title
stringlengths
1
93
url
stringlengths
31
123
text
stringlengths
0
361k
ஆய்தக்குறுக்கம்
https://ta.wikipedia.org/wiki/ஆய்தக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும். ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம். ல ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும் - நன்னூல்.97 எ.கா.: முள் + தீது = முஃடீது மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின் கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதைக் காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும். இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் மேற்கோள்கள் பகுப்பு:சார்பெழுத்துகள்
பாலா (இயக்குநர்)
https://ta.wikipedia.org/wiki/பாலா_(இயக்குநர்)
சேரன் (திரைப்பட இயக்குநர்)
https://ta.wikipedia.org/wiki/சேரன்_(திரைப்பட_இயக்குநர்)
பாக்யராஜ்
https://ta.wikipedia.org/wiki/பாக்யராஜ்
கே.பாக்யராஜ் (Bhagyaraj, பிறப்பு: சனவரி 7, 1953) ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளன்கோயில் என்னும் ஊரில் பிறந்தவர். பெற்றோர் பெயர் கிருஷ்ணசாமி-அமராவதி அம்மாள் மூன்றாவது மகனாக பிறந்தார். செல்வராஜ், தன்ராஜ் என இரு அண்ணன்கள் உண்டு . தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , திரைக்கதை அமைப்பாளர் , இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர். திரையுலக வாழ்க்கை 1977-ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலேவில் உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார். பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்தார். இப்படத்திற்கு வசனமும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தனது அடுத்த படமான புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டுமன்றி, கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார். ஒரு இயக்குனராக தமது முதல் படமாக பாக்யராஜ் உருவாக்கியது சுவர் இல்லாத சித்திரங்கள் (1979). (இடைக்காலத்தில் அவர் ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமான கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லன் வேடம் ஏற்று தனது இருப்பைப் பதிவு செய்திருந்தார்). முதல் படத்தில் சுதாகர் கதாநாயகனாகவும் சுமதி நாயகியாகவும் நடிக்க, ஒரு குணச்சித்திரப் பாத்திரத்தை பாக்யராஜ் ஏற்றிருந்தார். நகைச்சுவையும், சோகமும் சரிபாதியாக அதில் அமைந்திருந்தது. அடுத்து, சொந்த தயாரிப்பான ஒரு கை ஓசை திரைப்படம் துவங்கி தனது முத்திரையை பதிக்கத் தொடங்கினார்.அஸ்வினி இணைந்து நடித்த இப்படத்தில் அவர் வாய் பேச இயலாத ஊமைக் கதாநாயகனாக மேற்கொண்ட பாத்திரம் இரசிகர்களின் மனம் கவர்ந்தது. அடுத்து வெளியான மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா ஆகியவை பாக்யராஜின் முத்திரையை முழுமையாகக் கொண்டு வெற்றிப் படங்களாயின. அடுத்து மர்மங்கள் மற்றும் அதிரடி கொண்ட அதேசமயம் தனது முத்திரையுடனும் கூடிய ஒரு படமாக விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தைப் பாக்யராஜ் இயக்கி நடித்தார். பாக்யராஜ் தனது முத்திரையை முழுமையாகப் பதிந்து வெற்றி ஈட்டிய திரைப்படங்களாக அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு போன்றவை கருதப்படுகின்றன. டார்லிங், டார்லிங், டார்லிங் வெற்றிப்படத்தை இயக்கி அதில் நடித்த பூர்ணிமாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். பின், 1982 ம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு. ஊர்வசி அறிமுகமான இத்திரைப்படம் சென்னையிலும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் வெள்ளி விழா கொண்டாடியது. இதில் பாக்யராஜ் கையாண்ட சில விஷயங்கள் (முருங்கைக்காய் போன்றவை) இன்றளவும் பேசப்படுகிறது. அதேபோல் சின்ன வீடு, எங்க சின்ன ராசா, இது நம்ம ஆளு போன்ற படங்களுக்கு பெரிய வசூலையும், விருதுகளையும் பெற்றுத்தந்தன. சொந்த வாழ்க்கை தனது முதல் இரண்டொரு படங்களுக்குப் பிறகு, பாக்யராஜ் அப்போது துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த "பிரவீணா" என்னும் நடிகையை மணந்தார். இவர் பாக்யராஜின் "இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மணி" ஆகிய சில படங்களிலும் நடித்தவர். சில வருட மண வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு பிரவீணா இறந்தார். சில காலத்திற்குப் பின்னர், பாக்யராஜ் அப்போது முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரையுமே பாக்யராஜ் திரையுலகில் அறிமுகம் செய்திருக்கிறார். சரண்யா முதல் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. சாந்தனு தன் முதல் படமான சக்கரக்கட்டி என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகிறார். அரசியல் ஈடுபாடு துவக்கம் முதலே தன்னை எம். ஜி. ஆரின் ரசிகராக வெளிப்படுத்தியிருந்த பாக்யராஜ், ருத்ரா திரைப்படம் வெளியான காலகட்டத்தில் அ.தி.மு.க. கட்சியில் இணைந்திருந்தார். இப்படத்தில், ஒரு பாடல் காட்சியில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவப் படங்கள் திரையில் தோன்றுமாறு அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிறகு, அக்கட்சியிலிருந்து வெளியேறி சொந்தக் கட்சியாக எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் துவக்கினார். பின்னர், நாளடைவில் அது கலையவே, தற்போது, தி.மு.க. கட்சியில் உள்ளார். எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் 11 பிப்ரவரி 1989 இல் பாக்யராஜ் தொடங்கிய ஒரு அரசியல் கட்சியாகும் . இந்த கட்சி 1991 கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அதில் ஒரு வேட்பாளர் 87 வாக்குகளைப் பெற்றிருந்தார். இந்த கட்சி ஆரம்ப கட்டத்திலேயே படுதோல்வி அடைந்தது. பாக்யராஜ் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். ஏப்ரல் 5, 2006 அன்று, கட்சித் தலைவர் கருணாநிதி முன்னிலையில் பாக்யராஜ் திமுகவில் இணைந்தார், மேலும் அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ ஜெயலலிதாவை விமர்சித்தார். திமுகவில் இருந்து விலகி அரசியலில் பார்வையாளராக இருந்து வந்தார். பின்னர் திமுகவில் இருந்து விலகி அரசியலில் பார்வையாளராக இருந்து வருகிறார்.. இலக்கிய ஈடுபாடு இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர் பாக்யராஜ். முற்றிலும் நகைச்சுவைப் படமான 'இன்று போய் நாளை வா' என்னும் திரைப்படத்தில் கூட ஜெயகாந்தன் எழுதிய 'சமூகம் என்பது நாலு பேர்' என்னும் சிறுகதையைப் பற்றிய ஒரு குறிப்பு வருமாறு அமைத்திருந்தார். இவர் 1988 ஆம் ஆண்டு முதல் பாக்யா எனும் வார இதழ் ஒன்றினையும் நடத்தி வருகிறார். பாக்யராஜ் உருவாக்கிய இயக்குனர்கள் தமது குருவான பாரதிராஜாவைப் போலவே, பாக்யராஜும், பல திறமையான இயக்குனர்களை உருவாக்கினார். இவர்களில், பாண்டியராஜன், ரா.பார்த்திபன், வி.சேகர், லிவிங்ஸ்டன் மற்றும் ஜி. எம். குமார் ஆகியோர் வெற்றிகரமான இயக்குனர்களாகத் திகழ்ந்தனர். சிறப்புக் கூறுகள்: நடிகராக பாக்யராஜ் ஒரு நடிகராகத் தமது எல்லைகளை உணர்ந்தவராக விளங்கினார். அவர் தனக்கென உருவாக்கிக் கொண்ட பாத்திரத்தை அப்பாவித்தனமும் சாமர்த்தியமும் சம அளவில் கலந்தோடிய ஒரு பண்புக்கூறாக வடித்திருந்தார். இப்பண்புக்கூறு மிகப் பெரும் அளவில் அவருக்கு வெற்றியைத் தந்தது. தன்னைத் தானே விமர்சித்து கேலி செய்து கொள்ளும் ஒரு அரிய பண்பு அவரது குணச்சித்திரமாக படங்களில் வெளிப்பட்டு, ஒரு தனிப்பாணியை உருவாக்கின. ஒரு சராசரித் திரை நாயகனுக்கான இலக்கணங்களிலிருந்து விடுபட்டு, யதார்த்த உலகின் அன்றாட வாழ்க்கையில் பலங்களும் பலவீனங்களும் நிறைந்த மனிதனைச் சித்தரிப்பதாக அவரது பாத்திரங்கள் அமைந்தன. திரைக்கதை அமைப்பாளராக இந்தியாவின் சிறந்த திரைக்கதை அமைப்பாளர் என 1980-ம் ஆண்டுகளில் பாக்யராஜ் போற்றப்பட்டார். திரைக்கதை அமைப்பில் அவர் கொண்டிருந்த ஆளுமைக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம், அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான 'அவசர போலீஸ் 100'. 1977-ம் ஆண்டு முதலமைச்சர் ஆவதற்கு முன்பாக, ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். சில காட்சிகள் நடித்து நின்று போன படம், “அண்ணா நீ என் தெய்வம்”. இக்காட்சிகளின் மீதாக புதியதாக ஒரு திரைக்கதையை அமைத்து, தாமும் அதில் இரட்டை வேடத்தில் நடித்து பாக்யராஜ் உருவாக்கிய 'அவசர போலீஸ் 100' வெற்றிப்படமாக விளைந்தது. கமலஹாசன் நடித்த “ஒரு கைதியின் டைரி” திரைப்படத்திற்கு பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் அமைத்திருந்தார். இப்படத்தைப் பின்னர் இந்தியில் அமிதாப் பச்சன் இரட்டை வேடத்தில் நடிக்க 'ஆக்ரி ராஸ்தா' என்னும் பெயரில் பாக்யராஜ் இயக்கினார். இது மாபெரும் வெற்றி அடைந்தது. இயக்குனராக பாக்யராஜ் பாசாங்குகளற்ற, யதார்த்தமான ஒரு இயக்குனர். இவரது படங்களில் நகைச்சுவை உணர்வு இறுதிவரை இழையோடும் தமது படங்களின் வழியாகத் தம்மை ஒரு அறிவுஜீவி என நிலை நிறுத்திக் கொள்ள அவர் முயன்றதில்லை. பெரிய தொழில் நுட்பங்களையும் அவர் சார்ந்திருக்கவில்லை. அநேகமாக அவர் படங்களில் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளோ, வெளி நாட்டுப் படப்பிடிப்புகளோ இருந்ததில்லை. அவர் முழுக்க முழுக்க, தாம் தமக்கென அமைத்துக் கொண்ட பாணி, தமது திறமைகள், திரைக்கதை அமைப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பித் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இசையமைப்பாளராக “இது நம்ம ஆளு” திரைப்படத்திற்குப் பாக்யராஜே இசை அமைத்து, ஒரு பாடலையும் பாடியிருந்தார். மேலும் ஐந்து படங்கள் வரை இசையையும் தொடர்ந்தார். விமர்சனங்கள் பாக்யராஜ் தமது படங்களில் பாலியலை முன்னிறுத்துவதாக ஒரு விமர்சனம் எழுவதுண்டு. இதற்கு உதாரணமாக, மாபெரும் வெற்றி பெற்ற 'முந்தானை முடிச்சில்' முருங்கைக்காய், ‘சின்ன வீடு’ படத்தின் சில காட்சிகள், ‘இது நம்ம ஆளு’ போன்றவற்றைக் குறிப்பிடுவதுண்டு. ஆயினும், பாக்யராஜ், பாலியல் நெருக்கம் ஆபாசமாகத் தோன்றாதவாறு இவை அனைத்தையும் கணவன்-மனைவிக்கு இடையிலான நெருக்கத்தை மக்கள் விரும்பி ரசிக்கும் வகையில் வெளிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. உடன் நடித்த நாயகியர் பாக்யராஜின் திரைப்படங்கள் அனைத்தும் அவரது பாத்திரத்தை முன்னிறுத்தியவையாகவே அமைந்தமையால், நாயகியருக்குப் பொதுவாக, பெருமளவில், அவற்றில் பணி இருந்ததில்லை. இருப்பினும், அந்த ஏழு நாட்கள் படத்தில் அம்பிகா மற்றும் மௌன கீதங்கள் திரைப்படத்தில் சரிதா ஆகியோர் தமது பாத்திரங்களில் திறம்பட நடித்து நற்பெயர் பெற்றனர். பிரவீணா, பூர்ணிமா பாக்கியராஜ் (இவர்கள் இருவரும் பாக்யராஜுடன் வாழ்விலும் இணைந்தவர்கள்), ரதி அக்னிஹோத்ரி (பாக்யராஜின் முதல் நாயகி), ராதிகா, ஊர்வசி (பாக்யராஜின் அறிமுகமான இவர் நகைச்சுவை மிளிரும் நடிப்பிற்குப் பெயர் பெற்றவர்), பானுப்ரியா, குஷ்பூ, மீனாக்‌ஷி சேஷாத்ரி ஆகியோர் பாக்யராஜின் திரை நாயகியரில் குறிப்பிடத் தகுந்தவர்கள். பிற மொழிகளில் பாக்யராஜின் திரைப்படங்கள் இந்தியில் பாக்யராஜ் இயக்கிய திரைப்படம் ஆக்ரி ராஸ்தா. ஆயினும், அவரது பல படங்கள் தமிழில் வெற்றிக்கொடி நாட்டியமையால் ஏறக்குறைய அவரின் அனைத்துப் படங்களும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் அந்தந்த மொழி முன்னணி நடிகர்களால் நடிக்கப்பெற்று பெருவெற்றி பெற்றன. இவற்றில் பலவற்றில் இந்தி நடிகர் அனில் கபூர் நடித்திருந்தார். சிலவற்றில் கோவிந்தாவும், முந்தானை முடிச்சின் மறுவாக்கத்தில் ராஜேஷ் கன்னாவும் நடித்திருந்தனர். இவற்றில் இந்தியில் ஓ சாத் தின் என்ற பெயரில் வெளியான அந்த ஏழு நாட்கள் மற்றும் பேட்டா என்ற பெயரில் வெளியான 'எங்க சின்ன ராசா' ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றி அடைந்தன. பாக்யராஜ் திரைப்படங்கள் ஆண்டுஎண்தலைப்புமொழிபாத்திரம்குறிப்புகள்இயக்கம்தயாரிப்புஎழுத்துநடிப்பு1977116 வயதினிலேதமிழ்உதவி இயக்குனர் கௌரவ வேடம்19782கிழக்கே போகும் ரயில்தமிழ்உதவி இயக்குனர் கௌரவ வேடம்3சிகப்பு ரோஜாக்கள்தமிழ்கௌரவ வேடம்19794புதிய வார்ப்புகள்தமிழ்கதாநாயகனாக அறிமுகம்5கன்னிப்பருவத்திலேதமிழ்6சுவர் இல்லாத சித்திரங்கள்தமிழ்இயக்குனராக அறிமுகம்19807பாமா ருக்மணிதமிழ்8ஒரு கை ஓசைதமிழ்9குமரி பெண்ணின் உள்ளத்திலேதமிழ்198110மௌன கீதங்கள்தமிழ்11இன்று போய் நாளை வாதமிழ்12விடியும் வரை காத்திருதமிழ்13அந்த 7 நாட்கள்தமிழ்14ஏக் ஹை பூல்இந்திமௌன கீதங்கள் படத்தின் மறு ஆக்கம்15ராதா கல்யாணம்தெலுங்குஅந்த 7 நாட்கள் படத்தின் மறு ஆக்கம்198216தூறல் நின்னு போச்சுதமிழ்17பொய் சாட்சிதமிழ்18டார்லிங், டார்லிங், டார்லிங்தமிழ்198319முந்தானை முடிச்சுதமிழ்சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது20சாட்டை இல்லாத பம்பரம்தமிழ்21மூடு முள்ளுதெலுங்குமுந்தானை முடிச்சு படத்தின் மறு ஆக்கம்22ஓ சாத் தின்இந்திஅந்த 7 நாட்கள் படத்தின் மறு ஆக்கம்198423விதிதமிழ்கௌரவ வேடம்24அன்புள்ள ரஜினிகாந்த்தமிழ்கௌரவ வேடம்25தாவணிக் கனவுகள்தமிழ்198526ஒரு கைதியின் டைரிதமிழ்27நான் சிகப்பு மனிதன்தமிழ்28சின்ன வீடுதமிழ்29மாஸ்டர்ஜிஇந்திமுந்தானை முடிச்சு படத்தின் மறு ஆக்கம்198630ஆக்ரி ராஸ்தாஇந்திஒரு கைதியின் டைரி படத்தின் மறு ஆக்கம்31சம்சாரத குட்டுகன்னடம்கன்னிப்பருவத்திலே படத்தின் மறு ஆக்கம்32கண்ணத் தொறக்கணும் சாமிதமிழ்198733எங்க சின்ன ராசாதமிழ்34சின்னக்குயில் பாடுதுதமிழ்198835இது நம்ம ஆளுதமிழ்இசை அமைப்பும் இவரே198936௭ன் ரத்தத்தின் ரத்தமேதமிழ்மிஸ்டர் இந்தியா இந்திப்படத்தின் தமிழாக்கம்37ஆராரோ ஆரிரரோதமிழ்இசை அமைப்பும் இவரே38லவ் மாடி நோடுகன்னடம்அந்த 7 நாட்கள் படத்தின் மறு ஆக்கம்39பொண்ணு பாக்க போறேன்தமிழ்இசை அமைப்பும் இவரே199039அவசர போலீஸ் 100தமிழ்இவரின் மிகச்சிறந்த வெற்றிப்படம்40சாப்பல சென்னிகரயாகன்னடம்சின்ன வீடு படத்தின் மறு ஆக்கம்199141பவுனு பவுனுதான்தமிழ்இசை அமைப்பும் இவரே42ருத்ராதமிழ்199243சுந்தர காண்டம்தமிழ்44பேட்டாதமிழ்எங்க சின்ன ராசா படத்தின் மறு ஆக்கம்45அம்மா வந்தாச்சுதமிழ்நந்தகுமார்46சுந்தரகாண்டாதெலுங்குசுந்தர காண்டம் படத்தின் மறு ஆக்கம்47ஹள்ளி மேஸ்த்ருகன்னடம்முந்தானை முடிச்சு படத்தின் மறு ஆக்கம்48ராசுக்குட்டிதமிழ்199349மனே தேவருகன்னடம்மௌன கீதங்கள் படத்தின் மறு ஆக்கம்50அன்னய்யாகன்னடம்எங்க சின்ன ராசா படத்தின் மறு ஆக்கம்199451வீட்ல விசேஷங்கதமிழ்52ராஜா பாபுஇந்திராசுக்குட்டி படத்தின் மறு ஆக்கம்53அன்டாஸ்இந்திசுந்தர காண்டம் படத்தின் மறு ஆக்கம்54கோபி கிஷன்இந்திஅவசர போலீஸ் 100 படத்தின் மறு ஆக்கம்199555ஒரு ஊருல ஒரு ராஜகுமாரிதமிழ்56தாய்க்குலமே தாய்க்குலமேதமிழ்199657இன்ட்லோ இல்லாலு வன்டின்லோ பிரியுரலுதெலுங்குதாய்க்குலமே தாய்க்குலமே படத்தின் மறு ஆக்கம்58அதிரிந்தி அல்லுடுதெலுங்குஇது நம்ம ஆளு படத்தின் மறு ஆக்கம்59மிஸ்டர்பெச்சராஇந்திவீட்ல விசேஷங்க படத்தின் மறு ஆக்கம்60ஞானப்பழம்தமிழ்இசை அமைப்பும் இவரே199861வேட்டிய மடிச்சுக்கட்டுதமிழ்62கர்வாலி பஹர்வாலிஇந்திதாய்க்குலமே தாய்க்குலமே படத்தின் மறு ஆக்கம்63ஜகத் கில்லாடிகன்னடம்அவசர போலீஸ் 100 படத்தின் மறு ஆக்கம்199964படேல்கன்னடம்ராசுக்குட்டி படத்தின் மறு ஆக்கம்65நானு நன்ன ஹென்திருகன்னடம்தாய்க்குலமே தாய்க்குலமே படத்தின் மறு ஆக்கம்200066பாப்பா தி கிரேட்இந்திவேட்டிய மடிச்சுக்கட்டு படத்தின் மறு ஆக்கம்67கபடி கபடிதமிழ்200168பானல்லு நீனே புவியல்லு நீனேகன்னடம்வீட்ல விசேஷங்க படத்தின் மறு ஆக்கம்6912 பிதமிழ்வசனமும் இவரே200270சுந்தரகாண்டாகன்னடம்சுந்தர காண்டம் படத்தின் மறு ஆக்கம்200371சொக்கத்தங்கம்தமிழ்200672பாரிஜாதம்தமிழ்73சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்தமிழ்74ரெண்டுதமிழ்75ரவி சாஸ்திரிகன்னடம்200776முதல் முதலாய்தமிழ்77காசு இருக்கணும்தமிழ்ஜி.ஆர்.200878மாணவன் நினைத்தால்தமிழ்200979நினைத்தாலே இனிக்கும் தமிழ்201080உத்தம புத்திரன்தமிழ்81சித்து +2தமிழ்201182அப்பாவிதமிழ்83மாவீரன்தமிழ்வசனம் எழுதியுள்ளார். மகதீராவின் தமிழ் மொழி மாற்றுப் படம்84வாகை சூட வாதமிழ்201285மிஸ்டர் மருமகன்Malayalamபாலசுப்ரமணியம்201386ஒருவர் மீது இருவர் சாய்ந்துதமிழ்201487நினைத்தது யாரோதமிழ்அவராகவேகௌரவ வேடம்201588துணை முதல்வர்தமிழ்பெரியபாண்டி89மூணே மூணு வார்த்தைதமிழ்அவராகவே201690கணிதன்தமிழ்91வாய்மைதமிழ்கௌரவ வேடம்201792முப்பரிமாணம்தமிழ்அவராகவேகௌரவ வேடம்93அய்யனார் வீதிதமிழ்94வெருளிதமிழ்95இவன் யாரென்று தெரிகிறதாதமிழ்96துப்பறிவாளன்தமிழ்முத்து97பிரம்மா.காம்தமிழ்குருக்கள்201898கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யாதமிழ்99கூத்தன்தமிழ்2019100சீதாதெலுங்குசீதாவின் அப்பாவாக மேற்கோள்கள் குறிப்புதவிகள் பாக்கியராஜின் அரசியல் பற்றிய ஒரு வலைத்தளப் பதிவு புற இணைப்புகள் பாக்யராஜின் திரைப்படப் பட்டியல் அளிக்கும் ஒரு ஐஎம்டிபி பதிவு பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் பகுப்பு:ஈரோடு மாவட்ட நபர்கள் பகுப்பு:1953 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்
சீக்கிய சமயம்
https://ta.wikipedia.org/wiki/சீக்கிய_சமயம்
REDIRECT சீக்கியம்
மகரக்குறுக்கம்
https://ta.wikipedia.org/wiki/மகரக்குறுக்கம்
"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும். மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம் தனிமொழியில் மெய்யெழுத்துகளில் ன், ண் ஆகிய 2 இரண்டு மெய்யெழுத்துகளையும் அடுத்து வரும் மகர ஒற்றும் (ம்), புணர் மொழியில் மகர மெய்யை அடுத்துவரும் வகர ஒற்றும் (வ்) வரும் இடங்களிலும், மகர ஒற்று தன் மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும். இதுவே மகரக் குறுக்கம் எனப்படுகிறது. இதற்கான பண்டைய உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டு தனிமொழி போன்ம் காண்ம் புணர்மொழி வரும்வண்ணக்கன் இதனை இருசொல்-புணர்ச்சி என அறிஞர்கள் விளக்குவர். மகரக் குறுக்கத்திற்கு உடன்படும் ம் என்ற ஒலிக்குரிய மாத்திரை அளவு கால். மகரப் பிரகரணம் இதனைக் கூறும் தனியொரு நூலாக விளங்கிற்று எனத் தெரிகிறது. இலக்கண நூல் விளக்கம் ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும் என்னும் நன்னூல் 97-ஆம் நூற்பாவுக்கு உரையாசிரியர்கள் வரும் வண்டி தரும் வளவன் என்னும் எடுத்துக்காட்டுகின்றனர். மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. இது போல நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும். இஃது ஒரு வகை மகரக்குறுக்கம். செய்யுள் இறுதிப் போலி மொழிவயின் னகார மகாரம் ஈர் ஒற்றாகும் தொல்காப்பியம் 1-51 என்பது தொல்காப்பியம். இதன்படி பாடல்களின் முடிவில் போலும் என்று வரும் சொல்லில் னகரமும் மகரமும் ஒன்றாகி போன்ம் என்று ஈரொற்றாக நிற்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையிலும் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது மற்றொரு வகை மகரக்குறுக்கம் ஆகும். எடுத்துக்காட்டு செய்யுளின் இடையில் 'போன்ம்' வென்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என பதிற்றுப்பத்து 51 செய்யுள் இறுதியில் 'போலும்' முயக்கமும், தண்டாக் காதலும் தலைநாள் போன்மே அகநானூறு 332 உசாத்துணை இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் அடிக்குறிப்பு பகுப்பு:ஒலிப்பியல் பகுப்பு:சார்பெழுத்துகள்
ஔகாரக் குறுக்கம்
https://ta.wikipedia.org/wiki/ஔகாரக்_குறுக்கம்
ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும். இலக்கணம் தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம் நையும் ஔ உம் முதல் அற்று ஆகும் - நன்னூல்.95 எடுத்துக்காட்டு ஔவை ஔவியம் ஔசிதம் மௌவல் வௌவால்http://www.tamilvu.org/courses/degree/c021/c0211/html/c0211407.htm மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்துள்ள 'ஔ' தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து ஒன்றரை மாத்திரையளவே ஒலிப்பதைக் காணலாம். குறிப்பு ஔகாரம் உயிர் எழுத்தின் வரிசையில் கடைசியாக நின்றாலும் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வரா. உசாத்துணை இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் பகுப்பு:சார்பெழுத்துகள்
பாப்லோ நெருடா
https://ta.wikipedia.org/wiki/பாப்லோ_நெருடா
பாப்லோ நெருடா, (Pablo Neruda, ஜூலை 12, 1904 – செப்டம்பர் 23, 1973) என்ற புனைபெயர் கொண்ட ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ ( Ricardo Eliecer Neftalí Reyes Basualto), சிலி நாட்டில் பிறந்தவர். இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர். இவர் கவிஞராக மட்டுமல்லாது, சமூக உணர்வு கொண்ட போராளியாகவும், மார்க்சிய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தவர். 1920 ஆம் ஆண்டு கவிதை எழுதுவதற்காக, செக்கோஸ்லாவாகியா எழுத்தாளரான ஜோன் நெருடாவின் பெயரால் உந்தப்பட்டு, தன் பெயரையும் பாப்லோ நெருடா என்ற புனைப்பெயரினை ஏற்றுக்கொண்டார். பாப்லோ என்பது ஸ்பானிஷ் மொழியில் பால் (Paul) என்பதன் வடிவமாகும். வாழ்க்கை 1904 ஆண்டு, ஜூலை 12 தேதி சிலி நாட்டில் உள்ள பாரல் என்ற ஊரில் பாப்லோ நெருடா பிறந்தார். இவர் பிறந்த சில நாட்களிலேயே இவரை ஈன்ற தாய் மறைந்தார். இவர் தந்தை, டோனா ட்ரினிடாட் கார்டியா மார்வாடி என்பவரை, மறுமணம்‌ செய்து கொண்டார். சிற்றன்னையென்றாலும் நெருடாவின் மேல் அளவற்ற பாசம் கொண்டு வளர்த்தார். நெருடா, கார்டியா மார்வாடி பற்றி கூறும் போதெல்லாம் இவரைப் பெருந்தாய் என்று பெருமிதம் கொள்வார். முதல் முயற்சியாக இவர் தனது எட்டாம் அகவையில் எழுதிய கவிதை, இவருடைய பெருந்தாயைப் பற்றிய‌தே. பாப்லோ நெருடா என்ற புனைப்பெயருடன் எழுதிய முதல் கவிதைத் தொகுப்பு, இவருடைய 19ஆம் வயதில் " வைகறைக் கதிர்கள் (Books of Twilights) "அமுதசுரபி தீபாவளி மலர் 2004; பாப்லோ நெருடா; பக்கம் 195 என்ற பெயரில் 1923 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஸ்பானிய மொழியில் பெரும் கிளர்ச்சியும், பரபரப்பும் ஊட்டியது நெருடாவின் "இருபது காதல் கவிதைகளும் ஒரு விரக்தி பாடலும்" என்ற கவிதை தொகுப்பு. இத்தொகுப்பு வெளியிடும் போது நெருடாவின் வயது இருபது. காதல் கவிதைகளில் அதிர்ச்சியும் நேரடித்தன்மையும் கொண்ட அத்தொகுப்பு ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் நெருடாவினை பிரபலமாக்கியது. 1927ஆம் ஆண்டு சிலியின் தூதராக அவர் ரங்கூன் (பர்மா) சென்றார். ஆறு ஆண்டுகள் இலங்கையிலும், சிங்கப்பூரிலும், ரங்கூனிலும் அவர் தூதராகப் பணியாற்றினார். இந்த ஆண்டுகளில் மாபெரும் இலக்கியவாதிகளான, ப்ராஸ்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ், வால்ட் விட்மன் போன்றவர்களுடைய எழுத்தின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. பெருமை தமிழில், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடிய கணியன் பூங்குன்றனார் போலவே நெருடாவும் "பூமியின் தோல் உலகெங்கும் ஒன்றேதான் (The skin of the earth is same everywhere) " என்று பாடியுள்ளார். 1964ஆம் ஆண்டு ப்ரெஞ்சு தத்துவவாதியான ழான் பால் சார்த்தர் நோபல் பரிசு வேண்டாம் என்று சொல்லி மறுத்ததற்கு ஒரு காரணம், அந்த ஆண்டு பாப்லோ நெருடாவிற்கு பரிசு கொடுத்திருக்க வேண்டும் என்பது. 1971 ஆம் ஆண்டு பாப்லோ நெருடாவுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. "இருபதாம் நூற்றாண்டில் உலக மொழிகள் எல்லாம் கண்ட மாபெரும் கவிஞர் இவரே" என்று லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகிய கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், நெருடாவினைப் புகழ்கின்றார். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Profile at the Poetry Foundation Profile at Poets.org with poems and articles Nobel Biography NPR Morning Edition on Neruda's Centennial 12 July 2004 (audio 4 mins) "Pablo Neruda's 'Poems of the Sea'" 5 April 2004 (Audio, 8 mins) "The ecstasist: Pablo Neruda and his passions." The New Yorker. 8 September 2003 Documentary-in-progress on Neruda, funded by Latino Public Broadcasting site features interviews from Isabel Allende and others, bilingual poems Poems of Pablo Neruda பாப்லோ நெருடா, 1971ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக நோபெல் பரிசு பெற்றவர் நெருடா அமைப்பு பாப்லோ நெருடாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள் பாப்லோ நெருடாவின் வாழ்க்கை வரலாறு பகுப்பு:கவிஞர்கள் பகுப்பு:சிலேய எழுத்தாளர்கள் பகுப்பு:நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள் பகுப்பு:1904 பிறப்புகள் பகுப்பு:1973 இறப்புகள்
அகத்தியன் (திரைப்பட இயக்குநர்)
https://ta.wikipedia.org/wiki/அகத்தியன்_(திரைப்பட_இயக்குநர்)
ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)
https://ta.wikipedia.org/wiki/ஷங்கர்_(திரைப்பட_இயக்குநர்)
லெனின்
https://ta.wikipedia.org/wiki/லெனின்
லெனின் (Lenin) என்ற பெயர் கீழ்காணுபவர்களில் எவரையேனும் குறிக்கலாம். விளாதிமிர் லெனின் - உருசியப் புரட்சியாளர், சோவியத் ஒன்றியத்தின் முதல் ஆட்சித் தலைவர் பி. லெனின் - தமிழ்த் திரைப்பட இயக்குநர் ம. லெனின் - தமிழ் எழுத்தாளர்
மகேந்திரன்
https://ta.wikipedia.org/wiki/மகேந்திரன்
துரைசாமி நெப்போலியன்
https://ta.wikipedia.org/wiki/துரைசாமி_நெப்போலியன்
நெப்போலியன் என அழைக்கப்படும் குமரேசன் துரைசாமிநெப்போலியன் பற்றி அறிமுகம்-தன்விவரக் குறிப்பு பார்த்து பரணிடப்பட்ட நாள் 12-06-2009 (Kumaresan Duraisamy or Napoleon), (பிறப்பு: டிசம்பர் 2, 1963) தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் பெற்றோர் பெயர் துரை சாமி ரெட்டியார் தாயார் பெயர் சரஸ்வதி அம்மாள் . இவர் 7 பிள்ளைகள் .இவர் 2009 ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.https://tamil.oneindia.com/news/2009/05/16/tn-nepoleon-wins-from-perambalur.html தமிழ்த் திரையுலகிற்கு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடித்துள்ள திரைப்படங்கள் திரைப்படம் ஆண்டு குறிப்பு தசாவதாரம் 2008 விருமாண்டி 2004 சுயம்வரம் 1999 தாயகம் 1996 கிழக்குச் சீமையிலே 1992 புது நெல்லு புது நாத்து 1991 அறிமுகம் சீவலப்பேரி பாண்டி 1994 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் நெப்போலியன் அலுவலக இணையத்தளம் பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:1963 பிறப்புகள் பகுப்பு:திருச்சி மாவட்ட நபர்கள் பகுப்பு:நாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள் பகுப்பு:15வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு:திருச்சிராப்பள்ளித் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:பெரம்பலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள் பகுப்பு:தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு:தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்கள்
கல்கி (எழுத்தாளர்)
https://ta.wikipedia.org/wiki/கல்கி_(எழுத்தாளர்)
கல்கி (9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. வாழ்க்கைக் குறிப்பு கல்கி 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி பழைய சென்னை மாகாணத்தில் ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை அருகே அமைந்த பட்டமங்களம் எனும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-இல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார். 1922-இல் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-இல் அவர் நவசக்தி என்னும் பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் ஏட்டிக்குப் போட்டி 1927-இல் வெளியானது. ‘கல்கி’யின் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டமையால், அவருடைய பல படைப்புகள் இணையத்தில் பல தளங்களில் கிடைக்கின்றன. தமிழிசை வளர்ச்சிக்குப் பங்கு சமசுகிருதமும் தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலகட்டத்தில் தமிழிசைக்காகக் கல்கி சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி. தமிழ் இசை குறித்த கல்கியின் சிந்தனைகளைத் "தரம் குறையுமா" எனும் புத்தக வடிவில் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. படைப்புகள் புதினங்கள் கள்வனின் காதலி (1937) தியாகபூமி (1938-1939) மகுடபதி (1942) அபலையின் கண்ணீர் (1947) சோலைமலை இளவரசி (1947) அலை ஓசை (1948) தேவகியின் கணவன் (1950) மோகினித்தீவு (1950) பொய்மான் கரடு (1951) புன்னைவனத்துப் புலி (1952) அமரதாரா (1954) வரலாற்று புதினங்கள் சிவகாமியின் சபதம் (1944 – 1946) பார்த்திபன் கனவு (1941 - 1943) பொன்னியின் செல்வன் (1951 – 1954) சிறுகதைகள் சுபத்திரையின் சகோதரன் ஒற்றை ரோஜா தீப்பிடித்த குடிசைகள் புது ஓவர்சியர் வஸ்தாது வேணு அமர வாழ்வு சுண்டுவின் சந்நியாசம் திருடன் மகன் திருடன் இமயமலை எங்கள் மலை பொங்குமாங்கடல் மாஸ்டர் மெதுவடை புஷ்பப் பல்லக்கு பிரபல நட்சத்திரம் பித்தளை ஒட்டியாணம் அருணாசலத்தின் அலுவல் பரிசல் துறை ஸுசீலா எம். ஏ. கமலாவின் கல்யாணம் தற்கொலை எஸ். எஸ். மேனகா சாரதையின் தந்திரம் கவர்னர் விஜயம் நம்பர் ஒன்பது குழி நிலம் புன்னைவனத்துப் புலி திருவழுந்தூர் சிவக்கொழுந்து ஜமீன்தார் மகன் மயிலைக் காளை ரங்கதுர்க்கம் ராஜா இடிந்த கோட்டை மயில்விழி மான் நாடகக்காரி "தப்பிலி கப்" கணையாழியின் கனவு கேதாரியின் தாயார் காந்திமதியின் காதலன் சிரஞ்சீவிக் கதை ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம் பாழடைந்த பங்களா சந்திரமதி போலீஸ் விருந்து கைதியின் பிரார்த்தனை காரிருளில் ஒரு மின்னல் தந்தையும் மகனும் பவானி, பி. ஏ, பி. எல் கடிதமும் கண்ணீரும் வைர மோதிரம் வீணை பவானி தூக்குத் தண்டனை என் தெய்வம் எஜமான விசுவாசம் இது என்ன சொர்க்கம் கைலாசமய்யர் காபரா லஞ்சம் வாங்காதவன் ஸினிமாக் கதை எங்கள் ஊர் சங்கீதப் போட்டி ரங்கூன் மாப்பிள்ளை தேவகியின் கணவன் பால ஜோசியர் மாடத்தேவன் சுனை காதறாக் கள்ளன் மாலதியின் தந்தை வீடு தேடும் படலம் நீண்ட முகவுரை பாங்கர் விநாயகராவ் தெய்வயானை கோவிந்தனும் வீரப்பனும் சின்னத்தம்பியும் திருடர்களும் விதூஷகன் சின்னுமுதலி அரசூர் பஞ்சாயத்து கவர்னர் வண்டி தண்டனை யாருக்கு? சுயநலம் புலி ராஜா விஷ மந்திரம் விருதுகள் சாகித்திய அகாதமி விருது, 1956 - அலை ஓசைசாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள் சங்கீத கலாசிகாமணி விருது, 1953, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (ஆளுனர் ஸ்ரீ பிரகாசா தலைமை) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கல்கி கிருஷ்ணமூர்த்தி: பொன்னியின் செல்வன் எழுத்தாளரின் பன்முகத் தன்மை Tamilnation.org தளத்தில் உள்ள கல்கி பற்றிய கட்டுரை பகுப்பு:1899 பிறப்புகள் பகுப்பு:1954 இறப்புகள் பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:இதழாசிரியர்கள் பகுப்பு:தமிழ்வழிக் கல்வி செயற்பாட்டாளர்கள் பகுப்பு:தமிழிசை இயக்க செயற்பாட்டாளர்கள் பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் பகுப்பு:சங்கீத கலாசிகாமணி விருது பெற்றவர்கள் பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள் பகுப்பு:தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
வெங்கட் சாமிநாதன்
https://ta.wikipedia.org/wiki/வெங்கட்_சாமிநாதன்
வெங்கட் சாமிநாதன் (Venkat Swaminathan, 1933 - 21 அக்டோபர் 2015) என்ற பெயரில் எழுதிய சாமிநாதன், ஒரு கலை விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன நாடகம் உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை 1950களிலேயே வலியுறுத்தியவர். இவர் திரைக்கதை எழுதி, ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் வெளிவந்த அக்ரஹாரத்தில் கழுதை என்ற திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.. கனடாவில் உள்ள டொரண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2003ஆம் ஆண்டுக்கான இயல் விருது சாமிநாதனுக்கு வழங்கப்பட்டதுதமிழ் இலக்கியத் தோட்டம், டொரொண்டோ புத்தகங்கள் தொடரும் பயணம் - இலக்கிய வெளியில் நினைவுகளின் சுவட்டில் - (சுய சரிதம்) விமர்சனம் பாலையும் வாழையும் பான் ஸாய் மனிதன் இச்சூழலில் (கலாச்சார விமர்சனம்) கலை வெளிப்பயணங்கள் (கலை விமர்சனம்) திரை உலகில் (திரைப்பட விமர்சனம்) என் பார்வையில் சில கவிதைகள் என் பார்வையில் சில கதைகள், நாவல்கள் ஓர் எதிர்ப்புக்குரல் : காலத்தின் அங்கீகாரத்தை எதிர்நோக்கி கட்டுரைகள் அன்றைய வறட்சியிலிருந்து இன்றைய முயற்சி வரை (நாடகக் கட்டுரைகள்) பாவைக்கூத்து சில இலக்கிய ஆளுமைகள் இன்றைய நாடக முயற்சிகள் கலை, அனுபவம், வெளிப்பாடு விவாதங்கள் சர்ச்சைகள் கலை உலகில் ஒரு சஞ்சாரம் தொகுப்பு தேர்ந்தெடுத்த ந.பிச்சமூர்த்தி கதைகள் (தொகுப்பாசிரியர் : வெங்கட் சாமிநாதன்) பிச்சமூர்த்தி நினைவாக (பிச்சமூர்த்தி நினைவஞ்சலிக் கட்டுரைத் தொகுப்பு , தொகுப்பாசிரியர் : வெங்கட் சாமிநாதன்) மொழிமாற்றம் A Movement for Literature (தமிழில் எழுதியவர் : க.நா.சுப்பிரமணியம்) Mother has committed a murder (தமிழில் எழுதியவர் : அம்பை) தமஸ் (இருட்டு) (இந்தி நாவல் . எழுதியவர்: பீஷ்ம ஸாஹ்னி ) ஆச்சரியம் என்னும் கிரகம் (குழந்தைகள் கதைகள், சுற்று சூழல் பற்றியவை, ஜப்பானிய மூலம்) நேர்காணல் உரையாடல்கள் (நேர்காணல்கள் தொகுப்பு) திரைப்பிரதிகள் அக்ரஹாரத்தில் கழுதை ஏழாவது முத்திரை (இங்கமார் பெர்க்மன் இயக்கிய Seventh Seal என்ற திரைப்படம் பற்றிய நூல்) பிற எழுத்தாளர்களின் கருத்துக்கள் என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும் அளவுக்கு, நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன். - க.நா.சு சாமிநாதனது பேனா வரிகள் "புலிக்கு தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது" என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும் - சி. சு. செல்லப்பா தமிழ் கலைத் துறைகள் மீது வெ.சா கொண்டிருக்கும் ஆவேச ஈடுபாடு, வெகு அபூர்வமானது. தமிழ் இனத்தோடு தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கும் தன்மையில் இவரை பாரதியுடன் மட்டுமே ஒப்பிட முடியும். பாரதியோ ஒரு உணர்ச்சிக் கவிஞன். தேசியக் கவிஞன்; புரட்சிவாதி. அவனது இயற்கையான முகங்கள் அனைத்தும் நம்மவர்கள் இயற்கையாகவே புரிந்துகொள்ளாமல் போற்ற வசதியானவை. வெ.சாவின் உலகமோ, புரிந்து கொள்ளும் ஆற்றலை தீவிரமாகக் கேட்டு நிற்கிறது. சுய அபிமான உணர்வுகளை நீக்கி சத்தியத்தைப் பார்க்க முடிந்தவர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. ஆகவே அங்கீகாரத்திற்கு, காலத்தை இவர் எதிர்பார்த்து நிற்பது சரிதான் - சுந்தர ராமசாமி எந்த மேல் நாட்டு விமரிசன பாணியையும் கைக் கொள்ளாமல் தன் சுவைக்கு உட்பட்டதை, படைப்பின் கலாச்சாரப் பின்ணணியோடு பார்க்கும் தனி ரகம், இவரது விமரிசனம் - கோமல் சுவாமிநாதன் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சொல்வனம் மின்னிதழில் வெங்கட் சாமிநாதனின் படைப்புகள் திண்ணை மின்னிதழில் வெங்கட் சாமிநாதனின் படைப்புகள் தமிழ்ஹிந்து இணையதளத்தில் வெங்கட் சாமிநாதனின் படைப்புகள் வல்லமை மின்னிதழில் வெங்கட் சாமிநாதனின் படைப்புகள் பேராசிரியர் எம்.வேதசகாயகுமார், வெங்கட் சாமிநாதனைப் பற்றி எழுதிய கட்டுரை ஸ்வராஜ்யா மின்னிதழில் அரவிந்தன் நீலகண்டன் வெங்கட் சாமிநாதனைப் பற்றி எழுதிய கட்டுரை தி ஹிந்து (தமிழ்) நாளிதழில் வெங்கட் சாமிநாதனின் மறைவு குறித்த அஞ்சலி தில்லி தமிழ் சங்கத்தின் தில்லிகை இலக்கிய அமைப்பில் வெங்கட் சாமிநாதன் குறித்து நிகழ்ந்த உரை பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழ் விமர்சகர்கள் பகுப்பு:1933 பிறப்புகள் பகுப்பு:2015 இறப்புகள் பகுப்பு:இயல் விருது பெற்றவர்கள் பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்
பொன்னியின் செல்வன்
https://ta.wikipedia.org/wiki/பொன்னியின்_செல்வன்
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 – 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது. இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 293க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது. கதாபாத்திரங்கள் வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன் பொன்னியின் செல்வன் என்கிற அருண்மொழி வர்மன் ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன் குந்தவை பிராட்டியார் (சுந்தரசோழரின் மகள்) பெரிய பழுவேட்டரையர் நந்தினி சின்ன பழுவேட்டரையர் ஆதித்த கரிகாலர் வானமா தேவி சுந்தர சோழர் செம்பியன் மாதேவி கண்டராதித்தர் கடம்பூர் சம்புவரையர் சேந்தன் அமுதன் பூங்குழலி வீர பாண்டியன் குடந்தை சோதிடர் வானதி மந்திரவாதி இரவிதாசன் (பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்) கந்தமாறன் (சம்புவரையர் மகன்) கொடும்பாளூர் வேளார் மணிமேகலை (சம்புவரையர் மகள்) அநிருத்த பிரம்மராயர் மதுராந்தக சோழர் தியாக விடங்கர்: பூங்குழலியின் தந்தை மற்றும் கோடிக்கரையிலுள்ள கலங்கரை விளக்கத்தின் காவலர். மந்தாகினி தேவி மற்றும் வாணி அம்மாளின் தமையனும் ஆவார். கதையின் வரலாற்றுப் பின்னணி பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், பொன்னியின் செல்வன் கதையில் பல விதமான கதை மாந்தர்கள் இருந்தனர். விசயாலய சோழன் (கி.பி 847 – 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விசயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 – 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களின் புகழ்பெற்றவர்கள் இராசராச சோழனுக்கு, இராசேந்திர சோழனுக்கும், முதலாம் குலோத்துங்க சோழனுக்கு சோழ சாம்ராச்சியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்த பெரிதும் உதவியது. முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராச்சியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாக கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருட்டிணன் தலைமையிலான இராட்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராசாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாட்டையும் இராட்டிரகூடர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி அளவிலேயே நின்றது. இந்தக் காலகட்டத்திற்குப் பிறகான சோழ மன்னர்கள் ஐந்து பேரின் பெயர்கள் தெளிவாகக் கிடைக்கின்றன ஆனால் அவர்களது ஆட்சிக்காலம் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் தெளிவாக இல்லை. கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் ஆகிய ஐவரே அந்த சோழ அரசர்கள். இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் கிடைக்கிறது. இதில் ஆதித்த கரிகாலன் இராட்டிரகூடர்கள் முதலாம் பராந்தகனின் கடைசிக் காலத்தில் கைப்பற்றிய தொண்டை மண்டலத்தை மீண்டும் போரிட்டு கைப்பற்றினான் என்று தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் இறப்பிற்குப் பின்னோ அல்லது ஆதித்த கரிகாலனின் இறப்பிற்குப் பின்னோ சோழ நாட்டில் அடுத்த பட்டத்திற்கான மன்னரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்திருக்கிறது. ஆதித்த கரிகாலன் கடம்பூரில் கொல்லப்பட்ட இடம் தற்போது மேலக்கடம்பூர் என அழைக்கப்படுகிறது. (காட்டுமன்னார்கோயில் அருகில்) திருவாலங்காட்டுச் செப்பேடுகள், "விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான் (காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் சத்திரிய தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன. இந்தக் காலகட்டத்தைத்தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். பொன்னியின் செல்வன் என்பது இராசராச சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராசகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனைக் கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. இராசராச சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்கி மேலும் கே.ஏ. நீலகண்ட சாத்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், தி.வி. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார். இதில் பிற்காலச் சோழர் சரித்திரத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்தார். thumb|center|1000px|பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் உறவுமுறை. பகுதி 1: புது வெள்ளம் ஆடித்திருநாள் அத்தியாயம் தொடங்கி மாய மோகினி வரை 57 அத்தியாயங்களை உள்ளடக்கியது. முதல் பகுதியான புதுவெள்ளம் வரலாற்றுப் புகழ் பெற்ற வீர நாராயண (வீராணம்) ஏரியில் துவங்குகிறது. இந்த ஏரி சுந்தர சோழரின் பெரியப்பா இராசாதித்தரால் எழுப்பப்பட்டது. இந்த ஏரி 74 கணவாய்களை உடையது. வடதிசை மாதண்ட நாயகராக திகழும் ஆதித்த கரிகாலர் தனது அன்பு தங்கைக்கும், தந்தைக்கும் ஓலை கொடுத்து வர வந்தியத்தேவனை அனுப்புகிறார். வடதிசையில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் வீரநாராயண ஏரியில் வந்திய தேவன் சென்றுகொண்டிருக்கும் போது ஆடி திருநாள் கொண்டாட்டத்தை இரசித்தவாறு செல்வதாக முதல் பகுதி துவங்கி, பிறகு செல்லும் வழியில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்கும் போது சோழப் பேரரசின் மணி மகுடத்திற்கு பெரும் சூழ்ச்சி நடப்பதை காண்கிறான். பிறகு பல தடங்கல்களையும் மீறி சுந்தர சோழரை சந்தித்து ஓலை தந்தவுடன் ஆதித்த கரிகாலரின் தமக்கை இளையபிராட்டி குந்தவை தேவியைக் காண பழையாறை செல்கிறான். அங்கேயே இளைய பிராட்டியை (குந்தவை) சந்தித்து அவர் தனது இளைய தம்பியான அருண்மொழி வர்மருக்கு ஓலை கொடுத்து அனுப்ப அதற்காக கடல் பிரயாணம் செய்ய துவங்கும் வரை இப்பகுதி நீள்கிறது. பகுதி 2: சுழற்காற்று அத்தியாயம் பூங்குழலியில் தொடங்கி அபய கீதம் வரை 53 அத்தியாயங்களை உள்ளடக்கியது இரண்டாம் பகுதியான சுழற்காற்று. கோடிக்கரையில் வந்தியத்தேவன் பூங்குழலியை சந்தித்து, ஈழத்திற்கு பூங்குழலியின் படகில் செல்கிறான். ஈழத்திலிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மனை சந்தித்து குந்தவை பழையாறைக்கு அவரை அழைத்துக் கொண்டு வர கட்டளையிட்டதை கூறுகிறான். பார்த்திபேந்திரன் காஞ்சிக்கு இளவரசரை ஆதித்த கரிகாலன் அழைத்திருப்பதாகக் கூறுகிறான். வந்தியத்தேவனை இளவரசரிடம் அழைத்துவந்த ஆழ்வார்க்கடியான் ஈழத்தில் தங்குவதே சிறந்தது என்று முதல் மந்திரி அநிருத்தர் கூறியதை சொல்கிறான். இதற்கிடையே இளவரசரை சிறைசெய்து அழைத்து செல்ல பழுவேட்டரையர் வீரர்கள் இரண்டு கப்பல்களில் வருகின்றார்கள். அதிலொன்றில் ரவிதாசன், தேவராளனும் தஞ்சைக்கு திரும்புகிறார்கள். இளவரசர் அதில் செல்கிறார் என்று நினைத்து வந்தியத்தேவன் அக்கப்பலில் எதிரிகளிடம் மாட்டிக் கொள்கிறான். அருள்மொழிவர்மன் வந்தியத்தேவனை காப்பாற்ற பார்த்திபேந்தரன் கப்பலில் பின்தொடர்கிறார். இரு கப்பல்களும் பெரும் புயல்காற்றில் மாட்டிக் கொள்கின்றன. கடலில் மிதந்து கொண்டிருக்கும் இளவரசரையும், வந்தியத்தேவனையும் பூங்குழலி காப்பாற்றி கோடிக்கரையின் சதுப்பு நிலக் காட்டில் சேர்க்கின்றாள். பகுதி 4: மணிமகுடம் அத்தியாயம் கெடிலக் கரையில் தொடங்கி படகு நகர்ந்தது! வரை 46 அத்தியாயங்களை உள்ளடக்கியது நான்காம் பகுதியான மணிமகுடம். வந்தியத்தேவன், ஆதித்தர் கடம்பூர் மாளிகைக்கு செல்லவிடாமல் தடுக்கப் பார்க்கிறான். இருந்தும் இளவரசர் ஆதித்த கரிகாலர், பார்த்திபேந்திர பல்லவன், வந்தியதேவன், கந்தமாறன் ஆகியோர் கடம்பூர் சம்பூவரையன் மாளிகைக்கு வருகிறார்கள். திருக்கோவிலூர் மலையமான் பாதி தூரம் வரை வந்து வழியனுப்புகிறார். இதே நேரத்தில் தஞ்சாவூரில் முதன்மந்திரி அநிருத்தர், வைத்தியர் மகன் பினாகபாணியின் மூலம் கோடிக்கரையிலிருந்து மந்தாகினி அம்மையாரை பழுவூர் இளையராணியின் பல்லக்கில் கடத்தி வர செய்கிறார். வரும் வழியில் புயலின் காரணமாக பினாகபாணியின் மேல் மரம் ஒன்று முறிந்து விழுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பூங்குழலி மந்தாகினி அம்மையாருக்கு பதிலாக பல்லக்கில் ஏறிக்கொள்கிறாள். பாண்டிய ஆபத்துதவிகளை பின்தொடர்ந்து மந்தாகினி அம்மையார் பெரிய பழுவேட்டரையரின் நிலவறைக்கு வருகிறாள். மந்தாகினி சக்கரவர்த்தியைப் பார்க்கிறார். அதே நேரத்தில் ஆதித்த கரிகாலர் நந்தினியை பார்க்கிறார். பகுதி 5: தியாகச் சிகரம் அத்தியாயம் மூன்று குரல்களில் தொடங்கி மலர் உதிர்ந்தது வரை 91 அத்தியாயங்களை உள்ளடக்கியது ஐந்தாம் பகுதியான தியாக சிகரம். இராசராச சோழன் அருள்மொழிவர்மன் மக்களின் ஆதரவு தனக்கு இருந்தும் சிம்மாசனத்தை தன் சிற்றப்பனுக்கு வழங்கினான். அருள்மொழிவர்மனின் சரித்திரத்தில் இந்த நிகழ்ச்சி பெரிதும் போற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து இந்த பாகத்தை எழுதியதால் இதற்கு தியாக சிகரம் என பெயர் வைத்ததாய் நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். பெரிய பழுவேட்டரையருக்கு பாண்டிய ஆபத்துதவிகளின் சதித்திட்டம் தெரிய வருகிறது. அவர்கள் ஒரே நாளில் இளவரசர் அருள்மொழிவர்மன், சக்கரவத்தி சுந்தர சோழர் மற்றும் இளவரசர் ஆதித்த கரிகாலர் மூவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இளவரசர் அருள்மொழிவர்மனும், சக்கரவத்தி சுந்தர சோழரும் காப்பாற்றப்படுகின்றனர். சக்கரவத்தி சுந்தர சோழரை காப்பாற்றும் முயற்சியில் மந்தாகினி தேவி உயிரிழக்கிறார். பெரிய பழுவேட்டரையர் வருவதற்குள் இளவரசர் ஆதித்தர் இறந்துவிடுகிறார். பழி வந்தியதேவன் மேல் விழுகிறது. நாட்டு மக்கள், போர் வீரர்கள் அனைவரும் அருள்மொழிவர்மனுக்கு ஆதரவாய் இருக்கின்றனர். அருள்மொழிவர்மனுக்கு பட்டாபிசேகம் நடைபெறுகிறது. வந்தியதேவன் எப்படி காப்பாற்றப்படுகிறான். அருள்மொழிவர்மர் அரியணை எறுகிறாரா? இவ்வாறு ஐந்தாம் பாகம் செல்கிறது. முக்கிய பாத்திரங்கள் வரலாற்றில் முக்கிய இடம்பெறுவோர் வந்தியத் தேவன் குந்தவை அருண்மொழிவர்மன் சுந்தர சோழர் ஏனைய சில பாத்திரங்கள் நந்தினி - ஆதித்த கரிகாலனை காதலித்தவள், பின் வீரபாண்டியன் தனது தந்தை என அறிகிறாள். ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொன்ற பின்பு, பெரிய பழுவேட்டரையரின் மனைவியாகி பழுவூர் இளைய அரசியாகிறாள். சோழ பேரரசின் பெரும் அரசியாக ஆவதற்காக ஆதித்த கரிகாலன், சுந்தர சோழர், அருள்மொழி வர்மன் ஆகிய மூவரையும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டுகிறாள். பார்த்தவுடன் மோகம் கொள்ள வைக்கும் அழகுடையவளாக வலம் வருகிறாள். ஆழ்வார்க்கடியான் நம்பி - கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பயணிப்பவர். ஆயினும் ஆரம்பத்தில் இக்கதாபாத்திரம் ஒரு சோழ அரசின் ஒற்றன் என்பதை கூறாமல் கதையை நகர்த்தியமை கதைக்கு சுவை ஊட்டுகின்றது. அநிருத்தப் பிரம்மராயர் - சுந்தர சோழரின் முதன் மந்திரியாக இவர் கதையில் இடம் பெறுகிறார். வானதி - கொடும்பாளுர் இளவரசி வானதி, இளவரசர் அருள்மொழிவர்மரை நேசிக்கும் பெண்ணாக இதில் காட்டப்பட்டிருப்பாள். வானதி அருள்மொழி வர்மரை திருமணம் முடித்த பின் ஒரிரு வருடங்களுக்குள் காலமாகி விட்டார். பெரிய பழுவேட்டரையர் - இவர் மிகவும் வலிமைமிக்க கதாபாத்திரமாகக் காட்டப்பட்டுள்ளார். இறுதியில் மரணம் அடைவதுமாக மிக்க துக்கம் தருவதாக அமைகிறது. சின்னப் பழுவேட்டரையர் - தஞ்சை நகரத்தின் காவல் அதிகாரியாகவும், சோழர்களின் நல விரும்பியாகவும் இருக்கிறார். பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினியின் சோழப் பேரரசுக்கு எதிரான சதியை தொடக்கத்திலிருந்தே கடுமையாக எதிர்ப்பவராகவும், பெரிய பழுவேட்டரையரின் மீதான அதீத அன்பினால் அவரை அவ்வப்போது எச்சரிக்கை செய்வதுமாக இருக்கிறார். செம்பியன் மாதேவி - இவர் மழவராயர் குடும்பத்தில் பிறந்தவர். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்த பராந்தகச் சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்தனின் மனைவியாவர். கி.பி 957ல் கண்டராதித்த சோழன் மரணம் அடைந்த பிறகு மகன்களை வளர்க்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். மேலும் கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 – 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர். ஆதித்த கரிகாலன் – சுந்தர சோழரின் மகனாகவும், அருள்மொழிவர்மன் மற்றும் குந்தவை தேவியின் மூத்த சகோதரராகவும், பட்டத்து இளவரசராகவும் ஆதித்த கரிகாலன் வருகிறார். சிறுவயதிலேயே போர்புரியும் குணம் கொண்டவராகவும், எதிரிகளைத் தன்னந்தனியே எதிர்த்து நிற்கின்ற வீரராகவும், முன்கோபம் கொண்டவராகவும் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. மதுராந்தக தேவர் வீரபாண்டியன் பார்த்திபேந்திர பல்லவன் மந்தாகினி வாணி அம்மை தமிழ்ப் புதின வரலாற்றில் இதன் பங்கு இந்த நூல் தமிழில் வரலாற்று புதினங்களுக்கு ஒரு முன்னோடியாகவே அமைந்தது. இக்கதையின் முடிவுரையில், கல்கி குறிப்பிட்டு இருப்பது போல், விக்ரமன், சாண்டில்யன் போன்றவர்கள் தமிழ் வரலாற்றை புதினங்களாக்கிக் கொடுக்க முயன்று இருக்கிறார்கள். டாக்டர் எல். கைலாசம் பொன்னியின் செல்வனுக்கு முன் நடந்த நிகழ்வுகளை தனது புதினமான மலர்ச்சோலை மங்கையில் கொடுத்துள்ளார். எனினும் பொன்னியின் செல்வனுக்கு இணையாக இன்று வரை ஒரு புதினமும் சிறப்பாக வரவில்லை என்ற பரவலான அபிப்பிராயம் உள்ளது. "உயர்நிலைப்பள்ளியில் மாணவனாக பொன்னியின் செல்வனைப் படித்தாலும், கல்கி ஆசிரியர் மறைந்த பின்னர் மீண்டும் அது இருமுறை தொடர்கதையாகவே அற்புத ஓவியங்களோடு வெளிவந்த காலத்தில் மீண்டும் வாரவாரம் எண்ணற்ற முறையில் படித்து இருக்கிறேன். சோழ நாட்டுக்கு உள்ளே உலவுவதைப்போன்ற அந்த உணர்வை, எந்த எழுத்தாளனாலும் படைக்க முடியாது என்பது என் கருத்து" என்று வைகோ பொன்னியின் செல்வன் திறனாய்வில் குறிப்பிடுகிறார். திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் மதராசு தாக்கீசு, லைக்கா தயாரிப்பகம் தயாரிப்பில் 2022 இல் பொன்னியின் செல்வன் 1 திரைப்படமும், 2023 இல் பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் வெளிவந்துள்ளன. https://cinema.vikatan.com/kollywood/ponniyin-selvan-novel-characters-full-detail இவ்விரு திரைப்படங்களும் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தினை மையமாக வைத்து சில மாற்றங்களுடன் வெளிவந்தன. மொழிபெயர்ப்புகள் பொன்னியின் செல்வன் இதுவரை மூன்று முறை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (மொழிபெயர்ப்பாளர்கள்: இந்திரா நீலமேகம் சிவி கார்த்திக் நாராயணன், பவித்ரா ஸ்ரீநிவாசன்.) சமசுகிருதத்தில் 'பொன்னியின் செல்வன்' என்ற தலைப்பில் திருமதி ராஜலட்சுமி ஸ்ரீநிவாசன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு மத்திய சமசுகிருதப் பல்கலைக்கழகம் பதிப்பில் ஐந்து பகுதிகளாக 2015ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பொன்னியின் செல்வன் நாவல் முழுவதும் பொன்னியின் செல்வன் இணையம் பொன்னியின் செல்வன் சென்னை கதா பாத்திரங்கள் மற்றும் உறவு முறைகள் பொன்னியின் செல்வன் புத்தகங்கள் பகுப்பு:சோழர் பற்றிய தமிழ்ப் புதினங்கள் பகுப்பு:வரலாற்றுத் தமிழ்ப் புதினங்கள் பகுப்பு:வரலாற்றுப் புதினங்கள் பகுப்பு:தமிழ்ப் புதினங்கள்
ஐகாரக் குறுக்கம்
https://ta.wikipedia.org/wiki/ஐகாரக்_குறுக்கம்
ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிக்கும் நிலையை அடைதல். ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம். ஐகாரம் தன்னைச் சுட்டித் தனித்து எழுத்தாகக் கூறும்பொழுதோ பிறவற்றைச் சுட்டி ஓரெழுத்து ஒரு மொழியாகத் தனித்து நிற்கும் பொழுதோ இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். அந்த ஐகாரம் ஒரு சொல்லில் முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையாகவும் இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையாகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும் தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம் நையும் ஔ உம் முதல் அற்று ஆகும் -- நன்னூல்.95 எ.கா: ஐந்து- ஐகாரம் மொழிக்கு முதலில்- 1 1/2 மாத்திரை வளையல்- ஐகாரம் மொழிக்கு இடையில்- 1 மாத்திரை மலை- ஐகாரம் மொழிக்கு கடையில்- 1 மாத்திரை மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஐகாரம் குறைந்து ஒலிப்பதைக் காண்க. இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் பகுப்பு:சார்பெழுத்துகள்
சேரன்
https://ta.wikipedia.org/wiki/சேரன்
சேரன் என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் கீழே உள்ளன. சேரன் (திரைப்பட இயக்குநர்) - தென்னிந்தியத் திரைப்பட இயக்குனர். சேரன் (கவிஞர்) - ஈழத்தில் பிறந்த கவிஞர். சேரர் - பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர மன்னர்கள்.
கி. ராஜநாராயணன்
https://ta.wikipedia.org/wiki/கி._ராஜநாராயணன்
{{Infobox writer | name = கி. ராஜநாராயணன் | image = Kirajanarayanan.jpg | imagesize = 209 × 253 | caption = கி. ராஜநாராயணன் | pseudonym = கி. ரா | birthname = ராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயண பெருமாள்<ref>[https://tamil.oneindia.com/news/puducherry/famous-tamil-writer-ki-rajanarayanan-passed-away-at-92-421187.html கரிசல் இயக்கத்தின் தந்தை' என்று போற்றப்படும் எழுத்தாளர் கி.ரா. காலமானார்]</ref> | birthdate = 16 செப்டம்பர் 1923 | birthplace = இடைசெவல், பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) | deathdate = | deathplace = லாஸ்பேட்டை, புதுச்சேரி, இந்தியா | nationality = | period = 1958– 2021 | genre = சிறுகதை, புதினம் | subject = நாட்டுப்புறவியல், கிராமிய வாழ்க்கை | movement = | notableworks = கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்| spouse = | children = | relatives = | influences = | influenced = | awards = சாகித்திய அகாதமி விருது (1991) | signature = | website = https://www.kirajanarayanan.com/ | portaldisp = | box_width = 26em | citizenship = இந்தியர் }} கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், மாயமான், நாட்டுப்புற கதை களஞ்சியம் ஆகியவை இவரது பிரபலமான படைப்புகளில் சில. இவர் 1991 இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். டைம்ஸ் ஆஃப் இந்தியா இவரை "தமிழ் வாய்மொழி பாரம்பரியத்தின் காவலர்" என்று அழைத்தது. துவக்ககால வாழ்க்கை ராஜநாராயணன் அவர்கள் 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தின், கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் சிற்றூரில் பிறந்தார். இவர் ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளையாவார்கி. ரா.95 உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், சிறுவயதிலேயே காசநோயால் பாதிக்கப்பட்டார். ஏழாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திக்கொண்டார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (சிபிஐ) உறுப்பினரானார். 1947 மற்றும் 1951 க்கு இடையில் சிபிஐ-யால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகள் கிளர்ச்சிகளில் கலந்து கொண்டு, ஆதரவளித்த காரணங்களுக்காக இரண்டு முறை சிறைக்குச் சென்றார். 1952 ஆம் ஆண்டு நெல்லை சதி வழக்கிலும் இவர் பெயர் சேக்க்கப்பட்டது இருப்பினும் குற்றச்சாட்டுகள் பின்னர் கைவிடப்பட்டன. தொழில் ராஜநாராயணன் 30 வயதில் தனது இலக்கிய வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது முதல் சிறுகதையான "மாயமான்" 1959 இல் சரஸ்வதி இதழில் வெளியானது. அது வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இன்னும் பல சிறுகதைகள் வெளிவந்தன. கி. ரா.வின் கதைகள் வழக்கமாக அவரது சொந்தப் பகுதியான கோவில்பட்டியைச் சுற்றியுள்ள கரிசல் காட்டைச் சர்ந்தவை. கதைகள் பொதுவாக கரிசல் நாட்டு மக்கள், அவர்களின் வாழ்க்கை, நம்பிக்கைகள், போராட்டங்கள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளை, ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளை மையமாக கொண்டவை.கி. ராஜநாராயணன் கோபல்ல கிராமம் மற்றும் அதன் தொடர்ச்சியான கோபல்லபுரத்து மக்கள் ஆகியவை இவரது மிகவும் பாராட்டப்பட்ட புதினங்களில் ஒன்றாகும், பிந்தைய புதினம் இவருக்கு 1991 இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பு தென்னிந்தியாவில் ஒரு கிராமத்தில் வாழ்ந்த பலரின் கதைகளை இந்த புதினம் கையாள்கிறது. தமிழ்நாட்டின் வடக்கே இருந்த கொடூரமான இராச்யங்களிலிருந்து தப்பித்து தெலுங்கு மக்கள் தெற்கே தமிழ்நாட்டுக்கு இடம்பெயர்ந்து குடியேறுவதை விவரிக்கிறது. இந்த புத்தகங்களுக்கு அடுத்த பகுதியாக அந்தமான் நாயக்கர் புதினம் வந்தது. ஒரு நாட்டுப்புறவியலாளராக, கி. ரா. பல தசாப்தங்கள் கரிசல் வட்டாரத்தில் இருந்து நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து பிரபல பத்திரிகைகளில் வெளியிட்டார். 2007 ஆம் ஆண்டில், தஞ்சாவூரைச் சேர்ந்த அன்னம் என்ற பதிப்பகம் இந்த நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து நாட்டுப்புற கதைக் களஞ்சியம் என்ற பெயரில் 944 பக்க புத்தகமாக வெளியிட்டது. 2009 வரை, இவர் சுமார் 30 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இந்தப் புத்தகங்களில் சிலவற்றை ஆங்கிலத்தில் பிரித்தம் கே. சக்ரவர்த்தி மொழிபெயர்த்து 2009 இல் Where Are You Going, You Monkeys? – Folktales from Tamil Nadu'' என்ற பெயரில் வெளியிட்டார். கி. ரா. நாட்டுப்புறங்களில் நிலவும் பாலியல் கதைகளை நேர்மையாக சேகரித்து எழுதுவதற்கும், அவரது கதைகளில் இலக்கிய மொழிவழக்கைக் காட்டிலும் தமிழ் வட்டார வழக்கைப் பயன்படுத்துவதற்கும் நன்கு அறியப்பட்டவர். அவர் பேச்சுவழக்கை மொழியின் 'சரியான' வடிவமாகக் கருதினார். வட்டார வழக்குகளில் கதைகளை எழுதுவதோடு மட்டுமல்லாமல், கரிசல் வட்டார அகராதி என்று அழைக்கப்படும் என்று மக்கள் தமிழுக்கு அகராதியின் ஆசிரியராகவும் இருந்தார். இந்தப் பணி தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வட்டாரவழக்குகளுக்கும் இதே போன்ற அகராதிகள் உருவாக முன்னோடியாக இருந்தது. கி. ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., நல்ல இசை ஞானம் கொண்டவர் ,கவியரசு நா.காமராசன் அவர்கள் நடத்திய இலக்கிய பத்திரிகையான" சோதனை"யின் ஆலோசகர் ஆக இருந்துள்ளார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இவர் பல்கலைக்கழகத்தின் ஆவணப்படுத்தல் மற்றும் ஆய்வு மையத்தில் நாட்டுப்புறக் கதைகளின் இயக்குநர் பதவியை வகித்தார். 1998 மற்றும் 2002 க்கு இடையில் இவர் சாகித்திய அகாதமியின் பொதுக்குழுவிலும் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றினார். தனிப்பட்ட வாழ்க்கை 16, செப்டம்பர், 1954 இல், ராஜநாராயணன் கணவதி அம்மாளை (கி.ரா தங்கை எத்திராஜத்தின் வகுப்புத் தோழி; முறைப் பெண்ணும் கூட) மணந்தார். இணையருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.[5] கணவதி 25 செப்டம்பர் 2019 அன்று 87 வயதில் இறந்தார். 2021ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தனது 98ஆம் வயதில் புதுச்சேரியில் இயற்கை எய்தினார். இவரது உடல் இவரது சொந்த ஊரான இடைசெவலில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.கி.ரா.வுக்கு அரசு மரியாதை: தமிழக அரசுக்கும் கௌரவம், ஆசிரியர் தலையங்கம், 21 மே 2021, இந்து தமிழ் நாளிதழ் திரைப்படமாக்கப்பட்ட இவர் எழுத்துக்கள் 2003 ஆம் ஆண்டில், இவரது கிடை என்ற கதை ஒருத்தி என்ற பெயரில் தமிழ்த் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 1992 இல், இவரது கரண்ட் என்ற சிறுகதை இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் நிதி உதவியுடன் கரண்ட் (கரண்டு என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு கே. அரிகரன் இயக்கிய இந்தி திரைப்படம்). விருதுகள் 1971 – தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்ற விருது 1979 – இலக்கிய சிந்தனை விருது 1990 – சாந்தோம் இபன்னாட்டு கிறித்தவ சங்கத்தின் சிறந்த எழுத்தாளர் விருது 1991 – கோபல்லபுரத்து மக்கள் புதினத்துக்காக சாகித்ய அகாதமி விருது 2008 – எம்.ஏ. சிதம்பரம் விருது 2016 – கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தமிழ் இலக்கியச் சாதனை விருது. 2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது. படைப்புகள் அகராதிகள் கரிசல் வட்டார வழக்கு அகராதி கி.ரா.95: வெடித்துக் கிடக்கும் பருத்திக் காடு சிறுகதைகள் கன்னிமை மின்னல் கோமதி நிலை நிறுத்தல் கதவு(1965) பேதை ஜீவன் நெருப்பு விளைவு பாரதமாதா கண்ணீர் வேட்டி கரிசல்கதைகள் கி.ரா-பக்கங்கள் கிராமிய விளையாட்டுகள் கிராமியக்கதைகள் குழந்தைப்பருவக்கதைகள் கொத்தைபருத்தி புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள் பெண்கதைகள் பெண்மணம் வயது வந்தவர்களுக்கு மட்டும் கதை சொல்லி(2017) மாயமான் குறுநாவல் கிடை பிஞ்சுகள் நாவல் கோபல்ல கிராமம் கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாடமி விருது பெற்றது - 1991) அந்தமான் நாயக்கர் கட்டுரை ருஷ்ய மண்ணின் நிறம் என்ன? புதுமைப்பித்தன் மாமலை ஜீவா இசை மகா சமுத்திரம் அழிந்து போன நந்தவனங்கள் கரிசல் காட்டுக் கடுதாசி மாந்தருள் ஒரு அன்னப்பறவை தொகுதி நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பவர் கி. ராஜநாராயணன் – கலந்துரையாடல் நிகழ்வு ஜெயமோகன் கி.ராஜநாராயணன்: இனக்குழு அழகியலின் முன்னோடி கி.ரா: கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர்! கடிதம், கமல், வண்ணதாசன், சிறுவர் இலக்கியம்... - கிரா நேர்காணல்! -விகடன் கி.ராஜாநாராயணன் - சிறுகதை எழுத்துக்களின் பிதாமகர் மண்… மனிதர்கள்… வாழ்க்கை! கி.ராஜாநாராயணன் - சிறுகதைகள் பகுப்பு:1922 பிறப்புகள் பகுப்பு:2021 இறப்புகள் பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட நபர்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழ் அகராதி தொகுப்பாளர்கள் பகுப்பு:தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்
வாலி (கவிஞர்)
https://ta.wikipedia.org/wiki/வாலி_(கவிஞர்)
கவிஞர் வாலி (Vaali) (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன்; 29 அக்டோபர் 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி, தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி, திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அவர் நடித்த திரைப்படங்களுள், சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும், 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும், வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பிறப்பும் வளர்ப்பும் ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட 'வாலி' திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்து, திருவரங்கத்தில் வளர்ந்தார். ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, 'வாலி' என்ற பெயரைச் சூட்டினான். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி' என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால், வானொலிக்கு கதைகளும் நாடகங்களும் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு, வாலிக்குக் கிடைத்தது. திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில், பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்றுக் கொண்டவர்களில் ஒருவர், பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா. வாலி பெயர்க்காரணம் தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு, ஓவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம், அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார். எழுதிய நூல்கள் சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: 'அம்மா', 'பொய்க்கால் குதிரைகள்', 'நிஜ கோவிந்தம்', 'பாண்டவர் பூமி', 'கிருஷ்ண விஜயம்' மற்றும் 'அவதார புருஷன்'. வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சூர்யா, பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இவற்றையும் பார்க்கவும் 1967இல் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில், 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம் பெற்ற வாலி இயற்றிய "நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்.."என்ற பாடலும் ஒரு காரணம் என்பதை அறுபதுகளின் மத்தியில் இருந்தவர்கள் அறிவார்கள். சென்னை தி.நகர் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு எதிரே இருந்த கிளப் ஹவுசில், கவிஞர் வாலி நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்குதான் நகைச்சுவை நடிகர் நாகேஷை கவிஞர் வாலி சந்தித்தார். பக்கத்து, பக்கத்து அறைகளில் இருந்ததால், மிக நெருங்கிய நண்பர்களானார்கள்.http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/70811-vaali-birthday-special-article.html தளபதியும் வாலியும்! - கவிஞர் வாலி பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு 'தளபதி' என்ற பெயருக்கும், வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் 'வெற்றி' என்பது எல்லாரும் அறிந்தது. வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!. விருதுகள் பத்மஸ்ரீ விருது-2007 1973-ல் 'இந்திய நாடு என் வீடு'.. என்ற 'பாரத விலாஸ்' திரைப்படத்தின் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார். வாலி ஐந்துமுறை (கீழே காணப்படும் திரைப்படங்களின்) சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர். 1970 – எங்கள் தங்கம் 1979 – இவர்கள் வித்தியாசமானவர்கள் 1989 – வருஷம் 16 , அபூர்வ சகோதரர்கள் 1990 – கேளடி கண்மணி 2008 – தசாவதாரம் தமிழக அரசின் பிற விருதுகள் 2000 - மகாகவி பாரதியார் விருது மறைவு வாலி மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, 2013 சூன் 7 அன்று, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி, அவர் 2013 சூலை 18 அன்று மாலை 5 மணியளவில் காலமானார்.மருத்துவமனையில் கவிஞர் வாலி காலமானார் குறிப்பிடத்தக்க பாடல்களில் சில பாடல் படம் ஆண்டு " ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... " ஆயிரத்தில் ஒருவன் 1968 " மல்லிகை என் மன்னன் மயங்கும்... " தீர்க்க சுமங்கலி 1974 " மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... " இரு மலர்கள் 1967நான் ஆணையிட்டால்எங்க வீட்டுப் பிள்ளை (1965)காற்று வாங்க போனேன் - கலங்கரை விளக்கம் (1965)சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ-சந்திரோதயம் (1966)வெற்றி வேண்டுமா போட்டு பாரடா -எதிர்நீச்சல் (1968)இறைவா உன் மாளிகையில்-ஒளிவிளக்கு(1968)அந்த நாள் ஞாபகம் - உயர்ந்த மனிதன் (1968)புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்-இருகோடுகள்(1969) ஆண்டுக்கு ஆண்டு சுபதினம் (1969)மதுரையில் பறந்த மீன்கொடியை-பூவா தலையா (1969) எழுதிய திரைப்பாடல்கள் கீழே காண்பது வாலி எழுதிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இது முழுமையான பட்டியல் அல்ல. ஆண்டு திரைப்படம் பாடல்(கள்) பிற குறிப்புகள்2014 காவியத் தலைவன் "அல்லி அர்ச்சுனா" கடைசி திரைப்படம் திருடன் போலீஸ் "மூடு பனிக்குள்" யான் "ஏ லம்பா லம்பா" ராமானுஜன் "நாராயணா" நான் தான் பாலா "திரு வாய்" கோச்சடையான் "மெதுவாகத்தான்" பண்ணையாரும் பத்மினியும் "எனக்காக பிறந்தாயோ""பேசுறேன் பேசுறேன்""உனக்காக பிறந்தேனோ" 2013 என்றென்றும் புன்னகை "கடல் நான்தான்" பிரியாணி "நானா நானா""மிஸ்சிப்பி" மரியான் "சொனாபரியா""நேற்று அவள்" தில்லு முல்லு 2014 "கை பேசி" எதிர்நீச்சல் "எதிர்நீச்சல்""வெளிச்சப் பூவே" உதயம் தே நெ 4 " இன்றோடு தடைகள்" அலெக்ஸ் பாண்டியன் "ஒன்னாம் கிளாஸ்" கண்ணா லட்டு தின்ன ஆசையா "ஏ உன்னைத்தான்""பர்த் டே""டூயட் சாங்" 2012 போடா போடி "அப்பன் மவனே வாடா" மிரட்டல் தடையறத் தாக்க ஆதலால் காதல் செய்வீர் "தப்புத் தண்டா" 2011 ஒஸ்தி "கலாசலா""ஒஸ்தி மாமே" மங்காத்தா "மச்சி ஓப்பன் தி பாட்டில்""நண்பனே" வெடி "காதலிக்க பெண் ஒருத்தி", "இச்சு இச்சு இச்சுக்கொடு" சட்டப்படி குற்றம் ஆடு புலி உயர்திரு 420 அய்யன் "விடுதலைக் குயில் நான்" மாவீரன் "பொன்னான கோழிப் பொண்ணு""வண்டினத்தைச் சும்மா சும்மா""ஆசை ஆசை" கண்டேன் "யாவருக்கும் தலைவன்" எங்கேயும் காதல் "தீ இல்லை""நங்கை நீதானே செங்கை" பொன்னர் சங்கர் 2010 பாணா காத்தாடி "தாக்குதே கண் தாக்குதே" நினைவில் நின்றவள் அனைத்து பாடல்களும் சுறா "வெற்றிக்கொடி ஏத்து" தீராத விளையாட்டுப் பிள்ளை "தீராத விளையாட்டுப் பிள்ளை" அகராதி வாலிபன் சுற்றும் உலகம் லீலை தொட்டுப்பார் கோவா "ஊரு நல்ல ஊரு""அடிடா நையாண்டிய""கோவா""இடை விழி" குரு சிஷ்யன் (2010) திரைப்படப் பட்டியல் 1950களில் 1958- அழகர்மலை கள்வன் (முதல் திரைப்படம்) ஆண்டு முதல் திரைப்படம் பாடல் பாடியவர் இசையமைப்பாளர் குறிப்புகள்1958அழகர்மலை கள்வன் நிலவும் தாரையும் நீயம்மா-இந்த உலகம் ஒருநாள் உனதம்மாபி சுசிலா கோபாலம்முதல் பாடல் 1960-1969 1961- "சந்திரகாந்த்" 1961- "நல்லவன் வாழ்வான்" 1963- "இதயத்தில் நீ" 1963- "கற்பகம்" 1963- "எதையும் தாங்கும் இதயம்" 1964- "தாயின் மடியில்" 1964- "தெய்வத்தாய்" 1964- "படகோட்டி" 1965- "பஞ்சவர்ணக்கிளி" 1965- "வெண்ணிற ஆடை" 1965- "பணம் படைத்தவன்" 1965- "தாழம்பூ" 1965- "அன்புக்கரங்கள்" 1965- "கலங்கரை விளக்கம்" 1965- "ஆயிரத்தில் ஒருவன்" 1965- "ஆசை முகம்" 1965- "நீ" 1965- "எங்க வீட்டுப் பிள்ளை" 1965- "காக்கும் கரங்கள்" 1965- "குழந்தையும் தெய்வமும்" 1966- "சின்னஞ்சிறு உலகம்" 1966- "மோட்டார் சுந்தரம் பிள்ளை" 1966- "நாடோடி" 1966- "அன்பே வா" 1966- "சந்திரோதயம்" 1966- "மேஜர் சந்திரகாந்த்" 1966- "தாலி பாக்கியம்" 1966- "நான் ஆணையிட்டால்" 1966- "பெற்றால்தான் பிள்ளையா" 1967- "பேசும் தெய்வம்" 1967- "அவள்" 1967- "செல்வமகள்" 1967- "அதே கண்கள்" 1967- "அரச கட்டளை" 1967- "காவல்காரன்" 1967- "நெஞ்சிருக்கும் வரை" 1967- "இரு மலர்கள்" 1968- "உயர்ந்த மனிதன்" 1968- "ஒளி விளக்கு" 1968- "எதிர்நீச்சல்" 1968- "ஜீவனாம்சம்" 1968- "கல்லும் கனியாகும்" 1968- "கண்ணன் என் காதலன்" 1968- "கலாட்டா கல்யாணம்" 1968- "குடியிருந்த கோயில்" 1969- "நம் நாடு (1969 திரைப்படம்)" 1969- "மன்னிப்பு" 1969- "நில் கவனி காதலி" 1969- "சுபதினம்" 1969- "இரு கோடுகள்" 1969- "அடிமைப்பெண்" 1969- "கன்னிப் பெண்" 1969- "பூவா தலையா" 1970-1974 1970- "மாணவன்" 1970- "தலைவன்" 1970- "என் அண்ணன்" 1970- "தேடிவந்த மாப்பிள்ளை" 1970- "மாட்டுக்கார வேலன்" 1970- "எங்கள் தங்கம்" 1971- "நூற்றுக்கு நூறு" 1971- "தேனும் பாலும்" 1971- "குமரிக்கோட்டம்" 1971- "ஒரு தாய் மக்கள்" 1971- "ரிக்சாக்காரன்" 1971- "நீரும் நெருப்பும்" 1971- "முகமது பின் துக்ளக்" 1971- "பாபு" 1972- "ராமன் தேடிய சீதை" 1972- "வெள்ளிவிழா" 1972- "இதய வீணை" 1972- "நான் ஏன் பிறந்தேன்" 1972- "அன்னமிட்ட கை" 1972- "பிள்ளையோ பிள்ளை" 1973- "சொல்லத்தான் நினைக்கிறேன்" 1973- "சூரியகாந்தி" 1973- "உலகம் சுற்றும் வாலிபன்" 1973- "அரங்கேற்றம்" 1973- "பாரத விலாஸ்" 1974- "தீர்க்க சுமங்கலி" 1974- "சிரித்து வாழ வேண்டும்" 1974- "உரிமைக்குரல்" 1974- "நேற்று இன்று நாளை" 1974- "சிவகாமியின் செல்வன்" 1974- "அத்தையா மாமியா" 1974- கலியுகக் கண்ணன் 1975-1979 1975- "புதுவெள்ளம்" 1975- "அவளும் பெண்தானே" 1975- "பட்டிக்காட்டு ராஜா" 1975- "அன்பே ஆருயிரே" 1975- "அபூர்வ ராகங்கள்" 1975- "இதயக்கனி" 1975- "டாக்டர் சிவா" 1975- "நினைத்ததை முடிப்பவன்" 1975- "தேன்சிந்துதே வானம்" 1976- "ஒரு கொடியில் இரு மலர்கள்" 1976- "ஊருக்கு உழைப்பவன்" 1976- "நீதிக்கு தலைவணங்கு" 1976- "நாளை நமதே" 1976- "பத்ரகாளி" 1977- "பெண் ஜென்மம் 1977- "இன்றுபோல் என்றும் வாழ்க" 1977- "நவரத்தினம்" 1977- "மீனவ நண்பன்" 1977- "ஆறு புஷ்பங்கள்" 1978- "மாங்குடி மைனர்" 1978- "வணக்கத்திற்குரிய காதலியே" 1978- "பைலட் பிரேம்நாத்" 1978- "சிகப்பு ரோஜாக்கள்" 1978- "அச்சாணி" 1978- "அவள் ஒரு அதிசயம்" 1978- "ஜஸ்டிஸ் கோபிநாத்" 1978- "சதுரங்கம்" 1978- "இளமை ஊஞ்சலாடுகிறது" 1978- "சிட்டுக்குருவி" 1978- மச்சானை பாத்தீங்களா 1978- "வண்டிக்காரன் மகன்" 1978- "அன்னபூரணி" 1979- "லட்சுமி 1979- "அன்னை ஓர் ஆலயம்" 1979- "நான் வாழவைப்பேன்" 1979- "அன்பே சங்கீதா" 1979- "தர்மயுத்தம்" 1979- "கடவுள் அமைத்த மேடை" 1979- "அலாவுதீனும் அற்புத விளக்கும்" 1979- "நீயா" 1979- "பட்டாகத்தி பைரவன்" 1979- "இவர்கள் வித்தியாசமானவர்கள்" 1979- "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" 1980-1984 1980- "கண்ணில் தெரியும் கதைகள்" 1980- "நிழல்கள்" 1980- "ஒத்தையடி பாதையிலே" 1980- "நட்சத்திரம்" 1981- "மௌன கீதங்கள்" 1981- "குடும்பம் ஒரு கதம்பம்" 1981- "ஆணிவேர்" 1981- "அக்னி சாட்சி" 1981- "மணல்கயிறு" 1982- "சிம்லா ஸ்பெஷல்" 1982- "மூன்று முகம்" 1982- "தூறல் நின்னு போச்சு" 1982- "தனிக்காட்டு ராஜா" 1982- "வாழ்வே மாயம்" 1982- "பட்டணத்து ராஜாக்கள்" 1982- "வா கண்ணா வா" 1982- "தாய் மூகாம்பிகை" 1982- "சகலகலா வல்லவன்" 1982- "துணை" 1982- "கண்ணே ராதா" 1982- "பரிட்சைக்கு நேரமாச்சு" 1982- "நெஞ்சங்கள்" 1982- "எங்கேயோ கேட்ட குரல்" 1982- "கோபுரங்கள் சாய்வதில்லை" 1982- "ரங்கா" 1982- "தீர்ப்பு" 1982- "வடமாலை" 1983- "அந்த சில நாட்கள்" 1983- "வெள்ளை ரோஜா" 1983- "அடுத்த வாரிசு" 1983- "சிவப்பு சூரியன்" 1983- "தங்கமகன்" 1983- "சந்திப்பு" 1983- "சூரக்கோட்டை சிங்கக்குட்டி" 1983- "நீதிபதி" 1983- "சரணாலயம்" 1983- "சாட்டை இல்லாத பம்பரம்" 1983- "கோழி கூவுது" 1983- "பாயும் புலி" 1983- "தாய்வீடு" 1983- "சுமங்கலி" 1983- "தூங்காதே தம்பி தூங்காதே" 1983- "மிருதங்க சக்கரவர்த்தி" 1983- "சட்டம்" 1984- "அன்பே ஓடிவா" 1984- "வம்ச விளக்கு" 1984- "மதுரை சூரன்" 1984- "தாவணிக் கனவுகள்" 1984- "தீர்ப்பு என் கையில்" 1984- "கை கொடுக்கும் கை" 1984- "வெள்ளை புறா ஒன்று" 1984- "வீட்டுக்கு ஒரு கண்ணகி" 1984- "சத்தியம் நீயே" 1984- "வைதேகி காத்திருந்தாள்" 1984- "ஓசை" 1984- "இருமேதைகள்" 1984- "விதி" 1984- "சிம்ம சொப்பனம்" 1984- "மெட்ராஸ் வாத்தியார்" 1984- "அன்புள்ள ரஜினிகாந்த்" 1984- "குழந்தை யேசு" 1984- "நல்லவனுக்கு நல்லவன்" 1984- "நல்ல நாள்" 1984- "நாளை உனது நாள்" 1984- "இது எங்க பூமி" 1984- "குடும்பம்" 1985-1989 1985- "ஆண்பாவம்" 1985- "தென்றலே என்னைத் தொடு" 1985- "ஸ்ரீ ராகவேந்திரா" 1985- "ஒரு நல்லவன் ஒரு வல்லவன்" 1985- "குங்குமச்சிமிழ்" 1985- "கீதாஞ்சலி" 1985- "மங்கம்மா சபதம்" 1985- "ஜப்பானில் கல்யாண ராமன்" 1985- "படிக்காதவன்" 1985- "பாடும் வானம்பாடி" 1985- "பொருத்தம்" 1985- "கன்னிராசி" 1985- "நீதியின் நிழல்" 1985- "ராஜரிஷி" 1985- "கெட்டிமேளம்" 1985- "நான் சிகப்பு மனிதன்" 1985- "பந்தம்" 1985- "வேஷம்" 1985- "படிக்காத பண்ணையார்" 1985- "நல்ல தம்பி" 1985- "உயர்ந்த உள்ளம்" 1985- "உதயகீதம்" 1985- "இதய கோவில்" 1985- "நாம் இருவர்" 1985- "காக்கிசட்டை" 1985- "கருப்பு சட்டைக்காரன் 1985- "ஆஷா 1985- "கரையை தொடாத அலைகள்" 1985- "சாவி" 1985- "சுகமான ராகங்கள்" 1986- "மீண்டும் பல்லவி" 1986- "கண்மணியே பேசு" 1986- "கரிமேடு கருவாயன்" 1986- "நான் அடிமை இல்லை" 1986- "எனக்கு நானே நீதிபதி" 1986- "விடுதலை" 1986- "அன்னை என் தெய்வம்" 1986- "ஒரு இனிய உதயம்" 1986- "சாதனை" 1986- "மௌன ராகம்" 1986- "மௌனம் கலைகிறது" 1986- "ஆனந்த கண்ணீர்" 1986- "நம்பினார் கெடுவதில்லை" 1986- "வசந்த ராகம்" 1986- "தர்ம தேவதை" 1986- "தர்மபத்தினி" 1986- "லட்சுமி வந்தாச்சு" 1986- "உயிரே உனக்காக" 1986- "சம்சாரம் அது மின்சாரம்" 1986- "மருமகள்" 1986- "மெல்லத் திறந்தது கதவு" 1986- "நானும் ஒரு தொழிலாளி" 1986- "டிசம்பர் பூக்கள்" 1986- "மனக்கணக்கு 1987- "முப்பெரும் தேவியர்" 1987- "எங்க சின்ன ராசா" 1987- "பாடு நிலாவே" 1987- "பூமழை பொழியுது" 1987- "குடும்பம் ஒரு கோவில்" 1987- "ஊர்க்காவலன்" 1987-'' நல்ல பாம்பு 1987- "காவலன் அவன் கோவலன்" 1987- "சிறைப்பறவை" 1987- "அஞ்சாத சிங்கம்" 1987- "வீர பாண்டியன்" 1987- "இனிய உறவு பூத்தது" 1988- "பூவுக்குள் பூகம்பம்" 1988- "பெண்மணி அவள் கண்மணி" 1988- "என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு" 1988- "அண்ணாநகர் முதல் தெரு" 1988- "குரு சிஷ்யன்" 1988- "பொறுத்தது போதும்" 1988- "இது நம்ம ஆளு" 1988- "சத்யா" 1988- "கலியுகம்" 1988- "சொல்ல துடிக்குது மனசு" 1988- "தர்மத்தின் தலைவன்" 1988- "என் தமிழ் என் மக்கள்" 1988- "தம்பி தங்கக் கம்பி" 1988- "மணமகளே வா" 1988- "சகாதேவன் மகாதேவன்" 1988- "அக்னி நட்சத்திரம்" 1988- "தாய்ப்பாசம்" 1989- "புதுப்புது அர்த்தங்கள்" 1989- "ஆராரோ ஆரிரரோ" 1989- "ராஜநடை" 1989- "ராஜாதி ராஜா" 1989- "என்ன பெத்த ராசா" 1989- "தர்மம் வெல்லும்" 1989- "வருஷம் 16" 1989- "அபூர்வ சகோதரர்கள்" 1989- "சிவா" 1989- "வெற்றி விழா" 1989- "பொன்மன செல்வன்" 1989- "சோலை குயில்" 1989- "ஒரே ஒரு கிராமத்திலே" 1989- "வாத்தியார் வீட்டுப் பிள்ளை" 1989- "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்" 1990-1994 1990- "கேளடி கண்மணி" 1990- "புது வசந்தம்" 1990- "துர்கா" 1990- "ஆரத்தி எடுங்கடி" 1990- "தாலாட்டுப் பாடவா" 1990- "அதிசயப் பிறவி" 1990- "மைக்கேல் மதன காமராஜன்" 1990- "புரியாத புதிர்" 1990- "வாழ்க்கைச் சக்கரம்" 1990- "புதுப்பாட்டு" 1990- "நடிகன்" 1990- "வேலை கிடைச்சுடுச்சு" 1990- "உன்னைச் சொல்லி குற்றமில்லை" 1990- "சிறையில் பூத்த சின்ன மலர்" 1990- "மை டியர் மார்த்தாண்டன்" 1990-" மனைவி ஒரு மாணிக்கம் 1990- "எதிர்காற்று" 1990- "அஞ்சலி" 1990- "ராஜா கைய வெச்சா" 1990- "சந்தன காற்று" 1990- "கிழக்கு வாசல்" 1990- "சத்ரியன்" 1990- "அரங்கேற்ற வேளை" 1990- "தைமாசம் பூவாசம்" 1991- "வாசலில் ஒரு வெண்ணிலா" 1991- "ஞான பறவை" 1991- "தைப்பூசம்" 1991- "ருத்ரா" 1991- "பிரம்மா" 1991- "ஈரமான ரோஜாவே" 1991- "இதயம்" 1991- "ஆயுள் கைதி" 1991- "சின்ன தம்பி" 1991- "கோபுர வாசலிலே" 1991- "நீ பாதி நான் பாதி" 1991- "தாலாட்டு கேக்குதம்மா" 1991- "கிழக்குக்கரை" 1991- "மரிக்கொழுந்து" 1991- "மாநகரக்காவல்" 1991- "தையல்காரன்" 1991- "தளபதி" 1991- "குணா" 1991- "வசந்தகால பறவை" 1992- "திருமதி பழனிச்சாமி" 1992- "உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்" 1992- "அம்மா வந்தாச்சு" 1992- "வில்லுப்பாட்டுக்காரன்" 1992- "செம்பருத்தி" 1992- "பாண்டியன்" 1992- "தேவர் வீட்டுப் பொண்ணு" 1992- "மீரா" 1992- "மன்னன்" 1992- "உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்" 1992- "செந்தமிழ் பாட்டு" 1992- "தெய்வ வாக்கு" 1992- "சின்னமருமகள்" 1992- "நாடோடிப் பாட்டுக்காரன்" 1992- "ஊர்பஞ்சாயத்து" 1992- "சிங்கார வேலன்" 1992- "சூரியன்" 1992- "நாங்கள்" 1992- "தேவர் மகன்" 1992- "தாலிகட்டிய ராசா" 1992- "வண்ண வண்ண பூக்கள்" 1993- "ஐ லவ் இந்தியா" 1993- "சின்ன ஜமீன்" 1993- "வள்ளி" 1993- "வால்டர் வெற்றிவேல்" 1993- "உள்ளே வெளியே" 1993- "மணிசித்திரத்தழு" (மலையாளம்) 1993- "தர்மசீலன்" 1993- "சின்னக்கண்ணம்மா" 1993- "உழைப்பாளி" 1993- "உழவன்" 1993- "எஜமான்" 1993- "சின்ன மாப்ளே" 1993- "மகராசன்" 1993- "கலைஞன்" 1993- "காத்திருக்க நேரமில்லை" 1993- "கற்பகம் வந்தாச்சு" 1993- "ஜென்டுல்மேன்" 1993- "செந்தூரப் பாண்டி" 1994- "சீமான்" 1994- "இந்து" 1994- "என் ஆசை மச்சான்" 1994- "வீட்ல விசேஷங்க" 1994- "வாட்ச்மேன் வடிவேலு" 1994- "ரசிகன்" 1994- "மோகமுள்" 1994- "காதலன்" 1994- "செந்தமிழ் செல்வன்" 1994- "ராசாமகன்" 1994- "கண்மணி" 1994- "மகாநதி" 1994- "வீரா" 1994- "நம்ம அண்ணாச்சி" 1994- "பிரியங்கா" 1994- "மிஸ்டர் ரோமியோ" 1994- "அமைதிப்படை 1994- "உங்கள் அன்பு தங்கச்சி" 1995-1999 1995- "ராசய்யா" 1995- "நான் பெத்த மகனே 1995- "கட்டுமரக்காரன்" 1995- "சின்ன வாத்தியார்" 1995- "தொட்டாசிணுங்கி" 1995- "தேவா" 1995- "பாட்டு பாடவா" 1995- "பெரிய குடும்பம்" 1995- "முத்துக்காளை" 1995- "ஆணழகன்" 1995- "ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி" 1995- "ஆசை" 1995- "மிஸ்டர். மெட்ராஸ்" 1995- "ராஜாவின் பார்வையிலே" 1995- "ரகசிய போலீஸ் (1995)" 1995- "திருமூர்த்தி" 1995- "ஆயுத பூஜை" 1996- "இந்தியன்" 1996- "அவதார புருஷன்" 1996- "அவ்வை சண்முகி 1996- "வான்மதி" 1996- "நேதாஜி" 1996- "காதல் தேசம்" 1996- "பூவே உனக்காக" 1996- "பூவரசன்" 1996- "இரட்டை ரோஜா" 1996- "கல்லூரி வாசல்" 1996- "டாடா பிர்லா" 1996- "கோயமுத்தூர் மாப்ளே" 1997- "தம்பிதுரை" 1997- "வாய்மையே வெல்லும்" 1997- "பாரதி கண்ணம்மா" 1997- "பெரிய மனுஷன்" 1997- "பொங்கலோ பொங்கல்" 1997- "பாசமுள்ள பாண்டியரே" 1997- "மன்னவா" 1997-"ரட்சகன் 1998- "கலர் கனவுகள் 1998- "காதலா காதலா" 1998- "மறுமலர்ச்சி" 1998- "நினைத்தேன் வந்தாய்" 1999- "காதலர் தினம்" 1999- "மன்னவரு சின்னவரு" 1999- "மனம் விரும்புதே உன்னை" 1999- "விரலுக்கேத்த வீக்கம்" 1999- "பூ வாசம்" 2000-2004 2000- "வண்ணத் தமிழ்ப்பாட்டு" 2000- "ஹேராம்" 2000- "கண்ணுக்கு கண்ணாக" 2000- "பாளையத்து அம்மன்" 2000- "பிரியமானவளே" 2000- "சிம்மாசனம்" 2000- "நாகலிங்கம்" 2000- "பெண்ணின் மனதை தொட்டு" 2001- "டும் டும் டும்" 2001- "மிடில் கிளாஸ் மாதவன்" 2001- "மின்னலே" 2001- "பார்த்தாலே பரவசம்" 2001- "தீனா" 2001- "லூட்டி" 2001- "சாக்லேட்" 2001- "தோஸ்த்" 2001- "நரசிம்மா" 2002- "யூத்" 2002- "பகவதி" 2002- "தென்காசிப்பட்டிணம்" 2002- "புன்னகை தேசம்" 2002- "ஸ்ரீ" 2002- "காதல் வைரஸ்" 2002- "மௌனம் பேசியதே" 2002- "இவன்" 2002- "பாபா" 2003- "புதிய கீதை" 2003- "லேசா லேசா" 2003- "சிம்ஹகிரி" (தெலுங்கு) 2003- "பாய்ஸ்" 2004- "மன்மதன்" 2004- "குத்து" 2004- "நியூ" 2005-2009 2005- "மண்ணின் மைந்தன்" 2005- "கஜினி" 2005- "சந்திரமுகி" 2005- "மும்பை எக்ஸ்பிரஸ்" 2005- "ஒரு நாள் ஒரு கனவு" 2005- "அன்பே ஆருயிரே" 2005- "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" 2006- "கள்வனின் காதலி" 2006- "சில்லுனு ஒரு காதல்" 2006- "தலைமகன்" 2006- "வல்லவன்" 2007- "இனிமே நாங்கதான்" 2007- "சிவாஜி" 2007- "சென்னை 600028" 2007- "ஆழ்வார்" 2007- "என் உயிரினும் மேலான" 2007- "பில்லா" 2007- "தொட்டால் பூ மலரும்" 2007- "உன்னாலே உன்னாலே" 2007- "அழகிய தமிழ் மகன்" 2008- "சரோஜா" 2008- "ஜெயம் கொண்டான்" 2008- "பீமா" 2008- "தசாவதாரம்" 2008- "சரோஜா" (தெலுங்கு) 2008- "சக்கரக்கட்டி" 2008- "தனம்" 2008- "குசேலன்" 2008- "பொம்மலாட்டம்" 2008- "சிங்ககுட்டி" 2008- "சிலம்பாட்டம்" 2008- "உளியின் ஓசை" 2009- "பஞ்சாமிர்தம்" 2009- "அருந்ததி" 2009- "மலை மலை" 2009- "நாடோடிகள்" 2009- "மத்திய சென்னை" 2009- "நான் கடவுள்" 2009- "குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்" 2009- "ஆதவன்" 2009- "வால்மீகி" 2009- "ஜகன் மோகினி" 2009- பழசிராஜா 2010-2014 2010- "ஜிக்கு புக்கு" 2010- "பெண் சிங்கம்" 2010- "மாஞ்சா வேலு" 2010- "நந்தா நந்திதா" 2010- "காதலுக்கு மரணமில்லை" 2010- "விருதகிரி" 2010- "குரு சிஷ்யன்" 2010- "கோவா" 2010- "தொட்டுப்பார்" 2010- "வாலிபன் சுற்றும் உலகம்" 2010- "தில்லாலங்கடி" 2010- "லீலை" 2010- "தீராத விளையாட்டு பிள்ளை" 2010- "அகராதி" 2010- "சுறா" 2010- "நினைவில் நின்றவள்" 2010- "பாணா காத்தாடி" 2011- "பொன்னர் சங்கர்" 2011- "எங்கேயும் காதல்" 2011- "கண்டேன்" 2011- "மாவீரன்" 2011- "உயர்திரு 420" 2011- "ஒஸ்தி" 2011- "வெடி" 2011- "மங்காத்தா" 2011- "சட்டப்படி குற்றம்" 2011- "ஆடுபுலி" 2011- "அய்யன்" 2012- "ஆதலால் காதல் செய்வீர்" 2012- "தடையறத் தாக்க" 2012- "மிரட்டல்" 2012- "போடா போடி" 2013- "தில்லு முல்லு" 2013- "எதிர்நீச்சல்" 2013- "என்றென்றும் புன்னகை" 2013- "அலெக்ஸ் பாண்டியன்" 2013- "பிரியாணி" 2013- "கண்ணா லட்டு தின்ன ஆசையா" 2013- "உதயம் என்.எச்4" 2013- "மரியான்" 2014- "யான்" 2014- "திருடன் போலீஸ்" 2014- "கோச்சடையான்" 2014- "ராமானுஜன்" 2014- "பண்ணையாரும் பத்மினியும்" 2014- "நான் தான் பாலா" 2014- "காவியத்தலைவன்" (கடைசி திரைப்படம்) திரைக்கதை வசனம் 1974- கலியுகக் கண்ணன் 1975- காரோட்டிக்கண்ணன் 1976- ஒரு கொடியில் இரு மலர்கள் 1978- சிட்டுக்குருவி 1979- கடவுள் அமைத்த மேடை 1983- "சாட்டை இல்லாத பம்பரம்" (வசனம்) 1989- ஒரே ஒரு கிராமத்திலே மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பகுப்பு:1931 பிறப்புகள் பகுப்பு:2013 இறப்புகள் பகுப்பு:திருச்சி மாவட்ட நபர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பகுப்பு:கவிஞர்கள் பகுப்பு:பாடலாசிரியர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள் பகுப்பு:பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள்‎ பகுப்பு:திருச்சிராப்பள்ளித் திரைப்பட நடிகர்கள் பகுப்பு:திருச்சிராப்பள்ளி எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழகக் கவிஞர்கள் பகுப்பு:தமிழ் பாடலாசிரியர்கள் பகுப்பு:தமிழகப் பாடலாசிரியர்கள்
க. கைலாசபதி
https://ta.wikipedia.org/wiki/க._கைலாசபதி
க.கைலாசபதி (K. Kailasapathy, ஏப்ரல் 5, 1933 - டிசம்பர் 6, 1982) இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர், தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர், பத்திரிகை ஆசிரியர் ஆவார். வாழ்க்கைக் குறிப்பு கைலாசபதி மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தவர். தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணி புரிந்தவர். தாய் தில்லைநாயகி நாகமுத்து. தொடக்கக் கல்வியை கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற கால கட்டத்தில் (1946-47) இலங்கை வந்தார். பள்ளிப் படிப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியிலும் தொடர்ந்தார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழும் மேலைத் தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்து இளங்கலை (சிறப்பு) பட்டத்தை 1957 இல் பெற்றார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன் ஆகியோருடைய வழிகாட்டல்கள் இவருக்குக் கிடைத்தன. தொழில் பட்டம் பெற்றபின் கொழும்பில் புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப்பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது. பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித் துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, "Tamil Heroic Poetry" என்னும் தலைப்பில் ஆய்வு செய்து பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளை இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதன் முதல் தலைவராக ஜூலை 19 1974ல் நியமனம் பெற்றார். ஜூலை 31, 1977 வரை இப்பதவியில் இருந்து திறம்படப் பணியாற்றினார். இலக்கியப் பணி ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது. இடதுசாரிச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர், அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது ஆக்கங்கள் இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது. இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. 1982ல், "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் இவராற்றிய, புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும். "அடியும் முடியும்", "பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்", "தமிழ் நாவல் இலக்கியம்", "இலக்கியச் சிந்தனைகள்" என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில. மிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர், 49வது வயதில் 1982 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி காலமானார். இவரது நூல்கள் பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966 தமிழ் நாவல் இலக்கியம்,1968 Tamil Heroic Poetry,Oxford,1968 ஒப்பியல் இலக்கியம்,1969 அடியும் முடியும்,1970 ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி(கமாலுதினுடன்)1971 இலக்கியமும் திறனாய்வும்,1976 கவிதை நயம்(இ.முருகையனுடன்),1976 சமூகவியலும் இலக்கியமும்,1979 மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),1979 The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist,Vol:7:10,Trivandrum நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,1980 திறனாய்வுப் பிரச்சினைகள்,1980 பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,1980(இ.ப) இலக்கியச் சிந்தனைகள்,1983 பாரதி ஆய்வுகள்,1984 The Relation of Tamil and Western Literatures ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,1986 On Art and Literature,1986 இரு மகாகவிகள்,1987(ஆ.ப) On Bharathi,1987 சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982) Tamil (mimeo)(co-author A,Shanmugadas) மேற்கோள்கள் வெளி இணைப்புக்கள் தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி - நா. சுப்பிரமணியன் - நூலகம் திட்டம் இலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982) - முனைவர் மு. இளங்கோவன் பகுப்பு:தமிழ் விமர்சகர்கள் பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள் பகுப்பு:1933 பிறப்புகள் பகுப்பு:1982 இறப்புகள் பகுப்பு:இலங்கைத் திறனாய்வாளர்கள் பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள் பகுப்பு:யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பகுப்பு:யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள் பகுப்பு:கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள் பகுப்பு:இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள் பகுப்பு:இலங்கைப் பத்திரிகையாளர்
கார்த்திகேசு சிவத்தம்பி
https://ta.wikipedia.org/wiki/கார்த்திகேசு_சிவத்தம்பி
கார்த்திகேசு சிவத்தம்பி (மே 10, 1932 - சூலை 6, 2011) ஒரு முக்கிய தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ஆவார். கல்வியும் கல்விப்பணியும் யாழ்ப்பாணம் கரவெட்டி மேற்கில் பிறந்த சிவத்தம்பி ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு சாகிரா கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் 1956 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராகவும், 1961 முதல் 1965 வரை இலங்கை நாடாளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். இலங்கையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். பல்கலைக்கழகப் பணி 1965 முதல் 1970 வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1970 முதல் 1975 வரை விரிவுரையாளராகவும், 1976 முதல் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார். கலைப் பங்களிப்பு பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய "விதானையார் வீட்டில்" தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார். ஆக்கங்கள் ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். மறைவு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தனது 79 வது வயதில் 2011, சூலை 6 புதன்கிழமை இரவு 8 .15 மணிக்கு கொழும்பு, தெகிவளையில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் காலமானார். இவர் பற்றிய படைப்புகள் தமிழக அரசின் திரு.வி.க. விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட ஈழத்தமிழ் அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை விகசிப்பின் சில ஊற்றுக்களைப் பதிவு செய்யும் வகையில், 'கரவையூற்று' எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 'கரவையூற்று' நூலின் தொகுப்பு ஆசிரியர் வீ.ஏ.திருஞானசுந்தரம். இவருடைய நூல்கள் இலக்கணமும் சமூக உறவுகளும் இலக்கியத்தில் முற்போக்குவாதம்; 1977 இலக்கியமும் கருத்துநிலையும்; 1982 இலங்கைத் தமிழர் - யார், எவர்? ஈழத்தில் தமிழ் இலக்கியம்; 1978 சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள் பண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி... ;மக்கள் வெளியீடு மதமும் கவிதையும் தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்; 1967 தமிழில் இலக்கிய வரலாறு தமிழ் கற்பித்தலில் உன்னதம் தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்; 1981 திசம்பர்; தமிழ்ப்புத்தகாலயம், சென்னை. தமிழ்ப் பண்பாட்டில் சினிமா; மக்கள் வெளியீடு தனித்தமிழிலக்கியத்தின் அரசியற் பின்னணி; 1979 திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு நாவலும் வாழ்க்கையும்; 1978. யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு Drama in Ancient Tamil Society; 1981 The Tamil Film as a Medium of Political Communication 1980 பதிப்பித்த நூல்கள் இலங்கைத் தமிழ் நாட்டார் வழக்கியல்; 1980 மார்க்கண்டன் வாளவிமான் நாடகம்; 1966 உசாத்துணைகள் அகவை 75 இல் பேராசிரியர் சிவத்தம்பி - வீரகேசரி 13 மே 2007 பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி காலமானார் - இனியொரு... வெளி இணைப்புக்கள் சங்கம் குறித்த சிவத்தம்பி ஆய்வு பிழையானது - முனைவர் இரா.சக்குபாய் மேற்கோள்கள் பகுப்பு:தமிழ் விமர்சகர்கள் பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள் பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள் பகுப்பு:இலங்கைத் தமிழ் இறைமறுப்பாளர்கள் பகுப்பு:1932 பிறப்புகள் பகுப்பு:2011 இறப்புகள் பகுப்பு:தமிழ் நாடக ஆய்வாளர்கள் பகுப்பு:இலங்கைத் திறனாய்வாளர்கள் பகுப்பு:தமிழ் கலைச்சொல் அறிஞர் பகுப்பு:தமிழ் அகராதி தொகுப்பாளர்கள் பகுப்பு:பிறமொழி-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் பகுப்பு:தமிழ் மொழிபெயர்ப்பியல் ஆய்வாளர்கள் பகுப்பு:இலங்கைப் பேராசிரியர்கள் பகுப்பு:கலா கீர்த்தி
தொ. மு. சி. ரகுநாதன்
https://ta.wikipedia.org/wiki/தொ._மு._சி._ரகுநாதன்
தொ. மு. சிதம்பர ரகுநாதன், (T. M. Chidambara Ragunathan, அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமர்சனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது. குடும்பம் தொ. மு. சி. ரகுநாதனின் பாட்டனார் சிதம்பர தொண்டைமான் என்பவராவார். இவர் சிறீரங்கநாதர் அம்மானை, நெல்லைப் பள்ளு போன்ற இலக்கியங்களை படைத்தவர். இவரது தந்தை தொண்டைமான் முத்தையன் பிரமமுத்தன் என்ற புனைபெயரில் 33 தியானச் சிந்தனைகள் என்ற நூலையும், மூன்று தனிப் பாசுரங்களையும், ஆங்கிலத்தில் கவிதைகளையும் இயற்றியவர். இவரது அண்ணன் தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் கோயில்கள் குறித்த கட்டுரைகள் வேங்கடம் முதல் குமரிவரை என்ற தலைப்பில் ஐந்து பெருந்தொகுதிகளாக எழுதியவர். வாழ்க்கைக் குறிப்பு ரகுநாதன் திருநெல்வேலியில் அக்டோபர் 21, 1923ல் பிறந்தார். இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய இவரது அண்ணன் பாஸ்கர தொண்டைமான் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இவரது ஆசிரியர் அ. சீனிவாச ராகவன் இவருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார். இவரது முதல் சிறுகதை 1941ல் பிரசண்ட விகடனில் வெளிவந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார். 1944ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும் பின்பு 1946ல் முல்லை என்ற இலக்கியப் பத்திரிகையிலும் பணியாற்றினார். இவரது முதல் புதினமான புயல் 1945ல் வெளியானது. இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது 1948ல் வெளியான இலக்கிய விமர்சனம். அதைத் தொடர்ந்து 1951ல் பஞ்சும் பசியும் என்ற புதினத்தை எழுதினார். இப்புதினம் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50,000 பிரதிகள் விற்பனையானது. அதே ஆண்டு தனது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். 1954–56 வரை சாந்தி என்ற முற்போக்கு இலக்கிய மாத இதழை நடத்தினார். அந்த இதழ் மூலம் டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அடுத்த பத்தாண்டுகளுக்கு அமைப்புசாரா எழுத்தாளராகப் பணிபுரிந்தார். 1960ல் சோவியத் நாடு பதிப்பகத்தில் சேர்ந்து நிறைய ரஷியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டார். அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை: மாக்சிம் கார்க்கியின் தாய் மற்றும் விளாடிமிர் மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா விளாடிமிர் இலிச் லெனின். அவரது இலக்கிய விமர்சன நூலான பாரதி - காலமும் கருத்தும் 1983ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1985ல் இளங்கோ அடிகள் யார் என்ற சமூக வரலாற்று ஆய்வினை வெளியிட்டார். 1988ல் சோவியத் நாடு இதழிலிருந்து ஓய்வு பெற்றார். 2001ல் பாளையங்கோட்டையில் காலமானார். தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன் இவரது நண்பர். 1948ல் புதுமைப்பித்தன் இறந்தபின் அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். 1951ல் தன் நண்பரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். 1999ல் புதுமைப்பித்தன் கதைகள் - விமரிசனங்களும் விஷமங்களும் என்ற நூலை வெளியிட்டார். அந்நூல் 1951ல் வெளியான வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியாகவும் புதுமைப்பித்தனின் படைப்புகளில் பிறமொழித் தழுவல் மிகுந்துள்ளதாக அவரது சமகால எழுத்தாளர்கள் (பெ. கோ. சுந்தரராஜன் போன்றோர்) முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடியாகவும் அமைந்திருந்தது. 1942 முதல் 1962 வரை இவரது எழுத்துலக வாழ்க்கை முழு வேகத்தில் இருந்தது. இவர் ஒரு சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் படும்பாட்டைத் தனது பஞ்சும் பசியும் நூலில் தெளிவாகக் காட்டியுள்ளார். அவரது கொள்கைகளை அந்நூல் பிரதிபலிக்கிறது. திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். ரகுநாதன் மொத்தம் 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 புதினங்கள், 2 நாடகங்கள் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.Tamil Sahitya Akademi Awards 1955–2007 சாகித்திய அகாதமி விருது Official website. சிறப்பம்சங்கள் சோசலிச எதார்த்தவாத நாவல் இலக்கியப் போக்கைத் தன் “பஞ்சும் பசியும்” நாவல் மூலம் தொடங்கி வைத்தார். தமிழ் இலக்கிய ஆய்வை இலக்கண ஆய்வு நிலையிலிருந்தும், ரசனை ஆய்வு நிலையிலிருந்தும் சமூகநிலை ஆய்வு என்னும் ஆழமான தளத்துக்குக் கொண்டு சென்று, ஆய்வின் எல்லையை விசாலப்படுத்தினார். “பாரதியும் ஷெல்லியும்”, “கங்கையும் காவிரியும்” ஆகிய நூல்களின் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தைத் தமிழில் விரிவுபடுத்தியவர். “இளங்கோவடிகள் யார்?” என்னும் நூலின் வழி, தமிழகத்தில் சமய உருவாக்கங்களைப் போல நடந்த புதுப்புதுச் சாதி உருவாக்கங்களைத் துலக்கி, சாதி இறுக்கங்களின் பொய்மையைப் பளிச்சென வெளிப்படுத்தியவர். விருதுகள் சாகித்திய அகாதமி விருது – 1983 சோவியத் லேண்ட் நேரு விருது (தாய் மற்றும் லெனினின் கவிதாஞ்சலிக்காக) தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை பரிசு பாரதி விருது - 2001 எழுதிய நூல்கள் சிறுகதை சேற்றில் மலர்ந்த செந்தாமரை க்ஷணப்பித்தம் சுதர்மம் ரகுநாதன் கதைகள் கவிதை ரகுநாதன் கவிதைகள் கவியரங்கக் கவிதைகள் காவியப் பரிசு நாவல் புயல் முதலிரவு (தமிழ்நாட்டரசால் தடைசெய்யப்பட்டது) கன்னிகா பஞ்சும் பசியும் (நெசவாளரின் துயர் சொல்லும் புதினம்/நாவல்) நாடகம் சிலை பேசிற்று மருது பாண்டியன் விமரிசனம் இலக்கிய விமரிசனம் சமுதாய விமரிசனம் கங்கையும் காவிரியும் (தாகூருடன் பாரதியை ஒப்பிடும் ஆய்வு நூல்) பாரதியும் ஷெல்லியும் பாரதி காலமும் கருத்தும் புதுமைப்பித்தன் கதைகள் - சில விமரிசனங்களும் விஷமத்தனங்களும் (1999) வரலாறு புதுமைப்பித்தன் வரலாறு ஆய்வு இளங்கோவடிகள் யார்? (1984) மொழிபெயர்ப்பு தாய் (கார்க்கியின் - தி மதர்). லெனினின் கவிதாஞ்சலி (மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா - விளடிமிர் இலிச் லெனின்). மூன்று தலைமுறைகள் (கார்க்கியின் - தி ஆர்டமோனோவ் பிசினஸ்); ஸ்டார்பிரசுரம், சென்னை; பக்கங்கள் 685 தந்தையின் காதலி (கார்க்கியின் கதையான மால்வா) சந்திப்பு (கார்க்கியின் சிறுகதைகள்) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் aaraamthinai.com தமிழகம்.வலை தளத்தில்,தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய நூல்கள் பகுப்பு:1923 பிறப்புகள் பகுப்பு:தமிழ் விமர்சகர்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:2001 இறப்புகள் பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் பகுப்பு:உருசியம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட நபர்கள்
திருச்சி
https://ta.wikipedia.org/wiki/திருச்சி
REDIRECT திருச்சிராப்பள்ளி
விக்கிபீடியா தூதரகம்
https://ta.wikipedia.org/wiki/விக்கிபீடியா_தூதரகம்
REDIRECT விக்கிபீடியா:விக்கிபீடியா தூதரகம்
பவுலோ கோய்லோ
https://ta.wikipedia.org/wiki/பவுலோ_கோய்லோ
பவுலோ கோய்லோ (Paulo coelho) (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1947) உலகப் புகழ்பெற்ற சமகால பிரேசில் நாட்டு எழுத்தாளர் ஆவார். இவரது படைப்புகளிலேயே தி ஆல்கெமிஸ்ட் ( தமிழில் ரசவாதி) புதினம் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நினைவாக்கப் பாடுபட வேண்டும் என்பது இவரது புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகளில் காணப்படும் அடிப்படை கருத்தாகும். ஆனாலும் இலெவன் மினிட்ஸ் (Eleven Minutes) என்ற அவரது புதினத்தில், யதார்த்த நிலைமைக்கு நேருக்கு நேர் முகம் கொடுப்பதுபற்றி சொல்லியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார்Paulo Coelho, "Eleven Minutes", 2003. இவரது தி ஆல்கெமிஸ்ட் புதினம் தமிழில் !ரசவாதி என்ற பெயரில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. சாதனைகளும் விருதுகளும் விற்பனையில் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள பல நூல்களை பாவுலோ கோய்லோ எழுதியுள்ளார். இவருடைய நூல்கள் 82 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளன. 170க்கும் அதிகமான நாடுகளில் சுமார் 23 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. 'பிரேசிலியன் அகாடமி ஆஃப் லெட்டர்ஸ்' அமைப்பின் உறுப்பினரான இவர் 'செவாலியே' விருது பெற்றவர். 2007ல் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதராக நியமிக்கப்பட்டார்.ரசவாதி-தமிழில் மொழிபெயர்ப்பு நாகலட்சுமி சண்முகம்- பதிப்பு மஞ்சுள் பப்ளிஷிங்-2020 படைப்புகள் பவுலோ கோய்லோ ஏராளமான நூல்களை படைத்துள்ளார். அவற்றுள் முக்கியமானவை:- பிரிடா, த வேல்கிரீஸ், மக்தூப், பை த ரிவர் ஐ சேட் டவுன் அன்ட் வெப்ட், த ஃபிஃப்த் மவுன்டன் போன்றவையாகும் .ரசவாதி-தமிழில் மொழிபெயர்ப்பு நாகலட்சுமி சண்முகம்- பதிப்பு மஞ்சுள் பப்ளிஷிங்- second impression 2020 ரசவாதி கதைச்சுருக்கம் சந்தியாகு என்ற சிறுவனைப் பற்றிய மாயாஜால நூல் இது. அந்தலூசியாவில் ஆடுகள் மேய்க்கும் அவனுக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. ஒரு குழந்தை இவனை பிரமிடுகளுக்கு அழைத்துப் போவதாக கனவு காண்கிறான். அது குறித்து கனவுகளுக்கு பலன் சொல்லும் சூனியக்காரியிடம் கேட்கிறான். அவள் அறிவுறுத்த அதன்படி செல்லும் அவன் மெல்ஜிசெடக் எனும் பெரியவரை இடையில் சந்திக்கிறான். சேலம் ராஜாவான அவர் 'கனவுகளையும் குறியீட்டுச் சகுனங்களையும் நம்பு. பிரபஞ்சத்தின் மொழியை அறிந்து கொள். உன் இலக்கை நீ அடைவாய்' என்கிறார். அதனை ஏற்று பொக்கிஷத்தைத் தேடிச் செல்கிறான் சந்தியாகு. ஸ்பெயினில் இருந்து கிளம்பும் அவன் தனது ஆடுகளை விற்று பணம் பெற்று தன் இலக்கை நோக்கி விரைகிறான். டான்ஜியர்ஸ் சந்தைகளிலும் எகிப்துப் பாலைவனங்களுலும் அலைந்து திரியும் அவனை விதி ஒரு ரஸவாதியைச் சந்திக்க வைக்கிறது. அவரது வழிகாட்டுதலின்படி பிரமிடுகளை அடைகிறான். அங்கே அவன் தேடி வந்த பொக்கிஷம் கிடைத்ததா? இலக்கை அடைந்தானா என்பதே கதையின் முடிவாகும் ரசவாதி-தமிழில் மொழிபெயர்ப்பு நாகலட்சுமி சண்முகம்- பதிப்பு மஞ்சுள் பப்ளிஷிங் செய்தி இதயம் கூறுவதை நாம் கவனமாகக் கேட்க வேண்டும். வாழ்க்கைப் பாதையில் விதி சுட்டிக்காட்டும் சகுனங்களையும் கவனிக்க வேண்டும், அனைத்துக்கும் மேலாக நம் கனவுகளை நாம் தொடர வேண்டும் என்று அறிவுறுத்தும் சில நூல்களில் இதுவும் ஒன்று. படைப்புகள் புதினங்கள் ஆண்டு போர்த்துகீசியத் தலைப்பு ஆங்கிலத் தலைப்பு குறிப்பு 1974 O Manifesto de Krig-há The Manifest of Krig-há Teatro da Educação Theater For Education 1982 Arquivos do Inferno Hell Archives 1986 O Manual Prático do Vampirismo Practical Manual of Vampirism 1987 O Diário de Um Mago The Pilgrimage 1988 O Alquimista The Alchemist நூல் முன்னுரை - இலவசப் பதிவிறக்கம் (.rtf) 1990 Brida Brida 1991 O Dom Supremo The Greatest Gift 1992 As Valkírias The Valkyries (novel)|The Valkyries 1994 Maktub Maktub (book)|Maktub இலவசப் பதிவிறக்கம் (.zip/.rtf) Na margem do rio Piedra eu sentei e chorei By the River Piedra I Sat Down and Wept 1996 O Monte Cinco The Fifth Mountain 1997 Letras do amor de um profeta Love Letters from a Prophet Manual do guerreiro da luz The Manual of the Warrior of Light 1998 Veronika decide morrer Veronika Decides to Die Palavras essenciais Essential Words 2000 O Demônio e a srta Prym The Devil and Miss Prym 2001 Histórias para pais, filhos e netos Fathers, Sons and Grandsons 2003 Onze Minutos Eleven Minutes 2004 E no sétimo dia And on the Seventh Day O Gênio e as Rosas The Genie and the Rose | |- | Viagens| Journeys| |- |rowspan="2" | 2005 | O Zahir| The Zahir| |- | Caminhos Recolhidos| Revived Paths 2006 Ser como um rio que flui Like the Flowing River இலவசப் பதிவிறக்கம் (.pps) A bruxa de Portobello The Witch of Portobello 2007 Vida: Citações selecionadas Life: Selected Quotations 2008 O Vencedor está Só The Winner Stands Alone 2010 O Aleph The Aleph (not yet published) வெளி இணைப்புகள் பவுலோ கோய்லோ அதிகாரப்பூர்வ இணையத்தளம் Warrior of the Light Online பவுலோ கோய்லோ ரசிகர் மன்றம் மேற்கோள்கள் பகுப்பு:போர்த்துக்கேய எழுத்தாளர்கள் பகுப்பு:1947 பிறப்புகள் பகுப்பு:பிரேசிலின் எழுத்தாளர்கள் பகுப்பு:வாழும் நபர்கள்
சுனாமிப் புகைப்படத்துக்கு உலக விருது
https://ta.wikipedia.org/wiki/சுனாமிப்_புகைப்படத்துக்கு_உலக_விருது
டிசம்பர் 26, 2004 இல், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தாக்கிப் பேரழிவை விளைவித்த ஆழிப்பேரலை சோகத்தைச் சித்தரிக்கும் நோக்கில் தமிழகத்தின் கடலூர் கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துக்கு உலகச் செய்திப் புகைப்பட விருது கிட்டியிருக்கிறது. இது ராய்ட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்தைச் சார்ந்த ஆர்கோ தத்தா என்ற புகைப்பட நிபுணர் 2004 டிசம்பர் 28-ஆம் தேதி எடுத்த படம் ஆகும். சுமார் 70,000 புகைப்படங்கள் இந்தப்போட்டியில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது. சுனாமியின் போது தப்பிபிழைத்த பெண்மணி ஒருவர், கடற்கரையில், தம் உறவினர் ஒருவரின் உடல் அருகே கதறுவதைக் காட்டும் இந்தப் புகைப்படம், சுனாமி அழிவின் கோரத்தையும், சோகத்தையும் துல்லியமாகச் சித்தரிப்பதாக ஆம்ஸ்டர்டாம் நகரில் இப்போட்டியை நடத்தியவர்கள் கூறுகிறார்கள். மேற்கோள்கள் வெளி இணைப்பு பரிசு பெற்ற படம் பகுப்பு:செய்திகள்
மனுஷ்ய புத்திரன்
https://ta.wikipedia.org/wiki/மனுஷ்ய_புத்திரன்
அப்துல் ஹமீது (பிறப்பு: 15 மார்ச் 1968) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். தொடக்க வாழ்க்கை திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் 15 மார்ச் 1968 அன்று பிறந்தார். இலக்கியப் பணி எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், கவிஞர் , இலக்கியவாதி என பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார். படைப்புகள் +ஆண்டுதலைப்புவகைபதிப்பகம்1983மனுஷ்ய புத்திரன் கவிதைகள்கவிதைத் தொகுப்புகள்1993என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் 1998இடமும் இருப்பும்2001நீராலானது 2003காத்திருந்த வேளையில் கட்டுரைத் தொகுப்புகள்எப்போதும் வாழும் கோடை2005மணலின் கதைகவிதைத் தொகுப்புகள்2007கடவுளுடன் பிரார்த்தித்தல்2009அதீதத்தின் ருசிஎன்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்கட்டுரைத் தொகுப்பு2010இதற்கு முன்பும் இதற்கு பின்பும்கவிதைத் தொகுப்புகள்2011பசித்த பொழுது2013அருந்தப்படாத கோப்பைஎதிர் குரல் (4 தொகுதிகள்)கட்டுரைத் தொகுப்புசூரியனுக்கு அருகில் ஒரு வீடுகவிதைத் தொகுப்புடினோசர்கள் வெளியேறி கொண்டிருக்கின்றனகட்டுரைத் தொகுப்புகள்தோன்ற மறுத்த தெய்வம்2016தித்திக்காதே கவிதைத் தொகுப்பு விருதுகள் 2002 - இளம் படைப்பாளிகளுக்கான உயரிய தேசிய விருதான சன்ஸ்கிருதி சம்மான் வழங்கப்பட்டது. 2003 - அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய ‘இலக்கியச் சிற்பி’ விருதையும், 2004 - இந்திய சமூக நீதி அமைச்சகத்தின் ‘தலைசிறந்த தனிநபர் படைப்பாற்றலுக்கான’ விருதையும் பெற்றிருக்கிறார். 2011 - அதீதத்தின் ருசி கவிதைத் தொகுப்புக்கு, கனடா நாட்டின் சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருது கிடைத்துள்ளது. 2016 - ஆனந்த விகடன் டாப் 10 மனிதர்கள் விருதுஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள், அணுக்கம் 04-04-2017 மேற்கோள்கள் வெளி இணைப்புக்கள் உயிர்மை - இணைய தளம் உயிர்மை - வலைப்பதிவு உயிர்மை - புத்தகப் பதிவு பகுப்பு:1968 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:திருச்சி மாவட்ட நபர்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:நவீன தமிழ்க் கவிஞர்கள் பகுப்பு:தமிழகக் கவிஞர்கள் பகுப்பு:திராவிட இயக்க எழுத்தாளர்கள்
வண்ணதாசன்
https://ta.wikipedia.org/wiki/வண்ணதாசன்
வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்http://www.vikatan.com/news/coverstory/75608-facts-you-should-know-about-sahitya-akademi.art. நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், தீபம் இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். 2016 விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது..சூன் 10, 2018 இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது. தஞ்சைத் தமிழ்ப் பல்கைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியுள்ளது. சிறுகதைத் தொகுப்புகள் கலைக்க முடியாத ஒப்பனைகள் தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் சமவெளி பெயர் தெரியாமல் ஒரு பறவை மனுஷா மனுஷா கனிவு நடுகை உயரப் பறத்தல் கிருஷ்ணன் வைத்த வீடு ஒளியிலே தெரிவது (உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து வழங்கிய 2011ஆம் ஆண்டில் சிறுகதைக்கான சுஜாதா விருதைப் பெற்றது) சில இறகுகள் சில பறவைகள் ஒரு சிறு இசை புதினங்கள் சின்னு முதல் சின்னு வரை கவிதைத் தொகுப்புகள் புலரி முன்பின் ஆதி அந்நியமற்ற நதி மணல் உள்ள ஆறு கட்டுரைகள் அகம் புறம் கடிதங்கள் வண்ணதாசன் கடிதங்கள் விருதுகள் கலைமாமணி சாகித்திய அகாதமி விருது விஷ்ணுபுரம் விருது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சிறுகதைகள் அகம் புறம் பகுப்பு:கவிஞர்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள் பகுப்பு:சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் பகுப்பு:1946 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:இயல் விருது பெற்றவர்கள் பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்
பூமணி
https://ta.wikipedia.org/wiki/பூமணி
கொம்மை (புதினம்) பூமணி (பிறப்பு - 1947, இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார்.இவர் எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது வாழ்க்கைக் குறிப்புகள் இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. பூமணி இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.http://www.dinamani.com/india/2014/12/20/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5/article2580521.ece இலக்கியப் பணி கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் பூமணியை ஊக்குவித்தார். ஆக்கங்கள் சிறுகதைத் தொகுப்பு வயிறுகள். ரீதி. நொறுங்கல்கள். நல்லநாள். புதினங்கள் வெக்கை. நைவேத்தியம். வரப்புகள். வாய்க்கால். பிறகு. அஞ்ஞாடி திரைப்படம் கருவேலம்பூக்கள் அசுரன் (கதை) சிறப்புகள் தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக இவர் இயக்கிய கருவேலம்பூக்கள் திரைப்படம் பல முக்கிய உலகத் திரைப்பட விழாக்களில் பங்கு பெற்றது. வெக்கை நாவல் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. விருதுகள் இலக்கியச் சிந்தனை பரிசு அக்னி விருது திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது இலக்கியத்துக்கான பங்களிப்புக்காக 2011க்கான விஷ்ணுபுரம் விருது அஞ்ஞாடி புதினத்திற்கு 2014இல் சாகித்திய அகாதமி விருது http://www.bbc.co.uk/tamil/arts_and_culture/2014/12/141219_poomani_angyadi விளக்கு விருது மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சித்திரமாய்த் தீட்டப்பட்ட கதை விருதுக்காக எழுதுவதில்லை: எழுத்தாளர் பூமணி பூமணியின் கதைகளை வாசிக்க: அழியாச்சுடர்கள் கருவேலம்பூக்கள் திரைப்பட விமர்சனம் . பூமணியின் கட்டுரைத் தொகுப்பில் கூறப்பட்டுள்ள தன் தாய் தேனம்மாவினை பற்றி அம்பையின் http://www.hinduonnet.com/thehindu/lr/2003/01/05/stories/2003010500280400.htm கருத்துக்கள். Clashing by Night, Caravan magazine இந்த ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பூமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது அஞ்ஞாடி நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது 'அஞ்ஞாடி' நாவலுக்காக எழுத்தாளர் பூமணிக்கு சாகித்ய அகாடமி விருது பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் பகுப்பு:1947 பிறப்புகள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட நபர்கள் பகுப்பு:தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்
ந. முத்துசாமி
https://ta.wikipedia.org/wiki/ந._முத்துசாமி
Na.Muthusamy (மே 25, 1936 - அக்டோபர் 24, 2018) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்த இவர் 2000 ஆண்டின் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர். இவரது "கூத்துப்பட்டறை" என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. "கசடதபற", "நடை" போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நீர்மை உட்பட 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "ந. முத்துசாமி கட்டுரைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டும் வண்ணம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தியது. தமிழகத்தில் 7 பேருக்கு பத்ம விருதுகள் புதுவை விவசாயிக்கு பத்மஸ்ரீ தினமணி, சனவரி 26,2012 ஆக்கங்கள் சிறுகதைத் தொகுப்பு நீர்மை நாடகங்கள் காலம் காலமாக அப்பாவும் பிள்ளையும் நாற்காலிக்காரர் சுவரொட்டிகள் படுகளம் உந்திச்சுழி கட்டியக்காரன் நற்றுணையப்பன் கட்டுரைத் தொகுப்பு அன்று பூட்டியவண்டி ( தெருக்கூத்துக் கலை பற்றிய கட்டுரைகள்) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கூத்துப்பட்டறை பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:நாடக இயக்குநர்கள் பகுப்பு:பத்மசிறீ விருது பெற்ற தமிழர்கள் பகுப்பு:1936 பிறப்புகள் பகுப்பு:2018 இறப்புகள் பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள் பகுப்பு:சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்கள் பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட நபர்கள் பகுப்பு:சென்னை எழுத்தாளர்கள் பகுப்பு:பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
கோபிகிருஷ்ணன்
https://ta.wikipedia.org/wiki/கோபிகிருஷ்ணன்
கோபிகிருஷ்ணன் (Gopikrishnan) மதுரையில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படுபவர் கோபிகிருஷ்ணன். நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர். உளவியல் துறையிலும் மற்றும் சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆத்மன் ஆலோசனை மையம் என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி ‘உள்ளிருந்து சில குரல்கள்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். வறுமையான குடும்பச் சூழல் காரணமாகவும், தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியாலும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டவராக இருந்தார் கோபி கிருஷ்ணன். இதற்காக உள நல மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் உருவான பலவீனம் காரணமாக, அதிக நோய்மையுற்று அதிலிருந்து மீள முடியாமலே 2003ஆம் ஆண்டு காலமானார். ஆக்கங்கள் ஒவ்வாத உணர்வுகள் தூயோன் மானிட வாழ்வு தரும் ஆனந்தம் டேபிள் டென்னிஸ் உள்ளிருந்து சில குரல்கள் முடியாத சமன் கோபிகிருஷ்ணன் அவர்களின் சில படைப்புகள் "அழியாச்சுடர்" தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அவைகளுக்கான சுட்டி: http://azhiyasudargal.blogspot.com/search/label/கோபிகிருஷ்ணன் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:2003 இறப்புகள் பகுப்பு:மதுரை மக்கள்
சச்சின் டெண்டுல்கர்
https://ta.wikipedia.org/wiki/சச்சின்_டெண்டுல்கர்
சுஜாதா
https://ta.wikipedia.org/wiki/சுஜாதா
சுஜாதா என்ற தலைப்பில் அமைந்த கட்டுரைகள் பின்வருமாறு: சுஜாதா என்ற புனைபெயர் கொண்ட தமிழக எழுத்தாளர். சுஜாதா - தென்னிந்திய நடிகை சுஜாதா (திரைப்படம்)
வாலி
https://ta.wikipedia.org/wiki/வாலி
வாலி என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் கீழே உள்ளன. வாலி (கவிஞர்) - தென்னிந்தியப் பாடலாசிரியர். வாலி (இராமாயணம்) - இராமாயணக் கதாபாத்திரம். வாலி (திரைப்படம்) - தென்னிந்தியத் தமிழ்த் திரைப்படம். பகுப்பு:பக்கவழி நெறிப்படுத்தல்
குற்றியலிகரம்
https://ta.wikipedia.org/wiki/குற்றியலிகரம்
நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும்.தொல்காப்பியம் நூன்மரபு 2யகரம் வரு வழி இகரம் குறுகும் உகரக் கிளவி துவரத் தோன்றாது. - தொல்காப்பியம் குற்றியலுகரப் புணரியல் 5யகரம் வர குறள் உ திரி இகரம் உம் அசைச்சொல் மியாவின் இகரம் உம் குறிய - நன்னூல் எடுத்துக்காட்டு நாடு + யாது -> நாடியாது கொக்கு + யாது -> கொக்கியாது மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம் கேள் + மியா -> கேண்மியா வால்+ மியா = வான்மியா கண்டேன் + யான் -> கண்டேனியான் வண்டலவர் கண்டே னியான் (கலித்தொகை 92-54) இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் குற்றியலுகரம் அடிக்குறிப்பு பகுப்பு:சார்பெழுத்துகள்
சுந்தர ராமசாமி
https://ta.wikipedia.org/wiki/சுந்தர_ராமசாமி
சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார். இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.1953 ஆம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. இலக்கியச் செல்வாக்குகள் இவர் சமூக சீர்திருத்தவாதிகளான காந்தி, பெரியார் ஈவெரா, அரவிந்தர், இராமகிருஷ்ண பரம அம்சர், இராம் மனோகர் லோகியா, ஜேசி குமரப்பா, ஜே கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இலக்கியத்தில் புத்துணர்திறனைப் புகுத்திய புதுமைப்பித்தன் எனப் பலரது நூல்களின் தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளார். மேலும் மலையாள இலக்கியச் சுடரான எம். கோவிந்தனை 1957இல் தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரது நண்பராக கடைசிவரை விளங்கியுள்ளார்.. 1950களில் பொதுவுடைமைத் தோழரான ப. ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்துள்ளார். அதனால் இவருக்கு மார்க்சியத் தத்துவத் தாக்கம் ஏற்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட சாந்தி இதழில் அவரது இலக்கியத் தொடர்பு உருவானது. மேலும் அவர் சரஸ்வதி இதழில் ஆசிரியக் குழு உறுப்பினராகியதும் எழுத்தாளராக வளர உதவியது. படைப்புகள் நாவல் ஒரு புளியமரத்தின் கதை (1966) ஜே.ஜே. சில குறிப்புகள் (1981) குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998) சிறுகதைகள் சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006) விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991) ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004) காற்றில் கரைந்த பேரோசை விரிவும் ஆழமும் தேடி தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000) இறந்த காலம் பெற்ற உயிர் இதம் தந்த வரிகள் (2002) இவை என் உரைகள் (2003) வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004) வாழ்க சந்தேகங்கள் (2004) புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்(2006) புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு (2005) மூன்று நாடகங்கள் (2006) வாழும் கணங்கள் (2005) கவிதை சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு (2005) மொழிபெயர்ப்பு செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை(1962) தோட்டியின் மகன்(புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை(2000) தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004) நினைவோடைகள் க.நா.சுப்ரமண்யம் (2003) சி.சு. செல்லப்பா (2003) கிருஷ்ணன் நம்பி (2003) ஜீவா (2003) பிரமிள் (2005) ஜி.நாகராஜன் (2006) தி.ஜானகிராமன் (2006) கு.அழகிரிசாமி. சிறுகதைகள் பட்டியல் சிறுகதைகள் இதழ் வருடம்1.முதலும் முடிவும் புதுமைப்பித்தன் மலர்19512.தண்ணீர் சாந்தி19533.அக்கரை சீமையில் சாந்தி19534.பொறுக்கி வர்க்கம் சாந்தி19535.உணவும் உணர்வும் 19556.கோவில் காளையும் உழவு மாடும் சாந்தி19557.கைக்குழந்தை சரஸ்வதி19578.அகம் சரஸ்வதி19579.அடைக்கலம் சரஸ்வதி195810.செங்கமலமும் ஒரு சோப்பும் சரஸ்வதி195811.பிரசாதம் சரஸ்வதி195812.சன்னல் சரஸ்வதி195813.லவ்வு சரஸ்வதி195814.ஸ்டாம்பு ஆல்பம் சரஸ்வதி 195815.கிடாரி சரஸ்வதி ஆண்டு மலர் 195916.சீதைமார்க் சீயக்காய்த்தூள் தாமரை பொங்கல் மலர் 195917.ஒன்றும் புரியவில்லை கல்கி தீபாவளி மலர் 196018.வாழ்வும் வசந்தமும் நவசக்தி வார இதழ் 196019.ரயில் தண்டவாளத்தில் ஓடும் கல்கி தீபாவளி மலர் 196120.மெய்க்காதல் கல்கி 196121.மெய்+பொய்=மெய் எழுத்து 196222.எங்கள் டீச்சர் கல்கி தீபாவளி மலர் 196223.பக்த துளசி இலக்கிய வட்டம்196424.ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு இலக்கிய வட்டம்196425.தயக்கம் சுதேசமித்திரன் தீபாவளி மலர்196426.லீலை கல்கி 196427.தற்கொலை கதிர் 196528.முட்டைக்காரி தீபம் 196529.திரைகள் ஆயிரம் தீபம் ஆண்டுமலர் 196630.இல்லாத ஒன்று கல்கி வெள்ளிவிழா ஆண்டுமலர் 196631.காலிப்பெட்டி உமா 32.அழைப்பு ஞானரதம் 197333.போதை சதங்கை 197334.பல்லக்குத் தூக்கிகள் ஞானரதம் 197335.வாசனை ஞானரதம் 197336.அலைகள் கொல்லிப்பாவை 197637.ரத்னாபாயின் ஆங்கிலம் அக் 197638.குரங்குகள் யாத்ரா 197839.ஓவியம் யாத்ரா 197940.பள்ளம் சுவடு 197941.கொந்தளிப்பு மீட்சி 198542.ஆத்மாராம் சோயித்ராம் 198543.மீறல் இனி 198644.இரண்டு முகங்கள் வீடு 198645.வழி கொல்லிப்பாவை 198646.கோலம் கொல்லிப்பாவை 198747.பக்கத்தில் வந்த அப்பா புதுயுகம் 198748.எதிர்கொள்ளல் காலச்சுவடு 198849.காணாமல் போனது காலச்சுவடு 198950.விகாசம் இந்தியா டுடே 199051.காகங்கள் காலச்சுவடு ஆண்டுமலர் 199152.மேல்பார்வை இந்திய டுடே இலக்கிய ஆண்டுமலர் 1994-199553.பட்டுவாடா காலச்சுவடு 199554.நாடார் சார் தினமணி பொங்கல் மலர் 199655.நெருக்கடி சதங்கை 199656.இருக்கைகள் காலச்சுவடு 199757.டால்ஸ்டாய் தாத்தாவின் கதை தினமணி தீபாவளி மலர் 199958.மயில் ஆனந்த விகடன் பவழவிழா மலர் 200259.பையை வைத்துவிட்டு போன மாமி 200360.தனுவும் நிஷாவும் காலம் 200461.களிப்பு 200462.நண்பர் ஜி.எம் காலச்சுவடு 200463.ஒரு ஸ்டோரியின் கதை காலச்சுவடு 200464.கூடி வந்த கணங்கள் 200465.கதவுகளும் ஜன்னல்களும் புதியபார்வை 200466.மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் 200467.அந்த ஐந்து நிமிடங்கள் 200468.ஈசல்கள் 200469.கிட்னி 200470.பிள்ளை கெடுத்தாள் விளை காலச்சுவடு 200571.கொசு, மூட்டை, பேன் புதியபார்வை 200572.ஜகதி காலம் 2005 சுந்தர ராமசாமி பெற்ற விருதுகள் இவர் கீழ்வரும் விருதுகளைப் பெற்றார். குமரன் ஆசான் நினைவு விருது இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம் 2001இல் வாழ்நாள் சாதனைக்காகப் பெற்றார். கதா சூடாமணி விருது (2004) சுந்தர ராமசாமி பெயரிலான விருதுகள் தமிழ்க் கணிமைக்கான விருது தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார். இளம் படைப்பாளர் விருது சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி விருது அளித்து வருகிறது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்து வரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக அவர்கள் இருப்பது அவசியம். விருதில் பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் அடங்கும். மேற்கோள் வெளி இணைப்புகள் போதை ஏற்றாத கதை சு.ரா. இணையதளம் பசுவய்யாவின் சில கவிதைகள் Tamilnation.org - சுந்தர ராமசாமி:வாழ்க்கையும் படைப்புகளும் சுந்தர ராமசாமியைப் பற்றி கௌரி ராம்நாராயண் எழுதிய கட்டுரை தமிழ் சி·பி இணையத்தளத்தில் சுந்தர ராமசாமியின் கட்டுரைகள் சு.ரா பற்றிய எதிர்ப்பு நோக்கு சுந்தர ராமசாமி படைப்புகள் சில - அழியாச்சுடர்களில் பகுப்பு:கவிஞர்கள் பகுப்பு:நவீன தமிழ்க் கவிஞர்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:1931 பிறப்புகள் பகுப்பு:2005 இறப்புகள் பகுப்பு:மலையாளம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட நபர்கள் பகுப்பு:இயல் விருது பெற்றவர்கள் பகுப்பு:தமிழ்நாட்டுக்கு வெளியே இறந்த தமிழ்நாட்டவர்கள்
பல்சாக்
https://ta.wikipedia.org/wiki/பல்சாக்
ஹோனர் தெ பல்சாக் (Honoré de Balzac) (மே 20, 1799 - ஆகஸ்ட் 18, 1850) ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். தொண்ணூற்றிரண்டு நாவல்கள், அவற்றுள் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பாத்திரங்களென பிரெஞ்சு இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளி, பல்சாக். மனிதத்தையும் அதை சார்ந்த உலகினையும் மிக நுணுக்கமாக அவதானித்த படைப்பாளி இவர். மேற்கத்திய உலகில், 'பல்சாசியன் நடை' என்பது விமர்சகர்களால் பெரிதும் போற்றப்படும் தகுதியாக இன்றைக்கு இலக்கியங்களில் முன்வைக்கப்படுகிறது. 'எழுத்தென்பது தவம்' எனப்புரிந்து செயல்பட்டவர். நல்ல படைப்புக்களுக்காக கடுந்தவம் புரிந்திருக்கிறார். ஆவி மணக்கும் காப்பியைச் சுவைத்தபடி இரவு முழுக்க எழுதுவதென்பது அவரது அன்றாடப்பணி. நாளொன்றுக்கு சராசரியாக பதினெட்டுமணிநேரங்கள் எழுத்துக்குச் செலவிட்டிருக்கிறார் பல்ஸாக். பாரிஸ் மாநகர வீதிகளாகட்டும் அல்லது ஒதுங்கிய நாட்டுப்புற நிலங்களாகட்டும், ஆடைகளாகட்டும் அல்லது வீட்டுத் தளவாடங்களாகட்டும், அனைத்துமே, அவரெழுத்தால் துல்லியமாக அறிமுகம் பெறமுடியும். "ஏதோவொருவகையில் நான் வகித்தப் பல்வேறுபணிகள் இப்படியானதொரு அவதானிப்புக் குணத்தினை எனக்குக் கொடுத்தன" என்பது, நாம் வியக்கும் அவதானிப்பு குணம்பற்றிய அவரது சொந்த வாக்குமூலம். பதிப்பகத் தொழிலில் இவருக்கேற்பட்டத் தோல்விகளும் நிதி நெருக்கடிகளும், அவருக்கான படைப்புக் களங்களை அடையாளம் காணவும், படைப்பு மாந்தர்களை இயற்கை தன்மைகளுக்கு சற்று மேலான தளத்தில் உலவச் செய்யவும் உதவின. சில நேரங்களில் கதைமாந்தர்களுக்கும் அவர்தம் வாழ்வியல் உடமைகளுக்கும் இவர்செய்யும் நகாசு வேலைகள், படைப்புக்களை பெருமைபடுத்துகின்றன. உலகின் பெரும்பாலான தேர்ந்த இலக்கியவாதிகளைப்போலவே, அனுபவங்களென்கிற ரசவாதக் குப்பியில், மேலான சிந்தனைமுலாம் என்கின்ற குழம்பில் தனது படைப்புமாந்தர்களை முங்கியெடுக்கிறார். வாழ்க்கைக் குறிப்பு இவரது பெற்றோர்கள் முதலாம் நெப்போலியன் காலத்தில் உயர்பதவியிலிருந்த பிரபுக்கள் வம்சத்தவர். தந்தை, 'பெர்னார் பிரான்சுவா' (Bernard Francois), தாய் 'ஆன்ன் சலாம்பியெ' (Anne Sallambier). பல்சாக் பெற்றோர்களுக்கு இரண்டாவது குழந்தை. பிறந்தவுடனேயே காப்பகத்தில் இடப்பட்டதால், பெற்றோர்களிடம் ஏற்பட்ட வெறுப்பு இறுதிவரைத் தொடர்கிறது. காப்பகத்தில் இவருடனேயே வளர்ந்த சகோதரி 'லோர்'(Laure) ரிடம் ஏற்பட்ட பாசப்பிணைப்பு பலவருடங்கள் நீடிக்கிறது. 1815 ஆம் ஆண்டு Ganser பள்ளியில் நடைபெற்ற மேடைப்பேச்சுகள் மூலமாக தனது தாய்மொழியான பிரெஞ்சு மொழியின் மீது பற்றுக்கொள்ள ஆரம்பித்தது. 1816ல், அக்காலத்தில் வாழ்ந்த மேல்தட்டுவர்க்க வழக்கப்படி சட்டம் பயின்றபோதும், இவரது கவனமனைத்தும் மொழியிலும் எழுத்திலுமிருந்தது. 1819 - 1820 ஆண்டுகளை பல்ஸாக்கின் இலக்கியப்பிரவேச காலங்களெனலாம். ரெனே தெகார்த்தெ , மால்ப்ரான்ச் (Nicholas Malebranche) ஆகியோரது தத்துவார்த்த எழுத்துக்களை விரும்பி வாசித்தார். மற்றமொழி படைப்புக்களையும் விட்டுவைக்கவில்லை. மொழிபெயர்ப்புகளிலும் அதிக நாட்டம். பைரன்(Byron) கவிதைகள், க்ராம்வெல் ( Oliver Cromwell) அவற்றுள் முக்கியமானவை. புகழ்பெற்ற பிரெஞ்சு மொழியின் நாடகவியலாளர்களான ராசின் (Jean Racine), கொர்னெய் (Pierre Corneille) ஆகியோர் அடியொற்றிப் படைப்புக்களை அளித்தார். ழான்-ழாக் ரூஸ்ஸோவினைப்போன்று (Jean-Jacques Rousseau) உருக்கமான புதினமும் எழுதப்பட்டது. இலக்கியங்களின் அனைத்துக்கூறுகளையும் அவர் நாடிபிடித்துப் பார்த்தக் காலமது. இக்காலங்களில்தான் தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்தையும் அதன் கட்டமைப்பையும் அறிவதற்காக வெகுசனப் புலங்களில் தன்னை ஒளித்துக்கொண்டார். பேட்டைவாசியாகவும், தொழிலாளியாகவும் அவரெடுத்த அவதாரங்களுள், "மனித புத்திகளின் யோக்கியதைகளை அறிவதற்கான தேடல்போதை இருந்திருக்கின்றது" ("Prenant Plaisir A L'identifier. Dans Une Sorte D' Ivresse Des Facultes Morales), என்பது ஒரு விமர்சகரின் கருத்து. ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது Buffonனுடைய Histoire Naturelle வாசித்துவிட்டு, "ப்யுஃபோனால், விலங்கியலை அடிப்படையாகக்கொண்டு சிறப்பானதொரு நூலை எழுதமுடியுமென்றால், அவ்வாறான நூலொன்றினை ஏன் நமது சமூகத்திற்காகவும் படைக்கக்கூடாது? என்ற எண்ணம் 1842ல் எழுதபபட்ட 'La Comedie Humaine' க்குக் காரணமாகிறது. மூத்த சகோதரி 'Laure' ன் திருமணம் முடிந்த சிலநாட்களில் எழுதப்பட்டது 'Falthurne' என்ற சரித்திர நாவல். 1822 ல் மதாம் தெ பெர்னி (Madame de Berny)யிடம் இவருக்கு காதல் ஏற்பட்டது. இளைஞன் பல்சாக்கிற்கு வயது இருபத்துமூன்று, சீமாட்டிக்கு வயது நாற்பத்தைந்து. திருமணமானவள், உபரியாக ஒன்பது பிள்ளைகள், இருந்தும் மோகித்தார். அவளுக்கும் இவரது எழுத்திலும், திறனிலும் நம்பிக்கை இருந்தது. 'Clotilde de Lusignan அல்லது le Beau Juif' என்கின்ற நாவல் இச்சீமாட்டியின் நினைவாகவே எழுதப்பட்டது. அடுத்து வெளிவந்தது 'சதசஞ்சீவி' (Centenaire). தனக்குப் பலியானவர்களால் உயிர்வாழ்ந்து யுகங்களிற் பயணிக்கும் கிழட்டு வேதாளத்தைப் பற்றியது. பிறகு 'அர்தென்ன் ராஜகுரு'( Vicaire des Ardennes ). உடன்பிறந்தவளை காதலிக்கும் பாவத்திலிருந்து தப்ப நினைக்கும் இளைஞன், அடுத்து (உண்மை அறியாமல்) மையல்கொள்கின்றபெண் அவனதுச் சொந்தத்தாய். இப்படைப்பு அக்காலத்திய சமூக அமைப்பையும் மத நம்பிக்கையும் கேலி செய்ததற்காகத் தடைசெய்யப்பட்டது. சூதாட்டக் கணவனால் துன்புற்று வாழ்ந்த தன் இளைய சகோதரியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட 'குடிகேடன்'(Chouhan) படைப்பிற்கு 600 பிரெஞ்சு பிராங்கினை ஒரு பதிப்பாளர் கொடுக்க முன்வந்தபோது, "எழுதும் தொழில் செய்து அவமானப்படுவதைக் காட்டிலும், விரல்களால் நிலத்தைக் கிண்டி பிழைப்பேன்" என்று சத்தமிட்டுவிட்டு, படைப்பைப் பிரசுரிக்க விரும்பாமல் மேசையில் வைத்துப் பூட்டிக்கொண்டார். "எஞ்சிய தேவதை (La Derniere Fee, ou La Nouvelle Lampe) அல்லது புதிய விளக்கு" மற்றொரு வித்தியாசமான புதினம். இந்தமுறை அவரது 'ராஜகுரு - கட்டுபாடற்ற காதலின் மன்னிப்புக் கோரல் என்கிற தலைப்பில் பழைய மொந்தையில் புதியகள்ளாக வெளிவருகிறது. உலக ஒழுக்கிலிருந்து விலக்கியச் சூழலில் வளர்க்கப்பட்ட இளைஞனுக்கு, உலகின் பிரதான இயக்கக்காரணிகளான சமூகம், அரசியல், பந்தம்..போன்றவற்றைத் தெரியப்படுத்த, ஒரு சீமாட்டி முன்வருகிறாள். பின்னர் 'அர்தென்ன் ராஜகுரு' வின் தொடர்ச்சியாக 'அன்னெத்தும் கயவனும் - Annette et le criminel)' எழுதப்படுகிறது. . 1824ம் ஆண்டுவாக்கில் பல்சாக்கிற்குக் கிடத்த 'ஹொராஸ் ரேஸ்ஸொன் (Horace Raisson) நட்பு, 'இலக்கியத் தொடர்' -(Feuilleton littéraire) இதழியலைத் தொடங்க உதவுகிறது. இவ்விதழ் ஆரம்ப காலத்தில் எல்லாவற்றையும் எழுத ஆரம்பித்து, நாளடைவில் இலக்கியம், அரசியம், விஞ்ஞானமென தனது எல்லைகளை சுருக்கித் தகுதியை வளர்த்துக்கொண்டது. உடன்பிறந்த சகோதரியின் கணவனால் ஏற்பட்ட கடன் தொல்லைகளிலிருந்து மீள்வதற்காக 1828ம் ஆண்டு நண்பர்களின் உதவியுடன் அச்சகம் மற்றும் பதிப்பகத் தொழிலை மேற்கொள்கிறார். Molierன் அனைத்து படைப்புகளும் முறையாக இவரால் பதிப்பிக்கபடுகின்றன. இவரது எண்னத்திற்கு மாறாக இத்தொழில் மேலும் கடனாளியாக மாற்றியது. மீண்டும் எழுத்துலகிற்குத் திரும்புகிறார். படைப்புகள் 1829க்குப் பிறகு அவரால் எழுதபட்ட படைப்புகள் அனைத்துமே மகோன்னதனமானவை. முதன்முதலாக அவரது சொந்தப் பெயரில் (HONORE DE BALZAC) படைப்புகள் அச்சுக்கு வந்தன என்பதை இங்கே குறிப்பிட்டாகவேண்டும். 1829 - 'எஞ்சியுள்ள குடிகேடன்' -LE DERNIER CHOUHAN., 'திருமணத்தின் உடற்கூறு (LA PHYSIOLOGIE DU MARRIAGE)', 'கீர்த்தியும் கேடும்' ( GLOIRE ET MALHEUR), 1830ல் - கட்டுரைகள், சிறுகதைகள் குறிப்பாக 'அந்தரங்க வாழ்க்கையின் காட்சிகள் (SCENES DE LA VIE PRIVEE),. 1831 'துயர் குறைக்கும் தோலாடை'(LA PEAU DE CHAGRIN) மற்றொரு உன்னதப் படைப்பு. கையிலிருந்த கடைசி நானயத்தையும் சூதாட்டத்தில் தொலைத்துவிட்டு, ஆற்றில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கும் கதை நாயகன் ஒரு புராதனப்பொருள் அங்காடியில் நுழைய நேரிடுகிறது. இவனது நிலையை அறிந்து இரக்கப்பட்ட அங்காடி உரிமையாளன் ஓர் அதிசயத் தோலாடையைக் காண்பித்து "உன் வேண்டுதலை நிறைவேற்றக்கூடிய ஆடை, ஆனால் ஒவ்வொரு வேண்டுதலின் போதும், தோலாடைச் சுருங்கத் தொடங்கும் அதற்கு ஈடாக உன்னுடைய ஆயுளும் குறைந்து கொண்டுவரும்" என எச்சரிக்கிறான். ஆடையைப்பெற்றுத் திரும்பும் இளைஞனுக்கு, கேட்டது கிடைக்கின்றது, வளங்கள் பெருகுகின்றன. வேண்டுதல் நிறைவேற்றப்படும்போதெல்லாம் தோலாடைச் சுருங்குவதுடன் கூடவே அவனது ஆயுளும் குறையத் தொடங்குகின்றது. ஒரு கட்டத்தில் தோலாடையை விரும்பித் தொலைத்தபோதும் அவனை அது விடுவதாகயில்லை. இறுதியில் அவனுயிரைக் குடித்து அதுவும் முடிந்து போகிறது. எதுவுமற்ற வாழ்க்கை என்கின்றபோது 'முடிவைத்' தேடி 'அவன்' சென்றான். எல்லாவற்றயும் தனதாக்கிக்கொள்ள முனைந்தபோது, 'முடிவு' அவனைத் தேடிவந்தது நெருங்கினாலும், விலகினாலும் 'இறப்பினை' கடந்தேசெல்லவேண்டும். என்கின்ற விதியினை மனதிற் பதியவைக்கும் அற்புதப் படைப்பு. 1832 - நாட்டுப்புற வைத்தியன் (Le Medecin de Campagne) 1834 - லான்ழே சீமாட்டி (La Duchesse de Langeais,) முழுமையின் தேடல் (La recherche de l'absolu). இக்காலத்தில் எழுதப்பட்ட 'பாதிரியார் கொரிஓ' (LE PERE GORIOT)வும் அவசியம் நாம் படித்தாகவேண்டிய நூல். வாழ்க்கையின் மிக உன்னத நிலையிலிருந்த மனிதனொருவன் தனது இரு பெண்களால் எல்லாவற்றையும் இழந்து நாயினும் கேவலாமாக மரணிப்பதை விவரிக்கும் புதினம். 1838 COMEDIE HUMAINE: மனிதத்தைப்பற்றி பேசுகின்ற ஒரு நூல். இயற்கை வரலாற்றில் விலங்குகள் வகைபடுத்தப்படுவதைப்போன்று, பல்ஸாக் தன் பங்கிற்கு மனித உயிர்களைப் பட்டியலிடுகிறார். அப்பட்டியலில் அன்றாடங் காய்ச்சிகளிலிருந்து, அறுசுவை உணவினைக் கொள்வோர்வரை எல்லோரும் இடம்பெற்றிருந்தனர். பணிகளென்றால் மருத்துவர், வணிகர், வங்கியாளர்,மதகுருமார், அதிகாரி,, அந்தஸ்தில் உள்ளவர், ஊழியர்கள், நிறுவன அதிபர்களென நீண்டவொரு பட்டியல். புலங்களெனில், பெருநகரமா, நகரமா, கிராமமா? ஆகச் சமூகத்தின் காரணிகளின் அடிப்படையில் மனிதர்களை வாசித்தார். அவரது தூரிகையில் மனிதர்களைப் பற்றிய முழுமையானச் சித்திரம் கிடைக்கிறது. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோன்று அவரது அவதானிப்பின் முழுவீச்சையும் இங்கே உணருகிறோம். மிக நுணுக்கமாகத் தீட்டப்படும் அவரது எழுத்தோவியத்தில் ஒரு முழுமையான மனிதனைக் காண்கிறோம். நகரமா, வீதியா, இருப்பிடமா, ஆடைகளா, மேசைகளா, நாற்காலிகளா, இன்ன பிற பொருட்களா, அவனுக்கான, அவன் சார்ந்த ஒழுக்கங்களா, உறவுகளா, அசைவுகளா, மொழிகளா அனைத்தையும், பட்டைத்தீட்டிய மனிதவைரமாக நம்மிடம் நீட்டும்போது அதனொளி நம்முள்ளத்தில் செய்யும் விந்தைகளை, விவரிப்பது கடினம். எல்லாவற்றிற்கு மேலாக உண்மைகளின் அடிப்படையில், பொய் வேதாந்தங்களை ஒதுக்கி மனிதத்தினை கண்டறிந்த அறிவிலக்கிய முயற்சி 'LA COMEDIE HUMAINE'. பகுப்பு:பிரெஞ்சு எழுத்தாளர்கள் பகுப்பு:1799 பிறப்புகள் பகுப்பு:1850 இறப்புகள்
மஞ்சள் (மூலிகை)
https://ta.wikipedia.org/wiki/மஞ்சள்_(மூலிகை)
மஞ்சள் வயல்|thumb|right|190px thumb|190px|மஞ்சள் தூள் thumb|190px|மஞ்சள் கிழங்குகள் thumb|190px|மகளிர் உரைத்து மேனியில் பூசிக் குளிக்கும் மஞ்சள் thumbnail|தமிழ் நாட்டில் உள்ள ஓர் கிராமத்தில் உள்ள ஓர் மஞ்சள் வயல் thumbnail|இந்தியாவிலூள்ள மகரசட எனும் கிராமத்திலுள்ள ஓர் மஞ்சள் மூலிகையின் பூ thumbnail|மஞ்சளின் கிழங்கு மஞ்சள், அரிணம் அல்லது பீதம் (Curcuma longa) உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை தமிழர் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது. வளர்வதற்கேற் சூழல் மஞ்சளுக்கு 20 °C and 30 °C (68 °F and 86 °F) இடைப்பட்ட வெப்பநிலை தேவைப்படுகிறது. மேலும் கணிசமான அளவு நீர்ப்பாசனமும் தேவைப்படுகிறது.Materia Indica, 1826, Whitelaw Ainslie, M.D. M.R.A.S., via Google Books தமிழகத்தில் ஈரோடு மாவட்டமானது மஞ்சள் வேளாண்மைக்கும், சந்தைக்கும் பெயர்பெற்றுள்ளது. வரலாறு மஞ்சள் தமிழ் நாட்டிலே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது. இது முதலில் நிறமூட்டவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் இது மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. மஞ்சளின் வகைகள் மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது. முட்டா மஞ்சள் கஸ்தூரி மஞ்சள் விரலி மஞ்சள் கரிமஞ்சள் நாக மஞ்சள் காஞ்சிரத்தின மஞ்சள் குரங்கு மஞ்சள் குடமஞ்சள் காட்டு மஞ்சள் பலா மஞ்சள் மர மஞ்சள் ஆலப்புழை மஞ்சள் மஞ்சளின் இயல்புகள் முட்டா மஞ்சள் இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள். கஸ்தூரி மஞ்சள் இது வில்லை வில்லையாக, தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது. விரலி மஞ்சள் இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள். மஞ்சளின் பயன்பாடுகள் . பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது. சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது. உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது. வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது. நிப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது. காய்கறிகளை வாங்கியவுடன் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் கலுவி பயன்படுத்துவதால் மரபனு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். மேலதிக தகவல்கள் மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும்அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதிதரும் படிவு (plaque) குறைக்கின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் (curcumin) என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை (beta-amyloid proteins) அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதிதரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன. மஞ்சள்தூளைத் திரவ வடிவத்தில் பயன்படுத்தி வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சாதரண இயல்பு நிலையில் திரவ மஞ்சள் ஒரு மெல்லிய படலமாக இடப்பட்டால் ஒளியை உறிஞ்சி மிளிரும் தன்மை கொண்டது, மஞ்சளில் உள்ள வேதிப்பொருளானது டி.என்.டி (TNT) போன்ற வெடிபொருட்களின் மூலக்கூறுகளை வளியில் இருந்து அகத்துறிஞ்சுவதனால் மஞ்சளின் ஒளிவெளிவிடும் தன்மை மாற்றம் அடைகின்றது; மிளிரும் தன்மை குறைகின்றது.Curry powder molecule 'is cheap sensor for explosives'; By Jason Palmer; http://www.bbc.co.uk/news/science-environment-12849781, 25 March 2011 தமிழர் வாழ்வியல் தமிழர் வாழ்வியலில் மஞ்சளைப் மருத்துவ பொருளாகக் கருதுகின்றனர். புதிதாக ஒரு வீட்டில் குடிபுகுபவர்கள் உப்பு, மஞ்சள் போன்றவற்றை கடவுள் படத்தின் முன் வைத்து அதன் பின்னரே பால் காய்ச்சுகின்றனர். புத்தாடை அணிவதற்கு முன்பு மஞ்சளை நீரில் தேய்த்து அதை ஆடையில் வைத்துக் கொள்கின்றனர். மாரியம்மன் கோயிலுக்கு தீச்சட்டி எடுப்பவர்கள் மீது முதலில் மஞ்சள் கலந்த நீர் ஊற்றப்படுகிறது. பொங்கல் திருநாளில் பொங்கல் பானையைச் சுற்றி மஞ்சள் செடியை கட்டுவர். மஞ்சள் தூளை நீரில் கலந்து பிள்ளையார் பிடித்து அறுகம்புல் வைத்து பிள்ளையாராக வழிபடுவர்.. திருவிழாக் காலங்களில் உறவினர்கள் மீது மஞ்சள் நீரை தெளிப்பர். மேற்கோள்கள் வெளி இணைப்புகள் மஞ்சள் குறித்த சீன வானொலியின் கட்டுரை பகுப்பு:மூலிகைகள் பகுப்பு:சுவைப்பொருட்கள் பகுப்பு:இஞ்சிக் குடும்பம் பகுப்பு:கிழங்குகள் பகுப்பு:இந்தியத் தாவரங்கள் பகுப்பு:உணவுச் சேர்பொருட்கள்
செல்லிடத் தொலைபேசி
https://ta.wikipedia.org/wiki/செல்லிடத்_தொலைபேசி
thumb|upright|ஆரம்ப திறன்பேசி வரையிலான செல்லிடத் தொலைபேசிகளின் படிவளர்ச்சி thumb|மோடோரோலா நிறுவனத்தின் ஒரு நகர்பேசி நகர்ந்து கொண்டே பேசக் கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் நகர்பேசி என்று அழைக்கப்படுகின்றன. இவை கம்பியில்லாத் தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு அருகிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. நகர்பேசிகளுக்கு இத்தகைய இணைப்புகள் வானலைகள் மூலம் ஏற்படுத்தப்படுவதால் அவற்றுக்குக் கம்பித் தொடர்பு தேவையில்லை. நகர்பேசியின் இன்னொரு பெயர் செல்பேசி (செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேச).8754830145 நகர்பேசியை சாத்தியமாக்கும் தொழில் நுட்பங்கள் குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறை thumb|right|குறிமுறைப் பிரிப்பு பன்னணுகல் முறை இயங்கும் விதி வானொலியை சுருதிகூட்டும் போது சில சமயம் ஒரே அலையெண்ணில் இரண்டு நிலையங்களின் ஒலிபரப்பை ஒரே நேரத்தில் கேட்க முடியும். இதற்குக் காரணம் நிலையங்களிலிருந்து வரும் வானொலிக் குறிகைகள் ஒரே அலையெண்ணில் இருப்பதால் அவை ஒன்றுக்கொன்று குறுக்கிடுகின்றன. குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் இந்த குறுக்கிடுதல் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறது. குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் இலக்கப்படுத்தப்பட்ட குரல் தரவு ஒரு பரவல் குறியீடு மூலம் அலையெண் கற்றையகலம் முழுவதும் பரப்பப்படுகிறது. ஒவ்வொரு அழைப்பிற்கும் (அல்லது இரு நகர்பேசிகளுக்கிடையான தொடர்புக்கும்) ஒரு தனிப்பட்ட பரவல் குறியீடு வழங்கப்படுகிறது. இக்குறியீடு மூலம் அலையெண்ணில் பல அழைப்புகளை ஒன்றுக்கு மேல் ஒன்று உடன்வைக்கலாம். குறியீடு பிரிப்பு பன்னணுகல் வலையத்தில் அழைப்பவர் மற்றும் அழைக்கப்படுபவர் கருவிகளில் மட்டும்தான் ஒரே பரவல் குறியீடு ஒதுக்கப்படுகின்றன. ஆகையால் இவ்விருவர்களுக்கிடையே தொடர்பு தெளிவாக இருக்கும். வலையத்தில் உள்ள மற்ற கருவிகளில் யாதேனும் வேறு வேறு அழைப்புகளில் இணைந்திருந்தால் அவைகளுக்கு வெவ்வேறு பரவல் குறுயீடுகள் ஒதுக்கப்படுகின்றன. எந்த ஒரு தொடர்பையும் அலையெண் கற்றையகலத்தைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற தொடர்புகள் தடங்கல் செய்யாது. இதனால் பல்லாயிரம் அழைப்புகளை கற்றையகலத்தில் பரப்பி ஒன்றுக்கொன்று மேல் அடுக்கலாம். இது பரவல் நிறமாலை தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறை உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறையில், காலப்பிரிப்பு பன்னணுகல் முறையில் அழைப்புகள் (அல்லது தொடர்புகள்) வலையத்தைப் பகிர்கின்றன. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு மூலம் குரல் தரவுகள் குறுக்கப்பட்டு அதிக அழைப்புகளை வலையத்தில் ஏற்க இயல்பாகிறது. கம்பியில்லா முறையின் அங்கங்கள் கம்பியில்லா தொலைதொடர்பு அமைப்பு முறையில் பல அங்கங்கள் உள்ளன. அவற்றைக் கீழே காண்போம். நகர் நிலையம் முதலில் இருப்பது நகர் நிலையம். இதுதான் ஒரு சந்தாதாரரின் நகர்பேசி. இது வானலைச் செலுத்துப்பெறுவி, காட்சித் திரை, இலக்கக்குறிகைச் செயலிகள், சூட்டிகையட்டை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சூட்டிகையட்டை, சந்தாதாரர் அடையாளக்கூறு எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு நகர்பேசி சாதனத்தின் தனித்தன்மையான அடையாளத்திற்கு பன்னாட்டு நகர்சாதன அடையாளம் எனப் பெயர். சூட்டிகையட்டையில் பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் - பதிந்துள்ளது. பன்னாட்டு நகர்சாதன அடையாளம் மற்றும் பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் ஒன்றுக்கொன்று தனியானவை, அவைகளில் சேர்மானமும் தனித்தன்மையானது. தள நிலையம் கம்பியில்லா அமைப்பின் அடுத்ததான உறுப்பு தள நிலையம். ஒரு தள நிலையம் என்பது தள செலுத்துப்பெறு நிலையம் மற்றும் தள நிலைய இயக்ககம் என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு தள செலுத்துப்பெறு நிலையத் துணையமைப்பு பல வானலை செலுத்துப்பெறுவிகளைக் கொண்டது. நகரும் நிலையத்தின் தொடர்பிற்கான வானிணைப்புகளை நிர்வகிக்கிறது. மாநகரப் பகுதிகளில் தள செலுத்துப்பெறு நிலையங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஒரு தள நிலைய இயக்ககம் பல தள செலுத்துப்பெறு நிலையங்களை நிர்வகிக்கும். ஒரு தள நிலைய இயக்ககம் வானலைவரிவை துவக்கம், அலைவெண் துள்ளல், கைமாற்றங்கள் ஆகிய செயல்கூறுகளை பூர்த்திசெய்கிறது. தள நிலைய இயக்ககம் எனப்படுவது நகர் நிலைமாற்றகத்திற்கும் நகர்கருவிக்கும் இடைமுகமாக அமைந்துள்ளது. நகர் நிலைமாற்றகம் பிணையத் துணையமைப்பின் மையத்தில் நகர் நிலைமாற்றகம் சேர்ந்துள்ளது. அது ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு அல்லது ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணையத்திற்கு ஒரு சாதாரண கணுவாக விளங்குகிறது. இது தவிர, நகர்கருவியுடன் பதிவுசெய்தல், உறுதிபடுத்துதல், இருப்பிடம் புதுப்பித்தல், கைமாற்றம், அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு ஆகிய பொறுப்புக்களை தாங்கும். நகர் நிலைமாற்றகம் துணைமுறைமை SS7 என்ற குறிகைமுறை மூலம் ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு அல்லது ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணையத்திற்கு இணைகின்றது. இல் இருப்பிடம் பதிவகம் மற்றும் விஜய இருப்பிடம் பதிவகம் இரண்டும் நகர் நிலைமாற்றகத்துடன் ஓர் உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறை அழைப்பின் திசைவு மற்றும் அலையல் திறமைகளை பூர்த்திசெய்கின்றன. ஒரு சந்தாதாரரின் எல்லா நிர்வாக விவரங்களும் இல் இருப்பிடம் பதிவகம் மூலம் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரரின் தற்போதய இருப்பிடம் நகர்நிலைய அலையல் எண் என்ற வடவத்தில் அறியப்படுகிறது. இந்த நகர்நிலைய அலையல் எண் மூலம்தான் ஓர் அழைப்பு சந்தாதாரர் கருவிக்கு திசைவுசெய்யப்படுகிறது. ஒரு உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு பிணையத்தில் தருக்கம்படி ஓர் இல் இருப்பிடம் பதிவகம் இருக்கும், ஆனால் அதை ஒரு பரவல் தரவித்தளமாகக்கூட செயல்படுத்தப்படலாம். விஜய இருப்பிடம் பதிவகம் அதன் கட்டுப்பாடு பகுதியிலுள்ள நகர்கருவிகளின் ஒருசில நிர்வாக விவரங்கள் மட்டும் இல் இருப்பிடம் பதிவகத்திலிருந்து எடுத்து சேகரிக்கும். நகர் நிலைமாற்றகத்திலேயே நகர்நிலையங்களின் விவரங்கள் சேமிக்கப்படாது. நகர் நிலைமாற்றகமும் விஜய இருப்பிடம் பதிவகமும் கம்பியில்லா நிலைமாற்றுக் கருவிகளில் ஒன்றாக செயல்படுத்தப்படுகிறது. ஆகையால் அவைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளும் ஒன்றானவையே. நகர்கருவி அடையாளப் பதிவகம் மூலம் ஓர் உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு பிணையித்திலுள்ள எல்லா நகர்கருவிகளின் பன்னாட்டு நகர்சாதன அடையாள எண்கள் ஒரு தரவுத்தளத்தில் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரின் நகர்கருவி தொலைந்தால் அதன் பன்னாட்டு நகர்சாதன அடையாள எண் தரவுத்தளத்தில் குறிக்கப்படுகிறது. உறுதிப்படுத்தகம் சந்தாதர்களின் சூட்டிகையட்டையின் ரகசியக் குறியீட்டை சேகரித்து நகர்கருவிகளை ஒரு பிணையத்திலுள் உறுதிபடுத்தும். கைமாற்றம் என்பது ஒரு நிகழும் அழைப்பை ஒரு கலத்திலிருந்து இன்னொன்றுக்கு நிலைமாற்றுவது. ஒரு கம்பியில்லா பிணையத்தில் நான்கு விதமான கைமாற்றங்கள் உண்டு. ஒரு தள நிலைய இயக்ககத்துக்குள்ளேயே தடம் கைமாற்றம் (Channel Handover), மற்றும் கலம் கைமாற்றம் (Cell Handover) இரு தள நிலைய இயக்ககங்களுக்கிடையே ஆனால் ஒரே நகர் நிலை மாற்றகத்திற்குள்ளே இரு நகர் நிலை மாற்றகங்களுக்கிடையே முதல் இரு கைமாற்றங்கள் அக கைமாற்றம் எனறழைக்கப்படுகின்றன. இறுதி இரண்டும் புற கைமாற்றம் என்றழைக்கப்படுகின்றன. கைமாற்றங்கள் நகர்கருவி மூலம் துவக்கப்படுகின்றன அல்லது பிணையத்தின் உபயோகச் சுமையை சீர்ப்படுத்த நகர் நிலைமாற்றகம் மூலமும் துவக்கப்படுகின்றன. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பின் பயனில்லா காலகட்டங்கள், மற்றும் குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் குறிப்பிட்ட அலைவெண்களில் நகர்கருவி ஒலிபரப்பு கட்டுப்பாடுத் தடத்தை வருடி அருகாமையிலுள்ள கலங்களில் 6 உன்னத கலங்களை அவைகளிருந்து பெறும் வானலை திறத்தின்படி சேகரிக்கும். இத் தகவலை தள நிலைய இயக்ககத்திற்கும் நகர் நிலை மாற்றகத்திற்கும் தெரிவிக்கும். கைமாற்றத்தின் செயல்படுத்தம் கம்பியில்லா பிணையத்தை பொறுத்தவரை உள்ளது. குறைவான ஏற்பு படிமுறைப்படி (Minimum Acceptance Algorithm) ஒரு நகர்கருவியின் பெறும் குறிகைத்திறன் (Received Signal Power) ஒரு அளவிற்கு மீது குறைந்தால் அதன் இயங்கும் திறன் (Operating Power) அதிகரிக்கப்படுகிறது. அது மீறி பெறும் குறிகைத்திறன் முன்னேற்றம் இல்லையினில் நகர்கருவி வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கும். திறன் சேமிப்பு படிமுறைப்படி (Power Budget Algorithm) இயங்கும் கலத்திலிருந்து குறிகைத்திறன் குறைந்தால் வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கப்படும். கம்பியில்லாவில் ஒரு நகர்கருவியின் இருப்பிடம் HLR மற்றும் VLR பதிவகங்கள் மூலம் புதுப்பிக்கப்படுகிறது. ஒரு நகர்கருவி ஒரு பிணையத்திலிருந்து மற்றொன்றிற்கு பயணம் செய்யும்போது அதற்கு பெறும் ஒளிபரப்பில் மாற்றம் தெரியும். அப்பொழுது நகர்கருவி தன் IMSI மற்றும் பழைய தாற்காலிக நகர்சந்தாதாரர் அடையாளம் எண்களை புது பிணையத்தின் VLR பதிவகத்திற்கு ஒரு புதுப்பிப்புக் கட்டளையாக (Update Request) அனுப்புகிறது. நகர்கருவிக்கு ஒரு புது MSRN எண் ஒதுக்கப்பட்டு புது பிணையத்தின் VLR மூலம் புது HLR பதிவகத்திற்கு அனுப்பபடுகிறது. புது HLR பழைய பிணையத்தின் VLRக்கு முந்திய MSRN எண்ணை ரத்து செய்யுமாறு தெரிவிக்கிறது; அந்த எண்ணை மறு உபயோகம் செய்ய இயல்கிறது. புது TMSI எண் ஒதுக்கப்படுகிறது. MSC அமைப்பு பொதுத் தொலைபேசி பிணையத்திற்கும் கம்பியில்லாப் பிணையத்திற்கும் இடைமுகமாகும். ஒரு PSTN பிணையத்திலிருந்து தோன்றும் அழைப்பு ஒரு நுழைவாயில் நகர்பேசி சந்தாதாரர் எண் (Mobile Station ISDN-MSISDN) மூலம் MSC நுழைவாயிலுக்கு திசைவு செய்யப்படுகிறது. இந்த நுழைவாயில் நகர்பேசி MSISDN எண்ணுடன் HSRஐ வினாவித்து MSRN எண்ணை பெறுகிறது. இந்த MSRN எண்ணுடன் அழைப்பு MSCக்கு திசைவு செய்யப்படுகிறது. MSCயின் VLR பதிவகம் MSRNஐ எடுத்து மாற்றி நகர்கருவிக்கு TMSI எண் ஒன்றை அளிக்கிறது. ஒரு அழைப்பு BSCயின் கட்டுப்பாடு மூலம் நகர்கருவிக்கு திசைவு செய்யப்படுகிறது. கம்பியில்லா அணுகு நெறிமுறை கம்பியில்லா தொலைதொரபில் ஒரு முக்கியமான இடம் வைத்திருப்பது கம்பியில்லா அணுகு நெறிமுறை. கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையத்திற்கும் ஒரு நகர்கருவிக்கும் இடையே தொடர்பு இயல்பாகிறது. கம்பியில்லா அணுகு நெறிமுறை என்பது ஒரு தூது நெறிமுறை (Messaging Protocol). கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையம் மூலம் நகர்கருவிகளுக்கு மின்னஞ்சல், குரல்தகவல், நாட்குறிப்பு ஆகிய சேவைகளை நிறைவேற்ற இயல்கிறது. ஒரு கம்பியில்லா அணுகு நெறிமுறை அமைப்பில் 3 பாகங்கள் உண்டு: அவை: கம்பியில்லா அணுகு நெறிமுறை நுழைவாயில், இணைய வழங்கன், மற்றும் கம்பியில்லா அணுகு நெறிமுறை தெரிந்த நகர்கருவி. கம்பியில்லா அணுகு நெறிமுறை நுழைவாயில் (Access Point) WML தகவல்களை கம்பியில்லா அணுகு நெறிமுறையை ஏற்கும் நகர்கருவியுடன் பரிமாற்றுகிறது மற்றும் HTML தகவல்களை இணைய வழங்கன் மூலம் பரிமாற்றுகிறது. இணைய வழங்கன் தரவுத்தளங்களுடன் ASP, ColdFusion, CGI அல்லது PHP ஆகிய மென்பொருள் கருவிகள் மூலம் தொடர்புகொண்டு HTML பக்கங்களை வழங்குகிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் நகர்பேசித் தொழில் நுட்பம் இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக நகரும் தொலைபேசிகள் நகர்புறங்கள் முதல் நாட்டுப்புறங்கள் வரை பரவியுள்ளன. நகர்பேசிகளின் பயன்பாட்டுத் திட்டங்களும் அதிகரித்து அவைகளின் கட்டணங்களும் படிப்படியாக குறைந்துள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவில் நகர்பேசி ஒரு அந்தஸ்துக் குறியாக இருந்த போதிலும் இன்று அது நாடெங்கும் இயல்பாக அனைவரும் உபயோகிக்கும் ஒரு பொருள் ஆகிவிட்டது. பல்வேறு கருவிகள் பல்வேறு திட்டங்கள் பல்வேறு சேவை நிறுவனங்கள்... இந்தியாவில் சி.டி.எம்.ஏ சேவையை வழங்கும் நிறுவனங்கள் டாடா இண்டிகாம் ரிலையன்ஸ் CDMA MTS Virgin CDMA ஜி.எஸ்.எம் சேவையை வழங்கும் நிறுவனங்கள் right|thumb|100px|ஏர்டெல் சின்னம் right|thumb|100px|ஐடியா சின்னம் ஏர்செல் ஏர்டெல் வோடபோன் ஐடியா ஸ்பைஸ் டெலிகாம் யூனிநார் வீடியோகான் மொபைல் ரிலையன்ஸ் ஜி.யெஸ்.எம் ஐடியா செல்லுலார் விர்ஜின் பிஎஸ்என்எல் ஜியோ இலங்கையில் 2005 ஆம் ஆண்டு மே மாதத்தில் CDMA தொழில் நுட்பம் சண்டெல் மற்றும் லங்காபெல் நிறுவனங்களினால் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொலைத்தொடர்பிற்கு மாத்திரமன்றி இணைய இணைப்பிலும் சண்டெல் மற்றும் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் விநாடிக்கு 115.2 கிலொபிட்ஸ் இணைப்பிலும் மற்றும் லங்காபெல் விநாடிக்கு 153கிலோபிட்ஸ் இணைப்பிற்கும் சண்டெல் விநாடிக்கு 230.4/115.2 கிலோபிட்ஸ் இணைப்பிலும், டயலொக் விநாடிக்கு 460.8/230.4. கிலோபிட்ஸ் இணைப்பிற்கும் உதவுகின்றது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கிளிநொச்சி முல்லைத்தீவு தவிர இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் இச்சேவை அறிமுகபப்டுத்தப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைத் தொடர்புநிலையத்தின் இச்சேவையை 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இப்போதுள்ள நிலையில் இலங்கைத் தொலைத்தொடர்பு நிலையமும் டயலொக் மற்றும் அதைத் தொடர்ந்து சண்டெல் மற்றும் லங்காபெல் வலையமைப்புக்களும் விளங்குகின்றன. இலங்கையில் CDMA சேவையை வழங்கும் நிறுவனஙகள் : இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் இலங்கைத் தொலைத் தொடர்பு சண்டெல் சண்ரெல் லங்காபெல் லங்காபெல் டயலொக் புறோட்பாண்ட் இலங்கையில் GSM (TDMA) சேவையை வழங்கும் நிறுவனங்கள் மோபிட்டல் (Mobitel ) டயலொக் புறோட்பாண்ட் செல்டெல் ஹட்ச் (Hutch) தொழில் நுட்பக் குறிப்புகள் உங்கள் சர்வதேச நகர்பேசியை அடையாளம் காணும் இலக்கத்தை அறிய கொள்ள நகர்பேசியின் *#06# என்று அழுத்தவும். இதில் AAAAAA-BB-CCCCCC-D இதில் AAAAAA - மாதிரியின் அனுமதிக் குறியீடு இதில் BB - இறுதியாகக் கூட்டிணைக்கும் குறியீடு இதில் CCCCCC - நகர்பேசியின் தொடரிலக்கம் இதில் D - மிகையான இலக்கம் இந்த இலக்கத்தைக் குறித்து வைத்துக்கொள்ளவும் இது நகர்பேசியானது தொலைந்தால் நகர்பேசியை செயலிழக்கச் செய்ய உதவுவதோடு களவெடுத்தவரைக் கையும் மெய்யுமாகக் கண்டுபிடிக்கவும் உதவும். நோக்கியா நகர்பேசி நோக்கியா (Nokia) நகர்பேசிகளின் தயாரித்த திகதியைக் கண்டறிய நகர்பேசியில் *#0000# விசைகளை அழுத்தவும். நோக்கியா நகர்பேசிகளில வேகமான அழைப்புக்களை ஏற்படுத்த xx# என்றவாறு அழுத்தவும் எடுத்துக்காட்டாக 24 ஆவதுசேமிக்கப்பட்ட இலக்கத்தை அழைக்கவேண்டும் எனில் 24# என்றவாறு விரைவாக டயல் செய்யலாம். நோக்கியா நகர்பேசியின் வரண்டி (Warranty) ஐப்பார்க்க *#92702689# அதாவது (*#WAR0ANTY#) வருமாறு அழுத்திப் பெற்றுக் கொள்ளலாம். வெளி இணைப்புகள் கம்பியில்லாத் தொலைத்தொடர்பு குறித்த விளக்கப்பக்கம் * பகுப்பு:பதிகணினியியல் பகுப்பு:புதிய ஊடகம்
சில நேரங்களில் சில மனிதர்கள்
https://ta.wikipedia.org/wiki/சில_நேரங்களில்_சில_மனிதர்கள்
சில நேரங்களில் சில மனிதர்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ஜெயகாந்தனின், "அக்னி பிரவேசம்" என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். லட்சுமி, ஸ்ரீகாந்த், சுந்தராபாய் மற்றும் பலர் நடித்த இப்படத்தினை ஏ. பீம்சிங் இயக்கினார். இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் கொன்னி சமயலுலோ கொம்தரு மனுஷுலு என்ற பெயரில் வெளிவந்தது. பகுப்பு:1977 தமிழ்த் திரைப்படங்கள்‎ பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு:ஏ. பீம்சிங் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள் பகுப்பு:மனோரமா நடித்த திரைப்படங்கள் பகுப்பு:நாகேஷ் நடித்த திரைப்படங்கள் பகுப்பு:எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள் பகுப்பு:தமிழ்ப் புதினங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படங்கள்
பாரதி
https://ta.wikipedia.org/wiki/பாரதி
பாரதி அல்லது பாரதியார் என்ற தலைப்புகளில் உள்ள விக்கிப்பீடியா கட்டுரைகள்: சுப்பிரமணிய பாரதி, மகாகவி பாரதியார் சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் கவிக் குஞ்சர பாரதி, கருநாடகப் பாடலாசிரியர் கோபாலகிருஷ்ண பாரதியார், கருநாடகப் பாடலாசிரியர் சுத்தானந்த பாரதியார், கவியோகி பாரதிதாசன், கவிஞர் சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் பாரதி, தமிழ்த் திரைப்பட நடிகை பி. வி. நரசிம்மபாரதி, தமிழ்த் திரைப்பட நடிகர் பழனி பாரதி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் பாரதி பாஸ்கர், பட்டிமன்றப் பேச்சாளர் தமிழ்த் திரைப்படங்கள்: பாரதி (திரைப்படம்) ஜெயபாரதி (1940) பாரதி கண்ணம்மா வேறு பாரதியார் பல்கலைக்கழகம், தமிழகப் பல்கலைக்கழகம் பாரதியார் விருது, தமிழக அரசு விருது பாரதி, ஈழத்துத் தமிழ் இதழ்
குடுமியான்மலை
https://ta.wikipedia.org/wiki/குடுமியான்மலை
குடுமியான்மலை, தமிழ்நாட்டின் புதுக்கோட்டை நகரத்திற்கு மேற்கே தொலைவில் அமைந்த சிற்றூர் ஆகும். இங்குள்ள குகைகளில், பல்லவர் கால (கி.பி. ஏழாம் நூற்றாண்டு) இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும். தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பண்ணையும் (அண்ணா பண்ணை, குடுமியான் மலையில் இருந்து ஐந்து கிலோமீட்டர்கள்) இங்கு அமைந்துள்ளது. வரலாறு தற்பொழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில், குடுமியான்மலையும் ஒன்று. முற்காலக் குறிப்புகளில் திருநாலக்குன்றம் என்றும், பின்னர் சிகாநல்லூர் என்றும் குடுமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில்தான் புகழ் பெற்ற குடுமியான்மலை கோயில்வளாகம் அமைந்துள்ளது. சங்கநூல் குறிப்பு 'பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி' என்னும் பாண்டிய மன்னனின் ஆட்சியின்கீழ் இந்த ஊர் இருந்தது. இந்த ஊரில் இருந்துகொண்டு இவன் யாகம் செய்ததால் இவனைக் 'குடுமிக் கோமான்' என்று போற்றி மகிழ்ந்தனர். இவன் சிறந்த கொடையாளி.காரி கிழார் - புறம் 6 \ நெடும்பல்லியத்தனார் - புறம் 64 \ நெடும்பல்லியத்தை - புறம் 9, 12 \ குடைவரைக் கோயில் குன்றின் மேலும், அதன் அருகிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்றுள் ஒரு குடைவரைக் கோயிலும், கலை நயம் மிக்க சிலைகளை உடைய சிகாநாதசுவாமி கோயில் என்ற பெரிய சிவன்கோயிலும் அடங்கும். குடைவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள், இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டுகள் இந்தக் கல்வெட்டுகள், குடுமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதிசெய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும், பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (ஏழு-எட்டாம் நூற்றாண்டு), குடுமியான்மலைக் கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டுச்செல்கின்றன. மேலக்கோயிலில் உள்ள, பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்தச் சிவாலயம் சைவ சமய மீட்சிக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. சிவன் வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் இங்குள்ள சிற்பங்கள் ஒன்றில், சிவன் வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் (வீணா-தாரா).(சிவன், வீணை வாசிப்பதில் விருப்பமுடைய கடவுள் என்று நம்பப்படுகிறது). இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இசைக்குறிப்புகள் குடுமியான்மலையில் பொறிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, பழங்காலத்தில் இவ்விடம் இசை அறிஞர்களும் மாணவர்களும் அடிக்கடி வருகை தந்திருக்கக் கூடிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது. மறு சீரமைப்புப் பணிகள் சோழப் பேரரசின் தொடக்க காலம் முதல்தான், இக்கோயிலின் வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த தொடர்ச்சியான கல்வெட்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. தொடக்க காலச் சோழர் கல்வெட்டுகள் (கி.பி ஒன்பதாம்-பத்தாம் நூற்றாண்டு) மேலக்கோயிலிலோ, இரண்டாம் பிரகாரத்தின் சுவர்களிலோ காணப்படுகின்றனவே தவிர முதன்மைக் கோயிலில் (Main shrine) காண இயலவில்லை. இதனால், இக்கோயில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் (remodelled) என்று அறியப்படுகிறது. கட்டடக்கலை பாணியை கருத்தில் கொண்டு பார்க்கையில், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில்தான் இந்த மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. கி.பி 1215 முதல் 1265 வரை, ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம், மறு சீரமைப்புப் பணிகள் நடை பெற்றன. பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் புதிய கட்டுமானப் பணிகளும் நடைபெற்றன. இந்தப்பணியில் கோனாட்டைச் சேர்ந்த நாடுகளும் (வட்டார ஊர்கள் ஒன்றிணைந்த அமைப்பு) நகரங்களும் (வணிகர்களின் அமைப்பு) ஊர்களும், படைப்பற்றுகளும் (Cantonments) பங்கு கொண்டன. ஈகை உள்ளம் கொண்ட தனி நபர்களும் உதவினர். 24 adam-s (one league) கொண்ட ஒவ்வொருவருக்கும் வரிப்பணம் விதிக்கப்பட்டுக் கோயில் பணிக்காகத் திரட்டித் தரப்பட்டது. பணம் தவிர்த்த இன்ன பிற பங்களிப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மறு சீரமைப்புப் பணிகளுக்கு உதவி 'உமையாள்வி நாச்சி' என்றபெயருடைய தாசிப் பெண்ணும், இந்த மறு சீரமைப்புப் பணிகளுக்குக் கணிசமாக உதவினார். 73,300 தங்க நாணயங்கள் விலை கொடுத்துக் கோயிலின் சில நிலப்பகுதிகளை வாங்கிய துர்கை ஆண்டாரின் மகள்தான் உமையாள்வி நாச்சி. உமையாள்வி நாச்சி, குகைக்கோயிலை அடுத்துள்ள அம்மன் சந்நிதியைக் கட்டி, அதில் மலையமங்கை (அல்லது சௌந்தர நாயகி) சிலையைப் பிரதிஷ்டை செய்தாள். மேலும் விசலூர், பின்னங்குடி, மருங்கூர் (மருங்குபட்டி), காரையூர் மற்றும் மேலமநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து நிலங்கள், தோட்டங்கள், கிணறுகள் வாங்கப்பட்டுக் கோயில் கணக்கில் சேர்க்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில், குடுமியான்மலைப் பகுதி ஊர்கள் காங்கேயராயர்களாலும் வானதரையர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வந்தன. சென்றடையும் வழி புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து ஏறக்குறைய 20 கி.மீ தொலைவில் குடுமியான்மலை அமைந்துள்ளது. முக்கிய சாலையில் இருந்து விலகி மலை அடிவாரம் நோக்கிச் சென்றால் கோயில் வளாகத்தை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து நகரப்பேருந்து வசதி உண்டு. பேருந்து எண் : எண் 5 , 28 . என்ற எண் கொண்ட பேருந்துகள் சுமார் 45 முதல் ஒரு மணிநேரம் வரை ஆகும், வழியாக கடந்துசெல்லும் ஊர்கள், திருவப்பூர் , பெருமாநாடு , குமரமலை விளக்கு, புல்வயல் , அன்னாப்பண்ணை, வயலோகம், விசலூர் , குடுமியான்மலை. அடிக்குறிப்பு பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டம் பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள் பகுப்பு:தமிழகத்துக் குடைவரைகள் பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
மாதிரி முதற்பக்கம்
https://ta.wikipedia.org/wiki/மாதிரி_முதற்பக்கம்
REDIRECT விக்கிபீடியா:மாதிரி முதற்பக்கம்
பி. ஆர். ராஜமய்யர்
https://ta.wikipedia.org/wiki/பி._ஆர்._ராஜமய்யர்
பி. ஆர். ராஜமய்யர் அல்லது பி. ஆர். ராஜம் ஐயர் (ஜனவரி 25, 1872 - மே 13, 1898) ஓர் எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், பத்திரிகையாசிரியர், ஆன்மிகம் மற்றும் தத்துவ வேட்கை கொண்ட சிந்தனையாளர். இவர் தமிழில் வெளியாகிய முதல் சில நாவல்களில் ஒன்றாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை மிக இளவயதிலேயே (21ஆம் வயதில்) எழுதியவர். வாழ்க்கை ராஜமய்யர், 1872ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு என்ற கிராமத்தில் பிறந்தவர். அவர் ஒரு சாதாரண நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இளமைக் கல்வியை மதுரை பாண்டித்தியப் பாடசாலையில் பயின்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் 1889 இல் கலைமாணி (B.A.) பட்டம் பெற்று சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். இறுதித் தேர்வில் வெற்றி பெறவில்லை. அதனால் விரக்தியில் ஆழ்ந்திருந்த சமயத்தில், தனது மனத்தை ஞான மார்க்கத்தில் செலுத்தினார். இதழியல் தொடர்பு பிரம்மவாதின் என்ற ஆங்கிலத் திங்களிதழில் Man his littleness and greatness என்ற தனது முதல் கட்டுரையை எழுதினார். இவருடைய எழுத்துக்கள், இவர் வாழ்க்கையின் ஆன்மிகத் தேடலின் பிரதிபலிப்பாக அமைந்தன. சுவாமி விவேகானந்தரால் பணிக்கப்பட்டு பிரபுத்த பாரதா என்ற ஆங்கில பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவர் எழுதிய தத்துவ விசாரணை கட்டுரைகள், பின்னாளில் வேதாந்த சஞ்சாரம் (ஆங்கிலத்தில் Rambles in Vedanta) என்று 900 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளிவந்தது. மறைவு மே 13 ஆம் நாள் 1898 ஆம் ஆண்டு ,தன்னுடைய 26ஆம் வயதில் குடற்சிக்கல் நோய் காரணமாக இயற்கை எய்தினார். பிரபுத்த பாரதாவின் 1898 ஜூன் மாத இதழில் இராஜமையரின் மறைவினால் இந்த இதழ் நிறுத்தப்படுகிறது என்ற செய்தி வெளியிடப்பட்டது. [ஆனால், சுவாமி விவேகானந்தரின் பெருமுயற்சியால், பி. ஆர். ராஜமய்யரின் மறைவை அடுத்து 1898 ஆகஸ்டு இதழில் இருந்து சென்னைக்கு பதிலாக அல்மோராவில் உள்ள அத்வைத ஆசிரமத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது.] கமலாம்பாள் சரித்திரம் தமிழில் முதல் நாவல் என சொல்லப்படும், மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் 1870ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ராஜமய்யர், தமிழின் இரண்டாம் நாவலாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை 1893 ஆம் ஆண்டு விவேக சிந்தாமணி என்ற மாத பத்திரிக்கையில் தொடராக எழுத ஆரம்பித்தார். அவருக்கு அப்போது வயது 21. ராஜமய்யர் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அழ்ந்த அறிவும், புலமையும் பெற்றிருந்தார். வில்லியம் தாக்கரே, கோல்ட் ஸ்மித் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களை படித்திருந்தார். ஆயினும் கமலாம்பாள் சரித்திரம், எந்த ஆங்கில நடையின் தாக்கமும் இல்லாமல், தன்னுடைய கலைத்திறன் மற்றும் வாழ்க்கையினை நோக்கும் பாதை ஆகியவற்றை கொண்டு ஒரு புதிய இலக்கிய மரபை துவக்கிவைத்தார். ஷெல்லி,வேர்ட்ஸ்வொர்த் போன்ற சிறந்த கவிஞர்களின் கவிதைகளை ஊன்றிப் படித்தார். உலகக் கவிஞர்களில் தலைசிறந்தவர் கம்பர் என்பது அவருடைய கருத்து. படைப்புகள் நாவல் கமலாம்பாள் சரித்திரம் கட்டுரைகள் மனிதனின் பெருமையும் சிறுமையும் வேதாந்த சஞ்சாரம் சிந்தனைகள் "இச்சரித்திர மெழுதுவதில் எனக்கு கதையே முக்கிய கருத்தன்று. மற்றென்னையோவெனில், பகவானது மாயா விபூதியாம் பெருங்கடலினுள் ஒர் அலையுள், ஒர் நுரையுள், ஒர் அணுவை யானெடுத்து, அதனுள் என் புல்லறிவுக் கெட்டியமட்டும் புகுந்து பார்த்து, தூண் பிளந்து தோன்றிய அவனே அங்கும் இருக்கக் கண்டு கைகூப்பி ஆடிப்பாடி, அரற்றி உலகெல்லாம் துள்ளித் துதைத்த இளஞ்சேயொப்ப யாரும் ஆடிப்பாடி ஓடவேண்டுமென்பதேயன்றி வேறன்று. இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா பல கஷ்டநஷ்டங்களை அனுபவித்து கடைசியாக நிர்மூலமான ஓர் இன்ப நிலை அடைந்ததை விவரிப்பதே இந்த நவீனத்தின் முக்கிய நோக்கம்" - கமலாம்பாள் சரித்திரத்தைப் பற்றி "கவிதை இன்பம் வேதனை இரண்டையும் அளிக்கிறது. பிரபஞ்சத்தின் மகிமையையும் மனிதனின் சிறப்பையும் அது பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே உயர்ந்த பட்ச கவிதை என்பது கோவிலுக்குப் போகும் வழியில் உள்ள மண்டபம். சாலையோரம் சற்று இளைப்பாற தங்குமிடம்" "கவிதை தரக்கூடியதை விட மேலான இன்பம் மனிதனின் பிறப்புரிமை. நிரந்தரமாகவும், மாறாத இன்பத்தோடு இருப்பது, நிலவொளி இரவைப் போலவே வெப்பமான பருவகாத்தை ரசிப்பதும், மனிதனின் தயாள, தன்னல தியாகத்தையும், முறைகேடான அக்கிரமத்தையும் சமமான சாந்தத்துடன் மதிக்கவும், காம்பீர்ய சூர்ய அஸ்தமனத்தைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் மட்டும் விடாமல், வானம்பாடிபோல், பாடிப்பறக்கும் வானம்பாடியைப்போல் வானவெளியில் சஞ்சரிப்பது மட்டும் இல்லாமல், பிரபஞ்சத்தோடு கலந்து வருவதுடன் தன்னால் ஒரு போதும் வெளியிட முடியாததை ஆனால் எல்லாவற்றையும் மறைக்க முடியாததை உணர்ந்து, தானே சூர்யனாகவும், அஸ்தமனமாயும், ஒளியாயும், வானம்பாடியாயும், கானமாகவும், வானமாகவும் இன்னும் இந்தப் பிரபஞ்சத்தில் மேன்மையாக உள்ள அத்தனையுமாக ஆகிவிடவேண்டும். மனிதன் தன் வாழ்க்கையிலும் எல்லையற்ற வெளியில் தான் கரைந்து குமுறும் அலைகடலையும், உயர் மலையையும் ஒளிரு தாரகைகளயும் ஓசையிடும் அருவிகளையும் தனக்குள்ளே உணரப்போகிறான். இந்த அர்த்தத்தில் அவன் கடவுள். வேதங்களில் கூறப்படும் பரப்பரும்மன். பந்தம் நீங்கி விடுதலை பெற்ற உணர்ந்த மனிதனின் மனதில் சாசுவத நிலவொளி, வெளியீட்டுக்கும் அப்பாற்பட்ட எல்லையற்ற பேரின்பம், அதாவது நானும் நானே. நானே மற்றவர்களும். நானே பிரம்மனும்" - Rambles in Vedanta பிற எழுத்தாளர்களின் கருத்துக்கள் ராஜமய்யர் என்ற சக்தி, ஒரு வால் நட்சத்திரம் போல, அணு ஆயுத வெடிப்பின் பிரம்மாண்டம் போல ஒரு குறுகிய காலத்திற்குள், பல்வேறு திசைகளில் ஓர் அசாதாரண வேகத்தில் துடித்து இயங்கி மறைந்துவிட்டது. இவ்வியக்கத்தின் துடிப்பும், வேகமும், பலதிசை நோக்கும், வாழ்ந்த காலத்தின் சுருக்கமும், இதை அணுகி புரிந்து கொள்ள முயற்சி செய்பவனைத் திக்கித் திணற வைத்துவிடுகிறது. இதன் விளைவு, வெடித்துச் சிதறிய துணுக்குகளில் தனக்கு அகப்பட்டதை வைத்துக் கொண்டு, ராஜமய்யரை, நாவலாசிரியர், தத்துவ ஞானி என்று பலவாறாக மதிப்பிடுகிறோம் - வெங்கட் சாமிநாதன் சான்றாதாரங்கள் சில இலக்கிய ஆளுமைகள். ஆசிரியர்: வெங்கட் சாமிநாதன். அசோகமித்திரன் கட்டுரைகள் - பாகம் 1. ஆசிரியர் : அசோகமித்ரன் அசோகமித்ரன், "B.R. Rajam Aiyar and His Kamalambal Charitrans", The Literary Criterion 21.1&2 (1986):86-92. உமா பரமேஸ்வரன். "Rajam Aiyar's Vasudeva Sastry" , The Literary Endeavour 6.1 (1985):55-67. S.விஸ்வநாதன். "Rajam Iyer's Vasudeva Sastry or True Greatness: Apologue or Religious Novel?" Journal of Indian Writing in English 2.1: 49-53. க. நா. சுப்பிரமணியம் Rajam Iyer: a pioneer Tamil novelist. (Modern Indian authors), Indian and Foreign Review (New Delhi) 16, no.12 (1 Apr 1979, 20-22 ) மேற்கோள்கள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:1872 பிறப்புகள் பகுப்பு:1898 இறப்புகள் பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள் பகுப்பு:திண்டுக்கல் மாவட்ட நபர்கள்
திலீப்குமார் (எழுத்தாளர்)
https://ta.wikipedia.org/wiki/திலீப்குமார்_(எழுத்தாளர்)
திலீப்குமார் (பிறப்பு: 1951, Dilip Kumar) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர், இலக்கிய திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், மொழிபெயற்பாளர் ஆவார். இவர் குஜராத்தி மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் பற்று கொண்டவர். சிறுகதை, இலக்கிய திறனாய்வு என இரு துறைகளிலும் எழுதிவருபவர். இவருடைய கதைகள் யதார்த்தின் கனத்தினை வெளிப்படுத்துபவை. தெளிந்த பாத்திரப்படைப்பு, மெல்லிய நகைச்சுவை, அனுபவப்பூர்வமான வாழ்க்கையின் தேடல்கள் கொண்டவை இவருடைய கதைகள். 2002இல் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாஷா பாரதி" என்ற மதிப்புமிக்க விருதினைப் பெற்றவர். பல இந்திய இலக்கியத் திட்டங்களுக்கு ஆலோசகராகவும், சிறந்த மொழி பெயர்ப்புக்காக வழங்கப்பெறும் தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் பணிபுரிந்தவர். புத்தகங்கள் சிறுகதைத் தொகுப்பு மூங்கில் குருத்து (1985) கடவு (2000) A Place to Live: Contemporary Tamil Short Fiction (தமிழ் சிறுகதைகளின் ஆங்கில வடிவம்) The Tamil story: Through the Times, Through the Tides (தொகுப்பாசிரியர், பதிப்பாசிரியர் 2016; சாகித்திய அகாதெமியின் மொழிபெயர்ப்புக்கான விருது பெற்ற நூல்) இலக்கியத் திறனாய்வு மௌனியுடன் கொஞ்ச தூரம் (மௌனி பற்றிய இலக்கியத் திறனாய்வு) (1992) நாடகங்கள் ரமாவும் உமாவும் (2011) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கௌரி ராம்நாராயண், திலீப்குமார் பற்றி எழுதிய கட்டுரை . திலீப்குமார் படைப்புகள் சில - அழியாச்சுடர்களில் திலீப் குமார்:மொழியின் எல்லைகளைக் கடந்து..-வெங்கட் சாமினாதன் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழ் விமர்சகர்கள் பகுப்பு:1951 பிறப்புகள்
இயற்கை எண்
https://ta.wikipedia.org/wiki/இயற்கை_எண்
REDIRECT இயல் எண்
ராபர்ட் ஹூக்
https://ta.wikipedia.org/wiki/ராபர்ட்_ஹூக்
ராபர்ட் ஹூக் (Robert Hooke) (1635 - 1703), இங்கிலாந்து நாட்டு இயற்பிலாளரும் கணித அறிஞரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஹூக், தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு குறித்த அவருடைய விவரணைகளுக்காக புகழ் பெற்றவர். அவர் வாழ்ந்த காலத்தின் மிகச் சிறந்த எந்திரவியலாளராகக் கருதப்படும் ராபர்ட் ஹூக் பல வானியல் கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தினார். முதன் முதலாக, கோள்களின் இயக்கங்கள் குறித்த கோட்பாடுகளை எந்திரவியல் அடிப்படையில் அணுகி அண்ட ஈர்ப்பு விசையின் இருப்பைக் கணித்தவரும் இவரே. 1684ல், நடைமுறைப்படுத்த வல்ல தந்தி முறை ஒன்றை உருவாக்கினார். முதல் கணிதக் கருவியையும் கிரிகோரிய தொலைநோக்கியையும் ராபர்ட் ஹூக் தான் வடிவமைத்தார். ஹூக் விதியை வரையறுத்தார்.Robert Hooke, De Potentia Restitutiva, or of Spring. Explaining the Power of Springing Bodies, London, 1678. 1665ல் எழுதிய மைக்ரோகிராஃபியாவில் (Micrographia), தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு பற்றி விவரித்துள்ளார். செல் (Cell) என்ற சொல்லை முதலில் உருவாக்கியவரும் இவரே. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ராபர்ட் ஹூக், குட்டன்பேர்க் திட்டத்திலிருந்து ஹூக் Timeline http://www.roberthooke.org.uk பகுப்பு:அறிவியலாளர்கள் பகுப்பு:1635 பிறப்புகள் பகுப்பு:1703 இறப்புகள் பகுப்பு:ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளர்கள் பகுப்பு:ஆங்கிலேய இயற்பியலாளர்கள்
ஆன்டன் வான் லீவன்ஹூக்
https://ta.wikipedia.org/wiki/ஆன்டன்_வான்_லீவன்ஹூக்
ஆன்டன் வான் லீவன்ஹூக் ( Anton van Leeuwenhoek, 1632-1723), நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்கை வரலாற்று ஆய்வாளரும் நுண்ணோக்கிகளை உருவாக்கியவரும் ஆவார். இவரை நுண்ணுயிரியலின் தந்தை என்பர். இவரே முதலாவது நுண்ணுயிரியலாளர் ஆவார். இவர் நுண்ணோக்கிகளை களை மேம்படுத்தியதுடன், நுண்ணுயிர்கள் என்று அழைக்கப்படும் ஒருகல விலங்குகளை முதன் முதலில் அவதானித்தவரும் இவரே. அவர், 247க்கும் மேற்பட்ட நுண் நோக்கும் கருவிகளை உருவாக்கினார்; அவற்றுள் சில, 270 மடங்குக்கும் அதிகமாக உருப்பெருக்கம் செய்யும் திறன் பெற்று இருந்தன. பாக்டீரியாக்கள், புரோட்டோசோவாக்கள், ஸ்பெர்மடோசோவாக்கள், தசைநார்கள், குருதிச் சுற்றோட்டத்தொகுதியில், மயிர்த்துளைக்குழாய்களூடாக, குருதியின் அசைவு என்பவற்றை நுண்ணோக்கியில் அவதானித்து அறிவித்தவரும் இவரே. இரத்த நாள ஓட்டம் பற்றிய விவரிப்பில், இரத்தச் சிவப்பு அணுக்களைப் பற்றியும் பதிவு செய்துள்ளார்.Lane, Nick (6 March 2015). "The Unseen World: Reflections on Leeuwenhoek (1677) 'Concerning Little Animal'." Philosophical Transactions of the Royal Society B: Biological Sciences . 2015 Apr; 370 (1666): வெளி இணைப்புகள் ஆன்டன் வான் லீவன்ஹூக் பற்றிய இணையத்தளம் மேற்கோள்கள் பகுப்பு:அறிவியலாளர்கள் பகுப்பு:1632 பிறப்புகள் பகுப்பு:1723 இறப்புகள்
கிரிகோர் மெண்டல்
https://ta.wikipedia.org/wiki/கிரிகோர்_மெண்டல்
கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள். மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில், இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. 1866ல் இது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். எனினும், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; ஏற்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்கள் மெண்டல் எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இன்று, மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள் மரபியலின் அடிப்படையாக விளங்குகின்றன. வாழ்க்கைக் குறிப்பு ஆத்திரியப் பேரரசில் உள்ள ஐன்செண்டோர்ஃபு (மொராவியா) (Heinzendorf (Moravia)) (தற்பொழுதைய இன்றிசெட்டு, நவீ இல்றீன் (Hynčice, Nový Jičín) மாவட்டம், செக் குடியரசு) என்ற இடத்தில் பிறந்தார். மெண்டல், தன் இள வயதில் தோட்ட வேலை பார்த்தார். பின் ஓல்முட்டுசு (Olmutz) மெய்யியல் நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். 1843ல் பெறனோவில் உள்ள அகத்தீனிய மடத்தில் சேர்ந்தார். அதன் பிறகு வியன்னா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலச் சென்றார். தாவரங்களில் இருந்த வேறுபாடுகளை ஆய்வு செய்வதற்கு, அவரது பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மடத்தில் உடன் பணியாற்றியவர்களும் தூண்டுகோலாக விளங்கினர். மெண்டலுக்கு இயற்கை மீதிருந்த காதலே அவருடைய ஆராய்ச்சி மனப்பான்மைக்கு முக்கியக் காரணமாகும். தாவரங்கள் தவிர, வானியலிலும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. மெண்டல், தன் மடத்திலிருந்த தோட்டத்திலேயே ஆராய்ச்சிப் பணிகளைச் செய்தார். 1856இல் இருந்து 1863 வரை பல நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்ட பட்டாணிச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபுப் பண்புகளை ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, பாரம்பரிய இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படும் செயல்முறையை விளக்க, இரு முக்கிய விதிகளை முன்மொழிந்தார். அவை பின்னாளில் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றன. 1865ஆம் ஆண்டு, பொகீமியாவில் (Bohemia) உள்ள புருன் (Brunn) இயற்கை வரலாற்றுச் சங்கத்தில் நடந்த இரண்டு அமர்வுகளில் தாவரக் கலப்பினமாக்கல் ஆய்வுகள் என்ற தலைப்பிலான தம்முடைய ஆய்வு அறிக்கையை முன்வைத்தார். எனினும், அந்தக் காலகட்டத்தில் மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை எவரும் உணரவில்லை. அதற்கடுத்த 35 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே பிற அறிஞர்கள் அவருடைய ஆய்வை மேற்கோள் காட்டினர். பட்டாணியில் தனது ஆய்வை முடித்துக்கொண்டவர், பின்னர் விலங்குகளிலும் தன் ஆய்வை மேற்கொள்ளும் எண்ணத்துடன் தேனீக்களில் தனது ஆய்வைத் தொடங்கினார். தேனீக்களில் ஒரு கலப்பினத்தை அவர் தோற்றுவித்த போதிலும், அந்தக் கலப்பினம் நிலைத்து நிற்காமல் அழிந்து போனது. இராணித் தேனீயின் இனப்பெருக்க நடவடிக்கையை கட்டுப்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் காரணமாக, தேனீக்களின் மரபியல் பற்றிய சரியானதொரு புரிதலை அவரால் கொடுக்க முடியாமல் போனது. அவர் இனங்கண்டு எடுத்துரைத்த சில புதிய தாவர இனங்களுக்குரிய சீர்தர தாவரவியல் ஆசிரிய குறுக்கங்களில் (The standard botanical author abbreviation) ‘மெண்டல்' எனக் குறிப்பிடப்படுகின்றது. 1868 -இல், அரசாங்கம் சமய நிறுவனங்களின் மீது சிறப்பு வரிகளை விதிக்க முயன்ற போது, அதற்கு எதிராக செயற்பட வேண்டிய நிலையில் இருந்தார். எனவே, தனது அறிவியல் நோக்கிலான வேலைகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு, நிருவாகக் கடமைகளை செய்யத் தொடங்கினார். சனவரி 6, 1884ஆம் ஆண்டு ஆத்திரியா-அங்கேரி (தற்பொழுதைய செக் குடியரசு)ல் உள்ள பெறனோ என்ற இடத்தில் நீடித்தக் கல்லீரல் அழற்சி (chronic nephritis) நோயால் உயிரிழந்தார். மெண்டலின் ஆராய்ச்சி மீட்டெடுப்பு thumb|ஆட்சியுடைய, பின்னடைவான தோற்றவமைப்புக்கள். (1) பெற்றோர் சந்ததி. (2) F1 சந்ததி. (3) F2 சந்ததி. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவம் உணரப்படாமலேயே இருந்தது. 1900ல் இயூகோ டி விரீசு (Hugo de Vries), காருல் கோரென்சு (Carl Correns) மற்றும் எரிக்கு வான் இட்செர்மர்க்கு (Erich von Tschermak) ஆகிய அறிஞர்கள் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளை மீட்டெடுத்தார்கள். அவர்கள் செய்து பார்த்த சோதனைகளில் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளைச் சரிபார்த்துக்கொள்ள முடிந்தது. அதன் பின்னரும் கூட, மெண்டலின் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் பற்றி வில்லியம் பேட்சனுக்கும் கார்ல் பியர்சனுக்கும் இடையில் கடும் விவாதங்கள் நிகழ்ந்தன. 1918ல், ரொனால்டு பிசர் மெண்டலின் மரபியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நவீன பரிணாம உயிரியல் துறைக்கு வித்திட்டார். 1930கள் 1940 களில், அவரது ஆய்வுகளை மீட்டெடுத்து, டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கையுடன் சேர்த்து, தற்கால நவீன கொள்கைகளை உருவாக்கினார்கள். மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளின் நம்பகத்தன்மை அவ்வப்போது கேள்விக்குளாக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற புள்ளியியலாளரான ரொனால்டு பிசர் மெண்டலின் ஆய்வுகளில் கூறப்பட்டிருந்த F1 சந்ததியின் விகிதத்தை ஆய்வுசெய்து, அவை நம்ப முடியாத வகையில் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தை மிக அண்மித்திருப்பதாக கருதினார். மெண்டல், உண்மைக்குப் புறம்பான முறையில் தன் ஆராய்ச்சி முடிவுகளைத் திருத்தி எழுதினார் என்று சொல்ல முடியாது என்றாலும், அவரின் ஆராய்ச்சி முடிவுகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் எளிமையாக உள்ளன. பெரும்பாலும், அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் இவ்வளவு எளிமையாக கிடைத்து விடுவதில்லை. இது போக, அவர் பெரும்பாலும் ஒரே மரபணுவில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாகத் தாவரங்களில் விளையும் வேறுபாடுகளை மட்டும் கொடுத்திருந்தார். பல மரபணுக்களையும் அவர் கவனித்திருந்தார் என்றால், மரபணுக்களின் இணைப்புகளின் காரணமாக முடிவுகள் வேறு மாதிரியாகவோ இவ்வளவு எளிமையாகவோ கிடைத்திருக்காமல் இருக்கலாம். இதனால், ஒருவேளை மெண்டல், தான் பரிந்துரைத்த மரபியல் கோட்பாடுகளுக்குப் புறம்பாக வந்த ஆராய்ச்சி முடிவுகளை மறைத்திருக்கக் கூடுமோ என்ற ஐயப்பாடும் நிலவுகிறது. மெண்டலும் டார்வினும் இங்கிலாந்து இயற்கையிலாளர் சார்லஸ் டார்வினும் (1809 — 1882) மெண்டலும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். மெண்டல், டார்வினின் ”உயிரினங்களின் தோற்றம்” கட்டுரையைப் படித்திருந்த போதிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கவில்லை. மெண்டலின் ஆராய்ச்சிக் கட்டுரையை டார்வின் பெற்றுக் கொண்ட போதிலும், இறுதி வரை அதைப் படிக்கவில்லை என்று தெரிய வருகிறது. இது போன்ற காரணங்களால், 1920 வரை பரிணாமம் குறித்த கோட்பாடுகள் உருப்பெறாமலே இருந்தன. படங்கள் நூலாதாரம் William Bateson On-line Facsimile Edition: Electronic Scholarly Publishing, Prepared by Robert Robbins Robert Lock, Recent Progress in the Study of Variation, Heredity and Evolution, London, 1906 Reginald Punnett, Mendelism, Cambridge, 1905 Curt Stern and Sherwood ER (1966) The Origin of Genetics. James Walsh, Catholic Churchmen in Science, Philadelphia: Dolphin Press, 1906 Ronald A. Fisher, "Has Mendel's Work Been Rediscovered?" Annals of Science, Volume 1, (1936): 115–137. Discusses the possibility of fraud in his research. வெளி இணைப்புகள் மெண்டல் இணையத்தளம் மெண்டலின் ஆராய்ச்சிக்கட்டுரை (ஆங்கிலத்தில்) மெண்டல் மரபியல் அருங்காட்சியகம் கத்தோலிக்க கலைக்களஞ்சியத்தில் "Mendel, Mendalism" குறித்த பதிவு பகுப்பு:ஆஸ்திரிய அறிவியலாளர்கள் பகுப்பு:மரபியலாளர்கள் பகுப்பு:1822 பிறப்புகள் பகுப்பு:1884 இறப்புகள் பகுப்பு:செக் உயிரியலாளர்கள் பகுப்பு:ஆஸ்திரிய உயிரியலாளர்கள்
அலெக்சாண்டர் பிளெமிங்
https://ta.wikipedia.org/wiki/அலெக்சாண்டர்_பிளெமிங்
அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங் அஞ்சல் தலை||right||thumb|272px சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார். பெனிசிலின் கண்டுபிடிப்பு உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு. பிறப்பு ஃப்ளெமிங் 1881 ஆகஸ்ட் 6 அன்று ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. அங்குதான் இயற்கையை ரசிக்கவும், எதையும் கூர்ந்து நோக்கி அறியவும் அவர் பயிற்சி பெற்றார். பின்னாளில் அவர் பெனிஸிலின் என்ற அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க இப்பயிற்சியே உதவி செய்தது. தொழில் நுட்ப கல்லுாரி படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக தனது 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது. நோய்க்கிருமிகளுக்கு எதிரான போர் படிப்பை முடித்த பிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஃப்ளெமிங். ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார். ரத்தத்தைப் பரிசோதித்து அந்த நோயை எளிதில் கண்டறியும் ஒரு மேம்பட்ட முறையை ஃப்ளெமிங் அறிமுகப்படுத்தினார். நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் ரைட் குழுவினரின் தடுப்பூசி மட்டும் பயன்படுத்தப்பட்டிரா விட்டால், ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பார்கள். போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர். இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார். குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது. பல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோசைம்’ எனப் பெயரிட்டார். காளானிலிருந்து பெனிசிலின் 1928ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங்.கிடைத்த மருந்து ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர். பாராட்டுக்களும் விருதுகளும் 1945ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டது. ஆறாம் ஜோர்ஜ் மன்னரால் 1944 ஆம் ஆண்டில் நைட் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்."People of the century". P. 78. CBS News. Simon & Schuster, 1999 1999 ஆம் ஆண்டில் டைம் சஞ்சிகையால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு நிறைவுறும் தறுவாயில் சுவீடனிலிருந்து வெளிவரும் பிரசித்திபெற்ற மூன்று சஞ்சிகைகள் பென்சிலினை கடந்த ஆயிரமாண்டு காலத்தின் சிறந்த கண்டுபிடிப்பாக அறிவித்தன. 2002 ஆம் ஆண்டில் பிபிசியால் மக்களின் வாக்களிப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரித்தானியாவின் முக்கியமான 100 நபர்களின் பட்டியலில் அலெக்சாண்டர் பிளெமிங்கும் உள்ளடக்கப்பட்டார்."100 great Britons - A complete list". Daily Mail. Retrieved 3 August 2012 அலெக்சாண்டர் பிளெமிங்கின் ஞாபகார்த்தமாக சிறுகோள் படையிலுள்ள ஒரு சிறுகோளுக்கு 91006 பிளெமிங் எனப் பெயரிடப்பட்டது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் டைம் 100: நூற்றாண்டின் மிக முக்கிய மனிதர்கள் அலெக்ஸாண்டர் பிளெமிங் பற்றிய குறிப்பு பகுப்பு:1881 பிறப்புகள் பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள் பகுப்பு:ஆங்கிலேய அறிவியலாளர்கள் பகுப்பு:இசுக்காட்லாந்து அறிவியலாளர்கள் பகுப்பு:1955 இறப்புகள்
ஜேம்ஸ் டூயி வாட்சன்
https://ta.wikipedia.org/wiki/ஜேம்ஸ்_டூயி_வாட்சன்
ஜேம்ஸ் டூயி வாட்சன் (James Dewey Watson) (பிறப்பு - 1928), அமெரிக்கப் பேராசிரியரும் உயிரியலாளரும் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கேவண்டிஷ் ஆய்வகத்தில், பிரான்சிஸ் க்ரிக்குடன் இணைந்து (1951) டி.என்.ஏயின் மூலக்கூறு அமைப்பை ஆராயும் பணியில் ஈடுபட்டார். (எம். ஹெச். எஃப் வில்கின்ஸின் ஊடு-கதிர் விளிம்பு விளைவு ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு செய்யபட்ட) இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் 1953ல் ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 1962ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசை க்ரிக், வில்கின்ஸ் ஆகியோருடன் இணைந்து வாட்சன் பெற்றுக்கொண்டார்.1989 முதல் 19992 வரை (அமெரிக்க) தேசிய மனித மரபணு ரேகை ஆராய்ச்சி மையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். மரபியல், பாக்டீரியா திண்ணி மற்றும் புற்று நோய் தொடர்பான ஆராய்ச்சித் துறைகளில் வாட்சன் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளார். மேலும் படிக்க James D. Watson and Francis H. Crick. "Letters to Nature: Molecular structure of Nucleic Acid." Nature 171, 737–738 (1953). James D. Watson, The Double Helix: A Personal Account of the Discovery of the Structure of DNA, Atheneum, 1980, (first published in 1968) James D. Watson, Genes, Girls, and Gamow: After the Double Helix, Random House, January, 2002, hardcover, 259 pages, James D. Watson and Andrew Berry, DNA: The Secret of Life, Random House, April, 2003, hardcover, 464 pages, வெளியிணைப்புகள் ஜேம்ஸ் டூயி வாட்சன் - கோல்ட் ஸ்ப்ரிங் ஹார்பர் ஆய்வகம் அருஞ்சொற்பொருள் பாக்டீரியா திண்ணி - Bacteriophage மனித மரபணு ரேகை - Human genome ஆக்சியகற்றப்பட்ட ரைபோ கரு அமிலம் - Deoxy ribo nucleic acid பகுப்பு:1928 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:அமெரிக்க இறைமறுப்பாளர்கள் பகுப்பு:நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள் பகுப்பு:ஆங்கில அமெரிக்கர்கள் பகுப்பு:அமெரிக்க அறிவியலாளர்கள் பகுப்பு:சிக்காகோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்
பிரான்சிஸ் கிரிக்
https://ta.wikipedia.org/wiki/பிரான்சிஸ்_கிரிக்
thumb|right|பிரான்சிஸ் கிரிக் பிரான்சிஸ் கிரிக் (Francis Crick, சூன் 8, 1916-சூலை 28, 2004), இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி ஆவார். டி.என்.ஏயின் அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, 1962 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை மௌரிஸ் வில்கின்ஸ் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார். அமெரிக்காவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1959), ராச்செஸ்டர் பல்கலைக்கழகம் (1959), ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி (1960) மற்றும் ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்(Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். இவற்றையும் பார்க்கவும் நோபல் பரிசு நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் மேற்கோள்கள் பகுப்பு:நோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள் பகுப்பு:அறிவியலாளர்கள் பகுப்பு:2004 இறப்புகள் பகுப்பு:1916 பிறப்புகள்
ஜான் கிரிகோர் மெண்டல்
https://ta.wikipedia.org/wiki/ஜான்_கிரிகோர்_மெண்டல்
வழிமாற்று கிரிகோர் மெண்டல்
சீர்காழி
https://ta.wikipedia.org/wiki/சீர்காழி
சீர்காழி (Sirkazhi) தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். LocalBodies of MAYILADUTHURAI DISTRICT நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆறும், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. சீர்காழி நகரின் நடுவே புகழ்பெற்ற திருஞானசம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சட்டைநாதர் ஆவார் மக்கள் வகைப்பாடு இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,228 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 16,196 ஆண்கள், 16,032 பெண்கள் ஆவார்கள். சீர்காழி மக்களின் சராசரி கல்வியறிவு 84.98% ஆகும். சீர்காழி மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.சீர்காழி நகரத்த்தின் மக்கள்தொகை பரம்பல் இங்கு ஆதி திராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்த மக்கள் பரவலாக வாழுகின்றனர். படையாட்சிகள் (வன்னியர்), நாயுடுகள், பிள்ளைமார்கள் என்று வாழ்கின்றனர். பல தலைமுறைகளாக இங்கு கிறித்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்குப் பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர். திருக்கோயில்கள் இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் சில, சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில் சீர்காழி, செங்கமேடு, திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீசுவரன்கோவில், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில், திருக்கோலக்கா, திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில், வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில், திருக்கடையூர், திருவெண்காடு, திருமணஞ்சேரி மற்றும் திருவாழி – திருநகரி விண்ணவர் கோவில்கள் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன. உண்மையான பெயர் ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே தமிழில், "சீகாழி' என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், "காழி நகரம்" என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர். திருஞானசம்பந்தர் இந்தச் சீகாழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் திருஞானசம்பந்தர் ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம், தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத இருதயர், குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் பார்வதியையும் பரமேசுவரனையும் அம்மையப்பராக உணர்ந்து, "அம்மே அப்பா' என்று அழுதார். இதைக் கண்ட இறைவன், "கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது. வாயில் பால் வழிந்த நிலையில் நின்ற சம்பந்தரைக் கண்ட அவரது தந்தையார், "பால் கொடுத்தது யார்? என்று கோபத்துடன் கேட்டு, கோலெடுத்து அதட்டினார். அப்போது சம்பந்தர் "தோடுடைய செவியன்' என்னும் திருப்பதிகம் பாடியருளி, சிவ-பார்வதியே இந்த அருளைச் செய்தனர் என்று தனது தந்தைக்கு உணர்த்தினார். அதன்பின் திருஞான சம்பந்தர் சைவ சமயம் தழைக்க, பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று திருப்பதிகங்கள் பாடினார். தனது பதினாறாவது வயதில், நல்லூர்ப்பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில், தன்னுடைய திருமணத்தை முடித்து அன்பர்கள் கூட்டத்துடன் தானும் சிவ ஜோதியில் கலந்தார். இப்படிச் சைவம் தழைக்கத் தோன்றி, அயராது பாடுபட்டு வெற்றி பெற்ற ஞானசம்பந்தரின் பிறந்த தலமென்ற பெருமையே சீகாழிக்குப் போதுமானது. புராண வரலாறு ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீகாழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் "தோணிபுரம்' என்றும் போற்றப்படுகிறது. மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக பைரவர், தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்த மகாலட்சுமி மாங்கல்ய பிச்சை கேட்க, மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன். பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி பைரவருக்கு "சட்டை நாதர்' என்ற திருப்பெயர் ஏற்பட்டது. தலப் பெயர்கள் காவிரியின் வடகரைத் தலங்களுள் சீகாழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இதனைக் "கழுமல வள நகர்' என்றும் குறிப்பிடுவர். பிரமன் தன் தொழில் தடையின்றி நடைபெற வழிபட்டதால் "பிரம்ம புரம்' என்றும், மூங்கில் வடிவமாக இறைவன் தோன்றி இந்திரனுக்கு அருள் செய்ததால் "வேணுபுரம்' என்றும், சூரனுக்கு பயந்த தேவர்கள் புகலிடமாகப் பூசித்ததால், "புகலி' என்றும், வியாழன் பூசித்ததால் "வெங்குரு' என்றும், பிரளய காலத்தில் தோணியாய் மிதந்ததால் "தோணிபுரம்' என்றும், ராகு பூசித்ததால் "சிரபுரம்' என்றும், வராக மூர்த்தி பூசித்ததால் "பூந்தராய்' என்றும், சிபிச் சக்கரவர்த்தி பேறு பெற்றதால் "புறவம்' என்றும், கண்ணன் பூஜித்ததால் "சண்பை' என்றும், பத்திரகாளி, காளிங்கன், பாம்பு பூஜித்ததால் "ஸ்ரீகாளிபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது. கல்வெட்டுகள் இவ்வாலயத்தில் 47 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீர ராஜேந்திரன், ராஜாதிராஜ தேவர், கோப்பெருஞ் சிங்கன், பரகேசரி வர்மன், கிருஷ்ண தேவராயர் எனப் பல்வேறு மன்னர்களின் கல்வெட்டுகள் இங்குள்ளன. ஆலய அமைப்பு சீகாழி நகரின் மையப் பகுதியில், நான்கு புறமும் கோபுரங்களுடன், உயர்ந்த திருச்சுற்று மதில்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. இறைவன் பிரம்மபுரீசுவரருக்கும், இறைவி திருநிலை நாயகிக்கும், திருஞானசம்பந்தருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. வடக்கு உட்பிரகாரத்தில் முத்துச் சட்டை நாதர் அருள் பாலிக்கின்றார். தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் காட்சியைக் காணலாம். இங்கு சட்டை நாதர் பலிபீடமும் அமைந்துள்ளது. மேல் பிரகாரத்தில், கருவறை விமானமேறிச் சென்று தரிசிக்கப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. விமானத்தில் பெரிய உருவத்தில் உமா மகேசுவரர், தோணியப்பராகக் காட்சி தருகின்றார். இவரையடுத்து மேல்புறத்தில் சட்டை நாதர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் திருப்பெயராலேயே இத்திருத்தலம் அழைக்கப்படுகின்றது. ஆலய வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் திருஞானசம்பந்தர் திருக்கோயிலும், அதனருகே திருநிலைநாயகி திருக்கோயிலும் அமைந்துள்ளன. அதன் அருகே பெரிய அளவில் பிரம்ம தீர்த்தம், நாற்புறமும் கருங்கல் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. இறைவன் இவ்வாலயத்தில் குரு மூர்த்தம், லிங்க மூர்த்தம், சங்கம மூர்த்தம் என மூன்று வகையான மூர்த்தங்களும் ஒருங்கே அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். மலைமீது பெரிய நாயகி சமேத பெரிய நாயகராகக் காட்சி தரும் தோணியப்பரே குரு மூர்த்தமாவார். இவரே திருஞானசம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு ஆவார். இத்தலத்தின் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்க மூர்த்தமாகும். இவர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர். விமானத்தின் உச்சியில் ஆணவ மாயையால் உலகைக் கலக்கிய திருமாலின் உடலைப் பிளந்து, அவருடைய எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் கொண்டு, "சட்டை நாதர்' என்ற திருநாமத்தோடு தனிச் சிறப்புடன் பைரவர் விளங்குகிறார். தீர்த்தங்கள் இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், கழுமல தீர்த்தம், விநாயக நதி என இருபத்திரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் ஊட்டிய இடமான பிரம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். விழாக்கள் இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இதில் இரண்டாம் திருவிழா, திருமுலைப்பால் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூர உற்சவமும், நவராத்திரி உற்சவமும் நடைபெறுகின்றன. சட்டை நாதருக்கு வெள்ளிக் கிழமைதோறும் நள்ளிரவில் நடைபெறும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவருக்கு புனுகுச் சட்டம் சார்த்தி வடை, பாயசம் படைக்கப்படுகிறது. நிர்வாகம் இவ்வாலயம் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.சீகாழி சட்டைநாத சுவாமி ஆலயம் வருவோர்க்கு மிகப் பெரிய வாய்ப்பு ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருஞான சம்பந்தர் அவதரித்த இல்லத்தைத் தரிசிப்பது (இது காஞ்சி சங்கர மடத்தின் பராமரிப்பில் உள்ளது). ஞானசம்பந்தருக்குப் பொன்தாளம் வழங்கிய "திருக்கோலக்கா' என்னும் தலமும் அருகில் இருக்கின்றது. ஆதாரங்கள் இவற்றையும் பார்க்கவும் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருக்காழிச்சீராம விண்ணகரம் தாடாளன் கோயில் வெளி இணைப்புகள் விக்கிமேப்பியாவில் சீர்காழி அமைவிடம் பகுப்பு:மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஊர்களும் நகரங்களும்
உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு
https://ta.wikipedia.org/wiki/உயிரித்_தொழில்நுட்பத்தின்_வரலாறு
கி.பி.1ஆம் நூற்றாண்டு வரை கி. மு. 8,000 - மனிதர்கள் பயிர் விளைவிக்கவும் வீட்டு விலங்குகளை வளர்க்கவும் பழகுகிறார்கள். கி. மு. 4,000 - எகிப்தியர்கள் Wine (பழ ரச பானம் ?) செய்வதில் நிபுணத்துவம் அடைகிறார்கள். கி.மு. 2,000 - எகிப்தியர்களும் சுமேரியர்களும் வெண்ணை செய்வதிலும் Brewing-லும் நிபுணத்துவம் அடைகிறார்கள். கி. மு. 1,800 - Yeast-களைக் கொண்டு Wine, Beer, Bread செய்வதில் முதன்முதலாக உயிரித் தொழில்நுட்பக் கொள்கைகள் பயன்படுத்தப்பட்டன.மது பானம்,Baking செய்வதில் பயன்பட்ட Saccharomyces வகை Yeast-கள் வணிக முக்கியத்துவம் கொண்டிருந்தன. கி. மு. 500 - சீனாவில்,moldy soybean curd நோய் உண்டாக்கும் கிருமிகளைக் கொல்ல பயன்பட்டது. கி. மு. 300 - கிரேக்கர்கள் ஒட்டுத் தாவரங்களை (grafting techniques for plant breeding) செய்யும் முறையை அறிகிறார்கள். கி. பி. 1ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு வரை கி. பி. 100 AD - சீனர்கள், தூளாக்கப்பட்ட chrysanthemum-களிலிருந்து முதல் பூச்சிக்கொல்லியைக் கண்டுபிடிக்கின்றனர். கி. பி. 1663 - ராபர்ட் ஹூக்கின் திசுள் (Cell) கண்டுபிடிப்பு. 1675 - ஆன்டன் வான் லீவன்ஹூக்கின் பாக்டீரியா கண்டுபிடிப்பு. 1700கள் - பல Hybrid வகை தாவரங்களை ஆய்வாளர்கள் கண்டறிகிறார்கள். 1830 - புரதங்கள் கண்டுபிடிப்பு. 1833 - முதல் enzyme கண்டுபிடிப்பு. 1835 - எல்லா உயிரினங்களும் திசுள்களால் ஆனவை என்ற Matthias Scheiden மற்றும் Theodor Schwann கோட்பாடு வெளியீடு;ஒரு திசுளிலிருந்து தான் இன்னொரு திசுள் உருவாக முடியும் என்று Viichow அறிவிக்கிறார். 1859 - சார்லஸ் டார்வினின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த "On the Origin of Species" புத்தகம் வெளியீடு. 1861 - Louis Pasteur பால் பதப்படுத்தும் முறையை கண்டறிகிறார். 1865 - ஜான் கிரிகோர் மெண்டல்,Law of heridity-ஐக் கண்டுபிடிக்கிறார். 1870-1890 - பல வகை கலப்பினத் தாவரங்கள் உருவாக்கம். விவசாயிகள், நைட்ரஜனேற்ற பாக்டீரியாக்களை பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். கி.பி.19ஆம் நூற்றாண்டு முதல்.. 1919 - 'Biotechnology’ என்ற சொல் முதன்முதலில் பயன்படுத்தப்படுகிறது. 1928 - சர் அலெக்ஸாண்டர் ஃளெமிங்கின் பென்சிலின் (Antibiotic) கண்டுபிடிப்பு. 1941 - Danish நுண்ணுயிரியலாளர் ஏ. ஜஸ்டின் "Genetic engineering” (மரபணுப்பொறியியல்) என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். 1942 - பென்சிலின் உற்பத்தி. 1953 - ஜேம்ஸ் வாட்சனும் ஃரான்சிஸ் க்ரிக்கும் முதன்முதலில் DNAவின் Double helix வடிவத்தை விவரிக்கிறார்கள். 1958 - முதன்முதலில், சோதனைக்குழாயில் DNA உருவாக்கப்பட்டது.. 1968 - 20 அமினோ அமிலங்களை உருவாக்கும் மரபியல் குறியீடுகளை ( genetic codes )கண்டறிந்ததற்காக Marshall W. Nirenbergம் ஹர் கோபிந்த் குரானாவும் நோபல் பரிசு பெறுகிறார்கள். 1970 - முதல் restriction enzyme-ஐ அமெரிக்க நுண்ணுயிரியலாளர் டேனியல் நேதன்ஸ் ( Daniel Nathans ) கண்டுபிடித்தார்.restriction enzyme-கள் மரபியல் பண்புகளைத் தரும் வேதிப்பொருட்களை ( genetic material ) பல துண்டுகளாக வெட்ட உதவுவதன் மூலம் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ஏதுவாக இருக்கிறது. 1971 - முதன்முதலில் ஒரு முழு ஜீன் ( Gene ) சோதனைச்சாலையில் உருவாக்கப்படுகிறது. 1972 - DNA துண்டுகளை ஒட்ட உதவும் DNA லைகேஸ் ( DNA ligase ) முதன்முதலில் பயன்படுத்தப்படுகிறது. முதன்முதலில், இரண்டு வெவ்வேறு வைரஸ்களின் DNA துண்டுகளை இணைத்து recombinant molecule செயற்கை முறையில் உருவாக்கப்படுகிறது. 1973 - Stanley Cohen-ம் Herbert Boyer-ம் சேர்ந்து recombinant DNA தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தனர்.இந்நிகழ்வு நவீன உயிரித் தொழில்நுட்பத்திற்கு வித்திட்டதாக கருதப்படுகின்றது. 1976 - ஒரு குறிப்பிட்ட ஜீனை உருவாக்க எந்தெந்த கார ஜோடிகள் ( Base pairs ) சேர்ந்து உருவாக்குகின்றன என்று கண்டறியப்படுகின்றது. 1977 - மிக நீளமான DNA துண்டுகளையும் வேகமாக Sequence செய்வதற்கான செய்முறைகள் கண்டறியப்படுகின்றன. 1978 - Recombinant மனித இன்சுலின் ( Insulin ) முதன்முதலில் உருவாக்கப்படுகிறது. 1980 - முதல் செயற்கை recombinant DNA மூலக்கூறினை உருவாக்கியதற்காக Paul Berg, Walter Gilbert, Fredrick Sanger ஆகியோருக்கு வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1981 - முதல் transgenic விலங்கு 'the golden carp', சீன விஞ்ஞானிகளால் படி எடுக்கப்படுகிறது ( Cloned ). 1982 - கால்நடைகளுக்கான முதல் recombinant DNA தடுப்பு மருந்து உருவாக்கம். Kary Mullis,சிறிய DNA துண்டுகளை விரைவில் பெருக்கம் செய்ய உதவும் 'பாலிமரேஸ் சங்கிலித்தொடர் வினையை' ( polymerase chain reaction (PCR)) கண்டுபிடிக்கின்றனர். 1990 - உலகின் முதல் 'மனித மரபு ரேகை திட்டம்' ( Human genome project ) தொடங்குகிறது. 1997 - டாலி - படியெடுக்கப்பட்ட முதல் பாலூட்டி - பிறப்பு. மனித மரபு ரேகை மற்றும் மனித உரிமைகள் மீதான அனைத்துலக தீர்மானத்தை யுனெசுகோ அறிவிக்கிறது. 1998 - கிட்டத்தட்ட 30,000 ஜீன்களின் இருப்பிடத்தை வரையறுக்கும் முதல் 'மாதிரி மனித மரபு ரேகை' அறிவிப்பு. ( First draft of HUman Genome ) 2000 - அமெரிக்க விஞ்ஞானிகள் Craig Venter மற்றும் Francis Collins முதல் முழுமையான மனித மரபு ரேகையை உலகுக்கு அறிவிக்கிறார்கள். DNAவின் double helix வடிவத்தை வாட்சனும் க்ரிக்கும் கண்டுபிடித்து 50 ஆண்டுகள் நிறைவு. பகுப்பு:உயிரித் தொழில்நுட்பம்
உயிரித் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்
https://ta.wikipedia.org/wiki/உயிரித்_தொழில்நுட்பத்தின்_பயன்பாடுகள்
வேளாண்மை தாவரங்களில் மரபணு மாற்றம் செய்வதின் மூலம், பின்வரும் விரும்பத்தகுந்த குணங்களைப் பெறலாம். அதிக நோய் எதிர்ப்பு (Added Immunity) வறட்சி எதிர்ப்பு (Drought resistance) பூச்சி எதிர்ப்பு (Insect resistance) பூஞ்சை எதிர்ப்பு (Fungal resistance) அதிக விளைச்சல் (Increased yield) அதிக சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்கள் (Added nutrients) ஒட்டுத் தாவர இனங்கள் (Hybrid plant varieties) அதிக உப்புத் தன்மை கொண்ட நிலங்களிலும் விளைச்சல் தண்ணீர் அதிகம் தேங்கியுள்ள நிலங்களிலும் விளைச்சல் மருத்துவம் DNA தடுப்பு மருந்துகள்(DNA Vaccines) - ஒரு நோய்க்கு எதிரான தடுப்பு சக்தியைத் தரும் குறிப்பிட்ட Antigen-களை உருவாக்கும் மரபணுப்பகுதிகளை நேரடியாக ஒருவருக்கு செலுத்துவதன் மூலம், அந்த நோய்க்கு எதிரான அவருடைய தடுப்பு சக்தியைத அதிகரிக்க இயலும். மரபணு சிகிச்சை (Gene therapy) - பரம்பரை நோய்கள் மற்றும் மரபணு சார்ந்த நோய்கள் உள்ளவர்களின் கோளாறான மரபணுக்களை நல்ல மரபணுக்களைக் கொண்டு மாற்றி அந்நோயை குணப்படுத்துவதோ அடுத்த தலைமுறைக்கு பரவாமல் செய்வதோ கொள்கையளவில் சாத்தியமாகும்.எனினும் இது குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் முழு வெற்றி அடையவில்லை. சுரப்பிகள் (Hormones) - குறைந்த அளவில் சுரப்பதால் குறைப்பாடுகளை உருவாக்கும் இன்சுலின் போன்ற சுரப்பிகளை பாக்டீரியாக்களைக் கொண்டு தயாரித்து மனித உடலில் செலுத்துவதன் மூலம் அக்குறைப்பாடுகளை போக்க இயலும். சுற்றுச்சூழல் உயிர் நுட்பவியல் சுற்றுப்புறச்சூழலில் முக்கியப்பங்கினை வகிக்கிறது.இதன் மூலம் இயற்கை சுற்றுப்புறச்சூழல் மற்றும் அதன் முக்கிய கூறுகள் ஆகியனவற்றை பாதுகாத்தல் மற்றும் பொருளாதார ரீதியாக பயன்படுத்துதல் உள்ளிற்றவற்றைஉள்ளடக்கியது.சுற்றுப்புறசூழலை மாசுபடுத்தும் காரணிகளை உயிர்காரணிகள் கொண்டு ஒடுக்கவும், அதனை மறுசுழற்சி முறைகள் மூலம் பொருளாதார பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. சட்டம் உயிர்காரணிகள் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் தோற்றம், அதனை பயன்படுத்தும் தர்மம் ஆகியவற்றை உள்ளடக்கியது உயிர்சட்ட வகைமை. இதன் மூலம் உயிர் கூறுகள் பற்றிய ஆராய்ச்சிகள் முறைமை படுத்த படுகின்றன. தொழிற்துறை ஆடை தயாரிப்பு தோல் பதனிடுதல் உணவு பதப்படுத்துதல் பென்சால்டிஹைட் (benzaldihyde) போன்ற பாதுகாப்பான்கள் (preservatives) உணவு பொருட்களுடன் சேர்த்து பல நாட்கள் கெடாமல் பாதுகாக்கலாம். பகுப்பு:உயிரித் தொழில்நுட்பம்
திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்
https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை_இரண்டாம்_அருள்_சின்னப்பர்
திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope St. John Paul II),Winfield, Nicole "Pope John Paul II moves a step closer to sainthood" Associated Press ABC News 14 January 2011 Retrieved 1 May 2011 ( - யோவான்னெஸ் பாவுலுஸ் II), கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை பணியாற்றிய திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதற்தடவையாகும். இவர் 1978ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் பதவியேற்றார். வரலாற்றில் நீண்ட காலம் இப்பதவி இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர். இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும்இதை நிருபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை. ஏனனில் இவருக்கு முன்னிருந்த பல திருத்தந்தையர்களின் புனிதர் பட்டமளிப்பு பட்டியல் முழுவதும் கிடைக்க வில்லை.. இவர் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார். தம் 26 ஆண்டு ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். தம் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் இவருக்குத் தெரிந்திருந்தன. வாழ்க்கைக் குறிப்பு 1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (யோவான் பவுல்), 1929இல் எமிலியா என்ற தமது தாயை இழந்தார். தமது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932இல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941இல் இழந்தார். செருமனிய நாத்சிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939இல் மூடப்பட்டது. எனவே செருமனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் சுண்ணாம்புக்கல் அகழ்விடத்திலும் பின்னர் சொல்வாய் நகரில் வேதித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்விப்படிப்பை மீண்டும் தொடர்ந்து 1946இல் குருவானார். 1964இல் கிராக்கோவ் பேராயராகவும் 1967இல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார். 1978ஆம் ஆண்டு அக்டோபர் 16இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். 2005 ஏப்ரல் 2ஆம் நாள் காலமானார். இரண்டாம் அருள் சின்னப்பரின் பயணங்கள் 800px அருளாளர் பட்டம் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்த சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான விசாரணை தொடங்கியது. வழக்கமாக இவ்வகையான விசாரணை தொடங்குவது ஒருவரது இறப்புக்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்தே ஆகும். ஆனால், இரண்டாம் யோவான் பவுலை விரைவில் புனிதராகக் காண பொதுமக்கள் விரும்பியதைத் தொடர்ந்து திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அந்த விசாரணை உடனடியாகத் தொடங்க ஆணையிட்டு, ஐந்து ஆண்டு தாமதக் காலம் வேண்டாமென்று விதிவிலக்கு அளித்தார். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2009, திசம்பர் 19ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார். பிரான்சு நாட்டைச் சார்ந்த ஒரு கன்னியர் இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதைத் தொடர்ந்து பார்க்கின்சன் நோயிலிருந்து திடீரென குணம் பெற்றதை ஆராய்ந்த வத்திக்கான் பேராயம், அந்நிகழ்ச்சி இறையருளால் நிகழ்ந்ததே என்று அறிக்கையிட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011, மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலைஅருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.Benedict XVI Will Beatify John Paul II On 1 May, The Vatican Information ServicePope John Paul II will be beatified in Rome this May , Irish Times.. புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுதல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்ட சில மணி நேரம் சென்ற உடனேயே, அவருடைய பரிந்துரையின் பயனாக ஒரு புதுமை நிகழ்ந்ததாக செய்தி வந்தது. கோஸ்தா ரிக்கா நாட்டு புளோரிபெத் மோரா என்ற பெண்மணிக்கு ஏற்பட்ட மூளை இரத்த அழற்சி, திருத்தந்தை இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதன் விளைவாக, அற்புதமான விதத்தில் மறைந்ததாகவும், அதற்கு மருத்துவர்களால் விளக்கம் தர இயலவில்லை என்றும் செய்தி வெளியானது. இந்த நிகழ்வை ஆய்ந்த வத்திக்கான் பேராயம் அதை ஒரு புதுமை என்று அறிக்கையிட்டது. 2013, சூலை மாதம் 4ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு ஆணைப்படி, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு விரைவில் புனிதர் பட்டம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதே தருணத்தில் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் புனிதராக அறிவிக்கப்படுவார் என்றும் தகவல் தரப்பட்டது. இரு திருத்தந்தையர்களுக்கும் புனிதர் பட்டம் 2014, ஏப்பிரல் 27ஆம் நாள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது. இரு திருத்தந்தையர் புனிதர்களாக அறிவிக்கப்படுதல் இரண்டாம் யோவான் பவுல், இருபத்திமூன்றாம் யோவான் ஆகிய இரு திருத்தந்தையருக்கும் ஒரே நாளில், ஒரே நிகழ்ச்சியின்போது புனிதர் பட்டம் வழங்கப்பட்டது ஒரு சிறப்பு நிகழ்வாயிற்று. அதுபோலவே திருத்தந்தை பிரான்சிசு தமக்கு முன் திருத்தந்தைப் பணியை ஆற்றி அப்பதவியிலிருந்து விலகிய முன்னாள் திருத்தந்தையான பதினாறாம் பெனடிக்டோடு இணைந்து பொதுமக்களுக்குமுன் திருப்பலி நிறைவேற்றி அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் வரலாற்றுச் சிறப்பானதாகும். திருச்சபைத் தலைவர்கள் மற்றும் திருப்பயணிகள் பங்கேற்பு புனிதர் பட்டம் வழங்குவதற்காகத் தேர்ந்துகொள்ளப்பட்ட நாள், 2014, ஏப்பிரல் 14, ஞாயிற்றுக் கிழமை கத்தோலிக்கருக்குச் சிறப்பான நாள். இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் வருகின்ற அந்த ஞாயிற்றுக் கிழமைக்கு முந்திய மாலையில்தான் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்தார். மேலும் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறான அந்த நாள் "இறை இரக்க ஞாயிறு" என்ற பெயரால் கொண்டாடப்பட வழிவகுத்தவர் இரண்டாம் யோவான் பவுல். புனிதர் பட்டமளிப்பு நிகழ்ச்சியின்போது மறையுரை ஆற்றிய திருத்தந்தை பிரான்சிசு, தமக்கு முன் திருத்தந்தைப் பணியை ஆற்றிய இரு புதிய புனிதர்களான திருத்தந்தையரின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். அவர்கள் இருவரும் கடவுளின் இரக்கத்தை வலியுறுத்தினார்கள் என்று அவர் கூறினார். திருத்தந்தை இருபத்திரண்டாம் யோவான் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டி (1962-1965), இருபதாம் நூற்றாண்டுத் திருச்சபையின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தார். திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் "குடும்பங்களை ஆதரித்து வளர்த்தார்."புனிதர் பட்டம் அளிப்பு விழா நிகழ்ச்சி திருத்தந்தை பிரான்சிசு நிகழ்த்திய புனிதர் பட்டமளிப்பு விழாவில் அவரோடு முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கூட்டுப் பலி நிறைவேற்றினார். மேலும் உலகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 150 கர்தினால்மார், 700 ஆயர்கள் மற்றும் 1000 குருக்களும் கலந்துகொண்டனர். புனிதர்களாக அறிவிக்கப்பட்ட இரு திருத்தந்தையர்களின் மீபொருள்கள் வெள்ளிப் பேழைகளில் கொண்டுவரப்பட்டு, மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டன. திருத்தந்தை யோவானின் உடல் புனித பேதுரு பெருங்கோவிலின் கீழ்க்கோவிலிலிருந்து மேற்கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டபோது அவருடைய உடலிலிருந்து எடுக்கப்பட்ட தோல் பகுதி அவருடைய மீபொருள் ஆனது. புதிய புனிதர்களின் மீபொருள்கள் திருத்தந்தை இரண்டாம் யோவானின் மீபொருளைக் கொண்டுவந்தவர் அவருடைய பரிந்துரையால் குணம் பெற்ற பிளோரிபெத் மோரா டியாஸ் என்னும் கோஸ்தா ரிக்கா நாட்டுப் பெண்மணி. அவர், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் உடலிலிருந்து, அவர் 2005இல் இறப்பதற்குமுன் மருத்துவப் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட அவரது இரத்தம் அடங்கிய பேழை. புதிய புனிதர்களின் உருவங்கள் சித்தரிக்கப்பட்ட பிரமாண்டமான தொங்குதிரைகள் புனித பேதுரு பெருங்கோவிலின் முகப்பிலிருந்து தொங்கவிடப்பட்டிருந்தன. பீடத்தைச் சுற்றிலும் 30 ஆயிரம் மலர்கள் அணிசெய்தன. அம்மலர்களை எக்குவடோர் நாடு நன்கொடையாக அளித்திருந்தது. உலக நாடுகள் பங்கேற்பு சுமார் 500 ஆயிரம் திருப்பயணிகள் கோவில் வளாகத்திலும் அதன் முன் டைபர் நைதி நோக்கிச் செல்லும் பெருஞ்சாலையிலும் கூடி நின்று பங்கேற்றனர். போலந்து நாட்டவரான திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு வணக்கம் செலுத்த வந்திருந்த ஆயிரக்கணக்கான போலந்து திருப்பயணிகள் தம் நாட்டுக் கொடியை அசைத்தவண்ணம் நின்றனர். 93 உலக நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த புனிதர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன. அவற்றுள் 19 தூதுக்குழுக்கள் நாட்டு அதிபர்கள் தலைமையின்கீழும் 24 குழுக்கள் நாட்டுப் பிரதமர்களின் தலைமையின்கீழும் வந்தன. எசுப்பானியாவின் அரசரும் அரசியும், பெல்ஜியத்தின் முன்னாள் அரசியும் பங்கேற்றனர்.. உலகின் மிகப்பெரும் போப் சிலை போலந்தில் இவருடைய மிக உயரமான சிலை ஏப்ரல் 2013ல் திறந்து வைக்கப்பட்டது. 45 அடி உயரமும் 5,000 கிலோகிராம் எடையும் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் இந்த சிலைதான் உலகிலேயே இவரின் மிக உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சிலியில் 40 அடி உயரமுடைய இவரின் சிலையே உலகில் மிகப்பெரியதாக இருந்தது. இந்த சிலை அமைக்க தொழிலதிபர் லெஸ்ஜெக் லைசன் என்பவர் முழு நிதியுதவியும் அளித்துள்ளார். 2010ஆம் ஆண்டில் குரோஷியா நாட்டுக்குத் தம் குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். அப்போது நீரில் மூழ்கி இவருடைய மகன் இறக்கும் நிலை ஏற்பட்டது. அந்த விபத்தில் இருந்து இவருடைய மகன் உயிர் பிழைத்தார். அதற்கு திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் பரிந்துரையே காரணம் என்று நம்பிய லைசன் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக உலகிலேயே மிக உயரமான ஜான் பாலின் சிலையை அமைக்க நிதியுதவி அளித்தார். அதன்படி போலந்தின் செஸ்டோகோவா என்ற இடத்தில் இந்த சிலையை செஸ்டோகோவா நகரின் பேராயர் வாட்சுவா தேபோ திறந்து வைத்தார். உலகிலேயே உயரமான இயேசு கிறித்துவின் சிலை உலகிலேயே இயேசு கிறித்துவின் மிக உயரமான சிலையும் போலந்து நாட்டில்தான் உள்ளது. 118 அடி உயரம் கொண்ட இச்சிலை 2011இல் ஸ்வீபோட்சின் நகரில் எழுப்பப்பட்டது. அருளாளர் பட்டமளிப்பின் படத்தொகுப்பு புனிதர் பட்ட நிகழ்ச்சி படத்தொகுப்பு ஆதாரங்கள் பகுப்பு:போலந்து திருத்தந்தையர்கள் பகுப்பு:1920 பிறப்புகள் பகுப்பு:2005 இறப்புகள் பகுப்பு:புனித பேதுரு பேராலய கல்லறைகள் பகுப்பு:போலந்தின் கிறித்தவப் புனிதர்கள்‎ பகுப்பு:கிறித்தவ மெய்யியலாளர்கள்
ஆழிப்பேரலை
https://ta.wikipedia.org/wiki/ஆழிப்பேரலை
thumb|right|2004-இல் நடந்த சமுத்திர சுனாமியால் அழிவிற்குட்பட்ட சென்னை மெரினா கடற்கரை சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை (Tsunami, செப்பானிய மொழி: 津 波 ட்சு னமி "துறைமுக அலை") என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும்போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக்கூடிய மூல காரணிகளாகும். சுனாமி சொல்லிலக்கணம் சுனாமி என்பது செப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்படுகிறது. சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை, கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும். சுனாமி உண்மையில் அலைகள் இல்லை, ஏனெனில் சமீபத்திய ஆண்டுகளில், இத்தொடர் அறிவியல் சமூகத்தில் பயனிழந்து உள்ளது. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த இந்த வார்த்தை அதன் பொதுவான தோற்றத்திலிருந்து பெறப்பட்டது. இங்கு "பேரலை" என்பது ஒரு நம்ப முடியாத உயர் அலை போன்ற தோற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பெயராகும். சுனாமி, கடலலை இரண்டும் கடலில் அலையை உருவாக்கி நிலத்தை நோக்கிச் செலுத்துகிறது. இதில் சுனாமியால் ஏற்படும் கடல் நீர் ஏற்றம் பெரிய அளவினதாகவும், அதிக நேரம் நீடிக்கக் கூடியதாகவும், அதனால் உண்டாகும் இயக்கம் மிகவும் அதிகமாகவும் இருக்கும். ‘அலை' என்ற வார்த்தைக்கு “போல" அல்லது “அதே தன்மை கொண்ட" என்ற பொருளும் உண்டு. சுனாமி என்பது துறைமுகங்களில் ஏற்படும் அலை அல்ல என்று புவியியலாளர்கள் மற்றும் கடலியலாளர்களும் கருதுகின்றனர். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உண்டு. தமிழில் “ஆழிப்பேரலை என்று உள்ளது. ஆக்கினசு மொழியில் சுனாமியை “பியுனா" அல்லது “அலோன்" புலூக் என்பர். “அலோன்" என்ற வார்த்தைக்குப் பிலிப்பைன்சு மக்களின் மொழியில் “அலை" என்று பெயர். இந்தோனேசியாவின் மேற்கு சுமித்ரா கடற்கரையில் உள்ள சிமிலி தீவில் உள்ள மொழியில் “சுமாங்" என்றும் சிகுலி மொழியில் “எமாங்" என்றும் அழைப்பர்JTIC.org. வரலாறு கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்சு, சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை “பெலோபொன்னேசியப் போர் வரலாறு” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன்முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டுள்ளார். கி.பி. 365-இல் அலெக்சாந்திரியாவில் மிகப் பெரிய அழிவுக்குப்பின் உரோமன் வரலாற்றாசிரியர் அம்மியனசு மாசில்லினுசு சுனாமி என்பது, நிலநடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவது, நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் எரிமலையாக உருவெடுகிறது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீதுதான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாகப் பிரியப்பிரிய, அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர். thumb|275px thumb|right|நிலத்தை அடையும்போது அலைகள் மேலும் வேகமிழந்து அதிக உயரம் எழும்புகின்றன. 250px|thumb 250px|thumb ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு. 365-ஆம் ஆண்டு சூலை 21-ஆம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப நூற்றாண்டுகளைக் கணக்கில் கொண்டால், முதன்முதலில் கடந்த 1755-ஆம் ஆண்டு, நவம்பர் 1-ஆம் தேதி போர்ச்சுக்கல் நகரான லிசுபனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், போர்ச்சுக்கல், சுபெயின், மொராக்கோ நாடுகளில் சுனாமி பேரழிவை ஏற்படுத்தியது. 1883-ஆம் ஆண்டு வாக்கில் சாவா சுமத்ரா இடையே கிரகோடா என்ற பகுதி எரிமலைப் பகுதியாகத் திகழ்ந்தது. அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அணுகுண்டை விட 10 ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்த வெடிசம்பவம் நடந்தது. பல்லாயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கு அப்போது சத்தம் கேட்டதாகத் தகவல் கூறுகிறது. 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் தொடர்ந்து 1999-ஆம் ஆண்டு வரை கூடச் சுனாமி தாக்குதல் நடந்துள்ளது. ஆனால், கடந்த 1964-ஆம் ஆண்டு தான் கடைசியாக அலாசுகா வளைகுடாவில் மிகப் பயங்கர சுனாமி ஏற்பட்டது. அதன் விளைவாக, அலாசுகா, வான்கூவர் தீவு (பிரித்தானிய கொலம்பியா), அமெரிக்காவில் கலிபோர்னியா, அவாய் பகுதிகளைத் தாக்கியது. ஆனால், உயிர்சேதம் 120 பேர்தான். காரணம், பாதுகாப்பு ஏற்பாடுகள் தான். சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது சப்பான் நாடுதான். 2004-இல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் மிக மோசமான ஆழிப்பேரலை காரணமாக 2,30,000 மக்கள் உயிரிழந்தனர். சுமித்ரா பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் அங்கு சுனாமிக்கான வாய்ப்புகள் அதிகம். 2004-ஆம் ஆண்டில், திசம்பர் 26-ஆம் நாளன்று, யுரேசியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆத்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில், கடலுக்கடியில் மோதியது. அதனால் ஏற்பட்ட பூகம்பத்தால் தோன்றிய அலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. இதுவே 2004-ஆம் ஆண்டின் மிகப்பெரிய இயற்கை அழிவாகக் கருதப்பட்டது. இது 2004-ஆம் ஆண்டு - இந்தியப் பெருங்கடலின் பூகம்பமும், ஆழிப்பேரலையும் எனப்படுகின்றது. உற்பத்தி முறைகள் சுனாமி உண்டாவதற்கு முக்கிய காரணம், கடலில் ஒரு கணிசமான அளவு நீர் இடப்பெயர்ச்சி ஆவதே ஆகும். நீர் இடப்பெயர்ச்சி ஆவதற்கு நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள் காரணம். மிக அரிதாகச் சில நேரங்களில் விண்கல் மற்றும் அணு சோதனைகள் மூலமும் சுனாமி உருவாகும். இவற்றால் உண்டாகும் அலைகள் பின்பு ஈர்ப்பு சக்தியால் நீடிக்கிறது. அலைகள் சுனாமி உருவாவதில் எந்தப் பங்கும் வகுப்பதில்லை. கடலாழத்தில் ஏற்படும் எந்தப் பாதிப்பின் போதும் வரும். கடலாழ பூகம்பத்தினால் வரும். கடலை ஒட்டிய நிலப்பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் வரும். மலையில் எரிமலை உண்டாகி, அதனால் வரும். வானில் கிரகங்களின் செயல்பாடுகள் மாறும் போதும் ஏற்பட வாய்ப்புண்டு (இது இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை) கடலில் இயற்பியல் மாற்றங்கள் ஏற்பட்டாலும் வரும். அதிர்வினால் உருவாக்கப்பட்ட ஆழிப்பேரலை கடல் படுகையில் திடீரென ஏற்படும் மாற்றதால் மேலிருக்கும் தண்ணீர் செங்குத்தாக இடமாற்றம் அடைவதால் ஆழிப்பேரலை உருவாகும். டெக்டானிக் நிலநடுக்கங்கள், பூமியின் புவி ஓடு உருக்குலைவதால் உண்டாகும், இது கடலுக்கு அடியில் ஏற்படும் போது சிதைக்கப்பட்ட பகுதியிலுள்ள தண்ணீர், சமநிலையில் இருந்து இடம் பெயர்கிறது. டெக்டானிக் தட்டுகளின் தவறான சுழற்சி காரணமாக, செங்குத்தாக நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது. இயக்கத்தில் ஏற்படும் சாதாரண தவறுகளாலும் கடல் படுகையில் இடப்பெயர்ச்சி ஏற்படும். ஆனாலும் இவை பெரிய சுனாமியை உண்டாக்குவது இல்லை. ஆழிப்பேரலைகள் ஒரு சிறிய அலை வீச்சும், மிக நீண்ட அலை நீளமும் உடையவை சாதாரண கடல் அலை 30 அல்லது 40 மீட்டர் அலைநீளம் உள்ளவை. ஆனால் ஆழிப்பேரலையின் அலைகள் சில நூறு கிலோ மீட்டர் நீளம் உடையவை. இவை கடல் பரப்பைவிட 300 மில்லி மீட்டர் மேலே சிறிய வீக்கம் போன்று உருவாகும். அவை தாழ்வான நீலை அடையும் போது மிக அதிக உயரமாக மேலெழுகிறது. ஆழிப்பேரலையின் சிறிய அலைகூட கடலோரப்பகுதியை மூழ்கடித்து விட முடியும். ஏப்ரல் 1946, அலாசுகாவில் அலேடன் தீவுகளுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவுகள் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் 14 மீட்டர் உயரத்திற்கு அலை மேலே எழுந்து அவாய் தீவில் உள்ள இலோ என்ற இடத்தையே அழித்து விட்டது. பசிபிக் பெருங்கடல் தரையில் அலாசுகா கீழ்நோக்கித் தள்ளப்பட்டதால், உண்டான பூகம்பமே இதற்குக் காரணம். குறுகும் எல்லைகளில் இருந்தும் சுடாரிக்கா என்ற இடத்தில் 8,000 வருடங்களுக்கு முன் சுனாமி தோன்றியது. கிராண்ட் பேங்க் 1929, பப்புவா நியு கினியா 1998 (டப்பின் 2001) சுனாமிகள் ஏற்படக் காரணம் பூகம்பத்தின் மூலம் உண்டான வண்டல் கடலில் சென்று கலந்ததால் உண்டானது. சுடாரிக்கா வண்டல் தோல்விக்குச் சரியான காரணம் தெரியவில்லை. அதிகப்படியான வண்டல்கள், ஒரு நிலநடுக்கம் அல்லது எரிவாயு ஐட்ரேட் வெளியானது (மீத்தேன் போன்ற வாயுக்கள்) காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம். 1960 வால்டிவியா பூகம்பம் (9.5 ஆறு), 1964 அலாசுகா பூகம்பம் (9.2 ஆறு), 2004-இல் இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் 2011ல் தோகூ பூகம்பம் (9.0 ஆறு) போன்றவை சமீபத்தில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நீள் ஊடுருவு பூகம்பங்கள். செப்பானில் சிறிய (4.2 ஆறு) பூகம்பம் ஏற்பட்டு அருகிலுள்ள கரையோரப் பகுதிகளை ஒரு சில நிமிடங்களில் பாழ்படுத்தியது. நிலச்சரிவுகளால் உருவான ஆழிப்பேரலை 1950களில் பெரும் நிலச்சரிவுகள் மூலம் தான் பெரிய சுனாமிகள் உண்டானது என்று நம்பப்பட்டது. நீருக்கடியில் ஏற்படும் நிலச்சரிவுகளால் ஏற்படும் சுனாமியை “சியோருக்கசு" என்று அழைத்தனர். இதனால் அதிக அளவு நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது ஏனெனில் நிலச்சரிவினால் உண்டாகும் கழிவுகள் அல்லது விரிவாக்கத்தால் உண்டாகும் சக்தி திரும்பவும் நீருக்குள்ளேயே செலுத்தப்டுகிறது. 1958-இல் மிகப்பெரிய நிலச்சரிவு, அலாசுகாவின் லிடுயா விரிகுடா பகுதியில் ஏற்பட்டபோது 524 மீட்டர் உயரத்திற்கு (1700 அடிக்குமேல்) அலை ஏற்பட்டது. இந்த அலை உடனடியாக நிலத்தை அடைந்து விட்டதால் நீண்ட தூரம் பயணிக்கவிலை. இதில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவர் கொல்லப்பட்டனர். ஆனால் மற்றொரு படகு அதிசயமாக அந்த அலையில் சவாரி செய்து கரையை அடைந்தது. விஞ்ஞானிகள் இந்த அலைகளை “மெகா சுனாமிகள்" என்று அழைத்தனர். அறிவியலாளர்கள் எரிமலை தீவின் இடிந்து விழும் மிகப் பெரிய நிலச்சரிவுகளால் மிகப்பெரிய, ஒரு பெருங்கடலையே கடக்கக் கூடிய மிகப் பெரிய “மெகா சுனாமியை” உருவாக்க முடியும் என்றனர். பண்புகள் சுனாமிகள் இரு வழிகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. பெருமளவு சக்தியுள்ள பெரிய அலை (நீரலை) அதிக வேகத்தில் செல்வதாலும், அலைகள் பெரிய அளவு இல்லாவிட்டாலும் நிலப்பகுதியை மொத்தமாக அழித்து, எல்லாப் பொருட்களையும் தன்னுடன் எடுத்துச் சென்று விடுவதாலும் பெரும் சேதம் ஏற்படுகிறது. சாதாரண காற்று அலைகள் 100 மீட்டர் அலை நீளமும், 2 மீட்டர் உயரமும் உடையவை. ஆழமான பெருங்கடலில் ஒரு சுனாமி 200 கிலோ மீட்டர் அலை நீளமும், மணிக்கு 800 கிலோ மீட்டர் பயணிக்கும் சக்தியும் உடையது. அதன் மகத்தான அலைநீளம் ஒரு சுழற்சியை முடிக்க 20 அல்லது 30 நிமிடங்கள் எடுத்து 1 மீட்டர் அலை அலைவு கொண்டதாக உள்ளது. இதனால் ஆழ்கடல் பகுதியில் சுனாமியை அறிய முடிவதில்லை. அரிதாகக் கப்பல்கள் சுனாமி அலை கடப்பதை உணர்கின்றன. சுனாமி கரையை அணுகும் போதும், நீர் ஆழமற்ற இடத்திலிருக்கும் போதும் அதன் வேகம் ஒரு மணிக்கு 80 கிலோ மீட்டருக்குக் கீழ் குறைகிறது. அதன் அலைநீளமும் 20 கிலோ மீட்டராகக் குறைகிறது. ஆனால் அதன் வீச்சு மிகுந்த அளவில் வளரும். சில நிமிடங்களில் சுனாமி அதன் முழு உயரத்தை அடைந்து விடும். மிகப்பெரிய சுனாமியைத் தவிர, நெருங்கிய அலைகளை உடைக்க முடியாது. மாறாக ஒரு வேகமாக நகரும் அலைகளின் துவாரம் போன்று தெரியும். விரிகுடாக்கள் மற்றும் மிகவும் ஆழமான நீர்அருகில் சுனாமிகள் உண்டானால் அவை சுனாமியை ஒரு படிக்கட்டு போன்றும், ஒரு செங்குத்தான அலையாகவும் மாற்றுகிறது. இதன் காரணமாகத் தான் சப்பானிய மொழியில் இதனை “துறைமுக அலை” என்று கூறுவர். சில நேரங்களில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், மீன்பிடிக்கும் போது எந்த அசாதாரண அலையையும் உணராமல், கரைக்குத் திரும்பி வந்த பின் கிராமமே பெரிய கடலலையால் அழிவுற்றதைக் கண்டுள்ளனர். சுனாமியின் உச்ச அலை கரையை அடையும் போது, கடல் மட்டம் தற்காலிமாக உயரும். இதை “ரன்” என்று குறிப்பிடப்படுகிறது. இவை கடல் மட்டத்திற்கு மேலிருந்து அளக்கப்படுகிறது. அலை உச்சிகளுக்கு இடையில் பலமடங்கு அலைகள் பலமணி நேரங்கள் தொடர்ந்து வந்தால், அதைப் பெரிய சுனாமி என்கிறோம். கரையை அடைந்த முதல் அலை உயர்ந்த ரன் இல்லை, சுனாமிகள் சுமார் 80ரூ பசிபிக் பெருங்கடலில் ஏற்படுறது. ஏரிகள் உள்ளிட்ட பெரிய நீர்ப்பரப்பு பகுதிகளிலேயே சுனாமி ஏற்படுகிறது. அவை பூகம்பங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள் நகர்வு போன்றவைகளால் உருவாகிறது. குறைகள் சுனாமியின் குறைபாடு என்னவென்றால் ஒரு அலை முகடு கரையை அடைவதைவிட தொட்டி போன்ற பகுதி முதலில் அடையும். இதனால் கடற்கரைளை ஒட்டிச் சாதாரணமாக மூழ்கி இருக்கும் இடங்கள் வெளிக்கொணரப்படுகிறது. அலை தொட்டி போன்ற பகுதிக்கு வெளிப்புறமாக நீரில் பரவுகிறது. அலை நேரத்தின் பாதி அளவு நேரத்திலேயே அலைகள் தோன்றுகின்றது. சில நேரங்களில் ஆர்வத்தின் காரணமாகவோ அல்லது கடல்படுகையில் உள்ள மீனைப்பிடிக்கும் ஆர்வத்திலோ உள்ள மக்கள் இந்த ஆபத்துகளை உணர முடியாமல் போகிறது. செறிவு மற்றும் அளவு மாறுபாடு பூகம்பங்களைப் போலச் சுனாமியின் செறிவு மற்றும் அளவு மாறுபாடுகளை ஒப்பீடு செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுனாமி அடர்த்தியை அளவிட சீபெர்க்-அம்பரசி என்னும் அளவுகோல் மத்திய தரைக் கடலிலும், இம்மாமுரா-லிடா செறிவு அளவுகோல் பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் பயன்படுத்தப்படுகிறது. பிற்காலத்தில் இம்மாமுரா-லிடா செறிவு அளவுகோல் சோலோவைவ் என்பவரால் சூத்திரத்தின்படி மாற்றி அமைக்கப்பட்டது. அங்கு ஆவ் அருகிலுள்ள கடற்கரை சராசரி அலை உயரம் உடையது. இந்த அளவுகோல் சோலோவ்-இமாமுரா சுனாமி செறிவு அளவுகோல் எனப்படுகிறது. இந்த அளவு, சுனாமி அளவாக நோவோசிப்ரிசிக் சுனாமி ஆய்வகம் தொகுக்கப்பட்ட உலக சுனாமிப் பட்டியல்களில் பயன்படுத்தப்படுகிறது. பரும அளவுகள் thumb|left|250px|தாய்லாந்தில் 2004 திசம்பர் 26 சுனாமி உண்மையில் சுனாமி அளவைக் காட்டிலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை முர்த்தி மற்றும் லூமிசு இருவரும் எம் எல் என்ற அளவினில் சுனாமியின் இயக்க ஆற்றலைக் கணக்கிட்டனர். ஆபே என்பவர் சுனாமியின் அளவுகோலாக மவுண்ட் என்பதை அறிமுகப்படுத்தினார். h என்பது சுனாமியின் அதிக பட்ச அலை வீச்சு. ஆழிப்பேரலை எச்சரிக்கை அமைப்பு அமெரிக்காவில் உள்ள அவாய் தீவில்தான் முதன் முதலாகப் பசிபிக் பெருங்கடல் பிராந்திய ஆழிப்பேரலை எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் அவாய். 1946 ஏப்ரல் 1 அன்று அவாய் தீவைத் தாக்கிய ராட்சத ஆழிப்பேரலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின. அமெரிக்கா 1949-ஆம் ஆண்டில் அங்கு பசிபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சதவீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் ஆழிப்பேரலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்கக் கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’. 1960-ஆம் ஆண்டில் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் அவாயை தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் ஆழிப்பேரலை ஏற்பட்டது. முன்னரே முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே இறந்தனர். அப்போது சப்பான், பிலிப்பைன்சு உள்ளிட்ட பசிபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963-ஆம் ஆண்டில் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராகச் சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆத்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்சு, கோசுடரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிசி, பிரான்சு, குவாதமாலா, இந்தோனேசியா, சப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்சு, உருசியா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது. 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை தாக்குதலுக்கு பிறகு இந்திய பெருங்கடல் ஆழிப்பேரலை எச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. சுனாமி மிதவை கருவி செயல்படும் விதம் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சமிக்ஞைகளாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சமிக்ஞையைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்துமானால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள். இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்குச் சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும். படங்களின் தொகுப்பு மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சுனாமி பற்றி களஞ்சியம் இணைய தளத்தின் கட்டுரை ஒருங்கிணைந்த ஆழிப்பேரலை கண்காணிப்பு சேவை செல்லிட பேசியின் (Cell Phone) குறுந்தகவல் (SMS) வழியாக ஆழிப்பேரலை குறித்து கடலோரத்தில் வசிப்பவர்களிடத்தே முன்னெச்சரிக்கை செய்ய ITZ தன்னார்வ குழுவினரால் முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இணைய தளம். சுனாமி: அன்றைய அழிவும் இன்றைய மாற்றமும் பகுப்பு:இயற்கை அழிவுகள் பகுப்பு:கடலியல் பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் பகுப்பு:நீரின் வடிவங்கள்
சார்லசு டார்வின்
https://ta.wikipedia.org/wiki/சார்லசு_டார்வின்
சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இதுவரை வாழ்ந்த உயிரியலாளர்களில் மிகவும் செல்வாக்கு உள்ளவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.As Darwinian scholar Joseph Carroll of the University of Missouri–St. Louis puts it in his introduction to a modern reprint of Darwin's work: "The Origin of Species has special claims on our attention. It is one of the two or three most significant works of all time—one of those works that fundamentally and permanently alter our vision of the world...It is argued with a singularly rigorous consistency but it is also eloquent, imaginatively evocative, and rhetorically compelling." இவரே மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது, அதாவது தகுதியானது உயிர் வாழும் என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.The Complete Works of Darwin Online – Biography. darwin-online.org.uk. Retrieved on 2006-12-15 இளமை thumb|left|upright|alt=Three quarter length portrait of seated boy smiling and looking at the viewer. He has straight mid brown hair, and wears dark clothes with a large frilly white collar. In his lap he holds a pot of flowering plants|ஏழு வயதுச் சிறுவன் டார்வின் ,1816 டார்வின் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி (Shrewsbury) எனுமிடத்தில் பிறந்தார். அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்; அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவரே. டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். சுரூஸ்பெரியில் தொடக்கக்கல்வியைக் கற்றார். சிறு வயது முதற் கொண்டே விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். தன்னைப் போன்று மகன் சார்லஸும் மருத்துவராக வரவேண்டும் என்று அவரது தந்தையார் விரும்பி எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மகனைச் சேர்த்தார்; ஆனால் இயற்கையியல் துறையிலும், நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு மருத்துவத் துறையில் நாட்டம் செல்லவில்லை. சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார். மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை நடப்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார். அவர் தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை இறையியல் பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின். படிப்பில் சிறந்து விளங்கிய அவரது ஆர்வமெல்லாம் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆய்விலேயே மிகுந்திருந்தது. கடற்பயணம் thumb|left|alt=On a sea inlet surrounded by steep hills, with high snow covered mountains in the distance, someone standing in an open canoe waves at a square-rigged sailing ship, seen from the front|அவரது பயணக்கப்பல் தமது 22ஆம் வயதில் இறையியலில் (Theology) பட்டம் பெற்ற டார்வின் கிறித்தவத் திருச்சபையில் உறுப்பினராகச் சேரவும் மறுத்துவிட்டார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த ஜான் ஹென்ஸ்லோ (John Stevens Henslow) என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின். சனவரி 1831 சாதாரண பட்ட இறுதிப் பரீட்சையில் அவர் சிறப்பாகச் செய்து, 178 பரீட்சார்த்திகளில் பத்தாவதாக வந்தார். அவர் மூலமாக கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவரின் நட்பு கிட்டியது. தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராயின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். இரண்டாண்டுகளில் திரும்புவது என்ற முடிவோடு தங்கள் பயணத்தினைத் தொடங்கினர். ஆனால் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22. thumb|400px|alt=Route from Plymouth, England, south to Cape Verde then southwest across the Atlantic to Bahia, Brazil, south to Rio de Janeiro, Montevideo, the Falkland Islands, round the tip of South America then north to Valparaiso and Callao. Northwest to the Galapagos Islands before sailing west across the Pacific to New Zealand, Sydney, Hobart in Tasmania, and King George's Sound in Western Australia. Northwest to the Keeling Islands, southwest to Mauritius and Cape Town, then northwest to Bahia and northeast back to Plymouth.|அவரின் "வேட்டைநாயின் கடற்பயணம்" ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது. இடரும், இன்னலும் மிகுந்த கடற்பயணத்தைச் சார்லஸ் டார்வின் மிகுந்த துணிச்சலுடன் மேற்கொண்டார். பயணத் துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல், தற்போது காணக்கிடைக்காத பல உயிரினங்களின் எலும்புகளை ஏராளமாகச் சேகரித்தார். ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக் கண்டு டார்வின் வியப்படைந்தார். இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், மேலும் அவை தொடர்ச்சியான சிறு, சிறு மாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று அவருக்குத் தோன்றியது. “உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?” என்ற வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது. ஆய்வுப்பணிகள் இந்நாளில் காணவியலாத, மறைந்துவிட்ட உயிரினங்களையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும் அவற்றின் எலும்புகளின் துணைகொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார். கெலபகஸ் (Galapagos Island) தீவுகளில் புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். இவ்வாய்வின் பயனாக “பரிணாம வளர்ச்சிக் கொள்கை” முடிவுக்கு அவர் வந்தார். இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, டார்வின் 1836-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார். அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும் ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த டார்வின் ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும்,தமது கண்டுபிடிப்புகளையும் ஆய்வுக்கட்டுரையாக எழுதி The voyage of the Beagle என்ற நூலை லண்டனில் வெளியிட்டார். திருமணம் தமது 30-ஆவது வயதில் எம்மா வெட்ஜ்வுட் (Emma Wedgwood) என்ற உறவுக்காரப் பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் டார்வின். திருமணத்திற்குப் பின்னரும், தமக்கு விருப்பமான இயற்கையியல் ஆய்வில் டார்வின் மிகுதியாக ஈடுபட்டார். அவரது குழந்தைகள் இடார்வீனின் குழந்தைகள் வாழ்நாள் வில்லியம் எராசுமசு இடார்வின்(27 திசம்பர் 1839 – 1914)அனே எலிசெபத் இடார்வின்(2 மார்ச்சு1841 – 23 1851)மேரி எலினார் இடார்வின்(23 செப்டம்பர்1842 – 16 அக்டோபர்1842)என்ரிட்டா எம்மா "எட்டீ" இடார்வின்(25 செப்டம்பர்1843–1929)சியார்சு ஓவர்டு இடார்வின்(9 சூலை 1845 – 7 திசம்பர்1912)எலிசெபத் "பெசி" இடார்வின்(8 சூலை 1847–1926)பிரான்சிசு இடார்வின்(16 ஆகத்து 1848 – 19 செப்டம்பர்1925)லியோனார்டு இடார்வின்(15 சனவரி1850 – 26 மார்ச்சு1943)ஓரேசு இடார்வின்(13 மே 1851 – 29 செப்டம்பர்1928)சார்லசு வாரிங் இடார்வின்(6 திசம்பர்1856 – 28 சூன் 1858) நூல்கள் சார்லஸ் டார்வினுக்கும், ஆல்பிரெட் ரஸ்ஸல் வாலஸ் என்ற மற்றொரு இயற்கையியல் அறிஞருக்கும் நட்பு உண்டாயிற்று. டார்வின் தாம் ஏற்கனவே அமெரிக்கக் கடற்கரையோரம் திரட்டிய சான்றுகளிலிருந்து உருவாக்கிய கொள்கைகளுக்கு மேலும் ஆதாரங்களைச் சேகரிப்பதில் நண்பருடன் சேர்ந்து ஈடுபட்டார். புதிய உயிரினங்கள் உருவாவதற்கான ஒழுங்கு மற்றும் விதிமுறைகள், அவ்வாறு உருவாகும் உயிரினங்களுள் சில பிரிவுகள் முழுமையாக மூல நிலையிலிருந்து மாறிவிடுவதற்கான போக்குகள் ஆகியவை பற்றிய ஆய்வுகளின் அடிப்படையில் டார்வின் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். பரிணாம வளர்ச்சிக் கொள்கை 1858ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள், மேற்கூறிய டார்வினின் கண்டுபிடிப்புகளும், அவரது நண்பர் வாலஸின் கட்டுரையும் லண்டன் லின்னன் கழகத்தில் (Linnean Society of London) வாசிக்கப்பட்டன. மேற்கொண்டு ஆய்வு செய்ததன் பயனாக டார்வினுக்குத் தோன்றியதே ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை’ ஆகும். 1859 ஆம் ஆண்டு இக்கொள்கையை, டார்வின் உலகை வியப்பில் ஆழ்த்திய ஒரு புத்தகம் மூலம் வெளியிட்டார். "The Origin of Species by Natural Selection" அதாவது 'இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்' என்ற அந்த புத்தகம் கூறிய கொள்கைதான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை. அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும்." இது புதிய இனங்களின் உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்று கூறினார் டார்வின். இக்கருத்துகளின் அடிப்படையிலேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. டார்வினின் இக்கருத்துகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன; வியப்போடும், ஆர்வத்தோடும் அவரது ஆய்வுகளை மக்கள் படித்தனர். இந்நிலவுலகில் வாழும் உயிரினங்களின் குறிப்பாக விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சியில் இயற்கையோடு ஒன்றிப்போகின்றவை பாதுகாப்போடு வாழ்வதையும், மற்றவை மறைந்து போவதையும் அறிந்து மக்கள் பெரிதும் வியப்படைந்தனர். ஆனால் அந்த சித்தாந்தத்தின் விளைவை உலகம் அப்போது உணரவில்லை. செடிகொடிகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே அது பொருந்தும் என்றுதான் நம்பியது. டார்வின்கூட மனிதனைப் பற்றி புத்தகத்தில் எதுவும் குறிப்பிடவில்லை. thumb|right|alt=Path covered in sandy gravel winding through open woodland, with plants and shrubs growing on each side of the path.|இப்பாதையிலேயே நடந்துகொண்டே சிந்திப்பார். "சிந்திக்கும் பாதை" எனப்படுவது. பரிணாம வளர்ச்சிக் கொள்கை மனிதனுக்கும் பொருந்த வேண்டும் என்பதை உலகம் உணரத் தொடங்கியபோது நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? என்ற கேள்வி எழுந்தது. டார்வின் அப்படி நேரடியாக சொன்னதில்லை நம்பியதுமில்லை. ஆனால் அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினர். எதிர்பார்க்கப்பட்டது போலவே தேவாலயங்களின் கண்டனத்துக்கு உள்ளானது டார்வினின் கொளகை. அவர் வாழ்ந்த போதே அவரது நூல் உலகம் முழுவதும் பதிக்கப்பட்டது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்நூல் இன்றும் விவாதத்திற்குரிய, கருத்துமாறுபாடுகளுக்கு இடம்தரும் நூலாக இருக்கிறது. டார்வின் பரிணாம கோட்பாடு மூன்று அம்சங்களைக் கொண்டது. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது) மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குஎடுத்துச் செல்லும் ஆற்றல்) உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச் சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப்பெருக்க முறைகளை தீர்மானித்து உயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது) இதைத்தான் இன்றைய நாகரீக, விஞ்ஞான உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் இயல்பினைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதை 'நவீன டார்வினியம்' என்கிறார்கள். உயிர் வாழ்தலுக்கான போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து, இனவிருத்தி செய்யும் (குணம்,உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது இன்றைய நவீன டார்வினியமாகும். பிற டார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் ‘மனிதனின் மரபுவழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம்பெயர்த் திறன்’ ஆகியனவாகும். மேலும் மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார். அவருடைய நூலான “தாவர வளர்ச்சிக்குப் புழுக்களின் பங்கு” என்பது மண் ஆராய்ச்சியும், மண்புழுக்களின் ஆய்வும் ஒன்றோடொன்று எவ்வளவு தொடர்புடையன என்பதை விளக்குவதாகும். இறப்பு சார்லஸ் டார்வின் 1882ஆம் ஆண்டு ஏப்பிரல் 19ஆம் நாள் காலமானார். இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஊடகங்கள் குறிப்புகளும் மேற்கோள்களும் வெளி இணைப்புகள் The Complete Works of Charles Darwin Online – Darwin Online; Darwin's publications, private papers and bibliography, supplementary works including biographies, obituaries and reviews Darwin Correspondence Project Full text and notes for complete correspondence to 1867, with summaries of all the rest ; public domain Darwin Manuscript Project Works by Charles Darwin in audio format from LibriVox Video and radio clips கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் Darwin 200: Celebrating Charles Darwin's bicentenary, Natural History Museum A Pictorial Biography of Charles Darwin Mis-portrayal of Darwin as a Racist Darwin's Volcano – a short video discussing Darwin and Agassiz' coral reef formation debate The life and times of Charles Darwin, an audio slideshow, The Guardian, Thursday 12 February 2009, (3 min 20 sec). Darwin's Brave New World – A 3 part drama-documentary exploring Charles Darwin and the significant contributions of his colleagues Joseph Hooker, Thomas Huxley and Alfred Russel Wallace also featuring interviews with ரிச்சர்ட் டாக்கின்சு, David Suzuki, Jared Diamond A naturalist's voyage around the world Account of the Beagle voyage using animation, in English from French National Centre for Scientific Research|Centre national de la recherche scientifique View books owned and annotated by Charles Darwin at the online Biodiversity Heritage Library. பகுப்பு:1809 பிறப்புகள் பகுப்பு:1882 இறப்புகள் பகுப்பு:ஆங்கிலேய எழுத்தாளர்கள் பகுப்பு:எடின்பரோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் பகுப்பு:தாவரவியலாளர்கள் பகுப்பு:பூச்சியியலாளர்கள் பகுப்பு:நிலவியலாளர்கள் பகுப்பு:இயற்கையியலாளர்கள் பகுப்பு:பயண எழுத்தாளர்கள் பகுப்பு:விலங்கின நடத்தையியலாளர்கள் பகுப்பு:உயிரியலாளர்கள் பகுப்பு:பரிணாம உயிரியல் பகுப்பு:மாந்தரினப் படிமலர்ச்சி பகுப்பு:அறிவியலாளர்கள் பகுப்பு:மரபியலாளர்கள் பகுப்பு:பிரித்தானிய உயிரியலாளர்கள்
தற்குறிப்பேற்ற அணி
https://ta.wikipedia.org/wiki/தற்குறிப்பேற்ற_அணி
தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும். எடுத்துக்காட்டுகள் எ.கா.1: போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட சிலப்பதிகாரம் விளக்கம்: கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார். எ.கா.2: தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால் கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல் கூவினவே கோழிக் குலம். நளவெண்பா விளக்கம்: நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாகக் கூவுகின்றன. இதைக் கண்ட புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார். எ.கா.3: காதலியைக் காரிருளில் கானகத்தே கைவிட்ட பாதகனைப் பார்க்கப் படாதேன்றோ - நாதம் அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி ஒளிக்கின்ற தென்னோ உரை. நளவெண்பா விளக்கம்: நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்("அலவன்") தம் வளையில் இருந்து வெளிப்பட்டு கடல் நாடிச் செல்கின்றன. இதைக் கண்ட புலவர், மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனைப் பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கின்றன என்கிறார். இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் அணி பகுப்பு:அணி இலக்கணம்
அறுபத்து மூன்று நாயன்மார்கள்
https://ta.wikipedia.org/wiki/அறுபத்து_மூன்று_நாயன்மார்கள்
வழிமாற்று நாயன்மார்
திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை_பதினாறாம்_பெனடிக்ட்
திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் (Pope Benedict XVI, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்; 16 ஏப்ரல் 1927 – 31 திசம்பர் 2022), உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவர். இவர் பவேரியா, ஜெர்மனியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர் என்பதாகும். 2005 ஏப்பிரல் திங்கள் 19 ஆம் நாள் தனது 78 அகவையில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். தமக்கு முன்னிருந்தவர்களைப் போலவே திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டவுடன் பெயர்மாற்றம் செய்துகொண்டார். 2005 ஏப்பிரல் திங்கள் 24 ஆம் நாள் பாப்பரசராக தமது முதல் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். 2005 மே திங்கள் 7 ஆம் நாள் புனித யோவான் லாத்தரன் பேராலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னதாக மூனிச் உயர்மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக செயற்பட்டுவந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 264 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார் 16ஆம் பெனடிக்ட். இவர் 28 பெப்ரவரி 2013இல் உரோம் நேரம் இரவு 8 மணிக்கு தனது திருத்தந்தை பதவியிலிருந்து விலகினார்.Benedict XVI: The end of a long goodbye திருத்தந்தை பெனடிக்டின் படிப்பினைகள் இன்றைய உலகில் மக்களின் முழு வளர்ச்சிக்குக் கிறித்தவ சமயம் துணையாக உள்ளது என்னும் கருத்தைத் திருத்தந்தை பெனடிக்ட் வலியுறுத்துகிறார். உலகமயமாக்கும் போக்கு கடவுள் நம்பிக்கையிலிருந்து மக்களைத் திசைதிருப்பி விடும் ஆபத்து உள்ளது என்றும், உண்மையான மதிப்பீடுகளை வாழ்வில் கடைப்பிடிக்கும்போதுதான் மனித வாழ்க்கை வளம்பெறும் என்றும் அவர் எடுத்துரைக்கிறார். கிறித்தவ சமயம் பகுத்தறிவுக்கு எதிராகப் போவதில்லை. மனிதர் பகுத்தறிவு கொண்டுள்ளார்கள் என்றால் அப்பகுத்தறிவு கடவுளுக்கு எதிரானதல்ல, மாறாக, அது கடவுள் மனிதருக்கு வழங்குகின்ற கொடை. அக்கொடையை நன்றியோடு ஏற்பது மனிதரின் பொறுப்பு. கடவுளால் படைக்கப்பட்ட உலகத்தை மனிதர் தம் பகுத்தறிவின் துணைகொண்டு ஆய்ந்து அறிந்து சீரமைக்கும் பொறுப்பு கொண்டுள்ளார்கள். எனவே கடவுள் நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை அல்ல; மாறாக, மனித பகுத்தறிவுக்கு உகந்ததே கடவுள் நம்பிக்கை. ஆனால், பகுத்தறிவு தன்னால் எல்லாம் கூடும் என்று மமதை கொண்டு, கடவுளின் துணை வேண்டாம் என்னும் போக்கில் போவது தவறு. இப்போக்கினைத் திருத்தந்தை பெனடிக்ட் பகுத்தறிவு மிகைவாதம் (rationalism) என்று அடையாளம் காட்டிக் கண்டிக்கின்றார். மேலும், உண்மை என்று ஒன்று இல்லை எனவும், மனிதர் உண்மையான மதிப்பீடுகளை அடையாளம் கண்டு அவற்றைக் கடைப்பிடிக்க இயலாது என்றும் கூறுகின்ற சூழ்நிலைவாத அடக்குமுறை (dictatorship of relativism) என்னும் கொள்கையையும் அவர் தவறு எனக் காட்டுகின்றார். திருத்தந்தை பெனடிக்ட் வெளியிட்ட படிப்பினை ஏடுகள் திருத்தந்தை பெனடிக்ட் பல போதனை ஏடுகளை வெளியிட்டுள்ளார். அவற்றுள் மூன்று சுற்றுமடல்களும் (encyclicals)சுற்றுமடல் அடங்கும். அவை கீழ்வருவன: 1) கடவுள் அன்பாய் இருக்கிறார் (God is Love - இலத்தீனில் Deus Caritas Est)"கடவுள் அன்பாய் இருக்கிறார்": இது திருத்தந்தை பெனடிக்ட் வெளியிட்ட முதல் சுற்றுமடல். 2005, திசம்பர் 25ஆம் நாள், கிறித்து பிறப்புவிழாவன்று கையொப்பமாகி, 2006, சனவரி 25இல் வெளியிடப்பட்ட இம்மடலில் கடவுளுக்கும் அன்புக்கும் இடையே நிலவும் நெருங்கிய பிணைப்பு விளக்கப்படுகிறது. கடவுள் மனிதரைத் தம் சாயலாகப் படைத்துள்ளார். கடவுளின் உள்ளார்ந்த இயல்பு அன்பு ஆகும். அந்த அன்பு மனிதரின் இயல்பாகவும் உள்ளது. எனவே மனிதர் கடவுளையும் மனிதரையும் அன்புசெய்யும் திறன் கொண்டுள்ளார்கள். மனிதர் காட்டும் அன்புக்கு ஊற்றாகவும் அது நிகழ்வதற்கு வழியாகவும் அமைவது கடவுளின் அன்புதான். கடவுளையும் மனிதரையும் பிணைக்கின்ற இந்த அன்பு மனிதரின் தனி வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் துலங்க வேண்டும். இச்சுற்றுமடலின் முதல் சொற்கள் விவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டவை: கடவுள் அன்பாய் இருக்கிறார் (1 யோவான் 4:16). மேலும், அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார் (1 யோவான் 4:16). பிறரோடு பகிர்தலும் பிறரிடமிருந்து பெறுதலும் அன்பின் இரு அடிப்படைப் பண்புகள் ஆகும். இதுவே கடவுளின் இயல்பு கூட. அவர் தம்மையே மனிதருக்குக் கையளித்து, தம் உறவை மனிதரோடு பகிர்கின்றார். அதே வேளையில் கடவுள் மனிதரிடமிருந்து பெறுகின்ற அன்பில் கடவுள் மகிழ்கின்றார். இந்த இருவகை அன்பு கிரேக்க கலாச்சாரத்தில் eros, மற்றும் agape என்று அறியப்பட்டன. தன்னையே பலியாக்கி அளிக்கும் அன்பு (agape) பிறருக்கு வாழ்வளிக்கும். பிறரிடமிருந்து பெறும் அன்பு (eros) புலன்களுக்கு மகிழ்வூட்டித் திளைக்கச் செய்யும். இவை இரண்டிற்குமே ஊற்று கடவுள்தாம் என்பதால் இவற்றை மனிதர் பிரித்தலாகாது. 2) எதிர்நோக்கால் மீட்படைகிறோம் (Saved by Hope - இலத்தீனில் Spe Salvi)"எதிர்நோக்கால் மீட்படைகிறோம்": இச்சுற்றுமடல் 2007, நவம்பர் 30ஆம் நாள் கையொப்பமிடப்பட்டு வெளியானது. உலகில் ஏற்படுகின்ற துன்பங்களின் நடுவே நம்பிக்கை இழக்காமல் வாழ்வது எப்படி, ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்நோக்கி வாழ்வது எப்படி என்று இம்மடல் விளக்குகிறது. மனிதர் பிற மனிதரை மதிக்காமல் அடிமைகள்போல நடத்துகின்ற வேளைகளில், காரணமின்றி இழிவுபடுத்துகின்ற வேளைகளில் எதிர்நோக்கு என்னும் நற்பண்பு நம்மிலிருந்து மறைந்துவிடலாகாது. துன்பமும் துயரமும் அநீதியும் அடிமைத்தனமும் ஒருநாள் மறைந்தொழியும் என்பது கிறித்தவம் தருகின்ற நம்பிக்கை, எதிர்நோக்கு. இதைத் திருத்தந்தை பெனடிக்ட் இம்மடலில் விளக்குகின்றார். இம்மடலின் கருத்து தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது:நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும் எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா? (உரோ 8:24). 3) உண்மையில் தோய்ந்த அன்பு (Love in Truth - இலத்தீனில் Caritas in Veritate)"உண்மையில் தோய்ந்த அன்பு": இச்சுற்றுமடல் 2009, சூன் 29ஆம் நாள் கையொப்பமிடப்பட்டு, சூலை 7ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதில் திருத்தந்தை பெனடிக்ட் சமூக நீதி பற்றிப் பேசுகின்றார். இன்றைய உலகில் நிலவுகின்ற சமூக அநீதிகள் பல. ஏழை நாடுகளுக்கும் செல்வம் படைத்த நாடுகளுக்கும் இடையே நிலவும் இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி செல்வம் குவிக்கின்றன. இலாப நோக்கோடு மட்டுமே வியாபார உறவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசடைவது பற்றிப் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இத்தகு குறைபாடுகளைக் களைய வேண்டும் என்றால் மனிதரிடையே அன்பு வளர வேண்டும் என்று பெனடிக்ட் அறிவுறுத்துகிறார். அந்த அன்பு உண்மையின் அடிப்படையில் எழ வேண்டும். அப்போதுதான் மக்களிடையே நீதி நிலவும் சமுதாயம் உருவாகும். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் சமயத் தலைவர் திருத்தந்தை பெனடிக்ட் நவீன சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றார். வத்திக்கான் நகரிலிருந்து திருத்தந்தையின் உரைகள் யூடியூபில் வெளியாகின்றன. முகநூல் வழியாகவும் வத்திக்கான் செய்தித் தொடர்பில் ஈடுபட்டுள்ளது. 2012 திசம்பர் மாதத்திலிருந்து திருத்தந்தை பெனடிக்ட் டிவிட்டர் வழியாகத் தொடர்பு கொள்கின்றார். 12/12/12 அன்று அவர் அனுப்பிய முதல் டிவிட்டர் செய்தி: நண்பர்களே, டிவிட்டர் வழி உங்களோடு தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் தாராள ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு என் இதயப்பூர்வமான ஆசியை வழங்குகின்றேன். திருத்தந்தை உலகில் பரவலாகப் பேசப்படுகின்ற எட்டு மொழிகளில் டிவிட்டர் செய்திகளை அனுப்பினார். அம்மொழிகள்: எசுப்பானியம், போர்த்துகீசியம், ஆங்கிலம், இத்தாலியம், பிரெஞ்சு, போலிஷ், செருமன், அரபி ஆகியன. இலத்தீன் மொழியில் டிவிட்டர் செய்தி 2013, சனவரி 20ஆம் நாள் திருத்தந்தை முதல் முறையாக இலத்தீன் மொழியில் டிவிட்டர் செய்தி அனுப்பினார்.திருத்தந்தை பெனடிக்டின் முதல் இலத்தீன் டிவிட்டர் செய்தி "Unitati christifidelium integre studentes quid iubet Dominus? Orare semper, iustitiam factitare, amare probitatem, humiles Secum ambulare" என்று இலத்தீனில் அனுப்பப்பட்ட அச்செய்தி தமிழில், "கிறித்தவர் நடுவே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று உளமார விரும்புவோர் என்ன செய்யவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்? இடைவிடாது இறைவேண்டல் செய்க, நீதி நெறியில் ஒழுகுக, நேர்மையான வாழ்வு நடத்துக, ஆண்டவரோடு பணிவுடன் வழிநடந்திடுக." இலத்தீன் மொழியைப் பேசுவோர் மிகச் சிலரே என்றாலும், எசுப்பானியம், போர்த்துகீசியம், பிரெஞ்சு, இத்தாலியம் உரோமேனியம் ஆகிய மொழிகளைப் பெற்றெடுத்த தாய்மொழி என்னும் பெருமை இலத்தீனுக்கு உண்டு என்பதாலும், பல அறிவியல் துறைகளில் வழக்கத்திலுள்ள கலைச் சொற்கள் இலத்தீனில் உள்ளன என்பதாலும் அம்மொழியைப் பலர் பயின்றுவருகின்றனர். திருத்தந்தை பெனடிக்ட் டிவிட்டர் வழியாக 2 மில்லியன் மக்களோடு தொடர்பு கொண்டுள்ளார். இலத்தீன் மொழித் தொடர்பாளர்கள்தான் மிகக் குறைந்த எண்ணிக்கையில், 5000 பேராக உள்ளனர். அவருடைய டிவிட்டர் கைப்பிடி "@Ponttifex" என்னும் இலத்தீன் சொல் ஆகும். அதற்கு "இணைப்பாளர்" (= பாலம் அமைப்பவர்) என்று பொருள். பணி துறப்பு 2013 பிப்ரவரி மாதம் 28ம் தேதியிலிருந்து திருத்தந்தை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை 11 பிப்ரவரி 2013 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்டார். முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் இம்முடிவை எடுத்துள்ளதாகவும், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் கர்தினால்கள் அவையால் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து பிப்ரவரி 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணியிலிருந்து பதவி விலகுவதாக அவ்வறிக்கையில் கூறியிருந்தார். இவர் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் தனது பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் பணி துறப்பு முடிவை எடுத்திருக்கலாம் என்றொரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதினாறாம் பெனடிக்ட், தனக்கு பின் திருதந்தையாக தெரிவு செய்யப்படுபவருக்கு நிபந்தனையற்ற கீழ்ப்படிதலை வாக்களித்தார்.எதிர்காலத் திருத்தந்தைக்கு என் நிபந்தனையற்ற மரியாதையையும், கீழ்ப்படிதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் - திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பணிதுறப்புக்குப்பின்பு வத்திக்கான் நகரின் தோட்டத்திலுள்ள "மாத்தர் எக்லேசியே" (திருச்சபையின் அன்னை) என்னும் துறவு இல்லத்தில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தங்கி இறைவேண்டலில் ஈடுபட்டிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைவு முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாக தனது 95 வயதில் அவரது வாடிகன் இல்லத்தில் 31 டிசம்பர் 2022 அன்று காலமானார். கத்தோலிக்க கிறித்தவர்களின் தலைமைப் பொறுப்பான போப் பதவியை சுமார் 8 ஆண்டுகள் வகித்த 16-வது பெனடிக்ட், 2013-ம் ஆண்டில் உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகினார். இதன் மூலம் 1415-ம் ஆண்டு 12-வது கிரிகோரிக்குப் பிறகு போப் பதவியில் இருந்து விலகிய முதல் நபரானார். 16-வது பெனடிக்ட் தமது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை வாட்டிகனில் உள்ள மாத்தர் எக்லெசியா மடாலயத்தில் கழித்தார். முன்னாள் போப் பதினாறாம் பெனடிக்ட் காலமானார் மேற்கோள்கள் பகுப்பு:1927 பிறப்புகள் பகுப்பு:செருமானிய மெய்யியலாளர்கள் பகுப்பு:செருமானிய திருத்தந்தையர்கள் பகுப்பு:2022 இறப்புகள் பகுப்பு:கர்தினால் குழு முதல்வர்கள் பகுப்பு:பணி துறந்த திருத்தந்தையர்கள்
அலெக்சாண்டர் கிரகாம் பெல்
https://ta.wikipedia.org/wiki/அலெக்சாண்டர்_கிரகாம்_பெல்
அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார். தனது இளமையில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்."Gray 2006, p. 228.Reville, F. Douglas. "History of the County of Brant: Illustrated With Fifty Half-Tones Taken From Miniatures And Photographs." Brantford Historical Society, Hurley Printing, Brantford, Ontario, 1920, p. 319. Retrieved from Brantford.Library.on.ca, May 4, 2012. இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம்.Bruce 1990, p. 419. இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். வாழ்க்கை இளமை அலெக்சாண்டர் பெல் ஸ்கொட்லாந்தில் எடின்பேர்க்கில் 3 மார்ச் 1847 ஆம் ஆண்டு பிறந்தார்.Petrie 1975, p. 4. அவருடைய குடும்ப நண்பரான அலெக்சாண்டர் கிரகாம் என்பவரின் மேல் மிகுந்த மதிப்பு கொண்டு அவருடைய பெயரையும் சேர்த்து அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது."Call me Alexander Graham Bell." fi.edu. Retrieved: July 28, 2010.Groundwater 2005, p. 23. அலெக்சாண்டருக்கு மெல்வில்லி ஜேம்ஸ் பெல் (1845–70) , எட்வர்டு ஜேம்ஸ் பெல்(1848–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர்."Time Line of Alexander Graham Bell." memory.loc.goiv. Retrieved: July 28, 2010. இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார். லண்டனில் வசித்த அவருடைய தாத்தா, டப்ளினில் உள்ள அவருடைய மாமா, எடின்பர்க்கில் உள்ள அவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஆகிய அனைவரும் பணி முறையாக நாவன்மை பயிற்றுவிப்பவர்களாகத் (Professed elocutions) திகழ்ந்து வந்தனர். கண்பார்வை அசைவுகளினால் பல்வேறு உணர்வுகளை எவ்வாறு காட்டுவது? உதடுகளின் அசைவைக் கொண்டு ஒருவர் பேசுவதைக் காது கேளாதோர் எவ்வாறு புரிந்து கொள்வது? என்பதைப் பற்றியெல்லாம் பெல்லின் தந்தை பல நூல்களை எழுதியுள்ளார்.Petrie 1975, p. 7. எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.Gray 2006, p. 8. பத்து வயதான போது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது.Mackay 1997, p. 31. இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார்Groundwater 2005, p. 30. . பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி அவளையே திருமணம் செய்துகொண்டார். thumb|alt = A distinguished bearded man, his young elegant wife next to him and their two young daughters poise for a formal portrait|Alexander Graham Bell, his wife Mabel Gardiner Hubbard, and their daughters Elsie (left) and Marian ca. 1885 thumb|right|alt=A three-story gray mansion, with an impressive covered front entrance|The Brodhead-Bell mansion, the Bell family residence in Washington, D.C., from 1882 to 1889.Bruce 1990, pp. 297–299. பணிகள் கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்குக் குடி பெயர்ந்தது.Petrie 1975, p. 10. போஸ்டன் நகரத்தில் வசித்த போது காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்காக பெல் ஒரு பள்ளிக் கூடத்தை ஏற்படுத்தினார்.Petrel 1975, p. 15.Town 1988, pp. 12–13.Bruce 1990, p. 74. அதில் பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளைக் கற்பித்தார்Bruce 1990, p. 37. .அவரது ஆய்வுமுறை, அறிவாற்றல் எங்கும் பரவியதால், பாஸ்டன் பலகலைக் கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரியராக இவரை பணியில் அமர்த்தியது. ஆய்வு பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அணுப்பினார் பெல். தந்தி முறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. பேச்சுகளையும் அந்த முறையில் அனுப்பலாமே என்று கிரகாமுக்கு 18 வயதிலேயே தோன்றியது. அதனால் அந்த முயற்சிகளில் ஈடுபடார்Alexander Graham Bell 1979, p. 8. . அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாயிருந்தன. 1875 இல் இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. முதலில் தெளிவில்லாத பேச்சொலிகளை அனுப்ப முடிந்தது. 1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் " வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்."(Watson, come here, I want to see you)என்பதுதான்."Bell's Lab notebook I, pp. 40–41 (image 22)." loc.gov. Retrieved: July 28, 2010. இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது.MacLeod 1999, p. 12. ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார். பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார்.MacLeod 1999, pp. 12–13. MacLeod 1999, p. 19. 1877 இல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு வழங்கிய 50,000 பிராங்க் பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை (Volta Laboratory) என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார்."Letter from Mabel Hubbard Bell, February 27, 1880." Library of Congress, Alexander Graham Bell Family Papers. Retrieved: April 5, 2009. Note (N.B.): The last line of the typed note refers to the future disposition of award funds: "... and thus the matter lay till the paper turned up. He intends putting the full amount into his Laboratory and Library". கண்டு பிடிப்புகள் thumb|Alexander Graham Bell in his later years. பெல் தொலைபேசியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன்Bruce 1990, p. 336.Jones, Newell. "First 'Radio' Built by San Diego Resident Partner of Inventor of Telephone: Keeps Notebook of Experiences With Bell." San Diego Evening Tribune, July 31, 1937. Retrieved from the University of San Diego History Department website, November 26, 2009.Phillipson, Donald J.C., and Laura Neilson. "Bell, Alexander Graham." The Canadian Encyclopedia online. Retrieved: August 6, 2009., ஆடியோ மீட்டர்Carson 2007, pp. 76–78.Bruce 1990, p. 338.Groth, Mike. "Photophones Revisted." Amateur Radio magazine, Wireless Institute of Australia, Melbourne, April 1987, pp. 12–17 and May 1987, pp. 13–17.Mims 1982, p. 11., மெட்டல் டிடக்டர்Grosvenor and Wesson 1997, p. 107., இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டு பிடித்தார். பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை. ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார். thumb|AEA Silver Dart ca. 1909 விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார். பிற்காலத்தில் கடல் விமானத்தைச் சீர்திருத்தி அமைப்பதில் வெற்றி கண்டார்.Phillips 1977, pp. 96–97. ஆடுகள் வளர்க்கும் முயற்சியில் புதுமையைப் புகுத்தினார். ஒவ்வொரு முறையும் இரட்டைக் குட்டிகளை ஈடும் பெண் ஆடுகளை உருவாக்கவும் திட்டமிட்டார். பாலைவனங்களில் நாடுகாண முற்படும் படைவீரர்களுகு, காற்றிலுள்ள மிகுந்த ஈரத்தை வடிகட்டி உதவக் கூடிய அரிய கருவியைக் கண்டுபிடித்தார். காது கேளாதோருக்குப் பேச்சுப் பயிற்சியை வளர்ப்பதற்கான சங்கம் ஒன்றை நிறுவினார்Miller and Branson 2002, pp. 30–31, 152–153.. கண் தெரியாதவர்களுக்குப் பிரெய்ல் முறையைக் கண்டு பிடித்த ஹெலன் கெல்லருக்கு பெல் பல உதவிகளைச் செய்துள்ளார்.Petrie 1975, p. 17. ஒலியியல் அடிப்படையில் உலக ஆங்கிலம் என்பதை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். தனிப்பட்ட முறையிலும், பிற அறிவியலறிஞர்களுடன் சேர்ந்தும் 59 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெல் பெற்றுள்ளார் என்பது அவருடைய வரலாற்றில் மிக முக்கியமான அம்சமாகும். சிறப்புகள் 1882 இல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். 1888 இல் உலக புவியியல் கழகத்தை(National Geograph Society) ஆரம்பித்த உறுப்பினர்களில் ஒருவராகவும், அந்தக் கழகத்தின் இரண்டாவது தலைவராகவும் விளங்கினார்."National Geographic Mission." nationalgeographic.com. Retrieved: July 28, 2010. He has been described as one of the most influential figures in human history.Hart 2000, p. 222. பிரெஞ்சு அரசு வழங்கிய 'லெஜியன் ஆப் ஆனர்'(Legion of Honour) விருது Acedemic Francise விருதுCrosland, Maurice P. "Science Under Control: The French Academy of Sciences, 1795–1914". Cambridge University Press, 1992. As cited by James Love in "KEI Issues Report on Selected Innovation Prizes and Reward Programs: The Volta Prize For Electricity." Knowledge Ecology International, March 20, 2008, p. 16. Retrieved: January 5, 2010. வோல்டா பரிசுDavis. John L. "Artisans and savants: The Role of the Academy of Sciences in the Process of Electrical Innovation in France, 1850–1880." Annals of Science, Volume 55, Issue 3, July 1998, p. 301. Retrieved from InformaWorld.com, January 5, 2010."Honors to Professor Bell." Boston Daily Evening Traveller, September 1, 1880, Library of Congress, Alexander Graham Bell Family Papers. Retrieved: April 5, 2009."Volta Prize of the French Academy Awarded to Prof. Alexander Graham Bell, September 1, 1880." Library of Congress, Alexander Graham Bell Family Papers. Retrieved: April 5, 2009."Telegram from Grossman to Alexander Graham Bell, August 2, 1880." Library of Congress, Alexander Graham Bell Family Papers. Retrieved: April 5, 2009."Telegram from Alexander Graham Bell to Count du Moncel, 1880." Library of Congress, Alexander Graham Bell Family Papers. Retrieved: April 5, 2009."Letter from Frederick T. Frelinghuysen to Alexander Graham Bell, January 7, 1882." Library of Congress, Alexander Graham Bell Family Papers. Retrieved: April 5, 2009. ராயல் சொசைட்டி ஆப் ஆர்ட்ஸ்(லண்டன்), ஆல்பெர்ட் பதக்கம்(1902) உர்ஸ்பர்க் பல்கலைக் கழகம் வழங்கிய முனைவர் பட்டம் எடிசன் பதக்கம்(1914) போன்ற பல்வேறு சிறப்புகளையும் விருதுகளையும் பெற்றார். மறைவு அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி அலெக்சாண்டர் கிரகாம் பெல் காலமானார்.Gray 2006, p. 419. அவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.Osborne, Harold S. "Biographical Memoir of Alexander Graham Bell, 1847–1922." National Academy of Sciences of the United States of America, Bibliographical Memoirs, Volume XXIII, First Memoir. Annual Meeting presentation, 1943, pp. 18–19. காப்புரிமைகள் Improvement in Transmitters and Receivers for Electric Telegraphs, filed March 1875, issued April 1875 (multiplexing signals on a single wire) Improvement in Telegraphy, filed February 14, 1876, issued March 7, 1876 (Bell's first telephone patent) Improvement in Telephonic Telegraph Receivers, filed April 1876, issued June 1876 Improvement in Generating Electric Currents (using rotating permanent magnets), filed August 1876, issued August 1876 Electric Telegraphy (permanent magnet receiver), filed January 15, 1877, issued January 30, 1877 Apparatus for Signalling and Communicating, called Photophone, filed August 1880, issued December 1880 Aerial Vehicle, filed June 1903, issued April 1904 அடிக்குறிப்பு மேற்கோள்கள் துணை நூல்கள் Alexander Graham Bell (booklet). Halifax, Nova Scotia: Maritime Telegraph & Telephone Limited, 1979. Ayers, William C., Therese Quinn and David Stovall, eds. The Handbook of Social Justice in Education. London: Routledge, 2009. . Bell, Alexander Graham. The Question of Sign-Language and The Utility of Signs in the Instruction of the Deaf—Two papers. Washington, D.C.: Sanders Printing Office, 1898. Bethune, Jocelyn. Historic Baddeck (Images of our Past series). Halifax, Nova Scotia, Canada: Nimbus Publishing, 2009. . Bruce, Robert V. Bell: Alexander Bell and the Conquest of Solitude. Ithaca, New York: Cornell University Press, 1990. . Black, Harry. Canadian Scientists and Inventors: Biographies of People who made a Difference. Markham, Ontario, Canada: Pembroke Publishers Limited, 1997. . Boileau, John. Fastest in the World: The Saga of Canada's Revolutionary Hydrofoils. Halifax, Nova Scotia, Canada: Formac Publishing Company Limited, 2004. . Dunn, Andrew. Alexander Graham Bell (Pioneers of Science series). East Sussex, UK: Wayland (Publishers) Limited, 1990. . Eber, Dorothy Harley. Genius at Work: Images of Alexander Graham Bell. Toronto, Ontario, Canada: McClelland and Stewart, 1982. . Evenson, A. Edward. The Telephone Patent Conspiracy of 1876: The Elisha Gray — Alexander Bell Controversy. Jefferson, North Carolina: McFarland Publishing, 2000. . Gray, Charlotte. Reluctant Genius: Alexander Graham Bell and the Passion for Invention. New York: Arcade Publishing, 2006. . Grosvenor, Edwin S. and Morgan Wesson. Alexander Graham Bell: The Life and Times of the Man Who Invented the Telephone. New York: Harry N. Abrahms, Inc., 1997. . Groundwater, Jennifer. Alexander Graham Bell: The Spirit of Invention. Calgary, Alberta, Canada: Altitude Publishing, 2005. . Lusane, Clarence. Hitler's Black Victims: The Historical Experiences of Afro-Germans, European Blacks, Africans, and African Americans in the Nazi Era. Hove, East Sussex, UK: Psychology Press, 2003. . Hart, Michael H. The 100: A Ranking of the Most Influential Persons in History. New York: Citadel, 2000. . Mackay, James. Sounds Out of Silence: A life of Alexander Graham Bell. Edinburgh: Mainstream Publishing Company, 1997. . MacKenzie, Catherine. Alexander Graham Bell. Whitefish, Montana: Kessinger Publishing, 2003. . MacLeod, Elizabeth. Alexander Graham Bell: An Inventive Life. Toronto, Ontario, Canada: Kids Can Press, 1999. . Matthews, Tom L. Always Inventing: A Photobiography of Alexander Graham Bell. Washington, D.C.: National Geographic Society, 1999. . Micklos, John Jr. Alexander Graham Bell: Inventor of the Telephone. New York: Harper Collins Publishers Ltd., 2006. . Miller, Don and Jan Branson. Damned For Their Difference: The Cultural Construction Of Deaf People as Disabled: A Sociological History. Washington, D.C.: Gallaudet University Press, 2002. . Mims III, Forest M. "The First Century of Lightwave Communications." Fiber Optics Weekly Update(Information Gatekeepers), February 10–26, 1982, pp. 6–23. Mullett, Mary B. The Story of A Famous Inventor. New York: Rogers and Fowle, 1921. Parker, Steve. Alexander Graham Bell and the Telephone(Science Discoveries series). New York: Chelsea House Publishers, 1995. . Petrie, A. Roy. Alexander Graham Bell. Don Mills, Ontario: Fitzhenry & Whiteside Limited, 1975. . Phillips, Allan. Into the 20th Century: 1900/1910 (Canada's Illustrated Heritage). Toronto, Ontario, Canada: Natural Science of Canada Limited, 1977. . Ross, Stewart. Alexander Graham Bell (Scientists who Made History series). New York: Raintree Steck-Vaughn Publishers, 2001. . Shulman, Seth. The Telephone Gambit: Chasing Alexander Bell's Secret. New York: Norton & Company, 2008. . Toward, Lilias M. Mabel Bell: Alexander's Silent Partner. Toronto, Ontario, Canada: Methuen, 1984. , . Town, Florida. Alexander Graham Bell. Toronto, Ontario, Canada: Grolier Limited, 1988. . Tulloch, Judith. The Bell Family in Baddeck: Alexander Graham Bell and Mabel Bell in Cape Breton. Halifax, Nova Scotia, Canada: Formac Publishing Company Limited, 2006. . Walters, Eric. The Hydrofoil Mystery. Toronto, Ontario, Canada: Puffin Books, 1999. . Webb, Michael, ed. Alexander Graham Bell: Inventor of the Telephone. Mississauga, Ontario, Canada: Copp Clark Pitman Ltd., 1991. . Winfield, Richard. Never the Twain Shall Meet: Bell, Gallaudet, and the Communications Debate. Washington, D.C.: Gallaudet University Press, 1987. . Wing, Chris. Alexander Graham Bell at Baddeck. Baddeck, Nova Scotia, Canada: Christopher King, 1980. Winzer, Margret A. The History Of Special Education: From Isolation To Integration. Washington, D.C.: Gallaudet University Press, 1993. . வெளியிணைப்புகள் Biography at the Dictionary of Canadian Biography Online Alexander Graham Bell Institute at Cape Breton University Bell Homestead, National Historic Site Bell Telephone Memorial erected in honor both Bell and the Invention of the Telephone in Brantford, Ontario's Alexander Graham Bell Gardens திண்ணை இதழில் பெல் பற்றிய கட்டுரை அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் Institute Bell Homestead, National Historic Site Biography and photos at the Canada's Telecommunications Hall of Fame website Biographical video footage at the Canada's Telecommunications Hall of Fame website Appleton's Biography edited by Stanley L. Klos Alexander Graham Bell National Historic Site Museum located in Baddeck, Nova Scotia containing many of Bell's experiments and models Alexander Graham Bell family papers Online version at the Library of Congress comprises a selection of 4,695 items (totaling about 51,500 images) containing correspondence, scientific notebooks, journals, blueprints, articles, and photographs documenting Bell's invention of the telephone and his involvement in the world's first telephone company, his family life, his interest in the education of the deaf and his aeronautical and other scientific works Bell's path to the invention of the telephone Bell's speech before the American Association for the Advancement of Science in Boston on August 27, 1880, presenting the Photophone, very clear description; published as "On the Production and Reproduction of Sound by Light" in the American Journal of Sciences, Third Series, vol. XX, No. 118, October 1880, pp. 305–324 and as "Selenium and the Photophone" in Nature, September 1880 AlexanderBell.com – Telecom pioneer Alexander Graham Bell gravesite Alexander Graham Bell: Biography and Much More from Answers.com Excellent summary of Alexander Graham Bell's life, has many useful dates for important parts of his life Bell family tree American Treasures of the Library of Congress, Alexander Graham Bell – Lab notebook I, pp. 40–41 (image 22) Scientists' profile: Alexander Graham Bell (Italian) Timeline for Antonio Meucci National Academy of Sciences Biographical Memoir Listen to Alexander Graham Bell's Voice | Audio Gallery | Smithsonian.com இவற்றையும் பார்க்கவும் தொலைபேசி பகுப்பு:அமெரிக்க அறிவியலாளர்கள் பகுப்பு:அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள் பகுப்பு:1847 பிறப்புகள் பகுப்பு:1922 இறப்புகள் பகுப்பு:பிரித்தானியக் கண்டுபிடிப்பாளர்கள் பகுப்பு:அமெரிக்க இயற்பியலாளர்கள் பகுப்பு:அமெரிக்க அறியொணாமையியலாளர்கள் பகுப்பு:வானூர்தியியல் முன்னோடிகள் பகுப்பு:கனடிய இயற்பியலாளர்கள் பகுப்பு:எடின்பரோ பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்
தாமஸ் ஆல்வா எடிசன்
https://ta.wikipedia.org/wiki/தாமஸ்_ஆல்வா_எடிசன்
வழிமாற்று தாமசு ஆல்வா எடிசன்
அ. மாதவையர்
https://ta.wikipedia.org/wiki/அ._மாதவையர்
thumb|right|200px|அ. மாதவையா அ. மாதவையர் அல்லது அ. மாதவையா (A. Madhaviah, ஆகத்து 16, 1872 – அக்டோபர் 22, 1925), தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், இதழாளர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை பெற்றவர். பிறப்பு அ. மாதவையர், திருநெல்வேலி அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். கல்வி தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) 1892-இல் முதல் மாணவராக முடித்தார். பணி பட்டம் பெற்றதும் தான் பயின்ற சென்னை கிறித்துவக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், தனது குடும்பத்தை நடத்துவதற்காக, உப்பு சுங்க இலாகா (Salt and Abkari department) நடத்திய தேர்வில் முதலிடம் வந்து Salt Inspector ஆக ஆந்திராவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணியிலமர்ந்தார். அங்கு அவர் தெலுங்கு மொழியினையும் கற்றறிந்தார். தொடர்கதை எழுத்தாளர் மாதவையர் தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் சாவித்திரியின் கதை என்ற தொடரினை எழுதத்தொடங்கினார். ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் 1903 ஆம் ஆண்டு முத்துமீனாக்ஷி என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது. 1898 ஆம் ஆண்டு பத்மாவதி சரித்திரம் என்ற நாவலின் முதற்பகுதியும், 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. 1924 சித்திரையில் பஞ்சாமிர்தம் என்ற மாத இதழைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை அவ்விதழில் எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையர் மரணமடைந்தார். இதழாளர் அ. மாதவையர் தமிழர் நேசன், பஞ்சாமிர்தம் ஆகிய இதழ்களை வெளியிட்டார்.குடிஅரசு, 1-11-1925 பக்.9 மரணம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். சொற்பொழிவின் பொழுதே கீழே விழுந்து மரணமடைந்தார். குடும்பம் அ. மாதவையாவுக்கு அக்காலத்தில் இருந்த அவரது குடும்ப விழுமியங்களுக்கு ஏற்ப தன்னுடைய பதினைந்தாம் வயதிலேயே (1887) திருமணம் செய்யப்பட்டது. அவருக்கு, மா. அனந்த நாராயணன், மீனாட்சி தியாகராஜன், மா. கிருஷ்ணன், முக்தா வெங்கடேஷ் என்ற முத்துலட்சுமி, விசாலாட்சி, டாக்டர் சரசுவதி உட்டபட ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என்று எட்டு மகவுகள். அறிவியல் எழுத்தாளர் பெ. நா. அப்புசாமி இவருக்கு அண்ணன் மகன். சுவையான செய்திகள் 1914 ஆம் ஆண்டில் இந்திய கும்மி என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் மாதவையா. இப்போட்டியில் சுப்பிரமணிய பாரதியாரும் பங்கு கொண்டார். 1892 ஆம் ஆண்டில் சாவித்திரியின் கதை (அல்லது சாவித்திரியின் சரித்திரம்) என்ற நாவலை எழுதத் தொடங்கினார். தமிழில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879) என்ற நாவலுக்குப் பின்பு வந்த இரண்டாம் தமிழ் நாவல், சாவித்திரியின் கதை. ஆனால் நான்கு முறை தடைப்பட்டு 1903இல் முழுமையாக வந்ததாலும், பி. ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவல் 1896இல் வந்ததாலும், தமிழின் இரண்டாம் நாவல் என்ற தகுதி பத்மாவதி சரித்திரம் நாவலுக்குக் கிட்டாமல் போனது. படைப்புகள் நாவல் பத்மாவதி சரித்திரம் (1898) முத்துமீனாட்சி (1903) விஜயமார்த்தாண்டம் (1903) Thillai Govindan (1903) Satyananda (1909) The story of Ramanyana (1914) Clarinda (1915) Lieutenant Panju (1915) Markandeya (1922) Nanda (1923) Manimekalai (1923) பத்மாவதி சரித்திரம் மூன்றாம் பாகம் (1928, முற்றுப்பெறாதது) சிறுகதை Kusika's short stories - இரண்டு பாகங்களாக 1916 இலும், 1923-24இலும் வெளிவந்தன. குசிகர் குட்டி கதைகள் (ஆங்கிலத்திலிருந்து அ. மாதவையாவால் தமிழாக்கம் செய்யப்பட்டவை) (1924) நாடகம் உதயலன் என்னும் கொற்கைச் சிங்களவன் (ஷேக்ஸ்பியர் எழுதிய 'ஒத்தெல்லோ எனும் வெனிசு மோரியன்' நாடகத்தின் தமிழாக்கம்) (1903) திருமலை சேதுபதி (1910) மணிமேகலை துறவு (1918) ராஜமார்த்தாண்டம் (1919) பாரிஸ்டர் பஞ்சநதம் (1924) கவிதை Poems (20 கவிதைகள்) (1903) Dox vs Dox poems (1903) பொது தர்ம சத்கீத மஞ்சரி (இரண்டு பாகங்கள், 1914) The Ballad of the penniless bride (1915) புது மாதிரிக் கல்யாணப் பாட்டு (1923) இந்திய தேசிய கீதங்கள் (1925) இந்தியக் கும்மி கட்டுரை Thillai Govindan's Miscellany (1907) ஆசாரச் சீர்திருத்தம் (1916) சித்தார்த்தன் (1918) பால வினோதக் கதைகள் (1923) பால ராமாயணம் (1924) குறள் நானூறு (1924) Dalavai Mudaliar (1924) தளவாய் முதலியார் குடும்ப வரலாறு (1924) தட்சிண சரித்திர வீரர் (1925) இதைத் தவிர தமிழில் சில கட்டுரைகள், கருத்துக்கள், போன்றவை பஞ்சாமிர்தம் என்ற இதழில் 1924 முதல் 1925 வரை வெளிவந்தன. அதைப் போலவே ஆங்கிலத்தில் 1892 முதல் 1910 வரை, மாதவையா எழுதிய பதினாறு கட்டுரைகளும் கவிதைகளும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் கல்லூரி இதழில் வெளிவந்தன. இவற்றையும் பார்க்கவும் மாதவையா கிருட்டிணன் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Padmavati - A. Madhaviah மொழிபெயர்ப்பு: மீனாட்சி தியாகராஜன், கதா பதிப்பகம் A. Madhaviah - A Biography and a Novella, Sita Anantha Raman and Vasantha Surya, Oxford University Press பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:1872 பிறப்புகள் பகுப்பு:1925 இறப்புகள் பகுப்பு:திருநெல்வேலி மாவட்ட நபர்கள் பகுப்பு:இதழாசிரியர்கள் பகுப்பு:தமிழ் இதழியலாளர்கள் பகுப்பு:தமிழக ஊடகவியலாளர்கள்
சாகித்திய அகாதமி விருது
https://ta.wikipedia.org/wiki/சாகித்திய_அகாதமி_விருது
சாகித்திய அகாதமி விருது (Sahitya Akademi Award), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. சாகித்ய அகாதமி சாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954-இல் தொடங்கப்பட்ட ஓர் அமைப்பு.அது இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு தொடங்கப்பட்டது. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது. இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளைச் செய்வது சாகித்ய அகாதமி. சாகித்திய அகாதமி உறுப்பினராக இருந்தோர் சாகித்ய அகாதமி கழகத்தில் அனைத்து மொழிகளுக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. தமிழுக்கான இடத்தில் உறுப்பினராக இருந்தோர்: நெ. து. சுந்தரவடிவேலு நாவலர் நெடுஞ்செழியன் (அப்போதைய சென்னை மாநிலக் கல்வி அமைச்சர்) நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 662 பரிசுத் தொகை சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூலினை எழுதிய நூலாசிரியருக்கு முதன்முதலாக 1955-ஆம் ஆண்டில் ரூபாய் 5,000 வழங்கப்பட்டது. பின்னர் 1983-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அதன் பிறகு 1988-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2001-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 40,000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 2003-ஆம் ஆண்டில் ரூபாய் 50,000 ஆக அதிகரிக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு முதல் ரூபாய் 1,00,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது. விருதுக்குத் தேர்ந்தெடுக்கும் முறை இது, நீண்ட, ஒராண்டு கால விவாதம் மற்றும் தேர்வுகளைக் கொண்டது. இந்த விருது இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஓர் ஊடகமாகத் திகழ்கிறது. அதுமட்டுமன்றித் தற்கால மாறுதல்களையும், புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும். முதற்கட்டமாகத் தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஓரிரண்டு வல்லுநர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுநர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுநரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்குத் தேர்வுக்குச் செய்யப்படுகிறது. பின்னர் அகாதமியின் செயற்குழு அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படுகிறது.சாகித்திய அகாதமி விருது தேர்ந்தெடுக்கும் முறை அலுவல்முறை இணையதளத்திலிருந்து சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள் சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள் சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் சாகித்திய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர்கள் சாகித்ய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருது பெற்ற எழுத்தாளர்கள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சாகித்ய அகாதமிக்கான அதிகாரப்பூர்வ இணையதளம் சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் பகுப்பு:இந்திய இலக்கிய விருதுகள் பகுப்பு:சாகித்திய அகாதமி விருதுகள் பகுப்பு:பரிசுகளும் விருதுகளும்
ஞானபீட விருது
https://ta.wikipedia.org/wiki/ஞானபீட_விருது
ஞான பீட விருது (Jnanpith Award ) என்பது இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு சைனக் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. 1954 -ல் இதைத் தோற்றுவித்தவர் சாந்திபிரசாத் ஜெயின் என்பவர். இந்தியாவின் முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான டாக்டர். இராஜேந்திரபிரசாத் இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுவழங்கி பெருமைப்படுத்த ஒரு அமைப்பு வேண்டும் என்று பல தொழில் முனைவோரிடம் கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக உருவானதே பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக்கழகம். இந்த விருது, இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன சரசுவதி சிலையை உள்ளடக்கியது. 1961ல் இந்த விருது நிறுவப்பட்டது. 1965ல் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ. சங்கர குருப்பிற்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார். 1982 வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பைப் பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அதிகபட்சமாக, இந்தி மொழி எழுத்தாளர்கள் பதினொரு முறையு இந்த விருதைப் பெற்றுள்ளார்கள். 2015 ஆம் ஆண்டில் பரிசுத் தொகையானது இந்திய மதிப்பில் 11 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மொத்தமுள்ள அங்கீகரிக்கப்பட்ட இருபத்தைந்து மொழிகளில் இதுவரை மொத்தம் பதினைந்து மொழிகளுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தி மொழிகளில் இதுவரை பதினொரு விருதுகளும், கன்னடம் மொழிகளில் எட்டு விருதுகளும், வங்காள மொழியில் இதுவரை 6 விருதுகளும், மலையாளத்தில் 6 விருதுகளும், குஜராத்தி , மராத்திய மொழி, ஒடியா மொழி, உருது போன்ற மொழிகளில் தலா நான்கு விருதுகளும், தெலுங்கு மூன்று விருதுகளும், அசாமிய மொழி, பஞ்சாபி மொழி, மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் இரண்டு விருதுகளும், காஷ்மீரி மொழிகளில், கொங்கணி மொழி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒரு முறையும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரையில் ஐம்பத்தி ஏழு நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஏழு நபர்கள் பெண்கள் ஆவர். ஆஷா பூர்ணாதேவி இந்த விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆவார். 1965 ஆம் ஆண்டில் புரோதம் புரோதிசுருதி (பொருள்: முதல்சத்தியம்) எனும் வங்காள புதினத்திற்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது. பிண்ணனி link=https://en.wikipedia.org/wiki/File:G.shankarakurup.jpg|thumb|முதல் ஞானபீட விருது பெற்ற சங்கர குருப் பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று நிறுவனம் எனும் நிறுவனத்தை 1944 இல் சகு சாந்தி பிரசாத் ஜெயின் என்ற சகு சைனக் குடும்பத்தைச் சேர்ந்தவரால் தோற்றுவிக்கப்பட்டது. மே 1961 இல் இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து சிறந்த நூலிற்கான விருது வழங்க வேண்டும் என நினைத்தனர். பின் நவம்பர் மாத இறுதியில் ரமா ஜெயின் , (பாரதிய ஞானபீடத்தைத் தோற்றுவித்தவர் ) சில இலக்கிய வல்லுநர்களை அழைத்து இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார். அவர்களில் சிலர் காகா காலேல்கர், ஹரிவன்சராய் பச்சன்,ராம்தாரி சிங் திங்கர் , ஜெய்னெந்திர குமார், ஜெகதீசு சந்திர மார்தூர், பிரபாகர் மாசே, அக்சய குமார் ஜெயின் மற்றும் லட்சுமி சந்திரா ஜெயின். மேலும் இது பற்றி 1962 இல் அனைத்திந்திய குஜராத்திம் சாகித்திய பரிசத் மற்றும் பாரதிய பாஷா பரிசத்தின் ஆண்டுக் அமர்வில் விவாதிக்கப்பட்டது. ஏப்ரல் 2, 1962 இல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சுமார் 300 எழுத்தளர்களை புதுதில்லிக்கு அழைத்து அவர்களை இரு அமர்வுகளாக தரம்வீர் பாரதி அவர்கள் பரிசோதித்து பின் அந்த முன்வரைவினை பிரசாத்திடம் வழங்கினார். முதல் தேர்வுக்குழுக் கூட்டமானது மார்ச் 16, 1963 இல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிரசாத் அவர்கள் பெப்ரவரி 28, 1963 இல் இறந்தார். எனவே காகா காலேல்கர் மற்றும் சம்பூர்ணநந்தர் ஆகியேரை தற்காலிக நிறுவனர்களாக குழு நிர்ணயம் செய்தது. முதல் தேர்வுக் குழு உறுப்பினர்கள் முதல் தேர்வுக்குழு உறுப்பினர்களாக நிரஞ்சன் ராய், கரண் சிங், ஆர். ஆர். திவாகர், வி.ராகவன், பி. கோபால் ரெட்டி, ஹரேகிருஷ்ணா மஹாதப், ரமா ஜெயின், மற்றும் லட்சுமி சந்திரா ஜெயின் ஆகியோர் இருந்தனர். சம்பூர்ணாநந்தர் தலைவராக செயல்பட்டார். 1921 முதல் 1951 ஆம் ஆண்டுகள் வரையிலான காலங்களில் எழுதப்பட்ட நூல்களை முதல் விருதுக்கான பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டனர். விதிமுறைகள், தேர்வு செய்யும் நடைமுறைகள் விருதிற்காக பல இலக்கிய வல்லுநர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகங்கள், பல மொழிகளைச் சேர்ந்த சங்கங்கள், விமர்சகர்கள். போன்றவர்களிடமிருந்து  பரிந்துரைகள் பெறப்படுகின்றன. தற்சமயம் விருது பெற்ற ஒருவரின் நூல்களை அடுத்த இரண்டு வருடத்திற்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. தேர்வுக்குழுவானது சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற மற்றும் நேர்மையான ஏழு முதல் பதினொரு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு உறுப்பினர்களும் மூன்று ஆண்டுகள் தேர்வுக் குழு உறுப்பினர்களாக செயல்படுவர்.தேவையேற்படின் அந்தக் காலத்தை மேலும் இரு ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு செய்யலாம். பரிந்துரைக்கு ஏற்கப்பட்ட நூல்கள் பகுதி அல்லது முழுவதுமாக இந்தி அல்லது ஆங்கிலம்மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பின்னரே அதனை ஆலோசனைக் குழுக்கள் மதிப்பீடு செய்வர். ஒரு குறிப்பிட்ட ஆண்டிக்கான தேர்வு பெற்றவர் பற்றிய அறிவிப்பை தேர்வுக் குழு வெளியிடும். இதற்கான முழு அதிகாரமும் தேர்வுக் குழுவிற்கே உள்ளது. ஞான பீட விருது பெற்றோர் பட்டியல் (ஆண்டு - பெயர் - ஆக்கம் - மொழி) 1965 - ஜி சங்கர குருப் - ஓடக்குழல் (புல்லாங்குழல்) - மலையாளம் 1966 - தாராசங்கர் பந்தோபாத்தியாய் - கணதேவ்தா - வங்காள மொழி 1967 - குவெம்பு (முனைவர் கே.வி. புட்டப்பா) - ஸ்ரீ இராமயண தரிசனம் - கன்னடம் 1967 - உமா ஷங்கர் ஜோஷி - நிஷிதா - குஜராத்தி 1968 - சுமித்ரானந்தன் பந்த் - சிதம்பரா - ஹிந்தி 1969 - பிராக் கோரக்புரி - குல்-இ-நக்மா - உருது 1970 - விஸ்வநாத சத்யநாராயணா - இராமயண கல்பவ்ரிக்ஷமு - தெலுங்கு 1971 - விஷ்ணு டே - ஸ்ம்ருதி சட்டா பவிஷ்யத் - வங்காள மொழி 1972 - இராம்தாரி சிங் தினகர் - ஊர்வசி - ஹிந்தி 1973 - தத்தாத்ரேய ராமச்சந்திரன் பிந்த்ரே - நகுதந்தி - கன்னடம் 1973 - கோபிநாத் மொஹந்தி - மட்டிமடல் - ஒரியா 1974 - விஷ்ணு சகரம் காண்டேகர் - யயாதி - மராத்தி 1975 - அகிலன் - சித்திரப்பாவை - தமிழ் 1976 - ஆஷாபூர்ணா தேவி - ப்ரதம் ப்ரதிஸ்ருதி - வங்காள மொழி 1977 - க. சிவராம் கரந்த் - முக்கஜ்ஜிய கனசுகலு (ஆயாவின் கனவுகள்) - கன்னடம் 1978 - ச.ஹ.வ. அஜ்னேயா - கித்னி நாவோம் மே கித்னி பார் (எத்தனை முறை எத்தனை படகுகள் - ஹிந்தி 1979 - பிரேந்த்ர குமார் பட்டாச்சார்யா - ம்ருத்யுஞ்சய் (சாகாவரம்) - அஸ்ஸாமி 1980 - ச.க.பொட்டிக்கட் - ஒரு தேசத்திண்டே கதா (ஒரு நாட்டின் கதை) - மலையாளம் 1981 - அம்ரிதா பிரீதம் - காகஜ் தே கான்வாஸ் - பஞ்சாபி மொழி 1982 - மஹாதேவி வர்மா - ஹிந்தி 1983 - மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் - சிக்கவீர ராஜேந்திரா - கன்னடம் 1984 - தகழி சிவசங்கரப் பிள்ளை - மலையாளம் 1985 - பன்னாலால் படேல் - குஜராத்தி 1986 - சச்சிதானந்த் ரௌத் ராய் - ஒரியா 1987 - விஷ்ணு வாமன் ஷிர்வாத்கர் - (குசுமக்ராஜ்) - மராத்தி 1988 - முனைவர். சி. நாராயண ரெட்டி - தெலுங்கு 1989 - குர்ராடுலென் ஹைதர் - உருது 1990 - வி. கே. கோகாக் - பாரத சிந்து ரஷ்மி - கன்னடம் 1991 - சுபாஷ் முகோபாத்யாய் - வங்காள மொழி 1992 - நரேஷ் மேத்தா - ஹிந்தி 1993 - சீதாகாந்த் மஹாபாத்ரா - ஒரியா 1994 - உ. இரா. அனந்தமூர்த்தி - கன்னடம் 1995 - எம். டி. வாசுதேவன் நாயர் - மலையாளம் 1996 - மகாசுவேதா தேவி - வங்காள மொழி 1997 - அலி சர்தார் ஜாஃப்ரி - உருது 1998 - கிரிஷ் கர்னாட் - கன்னடம் 1999 - நிர்மல் வர்மா - ஹிந்தி 1999 - குர்தியால் சிங் - பஞ்சாபி 2000 - இந்திரா கோஸ்வாமி - அஸ்ஸாமி 2001 - ராஜேந்திர கேஷவ்லால் ஷா - குஜராத்தி 2002 - ஜெயகாந்தன் - தமிழ் 2003 - விந்தா கரண்டிகர்' - மராத்தி மொழி 2004 - ரகுமான் ராகி சுப்துக் சோடா, கலாமி ராகி மற்றும் சியா ரோட் ஜாரேன் மான்சு - காஷ்மீரி மொழி 2005 - கன்வர் நாராயண் இந்தி மொழி 2006 - ரவீந்திர கேல்கர் கொங்கணி 2006 - சத்திய விரத் சாஸ்திரி சமசுகிருதம் 2007 - ஓ. என். வி. குரூப்'' மலையாளம் 2009 - அமர் காந்த் - இந்தி & ஸ்ரீ லால் சுக்லா - இந்தி 2010- சந்திர சேகர கம்பரா - கன்னடம் 2011- பிரதிபா ரே யஜனசெனி - ஒரியா 2012 - ரவுரி பாரத்வாச பாகுடுரல்லு - தெலுங்கு 2013 - கேதார்நாத் சிங் - இந்தி 2014- பாலச்சந்திர நெமதே - மராத்தி 2015- ரகுவீர் சவுத்ரி - குஜராத்தி 2017 _ கிருஷ்ணா சோப்தி- இந்தி 2018 - அமிதவ் கோசு - ஆங்கிலம் 2019 - அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி - மலையாளம் 2021 - நீல்மனி பூக்கன் - அசாமி 2022 - தாமோதர் மவுசோ - கொங்கணி மேற்கோள்கள் குறிப்புகள் வெளியிணைப்புகள் பகுப்பு:இந்திய இலக்கிய விருதுகள் பகுப்பு:பரிசுகளும் விருதுகளும்
குறள் வெண்பா
https://ta.wikipedia.org/wiki/குறள்_வெண்பா
250px|thumb|right|மிகப்பெரிய நூல் வடிவில் திருக்குறள் குறள் வெண்பா என்பது வெண்பா வகையின் இரண்டு அடி உள்வகையாகும். புகழ் பெற்ற திருக்குறள் குறள் வெண்பா வகையையே சார்ந்தது. எடுத்துக்காட்டு எடுத்துக் காட்டாக ஒரு திருக்குறள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. எழுத்துகள் எல்லாவற்றிற்கும் முதலெழுத்தாக அகரம் இருப்பது போல உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் முதலாளாகக் கடவுள் இருக்கிறார் எனப் பொருள்பட இதனைத்  திருவள்ளுவர் ஆக்கியுள்ளார். திருக்குறள் நூலில் முதலாவது குறள் இதுவே. நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாக முதலாமடியும் மூன்று சீர்களைக் கொண்ட சிந்தடியாக இரண்டாமடியும் அமைய, மொத்தமாக ஏழு சீர்களைக் கொண்ட குறள் வெண்பாவாக இத்திருக்குறளைக் காணலாம். 'அகர' என்ற முதற் சீரில் "அ" உம் 'ஆதி' என்ற நான்காம் சீரில் "ஆ" உம் மோனையாக வந்துள்ளது. அதேவேளை முதலடி முதற் சீரில் "அக" உம் இரண்டாமடி முதற் சீரில் "பக" உம் எதுகையாக வந்துள்ளது. இவ்வாறு எதுகை அமைந்தால் "ஒரு விகற்பக் குறள் வெண்பா" என்றும் இவ்வாறு எதுகை அமையாத வேளை "இரு விகற்பக் குறள் வெண்பா" என்றும் சொல்லப்படுகிறது. ஈரசைச் சீர்கள் ஆறும் மூவசைச் சீர் ஒன்றும் அதேவேளை ஈற்றடி ஈற்றுச் சீர் 'பிறப்பு' எனும் வாய்பாட்டிலும் இக்குறள் அமைந்திருக்கிறது. அதாவது, ஈரசைச் சீர்களும் மூவசைச் சீர்களில் காய்ச் சீரும் ஈற்றடி ஈற்றுச் சீர் ஓரசைச் சீரும் (அல்லது உகரம் ஏறிய ஓரசைச் சீரும்) வெண்பாவில் வருவது இயல்பே! மாமுன் நிரை (இயற்சீர் வெண்டளை), காய்முன் நேர் (வெண்சீர் வெண்டளை) என்றவாறு இக்குறளில் தளைகள் வந்துள்ளது. இங்கே விளமுன் நேர் வராவிடினும் அதுவும் இயற்சீர் வெண்டளை ஆகும். குறள் வகை இனக்குறள், விகற்பக்குறள் என்று குறள் இரண்டு வகைப்படும் என்று யாப்பருங்கல விருத்தி குறிப்பிட்டு அவற்றிற்கு எடுத்துக்காட்டுகளைத் தருகிறது. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 185 இனக்குறள் சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு [மோனை] தன்னுயிர்க் கின்னாமை தான்றிவான் என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல் [எதுகை] இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண் [முரண்] கடிகை நுதல்மடவாள் சொல்லும் கரும்பு படாஅ முலைமேல் துகில் [இயைபு] கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில் [அளபெடை] விகற்பக் குறள் அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் [விகற்பம்] அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ எனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு [விகற்பம்] அறிஞர் இயம்பிய உள்ளத்தும் வைகுமே நன்னுதல் நோக்கோர் வளம் [செந்தொடை] அலகிடுதல் என்பது குறள். இதனை இவ்வாறு முறையாக அலகிடும்போது குறள் வெண்பாவின் இலக்கண அமைதி விளங்கும். சீர்நிலை + குறள் வெண்பா (சீர்நிலை) குறளில் உள்ள சீர் அசை வாய்பாடு அகர நிரை நேர் தேமா முதல நிரை நேர் தேமா எழுத்தெல்லாம் நிரை நேர் நேர் புளிமாங்காய் ஆதி நேர் நேர் தேமா பகவன் நிரை நேர் புளிமா முதற்றே நிரை நேர் புளிமா உலகு நிரைபு பிறப்பு தளைநிலை + குறள் வெண்பா (தளை அமைதி) சீரும் சீரும் தளைதல் தளையின் பெயர் தளைதல் அகர முதல இயற்சீர் வெண்டளை மா முன் நிரை முதல எழுத்தெல்லாம் இயற்சீர் வெண்டளை மா முன் நிரை எழுத்தெல்லாம் ஆதி வெண்சீர் வெண்டளை காய் முன் நேர் ஆதி பகவன் இயற்சீர் வெண்டளை மா முன் நிரை பகவன் முதற்றே இயற்சீர் வெண்டளை மா முன் நிரை முதற்றே உலகு இயற்சீர் வெண்டளை மா முன் நிரை யாப்பு இலக்கணப்படித் திருவள்ளுவர் தனது திருக்குறளில் கையாண்ட நுட்பங்களையே மேலே காண்கின்றோம். இன்னோர் எடுத்துக்காட்டாக 110ஆவது குறளைப் பார்ப்போம். இதுவோர் இரு விகற்பக் குறள் வெண்பா ஆகும். இக்குறளுக்கு  "எந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை." என மு. வரதராசன் விளக்கம் தருகின்றார். மேலும் பார்க்க சிந்தியல் வெண்பா நேரிசை வெண்பா உசாத்துணைகள் யாப்பறிந்து பாப்புனைய - மருதூர் அரங்கராசன் யாப்பதிகாரம் - புலவர் குழந்தை யாப்பரங்கம் - புலவர் வெற்றியழகன் மேற்கோள் வெளி இணைப்புகள் திருக்குறள் அலகிடுதல் பகுப்பு:வெண்பா பகுப்பு:திருக்குறள்
ராதிகா சரத்குமார்
https://ta.wikipedia.org/wiki/ராதிகா_சரத்குமார்
இராதிகா சரத்குமார் (Raadhika Sarathkumar, பிறப்பு: ஆகத்து 21, 1962)https://tamil.filmibeat.com/celebs/radhika-sarathkumar/biography.html தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் , அரசியல்வாதி ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார். வாழ்க்கைச் சுருக்கம் இராதிகா இலங்கையில் கொழும்பு நகரில் 1963 ஆகத்து 21 இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும் அவரது மனைவிகளில் ஒருவரான கீதாவிற்கும் முதல் மகளாக பிறந்தார். மேலும் நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான இராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார். நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். இதற்கு முன்னதாகவே இராதிகாவிற்கு இரண்டு முறை திருமணங்கள் நடந்து விவாகரத்துப் பெற்றார். முதல் முறையாக மலையாள மற்றும் தமிழ் திரைப்பட முன்னாள் நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. நடிப்பு அனுபவம் இவர் தமிழ் திரையுலகில் 1980-1990களில் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், மோகன் போன்றவர்களுடன் தவிர்க்க முடியாத இணை கதாநாயகியாக நடித்துள்ளர். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகருடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் 1980 முதல் 1990 வரை பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் 90களுக்கு பிற்பகுதியில் தமிழ் திரைப்படங்களில் நடிகை இலட்சுமி, ஸ்ரீவித்யா, இராதிகா என்ற மூன்று கதாநாயகிகளும் போட்டி போட்டு கொண்டு தாயார் மற்றும் முதுமையான கதாபாத்திரத்தில் குணச்சித்திர வேடம் ஏற்று திறம்பட நடித்தனர். மேலும் ராதிகா அவர்கள் தனது முதல் திரைப்படமான கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிக்கும் போதே அவரது தாயார் கீதா அவர்கள் இராதிகா நடிப்பில் சிறிதும் கவர்ச்சியான உடையோ அல்லது கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க கூடாது என்ற நிபந்தனையோடு நடிக்க வைத்தார். அதனாலே அன்று முதல் இன்று வரை இராதிகா அவர்கள் கவர்ச்சி விதமான கதாபாத்திரங்களை தவிர்த்து விட்டு நடித்து வருகிறார். இந்த நடிகைகள் பட்டியலில் நடிகை இராதிகா மட்டுமே 2000க்கு பிறகு தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனமான ராடான் மீடியாவொர்க்ஸ் சார்பில் சித்தி, அண்ணாமலை, செல்வி, வாணி ராணி போன்ற மெகா ஹிட் நாடகங்களில் நடித்து அதிலும் மைய்ய கதாநாயகியாகவும், தாயாராகவும், கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அரசியல் வாழ்க்கை 2006 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவர் தனது கணவர் சரத்குமாருடன் அதிமுகவில் இணைந்தார். அக்டோபர் 18, 2006 இல் கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். 2021 முதல் சமத்துவ மக்கள் கட்சி துணைப் பொதுச்செயலாளராக இருக்கிறார். நடித்த திரைப்படங்களில் சில கிழக்கே போகும் ரயில் நிறம் மாறாத பூக்கள் இன்று போய் நாளை வா ஈரவிழிக் காவியங்கள் போக்கிரி ராஜா மூன்று முகம் ரெட்டை வால் குருவி பூந்தோட்ட காவல்காரன் தைப் பொங்கல் ஊர்க்காவலன் கிழக்குச் சீமையிலே வீரபாண்டியன் தெற்கத்திக்கள்ளன் சிப்பிக்குள் முத்து நல்லவனுக்கு நல்லவன் தாவணிக் கனவுகள் பசும்பொன் நானே ராஜா நானே மந்திரி தூங்காதே தம்பி தூங்காதே கேளடி கண்மணி நினைவுச் சின்னம் பவித்ரா ராசய்யா வீரத்தாலாட்டு சூர்யவம்சம் ஜீன்ஸ் தாஜ்மகால் அமர்க்களம் பூமகள் ஊர்வலம் ரோஜாக்கூட்டம் கண்ணாமூச்சி ஏனடா பந்தயம் சகுனி இரண்டாம் உலகம் அமர்க்களம் இராதிகா நடித்துள்ள சில தொலைக்காட்சி தொடர்கள் சித்தி அண்ணாமலை செல்வி அரசி செல்லமே வாணி ராணி சந்திரகுமாரி சித்தி (பருவம் 2) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ராடான் நிறுவனத்தின் இணையதளம் பகுப்பு:1963 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:தமிழ் நடிகைகள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்பு:சென்னை நடிகைகள் பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகைகள் பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்பு:நடிகர் தொடர்பான குறுங்கட்டுரைகள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் பகுப்பு:சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள் பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்பு:20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள் பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள் பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் பகுப்பு:தமிழ்நாட்டு தொலைக்காட்சி பிரமுகர்கள் பகுப்பு:தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள்
ரேவதி (நடிகை)
https://ta.wikipedia.org/wiki/ரேவதி_(நடிகை)
ரேவதி (Revathy, பிறப்பு: சூலை 8, 1966) தமிழ்த் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிகையாக அறியப்படுகிறார். மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, ஆங்கிலத்தில் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார். வாழ்க்கைக் குறிப்பு ரேவதி, 1966 ஜூலை 8-ல் கேரளத்தின் கொச்சியில் பிறந்தார். இவர் தந்தை கேளுண்ணி. ரேவதி, 1988 ல் சுரேஷ் மேனனைத் திருமணம் செய்தார். பின்னர், 2002 ல் இருவரும் மணமுறிவு பெற்று பிரிந்தனர். நடித்துள்ள திரைப்படங்கள் தேவர் மகன் புதிய முகம் மௌன ராகம் 2 ஸ்டேட்ஸ் ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி 1981 மண்வாசனை தமிழ்1984 புதுமைப்பெண் தமிழ் வைதேகி காத்திருந்தாள் தமிழ்1985 ஆகாயத் தாமரைகள் தமிழ் ஆண்பாவம் தமிழ் உதயகீதம் தமிழ் ஒரு கைதியின் டைரி தமிழ் கன்னிராசி தமிழ் செல்வி தமிழ் பகல் நிலவு தமிழ் பிரேம பாசம் தமிழ் திறமை தமிழ்1986 மௌனராகம் தமிழ் லட்சுமி வந்தாச்சு தமிழ் புன்னகை மன்னன் தமிழ்1987 கிராமத்து மின்னல் தமிழ் இலங்கேஸ்வரன் தமிழ்1990 அஞ்சலி தமிழ் அரங்கேற்ற வேளை தமிழ் சத்ரியன் சிறப்புத் தோற்றம் தமிழ் இதயத் தாமரை தமிழ் கிழக்கு வாசல் தமிழ் ராஜா கைய வச்சா தமிழ் 1991 ஆயுள் கைதி தமிழ்1992 தெய்வ வாக்கு தமிழ் தேவர் மகன் தமிழ்1993 புதிய முகம் தமிழ் மறுபடியும் தமிழ்1994 என் ஆசை மச்சான் தமிழ் பாசமலர்கள் தமிழ் பிரியங்கா தமிழ் மகளிர் மட்டும் தமிழ்1995 அவதாரம் தமிழ் தமிழச்சி தமிழ் தொட்டாச்சிணுங்கி தமிழ் 1996 சுபாஷ் தமிழ்1998 தலைமுறை தமிழ் ரத்னா தமிழ் 1999 தாஜ்மகால் தமிழ் இயக்கிய திரைப்படங்கள் மித்ர், மை பிரெண்ட் (ஆங்கிலம்) பிர் மிலேங்கே (இந்தி) விருதுகள் 1992 - சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது. (திரைப்படம் - தேவர் மகன்) 2002 - சிறந்த ஆங்கிலத் திரைப்படத்திற்கான தேசிய விருது. (திரைப்படம் - Mitr, my friend) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ரேவதியின் இணையத்தளம் பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள் பகுப்பு:1966 பிறப்புகள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:இந்தித் திரைப்பட நடிகைகள் பகுப்பு:நடிகர் தொடர்பான குறுங்கட்டுரைகள் பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள் பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள் பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள் பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் பகுப்பு:இந்தியப் பெண் திரைப்பட இயக்குநர்கள்
ஜெர்மனி
https://ta.wikipedia.org/wiki/ஜெர்மனி
செருமனி (Germany, ), அல்லது செருமன் கூட்டாட்சிக் குடியரசு (, ), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆத்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்சு, லக்சம்பேர்க், பெல்சியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. செருமனியின் பரப்பளவு 357,021 கிமீ². 82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடாகவும், மூன்றாவது அதிகம் புலம் பெயர்ந்த மக்களைக் கொண்டதாகவும் திகழ்கிறதுGermany: Inflow of foreign population by country of nationality, 1994 to 2003. செருமனி கிழக்கு செருமனி மற்றும் மேற்கு செருமனி என இரண்டு பகுதிகளாக 1949 ஆம் ஆண்டு முதல் 3.அக்டோபர்,1990 வரை இருந்தது. கிழக்கு-செருமனிக்கு கிழக்கு-பெர்லின் தலைநகரமாகவும் மேற்கு-செருமனிக்கு பான் (Bonn) தலைநகரமாகவும் இருந்தன. மேற்கு-பெர்லினை கிழக்கு-பெர்லின் மற்றும் கிழக்கு-செருமனியில் இருந்து பிரிக்க 1961 இல் பெர்லின் சுவர் கட்டப்பட்டது. 1989 இல் அச்சுவர் உடைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட செருமனிக்கு பெர்லின் தலைநகரம் ஆனது. செருமனி இப்போது 16 மாநிலங்களை (Länder) கொண்ட ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாகும். இதன் தலைநகரம் பெர்லின். இதுவே இந்நாட்டின் பெரிய நகரமும் ஆகும். செருமானியா என அறியப்பட்ட பிரதேசத்தில் கி.பி. 100க்கு முன்னரே செருமானிக் மக்கள் குடியேறியமைக்கு ஆதாரங்கள் உள்ளன. குடிப்பெயர்வுக் காலப்பகுதியில், செருமானிக் குழுக்கள் மேலும் தென்பகுதிக்குப் பரவியதோடு ஐரோப்பாவெங்கும் வெற்றிகரமான ராச்சியங்களை ஏற்படுத்தினர். 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், செருமனிப் பகுதிகள் புனித உரோமப் பேரரசின் மையப்பகுதிகளாக இருந்தன.The Latin name Sacrum Imperium (Holy Empire) is documented as far back as 1157. The Latin name Sacrum Romanum Imperium (Holy Roman Empire) was first documented in 1254. The full name "Holy Roman Empire of the German Nation" (Heiliges Römisches Reich Deutscher Nation) dates back to the 15th century. 16ம் நூற்றாண்டில் வடக்கு செருமன் பகுதிகள் புரட்டசுதாந்து சீர்திருத்தத்தின் மத்திய நிலையமாக விளங்கியது. எனினும், தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் உரோமன் கத்தோலிக்கப் பகுதிகளாகவே இருந்தன. இதன் காரணமாக முப்பதாண்டுப் போர் ஏற்பட்டதோடு, கத்தோலிக்க்- புரட்டசுதாந்து பிரிவினையின் ஆரம்பமாகவும் அமைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, செருமானிய சமுதாயத்தின் பண்பைத் தீர்மானிப்பதாகவும் இது இருந்து வருகிறது. நெப்போலியப் போர்களின் போது, செருமானியப் பகுதிகளில் நாட்டுப் பற்று எழுச்சிபெற்றது. இதன் மூலம்,1871இல், புருசியாவைத் தலைமையாகக் கொண்டு, பெரும்பாலான செருமானியப் பகுதிகள் செருமன் பேரரசாக எழுச்சி பெற்றன. 1918-1919 செருமானியப் புரட்சி மற்றும் முதல் உலகப் போரில் சரணடைவு என்பவற்றைத் தொடர்ந்து, 1918 இல், நாடாளுமன்ற வைமார் குடியரசு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அதன் சில பகுதிகள் வெர்செயில்சு உடன்படிக்கையின்படி பிரித்தெடுக்கப்பட்டன. இக்காலப்பகுதியில், விஞ்ஞான மற்றும் கலைத் துறைகளில், பல முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக 1933 இல் மூன்றாவது முடியாட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் பின்பு நாட்டில் நாசிசக் கொள்கைகள் பரவின. இதனால் இரண்டாம் உலகப்போரும் மூண்டது. 1945 இன் பின், செருமனி நேச நாடுகளால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவை கிழக்கு செருமனி மற்றும் மேற்கு செருமனி என அழைக்கப்பட்டன. 1990 இல் செருமனி மீண்டும் ஒன்றிணைந்தது. 1957ல் ஐரோப்பிய சமூகத்தை உருவாக்குவதில் செருமனியும் பங்கு கொண்டது. இது 1993ல், ஐரோப்பிய ஒன்றியமாக மாறியது. இது சென்சென் பகுதியின் ஒரு பகுதியாகவும், 1999இலிருந்து, யூரோ பகுதியின் ஒரு உறுப்பினராகவும் ஆனது. செருமனி, ஐக்கிய நாடுகள், நேட்டோ, G8, G20, பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்கான அமைப்பு மற்றும் ஐரோப்பியச் சம்மேளனம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான, 2011-2012 காலப்பகுதிக்கான தற்காலிக உறுப்பினராகவும் உள்ளது. செருமனி, உத்தேச மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் நான்காவது பாரிய பொருளாதார நாடாகவும், கொள்வனவுச் சக்தி அடிப்படையில், ஐந்தாம் இடத்திலும் உள்ளது. செருமனி உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும், மூன்றாவது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இது ஒரு உயர் வாழ்க்கைத்தரம் கொண்ட நாடாகவும், சமூகப் பாதுகாப்புடைய நாடாகவும் காணப்படுகிறது. செருமனி உலகின் மிகப் பழைமை வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு முறைமையையும் கொண்டுள்ளது. செருமனியில் பல சிறந்த தத்துவஞானிகள், இசையமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும், இதன் கலாச்சார மற்றும் அரசியல் வரலாறும் சிறப்பானதாகும். சொற்பிறப்பியல் ஜெர்மனி என்ற ஆங்கிலச் சொல் இலத்தீனிய ஜெர்மானியா என்பதிலிருந்து வந்துள்ளது; ரைன் ஆற்றுக்கு கிழக்கில் வசித்த மக்களைக் குறிப்பிட யூலியசு சீசர் இச்சொல்லைப் பயன்படுத்தினார். குறிப்பாக, கால் இனத்தவர்கள் , இவர்களை ஜெர்மனி என அழைத்து வந்தனர். இதிலிருந்தே உரோமானியர்கள் ரைன் ஆற்றுக்கு கிழக்கேயும் தானூப் ஆற்றுக்கு வடக்கேயும் வாழ்ந்த மக்களைக் குறிக்க ஜெர்மனி என்ற பெயரைப் பயன்படுத்த துவங்கினர். இடாய்ச்சு சொல்லான இடாய்ச்சுலாந்து, *தியொடொ என்ற தொன்மைய செருமானிய வேரிலிருந்து வந்ததாகும்; இதன் பொருள் "மக்கள், இனம், நாடு" என்பதாக அமையும். இது ஜெர்மானிய மக்களின் பொதுமொழியைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்ட பரந்த சொல்லாக இருந்தது. இது குறிப்பாக செருமனி மொழியையோ மக்களையோ குறிப்பிடவில்லை. முதன்முதலாக இச்சொல் பயன்படுத்தப்பட்டபோது (பிந்தைய 8-ஆம் நூற்றாண்டு) இது மெர்சியா இராச்சியத்தின் மொழியைக் குறிப்பதாயிருந்தது; உண்மையில் அந்த மொழி பண்டைய ஆங்கிலம் ஆகும்.Online Etymological Dictionary; "Deutsch" பிற்பாடு பல்வேறு இனங்களும் தங்களுக்கான தனி அடையாளத்தை நிலைநிறுத்த முற்பட்டனர்; பிரித்தானியத் தீவிலிருந்தவர்கள் ஆங்கிலோ-சாக்சன் மக்கள், ஆங்கில்கள் பின்னர் ஆங்கிலேயர் எனப்பட்டனர். இவர்கள் தொன்மைய செருமனியின் அறிஞர்களால் "பவேரியர்கள்", "சாக்சன்கள்" அல்லது "இசுவாபியர்கள் " எனப் பிரித்தறியப்பட்டனர். இச்சொற்கள் பெரும் நிலப்பகுதிகளை ஆண்ட உள்ளக ஆட்சியாளர்களைக் கொண்டு உருவாகின."Dux" und "Ducatus". Begriffs- und verfassungsgeschichtliche Untersuchungen zur Entstehung des sogenannten "jüngeren" Stammesherzogtums an der Wende vom neunten zum zehnten Jahrhundert (1977) by H. Goetzபுனித உரோமைப் பேரரசு உடைபட்டபோது, இத்தகைய தனி அடையாளங்கள் மறைந்து அவரவர் பேச்சுவழக்கில் *தியுடொ என்ற சொல் அடிப்படையில் இதுவரை பெயரிடப்படாத செருமானிய இனக்குழுக்கள் அழைக்கப்பட்டன. இவ்வாறு 13-ம் நூற்றாண்டில் தியுடிக்சுலாந்து (டாய்ச்சுலாந்து, செருமனி) புழக்கத்திற்கு வந்தது.Online Etymological Dictionary; "Germany"Etymologisch Woordenboek der Nederlandse Taal; "Duits", "Duitsland". வரலாறு வரலாற்றுக்கு முந்தையக் காலம் 1907இல் கண்டெடுக்கப்பட்ட மாயுவர் 1 தாடையெலும்பு செருமனியில் 600,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொன்மையான மக்கள் வாழ்ந்துள்ளனர் எனக் காட்டுகிறது. உலகில் மிகவும் பழைமையான முழுமையான வேட்டைக்கருவிகள் செருமனியில் இசோனின்கென் என்னுமிடத்தில் 1995இல் கண்டுபிடிக்கப்பட்டன; 380,000 ஆண்டுகள் பழைமையான 6-7.5 அடி நீளமுள்ள மூன்று மர எறிவேல்கள் கிடைத்தன. செருமனியில் உள்ள நியாண்டர் பள்ளத்தாக்கில் (பள்ளத்தாக்கு செருமானிய மொழியில் தால் எனப்படும்) முதல்மனித தொல்லுயிர் எச்சம் கிடைக்கப்பெற்றது; 1856இல் இது புதிய மனித இனமாக நியண்டர்தால் மனிதன் என அங்கீகரிக்கப்பட்டது. இந்த நியாண்டர்தால் தொல்லுயிர் எச்சங்கள் 40,000 ஆண்டுகள் பழைமையானதாக மதிப்பிடப்படுகின்றது. இதேயளவு பழைமையான சான்றுகள் உல்ம் என்னும் ஊருக்கு அருகிலுள்ள சுவாபியன் யுரா குகைகளிலும் கிடைத்துள்ளன; 42,000 ஆண்டுகள் பழைமையான பறவையின் எலும்பு, பெரும் தந்தங்களிலான புல்லாங்குழல்கள் கண்டறியப்பட்டுள்ளன; இவையே உலகின் மிகவும் தொன்மையான இசைக்கருவிகளாகும். 40,000 ஆண்டுக்கு முந்தைய பனிக்கால சிற்பமான சிங்க மனிதன் உலகின் முதல் கலைவடிவமாக கருதப்படுகிறது. ஜெர்மானிக் குழுக்களும் ஃபிராங்கியப் பேரரசும் thumb|300px|ஜெர்மானியாவினதும் புனித உரோமப் பேரரசினதும் வரைபடம் ஜெர்மானிக் குழுக்கள், நோர்டிக் வெண்கலக் காலம் அல்லது ரோமானியருக்கு முந்திய இரும்புக் காலத்திலிருந்தே காணப்பட்டமைக்குச் சான்றுகள் உண்டு. அவர்கள் தெற்கு ஸ்கண்டினேவியா மற்றும் வடக்கு ஜெர்மனியிலிருந்து கி.மு. 1ம் நூற்றாண்டிலிருந்து தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிப் பரவத் தொடங்கினர். இதன் மூலம் கவுலின் செல்டிக் குழுக்கள், ஈரானியர்கள் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் காணப்பட்ட பால்டிக் மற்றும் ஸ்லாவிக் குழுக்களுடனும் தொடர்பு கொண்டனர். அகஸ்டசின் கீழ், ரோமானியத் தளபதியான பப்லியஸ் குயின்டிலியஸ் வரஸ் ஜெர்மானியாவைக் கைப்பற்றினான் (அண்ணளவாக ரைனிலிருந்து யூரல் மலைத்தொடர் வரையிலான பகுதி). கி.பி. 9ல், வரசினால் வழிநடத்தப்பட்ட மூன்று ரோமப் படைப்பிரிவுகள், செருஸ்கன் தலைவரான ஆர்மினியசினால் தோற்கடிக்கப்பட்டன. டாசியஸ் ஜெர்மானியா என்ற நூலை எழுதிய காலப்பகுதியான கி.பி.100ல், ஜெர்மானியக் குழுக்கள், தற்கால கெர்மனியின் பெரும்பாலான பகுதிகளான, ரைன் மற்றும் டன்யூப் நதிக்கரையோரமாகக் குடியேறினர் (லைம்ஸ் ஜெர்மானிகஸ்). எனினும், ஆஸ்திரியா, தெற்கு பவேரியா மற்றும் மேற்கு ரைன்லாந்து என்பன ரோமானிய மாகாணங்களாகவே இருந்தன.Fulbrook 1991, pp. 9–13. 3ம் நூற்றாண்டில், அலெமனி, ஃபிராங்க்குகள், சட்டி, சாக்சன்கள், ஃபிரிசி, சிகம்ப்ரி மற்றும் துரிங்கி போன்ற பல மேற்கு ஜெர்மானிக் குழுக்கள் எழுச்சி பெற்றன. 260களில், ஜெர்மானிக் மக்களில் பலர் ரோமானியக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். 375ல் ஹன்களின் படையெடுப்பு மற்றும் 395ல் ரோமப் பேரரசின் வீழ்ச்சி ஆகியன காரணமாக ஜெர்மானிக் குழுக்கள் மேலும் தென்மேற்காக நகர்ந்தன. இதேவேளை, சில பாரிய குழுக்கள் உருவாகி, சிறிய ஜெர்மானிக் குழுக்களைப் பிரதியீடு செய்தன. பாரிய பகுதிகள் (மெரோவின்கியன் காலப்பகுதியிலிருந்து இவை ஆஸ்திரேசியா என அறியப்பட்டன.) ஃபிராங்குகளால் கைப்பற்றப்பட்டன. மேலும் வடக்கு ஜெர்மனி சாக்சன்களாலும், ஸ்லாவுகளாலும் ஆளப்பட்டது. புனித உரோமப் பேரரசு thumb|upright|left|மார்ட்டின் லூதர் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தை ஆரம்பித்தார். டிசெம்பர் 25, 800ல் ஃபிராங்கிய மன்னனான சார்லமக்னே பேரரசராக முடிசூட்டப் பட்டார். இவர் கரோலிங்கியப் பேரரசை உருவாக்கினார். 843ல் இது பிரிக்கப்பட்டது.Fulbrook 1991, p. 11. இதன் கிழக்குப் பகுதியில் புனித உரோமப் பேரரசு உருவாக்கப்பட்டது. இது வடக்கே எய்டர் ஆற்றிலிருந்து, தெற்கே மத்தியதரைக் கடல் வரையும் பரந்திருந்தது. ஒட்டோனியப் பேரரசர்களின் ஆட்சியின் கீழ்(919–1024), பல பாரிய அரசுகள் ஒன்றிணைந்தன. 962ல் இப்பகுதிகளின் புனித உரோமப் பேரரசராக ஜெர்மானிய மன்னர் முடிசூட்டப்பட்டார். சாலியன் பேரரசர்களின் காலத்தில் (1024–1125), புனித உரோமப் பேரரசு வட இத்தாலியையும் பர்கண்டியையும் உள்வாங்கிக் கொண்டது. ஹொஹென்ஸ்டாஃபென் பேரரசர்களின் ஆட்சியின் கீழ்(1138–1254), ஜெர்மானிய இளவரசர்கள் தமது ஆதிக்கத்தை, ஸ்லாவுகள் வசித்த தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிறுவிக் கொண்டனர். இதன்மூலம் இப்பகுதிகளிலும், மேலும் கிழக்குப் பகுதிகளிலும் ஜெர்மானியக் குடியேற்றங்களை ஏற்படுத்தினர் (ஓஸ்ட்சீட்லங்). வட ஜெர்மானிய நகரங்கள் வளமிக்க நகரங்களாக வளர்ச்சி பெற்றதோடு, ஹன்சியாட்டிக் லீக்கிலும் அங்கத்துவம் பெற்றன.Fulbrook 1991, pp. 13–24. 1315ல் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தினாலும், 1348-50ல் இடம்பெற்ற கறுப்பு இறப்பினாலும் ஜெர்மனியின் சனத்தொகை வீழ்ச்சியடைந்தது. 1356ல் எழுதப்பட்ட கோல்டன் புல் எனும் அரசாணை பேரரசின் அடிப்படை யாப்பாகக் காணப்பட்டது. இதில் ஏழு சக்திமிக்க சிற்றரசுகள் மற்றும் ஆயர் ஆட்சிப் பகுதிகளை ஆண்டோர் மூலம் நடத்தப்படும் தேர்தல் மூலம் பேரரசரைத் தெரிவுசெய்யும் முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.Fulbrook 1991, p. 27. 1517ல் மார்ட்டின் லூதர் தனது தொண்ணூற்றைந்து வாசகங்கள் அடங்கிய ஆய்வுக் கட்டுரையை விற்றன்பேர்க்கில் பிரசுரித்தார். இதன்மூலம், ரோமன் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்த அவர் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தையும் ஆரம்பித்தார். 1530ன் பின் ஒரு தனியான லூதரன் திருச்சபை பல ஜெர்மானியப் பகுதிகளில் உத்தியோகபூர்வ சமயமாக உருவானது. சமய முரண்பாடு காரணமாக முப்பதாண்டுப் போர் (1618–1648) ஆரம்பமானது இது ஜெர்மானியப் பகுதிகளின் அழிவுக்கும் காரணமானது. ஜெர்மானியப் பகுதிகளின் சனத்தொகை 30%த்தால் குறைவடைந்தது. வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் (1648), ஜெர்மானியப் பகுதிகளில் இடம்பெற்ற சமயப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. எனினும் ஜெர்மானியப் பேரரசு பல்வேறு சுதந்திர சிற்றரசுகளாகப் பிரிந்தது. 18ம் நூற்றாண்டில், புனித உரோமப் பேரரசில் இவ்வாறான 1,800 பகுதிகள் காணப்பட்டன.Gagliardo, G., Reich and Nation, The Holy Roman Empire as Idea and Reality, 1763–1806, Indiana University Press, 1980, p. 12-13. 1740இலிருந்து, ஆஸ்திரிய ஹப்ஸ்பர்க் முடியரசினதும், பிரசிய ராச்சியத்தினதும் இரட்டை ஆட்சி ஜெர்மானிய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது. 1806ல் நெப்போலியப் போர்கள் காரணமாக இவ்வாட்சி அகற்றப்பட்டது.Fulbrook 1991, p. 97. செருமனிக் கூட்டமைப்பும் பேரரசும் thumb|கருப்பு-சிவப்பு-தங்கக் கொடியின் துவக்கம்: செருமன் புரட்சி 1848 (பெர்லின், 19 மார்ச்சு 1848) thumb|1871இல் வெர்சாயில் செருமானியப் பேரரசு நிறுவப்படுதல். பிஸ்மார்க்கு மத்தியில் வெள்ளைச் சீருடையில் உள்ளார். முதலாம் நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு 1814இல் கூடிய வியன்னா மாநாடு செருமானியக் கூட்டமைப்பை (Deutscher Bund) நிறுவியது; இது இறையாண்மையுடைய 39 அரசுகளின் நெகிழ்வான கூட்டணியாகும். ஐரோப்பிய மீளமைப்பு அரசியலுக்கு உடன்படாததால் செருமனியில் முற்போக்குவாத இயக்கங்கள் வெளிவரத் தலைப்பட்டன. ஆஸ்திரிய அரசியல்வாதி மெட்டர்னிக்கின் அடக்குமுறைகள் இந்த எதிர்ப்புக்களை வலுவாக்கின. செருமானிய அரசுகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட சோல்பெரைன் என்ற சுங்க ஒன்றியம், அவற்றிடையே பொருளியல் ஒற்றுமைக்கு வழிகோலியது.பிரெஞ்சுப் புரட்சியின் தேசிய முற்போக்கு கருத்துருக்கள் பலரிடையே, குறிப்பாக இளம் செருமானியரிடையே, ஆதரவு பெறத் தொடங்கின. மே 1832இல் நடந்த ஆம்பாக் விழா செருமன் ஒற்றுமைக்கும் விடுதலைக்கும் மக்களாட்சிக்கும் ஆதரவான முதன்மை நிகழ்வாகும். ஐரோப்பாவில் நிகழ்ந்த தொடர் புரட்சிகளின் விளைவாக, செருமனியிலும் பொதுமக்களும் அறிஞர்களும் 1848ஆம் ஆண்டுப் புரட்சிகளைத் தொடங்கினர். பிரசியாவின் நான்காம் பிரெடெரிக் வில்லியத்திற்கு, மிகுந்த குறைவான அதிகாரங்களுடன், பேரரசர் பதவி அளிக்க முன்வந்தனர்; இதனை ஏற்க மறுத்த பிரெடெரிக் வில்லியம் ஓர் அரசியலமைப்பை முன்மொழிந்தார். இது எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. பிரசிய மன்னர் முதலாம் வில்லியமிற்கும் முற்போக்கான நாடாளுமன்றத்திற்கும் இடையே 1862ஆம் ஆண்டு படைத்துறை சீர்திருத்தங்கள் குறித்து கருத்து வேறுபாடு எழுந்தது. மன்னர் பிஸ்மார்க்கை புதிய தலைமை அமைச்சராக நியமித்தார். 1864இல் பிஸ்மார்க் டென்மார்க் போரில் வெற்றி கண்டார். தொடர்ந்து 1866இல் ஆஸ்திரோ-பிரசியப் போரில் இவரடைந்த வெற்றி வட செருமன் கூட்டமைப்பை நிறுவத் துணை நின்றது. முன்பு செருமானிய விவகாரங்களில் முன்னிலை வகித்த ஆஸ்திரியா இக்கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. 1871இல் பிரான்சு தோல்வி கண்டபோது வெர்சாய் அரண்மனையில் 1871இல் செருமன் பேரரசு அறிவிக்கப்பட்டது; ஆஸ்திரியா தவிர்த்த அனைத்து பகுதிகளும் இதில் உள்ளடங்கின. left|thumb|செருமானியப் பேரரசு (1871–1918), ஆதிக்கம் மிக்க பிரசியா நீலத்தில் புதிய நாட்டின் மூன்றில் இருபங்கு நிலப்பகுதியும் மக்கள்தொகையும் கொண்ட பிரசியா ஆதிக்கமிகுந்த அங்கமாக விளங்கியது; ஓயென்சொலார்ன் பரம்பரையைச் சேர்ந்த பிரசிய அரசர் அதன் பேரரசராக ஆட்சி செய்தார், பெர்லின் அதன் தலைநகரமாக விளங்கியது. செருமானிய ஒருங்கிணைப்பிற்குப் பிந்தைய காலகட்டத்தில் பிஸ்மார்க்கின் வெளியுறவுக் கொள்கைகள் செருமனியின் நிலையை, பெரும் வளரும் நாடாக, நிலைநிறுத்தியது. பிரான்சுடன் போர் தவிர்ப்பு உடன்பாடு கண்டார். 1884ஆம் ஆண்டு பெர்லின் மாநாட்டின்படி கமரூன் போன்ற செருமனியின் குடியேற்றப்பகுதிகளுக்கு புதிய பேரரசு உரிமை கொண்டாடியது. செருமனியின் இரண்டாம் வில்லியமின் கீழ், மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே, ஆதிக்கவாதத்தை முன்னெடுத்ததால் அண்டைநாடுகளுடனான உறவில் விரிசல் கண்டது. பிஸ்மார்க் கண்ட பல உடன்பாடுகள் புதுப்பிக்கப்படவில்லை; புதிய கூட்டணிகளில் செருமனி இடம்பெறவில்லை.Fulbrook 1991, pp. 135, 149. சூன் 28, 1914இல் ஆஸ்திரியாவின் இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட் கொலையுண்டதை அடுத்து முதல் உலகப் போர் துவங்கியது. மைய சக்திகளில் அங்கமாகவிருந்த செருமனி நேசநாடுகளிடம் தோற்றது. இந்தப் போரில், ஏறத்தாழ இரண்டு மில்லியன் செருமானிய படைவீரர்கள் மடிந்தனர். நவம்பர் 1918இல் செருமன் புரட்சி வெடித்தது; பேரரசர் இரண்டாம் வில்லியமும் அனைத்து செருமானிய அரசுகளும் பதவி துறந்தனர். நவம்பர் 11இல் ஏற்பட்ட சமரசம் போரை முடிவுக்குக் கொணர்ந்தது. சூன் 1919இல் செருமன் வெர்சாய் உடன்பாட்டில் ஒப்பிட்டது. செருமானியர்கள் இந்த உடன்படிக்கை தங்களுக்கு அவமானகரமாகவும் நீதிபிறழ்ந்ததாகவும் உணர்ந்தனர். இதுவே பின்னாளில் இட்லர் மேலோங்க அடிப்படையாக அமைந்ததாக சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். வீமர் குடியரசும் மூன்றாம் இராய்க்கும் செருமன் புரட்சியின் துவக்கத்தில் செருமனி தன்னை குடியரசாக அறிவித்துக் கொண்டது. இருப்பினும், அதிகாரப் பகிர்விற்கான போராட்டம் தொடர்ந்தது; இடதுசாரி பொதுவுடைமை பவேரியாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆகத்து 11, 1919இல் புரட்சி முடிவுக்கு வந்தபோது செருமனியின் குடியரசுத் தலைவராக இருந்த பிரெடிரிக் எபெர்ட்டு மக்களாட்சிக்கான வைமார் அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.Fulbrook 1991, pp. 156–160. இதன் ஆட்சிக்காலத்தில் பெல்ஜிய, பிரான்சிய ஆக்கிரமிப்புகள், விலைவாசி ஏற்றத்தைத் தொடர்ந்து 1922-23இல் மீயுயர் ஏற்றம், கடன் சீரமைப்புத் திட்டம், 1924இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நாணயம், தேசிய தன்னம்பிக்கை வளர்ச்சி, கலை ஆக்கங்கள், முற்போக்கான பண்பாடு மற்றும் பொருளியல் வளர்ச்சியை செருமனி எதிர்கொண்டது. இருப்பினும் பொருளியல்நிலை நிலையில்லாமலும் அரசியல்நிலை கிளர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தன. 1924 முதல் 1929 வரையிலான செருமனி "பகுதி நிலைபெற்ற" செருமனியாக வரலாற்றாளர் டேவிட் வில்லியம்சன் கூறுகிறார்.Williamson (2005). Germany since 1815: A Nation Forged and Renewed. Palgrave Macmillan, pp. 186-204. இது 1929இல் ஏற்பட்ட பெரும் பொருளியல் வீழ்ச்சியால் சீரழிந்தது. thumb|upright|left|நாட்சி ஜெர்மனியின் இட்லர், பியூரர் கூட்டமைப்பிற்கு 1930இல் நடந்த தேர்தல்களில் நாட்சி கட்சி 18% வாக்குகளையே பெற்றது. எந்தக் கூட்டணியும் அரசமைக்க இயலாதநிலையில் அரசுத்தலைவர் எயின்ரிக் புருன்னிங் வீமர் அரசியலமைப்பின் 48ஆம் பிரிவின்படி தம்மை நெருக்கடிநிலை அதிகாரங்களுடன் நாடாளுமன்ற ஒப்புதலின்றி ஆள அனுமதிக்குமாறு நாட்டுத்தலைவர் பவுல் ஃபொன் இன்டென்பெர்கை வேண்டினார். இதனை ஏற்றுக்கொண்ட பிறகு ஆட்சி செய்த புருன்னிங் பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கத்தை குறைக்க பெரும் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கினார். இது வேலையற்றோர் எண்ணிக்கையை கூட்டியதுடன் சமூக சேவை வசதிகளையும் குறைத்தது. 1932இல் கிட்டத்தட்ட 30% செருமானிய தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்தனர். அந்தாண்டு நடந்த சிறப்புத் தேர்தலில் நாட்சி கட்சி 37% வாக்குகளைப் பெற்றது;இருந்தும் கூட்டணி சேர்த்து ஆட்சி அமைக்க இயலவில்லை. பல்வேறு மாற்று அமைச்சரவைகளை சோதித்து தோல்வியுற்ற பவுல் பொன் இன்டனெபெர்கு சனவரி 30, 1933இல் இட்லரை அரசுத்தலைவராக நியமித்தார்.Fulbrook 1991, pp. 155–158, 172–177. பெப்ரவரி 27, 1933இல் செருமானிய நாடாளுமன்றக் கட்டிடம் தீக்கிரையானது; இந்நிலையில் வழங்கப்பட்ட இராய்க்சுடாக் தீ தீர்ப்பாணையின்படி அடிப்படை குடிம உரிமைகள் இடைநீக்கம் செய்யப்பட்டு இட்லருக்கு]] எல்லையற்ற சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது. இட்லர் முழுமையும் மையப்படுத்தப்பட்ட சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார். செருமனியின் முதல் செறிவக முகாம்களை பெப்ரவரி 1933இல் நிறுவினார். செப்டம்பர் 1933இல் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பில் உலக நாடுகள் சங்கத்திலிருந்து விலக செருமனி வாக்களித்தது. இட்லர் படைத்துறையை வலுப்படுத்தத் தொடங்கினார். பற்றாக்குறை நிதியைப் பயன்படுத்தி இட்லர் பல்லாயிரக் கணக்கான செருமானியர்களை பொதுத்துறை திட்டங்களில் வேலைக்கமர்த்தினார். ஆகத்து 1934இல் படைத்துறை வீரர்கள் நாட்டின் தளபதிக்கல்லாது இட்லருக்கு தனிப்பட்ட முறையில் விசுவாச உறுதிமொழி எடுக்கும் சட்டத்தை அமைச்சரவை இயற்றியது.Kershaw, Ian (1998). Hitler Hubris. New York, NY: W.W. Norton,pg. 317 1934இல் நடந்த பொது வாக்கெடுப்பில் 90% வாக்குகள் பெற்று அரசுத்தலைவர் பதவியும் நாட்டுத்தலைவர் பதவியும் ஒன்றிணைக்கப்பட்டது Kershaw, Ian (1998). Hitler Hubris. New York, NY: W.W. Norton,pg. 230 1935இல் படைத்துறையில் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டது; வெர்சாய் உடன்பாட்டிலிருந்து விலகிக் கொண்டது; யூதர்களையும் மற்றக் குழுக்களையும் இலக்கு வைத்து நுரெம்பர்கு சட்டங்கள் இயற்றப்பட்டன. 1935இல் நேசப்படைகள் கையகப்படுத்தியிருந்த சார் பகுதியை செருமனி மீட்டது; 1936இல் வெர்சாய் உடன்பாட்டின்படி தடை செய்யப்பட்டிருந்த ரைன்லாந்திற்குள் துருப்புக்களை அனுப்பியது.Fulbrook 1991, pp. 188–189. 1938இல் ஆசுதிரியா கையகப்படுத்தப்பட்டது; செப்டம்பர் 1939இல் செக்கோசிலோவாக்கியாவைக் கைப்பற்றியது. பின்னர் போலந்து படையெடுப்பு நடத்துமுகமாக மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. செப்டம்பர் 1, 1939இல் போலந்து படையெடுப்பு நடைபெற்றது; சோவியத் செஞ்சேனையுடன் போலந்தைக் கைப்பறியது. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் செருமனி மீது போர் தொடுத்து இரண்டாம் உலகப் போர் தொடங்கியது.Fulbrook 1991, pp. 190–195. சூலை 22, 1940இல் பிரான்சின் பெரும்பகுதியை செருமனி கைப்பற்றியபின்னர் பிரான்சு செருமனியுடன் சமரசம் செய்து கொண்டது. பிரித்தானியர்கள் 1940இல் பிரித்தானியச் சண்டை என்றறியப்பட்ட செருமனியின் தாக்குதல்களை முறியடித்தனர். சூன் 22, 1941இல் செருமனி மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தை மீறி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தனர். அச்சமயத்தில் செருமனியும் மற்ற அச்சு நாடுகளும் ஐரோப்பாவின் பெரும்பகுதியையும் வடக்கு ஆப்பிரிக்காவையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 1943 துவக்கத்தில் சுடாலின்கிராட் சண்டையை அடுத்து சோவியத் ஒன்றியத்திலிருந்து மீளத் துவங்கினர். செப்டம்பர் 1943இல் செருமனியின் கூட்டாளி இத்தாலி சரண்டைந்தது; இதனால் இத்தாலியிலிருந்த நேசப்படையினருடன் போரிட கூடுதல் துருப்புக்கள் வேண்டியிருந்தது. பிரான்சில் டி-டே படையிறக்கம் போரின் மேற்கு முனையை திறந்தது; செருமனியின் எதிர்த் தாக்குதல்களுக்கிடையே நேசப்படைகள் 1945இல் செருமனிக்குள் நுழைந்தன. பெர்லின் சண்டையையும் இட்லரின் மரணத்தையும் அடுத்து செருமானியப் படை மே 8, 1945இல் சரணடைந்தது. மனித வரலாற்றின் குருதிமிக்க போராக விளங்கிய இந்த உலகப்போரில் ஐரோப்பாவில் மட்டும் 40 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்; செருமன் படையில் மட்டும் 3.25 மில்லியன் முதல் 5.3 மில்லியன் வீரர்கள் இறந்து பட்டனர்.Rüdiger Overmans. Deutsche militärische Verluste im Zweiten Weltkrieg. Oldenbourg 2000. 1 முதல் 3 மில்லியன் செருமானிய குடிமக்கள் மடிந்தனர்.Das Deutsche Reich und der Zweite Weltkrieg, Bd. 9/1, . Page 460 (This study was prepared by the German Armed Forces Military History Research Office, an agency of the German government)Bonn : Kulturstiftung der Deutschen Vertriebenen, Vertreibung und Vertreibungsverbrechen, 1945–1948 : Bericht des Bundesarchivs vom 28. Mai 1974 : Archivalien und ausgewählte Erlebnisberichte / [Redaktion, Silke Spieler]. Bonn :1989 . (This is a study of German expulsion casualties due to "war crimes" prepared by the German government Archives) சிறுபான்மையர், அரசியல், சமய எதிர்ப்பாளர்களை இலக்காக கொண்டு இயற்றப்பட்ட நாட்சி ஆட்சி கொள்கைகள் பின்னதாக பெரும் இன அழிப்பு என அறியப்பட்டன. இந்த இனவழிப்பில் 6 மில்லியன் யூதர்கள், 220,000இலிருந்து 1,500,000 வரையான ரோமானி மக்கள், 275,000 மனநலம்/உடல்நலம் இல்லாதவர்கள், ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள், ஆயிரக்கணக்கான தற்பால்சேர்க்கையினர், நூறாயிரக்கணக்கான அரசியல் அல்லது சமய மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள் உள்ளிட்ட 10 மில்லியன் குடிமக்கள் அழிக்கப்பட்டனர். தவிர ஆறு மில்லியன் உக்ரைனியர் மற்றும் போலந்துக்காரர்களும் 2.8 மில்லியனாக மதிப்பிடப்படும் சோவியத் போர்க்கைதிகளும் நாட்சி ஆட்சியில் உயிரிழந்தனர். thumb|இரண்டாம் உலகப் போரில் இடிபட்ட பெர்லின். போரில் தோல்வியடைந்ததால் செருமனி நிலப்பகுதிகளை இழந்ததோடன்றி செருமனியின் கிழக்குப் பகுதிகளிலிருந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளிலிருந்தும் பல மில்லியன் செருமானிய இனத்தினர் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சில நாட்சிகள் பெரும் இன அழிப்பு போன்ற குற்றங்களுக்காக நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் குற்ற விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டனர். கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் thumb|left|செருமனியில் நேசப்படைகள் ஆக்கிரமித்திருந்த இடங்கள், 1947. செருமனி சரண்டைந்த பிறகு செருமனியின் மிஞ்சியிருந்த பகுதிகளையும் பெர்லினையும் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள் நான்கு இராணுவ ஆக்கிரமிப்பு மண்டலங்களாகப் பிரித்துக் கொண்டன. இந்த மண்டலங்களில் கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6.5 மில்லியனுக்கும் கூடுதலான செருமானிய இன மக்கள் குடியேற்றப்பட்டனர். பிரான்சு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஒன்றிணைத்து மே 23, 1949இல் செருமானியக் கூட்டு மக்களாட்சியாக (Bundesrepublik Deutschland) நிறுவப்பட்டது; அக்டோபர் 7, 1949இல் சோவியத் பகுதி ஜெர்மன் சனநாயகக் குடியரசாக(GDR) (Deutsche Demokratische Republik) அறிவிக்கப்பட்டது. இவை முறைசாராது "மேற்கு ஜெர்மனி" என்றும் "கிழக்கு ஜெர்மனி" என்றும் அழைக்கப்பட்டன. கிழக்கு ஜெர்மனிக்கு கிழக்கு பெர்லின் தலைநகராயிற்று; மேற்கு ஜெர்மனிக்கு பான் தற்காலிகத் தலைநகராயிற்று. செருமானியக் கூட்டு மக்களாட்சிக்கு மார்ஷல் திட்டத்தின் கீழான மீள்கட்டமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன. thumb|right|1989இல் இடிபடுவதற்கு முன்னதாக பிரான்டென்போர்க் வாயில் அருகே பெர்லின் சுவர். இன்று இவ்வாயில் செருமனியின் முதன்மையான தேசிய அடையாளமாக விளங்குகிறது. மேற்கு செருமனி, மக்களாட்சி குடியரசாக சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய அமெரிக்கா, பிரான்சு, ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து செயல்பட்டது. 1949இல் இதன் முதல் அரசுத்தலைவராக (சான்சுலர்) கொன்ராடு அடேனார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1963 வரை இப்பதவியில் நீடித்தார். மேற்கு செருமனி 1955இல் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்புடன் இணைந்தது. கிழக்கு செருமனி கிழக்கத்திய திரளணி நாடாக சோவியத் ஒன்றியத்தின் அரசியல் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டது. கிழக்கு செருமனி மக்களாட்சியாக தன்னை அறிவித்துக் கொண்டாலும் பொதுவுடமையாளர்களின் செருமானிய சோசியலிச ஒற்றுமைக் கட்சியைச் சேர்ந்த பொலிட்பீரோ உறுப்பினர்களிடமே அரசியல் அதிகாரம் இருந்தது. சோவியத்-பாணி திட்டமிட்ட பொருளாதாரம் அமைக்கப்பட்டது; கிழக்கு செருமனி பின்னாளில் காம்கான் நாடாக இணைந்தது. 1961இல் கிழக்கு செருமானியர்கள் மேற்கு செருமனிக்கு தப்பிச் செல்வதைத் தடுக்குமாறு பெர்லின் சுவர் கட்டப்பட்டது. இது பனிப்போரின் ஓர் அடையாளமாக விளங்கியது. எனவே போலந்திலும் அங்கேரியிலும் ஏற்பட்ட மக்களாட்சி மாற்றங்களை அடுத்து 1989இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது பொதுவுடமையின் வீழ்ச்சி, செருமானிய மீளிணைவு மற்றும் டை வென்டே (திருப்பம்) அடையாளமாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 12, 1990இல் இரண்டு+நான்கு உடன்பாடு காணப்பட்டு நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு செருமனிக்கு முழுமையான இறையாண்மை கிட்டியது. அக்டோபர் 3, 1990இல் செருமானிய மீளிணைவு ஏற்பட இது வழிவகுத்தது. செருமானிய மீளிணைவும் ஐரோப்பிய ஒன்றியமும் thumb|செருமானிய மீளிணைவிற்கான தேசிய நினைவுறலாக அக்டோபர் 3, 1990இல் ரெய்க்ஸ்டாக் கட்டடத்தின் வெளியே ஜெர்மன் ஒற்றுமைக் கொடி, ஏற்றப்பட்டது. ரெய்க்ஸ்டாக் கட்டடத்தில்தான் செருமனியின் நாடாளுமன்றம் புன்டேசுடாக் கூடுகிறது. மார்ச்சு 10, 1994இல் இயற்றப்பட்ட பெர்லின்/பான் சட்டப்படி பெர்லின் ஒன்றுபட்ட செருமனிக்கு மீண்டும் தலைநகராயிற்று; பான் நகருக்கு தனிப்பட்ட நிலையாக Bundesstadt (கூட்டு நகரம்) என்ற தகுதி வழங்கப்பட்டது. சில அமைச்சரகங்கள் இங்கு இயங்குகின்றன. அரசு இடமாற்றம் 1999இல் முழுமையடைந்தது. மீளிணைவிற்குப் பிறகு செருமனி ஐரோப்பிய ஒன்றியத்திலும் நாடோவிலும் முனைப்பான பங்காற்றி வருகின்றது. 1999இல் யூகோசுலோவியாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டபோது அமைதிகாப்புப் படையை அனுப்பியது. தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானித்தானிற்கு பாதுகாப்பு வழங்க நாடோவின் முயற்சிகளில் இணைந்து தனது படைகளை அனுப்பியது. இவை பாதுகாப்புப் படைகளை நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற செருமானியச் சட்டங்களுக்கு புறம்பானதால் சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது. 2005இல் அங்கெலா மேர்க்கெல் செருமனியின் முதல் பெண் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புவியியல் செருமனி மேற்கு மற்றும் நடு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இதன் பெரும்பாலான பகுதிகள் அகலக்கோடுகள் 47°, 55° வ ஆகியவற்றுக்கு இடையிலும், நெடுங்கோடுகள் 5°, 16° கி ஆகியவற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. 357,021 ச.கிமீ (137,847 ச.மைல்) பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 349,223 ச.கிமீ (134,836 ச.மைல்) நிலப் பரப்பும், 7,798 ச.கிமீ (3,011 ச.மைல்) நீர்ப் பரப்பும் ஆகும். பரப்பளவின் அடிப்படையில் ஐரோப்பாவின் 7 ஆவது பெரிய நாடாகவும், உலகின் 62 ஆவது பெரிய நாடாகவும் செருமனி விளங்குகிறது. உயரம், அதி கூடிய அளவாகத் தெற்கில் ஆல்ப்சு மலைப்பகுதியில் தொடங்கி வடமேற்கில் வடகடல் கரையோரம் வரையும், வடகிழக்கில் பால்டிக் கடல் கரையோரம் வரையும் குறைகிறது. நடு செருமனியின் காடுகளைக் கொண்ட மேட்டு நிலங்களிலும், வட செருமனியின் தாழ் நிலப் பகுதியிலும் பெரிய ஆறுகளான ரைன், தன்யூப், எல்பே போன்றன ஓடுகின்றன. அல்பைன் பகுதியில் பனியாறுகள் காணப்படினும், தற்போது உருகி இல்லாது போகும் நிலை காணப்படுகிறது. இரும்புத் தாது, நிலக்கரி, பொட்டாசு, மரம், லிக்னைட்டு, யுரேனியம், செப்பு, இயற்கை வளிமம், உப்பு, நிக்கல், விளைநிலங்கள், நீர் என்பன செருமனியின் குறிப்பிடத்தக்க இயற்கை வளங்கள். தட்ப வெப்பம் செருமனியின் பெரும்பாலான பகுதிகளில், ஈரலிப்பான மேற்குக் காற்று முதன்மை பெறும் மிதவெப்பப் பருவகாலத் தட்பவெப்ப நிலை காணப்படுகின்றது. உயிரிப்பல்வகைமை செருமனிக்கு உட்பட்ட பகுதிகளை இரண்டு சூழல்மண்டலங்களாகப் பிரிக்கலாம். இவை, ஐரோப்பிய-நடுநிலக்கடல் மலைசார் கலப்புக் காடுகளும், வடகிழக்கு-அத்திலாந்திய அடுக்கக் கடல்சார் பகுதிகளும் ஆகும். 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, செருமனியின் நிலப்பகுதியின் 34% விளை நிலங்களாகவும், 30.1% காடுகளாகவும் உள்ளன. 13.4% மட்டுமே நிரந்தரமான புல்வெளிகள். 11.8% குடியிருப்புக்களும், சாலைகளுமாக உள்ளன. நடு ஐரோப்பாவுக்குப் பொதுவான தாவரங்களும் விலங்குகளுமே இங்கும் காணப்படுகின்றன. செருமனியின் காடுகளின் மூன்றில் ஒரு பகுதி "பீச்", "ஆக்" போன்ற இலையுதிர் மரங்களால் ஆனவை. மீள்காடாக்க முயற்சிகளினால் ஊசியிலை மரங்கள் அதிகமாகி வருகின்றன. உயர் மலைப் பகுதிகளில், "இசுப்புரூசு", "ஃபர்" மரங்கள் அதிக அளவில் உள்ளன. மணற் பகுதிகளில் "பைன்", "லார்ச்" போன்ற மர வகைகள் காணப்படுகின்றன. பல வகையான பெரணிச் செடிகள், பூஞ்செடிகள், பூசணங்கள், பாசிகள் என்பனவும் உள்ளன. இங்குள்ள காட்டு விலங்குகளுள், மான், காட்டுப்பன்றி, நரி, பாட்கர், முயல் போன்ற வகைகள் அடங்கும். குறைந்த அளவில் நீரெலிகளும் உள்ளன. செருமனியின் மாநிலங்கள் தமிழில்செருமன் மொழியில்செருமனியின் மாநிலங்கள் தலைநகரம் Bundesland Hauptstadt1 பாடன் - வூர்ட்டம்பெர்க்ஸ்டுட்கார்ட்Baden-WürttembergStuttgart2 பயர்ன்முன்ச்சென்(Freistaat) BayernMünchen3 பெர்லின் - Berlin Berlin4 பிரண்டென்பேர்க்போட்ஸ்டம்BrandenburgPotsdam5 பிறேமன்பிறேமன்(Freie Hansestadt) BremenBremen6 ஹாம்பேர்க் - (Freie und Hansestadt) Hamburg Hamburg7 ஹெஸன்வீஸ்பாடன்HessenWiesbaden8 மெக்லென்பேர்க் - ஃபோர்போமென்சுவேரீன்Mecklenburg-VorpommernSchwerin9 நீடர்சாக்ஸன்ஹனோஃபர்NiedersachsenHannover10 நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன்டுஸ்சல்டோர்ப்Nordrhein-WestfalenDüsseldorf11 ரைன்லண்ட் - ஃபால்ஸ்மைன்ஸ்Rheinland-PfalzMainz12 சார்லாந்த்சார்புருக்கன்SaarlandSaarbrücken13 சாக்ஸ்சன்டிரேஸ்டன்(Freistaat) SachsenDresden14 சாக்ஸ்சன் - அன்கால்ட்மாக்டபேர்க்Sachsen-AnhaltMagdeburg15 ஷ்லேஸ்விக் - ஹோல்ஷ்டைன்கீல்Schleswig-HolsteinKiel16 தூறிங்கென்ஏர்ஃபூர்ட்(Freistaat) ThüringenErfurt left|thumbnail|250px|செருமனி center|thumbnail|160px|அதன் மாநிலங்கள் நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் அதிக மக்கள்தொகை-அடர்த்தி கொண்டது. ஹெஸன் மாநிலத்தில் உள்ள ஃபிரான்க்ஃபர்ட் ஜெர்மனியின் வர்த்தக தலைநகரமாகும். தேசிய விமான சேவையான 'லுஃப்ரான்சாஸா'வின் தலைமைச்செயலகம் மற்றும் விமான கிடங்கும் இங்குதான் உள்ளன. இசையமைப்பாளர் பித்தோவன் பானில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் மொழி ஜெர்மனியில் அதிகம் பேசப்படும் மொழி ஜெர்மன் ஆகும். இதுவே தேசிய மொழியும் ஆகும். இது ஆங்கிலம் போன்ற எழுத்துக்களைக் கொண்டிருந்தாலும் மிகவும் வேறுபட்ட ஒலி உடையதாகும் . கூடுதலாக ä,ö,ü,ß போன்ற எழுத்துக்களும் உள்ளன. இவ்வெழுத்துகளுக்கு மேல் இருக்கும் புள்ளிக்கு 'உம்-லௌட்' (umlaut) என்று பெயர். பெயர்சொற்களுக்கு பால் (ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் எனும்) அடிப்படையில் டெயர் ('der'- ஆண்பால்), டீ ('die' - பெண்பால்), டாஸ் ( 'das' - ஒன்றன்பால்) எனும் அடைமொழி சேர்க்கப்படுகின்றது. இந்தியாவில் ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஜெர்மனியின் புகழ்பெற்ற கோத்தே-இன்ஸ்டிட்யூட் (Goethe-Institute) இந்தியாவின் பத்து பெரிய நகரங்களில் ஜெர்மன் மொழி வகுப்புகள் நடத்தி வருகின்றதுhttp://www.goethe.de/ins/in/lp/enindex.htm. முக்கிய ஆறுகள் ஜெர்மனியில் பல முக்கிய நதிகள் உள்ளன. இவற்றுள் மிக நீளமான ரைன் ஆறு 1232 கி.மீ. நீளம் கொண்டது. எல்பா மற்றும் தன்யூப் ஆகியன ரைனிற்கு அடுத்த பெரிய நதிகளாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீர்வழி போக்குவரத்திற்கு இவ்வாறுகள் உதவுகின்றன. பொருளியல் நிலை left|thumb|செருமனியின் நிதியத் தலைநகராக விளங்கும் பிராங்க்ஃபுர்ட் (புதிய ஐரோப்பிய நடுவண் வங்கித் தலைமை அலுவலகத்தின் படம்) thumb|ஐரோப்பாவில் தொழிலாளர் உற்பத்தித் திறன் மிக உயர்ந்த நிலையில் உள்ள நாடுகளில் செருமனியும் ஒன்று. பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு, 2012 right|thumb| மெர்சிடிஸ்-பென்ஸ் மகிழுந்து. 2003 முதல் 2008 வரை உலகின் முன்னணி ஏற்றுமதியாளராக இருந்துள்ளது. thumb|right|நாணயஞ்சார் ஒன்றியமான ஐரோ வலயத்திலும் (கரும் நீலம்), ஐரோப்பிய ஒன்றிய தனிச்சந்தையிலும் செருமனி பங்கேற்கிறது. செருமனியின் சமூகச் சந்தைப் பொருளாதாரம் மிகவுயர் திறனுடைய தொழிலாளர்களையும் பெரும் மூலதனப் பங்குகளையும், மிகக் குறைந்த நிலையில் ஊழலையும், மிக உயர்ந்த புத்தாக்கத் தூண்டலையும் கொண்டதாக விளங்குகிறது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய, செல்வாக்குள்ள தேசிய பொருளாதாரமான செருமனி உலகில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நான்காவதாகவும்Field listing – GDP (official exchange rate) மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் ஐந்தாவதாகவும் உள்ளது.Field listing – GDP (PPP exchange rate) 2011இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிநிலை அறிக்கையில் நிகர பங்களிப்பாளர்களில் பெரும் நாடாக செருமனி இருந்துள்ளது. மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 71% சேவைத்துறையிலும் 28% தொழிலுற்பத்தியிலும் 1% வேளாண்மையிலும் கிடைக்கின்றது. தேசிய வேலையில்லாதோர் விழுக்காடு அலுவல்முறையாக ஏப்ரல் 2014இல் 6.8% ஆக இருந்தது. இதில் முழுநேர வேலைத் தேடும் பகுதிநேர ஊழியரும் அடங்கி உள்ளனர். ஐரோப்பிய நாடுகளிடையே நெருங்கிய பொருளாதார, அரசியல் ஒற்றுமைக்கு செருமனி முயன்று வருகின்றது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையேயான உடன்பாடுகள் மற்றும் ஐ.ஒ. சட்டங்களுக்கேற்ப இதன் வணிகக் கொள்கைகள் வரையறுக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொது நாணயம், ஐரோ, செருமனியில் சனவரி 1, 2002இல் அறிமுகப்படுத்தப்பட்டது. செருமனியின் நாணயஞ்சார் கொள்கைகளை ஐரோப்பிய நடுவண் வங்கி தீர்மானிக்கின்றது. செருமானிய மீளிணைவின் இருபதாண்டுகளுக்குப் பிறகும் வாழ்க்கைத்தரமும் தனிநபர் வருமானமும் முந்தைய மேற்கு செருமனிப் பகுதிகளில் முந்தைய கிழக்கு செருமனிப் பகுதிகளை விடக் கூடுதலாக உள்ளது. கிழக்கு செருமனியின் நவீனமயமாக்கலும் ஒன்றிணைப்பும் நீண்டநாள் செயற்பாடாக உள்ளது; 2019 வரை நீடிக்கும் என மதிப்பிடப்படுகின்றது. மேற்கிலிருந்து கிழக்கிற்கு ஆண்டுக்கு ஏறத்தாழ $80 பில்லியன் பரிமாறப்படுகின்றது. சனவரி 2009 இல் செருமானிய அரசு பொருளியல் நிலையைத் தூண்டும் விதமாகவும் நலிந்த துறைகளைக் காப்பாற்றவும் €50 பில்லியன் திட்டம் அறிவித்துள்ளது. உலகில் நடக்கும் முன்னணி வணிக விழாக்களில் மூன்றில் இரண்டு செருமனியில் நடக்கின்றன. 2010ஆம் ஆண்டில் வருமானத்தின் அடிப்படையில், பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட, உலகின் முதல் 500 பெரிய நிறுவனங்களில் (பார்ச்சூன் குளோபல் 500) 37 செருமனியைத் தலைமையிடமாகக் கொண்டவை. செருமனியின் மிகவும் அறியப்பட்ட வணிக நிறுவனங்கள்: மெர்சிடிஸ்-பென்ஸ், பி.எம்.டபிள்யூ, எஸ்ஏபி, சீமென்ஸ், போல்க்ஸ்வேகன், அடிடாசு, ஆடி, அலையன்ஸ், போர்ஷ், பேயர், போஸ்ச், மற்றும் நிவியா. செருமனியின் சிறு,குறு நிறுவனங்கள் அவற்றின் சிறப்புத்திறனுக்காக அறியப்பட்டவை. தங்கள் துறையில் தனிச்சிறப்பு பெற்றுள்ள இத்தகைய 1000 நிறுவனங்கள் மறைந்துள்ள வாகையாளர்களாக மதிப்பிடப்படுகின்றனர். புகழ் பெற்ற ஜெர்மானியர்கள் ஐன்ஸ்டீன் பிளாங்க் கெப்ளர் டீசல் போஸ்ச் பாரன்ஹட் சீமன்ஸ் கார்ல் பென்சு கார்ல் மார்க்சு பிரெட்ரிக் ஏங்கல்ஸ் அலெக்ஸாண்டர் ஃபான் ஹம்போல்ட் போன்றோர் ஜெர்மனியில் பிறந்த சில அறிஞர்களாவர். காஸ்பர் டேவிட் பிரடெரிக் மைக்கேல் ஷுமக்கர் பிரபல கார் பந்தய வீரர் ஆவார். பீத்தோவன் புகழ் பெற்ற செவ்வியல் இசையமைப்பாளர் ஆவார். பொறிஸ் பெக்கர் (Boris Becker) (சிறந்த ரெனிஸ் வீரன்) ஸ்ரெஃபி கிராஃப் (Steffi Graf)(சிறந்த ரெனிஸ் வீராங்கனை) உணவு செருமானியர்களின் உணவுப்பழக்கம் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு விதமான உணவை தமது பிரத்தியேக உணவாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே உணவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எந்த உணவையும் வீணாக்க மாட்டார்கள். இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போதும், அதன் பின்னும் அவர்கள் அனுபவித்த வறுமையும், பட்டினியும் அதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. இறைச்சி, மீன், முட்டை, மரக்கறி என்று எல்லாவிதமான உணவுகளும் இவர்களது சமையலில் இடம்பெறும். சமைப்பதில் பலவிதமான முறைகளை வைத்திருக்கிறார்கள். உணவில் எல்லாச் சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டுமென்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். பால், பாலாடைக் கட்டி, பழங்கள் போன்றவற்றையும் அதிகளவு கவனம் செலுத்தி உண்கிறார்கள். வடக்கு செருமானியர் உருளைக்கிழங்கைப் பிரதான உணவாகக் கொண்டுள்ளார்கள். உருளைக்கிழங்கை அவித்து, பொரித்து, வறுத்து, வெதுப்பி என்று பலவித முறைகளில் செய்து அதற்கு இறைச்சியோ, மீனோ சேர்த்து உண்கிறார்கள். தெற்கு செருமானியர் நூடில்ஸ், ஸ்பெற்சிலே(நூடில்ஸ்வகையில் பிரத்தியேகமான ஒன்று) க்னொய்டெல் போன்றவற்றைப் பிரதான உணவாகக் கொள்கிறார்கள். இவர்களிடம் ஏறத்தாழ 300 வகையான பாண் வகைகள் (Bread) உள்ளன. பாணை பெரும்பாலும் மாலை உணவாகவும், காலை உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். மாலையில் பாணுக்கு இடையில் மரக்கறிகள், இறைச்சித்துண்டங்கள், வூஸ்ற், சீஸ் போன்றவற்றை வைத்துச் சாப்பிடுகிறார்கள். இதை இரவுப்பாண் (Abendbrot) என்பார்கள். காலையில் பெரும்பாலும் பாணை வெண்ணெய், ஜாமுடன் சாப்பிடுவார்கள். கூடவே மரக்கறித் துண்டுகள், பாலாடைக் கட்டி போன்றவைகளையும் சேர்த்துக் கொள்வார்கள். காலை உணவில் கண்டிப்பாக ஒரு கிண்ணம் தோடம்பழச் சாறு சேர்த்துக் கொள்வார்கள். குழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஒரு கிண்ணம் பால் கொடுக்கப்படும். காலை உணவில் தானியவகைகள் கொண்ட Cereal என்னும் உணவும் பிரதான உணவாகக் கொள்ளப்படுகிறது. வூஸ்ட் எனப்படும் உணவு வகை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. துருக்கி நாட்டு உணவு வகையான கேபாப் ஜெர்மன் மக்களிடையே மிகுந்த வரவேற்பபைப் பெற்றுள்ளது. இத்தாலி உணவான பிற்ஸா, பாஸ்தா, லசாணியா போன்ற உணவு வகைகளும் இங்கு விரும்பப் படுகின்றன. இந்திய மற்றும் சீன உணவங்காடிகளும் இங்குள்ளன. ஜெர்மனியில் கோயில்கள் ஜெர்மனியில் அதிகமானோர் கிறித்தவத்தைப் பின்பற்றினாலும் மற்ற மதங்களும் இங்கு ஆதரிக்கப்படுகின்றன. ஜெர்மனியின் நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் மாநிலத்தில் உள்ள ஹம் என்னும் ஊரில் கோபுரத்தோடு கூடிய அம்மன் கோயில் உள்ளது http://www.kamadchi-ampal.de/englisch/index.php. ஜெர்மனியின் பல ஊர்களில் கோயில்கள் இருந்தாலும்,கோபுர அமைப்போடு இருப்பதால் ஜெர்மனியின் மற்ற மாநிலங்களில் இருந்தும் மக்கள் அதிக அளவில் ஹம்மில் இருக்கும் கோயிலுக்கு வருகின்றனர். ஜெர்மனியில் கல்வி வாய்ப்புகள் ஜெர்மனியின் பல நகரங்களில் பல்கலைக்கழங்கள் உள்ளன http://en.wikipedia.org/wiki/List_of_universities_in_Germany. அயல் நாடுகளில் இருந்து வந்து இங்கு படிக்க விரும்பும் மாணவர்கள் http://www.daad.de/deutschland/index.en.html எனும் இணையதளத்திலிருந்து விபரங்களை அறியலாம். இவற்றையும் பார்க்கவும் செருமனி தேசிய காற்பந்து அணி பிரான்சு ஜெர்மனி உறவு செருமானிய உயிரியலாளர் பட்டியல் குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ஜெர்மனியின் அதிகாரபூர்வ தளம் பகுப்பு:ஐரோப்பிய நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
மியூசிக் ஹால்
https://ta.wikipedia.org/wiki/மியூசிக்_ஹால்
மியூசிக் ஹால் (Music Hall) இங்கிலாந்து நாட்டின் ஒரு நாடகக் கலைவடிவமாகும். இக்கலை 1850 முதல் 1960 வரையிலான காலத்தில் மிகவும் பிரபலம் அடைந்தது. இச்சொல் கீழ் காணும் மூன்று பொருள்களிலும் உபயோககிக்கப் பெற்றது. பாடல், நகைச்சுவை மற்றும் நடிப்புக் கொண்ட பல்சுவை நிகழ்ச்சி இந்நிகழ்ச்சியின் பிண்ணனி இசை இந்நிகழ்ச்சி நடை பெற்ற அரங்கம் பகுப்பு:நாடக வகைகள்
நியூட்டன் (அலகு)
https://ta.wikipedia.org/wiki/நியூட்டன்_(அலகு)
இயற்பியலில், நியூட்டன் (newton, குறியீடு: N) என்பது விசையின் SI அலகாகும். சர் ஐசக் நியூட்டன் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. நியூட்டன் அலகு முதன்முதலில் 1904 வாக்கில் பயன்படுத்தப்பட்டது. 1948-இல் நடந்த நிறைகள் மற்றும் அளவைகள் மீதான பொது மகாநாடு (General Conference on Weights and Measures - CGPM)-க்குப் பிறகு, விசையின் அலகாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு கிலோகிராம் திணிவுள்ள பொருளொன்றில் ஒரு மீட்டர்/செக்கன்2 வேகவளர்ச்சியை (acceleration) உருவாக்கத் தேவையான விசையே ஒரு நியூட்டன் என வரைவிலக்கணம் கூறுகின்றது.. நியூட்டன், SI அடிப்படை அலகுகளில், கிகி x மீ x செக்−2 என்பவற்றை உள்ளடக்கிய ஒரு SI அலகு ஆகும். எடுத்துக்காட்டுகள் நிறை என்பதன் ஒரு வரைவிலக்கணம், புவியீர்ப்பு காரணமாக இரு பொருட்களிடையே உள்ள விசை என்பதனால், நியூட்டன் நிறையின் ஒரு அலகுமாகும். புவி மேற்பரப்பின் வெவ்வேறு இடங்களில் சில பத்திலொரு பங்கு வீதம் அளவுக்கு வேறுபட்டாலும், ஒரு கிலோகிராம் திணிவுள்ள ஒரு பொருள் புவியின் மேற்பரப்புக்கு அண்மையில் அண்ணளவாக 9.81 நியூட்டன்களாக இருக்கும். வேறுவகையில், 9.81−1 கிகி திணிவுள்ள ஒரு பொருள் (≈101.94 கிராம்கள்) அண்ணளவாக ஒரு நியூட்டன் நிறையுடையதாக இருக்கும். மேற்கோள்கள் பகுப்பு:SI சார் அலகுகள் பகுப்பு:விசை அலகுகள்
பாசுக்கல் (அலகு)
https://ta.wikipedia.org/wiki/பாசுக்கல்_(அலகு)
பாசுக்கல் அல்லது பாஸ்கல் (Pascal) (குறியீடு Pa) என்பது அழுத்தத்தின் SI அலகு ஆகும். பாசுக்கல் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு நியூட்டன் எடை செயல்படும்போதுள்ள அழுத்தம் ஆகும். அதாவது ஒரு பாசுக்கல் என்பது நியூட்டன்/மீட்டர்2 க்குச் சமமாகும். புகழ் பெற்ற பிரான்சியக் கணித அறிஞரும், இயற்பியலாளரும், மெய்யியல் அறிஞருமான பிளேய்சு பாசுக்கல் (Blaise Pascal) நினைவாக இந்த அலகு பெயரிடப்பட்டுள்ளது. 1 Pa = 1 N/m2 = 1 (kg·m/s2)/m2 = 1 kg/m·s2 = 0.01 மில்லிபார் = 0.00001 பார் இதே அலகு தகைவு (stress (physics)|stress), யங் கெழு அல்லது யங் எண்(Young's modulus), இழுவலிமை (tensile strength) ஆகியவற்றையும் அளக்கப் பயன்படுகிறது. தரையில், கடல்மட்டத்தில், சீரான வளிமண்டல அழுத்தம் 101,325 பா (Pa) = 101.325 கிபா (kPa) = 1013.25 ஃகெபா (hPa) = 1013.25 மிபார் (mbar) = 760 டார் (ISO 2533) ஆகும். உலகெங்கிலும் வானிலையாளர்கள் (Meteorologists) வெகு காலமாக வளிமண்டல அழுத்தத்தை மில்லிபார் என்னும் அலகால் அளந்துவந்தனர். SI அலகுகள் வந்தபிறகும் இந்த மில்லிபார் அளவை பின்பற்றும் முகமாக மில்லிபாருக்கு இணையான ஃகெக்டோ-பாசுக்கல் என்னும் அலகைப் பயன்படுத்துகின்றனர். ஒரு ஃகெக்டோ பாசுக்கல் என்பது 100 பாசுக்கலுக்கு ஈடு. ஒரு மில்லிபார் என்பது 100 பாசுக்கல் ஆகும். பிற துறைகளில் கிலோபாசுக்கல் போன்ற SI அலகுகளையே பயன்படுத்துகின்றனர். குறைக்கடத்தி கருவி உருவாக்க இயலிலும், வெற்றிடத்தன்மையை (அழுத்தக் குறைவுத் தன்மையை) அளக்க பாசுக்கல் என்னும் அழுத்த அளவு பயன்படுத்தினாலும், கூடவே டார் (Torr) என்னும் அளவையும் பயன்படுத்துகின்றனர். 1 கெக்டோ பாசுக்கல்(hectopascal) (hPa) = 100 Pa = 1 (மில்லிபார்) mbar 1 கிலோபாசுக்கல் (kilopascal) (kPa) = 1000 Pa = 10 hPa முன்னாளைய சோவியத் யூனியனில் மீட்டர்-டன்-நொடி அலகுமுறையில் (mts system) பீசே (pieze) என்னும் அலகை அழுத்தத்திற்குப் பயன்படுத்தினர். அது ஒரு கிலோபாசுக்கலுக்கு ஈடு ஆகும். பல்வேறு (தோராயமான) மதிப்புகளின் எடுத்துக்காட்டுக்கள் (அறிமுகத்துக்கு SI முன்னொட்டு பார்க்கவும்) 0.5 Pa புளூட்டோவின் வளிமண்டல அழுத்தம் (1988 ஆம் ஆண்டு கணிப்பு) 10 பா (Pa) ஒரு செங்குத்துக்குழாயில் ஒரு மில்லிமீட்டர் உயரம் நீரின் உயர்ச்சியால் அடியே எற்படும் அழுத்தம்; 1 kPa (கிபா) செவ்வாய் கோளின் வளிமண்டலத்தின் அழுத்தம், ∼ பூமியின் கடல்மட்ட அழுத்தத்தில் 1 %. 10 kPa (கிபா) 1 மீட்டர் உயரம் நீர் ஏறுவதால் ஏற்படும் அழுத்தம்¹, அல்லது பூமியின் கடல் மட்டம்கடல்மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரம் ஏறினால் காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் தணிவு (குறைப்பு) 101.325 kPa (கிபா) கடல்மட்டத்தில் இருக்கும் சீர்தரமான வளிமண்டல அழுத்தம் = 1013.25 hPa (ஃகெபா) 10 MPa (மெபா)- 100 MPa (மெபா) பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா பெரும்பிளம் (Mariana Trench )யில், ஏறத்தாழ 10 கிலோமீட்டர் (km) ஆழத்தில் உள்ள அழுத்தம் 10 GPa (கிகாபா) வைரம் உருவாகும் அழுத்தம்;. 100 GPa (கிகாபா) கருத்தியல் கணிப்புப்படி கரிம நானோகுழாய் (கார்பன் னானோகுழாய்) (CNTs) இன் இழுவலிமை (tensile strength) ¹பூமியின் நிலப்பரப்பில் மற்ற அழுத்த அலகுகளுடன் ஒப்பீடு 1 பார் 100 000 Pa 1 மில்லிபார் 100 Pa 1 வளிமண்டல அழுத்தம் 101 325 Pa 1 மில்லிமீட்டர் பாதரசம் (mmHg) (அல்லது டார் (Torr)) 133.332 Pa 1 அங்குல பாதரசம் (1 mmHg) 3 386.833 Pa பகுப்பு:SI சார் அலகுகள் பகுப்பு:அழுத்த அலகுகள்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
https://ta.wikipedia.org/wiki/மறுமலர்ச்சி_திராவிட_முன்னேற்றக்_கழகம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( ம. தி. மு. க., Marumalarchi Dravida Munnetra Kazhagam) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1993 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து,‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது. தேர்தல் பங்களிப்பு 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற/நாடாளுமன்றத் தேர்தலில் தனது மதிமுகவுடன் அன்றைய மத்திய காங்கிரசின் எதிர்கட்சியான ஜனதா தளம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி, திவாரி காங்கிரஸ், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் இணைந்து மக்கள் ஜனநாயக முன்னணி என்று வைகோ தலைமையில் கூட்டணி அமைந்தது ஆனால் கூட்டணி பெயர் பிரச்சனையால் பாமக, திவாரி காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்டது. சென்னை பனகல் பூங்காவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவில், தமது சொத்துக்கணக்கை வெளியிட்டார் வை. கோபால்சாமி. கழகத்தின் தலைமையில் மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்பட்ட சூழலில், எதிர்பாராத முடிவாக அவ்வாண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இக்கூட்டணி கட்சிகளோடு இணைந்து போட்டியிட்ட மதிமுகவும் படுதோல்வி அடைந்ததை அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் வைகோவின் ம.தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. தனது மக்கள் ஜனநாயக முன்னணியில் இடம் பெற்றிருந்த ஜனதாதளமும், சிபிஎம்மும் ஒவ்வொரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இத்தேர்தலில் மாறாக வைகோவை வெளியேற்றிய கட்சியான திமுக இம்முறை வெற்றி பெறவும் தனது கட்சி சந்தித்த முதல் தேர்தலிலே பெரும் தோல்வி அடைந்தது. 1998 ஆம் ஆண்டு மத்தியில் ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்ததால். மீண்டும் நடைபெற்ற 1998 நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க தனது திமுகவின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக அங்கம் வகித்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சிவகாசி, பழநி, திண்டிவனம் ஆகிய மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக கூட்டணி ஆதரவுடன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமராக வாஜ்பாய் மத்தியில் ஆட்சி ஆளுவதற்க்கு ஆதரவு அளித்த ம.தி.மு.க முதல் முறையாக வைகோ மக்களவை உறுப்பினர் ஆக பொறுப்பேற்றார். 1999 ஆம் ஆண்டு அதிமுக-பாஜக விற்கு அளித்து வந்த ஆதரவை ஜெயலலிதா விலக்கிக் கொண்டதால் ஒரே ஆண்டில் மீண்டும் வந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்த போது வைகோவை வெளியேற்றிய கட்சியான திமுக–பாஜகவின் தலைமையிலான தேஜகூ கூட்டணியில் இணைந்ததால். பிரதமர் வாஜ்பாய் அவர்களின் வேண்டுகோளை மதித்து வைகோ அக்கூட்டணியில் தொடர்ந்தார். சிவகாசி, பொள்ளாச்சி, திண்டிவனம், திருச்செங்கோடு ஆகிய தொகுதிகளில் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. இம்முறை வாஜ்பாய் அமைச்சரவையில் மதிமுக சார்பில் இரண்டு அமைச்சர்கள் மத்திய இலாக்கா மந்திரியாக பொறுப்பெற்று கொண்டனர். இரண்டாவது முறை வைகோ மக்களவை உறுப்பினர் ஆக பொறுப்பு வகித்தார். 2001 சட்டமன்றத் தேர்தலில் திமுக-பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு பிரச்சனையால் ம.தி.மு.க தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் அங்கம் வகிக்கித்திருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.க இம்முறையும் சிவகாசி, பொள்ளாச்சி, வந்தவாசி, திருச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. திமுக–மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆதரவுக்கு ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. அதை காரணம் காட்டி வைகோ அவர்கள் மதிமுக ஆட்சியில் பங்கு ஏற்காமல் பிரச்சாரங்களின் அடிப்படையில் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தார். பின்பு வைகோ ஈழ தமிழர்கள் விவகாரத்தில் எதிராக செயல்பட்ட கூட்டணி தலைமை கட்சியான காங்கிரசின் செயல்பாட்டை கண்டித்து 2007 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டார். 2006 சட்டமன்றத் தேர்தலின் போது திமுகவுடன் கூட்டணியில் தொடர்ந்த ம.தி.மு.க இத்தேர்தலில் தொகுதி உடன்பாட்டு பிரச்சனையால் வைகோ அவர்கள் எதிர்கட்சியான அதிமுகவில் தன்னை முந்தைய ஆட்சி காலத்தில் 19 மாதங்கள் சிறையில் அடைத்த அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இணைந்தது மக்களிடையே விமர்சிக்கபட்டாலும். இத்தேர்தலில் அதிமுக-மதிமுகவிற்க்கு 35 தொகுதிகள் வழங்கியது அதில் வாசுதேவநல்லூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், கம்பம், தொண்டான்முத்தூர் ஆகிய 6 தொகுதிகளில் வெற்றி பெற்று முதல் முறையாக மதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக சட்டசபைக்கு சென்றனர். மேலும் இத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தாலும் ஆளும் கட்சியான திமுகவிற்கு பலமான எதிர்கட்சித்தலைவியாக ஜெயலலிதா செயல்பட்டார். அதே போல் கூட்டணியில் மதிமுகவின் வைகோ அவர்கள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மிகவும் சவாலாக செயல்பட்டார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்ந்த மதிமுக இத்தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு ஈரோடு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இத்தேர்தலின் போது எதிர்கட்சியான திமுக-காங்கிரஸ் கூட்டணியையும் அக்கட்சியில் நடந்த குறைகளையும், ஈழதமிழற்களின் இனபடுகொலை, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணம், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வழக்குகள், திமுக அமைச்சர்களின் அத்து மீறிய அதிகார வன்முறை செயல்களை கண்டித்து வைகோ அவர்கள் இக்குற்றங்களை நீதிமன்றத்தில் வழக்காக உருவாக்கி தாக்கல் செய்தும். அதை மக்களிடையே வீதி வீதியாக சென்று பிரச்சாரங்களில் கடுமையாக விமர்சித்தார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்ந்த ம.தி.மு.க இத்தேர்தலில் தொகுதி பங்கீடு தராத காரணத்தால் கூட்டணியிலிருந்து விலகியது. இதை தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் தேர்தல் புறக்கணிப்பு செய்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவின் ம.தி.மு.க கட்சி அப்போது மத்தியில் நடந்து கொண்டிருந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் மத்திய காங்கிரஸ் இடியமீன் ஆட்சியை நாட்டைவிட்டு விரட்டவேண்டும். என்ற நோக்கத்துடன் காங்கிரசின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடியை ஆதரித்து மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை அதற்கு விரைவில் மோடி இந்தியாவிற்கு பிரதமராக தேவை என்று கூறி தமிழகம் முழுவதும் மோடி அலையை உருவாக்கினார். அதே போல் தமிழகத்திலும் திமுக, அதிமுக கட்சிக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சி வரவேண்டும் என்று வைகோ பிரச்சாரத்தில் முழங்கினார். அதனால் சுமார் 10 வருடங்களுக்கு பிறகு ம.தி.மு.க-பாஜகவுடன் கூட்டணி வைத்து கொண்டு மத்தியில் பாரதிய ஜனதா கட்சி 10 வருடங்களுக்கு பிறகு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது அக்கட்சியில் நரேந்திர மோடி பிரதமரானார். ஆனால் தமிழகத்தில் பாஜகவின் தலைமையிலான தேஜகூவில் பாஜக மற்றும் பாமக ஒவ்வொரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றது என்றாலும் ம.தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதைவிட வைகோ தான் இத்தேர்தல் பிரச்சாரத்தில் உயிர் மூச்சாக முழங்கி வெற்றி பெற வைத்த பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் இலங்கை பிரதமர் இராஜபக்சே அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதை எதிர்த்து டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட வைகோ தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 2016 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக என்ற தமிழக தேர்தல் களத்தில் வெற்றி பெற்று ஆளும் கட்சிகளிடம் கூட்டணியில் ஈடுபடாமல் ம.தி.மு.க தலைமையில் வைகோ அவர்கள் உருவாக்கிய மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த் அவர்களை முதலமைச்சராக அறிவித்து அவரது தேமுதிக-மதிமுகவுடன் விசிக, தமாகா, சிபிஐ, சிபிஎம் போன்ற தமிழக உள்நாட்டு கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து மிக பெரிய கூட்டணியாக அமைந்தது. இக்கூட்டணி தமிழக தேர்தல் வரலாற்றிலே தமிழகத்தில் வெற்றி பெறும் கட்சிகளான திமுக–அதிமுக கட்சிகளுடன் கூட்டணியில் இணையும் பெரும் கட்சிகளை தனது கூட்டணியில் இணைத்து கொண்டு திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்று சவாலாக மாற்று ஆட்சி தத்துவத்தில் வைகோ அவர்கள் வழி நடத்தி சென்ற போதிலும் இத்தேர்தலில் இக்கூட்டணி கட்சிகளுக்கு பெரும் தோல்வியே கிடைத்தது. 2019 நாடாளமன்றத் தேர்தலில் தமிழகத்தின் பெரும் முதலமைச்சர்கள் ஆன கருணாநிதி, ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு நடந்த இத்தேர்தலில் வைகோ அவர்கள் அதற்கு முந்தைய காலத்தில் கடுமையாக விமர்சித்து வந்த திமுக மற்றும் காங்கிரசுடன் வெகுநாள் கழித்து மீண்டும் தனது மதிமுக இக்கூட்டணியில் சேர்ந்து செயல்பட்டது. தேர்தலுக்கு இரண்டு வருடத்திற்கு முன்பே திமுகவின் அடுத்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் என்று திமுகவே அறிவிக்காத நிலையில் வைகோ அவர்கள் ஸ்டாலினை திமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்தார். பின்பு வைகோவும், ஸ்டாலினும் தோழமை பாராட்டி வந்த நிலையில் இந்த பாராளமன்ற தேர்தலில் வைகோ அவர்களை திமுகவில் விலக்கபட்டதிலிருந்து தனது தந்தை கருணாநிதியே வெகுநாட்களாக வழங்காத மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ஸ்டாலின் வழங்கி பெருமைபடுத்தினார். இத்தேர்தலில் எதிரணியில் அதிமுக ஆட்சியில் முதல்வர் ஜெயலலிதா மர்மமான இறப்பை கண்டித்தும் அவர் இறப்பிற்கு பின் அவரது அதிமுக ஆட்சி கலைக்கபடாமல் மத்திய பாஜகவின் பிரதமர் மோடியின் வரைமுறையற்ற அதிகாரத்தையும் அடிமை கூட்டணி அதிமுக-பாஜக அரசை எதிர்த்தும் மத்தியில் பாஜக அரசின் மதவாத செயல்களையும் கண்டித்து வைகோ பிரச்சாரம் செய்தார். இத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இம்முறை மதிமுகவிற்க்கு ஈரோடு மக்களவைத் தொகுதி ஒதுக்கப்பட்டு திமுகவின் அதிகார பூர்வமான உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சார்பில் அ. கணேசமூர்த்தி வெற்றி பெற்று மக்களவை உறுப்பினர் ஆனார். இம்முறை 1990 ஆம் ஆண்டுக்கு பிறகு சுமார் 30 வருடங்கள் கழித்து நான்காவது முறையாக வைகோ மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்ந்த மதிமுக அக்கட்சி உருவாக்கிய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதில் திமுக தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சட்டமன்ற வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இம்முறை சாத்தூர், வாசுதேவநல்லூர், மதுரை தெற்கு, அரியலூர் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். தேர்தல் வெற்றிகள் வரிசை எண் நாடாளுமன்றத் தேர்தல் ஆண்டு தொகுதிகள்1 1998 சிவகாசி, திண்டிவனம், பழநி2 1999 சிவகாசி, திண்டிவனம், பொள்ளாச்சி, திருச்செங்கோடு3 2004 சிவகாசி, வந்தவாசி, பொள்ளாச்சி, திருச்சி4 2009 ஈரோடு5 2019 ஈரோடு வரிசை எண் 2006 சட்டமன்றத் தேர்தல் 2021 சட்டமன்றத் தேர்தல்1 சிவகாசி சாத்தூர்2 விருதுநகர் வாசுதேவநல்லூர்3 வாசுதேவநல்லூர் மதுரை தெற்கு4 திருமங்கலம் அரியலூர்5 கம்பம்6 தொண்டாமுத்தூர் தேர்தல் சின்னம் 100px 1996 ஆம் ஆண்டில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இக்கட்சிக்கு குடை சின்னம் வழங்கப்பட்டது. 100px சூலை 29, 2010 ஆணையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சிக்கான விதிகளை மதிமுக பெறாததால் மதிமுக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்தது. ஆனால் இக்கட்சி பம்பரம் சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் எனக் கூறியது. 100px 2024 நாடாளுமன்ற தேர்தலில், தேர்தல் ஆணையம் மதிமுகவிற்கு தீப்பெட்டி சின்னத்தை திருச்சி மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கியுள்ளது. முக்கிய மதிமுக அரசியல்வாதிகள் பதவி பெயர் நிறுவன பொதுச்செயலாளர் வைகோஅவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ் முதன்மை செயலாளர் துரை வைகோ துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா செஞ்சி ஏ. கே. மணி ஆடுதுறை முருகன் ரொகையா பீவி சேக் அகமது தி. மு.இராசேந்திரன் கொள்கை விளக்க அணி செயலாளர் வந்தியத்தேவன் பொருளாளர் நெய்வேலி செந்திலதிபன் மாணவர் அணி மாநில செயலாளர் பால.சசிகுமார் அமைப்புச்செயலாளர் பிரியக்குமார் செய்தி தொடர்பு செயலாளர் நன்மாறன் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரப்பூர்வ மதிமுக இணையத்தளம் பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள் பகுப்பு:தமிழ்நாட்டு திராவிட அமைப்புகள் பகுப்பு:1993இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்
பாட்டாளி மக்கள் கட்சி
https://ta.wikipedia.org/wiki/பாட்டாளி_மக்கள்_கட்சி
பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi, பா.ம.க) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். இக்கட்சியை 1989களில், மருத்துவர் ராமதாஸ் தொடங்கினார். வன்னியர் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட வன்னியர் சங்கமானது, பின்னாளில் பாட்டாளி மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியாக மாறியது. இந்த கட்சியின் சின்னமாக 90-களில் 'யானை' சின்னமும், தற்போழுது 'மாம்பழம்' ஆகும். இதுவரை இக்கட்சி தமிழ்நாடு சட்டமன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. சனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்ச் 26, 2009 வரை இருந்தது.http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=PMK+swings+AIADMK+way&artid=HtcJD1dO7X4=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO= 14வது மக்களவையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரா. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார். இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார். சூலை 29, 2010 ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்துள்ளது. ஆனால் இக்கட்சி சின்னத்தை (மாம்பழம்) இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளது.http://eci.nic.in/eci_main/ElectoralLaws/PoliticalParties.pdf தமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்களை கொண்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிட்டதில் 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது. 15வது மக்களவைக்கான தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது. பின்னர் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி வைத்து 23 தொகுதிகளில் போட்டியிட்டு, 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது மற்றும் 3.80% சதவீத வாக்குகளை பெற்றது. சின்னம் இக்கட்சி ஆரம்பத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. பகுசன் சமாச் கட்சிக்கு தேசிய அரசியல் கட்சி என்று 1997இல் தகுதி உயர்த்தப்பட்டதாலும் யானை சின்னத்தை அது நாடு முழுக்க பயன்படுத்தியதாலும் யானை சின்னம் அதற்கு ஒதுக்கப்பட்டது. பாமக தமிழ்நாடு மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்ததால் அதன் யானை சின்னம் பறிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் தகுதி இழக்காததால், அங்கு யானை சின்னத்தை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் இசைந்தது. 1998இல் இக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. அன்றிலிருந்து மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. விதிகளின் படி மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் பறித்து விட்டாலும், 2016 சட்டமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட இக்கட்சிக்கு அனுமதி வழங்கியது. தலைவர் பேராசிரியர் தீரன் (1989 முதல் - வரை) எடப்பாடி கணேசன் கோ. க. மணி (1998 முதல் 2022 வரை) தினமணி மதுரை 2022 சூலை 2 சனிக்கிழமை, பக்.7 அன்புமணி இராமதாசு (2022 மே 28 முதல்) பொதுச்செயலாளர் தலித் எழில்மலை வடிவேல் இராவணன் முக்கியத் தலைவர்கள் ச. இராமதாசு - பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் - பாமக மாநில தலைவர் கோ. க. மணி - முன்னாள் மாநில தலைவர் என். டி. சண்முகம் - முன்னாள் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சர் ஏ. கே. மூர்த்தி - பாமக துணை பொது செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய இரயில்வே துறை இணை அமைச்சர் அர. வேலு - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் இரயில்வே அமைச்சர் வடிவேல் இராவணன் - பாமக மாநிலப் பொதுச்செயலாளர் திலகபாமா - பாமக மாநிலப் பொருளாளர் கோ.க.ம.தமிழ்க்குமரன் - பா.ம.க. இளைஞரணித்தலைவர் தினமணி மதுரை 2022 10 23 ஞாயிறு பக்கம் 8, பாமகவின் இளைஞரணித் தலைவராக தமிழ்த்குமரன் நியமனம் வழக்கறிஞர் கே. பாலு - பாமக பேச்சாளர் தேர்தல் வரலாறு தமிழ்நாடு +தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஆண்டு தேர்தல் மொத்த வாக்குகள் வென்ற தொகுதிகள் மாற்றம் கூட்டணி முடிவு199110ஆவது சட்டமன்றம்1,45,9821 எதிரணி199611ஆவது சட்டமன்றம் 10,42,333 3பாமக+திவாரி எதிரணி200112ஆவது சட்டமன்றம்15,57,500 16அதிமுக+ அரசு200613ஆவது சட்டமன்றம்18,63,749 2திமுக + அரசு201114ஆவது சட்டமன்றம்19,27,783 15திமுக + எதிரணி201615ஆவது சட்டமன்றம்23,00,775 3 தோல்வி202116ஆவது சட்டமன்றம்17,56,796 5அதிமுக+ எதிரணி +மக்களவைத் தேர்தல் வருடம் தேர்தல் மொத்த வாக்குகள் வென்ற தொகுதிகள் மாற்றம் கூட்டணி முடிவு199611ஆவது மக்களவை5,52,11815பாமக + திவாரி காங்கிரசு தோல்வி199812ஆவது மக்களவை15,48,9764தேசகூ அரசு199913ஆவது மக்களவை22,36,8211தேசகூ அரசு200414ஆவது மக்களவை19,27,367மாற்றங்கள் இல்லைமமுகூ அரசு200915ஆவது மக்களவை19,44,6195 ஐதேமுகூ தோல்வி201416ஆவது மக்களவை18,04,8121தேசகூ அரசு201917ஆவது மக்களவை22,97,4311தேசகூ அரசு மமுகூ - மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தேசகூ - தேசிய சனநாயகக் கூட்டணி ஐதேமுகூ - ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி - பாமக-திவாரி காங்கிரசு முன்னணி புதுச்சேரி வருடம் பொதுத் தேர்தல் கிடைத்த வாக்குகள் வெற்றி பெற்ற தொகுதிகள் 1989 9வது மக்களவை 25,021 0 1991 8வது சட்டசபை 11,402 0 1991 10வது மக்களவை 13,375 0 1996 9வது சட்டசபை 11,544 1 1996 11வது மக்களவை 19,792 0 1999 13வது மக்களவை 1,40,920 0 2001 10வது சட்டசபை 36,788 0 2004 14வது மக்களவை 2,41,653 1 2006 11வது சட்டசபை 23,426 2 2009 15வது மக்களவை 2,08,619 0 மக்களவை உறுப்பினர்கள் எண்வருடம்தேர்தல்உறுப்பினர்தொகுதிவகித்த பதவி1199812ஆவது மக்களவைதலித் எழில்மலைசிதம்பரம்சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் (தனி பொறுப்பு), 19992199812ஆவது மக்களவைதுரைவந்தவாசி3199812ஆவது மக்களவைகே. பாரிமோகன்தருமபுரி 4199812ஆவது மக்களவைஎன். டி. சண்முகம்வேலூர் 5199913ஆவது மக்களவைதுரைவந்தவாசி2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்6199913ஆவது மக்களவைபு. தா. இளங்கோவன்தருமபுரி 7199913ஆவது மக்களவைஏ. கே. மூர்த்திசெங்கல்பட்டு இரயில்வே துறை அமைச்சர் (சூலை 2002- 15 சனவரி, 2004)8199913ஆவது மக்களவைஇ. பொன்னுசாமிசிதம்பரம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் (1999-2001)9199913ஆவது மக்களவைஎன். டி. சண்முகம்வேலூர்2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), சுகாதாரம் & குடும்ப நலத்துறை அமைச்சகம் (அக்டோபர் 1999 - மே 2000) இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), நிலக்கரி அமைச்சகம் (மே 2000 - பிப்ரவரி 2001) இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு), உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் (சூலை 2002 - சனவரி 2004)10200414ஆவது மக்களவைகோ. தன்ராஜ்திண்டிவனம்11200414ஆவது மக்களவைஏ. கே. மூர்த்திசெங்கல்பட்டு 2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்12200414ஆவது மக்களவைஇ. பொன்னுசாமிசிதம்பரம்2வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்13200414ஆவது மக்களவைசெந்தில் இராமன்தருமபுரி 14200414ஆவது மக்களவைஅர. வேலுஅரக்கோணம் இரயில்வே துறை அமைச்சர் (2004) 29 மார்ச், 2009 அன்று இரயில்வே துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்15201416ஆவது மக்களவைஅன்புமணி ராமதாஸ் தருமபுரி மாநிலங்களவை உறுப்பினர்கள் வ.எண்பெயர் பதவிஆண்டு1அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினர்2004 - 2010சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர்2004 - 20092மாநிலங்களவை உறுப்பினர்2019 - தற்போது வரை வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு இக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் விடுத்த கோரிக்கையின் படி, அதிமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, வன்னியர் சமூகத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் உள் ஒதுக்கீடாக 10.5% வழங்கி சட்டம் இயற்றியும், அரசாணையும் வெளியிட்டது. தமிழ்நாடு அரசு, வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு செய்தது தவறு என்று கூறிய வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், 10.5% இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. எனவே திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு, 10.5% உள் ஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிட்டது. 10.5% இட ஒதுக்கீடு: மருத்துவ, பொறியியல் கல்வியில் அமல்படுத்த தமிழக அரசு முடிவு? இவற்றையும் பார்க்கவும் மக்கள் தொலைக்காட்சி காமன்வீல் கட்சி தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பா. ம. க கட்சி தளம் பா.ம.க கட்சி வலைப்பூ பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள் பகுப்பு:1989இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் பகுப்பு:பாட்டாளி மக்கள் கட்சி பகுப்பு:புதுச்சேரி அரசியல் கட்சிகள்
வைகோ
https://ta.wikipedia.org/wiki/வைகோ
வைகோ (இயற்பெயர்: வை. கோபால்சாமி, பிறப்பு: மே 22, 1944) தமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர் ஆவார். இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். வைகோ வாழ்க்கை வரலாறு: தொண்டரணி முதல் தனிக்கட்சி வரை பிறப்பும் வளர்ப்பும் வை கோபால்சாமி பிறந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆகும். வையாபுரி - மாரியம்மாள் தம்பதியினருக்கு 1944ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு மூன்று சகோதரிகள், ரவிச்சந்திரன் என்ற இளைய சகோதரரும் உள்ளனர். குடும்ப வாழ்க்கை வை.கோ ரேணுகாதேவி என்ற பெண்ணை 14ஆம் தேதி சூன் மாதம் 1971ஆம் ஆண்டு மணந்தார், இவர்களுக்கு துரை வையாபுரி என்ற மகனும் ராஜலட்சுமி–ராஜசேகரன் மற்றும் கண்ணகி–பாலகிருஷ்ணன் என்ற மகள்களும் உள்ளனர். அரசியல் வாழ்க்கை திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1992 இல் திமுக தலைவர் கருணாநிதியைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலைப் பழி சுமத்தித் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (03/04/1978-02/04/1996), இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2001 இல் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார். அரசியல் பயணத்தில் 50 ஆண்டு 1964 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா முன்னிலையில் சென்னை கோகலே மன்றத்தில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் முதன் முதலில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார் வைகோ.வைகோ 50 மக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்றத் தேர்தலில் வைகோ அவர்கள் தலைமையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த போதிலும் விஜயகாந்த் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிருத்தி அவரது தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என ஆறு கட்சிகள் அங்கம் வகித்தன. மக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைத்தால் ஊழல்வாதிகள் சொத்துக்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கபடுமென வைகோ வாக்குறுதி அளித்தார். இத்தேர்தல் வாக்குறுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது என்றாலும், அரசியல் தலைவர்களிடமும், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் எதிர்ப்பை கிளப்பியது. 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலின் மையப் பிரச்சினை என்ன? தமிழக மக்களின் மையப் பிரச்சினை என்ன? என்று மக்களிடம் கருத்து கணிப்புகளை கைபேசி மற்றும் புலனம், முகநூல் வழியாக கருத்து கேட்கப்பட்டு மக்களின் பேராதரவுடன் வைகோ எடுத்த இந்த முடிவை பாராட்டி மற்ற தமிழக உள்நாட்டுகட்சி மற்றும் இடதுசாரி கட்சி தலைவர்களும் வைகோவின் கருத்தில் உடன்பட்டு மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தனர். மக்களிடையே சரியான வரவேற்பு இருந்தும், பின்னர் ௭திர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தே.மு.தி.க மற்றும் தமாகா விலகியது. பின்பு வரவிருந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மற்ற கட்சிகளோடு உடன்பாடில்லாமல் தனித்து போட்டியிடும் ௭ன்று வைகோ 2016 திசம்பர் மாதம் 27ஆம் தேதி மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் அறிவித்தார். இதன் பிறகு ஏற்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மரணத்திற்கு பின் உள்ளாட்சி தேர்தல் நடக்காததால். பிறகு தான் உருவாக்கிய மக்கள் நலக் கூட்டணியை முடக்கினார். பின்பு திமுகவில் தனது மதிமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் போன்ற மக்கள் நல கூட்டணியில் இருந்த தோழமை கட்சிகளோடு இணைந்து செயல்பட்டார். குற்றம் சாட்டுகிறேன் 2004-2009 யில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இந்திய அரசு எப்படி எல்லாம் உதவியது என்பதனை விளக்கி "குற்றம் சாட்டுகிறேன்" எனும் புத்தகத்தினை வைகோ எழுதியுள்ளார். 2004-2009 ஆண்டுகளில் இந்தியப் பிரதமருக்கு தான் எழுதிய கடிதங்களையும், தனக்குப் பிரதமர் எழுதிய கடிதங்களையும் இந்தப் புத்தகத்தில் தொகுத்து உள்ளார் வைகோ. இதை ஆங்கிலத்தில் "I Accuse" என்ற தலைப்பில் வெளியிட்டும் உள்ளார். பொதுச்சேவை வைகோ 2015 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி இரத்ததான முகாமை தொடங்கினார். கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாம்களை நடத்தினார். நதிநீர் இணைப்புக்காக ஒரு மாதகாலம் நடைபயணமும் மேற்கொண்டார். இவரின் போராட்டங்கள் தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளான முல்லைப்பெரியாறு பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட் என பல போராட்டங்களை நடத்தி வருபவர் வைகோ. மதுவிலக்கு போராட்டம் மதுவை எதிர்த்து 2400 கல் தொலைவு தூரம் தொடர் நடைப்பயணம் மேற்கொண்டவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கடுமையாகப் போராடி அதில் வெற்றி பெற்றவர். 30 முறை கைதானவர். ஐந்து ஆண்டுகள் சிறையில் தன் வாழ்நாளை கழித்தவர். ஒரு கோடி கல் தொலைவுகளுக்கும் மேல் பயணம் செய்தவர், தமிழகத்தில் 50000 கிராமங்களுக்கும் மேல் சென்று மக்களை சந்தித்தவர் ஆவார். சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு சீமைக்கருவேல மரங்களை அழிப்பதற்காக வழக்குத் தொடுத்து வாதாடி இருக்கின்றார். தமிழ்நாட்டில் பல்வேறு நீர்நிலைகள், கண்மாய்கள், ஆற்றுப் படுகைகள் மற்றும் தரிசு நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களால் நீர்வளம், நிலவளம் குன்றி வருகிறது. ௭னவே அம்மரங்களை அடியோடு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட பிற துறைகளின் செயலாளர்களுக்கு 2015 ஆம் ஆண்டு ஆகத்து 8 ஆம் திகதி கடிதம் எழுதினார். தமிழக அரசின் சார்பில் ௭வ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அதே ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சனவரி மாதம் 10 ஆம் திகதியன்று மாண்பமை நீதிபதிகள் செல்வம், கலையரசன் அமர்வில் நடந்த விசாரணையில், தமிழகத்தின் 13 தென்மாவட்டங்களில் சீமைக்கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மாவட்ட நீதிபதிகளின் மேற்பார்வையில் அந்தப் பணிகளை விரைவுபடுத்த ஒவ்வாரு மாவட்டத்திற்கும் 5 வழக்கறிஞர்கள் கொண்ட குழு அமைத்தது. இதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மற்ற 19 மாவட்டங்களிலும் சீமைக்கருவேல மரங்களை வெட்ட ஆணை பிறப்பிக்க கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம் மதுரை கிளை 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் திகதி அதற்கான உத்தரவையும் பிறப்பித்து, 19 மாவட்ட ஆட்சியர்களுக்கும் தாக்கீது அனுப்பியுள்ளது. முல்லைப் பெரியாறு பிரச்சினை முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக எட்டு ஆண்டுகள் போராடி இருக்கின்றார். மீத்தேன் ௭திர்ப்பு போராட்டம் மீத்தேனை எதிர்த்துத் தஞ்சை மண்டலத்தில் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்திருக்கிறார். காவேரி பிரச்சினை காவிரிப் பிரச்சினையில் பத்தாயிரம் பேர்களைத் திரட்டிக் கொண்டு காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து கல்லணை வரையிலும் நடந்து சென்றிருக்கிறார். ஸ்டெர்லைட் போராட்டம் ஸ்டெர்லைட் பிரச்சினையில் உலகக் கோடீசுவரர்களுள் ஒருவரான ஸ்டெர்லைட் அதிபரை எதிர்த்துப் பதினெட்டு ஆண்டுகள் போராடி இருக்கின்றார். இதற்காக உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தானாகவே வாதாடியிருக்கின்றார். தனித்தமிழ் ஈழம் தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்காகப் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தை, உலக அரங்கில் முதன்முதலாக முன்வைத்தது இவரே.(தினத்தந்தி) 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலர் வைகோ ஜெனீவா சென்றார். ஜெனீவா விமான நிலையத்தில் ஈழத் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் வைகோவை வரவேற்றனர்.சுவிஸின் ஜெனீவா நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பான ஐ.நா. குழுவின் முழுமையான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வகித்த பதவிகள் 1970- கலிங்கப்பட்டி பஞ்சாயத்து தலைவர் தனது 25வது அகவையில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர் திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் 1978- முதன்முதலாக மாநிலங்களவை உறுப்பினர் 1984-இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் 1990- மூன்றாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர் என 18 ஆண்டுகள் 1994- ம.தி.மு.க நிறுவன பொதுச்செயலாளர் 1998- பிப்ரவரி மாதம் சிவகாசி தொகுதியில் மக்களவை உறுப்பினர் 1999- அக்டோபர் மாதம் இரண்டாவது முறையாக சிவகாசி தொகுதியில் மக்களவை உறுப்பினர் திமுக மாநில மாணவரணித் துணைத்தலைவர் திமுக தேர்தல் பணிக்குழு தலைவர் திமுக தொண்டர் அணித் தலைவர் 2019 - நான்காவது முறையாக மாநிலங்களவை உறுப்பினர். எழுத்துப் பணிகள் வை.கோ 50க்கும் அதிகமான புத்தகங்களை இயற்றியுள்ளார். அதில் குறிப்பிட்ட புத்தகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வரிசை எண் வருடம் புத்தகம் குறிப்பு1கனவு நனவாகியது2இதயச் சிறகுகள்3வீரத்தின் புன்னகை பரவட்டும்4தமிழிசை வெல்வோம்5நாதியற்றவனா தமிழன்?6குற்றம் சாட்டுகிறேன்71988இரத்தம் கசியும் இதயத்தின் குரல் 8சிறையில் விரிந்த மடல்கள்9இந்தியை எதிர்க்கிறோமே ஏன்?10தமிழ் ஈழம் ஏன்?11படையின் மாட்சி12தமிழர் வாழ்வில் தந்தை பெரியார் 13வைகோவின் சங்கநாதம்14வாழ்வு மலரும் வழி15தமிழ் இசைத்தேன்16இசைத்தேனாய் இலக்கிய தென்றலாய்17தடைகளை தகர்ப்போம்! தாயகம் காப்போம்!18உலக நாடுகளின் ஒன்றியம்19வரலாறு சந்தித்த வழக்குகள்20பெண்ணின் பெருமை21வெற்றிப்படிகள்22தணலும் தன்மையும்23என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?24வெற்றிச் சங்கொலி25வாகை சூடுவோம்26உலகுக்கு ஒரே பொதுமறை27புயலின் முகங்கள்28ஒற்றுமை ஓங்கட்டும்29தமிழரின் போர்வாள் 30மனித உரிமைகள்31போற்றிப் பாடுவோம்32ஆம்! நம்மால் முடியும்33வைகோவின் கடிதங்கள்- பாகம் 1 34வைகோவின் கடிதங்கள்- பாகம் 2 35மறுமலர்ச்சி பெற, எழுச்சி நடை36உழைப்பால் உயர்வோம்37யமுனைக் கரையில்38மனைமாட்சி39தமிழால் உயர்வோம்40பரணிக்கரையில் புரட்சிக்கனல் 41தாகம் தீர பாசனம் பெருக42தேன் மலர்கள்- (பேச்சுக்கள்) 43நடுநாடு தந்த நம்பிக்கை மேற்கோள்கள் வெளி இணைப்புக்கள் வைகோவின் இணையத்தளம் மதிமுகவின் இணையத்தளம் பகுப்பு:நாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள் பகுப்பு:12வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு:13வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:1944 பிறப்புகள் பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு:தமிழ்நாட்டின் மது எதிர்ப்புப் போராளிகள் பகுப்பு:மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள் பகுப்பு:தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் பகுப்பு:ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இசுலாம்
https://ta.wikipedia.org/wiki/இசுலாம்
இசுலாம் (இஸ்லாம் , அரபு: الإسلام; al-'islām, Islam) என்பது ஓரிறைக் கொள்கையைக் கொண்ட ஓர் ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.907 பில்லியன் (190 கோடி மற்றும் எழுபது லட்சத்திற்கும் மேலான) மக்கள் இம்மதத்தைப் பின்பற்றுகிறார்கள்http://www.pewforum.org/Muslim/Mapping-the-Global-Muslim-Population.aspx. இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 24.9 சதவீதமாகும், அதாவது கிட்டத்தட்ட மனித சமுதாயத்தில் நான்கில் ஒருவர். உலகின் 49 நாடுகளின் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையான இசுலாம், கிறிஸ்தவத்திற்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரியதும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றும் ஆகும்Resources-on-the-Future-of-the-Global-Muslim-Population. இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்குப் பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாகக் கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களைப் பெற முடியும் என்பது இசுலாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இசுலாமின் கட்டாயக் கடமைகளாகும். இசுலாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது. 1. அல்லாஹ்வின் வேதம். (குர் ஆன்) 2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள். (ஹதீஸ்) ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி இந்த மார்க்கத்தை மெக்கா நகரில் பரப்பத் தொடங்கினார். பின்பு எட்டாம் நூற்றாண்டில் உமையா கலீபகம் காலத்தில் மேற்கின் அந்தலூசியாவிலிருந்து கிழக்கின் சிந்து ஆறு வரை இஸ்லாம் பரவியது. முகம்மது நபி இறைவனின் தூதர் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை ஆகும். இசுலாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது. ஆதம் (அலை), நூஹ் (அலை) (நோவா), இப்ராகிம் (அலை) (ஆபிரகாம்), இஸ்மாயில் (அலை), தாவூத் (அலை), மூசா (அலை) (மோசே) மற்றும் ஈசா (அலை) போன்ற முன் சென்ற நபிமார்களுக்கும் இறைவனின் கட்டளைகள் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் முகம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திற்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது. உலகில் மிக வேகமாகப் பரவி வரும் பெரும் மதம் இஸ்லாம் ஆகும்Lippman, Thomas W. 7 April 2008. "No God But God." U.S. News & World Report. Retrieved 24 May 2020. "Islam is the youngest, the fastest growing, and in many ways the least complicated of the world's great monotheistic faiths. It is based on its own holy book, but it is also a direct descendant of Judaism and Christianity, incorporating some of the teachings of those religions—modifying some and rejecting others.". சொல்-வேர் இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் சலாம் ஆகும். இது ஸ்-ல்-ம் என்ற மூன்று அரபி வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். இந்த சொல் முழுமையானவொன்று, சரணடைதல், பிழையில்லாதவொன்று, நேர்மை, பாதுகாப்பு, ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் பொருள் அந்த ஏக இறைவன் எனும் படைத்தவனின் நாட்டத்தை ஏற்றுக் கொண்டு, தம்மை முழுமையாக ஒப்படைத்து, அவனை வழிபடுவது என்பதாகும். நம்பிக்கைகள் (ஈமான்) 250px|thumb|குரான்-இசுலாமிய வாழ்வியல் மற்றும் சட்டத்தின் அடிப்படை இசுலாம், தன்னை பின்பற்றுபவர்களை கீழ்கண்ட விடயங்களின் மீது நம்பிக்கை வைப்பதை கட்டாயமாக்கியுள்ளதுகுரான் 4:136. இது ஈமான் என்ற அரபு சொல்லால் குறிக்கப்படுகின்றது. கடவுள் (அல்லாஹ்) “கடவுள் ஒருவனே. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்பது இசுலாமின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட பால்வேறுபாடு காட்டாத ஒரு படர்க்கைச் சொல். இது அரேபிய நாடோடிக் குழுக்கள், தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும்.Islam: Empire of Faith. PBS. Retrieved 2010-12-18 அல்லாஹ் ஒருவனே இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன் தான். அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வேண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது. அவனுடைய ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை. . மலக்குகள் (வானவர்கள்) வானவர்கள் எனப்படுபவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட, இறைவனின் சேவகர்கள் என நம்பிக்கை வைத்தல் ஒரு இசுலாமிய கடமையாகும். இவர்களை இறைவன் ஒளியினால் படைத்ததாக நபிமொழி கூருகின்றது. இறைவனை தொழுதவண்ணம் இருப்பது, இறைத்தூதர்களுக்கு இறைவனின் செய்தியை கொண்டு செல்வது, ஒவ்வொரு மனிதனின் பாவ புண்ணிய கணக்கை குறித்துக்கொள்வது, அவர்களின் உயிரை எடுப்பது ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது. ஜிப்ராயீல் வானவ கூட்டத்தின் தலைவராக குறிப்பிடப்படுகின்றார். அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது ஈமானின் இரண்டாவது அம்சமாகும். கண்களுக்கு புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது. இவர்களுள் பிரதானமானவரது பெயர் ஜிப்ரீல் (அலை) என்பதாகும். இவரது பொறுப்பு இறைச் செய்தியை இறைத்தூதர்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதாகும். இன்னும் பல முக்கியமான வானவர்கள் உள்ளனர். வேதங்கள் முகம்மது நபிக்கும் அவருக்கு முன்னால் வந்துசென்ற வேறுசில தூதர்களுக்கும் வேதங்கள் கொடுக்கப்பட்டன என நம்புதல் மற்றொரு இசுலாமிய கடமையாகும். தவ்ராத், சபூர், இஞ்சில் ஆகியவை முறையே மூசா, தாவூத், ஈசா ஆகிய இறைதூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளதுகுரான் 21:48[குரான் 53:36]குரான் 17:55Abdullah Yusuf Ali, Holy Quran: Text, Translation and Commentary, Appendix: On the Injil. மேலும் இவை காலப்போக்கில் மனிதர்களினால் திருத்தப்பட்டதாகவும்See: * Accad (2003): According to Ibn Taymiya, although only some Muslims accept the textual veracity of the entire Bible, most Muslims will grant the veracity of most of it. * Esposito (1998, pp. 6,12) * Esposito (2002b, pp. 4–5)* Peters (2003, p. 9) *F. Buhl; A. T. Welch. "Muhammad". Encyclopaedia of Islam Online.* Hava Lazarus-Yafeh. "Tahrif". Encyclopaedia of Islam Online., அதனாலேயே இறுதியானதாகவும், திருத்தப்பட முடியாததாகவும் முகம்மது நபிக்கு குரான் வழங்கப்பட்டதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் பெயரறிந்து மேற்கூறப்பட்ட வேதங்களையும், மற்றவைகளைப் பொதுவாகவும் அல்லாஹ் அருளியவை என நம்புவது இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த மூன்றாவது அம்சமாகும். அல்லாஹ் அருளிய அனைத்து வேதங்களிலும் இறுதியானது அல்குர்ஆன் ஆகும். . இறைதூதர்கள் (நபிமார்கள்) இஸ்லாம் கூறும் இறைதூதர்கள் (நபிமார்கள்) எனப்படுபவர்கள், உலக மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மனிதர்கள் என்பது இசுலாமிய நம்பிக்கையாகும். உலகின் முதல் மனிதன் ஆதம் முதல் அனேக தூதர்கள் பூமியின் பல்வேரு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூருகின்றதுகுரான் 10:47. உலக மக்கள் இறைவனை மறந்து, அநீதியின் பக்கம் செல்லும்போது அவர்களை தடுத்து நிறுத்துதல் மற்றும் இறைவனின் செய்தியை அவர்களுக்கு அறிவித்தல் ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது. முகம்மது நபி இவர்களில் இறுதியானவராக குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றார்குரான் 33:40. இறுதித் தீர்ப்பு நாள் (மறுமை-கியாமத்) ஒருநாள் இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு, முதல் மனிதன் ஆதம் முதல் கடைசி மனிதன் வரை மீள்வுயிர்விக்கப்படுவர். அன்று அவர்கள் செய்த பாவ மற்றும் புண்ணியங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவது ஒரு கடமையாகும். கியாமத் எனப்படும் இந்த நாளில் அவர் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப சொர்க்கமோ, நரகமோ தரப்படும் என குரான் குறிப்பிடுகின்றது. மறுமையை நம்ப வேண்டும் என்பது நம்பிக்கை சார்ந்த ஐந்தாவது அம்சமாகும். இது தொடர்பாக நம்பிக்கை கொள்ள வேண்டியவை. ஒரு நாள் அல்லாஹ் முழு உலகையும் படைப்பினங்களையும் அழித்து விடுவான். அந்நாளின் பெயர்: கியாமத் ஆகும். பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அனைவரும் அல்லாஹ்வுக்கு முன் ஆஜராவார்கள். அதற்கு மஹ்ஷர் என்று பெயர். எல்லா மனிதர்களும் தங்கள் உலக வாழ்வில் எதை எதை செய்தார்களோ அவை முழுவதும் கொண்ட செயல் பட்டியல் இறைவனின் நீதி மன்றத்தில் சமர்ப்பணமாகும். விதி விதி எனப்படுவது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என நம்புவது இசுலாமின் ஒரு கடமை. விதியை பற்றி சிந்திப்பதையோ அல்லது அதைப் பற்றி தர்க்கம் செய்வதையோ குரான் தடுக்கின்றது . இந்தப் பிரபஞ்சமும் இதிலுள்ள படைப்புக்கள் அனைத்தும் அணுவும் பிசகாது அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படியே இயங்குகின்றன என்பது இஸ்லாத்தின் இறை நம்பிக்கை சார்ந்த ஆறாவது அம்சமாகும். மனிதனுடைய கற்பனைகள் கருத்துக்கள் கூட அல்லாஹ்வின் நிர்ணயத்துக்கு உட்பட்டவையே. அல்லாஹ்வின் ஞானத்துக்கு புறம்பாகவோ, அவன் நிர்ணயித்த விதிமுறைகளுக்கு மாறாகவோ எதுவும் இயங்க முடியாது. இதன் கருத்து மனிதன் சுதந்திரமாக இயங்குவதற்கான அறிவையும் ஆற்றலையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். அதேவேளை அவற்றில் தன் விதிமுறைகளையும் வைக்க அவன் தவறவில்லை. இது அவனது ஆற்றலில், அறிவில், திறமையில் உள்ளதாகும். கடமைகள் 250px|left|thumb|இறை வணக்கம் செய்யும் கெய்ரோவாசிகள். ழான் லியோன் யேர்மி 1865ல் வரைந்தது. இசுலாம் தன்னைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கடமைகளாக ஐந்தை குறிப்பிடுகின்றது. இவை இசுலாத்தின் ஐந்து தூண்கள் என அழைக்கப்படுகின்றன. உறுதிமொழி (கலிமா) “இறைவன் (அல்லாஹ்) ஒருவனே. அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. முகம்மது அவனது தூதர்.” என்பதில் முழுநம்பிக்கை கொண்டு, வாயால் உறுதிமொழி கொடுப்பது முதல் கட்டாய கடமை. இது கலிமா சகாதா என அழைக்கப் படுகின்றது. ஒரு மாற்று மதத்தவர், இசுலாமிற்கு மாற இதனை உச்சரித்தால் போதுமானதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. கலிமா ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ சிலை வழிபாடு, கபுரு-சமாதி வழிபாடு, முக்கடவுள் வழிபாடு, மதகுருமார்கள் வழிபாடு போன்ற நரகத்திற்கு இட்டுச் செல்லும் கோணல் வழிபாடுகளிலிருந்து விடுபட்டு இறைவன் அளித்துள்ள (பார்க்க 6:153) ஒரே நேர்வழிக்கு வரும்போது மனதில் உறுதி கொண்டு வாயினால் மொழிய வேண்டிய உறுதி மொழியே அரபி மொழி வழக்கில் கலிமா என்பதாகும். “”அல்லாஹ்” என்று அரபி மொழியில் அழைக்கப்படும் இணை, துணை, தாய் தந்தை, மகன், தேவை, இடைத்தரகு எதுவுமே அற்ற ஏகனாகிய இறைவன் தன்னந்தனியனான ஒருவனோ, அதுபோல் அந்த ஓரிறைவனை ஏற்று உறுதி மொழி பகர்வதும் ஒன்றே ஒன்றுதான். அது வருமாறு: அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ. இந்த அரபி மொழி உறுதி மொழியின் தமிழ்ப் பொருள் வருமாறு: “”அல்லாஹ் அல்லாத இறைவனே இல்லை என்று நான் உறுதியாகக் கூறுகிறேன், இன்னும் முஹம்மது(ஸல்) அவர்கள் அவனது அடிமையாகவும், தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதியாகக் கூறுகிறேன்” என்பதாகும். இறை வணக்கம் (தொழுகை) பருவவயதடைந்த, புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொரு இசுலாமியரும் தினமும் ஐந்து முறை இறை வணக்கம் செய்ய வேண்டியது இரண்டாவது கட்டாய கடமையாகும். பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு மட்டுமே இந்த ஐந்து வேளை வணக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. மெக்காவில் உள்ள புனித காபாவை நோக்கி வணங்கப்படும் இந்த முறையில் அரபு மொழியில் உள்ள குரானின் வசனங்கள் ஓதப்படுகின்றன. நோன்பு ஒவ்வொரு வருடமும் இசுலாமிய நாட்காட்டியின் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இசுலாமின் மூன்றாவது கட்டாய கடமையாகும். சூரிய உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு மற்றும் நீர் ஆகிய எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இது நிறைவேட்றப்படுகிண்றது. நோயாளிகள் , பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்குநேர பெண்கள், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. பொருள் தானம் (ஸக்காத்) ஸக்காத் எனப்படும் கட்டாய பொருள் தானம் இசுலாமின் நான்காவது கட்டாய கடமையாகும். இதன்படி, ஒவ்வொரு இசுலாமியரும் ஆண்டுக்கு ஒருமுறை தனக்குச் சொந்தமான தங்க, வெள்ளி நகைகள் மற்றும் வியாபார பொருள்கள் ஆகிய செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை (100க்கு 2.5%) ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும். மொத்த சொத்து 87.5 கிராம் தங்கத்திற்கும் அல்லது 612.5 கிராம் வெள்ளிக்கும் குறைவாக இருக்கும் ஒருவனுக்கு இந்த கட்டாய தானம் கடமை ஆகாது. புனித பயணம் (ஹஜ்) thumb|புனித பயண நேரத்தில் காபா வசதி வாய்ப்பு படைத்த ஒவ்வொரு இசுலாமியரும், தனது வாழ்நாளில் ஒருமுறை சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள காபாவை தரிசிப்பது இசுலாமின் ஐந்தாவது கடமையாகும். இந்த பயணம் இசுலாமிய நாட்காட்டியின் துல்கச் மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. மற்ற நான்கு கட்டாய கடமைகளில் இருந்து இதற்கு சற்று தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் மற்றும் நோய்வாயப்பட்ட மக்களுக்கு இந்த கடமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இசுலாமியப் பிரிவுகள் இசுலாமியர்கள் பொதுவாக சுன்னி மற்றும் சியா என்ற இரண்டு பெரும் பிரிவினராக உள்ளார்கள். இதை தவிர சூபிசம் போன்ற சில பிரிவுகளும் உள்ளன. சன்னி இசுலாம் thumb|400px|சுன்னி, சியா பரவல் சன்னி இசுலாம், இசுலாமிய உட்பிரிவுகளில் மிகப்பெரியது ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 75 முதல் 90 சதவிகிதத்தை கொண்டுள்ளது. சன்னி என்ற சொல் சுன்னத் என்பதன் சுருக்கம் ஆகும். இதற்கு 'முகம்மதை பின்பற்றுதல்' என்பது பொருளாகும். இராக், ஈரான், மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இசுலாமியர்கள் வாழ் நாடுகளிலும் சன்னி இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. இதன் சட்ட பிரிவுகள் மொத்தம் நான்கு உள்ளன. இவை மத்கபு என அழைக்கப்படுகின்றன. (ஹ)கனபி, சாபி, மாலிக்கி மற்றும் ஹன்பலி ஆகிய நான்கில் ஏதேனும் ஒன்றை பின்பற்ற சன்னி முசுலிம்களுக்கு உரிமை உண்டு. இவற்றோடு சேர்த்து சலபி மற்றும் வஃகாபிசம் ஆகியவையும் அதிக பரப்பில் பின்பற்றப் படுகின்றன. சியா இசுலாம் சியா இசுலாம், இசுலாமிய உட்பிரிவுகளில் இரண்டாவது மிகப்பெரிய பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 10 முதல் 20 சதவிகிதத்தை கொண்டுள்ளது. இராக், ஈரான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த பிரிவு, மற்ற இசுலாமிய நாடுகளிலும் கணிசமான அளவில் உள்ளது. சியா இசுலாம் தன்னகத்தே அனேக உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் 'பன்னிருவர் பிரிவு' முதன்மையாக உள்ளது. இதை தவிர இசுமாலி, செய்யதி போன்ற பிரிவுகளும் கணிசமான அளவில் உள்ளன. பன்னிருவர் பிரிவின் அனேக நடைமுறைகள் சுன்னி இசுலாம் முறையுடன் ஒத்துப்போகின்றன. சூபிசம் சூபிசம் என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு ஆகும். அன்றைய இசுலாமிய ஆட்சியாளர்களின் பகட்டான ஆட்சி முறைக்கு எதிரான இயக்கமாக இது தொடங்கப்பட்டது. உலக வாழ்வை துறத்தல், தவம், இசை ஆகியவற்றின் மூலம் இறைவனை அடைய முடியும் என்பது இவர்களின் வாதம். இவ்வாறான முயற்சிகளால் இறைவனை அடைந்தவர்கள் சூபிகள் என அழைக்கப் பட்டனர். தனியே தங்களுக்கான சட்ட முறைகளை கொண்டிராத இவர்கள், சுன்னி மற்றும் சியா இசுலாமிய முறைகளையே பின்பற்றுகின்றனர். தர்கா வழிபாடு என்பது இவர்களின் பிரதான வழிபாட்டு முறையாகும். பிற பிரிவுகள் அகுமதிய்யா - இசுலாத்தின் பல கோட்பாடுகளை பின்பற்றும் இவர்கள், முகமது நபிக்கு பிறகு வந்த மிர்சா குலாம் அஹ்மத் என்பவரை மற்றொரு இறைதூதராக நம்புகின்றனர். இது இசுலாத்தின் அடிப்படை கொள்கைக்கு எதிராக இருப்பதாக கூறி இவர்களை முசுலிம்களாக ஏனைய முசுலிம்கள் ஏற்பதில்லை. இபாதி - இசுலாத்தின் ஆரம்பகாலங்களில் தோன்றிய காரிசியாக்கள் எனப்படும் அடிப்படைவாத குழுவின் ஒரு பிரிவே இபாதி இசுலாம் ஆகும். இவர்கள் இன்றளவும் ஓமன் நாட்டில் பெரும்பான்மையினராக உள்ளனர். குரானிசம் - நபிமொழி நூல்களின் வழிமுறைகளை தவிர்த்து, குரானின் கோட்பாடுகளை மட்டுமே அடிப்படையாக கொண்டு வாழ்பவர்கள் இவர்கள். யசானிசம் - 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சேக் அதி இப்னு முசாபிர் என்பவரால் முன்னெடுக்கபட்ட வழிமுறை இது. குர்தியர்களின் தொன்ம நம்பிக்கைகள் மற்றும் சூபிசத்தின் கூருகள் ஆகியவற்றின் கலவையாக இது உள்ளது. இசுலாம் தேசம் - இது ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க சமய மற்றும் பண்பாட்டு அமைப்பு ஆகும். அமெரிக்காவின் நிறவெறி மற்றும் கிறிஸ்தவத்திற்கு எதிராக இது 20ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. ரோஹிங்கியா முஸ்லிம் இவர்கள் மியான்மர்உள்நாட்டிளேயே அகதிகளாக வாழுகிறார்கள். 2012ஆம் ஆண்டிலிருந்து தாக்குதலால் பலர் இறந்தும், 1,40,000 பேர் உரிமைகள் பரிக்கப்பட்டும் வாழுகிறார்கள்.http://tamil.thehindu.com/search/advanced.do| தி இந்து தமிழ் 20. சூன் 2014 இசுலாமிய பரவல் 400px|thumb|முசுலிம் மக்கள் பரவல் சதவிகிதம் (Pew Research Center, 2009). 2010ல் 232 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு, மொத்தம் 1.57 பில்லியன் மக்கள் இசுலாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூருகின்றது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 23% ஆகும். இதில் 75 முதல் 90 சதவீதம் வரை சுன்னி முசுலிம்களும், 10 முதல் 20 சதம் வரை சியா முசுலிம்களும் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூருகின்றது. ஏறக்குறைய 50 நாடுகளில் இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. கண்டங்கள் விரிசையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகமான அளவில் இசுலாம் பரவி உள்ளது. மொத்த இசுலாமிய மக்கள்தொகையில் 68%தை ஆசிய கண்டம் கொண்டுள்ளது. 638 மில்லியனுக்கும் அதிகமான இசுலாமியர்கள் இந்தோனேசியா, பாகிசுத்தான், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர். ஆப்பிரிக்காவை பொருத்த அளவில் எகிப்து மற்றும் நைசீரியா ஆகியவை அதிக இசுலாமிய மக்கள்தொகையை கொண்டுள்ளன. ஐரோப்பாவை பொருத்த அளவில் அநேக நாடுகளில், கிறிஸ்தவத்திற்கு அடுத்த நிலையில் இசுலாம் உள்ளது. துருக்கி, அதிகக் கூடிய இசுலாமிய மக்கள் தொகையை கொண்ட ஐரோப்பிய நாடாகும். அமெரிக்காவில் இசுலாமியர்களின் மக்கள் தொகை 7 மில்லியன் ஆகும். வரிசை எண் கொடி நாடு இசுலாமிய மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில்இசுலாமியர்களினன் பரவல் (%)pewforum.org 2010ன் கணிப்பு 1 50px இந்தோனேசியா 204847000 88.1% 2 50px பாகிசுத்தான் 178097000 96.4% 3 50px இந்தியா 177286000 14.6% 4 50px வங்காள தேசம் 148607000 90.4% 5 50px எகிப்து 80024000 94.7% 6 50px நைசீரியா 75728000 47.9% 7 50px ஈரான் 74819000 99.7% 8 50px துருக்கி 74660000 98.6% 9 50px அல்சீரியா 34780000 98.2% 10 50px மொராக்கோ 32381000 99.9% thumb|center|1000px|<center>இறை வணக்கத்தில் ஈடுபடும் முசுலிம்கள். இடம்: டெல்லி ஃசும்மா பள்ளிவாசல்</center> இவற்றையும் பார்க்கவும் இசுலாம் குறித்த விமர்சனங்கள் இசுலாமிய மெய்யியல்‎ இசுலாமிய வரலாறு‎ இஸ்லாத்தில் பெண்ணுரிமை இசுலாமியத் தமிழ் இலக்கியம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் தமிழ் இசுலாமிய இனையதளங்கள் தொழுகை நோன்பு Patheos Library – Islam University of Southern California Compendium of Muslim Texts Encyclopedia of Islam (Overview of World Religions) Ethical Democracy Journal views on Islam, other ethical systems and democracy Islam, article at Encyclopædia Britannica Islam, article at Friesian.com Asabiyya: Re-Interpreting Value Change in Globalized Societies, article at Repec/Ideas, University of Connecticut and IZA, Bonn, on Islam and global value change Islam, article at Citizendium Islam (Bookshelf) at Project Gutenberg Islam from UCB Libraries GovPubs Islam and Islamic Studies Resources from Dr. Alan Godlas, Professor, University of Georgia * பகுப்பு:ஆபிரகாமிய சமயங்கள்
ஒற்றளபெடை
https://ta.wikipedia.org/wiki/ஒற்றளபெடை
ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும். ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் ஆகிய பதினோரு எழுத்துகளும் தனிமொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும். ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம் அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை கடை மிகல் ஏ அவற்றின் குறி ஆம் வேறு ஏ - நன்னூல்.எழு.92 எ.கா: வெஃஃகு வார்க்கில்லை குறிற்கீழ் இடை கண்ண் கருவிளை குறிற்கீழ் கடை கலங்ங்கு நெஞ்ச்மிலை குறிலிணைகீழ் இடை மடங்ங் கலந்த மன்னே குறிலிணைகீழ் கடை மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை காணலாம். ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும். இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் பகுப்பு:சார்பெழுத்துகள்
உயிரளபெடை
https://ta.wikipedia.org/wiki/உயிரளபெடை
உயிரளபெடை உயிர் + அளபு + எடை(=எடுத்தல்) என்பது உயிரெழுத்து அளபெடுத்து வருதல். ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து அளபெடுத்து வருதல். உயிரெழுத்துகளில் குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை. மேலும் எழுத்துகளுக்கு ஒலியளவைக் கூட்டவேண்டி வரும்போது ஒத்த ஒலியுடைய எழுத்தைக் கூட்டி எழுதி ஒலித்துக்கொள்ளுமாறு காட்டுவர். இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில் அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறியே -நன்னூல் அளபெடுகும் எழுத்துகள் உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு அளபெடுக்கும். எடுத்துக்காட்டு அளபெடுத்த எழுத்து அளபெடுத்துள்ள பாங்கு குறிப்பு பாஅல் புளிப்பினும் (பெயர்ச்சொல்), புறநானூறு 2, புகாஅர் (வினைமுற்று) குறுந்தொகை 130, புகாஅர்த் தெய்வம் (ஊர்) அகம் 110, ஆஅய் (அரசன்) நற்றிணை 167 ஆஅ பால் - பாஅல் செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர், படாஅஅ முலைமேல் துகில் திருக்குறள் 1087 ஆஅஅ கடா - கடாஅ, படா - படாஅஅசெய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போல நற்றிணை 58 ஈஇ குருவி - குரீஇ சொல்லிசை அளபெடை கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும் திருக்குறள் 166 ஊஉ உடுப்பதும் - உடுப்பதூஉம், உண்பதும் - உண்பதூஉம் அளபெடுக்காவிட்டாலும் செய்யுளில் தளை தட்டாது ஆகையால் இன்னிசை அளபெடை பேஎம் முதிர், மன்றத்து பட்டினப்பாலை 255 ஏஎ பேம் - பேஎம் அச்சம் இன்னிசை அளபெடை இன்சொலால் ஈரம் அளைஇ திருக்குறள் 91 ஐஇ அளவி - அளைஇ சொல்லிசை அளபெடை கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி, புறநானூறு 117 ஓஒ கோல் - கோஒல் செய்யுளிசை அளபெடை (இசைநிறை அளவெடை - ஔஉ - - அளபெடுக்கும் இடங்கள் மொழியின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.: எடுத்துக்காட்டு: 1 ஓஒதல் வேண்டும் முதல் 2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு இடை 3 நல்ல படாஅ பறை கடை மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காணலாம். ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும். வகைகள் இதில் செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை என மூன்று வகைகள் உள்ளன. அளபெடைப் பெயர் ஆடூஉ ஆடூஉ முன்னிலை மகடூஉ மகடூஉ முன்னிலை இந்தச் சொற்களைத் தொல்காப்பியம் பால் உணரும்படி வந்த சொற்கள் எனக் குறிப்பிடுகிறது. ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயரும் (தொல்காப்பியம், 2-163 பெயரியல்) இவற்றையும் பார்க்கவும் தமிழ் இலக்கணம் உசாத்துணை முனை. நல்லாமூர் கோ. பெரியண்ணன், அடிப்படை எளிய தமிழ் இலக்கணம், வனிதா பதிப்பகம், சென்னை-17, முதல் பதிப்பு 2003 அடிக்குறிப்புகள் பகுப்பு:சார்பெழுத்துகள்
செங்குருதியணு
https://ta.wikipedia.org/wiki/செங்குருதியணு
right|frame|மனித இரத்தச் சிவப்பணுக்கள் செங்குருதியணு அல்லது இரத்தச் சிவப்பணு (Erythrocytes or Red blood cell) (இலங்கை வழக்கு: செங்குருதிக் கலம் அல்லது செங்குருதிச் சிறுதுணிக்கை) முதுகெலும்புடைய விலங்குகளின் குருதியில் உள்ள உயிரணுக்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனவாகும். இவையே இவ் விலங்குகளில் ஆக்சிசனை நுரையீரலிலிருந்து இழையங்களுக்கு எடுத்துச் செல்கின்றன. பிற்பாடு, இழையங்களிலிருந்து வெளியிடப்படும் கரியமில வாயுவையும் நுரையீரலுக்கு எடுத்துச் செல்கின்றன. இப்பணியில் உதவுவது இவற்றிலுள்ள ஹீமோகுளோபின் என்ற புரதமாகும். இவை வட்ட வடிவில் இருபுறமும் குழிந்த செல்கள் இச்செல்களில் உட் கரு இல்லை. ஆண்களின் இரத்தத்தில் ஒவ்வொரு கன மில்லிமீட்டர் இரத்தத்திலும் ஏறக்குறைய 5.2 மில்லியன் சிவப்பணுக்கள் உண்டு. (அளவீடு 4.2-5.8 மில்லியன்) பெண்களின் இரத்தத்தில் ஒரு கன மில்லி மீட்டர் இரத்தத்தில் 4.5 மில்லியன் சிவப்பணுக்கள் (அளவீடு 3.3-5.2 மில்லியன்) அமைந்திருக்கும். தட்டு வடிவில் உள்ள சிவப்பணுவின் குறுக்கு விட்டத்தின் அளவு 7.5 mm ஆகும். ஒவ்வொரு செக்கனிலும் 2.4 மில்லியன் செங்குருதியணுக்கள் உருவாக்கப்படுகின்றனErich Sackmann, Biological Membranes Architecture and Function., Handbook of Biological Physics, (ed. R.Lipowsky and E.Sackmann, vol.1, Elsevier, 1995. எலும்பு மச்சையில் இவை உற்பத்தியாகின்றன. இவை குருதியில் 100-120 நாட்கள் இருந்து, பின்னர் முதிர்வடைந்த சிவப்பணுக்கள் பெருவிழுங்கி (Macrophage) இனால், கல்லீரல், மண்ணீரலில் அழிக்கப்படுகின்றன. right|200px|சிவப்பணுவும் வெள்ளையணுவும் தொழில்கள் பிரதான தொழில்: செங்குருதிக் கலங்களின் பிரதான தொழில் ஆக்சிசன் வாயுவைக் காவுவதும் விடுவிப்பதுமாகும். செங்குருதிக் கலங்களிலுள்ள ஹீமோகுளோபின் புரதத்திலுள்ள இரும்பு அயன்களுடனேயே ஆக்சிசன் இணைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு பின் ஆக்சிசன் குறைவான இடத்தில் விடுவிக்கப்படுகின்றது. குருதியில் கொண்டு செல்லப்படும் ஆக்சிசனில் 98%க்கும் மேற்பட்ட வீதமான ஆக்சிசன் செங்குருதிக் கலங்களிலேயே காவப்படுகின்றன. குருதியில் காவப்படும் 5-10% காபனீரொக்சைட்டை ஹீமோகுளோபினின் புரதப்பகுதியோடு இணைத்துக் காவி விடுவித்தல். (குருதி முதலுருவில் கரைந்த இரு காபனேற்று அயன் (HCO3-) வடிவில் காவப்படுவதே பிரதான முறையாகும். கரைந்த CO2 வடிவிலும் காவப்படுகின்றது) காபனீரொக்சைட்டுக் கொண்டு செல்லலில் இக்கலத்திலுள்ள நொதியங்கள் உதவுகின்றன. முள்ளந்தண்டுளிகளின் செங்குருதியணு thumb|200px|முள்ளந்தண்டுளிகளிடையே செங்குழியப் பருமனின் அடிப்படையில் பெரும் வேறுபாடு உள்ளது. முலையூட்டிகளின் செங்குழியத்தில் கரு இல்லை. அத்துடன் முலையூட்டிகளின் செங்குழியப் பருமன் ஏனைய வகை முள்ளந்தண்டுளிகளினதை விட மிகவும் குறைவாகும். முள்ளந்தண்டுளிகளில் மாத்திரமே செங்குருதியணு காணப்படுகின்றது. இவற்றில் இனத்துக்கினம் செங்குருதியணுவின் வடிவமும், கட்டமைப்பும் மாற்றமடைகின்றது. முலையூட்டிகள் தவிர ஏனைய அனைத்து முள்ளந்தண்டுளிகளின் (மீன்கள், ஈரூடகவாழிகள், ஊர்வன, பறவைகள்) செங்குருதிக் கலங்களிலும் கரு உள்ளது. செங்குருதிக் கலங்களே குருதிக்குச் சிவப்பு நிறத்தைக் கொடுக்கின்றன. செங்குருதிக் கலங்களின் ஹீமோகுளோபினின் ஹீம் கூட்டத்தின் இரும்பு அயன்களாலேயே இரத்தம் சிவப்பு நிறமாகின்றது. செங்குருதிக் கலங்கள் நீக்கப்பட்ட குருதி முதலுரு வைக்கோல் மஞ்சள் நிறத்திலேயே இருக்கும். உலகில் குடும்பம் Channichthyidae மீன்களில் மாத்திரமே செங்குருதிக் கலங்களோ ஈமோகுளோபினோ காணப்படுவதில்லை. இவை அந்தார்ட்டிக் சமுத்திரத்தின் குளிர் நீரில் வாழ்வதால் அந்நீரே அவற்றுக்குத் தேவையான ஆக்சிசனைக் காவுகின்றது. (குளிர் நீரில் ஆக்சிசனின் கரைதிறன் அதிகமாகும்). பொதுவாக செங்குருதிக் கலத்தின் விட்டம் குருதி மயிர்க்குழாயின் விட்டத்தை விட 25% அதிகமாகும். எனினும் செங்குருதிக் கலங்களின் கலமென்சவ்வின் மீள்தன்மை (Elasticity) காரணமாக அக்குறுகிய இடைவெளியூடாகவும் நசிந்து கொண்டு செல்கின்றன. இவ்வாறு இருப்பதால் செ.கு.கலங்கள் மெதுவாக மயிர்த்துளைக் குழாயூடாக செல்கின்றன. இம்மெதுவான அசைவால் அதிகளவு ஆக்சிசன் பரவக் கூடியதாக உள்ளது. ஈமோகுளோபின் முள்ளந்தண்டுளிகளின் பிரதான சுவாச நிறப்பொருள் ஈமோகுளோபின் ஆகும். ஈமோகுளோபினில் குளோபின் எனும் புரதப்பகுதியும் ஹீம் எனும் அயன் பகுதியும் உண்டு. ஆக்சிசன் இரும்பு அயனோடு இணையும்; CO2 புரதப்பகுதியோடு இணையும். எனவே ஆக்சிசன் கொண்டு செல்லலுக்கு காபனீரொக்சைட்டு போட்டியாக இருப்பதில்லை. எனினும் புகையிலுள்ள காபனோரொக்சைட்டு (CO) இரும்போடு இணைவதால் ஆக்சிசன் கொண்டு செல்லலுக்குப் போட்டியாக அமைந்து ஆக்சிசன் காவலைக் குறைக்கின்றது. ஒரு ஈமோகுளோபின் புரதத்தில் நான்கு இரும்பு அயன்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு செங்குருதிக் கலத்தில் கிட்டத்தட்ட 270 மில்லியன் ஈமோகுளோபின் மூலக்கூறுகள் உள்ளன. முலையூட்டிகளின் செங்குருதிக் கலம் மனிதன் உட்பட முலையூட்டிகளின் செங்குருதிக் கலம் ஆக்சிசன் காவல் வினைத்திறனை அதிகரிப்பதற்கென பல இசைவாக்கங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் கருவோ, இழைமணியோ இருப்பதில்லை. எனவே இவற்றின் செங்குருதிக் கலங்களில் டி.என்.ஏ இருப்பதில்லை. முலையூட்டிகளின் செங்குருதிக் கலங்களுக்குத் தேவையான சக்தி காற்றின்றிய சுவாசம் மூலமே பெறப்படுகின்றது. இழைணி இன்மையால் கிடைக்கும் நன்மை: காவப்படும் ஆக்சிசன் காவிக் கலமான செ.கு.கலத்தால் உபயோகிக்கப்பட மாட்டாது. கரு இல்லாததால் கிடைக்கும் நன்மை: கரு பிடிக்கும் கனவளவு மீதப்படுத்தப்பட்டிருப்பதால், அதிக ஆக்சினைக் காவலாம். டி.என்.ஏ இல்லாததால் செ.கு.கலங்களை எந்தவொரு வைரஸ்ஸாலும் தாக்கி அழிக்க முடியாது. முலையூட்டிகளின் செங்குருதிக் கலங்கள் இரட்டைக் குழிவான தட்டுருவானவை. இவ்விரட்டைக் குழிவும் ஆக்சிசன் பரவலடையும் மேற்பரப்பின் பரப்பளவை அதிகரிப்பதாக உள்ளது. செங்குழிய வாழ்க்கைக் காலம் செங்குழியங்கள் பொதுவாக செவ்வென்பு மச்சையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு செக்கனிலும் 2-4 மில்லியம் செங்குழியங்கள் உருவாகின்றன. இவற்றின் உற்பத்திக்கு இரும்புச்சத்து, புரதம், ஃபோலிக் அமிலம், வைட்டமின் B12 என்பன அவசியமாகும். ஒவ்வொரு செங்குழியமும் முதல் 7 நாட்களை செவ்வென்பு மச்சையினுள் ஆரம்ப நிலையிலும், கிட்டத்தட்ட 120 நாட்களை குருதியிலும் கழிக்கின்றன. செங்குழியங்களின் முன்னோடிக் கலங்கள் வலையுருக்குழியங்கள் ஆகும். வாழ்வுக் காலத்தை முடித்த செங்குழியங்களும், காயமடைந்த அல்லது வித்தியாசமான செங்குழியங்களும் குருதியிலிருந்து நீக்கப்படுகின்றன. பிரதானமாக மண்ணீரலிலும், ஈரலிலும் இவை நீக்கப்படுகின்றன. ஈரலில் அழிக்கப்படும் செங்குழியங்களின் கூறுகளிலிருந்தே பித்த நிறப்பொருட்கள் உருவாகின்றன. கருப்பையில் உள்ள முதிர்மூலவுரு நிலையில் மாத்திரமே செங்குழியங்கள் பிரதானமாக ஈரலில் உருவாக்கப்படுகின்றன. மனிதரில் செங்குழியம் thumb|200px|மனித செங்குழியம் உடலை முழுமையாக சுற்றிவர 20 செக்கன்கள் எடுக்கும். இக்காலத்தில் இதில் ஆக்சிசன் அளவு மாறுபடலை இப்படிமம் காட்டுகின்றது. நுரையீரல் சிற்றறையில் உள்ளபோது ஆக்சிசன் அளவு உச்சத்தில் உள்ளது. விட்டம்:6.2–8.2 µm தடிப்பு:0.8–1 µm மேற்பரப்பளவு:136 μm2 வடிவம்:இருகுழிவான வட்டத்தட்டு வடிவம் எண்ணிக்கை: மொத்தமாக 20-30 திரில்லியன். இது உடலில் உள்ள மொத்தக் கலங்களின் எண்ணிக்கையில் கால்ப்பங்காகும். ஆண்களில்- 5.5-6 மில்லியன்/µL பெண்களில்- 4.5-5 மில்லியன்/µL செங்குழியத்துடன் தொடர்புடைய நோய்கள் frame|right|அரிவாள்க் கல நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரின் குருதி. செங்குழியங்களின் வடிவம் விகாரமடைந்துள்ளதை அவதானிக்கலாம். குருதிச்சோகை- குருதியில் செங்குழிய எண்ணிக்கை குறைவடைவதால் அல்லது செங்குழிய வடிவம் விகாரமாவதால் ஏற்படும் நோய் நிலமை. இதனால் உடலில் ஆக்சிசன் கொண்டு செல்லும் வினைத்திறன் குறைவடையும். இரும்புச் சத்துக் குறைபாட்டு குருதிச்சோகை- உணவில் இரும்புச் சத்து குறைவாக உள்ளமை/ உடலினுள் இரும்புச் சத்து உறிஞ்சப்படல் குறைவடைவதால் ஏற்படும் குருதிச் சோகை. செங்குழிய உற்பத்திக்கு இரும்புச் சத்து அவசியமென்பதால் உருவாக்கப்படும் செங்குழியங்களின் எண்ணிக்கை குறைவடைந்து குருதிச் சோகை ஏற்படும். அரிவாள்-கலச் செங்குழிய குருதிச் சோகை- இது மரபணு சார்ந்த நோயாகும். மரபணுவில் ஏற்படும் மாறுதலால் உண்டாகின்றது. செங்குழியங்கள் அரிவாள் போன்ற வடிவை எடுக்கின்றன. அவற்றின் மீள்தன்மையும், ஆக்சிசன் காவும் திறனும் குறைவடைகின்றன. குருதிக் கலன்கள் விகாரமுள்ள இக்கலங்களால் அடைக்கப்படலாம். இதனால் வலியும், பக்கவாதமும் ஏற்படலாம். மண்ணீரலும் பாதிக்கப்படலாம். தலசீமியா- மரபணு சார்ந்த நோய். ஈமோகுளோபின் உப அலகுகள் சரியான வீதத்தில் உருவாக்கப்படாமையால் ஏற்படும் நோய் நிலமை. கோளக் குழியமாதல் - மரபணு சார்ந்த நோய். செங்குழிய மென்சவ்வில் ஏற்படும் விகாரத்தால் கலம் சிறிய கோள வடிவத்தை எடுக்கும். இக்கலங்கள் மண்ணீரலில் இவற்றின் விகாரத்தன்மை காரணமாக அழிக்கப்படுவதால், செங்குழிய எண்ணிக்கை குறைவடைந்து குருதிச் சோகை ஏற்படும். செங்குழியச் சிதைவு-உருவாக்கப்படும் அளவை விட செங்குழியங்கள் அதிகளவில் அழிக்கப்படுவதால் ஏற்படும் நோய் நிலமை. மலேரியா- மலேரியாவை ஏற்படுத்தும் Plasmodium புரோட்டோசோவா தன் வாழ்க்கை வட்டத்தில் சில காலத்தை செங்குழியத்தினுள்ளே களிக்கும். அது செங்குழியத்தினுள்ளே உள்ள ஈமோகுளோபினை பிரிகையடையச் செய்து காய்ச்சலை ஏற்படுத்தும். செங்குழிய எண்ணிக்கை அதிகரித்தல்- இந்நிலைமை குருதியின் பிசுக்குமையை அதிகரித்து குருதியோட்டத்தைக் குறைக்கும். பிழையான குருதி மாற்றீடு - பொருந்தாத குருதி வகைகளை மாற்றீடு செய்வதால் ஏற்படும் நோய் நிலமை. குருதி வாங்கியின் பிறபொருளெதிரிகள் பொருத்தமில்லாத குருதியிலுள்ள செங்குழியங்களை அழிப்பதால் இறுதியில் இறப்பு நிகழலாம். மேற்கோள்கள் வெளி இணைப்பு http://en.wikipedia.org/wiki/Erythrocytes பகுப்பு:குருதி
சந்திரசேகர் வரையறை
https://ta.wikipedia.org/wiki/சந்திரசேகர்_வரையறை
சந்திரசேகர் வரையறை (Chandrasekhar limit) என்பது ஒரு நிலையான வெண் குறுமீனின் அதிக பட்ச திணிவு (Mass) அளவாகும். இது ஏறத்தாழ சூரியனின் நிறையைப்போல் 1.44 மடங்காகும் (2.765×1030 kg). இதற்குக் கூடுதலான நிறையிருப்பின் அவ்விண்மீன் தனது நிலைத்தன்மையை இழக்கும். இவ்வரையறையைக் கண்டறிந்தவர் தமிழ் நாட்டில் பிறந்த புகழ் பெற்ற விஞ்ஞானியும், இயற்பியலிற்கான நோபல் பரிசு பெற்றவருமான சுப்ரமணியன் சந்திரசேகர் ஆவார். வெண் குறுமீன்கள், எலக்ட்ரான் சமநிலை குலைவு அழுத்தத்தால் (Electron Degeneracy Pressure) தமது திண்மத்தால் ஏற்படும்புவியீர்ப்பு விசையால் ஏற்படக்கூடிய குலைவைத் (Gravitational Collapse) தடுத்து நிலைபெறுகின்றன (பொதுவாக விண்மீன்கள், திண்மத்தால் ஏற்படக்கூடிய புவியீர்ப்பு குலைவை, அணுக்கரு இணைப்பில் உருவாகும் அழுத்தத்தால் (Thermal Pressure) ஈடுசெய்து நிலைத்திருக்கின்றன). சந்திரசேகர் வரையறை திண்ம அளவைத் தாண்டும்போது, புவியீர்ப்பு குலைவை எலக்ட்ரான் சமநிலை குலைவு அழுத்தத்தால் ஈடுசெய்ய இயலாமல் போகிறது. அதன் தொடர்ச்சியாக, அவ்விண்மீன் ஈர்ப்பு விசை குலைவின் விளைவாக நியூட்ரான் விண்மீனாகவோ (Neutron Star) அல்லது கருந்துளையாகவோ (Blackhole) உருப்பெருகிறது. சந்திரசேகர் வரையறைக்குள்ளாக திண்மம் கொண்ட விண்மீன்கள், வெண் குறுமீன்களாக நிலைத்திருக்கும்.Sean Carroll, Ph.D., Caltech, 2007, The Teaching Company, Dark Matter, Dark Energy: The Dark Side of the Universe, Guidebook Part 2 page 44, Accessed Oct. 7, 2013, "...Chandrasekhar limit: The maximum mass of a white dwarf star, about 1.4 times the mass of the Sun. Above this mass, the gravitational pull becomes too great, and the star must collapse to a neutron star or black hole..." உசாத்துணைகள் பகுப்பு:வானியற்பியல் பகுப்பு:வெண் குறுமீன்கள்
வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி
https://ta.wikipedia.org/wiki/வரியோட்டவழிக்_கணித்த_குறுக்குவெட்டு_வரைவி
thumb|கருவியின் வரைபடம் வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (computed tomography scan) என்ற கருவி மூலம் ஊடுகதிர் அலைகளை வெவ்வேறு கோணங்களில் உடலில் செலுத்தி, உடலின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை முப்பரிமாண வடிவத்தில் கணிப்பொறியில் காணலாம். மருத்துவர்கள் அவற்றை ஆராய்ந்து உடலின் கூறுகளை அறிய முடியும். வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (C.T. ஸ்கேன் என்பது) X-rayவை உடலுக்குள் செலுத்தி கம்ப்யூட்டர் மூலம் திரையில் பார்ப்பது மூளைக் கழலை, நுரையீரல், சிறுநீரகம், எலும்பு மற்றும் இரத்த நாளங்களை ஆய்வதற்குப் பயன்படுகிறது. இச்சாதனத்தைப் பலமுறை பயன்படுத்துவதன் மூலம் புற்று நோய் வருவதற்கான சிறிய வாய்ப்பும் உள்ளது. இவற்றையும் பார்க்கவும் காந்த அதிர்வு அலை வரைவு மீயொலி நோட்டம் பகுப்பு:மருத்துவப் படிமவியல் பகுப்பு:மருத்துவக் கருவிகள் பகுப்பு:மருத்துவ சோதனைகள்
எரிமம்
https://ta.wikipedia.org/wiki/எரிமம்
thumb|அணு ஆற்றல் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் வில்லைகள் எரிமம் அல்லது எரிபொருள் (Fuel) என்பது பெரும்பாலும் நெருப்புடனோ நெருப்பின்றியோ எரிப்பதன் மூலம் ஆற்றல் தரும் பொருட்களைக் குறிப்பதாகும். அணுக்கருப் பிளவு அல்லது அணுக்கரு இணைவு போன்ற மற்ற ஆற்றல் மூலங்களையும் எரிபொருள் எனக் குறிப்பிடலாம். இவ்வெரி பொருட்களைச் சரியான முறையில் எரிக்கும் போது வெளிப்படும் ஆற்றல் வீட்டு மற்றும் தொழிற்சாலைத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எரிமங்களின் வகைகள் எரிமங்களை இரு பெரும் வகைகளாகப் பிரிக்கலாம். இயற்கை அல்லது முதல்நிலை எரிபொருள்: இவை இயற்கையாகப் பெறப்படுபவை. விறகு, நிலக்கரி, பாறை எண்ணெய், இயற்கை வாயு போன்றவை இயற்கை எரிபொருட்களாகும். செயற்கை அல்லது இரண்டாம் நிலை எரிபொருள்: இவை இயற்கை எரிபொருட்களிலிருந்து பெறப்படுபவை. மரக்கரி, கல்நெய் , டீசல், மண்ணெண்ணெய், கரிவாயு போன்றவை செயற்கை எரிபொருட்களாகும். எரிபொருட்கள் பொதுவாக திண்ம, நீர்ம, வளிம எரிபொருட்கள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன. திண்ம எரிமங்கள் மரம், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி என்பன திண்ம எரிபொருள். நீர்ம எரிமங்கள் கல்நெய், மண்ணெண்ணெய், எரிசாராயம், எரிநெய் போன்றவை நீர்ம எரிபொருள். வளிம எரிமங்கள் நீர்ம நிலைப்படுத்தப்பட்ட பெட்ரோலிய வாயு, இயற்கை வாயு, சாணவாயு, உற்பத்தி வாயு, நீர்வாயு போன்றன வாயு எரிபொருட்கள். எரிமங்களின் கலோரி மதிப்பீடு ஓர் அலகு பருமன் உள்ள எரிபொருள் முழுவதுமாக எரியும்போது வெளிப்படும் மொத்த ஆற்றல் அவ்வெரிபொருளின் கலோரி மதிப்பீடு எனப்படுகிறது. திண்ம அல்லது நீர்ம எரிபொருட்களின் கலோரி மதிப்பீடு கிலோஜூல்/கிலோகிராம் (kJ/kg) என்ற அலகிலும் வளிம எரிபொருட்களின் மதிப்பீடு கிலோஜூல்/மீட்டர்3 (kJ/m3) என்ற அலகிலும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பார்க்க உயிரி எரிபொருள் ஹைடிரோகார்பன் மண்ணெய் நிலக்கரி * பகுப்பு:ஆற்றல் பகுப்பு:கரிம வேதியியல் மேற்கோள்கள்
உலக இயற்பியல் ஆண்டு 2005
https://ta.wikipedia.org/wiki/உலக_இயற்பியல்_ஆண்டு_2005
right|200px thumb|right|உலக இயற்பியல் ஆண்டு 2005 நிகழ்ச்சியின்போது தாய்ப்பே 101 மீது காட்சிப்படுத்தப்பட்ட பொருண்மை ஆற்றல் சமன்மை வாய்பாடு. 2005 ஆம் ஆண்டை உலக இயற்பியல் ஆண்டு (World year of Physics 2005) என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1905 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நான்கு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டதன் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உலக இயற்பியல் ஆண்டு கொண்டாடப்பட்டது. சார்பியல் கொள்கை, பிரவுனியன் இயக்கம், ஒளி மின் விளைவு, ஒளிக் குவையமாக்கம் ஆகிய நான்கு ஆய்வுகளும் இயற்பியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இயற்பியல் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகள் உருவாக்கிய பெரும் மாற்றங்கள் குறித்து இவ்வாண்டில் பன்னாட்டு அளவில் விவாதிக்கப்பட்டது. மேலும் 21 ஆம் நூற்றாண்டில் இயற்பியல் சந்திக்கவிருக்கும் அறைகூவல்கள் குறித்தும் நடப்பாண்டில் கருத்துப் பரிமாற்றம் பன்னாட்டு அளவில் பரவலாக மேற் கொள்ளப்பட்டன. பல்வேறு அறிவியல் துறைகளில் இயற்பியல் நிகழ்த்திவரும் மாற்றங்கள் பற்றியும் உலகமுழுவதும் அறிவியல் அறிஞர்கள் விவாதித்தார்கள். வரலாறு இயற்பியல் இயற்கையையும் புறநிலை உலகையும் முழுமையாகப் புரிந்து கொள்ள உதவு அடிப்படையான அறிவியலாகும். இன்றைய தொழினுட்பத்தின் பெரும்பகுதி இயற்பியலின் பயன்பாடுகளால் உருவாகியதே ஆகும். உலகளாவிய நிலையில் இயற்பியல் சார்ந்த விழிப்புணர்வை உயர்த்தல், அப்புலத்தின் பெருவளர்ச்சிகளைக் கொண்டாடுதல் எனும் இரு நோக்கங்களுக்காக பன்னாட்டு தூய, பயன்முறை இயற்பியல் ஒன்றியம் 2005ஆம் ஆண்டை உலக இயற்பியல் ஆண்டாகக் கொண்டாடுவதென தீர்மானம் நிறைவேற்றியது. பிறகு இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையாலும், ஐக்கிய அமெரிக்கப் பேராயத்தாலும் ஏற்கப் பட்டு வழிமொழியப்பட்டது.http://www.aip.org/eindstein/http://www.theithacajournal.com/news/stories/20050514/localnews/2136011.html ஆன்னசு மிராபிலிசு கடந்த நூறு ஆண்டுகளாக இயற்பியலின் மெய்யியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான 2005 ஆண்டு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைகிறது. இம்மாற்றங்கள் 1905ஆம் ஆண்டில் ஐன்சுட்டீன் வெளியிட்ட பின்வரும் நான்கு ஆய்வுக் கட்டுரைகளுடன் தொடங்கின. இவை பிரவுனிய இயக்கம், சிறப்புச் சார்பியல் கோட்பாடு , ஒளிமின் விளைவு, ஒளியாற்றல் குவையமாக்கம் ஆகிய நான்குக் கருத்துப் படிமங்களை அறிமுகப்படுத்தின. இந்நிகழ்வு குவைய இயக்கவியலை உருவாக்கி வளர்க்கப் பேருந்துதல் தந்தது. E = mc2 என்ற பொருள்-ஆற்றல் சமன்பாட்டைப் பெற்றெடுத்த்து. இவை "Annus Mirabilis கட்டுரைகள்" என வழங்கப்படுபவை. ஏனெனில் இவை 1905ஆம் ஆண்டை இயற்பியலின் விந்தையாண்டாக மாற்றியவையாகும்.http://press.princeton.edu/titles/6272.html பெரும்பாலான இயற்பியலார் முதல் மூன்றை நோபல் பரிசு பெறுமளவுக்குச் சிறப்பானவையாகக் கருதிட, நான்காவதான ஒளிமின் விளைவே நோபெல் பரிசை வென்றது. இந்தக் கட்டுரைகளின் சிறப்பே என்னவென்றால், கோட்பாட்டு இயற்பியலில் இருந்தே ஏரணமுறைப்படி செய்முறை முடிவுகளைத் தெளிவாக விளக்கியமைதான் எனலாம். இது பிறகு பல பத்தாண்டுகளாக இயற்பியல் அறிஞகளை வியப்பிலாழ்த்தியது. ஒளிமின் விளைவு முதல் ஆய்வுக் கட்டுரை ஆற்றல் குவையம் எனும் கருத்துப் படிமத்தை முன்மொழிந்தது. அதைப் பயன்படுத்தி ஒளிமின் விளைவு நிகழ்வை எப்படி விளக்கமுடியும் எனக் காட்டியது. ஆற்றல் குவையம் பற்றிய எண்ணக்கரு, மாக்சு பிளாங்கின் கரும்பொருள் கதிர்வீச்சு விதியைக் கொணர, பின்னவர் பயன்படுத்திய ஒளிர்வு ஆற்றல் ”குவையம்” எனும் இடைவிட்டு அமையும் சிறுசிறு அளவுகளிலேயே உறிஞ்சவோ உமிழவோ முடியும் என்ற கற்பிதத்தில் இருந்து பெற்றதாகும். ஐன்சுட்டீன் ஒளியை இடைவிட்டுஅமையும் ஆற்றல் குவைகளாகக் கொள்ளும்போது எப்படி புதிராக இருந்த ஒளிமின் விளைவை எளிதாக விளக்கமுடியும் எனக் காட்டினார். ஒளிக்குவைய எண்ணக்கரு ஒளியின் அலைக்கோட்பாட்டுடன் முரண்பட்டது. ஒளிசார்ந்த அலைக்கோட்பாடு, ஜேம்சு மாக்சுவெல்லின் மின்காந்தவியல் சமன்பாடுகள் தரும் நடத்தையை விளக்கும் ஆற்றலின் ஈறிலாத பிரிதிறக் கற்பிதத்தைச் சார்ந்து உருவாகியதாகும். செய்முறைகள் ஐன்சுட்டீனின் ஒளிமின் விளைவுச் சமன்பாடுகள் துல்லியமானவை என நிறுவிய பிறகும் அவருடைய விளக்கம் எல்லோராலும் பொதுவாக ஏற்கப்படவில்லை. என்றாலும், 1921ஆம் ஆண்டளவில் இவருக்கு நோபெல் பரிசளிக்கும் மேற்கோளில் அவரது ஒளிமின் விளைவு ஆய்வுக்காகத் தரப்படுவதாக வெளியிட்ட பிறகே, பெரும்பாலான அறிவியலார் ஒளிக்குவையம் இருக்கமுடியும் என்பதை ஒப்புக் கொண்டனர். குவைய இயக்கவியல் வளர்ந்து முதிர்வுற்ற பிறகே ஒளிமின் விளைவின் முழுக்காட்சியையும் பெறமுடிந்தது. பிரவுனிய இயக்கம் அந்த ஆண்டின் அவரது இரண்டாம் ஆய்வுக் கட்டுரை பிரவினிய இயக்கத்தில் துகள்களின் இடப்பெயர்ச்சி நெறியம், (Vector) நிரல் சதுர வேர் மதிப்புக் கோவை உருவாக்கும் நிகழ்தகவுப் படிமத்தைச் சார்ந்துள்ளதை முன்மொழிந்தது. அப்போது எதிர்க்கப்பட்ட பாய்ம இயக்க்க் கோட்பாட்டைப் பயன்படுத்தி, அதுவரை கண்டுபிடிக்கப்பட்டு பல பத்தாண்டுகளாகியும் விளக்கப்படாமல் இருந்த இந்த நிகழ்வை நிறைவாக விளக்கி, அணுக்களின் நிலவலுக்கான செய்முறைச் சான்றையும் காட்டினார். இது அப்போது எதிர்ப்பில் இருந்த புள்ளியியல் இயக்கவியலுக்குப் பெரும் மதிப்பூட்டியது. இதற்கு முன்பு அணுக்கள் பயன்மிக்க கருத்துப்படிமங்களாகவே கருதப்பட்டன. ஆனால் இயற்பியலாரும் வேதியியலாரும் அணுக்கள் உண்மையாக நிலவும் உருப்படிகளா எனச் சூடான விவாதத்தில் இறங்கி இருந்தனர். ஐன்சுட்டீனின் அணுநடத்தை பற்றிய புள்ளியியல் விளக்கம் செய்முறை வல்லுநர்களுக்கு அவற்றை நுண்ணோக்கியால் எண்ணிட ஒரு வழிமுறையை உருவாக்கித் தந்தது. அணுவெதிர்ப்புச் சிந்தனைப் பள்ளியின் தலைவர்களில் ஒருவரான வில்கெல்ம் ஆசுட்வால்டு, ஆர்னால்டு சோமர்ஃபீல்டு அவர்களிடம் தான் ஐன்சுட்டீனின் பிரவுனிய இயக்க விளக்கத்தால் அணுநம்பும் கூட்டத்தில் சேர்ந்துவிட்டதாகக் கூறினாராம். சிறப்புச் சார்பியல் கோட்பாடு அந்த ஆண்டின் ஐன்சுட்டீனின் மூன்றாம் ஆய்வுக் கட்டுரை ஓர் உயர்திறத் தன்னுள்ளடக்கமான ஆய்வாகும். இதை உருவாக்க வேறு மேற்கோள்கள் என எவற்றையும் அவர் பயன்படுத்தவில்லை. இந்த ஆய்வில் ஐன்சுட்டீன் காலம், தொலைவு, பொருண்மை, ஆற்றல் ஆகிவற்றின் உறவுசார்ந்த கோட்பாட்டை மின்காந்தவியலோடு பொருந்துமாறு உருவாக்கினார். ஆனால் இதில் இவர் ஈர்ப்புவிசையைக் கருதவில்லை. thumb|right|The logo is meant to represent the light cone diagram used in சிறப்புச் சார்புக் கோட்பாடு to show locations that are in causal contact and those that are not. ஐன்சுட்டீனின் விளக்கம் இரு எடுகோள்களில் இருந்து உருவாகிறது: முதல் எடுகோள் கலிலியோவின் ஒருவருக்கொருவர் நிலையான சார்பு விரைவுகளில் செல்லும் அனைத்து நோக்கர்களுக்கும் இயற்பியல் விதிகள் ஒன்றுபோலவே அமையும் என்ற எண்ணக்கருவாகும். இரண்டாம் எடுகோள் எந்தவொரு நோக்கருக்கும் ஒளியின் விரைவு ஒன்றுபோலவே அமையும் என்பதாகும். இந்த இரண்டாம் எடுகோள் மைக்கேல்சன்-மோர்லி செய்முறை அறிவியலில் உருவாக்கிய சிக்கலைத் தவிர்த்தது. தனித்த காலமும் தனித்த வெளியும் ஒளியின் தனித்த நிலையான விரைவுடன் பொருந்திவராததால் குறிப்பிடத்தக்க பல தொடர்ச்சியான விளைவுகளைக் கொண்டதாகும்.. எனவே இந்தக் கோட்பாடு ஏராளமான முரண்புதிர்களை எழுப்பியது. அதனால் கோட்பாட்டைப் பொருளற்றதாகியது. மேலும் இது ஐன்சுட்டீனையும் கேலிப்பொருளாக்கியது. என்றாலும் அவர் இந்தத் தோற்றநிலை முரண்பாடுகளையெல்லாம் பின்னர் கவனமாகக் கருதிப்பார்த்து அந்தச் சிக்கல்களை எல்லாம் தீர்த்துவைத்தார். தொடர்விளைவுகள் ஐன்சுட்டீனின் சிறப்புச் சார்பியல் கோட்பாடு புதுவகை இயற்பியலை முன்வைத்தது. இது ஐசக் நியூட்டனின் நுண்கலனக் கணிதம் உருவாக்கிய செவ்வியல் இயக்கவியலில் இருந்து பேரளவில் வேறுபட்டது. ஒளிமின் விளைவு ஆய்வு குவைய இயக்கவியலைக் கிளர்ந்தெழச் செய்தாலும் உறுதியின்மை நெறிமுறை கருதுப்படிமத்தை இயற்பியல் உலகில் அறிமுகப்படுத்திய குவைய இயக்கவியலை முழுமையற்றதாகக் கருதினார். அவரது தீர்வியல்புக் கண்ணோட்டத்தை " அவர் (கடவுள்) தாயம் ஆடமாட்டார் என நான் நம்புகிறேன்]." என்ற பெயர்பெற்ற மேற்கோளில் இருந்து அறியலாம். அவர் குவைய இயக்கவியலை, குவையப் புலக் கோட்பாடு, பொதுச் சார்பியல் கோட்பாடு, மின்காந்தவியல் ஆகியவற்றை ஒருங்கிணக்க முயலும் ஒன்றிய புலக் கோட்பாட்டிற்கு வைக்கும் வெடியாகக் கருதினார்.என்றாலும், குவைய இயக்கவியல் வெற்றிகரமாக இயற்பியல் நிகழ்வை முன்கணிப்பதை அவர்மறுத்ததில்லை. அவரது ஒன்றிய புலக் கோட்பாட்டுக்கான ஆர்வம் இன்றும் மங்காமல் குவைய இயக்கவியல், சரக் கோட்பாடு, மீக்கடத்துமை ஆகிய புலங்களில் தொடர்கிறது. இயற்கை மெய்யியலில், ஐன்சுட்டீனின் 1905ஆம் ஆண்டு ஆய்வுகளால், ஏற்பட்டுள்ள தனிநிலைக் கோட்பாட்டில் இருந்து உறுதியின்மை மற்றும் சாபுடைமைக் கோட்பாட்டுக்கான அடிப்படைப் பெயர்ச்சியை அல்லது கோட்பாட்டுச் சட்டக மாற்றத்தை இந்த ஆண்டு குறிக்கிறது. சிறப்பு விழாக்கள் thumb|right|பெர்லின் thumb|right|கான்பரா அமெரிக்காவில் மேரிலாந்துப் பல்கலைக்கழகக் கல்லூரி சிமித்சோனியன் நிறுவனத்துடனும் நாசாவின் கோடார்டு விண்பறத்தல் மையத்துடனும் இணைந்து விரிவுரைகளும் இருப்பிடத் திட்டங்களும் உட்பட்ட பல்வேறு செயல்பாடுகளை நிறைவேற்றியது.University of Maryland Celebration பெர்லின் நகரில் பெயர்பெற்ற அண்டர் டென் இலிண்டன் பொலிவார்டின் ஒரு பகுதியில் பதினாறு மாபெரும் செந்நிற E'கள் நிறுவப்பட்டன. "ஐன்ஸ்டைன் மைல்" எனப்பட்ட இந்த E's, 2005 ஏப்பிரல் முதல் செப்டம்பர் வரை ஆல்பெர்ட் ஐன்சுட்டீனின் கோட்பாடுகள், வாழ்க்கை நிகழ்ச்சிகள் சார்ந்த தகவல்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது. எகிப்தில் அலெக்சாந்திரியா நூலகம், ஐன்சுட்டீன் கருத்தரங்கை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தது. சான் மரீனோ ஒரு €2 கொண்டாட்ட நாணயத்தை வெளியிட்டது. செக் குடியரசு, கடானில் உள்ள கிர்விட்சர் நாள் 2005 ஐன்சுட்டீன் கோட்பாடுகளுக்காகக் காணிக்கையாக்கப்பட்டது. கனடா, வாட்டர்லூவில் உள்ள கோட்பாட்டு இயற்பியல் சுற்றளவு நிறுவனம் செப்டம்பர் 30இல் இருந்து அக்டோபர் 23வரை ஐன்சுட்டீன் திருவிழாவை விருந்தோம்பியது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் 2005 டிசம்பர் 1ஆம் நாளன்று ஐன்சுட்டீனுக்கு அப்பால் வைய விரிவு வலைப்பரப்புதல் எனும் நிகழ்வை ஒருங்கிணைத்தது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் உலக இயற்பியல் ஆண்டு 2005 அதிகாரப்பூர்வ இணையத்தளம் இயற்பியல்.ஓர்க் பகுப்பு:இயற்பியல் பகுப்பு:ஐக்கிய நாடுகள் கடைப்பிடிப்புக்கள் பகுப்பு:2005 நிகழ்வுகள் பகுப்பு:ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
நெல்லி
https://ta.wikipedia.org/wiki/நெல்லி
நெல்லி (Phyllanthus emblica) யுபோர்பியேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரம். இது இந்திய மருத்துவ முறைகளில் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது.இது உயரமான இலையுதிர் மரம். இதன் காய்கள் சதைப் பற்றுடனும், உருண்டையாக ஆறு பிரிவாகப் பிரிந்தும், வெளிரிய பசுமை நிறத்திலோ, மஞ்சளாகவோ காணப்படும். வளரியல்பு நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என்ற வேறு இனங்களும் உண்டு. அரி நெல்லிக்காய் எனப்படுவது நம் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டு மரமாக வளர்ந்து மிகவும் சுவையுடன் கூடிய நெல்லிக்காய்களைக் கோடைகாலம் முழுவதும் தரக்கூடியது. நெல்லி மரம் 5 முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. விரிந்து, பரந்து கிளைகள் விட்டு வளரும். இதன் கிளைகளில் இலைகள் கொத்துக், கொத்தாக அடர்த்தியாக வளரும். ஒவ்வொரு காம்பிலும் இருபுறங்களிலும் பச்சை வண்ணத்தில் இலைகள் அமைந்திருக்கும். இலைக் காம்பை ஒட்டியே சின்னஞ்சிறு வெள்ளை நிறப்பூக்கள் அரும்பும். வேனில் காலத் துவக்கத்தில் பூ ஆரம்பித்து வேனில் காலம் முடிவதற்குள் கனிவிடத் தொடங்கி விடுகிறது. மற்றொன்று தோப்பு அல்லது காட்டு நெல்லிக்காய் எனும் பெரிய அளவிலான பச்சை நெல்லிக்காய். மலைகளில் நன்றாக விளையும். மற்றைய நிலங்களில் சுமாராக விளையும். தென்னிந்தியாவில் அதிகமாகக் கிடைக்கும். இலையுதிர் மர வகையைச் சேர்ந்தது. இலைகள் நீண்டிருக்கும். அகலம் குறைவானது. இளம் மஞ்சள் நிறக் காய்களை உடைய மரம். காய் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகள் ஒருங்கே பெற்றது. இலையடி செதில் மிகச் சிறியதாக நீண்டு இருக்கும். பூக்கள் இலைக்கோணங்களில் கொத்தாக இருக்கும். ஆண் பூக்களும், பெண்பூக்களும் கலந்து இருக்கும். இலைகளில் மேல் பகுதியில் இருப்பவை ஆண் பூக்களாகவும், கீழ்பகுதியில் உள்ளவை பெண் பூக்களாகவும் இருக்கும்.பெண் பூக்களின் எண்ணிக்கை ஆண் பூக்களின் எண்ணிக்கையைவிடக் குறைவாக இருக்கும். பூ இதழ்கள் ஆறு. தலைகீழ் ஈட்டி வடிவமானது. மகரந்தக் கேசங்கள் மூன்று இணைந்திருக்கும். இணைக்கும் பகுதி சேர்ந்து கூர்மையாக இருக்கும். செங்குத்தாக வெடிக்கும். கனி ட்ரூப் வகையைச் சேர்ந்தது. வெடியாக்கனி பலவீனப் பட்டதாக இருக்கும். உருண்டை வடிவமானது. சதைப்பற்று உள்ளது, சாறு இருக்கும். விதைகள் மூன்று கோணங்கள் உடையது. விதையுறை கடினமாக இருக்கும். ஒட்டுச்செடிகள் 3 வருடங்களில் காய்க்கும். மற்றவை காய்க்க 6 வருடங்கள் கூடச் செல்லலாம். நெல்லி விதை மூலமும், ஒட்டுக் கட்டு மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. அடங்கியுள்ள சத்துக்கள் புரதம் – 0.4 கி கொழுப்பு – 0.5 கி மாச்சத்து – 14 கி கல்சியம் – 15 மி.கி பொஸ்பரஸ் – 21 மி.கி இரும்பு – 1 மி.கி நியாசின் – 0,4 மி.கி வைட்டமின் ´பி1` - 28 மி.கி வைட்டமின் ´சி` - 720 மி.கி கரிச்சத்து சுண்ணாம்பு தாதுப் பொருட்கள் கலோரிகள் - 60 இதில் மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு, அதிகளவான வைட்டமின் 'சி' உள்ளது. ஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளதாகக் கருதப்படுகின்றது. தமிழ் இலக்கியத்தில் இடம் கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியத்தில் உள்ளது. thumb|நெல்லி, மத்தியப் பிரதேசம் மருத்துவப் பலன்கள் கீழ்கண்ட மருத்துவ குணங்கள் நெல்லியில் இருப்பதாக, சித்த மருத்துவர்களாலும், இயற்கை அறிஞர்களாலும் நம்பப் படுகின்றன. இருப்பினும், இவை மேலதிக ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியன ஆகும். தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். "The Plant List: A Working List of All Plant Species". Retrieved 26 July 2014. Jump up ^ Oxford English Dictionary 2nd edition, 1989. Accessed online 22 April 2010. (Note however that the OED has final /ɪ/, as this entry predates its acceptance of happy- நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால், நல்லது. நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும். நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும். நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம். நல்ல நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்.Jump up ^ Altervista Flora Italiana, Ribes uva-crispa L. சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்ததாக இருக்கும். மாதவிடாய் காலத்தில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படும் போது, தினமும் மூன்று முறை சிறிது நெல்லிக்காய் ஜூஸையும், கனிந்த வாழைப்பழத்தையும் சாப்பிட்டால், சரிசெய்துவிடலாம்.Jump up ^ Flora of North America, Ribes uva-crispa Linnaeus, 1753. European gooseberry, groseillier épineux முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரிசெய்யலாம். நெல்லிக்காய் ஜூஸ் சரும பிரச்சனைகளை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. குறிப்பாக முகப்பரு, பிம்பிள் உள்ளவர்கள், அதனை குடித்தால் போக்கிவிடலாம். நெல்லிக்காய் சாற்றைக் குடித்தால், கண் பார்வை அதிகரிக்கும்.Jump up ^ "Online Etymology Dictionary". etymonline.com. நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வெளிப்படுவதை தடுக்கும். சான்றுகள் மேற்கோள்கள் பகுப்பு:பழ மரங்கள் பகுப்பு:இந்தியத் தாவரங்கள்
குருதி உறைதல்
https://ta.wikipedia.org/wiki/குருதி_உறைதல்
'இரத்தம் உறைதல்' என்பது காயம் ஏற்படும்பொழுது திசுக்கள் பாதிக்கப்படுவதனால் இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும் பொருட்டு நிகழும். இரத்தத்தில் இரத்தச் சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள் மற்றும் இரத்தத் தட்டுக்கள் உள்ளன. இரத்தப்பெருக்கைத் தடுக்க,இரத்தத் தட்டுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.பாதிக்கப்படும் இடத்தில் அவை கூடி வலை போன்ற அமைப்பினை ஏற்படுத்துகின்றன. இவை ஃபைப்ரின்கள் எனப்படும். இவ்வகை வலை போன்ற சல்லடையே இரத்தம் உறைதலுக்குக் காரணமாகின்றது மேலும் பார்க்க நாரீனி (புரதம்) பகுப்பு:குருதி de:Hämostase#Übersicht über Gerinnungsfaktoren und Inhibitoren
அஸ்ரரோயிட்
https://ta.wikipedia.org/wiki/அஸ்ரரோயிட்
REDIRECT சிறுகோள்
பிரௌனியன் இயக்கம்
https://ta.wikipedia.org/wiki/பிரௌனியன்_இயக்கம்
thumb|பிரௌனியன் இயக்கத்தின் ஒப்புருவாக்கம் thumb|ஆயிரம் முறை இரு பரிமாண வெளியில் நடக்கும் ஒரு குறிப்பில்வழி பிரௌனியன் இயக்கத்தின் மாதிரி வரைபடம் பிரௌனியன் இயக்கம் (Brownian motion) என்பது கீழ்காணுபவற்றைக் குறிக்கும்: நீர்மத்தில் நுண்ணிய துகள்களின் "ஒழுங்கற்றது போல் தோன்றும்" அல்லது குறிப்பில்வழி (random) இயக்கம். மேல் குறிப்பிடப்பட்டுள்ள வகை இயக்கங்களின் கணித மாதிரி. முதன் முதலில், இராபர்ட் பிரௌன் (Robert Brown) என்ற தாவிரவியலாளரால் முன் வைக்கப்பட்ட இக்கருத்துருவை, லூயி பாசெலியர் (Louis Bachelier) என்பவர் கோட்பாட்டு நிலைக்கு கொண்டு வந்தார். அல்பர்ட் ஐன்ஸ்டீனும் இதில் பங்களிப்புச் செய்தார். சான் பத்தீட்டு பெரென் என்பவர் தனது ஆய்வுகள் மூலம் இக்கோட்பாட்டிற்கு வலு சேர்த்தார். வரலாறு ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இராபர்ட் பிரௌன் என்பவர் 1827ஆம் ஆண்டில்R. Brown, “A brief account of microscopical observations made in the months of June, July, and August, 1827, on the particles contained in the pollen of plants; and on the general existence of active molecules in organic and inorganic bodies,” Philos. Mag. (N. S.) 4, 161–173 (1928); R.Brown, “Additional remarks on active molecules,” Philos. Mag. (N. S.) 6, 161–166 (1929); R. Brown, Edinb.New Philos. J. 5, 358 – 371 (1828). தண்ணீரில் மகரந்தத் தூள்களைப் போட்டு அவற்றை ஒரு நுண்ணோக்கியின் மூலம் பார்த்தார். மகரந்த்த் தூள் ஒவ்வொன்றும் அங்குமிங்கும் ஓடியது. ஆனால் தண்ணீரில் எந்தவிதமான அசைவுமிருப்பதாகத் தெரியவில்லை. மகரந்தத் தூள்களுக்கு உயிர் உண்டோ என்ற சந்தேகம் அவருக்கு முதலில் ஏற்பட்டது. ஆனால் அடுத்து அவர் ஒரு சாயப் பொடியைத் தண்ணீரில் கலந்து நுண்ணோக்கியின் மூலமாகப் பார்த்த போது, உயிரில்லாதவை என்று உறுதியாகத் தெரிந்த சாயத் துகள்களும் அங்குமிங்கும் ஓடியாடியதைக் கண்டார். பிரௌனுக்கு அதற்கான காரணம் விளங்கவில்லை. எனினும் அதை அவர் முதலில் அறிவித்ததால் அத்தகைய துகள்களின் இயக்கத்திற்கு பிரௌனியன் இயக்கம் என்று பெயரிடப்பட்டது. பிரௌனியன் இயக்கம் 1860களில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாரான ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் வாயுக்களில் நுண்ணிய அணு அல்லது மூலக்கூறுகளிருப்பதாகவும், அவை ஓய்ச்சலின்றி அங்குமிங்கும் கண்டபடி ஓடிக்கொண்டிருப்பதாகவும் கற்பனை செய்து வாயுக்களின் நடத்தைகள் பற்றிய விதிகளை உருவாக்கினார். திரவங்களிலும் கூட மூலக்கூறுகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் எண்ணத் தலைப்பட்டனர். அதன் மூலம் பிரௌனியன் இயக்கத்திற்கான காரணம் விளங்க தொடங்கியது. தண்ணீரிலுள்ள மூலக்கூறுகள் மகரந்த்த் தூள்களையும், சாயத் தூகள்களையும் நாலா திசைகளிலிருந்தும் வந்து தாக்கிப் பந்தாடி கொண்டிருக்கின்றன. ஒரு திசையில் திடீரொன்று மோதல் அதிகமாகிவிட்டால் மகரந்த்த் தூள் அந்தத் திசையில் உந்தப்பட்டு ஓடுகிறது. சிறிது தூரம் ஓடியதும் வேறு துகள்கள் அதனுடன் மோதி தைத் திசை திருப்பி விடுகின்றன. ஒரு குறிப்பிட்ட நிறையுள்ள துகள் இவ்வாறு நகர்த்தப்படுகிற தொலைவு நீர் மூலக்கூறின் நிறையைப் பொறுத்தது என்ற கருத்தை 1905 ஆம் ஆண்டுA. Einstein, “Uber die von der molekularkinetischen ¨Theorie der Wärme geforderte Bewegung von in ruhenden Flüssigkeiten suspendierten Teilchen,” Ann. Phys. (Leipzig) 17, 549–560 (1905). ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கண்டறிந்து அதற்கான ஒரு சமன்பாட்டையும் உருவாக்கினார். சான் பத்தீட்டு பெரென் என்ற பிரெஞ்சு இயற்பியலாளர் 1908-11 ஆண்டுJ. B. Perrin, “Mouvement brownien et réalité moléculaire,”bAnn. de Chimie et de Physique (VIII) 18, 5–114 (1909); J. Perrin, “Atoms,” translated by D. Ll. Hammick (London: Constable), and reprinted by (Ox Bow Press, Woodbridge, 1990), Ch. II-IV. காலங்களில் செய்முறை ஆராய்ச்சி மூலம், ஐன்ஸ்டைன் கண்டறிந்த சமன்பாட்டை உறுதி செய்தார். அந்த சமன்பாட்டை பயன்படுத்தி நீர் மூலக்கூறுகளின் பரிமாணத்தைக் கணக்கிட்டார். மேற்கோள்கள் பகுப்பு:இயற்பியல் கோட்பாடுகள் பகுப்பு:ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பகுப்பு:கூழ்ம வேதியியல்
பிரவுனியன் இயக்கம்
https://ta.wikipedia.org/wiki/பிரவுனியன்_இயக்கம்
REDIRECT பிரௌனியன் இயக்கம்
இத்தாலி
https://ta.wikipedia.org/wiki/இத்தாலி
இத்தாலியக் குடியரசு அல்லது இத்தாலி (இத்தாலிய மொழி: Repubblica Italiana அல்லது Italia - இட்டாலியா) தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்பப் பகுதியையும், மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும். இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, சிலவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. சான் மேரினோ மற்றும் வத்திக்கான் நகர் என்ற இரு தனி நாடுகளும், இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியம், ஜி8, ஜி20 ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. உலகில் வாழ்வதற்கு ஏற்ற நாடுகளில் முதன்மையான நாடுகளில் இதுவும் ஒன்று. இத்தாலியின் தலைநகரான உரோம் நகரம் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளது. புவியியல் இத்தாலி தெற்கு ஐரோப்பாவில் உள்ளது. மொழிகள் இத்தாலிய மொழியே இத்தாலியின் ஆட்சி மொழியாகும். ஐந்தரை கோடி மக்கள் இம்மொழியை தாய்மொழியாகப் பேசுவதாக அறியப்படுகிறது. இருப்பினும் உலகளவில் 15 கோடி மக்கள் இம்மொழியை பேசுவதாக கணிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல வட்டார வழக்குகள் உள்ளன. சிறுபான்மையினரின் மொழிகளும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஆட்சிமொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு, செருமன் மொழிகள் சில வட்டாரங்களில் பேசப்படுகின்றன. இத்தாலிய மொழியுடன் சிறுபான்மையினரின் மொழிகளிலும் கல்வி பயில வாய்ப்பு உள்ளது. சமயம் கிறித்தவமே பிரதான சமயமாகும். பிற சமயத்தினர் குறைவான விகிதத்திலேயே வாழ்கின்றனர். கத்தோலிக்கக் கிறித்தவமே பலரால் கடைப்பிடிக்கப்படுகிறது. விளையாட்டு கால்பந்தாட்டமே பிரதான விளையாட்டாகும். உலகக் கால்பந்தாட்டக் கோப்பையிலும் இத்தாலி கலந்துகொண்டு கோப்பைகளை வென்றுள்ளது. கைப்பந்தும், கூடைப்பந்தும் முக்கியமான விளையாட்டுகளாகும். இத்தாலியின் சிறப்புகள் thumb|left|163px|இத்தாலி சார்டானியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு குட்டிதீவு தவோலாரா. இத்தாலியால் அங்கிகரிக்கபட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவு ஐந்து சதுர கி.மீ. இங்குள்ள மக்களின் எண்ணிக்கை வெறும் 11 தான். thumb|left|163px|பாறை ஓவியக் கீறல்கள் - கி.மு.8000(Neolithic) இத்தாலியில் கி.மு.8000(Neolithic) ஆண்டு காலத்திலேயே, காமுனி(Camunni) நாகரீகம் இருந்துள்ளது. அதற்கானச் சான்று, இத்தாலியின் லோம்பார்டி மண்டலப் பகுதியிலுள்ள வால்கமோனிகா(Valcamonica)பள்ளத்தாக்குப் பகுதியின், பாறை ஓவியக் கீறல்களிலுள்ளன.ஆங்கில விக்கிபீடியா இணையப் பக்கம். இத்தாலி, ஐரோப்பியப் பண்பாடுகள் பலவற்றின் உறைவிடமாக விளங்கியது. மேற்குலக பண்பாட்டின் தலைநகராக ரோம் நகரம், பல நூற்றாண்டுகளாக இருந்தது. பரோக் என்றழைக்கப்படும் மேற்குலக கலாச்சாரம், 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ரோமிலேயே ஆரம்பமானது. அத்துடன் கத்தோலிக்க திருச்சபையும் இங்கேயே இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரையில், இத்தாலி காலனித்துவப் பேரரசாக இருந்தது. இன்று, இத்தாலி ஒரு மக்களாட்சிக் குடியரசாகவும், வளர்ச்சியடைந்த நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரநிலை அளவீட்டில் உலகின் 8ஆவது நாடாக இத்தாலி விளங்குகிறதுQuality-of-life Survey, தி எக்கனாமிஸ்ட். இத்தாலி ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ ஆகிய அமைப்புகளின் ஆரம்ப உறுப்பு நாடாகும். ஜி8 அமைப்பிலுள்ள ஒரு உறுப்பு நாடாகும். இத்தாலியின் தோற்றம் left|160px|thumb|கி.பி.1000 தற்போதுள்ள இத்தாலியக் குடியரசு நாடு 1946 ஜூன் 2 இல் உருவானது. அதற்குமுன், இத்தாலிய பேரரசாக (Kingdom of Italy) 1861, மார்ச் 17 முதல் இருந்தது. இத்தாலிய இராச்சியம் உருவாவதற்கான விதைக்கரு பல்வேறு வரலாற்று நிகழ்வுகளால் தோன்றியது. அவை வருமாறு;- 14-17ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட எலிக்கொள்ளை நோய் (Plague); 65 ஆண்டுகள் நடந்த இத்தாலியப் போர்கள் – (1494–1559); அப்போர்களுக்குப்பின், உருவான அரசுகளின் அமைதியான ஒருங்கிணைந்த ஆட்சிமுறைகள்; 154 ஆண்டுகள் நடைபெற்ற எசுப்பானிய (Habsburg Spain) ஆட்சி முறை – (1559–1713). 83ஆண்டுகள் நடைபெற்ற ஆஃசுதிரிய (Habsburg Austria) ஆட்சி முறை – (1713–1796); 18ஆண்டுகள் நடைபெற்ற பிரென்'சு குடியரசின் ஆட்சி முறை – (1796–1814); 1814ல் நடைபெற்ற வியன்னா பேராயத்தின் தீர்மானங்களும், செயலாக்கங்களும் ஆகும். இத்தாலியின் மண்டலங்கள் right|330px|இத்தாலிய மண்டலங்கள்- 20|thumb thumb|right|330px|இத்தாலியில் பேசப்படும் கிளைமொழிகள் இத்தாலிய நாடானது, 20 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐந்து மண்டலங்களுக்கு, சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவை, சாதாரண அதிகாரங்களுள்ள மண்டலங்கள் ஆகும். அம்மண்டலங்கள் ஆட்சி நிர்வாகத்திற்காக, இரண்டு அல்லது அதற்கு மேலும் ஒரு தடவை பிரிக்கப்பட்டுள்ளன. அ'சுடாப் பள்ளத்தாக்கு(Valle d'Aosta) என்ற சிறப்பு மண்டலம், அங்ஙனம் பிரிக்கப்படாத மண்டலமாகும். மண்டலங்கள் தலைநகரம் பரப்பளவு (km²) மக்கள் தொகை 1) அப்ருசோ (Abruzzo) L'Aquila 2) Aosta பள்ளத்தாக்கு (சிறப்பு மண்டலம்-1) Aosta 3) அபுலியா(Apulia) பாரி (Bari) 4) பசிளிகாதா (Basilicata) Potenza 5) கலபிரியா (Calabria) Catanzaro 6) Campania Naples 7) Emilia-Romagna Bologna8) Friuli-Venezia Giulia (சிறப்பு மண்டலம்-2) Trieste9) Lazio ரோம்10) Liguria Genoa11) லோம்பார்டி (Lombardy) மிலன் (Milan) 12) Marche Ancona 13) Molise Campobasso14) பியத்மாந்து (Piedmont) துரின் 15) சார்தீனியா (Sardinia) (சிறப்பு மண்டலம்-3) Cagliari 16) சிசிலி (Sicily) (சிறப்பு மண்டலம்-4) Palermo17) Tuscany Florence 18)Trentino-Alto Adige (சிறப்பு மண்டலம்-5) Trento 19) Umbria Perugia 20) Veneto வெனி'சு இவற்றையும் பார்க்க இத்தாலிய ஐக்கியம் இத்தாலிய மொழி பொம்பெயி வெளி இணைப்புகள் Presidenza della Repubblica - இத்தாலிய அதிபரின் உத்தியேகபூர்வ இணையத்தளம். (இத்தாலிய மொழியில்) Parlamento - இத்தாலிய நாடாளுமன்ற உத்தியேகபூர்வ இணையத்தளம்.(Senate in Italian only) Italia.gov.it Main governmental portal (இத்தாலிய மொழியில்) Ministero degli Affari Esteri, Italian Foreign Office இத்தாலிய வரைபடம். - இத்தாலியின் வரைபடமும் பிராந்தியங்களும். இத்தாலி - வரைபடமும் வாநிலையும் - வரைபடமும் ஆறு நாட்களிற்கான வாநிலை முன் அறிவித்தலும். இத்தாலித்தமிழ்.கொம் இத்தாலி வாழ் தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட முதலாவது இணையத் தளம். இத்தாலித் தமிழர்களின் கலை, கலாச்சார, சமூக, புகலிட மற்றும் பலவற்றை உள்ளடக்கி வெளி வந்துள்ளது. மேற்கோள்கள் பகுப்பு:இத்தாலி பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
ஐக்கிய இராச்சியம்
https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_இராச்சியம்
ஐக்கிய பேரரசு (United Kingdom, பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய பேரரசு ), மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது பொதுநலவாய நாடுகள், ஜி8, மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஓர் அங்கமாகும். பொதுவாக ஐக்கிய பேரரசு என்றோ UK அல்லது பிரித்தானியா (Britain) என்றோ (தவறுதலாக) பெரிய பிரித்தானியா என்றோ அழைக்கப்படும் ஐக்கிய பேரரசானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை — பெரிய பிரித்தானியத் தீவில் உள்ளன. நான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய பேரரசின் ஒரு மாகாணமாகக் கருதப்படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய பேரரசின் ஒரே பன்னாட்டு நில எல்லையாகும். ஐ. இ. உலகெங்கும் பற்பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் கொண்டுள்ளது; பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது.; ; பல ஒன்றிணைப்புச் சட்டங்களின் வாயிலாக (வேல்ஸை உள்ளடக்கிய), இங்கிலாந்து பேரரசோடு, முதலில் ஸ்காட்லாந்தையும், பின்னர் அயர்லாந்தையும், ஓராட்சியின் கீழ் ஒருங்கிணைத்து, இலண்டன் மாநகரைத் தலைநகராகக் கொண்ட ஐ. இ. உருவாக்கப்பட்டது. 1922இல் அயர்லாந்தின் பெரும்பாகம் ஐக்கிய பேரரசிலிருந்து விடுபட்டு ஒரு விடுுதலைபெற்ற நாடாக உருவானது (எனினும் 1949 வரை, ஐக்கிய பேரரசின் மன்னரே அயர்லாந்தின் மன்னராகவும் திகழ்ந்தார்). பின்னர், அது அயர்லாந்து குடியரசாக உரு மாறியது. ஆனால், அத்தீவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆறு வட்டாரங்கள், வடக்கு அயர்லாந்து என்ற உருவில் ஐக்கிய பேரரசுடனே தொடர்ந்தன. ஐ.இ. ஐரோப்பியக் கண்டத்தின் வடமேற்குக் கரைக்கு அப்பால் உள்ளது. அது அயர்லாந்து குடியரசுடன் உள்ள நில எல்லையைத் தவிர, வடக்குக் கடல், ஆங்கிலக் கால்வாய், செல்டிக் கடல், ஐரியக் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றால் முற்றிலும் சூழப்பட்டிருக்கின்றது. "பெரிய பிரித்தானியா" அல்லது "பிரித்தானியா" என்பது பிரித்தானியத் தீவுகளிலேயே மிகப் பெரிதான தீவின் புவியியல் பெயராகும். அரசியல் ரீதியில், பெரிய பிரித்தானியா என்பது இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவற்றின் கூட்டுப் பெயராகும். (அதாவது, வடக்கு அயர்லாந்தைத் தவிர்த்து ஐக்கிய பேரரசின் ஏனைய பகுதிகள்). "பெரிய பிரித்தானியாவின் ஐக்கிய பேரரசு " ஒன்றிய சட்டம் 1707 வாயிலாகத் தோற்றுவிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்கு, ஸ்காட்லாந்தை "வடக்குப் பிரித்தானியா" என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை "தெற்குப் பிரித்தானியா" என்றும் அழைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், இவ்வழக்கம் நாளடைவில் மறைந்து போயிற்று. இன்றைய வழக்கில் "பிரித்தானியா" என்னும் பெயர் சுருக்கமாக மொத்த ஐக்கிய பேரரசை குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், ஐக்கிய பேரரசு என்பதற்கு "பெரிய பிரித்தானியா" என்று குறிப்பிடுவது பிழையாகும், ஏனென்றால் இந்தப் பெயர் வடக்கு அயர்லாந்தை உட்படுத்தாது. இது மனவருத்ததை ஏற்படுத்தலாம். பிரித்தானியத் தீவுகள் என்பது பெரிய பிரித்தானியத் தீவு மற்றும் அயர்லாந்து தீவு மற்றும் அருகிலிருக்கும் ஏனைய தீவுகளான கால்வாய் தீவுகள், ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, மான் தீவு, Isle of Wight, ஷெட்லாந்து தீவுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. எனினும், பிரித்தானியாவுக்குச் (அதாவது ஐக்கிய பேரரசிற்கு) சொந்தமான தீவுகள் என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதால், இப் பயன்பாடு பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது, குறிப்பாக அயர்லாந்தில். இதற்கு மாற்றுப் பெயராக, அதிகார வட்டாரங்களில் அதிகம் பயன்படுத்தப் படாவிட்டாலும், வடக்கு அட்லாந்தியத் தீவுகள் என்ற பெயர் முன்வைக்கப் பட்டிருக்கிறது. வரலாறு கொட்லாந்தும் இங்கிலாந்தும் 10ம் நூற்றாண்டிலிருந்து தனித்தனி அமைப்புகளாக இயங்கி வந்துள்ளன. 1284ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழிருந்த வேல்ஸ், ஒன்றியச் சட்டங்கள் 1536–1543 வாயிலாக இங்கிலாந்து பேரரசுடன் இணைந்தது. 1603 முதல் ஒரே மன்னரைக் கொண்ட தனித்தனி பேரரசுகளான இங்கிலாந்தும் கொட்லாந்தும் ஒன்றியச் சட்டம் 1707 வாயிலாக ஒரு நிரந்தர ஒன்றியமாக இணைந்தன, பெரிய பிரித்தானியாவின் பேரரசாக. இது நடந்த நேரத்தில் கொட்லாந்து பொருளாதாரச் சீரழிவை எதிர்நோக்கியிருந்தது. இங்கிலாந்துடனான ஒருங்கிணைப்பு கொட்லாந்து மக்களின் பரவலான எதிர்ப்பைப் பெற்றது. 1169ஆம் ஆண்டிலிருந்து 1691ஆம் ஆண்டு வரை படிப்படியாக ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்ட அயர்லாந்து பேரரசு, ஒன்றியச் சட்டம் 1800 வாயிலாகப் பெரிய பிரித்தானிய பேரரசுடன் இணைந்ததால், பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய பேரரசு உருவானது. இதுவும் ஐரிய மக்களின் விருப்பமின்றியே நடைபெற்றவொரு ஒருங்கிணைப்பாகும். இதற்குச் சற்று முன்னரே, 1798ஆம் ஆண்டில் ஐக்கிய ஐரிய மக்களின் புரட்சி வெடித்துத் தோல்வியடைந்திருந்தது (பார்க்க: ஐக்கிய ஐரிய மக்கள் சமூகம்). நெப்போலிய மன்னனின் போர்த் தொடுப்புகளால் எழுந்த பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி, இந்த ஒருங்கிணைப்புச் செயல் விரைவு படுத்தப்பட்டது. 1922ஆம் ஆண்டு நிகழ்ந்த கடும் போரைத் தொடர்ந்து ஆங்கில - ஐரிய ஒப்பந்தம் ஏற்பட்டு, அயர்லாந்து தீவு ஐரிய சுதந்திர நாடு மற்றும் வடக்கு அயர்லாந்து என்று பிரிவடைந்து, பின்னது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தது. ஒப்பந்தத்தில் முடிவானபடி ஐரிஷ் மாகாணமான அல்ஸ்டரிலுள்ள ஒன்பது வட்டாரங்களில் ஆறு வட்டாரங்கள் ஐக்கிய பேரரசுடன் தொடர்ந்தன. இங்கு வாழும் மக்கள் தொகையில் ஏறக்குறைய 40% உள்ளவர்கள் சுதந்திர அயர்லாந்துடன் ஒருங்கிணைய விரும்புகின்றனர். 1927ஆம் ஆண்டு அயர்லாந்தின் பெரும்பகுதியின் வெளியேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய பேரரசின் பெயர் பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய பேரரசு என மாற்றப் பட்டது. thumb|300px|left|1897-ல் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகள் தொழிற்துறையிலும், கப்பற்துறையிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆதிக்க சக்தியாகத் திகழ்ந்த ஐ.இ, மேற்கத்திய சிந்தனைகளான உடைமை, சுதந்திரம், முதலாளித்துவம் மற்றும் நாடாளுமன்ற மக்களாட்சி அகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது. உலக இலக்கியம் மற்றும் அறிவியல் துறைகளிலும் பெரும் பங்காற்றியது. அதன் உச்ச நிலையில், பிரித்தானிய ஏகாதிபத்தியம் உலகின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கை உள்ளடக்கியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஐக்கிய இராச்சியத்தின் ஆதிக்கம் இரு உலகப் போர்களால் வெகுவாகக் குறைந்ததைக் காணமுடிந்தது. 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலோ, பிரித்தானிய ஏகாதிபத்தியம் கலைக்கப் பட்டு, முற்றிலும் மறைந்தது. ஆனால் ஐ.இ தன்னை ஒரு நவீனமயமான, வளமையான நாடாக வளர்த்துக் கொண்டது. தற்போது ஐ.இ ஐரோப்பிய கண்டத்துடனான ஒருங்கிணைப்பின் விகிதத்தைக் குறித்து சிந்தித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்திருந்தும், உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவும் தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலைக் குறித்த அரசின் கணிப்புகளாலும், ஐ.இ இன்னும் ஐரோவை அதன் நாணயமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு மக்கள் மத்தியில் தீவிர எதிர்ப்பு நிலவுகிறது. சில ஆங்கிலேயப் பொருளாதார வல்லுனர்களின் கோரிக்கை, ஐ.இ ஐரோவைப் பின்பற்றுவதற்கு முன்னர், ஐரோப்பிய மத்திய வங்கி இங்கிலாந்தின் வங்கியை முன்மாதிரியாகக் கொண்டு சீர்திருத்தம் பெற வேண்டும் என்பதே. ஜெர்மனி ஐரோவை ஏற்றுக் கொண்டபின் சந்தித்த பொருளாதார இக்கட்டுகளைக் கருத்தில் கொண்டால், மேற்கூறிய கோரிக்கை நிறைவேற்றப்படும் சாத்தியங்களிருப்பதாகத் தென்படலாம். அரசியல் சட்டச் சீர்திருத்தமும் தற்போதைய ஒரு நிகழ்வாகும். பிரபுக்களின் அவையில் சீர்திருத்தங்கள், கொட்லாந்து தனது ஸ்காட்டிஷ் நாடாளுமன்றத்தை 1999ஆம் ஆண்டு தேர்வு செய்தது, அதே வருடம் அதிகாரப் பரவலாக்கங்கள் வேல்ஸிலும் வடக்கு அயர்லாந்திலும் நடைபெற்றது, ஆகியவை அண்மை கால நிகழ்வுகள். தடைகளற்ற சுதந்திரமான பின்புலத்தைக் கொண்டிருந்தும், அரசின் தகவல் ஆணையரின் 2004ஆம் வருடக் கூற்றுப் படி ஒரு பரவலான கண்காணிப்புடைய சமூகமாக ஐ. இ உருமாறும் வாய்ப்புள்ளது. ஐ.இ காமன்வெல்த் நாடுகள் மற்றும் NATO ஆகியவற்றில் ஒரு அங்கமாகும். அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் ஒரு நிரந்தர உறுப்பினர் ஆகவும் உள்ளது. அதனால் அதற்கு வெட்டு ஓட்டு அதிகாரமும் உண்டு. ஐ. இ, உலகிலுள்ள வெகு சில அணு ஆயுத சக்தியுடைய நாடுகளில் ஒன்றாகும். பார்க்கவும்: பிரித்தானிய அரச பரம்பரை; பிரித்தானிய வரலாறு; இங்கிலாந்து வரலாறு; அயர்லாந்து வரலாறு; கொட்லாந்து வரலாறு; வேல்ஸ் வரலாறு; ஐ.இ வட்டார வரலாற்றுச் சொற்கள் அரசியல் ஐக்கிய பேரரசு ஓர் அரசியல்சட்ட முடியாட்சியாகும் (constitutional monarchy). அதை அரசாளும் அதிகாரம் பிரதமரின் தலைமையிலுள்ள அரசிடம் உள்ளது. பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் கொண்டது அமைச்சரவை. மகுடாதிபதிக்கு ஆலோசனைகள் வழங்கும் ஆலோசனைக்குழுவில் (privy council) அமைச்சரவை ஒரு துணைக்குழுவாகும். அரசாளும் உரிமையைக் கொண்ட மன்னர், நாட்டின் தலைவராகத் திகழ்கிறார். எனினும், நடைமுறையில் அவரது அரசு கீழவையான மக்களவைக்குக் (British (House of Commons) கட்டுப்பட்டே செயல்பட இயலும். மக்களவையானது ஐக்கிய பேரரசின் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப் பட்ட ஒரே நாடாளுமன்ற அவையாகும். மரபுவழிப் படி, அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து (members of the Commons) தேர்வு செய்யப் படுகிறார்கள். வெகு சிலர் மேலவையான பிரபுக்களவையிலிருந்தும் (British House of Lords) நியமிக்கப் படுகிறார்கள். அமைச்சர்கள் ஆலோசனைக்குழுவுக்கும் சேர்த்தே நியமனம் செய்யப் படுகிறார்கள். இவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் உண்டு. பொதுவாக, மக்களவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரே பிரதமராகக் கண்டுகொள்ளப் பட்டு மன்னரால் (அரசரால்) அரசாங்கம் அமைக்கும்படி உத்தரவிடப்படுவார். இதற்கு அவருக்கு மக்களவையின் ஆதரவு இருப்பது அவசியம். தற்போதைய பிரதமர் லிஸ் டிரஸ் ஆவார். 2022ஆம் ஆண்டு முதல் பதவியிலிருக்கிறார். ஐக்கிய பேரரசின் ஏகாதிபத்தியப் பின்புலத்தின் விளைவாக, பிரித்தானிய அரசமைப்பு உலகெங்கும் பின்பற்றப் படுகிறது. பிரித்தானியப் பாணிப் நாடாளுமன்ற முறையைக் கடைப்பிடிக்கும் நாடுகள், வெஸ்ட்மின்ஸ்டர் அரசாட்சி முறையைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகின்றன. தற்போதைய முடிக்குரியவர் மூன்றாம் சார்லசு (Charles III) ஆவார். இவர் 2022ஆம் ஆண்டு அரியணை ஏறினார். நவீன கால ஐக்கிய பேரரசில் முடிக்குரியவரின் பங்கு என்பது, பொதுவாகப் பெயரளவில்தான், எனினும் எப்பொழுதும் அவ்வாறல்ல. அவருக்கு அமைச்சரவையின் எல்லா ஆவணங்களுக்கும் அனுமதியுண்டு. வாரமொருமுறை பிரதமர் அவரைச் சந்தித்து அரசின் நிகழ்வுகள்குறித்து தெரியப்படுத்துவார். அரசுச் சட்ட ஆசிரியர் வால்டர் பேக்ஹாட் (Walter Bagehot), முடிக்குரியவருக்குக் கீழ்கண்ட மூன்று உரிமைகள் இருப்பதாகக் கூறினார்: கலந்தாலோசிக்கப்படும் உரிமை, அறிவுரைக்கும் உரிமை மற்றும் எச்சரிக்கும் உரிமை. இவ்வுரிமைகள் அரிய சந்தர்ப்பங்களிலேயே உபயோகிக்கப் பட்டாலும், தக்க தருணங்களில் இன்றியமையாதவையாக அமைந்துள்ளன — உதாரணம், "தொங்கு நாடாளுமன்றம்" ஏற்பட்ட பொழுதெல்லாம். ஒவ்வொரு வருடமும், பொதுவாக நவம்பர் மாதத்தில், அரசர் அவர்கள் நாடாளுமன்றத்தைத் துவக்கி வைத்து, அரசின் அடுத்த வருடத்திற்கான செயல் திட்டங்கள்குறித்த சிறப்புரையை வழங்குவார். அரசர் அவர்கள் நாடாளுமன்றத்தின் இன்றியமையாத ஒரு அங்கத்தினராகக் கருதப் படுகிறார். நாடாளுமன்றத்திற்கு, கூடும் அதிகாரத்தையும், சட்டங்களியற்றும் அதிகாரத்தையும் மேன்மைமிகு அரசர் அவர்களே வழங்குவதாகக் கொள்ளப்படுகிறது. ஒரு நாடாளுமன்ற சட்டவரைவு மேன்மைமிகு அரசர் அவர்கள் கையொப்பமிடும் வரை சட்டமாக அங்கீகாரம் பெறாது. இத்தகைய இராச அங்கீகாரம் நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்ட எந்த மசோதாவுக்கும் மறுக்கப் பட்டதில்லை ( ஒரே ஒரு முறை அரசி ஆன் (Queen Anne) 1708ஆம் ஆண்டில் அவ்வாறு செய்ததைத் தவிர). மேன்மைமிகு அரசி அவர்கள் செய்யும் இன்னொரு பணி, நாட்டிற்குப் பெருந் தொண்டாற்றியவர்களுக்குப் பட்டங்களும் பதக்கங்களும் வழங்கிக் கௌரவிப்பதாகும். முடிக்குரியவரே நாட்டின் தலைவராகவும் அரசு நிர்வாகத்தின் தலைவராகவும் திகழ்கிறார். பிரித்தானிய அரசும் அதிகாரபூர்வமாக மேன்மைமிகு அரசரின் ஐக்கிய பேரரசின் அரசு என்றே அழைக்கப் படுகிறது. அரசரால் நியமிக்கப் பட்டதாகக் கருதப்படும் பிரதமரே, அரசாங்கத்தின் தலைவராவார். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, போர் தொடுப்பது போன்ற எல்லா வெளியுறவுக் கொள்கைகளும், மேன்மைமிகு அரசர் அவர்களின் பெயரிலேயே மேற்கொள்ளப் படுகின்றன. ஐக்கிய பேரரசினடி முடிக்குரியவரே நீதியின் பிறப்பிடமாவார். அனைத்துக் குற்றப் பத்திரிக்கைகளும் முடிக்குரியவரின் பெயரிலேயே எழுதப் படுகின்றன (அரசரானால் "ரெக்ஸ்" என்ற பெயரிலும், அரசியானால் "ரெசினா" என்ற பெயரிலும்). மேன்மைமிகு அரசரின் போர்ப்படை என்றழைக்கப்படும் பிரித்தானியப் போர்ப்படைக்கும் அவரே தலைமைத் தளபதியாவார். அண்மை காலத்திலேற்பட்ட இழுக்குகள் மற்றும் விவாதங்களையும் தாண்டி, முடிக்குரியவருக்கு மக்களிடையே வலுவான ஆதரவே இருந்து வந்துள்ளது. அரசியல் பின்புலமுள்ள சனாதிபதி முறையை விட, அரசியல் சார்பற்ற முடிக்குரியவரை (அவர் அத்தகுதியைப் பிறப்பால் அடைந்தவர் என்றாலும்) நாட்டின் தலைவராகக் கொள்வதே மேலானதாகக் கருதப் படுகிறது. பிரித்தானிய முடிக்குரியவர் மற்றொரு 15 சுதந்திர நாடுகளுக்கும் தலைமை வகிக்கிறார். இந்நாடுகள் பொதுநலவாய நாடுகள் என்று வழங்கப்படுகின்றன. ஐக்கிய பேரரசிற்கு இந்நாடுகளின் மீது அரசியல் ரீதியாகவோ அல்லது ஆட்சி ரீதியாகவோ எந்தவொரு அதிகாரமும் இல்லையென்றாலும், நெடுங்காலத்திய, நெருக்கமான உறவுமுறைகளின் காரணமாக ஒரு செல்வாக்குண்டு. சில பொதுநலவாய நாடுகளுக்குப் பிரித்தானிய ஆலோசனைக்குழுவே உச்ச நீதிமன்றமாக விளங்குகிறது. ஒப்பந்தச் சட்டத்தின்படி (Act of Settlement 1701) முடிக்குரியவர் ஒரு ரோமன் கத்தோலிக்கரை மணந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது. thumb|200px| மக்களவையும் பிரபுக்களவையும் இலண்டன் மாநகரம் வெஸ்ட்மின்ஸ்டரில் தேம்ஸ் நதிக் கரையிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் தான் உள்ளன. நாடாளுமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட 646 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவை, மற்றும் நியமன உறுப்பினர்களையே கொண்ட பிரபுக்களவை, ஆகிய இரு அவைகளையும் உள்ளடக்கியதாகும். மக்களவை பிரபுக்களவையை விடக் கூடுதல் அதிகாரத்தை உடையதாகும். அதன் 646 உறுப்பினர்களும், ஐக்கிய பேரரசின் நான்கு பாகங்களிலிருந்தும், மக்களால் நேரடியாக, தொகுதி வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர். பிரபுக்களவை தற்போது 706 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் எவரும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களல்ல. இவர்கள் அனைவருமே வம்சாவளியாகவோ அல்லது கௌரவிக்கப் பட்டோ உயர்குடிகளானவர்கள் (nobility), மற்றும் இங்கிலாந்து தேவாலயத்தின் மதகுருமார்கள், ஆகியவர்களே. பண்டைய நாட்களில், பிரபுக்களவை உயர்குடிகளையே உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. இவர்களுக்குப் பிறப்புரிமை கருதி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டன. எனினும் இன்றைக்கு இவ்வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. மேலும், பிரபுக்களவைச் சட்டம் 1999, வம்சாவளி உறுப்பினர்களின் தொகையை வெகுவாகக் குறைத்தது. 706 உறுப்பினர்களில் 92 பேர்களுக்கே பிறப்புரிமையால் பதவி பெறும் வாய்ப்புண்டு, அதுவும் அவர்கள் மற்ற உயர்குடிகளால் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் அல்லது Earl Marshal, Lord Great Chamberlain போன்ற பேரரசிய பதவிகளை உடையவர்களாக இருக்க வேண்டும். பிரபுக்களவை சீர்திருத்தங்கள் முதலில் எல்லா வம்சாவளி உறுப்பினர்களின் வாக்குரிமையையும் பறிப்பதற்கு முயற்சி செய்தது. பிறகு சமரசம் செய்து கொள்ளப்பட்டு, அவர்கள் படிப்படியாக உரிமைகளை இழக்கும்படி மாற்றியமைக்கப்பட்டது. ஐக்கிய பேரரசு ஒரு நடுவண் ஆட்சி, அல்லது ஒற்றையாட்சி (unitary) அரசு என்றும், வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள நாடாளுமன்றமே ஐக்கிய பேரரசின் ஒட்டுமொத்தமான அரசதிகாரத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்றும், விவரிக்கப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முழுவதிலும் ஐக்கிய பேரரசு அயர்லாந்துக்குச் சுயாட்சி வழங்குவது குறித்து விவாதித்தது. 1920ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்திற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. ஆனால் அது 1972ஆம் ஆண்டு நடந்த பலத்த உள்நாட்டுக் கலவரத்துக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப் பட்டது. 1990களில் தன்னாட்சி மீண்டது, கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் சுயாட்சிப் நாடாளுமன்றங்கள் உருவான பொழுது. 1999இல் ஸ்காட்டியப் நாடாளுமன்றமும் வேல்ஸ் தேசிய அவையும்]] நிறுவப் பட்டன, முன்னது சட்டமியற்றும் அதிகாரமும் கொண்டதாக. இப்பொழுது கல்வி வட்டாரங்களிலும் மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்படுவது என்னவென்றால், கார்னிஷ் மக்களும் அவர்கள் வாழும் பகுதிகளும் ஐக்கிய பேரரசின் தனியொரு பகுதியாகவும் நாடாகவும் கருத வாய்ப்புள்ளதா என்பதே. கார்ன்வாலில் ஒரு தேசிய இயக்கம் ஒரளவுக்கு செயல்பட்டு வருகிறது. தன்னாட்சி கோரி ஒரு மனு சமர்பிக்கப் பட்டு, அதற்கு 50000 ஆதரவுக் கையொப்பங்களும் சேகரிக்கப் பட்டன. எனினும், ஐக்கிய பேரரசி அரசுக்கு, கார்ன்வாலுக்கு எவ்வகையான தன்னாட்சியையும் வழங்கும் எண்ணமில்லை. மாகாண அவைகள் வடக்கில் முயற்சி செய்யப்பட்டு, மக்கள் ஆதரவின்றி கைவிடப்பட்டன. எனினும், துணைப் பிரதமரின் அலுவலகம் கூறுவது என்னவென்றால், "அரசு தொடர்ந்து அதிகாரத்தைப் பரவலாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு, அதன் மூலம் பிராந்திய அளவில் செயல்பாடுகளைச் செம்மைப் படுத்தி, எல்லா ஆங்கிலப் பிரதேசங்களையும் வலிமையாக்கும் கொள்கையில் தெளிவாகவுள்ளது" என்பதே. நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதிகாரப் பகிர்வுடைய ஒரு அவையின் நிர்மாணிப்பு என்று வடக்கு அயர்லாந்தின் சமீபத்திய சுயாட்சி முயற்சியும் தூய வெள்ளி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்டது, ஆனால் அது தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. பன்முக (federal) அரசமைப்பைப் போலல்லாது, தன்னாட்சிப் நாடாளுமன்றங்களுக்கு அரசுச் சட்டத்தில் எந்தவொரு உரிமையோ, இடமோ கிடையாது. அவை இலண்டன் பாரளுமன்றத்தால் உருவாக்கப் பட்டு, 1972இல் வடக்கு அயர்லாந்தில் நிகழ்ந்தது போல், இலண்டன் பாரளுமன்றத்தாலேயே கலைக்கப் பட்டும் விடலாம். பிரிவுகளும் துணைப்பிரிவுகளும் ஐக்கிய பேரரசு நான்கு பிரிவுகளைக் கொண்டது: ஐக்கிய பேரரசின் பிரிவுகள் கீழ்க்கண்டவாறு துணைப்பிரிவுகளைக் கொண்டுள்ளன: இங்கிலாந்தின் பிராந்தியங்கள், மற்றும் வட்டாரங்கள்; ஸ்காட்லாந்தின் துணைப்பிரிவுகள்; வேல்ஸின் வட்டாரங்கள்; வடக்கு அயர்லாந்தின் மாவட்டங்கள். ஒன்றியச் சட்டம் 1536 இங்கிலாந்தையும் வேல்ஸையும் ஒருங்கிணைத்தது. நான்கு பிரிவுகளும் பண்டைய நாட்களிலேயே வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இங்கிலாந்தின் மக்கள்தொகை மற்றதுகளை விட வெகு அதிகமாதலால், அண்மை காலத்தில் அது ஒன்பது பிராந்தியங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவை: வடகிழக்கு, வடமேற்கு, யார்க்-ஷையர் மற்றும் ஹம்பர், கிழக்கு மிட்லேண்ட்ஸ், மேற்கு மிட்லேண்ட்ஸ், கிழக்கு இங்கிலாந்து, பாரிய இலண்டன், தென்கிழக்கு இங்கிலாந்து, தென்மேற்கு இங்கிலாந்து ஆகியவை. ஒவ்வொரு பிராந்தியமும் வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு சமயத்தில், ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் ஒரு பிராந்திய அவையை அமைக்கத் திட்டமிடப் பட்டிருந்தாலும், முதலில் முயற்சிக்கப்பட்ட வடகிழக்குப் பிராந்தியத்தில் இதற்கு மக்களின் ஆதரவு கிட்டாததால், இத்திட்டத்தின் வருங்காலமே கேள்விக்குறியாகியுள்ளது. கொட்லாந்து 32 வட்டாரங்களையும், வேல்ஸ் 22 வட்டாரங்களையும், வடக்கு அயர்லாந்து 26 மாவட்டங்களையும் கொண்டுள்ளன. அவ்வப்பொழுது சேர்த்துக் கூறப்பட்டாலும், சட்டப்படி ஐக்கிய பேரரசின் பிரிவாக இல்லாதவை அதன் மகுடச் சார்பு நாடுகளாகும். அவை தன்னாட்சி முறையில் இயங்கும் மகுடச் சொத்துக்களாகும். இத் தவிர ஐக்கிய பேரரசு பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் உள்ளடக்கியுள்ளது. இராணுவம் thumb|150px|right|மேன்மைமிகு இராஜாவின் முப்படைகளின் முத்திரை. நங்கூரம் கப்பற்படையையும், வாட்கள் நிலப்படையையும், கழுகு விமானப்படையையும் குறிக்கின்றன. ஐக்கிய பேரரசின் போர்ப்படைகளாவன பிரித்தானிய போர்ப்படைகள் என்றோ மேன்மைமிகு அரசரின் போர்ப்படைகள் என்றோ அல்லது அதிகாரபூர்வமாக மகுடத்தின் போர்ப்படைகள் என்று வழங்கப்படுகின்றன. அவற்றின் தலைமைத் தளபதி மேன்மைமிகு அரசர் ஆவார். அவை பாதுகாப்பு அமைச்சகத்தால் நிர்வகிக்கப் படுகின்றன. பிரித்தானிய போர்ப்படையின் தலையாய கடமை, ஐக்கிய பேரரசையும் அதன் கடல் கடந்த நிலப்பரப்புகளையும் பாதுகாப்பதே. அத்துடன், பிரிட்டனின் பாதுகாப்புக்கு இன்றியமையாத மற்ற அம்சங்களையும் கவனிக்கும் பொறுப்பும், சர்வதேச அமைதி முயற்சிகளில் பங்கு பெறுவதும் அதன் கடமைகளே. அவை, NATO மற்றும் இதர கூட்டு நடவடிக்கைகளிலும் தொடர்ந்து நற்பணியாற்றி வருபவையாகும். 2004ஆம் ஆண்டில், பிரித்தானிய நிலப்படை 112.700 வீரர்களையும் (இதில் 7.600 பெண் வீரர்களும் அடக்கம்), இராச விமானப்படை 53,400 வீரர்களையும் கொண்டிருந்தன. 40.900 வீரர்களைக் கொண்ட இராசக் கப்பற்படை ஐக்கிய பேரரசின் தன்னிச்சையான அணு ஆயுத செயல்திட்டப் பிரிவினை உள்ளடக்கியது. அது நான்கு டிரைடெண்ட் எறிகணை நீர்மூழ்கிகளைக் கொண்டது. இராச கப்பற்படை வீரர்கள் நீர்-நில அதிரடி நடவடிக்கைகளில் NATO நிலப்பரப்பிலும் அதனைத் தாண்டியும் பங்கு பெறுவர். மேற்கூறிய அனைத்துப் போர்வீரர்களையும் சேர்த்தால், மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய 210,000 ஆகும். பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் பிரிட்டனும் ஐரோப்பாவின் சக்திவாய்ந்த மற்றும் முழுமையானதொரு போர்ப்படையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. பிரிட்டனின் பரவலான செயல்திறன்களையும் தாண்டி, அண்மையில் நிலவும் பாதுகாப்புக் கொள்கையானது, பிரிட்டன் தனித்துப் போரிடாமல், தோழமை நாடுகளுடன் சேர்ந்து கூட்டு நடவடிக்கைகளில் மட்டுமே பங்கு பெறுவது, என்பதே. பாஸ்னியா, கொசோவோ, ஆஃப்கானிஸ்தான், இராக் (கிரேன்பி நடவடிக்கை, விமானத்தடைப் பிராந்தியங்கள், டெசர்ட் பாக்ஸ் நடவடிக்கை, டெலிக் நடவடிக்கை) ஆகியவற்றை இக்கொள்கைக்கு உதாரணங்களாகக் கூறலாம். பிரித்தானிய படை கடைசியாகத் தனித்துப் போரிட்டது 1982ஆம் ஆண்டு நடந்த ஃபாக்லாண்ட்ஸ் போரில்தான். பிரித்தானிய படைகள் வடக்கு அயர்லாந்தில் நடக்கும் கலவரங்களை ஒடுக்குவதிலும் பங்கு பெறுகின்றன. எனினும், அங்கு படைக் கலைப்பு படிப்படியாகச் செயல்படுத்தப் படுகிறது. புவியியல் thumb|200px|ஐக்கிய பேரரசின் வரைபடம் இங்கிலாந்தின் பெரும்பாகம் சமவெளிப் பிரதேசமாகும். கிழக்கையும் மேற்கையும் பிரிக்கும் மலைப்பகுதிகள் வடமேற்கில் லேக் மாவட்டத்திலுள்ள கம்ப்ரயன் மலைகளும், வடக்கில் பெனைன்ஸ் மலைப்பிரதேசம் மற்றும் பீக் மாவட்டத்திலுள்ள சுண்ணாம்புக்கல் மலைகள் ஆகியன. மற்ற மலைப்பகுதிகள் பர்பெக் தீவிலுள்ள கீழ் சுண்ணாம்புக்கல் மலைகள், வடக்கு மலைச்சரிவுகளான காட்ஸ்வோல்ட்ஸ், லின்கன்ஷையர் மற்றும் சாக் சரிவுகள், தெற்கு மலைச்சரிவுகள் மற்றும் தெற்கு இங்கிலாந்தின் சில்டர்ன்ஸ் ஆகியவை. இங்கிலாந்தில் 1000 மிட்டர்களுக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்ட சிகரமெதுவுமில்லை. முக்கியமான ஆறுகளும் கயவாய்களும் (estuaries) இவையே: தேம்ஸ், செவெர்ன், ட்ரெண்ட், ஔஸ் மற்றும் ஹம்பர் ஆகியன. பெருநகரங்களாகியன இலண்டன், பர்மிங்காம், மான்செஸ்டர், லீட்ஸ், ஷெஃபீல்ட், லிவர்பூல், பிரிஸ்டொல், நாட்டிங்ஹம், லீசெஸ்டர் மற்றும் நியூ கேசில். டோவருக்கு அருகிலுள்ள கால்வாய் சுரங்கம் (Channel tunnel) ஐக்கிய பேரரசை பிரான்ஸுடன் இணைக்கிறது. வேல்ஸ் பெரும்பாலும் மலைப்பாங்கான நிலப்பரப்பையுடையது. அதன் உயரமான சிகரம் 1085 மீட்டர் உயரமுள்ள ஸ்நோடௌன் ஆகும். வேல்ஸ் மையப்பகுதிக்கு வடக்கில் இருப்பது அங்க்லெசி தீவு. வேல்ஸின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் தெற்கிலுள்ள கார்டிஃப் ஆகும். இன்ன பிற மாநகரங்கள் ஸ்வேன்சீ, நியூ போர்ட் மற்றும் ரெக்ஸ்ஹம் ஆகியன. ஸ்காட்லாந்தின் பூகோள அமைப்பு பலதரப்பட்டது. தெற்கிலும் கிழக்கிலும் சமவெளிகளாகவும் வடக்கிலும் மேற்கிலும் மலைப்பகுதிகளாகவும் உள்ள நிலப்பரப்பைக்கொண்டது கொட்லாந்து. அதன் 1343 மீட்டர் உயரமுள்ள பென் நெவிஸ் சிகரமே ஐக்கிய பேரரசின் மிகுந்த உயரமான சிகரமாகும். பல நீளமான கயவாய்களும் ஏரிகளும் ஸ்காட்லாந்தில் உண்டு. மேற்கிலும் வடக்கிலும் பல தீவுகளையும் உள்ளடக்கியது கொட்லாந்து. ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, ஷெட்லேண்ட் தீவுகள் மற்றும் மனிதக் குடியிருப்பில்லாத ராக்கெல் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை. முக்கிய நகரங்கள் எடின்பரோ, கிளாஸ்கோ, அபர்தீன் மற்றும் டண்டீ ஆகியவை. அயர்லாந்து தீவின் வடகிழக்கிலுள்ள வடக்கு அயர்லாந்து, பெரும்பாலும் மலைப்பகுதியே. பெல்ஃபாஸ்ட் மற்றும் லண்டண்டெர்ரி அதன் முக்கிய நகரங்களாகும். ஐக்கிய பேரரசு மொத்தமாக 1098 சிறிய தீவுகளைக் கொண்டது. இவற்றில் பல இயற்கையானவை. மற்றவை செயற்கையாக, கற்களையும் மரத்தையும் கொண்டு பண்டைய காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் இயற்கையான பாழ்பொருட்களும் அவற்றின் மேல் படிந்ததால் படிப்படியாக விரிவாக்கமடைந்த செயற்கைத் தீவுகளாகும். பொருளாதாரம் ஐக்கிய பேரரசு முன்னணியில் இருக்கும் ஒரு வணிக சக்தி மற்றும் நிதித்துறை மையமாகும். முதலாளித்துவத்தையே முதன்மையாகக் கொண்ட அதன் பொருளாதாரம், உலகில் நான்காவது இடத்தை வகிப்பதாகும். கடந்த இருபது வருடங்களாக அரசு, தனியார்மயமாக்கல்களை மேற்கொண்டு அரசுடைமையைப் பெரிதும் குறைத்துக் கொண்டுள்ளது. மக்கள்நல அரசமைப்பையும் (welfare state) வெகுவாகக் கட்டுப்படுத்தி வந்திருக்கிறது. உழவுத் தொழில், ஐரோப்பிய அளவில், அதீதமான, மிகவும் இயந்திரமயமான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க முறையில் மேற்கொள்ளப்பட்டு, நாட்டின் உணவுத் தேவைகளின் 60 % பங்கு, மக்கள்தொகையில் 1 % அளவே உள்ள உழவர்களைக் கொண்டு நிறைவு செய்யப்படுகிறது. ஐக்கிய பேரரசு பெரிய அளவில் நிலக்கரி, எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களைக் கொண்டுள்ளது. அதன் மின்னாற்றல் தயாரிப்பின் பங்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% ஆகும். இது United Kingdom போன்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு மிக அதிகமானவொரு எண்ணிக்கையாகும். சேவைகளே நிகர உள்நாட்டு உற்பத்தியின் பெரும் பங்கை வகிக்கின்றன. குறிப்பாக, வங்கித் துறை, காப்புறுதித் துறை மற்றும் வணிகத்துறையைச் சார்ந்த சேவைகள், ஆகியன. தொழில்த்துறையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் குறைந்து வந்தாலும், ஐ. இ இன்னும் சாலை வாகனங்கள், போராயுதங்கள், பெட்ரோலியப் பொருட்கள், கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் கைபேசிகள் ஆகியவற்றுக்கு ஐரோப்பாவின் முன்னணி உற்பத்தியாளராகத் திகழ்கிறது. சுற்றுலாத் துறையும் இன்றியமையாததே. வருடத்துக்கு 23.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் ஐ.இ, உலக சுற்றுலா மைய நாடுகளில் ஆறாவது இடத்தை வகிக்கிறது. டோனி ப்ளேர் அரசு, ஐ.ஒ அமைப்புடன் இணைவது குறித்து பதிலளிக்கும் முகமாக, சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அவை: ஐந்துப் பொருளாதாரப் பரிசோதனைகளில் வெற்றி, அதன் பிறகு மக்களிடம் வாக்கெடுப்பு, ஆகியன. இவையனைத்தையும் வெற்றிகரமாகக் கடந்த பிறகே ஐ.இ ஐ.ஒ-உடன் இணையும் வாய்ப்புள்ளது. மக்கள்தொகை பரம்பல் முதன்மையாகப் பேசப்படும் மொழி ஆங்கிலமாகும். மற்ற ஆதிகுடி மொழிகளாவன: செல்டிக், வெல்ஷ், ஸ்காட்டிஷ் கேலிக், அதற்கு நெருங்கியத் தொடர்புடைய ஐரிஷ் கேலிக், கார்னிஷ், ஆங்கிலத்துடன் நெருங்கியத் தொடர்புடைய சமவெளி ஸ்காட்ஸ், ரோமனி, பிரித்தானிய சைகை மொழி, ஐரிஷ் சைகை மொழி ஆகியவை. பல நூற்றாண்டுகளாக வடக்கு இங்கிலாந்தில் செல்டிக் வட்டார மொழியான கம்ப்ரிக்கின் பாதிப்பு இருந்து வந்திருக்கிறது. இதற்குச் சிறந்தவொரு உதாரணம், அப்பகுதிகளில் செம்மறி ஆடுகளை எண்ணுவதற்கென்றே பிரத்யேகமாகப் பயன்படுத்தப்படும் கம்ப்ரிக் எண்கள் ஆகும். அண்மை காலத்தில் குடியேறிவர்கள், குறிப்பாகக் காமன்வெல்த் நாட்டவர்கள், வேறு பல மொழிகளையும் பேசுகிறார்கள். அவை (சீன நாட்டின்) கேன்டனியம், பஞ்சாபி, குஜராத்தி, ஹிந்தி, உருது மற்றும் ஜமேய்க்கக் கிரியோல் ஆகியவை. பார்க்க: ஐக்கிய பேரரசின் மொழிகள் பண்பாடு thumb|வில்லியம் ஷேக்ஸ்பியர்(1564–1616) உலகிலேயே மிகவும் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்களில் இரண்டை ஐக்கிய பேரரசு கொண்டுள்ளது. அவை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆகியவை. இவ்விரண்டும் பல விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் உருவாக்கியவை. சில உதாரணங்கள்:சர் ஐசக் நியூட்டன், சார்ல்ஸ் டார்வின், மைக்கேல் பரடே, பால் டிரக் மற்றும் ஐசம்பார்ட் கிங்டம் ப்ரூனெல் ஆகியோர். பல கண்டுபிடிப்புகள் இந்நாட்டில் நடந்துள்ளன. அவற்றில் சில: நீராவி இயந்திரம், உந்துபொறி (locomotive), 3-பீஸ் சூட், தடுப்பு ஊசி, ஈயப் படிகம், தொலைக்காட்சி வானொலி, தொலைபேசி, நீர்மூழ்கி, ஹோவர்கிராஃப்ட், உட் தகன இயந்திரம் (internal combustion engine) மற்றும் ஜெட் இயந்திரம் ஆகியன. பலதரப்பட்ட விளையாட்டுக்களும் ஐக்கிய பேரரசிலேயே உருவாகின. உதாரணம், கால்பந்து, கோல்ஃப், கிரிக்கெட், குத்துச் சண்டை, ரக்பி கால்பந்து, பில்லியர்ட்ஸ் மற்றும் அமெரிக்காவில் அதிகமாக விளையாடப்படும் பேஸ்பாலின் முன்னோடியான ரௌண்டர்ஸ் எனும் விளையாட்டு. இங்கிலாந்து உலக கால்பந்துக் கோப்பை 1966 மற்றும் 2003 ரக்பி ஒன்றிய உலகக் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளது. விம்பிள்டன் கோப்பை எனும் சர்வதேச டென்னிஸ் போட்டி, தெற்கு இலண்டனிலுள்ள விம்பிள்டனில் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் நடைபெறும் ஒரு உலகப் புகழ் வாய்ந்த நிகழ்ச்சியாகும். நாடகாசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் உலகின் மிகச்சிறந்த எழுத்தாளராகப் பலரால் கருதப் படுபவர். மற்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் ப்ராண்ட் சகோதரிகள் (சார்லோட், எமிலி மற்றும் அன்), ஜேன் ஆஸ்டின், ஜே. கே. ரௌலிங், அகதா கிரிஸ்டி, ஜே ஆர் ஆர் டோல்கியன் மற்றும் சார்ல்ஸ் டிக்கன்ஸ் ஆகியோர். முக்கியமான கவிஞர்கள் லார்ட் பைரன், இராபர்ட் பர்ன்சு, லார்ட் டென்னிசன், தாமஸ் ஹார்டி, வில்லியம் ப்ளேக் மற்றும் டிலன் தாமஸ் ஆகியோர் ஆவர். (பார்க்க: பிரித்தானிய இலக்கியம்) ஐக்கிய பேரரசின் குறிப்பிடும்படியான இசைப் படைப்பாளர்கள் வில்லியம் பைர்ட், ஜான் டவர்னர், தாமஸ் டேலிஸ் மற்றும் ஹென்றி பர்செல் ஆகியோர் 16ஆம் நூற்றாண்டு மற்றும் 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்களாவர். அண்மை காலத்தில், சர் எட்வர்ட் எல்கர், சர் ஆர்தர் சல்லிவன், ரால்ஃப் வான் வில்லியம்ஸ், பெஞ்சமின் பிரிட்டென் ஆகியோர் 19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்களாவர். ராக் அண்ட் ரோல் இசை வகையின் வளர்ச்சிக்கு ஐக்கிய பேரரசும் அமெரிக்காவுமே பிரதான பங்களிப்பாளர்களாவர். ஐக்கிய பேரரசு பல பிரபலமான இசைக்குழுக்களை உலகுக்கு வழங்கியுள்ளது. அவை: பீட்டில்ஸ், க்வீன், ரோலிங் ஸ்டோன்ஸ், லெட் ஸெப்பிலின், பிளாக் ஸப்பாத், பிங்க் ஃப்ளாயிட், டீப் பர்பிள் மற்றும் பல. பங்க் ராக் இசையில் 1970களில் ஐ. இ முன்னணியில் இருந்தது. இவ்வகை இசையை வழங்கியவர்கள் செக்ஸ் பிஸ்டல்ஸ் மற்றும் த க்ளேஷ் குழுவினர். ஹெவி மெட்டல் வகை இசையில் புகழ்பெற்ற ஐ.இ குழுவினர் மோட்டர்ஹெட் மற்றும் அயர்ண் மெய்டன் ஆகியோர். அண்மைய வருடங்களில் பிரிட்பாப் வகை பிரபலமடைந்து ஒயாஸிஸ், ப்ளர் மற்றும் சூப்பர்கிராஸ் ஆகிய குழுக்கள் சர்வதேசப் புகழ் அடைந்தன. எலக்டிரானிகா வகை இசையிலும் ஐ. இ முன்னிடம் வகிக்கிறது. இவ்வகையில் வல்லமை பெற்ற இசைஞர்கள் அஃபெக்ஸ் ட்வின், தல்வின் சிங், நிதின் சாஹ்னி, மற்றும் லாம்ப் ஆகியோர் (பார்க்க: ஐக்கிய இராச்சியத்தின் இசை). நிலைப்பாட்டு எண்கள் (Rankings): UNDP: மனித வளர்ச்சி அட்டவணை (Human Development Index) 2004, 12ஆவது இடம், 177 நாடுகளில் அனைத்துலக வெளிப்படைத்துவ நிறுவனம் (Transparency International): ஊழல் அனுமான அட்டவணை(Corruption Perceptions Index) 2004 , 11ஆவது இடம், 146 நாடுகளில் எல்லையற்ற நிருபர்கள்(Reporters Sans Frontières): மூன்றாவது வருடத்திய உலகளாவியப் பத்திரிகை சுதந்திர அட்டவணை 2004 , 28ஆவது இடம், 167 நாடுகளில் இதனையும் காண்க பெரிய பிரித்தானியா பெரிய பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் வெளி இணைப்புகள் What’s the Difference Between Great Britain and the United Kingdom? ஐக்கிய பேரரசு நாடாளுமன்றம் எண் 10, டௌனிங் தெரு ஐ.இ அரசு சேவைகள் மற்றும் இணையத்தளங்களின் முகப்பு முடியரசு பிரித்தானிய ஒலி/ஒளிபரப்பு நிறுவனம் (பிபிசி) தேசிய புள்ளி விவரங்கள் அலுவலகம் ஐ.இ 2004 தகவல் புத்தகம் ஐக்கிய பேரரசிற்கு உட்பட்ட தேசங்களின் வரலாறு ஐக்கிய பேரரசைப் பற்றிய தனிப்பட்ட கண்ணோட்டம் ஐக்கிய பேரரசின் வரைபடங்கள் ஐ.இ பற்றிய CIA தகவல் புத்தகம் ஐ.இ நகரங்கள் பற்றிய வழிகாட்டி ஐ.இ சுற்றுலா வழிகாட்டி மேற்கோள்கள் பகுப்பு:ஐக்கிய இராச்சியம் பகுப்பு:ஐரோப்பிய நாடுகள் பகுப்பு:தீவு நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
ரவி சங்கர்
https://ta.wikipedia.org/wiki/ரவி_சங்கர்
பண்டிட் ரவி சங்கர் (Ravi Shankar, வங்காளம்: রবি শংকর; 7 ஏப்ரல் 1920 - 11 டிசம்பர் 2012),, உலகப் புகழ் பெற்ற இந்திய சிதார் இசைக்கலைஞர் ஆவார். இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார் விருதுகள் 1992 ஆம் ஆண்டு ரமன் மக்சேசே விருது. இவருக்கு 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. காளிதாஸ் சம்மன் விருது (1987-1988) 2013 ஆம் ஆண்டு பண்பாட்டு நல்லிணக்கத்துக்கான முதல் தாகூர் விருது கிராமி விருதுகள் 1967 ஆம் ஆண்டு எகுடி மெனுஹின் என்ற வயலின் இசைக் கலைஞருடன் இணைந்து உருவாக்கிய வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட் எனும் இசைக் கோவைக்கு முதல் தடவையாக "கிராமி விருதை" இவர் பெற்றார். 1972 ஆம் தி கன்செர்ட் பார் பங்களாதேஷ்என்ற ஆல்பத்திற்கு இரண்டாம் தடவை விருது கிடைத்தது. 2001 ஆம் ஆண்டு புல் சர்கிள் என்ற ஆல்பத்திற்கு மூன்றாம் தடவை விருது கிடைத்தது. 2013 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் கிராமி விருது. மாநிலங்களவை உறுப்பினர் 1986இல் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்http://rajyasabha.nic.in/rsnew/pre_member/1952_2003/r.pdf சித்தார் இசைக் கலைஞர் ரவி சங்கர் தினமணி. http://www.thehindu.com/features/friday-review/music/tagore-award-for-ravi-shankar/article4485466.ece. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் ரவி சங்கரின் வலைத்தளம் பகுப்பு:பாரத ரத்னா விருது பெற்றவர்கள் பகுப்பு:1920 பிறப்புகள் பகுப்பு:2012 இறப்புகள் பகுப்பு:காணொளிக் கோப்பு உள்ள கட்டுரைகள் பகுப்பு:ரமோன் மக்சேசே விருது பெற்றோர் பகுப்பு:சித்தார் இசைக் கலைஞர்கள் பகுப்பு:காளிதாஸ் சம்மன் விருது பெற்றவர்கள் பகுப்பு:வங்காள மக்கள் பகுப்பு:கிராமி விருது வென்றவர்கள்
நிறுத்தக்குறிகள்
https://ta.wikipedia.org/wiki/நிறுத்தக்குறிகள்
நிறுத்தக்குறிகள் (punctuation marks) பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும். பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நிறுத்தக்குறிகள் பின்வருவன: கால்புள்ளி (தமிழ் நடை) – (,) அரைப்புள்ளி (தமிழ் நடை) – (;) முக்கால்புள்ளி (தமிழ் நடை) -(:) முற்றுப்புள்ளி (தமிழ் நடை) – (.) புள்ளி (தமிழ் நடை) – (.) முப்புள்ளி (தமிழ் நடை) – (…) கேள்விக்குறி (தமிழ் நடை) -(?) உணர்ச்சிக்குறி (தமிழ் நடை) – (!) இரட்டை மேற்கோள்குறி (தமிழ் நடை) – (" ") ஒற்றை மேற்கோள்குறி (தமிழ் நடை) – (' ') தனி மேற்கோள்குறி (தமிழ் நடை) – ( ' ) மேற்படிக்குறி (தமிழ் நடை) – ( " ) பிறை அடைப்பு (தமிழ் நடை) – ( ) சதுர அடைப்பு (தமிழ் நடை) – [ ] இணைப்புக்கோடு; இணைப்புக்கோடு (தமிழ் நடை); இடைக்கோடு - ( - ) சாய்கோடு (தமிழ் நடை) – (/) அடிக்கோடு (தமிழ் நடை) – (_) உடுக்குறி (தமிழ் நடை) – (*) சான்றுகள் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004. *
பாரதியார்
https://ta.wikipedia.org/wiki/பாரதியார்
REDIRECT சுப்பிரமணிய பாரதி
மகாத்மா காந்தி
https://ta.wikipedia.org/wiki/மகாத்மா_காந்தி
வழிமாற்று மோகன்தாசு கரம்சந்த் காந்தி
தஞ்சை
https://ta.wikipedia.org/wiki/தஞ்சை
REDIRECT தஞ்சாவூர்
ஈரோடு
https://ta.wikipedia.org/wiki/ஈரோடு
ஈரோடு (Erode) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கும் மாநகராட்சி ஆகும். இது மாநில தலைநகரான சென்னையிலிருந்து தென்மேற்குத் திசையில் 400 கிலோமீட்டர் (249 மைல்) தொலைவிலும், காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையில் அமைந்துள்ளது. பெயர்க் காரணம் 'ஈரோடு' எனும் சொல்லானது, பெரும்பள்ள ஓடை, பிச்சைக்காரன் பள்ள ஓடை என்ற இந்த இரண்டு ஓடைகள் சேர்ந்ததுதான் ஈரோடை. ஈரோடைதான் காலப்போக்கில் மருவி `ஈரோடு’ என்றானதாக நவீன வரலாற்றாசிரியர்கள் சொல்கின்றனர். பைரவ புராண விளக்கவுரையில், சிவனின் மாமனாரான தட்சன், தாம் நடத்திய யாகத்திற்கு தமது மருமகனான இறைவன் சிவனை அழைக்கவில்லை; அவரது மனைவி தாட்சாயினி, தமது கணவர் விருப்பத்திற்கு எதிராக யாகத்திற்குச் சென்றாள்; யாகத்தில், தமது கணவரை, தந்தை இழிவுபடுத்தியதால் மனமுடைந்து திரும்பினாள். மேலும் அவள் சிவனிடம் திரும்பியபின் சிவன் கோபமுற்று தாட்சாயினியை எரித்தார் எனக் கூறுகிறது. அதைக் கேட்ட பிரம்மா, தன் ஐந்தாவது தலையைத் துண்டித்தார். அந்த மண்டை ஓடு சிவனை ஒட்டிக்கொண்டு, 'பிரம்மதோசம்' பிடித்தது. பிரம்மதோசத்தின் காரணமாக சிவன் இந்தியா முழுவதும் சுற்றினார். அப்போது ஈரோடு வந்த போது, இங்குள்ள கபால தீர்த்தத்தில் நீராடியதால் மண்டை ஓடு சிதைந்தது. இந்த மண்டைத் துணுக்குகள், ஈரோட்டைச் சுற்றியுள்ள வெள்ளோடு (Vellode ("வெள்ளை மண்டை")), பேரோடு (Perode ("பெரிய மண்டை")) மற்றும் சித்தோடு (Chithode ("சிறிய மண்டை")) ஆகிய இடங்களில் விழுந்ததாகக் கூறுகிறது. அவற்றின் பெயர்களும் முன்னுதாரணமாக அமைந்துள்ளன. கபால தீர்த்தமானது, ஆருத்ர கபாலீசுவரர் கோயிலின் (கோட்டை ஈசுவரன் கோவில்) இடதுபுறத்தில் உள்ளதை இன்றும் காணலாம். மேற்கண்டவாறு வரலாற்றினை பைரவ புராணமானது விளக்குகிறது. திருமாலின் அவதாரங்களில், குறிப்பிடத்தக்க அவதாரமான கூர்ம அவதாரத்திற்கான அடித்தளமாக இது திகழ்வதாக சான்றுகள் உள்ளன. வரலாறு thumb|ஈரோடு மாவட்டத்தின் வட்டங்கள் ஈரோடு நகரமானது உள்ளூர் கங்கை வம்ச அரசர்களான சேர மன்னர்கள் மற்றும் மேற்கு கங்கை வம்ச அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. தாராபுரமானது அவர்களின் தலைமையகமாகத் திகழ்ந்தது. சோழர்கள் ஆட்சிக்கு பின்னர், முஸ்லிம்கள் (மோடின் சுல்தான் (Modeen Sulthans)) மதுரை நாயக்கர்களின் கீழ் ஆட்சி புரிந்தனர். ஐதர் அலி ஆட்சிக்கு பின் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோர் மாவீரன் தீரன் சின்னமலை உதவியுடன் ஆதிக்கத்தினைச் செலுத்தினர். 1799 இல், திப்பு சுல்தான் தமது ஆட்சியினை பிரித்தானிய அரசிடம் இழந்தார், சங்ககிரி மலைக் கோட்டையில் தீரன் சின்னமலையின் மறைவிற்கு பின், கிழக்கு இந்திய கம்பெனியானது ஆட்சி புரிந்தது. ஹைதர் அலி ஆட்சியின் போது, ஈரோடு நன்கு புனரமைக்கப்பட்டு 300 வீடுகள் மற்றும் 1500 மக்கள் தொகை கொண்ட செழிப்பான நகரமாக இருந்தது. சுமார் 4000 சிப்பாய்கள் மூலம் கேர்ரிசன் களிமண் கோட்டையை, கிழக்கு நோக்கிய எல்லையாக (பட்சன் குறிப்பு - 1800 ஆம் ஆண்டு நவம்பர் 7 மற்றும் 8)வும், வடக்கில் காவிரி ஆற்றின் மீது காளிங்கராயன் கால்வாய் வெட்டப்பட்டதால் தென்னந்தோப்புகள் மற்றும் வளமான நிலங்களால் சூழப்பட்டு இருந்தது. அடுத்தடுத்த மராட்டிய, மைசூர் மற்றும் பிரித்தானிய படையெடுப்புகள் காரணமாக வார்ஸ் கோட்டை பாதுகாப்பு அரண் உட்பட, கிட்டத்தட்ட சிதைந்த ஈரோடு நகரமாக மாறியது. எனினும் பிரித்தானிய சமாதானத்தால் மக்கள் திரும்பி இங்கு குடியேறினர். ஓர் ஆண்டுக்குள் அது வளர்ச்சி காட்ட ஆரம்பித்தது. கேர்ரிசன் 1807இல் விலகிக்கொண்டது, நகரின் மையத்தில் பாழாக்கி கோட்டையை 1877 ஆம் ஆண்டு பஞ்சத்தின் போது நிவாரண வேலை மூலம் சரி செய்தது. பாதுகாப்பு அரண் உள்ள இடத்தில் தற்போது வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் கோட்டை இருந்த இடத்தில் சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இரு இந்து மதக் கோயி்ல்கள் தற்போது இருக்கின்றன. பண்டைய கொங்கு கால வரலாற்றின் படி சங்க கால கொங்கு பகுதியின் ஒரு பாகமாகவே ஈரோடு திகழ்ந்தது. இராச ராச சோழனின் ஆட்சியின் கீழ் இப்பகுதியினை ராஷ்ட்ராகுட்டாக்கள் கோசம்புதுரினை தலைமை இடமாக கொண்ட கோசாரஷ் என்ற துருப்புகள் எடுத்துக் கொண்டனர். அவர்கள் கோவையில் பயிற்சி பெற ஏதுவாக தங்கும் பகுதியாக பயன்படுத்தினர். இதை சாளுக்கியர்கள் தங்கள் பகுதியாக்கி கொண்டனர். பின்னர் மதுரை பாண்டிய மன்னர்களும் ஒய்சாளர்களும் தமதாக்கிக் கொண்டனர். கொங்கு மண்டல சதக பாடல் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த வாலசுந்தர கவிராயர் என்பவர், சீரிய செங்கமலமாய மேவுந்திரு வெழின்மிக் காரிருள் வோருடன் கூடிக் கலந்தங் கவர் பொருட்டாற் போரியல் வேல்விழி யிற்தாரணி நாயகன் பொன்னொடுபூ மாரிபொழிந்தது மீரோடை சூழ்கொங்கு மண்டலமே என பாடியுள்ளார். இதன் மூலம் 12ம் நூற்றாண்டிலேயே ஈரோடு, ஈரோடை என்ற பெயரில் கொங்குமண்டலத்தில் சிறப்புக்குரிய ஊராக விளங்கியதை அறியலாம். (சான்று:தினத்தந்தி 29.01.2020 ஈரோடு பதிப்பு - நம்ம ஊரு நல்ல ஊரு பகுதி - ஆய்வாளர் புலவர் ராசு மற்றும் ஆடிட்டர் மாரிமுத்து எழுதிய 'மாவீரன் சந்திரமதி முதலியார் வரலாறு' புத்தகம்) புவியியல் இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 183 மீட்டர் (600 அடி) உயரத்தில் இருக்கின்றது. ஈரோட்டின் உள்ளூர் திட்டக் குழுமம் 700 ச.கி.மீ-ஆகத் திகழ்கிறது. பொதுவாக ஈரோடு குறைந்த மழை மற்றும் ஒரு வறண்ட காலநிலையினை கொண்டு உள்ளது. அதிகபட்ச மழையானது கோபிச்செட்டிபாளையத்தில் பதிவு செய்யப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பாலக்காட்டு இடைவெளியானது கோயம்புத்தூர் மாவட்டம் காலநிலையினை வறண்ட தன்மையாக மாற்றுகிறது. பாலக்காட்டு கணவாய் வழியாக மேற்கு கடற்கரையிலிருந்து வரும் பருவகாற்று, அதன் ஈரப்பதத்தை இழப்பதால் கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளும், ஈரோடு பகுதியும் உலர் அடைகின்றன. மக்கள் வகைப்பாடு 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகை 157,101 ஆகும். அதில் 78,222 ஆண்களும், 78,879 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.93 % மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.ஈரோடு மாநகராட்சியின் மக்கள்தொகை பரம்பல் 2011இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 157,101 ஆகவும், கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 521,891 ஆகவும் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, ஈரோடில் இந்துக்கள் 83.15%, முஸ்லிம்கள் 12.37%, கிறிஸ்தவர்கள் 3.94%, சீக்கியர்கள் 0.06%, பௌத்தர்கள் 0.02%, சைனர்கள் 0.36% மற்றும் 0.12% பிற மதங்களைப் பின்பற்றுபவர்களும் உள்ளனர். மாநகராட்சி, நிர்வாகம் மற்றும் அரசியல் மாநகராட்சி அதிகாரிகள் மாநகர முதல்வர்ஆணையர்தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்சட்டமன்ற உறுப்பினர்எஸ். முத்துசாமி (ஈரோடு மேற்கு)சட்டமன்ற உறுப்பினர்திருமகன் ஈ. வெ. ரா (ஈரோடு கிழக்கு)மக்களவை உறுப்பினர்அ. கணேசமூர்த்தி ஈரோடு நகரம் 2008 ல் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டு, 2011ல் 109.52சதுர கி.மீட்டருக்கு விரிவுபடுத்தப்பட்டது. ஈரோடு மாநகராட்சியின் எல்லைகள் வடக்கில் பவானி ஆறு வரையும், மேற்கில் சித்தோடு மற்றும் செம்மம்பாளையம் வரையும், தென்மேற்கில் திண்டல்மேடு வரையும், தெற்கில் முத்தம்பாளையம் மற்றும் ஆணைக்கல்பாளையம் வரையும், தென் கிழக்கில் சோலார் வரையும் அமையப்பெற்றுள்ளது. ஈரோடு நகரக் காவல், தமிழ்நாடு காவல்துறையின் மாவட்டக் காவல் அமைப்பான ஈரோடு மாவட்டக் காவல் பிரிவில் உள்ளடங்கியது. ஈரோடு மாநகரில், 8 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும், ஒரு குற்றப் பிரிவு காவல் நிலையமும் இரண்டு போக்குவரத்துக் காவல் நிலையங்களும் உள்ளன. ஈரோடு மாநகரமானது, ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிகள் என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். 2019 ஆம் ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், இம்மக்களவைத் தொகுதியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அ. கணேசமூர்த்தி வென்றார். 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், எஸ். முத்துசாமி என்பவர் திமுக சார்பில் ஈரோடு மேற்கு தொகுதியிலிருந்தும் மற்றும் திருமகன் ஈ. வெ. ரா என்பவர் காங்கிரசு சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 250px|thumb|right|வணிகவரித்துறை அலுவலகம் அருகே மீனாட்சி சுந்தரனார் சாலை முக்கிய தொழில்கள் இங்கு மஞ்சள் அதிகளவில் பயிரிடப்பட்டு, வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய அளவில் நிஜாமுதீனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மஞ்சள் மார்க்கெட் ஈரோட்டில் தான் உள்ளது. இதனால் ஈரோடு மஞ்சள் மாநகரம் என்று அழைக்கப்படுகிறது. கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கும் புகழ் பெற்றது இந்நகரம். எனவே இது ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. உற்பத்தி ரகங்களான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தரைப்பாய்கள், லுங்கிகள், அச்சிடப்பட்ட துணிகள், துண்டுகள், கால்சட்டைகள் போன்ற பொருட்களை மொத்தமாக நகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பல ஜவுளி சந்தைகளில் சந்தைப்படுத்தப்படுகின்றன. இப்பகுதி பருத்தி விளைச்சலுக்கு சாதகமாக உள்ளது. பஞ்சாலைகளும் மோட்டார் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளும் இங்குள்ள முக்கிய தொழில்களுள் ஒன்றாகும். மேலும் நகரிலும் புறநகர்ப்பகுதிகளிலும் ஜவுளி உற்பத்தி தொழிலைச் சார்ந்த சாயத் தொழிற்சாலைகளும் அதிகளவில் இயங்கி வருகின்றன. உணவுப் பொருட்களின் மதிப்புக் கூட்டு பொருட்கள் உற்பத்தியும் அதிகளவில் நடைபெறுகிறது. தோல் பதனிடும் தொழிலும் இங்கே குறிப்பிட்ட அளவில் நடைபெறுகிறது. விவசாயம் சார்ந்த புற நகர்ப்பகுதிகளை உள்ளடக்கி உள்ளதால், நவீன அரிசி ஆலைகளும், தீவனத் தொழிற்சாலைகளும், எண்ணை ஆலைகளும் அதிகளவில் இயங்கி வருகின்றன. உலகமுழுவதும் ஏற்றுமதி ஜவுளிப் பொருட்களான துண்டுகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள், மற்றும் மஞ்சள் ஆகியன உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முக்கிய சுற்றுலாத்தலங்கள் தந்தை பெரியார் நினைவிடம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் திண்டல் முருகன் கோயில் கொடுமுடி மகுடேசுவரர் கோயில் (ஈரோட்டிலிருந்து 38 கீ.மீ தொலைவு) பவானி சங்கமேசுவரர் கோயில் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் (ஈரோட்டிலிருந்து 25 கீ.மீ தொலைவு) கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி திருக்கோயில் (ஈரோட்டிலிருந்து 30 கீ.மீ தொலைவு) பண்ணாரி அம்மன் கோவில் (பண்ணாரி, சத்தியமங்கலம்) பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில் (கோபிசெட்டிபாளையம்) கொடிவேரி நீர் வீழ்ச்சி, சத்தியமங்கலம் செல்லும் வழி (ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 51kms) பவானி சாகர் அணை (ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 89kms) சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அந்தியூர் குருநாத சுவாமி கோவில் தேவாரத் திருத்தலங்கள் பவானி சங்கமேசுவரர் கோயில், கொடுமுடி மகுடேசுவரர் கோயில் என தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளன. பிற கோவில்கள் கோட்டை ஈசுவரன் கோவில். ஈரோடு நகரின் நடுநாயகமாக விளங்கும் இக்கோவிலைக் கட்டியவர்கள் 'சிறு நல்லாள்', 'பெரு நல்லாள்' என்ற கன்னியர் ஆவர். இவர்கள் கணிகையர் ஆக இருந்து சிவத்தொண்டு புரிந்து சிறு கோவிலாக 12ம் நூற்றாண்டில் கட்டி வழிபட்டனர். ஆரம்பத்தில் இக்கோவில் சிவன் தொண்டீஸ்வரர் என அழைக்கப்பட்டு வழிபடப்பட்டார். தொண்டீஸ்வரர் என்ற பெயர் புராண இதிகாசங்களிலும் மற்றெங்கிலும் காணப்படாதால் இது காரணப் பெயர் எனக் கருதப்படுகிறது. பின்னாளில் இவ்இறைவன் ஆருத்ரா கபாலீஸ்வரர் என வணங்கப் பெறுகிறார் தினத்தந்தி ஈரோடு பதிப்பு 05.02.2020 'நம்ம ஊரு நல்ல ஊரு' பகுதி- தகவல்: ஆடிட்டர் எம். மாரிமுத்து எழுதிய 'மாவீரன் சந்திர முதலியார் வரலாறு நாகேஸ்வரர் திருக்கோவில் தலையநல்லூர் சிவகிரி பொன்காளியம்மன் கோவில் தலையநல்லூர் சிவகிரி வேலாயுதசுவாமி கோவில் சிவகிரி ஆருத்ர கபாலீஸ்வரா் கோவில் மகிமாலீஸ்வரா் திருக்கோவில் பொிய மாாியம்மன் வகையறா கோவில்கள் கொங்காலம்மன் கோவில் அரங்கநாதா் திருக்கோவில் கொண்டத்து காளியம்மன் திருக்கோவில் ஷீரடி சாய்பாபா திருக்கோவில், வள்ளிபுரத்தான் பாளையம் சாய்பாபா திருக்கோவில், இரயில்வே காலனி சித்தி விநாயகா் திருக்கோவில், இரயில்வே காலனி கோட்டை முனீஸ்வரன் திருக்கோவில் மாாியம்மன் திருக்கோவில், வீரப்பன்சத்திரம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், கருங்கல்பாளையம் கோதண்டராமா் கோவில், கருங்கல்பாளையம் காமாட்சி அம்மன் திருக்கோவில், கருங்கல்பாளையம் ஐயப்பன் கோவில், கருங்கல்பாளையம் சாய்பாபா திருக்கோவில், கருங்கல்பாளையம் வலம்புாி விநாயகா் திருக்கோவில், மாநகராட்சி கட்டிட வளாகம் கோட்டை அங்காளம்மன் திருக்கோவில் thumb|ஈரோடு மாநகரின் விரிவான சாலை அமைப்பு போக்குவரத்து 250px|thumb|right|நெரிச்சல் மிக்க ஓர் சந்திப்பு ஈரோடு போக்குவரத்து ஈரோடு மாநகரின் தொழில் முயற்சிகளுக்குப் பெரிதும் துணையாக இருப்பது போக்குவரத்து; ஈரோட்டிலிருந்து சென்னை, பெங்களூரு,மைசூர் ,கொச்சி உள்ளிட்ட தென்னிந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும், தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சாலை போக்குவரத்து உள்ளது. நேர்விரைவுப் பேருந்து சென்று வருகிறது. ஈரோடு மத்திய பேருந்து நிலையம் நகரின் முக்கியப் போக்குவரத்து மையமாக விளங்குகிறது. புதிதாக கீழ்வரும் இரண்டு புறநகர் பேருந்து நிலையங்கள் நிறுவும் பணிகள் நடைமுறையில் உள்ளது. சோலார் பேருந்து நிலையம், ஈரோடு பெரியசேமூர் பேருந்து நிலையம், ஈரோடு 250px|thumb|right|ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம் ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம், ஈரோடு மாநகரின் பிரதான தொடருந்து நிலையமாக விளங்குகிறது. தென் மாவட்டங்களையும், மேற்கு மாவட்டங்களையும், இந்தியாவின் வடக்குப் பகுதிகளோடு இணைக்கும் முக்கிய தொடருந்து சந்திப்பாக உள்ளது. இங்கிருந்து எந்த நேரமும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் தொடருந்து வசதி உள்ளது. ஈரோடு மாநகரம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலை சந்திப்பாக விளங்குகிறது. பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளும், மாநில நெடுஞ்சாலைகளும் சந்திக்குமிடமாக ஈரோடு உள்ளது. சேலம், கோவை, கொச்சி, சத்தியமங்கலம், மேட்டூர், கொல்லேகல், கரூர், திருச்சி, ஒட்டன்சத்திரம், தாராபுரம், பழனி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகள் இங்கு இணைகின்றன. ஈரோடு மாநகரின் வாகன நெரிசலை குறைப்பதற்காக (Outer Ring Road) வெளிவட்டச்சாலையானது முதல் கட்டத்தில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொக்கராயன்பேட்டையிலிருந்து திண்டல் அடுத்த நஞ்சனாபுரம் வரை 14.8 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது.http://www.projectstoday.com/Potpourri/IndianNews/Land%20acquisition%20begins%20for%20Erode%20ring%20road%20project.asphttp://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Erode&artid=129173&SectionID=102&MainSectionID=102&SEO=&Title= இரண்டாவது கட்டத்தில் பவளத்தான்பாளையத்திலிருந்து நசியனூர் அல்லது சித்தோட்டை இணைத்து அதன் வழியாக பவானி சாலையை இணைக்க திட்டமிட்டுள்ளார்கள். இதன் உத்தேச நீளம் 5 கி.மீ ஆகும். இதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீடு மிகவும் அதிகம் என்பதால், இதற்கான அடிப்படை பணிகளுக்கான அரசு ஒப்புதல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. எனவே தற்காலிகத் தீர்வாக, தற்போது பயன்பாட்டிலிருக்கும் திண்டல்-வில்லரசம்பட்டி-பெரியசேமுர் இணைப்பு சாலையை பல்வழித்தடத்திலான உள்வட்டச்சாலையாக (Inner Ring Road) விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. வானிலை மற்றும் காலநிலை பொதுவாக இங்கே பருவ மழை சீசன் போது தவிர மற்ற நாட்கள் முழுவதும் மிதமான-வறண்ட வானிலை உள்ளது. ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் வசந்த காலங்களாக உள்ளன, ஆனால் மார்ச் மாதம், தொடங்கி மே இறுதி வரை கத்திரி வெயில் தொடர்வதால் அதிகபட்ச வெப்பநிலையினை எட்டுகிறது. பொதுவாக மே மாதத்தில் அதிகபட்ச வெப்பமானது பதிவு செய்யப்படுகிறது. இந்த காலத்தில் குறைந்த மழை பொழிவானது வெப்பநிலை குறைக்க முடியாமல் இருக்கிறது. சூன்-ஆகத்து காலத்தில் காலநிலை வசந்த காலநிலையாக மாறுகிறது. இந்த முன் பருவ காலத்தில், வெப்பநிலையில் அதன் போக்கு தலைகீழாகிறது. செப்டம்பர் மாதத்தில் இருண்ட வானிலை நிலவிய போதிலும் மழையளவு மிகக்குறைந்த அளவே உள்ளன. வட கிழக்கு பருவமழை மூலம் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் மழை பெய்கிறது. டிசம்பர் மாதத்தில் தீவிரமடைந்து தெளிவான வானிலையை பெற்றுவிடுகிறது. இவ்வூரில் பிறந்த புகழ்பெற்ற மனிதர்கள் தந்தை பெரியார் சீனிவாச ராமானுஜம் எஸ். மீனாட்சிசுந்தர முதலியார் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் அதிகாரபூர்வ வலைத்தளம் பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள் பகுப்பு:ஈரோடு மாவட்டம்
இழையம்
https://ta.wikipedia.org/wiki/இழையம்
right|thumb|300px|ஹீமோடொக்சிலினும் இயோசினும் கொண்டு சாயமூட்டப்பட்ட மனித நுரையீரல் திசுக்களை நுண்நோக்கியினூடாகப் பார்க்கையில் தெரியும் தோற்றம் இழையம் (Tissue (biology)) (அல்லது திசு ) என்பது, ஒரு உயிர்ச் செயலைப் புரியும் ஒத்த பண்புகளுடைய உயிரணுக்களின் கூட்டமைப்பு ஆகும். திசுக்களைப் பற்றி ஆராயும் துறை இழையவியல் அல்லது திசுவியல் (Histology) ஆகும். நோய்களைக் கண்டறிவது தொடர்பாக இழையவியலை ஆராயும் போது அது இழையநோயியல் (Histopathology) என அழைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட இழையம் ஒரே மாதிரியான உயிரணுக்களைக் கொண்டிருப்பது அவசியமில்லை எனினும், ஒரே பிறப்பிடத்திலிருந்து பெறப்பட்ட உயிரணுக் கூட்டங்களைக் கொண்டிருக்கும். ஒரே தொழிலைச் செய்யக் கூடிய பல இழையக் கூட்டங்களைச் சேர்த்தே உறுப்பு அல்லது அங்கம் உருவாகின்றது. இழையங்களை பரஃபீன் (Paraffin) எனப்படும் மெழுகுக்கட்டிகளில் பதித்து, பின்னர் மெல்லிய படலமாக வெட்டியெடுத்து (Sectioning), இலகுவாகப் பார்ப்பதற்கு ஏற்றவகையில் அவற்றை இழையச்சாயங்கள் கொண்டு சாயமேற்றி (Staining), பின்னர் நுண்நோக்கிகள் மூலம் பார்த்து ஆராயும் முறை காலங்காலமாகப் பயன்பட்டு வருகின்றன. அண்மைய தொழில்நுட்ப முன்னேற்றங்களான இலத்திரன் நுண்நோக்கி (Electron Microscope), நோய்த்தடுப்பாற்றல் உடனொளிர்வு (Immunoflorescence), உறைநிலையில் திசுக்களைப் படலமாக வெட்டியெடுத்தல் (frozen tissue sectioning) போன்றன திசுவியல் ஆராய்ச்சிகளை வேகப்படுத்தவும் எளிமைப்படுத்தவும் உதவியுள்ளன. இக்கருவிகளையும் நுட்பங்களையும் கொண்டு, இழையங்களைத் தாக்க வல்ல நோய்களைக் கண்டறியவும், முன் கூட்டியே கணிக்கவும் இயலும். விலங்கு இழைய வகைகள் விலங்குகளில் நான்கு அடிப்படைத் இழைய வகைகள் உள்ளன. இவற்றில் வெவ்வேறு இழைய வகைகள் இணைந்து உறுப்புகளையும், பின்னர் உறுப்புக்கள் இணைந்து உடலையும் உருவாக்கும். புறவணியிழையம் thumb|350px|புறவணியிழையத்தின் வகைகள். உட்புற மற்றும் வெளிப்புற உடற்பாகங்களை மூடும் புறச்சவ்வு புறவணியிழையத்தால் (Epithelial tissue) ஆனது. இவ்வகை இழையமானது புறச் சூழலுடன் தொடர்புடைய அனைத்து உள், வெளி உறுப்புக்களையும் மூடி இருக்கும். உடல் உறுப்புக்கள் உடலின் மேற்பரப்பை மூடியுள்ள தோல், சமிபாட்டுத் தொகுதி, சுவாசத் தொகுதி, இனப்பெருக்கத் தொகுதி போன்றவற்றை மூடியுள்ள மேற்பரப்பு போன்றவை இவ்வகை இழையங்களால் ஆனது. இந்த இழையங்கள் உடல் உறுப்புக்களுக்கு பாதுகாப்பளித்தல், உடலிற்குத் தேவையான சில சுரப்புக்களைச் சுரத்தல், சமிபாடடைந்த உணவை அகத்துறிஞ்சல் போன்ற செயல்களைச் செய்யும். அத்துடன் இந்த இழையங்கள் ஏனைய இழையங்களிலிருந்து ஒரு அடிமென்சவ்வினால் (basal membrane) பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த இழையமானது உடலை நுண்ணுயிர்களின் தாக்கம், காயம் ஏற்படுதல், உடலிலிருந்து திரவ இழப்பு நேர்தல் போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கும். இணைப்பிழையம் இணைப்பிழையம் (Connective tissue) அல்லது தொடுப்பிழையம் என்பது உடற்பாகங்களை அல்லது வேறுபட்ட இழையங்களை இணைப்பவையாக, அவற்றிற்கு ஆதரவளிப்பவையாக அல்லது அவற்றைப் பிரித்து வைப்பவையாக இருக்கும் இழையமாகும். குருதி, எலும்பு, கொழுப்பிழையம் போன்றன இவ்வகை இழையங்களாகும். எலும்பானது உடல் உறுப்புகளுக்கு அமைப்பைக் கொடுப்பதுடன் உறுப்புக்களை இணைத்து வைத்திருக்கவும் உதவும். குருதி உடல் உயிரணுக்களுக்குத் தேவையான ஆக்சிசன், உணவு, சுரப்புக்கள் போன்றவற்றை எடுத்துச் செல்லவும், கழிவுகளை அகற்றவும் உதவும். தசை இழையம் thumb|350px|தசைகளின் வகைகள் (வெவ்வேறு உருப்பெருக்க அளவுகளில் காட்டப்பட்டுள்ளது) தசை இழையம் அல்லது தசையிழையம் எனப்படும் இழையங்கள் சுருங்கி விரியும் இயல்புள்ள இழையங்களாகும். இவை உடலசைவு, உள்ளுறுப்புக்களின் அசைவுக்கு உதவும். இவை மூன்று வகைப்படும். மழமழப்பானதசை அல்லது அழுத்தமான தசை (Smooth muscle): இவை உறுப்புக்களின் உள் படையாகக் காணப்படும். எலும்புத் தசை (Skeletal muscle): இவை எலும்புகளுடன் தொடர்புடையவையாக இருந்து அசைவுக்கு உதவும். இதயத் தசை (Cardiac muscle): இது இதயத்தில் காணப்படும். இதயம் சுருங்கி விரிய உதவுவதால் குருதியை உடலின் பல பகுதிகளுக்கும் அனுப்புவதில் பங்கெடுக்கும். நரம்பிழையம் நரம்புத் தொகுதி யை உருவாக்கும் இழையம் நரம்பிழையம் எனப்படும். இவ்வகைக் இழையங்கள் மூளை, தண்டு வடம் போன்ற மைய நரம்பு மண்டலம்தையும், புற நரம்பு மண்டலத்தையும் உருவாக்கும் இழையங்கள் ஆகும். நரம்பிணைப்பு மூலமான நரம்புத் தொடர்புகளில் இவ்வகை இழையங்கள் தொழிற்படும். thumbnail|centre|நரம்பிழையத்தைக் காட்டும் ஒரு மாதிரி. தாவர இழைய வகைகள் thumb|right|250px|பல்வேறு வகையான திசுக்களை அடுக்குகளாகக் கொண்ட தாவரத் தண்டொன்றின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம்: 1. தண்டின் நடுவில் உள்ள தக்கை எனப்படும் மென்மையான பகுதி (Pith), 2. மூலக்காழ் (Protoxylem), 3. காழ் (Xylem) I, 4. உரியம் (Phloem) I, 5. வல்லருகுக்கலவிழையம் (Schlerenchyma), 6. மேற்பட்டை (Cortex), 7. மேற்றோல் (Epidermis) தாவர இழையங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். புறத்தோல் அல்லது மேற்றோல் (Epidermis): இலைகளினதும், இளம் தாவரத்தினதும் வெளி மேற்பரப்பை ஆக்கும் கலங்களால் ஆன இழையமாகும். கலனிழையம் (Vascular tissue): முக்கியமாக இரு இழைய வகைகளைக் கொண்டிருக்கும். அவை காழ், உரியம் என்பனவாகும். இவை ஊட்டச்சத்து, திரவங்களைத் தாவரத்தின் உள்ளாகக் கடத்தும் இழையங்களாகும். அடியிழையம் (Ground tissue): இவ்வகை இழையமே மிகவும் குறைவாக வேறுபாட்டுக்கு உட்பட்டதாக இருக்கும். இவ்விழையம் ஒளிச்சேர்க்கையில் உணவைத் தயாரிக்கும் இடமாகவும், அவற்றைச் சேமித்து வைக்கும் இடமாகவும் இருக்கும். தாவர இழையங்கள் வேறொரு வகையிலும் பிரிக்கப்படும். பிரியிழையம் (Meristematic tissue) இவை தொடர்ந்து உயிரணுப்பிரிவு (Cell division), உயிரணு வேற்றுமைப்பாடு (cell differentiation) நடைபெறும் இயக்கத்திலுள்ள கலங்களைக் கொண்டிருக்கும். பொதுவாகத் தண்டு நுனி, வேர் நுனி, மற்றும் காழ், உரியக் கலங்களை உருவாக்கவல்ல தண்டின் உள்பகுதியில் காணப்படும் மாறிழையம் (Cambium) போன்றவை இவ்வகைப் பிரியிழையமாகும். இவை பிரிவுக்குட்பட்டு புதிய கலங்களை உருவாக்கும்போது அவை ஆரம்பத்தில் பிரியிழையக் கலங்களாக இருக்கும். பின்னர் அவை வேறுபாட்டுக்குட்பட்டு, வெவ்வேறு இழையங்களை உருவாக்கும். இவ்வகை இழையத்திலுள்ள கலங்கள் செலுலோசினால் ஆன மெல்லிய கலச்சுவரைக் கொண்டிருக்கும். வெவ்வேறு இடங்களில் உள்ள வெவ்வேறு பிரியிழையங்கள், அமைப்பில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டு முட்டை வடிவம், பல்கோண வடிவம், நாற்கோண வடிவமென வேறுபடும். ஆனால், ஒரு குறிப்பிட்ட இடத்திலுள்ள ஒரு இழையத்தின் கலங்கள் ஒரே அமைப்பைக் கொண்டிருக்கும். கலங்கள் அடர்த்தியான குழியவுருவையும், பெரிய கருவையும் மிகச் சிறிய அளவில் புன்வெற்றிடங்களையும் கொண்டிருக்கும். அத்துடன் கலங்கள் மிக நெருக்கமாக ஒன்றுடன் ஒன்று ஒட்டியபடி காணப்படுவதுடன், கலங்களுக்கிடையே இடைவெளியும் இருப்பதில்லை. இவ்வகை இழையம் மூன்று பிடிவுகளில் வருகின்றது. நுனிப்பிரியிழையம்: தண்டு, வேர் என்பவற்றின் வளரும் நுனிப்பகுதியில் காணப்படும். இதன் தொடர்ச்சியான பிரிவினால், தண்டு, வேர்ப்பகுதிகள் நீட்சியுற்று தாவர வளர்ச்சியில் உதவும். இது முதன்மையான வளர்ச்சி என்றும் நேர்வளர்ச்சி என்றும் அழைக்கப்படும். பக்கப்பிரியிழையம்: இவ்வகை இழையத்திலுள்ள கலங்கள் ஒரு தளத்திலேயே பிரிவைக் கொண்டிருப்பதனால், இதனால் உண்டாகும் வளர்ச்சி பக்க வளர்ச்சியாக இருக்கும். இதனால் தண்டு, வேர் போன்ற அங்கங்களின் விட்டம் அதிகரிக்கும். மரங்களின் வெளிப்பட்டைக்கு கீழாக இருக்கும் தக்கை மாறிழையம் (cork cambium), இருவித்திலைத் தாவரங்களின் கலனிழையத்தில் இருக்கும் கலனிழைய மாறிழையம் என்பன இவ்வகை இழையங்களாகும். இடைப்பிரியிழையம்: இவை நிரந்தர இழையங்களுக்கு இடையில் காணப்படும். கணுக்களின் அடிப்பகுதி, கணுக்களுக்கு இடையிலான பகுதிகள், இலையின் அடிப்பகுதி போன்ற இடங்களில் இவ்வகை இழையம் காணப்படும். தண்டுகளின் பக்க வளர்ச்சியிலும், தாவரங்களின் சில பகுதிகளில் நீட்சிக்கும் உதவும். நிலை இழையம்(Permanant tissue) பிரியிழையத்திலிருந்து உருவாகும் கலக்கூட்டம் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்ய ஆரம்பிக்கும்போது, அவை தமது தொடர்ந்து பிரியும் தன்மையை இழந்து நிலை இழையமாகின்றது. கலங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு, உருவம், தொழில் என்பவற்றை அடையும் செயல்முறையே கலவேறுபாடு (cell differentiation) எனப்படுகின்றது. இந்த நிலை இழையம் மேலும் பல வகையாகப் பிரிக்கப்படும். எளிமையான நிலை இழையம் புடைக்கலவிழையம் (Parenchyma) பச்சையவிழையம் (Chlorenchyma) காற்றுக்கலவிழையம் (Arenchyma) ஒட்டுக்கலவிழையம் (Cloeenchyma) வல்லருகுக்கலவிழையம் (Sclerenchyma) மேற்றோல் அல்லது புறத்தோல் (Epidermis) புடைக்கலவிழையம் இது செலுலோசினால் ஆன மிக மெல்லிய கலச்சுவர் கொண்ட கலங்களாலானது. கலங்களுக்கிடையே கல இடைவெளியையும் கொண்டிருக்கும். இவ்விழையத்திலிருக்கும் கலங்கள் கிட்டத்தட்ட ஒரே அளவானதாகவும், வடிவத்தில் கோள வடிவ அல்லது முட்டை வடிவ அமைப்பையும் கொண்டிருக்கும். இது தாவரங்களின் பல பகுதிகளிலும் காணப்படும். வேர், தண்டு, இலை, பூ, பழம் ஆகிய எல்லா அங்கங்களிலும் காணப்படும். பொதுவாக மேற்றோல் அல்லது தக்கைப் பகுதியிலும், இலைகளில் இலைநடுவிழையத்திலும் காணப்படும். இவ்விழையத்தின் முக்கிய தொழில், மாப்பொருள், கொழுப்பு, புரதம் போன்ற உணவுப் பொருட்களைச் சிதைமாற்றம் எனப்படும் வளர்சிதைமாற்றத்துக்கு உட்படுத்தி சேமித்தல் ஆகும். அத்துடன் கழிவுப் பொருட்களான பசை, பிசின், சில கனிமப் பொருட்களையும் சேமிக்கின்றது. பச்சையவிழையம் இவ்விழையத்தின் கலங்கள் பச்சைய நிறமியையுடைய பச்சையவுருமணிகளைக் கொண்ட கலங்களால் ஆனது. இவை பொதுவாகப் பச்சை இலைகளின் மென்மையான இழையத்திலும், செடிகளில் ஒளித்தொகுப்புச் செய்யக்கூடிய தண்டின் மேற்பட்டைப் பகுதியிலும் காணப்படும். காற்றுக்கலவிழையம் இவை ஒருவகை புடைக்கலவிழையமே ஆகும். நீர்த் தாவரங்களில், இவ்விழையத்திலுள்ள கல இடைவெளிகள் பெரிதாக அமைந்து காற்றுக் குழிகளை உருவாக்குவதால், அந்தத் தாவரங்கள் மிதக்கும் தன்மையுடையவையாக இருக்க முடிகின்றது. ஒட்டுக்கலவிழையம் thumb|ஓட்டுக் கலவிழையக் கலங்களில் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம் இவையும் செலுலோசாலான மெல்லிய கலச்சுவரைக் கொண்டிருப்பினும், பல கலங்கள் ஒன்றையொன்று சந்திக்கும் புள்ளிகளான கலத்தின் மூலைப் பகுதிகளில் செலுலோசு, பெக்டின் போன்ற பொருட்களால் கலச்சுவர் தடிப்படைந்து காணப்படும். இங்கே கலங்கள் கல இடைவெளிகளின்றி மிகவும் நெருக்கமாக அடுக்கப்பட்டு இருக்கும். இவை பொதுவாகத் தண்டுகள், இலைகளில், தோலுக்குக் கீழான இழையமாகக் காணப்படும். இவை ஒரு வித்திலைத் தாவரத்திலோ, வேர்களிலோ காணப்படுவதில்லை. இளம் தாவரத் தண்டுகளில் ஒரு ஆதாரம் வழங்கும் இழையமாகத் தொழிற்படும். இவை தாவர உடல்களில் இழுவிசை, மீள்திறன் போன்ற இயல்புகள் உருவாகக் காரணமாகும். இலைகளின் கரைப்பகுதிகளில் அமைந்திருந்து, காற்றில் அவை கிழிந்து போகாமல் பாதுகாக்கும். அத்துடன் எளிய காபோவைதரேட்டு பதார்த்தங்களை உருவாக்குவதிலும், மாப்பொருளைச் சேமிப்பதிலும் இவ்விழையம் பங்கு கொள்ளும். வல்லருகுக்கலவிழையம் thumb|300px|தாவரத்தின் அடிப்படை இழையத்தில் உள்ள நார் வல்லருகுக்கலவிழையத்தின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றம். இவ்விழையம் தடித்த கலச்சுவரைக் கொண்ட இறந்த கலங்களாலானது. இக்கலங்கள் லிக்னின் என்னும் பதார்த்தத்தால் ஆன தடித்த, இறுக்கமான துணைக் கலச்சுவரைக் கொண்டுள்ளன. இந்த லிக்னின் படிவானது மிகவும் தடிப்பாக இருப்பதனால், இக்கலங்கள் வளையாத, உறுதியான, நீரை உட்புகவிடாத இயல்புகளைக் கொண்டிருக்கும். கல இடைவெளியற்று, மிக நெருக்கமாக அடுக்கப்பட்ட கலங்கள் பல்கோண வடிவத்தைக் கொண்டிருக்கும். இவ்விழையம் முக்கியமாகக் கீழ்த்தோல், பரிவட்டவுறை, துணைக் காழ், துணை உரியம் போன்ற இடங்களில் காணப்படும். இவ்விழையத்தின் முக்கியமான தொழில் தாவரத்துக்கு உறுதியைக் கொடுப்பதனால், அவற்றிற்கான ஆதாரத்தை வழங்குவதாகும். இவ்விழையத்தின் கலங்களை இரு வகைப்படுத்தலாம். நார் (fibres): இவை நீளமாகவும், கூர்மையான கல முடிவுகளையுடைய நீட்சியடைந்த கலங்களைக் கொண்டுமிருக்கும். வன்கலங்கள் (sclerids): இவை லிக்னின் ஏற்றப்பட்ட மிகத் தடித்த கலச்சுவர் கொண்ட, குறுகிய கலங்களாகும். மேற்றோல் தாவரத்தின் எல்லாப் பகுதிகளையும் மூடியிருக்கும் தனிப் படலத்தால் ஆன கலங்களைக் கொண்டதே இந்த மேற்றோல் ஆகும். இவை பொதுவாகத் தட்டையான கலங்களால் ஆனது. கலங்களின் மேற்சுவரும், பக்கச் சுவர்களும், உட்சுவரை விடத் தடிப்பமானதாக இருக்கும். இங்கே கலங்கள் கல இடைவெளியற்று, ஒரு தொடர்ந்த விரிப்பாக அடுக்கப்பட்டும் தாவரத்தை மூடி இருந்து பாதுகாப்பளிக்கும். center|600px|இலையின் உடற்கூற்றியலைக் காட்டும் வரிப்படம். சிக்கலான நிரந்தர இழையம் ஒரே கல உற்பத்தியைக் கொண்ட, ஒன்றுக்கு மேற்பட்ட இழையக் கூட்டங்கள் ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்வதற்காக ஒன்றாக இணைந்து தொழிற்படுமாயின் அவை சிக்கலான இழையம் எனப்படும். கலனிழையங்களான காழ், உரியம் இவ்வகை இழையங்களாகும். மாறிழையத்தில் உள்ள பெற்றோர்க் கலங்கள் இவ்வகையான காழ் உரிய இழையங்களை உருவாக்கும். இவை நீர், கனிமம். ஊட்டச்சத்துக்கள், மற்றும் கரிமப் பதார்த்தங்களைத் தாவரத்தினுள் கடத்துவதில் பங்கெடுக்கும். காழ் கலன்றாவரங்களில் நீர், கனிமங்களைக் கடத்தும் முக்கிய இழையமாகக் காழ் இருக்கிறது. தாவரத்தின் தண்டு, வேர்களின் நடு அச்சைச் சுற்றி, குழாய் போன்ற அமைப்புக்களை இந்த இழையம் ஏற்படுத்தி இருக்கும். அக்குழாய்களின் ஊடாக நீர், கனிமம்மேல் நோக்கிக் கடத்தப்படும். உரியம் தாவரத்தால் உற்பத்தியாக்கப்படும் உணவுப் பொருட்களைக் கரைந்த நிலையில் தாவரத்தில், தேவைக்கேற்ப மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ, எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வதில் இந்த உரிய இழையம் உதவும். மேற்கோள்கள் பகுப்பு:உடற்கூற்றியல் பகுப்பு:இழையவியல்