மொழியப்பட்டது. 'எல்லா உயிரினங்களும் கலங்களால் ஆக்கப்பட்டுள்ளன', 'கலமே உயிரின் அடிப்படையலகு' என்பனவே இக்கொள்கையின் அடிப்படை வசனங்களாகும். கலத்தை விடச் சிறிய கலப் புன்னகங்கள் காணப்பட்டாலும் அவற்றால் சுயமாக இனப்பெருக்கம் செய்ய முடியாது. எனவே கலம் என்பதே உயிருள்ளவற்றின் பண்புகளைக் காட்டும் மிகச் சிறிய அலகாகும். எல்லாக் கலங்களிலும் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ உள்ளன. கலம் இரட்டை பொஸ்போலிப்பிட்டு மென்சவ்வால் சூழப்பட்டிருக்கும். ஆயுட்காலம் ஒரு உயிரினத்தின் அடிப்படை அளவுருக்களில் அதனுடைய ஆயுட்காலமும் ஒன்றாகும். சில உயிரினங்கள் குறுகிய காலம் உயிர் வாழ்வதைப் போன்று சில தாவரங்களும் பூஞ்சைகளும் ஆயிரக்கணக்கான வருடங்கள் உயிர் வாழக் கூடியனவாக உள்ளன. பரிணாமம் பால் இனம் தற்போதுள்ள மெய்க்கருவுயிரிகளிடையே பாலியல் இனப்பெருக்கம் பரவலாகக் காணப்படுகின்றது. இது மெய்க்கருவுயிரிகளின் அடிப்படை இயல்புகளில் ஒன்றாகும். வெளி இணைப்புகள் உயிரியல் விநோதம் உயிரின அடுக்கு வரைபடம் *
பிபிசி
https://ta.wikipedia.org/wiki/பிபிசி
பிபிசி (BBC) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த, பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம், 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிபிசி தொலைக்காட்சி, வானொலி, இணையத்தள சேவைகளை வழங்குகிறது. இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் வழங்கும் செய்திகள் உலகளவில் சேகரிக்கப்படுகின்றது. இதன் முதன்மைப் பணி ஐக்கிய இராச்சியத்திலுள்ள பகுதிகளுக்கு அரசு சார்பாக ஒலிபரப்புவதாகும். இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்பாகிறது. உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்கும் பிபிசி வானொலி பிபிசி தமிழோசை என்ற பெயரில் நாள்தோறும் அரை மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. தமிழோசை நிகழ்ச்சிகளை பெப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி ஒலிபரப்புச் செய்து வந்தது எனினும் ஈழப்போர்ச் செய்திகளை பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பெப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினூடான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டதுஇலங்கை வானொலியினூடான மறு ஒலிபரப்பை பிபிசி இடைநிறுத்துகிறது அணுகப்பட்டது 10 பெப்ரவரி 2009. எதிர்ப்பு இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் நடந்த பெண் வல்லுறவு நிகழ்வை ஒட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டி பெண்களை அவமதிப்பதாக இருப்பதாகக் கூறி, இதை ஒளிபரப்பு செய்த பிபிசியின் மீது இந்தியா அரசு நடவடிக்கை எடுக்க முயன்றது.மீது நடவடிக்கை எடுப்பது பற்றி மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது: ராஜ்நாத் சிங் தகவல் வருமான வரி சோதனையும், வரி ஏய்ப்பும் பி பி சி இந்தியா அலுவலகத்தில் 14 பிப்ரவரி 2023 அன்று இந்திய வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். BBC India offices searched by income tax officials Weeks after its documentary taken off, BBC gets I-T knock6 சூன் 2023 அன்று பி பி சி இந்தியா, தாங்கள் ரூபாய் 40 கோடியை வருமான வரி கணக்கில் குறைத்துக் காட்டியதாக மின்னஞ்சல் மூலம் வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.ரூ.40 கோடி குறைத்து காட்டினோம் : பி.பி.சி., நிறுவனம் ஓப்புதல் BBC admits it paid lower taxes in India மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பிபிசி இணையத்தளம் பிபிசி தமிழ் வானொலிச் சேவை பிபிசி டுவிட்டர் பக்கம் பிபிசி டெலிகிராம் பக்கம் பகுப்பு:ஆங்கில தொலைக்காட்சி சேவைகள் பகுப்பு:பிரித்தானிய வானொலி நிறுவனங்கள்
இலட்சம்
https://ta.wikipedia.org/wiki/இலட்சம்
ஒரு இலட்சம் () (Lakh) அல்லது ஒரு நியுதம் என்பது, எண்ணிக்கையில் நூறு ஆயிரங்களுக்கு சமமான ஒரு எண். நூறு இலட்சங்கள் சேர்ந்து ஒரு கோடியாகும், இது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழங்கால எண்ணிக்கை முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும் போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன்படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன. மேலும் இது அளவைக் குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது, உதாரணமாக "Lakhs of people" (Lakhs லட்சக்கணக்கான) லட்சக்கணக்கான மக்கள் என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. (லட்சக்கணக்கான இது பொருளாதார பயன்பாட்டிற்கு அல்ல.) இலட்சம் என்பதற்கு பதிலாக இலகாரம் சென்னைப் பேரகரமுதலி - இலகாரம் என்று எழுதுதல் தூய தமிழ் என்று கருதப்படுகிறது. எடுத்துக்காட்டு மேல் நாட்டு முறையில் பெரிய எண்களை எழுதும் போது ஆயிரம் ஆயிரமாகப் பிரித்துக் காட்டுவது வழக்கு. ஆயிரம் (1,000), மில்லியன் (1,000 x 1,000), பில்லியன் (1,000 x 1,000 x 1,000) என்றவாறு ஆயிரத்தின் மடங்குகளுக்கே தனிப் பெயர்களும் உள்ளன. ஆனால், இந்திய முறையில் ஆயிரம் (1,000), இலட்சம் (100 x 1,000), கோடி (100 x 100 x 1,000) ஆயிரத்தின் நூற்று மடங்குகளுக்கே தனிப்பெயர்கள் உள்ளன. இதனால், இந்திய முறையில் ஆயிரத்துக்குப் பின் நூறு நூறாகவே பிரித்துக் காட்டுவது வழக்கம். இந்திய முறை மேனாட்டு முறை ஆயிரம் 1,000 ஆயிரம் 1,000 பத்தாயிரம் 10,000 பத்தாயிரம் 10,000 இலட்சம் 1,00,000 நூறாயிரம் 100,000 பத்து இலட்சம் 10,00,000 நுல்லியம் (million) 1,000,000 கோடி 1,00,00,000 பத்து நுல்லியம் (ten million) 10,000,000 மேற்கோள் பகுப்பு:எண்ணிக்கை பகுப்பு:முழு எண்கள்
லட்சம்
https://ta.wikipedia.org/wiki/லட்சம்
REDIRECT இலட்சம்
கோடி
https://ta.wikipedia.org/wiki/கோடி
ஒரு கோடி (Crore) என்பது, எண்ணிக்கையில் நூறு இலட்சங்களுக்கு சமமாகும். நூறு கோடிகள் சேர்ந்து ஒரு பில்லியன் ஆகும். இது, இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் பழங்கால எண்ணிக்கை முறையாகும். இம்முறையில் எண்களை எழுதும்போது, எண்களுக்கு இடையே தடுப்பான்களை பயன்படுத்தும் இடங்களும் மாறுபடுகின்றன.Oxford English Dictionary, 1st ed., 1893, s.v. 'crore' எடுத்துக்காட்டு அயல் நாடுகளில் 30 மில்லியனை 30,000,000 என எழுதுவர். இதுவே கோடி அடிப்படையில் எழுதும் பொழுது, 3,00,00,000 என எழுதப்படும். மேற்கோள்கள் பகுப்பு:எண்ணிக்கை பகுப்பு:முழு எண்கள்
பாரதீய ஜனதாக் கட்சி
https://ta.wikipedia.org/wiki/பாரதீய_ஜனதாக்_கட்சி
REDIRECT பாரதிய ஜனதா கட்சி
மாத்திரை (தமிழ் இலக்கணம்)
https://ta.wikipedia.org/wiki/மாத்திரை_(தமிழ்_இலக்கணம்)
தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது ஒருவன் இயல்பாகக் கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துகள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண் இயல்பாகவே மூடித் திறந்து கொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் இமைத்துக் கொள்ளும் கால அளவுதான் மாத்திரை.கண் இமை நொடி என அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட ஆறே. - தொல்காப்பியம் நூன்மரபு 7 "இயல்பெழு மாந்தர்தம் இமைநொடி மாத்திரை" - நன்னூல்பிற்காலத்தவர் இதனைக் கைந்நொடி எனக் கூறுவது பொருந்தாது.குறிப்பு எண்ணுவோம் ஒருவர் படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்குத் தெரியாமலேயே அவர் இமை நொடிக்கிறது. அதாவது மூடித் திறக்கிறது. இதுதான் இமைநொடி. இயல்பாக எழும் இமைநொடி மாந்தர் இமைநொடி. பிற உயிரினங்களின் இமைநொடி அன்று. 'அன்பு அரவணைக்கும்' என்று ஒருவர் சொல்வதாக வைத்துக்கொள்வோம். இந்தத் தொடரில் 'அன்பு' என்பதை ஒலிக்க இரண்டரை மாத்திரை. இதுவே குற்றியலுகரமாக ஒலிக்கப்படும்போது இரண்டு மாத்திரை. அடுத்த சொல் வரும்போது விட்டிசை. பின்னர் 'அரவணைக்கும்' என்று வரும் சொல்லை ஒலிக்கும்போது ஏழு மாத்திரை. இத்தொடரை இயல்பாக மொழிய 10 மாத்திரையாவது வேண்டும். இப்போது எண்ணுவோம். 'கைந்நொடி'யை மாத்திரை எனல் தகுமா? எடுத்தல் கால், இணைத்தல் அரை, இறுக்கல் முக்கால், முடித்தல் ஒன்று - என்றெல்லாம் நம் முன்னோர்களில் சிலர் கூறியிருப்பதை விட்டுவிடலாம் எனபதை இவ்விடத்தில் முன்வைப்பதே நல்லது. நன்னூலாரும் இதனைக் கூறவில்லை என்பதை ஆய்ந்து உணர்ந்துகொள்வோம். மாற்றுக்கருத்து: [[கைந்நொடி'யை மாத்திரை எனல் தகுமா? எடுத்தல் கால், இணைத்தல் அரை, இறுக்கல் முக்கால், முடித்தல் ஒன்று - என்றெல்லாம் நம் முன்னோர்களில் சிலர் கூறியிருப்பதை விட்டுவிடலாம் . என்று மேலே கூறப்பட்ட கருத்து மறுக்கத் தக்கதாகும் ஏனெனில் கால்,அரை, முக்கால் போன்ற மாத்திரை அளவு பற்றிக் கூறியவர் முத்துவீரியம் என்ற இலக்கண நூலை எழுதிய முத்துவீரியர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வகுப்பறையில் ஆசிரியர் மாத்திரை அளவு பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது அந்த வகுப்பறையில் ஒரு மாணவன் எழுந்து நின்று ஆசிரியரை நோக்கி, 'ஆசிரியரே, நீர் மெய்எழுத்துகளுக்கு அரை மாத்திரை என்று கூறினீர்கள். அந்தக் கால அளவு இயல்பாக கண்ணிமைக்கும் நேரத்தில் கண்ணிமை பாதி இறங்கி வருகின்ற கால அளவு என்று கூற வேண்டுமா?' என்று வினவினால் அதற்கு ஆசிரியர் 'இயல்பாகக் கண்ணிமைக்கும் நேரத்தைக் கணக்கிட்டு அதை இரண்டாக வகுத்துக் கொண்டால் அரை மாத்திரை கால அளவு கிடைத்துவிடும்' என்று கூறிவிடுவார். அக்கருத்து மாணவருக்குத் துல்லியமான அரை மாத்திரை கால அளவை அளந்து கொள்ள இயலாமல் போய்விடும்.அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலத்தில் இயல்பாக இமைக்கும் கால அளவை அளந்து அரை மாத்திரைக்கு உரிய கால அளவை மிகத் துள்ளியமாகக் கூறிவிடலாம். வசதி வாய்ப்பு இல்லாத அக்காலத்தில் அரை மாத்திரைக்கு உரிய கால அளவை முத்துவீரியம் என்ற இலக்கண நூலின் ஆசிரியர் பகுத்து உரைத்திருப்பது மிகச் சரி என்றே கூறிவிடலாம்.]] குற்றெழுத்துகளுக்கு (குறில் எழுத்துகளுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு) நெட்டெழுத்துகளுக்கு (நெடில் எழுத்துகளுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ) தனி மெய்யெழுத்துகள், ஆய்த எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம் போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும். உயிரளபெடை மூன்று மாத்திரையளவும், ஒற்றளபெடை ஒரு மாத்திரையளவும் ஒலிக்கும். ஔகாரக்குறுக்கம், ஐகாரக்குறுக்கம் என்பன ஒன்று அல்லது ஒன்றரை மாத்திரையளவு ஒலிக்கும். மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பன கால் மாத்திரையளவு ஒலிக்கும். அடிக்குறிப்பு பகுப்பு:எழுத்திலக்கணம்
விக்சனரி
https://ta.wikipedia.org/wiki/விக்சனரி
விக்சனரி (Wiktionary) என்பது சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், உச்சரிப்பு முதலியவற்றை உள்ளடக்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலி ஒன்றைக் கூட்டு முயற்சியில் உருவாக்கும் ஒரு திட்டமாகும். இத்திட்டம் விக்கிமீடியா நிறுவனத்தினால் வழிநடத்தப்படுகிறது. வணிக நோக்கற்ற இந்த அகரமுதலியை இலவசமாக எவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்; பங்கேற்கவும் முடியும். விக்கிப்பீடியாவைப் போன்றே விக்சனரிகளும் பல மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. விக்சனரியில் சொற்களுக்குப் பொருள் தவிர விளக்கம், பயன்பாடு, சொற்பிறப்பியல், இணை சொற்கள், சொல்வளம் ஆகியவையும் தர வாய்ப்புள்ளது. ஒரு மொழியில் உருவாக்கப்படும் விக்சனரியில் அம்மொழி தவிர, பிற மொழிச் சொற்களும் இடம்பெறலாம். விக்சனரி வரலாறு இணையத்தில் விக்சனரியின் தோற்றம் 2002 டிசம்பர் 12 ஆம் திகதி உருவாக்கம் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆங்கிலம் அல்லாத முதல் மொழி விக்சனரியாக 2004 மார்ச்சு 28 ஆம் திகதி பிரஞ்சு மற்றும் பொலிசு மொழி அகரமுதலிகள் தோற்றப்பெற்றன. அதனைத் தொடர்ந்தே ஏனைய மொழிகளிலும் விக்சனரிகள் தோற்றம் பெறத்தொடங்கின. விக்சனரி தோற்றம் பெற்ற காலகட்டத்தில் அதன் இணைய முகவரியாக (wiktionary.wikipedia.org) என்றே 2004 மே 1 ஆம் திகதி வரை இருந்தது. தற்போது விக்சனரியின் இணைய முகவரியாக (www.wiktionary.org) விக்சனரியின் தற்போதைய இணைய முகவரி www.wiktionary.org. என்றுள்ளது. தமிழ் விக்சனரி வரலாறு முதன்மைக் கட்டுரை: தமிழ் விக்சனரி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் விக்சனரி இணையத்தளம் தமிழ் விக்சனரி இணையத்தளம் பகுப்பு:அகராதிகள் பகுப்பு:விக்கிமீடியா திட்டங்கள் பகுப்பு:மீடியாவிக்கி இணையங்கள் பகுப்பு:சொற்பிறப்பியல்
டோனி பிளேர்
https://ta.wikipedia.org/wiki/டோனி_பிளேர்
டோனி பிளேர் (Tony Blair), (பி. மே 6, 1953) ஐக்கிய இராச்சியத்தின் முன்னாள் பிரதமர் ஆவார். 1994ல் ஜான் ஸ்மித்தின் இறப்பிற்குப் பிறகு, தொழிற் கட்சியைத் தலைமை தாங்கி நடத்தி 1997ல் நடந்த பொதுத் தேர்தல்களில் ஜான் மேஜரைத் தோற்கடித்து தொழிற் கட்சிக்கு வெற்றி ஈட்டித் தந்தார். அன்று முதல், தொடர்ந்து மூன்று முறை பிரதமராகப் பதவி வகித்திருக்கிறார். தொழிற் கட்சித் தலைவர்களிலேயே அதிக காலம் பிரதமாரகப் பொறுப்பு வகிப்பவரும், தொடர்ந்து மூன்று முறை பொதுத் தேர்தல்களில் அக்கட்சிக்கு வெற்றி ஈட்டித் தந்தவரும் டோனி பிளேர் தான். இவர் ஜூன் 27, 2007 அன்று தமது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். வெளி இணைப்புகள் 10 Downing Street official site Guardian Unlimited Politics Ask Aristotle: Tony Blair They Work For You - Tony Blair Ministerial Whirl - A tool showing Tony Blair's cabinet changes since 1997 பகுப்பு:பிரித்தானிய அரசியல்வாதிகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:1953 பிறப்புகள் பகுப்பு:ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்கள்
மாத்திரை
https://ta.wikipedia.org/wiki/மாத்திரை
மாத்திரை (தமிழ் இலக்கணம்). மாத்திரை (மருத்துவம்).
பசுவய்யா
https://ta.wikipedia.org/wiki/பசுவய்யா
REDIRECT சுந்தர ராமசாமி
இராமாயணம்
https://ta.wikipedia.org/wiki/இராமாயணம்
thumb|300px|இராமன் அனுமனின் தோளில் இருந்தபடி இராவணனுடன் போர்புரியும் காட்சி. இராமாயணம் () வால்மீகி என்னும் முனிவரால் சமசுக்கிருத மொழியில் இயற்றப்பட்ட மிகப் பழைய இதிகாசமாகும்.இதிகாசம் என்றால் மரபுவழி வரலாறு, கதை என்று பொருள் படும். பெரும்காவியம் என்றும் பொருள். வாமன் சிவராமன் ஆப்தேயின் த பிராக்டிக்கல் சமசுக்கிருத-இங்கிலீசு அகராதி, திருத்திய, விரிவாக்கிய பதிப்பு (V. S. Apte's the Practical Sanskrit-English Dictionary ), பக்கம் 382: इतिहासः itihāsḥ इतिहासः [fr. इति-ह-आस (3rd. pers. sing. Perf. of अस् to be); so it has been] (1 History (legendary or traditional); धर्मार्थकाममोक्षाणामुपदेशसमन्वितम् . இது பொ.ஊ.மு. 5 ஆம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. 2 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்தின் முக்கியமான நூல்களுள் ஒன்று. மூல நூலான வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும், பிற நாடுகளின் மொழிகளிலும் இராமாயணம் இயற்றப்பட்டுள்ளது. கம்பர் என்னும் புலவர் புலவர்களுக்கே உண்டான பாணியில் பல கற்பனைகளை இனைத்து இதனைத் தமிழில் எழுதினார். இது கம்ப இராமாயணம் எனப்படுகின்றது. கெமர் மொழியில் உள்ள ரீம்கெர், தாய் மொழியில் உள்ள ராமகியெ, லாவோ மொழியில் எழுதப்பட்ட ப்ரா லாக் ப்ரா லாம், மலாய் மொழியின் இக்காயத் சேரி ராமா போன்றவை வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவியவை ஆகும். கோசல நாட்டின் தலை நகரமான அயோத்தியை சேர்ந்த ரகு வம்ச இளவரசரான ராமர், அவர் மனைவி சீதை ஆகியோரின் வாழ்க்கையை விவரிக்கும் இந்த இதிகாசம், உறவுகளுக்கு இடையேயான கடமைகளை எடுத்துக் காட்டுகின்றது. சிறந்த வேலையாள், சிறந்த தம்பி, சிறந்த மனைவி, சிறந்த அரசன் போன்றோர் எப்படி இருக்கவேண்டும் என்பது இதன் கதை மாந்தர்கள் மூலம் விளக்கப்படுகின்றது. இராம அவதாரம் சொற்பிறப்பியல் இராமாயணம் என்னும் பெயர் இராமன், அயனம் என்னும் சொற்களின் கூட்டாகும். காவியத்தின் மையப் பாத்திரத்தின் பெயரான இராம, இரண்டு சூழ்நிலை அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அதர்வவேதத்தில், இது 'அடர், அடர் நிறம், கருப்பு' என்று பொருள்படும் மற்றும் 'இரவின் இருள் அல்லது அமைதி' என்று பொருள்படும் இராத்திரி என்ற வார்த்தையுடன் தொடர்புடையது. மகாபாரதத்தில் காணக்கூடிய மற்றொரு பொருள், 'மகிழ்ச்சியானது, இனிமையானது, வசீகரமானது, அழகானது, அழகானது' என்பதாகும். அயனம் என்னும் சொல் சமசுக்கிருதத்தில் பயணம் என்னும் பொருளுடையது. இதனால், இராமாயணம் என்பது "இராமனின் பயணம்" என்று பொருள்படும், அக சாந்தியின் சமஸ்கிருத இலக்கண விதியின் காரணமாக அயனா அயனாவாக மாற்றப்பட்டது.Monier Monier Williams, राम, Sanskrit English Dictionary with EtymologyMonier Monier Williams, रात्रि, Sanskrit English Dictionary with EtymologyMonier Monier Williams, अयन, Sanskrit English Dictionary with Etymology காலம் மதிப்பீடு ஜோதிட கணக்கீடுகளின்படி, ராமாயணத்தின் விவரிப்பு பொ.ஊ.மு. 5301 இல் திரேதா யுகம் காலகட்டத்தில் நடந்தது.Absolute dating of Ramayana {https://books.google.lk/books/about/Absolute_Dating_of_Ramayana.html?id=XTXyDwAAQBAJ&redir_esc=y} ராபர்ட் பி. கோல்ட்மேனின் கூற்றுப்படி ராமாயணத்தின் பழமையான பகுதிகள் பொ.ஊ.மு. 7 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கும் பொ.ஊ.மு. 6 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு இடைப்பட்டவை. பௌத்தம் அல்லது மகத ராஜ்ஜியத்தின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடாத கதையே இதற்குக் காரணம். சாகேதா அல்லது ஷ்ரவஸ்தியின் வாரிசு தலைநகர் என்பதற்குப் பதிலாக, அயோத்தியை கோசலத்தின் தலைநகர் என்றும் உரை குறிப்பிடுகிறது. கதை காலத்தின் அடிப்படையில், ராமாயணம் மகாபாரதத்திற்கு முந்தையது என்பது வெளிப்படையானது. பொ.ஊ.மு. 7 முதல் 4 ஆம் நூற்றாண்டுகள் வரை கிடைக்கக்கூடிய உரையின் ஆரம்ப கட்டத்திற்கான அறிஞர்களின் மதிப்பீடுகள். இந்திய மொழிகளில் இராமாயணம் தமிழில் கம்பரும், வடமொழியில் வால்மீகியும், இந்தியில் துளசி தாசரும், மலையாளத்தில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனியும், ஒரியாவில் பலராம்தாசுவும் இயற்றியுள்ளனர். வடமொழி இராமாயண நூல்கள் . யோக வசிஷ்ட (அல்லது) வசிஷ்ட இராமாயணம் (பொ.ஊ. 8 அல்லது 12 ஆம் நூற்றாண்டு) . அத்யாத்ம இராமாயணம் (பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டு, இராமசர்மர் எழுதியது)அத்யாத்ம இராமாயணம் . அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்ட காலகட்டம்) . ஆனந்த இராமாயணம் (பொ.ஊ. 15 ஆம் நூற்றாண்டு) வால்மீகி பெயரால் வழங்கப்படுவது.http://www.tamilvu.org/slet/l3100/l3100pd3.jsp?bookid=56&auth_pub_id=69&pno=36 வால்மீகி இராமாயணத்தின் அமைப்பு இராமாயணத்தின் கதை பல மட்டங்களில் தொழிற்படுகின்றது. ஒரு மட்டத்தில் இது அக்காலத்துச் சமூகத்தை விவரிக்கின்றது. பரந்த பேரரசுகள், அடுத்த அரசர்களாக வரவிருக்கும் இளவரசர்களின் வாழ்க்கை, தாய்மாருக்கும் மாற்றாந் தாய்களுக்கும் இடையிலான போட்டி, உடன்பிறந்தோருக்கு இடையிலான அன்புப் பிணைப்பும் விசுவாசமும், இளவரசிகளை மணம் முடிப்பதற்கான போட்டிகள் போன்றவை இவற்றுள் அடக்கம். இன்னொரு மட்டத்தில் இது, நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன், ஒரு தலைவனாக எவ்வாறு நடந்துகொள்கிறான் என்பதையும், நிலைமைகளை ஒன்றுபோல எதிர்கொண்டு, சமயத்துக்குத் தக்கபடி நடந்து, தனது சொந்தத் துன்பங்கள் முதலியனவற்றுக்கும் அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதையும் காட்டுகிறது. வேறொரு மட்டத்தில் இது, தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டுவதற்காக மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த விஷ்ணுவின் கதையும் ஆகும். வால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை: பால காண்டம்: இராமனினதும் உடன்பிறந்தோரினதும் பிறப்பு, கல்வி, திருமணம் என்பவை பற்றிய கதைப் பகுதி. அயோத்தி காண்டம்: இராமன் சீதையை மணந்து கொண்ட பின்னர் இளவரசனாக அயோத்தியில் வாழ்ந்த காலத்துக் கதைப் பகுதி. ஆரண்ய காண்டம்: இராமன் காட்டுக்குச் சென்றதும் அங்கு வாழ்ந்ததும். கிஷ்கிந்தா காண்டம்: கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும்போது வானரர் நாட்டில் இராமனது வாழ்க்கை. சுந்தர காண்டம்: சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது, அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய கதைப் பகுதி. யுத்த காண்டம்: இராமனுக்கும் இராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய கதைப் பகுதி. உத்தர காண்டம்: இராமன் அயோத்திக்கு திரும்ப வந்து அரசனானதையும் சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி. இந்த இராமாயணத்தில் காணப்படும் முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் வால்மீகியால் எழுதப்பட்டதா என்பதில் சில ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. இவ்விரு பகுதிகளினதும் மொழி நடை ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபடுவதும் அவற்றின் உள்ளடக்கங்களில் முரண்பாடுகள் காணப்படுவதும் இத்தகைய ஐயப்பாடுகளுக்குக் காரணமாகும். எனினும் பலர் இவ்வேழு காண்டங்களும் வால்மீகியால் எழுதப்பட்டதாகவே நம்புகின்றனர். வால்மீகி இராமாயணத்தின் கதைச் சுருக்கம் பால காண்டம் அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு நீண்ட நாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்து வந்தார். அதனால் தன் மந்திரி சுமந்தரர் மற்றும் தன் குலகுருவான வசிட்டரின் அறிவுரைப்படி புத்திர-காமேஷ்டி யாகம் நடத்தினார். அப்போது மகா விஷ்ணு தோன்றி, ஓர் தங்கத்திலான பாத்திரத்தை தசரதனிடம் கொடுத்து அதிலிருக்கும் புனிதமான தேனைத் தசரதனின் மனைவியரை பருகும்படி கேட்டு கொண்டார். அதன்படி தசரதரும் தன் மனைவியரான கௌசல்யா, சுமித்திரை மற்றும் கைகேயியிடம் அந்த தேனை பகிர்ந்தளிதார். விரைவிலேயே கௌசல்யாவுக்கு இராமனும், கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு இரட்டையரான இலக்குவன் மற்றும் சத்ருகனன் ஆகியோர் பிறந்தனர். சிறிது காலத்திற்கு பின்பு நால்வரும் வசிட்டரிடம் சீடர்களாக சேர்ந்து பல்வேறு கலைகளை கற்று கொள்ள ஆரம்பித்தனர். இந்நிலையில் விசுவாமித்திர முனிவர், அயோத்தியை அடைந்து தசரதரிடம் தன் யாகங்களுக்கு சில ராட்சகர்களால் இடையூறு ஏற்படுவதால் அவர்களை அழிக்க இராமனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கினாலும் பிறகு இராமனையும், லட்சுமணனனையும் அவருடன் அனுப்பி வைத்தார். சகோதரர்கள் வந்த வேலையை செவ்வனே செய்த்தால், விசுவாமித்திரர் அவர்களுக்கு சில அஸ்திரங்களை அருளி ஆசிர்வதித்தார். அயோத்தி காண்டம் thumb|போட்டியில் மகாதேவரின் வில்லை முறித்த இராமன், (இராஜா ரவி வர்மாவின் ஓவியம்) விசுவாமித்திரர் இராமனையும், இலட்சுமணனையும் ஜனகன் என்னும் அரசன் ஆட்சி செய்த விதேக நாட்டின் தலைநகரமான மிதிலைக்கு அழைத்துச் சென்றார். ஜனகனுடைய மகள் சீதை. இவளுக்குத் திருமணம் செய்வதற்காக அரசர் போட்டியொன்றை ஒழுங்கு செய்திருந்தார். பல இளவரசர்கள் கலந்து கொண்ட அப்போட்டியில் வென்ற இராமன், சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்திக்கு மீண்டான். இராமனுக்கும், சீதைக்கும் திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகள் ஆனதும், வயதான தசரதர், இராமருக்கு மகுடம் சூட்ட விருப்பம் தெரிவிக்கிறார், அதற்கு கோசல அரசவையும் குடிமக்களும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்துகிறார்கள். மாபெரும் நிகழ்வின் முந்திய நாளில், மந்தரை என்கிற பொல்லாத வேலைக்காரியால் கைகேயியின் பொறாமை தூண்டப்படுகிறது. தசரதன் நீண்ட காலத்திற்கு முன்பு தனக்கு வழங்கிய இரண்டு வரங்களை நினைவு கூறுகிறார். இராமரை பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குள் அனுப்புமாறும், தனது மகன் பரதன் நாடாள வேண்டுமென்றும் தசரதனிடம் கைகேயி கோருகிறார். இதனால் மனம் உடைந்த அரசன், கொடுக்கப்பட்ட வரத்தின் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டு, கைகேயியின் கோரிக்கைகளுக்கு இணங்குகிறார். இராமர் தனது தந்தையின் ஆணையை முழுமையான சமர்ப்பிப்பு மற்றும் அமைதியான சுய கட்டுப்பாட்டுடன் ஏற்றுக்கொள்கிறார். இது கதை முழுவதும் அவரை வகைப்படுத்துகிறது. இவருடன் சீதாவும் லட்சுமணனும் இணைந்து காடு செல்கின்றனர். அவரைப் பின்தொடர வேண்டாம் என்று அவர் சீதாவிடம் கூறும்போது, ​​"நீங்கள் வசிக்கும் காடு எனக்கு அயோத்தி, நீங்கள் இல்லாமல் அயோத்தி என்பது எனக்கு ஒரு உண்மையான நரகமாகும்" என்று கூறுகிறாள். ராமர் வெளியேறிய பிறகு, தசரத மன்னர், துக்கத்தை தாங்க முடியாமல் காலமாகிறார். இதற்கிடையில், தனது நாட்டிற்குத் திரும்பிய பரதன், அயோத்தியில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்கிறார். பரதன் தனது தாயின் பொல்லாத சூழ்ச்சியினால் அரியணை ஏற மறுத்து, காட்டில் ராமரை சந்திக்கிறான். பரதன் ராமரிடம் திரும்பி வந்து ஆட்சி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார். ஆனால் தனது தந்தையின் கட்டளைகளை நிறைவேற்ற தீர்மானித்த ராமர், நாடு திரும்ப மறுக்கிறார். ஆரண்ய காண்டம் சில காலத்தின் பின் தனது மூத்த மகனான இராமனுக்கு முடிசூட்டத் தசரதர் எண்ணினார். அரச குடும்பத்தினரும் மக்களும் இது குறித்து மிகவும் மகிழ்ந்தனர். ஆனால், கைகேயியின் பணிப்பெண்களில் ஒருத்தியான கூனி என்பாள் இராமன் மீது வெறுப்புற்றிருந்தாள். இராமன் அரசனாவதை அவள் விரும்பவில்லை. அதனால், கைகேயியைத் தூண்டி விட்டு இராமன் அரசனாவதைத் தடுக்க எண்ணினாள். கைகேயியும் கூனியின் வலையில் விழுந்துவிட்டாள். முன்னொருபோது தசரதனின் உயிரைக் கைகேயி காத்தமைக்காக இரண்டு வரங்கள் தருவதாகத் தசரதன் வாக்களித்திருந்தான். அவ்விரு வரங்களையும் கேட்டு வாங்கும்படி கூனி கைகேயிக்கு ஆலோசனை கூறினாள். தனது மகனான பரதன் அரசனாக வேண்டும், இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் என்னும் இரண்டு வரங்களைக் கைகேயி தசரதரிடம் கேட்டாள். மனதை மாற்றிக்கொள்ளும்படி தசரதர் வேண்டியும் கைகேயி பிடிவாதமாக மறுத்துவிட்டதனால், தான் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக வேறு வழியின்றி அவளுடைய கோரிக்கைக்குத் தசரதன் இணங்க வேண்டியதாயிற்று. தசரதரின் முடிவைக் கேள்வியுற்ற இராமன் உடனடியாகவே காட்டுக்குக் கிளம்பினான். அவன் தடுத்தும் கேளாமல் சீதையும், இலட்சுமணனும் இராமனுடன் காட்டுக்குக் கிளம்பினர். இராமன் காட்டுக்குப் போய்விட்டான் என்பதைக் கேள்வியுற்ற தசரதர் கவலை தாங்காமல் உடனேயே இறந்துவிட்டார். அவ்வேளையில் பரதனும், சத்துருக்கனும் நாட்டுக்கு வெளியே இருந்தனர். தந்தையின் இறப்புச் செய்தி கேள்வியுற்ற அவர்கள் உடனடியாக நாடு திரும்பி நடந்ததை அறிந்து கொண்டனர். நடந்தவை அனைத்துக்கும் தனது தாயே காரணம் என்பதை அறிந்த பரதன் கோபம் கொண்டான். முடி சூட்டிக்கொள்ள மறுத்த அவன் இராமனைத் திரும்பவும் கூட்டி வருவதற்காகக் காட்டுக்குச் சென்றான். தந்தையின் சொல்லைக் காப்பாற்றுவதற்காக அயோத்திக்கு வர இராமன் மறுக்கவே, பரதன் இராமனின் காலணிகளை கேட்டுப் பெற்றுக்கொண்டு அயோத்திக்குச் சென்றான். அங்கே இராமனின் பாதுகைகளை அரியணையில் வைத்து இராமன் காட்டிலிருந்து மீளும் வரை அவனுக்காகப் பரதன் ஆட்சியை நடத்தினான். இராமனும், சீதையும், இலட்சுமணனும் காட்டில் வாழ்ந்து வந்தபோது அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கையான சூர்ப்பனகை என்பவள் இராமன் மீது ஆசை கொண்டாள். இலட்சுமணன் அவளது மூக்கை வெட்டித் துரத்திவிட்டான். இதனால் கோபமடைந்த அவள் தனது அண்ணனிடம் முறையிட்டாள். தனது தங்கைக்கு நேர்ந்த நிலையையிட்டுச் சினம் கொண்ட இராவணன் இராமனைப் பழிவாங்க எண்ணிச் சீதையைக் கவர்ந்து கொண்டு வந்து இலங்கையில், அசோகவனத்தில் சிறை வைத்தான். சீதையில் அழகில் மயங்கிய அவன், தன்னை மணந்து கொள்ளுமாறும் அவளை வற்புறுத்தினான். கிஷ்கிந்தா / சுந்தர / யுத்த காண்டங்கள் சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்கிரீவனின் அமைச்சனும், காற்றுக் கடவுளின் மகனுமான அனுமன் இராமனிடம் பெரும் பக்தி கொண்டிருந்தான். சுக்கிரீவனின் ஆணைப்படி வானரப் படைகள் பல திசைகளிலும் சென்று சீதையைத் தேடின. அனுமன் கடலைத் தாண்டி இலங்கைக்குச் சென்றான். அங்கே அசோக வனத்தில் சிறையிருந்த சீதையைக் கண்டான். thumb|300px|இராமனும், சீதையும் அமர்ந்திருக்கின்றனர். அருகின் இலட்சுமணன் நிற்க, அனுமன் இராமனை வழிபடும் காட்சி. அனுமன் மூலம் சீதை இருக்கும் இடத்தை அறிந்து கொண்ட இராமன், வானரப் படைகளின் உதவியோடு இலங்கைக்குச் சென்றான். இராவணனின் தம்பியான விபீடணன், சீதையை விட்டுவிடுமாறு இராவணனுக்கு ஆலோசனை கூறியும் அவன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன் இராமனை அடைந்து அவனுக்கு உதவினான். இடம்பெற்ற போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமன் விபீடணனை இலங்கை அரசனாக முடி சூட்டினான். இராமன் சீதையை மீட்டான். எனினும், சீதையின் தூய்மையை நிரூபிப்பதற்காக சீதை தீக்குள் புகுந்து வெளிவர வேண்டியதாயிற்று. இவ்வேளையில் இராமனுக்கு விதிக்கப்பட்ட நாடுகடந்த வாழ்க்கைக் காலமான பதினான்கு ஆண்டுகள் முடிவடைந்தன. இராமன், சீதை, இலட்சுமணன் ஆகியோர் அயோத்திக்கு மீண்டனர். இராமன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான். ஒருநாள் அயோத்தியின் குடிமக்களில் ஒருவன், சீதை இராவணனால் கடத்திச் செல்லப்பட்டதைக் குறித்து ஐயுற்றுப் பேசியதை அறிந்த இராமன் சீதையைக் காட்டுக்கு அனுப்பினான். அப்போது சீதை கருவுற்றிருந்தாள். காட்டில் சீதை வால்மீகி முனிவரின் ஆதரவில் வாழ்ந்து வந்தாள். அவளுக்கு லவன், குசன் என இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர். அக்காலத்தில் இராமன் தனது பேரரசை மேலும் பெருப்பிக்கும் நோக்குடன் அசுவமேத யாகம் எனப்பட்ட யாகத்தை ஒழுங்கு செய்தான். இந்த யாகத்தைச் செய்யும் ஒரு மன்னன் ஒரு குதிரையைப் பெரும் படையோடு அண்டை நாடுகளுக்கு அனுப்புவான். அவனுடன் போரிடமுடியாமல் அடிபணிய விரும்பும் அரசர்கள் அக் குதிரையைத் தமது நாட்டில் உலவ விடுவர். அப்படியின்றி அவ்வரசன் அடிபணிய விரும்பாவிட்டால் குதிரையைப் பிடித்துக் கட்டிவிடுவான். குதிரையை அனுப்பிய அரசன் போர் புரிந்து குறிப்பிட்ட நாட்டைத் தோற்கடிக்கவேண்டும். இராமன் அனுப்பிய குதிரை அவனது பிள்ளைகளான லவனும், குசனும் வாழ்ந்த காட்டில் உலவியபோது அவர்கள் அதனைப் பிடித்துக் கட்டியதுடன், அதனுடன் வந்த படையினருடன் மோதி அவர்களைத் தோற்கடித்தனர். இதைக் கேள்வியுற்ற இராமன் காட்டுக்கு வந்து தனது பிள்ளைகளையும், சீதையையும் கண்டான். சில காலத்தின் பின் புவியில் தனது காலம் முடிவுக்கு வருவதை சீதை உணர்ந்து தன்னை ஏற்றுக்கொள்ளும்படி புவியன்னையை வேண்டினாள். சீதையின் வேண்டுகோளுக்கு இணங்கிப் புவி பிளந்து அவளை ஏற்றுக்கொண்டது. லவனும், குசனும் அயோத்திக்குச் சென்று தந்தையுடன் வாழ்ந்தனர். சுந்தர காண்டம் சுந்தர காண்டம் வால்மீகி ராமாயணத்தின் இதயமாகவும், அனுமனின் சாகசங்களைப் பற்றிய விரிவான, தெளிவான கதையயும் கொண்டுள்ளது. சீதையைப்பற்றி அறிந்த பிறகு, அனுமன் ஒரு அழகிய வடிவத்தை எடுத்துக் கொண்டு, கடலுக்கு குறுக்கே இலங்கைக்கு பறந்து செல்கிறார். வழியில் அவர் தனது திறன்களை சோதிக்க ஒரு பேய் வடிவத்தில் வரும் ஒரு கந்தர்வ கன்னியை எதிர்கொள்வது போன்ற பல சவால்களை சந்திக்கிறார். அவர் மைனாகுடு என்ற மலையை எதிர்கொள்கிறார். அவர் அனுமனுக்கு ஓய்வு அளித்து அவருக்கு உதவுகிறார். சீதாவைத் தேடுவதற்கு இன்னும் சிறிது காலமே மீதமுள்ளதால் அனுமன் அவருடைய உதவியை மறுக்கிறார். இலங்கைக்குள் நுழைந்த பிறகு, இலங்கை முழுவதையும் பாதுகாக்கும் லங்கினி என்ற அரக்கியை காண்கிறார் அனுமன் அவளுடன் சண்டையிட்டு இலங்கைக்குள் செல்வதற்காக அவளை அடிபணியச் செய்கிறார். இந்த செயல்பாட்டில், லங்கினியை தோற்கடித்தால் இலங்கையின் முடிவு நெருங்குகிறது என்று அர்த்தமாகும் என்று கடவுளர்களிடமிருந்து பெற்ற எச்சரிக்கையை லங்கினி எடுத்துரைக்கிறாள். இங்கே, அனுமன் அரக்கர்களின் நாட்டை ஆராய்ந்து இராவணனை வேவு பார்க்கிறார். அவர் சீதையை அசோக வனத்தில் காண்கிறார். அங்கு சீதையை தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ராவணன் அச்சுறுத்துகிறான். நம்பிக்கையின் அடையாளமாக ராமரின் மோதிரத்தை கொடுத்து அனுமன் சீதாவுக்கு உறுதியளிக்கிறார். அவர் சீதையை மீண்டும் ராமரிடம் கொண்டு செல்ல முன்வருகிறார்; இருப்பினும், அவள் மறுத்து, அது தர்மம் அல்ல என்று கூறி, அனுமன் அவளை ராமரிடம் அழைத்துச் சென்றால் ராமாயணத்திற்கு முக்கியத்துவம் இருக்காது என்று கூறுகிறாள் - "ராமர் இல்லாதபோது ராவணன் சீதையை வலுக்கட்டாயமாக சுமந்து சென்றான். ராவணன் இல்லாதபோது, ​​அனுமன் சீதையை மீண்டும் ராமனிடம் கொண்டு சென்றான் " என்ற அவப்பெயர் வராதிருக்கவும் தான் கடத்தப்பட்ட அவமானத்திற்கு பழிவாங்கவும் இராமரே வர வேண்டும் என்று சீதை கூறுகிறாள். அனுமன் பின்னர் இலங்கையில் மரங்களையும் கட்டிடங்களையும் அழித்து இராவணனின் வீரர்களைக் கொல்வதன் மூலம் அழிவை ஏற்படுத்துகிறார். ராவணனின் வீரர்கள் தன்னைப் பிடித்து ராவணனிடம் அழைத்துச் செல்ல அனுமதிக்கிறார். சீதையை விடுவிக்க ராவணனுக்கு தைரியமான சொற்பொழிவு செய்கிறார். ராவணனால் அவரது வால் தீ வைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவர் பிணைப்புகளில் இருந்து தப்பித்து கூரையிலிருந்து கூரைக்குத் தாவுகிறார். ராவணனின் கோட்டைக்கு தீ வைத்து விட்டு தீவில் இருந்து பறந்து செல்கிறார். மகிழ்ச்சியான செய்திகளுடன் கிஷ்கிந்தாவுக்குத் திரும்புகிறார். உத்தர காண்டம் thumb|250px|சீதையை வால்மீகி ஆசிரமத்தில் சேர்த்தல், லவன்-குசர்கள் பிறப்பு மற்றும் வால்மீகி லவ-குசர்களுக்கு கல்வி மற்றும் போர் பயிற்சி கற்றுத் தருதல் மற்றும் இராமகாதையை எடுத்துரைத்தல் கம்ப இராமாயணத்தின் இறுதிக் காண்டமாக உத்தர காண்டம், ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது. கம்பர் தம் இராமாயணத்தைப் பால காண்டம் முதல் யுத்த காண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில், விடைகொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன், வீடணன் மற்றும் வானரர் முதலியோர்க்கு பரிசில்கள் கொடுத்து இராமன் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு இராமர் பல்லாண்டு மனுநெறி தவறாமல் ஆட்சி செய்ததை விளக்கி, இராமாயணத்தைக் கம்பர் நிறைவு செய்து விட்டார். அதன்பின் நிகழ்வுகளாக, சீதை தொடர்பான வதந்தியினை குடிமகன் மூலம் கேட்ட இராமர், ஐந்து மாத கர்ப்பிணியான சீதையை, இலக்குமணனைக் கொண்டு காட்டில் விட்டுவிடுதல், காட்டில் சீதைக்கு வால்மீகி ஆசிரமத்தில் லவன் மற்றும் குசன் எனும் இரட்டைக் குழுந்தைகள் பிறப்பதும், இராமர் செய்த அசுவமேத யாகக் குதிரைகளை லவ-குசர்கள் கட்டி வைத்தல், சத்துருக்கனன், பரதன் மற்றும் இலக்குமணராலும் வெல்ல முடியாத இலவ-குசர்களை, இராமரே நேரில் வந்து பார்த்து போரிடுவதும், பின்னர் லவ-குசர்களை அயோத்திக்கு அழைத்து செல்லுதலும், பூமி பிளந்து சீதை பூமாதேவியுடன் சேர்தல் போன்ற செய்திகளை, தான் எழுதிய உத்தர காண்டம் மூலம் ஒட்டக்கூத்தர் வடிவம் கொடுத்துள்ளார். இறையியல் முக்கியத்துவம் இராமாயணத்தின் முக்கிய கதை மாந்தனான இராமன், இந்துக்களின் முதன்மைக் கடவுளரில் ஒருவர். மும்மூர்த்திகளுள் ஒருவரான திருமாலின் 10 அவதாரங்களுள் ஒருவராகப் போற்றி வழிபடப்படுபவர். உலகில் தீமையை ஒழித்து அறத்தை நிலைநாட்டுவதற்காக திருமால் இப் புவியில் தோன்றியதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஆண்டு தோறும் பலர் இராமர் பயணம் செய்த பாதையைப் பின்பற்றி யாத்திரை செய்கின்றனர். இந்த இதிகாசம், ஒரு இலக்கியமாக மட்டுமன்றி, இந்து சமயத்துடன் இரண்டறக் கலந்துள்ளது. இதனைப் படிப்பவர்களதும், படிக்கக் கேட்பவர்களதும் பாவங்கள் நீங்கி, இறைவன் அருள் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. மகாபாரதத்தில் இராமாயாணம் மகாபாரத காவியத்தின் வன பருவத்தில் இராமாயண நிகழ்வுகளை மார்க்கண்டேய முனிவர் தருமனுக்கு எடுத்துரைத்தார். இராமாயணம் ஆரம்பம்! - வனபர்வம் பகுதி 272 தமிழ் இலக்கியங்களில் இராமாயணம் பற்றிய குறிப்பு பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டில் கம்பர், கம்பராமாயணத்தை தமிழில் எழுதுவதற்கு முன்பே, இராமாயணக் கதையைப் பற்றிய பல பழங்கால குறிப்புகள் உள்ளன, இது பொது சகாப்தத்திற்கு முன்பே தமிழ் நிலங்களில் நன்கு அறியப்பட்ட கதை என்பதைக் குறிக்கிறது. இக்கதை பற்றிய குறிப்புகள் அகநானூறு (பொ.ஊ.மு. 1ஆம் நூற்றாண்டு) மற்றும் புறநானூறு (பொ.ஊ.மு. 300 தேதியிட்டது), சிலப்பதிகாரத்தின் இரட்டைக் காப்பியங்கள் (பொ.ஊ. 2ஆம் நூற்றாண்டு) மற்றும் மணிமேகலை (காண்டோஸ் 5, 17 மற்றும் 18), மற்றும் குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆண்டாள் மற்றும் நம்மாழ்வார் ஆகியோரின் ஆழ்வார் இலக்கியங்கள் (பொ.ஊ. 5 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டவை) ஆகியவற்றில் காணப்படுகின்றன. நாயன்மார்களின் பாடல்களில் கூட இராவணன் மற்றும் சிவபெருமான் மீது அவன் கொண்ட பக்தி பற்றிய குறிப்புகள் உள்ளன. இராமாயணமும் இலங்கையும் இராமாயணத்தில் கூறப்படும் இலங்கை இன்றைய இலங்கைத் தீவைக் குறிக்கிறது என்பதே பெரும்பாலோரது கருத்து. எனினும், இதை மறுத்து இந்தியாவில் ஒடிசாவில் உள்ள லங்கையை இராமாயணத்தின் இலங்கையாகக் கொள்பவர்களும் உள்ளனர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படுவனவும், இராமர் பாலம் என்று அழைக்கப்படுவனவுமான ஆழம் குறைந்த திட்டுக்களே வானரப் படைகளால் அமைக்கப்பட்ட பாலம் எனச் சிலர் கருதுகின்றனர். அத்துடன் இலங்கையின் மையப் பகுதியில், நுவரெலியா என்னும் நகருக்கு அண்மையில் உள்ள சீதா எலிய என அழைக்கப்படும் இடமே சீதையைச் சிறைவைத்த அசோகவனம் என்கின்றனர். இராமாயண அவையடக்கம் குலோத்துங்க சோழ அரசனின் ஆணைப்படி கம்பரால் இயற்றப்பட்டது கம்பராமாயணம். இதனைக் கம்பர் வான்மீகி முனிவரின் இராமாயணத்தின்படி எழுதியிருக்கின்றார். அதனை அவர் தனது இராமாயண அவையடக்கத்தில் பின்வருமாறு கூறுகின்றார் - “தேவபாடையின் இக்கதை செய்தவர் மூவரானவர் தம்முளும் முந்திய நாவினார் உரைப்படி நான் தமிழ்ப் பாவினால் இஃதுணர்த்திய பண்பரோ!“ வடமொழியில் இராம கதையை வகுத்து வான்புகழ் கொண்ட வான்மீகி முனிவரின்படி நான் தமிழ்ப்பாவினால் பாடியிருக்கின்றேன் என்று கம்பர் கூறுகின்றபோதும் - சிற்சில இடங்களில் அழகுசெய்வான் பொருட்டு வான்மீகி இராமாயணத்தில் இல்லாதவற்றையும் எழுதியிருக்கின்றார். இவை தமிழ் மக்களிடையே நிலவிய இராமாயணக் கதைகளில் இருந்தும் சேர்ந்திருப்பதால், கம்பர் மெருகூட்டியவை முழுதும் அவரது கற்பனையே என்று ஊறு விட இயலாது. உதாரணம் : இராமனும் சீதையும் திருமணத்திற்கு முன்னர் ஒருவரையொருவர் கண்டு கழிபெரும் காதல் கொண்டதாய் வான்மீகி கூறவில்லை. ஆயினும், கம்பர் தமிழ் மரபினைத் தழுவி, தலைவனும் தலைவியும் திருமணத்தின் முன்னர் ஒருவரையொருவர் கண்டு கழிபெருங் காதல் கொண்டதாய்ச் சொல்கிறார். தமிழியற் கொப்ப அவ்வாறு கூறியமை - முதனூலுக்கு மாறுகொள்ளக் கூறியமை - வழுவாகாத; மரபெனவே கொள்ளப்படுகிறது. இராமாயணம் குறித்து சுவாமி விவேகானந்தர் கருத்து தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார்.சுவாமி விவேகாந்தரின் சொற்பொழிவு கட்டுரை, பக் 587-589 விஷ்ணு புராணம், இராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களில் வரலாற்று உண்மை உள்ளதா என்ற இந்து பத்திரிக்கை நிருபரின் கேள்விக்கு அளித்த பதிலில் சுவாமி விவேகானந்தர் கூறியதாவது: "ஏதோ ஒரு வரலாற்று உண்மையே புராணத்தின் கருவாக உள்ளது. உயர்ந்த கருத்துக்களைப் பல வடிவங்களில் மக்களுக்குக் கற்பிப்பதே புராணங்களின் நோக்கம்...இராமாயணமும் மகாபாரதமும் கண்ட நியதிப்படி, அவை இராமரையும் கிருஷ்ணரையும் சார்ந்திருக்க வேண்டியதே இல்லை. ஆனால் அவை உயர்ந்த கருத்துக்களை மனித இனத்தின் முன் வைப்பதால், அவற்றைச் சிறந்த அடிப்படை நூல்களாகக் கருத வேண்டும். எந்தப் புராணமானாலும் சரி, அதிலுள்ள தத்துவத்தை அறிய, அதில் வரும் பாத்திரங்கள் உண்மையா கற்பனையா என்ற ஆராய்ச்சி தேவையில்லை. மனித இனத்திற்குப் போதிப்பதே புராணங்களின் நோக்கம். இராமாயணத்தில் வரும் பத்துத் தலை அசுரன் வாழ்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவன் ஓர் உண்மைப் பாத்திரமா அல்லது கற்பனையா என்ற கேள்வியைத் தள்ளி வைத்துவிட்டு, அவன்மூலம் நமக்கு என்ன போதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும்."எழுந்திரு! விழித்திரு! சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகள் மற்றும் எழுதியவற்றின் தொகுப்பு 6; பக்கம் 375, 376 இதையும் பார்க்க சக்கரவர்த்தித் திருமகன் கம்ப இராமாயணம் தாய்லாந்து இராமாயணம் இராமர் சீதை திராவிட இயக்க ஆதரவாளர் எம்.ஆர்.ராதாவின் இராமாயண எதிர்ப்பு நூல்கள்: ராமாயணத்தை தடை செய் (நூல்) ராமாயணமா?கீமாயணமா? குறிப்புகளும் மேற்கோள்களும் வெளி இணைப்புகள் கம்பராமாயணத்திற்கு முன்பே எழுதப்பட்ட பழைய தமிழ் இராமாயணங்களின் மிச்சம் கம்பராமாயணம் நூல் http://valmikiramayanam.in/?tag=தமிழில்-வால்மீகி-ராமாயணம் ராமாயணத்தை கொண்டாடும் தாய்லாந்தின் 'ராமா' மன்னர்கள் இராமாயணம் பகுப்பு:காப்பியங்கள் பகுப்பு:இந்து தொன்மவியல் பகுப்பு:இந்திய தொன்மவியல் பகுப்பு:சமசுகிருத இலக்கியம் பகுப்பு:பண்டைய நூல்கள் பகுப்பு:கிழக்கின் புனித நூல்கள்
ருக்மிணி தேவி அருண்டேல்
https://ta.wikipedia.org/wiki/ருக்மிணி_தேவி_அருண்டேல்
உருக்மிணி தேவி அருண்டேல் (Rukmini Devi Arundale) (பெப்ரவரி 29, 1904 – பெப்ரவரி 24, 1986) மதுரையில் பிறந்தவர். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 1977 ஆம் ஆண்டு, மொரார்ஜி தேசாய், இவரை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு பரிந்துரைத்தப் போது அதை மறுத்தார். வாழ்க்கை வரலாறு உருக்மிணி தேவி, 1904 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 29 ஆம் தேதி நீலகண்ட சாஸ்திரி - சேஷம்மாள் தம்பதியருக்கு மகளாக, மதுரையில் பிறந்தார். உருக்மிணியின் தந்தை நீலகண்ட சாஸ்திரி, அன்னி பெசண்ட் துவக்கிய பிரம்மஞான சபையில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். சாஸ்திரி தனது பணி ஒய்வுக்கு பிறகு சென்னையில் உள்ள அடையாரில், தன் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். தியசோஃபிக்கல் சொசைட்டியில் நடைபெறும் ஆண்டுவிழாக்களில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. உருக்மிணி, ரவீந்திரநாத் தாகூர் எழுதிய மாலினி என்ற நாடகத்தில் நடித்தார். மேலும் ஒரு பாடலும் பாடினார். இதைப் பார்த்த அவர் தந்தை இசை பயில ஊக்கப்படுத்தினார். உருக்மிணி, கிரேக்க நடனமும் கற்றுக் கொண்டார். 1920 ஆம் ஆண்டில், ஜார்ஜ் சிட்னி அருண்டேல் என்பவரை இங்கிலாந்தில் இருந்து கல்வி மற்றும் இதர பணிகளில் தனக்கு உதவி புரிவதற்காக, அன்னிபெசன்ட் அழைத்தார். அன்னிபெசன்ட் அளித்த தேநீர் விருந்தில் ஜார்ஜ் அருண்டேலும், உருக்மிணியும் கலந்து கொண்டனர். இருவரும் ஈர்க்கப்பட்டு, அன்னி பெசண்ட்டின் அனுமதியோடு, உருக்மிணியின் பதினாறாம் வயதில் திருமணம் செய்து கொண்டனர். இத்திருமணம் அக்கால கட்டத்தில் உருக்மிணியின் உறவினர்களிடையே ஒரு பெரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. உருக்மிணி, ஜார்ஜுடன் ஐரோப்பாவிற்கு பயணம் சென்றார். அங்கு இசை, சிற்பம், ஆப்பரா, பாலே முதலிய பல கலைகளுக்கு அறிமுகமானார். ரஷ்ய நாட்டு பாலே கலைஞரான அன்னா பாவ்லோவாவிடமும், கிளியோ நார்டி என்பவரிடமும், பாலே நடனம் கற்றுக்கொண்டார். பாவ்லோவா, இந்திய பாரம்பரிய நடனத்தினையும் கற்குமாறு உருக்மிணியை அன்புடன் கேட்டுக்கொண்டார். அதுவரை சதிர் என்ற இந்திய பாரம்பரிய நடனத்தினை உருக்மிணி கண்டதில்லை. தமது கணவர் அருண்டேலைப் பற்றி கூறும் போது, அவரை இந்தியர்களை விடச் சிறந்த இந்தியர் என்றும் இந்திய நாட்டின் மேன்மையில், இந்திய நாட்டில் பிறந்த மகரிசிகளின் ஆன்மீக சக்தியில் நம்பிக்கை கொண்டிருந்தவர் என்றும் பாரதப் பண்பாட்டைப் புரிந்து அதை நேசித்தவர் என்றும் உருக்மிணி தேவி குறிப்பிடுவார்.அமுதசுரபி தீபாவளி மலர் 2004; உருக்மிணி தேவி அருண்டேல்; பக்கம் 168 1933 ஆம் ஆண்டில், கிருஷ்ண அய்யர், சென்னையில் உள்ள மியூசிக் அகாதெமியில், ஒரு தேவதாசி சதிர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதைக் காண உருக்மிணியை அழைத்திருந்தார். அந்த தேவதாசிகளின் சதிர் ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டார். அக்கலையினை கற்றுக்கொள்வதற்கு பலதடைகள் எழுந்தாலும், சதிர் ஆட்டத்தினை கற்க வேண்டும் என்று தீர்மானித்தார். அக்காலத்தில் புகழ்பெற்ற தேவதாசியான, மயிலாப்பூர் கௌரி அம்மா என்றவரிடம் தனியாகக் கற்க ஆரம்பித்தார். இதற்கு உருக்மிணியின் கணவரான அருண்டேலும், அன்னையும், தமையன்களும் உறுதுணையாக இருந்தனர். முதலில் கௌரி அம்மாவிடமும், பிறகு பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்பவரிடம் நடனம் பயின்றார் உருக்மிணி. நாட்டியத்தில் நன்றாக பயிற்சி பெற்று, 1935 ஆம் ஆண்டு, தியசோஃபிக்கல் சொஸைட்டியின் வைர விழாக் கொண்டாட்டத்தின் போது, அரங்கேற்றம் செய்தார். பலரும் இவருடைய நடனத்தினைப் பாராட்டினர். உருக்மிணியின் நடனம் அழகியல் மற்றும் ஆன்மீகத் தன்மை நிறைந்ததாகக் கருதப்பட்டது. சதிர் என்ற பரதநாட்டியம், சமூகத்தில் உள்ள பலரும் பயில வேண்டிய ஒன்று என்பதில் திண்ணமாக இருந்தார், உருக்மிணி. இதற்காக, கலாக்ஷேத்ரா என்ற கலைப் பள்ளியினை தோற்றுவித்தார். இங்குள்ள மாணவர்களுக்கு பயில சிறந்த இசைக்கலைஞர்களையும், நாட்டியக் கலைஞர்களையும் அழைத்தார். உருக்மிணி, விலங்குகள் மீது தீவிர அன்பினைக் கொண்டிருந்தார். இந்திய பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக இருந்த போது, விலங்கு வதை சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றினார். 1977 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய், உருக்மிணியை குடியரசுத் தலைவர் பதவியினை வகிக்குமாறு அழைப்பு விடுத்தார். கலை மற்றும் கலைசார்ந்தவற்றிற்காக பணிபுரிவதே தன் விருப்பம் என்று கூறி அப்பதவியினை ஏற்க மறுத்தார். 1986 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 24 ஆம் தேதி, உருக்மிணி இறந்தார். அதன் பிறகு, அவர் துவக்கிவைத்த கலாக்ஷேத்ரா தேசிய சிறப்பு வாய்ந்த நிறுவனமாக பாராளுமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது. கலைகளில் பங்கு நாட்டியம் உருக்மிணி, தனது சிறுவயதிலேயே, கலைகளில் நாட்டம் கொண்டவராக இருந்தார். ஆனால் அந்தக் காலகட்டத்தில் (1900 +) இளம்பெண்கள், பாட்டு மற்றும் நடனம் கற்றுக்கொள்வது சமூகத்தில் ஒரு இழுக்காகக் கருதப்பட்டது. ஏனெனில் பாட்டு மற்றும் நடனம் போன்றவை தேவதாசிகள் என்று அழைக்கப்பட்ட சமூகத்தினரால் மட்டுமே செய்யபட வேண்டியது என்ற எண்ணம் பரவியிருந்தது. அந்நிலையில் சதிர் என்ற ஆட்டத்தின் அழகியல் தன்மையினை உணர்ந்து, அதன் சிறப்பினை அறிந்து, அக்கலை போற்றி பாதுகாக்கப்பட வேண்டியது என்று நினைத்தார். தேவதாசிகள் மட்டும் பயின்று, சமூகத்தில் அக்கலை நிகழ்ச்சிகளுக்கு செல்வது இழுக்கு என்ற நிலையினை மாற்றியதில் பெரும் பங்கு உருக்மிணிக்கு உண்டு. அதுவரை சதிராட்டம் சிருங்கார இரசம் அதிகம் நிறைந்து, பார்வையாளர்களை மகிழ்விப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தது. உருக்மிணி, அந்த தளத்திலிருந்து மேலெழுந்து, ஆன்மிகத்தன்மையினையும் வெளிப்படுத்தி அக்கலையினை அனைவரும் ரசிப்பதோடு மட்டுமில்லாமல் அனுபவிக்கவும் வழிசெய்தார். தேவதாசிகள் சதிராடிய போது, சேலையும், தொள தொளவென்ற கால்சட்டையும், அழகான நகைகள் பலவற்றையும் அணிந்திருந்தனர். மேலும் இவர்கள் ஆடும் போது, பக்க வாத்தியக்காரர்கள் இவர்கள் பின் தொடர்ந்து நின்றோ/நடந்தோ கொண்டிருந்தனர். இந்த நிலையில், நடனத்தின் அழகியல் தன்மை குறைவதாக உருக்மிணி கருதினார். அதில் சில மாற்றங்கள் கொண்டுவந்தார். பக்கவாத்தியக்காரர்களையும், பாடுபவர்களையும் மேடையில் ஒர் இடத்தில் அமருமாறு செய்தார். பாரம்பரிய சிற்பக் கலைகளின் உதவியாலும், இத்தாலிய உடை நிபுணர் மேடம் காஸன் உதவியாலும் புதுவித உடைகளையும், ஒப்பனையும் செய்தார். அதைப் போலவே, மேடையின் பின்புலத்தினை மாற்றி, பிரோஸினியம் (மேற்புறம் மற்றும் பக்கவாட்டில் மூடிய) வகையான மேடைதான் நாட்டியத்திற்கு சிறந்தது என்று மேடையினை மாற்றினார். கான்ராட் வோல்ட்ரிங், அலெக்ஸ் எல்மோர், மேரி எல்மோர் போன்ற நாடகக் கலைஞர்களின் உதவியால் மேடையின் ஒளியமைப்பினையும் மாற்றினார். உலகின் சிறந்த அனைத்துக் கலைகளுக்கும் இணையானது இந்தியாவின் சதிர் என்ற அறிந்து, அதற்கு பரதநாட்டியம் என்ற பெயரினை சூட்டினார். வால்மீகி ராமாயணம், புத்தாவதாரம், குமார சம்பவம், குற்றாலக் குறவஞ்சி, கண்ணப்பர் குறவஞ்சி, ஆண்டாள் முதலிய நூல்களுக்கு நடனம் அமைத்தார்.அமுதசுரபி தீபாவளி மலர் 2004; உருக்மிணிதேவி அருண்டேல்; பக்கம் 166 நெசவு உருக்மிணி, இந்தியாவின் பாரம்பரியக் கலைகளில் முழுமையான ஆர்வம் கொண்டிருந்தார். 1937 ஆம் ஆண்டில் இந்திய அரசின் உதவியோடு, நலிவடைந்திருந்த நெசவுத் தொழிலினை, ஊக்குவிக்கும் பொருட்டு, சில நெசவு ஆலைகளை நிறுவினார். பல்வேறு வகைகளிலும், கண்கவர் வண்ணங்களிலும், அழகான வேலைப்பாடுகளுடைய கைத்தறி ஆடைகளை இந்த ஆலை தயாரித்தது. கமலாதேவி சட்டொபத்யாயவின் உதவியோடு, துணிகளுக்கு இயற்கையான சாயங்களை பயன்படுத்தும் முறையினை பயின்றார். அதோடு இல்லாமல் கலம்கரி என்ற துணிகளில், சாயம் கொண்டு வேலைப்பாடு செய்யும் முறைகளையும் ஊக்குவித்தார். மரபுக்கொடை 2016ல், கூகிள் நிறுவனம், உருக்மணி தேவியின் 112 வது அகவையை தமது முதற்பக்கக் கிறுக்கல் படத்தின் வாயிலாக அங்கீகரித்தது. பெற்ற விருதுகள் பத்ம பூசண் விருது காளிதாஸ் சம்மன் விருது சங்கீத நாடக அகாதமி விருது, வழங்கியது: சங்கீத நாடக அகாதமி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கலை விமர்சகர் சுனில் கோத்தாரி, உருக்மிணி தேவி அருண்டேல் பற்றி எழுதிய கட்டுரை உருக்மிணி தேவி பற்றி கலாக்ஷேத்திரா தளத்தில் உள்ள கட்டுரை சென்னை ஆன்லைன் தளத்தில் உள்ள உருக்மிணி தேவி பற்றிய கட்டுரை ரீடிஃப் இணையதளத்தில் உருக்மிணியினைப் பற்றிய கட்டுரை பகுப்பு:பரதநாட்டியக் கலைஞர்கள் பகுப்பு:1904 பிறப்புகள் பகுப்பு:1986 இறப்புகள் பகுப்பு:மதுரை மக்கள் பகுப்பு:சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்பு:காளிதாஸ் சம்மன் விருது பெற்றவர்கள் பகுப்பு:விலங்குரிமை செயற்பாட்டாளர்கள் பகுப்பு:தமிழ்நாட்டு நடனக்கலைஞர்கள் பகுப்பு:இந்தியப் பாரம்பரிய பெண் நடனக் கலைஞர்கள் பகுப்பு:மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள்
இல்லறவியல் (திருக்குறள்)
https://ta.wikipedia.org/wiki/இல்லறவியல்_(திருக்குறள்)
திருக்குறளின் அறத்துப்பால், பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் ஆகிய நான்கு இயல்களைக் கொண்டுள்ளது. அதிகாரங்கள் இல்லறவியலில் இருபது அதிகாரங்கள் அடங்கியுள்ளன. இல்வாழ்க்கை – மனைவியோடு கூடிவாழ்தல் வாழ்க்கைத் துணைநலம் – மனைவியின் சிறப்பு மக்கட்பேறு – அறிவுள்ள பிள்ளைகளைப் பெறுதலின் சிறப்பு அன்புடைமை – அன்பு செலுத்துதல் விருந்தோம்பல் – விருந்தினரை உபசரிக்கும் முறைமை இனியவைகூறல் – இனிமையான சொற்களையே சொல்லுக செய்ந்நன்றி அறிதல் – பிறர் செய்த நன்மையை என்றும் மறவாமை நடுவு நிலைமை அடக்கமுடைமை – உணர்வுகளை தீயவழியில் செல்லாமல் அடக்குதல் ஒழுக்கமுடைமை – நல்ல நெறிகளை கடைப்பிடித்தல் பிறனில் விழையாமை – பிறனுடைய மனைவியை விரும்பாமை பொறையுடைமை – பொறுமை காத்தல் அழுக்காறாமை – பொறாமை கொள்ளாமை வெஃகாமை – பிறர் பொருளை அபகரிக்க எண்ணாமை புறங்கூறாமை – பிறர் பற்றி கோள் சொல்லாமை பயனில சொல்லாமை – பயன் இல்லாத சொற்களைச் சொல்லாமை தீவினையச்சம் – பிறருக்கு தீமை செய்ய அஞ்சுதல் ஒப்புரவறிதல் – பொதுவான அறங்களை அறிந்து செய்தல் ஈகை – ஏழைக்கு இரங்குதல் புகழ் – நிலையான புகழ் பகுப்பு:திருக்குறள் பகுப்பு:திருக்குறள் ஆய்வு நூல்கள்
வானொலி
https://ta.wikipedia.org/wiki/வானொலி
thumb|1930 ஆண்டளவில் பயன்படுத்தப்பட்ட வானொலிப் பெட்டி அல்லது வானொலி வாங்கி thumb|upright=1.1|The Alexandra Palace, here: mast of the broadcasting station thumb|uprights t=1.1|Classic radio receiver dial வானொலி (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும். மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி ஆங்காங்கே மக்கள் அதை தங்களிடமுள்ள வானொலிப் பெட்டி வழியாகப் பெறுமாறு தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி (அ) ரேடியோ என்பர். இந்த மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது. ஒலி அலைகளுடன் மின்காந்த அலைகளைக் கலந்து வானொலி நிலையங்களிலிருக்கும் மிக உயரமான கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள அனுப்பும் கருவிகள் மூலம் வான்வெளியில் மின்காந்த அலைகளாக ஒலிபரப்பப்படுகின்றது. இப்படி ஒலிபரப்பப்பட்ட மின்காந்த அலைகளைப் பயனர்கள் தங்களிடம் உள்ள ஒலி வாங்கிகள் எனப்படும் வானொலிப் பெட்டியின் மூலம் கேட்டு மகிழ்கிறார்கள். வானொலிப் பெட்டிகள், வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட மின் காந்த அலைகளை உள்வாங்கி, அதனூடே கலந்திருக்கும், ஒலி அலைகளை மட்டும் பிரித்தெடுத்து சத்த ஒலிபெருக்கி ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. thumb|right|An audio signal (top) may be carried by an AM or FM radio wave. வானொலி நிலையங்கள் சென்னை வானொலி நிலையம், திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம், திருநெல்வேலி வானொலி நிலையம், கோயம்புத்தூர் வானொலி நிலையம், கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம், மதுரை வானொலி நிலையம், நாகர்கோவில் வானொலி நிலையம், உதகமண்டலம் வானொலி நிலையம், தூத்துக்குடி வானொலி நிலையம், உள்ளன . upright|thumb|Rooftop television antennas. Yagi-Uda antennas like these six are widely used at VHF and UHF frequencies. வானொலி ஒலிபரப்பு தத்துவம் ஒரு வானொலி நிலையத்தில், ரேடியோ அலைகளை உருவாக்கி, பின் அவைகளை ஒலி அலைகளோடு பண்பேற்றம் செய்து , அதன்பின் அவைகளை பரப்புவதற்குப் பயன்படும் சாதனம் பரப்பி (Transmitter) என அழைக்கப்படுகிறது. இது ‘ஹென்ரிச் ஹெர்ட்ஸ்’ என்பவரால் முதல் பரப்பி உருவாக்கப்பட்டது. இது துண்டுகளான ரகசிய சைகைகளை (Morse – Code Signal) மட்டும் பரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டது. பின் 1909 ஆம் ஆண்டில் முதல் வானொலி தொலைபேசி பரப்பி உருவாக்கப்பட்டது.மின்னணு சாதனங்கள் , கருத்தியல் , மேல் நிலை இரண்டாம் ஆண்டு பக்கம் -34 வகைகள் அ. ஊர்தி அலைப்பரப்பி (Carrier wave transmitter ) ஆ. பண்பேற்றப்பட்ட ஊர்தி அலைப்பரப்பி (Modulated carrier wave transmitter) இ. வானொலி தொலைபேசி பரப்பி (Radio Telephone Transmitter) ஊர்தி அலைப்பரப்பிகள் பழைய வகை பரப்பிகள் ஆகும். அவைகள் துண்டுச் சிக்னல்களை மட்டும் (Morse Signals) பரப்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. துண்டு சிக்னல்கள் புள்ளிகளையும் (dots) சிறிய கோடுகளையும்( dashes) கொண்டது. ஆனால் வானொலி பரப்பிகள் ரேடியோ அலைகளை பரப்புவதற்கு அதிக அளவில் பயன்படுகின்றன. இவைகள் ஏ.எம் ((AM) வானொலி பரப்பி மற்றும் எஃப் எம் ((FM) வானொலி பரப்பி என பிரிக்கப்படுகின்றன. வீச்சு மாற்றி வானொலி பரப்பி (Am Radio transmitter) இந்த பரப்பி வீச்சுப்பண்பேற்றம் செய்யப்பட்ட ரேடியோ அலைகளைப் பரப்புகின்றன. இது கீழ்கண்ட வெவ்வேறு நிலைகளைப் (Stage) பெற்றுள்ளது.மின்னணு சாதனங்கள் , கருத்தியல் , மேல் நிலை இரண்டாம் ஆண்டு பக்கம் -35-36 வானொலி அதிர்வெண் அலையாக்கி இது ஊர்தி அலைகளை உற்பத்தி செய்கிறது. வெப்பநிலை மற்றும் மின்னழுத்த வேறுபாடுகள் ஆகியவற்றினால் இது உற்பத்தி செய்யும் அதிர்வெண் மாறாதவாறு வடிவமைக்கப்படுகிறது. அதற்கு கிறிஸ்டல் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, இதற்கு கிறிஸ்டல் ஆசிலேட்டர் என்ற பெயரும் உண்டு. பஃபர் ஆம்ப்ளிஃபையர் (Buffer Amplifier) இது ஒரு இம்பிடன்ஸ் பொருந்தும் கிளாஸ் ஏ (Class) ஆர்.எஃப் ஆம்ப்ளிஃபையர் ஆகும். இது ஆர்.எஃப் ஆசிலேட்டர் நேரடியாக அவுட்புட் நிலையுடன் பளு ஆவதைத் தடுக்கிறது. இதனால் ஆர்.எஃப் அதிர்வெண் மாறிலியாகக் (Constant) கிடைக்கிறது. இண்டர் - மீடியேட் பவர் ஆம்ப்ளிஃபையர் இதுவும் ஒரு கிளாஸ் ஏ ஆம்ப்ளிஃபையராகும். இது பஃபர் மற்றும் மாடுலேட்டர் பகுதிகளை இணைக்கிறது. இது ஊர்தி அலையின் திறனைப் பெருக்குகிறது. ஒலிவாங்கி (Microphone) இது ஒரு சக்தி மாற்றும் சாதனம் (Transducer) ஆகும். இது ஒலியை, ஒலி மின்னலைகளாக (Audio Signals)) மாற்றுகிறது. முன்பெருக்கி (Pre Amplifier) முதலில் ஒலி மின்னலைகளில் உள்ள இரைச்சல் வடிகட்டப்பட்டு, பின்பு பெருக்கப்படுகிறது. செவி உணர்வு அதிர்வெண் பெருக்கி ((AF Amplifier) இது ஒலி மின்னலைகளின் திறனைப் பெருக்குகிறது. பெருக்கிய பின், மாடுலேட்டர் மற்றும் ஆர்.எப் பவர் ஆம்ப்ளிஃபையர் பகுதிக்குக் கொடுக்கிறது. மாடுலேட்டர் மற்றும் ஆர்.எஃப் பவர் ஆம்ப்ளிஃபையர் இங்கு ஒலிமின்னலை மற்றும் ஊர்தி அலைகள் வீச்சுப்பண்பேற்றம் (Ampliitude Modulation)) செடீநுயப்படுகிறது. பண்பேற்றப்பட்ட அலைகள், கடைசி நிலை ஆர்.எப் பவர் ஆம்ப்ளிபையரினால் மிக அதிக அளவில் பெருக்கப்பட்டு, பரப்பும் ஆண்டெனாவிற்குத் தரப்படுகிறது. பரப்பும் ஏரியல் (Transmitting Antenna) இது பண்பேற்றப்பட்ட அலைகளை மின்காந்த அலைகளாக ((Electromagnetic waves) மாற்றி, வான்வெளியில் பரப்புகிறது. பண்பலை பரப்பி (FM Transmitter) இந்த பரப்பி அதிர்வெண் பண்பேற்றம் செய்யப்பட்ட ஒலி அலைகளை உற்பத்தி செய்து அவைகளைப் பரப்புகிறது. இது கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரிவுகளையும் மற்றும் நிலைகளையும் கொண்டுள்ளது. 1. ஹகு பெருக்கி (AF amplifier) 2. பிரி – எம்பசிஸ்( Pre – emphasis) 3. கிறிஸ்டல் அலையாக்கி (Crystal – Oscillator) 4. அதிர்வெண் மடங்காக்கி (Audio processing stage) 5. ரியாக்டன்ஸ் - பண்பேற்றி (Audio processing stage) 6. பவர் பெருக்கி ஒலி – அலை தயாரிப்பு பகுதி (Audio processing stage) இப்பகுதி ஒலி வாங்கியையும், பிரி-எம்பசிஸ் மற்றும் ஹகு பெருக்கியையும் கொண்ட பகுதியாகும். முதலில் ஒலி வாங்கியின் மூலம் பெறப்பட்ட ஒலியானது, மின் அலையாக மாற்றப்பட்டு, பின்பு ஹகு ஆம்பிளிபயரின் மூலம் விரிவாக்கம் செய்யப்பட்டு, பிரி – எம்பசிஸ் பகுதிக்கு அனுப்பப்படுகிறது. உயர் அதிர்வெண் ஒலி அலைகள் இரைச்சலால் அதிகம் பாதிக்கப்படுவதால், இதனை நீக்க இவ்வலையின் வீச்சானது பெருக்கப்பட்டு மறுப்புப் பண்பேற்ற பகுதிக்கு அனுப்பப்படுகிறது. இதுவே பிரி-எம்பசிஸ் எனப்படும். இவ்வாறு பெருக்கப்பட்ட இவ்விரைச்சல் அலை ரிசீவரில் டி –எம்பசிஸ் என்ற சுற்றின் மூலம் மிக எளிமையாக நீக்கப்பட்டு விடும். மறுப்புப் பண்பேற்ற பகுதி (Reactance Modulator) இப்பகுதி கிறிஸ்டல் அலையாக்கி, அதிர்வெண் மடங்காக்கி மற்றும் மறுப்பு பண்பேற்றப் பகுதிகளைக் கொண்டதாகும். இப்பகுதியில் பயன்படுத்தப்படும் காயில் அல்லது மின்தேக்கியின் ரியாக்டன்ஸ், வருகின்ற ஒலி அலையின் அளவிற்கு ஏற்றவாறு வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டிற்கு ஏற்றவாறு வேறுபடுகிறது. இவ்வேறுபாட்டிற்கு ஏற்றவாறு பண்பேற்றத்திற்கு தேவையான உயர் அதிர்வெண் ஊர்தி அலைகளை, கிறிஸ்டல் அலையாக்கி உற்பத்தி செய்து தரும். இவ்வூர்தி அலைகளின் அதிர்வெண் மடங்காக்கியின் மூலம் பெருக்கப்பட்டு பவர் பெருக்கி பகுதிக்கு அனுப்பப்படுகிறது. பவர் பெருக்கி மற்றும் ஒலிபரப்பு ஏரியல் பண்பேற்றம் நிகழ்த்தப்பட்ட ஒலிஅலையானது அதன் மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டம் ஆகிய இரு முறைகளிலும் பெருக்கப்பட்டு ஒலிபரப்பு ஆண்டெனாவிற்கு அனுப்பப்படுகிறது. பரப்பும் ஆண்டெனாவானது RF அலைகளை மின்காந்த அலைகளாக மாற்றி வான்வெளியில் பரப்புகிறது. வானொலியின் பயன்கள் கப்பல்கள் மற்றும் நிலங்களுக்கு இடையில் மோர்ஸ் குறியீட்டைப் பயன்படுத்தி தந்திக்குறிப்புகளை அனுப்புவதற்கு, கடல்வழியே ஆரம்பகாலத்தில் பயன்படுத்தப்பட்டன. 1905 ஆம் ஆண்டில் சுஷிமா போரின் போது ரஷ்ய கப்பற்படையை ஜப்பானிய கடற்படையைக் கைப்பற்றியது அந்த தகவல்கள் ரேடியோ குறியீடு மூலம் அனுப்பப்பட்டன . முதன் முதலாக 1912 ஆம் ஆண்டில் ஆர்எம்எஸ் டைட்டானிக் கப்பலில் பயன்படுத்தப்பட்டது . மூழ்கிய கப்பல் மற்றும் அருகிலுள்ள கப்பல்கள் , மற்றும் உயிர் பிழைத்தவர்கள் பட்டியலிட்டு நிலையங்களுக்கு அனுப்பும் தகவல்தொடர்பு சாதனமாக ரேடியோ தந்தி பயன்பட்டது ."The History Of KQW Radio - KCBS". Bayarearadio.org. Retrieved 2009-07-22 முதல் உலகப் போரில் இரு தரப்பினரும் இராணுவம் மற்றும் கடற்படைகளுக்கு இடையே உத்தரவுகளையும் தகவல்களையும் அனுப்ப ரேடியோ பயன்படுத்தப்பட்டது; அதன் நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட தகவலை ஜெர்மனிக்கு தெரியப்படுத்த ரேடியோ தகவல்தொடர்புகளைப் பயன்பட்டது. , ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ரேடியோ பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு , வானொலி நிகழ்ச்சிகளில் செய்திகளும்,இடம்பெற்றன . 1920 கள் மற்றும் 1930 களில் பரவலாக வானொலியின் பயன்பாடு அதிகரித்தது . போருக்கு முந்தைய ஆண்டுகளில் ரேடியோ மற்றும் ராடார் பயன்படுத்தி விமானம் மற்றும் கப்பல்களைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டது . இன்று, வானொலி பல வகையான வடிவங்களில், வயர்லெஸ் நெட்வொர்க்குகள் மற்றும் அனைத்து வகையான மொபைல் தகவல்தொடர்புகள், ரேடியோ ஒளிபரப்பும் அடங்கும். தொலைக்காட்சியின் வருகைக்கு முன்பாக, வணிக ரீதியான வானொலி ஒலி பரப்புகள் செய்தி மற்றும் இசை மட்டுமல்லாமல் , நாடகங்கள், நகைச்சுவை, பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பல வகையான பொழுதுபோக்குகள் வழங்கின .1920 களின் பிற்பகுதி முதல் 1950 களின் இடைப்பட்ட காலம் வரை பொதுவாக வானொலியின் பொற்காலம் எனலாம் . வானொலி என்பது வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தி தனித்துவமக விளங்கியது . நவீன உலகில் தகவல் தொடர்பு சாதனங்கள், டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், ஐ.பேட், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான். தகவலை மக்களிடம் விரைவாக கொண்டு சேர்ப்பதில் வானொலியின் பங்கு அளவிடமுடியாதது. கல்வி சேவை , மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் , போன்றவற்றை வழங்குகின்றன . இன்று உலக முழுவதும் லட்சக்கணக்கான வானொலி நிலையங்கள் உள்ளன . தகவல்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி. அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் வானொலி என்றால் அது மிகையாகாது. ஆப்ரிக்கா, ஆசியா, வளைகுடா போன்ற நாடுகளில் இன்று உலக வானொலிதினத்தை கொண்டாடுகின்றனர். 2011 ம் ஆண்டு நவம்பர் 3 அன்று ஐக்கிய நாடுகள் சபை பிப்ரவரி 13ஐ உலக வானொலி நாள் என அறிவித்தது. ரேடியோ அலை மூலம் இயங்கும் கட்டுப்பாட்டுக் கருவி ரேடியோ அலைகளை பயன்படுத்தி கட்டுப்பாட்டுக் கருவியை ( Remote control) உருவாக்கி ஏவுகணைகள், படகுகள், கார்கள், மற்றும் விமானங்கள் ஆகியவற்றை தொலைதூரத்தில் இருந்து இயக்க பயன்படுத்தப்பட்டது . பெரிய தொழில்துறையில் கிரேன்களை இயக்க இப்போது, பொதுவாக டிஜிட்டல் ரேடியோ நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன, இவை பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துகின்றன.1898 இன் மின் கண்காட்சியில் மாடிசன் ஸ்கொயர் கார்டனில், நிகோலா டெஸ்லா வெற்றிகரமாக ஒரு ரேடியோ கட்டுப்பாட்டு மூலம் படகை இயக்கி காண்பித்தார்"Tesla - Master of Lightning: Remote Control". PBS. Retrieved 2009-07-22 "கப்பல்கள் அல்லது வாகனங்களை நகர்த்துவதற்கான கட்டுப்பாட்டு முறைமைக்கான கருவி மற்றும் கருவிக்கான" அமெரிக்க காப்புரிமை எண் 613,809 வழங்கப்பட்டது.Tesla - Master of Lightning: Selected Tesla Patents". PBS. Retrieved 2009-07-22 இவற்றையும் காண்க உலக வானொலி நாள் வானொலி ஆர்வலர் மேற்கோள்கள் பகுப்பு:இத்தாலியக் கண்டுபிடிப்புகள் பகுப்பு:ஊடக வடிவங்கள்
அகிலன்
https://ta.wikipedia.org/wiki/அகிலன்
அகிலன் (Akilan) என்று அறியப்படும் பி. வி. அகிலாண்டம் (சூன் 27, 1922 - சனவரி 31, 1988) தமிழக எழுத்தாளர் ஆவார். எதார்த்தம் மற்றும் ஆக்கப்பூர்வமான எழுத்து நடைக்குப் பெயர் பெற்றவராக அகிலன் அறியப்படுகிறார். அகிலன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். சிறப்புப் பெற்ற புதின ஆசிரியராக, சிறுகதையாளராக, நாடகாசிரியராக, சிறுவர் நூலாசிரியாராக, மொழிப்பெயர்ப்பாளராக, கட்டுரையாளராக இவருக்குப் பல முகங்கள் உண்டு. ஆரம்ப வாழ்க்கை அகிலாண்டத்தின் புனைபெயர் அகிலன் ஆகும். இவர் 1922 ஆம் ஆண்டு சூன் மாதம் 27 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் பிறந்தார். பெருங்காளூர் என்ற இக்கிராமத்திலேயே அகிலன் தன்னுடைய இளமைப்பருவத்தைக் கழித்தார். அவரது தந்தை வைத்தியலிங்கம் பிள்ளை ஒரு கணக்கு அலுவலர் ஆவார். தன்னுடைய ஒரே மகன் அகிலன் மீது அவர் அளவுகடந்த அன்பு கொண்டிருந்தார். ஆனால் எதிர்பாராவிதமாக அகிலன் தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழக்க நேர்ந்தது. ஆனால் அவரது தாயார் அமிர்தம்மாள் ஓர் அன்பான மனிதராக இருந்தார், ஆக்கப்பூர்வமான ஒரு படைப்பாளி என்ற முறையில், தன் மகனை ஒரு எழுத்தாளராக அவர் வடிவமைத்தார். பள்ளி நாட்களில் அகிலன் காந்திய தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார், சுதந்திரப் போராட்டத்தில் களம் இறங்க வேண்டும் என்பதற்காக புதுக்கோட்டையில் தன்னுடைய கல்லூரிப் படிப்பை தியாகம் செய்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அவர் இரயில்வே அஞ்சல் சேவை பிரிவில் பணியில் சேர்ந்தார், அதன் பிறகு அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இணைந்து முழுநேர எழுத்தாளராக எழுத்துப் பணியில் ஈடுபட்டார். இவர் எழுதிய கதைகள் பெரும்பாலும் சிறிய பத்திரிகைகளில் தோன்ற தொடங்கின. விருதுகள் அகிலன் எழுதிய சித்திரப்பாவை என்ற வரலாற்று நாவல் 1975-ஆம் ஆண்டிற்கான மதிப்பு மிக்க ஞான பீட விருதை வென்றது. இந்நாவல் அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவலுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது 1963-இல் கிடைத்தது. எங்கே போகிறோம் என்ற தனித்துவமான சமூக அரசியல் நாவல் 1975-ஆம் ஆண்டில் இவருக்கு ராசா சர் அண்ணாமலை விருதைப் பெற்றுத் தந்தது. கண்ணான கண்ணன் என்ற இவர் எழுதிய குழந்தை நூலுக்கு தமிழக அரசின் கல்வித்துறை சிறப்புப்பரிசு வழங்கி சிறப்பித்தது. அகிலன் 45 தலைப்புகளில் பல்வேறு படைப்புகளை உருவாக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர இவருடைய படைப்புகள் ஆங்கிலம், செருமனி, சீனா, மலாய் மற்றும் செக்கோசுலவேகிய மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. படைப்புகள் புதினங்கள் நிகழ்காலப் புதினங்கள் அவளுக்கு இன்ப நினைவு எங்கே போகிறோம் ? கொம்புத்தேன் கொள்ளைக்காரன் சித்திரப்பாவை சிநேகிதி துணைவி நெஞ்சின் அலைகள் பால்மரக்காட்டினிலே பாவை விளக்கு (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.) புதுவெள்ளம் பெண் பொன்மலர் வாழ்வெங்கே (இது திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது.) வானமா பூமியா வரலாற்றுப் புதினங்கள் வேங்கையின் மைந்தன் (இராசேந்திர சோழனின் கதை) அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தன் என்ற வரலாற்று நாவல் மிகப் பிரபலமாகப் பேசப்பட்டது. உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஆயிரமாயிரம் தமிழ் மக்களால் இந்நாவல் படிக்கப்பட்டது. சோழ வம்சத்தின் வரலாற்றை முழுமையாக எடுத்துக் கூறும் நாவலாக இது பார்க்கப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கனேசனால் மேடை நாடகமாக நடிக்கப்பட்டு பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. உலகின் மற்ற பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கு வேங்கையின் மைந்தனாக இருந்த சிறப்புமிக்க இராஜேந்திர சோழனின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றிய நுண்ணறிவை அகிலன் இந்நாவலில் வழங்கியுள்ளார் . இராசேந்திர சோழன் இராசராச சோழனின் மகன் ஆவார். அவரது காலம் கலை, இலக்கியம் மற்றும் நிர்வாகத்தில் தமிழர்களின் பேரரசு புகழின் உச்சத்தில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தோனேசியா, இலங்கை, கடாரம் எனப்படும் மலேசியா, இந்தியாவின் தெற்கு மற்றுன் கிழக்கு கடற்கரைப் பகுதிகள் ஆகியனவற்றை இவர் வெற்றி கொண்டார். கி.பி 1010 இல் இவர் வாழ்ந்ததாகவும் இவருடைய வம்சம் பல்வேறு வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நாவலானது கடாரத்தின் மீது பெற்ற வெற்றியையும், இந்தியாவின் வடக்குப் பகுதியை வெற்றி கொண்டதற்காக புதிய நகரமான கங்கைகொண்ட சோழபுரம் என்ற நகரத்தை உருவாக்கியதையும் பிரதிபலிக்கிறது. புதிதாகக் கட்டப்பட்ட கோயிலும் நகரமும் போர் மற்றும் சமாதான நடவடிக்கைகளுக்கு வழிகாட்டும் பல கட்டடக்கலை வடிவமைப்புகளைக் கொண்டிருந்தது. நாடுகளை வென்றதுடன் அழகிய பெண்களான அருள்மொழி மற்றும் ரோகினி ஆகியோரின் இதயங்களையும் இளங்கோ வேல் கைப்பற்றினார். அவர்கள் காட்டிய அன்பும் பாசமும் அகிலனின் எளிய சக்திவாய்ந்த வார்த்தைகளால் சித்திரிக்கப்பட்டது. இராசேந்திர சோழனின் மூத்த ஆலோசகராக வந்தியத்தேவன் நாவலில் தோன்றி போர் மற்றும் நிர்வாகத்தில் ஆலோசனைகள் வழங்குகிறார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலின் தொடர்ச்சியாகவும் வேங்கையின் மைந்தன் நாவல் பார்க்கப்படுகிறது. சோழர் காலத்தின்போது நடந்த வரலாற்று உண்மைகளை விவரிப்பதாலும் சரியான மொழியைப் பயன்படுத்தியிருந்ததாலும் இந்த நாவல் இந்திய அரசின் சாகித்திய அகாடமி விருதைப் பெற்றதில் ஆச்சரியம் ஏதுமில்லை. 'கயல்விழி (இது மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் என்னும் பெயரில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. தமிழக அரசின் பரிசு பெற்றது. வெற்றித்திருநகர்- இது விசயநகரப் பேரரசை மையமாகக் கொண்ட வரலாற்று நாவல் ஆகும். கலை கதைக் கலை புதிய விழிப்பு சுயசரிதை எழுத்தும் வாழ்க்கையும் மொழிபெயர்ப்பு நூல்கள் தாகம் - ஆஸ்கார் வைல்ட் சிறுகதை தொகுதிகள் சத்ய ஆவேசம் ஊர்வலம் எரிமலை பசியும் ருசியும் வேலியும் பயிரும் குழந்தை சிரித்தது சக்திவேல் நிலவினிலே ஆண் பெண் மின்னுவதெல்லாம் வழி பிறந்தது சகோதரர் அன்றோ ஒரு வேளைச் சோறு விடுதலை நெல்லூர் அரசி செங்கரும்பு அகிலன் சிறுகதை - அனைத்துக் கதைகளும் அடங்கிய தொகுப்பு சிறுவர் நூல்கள் தங்க நகரம் கண்ணான கண்ணன் நல்ல பையன் பயண நூல்கள் நான்கண்ட ரஷ்யா சோவியத் நாட்டில் மலேசியா சிங்கப்பூரில் அகிலன் கட்டுரை தொகுப்புகள் இளைஞருக்கு! 1962 தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி வெளியீடு நாடு நாம் தலைவர்கள் (கட்டுரைகள், 2000) வெற்றியின் ரகசியங்கள் நாடகம் வாழ்வில் இன்பம் திரைக்கதை வசனம் காசுமரம் ஒலித்தகடு நாடும் நமது பணியும் - அகிலன் உரை'' விருதுகள் ஞானபீட விருது சாகித்திய அகாதமி விருது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Akilan home page More info about the novel in Tamil Akilan book list Tamil அகிலன் படைப்புகள் பற்றிய முக நூல் பக்கம் . பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள் பகுப்பு:ஞானபீட விருது பெற்றோர் பகுப்பு:1922 பிறப்புகள் பகுப்பு:1988 இறப்புகள் பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட நபர்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்
கொல்கத்தா
https://ta.wikipedia.org/wiki/கொல்கத்தா
கொல்கத்தா () (முன்பு கல்கத்தா) என்பது முன்னாள் இந்தியாவின் தலைநகரும் தற்போதைய இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகர் கிழக்கு இந்தியாவின் கலாச்சாரம், கல்வி மற்றும் வர்த்தக நடுவமாக விளங்குகிறது. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கொல்கத்தா நகரின் புற நகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி ஆகும். எனவே, இந்நகர் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகராக கருதப்படுகிறது. மேலும், இந்நகர் உலக அளவில் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகருமாகும். கல்கத்தா நகர், ஆங்கிலேய ஆட்சியின்போது, 1911 ஆம் ஆண்டு வரை, இந்தியாவின் தலைநகராக விளங்கியது. அக்காலத்தில் கல்வி, அறிவியல், தொழில், பண்பாடு மற்றும் அரசியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய கொல்கத்தா நகர், 1954 ஆம் ஆண்டுக்கு பின் நடைபெற்ற அரசியல் சார்ந்த வன்முறைகளாலும், சச்சரவுகளினாலும் பொருளாதாரத்தில் பின்னடைவுற்றது. 2000 ஆம் ஆண்டுக்கு பின், சிறிதளவு பொருளாதார மறுமலர்ச்சி கண்டுள்ளது. இருப்பினும், பிற இந்திய நகரங்களை நோக்குங்கால் கொல்கத்தா இன்னமும் வறுமை, சுற்றுச்சூழல் மாசுறுதல், போக்குவரத்து நெரிசல் ஆகிய நகரம் சார்ந்த பிரச்சனைகளை எதிர் கொள்வதில் பின்தங்கி இருப்பது கண்கூடு. இந்திய விடுதலைப் போராட்டத்தில் கொல்கத்தா நகரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, இடதுசாரி கட்சிகளின் ஆதிக்கம், தொழிலாளர் சங்கங்களின் வளர்ச்சி ஆகிய பல அரசியல் மற்றும் சமுக மாற்றங்களில் கொல்கத்தா நகர் மற்ற இந்திய நகர்களை விட மாறுபட்டது. பெயர்க்காரணம் கொல்கத்தா என்ற பெயரும், ஆங்கிலேயர் இட்ட கல்கத்தா என்ற பெயரும், காளிகத்தா என்ற பழமையான பெயரில் இருந்து தோன்றியவையே. இப்பகுதியில், ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு இருந்த ஒரு சிற்றூரின் பெயர் இதுவாகும். இப்பெயருக்கு பல்வேறு பெயர் காரணங்கள் கூறப்படுகிறது. காளிகத்தா என்ற பெயர் காளிசேத்ரா (, காளி அன்னையின் (இந்து பெண் தெய்வம்) இடம்) என்ற பெயரில் இருந்து தோன்றியிருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர். வங்காள மொழியின் கில்கிலா (தட்டையான நிலம்) என்ற பதத்தில் இருந்தும் இப்பெயர் தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும், கால்வாய் என்ற பொருள் படும் கால் என்ற சொல்லும், தோண்டு என்ற பொருள்படும் கத்தா இணைந்தே இச்சொல் தோன்றியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கல்கத்தா என்று வழங்கி வந்த இந்நகரின் பெயர், 2001-ஆம் ஆண்டில் வங்காள மொழி உச்சரிப்பான கொல்கத்தா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நகரத்தின் பெயர் வங்காள மொழியினர் எப்பொழுதும் கொல்கத்தா என்றே அழைத்து வந்த போதும், ஆங்கிலேயர் இதனை கல்கத்தா என்று அழைத்தனர். இதனால் இதன் அதிகாரபூர்வப் பெயர் கல்கத்தா என்றே வழங்கி வந்தது. 2001-ஆம் ஆண்டில் கொல்கத்தா என்னும் உள்ளூர்ப் பெயரையே அதிகாரபூர்வப் பெயர் ஆக்கினர். வரலாறு thumb|left|300 px|கொல்கத்தா நகர் 1945, இரண்டாம் உலகப் போரின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. கொல்கத்தா நகருக்கு அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு சிற்றூரில் கிடைத்த அகழ்வாராய்ச்சி சின்னங்கள் மூலம் இப்பகுதியில் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதலே மக்கள் வசித்து வருவது அறியப்படுகிறது. இருப்பினும், நகரின் தெளிவான வரலாற்றை 1690 பின் இப்பகுதிக்கு வந்த பிரித்தானிய கிழக்கிந்திய வாணிப கழகத்தின் வருகைக்கு பின்னே அறிய முடிகிறது. இவ்வணிக கழகத்தின் உயர் அலுவலகராக பணியாற்றிய ஜோப் கேமொக் என்பவர் இந்நகரை நிறுவிய பெருமையை பெறுகிறார். அக்காலத்தில், இப்பகுதியை வங்காள நவாப் சிராஜ்-உத்-தவுலா ஆட்சிப் புரிந்தார். இப்பகுதியில் பாசக் இன மக்களும், வணிகத்தில் சிறந்த செட் இன மக்களும் வசித்து வந்தனர். 17 ஆம் நூற்றண்டின் இறுதியில், ஆங்கிலேயர் இப்பகுதியில் வேற்று நாட்டு குடியேற்ற சக்திகளான நெதர்லாந்து நாட்டவர், போர்த்துகீசியர், மற்றும் பிரெஞ்சு நாட்டவர் ஆகியோருடம் இருந்து தம் நலனை பாதுகாக்க ஒரு கோட்டையைக் கட்ட விரும்பினர். அதன் படி 1702ஆம் ஆண்டு வில்லியம் கோட்டையைக் கட்டினர். இக்கோட்டையே, ஆங்கிலேய படையினரின் குடியிருப்பாகவும், தலைமையிடமாகவும் இருந்தது. பின், கல்கத்தா வங்காள மாகாணத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிக கழக படையினரால் தொடந்து ஆங்கிலேயர் தாக்கப்பட, 1756 ஆம் ஆண்டு, வங்காள நவாப் சிராஜ்-உத்-தவுலாவின் எதிர்ப்பையும் மீறி ஆங்கிலேயர் தம் கோட்டையை மேலும் பலமாக்கி, போர்கருவிகளைப் பெருக்கினர். இதனால் கோபமடைந்த நவாப் கோட்டையைத் தாக்கி கைப்பற்றினார். கைப்பற்றப்பட்ட போர் கைதிகளான ஆங்கிலேயர் பலர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை கல்கத்தாவின் கருப்பு நிலவறை என்று குறிப்பிடுவர். அடுத்த ஆண்டே, ராபர்ட் கிளைவ் தலைமையிலான ஆங்கிலேய படைகள் மீண்டும் கோட்டையைக் கைப்பற்றினர். ஆங்கிலேய இந்தியாவின் தலைநகராக கல்கத்தா நகர் அறிவிக்கப்பட்டது. 1864-ஆம் ஆண்டு முதல் கோடைக்கால தலைநகராக மலைப்பாங்கான சிம்லா நகர் அறிவிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் கொல்கத்தா நகர் மாபெரும் வளர்ச்சியினை பெற்றது. மாளிகைகளின் நகர் என்ற பெயரை கொல்கத்தா நகர் பெற்றது. நகரின் அருகில் அமைந்திருந்த சதுப்பு நிலங்களில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு, நிலம் மேம்படுத்தப்பட்டது. கவர்னர்-ஜெனரல் ரிச்சர்டு வெல்லஸ்லி ஆண்ட 1797–1805 ஆண்டுகளில், நகரின் பொது கட்டிடக்கலை மாபெரும் வளர்ச்சியுற்றது. கல்கத்தா நகர் 18, 19-ஆம் நூற்றாண்டுகளில் ஆங்கிலேய கிழக்கு இந்திய வணிகக் கழகத்தின் அபின் போதை பொருள் வாணிபத்தின் தலைமையிடமாக இருந்தது. கல்கத்தாவின் புறநகர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட அபின் கல்கத்தா நகரில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. 19-ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் கல்கத்தா நகர் இரண்டாக பிரிக்கப்பட்டது; ஆங்கிலேயர் வாழும் வெள்ளையர் நகர், இந்தியர் வாழும் கறுப்பர் நகர். அந்நூற்றாண்டின் நடுக்காலத்தில் கல்கத்தா நகர் பெரும் பெருளாதார வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக நூற்பு தொழிலிலும், சணல் சார்ந்த தொழில் துறைகளிலும் பெரும் வளர்ச்சி பெற்றது. புதிய இரயில் பாதைகள், தொலை தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆங்கிலேய மற்றும் இந்திய பண்பாடு தொடர்பினால் உயர் வருமானம் கொண்ட இந்தியர்கள் உருவாகினர். இவர்களை பாபு என்று மக்கள் அழைத்தனர்.Jack I. (2001). "Introduction to URL accessed on 2006-04-26. 19-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் நிகழ்ந்த சமூக-பண்பாட்டு மாற்றத்தினை வங்காள மறுமலர்ச்சி என்றே வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். 1883-ஆம் ஆண்டு, சுந்தர்நாத் பானர்ஜி தலைமையில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கு, இந்தியாவில் தேசிய அளவில் நடைபெற்ற முதல் கருத்தரங்கு ஆகும். படிப்படியாக கல்கத்தா நகர் இந்திய விடுதலை போராட்டத்தின் மையமாக மாறியது. குறிப்பாக வன்முறை வழியே விடுதலை அடைய விரும்புவோரின் மையமாக இருந்தது. 1905-ஆம் ஆண்டு ஆங்கில அரசு மதத்தைக் காரணமாக கொண்டு நடத்திய வங்காள பிரிவினை, மக்களிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. ஒத்துழையாமை இயக்கம், வெளிநாட்டுப் பொருள்களைப் புறக்கணித்தல், சுதேசி இயக்கம் ஆகியவை வலிமை பெற்றன. இத்தகைய மக்கள் எதிர்ப்பினாலும், நகரின் அமைவிடத்தினாலும், 1911-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு தன் தலைநகரை கல்கத்தா நகரில் இருந்து புது தில்லி நகருக்கு மாற்றியது. thumb|300 px| புனித பாலின் பேராலயம், கொல்கத்தா, ஆங்கிலேயரால் கட்டப்பட்டது இரண்டாம் உலகப் போரில் கல்கத்தா நகரும் புறநகர் பகுதிகளும், துறைமுகமும் ஜப்பானிய தரைப்படையால் தாக்கப்பட்டன. 20 டிசம்பர் 1942 முதல், 24 டிசம்பர் 1944 வரை கல்கத்தா நகர் பலமுறை தாக்கப்பட்டது. இப்போரில் இலட்சக்கணக்கானோர் பஞ்சத்தினால் உயிரிழந்தனர். 1946-ஆம் ஆண்டு, இசுலாமிய நாட்டை உருவாக்கும் கோரிக்கை வலு பெற்றதன் விளைவாக உருவான மதக்கலவரத்தில் ஏறத்தாழ 4,000 மக்கள் உயிரிழந்தனர். இந்திய பிரிவினையின் போது மூண்ட வன்முறையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பெரும்பாலான இசுலாமியர் சமூகம் கிழக்கு பாக்கிஸ்தானுக்கு சென்றனர். 1960-ஆம் ஆண்டு முதல் 1980 ஆண்டு வரை மாநிலத்தில் வலிமை பெற்ற பொதுவுடமை கொள்கையால் தொழில் நலிவடைந்தது. எண்ணற்ற கதவடைப்பு போராட்டங்களாலும், தொழிலாளர் பிரச்சனைகளாலும்,நக்சலைட்டுகள் வலுப் பெற்றதாலும் நகரின் பொது நிருவாகம் பாதிப்படைந்ததோடு , பொருளாதார தேக்கம் ஏற்பட்டது. and Judith Vidal-Hall, "Naxalites", in Index on Censorship, Volume 35, Number 4 (2006). p. 73. 1971-ஆம் ஆண்டு, இந்தியா, பாக்கிஸ்தான் இடையே நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கான அகதிகள் கொல்கத்தா நகரில் தஞ்சம் புகுந்ததன் விளைவாக நகரின் கட்டமைப்பு பெரும் நெருக்கடிக்குள்ளானது. 1980 களில்,மும்பை நகர் கொல்கத்தா நகரை விட கூடுதல் மக்கள் தொகை கொண்ட நகரானது. இன்றும் கொல்கத்தா நகர் இந்திய பொதுவுடமை கட்சியின் வலிமையான தலைமையிடமாக உள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தை பொதுவுடமை கட்சி சுமார் 30 ஆண்டுகளாக ஆண்டு வருவது குறிப்பிடத்தக்கது இந்தியாவின் மற்ற மாநிலங்களின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு மேற்கு வங்க அரசு தற்காலத்தில் தொழில் வளர்ச்சிக்கு உதவ முனைந்துள்ளது. புவியமைப்பு right|thumb|300 px|ஊக்லி ஆறு மற்றும் வித்யாசாகர் சேது பாலம் கொல்கத்தா கிழக்கு இந்தியாவில் உள்ள கங்கை முகத்துவாரம் அருகில் அமைந்துள்ளது.NASA image. ஊக்லி ஆற்றின் கரையில் தெற்கு-வடக்காக நீள வாக்கில் அமைந்துள்ள இந்நகரின் பெரும்பாலான நிலம் முற்காலத்தில் சதுப்பு நிலமாகவும், ஈரநிலமாகவும் இருந்தவை. மக்கள் வளர்ச்சிக்காக அவை பின்னர் மேம்படுத்தப்பட்டவை. மீதம் இருக்கும் இவ்வகை சதுப்பு நிலம் சுற்றுப்புறச் சூழலை கருத்தில் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. கங்கை சமவெளியின் பல்வேறு பகுதிகளைப் போன்றே இப்பகுதியும் மிகுதியான அளவில் வளமான வண்டல் மண்ணையும், களி மண்ணையும் கொண்டது. இந்திய புவியியல் ஆய்வாளர்களின் கூற்றின்படி, இந்நகரின் அமைவிடம் மூன்றாவது நில நடுக்க அழிவுப் பகுதியில் உள்ளமையால் இப்பகுதி நில நடுக்கங்களால் பாதிப்படைய வாய்ப்புள்ளது. மேலும், இப்பகுதி அயனமண்டல புயல்களால் மிகவும் பாதிப்படையக் கூடிய பகுதி என்று ஐக்கிய நாடுகள் அவை முன்னேற்றத் திட்டத்தின் அறிக்கை கூறுகிறது. thumb|left|300px|கொல்கத்தா நகர் - செயற்கை கோள் புகைப்படம் கொல்கத்தா கடல் மட்டத்திலிருந்து 1.5 மீட்டரில் (5 அடி) இருந்து 9 மீட்டர் (30 அடி) வரையான உயரங்களுக்கிடையே அமைந்துள்ளது. இது ஊக்லி ஆற்றின் கரையோரமாக நீணு வளர்ச்சியடைந்து உள்ளது. இந்த நகரம் இருக்கும் இடத்தின் பெரும்பகுதி முன்னர் ஈரநிலமாகக் காணப்பட்டது. காலப்போக்கில், அதிகரித்து வந்த மக்கள் தொகையை அடக்குவதற்காக இந்நிலங்கள் படிப்படியாக இவ்வீரநிலங்கள் நிரப்பப்ட்டன. இவ்வாறு நிரப்பப்படாமல் மீந்திருந்த ஈரநிலம், இப்போது கிழக்குக் கல்கத்தா ஈரநிலம் என்று அழைக்கப்படுகின்றது. பெரும்பாலான இந்திய கங்கைச் சமவெளிப் போலவே இங்கு முக்கியமாகக் காணப்படும் மண்வகை வண்டல் ஆகும். களிமண், பல அளவுகளிலான மணல், சிறு கற்கள் என்பன நகரத்தின் அடியில் காணப்படுகின்றன. இப்படிவு இரண்டு களிமண் படைகளுக்கு இடையே அமைந்துள்ளது. இவற்றுள் மிகக் கீழுள்ள படை நிலமட்டத்தில் இருந்து 250 மீட்டருக்கும், 650 மீட்டருக்கும் இடையில் அமைந்துள்ளது. மேலுள்ள படை 10 மீட்டருக்கும், 40 மீட்டருக்கும் இடையிலான தடிப்புக் கொண்டதாக உள்ளது. இந்தியத் தர நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த நகரம், புவியதிர்வு வலயம் 3க்குள் அடங்குகிறது. நகர அமைப்பு right|thumb|300 px|கொல்கத்தா உயர்நீதி மன்றம் கொல்கத்தா நகர், கொல்கத்தா மாநகராட்சி மன்றத்தின் (KMC), ஆட்சி எல்லைக்குள் சுமார் 185 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. முறையான நகர எல்லை இவ்வளவாக இருப்பினும், நகரின் புறநகர் பகுதி மிகப்பெரியது. புற நகர் பகுதிகளையும் சேர்த்து கணக்கிட்டால் கொல்கத்தா நகர பரப்பளவு குறைந்தது 1750 சதுர கிலோமீட்டர் ஆகும். இப்பரப்பளவில் 72 நகரங்களும் 527 பேரூர்களும் அடங்கும். நகர் பொதுவாக வடக்குப் பகுதி, நடுப் பகுதி, தெற்குப் பகுதி என மூன்றாக பிரிக்கப்படுகிறது. வடக்கு கொல்கத்தா பகுதி நகரின் பழமையான பகுதியாகும். இப்பகுதியில் உள்ள பல கட்டிடங்களில், 19-ஆவது நூற்றாண்டு கட்டிடக்கலை வெளிப்படுவதைக் காணலாம். மேலும் பல தெருக்கள் குறுகிய சந்துகளாக காணப்படுகிறது. தெற்கு கொல்கத்தா இந்தியா விடுதலை அடைந்த பின் உருவாக்கப்பட்ட பகுதியாகும். இப்பகுதி பெரும்பாலும் வசதி படைத்த செல்வர்களின் பகுதியாக காணப்படுகிறது. நடு கொல்கத்தா பெரும்பாலும் வணிகப் பகுதியாக திகழ்கிறது. அரசு அலுவலகங்கள், தலைமை செயலகம் , தலைமை அஞ்சல் அலுவலகம் , கல்கத்தா உயர் நீதிமனறம், லால் பசார் காவலர் தலைமையகம் மற்றும் பல தனியார் அலுவலகங்கள் இப்பகுதியில் உள்ளன. மெய்டன் திடல் இப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய திறந்த வெளித் திடல் ஆகும். இத்திடலில் பல்வேறு விளையாட்டு போட்டிகளும், பொது நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. கிழக்கு மேற்குத்திசையில், இந்நகரம் மிக ஒடுக்கமானது. இது மேற்கே ஊக்ளி ஆற்றில் இருந்து தொடங்கி கிழக்கே கிழக்கத்திய மெட்ரோபாலிட்டன் பைபாசு வரை சுமார் 5 கிமீ நீளம் உள்ளதாகக் காணப்படுகின்றது. இந்த நகரம், வடக்குக் கொல்கத்தா, நடுக் கல்கத்தா, தெற்குக் கல்கத்தா என மூன்று பிரிவுகளாக உள்ளது. வடக்குக் கல்கத்தாப் பகுதியே நகரின் மிகப் பழைய பகுதியாகும். இங்கே 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடங்களையும் ஒடுங்கிய தெருக்களையும் காண முடியும். தெற்குக் கொல்கத்தா பெரும்பாலும் விடுதலைக்குப் பிற்பட்ட பகுதிகளைக் கொண்டதாகும். இங்கே பாலிகுங்னே, அலிப்பூர், புதிய அலிப்பூர் போன்ற உயர் மட்டத்தினர் வாழும் பகுதிகள் உள்ளன. நகரின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள உப்பு ஏரி நகரம் எனப்படும் பிதான் நகர்ப் பகுதி திட்டமிட்டுக் கட்டப்பட்ட பகுதியாகும். காலநிலை கொல்கத்தா மாநகர் அயன மண்டல காலநிலையான, வறண்ட மற்றும் ஈரமான பருவங்களைக் கொண்டுள்ளது. ஆண்டின் சராசரி வெப்பம் 26.8 C ஆகும்; மாத சராசரி வெப்ப நெடுக்கம் சுமார் 19 C முதல் 30 C வரை ஆக உள்ளது கோடைக் காலம் (மே மற்றும் ஜூன் மாதங்கள்) சுமார் 30 இல் இருந்து 40 °C (104 °F) வரை வெப்பமாகவும், ஈரப்பதம் மிகுந்ததாகவும் உணரப்படுகிறது . டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் உணரப்படும் குளிர்காலத்தில், வெப்ப நிலை 9 °C – 11 °C (54 °F – 57 °F) வரை குறையக் கூடும். இந்நகரில் பதியப் பட்டுள்ள உயர் வெப்பம் 43.9 C ஆகும். குறைந்த வெப்பநிலை 5 C ஆகும். இப்பகுதி தென்மேற்கு பருவக்காற்றினால் பருவமழையைப் பெறுகிறது. ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை பெய்யும் பருவமழையின் அளவு சராசரியாக 1582 MM ஆகும். ஆகஸ்டு மாதம் அதிகமான அளவு (306 MM) மழை பெய்கிறது. சுற்றுப்புறத் தூய்மைக் கேடு கொல்கத்தா மாநகரின் முக்கிய பிரச்சனையாகும். மற்ற இந்திய நகரங்களை விட கொல்கத்தா நகர் வளி மாசுபாட்டால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வான்மங்கலாலும், பனிப்புகையாலும் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் வளியில் உள்ள நச்சுப் பொருள்களால் மக்கள் மூச்சு சார்ந்த நோய்களாலும், நுரையீரல் புற்றுநோயாலும், காச நோயாலும் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளனர். பொருளாதாரம் thumb|300 px|left|தெருவோரப் பூ வணிகம் கொல்கத்தா, கிழக்கு இந்தியாவின் வணிக, நிதித் துறைகளின் மையமாக திகழ்கிறது. கல்கத்தா பங்கு சந்தை நாட்டின் இரண்டாவது பெரிய பங்கு மாற்றகம் ஆகும் இந்நகரின் துறைமுகங்கள் வணிக நோக்கிலும், இராணுவ நோக்கிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இப்பகுதியில் உள்ள மிகப்பெரிய பன்னாட்டு வானூர்தி நிலையம் கொல்கத்தா நகரிலேயே அமைந்துள்ளது. முந்தைய காலத்தில் பொருளாதாரம், அறிவியல், கலை என எல்லா துறைகளிலும் முன்னணியில் இருந்த கொல்கத்தா நகர் இந்திய விடுதலைக்கு பின் பல்வேறு அரசியல் மற்றும் சமூக காரணங்களால் பின்னடைவுற்றது. பல தொழிலகங்கள் மூடப்பட்டன. பல தொழில்கள் வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டன. 1990-ஆம் ஆண்டுக்குப்பின் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கையால் தொழில்கள் சிறிதளவு முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இருப்பினும் நகரின் 40% தொழிலாளர்கள் தாமே தொடங்கிய தொழில்களையே நம்பி உள்ளனர்.Chakravorty S (2000). "From Colonial City to Global City? The Far-From-Complete Spatial Transformation of Calcutta" in ஆதலால் பொருளாதார மாற்றங்கள் எளிதில் மக்களை சென்றடைவதில்லை. எடுத்துக்காட்டுக்கு, கொல்கத்தா நகரின் தெரு வணிகர்களின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 8,772 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அண்மைய காலத்தில் கொல்கத்தா நகரின் பொருளாதார வளர்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இத்துறை ஆண்டுக்கு 70% வளர்ச்சி எனற வேகத்தில் வளர்ந்து வருகிறது. மேலும் கட்டுமானத் துறையிலும் கடந்த சில ஆண்டுகளாக பெரும் வளர்ச்சி கிட்டியிருக்கிறது. thumb|300 px|தொழில்நுட்ப பூங்காவில் காணப்படும் கொக்நிசண்டு டெக்னாலஜி செலியுசன் கணிப்பொறி தொழில்நுட்ப நிறுவன கட்டிடம் இந்தியாவின் பல சிறந்த வணிக நிறுவனங்கள் கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டவை. அவற்றுள் பாட்டா காலணி நிறுவனம், பிர்லா குழுமம், நிலக்கரி இந்தியா லிமிடெட், தாமோதர் வாலி குழுமம், யுனைட்டட் வங்கி, யுஸிஓ வங்கி மற்றும் அலகாபாத் வங்கி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அண்மைய காலத்தில் இந்திய அரசு பல்வேறு பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளை இப்பகுதியில் நிறைவேற்ற முனைகிறது. இன்றியமையா சேவைகள் மற்றும் ஊடகங்கள் thumb|300 px|டாட்டா தகவல்தொடர்பு VSNL கோபுரம் கொல்கத்தா மாநகராட்சி கழகம் நகரின் குடிநீர் தேவையை ஊக்லி ஆற்றின் மூலம் நிறைவு செய்கிறது. மாநகரின் 2500  டன் கழிவு பொருள்கள் தினமும் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள தாபா என்ற கழிவு நிலத்தில் கொட்டப்படுகிறது. இககழிவுப் பொருள்களை இயற்கை உரமாக பயன்படுத்த வேளாளர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள். நகரின் பல பகுதிகளில் கழிவு நீர் வசதிகள் இன்றியும், நல்ல கழிப்பிடங்கள் இன்றியும் உள்ளன. நகர் பகுதியில், மின்சார உற்பத்தி, பகிர்ந்தளிப்பு தனியார் மயமாக்கப்பட்டு, கல்கத்தா மின்சார பகிர்ந்தளிப்பு குழுமத்தினால் நிருவகிக்கப் படுகிறது. புறநகர் பகுதிகளில் மேற்கு வங்காள மாநில மின்சாரம் வாரியம் மின்சாரத்தை அளிக்கிறது. தொடர்ச்சியான மின்சார தடங்கல் நகரின் பெரும் பிரச்சனையாக முந்தைய காலங்களில் இருந்து வந்தாலும் அண்மைய காலத்தில் நிலைமை சீராகி உள்ளது. நகரில் சுமார் 20 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. ஆண்டுதோறும் சராசரியாக 7 ,500 தீயணைப்பு, மீட்புப்பணிகளில் இவை பணியாற்றுகின்றன. அரசு தகவல் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும், தனியார் நிறுவனங்களான ஹட்ச், ஏர்டெல், ரிலையன்ஸ், ஏர்செல் மற்றும் டாட்டா இண்டிகாம் ஆகியனவும் தொலைபேசி, செல்பேசி சேவைகளை மக்களுக்கு அளிக்கின்றன. மேம்படுத்தப்பட்ட GSM, CDMA சேவைகளும் இந்நகரத்தில் மக்களுக்கு கிடைக்கிறது. அகலப்பட்டை இணைய இணைப்பு சேவையை பிஎஸ்என்எல், ஏர்டெல் ,ரிலையன்ஸ் மற்றும் டாட்டா இண்டிகாம் ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன. வங்காள மொழி நாளிதழ்களான ஆனந்தபசார் பத்திரிக்கா, ஆஜ்கல், பர்தாமன், கனசக்தி ஆகியவை விரும்பி படிக்கப் படுகின்றன. பல வட்டார, தேசிய ஆங்கில நாளிதழ்களும் கொல்கத்தா நகரில் வெளிவருகின்றன. அவற்றுள் தி டெலிகிராப் , தி ஸ்டேட்ஸ்மேன் , எசியான் எய்ஜ், இந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆகியவை குறிப்பிடத்தக்க அளவு விற்பனையாகின்றன. அகில இந்திய வானொலி, மேற்கு வங்காள மாநில வானொலி, பல தனியார் வானொலி சேவையாளர்கள் வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றனர். இது தவிர பல தனியார் பண்பலைவரிசைகளும் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றன. அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனமும் பல தனியார் கம்பி வட தொலைக்காட்சி நிறுவனங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. போக்குவரத்து thumb|300 px|கொல்கத்தா நகரின் விஐபி சாலை - வானூர்தி நிலையத்தையும் நகரையும் இணைக்கிறது thumb|left|300 px|கொல்கத்தா நகரின் தண்டுப் பேருந்து thumb|300 px|வித்யாசாகர் சேது பாலம் கொல்கத்தா நகரையும் அவுரா நகரையும் இணைக்கிறது பொது போக்குவரத்து வசதிகளை கொல்கத்தா புறநகர் இருப்புப்பாதை , கொல்கத்தா சுரங்க இரயில், தண்டுப் பேருந்து (TRAM), பேருந்துகள் ஆகியவை அளிக்கின்றன . புறநகர் போக்குவரத்துப் பிணையம் தொலைதூர புறநகர் வரை நீண்டுள்ளது. கொல்கத்தா சுரங்க இரயில் வலையமைப்பு, இந்திய இரயில்வேயினால் நடத்தப்படும் பழமையான சுரங்க இரயில் ஆகும். இது ஊக்லி ஆற்றுக்கு இணையாக தென்-வடக்காக நகரத்தின் ஊடே 16.45 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. பேருந்துகள் நகரின் விரும்பத்தக்க போக்குவரத்து முறையாக அமைந்துள்ளன. இவை அரசாலும், தனியாராலும் இயக்கப்படுகின்றன. இந்திய நகர்களில் கொல்கத்தா நகரில் மட்டுமே தண்டுப் பேருந்துகள் புழக்கத்தில் உள்ளன. இவை கல்கத்தா தண்டுப் பேருந்து நிறுவனத்தால் பராமரிக்கப்ப் படுகின்றன. மிக மெதுவாக இயங்கும் தண்டுப் பேருந்துகள் நகரில் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன. மழைக் காலத்தில் தேங்கும் மழைநீரால் கொல்கத்தா நகரின் பொது போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கை. நகரின் பல பகுதிகளில் மிதி இழுவண்டிகளையும், கையால் இழுக்கப்படும் இழுவண்டிகளையும் காணலாம். மற்ற இந்திய நகர்களை ஒப்பிடும்போது கொல்கத்தா நகரில் சொந்த வண்டிகளை வைத்திருபோர் எண்ணிக்கை மிகக் குறைவு. பல வகையான பொது போக்குவரத்து வசதிகள் அமைந்திருப்பது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இந்நிலைமை மாறி வருகிறது; 2002 ஆம் ஆண்டு தகவலின்படி கடந்த ஏழு ஆண்டுகளில் தனியார் வண்டிப் பதிவு 44% உயர்ந்துள்ளது.{} கொல்கத்தா நகர், அவுரா நிலையம் மற்றும் சீல்டா நிலையம் என்ற இரண்டு தொலைதூர இருப்புப்பாதை நிலையங்களை கொண்டுள்ளது. கொல்கத்தா என்று பெயரிடப்பட்டுள்ள மூன்றாவது தொலைதூர இரயில் நிலையம் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . இந்நகர் இந்திய இரயில்வேயின் இரண்டு பிரிவுகளுக்கு தலைமையிடமாக அமைந்துள்ளது . அவையாவன கிழக்கு இரயில்வே மற்றும் தென் கிழக்கு இரயில்வே. நகரின் ஒரே ஒரு வானூர்தி நிலையமான, நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் நகரின் வடக்கு பகுதியில் உள்ள டம் டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வானூர்திகள் புறப்படுகின்றன. கொல்கத்தா நகர் கிழக்கு இந்தியாவின் பெரிய ஆற்று துறைமுக நகராகும்.கொல்கத்தா துறைமுக பொறுப்பாட்சி கொல்கத்தா கப்பல் துறையையும், ஹால்டியா கப்பல துறையையும் நிருவகிக்கிறது.{} கொல்கத்தா நகருக்கும் அதன் இரட்டை நகரமான அவுரா நகருக்கும் இடையே பயணப்படகு சேவைகளும் உள்ளன. மக்கள் 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி கொல்கத்தாவின் மக்கள்தொகை 4,580,544 ஆக இருந்தது. சூழவுள்ள நகரப்பகுதிகளையும் சேர்த்து இது 13,216,546 ஆகும். 2009 ஆம் ஆண்டுக்கான கொல்கத்தா நகரத்தின் மக்கள்தொகை 5,080,519 ஆக இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். பால் விகிதம் 928 பெண்களுக்கு 1000 ஆண்கள் ஆக உள்ளது. இது நாட்டின் சராசரி விகிதத்திலும் குறைவானதாகும். நாட்டுப்புறங்களில் இருந்து வரும் பல ஆண்கள் தமது குடும்பத்தினரை ஊரிலேயே விட்டுவிட்டு நகரில் தனியாக வாழ்வதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கொல்கத்தாவின் எழுத்தறிவு வீதம் 81% ஆகும். இது நாட்டின் சராசரியிலும் 1% அதிகமானது. கொல்கத்தா மாநகரக் கார்ப்பரேசன் பகுதியின் மக்கள்தொகை வளர்ச்சி வீதம் 4.1%. இது இந்தியாவிலுள்ள மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களோடு ஒப்பிடும்போது குறைவானது. வங்காளிகள் 55% மக்கள் தொகையுடன் பெரும்பான்மையினராக உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மார்வாரிகளும், பீகாரிகளும் 20% மக்கள்தொகையைக் கொண்டோராக உள்ளனர். கொல்கத்தாவில் வாழும் சிறிய சிறுபான்மையினரில், சீனர், தமிழர், நேபாளிகள், ஒரியர், தெலுங்கர், அசாமியர், குசராத்தியர், ஆங்கிலோ இந்தியர், ஆர்மேனியர், திபேத்தியர், மராட்டியர், பஞ்சாபியர், பார்சிகள் என்போர் அடங்குவர். வங்காளி, இந்தி, உருது, ஆங்கிலம், ஒரியா, போச்பூரி ஆகிய மொழிகள் கொல்கத்தாவில் பேசப்படும் முக்கியமான மொழிகள். மக்கள்தொகைக் கணக்கீட்டின்படி இங்கு வாழ்வோரில் 80 சதவீதமானோர் இந்துக்கள் ஆவர். 20.27% முசுலிம்களும், 0.88%% கிறித்தவரும், 0.46% சமணரும் இங்கே வாழ்கின்றனர். சீக்கியர், பௌத்தர், யூதர், சோரோவாசுட்டிரியர் என்போரும் குறைந்த அளவில் உள்ளனர். 1.5 மில்லியன் மக்கள் அல்லது மொத்த மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியைனர் 2,011 பதிவுசெய்யப்பட்ட சேரிப் பகுதிகளிலும், 3,500 பதிவு செய்யப்படாத சேரிகளிலும் வாழ்கின்றனர். பண்பாடு கொல்கத்தா நீண்டகாலமாகவே அதன் இலக்கியம், கலை மற்றும் புரட்சிகரப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இந்தியாவின் முன்னைய தலைநகரமான இது நவீன இந்திய இலக்கியம், கலைச் சிந்தனைகள் ஆகியவற்றின் தோற்ற இடமாக விளங்குகின்றது. கொல்கத்தாவின் மக்கள், கலைகளையும் இலக்கியத்தையும் ரசிப்பதில் சிறப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதுடன், புதிய திறமைகளை வரவேற்கும் அவர்களது பாரம்பரியம் கொல்கத்தாவை ஆக்கத்திறன் ஆற்றல் கொண்ட ஒரு நகரமாக ஆக்குகிறது. இக் காரணங்களால் கொல்கத்தா இந்தியாவில் பண்பாட்டுத் தலைநகரம் எனவும் அழைக்கப்படுவது உண்டு. பலமான சமுதாய உணர்வுகொண்ட பரா எனப்படும் அயல்கள் கொல்கத்தாவின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆகும். பொதுவாக, இத்தகைய ஒவ்வொரு அயலும், ஒரு சமூகக் கழகத்தையும், அதற்கான ஒரு இடம், சில சமயங்களில் ஒரு விளையாட்டிடம் ஆகியவற்றையும் கொண்டிருக்கும். கொல்கத்தா மக்கள் அரட்டைகளில் ஈடுபடுவதைப் பழக்கமாகக் கொண்டவர்கள். இவை அறிவு பூர்வமான உரையாடல்களாக அமைவது உண்டு. இந்நகரத்தில் அரசியல் தொடர்பான சுவர் எழுத்துக்கள் வழமையாகக் காணப்படும் ஒரு அம்சம் ஆகும். இவை வெளிப்படையான கண்டனங்கள் முதல், கேலிப் படங்கள், பரப்புரைகள் வரை பலவகையாகக் காணபடுகின்றன. கொல்கத்தாவில், கோதிக், பரோக், ரோமனிய, கீழைத்தேச, இந்திய-இசுலாமிய கட்டிடக்கலை அம்சங்களைக் கொண்ட கொண்ட பல கட்டிடங்கள் உள்ளன. புடியேற்றவாதக் காலத்தைச் சேர்ந்த பல கட்டிடங்கள் நல்லநிலையில் பேணப்பட்டு வருவதுடன் இவற்றுட் பல பாரம்பரியச் சின்னங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரம் பல பழங்காலக் கட்டிடங்கள் பல்வேறு மட்டங்களில் அழியும் நிலையில் காணப்படுகின்றன. 1814 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இங்குள்ள இந்திய அருங்காட்சியகம் ஆசியாவிலேயே பழமையான அருங்காட்சியகம் ஆகும். இது இந்தியாவின் இயற்கை வரலாறு, கலைகள் என்னும் துறைகளைச் சார்ந்த ஏராளமான காட்சிப் பொருட்களைக் கொண்டுள்ளது. கொல்கத்தாவின் முக்கிய சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாகிய விக்டோரியா நினைவகம், நகரின் வரலாறு தொடர்பான ஒரு அருங்காட்சியகத்தையும் கொண்டுள்ளது. இங்குள்ள இந்தியத் தேசிய நூலகமும், நாட்டின் முன்னணிப் பொது நூலகங்களில் ஒன்றாக விளங்குகின்றது. கவின் கலைகள் அக்கடமியும், பிற ஓவியக் கூடங்களும், அடிக்கடி ஓவியக் கண்காட்சிகளை நடத்துகின்றன. கொல்கத்தாவில் "சாத்ரா" என அழைக்கப்படும் ஒருவகையான பாணியில் அமைந்த நாடகப் பாரம்பரியம் வழக்கில் உள்ளது. வங்காள மொழித் திரைப்படங்களையும், இந்தித் திரைப்படங்களையும் மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். இங்குள்ள டாலிகஞ்ச் என்னும் இடமே வங்காளத் திரைப்படத்தயாரிப்பின் மையமாகத் திகழ்கின்றது. இதனால் வங்காளத் திரைப்படத்துறையை "டாலிவூட்" எனவும் அழைப்பதுண்டு. நீண்ட காலப் பாரம்பரியத்தைக் கொண்ட இத் திரைப்படத்துறை பல புகழ் பெற்ற இயக்குனர்களைத் திரைப்பட உலகுக்கு அளித்துள்ளது. இவர்களுள் பழைய தலைமுறையைச் சேர்ந்த சத்யசித் ரே, மிருணாள் சென், தப்பன் சின்கா, ரித்விக் காட்டக் போன்றவர்களும், தற்காலத்தைச் சேர்ந்த அபர்ணா சென், ரித்துப்பார்னோ கோஷ் ஆகியோரும் அடங்குவர். கொல்கத்தாவின் உணவு வகைகளுள் முக்கியமானவை சோறும், மீன் கறியும் ஆகும். ரசகுல்லா, சந்தேசு, இனிப்புத் தயிர் என்னும் இனிப்பு வகைகளுக்கும் கொல்கத்தா பெயர் பெற்றது. கொல்கத்தாவில் வங்காளிகள் மிகவும் விரும்பும் மீனை அடிப்படையாக் கொண்ட பலவையான உணவு வகைகள் கிடைக்கின்றன. மேற்கோள்கள் பகுப்பு:மேற்கு வங்காள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பகுப்பு:முன்னாள் தேசிய தலைநகரங்கள் பகுப்பு:மேற்கு வங்காளத்திலுள்ள மாநகரங்கள் பகுப்பு:இந்தியாவின் மெட்ரோ நகரங்கள்
புகழ் பெற்ற இலங்கையர்கள்
https://ta.wikipedia.org/wiki/புகழ்_பெற்ற_இலங்கையர்கள்
இலங்கையின் சனாதிபதிகள் வில்லியம் கோபல்லாவ ஜே.ஆர் ஜெயவர்த்தனா ரணசிங்க பிரேமதாசா டி.பி.விஜயதுங்க சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமர்கள் டி.எஸ்.சேனநாயக்கா 1948-1952 டட்லி சேனாநாயக்க 1952-1953, 1960-1960, 1965-1970 ஜொன் கொதலாவல 1953-1956 எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா 1956-1959 டப்ளியூ. தகநாயக்க 1959-1960 சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960-1965, 1970-1977, 1994-2000 ஜே.ஆர் ஜெயவர்த்தனா 1977-1978 ரணசிங்க பிரேமதாசா 1978-1989 டி.பி.விஜயதுங்க 1989-1993 ரணில் விக்கிரமசிங்க 1993-1994, 2001-2004 சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க 1994- இரத்னசிறி விக்கிரமநாயக்கா 2000-2001 மகிந்த ராஜபக்ச 2004- இலங்கையின் அரசியல்வாதிகள் சர். பொன். இராமநாதன் சர். பொன். அருணாசலம் பிலிப் குணவர்த்தனா என். எம். பெரேரா கொல்வின் ஆர். டி சில்வா பீட்டர் கெனமன் ஜீ. ஜீ. பொன்னம்பலம் எஸ். ஜே. வி. செல்வநாயகம் சௌமியமூர்த்தி தொண்டமான் அ. அமிர்தலிங்கம் ரோஹண விஜேவீர லக்ஷ்மன் கதிர்காமர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கையின் தேசிய வீரர்கள் ஆறுமுக நாவலர் அநகாரிக்க தர்மபால இலங்கையின் விளையாட்டு வீரர்கள் டங்கன் வைட் துலிப் மெண்டிஸ் அர்ஜூன றணதுங்க அரவிந்த டி சில்வா சமிந்த வாஸ் முத்தையா முரளிதரன் மஹேல ஜயவர்த்தன சனத் ஜெயசூரிய சுசந்திகா ஜயசிங்க தமயந்தி தர்சா சிந்தன விதானகே இலங்கைக் கலைஞர்கள் விஜய குமாரதுங்க ஜீவன் குமாரதுங்க காமினி பொன்சேகா மாலினி பொன்சேகா பண்டித அமரதேவ ருக்மணிதேவி இலங்கை எழுத்தாளர்கள் இலங்கையின் அறிஞர்கள் சைமன் காசிச்செட்டி பரணவிதான ஆனந்த குமாரசுவாமி சுவாமி விபுலாநந்தர் சி. வை. தாமோதரம்பிள்ளை
சைமன் காசிச்செட்டி
https://ta.wikipedia.org/wiki/சைமன்_காசிச்செட்டி
சைமன் காசிச்செட்டி (Simon Casie Chetty, மார்ச் 21, 1807 - நவம்பர் 5, 1860), 19 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த புகழ் பெற்ற தமிழர்களில் ஒருவர் ஆவார். அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இலங்கை சட்டசபைக்கும் பிரித்தானியர்களால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். இவை தவிர தான் எழுதிய நூல்கள்மூலம் காசிச்செட்டி அவர்கள் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார். இளமைக் காலம் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கொழும்புச் செட்டிமார் குடும்பமொன்றில் 21 மார்ச்சு மாதம் 1807 ஆம் ஆண்டில் இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள புத்தளம் என்னும் நகருக்கு அண்மையில் கற்பிட்டியில் கவிரியேல் காசிச் செட்டியின் புதல்வராகப் பிறந்தார். இன்று சிங்களப் பிரதேசமாக மாறிவிட்ட இப்பகுதி அக்காலத்தில் பெருமளவு தமிழர் வாழ்ந்த பகுதியாக இருந்தது. வணிக மொழியாகவும் தமிழே விளங்கியது. தமிழ் நாட்டைச் சேர்ந்த செட்டிமார் முதலான வணிகக் குழுவினர் இங்கே வாழ்ந்து வந்தனர். காலப் போக்கில் இவர்கள் பிரித்தானியர் நடையுடைகளையும், அவர்கள் சமயத்தையும் சார்ந்து கொழும்புச் செட்டிகள் என வழங்கப்பட்டனர். இளம் வயதிலேயே தனது தாய்மொழியான தமிழ், சிங்களம், அக்காலத்து ஆட்சி மொழியான ஆங்கிலம் என்பவற்றைக் கற்றுப் புலமை எய்தினார். இவை தவிர, சமஸ்கிருதம், போத்துக்கீச மொழி, டச்சு மொழி, இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், அரபு மொழி ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார். இவர் வகித்த பதவிகள் இவரது பதினேழாவது வயதில், 1824 ஆம் ஆண்டு புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கினார். இதன் போது இவரது திறமைகள் வெளிப்பட்டதால் இவரது இருபத்தொன்றாவது வயதில் 1828-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளுக்கான மணியக்காரராக (Cheif Headman) உயர்வு பெற்றார். தனது இருபத்தேழாம் வயதில் 1833-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தின் முதலியாராகவும் எற்கனவே இருந்த மணியக்காரர் பதவியிலும் பணியாற்றினார்."தமிழ் புளூராக்" படைத்த சைமன் காசிச் செட்டி, பொ.வேல்சாமி, தினமணி கோல்புறூக் சீர்திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ் பேசும் மக்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த ஆ. குமாரசுவாமி முதலியார் 1836 ஆம் ஆண்டு நவம்பரில் காலமாகிவிடவே உறுப்புரிமை வெற்றிடமானபோது, 1838 இல் சைமன் காசிச்செட்டி தேசாதிபதியால் இலங்கைச் சட்டசபை உறுப்பினராக நியமனம் பெற்றார். 1845-ஆம் ஆண்டுவரை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு, 1848-ஆம் ஆண்டு முதலாகத் தற்காலிக நீதிபதியாகவும் 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார். இலங்கை நிருவாகச் சேவைக்கு இணைக்கப்பட்ட முதல் இலங்கையர், மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர் போன்ற பெருமைகள் இவரைச் சாரும்.இலங்கையின் கொழும்புச் செட்டி வம்சம் ஆற்றிய சேவைகளும், சாதனைகளும் தனது அரசுப் பணிகளுக்கு மத்தியிலும் இவர் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மிகுந்த தொண்டாற்றினார். தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்பற்றி எழுதியதோடு, தமிழ் - வடமொழி அகராதி, ஆங்கில - தமிழ் அகராதி, தமிழ்த் தாவரவியல் அகராதி என்னும் நூல்களைத் தயாரித்தார். யாழ்ப்பாணத்தின் வரலாறு, பரதவர்குல வரலாறு, தமிழ் நூல்களின் பட்டியல், தமிழர் சாதிப் பகுப்புமுறை, தமிழர் சடங்கு முறைகள் என்பனவும் இவர் எழுதியவற்றுள் அடங்குவன. இலங்கையின் பிரித்தானிய அரசு பின்னர் வெளியிட்ட "கசெற்" என்னும் செய்தி வெளியீட்டுக்கும், இலங்கையில் ஆங்கிலேயர் வெளியிட்ட செய்திப் பத்திரிகைகளுக்கும் முன்னோடியாகக் கருதப்பட்ட "சிலோன் கசற்றியர்" என்னும் வெளியீட்டைச் செட்டியார் வெளியிட்டதன்மூலம் இலங்கையிலும், இலண்டனிலும் கூடப் புகழ் பெற்றார். இவர் உதயாதித்தன் என்னும் தமிழ் மாசிகை ஒன்றையும் 1841 ஆம் ஆண்டு ஆரம்பித்தார் எனினும் நீண்டகாலம் அதை நடத்தமுடியாமல் நிறுத்திவிட்டார். இவர் எழுதிய நூல்களுள் இன்னொரு முக்கியமான நூல், "தமிழ் புளூட்டாக்" (Tamil Plutarch) என்னும் பெயரில் இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார். இதில் 189 தமிழ் நாட்டுப் புலவர்கள் பற்றியும், 13 இலங்கைப் புலவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். The Tamil Plutarch A Summary Account of the Lives of the Poets and Poetesses of Southern India and Ceylon, Simon Casie Chetty, தமிழ்நேசன் - மாலத்தீவு மொழியிலே சிங்கள மொழி கலந்துள்ளமை பற்றியும், ஜாவாத்தீவின் மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் இடையிலான தொடர்பை விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையையும் காசிச்செட்டி எழுதியுள்ளார். அத்துடன் இலங்கையின் வரலாற்றைக் கூறும் "சரித்திர சூதனம்" எனும் நூலையும் இவர் எழுதியுள்ளார். கத்தோலிக்க சமயம் தொடர்பான நூல்களையும் இவர் எழுதியுள்ளார். "கத்தோலிக்கத் தேவாலயங்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும்" எனும் தலைப்பில் நூல் எழுதிய இவர் யோசப் வாஸ் எனும் பாதிரியார் பற்றியும் எழுதியுள்ளார். கிரேக்க மொழியிலிருந்து கிறித்தவ வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்த 'பிலிப் டி மெல்லோ என்பவர்பற்றிய வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் கிறித்தவ வேதாகமத்தின் பழைய ஏற்பாடான ஆதியாகமம் பற்றிய ஓர் நூலையும் எழுதியுள்ளார். "புத்தளப் பிரதேச முக்குவ குலத்தவரின் உற்பத்தியும் - வரலாறும்" எனும் ஆய்வுக் கட்டுரையையும் முஸ்லிம்களுடைய பாரம்பரியம், பழக்கவழக்கம் எனும் தலைப்பிலும் ஆய்வுக்கட்டுரையையும் எழுதியுள்ளார். சைவசமயம் சம்பந்தமான நூல்களையும் எழுதியுள்ளார். திருக்கோணேச்சரம் பற்றிக் கூறும் கவிராஜவரோதயரின் புராணப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1831 ஆம் ஆண்டில் வெளியிட்டார். திருவாதவூரர் புராணத்தின் ஆறாவது சருக்கத்தினையும், காசிக் காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இறப்பு சைமன் காசிச்செட்டி 1860 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் திகதியன்று ஐம்பத்து மூன்றாவது வயதில் காலமானார். இவற்றையும் பார்க்கவும் தமிழ் புளூட்டாக் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள் - பொ. பூலோகசிங்கம் An Outline of the Classification of the Tamul Castes (January 1, 1865) - பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள் பகுப்பு:1807 பிறப்புகள் பகுப்பு:1860 இறப்புகள் பகுப்பு:கொழும்புச் செட்டிகள் பகுப்பு:இலங்கை சட்டசபை உறுப்பினர்கள் பகுப்பு:தமிழ் நூற்பட்டியலாளர்கள் பகுப்பு:இலங்கை முதலியார்கள் பகுப்பு:புத்தளம் மாவட்ட நபர்கள்
சா. ஜே. வே. செல்வநாயகம்
https://ta.wikipedia.org/wiki/சா._ஜே._வே._செல்வநாயகம்
தந்தை செல்வா என தமிழர்களால் அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (Samuel James Velupillai Chelvanayagam, மார்ச் 31, 1898 - ஏப்ரல் 26, 1977) அல்லது எஸ். ஜே. வி. செல்வநாயகம் என்பவர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாக, வழக்கறிஞராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவர் 2 தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கைத் தமிழரின் அரசியல் தலைவராக இருந்தவர். ஆரம்ப வாழ்க்கை செல்வநாயகம் 1898 மார்ச் 31 இல் மலேசியாவின் ஈப்போ நகரில் ஜேம்சு விசுவநாதன் வேலுப்பிள்ளை, ஹரியட் அன்னம்மா ஆகியோருக்கு முதலாவது மகனாகப் பிறந்தார். செல்வநாயகத்தின் தந்தை யாழ்ப்பாணம் தொல்புரம் என்ற இடத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியர். மலேசியாவுக்குக் குடிபெயர்ந்து வர்த்தகர் ஆனார். இவரது குடும்பம் பின்னர் தைப்பிங் நகருக்கு இடம்பெயர்ந்தது. செல்வநாயகத்தின் சகோதரர்கள் ஏர்னெஸ்ட் வேலுப்பிள்ளை பொன்னுத்துரை (பி. 1901), எட்வர்ட் ராஜசுந்தரம் (பி. 1902). தங்கை அற்புதம் இசபெல் இளம் வயதிலேயே இறந்து விட்டார். செல்வநாயகம் 4 வயதாக இருக்கும் போது, தாய், சகோதரர்களுடன் இலங்கை திரும்பினார். செல்வநாயகம் குடும்பத்துடன் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழையில் வாழ்ந்து வந்தார். செல்வநாயகம் தனது ஆரம்பக் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும் கற்றார். பின்னர் கொழும்பு சென்று புனித தோமையர் கல்லூரியில் கல்வி கற்றார். இவருடன் இக்கல்லூரியில் படித்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பின்னாளைய பிரதமர் சாலமன் பண்டாரநாயக்கா ஆவார். செல்வநாயகம் இலண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகப் படித்து தனது 19வது அகவையில் அறிவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். பட்டப்படிப்பு முடிந்தவுடன் புனித தோமையர் கல்லூரியில் ஆசிரியத் தொழிலில் இணைந்தார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த அவரது சகோதரர் கடுமையான சுகயீனம் உற்றிருக்கிறார் எனக் கேள்விப்பட்டு உடனடியாகத் தாயைப் போய்ப் பார்க்க விரும்பி விடுமுறை கேட்டார். ஆனால் அவரது வேண்டுகோள் கல்லூரி அதிபரால் மறுக்கப்பட்டதை அடுத்து அவர் ஆசிரியப் பதவியில் இருந்து விலகினார். பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியில் ஆசிரியரானார். ஆசிரியப் பணியில் இருந்த போதே இலங்கை சட்டக் கல்லூரியில் கல்வி கற்று 1923 இல் சட்ட அறிஞராக வெளியேறினார். 1927 இல் எமிலி கிரேஸ் பார் குமாரகுலசிங்கம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சுசிலி என்ற மகளும், செ. சந்திரகாசன், வசீகரன் என இரு மகன்களும் உள்ளனர். உவெசுலி கல்லூரியில் பணியாற்றும் போது அவர் தமிழ்த் தேசிய உடையை அணிகிறார் எனக் குற்றம் சாட்டி அவரை ஆசிரியர் பதவியில் இருந்து விலக்கினர். செல்வநாயகம் பின்னர் நீண்ட காலம் மிகவும் புகழ்வாய்ந்த குடிசார் வழக்கறிஞர்களில் ஒருவராக விளங்கினார். left|225px|thumb|செல்வநாயகம் சிலை அரசியலில் ஒரு குடிசார் வழக்கறிஞரான இவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின்கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார். இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 50 களின் இறுதிப் பகுதியிலும், 60களிலும், 70களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர். இவருடைய மகன் செ. சந்திரகாசன் தமிழகத்தில் ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகம் என்ற இலங்கை அகதிகளுக்கு அகதிகளால் செயல்படுத்த கூடிய அமைப்பை அமைத்து செயலாற்றி வருகின்றார். இவருடைய மகன் வழிப்பேத்தி பூங்கோதை சந்திரஹாசன் தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். தேர்தல் வரலாறு + சா. ஜே. வே. செல்வநாயகத்தின் தேர்தல் வரலாறு தேர்தல்தொகுதிகட்சிவாக்குகள்முடிவு 1947 நாடாளுமன்றம் காங்கேசன்துறை அஇதகா தேர்வு 1952 நாடாளுமன்றம் காங்கேசன்துறை இதக தோல்வி 1956 நாடாளுமன்றம் காங்கேசன்துறை இதக தேர்வு 1960 மார்ச் நாடாளுமன்றம் காங்கேசன்துறை இதக தேர்வு 1960 சூலை நாடாளுமன்றம் காங்கேசன்துறை இதக தேர்வு 1965 நாடாளுமன்றம் காங்கேசன்துறை இதக தேர்வு 1970 நாடாளுமன்றம் காங்கேசன்துறை இதக தேர்வு 1975 நாடாளுமன்ற இடைத்தேர்தல் காங்கேசன்துறை இதக தேர்வு உசாத்துணை வெளி இணைப்புகள் What Velupillai Chelvanayakam Envisaged Velupillai Prabakaran தந்தை செல்வாவின் அரசியல் வாழ்க்கை வரலாறு பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள் பகுப்பு:1898 பிறப்புகள் பகுப்பு:1977 இறப்புகள் பகுப்பு:இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள் பகுப்பு:இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் பகுப்பு:இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள் பகுப்பு:இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:இலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:இலங்கையின் 4வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:இலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:இலங்கையின் 7வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள் பகுப்பு:இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள் பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள் பகுப்பு:இலங்கையின் வட மாகாண நபர்கள்
பொன்னம்பலம் இராமநாதன்
https://ta.wikipedia.org/wiki/பொன்னம்பலம்_இராமநாதன்
சேர் பொன்னம்பலம் இராமநாதன் (Sir Ponnampalam Ramanathan, ஏப்ரல் 16, 1851 - நவம்பர் 26, 1930) இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். வாழ்க்கை வரலாறு பொன்னம்பலம் இராமநாதன் யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த இராசவாசல் முதலியார் (கேட் முதலியார்) அருணாசலம் பொன்னம்பலம் என்பவரின் இரண்டாவது புதல்வராகக் கொழும்பில் பிறந்தார். குமாரசாமி முதலியார், சேர் பொன்னம்பலம் அருணாசலம் ஆகியோரது சகோதரர். ஆரம்பக் கல்வியை கொழும்பு இராணிக் கல்விக்கழகத்தில் (கொழும்பு வேத்தியர் கல்லூரி) கற்றார். 13 ஆவது வயதில், மாநிலக் கல்லூரியில் கல்வி கற்பதற்காகச் சென்னைக்கு அனுப்பப்பட்டார். சேர் றிச்சட் மோர்கனின் கீழ் சட்டக் கல்வி பயின்று 1873 இலே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆனார். பின்னர் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி வகித்து 1906 ஆம் ஆண்டு, பணி ஓய்வு பெற்றார். அரசியல் சேவை 1879 ஆம் ஆண்டு இலங்கையின் சட்டசபைக்கு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1911 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் சட்டசபைக்கான முதலாவது தேர்தலில் முழு இலங்கையரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே உறுப்பினராக இராமநாதன் தெரிவு செய்யப்பட்டார். 1897ம் ஆண்டு விக்டோரியா மகாராணியாரின் 50வது ஆண்டு விழாவிற்கான இலங்கையின் பிரதிநிதியாக செல்லப் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களே தெரிவுச்செய்யப்பட்டார். அந்த விழாவின் போது அவருக்குப் பிரித்தானிய அரசினால் இலங்கையின் முழுமையான தேசியவாதி எனும் தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 1921 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசினால் பிரபுப் பட்டம் (Sir) வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். மிகுந்த சொல்வன்மையும் வாதத் திறமையும் வாய்க்கப்பெற்ற இவர், இலங்கையில் பிரித்தானியரின் பல நடவடிக்கைகளுக்கு எதிராக வாதாடி இலங்கையரின் நலன்களைப் பாதுகாத்தார். சிங்கள அரசியல் தலைவர்களின் வரலாற்றில் 1915ம் ஆண்டு இலங்கையில் சிங்கள-முஸ்லிம் இனக்கலவரம் ஒன்று ஏற்பட்டது.http://www.sangam.org/articles/view2/?uid=1068 இது சிங்கள அரசியல் தலைவர்களால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டதாகப் பிரித்தானிய ஆளுநர்கள் அறிந்துகொண்டனர். உடனடியாகப் பிரித்தானியா ஆளுநரால் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அத்துடன் அந்த இனக்கலவரத்திற்கு காரணமானவர்களைக் கைது செய்யவும் கட்டளையிட்டது. அந்த இனக்கலவரத்திற்கான பிரதான காரணிகளாக டீ. எஸ் சேனானாயக்கா, டீ. எஸ் விஜேவர்தனா, டொக்டர் நெயிசர் பெரேரா, ஈ. டீ. த சில்வா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா, எச் அமரசூரிய. ஏ. எச். மொலமூறே போன்ற இலங்கையின் முன்னணி சிங்கள அரசியல் தலைவர்களே இருந்தனர். இவர்களைக் கைது செய்த பிரித்தானிய அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அவர்களைப் பிரித்தானியாவில் சிறையில் அடைத்தது. அத்துடன் இனக்கலவரத்திற்கு முக்கிய காரணமான அனைவருக்கும் மரணத் தண்டனை வழங்கப்பட்டது. இனக்கலவரத்தை ஏற்படுத்திய குற்றம் பாரிய குற்றம் என்றபோதும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை விரும்பாத சேர் பொன்னம்பலம் இராமநாதன், பிரித்தானிய அரசை எதிர்த்து, சிங்கள அரச தலைவர்களின் உயிரைக் காப்பாற்றும் முகமாக மீட்பு போராட்டம் செய்து, அவர்களை மீட்டவர் என்பதும் இலங்கை அரசியல் வரலாற்று நிகழ்வாகும். பொன்னம்பலம் இராமநாதனின் போராட்டத்தினால், உயிர் மீண்டு வந்த சிங்கள அரசியலாளர்கள், அவரைத் தங்கள் தோள்களில் சுமந்து, காலிமுகத்திடலில் ஊர்வலம் சென்றமையும் வரலாற்று நிகழ்வாகும். இவ்வாறு பொன்னம்பலம் இரமாநாதன் சிங்கள அரசியல் தலைவர்களை மீட்டிருக்காவிட்டால் டீ. எஸ் சேனானாயக்கா, ஆர் டயஸ் பண்டாரநாயக்கா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் இலங்கை வரலாற்றில் இடம்பிடித்திருக்கவும் முடியாது என, நன்றி கூறும் தற்கால சிங்கள அரசியலாளர்களும் உளர். சமூக சேவை right|thumb|300px|இராமநாதனால் உடுவிலில் நிறுவப்பட்ட பெண்கள் கல்லூரியின் இன்றைய தோற்றம் இவர் அரசியல் மூலம் மக்களுக்குச் செய்த தொண்டுகள் தவிர, சமய, சமூகத் துறைகளிலும் சேவை செய்துள்ளார். இந்துக்களின் கல்வி மேம்பாட்டுக்காக யாழ்ப்பாணத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக இரண்டு பாடசாலைகளை நிறுவியுள்ளார். இவற்றில் பெண்கள் பாடசாலையான உடுவிலில் அமைந்துள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரி இன்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய கல்லூரிகளிலொன்றாக விளங்கிவருகிறது. ஆண்கள் பாடசாலையான பரமேஸ்வராக் கல்லூரி 1970 களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஒரு பகுதியாக்கப்பட்டது. சமய சேவை அருள்பரானந்த சுவாமிகளின் தொடர்பால் சமயம், தத்துவம், யோகநெறி என்பனவற்றைத் தெளிவாகக் கற்றுணர்ந்தார். கீழைத்தேய மெய்யியல் தூதுவராக 1905 - 1906 இலே அமெரிக்கா சென்று சொற்பொழிவுகளாற்றிப் பெயர் பெற்றார். சைவசித்தாந்த மகாசமாஜத்தின் முதல் மாநாட்டிற்குத் (1906) தலைமை வகித்தார். தந்தை கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டி 1857 நவம்பரிலே குடமுழுக்கு செய்வித்த, ஸ்ரீ பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். 1923 ஆம் ஆண்டிலே யாழ்ப்பாணத்திற் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் தோன்றுவதற்குக் காலாக இருந்ததோடு அதன் முதற் தலைவராகவும் பள்ளிக்கூடங்களின் முகாமையாளராகவும் 1926 வரை சேவை செய்தார். தொடர்ந்து அதன் போஷகராகவும் விளங்கினார். யாழ்ப்பாணத்தில் சாதியமைப்பு முறை இறுக்கமாக இருந்த காலகட்டத்தில் வாழ்ந்த இராமநாதன் உயர்சாதியினருக்குச் சார்பாகவே நடந்துகொண்டார் எனவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு ஆதரவான சட்டங்களை எதிர்த்தார் எனவும் சிலர் இவர்மீது குற்றம் சாட்டுகிறார்கள். அரசியலில் இவர் நாட்டுக்குச் செய்த சேவையைக் கௌரவிப்பதற்காகக் கொழும்பு காலிமுகத் திடலில் அமைந்துள்ள பழைய நாடாளுமன்ற வளாகத்துக்குள் இவரது உருவச்சிலை 1946 நவம்பர் 26 இல் ஆளுநர் என்றி மொங்க்-மேசன் மூரினால் திறந்து வைக்கப்பட்டது. விமர்சனங்கள் இலங்கையில் பெண்கள் வாக்குரிமை வழங்குவதை பொன். இராமநாதன் கடுமையாக எதிர்த்தார். இது தொடர்பாக இவர் கடுமையாக விமர்சனத்திற்குட்படுத்துகின்றார்.காலந்தோறும் அவரது பெயர் நிலைத்து நிற்கும்!-(திருமதி மீனாஷியம்மாள் நடேசய்யர் பற்றி சில குறிப்புகள்-: லெனின் மதிவானம் அவரது காலத்தில் இலங்கையில் ஒரு செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக இருந்த இராமநாதன், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது எனவும், படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் தேச வழமைச் சட்டத்தை முன்னிறுத்தி டொனமூர் ஆணைக் குழு முன் வாதிட்டார்.சி. கா செந்திவேல், ந. இரவீந்திரன். 1989). இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். சென்னை: தெற்குப் பதிப்பகம். இவரது நூல்கள் An Eastern Exposition of the Gospel of Jesus According to St. Mathew (1898) An Eastern Exposition of the Gospel of Jesus According to St. John (1902) The Culture of the Soul Among Western Nations (1906) The Spirit of the East Contrasted with the Spirit of the West (1905) On Faith or Love of God (1897) The Gospel of Jesus According to St. Matthew, as Interpreted to R. L. Harrison by the Light of the Godly Experience of Sri Paránanda The Judgments of the Supreme Court of Judicature: And of the High Court of Appeal of the Island of Ceylon, Delivered Between the Years 1820-1833 Riots and martial law in Ceylon, 1915 Reports of Important Cases Heard and Determined by the Supreme Court of Ceylon...: 1860, 1861 and 1862. 1880 The Spirit of the East Contrasted with the Spirit of the West: Being a Lecture Delivered ... Before the Brooklyn Institute of Arts and Sciences at Its Open Meeting of the Season of 1905-6 Reports of Important Cases Heard and Determined by the Supreme Court of Ceylon: During the Years 1860, 1861 and 1862 : with an Appendix Containing Cases Decided During that Period by the Judicial Committee of the Privy Council on Appeal from the Supreme Court of Ceylon On the Ethnology of the "Moors" of Ceylon பகவத்கீதா தமிழ் மொழிபெயர்ப்பும் விருத்தியுரையும் (1914) திருக்குறள் பாயிரமும் இராமநாதீயம் என்னும் விருத்தியுரையும் (1919) ஸ்ரீ இராமநாத தர்மசாஸ்திர பாடம் தேர்தல் வரலாறு + பொன்னம்பலம் இராமநாதனின் தேர்தல் வரலாறுதேர்தல்தொகுதிகட்சிவாக்குகள்முடிவு 1911 சட்டவாக்கப் பேரவை படித்த இலங்கையர் தெரிவு 1917 சட்டவாக்கப் பேரவை படித்த இலங்கையர் தெரிவு 1924 சட்டவாக்கப் பேரவை வட மாகாணம் (வடக்கு) தெரிவு மேற்கோள்கள் பகுப்பு:1851 பிறப்புகள் பகுப்பு:1930 இறப்புகள் பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள் பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள் பகுப்பு:இலங்கை சட்டசபை உறுப்பினர்கள் பகுப்பு:கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள் பகுப்பு:இலங்கை இந்துக்கள் பகுப்பு:இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள் பகுப்பு:இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் பகுப்பு:சர் பட்டம் பெற்ற இலங்கையர் பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் பகுப்பு:மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள்
கூட்டுக் குடும்பம்
https://ta.wikipedia.org/wiki/கூட்டுக்_குடும்பம்
பெற்றோர், அவர்களது மணமாகாத பிள்ளைகள், மணமான பிள்ளைகளும் அவர்களது துணைவரும் பிள்ளைகளும், சிலசமயம் பெற்றோரின் உடன்பிறந்தவர்கள் என இரத்த உறவால் பிணைக்கப்பட்ட, நேர்வழியிலும், கிளை வழியிலும் உறவினரானவர்கள் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்வது கூட்டுக் குடும்பம் (Joint Family) எனப்படும். இந்தியச் சமுதாயத்தில் இத்தகைய முறை பரவலாகக் காணப்படுகின்றது. இந்தியாவில் பொதுவாக ஆண்வழி உறவினர்களே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள். இவற்றையும் பார்க்கவும் தனிக் குடும்பம் (Nuclear Family) உள்தனிக் குடும்பம் (Subnuclear Family) இணைப்புவழித் தனிக் குடும்பம் (Suplimented Subnuclear Family) பகுப்பு:குடும்பம் பகுப்பு:மானிடவியல் பகுப்பு:சமூகவியல் en:Complex family mr:एकत्र कुटुंब पद्धती
ஈமோஃபீலியா
https://ta.wikipedia.org/wiki/ஈமோஃபீலியா
ஈமோஃபீலியா (Haemophilia அல்லது Hemophilia) என்பது, மனித உடலில் குருதி உறையாமல் போகும் பரம்பரை நோயின் பெயராகும். மரபணு குறைபாடுகளின் காரணமாக (அல்லது, மிக அரிதான சமயங்களில், தன்னுடல் தாக்குநோய் (autoimmune disorder) காரணமாக இரத்தத்தை உறையச் செய்யும் குருதி நீர்மக் (Plasma) காரணிகளின் செயல்பாடு குன்றுவதால், இந் நோய் உண்டாகிறது.https://www.nhlbi.nih.gov/health/health-topics/topics/hemophilia/signs உடலில், உள் மற்றும் வெளிக் காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறையாமல் தொடர்ந்து குருதிப்பெருக்கு ஏற்படுவதால் உயிர் அபாயம் உள்ள நோய்களில் இதுவும் ஒன்று. வகைகள் alt=X-இணைந்த பின்னடைவு|thumb|400px ஈமோஃபீலியா A - குருதி உறைதற்காரணி VIII குறைபாடு , "முதல்நிலை ஈமோஃபீலியா" (X-இணைந்த பின்னடைவு) ஈமோஃபீலியா B - குருதி உறைதற்காரணி IX குறைபாடு, "கிறித்துமசு நோய்" ("Christmas disease") (X-இணைந்த பின்னடைவு) ஈமோஃபீலியா C - குருதி உறைதற்காரணி XI குறைபாடு (ஆழ்சுக்கெனாட்ஃசி யூதர்கள் (Ashkenazi Jews), (தன்மூர்த்தப் பின்னடைவு) ஒத்த நோயான வான் வில்லர்பிராண்டு நோய் இம்மூவகை இரத்த உறையாமைகளைவிட வலுக்குன்றியதாகும். வான் வில்லர்பிராண்டு வகை மூன்று மட்டும் ஓரளவு வலுவுடையது. இது இரத்த உறைதலுக்கு காரணமான ஒரு புரதமான வான் வில்லர்பிராண்டு காரணியில் ஏற்படும் மாறுதலால் ஏற்படுகிறது. இரத்த உறைதலில் ஏற்படக்கூடிய சிக்கல்களில் பரவலாகக் காணப்படுவது இது. நோய் வரும் முறை ஈமோஃபீலியா நோய்க்குக் காரணமாக X நிறப்புரியில் உள்ள பின்னடைவான மாற்றுருக்கள் (alleles) காணப்படுகின்றன. இலிங்க நிறப்புரிகளைப் பொறுத்தவரையில் பெண்கள் இரண்டு X நிறப்புரிகளைக் கொண்டுள்ளனர், ஆண்கள் ஒரு Xஉம் ஒரு Yஉம் கொண்டுள்ளனர். X நிறப்புரியிலேயே குருதி உறைதற்காரணிக்குரிய மரபணு காவப்படுகிறது, Y நிறவுடலில் இவை காவப்படுவதில்லை. மனித உடலில், ஏனைய விலங்குகளைப் போலவே, இருமடிய நிலை பேணப்படுவதனால், அங்கே ஒரு குறிப்பிட்ட மரபணுவிற்குரிய இரு மாற்றுருக்கள் காணப்படும். அவையிரண்டும் ஒரே மாதிரியானவையாகவோ (Homozygous), வேறுபட்டவையாகவோ (Heterozygous) இருக்கலாம். ஆண்களில் ஒரு X நிறப்புரி மட்டுமே இருப்பதனால், X நிறப்புரியினால் காவப்படும் ஒரு இயல்பிற்குரிய மாற்றுருவில் ஒன்று மட்டுமே ஆண்களில் இருக்கும். பெண்களில் இரு X நிறப்புரிகள் இருப்பதனால் இரு மாற்றுருக்களும் காணப்படும். ஆண்களில் இந்த மாற்றுருக்களில் ஆட்சியுடைய ஒரு அலகு காணப்படுமாயின், நோய் வெளிப்படாது. ஆனால் பின்னடைவான மாற்றுருவாக அது இருப்பின் நோய் வெளிப்படும். பெண்களில் X நிறப்புரியில் இரு மாற்றுருக்கள் இரண்டும் ஆட்சியுடையதாகவோ, அல்லது ஏதாவது ஒன்று மட்டும் ஆட்சியுடையதாகவோ இருப்பின், பெண் நோயற்றவராக இருப்பார். ஆனால் ஆட்சியுடைய ஒரு மாற்றுருவையும், பின்னடைவான ஒரு மாற்றுருவையும் கொண்டவர் நோயைக் காவும் தன்மை உடையவராக இருப்பார். பெண்ணுக்கு கிடைக்கும் ஒரு மாற்றுரு ஆணிலிருந்து பெறப்படுவதனால், அது அனேகமாக ஆட்சியுடையதாகவே இருப்பதற்கான சந்தர்ப்பமே அதிகமாக இருப்பதனால் பெண்ணுக்கு கிடைக்கும் இரு மாற்றுருக்களும் பின்னடைவானதாக இருப்பதற்கான நிகழ்தகவு மிகமிகக் குறைவாகவே இருக்கும். நோயைக் கண்டறிவதற்கான சோதனைகள் கர்ப்ப காலத்திற்கு முன் கருத்தரித்துள்ள பெண்ணிடமிருந்து இந்நோய் குழந்தைக்குக் கடத்தப்படும் அபாயத்தைத் தவிர்க்க சோதனைகள் பொருட்டு மரபியல் சோதனைகள் மருத்துவத் துறையில் உள்ளன. இச்சோதனையில் இரத்த மாதிரி அல்லது திசு மாதிரி சேகரிக்கப்பட்டு அதில் ஈமோஃபீலியா நோய்க்குக் காரணமாக இருக்கக்கூடிய மரபுப்பிறழ்விற்கான அறிகுறிகள் ஏதும் உள்ளனவா என்பது சோதிக்கப்படுகிறது.http://www.nhs.uk/Conditions/Haemophilia/Pages/Diagnosis.aspx கர்ப்பகாலத்தில் தனது குடும்பத்தில் ஈமோஃபீலியா தாக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட வரலாற்றைக் கொண்டிருந்தால் ஈமோஃபீலியா மரபணு இருப்பதற்கான வாய்ப்பைக் கண்டறியும் சோதனையை செய்து கொள்ளலாம். இத்தகைய சோதனைகளில், கர்ப்ப காலத்தின் 11 ஆம் வாரம் முதல் 14 ஆம் வாரம் வரையிலான காலகட்டத்தில் கருப்பையின் சூல்வித்தகத்திலிருந்து மாதிரி எடுக்கப்பட்டு ஈமோஃபீலியா மரபணுவிற்காக சோதிக்கப்படுகிறது.http://www.nhs.uk/conditions/chorionic-villus-sampling/pages/introduction.aspx chorionic villus sampling (CVS) கர்ப்ப காலத்தின் 15 ஆம் வாரம் முதல் 20 ஆம் வாரம் வரையிலான காலகட்டத்தில் பனிக்குட நீரின் மாதிரி எடுக்கப்பட்டு சோதிக்கப்படுகிறது.http://www.nhs.uk/conditions/amniocentesis/pages/introduction.aspx amniocentesis குழந்தை பிறந்த பின் ஒரு குழந்தை பிறந்த பின்னர் ஈமோஃபீலியா இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்தால், இரத்தப் பரிசோதனை இந்நோயின் இருப்பினை உறுதி செய்ய இயலும். ஈமோஃபீலியா நோய் தாக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தில் பிறக்கும் குழந்தையின் தொப்புட்கொடியிலிருந்து சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரி ஈமோஃபீலியா நோயின் இருப்பினையும், அந்நோய் ஈமோஃபீலியா ஏ அல்லது ஈமோஃபீலியா பி இவற்றில் எவ்வகையைச் சார்ந்தது என்பதையும், நோயின் தீவிரத்தன்மை எந்த நிலையில் உள்ளது என்பதையும் கூடக் கண்டறிய முடியும். சிகிச்சை இதுவரை இந்நோய்க்கு சிகிச்சை ஏதுமில்லை எனினும், அவசியப்படும் பொழுது (ஈமோஃபீலியா Aக்கு காரணி VIII, ஈமோஃபீலியா Bக்கு காரணி IX) குருதி உறைதற்காரணிகளை ஊசி மூலம் நோயாளியின் உடலில் செலுத்தலாம். இதனால் தற்காலிகமாக இரத்த ஒழுக்கு சரி​ செய்யப்பட்டு நிறுத்தப்படுகின்றது.​பொதுவாக இரத்த உ​றைதற்கான காரணிகள் மனிதர்களின் உடலில் இருந்து தானமாகப் ​பெறப்படும் குருதிகளில் இருந்து பிரித்​தெடுக்கப்பட்டு உ​றைநி​லைப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகின்றது. இதில் இரத்தத்​தொற்று ​நோய்கள் பரவும்அபாயம் காணப்படுகின்றது. ஆனால் தற்காலத்தில்​ செயற்க்​கையாக உருவாக்கப்பட்ட குருதி உ​றைக்காரணிக​ளையும் தயார் ​செய்கின்றனர். இதில் அபாயங்கள் காணப்படுவதில்​லை. குருதிஉ​றைதற்காரணிக​ளை அதிகமாக பயன்படுத்துவதனால் உடலில் ஒரு எதிர்ப்பு தனிப்பி​ தோன்றிவிடுகிறது. அச்ச​மயங்களில் அதிக வலுவான காரணிகள் பயன்படுத்தப்படுகின்றன. வரலாறு இந்நோயைப் பற்றி குறிப்பிட்ட மருத்துவ வல்லுநர் அபுல்காசிஸ் என்பவர் ஆவார். பத்தாம் நூற்றாண்டில் இவர் சில இலேசான காயங்களுக்குப் பிறகு ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கின் காரணமாக ஆண்களை இழந்த குடும்பங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த நோயைப் பற்றிய பல விளக்கவுரைகள் மற்றும் நடைமுறைக் குறிப்புகள் வரலாற்றுப் பதிவுகள் பலவற்றிலும் காணப்பட்டாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் அறிவியல்ரீதியான பகுப்பாய்வுகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. 1803 ஆம் ஆண்டில் ஜான் கான்ராட் ஓட்டோ என்ற பிலெடெல்பியாவைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் "சில குடும்பங்களில் காணப்படும் இரத்த ஒழுக்கு" என்ற நூலில் "இரத்தப்போக்கு நோயாளிகள்" என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தார். அவர் இந்நோய் மரபுவழியாக வருகிறதென்றும், குடும்பத்திலுள்ள ஆரோக்கியமான பெண்களின் வழியாக கடத்தப்படுகிறது என்பதையும், பெரும்பாலும் இந்நோய் ஆண்களையே தாக்குகிறது என்பதையும் அறிந்திருந்தார். இவருடைய ஆய்வறிக்கை X இல் இணைந்த மரபுப் பிறழ்வுகள் குறித்த இரண்டாவதாகும். (முதல் ஆய்வறிக்கையானது ஜான் டால்டன் என்பவரால் தனுது குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட நிறக்குருடு பற்றியதாகும்). 1720 ஆம் ஆண்டு நியூ ஆம்சையர், பிளைமவுத் என்ற இடத்தில் வசித்த ஒரு பெண்ணிடம் இந்நோயைக் கண்டறிந்தார். பாதிப்பு ஏற்பட்ட ஆண்களால் அவர்களின் பாதிக்கப்படாத பெண் வாரிசுகளுக்கு இந்நோய் கடத்தப்படக்கூடும் என்ற கருத்தாக்கம் 1813 ஆம் ஆண்டு வரை ஜான் எப் ஹே என்பவரின் ஆய்வறிக்கை தி நியூ இங்கிலாந்து மருத்துவ பருவ இதழில் வெளிவரும் வரை அறியப்படாமல் இருந்தது.DIGITISED EARLY PAPERS AND BOOKS ON HUMAN AND MEDICAL GENETICS Genetics and Medicine Historical Network, Cardiff University. 1924 ஆம் ஆண்டில் பின்லாந்து மருத்துவர் பின்லாந்தின் தென்மேற்குப் பகுதியில் ஆலண்ட் தீவுகளில், மரபுவழியாக வந்த, ஈமோபீலியாவினை ஒத்த, சீரற்ற இரத்தப்போக்கு தன்மையைக் கண்டறிந்தார். இந்த சீரற்ற இரத்தப்போக்கு வான் வில்பர்ட் என அழைக்கப்படுகிறது. இவற்றையும் பார்க்கவும் இரத்த உறைதல் உலக ஈமோஃபீலியா கூட்டமைப்பு வெளி இணைப்புகள் பகுப்பு:குருதி நோய்கள் பகுப்பு:மரபணுப் பிறழ்ச்சிகள் பகுப்பு:குருதியியல்
பச்சையம்
https://ta.wikipedia.org/wiki/பச்சையம்
thumb|பச்சையம் இலைகளுக்குப் பச்சை நிறத்தைக் கொடுப்பதுடன், ஒளித்தொகுப்பில் பயன்படுத்துவதற்கான ஒளியையும் உறிஞ்சுகிறது. thumb|தாவர உயிரணுக்களில் உள்ள பச்சையமணிகளில் பச்சையம் உயர் செறிவாகக் காணப்படுகின்றது. thumb|Absorption maxima of chlorophylls against the spectrum of white light. thumb|SeaWiFS-derived average sea surface chlorophyll for the period 1998 to 2006. பச்சையம் (Chlorophyll - கிரேக்க சொல் மூலம்: chloros = பச்சை, phyllon = இலை) என்பது தாவரங்கள், பாசி வகைகள், சிலவகை பாக்டீரியாக்கள் ஆகியவற்றிலுள்ள ஒரு பச்சை வர்ண ஒளிச்சேர்க்கை நிறமி ஆகும். ஒளிச்சேர்க்கையின் முதல்படியாக பச்சையத்தின்மீது ஒளி விழுகிறது. இதன் மூலம் அது அயனாக்கம் (ionise) ஆகிறது. இதில் விளையும் வேதியியல் ஆற்றலை ஏ.டி.பி மூலக்கூறுகள் (molecules) உள்வாங்கி, பின்னர் அதைப்பயன்படுத்தி கரியமில வாயுவையும் நீரையும் காபோவைதரேட்டு மற்றும் ஒட்சிசனாக வேதிமாற்றம் செய்கின்றன. மின்காந்த அலை நிறமாலையின் (spectrum) சிவப்பு மற்றும் நீல நிறக்கதிர்களை அதிகம் உள்வாங்குவதால் பச்சையம் பச்சை வண்ணம் கொண்டுள்ளது. அணு அமைப்பு பச்சையம் ஒரு குளோரின் நிறமியாகும். அது ஹீம் போன்ற போர்ஃபிரின் நிறமிகளை ஒத்த அணு அமைப்பைக் கொண்டுள்ளது. குளோரின் வளையத்தின் மத்தியில் ஒரு மெக்னீசியம் அயன் (ion) உள்ளது. பலவகை பக்கச் சங்கிலிகள் இருந்தாலும், பொதுவாக ஒரு நீண்ட ஃபைடில் (phytyl) சங்கிலி இருக்கும். இயற்கையில் இது பல வடிவங்களில் அமைந்துள்ளது: பச்சையம் a பச்சையம் b பச்சையம் c1 பச்சையம் c2 பச்சையம் d மூலக்கூறு வேதியியல் வாய்ப்பாடு C55H72O5N4Mg C55H70O6N4Mg C35H30O5N4Mg C35H28O5N4Mg C54H70O6N4Mg C3 குழு -CH=CH2 -CH=CH2 -CH=CH2 -CH=CH2 -CHO C7 குழு -CH3 -CHO -CH3t -CH3 -CH3 C8 குழு -CH2CH3 -CH2CH3 -CH2CH3 -CH=CH2 -CH2CH3 C17 குழு -CH2CH2COO-Phytyl -CH2CH2COO-Phytyl -CH=CHCOOH -CH=CHCOOH -CH2CH2COO-Phytyl C17-C18 பிணைப்பு ஒற்றை ஒற்றை இரட்டை இரட்டை ஒற்றை காணப்படுவது எங்கும் பொதுவாக நிலச் செடிகளில் மட்டும் பல்வேறு பாசிகளில் பல்வேறு பாசிகளில் சில சிவப்புப் பாசிகளில் thumb|left|200px|பச்சையம் a, b மற்றும் d ன் பொது வரைபடம் thumb|left|200px|பச்சையம் c1 மற்றும் c2 ன் பொது வரைபடம் இன்றியமையாமை பச்சையும் வெண்மையும் கொண்ட இலை ஒன்றிலிருந்து மாவுச் சத்தை நீக்கிவிட்டு அந்த இலையை சிறிது நேரம் வெயிலில் வைத்திருக்க வேண்டும். அதன்பின் அயோடின் கரைசல் கொண்டு ஆய்வு செய்தால் மாவுச் சத்து பச்சையான இடங்களில் மட்டுமே இருப்பதைக் காணலாம். இதன்மூலம் ஒளிச்சேர்க்கைக்கு பச்சையம் இன்றியமையாதது என அறியலாம். இவற்றையும் பார்க்கவும் பசுங்கனிகம் பகுப்பு:ஒளிச்சேர்க்கை பகுப்பு:நிறமிகள்
டி. என். ஏ.
https://ta.wikipedia.org/wiki/டி._என்._ஏ.
thumb|right|120px|DNA மூலக்கூறின் ஒரு பகுப்பின் வெளி-நிரப்பும் மாதிரி டி.என்.ஏ (DNA) அல்லது தாயனை என்பது ஆக்சிசன் குறைந்த இரைபோ கருக்காடி (Deoxyribonucleic acid அல்லது Deoxyribose nucleic acid – DNA) எனப் பொருள் தரும். இது எந்த ஒரு உயிரினத்தினதும் (ஆர்.என்.ஏ வைரசுக்கள் தவிர்ந்த) தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல் சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும். டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம். உயிரினங்களின் (சில தீநுண்மங்கள் உட்பட) உயிர் வளர்ச்சிக்கான மரபுக் கட்டளைகள் டி.என்.ஏ யில் அடங்கியுள்ளது. உயிரினங்களின் பாரம்பரியப் பண்புகள் அவற்றின் சந்ததிகளுக்கும் (offspring) வருவதற்கு டி.என்.ஏ யே காரணமாகும். இனப்பெருக்கத்தின் பொழுது டி.என்.ஏ மூலக்கூறுகள் இரட்டித்து பெருகி சந்ததிகளுக்கு கடத்தப்படுகிறது. புரதம், ஆர்.என்.ஏ போன்ற உயிரணுக்களின் ஏனைய கூறுகளை அமைப்பதற்குத் தேவையான தகவல்களை டி.என்.ஏ கொண்டிருப்பதனால் இதனை நீல அச்சுப்படி தொகுப்பு ஒன்றுக்கு ஒப்பிடலாம். டி.என்.ஏ யில் மரபியல் தகவல்களைக் கொண்ட பகுதிகள் மரபணு எனப்படும். ஏனைய பகுதிகள் கட்டமைப்பிற்கும், மரபியல் தகவல்களின் பயன்பாட்டை ஒழுங்கமைப்பதிலும் பங்கெடுக்கும். டி.என்.ஏ கட்டமைப்பு thumb|right|200px|டி.என்.ஏ யின்வேதிக் கட்டமைப்பு. ஐதரசன் பிணைப்புக்கள் புள்ளிக் கோடுகளால் காட்டப்பட்டுள்ளது. frame|right|500px|டி.என்.ஏ யின் ஒரு பகுதியைக் காட்டும் இயங்குபடம். சுருளாகச் செல்லும் இரு இழைகளுக்கு கிடையாக bases அமைந்துள்ளனCreated from PDB 1D65 . இதன் வடிவம், ஓர் ஏணியை முறுக்கியது போன்று இரட்டைச்சுருள் (Double helix) வடிவத்தைக் கொண்டிருக்கின்றது. டி.என்.ஏ யானது நியூகிளியோட்டைடுக்கள் என அழைக்கப்படும் எளிய அலகுகளின் கூட்டால் உருவாகும் ஒரு பல்பகுதியக் கட்டமைப்பாகும் pp. 14–15.. இதன் வடிவத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர்கள் சேமுசு டி. வற்சன் (James D. Watson), பிரான்சிசு கிரிக் (Francis Crick) ஆகிய இருவருமாவர். ஒரு பொது அச்சைச் வட்டமாகச் சுற்றிச் செல்லும் இரு சுருளிச் சங்கிலி வடிவங்கள், 10 அங்க்சுரோம் (1.0 நானோ மீற்றர் nm) ஆரையையும், 34 அங்க்சுரோம் (3.4 nm) புரியிடைத் தூரத்தையும் கொண்டிருக்கும் அமைப்பொன்றை இவர்கள் கண்டு பிடித்தனர் உயிரினங்களில் டி.என்.ஏ யானது பொதுவாக தனியான மூலக்கூறாக இல்லாமல், இரு மூலக்கூறுகள் இறுக்கமாக இணைந்த நிலையில் காணப்படும்Berg J., Tymoczko J. and Stryer L. (2002) Biochemistry. W. H. Freeman and Company . இரு இழைகளும், ஒன்றை ஒன்று சுற்றி இருப்பதனால் இரட்டைச் சுருளி அமைப்பைப் பெறுகின்றது. நியூக்கிளியோடைட்டுக்கள் (nucleotide) எசுத்தர் பிணைப்பால் இணைக்கப்பட்ட ஒற்றைச்சர்க்கரைகளையும், அவற்றுடன் இணைந்த தாங்கி (base) மூலக்கூறுகளையும், பொசுபேற் (Phosphate) கூட்டங்களையும் கொண்டிருக்கும். ஒற்றைச்சக்கரை மூலக்கூறுகள் ஒவ்வொன்றுடனும், அடினின் (Adenine – A), தையமின் (Thymine -T), சைற்றோசின் (Cytosine – C), குவானின் (Guanine – G) என்ற நான்கு தாங்கிகள் (bases) என்றழைக்கப்படும் மூலக்கூறுகளில் ஏதாவது ஒன்று பிணைந்திருக்கும். ஒற்றைச்சக்கரை ஒன்றுடன் ஒரு தாங்கி மூலக்கூறு இணைந்து வரும் தொகுதி நியூக்கிளியோசைட்டு (nucleoside) எனப்படும். பின்னர் அது பொசுபேற்றுடன் இணையும்போது நியூக்கிளியோடைட்டு எனப்படுகின்றது. நியூக்கிளியோடைட்டுக்களில் காணப்படும் இந்த தாங்கி மூலக்கூறுகளின் ஒழுங்கு வரிசையே அனைத்து மரபியல்சார் தகவல்களையும் கொண்டிருக்கும் மரபுக் குறியீடுகளை நிர்ணயிக்கும். இந்த மரபுக் குறியீடுகள் புரதங்களின் எளிய கூறுகளான அமினோ அமிலங்களுக்கான வரிசையை தீர்மானிக்கும். இந்த தாங்கி மூலக்கூறுகளில் அடினினும், குவானினும் பியூரின் (purine) வகை எனவும், சைற்றோசினும், தயமினும் (pirimidine) பிரிமிடின் வகை எனவும் பாகுபடுத்தப்படும். (ஆர்.என்.ஏ யில் தயமினுக்குப் பதிலாக யூராசில் (uracil) எனப்படும் தாங்கி காணப்படும்) டி.என்.ஏ யின் ஆதார இழையில் ஒற்றைச்சக்கரைகளும், பொசுபேற்றுக்களும் ஒன்றுவிட்டு ஒன்றான ஒழுங்கில் அடுக்கப்பட்டிருக்கும். டி.என்.ஏ யிலுள்ள ஒற்றைச்சக்கரை, ஐந்து கரிம அலகுகளைக் கொண்ட 2-deoxyribose ஆகும் (ஆர்.என்.ஏ யிலுள்ள ஒற்றைச்சக்கரை ribose ஆகும்). அருகருகாக உள்ள இரு ஒற்றைச்சக்கரை வளைய மூலக்கூறுகளில் 3 ஆம், 5 ஆம் இடங்களிலுள்ள கரிமங்களுடன் ஒரு பொசுபேற் மூலக்கூறானது பொசுபேற்-இரு-எசுத்தர் பிணைப்பினால் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியான சமச்சீரற்ற பிணைப்புக்களால், ஒவ்வொரு இழையும் ஒரு திசையைக் கொண்டிருக்கும். டி.என்.ஏ யில் ஒரு இழையின் நியூக்கிளியோடைட்டுக்களின் திசைக்கு எதிர்த் திசையிலேயே அடுத்த இழையின் நியூக்கிளியோடைட்டுக்களின் திசை அமையும். இதனால் இரு இழைகளும், ஒன்றுக்கொன்று எதிரான திசையில் இருப்பதைக் காணலாம். இழைகளின் நுனிகளும் சமச்சீரற்ற நிலையிலேயே காணப்படும். ஒரு இழையின் ஒரு நுனியில், ஒற்றைச்சக்கரையின் 5 ஆம் கரிமத்துடன் இணைந்த பொசுபேற் அலகு காணப்படும். இதனை 5' (5 prime) என்பர். அதே பக்கமுள்ள அடுத்த இழையின் நுனியில் ஒற்றைச்சக்கரையின் 3 ஆம் கரிமத்தில் இணைந்த OH கூட்டம் (hydroxyl group) காணப்படும். இதனை 3' (3 prime) என்பர். டி.என்.ஏ யிலுள்ள புரியிடைத் தூரம் மிகச் சிறியதாக இருப்பினும், இது மில்லியன் எண்ணிக்கையிலான நியூக்கிளியோடைட்டுக்களைக் கொண்ட பல்பகுதியமாகும். மனிதனில் உள்ள நிறப்புரிகளில் முதலாவது நிறப்புரி கிட்டத்தட்ட 220 மில்லியன் இணைதாங்கிகளைக் (base pairs) கொண்டது. டி.என்.ஏ இழைகளின் பகுதிகள் குறிப்பிட்ட வெவ்வேறு புரதங்களிற்கான தகவல்களை அல்லது கட்டளைகளைக் கொண்ட மரபணுக்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு டி.என்.ஏ மூலக் கூறும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் அணுக்களால் கட்டமைக்கப்படுகிறது. ஒரு முழு மனிதத் தொகுதியில் 46 நிறப்புரிகள் உள்ளன: இதில் 23 தாயின் முட்டை உயிரணுவிலிருந்தும் மற்ற 23 தந்தையின் விந்தணுவில் இருந்தும் வந்தவை. ஒரு உயிரணு பிரியும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிறப்புரிகளில் உள்ள டி.என்.ஏ இன் ஒவ்வொரு துண்டும் நகல் எடுக்கப்படுகிறது. டி.என்.ஏ மூலக்கூறு மிக நீண்டது, மென்மையானது; ஸ்பேகெட்டி (spaghetti) என்னும் இத்தாலியத் தின்பண்ட நூலிழையின் 5 மைல் நீள அளவுக்கு இது அமையும்.. டி.என்.ஏ யின் அமைவிடங்கள் மெய்கருவுயிரிகள் விலங்குகள், தாவரங்கள், பூஞ்சைகள், அதிநுண்ணுயிரிகள் போன்ற மெய்க்கருவுயிரிகளில் அதிகளவான டி.என்.ஏ க்கள் உயிரணுக் கருவிலும், சிறியளவிலான டி.என்.ஏ க்கள் இழைமணிகள், பச்சையவுருமணிகள் போன்ற உயிரணுவின் உள்ளுறுப்புக்களான நுண் உறுப்புக்களிலும் அமைந்திருக்கும். உயிரணுக்களில் நீளமான அமைப்பான நிறப்புரிகளில் இந்த டி.என்.ஏக்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும். டி.என்.ஏ க்கள் இசுடோன் எனப்படும் புரதத்தினுள் இறுக்கமாகப் பொதிந்து நியூக்கிளியோசோம்களை உருவாக்கும். இவ்வமைப்பு டி.என்.ஏ சுருள் சுருளான அமைப்பை எடுக்க உதவும். நியூக்கிளியோசோம் அலகுகளின் தொகுப்பு, குரோமற்றின் (chromatin) என்னும் டி.என்.ஏ-புரதச் சிக்கலை (DNA-Protien complex) உருவாக்குகின்றது. இது மேலும் சுருள் வடிவில் உருவாகும்போது தோன்றும் அமைப்பே நிறப்புரிகளாகும். ஒவ்வொரு கலப்பிரிவின்போதும், டி.என்.ஏ இரட்டிப்பு எனும் தொழிற்பாட்டினால், நிறப்புரிகள் இரட்டிப்படையும். thumb|center|1180px|Fig. 2: The major structures in DNA compaction; DNA, the nucleosome, the 10nm "beads-on-a-string" fibre, the 30nm fibre and the metaphase chromosome. நிலைக்கருவிலிகள் ஆனால் பாக்டீரியா, ஆர்க்கீயா போன்ற நிலைக்கருவிலிகளில், டி.என்.ஏ யானது குழியமுதலுருவில் (cytoplasm) காணப்படும். டி.என்.ஏ யின் இயல்புகள் பள்ளங்கள் (Grooves) thumb|right|200px|டி.என்.ஏ யின் இரட்டைச்சுருள் வடிவம் இரட்டைச்சுருள் வடிவமான இரு இழைகளும் டி.என்.ஏ யின் ஆதாரமாக இருக்கும். அவ்விரு இழைகளுக்கு இடையிலான இடைவெளிகள் அல்லது பள்ளங்களை அவதானித்தால், அவையும் இரட்டைச்சுருளி வடிவத்தைக் கொண்டிருப்பதை காணலாம். இணைதாங்கிகளுக்கு (Base pairs) க்கு அண்மையாக உள்ள இந்த பள்ளங்களே இணைப்புப் பகுதிகளாக (binding sites) இருக்கும். இழைகள் ஒன்றுக்கொன்று நேரடியாக எதிர் எதிராகச் செல்லாமையினால், பள்ளங்களின் அளவு வேறுபடும். இவற்றில் பெரிய பள்ளம் (Major grooves) 22 அங்க்ஸ்ரொம் ஆகவும், சிறிய பள்ளம் (Minro grooves) 12 அங்க்ஸ்ரொம் ஆகவும் இருக்கும். சிறிய பள்ளமானது ஒடுங்கி இருப்பதனால், பெரிய பள்ளங்களிலேயே தாங்கிகளை அணுகுவது எளிதாக இருக்கும். இதனால், இரட்டை இழை கொண்ட டி.என்.ஏ யின் குறிப்பிட்ட இடத்தில் பிணைப்பை ஏற்படுத்தும் புரதங்கள் பெரிய பள்ளங்களில் வெளித்தெரியும் தாங்கிகளுடன் பிணையும். உயிரணுக்களினுள் டி.என்.ஏ யானது வழமையற்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும்போது, புரத மூலக்கூறுகளின் பிணைப்பு ஏற்படும் இடங்களிலும் மாற்றம் ஏற்படலாம். ஆனால் டி.என்.ஏ தனது வழமையான B உருவத்திற்கு வரும்போது, பெரிய பள்ளம், சிறிய பள்ளம் என்பன அவற்றின் அளவையே குறிக்கும். இணைதாங்கிகள் (Base pairs) 280px 280px மேலே: மூன்று ஐதரசன் பிணைப்புடன் உள்ள GC இணைதாங்கி, கீழே: இரண்டு ஐதரசன் பிணைப்புடன் உள்ள AT இணைதாங்கிஇரு இழைகளிலுமுள்ள தாங்கி மூலக்கூறுகளுக்கிடையில் ஏற்படும் ஐதரசன் பிணைப்புக்களால், இரு இழைகளும் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு இழையிலுள்ள குறிப்பிட்ட தாங்கி மூலக்கூறானது, அடுத்த இழையிலுள்ள ஒரு குறிப்பிட்ட தாங்கி மூலக்கூறுடன் மட்டுமே இணையும். அடினினானது அடுத்த இழையிலுள்ள தயமினுடனும், ஒரு இழையிலுள்ள சைற்றோசினானது, அடுத்த இழையிலுள்ள குவானினுடனும் மட்டுமே இணையும். இவ்வாறு இணையும் இரு தாங்கிகளையும் சேர்த்து இணைதாங்கி எனலாம். ஐதரசன் பிணைப்பானது பகிர்பிணைப்பு (அல்லது பங்கீட்டுப் பிணைப்பு அல்லது சம பிணைப்பாக = covalent bond) இருப்பதனால், அவை இலகுவில் பிரியவும் மீண்டும் சேரவும் கூடியனவாக இருக்கும். பொறியியல் விசை மூலமோ, அதிக வெப்பம் மூலமோ, இலகுவாக பல்லிணைவுப்படிகை போன்று இரு இழைகளும் பிரிக்கப்படலாம். இதன் மூலம், ஈரிழை டி.என்.ஏ யின் ஒவ்வொரு இழையிலும் உள்ள அனைத்து தகவல்களும் ஒவ்வொரு இழையிலும் இந்த இயல்பானது டி.என்.ஏ இரட்டிப்புக்கு மிகவும் அவசியமானதாகும். இரட்டிக்கப்பட்டு புதிய நிரப்பு இழைகள் தோன்றும். இவ்வாறாக நிரப்பு இணைதாங்கிகளுக்கிடையே (complementary base pairs) நிகழும் மீள்தகு இடைவினையானது உயிரினங்களில் டி.என்.ஏ யின் தொழில்கள் அனைத்துக்கும் மிகவும் முக்கியமானதாகும். பியூரீன், பிரிமிடீன் என்ற இரு வகையான தாங்கி மூலக்கூறுகளிலும் ஏற்படும் ஐதரசன் பிணைப்புக்களின் எண்ணிக்கையில் வேறுபாடு உண்டு. அடினின், தயமினுக்கு இடையில் இரு ஐதரசன் பிணைப்புக்களும், சைற்றோசின், குவானினுக்கு இடையில் மூன்று ஐதரசன் பிணைப்புக்களும் தோன்றும். மேலதிகமாக உள்ள ஒரு ஐதரசன் பிணைப்பின் விளைவால், GC அளவு அதிகமாகவுள்ள டி.என்.ஏ யானது, GC அளவு குறைவாக உள்ள டி.என்.ஏ யிலும்பார்க்க நிலைத்தன்மை கூடியதாக இருக்கும். GC அளவு அதிகமாக உள்ள, நீண்ட இழைகளைக் கொண்ட டி.என்.ஏ க்கள் உறுதியான பிணைப்புக்களையும், AT அளவு அதிகமுள்ள, குறுகிய இழைகளைக் கொண்ட டி.என்.ஏ க்கள் பலவீனமான பிணைப்புக்களையும் கொண்டிருக்கும். பரிசோதனைக் கூடங்களில், இங்குள்ள பிணைப்புக்களின் உறுதித்தன்மையை அறிய, ஐதரசன் பிணைப்புக்களை உடைக்கத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு அளவிடப்படும். ஒரு டி.என்.ஏ யிலுள்ள அனைத்து ஐதரசன் பிணைப்புக்களும் உடைக்கப்பட்டால், இரு இழைகளும் முழுமையாக தனிப்படுத்தப்பட்டு, இரு தனித்தனி மூலக்கூறுகளாக காணப்படும். இவ்வாறான ஒற்றை இழை டி.என்.ஏ (Single-starnded DNA = ssDNA) ஒரு பொதுவான அமைப்பைக் கொண்டிருப்பதில்லை. ஆனாலும் சில குறிப்பிட்ட வடிவங்கள் ஏனையவற்றைக் காட்டிலும் உறுதியானவையாக இருக்கும். மேலான சுருளாக்கம் (Supercoiling) டி.என்.ஏ யானது மேலான சுருளாக்கம் மூலம் ஒரு கயிறுபோல முறுக்கப்படக்கூடியது. சாதாரண நிலையில் இரட்டைச்சுருளி டி.என்.ஏ யிலுள்ள ஒரு இழையானது, 10.4 இணைத்தாங்கிகளுக்கு ஒரு தடவை தனது அச்சைச் சுற்றி வரும். ஆனால் இழைகள் முறுக்கப்படும் நிலையில் இழைகள் நெருக்கமாகவோ, அல்லது தளர்வாகவோ வர நேரிடும். டி.என்.ஏ யிலுள்ள சுருளின் திசையில் முறுக்கப்படுமாயின், தாங்கிகள் இறுக்கமான நிலையில் வைக்கப்பட்டிருக்கும். இது நேர்மறையான மேலான சுருளாக்கம் (positive supercoiling) எனப்படும். சுருளின் திசைக்கு எதிர்த் திசையில் முறுக்கப்படுமாயின், அது எதிர்மறையான மேலான சுருளாக்கம் (negative supercoiling) எனப்படும். இந்நிலையில் டி.என்.ஏ இழைகளில் தளர்வு ஏற்பட்டு, தாங்கிகள் விலகிச் செல்லும். இயற்கயில் ரொப்போஐசோமரேசு என்னும் நொதியத்தின் தாக்கத்தால் சிறிதளவு எதிர்மறையான மேலான சுருளாக்க நிலையிலேயே காணப்படும். டி.என்.ஏ இரட்டிப்பு மற்றும் படியெடுத்தல்/ பிரதியாக்கம் (transcription) செயல்முறையின்போது, டி.என்.ஏ இழைகளில் முறுகலால் ஏற்படக்கூடிய அழுத்தத்தை நீக்குவதிலும் இந்த நொதியம் பயன்படும். மாற்று டி.என்.ஏ வடிவங்கள் thumb|right|இடமிருந்து வலமாக டி.என்.ஏ யின் A, B, Z வடிவங்கள் தொழிற்படும் உயிரினங்களில் பொதுவாக B, Z டி.என்.ஏ வடிவங்களே காணப்பட்டாலும், A டி.என்.ஏ, வேறும் பல வடிவங்களில் டி.என்.ஏ அறியப்படுகின்றது. டி.என்.ஏ யில் நிகழும் நீரேற்ற அளவு, டி.என்.ஏ வரிசை, மேலான சுருளாக்கத்தின் அளவு, திசை, இணைதாங்கிகளில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள், உலோக அயனிகளின் வகை, செறிவு, கரைசலில் உள்ள polyamines என்பவற்றைப் பொறுத்து டி.என்.ஏ யின் வடிவங்கள் மாறுபடும் மேற்கோள்கள் வெளி இணைப்புக்கள் DNA binding site prediction on protein DNA the Double Helix Game From the official Nobel Prize web site DNA under electron microscope Dolan DNA Learning Center Double Helix: 50 years of DNA, Nature ENCODE threads explorer ENCODE home page. Nature (journal) Double Helix 1953–2003 National Centre for Biotechnology Education Genetic Education Modules for Teachers—DNA from the Beginning Study Guide Rosalind Franklin's contributions to the study of DNA U.S. National DNA Day—watch videos and participate in real-time chat with top scientists Clue to chemistry of heredity found த நியூயார்க் டைம்ஸ் June 1953. First American newspaper coverage of the discovery of the DNA structure DNA from the Beginning Another DNA Learning Center site on DNA, genes, and heredity from Mendel to the human genome project. The Register of Francis Crick Personal Papers 1938 – 2007 at Mandeville Special Collections Library, University of California, San Diego Seven-page, handwritten letter that Crick sent to his 12-year-old son Michael in 1953 describing the structure of DNA. See Crick’s medal goes under the hammer, Nature, 5 April 2013. 3D map of DNA reveals hidden loops that allow genes to work together (11 December 2014), Science (Daily News) பகுப்பு:கரு அமிலங்கள் பகுப்பு:மரபியல் பகுப்பு:உயிரணுவியல் பகுப்பு:டி. என். ஏ பகுப்பு:உயிரித் தொழில்நுட்பம்
அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்
https://ta.wikipedia.org/wiki/அணு_ஆயுத_சக்தியுடைய_நாடுகள்
பின்வருபவை அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் ஆவன. Country Warheads (Active/Total) Date of first test CTBT status Delivery methodsThe five nuclear-weapon states under the NPT United States 2,104 / 4,804 16 சூலை 1945 ("Trinity) Signatory Nuclear triadIISS 2012, pp. 54–55 Russia 1,600 / 4,480 29 ஆகத்து 1949 ("RDS-1) Ratifier Nuclear triadIISS 2012, p. 192 United Kingdom 160 / 225 3 ஒக்டோபர் 1952 ("Hurricane) Ratifier Sea-basedIISS 2012, p. 169 France 290 / 300 13 பெப்ரவரி 1960 ("Gerboise Bleue) Ratifier Sea and air-basedIISS 2012, p. 111 China n.a. / 250 16 ஒக்டோபர் 1964 ("596) Signatory Suspected nuclear triad.The Long Shadow: Nuclear Weapons and Security in 21st Century Asia by Muthiah Alagappa (NUS Press, 2009), page 169: "China has developed strategic nuclear forces made up of land-based missiles, submarine-launched missiles, and bombers. Within this triad, China has also developed weapons of different ranges, capabilities, and survivability."IISS 2012, pp. 223-224 Non-NPT nuclear powers India n.a. / 110 18 மே 1974 ("சிரிக்கும் புத்தர்) Non-signatory Land and air-based.IISS 2012, p. 243 Developing nuclear triad. Pakistan n.a. / 120 28 மே 1998 ("Chagai-I) Non-signatory Land and air-based.IISS 2012, p. 272Pakistan's Nuclear Weapons, By Bhumitra Chakma, (Routledge 2012), page 61: "Pakistan possesses two types of nuclear delivery vehicles: aircraft and missiles. Initially in the pre-tests era, Islamabad depended solely on aircraft as its chief means of delivering nuclear weapons. In the early 1990s, Pakistan acquired a few dozen ballistic missiles from China, and subsequently, it developed a number of missile systems which became its mainstay of nuclear delivery". North Korea n.a. / <10 9 ஒக்டோபர் 2006 Non-signatory Suspected land-based.Nuclear Proliferation in South Asia: Crisis Behaviour and the Bomb by Sumit Ganguly, Sumit Ganguly, S. Paul Kapur, (Routledge 2008), page 194-195Undeclared nuclear powers Israel n.a. / Suspected (est. range: 60-400)There are a wide range of estimates as to the size of the Israeli nuclear arsenal. For a compiled list of estimates, see Avner Cohen, The Worst-Kept Secret: Israel's bargain with the Bomb (Columbia University Press, 2010), Table 1, page xxvii and page 82.. Disputed(1960-1979),Farr, Warner D (செப்டம்பர் 1999), The Third Temple's holy of holies: Israel's nuclear weapons, The Counterproliferation Papers, Future Warfare Series 2, USAF Counterproliferation Center, Air War College, Air University, Maxwell Air Force Base, retrieved சூலை 2, 2006. including suspected detection of an advanced series device covert test in 1979 Vela Incident*, page 271 Signatory Suspected nuclear triad.An Atlas of Middle Eastern Affairs By Ewan W. Anderson, Liam D. Anderson, (Routledge 2013), page 233: "In terms of delivery systems, there is strong evidence that Israel now possesses all three elements of the nuclear triad."IISS 2012, p. 328 மேற்கோள்கள் பகுப்பு:அணு ஆயுதங்கள் அணு ஆற்றல் ஆயுதங்கள் பகுப்பு:பனிப்போர்
முன்கழுத்துக் கழலை
https://ta.wikipedia.org/wiki/முன்கழுத்துக்_கழலை
thumb|right|முன்கழுத்துக் கழலையுடன் ஒருவர் முன்கழுத்துக் கழலை அல்லது கண்டக்கழலை (Goitre) என்பது தைராய்டு சுரப்பி பெரிதாவதால் கழுத்தில் தொண்டைப் பகுதிக்குக் கீழே ஏற்படும் வீக்கமாகும்.. இது பெரும்பாலும் அயோடின் குறைபாட்டின் விளைவாகவே ஏற்படுகிறது. சில வேளைகளில் உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாகவும் சிலரிடையே தோன்றுவதாகவும் அறியப்பட்டுள்ளது. தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாததால் முன்கழுத்துக் கழலை உருவாகிறது. உலக அளவில் 90% முன்கழுத்துக் கழலை நோய்கள் அயோடின் குறைபாட்டால் ஏற்படுகிறது.R. Hörmann: Schilddrüsenkrankheiten. ABW-Wissenschaftsverlag, 4. Auflage 2005, Seite 15–37. அவை பெரும்பாலும் தீங்கற்ற கட்டிகளாகவே உள்ளன. முன்கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் தைராய்டு சுரப்புக் குறை மற்றும் அதிதைராய்டியம் ஆகியவற்றின் காரணமாக முன்கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் தோன்றுகின்றன. அதிதைராய்டியம் காரணமாக அட்ரீனல்வினையிய செயல்பாடுகளான: இதயத் துடிப்பு மிகைப்பு, மிகுதியான நெஞ்சுத்துடிப்பு (palpitations), பதற்றம் (nervousness), உடல் நடுக்கம் (tremor), உயர்த்தப்பட்ட குருதி அழுத்தம் மற்றும் சுற்று சூழலால் ஏற்படும் வெப்பத்தை தாங்க முடியாமல் போவது (heat intolerance) ஆகியவை உண்டாகும். அதியவளர்சிதைமாற்றம் (hypermetabolism), அதிகப்படியான தைராய்டு இயக்குநீர் சுரப்பு, அதிக ஆக்சிசன் நுகர்வு, புரத வளர்சிதையில் ஏற்படும் மாற்றங்கள், இயல்புக்கு மீறிக் கண்விழி பிதுங்கியிருத்தல் (exophthalmos) ஆகிய அறிகுறிகள் மூலமாகவும் முன்கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் தென்படுகின்றன.Porth, C. M., Gaspard, K. J., & Noble, K. A. (2011). Essentials of pathophysiology: Concepts of altered health states (3rd ed.). Philadelphia, PA: Wolters Kluwer/Lippincott Williams & Wilkins. தைராய்டு சுரப்புக் குறைவால் பசியில்லாவிட்டாலும் உடல் எடை அதிகரிக்கிறது, மலச்சிக்கல், சோம்பல் மற்றும் குளிர் தாங்க இயலாமை (cold intolerance) ஆகிய அறிகுறிகளும் காணப்படுகிறது. சுரப்பி வீக்கமடைதல் குறைந்த அயோடின் மட்டத்தில் றைஅயடோதைரோனின்(Triodothyronin) மற்றும் ரெட்ராஅயடோதைரோனின்(Tetreiodothyronin) குறைவடைகின்றன. இதனால் அசினர் கலங்கள்(Acini Cell) தைராயிட்டு சுரப்பியிலிருந்து வீக்கமடையத் தொடங்குகின்றன. முன் கழுத்துக் கழலை ஏற்படக் காரணங்கள் உலக அளவில், முன் கழுத்துக் கழலை ஏற்பட அயோடின் குறைபாடே காரணமாகும். அயோடின் கலந்த உப்பு பயன்படுத்தாத நாடுகளில் இந் நோய் அதிகமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. செலீனியம் குறைவாலும் இந் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. அயோடின் கலந்த உப்பை பயன்படுத்தும் நாடுகளில் காசிமோடோவின் தைராய்டழற்சி (Hashimoto's thyroiditis) என்ற நோய் உண்டாகிறது. சயனைடு விசத்தாலும் முன் கழுத்துக் கழலை ஏற்படுகிறது. வெப்ப மண்டல நாடுகளில் சயனைடு அதிகமுள்ள மரவள்ளி கிழங்கை அதிகம் உண்ணும் நாடுகளில், இந் நோய் அதிகம் காணப்படுகிறது. குறை தைராய்டு, அயோடின் குறைபாடு, தைராய்டு வீக்க நோய்க் காரணி (Goitrogen), கபச்சுரப்பி நோய் (Pituitary disease), கிரேவின் நோய் (Graves' disease), தைராய்டு புற்று நோய் ஆகியவையும் முன் கழுத்துக் கழலையுடன் தொடர்புடைய சில நோய்கள் ஆகும். அயோடின் பற்றாக்குறை காரணமாகவே பொதுவாகக் கண்டக் கழலை ஏற்படுகின்றது.ஆயினும் அயோடின் குறைபாடு இல்லாத வேளையிலும் உணவில் கழலையைத் தோற்றுவிக்கும் கூறுகள் (Goitrogenic substances) உள்ளெடுக்கப்படும் போது சிலருக்கு கண்டக் கழலை ஏற்படுகின்றது. கழலையைத் தோற்றுவிக்கும் கூறுகள் சில தாவர உணவு வர்க்கங்களில் காணப்படும் எதிர்ப் போசனைக் கூறுகள்(Anti nutritional Factors) கழலையைத் தோற்றுவிக்கின்றன. எ.கா: தயோசயனைட்டு(Thiocyanate): மரவள்ளி, கோவா, பூக்கோவா, முள்ளங்கி என்பவற்றில் தயோசயனைட்டு அதிக அளவில் காணப்படுகின்றது. பேர்க்குளோரேட்டு(Perchlorate): கரட், கடுகு என்பவற்றில் பேர்க்குளோரேட்டு அதிக அளவில் காணப்படுகின்றது. தயோயூரியா(Thiourea): தயோயுரசில்(Thiouracil): கோயிற்றின்(Goitrin) புற அமைப்பியல் முன் கழுத்துக் கழலைகள் வளர்ச்சி வீதம் அல்லது வளர்ச்சியின் அளவைப் பொறுத்து, அவை வகைப்படுத்தப்படுகின்றன. வளர்ச்சி வீதம் ஒரு கணுவுள்ள முன் கழுத்துக் கழலை: பல கணுக்களுள்ள முன் கழுத்துக் கழலை;பரவலான முன் கழுத்துக் கழலை:''' மிகைப்பெருக்கம் காரணமாக உருவாகிறது. அளவு வகை I (அழுத்தச்சோதனை முன் கழுத்துக் கழலை (palpation goitre)): பொதுவாகத் தெரிவதில்லை, ஆனால் அழுத்தச்சோதனை மூலமே கண்டறிய முடியும். வகை II: தொட்டு உணரக்கூடிய முன் கழுத்துக் கழலையாக இருக்கும், எளிதில் கண்டறியலாம். வகை III: மிகப் பெரிய முன் கழுத்துக் கழலை, அழுத்திய இடம் அமுக்கப்பட்டிருக்கும். முன் கழுத்துக் கழலை நோயின் அறிகுறிகள் கழுத்தின் கீழ் பகுதியில் கண்ணுக்குத் தெரியுமாறு வீக்கம் இருக்கும். தொண்டைப் பகுதியில் இறுக்கமாக உணருதல் இருமல் குரலில் மாற்றம் உணவை விழுங்குவதில் சிரமம் மூச்சு விடுவதில் சிரமம் சிகிச்சை முன் கழுத்துக் கழலை ஏற்படும் காரணத்தைப் பொறுத்து சிகிச்சை முறை மாறுபடுகிறது. தைராய்டு இயக்குநீர் (thyroid hormone) அதிகமாக சுரக்கும் பட்சத்தில் அவற்றை சுருக்க கதிரியக்க அயோடின் (radioactive iodine) பயன்படுத்தப்படுகிறது. முன் கழுத்துக் கழலை அயோடின் குறைபாட்டால் ஏற்பட்டால் லுகோலின் அயோடின் (Lugol's Iodine) அல்லது பொட்டாசியம் அயோடைடு கரைசல் ஆகியவை குறைந்த அளவில் மருந்தாக வழங்கப்படும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடு குறைவால் முன் கழுத்துக் கழலை ஏற்பட்டால், அவற்றை தூண்டும் உணவுகள் வழங்கப்படும். மிகவும் முடியாத நோயாளிகளின் தைராய்டு சுரப்பி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ நீக்கப்படும். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தேசிய நலவாழ்வுப் பணிகள், ஐக்கிய இராச்சியம் THYROID-DISEASE.ORG.UK (ஆங்கிலம்) பகுப்பு:நாளமில்லாச்சுரப்பியியல் பகுப்பு:ஊட்டக்குறைபாடு
கம்பியில்லாத் தொலைதொடர்பு
https://ta.wikipedia.org/wiki/கம்பியில்லாத்_தொலைதொடர்பு
வழிமாற்று செல்லிடத் தொலைபேசி
மியூனிக்
https://ta.wikipedia.org/wiki/மியூனிக்
thumb|right|280px மியூனிக் (ஜெர்மன்: München (ஒலிப்பு: 10px கேளுங்கள்), ஜெர்மன் நாட்டு மாநிலமான பவேரியாவின் தலைநகரமாகும். 1.402 மில்லியன் மக்கள்தொகை கொண்ட மியூனிக், பெர்லின் மற்றும் ஹம்பர்க்குக்கு அடுத்து ஜெர்மனியில் பெரிய நகரமாக விளங்குகிறது. இந்நகரம் இசர் ஆற்றங்கரையில் அச்சரேகையில் அமைந்துள்ளது. 1972 ல் இங்கு இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவந்த இஸ்ரேல் வீரர்களை பலஸ்தீனப் போராளிகள் கொலை செய்தனர். இதன் பின்னர் 2006 உலகக் கிண்ணக் கால் பந்தாட்டப் போட்டி இங்கு நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வூரில் பழமைவாய்ந்த இடாய்ச்சு அருங்காட்சியகமும் அமைந்துள்ளது. இங்கு தொழில் நுட்பம் சார்ந்த நூற்றாண்டுக்கும்மேலான பொருட்கள பல காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பி. எம். தபிள்யூ தானுந்து நிறுவனத்தின் தலைமையகமும் அதன் தானுந்து அருங்காட்சியகமும் மியூனிக்கில் தான் உள்ளன. thumb|மியூனிக்கின் வடக்கே உள்ள இசர் ஆற்றின் தோற்றம் வரலாறு 1158 ஆண்டில் தான், மியூனிக் நகரம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் என பழங்கால ஆவணக்குறிப்புகளால் கருதப்படுகிறது. 8ம் நூற்றாண்டில் துறவிகள் இங்கு அதிக எண்ணிக்கையில் வாழ்ந்திருந்தாலும், கற்காலத்திற்குப் பின்னர் வந்த காலங்களிலே, மியூனிக்கில் குடியிருப்புகள் பெருகின. அந்த காலத்தில் தான், பெனதிக்டை துறவிகள் தங்கியிருந்த இடத்தின் அருகிலுள்ள இசர் ஆற்றின் மீது, குயல்ப் ஹென்ரி, சாக்ஸனி மற்றும் பவேரியா பிரபு ஆகியோர்களால், ஒரு பாலம் கட்டப்பட்டது. வர்த்தகர்கள் தனது பாலத்தை பயன்படுத்த கட்டாயப்படுத்தினர். மேலும் அவ்வாறு அவர்கள் கடப்பதற்கு, கட்டணம் வசூலிக்கவும் செய்தனர். இதற்கு அருகிலுள்ள பிஷப் அவருக்குச் சொந்தமான பாலத்தையும் ஹென்ரி அழித்தார். இது குறித்து 1158ம் ஆண்டு, ஆக்ஸ்பர்க்கிலுள்ள அப்போதைய பேரரசர் பிரடெரிக் முதலாம் பர்பரோச்சர் முன்பு பிஷப்பும் மற்றும் ஹென்ரியும் கூச்சலிட்டனர். இதை விசாரித்த அரசர், ஹென்ரிக்கு தடையும், மற்றும் பிஷப்புக்கான ஒரு ஆண்டு இழப்பீட்டுத் தொகையும் வழங்கவேண்டுமென உத்தரவிட்டார். மேலும் மியூனிக் மக்களின் உரிமைகளான வர்த்தகம் மற்றும் நாணயத்தை உறுதி செய்தார். மாநிலங்கள் thumb|மியூனிக் நாட்டின் மாநிலங்கள் 1992ம் ஆண்டிற்குப் பிறகு, மியூனிக் நாடானது 25 மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அல்லாச் - உந்தர்மெஞ்சிங் அல்ஸ்டாத் - லெகல் ஆவுபிங் - லோச்சவுசென் - லாங்வய்டு ஆவு - ஹைதாவுசென் பெர்க் அம் லாயம் போகனாவுசென் பெல்ட்மொச்சிங் - அசன்பெர்கிள் ஆதெரன் லாயம் லாதுவிக்ஸ்வார்ஸ்டாத் - ஐசர்வார்ஸ்டாத் மேக்ஸ்வார்ஸ்டாத் மில்பெர்ட்சாபன் - அம் அர்த் மூசச் நியுவுசென் - நியும்பன்பர்க் ஓபர்கியாசிங் பாசிங் - ஓபர்மென்சிங் ராமர்ஸ்தார்ப் - பேர்லாச் சிசுவாபிங் - பிரைமன் சிசுவாபிங் - மேற்கு சிசுவாந்தலர்ஹோயி செந்திலிங் செந்திலிங் - வெஸ்பார்க் தால்கிருச்சன் - ஓபர்செந்திலிங் - போர்ஸ்தன்ராயட் - பர்ஸ்தன்ராயட் - சாலன் துருதெறிங் - ரெய்ம் அண்தர்கெயிசிங் - ஆர்லாசிங் புவி அமைப்பு பவேரியின் உயர்ந்த சமவெளியில் அமைந்தருக்கும் மியூனிக் நாடு, கடல் மட்டத்திலிருந்து உயரத்தில், ஆல்ப்ஸ் வடக்கு முனையின் வடக்கே தொலைவில் அமைந்துள்ளது. இசர் மற்றும் வார்ம் ஆறுகள், இந்நாட்டை வளப்படுத்துகின்றன. மியூனிக் தெற்கில் அல்பைன் போர்லாந்து அமைந்துள்ளது. காலநிலை இந்நாட்டின் காலநிலையானது, இருபெரும் காலநிலைகளான கோடை மற்றும் குளிர் ஆகியவற்றின் விளிம்பிலுள்ளது. இங்கு ஆனி மற்றும் ஆடி மாதங்களில் கோடையும், மார்கழி மற்றும் தை மாதங்களில் குளிரும் இருக்கும். ஆண்டின் சராசரியாக, இடி மின்னலுடன் கூடிய மழை, வசந்த மற்றும் கோடைக் காலங்களில் இருக்கும். குளிர்காலங்களில், மழை சற்று குறைவாகவே இருக்கும். ஆண்டின் சராசரி குறைந்த மழையளவாக, பிப்ரவரி மாதத்தில் பெய்யும். மேலும் ஆல்ப்ஸ் மலையை ஒட்டி இருப்பதால், ஜெர்மனியை விட அதிக மழையும் பனிப்பொழிவும் காணப்படும். மலையடிவாரத்தில் காணப்படும் வெப்ப சலனத்தால், (குளிர் காலத்திலும்) ஒரு சில மணி நேரத்திற்குள் வெப்பநிலை தீவிரமாக உயர வாய்ப்புள்ளது. மியூனிக் நாட்டின் அதிகபட்ச வெப்பநிலையாக 13 ஆகத்து 2003ம் ஆண்டு 37.1 C˚யும், குறைந்தபட்சமாக 21 சனவரி 1942ம் ஆண்டன்று -30.5 C˚வும் பதிவாகியுள்ளது. மியூனிக்கைச் சுற்றியுள்ளவை அல்பைன் மலையடிவாரத்தின் சமவெளியில் அமைந்திருக்கும் மியூனிக் நகரமானது, 2.6 மில்லியன் மக்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் நாட்டின் சிறு நகரங்களான தகாச்சு, ஃபிரியசிங், எர்திங், ஸ்டார்ன்பர்க், லான்துசட் மற்றும் மூஸ்பர்க் ஆகியவை சேர்ந்தவையே, மியூனிக் மாநகராட்சியாகும். இங்கு 4.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். பன்னாட்டு நல்லுறவுகள் thumb|upright=1.2|மியூனிக்கின் புதிய டவுன் ஹாலிலுள்ள பன்னாட்டு நிறுவனங்களை விளக்கும் படம் கீழ்க்கண்ட நாடுகளுடன், பன்னாட்டு நல்லுறவு வைத்துள்ளது மியூனிக். எதின்பர்க், ஸ்காட்லாந்து (1954) வெரோனா, இத்தாலி (1960) போர்தியாக்ஸ், பிரான்ஸ் (1964) சப்போரோ, சப்பான் (1972) சிஞ்சினாத்தி, ஓஹியோ, அமெரிக்க ஐக்கிய நாடு (1989) கியிவ், உக்ரைன் (1989) ஹராரே, ஜிம்பாவே (1996) மேற்கோள்கள் பகுப்பு:செருமானிய நகரங்கள் பகுப்பு:உலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்
பெயர்ச்சொல்
https://ta.wikipedia.org/wiki/பெயர்ச்சொல்
பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும். ஆதலால் பெயர்ச்சொல் பொருட் பெயர் இடப் பெயர் காலப் பெயர் சினைப் பெயர் பண்புப் பெயர் தொழிற் பெயர் என ஆறு வகைப்படும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்பவற்றைப் பொருளாதி ஆறு என்றும், பொருள் முதலாறு என்றும் கூறுவர். "பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்; வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது". தொல்காப்பிய விளக்கம் நிலனும் பொருளும் காலமும் கருவியும் வினைமுதற் கிளவியும் வினையும் உளப்பட அவ் அறுபொருள் தொல்காப்பியம் 2 வினையியல் 37 5 Ckjgrs நன்னூல் விளக்கம் 'இடுகுறி காரண மரபோடு ஆக்கம் தொடர்ந்து தொழில்அல காலம் தோற்றா வேற்றுமைக்கு இடனாய்த் திணைபால் இடத்து ஒன்று ஏற்பதுவும் பொதுவும் ஆவன பெயரே' நன்னூல் - 275 எடுத்துக்காட்டுகள் பொருட்பெயர் : மனிதன், பசு, புத்தகம் இடப்பெயர் : சென்னை, தமிழகம் காலப்பெயர் : மணி, நாள், மாதம், ஆண்டு சினைப்பெயர் : கண், கை, தலை பண்புப்பெயர் : இனிமை, நீலம், நீளம், சதுரம் தொழிற்பெயர் : படித்தல், உண்ணல், உறங்குதல் இது தவிர வேறு பல விதமாகவும் வகைப்படுத்துவது உண்டு. இவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம். 1. இயற்கைப் பெயர்கள் 2. ஆக்கப் பெயர்கள் 1. இடுகுறிப் பெயர்கள் 2. காரணப் பெயர்கள் 1. சாதாரண பெயர்கள் 2. பதிலிடு பெயர்கள் 1. நுண்பொருட் பெயர்கள் 2. பருப்பொருட் பெயர்கள் 1. உயிர்ப் பெயர்கள் 2. உயிரில் பெயர்கள் 1. உயர்திணைப் பெயர்கள் 2. அஃறிணைப் பெயர்கள் 1. தனிப் பெயர்கள் 2. கூட்டுப் பெயர்கள் பெயர்ச்சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் இன்னொரு பெயர் பதிலிடு பெயர் அல்லது மாற்றுப் பெயர் எனப்படுகின்றது. நான், நீ, அவன், அவள் போன்றவை பதிலிடு பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். பதிலிடு பெயர்களை, மூவிடப் பெயர்கள், பிற பதிலிடு பெயர்கள் என வகைப்படுத்துவது வழக்கம். மூவிடப் பெயர்கள், தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று இடங்களைக் குறித்து வருவனவாகும். இவை ஒவ்வொன்றையும், ஒருமைப் பெயர்களாகவும் பன்மைப் பெயர்களாகவும் மேலும் இரண்டாகப் பிரிக்கலாம். தன்மை : நான், நாங்கள். முன்னிலை : நீ, நீர், தாங்கள். படர்க்கை : அவன், அவள், அவர்கள், அது, அவை. தன்மை ஒருமை : நான். தன்மை பன்மை : நாங்கள். முன்னிலை ஒருமை : நீ, தம். முன்னிலை பன்மை : நீர், தாங்கள். படர்க்கை ஒருமை : அவன், அவள், அது. படர்க்கை பன்மை : அவர்கள், அவை. இவற்றையும் பார்க்கவும் பெயரெச்சம் தமிழ் இலக்கணம் மேற்கோள்கள் பகுப்பு:பெயர்ச் சொல் பகுப்பு:இலக்கணம்
வினைச்சொல்
https://ta.wikipedia.org/wiki/வினைச்சொல்
வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும். எ.கா கண்ணன் ஓடினான் என்ற தொடரில் ஓடினான் வினைச்சொல்லாகும். பழம் மரத்தில் இருந்து வீழ்ந்தது என்ற வசனத்தில் வீழ்ந்தது வினைச்சொல்லாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும். முற்று இருவகைப்படும். அவை தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்று எச்சம் இரண்டு வகைப்படும். அவை பெயரெச்சம் வினையெச்சம் ஒரு வினையானது (செயலானது) முடிவுறாமல் தொக்கி நிற்பது எச்சம். இதனை எச்சவினை என்பர். இத்தகைய எச்சவினையானது பெயரைக்கொண்டு முடிவுற்றால் அது பெயரெச்சம். வினையைக் கொண்டு முடிவுற்றால் அது வினையெச்சம் சான்று: படித்த- இதனோடு பெயரை மட்டுமே சேர்க்க இயலும் படித்து- இதனோடு வினையை மட்டுமே சேர்க்க இயலும் இப் பெயர், வினை எச்சங்கள் 1.தெரிநிலை 2. குறிப்பு என இரண்டாகப் பகுக்கப்படும் முற்று தெரிநிலை வினைமுற்று செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும் எ.கா: கயல்விழி மாலை தொடுத்தாள் குறிப்பு வினைமுற்று பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும். எ.கா: அவன் பொன்னன். எச்சம் வினையெச்சம் வினையெச்சம் என்பது வினை முற்றினைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும். எ.கா: படித்துத் தேறினான் இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் பகுப்பு: வினைச் சொல்
இடைச்சொல்
https://ta.wikipedia.org/wiki/இடைச்சொல்
இடைச்சொல் என்பது தனித்து நின்று பொருள் தராது, பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையில் நின்று பொருளை விளக்கும் சொல் ஆகும். இவை நுணுக்கமான பொருள் வேறுபாடுகளை உணர்த்துவதற்கும் உணர்ச்சிகளையும் கருத்துகளையும் மிகத்தெளிவாகவும் சுருக்கமான முறையிலும் வெளிப்படுத்தவும் பயன்படும். இடைச்சொற்களின் சில வகைகள் வருமாறு: 1.வேற்றுமை உருபுகள்- வேற்றுமையில், உருபுகள் இல்லாத முதல் வேற்றுமையும் எட்டாம் வேற்றுமையும் நீங்கலாக எஞ்சிய ஆறு வேற்றுமைகளுக்கும் உரிய அசை உருபுகள். 2.விகுதிகள்- அன், அள், உம், து போன்றன. 3.இடைநிலை- த், ட், ற், ன், கிறு, ப் போன்றன. 4.சாரியை- அத்து, அற்று, அம் போன்றன. 5.தத்தம் பொருள் உணர்த்தி வரும் இடைச்சொற்கள்- ஏ, ஓ, உம், தோறும், தான், என, என்று போன்றன. சில எடுத்துக்காட்டுகள்: கவிதாவைப் பார்த்தேன் - ஐ மற்று அறிவாம் நல்வினை - மற்று மலர் போன்ற கை - போன்ற வந்தான்- ஆன் அக்காளை, இக்காளை - அ, இ சென்றானா?- ஆ மேலே குறிப்பிட்டுள்ளவற்றுள் - ஐ என்பது வேற்றுமை உருபு. மற்று என்பது பொருள் குறிக்காது வரும் அசைச்சொல். ஆன் என்பது ஆண்பால் உணர்த்தும் விகுதி. போன்ற என்பது உவமையை உணர்த்தும் உவமை உருபு. அ, இ என்பன சுட்டெழுத்துகள் ஆ என்பது வினா எழுத்து இவை எல்லாம் பெயர்ச்சொல்லையோ வினைச்சொல்லையோ இடமாகக் கொண்டு வருகின்றன. இவை யாவும் தனித்து வருவதில்லை. இவை பெயர்ச்சொல்லைப் போன்றோ வினைச்சொல்லைப் போன்றோ தனித்து நின்று பொருள் தருவன அல்ல. பெயர்களோடும் வினைகளோடும் சேர்ந்து அவற்றின் இடமாகவே வரும். இவை பெயர்ச்சொற்களும் அல்ல; வினைச் சொற்களும் அல்ல. பெயர் வினைகளைச் சார்ந்து அவற்றை இடமாகக் கொண்டு வருவதனால் இவை இடைச்சொற்கள் ஆகின்றன. இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் இடைச்சொல் விளக்கம் பகுப்பு:சொல்லிலக்கணம்
உரிச்சொல்
https://ta.wikipedia.org/wiki/உரிச்சொல்
உரிச்சொல் என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாகத் திகழும் சொல்.உரிமை என்பது உறவால் தோன்றும் உரிமை. கணவன், மனைவி, தாய், தந்தை, மாமன், மைத்துனன், அத்தை, மாமி, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை - என்றெல்லாம் உறவால் உரிமை பெறுவது போன்று சொற்களிலும் உரிமை பூண்டு நிற்கும் நிலைமை ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும், பல சொற்கள் ஒரு பொருளுக்கு உரிமை பூண்டு நிற்கும்போதும் உரிச்சொல் நிலையினைப் பெறுகிறது. இது பெயர்ச்சொல்லாகவோ, வினைச்சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ, வினைக்கு அடைமொழியாகவோ, பெயருக்கும் வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும்.உரிச்சொல் கிளவி விரிக்கும் காலை,இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி,பெயரினும் வினையினும் மெய் தடுமாறி,ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும்,பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும்,பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி,தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின்,எச் சொல் ஆயினும், பொருள் வேறு கிளத்தல். (தொல்காப்பியம் - உரியியல் 1)பல்வகைப் பண்பும் பகர்பெயர் ஆகிஒருகுணம் பலகுணம் தழுவிப் பெயர்வினைஒருவா செய்யுட்கு உரியன உரிச்சொல் (நன்னூல்: 442) ஒப்பீட்டு விளக்கம் தமிழில் உரிச்சொல் முழுச்சொல்லாகவும் குறைசொல்லாகவும் வரும். தொல்காப்பியர் சொல்லதிகாரம் உரியியலில் 120 உரிச்சொற்களைக் குறிப்பிடுகிறார். செல்லல், இன்னல், இன்னாமையே.(தொல்காப்பியம் 3-302) - இது முழுச்சொல்லாக வந்த உரிச்சொல் வகை. தடவும் கயவும் நளியும் பெருமை.(தொல்காப்பியம் 3-320) - தடமருப்பு எருமை, கயவாய் மதகு, நளியிரு முந்நீர் - இவற்றில் தட, கய, நளி என்னும் உரிச்சொற்கள் குறைசொற்களாக உள்ளன. பாகுபாடும் விளக்கமும் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், "உரிச்சொல்" என்ற நான்கு வகைச்சொற்களின் வரிசையில் "உரிச்சொல்" இறுதியாக வருகிறது. உரிச்சொல்லானது, பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும். பெயருக்கு அல்லது வினைக்கு உரிய பன்மையை உணர்த்தும். அதாவது, பொருளுக்குரிய பண்புகளைக் குறிப்பதாகும். "உரி" என்னும் அடைமொழியைச் "சொல்" என்பதனோடு சேர்த்து "உரிச்சொல்" என்றனர். உரிச்சொல்லின் வகைகள் உரிச்சொல் இருவகைப்படும் ஒருபொருட்குறித்த பலசொல் பலபொருட்குறித்த ஒருசொல் சான்று: ஒரு பொருள் குறித்த பல சொல் சாலப்பேசினான். உறுபுகழ். தவஉயர்ந்தன. நனிதின்றான். இந்நான்கிலும் வரும், சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரேபொருளையுணர்த்துவன. பலபொருட்குறித்த ஒருசொல் கடிமனை - காவல் கடிவாள் - கூர்மை கடிமிளகு - கரிப்பு கடிமலர் - சிறப்பு இந்நான்கிலும்வரும் கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பலபொருள்களையுணர்த்தும் உரிச்சொல் குறிப்பவை உரிச்சொல் குறிக்கும் பண்புகள் பின்வருமாறு: உயர்திணைப் பண்புகள் உடம்போடு கூடிய உயிர்களின் குணங்கள் 32 என்று கூறுகின்றார் நன்னூலார் (நூற்பா 452).அவை, அறிவு அருள் ஆசை அச்சம் மானம் நிறைவு பொறை (பொறுமை) ஓர்ப்பு (தெளிவு) கடைப்பிடி மையல் (மயக்கம்) நினைவு வெறுப்பு உவப்பு (மகிழ்வு) இரக்கம் நாண் வெகுளி (கோபம்) துணிவு அழுக்காறு (பொறாமை) அன்பு எளிமை எய்த்தல் (சோர்வு) துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல் (பகை), வென்றி (வெற்றி) பொச்சாப்பு (பொல்லாங்கு) ஊக்கம் மறம் மதம் (வெறி) மறவி (மறதி) ஆகிய இவையும் இவை போன்ற பிறவும் உயிர்களின் பண்புகளாகும். இவை தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் பகுதியில் காட்டப்பட்டுள்ளன. அஃறிணைப் பண்புகள் நன்னூல், 454-ஆவது நூற்பா அஃறிணைப் பண்புகளைப் பின்வருமாறு வகைப்படுத்துகின்றது. வடிவங்கள் வட்டம் இருகோணம் முக்கோணம் சதுரம் முதலிய பலவகைளும் நாற்றங்கள் நறுநாற்றம் துர்நாற்றம் வண்ணங்கள் வெண்மை செம்மை (சிவப்பு) கருமை பொன்மை (மஞ்சள்) பசுமை சுவைகள் கைப்பு (கசப்பு) புளிப்பு துவர்ப்பு உவர்ப்பு கார்ப்பு (காரம்) இனிப்பு எட்டு ஊறுகள் அல்லது தொடு உணர்வுகள் வெம்மை (வெப்பம்) தண்மை (குளிர்ச்சி) மென்மை, வன்மை நொய்மை (நைதல்) திண்மை இழுமெனல் (வழவழப்பு) சருச்சரை (சொரசொரப்பு) இரண்டிற்கும் பொதுவான பண்புகள் உலகில் தோன்றியுள்ள எல்லாப் பொருள்களுமே ஒன்பது பண்புகளைக் கொண்டிருக்கும். (நன்னூல்,455). தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல் நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல் ஈதல் மேலும் காண்க தமிழிலக்கணம் பெயருரிச்சொல் வினையுரிச்சொல் இலக்கணம் ஆங்கிலவிலக்கணம் பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் மொழி மேற்கோள் குறிப்புகள் வெளி இணைப்புகள் http://www.tamilvu.org/courses/degree/a021/a0214/html/a0214111.htm பகுப்பு:சொல்லிலக்கணம் பகுப்பு:தமிழ் அகராதியியல்
டின்டால் விளைவு
https://ta.wikipedia.org/wiki/டின்டால்_விளைவு
thumb|275px|தூசு மற்றும் பனித்துகள்கள் நிறைந்த பகுதியில் சூரிய ஒளி சிதறுதல் thumb|right|250px|நீரில் உள்ள மாவுப்பொருள் ஒரு கூழ்மமாக உள்ளது. நுண்துகள்களாக உள்ள மாவுப்பொருள் அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு ஒளியைக் காட்டிலும் குறுகிய அலைநீளம் கொண்ட நீல நிற ஒளியை அதிகமாக சிதறச்செய்வதால், மெல்லிய நீல நிறம் காணப்படுகின்றது டின்டால் விளைவு (Tyndall effect) என்பது கூழ்ம நிலையிலுள்ள பொருட்களின் வழியாகப் பாயும் ஒளிக்கதிர்களை அவற்றிலுள்ள கூழ்மத்துகள்கள் (colloidal particles) சிதறடிப்பதைக் குறிப்பதாகும். இவ்வாறு ஒளிச்சிதறடிக்கப்படுவதால் ஊடுருவும் ஒளிக்கதிரின் பாதைப் புலனாகிறது. இவ்விளைவு இதைக் கண்டுபிடித்த அயர்லாந்து அறிவியலர் இஞ்சான் டின்டால் என்பவரின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பனிக்காலத்தில் வண்டிகளிலுள்ள முன்விளக்குகளின் ஒளி சிதறுவது இவ்விளைவினாலே ஆகும். புவியின் காற்று மண்டலமும் ஒரு கூழ்மக் கலவையே. இதன் காரணமாக சூரிய ஒளி சிதறடிக்கப்படுகிறது. குறைந்த அலைநீளம் (wavelength) கொண்ட கதிர்களே கூடுதலாக சிதறடிக்கப் படுகின்றன. இதன் காரணமாகவே வானம் நீல நிறமாகத் தென்படுகின்றது. இவற்றையும் பார்க்கவும் இராமன் விளைவு மேற்கோள்கள் பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள் பகுப்பு:சிதறல்
ஒளித்தொகுப்பு
https://ta.wikipedia.org/wiki/ஒளித்தொகுப்பு
ஒளித்தொகுப்புச் செய்ன்முறையை விளக்கும் எளிய வரைபடம்|thumb|250px thumb|250px|இலை - ஒளித்தொகுப்பு பெரும்பாலும் நிகழும் பகுதி ஒளிச்சேர்க்கை அல்லது ஒளித்தொகுப்பு (Photosynthesis) என்பது தாவரங்கள், பாசிகள் மற்றும் சிலவகை பாக்டீரியாக்கள் போன்றவற்றில் நிகழும் ஒரு உயிர்வேதியியல் நிகழ்வு ஆகும். ஒளிச்சேர்க்கையின் மூலம் இவ்வுயிரினங்கள் ஒளியின் ஆற்றலைப் பயன்டுத்திக் காபனீரொக்சைட்டு வளிமத்தைத் தமக்குத் தேவையான மாப்பொருள் என்னும் காபோவைதரேட்டு போன்ற கரிமவேதியல் பொருளாக மாற்றிக் கொள்ளும். தாவரங்களிலுள்ள பச்சையம் என்ற நிறமி பெரும்பாலும் இதற்கு உதவுகிறது. ஒளிச்சேர்க்கைவழியே தாவரங்களும், பாசிகளும், சயனோபாக்டீரியா (cyanobacteria) என்னும் உயிரினமும் கார்பனீரொக்சைட்டு வளிமத்தையும் நீரையும் ஒளியின் ஆற்றலையும் பயன்படுத்திக் கார்போவைதரேட்டுக்களாக மாற்றிக் கொண்டு, உயிர்வளியைக் (அல்லது ஆக்சிசனைக்) கழிவுப்பொருளாக வெளிவிடுகின்றன. ஒளிச்சேர்க்கையின் விளைவால் ஆக்சிசன் (உயிர்வளி) வெளியாவதால் உலகின் உயிர்வாழ்வுக்கு இவ் ஒளிச்சேர்க்கை மிக அடிப்படையான ஒரு நிகழ்வாகும். ஏறத்தாழ எல்லா உயிர்களும் ஆக்சிசனை நேரடியான ஆற்றல் வாயிலாகவோ (மூலமாகவோ) அல்லது உணவுக்கு அடிப்படையாகவோ கொள்ளுகின்றன.. ஒளிச்சேர்க்கையின் வழி பற்றப்படும் (பிடிக்கப்படும்) ஆற்றல் மிக மிகப் பெரியதாகும்: ஏறத்தாழ ஆண்டுதோறும் 100 டெரா வாட் ஆகும் (100,000,000,000,000 வாட்) என்று கணக்கிட்டு இருக்கின்றார்கள். இது ஏறத்தாழ உலக முழுவதும் மக்கள் ஆண்டுதோறும் பயன்படுத்தும் மொத்த ஆற்றலின் அளவைப்போல் ஏழு மடங்காகும். உலகில் நிகழும் ஒளிச்சேர்க்கையால் மரஞ்செடிகொடிகளும், பாசிகளும், பாக்டீரியாக்களும் மொத்தம் 100,000,000,000 டன் கார்பன்-டை-ஆக்சைடு தனை உயிரகப் பொருளாக (biomass) ஆண்டுதோறும் மாற்றுகின்றன. ஒளித்தொகுப்பு பற்றிய ஒரு மேலோட்டம் thumb|எளிய ஒளித்தொகுப்புத் தாக்கம் ஒளித்தற்போசணிகளிலேயே ஒளித்தொகுப்பு நடைபெறுகின்றது. ஒளியின் ஆற்றலைப் பயன்படுத்தி ஒளித்தொகுப்பு மூலம் அசேதன கார்பன் (காபனீரொக்சைட்டில்) சேதன வடிவுக்கு மாற்றப்படுகின்றது. இரண்டு வகையான ஒளித்தொகுப்பு வகைகள் உள்ளன. தாவரங்களும், அல்காக்களும், சயனோபக்டீரியாக்களும் நிகழ்த்தும் ஒளித்தொகுப்பின் பக்கவிளைபொருளாக ஒக்சிசன் சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுகின்றது. இம்முறை ஒக்சிசன் வெளியேற்றும் ஒளித்தொகுப்பாகும். எனினும் சில பக்டீரியாக்கள் மற்றவற்றைப் போல காபனீரொக்சைட்டை கார்பன் மூலப்பொருளாக உள்ளெடுத்தாலும், அவை ஒக்சிசனை வெளிவிடுவதில்லை. இது ஒக்சிசன் வெளியேற்றாத ஒளித்தொகுப்பு வகையாகும். இரு வகைகளிலும் சூரிய ஒளியே சக்தி முதலாக உள்ளது. ஒக்சிசனை வெளியேற்றும் ஒளித்தொகுப்பே பொருளாதார ரீதியில் மனிதனுக்கு முக்கியத்துவமானதால் அம்முறையே இங்கு அதிகம் ஆராயப்படுகின்றது. கார்பன் நிலைப்படுத்தல் அல்லது கார்பன் பதித்தல் எனும் உயிரிரசாயனச் செயன்முறை மூலம் காபனீரொக்சைட்டில் உள்ள கார்பன் உயிரிகளுக்குப் பயன்படும் வடிவமான வெல்ல வடிவத்துக்கு மாற்றப்படுகின்றது. ஒளித்தொகுப்பு ஒரு தொகுப்புக்குரிய தாக்கமாகையால் (எனவே அகவெப்பத்தாக்கம்) இதற்குப் புறத்தேயிருந்து ஒரு சக்தி முதலும், கார்பனை காபோவைதரேட்டாக மாற்ற இலத்திரன்களும் தேவைப்படுகின்றன. இச்சக்தித் தேவைப்பாட்டை சூரிய ஒளி நிறைவு செய்கின்றது. ஒக்சிசனை வெளியேற்றும் ஒளித்தொகுப்பில் பிரதான இலத்திரன் வழங்கியாக நீர் உள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் சுவாசத்துக்கு எதிர்மாறான செயன்முறையாக ஒளித்தொகுப்பு விளங்குகின்றது. சுவாசம் சக்தியை பயன்பாட்டுக்கு வெளியேற்றுகின்றது (புறவெப்பத்தாக்கம்); ஒளித்தொகுப்பு ஒளிச்சக்தியை இரசாயன் சக்தியாக சேமிக்கின்றது. எனினும் இரண்டு உயிரிரசாயனச் செயன்முறைகளும் நடைபெறும் விதம் நேர்மாறாக இல்லாமல் முற்றிலும் வேறுபட்ட விதத்தில் நடைபெறுகின்றன. ஒளித்தொகுப்பின் மேலோட்டமான தாக்கம்:- 2n CO2 + 2n DH2 + போட்டோன்கள் → 2(CH2O)n + 2n DO காபனீரொக்சைட்டு + இலத்திரன் வழங்கி + ஒளிச்சக்தி → காபோவைதரேட்டு + ஒக்சியேற்றப்பட்ட இலத்திரன் வழங்கி ஒக்சிசனை வெளியேற்றும் ஒளித்தொகுப்பின் தாக்கச்சமன்பாடு: 2n CO2 + 4n H2O + போட்டோன்கள் → 2(CH2O)n + 2n O2 + 2n H2O காபனீரொக்சைட்டு + நீர் + ஒளிச்சக்தி → காபோவைதரேட்டு + ஒக்சிசன் + நீர் தாக்கத்தை சுருக்குவதற்காக பொதுவாக இருபக்கத்திலுமுள்ள 2n நீர் மூலக்கூறுகள் நீக்கப்பட்டு பின்வரும் எளிய சமன்பாடு உருவாக்கப்பட்டுள்ளது: 2n CO2 + 2n H2O + போட்டான்கள் → 2(CH2O)n + 2n O2 காபனீரொக்சைட்டு + நீர் + ஒளிச்சக்தி → காபோவைதரேட்டு + ஒக்சிசன் சில நுண்ணங்கிகள் இலத்திரன் வழங்கியாக நீருக்குப் பதிலாக ஆர்சனைட்டைப் பயன்படுத்துகின்றன.; இவை சூரிய ஒளியைப் பயன்படுத்தி ஆர்சனைட்டை ஆர்சனேற்றாக ஒக்சியேற்றுகின்றன: CO2 + (AsO33–) + போட்டான்கள் → (AsO43–) + CO காபனீரொக்சைட்டு + ஆர்சனைட்டு + ஒளிச்சக்தி → ஆர்சனேற்று + காபனோரொக்சைட்டு (தொடர்ந்து வரும் தாக்கங்களில் வேறு சேர்மங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றது.) பொதுவாகன ஒளித்தொகுப்பு இரு படிநிலைகளில் நடைபெறுகின்றது. முதலாவது படிநிலை ஒளிச்சக்தியை உறிஞ்சும் ஒளித்தாக்கம் அல்லது ஒளி தேவைப்படும் தாக்கங்களாகும். இப்படிநிலையில் ஒளிச்சக்தியானது தூண்டப்பட்ட இலத்திரன்களின் வடிவில் பச்சையத்திலிருந்து சக்தி சேமிக்கும் மூலக்கூறுகளான ATP NADPH ஆகியவற்றில் சேமிக்கப்படுகின்றது. பச்சையத்திலிருந்து இழக்கப்பட்ட இலத்திரன்களை நீரிலிருந்து பெற்றுக்கொள்கின்றது. இச்செயற்பாட்டில் நீர் ஒக்சியேற்றமடைந்து ஒக்சிசனாக மாறி வளிமண்டலத்துக்குள் விடுவிக்கப்படுகின்றது. இரண்டாவது படிநிலை இருட்தாக்கம் அல்ல்து ஒளி நேரடியாகத் தேவைப்படாத தாக்கங்களாகும் (இப்படிநிலை இருட்தாக்கம் என அழைக்கப்பட்டாலும் இவை நடைபெற மறைமுகமாக ஒளிச்சக்தி அவசியமாகும்). இப்படிநிலையில் ATP மற்றும் NADPH ஆகியவற்றில் உள்ள சக்தியைக் கொண்டு காபனீரொக்சைட்டு காபோவைதரேட்டாக மாற்றப்படுகின்றது. அனேகமான ஒளித்தொகுப்பை மேற்கொள்ளும் உயிரினங்கள் கட்புலனாகும் ஒளியையே பயன்படுத்துகின்றன. எனினும் சில மாத்திரம் அகவெப்பக்கதிர்களைப் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒளித்தாக்கங்கள் thumb|657px|தைலக்கொய்ட் மென்சவ்வில் நடைபெறும் ஒளித்தொகுப்பின் ஒளித்தாக்கங்கள் தாவரங்களில் ஒளித்தாக்கங்கள் பசுங்கனிகத்தின் மணியுருவிலுள்ள தைலக்கொய்ட் மென்சவ்வில் நடைபெறுகின்றன. தைலக்கொய்ட் மென்சவ்வு வழமையான கல மென்சவ்வை ஒத்த ஒரு பொஸ்போஇலிப்பிட்டு இருபடை மென்சவ்வாகும். இம்மென்சவ்வில் இரண்டு ஒளித்தொகுதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தாக்க மையம் உள்ளது. தாக்க மையத்தில் தாவரங்களின் முதன்மையான ஒளித்தொகுப்பு நிறப்பொருளான பச்சையம் a (chlorophyll a) உள்ளது. தாவரங்களின் ஒளித்தொகுப்பில் இரண்டு ஒளித்தொகுதிகள் பங்கெடுக்கின்றன. இவை கண்டுபிடிக்கப்பட்டதின் வரிசையில் ஒளித்தொகுதி I மற்றும் II என பெயரிடப்பட்டாலும், ஒளித்தாக்கச் செயற்பாட்டில் ஒளித்தொகுதி இரண்டே முதலில் செயற்படும். ஒளித்தொகுதி இரண்டின் அமைப்பும் செயற்பாடும் ஊதாக் கந்தக பக்டீரியாக்களின் ஒளித்தொகுதியை ஒத்ததாக உள்ளது. ஒளித்தொகுதி II 680 nm அலைநீளம் உள்ள ஒளியை சிறப்பாக உறிஞ்சுவதால் அது P680 என அழைக்கப்படுகின்றது. ஒளித்தொகுதி I 700 nm அலைநீளமுடைய ஒளியை சிறப்பாக உறிஞ்சுவதால் அது P700 என அழைக்கப்படும். ஒளித்தொகுதி II தாக்கங்கள்: ஒளியினால் இலத்திரன் அருட்டப்படல் ஆரம்பிப்பது ஒளித்தொகுதி IIஇலே ஆகும். ஒளித்தொகுதி IIஇல் உள்ள பச்சையம் b (chlorophyll b), கரோட்டீன் போலிகள் என்பன வேறுபட்ட அலை நீளங்களில் ஒளியை அகத்துறிஞ்சி தாக்கமையத்திலுள்ள குளோரோபில் a மூலக்கூறுக்குக் கடத்துகின்றன. இந்த போட்டோனை உறிஞ்சுவதால் தாக்க மையத்திலுள்ள குளோரோபில் a மூலக்கூறிலுள்ள இலத்திரன் அருட்டப்பட்டு வெளியேற்றப்படுகின்றது. இவ்விலத்திரன் ஃபியோபைட்டின் எனும் மூலக்கூறுக்குக் கடத்தப்படும். பின்னர் அதிலிருந்து இலத்திரன் பிளாஸ்டோகுயினோன் மூலக்கூறுக்குக் கடத்தப்படுகின்றது. பிளாஸ்டோ குயினைன் இவ்விலத்திரனிலுள்ள சக்தியைப் பயன்படுத்தி பஞ்சணையினுள் உள்ள H+ அயன்களை மணியுரு உள்ளிடத்தினுள் பம்பும். இதனால் மணியுருவினுள் H+ அயன் செறிவு அதிகரிக்கும். இலத்திரன் வெளியேற்றப்படுவதால் பச்சையத்தில் (குளோரோபில் a) இலத்திரன் தட்டுப்பாடு ஏற்படுகின்றது. இத்தட்டுப்பாடை ஈடுசெய்ய நீர் மூலக்கூற்றில் உள்ள ஐதரசன் அணுக்களின் இலத்திரன்கள் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு நீர் ஒக்சியேற்றப்படும் போது ஒக்சிசனும், H+ அயன்களும் பக்கவிளைபொருளாகத் தோன்றுகின்றன. இவ்வாறு நீரை ஒக்சியேற்றுவதற்காக ஒளித்தொகுதி II உடன் இணைந்தவாறு ஒக்சிசன் உருவாக்கும் சிக்கல் (ஒரு நொதியம்) உள்ளது. இவ்வாறு ஒளி முந்நிலையில் பச்சையத்தில் ஏற்படும் இலத்திரன் தட்டுப்பாட்டை நீக்க நீர் பிரிகையடைந்து இலத்திரனை வழங்கல் நீரின் ஒளிப்பகுப்பு எனப்படும். இதனால் H+ அயன்களின் செறிவு தைலக்கொய்ட் மென்சவ்வின் ஒரு பக்கத்தில் அதிகமாக இருக்கும். நீரின் ஒளிப்பகுப்பு மற்றும் பிளாஸ்டோகுயினைனின் பம்பலால் தோன்றிய H+ அயன் செறிவுப் படித்திறனைக் கொண்டு தைலக்கொய்ட் மென்சவ்வில் இருக்கும் ATP தொகுப்பி (ATP synthase) எனும் நொதியம் ATP சக்தி மூலக்கூறுகளைத் தொகுக்கின்றது. ஒளித்தொகுதி I தாக்கங்கள்: ஒளித்தொகுதி I இலும் ஒளியால் தாக்க மையத்திலுள்ள பச்சையத்திலிருந்து இலத்திரன் அருட்டப்படும். இதனால் ஏற்படும் நேரேற்றத்தை ஒளித்தொகுதி II இலிருந்து வெளியேற்றப்படும் இலத்திரன் ஈடு செய்கின்றது. ஒளித்தொகுதி I இலிருந்து வெளியேற்றப்பட்ட இலத்திரன் பெரோடொக்சின் ஊடாக NADP+ தாழ்த்தும் நொதியத்தை அடையும். அங்கு H+, இலத்திரன், NADP+ என்பன இணைந்து NADPH உருவாகும். NADPH பின்னர் இருட்தாக்கத்துக்கு ஐதரசன் மூலமாகவும், தாழ்த்தியாகவும் தொழிற்படும். ஒட்டுமொத்த ஒளித்தாக்கச் சமன்பாடு: 2 H2O + 2 NADP+ + 3 ADP + 3 Pi + ஒளி → 2 NADPH + 2 H+ + 3 ATP + O2 Z வரைபடம் thumb|675px|center|Z வரைபடம் நீரின் ஒளிப்பகுப்பினால் வெளியேற்றப்படும் இலத்திரன் பச்சையவுருமணியூடாக பரிமாற்றப்படும் ஒவ்வொரு நிலையிலும் கொண்டுள்ள சக்தியை Z வரைபடம் காட்டுகின்றது. ஒளித்தொகுதி IIஇல் பெற்ற சக்தி ATPயை உருவாக்க பயன்படுவதுடன் ஒளித்தொகுதி Iஇல் பெற்ற சக்தி ஃபெரோடொக்சின் இலத்திரன் காவியூடாகக் கடத்தப்பட்டு NADPH மூலக்கூறுகளை உருவாக்கப் பயன்படும். ஒளி தங்கியிருக்காத கார்பன் பதித்தல் தாக்கங்களின் போது ATP, NADPH ஆகிய சக்தி மூலக்கூறுகளில் சேமிக்கப்பட்டுள்ள ஆற்றலே பயன்படுத்தப்பட்டு G3P யும் அதிலிருந்து குளுக்கோசும் தொகுக்கப்படுகின்றன. ஒளி நேரடியாகத் தேவைப்படாத தாக்கங்கள் இத்தாக்கங்கள் இருட்தாக்கங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. ஒளி தேவைப்படும் தாக்கங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ATP மற்றும் NADPH ஆகியவற்றின் சக்தியைப் பயன்படுத்தி காபனீரொக்சைட்டை காபோவைதரேட்டாக மாற்றுவதே இதன் பிரதான செயன்முறையாகும். இத்தாக்கங்கள் தைலக்கொய்ட் மென்சவ்வுக்கு வெளியே பசுங்கனிகத்தின் கலச்சாறுக்கு ஒப்பான ஸ்ட்ரோமாவில் நிகழ்கின்றன. இத்தாக்கங்களுக்கு நேரடியாக ஒளிச்சக்தி தேவைப்பலவில்லையென்றாலும் ஒளித்தாக்கங்களின் விளைவுகளான ATP மற்றும் NADPH என்பன தேவைப்படுகின்றன. ஒளி நேரடியாகப் பங்கெடுக்காத தாக்கங்களில் மூன்று படிநிலைகள் உள்ளன. அவையாவன கார்பன் நிலைப்படுத்தல்/ கார்பன் பதித்தல், தாழ்த்தல் தாக்கங்கள், ரிபியுலோசு 1,5 இருபொசுபேட்டு (RuBP) மீள்தொகுப்பு என்பனவாகும். இப்படிநிலைகள் மொத்தமாக கல்வின் வட்டம் என அழைக்கப்படுகின்றன. இத்தாக்கங்களில் மிக முக்கியமான நொதியமாக RuBisCO விளங்குகின்றது. இது NADPHஇலுள்ள சக்தியைப் பயன்படுத்தி காபனீரொக்சைட்டை C3H6O3-பொஸ்பேட்டாக நிலைப்படுத்துகின்றது. இருட்தாக்கம் பிரதானமாக மூன்று படிநிலைகளில் நிகழ்கின்றது. கார்பன் பதித்தல்: காபனீரொக்சைட்டு RuBisCO நொதியத்தின் ஊக்குவிப்புடன் RuBP உடன் இணைதல். உருவாகும் PGAஇல் 1/6 பங்கு வெல்ல உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும். தாழ்த்தல்: மீதி 5/6 பங்கு PGA இப்படிநிலையினுள் உள்வாங்கப்படும். ஒளித்தாக்கத்தில் உருவான முழு NADPHஉம், சிறிதளவு ATP உம் இங்கு PGA ஐத் தாழ்த்தப் பயன்படுத்தப்படும். RuBP மீளுருவாக்கம்: மீதி ATPஐப் பயன்படுத்தி காபனீரொக்சைட்டு வாங்கியான RuBP மீளுருவாக்கப்படும். மொத்த இருட்தாக்கம்: 3 CO2 + 9 ATP + 6 NADPH + 6 H+ → C3H6O3-phosphate + 9 ADP + 8 Pi + 6 NADP+ + 3 H2O thumb|right|400px|கல்வின் வட்டமும் கார்பன் நிலைப்படுத்தலும் இவ்வாறு உருவாக்கப்படும் C3H6O3 பின்னர் குளுக்கோசாக C6H12O6 மாற்றப்பட்டு அதன் பின்னர் தேவையான வடிவத்துக்கு மாற்றப்படுகின்றது. பொதுவாக தாவர இலைகளில் ஒளித்தொகுப்பின் பின்னர் குளுக்கோசு மாப்பொருளாகச் சேமிக்கப்படுகின்றது. கல்வின் வட்டத்தின் போது ஐந்து கார்பன் வெல்லமான ரிபியுலோசு 1,5 இருபொசுபேட்டுடன் (RuBP) காபனீரொக்சைட்டு இணைந்து, மூன்று கார்பன் வெல்லமான கிளிசரேட்-3பொஸ்பேட்டு (PGA அல்லது GP) உருவாக்கப்படுகின்றது. இவ்வாறு உருவாக்கப்படும் PGAஇல் ஆறில் ஐந்து பங்கு மூலக்கூறுகள் RuBPஐ மீண்டும் தொகுக்கவும் மீதி ஒரு பங்கு ஒளித்தொகுப்பில் ஈடுபடும் உயிரினத்துக்குத் தேவையான வெல்லத்தைத் தொகுக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. மேலே கூறப்பட்ட ஒளித்தொகுப்பின் இருட்தாக்கம் C3 தாவரங்களுக்குரியதாகும். இவற்றில் நடைபெறும் நீரிழப்பு, ஒளிச்சுவாசம் ஆகிய செயன்முறைகளால் இப்பொதுவான முறை வெப்பவலய நாடுகளில் வினைத்திறன் குன்றியதாக உள்ளது. இதற்கான இசைவாக்கங்களாக சில தாவரங்கள் சி4 கார்பன் பதித்தலையும், சில CAM கார்பன் பதித்தலையும் மேற்கொள்கின்றன. இவ்விரு செயன்முறைகளிலும் கல்வின் வட்டத்துக்கு மேலதிகமாக காபனீரொக்சைட்டைச் சேமித்து விடுவிக்கும் அனுசேபச் செயன்முறைகளும் உள்ளன. ஒளித்தொகுப்பு வீதத்தில் செல்வக்கு செலுத்தும் காரணிகள் ஒளித்தொகுப்பு வீதத்தில் பிரதானமாக மூன்று காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன: ஒளிச்செறிவும் ஒளியின் அலைநீளமும் காபனீரொக்சைட்டின் செறிவு வெப்பநிலை ஒளிச்செறிவும் வெப்பநிலையும் ஒளிச்செறிவும் வெப்பநிலையும் ஒன்றின் விளைவை மற்றையது கட்டுப்படுத்தும் ஒளித்தொகுப்புக் காரணிகளாக உள்ளன. இத்தோற்றப்பாடு ஃப்ரெடரிக் பிளாக்மான் என்பவரால் அவதானிக்கப்பட்டது. இத்தோற்றப்பாடானது ஒளித்தொகுப்பில் இரு நிலைகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தியது. வெப்பநிலை ஒளித்தொகுப்பின் கல்வின் வட்டத்திலும், ஒளிச்செறிவு ஒளித்தொகுப்பின் ஒளித்தாக்கங்களையும் பாதிக்கின்றன. காபனீரொக்சைட்டின் செறிவு ஒளித்தொகுப்பு வினைத்திறனாக நடைபெற இலைக்குள் காபனீரொக்சைட்டின் குறிப்பிட்டளவு செறிவு தேவைப்படுகின்றது. காபனீரொக்சைட்டின் செறிவு அளவுக்கதிகமாகக் குறைந்தால் (அதிக வெப்பமான நேரத்தில் இது நடைபெறும். அதிக வெப்பமான நேரத்தில் ஆவியுயிர்ப்பைக் குறைப்பதற்காக இலைவாய்கள் மூடிக்கொள்ளும். இதனால் ஒளித்தொகுப்புக்கு காபனீரொக்சைட்டு இலைக்குள் செல்ல முடியாது) ஒளித்தொகுப்பின் வினைத்திறனை மோசமாகப் பாதிக்கும் ஒளிச்சுவாசம் எனும் செயன்முறை நடைபெறத் தொடங்கும். கல்வின் வட்டத்தில் பயன்படுத்தப்படும் RuBisCO நொதியம் CO2 மற்றும் O2 ஆகிய இரண்டுடனும் தாக்கமடையக்கூடியது. காபனீரொக்சைட்டு குறைவான நேரத்தில் ஒக்சிசனுடன் தாக்கமடைந்து உருவாக்கப்பட்ட வெல்லத்தை காபனீரொக்சைட்டாக மாற்றி வீணாக்குகின்றது. என்வே அதிக ஒக்சிசன் செறிவும் குறைந்த காபனீரொக்சைட்டுச் செறிவும் மிக மோசமாக ஒளித்தொகுப்பைப் பாதிக்கின்றது. எனவே சோளம் போன்ற சில வெப்ப வலையத் தாவரங்கள் ஒளிச்சுவாசத்தைக் குறைக்கும் முகமாக C4 ஒளித்தொகுப்பு முறையைப் பயன்படுத்துகின்றன. விக்கிக் காட்சியகம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Metabolism, திசுள் மூச்சு (Cellular respiration) மற்றும் ஒளிச்சேர்க்கை - உயிர் வேதியியல் மற்றும் திசுள் உயிரியலுக்கான மின் நூலகம் பகுப்பு:ஒளிச்சேர்க்கை பகுப்பு:தாவர உடலியங்கியல் பகுப்பு:தாவரவியல் பகுப்பு:உயிரணு ஆற்றல் பரிமாற்றம் பகுப்பு:சூழல் மண்டலம்
தெரிநிலை வினைமுற்று
https://ta.wikipedia.org/wiki/தெரிநிலை_வினைமுற்று
தெரிநிலை வினைமுற்று என்பது செய்பவன் முதலா செய்பொருள் ஈறாக அமையும் ஆறையும் காட்டும் வினைமுற்று ஆகும். எ.கா: கயல்விழி தொடுத்தாள் இதில் கயல்விழி என்பது வினையைச் செய்யும் கருத்தா தொடுத்தாள் என்பது கருத்தாவின் செயலை உணர்த்தும் வினைமுற்று. இச்சொல்லிலிருந்து, செய்பவன் - கயல்விழி கருவி - நார், பூ, கை நிலம் - அவள் இருப்பிடம் செயல் - தொடுத்தல் காலம் - இறந்த காலம் செய்பொருள் - மாலை ஆகியவற்றை அறியலாம். இவ்வாறு, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும். இவற்றுள் சில குறைந்து வரும் ஆனால் காலத்தைத் தெளிவாகக் காட்டும். இவற்றையும் பார்க்கவும் குறிப்பு வினைமுற்று வினைச்சொல் தமிழ் இலக்கணம் பகுப்பு:சொல்லிலக்கணம்
குறிப்பு வினைமுற்று
https://ta.wikipedia.org/wiki/குறிப்பு_வினைமுற்று
பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி செய்பவன் கருவி நிலம் செயல் காலம் செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று எனப்படும் எடுத்துக்காட்டு அவன் பொன்னன்பெற்றது. எ.கா:அவன் பொன்னன். இத்தொடரில் பொன்னன் என்பது பொன்னையுடையன் என்று பொருள் தரும். பொன்னன் - பொருள் ஆரூரன் - இடம் ஆதிரையான் - காலம் கண்ணன் - சினை கரியன் - குணம் நடையன் - தொழில் இவ்வாறு பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனாகிய கருத்தாவை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும். இவற்றையும் பார்க்கவும் தெரிநிலை வினைமுற்று வினைச்சொல் தமிழ் இலக்கணம் பகுப்பு:சொல்லிலக்கணம்
பவேரியா
https://ta.wikipedia.org/wiki/பவேரியா
பவேரியா (Bavaria) ஜெர்மனியின் தென்கோடியில் அமைந்துள்ள பதினாறு ஜெர்மானிய மாநிலங்களுள் ஒன்று. இது 70,550.19 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இதுவே பரப்பளவு அடிப்படையில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் தலைநகரம் மியூனிக் ஆகும். மேலும் இது ஜெர்மனி நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும். நியூரம்பெர்க் இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம் ஆகும். ஜெர்மனி நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. இங்கு சுமார் 12.9 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். பவேரியா மாநிலம் ,தொடக்கத்தில் உரோமைப் பேரரசின் பெரிய நிலப்பகுதியாக கிமு 6-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தது. பின் ஜெர்மனியின் தனி மாநிலமாக உருவானது. பவேரியா மக்கள் தங்களுக்கு எனத் தனிக் பண்பாடுகளைக் கொண்டுள்ளனர். இந்த மாநிலத்தில் பெரும்பான்மையான சுமார் 52 விழுக்காடு மக்கள் கத்தோலிக்க திருச்சபையைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அக்டோபர் திருவிழா முதலிய திருவிழாக்கள் இங்கு கொண்டாடப்படுகிறது. ஜெர்மனி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்த மாநிலம் உள்ளது. இதன் மூலம் வளமான மாநிலமாக இது கருதப்படுகிறது. வரலாறு தொன்மைக்காலம் பவேரியாக்கள் வடக்கு ஆல்ப்ஸ் இல் தோன்றியதாக அறியப்படுகிறது. அதற்கு முன்பாக உரோமைப் பேரரசுவின் மாகாணங்களான இரேத்சியா மற்றும் நோரிகம் போன்ற மாகாணங்களில் வசித்துவந்தனர். பவேரியாக்கள் தொன்மையான இடாய்ச்சு மொழியைப் பேசினர். பவேரியன் என்பதற்கு பயாவின் ஆண்கள் என்பது பொருளாகும். இவர்கள் முதன் முதலில் எழுத்துப்பூர்வமாக அறியப்பட்டது 17-ஆம் நூற்றாண்டில் தான். யூத வரலாற்று ஆசிரியர் டேவிட் சாலமன் கன்சு என்பவர் இவர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.Dovid Solomon Ganz, Tzemach Dovid (3rd edition), part 2, Warsaw 1878, pp. 71, 85 (available online ) நிலவியல் பவேரியா மாநிலம் தனது எல்லைகளை ஆஸ்திரியா, செக் குடியரசு, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுடன் பங்கிட்டுக்கொள்கிறது. தன்யூப் ஆறு மற்றும் முக்கிய ஆறு (மெயின் ஆறு) இந்த மாநிலத்தின் வழியாக செல்கிறது. மொழிகள் , கிளை மொழி மூன்று ஜெர்மன் கிளை மொழிகளில் பவேரியா மக்கள் பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் வாழ்கிற மக்கள் தொமையான பவேரிய மொழி பேசுகின்றனர். பவேரியாவின் தென் கிழக்கில் வசிக்கும் மக்கள் சுவாபியன் ஜெர்மன் எனும் கிளை மொழியையும், வடக்குத் திசையிலுள்ள மக்கள் கிழக்கு ஃப்ரேன்கொனைன் ஜெர்மன் எனும் கிளை மொழியில் பேசினர். விளையாட்டு பவேரிய மாநிலத்தில் பல காற்பந்துச் சங்கங்கள் உள்ளன. குறிப்பாக பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம், எஃப் சி நியூரம்பெர்க், 1.எஃப் சி ஔசுபூர்கு, டி எஸ் வி 1860 மியூனிக் . இதில் பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம் மிகவும் பிரபலமானது. இந்தக் கழகம் இருபத்தி ஏழு முறைகள் ஜெர்மனியின் வாகையாளர் கோப்பையில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்த படியாக 1. எஃப் சி நியூரம்பெர்க் ஒன்பது முறையும், டி எஸ் வி 1860 மியூனிக் கழகம் ஒரு முறையும் பெற்றுள்ளன. பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம் ஐந்து முறை யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு போட்டியிலும், ஜெர்மன் வாகையாளர் போட்டியில் இருபத்தி ஏழு முறைகளும் வெற்றி பெறுள்ளன. புகழ்பெற்ற பவேரியாக்கள் அறிவியல் அறிஞர்கள் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான இயற்பியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படும் மேக்ஸ் பிளாங்க், எக்சு-கதிர் அலைகளைக் கண்டறிந்த வில்லெம் ரோண்ட்கன், குவாண்டம் இயங்கியலைத் தோற்றுவித்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான வெர்னர் ஐசன்பர்க், ஆதம் ரைஸ் . மதத் தலைவர்கள் உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவரான திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், போப் தமாசஸ் II, போப் விக்டர் II இவற்றையும் பார்க்க பவேரிய மொழி இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள் சான்றுகள் வெளி இணைப்புகள் பவேரியாவில் உள்ள தேவாலயங்கள் பவேரியா சுற்றுலாத்துறை பவேரிய அரசு இணையத்தளம் பகுப்பு:செருமானிய மாநிலங்கள்
பெயரெச்சம்
https://ta.wikipedia.org/wiki/பெயரெச்சம்
பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். அப்பெயரெச்சம் இருவகைப்படும். அவை தெரிநிலைப் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் பெயரெச்சச் சொற்கள் அகரவோசையையோ உம் என்னும் ஓசையையோ கொண்டு முடியும். தெரிநிலைப் பெயரெச்சம் காலத்தையும் செயலையும் உணர்த்திநின்று, அறுவகைப் பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சவினைச்சொல் தெரிநிலைப் பெயரெச்சம் ஆகும் எ.கா: படித்த மாணவன் படிக்கின்ற மாணவன் படிக்கும் மாணவன் இத்தொடர்களில் படித்த, படிக்கின்ற, படிக்கும் என்னும் சொற்கள் பொருள் முடிவு பெறவில்லை. அவை முறையே முக்காலத்தையும், படித்தல் என்னும் செயலையும் உணர்த்திநின்று மாணவன் என்னும் பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிந்துள்ளன. இவ்வாறு, காலத்தையும் செயலையும் உணர்த்திநின்று, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறு பொருட்பெயருள் ஒன்றினைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் எனப்படும். குறிப்புப் பெயரெச்சம் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் எச்சச் சொல் குறிப்புப் பெயரெச்சம் ஆகும். எ.கா: நல்ல மாணவன் அழகிய மலர் நல்ல, அழகிய என்னும் சொற்கள் காலத்தையோ செயலையோ உணர்த்தாமல் பண்பினை மட்டும் உணர்த்தி நின்று, பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிந்துள்ளன. காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது, குறிப்பினால் மட்டும் உணர்த்துவதால் இது குறிப்பு பெயரெச்சம் ஆகும். இவற்றையும் பார்க்கவும் வினையெச்சம் வினைச்சொல் தமிழ் இலக்கணம் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் பகுப்பு:வினைச் சொல்
வினையெச்சம்
https://ta.wikipedia.org/wiki/வினையெச்சம்
தமிழில் பத்து வகையான எச்சங்கள் உண்டு. அவற்றில் ஒன்று வினையெச்சம் (வினை+எச்சம்). வினையெச்சம் என்பது ஒரு வினைமுற்றினை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். வினையெச்சம் இருவகைப்படும். அவை, தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என்பன. எ.கா : படித்து வந்தான். மெல்ல நடந்தான். வினையெச்சச் சொற்கள் பொதுவாக இ அல்லது உ ஆகிய ஓசைகளைக் கொண்டு முடியும். தெரிநிலை வினையெச்சம் ஒரு வினையெச்சத் தொடரில் காலத்தையும் செயலையும் உணர்த்தி நின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் தெரிநிலை வினையெச்சம் எனப்படும் எ.கா: படித்துத் தேறினான் குறிப்பு வினையெச்சம் ஒரு வினையெச்சத் தொடரில் காலத்தை வெளிப்படையாக உணர்த்தாமல், பண்பினை மட்டும் உணர்த்திநின்று, ஒரு வினைமுற்றினைக் கொண்டு முடிவுறும் எச்சவினைச்சொல் குறிப்பு வினையெச்சம் எனப்படும் எ.கா: மெல்ல நடந்தான் வினையெச்சப் புணர்ச்சி பொதுவாக வல்லினம் வந்து புணரும்போது குற்றியலுகரத்தில் முடியும் வினையெச்சங்களில் மென்தொடர், இடைத்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலைமொழியாக நிற்க வருமொழியில் வல்லினம் வந்தாலும் ஒற்று மிகா. ஏனைய அனைத்து வகையான வினையெச்சங்களும் இடையொற்று மிக்கே முடியும். வினையெஞ்சு கிளவி வல்லெழுத்து மிகும் (தொல்காப்பியம் உயிர் மயங்கியல் 2) எடுத்துக்காட்டு மிகாதன நடந்து போனான் - மென்-தொடர்க் குற்றியலுகரம் முன்னர் ஒற்று மிகவில்லை. செய்து பார்த்தான் - இடைத்தொடர்க் குற்றியலுகரம் முன்னர் ஒற்று மிகவில்லை. மிகுவன பார்த்துப் படித்தான் - வன்-தொடர்க் குற்றியலுகரம் முன்னர் ஒற்று மிகுந்தது. மெல்லப் பேசு - குறிப்பு வினையெச்சம் முன்னர் ஒற்று மிகுந்தது. செய்யச் சொன்னான் - 'அ' எழுத்தில் முடியும் வினையெச்சம் முன் ஒற்று மிகுந்தது. செய்யாக் கிடந்தான் - 'ஆ' எழுத்தில் முடியும் வினையெச்சம் முன் ஒற்று மிகுந்தது. ஓடிப் போனான் - 'இ' எழுத்தில் முடியும் வினையெச்சம் முன் ஒற்று மிகுந்தது. இகர இறுதி வினையெஞ்சு கிளவி (தொல்காப்பியம் உயிர் மயங்கியல் 34) செய்யூஉக் கிடந்தான் - 'ஊ' எழுத்தில் முடியும் வினையெச்சம் முன் ஒற்று மிகுந்தது. ஊகார இறுதி வினையெஞ்சு கிளவி (தொல்காப்பியம் உயிர் மயங்கியல் 63) சில குறியீடுகள் செய்யிய என்பது வினையெஞ்சு கிளவிகளில் ஒன்று (தொல்காப்பியம் உயிர் மயங்கியல் 8) செய்யா என்னும் வினையெஞ்சு கிளவி (தொல்காப்பியம் உயிர் மயங்கியல் 20) இன்றி என்னும் வினையெஞ்சு கிளவி (தொல்காப்பியம் உயிர் மயங்கியல் 35) செயின் - னகர இறுதி வினையெஞ்சு கிளவி (தொல்காப்பியம் புள்ளி மயங்கியல் 38) இவற்றையும் பார்க்கவும் பெயரெச்சம் வினைச்சொல் தமிழ் இலக்கணம் அடிக்குறிப்பு பகுப்பு:வினைச் சொல்
சுரங்களின் அறிவியல்
https://ta.wikipedia.org/wiki/சுரங்களின்_அறிவியல்
தென்இந்திய இசையில் மட்டுமல்லாமல் அனைத்து இசைகளுக்கும் சுரங்கள் இன்றியமையாதவை. இத்தகைய சுரங்களின் அறிவியல் அம்சங்கள் இக் கட்டுரையில் எடுத்தாளப்படுகின்றன. மேற்கத்திய இசையை எடுத்துக் கொண்டால், சுரங்கள், 'நோட்' என்று வழங்கப்படுகின்றன. பியானோ அல்லது கீபோர்ட் ஒன்றில் இருக்கும், கருப்பு மற்றும் வெள்ளைக் கட்டைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு 'நோட்'-டைக் குறிக்கும். சுரங்களின் குறியீடு மேற்கத்திய சுரங்கள் 'A', 'B', 'C' ,... போன்ற குறியீடுகளால் வழங்கப்படுகின்றன. எழுத்து வடிவத்தில் 'A', 'B', 'C' ,... என்று குறிப்பிட்டாலும் பாடும்போது சுரங்களை குறிப்பதற்கு 'டோ', 'ரி', 'மி', 'ஃபா', 'ஸோ', 'லா', 'தீ' என்று வழங்குகிறார்கள். இவை முறையே, 'ஸ', 'ரி', 'க', 'ம', 'ப', 'த', 'நி' ஆகிய சுரஸ்தானங்களுக்கு சமானமாகும். அறிவியல் பின்னணி இந்த சுரங்களின் அதிர்வெண்ணின் பின்னணியில் சுவாரஸ்யமான கணிதமும், இயற்பியலும் இருக்கிறது! அதிர்வலைகளின் நிறமாலையில் (spectrum), ஒரு சிறு பகுதி மட்டுமே மனிதனின் காதுகளால் கேட்கக்கூடிய ஒலியினை எழுப்பக் கூடியவை. இவற்றின் அதிர்வெண் 16 Hz முதல் 16,000 Hz வரை. அவற்றில் 1000 Hz முதல் 16,000 Hz வரையுள்ள பகுதியில்தான் காதுகளும், ஒலியை புரிந்துகொள்ள மூளையும் நன்றாக உணர முடியும். அதிலும் அதிலுள்ள ஒவ்வொரு அதிர்வெண் ஒலியையும் நம் காதுகளால் வேறுபடுத்தி அறிய இயலாது. எடுத்துக்காட்டாக அதிர்வெண் 240 Hz ஒலிக்கும், 241 Hz ஒலிக்கும் வேறுபாடு எதுவும் நம் கேள்வியில் தெரியாது. ஒலிநிறமாலையை எண்மங்களாகப் (octave) பிரித்துக் கொள்ளலாம். மனிதர்களால் கிட்டத்தட்ட மூன்று முதல் ஐந்து எண்மங்களில் ஒலி எழுப்ப முடியும். எண்மங்களின் தொடக்க அதிர்வெண் f1 என்றால், முடியும் அதிர்வெண் தொடங்கிய அதிர்வெண்ணின் இரண்டு மடங்காக, 2 x f1 ஆக இருக்கும். விளக்குவதற்காக வேண்டி, ஒரு எண்மத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஒரு எண்மத்தில் இருக்கும் ஒலி அதிர்வுகளை அதிர்வெண் வாரியாக பிரித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு அதிர்வெண்ணுக்கும் இடைவெளி, 1.059 இன் மடங்கு என்று வைத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு, ஒரு ஒலி அதிர்வின் எண் 240 Hz என்றால், அதற்கு அடுத்த அதிர்வெண், 240 x 1.059 = 254 Hz ஆக இருக்கும். இப்படியே, 240,254,269,...என்று, பன்னிரெண்டு வரை செல்லும், பதிமூன்றாவது மடங்கு, தொடங்கிய 240 Hz க்காட்டிலும் இரண்டு மடங்காக இருக்கும்!. அதன் பின் அடுத்த ஆக்டேவ் துவங்கும். ஆக, ஒரு எண்மத்தில் 12 அதிர்வெண் ஒலிகள். இதிலிருந்து 12 என்னும் எண்ணுக்கும் சுரங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள ஒற்றுமையை அறிந்துகொள்ளலாம். 12 சுரங்களின் அதிர்வெண் இடைவெளியும் 1.509 Hz இன் மடங்குகள்தான். மேற்கத்திய சங்கீதத்தில் மேற்சொன்ன பன்னிரெண்டு அதிர்வெண் கணக்கும், 240 Hz போன்றதொரு நிலையான அதிர்வெண் ஆக்டேவ் தொடக்கமும் பின்பற்றப்படுகிறது. இந்திய சங்கீதத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. மேலும் இதை முதல் நிலையாக கொண்டு அதற்கு மேல் ‘கமகம்’ என்ற சொல்லப்படும் வழிமுறையையும் சேர்த்து, அடுத்த நிலையில் பயணிக்கிறார்கள். இம்முறை 16ஆம் நூற்றாண்டு பிரெஞ்சுச் சங்கீதத்திலும் இருந்ததாக சொல்லப்படுகிறது. எளிமை வேண்டி, அவை மேற்கத்திய சங்கீத வழக்கத்தில் அவ்வளவாக இல்லை. (Beatles, Simon போன்றவர்களின் ஆல்பங்களில் அவ்வப்போது காணலாம்). பகுப்பு:இசை
லீ குவான் யூ
https://ta.wikipedia.org/wiki/லீ_குவான்_யூ
லீ குவான் யூ (Lee Kuan Yew, 16 செப்டம்பர் 1923 - 23 மார்ச்சு 2015) சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார். இவரை சிங்கப்பூரின் தந்தை எனச் சொல்லுவர். இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார். நவம்பர் 12 ஆம் நாள் 1954 ஆம் வருடம் மக்கள் செயல் கட்சியை நிறுவினார். 1959 முதல் 1990 வரை இவரது மக்கள் செயல் கட்சியை 7 முறை வெற்றிபெற வைத்தவர்.1990 - ல் மக்கள் செயல் கட்சியின் கோ சோக் தோங்கு பிரதமராக இருக்கும் போது இவர் அதில் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார். சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங், இவரின் மகன் ஆவார். லீ குவான் யூ பிரதமர் ஆட்சியில் இருந்து விலகிய பின்னரும் சிங்கப்பூரின் மிக முக்கியமான அரசியல்வாதியாக இருக்கிறார். பின்னர் 2004 முதல் 2011 வரை இவருக்காகவே உருவாக்கப்பட்ட மதியுரை அமைச்சர் (Minister Mentor) பதவியில் பணியாற்றினார். சிங்கப்பூர் சுதந்திரத்திற்கு முன்னான 1948 ஆம் ஆண்டு தேர்தலில் ' தஞ்சோங் பாகர் ' தொகுதியில் வென்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1959 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இவரின் மக்கள் செயல் கட்சி மொத்தமுள்ள 51 இடங்களில் 43 இடங்களில் வெற்றி பெற்றது. இவ்வெற்றியினால் 'லி குவான் யூ' ஜூன் 3 ஆம் நாள் 1959 -இல் பிரதமராகப் பொறுப்பேற்றார். குடும்பம் லீ குவான் யூ, அவரின் வாழ்க்கை வரலாற்றில் தான் நான்காவது தலைமுறைச் சிங்கப்பூர்காரர் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் மூதாதையார் லீ போக் பூன், 1846ஆம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்தொங் மாகாணத்தில் இருந்து வெளியேறி சிங்கப்பூரின் நீரிணைக் குடியேற்றத்துக்கு (Strait settlements) 1863ல் வந்ததாக கூறி உள்ளார். லீ குவான் யூவின் தாத்தா லீ ஹூட் லாங் 1871ல் சிங்கப்பூரில் பிறந்தவராவார். லீ குவான் யூ வழக்கறிஞர் படிப்பை முடித்தவர். லீயின் குடும்பத்தினர் பலர் சிங்கப்பூர் சமூகத்தில் முக்கியப் பதவிகளில் உள்ளனர். அவரது இளைய மகன், லீ ஹசைன் யாங், முன்னாள் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் முன்னாள் தலைவராக இருந்துள்ளார் மற்றும் மேலும் சிங்டெல் நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்துள்ளார். இளமைக் காலம் லீ சிங்கப்பூரில் 92 கம்போங் ஜாவா சாலை 1923-இல் ஒரு பிரித்தானியக் குடிமகனாகப் பிறந்தார். லீ முதன் முதலில் டெலோக் குராவோ முதன்மைப் பள்ளியில் படித்துள்ளார். பின்னர் அவர் ராஃபிள்ஸ் நிறுவனத்தில்(RI) பயின்றார். அவர் இந்நிறுவனத்திற்காக கிரிக்கெட், டென்னிஸ், சதுரங்கம் விளையாடி பல விவாதங்களில் பங்கு கொண்டுள்ளார். லண்டனில் படிப்பு முடித்து அவர் 1949ல் சிங்கப்பூர் திரும்பினார். விருதுகள் அரசு மரியாதைகள் தி ஆர்டர் ஆப் தி ரைசிங் சன் (1967) ஆர்டர் ஆப் கம்பேனியன்ஸ் ஆப் ஹானர் (1970) கனைட் கிரான்ட் கிராஸ் ஆப் செயின்ட் மைக்கேல் மற்றும் புனித ஜார்ஜ் (1972) தி ப்ரிடம் ஆப் தி சிட்டி ஆப் லன்டன் (1982) தி சேரி பாதுகா மாஹகோடா ஜோர் (1984) தி ஆர்டர் ஆப் கிரேட் லீடர் (1988) 2002 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆய்வு முயற்சிகள் வளர்ச்சிக்காக லீ முறையாக சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழிற்துறையில் தனது பதவி உயர்வு அங்கீகாரமாக இம்பீரியல் காலேஜ் லண்டன் பெல்லோஷிப்பிற்கு அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை லீ குவான் யூ, 05 பெப்ரவரி2015 அன்று நிமோனியா காரணமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமாக உள்ளதாக அரசு அறிவித்தது.https://sg.news.yahoo.com/singapores-founding-leader-lee-worsens-critically-ill-govt-061845324.htmlhttp://www.straitstimes.com/news/singapore/more-singapore-stories/story/lee-kuan-yew-remains-critically-ill-condition-has-deterihttp://www.dinamalar.com/news_detail.asp?id=1210146 2015ஆம் ஆண்டு மார்ச்சு 22ந்தேதி மருத்துவமனையில் மரணமடைந்தார் சிங்கப்பூர் நேரம் ஞாயிறு (23 மார்ச்சு) அதிகாலை 3.18 மணி அளவில் இறந்தார்.http://www.bbc.co.uk/tamil/global/2015/03/150322_singaporelee இறுதிச் சடங்கு லீ குவான் யூவின் மறைவை ஒட்டி மார்ச்சு 23 முதல் மார்ச்சு 29 வரை ஒரு வாரகாலம் தேசிய அளவில் துக்க வாரமாக சிங்கப்பூர் அரசு கடைபிடிக்கப்பட்டது. லீ குவான் யூவின் குடும்பத்தினர் அவருக்கு மார்ச்சு 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் மார்ச்சு 25 முதல் மார்ச்சு 28 வரை அஞ்சலி செலுத்தினர். இதில் கிட்டத்தட்ட 4,15,000 பொதுமக்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வந்து நேரடியாக அஞ்சலி செலுத்தினர். இது மொத்த மக்கட்தொகையில் 12 விழுக்காடு ஆகும். அரசு முறையிலான இறுதிச் சடங்கு மார்ச்சு 29 அன்று பிற்பகல் இரண்டு மணிக்குத் தேசிய பல்கலைக்கழக கலாச்சார மையத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில் மண்டாய் தகனச் சாலையில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.http://yahoosg.tumblr.com/leekuanyew மேலும் நரேந்திர மோதி, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், இங்கிலாந்து நாடாளுமன்ற செயலாளர் வில்லியம் கக் உள்பட 23 நாட்டு தலைவர்கள் லீ இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். இந்தியாவில் லீ குவான் யூவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியாவில் 29 மார்ச்சு 2015 அன்று துக்க தினமாக கடைபிடிக்கப்பட்டது. மேலும் இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்டார். மேலும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. மேற்கோள்கள் பகுப்பு:சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் பகுப்பு:1923 பிறப்புகள் பகுப்பு:2015 இறப்புகள் பகுப்பு:சிங்கப்பூரின் பிரதமர்கள்
சோழர்
https://ta.wikipedia.org/wiki/சோழர்
சோழர் (Chola dynasty) என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும், பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து' என்பது பழமொழி. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர்.ஞா.தேவநேயப் பாவாணர், பண்டைத்தமிழ நாகரிகமும் பண்பாடும் (1966), பக்17, http://tamilvu.org/library/libindex.htm சேரர், பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத் தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. பொ.ஊ. 13-ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது. பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில் கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினார். 9-ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழரும், அவரது மகனான முதலாம் இராசேந்திர சோழரும், தற்போதய இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர். பொ.ஊ. 10-12 ஆம் நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் சாவா, சுமத்ரா, மலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன், தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தார். இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம், சிரீவிசயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. பண்டைய கால அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர். சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சோழர் சூடும் மலர் ஆத்தி. தோற்றமும் வரலாறும் சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை .பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குடிகள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ இயலவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற செய்திகள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பவை ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன. முற்காலச் சோழர்கள் இன்றைய தஞ்சை, திருச்சி உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்களை தன்னகத்தே கொண்டது சோழ நாடு. இந்நாடு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி என்பவனாவான். இவனை பரணர், கழாத்தலையார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். மற்றொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன். இவன் வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான்.அகநானூறு 375 ஆவது பாடல்: .....எழாஅத் திணிதோள் சோழர் பெருமகன் விளங்குபுகழ் நிறுத்த இளம்பெருஞ் சென்னி குடிக்கடன் ஆகலின் குறைவினை முடிமார் செம்புஉறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக்..... முதலாம் கரிகாலன் thumbnail|left|350px|கரிகால் சோழன் காலத்துச் சோழ நாடு. பொ.ஊ. 120 கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். கரிகாலன் முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. இவன் இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான்.Purananuru – 266 கரிகால சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே,தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான்.கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று. கரிகாலன் சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான்.History of ancient India, page 478: ..raising the banks of the Kaveri by Parakesari Karikala Chola<ref name="Proceedings of the Indian History Congress, Volume 39, page 156">Proceedings of the Indian History Congress, Volume 39, page 156</ref> பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான அரச பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர். கரிகாலன் சிறையில் சிறைக்காவலரரைக் கொன்று தப்பித்தான், பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான். கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனுடைய அம்பு சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று கூறுகிறது. பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை" விளங்குகிறது. இவன் இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது. பிற சோழ மன்னர்கள் இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி, போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்ட கோப்பெருஞ்சோழன், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி, குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். மேலும் நல்லுருத்திரன், கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணான் ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. இடைக்காலச் சோழர்கள் களப்பிரர் வருகை thumb|left|முதலாம் இராசராச சோழன் சிலை, தஞ்சைப் பெருவுடையார் கோயில், தஞ்சாவூர். பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் களப்பிரர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்த கன்னட நாட்டிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர். பொ.ஊ. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த உக்கிரபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும் களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது. நாட்டில் தெளிவற்ற பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்களைப்பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடித்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும். இவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மன்னன், அச்சுதவிக்கிராந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன் ஆவான். பொ.ஊ. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியரான அமிர்தசாகரர் இவனைப்பற்றிய சில பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார். இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாய் இருக்கக்கூடும். பழையாறை சோழர்கள் தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளில் குறிப்பாக உறையூர், பழையாறை நகரங்களிலிருந்து சோழ நாட்டின் சிலபகுதிகளை மட்டும் ஏறத்தாழ இருநூறாண்டுகள் புகழ் மங்கிய நிலையில் ஆண்டு வந்தனர். இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாகக் கூறும்போது, காவிரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்றுச் செய்திகளைத் தரவில்லை. இசை வெங்கிள்ளி பொ.ஊ. 300–330 கைவண்கிள்ளி பொ.ஊ. 330–350 பொலம்பூண்கிள்ளி பொ.ஊ. 350–375 கடுமான்கிள்ளி பொ.ஊ. 375–400 இரண்டாம் கோச்சோழன் செங்கணான் பொ.ஊ. 400–440 நல்லடி சோழன் பொ.ஊ. 440–475 பெயர் தெரியவில்லை பொ.ஊ. 476–499 மூன்றாம் கோச்சோழன் செங்கணான்சோழர் வரலாறு: மா. ராசமாணிக்கனார் பொ.ஊ. 499–524 புகழ்சோழன் பொ.ஊ. 524–530 மூன்றாம் கரிகாலன் பொ.ஊ. 530–550 அரசநாட்டுச் சோழர்கள் thumb|தஞ்சைப் பெருவுடையார் கோயில் கோபுரம் thumb|தஞ்சைப் பெருவுடையார் கோயில் வாயில் களப்பிரர் மற்றும் முத்தரையர் ஆதிக்கத்தின் காரணமாகச் சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில், மூன்றாம் கரிகாலன் களப்பிரர், முத்தரையர் ஆகியோரை விரட்டியதோடு, பல்லவ மன்னனான திரிலோசன பல்லவனை வெற்றி கொண்டு தொண்டை நாட்டை கைப்பற்றினான். ஆனால், கரிகாலனின் மறைவிற்குப் பின் பொ.ஊ. 550 இல் பல்லவ மன்னன் சிம்மவிட்டுணு சோழர்களை தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தான். இக்காலத்தில் சோழர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி பல்லவருக்கு அடங்கிய வட தமிழக தென் ஆந்திரநாட்டு எல்லைப் புறங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அதன்படி மூன்றாம் கரிகாலனின் புதல்வனான நந்திவர்மச் சோழன் வேங்கடமலைக்கு வடக்கே கடப்பை, சந்திரகிரி, அனந்தபுரம், கோலார் பகுதிகளையும், வேங்கடத்திற்கு தெற்கே காளத்தி, நெல்லூர், திருப்பதி, சிற்றூர், புங்கனூர் பகுதிகளையும் ஆளத் தொடங்கினன். நந்திவரும சோழனுக்குப் பின் அவனின் புதல்வனான சிம்மவிட்டுணு சோழன் பல்லவரை எதிர்த்துப் போரிட்டு மாண்டான். அவனையடுத்து, அவனது தம்பியரான சுந்தரானந்த சோழன் மற்றும் தனஞ்செய சோழன் ஆகியோர் பல்லவருக்கு அடங்கி ஆளத் தலைப்பட்டனர். இவர்கள் பல்லவர்கள், சாளுக்கியர், மேலைக் கங்கர்கள், கீழைக் கங்கர்களோடு மணவுறவும் பூண்டனர். இவர்கள் அரசநாட்டுச் சோழர்கள் (ரேனாட்டுச் சோழர்கள்) என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர். அப்பகுதிகளில் காடுகளை அழித்து நெல்லூர், சிற்றூர், புங்கனூர், திருப்பதி போன்ற புதிய ஊர்களை உருவாக்கினர். பொ.ஊ. 550 இல் கருநாடகத்தை ஆண்ட கங்க அரசர்களில் ஒருவனான துர்விந்தன் என்ற சிறந்த மன்னனின் மனைவியார் ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம சத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள். நந்திவரும சோழன் பொ.ஊ. 550–575 தனஞ்செய சோழன் பொ.ஊ. 575–609 மகேந்திரவருமச் சோழன் பொ.ஊ. 609–630 புண்ணியகுமார சோழன் பொ.ஊ. 630–655 விக்கிரமாதித்த சோழன் பொ.ஊ. 650–680 சக்திகுமார சோழன் பொ.ஊ. 680–705 விக்கிரமாதித்த சோழன் II பொ.ஊ. 705–730 சத்தியாதித்தச் சோழன் பொ.ஊ. 730–755 விசயாதித்த சோழன் பொ.ஊ. 755–790 சிரீகாந்த சிரீமனோகர சோழன் பொ.ஊ. 790–848 புண்ணியகுமார சோழனின் ஆட்சிக் காலத்தில் வருகை தந்த'யுவான் சுவாங்' என்ற சீனப் பயணி இவர்கள் நாட்டை' சூளியே' என்றும் அவர்கள் தம்மைச் சோழன் கரிகாலன் பரம்பரையினரைச் சேர்ந்ததாகக் கூறிக்கொண்டனர் என்றும் குறிப்பிடுகிறார். இச்சோழப் பேரரசர்களின் சோழநாட்டு எல்லை, தான்ய கடகத்திற்கு தென்மேற்கே 200 கல் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அது 480 கல் சுற்றளவு கொண்டதாகவும் தலைநகரம் 2 கல் சுற்றளவு கொண்டதாகவும் அச்சீனப்பயணி தன் பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.தமிழக வரலாறும் பண்பாடும்/பல்லவர் காலச் சமுதாய மாற்றங்கள் பக் 106. சிற்றரசர்களான சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்தத் தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். பல குறுநில மன்னர்களோடு திருமணத் தொடர்பு கொண்டு இழந்த செல்வாக்கை சோழர்கள் மீட்க முயன்றனர். பல்லவருக்கு கீழடங்கி ஆண்ட சிற்றரசனான விசயாலய சோழன் என்பவன் பாண்டிய மேலாதிக்கத்திலிருந்து ஆட்சி செய்த முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தான். சிரீகாந்த சிரீமனோகர சோழனின் வழித்தோன்றல் விசயாலய சோழன் என சுந்தர சோழன் வெளியிட்ட அன்பில் பட்டயம் தெரிவிக்கின்றது. பிற்காலச் சோழர்கள் பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிய வெங்கையா, உல்ச், கிருட்டிணசாத்திரி ஆகியோர் தொகுத்த கல்வெட்டுகளும் மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகளும் வழி செய்கின்றன. அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தைச் செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெடன் செப்பேடுகள் ஆகியவை அவற்றுள் சில. இவை தவிர இலக்கிய, இலக்கணங்களும் கலிங்கத்துப்பரணி, மூவருலா, பெரியபுராணம், பன்னிரு திருமுறைகள், திவ்யசூரிசரிதம், வீர சோழியம், தண்டியலங்காரம் போன்ற நூல்களும் இக்காலத்தை அறிய உதவும் சன்றுகளாக உள்ளன. thumb|left|பிற்கால மற்றும் சாளுக்கிய சோழ மன்னர்களின் அட்டவணை விசயாலய சோழன் (பொ.ஊ. 850-871) பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த பாண்டியர்களுக்கும் இடையில் போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது.பழையாறையில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன், பொ.ஊ. 850-இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த முத்தரையர்களைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான்.அது முதல் பொ.ஊ. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது. இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் பொ.ஊ. 871 இல் இறந்தான். முதலாம் ஆதித்த சோழன் (பொ.ஊ. 871-907) விசயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். 'முதலாம் ஆதித்தன்' என்று அழைக்கப்படும் அரசியல் ஆற்றலும் போர்த்திறமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். பொ.ஊ. 880-ல் பல்லவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக நிருபத்துங்க பல்லவனுக்கும் பல்லவன் அபராசிதனுக்கும் இடையே திருப்புறம்பியம் என்னும் ஊரில் போர் நிகழ்ந்தது. இப்போரில் அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தன், [[மேலைக் கங்கர்|கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் துணை நின்றனர். நிருபத்துங்க பல்லவனுக்கு பாண்டியன் வரகுணன் துணை நின்றான். இப்போரில் அபராசிதன் வெற்றிபெற்றான். பிருதிவிபதி மரணமடைந்தான். தோல்வியுற்ற பாண்டியன் தன் நாடு திரும்பினான். திருப்புறம்பியப் போர் சோழநாட்டின் எதிர்காலத்திற்குப் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராசிதனுக்கு எதிராக நின்ற பாண்டியர்கள், வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். இவற்றை ஆதித்தன் கைப்பற்றினான். அபராசிதனும் சோழர்களுக்குச் சில ஊர்களைப் பரிசாக அளித்தான். அக்காலத்தில் சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் இருந்தது. மனம் கொதித்து அதை மீட்கும் முயற்சிகளில் ஆதித்தன் ஈடுபட்டான். பல்லவர் மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராசித பல்லவனைக் கொன்று தொண்டை மண்டலத்தையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் கங்கர் நாட்டிலும், கொங்கு நாட்டிலும் பரவியிருந்தது. சேர நாட்டுடனும், இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுகளுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான். முதலாம் பராந்தக சோழன் (பொ.ஊ. 907-955) பொ.ஊ. 907 இல் முதலாம் ஆதித்த சோழனை அடுத்து அரசனானவன் பராந்தக சோழன். இக்காலத்தில் சோழப் பேரரசு வடக்கே காளத்தி முதல் தெற்கே காவிரி வரை பரவியிருந்தது. இவனும் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக் கன்னியாகுமரி வரை பரந்த பாண்டிநாட்டை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான்.உலக வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் இவனே ஆவான்தமிழக வரலாறும் பண்பாடும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம், பக். 145.. இவன் காலத்தில் குடவோலை முறையில் கிராம சபை உறுப்பினர், கிராம சபைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை, அமைக்கும் முறை, கிராம ஆட்சிமுறை பற்றிய விவரங்களை உத்திரமேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. இவன் காலத்துக்குப் பின்னும் சோழர் ஆட்சி 300 ஆண்டுகள் வரை தொடர்ந்தது. கண்டராதித்த சோழன் (பொ.ஊ. 955-962) பிற்காலத்தில் இராட்டிரகூடருடன் ஏற்பட்ட போரில் அவனது மகன் இராசாதித்தர் இறந்ததைத் தொடர்ந்து சோழநாட்டின் விரிவு வேகம் தணியத் தொடங்கியது. இராட்டிரகூடர்கள் சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது மகன் கண்டராதித்தன் பொ.ஊ. 950-இல் சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான். ஆனாலும் இவனது ஆட்சியும் குறுகிய காலமே நிலைத்தது. இவன் காலத்தில், இராட்டிரகூடர் சோழ நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள, பாண்டியர்களும் சோழர்களின் கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர். சிவ பக்தனான கண்டராதித்தன் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. இவன் மனைவி செம்பியன் மாதேவி எடுத்த கோயில்கள் சோழ நாட்டில் இன்றும் பல உள்ளன. இவன் காலத்தில் தொண்டை மண்டலம் முழுவதும் இராட்டிரகூடர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்தது. அரிஞ்சய சோழன் (பொ.ஊ. 962-963) கண்டராதித்தனை அடுத்து அவன் தம்பி அரிஞ்சயன் சோழ அரசனானான். முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகனான இராசாதித்தன் திருக்கோவிலூரில் இராட்டிரகூட மன்னனை எதிர்க்கப் படையுடன் தங்கியிருந்த போது அவனுக்குத் துணைபுரிய இவனும் தங்கியிருந்த சிறப்புடையவன். இராட்டிர கூடன் கைப்பற்றிய தொண்டை நாட்டைத் தான் மீட்க முயற்சிகள் செய்தான். இடையில் சிறிது காலமே ஆட்சி புரிந்த அரிஞ்சய சோழனும் குறுகிய காலத்தில் போரில் மடிந்தான். சுந்தர சோழன் (பொ.ஊ. 957-973) சோழ நாட்டின் இழந்த பகுதிகளை மீட்பதில் வெற்றி பெற்றவன் 957 இல் பட்டத்துக்கு வந்த சுந்தர சோழன் ஆவான். இவன் இராட்டிரகூடர்களைத் தோற்கடித்தது தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியதுடன், பாண்டியர்களையும் வெற்றி கொண்டான். எனினும், பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் பகைவர் சூழ்ச்சியால் கொல்லப்பட்டான். ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக, இராசகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது. அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த அநிருத்த பிரமாதிராசன் என்பவன் இவனுக்கு அமைச்சராய் இருந்தவன். கருணாகர மங்கலம் என்ற ஊரினை இறையிலியாக அவனுக்கு அளித்த செப்பேடுகளே அன்பில் செப்பேடுகள் ஆகும். உத்தம சோழன் (பொ.ஊ. 970-985) thumb|right|உத்தம சோழன் காலத்து வெள்ளிக்காசு. இலங்கையில் கண்டெடுக்கப்பட்டது. பொ.ஊ. 973 இல் சுந்தரசோழன் இறந்த பின்பு, அவன் மகன் இராசராசன் மன்னனாகவில்லை. கண்டராதித்தனின் மகனும் இராசஇராசனின் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழன் அரசுரிமை பெற்றான். இவனுக்கு முன்னதாகவே கிடைத்திருக்கவேண்டிய அரசுரிமை நீண்ட காலம் மறுக்கப்பட்டிருந்ததாகவும் வேறு சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவன் காலத்தில் நாடு அமைதியுடன் இருந்தது. உத்தம சோழனின் செப்பேட்டிலிருந்து அக்காலத்தில் வரிவடிவில் இருந்த தமிழ் எழுத்துக்களின் தன்மையை அறியலாம். புலியுருவம் பொறித்து உத்தமசோழன் என்று கிரந்த எழுத்துகளைத் தாங்கிய நாணயம் இவன் காலத்து வரலாற்றுச் சான்றாகும். இராசராச சோழன் (பொ.ஊ. 985-1014) பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராசராச சோழன் மன்னனானான். இவனுக்கு அருள்மொழிவர்மன், ரிசிவர்மன் என்று பெயர்கள் வழங்கப் பட்டதாக அழகர் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியப்படுகிறது. இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன. காந்தளூர்ச் சாலை இவற்றுக்காக இராசராசன் நடத்திய போர்கள் பல. சேரர், பாண்டியர், சிங்களவர், ஒன்று கூடி காந்தளூர்ச் சாலை என்ற இடத்தில் சோழரை எதிர்த்தனர். இப்போரில் சேர மன்னன் பாசுகர ரவிவர்மனைத் தோற்கடித்தான். சேர மன்னனுடைய கப்பற்படையை அழித்து உதகை, விழிஞம் ஆகிய பகுதிகளையும் வென்றான். இப்போரில், சேரருக்கு உதவுவதற்காகச் சென்ற பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனை வென்று, இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத் தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. கொல்லம் சென்று சேரனுடன் இரண்டாவது முறைப் போர் புரிந்து சேர நாட்டின் எஞ்சிய பகுதிகளையும் வென்றான். கங்கபாடி, நுளம்பாடி thumb|right|சோழப் பேரரசின் எல்லைகள். பொ.ஊ. 1014 சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து கங்கபாடியைக் (மைசூரின் தென்பகுதியும் சேலம் மாவட்டத்தில் வட பகுதியும் அடங்கிய நாடு) கைப்பற்றினான். தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு கங்கர்கள் இந்நாட்டை ஆண்டனர். மைசூர் நாட்டின் கீழ்ப்பகுதியும் பல்லாரி மாவட்டமும் கொண்ட நுளம்பாடியைப் பல்லவர்களின் வம்சத்தவராகிய நுளம்பர்களுடன் போரில் வென்று இப்பகுதியைக் கைப்பற்றினான். இப்போர்களில் தலைமை ஏற்று நடத்தியவன் இராசராசனின் மகனான முதலாம் இராசேந்திரன் ஆவான். சாளுக்கிய நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். துளுவர், கொங்கணர், தெலுங்கர், இராட்டிரகூடர் ஆகியோரை வென்று வடக்கே வங்காளம் வரை இவனது படைகள் சென்று போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. ஈழத்துப் போர் இராசராசன் வலிமை மிக்கக் கடற்படையைக் கொண்டு இலங்கையை வென்றான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய ஈழம் 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது. இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரம் போரில் அழிந்தது. 'சனநாத மங்கலம்' என்று புதிய பெயர் சூட்டப்பட்டு 'பொலன்னருவை' ஈழத்தின் புதிய தலைநகராயிற்று. இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின் பெயர் ராசராச பெரும்பள்ளி. ராசராசசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரை அக்காலத்தில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இராசேந்திரன் 'வானவன் மாதேச்சுரம்' என்ற பெயரில் இங்கு கற்றளி எடுத்தான். ஈழ மண்டலத்தில் உள்ள சில ஊர்களைத் தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு நிவந்தமாக அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள முந்நீர்ப் பழந்தீவு எனப்படும் இலட்சத்தீவுகள் மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்காசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது. முதலாம் இராசேந்திர சோழன் (பொ.ஊ. 1012-1044) இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன். இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர, கேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது. சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான். thumb|right|இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. பொ.ஊ. 1030 வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலத்தில் பெரும் பகுதி போர்கள் நிறைந்திருந்தது. வடநாட்டை வென்று பெற்ற கங்கை நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாகக் கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு தஞ்சைப் பெருவுடையார் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கம்' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான். பின்வந்த சோழ மன்னர்கள் முதலாம் இராசாதிராசன் இராசேந்திர சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் அவனது மகன் முதலாம் இராசாதிராசன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம், பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் கொப்பம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான். இரண்டாம் இராசேந்திரன் இவனைத் தொடர்ந்து அவன் தம்பி 'இராசேந்திரன்' என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன் எனப்படுகின்றான். கொப்பத்துப் போரில் தன் அண்ணன் மாண்டதும் படை நடத்திப் பகைவர்களை வென்றான். இவனது மகள் மதுராந்தகி பிற்காலத்தே குலோத்துங்கன் என்றழைக்கப்பட்ட இரசேந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாள். இவள் தஞ்சைப் பெரிய கோவிலில் இராசராசேச்சுவர நாடகம் நடத்த ஆண்டுக்கு 120 கலம் செல் நிவந்தமாக அளித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. பிற மன்னர்கள் இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராசேந்திரனும், பின்னர் அவன் மகனான அதிராசேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராசேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராசேந்திரன் இறந்து போனதால், தந்தை வழிசாளுக்கிய - தாய்வழியில் சோழர் மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப் பேரரசின் மன்னனானான். இது, பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விசயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சாளுக்கிய சோழர்கள் thumb|குலோத்துங்க சோழன் காலத்துச் சோழ நாடு பொ.ஊ. 1120 முதலாம் குலோத்துங்கன் பொ.ஊ. 1070-1120 இராசராசசோழனின் தமக்கையான குந்தவையின் மகனுக்கும் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கிய ஆதிக்க விரிவை எதிர்த்து வீரராசேந்திரன் போர் புரிந்த போதும் கடாரத்துக்குச் சோழப்படை சென்ற போதும் குலோத்துங்கன் அதில் பங்கு கொண்டிருந்தான். குழப்பம் மிகுந்து அரசனில்லாது சோழ நாடு தவித்தபோது அரசனாகி ஐம்பது ஆண்டுகள் சோழ நாடு சிதையாமல் காத்தவன் முதலாம் குலோத்துங்க சோழன். முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் ஈழநாட்டில், விசயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது. குலோத்துங்கன் இயன்ற வரை பயனற்ற போரை ஒதுக்கினான். இராசராச சோழன் கைப்பற்றிய நாடுகள் அந்நாட்டு மன்னர்களின் முயற்சியாலும் குலோத்துங்கனின் அமைதிக் கொள்கையாலும் சோழர் கையை விட்டு நழுவின. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் பிரச்சினைகள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தன. வெளிநாட்டுத் தொடர்புகள் முதலாம் இராசராசன் மற்றும் முதலாம் இராசேந்திரன் காலங்களிலேயே சீன நாட்டுடன் சோழ நாட்டிற்குத் தொடர்பு இருந்து வந்தது. குலோத்துங்கனும் தன் ஆட்சிக் காலத்தில் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 72 பேர்களடங்கிய ஒரு தூதுக் குழுவைச் சீனத்திற்கு அனுப்பிவைத்தான்தமிழக வரலாறும் பண்பாடும், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம்.பக்.167 மேலும் கடாரம், சுமத்திரா போன்ற தீவுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தான். ஆட்சிப் பணிகள் குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது வரியை நீக்கினான். எனவே சுங்கம் தவிர்த்த சோழன் என அழைக்கப்பட்டான்.விக்கிரம சோழன் உலா,ஒட்டக்கூத்தர். இராசராசனின் ஆட்சிக்குப்பின் இவனது ஆட்சிக் காலத்தில் சோழ நாடு முழுவதையும் அளக்கும் பணி தொடங்கி இரு ஆண்டுகளில் முடிவுற்றது. நிலமளந்த செயல் இவனது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மற்றொரு சிறப்பான செயலாகும். இவன் சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக இருந்த போதும் வைணவ, சமண, பௌத்த சமயங்களையும் ஆதரித்ததாகக் கல்வெட்டு கூறுகின்றது. குலோத்துங்கனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் செயங்கொண்டார். இவர் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து கலிங்கத்துப் பரணி இயற்றினார். சோழப் பேரரசின் வீழ்ச்சி முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர். தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன. 1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலைமையில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரம் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் பொ.ஊ. 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று. சோழ அரசர்களின் பட்டியல் அரசன் பெயர்ஆட்சியாண்டுகள் (பொ.ஊ.) தந்தைதலைநகரம்விசயாலய சோழ வம்சம்விசயாலய சோழன்848-871சுராதிராசன்அபிதான சிந்தாமணி.பக்.1611தஞ்சாவூர்ஆதித்த சோழன்871-907விசயாலய சோழன்தஞ்சாவூர்முதலாம் பராந்தக சோழன்907-950ஆதித்த சோழன்தஞ்சாவூர்கண்டராதித்த சோழன்950-955முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன்தஞ்சாவூர்அரிஞ்சய சோழன்956-957முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன்தஞ்சாவூர்இரண்டாம் பராந்தக சோழன்957-973அரிஞ்சய சோழன்தஞ்சாவூர்ஆதித்த கரிகாலன்957-969இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன்காஞ்சிபுரம்உத்தம சோழன்970-985கண்டராதித்த சோழன்தஞ்சாவூர்முதலாம் இராசராச சோழன்985-1014இரண்டாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன்தஞ்சாவூர்முதலாம் இராசேந்திர சோழன்1012–1044முதலாம் இராசராச சோழன்கங்கைகொண்ட சோழபுரம் முதலாம் இராசாதிராச சோழன்1018–1054முதலாம் இராசேந்திர சோழனின் மூத்த மகன்கங்கைகொண்ட சோழபுரம்இரண்டாம் இராசேந்திர சோழன்1051–1063முதலாம் இராசேந்திர சோழனின் இரண்டாவது மகன்கங்கைகொண்ட சோழபுரம்வீரராசேந்திர சோழன்1063–1070இரண்டாம் இராசேந்திர சோழன்கங்கைகொண்ட சோழபுரம்அதிராசேந்திர சோழன்1070வீரராசேந்திர சோழன்கங்கைகொண்ட சோழபுரம் சாளுக்கிய சோழர்கள்முதலாம் குலோத்துங்க சோழன்1070–1120முதலாம் இராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரன்கங்கைகொண்ட சோழபுரம்விக்கிரம சோழன்1118–1136முதலாம் குலோத்துங்க சோழன்கங்கைகொண்ட சோழபுரம் இரண்டாம் குலோத்துங்க சோழன்1133–1150விக்கிரம சோழன்கங்கைகொண்ட சோழபுரம் இரண்டாம் இராசராச சோழன்1146–1163இரண்டாம் குலோத்துங்க சோழன்கங்கைகொண்ட சோழபுரம் இரண்டாம் இராசாதிராச சோழன்1163–1178இரண்டாம் இராசராச சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன்கங்கைகொண்ட சோழபுரம் மூன்றாம் குலோத்துங்க சோழன்1173–1218இரண்டாம் இராசராச சோழன்கங்கைகொண்ட சோழபுரம் மூன்றாம் இராசராச சோழன்1216–1256மூன்றாம் குலோத்துங்க சோழன்பழையாறை மூன்றாம் இராசேந்திர சோழன்1246–1279மூன்றாம் இராசராச சோழன்பழையாறை பிற சோழர்கள் குளக்கோட்ட சோழன் (17 ஆம் நூற்றாண்டு) எல்லாள சோழன் (பொ.ஊ.மு. 205 - பொ.ஊ.மு. 161) வீரசேகர சோழன் (பொ.ஊ. 1511–1561) சோழ நாடு தமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர். உறையூர் பொ.ஊ. 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக் கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இந்நகரங்களில் பல இன மக்கள் வாழ்ந்தனர். இவை வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்த ரோமானிய நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. விசயாலய சோழன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்குப் பின் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் நகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராசேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது. கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராசராசனுடைய பெயரிலேயே "அருள்மொழி தேவேச்சுரம்" என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராசராசனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராசராசனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராசேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாகக் கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின. முத்தொள்ளாயிரத்தில் வரும் ஒரு பாடல் சோழரின் ஆட்சிப் பரப்பைக் கூறுகிறது. "கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால் தத்து நீர்த் தண்ணுஞ்சை தான் மிதியா பிற்றையும் ஈழம் மிதியா வருமே எம் கோழியர் கோக்கிள்ளிக் களிறு" சோழர் ஆட்சி சோழர் ஆட்சியில் ஆட்சிமுறை, கட்டிடக் கலை, இலக்கியம், இசை, சிற்பம். நாடகம், ஊராட்சி ஆகியவை சிறந்த நிலையில் இருந்தது. நிர்வாக மற்றும் செயலாக்க நடவடிக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது. நிர்வாகம், நீதி வழங்கல், வரி விதித்தல், பாதுகாப்புப் போன்றவற்றில் ஆலோசனைகள் கூற அமைச்சர்கள் இருந்தனர். தற்காலத்தில் இருப்பது போலச் சட்டசபையோ, சட்டவாக்க முறைமையோ இல்லாதிருந்ததால், அரசன் நீதியாகச் செயற்படுவது, தனிப்பட்ட அரசர்களின் நற்குணங்களிலும், அறவழிகளின்மீது அவனுக்கிருக்கக்கூடிய நம்பிக்கையிலுமே தங்கியிருந்தது. ஆட்சிப் பிரிவுகள் சோழ அரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம். இது ஊர் எனப்பட்டது.கிராமங்கள் பல கொண்டது நாடு. இது கோட்டம் அல்லது கூற்றம் எனப்படும். நாடுகள் பல கொண்டது வளநாடு. வளநாடுகள் பல கொண்டது ஒரு மண்டலம் ஆகும். ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. படைகள் கடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றியவர்கள் சோழர்கள். எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை, குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தன. முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலத்தில் 'மூன்றுகை மகாசேனை' என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது, இந்த படைபிரிவு செங்குந்தம் பிடிக்கும் கைக்கோளர் வகுப்பினரால் நிரப்பப்பட்டது. இதுவே பல உள்நாட்டு வெளிநாட்டு வெற்றிகளை ஈட்டியது. - பாவாணர்பழந்தமிழாட்சி, மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர், பக்கம் - 42 சமூகநிலை சோழரும் சாதியமும் சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும், பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். சாளரம் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்கக் கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.க. பஞ்சாங்கம். (2004). தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள். புதுவை: வல்லினம். பக்கம் 19. பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாகச் செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்."The picture which emerges suggests that the brahmans were in control of the powerful positions and that the non-brahmans were more or less working for them. The brahmans naturally emphasized caste-loyalties and caste-assemblies, since this would prevent a wider basis of unity developing amongst the non-brahmans. - Romila Thapar. (1960). A History of India. London: Penguin Books. பெண்டிர் சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாகச் சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவாக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 726 உடன்கட்டை ஏறுதல் கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றிச் சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்குமுன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராசராச பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்தச் சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை. பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.சோழர்கள் - K.A.நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 727 ஆடல் வல்லார் சோழர் காலத்தில் ஆடலும் பாடலும் ஓங்கியிருந்தன.ஆடல் மகளிர் பிறரைக் கவரும் வகையில் திகழ்ந்தனர். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். இவ்ர்களுக்குச் சமூகத்தில் மிகவும் மரியாதையும் சிறப்பும் வழங்கப்பட்டது. கோவில் நடனமாடும் கலை வளர்ச்சிக்குத் தங்கள் உயிர்களை அர்ப்பணித்த அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வு உடையவர்களாயும் திகழ்ந்தனர். கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்குக் கண்ணுக்கும் செவிக்கும் நல் விருந்தளித்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம். சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான கொடைகளைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். இவர்கள் மணவாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி (அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, பொ.ஊ. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது. அடிமைகள் சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆண்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு" என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார். ரொமிலா தபார் (Romila Thapar) என்று வரலாற்று அறிஞர் இந்தியாவின் வரலாறு (A History of India) என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது பிறராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்டார்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும், பாரிய உற்பத்திகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார். "Slavery was frequent, with men and women either selling themselves or else being sold by a third party. Many such persons were sold to the temple, particularly in cases of poverty or during a famine. But slaves were limited in number, since they were largely domestic slaves or attached to temples. The use of slave labour for large-scale production was not known." Romila Thapar. (1960). A History of India. London: Penguin Books. சோழரின் வணிகம் சோழர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் சிறந்து விளங்கினர். சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, பொ.ஊ. 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமத்ராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்சிகளுக்குச் சான்றாக அமைகின்றது. சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள் thumb|250px|பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால வெண்கலச்சிலை. சிவனின் அர்த்தநாரீசுவரர் தோற்றம். சோழர் காலத்தில் கலை, இலக்கியம், சமயம் முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தைத் தமிழரின் செவ்வியல் காலம் (classical age) என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும் சங்க காலமே தமிழரின் செவ்வியல் காலம் என்ற கருத்தும் இருக்கின்றது. பாரிய கோயில் கட்டிடங்களும், கற் சிற்பங்களும், வெண்கலச் சிலைகளும், இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும், வணிகமும், அவர்களுடைய பண்பாட்டுத் தாக்கங்களைப் பல நாடுகளிலும் உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள இந்துப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான எடுத்துக்காட்டுகளில் பல சோழர் விட்டுச் சென்றவையே. கலைகள் சோழர்காலத்தில் கட்டிடக் கலை சிறப்புற்றிருந்தது. சோழர்களின் நகரம், உள்ளாலை, புறம்பாடி'' என்ற இரு பிரிவாக இருந்தது. நகரங்கள் மிகப்பெரியவை. பல மாடிவீடுகள் கொண்டவை. இன்ன இடத்தில் இன்ன வகையான வீடுகள் தான் கட்டலாம் என்றும், இன்னவர்கள் இத்தனை மாடிகளுடன்தான் வீடுகள் கட்ட வேண்டும் என்றும் விதிகள் இருந்தன. பல அங்காடிகள் இருந்தன. இவர்களின் கட்டடக்கலை உன்னதத்தை விளக்குவன சோழர் அமைத்த கோவில்களே ஆகும். சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விசயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால், முதலாம் இராசராசனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரியவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும், ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதால், இராசராசன் காலத்திலும் அவன் மகனான இராசேந்திர சோழன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. பொ.ஊ. 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும். thumb|தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில், பொ.ஊ. 1200 சோழர் காலம், கல்லாலும் வெண்கலத்தாலும் ஆக்கப்பட்டச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, சிவனின் பல்வேறு தோற்றங்கள், விட்டுணு, மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் சிற்பநூல்கள்களிலும், ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும், 11 ஆம் 12 ஆன் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும், கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள், ஆடல் கடவுளான நடராசப் பெருமானின் சிலைகள் குறிப்பிடத் தகுந்தவை ஆகும். கல்வி சோழர் காலத்தில் கல்வி சமசுகிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள்.Romila Thapar. (1960). A History of India. London: Penguin Books. பக்கங்கள் 212-213. இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிலுனர் (apprenticeship) முறைப்படி அறிவூட்டப்பட்டது.Romila Thapar. (1960). A History of India. London: Penguin Books. பக்கம் 213. மொழி சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், வணிகம், இலக்கியம், சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் "அவற்றின் மெய்கீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது". இலக்கியம் சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும்.இக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி மிகுந்திருந்தது. ஆனால் சோழர்களால் தமிழ், உயர் கல்வி கூடங்களில் ஊக்குவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது."Had Tamil been encouraged to a greater extent in the centres of higher education it would have assisted in producing a far more vigoruous intellectual tradition than was actually in existence in these centres." – Romila Thapar. (1960). A History of India. London: Penguin Books. பக்கம் 213. சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. இந்து சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. இராசராச சோழன் காலத்தில் தேவாரம் முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. சமண, பௌத்த நூல்களும் இயற்றப்பட்டன. ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. திருத்தக்க தேவர் என்பவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்ட சூளாமணியும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும். மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் கம்பராமாயணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். செயங்கொண்டாரரின் கலிங்கத்துப்பரணியும் இன்னொரு சிறந்த இலக்கியம். இரண்டாம் குலோத்துங்க சோழன் பெற்ற கலிங்கத்து வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்நூல். இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் குலோத்துங்க சோழ உலா என்னும் நூலையும் தக்கயாகப் பரணி, மூவருலா என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சேக்கிழாரின் பெரிய புராணமும் இக்காலத்ததே. சோழ்ர் காலத்தில்தான் திருப்பாவை, திருவெம்பாவை போன்றவை சோழ நாடெங்கும் ஓதப்பட்டன. சோழர் காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சத்தை எட்டியது. சைவ சித்தாந்த நூல்களும் இக்காலத்தே மலர்ந்தன. மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றினார். வாகீச முனிவரின் ஞானாமிர்தம், திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் எழுதிய திருவுந்தியார், அருள்நந்தி சிவாச்சாரியார் எழுதிய சிவஞான சித்தியார், உமாபதிசிவாச்சாரியாரின் எட்டு நூல்கள் என சைவ சித்தாந்த அறிவு சோழர் காலத்தில் உருவாகி முறையான வடிவம் பெற்றது. சமயம் சோழர் இந்து சமயத்தை, சிறப்பாகச் சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். எனினும் பிற மதங்களையும் ஆதரித்தனர். சைவம், வைணவம் என்ற இரு மதங்களும் சோழர் காலத்தில் சிறந்திருந்தது. ஏராளமான சைவ, வைணவ மடங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. அவற்றிற்கு சாற்று முறை செய்ய வரியில்லா நிலங்கள், பணியாளர்கள் எனப்பெரும் பொருள் செலவிடப்பட்டது. இம்மடங்களில் உணவிடுதல், வழிப்போக்கருக்கு உப்பு, விளக்கெண்ணெய் வழங்குவது, நோய்க்கு மருத்துவம் செய்வது ஆகியன் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் சிந்தனை பக்திநெறியில் செல்ல இவை வழிவகுத்தன. சாளுக்கிய சோழர்கள் சிலர் வைணவர் பால், சிறப்பாக இராமானுசர் தொடர்பில் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராசேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள். இவற்றையும் பார்க்கவும் சோழர் கலை சோழர் காலக் கட்டிடக்கலை சோழர் இலக்கியங்கள் சோழர்கால வாணிகம் சோழர்காலச் சமுதாயம் சோழர்கால ஆட்சி இலங்கையில் சோழர் ஆட்சி தளிச்சேரி ஊடகங்களில் சோழர் திரைப்படம் ராஜ ராஜ சோழன் (திரைப்படம்) அம்பிகாபதி (திரைப்படம், 1937) அம்பிகாபதி (1957 திரைப்படம்) கரிகாலன் (திரைப்படம்) புதினம் சேரர் கோட்டை (புதினம்) கடல் புறா (புதினம்) வேங்கையின் மைந்தன் (புதினம்) உடையார் (புதினம்) இராஜகேசரி (புதினம்) பொன்னியின் செல்வன் பார்த்திபன் கனவு (புதினம்) மன்னன் மகள் (புதினம்) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சோழர் கட்டடக்கலை. சோழர் வெண்கல சிற்பங்கள். Feudalism & Chola Rule UNESCO World Heritage sites constructed by the Chola Empire. Pictures தென்னிந்திய கோவில்கள் . சோழ மன்னர்களின் பட்டியல் . இந்திய கடற்படை சோழர் காலத்தில் தமிழும் பெளத்தமும் - சுவீடன் பேராசிரியர் பேராசிரியர் பீட்டர் சல்க் பேட்டி Art of Cholas Chola coins of Sri Lanka * பகுப்பு:தமிழ்நாட்டு அரச வம்சங்கள் பகுப்பு:இந்தியப் பேரரசுகள் பகுப்பு:இந்துப் பேரரசுகள் பகுப்பு:இந்திய அரச மரபுகள் பகுப்பு:ஆசியாவின் முன்னாள் முடியாட்சிகள் பகுப்பு:தமிழ் அரச வம்சங்கள் பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு பகுப்பு:சோழப் பேரரசு பகுப்பு:தஞ்சாவூர் வரலாறு
உயிர்மெய் எழுத்து
https://ta.wikipedia.org/wiki/உயிர்மெய்_எழுத்து
வழிமாற்று உயிர்மெய் எழுத்துகள்
ஆய்த எழுத்து
https://ta.wikipedia.org/wiki/ஆய்த_எழுத்து
இதே பெயருடைய திரைப்படம் பற்றி அறிய ஆய்த எழுத்து (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க. ஆய்த எழுத்து () என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு.ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன - 'தொல்காப்பியம்' நூன்மரபு 2 இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும். எடுத்துக்காட்டு அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய் இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய் ஆய்தம் என்னும் சொல் thumb|ஃ என்னும் எழுத்தின் தமிழ் சைகை காணொளி ஆய்தம் என்பது பெயர்ச்சொல். ஆய்தல் என்பது வினைச்சொல். ஆய்வுரை நுணுகிப் பார்ப்பது. ஆய்தல் என்னும் உரிச்சொல் இருப்பதை நுட்பமாக்கிக் காட்டும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம். - தொல்காப்பியம் உரியியல் 32 இதனால் ஆய்தம் என்னும் சொல் ஒலியை நுண்மையாக்கி அதாவது மென்மையாக்கிக் காட்டுவது என்னும் பொருள்பட நிற்பதைக் காணமுடிகிறது. வரலாறும் இலக்கணமும் உலகில் பேச்சுமொழி முதலில் தோன்றிய பின்னர் எழுத்துமொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்து தோன்றியது. "அ" என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து. "அ" என எழுதினால் அது வரிவடிவ எழுத்து. காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன. உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று, தனியொரு எழுத்தாக இருப்பதால் "தனிநிலை" எனப்படுகிறது. இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது. ஓசையின் அடிப்படையில் அஃகேனம் எனப் பெயர் பெற்றுள்ளது. வழக்காற்றில் இதை "ஆய்த" எழுத்து என்றே கூறுவர். "ஆயுத" எழுத்து எனக்கூறுவது தவறு. பத்துவகைச் சார்பெழுத்துகளில் 2 ஆய்த எழுத்து பற்றியதாகும். அதில் ஒன்று முற்றாய்தம் (தன்னரை மாத்திரையை முழுமையாகப் பெற்று ஒலிப்பது) மற்றொன்று ஆய்தக்குறுக்கம் (தன் மாத்திரை அளவிலிருந்து பாதியாகக் குறைந்து ஒழிப்பது) ஆகும்.இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்பொழுது, "ஆய்தக்குறுக்கம்" என்ற சார்பெழுத்து ஆகிறது. ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃகு, அஃது என்பன போன்று வரும். கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என ஆய்தக்குறுக்கமாகிச் சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும். ஆய்தம் என்பது பொதுவாகக் கருவி எனப் பொருள்படும். ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது. போர்வீரனின் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவதுபோல் இடித்துத் தாக்கும். அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது. போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ஃ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்து கொள்ளலாம். தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன. அவ்வாறே ஆய்த எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது. தொல்காப்பியம் எழுத்து எனப்படுப அகரம் முதல் னகர இறுவாய் முப்பஃது என்ப சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே. அவைதாம், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. ஆயுதம் ஆயுதம் என்னும் சொல் சங்கப்பாடல்களில் இல்லை. இந்த வரிசையில் ஆயு, ஆயுங்கால, ஆயும், ஆயுள் என்னும் 4 சொற்கள் மட்டுமே உள்ளன. (சங்கநூல் சொல்லடைவு 1967) சங்ககாலத்தில் இல்லாத ஆயுதம் என்னும் ஒரு சொல்லைக் கொண்டு ஆய்தம் என்னும் தொல்பழஞ் சொல்லுக்குக் கற்பனைப் பொருள் கற்பிப்பது சாலாது. ஆய்த எழுத்து - விளக்கம் (ஃ) – அடைப்புக்குறிக்குள் உள்ள இந்த எழுத்தை ஆய்தம் என்னும் பெயரால் குறிப்பிடுவது வழக்கம். தொல்காப்பியர் இந்த ஆய்த எழுத்து சார்பெழுத்தின்பாற்பட்டது எனக் குறிப்பிடுகிறார். அஃகான் என்னும் பெயரிட்டு இதனை முன்னோர் வழங்கிவந்தனர். தொல்காப்பியரும் அவ்வாறே இதனை வழங்குகிறார். நன்னூல் அஃகேனம் என்னும் பெயரும் உண்டு எனக் குறிப்பிடுகிறது. தனிநிலை என்னும் சொல்லாலும் இதனைக் குறிப்பிடுகிறது. தமிழ் எழுத்துகளை ஆனா(அ), ஆவன்னா(ஆ) … எனப் படிக்கும் முறைமை ஒன்று இருந்துவந்தது. இந்த முறையில் படிப்போர் ஆய்த எழுத்தை அஃகன்னா எனப் படிப்பர். ஆய்தம் = ஒலி நுணுக்கம் தமிழில் ஆய்த எழுத்து வல்லெழுத்து ஒலியை நுணுக்கம் செய்யப் பயன்படுத்தப்படும். “ஓய்தல், ஆய்தல், நிழத்தல், சாஅய், ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்” என்பது தொல்காப்பியம் (உரியியல்) ஆய்தல் என்னும் சொல் நுணுக்கமாக நோக்கும் ஆராச்ச்சியைக் குறிக்க இன்றும் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். வலிமையான கற்களை நுணுக்கி மென்மையாக்கிக் கொள்வது போல ஆய்த எழுத்துகளை ஊர்ந்து வரும் வல்லின எழுத்துகளை நுண்மையாக்கிக் காட்ட இந்த ஆய்த எழுத்து பயன்படுவதை நாம் காண்கிறோம். முற்றாய்தம் எஃகு, கஃசு, கஃடு, பஃது, பஃறி என்னும் சொற்களில் ஆய்த எழுத்து அடுத்துள்ள வல்லின எழுத்தை மென்மையாக்கிக் காட்டுவதை இவற்றை ஒலித்துப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம். இவற்றில் ஆய்த எழுத்துக்கு இயல்பான அரை மாத்திரை. எனவே இதனை முற்றாய்தம் எனக் குறிப்பிடலாயினர். ஆய்தம் தன் மாத்திரையில் குறுகும் ஆய்தக் குறுக்கம் இருப்பதை வேறுபடுத்திக் காட்ட முற்றாய்தம் என்னும் சொல் தோன்றியது. சார்பெழுத்து என்பதிலிருந்து தெளிவுபடுத்திக்கொள்ள முதலெழுத்து என்னும் சொல்லை நன்னூல் வழக்குக்குக் கொண்டுவந்தது போன்றது இது. எஃகு = வேல், கஃசு = தொடி, கஃசு என்பன நிறுத்தலளவைக் குறியீடுகள், கஃடு = கள், பஃது = பத்து முப்பஃது என்ப - தொல்காப்பியம் முதல் நூற்பா, பஃறி = கட்டுமரம் உயிரோடு புணரும்போது ஆய்த எழுத்து தோன்றுதல் உண்டு.பஃது என் கிளவி - தொல்காப்பியம் குற்றியலுகரப் புணரியல் 39 ஆய்தக் குறுக்கம் (கல்+தீது) கஃறீது, (முள்+தீது) முஃடீது, (அவ்+கடிய) அஃகடிய –எனப் புணர்ச்சியில் வரும் ஆய்தவெழுத்து ஆய்தக் குறுக்கம். வடமொழி ஒலி ஒப்பீடு சமற்கிருதத்தில் (வடமொழியில்) இந்த ஒலியெழுத்தை அஹ என ஒலிப்பர். இந்த மொழியில் இந்த ஒலி சொல்லின் இறுதி ஒலியாக வரும். தமிழில் இந்த ஒலி இறுதி ஒலியாக வராது. வல்லின எழுத்துகள் ஆறும் ஊர்ந்துவரும் நுண்ணொலி எழுத்தாக இடையில் மட்டுமே வரும். திருக்குறள் காட்டும் ஆய்த-எழுத்து இலக்கணம் திருக்குறளில் ஆய்த எழுத்து ஒருமாத்திரை கொள்ளும் உயிரெழுத்தைப் போலவும், அரைமாத்திரை கொள்ளும் மெய்யெழுத்தைப் போலவும் அலகிட்டுக்கொள்ளுமாறு கையாளப்பட்டுள்ளது. இப்படி அலகிட்டுக்கொள்வதற்கான இலக்கணம் எழுத்தியல் கூறும் எந்த இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. எந்த யாப்பியல் இலக்கண நூலிலும் சொல்லப்படவில்லை. எனவே அதனைத் தனியே குறிப்பிடவேண்டியுள்ளது. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று (49) நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும் (476) அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கஃ தின்றேல் பிணியன்னறோ பீடு நடை (1014) இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்தை மெய்யெழுத்தாகக் கொண்டு அரைமாத்திரையால் அலகிட்டுக்கொள்கிறோம். அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி (226) வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை யாண்டும் அஃதொப்ப தில் (363) கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்(கு) ஒற்கத்தின் ஊற்றாம் துணை (414) இந்த மூன்று குறட்பாக்களில் ஆய்த எழுத்துக்கு ஒருமாத்திரை தந்து உயிரெழுத்தைப் போல் அலகிட்டுக்கொள்கிறோம். இதனால்தான் தமிழ் நெடுங்கணக்குக் கட்ட-வரிசையில் உயிரெழுத்துக் கிடைவரிசையின் இறுதியிலும், மெய்யெழுத்துக் குத்து வரிசைத் தொடக்கத்தின் மேலும் ஆய்த எழுத்தை வைத்துள்ளனர். இக்கால நிலை இக்காலத்தில் பிறமொழி (திசை)ச் சொற்களை எழுதும்போது ஃபாதர், ஃபேன், செல்ஃப், புரூஃப் என்றெல்லாம் எழுதிவருகிறோம். மாற்றுக் கருத்து முனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் என்ற நூலில் ஆய்த எழுத்து குறித்து கீழ்காணும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்தத்தின் வடிவமாக முப்பாற்புள்ளியைத் தொல்காப்பியர் குறித்துள்ளார். இன்று எழுதப்படுவது போன்று ஆய்தம் அன்றும் எழுதப்பட்டது என்று கூறுவது ஐயத்திற்கிடமாக உள்ளது. அசோகர் காலத்தில் இன்றைய ஆய்தப் புள்ளிகள் இகரமாகப் படிக்கப்பட்டதாக கோபிநாத் ராவ் கூறுகிறார்.இரா.கிருட்டிணமூர்த்தி, சேரநாட்டில் தமிழ் வட்டெழுத்து ப-53, 1982, முதற்பதிப்பு ஆய்தத்தின் வடிவம் பிற்காலத்து வழக்கென்றும், நச்சினார்க்கினியர் காலத்தில் நடுவு வாங்கி எழுதும் வழக்கம் இருந்ததென்றும் மு.இராகவையங்கார் கருதுகிறார் இரா.கிருட்டிணமூர்த்தி, சேரநாட்டில் தமிழ் வட்டெழுத்து ப-52, 1982, முதற்பதிப்பு. எனவே, தொல்காப்பியர் காலத்து ஆய்தப் புள்ளிகள் எவ்வாறு அமைந்து அதை மக்கள் எழுதினர் என்று அறிய முடியவில்லை, அவை படுக்கை நிலையிலோ அல்லது நின்ற நிலையிலோ ஒன்றன் பின் ஒன்றாக அமைந்து ஆய்தத்தை அறிவுறுத்தியிருக்கலாம். எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் காலத்ததாக அமைந்த காச குடிப்பட்டயத்துள் வெஃகா என்ற சொல் வருமிடத்து மேலும் கீழும் புள்ளிகளும், இவற்றிடையே வளைந்த கோடுமுடைய ஆய்த வடிவம் கிடைக்கிறது.மு.இராகவையங்கார், ஆராய்ச்சித்தொகுதி, ப-130, 1964, பாரிநிலையம், இரண்டாம் பதிப்பு ஒலிப்புக் குறைவை உணர்த்த எகர ஒகரங்கள் புள்ளி பெற்றது போல வைப்பு முறையில் ஆய்தத்திற்கு முன்னாக வரும் குற்றியலிகரமும், குற்றியலுகரமும் ஒரு புள்ளியும், இரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்று கொள்ளவும் இடமிருக்கிறது. ஒலிப்பு நிலையமைப்பில் ஏறுமுகமாகக் குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் அமைந்து ஒன்று, இரண்டு, மூன்று புள்ளிகளைப் பெற்றன என்று கொள்வதும் தவறாகாது அல்லது ஒலிப்புக் குறைவின் அடிப்படையில் குற்றியலிகரம் இரு புள்ளியும், குற்றியலுகரம் ஒரு புள்ளியும் (நாகியாது, காடு) பெற்றன என்றோ அவை ஒவ்வொரு புள்ளி (நாகியாது, காடு) மட்டுமே பெற்று எழுதப்பட்டன என்றோ கருதலாம். "ஒற்றெழுத்தியற்றே குற்றியலுகரம்" என்ற செய்யுளில் நூற்பாவும் இங்கு நினைக்கத் தக்கது. யாப்பருங்கல இரண்டாம் நூற்பாவின் மேற்கோளாக வரும் "சங்கயாப்பின்" "குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமும் மற்றவை தாமே புள்ளி பெறுமே" என்பதும் இங்குச் சுட்டத்தக்கது. முப்பாற்புள்ளியே ஆய்தம், குற்றியலிகரம், குற்றியலுகரம் ஆகிய மூன்றற்கும் பொது எழுத்தாய்த் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது சு.இரத்தினசாமி, தமிழ் எழுத்து வரிவடிவ வரலாறு, ப-64, 1988, முதற்பதிப்பு என்ற கருத்துக் குழப்பத்தை விளைவிக்குமாதலின் ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று. இவற்றையும் காண்க ஆய்தக்குறுக்கம் ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மாதம் ஒரு (இலக்கிய) விவாதம்! , "காரணப்பெயர் புலவர்" ம.நா.சந்தானகிருஷ்ணன், தினமணி, மார்ச் 7, 2010 பகுப்பு:சார்பெழுத்துகள் பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் பகுப்பு:ஒலிக்கோப்பு உள்ள கட்டுரைகள்
மதுரைக் காஞ்சி
https://ta.wikipedia.org/wiki/மதுரைக்_காஞ்சி
சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. "பெருகு வளமதுரைக் காஞ்சி" எனச் சிறப்பிக்கப்படும் இப்பாட்டு "கூடற்றமிழ்" என்றும் "காஞ்சி பாட்டு"என்றும் சிறப்புப் பெயர்களைப்பெறும். 1 பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப்பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார். போரின் வழியாக கொடுமையை விளக்குதல் பெரும்பாலான புலவர்கள் மன்னனின் போர்த் திறத்தையும் போரில் பகைவரைக் கொன்றழித்ததையும் கொன்றழித்த நாட்டுக் கோட்டை‌யை அழித்து அங்கே எள் மற்றும் திவசங்கள் விதைத்ததையும் பாடுவர். மருதனாரோ போரின் கொடுமையையும் போரினால் நாடு பாழாவதையும் பாடுகிறார். நாடெனும்பேர் காடுஆக ஆசேந்தவழி மாசேப்ப ஊர் இருந்தவழி பாழ்ஆக போரினால் நாடாக இருந்த இடம் காடாகும். பசுக்கள் திரிந்த வழியில் புலிகள் உலவும். ஊர் முழுதும் பாழாகும் என்று சொல்கிறார். நாளங்காடி மற்றும் அல்லங்காடி சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றிவிடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதனால் கடல் பொங்கி வழிவதுமில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார். மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது கரைபொருது இரங்கும் முந்நீர் போல, கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது. ஓர் இரவு (அல்) ஓர் இரவு முழுதும் மதுரை நகரில் நடக்கும் செயல்கள் யா‌வற்றையும் மருதனார் கூறுகிறார். குலமகளிர் பண்புகள், விலைமகளிர் வேலைகள், கள்வர் திறம், காவலர் மறம் ஆகியவற்றைக் கூறி நிறைவாக மன்னன் இரவில் துயில் கொள்ளல், காலையில் பள்ளியெழுச்சி, அவனது கொடை, அறம் ஆகியவற்றை விளக்கி அவனை வாழ்த்திப் பாடலை நிறைவு செய்கிறார். வெளி இணைப்புகள் மதுரைக் காஞ்சி நூல் உரை - பத்துப்பாட்டு நூல்கள் சொல்வனம் இதழில் குமரன் கிருஷ்ணன் கட்டுரை: https://solvanam.com/?p=51185 பகுப்பு:பத்துப்பாட்டு 1.தமிழ் இலக்கிய வரலாறு. முனைவர் கா.கோ.வேங்கடராமன்.பக்கம்-78.பதிப்பு 2008.
பட்டினப் பாலை
https://ta.wikipedia.org/wiki/பட்டினப்_பாலை
பட்டினப்பாலை (Pattinappalai) என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும். நூலின் சிறப்பு சங்க நூலாகிய பத்துப்பாட்டு வரிசையில் ஒன்பதாவது பாட்டு பட்டினப்பாலையாகும். பட்டினப்பாலையின் செய்யுள்கள் இடையிடையே வஞ்சிப்பாவின் அடிகள் விரவி இருந்தாலும் ஆசிரியப்பாவால் இயன்றவை. பட்டினம் துறைமுகத்தை ஒட்டியுள்ள பெரு நகரங்கள் பட்டினம் என அழைக்கப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் பழம்பெரும் நகரமாகும். தலைநகரமாக விளங்கிய துறைமுகப்பட்டினம். இது தமிழகத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கீழ்க்கோடியிலே காவிரி நதி கடலோடு கலக்கும் இடத்தில் உள்ளது. இப்போது இது ஒரு சிறிய ஊராகும். ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் கடலிலே மூழ்கி விட்டதாகச் சொல்லப்படுகிறது. ஐம்பெருங்காப்பியங்களிலே ஒன்றான மணிமேகலையில் காவிரிப்பூம்பட்டினம் கடலில் மூழ்கிய செய்தி காணப்படுகிறது. பாலை பாலை என்பது பாலைத்திணை ஆகும். பிரிவைப் பற்றிக் கூறுவது பாலைத்திணையாகும். கணவன் தன் மனைவியை விட்டுப் பிரிந்து போவது - அல்லது பிரிந்து போக நினைப்பது - அல்லது பிரிந்து போக வேண்டுமே என நினைத்து வருந்துவது பாலைத்திணையின்கண் அடங்கும். கணவன் தான் பொருள் தேடப் பிரிந்து செல்வதைத் தன் மனைவிக்கு அறிவிப்பதும், அதை அவள் தடுப்பதும் பாலைத் திணையில் அடங்கும். பட்டினப்பாலை என்பது பட்டினம்- பாலை என்ற இரு சொற்களைக் கொண்ட தொடர். "பட்டினத்தின் சிறப்பைக் கூறிப் பிரிவின் துன்பத்தை உணர்த்துவது" என்பது இதன் பொருளாகும். பாட்டின் அமைப்பு பொருள் தேடப் பிரிந்து செல்ல நினைக்கின்றான் தலைவன். பிரிந்து சென்றால் தன் காதலியின் நிலை என்ன அகும்? அவள் தன் பிரிவைப் பொறுப்பாளா? தான் திரும்பும் வரை அவள் உயிர்கொண்டு உறைவாளா? என்ற ஐயம் அவன் உள்ளத்திலே எழுந்து அவனை வாட்டுகின்றன. பிரிந்து சென்றால் தானும் மன அமைதியோடு சென்ற இடத்தில் செயலாற்ற முடியாது. வேதனைதான் மிஞ்சும்; வேதனையோடு செய்யும் செயலில் வெற்றிகாண முடியாது. ஆகையால் பிரிவு காதலிக்குத் துன்பம் தருவதோடு தனக்கும் துன்பத்தைத் தரும் என நினைக்கிறான் இதனால் " நான் பிரிந்து செல்ல நினைக்கும் காட்டு மார்க்கம், கரிகாற்சோழன் தன் பகைவர்களின் மேல் வீசிய வேல்படையைக் காட்டினும் கொடுமையானது. என்காதலியின் மெல்லிய தோள்கள் அந்தக் கரிகாற்சோழனுடைய செங்கோலைக் காட்டினும் குளிர்ச்சியைத் ( நன்மையை, இன்பத்தை)தருவன. ஆதலால் நீங்காத சிறப்பினையுடைய காவிரிப்பூம்பட்டினமே கிடைப்பதாஇருந்தாலும் கூட என் காதலியை விட்டுப் பிரிந்து வரமாட்டேன். என் மனமே! பிரிந்து போகவேண்டும் என எண்ணுவதை மறந்துவிடு". என்ற முடிவுக்கு வருகிறான். இதுவே பட்டினப்பாலையின் அகப்பொருள் கருத்தாகும். இதனை " திருமாவளவன் தெவ்வர்க்கு ஓங்கிய வேலினும் வெய்ய கானம்; அவன், கோலினும் தண்ணிய தடம்மெல் தோளே. முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வாரிரும் கூந்தல் வயங்கிழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே." என்று வரும் பட்டினப்பலை அடிகளால் அறியலம். நூலின் பொருள் காவிரியாற்றின் சிறப்பு; சோழநாட்டின் நிலவளம்; காவிரிப்பூம்பட்டினத்தின் சுற்றுப்புறங்களின் செழிப்பு; காவிரித்துறையின் காட்சி; செம்படவர்களின் வாழ்க்கை; பொழுதுபோக்கு இவைகளை இந்நூல் விரிவாகக் கூறுகிறது. காவிரிப்பூம்பட்டினத்திலே அக்காலத்தில் நடைபெற்ற வாணிகம்; அந்நகரத்திலே குவிந்திருந்த செல்வங்கள்; அங்கு நடைபெற்ற ஏற்றுமதி இறக்குமதி வாணிகம்; வாணிகர்களின் நடுவுநிலைமை; பண்டங்களைப் பாதுகாக்கும் முறை இவைகளையெல்லாம் இந்நூலிலே காணலாம். இந்த நகரத்தின் தலைவனான கரிகாற்சோழனின் பெருமை, வீரம், கொடை முதலியவற்றையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இந்நூல் பாலைத்திணை என்னும் அகப்பொருளைப் பற்றியதாயினும் புறப்பொருள் செய்திகளே இதில் மிகுதியாகக் காணப்படுகின்றன. கரிகாற்சோழன் பட்டினப்பாலையில் குறிப்பிட்டிருக்கும் கரிகாற்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவன். காவிரிப் பூம்பட்டினமே இவனுடைய தலைநகரமாக இருந்தது. இவன் இளைஞனாய் இருந்தபோது பகைவரால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.எப்படியோ சிறைலிருந்து தப்பித் தனக்குரிய அரசாட்சியையும் கைப்பற்றினான். பிறகு தன் பகைவர்களின் மேல் படை திரட்டிச் சென்று அவர்களையெல்லாம் வீழ்த்தி வெற்றிபெற்றான். இச்செய்தி பட்டினப்பாலையின் இறுதியில் கூறப்பட்டுள்ளது. இவனைப் பற்றி மேலும் பழமொழி, பொருநராற்றுப்படை, புறநானூறு, சிலப்பதிகாரம் போன்றவற்றில் பல செய்திகள் காணக்கிடைக்கின்றன. கரிகால் சோழன் சிறுவனாய் இருந்த போது அவனைக் கொல்ல பகைவர்கள் சூழ்ச்சி செய்து அவரிருந்த இல்லத்திற்குத் தீ வைக்க அஞ்சாமல் தீயினின்றும் வெளிவந்து தப்பித்துக்கொண்டான். அவன் தீயிலிருந்து வெளிவரும் போது அவனுடைய கால் தீப்பட்டுக் கரிந்து போனதால் கரிகால்சோழன் என்று பெயர் வந்தது. இவன் வெண்ணி என்னும் ஊரின் பக்கத்திலிருந்த போர்க்களத்தில் சேரமான் பெருஞ்சேரலாதன் என்பவனோடு போர் செய்து வென்றான். அப்பாேது அதே போர்க்களத்தில் சேரலாதனுக்குத் துணையாக வந்த பாண்டியனையும் எதிர்த்துப் போர் செய்து வென்றான். ஆகவே பாண்டியன், சேரன் இருவரையும் வென்றவன் இவன். இவன் இமயம் வரை படையெடுத்துச் சென்றான். இடையிட்ட மன்னர்களை எல்லாம் வென்று இமயத்தில் புலிக்கொடியையும் நாட்டினான். இவன் இளையோனாய் இருந்த போது நரை முடித்து நீதி கூறிய கதையும் வழங்குகிறது. கரிகால் சோழன் தமிழன்பன். தமிழ்ப்புலவர்களை ஆதரித்தவன். இரும்பிடர்த்தலையார் என்னும் புலவர் இவனது தாய்மாமன். பட்டினப்பாலையைப் பாடிய உருத்திரன்கண்ணனாருக்குப் பதினாறு நூறாயிரம் ( 16,00,000-16 லட்சம்) கழஞ்சு (பொன்) பரிசளித்தான் என்ற செய்தி இவனுடைய தமிழ்ப்பற்றை விளக்குவதாகும். இதை உற்றுநோக்கினால் 188 அடிகளுக்கு 16,00,0000 கழஞ்சு பொன் என்றால் ஒரு அடிக்கு 8,510.6 களஞ்சு பொன் கொடுத்தான் என்பதை அறிய முடிகிறது. ஆசிரியர் வரலாறு பட்டினப்பாலையை இயற்றிய ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவார். பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை என்ற நூலினையும் இவர்தான் இயற்றியுள்ளார். பெரும்பாணாற்றுப்படை தொண்டைமான் இளந்திரையன் என்னும் அரசன் மீது பாடப்பட்டது. பட்டினப்பாலை கரிகால்சோழன் மீது பாடப்பட்டது. ஆகவே இவர் கரிகாலன், இளந்திரையன் என்ற இரண்டு மன்னர்களின் அன்புக்குரியவராக வாழ்ந்தார் என்பதை அறியலாம். இவரின் வரலாற்றினை அறிவதற்கான சான்று எதுவும் இல்லை. கடியலூர் என்பதை இவர் பிறந்த ஊராகக் கருதுகின்றனர். இவ்வூர் எதுவெனத் தெரியவில்லை. இவர் தொண்டைமானையும், சோழனையும் பாடியிருப்பதால் இந்த ஊர் சோழ நாட்டிலோ, தொண்டை நாட்டிலோதான் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். இவர் கூறியிருக்கும் இயற்கை நிகழ்ச்சிகளும் உவமைகளும் அக்கால காவிரிப்பூம்பட்டினத்தை நம் மனக்கண்ணால் படம் பிடித்துக் காட்டுவது போல் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் பெருமை, தமிழர் நாகரிகத்தின் உயர்வு, தமிழர்களின் வீரம், பண்பாடு இவையெல்லாம் இந்தப் பட்டினப்பாலையில் காணலாம். பத்துப்பாட்டில் உள்ள நூல்களில் இரண்டு நூல்கள் இவருடைய படைப்புகள் (பெரும்பாணாற்றுப்படை 500 அடிகள் பட்டினப்பாலை 301 அடிகள்) ஆகும். உசாத்துணை பட்டினப்பாலை ஆராய்ச்சி உரை. சாமி சிதம்பரனார். இலக்கிய நிலையம். இரண்டாம் பதிப்பு. 1973. இவற்றையும் பார்க்கவும் சங்க இலக்கியம் ஏனைய பத்துப்பாட்டு நூல்கள் திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை முல்லைப்பாட்டு நெடுநல்வாடை மதுரைக் காஞ்சி குறிஞ்சிப் பாட்டு மலைபடுகடாம் பகுப்பு:பத்துப்பாட்டு வெளியிணைப்புகள் பட்டினப் பாலை நூல் உரை - பத்துப்பாட்டு நூல்கள்
மலைபடுகடாம்
https://ta.wikipedia.org/wiki/மலைபடுகடாம்
சங்ககாலத் தொகுப்புகளுள் ஒன்றான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம். இத் தொகுப்பிலுள்ள நூல்களுள் இரண்டாவது பெரிய நூல் இது. 583 அடிகளால் ஆன இப் பாடலை இயற்றியவர், இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் புலவர் ஆவார். இந்த நூலைக் கூத்தராற்றுப்படை எனவும் குறிப்பிடுவர்.வச்சணந்திமாலை உரை என்னும் 13 ஆம் நூற்றாண்டு நூல் திருமுருகாற்றுப்படையைப் புலவராற்றுப்படை என்றும், மலைபடுகடாம் நூலைக் கூத்தராற்றுப்படை என்றும் குறிப்பிடுகிறது நவிர மலையின் தலைவனான நன்னன் என்பவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டது இந்நூல். நவிர மலை மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்கள் தலைவனின் கொடைத் திறத்தையும் புகழ்ந்து பாடும் இந் நூற் பாடல்களில், அக்காலத் தமிழரின் இசைக்கருவிகள் பற்றியும் ஆங்காங்கே குறிப்புக்கள் காணப்படுகின்றன. நன்னனைப் பாடிப் பரிசு பெறச்செல்லும் பாணர், நெடுவங்கியம், மத்தளம், கிணை, சிறுபறை, கஞ்சதாளம், குழல், யாழ் போன்ற பலவகை இசைக் கருவிகளை எடுத்துச் செல்வது பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. இவற்றையும் பார்க்கவும் சங்க இலக்கியம் அடிக்குறிப்புகள் பகுப்பு:பத்துப்பாட்டு பகுப்பு:ஆற்றுப்படைகள் வெளியிணைப்புகள் மலைபடுகடாம் நூல் உரை - பத்துப்பாட்டு நூல்கள்
இடைக்கால இலக்கியம்
https://ta.wikipedia.org/wiki/இடைக்கால_இலக்கியம்
REDIRECT தமிழில் இடைக்கால இலக்கியம்
இரைபோ கருவமிலம்
https://ta.wikipedia.org/wiki/இரைபோ_கருவமிலம்
thumb|right|150px|உப்புமூலங்களுடன் கூடிய இரைபோ கருவமிலத்தின் வரைபடம் 200px|thumb|NMR structure of the central region of the human GluR-B R/G pre-mRNA, from the protein data bank ID 1ysv இரைபோ கருவமிலம் அல்லது ஆர்.என்.ஏ. (RNA - ribonucleic acid) என்பது ஒரு கருவமிலம் ஆகும். இதனை இரைபோக் கருக்காடி, ஐங்கரிமவினியக் கருக்காடி, ஐவினியக் கருக்காடி, ஐங்கரிமவினியக் கருவமிலம், ஐவினியக் கருவமிலம் என்ற பெயர்கள் கொண்டும் அழைக்கலாம். இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றான கருவமிலங்களில் ஒன்றாகும். இவையும் டி.என்.ஏ யைப் போன்றே நியூக்கிளியோட்டைடுக்களாலான நீண்ட சங்கிலி அமைப்பைக் கொண்டிருக்கும். உயிர்களுக்குத் தேவையான மரபுக் கட்டளைகளை டி.என்.ஏ. யிலிருந்து பெற்று புரதங்களை உருவாக்கும் செயல்முறையில் ஆர்.என்.ஏ. மிக முக்கிய பங்கு வகிக்கும். சில தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏ யே மரபியல் தரவுகளைக் கொண்டிருக்கும் மூலக்கூறாகவும் இருக்கும். ஆர்.என்.ஏ. வகைபாடுகள் ஆர்.என்.ஏ க்கள் அவற்றின் உரு மற்றும் செயலாற்றுதல் மூலம் பல்வேறுவகையாக வகைப்படுத்தப்படுகின்றன. புரதப்பெயர்ப்பிலுள்ள ஆர்.என்.ஏக்கள் புரதப்பெயர்ப்பிலுள்ள ஆர்.என்.ஏக்கள் (RNA in translation): செய்தி பரிமாற்ற ஆர்.என்.ஏ (messenger RNA -mRNA), இடமாற்று ஆர்.என்.ஏ (transfer RNA-tRNA), இரைபோசோமல் ஆர்.என்.ஏ (ribosomal RNA -rRNA). ஒழுங்காற்று ஆர்.என்.ஏக்கள் ஒழுங்காற்று ஆர்.என்.ஏக்கள் (Regulatory RNAs): குறு ஆர்.என்.ஏ (micro-RNA), சிறு ஆர். என். ஏ (small RNA), நீண்ட செய்தியற்ற ஆர்.என்.ஏ (long non-coding RNA). =dhdhj ஆர்.என்.ஏ மரபுத்தொகை= ஆர்.என்.ஏ மரபுத்தொகை (RNA genomes): ஒரிழை ஆர்.என்.ஏ (single strand RNA), ஈரிழை ஆர்.என்.ஏ. (double strand RNA). * பகுப்பு:உயிரித் தொழில்நுட்பம்
ஆர். என். ஏ
https://ta.wikipedia.org/wiki/ஆர்._என்._ஏ
வழிமாற்று இரைபோ கருவமிலம்
அல்கா
https://ta.wikipedia.org/wiki/அல்கா
300px|thumb|right|லௌரென்சியா (Laurencia) கடல்பாசியின் (seaweed) தோற்றம்: கிளைகள் பல திசுள் அமைப்புடையதாகவும் 1 மி.மி தடிமனுள்ளதாகவும் உள்ளன. இன்னும் சிறிய அல்காக்கள், இந்தக் கிளைகளுடன் ஒட்டியிருப்பதை படத்தின் கீழ் வலது மூலையில் காணலாம் அல்காக்கள் (Algae), அல்லது பாசி (இலங்கை வழக்கு) பல்வேறு குழுக்களைச் சேர்ந்த, ஒளிச்சேர்க்கை செய்ய வல்ல உயிரினங்கள் ஆகும். இவை பொதுவாக நீர் நிலைகளிலும் ஈரப்பரப்புகளிலும் காணப்படுகின்றன. நெடுங்காலமாக பாசிகள், எளிய தாவர வகைகளாகக் கருதப்பட்டாலும், சில பாசிகள் உயர் தாவர அமைப்பை பெற்றிருக்கின்றன. சில பாசிகள் அதிநுண்ணுயிரி மற்றும் புரோட்டோசோவா வகை உயிரினங்களின் பண்புகளையும் பெற்றிருக்கின்றன. ஆக, பாசிகளை பரிணாம வளர்ச்சியின் எந்த ஒரு குறிப்பிட்ட கால நிலையுடனும் தொடர்பு படுத்தாமல், பரிணாம வளர்ச்சியில் திரும்பத் திரும்பக் கடந்து வரப்பட்ட ஒரு உயிர் அமைப்பு நிலையாகக் கருதலாம். பாசிகளின் வகைகள் ஒரு கல அமைப்பிலிருந்து, பல கல அமைப்பு வரை வேறுபடுபவையாகும். இந்த ஒரு செல் அல்கா தாவரங்கள் தானாகவே உணவை தயாரித்துக் கொள்கின்றன. இவை நீரில் உள்ள கார்பனீராக்சைடையும் சூரிய ஒளியையும் பயன்படுத்தி உணவை தயாரித்தன. அப்போது ஆக்சிசனை வெளியிடுகிறது. இந்த ஆக்சிசன் சிறு சிறு நீர் குமிழிகளா வெளியேறி நீர் மட்டத்திற்கு மேல் வந்து சேர்கிறது. பிறகு இவை உடைந்து ஆக்சிசன் மேலே செல்கிறது. பல கோடான கோடி ஆண்டுகளாக இவைகள் இவ்வாறு ஆக்சிசனை வெளியிட்டதால் காற்றில் போதிய அளவு ஆக்சிசன் கிடைத்தது. வகைகள் 300px|thumb|right|நீலப்பசும் பாசி அல்காக்களில் பச்சை அல்கா, பழுப்பு அல்கா, இருகலப்பாசிகள் எனப்பல வகைகள் உண்டு. இவ்வல்காக்கள் ஆறுகள், குளங்கள், ஏரிகள், கழிமுகங்கள் மற்றும் கடலில் வாழக்கூடியவை. நன்னீரில் வாழ்பவை உவர்நீரில் வாழா. அதே போல் உவர்நீரில் வாழ்பவை நன்னீரில் வாழாது. கழிமுகங்களில் வாழக்கூடியவை நன்னீரிலும், உவர்நீரிலும் வாழா. நிலத்தாவரத் தோற்றம் பூமியில் உள்ள அனைத்துத் தாவரங்களும், அல்காக்களிலிருந்தே தோன்றியதாக, மரபியல்பரிணாமச் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு வகையான கடற்பாசிகள் கடற்நீர்பரப்பிலிருந்து, நிலப்பகுதிக்கு வந்ததாகவும், அவற்றில் ஒரு வகையே(பச்சைப்பாசி) இன்றுள்ள நிலத்தாவரங்களாக சிக்கலான பரிணாம வளர்ச்சிக்கு பிறகு மாறியுள்ளன. இதனை லூசியானா மாநில பல்கலைக் கழகத்தின் தொல்தாவரவியல் அறிஞர் இரசெல் சாஃப்மேன்(Russell Chapman) உறுதிபடுத்தியுள்ளார். தமிழ் இலக்கியங்களில் பாசி தமிழில் வழங்கிய பண்டைய இலக்கியங்களில் பாசி, அல்கா பற்றி அறிவியல் ரீதியாக வேறுபடுத்தாமையால் இரண்டையும் வழங்க ஒரே சொல்லாட்சியே பயன்பட்டது. இராவண காவியம் ;- கூசி லாதுகொல் கோள்வன் முதலைய ஏசி லாநீர்க் கிடங்கி னிருதலை மாசி லாத மறவ ரெதிரெதிர் பாசி போலப் பதிந்து பொருதனர்.(கிடங்கிடைப் போர், 16) பாரதியாரின் தேசிய கீதங்கள்;- நாட்பட நாட்பட நாற்றமு சேறும் பாசியும் புதைந்து பயன்நீர் இலதாய் நோய்க் களமாகி அழிகெனும் நோக்கமோ? விதியே விதியே தமிழச் சாதியை (24. தமிழ்ச் சாதி) ஐங்குறுநூறு;- தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள், பாசி சூழ்ந்த பெருங் கழல், தண் பனி வைகிய வரிக் கச்சினனே! (கபிலர்) அகநானூறு;- அருவிய யான்ற பெருவரை மருங்கில் சூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயங் காணாது பாசி தின்ற பைங்கண் யானை ஓய்பசிப் பிடியோ டொருதிறன் ஒடுங்க (பாலை- மாமூலனார்) புறநானூறு;- தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து, திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ, மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும், (பாடல் முதல் குறிப்பு:அறவை நெஞ்சத்து ஆயர்) குறுந்தொகை;- பரணர், மருதத் திணை – தலைவி சொன்னது ஊருண் கேணி உண் துறைத் தொக்க பாசி யற்றே பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே. ( 399-பரணர், மருதத் திணை – தலைவி சொன்னது ) மலைபடுகடாம் ;- விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா வழும்பு கண் புதைத்த நுண் நீர் பாசி அடி நிலை தளர்க்கும் அருப்பம் உம் உடைய (..222) நற்றிணை ;- அமுதம் உண்க நம் அயல் இலாட்டி கிடங்கில் அன்ன இட்டு கரை கான் யாற்று கலங்கும் பாசி நீர் அலை கலாவ ஒளிறு வெள் அருவி ஒள் துறை மடுத்து (..65) ஊடகங்கள் 250px|thumb|பாசிகள் ̈ மேற்கோள்கள் பகுப்பு:பாசிகள்
பூஞ்சை
https://ta.wikipedia.org/wiki/பூஞ்சை
மிகப் பெரிய மெய்க்கருவுயிரி உயிரினக் குழுக்களில் பூஞ்சைகளும் (Fungii) (இலங்கை வழக்கு:, பூஞ்சணம், பூசணம், பங்கசு) ஒன்று. தற்போதைய பாகுபாட்டியலின் அடிப்படையில், பூஞ்சைகள் ஒரு தனி இராச்சியமாக வகைப்படுத்தப்படுகின்றன. வளமற்ற மண்ணும், தாவர, விலங்கு கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து, நிலத்துடன் சேர்வதால் நிலவளம் அதிகரிக்கிறது. தொடக்கத்தில் தாவர இராச்சியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்ட பூஞ்சைகள், பின்னர் தாவரங்கள், விலங்குகள் போலத் தனிப்பெரும் உயிர் இராச்சியமாக வகைப்படுத்தப்பட்டன. பூமியில் எல்லா வகை சுற்றுச்சூழல்களிலும் பூஞ்சைகள் காணப்படுகின்றன. இவை இருண்ட, ஈரப்பசை நிரம்பிய இடங்களிலும் கனிம ஊட்டப்பொருட்கள் நிறைந்த வளர்தளங்களிலும் வளர்கின்றன. பல முக்கியமான ஒட்டுண்ணி வாழ்வை மேற்கொள்ளும் உயிரினங்கள், மற்றும் சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள் பூஞ்சை இராச்சியத்தில் உள்ளன. பூஞ்சைகள் பச்சையம் அற்ற மெய்க்கருவுயிரி (யூக்காரியோட்டிக்) உயிரினங்கள். இவை தாவரங்களைப் போலச் சுவருடைய உயிரணுக்களை உடையனவாகக் காணப்பட்டாலும், இவற்றில் பச்சையம் இல்லை. இப்பூஞ்சைகளினால் ஏற்படும் வேதிவினை மாற்றங்கள், சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பூஞ்சைகளைப் பற்றிய அறிவியல் பிரிவு பூஞ்சையியல் (mycology) எனப்படுகிறது. பூஞ்சைகள் பொதுவாகக் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும். எனினும் காளான்களாக இவை விருத்தியடையும் போது கண்ணுக்குத் தென்படுகின்றன. ஏனைய நுண்ணியிர்கள் போலவே இவற்றிலும் மனிதர்களுக்குப் பயனுடையவை, பயனற்றவை, தீமையானவை என உள்ளன. கன்டிடயாசிஸ் போன்ற நோய்களுக்கு இவை காரணமாகின்றன; உணவைப் பழுதடையச் செய்கின்றன. எனினும் பெனிசிலின் போன்ற முக்கியமான நுண்ணியிர்க்கொல்லிகளை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன. பூஞ்சைகள் பல தாவரங்களுடனும், வேறு உற்பத்தியாக்கிகளுடனும் ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. இலைக்கன் (அல்கா-பூஞ்சை அல்லது சயனோபக்டீரியா-பூஞ்சை கூட்டணி) இதற்கு மிக முக்கியமான உதாரணமாகும். மரங்களின் வேர்களில் கனியுப்பு அகத்துறிஞ்சலுக்கு இவை ஒன்றியவாழிகளாகச் செயற்பட்டு உதவுகின்றன. பூஞ்சைகளின் பண்புகள் thumb|பூஞ்சண இழை 1- கலச்சுவர் 2- பிரிசுவர் 3- இழைமணி 4- புன்வெற்றிடம் 5- எர்கோஸ்டரோல் பளிங்கு 6- இரைபோசோம் 7- கலக் கரு 8- அகக்கலவுச் சிறுவிழை 9- இலிப்பிட்டு உடல் 10- கல மென்சவ்வு 11- ஸ்பிட்ஸென்கூர்ப்பர் (Spitzenkörper) 12- கொல்கி உபகரணம் பூஞ்சைகள் உயிரியல் வகைப்பாட்டில் தனி இராச்சியமாகக் கருதப்படுகின்றன. முற்காலத்தில் தாவரங்களுடன் வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது பூஞ்சைகளின் தனித்துவமான இயல்புகள் கண்டறியப்பட்டுள்ளதால் இவை தனி இராச்சியமான Fungiiக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பூஞ்சைகள் பிற போசணிகளாகும். இவற்றால் சுயமாக உணவை உற்பத்தி செய்ய முடியாது. பூஞ்சைகள் மெய்க்கருவுயிரிகளாகும். இவற்றின் கலங்களில் உண்மையான, மென்சவ்வால் சூழப்பட்ட கரு/கருக்கள் உள்ளன. இவற்றின் கலங்களில் தாவரக் கலத்தைப் போல புன்வெற்றிடம் உள்ளது. கைட்டின் மற்றும் குளுக்கான்களாலான கலச்சுவரைக் கொண்டது. (தாவரக் கலச்சுவர் அனேகமாக செல்லுலோசால் ஆனது) L-லைசின் அமினோ அமிலத்தைத் தொகுக்கும் ஆற்றலுடையன. ஹைப்பே (பூஞ்சண இழை) எனப்படும் நீண்ட இழை போன்ற பல கருக்களைக் கொண்ட கலங்களாலானவை பூஞ்சைகள் பச்சையவுருமணிகளைக் கொண்டிருப்பதில்லை. உடற்கூற்றியல் thumb|330px|right|alt=Monochrome micrograph showing Penicillium hyphae as long, transparent, tube-like structures a few micrometres across. Conidiophores branch out laterally from the hyphae, terminating in bundles of phialides on which spherical condidiophores are arranged like beads on a string. Septa are faintly visible as dark lines crossing the hyphae.|Penicillium பூஞ்சணம் நுணுக்குக் காட்டியில்1. பூஞ்சண இழை 2. conidiophore 3. phialide 4. தூளியம் 5. பிரிசுவர் அனேகமான பூஞ்சைகள் பூஞ்சண இழைகளாக (hyphae) வளர்கின்றன. பூஞ்சண இழைகள் 2–10 µm விட்டமும் சில சென்டிமீட்டர்கள் நீளமுடையனவாகவும் வளர்கின்றன. பல பூஞ்சண இழைகள் ஒன்று சேர்ந்து பூஞ்சண வலையை (mycelium) ஆக்குகின்றன. பூஞ்சைகள் பூஞ்சண இழையை நீட்சியடையச் செய்வதன் மூலம் வளர்ச்சியடைகின்றன. வளர்ச்சி இழையுருப்பிரிவு மூலம் நிகழ்கின்றது. கருப்பிரிவு நிகழ்ந்து புதிய கருக்கள் உருவாக்கப்பட்டாலும், அக்கருக்களுக்கிடையிலான பிரிசுவர் (septum) முழுமையாக அவற்றைப் பிரிக்காததால் பூஞ்சைகள் அடிப்படையில் பொதுமைக் குழியக் கட்டமைப்பைக் காட்டுகின்றன. அதாவது (இனப்பெருக்கக் கட்டமைப்புக்களைத் தவிர) ஒரு பூஞ்சணத்தில் உடல் முழுவதும் ஒரே தொடர்ச்சியான குழியவுருவால் நிரப்பப்பட்டுள்ளது. இதனால் இனப்பெருக்கக் கட்டமைப்புக்களைத் தவிர வேறு வகையான இழைய வியத்தம் பூஞ்சைகளில் தென்படுவதில்லை. புதிய பூஞ்சண இழைகள் பழைய பூஞ்சண இழைகள் கிளை விடுவதன் மூலம் உருவாகின்றன. அனேகமான பூஞ்சைகள் பல்கல (உணமையில் பல்கரு) அங்கத்தவர்களென்றாலும், மதுவம் என்னும் கூட்டப் பூஞ்சைகள் தனிக்கல பூஞ்சணங்களாக உள்ளன. சில பூஞ்சணங்கள் தமது அகத்துறிஞ்சல் முறைப் போசணையை நிறைவேற்றுவதற்காக பருகிகள் (haustoria) என்னும் கட்டமைப்புக்களைக் கொண்டுள்ளன. இவற்றின் பூஞ்சண இழையினுள் பல சிறு புன்வெற்றிடங்கள் உள்ளன. இப்புன்வெற்றிடங்கள் தாவர புன்வெற்றிடம் புரியும் தொழிலையே புரிகின்றன. இதனைத் தவிர சாதாரண மெய்க்கருவுயிரி (யூக்கரியோட்டா) கலத்திலுள்ள அனைத்துப் புன்னங்கங்களும் பூஞ்சண இழைகளில் உள்ளன. இவை பொதுவாக காற்றுவாழிகள் (மதுவம் போன்றவற்றைத் தவிர்த்து) என்பதால் இவற்றில் இழைமணிகள் பல காணப்படும். பேசிடியோமைக்கோட்டா அங்கத்தவர்களின் இனப்பெருக்கக் கட்டமைப்புக்கள் நன்றாக வளர்ச்சியடைந்து வெற்றுக் கண்களுக்குப் புலப்படும் காளான் பூஞ்சணத்தை ஆக்குகின்றன. சில கைற்றிட் பூஞ்சைகளைத் தவிர ஏனைய பூஞ்சண இனங்களில் சவுக்குமுளை காணப்படுவதில்லை. வளர்ச்சியும் உடற்றொழிலியலும் thumb|அழுகிப்போகும் ஒரு குழிப்பேரிப் பழத்தின் மீது பூஞ்சை பூக்கின்றது. இங்குள்ள புகைப்படச் சட்டகங்கள் தொடர்ந்து ஆறு நாட்கள் 12 மணிநேர இடைவெளிகளோடு எடுக்கப்பட்டவை. பூஞ்சணங்களின் உடற்கட்டமைப்பு அவற்றின் போசணை முறைக்கமைய இசைவாக்கமடைந்துள்ளது. இவை இழையுருவான கட்டமைப்பைக் கொண்டுள்ளதால் இவற்றின் மேற்பரப்பு கனவளவு விகிதம் மிகவும் உயர்வாகும்; இதனால் பூஞ்சைகள் மிக அதிகமான அகத்துறிஞ்சல் வினைத்திறனைக் கொண்டுள்ளன. அனேகமானவை அழுகல்வளரிகளாகவும், பிரிகையாக்கிகளாகவும், சில ஒட்டுண்ணிகளாகவும், சில ஒன்றிய வாழிகளாகவும் உள்ளன. அனைத்துப் பூஞ்சணங்களும் அவற்றின் உணவின் மீதே வளர்வனவாக உள்ளன. தாம் வளரும் வளர்ச்சியூடகம்/ உணவு மீது நீர்ப்பகுப்பு நொதியங்களைச் சுரக்கின்றன. இந்நொதியங்கள் அவ்வுணவு மீது தொழிற்பட்டு அவ்வுணவு நீர்ப்பகுப்படைந்து குளுக்கோசு, அமினோ அமிலம் போன்ற எளிய உறிஞ்சப்படக்கூடிய வடிவத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கும். இவ்வெளிய சேதனப் பதார்த்தங்களை உள்ளெடுத்து பூஞ்சணம் வளர்ச்சியடைகின்றது. பூஞ்சணங்களின் நொதியங்கள் பல்சக்கரைட்டுக்கள், புரதம், இலிப்பிட்டு என அனைத்து வகை உயிரியல் மூலக்கூறுகளிலும் செயற்படக் கூடியது. பாக்டீரியாக்களைத் தாக்கியழிக்கப் பயன்படும் நுண்ணுயிர்க் கொல்லிகளால் இவற்றை அழிக்க முடியாது. பூஞ்சணங்கள் உயர் வளர்ச்சி வீதமுடையவை. இதனாலேயே இரவோடிரவாக ஒரே நாளில் காளான் வளர்ந்திருப்பதை அவதானிக்கலாம். பூஞ்சணங்கள் தாம் உள்ளெடுக்கும் உணவின் ஒரு பாகத்தைத் தம் வளர்ச்சி, இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்தி மீதியை கிளைக்கோஜன் மற்றும் எண்ணெய்ச் சிறுதுளிகளாகச் சேமிக்கின்றன. இனப்பெருக்கம் பூஞ்சணங்கள் இலிங்க முறை மற்றும் இலிங்கமில் முறையில் இனம்பெருகுகின்றன. அனேகமானவை இரு முறைகளையும் மேற்கொண்டாலும் சில இனங்கள் இலிங்க முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்வதில்லை. இலிங்கமில் முறை இனப்பெருக்கம்: பதிய வித்திகள் (conidia) மூலம் பிரதானமாக இலிங்கமில் இனப்பெருக்கம் நிகழ்கிறது. இதனைத் தவிர துண்டுபடல் இழையுருவான பூஞ்சணங்களில் நிகழும். அதாவது புற விசைகலால் பூஞ்சண வலை சேதமுறும் போது, ஒவ்வொரு துண்டமும் புதிய பூஞ்சணமாக வளர்ச்சியடையும் ஆற்றலுடையது. மதுவம் போன்ற தனிக்கல பூஞ்சணங்களில் அரும்புதல் (budding) மூலம் இலிங்கமில் இனப்பெருக்கம் நிகழும். தனியே இலிங்கமில் இனப்பெருக்கத்தை மாத்திரம் காட்டும் பூஞ்சணங்கள் டியூட்டெரோமைக்கோட்டா (Deuteromycota) எனும் பூஞ்சணக் கூட்டமாக வகைப்படுத்தப்படுகின்றன. இலிங்க முறை இனப்பெருக்கம்: அனேகமான பூஞ்சணங்கள் ஒடுக்கற்பிரிவுடன் கூடிய இலிங்க முறை இனப்பெருக்கத்தை மேற்கொள்கின்றன. பூஞ்சணங்களின் வாழ்க்கை வட்டத்தில் பொதுவாக ஒரு மடிய (n), இருகருக்கூட்ட அவத்தை(n+n), இருமடிய நிலைகள்(2n) உள்ளன. வெவ்வேறு பூஞ்சைக் கூட்டங்களில் வெவ்வேறு நிலை ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது. கைற்றிட் பூஞ்சணத்தில் இருகருக்கூட்ட அவத்தை காணப்படுவதில்லை. காளான் இருகருக்கூட்ட அவத்தை உடைய இனப்பெருக்கக் கட்டமைப்பாக உள்ளது. இவை நுகவித்தி (Zygospore), கோணி வித்தி (ascospore), சிற்றடி வித்தி (basidospore), இயங்கு வித்தி (zoospore) என பல்வேறு இலிங்க முறை இனப்பெருக்கக் கட்டமைப்புக்களைக் காட்டுகின்றன. உதாரணமாக ஒரு காளானின் குடையின் அடிப்பாகத்தில் நுணுக்குக்காட்டியினூடாக பல சிற்றடிகளையும், சிற்றடி வித்திகளையும் அவதானிக்கலாம். (இரு கருக்கூட்ட அவத்தை என்பது கருக்கட்டலின் போது உடனடியாக கருக்கட்டலில் ஈடுபடும் புணரிக் கருக்கள் (ஒருமடியம்-n) ஒன்றிணையாமல் ஒரு கலத்தினுள்ளேயே இரண்டும் சேர்ந்திருக்கும் (n+n) நிலை) இலிங்க முறை இனப்பெருக்கத்தின் போது முதலில் நேர் மற்றும் எதிர் குல பூஞ்சண இழைகளின் இணைதல் (conjugation) நிகழும். இவற்றின் இணைதலைத் தொடர்ந்து உடனடியாகக் கருக்கட்டல் நிகழ்வதில்லை. முதலில் குழிவுருப் புணர்ச்சி இடம்பெற்று இரு கருக்கூட்ட அவத்தை ஆரம்பமாகும். அதன் முடிவிலேயே கருப்புணர்ச்சி இடம்பெறும். பூஞ்சைகளின் வகைபாடு பூஞ்சணங்களின் பிரதான கூட்டங்கள் பூஞ்சணங்கள் அவை ஆக்கும் இலிங்க இனப்பெருக்கக் கட்டமைப்புக்க்களின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுகின்றன. பின்வருவன பிரதான பூஞ்சண கணங்களாகும்: கைற்றிடோ மைக்கோட்டா (Chytridiomycota): இவை இயங்குவித்திகளை ஆக்கும் பூஞ்சணங்களாகும். இவ்வித்திகளில் சவுக்குமுளை உள்ளதால் இவை நீரினுள் அசையும் திறன் கொண்டவையாக உள்ளன. பொதுவாக கைற்றிட்டுக்கள் நீர்வாழ்க்கைக்குரியனவாக உள்ளன. இவற்றில் சந்ததிப் பரிவிருத்தி உள்ளதுடன், இருமடிய, ஒருமடிய இரு நிலைகளும் சம ஆதிக்கத்துடன் உள்ளன. இவற்றில் இருகருக்கூட்ட அவத்தை காணப்படுவதில்லை. இவற்றில் கிட்டத்தட்ட 1000 இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவை இருமடிய இயங்கு வித்தி மூலம் இலிங்கமில் முறை இனப்பெருக்கத்தையும், ஒருமடிய இயங்கு வித்தி மூலம் இலிங்க முறை இனப்பெருக்கத்தையும் மேற்கொள்கின்றன. இக்கூட்டமே அறியப்பட்ட பூஞ்சணக் கூட்டங்களுள் கூர்ப்பில் ஆதியானதாக உள்ளது. உ-ம்: Allomyces ஸைகோ மைக்கோட்டா (Zygomycota): இருமடிய நுகவித்தியை ஆக்கும் பூஞ்சைகள் இக்கூட்டத்தினுள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் ஒருமடிய, இரு கருக்கூட்ட அவத்தை (Dikaryon stage) மற்றும் இருமடிய ஆகிய மூன்று நிலைகளும் இருந்தாலும், ஒருமடிய நிலையே ஆதிக்கமான நிலையாக உள்ளது. கிட்டத்தட்ட 1050 இனங்கள் இக்கூட்டத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன. பாணில் வளரும் பாண் பூஞ்சணம் இவ்வகையைச் சார்ந்ததாகும். இவற்றில் கருக்களிடையே பிரிசுவர் காணப்படுவதில்லை. உ-ம்: Rhizopus, Pilobus குளோமெரோ மைக்கோட்டா (Glomeromycota): இலிங்க முறை இனப்பெருக்கத்தைக் காட்டுவதில்லை. இவையே தாவரங்களின் வேரில் ஒன்றியவாழிகளாக வளரும் வேர்ப்பூஞ்சணங்களாகும். கிட்டத்தட்ட 150 இனங்கள் அறியப்பட்டுள்ளன. அஸ்கோ மைக்கோட்டா (Ascomycota): இலிங்க முறை இனப்பெருக்கத்தின் போது கோணி வித்திகளை உருவாக்கும் பூஞ்சணங்கள் இக்கணத்தினுள் உள்ளடக்கப்படுகின்றன. கோணி (ascus) என்னும் கட்டமைப்புக்குள் இவ்வித்திகள் உருவாக்கப்படுகின்றன. இலிங்கமில் முறை இனப்பெருக்கத்தின் போது தூளிய வித்திகளை (conidio spores) உருவாக்குகின்றன. கிட்டத்தட்ட 45000 இனங்கள் அறியப்பட்டுள்ளன. உ-ம்:Saccharomyces, Kluyveromyces, Pichia, Candida பேசிடியோ மைக்கோட்டா (Basidiomycota): இலிங்க முறை இனப்பெருக்கத்தின் போது சிற்றடி வித்திகளை உருவாக்கும் பூஞ்சணங்கள். இவை பொதுவாக காளான் என்னும் வெற்றுக்கண்ணுக்குத் தென்படக்கூடிய கட்டமைப்பை ஆக்குகின்றன. கிட்டத்தட்ட 22000 இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் இருகருக்கூட்ட அவத்தை ஆதிக்கத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். உ-ம்: Ustilago maydis, Malassezia, Cryptococcus neoformans சூழலியல் பூஞ்சைகள் புவியிலுள்ள அனைத்து வகையான சூழல்த்தொகுதிகளிலும் காணப்படுகின்றன. பக்டீரியாக்களும் பூஞ்சைகளுமே உயிரியல்த் தொகுதிகளில் முக்கியமான பிரிகையாக்கிகளாகும். எனவே இவை மீண்டும் சூழலுக்குக் கனியுப்புக்கள் சென்றடைவதை உறுதிப்படுத்துகின்றன. எனவே பூஞ்சைகள் அழிக்கப்பட்டால் புவியில் சூழலின் நிலைப்புத் தன்மை சீர்குலைந்து விடும். ஒன்றியவாழ்வு பூஞ்சைகள் ஆர்க்கியாவைத் தவிர்ந்த மற்றைய அனைத்து இராச்சியங்களைச் சேர்ந்த உயிரினங்களுடனும் ஒன்றியவாழிகளாகச் செயற்படுவதாக அறியப்பட்டுள்ளது. இவ்வாறான நிலமையில் இரு உயிரினங்களும் பயனடையும் வகையில் அவற்றுக்கிடையில் இடைத்தொடர்புகள் காணப்படும். தாவரங்களுடன் தாவரங்களின் வேர்களில் சில வகைப் பூஞ்சைகள் (நோய்த்தொற்று ஏற்படுத்துபவையைத் தவிர்த்து) வளர்ந்து வேர்ப் பூஞ்சணம் (மைகொரிஸா-Mycorrhiza) எனும் கட்டமைப்பை ஏற்படுத்துகின்றன. இவை பொதுவாக பெரும் மரங்களில் காணப்படும். மைகொரிஸா நீர் மற்றும் கனியுப்பு அகத்துறிஞ்சலின் வினைத்திறனை அதிகரிக்கின்றது. இதனால் மைகொரிஸா கட்டமைப்புடைய தாவரம் நன்மையடைகின்றது. பூஞ்சைகள் தாமுள்ள தாவர வேரிலிருந்து தமக்குத் தேவையான உணவைப் பெற்றுக்கொள்கின்றன. வேர் மயிர்கள் குறைவான தாவரங்களில் மைகொரிஸா மூலமே அனேகமான நீர் மற்றும் கனியுப்புத் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன. முக்கியமாக பொஸ்பேட்டு அகத்துறிஞ்சலுக்கு இக்கட்டமைப்புகள் உதவுவதாக அறியப்பட்டுள்ளது. அறியப்பட்டுள்ள தாவரங்களில் கிட்டத்தட்ட 90% ஆனவை மைகொரிஸா மூலம் பூஞ்சைகளுடன் ஒன்றிய வாழிகளாகச் செயற்படுகின்றன. இத்தொடர்புக்கான ஆதாரங்கள் கடந்த 400 மில்லியன் வருடங்களாக உள்ளன. thumb|left|upright|தாவர இழையத்துக்குள் வாழும் ஒன்றியவாழி பூஞ்சை சில பூஞ்சைகள் தாவரங்களின் இலைகள் மற்றும் தண்டினுள் ஒன்றியவாழிகளாக வாழ்கின்றன. இப்பூஞ்சைகள் சுரக்கும் நச்சுப்பதார்த்தங்கள் தாவரவுண்ணிகளிடமிருந்து இப்பூஞ்சைகள் வாழும் தாவரத்துக்குப் பாதுகாப்பளிக்கின்றன. பூஞ்சைகள் தாவரங்களிடமிருந்து உணவு மற்றும் உறையுள்ளைப் பெறுகின்றன. இத்தொடர்பை சில வகை புற்களில் அவதானிக்கலாம். அல்கா மற்றும் சயனோபக்டீரியாவுடன் right|thumb|லைக்கன் பூஞ்சையானது அல்கா அல்லது சயனோபக்டீரியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ஒன்றியவாழிக் கூட்டணியே லைக்கன் எனப்படும். லைக்கன்கள் ஏனைய உயிரினங்கள் வாழ முடியாத பாறைகளிலும் வாழும் ஆற்றலுள்ளன. இது இவ்வொன்றியவாழிக் கூட்டணியாலேயே சாத்தியமானது. பூஞ்சை அல்காக்கு/சயனோபக்டீரியாக்கு பாதுகாப்பு, நீர் மற்றும் கனியுப்புத் தக்கவைப்பை வழங்குவதுடன் அல்கா/சயனோபக்டீரியா உணவை உற்பத்தி செய்து பூஞ்சைக்குரிய பங்கை வழங்குகின்றது. லைக்கன்கள் புவியில் மண் தோன்றுவதில் முக்கிய பங்களிப்பு செய்துள்ளன. 17500 தொடக்கம் 20000 வரையான பூஞ்சையினங்கள் (20% பூஞ்சைகள்) லைக்கன்களைத் தோற்றுவிக்கின்றன. பூஞ்சைகளின் பயன்பாடுகள் பொருளாதார ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் இவை பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. காளான்களும், பெனிசிலியமும், மதுவமும் எமக்கு நன்றாகப் பழக்கப்பட்ட பூஞ்சைகளாகும். பெனிசிலியம் மருந்து தயாரிப்பிலும், மதுவம் மற்றும் காளான் உணவுற்பத்தியிலும் பயன்படுகின்றன. மருந்துற்பத்தி பெனிசிலின் போன்ற நுண்ணியிர்க்கொல்லிகளின் தயாரிப்பில் பூஞ்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. இயற்கையாக பெனிசிலியம் பூஞ்சையிலிருந்து பெறப்படும் பெனிசிலின் சிறிதளவான பக்டீரியாக்களையே எதிர்க்கும் ஆற்றல் கொண்டது. எனவே இயற்கையாகப் பெறப்படும் பெனிசிலினை மாற்றத்துக்குட்படுத்தி பலம் கூடிய பெனிசிலின் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. Penicillium griseofulvum எனும் பூஞ்சை இனத்திலிருந்து கிரீசியோஃபல்வின் எனும் நுண்ணியிர்க்கொல்லி உற்பத்தி செய்யப்படுகின்றது. கொலஸ்திரோல் சுரப்பை நிரோதிக்கும் மருந்துகளை உற்பத்தி செய்யவும் பூஞ்சைகள் பயன்படுகின்றன. உணவுத் தயாரிப்பில் தனிக்கல பூஞ்சை வகையான மதுவம் பாண் தயாரிப்பிலும், மதுபானத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றது. Saccharomyces எனும் மதுவத்தின் நொதித்தல் தொழிற்பாட்டின் மூலம் மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. படத்தொகுப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Tree of Life இணையத் திட்டம்:பூஞ்சைகள் பூஞ்சையியல் வலையகம் பூஞ்சை வலை வட அமெரிக்க பூஞ்சையியல் கூட்டமைப்பு பசிபிக் வடமேற்கு பூஞ்சைகள் தரவுத்தளம் அருஞ்சொற்பொருள் இராச்சியம் - Kingdom புல்லுருவி, ஒட்டுண்ணி - Parasite சிதை மாற்றம் செய்யும் உயிரினங்கள், பிரிகையாக்கிகள் - Decomposers பகுப்பு:பூஞ்சைகள்
வைரஸ்
https://ta.wikipedia.org/wiki/வைரஸ்
வழிமாற்று தீநுண்மி
சீனா (பக்கவழி நெறிப்படுத்துதல்)
https://ta.wikipedia.org/wiki/சீனா_(பக்கவழி_நெறிப்படுத்துதல்)
சீனா அல்லது சோங்கு ('Zhōngguó) என்பது பினவருவனவற்றைக் குறிக்கும்: அகண்ட சீனா சீன மக்கள் குடியரசு அல்லது சீனக் குடியரசு, சோங்கு ('Zhōngguó) என்பது பாரம்பரியப் பெயர்.
கருநாடகம்
https://ta.wikipedia.org/wiki/கருநாடகம்
கருநாடகம் (Karnāṭaka, , கர்நாடகம்) என்பது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள, ஒரு மாநிலமாகும். மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்கீழ் இம்மாநிலம் நவம்பர் 1, 1956 அன்று உருவாக்கப்பட்டது. மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்த இம்மாநிலம் 1973-இல் கர்நாடகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கருநாடக மாநிலமானது மேற்கில் அரபுக் கடல், வட மேற்கில் கோவாவையும், வடக்கில் மராட்டிய மாநிலத்தையும், வடகிழக்கில் தெலுங்கானாவையும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தையும், தென் கிழக்கில் தமிழ்நாட்டையும், தென் மேற்கில் கேரளாவையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம் மாநிலம் 74,122 சதுர மைல்கள், அதாவது 191,976 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 5.83% ஆகும். 30 மாவட்டங்களைக் கொண்டுள்ள இம்மாநிலம் பரப்பளவில் இந்தியாவின் எட்டாவது மிகப் பெரிய மாநிலமாகத் திகழ்வதுடன் மக்கள் தொகையில் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் கொண்டுள்ளது. கன்னடம் ஆட்சி மொழியாகவும் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது. கருநாடகம் என்ற பெயருக்குப் பல வித சொல்லிலக்கணம் பரிந்துரைக்கப்பட்டாலும், 'கரு' மற்றும் 'நாடு' என்ற கன்னட வார்த்தைகளில் இருந்துதான் அது உருவாக்கப்பட்டுள்ளது என்பது பொதுவான கருத்து. இந்த வார்த்தைகளின் பொருள் மேட்டு நிலம் என்பதாகும். ஆங்கிலேயர்கள் இம்மாநிலத்தை கர்நாடிக் என்றும் சில சமயங்களில் கர்நாடக் என்றும் குறிப்பிட்டனர். பழங்கற்கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள கருநாடகம், தொன்மையான மற்றும் நடு கால இந்தியாவின் சில வலிமை வாய்ந்த பேரரசுகளின் தாயகமாகவும் திகழ்ந்துள்ளது. இப்பேரரசுகளால் சார்பகண்ட மெய்ப்பொருள் அறிவச்செம்மல்களும், இசை வல்லுநர்களும் சமய, பொருளாதார மற்றும் இலக்கிய இயக்கங்களைத் தொடங்கினர். அவை இன்றுவரை நிலைத்திருப்பது குறிப்பிடத் தகுந்தது. இந்தியாவிலேயே கன்னட மொழி எழுத்தாளர்கள்தான் அதிக அளவில் ஞானபீட விருது பெற்றுள்ளார்கள். மாநிலத் தலைநகராக விளங்கும் பெங்களூரு, இந்தியா சந்தித்து வரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முன்னோடியாக உள்ளது. வரலாறு 175px|thumb|left|சாளுக்கியர் மற்றும் இராசரகுடர்களால் கட்டப்பட்ட மல்லிகார்சுனர் கோவில், காசி விசுவநாதர் கோவில் - பட்டாடக்கல், வட கருநாடகம். இது யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களம் கருநாடக வரலாற்றை அப்பகுதியில், கிடைத்துள்ள கைக் கோடரிகள் மற்றும் இதர கண்டுபிடிப்புகள் மூலம் பழங்கற்கால கைக் கோடரி கலாச்சாரத்துடன் அதற்கு இருந்துள்ள தொடர்பை அறிந்துகொள்ள முடிகிறது. புதிய கற்காலக் கலாச்சாரத்தின் சான்றுகளும் இம்மாநிலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. பண்டைய சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின் எச்சமான ஹரப்பாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம் கருநாடகத் தங்க சுரங்களைச் சார்ந்ததாக அறியப்படுவதன் வழியே கருநாடகப் பகுதி பண்டைய காலம் தொட்டே வணிகம், கலாச்சாரம் ஆகியவற்றில் முன்னேறி இருப்பது தெரிய வருகிறது. பொ.ஊ. 3 நூற்றாண்டுகளுக்கு முன்னதாக, கருநாடகத்தின் பெரும் பகுதி, பேரரசர் அசோகரின் மௌரிய ஆட்சிக்கு உட்படு முன், நந்தா பேரரசின் கீழ் இருந்தது. நான்கு நூற்றாண்டுகள் தொடர்ந்த சதவாகன ஆட்சி பெருமளவு கருநாடகத்தை அவர்களின் அதிகாரத்தின் கீழ் கொள்ள உதவி புரிந்தது. சாதவாகனர்களின் ஆட்சி இறக்கம் கருநாடகத்தை அடிச்சார்ந்த, முதல் அரசநாடுகளான கடம்பர்கள் மற்றும் மேலைக் கங்க வழியினரும் வளர வழி வகுத்தது. அதுவே, அப்பகுதி பக்கச் சார்பற்ற அரசியல் உருபொருளாக புகுந்து அடையாளம் காணவும் வழி வகுத்தது. மௌரிய சர்மாவால் தொடங்கப்பட்ட கடம்ப வழிமரபு, பனவாசியை தலைநகராக கொண்டது.From the Talagunda inscription (Dr. B. L. Rice in Kamath (2001), p. 30.)Moares (1931), p. 10. அது போல், மேலைக் கங்கர் மரபினர், தாலகாட்டை தலைநகராக கொண்டு அமைக்கப் பட்டது.Adiga and Sheik Ali in Adiga (2006), p. 89.Ramesh (1984), pp. 1–2. கடம்பர், சாளுக்கியர் கடம்பர் மரபைச் சார்ந்த முதலாவது அரசாங்கங்கள் கன்னட மொழியை நிர்வாக மொழியாகப் பயன்படுத்தினர் என்பது கால்மிதி கல்வெட்டு வழியாகவும் மற்றும் பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த செப்பு நாணயங்கள் வழியாகவும் அறியலாம்.From the Halmidi inscription (Ramesh 1984, pp. 10–11.)Kamath (2001), p. 10. இவ்வம்சத்தைத் தொடர்ந்து சாளுக்கியர் வலிமை பெற்று ஆட்சியைக் கைப்பற்றினர். தக்காணத்தை முழுவதுமாக ஆட்சிக்குள் கொண்டு வந்த சாளுக்கியர் கருநாடகத்தை முழுவதும் இணைத்த பெருமை பெற்றவர்கள்.The Chalukyas hailed from present-day Karnataka (Keay (2000), p. 168.)The Chalukyas were native கன்னடர் (N. Laxminarayana Rao and Dr. S. C. Nandinath in Kamath (2001), p. 57.)Altekar (1934), pp. 21–24.Masica (1991), pp. 45–46.Balagamve in Mysore territory was an early power centre (Cousens (1926), pp. 10, 105.)Tailapa II, the founder king was the governor of Tardavadi in modern Bijapur district, under the Rashtrakutas (Kamath (2001), p. 101.) சாளுக்கியர் கட்டிடக் கலை, கன்னட இலக்கியம், இசை ஆகியவற்றைப் பெரிதும் வளர்த்தனர்.Kamath (2001), p. 115.Foekema (2003), p. 9. விசயநகரப் பேரரசு, இசுலாமியர் ஆட்சி thumb|left|100px|திப்பு சுல்தான் பொ.ஊ. 1565ஆம் ஆண்டு, கருநாடகம் மட்டுமல்லாது தென் இந்தியா முழுவதும் முக்கிய அரசியல் மாற்றத்தைச் சந்தித்தது. பல நூற்றாண்டுகளாக வலிமை பெற்று திகழ்ந்த விசயநகரப் பேரரசு இசுலாமிய சுல்தானகத்துடன் தோல்வியைத் தழுவியது. பின் பிஜபூர் சுல்தானகத்திடம் ஆட்சி சிறிது காலம் இருந்து, பின் மொகலாயர்களிடம் 17ஆம் நூற்றாண்டு இடம் மாறியது. சுல்தானகத்தின் ஆட்சிகளின் போது உருது மற்றும் பாரசீக இலக்கியங்களும் வளர்க்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வடக்கு கருநாடகம் ஐதராபாத் நிசாமாலும் தெற்கு கர்நாடகம் மைசூர் உடையார்களாளும், ஆளப்பட்டது. மைசூர் அரசரான இரண்டாம் கிருட்டிணராச உடையார் மரணத்தைத் தொடர்ந்து, படைதலைவரான ஹைதர் அலி ஆட்சியைக் கைப்பற்றினார். ஆங்கிலேயருடன் பல போர்களில் வெற்றி கொண்ட அவரைத் தொடர்ந்து அவரது மகன் திப்பு சுல்தான் ஆட்சிப் பொறுப்பேற்று ஆங்கிலேயரை எதிர்த்தார். ஆங்கிலேயருடனான நான்காவது போரிற் திப்பு சுல்தான் மரணம் அடைந்ததன் வழியே மைசூர் அரசு ஆங்கிலேய அரசுடன் 1799 இல் ஒருங்கிணைக்கப்பட்டது. புவியமைப்பு கருநாடகத்தின் மேற்கில் அரபிக் கடலும், வடமேற்கில் கோவாவும், வடக்கில் மகாராஷ்டிரமும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசமும், தென்கிழக்கில் தமிழகமும், தென்மேற்கில் கேரளமும் அமைந்துள்ளன. கருநாடகத்தில் பெரும்பாலும் மலைப் பகுதிகளே காணப்படுகிறது. கருநாடக மாநிலத்தின் தென் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. காவிரி ஆறு கருநாடகத்தில் தொடங்குகிறது. thumb|கருநாடகம் நில உருவப்படம் left|thumb|200px| இந்தியாவின் உயரமான ஜோக் அருவி ஷராவதி ஆற்றில் இம் மாநிலம் 3 முக்கிய நிலப்பகுதிகளைக் கொண்டுள்ளது கரவாளி கடற்கரை நிலப்பகுதி, மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான மலைப்பாங்கான மலைநாடு நிலப்பகுதி மற்றும் தக்காண பீடபூமியின் பாயலுசீமா சமவெளி. மாநிலத்தின் பெரும்பகுதி பாயலுசீமா சமவெளியின் வரண்ட நிலப்பகுதியாகும். பெயர் . கருநாடகத்தில் பாயும் ஆறுகளாவன: காவேரி, துங்கபத்ரா, கிருஷ்ணா ஆறு மற்றும் சரவதி . கருநாடகத்தில் நான்கு பருவகாலங்கள் உணரப்படுகின்றன. குளிர்காலம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களிலும், கோடைக்காலம் மார்ச் மற்றும் மே மாதங்களிலும், பருவக்காற்று காலம் சூன் முதல் செப்டம்பர் வரையிலும்,பருவக்காற்று கடைக்காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலும் உணரப்படுகின்றது.. மாவட்டங்கள் thumb|371x371px 1,91,791 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கர்நாடக மாநிலம் 31 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 31 மாவட்டங்கள், பெங்களூர், பெல்காம், குல்பர்கா, மைசூர் ஆகிய நான்கு ஆட்சிப்பிரிவுகளுள் அடங்கும். பெங்களூர் ஆட்சிப்பிரிவு பெங்களூர் மாவட்டம் பெங்களூரு ஊரக மாவட்டம் சித்ரதுர்கா மாவட்டம் தாவண்கரே மாவட்டம் கோலார் மாவட்டம் ஷிமோகா மாவட்டம் தும்கூர் மாவட்டம் சிக்கபள்ளாபூர் மாவட்டம் ராமநகரம் மாவட்டம் பெல்காம் ஆட்சிப்பிரிவு பாகல்கோட் மாவட்டம் பெல்காம் மாவட்டம் பிஜப்பூர் மாவட்டம் தார்வாட் மாவட்டம் கதக் மாவட்டம் ஹவேரி மாவட்டம் உத்தர கன்னடம் மாவட்டம் குல்பர்கா ஆட்சிப்பிரிவு குல்பர்கா மாவட்டம் யாத்கிர் மாவட்டம் பெல்லாரி மாவட்டம் பீதர் மாவட்டம் கொப்பல் மாவட்டம் ராய்ச்சூர் மாவட்டம் விஜயநகர மாவட்டம் மைசூர் ஆட்சிப்பிரிவு சிக்மகளூர் மாவட்டம் சாமராசநகர் மாவட்டம் தெற்கு கன்னடம் மாவட்டம் ஹாசன் மாவட்டம் குடகு மாவட்டம் மாண்டியா மாவட்டம் மைசூர் மாவட்டம் உடுப்பி மாவட்டம் மக்கள் தொகையியல் 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கருநாடகத்தின் மொத்த மக்கள் தொகை 61,095,297 ஆக உள்ளது. அதில் 30,966,657 ஆண்களும்; 30,128,640 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 973 பெண்கள் வீதம் உள்ளனர். 2001 ஆண்டின் மக்கள் தொகையுடன் ஒப்புநோக்கும்போது மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.60% உயர்ந்துள்ளது. மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 319 நபர்கள் வீதம் உள்ளனர். நகரப்புறங்களில் 38.67% மக்களும், மக்கள் கிராமப்புறங்களிலும் 61.33% வாழ்கின்றனர். சராசரி கல்வியறிவு 75.36% ஆகவும், ஆண்களின் கல்வியறிவு 82.47 % ஆகவும், பெண்களின் கல்வியறிவு 68.08% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,161,033 ஆக உள்ளது.http://www.census2011.co.in/census/state/karnataka.html சமயம் ஆறு கோடியே பதினொன்று இலட்சம் மக்கள்தொகை கொண்ட கருநாடக மாநிலத்தில் 51,317,472 (84.00 %) மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 7,893,065 (12.92%) இசுலாம் சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 1,142,647 (1.87%) கிறித்தவ சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 440,280 (0.72%) சமண சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 95,710 (0.16%) பௌத்த சமயத்தைப் பின்பற்றுபவராகவும், 28,773 (0.05%) சீக்கிய சமயத்தைப் பின்பற்றுபவராகவும் உள்ளனர். பிற சமயத்தை பின்பற்றுவர்கள் எண்ணிக்கை 11,263 (0.02 %) ஆக உள்ளது. சமயம் குறிப்பிடாதவர்கள் எண்ணிக்கை 166,087 (0.27%) ஆக உள்ளது. மொழிகள் கருநாடகம் மாநிலத்தில் கன்னட மொழி அலுவல் மொழியாகவும் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகவும் உள்ளது. சுமார் 64.75% மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். இது தவிர, தமிழ், மராத்தி, கொங்கனி, மலையாளம், துளு, பஞ்சாபி, உருது மற்றும் இந்தி ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன. பண்பாடு பொருளாதாரம் left|thumb| கருநாடகம்: உள்மாநில உற்பத்தி கடந்த ஆண்டு கருநாடகத்தின் உள்மாநில உற்பத்தி குறைந்தது ரூ. 2152.82 பில்லியன் ($ 51.25 billion) என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறும் மாநிலங்களில் ஒன்றாக கருநாடகம் கருதப்படுகிறது. இம்மாநிலத்தின் 2007–2008 ஆண்டுகளுக்கான உள்மாநில உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்தது 7% . 2004-05 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கருநாடக மாநிலத்தின் பங்களிப்பு குறைந்தது 5.2% சதவிதமாக இருந்தது. கருநாடகம் கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. பத்தாண்டுகளில் உள்மாநில உற்பத்தி 56.2% சதவிகிதமும், தனி நபர் உள்மாநில உற்பத்தி 43.9% சதவிகிதமும் வளர்ந்துள்ளது. 2006–2007 ஆம் ஆண்டுகளில் மட்டும் ரூ. 78.097 பில்லியன் ($ 1.7255 பில்லியன்) கருநாடகம் அன்னிய நேரடி முதலிடாக பெற்று இந்திய மாநிலங்களில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. 2004ஆம் ஆண்டின் முடிவில், கருநாடகத்தில் வேலையில்லாதவர் விகிதம் 4.94% . இது தேசிய சராசரியான 5.99% விட குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. கருநாடகத்தின் தலைநகரமான பெங்களூர் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமாக கருதப்படுகிறது. கருநாடகத்தில் தங்கச் சுரங்கங்கள் அமைந்துள்ளன. கருநாடகம் மிகப்பெரிய பொதுத் துறை தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. இந்துஸ்தான் வானூர்தியல் நிறுவனம் (Hindustan Aeronautics Limited) , நாட்டு விண்வெளி ஆய்வகங்கள்(National Aerospace Laboratories), பாரத மிகுமின் தொழிலகம் (Bharat Heavy Electricals Limited), இந்திய தொலைபேசித் தொழிலகங்கள்(Indian Telephone Industries), இந்துஸ்தான் பொறியியங்கி கருவிகள்(Hindustan Machine Tools), இந்திய மற்றும் பன்னாட்டு கணிப்பொறி நிறுவனங்கள் பெங்களூரு நகரில் உள்ளன. இந்திய அறிவியல் கழகம் மற்றும் இஸ்ரோ போன்ற அறிவியல் மையங்கள் பெங்களூருவில் அமைந்துள்ளது. சுற்றுலா மற்றும் வழிபாட்டுத் தலங்கள் கர்நாடக மாநில முக்கிய சுற்றுலாத் தலங்களும் கோயில்களும்; மைசூர் அரண்மனை, ஜோக் அருவி, சிவசமுத்திரம் அருவி, ஹம்பி, ஹளேபீடு, பாதமி குகைக் கோயில்கள், விஜயாபுரா கோல்கும்பாபந்திப்பூர் தேசியப் பூங்கா, பன்னேருகட்டா தேசியப் பூங்கா, அன்ஷி தேசியப் பூங்கா, சரவணபெலகுளா, அமிர்தேஸ்வரர் கோயில், உடுப்பி கிருஷ்ணர் கோயில், மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில், முருகன் கோயில், கேசவர் கோவில், சென்னகேசவர் கோயில், சென்னகேசவர் கோயில், பேளூர், மூகாம்பிகை கோயில், விருபாட்சர் கோயில், ஹோய்சாலேஸ்வரர் கோவில், திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில், முருதீசுவரா கோயில், சாமுண்டீசுவரி கோயில் மற்றும் தர்மஸ்தால கோயில் ஆகும். இவற்றையும் பார்க்க கருநாடக ஆளுநர்களின் பட்டியல் கர்நாடக மாவட்டப் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கருநாடக அரசு வலைத்தளம் கருநாடக அரசு சேவைகளுக்கான மற்றுமோர் அலுவல்தளம் பகுப்பு:கர்நாடகம் பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
மரபியல்
https://ta.wikipedia.org/wiki/மரபியல்
thumb|right|upright|DNA, the molecular basis for inheritance. Each strand of DNA is a chain of nucleotides, matching each other in the center to form what look like rungs on a twisted ladder. மரபியல் (Genetics) அல்லது பிறப்புரிமையியல் என்பது மரபணுக்கள், பாரம்பரியம் மற்றும் உயிரினங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் குறித்த அறிவியல் துறையாகும்.Griffiths et al. (2000), Chapter 1 (Genetics and the Organism): IntroductionHartl D, Jones E (2005) நெடுங்காலமாகவே தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மரபுப் பண்புகள் பற்றிய விழிப்புணர்வு மனிதர்களுக்கு இருந்தது. அந்த அறிவே விவசாயத்தில், தாவரங்களிலும், கால்நடைகளிலும் தேர்வு இனப்பெருக்கம் (selective breeding) மூலம் அவற்றை முன்னேற்ற உதவியது. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கிரிகோர் ஜோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) என்பவரின் மரபியல் சம்பந்தமான ஈடுபாட்டின் பின்னரே, நவீன மரபியலானது வளர்ச்சியுற்று, முழுமையான ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டது. கிரீகர் மெண்டலுக்கு மரபியலின் அடிப்படை நுட்பங்கள் புரிந்திருக்காவிடினும், உயிரினங்களின் பாரம்பரிய இயல்புகளுக்குக் காரணம், பரம்பரையூடாகக் கடத்தப்படக் கூடிய ஏதோ சில அலகுகளே என்பதை அறிந்திருந்தார். அவையே பின்னர் மரபணு அல்லது பரம்பரை அலகு என அறியப்பட்டது. தற்காலத்தில், மரபணுக்கள் பற்றி ஆராய்வதற்கான முக்கிய கருவிகளையும், கோட்பாடுகளையும் மரபியல் ஆராய்ச்சி வழங்குகிறது. சந்ததிகளூடாகக் கடத்தப்படக்கூடிய பாரம்பரிய இயல்புகள் யாவும் டி.என்.ஏ யில் இருக்கும் மரபணுக்களில் நியூக்கிளியோட்டைடுக்கள் (Nucleotide) ஒழுங்குபடுத்தப்படும் வரிசை முறையில் தங்கியிருக்கும். டி.என்.ஏ யானது ஒன்றுக்கொன்று எதிர்நிரப்பு இயல்புடைய இரு இழைகளால் ஆனது (டி.என்.ஏ யின் படத்தைப் பார்க்க). இந்த இழைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஒரு புதிய துணை இழையைத் தோற்றுவிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதனால், நகல் எடுக்கும் செயல்முறை மூலம், அவை சந்ததியூடாக இயல்புகளைப் பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து கடத்த உதவும். ஒரு உயிரினத்தின் தோற்றம் இயல்புகளைத் தீர்மானிப்பதில் மரபியல் மிக முக்கிய பங்கு வகித்த போதிலும், அந்த உயிரினத்தில் சூழல் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கொண்டே அந்த உயிரினத்தின் இறுதியான தோற்றம், இயல்புகள் தீர்மானிக்கப்படுகின்றன. வெளி இணைப்புகள் தொடர்புடைய இதழ்கள் இயற்கை மரபியல் இயற்கை மறு ஆய்வு மரபியல் மனித மூலக்கூறு மரபியல் மனித மரபியலுக்கான அமெரிக்க இதழ் Nature Genomics மனித மரபியலுக்கான ஐரோப்பிய இதழ் Pharmacogenetics மரபியல் மருத்துவ இதழ் மேம்பட்ட மரபியல் மரபியல் மறு ஆய்வு ஆண்டு மலர் மரபணு மற்றும் வளர்ச்சி பாரம்பரியம் பற்றிய இதழ் பிற மரபியல் கல்விக்கூடம் மரபியலுக்கான இணைய நூலகம் வில்லியம் பேட்சனால் ஆதம் செட்குவிக்கிற்கு 1905-ல் எழுதப்பெற்ற ஒரு மடல் அடிக்குறிப்பு *
சங்கர்
https://ta.wikipedia.org/wiki/சங்கர்
சங்கர் அல்லது ஷங்கர் என்பது ஒரு சமசுகிருத சொல்லாகும். சங்கரம் என்றால் நன்மை செய்தல் என்பது பொருளாகும். எல்லோருக்கும் நன்மை செய்பவர் என்ற பொருளில் இது சிவனைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. ஷங்கர் (அல்லது சங்கர்) எனப்படுபவர் பின்வருவோரில் ஒருவராக இருக்கலாம். ஆனந்த் சங்கர் இந்தியத் திரைப்பட இயக்குனர், கேணல் சங்கர் - தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர், மாவீரர். கே. சங்கர் பிள்ளை - இந்திய கேலிச்சித்திர ஒவியர் கே. சங்கர் - இந்தியத் (தமிழ், இந்தி) திரைப்பட இயக்குனர் சங்கர் கணேஷ் - சங்கர், சங்கர்-கணேஷ் என அறியப்படும் இரட்டையர்களுள் ஒருவர். இவர்கள் இருவரும் இணைந்து இந்திய திரையிசை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்கள். சங்கர் சங்கரமூர்த்தி, பிபிசி ஒலிபரப்பாளர் சங்கர் மகாதேவன் - இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகர், சங்கர், மலையாள நடிகர், இயக்குனர் லெப்டினன்ட் சங்கர் - தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீரர். ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) - இந்தியத் (தமிழ், இந்தி) திரைப்பட இயக்குனர், பகுப்பு:பக்கவழி நெறிப்படுத்தல்
உடுமலைப்பேட்டை
https://ta.wikipedia.org/wiki/உடுமலைப்பேட்டை
thumb|250px|திருமூர்த்தி அணை உடுமலைப்பேட்டை (ஆங்கிலம்:Udumalaipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டம் மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். இந்த நகராட்சிதான் மாவட்டத்திலேயே மிகப்பெரிய நகராட்சி ஆகும். உடுமலைப்பேட்டையில்தான் தமிழக அரசின் சார்பில் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த சர்க்கரை ஆலையின்மூலம் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் சர்க்கரை தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது. வெளிமாவட்டங்களுக்கு சர்க்கரை ஏற்றி செல்ல ஆலையின் அருகாமையிலேயே ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் கரும்பு சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. மத்திய அரசின் சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது.உடுமலைப்பேட்டை நகராட்சியின் இணையதளம் உடுமலைப்பேட்டையில் பல காற்றாலைகளும், நூற்பாலைகளும் உள்ளன. உடுமலைப்பேட்டை நகராட்சி இந்த உடுமலைப்பேட்டை நகராட்சியானது 1918 - ம் ஆண்டு முதன்முதலில் நகராட்சி என்ற அந்தஸ்தை பெற்றது. +உடுமலைப்பேட்டை நகராட்சியைப் பற்றியத் தகவல்கள் பரப்பளவு 7.41 ச. கிமீமக்கள் தொகை2011 கணக்கெடுப்பின்படி1,53,633நகராட்சி மண்டலங்கள்உடுமலைப்பேட்டை நகராட்சிநகராட்சி வட்டங்கள்33 வட்டங்கள் இம்மன்றத்திற்காக அமைக்கபெற்ற நிலைக்குழுக்கள் வரி மற்றும் நிதிக் குழு பணிக்குழு திட்டக் குழு நல்வாழ்வுக் குழு உடுமலைப்பேட்டை மாநகராட்சி தமிழ்நாட்டில் மேலும் பல புதிய மாநகராட்சிகள் ஏற்படுத்தப்படும் என 26.04.2022 சட்டப்பேரவையில் அமைச்சர் திரு. கே.என்.நேரு அறிவித்தார். அதன்படி உடுமலைப்பேட்டை நகராட்சியை அருகாமையில் உள்ள கணக்கம்பாளையம், இராகல்பாவி, போடிப்பட்டி, கணபதிபாளையம், பூலாங்கிணறு குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை ஆகிய ஊராட்சிகளை இணைத்து புதிதாக உடுமலைப்பேட்டை மாநகராட்சி ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய இந்த ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிந்த பிறகு வார்டு மறுவரையறை பணிகள் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சி நான்கு மண்டலங்களுடன் சுமார் அறுபது வார்டுகளுடன் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.https://www.go.ogle.com/url?sa=t&source=web&rct=j&url=https://tamil.oneindia.com/amphtml/news/chennai/minister-kn-nehru-reply-about-another-new-corporation-in-tamil-nadu-456154.html&ved=2ahUKEwjbzIHnpsL3AhWExosBHZ2CDzIQFnoECDIQAQ&usg=AOvVaw3ks0F-rL2ICklHrMqA-ci மக்கள் வகைப்பாடு 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 17,132 1குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 61,133 ஆகும். மக்கள்தொகையில் 29,958 ஆண்களும், 31,175 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,041 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4939 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு 984 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,302 மற்றும் 42 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 81.83%, இசுலாமியர்கள் 14.49%, கிறித்தவர்கள் 3.19% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.உடுமலைப்பேட்டை நகர மக்கள்தொகை பரம்பல் திருவிழாக்கள் மையம்|thumb|259x259px|தேர் திருவிழா ஸ்ரீ மாரியம்மன் கோயில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையானது. நவம்பர்-டிசம்பர் மாதம் நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், நவம்பர்-டிசம்பர், ஆடி மாதம்-ஜூலை-ஆகஸ்ட் மற்றும் முழு நிலவு நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை கொண்டாடப்படும். திருவிழா சமயம் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைகிறார்கள். உடுமலைப்பேட்டை சுமார் 30+ கிராமங்களில் மார்ச் இறுதி மற்றும் ஏப்ரல் தொடங்கி மழை பெய்கிறது. தேர் திருவிழா (Chariot festival) புகழ்பெற்றது. சுற்றுலா தலங்கள் திருமூர்த்தி மலை திருமூர்த்தி அணை திருமூர்த்தி அருவி அமராவதி அணை அமராவதி முதலைப் பண்ணை Amaravathi Crocodile Farm மறையாறு சின்னாறு போக்குவரத்து இந்த நகராட்சியில் இருந்து பல தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. அதனடிப்படையில் பொள்ளாச்சி, திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, திருச்சூர், குருவாயூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோழிக்கோடு, வால்பாறை, மூணாறு, மறையூர், பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், குமுளி, போடிநாயக்கனூர், சங்கரன்கோவில், சிவகாசி, ராசபாளையம், அருப்புக்கோட்டை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், விளாத்திகுளம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, வேளாங்கண்ணி, கரூர், சேலம், ஓசூர், சென்னை, அந்தியூர், ஈரோடு, கோபிச்செட்டிபாளையம், திருப்பூர், தாராபுரம், சத்தியமங்கலம், மைசூரு, கூடலூர், உதகை, கோத்தகிரி, மேட்டுப்பாளையம், ஆனைகட்டி, என தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கும் குதிரையாறு அணை, அமராவதி அணை, திருமூர்த்தி அணை, ஆழியாறு அணை, போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், கொழுமம், பெரிய நெகமம், காட்டம்பட்டி, பனப்பட்டி காளியாபுரம், கோட்டூர், இரமணமுதலிபுதூர், கணியூர், கடத்தூர், பெல்லம்பட்டி, செஞ்சேரிமலை, குடிமங்கலம், காமநாயக்கன்பாளையம் , சுல்தான்பேட்டை, பல்லடம், கேத்தனூர், கோமங்கலம், மடத்துக்குளம் போன்ற கிராமப்பகுதிகளுக்கும் பேருந்து போக்குவரத்து சேவை உள்ளது. மேலும் நகராட்சி மற்றும் புறநகர் கிராமங்களுக்கு நகர பேருந்து சேவையும் உள்ளது. இங்கிருந்து கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் 80 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. உடுமலைப்பேட்டை காய்கறிச் சந்தை உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள காய்கறி சந்தையானது கொங்கு நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய காய்கறி சந்தை ஆகும். ஒட்டன்சத்திரம், திருப்பூர் காய்கறி சந்தைக்கு அடுத்த மூன்றாவது மிகப்பெரிய சந்தை ஆகும். சுற்றுவட்டார பகுதிகளான பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, மடத்துக்குளம், பழநி, தாராபுரம், குண்டடம், செஞ்சேரிமலை, பூளவாடி ஆகிய வட்டாரங்களில் விளையும் காய்கறிகள் மற்றும் பழங்கள் இந்த காய்கறி சந்தையில் நேரடியாக மொத்தம் மற்றும் சில்லறை விற்பனையாகவும் விற்கப்படுகிறது. மேலும் உழவர் சந்தையும் உடுமலைப்பேட்டை நகரில் இயங்குகிறது. உடுமலைப்பேட்டை தொடருந்து நிலையம் உடுமலைப்பேட்டை நகராட்சியில் தளி ரோட்டில் இரயில் நிலையம் உள்ளது. சேலம் கோட்டத்தில் அமைந்துள்ளது. ரயில் போக்குவரத்து நேரங்களில் எப்பொழுதுமே சுறுசுறுப்பாக காணப்படும் ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து தென்தமிழக பகுதிகளுக்கு நேரடியாக ரயில் போக்குவரத்து சேவை உள்ளது. புறப்படும் இடம்செல்லும் இடம்வழிஉடுமலைப்பேட்டைபாலக்காடுபொள்ளாச்சிஉடுமலைப்பேட்டைதிருநெல்வேலிபழநி, ஒட்டன்சத்திரம், மதுரை, விருதுநகர்உடுமலைப்பேட்டைசென்னைகரூர்,சேலம்உடுமலைப்பேட்டைதிருச்செந்தூர்மதுரை, திருநெல்வேலிஉடுமலைப்பேட்டைதிருவனந்தபுரம்பொள்ளாச்சி, பாலக்காடு, எர்ணாகுளம்உடுமலைப்பேட்டைகோயம்புத்தூர்பொள்ளாச்சி, செட்டிபாளையம் இந்த இரயில் நிலையம் 1,2&3 என மூன்று நடைமேடைகள் உள்ளன. இதில் ஒன்று மற்றும் இரண்டாவது நடைமேடைகள் பயணிகளை கையாளும் விதமாகவும் மூன்றாவது நடைமேடை சரக்குகளை கையாளும் விதமாக அமைந்துள்ளது. புகழ்பெற்ற மனிதர்கள் உடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர். சாதிக்பாட்சா முன்னாள் அமைச்சர். கவுண்டமணி பிரபல நகைச்சுவை நடிகர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கல்வி மாவட்டமான உடுமலைப்பேட்டையில் இராணுவ துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அமராவதிநகர் சைனிக் பள்ளி இயங்கி வருகிறது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி மேல்நிலைப்பள்ளி பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஜிவிஜி விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி காந்தி கலாநிலையம் மேல்நிலைப்பள்ளி வெங்கடகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி மலையாண்டிபட்டினம் மேல்நிலைப்பள்ளி ஜல்லிபட்டி மேல்நிலைப்பள்ளி பூலாங்கினறு மேல்நிலைப்பள்ளி போன்ற அரசு பள்ளிகளும் சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆர்ஜிஎம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆர்கேஆர் மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்போர்டு மேல்நிலைப்பள்ளி லூர்து மாதா காண்வெண்ட் மேல்நிலைப்பள்ளி ஜிவிஜி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பொன்நாவரசு பள்ளி இன்னும் பல தனியார் பள்ளிகளும் வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி கமலம் கலை அறிவியல் கல்லூரி விஷ்டம் மேலாண்மை கல்லூரி சுகுனா கோழி வளர்ப்பு மேலாண்மை கல்லூரி ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கலைக்கல்லூரி அரசு கலைக்கல்லூரி ஒன்றும் உடுமலையில் இயங்கி வருகிறது .தற்போது மத்திய அரசின் கேந்திரியா வித்யாலயா பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளது நிருவிந்தியா தத்தா நிகேதன் மாண்டிசோரி பள்ளி இயங்கி வருகின்றன. ஆதாரங்கள் பகுப்பு:தமிழ்நாடு தேர்வு நிலை நகராட்சிகள் பகுப்பு:திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மலை வாழிடங்கள்
கோவை தொழில்நுட்பக் கல்லூரி
https://ta.wikipedia.org/wiki/கோவை_தொழில்நுட்பக்_கல்லூரி
கோவை தொழில்நுட்பக்கல்லூரி (Coimbatore Institute of Technology) தமிழ்நாட்டின் கோவை நகரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியாகும். இது 1956 ஆம் ஆண்டு வி. இரங்கசாமி நாயுடு கல்வி அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. இது அரசு உதவி பெறும் ஒரு கல்லூரியாகும். 1987 முதல் தன்னாட்சிக் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. வரலாறு கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம் 1956 ஆம் ஆண்டில் வி.ரங்கசாமி நாயுடு கல்வி அறக்கட்டளையால் (வி.ஆர்.இ.டி) நிறுவப்பட்டது. உலகப் புகழ்ப் பெற்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்டில் பயின்றவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபரும் தொலைநோக்கு சிந்தனையாளருமான பேராசிரியர் பி. ஆர். ராமகிருஷ்ணன் கல்லோரியின் முதலாம் முதல்வர் ஆவார். இந்த நிறுவனம் 1956 முதல் 1980 வரை மெட்ராஸ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது, பின்னர் 1980 ஆம் ஆண்டில்  பாரதியார் பல்கலைக்கழகத்துடனும்  2001 இல் அண்ணா பல்கலைக்கழகத்துடனும் இணைக்கப்பட்டது. தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சில் மற்றும் தேசிய அங்கீகார வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட  இந்த நிறுவனம் 1987 ஆம் ஆண்டிலிருந்து  தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டுவருகிறது கல்வித் திட்டங்கள் +இளங்கலை பட்டதாரி கல்வித் திட்டங்கள்வரிசை எண்கல்வித் திட்டம்தொடங்கப்பட்ட ஆண்டு1கட்டிட பொறியியல்2இயந்திர பொறியியல் 3மின்சாரம் மற்றும் மின்னணுப் பொறியியல்4கணினி அறிவியல் மற்றும் பொறியியல்5மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல் 6தகவல் தொழில்நுட்பம்7இரசாயன தொழில்நுட்பம் +முதுகலை பட்டதாரி கல்வித் திட்டங்கள்வரிசை எண்கல்வித் திட்டம்துறைதொடங்கப்பட்ட ஆண்டு1கட்டமைப்பு பொறியியலில் கணினி முறைகள் மற்றும் பயன்பாடுகள்கட்டிட பொறியியல்2சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் மேலாண்மைகட்டிட பொறியியல்3கட்டுமான மேலாண்மைகட்டிட பொறியியல்4வெப்ப சக்தி பொறியியல்இயந்திர பொறியியல் 5மேம்பட்ட உற்பத்தி தொழில்நுட்பம்இயந்திர பொறியியல் 6பயன்படுத்தப்பட்ட மின்னணுவியல்மின்சாரம் மற்றும் மின்னணுப் பொறியியல்7பதிக்கப்பட்ட மற்றும் உண்மையான நேர அமைப்புகள்மின்சாரம் மற்றும் மின்னணுப் பொறியியல்8தொடர்பு பொறியியல்மின்னணு மற்றும் தொடர்பு பொறியியல்9கணினி அறிவியல் மற்றும் பொறியியல்கணினி அறிவியல் மற்றும் பொறியியல்10இரசாயன தொழில்நுட்பம் வெளி இணைப்புகள் கல்லூரியின் அதிகாரபூர்வ வலைத்தளம் மேற்கோள்கள் பகுப்பு:கோயம்புத்தூரிலுள்ள பொறியியல் கல்லூரிகள்
டாட்டா எலக்சி
https://ta.wikipedia.org/wiki/டாட்டா_எலக்சி
டாடா எலக்சி (Tata Elxsi) என்பது இலத்திரனியல் மற்றும் கணினி வரைகலை சார்ந்த துறைகளுக்கான வன்பொருள் மாதிரி மற்றும் மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனமாகும். இது இந்தியாவின் பெரிய தொழில் நிறுவனக் குடும்பமான டாடா குழுமத்தின் ஒரு பிரிவாகும். இது பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. கிளைகள்: திருவனந்தபுரம்,சென்னை, மும்பை. வெளி இணைப்புகள் அலுவலக வலைத்தளம் குறிப்புகளும் மேற்கோள்களும் பகுப்பு:டாட்டா குழுமம்
புலி
https://ta.wikipedia.org/wiki/புலி
புலி (பாந்தெரா டைக்ரிஸ்; Panthera tigris ) என்பது பூனைக் குடும்பத்தில் உள்ள ஒரு இனமாகும். பூனைகுடும்பத்திலேயே உருவத்தில் மிகப்பெரிய விலங்கான இது, இதன் பூனைகுடும்பத்தில் உருவத்தில் மிகப்பெரிய விலங்கான இது செம்மஞ்சள் நிற மேற்தோலுடன் கருப்புக் நிற கோடுகளுடன் வெளிறிய அடிப்பகுதியையும் கொண்டு காணப்படும். உச்சநிலைக் கொன்றுண்ணியான புலி, பெரும்பாலும் மான்கள் போன்ற தாவர உண்ணிகளை வேட்டையாடுகின்றன. இது தனக்கென எல்லை வகுத்துக் கொண்டு வாழும் சமூக விலங்காகும். இது இரை தேடவும் தன் குட்டிகளை வளர்க்கவும் ஏதுவாக இருக்கும் வகையில் பெரும் பரப்பளவு நிறைந்த இடங்களில் வாழ்கின்றது. புலிக்குட்டிகள் தங்கள் தாயின் பராமரிப்பில் ஏறக்குறைய இரண்டு வயதுவரை வாழ்கின்றன. பிறகு அவை தாங்கள் வாழிடத்தை விட்டுப் பிரிந்து தங்களுக்கென எல்லையை வகுத்துக் கொண்டு தனியாக வாழப் பழகுகின்றன. புலியானது ஒருகாலத்தில் கிழக்கு அனாத்தோலியப் பகுதியில் தொடங்கி அமுர் ஆற்றின் வடிப்பகுதி வரையிலும், தெற்கில் இமயமலை அடிவாத்தில் தொடங்கி சுந்தா தீவுகளில் உள்ள பாலி வரையிலும் பரவியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் புலிகள் தங்கள் வாழ்விடத்தில் ஏறத்தாழ 93% அளவு வரை இழக்க நேரிட்டது. நாளடைவில் இவை மேற்கு மற்றும் நடு ஆசியா, சாவகம் மற்றும் பாலி தீவுகள், தென்கிழக்கு மற்றும் தெற்காசியா மற்றும் சீனா ஆகிய இடங்களில் அருகிப்போனது. தற்போது இவை உருசியாவின் சைபீரிய மிதவெப்பவலயக் காடுகள், இந்தியத் துணைக்கண்டம், தெற்காசியாவின் சில பகுதிகள் மற்றும் இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகள் ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன. புலியானது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் செம்பட்டியலில் அருகிய இனமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று பெரும்பாலான புலிகள் இந்தியாவில் வாழ்கின்றன. காடுகளின் அழிவு மற்றும் வேட்டையாடுதல் புலிகளின் எண்ணிக்கை குறைவிற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றது. அதிக மனித சனத்தொகை அடர்த்தி உள்ள நாடுகளில் மனிதர்களின் அத்துமீறல் காரணமாக புலிகளுடன் ஏற்படும் மோதல் காரணமாக இவை கொள்ளப்படுகின்றன. புலிகள் பண்டைய புராணங்கள் மற்றும் கலாச்சாரங்களின் நாட்டுப்புறக் கதைகளில் முக்கியமாக இடம்பெற்றன. மேலும் இவை கொடிகள் மற்றும் விளையாட்டு அணிகளுக்கான சின்னங்கள், நவீன திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்களில் தொடர்ந்து சித்தரிக்கப்படுகின்றன. புலியானது இந்தியா, வங்கதேசம், மலேசியா மற்றும் தென் கொரியாவின் தேசிய விலங்காக உள்ளது. வகைபிரித்தல் 1758 ஆம் ஆண்டில், கார்ல் லின்னேயஸ் தனது படைப்பான சிசுடமா நேச்சுரே வில் புலியை விவரித்து அதற்கு பெலிஸ் டைகிரிஸ் என்ற அறிவியல் பெயரை வழங்கினார். 1929 ஆம் ஆண்டில், பிரித்தானிய வகைபிரித்தல் நிபுணரனான ரெசினால்ட் போகாக் "பாந்தெரா டைகிரிஸ்" என்ற கற்போதைய அறிவியல் பெயரை பயன்படுத்தி பெரும்பூனை இனத்தின் கீழ் இதனை வகைப்படுத்தினார். கிளையினங்கள் புலிகளின் கிளையினங்கள் பற்றிய லின்னேயஸின் விளக்கத்தைத் தொடர்ந்து, பல புலிகளின் விலங்கியல் மாதிரிகள் விவரிக்கப்பட்டு துணை இனங்கள் என முன்மொழியப்பட்டன. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் விவரிக்கப்பட்ட பெரும்பாலான கிளையினங்கள் உரோமத்தின் நிறம், அதன் மீதிருந்த கோட்டின் வடிவங்கள் மற்றும் உடலின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டன. இவ்வாறு விவரிக்கப்பட்ட பல புலி கிளையினங்களின் நம்பகத்தன்மை 1999 இல் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. உருவவியல் ரீதியாக வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த புலிகள் சிறிதளவில் மட்டுமே வேறுபடுகின்றன. இதன் விளைவாக, ஆசியாவின் பிரதான நிலப்பரப்பில் வசித்த புலிகள் மற்றும் சுந்தா பெருந் தீவுகளில் வசித்த புலிகள் என இரண்டு புலி கிளையினங்களை மட்டுமே அங்கீகரிக்க முன்மொழியப்பட்டது. ஆசிய பிரதான நிலப்பரப்பில் வசித்த புலிகள் பொதுவாக இலகுவான நிறத்திலான உரோமங்கள், குறைவான எண்ணிக்கையிலான கோடுகளுடன் அளவில் பெரிதாக இருப்பதாக விவரிக்கப்படுகிறது, அதே சமயம் தீவுப் புலிகள் சிறியதாக, அதிக எண்ணிக்கையிலான பட்டையான கருங்கோடுகளுடன் இருந்தன. 2015 இல் இந்த இரண்டு கிளையினங்களின் முன்மொழிவு ஒருங்கிணைந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி அனைத்து புலி கிளையினங்களின் உருவவியல், சுற்றுச்சூழல் மற்றும் மூலக்கூறு பண்புகளின் விரிவான பகுப்பாய்வு மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. அறிவியலாளர்கள் வங்காளப் புலி, மலேசியப் புலி, இந்தோசீனப் புலி, சைபீரியப் புலி மற்றும் தென் சீனப் புலி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கிளையினம், சுமாத்திராப் புலி, பாலிப் புலி மற்றும் சாவகப் புலி ஆகியவற்றை உள்ளடக்கிய மற்றுமொரு கிளையினம் என இரண்டு கிளையினங்களை மட்டுமே அங்கீகரிக்க முன்மொழிந்தனர். இந்த இரண்டு கிளையினங்களாக பிரிக்கும் கூற்று சில ஆராய்ச்சியாளர்களால் மறுக்கப்படுகிறது, ஏனெனில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட உயிருள்ள ஆறு கிளையினங்களை மரபணு ரீதியாக வேறுபடுத்தி அறியலாம். 2018 இல் மரபணு ஆராய்ச்சியின் முடிவுகள் ஆறு உயிருள்ள முன்மொழியப்பட்ட ஆறு கிளையினங்களை ஆதரிக்கின்றன மற்றும் இந்த கிளையினங்கள் அனைத்தும் ஏறத்தாழ 110,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு பொதுவான மூதாதையரிலிருந்து வந்தவை என்பதைக் குறிக்கின்றன. 2021 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இந்த ஆறு துணையினங்களின் மரபணு தனித்துவத்தையும் பிரிவினையையும் உறுதிப்படுத்தியுள்ளன. புலிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன: பாந்தெரா டைகிரிஸ் டைகிரிஸ் துணையினம் விளக்கம் படம் வங்காளப் புலி இந்த புலி இந்திய துணைக்கண்டத்தில் வாழ்கிறது. வங்காளப் புலி பற்றிய லின்னேயஸின் அறிவியல் விளக்கம் இயற்கை ஆர்வலர்களான கான்ராட் கெஸ்னர் மற்றும் உலிஸ்ஸே அல்ட்ரோவாண்டி ஆகியோரின் முந்தைய விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. வங்காளப் புலிகள் சைபீரியப் புலி போன்ற வடக்கு வாழ் புலிகளைக் காட்டிலும் குறுகிய அடர்த்தியுடைய மற்றும் பிரகாசமான செம்மஞ்சள் நிற உரோமங்கள் மற்றும் அதிக இடைவெளி கொண்ட கருப்பு கோடுகளுடன் விவரிக்கப்பட்டுள்ளன.frameless †காசுபியன் புலிஇந்த துணையினமானது மேற்கு-மத்திய ஆசியாவில் வாழ்ந்தது. இவை மெல்லிய பிரகாசமான துருப்பிடித்த-சிவப்பு நிற உரோமங்களையும், நெருங்கிய இடைவெளியில் பழுப்பு நிற கோடுகளையும் கொண்டிருந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது. மரபணு பகுப்பாய்வின்படி, இது சைபீரியப் புலியுடன் நெருங்கிய தொடர்புடையது.இது 1970களில் அழிந்து போனது.frameless சைபீரியப் புலிஇந்த புலியானது உருசியா நாட்டின் கிழக்கு பகுதிகள், வடகிழக்கு சீனா மற்றும் வட கொரியாவில் காணப்படுகிறது. இவை நீண்ட முடிகள் மற்றும் அடர் பழுப்பு நிறக் கோடுகள் கொண்ட அடர்த்தியான உரோமங்களுடன் இருக்கின்றன. இதன் மண்டை ஓடு தென் பகுதியில் வாழும் புலிகளை விட குறுகியதாகவும் அகலமாகவும் இருப்பதாக விவரிக்கப்படுகிறது.frameless தென் சீனப் புலிஇந்த புலி தென்-மத்திய சீனாவில் வாழ்ந்தது. இதன் மண்டை ஓடுகள் வங்காளப் புலிகளை விட சிறியதாகவும், குறுகிய கடைவாய்ப் பற்களைக் கொண்டதாகவும் இருந்தது. இந்தப் புலியின் உரோமம் மஞ்சள் நிறத்தில் தடித்த கோடுகளுடன் இருப்பதாக விவரிக்கப்பட்டது. 1970 களில் இருந்து அதன் இயற்கை வாழிடங்களில் தென்படாததால் இந்தப் புலி காடுகளில் அழிந்துவிட்டிருக்கலாம் என எண்ணப்படுகின்றது.frameless இந்தோசீனப் புலிஇந்தப் புலி தென்கிழக்காசியாவின் இந்தோசீன தீபகற்பத்தில் காணப்படுகிறது. இவை வங்காளப் புலிகளை விட உடளவில் சிறியதாக, குறுகிய மண்டை ஓடுகளுடன் இருந்தன. வங்காளப் புலியை விட அதிகமான குறுகிய கோடுகளுடன், சற்றே கருமையான உரோமங்களை கொண்டிருக்கின்றன.frameless மலேசியப் புலிஇந்தோசீனப் புலியிலிருந்து வேறுபட்ட மரபணு வடிவம் கொண்டதன் அடிப்படையில் இது ஒரு தனித்துவமான கிளையினமாக முன்மொழியப்பட்டது. வடிவம், நிறம் அல்லது மண்டை ஓட்டின் அளவு ஆகியவற்றை பொறுத்தமட்டில் இவை இந்தோசீனப் புலிகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் வேறுபடுவதில்லை.frameless பாந்தெரா டைகிரிஸ் சோண்டைக்கா துணையினம் விளக்கம் படம் †சாவகப் புலிஇவை ஆசியப் பெருநிலப் புலிகளுடன் ஒப்பிடும்போது சிறியவை. இதன் மண்டை ஓடு ஒப்பீட்டளவில் நீளமானது. இதன் உரோமங்களின் மீது குட்டையான மிருதுவான முடிகள் இருந்தன. சுமாத்திராப் புலியுடன் ஒப்பிடுகையில், கோடுகள் நீளமாகவும், மெல்லியதாகவும், எண்ணிக்கையில் சற்று அதிகமாகவும் இருந்தன. சாவகப் புலி 1980களில் அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது.frameless †பாலிப் புலிபாலியில் இருந்த புலிகள் சாவகப் புலிகளை விட பிரகாசமான உரோம நிறம் கொண்டவையாகவும், இவற்றின் மண்டை ஓடு சிறியதாகவும் இருப்பதாக விவரிக்கப்படுகின்றது. இந்தப் துணையினமானது 1940 களில் அழிந்தது.frameless சுமாத்திராப் புலிஇந்த புலியின் உரோமம் சற்றே கறுத்த செம்மஞ்சள் நிறத்தில் இருக்கின்றது. இது மற்ற தீவு புலிகளை விட பரந்த உடலமைப்புடன் சிறிய நாசிப் பகுதியைக் கொண்டுள்ளது. with many thick stripes. இந்தப் புலிக்கு முகத்தைச் சுற்றி நீண்ட முடிகள் உள்ளன.frameless பரிணாமம் thumb|upright=0.95|இரண்டு முன்மொழியப்பட்டுள்ள கிளை வரைபடங்கள் (cladograms) பாந்தெரா எனும் பெரும்பூனை இனத்தில் புலியுடன் சிங்கம், சிறுத்தை, ஜாகுவார் மற்றும் பனிச்சிறுத்தை ஆகியவையும் அடங்கியுள்ளது. மரபணு பகுப்பாய்வு முடிவுகள் புலி மற்றும் பனிச்சிறுத்தை இனங்கள் ஏறத்தாழ 2.88 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரே மூதாதயரிலிருந்து பிரிந்ததாகக் காட்டுகின்றது. இன்று உயிருடன் இருக்கும் அனைத்து புலிகளுக்கும் ஒரே பொதுவான மூதாதையர் 108,000 முதல் 72,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகின்றன. 2022 ஆம் ஆண்டு ஆய்வு 94,000 ஆண்டுகளுக்கு முன் நவீன புலிகள் ஆசியாவில் தோன்றியதாகவும், நவீன கால புலிகள் மற்றும் முன்னர் வாழ்ந்த பழங்காலப் புலிகலிடையே இனக்கலப்பு இருந்ததற்கான சான்றுகள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றது. கலப்பினங்கள் லைகர் மற்றும் டைகன் என அழைக்கப்படும் கலப்பினங்கள் புலிகளை சிங்கங்களுடன் இனப்பெருக்கம் செய்வதன் மூலம் உருவாக்கப்பட்டன. ஒரு பெண் புலிக்கும் ஆண் சிங்கத்துக்கும் பிறந்த விலங்கை லைகர் எனவும், ஆண் புலி மற்றும் பெண் சிங்கத்திற்கு பிறந்த விலங்கினத்தை டைகன் எனவும் அழைக்கின்றனர். இந்த கலப்பினங்கள் சிங்கம் மற்றும் புலி ஆகிய இரண்டின் உடல் மற்றும் நடத்தை குணங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. ஆண் சிங்கங்களிடம் இருக்கும் ஒரு வளர்ச்சியை ஊக்குவிக்கும் மரபணுவின் விளைவாக லைகர்கள் பொதுவாக மிகவும் பெரியதாக வளர்கின்றன. இதற்கு மாறாக, ஆண் புலிகளிடம் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மரபணு இல்லாததால் டைகன்கள் இவ்வாறு வளருவதில்லை. பண்புகள் thumb|சைபீரியப் புலி புலி பூனை குடும்பத்தின் மிகப்பெரிய உயிரினமாக கருதப்படுகிறது. புலியினங்களின் உடல் தோற்றம் பெருமளவில் வேறுபடுவதால், புலியின் "சராசரி" அளவு சிங்கத்தை விட குறைவாக இருக்கலாம், அதே சமயம் அளவில் பெரிய புலிகள் பொதுவாக சிங்கங்களை விட பெரியவை. சைபீரிய மற்றும் வங்காளப் புலிகள் புலியின்களில் மிகப்பெரிய துணையினங்களாகக் கருதப்படுகிறது. வங்காளப் புலிகளின் சராசரி நீளம் மூன்று மீட்டர் வரையிலும், ஆண் புலிகளின் எடை 200 முதல் 260 கிலோ வரையிலும், பெண் புலிகளின் எடை 100 முதல் 160 கிலோ வரையிலும் இருக்கும். தீவுப் புலிகள் சிறியவையாக இருக்கின்றன, சுமாத்திராப் புலிகளின் நீளம் 2.5 மீட்டர் வரையிலும், ஆண் புலிகள் 100 முதல் 160 கிலோ மற்றும் பெண் புலிகள் 75 முதல் 110 கிலோ எடையுடன் இருக்கின்றன. வெவ்வேறு புலி துணையினங்களின் உடல் அளவுகள் அதன் வசிப்பிடங்களின் காலநிலையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. thumb|எலும்புக்கூடு ஒரு புலியானது வலிமையான தசைகள், சிறிய கால்கள், வலிமையான முன்கால்கள், அகன்ற பாதங்கள், பெரிய தலை மற்றும் நீண்ட வால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் முன் பாதங்களில் ஐந்து இலக்கங்களும், பின் பாதங்களில் நான்கு இலக்கங்களும் உள்ளன. இவை அனைத்தும் உள்ளிழுக்கக்கூடிய வளைந்த நகங்களைக் கொண்டுள்ளன. புலியின் மண்டை ஓடு பெரியது மற்றும் உறுதியானது. இது சிங்கத்தின் மண்டை ஓட்டை ஒத்திருக்கிறது. நீள்வட்ட அமைப்புடன் சுருங்கிய முன் பகுதி, நீண்ட நாசி எலும்புகள் மற்றும் ஒரு பெரிய முகடு கொண்டது. கீழ் தாடையின் அமைப்பு மற்றும் நாசிகளின் நீளம் ஆகியவை புலியினங்களை பிரித்துக் காட்டும் மிகவும் நம்பகமான குறியீடுகளாகும். புலிக்கு மிகவும் வலுவான பற்கள் உள்ளன மற்றும் இது சற்றே வளைந்த நீளமான கோரை பற்களைக் கொண்டுள்ளது. உரோமம் ஒரு புலியின் உரோமம் பொதுவாக மெல்லியதாக இருக்கும். இருப்பினும் சைபீரியப் புலி குளிரைத் தாங்கும் விதமாக அடர்த்தியான உரோமத்தைக் கொண்டுள்ளது.ஆண் புலிகள் கழுத்து மற்றும் தாடை பகுதிகளில் அடர்த்தியான முடிகளைக் கொண்டுள்ளது. மேலும் இதன் வாய் பகுதியில் மீசை போன்ற நீண்ட முடிகள் உள்ளது. இவை பொதுவாக செம்மஞ்சள் நிறத்தில் காணப்பட்டாலும், இவற்றின் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்து அடர் சிவப்பு வரை மாறுபடலாம். முகத்தின் சில பகுதிகள் மற்றும் உடலின் அடிப்பகுதியில் இவை வெள்ளை நிற உரோமத்தைக் கொண்டுள்ளன. இதன் காதுகளின் பின்புறத்தில் கருப்பு நிறத்தால் சூழப்பட்ட ஒரு வெள்ளை புள்ளியையும் கொண்டுள்ளது. thumb|left|புலியின் உரோமம் புலியானது தனித்துவமான கருப்பு அல்லது அடர் பழுப்பு நிற கோடுகளைக் கொண்டுள்ளது. இந்த கோடுகளின் அமைப்பு ஒவ்வொரு புலிக்கும் இடையே வேறுபடுகின்றது. கோடுகள் பெரும்பாலும் செங்குத்தாக உள்ளன, ஆனால் மூட்டுகள் மற்றும் நெற்றியில் இவை கிடைமட்டமாக இருக்கும். உடலின் பின்புறத்தில் இவை அதிகமாக உள்ளன மற்றும் வயிற்றின் கீழ் கோடுகள் இல்லாமல் கூட போகலாம். கோடுகளின் நுனிகள் பொதுவாக கூர்மையாக இருக்கும் மற்றும் சிலது பிளவுபடலாம் அல்லது நடுவில் பிரிந்து மீண்டும் ஒண்டு சேரலாம். வாலில் இவை தடிமனான பட்டைகள் போல் அமைந்துள்ளன. இதன் செம்மஞ்சள் நிறம் புலியின் இரை இதனை எளிதில் கண்டுகொள்ளாமலிருக்க சுற்றுப்புறத்துடன் ஒன்றிணைந்து மறைவதற்கு உதவுகின்றன. காய்ந்த மரங்கள், நாணல்கள் மற்றும் உயரமான புற்களைக் கொண்ட பகுதிகளில் இந்த கோடுகள் புலிகளுக்கு சாதகமாக இருக்கும். காதில் உள்ள வெள்ளைப் புள்ளிகள் புலிகளிடையே தகவல் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிகின்றது. நிற வேறுபாடுகள் thumb|ஒரு வெள்ளைப் புலி புலிகளில் மூன்று நிற வேறுபாடுகள் அறியப்பட்டுள்ளன. கோடுகளற்ற பனி போன்ற வெள்ளை நிற புலிகள், கோடுகளுடன் கூடிய வெள்ளை மற்றும் தங்க நிற உரோமங்களுடன் கூடிய புலிகள் ஆகியவை இதில் அடங்கும். வெள்ளைப்புலி பொதுவாக வெள்ளை நிற பின்னணியில் பழுப்பு நிற கோடுகளுடன் உள்ளது. தங்க நிற புலி சிவப்பு-பழுப்பு நிற கோடுகளைக் கொண்டுள்ளது. பனி வெள்ளைப் புலி வெளிறிய சிவப்பு-பழுப்பு நிற வளையங்கள் கொண்ட வால் பகுதியையும், கோடுகள் இல்லாத அல்லது மிகவும் மங்கலான கோடுகள் கொண்ட உரோமத்தையும் கொண்டுள்ளது. இப்போது காட்டுப் புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்ததால் இந்த வேறுபாடுகளை இயற்கையில் காண்பது அரிதாகும். ஆனால் உயிரியல் பூங்காக்களில் இது போன்ற புலிகள் இன்றும் வளர்க்கப்படுகின்றன. வெள்ளைப் புலிகளின் இனப்பெருக்கம் சர்ச்சைக்குரியது, ஏனெனில் புலிகளின் இனப்பாதுகாப்புக்கு அவற்றால் எந்த பயனும் இல்லை. 0.001% காட்டுப் புலிகள் மட்டுமே இந்த நிற உருவத்திற்கான மரபணுக்களைக் கொண்டுள்ளது. செயற்கையாக இவை இனப்பெருக்கம் செய்யப்பட்டால் இவற்றின் விகிதம் அதிகரிக்கின்றது மற்றும் இவை சாதாரண புலிகளுடன் இனப்பெருக்கம் செய்தால், மரபணுக்கலில் மாறுபாடு ஏற்படுத்துகிறது. வாழ்விடம் thumb|இந்தியாவில் ஒரு வங்காளப் புலி புலி வரலாற்று ரீதியாக கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தோசீன தீபகற்பம் வரையிலும், தென்கிழக்கு சைபீரியாவிலிருந்து இந்தோனேசியாவின் சுமாத்திரா, சாவா மற்றும் பாலி தீவுகள் வரையிலும் பரவியிருந்தது. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது அதன் வரலாற்று பரவலில் 7% க்கும் குறைவான இடங்களிலேயே காணப்படுகின்றது. இந்திய துணைக்கண்டம், இந்தோசீன தீபகற்பம், சுமாத்திரா தீவுகள், உருசியாவின் கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு சீனா ஆகிய இடங்களில் மட்டுமே இவை காணப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகளாவிய புலிகளின் வாழ்விடத்தின் மிகப்பெரிய பரப்பளவு இந்தியாவில் உள்ளது. புலி முக்கியமாக காடுகளில் வாழ்கிறது.Sunquist, M. (2010). "What is a Tiger? Ecology and Behaviour" in மத்திய ஆசியாவில் இது தாழ்வான மலைகளிலும் பரந்த இலை காடுகளிலும் வசிப்பதாக குறிப்பிடப்படுகின்றன.Miquelle, D. G.; Smirnov, E. N.; Merrill, T. W.; Myslenkov, A. E.; Quigley, H.; Hornocker, M. G.; Schleyer, B. (1999). "Hierarchical spatial analysis of Amur tiger relationships to habitat and prey" in இந்திய துணைக்கண்டத்தில், இது வெப்பமண்டல அகன்ற இலைக் காடுகள், பசுமையான காடுகள், வெப்பமண்டல உலர் காடுகள்கள், சமவெளிகள் மற்றும் சதுப்புநிலக் காடுகளில் வாழ்கின்றன.Wikramanayake, E. D.; Dinerstein, E.; Robinson, J. G.; Karanth, K. U.; Rabinowitz, A.; Olson, D.; Mathew, T.; Hedao, P.; Connor, M.; Hemley, G.; Bolze, D. "Where can tigers live in the future? A framework for identifying high-priority areas for the conservation of tigers in the wild" in இமயமலைகளில் இது மிதமான உயரத்தில் உள்ள மலைகளின் நடுவே உள்ள காடுகளில் காணப்படுகின்றன. இந்தோனேசிய தீவுகளில் புலிகள் தாழ்நில சதுப்பு நிலக் காடுகள் மற்றும் மலைக் காடுகளில் உள்ளன. நடத்தை மற்றும் சூழலியல் thumb|upright|நீரில் நீந்தும் ஒரு புலி புலிகள் பகலை விட இரவில் சுறுசுறுப்பாக இருக்கின்றன. இவை மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்கின்றன. அதிகாலையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் இவை நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 4.6 கி.மீ. தூரம் பயணிக்கின்றது. புலிகள் அந்தி வேளையில் இருந்து நள்ளிரவு வரை உள்ள நேரத்தில் வேட்டைகளில் ஈடுபடுகின்றது. மற்ற பூனை இனங்களைப் போலவே, புலிகளும் தன்னை தானே நக்குவதன் மூலமும், இவற்றின் உடலிலிருந்து சுரக்கும் ஒரு வகை எண்ணெயைப் உரோமம் முழுவதும் பரப்புவதன் மூலமும் தங்கள் மேலங்கிகளைப் பராமரிக்கின்றன. புலிகள் நன்றாக நீந்த வல்லவை, இவை குறிப்பாக வெப்பமான நாட்களில் பெரும்பங்கை நீர்நிலைகளில் கழிக்கின்றன. பெரிய புலிகள் எப்போதாவது மட்டுமே மரங்களில் ஏறுகின்றன. ஆனால் 16 மாதங்களுக்கும் குறைவான குட்டிகள் வழக்கமாக அவ்வாறு செய்யலாம். சமூக இயக்கம் thumb|ஒரு புலி தனது பிரதேசத்தைக் குறிக்க மரத்தில் தேய்க்கிறது வயது வந்த புலிகள் பெரும்பாலும் தனிமையில் வாழ்கின்றன. இவை தனக்கென ஒரு இடத்தை நிறுவி அதன் வரம்புகளை பராமரிக்கின்றன. பராமரிக்கப்படும் இடத்தின் அளவு இரையின் மிகுதி, புவியியல் பகுதி மற்றும் பாலினத்தைப் பொறுத்தது. ஆண் மற்றும் பெண் புலிகள் தங்களுக்கென தனி பிரதேசங்களை பாதுகாக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் ஒரு ஆண் புலியின் பிரதேசம் பெரியதாக இருக்கும் மற்றும் அதில் பல பெண் புலிகளின் பிரதேசங்களை உள்ளடக்கியிருக்கலாம். இந்தியாவில் பெண் புலிகளின் பிரதேசங்கள் ஏறத்தாழ 46 முதல் 96 சதுர கி.மீ. ஆகவும், ஆண் புலிகளின் பிரதேசங்கள் ஏறத்தாழ 81 முதல் 147 சதுர கி.மீ. ஆகவும் இருந்தன. புலிகளின் எண்ணிக்கை அல்லது இரை குறைவாக இருந்தால் அது சில சமயம் பெரிய பிரதேசங்களை ஆள்கின்றன. சீனாவில் ஆண் புலிகள் ஏறத்தாழ 417 சதுர கி.மீ. வரை உள்ள பிரதேசங்களை பாதுகாக்கின்றன. thumb|left|ஆக்கிரோசத்தின் அடையாளமாக பற்களைக் காட்டும் புலி புலிகள் நெடுந்தூரம் செல்ல வல்லவை, இவை கிட்டத்தட்ட 650 கி.மீ. தொலைவு வரை பயணிக்கின்றது. இளம் புலிகள் தங்கள் தாயின் பிரதேசத்தின் அருகில் தங்கள் முதல் பிரதேசங்களை நிறுவுகின்றன. இருப்பினும், ஆண் புலிகள் தங்கள் பெண் சகாக்களை விட அதிகமான தூரம் இடம்பெயர்ந்து செல்கின்றன. ஆண் புலிகள் பொதுவாக பெண் புலிகளை விட இளம் வயதிலேயே தாயை பிரிந்து செல்கின்றன. ஒரு இளம் ஆண் புலி மற்றொரு ஆணின் பிரதேசத்தில் தற்காலிகமாக வாழ வேண்டியிருக்கும். இதனால் ஏற்படும் சண்டைகளின் விளைவாக இளம் ஆண் புலிகளின் ஆண்டு இறப்பு விகிதம் 35% வரை உள்ளது. மாறாக இளம் பெண் புலிகள் 5% என்ற விகிதத்தில் மட்டுமே இறக்கின்றன. புலிகள் தாவரங்கள் மற்றும் பாறைகள் மீது தனது சிறுநீரை தெளித்தல் மற்றும் மரங்கள் மீது தன் உடலிலிருந்து வெளிப்படும் வாசனை கொண்ட சுரப்புகளை தேய்த்தல் மற்றும் அதன் மலத்தை தரையில் தேய்த்தல் போன்ற நடவடிக்கைகளினால் தங்கள் எல்லைக் குறிக்கின்றன. வாசனை அடையாளங்கள் ஒரு புலியை மற்றோரு புலியால் அடையாளம் காண அனுமதிக்கின்றன. இனப்பெருக்கத்தின் போது ஒரு பெண் புலி தன் வாசனையை அடிக்கடி குறிப்பதன் மூலமும், குரல்களை எழுப்புவதன் மூலமும் தன் இருப்பை ஆண் புலிகளுக்கு தெரிவிக்கும். உரிமை கோரப்படாத பிரதேசங்கள், சில நாட்கள் அல்லது வாரங்களில் வேறொரு புலியால் கையகப்படுத்தப்படலாம். பொதுவாக ஆண் புலிகளிடம் சகிப்புத்தன்மை குறைவாகவே இருக்கும். பிரதேச தகராறுகள் பொதுவாக வெளிப்படையான மிரட்டல் மற்றும் சண்டைகளின் மூலம் தீர்க்கப்படுகின்றன. சில சமயங்களில் ஆதிக்கம் நிறுவப்பட்டவுடன், ஒரு ஆண் புலி தனது வரம்பிற்குள் இருக்கும் இன்னுமோர் ஆண் புலியை பிரச்சனை இல்லாத வரை பொறுத்துக்கொள்ளலாம். ஒரு பெண் புலிக்காக போட்டியிடும் இரண்டு ஆண் புலிகளுக்கு இடையே மிகவும் கடுமையான தகராறுகள் ஏற்படுகின்றன. புலிகள் பெரும்பாலும் தனியாக வாழ்ந்தாலும், தனிநபர்களுக்கிடையேயான உறவுகள் சிக்கலானதாக இருக்கும். ஆண் சிங்கங்களைப் போலல்லாமல், ஒரு ஆண் புலியானது அதன் பிரதேசத்தில் உள்ள பெண் புலிகள் மற்றும் குட்டிகளுடன் உணவை பகிர்ந்து கொள்ளும். தொடர்பு thumb|ஒரு புலி உறுமுகிறது நட்புரீதியான சந்திப்புகள் மற்றும் பிணைப்புகளின் போது, ​​புலிகள் ஒன்றுக்கொன்று உடலைத் தேய்த்துக்கொள்கின்றன. புலிகள் மற்றொரு புலியின் அடையாளங்களை முகர்ந்து பார்க்கும் போது ஒரு வித முக பாவத்தை காட்டுகின்றன. புலிகள் தங்கள் மனநிலையை அடையாளம் காட்ட தங்கள் வால்களைப் பயன்படுத்துகின்றன. நல்லுறவைக் காட்ட, வாலை மேலே தூக்கி மெதுவாக அசைகிறது, அதே சமயம் பயம் மற்றும் பணிவை காட்ட வாலைப் பக்கவாட்டாக அசைக்கிறது. பொதுவாக அமைதியாக இருக்கும்போது, ​​வால் தாழ்வாக தொங்கும் நிலையில் உள்ளது. புலிகள் பொதுவாக பலவிதமான சத்தங்களை எழுப்புகின்றன. தொலைதூரத்தில் உள்ள மற்ற நபர்களுக்கு தங்கள் இருப்பைக் குறிக்க இவை உறுமுகின்றன. இந்த உறுமல் சத்தம் ஏறத்தாழ 8 கி.மீ. தூரம் வரை கேட்கும். ஒரு புலி தொடர்ச்சியாக மூன்று அல்லது நான்கு முறை உறுமலாம். இனச்சேர்க்கையின் போதும், ஒரு தாய் தன் குட்டிகளை தன்னிடம் அழைக்க விளையும் போதும் இவை குறிப்பிட்ட ஒலிகளை எழுப்புகின்றன. பதட்டமாக இருக்கும் போது, ​​புலிகள் ஒரு வகையான முனகல் சத்தத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலும் நட்பு சூழ்நிலைகளில் மெதுவான ஒலிகளை எழுப்புகின்றன. தாய்ப்புலிகள் தங்கள் குட்டிகளுடன் முணுமுணுப்பதன் மூலம் தொடர்பு கொள்கின்றன, அதே நேரத்தில் குட்டிகள் மியாவ் போன்ற ஒளி எழுப்புகின்றன. வேட்டையாடுதலும் உணவும் thumb|right|புலியின் பல்லமைப்பு. பெரிய கோரைப்பற்கள் இரையைக் கடித்துக் கொல்லப் பயன்படுகின்றன. ஆனால் அவை உண்ணும் போது கோரைபற்களை கறியைக் கிழிக்கப் பயன்படுத்துகின்றன. ஊனுண்ணியான புலி மான் மற்றும் காட்டுப் பன்றி போன்ற விலங்குகளை வேட்டையாடுகின்றது. புலிகள் காட்டெருமை போன்ற பெரிய இரைகளையும், குரங்கு, மயில் மற்றும் பிற பறவைகள், முள்ளம்பன்றி மற்றும் மீன்கள் போன்ற மிகச் சிறிய இரைகளையும் சில சந்தர்ப்பங்களில் கொல்கின்றன. புலிகள் பொதுவாக இந்திய யானை மற்றும் காண்டாமிருகம் ஆகியவற்றை தாக்குவதில்லை. எனினும் சில சமயங்களில் இந்நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனிதர்களுக்கு அருகாமையில் இருக்கும் போது, ​​புலிகள் சில நேரங்களில் வீட்டு கால்நடைகள் மற்றும் நாய்களை வேட்டையாடுகின்றன. புலிகள் எப்போதாவது தாவரங்கள், பழங்கள் மற்றும் தாதுப்பொருட்களை உட்கொள்ளும். புலிகள் தங்கள் தாயிடமிருந்து வேட்டையாடக் கற்றுக்கொள்கின்றன. இரையைப் பொறுத்து, ஒரு புலி பொதுவாக வாரந்தோறும் கொல்லும். புலிகள் பொதுவாக தனியாக வேட்டையாடுகின்றன, ஆனால் ஒரு வயது வரை குட்டிகள் ஒன்றாக வேட்டையாடுகின்றன. புலி இரையைத் தேடி நீண்ட தூரம் பயணித்து, இலக்கைக் கண்டுபிடிக்க பார்வை மற்றும் செவித்திறனைப் பயன்படுத்துகிறது. புலிகள் பொதுவாக பதுங்கியிருந்து தாக்கும். சாத்தியமான இரையை நெருங்கும் போது, ​​தலையை குனிந்து முன்னோக்கி ஊர்ந்து செல்கிறது. மேலும் இரை போதுமான அளவு அருகில் வரும் வரை அமைதியாக காத்திருக்கும். புலிகள் மணிக்கு 56 கி.மீ. வேகமாக ஓடக்கூடியவை. இவை 10 மீட்டர் வரை தாவி பாய்ந்து சென்று இரையை பிடிக்க முடியும். thumb|left|ஒரு காட்டுப்பன்றியைக் கொல்ல இரண்டு புலிகள் இணைந்து வேலை செய்கின்றன புலி பின்னால் அல்லது பக்கவாட்டில் இருந்து தாக்குகிறது. இது முன்னங்கால்களால் இரையைப் பிடித்து பிறகு தொண்டையில் கடித்து கழுத்தை நெரித்து கொள்கின்றது. புலிகள் சில நேரங்களில் இரையைக் கொல்ல தொண்டையைக் கிழிப்பது அல்லது கழுத்தை உடைப்பது உள்ளிட்ட பிற முறைகளைப் பயன்படுத்தலாம். பெரிய இரையை கொல்லும் போது அதன் பின்புறத்தில் கடித்து தசைநார்களை துண்டிக்கின்றது. சில சமயங்களில் தனது பாதங்களினால் ஒரு அடி வைப்பதன் மூலம் இறையின் மண்டை ஓட்டை உடைக்கும் திறன் கொண்டது. முழுமையாக வளர்ந்த எருமையின் உடலை சிறிது தூரம் இழுத்துச் செல்லும் வலிமை புலிக்கு உண்டு. இது சாப்பிடுவதற்கு முன் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறது மற்றும் ஒரு அமர்வில் 50 கிலோ இறைச்சியை உட்கொள்ளலாம். இனப்பெருக்கம் thumb|ஒரு புலிக் குடும்பம் புலி ஆண்டு முழுவதும் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றது, ஆனால் பெரும்பாலான குட்டிகள் மார்ச் மற்றும் சூன் மாதங்களுக்கு இடையில் பிறக்கின்றன. ஒரு ஆண் புலி தனது எல்லைக்குள் இருக்கும் அனைத்து பெண் புலிகளுடனும் இணைகிறது. இளம் ஆண் புலிகளும் பெண் புலிகளால் ஈர்க்கப்படுவதால் இது சண்டைக்கு வழிவகுக்கிறது, இதில் அதிக ஆதிக்கம் செலுத்தும் ஆண் புலி மற்ற ஆண் புலிகளை விரட்டுகிறது. ஒரு பெண் புலி இனச்சேர்க்கைக்குத் தயாராக இருப்பதைக் காட்ட ஆண் புலி காத்திருக்கிறது. ஒரு பெண் புலி தன் வாலை பக்கவாட்டில் வைத்து ஆண் புலிக்கு சமிக்ஞை செய்கிறது. கலப்பு பொதுவாக 20 முதல் 25 வினாடிகள் நீளமானது மற்றும் புலி சோடிகள் நான்கு நாட்கள் வரை ஒன்றாக இருக்கலாம் மற்றும் பல முறை இனச்சேர்க்கை செய்யலாம். கர்ப்ப காலம் 93 முதல் 114 நாட்கள் வரை இருக்கும். thumb|left|குட்டியுடன் தாய் புலி ஒரு புலியானது ஒதுங்கிய இடத்தில், அடர்ந்த தாவரங்களில், ஒரு குகையில் அல்லது ஒரு பாறையின் கீழ் குட்டிகளை ஈனுகின்றது .ஒரு சமயத்தில் இரண்டு அல்லது மூன்று குட்டிகளை ஈனுகின்றது. புதிதாகப் பிறந்த குட்டிகளின் எடை1.௬ கிலோ வரை இருக்கும், மேலும் இவை பிறக்கும் போது பார்வையற்றவையாக இருக்கின்றன. தாய் தன் குட்டிகளை நக்கி சுத்தப்படுத்துகிறது, பாலூட்டுகிறது மற்றும் அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாக்கிறது. தாய் புலி குட்டிகளை விட்டு வேட்டையாட வெகுதூரம் பயணிப்பதில்லை. தாய் தனது குட்டிகளை வாயால் கழுத்தை பிடித்து ஒவ்வொன்றாக கொண்டு செல்கிறாள். இந்த ஆரம்ப மாதங்களில் புலி குட்டிகளின் இறப்பு விகிதம் 50% ஐ எட்டும். குட்டிகளால் ஒரு வாரத்தில் பார்க்க முடியும், இரண்டு மாதங்களில் இவை வெளியே வர தொடங்கும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, குட்டிகள் தங்கள் தாயைப் பின்தொடர முடியும். பெண் புலி வேட்டையாடச் செல்லும்போது இவை ஒளிந்துகொள்கின்றன. குட்டிகள் விளையாடினாலும், தாயுடன் இணைந்து வேட்டையாடுவதைப் பயிற்சி செய்கின்றன. ஏறக்குறைய ஆறு மாத வயதில், குட்டிகள் அதிக சுதந்திரம் பெறுகின்றன. எட்டு மற்றும் பத்து மாதங்களுக்கு இடையில், இவை வேட்டைக்கு தங்கள் தாயுடன் செல்கின்றின. ஒரு குட்டி 11 மாதங்களிலேயே தனியாக இரையை கொல்ல வல்லது. ஆண் புலிகளுக்கு பெண் புலிகளை விட முன்னதாகவே தனியாக வேட்டையாட சுதந்திரம் கிடைக்கும். பெண் புலிகள் பாலியல் முதிர்ச்சி அடைய மூன்று முதல் நான்கு வருடங்கள் ஆகும். ஆண் புலிகளுக்கு இது நான்கு முதல் ஐந்து வருடங்களாகும். புலிகள் 26 ஆண்டுகள் வரை வாழலாம். குட்டிகளை வளர்ப்பதில் ஆண் புலி பங்கு வகிக்காது, ஆனால் இது அவைகளுடன் பழகலாம். வசிக்கும் ஆண் தனது எல்லைக்குள் இருக்கும் குடும்பங்களுக்குச் சென்று உறவாடுகின்றது.They socialise and even share kills. One male was recorded looking after orphaned cubs whose mother had died. அச்சுறுத்தல்கள் thumb|ஒரு புலித்தோல் புலிக்கான முக்கிய அச்சுறுத்தல்களில் வாழ்விட அழிவு மற்றும் வேட்டையாடுதல் ஆகியவை அடங்கும். இதன் உரோமங்கள் மற்றும் உடல் பாகங்கள் ஆகியவற்றுக்காக இவை வேட்டையாடப்படுகின்றன. இது காடுகளில் புலிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துள்ளன. சாலைகள், ரயில் பாதைகள், மின்சார கம்பிகள், நீர்ப்பாசன கால்வாய்கள் மற்றும் சுரங்க நடவடிக்கைகள் போன்றவற்றால் இன் வாழ்விடங்கள் பாதிக்கப்படுகின்றன.காடழிப்பு மற்றும் பயிரிடல் புலிகளின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது. புலிகள் கண்ணி வெடிகள், சறுக்கல் வலைகள், மற்றும் வேட்டை நாய்களைப் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன. 2000-2022 ஆண்டுகளில், 28 நாடுகளில் 3,377 புலிகளின் உடல் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்த புலி பாகங்களுக்கான தேவையும் புலிகளின் எண்ணிக்கைக்கு பெரும் அச்சுறுத்தலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கால்நடைகளைத் தாக்கி வேட்டையாடுவதற்காக உள்ளூர் மக்கள் புலிகளைக் கொல்வது புலிகளின் எண்ணிக்கை குறைவதற்கு பங்களிக்கிறது. பாதுகாப்பு முயற்சிகள் + உலகளாவிய காட்டுப் புலிகளின் எண்ணிக்கைநாடுஆண்டுமதிப்பீடு 2023 3682–3925 2021 750 2016 400–600 2014 300–500 2022 355 2023 189 2023 131 2022 <150 2018 55 2018 22 மொத்தம் 5,764–6,467 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி, புலியானது அருகிய இனம் என பட்டியலிடப்பட்டுள்ளது. 2010 இல் இந்தியா, நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மியான்மர், உருசியா , சீனா, தாய்லாந்து, லாவோசு, கம்போடியா, வியட்நாம், மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் உருசியாவில் சந்தித்து, புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க ஒப்புக்கொண்டனர். ஒரு தசாப்தத்திற்குப் தெற்காசிய நாடுகளும் உருசியாவும் இதில் முன்னேற்றம் கண்டன. சர்வதேச அளவில், புலி பாதுகாக்கப்பட்டு, உயிருள்ள புலிகள் மற்றும் அவற்றின் உடல் உறுப்புகளின் வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972 இன் கீழ் 1972 முதல் புலிகள் பாதுகாக்கப்படுகிறது.1973 ஆம் ஆண்டில், இந்தியாவில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் புலிகள் திட்டம் புலிகள் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்டது. அப்போதிருந்து, 2022 வரை நாட்டில் 53 புலிகள் காப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளன. புலிகளை இன்னிகையில் ஏறத்தாழ 70% இன்று இந்தியாவில் உள்ளது. நேபாளத்தில் இது தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 1973 முதல் பாதுகாக்கப்படுகிறது. பூட்டானில், இது 1969 முதல் பாதுகாக்கப்படுகிறது; 2006-2015 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட முதல் புலி செயல் திட்டம் வாழ்விட பாதுகாப்பு, கல்வி மற்றும் விழிப்புணர்வை மையமாகக் கொண்டது.வங்காளதேசத்தில், இது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 2012 இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது. 2003 இல் உருவாக்கப்பட்ட மியான்மரின் தேசிய புலிகள் பாதுகாப்பு உத்தியானது சீரழிந்த வாழ்விடங்களை மீட்டெடுப்பது போன்ற மேலாண்மை பணிகளை உள்ளடக்கியது. 2010 ஆம் ஆண்டு தொடங்கி, தாய்லாந்து புலிகளையும் அவற்றின் இரையையும் பாதுகாக்க "தாய்லாந்து புலி செயல் திட்டத்தை" அறிமுகப்படுத்தியது. சீனாவில், 1993 ஆம் ஆண்டில் புலிகளின் உடல் பாகங்கள் வர்த்தகம் தடை செய்யப்பட்டது, இது பாரம்பரிய சீன மருத்துவத்தில் புலி எலும்புகளின் பயன்பாட்டைக் குறைக்க உதவியது. 1940 களில், புலி உருசியாவில் அழிவின் விளிம்பில் இருந்தது. அதன் பிறகு வேட்டையாடுவதைத் தடுக்கும் கட்டுப்பாடுகள் தொடங்கப்பட்டன, மேலும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் வலையமைப்பு நிறுவப்பட்டது. இது புலிகளின் எண்ணிக்கையில் உயர்வுக்கு வழிவகுத்தது. 1994 இல், இந்தோனேசிய சுமத்திரா புலிகள் பாதுகாப்பு உத்தி, சுமத்திராவில் புலிகளைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை வகுத்தது.Franklin, N., Bastoni, Sriyanto, Siswomartono, D., Manansang, J. and R. Tilson "Last of the Indonesian tigers: a cause for optimism" in .Tilson, R. (1999). Sumatran Tiger Project Report No. 17 & 18: July − December 1999. Grant number 1998-0093-059. Indonesian Sumatran Tiger Steering Committee, Jakarta. மனிதர்களுடனான உறவு thumb|இந்தியாவில் யானை முதுகில் இருந்து புலி வேட்டையாடுதல், 1808 இந்தியாவில் புலி வேட்டையாடப்படும் ஓவியங்கள் 5,000-6,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து உள்ளன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, நாணயங்களில் புலிகளைக் கொல்வது போல் சித்தரிக்கப்பட்டது. புலி வேட்டை 16 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசின் கீழ் நிறுவப்பட்ட ஒரு விளையாட்டாக மாறியது. புலிகள் யானை அல்லது குதிரைகளின் மீது இருந்து துரத்தி கொள்ளப்பட்டன. பிரித்தானியர்கள் 1757 ஆம் ஆண்டிலேயே புலிகளைக் கொல்ல வெகுமதிகளை வழங்கினார்கள். குறிப்பாக 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏறத்தாழ 80,000 புலிகள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மற்ற காட்டு விலங்குகளை விட புலிகள் நேரடியாக அதிக மக்களை கொன்றதாக கூறப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில், பெரிய புலிகள் பொதுவாக மனிதர்களைத் தவிர்க்கின்றன, ஆனால் மக்கள் அவற்றுடன் இணைந்து வாழும் இடங்களில் தாக்குதல்கள் நடக்கின்றன.Nyhus, P. J.; Tilson, R. "Panthera tigris vs Homo sapiens: Conflict, coexistence, or extinction?" in மனிதர்கள் மீதான பெரும்பாலான தாக்குதல்கள் தற்காப்பிற்காக நடக்கின்றன. மனித உண்ணிப் புலிகள் பெரும்பாலும் வயதான அல்லது காயமுற்ற புலிகளாக இருக்கும். thumb|கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு புலி பழங்காலத்திலிருந்தே புலிகள் காட்சிக்காக பயன்படுத்தப்பட்டன. இவை சிறை பிடிக்கப்பட்டு சாகச நிகழ்ச்சிகள் மற்றும் மிருகக்காட்சி சாலைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டன. விலங்கு உரிமைக் குழுக்களின் அழுத்தம் மற்றும் இயற்கையான அமைப்புகளில் அவற்றைப் பார்க்க வேண்டும் என்ற பொதுமக்களின் அதிக விருப்பத்தின் காரணமாக பல நாடுகளில் புலிகள் மற்றும் பிற விலங்குகளை நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது குறைந்தது. பல நாடுகள் இத்தகைய செயல்களை கட்டுப்படுத்தும் அல்லது தடை செய்யும் சட்டங்களை அமல்படுத்தியுள்ளன. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட புலிகள் அமெரிக்காவில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. 2020 ஆம் ஆண்டில் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 7,000–8,000 புலிகள் "புலி பண்ணை"களில் இருந்தன. இந்த புலிகள் பாரம்பரிய மருத்துவத்திற்காக புலி பாகங்களுக்காக வளர்க்கப்படுகின்றன. கலாச்சார முக்கியத்துவம் thumb|upright|ஒரு புலியின் மீது சவாரி செய்யும் இந்து தெய்வமான பராசக்தி 2004 ஆம் ஆண்டு அனிமல் பிளானட் நடத்திய வாக்கெடுப்பில், புலி 21% வாக்குகளைப் பெற்று உலகின் விருப்பமான விலங்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புலி மிகவும் பிரபலமான காட்டு விலங்கு என்று கண்டறியப்பட்டது. பண்டைய சீனாவில், புலி காட்டின் அரசனாக போற்றப்பட்டது மற்றும் சீனாவின் பேரரரசரைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. சீன வானவியலில் புலி பன்னிரண்டு ராசிகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது .சிந்து சமவெளி நாகரிகத்தின் பசுபதி முத்திரையின் மீது காட்டப்படும் விலங்குகளில் புலியும் ஒன்று. தென்னிந்தியாவின் சோழ வம்சத்தின் காலத்தில் புலியானது முத்திரைகள் மற்றும் நாணயங்களில் சித்தரிக்கப்பட்டது. புலி சோழர்களின் அதிகாரப்பூர்வ சின்னமாக இருந்தது. புலிகளுக்கு மத முக்கியத்துவம் உண்டு, சில சமயங்களில் இவை வழிபடப்படுவதும் உண்டு. பௌத்த சமயம் புலி, குரங்கு மற்றும் மான் ஆகியவை மூன்று உணர்வற்ற உயிரினங்கள் என்றும் புலி கோபத்தை குறிக்கிறது என்றும் கூறுகிறது. இந்து சமயத்தில், புலி பராசக்தி மற்றும் ஐயப்பன் ஆகியோரின் வாகனமாக கருதப்படுகின்றது. இதேபோல், கிரேக்க உலகில், புலி தியோனிசசின் வாகனமாக சித்தரிக்கப்பட்டது. கொரிய புராணங்களில் புலிகள் மலைக் கடவுள்களின் தூதர்கள் எனக் கூறப்படுகின்றது. மேற்கோள்கள் புற இணைப்புகள் பகுப்பு:புலிகள்
திருவாசி
https://ta.wikipedia.org/wiki/திருவாசி
thumb|200px|நடராசருக்குப் பின் வட்டவடிவில் அமைந்துள்ள திருவாசி thumb|200px|அண்டங்களின் இயக்கத்தைக் குறிக்கும் சிவ நடனம் பிரபஞ்சத்தைக் குறிக்கும் வட்டத்துக்குள் நின்று ஆடும் சிவன். இந்தப் பிரபஞ்ச வட்டத்தையே திருவாசி பிரதிபலிக்கிறது. திருவாசி என்பது கோயிலில் கடவுள் சிலை இருக்கும் பீடத்தின் மேல் அமைந்திருக்கும், வேலைப்பாட்டுடன் கூடிய, உலோகத்தினால் செய்யப்பட்ட அலங்கார அமைப்பு ஆகும். இதனை திருவாசிகை, திருவாட்சி, வாகனப்பிரபை போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு. இது சிலைக்குப் பின்னணியாக இருக்கும்படி அமைந்திருக்கும். வளைவாக அமைந்து காணப்படினும், இவை பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன. சமய அடிப்படையில் இதற்குப் பல தத்துவங்கள் கூறப்படுகின்றன. உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த நூல் சிவனின் நடராச தத்துவத்தை விளக்கும்போது ஓங்காரமே திருவாசி என்று திருவாசியை ஓங்கார வடிவமாகக் காட்டுகிறது. https://web.archive.org/save/http://temple.dinamalar.com/news_detail.php?id=24105 ஓங்கார மேநல் திருவாசி உற்றதனில் -சேக்கிழார் பிள்ளைத் தமிழ் இதுதவிர திருவாசி பிரபஞ்சத்தைக் குறிக்கிறது என்ற கருத்தும் உண்டு. நடராஜர் சிற்பங்களில் திருவாசி ஏறத்தாழ வட்டவடிவில் காணப்படும். இவ்வட்டத்தின் மையம் ஆடல் புரியும் நிலையில் உள்ள சிலையின் தொப்புளுடன் பொருந்தி வரும்படி அமைந்திருக்கும். வளைவின் வெளிப்புறம் வரிசையாகத் தீச்சுவாலைகள் இருக்கும். சில திருவாசிகளில் இருபுறமும் பீடத்திலிருந்து தூண்போன்ற அமைப்புக்களும் அதன் மேல் வளைவான அமைப்பும் காணப்படும். உச்சியில் யாளியின் முகம் அமைந்திருக்க, இரு பக்கங்களிலும் தூண் அமைப்பின் உச்சியிலிருந்து வளைவு தொடங்கும் இடங்களில் பக்கத்துக்கு ஒன்றாக இரு மகர உருவங்கள் இருப்பது உண்டு. திருவாசிகள் பித்தளை, செப்பு, பஞ்சலோகம், வெள்ளி, தங்கம் போன்ற பலவகை உலோகங்களால் ஆக்கப்படுவது உண்டு. ஆதாரங்கள் பகுப்பு:இந்துக் கோயிலில் காணும் பொருட்கள் பகுப்பு:சிவாலயங்களில் காணும் பொருள்கள்
வேங்கடசூரி சுவாமிகள்
https://ta.wikipedia.org/wiki/வேங்கடசூரி_சுவாமிகள்
வேங்கடசூரி சுவாமிகள் (1817-1889) ஒரு பன்மொழிப் புலவரவார். வாழ்க்கைக் குறிப்பு தஞ்சை, அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ள இராமச்சந்திராபுரம் என்ற ஊரில், வைதீக புரோகிதத்தை தொழிலாக கொண்ட நாராயண சர்மா என்பவருக்கும், தாய் அரங்கநாயகி தேவி அம்மையாருக்கும் பிறந்தார். வேங்கடசூரி சுவாமியின் இயற்பெயர் சுப்புராமன். தமது 15ம் அகவையில் நரசிம்மமூர்த்தியின் உபாசகராகி கவி பாடும் திறன் பெற்றார். பின் வாலாசாப்பேட்டை வேங்கடரமண பாகவதரின் சீடராகி கர்நாடக சங்கீதம் மற்றும் ஹடயோகம் பயின்றார். சமசுகிருதம், தெலுங்கு, சௌராட்டிர மொழி மற்றும் தமிழ் முதலிய மொழிகளிலும், குலத்தொழிலான வைதீகம் மற்றும் புரோகிதத்திலும் புலமை பெற்றார். தமது 21வது அகவையில் இலக்குமிதேவி என்ற பெண்மணியை மணந்து இல்லறம் நடத்தினார். பரமக்குடியில் ஆறு ஆண்டுகள் வசித்த பின்னர் தஞ்சையில் 25 ஆண்டுகள் வசித்ததால் இவரை தஞ்சாவூர் அய்யான் என்று புகழ் பெற்றார். பிற்காலத்தில் மதுரை, தெற்குமாசி வீதியில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் தங்கி சௌராஷ்டிர மொழியை மேம்படுத்த பள்ளிக்கூடத்தை நடத்தினார். வேங்கடசூரி சுவாமிகள் இரண்டாம் முறை காசிக்கு புனிதப்பயணம் மேற்கொண்டு திரும்புகையில் யமுனை ஆற்றாங்கரையில் தமது 72ம் அகவையில் வைகுண்டப்பதவியை அடைந்தார். விருதுகள் தஞ்சை மராத்திய அவையில் சமசுதான பண்டிதராக விளங்கிய வேங்கடாச்சாரியை தர்க்க வாதத்தில் வென்று தமது புலமையை நிலை நாட்டியதால் ‘வேங்கடசூரி’ என்ற பட்டத்தை பெற்று தஞ்சை மன்னரவைப் புலவரானார். ”சூரி” என்றால் மராத்திய மொழியில் ”வென்றவன்” என்றும், சமசுகிருத மொழியில் ”பெரும் புலவர்” என்று பொருள்படும். மேலும் தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலைய ஆராய்ச்சி உறுப்பினர் தகுதி மன்னரால் வழங்கப்பட்டு பெருமை பெற்றார். வாழ்நாள் சாதனைகள் சௌராட்டிர மொழியில் இசை வடிவில் முழு இராமாயணத்தை பாடி உள்ளார். (இதனை சௌராட்டிர மொழி வளர்ச்சி குழுவினர் 1904ல் தெலுங்கு & தமிழ் மொழியில் வெளியிட்டனர்) தியாகப்பிரம்மம் தியாகராசஜரின் தெலுங்கு மொழி]]யில் இயற்றிய நவுகா சரித்திரம் எனும் இசை நாடக நூலை சமசுகிருதத்த்ல் மொழி பெயர்த்துள்ளார். சௌராட்டிரமொழியை செம்மைப்படுத்தி புதிய பாட நூல்களை வெளியிட்டார் இதிகாச, புராண உபந்யாசங்களில் தன்னிகரில்லாதவர். உசாத்துணைகள் சௌராட்டிரர் வரலாறு, கே.ஆர்.சேதுராமன், 2008 சௌராட்டிர பிராமணர் சரித்திரம், கே.ஏ.அன்னாசாமி சாத்திரியார், 1914 வெளி இணைப்புகள் சௌராட்டிரர் சமூக வரலாறு கேட்க http://sapovadia.wordpress.com/2012/04/03/saurashtra-a-language-region-culture-community http://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=759 History of Saurashtrians of Tamilnadu பகுப்பு:சௌராட்டிரர் பகுப்பு:சௌராட்டிர அறிஞர்கள் பகுப்பு:சௌராட்டிர நபர்கள்
வேங்கடரமண பாகவதர்
https://ta.wikipedia.org/wiki/வேங்கடரமண_பாகவதர்
thumb|வேங்கடரமண பாகதவரின் 228-வது பிறந்த விழாவை சிறப்பிக்க இந்திய அஞ்சல் துறை 2009-இல் வெளியிட்ட அஞ்சல் தலை வேங்கடரமண பாகவதர் (18-2-1781 - 18-12-1874) சௌராட்டிர மொழி, தமிழ், சமஸ்கிருத மொழி மற்றும் தெலுங்கு மொழிகளில் புலமையும், கருநாடக பக்தி இசையில் மிகுந்த தேர்ச்சியும் உடையவராய் விளங்கியவர்.வேங்கடரமண பாகவதர் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்போட்டையில், குப்பையா நன்னுசுவாமி பாகதவருக்கு ஐந்தாம் மகனாகப் பிறந்தவர்.இவரும், இவரது மகன் கிருஷ்ணசாமி பாகவதரும் தியாகராஜ சுவாமியின் சீடர்களாக விளங்கியவர்கள். Venkataramana Bhagavathar வாழ்நாள் சாதனைகள் இவர் தியாகராஜரின் தலைமை மாணவர் ஆவார். தெலுங்கு மற்றும் சௌராட்டிர மொழியில் பல்வேறு பக்திக் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். தமது அனைத்து தெலுங்கு கீர்த்தனைகளின் இறுதியில் தியாகராஜ என்ற முத்திரையிட்டுக் குரு காணிக்கையாக செலுத்தியுள்ளார். Illustrious disciple of saint-poetTorchbearer of Tyagaraja tradition தியாகராச சுவாமிகள் தெலுங்கு மொழியில் இயற்றிய நௌகா சரிதம் எனும் நூலை, வேங்கடரமண பாகவதவர் சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்த்துள்ளார். தியாகராஜர் மறைவுக்குப் பின்னர் வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜாப்பேட்டைக்கு குடிபெயர்ந்தார். தியாகராஜர் பயன்படுத்திய பாதுகை, பாராயணம் செய்த தெலுங்கு பாகவத நூல், கையெழுத்து ஏட்டுச் சுவடிகள், ஸ்ரீ வேங்கடரமணபாகவதரின் பாதுகைகள், பூஜா பாத்திரங்கள், அவர் இயற்றிய கீர்த்தனைகள், புதிய வர்ணங்கள், ஸ்வர ஜதிகள் முதலியவை அடங்கிய அற்புத பொக்கிஷமான ஏட்டுச் சுவடிகளை பாதுகாத்து வந்தார். வேங்கடரமணரின் மறைவிற்குப் பின் அவரிடம் ஏட்டுச் சுவடிகள் மற்றும் அவர் பயன்படுத்திய பூஜைப் பொருட்கள் மதுரை சௌராட்டிர சபையைச் சேர்ந்த வேங்கடரமண மந்திரத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் வேங்கடரமணரது பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் செளராட்டிரர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. History of Sri Ventaramana BhagavatharLife and Contribution Of Venkataramana Bhagavatar Part 1 Life and Contribution Of Venkataramana Bhagavatar Part 2 வேங்கடரமணரின் கர்நாடக பக்தி இசையை பாராட்டி, அவரின் உருவம் பதித்த அஞ்சல் வில்லையை இந்திய அஞ்சல் துறை 2009-ஆம் ஆண்டில் வெளியிட்டது. வேங்கடரமண பாகவதரின் நினைவாக வெளியிடப்பட்ட அஞ்சல் தலை மேற்கோள்கள் வெளி இணைப்புகள் http://www.venkataramanabhagavadar.org/Index.html http://sangeetasagaram.blogspot.in/2011/10/walajpet-venkataramana-bhagavatar.html வேங்கடரமண பாகவதரின் நினைவு இல்லம், வாலாஜாப்பேட்டை வேங்கடரமண பாகவதரின் வலைதளம் பகுப்பு:18 ஆம் நூற்றாண்டுக் கருநாடக இசைக் கலைஞர்கள் பகுப்பு:கருநாடக இசைக் கலைஞர்கள் பகுப்பு:வைணவ அடியார்கள் பகுப்பு:1781 பிறப்புகள் பகுப்பு:1874 இறப்புகள் பகுப்பு:சௌராட்டிரர் பகுப்பு:சௌராட்டிர அறிஞர்கள் பகுப்பு:இந்து சமயப் பெரியார்கள் பகுப்பு:சௌராட்டிர நபர்கள்
அலைபாயுதே
https://ta.wikipedia.org/wiki/அலைபாயுதே
அலைபாயுதே (Alaipayudhey) மணிரத்னம் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, சொர்ணமால்யா முதலியோர் நடித்திருந்தனர். இது ஒரு காதல் படம் ஆகும். நடிகர்கள் மாதவன் - கார்த்திக் சாலினி (நடிகை) - சக்தி செல்வராஜ் ஜெயசுதா - சரோஜா சொர்ணமால்யா (நடிகை) - பூரணி செல்வராஜ் விவேக் - சேது பிரமீட் நடராஜன் - வரதராஜன் ரவி பிரகாஷ் (நடிகர்) வேணு அரவிந்த் - ஆறுமுகம் K. P. A. C. லலிதா கார்த்திக்கின் அம்மா சுகுமாரி (நடிகை) - சக்தியின் அத்தை அழகம்பெருமாள் - நாயர் ஹரி நாயர் கார்த்திக் குமார் - சியாம் அரவிந்த்சாமி as ராம் குஷ்பு - மீனா சோபியா ஹகியூ (செப்டம்பர் மாதம் பாடல்) கதை கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் (மாதவன்) சக்தியைச் (ஷாலினி) சந்திக்கின்றான். பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் புகைவண்டிப் பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது. இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பின் காரணமாகத் தனியே குடித்தனம் நடத்துகின்றனர். இறுதியில் சக்திக்கு விபத்து ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சேருகிறார்கள். மேற்கோள்கள் பகுப்பு:2000 தமிழ்த் திரைப்படங்கள்‎ பகுப்பு:காதல் திரைப்படங்கள் பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு:ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள் பகுப்பு:மாதவன் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு:விவேக் நடித்த திரைப்படங்கள் பகுப்பு:குஷ்பூ நடித்த திரைப்படங்கள் பகுப்பு:அரவிந்த்சாமி நடித்த திரைப்படங்கள் பகுப்பு:மணிரத்னம் இயக்கிய திரைப்படங்கள்
ஏ.ஆர்.ரகுமான்
https://ta.wikipedia.org/wiki/ஏ.ஆர்.ரகுமான்
REDIRECT ஏ. ஆர். ரகுமான்
ஆந்திரப் பிரதேசம்
https://ta.wikipedia.org/wiki/ஆந்திரப்_பிரதேசம்
ஆந்திரப் பிரதேசம் (Andhra Pradesh) என்பது இந்தியாவின், 28 மாநிலங்களுள் ஒன்றாகும். இந்தியாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள இந்த மாநிலம் பரப்பளவின்படி நாட்டின் 8-ஆவது பெரிய மாநிலம் ஆகும். 2011 கணக்கெடுப்பின்படி இது இந்தியாவின் 10-ஆவது மக்கள்தொகை மிகுந்த மாநிலம் ஆகும். ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பெரிய நகரம் விசாகப்பட்டினம் ஆகும். இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றான தெலுங்கு இம்மாநிலத்தின் அலுவல்முறை மொழியாகவும் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியாகவும் உள்ளது. 2 சூன் 2014 நாளன்று ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலமாக ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வந்த ஐதராபாத் நகரம், தெலங்கானாவின் தலைநகரமாக மாறியது. எனினும் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014-இன்படி ஐதராபாத் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பூர்வ தலைநகராக அதிகபட்சம் பத்தாண்டுகள்வரை நீடிக்கும். அதற்குள் புதிய தலைநகரமாக அமராவதி என்ற நகரம் உருவாக்கப்பட்டபிறகு அது சட்டப்படி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாக மாறும். குசராத்தை அடுத்து ஆந்திரப் பிரதேசம், இந்தியாவின் 2-ஆவது மிக நீளமான கடற்கரை எல்லையைக் கொண்டுள்ளது. இது வடமேற்கில் தெலுங்கானா, வடகிழக்கில் சத்தீசுகர் மற்றும் ஒடிசா, மேற்கில் கருநாடகா மற்றும் தெற்கில் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது. இதன் கிழக்கில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது. மேலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் மாவட்டமான யானம் என்ற சிறிய பகுதி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதாவரி டெல்டாவில் காக்கிநாடா நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. விசயவாடா, திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் ஆகியன இம்மாநிலத்திலுள்ள ஏனைய பெரிய நகரங்களாகும். புவியமைப்பு கோதாவரி, கிருட்டிணா ஆகிய ஆறுகள் ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாய்கின்றன. அவற்றின் கழிமுகங்கள் காரணமாக அரிசி உற்பத்தியில் இம்மாநிலம் சிறந்து விளங்குகிறது. வரலாறு thumb|ஆந்திர மாநிலம்(1953-1956) thumb|ஆந்திரப் பிரதேசம்(1956-2014) 1 நவம்பர் 1956 அன்று மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்படி தெலுங்கு பேசும் சென்னை மாகாணத்தின் தெலுங்கு மொழி பேசும் பகுதிகளையும் இணைத்து ஆந்திரப் பிரதேசம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவே ஆகும். தற்போதைய தெலுங்கானா பகுதிகள் ஐதராபாத் அரசாட்சி பகுதியாகவே இருந்தது. இராயலசீமை, கடற்கரை ஆந்திரா சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தது. எனவே 2014 சூன் மாதம் தெலுங்காணா தனி மாநிலமாக இம்மாநிலத்தை பிரித்து உண்டாக்கப்பட்டது. மாவட்டங்கள் அல்லூரி சீதாராம ராசு அனகாபள்ளி அனந்தபூர் அன்னமய்யா பாபட்லா சித்தூர் கொனசீமா கிழக்கு கோதாவரி ஏலூரு குண்டூர் காக்கிநாடா கிருட்டிணா கர்நூல் நந்தியால் என் டி ஆர் பாலநாடு பார்வதிபுரம் மண்யம் பிரகாசம் சிறீகாகுளம் நெல்லூர் சிறீசத்ய சாய் திருப்பதி விசாகப்பட்டினம் விசயநகர மேற்கு கோதாவரி கடப்பா வருவாய் பிரிவுகள் இந்த 13 மாவட்டங்கள் 50 வருவாய் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 7 வருவாய் பிரிவுகளும், விசயநகர மாவட்டத்தில் 2 மட்டுமே உள்ளன. மண்டலங்கள் 50 வருவாய் பிரிவு 670 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 66 மண்டலங்கள் உள்ளன. விசயநகர மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 34 மண்டலங்கள் உள்ளன. நகரங்கள் ஆந்திரப் பிரதேசத்தில் 16 நகராட்சிகள் மற்றும் 14 மாநகராட்சிகள் உட்பட மொத்தம் 31 நகரங்கள் உள்ளன. விசாகப்பட்டினம் மற்றும் விசயவாடா ஆகிய நகரங்கள் இருபது இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் ஆகும். பொருளாதாரம் உழவு ஆந்திரப் பிரதேசத்தில் அதிகமாக பழக்கத்திலுள்ள தொழிலாகும். அரிசி, புகையிலை, பருத்தி, மிளகாய், கரும்பு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆந்திரப் பிரதேசத்தில் தனிகவனம் அளிக்கப்பட்டு வருகிறது. கடப்பா மாவட்டத்தில் உள்ள 2664 கனிம சுரங்கங்கள் மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் வளம் பெறுகிறது. காக்கிநாடா துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் மசூலிப்பட்டினம் துறைமுகங்கள் மாநிலத்தின் வருவாய்க்கு வகை செய்கிறது. நீர் ஆதாரங்கள் கோதாவரி ஆறு, கிருட்டிணா ஆறு, சிரீசைலம் அணை, எம். பி. ஆர் அணை, மயிலாவரம் அணை, சோமசீலா அணை மற்றும் போலவரம் திட்டம் மாநிலத்தின் நீர் ஆதாரங்களாக உள்ளது. மக்கள் தொகையியல் மே 2014-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநில அரசின் புள்ளி விவரப்படி 1,60,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 4,93,86,799 ஆகும். அதில் ஊர்நாட்டு மக்கள் தொகை 3,47,76,389 (70.4); நகரப்புற மக்கள் தொகை 1,46 ,10,410 (29.6%) ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 50.1% ஆகவும்; பெண்கள் 49.9% ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 308 மக்கள் வீதம் வாழ்கின்றனர். பதினெட்டு வயதிற்குட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 9 52,22,384 (10.6%) ஆகும். மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 67.41% ஆக உள்ளது. அதில் ஆண்களின் படிப்பறிவு 80.9%; பெண்களின் படிப்பறிவு 64.6% ஆகவும் உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் பட்டியல் சமூக மக்கள் தொகை 84,45,398 (17.1 %) ஆகவும்; பட்டியல் பழங்குடி மக்கள் தொகை 26,31,145 (5.3%) ஆக உள்ளனர். மாநிலத்தில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை 2,29,69,906 ஆகும். இவர்களில் முதன்மைப் பணியாளர்களின் எண்ணிக்கை 1,92,31,167 ஆகவும்; திறன் குறைந்த பணியாளர்களின் எண்ணிக்கை 37,38,739 ஆகவும் உள்ளது. பயிரிடுவோர்கள் எண்ணிக்கை 30,70,723 ஆகவும்; வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 85,57,567 ஆகவும் உள்ளது. கல்வி ஆரம்பப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை 37,45,340; நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 21,01,928 ஆக உள்ளது. மொழிகள் ஆந்திரப் பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ மொழி தெலுங்கு. சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் தெலுங்கு மொழியை ஒரு பாரம்பரிய மொழியாக அறிவித்துள்ளார். மதங்கள் ஆந்திரத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள், முசுலிம்கள் கணிசமான சிறுபான்மையினர். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலங்களில் இந்துக்கள் (90.87%), முசுலிம்கள் (7.32%) மற்றும் கிரித்துவர் (1.38%) உள்ளனர். புத்த மதத்தினர், சீக்கியர்கள், செயின் மற்றும் அவர்களது மதத்தை நிலைநாட்ட மறுத்துவிட்ட மக்கள் மீதமுள்ள பகுதியை உருவாக்குகின்றனர். அரசியல் இம்மாநிலத்தில் 175 சட்டப் பேரவை தொகுதிகளும் 58 சட்ட மேலவை தொகுதிகளும் உள்ளன. மேலும் 25 மக்களவைத் தொகுதிகளும் 11 மாநிலங்களவை தொகுதிகளும் உள்ளன.http://www.ap.gov.in/wp-content/uploads/2016/01/1-ADMINISTRATIVE-AND-GEOGRAPHICAL-PROFILE.pdf தெலங்கானா மாநில பிரிவினைக்குப் பிறகு 2014ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த சட்ட மன்ற தேர்தலில், செகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று, தற்போதைய முதல்வராக உள்ளார். நிர்வாகம் இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக பதின்மூன்று வருவாய் மாவட்டங்களாகவும்; எண்பது வருவாய் கோட்டங்களாகவும், 664 வருவாய் மண்டல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. பெரும் நகரங்கள் விசாகப்பட்டினம், விசயவாடா, திருப்பதி, குண்டூர், காக்கிநாடா, நெல்லூர் மற்றும் கர்நூல் இம்மாநிலத்தின் பெரும் நகரங்கள் ஆகும். வழிபாட்டுத் தலங்கள் thumb|right|350px|திருப்பதி ஏழுமலையான் thumb|left|250px|விசயவாடா கனகதுர்கை கோயில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் சிரீசைலம் மல்லிகார்சுனர் கோயில் விசயவாடா கனகதுர்கை கோயில் ராமகிரி வாலீசுவரர் கோயில் புங்கனூர் சிவன் கோயில் சிம்மாச்சலம் திரிபுராந்தகேசுவரர் கோயில் பீமாவரம் சிவன் கோயில் கலாச்சாரம் தெலுங்கு ஆந்திரப் பிரதேசத்தின் முதன்மை மொழியும், ஆட்சி மொழியும் ஆகும். கருநாடக இசையில் தெலுங்கு மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. தெலுங்கு ஆண்டுப்பிறப்பான உகாதி, ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுகிறது. குச்சிப்புடி ஆந்திரத்தின் பாரம்பரிய நாட்டிய வகையாகும். ஐதராபாத்தை மையமாகக் கொண்ட தெலுங்கு திரைப்படத் துறை, இந்தியாவில் மூன்றாவது பெரிய திரைப்படத்துறையாகும். ஆந்திர உணவு வகைகள் காரம் நிறைந்தவை. போக்குவரத்து தொடருந்து விசயவாடாhttp://indiarailinfo.com/arrivals/vijayawada-junction-bza/29 மற்றும் விசாகப்பட்டினம்http://indiarailinfo.com/arrivals/visakhapatnam-junction-vskp/401 தொடருந்து நிலையங்கள் இருப்புப்பாதை மூலம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. வானூர்தி நிலையங்கள் விசாகப்பட்டினம், விசயவாடா மற்றும் திருப்பதிhttps://www.makemytrip.com/flights/tirupati-tir-tirupati.html வானூர்தி நிலையங்கள், வானூர்தி மூலம் இந்தியாவின் அனைத்து நகரங்களுடன் இம்மாநிலத்தை இணைக்கிறது. விளையாட்டு மட்டைப்பந்து விளையாட்டு மிகவும் பரவலான விளையாட்டு ஆகும். விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA விளையாட்டரங்கம் ஆந்திரப் பிரதேச கிரிக்கெட் அணிக்கு சொந்தமானது. இந்த இடம் தொடர்ந்து பன்னாட்டு மற்றும் உள்நாட்டு போட்டிகளுக்குப் பொருந்தும். ஆந்திராவில் இருந்து குறிப்பிடத்தக்க வீரர்கள், விசயநாகரத்தின் மகராச்சுகுமார், எம். வி. நரசிம்ம ராவ், எம். எசு. கே. பிரசாத், வி.வி.எசு. லட்சுமண், திருமலசீட்டி சுமன், அர்சத் அய்யூப், அம்பதி ராயுடு, வெங்கடாபதி ராசா, அரவிந்த நாயுடு, யலக்க வேணுகோபால் ராவ் ஆகியோராவர். ஒலிம்பிக் பதக்கத்தை வென்ற முதல் பெண் இந்தியரான கர்ணம் மல்லேசுவரி, ஆந்திராவின் திருகாகுளம் மாவட்டத்திலிருந்து வந்தவர். 19 செப்டம்பர் 2000 அன்று, 69 கிலோ பிரிவில் 240 கிலோ எடை கொண்ட வெண்கலப் பதக்கம் வென்றார். பௌத்தத் தொல்லியல் களங்கள் நாகார்சுனகொண்டா அமராவதி உண்டவல்லி போச்சன்ன கொண்டா கண்டசாலா சந்திராவரம் thumb|center|900px|நாகார்சுனகொண்டாவில் உள்ள புத்தரின் சிலையுடன் கூடிய தொல்லியல் களம் மேலும் பார்க்க ஆந்திரப் பிரதேச அரசு ஆந்திரப் பிரதேச மாவட்டங்களின் பட்டியல் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர்களின் பட்டியல் ஆந்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் மேற்கோள்கள் 16. https://www.makeourmoments.com/tour/munnar-day-tour/ வெளி இணைப்புகள் வெளி இணைப்புகள் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் ஆந்திர ராச்சியம் என்ற தலைப்பிலான கட்டுரை உள்ளது. ஆந்திரப் பிரதேச அரசு இணைய தளம் தெலங்கானா பிரிவினைக்குப் பின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வரைபடம் பகுப்பு:ஆந்திரப் பிரதேசம் பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
மனிதவியல்
https://ta.wikipedia.org/wiki/மனிதவியல்
REDIRECT மானிடவியல்
அலெக்ஸாண்டர் ஃளெமிங்
https://ta.wikipedia.org/wiki/அலெக்ஸாண்டர்_ஃளெமிங்
REDIRECT அலெக்சாண்டர் பிளெமிங்
சு. வில்வரத்தினம்
https://ta.wikipedia.org/wiki/சு._வில்வரத்தினம்
சு. வில்வரத்தினம் (1950 - டிசம்பர் 9, 2006) 1970 களிலே எழுத ஆரம்பித்து 1980 களில் முக்கியமான எழுத்தாளராகப் பரிணமித்தவர். சு.வி என்ற பெயரால் அறியப்படுபவர். வாழ்க்கைக் குறிப்பு யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வில்வரத்தினம், ஈழத்தி்ன் இலக்கிய சிந்தனையாளராகிய மு. தளையசிங்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர். இவருடைய கவிதைகள் மொத்தமாக உயிர்த்தெழும் காலத்துக்காக என்ற தொகுதியாக 2001 இலே வெளியானது. மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கில வடிவிலே வெளிவந்துள்ளது. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்ட கவிஞரான இவர் தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார். இவரது காற்றுவழிக் கிராமம் என்னும் கவிதைத் தொகுதி விபபி சுந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது. இவர் கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை பொருந்தியவரும்கூட. வில்வரத்தினம் இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார். அங்குள்ள கல்வித் திணைக்களத்தில் பணியாற்றினார். 2 பிள்ளைகளின் தந்தை ஆவார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த வில்வரத்தினம் கொழும்பில் 9 டிசம்பர் 2006 அன்று தனது 56வது வயதில் காலமானார். நாட்டுப்பற்றாளர் விருது தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய பங்களிப்புகளுக்காக கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். படைப்புகள் +ஆண்டுதலைப்புவகைபதிப்பகம்1985அகங்களும் முகங்களும்கவிதைத் தொகுதிஅலை வெளியீடு1995காற்றுவழிக்கிராமம்ஆகவே பதிப்பகம்காலத்துயர்வி. ஜே. பதிப்பகம்2000நெற்றிமண் 2001உயிர்த்தெழும் காலத்துக்காகவிடியல் பதிப்பகம்2004புதுத்துளிர் நூறு(இணை ஆசிரியர்: செல்லையா யோகராசா)பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (வடக்கு கிழக்கு மாகாணம்)2005வாசிகம் கூடல் வெளியீடு நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள் அகங்களும் முகங்களும் - நூலகம் திட்டம் காற்றுவழிக் கிராமம் - நூலகம் திட்டம் உயிர்த்தெழும் காலத்திற்காக - நூலகம் திட்டம் வெளி இணைப்புக்கள் சு. வில்வரத்தினம் (சோமியின் நினைவுப்பதிவு) சு. வில்வரத்தினம் (டிசேயின் நினைவுப்பதிவு) கரைவு (கந்தையா இரமணிதரனின் நினைவுப்பதிவு) சு. வில்வரத்தினம் குரல் பதிவு என்பிலிகளுக்கு - சு.வி.யின் கவிதை என்னைக் கவர்ந்தவர்கள் - 5 (கவிஞ்ர் சு.வில்வரத்தினம்)- (கே.எஸ்.பாலச்சந்திரனின் நினைவுப்பதிவு) பகுப்பு:1950 பிறப்புகள் பகுப்பு:2006 இறப்புகள் பகுப்பு:புங்குடுதீவு நபர்கள் பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள் பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்
தொல்காப்பியம்
https://ta.wikipedia.org/wiki/தொல்காப்பியம்
தொல்காப்பியம் () என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர். பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும். தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின. தொல்காப்பியர் காலம் தொல்காப்பிய நூலுக்குச் சிறப்புப் பாயிரம் இயற்றியவர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியருடன் பயின்றவர். இது பாணினி எழுதிய வடமொழி இலக்கண நூலுக்கு சமகாலத்து நூல். தொல்காப்பியர் காலத்தில் தமிழில் இருந்த 'முந்துநூல்' (அகத்தியமும்) கண்டிருந்தார். தோற்றம் என்ற தலைப்பில் சான்றுடன் கூடிய தொல்காப்பியர் காலம் இணைக்கப்பட்டுள்ளது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொல்காப்பியர் ஆண்டினை பொ.ஊ.மு. 711 என்று பொருத்தியது. தொல்காப்பியம் – பெயர் விளக்கம் தொல்காப்பியம் எழுதப்பட்ட ஓலைச்சுவடி|center|thumb|820px தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம், தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் என்னும் இருவேறு கருத்துகள் அறிஞர்களிடையே நிலவி வருகின்றன.தொல்காப்பியம் என்ற சொல் நூலைக் குறிக்கும் போது ஒரு சொல் நீர்மைத்து.பொருளை விளக்கும் போது அதைத் தொல்+காப்பு+இயம் என்று முச்சொற்களாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும்.பழமையைத், தொன்மையைக் காத்து இயம்புவது என்று பொருள் பெறும்.தமிழரின் தொன்மையை பழமையைக் காத்து இயம்பும் நூல்.தொன்மை + காப்பியம் (தொன்மைகளை காத்து இயம்புதல்)= தொல்காப்பியம்.(பண்புத்தொகை): மிகவும் தொன்மை(பழமை)யான காப்பிய நூல் என்பதாலும் இது "தொல்காப்பியம்" என்று அழைக்கப்படுகின்றது. தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் தொல்காப்பிய நூல் முழுமைக்கும் உரை எழுதிய இளம்பூரணர், தொல்காப்பியர் கூறும் ஆகுபெயர்களில் ஒன்றான 'வினைமுதல் உரைக்கும் கிளவி என்பதற்குத் 'தொல்காப்பியம்' என்னும் எடுத்துக்காட்டினைத் தந்துள்ளார். (2-3-31) இது தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் என்னும் கருத்தை வலியுறுத்துகிறது.காப்பியக்குடியில் ஆசிரியர் தொல்காப்பியர் தோன்றினாலும்,பழமையைக் காத்து இயம்புவதற்காகப் புனைபெயராகத்தான் தமக்குத் "தொல்காப்பியன்" எனப்பெயர் வைத்துக்கொண்டார்.அதனால்தான் சிறப்புப் பாயிரத்தில் 'தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி'எனக் குறிப்பிடுகிறார்.தொல்காப்பியன் எனத் தன் பெயரைத் தோற்றுவித்துக் கொண்டு என்பது இதன் பொருள் ஆகும். அகத்தியர் செய்தது அகத்தியம். பன்னிருவர் செய்தது பன்னிரு படலம்.ஐந்திரன் செய்தது ஐந்திரம். காக்கை பாடினியார் செய்தது காக்கைபாடினியம். பல்காப்பியனார் செய்தது பல்காப்பியம். திருமூலர் செய்தது திருமூலம். இப்படித் தொல்காப்பியத்துக்கு முந்திய இலக்கண நூலும் தொல்காப்பியத்தை முதல்-நூலாகக் கொண்ட தமிழின் பழமையான இலக்கண நூல்களில் பலவும் பிறவும் ஆசிரியராலேயே பெயர் பெற்றுள்ளன. இந்த வகையில் கருத்தா இன்றி காரியமில்லை அதனால் தொல்காப்பியர் செய்தது தொல்காப்பியம் எனக் கொள்வதே முறைமை. கபிலர், தொல்கபிலர், பரணர், வன்பரணர் என வேறுபடுத்தப்படும் புலவர்களை நாம் அறிவோம். அதுபோலக் காப்பியனார் என்னும் பெயரில் தொல்காப்பியனார், பல்காப்பியனார், காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர்கள் இருந்துவந்ததை வரலாறு காட்டுகிறது. தொல்காப்பியப் பாயிரம் “புலம் தொகுத்தோன் … ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறுத்த படிமையோன்” என்று கூறுகிறது. இதில் தொல்காப்பியன் புலம்(=இலக்கணம்) தொகுத்தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவற்றை விடுத்துத் தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனக் கூறுவோர் வரலாற்றை எண்ணிப்பார்க்க வேண்டும். தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் இயம்புவது "இயம்" ஆகும். இயத்துக்குக் காப்புத் (காவல்) தருவது "காப்பியம்". தொன்மையான காப்பியம் ஆதலால் இது தொல்காப்பியம் ஆனது.{| border="1" align="center" float="left" cellpadding=4 cellspacing="0" width="550" style="margin: 1em 1em 1em 1em; background: #fafafa; border: 1px #aaaaaa solid; border-collapse: collapse; font-size: 90%;" |style="width:200px"| ஈறு போதல் இடையுகரம் இய்யாதல் ஆதி நீடல் அடியகரம் ஐயாதல் தன்னொற் றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல் இனமிகல் இனையவும் பண்பிற் கியல்பே நன்னூல் - 136 |style="width:200px"| தொன்மை + காப்பியம் "ஈறு போதல்" என்னும் விதிப்படி தொன்மை + காப்பியம் தொன் + காப்பியம் "முன்னின்ற மெய்திரிதல்" என்னும் விதிப்படி தொன்ல் + காப்பியம் தொல் + காப்பியம் |} தொல்காப்பியம் செய்தவர் தொல்காப்பியர் எனப்பட்டார். நன்னூல் செய்த பவணந்தி முனிவரை நாம் நன்னூலார் என வழங்குவது போன்றதே இது. தோற்றம் தொல்காப்பியப் பாயிரம் இவரை: "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப் பல்புகழ் நிறைந்த படிமையோன்" என்று குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் 'புலம்' தொகுத்தார் என்றும் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்றும் புலன் என்றும் நாம் அறிவுக்கு அடிப்படையாக அமைந்துள்ள நிலைகளங்களைக் குறிப்பிடுகிறோம். அது போல மொழிக்கு அடிப்படையாக அமைந்துள்ள எழுத்து முதலான களங்களைக் காட்டுவது புலம் ஆகும். ஆகவே தொல்காப்பியர் புலம் தொகுத்தார் ஆனார். தொல்காப்பியர் பற்றி வேறு தனிப்பட்ட தகவல்கள் அதிகம் காணப்படவில்லை. தொல்காப்பிய ஆசிரியர் சமணர் என்று சிலர் குறிப்பிட்டாலும், வேறு சிலர் இது பலரால் பல்வேறு காலங்களில் எழுதப்பெற்ற நூல் என்றே நம்புகின்றனர். தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலகட்டங்களில் பல ஆய்வாளர்கள் வெவ்வேறு விதங்களில் இதன் காலத்தைக் கணிக்க முயன்றுள்ளார்கள். பண்டைக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந் நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும், தொல்காப்பியம் பொ.ஊ.மு. 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனினும் தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வாளர்களால் இஃது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தெ. பொ. மீனாட்சிசுந்தரம், இலக்குவனார் போன்றவர்கள் இந்நூல் பொ.ஊ.மு. 700-ஆம் ஆண்டளவில் ஆக்கப்பட்டதாகக் கருதினார்கள். வேறு சிலர் இதன் காலத்தை பொ.ஊ.மு. 500-இக்குச் சிறிது முன்பின்னாகக் கணிப்பிட்டார்கள். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றிய ச. வையாபுரிப்பிள்ளையும் வேறு சில வெளிநாட்டு அறிஞர்களும் தொல்காப்பியத்தின் காலத்தை மேலும் பின் தள்ளி பொ.ஊ. 3-ஆம் நூற்றாண்டு என்றனர். தொல்காப்பியம் பல ஆசிரியர்கள் கொண்டது என்போரின் கருத்தோ, பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்று பொ.ஊ. 5-ஆம் நூற்றாண்டு வரை இந்நூல் எழுதப்பெற்றது என்பதாகும். ஆயினும் மா.இராச மாணிக்கனார் தன் கால ஆராய்ச்சி நூலில் மணி மேகலை எழுதப்பட்ட காலம் பொ.ஊ. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு என்று பல்வேறு சான்றுகளுடன் எசு. வையாபுரி பிள்ளையின் கருத்துகளை மறுத்தும், மா. இராச மாணிக்கனார் தொல்காப்பியர் காலம் பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு என்றும் உறுதியாக கூறுகிறார். தொல்காப்பியர் காலம் சங்க காலப் புலவர் மாமூலனாரின் காலம் பற்றிய தவறான கணிப்பே கடைச்சங்க காலம் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரியவருகிறது. மாமூலனார் பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட நந்தர்கள் பற்றியும் பிறகு ஆண்ட மௌரியர்களின் தமிழகப் படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார்.கள்ளில் ஆத்தி --ரையனார், ஊன்பொதி பசுங்குடையார் மேலும் 3 புலவர்கள் இப்போரினை தம் இலக்கியங்களில் பதிவு செய்து போரில் வென்றவன் கரிகாலனின் தந்தை இளஞ்சேட் செண்ணி என்கின்றனர். இதன் மூலம் திருவள்ளுவர் போன்றோரின் காலம் பொ.ஊ.மு. 5-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனத் தெரிகிறது. இதனால் தொல்காப்பியரின் காலம் பொ.ஊ.மு. 10-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனத் தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. மேலும் சங்க காலப் புலவர் கபிலர், அரசன் இருங்கோவேள் பற்றிக் கூறுகையில் அவனுடைய முன்னோர்கள் 49 தலைமுறையாகத் துவரை (துவாரகை) மாநகரை ஆண்டு வந்ததாகவும் அவர்களில் முன்னோன் ஒருவன் கழாத்தலை புலவரை இழிவு படுத்தியதன் காரணமாகவே இருபெரு மாநகரங்கள் (துவரை, வேட்துவாரகை) அழிவடைந்ததாகவும் கூறுகிறார். மாமூலனார் காலத்தின் மூலம் கபிலர் காலம் பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் பொ.ஊ.மு. 280-290 இடைப்பட்ட காலமாகும். ஒரு தலைமுறைக்கு 27 எனக் கொள்ள, 49×27=1323 ஆக 265+1323=1588 பொ.ஊ.மு. 16-ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கு முற்பட்ட விடயங்களைப் பற்றியும் மேலும் அக்காலத்தில் கழாத்தலையார் என்ற புலவர் வாழ்ந்தது பற்றியும் கபிலர் கூறுகிறார். இதன் மூலம் தொல்காப்பியரின் காலம் பொ.ஊ.மு. 20-ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனத் தாராளமாகக் கூறலாம். கபிலர் காலத்திலும் கழாத்தலை என்ற புலவர் வாழந்ததாகவும் அப்புலவரால் பாடப்பட்ட அரசர்களின் பெயர்கள் மூலம் தெரியவருகிறது. வரலாற்றாசிரியர்கள் பொ.ஊ.மு. 1500-ஆம் ஆண்டு வாக்கில் துவாரகை கடலாள் கொள்ளப்பட்டதாகக் கூறுவது கபிலரின் பாடலை 100 சதவீதம் உறுதிபடுத்தும் விதமாக உள்ளது. இதன் மூலம் கபிலரின் காலம் பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டு என்பதும் நக்கீரர் (பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டு-கபிலரை விட ஒரு தலைமுறை இளயவர்) என்பவரின் கூற்றின் மூலம் தொல்காப்பியர் இடைச்சங்கத்தில் (பொ.ஊ.மு. 5770-பொ.ஊ.மு. 2070) பிறந்தவர். கபிலர் பாடல் மூலம் தொல்காப்பியர் காலம் பொ.ஊ.மு. 21-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது. அதாவது இடைச்சங்கத்தில் பிறந்தவர் எனத் துள்ளியமாகத் தெரிகிறது.காரணம் நக்கீரர், தொல்காப்பியரை இடைச்சங்கத்தில் பிறந்து வாழ்ந்து இறந்ததாகவே குறிப்பிடுகிறார்.இடைச் சங்கம் பொ.ஊ.மு. 21-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்பதால் தொல்காப்பியர் பொ.ஊ.மு. 2100-இக்கும் முன்பே வாழ்ந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. அமைப்பு 370px|center|thumbமூல ஓலையுடனான தொல்காப்பிய அமைப்பு தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் (syntax) அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம் எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும் தமிழ்மரபையும் விளக்குகிறது. எழுத்ததிகாரம் thumb|190px|தொல்காப்பிய எழுத்து நடை - ஒரு பகுதி. நூல் மரபு – (நூன்மரபுச் செய்திகள்) மொழி மரபு – (மொழிமரபுச் செய்திகள்) பிறப்பியல் – (பிறப்பியல் செய்திகள்) புணரியல் – (புணரியல் செய்திகள்) தொகை மரபு – (தொகைமரபுச் செய்திகள்) உருபியல் (உருபியல் செய்திகள்) உயிர் மயங்கியல் (உயிர் மயங்கியல் செய்திகள்) புள்ளி மயங்கியல் (புள்ளிமயங்கியல் செய்திகள்) குற்றியலுகரப் புணரியல் (குற்றியலுகரப் புணரியல் செய்திகள்) எழுத்ததிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள் எழுத்ததிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன. முதலாவதாக உள்ள நூன்மரபு என்னும் இயலில் தமிழ் மொழியிலுள்ள எழுத்துகளைப் பற்றிய செய்திகள் உள்ளன. எழுத்துகளின் தொகுப்புப்பெயர்கள், எந்த எழுத்தோடு எந்த எழுத்து சேரும் என்பன போன்ற செய்திகள் இதில் சொல்லப்படுகின்றன. இரண்டாவதாக உள்ள மொழிமரபு என்னும் இயலில் சார்பெழுத்துகளைப் பற்றிய விளக்கமும் சொல் தொடங்கும் எழுத்துகள், சொல்லில் முடியும் எழுத்துகள் பற்றிய செய்திகளும் உள்ளன. மூன்றாவதாக உள்ள பிறப்பியலில் எழுத்துகளின் ஒலி எவ்வாறு எந்தெந்த உறுப்புகளில் பிறக்கும் என்னும் செய்திகள் சொல்லப்படுகின்றன. நான்காவதாக உள்ள புணரியலில் நின்ற சொல்லின் இறுதி எழுத்தோடு வருகின்ற மொழியின் முதலெழுத்து எவ்வாறு புணரும் என்று விளக்கப்படுகிறது. இயல்பு, திரிபு, சாரியை பெறுதல் முதலானவை சொற்கள் புணரும்போது நிகழும் பாங்கு இதில் கூறப்படுகிறது. ஐந்தாவதாக உள்ள தொகைமரபு என்னும் இயலில் வேற்றுமைப் புணர்ச்சி, வேற்றுமை அல்லாத அல்வழிப் புணர்ச்சி முதலானவை விளக்கப்படுகின்றன. ஆறாவதாக உள்ள உருபியலில் எந்தெந்த எழுத்தின் இறுதியில் எந்தெந்த சாரியைகள் இணைந்து புணரும் என்று விளக்கப்படுகிறது. ஏழாவதாக உள்ள உயிர்மயங்கியலில், உயிரெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது. எட்டாவதாக உள்ள புள்ளிமயங்கியலில் மெய்யெழுத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது. ஒன்பதாவதாக உள்ள குற்றியலுகரப் புணரியலில் குற்றியலுகரத்தில் முடியும் நிலைமொழி புணரும் பாங்கு சொல்லப்படுகிறது. இப்படி எழுத்து, மொழி(word), புணர்மொழி(combination of words) ஆகிய மொழிக்கூறுகள் எழுத்ததிகாரத்தில் விளக்கப்படுகின்றன. சொல்லதிகாரம் கிளவியாக்கம் வேற்றுமை இயல் வேற்றுமை மயங்கியல் விளி மரபு பெயரியல் வினை இயல் இடையியல் உரியியல் எச்சவியல் சொல்லதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள் சொல்லதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன. முதலாவது கிளவியாக்கம் என்னும் இயலில் தமிழ்ச் சொற்றொடர் வாக்கியமாக அமையும் பாங்கு கூறப்படுகிறது. இரண்டாவது வேற்றுமையியலில் வேற்றுமை உருபுகள் இன்னின்ன கருத்துகளைப் புலப்படுத்திக்கொண்டு சொற்றொடராக அமையும் என்பது விளக்கப்படுகிறது. மூன்றாவது வேற்றுமை மயங்கியலில் 2, 3, 4, 5, 6, 7 வேற்றுமை உருபுகள் உருவில் திரிந்தும் பொருளில் வேறுபட்டும் நிற்கும் இடங்கள் எவை என விளக்கப்படுகிறது. நான்காவது விளிமரபு என்னும் இயலில் 8-ஆம் வேற்றுமையாக எந்தப் பெயர்ச்சொல் எவ்வாறு மாற்றம் கொள்ளும் என்பது விளக்கப்படுகிறது. ஐந்தாவது பெயரியலில் பெயர்ச்சொற்கள் தோன்றுமாறும் அவை ஒருமை, பன்மை என்னும் எண்ணைப் புலப்படுத்தும்போதும் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் இடத்தைப் புலப்படுத்தும்போதும் எவ்வாறு அமையும் என்பது விளக்கப்படுகிறது. ஆறாவது வினையியலில் வினைச்சொற்கள் காலம் காட்டும் பாங்கும் ஐம்பால் மூவிடங்களில் ஈறுகள் கொள்ளும் பாங்கும் எச்சங்களாகத் திரியும் பாங்கும் விளக்கப்படுகின்றன. ஏழாவது இடையியலில் பெயரையும் வினையையும் கூட்டுவிக்க இடையில் வந்தமையும் இடைச்சொற்கள் எடுத்துக்காட்டப்பட்டு விளக்கப்பட்டுள்ளன. எட்டாவது உரியியலில் பெயருக்கும், வினைக்கும் உரிமை பூண்ட உரிச்சொறகள் எடுத்துக் காட்டப்பட்டு அவை உணர்த்தும் பொருள்கள் இவை என்பதும் சொல்லப்படுகிறது. ஒன்பதாவது எச்சவியலில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என்னும் பாகுபாடுகளும், பெயரெச்சம், வினையெச்சம், சொல்லெச்சம் பிரிநிலையெச்சம், எதிர்மறை எச்சம், ஒழியிசை எச்சம், உம்மை எச்சம், என-என்னும் எச்சம் முதலானவை பற்றிய விளக்கங்களும், ஈ, தா, கொடு ஆகிய சொற்களின் சிறப்புப்பொருள்களும், இடக்கரடக்கல், குறைசொற்கிளவி பற்றிய விளக்கங்களும், காலமயக்கம், ஒருமை-பன்மை மயக்கம் பற்றிய பல்வகை மொழிக்கூறுகளும் விளக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையே நிரல்நிறை, சுண்ணம், அடிமறி-மாற்று, மொழிமாற்று ஆகிய செய்யுளின் பொருள்கோள் வகை புகுந்துள்ளது விந்தையே. மொத்தத்தில் சொல்லதிகாரம் மொழியின் வாக்கிய அமைப்பைக் (Syntax) கூறுகிறது எனலாம். பொருளதிகாரம் அகத்திணையியல் புறத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியல் பொருளதிகாரத்தில் சொல்லப்படும் செய்திகள் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று 3 அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. எழுத்ததிகாரமும், சொல்லதிகாரமும் தமிழ்மொழியின் இயல்பைக் கூறுகின்றன. பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. வாழ்வியல் நூல்கள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதையும் விளக்குகிறது. பொருளதிகாரத்தில் 9 இயல்கள் உள்ளன. முதலாவதாக உள்ள அகத்திணையியல், புறத்திணையியல் ஆகியவை முறையே அகத்திணைகள் ஏழையும், புறத்திணைகள் ஏழையும் விளக்குகின்றன. மூன்றாவதாக உள்ள களவியலும், நான்காவதாக உள்ள கற்பியலும் அகத்திணையின் உட்பகுப்பு விளக்கங்கள். ஐந்தாவதாக உள்ள பொருளியல் அகப்பாடல்களுக்குப் பொருள் காணும் முறைமையை விளக்குகிறது. ஆறாவதாக உள்ள மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும் புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகிறது. பெய்ப்பாடு என்பது உள்ளத்து உணர்வுகள் உடலில்(மெய்யில்) வெளிப்படுவது. ஏழாவதாக உள்ள உவம இயல் வாய்மொழியில் பொருளை வெளிப்படுத்தும் பாங்கை விளக்குகிறது. எட்டாவதாக உள்ள செய்யுளியல் அகச் செய்திகளையும் புறச் செய்திகளையும் பண்டைய பாடல்களும் நூல்களும் எவ்வாறு புலப்படுத்தின என்பதை விளக்குகிறது. ஒன்பதாவதாக உள்ள மரபியலில் உயிரினங்களின் பாகுபாடும் அவற்றின் இளமை, ஆண், பெண் பாகுபாட்டு வழக்குப் பெயர்களும் விளக்கப்படுகின்றன. அத்துடன் ஓரறிவு உயிர்களை மரம் என்றும், புல் என்றும் பாகுபடுத்தி அவற்றின் இலை, காய், பழம், முதலானவற்றிற்கு வழங்கப்படும் பெயர்களும் சுட்டப்படுகின்றன. நிலம், தீ, நீர், வளி, விசும்பு என்னும் வரிசையில் ஐந்து பூதப்பொருள்களும் சுட்டப்படுகின்றன. உயிரினங்களின் இளமை, ஆண், பெண் ஆகியவற்றை விளக்கிய பின்னர், ஓரறிவு உயிரினங்களை விளக்கியிருப்பதற்கு முன்னர், இடைப்பகுதியில், மக்களை அந்தணர், அரசர், வைசியன், வேளாண் மாந்தர் என்னும் பாகுபாடு, நிரல் மாறி உள்ளதால் இந்தப் பாகுபாட்டைப் பிற்கால இடைச்செருகல் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். மேலும் மரபியலுக்குப் புறனடையாக அமைந்துள்ள நூற்பாக்களுக்குப் பின்னர் ஓர் இணைப்பைப் போல் நூல், உரை, உத்தி பற்றிய பாகுபாடுகள் பிற்காலத்து 13-ஆம் நூற்றாண்டு நன்னூலார் பாங்கில் அமைந்துள்ளன. மொத்தத்தில் பொருளதிகாரம் தமிழ்மக்களின் வாழ்வியலையும் தமிழ்ப் பாடல்களின் அமைதியையும் விளக்குகிறது எனலாம். இலக்கணம் - சொல்விளக்கம் தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இதனை இலக்கணம் - சொல்விளக்கம் என்னும் பகுதியில் காணலாம். தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர்கள் தொல்காப்பிய ஆறு பண்டை உரையாசிரியர்கள் இளம்பூரணர்-எழுத்து, சொல், பொருளதிகாரத்திற்கு பேராசிரியர்- சேனாவரையர்- சொல்லதிகாரத்திற்கு நச்சினார்க்கினியர் தெய்வச்சிலையார் கல்லாடனார் தொல்காப்பியம் - ஆங்கில மொழிபெயர்ப்பு சுப்பிரமணிய சாத்திரி, இலக்குவனார், முருகன் ஆகியோர் மொழிபெயர்ப்பின் வழி செய்யப்பட்டுள்ளது. தொல்காப்பியம் சிறப்புப்பற்றிய பேராசிரியர்களின் கருத்து 1. தொல்காப்பியம் தமிழர்களின் உயிர் நூல் எனக் கூறுவார் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். செய்தித் தொகுப்புக் கட்டுரைகள் அகத்திணையில் உரையாடுவோர் (அகத்திணை மாந்தர்) (அகத்திணைப் பாத்திரங்கள்) அகத்திணை வாயில்கள் (அகத்திணைத் தூதர்கள்) தொல்காப்பியத்தில் விலங்கினம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தொல்காப்பியம்.pdf தொல்காப்பியம் பகுதிகள் தொல்காப்பியரின் இலக்கிய கோட்பாடு - ஆய்வுக் கட்டுரை (1996) தொல்காப்பியத்தின் சமகால முக்கியத்துவம் தொல்காப்பியம் இணைய வகுப்பு * பகுப்பு:தமிழ் இலக்கண நூல்கள்
நோபல் பரிசு
https://ta.wikipedia.org/wiki/நோபல்_பரிசு
நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர். வரலாறு thumb|upright|தான் இறந்ததாக "மரணத்தின் வியாபாரி இறப்பு" என்ற தலைப்பில் வெளிவந்த செய்தி ஆல்ஃபிரட் நோபலைத் துணுக்குறச் செய்தது. ஆல்ஃபிரட் நோபல் ( 1833, அக்டோபர் 21 அன்று சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார். அவரது குடும்பம் ஒரு பொறியியலாளர் குடும்பமாகும். இவரது வாழ்நாளில் வேதியாளராயும் பொறியாளராயும் கண்டுபிடிப்பாளராயும் விளங்கினார். 1894-ஆம் ஆண்டு போஃபர்சு இரும்பு மற்றும் எஃகு ஆலையை நோபல் வாங்கினார். அதனை பெரும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றினார். பலவித புகையற்ற ராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்-கை இவர்தான் கண்டுபிடித்தார். இதுவே பிரித்தானியத் தயாரிப்பான புகையற்ற வெடிபொருளான கார்டைட்-டுக்கும் முன்னோடியாகும். அதைச் சார்ந்து ஒரு பதிப்புரிமை வழக்கும் நோபலால் தொடரப்பட்டிருந்தது. நோபல் தன் வாழ்நாளில் மிகப்பெருமளவில் செல்வம் சேர்த்தார். அவரது வருமானத்தில் பெரும்பகுதி அவரது 355 கண்டுபிடிப்புகளால் கிடைத்தது, அவற்றுள் முக்கியமானது டைனமைட் ஆகும்.. 1888-ல் ஒரு பிரெஞ்சு செய்தித்தாளில் "மரணத்தின் வியாபாரி இறப்பு" என்ற தனது இறப்புச் செய்தி கண்டு அதிர்ந்தார். ஆனால் அப்போது இறந்தவர் ஆல்ஃபிரடின் சகோதரரான லுட்விக் ஆவார். ஆனால் அச்செய்தி நோபலை துணுக்குறச் செய்தது, தான் இறந்தபிறகு எவ்வாறு நினைவில் வைக்கப்படுவோம் என்று தீவிரமான சிந்தனைக்கு ஆளானார். இதுவே அவரை தன்னுடைய உயிலை மாற்றி எழுதச் செய்தது.. 63 வயதான போது திசம்பர் 10,1895 அன்று இத்தாலியின் சான் ரெமோ மாளிகையில் ஆல்ஃபிரட் நோபல் காலமானார். அனைவரும் பெருத்த வியப்புக்கு உள்ளாகும் வகையில் நோபலின் கடைசி உயிலில், தனது சொத்தின் பெரும்பகுதி 'மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு' பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்க பயன்படுத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். நோபல் தன் வாழ்நாளில் பல உயில்களை எழுதியிருந்தார். அவரது கடைசி உயில் நவம்பர் 27, 1895 அன்று பாரிசிலிருந்த சுவீடன்-நார்வே மன்றத்தில் எழுதப்பட்டு அவரால் கையொப்பமிடப்பட்டிருந்தது. தனது சொத்தில் 94%-தினை, 31 மில்லியன் சுவீடன் குரோனார்(2008 மதிப்பின்படி 150 மில்லியன் யூரோ, 186 அமெரிக்க டாலர்கள்), ஐந்து நோபல் பரிசுகளை வழங்குவதற்காக எழுதி வைத்தார்.. அவரது உயிலின் மீதிருந்த ஐயங்களால் ஏப்ரல் 26, 1897 அன்றுதான் நார்வேயின் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. நோபலின் உயிலை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களால், ராக்னார் சோல்மான் மற்றும் ருடோல்ஃப் லியெக்விஸ்ட், அவரது சொத்தை பரமாரிக்கவும் பரிசுகள் வழங்குதலை ஒழுங்குபடுத்த/முறைப்படுத்தவும் "நோபல் அறக்கட்டளை" அமைக்கப்பெற்றது. நோபலின் குறிப்புகளின்படி, அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நார்வே நோபல் குழு அமைக்கப்பெற்றது, அதன் உறுப்பினர்கள் உயில் அங்கீகரிக்கப்பட்ட சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர், ஏனைய பரிசுகளை வழங்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை கரோலின்சுகா நிறுவனம் (சூன் 7), சுவீடன் சங்கம் (சூன் 9), ராஜாங்க சுவீடன் அறிவியற் கழகம் (சூன் 11). எவ்வாறு பரிசுகள் வழங்கப்படவேண்டுமென்ற விதிமுறைகள் நோபல் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப்பட்டபின், மன்னர் ஆஸ்கர் II -வினால் 1900-ல் பிரகடனப்படுத்தப்பட்டன. 1905-ஆம் ஆண்டு நார்வேயும் சுவீடனும் பிரிந்தன. அதன் பின்னர், அமைதிக்கான நோபல் பரிசை அளிப்பதன் பொறுப்பு நார்வேயின் வசமும் மற்ற பரிசுகளை வழங்கும் பொறுப்பு சுவீடனிலிருக்கும் அமைப்புகளின் வசமும் உள்ளது. நோபல் அறக்கட்டளை thumb|left|alt=A paper with stylish handwriting on it with the title "Testament"|Alfred Nobel's will stated that 94% of his total assets should be used to establish the Nobel Prizes. நோபல் பரிசுகளின் நிதி மூலங்களையும் அதன் நிர்வாகத்தையும் கவனிக்க சூன் 29, 1900 அன்று "நோபல் அறக்கட்டளை" ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கபபட்டது. நோபெலின் உயிலின்படி, அறக்கட்டளையின் முதற்கடமை நோபெல் விட்டுச்சென்ற சொத்தினை பாதுகாப்பதாகும். சகோதரர்கள் ராபர்ட் மற்றும் லுட்விக் நோபெல் அசர்பெய்ஜானிலிருந்த எண்ணெய் நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்திருந்தனர். சுவீடன் நாட்டு வரலாற்றாசிரியரான இ. பார்கென்கிரன், நோபெல் குடும்ப வரலாற்றுத் தொகுப்புகளை நேரில் பார்வையிட்டவர், அவரின் கூற்றுப்படி பாகு-விலிருந்து நோபெலின் முதலீடுகளை திரும்பப் பெற்றதே பரிசுகளை வழங்க ஆரம்பத்தில் மிக்க உறுதுணையாயிருந்தது. நோபெல் அறக்கட்டளையின் மற்றொரு பணி, பரிசுகளை உலக அளவில் கொண்டு சேர்ப்பதும் பரிசு வழங்கல் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதுமாகும். அறக்கட்டளை பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த பங்கும் எடுப்பதில்லை. பல வகைகளில் இந்த அறக்கட்டளை ஒரு முதலீட்டுக் குழுமமாகவே செயல்படுகிறது, நோபெலின் சொத்தை முதலீடாகக் கொண்டு பரிசு வழங்கவும் அதன் நிர்வாகத்துக்குமான நிதியை அது உற்பத்தி செய்கிறது. 1946-லிருந்து சுவீடனில் அனைத்து வித வரிகளிலிருந்தும் நோபெல் அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 1953-லிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும் அனைத்து வித வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. 1980-களிலிருந்து இதன் முதலீடுகள் பெரும் லாபமீட்டிவருகின்றன. திசம்பர் 31, 2007-படி நோபெல் அறக்கட்டளையின் சொத்து மதிப்பு 3.628 பில்லியன் சுவீடன் குரோனார்கள் (560 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும். விதிகளின்படி, அறக்கட்டளையானது ஸ்டாக்ஹோமைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும். மேலும், சுவீடன் அல்லது நார்வே நாட்டின் குடிமக்கள் ஐவர் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இருப்பர். அறக்கட்டளையின் தலைவர், மன்னருக்கான ஆலோசனைக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார். மற்ற நான்கு உறுப்பினர்களும் நோபல் பரிசுகளுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் அமைப்புகளின் அறங்காவலர்களால் தேர்ந்தெடுக்ககப்படுவர். அறக்கட்டளை உறுப்பினர்களிடையே அதன் செயற்குழு இயக்குனரும், ஒரு துணை இயக்குனர் மன்னருக்கான ஆலோசனைக் குழுவாலும், மேலும் இரு இணை இயக்குனர்கள் அமைப்புகளின் அறங்காவலர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவர். எனினும், 1995-லிருந்து அனைத்து உறுப்பினர்களும் நோபல் பரிசு அமைப்புகளின் அறங்காவலர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இயக்குனர் மற்றும் துணை இயக்குனரும் அறக்கட்டளை உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் தவிர்த்து, நோபல் அறக்கட்டளையானது அனைத்து பரிசு வழங்கும் அமைப்புகள்(சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகம், கரோலின்சுகா நிறுவனம், சுவீடன் கழகம், நார்வே நோபெல் கழகம்), அவற்றின் அறங்காவலர்கள் மற்றும் தணிக்கையாளர்களை உள்ளடக்கியது. முதல்முறை வழங்கப்பட்ட பரிசுகள் thumb|upright|right|alt=A black and white photo of a bearded man in his fifties sitting in a chair. |வில்கேல்ம் கான்ராட் ரோங்க்டேன் x கதிர்களைக் கண்டுபிடித்ததற்காக பௌதீகத்துக்கான முதல் நோபல் பரிசை வென்றவர் நோபல் அறக்கட்டளை நிறுவப்பட்டு அதன் விதிமுறைகளும் வகுக்கப்பட்ட பின்னர், நோபல் கழகங்கள் பரிசுகளுக்கான முதல் முறை வழங்கப்படப்போகும் முன்மொழிவுகளைத் தயார் செய்தன. அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பட்டியல்கள் பரிசு வழங்கும் கழகங்களுக்கு அனுப்பப்பட்டன. பரிசுகளின் நம்பகத்தன்மையைக் கூட்டும் வகையில், நார்வே நோபல் கழகம் புகழ்பெற்ற யார்கன் லொவ்லான்ட், யார்ன்ஸ்ட்யெர்ன் யார்ன்சன் மற்றும் யொகானசு ஸ்டீன் ஆகியோரை பரிசு வழங்கும் குழுவில் நார்வே நோபல் கழகம் நியமித்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளர்ந்துவந்த அமைதி இயக்கங்களிலிருந்த புகழ்பெற்ற இருவருக்கு பரிசு வழங்குவதற்கு நோபல் கழகம் முடிவு செய்தது: ஃபிரடெரிக் பாசி (உலக நாடுகளின் கூட்டமைப்பின் துணை நிறுவனர்) மற்றும் யென்றி டூனான்ட் (உலகளாவிய செஞ்சிலுவைக் கழக நிறுவனர்).. இயற்பியலில் நோபல் பரிசுக்கு தகுதியுடையவர்களாக நோபல் கழகம் இருவரைத் தேர்ந்தெடுத்தது: எக்ஸ்- கதிர்களைக் கண்டுபிடித்த வில்யெம் கொன்றாடு ரான்ட்ஜன் மற்றும் கேதோடு கதிர்களைக் கண்டறிந்தவரான பிலிப் லெனார்டு. சுவீடன் அறிவியற் கழகம் ரான்ட்ஜனை பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுத்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் பல வேதியியலாளர்கள் முக்கியமான கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் செய்திருந்தனர். ஆகையால் பரிசு வழங்கப்பட வேண்டும் எனும்படியான வகையில் தகுதிப்பட்டியலை தயாரிக்கவே பரிசு வழங்கும் கழகம் தள்ளப்பட்டது. இத்துறையில் 20 முன்மொழிவுகள் வைக்கப்பட்டன. அவற்றுள் 11 யாகோபசு வான் கா-வுக்கானவை. முடிவில் யாகோபசு வான் கா-வுக்கு வேதியியல்-வெப்ப இயக்கவியலில் அவரின் பங்களிப்புக்கு நோபல் பரிசு தரப்பட்டது.. முதல் நோபல் இலக்கியப்பரிசுக்கு சல்லி புருதோமை, சுவீடன் கழகம் தேர்ந்தெடுத்தது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த 42 எழுத்தாளர்கள், கவிஞர்கள் இதனை எதிர்த்துப் போராடி தமது அதிருப்தியைத் தெரிவித்தனர், அவர்கள் லியோ டால்ஸ்டாய்தான் வெல்லுவார், அவரே பரிசுக்கு மிகச் சரியானவர் என எண்ணினர். சிலர், பர்டன் பெல்டுமான் உட்பட, சல்லி புருதோம் ஒரு சாதாரண கவிதான் என்ற எண்ணங்கொண்டிருந்தனர். பர்டன் பெல்டுமான், பரிசு வழங்கும் கழகத்தினர் விக்டோரிய இலக்கிய ஆவலர்கள் போலும், ஆதலால் தான் விக்டோரிய கவிக்கு பரிசு கொடுத்திருக்கின்றனர், என்று குற்றஞ்சாட்டினார். மருத்துவத்துவத்துக்கான நோபல் பரிசு யெர்மானிய உடலியங்கியல் மற்றும் நுண்ணியிரியியலாளரான எரிக் வான் பெரிங்-குக்கு வழங்கப்பட்டது. 1890-களில் எரிக் வான் பெரிங் டிப்தீரியாவுக்கான நஞ்செதிரியைக் கண்டறிந்தார், அதுநாள் வரையிலும் டிப்தீரியாவால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். இரண்டாம் உலகப்போர் 1938 மற்றும் 1939-ல் அடால்ஃப் ஹிட்லர்-இன் மூன்றாம் செல்வம், நோபல் பரிசு வென்ற மூவரை (ரிச்சர்டு குன், அடால்ஃப் பிரைட்ரிச் யொகான் பியூட்டெனான்ட் மற்றும் யெர்கார்டு டொமாக்) பரிசினைப் பெற்றுக்கொள்ள விடவில்லை.. ஆனால், ஒவ்வொருவரும் பின்னர் அவர்களது பட்டயத்தையும் பரிசினையும் பெற்றுக்கொண்டனர். சுவீடன் இரண்டாம் உலகப் போரின்போது நடுவுநிலைமையை வகித்தாலும் நோபல் பரிசுகள் இடைவெளிவிட்டு விட்டு கொடுக்கப்பட்டன. 1939-ல் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் தரப்படவில்லை. 1940-42 காலகட்டத்தில், நார்வே யெர்மனியால் கைப்பற்றப்பட்டிருந்தது, எந்த துறையிலும் பரிசு வழங்கப்படவில்லை. அதற்கடுத்த ஆண்டு அமைதி மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளைத் தவிர ஏனையவை தரப்பட்டன. நார்வே கைப்பற்றப்பட்ட பின்னர் மூன்று நோபெல் அறக்கட்டளை உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடினர். ஆசுலோவிலிருந்த நோபல் கழக மாளிகை சுவீடன் நாட்டு சொத்து என்று நோபல் கழகம் அறிக்கை விட்டதன் காரணத்தால் அங்கிருந்த மற்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் நாசிக்களின் நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பர். ஆதலால் அக்கழக மாளிகை யெர்மானிய ராணுவத்திடமிருந்து தப்ப ஒரு புகலிடமாக இருந்தது, ஏனெனில் யெர்மனியுடன் சுவீடன் போரில் ஈடுபடவில்லை. அங்கிருந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் நோபெல் கழகத்தின் வேலைகளை தொடர்ந்து கவனித்து வந்தாலும் பரிசுகள் எதுவும் வழங்கப்படவில்லை. 1944-ல் நோபல் அறக்கட்டளை, வெளிநாட்டுக்குத் தப்பிய மூன்று உறுப்பினர்களும் சேர்த்து, முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன, அமைதிக்கான நோபல் பரிசு எப்போதும் போல இனி வழங்கப்படுமென அறிவித்தனர். பொருளாதார அறிவியலுக்கான பரிசு 1968-ஆம் ஆண்டு சுவீடன் நடுவண் வங்கியானது தனது 300-வது வருட கொண்டாட்டத்தின்போது, ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து நோபலின் பெயரில் ஒரு பரிசினை ஏற்படுத்த வைத்தது. அதற்கடுத்த வருடம் நோபல் நினைவு பொருளாதார அறிவியல் பரிசு வழங்கப்பட்டது. பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகத்தின் பொறுப்பில் விடப்பட்டது. முதல் பொருளாதாரத்துக்கான பரிசினைப் பெற்றவர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் ஃபிரிச் ஆவர். அவர்கள் "பொருளாதார செயற்பாடுகளுக்கான இயங்கு படிமங்களை உருவாக்கி அதை வெற்றிகரமாக செயற்படுத்தியும் உள்ளனர்" என்பது நோபல் குழுவின் குறிப்பு. ஒரு நோபெல் பரிசாக இல்லாவிட்டாலும் இது ஏனைய நோபெல் பரிசுகளோடே அடையாளப்படுத்தப்படுகிறது. பரிசுக்குரியவர்களும் மற்ற நோபெல் பரிசுக்குரியவர்கள் அறிவிக்கப்படும்போதே அறிவிக்கப்படுகிறார்கள். பொருளாதார அறிவியலின் பரிசு சுவீடனின் நோபல் பரிசு வழங்கும் விழாவிலேயே வழங்கப்படுகிறது. இந்த பரிசினை சேர்த்த பின்னர், நோபல் அறக்கட்டளைக் குழு கூடி விவாதித்து இனி ஏதும் புதிய பரிசுகளை வழங்குவதில்லையென முடிவெடுத்தது. விருது வழங்கும் முறை விருது வழங்கும் முறை அனைத்து நோபல் பரிசுகளுக்கும் ஒத்ததாக உள்ளது; முக்கிய வேறுபாடு என்னவென்றால் யார் அவர்களை ஒவ்வொருவராக பரிந்துரை செய்வது என்பதாகும். பரிந்துரைகள் 3000 தனிநபர்களுக்கு பற்றிய பரிந்துரையை வடிவங்கள் நோபல் கமிட்டி மூலம் அனுப்பப்படுகின்றன, பொதுவாக செப்டம்பர் மாதம் பரிசுகள் வழங்கப்படுவதற்கு ஒரு ஆண்டின் முன்னதாகவே அனுப்பப்படும். அமைதிக்கான நோபல் பரிசுக்கான விசாரணை, அரசாங்கங்கள், சர்வதேச நீதிமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி தலைவர்கள், முன்னாள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் நார்வே நோபல் கமிட்டியின் தற்போதைய அல்லது முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பப்படுகின்றன. பரிந்துரையை வடிவங்கள் திரும்பி வருவதற்கான காலக்கெடு விருது ஆண்டின் ஜனவரி 31 ஆக உள்ளது. நோபல் பரிசு குழு, இந்த வடிவங்கள் மற்றும் கூடுதல் பெயர்களில் இருந்து சுமார் 300 திறன் பெற்றவர்களை பரிந்துரைக்கும். தேர்வு நோபல் பரிசு குழு, பின்னர் தொடர்புடைய துறைகளில் நிபுணர்களின் ஆலோசனை பிரதிபலிக்கும் ஒரு அறிக்கை உருவாக்குகிறது. இது, ஆரம்ப வேட்பாளர்கள் பட்டியலை சேர்த்து, பரிசு வழங்கும் நிறுவனங்களில் சமர்ப்பிக்கப்படும். இது, ஒரு பெரும்பான்மை வாக்குகளை ஒவ்வொரு துறையில் பரிசு பெற்றவர்களின் தேர்வைச் சந்திக்கின்றது. அதிகபட்சமாக மூன்று பரிசு பெற்றவர்கள் மற்றும் இரண்டு வெவ்வேறு படைப்புகள் உடையவர்கள் ஒவ்வொரு விருதுக்கான தேர்வாக இருக்கலாம். நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கூடிய அமைதி பரிசு தவிர, விருதுகளை தனி நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லையெனில், அதற்கான பணத்தை அறிவியல் சார்ந்த பரிசுகளுக்கு இடையே பிரித்து தரப்படும். இதுபோல இதுவரை 19 முறை நடந்துள்ளது. விருது வழங்கும் விழா வருடந்தோறும் நோபெல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபெல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபெல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன. பரிசு பெறுவோரின் சொற்பொழிவு, இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடை பெறுவது வழக்கம். அதே டிசம்பர் பத்தாம் நாள், நோர்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கும் விழா மற்றும் பரிசு பெறுவோரின் சொற்பொழிவும் நடைபெறும். ஆல்ஃபிரட் நோபெல் உயில் எழுதும் சமயத்தில் நோர்வேவும் சுவிடனும் ஒரே கூட்டுப்பிரதேசமாக இருந்ததால், நோர்வேயில் அமைதிக்கான பரிசும், சுவிடனில் மற்ற பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியும், இதனையொட்டி நடைபெறும் விழாக்களும், சமீப காலமாக உலகளாவிய நிகழ்ச்சியாக விளங்குகின்றன. நோபல் பரிசும் தமிழரும் நோபல் பரிசினை இதுவரை மூன்று தமிழர் பெற்றுள்ளனர். இந்தப் பெருமைக்குரியோர் ச. வெ. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) ஆவர். இவற்றையும் பார்க்கவும் நோபல் பரிசு சர்ச்சைகள் நோபெல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் அமைதிக்கான நோபெல் பரிசு இயற்பியல் நோபல் பரிசு பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு விக்கிமுலம்:இயற்பியலுக்கான நோபெல் பரிசு விரிவுரைகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் நோபெல் மின்-அருங்காட்சியகம் — அதிகாரப்பூர்வ தளம் The Nobel Committees of the Royal Swedish Academy of Sciences The Nobel Committee of the Karolinska Institute The Swedish Academy The Norwegian Nobel Committee The Nobel Prize Internet Archive — an unofficial site நோபெல் பரிசு பெற்றவர்கள்-கால வரிசைப்படி The Nobel Prize Countries Ranked by Population to Nobel Prize Ratio Nobel prizewinner dies before announcement நோபல் பரிசு வரலாறு - காணொளி பகுப்பு:நோபெல் பரிசு பகுப்பு:பரிசுகளும் விருதுகளும்
பல்லவர் காலக் கட்டடக்கலை
https://ta.wikipedia.org/wiki/பல்லவர்_காலக்_கட்டடக்கலை
தென்னிந்தியக் கட்டிடக்கலையில் ஒரு திருப்புமுனையாக அமைந்து அதன் வளர்ச்சியில் ஆகக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியது பல்லவர் காலமே எனில் அது மிகையல்ல. இப்பகுதியில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டளவில் ஆரம்பித்து வளர்ச்சியடைந்த திராவிடக் கட்டிடக்கலையின் ஆரம்பம் இந்தக் காலமே. பின்னணி பல்லவ வம்சத்தினர் தமிழகத்தின் வடபகுதியில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சியிலிருந்து வந்தாலும், கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரையான 3 நூற்றாண்டுக் காலமே காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு ஒரு வலுவுள்ள அரசை நிறுவியிருந்தனர். இவர்கள் தமிழர் அல்ல என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படினும், இவர்கள் பூர்வீகம் பற்றியோ, தமிழ் நாட்டுக்கு இவர்கள் வந்து சேர்ந்த விதம் பற்றியோ சரியான தகவல்கள் இல்லை. பல்லவர்கள் காலத்தை முற்காலப் பல்லவர் காலம், இடைக் காலப் பல்லவர் காலம், பிற்காலப் பல்லவர் காலம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது உண்டு. கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மகேந்திரவர்மனின் ஆட்சியுடன் பிற்காலப் பல்லவர் காலம் ஆரம்பமானது. பல்லவர்களின் பொற்காலத்தின் ஆரம்பமும் அதுவே. பிற்காலப் பல்லவர்கள் காலத்திலேயே தமிழ் நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியும், சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை முதலிய கலை வளர்ச்சியும் உச்ச நிலையடைந்தன. மகேந்திர பல்லவனுடன் துவங்கிய பிற்காலப் பல்லவ மன்னர் வரிசையிலே, மாமல்லன் எனப்பட்ட முதலாம் நரசிம்மன், இராஜசிம்மன் எனப்பட்ட இரண்டாம் நரசிம்மன், நந்திவர்மன் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். பல்லவர் கட்டிடக்கலையின் பல்வேறு கட்டங்கள் பல்லவர் கட்டிடக்கலையை இரண்டு கட்டங்களாகப் பிரிப்பதுண்டு. முதல் கட்டம் சுமார் கி.பி. 610 தொடக்கம் கி.பி. 690 வரையான காலமாகும். இக்கட்டத்தில் அமைக்கப்பட்டவை அனைத்துமே குடைவரை கோயில்கள் ஆகும். இரண்டாம் கட்டமான கி.பி. 690 இலிருந்து கி.பி. 900 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டவை அனைத்தும் கட்டுமானக் (Structural) கட்டிடங்களாகும். இவற்றுள் முதல் கட்டத்தில் கட்டப்பட்டவை மகேந்திரன் கட்டிடங்கள், மாமல்லன் கட்டிடங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் பிரிவில் தூண்கள் அமைந்த மண்டபங்கள் மட்டுமே அடங்குகின்றன. இரண்டாம் பிரிவில் மண்டபங்களுடன் இரதங்கள் எனப்படும் ஒற்றைக்கல் கோயில்களும் அடக்கம். இரண்டாம் கட்டமும், நரசிம்மன் கட்டிடங்கள், நந்திவர்மன் கட்டிடங்கள் என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இவ்விரண்டிலும் அடங்குபவை கட்டுமானக் கோயில்களாகும். தமிழ் நாட்டுக் கட்டிடக்கலை வளர்ச்சியில் பல்லவர்களின் பங்களிப்பு பழங்காலத்தில் தமிழ் நாட்டில் கட்டிடங்கள் அழியக்கூடிய கட்டிடப்பொருட்களான மரம், சுதை மற்றும் செங்கல்களினால் அமைக்கப்பட்டதாகப் பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. வடக்கு மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் அசோகப் பேரரசன் காலம் முதலும் பின்னர் ஆந்திரப் பகுதிகளிலும் பயன்பாட்டிலிருந்து வந்த பெரிய பாறைகளைக் குடைந்து குடைவரைகளை அமைக்கும் முறை தமிழ் நாட்டில் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதற்குப் பல பண்பாட்டு, பொருளாதார மற்றும் தொழில் நுட்பக் காரணிகளை ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். ஆறாம் நூற்றாண்டளவில் தென் தமிழ் நாட்டில் பாண்டியர்களினால் குடைவரைகள் அறிமுகப் படுத்தப்பட்டதாகக் கருதப்படினும், தமிழ் நாட்டில், தேவையான சூழலும், வளங்களும், அரசியல் ஆதரவும் அளித்து இதன் வளர்ச்சிக்குப் பெருமளவு ஊக்கம் கொடுத்த பெருமை பல்லவர்களையே சாரும். தமிழ் நாட்டுக்கு வடக்கே ஏற்கனவே முகம் காட்டத் தொடங்கியிருந்த திராவிடக் கட்டிடக்கலை என இன்று குறிக்கப்படும் புதிய தென்னிந்தியக் கட்டிடக் கலைப் பாணிக்குத் தமிழ் நாட்டில் உரமளித்து, இந்தியாவின் முக்கியமான கட்டிடக் கலைப் பாணிகளில் ஒன்றாக வளர்வதற்கு அடித்தளமிட்டதும் பல்லவர் காலமேயாகும். பல்லவர் கட்டிடக்கலையின் சிறப்பம்சங்கள் பல்லவர்களால் கட்டப்பட்ட மாமல்லபுர மரபுக்கோயில்கள், யுனெசுக்கோ அமைப்பால் உலக பாரம்பரிய களமாக அறிவித்துள்ளதை அடுத்து பல்லவர் கட்டிடக்கலை சிறப்பினை அறியலாம். முக்கியமான பல்லவர் கட்டிடங்கள் குடைவரைகள் பல்லவர்கள் அமைத்த குடைவரைகள் தமிழ் நாட்டில், மண்டகப்பட்டு, பல்லாவரம், மாமண்டூர், குரங்கணில் முட்டம், வல்லம், மகேந்திரவாடி, தளவானூர், திருச்சிராப்பள்ளி, சீயமங்கலம், விளாப்பாக்கம், அரகண்டநல்லூர், திருக்கழுக்குன்றம், சிங்கப்பெருமாள் கோயில், சிங்கவரம், மேலச்சேரி, சாழுவன் குப்பம், கீழ்மாவிலங்கை, மாமல்லபுரம், ஆவூர், திரைக்கோயில், புதூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. கற்றளிகள் அல்லது ஒற்றைக்கல் கோயில்கள் பஞ்சபாண்டவர் ரதங்கள் - மாமல்லபுரம் கட்டுமானக் கோயில்கள் கடற்கரைக் கோயில்கள், மாமல்லபுரம் கைலாசநாதர் கோயில், காஞ்சிபுரம் வைகுந்தப்பெருமாள் கோயில், காஞ்சிபுரம் இலங்கை கட்டிடக்கலையில் பல்லவர்களின் தாக்கம் தம்புள்ளையில் அமைந்துள்ள நாலந்த சிலை மண்டபம் இலங்கை கட்டிடக்கலையில் பல்லவ கட்டிடக்கலையை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றையும் பார்க்கவும் திராவிடக் கட்டிடக்கலை சோழர் காலக் கட்டிடக்கலை பாண்டியர் காலக் கட்டிடக்கலை விஜயநகரக் கட்டிடக்கலை நாயக்கர் காலக் கட்டிடக்கலை வெளியிணைப்புகள் பகுப்பு:கட்டிடக்கலை வரலாறு பகுப்பு:திராவிடக் கட்டிடக்கலை பகுப்பு:இந்துக் கோயில் கட்டிடக்கலை
திருநெல்வேலி
https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலி
திருநெல்வேலி அல்லது நெல்லை (, Tirunelveli), என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். இவ்வூர் அல்வாவிற்கு பெயர் பெற்றது. திருநெல்வேலி மாநகரம், தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகச் சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.நெல்லையப்பர் (செப்பறை நடராஜர்) திருக்கோயில் தினமலர் பெயர் விளக்கம் 16 ஆம் நூற்றாண்டு நூல் வேணுவனப் புராணம் திருநெல்வேலிக்கு 'வேணுவனம்' என்று பெயர் சூட்டிப்படுகிறது. 'வேணு' என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். பண்டைக் காலத்தில் மூங்கில் காடாக விளங்கிய இந்த ஊர், மூங்கில்-நெல்லால் பசியைப் போக்கிய காரணத்தால், இந்த ஊரை 'நெல்வேலி' எனப் பெயரிட்டு வழங்கியிருக்கிறார்கள். இது தவறானது அந்தணர் ஒருவர் நெல்லையப்பர் சுவாமிக்கு சமைத்து படைப்பதற்காக நெல்லை வெய்யிலில் காய வைத்து விட்டு சென்றிருக்க மழை பொழிய ஆரம்பித்து விட்டது. பயந்தோடி வேகமாக வந்தவர் வியந்து போனார். இறைவன் அருளால் நெல்லைச் சுற்றி மழை பொழியாமல் வேலியிட்டார் போல காணப்பட்டது. இவ்வாறு இறைவன் நெல்லுக்கு வேலியிட்டதால் திரு என்னும் அடைமொழியுடன் திருநெல்வேலி ஆனது. இந்த விளக்கத்தை நெல்லையப்பர் சுவாமி கோவிலிலும் காணலாம். பெயர்க் காரணம் முன்னொரு காலத்தில் தீவிர சிவ பக்தரான வேதபட்டர் என்பவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். தமது வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டி ஒவ்வோர் ஊரிலும் அமைந்த சிவனை வழிபட்டு வந்தார். சிவன் அருளால் வேதபட்டருக்கு சகல செல்வங்களும் கிடைத்தன. வேணுவனம் (திருநெல்வேலி) வந்த வேதபட்டர் சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரைச் சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார். இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்குச் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லைக் காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார். அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காகக் காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே எனப் பதறியபடி கவலையுடன் அவர் கோயிலுக்கு ஓடி வந்தார். ஆனால் அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம், நெல்வேலி எனப் பெயர் பெற்றது. பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது. இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது. ஓர் ஏழை விவசாயி இறைவனுக்குப் படைக்க நெல்லைக் காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரெனப் பெய்ய, சிவன் (நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர் என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர். வரலாறு 250x250px|left|thumb|திருநெல்வேலியின் பெரும் கோவில்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் செதுக்கப்பட்ட தூண்|alt=granite column with sculpture showing a person with a bow திருநெல்வேலியின் வரலாற்றை இங்கு வந்திருந்த கிறித்தவப் பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் (1814–91) ஆய்வு செய்துள்ளார். திருநெல்வேலி பாண்டிய அரசர்களின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது; அவர்களின் முதன்மைத் தலைநகரமாக மதுரை இருந்தது. இங்கிருந்த பாண்டிய வம்சம் அனோ டொமினிக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன; அசோகர் (பொ.ஊ.மு. 304–232) காலக் கல்வெட்டுக்களிலும் மகாவம்சம், வராகமிகிரரின் பிரகத் சம்கிதை மற்றும் மெகஸ்தனிசின் (பொ.ஊ. 350–290) நூலிலும் இப்பேரரசு குறிக்கப்பட்டுள்ளது. இந்த இராச்சியம் பொ.ஊ. 1064இல் இராசேந்திர சோழன் காலத்தில் சோழர் ஆட்சியின் கீழ் வந்தது. 13ஆவது நூற்றாண்டு வரை சோழரின் ஆட்சியிலிருந்த திருநெல்வேலி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பிற்காலப் பாண்டியரின் கீழ் வந்தது. பொ.ஊ. 13ஆவது, 14ஆவது நூற்றாண்டுகளில் நெல்லையப்பர் கோவில் பாண்டியர்களின் அரசக் கோவிலாக விளங்கியது. அரச ஆதரவினால் அக்காலத்தில் பல அணைகள் கட்டப்பட்டன. குலசேகரப் பாண்டியனின் (1268–1308) மரணத்திற்குப் பிறகு, 16ஆவது நூற்றாண்டில் விசயநகர மன்னர்களும் (பாளையக்காரர்கள்) ஆட்சி புரிந்தனர். தெலுங்கு, கன்னடர்கள் கிழக்கத்திய கரிசல் மண் பிரதேசத்திலும் குடியேறினர். திருநெல்வேலி மதுரை நாயக்கர்களின் இரண்டாம் தலைநகரமாக இருந்தது; விசுவநாத நாயக்கர் (1529–64) காலத்தில் 1560இல் திருநெல்வேலி மீளமைக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவிலில் உள்ள கற்றளிகளில் இவரது தாராளமான நன்கொடை பதியப்பட்டுள்ளது. 1736இல் நாயக்கராட்சி முடிவுக்கு வந்தது; 18ஆம் நூற்றாண்டின் மையக்காலத்தில் இப்பகுதியை சந்தா சாகிப் (1740–1754), ஆற்காடு நவாப் மற்றும் மருதநாயகம் (1725–1764) கைப்பற்றினர். 1743இல் நிசாம்-உல்-முல்க், தக்காணப் பீடபூமியின் தளபதி, இப்பகுதியில் இருந்த மராத்தியர்களை விரட்டியடித்து, இப்பகுதி ஆற்காடு நவாப் ஆட்சியின் கீழ் வந்தது. இருப்பினும் அதிகாரம் நாயக்கர்களின் படைத்தளபதிகளாக இருந்த பாளையக்காரர்களிடம் இருந்தது. திருநெல்வேலி நாயக்கர் ஆட்சியிலும், நவாப் ஆட்சிக்காலத்திலும் முதன்மை வணிக நகரமாக விளங்கிய இந்நகரம் நெல்லைச் சீமை எனப்பட்டது; சீமை என்பதற்கு "வளர்ச்சியுற்ற வெளிநாட்டு நகரம்" எனப் பொருள் கொள்ளலாம். பாளையக்காரர்கள் மலைகளில் கோட்டைகள் கட்டிக்கொண்டு, தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு வந்தனர். 1755இல் பிரித்தானிய அரசு மேஜர் எரானையும் மகபுசு கானையும் அனுப்பி அமைதி ஏற்படுத்தினர். திருநெல்வேலி நகரம் மகபூசு கானுக்கு வழங்கப்பட்டது. பாளையக்காரர்கள் மகபூசு கானுடன் சண்டையிட்டனர். மகபூசுகானுக்கு உதவியாக கிழக்கிந்தியக் கம்பனி முகமது யூசபை அனுப்பியது. கான் ஆட்சியைக் கைபற்றிய பின்னர் 1763இல் எதிர்பாளராக மாறினார். இதனால் 1764இல் கான் தூக்கிலிடப்பட்டார். 1758இல் பிரித்தானிய துருப்புகள் தளபதி புல்லர்டன் தலைமையில் கட்டபொம்மனை வென்றனர். 1797இல் பானர்மேன் தலைமையிலான பிரித்தானியருக்கும் கட்டபொம்மன் தலைமையிலான பாளையக்காரர்களுக்கும் முதலாம் பாளையக்காரப் போர் மூண்டது. எட்டையபுரம் மன்னர் போன்ற சில பாளையக்காரர்கள் பிரித்தானியர்களுக்கு ஆதரவாயிருந்தனர். கட்டபொம்மன் தோற்கடிக்கப்பட்டு தனது பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டார். இரண்டாண்டுகள் கழித்து இரண்டாம் பாளையக்காரர் போர் நிகழ்ந்தது. மிகுந்த எதிர்ப்புக்கு பிறகு பிரித்தானியர் மீண்டும் வென்றனர். நவாபுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி கர்னாடிக் பகுதி பிரித்தானியர் ஆட்சி கீழ் வந்தது. 1801இல் நவாபிடமிருந்து திருநெல்வேலியைப் பெற்ற பிறகு பிரித்தானியர் இதனைத் திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரமாக்கினர். நிர்வாக, படைத்துறை தலைமையகங்கள் பாளையம்கோட்டையில் அமைந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு திருநெல்வேலி மாவட்டத் தலைநகரமாக விளங்கியது. 1986இல் தனியாக தூத்துக்குடி மாவட்டம் பிரிந்தது. தற்போதைய இந்திய அரசின் 100 நுண்சீர் நகரங்களில் ஒன்றாக திருநெல்வேலி அடையாளம் காணப்பட்டுள்ளது. புவியியல் இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 47 மீட்டர் (154 அடி) உயரத்தில் இருக்கின்றது. மக்கள் வகைப்பாடு இந்திய 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 4,73,637 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருநெல்வேலி மக்களின் சராசரிக் கல்வியறிவு 90.39% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.75%, பெண்களின் கல்வியறிவு 86.18% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. திருநெல்வேலி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 2011 இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் துவக்கநிலை மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 4,73,637 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 4,97,826 ஆகவும் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, திருநெல்வேலியில் இந்துக்கள் 69.00%, முஸ்லிம்கள் 20.02%, கிறிஸ்தவர்கள் 10.59%, சீக்கியர்கள் 0.01%, பௌத்தர்கள் 0.01%, சைனர்கள் 0.02%, 0.35% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர். இரட்டை நகரங்கள் திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் (TWIN CITY) என்றழைக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆறு ஆனது இவ்விரு நகரங்களுக்கிடையே ஓடுகின்றது. திருநெல்வேலி ஆனது ஆற்றின் மேற்குப் புறமும், பாளையங்கோட்டை கிழக்குப் புறமும் அமைந்துள்ளன. பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். போக்குவரத்து திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்|thumb|right|alt=தொடருந்து நிலையத்தின் நுழைவாயில் திருநெல்வேலி ஒரு விரிவான போக்குவரத்துப் பிணையத்தினைக் கொண்டுள்ளது; இது சாலை, இரயில் மற்றும் விமானம் மூலம் பிற முக்கிய நகரங்களோடு நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி சாலைகளை மொத்தம் பராமரிக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் முப்பது கிலோமீட்டர்கள் சாலையும், மாநில நெடுஞ்சாலைகள் துறை மூலம் இருபத்தி இரண்டு கிலோமீட்டர் சாலையும் பராமரிக்கப்படுகின்றன. 1844 ஆம் ஆண்டில் திருநெல்வேலி - பாளையங்கோட்டையை இணைக்கும் வகையில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கர்னல் ஹார்ஸ்லேவினால் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இன்று அது சுலோச்சன முதலியார் பாலம் என்றழைக்கப்டுகிறது. திருநெல்வேலி நகரம் தேசிய நெடுஞ்சாலை 7 மேல், மதுரைக்குத் தெற்கே தொலைவிலும் மற்றும் கன்னியாகுமரிக்கு வடக்கே தொலைவிலும் அமைந்துள்ளது,. தேசிய நெடுஞ்சாலை 7A, இது தேசிய நெடுஞ்சாலை 7-ன் ஒரு நீட்டிப்பு ஆகும்; இது தூத்துக்குடி துறைமுகத்தினை பாளையங்கோட்டையோடு இணைக்கிறது. திருநெல்வேலி நகரில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன. 2003 இல், மத்தியப் பேருந்து நிலையம் (புதிய பஸ் ஸ்டாண்ட்) வேய்ந்தான் குளத்தில் திறக்கப்பட்டது. இங்கிருந்து மற்றைய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆனது பெங்களூர், சென்னை, கன்னியாகுமாரி மற்றும் பிற நகரங்களுக்கு அதிதூரப் பேருந்து சேவையை இயக்குகிறது. மேலும் சந்திப்பு மற்றும் பாளைப் பேருந்து நிலையங்களிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி நகர மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்குப் பேருந்து சேவையை இயக்குகிறது. திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் இந்தியாவில் பழமையான இரயில் நிலையங்களில் ஒன்றாகும். செங்கோட்டை - திருநெல்வேலி தொடருந்து இணைப்பு 1903 ஆம் ஆண்டு முதல் திறக்கப்பட்டது; பின்பு கொல்லம் வரை இணைக்கப்பட்ட இது பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் மாகாணத்திற்கு மிக முக்கியமான வர்த்தகப் பாதையாக இருந்தது. திருநெல்வேலி நகரம் நான்கு திசைகளிலும் தொடருந்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. வடக்கே மதுரை, தெற்கே நாகர்கோயில், மேற்கே கொல்லம் செல்லும் தொடருந்து இணைப்பு தென்காசி, செங்கோட்டையுடனும், கிழக்கே திருச்செந்தூருடனும் இணைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலிருந்து தினமும் திருச்சிராப்பள்ளி, சென்னை, மதுரை, கன்னியாகுமரி, மும்பை, குருவாயூர், ஹவுரா, தில்லி மற்றும் திருவனந்தபுரம் ஊர்களுக்கு விரைவுப் பயணிகள் சேவைகள் உள்ளன. மேலும் மதுரை, திருச்செந்தூர், திருச்சி மற்றும் கொல்லம் தென்காசி பாசஞ்சர் சேவை உள்ளது. திருநெல்வேலியின் அருகில் உள்ள விமான நிலையம் தூத்துக்குடி வானூர்தி நிலையம் ஆகும்; இது திருநெல்வேலி நகரின் கிழக்குத் திசையில் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாகைகுளம் (Vaagaikulam) என்ற ஊரில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து சென்னைக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் (TRV) தொலைவில் உள்ளது. மற்றுமோர் அருகில் உள்ள சர்வதேச விமான நிலையம் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம், ஆகும். மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் மாநகராட்சி அதிகாரிகள் மாநகர முதல்வர்ஆணையர்தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்சட்டமன்ற உறுப்பினர்நயினார் நாகேந்திரன்மக்களவை உறுப்பினர்எஸ். ஞானதிரவியம் திருநெல்வேலி மாநகராட்சியானது திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். 2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக-வை)ச் சேர்ந்த எஸ். ஞானதிரவியம் வெற்றி பெற்றார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், இச்சட்டமன்றத் தொகுதியில், பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றார். கல்வி thumb|left|திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் கலையரங்கம்|alt=a building viewed amidst trees மாநில கீதமான "தமிழ்த் தாய் வாழ்த்தினைப்" பாடிய மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் பெயரில் இங்கு ஒரு பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அபிசேகப்பட்டியில் உள்ளது. பெரும்பாலான கிறித்தவப் பள்ளிகளும், கல்லூரிகளும் பாளையங்கோட்டையில் உள்ளன. திருநெல்வேலியில் 80 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 29 மேல்நிலைப் பள்ளிகளும், 12 உயர்நிலைப் பள்ளிகளும், 22 நடுநிலைப் பள்ளிகளும், 17 தொடக்கப் பள்ளிகளும் உள்ளன; திருநெல்வேலி மாநகராட்சி இவற்றில் 33 பள்ளிகளை நடத்துகின்றது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி, கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், மற்றும் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரி, திருநெல்வேலி ஆகிய தொழில்சார்ந்த கல்லூரிகள் தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்றன. செ. சேவியர் கல்லூரி, செ. ஜான்ஸ் கல்லூரி கிறித்தவ டயோசிசின் அமைப்பினரால் நடத்தப்படுகின்றன. மேலும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி (பாரதியார் இங்கு படித்தார்), சதுக்கத்துல்லா அப்பா கல்லூரி, சாரா டக்கர் கல்லூரி குறிப்பிடத்தகுந்தவை. இந்தியன் இன்ஸ்டிட்யுட் ஆப் ஜியோமெகனடிசம் (IIG) அதன் பிராந்திய நிறுவனமாக, 'the Equatorial Geophysical Research Laboratory'-ஐ நிறுவி, மண்ணியல், வளிமண்டல மற்றும் வானியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. திருநெல்வேலியில் மாவட்ட அறிவியல் மையம் உள்ளது. இது பெங்களூரிலுள்ள விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின், துணைப்பிரிவு ஆகும். இங்கு நிரந்தரக் காட்சியகங்ளும், அறிவியல் காட்சிகளும், ஊடாடும்(Interactive) மற்றும் சுய வழிகாட்டுதல் (self-guided) சுற்றுலாவும், சிறியகோளரங்கம் மற்றும் வானிலைக்கூர்நோக்கும் மையமும் உள்ளன. முக்கிய இடங்கள் நெல்லையில் பாயும் புகழ்பெற்ற தாமிரபரணி ஆறு அகத்தியமலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாபநாசத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பல்வேறு திரைப்படப்பிடிப்புகள் நடந்துள்ளன. பாபநாசத்தில், புகழ் பெற்ற அகத்தியர் அருவி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் புகழ் பெற்ற குற்றால அருவித்தொடர் உள்ளது. இந்தக் குற்றால அருவி நெல்லையிலிருந்து 50கி.மீ. தொலைவில் உள்ளது. தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இங்கு மெயின் அருவி, ஐந்தருவி, தேனருவி, செண்பகாதேவி, புலிஅருவி, பழைய குற்றாலம் எனப் பல அருவிகள் உள்ளன. மெயின் அருவி மிகவும் பிரசித்தி பெற்றது. வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட இந்த அருவிக்கு மக்கள் வருகின்றனர். நெல்லையப்பர் கோவில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம் இந்த நகரில் அமைந்துள்ளது. ஸ்ரீ காந்திமதி-நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும், சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று உள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது. திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் வழி கருப்பூந்துறை ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீ அழியாபதி ஈஸ்வரர் திருக்கோயில் கோரக்க மகரிஷியால் வழிபட்ட தலம் ஆகும். ஆதாரங்கள் பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள் திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதிகள் பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்
நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல்
https://ta.wikipedia.org/wiki/நோபல்_பரிசு_பெற்றவர்கள்_பட்டியல்
thumb|நோபல் பரிசு பெற்றவர்கள் தங்கப் பதக்கத்துடன் டிப்ளோமா மற்றும் (2017 இன் படி) 9 மில்லியன் SEK (தோராயமாக US $1.0 மில்லியன், €0.87 மில்லியன்) பெறுகிறார்கள். right|thumb|Nobel 2012இன் விழாவில் பரிசாளர்கள் ஆல்வின் ரோத், பிரையன் கோபிலுக்கா, இராபர்ட்டு இலெவுக்கோவித்ஃசு, டேவிட். ஜே. வைன்லேண்டு, and செர்கே அரோழ்சி நோபெல் பரிசுகள் (, ) ஆண்டுதோறும் சுவீடிய அரசுக் கல்விக்கழகத்தாலும் (The Royal Swedish Academy of Sciences), சுவீடியக் கல்விக்கழகத்தாலும் (The Swedish Academy), கரோலின்சுகா நிறுவனத்தாலும் (The Karolenska Institute) மற்றும் நார்வே நோபெல் குழுவாலும் (The Norwegian Nobel Committee) தனியொருவருக்கோ நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் ஆகிய அறிவியல்புலங்களில் பெரும்பங்களிப்பு ஆற்றுபவர்களுக்குத் தரப்படுகின்றன. இவை ஆல்ஃபிரெட் நோபெலின் 1895அம் ஆண்டு உயிலின்படி நிறுவப்பட்டுத் தரப்படுகின்றன.இது நோபெல் அறக்கட்டளையால் ஆளப்படுமெனக் கூறுகிறது. பொருளியலுக்கான நோபெல் நினைவுப் பரிசு 1968இல் சுவீடன்னைச் சார்ந்த Sveriges Riksbank எனும் வங்கியால் பொருளியலில் பெரும்பங்களிப்பவர்களுக்காக நிறுவப்பட்டது. இதில் ஒவ்வொரு பரிசாளருக்கும் பொற்பதக்கமும் பட்டயமும் நோபெல் அறக்கட்டளை குறிப்பிட்ட ஆண்டில் முடிவுசெய்யும் பணத்தொகையும் வழங்கப்படும். பரிசு ஒவ்வொரு பரிசும் ஒரு தனிக்குழுவால் தரப்படுகிறது; இயற்பியல், வேதியியல், பொருளியல் பரிசுகளைச் சுவீடிய அரசுக்கழகம் தருகிறது; கரோலின்சுகா நிறுவனம் உடலியங்கியல் அல்லது மருத்துவப் பரிசுகளை வழங்குகிறது; நார்வே நோபெல்குழு அமைதிக்கான பரிசுகளை அளிக்கிறது. ஒவ்வொரு பரிசாளரும் ஆண்டுஅகளைச் சார்ந்து வேறுபடும் பதக்கத்தையும் பட்டயத்தையும் பணத்தொகையையும் பெற்றுவந்துள்ளனர். முதல்நோபெல் பரிசுகள் 1901இல் பரிசாளர்களுக்கு 150,782 SEK அமைந்தன.இது 2007இல் 7,731,004 SEK மதிப்புக்குச் சம்மானது. பரிசாளர்களுக்கு 2008இல் பணத்தொகையாக 10,000,000 சுவீடியக் குரோனர்கள்(SEK) வழங்கப்பட்டன. பரிசுகள் நோபெல் மறைந்த நாளான திசம்பர் 10இல் அவரது நினைவு ஆண்டுவிழாவில் சுட்டாக்கொல்மில் தரப்படுகின்றன. பெயர்கள் தரப்படாததாலோ வேறு புறநிகழ்வுகளாலோ நோபெல் பரிசு தரப்படாவிட்டால் பரிசுத்தொகை உரிய பரிசுக்கணக்கில் திரும்பச் செலுத்தப்படும். நோபெல் பரிசு போர்மூண்டதால் 1940முதல் 1942வரை தரப்படவில்லை. பரிசாளர்கள் கடந்த நூற்றாண்டு 1901 முதல் இந்த நூற்றாண்டு 2012 வரை நோபல் பரிசுகளும் பொருளியலுக்கான நோபெல் நினைவுப் பரிசுகளும் 555 தடவைகள் 863 பேருக்கும் நிறுவனங்களுக்கும் தரப்பட்டுள்ளன. இதில் சிலர் ஒருதடவைக்கும் மேல் பரிசு வாங்கியுள்ளதால் மொத்தத்தில் 825 பேரும் 21 நிறுவனங்களும் பரிசு பெற்றுள்ளன. நான்கு நோபெல் பரிசாளர்களுக்கு அவர்களது அரசுகள் இப்பரிசைப் பெற இசைவு தரவில்லை. [அடோல்ஃப் ஃஇட்லர் மூன்று செருமானியர்களான இரிச்சர்ட் குஃன் (வேதியியல், 1938), அடோல்ஃப் புட்டனண்ட் (வேதியியல், 1939), and ஜெரார்டு டொமாக் (உடலியங்கியல் அல்லது மருத்துவம், 1939), ஆகியோரை நொப்ர்ல் பரிசை வாங்கவிடவில்லை. முன்னாள் சோவியத் ஒன்றிய அரசு போரிசு பாசுதர்னாக்கை (இலக்கியம், 1958) பரிசை மறுக்கும்படி வற்புறுத்தியது. இரு நோபெல் பரிசாளர்களான [[ழீன் பௌல் சாட்ட்ரேயும்(இலக்கியம், 1964) இலே டக் தோவும் (அமைதி,1973) இப்பரிசை வாங்க மறுத்துவிட்டனர். சாத்ரே எந்த அலுவல்முறைப் பரிசையும் வாங்க விரும்பாதால் மறுத்தார்.இலே அப்போது வியட்நாம் இருந்த நிலைமையால் மறுத்தார். ஆறு பரிசாளர்கள் ஒரு தடவைக்கும் மேல் பரிசு பெற்றுள்ளனர்.; அந்த அறுவருள் செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக்குழு அமைதிக்கான நோபெல் பரிசை மும்முறை பெற்றது வேறெவருமே மும்முறை பெறவில்லை.. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் இருமுறை அமைதிக்கான நோபெல் பரிசைப் பெற்றது. மேலும் ஜான் பர்டீனுக்கு இருமுறை இயற்பியலுக்கான நோபெல் பரிசும் ஃபிரெடெரிக் சாங்கருக்கு இருமுறை வேதியியலுக்கான நோபெல் பரிசும் வழங்கப்பட்டன. வெவ்வேறு புலங்களில் இருவருக்கு வழங்கப்பட்டன: மேரி கியூரி (இயற்பியலும் வேதியியலும்);இலினசு பௌலிங் (வேதியியல், அமைதி). 826 பரிசாளர்களில் 43பேர் பெண்கள்; நோபெல் பரிசுபெற்ற முதள் பெண்மணி மேரி கியூரி ஆவார். இவர் 1903இல் இயற்பியலுக்கான நோபெல் பரிசைப் பெற்றார். இருபாலாரிலுமே முதல்முறையாக இரு நோபெல் பரிசு பெற்றவர் மேரி கியூரியே. இவர் இரண்டாவதாக 1911இல் வேதியியலுக்கான நோபெல் பரிசைப் பெற்றார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Official website of the Royal Swedish Academy of Sciences Official website of the Nobel Foundation Downloadable Database of Nobel Laureates *
பெங்களூர்
https://ta.wikipedia.org/wiki/பெங்களூர்
பெங்களூர் (Bangalore), அலுவல்முறையில் பெங்களூரு (Bengaluru, , ) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்குப் பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள இந்நகரம் மக்கள்தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் உள்ளது. இங்கு கன்னடம் பேசுவோர் (44%), தமிழ் பேசுவோர் (28%), தெலுங்கு பேசுவோர் (14%) என்பதாக உள்ளது. நகரத்தின் பன்முகத்தன்மை மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக பெங்களூருவின் மக்கட் தொகை 1 கோடியைத் தாண்டியது. நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் முதலாம் கெம்பை கவுடர் இந்த இடத்தில் ஒரு செங்கல்லில் செய்த கலவைக் கோட்டையைக் கட்டினார். விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் இந்நகரத்தின் நவீன வரலாறு துவங்கியது. பிரித்தானிய ஆட்சியின் போது, இந்நகரம் தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது. இன்று, ஒரு பெரிய வளரும் பெருநகரமாக, இந்தியாவின் புகழ்பெற்ற பல கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தாயகமாக பெங்களூரு இருக்கிறது. பொதுத்துறை கனரக தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு, மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் இந்நகரில் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்பத்துறை வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் நாட்டின் முன்னணி ஆகிய காரணங்களால், பெங்களூரு இந்தியாவின் 'சிலிகான் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்படுகிறது. மக்கள்பரவலில் பன்முகத்தன்மை கொண்டதான பெங்களூரு பெரும் பொருளாதார மையமாகத் திகழ்வதோடு இந்தியாவில் மிகத் துரிதமாய் வளரும் பெரு நகரமாகவும் உள்ளது. 2015 ஆம் ஆண்டு பெங்களூரு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பெயர் வரலாறு பெங்களூரு என்ற நகரப் பெயரின் ஆங்கிலவயமாக்க பிரயோகமான பெங்களூர் என்னும் பெயர் தான் சில ஆண்டுகள் முன்பு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. "பெங்களூரு" என்கிற பெயருக்கான முதற்குறிப்பு ஒன்பதாம் நூற்றாண்டு மேற்கு கங்க வம்சத்தின் "வீரக் கல்" (ஒரு மாவீரனின் சிறப்பம்சங்களைப் போற்றும் கல் எழுத்துக்கள்) ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்களில் காணத்தக்கதாக இருக்கிறது. பெகரில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்வெட்டில், "பெங்களூரு" என்பது 890 ஆம் ஆண்டில் போர் நடந்த ஒரு இடமாகக் குறிப்பிடப்படுகிறது. கங்க சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இந்த இடம் இருந்தது. இது பெங்கவால்-ஊரு, அதாவது ஹளேகன்னட என்றழைக்கப்பட்ட பழைய கன்னட மொழியில் வெங் காவல் ஊர் (காவலர்களின் நகரம்) என்று அழைக்கப்பட்டது.கே. சந்திரமவுலி. "தி சிட்டி ஆஃப் பாயில்டு பீன்ஸ்" . தி ஹிந்து பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது:பொ.ஊ. 890 ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு, பெங்களூரு 1,000 ஆண்டுகளுக்கும் பழமையானது என்று தெரிவிக்கிறது. ஆனால் இக்கல்வெட்டு நகருக்கருகில் பேகூரில் (வேகூர்) நாகேஸ்வரா கோவிலில் கவனிப்பாரின்றி இருக்கிறது. ஹலே கன்னட (பழைய கன்னடம்) மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு எழுத்துக்கள் 890 ஆம் ஆண்டின் பெங்களூரு போர் ஒன்றைக் குறிப்பிடுகிறது. இதனை வரலாற்று ஆசிரியரான ஆர். நரசிம்மச்சார் தனது கருநாட்டக கல்லெழுத்தியல் (தொகுதி. 10 துணைச்சேர்ப்பு) தொகுப்பில் பதிவு செய்திருந்தும் கூட, அதனை பாதுகாக்க இதுவரை எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. சொல்வழக்கு கதையாக இருந்தாலும் கூட பிரபலமான பழைய சம்பவம் ஒன்று இவ்வாறு நினைவுகூர்கிறது: 11 ஆம் நூற்றாண்டின் ஹோய்சாலா அரசரான இரண்டாம் வீர வல்லாளர், வேட்டையாட சென்ற போது காட்டில் வந்த வழியை மறந்து விட்டார். பசியிலும் களைப்பிலும் இருந்த போது, ஒரு ஏழைக் கிழவியை அவர் சந்தித்தார். அந்தக் கிழவி அவருக்கு அவித்த பயிறு பரிமாறினார். ராஜா நன்றியுடன் "பெந்த-கால்-ஊரு" () (வார்த்தை அர்த்தத்தில், "வெந்த கடலை ஊர்") என்று அந்த இடத்திற்கு பெயரிட்டார். அது இறுதியில் "பெங்களூரு" என்று ஆனது. 11 டிசம்பர் 2005 அன்று, பெங்களூர் என்கிற பெயரை பெங்களூரு என்று பெயர்மாற்றம் செய்வதற்கு ஞானபீட விருது வென்ற யூ. ஆர். அனந்தமூர்த்தி அளித்திருந்த ஒரு யோசனையை ஏற்றுக் கொண்டதாக கர்நாடக அரசு அறிவித்தது. 27 செப்டம்பர் 2006 அன்று புருகத் பெங்களூரு மகாநகர பலிகே]] (BBMP) உத்தேசிக்கப்பட்ட பெயர் மாற்றத்தை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றியது. கர்நாடகா அரசாங்கத்தால் அந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அலுவல்ரீதியாக 1 நவம்பர் 2006 முதல் பெயர் மாற்றத்தை அமலாக்க முடிவு செய்யப்பட்டது. ஆயினும், மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்களின் காரணமாக இந்த நிகழ்முறை சற்று முடங்கியது. வரலாறு thumb|பெங்களூரின் லேடி கர்சன் மருத்துவமனை 1864 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பின்னர் இந்திய வைஸ்ராயாக இருந்த கர்சன் பிரபுவின் முதல் மனைவியின் பெயர் அதற்கு வைக்கப்பட்டது. மேலைக் கங்கர்களின் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு, பொ.ஊ. 1024 ஆம் ஆண்டு சோழர் களால் பெங்களூரு கைப்பற்றப்பட்டு பின் 1070 ஆம் ஆண்டில் சாளுக்கிய-சோழர்களின் வசம் சென்றது. 1116 ஆம் ஆண்டில், ஹோய்சாளப் பேரரசு சோழர்களை தூக்கியெறிந்ததோடு தனது ஆட்சியை பெங்களூருக்கும் நீட்டித்தது. நவீன பெங்களூரு விஜயநகர சாம்ராச்சியத்தின் குத்தகைதாரர்களில் ஒருவரான முதலாம் கெம்பெ கவுடாவினால் நிறுவப்பட்டது. இவர் செங்கல்-கலவை கோட்டை ஒன்றையும் நந்தி கோயில் ஒன்றையும் நவீன பெங்களூருவின் அருகாமையில் 1537 ஆம் ஆண்டில் கட்டினார். புதிய நகரத்தை கெம்பெ கவுடா "கந்துபூமி" அல்லது "நாயகர்களின் பூமி" என்று குறிப்பிட்டார். பெங்களூரு கோட்டைக்குள்ளாக, நகரம் சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொன்றும் ஒரு "பேட்டெ" (பேட்டை) என்றழைக்கப்பட்டது. நகரம் இரண்டு முக்கிய வீதிகளைக் கொண்டிருந்தது. சிக்கபேட்டெ வீதி கிழக்கு - மேற்காக சென்றது. தொட்டபேட்டெ வீதி வடக்கு - தெற்காக சென்றது. இவை குறுக்கிட்ட இடம் பெங்களூரின் இதயமான தொட்டபேட்டெ சதுக்கத்தை உருவாக்கியது. கெம்பெ கவுடாவுக்கு அடுத்து வந்த, இரண்டாம் கெம்பெ கவுடா, பெங்களூரின் எல்லைகளாக அமைந்த நான்கு புகழ்பெற்ற கோபுரங்களைக் கட்டினார். விஜயநகர ஆட்சியின் போது, பெங்களூரு "தேவராயநகர" மற்றும் "கல்யாணபுரா" ("மங்கள நகரம்") என்றும் அழைக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசு வீழ்ந்த பின், பெங்களூரின் ஆட்சி பல கைகளுக்கு மாறியது. 1638 ஆம் ஆண்டில், ரனதுல்லா கான் தலைமையிலான ஒரு பெரும் பீஜப்பூர் படை சாஜி போன்ஸ்லேவுடன் இணைந்து மூன்றாம் கெம்பெ கவுடாவைத் தோற்கடித்தது. பெங்களூரு சாஜிக்கு கொடையாகக் கொடுக்கப்பட்டது. 1687 ஆம் ஆண்டில், முகலாய தளபதியான காசிம் கான் சாஜியின் மகனான எகோஜியைத் தோற்கடித்து, பெங்களூரை மைசூரின் சிக்கதேவராஜ உடையாருக்கு (1673-1704) 300,000 ரூபாய்க்கு விற்றார்."தி முகல் த்ரோன்", ஆப்ரஹாம் எரலே, 2004 (), பக்கம் 538. 1759 ஆம் ஆண்டில் இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் இறந்த பிறகு, மைசூர் ராணுவத்தின் படைத் தளபதியாக இருந்த ஹைதர் அலி தன்னை மைசூரின் உண்மையான ஆட்சியாளராக பிரகடனப்படுத்திக் கொண்டார். பின்னர் ஆட்சி மைசூர்ப் புலி என்று அழைக்கப்பட்ட ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தான் வசம் சென்றது. நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரில் (1799) திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு இறந்த பிறகு இறுதியில் பெங்களூரு பிரித்தானிய இந்திய சாம்ராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. பிரித்தானியர்கள் பெங்களூரு "பீடெ"யின் நிர்வாகக் கட்டுப்பாட்டை மைசூர் பேரரசரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, கன்டோன்மென்டை மட்டும் தங்கள் ஆட்சியின் கீழ் வைத்துக் கொண்டனர். மைசூர் ராச்சியத்தின் 'இருப்பிடம்' முதலில் மைசூரில் 1799 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பின் இது 1804 ஆம் ஆண்டில் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. இந்தக் காலத்தில் மதராஸ் பிரசிடென்சியில் இருந்து தொழிலாளர்களை பணியமர்த்தி பின் அவர்களை கன்டோன்ட்மென்ட் பகுதிக்கு மாற்றுவது பிரித்தானியருக்கு சுலபமானதாக இருந்தது. மைசூர் ராஜ்ஜியம் தனது தலைநகரை மைசூர் நகரத்தில் இருந்து பெங்களூருக்கு 1831 ஆம் ஆண்டில் மாற்றியது." மைசூர் (தலைநகரம்)". என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா. 1911 பதிப்பு. இந்த காலகட்டத்தின் இரண்டு முக்கிய வளர்ச்சிகள் நகரின் துரித வளர்ச்சிக்கு பங்களித்தது. அவற்றுள் ஒன்று தந்தி இணைப்புகளின் அறிமுகம். மற்றொன்று 1864 ஆம் ஆண்டின் மதராசுக்கான இரயில் இணைப்பாகும். thumb|1887 இல் கட்டப்பட்ட மைசூர் அரண்மனை மைசூர் ஆட்சியாளர்களின் தாயகமாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் பெங்களூரு ஒரு இரட்டை நகரமாய் ஆனது. "பெடெ" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "கன்டோன்ட்மென்ட்" பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர்.பெங்களூரில் பொது இடம்: நடப்பு மற்றும் வருங்கால கணிப்புகள் (அத்தியாயம் 8, பக்கம் 17) 1898 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிளேக் தொற்றுநோய் பரவியது. இது அந்நகரின் மக்கள்தொகையை பெருமளவு குறைத்தது. மல்லேஸ்வரா மற்றும் பசவனகுடியின் புதிய விரிவாக்க பகுதிகள் 'பெடெ'யின் வடக்கு மற்றும் தெற்கில் உருவாக்கப்பட்டன. தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி கம்பிகள் இடப்பட்டன. 1898 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டார். 1906 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதன்முதலில் மின்சாரத்தை பெற்ற நகரமாக பெங்களூரு ஆனது. சிவசமுத்திரத்தில் அமைந்துள்ள நீர்மின் ஆலையில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது. இந்தியாவின் தோட்ட நகரமாக பெங்களூரின் புகழ் 1927 ஆம் ஆண்டில் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் ஆட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போது துவங்கியது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்கள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. 1947 ஆகத்து மாதத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மைசூர் மகாராஜா அரச பிரமுகராக இருந்த புதிய மைசூர் ராச்சியத்தில் பெங்களூரு தொடர்ந்தது. பொதுத் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகியவை மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து கன்னடத்தினர் நகருக்குள் குடியேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது. 1941-51 மற்றும் 1971-81 தசாப்தங்களில் பெங்களூரு துரித வளர்ச்சியை கண்டது. இது வடக்கு கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் இந்நகரில் குடியேற வழி செய்தது. 1961 ஆம் ஆண்டுவாக்கில், 1,207,000 மக்கள்தொகையுடன் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக பெங்களூரு ஆனது.எண்மருவி நூலகங்கள் மற்றும் காப்பகங்கள் தொடர்ந்து வந்த சகாப்தங்களில், நகரில் பல தனியார் நிறுவனங்கள் தோன்றியதைத் தொடர்ந்து பெங்களூரின் உற்பத்தித் தளம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வந்தது. பெங்களூரு தனது நில விற்பனைச் சந்தையில் 1980கள் மற்றும் 1990களில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மூலதன முதலீட்டாளர்கள் பெங்களூரின் பெருமளவிலான காலி மனைகள் மற்றும் வீடுகளை பலமாடி அடுக்கங்களாக மாற்றியதால் இந்த வளர்ச்சி உத்வேகம் பெற்றது.பெஞ்சமின், சாலமன். . சுற்றுச்சூழல்&நகரமயமாக்கம் தொகுதி 12 எண் 1, 2006. ஐக்கிய நாடுகள் பொது நிர்வாகம். 1, ஏப்ரல் 2000. 1985 ஆம் ஆண்டில், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் பெங்களூரில் தனது தளத்தை அமைத்த முதல் பன்னாட்டு நிறுவனமாகும். பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பின்தொடர்ந்தன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், பெங்களூரு தன்னை இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்காக உறுதியாக நிறுவிக் கொண்டது. புவியியல் thumb|right|பெங்களூரு ஹெசராகட்டா ஏரி தென்னிந்திய மாநிலமான கர்நாடகத்தின் தென்கிழக்கில் பெங்களூரு அமைந்துள்ளது. இது மைசூர் பீடபூமியின் (இருதய பகுதியில் கேம்பிரியன் காலத்திற்கு முந்தைய பரந்த தக்காண பீடபூமியின் ஒரு பகுதி) 920 மீ (3,018 அடி) சராசரி உயரத்தில் அமைந்துள்ளது. இது 741 கிமீ² (286 மைல்²). பரப்பளவில் அமைந்துள்ளது. பெங்களூரு நகரத்தின் பெரும் பகுதி கர்நாடகத்தின் பெங்களூரு நகர மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுற்றியிருக்கும் கிராமப் பகுதிகள் பெங்களூரு கிராம மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். பழைய பெங்களூரு கிராம மாவட்டத்தில் இருந்து ராமநகரா என்னும் புதிய மாவட்டத்தை கர்நாடகா அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. நகரின் வழியாய் ஓடும் பெரிய ஆறு எதுவும் இல்லை. ஆயினும் வடக்கில் 60 கிமீ தொலைவில் (37 மைல்கள்) நந்தி மலையில் ஆர்க்காவதி ஆறும் தென்பெண்ணை ஆறும் சந்தித்துக் கொள்கின்றன. அர்காவதி ஆற்றின் சிறு கிளைநதியான விருட்சபவதி ஆறு நகருக்குள்ளாக பசவனகுடியில் தோன்றி நகரின் வழியே பாய்கிறது. பெங்களூரின் பெரும் கழிவுகளை அர்க்காவதி மற்றும் விருட்சபவதி ஆறுகள் சேர்ந்து தான் சுமக்கின்றன. 1922 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு கழிவுநீக்கம் அமைப்பு நகரின் 215 கிமீ² (133 மைல்²) தூரத்திற்கு பரந்து அமைந்து பெங்களூரின் சுற்றளவில் அமைந்துள்ள ஐந்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை இணைக்கிறது.. டெக்கான் ஹெரால்டு.2006தி பிரின்டர்ஸ் (மைசூர்) லிமிடெட். 11 மார்ச் 2004 16 ஆம் நூற்றாண்டில், நகரின் நீர்த்தேவைகளை நிறைவு செய்வதற்காக முதலாம் கெம்பெ கவுடா பல ஏரிகளைக் கட்டினார். கெம்பம்புதி கெரே தான் இந்த ஏரிகளில் மிகவும் முதன்மையானதாக இருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், நகருக்கு நீர் விநியோகம் செய்வதற்கு சர் மிர்சா இஸ்மாயில் (மைசூர் திவான், பொ.ஊ. 1926-41) மூலம் நந்தி ஹில்ஸ் வாட்டர்ஒர்க்ஸ் நிறுவப்பட்டது. தற்போது நகருக்கான நீர் வழங்கலில் சுமார் 80% பங்கினை காவிரி நதி அளிக்கிறது. எஞ்சிய 20% திப்பகொண்டனஹல்லி மற்றும் ஹெசராகட்டா ஆகிய அர்காவதி ஆற்றின் நீர்த்தேக்கங்கள் மூலம் பெறப்படுகிறது. பெங்களூரு ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர்கள் (211 மில்லியன் அமெரிக்க கேலன்கள்) நீரைப் பெறுகிறது. இது வேறு எந்த ஓர் இந்திய நகரத்தைக் காட்டிலும் அதிகமானதாகும். ஆயினும், பெங்களூரு சில சமயங்களில் குறிப்பாக கோடைப் பருவங்களின் போது நீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. பெங்களூரு ஏராளமான நன்னீர் ஏரிகள் மற்றும் குளங்களைக் கொண்டிருக்கிறது. மடிவாலா குளம், ஹெப்பல் ஏரி, அல்சூர் ஏரி மற்றும் சாங்க்கி குளம் ஆகியவை அவற்றில் பெரியவையாகும். வண்டல் படிவுகளின் வண்டல் மற்றும் மணல் அடுக்குகளில் இருந்து நிலத்தடிநீர் தோன்றுகிறது. நகரத்தின் தாவர வகைகளைப் பொறுத்த வரை பெரும் எண்ணிக்கையில் இலையுதிர் வகை மரங்களும் சிறு எண்ணிக்கையில் தென்னை மரங்களும் உள்ளன. பெங்களூரு நிலவதிர்வு மண்டலத்தில் இரண்டாம் அடுக்கு பகுதியாக (ஒரு திடமான மண்டலம்) வகுக்கப்பட்டிருந்தாலும், 4.5 ரிக்டர் அளவுக்கான பெரிய பூகம்பங்களை கண்டிருக்கிறது. காலநிலை அதிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் காரணத்தால், பெங்களூரு ஆண்டு முழுவதும் பெரும்பாலும் ரம்மியமான காலநிலையையே கொண்டிருக்கிறது. ஆயினும் அவ்வப்போது ஏற்படும் வெப்ப அலைகள் கோடையில் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. சனவரி மாதம் மிகவும் குளிர்ந்த மாதமாக இருக்கிறது. சராசரி குறைந்த வெப்பநிலை 15.1 °C ஆக இருக்கும். ஏப்ரல் மாதம் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கிறது. சராசரி உயர்ந்த வெப்பநிலையாக 33.6 °C இருக்கும். பெங்களூரில் மிக அதிகமாகப் பதிவான வெப்பநிலை 38.9°C ஆகும். மிகவும் குறைந்தபட்சமாக 7.8 °C (1884 ஜனவரி) பதிவாகியிருக்கிறது. குளிர்கால வெப்பநிலைகள் அபூர்வமாக 12 °C க்கு கீழ் சரியும். கோடை வெப்பநிலைகள் அபூர்வமாக 36-37 °C (100 °F) க்கு அதிகமாக இருக்கும். வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவக்காற்று இரண்டில் இருந்தும் பெங்களூரு மழைப்பொழிவைப் பெறுகிறது. செப்டம்பர், அக்டோபர் மற்றும் ஆகத்து ஆகியவை முறையே மிகவும் மழைப்பொழிவு மிகுந்த காலங்களாகும். ஓரளவு அடிக்கடி நிகழும் இடிமின்னலுடனான புயல் மழையால் கோடை வெப்பம் சரிக்கட்டப்படுகிறது. இது மின்துண்டிப்பு மற்றும் உள்ளூர் வெள்ளப்போக்கிற்கும் அவ்வப்போது காரணமாகிறது. 24 மணி நேர காலத்தில் பதிவான மிக அதிக மழைப்பொழிவு அக்டோபர் 1, 1997 அன்று பதிவானது. நகர நிர்வாகம் புருகத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) நகரத்தின் நிர்வாகத்திற்கான பொறுப்பில் இருக்கிறது. புருகத் பெங்களூரு மகாநகர பலிகே பெருநகர மாமன்றம் மூலம் நடத்தப்படுகிறது. மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வார்டுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. மாமன்றத்தின் ஒரு மேயர் மற்றும் ஆணையர் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் இருந்து ஒருவருக்கோ அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவருக்கோ இந்த இடம் ஒதுக்கப்படுகிறது. thumb|right|கர்நாடகா உயர்நீதி மன்றம் தான் கர்நாடகாவின் மிக உயர்ந்த நீதி அமைப்பாகும். இது பெங்களூரில் அமைந்துள்ளது. பெங்களூரின் துரித வளர்ச்சியானது போக்குவரத்து நெருக்கடி மற்றும் உள்கட்டுமான பழமைப்படல் ஆகியவை தொடர்பான பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இவை பெங்களூரு மகாநகர பாலிகேவுக்கு தீர்ப்பதற்கு சவாலளிக்கும் பிரச்சினைகளாக உள்ளன. 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த பெங்களூரின் இயற்பியல், உயிரியல் மற்றும் சமூகபொருளாதார அளவீடுகள் குறித்த பெதெல்ல சுற்றுச்சூழல் மதிப்பீடு அமைப்பு (BEES), பெங்களூரின் தண்ணீர் தரம் மற்றும் பிராந்திய மற்றும் நீர்ப்புற சூழலமைப்பு ஏறக்குறைய உன்னதமானவை யாக இருப்பதாக சுட்டிக் காட்டியது. நகரின் சமூக பொருளாதார அளவீடுகள் (போக்குவரத்து நெரிசல், வாழ்க்கைத் தரம்) ஆகியவை குறைந்த மதிப்பெண்களே பெற்றன.. பெங்களூரு பெருநகர சாலை போக்குவரத்து நிறுவனம். (பக்கம் 30) நகரின் திட்டமிடப்படாத வளர்ச்சியானது பெரும் போக்குவரத்து நெருக்கடியில் விளைந்தது. மேற்பால அமைப்பு கட்டுவதன் மூலமும் ஒருவழிப்பாதைகள் மூலமும் இந்த பிரச்சினையைத் தீர்க்க மாநகராட்சி முனைந்தது. சில மேற்பாலங்களும் ஒருவழிப் பாதைகளும் போக்குவரத்து நெருக்கடியான சூழலை ஓரளவுக்குக் குறைக்க உதவினாலும் நகர போக்குவரத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அவற்றால் ஈடு கொடுக்க முடியவில்லை. 2005 ஆம் ஆண்டில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டும் தங்களது வருடாந்திர நிதி ஒதுக்கீட்டில் பெங்களூரின் உள்கட்டுமான மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க தொகையை ஒதுக்கின."நிதி ஒதுக்கீடு பெருநகர வளர்ச்சியைத் தூண்டும்: பிரதமர் ". MSN India. 2006Microsoft India. 12 பிப்ரவரி 2006. நகர வளர்ச்சித் திட்டங்களை வடிவமைப்பதிலும் செயல்படுத்துவதிலும் பெங்களூரு வளர்ச்சிக் கழகம் (BDA) மற்றும் பெங்களூரு திட்டப் பணிப்படை (BATF) ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூரு மகாநகர பாலிகே செயல்படுகிறது. ஒரு நாளைக்கு 3,000 டன்கள் திடக்கழிவினை பெங்களூரு உருவாக்குகிறது. இதில் 1,139 டன்கள் சேகரிக்கப்பட்டு கர்நாடகா கழிவு மேம்பாட்டு வாரியம் போன்ற கூட்டுரம் பிரிவுகளுக்கு அனுப்பப்படுகின்றன. எஞ்சிய திடக் கழிவுகள் நகராட்சியால் திறந்த வெளிகளிலோ அல்லது நகருக்கு வெளியே சாலையோரங்களிலோ கொட்டப்படுகின்றன.van Beukering, Sehker, et al."Analysing Urban Solid Waste...". சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டிற்கான சர்வதேச நிறுவனம்2006மார்ச் 1999. போக்குவரத்து காவல்துறை, நகர ஆயுதப்படை காவல்துறை, மத்திய குற்றவியல் பிரிவு மற்றும் நகர குற்றவியல் ஆவணப் பிரிவு உள்ளிட்ட ஆறு புவியியல் மண்டலங்களை பெங்களூரு நகர காவல்துறை (BCP) கொண்டுள்ளது. அத்துடன் இரண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 86 காவல் நிலையங்களையும் இயக்குகிறது. கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் என்கிற வகையில் கர்நாடகா உயர்நீதி மன்றம், கர்நாடகா சட்டமன்றம் மற்றும் கர்நாடக ஆளுநர் இல்லம் ஆகிய முக்கிய மாநில அரசாங்க அமைப்புகளின் இருப்பிடங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு மூன்று உறுப்பினர்களையும், கர்நாடகா சட்ட மன்றத்திற்கு 28 உறுப்பினர்களையும் பெங்களூரு பங்களிப்பு செய்கிறது. பெங்களூரில் மின்சார ஒழுங்கு கர்நாடகா மின் விநியோக நிறுவனம் (KPTCL) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பல நகரங்களைப் போலவே, பெங்களூரிலும் அறிவிக்கப்பட்ட மின்தடை உள்ளது. குறிப்பாக கோடை காலங்களில். வீட்டுத் தேவைகள் மற்றும் பெருநிறுவனத் தேவைகள் இரண்டின் நுகர்வையும் பூர்த்தி செய்வதற்கு மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுக்கு இது அவசியமாகிறது. பொருளாதாரம் பெங்களூரின் பொருளாதாரம் (2002-03 மொத்த மாவட்ட வருவாய்) அதனை இந்தியாவின் ஒரு பிரதான பொருளாதார மையமாக ஆக்குகிறது.. பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை 10.3% பொருளாதார வளர்ச்சியுடன், பெங்களூரு இந்தியாவில் மிகத்துரித வளர்ச்சியுறும் முக்கிய பெரு நகரமாக இருக்கிறது.சூரத், துரிதமாய் வளரும் நகரம். Rediff.com. 29 ஜனவரி 2008. தவிரவும், பெங்களூரு இந்தியாவின் நான்காவது பெரிய துரித நகர்வு நுகர்வு பொருட்கள் (FMCG) சந்தையாக இருக்கிறது."பெங்களூரு மிகவும் பணம்புரளும் சந்தை". 2006 Rediff.com. 23 ஆகஸ்டு 2006. மிக உயர்ந்த சொத்துமதிப்பு கொண்ட தனிநபர்]]கள் எண்ணிக்கையில் மூன்றாவது பெரிய மையமாக இருக்கும் இந்நகரம் 10,000 க்கும் அதிகமான டாலர் மில்லியனர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் முதலீடு செய்யத்தக்க உபரியைக் கொண்டுள்ள சுமார் 60,000 பெரும் பணக்காரர்களையும் கொண்டுள்ளது."பெங்களூரு நாட்டின் மூன்றாம் பெரிய பணக்கார நகரம்".2007. டைம்ஸ் ஆஃப் இந்தியா 1 ஏப். 2007 2001 வாக்கில், அந்நிய நேரடி முதலீட்டில் பெங்களூரின் பங்களிப்பு இந்திய நகரங்களில் நான்காவது பெரியதாகும்.மாத்தூர், ஓம் பிரகாஷ். . 2006 நகர்ப்புற கூட்டுமுயற்சிகள் அறக்கட்டளை ஆக. 2003 1940 ஆம் ஆண்டில் சர் மிர்சா இஸ்மாயில் மற்றும் சர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா ஆகிய தொழில்துறை முன்னோடிகள் பெங்களூரின் வலிமையான உற்பத்தி மற்றும் தொழில்துறை அடித்தளத்தை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்கை ஆற்றினார்கள். பல பொதுத்துறை நிறுவனங்களின் தலைமையகங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. 1972 ஜூன் மாதத்தில், விண்வெளித் துறையின் கீழ் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) உருவாக்கப்பட்டு அதன் தலைமையகம் இந்நகரில் அமைந்தது. இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களை பெங்களூரில் கொண்டுள்ளன. நகரில் அமைந்துள்ள ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் காரணமாக பெங்களூரு இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. இவை இந்தியாவின் 2006-07 தகவல்தொழில்நுட்ப சேவை ஏற்றுமதியில் 33% பங்களிப்பு செய்தன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது நகருக்கு சவால்களையும் அளித்திருக்கிறது. நகரத்தின் உள்கட்டமைப்பில் மேம்பாட்டைக் கோரும் நகரின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், கர்நாடகத்தின் கிராமப் பகுதி மக்களையே தங்கள் பிரதான வாக்கு வங்கிகளாகக் கொண்டிருக்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையே சிலசமயங்களில் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் உயிரித் தொழில்நுட்பம் தொடர்பான துறைகளின் மையமாக பெங்களூரு விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டில், இந்தியாவின் 265 உயிரிதொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 47% இங்கு அமைந்திருந்தன; இந்தியாவின் மிகப்பெரிய உயிரிதொழில்நுட்ப நிறுவனமான பயோகான் நிறுவனமும் இதில் அடங்கும். போக்குவரத்து thumb|பெங்களூரு சர்வதேச விமானநிலையம் தேவனஹள்ளியில் அமைந்துள்ளது. பெங்களூரில் புதிதாகக் கட்டப்பட்ட பெங்களூரு சர்வதேச விமான நிலையம் (ATA குறியீடு: BLR) 24 மே 2008 முதல் தனது செயல்பாட்டைத் துவக்கியது. முன்னதாக நகருக்கு எச்ஏஎல் வானூர்தி நிலையம் சேவையாற்றி வந்தது. இது இந்தியாவின் நான்காவது பரபரப்பான வானூர்தி நிலையமாக இருந்தது. ஏர் டெக்கான் மற்றும் கிங்பிசர் ஏர்லைன்சு நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களை பெங்களூரில் கொண்டுள்ளன. நம்ம மெட்ரோ என்றழைக்கப்படும் துரித போக்குவரத்து அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. நிறைவுறுகையில் இது 41 நிறுத்தங்களை அடக்கி, தரைக்கு மேலும், தரைக்குகீழும் ஆன தொடர்வண்டி வலைப்பின்னலைக் கொண்டிருக்கும். இந்திய ரயில்வே மூலம் பெங்களூரு நாட்டின் பிற நகரங்களுடன் நல்ல இணைப்பைப் பெற்றிருக்கிறது. ராஜதானி விரைவுத் தொடருந்து நகரை இந்திய தலைநகரான புது டெல்லியுடன் இணைக்கிறது. இருப்புப் பாதை வழியே கர்நாடகாவின் அநேக நகரங்கள், மற்றும் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடனும் பெங்களூரு இணைக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்கள் என்றழைக்கப்படும் மூன்று சக்கர, கருப்பு மற்றும் மஞ்சள் நிற தானியங்கி மூவுருளி உந்து போக்குவரத்துக்கு பிரபலமானதாகும். மீட்டர் பொருத்தப்பட்டுள்ள இவை மூன்று பயணிகள் வரை சுமந்து செல்லும். சற்று கூடுதல் கட்டணத்தில் வாடகை மகிழுந்து சேவைகளும் உண்டு. பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC) மூலம் இயக்கப்படும் பேருந்துகளும் நகரில் பொதுப் போக்குவரத்துக்கான ஒரு வழியாக இருக்கின்றது. பயணிகள் இந்த பேருந்துகளில் பயணிக்கும் போது பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்கு பேருந்து முன் அனுமதிச் சீட்டு வசதியையும் போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது. முக்கிய தடங்களில் குளிரூட்டப்பட்ட, சிவப்பு வண்ண வால்வோ பேருந்துகளையும் இப்போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. பெங்களூரை கர்நாடகாவின் பிற பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுடன் இணைக்கும் வகையில் கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் 6,600 பேருந்துகளை 5,700 கால அட்டவணை நேரங்களில் இயக்கி வருகிறது. மக்கள் வாழ்வியல் thumb|left|பெங்களூரு பசவனகுடியில் அமைந்துள்ள ஒரு பிரபலமான நந்தி கோவில். பெங்களூரு நகரம் மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய நகரமாகவும் உலகின் 28வது பெரிய நகரமாகவும் இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு மக்கள்தொகை 5,300,000 இருந்ததாய் மதிப்பிடப்பட்டது. 1991-2001 காலத்தில் புது டெல்லிக்கு அடுத்து மிகத் துரித வளர்ச்சி கண்ட இந்திய பெருநகரம் பெங்களூரு ஆகும். இந்த பத்தாண்டுகளில் வளர்ச்சி விகிதம் 38% ஆக இருந்தது. பெங்களூருவாசிகள் ஆங்கிலத்தில் பெங்களூரியன்ஸ் என்றும் கன்னடத்தில் பெங்களூரினவாரு என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் நகர மக்கள்தொகையில் சுமார் 39% ஆக இருக்கிறார்கள்.ராமச்சந்திரன், சுதா. உள்ளூர் பெருமிதம் பெங்களூரு வர்த்தகத்தை பாதிக்கிறது . ஆசியா டைம்ஸ். 2 ஏப்ரல் 2008.கன்னடர்கள் மற்றும் குடியேறியவர்கள் இடையே குமுறும் பதற்றத்தை பெங்களூரு உணர்கிறது. யாஹூ! நியூஸ். 11 பிப்ரவரி 2008. நகரத்தின் பன்முகக் கலாச்சார இயல்பால் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பெங்களூரு வந்து குடியேறுகின்றனர்."கன்னடர்களுக்கு அனைத்து ஆதரவுக்கும் உறுதி" . தி ஹிந்து. 23 ஜூலை 2004. நகரின் மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 14.3% இருக்கிறார்கள். கன்னடம் மற்றும் ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகியவை நகரில் பேசப்படும் பிற முக்கிய மொழிகளாக உள்ளன.கர்நாடகா.காம் அளிக்கும் "பெங்களூரு உண்மைகள்". 2001 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பெங்களூரு மக்கள்தொகையில் 79.37% பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இது ஏறக்குறைய தேசிய சராசரியை ஒட்டி இருக்கிறது."சென்சஸ் GIS வீட்டுநிலை" . censusindiamaps.net. 2006 முஸ்லீம்கள் மக்கள்தொகையில் 13.37% பேர் இருக்கிறார்கள். இதுவும் ஏறக்குறைய தேசிய சராசரி அளவை ஒட்டியே உள்ளது. கிறிஸ்தவ மற்றும் சமண மதத்தவர்கள் மக்கள்தொகையில் முறையே 5.79% மற்றும் 1.05% இருக்கிறார்கள். இது இம்மதங்களின் தேசிய சராசரிகளை விட இருமடங்காகும். ஆங்கிலோ இந்தியர்களும் நகரில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலுள்ள பிரிவினராக உள்ளனர். பெங்களூரு மக்கள்தொகையில் பெண்கள் 47.5% உள்ளனர். மும்பைக்கு பிறகு இந்திய பெருநகரங்களில் பெங்களூரு தான் இரண்டாவது பெரிய எழுத்தறிவு விகிதம் (83%) கொண்ட நகரமாய் உள்ளது. பெங்களூரு மக்கள்தொகையில் சுமார் 10% சேரிகளில். இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2001. வாழ்கிறார்கள். மும்பையுடனும் மற்றும் நைரோபி போன்ற வளரும் நாடுகளின் பிற நகரங்களுடனும் ஒப்பிடுகையில் இது குறைந்த அளவேயாகும்.வாரா, ரஸ்னா. "சேரிகள் நகரங்களின் இதயத்துடிப்பு". 6 அக்டோபர் 2003 இந்தியாவின் 35 பெரிய நகரங்களில் பதிவாகும் மொத்த குற்றங்களில் பெங்களூரு 9.2% பங்களிப்பை கொண்டிருப்பதாக 2004 தேசிய குற்றப் பதிவுகள் கழகம் சுட்டிக் காட்டுகிறது. டெல்லி மற்றும் மும்பை முறையே 15.7% மற்றும் 9.5% பங்களிக்கின்றன.. தேசிய குற்ற ஆவணப் பிரிவு. பண்பாடு thumb|right|200px|மலர் கண்காட்சிகளுக்கு பெயர்பெற்றதான லால் பாக் கண்ணாடி இல்லம் இப்போது பாரம்பரிய நினைவுச்சின்னமாய் திகழ்கிறது. பெங்களூரு "இந்தியாவின் தோட்ட நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இங்கு லால் பாக் மற்றும் கப்பன் பார்க் உள்ளிட்ட பல பொதுப் பூங்காக்கள் உள்ளன. பழைய மைசூர் சாம்ராச்சியத்தின் பாரம்பரிய கொண்டாட்ட அடையாளமான மைசூர் தசரா, அரசாங்கப் பண்டிகை ஆகும். பெரும் உற்சாகத்துடன் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. "கரக சக்தியோத்சவா" அல்லது பெங்களூரு கரகா என்றழைக்கப்படும் பெங்களூரின் மிக முக்கியமான பழமையான பண்டிகைகளை நகரம் கொண்டாடுகிறது. "தீபங்களின் பண்டிகை"யான தீபாவளி மக்கள்வாழ்க்கைமுறை மற்றும் மத எல்லைகளைக் கடந்து கொண்டாடப்படும் மற்றுமொரு முக்கிய பண்டிகையாகும். பிற பாரம்பரிய இந்திய பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி, உகாதி, சங்கராந்தி, ஈத் உல்-பித்ர், மற்றும் கிறிஸ்துமஸ் ஆகியவையும் இங்கு கொண்டாடப்படுகின்றன. கன்னடத் திரைப்பட துறையின் தாயகமாக பெங்களூரு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 கன்னட திரைப்படங்கள் இங்கிருந்து வெளியாகின்றன.. மறைந்த நடிகரான ராஜ்குமார் கன்னடத் திரையுலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர்களில் மிக முக்கியமான ஒருவர் ஆவார். சமையல்கலையின் பன்முகத்தன்மை பெங்களூரின் சமூக மற்றும் பொருளாதார பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாய் உள்ளது. ரோட்டோரக் கடையினர், தேநீர்க்கடையினர், மற்றும் தென்னிந்திய, வட இந்திய, சீன மற்றும் மேற்கத்திய துரித உணவுகள் நகரில் மிகவும் பிரபலம் பெற்றுள்ளன. உடுப்பி உணவகங்கள் மிகவும் பிரபலம் பெற்றவையாக உள்ளன. இவை முதன்மையாக பிராந்திய சைவ உணவுகளை வழங்குகின்றன. இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் முக்கிய மையமாகவும் பெங்களூரு இருக்கிறது. பாரம்பரிய இசை மற்றும் நடனக் கச்சேரிகள் ஆண்டு முழுவதிலும் குறிப்பாக ராமநவமி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்களின் போது பரவலாக நடத்தப்படுகின்றன. நகரில் உற்சாகமான கன்னட நாடக இயக்கமும் இருக்கிறது. ரங்க சங்கரா போன்ற அமைப்புகள் இதனை முன்னெடுத்துச் செல்கின்றன. சர்வதேச ராக் கச்சேரிகள் நடப்பதற்கான முதன்மை இடங்களில் ஒன்றாகவும் பெங்களூர் ஆகியுள்ளது.ரிச்சர்டு பிளங்கெட் (2001), ப. 124. விளையாட்டு மட்டைப்பந்து பெங்களூரின் மிகப் பிரபல விளையாட்டுகளுள் ஒன்றாகும். குறிப்பிடத்தக்களவில் தேசிய மட்டைப்பந்து வீரர்கள் பெங்களூரில் இருந்து வந்துள்ளனர். சிறுவர்கள் சாலைகளிலும் நகரின் பல பொது இடங்களிலும் சாலையோர கிரிக்கெட் விளையாடுகிறார்கள். பெங்களூரின் முதன்மையான உலகளாவிய மட்டைப்பந்து மைதானமாக எம். சின்னசுவாமி அரங்கம் உள்ளது. இது 40,000சின்னசாமி மைதானம் பேர் அமரும் இடம் கொண்டதாகும். 1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆகியவற்றின் ஆட்டங்கள் இங்கு நடந்துள்ளன. இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிளையணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் பிரீமியர் ஹாக்கி லீக் (PHL) கிளையணியான பெங்களூரு ஹை-ஃபிளையர்ஸ் ஆகியவை நகரில் அமைந்துள்ளன. இந்தியாவின் டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணி உறுப்பினர்களான மகேஷ் பூபதி . CBSSports.com. சிபிஎஸ் இன்டராக்டிவ் மற்றும் ரோகன் போபன்னாடேவிஸ் கோப்பை வீரர்கள். Daviscup.com. சர்வதேச டென்னிஸ் பெடரேஷன். ஆகியோரும் பெங்களூரில் தான் வசிக்கிறார்கள். நகரில் ஆண்டுதோறும் பெண்கள் டென்னிஸ் கழகத்தின் பெங்களூரு ஓபன் போட்டிகள் நடக்கின்றன. செப்டம்பர் 2008 துவங்கி, ஆண்டுதோறும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் டென்னிஸ் ஓபன் ஏடிபி போட்டிகளும் பெங்களூரில் நடைபெறுகின்றன.. CBSSportsline.com. தேசிய நீச்சல் வெற்றிவீரரான நிஷா மிலெட், உலக ஸ்னூக்கர் வெற்றிவீரரான பங்கஜ் அத்வானி மற்றும் முன்னாள் அனைத்து இங்கிலாந்து ஓபன் பூப்பந்து வெற்றிவீரரான பிரகாஷ் படுகோனே ஆகியோரும் பெங்களூரில் இருந்து வரும் பிற விளையாட்டு பிரபலங்களில் அடங்குவர். கல்வி thumb|right|இந்திய அறிவியல் நிறுவனம் - இந்தியாவில் அறிவியலுக்கான முதன்மை நிறுவனம். 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, பெங்களூரில் கல்வி என்பது பிரதானமாக மதத் தலைவர்களால் நடத்தப்பட்டதால் அந்த மதத்து மாணவர்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது.ஹயவதன ராவ் (1929), ப494 மும்மடி கிருஷ்ணராஜ உடையார் ஆட்சியின் போது மேற்கத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரில் இரண்டு பள்ளிகள் நிறுவப்பட்டன. இதனையடுத்து, வெஸ்லியன் மிஷன் 1851 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை நிறுவியது. 1858 ஆம் ஆண்டில் பெங்களூரு உயர்நிலைப் பள்ளி அரசாங்கத்தால் துவக்கப்பட்டது.ஹயவதன ராவ் (1929), ப497 சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், இளம் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாற்றம் கண்டுள்ளன. இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ் (எஸ்எஸ்எல்சி), இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ் மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற கல்வி வாரியங்கள் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்கும் பல்வேறு பள்ளிகள் பெங்களூரில் உள்ளன. பெங்களூரு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ அல்லது தனியார் பள்ளிகளாகவோ (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத பள்ளிகள்) உள்ளன. தங்களது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக பல்கலைக்கு முந்தைய பியுசி படிப்பை கலை, வணிகம் அல்லது அறிவியல் ஆகிய மூன்று பிரிவுகளில் ஒன்றில் மேற்கொள்கிறார்கள். தேவையான படிப்பை முடித்தபிறகு, பல்கலைக்கழகங்களில் பொது அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் பதிவு செய்து படிப்பைத் தொடரலாம். 1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழகம் சுமார் 500 கல்லூரிகளுக்கு இணைப்புத் தொடர்பு வழங்குகிறது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருக்கிறது. பெங்களூருக்கு உள்ளேயே இந்த பல்கலைக்கழகம் ஞானபாரதி மற்றும் மத்திய கல்லூரி என இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. 1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகம் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான முதன்மை நிறுவனமாகும். இந்திய பல்கலைக்கழக தேசிய சட்டப் பள்ளி (NLSIU), இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூரு (ஐஐஎம்-பி) மற்றும் இந்தியப் புள்ளியியல் ஆய்வு நிறுவனம் ஆகிய தேசியப் புகழ்பெற்ற நிறுவனங்களும் பெங்களூரில் அமைந்துள்ளன. இந்தியாவின் முதன்மையான மனநல சுகாதார நிறுவனமும் பெங்களூரில் தான் அமைந்துள்ளது. முதன்மையான மனநல சுகாதார நிறுவனமான மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான தேசிய நிறுவனம் (NIMHANS) பெங்களூரில் அமைந்துள்ளது. ஊடகங்கள் முதல் அச்சகம் பெங்களூரில் 1840 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. 1859 ஆம் ஆண்டில் பெங்களூரு ஹெரால்டு பத்திரிகை பெங்களூரில் வெளியிடப்படும் முதல் வாரமிருமுறை ஆங்கில இதழாக வெளியானது. 1860 ஆம் ஆண்டில் மைசூர் விருட்டினா போதினி பெங்களூரில் விற்பனையாகும் முதல் கன்னட செய்தித்தாளானது. தற்போது விஜய கர்நாடகா மற்றும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவை தான் முறையே கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பெங்களூரில் மிக அதிக அளவில் விற்பனையாகும் பத்திரிகைகளாக இருக்கின்றன. இவற்றுக்கு நெருக்கமாக பிரஜாவாணி மற்றும் டெக்கான் ஹெரால்டு ஆகியவை வருகின்றன. இந்திய அரசாங்கத்தின் அலுவல்முறை ஒலிபரப்பு நிறுவனமான அனைத்து இந்திய வானொலி தனது பெங்களூரு நிலையத்தில் இருந்து 1955 ஆம் ஆண்டில் ஒளிபரப்பைத் துவக்கியது. ரேடியோ சிட்டி தான் பெங்களூரில் ஒலிபரப்பான முதல் தனியார் பண்பலை வானொலியாகும். சமீப ஆண்டுகளில், ஏராளமான பண்பலை நிலையங்கள் பெங்களூரில் தங்கள் ஒலிபரப்பைத் துவக்கியுள்ளன. நவம்பர் 1, 1981 அன்று தூர்தர்ஷன் தனது ஒளிபரப்பு மையத்தை இங்கு நிறுவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் துவங்கியது. தூர்தர்ஷனின் பெங்களூரு அலுவலகத்தில் 1983 ஆம் ஆண்டில் ஒரு தயாரிப்பு மையம் நிறுவப்பட்டது. இதனையடுத்து 19 நவம்பர் 1983 முதல் கன்னடத்தில் ஒரு செய்தி நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த முடிந்தது. 15, ஆகஸ்டு 1991 அன்று தூர்தர்ஷன் கன்னட செயற்கைக்கோள் சேனல் ஒன்றையும் துவக்கியது. அது இப்போது டிடி சந்தனா என்று பெயரிடப்பட்டுள்ளது. 1991 செப்டம்பர் மாதத்தில் ஸ்டார் டிவியின் சேனல்கள் ஒளிபரப்பைத் துவக்கியபோது தனியார் செய்தித் தொலைக்காட்சிகள் பெங்களூரில் கால்பதித்தன. பெங்களூரில் பார்க்க முடிகிற செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை சென்ற வருடங்களில் மிகுந்த வளர்ச்சி கண்டிருந்தாலும், இந்த வளர்ச்சி தொலைக்காட்சி அலைவரிசை வழங்குனர்கள் இடையே அவ்வப்போது மோதல்களுக்கும் இட்டுச் செல்கிறது. பெங்களூரில் துவங்கிய முதல் இணைய சேவை வழங்குநர் பெங்களூரு STPI ஆகும். இந்நிறுவனம் 1990களின் ஆரம்பத்திலேயே இணைய சேவைகளை வழங்கத் துவங்கியிருந்தது. ஆயினும் இந்த இணைய சேவை பெருநிறுவனங்களுக்கு மட்டுமே அதிகம் பயன்பட்டதாய் இருந்தது. 1995 ஆம் ஆண்டின் இறுதியில் VSNL பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தத்தக்க தொலைபேசிக் கம்பிவழி இணைய சேவைகளை அறிமுகப்படுத்திய பின் தான் இந்நிலை மாறியது. இப்போது பெங்களூரு தான் இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான அகலப்பட்டை இணைய இணைப்புகள் கொண்ட நகரமாக உள்ளது. கூடுதல் பார்வைக்கு பெங்களூரு சுற்றுலாத் தளங்கள் கர்நாடகா நம்ம மெட்ரோ மேற்கோள்கள் வெளி இணைப்புகள் புருகத் பெங்களூரு மகாநகர பாலிகே - (மாநகராட்சி) பெங்களூரு ஒருமுகச் சேவை வலைமனை லால்பாக் தாவரவியல் பூங்கா, பெங்களூரு பெங்களூரு / பெங்களூரு நகர இணையதளம் பெங்களூரு நிகழ்வுகள் பகுப்பு:இந்தியாவின் மெட்ரோ நகரங்கள் பகுப்பு:கருநாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் பகுப்பு:இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள் பகுப்பு:கர்நாடகாவிலுள்ள மாநகரங்கள் பகுப்பு:பெங்களூர் நகர மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்
எயிட்சு
https://ta.wikipedia.org/wiki/எயிட்சு
பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும், இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்ற நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்களை இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது இத்தகைய நோய்ப்பரப்புதல் ஆசனவாய், யோனிக் குழாய் அல்லது வாய் வழி கொள்ளும் உடலுறவினாலோ, இரத்ததானத்தினாலோ, கிருமி பாதித்த ஊசிகளின் உபயோகத்தினாலோ, தாயிடமிருந்து குழந்தைக்கு கருத்தரிப்பு, பிரசவம், பாலூட்டுதல் போன்றவைகளினாலோ அல்லது வேறெந்த வகையிலாவது மேற்சொன்ன உடல்திரவங்களைச் சாரும்பொழுதோ ஏற்படக்கூடும். எயிட்சு தற்பொழுது ஒரு பரவல் தொற்று நோயாகும். 2007-ல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் எயிட்சோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது. இம்மரணங்களில் நான்கில் மூன்று பகுதி ஆப்பிரிக்காவின் சகாராவுக்கருகில் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து மனித மூலதனத்தைச் சிதைத்திருக்கிறது. மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆப்பிரிக்காவில் எச்.ஐ.வி. தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது,. எயிட்சு முதன்முதலில் அமெரிக்காவின் நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் 1981-ல் கண்டறியப்பட்டது. 1980-களின் முற்பகுதியில் இந்நோய்க்கான காரணம் எச்.ஐ.வி. எனக் கண்டறியப்பட்டது. எச்.ஐ.வி. எயிட்சுக்கான சிகிச்சை, நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வல்லதாயிருந்தாலும் தற்சமயம் இந்நோய்க்கு தடுப்பூசியோ நிரந்தர தீர்வோ இல்லை. மீளூட்டுநச்சுயிரி எதிர்மருந்து எச்.ஐ.வி. நோயின் இறப்புவிகிதத்தையும், பாதிப்பு விகிதத்தையும் குறைக்க வல்லதாயிருந்தாலும் இம்மருந்துகள் விலையுயர்ந்தனவாகவும், கிடைப்பதற்கு அரியனவாகவும் இருப்பதால் அனைத்து நாடுகளிலும் வாடிக்கையாக கிடைப்பதில்லை. இந்நோயை குணப்படுத்துவதற்கு உள்ள இத்தகைய இடர்பாடுகளால், நோய் வராமல் தடுத்தலே இப்பரவல் தொற்றுநோயைக் கட்டுபடுத்துவதிலுள்ள முக்கிய குறிக்கோள் எனக்கருதி வைரசின் பரவலைத் தடுக்க சுகாதார நிறுவனங்கள் பாதுகாப்பான உடலுறவையும், புதிய ஊசிகளை பயன்படுத்துதலின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர். இந்தக் கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள சுருக்கங்கள் எயிட்சு : பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் அறிகுறிகள் எச்.ஐ.வி. : மனிதனின் எதிர்ப்பாற்றல் குறைப்பு வைரசு CD4+ : "சி.டி.4"+ "டி" உதவிச்செல்கள் CCR5 : கீமோகைன் [[[கார்பன்]]-கார்பன் வடிவ அமைப்பு] ஏற்பி-5 CDC : நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் WHO : உலக சுகாதார அமைப்பு PCP : நியுமோசிஸ்டிஸ் நுரையீரல் அழற்சி (நிமோனியா) TB : காசநோய் MTCT : தாயிலிருந்து பிள்ளைக்குப் பரவுதல் HAART : மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை STI/STD : பால்வினை நோய்கள் அறிகுறிகள் 450px|thumb|right|சிகிச்சைக்குட்படாத எச்.ஐ.வி. நோய்த்தொற்றின் நச்சுயிரி சுமைக்கும், "சி.டி.4" + உதவிச்செல்கள்களின் எண்ணிக்கைக்குமான தொடர்பு மற்றும் சராசரி சிகிச்சைக்குட்படாத காலத்தில் காணப்படும் எச்.ஐ.வி. எண்ணிக்கைக்கான பொது வரைபடம்;ஒவ்வொரு நோயாளியின் நோய்க்காலத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் காணப்படுகிறது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலமுடைய மனிதர்களில் உருவாகாத சில நிலைகளின் விளைவே எயிட்சு நோயின் அறிகுறிகள் ஆகும்.பெரும்பாலும் இவ்வசாதாரண நோய் நிலைகள் பாக்டீரியா, வைரசு, காளான் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நோய்கிருமிகளின் தாக்கத்தால் ஏற்படுகின்றன. இந்நோய்க் கிருமிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் எச்.ஐ.வியால் சீரழிக்கப்படுவதே நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்குக் காரணமாகும். வாய்ப்பை எதிர்நோக்கிய நோய்த் தொற்றுக்கள் எயிட்சு கண்ட மனிதர்களில் மிகுதியாகக் காணப்படுகிறது. எச்.ஐ.வி. கிட்டத்தட்ட அனைத்து உறுப்பு மண்டலங்களையும் பாதிக்கிறது. எயிட்சு நோய் கண்டவர்களுக்கு காபோசியின் சதைப்புற்று, கருப்பை முகப்பு புற்றுநோய், நிணத்திசுப் புற்று என்றழைக்கப்படும் நோய் எதிர்ப்பு மண்டல புற்றுநோய் போன்ற புற்று நோய்கள் எளிதாக தாக்கும் தன்மை உள்ளது. கூடுதலாக எயிட்சு நோய் கண்டவர்களில் உடலளாவிய நோய் அறிகுறிகளான காய்ச்சல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில்) வீங்கிய சுரபிகள், நடுக்கம், தளர்ச்சி மற்றும் எடை குறைவு போன்றவை காணப்படும். அவரவர் வாழும் நிலப்பகுதியில் நிலவும் நோய் விகிதத்திற்கேற்ப எயிட்சு நோயாளிகள் பிரத்தியேக நோய்தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். thumb|left|260px|எயிட்சு நோயின் பிரதான அறிகுறிகள் சுவாச நோய் தாக்கம் thumb|right|150px|நியுமோசிஸ்டிஸ் நிமோனியாவின் (பிசிபி) எக்ஸ்-ரே. இருபக்க நுரையீரல்களிலும் பிசிபி-யின் குணாதிசயமான அதிகரிக்கப்பட்ட வெள்ளை நிற ஒளிபுகா நிலை காணப்படுகிறது. நியுமோசிஸ்டிஸ் நிமோனியா (முன்பு நியுமோசிஸ்டிஸ் கரினியை நிமோனியா என அழைக்கப்பட்ட காரணத்தால் பிசிபி எனச் சுருக்கி வழங்கப்பட்டு இப்பொழுதும் அவ்வாறே அழைக்கப்படுகிறது). இது ஆரோக்கியமான நோயெதிர்ப்புத்திறன் பெற்றவர்களில் மிக அரிதாகவும், எச்.ஐ.வி. நோயாளிகளில் மிக சாதரணமாகவும் காணப்படுகின்றது. இந்நோய் நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியை எனும் கிருமியினால் ஏற்படுகின்றது. மேற்கத்திய நாடுகளில் சரியான நோய்கண்டறிதல், சிகிச்சைமுறை மற்றும் நோய்க்கட்டுப்பாடு கண்டறியப்படும் முன்னர் இந்நோயே உடனடி மரணத்திற்கு காரணமாய் இருந்தது. "சி.டி.4" எண்ணிக்கை ஒரு மைக்ரோ லிட்டர் ரத்ததில் இருநூறு செல்களுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே நோய்த் தாக்கும் அபாயம் உள்ள போதிலும், வளர்ந்து வரும் நாடுகளில் எயிட்சு நோய் பரிசோதிக்கப்படாத நபர்களில் இந்நோய் எயிட்சின் முதல அறிகுறியாக உள்ளது. காசநோய் எச்.ஐ.வியோடு தொடர்புடைய நோய் தாக்கங்களில் தனித்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இது நோய் எதிர்ப்புத்திறன் உள்ள மனிதர்களுக்கும் சுவாசம் வழியாகப் பரவக்கூடியது. இந்நோய் கண்டறியப்படும் பட்சத்தில் எளிதாகக் குணப்படுத்தமுடியும். இந்நோய் எச் ஐ வி - யின் ஆரம்ப நிலையில் ஏற்படலாம். சிகிச்சையின் மூலம் குணப்படுத்த வல்லது. இருப்பினும், பன்மருந்துஎதிர்ப்பு ஒரு அதீத பிரச்சனையாகவே உள்ளது. காசநோய் தாக்கம் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் நேரடி சிகிச்சை முறை மற்றும் ஏனைய மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளினாலும் குறைந்துவருகின்றது. ஆனால் எச்.ஐ.வி. பரவியுள்ள வளர்ந்துவரும் நாடுகளில் இத்தகைய மாற்றம் இல்லை. எச்.ஐ.வி-யின் ஆரம்ப நிலையில் ("சி.டி.4" எண்ணிக்கை > 300 செல்கள்/மைக்ரோ லிட்டர்), காசநோய் ஒரு வரையறுக்கப்பட்ட சுவாசநோயாக வெளிப்படுகிறது. எச்.ஐ.வி. நோய்த்தாக்கம் அதிகரிக்கும்பொழுது, காசநோய் சுவாசநோய்த் தன்மையில் இருந்து மாறுபட்டு நுரையீரலுக்கு வெளியே (உட்பரவிய) நோயாக வெளிப்படுகிறது. நோயறிகுறிகள் ஒரே பகுதியில் அல்லாமல், வெகுவாக எலும்பு மஜ்ஜை, எலும்பு, சிறுநீரக மற்றும் இரைப்பைக்குடல் வழி, கல்லீரல், மண்டல நாள முடிச்சு மற்றும் மைய நரம்பு மண்டலம் போன்றவைகளை பாதிக்கின்றது. இரைப்பைக் குடல் கிருமித்தாக்கங்கள் உணவுக்குழல் அழற்சி என்பது உணவு குழலின் (தொண்டையையும் இரைப்பையையும் இணைக்கும் குழல்) கீழ் முனையில் உள்ள படர்சவ்வில் ஏற்படும் அழற்சியாகும். எச் ஐ வி நோய் பாதிக்கப்பட்ட நபர்களில் இது காளான் (கேண்டிடியாசிஸ் )அல்லது வைரசினால் (ஹெர்பெஸ் சிம்ப்லக்ஸ்-1 அல்லது சைட்டோமேகல்லோ வைரசு )ஏற்படும் நோய்த்தாக்கம். அரிய நிகழ்வாக இது மைகோபாக்டீரியாவாலும் ஏற்படும். எச்.ஐ.வி. நோய் தாக்கத்தில் ஏற்படும் நாள்பட்ட வயிற்றுபோக்கிற்கான காரணங்கள் பலவாகும். அவைகளில் பொதுவாக பாக்டீரியாவால் (சால்மனெல்லா ,ஷிகல்லா , லிஸ்டீரியா அல்லது காம்பைலோபேக்டர் ) மற்றும் ஒட்டுண்ணி தாக்கம் மற்றும் அறிய சந்தர்ப்ப நோய்தாக்கங்களான கிரிப்டோஸ்போரிடியாஸிஸ், [[மைக்ரோஸ்போரிடியாஸிஸ்|மைக்ரோஸ்போரிடியாஸிஸ்{ /6}, மைகோபாக்டீரியம் ஏவியம் கூட்டு (எம் எ சி ) மற்றும் வைரசு (ஆஸ்ட்ரோ வைரசு, அடினோ வைரசு, ரோட்டா வைரசு மற்றும் சைட்டோமேகல்லோ வைரசு) சைட்டோமேகல்லோ வைரசு பெருங்குடல் அழற்சியை ஏற்படுத்துகிறது . சில நிகழ்வுகளில், எச் ஐ வி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பக்கவிளைவாகவோ அல்லது எச் ஐ வி நோயின் தொடர்விளைவாகவோ வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.இது பெரும்பாலும் ஆரம்ப கால நோயின் குணாதிசயமாக இருக்கிறது.எதிருயிரிணியைப் பயன்படுத்தி கிளாஸ்ற்றிடியம் டிபிசில் போன்ற பாக்டீரியாக்கள் விளைவிக்கும் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த நினைக்கும் போதும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எச் ஐ வி நோயின் பிந்தைய காலங்களில் ஏற்படும் வயிற்றுப்போக்கானது உணவு பாதையின் சத்துக்களை கிரகிக்கும் திறனில் ஏற்படும் மாற்றத்தால் விளைந்து எச் ஐ வி யின் உடலை இளைக்க வைக்கும் தன்மைக்கு துணைபோவதாய் இருக்கிறது. நரம்பு மண்டல மற்றும் மனநல தொடர்பு இந்நோயின்போது நாளடைவில் பலகீனமாகி விட்ட நரம்பு மண்டலத்தை நுண்ணியிரிகள் தாக்குவதின் மூலமாகவோ அல்லது நேரடி நோய்ப்பிணியின் காரணமாகவோ விதவிதமான மூளைநரம்பு விளைவுகள் ஏற்படலாம். ஒருவகை ஓரணு ஒட்டுண்ணி நோய் (டாக்சாப்பிளாசுமம்) ஒரு செல் ஒட்டுயிரியான டாக்சோபிளாசுமா காண்ட்டையால் ஏற்படுகிறது. இது பொதுவாக மூளையைத் தொற்றி டாக்சோபிளாசுமா மூளையழற்சியையும், கண்கள் மற்றும் நுரையீரலின் வியாதிகளையும் ஏற்படுத்தவல்லது. கிரிப்டோகாக்கல் மெனிஞ்சைடிஸ் எனப்படும் மூளைச்சவ்வு அழற்சி கிரிப்டோகாக்கஸ் நியோபார்மன்சு எனும் காளான் மூளை மற்றும் தண்டுவடத்தை சூழ்ந்துள்ள மூளை உறையைத் தொற்றும்போது ஏற்படுகிறது. இது காய்ச்சல், தலைவலி, மயக்கம், வாந்தி எடுக்கவேண்டும் என்ற உணர்வு மற்றும் வாந்தியை ஏற்படுத்தலாம். நோயாளிகளுக்கு வலிப்பு மற்றும் மன குழப்பத்தையும் ஏற்படுத்தலாம். சிகிச்சை அளிக்கத் தவறினால் மரணமும் ஏற்படலாம். தீவிர பல்குவிய வெள்ளையணு மூளையழற்சி (PML) என்பது மூளையின் நரம்பணுவால்களை சூழ்ந்துள்ள மையலின் நரம்புறையை படிப்படியாக அழித்து நரம்புகளில் அனிச்சை விளைவுக் கடத்தலைப் பாதிக்கும் [[நரம்புறை சிதைவு நோயாகும். இந்த நோயானது 70 சதவிகித மக்களிடையே உட்புதை நிலையையிலுள்ள நச்சுயிரியான ஜே சி வைரசால் நோயெதிர்ப்பு சக்தியற்ற எயிட்சு நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்படுகிறது. இந்நோய் விரைவாக முன்னேறி பெரும்பாலும் கண்டுபிடித்த சில மாதங்களுக்குள்ளேயே மரணத்தை ஏற்படுத்தவல்லது. எயிட்சு மறதிநோய் தொகுப்பு என்பது எச் ஐ வி நோய்த்தொற்றால் தூண்டப்பட்டு எச் ஐ வி தொற்றிய மூளை, பெருவிழுங்கிகள் மற்றும் மைக்ரோகிளையாவின் நோயெதிர்ப்புத்திறன் ஊக்கத்தால் கிளர்ந்தெழும் ஒரு வளர்சிதைமாற்ற மூளையழற்சி நோயாகும். இவ்விதமான செல்கள் எச் ஐ வி யால் வளமாக தொற்றப்பட்டு நோயாளினதும் நச்சுயிரினதுமான நரம்புநச்சை சுரக்கின்றன. பிரத்தியேக நரம்புக் கோளாறுகள் எச் ஐ வி நோய் தொற்றி பல வருடங்கள் களித்து வெளிவந்து அறிவு, நடவடிக்கை மற்றும் வெளி நோக்கு நரம்பியக்கத் திறன் குறைபாடுகளைக் கொண்டிருக்கும். இவை குறைந்த "சி.டி.4" + "டி" செல் அளவுகளையும் இரத்தத்தில் அதிக நச்சுயிரி சுமையையும் கொண்டிருக்கும். இதன் பரவல் மேற்கத்திய நாடுகளில் 10 -20 சதவிகிதமும் இந்தியாவில் 1 -2 சதவிகிதமாகும்,. இந்த வித்தியாசம் எச் ஐ வி யின் உள்வகைகளைப் பொருத்ததாகும். எச் ஐ வி நோயாளிகளுக்கு பிந்தைய காலத்தில் எயிட்சுடன் தொடர்புடைய பித்து பிடிக்கக் கூடும். இது நரம்புகளின் அதிர்வுகடத்தும் பண்பின் இருமுனைக் கோளாறினால் ஏற்படும் பித்து நிகழ்வுகளைவிட அதிகமான எரிச்சலும், அறியும்சக்தி குறைபாடும், குறைவான வளமான மனநிலையையும் கொண்டிருக்கும். எச் ஐ வி யால் ஏற்படும் பித்து நாள்பட்டதாகவும் இருக்கும். பல்நோக்கு மருந்துகளாலான சிகிச்சையினால் இக்கூட்டு அறிகுறிகள் குறைவாகவே தென்படுகிறது. கட்டிகளும் ஆபத்தான புற்றுகளும் thumb|right|150px|காபோசியின் சதைப்புற்று எச் ஐ வி நோயாளிகள் பலவிதமான புற்று நோய்களுக்கான வாய்ப்பை பெருமளவு கூட்டியிருக்கின்றனர். இது பிரதானமாக புற்றுநோய் திறனுள்ள டி என் ஏ வைரசு களான எப்ஸ்டீன்-பார் வைரசு (EBV), காபோசியின் சதைப்புற்று தொடர்புடைய ஹெர்பிஸ் வைரசு (KSHV) மற்றும் மனித பாப்பில்லோமா நச்சுயிரி போன்றவைகளின் சகத்தொற்றால் ஏற்படுகிறது. காபோசியின் சதைப்புற்று எச் ஐ வி நோயாளிகளில் சாதாரணமாக காணப்படும் கட்டியாகும். இந்த கட்டி 1981 இல் ஓரினச்சேர்க்கையாளர்களிடையே தென்பட்டதே எயிட்சு பரவலின் முதன்மை அறிகுறிகளில் ஒன்றாகும். காமா ஹெர்பிசு வகையைச் சேர்ந்த காபோசியின் சதைப்புற்று தொடர்புடைய ஹெர்பிஸ் வைரசு (KSHV) எனும் நச்சுயிரியால் உருவாக்கப்படும் இது பெரும்பாலும் ஊதா முடிச்சுகளாக தோலில் மட்டுமல்லாது பிற உறுப்புக்களான வாய், உணவு குழாய் மற்றும் நுரையீரலையும் தாக்க வல்லது. உயர் நிலை பி செல் நிணத்திசுப் புற்று க்களான பர்கிட்டின் நிணநீர்ச் சுரப்பிப் புற்று, பர்கிட்ஸ் லைக் நிணநீர்ச் சுரப்பிப் புற்று, டிஃப்யூஸ் லார்ஜ் பி -செல் நிணநீர்ச் சுரப்பிப் புற்று, மற்றும் பிரைமரி சென்ட்ரல் நர்வஸ் சிஸ்டம் நிணநீர்ச் சுரப்பிப் புற்று ஆகியன எச் ஐ வி நோயாளிகளில் பெரும்பான்மையாக காணப்படுகின்றன.இத்தகைய புற்றுக்கள் மோசமான முன்னறிவித்தலை அறிவிக்கின்றன. சில நிலைகளில் இத்தகைய நிணத்திசுப்புற்றுகள் எயிட்ஸினை விவரிப்பதாக அமைந்துள்ளன. எப்ஸ்டீன்-பார் வைரசு(EBV) இத்தகைய நிணத்திசுப்புற்றுகள் பலவற்றை உருவாக்குகிறது. எச் ஐ வி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை முகப்பு புற்றுநோயும் எயிட்ஸினை விவரிப்பதாக உள்ளது. இது மனித பேபில்லோமா வைரசினால் (HPV) ஏற்படுத்தப்படுகிறது. மேலே கூறப்பட்ட எயிட்ஸினை விவரிக்கும் கட்டிகளைத்தவிர எச் ஐ வி நோயாளிகள் ஹாட்ஜ்கின்'சு நோய் மற்றும் மல துவார மற்றும் ஆசன வாய் புற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் மார்பக புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியன எச் ஐ வி நோயாளிகளில் அதிகம் காணப்படுவதில்லை. எயிட்சு நோய் சிகிச்சைக்கு மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை அதிகம் உபயோகிக்கப்படும் இடங்களில் எயிட்ஸோடு தொடர்புடைய ஆபத்து வாய்ந்த புற்றுக்களின் தென்படுதல் குறைகிறது. ஆனாலும் எச் ஐ வி நோயாளிகள் மரணத்திற்கு ஆபத்தான புற்றுக்களே மிக முக்கிய காரணமாக விளங்குகிறது [62]. ஏனைய சந்தர்ப்பவாத தொற்றுக்கள் பால்வினை (எயிட்சு) நோயாளிகளிடம் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நோய்த்தொற்றுகளால் மிதமான காய்ச்சல், எடை குறைவு போன்ற இனம் புரியாத நோய் அறிகுறிகளைக் காணலாம். இது மைகொபேக்டீரியம் ஏவியம்,மைகொபேக்டீரியம் இண்டர்செல்லுலரே மற்றும் சைடோமெகலோவைரசு(CMV) போன்ற தொற்றுக்களை உள்ளடக்கியது. CMV பெருங்குடல் அயர்ச்சியையும், சி எம் வி விழித்திரை அழற்சியையும் உருவாக்கி பார்வையின்மையை ஏற்படுத்த வல்லது. நோய் பரவியுள்ள தென் கிழக்கு ஆசியாவில் பெனிசிலியம் மார்ணபீ தோற்றுவிக்கும் பெனிசிலினோசிசு நோய், எக்ஸ்ட்ரா பல்மனரி டியுபர்குளோசிஸ் மற்றும் கிரிப்டோகாகோசிசு க்கு அடுத்தப்படியாக எச் ஐ வி நோயாளிகளை அதிகம் தாக்கும் சந்தர்ப்பவாத நோய்த்தொற்றாக இருக்கிறது. காரணம் right|thumbnail|300px|எச் ஐ வி -1 இன் ஒளி நுண்ணொளி எலக்ட்ரான் நுண் வரைபடம், பச்சை நிறத்துடன், வளர்க்கப்பட்ட நிண அணுவிலிருந்து வெளிப்படுகிறது. எச் ஐ வி நோய்த்தொற்றின் மிகக் கடுமையான உந்துதலில் விளைவதே எயிட்சு நோயாகும். எச் ஐ வி என்பது நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய உறுப்புகளான டி செல்களின் உட்பிரிவான சி.டி 4 + "டி" செல்கள், பெருவிழுங்கிகள் மற்றும் நரம்பு இழை செல்களைத் தொற்றும் ஒரு மீள்ஊட்டு நச்சுயிரியாகும் (Retrovirus). அது சி.டி 4+ "டி" செல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ அழிக்கிறது. இரத்தத்தில் ஒரு மைக்ரோலிட்டருக்கு, இருநூறு செல்களே இருக்கும் அளவிற்கு சி.டி4+ "டி" செல்களின் அளவு எச் ஐ வி யால் அழிக்கப்பட்ட உடன் செல்வழி நோயெதிர்ப்பு ஒழிக்கப்படுகிறது. இரத்தத்தில் மீதமிருக்கும் சி.டி4+ "டி" செல்களின் அளவைப்பொருத்தும், மேலே குறிப்பிட்டதைப் போல ஏனைய தொற்றுக்களினைப் பொருத்தும் தீவிர எச் ஐ வி தொற்று நாளடைவில் நோய் உட்புதை எச் ஐ வி தொற்றாகவும், அதன்பின்னர் ஆரம்ப அறிகுறிகளுடைய எச் ஐ வி தொடராகவும், இறுதியாக எயிட்சாகவும் முன்னேறுகிறது [69]. மீள்ஊட்டு நச்சுயிரி எதிர்ப்புமருந்து உபயோகப்படுத்தாத பொழுது எச் ஐ வி எயிட்சாக முன்னேறுவதற்காகும் கால இடைநிலை ஒன்பது முதல் பத்து வருடங்களாகவும், எயிட்சு உருவான பின்னர் உயிர்வாழும் காலத்தின் இடைநிலை 9.2 மாதங்களே மட்டுமாகவும் உள்ளது [71]. எனினும், மருத்துவ குணாதிசயங்களுடனான வியாதியாக முன்னேறும் வேகம் மனிதர்களுக்கிடையே இரு வாரங்கள் முதல் இருபது வருடஙகள் வரையிலான மாறுபட்ட காலஅளவை உடையதாய் காணப்படுகிறது. நோய் வளர்ச்சியின் வேகத்தை பல காரணிகள் நிர்ணயிக்கின்றன. இதில் நோயாளியின் நோயெதிர்ப்புசக்தி எனும் எச் ஐ வி யிலிருந்து உடலைப் பாதுகாக்கும் காரணிகளும் அடங்கும்,. வயதானவர்கள் பலகீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டுள்ளதால் அத்தகையோரில் நோய் முற்றல் மிக விரைவாக நடக்கும் ஆபத்தைப் பெற்றிருக்கின்றனர். மருத்துவவசதியின்மை மற்றும் காசநோய் போன்ற சகத்தொற்று நோய்கள் ஆகியன விரைவான நோய் முற்றுதலுக்கு வழிவகுக்கின்றன,. நோய்த்தாக்கிய மனிதனின் மரபணு பாரம்பரியம் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே சிலர் குறிப்பிட்ட சில வகை எச் ஐ வி கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தி உடையவர்களாயிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒத்த மரபு நிலை CCR5-Δ32 மாறுபாடு உடையவர்கள், சில எச் ஐ வி வகைகளுக்கு எதிர்ப்பு சக்தியை உடையவர்களாய் இருக்கின்றனர். எச் ஐ வி மரபியல் மாறுபாடுகள் உடையதாக இருப்பதால் பல்வேறு வகைகளாக தோன்றி நோய்முற்றலில் வேறுபட்ட வேகத்தை கொண்டனவாய் இருக்கிறது,. உடலுறவின் வாயிலாக பரவுதல் ஒருவரின் உடல் திரவங்களோடு இன்னொருவரின் ஆசனவாய், பிறப்புறுப்பு அல்லது வாயின் உட்பகுதியில் உள்ள படர்சவ்வு படலம் தொடர்பு கொள்ளும் பொழுது இது ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு பரவுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவில் ஏற்றுக்கொள்ளுபவர்களுக்கு, செருகச் செய்பவர்களை விட ஆபத்து அதிகமாயும், பாதுகாப்பற்ற ஆசனவாய் வழி உடலுறவு மேற்கொள்ளுபவர்களுக்கு, பிறப்புறுப்பு வழி மற்றும் வாய் வழியேயான உடலுறுவு மேற்கொள்பவர்களை விட நோய்த் தொற்றும் ஆபத்து அதிகமாயும் காணப்படுகிறது. எனினும், செருகச் செய்பவர்களுக்கும், ஏற்றுக்கொள்ளுபவர்களுக்கும் நோய் பரவும் ஆபத்து சம அளவில் இருப்பதால், வாய்வழி உறவும் பதுகாப்பானதென்று கூறுவதற்கில்லை,. பலவந்தபடுத்தி உடலுறவு கொள்ளுதல் ஆணுறை பயன்படுத்தாமலேயே கொள்ளப்படுவதாலும், யோனிக்குழாய்க்கு அதிக சேதம் விளைவிப்பதாலும் எச் ஐ வி பரவுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்கிறது. ஏனைய பாலியல் நோய்த்தொற்றுக்கள் (STI) பிறப்புறுப்புகளில் நுண்ணிய அரிமான புண்களை ஏற்படுத்தி தோல் மேலணியை சேதப்படுத்துவதன் மூலமும், விந்து மற்றும் யோனி மட கசிவுகளில் சிறுக சிறுக சேர்ந்துகொண்டிருக்கும் எச் ஐ வி தொற்றிய அல்லது தொற்றுக்காளாகும் நிணத்திசுக்கள் மற்றும் பெருவிழுங்கிகளின் மூலமும் எச் ஐ வி யின் கடத்துதலையும் நோய்த்தொற்றுதலையும் அதிகரிக்கச்செய்கிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் நோய்ப்பரவல் குறித்த ஆய்வுகள் பால்வினை நோய்களான சிபிலிஸ், கேன்க்ராய்ட் முதலியவைகளால் உருவாக்கப்படும் பிறப்புறுப்பு அரிமானப் புண்கள், எச் ஐ வி நோய்த்தொற்றை நான்கு மடங்குகள் அதிகரிக்கச் செய்வதாய் கூறுகின்றன. நிண அணுக்கள் மற்றும் பெருவிழுங்கிகளின் கூட்டணியை தன்னைச் சார்ந்த பகுதிகளில் அதிகரிக்கச் செய்வதன் மூலம் மேகவெட்டை நோய், கிளமீடியா மற்றும் ட்ரைக்கொமோனியாஸிஸ் போன்ற பால்வினை நோய்கள் நோய்தொற்றும் அபாயத்தை குறைந்த அளவேனும் அதிகரிக்கச் செய்வதாய் இருக்கின்றன. எச் ஐ வி யின் நோய்பரப்புதல், அதன் நோய்த்தொற்று திறனின் அடையாளக் குறியீட்டைப் பொறுத்தும், நோயில்லாதவரின் நோய்த்தொற்றுக்குள்ளாகும் அபாயத்தைப் பொறுத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. நோயின் நிலையைப் பொறுத்து நோய்த்தொற்றுதிறன் மாறுபடுவதாயும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானதாயும் இருக்கிறது. இரத்தத்தில் நச்சுயிரி சுமை கண்டுபிடிக்க முடியாததாய் இருந்தாலும் விந்து மற்றும் பிறப்புறுப்புக் கசிவுகள் நச்சுயிரியற்று உள்ளன எனச் சொல்வதற்கில்லை. எனினும் இரத்தத்தில் ஏற்படும் ஒவ்வொரு பத்து மடங்கு எச் ஐ வி அதிகரிப்பும் நோய்த்தொற்றை 81 சதவிகிதம் அதிகரிக்கும். இயக்குநீர் மாற்றங்களாலும் பெண்ணுறுப்பின் நுண்ணுயிரிச் சூழலாலும், உடல் இயக்கு இயலினாலும், பெண்கள் எச் ஐ வி நோய்த்தொற்றுக்களாகும் வாய்ப்பையும், பால்வினை நோய்களுக்குள்ளாகும் தன்மையையும் பெற்றிருக்கின்றனர்,. எச் ஐ வி யின் ஒரு மாதிரியால் தொற்றப்பட்டவர்கள் பிற்காலங்களில் வேறு ஆபத்தான மாதிரிகளால் தொற்றக்கூடும். ஒரே முறை உடலுறவினால் நோய்த்தொற்றுவது கடினமாகும். பலருடன் வைத்திருக்கும் நீண்ட கால பாலியல் தொடர்புகளின் போக்குடன், அதிவேகமான நோய்த்தொற்று பரவல் காணப்படுகிறது. இத்தகைய நிலைமை இந்நச்சுயிரி நோய்ற்ற துணைக்குப் பரவி அவரிடமிருந்து பிறருக்கு பரவ வழிவகுக்கிறது. ஒருவர் ஒரு காலகட்டத்தில் இன்னொருவருடன் மற்றுமே உறவு வைத்திருப்பது அல்லது எப்போதாவது நிகழும் உடலுறவுகள் குறைந்த நோய்த்தொற்று வேகத்தைக் கொண்டிருக்கிறது. ஆணோடு பெண் வைத்திருக்கும் உறவின் மூலம் எச் ஐ வி பரவுவது வேற்றிடங்களைவிட ஆப்பிரிக்காவில் அதிகமாக பரவுகிறது. இதற்கான காரணம் ஐம்பது சதவிகித ஆப்பிரிக்க பெண்களின் யோனியின் படர் சவ்வினை சிதைக்கும் குறட்டை நோய் சிஸ்டோஸோமியாசிஸ் எனும் ஒட்டுண்ணி வியாதியாகும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றனAgnès-Laurence Chenine, Ela Shai-Kobiler, Lisa N. Steele, Helena Ong, Peter Augostini, Ruijiang Song, Sandra J. Lee, Patrick Autissier, Ruth M. Ruprecht, W. Evan Secor Acute Schistosoma mansoni Infection Increases Susceptibility to Systemic SHIV Clade C Infection in Rhesus Macaques after Mucosal Virus Exposure PLoS Neglected Tropical Diseases DOI: 10.1371/journal.pntd.0000265. இரத்தத்தின் நோய்க் காரணிகளால் பாதிக்கப்படும்பொழுது thumb|250px|போதைமருந்து உட்கொள்ளுதலுடன் கூடிய எயிட்சு ஆபத்தை விவரிக்கும் 1989 நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய சுவரொட்டி இந்த நோய்த் தொற்றல் வழி பெரும்பாலும் சிரை வழியாக போதைமருந்து போடுபவர்களுக்கும், இரத்தம் உறையாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இரத்ததானம் மற்றும் இரத்த பொருட்கள் தானம் பெறுபவர்களுக்கும் பொருத்தமானது. எச் ஐ வி தொற்றப்பட்ட இரத்தத்தால் கிருமி தாக்கப்பட்ட ஊசிகளை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பலமுறை பயன்படுத்துதல் எச் ஐ வி பரப்ப முக்கியமான காரணமாய் இருக்கிறது. வட அமெரிக்கா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் ஊசிகளைப் பகிர்தலே மூன்றில் ஒரு பங்கு எச் ஐ வி நோய்த் தொற்றுக்கு காரணமாகும். எச் ஐ வி நோயாளி மீது பயன்படுத்தப்பட்ட ஊசியை ஒரே முறை பயன்படுத்துவதால் 150 பேரில் ஒருவருக்கு எச் ஐ வி தொற்றுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. (மேலே அட்டவணை பார்க்க) எச் ஐ வி எதிர் மருந்துகள் மூலம் தொடர்புக்கு பிந்தைய நோய்க்கட்டுப்பாடு முறைகளை மேற்கொள்ளுவதன் மூலம் நோய் தொற்றும் அபாயத்தை மேலும் குறைக்கலாம். பச்சை குத்துதல் மற்றும் துளையிடுதல் ஆகியன மேற்கொள்ளுபவர்களுக்கும் இதே வழிமுறை மூலம் நோய்த்தொற்று நிகழலாம். சப்-சகாரன் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் திகழும் மருத்துவ வசதிக் குறைபாடு மற்றும் போதிய பயிற்சியின்மை போன்றவை இந்நாடுகள் உலகளாவிய நோய்த்தடுப்பு முறைகளை பின்பற்றுவதற்கு ஏதுவாக இல்லை. ஏறத்தாழ இரண்டரை சதவிகிதம் எச் ஐ வி நோய்த்தொற்று பாதுகாப்பற்ற உடல்நலம் பேண பயன்படுத்தப்படும் ஊசிகளால் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் அவை மக்கள் நல பணியாளர்கள் மூலம் எச் ஐ வி பரவுவதைத் தடுக்க நோய்த் தடுப்பு முறைகளைக் கையாளுமாறு உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது. வளர்ந்த நாடுகளில் இரத்ததானத்தின் மூலம் எச் ஐ வி பரவுதல் தரமான நன்கொடையாளர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் எச் ஐ வி நோய் பாதிப்பு ஆய்வின் மூலமும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பான்மையான மக்களுக்கு பாதுகாப்பான இரத்தம் கிடைப்பதில்லை எனவும் உலகளாவிய எச் ஐ வி நோய் பரவலில் ஐந்து சதவிகிதம் முதல் பத்து சதவிகிதம் இரத்ததானத்தின் மூலமும் இரத்தபொருட்கள் தானத்தின் மூலமுமே நடக்கிறது எனவும் உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. பிறப்பு சார்ந்த நோய் பரவுதல் தாயிடமிருந்து குழந்தைக்கு,குழந்தை கருப்பையில் இருக்கும்போதே கர்ப்பகாலத்தின் கடைசி வாரங்களிலும் பிரசவத்தின் போதும் நோய்த் தொற்றல் நடக்கிறது. சிகிச்சை அளிக்காத பொழுது கர்ப்பகாலத்தின் போதோ, பிரசவ வலியின் போதோ அல்லது பிரசவத்தின் போதோ தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவுதல் 25 சதவிகிதமாகும். ஆனால் தாய் ரெட்ரோ வைரல் எதிர் மருந்து சிகிச்சைக்கு உட்பட்டு மகப்பேறு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பொழுது நோய்பரவுதல் வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே. நோய்த்தொற்றும் அபாயம் குழந்தை பெரும் பொழுது தாயின் வைரசு சுமையைப் பொறுத்துள்ளது. வைரசு சுமை அதிகமாக இருப்பின் நோய்த்தொற்றும் அபாயம் அதிகமாக இருக்கும். தாய்ப்பாலூட்டுதலும் நோய்ப் பரவலை நான்கு சதவிகிதம் அதிகரிக்கிறது. தவறான நம்பிக்கைகள் எச் ஐ வி/எயிட்சை சுற்றி பல தவறான கருத்துகள் நிலவுகின்றன. அவற்றுள் சாதாரண தொடுதலின் மூலம் எயிட்சு பரவும், கன்னியுடன் கொள்ளும் உடலுறவு எயிட்சை குணமாக்க வல்லது மற்றும் எச் ஐ வி ஓரினச் சேர்க்கையாளர்களையும் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களையுமே தாக்கும் என்ற மூன்றும் முக்கியமானவை. ஆசனவாய் மூலம் ஓரினச் சேர்க்கையாளர்களிடையே உடலுறவு கொள்வது எயிட்சுக்கு வழிவகுக்கும் என்பதும், பள்ளிகளில் ஓரினச்சேர்க்கை பற்றிய திறந்த கலந்துரையாடல் ஓரினச்சேர்க்கையையும் எயட்சையும் பெருக்கும் என்பன இது போன்ற ஏனைய தவறான எண்ணங்களாகும் [121]. உடல் இயக்க நோய்க்குறி இயல் எயிட்ஸின் உடல் இயக்க நோய்க்குறியியல் ஏனைய கூட்டியங்களைப் போல மிக சிக்கலானது. [124] இறுதியில் எச் ஐ வி "சி.டி.4" + "டி" உதவி நிண அணுக்களை அழித்து எயிட்சை உருவாக்குகிறது. எயிட்சோ நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி வாய்ப்பு எதிர்நோக்கிக் காத்திருக்கும் நோய்த்தொற்றுக்களுக்கு வழிவகுக்கிறது. நோய் எதிர்ப்பு உருவாவதற்கு "டி" நிண அணுக்கள் மிகவும் இன்றியமையாதவை ஆகும். அவை இல்லாத பொழுது நோய்த் தொற்றுக்களை விரட்டவும் புற்று அணுக்களை அழிக்கவும் உடலால் இயலாது. "சி.டி.4" + "டி" செல் அழிவின் முறை தீவிர நோய்நிலையிலும் நாள்பட்ட நோய்நிலையிலும் மாறுபடுகிறது. தீவிர நோய்நிலையில் "சி.டி.4" + "டி" செல்களின் அழிவு, எச் ஐ வி யால் தூண்டப்பட்ட செல் அழிவு மற்றும் செல் நச்சு "டி" செல்களின் நோய்தொற்றிய செல்களைக் கொல்லும் பாங்கு ஆகியவற்றின் வாயிலாக நிகழ்கிறது. திட்டமிடப்பட்ட செல் மரணத்தின் மூலமாகவும் இது நிகழலாம். நாள்பட்ட நோய் நிலையில், உடலளாவிய நோயெதிர்ப்பு தூண்டுதலின் விளைவுகளினால், புது "டி" செல்கள் தயாரிக்கும் வல்லமையை நோயெதிர்ப்பு மண்டலம் படிப்படியாக இழந்து விடும் தன்மையே "சி.டி.4" + "டி" செல்கள் குறைவதற்கு காரணமாய் இருக்கிறது. எயிட்ஸின் பிரதான குணாதிசயமான நோயெதிர்ப்புக் குறைபாட்டின் அறிகுறிகள், மனிதரை நோய்த்தொற்றி பல வருடங்கள் வரை புலப்படாமல் போனாலும் நிண அணுக்களின் புகலிடமான குடற்பகுதி மேல்சவ்வு போன்ற பகுதிகளில், "சி.டி.4" +"டி" செல்களின் பெரும்பான்மை இழப்பு, நோய்த்தொற்றின் முதல் வாரங்களிலேயே ஏற்பட்டுவிடுகிறது. [128]குறிப்பாக குடற்பகுதி மேல்சவ்வு பகுதிகளில் "சி.டி.4" + "டி" செல்கள் அழிக்கப்பட காரணம் ,பெரும்பான்மையான "சி.டி.4" + "டி" செல்கள் CCR5 சக ஏர்புணர்விகளைக் கொண்டிருக்கும். இரத்தத்தில் இருக்கும் "சி.டி.4" + "டி" செல்களோ மிகக் குறைவான CCR5 சக ஏர்புணர்விகளையே கொண்டிருக்கும்.[130] தீவிர நோய் நிலையில் எச் ஐ வி CCR5 சக ஏர்புணர்விகளைக் கொண்டிருக்கும் "சி.டி.4" + செல்களை, தேடிப் பிடித்து அழிக்கிறது. ஒரு பலமான நோயெதிர்ப்பு சக்தி எழும்பி, படிப்படியாக நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தி நோயுட்புதை நிலையைத் தோற்றுவிக்கிறது. ஆரம்ப நோய்நிலையில், உயிருக்கு ஆபத்தான பிற நோய்த்தொற்றுக்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு நிலைத்திருப்பினும், குடற்பகுதி மேல்சவ்வு "சி.டி.4" + "டி" செல்கள் நோய்க்கிருமித்தாக்கம் முழுவதும் அழிந்தவண்ணமே இருக்கும். விடாமல் நடந்துகொண்டிருக்கும் எச் ஐ வி யின் பல்பிரிவாக்கம், நாள்பட்ட நோய் நிலை முழுவதிலும் ஒரு உடலளாவிய நோய் எதிர்ப்பு தூண்டுநிலையைத் தோற்றுவிக்கிறது. நோய் எதிரணுக்களைத் தூண்டி அழற்சி உண்டுபண்ணும் சைடோகைன்களை வெளிவிடும் இத்தகைய நோயெதிர்ப்பு தூண்டுநிலை, எச் ஐ வி மரபணு பொருட்களாலும், எச் ஐ வி பல்பிரிவாக்கத்திற்கு எதிராக எழும் நோய் எதிர்ப்புத் திறன் உருவாக்கத்தாலும் ஏற்படுகிறது.தீவிர நோய்நிலையில் நிலவும் குடற்பகுதி மேல்சவ்வு பகுதிகளின் "சி.டி.4" + "டி" செல்களின் அழிவு ஏற்படுத்தும், உட்சவ்வு வேலி நோயெதிர்ப்பு கண்காணிப்பு ஒழுங்குச்சேதம் மற்றுமொரு காரணமாகும். மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்தைக் குடலின் இயற்கையான நுண்ணுயிரிகளுக்கு கையளித்து விடுகிறது. ஆரோக்கியமான நபர்களிலோ இந்நுண்ணுயிரிகள் உட்சவ்வு நோயெதிர்ப்பு மண்டலத்தால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும். இத்தகைய நோயெதிர்ப்புத் தூண்டுதலால் ஏற்படும், "டி" செல் தூண்டப்படுதலும் அவற்றின் பெருக்கமும் அவற்றை எச் ஐ வி நோய்க் கிருமியின் புதிய இலக்காக்குகின்றன.இரத்தத்தின் "சி.டி.4" + "டி" செல்களில் 0.01-0.10 சதவிகிதம் அளவே நோய்த்தொற்றுக்காளாவதால், "சி.டி.4" + "டி" செல்களின் ஒட்டுமொத்த அழிவிற்கு, எச் ஐ வி யின் நேரடி தாக்குதல் மட்டுமே காரணமாக இருத்தல் இயலாது. நோயெதிர்ப்பு மண்டலம் தூண்டப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது ஏற்படும் திட்டமிடப்பட்ட செல் மரணத்திற்கு ஆளாவதே "சி.டி.4" + "டி" செல் அழிவிற்கு முக்கிய காரணமாகும். இழந்த "டி" செல்களை ஈடுகட்ட வெளிக்கணையமானது புது "டி" செல்களை விடாமல் தயாரித்துக் கொண்டிருந்தாலும், வெளிக்கணைய அணுக்கள் மீதான எச் ஐ வி யின் நேரடி தாக்குதல், வெளிக்கணையத்தின் இழப்பு மீட்புத் தன்மையைப் படிப்படியாக அழித்து விடுகிறது. எனவே நாளடைவில் போதுமான நோயெதிர்ப்புசக்தினிலைக்குத் தேவையான குறைந்தபட்ச "சி.டி.4" +"டி" செல்கள் இல்லாத நிலை ஏற்பட்டு, எயிட்ஸுக்கு வழிவகுக்கிறது. பாதிக்கப்பட்ட செல்கள் எச் ஐ வி நச்சுயிரி எந்த வழியில் நுழைந்தாலும் கீழ்கண்ட செல்களை முதலில் தாக்குகிறது.[135]^ Textbook of Pathology by Harsh Mohan, நிண நாள மண்டலம் : "சி.டி."4+ "டி"-உதவிச் செல்கள் பெருவிழுங்கிகள் ஒற்றைக் குழியங்கள் "பி"-"பி"-நிணநீர்க் குழியங்கள் சில நாள உட்சவ்வு செல்கள் மைய நரம்பு மண்டலம் : நரம்புமண்டலத்தின் மைக்ரோகிளையா ஆஸ்ட்ரோசைட்டுகள் - நரம்பு நார்த்திசுக்கள் ஒலிகோடென்றோசைட்டுகள் நரம்பு செல்கள் - சைடோகைன்கள் மற்றும் ஜி.பி.-120 யின் செயல் மூலம் மறைமுகமாக நோயின் விளைவு இந்நச்சுயிரிக்கு உயிரணு தாக்கும் பண்பு உள்ளது. ஆனால் அது எவ்வாறு நடைபெறுகிறது என்பது இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. இது நீண்ட காலங்கள் செல்களில் செயலற்று இருக்கும் வல்லமையையும் பெற்றுள்ளது. இந்த பண்பு "சி.டி."4-ஜி.பி. 120 இடையே நடக்கும் பின்னிய செயல்விளைவால் நிகழ்கிறதென எண்ணப்படுகிறது. எச் ஐ வி வைரசின் மிக முக்கிய விளைவு, "டி"-உதவி செல்களின் வீழ்ச்சியும் அழிவும் ஆகும். செல்லானது கொல்லப்படுகிறது அல்லது செயல்பட முடியாத அளவிற்கு சிதைக்கப்படுகிறது. (இவை வெளிப்புரதங்களுக்கு சவாலாக இருப்பதில்லை). நோய்த்தொற்றிய "பி" செல்களாலும் எதிர்ப்பான்களை தயார் செய்ய இயல்வதில்லை. இவ்வாறாக நோயெதிர்ப்பு மண்டலம் வீழ்ச்சியடைந்து நோய்த்தொற்றுக்கள் மற்றும் புற்றுக்கட்டிகள் போன்ற பிரத்தியேக எயிட்சு சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது (மேலே பார்க்க). மைய நரம்பு மண்டலத்தின் செல்களில் ஏற்படும் நோய்த்தொற்று தீவிர கிருமிகளற்ற மூளை உறை அழற்சியையும், தீவிரக்குறைவான மூளை அழற்சியையும் வெற்றிட தண்டுக்கொழுப்பழற்சியையும் புற எல்லை நரம்பழற்சியையும் ஏற்படுத்துகிறது. பின்னர் அது எயிட்சு நோய் புத்தி சுவாதீனமின்மையைத் (எயிட்சு பித்து) தோற்றுவிக்கிறது. "சி.டி."4-ஜி.பி.120 இன் பின்னிய செயல்விளைவு (மேலே பார்க்க) சைடோமகேலோ வைரசு, கல்லீரல் அழற்சி வைரசு மற்றும் ஹெர்பிஸ்சிம்ப்ளெக்சு வைரசு போன்ற நச்சுயிரிகளுக்கு அனுமதியளிக்கும் காரணத்தால் செல் சிதைவு வலுப்பெறுகிறது. மரபணு அடிப்படை விரிவான விளக்கத்திற்கு கீழ் காண்பவற்றைக் காண்க: எச் ஐ வி யின் அமைப்பும் மரபணுக் கோர்வையும் எச் ஐ வி யின் பல்பிரிவாக்கச் சுழற்சி. எச் ஐ வி யின் நகரும் விளைவு'' நோய் நிர்ணயம் எச் ஐ வி யினால் தாக்கப்பட்ட மனிதர்களில் நோய் கண்டறிதல் சில நோய் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டது. ஜூன் 5,1981-லிருந்து எச் ஐ வி யின் நோய்த் தோன்று வழி ஆய்தல் மற்றும் நோய் அழிவு ஆய்தலைப் பற்றி, பேங்குய் வரையறை மற்றும் 1994 இன் உலக சுகாதார நிறுவனத்தின் விரிவான எயிட்சு நோய்க்கான வரையறை, போன்ற பல வரையறைகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.ஆனாலும் இவ்வரையறைகள் நுட்பமற்றதாகவும் பிரத்யேகமற்றதாகவும் இருப்பதினால் நோயாளிகளை அவரவர் நோய்நிலைப்படி வகைப்படுத்துதல் இவற்றிற்கு தேவையற்றது. வளரும் நாடுகளில் நோய் மற்றும் ஆய்வக ஆராய்ச்சி ஆதாரக் கூறுகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட எச் ஐ வி தொற்று மற்றும் நோய்க்கான உலக சுகாதார நிறுவன வகைப்பாட்டு முறையும், வளர்ந்த நாடுகளில் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் நோய்ப்பகுப்பு முறையும் பின்பற்றப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பு நோய் நிலை நிர்ணயம் 1990 இல் உலக சுகாதார நிறுவனம் இந்நோய்த் தொற்றுகளையும் நிலைகளையும் ஒன்றுபடுத்தி எச் ஐ வி-1 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான வகைப்பாட்டு முறையை அளித்துள்ளது. இது, செப்டம்பர் 2005 இல் மறுவரையறுக்கப்பட்டது. இந்நோய் நிலைகள் பெருமளவு ஆரோக்கியமான மனிதர்களில் எளிதாகக் குணப்படுத்தவல்ல சந்தர்ப்பவாத நோய்த் தொற்றுக்களேயாகும். நிலை I: எச் ஐ வி நோய்த் தொற்று அறிகுறிகளற்றதாக இருக்கிறது. இதை எயிட்சு என்று கூறமுடியாது. நிலை II: இது தோல் மற்றும் உட்சவ்வு வெளிப்பாடுகளையும் திரும்பத் தோன்றும் மேல் சுவாச பாதையின் நோய்த் தொற்றுக்களையும் கொண்டிருக்கும். நிலை III: ஒரு மாதத்துக்கு மேலாக இருந்துகொண்டிருக்கும் காரணம் கூற இயலாத நாள்பட்ட வயிற்றுப்போக்கு, கடுமையான பாக்டீரியாக்களின் தொற்று மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட காசநோயைக் கொண்டிருக்கும். நிலை IV: இது மூளையில் டாக்சோபிளாசுமோசிசையும், உணவுக் குழாய், மூச்சுக் குழாய், சிறு மூச்சுக் குழாய், நுரையீரல் போன்றவற்றில் கேண்டிடியாசிசு, காபோசியின் சதைப்புற்று ஆகியவற்றையும் கொண்டிருக்கும். இந்நோய்கள் எயிட்சின் அறிகுறிகளாகத் திகழ்பவை. நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் வகைப்பாட்டியல் முறை நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களால் எயிட்சைக் குறித்து இரு வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. முதலாவது வரையறை, எயிட்சினை அதனுடன் சம்பந்தப்பட்ட நோய்களின் அடிப்படையில் வகுக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, எச் ஐ வி யின் கண்டுபிடிப்பாளர்கள், அதற்கு அப்பெயரை இடுவதற்கு காரணமாய் இருந்த நோயானது நிணநீர்ச் சுரப்பி நோயாகும் [142][144]. 1993 இல் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் எயிட்சின் வரையறையை "சி.டி.4" + "டி" செல்களை, ஒரு மைக்ரோ லிட்டர் இரத்தத்தில் இருநூறுக்கும் குறைவாகவோ அல்லது அனைத்து நிண செல்களின் எண்ணிக்கையில் பதினான்கு சதவிகிதத்திற்கு குறைவாகவோ பெற்றிருக்கும் அனைத்து எச் ஐ வி நேர்மறை மக்களும் எயிட்சில் அடங்குவர் என எயிட்சின் வரையறையை விரிவாக்கம் செய்திருக்கிறது [146]. வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான எயிட்சு நோயாளிகளுக்கு இந்த வரையறையையோ, அல்லது 1993 க்கு முந்தைய வரையறையையோ பயன்படுத்துகின்றனர். இத்தகைய எயிட்சு நோய் நிர்ணயம், சிகிச்சைக்கு பின்னர் இரத்தத்தின் 1 மைக்ரோ லிட்டருக்கு, "சி.டி.4" + "டி" செல்களின் எண்ணிக்கை இருநூறை விட அதிகரித்தாலும் அல்லது எயிட்சு இருப்பதைப் பறைசாற்றும் ஏனைய நோய் அறிகுறிகள் குணமாக்கப்பட்ட பின்னரும் நிலைத்து நிற்கிறது. எச் ஐ வி சோதனை எச் ஐ வி யால் தொற்றப்பட்டிருப்பதை பல மக்கள் அறியாதிருக்கின்றனர். உடலுறவு கொள்ளும் நகர மக்கள்தொகையில் 1சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே, எச் ஐ வி சோதனைக்கு உட்பட்டிருக்கின்றனர். கிராமங்களில் இந்த விகிதம் இன்னும் குறைவானதாகும். மேலும் நகர நல வாரியங்களுக்கு வருகை தரும் 0.5 சதவிகித கர்ப்பிணிப் பெண்களே அறிவுறுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு சோதனை முடிவுகளைப் பெற்றுக் கொள்கின்றனர். கிராம நல வாரியங்களில் இது இன்னும் குறைவாயிருக்கிறது.. எனவே மருத்துவம் மற்றும் மருத்துவ ஆய்வில் பயன்படுத்தப்படும் கொடையாளரின் இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்கள் நோய் பாதிப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. எச் ஐ வி சோதனைகள் பெரும்பாலும் தமனி இரத்தத்திலேயே நடத்தப்படுகின்றன. பெரும்பாலான ஆய்வகங்கள் எதிர் எச் ஐ வி எதிர்க் காரணிகளையும் (IgG மற்றும் IgM), எச் ஐ வி p24 நோய் எதிர்ப் புரதத்தையும் கண்டறியும், நான்காம் தலைமுறை நோய் பாதிப்பாய்வு சோதனைகளை பயன்படுத்துகின்றன. முந்தைய சோதனையில் எதிர்மறையென கருதப்பட்ட நோயாளியிடம் எச் ஐ வி எதிர்காரணியோ அல்லது எதிர்ப்புரதமோ கண்டறியும் பட்சத்தில் அது எயிட்சு நோய்க்கு சான்றாக எண்ணப்படும்.நோயாளிகளின் முதலாம் மாதிரி எயிட்சு நோய்க்கூறுகளை வெளிப்படுத்தினால் அவர்கள் அதனை உறுதிப்படுத்தும் படிக்கு அவர்கள் பிறிதொரு இரத்த மாதிரி மூலம் இரண்டாம் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். முதலாம் நோய்த்தொற்றிற்கும் அதற்கு எதிராகக் கண்டுபிடிக்கவல்ல நோய் எதிர்க்காரணிகள் உருவாகும் காலத்திற்கும் இடைப்பட்ட காலமான ஜன்னல் காலம் ஊனீர் மாற்றமடைந்து நேர்மறைஎன சோதித்தறிவதற்கு 3–6 மாதங்கள் பிடிக்கும். ஜன்னல் காலத்தில் பாலிமரேஸ் தொடர் விளைவின் மூலம் இந்நச்சுயிரியைக் கண்டுபிடித்தல் சாத்தியமான ஒன்றாகும்.இதன் மூலம் நான்காம் தலைமுறை EIA நோய்பாதிப்பாய்வைவிட விரைவாக நோய்த்தொற்று கண்டுபிடிக்கப் படுகிறதென ஆய்வுகள் கூறுகின்றன. பாலிமரேஸ் தொடர் விளைவின் மூலம் நேர்மறையென அறிவிக்கப்பட்ட முடிவுகள் எதிர்க்காரணி சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. எச் ஐ வி யால் தொற்றப்பட்ட தாய்க்குப் பிறந்த பச்சிளம் குழந்தைகளில் நடத்தப்படும் வழக்கமான எச் ஐ வி சோதனைகள் குழந்தையின் இரத்தத்தில் இருக்கும் தாய் வழி நோய் எதிர்க்காரணிகளால் நம்பத் தகுந்தவை அல்ல. எனவே குழந்தையின் நிண அணுக்களில் அமையப்பெற்றிருக்கும் எச் ஐ வி முன் நச்சுயிரியின் டி என் ஏ யை சோதித்தறியும் பாலிமரேஸ் தொடர் விளைவின் மூலமே நோய்த்தொற்றைக் கண்டுபிடிக்க இயலும். தடுக்கும் முறைகள் +ஒவ்வொரு செயலுக்கும் ஏற்படக்கூடிய எச் ஐ வி நோய் தாக்கத்திற்கான அபாய நிர்ணயம்எச் ஐ வி நோய்க்கு ஆளாகும் வழிநோய்த்தாக்கதிர்க்காளாகும் வழி நோய்த்தொற்றுமூலத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் ஒவ்வொரு10,000 முறைகளுக்கும் நிர்ணயிக்கப்பட்ட நோய்த்தொற்றுக்கள் இரத்த தானம் 9,000பிரசவம் 2,500போதை மருந்துகள் உட்செலுத்தப் பயன்படும் ஊசி-பகிர்மானம் 67தோலில் செலுத்தப்படும் ஊசிமுனை குச்சிகள் 30ஏற்கும் உடலுறவு* 50செருகும் ஆசனவாய் வழி உடலுறவு* 6.5ஏற்கும் ஆண்குறி-யோனி உடலுறவு* 10செருகும் ஆண்குறி-யோனி உடலுறவு* 5ஏற்கும் வாய்வழி உடலுறவு*§ 1செருகும் வாய்வழி உடலுறவு*§ 0.5* ஆணுறை பயன்படுத்தாத பொழுது §ஆணுடனான வாய்வழி உடலுறவைக் குறிக்கிறது எச் ஐ வி நோய் பரப்பலுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுபவை உடலுறவு, நோய்த்தொற்றிய உடல் திரவங்கள், மற்றும் திசுக்களுடனான தொடர்பு, பிறப்பு சார்ந்த காலகட்டத்தில் தாயிடமிருந்து கருவுக்கோ, குழந்தைக்கோ ஏற்படுவது. நோய்த் தொற்றப்பட்டவர்களின் உமிழ்நீர், கண்ணீர் மற்றும் சிறுநீரில் எச் ஐ வி கண்டுபிடிக்கப்படும் போதிலும் இத்தகைய சுரப்பு நீர்களின் மூலம் நோய்த்தொற்றியதாக எவ்வித பதிவுகளும் இல்லை. இவற்றின்மூலம் நோய்தொற்றும் அபாயம் மிக அற்பமானாதே. உடலுறவு பெரும்பாலான எச் ஐ வி நோய்த்தொற்றுக்கள், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பரப்பப்படுகிறது. உலகம் முழுவதும் எச் ஐ வி நோய் பரப்பலுக்கான முக்கிய காரணம் ஆணும் பெண்ணும் கொள்ளும் உடலுறவினால் விளைவதேயாகும். உடலுறவு நிகழ்வின் போது ஆணுறை அல்லது பெண்ணுறை உபயோகிப்பது மட்டுமே எச் ஐ வி மற்றும் ஏனைய பால்வினை நோய்கள் தொற்றும் அபாயத்தையும் கர்ப்பமடைவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. முறையான ஆணுறை பயன்பாடு வெவ்வேறு பாலரிடையே எச் ஐ வி நோய்த்தொற்றும் அபாயத்தை ஏறத்தாழ எண்பது சதவிகிதம் குறைத்தாலும், ஒவ்வொரு தருணத்திலும் ஆணுறைகளை சரியாக உபயோகப்படுத்தும்போது அதிக பலன் விளைவதாகத் தற்போதைய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மரப்பால் வகை ஆணுறைகளை எண்ணெய் போன்ற வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்துவதே எச் ஐ வி மற்றும் ஏனைய பால்வினை நோய்கள் தொற்றும் அபாயத்தைக் குறைக்க வல்ல ஒரே சிறந்த தொழில்நுட்மாகும். பெட்ரோலியம் ஜெல்லி, வெண்ணெய், பன்றிக் கொழுப்பு போன்ற எண்ணெய் போன்ற வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை உபயோகிப்பது மரப்பாலை கரைத்து துளைத்தன்மையுடையதாக்குமாதலால் இவற்றை உபயோகிப்பது ஏற்றதல்ல என்று ஆணுறை தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கின்றனர். தேவைப்பட்டால் தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை உபயோகிக்கலாம் என்கின்றனர். பாலியூரிதீன் ஆணுறைகளில் வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை உபயோகிக்கலாம் என்று இவர்கள் கூறுகின்றனர். பெண்ணுறை, ஆணுறைக்கு மாற்றாக, பெண்களால் உபயோகப்படுத்தப்படுவது. இது பாலியூரிதீன் கொண்டு தயாரிக்கப்படுவதால் இவற்றோடு எண்ணெய் போன்ற வழுவழுப்பூட்டும் மசகுப் பொருட்களை உபயோகிக்கலாம். இவை ஆணுறைகளை விடப் பெரியதாகவும், விரைப்பான வளையம் போன்ற வாய்பகுதியைக் கொண்டதாகவும் இருக்கின்றன. இவை யோனிக்குள் செருகப்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பெண்ணுறைகள் ஒரு உள் வளையத்தைப் பெற்றிருக்கின்றன. இவ்வளையம் யோனிக்குள் பெண்ணுறை நழுவாத வண்ணம் பார்த்துக் கொள்கிறது. இவ்வளையத்தை அழுத்தும்போது பெண்ணுறை யோனிக்குள் செருகக் கூடியதாய் இருக்கிறது. இருப்பினும் தற்சமயம் பெண்ணுறைகள் கிடைப்பதற்கரியதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. முதல்நிலை ஆய்வுகள் பெண்ணுறைகள் போதிய அளவில் இருக்கும் பொழுது, ஒட்டுமொத்த பாதுகாப்பான உடலுறவு நிகழ்வுகள், பாதுகாப்பற்ற உடலுறவு நிகழ்வுகளோடு ஒப்பிடும் போது அதிகமாகின்றன. இது பெண்ணுறையை முக்கியமான எயிட்சு தடுப்பு யுத்தியாக்குகிறது. இருவரில் ஒருவரை இந்நோய் தாக்கியிருக்கும் பட்சத்தில், விடாது ஆணுறை உபயோகிக்கும் பொழுது, நோய்த்தாக்கம் இல்லாதவரை இந்நோய்த் தொற்றும் வாய்ப்பு வருடம் ஒரு சதவிகிதத்திற்குக் கீழ் என கணவன்-மனைவிகளிடம் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோய்த்தடுப்பு யுத்திகள் அனைத்து வளர்ந்த நாடுகளிலும் நன்கறியப்பட்டுள்ள போதிலும், கணிசமான அளவு இளைஞர்கள் எச் ஐ வி/எயிட்சு பற்றிய அறிவைப் பெற்றிருக்கும் போதிலும், தாங்கள் எச் ஐ வி தொற்றுதலுக்காளாகும் அபாயத்தைக் குறைவாக மதிப்பிட்டு, பேராபத்து விளைவிக்கும் நடவடிக்கைகளில் இறங்குகின்றனர் என ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்காவின் நோய்பரவல் மற்றும் நடத்தை பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கன்றன. ஆண் விருத்தசேதனம் ஈரின மனிதர்களிடையே எச் ஐ வி நோய்த்தொற்று அபாயத்தை அறுபது சதவிகிதம் குறைக்கின்றன என சுற்று மாதிரி கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் போக்கு கணக்கற்ற நடைமுறை, கலாச்சார மற்றும் கருத்து சிக்கல்களை எதிர்நோக்கவேண்டியிருக்குமென்றாலும் இது பல நாடுகளில் உத்வேகத்துடன் பரிந்துரைக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. விருத்தசேதனம் செய்து கொண்டவர்கள் தங்கள் சேதப்படத்தக்க தன்மையை உணராது பாதுகாபற்ற உடலுறவு நடவடிக்கைகளில் இறங்குவது விருத்தசேதனம் செய்ததால் கிடைக்கப்பெற்ற தற்காப்பை இல்லாததாக்கிவிடும் என சில வல்லுனர்கள் கருதுகின்றனர். எனினும், ஒரு சுற்றுமாதிரி கட்டுபடுத்தப்பட்ட சோதனை வயது வந்த ஆண்களின் விருத்தசேதனமானது எச் ஐ வி அபாயத்தை அதிகரிக்கும் நடவடிக்கை அல்ல என்று கூறுகிறது. நோய்பாதிக்கப்பட்டவர்களின் உடல் திரவங்களுடனான தொடர்பு நல ஊழியர்கள் கிருமி பாதித்த இரத்தத்துடனான தொடர்பைக் குறைக்க எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எச் ஐ வி க்கு அவர்கள் ஆளாவதைத் தடுக்கவல்லது.கையுறைகள், முகமூடிகள், பாதுகாப்புக் கண் அணிகள் மற்றும் மூடிகள், அங்கிகள் அல்லது மேலாடைகள் போன்றவை தோல் அல்லது படர்சவ்வுப் படலத்திற்கு இரத்தத்தின் நோய்க்காரணிகளுடனான நேரடி தொடர்பை ரத்து செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும். கிருமிபாதித்த இரத்தத்துடனோ அல்லது உடல் திரவங்களுடனோ ஏற்பட்ட தொடர்புக்குப் பின்னர் தோலை அடிக்கடி சுத்தமாகக் கழுவுதல் நோய்த்தொற்று நிகழும் வாய்ப்பைக் குறைக்கவல்லது. இறுதியாக ஊசிகள், அறுவை கிழி கத்திகள், கண்ணாடிகள் போன்றவைகளை, கிருமிபாதித்தவைகளால் ஏற்படும் ஊசிகுத்து காயங்கள் நிகழாவண்ணம் கவனமாக நீக்கி விடுதல் அவசியமானதாகும். எச் ஐ வி நோய்ப்பரவல் பெரும்பாலும் சிரை வழி மருந்து செலுத்துவதன் மூலம் ஏற்படுவதால் வளர்ந்த நாடுகளில் நடத்தப்பெறும், தீங்கு குறைப்பு யுத்திகளான, ஊசி பரிமாற்ற நிகழ்ச்சி போன்றவை தவறான மருந்து பிரயோகத்தினால் விளையும் நோய்த்தொற்றைக் குறைக்க உதவுகின்றன. தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவுதல் ஏற்றுக்கொள்ளத்தக்க, எளிதாகப் பெற்றுக்கொள்ளவல்ல, நிலையான மற்றும் பாதுகாப்பான, மாற்று உணவு இருப்பின் எச் ஐ வி யால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்கள் சிசுவிற்குத் தாய்ப்பாலூட்டுவதைத் தவிர்க்க வேண்டுமென தற்போதைய பரிந்துரைகள் அறிவிக்கின்றன. எனினும் அவ்வாறு இயலாதப்பட்சத்தில் குழந்தையின் ஆரம்ப கால மாதங்களில் பிரத்தியேக தாய்ப்பால் கொடுப்பதும் பின்னர் முடிந்தவரை விரைவாக அதனை நிறுத்திவிடுதலும் சிறந்தது. தங்களது சொந்த குழந்தைகளல்லாத அந்நிய குழந்தைகளுக்கும் பெண்கள் பாலூட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது; பார்க்க செவிலித்தாய் சிகிச்சை right|thumb|100px|அபாகாவிர் – தலைகீஷ் மரபணு மாற்ற எதிர்வினைப்பொருளின் நியுகிளியோசைட் ஒத்த அமைப்பு செயலி (NARTI or NRTI) thumb|100px|அபாகாவிர் இன் வேதியியல் அமைப்பு எச் ஐ வி அல்லது எயிட்ஸுக்கான தடுப்பூசியோ அல்லது தீர்வோ தற்சமயம் இல்லை. வைரஸுடனானத் தொடர்பைத் தவிர்ப்பதன் மூலமும் அது இயலாத பட்சத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்புக்குப் பின்னர் தொடர்புக்குப் பிந்தைய நோய்க்கட்டுப்பாடு (பி இ பி)என்றழைக்கப்படும் ரெட்ரோவைரல் எதிர்மருந்து சிகிச்சைக்கு உட்படுவதன் மூலமுமே இந்நோயைப் பரப்புதலைக் கட்டுப்படுத்த முடியும். [215] தொடர்புக்குப் பிந்தைய நோய்க்கட்டுப்பாடு (பி இ பி)க்கு மிக அத்தியாவசியமான நான்கு வார வைத்திய கால அட்டவணை உள்ளது. விரும்பத்தகாத பக்க விளைவுகளான வயிற்றுப்போக்கு, தேக அசௌகரியம், வாந்தி எடுக்கவேண்டுமென்ற உணர்வு மற்றும் களைப்பு ஆகியனவற்றை இது ஏற்படுத்தவல்லது. வைரசுக்கெதிரான சிகிச்சை எச் ஐ வி நோய்க்கான தற்போதைய வைத்தியம் அதி தீவிர ரெட்ரோ வைரல் எதிர்மருந்து அல்லது மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையினைக் கொண்டது. புரத நொதி வினைத் தடுப்புப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் 1996 ஆம் ஆண்டு அறிமுகத்திற்குப் பிறகு, இது பல எச் ஐ வி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நன்மை விளைவித்துள்ளது. தற்போதைய அனுகூலமான மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் தேர்வுகள் குறைந்தது மூன்று மருந்துகளை உள்ளடக்கிய, இரண்டு வித ரெட்ரோ வைரல் எதிர்மருந்துகளின் சேர்வுகளைக் கொண்டிருக்கும். இது காக்டெயில்கள் (கலப்பு பானங்கள்)என்று குறிக்கப்படுகிறது.பிரத்தியேக மருத்துவ நியமங்கள், இரு நியுக்ளியோசைடு ஒத்தஅமைப்புச்செயலி தலைகீழ்மரபணுமாற்ற நொதி எதிர்வினைப்பொருட்களையும் (NARTI அல்லது NRTI) மற்றும் புரத நொதி எதிர்வினைப் பொருட்களையோ அல்லது நியுக்ளியோசைடு அல்லாத தலைகீழ்மரபணுமாற்ற நொதி எதிர்வினைப்பொருட்களையோ கொண்டிருக்கும். எச் ஐ வி நோயின் வளர்ச்சிப் போக்கு வயது வந்தவர்களை விட குழந்தைகளையே அதிகம் பாதிப்பதாலும்,குறிப்பாக இளம் சிசுக்களுக்கு ஆய்வக சோதனைக் குறியீடுகள் நம்பத்தகுந்தவையாயில்லாததாலும், சிகிச்சை பரிந்துரைகள் வயதுக்கு வந்தவர்களை விட குழந்தைகளுக்கு மிக வன்மையாக உள்ளன. மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் மருந்து இருப்பில் இருக்கும் வளர்ந்த நாடுகளில்,நச்சுயிரி சுமை, CD 4 இன் சரிவு, மற்றும் நோயாளியின் ஆயத்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் தொடக்க சிகிச்சையைப் பரிந்துரைக்கின்றனர். மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் முக்கிய குறிக்கோள் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, நோய் சிக்கல்களைக் குறைப்பது இரத்தத்தின் எச் ஐ வி அளவை கண்டுபிடிக்க முடியாத அளவிற்குக் குறைப்பது. ஆனால் இது எச் ஐ வி யை குணமாக்கவோ சிகிச்சையை நிறுத்தியவுடன் இரத்தத்தில்ஹார்ட் எதிர்ப்பு சக்தியுள்ள எச் ஐ வி அளவு அதிகமாவதைத் தடுக்கவோ இயலாததாய் இருக்கிறது. மேலும் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையினைப் பயன்படுத்தி எச் ஐ வி யிலிருந்து விடுபடுவதற்கு ஒருவருக்கு அவரது வாழ்நாள் காலமே போதுவதில்லை. இருந்தும், பல எச் ஐ வி நோயாளிகள் தங்கள் பொதுவான உடல்நலத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து எச் ஐ வி யின் இறப்பு விகிதமும், நோயுற்ற விகிதமும் சரிவதற்குக் காரணமாயிருந்திருக்கின்றனர். மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை இல்லாத பொழுது எச் ஐ வி நோய்த்தாக்கம் எயிட்சு ஆக வளர்ச்சியடைவதற்கு ஒன்பது முதல் பத்து வருடங்கள் கால இடைநிலையும் எயிட்சு ஆக மாறியபிறகு உயிர் வாழும் காலத்திற்குரிய கால இடைநிலை 9.2 மாதங்களேயாகவும் இருக்கிறது. மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை உயிர்வாழும் கால இடைநிலையை 4 முதல் 12 வருடங்கள் அதிகப்படுத்தும் என எண்ணப்படுகிறது. ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகளில் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை அனுகூலமான பலனை அளிப்பதில்லை. காரணம் மருந்துகளின் ஒவ்வாமை, பக்கவிளைவுகள், முந்தைய பலனற்ற ரெட்ரோ வைரல் எதிர்மருந்து சிகிச்சை, மருந்து எதிர்ப்பு சக்தியுடைய எச் ஐ வி மாதிரிகள் போன்றவை. சிகிச்சை பின்பற்றாமை, மற்றும் சிகிச்சையில் உறுதியற்று இருத்தல் போன்றவைகளே மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை சில மக்களில் பலனளிக்காமல் இருப்பதற்கு காரணம். சிகிச்சையில் உறுதியற்று இருத்தல் மற்றும் பின்பற்றாமல் இருப்பதற்கான காரணங்கள் பலவாகும். மருத்துவ வசதியின்மை, சமூக உதவியின்மை, மனநல வியாதி மற்றும் போதை பழக்கம் போன்றவையே சமூக நல பிரச்சினைகள் ஆகும். அதிக எண்ணிக்கையில் மாத்திரைகள் அடிக்கடி சாப்பிட வேண்டியிருப்பதால் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை நியமம் சிக்கலானதாகவும் பின்பற்றுவதற்கு கடினமானதாகவும் இருக்கிறது.கொழுப்புத் திசு இறப்பு இரத்தத்தின் கொழுப்படர்த்தியில் ஏற்படும் மாறுபாடு, வயிற்றுப்போக்கு, இன்சுலின் எதிர்ப்பு இதய மற்றும் இரத்தக் குழாய் அபாயம், பிறப்புக் குறைபாடுகள் போன்ற பக்க விளைவுகளும் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையினைப் பின்பற்றுவதில் சிரமத்தை விளைவிக்கின்றன. மீளூட்டு நச்சுயிரி (Retrovirus) எதிர் மருந்து விலையுயர்ந்ததாகவும் இருப்பதால் உலகத்தின் பெருவாரியான நோய் தொற்றிய மக்களுக்கு இவை கிடைப்பதில்லை. ஆராய்ச்சி நிலையிலுள்ள சிகிச்சை முறைகள் தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்கக்கூடும் என்பதாலும், இதனால் வளர்ந்து வரும் நாடுகள் தடுப்பூசி பெற்றுக் கொள்ள எதுவாய் இருக்கும் என்பதாலும், தடுப்பூசி இருக்கும் பட்சத்தில் தினசரி சிகிச்சை தேவையற்றது என்பதாலும் இப்பரவல் தொற்றினைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்று கணிக்கப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் ஏறத்தாழ 30 வருடங்களுக்குப் பின்னும் எச் ஐ வி-1 தடுப்பூசி தயாரிப்பதற்கு கடினமான இலக்காகவே இருக்கிறது. தற்போதைய மருந்துகளின் பக்கவிளைவுகளைக் குறைப்பது, சிகிச்சை பின்பற்றப்படுதலை அதிகரிக்க மருந்து நியமங்களை எளியவையாக்குதல், மற்றும் மருந்துக்கான எதிர்ப்பை சமாளிக்க சிறந்த மருந்து நியமத் தொடர்களைத் தீர்மானித்தல் ஆகியனவைகளை உள்ளடக்கியதே தற்போதைய சிகிச்சை முறைகளை முன்னேற்றும் ஆராய்ச்சியாகும். சந்தர்ப்பவாத நோய்த்தொற்றுக்களைத் தடுத்தல் எச் ஐ வி நோய்த்தாக்கிய அல்லது எயிட்சு நோயாளிகளின் சிகிச்சைக்கு நன்மை பயக்கும் என்பதைப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கல்லீரல் அழற்சி "எ" மற்றும் "பி" க்கான நச்சுயிரிகளினால் தொற்றப்படாதவர்களுக்கு, தொற்றும் அபாயத்தைக் குறைக்க இந்நோய்களுக்கான தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு அடக்குதலைப் பெற்றவர்கலுக்கு, நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியையால் ஏற்படும் நுரையீரலழற்சி, டாக்ஸோபிளாஸ்மோசிஸ் மற்றும் கிரிப்டோகாக்கஸ் மூளையுறையழற்சி (மெனிஞ்சைடிஸ்) போன்ற நோய்களுக்கும் நோய்க்கட்டுப்பாடு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. கிளைக்கோப்புரதம் 120 (ஜி.பி.120) எனும் "சி.டி.4" பிணையும் இடத்துக்கான புரதத்தை அளிக்கவல்ல ஒரு எதிர்க்காரணி நொதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அனைத்து எச் ஐ வி மாதிரிகளுக்கும் பொதுவான இப்புரதம் "பி" நிண செல்களும் இணையும் இடமாக இருப்பதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை விட்டுவிடுகிறது. ஜெர்மனியின் பெர்லினில் பத்து வருடங்களுக்கு மேலாக எச் ஐ வி நோய்தொற்றறினால் அவதிப்பட்டு வந்த ஒரு 42 வயதான இரத்தப்புற்று நோயாளிக்கு CCR5 செல் மேற்பரப்பு ஏற்புணர்வியின் அசாதாரண இயற்கை மாதிரியைக் கொண்ட செல்களாலான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை சோதனை அடிப்படையில் நடத்தப்பட்டது. INTHACCR5-Δ32 மாதிரியானது தன்னை இயல்பாகக் பெற்றிருக்கும் மக்களின் சில அணுக்களை, குறிப்பிட்ட வகை எச் ஐ வி கிருமிகளுக்கான எதிர்ப்பு சக்தி உடையவையக்குகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை முடிந்து ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப் பின் அந்த நோயாளி ரெட்ரோ வைரல் எதிர்மருந்து உட்கொள்ளுவதை நிறுத்திய பின்னரும் அவரது இரத்தத்தில் எச் ஐ வி நோய்க் கிருமி காணப்படவில்லை. மாற்று வைத்திய முறைகள் நோய் அறிகுறிகளை குணமாக்கவும் நோயின் போக்கைக் கட்டுப்படுத்தவும் பல விதமான மாற்று வைத்திய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. நோயுற்ற விகிதத்தையும், இறப்பு விகிதத்தையும் மாற்றுமருந்துகளால் கட்டுப்படுத்துவது இயலாது என்றும் எயிட்சு நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் ஒருவேளை இவற்றின் உபயோகத்தால் மேம்படலாம் எனத் தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வகை வைத்திய முறைகளின் மனோதத்துவ விளைவுகளே மிகுந்த நன்மை பயப்பதாகும். அக்குபங்க்சர் இந்நோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதிலும், எச் ஐ வி நோயைக் குணப்படுத்தும் முயற்சியிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. மூலிகை மருந்துகளின் விளைவுகளைக் கண்டறியும் பல சுற்றுமாதிரி நோய் சோதனைகள் இம்மூலிகைகளுக்கு நோயின் வளர்ச்சிப் போக்கில் எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும் இவற்றைப் பயன்படுத்துவது ஆபத்தான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கின்றன. போதுமான உணவு உட்கொள்ளுதலைக் கொண்ட எச் ஐ வி நோய்த்தாக்கிய வயதுவந்தவர்களுக்கு பல்லுயிர்ச்சத்து உபபொருட்களால் நோய்த்தாக்கு விகிதத்திலும் இறப்பு விகிதத்திலும் எந்த மாற்றமும் இல்லை. நோயெதிர்ப்பிலும் ஊட்டச்சத்திலும் கீழ்மட்டத்திலுள்ள கருத்தரித்துள்ள மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு தினசரி பல்லுயிர்ச்சத்து உபபொருட்கள் அளிப்பதால் தாய் சேய் இருவருக்கும் அதிக பலன் கிட்டியதென்று ஒரு பெரிய தான்சானிய ஆய்வு தெரிவிக்கிறது. எச் ஐ வி நோயாளிகள் RDA அளவுகளில் உணவு நுண்சதது உட்கொள்ளுதல் உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளில் A உயிர்ச்சத்து சேர்த்துக்கொள்ளுதல் இறப்பு விகிதத்தைக் குறைத்து வளர்ச்சியை அதிகரிக்கிறது. செலீனியத்தின் அன்றாட உட்கொள்ளுதல் எச் ஐ வி நச்சுயிரி சுமையைக் குறைத்து "சி.டி.4" எண்ணிக்கையை அதிகரிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட வைரசு எதிர் சிகிச்சைக்கு சேர்வைப் பொருளாக செலீனியம் பயன்படும் போதிலும் அது தனியாக இறப்புவிகிதத்தையும் நோய்பாதிப்பு விகிதத்தையும் குறைக்க இயலாது.. முடிவு ரெட்ரோவைரல் எதிர்ப்புமருந்து உபயோகப்படுத்தாத பொழுது எச் ஐ வி கிருமி வகையைப் பொறுத்து மொத்த உயிர்வாழும் கால இடைநிலை 9 முதல் 11 வருடங்களாகக் கணிக்கப்பட்டுள்ளது. எயிட்சு நோய்க் கண்டறித லுக்குப் பிறகு போதிய வசதிகளற்ற மருத்துவ வசதியில்லாத இடங்களில் உயிர்வாழும் கால இடைநிலை 6 முதல் 19 மாதங்களே மட்டுமாகவும் உள்ளது என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சைக் கிடைக்கும் இடங்களில் எச் ஐ வி நோய்தாக்கத்திற்கும் எயிட்ஸுக்கும், சக்தி வாய்ந்த அதனை உபயோகிக்கும் பொழுது இறப்பு விகிதம் 80 சதவிகிதம் வரைக் குறைக்கப்படுகிறது. மேலும் எச் ஐ வி நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நபர் உயிரோடிருக்கும் காலம் 20 வருடங்கள் என நிர்ணயிக்கப்பட்ட்டுள்ளது. புதிய சிகிச்சை முறைகள் நடைமுறைக்கு வந்து கொண்டிருந்தாலும் எச் ஐ வி சிகிச்சைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பதால் உயிர் வாழும் காலத்தின் கணிப்பு மாறிக் கொண்டே இருக்கிறது. ரெட்ரோ வைரல் எதிர் மருந்து இல்லாவிட்டால் ஒரு வருட காலத்திற்குள் பொதுவாக மரணம் நிகழ்ந்து விடுகிறது. பெரும்பாலான நோயாளிகள் சந்தர்ப்பவாத தொற்றுக்களினாலோ அல்லது ஆபத்தான புற்றுக்களினாலோ ஏற்படும் படிப்படியான நோயெதிர்ப்பு மண்டல செயலிழப்பால் மரணமடைகின்றனர். நோய் வளர்ச்சிப் போக்கு ஊட்டுயிரியின் நோய் பாதிப்பு வாய்ப்பு, நோயெதிர்ப்பு செயல்பாடு, மருத்துவ வசதி, சக தொற்றுக்கள், மற்றும் நச்சுயிரியின் வகை என்பதைப் பொறுத்து ஒருவருக்கொருவர் கணிசமான அளவு மாறுபடுகிறது. நோய் பரவல் 290px|thumb|right|2005 ஆம் ஆண்டின் இறுதியில், இளைஞர்களைத் (15 -49) தாக்கும் என்று கணிக்கப்பட்ட நாடுவாரிய நோய்ப்பரவல் எயிட்சு நோய்ப்பரவலானது வேறுபட்ட உள்வகைகளின் பல்வேறு பரவல்களாகவும் காணப்படுகிறது.இந்நோயின் பரவலில் முக்கிய பங்காற்றுபவை உடலுறவு மூலம் பரவுதல் மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு பிறப்பின் போதும்,பாலூட்டும் போதும் நிகழும் செங்குத்துப் பரவல் முறை ஆகியன. தற்போது ரெட்ரோ வைரல் எதிர் மருந்து இருப்பும் கவனிப்பும் உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ள போதிலும் எயிட்சு நோய்ப்பரவல் 2007 ஆம் ஆண்டு 2 .1 மில்லியன் மக்களை (இடைவெளி) 1.9 -2.4 மில்லியன்) உயிரிழக்கச் செய்திருக்கிறது.இவர்களில் 330,000 பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். உலகம் முழுவதிலும் 2.5 மில்லியன் குழந்தைகள் உட்பட 33.2 மில்லியன் மக்கள் 2007-ல், எயிட்ஸுடன் வாழ்ந்திருக்கின்றனர். 2007-ல், 420,000 குழந்தைகள் உட்பட 2.5 மில்லியன்(இடைவெளி 1.8–4.1 million) புதிதாக நோய்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர் என கணிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவின் சகாராவை ஒட்டிய பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாகும்.2007-ல் அப்பகுதி எயிட்ஸுடன் வாழ்பவர்களில் 68 சதவிகிதத்தையும், எயிட்சினால் மரணமடைந்தவர்களில் 76 சதவிகிதத்தையும் உள்ளடக்கியிருந்ததோடல்லாமல், பிறகு வந்த 1.7 மில்லியன் புதிய நோய்த்தொற்றுக்கள், எச் ஐ வி யுடன் வாழ்வோர் எண்ணிக்கையை 22.5 மில்லியன் என்ற அளவிற்கு உயர்த்தியதையும், அப்பகுதியில் எயிட்ஸினால் அனாதையாக்கப்பட்ட 11.4 மில்லியன் குழந்தைகள் வாழ்ந்து வருவதையும் கண்டிருக்கிறது. ஏனையப் பகுதிகளைப் போலல்லாமல் சகாராவையொட்டிய பகுதிகளில் எச் ஐ வி யுடன் வாழ்வோரில் 61 சதவிகிதம் பெண்களாவர். 2007 ஆம் ஆண்டு வயது வந்தோரில் நோய் நிலவு விகிதம் 5.0 சதவிகிதமாகவும், இப்பகுதி இறப்புவிகிதத்தின் தனிப்பெரும் காரணம் எயிட்சு ஆகவும் இருக்கிறது [300]. தென்னாப்பிரிக்காவே உலகிலேயே அதிக அளவில் எச் ஐ வி நோயாளிகளைக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நைஜீரியாவும் இந்தியாவும் உள்ளன [302]. தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் இரண்டாவதாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 2007 இல் எயிட்சுடன் வாழும் மக்களில் 18 சதவிகிதம் பேர் இப்பகுதியில் இருந்தனர். 300,000 மரணங்கள் எயிட்சினால் நிகழ்ந்தன [303]. இந்தியாவில் 2.5 மில்லியன் நோய்த்தொற்றுக்களும், வயது வந்தோரில் நோய்த்தாக்கம் 0.36 சதவிகிதமாக உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது [304]. மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் சராசரி வாழ்நாள் காலம் வேகமாகச் சரிந்துள்ளது. எடுத்துக்காட்டாக 2006 இல் போட்ஸ்வானாவில் இது 65 வருடங்களிலிருந்து 35 வருடங்களாகச் சரிந்துள்ளது [306]. வரலாறு எயிட்சு முதன்முதலாக ஜூன் 5, 1981 இல் அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையங்களில் (CDC) கண்டறியப்பட்டது. இம்மையங்கள் (CDC) லாஸ் ஏஞ்சல்ஸின் 5 ஒரினச்சேர்க்கையாளர்களிடையே நியுமோசிஸ்டிஸ் கரினியை நிமோனியாவைக கண்டுபிடித்தது. இப்பொழுதும் PCP என்றே வகைப்படுத்தப்பட்டு நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியையால் உண்டாவதாகக் கருதப்படுகிறது)ஆரம்பத்தில் இந்நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் CDC யிடம் இல்லாத காரணத்தால் இதனுடன் தொடர்புடைய நோய்களின் பெயரை வைத்து (எடுத்துக்காட்டாக நிணநீர்ச்சுரப்பிநோயான லிம்படினோபதி) இந்நச்சுயிரிக்குப் பெயரிட்டனர் இதன் கண்டுபிடிப்பாளர்கள். காபோசியின் சதைப்புற்று மற்றும் சந்தர்ப்பவாத நோய்த்தொற்றுக்கள் என்ற பெயரும் இதற்கிடப்பட்டு 1981 இல் அப்பெயரில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது. பத்திரிகையாளர்களிடையே GRID (ஓரினச்சேர்கையாளர்களோடு தொடர்புடைய நோயெதிர்ப்புக் குறைபாடு) என்று பெயரிடப்பட்டது. CDC பெயர் தேடி அலைந்த பின்னர் நோயுற்ற சமுதாயங்களைப் பார்த்து "4H நோய்"(ஹைதியைச் சேர்ந்தவர்கள், ஓரினச்சேர்க்கையாளர்கள், இரத்தம் உரையாமையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஹெராயின் பயன்படுத்துபவர்கள்)என்று பெயரிட்டது. எனினும் எயிட்சு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மட்டும் உரியதல்ல எனக் கண்டறிந்த பின்னர் "கிரிட்" (GRID) என்ற சொல் பொருத்தமானதாகத் தோன்றாத காரணத்தால் 1982 ஜூலையில் எயிட்சு என்ற சொல் அறிமுகப்பட்டது. செப்டம்பர் 1982 க்குள் CDC எயிட்சு என்ற பெயரை உபயோகப்படுத்த ஆரம்பித்து இந்நோய்க்கு சரியான விரிவாக்கத்தை அளித்தது.. எயிட்சு நோய் பரவல் பிந்தைய 1950 களில், பெல்ஜியத்தின் காங்கோவில், ஹிலாரி கோப்ரொவ்ஸ்கியின் போலியோமையலைடிஸ் தடுப்பூசிக்கான அசட்டையான ஆய்வின் பொழுது ஆரம்பித்துவைக்கப்பட்டதாகும் என பலத்த சர்ச்சைக்குள்ளான தேற்றமான OPV எயிட்சு கருதுகோள் தெரிவிக்கிறது. விஞ்ஞானிகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விவரம் கிடைக்கும் ஆதாரங்களால் உறுதிசெய்யப்படவில்லை. எச் ஐ வி ஆப்பிரிக்காவிலிருந்து ஹைதிக்குச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குச் சென்றிருக்கலாம் என்று அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கிறது. எச் ஐ வி கிருமி கமரூன் நாட்டில் இருந்த சிம்பன்சியை மனிதன் வேட்டையாடி அதை வெட்டும் போது சிம்பன்சியின் இரத்தம் அதை இறைச்சிக்காக வெட்டிய மனிதனின் கையில் இருந்த காயம் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறதுஎச் ஐ வி ஆப்பிரிக்காவில் இருந்து பரவியதற்கு காரணம் குடியேற்றவாதம். எய்ட்ஸ் நோயின் தோற்றம் பற்றி ஆராய்ச்சிகளை நடத்திய மேற்குலக விஞ்ஞானிகள் 1920களில் காங்கோ மக்களாட்சிக் குடியரசு நாட்டில் கின்ஷாஸா நகரில் இருந்துதான் ஹெச்.ஐ.வி கிருமி பரவ ஆரம்பித்தது என்று கூறுகின்றனர்http://www.bbc.co.uk/tamil/science/2014/10/141003_aidsorigin எய்ட்ஸின் தோற்றம் 1920களின் கின்ஷாஸா என்கிறது புதிய ஆராய்ச்சி. சமுதாயமும் கலாச்சாரமும் களங்கம் thumb|216px|right|ரியான் வைட் தனது எச் ஐ வி நோய்த் தாக்கத்தால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு சுவரொட்டி குழந்தையாக ஆனார் எயிட்சு நிந்தையானது உலகம் முழுவதிலும் பல விதங்களில் காணப்படுகிறது. சமுதாயத்தில் இருந்து தள்ளிவைத்தல், விலக்குதல், பாகுபாடு , எச் ஐ வி தாக்கப்பட்ட மக்களைத் தவிர்த்தல், நோயாளியின் விருப்பமின்றி அவரை கட்டாயப்படுத்தி எச் ஐ வி சோதனைக்கு உட்படுத்தி நோயாளி பற்றிய இரகசியங்களை வெளியிடுதல், எச் ஐ வி நோய்த்தாக்கியவர்கள் அல்லது நோய்தாக்கியவர்கள் என்று எண்ணப்பட்டவர்களுக்கெதிரான வன்முறை, மற்றும் எச் ஐ வி நோயாளிகளை நோய் பாதிப்பறிய தனிமைப்படுத்துதல் போன்றவையே இவை . இந்நிந்தையுடன் கூடிய வன்முறை அல்லது வன்முறையைப் பற்றிய பயம் போன்றவை அநேக மக்கள் எச் ஐ வி சோதனையை நாடுவதிலிருந்தும், முடிவுகளை அறிய திரும்பிவருவதிலிருந்தும், சிகிச்சை பெற்றுக்கொள்வதிலிருந்தும் தடுப்பதால் சமாளிக்கவல்ல நாள்பட்ட வியாதி நிலையிலிருந்து இந்நோய் மரணதண்டனையாக உருவெடுத்து எச் ஐ வி பரவலை நிரந்தரமாக்குகிறது. எயிட்சு நிந்தை கீழ்க்கண்ட மூன்று பிரிவினைகளாக வகைப்படுத்தப்படுகிறது. விளைவுக்கு பயந்த எயிட்சு நிந்தை -சாவை ஏற்படுத்தவல்ல தொற்று வியாதியுடனான பயம் மற்றும் பீதியின் பிரதிபலிப்பு. அடையாளப்படுத்தும் எயிட்சு நிந்தை —நோயின் காரணங்களாகக் கருதப்படும் கூடி வாழும் சகவாச பிரியர்களையும்,வாழ்க்கை முறைகளையும் பற்றிய நிந்தை விரும்பத்தகாத அடைமொழியுடனான எயிட்சு நிந்தை '' —எச் ஐ வி/எயிட்சு அல்லது எச் ஐ வி நேர்மறை மக்களுக்குத் தரப்படும் நிந்தையான அடைமொழி பெரும்பாலும் எயிட்சு நிந்தையானது ஒன்றோ பலதோ ஆன பிற நிந்தைகளுடன் கூட்டாகப் பிரயோகிக்கப்படுகிறது. குறிப்பாக ஓரினச்சேர்க்கை, ஈரினச்சேர்க்கை, ஒழுக்கமின்மை, விபச்சாரம் மற்றும் சிறை வழி போதைமருந்து போடுதல் போன்றவையே இவை. வளர்ந்த நாடுகள் பலவற்றில் எயட்சுக்கும் ஓரின மற்றும் ஈரின சேர்க்கையுடன் இருக்கும் தொடர்பு பாலுறவில் வெறுப்பையும் ஒரினசேர்க்கைக்கெதிரான கருத்துகளையும் ஏற்படுத்துகிறது. அனைத்து ஆண் உடலுறவிலும், நோய்த்தாக்கம் இல்லாத ஆண்களுக்கிடையேயான உடலுறவிலும் கூட எயிட்சு வாய்ப்பிருப்பதாக எண்ணப்படுகிறது. பொருளாதார பாதிப்பு right|295px|thumb|கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளின் மனிதர்களின் சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பில் ஏற்படும் மாற்றம் [348][349][350][351][352] எச் ஐ வி மற்றும் எயிட்சு மனித மூலதன இருப்பைக் குறைத்து பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கிறது. மனித மூலதனம்பொருளாதார வளர்ச்சி<CITE class=goog-gtc-mediawiki-ref gtc:inserted gtc:temp gtc:prefix='</CITE>வளர்ந்த நாடுகளைப் போலல்லாது, சரியான போஷாக்கு, உடல் பராமரிப்பு மற்றும் மருந்துகளின்றி எயிட்சு தொடர்பான சிக்கல்களினால் பலர் அவதிப்பட்டு மரிக்கின்றனர். வேலைசெய்ய முடியாத நிலையில் அவர்களுக்கு தகுந்த மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது. குறிப்பிடத்தக்க எயிட்சு மக்கள்தொகை உடைய நாடுகளில் இது சமூக பொருளாதாரங்களின் சரிவை ஏற்படுத்தும் என்பதே இத்தகைய நோய்த்தாக்கத்தின் முன்னறிவிப்பாகும். நோய்ப்பாதிப்பு கடுமையாக உள்ள சில பகுதிகளில் இந்நோய்பரவல் வயதான தாத்தா பாட்டிகளால் பராமரிக்கப்படும் நிலையிலுள்ள பல அனாதைகளை விட்டுச் சென்றிருக்கிறது. இப்பகுதிகளின் அதிகரித்திருக்கும் இறப்புவிகிதம் பணியாளர் சமுதாயத்திலும் தொழில் அனுபவமுடையோர்களின் எண்ணிக்கையிலும் பெரும் சரிவை ஏற்படுத்துகிறது. இங்ஙனம் சரிவடைந்த பணியாளர் சமுதாயமும் பெருமளவில் குறைந்த ஞானமும் பணி அனுபவமும் உடைய இளைஞர்களைக் கொண்டிருப்பதால் இது குறைந்த உற்பத்திக்கு வழிவகுக்கும். நோயுற்ற குடும்பத்தினரை பார்த்துக்கொள்ளவோ, தான் நோயுற்றிருக்கும் நிமித்தமாகவோ பணியாளர்களால் அனுபவிக்கப்படும் மருத்துவ விடுப்பும் உற்பத்தியைக் குறைக்க வல்லது. வருமான இழப்பு மற்றும் பெற்றோரின் மரணம் மூலம் மனித முதலீட்டையும், மக்களின் பேரில் முதலீடு செய்வதையும், பெருக்குவதற்கான நுட்பங்களை அதிகரிக்கப்பட்ட இறப்புவிகிதம் பலவீனப்படுகிறது. இளைஞர்களை பெருமளவில் கொல்வதன் மூலம் வருமான வரி செலுத்தும் மக்கள் தொகையை கணிசமாகக் குறைத்து கல்வி மற்றும் நல பணி எயிட்சு அல்லாத பொது செலவினங்களுக்கான ஆதாரத்தைக் குறைத்து நாட்டில் நிதி நெருக்கடியையும் பொருளாதார பின்னடைவையும் ஏற்படுத்துகிறது. இது வரியாதாரத்தின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதோடல்லாமல் நோயாளிகளுக்கான சிகிச்சை, நோய்ப்பட்ட பணியாளர்களுக்குப் பதிலாக பணியமர்த்தியிருக்கும் ஊழியர்களுக்கான பயிற்சி, மருத்துவ விடுப்பூதியம் மற்றும் எயிட்சு அனாதைகள் பராமரிப்பு போன்ற அதீத செலவுகளால் வரியாதார வளர்ச்சிப் பின்னடைதலை அதிகரிக்கிறது. வயது வந்தோர்களின் இறப்பு விகித அதிகரிப்பினால், அநாதைகளைப் பராமரிக்கும் பொறுப்பும், நிந்தனையும் குடும்பத்திலிருந்து அரசுக்கு மாற்றப்படும் பொழுது இத்தகையதொரு சூழ்நிலை ஏற்படுகிறது. வீட்டளவில் எயிட்சு நோய் வருமான இழப்பையும் உடல்நல பேணுதலில் செலவு அதிகரிப்பையும் விளைவிக்கறது. இத்தகைய வருமான இழப்புகள், செலவு குறைப்பு நடவடிக்கைகளையும், படிப்பிற்கு பதிலாக உடல் நலம் பேணுதல் மற்றும் மயான செலவுகளில் ஈடுபடும் மாற்று விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. எச் ஐ வி /எயிட்சு நோயாளி இருக்கும் இல்லங்கள் மற்றவைகளை விட இருமடங்கு மருத்துவச் செலவுகளுக்காளாவதாக, கோட் டி ஐவாய்ர் ஆய்வு தெரிவிக்கிறது. எயிட்சும் மதமும் மத தலைவர்களில் பலர் விஞ்ஞானிகளால் நோய்ப்பரவலைத் தடுக்க ஒரே வழியெனக் கருதப்படும் கருத்தடை சாதனங்கள் உபயோகத்திற்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவிக்கும் காரணத்தால் மதமும் எயிட்சும் என்ற தலைப்பு கடந்த இருபத்து ஆண்டுகளாக பெறும் விவாதத்திற்குள்ளானதாகும். உலகளாவிய நல பணிகளிலும், மதசார்பற்ற நிறுவனங்களான UNAIDS மற்றும் உலக சுகாதார நிறுவனத்துடனான ஒத்துழைப்பிலும் ஈடுபட்டிருக்கும் மதங்களின் பங்கேற்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. எயிட்சு மறுதலிப்பு சில சீர்திருத்தவாதிகள் எச் ஐ விக்கும் எயட்சுக்குமான தொடர்பையும் எச் ஐ வி என்ற ஒன்று உள்ளதா எனவும் தற்போதைய சிகிச்சை முறைகளின் நம்பகத்தன்மையையும் குறித்தும் கேள்வி எழுப்பிவருகின்றனர். மருத்துவ சிகிச்சையே எயிட்சு மரணங்களுக்குக் காரணம் என்றும் கொக்கரிக்கின்றனர். இத்தகைய பறைசாற்றல்கள் விஞ்ஞானிகளால் விரிவாக சோதிக்கப்பட்டு முழுமையாக நிராகரிகப்பட்டுள்ள போதிலும் எச் ஐ வி யே எயிட்சு நோய்க்குக் காரணம் என்பதற்கான விஞ்ஞானிகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஆதாரத்தைப் பின்வரும் குறிப்புகளில் காணவும்,,,,, அவை இணையதளத்தின் மூலம் பரப்பப்பட்டு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.தென்னாப்பிரிக்காவில் முன்னாள் அதிபர் தபோ ம்பெகி யின் எயிட்சு மறுதலிக்கும் போக்கு எயிட்சு நோய் பரவலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் பலனற்று போகக் காரணமாய் இருந்ததோடல்லாமல் ஆயிரக்கணக்கான எயிட்சுமரணங்களையும் ஏற்படுத்திற்று. எச் ஐ வி நோய் வேட்டை ஓரினச்சேர்க்கையாளர்களில் ஒரு பிரிவினர் எச் ஐ வி நேர்மறையான கூட்டாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டு நோய்த்தொற்றை சுறுசுறுப்பாகப் பின்தொடர்கின்றனர். நோய்த்தொற்றை பின்தொடர்பவர்கள் பூச்சிவிரட்டுபவர்கள் எனவும் அவர்களுக்கு நோயைக் கொடுப்பவர்கள் பரிசளிப்பவர்கள் எனவும் கொச்சையான அடைமொழிகளால் இது அழைக்கப்படுகிறது. எச் ஐ வி நோய்த்தொற்றை பெற்றுக் கொள்வதில் எந்த நாட்டமும் இல்லாமல் பாதுகாப்பற்ற உடலுறவைத் தேர்ந்துகொள்பவர்களைக் குறிக்கும் அடைமொழியான பேர்பேக்கிங் எனப்படும் சேணமற்ற குதிரை போன்ற என்ற வார்த்தையிலிருந்து இத்தகைய எயிட்சு பின்தொடரும் நிலை வித்தியாசப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய பழக்கத்தின் உண்மையான விரிவு அறியப்படாததாகவே இருக்கிறது. இத்தகைய கலாச்சாரத்தின் அங்கத்தினர்கள் என தங்களை அடையாளம் காட்டிக் கொள்பவர்கள் அனைவரும் எச் ஐ வி பரப்புதலில் நாட்டம் கொண்டவர்கள் அல்ல. சில பக் சேசர்கள் இணையதளத்தின் மூலம் கிப்ட் கிவர்களோடு தொடர்பு கொள்ள முற்படுகின்றனர். வேறு சில நோய்க்கிருமியைப் பின்தொடர்வோர் எச் ஐ வி நேர்மறையாளர்கள், எச் ஐ வி எதிர்மறையாளர்களோடு நோய்தொற்றை அடையவேண்டும் என்ற நோக்குடன் ("பரிசு பெறுவது") பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் நோய்க்கிருமி கேளிக்கைகளில் நிலைமாற்ற விருந்துகளை ஏற்பாடுசெய்து அதில் கலந்து கொள்கின்றனர்.[384]^ Deen, T., 2008. "Breeding Culture : Barebacking, bugchasing, gift-giving". Massachusetts Review, Vol. 49(1), pp. 80-94. தவறான கருத்துக்கள் எச்.ஐ.வி குறித்தும் எயிட்சு குறித்தும் பல தவறான கருத்துக்களும் நம்பிக்கைகளும் நிலவுகின்றன. மிகவும் பரவலான பிழையான கருத்துக்களாக இருப்பவை: எயிட்சு சாதாரணத் தொடுதல் மூலம் பரவுகின்றது; கன்னியருடன் பாலுறவு கொள்வது எயிட்சு நோயைக் குணமாக்கும்; எச்.ஐ.வி தீநுண்மம் தற்பால் சேர்க்கையாளர்களையும் போதைப்பொருள் பயன்படுத்துவோரையும் மட்டுமே தாக்குகின்றது; தொற்றில்லாத இரு ஆண்மக்களிடையே குதவழிப் பாலுறவு எச்.ஐ.வி தொற்றுக்கு வழி வகுக்கும்; பள்ளிச்சாலைகளில் எச்.ஐ.வி குறித்தும் தற்பால் சேர்க்கை குறித்தும் அறியத்தருதல் எயிட்சு நோய் தாக்குவீதம் கூட வழிவகுக்கும் என்பனவாகும். சிலர் எச்.ஐ.வி தீநுண்மத்திற்கும் எயிட்சிற்கும் தொடர்பில்லை எனக் கருதுகின்றனர். வேறு சிலர் எச்.ஐ.வி. தீநுண்மம் இருப்பதையும் அதற்கான சோதனைகளின் செல்லுந்தன்மை குறித்தும் ஐயமுறுகின்றனர். எயிட்சு மறுப்பாளர்கள் எனப்படும் இவர்களது கூற்றுக்கள் அறிவியல் குமுகத்தால் ஆயப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவர்கள் குறிப்பிடத்தக்க அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்; தென்னாபிரிக்காவில் 1999-2005 காலகட்டத்தில் எயிட்சு மறுப்புவாதத்திற்கு அரசாதரவு இருந்தது. இதனால் அந்நாட்டில் எயிட்சு நோய்ப்பரவல் தடுக்கப்படாது தவிர்த்திருக்கக்கூடிய பல்லாயிர உயிரிழப்புக்களும் எச்.ஐ.வி தீநுண்மத்தொற்றுக்களும் ஏற்பட்டன. எச்.ஐ.வி என்பது அறிவியலாளர்களால் தவறாகவோ விருப்பத்துடனோ உருவாக்கப்பட்ட பொய்மை என பல சதிக் கொள்கைகள் பரவியுள்ளன. சோவியத் நாட்டில் எச்ஐவி/எயிட்சு ஐக்கிய அமெரிக்காவால் பரப்பப்பட்ட பொய்மை என பரப்புரை செய்யப்பட்டது. இதனை பல மக்கள் நம்புவதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்புகள் மற்றும் ஒப்பீடுகள் கூடுதல் வாசிப்பு புற இணைப்புகள் எச் ஐ வி/எயிட்சு சிகிச்சைத் தகவல்கள் எச் ஐ வி/எயிட்சு குறித்த ஐக்கிய நாடுகளின் திட்டங்கள் எச் ஐ வி/எயிட்சு குறித்த தகவல்கள் எய்ட்ஸின் தோற்றம் 1920களின் கின்ஷாஸா என்கிறது புதிய ஆராய்ச்சி எச்ஐவி வைரஸை வெளியேற்றும் புற்றுநோய் மருந்து பகுப்பு:கொள்ளை நோய்கள் பகுப்பு:பாலுறவு நோய்கள் பகுப்பு:நச்சுயிரி நோய்கள் பகுப்பு:நோய் எதிர்ப்பு முறைமைகள் பகுப்பு:நுண்ணுயிரியல் பகுப்பு:எயிட்சு பகுப்பு:கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள்
கதிரைமலைப் பள்ளு
https://ta.wikipedia.org/wiki/கதிரைமலைப்_பள்ளு
கதிரைமலைப் பள்ளு என்பது யாழ்ப்பாணத்தில் வழங்கும் மூன்று பள்ளுகளில் காலத்தால் முதன்மையானது.பள்ளு இலக்கியம், தமிழ் இணைய கல்விக்கழகப் பாடம் 1915 ஆம் ஆண்டு முதன்முதலாக அச்சில் வெளிவந்த இந்நூலின் காலமும் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. இது மரபு வழி இலக்கிய அம்சங்களையும் நாட்டார் இலக்கியப் பண்புகளையும் இசைநாடகக் கூறுகளையும் கொண்டதாகக் காணப்படுகிறது. இது வேளாண்மை பற்றிய நூல் ஆகும். நெல், மீன் வகைகளையும், பள்ளர்கள் தொழிலையும் நாட்டின் வளப்பத்தையும் இது விளக்குகிறது.மதிப்புரை, கதிரைமலைப் பள்ளு, செந்தமிழ்ச்செல்வி, கார்த்திகை 1935 இந்நூல் 130 செய்யுள்கள் கொண்டது. பிற்காலத்திய இடைச்செருகல்கள் சிலவுங் காணப்படுகின்றன. ஈழத்துக் கதிரைமலைப் பள்ளினைப் பின்பற்றியே தமிழகத்திற் பள்ளுப் பிரபந்தங்கள் எழுந்தன என்பர். கதிரையப்பர் பள்ளு எனவும் இது அழைக்கப்படுகிறது. இந்நூல் கதிர்காமத்தில் கோவில் கொண்டுள்ள முருகன் மீது பாடப்பட்டுள்ளது. முருகனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது. பள்ளன், பள்ளி, பண்ணைக்காரன், இளையபள்ளி என நான்கு பாத்திரங்கள் உண்டு. சிந்து, விருத்தம் ஆகிய பாவகைகளும் பேச்சு சொல்லும் இந்நூலில் காணப்படுகிறது.நூலகம் திட்டத்தில் கதிரைமலைப்பள்ளு இந்நூலாசிரியரின் பெயர் புலப்படவில்லை. (1478 - 1519 )இல் நல்லூரிலிருந்து அரசாண்ட பரராசசேகர மகாராசாவின் காலத்தது இந்நூல் என்பதற்குப் பல ஆதரங்களுள. பரராசசேகரனின் ஆணையின்படி பன்னிரு புலவரால் இயற்றப்பட்ட பரராசசேகரம் என்னும் வைத்தியநூலில் 'தென்கதிரைவேலர்' பலவிடங்களிற புகழப்படுகிறார். இப் பன்னிருபுலவர்களுள் ஒருவரே 'கதிரைமலைப்பள்ளு'ப் பாடியிருக்கக்கூடும். பதிப்புகள் கதிரைமலைப் பள்ளு (1935) - முத்துலிங்க சுவாமிகளின் ஆதரவில் வ. குமாரசுவாமி அவர்களால் தொகுக்கப்பட்டது. சி. வி. ஜம்புலிங்க பிள்ளை என்பவரால் சென்னை, புரோகிரசிவ் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் மறுபதிப்பு 1996 இல் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கொழும்பு யுனி ஆர்ட்சு அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. மேற்கோள்கள் பகுப்பு:ஈழத்து நூல்கள் பகுப்பு:15 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள் பகுப்பு:பள்ளு பகுப்பு:ஈழத்துச் சிற்றிலக்கியங்கள் பகுப்பு:ஈழத்து சமய இலக்கியம்
அரசகேசரி
https://ta.wikipedia.org/wiki/அரசகேசரி
பாடலரசன் அரசகேசரி பண்டாரம் (நல்லூர், 16- 17 ஆம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலவர் ஆவார். வாழ்க்கை குறிப்பு அரசகேசரி, யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மருமகனும், எதிர்மன்னசிங்கம் என்னும் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த ஆரியச் சக்கரவர்த்தியின் (1591-1616) மாமனும் ஆவார். பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றிய அரசகேசரி பரராசசேகரச் சக்கரவர்த்தியின் இரண்டாம் மனைவியாகிய வள்ளியம்மையின் மகளாகிய மரகதவல்லியின் கணவராவார். வள்ளியம்மையும் பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றலே. பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மகனும் மரகதவல்லியின் தமையனுமாகிய யாழக மன்னன் பெரியபிள்ளையின் மகன்தான் எதிர்மன்னசிங்கம் ஆவான். எதிர்மன்னசிங்கனால் மரணப்படுக்கையிலே தன் மகன் வயதுக்கு வரும்வரை இராச்சிய பரிபாலனம் செய்யும்படி வேண்டப்பட்டவர் அரசகேசரி. எதிர்மன்னசிங்கனின் நியமனத்தைப் போர்த்துக்கேய தேசாதிபதி ஏற்குமுன் சங்கிலி குமாரனாற் கொல்லப்பட்டவர். சங்கிலி குமாரனின் ஆட்சி 1615-1619. இலக்கியப் பங்களிப்பு தமிழ் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் வல்லவர். காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சம் என்னும் மகா காவியத்தை இவர் தமிழில் புராண நடையில் பாடி இரகு வமிசம் என்னும் பெயர் சூட்டினார். காரைதீவு கா.சிவசிதம்பர ஐயர் 1887 ம் ஆண்டிலே சென்னையில் பதிப்பித்து வெளியிட்ட தட்சிண புராணப் பதிப்பிலே அரசகேசரி இயற்றியதாகச் சிறப்புப் பாயிரமொன்றும் இடம்பெறுகின்றது. இவரின் இருமொழி புலமைக்கும், மொழி பெயர்க்கும் ஆற்றலுக்கும் எடுத்துக்காட்டு ஒன்று காட்டுதும்:-குமாரசுவாமிபுலவர் இரகுவமிச கருப்பொருள் (கட்டுரை) ., 1910. ... ஸ்ராஜ்யம் குருணாதத்தம் பிரதிபத்யாதிகம் பபெள திநாந்தெ நிஹிதம் தேஜஸ் சவித்திரே வஹா என்னும் வடமொழி இரகுவமிச சுலோகத்தை தமிழில்:- கனைகழல் வீரனுங் காவ லான்றரு புனைமணி முடியொடும் பொலிந்து தோன்றினான் றினகரன் றிவாந்தகா லத்திற் சேர்த்திய வினவொளி கொடுகன லிலங்கிற் றென்னவே இவர் இரகுவமிசம் பாடுங்காலத்தில், நல்லூருக்குக் கீழைத் திசையில் உள்ள நாயன்மார்க்கட்டில் உள்ள அரசடிப்பிள்ளையார் கோவிலின் தாமரை குளத்தின் கரையில் இருந்த வண்ணம் பாடினார் என்பர். இதனால்தான் நாட்டுப் படலம் பாடும் போது குளங்களை முதலில் பாடினார் என்று கூறுவர். இவர் வயல்களை பாடும்போது குளத்துக்கு அருகில் இருந்த கரும்பு மற்றும் நெல் வயல்களையும் வாழை மற்றும் கமுகுத் தோப்புகளையும் இரகுவமிச செய்யுளில் வருணித்து பாடயுள்ளார். இதற்கு சான்றாக தமிழ் இரகுவமிச பாடல் ஒன்று காட்டுதும்:- கூறு வேழத்தி னரம்பையின் வளைந்தன கதிர்க ளூறு செய்திடத் தொடுத்தகூன் குயமொத்த வேனும் பாறு நெட்டிலைப் பூகமேல் வீழ்ந்தன பழுக்காய்த் தாறு வேறிடக் கொளீஇயன தோட்டியிற் றங்கும் இவர் அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற நூல்களில் மிக தேர்ச்சியுடையவர் என்பது, சங்க இலக்கியங்களில் வரும் சொல்ப் பயன்பாட்டை தனது தமிழ் இரகுவமிச செய்யுளுள் அருமையாக அமைத்து பாடியமை சான்றாகும். இதற்கு உதாரணமாக ஒன்று காட்டுதும்:- பரிமுக வம்பியும் கரிமுக வம்பியும் அரிமுக வம்பியு மருந்துறை யியக்கும் பெருந்துறை மருங்கில் என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறிய அம்பி சிறப்புக்களை ( அம்பி = தோணி) , அறிமுக மடுத்து வீழு மான்மத வளறு நாறிக் கரிமுக வோட மூர்ந்து சிலதியர் மருங்கு காப்பச் சுரிமுக நெற்றி துற்றிச் சுடர்மணி வர்க்கந் தொக்க பரிமுக வோட மூர்ந்து சிலதியர் மருங்கு போனார் என்னுஞ் செய்யுளுள் அமைத்து பாடியுள்ளர். மேலும் இவர் கம்பர் பாடிய கம்ப இராமாயணதை பின்பற்றி, காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சதை தமிழில் மொழிபெயர்த்து, மிக கடினமான சொற்களில் பாடியமையால் இது அறிஞர்களால் மட்டும் சுவை உணர்ந்து மேச்சும்படியாகுள்ளது. இவர் வாழ்ந்த அரண்மனை நல்லூர் யமுனா ஏரிக்கு அருகாமையில் இன்றும் அரசகேசரிவளவு என்று விளங்கும் நிலப்பரப்பில் அமைந்திருந்தது என்பர்.குமாரசுவாமிபுலவர் தமிழ் புலவர் சரித்திரம்., 1914. பக். 21... மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தமிழ் இரகுவமிசம் நூல் தந்த அரசகேசரி பகுப்பு:ஈழத்துப் புலவர்கள்
நா. கதிரைவேற்பிள்ளை
https://ta.wikipedia.org/wiki/நா._கதிரைவேற்பிள்ளை
நா. கதிரைவேற்பிள்ளை (திசம்பர் 21, 1871 – 26 மார்ச் 1907) இலங்கைத் தமிழறிஞர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். 'தமிழ்த் தென்றல்' திரு. வி. க. வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர். சதாவதானி எனப் போற்றப் பெற்றவர். பிறப்பு கதிரைவேற்பிள்ளை பருத்தித்துறை, மேலைப்புலோலியில் வாழ்ந்த நாகப்பபிள்ளை என்பவருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் 1871-ஆம் ஆண்டு பிறந்தார். (திரு. வி. க தனது நூலில் நா. கதிரைவேற்பிள்ளை 1860 நவம்பரில் பிறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.) அயலில் இருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி பெற்றார். குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலவில்லை. ஆறுமுக நாவலரின் மாணாக்கராகிய மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை என்பாரிடம் முறையாகக் கல்வி கற்றார். பதினெட்டு வயதிற்குள் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்கநூல்களையும், தருக்க சாத்திரங்களையும் கற்றார்.சபாபதிப்பிள்ளை, ஆ. நாவலர் வழிக்கோர் காவலர், நூலகம் திட்டம், 1971 தமிழகம் பயணம் தமிழின் மீதான ஆர்வத்தினால் சென்னைக்குப் பயணமானார். சென்னையில், தமிழ் கற்க விரும்பியவருக்குத் தி. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் உதவினார். புலமையும், கருணையும் கொண்டிருந்த தி. த. கனகசுந்தரம்பிள்ளை, கதிரவேற்பிள்ளையை மாணவராக ஏற்றுக் கொண்டார். தமிழின் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்ததோடு, சைவ சித்தாந்த சாத்திரங்களையும் பயின்று புலமை பெற்றார் கதிரவேற்பிள்ளை. வடமொழியிலும் தேர்ச்சி பெற்ற கதரவேற்பிள்ளை, சென்னை ரிப்பன் அச்சகத்தின் அதிபர் சிவசங்கரன் செட்டியாரின் பழக்கத்தால், தாள் திருத்தும் பணியை ஏற்று, படிக்கின்ற காலத்திலேயே, சென்னையில் செலவுக்கு வேண்டியதை ஈடு செய்து கொண்டார். நூல்கள் இயற்றல் தமிழ்நாட்டிற்கு வந்து பல சைவ நூல்களையும், நைடதத்திற்கு உரையையும் இயற்றினார். இலங்கையில் கதிர்காமம் என்ற தலத்துக்கு ஒரு கலம்பக நூல் இயற்றினார். பழனித் தலப் புராணம், திருவருணைக் கலம்பகம், சிவராத்திரிப் புராணம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதிய கதிரவேற்பிள்ளை, அதிவீரராம பாண்டியர் இயற்றிய தமிழ்க் கூர்ம புராணத்திற்கு விளக்கவுரை கண்டார். சிவஷேத்திராலய மகோற்சவ விளக்கம், திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் சரிதவசனச் சுருக்கம், ஏகாதசிப் புராணத்திற்கு அரும்பதவுரை ஆகிய நூல்களையும் எழுதினார். வெளியிடப்பட்ட நூல்கள் சிவக்ஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம், 1896, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை சைவ பூஷண சந்திரிகை, (இரண்டாம் பதிப்பு: 1902, சென்னை சி.நா.அச்சியந்திரசாலை) புத்தமத கண்டனம், 1903 சுப்பிரமணிய பராக்கிரமம், 1906, சென்னை: வித்யாரத்நாகர அச்சுக்கூடம் அதிவீரராமபாண்டியனார் இயற்றிய நைடதமூலமும் விருத்திஉரையும், 1912, சென்னை: வித்யாரத்நாகர அச்சுக்கூடம் தாயுமான சுவாமிகள் அருளிச்செய்த திருப்பாடற்றிரட்டு, 1939, சென்னை: வித்யாரத்நாகர அச்சுக்கூடம் தாயுமானவர் பாடல், 1930 அகராதி தொகுத்தல் சென்னை வாழ் தமிழறிஞர் பலருடைய வேண்டுகோளுக்கிணங்கத் தமிழ்ப்பேரகராதி எழுதி வெளியிட்டார். இவ்வகராதியின் பெருமையைப், என்று தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் புகழ்ந்திருக்கிறார். ஆசிரியப் பணி கதிரைவேற்பிள்ளை, தமது 1897 ஆம் ஆண்டில், சென்னையில் இருந்த உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணி ஏற்றார். அப்போதுதான், திரு. வி. கல்யாணசுந்தரனார், பிள்ளையவர்களின் மாணாக்கராகும் பேறு பெற்றார். கதிரவேற்பிள்ளையின் பேச்சுத் திறன், சென்னையில் மட்டும் அல்லாது, தமிழகமெங்கும் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று, தமிழ் மொழியின் செழுமைக்கும், சைவ நெறியின் வளர்ச்சிக்கும் உரையாற்றிப் புகழ் பெற்றார். மருட்பா மறுப்பு சைவத் தமிழ் உலகம் போற்றி வந்த திருமறைகளே 'அருட்பா' என்றும் வள்ளல் பெருமான் இராமலிங்கர் பாடியுள்ளவை 'மருட்பா' என்றும் சைவநெறிப் பற்றால் கூறத் துணிந்தார் கதிரவேற்பிள்ளை. இந்த 'அருட்பாப் பூசல்', பெருமான் ஆறுமுக நாவலர் காலத்தில் தொடங்கியது, மீண்டும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் நடைபெறலாயிற்று. பேசியதோடு, இராமலிங்க சுவாமியின் பாடல்கள் மருட்பாவேயன்றி, அருட்பா அல்ல எனக் கதிரவேற்பிள்ளை 'மருட்பா மறுப்பு' எழுதியதை ஆதாரமாக வைத்து, சென்னை நீதிமன்றத்தில் வள்ளல் பெருமான் அன்பர்களால் பிள்ளையவர்களின் மீது மானநஷ்ட வழக்குத் தொடரப் பெற்றது. இந்த வழக்கில், தமது ஆசிரியர் கதிரைவேற்பிள்ளைக்கு ஆதரவாக திரு. வி. க. சாட்சியமளித்தார். இறுதியில், நீதிபதியால் வழக்கு தள்ளுபடி செய்யப் பெற்றது. விருதுகள் தமிழ்நாட்டுச் சைவ மடங்களாலும், குறுநில மன்னர்களாலும், புரவலர்களாலும் வழங்கப் பெற்ற நாவலர், சைவசித்தாந்த மகாசரபம், அத்துவித சித்தாந்த மகோத்தாரணர், மகாவித்துவான், பெருஞ்சொற்கொண்டல் முதலிய பட்டங்களைப் பெற்றார். சென்னை இலக்குமி விலாச மண்டபத்தில் கவிராயர்கள், பண்டிதர்கள், புரவலர்கள் முன்னிலையில் கதிரவேற்பிள்ளை சதாவதானம் செய்து சதாவதானி என்னும் பட்டத்தையும் பெற்றார். சதாவதானி ஒருவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்தால் சதாவதானி என்பர். கதிரைவேற்பிள்ளை செய்த சதாவதானம் பலர் முன்னிலையில் நடந்து வெள்ளைக்கார துரைகளால் பாராட்டப்பட்டது. கதிரைவேற்பிள்ளை முதலில் யாழ்ப்பாணம் மேலைப்புலோலி கந்தசுவாமி கோவிலில் நன்னூல் காண்டிகையுரை ஆசிரியர் வித்துவான் அ. குமாரசாமிப் புலவர் தலைமையில் 18 அவதானங்களை செய்து முடித்தார். பின்னர் சென்னையில் லெட்சுமிவிலாச நாடகசாலையில் பாலசரசுவதி ஞானானந்த சுவாமிகள் தலைமையில், வேலும் மயிலும் துணையென நவிலல் இலாட சங்கிலி கழற்றல் சிலேடைக் கட்டளைக் கலித்துறை, சிலேடை வெண்பா, நீரோட்டகம் முதலியன 6 இலக்கண விடை உபந்நியாசம் இரண்டறக் கலத்தல் உபந்நியாசம் பாரதச் செய்யுளுரை இங்கிலீஷ் கண்டப் பத்திரிக்கை வருடந்தேதி, பிறந்த நாள், இலக்கினம், பிறந்த நட்சத்திரம் முதலியவை எண் கணக்கில் கூட்டல் 1, கழித்தல் 1, பெருக்கல் முதலியவை இவற்றை செய்து முடித்து சதாவதானியென்ற பட்டத்தைப் பெற்றார்.ஸ்ரீமான் நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் சரித்திரமும் அவரது பிரிவாற்றாமையினால் பல புலவ சிகாமணிகளார் கூறிய பாக்களும், பாலசுந்தர நாயகர், 1908 இறுதி நாட்கள் மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராகத் திகழ்ந்த கதிரைவேற்பிள்ளை, தமிழ்ப் பணிக்காக, அடிக்கடி சென்னையிலிருந்து நீலகிரி சென்று வந்தார். 1907 ஆம் ஆண்டில் ஒருமுறை நீலகிரி சென்றபோது, குன்னூரில் கடுஞ்சுரத்தால் உடல் நலிவுற்று பராபவ ஆண்டு பங்குனி 13 செவ்வாய்க்கிழமை (1907 மார்ச் 26) அன்று இறந்தார். பிறர் எழுதிய வாழ்க்கை வரலாறு நூல்கள் திரு. வி. க., தமது ஆசிரியரின் நினைவைப் போற்றும் வகையில், யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம் சதாவதானி நா கதிரைவேற்பிள்ளை சரிதம் என்ற அரியதொரு நூலாகயாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம் சதாவதானி நா கதிரவேற்பிள்ளை சரிதம் இயற்றியது திரு.வி.க. எழுதி 1908 இல் வெளியிட்டார். கதிரைவேற்பிள்ளையின் மாணாக்கரும், புரசை முனிசாமி நாயகர் குமாரருமாகிய பாலசுந்தர நாயகர் என்பவர் 1908 ஆம் ஆண்டில் ஸ்ரீமான் நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் சரித்திரமும் அவரது பிரிவாற்றாமையினால் பல புலவ சிகாமணிகளார் கூறிய பாக்களும் என்ற நூலை எழுதி வெளியிட்டார். குறிப்புகள் மேற்கோள்கள் பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள் பகுப்பு:தமிழறிஞர்கள் பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள் பகுப்பு:1871 பிறப்புகள் பகுப்பு:1907 இறப்புகள் பகுப்பு:தமிழ் அகராதி தொகுப்பாளர்கள்
அ. குமாரசாமிப் புலவர்
https://ta.wikipedia.org/wiki/அ._குமாரசாமிப்_புலவர்
சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவர் (Kumaraswamy Pulavar, சனவரி 18, 1854 – மார்ச்சு 23, 1922) என அழைக்கப்படும் அ. குமாரசாமிப்பிள்ளை இலங்கையைச் சேர்ந்த புலவரும், தமிழறிஞரும், பதிப்பாளரும், உரையாசிரியரும் ஆவார். ஆங்கிலேயக் குடியேற்ற ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர். பிறப்பு யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் என்ற ஊரில் பிறந்த குமாரசுவாமிப் புலவரின் தந்தை அம்பலவாணர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை தமது பெரிய தகப்பனாராகிய முத்துக்குமாரக் கவிராயரிடம் கற்றுத் தேறியவர். அத்துடன் சைவ சமய ஈடுபாடும் கொண்டவர். தென்கோவை குமாருடையார் மகள் சிதம்பராம்மை என்பவரை 1840 வைகாசி ஐந்தாம் நாள் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் முறையே சிவகாமிப்பிள்ளை, குமாரசுவாமி மற்றும் காமாட்சிப்பிள்ளை என மூன்று மகவுகளைப் பெற்றனர். 1854 ஆம் ஆண்டு தை 18 ஆம் நாள் குமாரசுவாமி பிறந்தார்குமாரசுவாமி புலவர் வரலாறு - கு முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை, 1952.. கல்வி குமாரசுவாமிக்கு ஐந்து வயதானதும், தந்தையார் குலகுருவான வேதாரணியம் நாமசிவாய தேசிகர் என்பவரை அழைத்து இவருக்கு ஏடு தொடக்குவித்தார். பின்னர் மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். இவர் ஆங்கிலத்தில் அடிப்படை புலமை அடைந்த பின்பு, இவரை ஆங்கில பாடசாலையை விட்டு விலக்கிய இவரது தந்தையார், சுண்ணாகம் முருகேச பண்டிதரிடம் இவரை தமிழ் கல்வி பயிலுமாறு அனுப்பினார். முருகேச பண்டிதரிடம் தமிழ்க் கல்வி கற்ற காலத்தே இவருடன் கூட கல்வி கற்றவருள் குறிப்பிடத்தக்கவர்கள் ஊரெழு சு. சரவணமுத்துப்புலவர், மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, சுண்ணாகம் மு. வைத்தியநாதபிள்ளை போன்றோர் ஆவர். இவர் மாணவராக இருந்த போது, சொல்லும் பொருளும் சுவைபட பாடுவதிலும், கட்டுரை எழுதுவதிலும், சொற்பொழிவு ஆற்றுவதிலும் திறமை பெற்றிருந்தமையால் இவரைப் புலவர் என்று பட்டப் பெயரால் அழைத்தனர். இப்பட்டப் பெயரே இவருக்கு பிற்காலத்தில் இயற்பெயராகிற்று என்று புலவரது மாணவராகிய புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் செய்யுள் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்குமாரசுவாமிப் புலவர் சரிதம் - சி. கணேசையர், 1935.. பாரேறு சுன்னைக் குமார சுவாமிப் புலவனுக்கே ஏரே இடுகுறி யாகிப் புலவரெனும் பெயர்தான் பாரேறு மற்றைப் புலவருக்குக் காரணப் பண்புறலற் சீரே இடுகுறி காரண மாகித் திகழ்ந்ததுவே. நாவலருடன் தொடர்பும் வடமொழிக் கல்வியும் thumb|left|150px|உடுவில் பொதுசன நூலகவளாகத்தில் அமைந்துள்ள குமாரசாமிப்புலவரின் சிலை புலவரவர்கள் கல்வி கற்று வரும் காலத்தே, தமிழகம் சென்று தமிழ் மற்றும் சைவத் தொண்டாற்றி விட்டு தாயகம் திரும்பிய ஆறுமுக நாவலருக்கு வெகு சிறப்பான வரவேற்பு விழா ஒன்றை யாழ்ப்பாண மக்கள் 1869 ஆம் ஆண்டு நடாத்தினர். இவ்விழாவில் புலவரவர்கள் நாவலர் பெருமானை முதலில் நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றார். இதையடுத்து நாவலர் சைவ சொற்பொழிவுகளுக்கு தவறாது சென்று செவிமடுத்து மகிழ்ந்த புலவருக்கு, உடன் கற்ற நண்பன் ஊரெழு சரவணமுத்துப் புலவர் மூலம் நாவலர் அறிமுகம் கிடைத்தது. நாவலரும் தனது பழைய நண்பனாகிய முத்துக்குமாரக் கவிராயாரின் வழிதோன்றல்தான் புலவர் என்றறிந்து, புலவரின் தமிழ்க் கல்விக்கு ஊக்கமளித்தது மட்டுமல்லாது வடமொழி மற்றும் சைவசித்தாந்தகளை முறையே கற்குமாறு அறிவுரை வழங்கினார். இந்நட்பு நாவலரின் மறைவு வரை மிக நெருக்கமாக இருந்தது என்பதை, புலவர் நாவலர் மீது கூறிய சரமகவிகள் நன்கு விளக்கும்.. நாவலரின் அறிவுரைப்படி புலவரும் வடமொழி கற்கும் பொருட்டு, நெருங்கிய உறவினரும், கற்பிட்டி நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளரும், நான்கு மொழிகளில் புலமை உடையவருமாகிய நாகநாத பண்டிதரை அணுகி வடமொழி கற்று வரலானார். நீதிசாரம், இராமோதந்தம், சாணக்கிய சதகம், முக்தபோதம், மாகம், இரகுவமிசம், சாகுந்தலம் முதலிய வடமொழி நூல்களை முதலில் புலவரவர்கள் கற்றுத் தெளிந்தார். பண்டிதர் வேலை மாற்றம் பெற்று கற்பிட்டி சென்ற பின்னர், தபால் மூலம் புலவரின் கல்வி தொடர்ந்தது. இவ்வாறு பண்டிதரால் மொழிபெயர்த்து அனுப்பப்பட்ட நூல்களுக்குள் ஒன்றாகிய இதோபதேசம் புலவரால் 1886 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இங்கனம் வடமொழியைச் செவ்வனே கற்றதன் பலனாகப் புலவர் பல வடமொழி நூல்களை மொழி பெயர்த்து தமிழில் பாடியுள்ளார். மேலும் சைவசித்தாந்த அறிவைப் பெருக்கும் பொருட்டு தனது குடியின் குரவராகிய நமசிவாய தேசிகரை அணுகி சைவசித்தாந்தம் மற்றும் சைவச் சான்றோர் வரலாறு முதலியவற்றை கற்கலானார். புலவரவர்கள் மேல் கூறிய தனது முக்குரவருக்கும் தான் இயற்றிய மேகதூதக் காரிகை என்னும் நூலின் குரு வணக்கச் செய்யுளில் வணக்கம் கூறி உள்ளார். வேறு புலவரை நாடுதல் புலவரின் தமிழ் குரவர் முருகேச பண்டிதர் தமிழகம் சென்ற சிறிது காலத்தில், ஆறுமுக நாவலர் இறந்தார். இதனால்ப் புலவர் தமிழ் இலக்கியம், இலக்கணம், சைவசித்தாந்தம் முதலியவற்றில் ஏற்பட்ட சந்தேகங்களை தீர்க்கும் பொருட்டு முறையே அளவெட்டி கனகசபைப் புலவரிடமும், இணுவில் நடராசையரிடமும் வினாவித் தெளிந்தார். புலவர் தனக்கு கம்பராமாயணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை நீக்க, கவித்தலம் துரைச்சாமி மூப்பன் இயற்றிய கம்பராமாயண கருப்பொருளுரை என்னும் நூலை அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெற முடியாததால், துரைச்சாமி மூப்பன் அவர்கள் பேரில் சிட்டுக்கவி ஒன்றை வரைந்து அவருக்கு அனுப்பினார். இச்சிட்டுக்கவியால் மகிழ்வுற்ற துரைச்சாமி மூப்பன் கம்பராமாயண கருப்பொருளுரை என்னும் நூலையும் தாம் இயற்றிய வேறு சில நூல்களையும் அனுப்பி வைத்தார். ஆசிரியர் பணி சி. வை. தாமோதரம்பிள்ளை 1876 ஆம் ஆண்டு ஆவணி 10ம் நாள் யாழ்ப்பாணம், ஏழாலையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். இப்பாடசாலையில் முருகேச பண்டிதரும் புலவரும் முறையே தலைமையாசிரியராகவும் உதவியாசிரியராகவும் பணியமர்த்தப்பட்டனர். 1878 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முருகேச பண்டிதர் தமிழகம் செல்ல நேரிட்டதால் புலவரவர்களை தலைமை ஆசிரியராக பணியமர்த்தினார் தாமோதரம்பிள்ளை. புலவரிடம் தனது பாடசாலைப் பொறுப்புக்கள் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு அரசுப் பணி நிமித்தம் தமிழகம் பயணமானார். ஆறுமுகநாவலர், முருகேச பண்டிதர், கொக்குவில் ச. சபாரத்தினமுதலியார், வித்துவசிரோன்மணி ச. பொன்னம்பலபிள்ளை போன்ற மூத்த அறிஞர்களால் ஆண்டுதோறும் இப்பாடசாலை மாணவர்களின் திறமை சோதிக்கப்பட்டது. இச்சோதனைகளைப் பற்றிய அறிக்கைகள் சென்னைப் பட்டணத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களுக்கு அனுப்பப்பட்டது. புலவரின் கற்பிக்கும் திறமையால் தமது பாடசாலை வளர்ச்சி அடைவதை, நேரில் பார்த்தும் சோதனையறிக்கைகள் மூலமும் அறிந்து மகிழ்ச்சி எய்திய தாமோதரம்பிள்ளை புலவருக்கு எழுதிய கடிதம்:- சென்னை, பிரமாதீச ௵மாசி ௴ 22 ௳ (1880) நின்னிரு பங்கண்டு நென்னலென் றன்மன நெக்குருகித் தன்னிற் கரைந்தது தானென்சொல் கேனேத்துந் தாங்குமொரு வன்னெஞ் சுளேனெனு மாற்றம்பொய்யாது டின்ன மிவருனைப் போற்குமார சாமி யெனக்கன்பரே. இங்ஙனம், அன்பன், சி. வை. தாமோதரம்பிள்ளை புலவரின் மாணாக்கர்கள் ஏழாலை சைவபிரகாச வித்தியாசாலையில் புலவரிடம் தமிழ் கற்று தெளிந்தவர்களில் , வித்துவான் சிவானந்தையர்(1873 -1916), தெல்லிப்பழை பாலசுப்ரமணிய ஐயர், தெல்லிப்பழை சுப்ரமணியபிள்ளை, இளவாலை க. சங்கரப்பிள்ளை, தெல்லிப்பழை நா. மயில்வாகனம்பிள்ளை, மாவிட்டபுரம் விசுவநாத முதலியார், கையிட்டி பொன்னையர், சுண்ணாகம் மாணிக்கதியாகராச பண்டிதர், ஏழாலை வி. தம்பையாபிள்ளை, கொக்குவில் இளையதம்பிப்பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கினர். இவர்களுக்குள் ஆழ்ந்த கல்வியறிவும் செய்யுள் புனையுமாற்றலும் நூலுரைகள் இயற்றும் திறமையும் பெரிதும் பொருந்தி விளங்கியவர் சிவானந்தையராவர். இவர் தருக்க சங்கிரக மொழிபெயர்ப்பு, புலியூர்ப் புராணம், புலியூரந்தாதி, சனிதுதி முதலிய நூல்களை இயற்றியுள்ளார். மாணிக்கதியாகராசப் பண்டிதர் கதாப்பிரசங்கஞ் செய்வதிலும், தம்பையாபிள்ளை புராண படனஞ் செய்வதிலும் சிறந்து விளங்கினர். இல்வாழ்வு 1884 ஆம் ஆண்டு உடுவில் மயில்வாகனம், நாகமுத்தம்மையார் தம்பதியினரின் மகளாகிய சின்னாச்சியம்மையாரை புலவருக்கு மணம் முடித்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் புலவரின் பெற்றோர், தமக்கையார் முதலியோர் அடுத்தடுத்து இறந்தமையால் தடைப்பட்ட திருமணம் 1892 இல் நடந்தது. இவர்களுக்கு விசலாட்சியம்மையார் (1893-1925) என்னும் ஒரு மகளும், அம்பலவாணர் (1895-1974), முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1900-1987) என இரு மகன்களும் பிறந்தனர். மகன்கள் இருவரும் தமிழ்க் கல்வியில் பெரிதும் சிறந்து விளங்கி, யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். புலவரின் இளைய மைந்தர் சென்னை லயோலாக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் 1930-1932 காலப்பகுதியில் பணியாற்றியுள்ளார். மேலும் மைந்தர்கள் இருவரும் புலவரின் நூல்கள் மற்றும் முத்துகுமாரகவிராயர் நூல்கள் எல்லாவற்றையும் பதிப்பித்துள்ளார்கள்.குமாரசுவாமிபுலவர் சரிதம் சி கணேசையர்., 1935. . யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் 1913ஆம் ஆண்டு சென்னை அரசு தமிழ் அகராதி ஒன்றைத் தொகுக்கும் பொருட்டு பாதிரியார் சாண்டிலர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவினர் அகராதியின் மாதிரி நகல் ஒன்றை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பினர். சங்கத்தினர் இதனை ஆராய்ந்து அறிக்கை வரையும் பொறுப்பை புலவரிடம் ஒப்படைத்தனர். 1913 ஏப்ரல் 4 இல் இடம்பெற்ற சங்கக் கூட்டத்தில் புலவரின் இவ்வறிக்கை நீண்ட தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. புலவரால் அறிக்கையில் கூறப்பட்ட பிழைகள் எல்லாவற்றையும் வாசித்து அறிந்த சாண்டிலர் யாழ்ப்பாணம் வந்து புலவரை உடுவில் மகளிர் கல்லூரியில் சந்தித்து பல தடவை அகராதி தொடர்பாக கலந்துரையாடினார். சாண்டிலர் புலவரின் அறிவுரைப்படி பல திருத்தங்களை அகராதியில் செய்திருந்தார். புலவர் தனது வாழ்நாள் முழுவதும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக விளங்கி, அதன் சார்பாக பல கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் வழங்கியுள்ளார். வண்ணார்பண்ணை நாவலர் பாடசாலை சி. வை .தாமோதரம்பிள்ளை புதுக்கோட்டையில் நீதிபதிப் பணியிலிருந்து இளைப்பாறிய பின் அவரது உடல் வளமும், பொருள் வளமும் நலிவுற்ற காரணத்தால், ஏழாலை சைவப்பிரகாசப் பள்ளிக்கூடம் 1898 இல் மூடப்பட்டது. புலவர் வேலையில்லாது இருந்த காலத்தில் நீதிபதி உடுப்பிட்டி கு. கதிரவேற்பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் தொகுத்த தமிழ்ச் சொல் அகராதியை தொகுக்கும் பொருட்டு உதவி வந்தார். மேலும் இக்காலத்தில் புலவர் யாழ்ப்பாணம் வைதிக சைவபரிபாலன சபையில் முக்கிய உறுப்பினராக இருந்தமையால், சபை சார்பாக பல கோவில்களுக்கு சென்று சைவத்தின் சிறப்பு பற்றி சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். ஆறுமுக நாவலரால் 1848 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியர் திரு ா . வைத்திலிங்கம்பிள்ளை நோய்வாய்ப்பட்டு இறந்ததை அடுத்து, 1902 அக்டோபர் 1 இல் புலவர் அப்பதவியில் அமர்த்தப்பட்டார். இங்கு புலவர் தமது வாழ்நாள் முழுவதும் பணியாற்றி வந்துள்ளார். இங்கு இவர் தமிழ் இலக்கண இலக்கியம், சைவ சித்தாந்தம், மற்றும் வடமொழி இலக்கண இலக்கியம் முதலியவற்றை கற்பித்துள்ளார். பிற்கால மாணாக்கர்கள் 1898 ஆம் ஆண்டுக்குப் பின் புலவரிடத்தில் கல்வி கேட்டுத் தெளிந்தவர்களில் பலர் வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் புலவரிடத்தில் கற்றவர்கள், சிலர் புலவருடைய வீட்டுக்கு சென்று கற்றவர்களாவர். இவர்களுள் முக்கியமானவர்கள், இளவாலை க. சங்கரப்பிள்ளை, கொக்குவில் சீ. முருகேசையர், கந்தரோடை அ. கந்தையாப்பிள்ளை, வட்டுக்கோட்டை க. சிதம்பரநாதன், வண்ணார்பண்ணை ஆ. சண்முகரத்தின ஐயர், புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர், தென் கோவை ச. கந்தையாப் பண்டிதர், உடுவில் வ. மு. இரத்தினேசுவர ஐயர், உடுவில் மு. ஜகநாதையர், காரைநகர் ச.பஞ்சாட்சர ஐயர், இருபாலை சி. வேதாரணிய தேசிகர், இருபாலை சி. தியாகராசபிள்ளை, தாவடி மு.பொன்னையாபிள்ளை, நாயன்மார்கட்டு செ. சிவசிதம்பரப்பிள்ளை, நீர்வேலி வி. மயில்வாகனப்பிள்ளை, தெல்லிப்பழை மேற்கு சி. கதிரிப்பிள்ளை, வேதாரணியம் தி அருணாசல தேசிகர், சிறுப்பிட்டி த. கார்த்திகேயப்பிள்ளை, நல்லூர் க. குருமூர்த்தி சிவாசாரியார், மட்டுவில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, மட்டக்களப்புப் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை முதலியோராவர். இவர்களுக்குள் புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர் புலவரைப் போல் ஆழ்ந்த இலக்கண அறிவு கொண்டிருந்தமையால் பிற்காலத்தில் தொல்காப்பியக்கடல் என அழைக்கப்பட்டவர்; புலவரின் மறைவுக்குப் பின் புலவரின் வரலாற்றை எழுதியவரும் இவரே. மேலும் இருபாலை சேனாதிராசா முதலியாரின் வழித்தோன்றலாகிய தென்கோவை கந்தையா பண்டிதர், கொழும்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் வித்தகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். கணேசையரும் கந்தையா பண்டிதரும் பிற்காலத்தில் ஈழ நாட்டின் சிறந்த தமிழறிஞர்களாக விளங்கினர். மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பொ. பாண்டித்துரைத் தேவர் புலவரின் திறமைகளைக் கேள்வியுற்று புலவரை சங்க உறுப்பினராக்கும் பொருட்டு 1902 அக்டோபர் 17 இல் கடிதம் மூலம் வேண்டியிருந்தார். இதற்கு இணங்கிய புலவர், பல கட்டுரைகள் வரைந்து சங்கத்தின் பத்திரிகையாகிய செந்தமிழுக்கு அஞ்சல் செய்துள்ளார். மேலும் சங்கத்தினால் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு வினாத்தாள்களும் எழுதி அனுப்பியுள்ளார். 1909 ஆம் ஆண்டு புலவர் தமிழ்நாடு சென்ற போது தேவரினால் வரவேற்கப்பட்டு, சங்கப் புலவர்களுக்கு அறிமுகம் செய்து கௌரவிக்கப்பட்டார். மீண்டும் 1914 ஆம் ஆண்டு தமிழகம் சென்றிருந்த போது, சங்கத்தின் தலைவரான இராசராசேசுவர சேதுபதி மன்னவரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். புலவர் இறந்தபோது அவரது 21 ஆண்டுத் தமிழ் தொண்டைப் பாராட்டி இச்சங்கத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புலவரின் கடைசி நூலாகிய இராமோதந்தம் 1923 ஆம் ஆண்டு இச்சங்கத்தால் பதிப்பித்து வெளியிடப்பட்டது.. இறுதி நாட்கள் 1922, மார்ச்சு 10 இல் புலவரை சுரமும் வயிற்றுழைவு நோயும் வருத்தத் தொடங்கின. மருத்துவத்தால் நோய் தணியாது, 1922 மார்ச்சு 23 அதிகாலை மூன்றரை மணியளவில் உயிர் துறந்தார். புலவர் நோயுற்ற காலத்தே அங்கு இருந்து பணிவிடை புரிந்த, அவரது மாணவனாகிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை சுடுகாட்டில் புலவரின் உடல் எரியூட்டப்பட்ட போது பின்வரும் இரங்கற்பாவினால் தனது குரவருக்கு இறுதி வணக்கம் கூறினார்: செந்தமிழும் ஆரியமுந் தேர்ந்து வீறித் தேயமேலாம் சென்றிலகும் சீர்த்தி ஒன்றே இந்தநில மிசையிருப்ப இணையி லாத எண்ணில்பல கவிதழைத்த இனிய வாயும், அந்தமிலாக் கவிகள்பல எழுதி வைத்த அம்புயநேர் திருக்கரமும், அந்தோ! அந்தோ! இந்தனத்திற் செந்தழலில் உருகி வீய யாமிதனைப் பார்த்திருத்தல் என்ன! என்ன! புலவரின் செய்யுள் நூல்கள் குமாரசாமிப் புலவர் தொடக்கக் காலத்தில் இயற்றிய செய்யுள்கள், பதிகம், ஊஞ்சல், சிந்து, இரட்டைமணிமாலை, அட்டகம், கும்மி மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களாக விளங்கின. பதிகங்கள் வதுளை கதிரேசன் பதிகம் (1884) வதுளை மாணிக்கவிநாயகர் பதிகம் (1884) மாவைப் பதிகம் (1892) துணைவை அரசடி விநாயகர் பதிகம் (1894) அமராவதி பூதூர் பாலவிநாயகர் பதிகம்(1897) ஊஞ்சல்கள் வதுளைக் கதிரேசன் ஊஞ்சல் (1884) துணைவை அரசடி விநாயகர் ஊஞ்சல் (1889) கீரிமலை நகுலேசர் ஊஞ்சல் (1896) ஏழாலை அத்தியடி விநாயகரூஞ்சல் (1897) கைலாய பிள்ளையார் ஊஞ்சல் (1904) கோப்பாய் வெள்ளெருவை விநாயகர் ஊஞ்சல் (1905) விளிசிட்டி பொற்கலந்தம்பை பைரவர் ஊஞ்சல் (1912) தெல்லிப்பழை தில்லையிட்டி அம்மன் ஊஞ்சல் (1915) பன்னாலை வள்ளிமலை கந்தசுவாமி ஊஞ்சல் (1916) அராலி முத்துமாரியம்மான் ஊஞ்சல் (1921) வேறு சிற்றிலக்கிய நூல்கள் வதுளைக் கதிரேசன் சிந்து (1884) மாவையிரட்டை மணிமாலை (1896) நகுலேசர் சதகம் (தசகம்) (1896) அத்தியடி விநாயகர் அட்டகம் (1897) கும்மி மிலேச்சமதவிகற்பகக் கும்மி (1888) மொழிபெயர்ப்புச் செய்யுள்கள் ஏகவிருத்தபாரதம் முதலியன (1896) மேகதூதக் காரிகை (1896) சாணக்கிய நீதிவெண்பா (1914) இராமோதந்தம் (1921) வசன அல்லது உரைநடை நூல்கள் திருக்கரைசைப் புராண பொழிப்புரை (1890) இப்புராணம் திருகோணமலைக்கு அருகில் உள்ள கரைசையம் என்னும் மகாவலி ஆற்றங்கரையில் உள்ள இடத்தில் அமைந்துள்ள சிவன் திருக்கோவிலின் சிறப்புரைக்கும்.இது சூதமுனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட ஒரு புராணமாகும். இதனை தமிழில் இயற்றியவர் யாவர் என்று புலப்படவில்லை. திருகோணமலை வாழ் நண்பரான வே அகிலேசபிள்ளை விரும்பியவாறு, இப்புராண பொழிப்புரையை புலவர் எழுதியுள்ளார். சூடாமணி நிகண்டு முதல் தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1896) சூடாமணி நிகண்டு இரண்டாம் தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1900) சூடாமணி நிகண்டு முதலைந்து தொகுதிப் பதப்பொருள் விளக்கம் (1900) சூடாமணி நிகண்டு என்னும் நூல்ளுள் காணப்படும் தமிழ் சொற்களுக்கு பின்கலநிகண்டு மற்றும் பல இலக்கண நூல்களின் உதவியோடும், வடமொழிச் சொற்களுக்கு இலிங்கபட்டியம், அபிதநிகம், மகாவியாக்கியானம் போன்ற நூல்கள் உதவியோடு புலவர் தனது பொருள் விளக்கத்தை எழுதியுள்ளார். இந்நூலில் தெளிவற்றுக் கிடந்த பல சொற்களுக்கு பொருள் விளக்கம் கூறுவதன் மூலம் தமிழ்க் குரவரும், அதனைக் கற்போரும் பயனடையக்கூடியதாகயுள்ளது. இலக்கணசந்திரிகை (1897) தமிழில் அகராதி எழுதிய உடுப்பிட்டி கு கதிரவேற்பிள்ளை விரும்பியவாறு எழுதப்பட்ட சொல்லியல் ஆய்வு நூலாகும். இதில் பவணந்தி முனிவர் நன்னூலில் கூறிய நெறியை பின்பற்றாது திரிபுனால் விகாரம் அடைந்து இலக்கியங்களில் விளங்கும் சொற்களுக்கு விதியுரைக்குகிறார் புலவர். மேலும் தமிழில் வடிவம் மாறி வரும் வடமொழிச் சொற்கள் பற்றியும் இதில் ஆராயப்படுகிறது. கண்ணகி கதை (1900) யாப்பருங்கலப் பொழிப்புரை (1900) யாப்பருங்கலம் என்பது யாப்பிலக்கணத்தை நூற்பா அகவல் எனப்படும் சூத்திர யாப்பிலமைத்துச் செய்த ஒரு பழைய நூலாகும். யாப்பருங்கலக் காரிகைக்கு மூலநூல் இதுவே. கற்போருக்கு பயனுள்ளவாறு புலவரர்கள் இப்பொழிப்புரையை வெளியிட்டார். இரகுவம்சக் கருப்பொருள் (1900) வடமொழியில் காளிதாசர் பாடிய இரகுவம்சத்தைத், தமிழில் பாடிய அரசகேசரியின் செய்யுள்களுக்கு உடுப்பிட்டி கு கதிரவேற்பிள்ளை விரும்பியவாறு புலவரால் உரை எழுதபட்டது. வெண்பா பாட்டியல் பொழிப்புரை (1900)== இதுவும் புலவரால் பொழிப்புரை எழுதப்பட்ட ஒரு நூலாகும். இதில் வெண்பாவில் உள்ள இலக்கண விதிமுறைகளைப் பற்றி விளக்கம் தரப்படுகிறது. கலைசைச் சிலேடை வெண்பா அரும்பதவுரை (1901) தொட்டிக்கலைச் சுப்ரமணிய முனிவர் இயற்றிய இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளும் இரண்டாமடிகள் இரண்டு மூன்று பொருள் கொள்ளும்படி சிலேடையுடையனவாகவும், பின்னிரண்டடிகளும் திரிபுயமக முடையனவாகவும் எழுதப்பட்டுள்ளது. இச்செய்யுட்களுக்கு புலவரால் அரும்பதவுரை வழங்கப்பட்டுள்ளது. நீதிநெறி விளக்கப் புத்துரை (1901) திருக்குறள் முதலிய நீதி நூல்களை தழுவி குமரகுருபர சுவாமியால் வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட இந்நூலுக்கு எத்தனையோ நுட்பமான திருத்தங்களும், மேற்கோள்களும், பிறவும்,சுருக்கமும், விளக்கமும் உள்ளவாறு புத்துரை ஒன்றை புலவரவர்கள் வழங்கியுள்ளார்கள். மறைசையந்தாதி அரும்பதவுரை (1901) நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் வேதாரணியேசுரர் (திருமறைக்காடுறையும் சிவன் ) மிது பாடிய இவ்வந்தாதிக்கு புலவர் அரும்பதவுரை எழுதியுள்ளார். தண்டியலங்கார புத்துரை (1903) இந்நூல் காளிதாசரால் வடமொழியில் இயற்றபட்ட காவியதர்சம் என்னும் நூலைத் தழுவி தமிழில் தண்டிப்புலவரால் தண்டியலங்காரம் எனும் பெயரில் இயற்றப்பட்டது. இது செய்யுள்களை மேலும் சிறப்பாக்க கையாளப்படவேண்டிய விதிமுறைகளை பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் எனும் மூன்று பகுதிகளில் கூறுகிறது. இதற்கு பலர் உரை எழுதியிருந்த போதும், அவற்றில் வழுக்கள் மிகுதியாக இருந்தமையால் அவற்றைத் திருத்தி புதியதொரு உரையை புலவர் வழங்கியுள்ளார். திருவாதவூரர் புராணப் புத்துரை (1904) மாணிக்கவாசக பெருமானின் வரலாற்றை கூறும் இந்நூல் கடவுள் மாமுனிவரால் எழுதப்பட்டது. முன்பு இதனை திருத்தி பதிப்பித்த புலவரவர்கள்,1904 ஆம் ஆண்டு இதற்கு ஒரு புத்துரையை எழுதி வெளியிட்டார். யாப்பருங்கலகாரிகைப் புத்துரை (1908) முன்னர் பொழிப்புரையுடன் வெளியிட்ட இந்நூலுக்கு 1908 ஆம் ஆண்டு புதியதோர் உரையை புலவரவர்கள் வரைந்துள்ளார். இதன் இரண்டாம் பதிப்பை 1925 இல் கு. அம்பலவாணபிள்ளை வெளியிட்டார். இதன் மறுபதிப்பு 2015 இல் சென்னையில் வெளியிடப்பட்டது. முத்தகபஞ்சவிஞ்சதி குறிப்புரை (1909) புலவரவர்கள் தனது மூதாதையரான முத்துக்குமாரகவிராயர் இயற்றிய பல நூறு செய்யுள்கள் காலத்தால் அழிவுற்ற நிலையில் உறவினர் மற்றும் கவிராயரிடம் கற்றவரிடமும் வினவியும் தேடியுமறிந்த இருபத்தைந்து செய்யுள்களை இந்நூலில் பதிப்பித்துள்ளார். கவிராயர் பிரகேளிகை, நாமாந்தரிதை, சங்கியாதை, வியிற்கிராந்தை, மடக்கலங்க்காரம் முதலிய யாப்பணிகளை நூதனமாக நல்லிசைச் செய்யுளுள் அமைத்துப் பாடியுள்ளார். இச்செய்யுள்களை கற்றவரும் மற்றவரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் புலவரவர்கள் இவற்றுக்கு குறிப்புரை எழுதுயுள்ளார். அகப்பொருள் விளக்க புத்துரை (1912) 1912ஆம் ஆண்டு இறையனார் அகப்பொருளுக்கு, புலவரவர்கள் திரு த.தி.கனகசுந்தரம்பிள்ளையுடன் இணைந்து புதியதோர் உரை எழுதி வெளியிட்டுள்ளார்கள். வினைப்பகுபதவிளக்கம் (1913) இந்நூலிற் கையாளப்பட்ட இலக்கணவாராய்ச்சி முறை நன்னூலிலுள்ள 'நடவாமடிசீ' என்னுஞ் சூத்திரத்தைப் பீடிகையாகக்கொண்டு இருபத்துமூன்று பகுதிகளையும் தனித்தனியே விளக்கிக் காட்டுகின்றது. இந்நூல் மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை விரும்பியவாறு இயற்றப் பெற்றது. இலக்கியச் சொல்லகராதி (1915) இது சங்க இலக்கியங்களிலும், சங்கமருவிய இலக்கியங்களிலும், பிற்றைச் சான்றோரிலக்கியங்களிலும் வருகின்ற அருஞ் சொற்களாகிய இலக்கியச் சொற்களைத் தொகுத்து புலவரால் இயற்றப்பட்டது. மற்றைய அகராதிகளில் வழுவுற எழுதப்பட்ட சொற்களும், சொற்பொருள்களும் இதன்கண் திருத்தமுற எழுதப்பட்டுள்ளன. பிற அகராதிகளில் வராத அனேகம் புதுச்சொற்கள் இதிற் சேர்க்கப்பட்டுள்ளன. இது பண்டைக்கால இலக்கியங்களைப் பயில்வாருக்குப் பெரிதும் பயன்படும். தமிழ்ப் புலவர் சரித்திரம் (1916) இந்நூலில் பல புலவர்களுடைய சரித்திரச் சுருக்கமும், அவர்கள் பாடிய அருங்கவிகளும், அவற்றின் உரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூலின் வசனங்கள் சுருக்கமும், தொடைநயமும் பொருந்த அழகுற எழுதி சேதுபதி மன்னவருக்கு அர்ப்பணித்துள்ளார். மேலும் இந்நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டக்கல்விப் பாடநூலாக விளங்கியது. இராமாயணம் பாலகாண்டம் அரும்பதவுரை (1918) இது புலவரவர்கள், தி. த. கனகசுந்தரம்பிள்ளையுடன் சேர்ந்து எழுதிய நூல். இராமாயணச் செய்யுள்களில் பதிக்கும்போது சொற்குற்றங்கள் பெருகிவருவதை கண்ட இவர்கள், பழைய ஏட்டுச்சுவடிகளை தமிழகத்தில் தேடிக் கண்டெடுத்து, அவற்றின் துணையுடன் திருத்தமாக அரும்பதவுரையுடன் பாலகாண்டத்தை வெளியிட்டனர். புலவரின் உடல்நலக் குறைவாலும், கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் சென்னையில் வசிக்க நேரிட்டதாலும் திட்டமிட்டபடி மிகுதி இராமாயணம் வெளியிடப்படவில்லை. ஏரேழுபது பொழிப்புரை (1920) கம்பரால் இயற்றப்பட்ட இந்நூலுக்கு புலவர் பொழிப்புரை வழங்கியுள்ளார். இதோபதேசம் (1920) இது விட்டுணூசர்மர் என்பவரால் வடமொழியில் சுதர்சனர் என்னும் அரசனின் மைந்தருக்கு அரசியல் நெறி போதிக்கும் பொருட்டு எழுதப்பட்ட நூலாகும். இதனை புலவரின் வடமொழிக் குரவர் நாகநாத பண்டிதர் தமிழில் செய்யுள் வடிவில் மொழிபெயர்த்தார். அவற்றை புலவர் வசனநடையில் எழுதியுள்ளார். கல்வளையந்தாதி பதவுரை (1921) நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் எழுதிய கல்வளையந்தாதிக்கு புலவர் பதவுரை எழுதியுள்ளார். சிசுபாலசரிதம் (1921) சிசுபாலவதம், மகாபாரதம், பாகவதம் ஆகிய வடமொழி நூல்கள் கூறும் சேதினாட்டரசன் சிசுபாலன் வரலாற்றைப் புலவரவர்கள், மொழிபெயர்த்து உரைநடையமைப்பில் தமிழில் தந்துள்ளார். இரகுவமிச சரிதாமிர்தம் (1922) முதலில் வடமொழியில் காளிதாசராலும், பின்னர் தமிழில் அரசகேசரியாலும் பாடப்பட்ட இந்நூலை புலவர் வசனநடையில் எழுதியுள்ளார். இரகுவமிசம் திலீபன் முதல் இலவகுசர் வரையான இரகுகுல அரசரின் வரலாற்றை கூறுகிறது. புலவர் பதிப்பித்த நூல்கள் இதோபதேசம் (1886)' இது புலவரின் வடமொழிக் குரவர் நாகநாத பண்டிதரால் வடமொழியிலிருந்து தமிழுக்கு செய்யுள் வடிவில் மொழி பெயர்க்கப்பட்டதாகும். இதனை பண்டிதரவர்கள் புலவருக்கு கல்வி கூறும் பொருட்டுச் செய்திருந்தார். நகுலமலைக் குறவஞ்சி நாடகம் (1895) அராலி விசுவநாத சாத்திரிகளால் இயற்றப்பட்ட இந்நூல், புலவரால் பல மேற்கோள்களோடு பதிப்பிக்கப்பட்டது. யாப்பருங்கலக்காரிகை பழையவுரை (1900) இதில் நிலவிய சொற்குற்றங்களை நீக்கிப் புலவரால் 1900 ஆம் ஆண்டு பதிப்பிடப்பட்டது. ஆசாரக்கோவை (1900) புலவரால் பதிக்கப்பட்ட ஆசாரக்கோவை பெருவாயில் முள்ளியரால், ஆசாரமுரைக்கும் வகையில் இயற்றப்பட்டதாகும். நான்மணிக்கடிகை (1900) ஆத்திசூடி வெண்பா (1901) இராமபாரதி இயற்றிய இந்நூலை, புலவர் 1901 ஆம் ஆண்டு பதிப்பித்தார். சிவசேத்திர விளக்கம் (1901) திருவண்ணாமலை அண்ணாமலைத்தேசிகர் இயற்றிய இந்நூலை புலவர் ஆராய்ந்து, மூன்று சிறப்புப்பாயிரப் பாக்கள் வழங்கிப் பதிப்பித்தார். உரிச்சொனிகண்டு (1902) தமிழில் வரும் உரிச் சொற்களுக்கு பொருள் வரையறுத்துக் கூறும் இந்நூலை புலவர் திறனாய்வு செய்து பதிப்பித்தார். திருவாதவூரர் புராணமுலம் (1902) கடவுள் மாமுனிவரால் இயற்றப்பட்ட இந்நூலின் பிற பதிப்புகளில் மிகுதியாகக் காணப்பட்ட சொல்லியல் வழுக்களை நுண்ணறிவால் களைந்தது மிகத் திருத்தமாக புலவர் இதனை பதிப்பித்தார். பழமொழி விளக்கம் (1903) பழமொழிகளின் கதைகளைத் தழுவி இயற்றப்பட்ட இந்நூல் 1903 ஆம் ஆண்டு புலவரால் பதிப்பிக்கப்பட்டது. சதாசாரக்கவித்திரட்டு (1901) சிவத்தோத்திரக்கவித்திரட்டு (1911) கண்டனங்களும், கட்டுரைகளும், சொற்பொழிவுகளும் புலவர் செய்யுள்கள்,கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் முதலியவற்றைக் கையாண்டு தமது கண்டனங்களை வழங்கியுள்ளார். இவை இரு வகைப்படும். கிறித்து மதத்தவர் மேலைநாட்டு ஆட்சியாளரின் துணையுடன் தங்கள் மதத்தை தமிழரிடையே பரப்பும் பொருட்டு சைவத்தை இழிந்து வந்ததை எதிர்த்து தொடக்ககாலத்தில் புலவர் கண்டனங்கள் பல வழங்கியுள்ளார். புலவர் கிறித்து மதத்தவரின் சைவநிந்தனையை மறுத்து வரைந்த கட்டுரைகள் பின்வருமாறு. இலங்கை நேசன் என்னும் செய்தித்தாளில் வெளிவந்த கண்டனங்கள். கிறீஸ்து தேவனா? (1878) பன்னகவரி (1881) உதயபானு என்னும் செய்தித்தாளில் வெளிவந்த கண்டனங்கள்: நற்புத்தி (1880) அஞ்ஞானி என்னுஞ் சொன்மறுப்பு (1881) கிறீஸ்து சிருட்டிகர் (1881) பாதுகாவலன் பத்திராதிபருக்கு (1881) காரைக்கால் சத்திய வேத ஆசாரப் பிரியருக்கு (1881) வடவிலங்கைக் கிறீஸ்த வித்தகருக்கு (1882) நாகரீகசார விநாசம்(1882) ஆறுமுக நாவலர் இறந்தபோது, கிறித்துவ மதச்சபைகள் தங்கள் மதத்தை பரப்ப நல்ல தருணம் எனக் கருதிப் பல சைவமதக் கண்டனங்களை வெளியிட்ட போது அவற்றை மறுத்து மேல்க்கூறிய தலைப்புக்களில் புலவரவர்கள் கண்டனங்களை வெளியிட்டார். 1889 ஆம் ஆண்டுக்கு பின் மதம் பரப்பும் நடவடிக்கை ஓரளவு தணிவுற்றதால் புலவரும் கண்டனம் எழுதுவதை கைவிட்டார். இலக்கண இலக்கிய நூல்களுக்கு உரையேழுதுபவர்கள் மற்றும் அவற்றைப் பதிப்பிப்போர் செய்யும் பொருள் மற்று சொற் குற்றங்களை தனது நுண்ணறிவால் கண்டறிந்து, அவற்றைத் திருத்தும் பொருட்டு கண்டனங்கள் வரைவதில் புலவரவர்கள் அக்காலத்தில் தலைசிறந்தவராக விளங்கினார். இதனை கண்டு வியந்த நல்லூர் சரவணமுத்துப் புலவர் யாப்பருங்கலக் காரிகைப் பதிப்புக்கு வழங்கிய சிறப்புப் பாயிரத்தில் பின்வருமாறு கூறியுள்ளார். எம்மை விஞ்சிடுவோர் எவருமிங் கிலையெனாத் தம்மைத் தாமே தனிவியந் தெழுதும் போலி நாவலர் புரைபட இயற்றிய நூலுரைப் பிழைகளை நுண்ணிதி னாய்ந்தோன் புலவர் தனது காலத்தே பல பல கண்டனங்களை வரைந்துள்ளார், ஆனால் மிகுந்த பரபரப்பையும், அறிஞர்களின் வரவேற்பையும் பெற்ற மூன்று கண்டனங்கள் வருமாறு: கந்தபுராண வியாக்கியானம் (1876) புலவர் இளமைக்காலத்தில் வரைந்த இக்கண்டனம் நகைச்சுவை ததும்பும் வகையில் உள்ளது. கந்தபுராணம் முதலியவற்றைப் பிரசங்கஞ் செய்யும் உரையாசிரியர்கள் செய்யும் பிழைகளைக் கண்டித்துக் கூறும் இக்கண்டனத்தை வாசித்த ஆறுமுக நாவலர் அதன் உரைநடையின் சிறப்பையும், தருக்கரீதியாக எழுதப்பட்டிருப்பதையும் கண்டு களித்ததோடமையாது அதற்குச் சார்பாக ஒரு கடிதம் வரைந்து இலங்கை நேசனில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் புலவரின் கண்டன திறமையை தமிழ் அறிஞர்கள் எல்லோரும் அறிந்தனர். இலக்கண வினா(1880) இப்பெயருடைய கண்டனம், யோன் சங்கரப்பிள்ளை என்பவர் புதிய முறையில் இலக்கணச் சல்லாபம் என்னும் நூலைத் தமிழ் மரபு கவனியாது எழுதியமையால் புலவரால் வரையப்பட்டு உதயபானுவில் வெளிவந்தது. இது அக்காலத்தில் அறிஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. சிவக சிந்தாமணிப் பிழைகள் (1901) புலவர், உ. வே. சாமிநாதையர் பதிப்பித்த சிவக சிந்தாமணிப் பதிப்பிலுள்ள பிழைகளை திரட்டி மேல் கூறிய பெயரில் வெளியிட்டார். முன்னைய நாட்களில் சாமிநாதையரின் மாணவகராகிய சண்முகம்பிள்ளை, புலவரின் தமிழ்க் குரவராகிய முருகேசப் பண்டிதரை ஈழநாட்டாரும் சாதாரண இலக்கிய விலக்கணக் கல்வியறிவில்லாத அற்பரும் என இழிந்து கண்டனம் எழுதியதால், சாமிநாதையர் புலவரின் கண்டனத்தை பழிவாங்கும் நடவடிக்கை எனக் கருதினார். இதனால் புலவருக்கும் சாமிநாதையருக்கும் இடையே நிலவிய நட்பில் பன்னிரு ஆண்டு கால இடைநிறுத்தம் ஏற்பட்டது. புலவரவர்கள் கண்டனக் கட்டுரைகள் தவிர சில நூறு இலக்கணவிலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மற்றும் சைவான்மீகக் கட்டுரைகளையும், உதயபானு, இலங்கை நேசன், திராவிடகோகிலம், செந்தமிழ், சிறிலோகரஞ்சனி முதலிய பத்திரிகைகளுக்கும் பிற வெளியீடுகளுக்கும் வழங்கி உள்ளார். மேலும் அக்காலத்தில் கோவில்கள் மற்றும் கல்விக்கூடங்கள் போன்ற இடங்களில் புலவரவர்கள், ஆன்மீகம் மற்றும் இலக்கணவிலக்கியம் சார்ந்த தலைப்புகளில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சுண்ணாகம் அ.குமாரசுவாமிப்-புலவர் இலங்கைத் தமிழ் அறிஞர்களில் இன்றும் போற்றப்படுபவர் குமாரசுவாமிப்புலவர் சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவர் பகுப்பு:ஈழத்துப் புலவர்கள் பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள் பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள் பகுப்பு:ஈழத்துப் பதிப்பாளர்கள் பகுப்பு:தமிழ்ப் பதிப்பாளர்கள் பகுப்பு:தமிழ் இலக்கண அறிஞர்கள் பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள் பகுப்பு:1854 பிறப்புகள் பகுப்பு:1922 இறப்புகள்
விபுலாநந்தர்
https://ta.wikipedia.org/wiki/விபுலாநந்தர்
சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 – சூலை 19, 1947) கிழக்கிலங்கையின் காரைதீவில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர். வாழ்க்கை பிறப்பு சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் மயில்வாகனன் ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 1892 மார்ச்சு 27 (1892 கர ஆண்டு பங்குனி 16) அன்று சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்குப் பிறந்தார். கல்வி இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior) சோதனையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார். ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912-ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1915-ஆம் ஆண்டு கொழும்பு அரசினர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916-இல் அறிவியலில் பட்டயத்தையும் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலாநந்தரே. ஆசிரியப் பணி கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராகப் பணியாற்றினார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. அதனால் 1917-ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் 1920-ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc தேர்வில் தோற்றி சித்தியடைந்தார். மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக் கல்லூரி முகாமையாளரும், திருப்புகழ், சிவப்பிரகாசம், சிவஞானசித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில், 1925-ஆம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலாநந்தர் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு 1928-இல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். 1926-ஆம் ஆண்டிலிருந்து 1930 வரை திருகோணமலையில் இருந்தபடியே யாழ்ப்பாணம் இராமகிருட்ண மிசன் வைத்தீசுவர வித்தியாலயத்தின் முகாமையாளராகவும் செயற்பட்டார். துறவறம் மனதை ஈர்த்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922-ஆம் ஆண்டில் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார், மயில்வாகனன். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சர்வானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. இரண்டு வருடங்கள் அங்குப் பயின்ற அவர், இராமகிருஷ்ண மிஷன் நடத்திய ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும்,வேதாந்த கேசரி (Vedanta Kesari) என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்சையின் பரீட்சார்த்தகராக நியமிக்கப்பட்டார். மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழ் எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், 'மதங்க சூளாமணி' என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. 1924-ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சர்வானந்தரால் சுவாமி விபுலாநந்தர் என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார். இசை ஆராய்ச்சி thumb|left|200px|1942 ஆகத்து 1 மதுரை முத்தமிழ் மாநாட்டில் விபுலாநந்தர் செட்டி நாட்டரசர் வேண்டுகோளின்படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931-ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்துப் போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். அக்காலப் பகுதியில் தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934-ஆம் ஆண்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்தி விலகி இலங்கை திரும்பிய அடிகளார், இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு வந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள அல்மோரா(Almorah) என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் 'பிரபுத்த பாரதம்' (Prabuddha Bharatha) என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934-ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அப்போது தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய 'யாழ் நூல்' உருவாக்கம் பெற்றது. 1943-ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியபோது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராகப் பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத்துறை எவ்வழியில் செல்லவேண்டும் என்ற திட்டங்களைச் சுவாமி விபுலாநந்தரே வகுத்தார் என்பது நினைவில் இருக்கத்தக்கது. 250px|thumb|right|விபுலாநந்தர் கலைச்சொல்லாக்கம் சுவாமி விபுலாநந்தர் தலைமையேற்று நடத்திய தமிழ்க் கலைச்சொல்லாக்க மாநாடு 1936 செப்டெம்பர் 20 ஞாயிற்றுக்கிழமை சென்னை பச்சையப்பன் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது. திருவாங்கூர் திவான் சேர் சி. பி. இராமசாமி ஐயர் தொடக்கி வைத்தார். சென்னைப் பல்கலைக்கழகம், இலங்கை அரசாங்கம், தென்னிந்திய ஆசிரியர் சங்கம், தென்னிந்தியத் தமிழ்ச் சங்கம் ஆகியன அறிஞர்களை இம்மாநாட்டுக்கு அனுப்பியிருந்தன. சுவாமி விபுலாநந்தர் கலைசொல்லாக்கக் குழுவின் தலைவராகவும், வேதியியல் கலைச்சொல் நூற் குழுவின் தலைவராகவும் இருந்து செயற்பட்டார். 1936 செப்டம்பர் 27 அன்று சென்னை மாகாணத் தமிழர் மாநாடு நடைபெற்ற போது, கலைச்சொல்லாக்கத்தைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. யாழ் நூல் அரங்கேற்றம் சுவாமி அவர்களின் தமிழ்த் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய யாழ் நூல் ஆராய்ச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம்பூதூர் வில்வாரண்யேசுவரர் கோயிலில் திருஞானசம்பந்தரின் சந்நிதானத்தில் இசை விற்பன்னர்கள், கற்றோர்கள், மற்றோர்கள் முன்னிலையில் தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947-ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார். முதல் நாள் விழாவில் இயற்றமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சூழ்ந்து வர சுவாமி அவர்களைத் தெற்குக் கோபுர வாயிலின் வழியாகத் திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். சுவாமி அவர்கள் தான் ஆராய்ந்து கண்டுபிடித்த வரைபடத்துடன் விளக்கிய பின்னர்த் தான் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்த்தண்டி வீணைகளைத் தாங்கிச் சிலர் சென்றார்கள். நாச்சியார் முன்னிலையில் சுவாமி இயற்றிய 'நாச்சியார் நான்மணிமாலை' வித்துவான் ஔவை துரைசாமி அவர்களால் படிக்கப்பட்டு அரங்கேறியது. பாராட்டுரைகளுக்குப் பின்னர்ச் சங்கீதபூஷணம் க.பெ. சிவானந்தம் பிள்ளை சுவாமிகளால் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிய முதல் நாள் விழா இனிதாக நிறைவேறியது. இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ. முருகப்பா, தமிழ்ப்பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழக சாம்பமூர்த்தி ஐயர், இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தைக் கவியரசு அ. வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், மற்றும் பலர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். பின்னர்ச் சுவாமி விபுலாநந்தர் யாழ் பற்றிய அரிய தகவல்களை எடுத்துவிளக்கினார். வித்துவான் வெள்ளைவாரணர் யாழ்நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார். பின்னர் யாழ்நூல் அரங்கேற்றப்பட்டது. மறைவு right|thumb|விபுலாநந்தர் சமாதி யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். 1947 சூலை 19-ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் இறந்தார். அவரது உடல், அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. ஈழத்து மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைச் சேர்த்துள்ளது. இத்துடன் நாட்டில் உள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் இவரது மறைவு நாளான அன்றே கொண்டாடப்படுகின்றது. வெளிவந்த நூல்கள் மதங்க சூளாமணி யாழ்நூல் சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் (127 கட்டுரைகளின் தொகுப்பு, 3 பாகங்கள், 1997) விபுலானந்தர் இலக்கியம் (தொகுப்பு) மொழிபெயர்த்து சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்; மொழிபெயர்ப்பு:விபுலாநந்தர்; 1957; ராமகிருஷணமடம், சென்னை-4.கல்கி 1957-03-10 படித்துப்பாருங்கள் பக்.55 விபுலாநந்தர் பற்றிய ஆக்கங்கள் அடிகளார் படிவமலர் - ம. சற்குணம் விபுலானந்தர் இமயம் - மட்டக்களப்புத் தமிழ் சங்கம் விபுலானந்தர் காவியம் - சுப்பிரமணியம் சிவலிங்கம் சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும் - சி. மௌனகுரு சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள் - கா. சிவத்தம்பி யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் - அ. கௌரிகாந்தன் இவற்றையும் பார்க்கவும் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி விபுலானந்தர் படைப்பிலக்கிய விருது உசாத்துணை தமிழ் வளர்த்த நல்லறிஞர்கள் - குன்றக்குடி பெரியபெருமாள் நூலகம் திட்டத்தில் விபுலானந்தர் பற்றிய நூல்கள் சுவாமி விபுலாநந்தர் காலமும் கருத்தும் - சி. மௌனகுரு சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள் - கா. சிவத்தம்பி யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலானந்தரும் - அ. கௌரிகாந்தன் வெளி இணைப்புகள் விபுலாநந்தர் தமிழ்த் தொண்டு, முனைவர் மு. இளங்கோவன் இசைத்தமிழின் இலங்கை முகம், முனைவர் மு.இளங்கோவன் பிபிசியில் விபுலாநந்தர் பற்றிய ஆய்வு தமிழிசை இயக்கமும் விபுலாநந்தரும் தினமணியில் விபுலானந்தர் பற்றிய கட்டுரை தமிழறிஞர் விபுலாநந்தர் விபுலாநந்தர் பிறந்த தினம் Swami Vipulananda: The Monk Who Recreated Lost Ancient Tamil Musical Instruments, Aravindan Neelakandan, 27 மார்ச் 2022 பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள் பகுப்பு:மட்டக்களப்பு மாவட்ட நபர்கள் பகுப்பு:தமிழிசைக் கலைஞர்கள் பகுப்பு:தமிழறிஞர்கள் பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள் பகுப்பு:1947 இறப்புகள் பகுப்பு:1892 பிறப்புகள் பகுப்பு:தமிழிசை ஆய்வாளர்கள் பகுப்பு:தமிழ் நாடக ஆய்வாளர்கள் பகுப்பு:தமிழ் கலைச்சொல் அறிஞர் பகுப்பு:தமிழிசை இயக்க செயற்பாட்டாளர்கள் பகுப்பு:அம்பாறை மாவட்ட நபர்கள் பகுப்பு:புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை பழைய மாணவர்கள் பகுப்பு:இராமகிருட்டிண இயக்கத்தின் துறவிகள்
ஈழத்தமிழ் நாடகங்கள்
https://ta.wikipedia.org/wiki/ஈழத்தமிழ்_நாடகங்கள்
ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாடகளும் நவீன நாடகங்களாகும். மரபுவழி நாடகங்களைக் கூத்துக்கள் எனவும் அழைப்பார். இக் கூத்துக்களின் ஆரம்பகாலம் எது எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாதுவிடினம் ஈழத்தில் நாடக வடிவ இலக்கியங்களான பள்ளு குறவஞ்சி நூல்களின் தோற்றக் காலமான 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் ஈழத்தில் பல மரபுவழி நாடகப் பிரதிகள் தொடர்ச்சியாகத் தோன்றத் தொடங்கின என்று அறிகிறோம். கணபதி ஐயரே (1709-1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முதலாசிரியர் என்பர். இவர் வாளபீமன் நாடகத்தை எழுதினார். இதுவரை கிடைத்த பல்வேறு தகவல்களிலிருந்து ஈழத்தில் ஏறத்தாள 200க்கு மேற்பட்ட மரபுவழி நாடக நூல்கள் இருந்ததாக அறிய முடிகிறது. ஆனால் ஏட்டுருவிலோ அன்றி அச்சுருவிலோ கையிற் கிடைப்பவை அவற்றினும் பாதியே. போத்துக்கேயர் வருகையின் பின் ஈழத்தில் வளர்ச்சி பெற்ற கத்தோலிக்க மதத் தாக்கத்தினால் கத்தோலிக்க மதச் சார்பு பொருந்திய கூத்துக்களும் தோன்றின. என்றிக் எம்பரதோர் நாடகம், ஞானசவுந்தரி நாடகம் என்பன இதற்கு உதாரணங்களாகும். ஈழத்து மரபுவழி நாடகங்களில் கத்தோலிக்காரின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, மலைநாடு ஆகிய இடங்களிலெல்லாம் இம் மரபு வழி நாடகங்கள் இன்றும் வழக்கிலுள்ளன. இவற்றிற்கிடையே பிரதேசத்திற்குப் பிரதேசம் சிற்சில வேறுபாடுகளிருப்பினும் இவை அனைத்தும் ஓரிடத்திலுருவாகி, பின்னர் ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களிற் சுவறின என்பதற்கு ஆதாரங்களுண்டு. இம்மரபுவழி நாடகங்களே ஈழத்து நாடக மரபின் ஆரம்பமாகும். பார்ஸி வழி நாடகக்காரரது வரவினால் 18 ஆம் நூற்றாண்டில் விலாசம் என்றொரு நாடக வடிவம் ஈழத்தில் வந்து புகுந்தது. அரிச்சந்திர விலாசம், மதனவல்லி விலாசம் என்பன இதற்கு உதாரணம். கூத்திலிருந்த ஆட்ட முறைகள் நீக்கப்பட்டமையும் கர்னாடக சங்கீத இசை இடம் பெற்றமையும் விலாசத்தை கூத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டிய அம்சங்களாகும். கூத்து ஆட்ட முறைகளை விட்டு கர்னாடக இசையுடன் மேற்கத்திய, இந்துஸ்தானி இசைகளும் கலந்து சபா, டிறாமா போன்ற நாடக வடிவங்களும் 19 ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் எழுந்தன. நாட்டுக்கூத்திற் காணப்படாத காட்சியமைப்பும் விறுவிறுப்பான கதையோட்டமும் இந்நாடகங்களின் பிரதான அம்சங்களாகும். துணை நூல்கள் வெளி இணைப்புகள் ஈழத்து நாடக நூல்கள் கந்தன் கருணை - நூலகம் திட்டம் வந்து சேர்ந்தன, தரிசனம் - நூலகம் திட்டம் சமூக விரோதி - நூலகம் திட்டம் நான்கு நாடகங்கள் - நூலகம் திட்டம் பகுப்பு:இலங்கைத் தமிழ் நாடகங்கள்
டோனி ப்ளேர்
https://ta.wikipedia.org/wiki/டோனி_ப்ளேர்
redirect டோனி பிளேர்
ஃரான்சிஸ் க்ரிக்
https://ta.wikipedia.org/wiki/ஃரான்சிஸ்_க்ரிக்
redirect பிரான்சிஸ் கிரிக்
அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்
https://ta.wikipedia.org/wiki/அலெக்ஸாண்டர்_ஃப்ளெமிங்
redirect அலெக்சாண்டர் பிளெமிங்
அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்
https://ta.wikipedia.org/wiki/அலெக்ஸாண்டர்_க்ரஹாம்_பெல்
REDIRECT அலெக்சாண்டர் கிரகாம் பெல்