title
stringlengths
1
93
url
stringlengths
31
123
text
stringlengths
0
361k
வேதம்
https://ta.wikipedia.org/wiki/வேதம்
thumb|upright=1.2|இந்து மதத்தின் பண்டைய சமசுகிருத வேத நூல். மேலே: அதர்வண வேதத்திலிருந்து ஒரு பகுதி. வேதங்கள் (Vedas) என்பவை பொதுவாக இந்து சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். பொ.ஊ.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இந்துக்களின் வேதங்கள் இன்றிருப்பது போலவே இருந்தது என்று பண்டித பால கங்காதர திலகர் நிரூபித்துள்ளதாக சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார்.எனது பயணம்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 109 சொற்பிறப்பியல் இந்து மதத்தில், வேதம் என்ற சொல் வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. வித் என்றால் சமசுகிருதத்தில் அறிதல் என்று பொருளாகும். வேதங்கள் என்பதற்கு ’‘உயர்வான அறிவு’’ என்றும் பொருள்படும். வேதங்களின் வகைகள் இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதம் ஆகியவை தான் அடிப்படையில் வேதங்களாகக் கருதப்பட்டன. அதர்வணத்தை தீமை என்று கருதினார்கள். பிற்காலத்தில் தான் அது நான்காவது வேதமாகச் சேர்க்கப்பட்டது. இவை தமிழில் நான்மறை என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்). சமசுக்கிருத வேதங்கள்: The Vedas The Vedas ரிக் வேதம் யசுர் வேதம் சாம வேதம் அதர்வண வேதம் என்பனவாகும். வேதங்கள் நான்கு என வகுத்தவர் வியாசர். வேதங்களை "சுருதி, மறை" எனவும் கூறுவர். வேதங்களின் நான்கு பாகங்கள் வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை: சம்ஹிதை - தொகுப்பு; "மந்திரங்கள்" (கடவுளால் தரப்பட்டவையாக கருதப்படும் பாடல்கள்) பிராமணம் எனப்படும் உரை அல்லது சடங்கு வழிமுறைகள் ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவர்களின் உரைகள் உபநிடதங்கள் (வேதங்களுக்கான தத்துவ உரைகள்/ விளக்கங்கள்/ எதிர்ப்புக்கள்) ; இவை வேதத்தின் முடிவில் வருவன வேத அந்தம் (முடிவு) என்னும் பொருளில் வேதாந்தம் எனப்படும். வரலாறு வேதங்களில் பல்வேறு கடவுள்களைப் புகழ்ந்து இந்த பாடல்கள் புனையப்பட்டிருக்கின்றன. சடங்குகளின் போது பின்பற்றப்படுவதற்காக பல்வேறு விவரங்கள் யஜூர் வேதத்தில் குறிப்பிடப்படுகின்றன. சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும். சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோன்றியதாகவும் கூறப்படுகின்றது. அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும். இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், பொ.ஊ.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளன. ஏறத்தாழ பொ.ஊ.மு. 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைபெற்று வந்துள்ளது. விசய நகரப் பேரரசை ஆண்ட முதலாம் ஹரிஹரர் காலத்தில் வாழ்ந்த சாயணாச்சாரியர் (सायण) என்னும் 14 ஆவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாசா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும். இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. பொ.ஊ. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காடுவாழ் முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யசுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சதபத பிராமணம் என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சதபத பிராம்மணம் சுமார் பொ.ஊ.மு. 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது. முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்குத் துணையான வேதாந்த பாகங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு.வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். இதனை ஞான காண்டம் என்பர். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது. கடவுள் கோட்பாடு வேதகால கடவுட்கோட்பாடு முற்பட்ட கால  கடவுள் கோட்பாடு, இடைபட்ட காலகடவுட்கோட்பாடு, பிற்பட்ட கால கடவுட் கோட்பாடு என மூன்று வகையாக நோக்கப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் வேதகால மக்கள் இயற்கை சக்திகளை வெல்லவோ, விளங்கவோ முடியாதவர்களாக காணப்பட்டனர். இடி,மின்னல்,மழை,புயல் போன்ற இயற்கையின் ஒவ்வொரு செயலையும் தமக்கு மேற்பட்ட சக்தியாகக் கருதினர். எனவே வேதகால மனிதன் பயத்தின் அடிப்படையில் இயற்கையை கடவுளாக வழிபட முனைந்ததோடு வேதகால கடவுள் கோட்பாடும் உதயமாயிற்று. இயற்கையை வழிபட்ட மனிதன் அவ் இயற்கை சக்திகளுக்கு இறைநிலை கொடுத்து பல்வேறு பெயர்கள் சூட்டி வழிபடத் தொடங்கினான்.இவ்வாறு இருக்கு வேதகாலத்தில் 33 தெய்வங்கள் வணங்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இத் தெய்வங்களை மண்ணுறை தெய்வங்கள், விண்ணுறை தெய்வங்கள், இடைநிலை தெய்வங்கள் என ஆய்வாளர்கள் மூன்று வகையாக பிரித்து நோக்குகின்றனர். இவற்றுள் இந்திரன், வருணன், அக்கினி, உருத்திரன், விஷ்ணு முதலிய தெய்வங்கள் குறிப்பிடத்தக்கன. இருக்கு வேதகாலத்திலே பல தெய்வங்கள் வழிபட்டமை மறுக்கமுடியாத உண்மை. இருப்பினும்ஒவ்வொரு தேவைக்கும் அவர்கள் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட்டமை காணமுடிகின்றது. அவ்வேளை அந்த ஒரு தெய்வமே எல்லாவற்றிலும் உயர்ந்த மேலான தெய்வமாகக் கருதப்படுகின்றது. இவ்வாறு இடைப்பட்ட வேதகாலத்தில் தேவைகேற்ப ஒரு தெய்வத்தை முதன்மைப் படுத்தி வழிபடுகின்ற ஒரு தெய்வ கோட்பாடு தோன்றியது. இருக்கு வேதம் 10ம் மண்டலத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு வினா காணப்படுகின்றது. நாம் யாருக்கு நமது அவி பாகத்தை செலுத்துவோம்? எல்லாவற்றிலும் உயர்ந்ததும் மேலானதுமான தெய்வம் எது?’’ என்று கேட்கபட்டன. அதற்கு “பிரஜாபதியே எல்லாவற்றிலும் உயர்ந்ததும் மேலானதுமான தெய்வம்.அவருக்கே உங்கள் அவிபாகத்தைக் கொடுங்கள்” என்று கூறப்படுகின்றது. இதுவும் இருக்கு வேதகால ஒரு தெய்வ கோட்பாட்டிற்கான ஒரு ஆதாரமாகும். இடைப்பட்ட வேதகால ஒரு தெய்வ கோட்பாட்டிலிருந்து மேற்பட்டதாக ஒரு பொருள் கோட்பாடு பிற்பட்ட வேதகாலத்தில் தோன்றியது. இருக்குவேதம் 10 மண்டலத்தில் ‘’ உள்பொருள் ஒன்று அதனை பலவென்று அழைப்பர்” எனப் பொருள்படும். “ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி’’ என்ற கூற்று காணப்படுகின்றது.மேலும் இங்கு பலவற்றிலும் வலிமை வாய்ந்தது ஒன்று என்ற கூற்றும் காணபடுகின்றது. புருஷன் ஒருவனே எல்லாவற்றிலும் இருக்குறான். இருந்தான், இருப்பான் போன்ற மகாவாக்கியங்கள், உள்பொருள் ஒன்று என்பதை விளக்குகின்றன. இவ்வாறு உள்ள பொருளை பிற்காலத்தில் பிரமம் என்றும் பரமாத்மா என்றும் அழைக்கப்பட்டது. வேதாந்தம் ,சித்தாந்தம், உபநிடத தத்துவங்கள் தோன்றுவதற்கும் இதுவே வழிசமைத்தது. முந்தைய வேதம் ரிக் வேதம் இது முந்தைய வேதகாலம் என்றும் அழைக்கப்படுகிறது.வரலாறு பாடப்பகுதி பதினொன்றாம் வகுப்பு.பக்கம்-22 இதன் காலம் பொ.ஊ.மு. 2200 முதல் பொ.ஊ.மு. 1600 வரை ஆகும். ரிக் வேதத்தில் 10600 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். இப்பாடல்கள் ரிக் வேத மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், பழக்கங்கள் ஆகியவற்றை தெளிவாக கூறுகின்றது. மேய்ச்சலே ரிக் வேதகால மக்களின் முக்கிய தொழிலாகும். ரிக் வேத மக்கள் தச்சு வேலைகளும் செய்துள்ளனர். மண்வேலைகள் செய்வது, நூல் நூற்றல், பருத்தி கம்பளி உடைகள் தயாரிப்பது ஆகியன ரிக்வேத கால மக்களின் உப தொழிலாக இருந்துவந்துள்ளன. மேலும் வேதங்கள் மக்களின் கடவுள்களைப் பற்றியும் அதிக தகவல்கள் தருகின்றன. ரிக் வேத மக்கள் இந்திரனையும், அக்னியையும் முதற்கடவுளாக வழிபட்டுவந்துள்ளனர்.Rig Veda பிந்தைய வேதங்கள் பிந்தைய வேத காலங்களில் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளனர். இக்குறிப்புகளை பிந்தைய வேதங்கள் குறிப்பிடுகின்றன. பிந்தைய வேத காலங்களில் அவர்களின் நம்பிக்கை, பழக்கவழக்கங்களும் மாற்றம் பெற்றுள்ளன. முந்தைய வேதகாலங்களில் கடவுளான இயற்கையை விட சிவன், பிரம்மன், விஷ்ணு ஆகியோரை வழிபட்டு வந்துள்ளனர். யசுர் வேதம் இது பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும். இதன் காலம் பொ.ஊ.மு. 1400 முதல் பொ.ஊ.மு. 1000 வரை ஆகும். சாம வேதம் இதுவும் பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும்.சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும். சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோற்றியதாகவும் கூறப்படுகின்றது. அதர்வண வேதம் அதர்வண வேதம் இறுதியான வேதமாகும். இதனை நான்காவது வேதம் என்றும் கூறுவர். அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும். வேத இலக்கியங்கள் நான்கு வேதங்களைத் தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகிய அனைத்தும் வேத இலக்கியங்களில் அடங்குவனவாகும். வழிபாடுகள் மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கை பற்றிய விளக்கங்களை உபநிடதங்கள் கூறுகின்றன. திறனாய்வு இந்து மதம் பற்றிய பல ஆய்வாளர்கள் இந்து மதம் அனைத்து சமகால மதங்களின் கூறுகளையும் ஏற்றுக்கொள்கிறது என்றும், இந்து மதத்தின் வேத புராணங்கள் உட்பட பல வசனங்களில் ப பத்த மதம் த்தம், சமண மதம் மற்றும் சீக்கியம் ஆகிய கூறுகள் உள்ளன என்றும், கணிசமான அளவு கிரேக்க மற்றும் ஜோராஸ்ட்ரியனிசம் போன்ற மதக் கூறுகளை ஏற்றுக்கொண்டதாகவும் கூறுகின்றனர். அவெஸ்டா. இஸ்லாமிய நபி முஹம்மதுவின் தீர்க்கதரிசனம்), இந்திரனிலிருந்து இந்திரன் வரை, கந்தரேவாவிலிருந்து காந்தர்வா வரை, வஜ்ரா, வாயு, மந்திரம், யாம், அஹூதி, ஹுமாதா முதல் சுமதி வரை. இவற்றையும் பார்க்கவும் ஆகமங்கள் உபவேதங்கள் உபநிடதங்கள் குறிப்புகள் மேற்கோள்கள் சோ.ந.கந்தசாமி. (2004). இந்திய தத்துவக் களஞ்சியம். சிதம்பரம்: மெய்பப்பன் பதிப்பகம். வெளி இணைப்புகள் What are Vedas? The Fours Vedas and the Parts of the Vedas The Principal Upanishads Upanishads Index The Essentials of the Upanishads The Essence of Upanishads பகுப்பு:இந்து சமய நூல்கள் பகுப்பு:பூர்வ மீமாஞ்சம்
பன்னம்
https://ta.wikipedia.org/wiki/பன்னம்
பன்னம் (அல்லது வித்திலியம், Fern) என்னும் செடி மற்றும் மர வகைகளை அறிவியலில் தெரிடொ-'வைட்டே (Pteridophyte) என்று அழைப்பர். தெரிடொ-ஃபைட்டா (Pteridophyta) என்னும்பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதினாயிரம் நிலைத்திணை வகைகளில் ஒன்றைக் குறிக்கும். இவை பூக்கும் தாவரங்கள் தோன்றும் முன்னரே மிகு பழங்காலத்தில் தோன்றி இன்றும் வளரும் நிலைத்திணை வகை. பன்னங்கள் அல்லது வித்திலியங்கள் எனப்படுவன, வித்துக்களில்லாது, புதிய பரம்பரையை உருவாக்குவதற்காக நுண்வித்துக்கள் (spores) மூலம் இனப்பெருக்கம் செய்யும் குழாயுடைத் தாவரம் (vascular plant) என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. உண்மையான இலைகளைக் கொண்டிருப்பதால் இவை லைக்கோபைட்டாக்களிலிருந்து வேறுபடுகின்றன. இவை வித்துக்கள் மற்றும் பூக்களைக் கொண்டிராததால், வித்துத் தாவரத்திலிருந்து வேறுபடுகின்றன. பன்னத்தின் (அல்) வித்திலியத்தின் வாழ்க்கை வட்டம் சாதாரணப் பன்னமொன்றின் வாழ்க்கை வட்டம், இரண்டு வேறுபட்ட உருவாக்கக் கட்டங்களைக் கொண்டுள்ளது. இவை பின்வருமாறு: நுண்வித்திகளை உருவாக்கும் ஸ்போரோபைட்டே கட்டம். நுண்வித்திகள் கலப்பிரிவு மூலம் ஹப்லொயிட் புரோதலஸ் (haploid prothallus) ஆக வளர்ச்சியடைகின்றன. (கேம்டோபைட்டே கட்டம்) புரோதலஸ் உயிர்வித்தினை (gametes) உருவாக்குகின்றது. ஆண் gamete ஒரு பெண் உயிர்வித்தினைக் (gamete) கருக்கொள்ளச் செய்கிறது. இது கலப்பிரிவு மூலம் திப்லோயிட் ஸ்போரோபைட்டே பன்னமாக வளர்ச்சியடைகின்றது. பன்னத்தின் அமைப்பு thumb|பன்னங்கள் தண்டுகள்: பொதுவாக இவற்றின் தண்டுகள் மிகவும் உயரம் குறைவானவை. எனவே நிலக்கீழ் தண்டுகளைக் குறிக்கும் ரைசோம் என்ற பெயரால் இத்தண்டுகள் அழைக்கப்படுகின்றன. எனினும் சில இனங்கள் 20 m உயரம் வரை ளரக்கூடியன. காழ்க்க்லன் மூலகம் இவற்றின் காழில் காணப்படுவதில்லை. இவற்றின் காழில் பிரதான கடத்தும் ஊடகம் குழற்போலிகளாகும். உரியத்தில் தோழமைக் கலங்கள் காணப்படுவதில்லை. மிகவும் எளிய கடத்தும் கலன்களைக் கொண்ட தாவரங்களாக பன்னங்கள் உள்ளன (லைக்கோபைட்டாக்களும் இது போன்ற எளிய கலன் இலையங்களைக் கொண்டுள்ளன.) இலை: பன்னங்களின் இலைகள் பன்னோலை என அழைக்கப்படும். இவ்விலைகள் விரிக்கப்படும் முன்னர் உருட்டப்பட்டு சுருக்கப்பட்ட வடிவில் காணப்படுகின்றன. இவ்வோலைகளே பன்னங்களின் பிரதான ஒளித்தொகுப்பு நடைபெறும் பகுதிகளாகும். வேர்: பன்னங்களின் வேர்கள் ஏனைய தாவரங்களின் வேர்களை ஒத்ததாகும். மேலுள்ள கட்டமைப்பு பன்னத்தின் வித்தித் தாவரத்துக்கே (2n தாவரம்) பொருத்தமானதாகும். பன்னத்தின் புணரித்தாவரம் (n தாவரம்) கட்டமைப்பில் மிக எளிமையானதாகும். இது கட்டமைப்பில் ஈரலுருத் தாவரம் போலக் காணப்படும். பன்னத்தின் புணரித்தாவரக் கட்டமைப்பு பின்வருமாறு காணப்படும்: புரோதல்லசு: பச்சை நிறமான ஒளித்தொகுப்பில் ஈடுபடக்கூடிய ஒரு கட்டமைப்பாகும். இது புணரிகளை உருவாக்ககூடியது. இது 3-10 mm நீளமானதுடன் 2-8 mm அகலமானது. இது இதயம் அல்லது சிறிநீரகத்தின் வடிவுடைய மிக மெல்லைய ஒரு கலத் தடிப்புடைய கட்டமைப்பாகும். அன்தரீடியா: புணரித்தாவரத்தின் விந்துக்களை உருவாக்கும் பகுதி. ஆர்கிகோனியா: புணரித்தாவரத்தின் சூலை (முட்டைக் கலத்தை) உருவாக்கும் பகுதி ரைஸொட்கள்: புணரித்தாவரத்தின் வேர்களாகச் செயற்படும் நீட்டப்பட்ட கலன்களாலான பகுதி. எனினும் இவை உண்மையான வேர்களல்ல. இவை புணரித்தாவரத்தை நிலத்தில் பதித்து அதற்குத் தேவையான நீரையும், கனியுப்புக்களையும் பெற்றுக் கொடுக்கின்றன. உசாத்துணை வெளியிணைப்பு Tree of Life Web Project: Filicopsida A classification of the ferns and their allies A fern book bibliography Register of fossil Pteridophyta L. Watson and M.J. Dallwitz (2004 onwards). The Ferns (Filicopsida) of the British Isles. Ferns and Pteridomania in Victorian Scotland Non-seed plant images at bioimages.vanderbilt.edu "American Fern Society" "British Pteridological Society" Checklist of Ferns and Lycophytes of the World Images of ferns of Hawaii பகுப்பு:தாவர வகைகள் பகுப்பு:அலங்காரத் தாவரங்கள் பகுப்பு:மேலொட்டிகள்
தோட்டக்கலை
https://ta.wikipedia.org/wiki/தோட்டக்கலை
thumb| ஈக்வடார், துல்கானில் உள்ள தோட்டம் உருவ வகைத் தாவரங்களைப் பேணுதல் தோட்டக்கலை (Gardening) என்பது வீட்டுக்கு அருகில், முகப்பிலோ பின்னாலோ தாவரங்களை நட்டு வளர்க்கின்ற நடைமுறையாகும். தோட்டங்களில் அழகூட்டும் தாவரங்கள் அவற்றின் பூக்கள், இலைகள், அல்லது ஒட்டுமொத்தத் தோற்ற வனப்பு கருதி வளர்க்கப்படுகின்றன. கிழங்குகள், கீரைகள், பழங்கள், மூலிகைகள் தரும் தாவரங்களும் உணவுக்காகவும் சாயங்களுக்காகவும் மருத்துவத்துக்காகவும் நறுமணப் பொருள்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. தோட்டக்கலை ஓய்வுகொள்ளும் வேலையாகவும் கருதப்படுகிறது. சிறிய பழத் தோட்டத்தில் இருந்து, செடிகள், மரங்கள், மூலிகைகள் எனப் பலவகைத் தாவரங்கள் வளர்க்கும் பெருந்தோட்டங்கள் வரை தோட்டவேலை அல்லது தோட்டவளர்ப்பு வரை அமையும். வீட்டுப் புறக்கடையில் வளர்க்கும் வீட்டுத் தோட்டம் முதல், தாழ்வாரங்கள், வீட்டோரங்கள் தொட்டியில் அமையும் மதில்சுவர்த் தோட்டங்கள், கட்டிட உட்புற, வெளிப்புறத் தோட்டங்களாகவும் அமையலாம். சிலவகைச் சிறப்புத் தோட்டங்களில் ஒரேவகைத் தாவரம் மட்டுமே அமையும். இன்னௌஞ் சிலவற்ரில் பலவகைத் தாவரங்களமிடையிடையில் கலந்து வளர்க்கப்படலாம். தோட்ட வளர்ப்பு கடின உழப்பினை வேண்டுகிறது, அழ்ந்த ஈடுபாட்டைக் கோருகிறது ஈவை பண்ணைகள், காடுகளைவிட செறிவான உழைப்பைக் கோருவதால் அவற்றில் இருந்து பெரிதும் வேறுபட்டுள்ளன. தோட்டக்கலை வரலாறு thumb|200px| இங்கிலாந்து சிராப்சயரில் அமைந்த இராபர்ட் கார்ட்டின் காட்டுத் தோட்டம் தொல்பழங்காலம் உலகின் மிகப் பழைய தோட்ட வடிவம் காட்டுத் தோட்டமாகும். இது காடுசார்ந்த உணவு விலைச்சல் களாமாகவும் விளங்கியது. காட்டுத் தோட்டம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் ஆற்றோரமாக அமைந்த காடுகளிலும் பருவக்காற்று மழை வட்டாரங்களின் ஈரமான மலைச் சாரல்களிலும் தோன்றியது. மேலும் அவற்ருக்கு அருகே இருந்த பயன்மரங்களும் கொடிமுந்திரி தாவர இனங்களும் இனங்கண்டுப் பேணப்பட்டு மேம்படுத்தப்பட்டன. தோட்டத்தின் வேண்டாத் தாவர இனங்கள் நீக்கப்பட்டன. பிறகு, அயல்தாவரங்களும் தெரிவுசெய்து தோட்டத்தில் வளர்க்கப்பட்டன. முதல் நாகரிகங்கள் தோன்றியதும், செல்வந்தர்கள் அழகுக்ககத் தோட்டங்களை வளர்க்கலாயினர். பண்டைய எகுபதியின் கல்லறைத் தோட்ட ஓவியங்களில் கிமு 1500 ஆண்டளவில் உருவாகிய புதிய அரசாட்சியில் தோட்டமும் நிலக்கிடப்பும் வடிவமைத்ததற்கன சான்றுகள் கிடைத்துள்ளன; அவை தாமரை மலர்ந்த சிறுகுளங்களையும் பனைமர வரிசையையும் சீரொருமையுடன் திகழும் வேலங்கன்றுகளையும் காட்டுகின்றன. பண்டையத் தோட்ட வடிவமைப்புக்கான சிறந்த எடுத்துக்காட்டு பாபிலோனியத் தொங்கும் தோட்டமாகும். இது பண்டையல் ஏழு வியப்புகளில் ஒன்றாகும். பண்டைய உரோம் நகரில் பல பத்து தோட்டங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. பண்டைய எகுபதி நாட்டுச் செல்வந்தர்கள் நிழலுக்காக தோட்டங்களை வளர்த்துள்ளனர். எகுபதி நாட்டு மக்கள் மரங்களையும் தோட்டங்களையும் கடவுளரோடு தொடர்புபடுத்தினர். அவர்களின் தெய்வங்கள் தோட்டங்களைக் கண்டு மகிழ்ச்சி கொண்டதாகக் கருதினர். பண்டைய எகுபதியின் தோட்டச் சுவர் ஓரங்களில் மரங்களை வரிசைகளில் நட்டு வளர்த்துள்ளனர். இவற்றில் பரவலாகப் பேரீச்ச மரங்களும் ஊசியிலை மரங்களும் வில்லோ மரங்களும் கொட்டைதரும் மரங்களும் அமைகின்றன. தோட்டங்கள் உயர் சமூக, பொருளியல் செழிப்பின் அறிகுறிகள் ஆகின. இவர்கள் வைன் தோட்டங்களையும் செழிப்பின் அடையாளங்களாக வளர்த்தனர். எகுபதியத் தோட்டங்களில் உராசா, பாப்பி, டெய்சி, ஐரிசு பூக்களும் மலர்ந்து காணப்படும். தோட்ட வகைகள் வீட்டுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் தோட்டம் வீட்டுத் தோட்டம் எனப்படுகின்றது. பொதுவாகத் தோட்டங்கள் வீட்டைச் சூழவுள்ள நிலப்பகுதியிலேயே அமைவது வழக்கமெனினும், வீட்டுக் கூரைகள், பலகணித் தொட்டிகள், பலகணிகள் போன்ற பகுதிகளிலும் அமைக்கப்படுவதுண்டு. "உள்ளகத் தோட்டக்கலை" என்பது கட்டிடங்களுக்குள் தாவரங்களை வளர்ப்பது ஆகும். வீட்டுத் தாவரங்கள் இதற்கென அமைக்கப்பட்ட காப்பகங்கள், பசுமைக்குடில் போன்றவற்றுள்ளும் வளர்க்கப்படுவதுண்டு. "நீர்த் தோட்டக்கலை" என்பது சிறு குளங்கள், தடாகங்கள் போன்றவற்றுக்குப் பொருத்தமான தாவரங்களை வளர்ப்பதாகும் . வீட்டுத்தோட்டங்களில் மட்டுமன்றி, பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், நெடுஞ்சாலையோரங்கள், சுற்றுலாப்பகுதிகள் போன்றவற்றிலும் தோட்டக்கலை அறிவு பயன்படுகிறது. தோட்டக்கலை நோக்கங்கள் தாவரங்கள் பயன்பாடு சார்ந்த, பயன்பாடு சாராத பல்வேறு தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் சில பின்வருமாறு: பயன்பாடு சார்ந்தவை உணவு கால்நடைத் தீவனம் மருத்துவம் சாயங்கள் துணிவகைகள், கைவினைப் பொருட்கள் போன்றவற்றிற்கான மூலப் பொருள்கள். பயன்பாடு சாராதவை அழகு இயற்கையுடனான இசைவு பொழுதுபோக்கு மரக்கறி வகைகள், பழ வகைகள், மூலிகைகள், நிழல் மரங்கள், புல், பல்லாண்டுத் தாவரங்கள், அலங்காரத் தாவரங்கள், பூச்செடிகள் போன்ற பலவகைத் தாவரங்களும் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. பல தோட்டங்களில், இவற்றில் பலவற்றை ஒருங்கே காணக்கூடும். பழ மரங்கள் வீட்டுத் தோட்டங்களிலே வளர்க்கப்படுவது வழக்கமெனினும் பேரளவில் வளர்க்கும்போது தோப்புகளிலே வளர்ப்பார்கள். மேலும் காண்க பொன்சாய் அறிமுகப்படுத்தப்பட்ட இனங்கள் தோட்டம் தலைப்புகள் பட்டியல் வெளி இணைப்புகள் National Gardening Association (USA)
சினேகா
https://ta.wikipedia.org/wiki/சினேகா
சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். 2001 இல் இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 இல் என்னவளே என்ற திரைப்படத்தில் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். பிறப்பும் கல்வியும் சினேகா தமிழ்நாட்டில் இராசாராம் பத்மாவதி தம்பதியினருக்கு சுகாசினியாகப் பிறந்தார். இவரின் குடும்பம் இவரின் பிறப்புக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாக்குச் சென்றது, அங்கு அவர் ஓன் ஆங்கில உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்தார். பின்னர் இவர் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் உள்ள பண்ருட்டி என்னும் ஊரில் குடியேறினர். அங்கே இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் ஒன்றும் உள்ளது. திரைப்பட வாழ்க்கை சினேகா முதலில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீல பக்சி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார். பின்னர் தமிழ்த் திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். என்னவளே படத்தில் நடித்து புகழ் பெறத் தொடங்கினார். மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார். இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது. தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களில் விருது பெற்றார். பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என்று ஏறத்தாழ எழுபது படங்களில் நடித்துள்ளார். சொந்த வாழ்க்கை 2009 இல் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார். பின்னர், பிரசன்னா சினேகாவின் வடிவழகு நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் 2011 நவம்பர் 9 அன்று பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி மே 11, 2012 இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.. தற்போது சினேகா சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். 2015 ஆகத்து 10 இல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு விகான் என்று பெயர் சூட்டினார்கள். சினேகா தமது பெண் குழந்தைக்கு ஆத்யந்தா என்று பெயர் சூட்டியிருப்பதாக நடிகர் பிரசன்னா பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். விளம்பர வடிவழகுத் தொழில் சரவண ஸ்டோர்ஸ், ஹார்லிக்ஸ், ஆஷிர்வாட் போன்ற பல விளம்பரங்களில் அவர் தோன்றினார். திருமணத்திற்குப் பின் சினேகா தன் கணவருடன் பிரசன்னாவுடன் இணைந்து யுனிவர்சல் விளம்பரங்களில் பணிபுரிந்தார், சென்னை சர்வதேச ஃபேஷன் வீக், சிட்னி ஸ்லேடன் பேஷன் வாரம் மற்றும் சென்னை மற்றும் மும்பையில் நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர் நடித்தார். பொது வாழ்வும் உதவியும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 41 நாளாக போராடினர். டெல்லியில் போராடிய விவசாய குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு நடிகர் பிரசன்னா, சினேகா தம்பதியினர் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தனர். என்னுடைய சம்பளம் முழுவதும் கொடுக்கும் அளவுக்கு நான் ஊதியம் பெறவில்லை என்றாலும், இயன்றதைச் செய்து இன்பம் பெறும் முயற்சியாகவே நிதியுதவி அளித்துள்ளதாகவும், இதே போன்று நடிகர்கள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பினரும் நிதியுதவி அளிக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நடித்த திரைப்படங்கள் என்னவளே ஆனந்தம் பார்த்தாலே பரவசம் விரும்புகிறேன் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே உன்னை நினைத்து கிங் புன்னகை தேசம் பம்மல் கே. சம்பந்தம் ஏப்ரல் மாதத்தில் வசீகரா பார்த்திபன் கனவு வசூல்ராஜா எம். பி. பி. எஸ் ஜனா'' போஸ் ஆட்டோகிராப் அதுவ ஆயுதம் சின்னா ஏபிசிடி புதுப்பேட்டை நான் அவனில்லை (2007) பள்ளிக்கூடம் பிரிவோம் சந்திப்போம் (விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)) சிலம்பாட்டம் கோவா தீராத விளையாட்டுப் பிள்ளை பவானி ஐ. பி. எஸ். பொன்னர் சங்கர் (திரைப்படம்) ஒரு கல் ஒரு கண்ணாடி) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் சர்வதேச திரைப்படத் தரவு தளத்தில் சினேகாவின் இணையத்தளம் பகுப்பு:1981 பிறப்புகள் பகுப்பு:வாழும் நபர்கள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள் பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள் பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள் பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
மதுரை
https://ta.wikipedia.org/wiki/மதுரை
மதுரை (ஆங்கிலம்: Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம். இது மதுரை மாவட்டத்தின் தலைநகர் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள பெருநகரங்களில், இதுவும் ஒன்று. இது தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், அடுத்த, நகர்புற பரப்பளவு அடிப்படையில், மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். மக்கள்தொகை அடிப்படையில், இந்நகரம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும். பதினைந்து லட்சம் மேல் மக்கட்தொகை கொண்ட மாநகரம். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம், இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. thumb|right|மதுரையில் உள்ள கட்டபொம்மன் சிலை thumb|right|மீனாட்சி திருக்கல்யாணம் இந்தியத் துணைக்கண்டத்தில், தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை, தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 2-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை. மௌரியப் பேரரசின் அமைச்சர் கௌடில்யர் (பொ.ஊ.மு. 370 – பொ.ஊ.மு. 283), கிரேக்க தூதர் மெகஸ்தெனஸ் (பொ.ஊ.மு. 350 – பொ.ஊ.மு. 290) ஆகியோரின் குறிப்புக்களில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. மரபுச் சின்னமாகப் பார்க்கப்படும் மதுரை நகரம், பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராச்சியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர். நகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. நகரில், ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. சித்திரைத் திருவிழா என்று பொதுவாக அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து இலட்சம் பேராற் கண்டுகளிக்கப்படும் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. நகரின் ஒருபகுதியான அவனியாபுரம் பகுதியில், பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவல், நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள், பெயர் பெற்ற நிகழ்வுகளாகும். மதுரை, தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், இரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையில், இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு, உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. மதுரை மருத்துவக்கல்லூரி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற அரசு கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன. நகர நிர்வாகம், 1971-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பின் மூலம் நடைபெறுகிறது. இது சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய மாநகராட்சி ஆகும். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையும் இங்கு உள்ளது. இது இந்தியாவில், மாநிலத் தலைநகரங்களுக்கு வெளியில் உள்ள நீதிமன்றங்களில் ஒன்றாகும். மதுரையில், பன்னாட்டுச் சேவைகளை வழங்கும் வானூர்தி நிலையமும், தென் மாவட்டங்களில் பெரிய தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் மதுரை நகரம் இணைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவின் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தெரிவு செய்யப்பட்டது. மதுரை 147.99 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டத் தகவலின்படி, மதுரை நகரில் 1,017,865 பேர் வசிக்கின்றனர். பெயர்க் காரணம் இந்நகரம் முந்தைய காலத்தில் மலைகள் மிகுந்த பகுதியாக இருந்ததால் இவ்வூருக்கு மலைதுரை என்ற பெயரலே அழைக்கபெற்றதாகவும் பின்னாளில் அப்பெயர் காலத்தால் மருவி மலைதுரை ம+(லை)+துரை மதுரையாக மாறியதாக கூறப்படுகிறது. முன்னொரு காலத்தில் மலைதுரையை ஆண்ட மலைத்துவசபாண்டியனின் திருப்பெயராலே மலைத்துவசத்துறை என்ற பெயரே மதுரையாக மாறியது என்றும் கூறப்படுகிறது. இவ்வூரை மதுரை, மலை நகரம், மதுராநகர், தென் மதுராபுரி, கூடல், முக்கூடல் நகரம், பாண்டிய மாநகர், மல்லிகை மாநகர், மல்லிநகரம், வைகை நகரம், நான்மாடக்கூடல், திரு ஆலவாய், சுந்தரேசபுரி, மீனாட்சி நகரம், போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத் துறை மதுரை; மருத மரங்கள் மிகுதியான பகுதியாக இருந்ததால் இவ்வூருக்கு மருதத்துறை என்பது மருவி மதுரை என ஆனது என ஒரு கருத்தும், (வைகை ஆற்றங்கரையில் மருத மரங்கள் மிகுதி).திருமருத முன்றுறை - பரிபாடல் 7-83வையைத் திருமருத முன்றுறை - பரிபாடல் 22-45வையை மருதோங்கு முன்றுறை – சிலப்பதிகாரம் 14-72 இந்துக் கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால்(இனிப்பு) இப்பெயர் பெற்றது என மற்றொரு கருத்தும் நிலவுகிறது. முந்தைய 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட திருவிளையாடற் புராணத்தில், மதுரையின் பல்வேறு பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. கூடல் என்ற பெயர் மதுரையில் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களையும், நான்மாடக்கூடல் என்ற பெயர் மதுரையைச் சூழ்ந்துள்ள நான்கு கோயில் கோபுரங்களையும் குறிக்கிறது. சிவனடியார்கள், மதுரையைத் திரு ஆலவாய் எனக் குறிப்பிடுகின்றனர். தமிழகக் கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் குறிப்பின்படி, பொ.ஊ.மு. 2-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்ப் பிராமி கல்வெட்டு ஒன்று மதிரை எனக் குறிக்கிறது. இதற்கு மதிலால் சூழப்பட்ட நகரம் என்பது பொருள். சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில் – இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்லை ஊர்கள். சீறா நாகம் – நாகமலை கறவா பசு – பசுமலை பிளிறா யானை – யானைமலை முட்டா காளை – திருப்பாலை ஓடா மான் – சிலைமான் வாடா மலை – அழகர்மலை காயா பாறை – வாடிப்பட்டி பாடா குயில் – கீழக்குயில்குடி வரலாறு thumb|left|250px| வைகை வட கரையிலிருந்து மதுரையைச் சித்தரிக்கும் 18ஆம் நூற்றாண்டு ஓவியம் பொ.ஊ.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து மதுரையில் மக்கள் வசித்து வருவதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. இலங்கையில் பொ.ஊ.மு. 570-ஆம் ஆண்டில் தம்பபன்னி இராச்சியத்தைத் தோற்றுவித்த விசயன் மதுராபுரியைச் சேர்ந்த பாண்டிய இளவரசியை மணந்ததாக இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம் குறிப்பிடுகிறது. இங்கே மதுராபுரி எனக் குறிப்பிடப்படுவது பண்டைய மதுரையையே. பொ.ஊ.மு. 4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பயணியான மெகசுதனிசு தனது குறிப்புகளில் "மதுரா" எனக் குறிப்பிடப்படுவதிலிருந்து, அவர் மதுரைக்கு வந்து இருக்கலாம் என அறியப்படுகிறது. இருப்பினும் சில அறிஞர்கள் "மதுரா" எனக் குறிப்பிடுவது மௌரியப் பேரரசில் புகழ் பெற்ற வடஇந்திய நகரமான மதுரா என்கின்றனர். மேலும் சாணக்கியர் எழுதிய அர்த்தசாத்திரத்திலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. தமிழின் பழமையான இலக்கியங்களான நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் மதுரை குறித்து கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் "கூடல்" என்றும் சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூறு முதலிய நூல்களில் "மதுரை" என்றும் மதுரை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சங்ககாலத்தில் நான்மாடக்கூடல் எனப் போற்றப்பட்டது(பரிபாடல் திரட்டு 1-3, 6 மதுரை). மதுரையைத் தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை என்று சிறுபாணாற்றுப்படையில், நல்லூர் நத்தத்தனாரும் மதுரையைப் பற்றி குறிப்பிடுகின்றார். ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதிவெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் எனப் பல்வேறு அடைமொழிகளால் தான் எழுதிய சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் மதுரையைச் சிறப்பிக்கிறார். இவை தவிர கிரேக்க, உரோமானிய வாரலாற்றிலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. உரோமானிய வரலாற்றாய்வாளர்களான இளைய பிளினி (பொ.ஊ. 61 – c. பொ.ஊ. 112), தாலமி (c. பொ.ஊ. 90 – c. பொ.ஊ. 168), கிரேக்க புவியுலாளரான இசுட்ராபோ (பொ.ஊ.மு. 64/63  – c. பொ.ஊ. 24), மதுரை பற்றி குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக செங்கடல் செலவில் மதுரை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. right|thumb|மதுரை சுல்தானகத்தின் முதல் சுல்தான் ஜலாலுதீன் ஆசன் கானின் நாணயம் சங்க காலத்தில் பாண்டியர் ஆளுகையின் கீழ் மதுரை இருந்தது சங்க இலக்கியங்கள் மூலம் அறிய வருகிறது. சங்க காலத்துக்குப் பின், களப்பிரர் ஆளுகையின் கீழ் வந்த மதுரை பொ.ஊ. 590 பாண்டியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. ஆனால், 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பாண்டியர்கள் சோழர்களிடம் தோல்வியுற்றனர். இதனால் சோழர்களின் ஆளுகையின் கீழ் வந்த மதுரையானது, 13-ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் பாண்டியப் பேரரசு உருவாக்கப்படும் வரை சோழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் (பொ.ஊ. 1268 – பொ.ஊ. 1308) மறைவுக்குப் பின் மதுரை தில்லி சுல்த்தானகத்தின் கீழ் வந்தது. பின் தில்லி சுல்தானகத்திலிருந்து பிரிந்து மதுரை சுல்தானகம் தனி இராச்சியமாக இயங்கியது. பின் பொ.ஊ. 1378-இல் விஜயநகரப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. பொ.ஊ. 1559-இல் விசய நகரப் பேரரசிடமிருந்து நாயக்கர்கள் தன்னாட்சி பெற்றனர். பின் 18-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பொ.ஊ. 1736-இல் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வரும்வரை மதுரையானது சந்தா சாகிப் (பொ.ஊ. 1740 – 1754), ஆற்காடு நவாப் மற்றும் மருதநாயகம் (பொ.ஊ. 1725 – 1764) ஆகியோரால் மீண்டும் மீண்டும் பலமுறை கைப்பற்றப்பட்டது. பின் 1801-இல், மதுரை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டின் கீழ், சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. அவர்கள் ஆட்சியின் தொடக்க கால கட்டங்களில் ஆங்கில அரசு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நன்கொடை வழங்கியதுடன் திருவிழாக்களிலும் பங்கு பெற்றது. 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டுகளில் மதுரை நகரானது அரசியல், தொழிற்றுறை நகராக வளர்ந்ததுடன் அப்போதைய மதுரை மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்கியது. 1837-ஆம் ஆண்டில், கோவிலைச் சுற்றி இருந்த கோட்டையானது அகற்றபட்டு, அகழி நிலத்தப்பட்டது. கிடைத்த இடிபாடுகள் மற்றும் பொருட்களைக் கொண்டு, புதிய தெருக்களான வெளி, மாரட், பெருமாள் மேசுதிரி வீதிகள் அமைக்கப்பட்டன. பொ.ஊ. 1836-இல் மதுரை நகராட்சியாகத் மாற்றப்பட்டது. நகராட்சியாக மாற்றப்பட்ட போது, ஆங்கில அரசானது மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துதலிலும் வரி வசூலிப்பதிலும் சில சிக்கல்களைச் சந்தித்தது. எனவே, பொ.ஊ. 1880 மற்றும் 1885 மதுரை நகரமும், மாவட்டமும் மறுஅளவீடு செய்யப்பட்டது பின்னர் நிர்வாக வசதிக்காக 5 நகராட்சிகள், 6 தாலுகாக்கள் மற்றும் இரண்டு மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. நகரில் காவல் நிலையங்கள் எழுப்பப்பட்டு மதுரையைத் தலைமையிடமாக மாவட்டக் காவல் துறை ஆணையர் பதவியும் ஏற்படுத்தப்பட்டது. 1921 செப்டெம்பர் 26-ஆம் நாள், மதுரையில் அரையாடை அணிந்து வேலை செய்து கொண்டிருந்த விவாசாயிகளைக் கண்டு, இந்திய தேசியத் தலைவரான காந்தி முதன்முறையாக அரையாடையை அணிந்தார். 1939-இல் மதுரையில் ஆலய நுழைவுப் போராட்டத்தை மேற்கொண்ட தனது நண்பர் வைத்தியநாதையரைக் காப்பாற்றும் பொருட்டு அப்போதைய சென்னை மாகாண பிரதமர் இராசகோபாலாச்சாரி தலைமையிலான அரசு ஆலய நுழைவு உறுதிப்படுத்தலும் பாதுகாப்பும் சட்டத்தை இயற்றி நாடார்களும் தலித்துகளும் ஆலயம் நுழைவதற்கான தடையை நீக்கியது. நகரமைப்பு thumb|200px|right|மதுரை நகரின் மையப் பகுதியையும் முக்கிய இடங்களையும் காட்டும் வரைபடம்|alt=map of city showing main streets in the centre of a city பண்டைய மதுரை நகரத்தின் புவியியல் மற்றும் வழிபாட்டு மையமாக விளங்கிய மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி மதுரை நகரமானது கட்டப்பட்டுள்ளது. நகரமானது பொது மையத்தைக் கொண்ட நான்கு நாற்கர வடிவமுடைய தெருக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது மதுரையை ஆண்ட நாயக்கர்களின் முதல் நாயக்கரான விசுவநாத நாயக்கரால் (பொ.ஊ. 1159–64) சதுர மண்டல முறையில் கட்டப்பட்டதாகும். இந்த தெருக்கள் அவற்றில் திருவிழாக்கள் கொண்டாடப்படும் தமிழ் மாதங்களின் பெயர்களால் ஆடி, சித்திரை, ஆவணி - மூல, மாசி வீதிகள் என தற்போதும் அழைக்கப்படுகின்றன. கோயில் பிரகாரத்திலும் அதனைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களிலும் திருவிழாக்களானது கொண்டாடப்படுவதுடன், தேரோட்டமும் நடைபெறுகிறது. நகர மையமும், அதனைச் சூழ்ந்துள்ள தெருக்களும் தாமரை மலர் மற்றும் அதன் இதழ் போன்ற தோற்றம் கொண்டதாக பழைய இலக்கியங்கள் கூறுகின்றன. நகரத்தின் அச்சானது காந்த ஊசிகளின் அச்சுடன் பொருந்தும் வண்ணம் அமைந்து, கோவிலின் நான்கு வாசல்களும் அதன் முனைகள் போல் உள்ளன. இந்த அமைப்பில் உயர்சாதியினர் கோவிலுக்கு அருகிலுள்ள தெருக்களிலும், ஏழை மற்றும் பிற்பட்ட படிநிலை மக்கள் தொலைவிலுள்ள தெருக்களிலும் குடியிருந்தனர். பின் 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் வருகை, தொழில் துறை வளர்ச்சி மற்றும் நகரமயாமாதல் காரணமாக மதுரை நகரின் அமைப்பில் மாறுதல்கள் (கோட்டைச் சுவர் அகற்றப்பட்டு புதிய தெருக்கள் உருவாதல்) ஏற்பட்டு தற்போது அனைத்து படிநிலை மக்களும் ஒன்றிணைந்து வாழுகின்றனர். மதுரையின் கிழக்கு குடவரை கோவில் குன்னத்துார்(திருக்குன்றத்துார்) அமைந்துள்ளது. மாறவர்ம சுந்தரபாண்டியன் மற்றும் பலர் சிவலிங்க திருமேனியை மலையை குடைந்து உருவாக்கி உள்ளனர். இது பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இது மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. புவியியல் மற்றும் பருவநிலை thumb|350px|left|வைகை ஆறு|alt=river with water flowing amidst weeds இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் உயரத்தில் வளமான வைகை ஆற்றின் சமவெளியில் அமைந்துள்ளது. வைகை ஆறு நகரின் வடமேற்கு-தென்கிழக்காக ஒடி நகரை ஏறக்குறைய இரு சமபகுதிகளாகப் பிரிக்கிறது. நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் சிறுமலை மற்றும் நாகமலைக் குன்றுகளும், வடகிழக்கே யானைமலைக் குன்றும் அமைந்துள்ளன. மதுரையைச் சூழ்ந்துள்ள நிலங்களில் பெரியாறு அணை பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. மதுரை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது. மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகள் தென்னிந்தியச் சமவெளிகள் போன்று சிறு சிறு குன்றுகள் காணப்படுகின்றன. மணலின் தன்மையைப் பொருத்த வரையில் மதுரையின் மையப்பகுதி களிமண்ணும், புறநகர்பகுதிகள் செம்மண் மற்றும் கரிசல் மண்ணும் கொண்டுள்ளன. நெல் அதிகம் பயிரிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து பயறு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு ஆகியவை பயிரிடப்படுகின்றன. ஆண்டின் எட்டு மாதங்களுக்கு மதுரையில் வறண்ட மற்றும் வெப்பமான வானிலை நிலவுகிறது. அருகிலுள்ள திண்டுக்கல் மற்றும் மதுரையில் பிப்ரவரி மற்றும் மார்ச்சு மாதங்களில் குளிர் காற்று வீசுகிறது. மார்ச்சிலிருந்து சூலை வரை அதிக வெப்பமான மாதங்களாகும். ஆகசுட்டிலிருந்து அக்டோபர் வரை மிதமான வானிலையும், நவம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை இடி மற்றும் கனமழையுடன் மிதமான குளிரும் காணப்படுகிறது. மதுரையில் மூடுபனியானது குளிர்காலங்களில் மிக மிகக் குறைவாகவே ஏற்படுகிறது. கடல் மற்றும் மலையிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழையால் சம விளைவுகளே ஏற்படுகிறது. இருப்பினும் அக்டோபரிலிருந்து திசம்பர் வரை வீசும் வடகிழக்கு பருவமழையால் அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது. மதுரை மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு 85.76 செ. மீ. கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 °செ, குறைந்தபட்ச வெப்பநிலை 26.3 °செ, இருப்பினும் சாதாரணமாக வெப்பநிலையானது 42 °செ வரை உயரும். நகரமயமாதல், வாகனப் பெருக்கம் மற்றும் தொழில்மயமாதல் காரணமாக மதுரையின் வளிமண்டல வெப்பநிலை உயர்ந்துள்ளது, இந்திய வானியலாய்வுத் துறையிடம் உள்ள 62 ஆண்டுகால தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது. 2001–2010 வரையான பத்தாண்டுகளில் அதிகபட்ச வெப்பநிலையான 42 °செ 2004 மற்றும் 2010 என இருமுறை பதிவாகியுள்ளது. மக்கள் வகைப்பாடு thumb|150px|right|பூ வியாபாரம் செய்யும் ஒரு மதுரைவாசி 2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி மதுரையின் மொத்த மக்கள் தொகை 10,17,865 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள், இது தேசிய சராசரியான 929 ஐ விட மிக அதிகம் ஆகும். இதில் 1,00,324 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். இவர்களில் ஆண்கள் 51,485 மற்றும் பெண்கள் 48,389. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கை முறையே 6.27% மற்றும் 0.31% ஆகும். நகரின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 81.95% உள்ளது. 1,224 விவசாயிகள், 2,178 முதன்மை வேளாண் தொழிலாளர்கள், 11,282 குடிசைத் தொழிலகங்கள், 3,48,849 பிற தொழிலாளர்கள், 27,782 குறு தொழிலாளர்கள், 388 குறு விவசாயிகள், 616 குறு வேளாண் தொழிலாளர்கள், 1,611 சிறு குடிசைத்தொழிலாளர்கள் மற்றும் 25,167 பிற குறு தொழிலாளர்கள் என மொத்தம் 3,91,315 தொழிலாளர்கள் உள்ளனர். மதுரை மாநகரரானது 14,62,420 மக்களுடன் தமிழக அளவில் மூன்றாவது பெரிய மற்றும் இந்திய அளவில் 44-ஆவது பெரிய மாநகரம் ஆகும் (Metropolitan City). 2011-ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 8,73,601 (85.83%) ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 86,886 (8.54%), கிறிஸ்தவர்கள் 52,737 (5.18%), மதம் குறிப்பிடாதோர் 3,002 (0.29%), சமணர்கள் 1,324, சீக்கியர்கள் 164, புத்த மதத்தினர் 74, மற்றவர்கள் 77 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர்.Madurai City Census 2011 data தமிழ் மொழி அதிக அளவில் பேசப்படும் மொழியாகும். சௌராட்டிரம் கி. பி. 16-ஆம் நூற்றாண்டில் மதுரைக்கு இடம் பெயர்ந்த சௌராட்டிரர்களால் பேசப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள், ரோமன் கத்தோலிக்க மதுரை டையோசிசுடனும், புரட்டஸ்தாந்த கிறித்தவர்கள் தென்னிந்திய திருச்சபையின் மதுரை – இராமநாதபுரம் திருமண்டலத்தில் இணைந்துள்ளனர். 2001-இல் குடிசை வாழ் மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 32.6 சதவீதமாகும். இது தேசிய சராசரியான 15.05% விட மிக அதிகம். (படத்திலிருந்து) 1971–1981-இல் 50% வரை மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அதிகரிப்பிற்கு 1974-ஆல் மதுரை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 13 பஞ்சாயத்துகள் மதுரையுடன் இணைக்கப்பட்டதே காரணமாகும். 1981 மற்றும் 2001-இல் மக்கள் தொகை வீதம் குறைவிற்கு மதுரை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, 1984-இல் திண்டுக்கல் மற்றும் 1997-இல் தேனி மாவட்டம் உருவாக்கபட்டதே காரணமாகும். கூட்டாக ஆண்டு வளர்ச்சி வீதம் 1971–1981-இல் 4.10 சதவீதமும், 1991–2004-இல் 1.27 சதவீதமும் குறைந்துள்ளது. ஆட்சி மற்றும் அரசியல் மாநகராட்சி மேயர்திருமதி.இந்திராணிஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஐ.ஏ.எஸ்துணை மேயர்நாகராஜன்சட்டமன்ற உறுப்பினர்கள்மதுரை மத்திபழனிவேல் தியாகராஜன்மதுரை கிழக்குபி. மூர்த்திமதுரை வடக்குஜி. தளபதிமதுரை தெற்குஎம். பூமிநாதன்மதுரை மேற்குசெல்லூர் ராசுநாடாளுமன்ற உறுப்பினர்மதுரை மக்களவைத் தொகுதிசு. வெங்கடேசன் thumb|200px|left|மதுரை மாநகராட்சி அலுவலகம் நகரமைப்புச் சட்டம் 1865-இன்படி, மதுரை 1866-ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் நகராட்சியாக ஆக்கப்பட்டது. பின் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடத்தப்பட்டு நகராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1891 மற்றும் 1896 தவிர). அப்போது இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசிய காங்கிரசே வெற்றி பெற்று வந்தது. மதுரை மாநகராட்சி சட்டம், 1971-இன்படி, மே 1, 1971 முதல் மாநகராட்சியாக மேம்பாடு செய்யப்பட்டது. மதுரை தமிழகத்தின் 2011 முன்பு வரை இரண்டாவது பழைய பெரிய மாநகராட்சியாகும்.தற்போது மதுரை தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய நகரமாக உள்ளது. மாநகராட்சியானது நிர்வாகத்திற்காக 6 துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: பொது, பொறியியல், வருவாய், பொதுசுகாதாரம், நகரத் திட்டமிடல் மற்றும் கணினிப் பிரிவு. இந்தத் துறைகள் அனைத்தும் மதுரை மாநகராட்சி ஆணையாளரின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவரே மாநகராட்சியின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் தலைவராக உள்ளார். இது தவிர சட்டமியற்றும் அதிகாரம் மாநகராட்சி உறுப்பினர்கள் வசம் உள்ளது. மாநகராட்சியின் 100 வார்டுகளிலிருந்து ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு உறுப்பினர் என 100 உறுப்பினர்கள் மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநகர் மன்றத்தின் தலைவராக மேயர் செயல்படுகிறார். இவருக்கு உதவியாக துணைமேயரும் உள்ளார். இது தவிர மாநகராட்சி நிர்வாக வசதிக்காக மண்டலங்களாப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி அலுவலகம் தல்லாகுளம் அருகே செயல்பட்டு வருகின்றது. மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளது. 200px|thumb|left|சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை|alt=Four floored building located on a road மதுரை நகரானது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது தவிர மதுரை மக்களைவைத் தொகுதியும் உள்ளது. இவற்றிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு தமிழக காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரை நகரமானது தனி காவல் துறை மாவட்டமாக உள்ளது. மதுரை மாநகர் காவல் துறையில், தல்லாகுளம், அண்ணா நகர், திலகர் திடல், டவுண் என நான்கு பிரிவுகளுடன் மொத்தம் 27 காவல் நிலையங்களும் உள்ளன. மாநகர் காவல் துறைத் தலைவராக காவல் துறை ஆணையாளர் உள்ளார். புறநகர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கானது மதுரை மாவட்டக் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இது தவிர சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளையும் உள்ளது. இது மாநிலத் தலைநகருக்கு வெளியில் இருக்கும் வெகு சில உயர்நீதி மன்றங்களுள் ஒன்று. இது சூலை 2004 முதல் செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து சாலைப் போக்குவரத்து thumb|300px|right|எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலை 7 (வாரணாசி-பெங்களூரு-கன்னியாகுமரி), தேசிய நெடுஞ்சாலை 49 (கொச்சி-தனுஷ்கோடி), தேசிய நெடுஞ்சாலை 45B (திருச்சிராப்பள்ளி-தூத்துக்குடி ), தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா) திருமங்கலம் – கொல்லம், தேசிய நெடுஞ்சாலை 38 தூத்துக்குடி - மதுரை - திருச்சி - விழுப்புரம் - திருவண்ணாமலை - வேலூர் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் மதுரை வழிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும். இது தவிர மாநில நெடுஞ்சாலைகளான மா. நெ – 33, மா. நெ – 72, மா. நெ – 72ஏ, மா. நெ – 73 மற்றும் மா. நெ – 73ஏ ஆகியவையும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வண்ணம் உள்ளன. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை வட்டங்களுள் மதுரையும் ஒன்றாகும். இது தவிர மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) இயங்கி வருகிறது. இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரையில் மூன்று முக்கியப் பேருந்து முனையங்கள் உள்ளன. அவை மாட்டுத்தாவணி ஒருகிணைந்த பேருந்து முனையம்(MIBT), ஆரப்பாளையம் ஆகிய இரண்டும் புறநகர் பேருந்து முனையங்களாகவும், பெரியார் பேருந்து நிலையம் நகர் பேருந்து நிலையமாகவும் உள்ளது. அரசால் இயக்கப்படும் நகர் பேருந்துகள் தவிர 236 பதிவு பெற்ற தனியார் சிற்றுந்துகளும், 12,754 பதிவு பெற்ற தானிகளும் உள்ளன. மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் : ( சென்னை, திருச்சி, முசிறி, துறையூர், பெரம்பலூர், அரியலூர், ஜெயங்கொண்டம், தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், வடலூர், விருத்தசாலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி, நீடாமங்கலம், திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி, புதுக்கோட்டை, திருமயம், சிங்கம்புணரி, பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, திருவாடானை, தொண்டி, சிவகங்கை, காளையார்கோவில், இடையாங்குடி, நத்தம், மணப்பாறை, விராலிமலை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், திசையன்விளை, சாத்தான்குளம், உடன்குடி, எட்டையபுரம், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை, மானாமதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், ராமேஸ்வரம், ஏர்வாடி, கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, கீழக்கரை, சிவகாசி, திருவில்லிபுத்தூர், இராஜபாளையம், சங்கரன்கோவில், சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, பாபநாசம் என தமிழ்நாட்டின் ஏனய பகுதிகளுக்கு செல்ல நேரடியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கேரள மாநிலத்தின் கொல்லம், திருவனந்தபுரம், புனலூர், கொட்டாரக்கரை, மூணார், கோட்டயம், எர்னாகுளம், பாலக்காடு, திருச்சூர், குருவாயூர், மலப்புறம், கோழிக்கோடு, கண்ணூர் போன்ற முக்கிய நகரங்களுக்கும், பெங்களூரு, மைசூர், மடிக்கேரி, திருப்பதி, பாண்டிச்சேரி போன்ற வெளிமாநில நகரங்களுக்கும் பேருந்து உள்ளன.) ஆரப்பாளையம் பேருந்து நிலையம் :(கோயமுத்தூர், மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி, திருப்பூர், அவிநாசி, அன்னூர், பல்லடம், தாராபுரம், ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், எடப்பாடி, சங்ககிரி, திருச்செங்கோடு, சேலம், ஓமலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், நாமக்கல், கொடுமுடி, கரூர், ஆண்டிபட்டி, வருசநாடு, தேனி, போடி, உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர், குமுளி, கோம்பை, தேவாரம், பெரியகுளம், வத்தலகுண்டு, கொடைக்கானல், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி போன்ற இடங்களுக்கு பேருந்து உள்ளன.) தொடருந்து thumb|right|200px|மதுரை சந்திப்பு|alt=Building having a portico and pillared halls மதுரை சந்திப்பு தென் தமிழகத்தின் முக்கிய இரயில் நிலையமாக உள்ளது. இதனைத் தலைமையிடமாகக் கொண்டு தென்னக இரயில்வேயின் மதுரை இரயில்வே கோட்டம் செயல்படுகிறது. இது சென்னையை அடுத்து அதிக வருமானம் தரக் கூடிய கோட்டமாக உள்ளது. மதுரையிலிருந்து நாட்டின் மற்ற முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி, ஜெய்ப்பூர், லக்னோ, பட்னா, கொல்கத்தா, ஐதராபாத், விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கோவை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி, ராமேசுவரம், திருவண்ணாமலை, திருப்பதி, வேலூர், கன்னியாகுமரி போன்றவற்றை இணைக்கும் வண்ணம் நேரடி தொடருந்து சேவைகளும் உள்ளன. மதுரையானது நாட்டின் பிற பகுதிகளுடன் தொடருந்து சேவைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மதுரையில் மாநில அரசினால் அறிவிக்கப்பட்ட மோனோ ரயில் சேவை திட்டமிடல் கட்டத்தில் உள்ளது. விமானம் thumb|right|250px|மதுரை விமான நிலையம் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் தமிழகத்தின் மூன்றாவது பெரிய விமான நிலையம் ஆகும். இது நகரின் மையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு விமானச் சேவையும் மற்றும் பன்னாட்டு விமானங்கள் இலங்கை, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இயக்கப்படுகிறது. விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், மிகின் லங்கா, ஸ்பைஸ் ஜெட் ஆகியவற்றால் விமான சேவைகள் விளங்கப்படுகிறது. மதுரை விமான நிலையம் 5.2 இலட்சம் பயணிகளை ஏப்ரல் 2011 முதல் மார்ச்சு 2014 காலகட்டத்தில் கையாண்டுள்ளது. கல்வி thumb|அமெரிக்கன் கல்லூரி மதுரை பல நூற்றாண்டுகளாக தமிழ் கலாச்சாரம், இலக்கியம், இசை, நடனம் மற்றம் பல கலைகளைக் கற்பிக்கும் மையமாக விளங்கியது. மதுரையை மையமாகக் கொண்டு மூன்று தமிழ்ச் சங்கங்கள் இயங்கி வந்துள்ளன. சங்க இலக்கியங்கள் பல இங்கு தான் அரங்கேற்றப்பட்டன எனவும் நம்பப்படுகிறது. மதுரைத் தமிழ்ச் சங்கம் மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் செயல்படுகிறது. சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் பழந்தமிழர்களின் மேன்மையை படம் பிடித்து காட்டுகிறது. மதுரையின் பழமையான கல்லூரி, 1881-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அமெரிக்கன் கல்லூரி ஆகும். நகரின் முதல் பெண்கள் கல்லூரியாக 1948-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டோக் பெருமாட்டி கல்லூரி உள்ளது. இவை தவிர, தியாகராசர் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1949), மதுரைக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1889), பாத்திமா கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1953), தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1962), நாட்டின் பழமையான மேலாண்மைப்பள்ளிகளுள் ஒன்று மற்றும் சௌராஷ்டிரா கல்லூரி,சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, வக்பு வாரியக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1964), சரசுவதி நாராயணன் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1966) ஆகியவை நகரின் பழமையான கல்வி நிலையங்களில் குறிப்பிடத்தக்கவை. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் (ஆரம்ப காலங்களில் மதுரைப் பல்கலைக்கழகம்) 1966-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, ஒரு மாநிலப் பல்கலைக் கழகமாகும். இதனுடன் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள 109-இற்கும் மேலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 47 (தன்னாட்சி, அரசு உதவி, சுயநிதி, உறுப்பு கல்லூரி மற்றும் மாலை நேரக் கல்லூரிகள் உட்பட) பல்கலைக்கழகத்தால் ஏற்பு பெறப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. இது தவிர ஏழு பல் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் 5 தொழிற்பயிற்சிப் பள்ளிகள்(ஐடிஐ) மதுரையில் உள்ளன. இவற்றுள் அரசு தொழிற்பயிற்சிப் பள்ளி, தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மகளிர் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை குறிப்பிடத்தக்கன. மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் என இரு மருத்துவக் கல்வி நிலையங்களும், 11 துணை மருத்துவக் கல்வி நிலையங்களும் மதுரையில் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற ஏழு பொறியியல் கல்வி நிலையங்கள் மதுரையில் உள்ளன. இதில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி பழமையானதாகும். இது தவிர மதுரையைச் சுற்றிலும் பல சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. 1979-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மதுரை சட்டக்கல்லூரி, தமிழகத்தில் உள்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளுள் ஒன்றாகும். இது தமிழ்நாடு அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை தவிர மதுரை நகரில் மூன்று ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், இரு இசைக் கல்லூரிகள், மூன்று மேலாண்மைக் கல்லூரிகள் மற்றும் 30-இற்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. 1965-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தது) தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வேளாண்மைக் கல்லூரி ஆகும். இதனுடன் மனையியல் கல்லூரி ஒன்றும் உள்ளது. மதுரை நகரில் சுமார் 369 ஆரம்ப, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. வழிபாட்டிடங்கள் thumb|180px|மீனாட்சி அம்மன் கோயில் குளத்தின் பின்னணியில் கோவில் கோபுரங்கள் மதுரையில் பல கோவில்கள் இருப்பதால், இது கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் மீனாட்சியம்மன் கோவில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோவிலாகும். இது வைகையாற்றின் தெற்கில் அமைந்துள்ளது. கோவில் கட்டிடமானது 45-50 மீ. உயரம் கொண்ட பல்வேறு கோபுரங்களைக் கொண்டுள்ளது. இதில் தெற்கு கோபுரம் 51.9 மீ. (170 அடி) உயரத்துடன் மிக உயரமானதாகும். கருப்ப கிரகத்தின் மேல் இரண்டு தங்க விமானங்களும் அமைந்துள்ளன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் இக்கோவில் பற்றி குறிப்பிடப்படுவது இதன் பழமைக்குச் சான்றாகும். கோவிலின் தற்போதைய அமைப்பானது பொ.ஊ. 1623-இலிருந்து 1655-இற்குள் கட்டப்பட்டதாகும். தினசரி 15,000 பேர்களும், வெள்ளிக்கிழமைகளில் 25,000 பேர் வரையும் கோவிலைப் பார்வையிடுகின்றனர். சுமார் 33,000 சிற்பங்கள் வரை கோவிலில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. புதிய உலக அதிசயங்களுக்கான முதல் முப்பது பரிந்துரைகளில் இக்கோவிலும் இடம் பெற்றிருந்தது. நகரினுள் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவிலில் சிவாலயங்களில் காணப்படுவது போன்று நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் சோலைமலை அடிவாரத்தில் அழகர் கோவில் அமைந்துள்ளது. சோலை மலையின் மேல் முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பழமுதிர்சோலை அமைந்துள்ளது. left|thumb|200px|காசிமார் பெரிய பள்ளிவாசல், நகரின் முதல் தொழுகைப் பள்ளி|alt=Mosque building with two minarets காசிமார் பெரிய பள்ளிவாசல் நகரின் பழமையான முசுலிம் வழிபாட்டுத் தலம் ஆகும். இப்பள்ளிவாசல் 13-ஆம் நூற்றாண்டில் குலசேகரப் பாண்டியனிடமிருந்து தானமாகப் பெற்ற நிலத்தில், ஓமனில் இருந்து வந்த காசி சையது தாசுத்தீன் அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. சையது தாசுதீனின் வழித்தோன்றல்களே மதுரை நகரின் காசிகளாக தமிழக அரசால் நியமிக்கப்படுகின்றனர். மதுரை அசரத்தின் தர்காவான மதுரை மக்பரா இப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம், மதுரையிலிருந்து எட்டு கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மீனாட்சியம்மன் கோவிலை அடுத்து திருப்பரங்குன்றம் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது. மேலும் மலைக் குன்றின் மீது அசரத்து சுல்தான் சிக்கந்தர் பாதுசாவின் தர்காவும் அமைந்துள்ளது. கோரிப்பாளையம் தர்காவானது கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது. கோர் என்ற பாரசீக வார்த்தைக்கு கல்லறை என்பது பொருள். இங்கு அசரத்து சுல்தான் அலாவுத்தீன் பாதுசா, அசரத்து சுல்தான் சம்சுத்தீன் பாதுசா மற்றும் அசரத்து சுல்தான் அபிபுத்தீன் பாதுசா ஆகியோரின் கல்லறைகள் உள்ளது. புனித மரியன்னை தேவாலயமானது கத்தோலிக்க திருச்சபை மதுரை உயர்மறை மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. கலாச்சாரம், சுற்றுலா மற்றும் கொண்டாட்டங்கள் right|thumb|180px|இந்தோ சரசானிக் முறையில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் அரண்மனை தூண்கள் மதுரை நகரமானது இரவிலும் செயல்பாட்டில் இருப்பதால் "தூங்கா நகரம்" என பரவலாக அறியப்படுகிறது. மதுரை அதிக அளவு சுற்றுலா பயணிகளைக் கவரும் நகரங்களுள் ஒன்று. 2010-ஆம் ஆண்டில் மட்டும் 91,00,000 சுற்றுலா பயணிகள் மதுரை நகருக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் 5,24,000 வெளிநாட்டினரும் அடக்கம். மருத்துவச் சுற்றுலாப் பயணிகளும் தற்போது மதுரைக்கு பெருமளவு வருகின்றனர். இந்தோ சரசானிக் பாணியில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகால் சுற்றுலாப் பயணிகளைப் பெருதும் கவர்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தேசிய நினைவுச் சின்னம் ஆகும். இங்கு தமிழக தொல்லியல் துறையால் திருமலை நாயக்கர் மற்றும் மகாலின் வரலாற்றைக் கூறும் ஒலி - ஒளிக் காட்சிகளும் மாலையில் காட்டப்படுகின்றன. இராணி மங்கம்மாளின் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தற்போது காந்தி அருங்காட்சியமாகச் செயல்படுகிறது. இது நாட்டிலுள்ள ஐந்து காந்தி நினைவு அருங்காட்சியகங்களுள் ஒன்று. இங்கு நாதுராம் கோட்சேவால் கொல்லப்பட்டபோது காந்தி அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த ஆடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வருங்காட்சியத்தை பார்வையிட்டதே தனது நிறவெறிக்கெதிரான அமைதி வழிப் போராட்டத்துக்கு தூண்டுதலாக இருந்தது என மார்டின் லூதர் கிங் குறிப்பிட்டுள்ளார். தல்லாகுளத்தில் அமைந்துள்ள சூழலியல் பூங்கா விளக்கு மற்றும் ஒளியிழைக் கம்பிகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்கள் மற்றும் நீர்ச் சுனைகளைக் கொண்டுள்ளது(மாலை நேரத்தில் மட்டும் அனுமதி). தமுக்கம் மைதானம் மற்றும் காந்தி அருங்காட்சியகத்துக்கு இடையே அமைந்துள்ள இராசாசி பூங்காவை விடுமுறை நாட்களில் 5000 பேர் வரையும் வேலை நாட்களில் 2000 – 3000 பேர் வரையும் பார்வையிடுகின்றனர். இது தவிர மதுரை – திண்டுக்கல் சாலையில் பரவை அருகே அதிசயம் பொழுதுபோக்கு பூங்காவும் உள்ளது. இது தவிர செயற்கை இழை மைதானம், நீச்சல் குளம் கொண்ட எம். ஜி. ஆர். ரேசு கோர்சு மைதானமும் உள்ளது. இங்கு பல்வேறு தேசிய விளையாட்டுப் போட்டிகளும், பன்னாட்டு கபாடி போட்டிகளும் நடைபெறுகின்றன. "ஜில் ஜில் ஜிகர்தண்டா" என்று உள்ளூர் கடைக்காரர்களால் அழைக்கப்படும் சீனப் பாசி கலந்த ஒரு வகைக் குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது. left|thumb|180px|காந்தி அருங்காட்சியகம் thumb|வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா மதுரை நகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல், தேரோட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகும் முழுவதிலுமிருந்து பல இலட்சம் சுற்றுலா பயணிகளைக் கவர்கிறது. இதை ஒட்டி திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆவணிமூல விழாவில் சிவனின் அறுபத்து நான்கு திருவிளாயாடல்களும் நடத்தப்படுகின்றன. அது தை மாதம் முழு நிலவு நாளில் கொண்டாடப்படும் தெப்பத்திருவிழாவில் அலங்கரிக்கப்பட கடவுள் சிலைகள் தெப்பதில் வைத்து விடப்படுகின்றன.{{sfn|Tourism in Madurai} அதுபோல் பொங்கல் திருநாளை ஒட்டி மதுரை சுற்று வட்டார கிராமங்களில் ஏறுதழுவுதல் (ஜல்லிக்கட்டு) நடைபெறுகிறது. இவை தவிர கோரிப்பாளையம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா, தெற்குவாசல் புனித மேரி தேவாலயத்தில் கொண்டாடப்படும் கிறித்துமசு விழா போன்றவை நகரின் பிற முக்கியத் திருவிழாக்கள். இது தவிர மதுரையை மையமாகக் கொண்டு பல திரைப்படப் படப்பிடிப்புகளும் நடைபெறுகின்றன. ஊடகம் மற்றும் பிற சேவைகள் நகரில் பல்வேறு வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு நிறுவனமான அனைத்திந்திய வானொலி, தனியார் நிறுவனங்களான  ரேடியோ சிட்டி ,சூரியன் எப். எம், ரேடியோ மிர்ச்சி, ஹலோ எப். எம் ஆகியன குறிப்பிடத்தக்கவை. தினமலர், தினகரன், தமிழ் முரசு, தினத்தந்தி, தினமணி, ஆகிய காலை நாளிதழ்களும், மாலை மலர், தமிழ் முரசு போன்ற மாலை நாளிதழ்களும், தி இந்து, தி நியூ இந்தியன் எக்சுபிரசு, டெக்கான் கிரானிக்கிள், டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் மதுரையில் பதிப்புகளைக் கொண்டுள்ளன. பல்வேறு வகையான நிறுவனங்கள் தொலைக்காட்சி இணைப்பை வழங்குகின்றன. மதுரை நகரின் மின்சேவையானது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரையானது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மதுரை வட்டாரத்தின் தலைமையிடமாக உள்ளது. மதுரை நகர் மற்றும் புற நகர் பகுதிகள் மதுரை மாநகர மின்பகிர்மான வட்டத்தின் கீழ் உள்ளது. இது மேலும் ஆறு துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரை நகரில் குடிநீரானது மதுரை மாநகராட்சி மூலம் விநியோகிக்கப்படுகிறது. 2010–2011 காலகட்டத்தில் 87,091 இணைப்புகளுக்கு 950.6 இலட்சம் இலிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறை மூலம் சுமார் 400 மெட்ரிக் இடன்கள் அளவு கழிவுகள் சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. மழைநீரைச் சேகரிப்பதற்காக சாலையின் ஓரங்களில் மழைநீர் சேகரிப்பு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் முதல் முதலில் 1924-ஆம் ஆண்டு பிரிட்டிசு ஆட்சியின் கீழ் அமைக்கப்பட்டன. பின் 1959 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் விரிவாக்கப்பட்டன. 2011-ஆம் ஆண்டின் ஜவகர்லால் நேரு தேசிய ஊரக புதுப்பிப்பு திட்டம் மூலம் நகரின் 90 விழுக்காடு பகுதிகள் பாதாள சாக்கடை திட்டத்தில் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. thumb|ஹனிவெல் மதுரை நகரானது, பி.எஸ்.என்.எல் -இன் மதுரை தொலைத் தொடர்பு வட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. உலகளாவிய நடமாடும் தகவல் தொடர்புகள் திட்டம் (GSM) மற்றும் சிடிஎம்ஏ இணைப்புகளும் மதுரை நகரில் கிடைக்கின்றன். இது தவிர அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் கிடைக்கப் பெறுகிறது. பாரத்து சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் அழைப்பாளர் தெரிவு வகை இணைப்பான நெட்ஒன் இணைப்பும் உள்ளது. மதுரை நகரில் 2007, டிசம்பர் 17-இல் இருந்து கடவுச் சீட்டு அலுவலகம் இயங்கி வருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகியவை இதன் ஆளுகையின் கீழ் உள்ளன. நகரில் தென் மாவட்டங்களில் பெரிய மருத்துவமனையான அரசு இராசாசி மருத்துவமனையும் உள்ளது. பிரச்சினைகள் ஒவ்வொருநாளும் பெருகிவரும் இருசக்கர வாகனங்கள், மகிழுந்துகள் போன்றவற்றின் காரணமாக நகருக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்கள், முறைப்படுத்தப்படாத போக்குவரத்து விதிகள், வைகை ஆற்றில் கலந்துவிடப்படும் பல்வேறு விதமான மாசுபட்ட திட மற்றும் திரவக் கழிவுகள், சாலைகளின் ஓரங்களில் தீயநாற்றத்தை ஏற்படுத்தும் குப்பைகள் மற்றும் சாக்கடைகள் எனப் பல சவால்களை மதுரை நகரம் எதிர்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் left|thumb|150px|மதுரை நகரின் நெரிசலான சாலைகள் மதுரை நகர் கடந்த சில ஆண்டுகளாக சந்தித்து வரும் மிக முக்கிய பிரச்சினையாக வைகை ஆறு மாசுபடுவதைக் குறிப்பிடலாம். மதுரை நகரின் முக்கிய சாக்கடைகள், சிறு தொழிற்சாலைகளின் கழிவுநீர் போன்றவை வைகை ஆற்றில் கலக்கப்படுவதால் வைகை ஆறு மாசடைந்து காணப்படுகிறது. இது தவிர வைகையின் இரு கரைகளிலும் உள்ள மக்கள் குப்பைகளை அதிக அளவில் வைகை ஆற்றுக்குள் கொட்டுவதாலும் ஆறு மாசடைகிறது. இவற்றைப் பற்றி உள்ளூர் நாளிதழ்கள் சுட்டிக்காட்டுவதும், மாநகராட்சி நிர்வாகம் தற்காலிக நடவடிக்கை எடுப்பதும் மதுரையில் வழமையாக நடக்கும் நிகழ்வுகள். வைகையாற்றில் கழிவுகள் மக்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் சாக்கடை நீர், ஆற்றின் கரையோரம் உள்ள சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் மற்றும் நகரின் பல இடங்களில் சேகரிக்கப்படும் மனிதக் கழிவுகள் முதலியன வைகை ஆற்றில நேரடியாக கலந்து விடப்படுகின்றன. இவை தவிர இறைச்சிக் கடை கழிவுகள் முதலிய திடக்கழிவுகளும் ஆற்றுக்குள் கொட்டப்படுகின்றன. இதனால் வைகை ஆறு மாசடைந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக சித்திரைத் திருவிழாவின் போது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு மிக அருகில் பந்தல்குடி கண்மாய் நீர் வைகையாற்றில் கலக்கும் இடம் தற்போது சாக்கடை கலக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே வருடத்தின் பெருவாரியான நாட்களில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடமும் மாசடைந்து காணப்படுகிறது. போக்குவரத்து பிரச்சினைகள் நீண்ட காலத்திற்கு முன்பு வடிவைக்கப்பட்ட நகரின் சில பிரதான சாலைகள் வளர்ந்து வரும் வாகனப் போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. சிம்மக்கல், கோரிப்பாளையம், காளவாசல், பழங்காநத்தம், காமராஜர் சாலை போன்ற இடங்களில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படுகிறது. இதனை மனதில் வைத்து வழிமொழியப்பட்ட பறக்கும் சாலைகள் திட்டம் இன்னும் திட்ட அளவிலேயே இருக்கின்றது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ் மதுரை நகருக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்பட்டது. இருப்பினும் நெரிசலைக் குறைக்கும் வகையில் புதிய பாலங்கள் எதுவும் இன்னும் அமைக்கப்படவில்லை. சென்னையை அடுத்து கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று சமீபத்தில் தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு மெட்ரோ ரயில் போக்குவரத்து மதுரை நகருக்கு கிடைக்குமாயின் தற்போதைய போக்குவரத்துப் பிரச்சினை பெரும்பகுதி குறைக்கப்படும். இதனையும் காண்க புதுமண்டபம் திருமலை நாயக்கர் அரண்மனை காந்தி அருங்காட்சியகம் சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் மேற்கோள்கள் உசாத்துணைகள் வெளி இணைப்புகள் மதுரை மாவட்ட ஆட்சியர் இணையதளம் மதுரை மாநகராட்சியின் இணையதளம் *மதுரை வரலாறு 1945-ஆம் ஆண்டில் மதுரை நகரம், காணொளி Majestic Madura மதுரை வரலாறு - காணொளி மதுரைக்கு அருகில் 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய வணிக நகரம் காணொளிக் காட்சி பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மாநகரங்கள் பகுப்பு:இந்து புனித நகரங்கள் பகுப்பு:பண்டைய இந்திய நகரங்கள்
நல்லூர்க் கந்தசுவாமி கோயில்
https://ta.wikipedia.org/wiki/நல்லூர்க்_கந்தசுவாமி_கோயில்
REDIRECT நல்லூர் கந்தசுவாமி கோவில்
யாழ்ப்பாணக் கோட்டை
https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணக்_கோட்டை
யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்த அரசின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளது. போத்துக்கீசர் காலம் யாழ்ப்பாண அரசு 1619 இல் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை நல்லூரிலிருந்து அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு கோட்டையையும் கட்டினர்.Antonio Bocarro’s Description of Ceylon (Translated into English by T. B. H. Abeyasinghe), The Journal of the Royal Asiatic Society of Sri Lanka, New Series, Vol XXXIX, Special Number, 1999. pp. 56, 57 1619 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள கோவாவிலிருந்த தலைமையகத்திலிருந்து பிலிப்பே டி ஒலிவேராவுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை 1625 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. 1629 இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், 1637 இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே கத்தோலிக்கத் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், வைத்தியசாலையொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன.Ribeiro, Joao., The Histiric Tragedy of the Island of Ceilao (Translated from Portuguese by P. E. Pieris), Asian Educational Services, New Delhi, 1999 (First Published 1909), p. 2013. போத்துக்கீசரின் யாழ்ப்பாண நகரம் (போர்த்துக்கேயர் குடியேற்றம்) கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.Antonio Bocarro’s Description of Ceylon, 1999. pp. 57 ஒல்லாந்தர் காலம் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ஜூன் 22 இல் கைப்பற்றினர். போர்த்துக்கேயரின் கோட்டையையே ஒல்லாந்ததும் சில ஆண்டுகள் பயன்படுத்தினர். பின்னர் அதனை இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள். முதலில் ஐங்கோணக் கோட்டையின் உள் அரண்களையும், பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் வெளிச் சுற்று அரண்களையும் கட்டினர்.Nelson, W. A., The Dutch Forts of Sri Lanka, Sri Lanka Netherlands Association, Colombo, 2004, p. 82. இக்கோட்டைக்குள் கட்டளைத் தளபதியின் இல்லமும், பிற படை அதிகாரிகளுக்கான இல்லங்களும் இருந்தன. மருத்துவமனை, சிறைச்சாலை என்பன உள்ளிட்ட வேறு பல கட்டடங்களும் இக்கோட்டைக்குள் காணப்பட்டன. இவற்றுடன், கிரேக்கச் சிலுவை வடிவில் அமைந்த தேவாலயம் ஒன்றும் அமைந்திருந்தது. தற்காலம் 1984–1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதிகாக்கும் படை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கோட்டையை முற்றுகையிட்ட புலிகள் பல மாதங்களின்பின் அதனைக் கைப்பற்றிக்கொண்டனர். கைப்பற்றிய சிறிது காலத்தில் மீண்டும் இவ்வாறான நிகழ்வைத் தடுக்க கோட்டையின் பெரும்பகுதி புலிகளின் ஆலோசனையின் கீழ் அழிக்கப்பட்டது. 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் மீண்டும் கைப்பற்றியபோது இக்கோட்டையின் எச்சங்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்தன. படங்கள் மேலும் பார்க்க யாழ்ப்பாண அரசு யாழ்ப்பாண மாவட்டம் யாழ்ப்பாண நகரம் யாழ்ப்பாணக் குடாநாடு யாழ்ப்பாண வரலாறு மேற்கோள்கள் பகுப்பு:யாழ்ப்பாண வரலாறு பகுப்பு:இலங்கையில் உள்ள கோட்டைகள் பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள கட்டடங்களும் கட்டமைப்புக்களும் பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள கோட்டைகள் பகுப்பு:இலங்கையின் தொல்லியற்களங்கள் பகுப்பு:இலங்கையில் உள்ள போர்த்துக்கீசக் கோட்டைகள்
பிலிப்பே டி ஒலிவேரா
https://ta.wikipedia.org/wiki/பிலிப்பே_டி_ஒலிவேரா
பிலிப்பே டி ஒலிவேரா 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையிலிருந்த போத்துக்கீசத் தளபதிகளுள் ஒருவர். 1619 இல் இவரின் தலைமையில் வந்த படையினரே யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி அதனைப் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். இதன் பின்னர் இப்பகுதியின் "கப்டன் மேஜரா"க ஒலிவேராவே நியமிக்கப்பட்டார். கடும் போக்குக் கத்தோலிக்கரான இவர், பிரபலமான நல்லூர்க் கந்தன் கோயில் உட்பட, யாழ்ப்பாணத்திலிருந்த பல இந்துக் கோயில்களை இடிப்பித்தார். நல்லூர் கோயில் அழிக்கப்பட்டது தொடர்பாக குவைறோஸ் பாதிரியார் தானெழுதிய நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: "பிலிப்பே டி ஒலிவேரா பெப்ரவரி 2 ஆம் திகதி நல்லூருக்குச் சென்று இந்துக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட பெரிய கோயிலைத் தரைமட்டமாக்கும்படி ஆணையிட்டான். கோயிலை இடியாது விடுவதற்காக, வேண்டியவனைத்தும் தருவதாகவும், வீடுகள் கட்டித்தருவதாகவும் பலமுறை இந்துக்கள் கேட்டுக்கொண்டது, கோயிலை இடிக்கவேண்டுமென்ற அவனது விருப்பத்தை மேலும் அதிகரித்தது. ஏனெனில் அவன் ஒரு மகத்தான கிறிஸ்தவனாவான்."Fernao De Queyroz, The Temporal and Spiritual Conquest of Ceylon, (translated by Perera, S.G., from Portuguese), Colombo, 1930, (மறுபதிப்பு: Asian Educational Services Vol II, 1992, New Delhi, p.243). யாழ்ப்பாண அரசின் கீழிருந்த பகுதிகளின் தலைநகரமாக யாழ்ப்பாண நகரத்தை உருவாக்கியவரும் இவரே. சுமார் எட்டு வருடங்கள் கப்டன் மேஜராக யாழ்ப்பாணத்தை நிர்வகித்துவந்த ஒலிவேரா, 1627 ஆம் ஆண்டு மார்ச் 22 இல் தனது 53 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் இறந்தார். பிற சமயங்களின்பால் கடுமையாக நடந்து கொண்டாலும், யாழ்ப்பாணத்தில் ஏழைகளுக்கும், விதவைகள் முதலியவர்களுக்கும் பயன்படும்வகையில் "மிசரிக்கோடியா" என்று அழைக்கப்பட்ட வைத்தியசாலையொன்றைத் தன் சொந்தச் செலவிலேயே கட்டிக்கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எல்லோரும் ஒலிவேராமீது அன்பு கொண்டிருந்ததாகவும், அவரை "பிலிப்பே ராஜா" என்றே அழைத்து வந்ததாகவும் குவைறோஸ் பாதிரியார் குறிப்பிடுகின்றார். 1627 பெப்ரவரி 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை உலுக்கிய சூறாவளியின் போது, அவரது வீட்டில் ஒதுங்கிய மக்கள் மீது அவர் காட்டிய அக்கறையையும் அவர்கள் தொடர்பில் அவர் நடந்துகொண்ட விதம் பற்றியும் குவைறோஸ் உயர்வாகப் பேசியுள்ளார். குறிப்புகள் இவற்றையும் பார்க்கவும் யாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி பகுப்பு:1627 இறப்புகள் பகுப்பு:போர்த்துக்கேய இலங்கை பகுப்பு:17-ஆம் நூற்றாண்டில் இலங்கை பகுப்பு:யாழ்ப்பாண அரசு
சமசுகிருதம்
https://ta.wikipedia.org/wiki/சமசுகிருதம்
சமசுகிருதம் (ஆங்கிலம்: Sanskrit), சமற்கிருதம் அல்லது சங்கதம் என்பது இந்தியாவின், மிகப்பழைய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழியையும் பாகத மொழிகளையும் வடமொழி என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இது இந்தோ-ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும். இந்தியாவில், உத்தராகண்ட மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழியாகக் கொண்டுள்ளது.உத்தராகண்ட் - வடமொழி தற்போது கருநாடகா மாநிலத்தில், சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது.Tale of two villages எனினும் இந்து சமயத்தின் நான்கு வேதங்கள், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, இராமாயணம் மற்றும் மகாபாரதம், புராணங்கள் போன்ற பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய இலக்கியங்கள் இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. காளிதாசர் சமசுகிருத மொழியில் பல இலக்கியங்களைப் படைத்தார். பாணினி என்பார் சமசுகிருத மொழி இலக்கணத்தைப் படைத்தார். இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். இந்தி, வங்காளி, குசராத்தி, மராத்தி, காசுமீரி, அரியான்வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சாபி, உருது முதலிய மேம்பட்ட வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது.‘Sanskrit has had profound influence on world languages’ தென் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் வட மொழிச் சொற்கள் அதிகம் இருப்பதைக் காணலாம். எனினும் பல சொற்கள் தமிழ் மொழியில் இருந்து எடுக்கப்பட்டவையாக இருக்கலாம் என அறிஞர்கள் கூறுவர். சமற்கிருத பாரதி அமைப்பு, பரந்த அளவில் பேச்சு வழக்கில் எளிய வட மொழியை மீண்டும் பயன்படுத்த மக்களுக்கு பயிற்சியளித்து வருகின்றது. தமிழ் மொழிக்கு அடுத்து 2015-ஆம் ஆண்டில் சமசுகிருத மொழிக்கு செம்மொழி தகுதி கிடைத்தது. Classical language தொல்காப்பிய தமிழாக்கல் முறை தொல்காப்பியத்தின் மூன்று நூற்பாக்களிளும் தமிழில் வடமொழி என தமிழாக்க விதிக்கிறது. எனவே சமசுகிருதம் அல்லது சமற்கிருதம் எனும் சொற்கள் கொடுந்தமிழாக கருதப்படுகிறது. தற்கால பயனில் சீனிவாச சருமா இயற்றிய வடமொழி நாடக இலக்கிய வரலாறு, சு. சாத்திரியார் இயற்றிய வடமொழி நூல் வரலாறு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. தமிழ் மொழிக்கு அடுத்து 2015-ஆம் ஆண்டில் சமசுகிருத மொழிக்கு செம்மொழி தகுதி வழங்கப்பட்டது. Classical language வரலாறு thumb|right சமற்கிருதம் என்பதன் பொருள் (அழகு/இலக்கணம்)http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.1:1:1188.tamillex வடமொழி பிராகிருதத்தின் (பிராகிருதம் = மக்கள் பேச்சு வழக்கில் முதன்மை கொண்டது) செம்மையான மொழிவடிவம் என்று கருதப்படுகின்றது. பிராகிருதம் என்பது மகதி, மகாராட்டிரி, சவுரசேனி, பைசாச்சி முதலிய நான்கு அமைப்புகளுள் அடங்கும் மொழிகளை குறிக்கும். பாளி ஒரு பிராகிருத மொழியாகும். வேதிய வடமொழியிருந்து தோன்றி பிறகு பொ.ஊ.மு. முதலாம் ஆயிரவாண்டில் மக்கள் பேச்சுவழக்கில் திரிந்து வெவ்வேறு மொழிகளாக ஆனவை பிராகிருதம் என்ற பெயர் பெற்றது. இம் மொழிக்கு பல கட்டங்களில் இலக்கணங்கள் இயற்றப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது. இதன் பழைய வேதகால வடிவம், எல்லாப் பிற்கால இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் மூலமான முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழிக்குக் கிட்டியதாகும். வேதகால வடமொழி ஈரானின் அவெத்தன் மொழியை ஒத்தது. இதன் இலக்கணமும் சொல்லாக்கமும் உறுதியான பின்னர், இது ஒரு அழகியல் ஒழுங்கமைவுக்கு உட்பட்ட மொழியானதுடன், நாடகம், மருத்துவம், அரசியல், வானியல், கணிதம் முதலியவை சார்ந்த இலக்கியங்களும் உருவாயின. பல மேம்பட்ட ஐரோப்பிய மொழிகளுடனும், கிரேக்கம், இலத்தீன் முதலிய செம்மொழிகளுடனுமான வடமொழியின் பொது உற்பத்தியை, வடமொழியில் தாய் (மாதர்), தந்தை (பிதர்) என்பவற்றுக்கான சொற்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். எயின்றிச்சு உரோத்து மற்றும் சொகான் ஏருணெட்டு அங்குலெடன் என்பவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட ஐரோப்பிய வடமொழி ஆராய்ச்சி, வில்லியம் இயோனுசு இந்த மொழிக்குடும்பத்தைக் கண்டுபிடிக்க வித்திட்டதுடன், மொழியியலின் வளர்ச்சியிலும் தலைமையான பங்கு வகித்தது. உண்மையில், மொழியியல், வடமொழிக்கான விதிகளை ஒழுங்கமைக்கும் முயற்சியின்போது, இந்திய இலக்கணவியலாளர்களாலேயே முதலில் வளர்க்கப்பட்டது. பிற்காலத்தில் உலகின் ஏனைய பகுதிகளில் வளர்ந்த மேம்பட்ட மொழியியல், மேற்படி இலக்கணவியலாளர்களுக்குப் பெருமளவு கடமைப்பட்டுள்ளது. வடமொழியே இந்தோ-ஆரியனின் ஒரு கிளையான இந்தோ-ஈரானியனின் மிக மூத்த உறுப்பு மொழியாகும். வேதங்களும், தொன்மையான வடநூல்களும் எழுதப்பட்ட வேதகால வடமொழியே இம்மொழியின் மிகப்பழைய வடிவமாகும். மிகப் பழைய வேதமான இருக்கு வேதம் பொ.ஊ.மு. இரண்டாவது ஆயிரவாண்டின் இடையில் இயற்றப்பட்டது. வேதகால வடிவம் பொ.ஊ.மு. முதலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை வழக்கிலிருந்தது. ஏறத்தாழ இக் காலப்பகுதியில் வடமொழி, சமயம் மற்றும் கல்வியைப் பொறுத்தவரை தனது முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு இறங்கியது. இக்காலப்பகுதியில் நிகழ்ந்த வடமொழியின் அமைப்புப் பற்றிய ஆய்வுகள் மொழியியலின் தொடக்கத்துக்கு வழி சமைத்தன. இப்பொழுது கிடைக்கும் மிகத் தொன்மையான வடமொழி இலக்கணம் பாணினியின் சு. பொ.ஊ.மு. 500 அட்டாத்தியாயி ("8 அத்தியாய இலக்கணம்"). காப்பிய வடமொழி என்று அழைக்கப்படும் ஒரு வடமொழி வடிவத்தை மகாபாரதம் மற்றும் ஏனைய இந்துக் காப்பியங்களில் காணலாம். கீழ் மட்ட வடமொழியே பிராகிருதமாகவும் (ஆரம்ப கால பௌத்த நூல்கள் இம் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன), மேம்பட்ட இந்திய மொழிகளாகவும் வளர்ச்சியடைந்திருக்கக்கூடும். வடமொழிக்கும் தென்னிந்தியாவின் திராவிட மொழிகளுக்கு இடையேயும் கூட இருவழிச் செல்வாக்கு இருந்துள்ளது. எழுத்து வரலாற்று நோக்கில் சமசுகிருதத்துக்கோர் எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய பிராமி எழுத்துக்கள் அசோகச் சக்கரவர்த்தியின் தூண் கல்வெட்டுக்களின் காலம் வரை கூடப் புழக்கத்திலிருந்தது. பின்னர், கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், தெற்கே கன்னடம் போன்ற எழுத்துக்களும், வடக்கே வங்காளம் மற்றும் ஏனைய வட இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல ஆண்டுகளாக, சிறப்பாக அண்மைக் காலங்களில் தேவநாகரி எழுத்துக்களே பரவலாக சமசுகிருதத்துடன் தொடர்புபட்டுள்ளது. சில சூழல்களில், குறிப்பாக தேவநாகரி எழுத்துக்கள் உள்ளூர் எழுத்து முறைமையாக இல்லாத பகுதிகளில் கிரந்த எழுத்துக்கள் அல்லது உள்ளூர் எழுத்துக்கள் பயன்பாட்டிலுள்ளன. சமசுகிருதத் தொடர்பில் எழுத்து அறிமுகப் படுத்தப்பட்டது பிற்காலத்திலே ஆகும். பரம்பரை பரம்பரையாக அறிவு, வாய் மொழி மூலமே கடத்தப்பட்டு வந்தது. எழுத்து நடு கிழக்கிலிருந்து வந்த வணிகர்களூடாக இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கலாம் என்று இரைசு இடேவிட்டு (Rhys Davids) என்பார் கருதுகின்றார். எனினும், சமசுகிருதம் தொடர்ந்தும் பல காலம் வாய்மூல மொழியாகவே புழங்கி வந்தது. எனினும், ஒலிகள் தொடர்பான வேத தத்துவங்களும், எழுத்திலக்கணமும், இந்துக் குறியீட்டு முறையில் வகிக்கும் பங்கு கவனிக்கத் தக்கதாகும். 51 எழுத்துக்களைக் கொண்ட வருணமாலா என்று அழைக்கப்படும் ஒலிமாலை, காளியின் 51 மண்டையோடுகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. செல்வாக்கு நவீன இந்தியா சமசுகிருதத்தின் சொற்றொகுதியையும், இலக்கண அடிப்படையையும் கொண்டு உருவான தற்காலத்து மொழிகள் மீதான அம்மொழியின் தாக்கம் மிகவும் பெரியது. சிறப்பாக, இந்தியச் சமுதாயத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில், சமசுகிருதம், இந்து சமய நூல்களின் களஞ்சியமாகவும், வழிபாட்டுக்குரிய மொழியாகவும் போற்றப்படுகின்றது. வழிபாடுகளில் நாட்டார் மற்றும் பிரதேச வழக்காறுகளும் பரவலாகக் காணப்பட்டபோதிலும், பல இந்துக்கள் சமசுகிருத மந்திரங்களை ஓதி வருவதுடன், பெரும்பாலான கோயில்களில் கிரியைகளும் சமசுகிருத மொழியிலேயே இன்றும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பிரதேச மொழிகளான வங்காளி, குசராத்தி, இந்தி முதலியவற்றின், தூய நிலை எனக் கருதப்படும், உயர்நிலை வடிவங்கள் பெருமளவில் சமசுகிருதப் படுத்தப்பட்டவையாகக் காணப்படுகின்றன. தற்கால இந்திய மொழிகளில், இந்தி பேச்சு வழக்கில் அரபி மற்றும் பாரசீக மொழிகளின் தாக்கத்தைப் பெருமளவில் கொண்டிருந்தபோதும், வங்காளி, மராத்தி போன்ற மொழிகள் கூடிய அளவில் சமசுகிருத சொல் மூலங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியப் பாடலாக கருதப்படும் சன கண மன, என்ற பாடல் பெருமளவில் சமசுகிருதப் படுத்தப்பட்ட வங்காள மொழியின் உயர்நிலை வடிவில் இயற்றப்பட்டது. வந்தே மாதரம் என்ற சுதந்திரப்பாடல் முழுமையாக சமசுகிருதத்தில் இயற்றப்பட்டதாகும். இந்து சமயம் தொடர்பான கல்வியைப் பொறுத்தவரை, சமுதாயத்தின் உயர்மட்டத்திலுள்ள படித்தவர்கள் மத்தியில் சமசுகிருதம் இன்னும் கற்கை மொழியாகப் போற்றப்பட்டது. இருப்பினும் இது தற்போது இறந்து போன மொழியாகவே கருதப்படுகிறது. சீன மொழியிலும், பண்பாட்டிலும் கூடச் சமசுகிருத மொழியின் தாக்கங்கள் காணப்படுகின்றன. பௌத்த சமயம் சீனாவுக்குப் பரவியபோது சமசுகிருதம் கலந்த பிராகிருத மொழி நூல்களூடாகவே பரவியது. பௌத்த நூல்கள் சீன மொழியில் எழுதப்பட்டபோது, சமசுகிருதச் சொற்களை ஒலிமாற்றம் செய்தே எழுதினர். இதனால் பல சமசுகிருத மொழிச் சொற்கள் சீன மொழியிலும் கலந்தன. இந்திய மொழிகளல்லாத வேறும் பல மொழிகளிலும் சமசுகிருதச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாகத் தாய் மொழியிலும், மலைய மொழியிலும், சப்பானிய மொழியிலும், திபேத்திய மொழியிலும், பருமிய மொழியிலும் வேறு மொழிகளிலும் பல சமசுகிருதச் சொற்கள் உள்ளன. இந்துக் கடலோடிகளின் வழியாகப் பிலிப்பைன் நாட்டிலும் கூட அவர்களது தகலாகு (Tagalog) மொழியிலும் குரு (ஆசிரியர்) போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன. ஒலியனியலும் எழுத்து முறைமையும் சமசுகிருதம் 48 ஒலியன்களைக் கொண்டது (வேதகாலத்தில் 49 ஒலியன்கள் இருந்தன). பெரும்பாலான இந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் சமசுகிருதத்தின் அசையெழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். உருது மற்றும் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவற்றின் எழுத்து வடிவங்கள் இதற்கு விதி விலக்காகும் தமிழ் மட்டும் தனித்த மொழியாகும். ஒலிகள் அவற்றின் மரபுவழி வரிசைப்படி இங்கே தரப்படுகின்றன: உயிர்கள், வெடிப்பொலிகளும் (stops) மூக்கொலிகளும் (nasals) (வாயின் பின் பகுதியிலிருந்து முன்னோக்கி நகர்பவை), இறுதியாக இடையொலிகளும் (liquids), குழிந்துரசொலிகளும் (sibilants). (குறிப்பு: நெட்டுயிர்கள், ஒத்த குறில்களிலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டவை. இவற்றுடன் மேலதிகமாக நீண்டொலிக்கும் உயிர்களும் உள்ளன. இவை அழைத்தல், வாழ்த்துதல் போன்ற சந்தர்ப்பங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பயன்படுகின்றன. ஒலிபெயர்ப்பு சமசுகிருதத்தை ஒலிபெயர்ப்பதற்கு இலத்தீன் வரிவடிவங்களைப் பயன்படுத்தும் பல முறைகள் உள்ளன. பெருமளவு பயன்பாட்டிலுள்ளது IAST (International Alphabet of Sanskrit Transliteration) என்னும் அனைத்துலக சமசுகிருத ஒலிபெயர்ப்பு முறை ஆகும். கல்விசார்ந்த தேவைகளுக்கான தரநிலையான இம்முறை, ஒலியடிக் கூறுகளை (diacritical marks) உள்ளடக்கியது ஆகும். கணினிகளில் இம்முறையைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக வேறு முறைகளும் உருவாக்கப்பட்டன. இவற்றுள், ஆர்வட்டு-கியோட்டோ (Harvard-Kyoto), ITRANS என்பனவும் அடங்கும். ITRANS இணையத்தில் பரவலான பயன்பாட்டில் உள்ளது. உயிரெழுத்துக்கள் (கிட்டிய தமிழ் ஒலிக் குறியீடுகளுடன்) अ - அ आ - ஆ इ - இ ई - ஈ उ - உ ऊ - ஊ ऋ "ரி". "ரு" என்பவற்றுக்கு இடையில் ॠ "ரீ". "ரூ" என்பவற்றுக்கு இடையில் ऌ லி லு என்பவற்றுக்கு இடையில் ॡ லீ லூ என்பவற்றுக்கு இடையில் (Sanskrit recognizes vocalic r (errr) and l (ulll), unlike, say, English) கூட்டுயிர்கள் (எளிய உயிரெழுத்துக்களின் சேர்க்கை) (Diphthongs) ए - ஏ ऎ - ஐ ऒ- ஓ औ - ஔ உயிரெழுத்துக்கள் மூக்கொலிச் சாயல் (nasalization) பெறுவதுண்டு. மெய்யெழுத்துக்கள் சமசுகிருதம், பின்வரும் ஒலிப்பிடங்களில் (places of articulation), அதிர்வில் ஒலி (voiceless), ஃ இணையொலியுடன் கூடிய அதிர்வில் ஒலி (voiceless aspirate), அதிர்வுடை ஒலி (voiced), ஃ இணையொலியுடன் கூடிய அதிர்வுடை ஒலி (voiced aspirate) மற்றும் மூக்குத் தடையொலி (nasal stop) என்பவற்றைக் கொண்டுள்ளது: மெல்லண்ணவொலி (Velar) (மெல்லண்ண நிலை) (k, kh, g, gh, n as in ing) அண்ண நிலை ஒலி (Palatal) (வல்லண்ண நிலை) (c, ch, j, jh, ~n) வளை நாவொலி (Retroflex) (t, th, d, dh, n) பல்லொலி (Dental) (t, th, d, dh, n) இதழினவொலி (Labial) (p, ph, b, bh, m) மேற்கோள்களும் அடிக்குறிகளும் வெளியிணைப்புகள் Sanskrit language Sanskrit Lessons (free online from the Linguistics Research Center at UT Austin) Samskrita Bharati, organisation supporting the usage of Sanskrit Sanskrit Documents—Documents in ITX format of Upanishads, Stotras etc. Sanskrit texts at Sacred Text Archive Sanskrit Manuscripts in Cambridge Digital Library பகுப்பு:சமசுகிருதம் பகுப்பு:தொன் மொழிகள் பகுப்பு:இந்திய-ஆரிய மொழிகள்
சிங்கப்பூர்
https://ta.wikipedia.org/wiki/சிங்கப்பூர்
சிங்கப்பூர் அல்லது சிங்கப்பூர் குடியரசு (The Republic of Singapore, சீனம்: 新加坡共和国, Xīnjīapō Gònghéguó; மலாய்: Republik Singapura) என்பது தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது. சிங்கப்பூர் தீவை ஜொகூர் நீரிணை, மலேசியாவில் இருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீரிணை இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்கப்பூர் பெரிதும் நகரமயம் ஆன நாடாகும். மிகக் pகுறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. நிலச் சீரமைப்பு மூலம் கூடுதலான நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன. கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம் தொடங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் பல உள்ளூர் இராச்சியங்களின் பகுதியாக விளங்கி வந்துள்ளது. 1819-ஆம் ஆண்டில் ஜொகூர் சுல்தானகத்தின் அனுமதியுடன் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பொது 1824-இல் பிரித்தானியாவின் நேரடி ஆட்சியினுள் வந்தது. 1826-இல் தென்கிழக்காசியாவின் ஒரு பிரித்தானிய குடியேற்ற நாடாக ஆனது. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும் 1945-இல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. அதன்பிறகு 1963-இல் ஏனைய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளுடன் சேர்ந்து மலேசியாவோடு இணைந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது. 1965 ஆகஸ்ட் 9-இல் மலேசியாவிலிருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடாக உருவானது. அன்றிலிருந்து சிங்கப்பூரின் வளம் பெருமளவு விரிவடைந்து நான்கு ஆசியப் புலிகளில் ஒன்றானது. நாடாளுமன்றக் குடியரசு சிங்கப்பூர் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையில் ஓரவை நாடாளுமன்றக் குடியரசு ஆட்சியைக் கொண்டுள்ளது. 1959-ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சி அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது. கொள்வனவு ஆற்றல் சமநிலையின் அடிப்படையில், சிங்கப்பூரின் ஆள்வீத வருமானம் உலக நாடுகளில் மூன்றாவது நிலையில் உள்ளது. சிங்கப்பூரின் மக்கள்தொகை 5 மில்லியனுக்கும் சற்று மிகுதியாகும். இவர்களில் 2.91 மில்லியன் உள்ளூரில் பிறந்தவர்கள். சிங்கப்பூர் வாழ்க்கைத் தரம் மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். இவர்களுக்கு அடுத்ததாக மலாய், மற்றும் சிங்கப்பூர் தமிழர்கள் உள்ளனர். சிங்கப்பூரின் அலுவல்முறை மொழிகள்: ஆங்கிலம், சீனம், மலாய் மொழி, தமிழ் மொழி ஆகியவையாகும். ஆசியான் அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் ஏப்பெக் அமைப்பின் செயலகம் அமைந்துள்ளது. அத்துடன், கூட்டுசேரா இயக்கம், பொதுநலவாய நாடுகள் ஆகிய அமைப்புகளிலும் உறுப்பு நாடாக உள்ளது. மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச் சிறிய நாடாகும். இருப்பினும் விடுதலைக்குப் பின், அந்த நாட்டில் பல்வேறு பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. சிங்கப்பூர் அரசு தன் உள்கட்டுமானத்தைத் தரப்படுத்திக் கொண்டதால், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. thumb|சிங்கப்பூரில் கனடிய சர்வதேச பள்ளி பெயர் காரணம் சிங்கப்பூர், சிங்கம் + புரம் = சிங்கப்பூர்; அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளைக் கொண்டது. சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய்ச் சொல்லில் இருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்); மற்றும் பூரா (புரம்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது. மலாய் வரலாற்றின்படி 14-ஆம் நூற்றாண்டு சுமாத்திரா மலாய் இளவரசர் நீல உத்தமன், ஒரு கடும் புயலின் போது இந்தத் தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம்போல ஒரு மிருகத்தைப் பார்த்து, சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக் கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக ஒரு வரலாற்றுக் கதை உண்டு. வரலாறு முந்தைய வரலாறு சிங்கப்பூரின் காலனித்துவ ஆட்சிக்கு முந்தைய வரலாறு 14-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டு இருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. 14-ஆம் நூற்றாண்டில் அது துமாசிக் என்ற பெயர் கொண்ட நகரமாகக் காட்சி அளித்தது. அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்றும் மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது. சிங்கப்பூரா ஸ்ரீவிஜய பேரரசு மறைந்த பிறகு, துமாசிக் மற்ற அரசுகளால் தாக்கப்பட்டது. ஜாவாவில் இருந்த மயாபாகித் பேரரசு, தாய்லாந்தில் இயங்கிய அயூத்தியா அரசு போன்றவை அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன. தாய்லாந்தின் அயூத்தியா அரசு குறைந்தது ஒரு முறை, துமாசிக் தீவைப் பெரிய அளவில் தாக்க முயன்று தோல்வி அடைந்தது என்று வரலாறு காட்டுகிறது. அந்தக் கட்டத்தில் தான், அதாவது 15-ஆம் நூற்றாண்டின் தொடக்கக் கட்டத்தில், துமாசிக் நகருக்கு சிங்கப்பூரா எனும் புதிய பெயர் சூட்டப்பட்டது. குடியேற்றவாத ஆட்சி thumb|260px| தாமஸ் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் 1819-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் நாள், சர் தாமஸ் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் என்பவர் தீபகற்ப மலேசியாவின் பெருநிலப் பகுதியில் தரை இறங்கினார். இந்தப் பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் சார்பில் வணிக நிலையம் ஒன்றை அமைக்க விரும்பினார். அந்த வகையில் 1819 பெப்ரவரி மாதம் 6-ஆம் தேதி ஜொகூர் சுல்தானகத்தின் மன்னராக இருந்த சுல்தான் உசேன் ஷா (Hussein Shah of Johor) என்பவருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் வணிக நிலையம் ஒன்றையும்; குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக் கொண்டது. இருப்பினும் ஆகஸ்டு 1824-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் மலாய் ஆட்சியாளரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருந்தது. ஆகஸ்டு 1824-இல் சிங்கப்பூர் முழுத் தீவையும் பிரித்தானியா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் பின்னர் சிங்கப்பூர், ஒரு பிரித்தானியக் குடியேற்றநாடு எனும் தகுதியைப் பெற்றது. நவீன சிங்கப்பூரின் தொடக்கம் அந்தக் கட்டத்தில், சிங்கப்பூரில் இருந்த இரண்டாம் நிலை அதிகாரியான ஜான் குரோபுர்ட் (John Crawfurd) என்பவரே சிங்கப்பூரைப் பிரித்தானியாவுக்கு உரியதாக்கியவர். இவர் 1824 ஆகஸ்ட் 2-ஆம் தேதி சுல்தான் உசேன் ஷாவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தார். இதன் அடிப்படையில் சுல்தான் உசேன் ஷா, சிங்கப்பூர் தீவு முழுவதையும் பிரித்தானியாவுக்கு வழங்கினார். இதுவே நவீன சிங்கப்பூரின் தொடக்கம் எனலாம். ராபிள்சின் உதவி அதிகாரியான வில்லியம் பர்குவார் (William Farquhar) சிங்கப்பூரின் வளர்ச்சியையும், பல்லின மக்களின் உள்வருகையையும் ஊக்கப் படுத்தினார். இந்த உள்வருகை கட்டுப்பாடற்ற குடியேற்றக் கொள்கையின் காரணமாக ஏற்பட்டது. 1856-ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சி செய்தது. நகரத் திட்டமிடல் முயற்சி ஆனால் 1867-ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மக்கள் பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக, பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது. 1869-ஆம் ஆண்டில் சுமார் 100,000 மக்கள் சிங்கப்பூர் தீவில் வாழ்ந்தனர். சிங்கப்பூரின் முதலாவது நகரத் திட்டமிடல் முயற்சி என்பது ஒரு பிரித்தாளும் உத்தியாகவே மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டப்படி தீவின் தெற்கு பகுதியில் வெவ்வேறு இன மக்கள் தனித்தனிப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். சிங்கப்பூர் ஆற்றுப் பகுதி, பல்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்த வணிகர்களும், வங்கியாளர்களும் நிறைந்த பகுதியாக விளங்கியது. சீன, இந்தியக் கூலித் தொழிலாளர்கள் படகுகளில் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலைகள் செய்து வந்தனர். மலாய் மக்கள்கள் பெரும்பாலும் மீனவர்களாகவும், கடலோடிகளாகவும் இருந்தனர். கெனிங் மலைக் கோட்டை thumb|260px| 1902-ஆம் ஆண்டில் கெனிங் மலைக் கோட்டையில் கலங்கரை விளக்கம் அராபிய வணிகரும், அறிஞர்களும் ஆற்றுக் கழிமுகத்தின் தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்தனர். அக்காலத்தில் மிகவும் குறைவாகவே இருந்த ஐரோப்பியக் குடியேற்றக்காரர்கள் கெனிங் மலைக் கோட்டைப் பகுதியிலும் (Fort Canning Hill), ஆற்றின் மேல் பகுதிகளிலும் வாழ்ந்தனர். ஐரோப்பியரைப் போலவே இந்தியர்களும் தீவின் உட்பகுதியிலேயே குடியேறினர். அந்த இடம் தற்சமயம், சின்ன இந்தியா (Little India) என்று அழைக்கப்படுகிறது. 1960-களில் பெரும் அளவிலான மீள்குடியெற்ற நடவடிக்கைகள் தான் இப்போது அறியப்படுகிறது. தவிர, அக்காலத்தின் நாட்டுப்புறத் தனியார் குடியேற்றங்கள்பற்றி மிகக் குறைவாகவே தெரிய வருகிறது. உலகப்போர் பினாங்கு, மலாக்கா ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் நீரிணைக் குடியேற்றங்களின் (Straits Settlements) ஒரு பாகமாக இருந்தது. சப்பானியருடைய எழுச்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வேகமாகத் தமது படைகளைப் பெருக்கி வருவதைப் பிரித்தானியா அறிந்திருந்தது. தென்கிழக்காசியாவில் இருந்த தமது சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகச் சிங்கப்பூரின் வட முனையில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்குப் பிரித்தானியா முடிவு செய்திருந்தது. ஆனால் ஜெர்மனியுடன் ஏற்பட்ட போரினால் போர்க் கப்பல்களையும், தளவாடங்களையும் ஐரோப்பாவுக்குக் கொண்டு வரவேண்டி இருந்ததனால் அந்தத் திட்டம் நிறைவேறவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியப் படைகள் (ஜப்பானியப் படைகள்) மலாயாவைக் கைப்பற்றிக் கொண்டன. தோமோயுகி யமாசிதா thumb|230px| தோமோயுகி யமாசிதா ஜப்பானியப் படைகள் சிங்கப்பூரைத் தாக்கியபோது, சிங்கப்பூர் பிரித்தானிய அரசாங்கம், பெரும்பாலான தம் படைகளை ஐரோப்பாவுக்கு அனுப்பிவிட்டுக் குறைந்த படைபலத்துடன் இருந்தது. அதனால் பிரித்தானியர் 6 நாட்களில் தோல்வி அடைந்தது. அத்துடன், புகமுடியாத கோட்டை என்று சொல்லப்பட்ட சிங்கப்பூரையும் 1942 பெப்ரவரி 15-ஆம் தேதி சப்பானியத் தளபதி தோமோயுகி யமாசிதாவிடம் (Tomoyuki Yamashita) ஒப்படைத்துச் சரண் அடைந்தது. இந்தத் தோல்வியை "பெரும் இழப்பு" என்றும் "பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய சரணாகதி" என்றும் அப்போதைய பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் கடற்படைத் தளத்தைச் சப்பானியர் பயன்படுத்தாமல் இருப்பதற்காக, அந்தத் தளம் சப்பானியரிடம் வீழ்ச்சி அடையும் முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. சிங்கப்பூரின் பெயரை "ஷோவாவின் காலத்தில் பெறப்பட்ட தெற்குத் தீவு" என்னும் சப்பானியத் தொடரைச் சுருக்கி "ஷொனான்டோ" என சப்பானியர் மாற்றினர். உலகப் போரில் சப்பானியர் தோல்வியுற்ற ஒரு மாதத்திற்குப் பின்னர் 1945-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. தற்போதைய சிங்கப்பூர் thumb|260px| சிங்கப்பூர் லிட்டல் இந்தியா; 2006-ஆம் ஆன்டு 1959-ஆம் ஆண்டில் சிங்கப்பூர், பிரித்தானியப் பேரரசினுள் ஒரு தன்னாட்சி பெற்ற நாடானது. யூசுப் இசாக் (Yusof bin Ishak) என்பவர் நாட்டுத் தலைவராகவும், லீ குவான் யூ (Lee Kuan Yew) பிரதமராகவும் ஆயினர். 1963 ஆகஸ்டில் சிங்கப்பூர் ஒருதலைப் பட்சமாகத் தன்னை முழு விடுதலை பெற்ற நாடாக அறிவித்துக் கொண்டது. 1963-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலாயா, சபா, சரவாக் ஆகியவற்றுடன் சேர்ந்து மலேசியா எனும் மலேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது. இரண்டு ஆண்டுகள் கழித்து, 1965-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் ஆட்சியில் இருந்த மக்கள் செயல் கட்சிக்கும்; கோலாலம்பூரில் இருந்த மத்திய அரசுக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் ஏற்பட்டன. மலேசியாவில் இருந்து விலகல் அவற்றின் காரணமாக, அதே 1965-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி, மலேசியக் கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர், விலகி இறைமையுள்ள ஒரு நாடானது. யூசுப் இசாக் சிங்கப்பூரின் முதலாவது தலைவர் ஆனார். லீ குவான் யூ பிரதமராகத் தொடர்ந்தார். சிங்கப்பூர் தன்னிறைவு பெற முயன்ற வேளையில், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து விலக வேண்டிய இக்கட்டான நிலைமை. அந்தக் கட்டத்தில் சிங்கப்பூரில் பெருமளவிலான வேலையில்லாமை, வீடு மனைகள் பற்றாக்குறை, நிலம் மற்றும் இயற்கை வளப் பற்றாக்குறை அதிகமாக இருந்தன. இவ்வாறான பெரும் பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டியிருந்தது. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வு லீ குவான் யூ பிரதமராக இருந்த, 1959 தொடக்கம் 1990 வரையான காலப் பகுதியில் பரவலான வேலையில்லாப் பிரச்சினைகள் சமாளிக்கப்பட்டன. மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப் பட்டது. பெருமளவிலான வீடமைப்புத் திட்டங்கள் அமைக்கப்பட்டன. இந்தக் காலத்திலேயே நாட்டின் பொருளாதார உள் கட்டமைப்புகள் வளர்ச்சி அடைந்தன; இன முரண்பாடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன; ஆண்களுக்கான கட்டாய படைத்துறைச் சேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான தேசியப் பாதுகாப்பு முறை உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தகக் கப்பல்களைக் காணும் துறைமுகங்களில் ஒன்றாக உள்ளது. புவியியல் 250px|thumbnail|இடது|சிங்கப்பூரின் தீவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் சிங்கப்பூர் 63 தீவுகளை உடையது, இதில் பெரிய முதன்மை தீவு சிங்கப்பூர் தீவென அழைக்கப்படுகிறது . மலேசியாவின் ஜொகூர் மாநிலத்துடன் இரண்டு சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள இணைப்பு சாலைக்குப் பெயர் ஜொகூர்-சிங்கப்பூர் காசுவல் வே, மேற்கில் உள்ள இணைப்பு சாலைக்கு டுவசு என்று பெயர். சந்தோசா, புளாவ் மேகோங்ர புளாவ் யுபின், ஜூராங் தீவு ஆகியவை மற்ற குறிப்பிடதக்க தீவுகள் ஆகும். கடலிலிருந்து நிலத்தை மீட்கும் திட்டம் செயலில் உள்ளது. இதன் காரணமாக 1960ல் 581.5 ச. கிமீ (224.5 சதுர மைல்) இருந்த நிலப்பரப்பு தற்போது் 704 ச.கிமீ (272 சதுர மைல்) ஆக உள்ளது. 2030ம் ஆண்டில் மேலும் 100 ச. கிமீ நிலம் மீட்கப்பட்டுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது . சில நிலமீட்பு திட்டங்களில் சிறிய தீவுகள் ஒன்றிணைக்கப்பட்டு பெரிய தீவு உருவாக்கப்படுகின்றன. நகரமயமாக்கல் பெரும்பாலான முதன்மை மழைக்காடுகளை அழித்துவிட்டாலும் 5% நிலமானது இயற்கை காடுகளாகப் பாதுகாக்கப்படுகிறது . புகிட் திமா என்பது குறிப்பிடத்தகுந்த அழிக்கப்படாத காடாகும். சிங்கப்பூர் அயனமண்டல தட்பவெப்பநிலை உள்ள நாடாகும். ஆண்டு முழுவதும் வெப்பநிலையில் பெரிய மாறுதல்கள் இருக்காது. அதிகளவு ஈரப்பதம், மழைப்பொழிவு இருக்கும். இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதால் இங்கு வானம் மங்கலாக மூட்டத்துடன் காணப்படும். பொருளாதாரம் விடுதலைக்கு முன்பு இப்பகுதியிலிருந்த பிரித்தானிய குடியிருப்புக்களின் தலைநகராகச் சிங்கப்பூர் விளங்கியது. பிரித்தானியரின் முதன்மை கடற்படை தளமாகக் கிழக்காசியாவில் இது விளங்கியது. பிரித்தானியாவின் கடற்படை தளமாக இருப்பதால் சிங்கப்பூரில் உலகின் பெரிய உலர் கப்பல் பராமரிக்கும் களம் இருந்தது. சிங்கப்பூர் கிழக்கின் ஜிப்ரால்ட்டர் என்று அழைக்கப்பட்டது. சுயஸ் கால்வாய் திறந்ததால் உலக வணிகத்தில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. அதனால் சிங்கப்பூர் வணிகத்தின் முதன்மை வழியாக விளங்கியது. அதன் காரணமாகச் சிங்கப்பூர் துறைமுகம் உலகின் பெரிய துறைமுகமாக மாறியது. விடுதலைக்கு முன்பு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நபர் ஒன்றுக்கு 511 டாலராக இருந்தது. இது அப்போது கிழக்காசியாவில் மூன்றாவது உயர்வான நிலையாகும். விடுதலைக்கு பின்பு அன்னிய நேரடி முதலீடு மற்றும் சிங்கப்பூர் முன்னெடுத்த தொழிற்புரட்சிக்கான வழிகளும் அந்நாட்டை புதிய பொருளாதார நாடாக மாற்றியது. தற்போதைய சிங்கப்பூர் சந்தை பொருளாதாரத்தின் மூலம் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. சிங்கப்பூரின் பொருளாதாரம் முதலீட்டாளர்க்கு உகந்ததாகவும் வணிக கட்டுப்பாடுகள் குறைந்ததாகவும் உள்ளது. இது உலகின் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்று. சிங்கப்பூர் உலகின் 14வது பெரிய ஏற்றுமதியாளராகவும் 15வது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு, மூடிசு, பிட்ச் ஆகிய மூன்று கடன் மதிப்பீடு நிறுவனங்களின் நாணயநிலை மதிப்பீட்டில் ஆசியாவில் சிங்கப்பூர் மட்டுமே உயர் மதிப்பீடு (AAA) பெற்ற நாடாகும்.. ஐக்கிய அமெரிக்கா, நிப்பான், ஐரோப்பா ஆகியவற்றின் 7,000க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. 1500 சீன, இந்திய நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. இங்குள்ள அனைத்து துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய அன்னிய முதலீட்டாளர் சிங்கப்பூராகும். சிங்கப்பூரின் தொழிலாளர்களில் கிட்டதட்ட 44 விழுக்காட்டினர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லாத வெளிநாட்டினராகும்"44 Percent of Workforce Are Non-Citizens" (our estimate). Your Salary in Singapore.. சிங்கப்பூர் பத்தாவது பெரிய வெளிநாட்டு நிதியிருப்பை கொண்டுள்ள நாடாகும்Official Foreign Reserves, Monetary Authority of Singapore."Top 10 countries with Largest Foreign Exchange Reserves" , Shine, 8 September 2009.. சிங்கப்பூரின் நாணயம் சிங்கப்பூர் வெள்ளியாகும், இதை வெளியிடுவது சிங்கப்பூர் பண அதிகார அமைப்பாகும். சிங்கப்பூர் வெள்ளியை புருனை வெள்ளியுடன் பரிமாற்றிக்கொள்ளலாம் . சிங்கப்பூர் பொருளாதாராம் ஏற்றுமதியையே பெரிதும் நம்பி உள்ளது. இயந்திர பொறியியல் துறை, உயிரிமருத்துவ அறிவியல் துறை, வேதிப்பொருட்கள், மின்னனு பொருட்கள் போன்றவை ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கின்றன. சிறிய நாடாக இருந்தபோதிலும் சிங்கப்பூர் பன்முகத்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை கொண்டுள்ளது. இந்த உத்தியால் ஏதாவது ஒரு துறையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது நாட்டின் வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் பாதிக்காதென அரசு கருதுகிறது. thumb|400px|சிங்கப்பூர் வான்வெளி இதன் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறையும் பெரும்பங்கு வகிக்கிறது. 2007ஆம் ஆண்டு 10.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிந்தார்கள் Year Book of Statistics, Singapore. Singapore Tourism Board.. சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு சூதாட்ட இடங்களை 2005ல் அரசு அனுமதித்தது. மருத்துவ சுற்றுலாவின் மையமாகத் தன்னை மேம்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் தீவிரமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 200,000 வெளிநாட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகச் சிங்கப்பூர் வருகிறார்கள். 2012-இல் ஒரு மில்லியன் மருத்துவ சுற்றுலாப் பயணிகளுக்கு மருத்துவம் பார்த்து 3 பில்லியன் அமெரிக்க வெள்ளியை வருமானமாகப் பெற அரசு குறிக்கோள் கொண்டுள்ளது. சிங்கப்பூர் கல்வி மையமாகவும் திகழ்கிறது. 2006ல் 80,000க்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் இங்கு படித்தார்கள். 5,000-க்கும் அதிகமான மலேசிய மாணவர்கள் தினமும் ஜொகூர்-சிங்கப்பூர் காசுவல் வே வழியாகத் தினமும் வந்து படித்துச் செல்கிறார்கள். 2009ல் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் 20% வெளிநாட்டு மாணவர்கள் படித்தார்கள். வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பாலோர் தென்கிழக்காசியா, சீனா, இந்தியாவைச் சார்ந்தவர்கள் . சிங்கப்பூர் உலகின் நான்காவது முன்னணி நிதி மையமாகவும்"Global Financial Centres 7" , City of London, March 2010., சூதாட்டத்திற்கான இரண்டாவது பெரிய சந்தையாகவும் திகழ்கிறது. அதிக பொருட்களைக் கையாளும் உலகின் முன்னணித் துறைமுகங்களில் சிங்கப்பூர் துறைமுகமும் ஒன்றாகும். உலக வங்கி வணிகம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் மிகக்குறைந்த இடம் எனச் சிங்கப்பூரைத் தெரிவு செய்துள்ளது இதைச் சிறந்த தளவாடங்கள் மையம் எனவும் வரிசை படுத்தியுள்ளது. இலண்டன், நியு யார்க், டோக்கியோவிற்கு அடுத்து சிங்கப்பூர் நான்காவது பெரிய வெளிநாட்டு நாணய பரிமாற்ற மையமாகும். 2001ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தநிலை காரணமாகச் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.2% குறைந்தது. இதனால் 2001 டிசம்பரில் பொருளாதார மீளாய்வு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு அது பொருளாதாரத்தைச் சீரமைக்க பல்வேறு கொள்கைகளைப் பரிந்துரைத்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியால் சிங்கப்பூர் மந்தநலையிலிருந்து மீண்டது. 2004-இல் 8.3விழுக்காடு 2005ல் 6.4 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது. 2006-இல் 7.9 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது. 2009-இல் 0.8 விழுக்காடு வளர்ச்சி குறைந்து 2010ல் பொருளாதாரம் மீண்டு 14.5 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது. சேவைத் துறையிலேயே பெரும்பாலானவர்கள் வேலை செய்கிறார்கள். டிசம்பர் 2010 கணக்குப்படி 3,102,500 பணியிடங்களிலில் 2,151,400 பணியிடங்கள் சேவைத் துறையைச் சார்ந்தது ஆகும். 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் வேலை வாய்ப்பில்லாமல் இருப்பவர்கள் 2 விழுக்காடு ஆகும். விழுக்காடு கணக்கில் சிங்கப்பூரிலேயே அதிக மில்லியனர்கள் உள்ளனர். ஆறு வீட்டுகளில் ஒரு வீடு நிலம், வணிகம், வீடு, ஆடம்பர பொருட்கள் இல்லாமல் மில்லியன் அமெரிக்க வெள்ளியை கொண்டுள்ளது. சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு மிகவும் அதிகமாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்த நாடாக இருந்த போதிலும் இங்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது தீர்மானிக்கப்படவில்லை. முன்னேற்றமடைந்த நாடுகளில் இங்கு ஊதிய ஏற்றத்தாழ்வு மிக அதிகம்.. பண்பாடு சிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு. மலாய் மக்கள், தமிழர், சீனர், அரபு நாட்டினரின் பண்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. சிங்கப்பூரின் வெற்றிக்கும் அதன் தனித்துவத்துக்கும் சமய, இன நல்லுறவு அரசாங்கத்தில் முக்கிய காரணமாக அதன் சமய, இன நல்லுறவுக் கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நாட்டின் மொத்தச் மக்கள்தொகையில் 42 விழுக்காடு வெளிநாட்டினராக உள்ளனர். அவர்கள் சிங்கப்பூரின் கலாசாரத்தில் பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றனர். விளையாட்டும் பொழுதுபோக்கும் பிரபலமான விளையாட்டுக்களாகக் கால்பந்து, கூடைப்பந்து, துடுப்பாட்டம், நீச்சல், படகோட்டம், மேசைப்பந்து, பூப்பந்து என்பன காணப்படுகின்றன. பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் பொது நீச்சல் குளங்கள், வெளிப்புற கூடைப்பந்தாட்ட திடல்கள், உள்ளரங்க விளையாட்டு வளாகங்கள் போன்ற வசதிகளை அருகில் கொண்ட பொது குடியிருப்பு பகுதிகளில் வாழ்கின்றனர். தண்ணீர் விளையாட்டுக்களான படகோட்டம், கயாகிங், நீர் சறுக்கு போன்றவை பிரபலமாக உள்ளன. இசுகூபா டைவிங் மற்றொரு பிரபலமான உற்சாக விளையாட்டாக இருக்கிறது. 1994-இல் உருவாக்கப்பட்ட சிங்கப்பூர் கால்பந்து லீக்,தற்போது வெளிநாட்டு அணிகள் உட்பட 12 கழகங்களைக் கொண்டுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய தேசிய கூடைப்பந்து லீக் எனப்படும் சிங்கப்பூர் சிலிங்கர்சு அக்டோபர் 2009-இல் நிறுவப்பட்ட ஆசியான் கூடைப்பந்து லீக்கில் உள்ள தொடக்க அணிகளில் ஒன்றாகும். ஊடகம் ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சியும், வானொலியும், செய்தித்தாள்களும் உள்ளன. வசந்தம் என்பது தமிழ் தொலைக்காட்சியாகும். ஒலி என்பது தமிழ் வானொலி, தமிழ்முரசு என்பது செய்திதாள் ஆகும். மீடியாகார்ப் என்ற நிறுவனம் பெரும்பாலான தொலைக்காட்சி, வானொலி நிலையங்களை நடத்துகிறது. இது அரசு முதலீட்டு அமைப்புக்குச் சொந்தமானதாகும். சிங்கப்பூர் பிரசு கோல்டிங்சு என்பது செய்தித்தாள்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பாகும். தமிழ்முரசை இவ்வமைப்பே நடத்துகிறது. சிங்கப்பூரில் ஊடக சுதந்திரம் குறைவு. சிங்கப்பூரில் 3.4 மில்லியன் இணைய பயனாளிகள் உள்ளனர். இது உலகளவில் அதிகமாகும். இணையத்திற்கு அதிக கட்டுப்பாடுகளை அரசு விதிக்கவில்லை. சில நூறு (பெரும்பாலும் ஆபாச தளங்கள்) இணைய தளங்களைத் தடை செய்துள்ளது. இத்தடை வீட்டு இணைப்புகளுக்கு மட்டுமே; அலுவலக இணைய இணைப்புகளுக்குத் தடை இல்லை. மக்கள் தொகையியல் மக்கள் 2011ம் ஆண்டின்படி சிங்கப்பூரின் மக்கள் தொகை 5.18 மில்லியன் ஆகும். இதில் 3.25 மில்லியன்(64%) மக்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள். மேலும் உலகளவில் ஒரு நாட்டின் சனத்தொகையில் அதிக வெளிநாட்டினரைக் கொண்ட நாடுகளில் 6ம் இடத்தை வகிக்கிறது. இவர்கள் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர். 2009 கணக்கெடுப்பின்படி சீனர்கள் 74.2%மாகவும், மலாயர் 13.4%மாகவும், இந்தியர் 9.2%மாகவும் உள்ளனர். 2010ம் ஆண்டுக்கு முன்பு சிங்கப்பூர் மக்கள் தங்களை ஏதாவது ஒரு இனத்தை சார்ந்தவர்களாகத் தான் குறிப்பிடமுடியும். இயல்பாகத் தந்தையின் இனத்தையே மகன் அல்லது மகள் சார்ந்ததாக அரசு பதிவேட்டில் குறிப்பிடப்படும். இதனால் அரசு கணக்கின் படி பல்லின கலப்பு மக்கள் இல்லை என்றே இருக்கும். 2010க்கு பின்பு இரு இனங்களை சார்ந்தவர் எனப் பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது. 1000 மக்களுக்கு 1400 அலைபேசிகள் உள்ளன. நிலப்பற்றாக்குறையால் அரசு நிதியுதவி பெற்ற, அடுக்கு மாடி வீட்டு மனைகளை வீட்டுவசதி வாரியத்தின் மூலம் மக்களுக்கு வழங்குகிறது. குழந்தை பிறப்பு குறைவாக உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. மதம் சிங்கப்பூர் பல மதங்கள் கொண்ட ஒரு நாடு. 33% சிங்கப்பூர்வாசிகள் பௌத்தத்தையும், 18% மக்கள் கிறித்துவத்தையும் பின்பற்றுகின்றனர். எந்த மதமும் சாராதவர்கள் 17% உள்ளனர். 15% மக்கள் இசுலாம் மதத்தினைப் பின்பற்றுகின்றனர். இசுலாமை பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் மலாய் மக்கள் ஆவர். டாவோயிசத்தை 11% மக்கள் பின்பற்றுகின்றனர். சிறுபான்மை மக்கள் பலர் இந்து சமயத்தையும், சீக்கிய சமயத்தையும் பின்பற்றுகின்றனர். பௌத்த சமயத்தையும் டாவோயிசத்தையும் பெரும்பாலும் சீனர்களே பின்பற்றுகின்றனர். இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலோர் இந்தியர் ஆவர். பௌத்தத்தின் மூன்று பிரிவுகளான மகாயாணம், வஜ்ராயணம், தேரவாததிற்கு இங்கு மடங்கள் உண்டு. பெரும்பாலோர் மகாயாணத்தை பின்பற்றுகின்றனர் . சீன மகாயாணமே இங்கு பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது. மொழி ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும். சிங்கப்பூர் விடுதலை அடைந்தது முதல் ஆட்சி மொழியாக ஆங்கிலம் வளர்க்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரர்களில் சுமார் 100,000 பேர் அல்லது 3 விழுக்காட்டினர் தமிழை தங்கள் சொந்த மொழியாகப் பேசுகின்றனர். 250px|thumbnail|இடது|ஆங்கிலம், சீனம், தமிழ், மலாயில் எழுதப்பட்டுள்ள எச்சரிக்கை சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. மலாய் தேசிய மொழியாக இருந்தாலும் நடைமுறையில் ஆங்கிலத்துக்கே அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது, அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா போன்றவற்றில் மலாய் தேசிய மொழியாக உள்ளதால் அண்டை நாடுகளுடன் சச்சரவுகளைத் தவிர்க்க மலாயை தேசிய மொழியாகக் கொண்டுள்ளது . அரசாங்கத்தின் அலுவல்கள், வணிகம், கல்வி போன்றவை ஆங்கிலத்திலேயே நடக்கின்றன.. சிங்கப்பூரின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன, . நீதிமன்றத்தின் மொழியாகவும் ஆங்கிலமே உள்ளது. நீதிமன்றத்தில் ஆங்கிலம் அல்லாத மற்ற மொழியில் முறையிட வேண்டும் என்றால் மொழிபெயர்ப்பாளர் தேவை.. 20 விழுக்காடு சிங்கப்பூர் மக்களுக்கு ஆங்கிலத்தில் படிக்கவோ எழுதவோ தெரியாது. 2010ம் ஆண்டு கணக்கின்படி 71 விழுக்காடு மக்களுக்கு இரண்டு அல்லது அதற்கு அதிகமான மொழிகள் தெரியும் . சிங்கப்பூரில் பெரும்பான்மை (பாதி மக்கள்) மக்களின் மொழியாக சீனம் உள்ளது. கல்வி thumb|நன்யாங் தொழினுட்ப பல்கலைக்கழகத்தின் நிருவாகக் கட்டிடம், சிங்கப்பூரின் ஐந்து அரசு பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். ஆரம்ப, இரண்டாம், மூன்றாம் நிலைக் கல்விக்கு பெரும்பாலும் அரசு துணைபுரிகிறது. அனைத்து தனியார் மற்றும் பொதுக் கல்வி நிறுவனங்களும் கட்டாயமாகக் கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும். அரசு பள்ளிகளின் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. "தாய் மொழி" தவிர அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதுடன் தேர்வுகளும் ஆங்கிலத்திலேயே நடாத்தப்படுகின்றன. அதே சமயம் பொதுவாக "தாய் மொழி" சர்வதேச அளவில் முதல் மொழியைக் குறித்தாலும்; சிங்கப்பூர் கல்வி முறையில், இது இரண்டாவது மொழியைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது, ஆங்கிலம் முதல் மொழி எனப்படுகிறது. வெளிநாடுகளில் சிலகாலம் இருந்த மாணவர்கள் அல்லது தங்கள் "தாய் மொழியைக்" கற்க சிரமப்படுபவர்களுக்கு ஒரு எளிமையான பாடத்திட்டத்தினை எடுக்க அல்லது பாடத்தைக் கைவிட அனுமதிக்கப்படுகிறது. கல்வி மூன்று நிலைகளில் நடைபெறுகிறது: அவை "ஆரம்பக் கல்வி", "இடைநிலைக் கல்வி", "பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி" என்பனவாகும். இவற்றில் ஆரம்பக் கல்வி மாத்திரமே கட்டாயமானது, இது மாணவர்களுக்கு நான்கு ஆண்டு அடிப்படைப் பயிற்சியையும் இரு ஆண்டுகள் திசையமைவு பயிற்சியையும் வழங்குகிறது. மொத்தமாக ஆரம்பப் பள்ளி ஆறு ஆண்டுகளாகும். பாடத்திட்டமானது ஆங்கிலம், தாய்மொழி, கணிதம் ஆகியவற்றிலான அறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கிலம், தாய்மொழி, கணிதம், அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. சிங்கப்பூரின் இரண்டு முக்கிய பொதுப் பல்கலைக்கழகங்களான சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் மற்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களினுள் அடங்குகிறன. போக்குவரத்து சிங்கப்பூர் சிறிய, மக்கள் அடர்த்திமிக்க நாடாகியதால் இங்கு தனியார் மகிழுந்து வைத்துக்கொள்ளப் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இது சாலைகளில் நெரிச்சலை தவிர்க்கவும் மாசுபடுதலை குறைக்கவும் அரசு மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். மகிழுந்து வாங்க அதன் சந்தை மதிப்பை விட ஒன்றறை மடங்கு சுங்கத்தீர்வை வாங்குபவர் அரசுக்கு செலுத்த வேண்டும். மேலும் அவர் சிங்கப்பூரின் மகிழுந்து வாங்க உரிய தகுதி சான்றிதழ் (COE) வாங்க வேண்டும். இச்சான்றிதழ் 10 ஆண்டுகளுக்கு மகிழுந்தை சிங்கப்பூரில் ஓட்ட அனுமதிக்கிறது. இங்கு மகிழுந்தின் விலை அதிகம், சிங்கப்பூர்வாசிகளில் 10க்கு ஒருவர் மகிழுந்து வைத்துள்ளார் . thumb|right|300px|மின்னனு கட்டண சாலை வடக்கு பாலம் சாலை தனிப்பட்ட முறையில் மகிழுந்து வைத்துக்கொள்ளப் பல கட்டுப்பாடுகள் இருப்பதாலும் பேருந்து தொடருந்து வசதி நன்றாக இருப்பதாலும் பெரும்பாலான சிங்கப்பூர்வாசிகள் பேருந்து, தொடருந்து, வாடகை மகிழுந்து, மிதிவண்டி மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். எசு.பி.எசு டிரான்சிட் என்ற நிறுவனம் பேருந்துகளை இயக்குகிறது. எசு.எம்.ஆர்.டி கழகம் என்ற நிறுவனம் பேருந்துகளையும் தொடருந்துகளையும் இயக்குகிறது. 12க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாடகை மகிழுந்துகளை இயக்குகின்றன. 25,000 வாடகை மகிழுந்துகள் சிங்கப்பூரில் உள்ளன. மற்ற முன்னேரிய நாடுகளுடன் ஒப்பிடும் போது வாடகை மகிழுந்துகளின் வாடகை குறைவு, எனவே இவற்றின் பயன்பாடு மக்களிடையே அதிகம் உள்ளது. சிங்கப்பூரின் சாலைகளின் மொத்த தொலைவு 3,356 கி.மீட்டர், இதில் 161 கிலோ மீட்டர் விரைவுச் சாலைகளாகும். உலகின் முதல் நெரிச்சல் கட்டண திட்டமான சிங்கப்பூர் வட்டார உரிம திட்டம் 1975ல் நடைமுறை படுத்தப்பட்டது. 1998ல் இத்திட்டம் மேம்படுத்தப்பட்டு மின்னனு கட்டண சாலை என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. இதன் மூலம் மின்னனுமுறையில் சுங்கம் வசுலித்தல், மின்னனு முறையில் உணர்தல், காணொளிமூலம் கண்காணித்தல் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசியாவில் பன்னாட்டு போக்குவரத்தின் முக்கிய மையமாகச் சிங்கப்பூர் விளங்குகிறது. 2005ல் சிங்கப்பூர் துறைமுகம் 1.15 மில்லியன் டன் (கப்பலின் மொத்த சுமையளவு) கையாண்டது. சாங்காய் துறைமுகத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவான சரக்குகளை (423 மில்லியன் டன்) கையாண்டது. கப்பலின் பொருட்களை வேறு கப்பலுக்கு மாற்றும் முதன்மை மையமாகவும் திகழ்கிறது. கப்பல்கள் எரிபொருளை நிரப்பும் மையமாகவும் திகழ்கிறது. தென்கிழக்காசியாவின் வானூர்தி மையமாகச் சிங்கப்பூர் விளங்குகிறது. இலண்டனிலிருந்து சிட்னி செல்லும் வானூர்திகள், பயணிகள் இடைத்தங்கும் இடமாகவும் சிங்கப்பூர் விளங்குகிறது . சிங்கப்பூரில் 8 வானூர்தி நிலையங்கள் உள்ளன. சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் 80 வானூர்தி நிறுவனங்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இவை 68 நாடுகளில் உள்ள 302 நகரங்களை இணைக்கின்றன. சிங்கப்பூர் வான்வழி இந்நாட்டின் தேசிய வானூர்தியாகும். இவற்றையும் பார்க்கவும் சிங்கப்பூர் தமிழர் சிங்கப்பூர் கோயில்கள் குறிப்புகள் மேற்கோள்கள் Bibliography Lee Kuan Yew (2000). From Third World To First: The Singapore Story: 1965–2000. New York: HarperCollins. வெளி இணைப்புகள் சிங்கப்பூர் அரசின் இணையதளம் விக்கி ட்ரேவல் - சிங்கப்பூர் வழிகாட்டி பகுப்பு:தென்கிழக்கு ஆசிய நாடுகள் பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள் பகுப்பு:ஆசியத் தலைநகரங்கள் பகுப்பு:தீவு நாடுகள் பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்
இராகம்
https://ta.wikipedia.org/wiki/இராகம்
இராகம் () (சமஸ்கிருதம்: रागः, இந்தி: राग) என்பது இந்தியப் பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது. இராகத்தின் அடிப்படை "இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்." லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). 1988. இராக, தாள வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். சென்னை: மணிமேகலை. இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போதும் (ஆரோகணத்தில் - आरोहणम्) கீழே செல்லும்போதும் (அவரோகணத்தில் - अवरोहणम्) எந்த ஸ்வரங்களை (स्वर) வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, அது ராகத்தில் எந்தெந்த ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும், எந்தெந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக இராகத்தில் இருக்கும் ஸ்வரங்களைப் பயன்படுத்தி இராகத்தின் ஸ்வர பாவங்களை முன்னிலையில் காட்டும் வகையில் இசையமைக்க இராகம் உதவுகிறது. ஸ்வரங்கள் ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும். வெகு சில இராகங்களில் மட்டும் நான்கு அல்லது மூன்று ஸ்வரங்களோ, அல்லது ஏழுக்கு மேல் ஸ்வரங்கள் (அன்னிய ஸ்வரங்களை கூட்டி) வரலாம். ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு. எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ராகத்தின் ஆரோகணத்திலோ அவரோகணத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர (वक्र) ராகம் என்று அழைக்கப்படும். கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயர் உண்டு. ஒரு ஸ்தாயில் இருக்கும் ஏழு ஸ்வரங்களில் இரண்டாம், மூன்றாம், ஆறாம், ஏழாம் ஆகிய ஸ்வரங்கள் மூன்று வகைப்படலாம் (sharp and flat). நான்காம் ஸ்வரம் இரண்டு வகைப்படும். இந்த வகைகளில் எந்த ஸ்வரத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும் இராகம் காட்டும். இராகத்திற்கு தகுந்த நேரம் காலை, நன்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு பொழுதுகளுக்கும் தகுந்த இராகங்கள் உள்ளன. பொழுதிற்கு ஏற்ற ராகம் பாடும் வழக்கம் இந்துஸ்தானி இசையில் (வட இந்திய இசை) பின்பற்றப்படுகிறது, ஆனால் கர்நாடக இசையில் (தென் இந்திய இசை) குறைவாகவே பின்பற்றப்படுகின்றது. கர்நாடக-இந்துஸ்தானி ஒற்றுமை வேறுபாடு இந்திய பாரம்பரிய இசையின் இரு பாகங்களான கர்நாடக இசைக்கும் இந்துஸ்தானி இசைக்கும் வெவ்வேறு இராகங்கள் இருக்கின்றன. சில ராகங்கள் இரு இசை முறைகளுக்கும் உரியன. தென் இந்திய இசையிலும் வட இந்திய இசையிலும் ஒரே ஆரோகணம் - அவரோகணத்தைக் கொண்டிருந்தாலும் வேறு பெயர்களைக் கொண்டுள்ளன. ஒரு எடுத்துக்காட்டாக கர்னாடக இசையில் "கல்யாணி" என்ற பெயர் கொண்ட இராகமும் இந்துஸ்தானி இசையில் "யமன்" என்ற பெயரைக் கொண்ட ராகமும் ஒரே ஆரோகணம் - அவரோகணத்தைக் கொண்டுள்ளன. சில ராகங்கள் இரு இசை வழக்குகளில் ஒரே பெயரைக் கொண்டிருந்தாலும் வெவ்வேறு ஸ்வர வரிசைகளைக் கொண்டுள்ளன. ஒரு எடுத்துக்காட்டாக கர்னாடக இசையில் பைரவி ஹிந்துஸ்தானி இசையில் வரும் பைரவியை ஒப்பிடும் போது சில ஸ்வரங்கள் வேறுபாடு தவிர இராக பாவம் வேறு. ஹிந்துஸ்தானி இசையில் வரும் பைரவி கர்னாடக இசையின் தோடிக்கு சமம். கர்னாடக இசையின் பைரவி இந்துஸ்தானி இசையில் வரும் அஸாவாரி தாட்டோடு இணையும். இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து "தாட்" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கின்றன. தென் இந்தியாவில் ராகங்கள் 72 மேளாகர்த்தா ராகங்களின் அடிப்படையில் ஜனக - ஜன்னிய ராகங்களாக வகுக்கப்படுகின்றன. இராகம் அறிவியல் அல்ல ராகங்கள் பழங்காலத்தில் எழுதப்படாமல், குரு - சிஷ்யன் பரம்பரையில் வாய்மொழியாக கற்பிக்கப்பட்டதால் சில ராகங்கள் வெவ்வேறு இடங்களில் வேறு விதமாக தோன்றலாம். இந்திய பாரம்பரிய இசை எப்போதும் இராக அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தாலும், ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இசை எல்லாம் பாரம்பரிய இசை என்பது உண்மை அல்ல. சினிமா பாட்டுகள் பலவும் ராகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. ஆரோகனம் அவரோகனம் தவிர வேறு எதுவும் எழுதப்படாது. ராக பாவங்கள் (எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும், எந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் போன்றவை) குரு சிஷ்யன் பரம்பரையில் வாய்மொழியாகக் கற்பிக்கப்படுகின்றன. இராக பாவங்களை வெளிப்படுத்த உதவும் சில பாட்டுகளுக்கு "வர்ணம்" என்ற பெயர் உண்டு. இப்பாட்டுகள் இராகத்தை வர்ணிப்பதே இவற்றின் பெயருக்குக் காரணம். உசாத்துணை வெளியிணைப்புக்கள் The Raga Guide (sections) இராகம் தானம் பல்லவி தகவல் பகுப்பு:இராகங்கள் பகுப்பு:கருநாடக இசை
தேவநாகரி
https://ta.wikipedia.org/wiki/தேவநாகரி
தேவநாகரி (Devanagari) என்பது சமசுகிருதம், இந்தி, மராட்டி, காசுமிரி, சிந்தி போன்ற இந்திய மொழிகளையும், நேபாளியையும் எழுதப் பயன்படுத்தும் ஒரு எழுத்து முறைமையாகும். தேவநாகரி அபுகிடா என்று அழைக்கப்படும் எழுத்து முறைமை வகையைச் சேர்ந்தது. அபுகிடா என்பது ஒவ்வொரு மெய்யெழுத்தும் உள்ளார்ந்த உயிரெழுத்தொன்றைக் (இங்கே "அ") கொண்டிருக்கும், வேறு குறியீடுகளைச் சேர்ப்பதன் மூலம் இதனை மாற்றிக்கொள்ள முடியும். தேவநாகரி, கி.மு 500 வாக்கில் புழக்கத்துக்கு வந்த பிராமியின் வாரிசாகக் கருதப்படுகின்றது. பிராமி எழுத்துக்கள் கிழக்கு அரமேய மொழி அரிச்சுவடி போன்ற செமிட்டிக் எழுத்துக்களிலிருந்து உருவானதாகப் பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றார்கள். கி.மு 2600 ஆண்டுகள் வரையாவது பழமையான சிந்து சமவெளி எழுத்துக்களிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமென்ற அதிகம் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்தும் உண்டு. பிராமிக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு எழுத்துக்களையும் ஏனைய பல இந்திய மொழிகள் பயன்படுத்துகின்றன. தேவநாகரி என்னும் சொல், கடவுள் என்பதைக் குறிக்கும் சமசுகிருதச் சொல்லான "தேவ" என்பதும், நகரம் என்பதைக் குறிக்கும் "நாகரி" என்பதும் சேர்ந்து உருவானது. இச் சொல், கடவுளின் நகரத்தின் எழுத்து என்ற பொருள்படும். தேவநாகரி இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றது. சமசுகிருதத்தில் சொற்கள், மேற்கோடு முறியாமல் இடைவெளியின்றி எழுதப்படுகின்றன. இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு. நவீன மொழிகளில் சொற்கள் தனித்தனியாக எழுதப்படுகின்றன. தேவநாகரியில் ஆங்கிலத்திலிருப்பது போல் பெரிய, சிறிய எழுத்து வேறுபாடுகள் கிடையாது. சமசுகிருத எழுத்துக்கூட்டல் ஒலிப்பியல் முறை ஆனாலும் வரலாற்று மாற்றங்களினால் தேவநாகரியிலெழுதப்படும் நவீன மொழிகள் ஓரளவு மட்டுமே ஒலிப்பியல் முறைமையைக் கொண்டுள்ளது. அதாவது தேவநாகரியில் எழுதப்படும் சொற்கள் ஒரு வழியாக மட்டுமே உச்சரிக்கப்படமுடியுமாயினும், எல்லா உச்சரிப்புக்களையும் அச்சொட்டாக எழுத முடியாது. தேவநாகரி 34 மெய்யெழுத்துக்களையும் (வியஞ்சன்), 12 உயிரெழுத்துக்களையும் (இசுவர்) கொண்டுள்ளது. பின்வரும் அட்டவணைகளிலுள்ள transliterations பிரபல கல்கத்தா தேசிய நூலக ரோமனாக்கம் முறையைப் பின்பற்றியுள்ளது. ITRANS குறியீடு தேவநாகரியை ஆங்கிலத்துக்கு மாற்றுவதற்கான ஒரு lossless transliteration முறையாகும். இது Usenet இல் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. ITRANS முறையில் தேவநாகரி என்னும் சொல் "devanaagarii" என எழுதப்படும். தேவநாகரியின் குறியீடுகள் தேவநாகரியின் எல்லா உயிர்க் குறிகளும் மெய்யெழுத்துக்களுக்கு மேல் அல்லது கீழ்ப் பகுதியில் அல்லது இடப்பக்கத்தில் சேர்க்கப்படுகின்றன. "இ" உயிர் மட்டும் மெய்யெழுத்துக்கு வலப்பக்கம் சேர்க்கப்படும். "தேவநாகரி உயிரெழுத்துக்கள்" அட்டவணையில் "எழுத்துக்கள்" நிரலில் மெய்யெழுத்துச் சேர்க்கையின்றி வரும் உயிரெழுத்துக் குறியீடுகள் காட்டப்பட்டுள்ளன. "உயிர்க் குறியீடு" நிரல், உயிர் மெய்யெழுத்துக்களுடன் சேரும்போது பயன்படும் குறியீடுகளைக் கொண்டுள்ளது. "'ப' உடன் உயிர்" நிரலில் "ப்" மெய்யுடன் உயிரொலிகள் சேரும்போது வரும் குறியீடுகள் உதாரணமாகத் தரப்பட்டுள்ளன. "யுனிகோடு பெயர்" நிரல், உயிரொலிகளுக்கான யுனிகோடு specification இல் காணப்படும் பெயர்களைக் காட்டுகின்றது. "IPA" நிரல் அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி முறையில் தேவநாகரி எழுத்துக்களுக்கான உச்சரிப்புகளைத் தருகின்றது. +தேவநாகரி உயிரெழுத்துக்கள்எழுத்துஉயிர்க் குறியீடு[ப] உடன் உயிர் யுனிகோடு பெயர்IPA अ प (pa) A ə आ ा पा (pā) AA ɑ इ ि पि (pi) I ɪ ई ी पी (pī) II i उ ु पु (pu) U ʊ ऊ ू पू (pū) UU u ऋ ृ पृ (pṛ) VOCALIC R ri ॠ ॄ पॄ VOCALIC RR ऌ ॢ पॢ VOCALIC L ॡ ॣ पॣ VOCALIC LL ऍ ॅ पॅ CANDRA E ऎ ॆ पॆ SHORT E ए े पे (pe) E e ऐ ै पै (pai) AI ɛ ऑ ॉ पॉ CANDRA O ऒ ॊ पॊ SHORT O ओ ो पो (po) O o औ ौ पौ (pau) AU ɔ +Other modifier symbolsSymbolSymbol with [p]Unicode name Function ् प् VIRAMA Called halant; suppresses the inherent vowel. ँ पँ CANDRABINDU Nasalizes vowel ं पं ANUSVARA Nasalizes vowel ः पः VISARGA Adds voiceless breath after vowel ़ प़ NUKTA Used to indicate sounds borrowed from Persian (e.g., ph + nukta = f) ऽ पऽ AVAGRAHA When no vowel is written, 'a' is assumed. To specifically denote the absence of a vowel, a halant (also called virama) is used. +Devanagari consonantsLetterUnicode name TransliterationIPAक KA k kख KHA kh khग GA g gघ GHA gh gɦङ NGA ṅ ŋच CA c tʃछ CHA ch tʃhज JA j dʒझ JHA jh dʒɦञ NYA ñ ɲट TTA ṭ ʈ / ɽ̊ठ TTHA ṭh ʈh / ɽ̊hड DDA ḍ ɖ / ɽढ DDHA ḍh ɖɦ / ɽɦण NNA ṇ ɳत TA t t̪थ THA th t̪hद DA d d̪ध DHA dh d̪ɦन NA n n̪प PA p pफ PHA ph phब BA b bभ BHA bh bɦम MA m mय YA y jर RA r ɾल LA l lळ LLA ḷ ɭव VA v vश SHA ś ɕष SSA ṣ ʂस SA s sह HA h h இவற்றுள், ळ இந்தியில் பயன்படுத்தப்படுவதில்லை. மொத்தமும் மராத்தியில் பயன்படுத்தப்படுகிறது. தேவநாகரி எழுத்துக்கள் கீழ்க்கண்டவாறு எழுதப்படுகின்றன: +Devanagari numerals० 0१ 1२ 2३ 3४ 4५ 5६ 6७ 7८ 8९ 9 யுனிக்கோடில் தேவநாகரி தேவநாகரியின் யுனிக்கோடு எல்லை U+0900 .. U+097F.   0123456789ABCDEF900 ऀँंःऄअआइईउऊऋऌऍऎए910 ऐऑऒओऔकखगघङचछजझञट920 ठडढणतथदधनऩपफबभमय930 रऱलळऴवशषसहऺऻ़ऽाि940 ीुूृॄॅॆेैॉॊोौ्ॎॏ950 ॐ॒॑॓॔ॕॖॗक़ख़ग़ज़ड़ढ़फ़य़960 ॠॡॢॣ।॥०१२३४५६७८९970 ॰ॱॲॳॴॵॶॷॸॹॺॻॼॽॾॿ வெளியிணைப்புகள் IndiX, Indian language support for Linux , a site by the Indian National Centre for Software Technology Unicode Chart for Devanagari On history of Indian writing பகுப்பு:அபுகிடா எழுத்து முறைமைகள் பகுப்பு:எழுத்து முறைகள் பகுப்பு:பிராமிய எழுத்துமுறைகள் பகுப்பு:இந்தி
மானிடவியல்
https://ta.wikipedia.org/wiki/மானிடவியல்
மானிடவியல் அல்லது மாந்தவியல் (Anthropology) மனித இனம் பற்றிய அறிவியல் கல்வித்துறை ஆகும். இது மனித குலத்தைச் சமூக நிலை, பண்பாட்டு நிலை, உயிரியல் நிலை போன்ற வேறுபட்ட நிலைகளில் கடந்த கால மக்களையும், சமகால மக்களையும் (அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும்) ஆராயும் பரந்த விரிந்த இலக்குடையதாக உள்ளது.பக்தவத்சல பாரதி. (2005). மானிடவியல் கோட்பாடுகள். புதுவை: வல்லினம் பதிப்பகம். இது இரண்டு வகைகளில் முழுதளாவிய (holistic) தன்மை கொண்டது: இது எல்லாக் காலங்களையும் சேர்ந்த அனைத்து மனிதர்களையும், மனித இனத்தின் அனைத்து அம்சங்களையும் பற்றிக் கருத்தில் கொள்கின்றது. பண்பாடு பற்றிய எண்ணக்கருவும், மனித இயல்பு பண்பாடே எனும் கருத்தும் (notion); அதாவது எங்களுடைய இனம் உலகத்தை குறியீட்டு முறையில் விளங்கிக் கொள்வதற்கும், சமுதாய ரீதியில் குறியீட்டு முறையில் பயிலவும் பயிற்றுவிக்கவும், அக்குறியீடுகளின் அடிப்படையில் உலகத்தையும் எங்களையும் மாற்றிக் கொள்வதற்கும் ஏதுவாக முழுமையான தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளது என்னும் கருத்துமே மானிடவியலின் அடிப்படையாகும். ஐக்கிய அமெரிக்காவில், மானிடவியல் பாரம்பரியமாக நான்கு துறைகளாக வகுக்கப்படுகிறது: உடல்சார் மானிடவியல்: இது உயர் பாலூட்டியின் நடத்தைகள், மனித படிமலர்ச்சியியல், குடித்தொகை, மரபியல் என்பவை பற்றி ஆராய்கின்றது; இத் துறை சில சமயங்களில் உயிரியல்சார் மானிடவியல் எனவும் வழங்கப்படுகின்றது. சமூக, பண்பாட்டு மானிடவியல்: இது சமூக மானிடவியல், பண்பாட்டு மானிடவியல் ஆகிய இரண்டையும் இணைத்து உருவாகியதாகும். இந்த ஆய்வுக் களம் சமூக வலையமைப்பு, சமூக நடத்தைகள், உறவுமுறை வடிவங்கள், அரசியல், நம்பிக்கைகள், உற்பத்தி வடிவங்கள், பரிமாற்றம், நுகர்வு மற்றும் ஏனைய பண்பாட்டு வெளிப்பாடுகள் என்பவற்றை உள்ளடக்கும்; மொழிசார் மானிடவியல்: இது காலம் மற்றும் இடம் சார்ந்த நிலையில் மொழிகளின் வேறுபாடுகள், மொழியின் சமூகப் பயன்பாடு, மொழிப் பண்பாடு என்பவற்றுக்கிடையிலான தொடர்பு பற்றி ஆய்வு செய்கின்றது; தொல்பொருளியல், இது மனித சமூகங்களின் பொருள்சார் எச்சங்களை ஆராய்கிறது. (இது பொதுவாக ஒரு தனியான துறையாகவே கணிக்கப்படுகின்றது). மானிடவியல் எண்ணக்கருக்கள் நடத்தை நவீனத்துவம்(Behavioral modernity) குடியேற்றவாதம் பண்பாடு இனத்துவம் பரிமாற்றம்(Exchange) மற்றும் கொடுத்துவாங்கல் (Reciprocity) குடும்பம் பால்சார் வகிபாகம் (Gender role) உறவுமுறையும் மரபுவழியும் திருமணம் அரசியல் முறைமைகள் இனம் சமயம் வாழ்க்கை நிலை பிறபண்பாட்டுமயமாதல் (Transculturation) மானிடவியல் துறைகளும் துணைத் துறைகளும் உயிரியல் மானிடவியல் (அத்துடன்பௌதீக மானிடவியல்) சட்ட மானிடவியல் Paleoethnobotany பண்பாட்டு மானிடவியல் (சமூக மானிடவியல் எனவும் கூறலாம்) பயன்பாட்டு மானிடவியல் பண்பாட்டிடை ஆய்வு இணையவெளி மானிடவியல் அபிவிருத்தி மானிடவியல் சூழல் மானிடவியல் பொருளாதார மானிடவியல் பழங்கால இசையியல் மருத்துவ மானிடவியல் உளவியல் மானிடவியல் அரசியல் மானிடவியல் சமய மானிடவியல் (Anthropology of religion) புறப்பொருள் மானிடவியல் (Public) காட்சி மானிடவியல் இனவரைவியல் மொழியியல்சார் மானிடவியல் விளக்கமுறை மொழியியல் (Synchronic linguistics) அல்லது விளக்க மொழியியல் (Descriptive linguistics) வரலாற்றுமுறை மொழியியல் (Diachronic linguistics) அல்லது வரலாற்று மொழியியல் (Historical linguistics) இனக்குழு மொழியியல் (Ethnolinguistics) சமூகமொழியியல் தொல்பொருளியல் மேற்கோள்கள்
மகாபாரதம்
https://ta.wikipedia.org/wiki/மகாபாரதம்
மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமசுகிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிசி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது. நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும். இதனைத் தமிழில் "வில்லிபாரதம்" என்ற இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராசகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார். தோற்றம் இதன் முற்பட்ட பகுதிகள் வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (கிமு 5ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிபி நான்காம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர் காலத்தில் இது இதன் முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தே இது இதன் முழு நீளத்தை அடைந்ததாகச் சொல்கிறார்கள். முறையான பாரதம் எனக் கூறப்படும் இதன் மூலப் பகுதி 24,000 அடிகளைக் கொண்டது என மகாபாரதத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட பாரதத்தின் மூலப் பகுதி 8,000 அடிகளைக் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதி பருவம் கூறுகிறது இது செயம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது இது 24,000 அடிகளைக் கொண்டிருந்தது. உக்கிராஸ்ராவ சௌதி ஓதியபடி இது 90,000 அடிகளை உடையதாக இருந்தது. இவ்விதிகாசத்தை எழுதியவராக மரபுவழியாக நம்பப்படும் வியாசர் இதில் ஒரு கதை மாந்தராகவும் உள்ளார். வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, இந்துக் கடவுளான பிள்ளையாரே ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்லிவரவேண்டும் எனப் பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம். வியாசரும் எழுதுமுன் தன் பாடல் வரிகளைப் பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினாராம். "மகாபாரதம்" என்னும் நூல் தலைப்பு, "பரத வம்சத்தின் பெருங்கதை" என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே "பாரதம்" எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது "மகாபாரதம்" என அழைக்கப்பட்டது. உள்ளடக்கப் பரப்பு இது, குருச்சேத்திரப் போர் எனப்படும், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையிலான பெரும் போரை மையப்படுத்திய கதையாக இருந்தபோதிலும், இதில், பிரம்மம், ஆன்மா என்பன தொடர்பானமெய்யியல் உள்ளடக்கங்களும் பெருமளவில் உள்ளன. பகவத் கீதை, மனித வாழ்வின் நால்வகை நோக்கங்கள் தொடர்பான விளக்கங்கள் போன்றவை இவற்றுள் அடக்கம். மகாபாரதம் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியிருப்பதாகக் கூறுகிறது. இதன் முதலாம் பர்வம், "இதில் காணப்படுபவை வேறிடங்களிலும் காணப்படலாம். இதில் காணப்படாதவை வேறெங்கும் காணப்படா" என்கிறது. இவ்விதிகாசத்தினுள் அடங்கியுள்ள முக்கிய ஆக்கங்களும் கதைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன. பகவத் கீதை: பகவத் கீதை, மகாபாரதத்தின் ஆறாவது பர்வமான பீசுமபர்வத்தில் அடங்கியுள்ளது. குருச்சேத்திரப் போரின் தொடக்கத்தில், அப்போர் தேவைதானா என அருச்சுனனுக்கு ஏற்பட்ட ஐயத்தையும், தொய்வையும் நீக்குவதற்காகக் கண்ணன் கூறிய அறிவுரைகளை உள்ளடக்கியது இது. விதுர நீதி: இது ஐந்தாம் பருவமான உத்யோக பருவத்தில் வருகிறது. திருதராட்டிரனுக்கு, விதுரன் ஓர் இரவு முழுவதும், மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக் கூடாது; என்னென்ன செய்ய வேண்டும்; என்னென்ன செய்யக் கூடாது என்கிற வாழ்வியல் நீதிநெறிகளை விளக்கிக் கூறும் பகுதி இது. நளன், தமயந்தி கதை: இதிகாசத்தின் மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் காணப்படுகின்றது. இது நளன் என்னும் அரசனும், தமயந்தி என்னும் இளவரசியும் காதலித்து மணம்புரிந்து கொள்வதையும், பின்னர் நளன் சனியால் பிடிக்கப்பட்டு நாடிழந்து பல ஆண்டுகள் அல்லலுற்று மீண்டும் இழந்த அரசுரிமையைப் பெறுவதையும் கூறும் கதை. இராமாயணத்தின் சுருக்கம்: மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் உள்ளது. மேலும் தேவயானி – கசன், யயாதி, நகுசன், சாரங்கக் குஞ்சுகளின் கதை, அகத்தியரின் கதை, யவக்ரீவன் கதை, தருமவியாதன் என்னும் கசாப்புக் கடைக்காரனின் கதை, சத்தியவான் சாவித்திரி கதை, துசுயந்தன் – சகுந்தலை கதை, நளாயினி கதை, அரிச்சந்திரன், கந்த பெருமான், பரசுராமர் மற்றும் கலைக்கோட்டு முனிவர் வரலாறுகள் என்று பலவும் ஆரண்யக பருவத்தில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வித வாழ்வியல் நீதி அல்லது நியதியை மையப்படுத்திய அற்புதக் கதைகள் ஆகும். இவை தம்மளவில் தனி ஆக்கங்களாகவும் கருதப்படத் தக்கவை. வரலாறும் அமைப்பும் thumb|right|250px| சூத புராணிகரான உக்கிரசிரவசு என்பவர் மகாபாரத இதிகாசத்தை, நைமிசாரண்ய முனிவர்களுக்கு எடுத்துரைத்தல் இவ்விதிகாசம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்பை உடையது. இவ்வமைப்பு, பழங்கால இந்தியாவின் ஆக்கங்களில் பரவலாகக் காணப்படுவதாகும். வியாசரால் எழுதப்பட்ட இது பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய சீடரான வைசம்பாயனர் என்பவரால், அருச்சுனனின் கொள்ளுப்பேரனான சனமேசயன் என்னும் அரசனுக்குச் சொல்லப்பட்டது. இது மேலும் பல ஆண்டுகள் கடந்த பின்னர் கதைசொல்லியான உக்கிரசிரவசு என்பவரால் நைமிசாரண்யம் எனும் காட்டில் வாழும் முனிவர்கள் குழுவொன்றுக்குச் சொல்லப்பட்டது. மகாபாரதத்தின் பல்வேறு பகுதிகளின் காலத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் பல அறிஞர்கள் நீண்ட காலத்தைச் செலவு செய்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் இந்தியவிலாளர் பலர், இது குழப்பமாகவும், ஒழுங்கற்ற முறையிலும் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். மகாபாரதம் தொடர்பான மிக முற்பட்ட குறிப்புக்கள், கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அட்டாத்தியாயி என்னும் இலக்கண நூலிலும், அசுவலாயன கிருகசூத்திரம் என்னும் நூலிலும் காணப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு 24,000 அடிகளுடன் கூடிய பாரதமும், விரிவாக்கப்பட்ட மகாபாரதத்தின் தொடக்க வடிவங்களும், கிமு நான்காம் நூற்றாண்டளவில் இருந்திருக்கக்கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இதன், 8,800 அடிகளைக் கொண்ட மூல வடிவம் கிமு 9-8 நூற்றாண்டுகளிலேயே தோன்றியிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து. வியாச பாரதத்தின் அமைப்பு மொத்தம் 18 பெரும் பருவங்கள் கொண்ட வியாச பாரதம் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆத்ய பஞ்சகம்: ஆதி, சபா, ஆர்ண்ய, விராட மற்றும் உத்யோக ஆகிய 5 பர்வங்கள் யுத்த பஞ்சகம்: பீசும, துரோண, கர்ண, சல்ய மற்றும் செளப்திக ஆகிய போர் நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள் சாந்தி த்ரையம்: சுதிரீ, சாந்தி மற்றும் அனுசாசன் ஆகிய அமைதி திரும்பியதை விவரிக்கும் 3 பர்வங்கள் அந்த்ய பஞ்சகம்: அசுவமேதிக, ஆச்ரமவாஸிக, மெளசல, மகாப்ரசுதானிக மற்றும் சுவர்க்காரோகண ஆகிய இறுதி நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள் 18 பர்வங்கள் மகாபாரதத்தின் 18 பர்வங்கள் பின்வருமாறு: ஆதி பருவம்: 19 துணைப் பருவங்களைக் (1-19) கொண்டது. நைமிசக் காட்டில் முனிவர்களுக்கு சௌதி மகாபாரதத்தைச் சொல்லியது பற்றியும், வைசம்பாயனரால் முன்னர் இக்கதை சனமேசயனுக்குச் சொல்லப்பட்டது பற்றியும் இப் பருவத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பருவம், பிருகு இனத்தின் வரலாற்றையும் கூறுகிறது. குரு இளவரசர்களின் பிறப்பு, அவர்களது இளமைக்காலம் என்பனவும் இப் பருவத்தில் எடுத்தாளப்படுகின்றன. சபா பருவம்: 20 – 28 வரையான 9 துணைப் பருவங்கள் இதில் உள்ளன. இந்திரப்பிரஸ்தத்தில் மயன் மாளிகை அமைத்தல், அரண்மனை வாழ்க்கை, தருமன் இராசசூய யாகம் செய்தல் என்பன இப் பருவத்தில் சொல்லப்படுகின்றன. அத்துடன், தருமன் சூதுவிளையாட்டில் ஈடுபட்டு இறுதியில் நாடிழந்து காட்டில் வாழச் செல்வதும் இப் பருவத்தில் அடங்குகின்றன. ஆரண்யக பருவம்: 29 – 44 வரையான 16 துணைப் பருவங்கள் இதில் அடங்குகின்றன. இது பாண்டவர்களின் 12 ஆண்டுக்காலக் காட்டு வாழ்க்கை பற்றிய விபரங்களைத் தருகிறது. விராட பருவம்: 45 – 48 வரையான 4 துணைப் பருவங்களைக் கொண்ட இப் பருவம், பாண்டவர்கள், மறைந்து விராட நாட்டில் வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது. உத்யோக பருவம்: 49 – 59 வரையான 11 துணைப் பருவங்களைக் கொண்டது இது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளையும், அம்முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர் இடம்பெற்ற போருக்கான நடவடிக்கைகள் பற்றியும் எடுத்தாள்கிறது. பீசும பருவம்: இது 60 – 64 வரையான 5 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. இப்பருவத்தில் தான் பகவத் கீதை கிருட்டிணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது. பீசுமர் கௌரவர்களின் தளபதியாக இருந்து நடத்திய போரின் முதற்பகுதியையும், அவர் அம்புப் படுக்கையில் விழுவதையும் இது விவரிக்கிறது. துரோண பருவம்: 65 – 72 வரையான 8 துணைப் பர்வங்களில், துரோணரின் தலைமையில் போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர். கர்ண பருவம்: 73 ஆம் துணைப் பர்வத்தை மட்டும் கொண்ட இப் பர்வத்தில் கர்ணனைத் தளபதியாகக் கொண்டு போர் தொடர்வது விவரிக்கப்படுகின்றது. சல்லிய பருவம்: 74 – 77 வரையான 4 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. சல்லியனைத் தளபதியாகக் கொண்டு இடம் பெற்ற இறுதிநாள் போர் இப் பர்வத்தில் கூறப்படுகின்றது. இதில் சரசுவதி நதிக்கரையில் பலராமனின் யாத்திரையையும், போரில் துரியோதனனுக்கும், வீமனுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போரும் விளக்கப்படுகின்றது. வீமன் தனது கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் அடித்து அவனைக் கொன்றான். சௌப்திக பருவம்: 78 – 80 வரையான 3 துணைப் பர்வங்களை இது அடக்குகிறது. அசுவத்தாமனும், கிருபனும், கிருதவர்மனும், போரில் எஞ்சிய பாண்டவப் படைகளில் பலரை அவர்கள் தூக்கத்தில் இருந்தபோது கொன்றது பற்றி இப் பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர் பக்கத்தில் எழுவரும், கௌரவர் பக்கத்தில் மூவரும் மட்டுமே போரின் இறுதியில் எஞ்சினர். சுதிரீ பருவம்: 81 – 85 வரையான 5 துணைப் பர்வங்கள் இதில் அடங்குகின்றன. இப் பர்வத்தில் காந்தாரி, குந்தி முதலிய குரு மற்றும் பாண்டவர் பக்கங்களைச் சேர்ந்த பெண்கள் துயரப் படுவது கூறப்படுகின்றது. சாந்தி பருவம்: 86 – 88 வரையான மூன்று துணைப் பர்வங்களை அடக்கியது இப் பர்வம். அத்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும், புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் ஆகியவை தொடர்பில் பீசுமர் வழங்கிய அறிவுரைகளும் இப் பர்வத்தில் அடங்கியுள்ளன. மகாபாரதத்தின் மிகவும் நீளமான பர்வம் இது. அனுசாசன பருவம்: 89, 90 ஆகிய இரண்டு துணைப் பர்வங்களை அடக்கியது. பீசுமரின் இறுதி அறிவுரைகள். அசுவமேத பருவம்: தருமர் அசுவமேத யாகம் செய்வதையும், அருச்சுனன் உலகைக் கைப்பற்றுவதையும் இது உள்ளடக்குகிறது. கண்ணனால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட கீதையும் இதில் அடங்குகிறது. ஆசிரமவாசிக பருவம்: 93 – 95 வரையான 3 துணைப் பர்வங்கள் இதில் உள்ளன. திருதராட்டிரன், காந்தாரி, குந்திமற்றும் விதுரன் ஆகியோர் இமயமலையில் வனப்பிரசுதம் ஆச்சிரமத்தில் வாழ்ந்தபோது காட்டுத் தீக்கு இரையானது இப் பர்வத்தில் கூறப்படுகின்றது. மௌசல பருவம்: 96 ஆவது துணைப் பர்வம். யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்டையில் அவர்கள் அழிந்துபோனதை இப் பர்வம் கூறுகிறது. மகாபிரசுதானிக பருவம்: 97 ஆவது பர்வம்: தருமரும் அவரது உடன்பிறந்தோரும் நாடு முழுதும் பயணம் செய்து இறுதியில் இமயமலைக்குச் சென்றது, அங்கே தருமர் தவிர்த்த ஏனையோர் இறந்து வீழ்வது ஆகிய நிகழ்ச்சிகள் இப் பர்வத்தில் இடம்பெறுகின்றன. சுவர்க்க ஆரோகன பருவம்: 98 ஆவது துணைப் பர்வம். தருமரின் இறுதிப் பரீட்சையும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதும் இதில் சொல்லப்படுகின்றன. 99, 100 ஆகிய துணைப் பருவங்களை உள்ளடக்கிய அரிவம்ச பருவம் எனப்படும் பருவம் முற் கூறிய 18 பர்வங்களுள் அடங்குவதில்லை. இதில் முன் பர்வங்களில் கூறப்படாத, கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் கூறப்படுகின்றன. வரலாற்றுச் சூழல் வரலாற்று நோக்கில் குருச்சேத்திரப் போர் பற்றித் தெளிவு இல்லை. இப்படி ஒரு போர் நிகழ்ந்திருப்பின் அது கிமு 10 ஆம் நூற்றாண்டளவில் இரும்புக் காலத்தில் நடைபெற்று இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிமு 1200 – 800 காலப்பகுதியில், குரு இராச்சியம் அரசியல் அதிகார மையமாக இருந்திருக்கலாம். இக்காலத்தில் இடம்பெற்ற வம்சம் சார்ந்த பிணக்கு ஒன்று தொடக்ககால பாரதம் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும். புராண இலக்கியங்கள் மகாபாரதத்துடன் தொடர்புடைய மரபுகளின் பட்டியல்களைத் தருகின்றன. தொல்வானியல் முறைகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளின் காலத்தைக் கணிக்க எடுத்த முயற்சிகள் போர்க் காலத்தை கிமு நான்காம் ஆயிரவாண்டு முதல் கிமு இரண்டாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை குறிக்கின்றன.ஆனாலும் இதில் தவறு இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது ஆரியர்களின் காலம் கி.மு 1300 க்கு பிறகே வருவதாலும் ,அதற்கு பிறகே நடந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. கதைச் சுருக்கம் மகாபாரதத்தின் அடிப்படைக் கதை குரு குலத்தவரால் ஆளப்பட்டு வந்த அத்தினாபுரத்தின் ஆட்சி உரிமை குறித்து பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே உண்டான பிணக்கு ஆகும். திருதராட்டிரன் மற்றும் பாண்டு ஆகிய சகோதரர்களின் வழிவந்தவர்களான கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலேயே இப் பிணக்கு நிகழ்ந்தது. கௌரவர்களே இவர்களுள் மூத்த மரபினராக இருந்தாலும், கௌரவர்களில் மூத்தோனாகிய துரியோதனன், பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமனிலும் இளையவனாக இருந்தான். இதனால் துரியோதனன், தருமன் இருவருமே ஆட்சியுரிமையை வேண்டி நின்றனர். இப்பிணக்கு இறுதியில் குருச்சேத்திரப் போராக வெடித்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. THE MAHABHARATA இப்போர் உறவுமுறை, நட்பு போன்றவை தொடர்பான சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தியது. மகாபாரதம் கர்ணனின் இறப்புடனும் தொடர்ந்த அவருடைய மரபின் முடிவுடனும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதுடனும் நிறைவடைகிறது. அத்துடன் இதன் முடிவுடன் கலியுகம் தொடங்குகிறது. தமிழில் மகாபாரதம் பாரதம் பாடிய பெருந்தேவனார் எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் பாரதத்தை தமிழ்ப்படுத்தினார். இவரின் காலமும் உறுதியாகத் தெரியவில்லை. இவர் தமிழ் மொழிப்படுத்திய பாரதமும் கிடைக்கவில்லை. பின்னர் தொண்டைமண்டலத்து திருமுனைப்பாடி நாட்டு சனியூரைச் சேர்ந்த வில்லிப்புத்தூரார் தனது புரவலரான வக்கபாகை வரபதியாட்கொண்டான் வேண்டிக்கொண்டதற்கு இணங்க பாரதத்தைப் பாடினார். வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதத்தில் பத்துப் பருவங்களே (மொத்தப்பாடல்கள் 4350) இருக்கின்றன. மகாபாரதத்தின் பதினெட்டாம் நாள் போரின் இறுதியுடன் தருமன் முடி சூட்டுதல், பாண்டவர் அரசாட்சி என்று முடித்து விடுகிறார். 14ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராரால் உருவாக்கப்பட்ட வில்லிபாரதமும் 18ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளையால் உருவாக்கப்பட்ட நல்லாப்பிள்ளை பாரதமும் மட்டுமே முழுமையாகக் கிடைத்த பிரதிகள். இதன் பின்னர் மகாபாரதத்தை வேறு சிலரும் உரைநடையில் மொழியாக்கம் செய்துள்ளனர். அவற்றுள் முழுமையானதாக திருத்தமிகு பதிப்பாகக் கருதப்படுவது, 1903 இலிருந்து இருபத்தைந்து ஆண்டு காலம், ம. வீ. இராமானுசச்சாரியார் தலைமையில் பல வடமொழி தமிழ் மொழி வித்வான்களால் மொழிபெயர்க்கப் பட்ட மகாபாரதப் (கும்பகோண) பதிப்பாகும். 9000 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 1930களிலும் 1950களிலும் 2008இலும் பதிப்பிக்கப் பட்டன. அதைத் தவிர குறிப்பிடத்தக்கவர் இராசாசி. அவருடையது "வியாசர் விருந்து" குறிப்பிடத் தகுந்தது. அ. லெ. நடராசன் "வியாசர் அருளிய மகாபாரதம்" என்ற பெயரில் நான்கு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார். பத்திரிக்கையாளர் சோ "மகாபாரதம் பேசுகிறது" என்ற பெயரில் வியாச பாரதத்தை இரு பாகங்களாக எழுதியுள்ளார். இராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் வியாசரைத் தழுவி எழுதிய மகாபாரதம் குறிப்பிடத்தகுந்தது. 2013ஆம் ஆண்டு வெளியான பத்தொன்பதாம் பதிப்பு வரை 2,35,000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. ஜெயமோகன் மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் நாவல் வடிவில் எழுதிருக்கிறார். அவரது இணையதளத்தில் 2014 ஜனவரி 1 ஆம் தேதிமுதல் 2020 ஜூலை 16 வரை தொடராகப் பதிவேற்றப்பட்டது. மொத்தம் பத்து தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டு, 26 நாவல்களும் 25000 பக்கங்களும் அது விரிவடைந்து வெளியிடப்பட்டுள்ளது. இதனையும் காண்க மகாபாரத கதைமாந்தர்களின் பட்டியல் மகாபாரதத்தில் கிருஷ்ணன் பகவத் கீதை மேற்கோற்கள் பகுப்பு:மகாபாரதம் பகுப்பு:இந்து தொன்மவியல் பகுப்பு:இதிகாசங்கள் பகுப்பு:சமசுகிருத இலக்கியம் பகுப்பு:காப்பியங்கள் பகுப்பு:பண்டைய நூல்கள்
தொல்லியல்
https://ta.wikipedia.org/wiki/தொல்லியல்
thumb|300px|right|இத்தாலியின், 2000 ஆண்டுக்காலப் பழமை வாய்ந்த பண்டைக்கால உரோமில் அகழ்வாய்வு. thumb|300px|உரோம அரங்கு, அலெக்சாந்திரியா, எகிப்து தொல்லியல் (Archaeology) என்பது பொருள்சார் பண்பாட்டை அகழ்ந்தெடுத்து தொன்மைக்கால மாந்தர் செயல்பாட்டைப் பகுப்பாய்வு செய்யும் அறிவியல் புலமாகும். இவ்வகைப் பொருள்சார் பண்பாட்டுத் தொல்லியல் ஆவணங்களில் கட்டிடக்கலை, தொல்பொருட்கள், தொல்லுயிர் எச்சம், மனித எச்சங்கள், சூழலியல் எச்சங்கள் ஆகியன உள்ளடங்கும். எனவே தொல்லியலை சமூகவியல் கிளைப்புலமாகவும் மாந்தவாழ்வியல் கிளைப்புலமாகவும் (humanities) கருதலாம். ஐரோப்பாவில் தனிப்புலமாகவும் பிறபுலங்கள் சார்ந்த கிளைப்புலமாகவும் பார்க்கப்படுகிறது; வட அமெரிக்காவில், தொல்லியல் மானிடவியலின் கிளைப்புலமாகவே நோக்கப்படுகிறது. தொல்லியலாளர்கள் கிழக்கு ஆப்பிரிகாவில் உலோம்கிவியில் கிமு 3.3 மில்லியன் ஆண்டுகள் முந்தைய கற்கருவிகளின் கண்டுபிடிப்பு முதல் மிக அண்மைய பத்தாண்டுகள் வரையிலான மாந்தரின முந்து வரலாற்றையும் வரலாற்றுக் காலத்தையும் பயில்கின்றனர். தொல்பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன. தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச்சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது. தொல்லியலின் வரலாறு ஃபிளவியோ பியோண்டோ என்ற இத்தாலிய வரலாற்று அறிஞர் பண்டைய உரோமின் தொல்பொருட்களைக் கொண்டு ஒரு முறையான காலக்கணிப்பு முறையை உருவாக்கினார். அதனால் இவர் தொல்லியலைக் கண்டுபிடித்தவர் என்று போற்றப்படுகிறார். சிரியேக்கோ பிசிகோலி என்ற இத்தாலிய வணிகர் கிழக்கு மத்திய கடலில் உள்ள தொல்பொருள்களைக் கொண்டு கமாண்டரியா என்ற ஆறு தொடர் புத்தகங்களை பதினான்காம் நூற்றாண்டில் எழுதினார். அதனால் இவர் தொல்லியலின் தந்தை என்று போற்றப்படுகிறார். இதன்பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இத்துறை பெரும் வளர்ச்சி அடைந்தது. ஐரோப்பியர்கள் மறைந்து போனதாகக் கருதப்படும் ட்ராய் நிலத்தை பற்றி அறிவதற்கான முயற்சிகளும் சார்லசு டார்வினின் பரிணாமக் கொள்கையும் இத்துறை வளர்ந்ததற்கு முக்கியக் காரணிகளாக கருதப்படுகின்றன. கல்விசார் துணைத் துறைகள் காலத்தினால் அல்லது பிரதேசத்தினால் வேறுபடுத்தப்படுகின்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட சில துணைத்துறைகளைக் கீழே காண்க. ஆப்பிரிக்கத் தொல்லியல் அமெரிக்கப் பழங்குடி மக்களின் தொல்லியல் ஆத்திரேலியத் தொல்லியல் ஐரோப்பியத் தொல்லியல் தொழில்துறைத் தொல்லியல் தொழிற் புரட்சியின் சின்னங்களான பொருட்களின் பேணுகையில் கவனம் செலுத்துவது. நிலக்கிடப்புத் தொல்லியல் - நிலவியல் அமைப்புகளில் அகழாய்வுக்கு உட்பட்ட இடத்தின் நில அமைப்புகள் முன்பும் இப்போதும் எப்படி இருந்தன என்று படிக்கின்ற துறை. கடல்சார் தொல்லியல் கடலில் மூழ்கிய பண்டைய தொல்லியல் எச்சங்களை கண்டறிந்து அந்நாகரிகத்தின் கடல்வணிகம், துறைமுகக் கட்டுமானம் மற்றும் கடல்சார் மக்களின் வாழ்க்கை போன்றவற்றை கண்டறிவதில் கவனம் செலுத்துவது. (எ.கா. இந்தியாவில் பல மாநில அல்லது தேசிய தொல்பொருளியல் அருங்காட்சியகங்கள் இருந்தாலும் தொல்லியல் அருங்காட்சியகம், பூம்புகார் மட்டுமே கடல்சார் தொல்லியல் பொருட்களை ஆவணப்படுத்துவதை கூறலாம். மத்திய கிழக்குத் தொல்பொருளியல் மத்தியகாலத் தொல்பொருளியல் என்பது ரோமருக்குப் பிற்பட்ட, பதினாறாம் நூற்றாண்டு வரையான, ஐரோப்பியத் தொல்பொருளியல் பற்றிய படிப்பாகும். மத்திய காலத்துக்குப் பிற்பட்ட தொல்பொருளியல் ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட வரலாற்றை கண்டறிய உதவும் துறை. நவீன தொல்பொருளியல் காலக்கணிப்பு முறைகள் தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கும் பொருட்களை பல்வேறு முறைகளில் கிடைக்கும் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றைக் காலக்கணிப்புக்கு உட்படுத்துகின்றனர். அவற்றை மூன்றாக வகைப்படுத்தி சார்பற்ற காலக்கணிப்பு முறைகள், சார்புடைய காலக்கணிப்பு முறைகள், சமான காலக்கணிப்பு முறைகள் அவற்றின் கீழ் பல்வேறு முறைகளை உள்ளடக்குகின்றனர். சார்பற்ற காலக்கணிப்பு முறைகள் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு கால இடைவெளி அளவியல் வெப்பக்குழலாய்வுச் காலக்கணிப்பு ஒளிக்குழல் காலக்கணிப்பு நாணயவியல் பொட்டாசியம்-ஆர்கான் காலக்கணிப்பு ஈய அரிப்புச் காலக்கணிப்பு அமினோ அமிலக் காலக்கணிப்பு தொல்பொருளின் மேல் படிந்த எரிமலைக் குழம்புக் கட்டியின் மீது நீரை பாய்ச்சும் முறை சார்புடைய காலக்கணிப்பு முறைகள் சார்புடைய காலக்கணிப்பு முறைகளாக அதிகம் அறிய வருவது மண்ணடுக்காய்வாகும். இம்முறையின் படி அகழாய்வில் கிடைக்கும் பொருள் எத்தனை அளவு ஆழத்தில் கிடைக்கின்றன என்பதை பொறுத்து தோண்டி எடுக்கப்பட்ட தொல்பொருளின் காலம் கணிக்கப்படுகிறது. சமான காலக்கணிப்பு முறைகள் தொல் புவிகாந்தவியல் - பூமியின் துருவங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் மாறிக்கொண்டே இருக்கும். அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் பாலத்தில் உள்ளப்பாறைகளில் அக்காலத்தில் பாறையின் அச்சு எங்கிருந்தது என்பதை கணித்து அதை இப்போது பாறையின் அச்சு இருக்கும் இடத்தோடு தொடர்புப்படுத்தி அதில் வரும் கோண வித்யாசங்களைக் கொண்டு தொல்பொருளின் காலத்தை கணிக்கும் முறை. எரிமலைச்சாம்பல் காலக்கணிப்பு - அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் பாலத்தில் ஏதேனும் எரிமலைக் குழம்பின் துணுக்குகள் காணப்பட்டால் அத்துணுக்கு எந்த எரிமலையில் வந்தது என்பதை கண்டறிந்து அந்த எரிமலை வெடித்ததன் காலத்தை தொடர்புப்படுத்தி தொல்பொருளின் காலத்தை கணிக்கும் முறை. உயிர்வளிம ஓரகத் தனிம மண்ணடுக்காய்வு - அகழாய்வில் கிடைத்த தொல்பொருளின் காலத்தில் இருந்த வானிலையைக் கொண்டு காலம் கணித்தல். (எ.கா. இடைப்பணியூழியின் பாலநிலையில் உள்ள பொருள் 1,15,000 ஆண்டுகள் பழமையானது என கணிக்கப்படும். மேலும் காண்க மானிடவியல் தொல்லியல் தொல்மரபியல் சமய, சடங்குசார் தொல்லியல் செவ்வியல் தொல்லியல் தொல்மானிடவியல் மேற்கோள்கள் நூல்தொகை மேலும் படிக்க Archaeology (magazine) Lewis Binford - New Perspectives in Archaeology (1968) Glyn Daniel – A Short History of Archaeology (1991) Kevin Greene – Introduction to Archaeology (1983) Thomas Hester, Harry Shafer, and Kenneth L. Feder – Field Methods in Archaeology 7th edition (1997) Ian Hodder & Scott Hutson – "Reading the Past" 3rd. edition (2003) International Journal of South American Archaeology - IJSA (magazine) Internet Archaeology, e-journal C.U. Larsen - Sites and Monuments (1992) Adrian Praetzellis – Death by Theory, AltaMira Press (2000). Colin Renfrew & Paul Bahn – Archaeology: theories, methods and practice, 2nd edition (1996) Smekalova, T.N.; Voss O.; & Smekalov S.L. (2008). "Magnetic Surveying in Archaeology. More than 10 years of using the Overhauser GSM-19 gradiometer". Wormianum. David Hurst Thomas – Archaeology, 3rd. edition (1998) Robert J. Sharer & Wendy Ashmore – Archaeology: Discovering our Past 2nd edition (1993) Bruce Trigger – "A History of Archaeological Thought" 2nd. edition (2007) Alison Wylie – Thinking From Things: Essays in the Philosophy of Archaeology'', University of California Press, Berkeley CA, 2002 வெளி இணைப்புகள் 400,000 records of archaeological sites and architecture in England Archaeolog.org Archaeology Daily News Archaeology Times | The top archaeology news from around the world Council for British Archaeology Estudio de Museología Rosario Fasti Online – an online database of archaeological sites Great Archaeology Kite Aerial Photographers – Archaeology NPS Archeology Program: Visit Archeology (Archeology travel guides) Sri Lanka Archaeology The Archaeological Institute of America The Archaeology Channel The Archaeology Data Service – Open access online archive for UK and global archaeology The Archaeology Division of the American Anthropological Association The Canadian Museum of Civilization – Archaeology The Society for American Archaeology The World Archaeological Congress US Forest Service Volunteer program Passport in Time World Archaeology News – weekly update from BBC Radio archaeologist, Win Scutt The Italian Archaeological Mission in Uşaklı Höyük Comprehensive Database of Archaeological Site Reports in Japan பகுப்பு:மானிடவியல்
தாமரைக் கோலம்
https://ta.wikipedia.org/wiki/தாமரைக்_கோலம்
thumb|right|400px|கம்பிக் கோலம் தாமரைக் கோலம் ஒன்றுடனொன்று 45 பாகை கோணத்தில் வெட்டும் 4 இரட்டைக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கோடுகளின் ஒன்றுவிட்டொரு முனைகளை வளை கோடுகளால் இணைத்து எட்டு இதழ்களுடைய தாமரை வடிவம் வரையப்பட்டுள்ளது. எளிமையான கோலம் எளிமையான கோலங்களிலொன்று. இதன் ஒரு வேறுபாடாக ஒற்றைக் கோடுகளை உபயோகித்தும் இத் தாமரை வடிவம் வரையப்படுவதுண்டு. இந்தியப் பண்பாட்டில் தாமரை இந்தியப் பண்பாட்டில் தாமரை பன்னெடுங் காலமாகவே முக்கிய இடத்தை வகித்துவருகிறது. இந்து, பௌத்த கலைகளில் தாமரைக்கு முக்கியத்துவம் உண்டு. சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை போன்றவற்றில் தாமரை சிறப்பிடம் பெறுகிறது. இதனால் தாமரைக் கோலங்களும் மிகப் பழங்காலத்திலிருந்தே வழக்கிலிருந்து வருவதாகக் கூற முடியும். இவற்றையும் பார்க்கவும் கோலம் கோலங்கள் - சில மாதிரிகள் மேற்கோள் பகுப்பு:கோலங்கள்
தொட்டில் கோலம்
https://ta.wikipedia.org/wiki/தொட்டில்_கோலம்
right|thumb|400px|8 X 10 நேர்ப்புள்ளிகள், புள்ளிகள் நேர்கோடுகளால் இணைப்பு தொட்டில் கோலம், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்குப் பயன்படுத்தும் தொட்டிலை abstract வடிவில் வெளிப்படுத்தும் கோலம் ஆகும். கண்ணன் தொட்டில் குழந்தை கிருஷ்ணரின் தொட்டிலாகக் கருதி இக் கோலத்தை வரைவதுண்டு. எனவே "கண்ணன் தொட்டில்" என்ற பெயரும் உண்டு. அழகு படுத்த பொருத்தமான கோலம் வரைவதற்கு இலகுவான சிறிய கோலங்களில் இதுவும் ஒன்று. இக் கோலத்தில் ஓரிரு வேறுபாடுகளும் உள்ளன. இதன் அடிப்படையான வடிவத்தை பயன்படுத்தி பெரிய அளவு கோலங்களையும் வரையலாம். நிறப் பொடிகளை பயன்படுத்தி அழகு படுத்தவும் பொருத்தமானது இந்தக் கோலம். இவற்றையும் பார்க்கவும் கோலம் கோலங்கள் - சில மாதிரிகள் மேற்கோள் பகுப்பு:கோலங்கள்
துளசி மாடக் கோலம்
https://ta.wikipedia.org/wiki/துளசி_மாடக்_கோலம்
thumb|400px|7 X 7 X 6 நேர்ப்புள்ளிகள்,புள்ளிகளூடு வளைகோடுகள் துளசி மாடக் கோலம் 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்திவரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறான கூறுகளை ஒன்றுடனொன்று மூலைகளில் தொடுத்துக் கோலத்தை விரிவாக்கம் செய்யலாம். எந்த வித எல்லையும் கிடையாது இணைக்கப்படும் கூறுகளின் எண்ணிக்கைக்கோ அல்லது உருவாக்கும் உருவமைப்புக்கோ எந்த வித எல்லையும் கிடையாது. கிடைக்கும் இடத்தின் அளவுக்கும், நேரத்துக்கும் தக்கபடி கோலத்தை அமைத்துக்கொள்ள முடியும். கோலம் வரைபவரின் கற்பனாசக்திக்கு ஏற்றபடி கோலத்தின் உருவ அமைப்புக்கு பொருத்தமான பெயரையும் இட்டுக்கொள்ளலாம். விதமான கூறுகள் ஒரு கூறு கூட இங்கே காட்டப்பட்டதுபோல்தான் இருக்கவேண்டுமென்ற தேவை இல்லை. 7 x 7 நேர்ப்புள்ளிகளைப் பயன்படுத்தி பல்வேறு விதமான கூறுகளையும் கூட வரையமுடியும். அதுமட்டுமின்றி 7 x 7 நேர்ப்புள்ளிகளுக்குப் பதிலாக புள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தோ, கூட்டியோகூட வெவ்வேறு அளவுள்ள கூறுகளை உருவாக்கலாம். இவற்றையும் பார்க்கவும் கோலம் கோலங்கள் - சில மாதிரிகள் மேற்கோள் பகுப்பு:கோலங்கள்
குத்து விளக்குக் கோலம்
https://ta.wikipedia.org/wiki/குத்து_விளக்குக்_கோலம்
thumb|ஊடு புள்ளிக் கோலம் - 38 புள்ளிகள் குத்து விளக்குக் கோலம் 38 புள்ளிகளை உயரமாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை கட்டாயமல்ல. அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி அழகாயிருக்கத்தக்க வகையில் இந்த எண்ணிக்கையை மாற்றிக்கொள்ளலாம். பல்வேறு முறைகளில் குத்துவிளக்கு வடிவத்தைக் கோலத்தில் கொண்டுவரமுடியும். இந்துப் பண்பாட்டில் குத்து விளக்கு குத்து விளக்கு, இந்துப் பண்பாட்டில் ஒரு மங்களகரமான பொருளாகக் கருதப்படுகிறது. முக்கியமான பாரம்பரிய நிகழ்ச்சிகளில், விருந்தினர்களை வரவேற்பதற்கும், அந் நிகழ்வுகளைத் தொடங்கி வைப்பதற்கும் குறியீடாகக் குத்துவிளக்கேற்றி வைத்தல் வழக்கம். குத்துவிளக்கு வடிவம் இதனால் மேற்படி மங்களகரமான நிகழ்ச்சிகளில் கோலமிடுவதற்குக் குத்துவிளக்கு வடிவம் பொருத்தமாக அமையும். இவற்றையும் பார்க்கவும் கோலம் கோலங்கள் - சில மாதிரிகள் மேற்கோள் பகுப்பு:கோலங்கள்
திருக்குளக் கோலம்
https://ta.wikipedia.org/wiki/திருக்குளக்_கோலம்
thumb|"+" அடையாளங்கள் 8 X 8 வரிசை, நேர்கோடுகளால் இணைப்பு திருக்குளக் கோலம் புள்ளிகளன்றி வேறொரு அடையாளம் ('+') மூலம் கோடுகளை வழிப்படுத்தி வரையப்படும் சில கோலங்களில் ஒன்று. வேண்டிய அளவுக்குப் பெரிதாக்கி வரையக் கூடிய மிக இலகுவான கோலமிது. கோலமிடுபவரின் கற்பனை வளத்துக்குத் தக்கபடி பல்வேறு வடிவங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றையும் பார்க்கவும் கோலம் கோலங்கள் - சில மாதிரிகள் மேற்கோள் பகுப்பு:கோலங்கள்
ஆபிரிக்க-ஆசிய மொழிகள்
https://ta.wikipedia.org/wiki/ஆபிரிக்க-ஆசிய_மொழிகள்
right|300px|thumb|ஆபிரிக்க-ஆசிய மொழிகளின் பரம்பல் ஆபிரிக்க-ஆசிய மொழிகள் என்பன, வடக்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, சாஹேல், மற்றும் தென்மேற்கு ஆசியா ஆகிய இடங்களில், அண்ணளவாக 28.5 கோடி மக்களால் பேசப்படுகின்ற சுமார் 240 மொழிகளை உள்ளடக்கிய மொழிக்குடும்பம் ஆகும். "ஆப்ரேசியன்", "ஹமிட்டோ-செமாட்டிக்", "லிஸ்ராமிக்" (Hodge 1972), எரித்ரேசியன் (Tucker 1966.) என்ற பெயர்களாலும் இந்த மொழிக்குடும்பம் குறிப்பிடப்படுகின்றது. துணை மொழிக் குடும்பங்கள் ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தின் துணை மொழிக் குடும்பங்கள்: பேர்பர் மொழிகள் (Berber languages) சாடிக் மொழிகள் (Chadic languages) எகிப்திய மொழிகள் (Egyptian languages) செமிடிக் மொழிகள் (Semitic languages) குஷிட்டிக் மொழிகள் (Cushitic languages) பேஜா மொழி (Beja language)(சர்ச்சைக்குரியது; பொதுவாகக் குஷிட்டிக்கின் ஒரு பகுதியாக வகைப்படுத்தப்படுகின்றது.) ஒமோட்டிக் மொழிகள் (Omotic languages) ஒங்கோட்டா மொழி ஆப்பிரிக்க-ஆசிய மொழியாகக் கருதப்பட்டாலும், இக்குடும்பத்துள் இதனுடைய வகைப்படுத்தல் சர்ச்சைக்கு உரியதாகவே இருந்துவருகிறது (போதிய தரவுகள் இல்லாமையும் ஒரு காரணம்) முதல்நிலை-ஆபிரிக்க-ஆசிய மொழி எங்கே பேசப்பட்டது என்பதிலே பொதுவாக ஒத்த கருத்துக் கிடையாது; இக் குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறுபட்ட மொழிகள் பேசப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, பொதுவாக ஆபிரிக்காவாக (உம். டயகோனோப், பெந்தர்), குறிப்பாக எதியோப்பியாவாக, இருக்கலாம் என்ற கருத்து உண்டு. இதே வேளை மேற்குச் செங் கடல் மற்றும் சகாரா பகுதியும் முன்வைக்கப்பட்டுள்ளது (உம். எஹ்ரெட்). அலெக்சாண்டர் மிலிட்டரேவ் இவர்களுடைய தாய் நிலம் லேவண்ட் ஆக இருக்கலாம் எனக் கருதுகிறார். செமிட்டிக் மொழிகளே, ஆபிரிக்காவுக்கு வெளியே காணப்படும், ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தின் ஒரே துணை மொழிக் குடும்பமாகும். எனினும் வரலாற்றுக் காலத்திலோ அல்லது வரலாற்றுக்கு மிக அணித்தான காலப்பகுதியிலோ சில செமிட்டிக் பேசும் மக்கள், தெற்கு அரேபியாவிலிருந்து மீண்டும் எதியோப்பியாவுக்கு வந்துள்ளார்கள், இதனால் சில நவீன எதியோப்பிய மொழிகள் (அம்ஹாரிக் போன்றவை) அடிப்படையான குஷிட்டிக் அல்லது ஒமோட்டிக் குழுக்களைச் சேராமல் செமிட்டிக்காக இருக்கின்றன. (முர்த்தொனென் (1967) போன்ற மிகச் சில ஆய்வாளர்கள் மேற்படி கருத்துடன் முரண்படுவதுடன், செமிட்டிக் எதியோப்பியாவில் உருவாகியிருக்கலாமெனக் கருதுகிறார்கள்). வகைப்படுத்தலின் வரலாறு ஆபிரிக்க-ஆசிய etymologies க்கான சில முக்கிய மூலங்களில் பின்வருவனவும் உள்ளடங்குகின்றன: Marcel Cohen, Essai comparatif sur la vocabulaire et la phonétique du chamito-sémitique, Champion, Paris 1947. Igor M. Diakonoff et al., "Historical-Comparative Vocabulary of Afrasian", St. Petersburg Journal of African Studies Nos. 2-6, 1993-7. Christopher Ehret. Reconstructing Proto-Afroasiatic (Proto-Afrasian): Vowels, Tone, Consonants, and Vocabulary (University of California Publications in Linguistics 126), California, Berkeley 1996. Vladimir E. Orel and Olga V. Stolbova, Hamito-Semitic Etymological Dictionary: Materials for a Reconstruction, Brill, Leiden 1995 மேலும் காண்க ஆபிரிக்க மொழிகள் மூலங்கள் Bernd Heine and Derek Nurse, African Languages, Cambridge University Press, 2000 - Chapter 4 Merritt Ruhlen, A Guide to the world's Languages Lionel Bender et al., Selected Comparative-Historical Afro-Asiatic Studies in Memory of Igor M. Diakonoff, LINCOM 2003. http://www.ethnologue.com/show_family.asp?subid=2 பகுப்பு:ஆபிரிக்க-ஆசிய மொழிகள் பகுப்பு:மொழிக் குடும்பங்கள்
நைகர்-கொங்கோ மொழிகள்
https://ta.wikipedia.org/wiki/நைகர்-கொங்கோ_மொழிகள்
மொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நைகர்-கொங்கோ மொழிகள் உலகின் மிகப்பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக இருப்பதுடன், நிலவியல் பரம்பல், பேசுபவர்களின் எண்ணிக்கை (600 மில்லியன் மக்கள், அதாவது 85% ஆப்பிரிக்க மக்கள் தொகை), பேசப்படும் ஆப்பிரிக்க மொழிகளின் எண்ணிக்கை (1514) போன்றவற்றின் அடிப்படையில், ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய மொழிக்குழுவாக நைகர்-கொங்கோ மொழிக்குழு இருக்கின்றது ஜோசேப் ஹெச். கிறீன்பேர்க் என்பவரே முதலில் இக் குடும்பத்தின் எல்லைகளை அடையாளம் கண்டவராவார். அவருடைய "ஆபிரிக்காவின் மொழிகள்" என்னும் நூலில், இக் குடும்பத்தை அவர் நைகர்-கொர்டோபானியன் என அழைத்தார். ஜோன் பெந்தோர்-சாமுவேல் என்பார் தற்போது மொழியியலாளரிடையே பரவலாக வழக்கிலுள்ள நைகர்-கொங்கோ என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார். (கொர்டோபானியன் மொழிகள் ஐப் பார்க்கவும்) நைகர்-கொங்கோவினுள் அடங்கும் முக்கிய மொழிகள் அல்லது துணைக் குழுக்கள். மேற்கு அத்திலாந்திய: செனகலில் பேசப்படும் வோலோஃப் (Wolof), சாஹேலில் பேசப்படும் ஃபுல்ஃபுல்டே (Fulfulde) என்பன இதனுள் அடங்குகின்றன. மாண்டிங்: மேற்கு ஆபிரிக்காவில் பேசப்படுவது; மாலியில் பேசப்படும் பம்பாராவை உள்ளடக்கும். குவா: கானாவில் பேசப்படும் அக்கான் உள்ளடங்கியது. * நைஜீரியாவில் பேசப்படும் யொரூபா மற்றும் இக்போ மொழிகள். குர்:Côte d'Ivoire, தோகோ, புர்கினா பாசோ மற்றும் மாலி போன்ற இடங்களில் பேசப்படுவது. குறூ: பேட்டே, நியாப்வா, மற்றும் திதா என்பவை உள்ளிட்ட, மேற்கு ஆபிரிக்காவில் பேசப்படும் மொழிகள். அதமாவா-உபாங்கி: மத்திய ஆபிரிக்கக் குடியரசில் பேசப்படும் சாங்கோ பண்டு (Bantu): சுவாஹிலியை (கிஸ்வாஹிலி) உள்ளடக்கிய மிகப் பெரிய குழு. உசாத்துணைகள் Joseph H. Greenberg, The Languages of Africa. Indiana Univ. Press (1966). Bernd Heine and Derek Nurse, African Languages - An Introduction. Cambridge Univ. press (2000) John Bendor-Samuel, The Niger-Congo Languages — A classification and description of Africa's largest language family, University Press of America (1989). Ethnologue: Niger-Congo Family Tree மேற்கோள்கள் பகுப்பு:நைகர்-கொங்கோ மொழிகள்
வானளாவி
https://ta.wikipedia.org/wiki/வானளாவி
right|thumb|தாய்ப்பே 101 வழக்கமாக, 152 மீட்டர்களிலும் கூடிய உயரம் கொண்ட உயர்ந்த மனித வாழ்க்கைக்குகந்த கட்டிடங்கள் வானளாவிகள் (skyscraper) எனப்படுகின்றன. 19 ஆம் நூற்றாண்டுவரை ஆறு மாடிக்கு மேற்பட்ட உயரங்கொண்ட கட்டிடங்களைக் காண்பது அரிது. மனிதர்கள் இதற்கு மேற்படப் படிகளில் ஏறி இறங்குவது நடைமுறைக்கு உகந்ததல்ல. அத்துடன், 15 மீட்டர்களுக்கு மேல் நீர் வழங்குவதும் இயலாமல் இருந்தது. உருக்கு, வலுவூட்டிய காங்கிறீற்று (Concrete) மற்றும் நீரேற்றிகள் என்பவற்றின் உருவாக்கம், மிகவும் உயரமான கட்டிடங்கள் கட்ட இயன்றது. இவற்றுட் சில 300 மீட்டர்களுக்கும் அதிகமான உயரமுள்ளவை. வானளாவிகளை நடைமுறைச் சாத்தியமாக்கிய இன்னொரு வளர்ச்சி உயர்த்திகள் ஆகும். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், நியூயார்க் நகரத்திலும், சிகாகோவிலும் முதலில் வானளாவிகள் தோன்றத் தொடங்கின. வில்லியம் லே பாரோன் ஜென்னி, ஹோம் இன்சூரன்ஸ் கட்டிடம் என அழைக்கப்பட்ட முதலாவது வானளாவியை சிகாகோவில் வடிவமைத்தார். பத்து மாடிகளைக் கொண்ட இந்த அமைப்பு 1884-1885 ல் கட்டப்பட்டுப் பின்னர் "பீல்ட்ஸ்" (Field's) கட்டிடம் கட்டுவதற்காக 1931ல் இடிக்கப்பட்டது. வானளாவிகளின் பாரம் தாங்கும் கூறுகளும், குறிப்பிடத்தக்க அளவு ஏனைய கட்டிடங்களில் இருந்து வேறுபடுகின்றன. 4 மாடிகள் வரையான கட்டிடங்களின் அவற்றின் சுவர்களே பாரத்தைத் தாங்கும்படி அமைக்க முடியும். வானளாவிகள் மிக உயரமானவை ஆதலால் இவற்றின் பாரம், எலும்புக்கூடுகள் போன்ற உறுதியான சட்டக அமைப்புக்களால் தாங்கப் படுகின்றன. சுவர்கள் இச் சட்டகங்களின் மீது தாங்கப்படுகின்றன. அதிகமான காற்று விசையைத் தாங்குமுகமாக, 40 மாடிகளுக்கும் அதிகமான உயரம் கொண்ட வானளாவிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படுகின்றது. மிக உயர்ந்த வானளாவிகளின் ஒப்பீடு (to scale) 400px|பெட்ரோனாசுடன் ஒப்பீடு இவற்றையும் பார்க்கவும் கட்டிடக்கலை கட்டிட அமைப்பு ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 உயரமான கட்டிடங்கள் வானளாவிகளின் பட்டியல் உலகின் உயரமான அமைப்புகள் கோபுரங்களின் பட்டியல் கட்டிடங்களின் பட்டியல் வெளியிணைப்புகள் http://www.skyscrapers.com http://www.skyscrapercity.com http://www.skyscraperpage.com http://www.brazilskyscrapers.hpg.com.br http://www.bionictower-bvs.com/ (1228m Shanghai tower project) http://www.skyscraper.org https://web.archive.org/web/20040522093404/http://www.geocities.com/birmingham_highrise/ http://www.popsci.com/popsci/science/article/0,12543,420169-1,00.html *
மயில்வாகனப் புலவர்
https://ta.wikipedia.org/wiki/மயில்வாகனப்_புலவர்
மயில்வாகனப் புலவர் (இயற்பெயர்: சுப்பிரமணியம் மயில்வாகனம்மாதகல் நலன்புரிச் சங்கம் : 20ஆவது ஆண்டுச் சிறப்பு மலர் (2014) பக். 53) யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் வாழ்ந்தவர். அக்காலத்தில் இருந்த ஒல்லாந்த அதிகாரியொருவரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாண வைபவமாலை என்னும் யாழ்ப்பாணச் சரித்திர நூலை இவர் இயற்றியதாகத் தெரிகிறது. வரலாறு இவர் யாழ்ப்பாணத்திலுள்ள மாதகல் என்னும் ஊரைச் சேந்தவர். இவருடைய தந்தையார் பெயர் சுப்பிரமணியம் எனவும் தாயார் பெயர் சிதம்பரம் எனவும் கூறுவர். வைபவமாலையின் சிறப்புப் பாயிரச் செய்யுளில் வரும், "...மண்ணிலங்கு சீர்த்திவையா மரபில்மயில் வாகனவேள் வகுத்திட்டானே" என வரும் அடிகளையும், இவரியற்றிய இன்னொரு நூலான புலியூரந்தாதி சிறப்புப் பாயிரச் செய்யுளில் வரும், "...நல்ல கலைத்தமிழ் நூல்கள் விரிந்துரைத்த வையாவின் கோத்திரத் தான்மயில் வாகனன்..." என்னும் அடிகளையும் ஆதாரமாகக் கொண்டு இவர், யாழ்ப்பாண அரசர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் இறுதிக்காலப் பகுதியில் வாழ்ந்து வையாபாடல் எனும் யாழ்ப்பாணச் சரித்திரம் கூறும் நூலொன்றை எழுதிய வையா அல்லது வையாபுரி ஐயர் என்பவரது பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலைக் கட்டுவித்த வைத்திலிங்கம் செட்டியாரின் நண்பராயிருந்தார் என்பதை வைத்து, இவரது காலம் 18 ஆம் நூற்றாண்டின் பின்னரையாக இருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது. "வைத்திலிங்கச் செட்டியார் கூழங்கைத் தம்பிரானிடம் பாடங்கேட்டது, மயில்வாகனப்புலவரை நடுவராக வைத்துக்கொண்டேயாம்."முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ., யாழ்ப்பாணச் சரித்திரம், 1912, யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம் (நான்காம் பதிப்பு, 2000, சென்னை: Maazaru DTP) குறிப்புகள் வெளி இணைப்புக்கள் யாழ்ப்பாண வைபவ மாலை - நூலகம் திட்டம் மயில்வாகனப் புலவர் பகுப்பு:ஈழத்துப் புலவர்கள்
அபுதாபி
https://ta.wikipedia.org/wiki/அபுதாபி
அபுதாபி (Abu Dhabi) என்னும் பெயர் ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாட்டில் உள்ள ஏழு அமீரகங்களில் மிகப்பெரிய அமீரகத்துக்கும், அந்த அமீரகத்தின் தலை நகரத்துக்கும் வழங்கிவரும் பொதுப் பெயராகும். அபுதாபி நகரமானது குறிப்பிட்ட அபுதாபி அமீரகத்துக்கு மட்டுமன்றி, முழு நாட்டுக்குமே தலைநகரமாகவும் விளங்குகின்றது. இவை பற்றித் தனித்தனியாக அறியப் பின்வரும் பக்கங்களுக்குச் செல்லவும். அபுதாபி அமீரகம் அபுதாபி நகரம்
அபுதாபி (நகரம்)
https://ta.wikipedia.org/wiki/அபுதாபி_(நகரம்)
அபுதாபி (Abu Dhabi, , அபூ ழபீ) ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகவும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. இந்நாட்டின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியதான அபுதாபி அமீரகத்திலுள்ள இந் நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். இது பாரசீக வளைகுடாவின் மத்திய மேற்குக் கரையில் இருந்து வளைகுடாவுக்குள் துருத்திக் கொண்டிருக்கும் "T" வடிவமான தீவொன்றில் அமைந்துள்ளது. 67,340 கிமீ2 (26,000 ச.மை) பரப்பளவு கொண்ட அபுதாபி நகரத்தில் 860,000 (2007) மக்கள் வாழ்கிறார்கள். இந்த நகரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவண் அரசும், அதன் பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ளன.அபுதாபி அமீரக அரச குடும்பத்தின் இருப்பிடமும் இதுவே. அபுதாபி இன்று பல்நாட்டின மக்களைக் கொண்ட பெரு நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. விரைவான வளர்ச்சியும், நகரமயமாக்கமும், இங்கு வாழும் மக்களின் ஒப்பீட்டளவில் அதிகமான சராசரி வருமானமும் சேர்ந்து இந் நகரத்தை முற்றாகவே மாற்றியுள்ளன. நாட்டின் தலைநகரம் என்ற வகையில் இது ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல், கைத்தொழில் நடவடிக்கைகளினதும், பண்பாடு மற்றும் வணிக நடவடிக்கைகளினதும் மையமாக விளங்குகிறது. அபுதாபி நகரம் மட்டும் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15% ஐ உருவாக்குகின்றது. நாட்டின் முக்கியமான நிதி அமைபான மத்திய வங்கியும், வணிக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களும் இங்கு அமைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய பெற்றோலிய உற்பத்தியாளர்களில் ஒன்றான அபுதாபி அண்மைக்காலங்களில் அதன் பொருளாதார அடித்தளத்தை, பல்வேறு நிதிச் சேவைகளிலும், சுற்றுலாத்துறையிலும் முதலீடு செய்வதன் மூலம் விரிவாக்கியுள்ளது. இப் பகுதியின் மூன்றாவது செலவு கூடிய நகரமான அபுதாபி, உலகின் செலவு கூடிய நகரங்களின் வரிசையில் 26 ஆவது இடத்தில் உள்ளது. வரலாறு கிமு மூன்றாவது ஆயிரவாண்டுக் காலப்பகுதியிலேயே அபுதாபியின் சில பகுதிகளில் குடியேற்றங்கள் இருந்திருக்கின்றன. அக்காலத்தில் இப் பகுதிகளுக்கேயுரிய நாடோடி மந்தை வளர்ப்பும், மீன்பிடித்தலும் இருந்ததாகத் தெரிகிறது. தற்கால அபுதாபியின் தோற்றம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பனி யாஸ் என்னும் பழங்குடிக் கூட்டமைப்பு உருவானதோடு தொடங்கியது. இது பின்னர் துபாய் நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டில் துபாயும், அபுதாபியும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அபுதாபியின் பொருளாதாரம், ஒட்டக வளர்ப்பு, அல் எயின், லீவா ஆகிய பாலைவனச் சோலைகளில் உற்பத்தியான பேரீச்சு, மரக்கறி வகைகள், அபுதாபி நகரக் கரையோரத்துக்கு அப்பால் இடம்பெற்ற மீன்பிடித்தல், முத்துக் குளிப்பு என்பவற்றில் தங்கியிருந்தது. அக்காலத்தில் அபுதாபி நகரத்தில் இருந்த வீடுகள் ஈச்சமர ஓலைலளால் அமைக்கப்பட்ட "பராஸ்தி"என்னும் வகையைச் சார்ந்தவையாகும். வசதி படைத்தவர்கள் மண்ணால் கட்டப்பட்ட குடில்களில் வாழ்ந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில், உலகில் செயற்கை முத்து உற்பத்தித் தொழில் வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அபுதாபியின் முத்துக்குளிப்பு நெருக்கடிக்குள்ளானது. அப்போது முத்துக்களின் ஏற்றுமதியே அபுதாபி மக்களின் பணவருவாய்க்கான முக்கிய மூலமாக இருந்தது. 1939 ஆம் ஆண்டில் அக்கால அபுதாபியின் ஆட்சியாளரான சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான், பெற்றோலிய சலுகையை வழங்கினார். 1958 ஆம் ஆண்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்கத்தில் பெட்ரோலிய வருமானம் அபுதாபியின் வளர்ச்சியில் மிகக் குறைந்த தாக்கத்தையே கொண்டிருந்தது. சில குறைந்த உயரம் கொண்ட காங்கிறீட்டுக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. தளமிடப்பட்ட முதலாவது சாலை 1961 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பெற்றோலிய வருமானம் நீடிக்குமா என்ற ஐயப்பாடு காரணமாக சேக் சக்புத் எச்சரிக்கையாக நடந்து கொள்ள விரும்பினார். வருமானத்தை வளர்ச்சிப் பணிகளில் முதலீடு செய்யாமல் சேமிக்க எண்ணினார். அவரது சகோதரரான சேக் சாயித் பின் சுல்தான் அல் நகியான், பெற்றோலியத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அபுதாபியை மாற்ற வல்லது என்னும் கருத்தைக் கொண்டிருந்தார். நகியான் குடும்பத்தினர் சேக் சக்புத்துக்குப் பதிலாக சேக் சாயித் ஆட்சியாளராகி வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என விரும்பினர். 1966 ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரித்தானியரின் துணையுடன், சேக் சயத் ஆட்சியாளரானார். இவற்றையும் பார்க்கவும் துபாய் சார்ஜா அமீரகம் மேற்கோள்கள் பகுப்பு:ஆசியத் தலைநகரங்கள் பகுப்பு:அபுதாபி அமீரகம் பகுப்பு:ஐக்கிய அரபு அமீரகம்
வண்ணார்பண்ணை
https://ta.wikipedia.org/wiki/வண்ணார்பண்ணை
வண்ணார்பண்ணை (Vannarpannai) தற்போதைய யாழ்ப்பாண நகரப்பகுதியில் அடங்கியுள்ள ஒரு புறநகர் ஆகும். இப்பகுதியில் நகர மத்திக்கு மிகவும் அண்மையில் "வண்ணான் குளம்" என அழைக்கப்படும் குளமொன்றும் உண்டு. இது மிக அண்மைக்காலம் வரை, துணி சலவை செய்வதற்கு, சலவைத் தொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. அமைவிடம் தற்காலத்தில் வண்ணார்பண்ணை என்று அழைக்கப்படும் பகுதி, நகர மத்திக்கு அண்மையில் தொடங்கி, காங்கேசந்துறை வீதி, கஸ்தூரியார் வீதி என்னும் வீதிகளை அண்டிச் சுமார் ஒரு மைல் தூரம் வரை வியாபித்து உள்ளது. வரலாறு யாழ்ப்பாண அரசர் காலத்தில் நல்லூர் தலைநகரமாயிருந்தபோது, வண்ணார்பண்ணை பனங் கூடல்கள் நிரம்பிய சிற்றூராக இருந்ததாகத் தெரிகிறது. பின்னர் போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைத் தங்களது நிர்வாக மையமாக மாற்றிக் கடற்கரையோரமாகக் கோட்டையொன்றையும், அருகில் தங்கள் வாழ்விடங்களையும் அமைத்துக்கொண்ட பின்னர், இப்பகுதி படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கியது. கோயில்கள் வண்ணார்பண்ணை வைத்தீசுவரர் ஆலயம் வண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம் (நாச்சிமார் கோவில்) வண்ணார்பண்ணை நடேசர் கோவில் சாந்தையர்மடம் கற்பக விநாயகர் ஆலயம் வண்ணை சிறீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் வண்ணை ஸ்ரீ நொச்சியம்பதி பத்திரகாளி அம்பாள் ஆலயம் வண்ணை வடமேற்கு அண்ணமார் களனிப்பதி விஸ்வலிங்க மஹாகணபதி மூர்த்தி தேவஸ்தானம் (பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோவில்) காட்டுத்துறை அம்பலவாண விநாயகர் கோயில் வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் பாடசாலைகள் யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம் வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஒஸ்மானியாக் கல்லூரி கதீஜாக் கல்லூரி பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும் பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டம் மேற்கோள்கள்
வட்டம்
https://ta.wikipedia.org/wiki/வட்டம்
right|வட்டம் - விளக்கப்படம் thumb|250px|வட்டம் - விளக்கப்படம் யூக்கிளிட்டின் கேத்திர கணிதப்படி, ஒரு வட்டம் ( Circle) என்பது, ஒரு குறிப்பிட்ட புள்ளியொன்றிலிருந்து சம அளவான தூரத்தில், ஒரே தளத்திலுள்ள புள்ளிகளின் கணமாகும். குறிக்கப்பட்ட புள்ளி அவ்வட்டத்தின் "மையம்" எனவும், சம அளவான தூரம் அதன் ஆரை எனவும் அழைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து எப்பொழுதும் சமதூரத்தில் இருக்குமாறு இயங்கும் ஒரு புள்ளியின் இயங்குவரையாகவும் வட்டத்தை வரையறுக்கலாம். வட்ட விலகலின் மதிப்பு பூச்சியமாகக் கொண்ட கூம்பு வெட்டாகவும் வட்டத்தைக் கொள்ளலாம். ஒரு நேர் கூம்பை அதன் அச்சுக்குச் செங்குத்தான தளத்தால் வெட்டும்போது கிடைக்கும் வெட்டுமுகம் வட்டமாக இருக்கும். வட்டங்கள், அவை அமைந்துள்ள தளத்தை உட்புறம், வெளிப்புறம் என இரண்டாகப் பிரிக்கும் எளிமையான மூடிய வளைவுகளாகும். எல்லா வட்டங்களும் வடிவொத்தவை; அதனால், ஒரு வட்டத்தின் சுற்றளவும், அதன் ஆரையும் விகிதசமனானவை, அதுபோலவே, வட்டத்தின் பரப்பளவும் அதன் ஆரையின் வர்க்கத்துக்கு விகிதசமனானது. இவ் விகிதசமனின் மாறிலிகள் முறையே 2πயும் πயுமாகும். வட்டத்தின் சுற்றளவு "பரிதி" எனப்படும். வட்டத்தைக் குறிக்க தமிழர்கள் பரிதி என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர்.முனைவர் பெ. துரைசாமி, தமிழரின் வானியல் கோட்பாடுகள், அறிவன் பதிப்பகம், தஞ்சாவூர், டிசம்பர் 2005. பக்கம் 34 சமன்பாடுகள் கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமை கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையில், (x0, y0) என்பதால் குறிக்கப்படும் புள்ளியை மையமாகவும், r என்பதை ஆரையாகவும் கொண்ட வட்டமொன்றிலமைந்துள்ள (x, y) ஆல் குறிக்கப்படும் எல்லாப் புள்ளிகளும் பின்வரும் சமன்பாட்டால் தரப்படும்: வட்டத்தின் மையப் புள்ளி (0, 0) ஆக இருப்பின், இச் சமன்பாடு பின்வருமாறு அமையும்: (0, 0) வை மையமாகக் கொண்ட 1 அலகு ஆரையுடைய வட்டம் அலகு வட்டம் எனப்படும். இதன் சமன்பாடு: துணையலகு வடிவில்: முக்கோணவியல் சார்புகள் சைன் மற்றும் கொசைன்களாலான துணையலகுகளைப் பயன்படுத்தி எழுதப்படும் வட்டத்தின் சமன்பாடு: இங்கு t துணையலகு மாறி; இதன் மதிப்பு 0 - 2π வரை அமையும்; வடிவவியலாக இது (a, b) லிருந்து (x, y) ஐ இணைக்கும் கதிர் x-அச்சுடன் உண்டாக்கும் கோணம். துணையலகு வாயிலாக மற்றொரு சமன்பாடு: இதில் t : r என்பது x-அச்சுக்கு இணையாக வட்டத்தின் மையத்தின் வழியாகச் செல்லும் கோட்டின் மீதான வட்டத்தின் திண்மவரைபட வீழலாகும் (Stereographic projection). விட்டத்தின் முனைப்புள்ளிகள் மூலமாக: ஒரு விட்டத்தின் முனைப்புள்ளிகள் (x_1, y_1) , (x_2, y_2) எனில் அவ்வட்டத்தின் சமன்பாடு: சிறப்பு வகை கூம்புவெட்டாக: இரு மாறிகளில் அமைந்த இருபடிச்சமன்பாடு, பொதுவாக ஒரு கூம்பு வெட்டைக் குறிக்கும். வட்டத்தின் வட்டவிலகல் பூச்சியமாதலால் மேற்காணும் கூம்புவெட்டின் சமன்பாடு வட்டத்தைக் குறிக்கும்போது, ஆக இருக்கும். எனவே வட்டத்தின் சமன்பாடு ஆகும். இதனை மேலும் என்ற வடிவிற்கு மாற்றலாம். என இச்சமன்பாட்டைச் சுருக்க வட்டத்தின் மையம் மற்றும் ஆரம்: மையம்: ஆரம்: போலார் ஆள்கூற்று முறைமை போலார் ஆள்கூற்று முறைமையில் வட்டத்தின் சமன்பாடு: இதில் வட்டத்தின் ஆரம் a; வட்டத்தின் மீதமைந்த ஏதேனும் ஒரு பொதுப்புள்ளியின் போலார் ஆயதொலைகள் ; வட்ட மையத்தின் போலார் ஆயதொலைவுகள் ; r0 என்பது ஆதிப்புள்ளிக்கும் வட்ட மையத்துக்கும் இடைப்பட்ட தூரம்; φ என்பது வட்ட மையத்தையும் ஆதிப்புள்ளியையும் இணைக்கும் கோடானது x-அச்சின் நேர்திசையுடன் உண்டாக்கும் கோண அளவு (இக்கோணம் எதிர் கடிகாரதிசையில் அளக்கப்படுகிறது) இச்சமன்பாட்டிலிருந்து r இன் மதிப்பு: இதில் வர்க்கமூலத்திற்கு முன் வரக்கூடிய நேர் (+) மற்றும் எதிர்க் குறிகளுக்குக் (-) கிடைக்கும் இதன் வளைவரைகள் ஒன்றாகவே இருக்கும். வட்ட மையம் ஆதிப்புள்ளியாக இருந்தால், அதாவது r0 = 0, எனில் இச்சமன்பாடு : ஆக மாறுகிறது. , அதாவது ஆதிப்புள்ளி வட்டத்தின் மீதமைந்தால் சமன்பாடு: சிக்கலெண் தளத்தில் சிக்கலெண் தளத்தில் மையம் c மற்றும் ஆரம் (r) கொண்ட வட்டத்தின் சமன்பாடு: . இது துணையலகு வடிவில் கீழுள்ளவாறு அமையும்: . (p, q மெய்யெண்கள்; g சிக்கலெண்) எனும் சமன்பாடு சிலசமயங்களில் பொதுமைப்படுத்தப்பட்ட வட்டம் என அழைக்கப்படுகிறது. வட்டத்தின் சமன்பாட்டைப் பின்வருமாறு விரித்து எழுதி, அது பொதுமைப்படுத்த வட்டத்தின் சமன்பாட்டுடன் ஒத்துள்ளதைக் காண முடியும்: பொதுமைப்படுத்தப்பட்ட வட்டத்துடன் ஒப்பிட, , பொதுமைப்படுத்தப்பட்ட வட்டங்கள் எப்பொழுதுமே வட்டங்களாக இருக்காது. அவை வட்டங்களாகவோ அல்லது கோடுகளாவோ அமைகின்றன. வட்டத்தின் சுற்றளவு வட்டத்தின் சுற்றளவிற்கும் விட்டத்திற்குமுள்ள விகிதம் π (pi), ஒரு விகிதமுறா மாறிலி; அதன் மதிப்பு தோராயமாக 3.141592654. வட்டத்தின் சுற்றளவு C; விட்டம் d; ஆரம் r எனில்: வட்டத்தின் பரப்பளவு thumb|வட்டத்தால் உள்ளடக்கப்பட்ட பரப்பளவு = π × நிழலிடப்பட்ட வட்டத்தின் பரப்பு வட்டத்தின் பரப்பளவானது, வட்டத்தின் சுற்றளவை அடிப்பக்கமாகவும் ஆரத்தைக் குத்துயரமாகவும் கொண்ட முக்கோணத்தின் பரப்பளவிற்குச் சமமென ஆர்க்கிமிடீசால் நிறுவப்பட்டுள்ளது. எனவே வட்டத்தின் பரப்பளவு A: அதாவது d பக்க அளவுள்ள சுற்றுச்சதுரத்தின் பரப்பளவில் 79சதவீதம். கணக்குபாடங்களில் நம் நாட்டு மாணவர்கள் மற்ற நாட்டு மாணவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்கள், எப்படி என்றால், மற்ற நாடுகளில் பள்ளிக்குச் சென்று முறையாகக் கற்றால் தான் கணிதம் பயில முடியும். ஆனால், இந்தியாவில் சில நடைமுறைப் பயிற்சிகளாலேயே பாமரர்கள் கூடக் கணக்கில் புலிகளாக உலா வருவதைக் காண்கிறோம். வட்ட வடிவ நிலத்தின் பரப்பளவை காண, "காக்கைப்பாடினியம்" என்ற தொன்மையான நூலில் செய்யுள் வடிவிலேயே விளக்கியுள்ளனர். "வட்டத்து அரை கொண்டு விட்டத்து அரை ஆக்க சட்டெனத் தோன்றுங் குழி" - காக்கைப் பாடினியம் 46:49 விளக்கம்: இதன்படி, வட்டத்தரைச் சுற்றளவு, விட்டத்தரை = அரைவிட்டம் = இதன்படி, வட்டத்தின்பரப்பளவு, குழி என்பது பரப்பைக் குறிக்கும் சொல். பண்புகள் தரப்பட்ட சுற்றளவைக் கொண்டு வரையக்கூடிய வடிவங்களில் மிக அதிக பரப்பளவுடையது வட்டம். வட்டம் அதிக சமச்சீருடைய வடிவம்: வட்ட மையத்தின் வழிச் செல்லும் ஒவ்வொரு கோடும் பிரதிபலிப்பின் சமச்சீர் அச்சு; மையத்தைப் பொறுத்து சுழற்றப்படும் அனைத்து கோணஅளவு சுழற்சிகளுக்கும் சுழற்சிச் சமச்சீர் உடையது; இதன் சமச்சீர் குலம், செங்குத்துக் குலம் -O(2,R) ஆகும். சுழற்சிகளின் குலம், வட்டக் குலம் T. அனைத்து வட்டங்களும் வடிவொத்தவை. ஒரு வட்டத்தின் சுற்றளவும் ஆரமும் நேர்விகிதத்தில் இருக்கும். அந்நேர்விகித மாறிலி 2π. ஒரு வட்டத்தின் பரப்பளவும் ஆரத்தின் நேர்விகிதத்தில் இருக்கும். அந்நேர்விகித மாறிலி π. ஆதிப்புள்ளியை மையமாகக் கொண்டு ஓரலகு ஆரமுடைய வட்டம் அலகு வட்டம் எனப்படும். தரப்பட்ட, ஒரே கோட்டிலமையாத மூன்று புள்ளிகளின் வழியாக ஒரேயொரு வட்டமே வரையலாம். கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் அம்மூன்று புள்ளிகளின் ஆயதொலைவுகளின் வாயிலாக வட்டத்தின் மையத்தையும் ஆரத்தையும் காணும் வாய்ப்பாட்டைத் தரமுடியும். நாண்கள் வட்டத்தின் நாண்கள் சம நீளமுள்ளவையாக இருந்தால், இருந்தால் மட்டுமே அவை வட்ட மையத்திலிருந்து சமதூரத்தில் அமையும். ஒரு நாணின் நடுக்குத்துக்கோடு வட்ட மையத்தின் வழிச் செல்லும். நடுக்குத்துக்கோட்டின் தனித்தன்மையிலிருந்து பின்வரும் முடிவுகள் எழுகின்றன: வட்ட மையத்திலிருந்து நாணுக்கு வரையப்படும் செங்குத்துக்கோடு நாணை இருசமக்கூறிடும். ஒரு நாணை இருசமக் கூறிடும் கோடு வட்ட மையத்திலிருந்து வரையப்பட்டிருந்தால் அக்கோடு அந்த நாணுக்குச் செங்குத்தாகும். வட்டத்தின் ஒரே நாணால் அந்நாணின் ஒரே பக்கத்தில் வட்ட மையக்கோணமும் உட்கோணமும் தாங்கப்பட்டால், வட்ட மையக்கோணமானது உட்கோணத்தைப் போல இரு மடங்காகும். வட்டத்தின் ஒரே நாணால் அந்நாணின் ஒரே பக்கத்தில் தாங்கப்படும் இரு உட்கோணங்கள் சமமாகும். வட்டத்தின் ஒரே நாணால் அந்நாணின் எதிர்ப்பக்கங்களில் தாங்கப்படும் இரு உட்கோணங்கள் மிகைநிரப்புக் கோணங்களாகும். ஒரு வட்ட நாற்கரத்தின் வெளிக்கோணம் அதன் எதிர் உட்கோணத்திற்குச் சமம். ஒரு விட்டத்தால் வட்டத்தின் மேலமையும் ஒரு புள்ளியில் தாங்கப்படும் கோணம் செங்கோணம். வட்டத்தின் மிகப்பெரிய நாண் விட்டம். ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் இரு நாண்களில் ஒன்று a , b நீளமுள்ள துண்டுகளாகவும் மற்றது c , d நீளமுள்ள துண்டுகளாகவும் வெட்டப்படுமானால் . ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும் இரு செங்குத்து நாண்களில் ஒன்று a , b நீளமுள்ள துண்டுகளாகவும் மற்றது c , d நீளமுள்ள துண்டுகளாகவும் வெட்டப்படுமானல் இன் மதிப்பு விட்டத்தின் வர்க்கமாகும்.Posamentier and Salkind, Challenging Problems in Geometry, Dover, 2nd edition, 1996: pp. 104–105, #4–23. தொடுகோடு ஒரு ஆரத்தின் வட்டத்தின் மேலுள்ள முனைப்புள்ளி வழியால அந்த ஆரத்திற்கு வரையப்படும் செங்குத்துக்கோடு வட்டத்திற்கு அப்புள்ளியில் தொடுகோடாகும். தொடுபுள்ளியில் தொடுகோட்டிற்கு வரையப்படும் செங்குத்துக்கோடு வட்ட மையத்தின் வழிச் செல்லும். வட்டத்திற்கு வெளியேயுள்ள ஒரு புள்ளியிலிருந்து இரு தொடுகோடுகள் வரைய முடியும். அவ்விரு தொடுகோடுகளும் சம நீளமுள்ளவை. A மற்றும் B புள்ளிகளில் வரையப்படும் தொடுகோடுகள் இரண்டும் புள்ளி P இல் வெட்டிக்கொண்டால், கோணங்கள் ∠BOA , ∠BPA இரண்டும் மிகைநிரப்புக் கோணங்கள். O, வட்டமையம். AD புள்ளி A இல் வட்டத்திற்கு வரையப்பட்ட தொடுகோடு; AQ வட்ட நாண் எனில் . வடிவவியல் வடிவங்களில் உட்புறமும் வெளிப்புறமும் வரையப்படும் வட்டங்கள் ஒவ்வொரு முக்கோணத்துக்குள்ளும் அதன் மூன்று பக்கங்களையும் தொட்டவாறு ஒரு தனித்த வட்டம் வரைய முடியும். அவ்வட்டம் முக்கோணத்தின் உள்வட்டம் எனப்படும்.Incircle – from Wolfram MathWorld. Mathworld.wolfram.com (2012-04-26). Retrieved on 2012-05-03. ஒவ்வொரு முக்கோணத்துக்குள்ளும் அதன் மூன்று உச்சிகளின் வழிச்செல்லும் ஒரு தனித்த வட்டம் வரைய முடியும். அவ்வட்டம் முக்கோணத்தின் சுற்றுவட்டம் எனப்படும்.Circumcircle – from Wolfram MathWorld. Mathworld.wolfram.com (2012-04-26). Retrieved on 2012-05-03. தொடு பலகோணம் என்பது அதன் உட்புறமாக அனைத்துப் பக்கங்களையும் தொடுமாறு ஒரு வட்டம் வரையக்கூடியதொரு குவிவுப் பலகோணம் ஆகும். தொடு நாற்கரம் ஒரு தொடு பலகோணமாகும்.Tangential Polygon – from Wolfram MathWorld. Mathworld.wolfram.com (2012-04-26). Retrieved on 2012-05-03. வட்டப் பலகோணம் என்பது அதன் ஒவ்வொரு உச்சிகளின் வழிச்செல்லுமாறு ஒரு வட்டம் வரையக்கூடியதொரு குவிவுப் பலகோணமாகும். வட்ட நாற்கரம் ஒரு வட்டப் பலகோணம். மேலும் பார்க்க வட்டவலையம் கோளம் ஓரலகு வட்டம் அப்பொலோனிய வட்டங்கள் ஸ்பைக்கர் வட்டம் சூழ்தொடு வட்டம் முக்கோணத்தின் உள்வட்டமும் வெளிவட்டங்களும் ஒன்பது-புள்ளி வட்டம் சமச்சரிவு இடைக்கோடு முக்கோணத்தின் உள்வட்டமும் வெளிவட்டங்களும் இலெசிட்டரின் தேற்றம் பிரகார்டு வட்டம் செங்குத்து மூலைவிட்ட நாற்கரம் தொடுகோட்டு நாற்கரம் வட்ட நாற்கரம் சூழ்தொடு வட்டம் குவியம் (வடிவவியல்) துணை நூல்கள் வெளியிணைப்புகள் Circle (PlanetMath.org website) Interactive Java applets for the properties of and elementary constructions involving circles. Interactive Standard Form Equation of Circle Click and drag points to see standard form equation in action Munching on Circles at cut-the-knot பகுப்பு:வட்டங்கள் பகுப்பு:வளைவரைகள் பகுப்பு:கூம்பு வெட்டுகள் பகுப்பு:வடிவவியல் வடிவங்கள்
இலங்கைக் கட்டிடக்கலை
https://ta.wikipedia.org/wiki/இலங்கைக்_கட்டிடக்கலை
thumb|250px|இலங்கையின் பழைய தலைநகரங்களில் ஒன்றான பொலொன்னறுவையில் காணப்படும் வட்டதாகே எனப்பதும் கட்டிடத்தின் அழிபாடுகள் thumb|250px|இலங்கையின் முதல் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள பண்டைக்காலத் தாது கோபுரம். மீளமைக்கப்பட்டது. இலங்கைக் கட்டிடக்கலை மிகவும் தொன்மை வாய்ந்தது. 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இது பெரும்பாலும் பௌத்த சமயம் சார்ந்ததாகக் காணப்படுகின்றது. இதனால் இலங்கைக் கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்கள் பெரும்பாலும் பௌத்த வழிபாட்டிடங்கள் தொடர்பானவையாகவே உள்ளன. பௌத்த மதமும் அயல் நாடான இந்தியாவில் தோன்றி அசோகப் பேரரசர் காலத்தில் இலங்கைக்குப் பரவியதாலும், அண்மை அமைவிடம் காரணமாக இலங்கைக்கும், இந்தியாவுக்கும், சிறப்பாகத் தமிழ்நாட்டுக்கும் இடையில், பண்பாட்டுத் தொடர்புகள் இருந்துவந்ததனாலும், தமிழ்நாட்டிலிருந்து காலத்துக்குக் காலம் நிகழ்ந்த படையெடுப்புக்களின் விளைவாகவும் இந்தியக் கட்டிடக்கலையின் தாக்கம் இலங்கைக் கட்டிடக்கலையில் காணப்படுவதை அவதானிக்கலாம். எனினும் பண்டைய இலங்கைக் கட்டிடக்கலை தனித்துவமான பல குணாதிசயங்களைக் கொண்டு விளங்குவதை நாட்டின் பல இடங்களிலும் முழுமையாகவும், சிதைந்தும் காணப்படும் பல வழிபாட்டிடங்கள், அரண்மனைகள், பல வகையான பொதுக்கட்டிடங்கள் என்பவற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடியும். பழங் காலத்தில் கட்டப்பட்ட சைவ சமயக் கோயில்கள் சிலவும் ஆங்காங்கே காணப்படினும் அவை முற்றிலும் திராவிடக் கட்டிடக்கலை வடிவங்களாகவே காணப்படுகின்றன.The Oxford History of the British Empire: Volume V: Historiography, pg 248 ஆரம்பகாலக் கட்டிட வகைகள் இலங்கையின் வரலாறு கலிங்க இளவரசனான விஜயன் அவனது தோழர்களுடன் இலங்கையில் இறங்கி அரசனாக முடிசூட்டிக்கொண்டதிலிருந்து ஆரம்பமானதாகப் பாளி வரலாற்று நூல்கள் குறிப்பிட்டாலும், நாட்டின் முதலாவது பௌத்த அரசனான தேவாநாம்பியதீசனின் காலத்திலேயே (கி.மு 250 – 210) முக்கியமான கட்டிடக்கலை ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன. தாதுகோபுரங்கள் பௌத்தக் கட்டிடக்கலை தொடர்பில் இலங்கையில் காணப்படும் மிகப் பழைய கட்டிடவகை தாதுகோபுரங்கள் ஆகும். இது பாளி மொழியில் தூபா எனவும் சிங்கள மொழியில் தாகபா எனவும் குறிப்பிடப்படுகின்றது. இவை பல வடிவங்களைக் கொண்டவையாக இருப்பினும் ஏறத்தாளக் கவிழ்த்து வைக்கப்பட்ட அரைக் கோள வடிவம் கொண்டவை எனலாம். சிங்கள வரலாற்று நூல்கள் மூலம் அறியப்பட்ட மிகத் தொன்மையான தாதுகோபுரம், இலங்கையின் பண்டைய தலை நகரமான அனுராதபுரத்தில் முன்னர் குறிப்பிட்ட தேவாநாம்பியதீசன் காலத்தில் கட்டப்பட்ட தூபாராம தாதுகோபுரமாகும். இந்தத் தாது கோபுரம் திருத்தி அமைக்கப்பட்ட நிலையில் இன்றும் காணப்படுகின்றது. இதைத் தொடர்ந்து கட்டப்பட்ட தாது கோபுரங்கள் பல அனுராதபுரத்திலும், பிற்காலத் தலைநகரான பொலநறுவையிலும், ஏனைய இடங்களிலும் காணப்படுகின்றன. பின்னர் கட்டப்பட்ட தாதுகோபுரங்கள் பாரிய அளவு கொண்டவையாக இருந்தன. அனுராதபுரத்திலுள்ள கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, ருவன்வலிசாய தாதுகோபுரமும், கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த அபயகிரி தாதுகோபுரமும், கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜேதவன தாதுகோபுரமும் உலகின் மிகப்பெரிய திண்மக் கட்டிட அமைப்புக்களின் பட்டியலில் இடம் பெறக்கூடியன. போதிகர போதிகர என்பது வெள்ளரசுவீடு எனப் பொருள்படும். புத்த பகவான் அமர்ந்திருந்து ஞானம் பெற்றதாகக் கருதப்படும் புனித வெள்ளரசு மரக் கிளையொன்று அசோகப் பேரரசர் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு அனுராதபுரத்தில் நடப்பட்டது. தொடர்ந்து இலங்கையின் பல இடங்களிலும் பௌத்த வழிபாட்டிடங்களில் வெள்ளரசு மரங்கள் நடப்பட்டன. இம் மரத்தின் கீழ், புத்தர் இருந்து ஞானம் பெற்ற இருக்கையைக் குறிக்க ஒரு கற்பலகை அமைக்கப் பட்டிருக்கும். பிற்காலத்தில் அங்கே ஒரு புத்தர் சிலையும் அமைக்கப்படுவது வழக்கமாயிற்று. இவை அனைத்துக்கும் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட கட்டிடமே போதிகர இவற்றையும் பார்க்க இலங்கையின் கோட்டைகள் மேற்கோள்கள் *
அங்குலம்
https://ta.wikipedia.org/wiki/அங்குலம்
thumb|right|120px|2அங்குல அளவு அங்குலம் (; inch, குறியீடு: in அல்லது ″) என்பது பிரித்தானிய அளவை முறையில் நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகு. இது ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஓர் அங்குலம் அண்ணளவாக 2.54 சதம மீட்டருக்குச் சமமானது... பல்வேறு நீள அளவைகளுக்குச் சமமான அங்குலங்கள் இம்பீரியல் அலகுகள் 1 அடி 12 அங்குலங்கள்1 யார் 36 அங்குலங்கள்1 பாகம் 72 அங்குலங்கள்1 சங்கிலி 792 அங்குலங்கள்1 பெர்லாங் 7920 அங்குலங்கள்1 மைல்63,360 அங்குலங்கள் மெட்ரிக் அலகுகள் 1 மில்லிமீட்டர்0.0394 அங்குலங்கள்1 சதம மீட்டர்0.3937 அங்குலங்கள்1 மீட்டர்39.37 அங்குலங்கள்1 கிலோமீட்டர்39,370 அங்குலங்கள் பழைய இந்திய அளவைமுறை 1 விரற்கடை 3/4 அங்குலம்1 சாண் 9 அங்குலங்கள்1 முழம்18 அங்குலங்கள் மேற்கோள்கள் பகுப்பு:நீள அலகுகள் பகுப்பு:பிரித்தானிய அலகுகள் fy:Tomme (lingtemaat)
கோயில் (வழிபாட்டிடம்)
https://ta.wikipedia.org/wiki/கோயில்_(வழிபாட்டிடம்)
thumb|200px|கி.மு 449 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஹெபீஸ்ட்டஸ் கோயில் எனப்படும் கிரேக்கக் கோயில் ஒன்று. வழிபாட்டிடம் என்பது ஆன்மீக சடங்குகள், பிரார்த்தனை, பலியிடல் போன்ற செயல்களுக்காக ஒதுக்கப்பட்ட கட்டிடமாகும். பண்டை எகிப்தியக் கோயில்கள் thumb|200px|பண்டை எகிப்தியக் கோயில் ஒன்று பண்டைக்கால எகிப்தின் தொடக்கக் கோயில்கள் ஒரு மூடிய மண்டபம் ஆகும். இவற்றின் கூரைகள் தூண்களினால் தாங்கப்பட்டு இருந்தன. புதிய இராச்சியக் காலத்தில், வாயில் கோபுர அமைப்புக்கள், முற்றம், கோயில் கருவறைக்கு முன் அமைந்த மண்டபம் என்பன அமைக்கப்பட்டன. இப் பாணி கிரேக்க -ரோமர் காலம் வரை நிலைத்து இருந்தது. பண்டை எகிப்தியக் கோயில்கள் கற்களால் கட்டப்பட்டன. சுற்று மதில்களுக்கு செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. எகிப்தியக் கோயில்களின் நடுவில் ஒரு அறையில் கடவுள் உருவம் வைக்கப்படிருக்கும். அரசனின் சார்பில் ஒரு மதகுரு இதற்குப் பொறுப்பாக இருப்பார். இக் கோயில்கள் பொதுவாக மக்கள் வழிபடுவதற்காகத் திறந்து வைக்கப்படுவது இல்லை. கோயில் அதிகாரிகளைத் தவிர வேறு எவரும் செல்ல முடியாதவாறு கோயில் பூட்டப்பட்டிருக்கும். விழா நாட்களில் மட்டும் சிலை மக்கள் வழிபடுவதற்காக கோயிலுக்கு வெளியில் எடுத்துவரப்படும். கிரேக்க - உரோமக் கோயில்கள் பண்டைக் கிரேக்கர்கள் தமது கோயில்களை டெமெனோஸ் என்று அழைத்தனர். இது புனிதப் பகுதி என்னும் பொருள் கொண்டது. பலி கொடுப்பதற்கான பலிபீடம் கட்டிடங்களுக்குப் புறத்தே அமைந்த வெளியிடத்திலேயே இருப்பதால், இக் கோயில்களின் புனிதம் முக்கியமாக இவ் வெளியிடங்களுடனேயே தொடர்புபட்டு உள்ளது. கிரேக்கக் கடவுளர் சிலைகளைத் தாங்கிய கட்டிடங்கள் தொடக்கத்தில் மிகவும் எளிமையான கட்டிடங்களாகவே இருந்தன. கி.மு ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவை விரிவான நுணுக்க வேலைப்பாடுகளுடன் அமைந்தன. கிரேக்கக் கோயில் கட்டிடக்கலை, பண்டைய கட்டிடக்கலை மரபுகளில் பெருமளவு தாக்கத்தைக் கொண்டிருந்தது. கோயில்களின் அமைவிடத்தைத் தீர்மானிப்பதற்கான கிரியைகள், பறவைகளின் பறப்பை அல்லது வேறு இயற்கைத் தோற்றப்பாடுகளை அவதானித்துக் குறி சொல்பவரினால் நடத்தப்பட்டது. ரோமர் கோயில்கள் பொதுவாகக் கிழக்கு நோக்கியபடி அமைந்திருந்தன. எனினும் கோயில்களின் திசை குறித்த நுணுக்க விபரங்கள் சரியாகத் தெரியவரவில்லை. சில கோயில்கள் வேறு திசைகளை நோக்கியும் அமைந்திருக்கின்றன. எடுத்துக் காட்டாக பந்தியன் (Pantheon) வடக்கு நோக்கியபடி உள்ளது. இந்துக் கோயில்கள் thumb|200px|கம்போடியாவில் உள்ள அங்கூர் வாட் இந்துக் கோயில்.12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இதுவே உலகின் மிகப்பெரிய இந்துக் கோயிலாகும். பல நூறு மொழிகளைப் பேசுவோர் இந்துக்களாக இருக்கிறார்கள். இதனால், இறைவனை வணங்குவதற்கான இடம், மந்திர், மந்திரா, தேவஸ்தானம், தேவாலயம், அம்பலம் போன்ற எண்ணற்ற சொற்களால் குறிப்பிடப்படுவது உண்டு. எனினும் இவற்றின் நோக்கம் ஒன்றே. இந்து சமயத்தில் ஒரு மரத்தின் கீழ் ஒரு கல்லை வைத்து அதை இறைவனாக உருவகித்து வணங்கும்போது அது ஒரு கோயிலாகி விடுகிறது. எனவே வெறும் மர நிழலில் இருந்து, ஒரு நகரத்தையே உள்ளடக்கிய பெரிய கோயில்கள் வரை பல அளவுகளிலும் இந்துக் கோயில்கள் உள்ளன. இந்துக் கோயில்கள் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவை. இந்து சமயத்தின் தாயகமான இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோயில்கள் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இடைக்காலத்தில், படையெடுப்புக்களாலும், பண்பாட்டுத் தொடர்புகளாலும் இந்து சமயம் இந்தியாவைத் தாண்டியும் விரிவடைந்தபோது வேறு பல நாடுகளிலும் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன. உலகின் மிகப்பெரிய இந்துக் கோயில்கள் இந்தியாவுக்கு வெளியே கம்போடியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் அமைக்கப்பட்டன. இன்று, இந்துக்கள் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி வாழுகின்றனர். அதனால், ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிலும் கூடப் பல இந்துக் கோயில்கள் அமைக்கப்படுகின்றன. அமைந்திருக்கும் சமுதாயம், இடம், அமைக்கப்பட்ட காலம் ஆகியவற்றைப் பொறுத்து இந்துக் கோயில்கள் பல்வேறு அமைப்புக்களில் காணப்படுகின்றன. எனினும் சில அடிப்படையான அமைப்புக்கள் எல்லா இந்துக் கோயில்களிலும் உள்ளன. வகைப்பாடு இந்து சமயக் கோயில்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன.வேம்பத்தூர் கிருஷ்ணன் எழுதிய “ஆலய மணிகள்” நூலின் பக்கம்- 47. தைவிகம் - தேவர்களே மூலவிக்கிரகங்களை நிறுவிச் செய்தது. ஆசுரம் - அசுரர்கள் ஏற்படுத்திய கோயில்கள் இது. ஆர்ஷம் - ரிசிகள் கோயிலுக்கான மூலவரை நிறுவுவது. மாநுஷம் - மன்னரும், மக்களும் நிறுவிக் குடமுழுக்கு செய்யப்பட்டது. புத்த கோயில்கள் thumb|200px|புத்த காயாவில் உள்ள மகாபோதி கோயில் தொகுதி. மரபுவழியான புத்த கோயில்கள், மனிதருக்கு உள் மற்றும் வெளி அமைதியைக் கொடுக்கும் நோக்கில் வடிவமைக்கப் படுகின்றன. பௌத்தம் இறைவனைப் பற்றிப் பேசுவதில்லை ஆயினும், பௌத்த சமயத்தின் சில பிரிவுகள் கௌதம புத்தரைப் புத்த கோயில்களில் வைத்து வழிபடுகின்றனர். தாதுகோபுரம், அரச மரம், படிம வீடு, துறவிகள் மடம் போன்ற கூறுகள் புத்த கோயில்களில் காணப்படுகின்றன. இத் தாதுகோபுரங்களில் கௌதம புத்தரின் பல், எலும்பு போன்ற சின்னங்கள் வைக்கப்படுகின்றன. புத்த மதம் தோன்றிய இந்தியாவில் இன்று அம் மதம் அருகி விட்டாலும், இந்தியாவுக்கு வெளியே அது ஒரு பாரிய மதமாக உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும், சீனா, ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளிலும் புத்த மதம் பெரும்பான்மை மதமாக இருந்து வருகிறது. இதனால் அந் நாடுகளிலும், அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் வேறு பல நாடுகளிலும் புத்த கோயில்கள் உள்ளன. உலகின் மிகப்பெரிய தாதுகோபுரங்களைக் கொண்ட புத்த கோயில்கள் சில இலங்கையில் உள்ளன. அசோகப் பேரரசனால் அனுப்பி வைக்கப்பட்டதும், புத்தர் ஞானம் பெற்றதுமான வெள்ளரசு மரக் கிளையை நட்டு வளர்க்கப்பட்ட அரச மரம் இன்றும் அநுராதபுரத்தில் உள்ள புத்த கோயில் ஒன்றில் உள்ளது. சமணக் கோயில்கள் thumb|200px|இந்தியாவின் கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள சமணக் கோயில் ஒன்று. சமண சமயம் அல்லது ஜைன மதம் என அழைக்கப்படும் மதம் ஒரு காலத்தில் இந்தியாவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. இம் மதம் செல்வாக்கிழந்த போது சமணக் கோயில்கள் பல அழிக்கப்பட்டு விட்டன. இன்று இந்தியாவில் சிறு அளவில் சமணர் வாழ்ந்து வருகின்றனர். சமணக் கோயில்களில் தீர்த்தங்கரர்கள் எனப்படும் மதப் பெரியார்களின் உருவங்கள் வைத்து வழிபடப்படுகின்றன. சமணக் கோயில்கள் பெரும்பாலும் சலவைக் கல்லினால் அமைக்கப்படுகின்றன. சில புகழ் பெற்ற சமணக் கோயில்கள் இந்தியாவில், பலித்தானா, சங்கேஸ்வர், சிக்கார்ஜி, வத்தமான், மும்பாய், அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ளன. சமணக் கோயில்களில் பல சலவைக் கல் தூண்கள் அமைக்கப்படுகின்றன. இவை தேவதைகளின் உருவங்களைக் கொண்ட சிற்பவேலைகளினால் அழகூட்டப்படுகின்றன. சமணக் கோயில்களின் முதன்மை அறையில், பர்ஷ்வாநாதர், ரிஷபதேவர், மகாவீரர் ஆகிய மூன்று தீர்த்தங்கரர்களின் உருவங்கள் வைக்கப்படுகின்றன. மவுண்ட் அபுவில் உள்ள தில்வாரா கோயில்கள் சமணம் தொடர்பான மிக அழகிய யாத்திரைத் தலம் எனச் சொல்லப்படுகின்றது. சீக்கியக் கோயில்கள் thumb|200px|right|பொற்கோயில் எனப்படும் ஹர்மந்திர் சாகிப் சீக்கிய மதக் கோயில்கள் பொதுவாக குருத்துவாரா எனவே அழைக்கப்படுகின்றன. இச் சொல் பஞ்சாபி மொழியில் குருவுக்கான வாயில் என்னும் பொருள் கொண்டது. எனினும் கோயில் என்ற சொல் சீக்கிய மதக் கோயில்களுக்கும் பரவலாக வழங்கப்படுவது உண்டு. சீக்கியக் கோயில்களில் உருவங்கள் வைத்து வணங்கப்படுவது இல்லை. சீக்கிய மதத்தினர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்களுடைய மிகப் புனிதமான கோயிலும் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் (அம்ரித்சார்) என்னும் நகரில் அமைந்துள்ளது. ஹர்மந்திர் சாகிப் என்னும் பெயர் கொண்ட இக் கோயில் பொதுவாகப் பொற்கோயில் என அழைக்கப்படுகிறது. சீக்கியக் கோயில்களுக்குள் பிற மதத்தினரும் அநுமதிக்கப்படுகின்றனர். எனினும், உட் செல்லும் எவரும் காலணிகளைக் கழற்றிவிட்டு, கைகழுவித் தலையில் துண்டு அல்லது தொப்பி அணிந்தே செல்ல முடியும். கிறித்தவக் கோயில்கள் right|thumb|225px|வத்திக்கான் நகரின் புனித பேதுரு பேராலயம் கிறித்தவர்கள் தங்களின் வழிபாட்டு இடங்களை சர்ச் என அழைப்பர். கிறித்த சர்ச்க்குள் பிற மதத்தினரும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆயினும் திருவருட்சாதனங்களில் குறிப்பாக நற்கருணை விருந்தில் பங்கு பெற முடியாது. எல்லா கிறித்தவ ஆலயங்களும் குறிப்பாக கத்தோலிக்க ஆலயங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு புனிதரோ அல்லது இயேசு கிறித்துவின் பெயராலோ தந்தையாம் கடவுளுக்கே அர்பணிக்கப்பட்டதாகும். இவற்றையும் பார்க்க அடுக்குத் தூபி பள்ளிவாசல் ஜங்கம் விளக்கக் குறிப்புகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் online – distinct for the religious and anatomical terms Comparison between Egyptian and Greek temples பகுப்பு:சமய வழிபாட்டிடங்கள் பகுப்பு:கோயில்கள்
கணபதி காங்கேசர் பொன்னம்பலம்
https://ta.wikipedia.org/wiki/கணபதி_காங்கேசர்_பொன்னம்பலம்
ஜி. ஜி. பொன்னம்பலம் எனப்படும் கணபதி காங்கேசர் பொன்னம்பலம்(G. G. Ponnambalam, நவம்பர் 8, 1901 - பெப்ரவரி 9, 1977) இலங்கைத் தமிழர்களின் நலன்கருதித் துவக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஆவார். இலங்கையின் அரசியலில் 1940களிலும் 1950களிலும் மிகவும் அறியப்பட்டிருந்த இவர் ஒரு திறமையான குற்றவியல் வழக்குரைஞர் ஆவார். ஜீ.ஜீ. என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவர். வரலாறு பொன்னம்பலம், யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள அல்வாய் என்னும் ஊரில் 1901 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் கணபதி காங்கேசர். தபால் அதிபராகப் பணியாற்றினார். தாயார் மானிப்பாய்க்கு அண்மையிலுள்ள நவாலியைச் சேர்ந்தவர். பொன்னம்பலம், யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர் உயர் கல்விக்காகக் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று இயற்கை அறிவியல் துறையிலும் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார். இலங்கை திரும்பிய அவர் கொழும்பில் வழக்குரைஞராகத் தொழில் புரிந்தார். நல்ல வாதத் திறமை கொண்ட பொன்னம்பலம் சிறந்த குற்றவியல் வழக்குரைஞராகப் புகழ் பெற்றார். 1948 ஆம் ஆண்டில் அரச வழக்கறிஞர் (King’s Counsel) என்னும் தகுதியைப் பெற்றார். இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். இவரது மகன், குமார் என்று அழைக்கப்பட்ட காசிநாதர் காங்கேசர் பொன்னம்பலம், இலங்கைத் தமிழர் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். இவர் இனவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அரசியல் வாழ்க்கை 1931 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது அரசாங்கச் சபைக்கான தேர்தலில் மன்னார்-முல்லைத்தீவுத் தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டாராயினும் வெற்றிபெற முடியவில்லை. ஆயினும் இது இவரின் அரசியல் வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. 1934 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம், வெற்றி பெற்று அரசாங்கச் சபை உறுப்பினர் ஆனார். 1936 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்ற இவர் 1947 ஆம் ஆண்டுவரை அரசாங்கச் சபை உறுப்பினராகத் தொடர்ந்தார். 1944, ஆகஸ்ட் 29 இல் இலங்கையில் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியை இவர் தொடக்கினார். இக் காலகட்டத்தில் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரித்தானிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட சோல்பரி ஆணைக்குழு முன் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக சமபல பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டார். இதன் மூலம் பொதுவாக இலங்கை அரசியலிலும், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலிலும் பெரும் செல்வாக்குப் பெற்றார். அக்காலத்தில் ஐம்பதுக்கு ஐம்பது என்று பரவலாக அறியப்பட்ட இச் சமபல பிரதிநிதித்துவக் கொள்கையை அடிப்படையில் 1947 இல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது. இத் தேர்தலில் நல்ல அரசியல் செல்வாக்குக் கொண்டிருந்த அருணாசலம் மகாதேவாவை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் பெருமளவு வாக்குகளால் வெற்றி பெற்றார். 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதும், மலையகத் தமிழரின் குடியுரிமை பற்றிய பிரச்சினைகளில் பொன்னம்பலத்தின் அணுகு முறைகளையும் ஏற்றுக்கொள்ளாத சில தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறினர். இதனால் கட்சி பிளவு பட்டது. எனினும் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் தொழில் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் ஐந்தாண்டு காலம் அமைச்சராகப் பதவியில் இருந்த இவர், பல பாரிய தொழிற்சாலைகளைத் தமிழர் பகுதிகளில் நிறுவினார். வடக்கில், காங்கேசன்துறையில் நிறுவப்பட்ட காங்கேசன்துறை சிமெண்ட் தொழிற்சாலையும், வன்னிப் பகுதிக்கு அண்மையில் பரந்தன் என்னுமிடத்தில் நிறுவப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு அண்மையில் வாழைச்சேனையில் ஏற்படுத்தப்பட்ட காகித ஆலை ஆகியவை இவற்றுள் முக்கியமானவை. செல்வாக்குச் சரிவு தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்த செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன் முதலிய தலைவர்கள் தமிழரசுக் கட்சி என அழைக்கப்பட்ட கூட்டாசிக் கட்சியை (Federal Party) உருவாக்கினர். தமிழ்க் காங்கிரசைவிடக் கூடிய தமிழ்த் தேசியவாதக் கட்சியாக அடையாளம் காணப்பட்ட இக் கட்சியின் செல்வாக்கு வளர்ந்தபோது, காங்கிரசின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஈ. எம். வி. நாகநாதன், பொன்னம்பலத்தை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்டார். இத் தேர்தலில் பொன்னம்பலம் வெற்றி பெற்றார் ஆயினும், வாக்கு வேறுபாடு குறைவடைந்ததுடன், நாடாளுமன்றத்தில் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையும் குறைந்தது. 1956 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் காங்கிரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இத் தேர்தலில் இக் கட்சியின் சார்பில் பொன்னம்பலம் மட்டுமே மிகவும் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். 1960 ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மீண்டும் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் இரண்டிலும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான அல்பிரட் துரையப்பாவிடம் தோற்றார். 1965 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத் தேர்தலில் இவருடன் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் இருவர் வெற்றி பெற்றனர். 1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியிலேயே போட்டியிட்டார். இத்தடவை இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மாவட்ட நீதவான் ஆகிய சி. எக்ஸ். மார்ட்டின் என்பவரிடம் தோல்வியடைந்தார். இத் தேர்தலில் மூன்றாம் இடமே இவருக்குக் கிடைத்தது. இதுவே பொன்னம்பலம் போட்டியிட்ட இறுதித் தேர்தலாகவும் அமைந்தது. அரசியல் மாற்றங்கள் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர் அரசியலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. 1970 இல் பதவிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு தமிழருக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் தமிழ் இளைஞர் மத்தியில் தீவிரவாதம் முளைவிடத் தொடங்கியது. தமிழர் மிதவாதக் கட்சிகளின் தலைவர்கள் இனியும் பிரிந்து நின்று எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தனர். தமிழரசு, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், மலையகத் தமிழர்களின் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் சேர்த்துக்கொண்டு தமிழர் கூட்டணி என்னும் புதிய அமைப்பை உருவாக்கினர். இதன் தலைவர்களாக,எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜி. ஜி. பொன்னம்பலம், எஸ். தொண்டமான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன் மூலம் அரசியலில் இருந்து ஓரளவுக்கு ஒதுங்கி இருந்த பொன்னம்பலம் மீண்டும் அரசியலுக்கு வந்தார். எனினும் தீவிர அரசியலில் இவர் நேரடியாக இறங்கவில்லை. தமிழர் கூட்டணியினர் தமிழீழம் என்னும் தனி நாட்டை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றினர். அத்தீர்மானத்தை அச்சிட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கிய அமிர்தலிங்கம் முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு ட்ரையல் அட் பார் எனப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடத்த ஏற்பாடாகியது. இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு வழக்காக இது விளங்கியதுடன், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது எனலாம். இவ்வழக்கை நடத்துவதற்காகச் செல்வநாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் குழுவில் பொன்னம்பலம் பங்கேற்று வாதாடினார். இதில் பொன்னம்பலத்தின் வாதத்திறமையினால் கூட்டணித் தலைவர்கள் விடுதலையாயினர். இவ் வழக்கின் மூலம் தமிழர் மத்தியில் பொன்னம்பலத்தின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்தது எனலாம். இவ் வழக்கில் ஏற்பட்ட புகழ் காரணமாகத் தமிழ்நாட்டில் மு. கருணாநிதி மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கொன்றிலும் கருணாநிதிக்காகப் பொன்னம்பலம் வாதாடினார். எனினும் வழக்கு முடியுமுன்னரே மலேசியாவில் காலமானார். அவரது உடல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுக் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபின்னர் யாழ்ப்பாணத்தில் அவரது சொந்த ஊரான அல்வாயில் மக்கள் திரளின் மத்தியில் எரியூட்டப்பட்டது. வெளி இணைப்புகள் வணக்கம் வலைவாசல் செய்தி மஹாவலி.காம். இணைய செய்தி மேற்கோள்கள் பகுப்பு:1901 பிறப்புகள் பகுப்பு:1977 இறப்புகள் பகுப்பு:இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் பகுப்பு:யாழ்ப்பாணத்து நபர்கள் பகுப்பு:இலங்கைத் தமிழ் வழக்கறிஞர்கள் பகுப்பு:இலங்கை அரசாங்க சபை உறுப்பினர்கள் பகுப்பு:இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:இலங்கையின் 2வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:இலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பகுப்பு:இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள் பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள் பகுப்பு:இலங்கையின் வட மாகாண நபர்கள்
மலேஷியா
https://ta.wikipedia.org/wiki/மலேஷியா
REDIRECT மலேசியா
காங்கேசன்துறை வீதி
https://ta.wikipedia.org/wiki/காங்கேசன்துறை_வீதி
காங்கேசன்துறை வீதி (Kankesanthurai Road அல்லது KKS Road, கே.கே.எஸ் வீதி) என்பது, யாழ்ப்பாண நகரத்திலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள துறைமுக நகரமான காங்கேசன்துறை நோக்கிச் செல்லும் பாதையைக் குறிக்கும். இது கே.கே.எஸ். (காங்கேசன்துறை என்பதன் ஆங்கிலக் குறுக்கம்) வீதி எனவும் பரவலாக அறியப்படுகின்றது. இதனுடைய நீளம் அண்ணளவாக 10 மைல்களாகும். இவ் வீதி, வண்ணார்பண்ணை, கொக்குவில், கோண்டாவில், தாவடி, இணுவில், உடுவில், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, மாவிட்டபுரம் ஆகிய ஊர்களை ஊடறுத்துச் செல்கின்றது. செப்பமற்ற மண்பாதையாக இருந்த இவ் வீதி 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் முறையான வீதியாகக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றது. முக்கிய சந்திகள் காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாண நகரத்திலிருந்து, குடாநாட்டின் கரையோரங்களை நோக்கி விசிறி அமைப்பில் செல்லும் வீதிகளுள் ஒன்று. இந்த வீதிகளைச் செங்குத்தாக வெட்டிக்கொண்டு கிழக்கு - மேற்காகச் செல்லும் வீதிகள் பல உள்ளன. இத்தகைய வீதிகள் காங்கேசன்துறை வீதியை வெட்டிச் செல்லுவதனால் ஏற்படுகின்ற சந்திகள் அவற்றை அண்டியுள்ள ஊர்களுக்கான மையங்களாகச் செயற்படுகின்றன. இவ்வாறான சந்திகள் சில பின்வருமாறு: யாழ் நகருக்குள் உள்ளவை யாழ் ஆஸ்பத்திரி வீதிச் சந்தி (சத்திரத்துச் சந்தி) ஸ்ரான்லி வீதிச் சந்தி (மிட்டாசுக் கடைச் சந்தி) சிவன் கோயிலடிச் சந்தி நாவலர் சந்தி தட்டாதெருச் சந்தி யாழ் நகருக்கு வெளியே உள்ளவை கொக்குவில் சந்தி குளப்பிட்டி சந்தி தாவடிச் சந்தி உப்புமடம்(கோண்டாவில்)சந்தி இணுவில் சந்தி மருதனார்மடம் சந்தி சுன்னாகம் சந்தி மல்லாகம் சந்தி தெல்லிப்பழை சந்தி அண்டியுள்ள முக்கிய நிறுவனங்கள் மற்றும் நகரங்கள் கோட்டை முனீசுவரர் கோவில் கூட்டுறவாளர் வீரசிங்கம் மண்டபம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு உயிர் கொடை உத்தமர் நினைவாலயம் யாழ்ப்பாணம் தலைமை அஞ்சல் நிலையம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில் வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை சிவதொண்டன் நிலையம், இலங்கை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வண்ணை காமாட்சி அம்பாள் ஆலயம் கொக்குவில் இந்துக்கல்லூரி இணுவில் மக்லியொட் மருத்துவமனை மருதனார்மடம் சுந்தர ஆஞ்சநேயர் கோவில் மருதனார்மடம் உழவர் சந்தை இராமநாதன் மகளிர் கல்லூரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைப் பீடம் சுன்னாகம் நகரம் சுன்னாகம் உழவர் சந்தை தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயில் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் பகுப்பு:யாழ்ப்பாண வீதிகள் பகுப்பு:இணுவில்
கிலோமீட்டர்
https://ta.wikipedia.org/wiki/கிலோமீட்டர்
மெற்றிக்கு அளவை முறையில், கிலோமீட்டர் (இலங்கை வழக்கு: கிலோ மீற்றர்) என்பது நீளத்தை அளப்பதற்கான ஒரு அலகாகும். இது இம்பீரியல் அளவைமுறையில், அண்ணளவாக 0.6214 மைல்களுக்குச் சமமானது. இது 1000 மீட்டர்கள் கொண்டது. பொதுவாக ஒரு பிரதேசத்தில், நாட்டில், அல்லது உலகப் பரப்பில் இடங்களுக்கிடையேயான தூரங்கள் கிலோமீட்டரில் அளக்கப்படுவது வழக்கம். மெற்றிக்கு அளவை முறையில் பொதுவாகப் புழக்கத்திலுள்ள நீள அலகுகளுக்கிடையேயான தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன. 1,000,000 மில்லிமீட்டர் = 1 கிலோமீட்டர்100,000செண்டிமீட்டர்= 1 கிலோமீட்டர்10,000இடெசிமீட்டர்= 1 கிலோமீட்டர்1000மீட்டர் = 1 கிலோமீட்டர் சில முக்கியமான தூரங்கள் கிலோமீட்டரில் புவிமையக் கோட்டில் பூமியின் சுற்றளவு - 40,075 கி.மீ. பூமியிலிருந்து சந்திரனின் சராசரித் தூரம் - 238,854 கி.மீ. பூமியிலிருந்து சூரியனின் மிகக் குறைந்த தூரம் - 147,097,800 கி.மீ. கடல் மட்டத்திலிருந்து எவரெசுட்டு சிகரத்தின் உயரம் - 8.84 கி.மீ. பகுப்பு:நீள அலகுகள்
தச்சர்
https://ta.wikipedia.org/wiki/தச்சர்
thumb|ஒரு இடைக்கால தச்சரின் கருவிகள், c. 1465 மரவேலை (அல்லது தச்சு வேலை) செய்யும் ஒருவரைத் தமிழில் தச்சன் எனக் குறிப்பிடுவர். துண்டு துண்டாக அறுக்கப்பட்ட மரங்களை மரசாமான்களாக தச்சர் வடிவமைக்கின்றார். கதவு, சன்னல், அலமாரி, நற்காலி உட்பட அனைத்து மரச்சாமான்களை தச்சர் வடிவமைக்கிறார். பயன்படுத்தும் சாதனங்கள் உளி, சுத்தி, வாள், ஆணி, துளைக்கருவி, அரம், இழைப்புளி போன்றவை. தச்சரின் வகைகள் மரவேலை செய்யும் தச்சர், நகை வேலை செய்யும் தச்சர் (இதில் நகை வேலை செய்பவர்களை தட்டார், பத்தர் என்ற பெயர்களிலும் அழைப்பர்), இரும்பு வேலை செய்யும் தச்சர் எனப்படுவர் (இதில் இரும்பு வேலை செய்யும் தச்சரை கருமார் என்ற பெயரில் அழைப்பர். பழங்காலத்தில் தச்சர் பழங்காலத்தில் தச்சரின் பங்கு இன்றிமையாதது. தற்பொழுது பெரும்பாலும் தச்சு வேலைக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலத்தில் மரத்தில் வடிவங்கள் தச்சர்கள் வெறும் உளி, சுத்தி பயன்படுத்தி வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பகுப்பு:கைவினைஞர்கள் பகுப்பு:மரவேலை பகுப்பு:தொழில்கள் பகுப்பு:தொழிற்கலைஞர்கள்
தட்டார்
https://ta.wikipedia.org/wiki/தட்டார்
REDIRECT கொல்லர்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் பட்டியல்
https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_திரைப்பட_இயக்குநர்களின்_பட்டியல்
கிருஷ்ணன்-பஞ்சு டி. ஆர். ராமண்ணா எஸ்.பாலசந்தர் பி. ஆர். பந்துலு ப. நீலகண்டன் எம். ஏ. திருமுகம் கே. சங்கர் ஸ்ரீதர் ஏ. பி. நாகராசன் ஏ. சி. திருலோகச்சந்தர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் முக்தா சீனிவாசன் பி. மாதவன் கே. விசயன் வியட்நாம் வீடு சுந்தரம் எம். ஜி. ஆர் கே. பாலசந்தர் பாரதிராஜா மணிரத்னம் பி. வாசு சந்தான பாரதி ஆர். பி. உதயகுமார் ராஜ்கபூர் சங்கர் கமலஹாசன் சேரன் பாலுமகேந்திரா சிங்கீதம் சீனிவாஸராவ் செல்வராகவன் எஸ். பி. முத்துராமன் மகேந்திரன் பாலா பாக்கியராஜ் தரணி ஆர்.வி. உதயகுமார் பாண்டியராஜன் பாலாஜி சக்திவேல் கௌதம் மேனன் ஆர். கே. செல்வமணி அமீர் சுசி.கணேசன் சுந்தர்.சி கே.எஸ்.ரவிகுமார் விக்ரமன் எஸ். ஜே. சூர்யா லிங்குசாமி லியாகத் அலிகான் பார்த்திபன் தங்கர் பச்சான் அகத்தியன் ஞான ராஜசேகரன் பி.லெனின் விசு மிஷ்கின் அழகம்பெருமாள் பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
கைலாசம் பாலசந்தர்
https://ta.wikipedia.org/wiki/கைலாசம்_பாலசந்தர்
மைல்
https://ta.wikipedia.org/wiki/மைல்
thumb|வலது பிரித்தானிய அளவை முறையில் நீண்ட தூரங்களை அளக்கப் பயன்படும் நீள அலகு மைல் ஆகும். மெட்ரிக் முறையில் இது அண்ணளவாக 1.6 கிலோமீட்டருக்குச் சமமானது. பண்டைய அரபிகளும் தூரத்தை அளக்க மைல் என்பதைப் பயன்படுத்தினார்கள். இது பிரித்தானிய அளவை முறைக்கு மிகவும் முற்பட்டதாகும். முகம்மது நபியவர்களின் காலத்திலும் அதற்கு முன்னரும் இது பயன்பாட்டிலிருந்தது. ”அரபு மைல்” என்று தற்கால வரலாற்றாளர்களால் அழைக்கப்படும் இந்த அலகு 1900 முதல் 2000 மீட்டருக்கு சம்மானதாக இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 1 மைல் = 8 பர்லாங்கு = 80 சங்கிலி = 880 பாகம் = 1760 யார் = 5280 அடி = 63360 அங்குலம் பகுப்பு:நீள அலகுகள் பகுப்பு:பிரித்தானிய அலகுகள்
மொழியியல் தொடர்பான அடிப்படைத் தலைப்புகள்
https://ta.wikipedia.org/wiki/மொழியியல்_தொடர்பான_அடிப்படைத்_தலைப்புகள்
மொழியியல் தொடர்பான அடிப்படைத் தலைப்புகள் கீழே தரப்பட்டுள்ள அம்சங்களைத் தழுவி அமைகின்றன. அடிப்படைக் கேள்விகள் மொழியியலில் கேட்கப் படுகின்ற அடிப்படையான கேள்விகள் எவை? மொழி என்பது என்ன? எப்படி இது படிமலர்ச்சி அடைந்தது/அடைந்து வருகிறது? மொழி எப்படி ஒரு தொடர்பு ஊடகமாகச் செயற்படுகிறது? எப்படி ஒரு மொழி சிந்தனை ஊடகமாகத் தொழிற்படுகிறது? எல்லா மொழிக்கும் பொதுவானவை எவை? மொழிகள் தம்முள் எவ்வாறு வேறுபடுகின்றன? மொழியையும், கிளைமொழியையும் வேறுபடுத்தி அறிவது எப்படி? அடிப்படைக் கருத்துருக்கள் மொழியியலில் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைக் கருத்துருக்கள் அல்லது சொற்கள் எவை? உருபன் (Morpheme) ஒலியன் (Phoneme) இலக்கணம் (Grammar) சொற்றொடரியல் (Syntax) சொற்பொருளியல் (Semantics) சூழ்பொருளியல் (Pragmatics) அடிப்படைக் கருத்துருக்களின் கண்டுபிடிப்பு - Timeline அடிப்படைக் கருத்துருக்கள் முதன் முதலில் விளக்கப்பட்டது எப்போது? யாரால்? பண்டைய சமஸ்கிருத இலக்கண நூலோர் பண்டைய கிரேக்கர்களின் மொழி ஆய்வுகள் கிரேக்க ஆய்வுகள் தொடர்பிலான உரோமர்களின் மேலாய்வு இலத்தீன் மொழியிலான மத்தையகாலத் தத்துவ ஆக்கங்கள் 19 ஆம் நூற்றாண்டில் நவீன மொழியியலின் ஆரம்பம் Behaviorism and mental tabula rasa hypothesis சொம்ஸ்கியும் (Chomsky) செயற்பாட்டுவாதமும் (functionalism) Generative grammar leads to generative phonology and semantics நிக்கராகுவா சைகை மொழியின் (Sign Language) தோற்றம் Alternate syntactic systems develop in 80s 80 களில் கணினிசார் மொழியியல் நரம்பியல்சார் மொழியியலும், அறிதிறன் (cognition) தொடர்பான உயிரியல் அடிப்படையும் Pirahã எண் கருத்துரு தொடர்பான சர்ச்சை மொழியியலாளர் மொழியியல் துறை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செலுத்தியவர்கள் பெஞ்சமின் லீ வார்ப் (Benjamin Lee Whorf) Claude Levi-Strauss எட்வார்ட் சாப்பிர் (Edward Sapir) பேர்டினண்ட் டி சோசுரே (Ferdinand de Saussure) பிரான்ஸ் போப்(Franz Bopp) ஆகஸ்ட் ஸ்கிலீஷெர் (August Schleicher) ஜான் லாங்ஷோ ஆஸ்டின் (John Langshaw Austin) ஜான் ஆர். சியர்லே (John R. Searle) லூயிஸ் ஜெம்ஸ்லேவ் (Louis Hjelmslev) கென்னத் எல். பைக் (Kenneth L. Pike) எம்.ஏ.கே. ஹாலிடே (M.A.K. Halliday) நோவாம் சொம்ஸ்கி (Noam Chomsky) பாணினி ராஸ்முஸ் ராஸ்க் (Rasmus Rask) ரோமன் ஜாக்கோப்சன் (Roman Jakobson) சர். வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones) துணைத் துறைகள் அறிதிற மொழியியல் (Cognitive linguistics) கணினிசார் மொழியியல் (Computational linguistics) ஒப்பீட்டு மொழியியல் (Comparative linguistics) கிளைமொழியியல் (Dialectology) சொற்பிறப்பியல் (Etymology) வரலாற்று மொழியியல் (Historical linguistics) இலக்கணம் Language didactics சொல்லியல் (Lexicology) மொழியியற் புள்ளியியல் (Linguistic statistics) Linguistic Typology உருபனியல் (Morphology) ஒலிப்பியல் (Phonetics) ஒலியியல் (Phonology) சூழ்பொருளியல் (Pragmatics) உளவியல்சார் மொழியியல் (Psycholinguistics) சொற்பொருளியல் (Semantics) சமூக மொழியியல் (Sociolinguistics) Schools/இயக்கங்கள்/அணுகுமுறைகள் Danish School செயற்பாட்டுவாதம் Geneva School Neo-Grammarians Prague School Prescription and description சோவியத் மொழியியல் Stratificational linguistics அமைப்புவாதம் (Structuralism) Systemic linguistics SIL International Tagmemics இதர தலைப்புகள் தனிநிலை மொழி – isolating ஒட்டுநிலை மொழி – agglutinative உட்பிணைப்பு மொழி – inflexional * பகுப்பு:சமூகம் தலைப்புகள் பட்டியல்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
https://ta.wikipedia.org/wiki/இலங்கை_கம்யூனிஸ்ட்_கட்சி
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பொதுவுடமைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சி. பொதுவுடமைக் கொள்கையின் ஆதரவாளர்களால் இலங்கையில் தொடங்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து ஸ்டாலினிசத்துக்குச் சார்பானவர்கள் பிரிந்து உருவாக்கிய ஐக்கிய சோஷலிசக் கட்சி என்ற பெயரிலான கட்சியின் தொடர்ச்சியாக 1943ல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. வைத்திய கலாநிதியான எஸ். ஏ. விக்கிரமசிங்க தலைமை தாங்கி ஐக்கிய சோஷலிசக் கட்சியையும் பின்னர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியையும் வழிநடத்தினார்.Benjamin, Roger W.; Kautsky, John H.. Communism and Economic Development, in The American Political Science Review, Vol. 62, No. 1. (Mar., 1968), p. 122. 1952 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரான திருமதி டொரீன் விக்கிரமசிங்க இலங்கைப் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். 1960ல் கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் மகாஜன எச்சத் பெரமுன என்ற கட்சியும் இணைந்து இடதுசாரிக் கூட்டணியொன்றை உருவாக்கின. ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி என்று அழைக்கப்பட்ட இக் கூட்டணி, 1964ல் அப்போதைய பிரதம அமைச்சரான சிரிமாவோ பண்டாரநாயக்கா கம்யூனிஸ்ட் கட்சிக்கும், லங்கா சமசமாஜக் கட்சிக்கும் அமைச்சர் பதவிகளைக் கொடுக்க முன்வந்தபோது உடைந்தது. மேற்கோள்கள் பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள் பகுப்பு:1943இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் பகுப்பு:இலங்கையில் பொதுவுடைமை
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பொதுவுடைமைக்_கட்சி
{{Infobox Indian political party | party_name = இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிCommunist Party of India | abbreviation = CPI | party_logo = |logo_size = | flag = 200px | colorcode = | founder = |general_secretary = து. ராஜா |ppchairman = வினாய் விசுவம் | loksabha_leader = கே. சுப்பராயன் | rajyasabha_leader = வினாய் விசுவம் | foundation = | publication = {{list collapsed|title=பத்திரிகைகள்|நியூ ஏஜ்முக்தி சங்கார்சுஜனயுகம்நவயுகம்கலந்தார்ஜனசக்தி}} | headquarters = அஜோய் பவன், 15, இந்திரசித் குப்தா மார்க்கம், புது தில்லி, இந்தியா-110002 | eci = தேசியக் கட்சி | alliance = | loksabha_seats = | rajyasabha_seats = | ideology = பொதுவுடைமைமார்க்சியம்–லெனினிசம் | position = இடதுசாரி |students = அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு | youth = அனைத்திந்திய இளைஞர் கூட்டமைப்பு | women = இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பு | labour = அனைத்திந்திய தொழிற்சங்கப் பேரவை பாரதிய கெட் மசுதூர் ஒன்றியம் | peasants = அகில இந்திய விவசாயிகள் சங்கம் | website = | native_name = | native_name_lang = | membership = | colours = சிவப்பு |state_seats_name = மாநிலப் பேரவைகள் |state_seats = | state2_seats_name = மாநில சட்டமன்ற மேலவைகள் | state2_seats = (பிகார்) | no_states = | international = கம்யூனிச, உழைப்பாளர் கட்சிகளின் பன்னாட்டுக் கூட்டு | tribal wing = | electoral_symbol = 130px }} இந்தியப் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India'') ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் உள்ளன. திசம்பர் 26, 1925-ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. து. ராஜா 21 சூலை 2019 அன்று இந்திய பொதுவுடமைக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டி.ராஜாஇது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இரா. முத்தரசன் என்பவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருக்கிறார். கட்சியில் பிளவு 1962-இல் நடைபெற்ற இந்தியச் சீனப் போரின் காரணமாக கட்சித் தலைவர்களுக்கிடையே சீனாவை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற முரண்பாடுகள் ஏற்பட்டது. எஸ். ஏ. டாங்கே தலைமையிலான தலைவர்கள் சோவியத் ஒன்றியம் மற்றும் இந்தியாவை ஆதரித்தனர். சில தலைவர்கள் சீனாவை ஆதரித்தனர். இதன் காரணமாக 1964-இல் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட தலைவர்கள் 1964-இல் புதிய மார்க்சிஸ்டு கட்சியை நிறுவினர்.சீனப் போரால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்தது ஏன்? ஆயினும் கொள்கை கோட்பாடுகள் ஒன்றே கொண்டிருந்தபோதிலும் ஏன் இடது வலது என பிரிந்த காரணம் ஏனென்று தெரியவில்லை. ஆரம்ப கால வரலாறு ரஷ்யப் புரட்சி அக்டோபர் 1917ல் வெற்றி பெற்ற பிறகு மேற்கத்திய நாடுகளிலும் கீழ்த் திசை நாடுகளிலும் [மார்க்சியம்||மார்க்சியக்] கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த படித்த அறிவாளிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கத் தொடங்கினார்கள். அதே போன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த படித்த எம். என். ராய் போன்ற அறிவாளிகளின் சில குழுக்கள் மார்க்சியத்தின் பொதுவான கோட்பாடுகளை இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப, பழைய சோவியத் ஒன்றியத்தில் இருந்த தாஷ்கண்ட் நகரத்தில், இந்தியப் பொதுவுடமைக் கட்சியைத் தெடங்கினார்கள். இந்தியாவில் 100 ஆண்டுகளை கடந்த கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு 1925 களின் முதல் பாதியில் இந்தக் குழுக்கள் [கம்யூனிஸ்ட் அகிலம்|கம்யூனிஸ்ட் அகிலத்தின்] (Comintern - சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டமைப்பு) வழிகாட்டலில் ஒன்று சேர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கின. மக்களை ஒன்று திரட்ட மும்பை, வங்காளம், பஞ்சாப் மற்றும் ஐக்கிய மாநிலங்களில் விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சிகள் அமைக்கப்பட்டன. இந்தக் கட்சிகள் மூலமாகவும் அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் (AITUC) மூலமாகவும் விவசாயிகள், தொழிலாளர்கள் இயக்கங்களில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்றனர். பம்பாயில் பலம் வாய்ந்த கர்னி-காம்கார் ஒன்றியம் மூலம் நடந்த கூலி உயர்வுக்கான போராட்டங்களுகு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை வகித்தனர். ஆங்கிலேய காலனி ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை அப்போது இந்தியாவில் ஆங்கிலேய காலனிய ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவர்கள் ஆரம்ப காலத்திலிருந்து கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கினர். ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக சதி வழக்குகள் போட்டு கம்யூனிஸ்டுகளின் அரசியல் நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர். 1929 மார்ச்சில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் கான்பூர், மீரட் போன்ற சதி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் போர் எதிர்ப்பின் காரணமாக பல தலைவர்கள் கைதாகினர். இட்லரை [சோவியத் யூனியன்|சோவியத் யூனியனை] ஆங்கிலேயருக்கு ஆதரவாக தாக்கிய போது ஆங்கிலேயர்கள் இந்தியப் பொதுவுடமைக் கட்சிக்கு ஆதரவாக இருக்க ஆரம்பித்தார்கள். காங்கிரசுடன் உறவு கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை தட்டிக் கேட்கவில்லை. தேசிய விடுதலை இயக்கத்துக்கு தலைமை ஏற்கவும் முயற்சிக்கவில்லை. காங்கிரசின் உள்ளிருக்கும் முற்போக்கு பிரிவினரை ஈர்த்து காங்கிரசுக் கட்சியை இடது சாரி திசையில் திருப்பலாம் என்று 1921 அகமதாபாத் காங்கிரஸ் மாநாட்டில் கம்யூனிஸ்ட்கள் முயற்சித்தனர். முழு விடுதலையை அடைவதை காங்கிரஸ் கட்சியின் திட்டமாக நிறைவேற்றும்படி செய்யப் போராடினார்கள். ஆனால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1947 ஆம் ஆண்டு இந்தியாவில் பல மாநிலங்களில் கம்னியூஸ்ட் கட்சிகள் ஆயூதம் ஏந்திய போராட்டமுறையில் ஆட்சி அமைப்பதை காரணம் காட்டி அன்றைய காங்கிரஸ் கட்சியை சார்ந்த இந்திய முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தடை செய்யப்பட்டது. பின்பு இதற்கிடையே ஏற்பட்ட சர்வதேச இடதுசாரி கம்யூனிஸ்ட்களின் தலைமையிடமான (பொலிட்பீரோ) தலையீட்டால் இந்தியாவில் கம்னியூஸ்ட் கட்சி தேர்தல் அரசியலில் ஈடுபடலாம் என்று பிரதமர் நேரு தடையை 1952 நீக்கினார். பின்பு 1952 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நேரடியாக தேர்தல் அரசியலில் கம்னியூஸ்ட் கட்சி செயல்பட ஆரம்பித்தது. இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கொள்கை சித்தாந்தம் உடைய பலமான எதிர்கட்சியாக கம்னியூஸ்ட் கட்சி செயல்பட்டு வந்தது. பிறகு 1969 ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி பிளவுற்ற போது இந்திரா காங்கிரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்தது. பின்பு காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணி ஆதரவு நிலையை கம்யூனிஸ்ட் கட்சி எடுத்ததாலே பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதனால் இந்தியாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து வெற்றி பெற்று இந்தியாவை ஆளும் மத்திய அரசாக ஆட்சி அமைக்க முடியாத நிலையும், அக்கட்சியின் தனித்தன்மையும் இழந்ததாக கூறப்படுகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இணையத்தளம் பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள் பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள் பகுப்பு:1920இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் பகுப்பு:இந்திய பொதுவுடமைக் கட்சிகள்
ஆவியில் வேகவைத்தல்
https://ta.wikipedia.org/wiki/ஆவியில்_வேகவைத்தல்
thumb|left|ஆவியில் வேகவைத்த இட்லி இந்திய உணவு வகைகளில் இட்லி, பிட்டு, இடியப்பம் போன்ற உணவுகள் ஆவியில் வேகவைக்கும் முறையைப் பயன்படுத்தித் தயார் செய்யப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு வகை உணவுக்கும் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் பயன்படுகின்றன. அடிப்படையில் கீழே நீரைக்கொண்டுள்ள ஒரு பாத்திரம் இருக்கும். இது அடுப்பில் வைத்துச் சூடாக்கப்படும் போது வெளிவரும் ஆவி படக்கூடிய வகையில் இதற்கு மேல் வேகவைக்கப்பட வேண்டிய பதார்த்தம் வைக்கப்படும். வெளிவரும் ஆவி தப்பிப் போகாதபடி மூடி வைக்கப்படும். வெளி இணைப்புகள் பல்வேறு அவித்த உணவுகள் செய்முறை-அறுசுவை.காம் பகுப்பு:சமையல் முறைகள்
இடியப்பம்
https://ta.wikipedia.org/wiki/இடியப்பம்
இடியப்பம் அல்லது இடியாப்பம் () என்பது அரிசி மாவினால் தயாரிக்கப்படும் ஒருவகை உணவாகும். இந்தியாவில் கேரள மாநிலத்திலும், இலங்கையிலும் அதிக அளவில் உண்ணப்படுகிறது. இலங்கைத் தமிழர் மத்தியில் இது ஒரு முக்கிய உணவு வகையாக உள்ளது. இது அரிசி மாவிலேயே செய்யப்படுகின்றது. கோதுமை மாவும் பயன்படுத்தலாம். இடியப்பம் பிழிவதற்கான சிறு உபகரணம் இடியப்ப உரல் ஆகும். "Lokopakara" Agri-History Bulletin No. 6 - (Trans) Ayangarya, Y. L. Nene, Nalini Sadhale, Valmiki Sreenivasa (Trans), 2004 சம்பல், சொதி thumb|இடியாப்பம் பிழிதல் இலங்கை உணவு முறையில் இடியப்பம் சம்பல் என்னும் தேங்காயினால் செய்யப்பட்ட உணவுடனும் சொதி எனப்படும் நீர்ம உணவுடனும் சேர்த்து உண்ணப்படுகிறது. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Iddiyappam செய்முறை பகுப்பு:இடியப்பம் பகுப்பு:கேரள சமையல்
உயர்த்தி
https://ta.wikipedia.org/wiki/உயர்த்தி
thumb|உயர்த்தி உயர்த்தி அல்லது தூக்கி (Elevator) என்பது ஆட்களையோ பொருட்களையோ நிலைக்குத்துத் திசையில் தூக்கிச் செல்லும் ஒரு போக்குவரத்துக் கருவியாகும். உயரமாக அமைந்துள்ள பல அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு மனிதர்கள் அல்லது பொருள்களை கொண்டு செல்லப் பயன்படும் ஒரு நவீன சாதனம் ஆகும். பொதுவாக இது மின்சார இயக்கிகள் மூலம் இரும்பு கயிறுகளை இயக்கியோ, விசையியக்கக் குழாய் மூலம் பாய்மத்தின் அளவை உந்து தண்டினுல் உயர செய்தோ இயக்கப்படும். வேளான்மை மற்றும் உற்பத்தி துறையில் உயர்த்தி என்பது சேமிப்பு கிடங்கினுள் (களஞ்சியத்தினுள்) பொருட்களை தொடர்ந்து எடுத்து செல்லும் ஒரு கருவியை குறிக்கும். வரலாறு thumb|right|ஜெர்மானிய வல்லுனர் கொன்ரட் க்யெசெர் (1405) வடிவமைத்த உயர்த்தி இத்தகைய அமைப்பிலான் ஒரு சாதனத்தைப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே ரோமானியர்கள் பயன் படுத்தியதாகத் தெரிகிறது. அவர்கள் இவ்வுயர்த்திகளை ஏற்றவும் இறக்கவும் அடிமைகளைப் பயன்படுத்தினார்கள். அதன் பின் 17 ஆம் நூற்றாண்டில் வேலயர் என்ற பிரெஞ்சு நாட்டவர் பறக்கும் நாற்காலி ஒன்றை அமைத்தார். இதன் மூலம் பயணிகள் உயரமான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதை இயக்க பணியாட்களையும் அடிமைகளையும் சில சமயம் விலங்குகளையும் பயன்படுத்தினார். அதன் பின், 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நீராற்றலால் இயங்கும் உயர்த்திகள் (Hydraulic Elevators) உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இவை தொழிற்சாலைகளிலும் சுரங்ககளிலும் அதிக அளவு பொருட்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டன. இவை ஒரு நிமிடத்திற்கு 100 அடி முதல் 200 அடிவரை உயர்த்தப்பட்டது. இன்றைய வடிவிலான மின்-உயர்த்தியை 1880 -இல் வெர்னர் சீமன்ஸ் என்பவர் ஜெர்மனி யில் உருவாக்கினார். உயர்த்திகள் எளிமையான கயிற்றினால் அல்லது சங்கிலியால் இழுக்கப்படும் தூக்கிகளாகவே ஆரம்பித்தன. 1853 ல், எலிஷா ஒட்டிஸ் என்பவர் தூக்குகின்ற கயிறுகள் அறுந்தாலும் பயணிகள் இருக்குமிடம் விழுவதைத் தடுக்கக் கூடிய பாதுகாப்பான உயர்த்திகளை அறிமுகப்படுத்தினார். மார்ச் 23, 1857 இல், அவரது முதலாவது உயர்த்தி 488 புரோட்வே, நியூயார்க்கில் அமைக்கப்பட்டது. அதன் பின் சில திருத்தங்களுடன் வில்லியம் பாக்ஸ்டர் என்பவர் அமெரிக்காவில் உருவாக்கிப் பயன்படுத்தினார். இது மின்சார மோட்டாரால் இயக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு மாற்றுத் திருத்தங்களுக்குப் பிறகு இன்றைய உயர்த்திகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. உயர்த்திகளின் அமைப்பு இழுவை வகை உயர்த்திகள் அமைக்கப்பட்டுள்ள பல மாடிக்கட்டிடத்தில் உச்சிப்பகுதியில் மின்சார மோட்டார் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். மின்சார மோட்டரை இயக்கினால் அதோடு இணைக்கப்பட்டுள்ள சக்கரம் மெதுவாகச் சுழலும். அப்போது அச்சக்கரத்தின் மீது வலுவான இரும்புக்கயிறு சுற்றிக் கொள்ளும். அக்கயிற்றின் மற்றொரு முனையில் மக்கள் ஏறிச் செல்லும் பெட்டி அமைந்திருக்கும். சக்கரத்தில் இரும்புக்கயிறு சுற்றச்சுற்ற ஆட்கள் ஏறிய பெட்டி மெதுவாக மேலே உயரும். பெட்டியின் மறுமுனையில் பெட்டியை விடச் சற்றுக் கனம் குறைந்த இரும்பு எடை ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். இது எதிர் எடை என்று அழைக்கப்படும். பெட்டி தரையிலிருந்து மேலே தூக்கப்படும்போது இந்த எடை கீழ் நோக்கி இறங்கும். பெட்டி கீழே இறங்கும்போது இந்த எடை மேலே உயரும். இவ்வாறு இந்த எதிர் எடையைப் பயன்படுத்தும் பொழுது அதிக அளவு சக்தியானது உயர்த்தியை இயக்கத் தேவைப்படாது. குறைந்த அளவு சக்தியே போதும். எதிர் எடைக்கும் உயர்த்திப் பெட்டியின் கனத்திற்கும் சிறு வேறுபாடு இருக்கும். இந்த சிறு வேறுபாட்டிற்கேற்ப மின்சக்தி பயன்படுத்தப்பட்டால் போதும். நீரியல் வகை இவ்வகை உயர்த்திகள் தரைக்கு மேல் அல்லது கீழே உள்ள ஒரு உந்துத் தண்டின் மேல் அழுத்தம் ஏற்படுத்தி பெட்டியை நகர்த்துகின்றன. நீரியல் வகை உயர்த்திகள் பெரும்பாலும் இழுவை வகை உயர்த்திகளை விட மெதுவாக செயல்படும். உயர்த்தி கதவுகள் உயர்த்தி கதவுகள் உயர்த்தியில் பயணம் செய்வோர் தவறி விழுவதை தடுக்க பயன்படுகின்றன. பெரும்பாலும் இடையில் கூடி பிரியும் இரு தகடுகளை கொண்டு இது சாத்தியமாகிறது. சில உயர்த்திகளில் இரு கதவுகளும் ஒன்றன் பின் ஒன்று சரிந்து செல்லும் வகையிலும் அமைக்க பெற்றிருக்கும். ஒரு சில எளிமையான உயர்த்திகளில், வீடுகளில் உள்ளது போல சாதாரண ஒற்றை கதவு பொருத்த பட்டிருக்கும். உயர்த்திகளை இயக்குதல் மக்கள் ஏறிச் செல்லும் உயர்த்திகளில் மின்சார மோட்டாரை இயக்கும் பொத்தன்கள் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் மாடிகளின் எண்களைக் குறிக்கும் பொத்தான்களும் இருக்கும். நாம் உயர்த்தியில் நின்றபடி எந்த மாடிக்குச் செல்ல வேண்டுமோ அந்த மாடி எண்ணுள்ள பொத்தனை அழுத்தினால் குறிப்பிட்ட அந்த மாடியில் சென்று உயர்த்தி நிற்கும். இதனால் நாம் விரும்பும் மாடிக்கு மேலோ கீழோ சென்றுவர இயலும். ஆட்கள் இல்லாத உயர்த்தியை நாம் எந்த மாடிக்கும் பொத்தானை அழுத்தி வரவழைத்து ஏறிச் செல்ல முடியும். தற்போது ஒற்றைப் படை, இரட்டைப்படை எண்ணுள்ள மாடிகளுக்கெனத் தனித்தனியே உயர்த்திகள் அமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. thumb|200px|உயர்த்தி கட்டுபாட்டு பலகை உயர்த்தி படிமுறை உயர்த்தி படிமுறை என்பது ஒரு உயர்த்தி மேலே அல்லது கீழே சென்று கொண்டிருக்கும்பொழுது அது எந்தெந்த தளங்களில் நிற்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் படிமுறை ஆகும். அதன் தொகுப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது: இங்கு வேண்டுகோள் என்பது பொத்தானை அழுத்தி உயர்த்தியை வரவழைப்பதை குறிக்கும். ஒரு திசையில் சென்று கொண்டிருக்கும்பொழுது அத்திசையில் எஞ்சிய வேண்டுகோள் இருந்தால் தொடர்ந்து அத்திசையிலேயே செல்ல வேண்டும். அத்திசையில் மேலும் வேண்டுகோள் இல்லையெனில், நின்று அடுத்த வேண்டுகோளுக்கு காத்திருக்க வேண்டும். அல்லது எதிர் திசையில் வேண்டுகோள் இருந்தால் அங்கு செல்ல வேண்டும். உயர்த்தி படிமுறை ஆனது கணினி இயக்கு தளத்தில் வன்தட்டு நிலை நினைவக வேண்டுகோள்களை (Hard disk requests) பட்டியலிட பயன்படுகிறது. அண்மைக் கால உயர்த்திகள் பட்டறிவுசார் படிமுறைகளை பயன்படுத்துகின்றன. சேரிட கட்டுப்பாட்டு முறை வானளாவி போன்ற உயர்ந்த கட்டிடங்களில், சேரிட கட்டுப்பாட்டு முறையும் பயன்படுத்தபடுகிறது. இம்முறையில், நாம் எந்த தளத்திற்கு செல்ல விரும்புகிறோமோ அதை பதிவு செய்திட வேண்டும். உடனே நாம் எந்த உயர்த்தியில் பயணிக்க வேண்டும் என்பதை கணினி கணக்கிட்டு சொல்லி விடும். அனைத்து உயர்த்திகளும் அனைத்து தளங்களிலும் நின்று செல்ல வேண்டாம் என்பதால் பயண நேரம் குறையும். ஆனால் பயணிகளின் காத்திருப்பு நேரம் உயர வாய்ப்புள்ளது. உயர்த்திகளின் வகைகள் பொதுவாக, மூன்று வகை உயர்த்திகள் உண்டு: இழுவை வகை நீரியல் வகை சுற்றுயர்த்திகள் இவற்றையும் பார்க்கவும் நகர்படிகள் சரக்கு உயர்த்திகள் பகுப்பு:கருவிகள் பகுப்பு:19-ஆம் நூற்றாண்டுக் கண்டுபிடிப்புகள்
பாரிசு
https://ta.wikipedia.org/wiki/பாரிசு
பாரிசு (Paris, பாரிஸ், , பாரீ) எனப்படுவது பிரான்சு நாட்டின் தலைநகரமும், நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும். இதன் மக்கள்தொகை 2,102,650 (1 சனவரி 2023) ஆகும்.Estimated populations on 1 January 2023 , INSEE. Retrieved 27 March 2023. இதன் பரப்பளவு ஏறத்தாழ 105 சதுர கிமீ ஆகும். பாரிசு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஐந்தாவது மக்கள்தொகை அதிகம் கொண்ட நகரமும், உலகின் 30-ஆவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும் (2022). 17-ஆம் நூற்றாண்டிலிருந்து, பாரிசு நிதி, பண்ணுறவாண்மை, வணிகம், பண்பாடு, அலங்காரம், உணவு மற்றும் பல துறைகளில் உலகின் முக்கிய மையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. கலை மற்றும் அறிவியலில் இதன் முக்கிய பங்கிற்காகவும், இதன் ஆரம்பகால மற்றும் விரிவான தெரு விளக்கு அமைப்பிற்காகவும், 19 ஆம் நூற்றாண்டில், இது ஒளி நகரம் என்று அறியப்பட்டது. வரலாறு பாரிஸ் என்ற பெயர், ரோமர் இப் பிரதேசத்தை ஆக்கிரமித்த காலத்தில் அங்கே வாழ்ந்துவந்த "கலிக்" இனக் குழுவின் பெயரான பரிசிஸ் என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது. வரலாற்று அடிப்படையில் பாரிஸின் மையக்கரு, பலைஸ் டி ஜஸ்டிஸ் (Palais de Justice) மற்றும் நோட்ரே-டேம் டி பாரிஸ் தேவாலயம் என்பவற்றினால் பெரிதும் இடங் கொள்ளப்பட்டுள்ள, இலே டி லா சிட்டே (Île de la Cité) எனப்படும் ஒரு சிறு தீவாகும். இது பெரும்பாலும் 17ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட அழகிய வீடுகளைக்கொண்ட இன்னொரு தீவான இலே செயிண்ட்-லூயிஸ் என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது. கி.மு 52ல் ரோமர் வரும் வரை பாரிஸில், கலிக் இனக்குழுவினர் வாழ்ந்து வந்தனர். இவர்களை ரோமர் பாரிஸீ என அழைத்தனர், எனினும் நகரத்தின் பெயரை "சதுப்பு இடம்" எனப் பொருள்படும் லூட்டேசியா எனவே குறிப்பிட்டனர். சுமார் 50 வருடங்களுக்குப் பின்னர், நகரம், தற்போது லத்தீன் பகுதி என வழங்கும், சீன் நதியின் இடது கரைக்கு விரிவடைந்தது, இது பின்னர் "பாரிஸ்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ரோமர் ஆட்சி 508ல் முடிவடைந்தது. பிரான்க் குளோவியஸ், பாரிஸை, பிரான்க்ஸின் மெரோவிங்கியன் வம்சத்தின் தலைநகரமாக ஆக்கினான். 88 களில் இடம்பெற்ற Viking ஆக்கிரமிப்புகள், இலே டி லா சிட்டேயில் கோட்டை ஒன்றைக் கட்டவேண்டிய நிலையைப் பாரிஸியர்களுக்கு ஏற்படுத்தின. மார்ச் 28, 845 ல், ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் Viking தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது, எனினும் பெருந்தொகையைக் கப்பமாகப் பெற்றுக்கொண்டு அவன் பாரிஸை விட்டு நீங்கினான். பிற்காலக் கரோலிங்கியன் அரசர்களின் வலிமைக் குறைவினால், பாரிஸின் கவுண்ட்கள் படிப்படியாக வலிமை பெற்று வந்தனர். இதன் விளைவாக பாரிஸின் கவுண்ட், ஓடோ நிலப் பிரபுக்களினால் பிரான்சின் அரசனாகத் தெரியப்பட்டான், எனினும் சார்ள்ஸ் IIIயும் அரியணைக்கு உரிமை கோரினான். இறுதியாக 987ல் இறுதிக் கரோலிங்கியனின் மறைவுக்குப் பின், பாரிஸின் கவுண்டான ஹியூ கப்பெட் அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான். 11 ஆம் நூற்றாண்டில் நகரம் ஆற்றின் வலது கரைக்கும் விரிவடைந்தது. பிலிப் II அகஸ்தஸின் காலத்தையும் (1180–1223) உள்ளடக்கிய 12ஆம், 13ஆம் நூற்றாண்டுகளில் நகரம் மிகவும் வளர்ச்சியடைந்தது. முக்கிய பாதைகளுக்குத் தளமிடப்பட்டது, முதல் லூவர் ஒரு கோட்டையாகக் கட்டப்பட்டது, நோட்ரே டேம் தேவாலயம் அடங்கலாகப் பல தேவாலயங்கள் கட்டப்பட்டன அல்லது ஆரம்பிக்கப்பட்டன. வலது கரையிலிருந்த பல கல்விக்கூடங்கள் Sorbonne ஆக ஒழுங்கமைக்கப்பட்டன. அல்பர்ட்டஸ் மக்னஸ், சென். தோமஸ் அக்குவைனஸ் போன்றவர்கள் இவற்றைச் சேர்ந்த ஆரம்பகால அறிஞர்களாயிருந்தார்கள். 14 ஆம் நூற்றாண்டில் Black Death தாக்கம் காரணமாக ஏற்பட்ட தற்காலிக தடங்கல் தவிர மத்திய காலப் பகுதியில், பாரிஸ் ஒரு வர்த்தக மற்றும் அறிவு சார்ந்த மையமாக விளங்கியது. சூரிய அரசன் (Sun King) என அழைக்கப்பட்ட லூயிஸ் XIV அரசன் காலத்தில் (1643–1715) அரச மாளிகைகள் பாரிஸிலிருந்து, அண்மையிலுள்ள வெர்சாய்க்கு மாற்றப்பட்டது. புவியியல் பாரிஸ், சீன் ஆற்றின் வடக்கே திரும்பும் வளைவில் செயிண்ட் லூயி, டி லா சிட்டே என்னும் இரண்டு தீவுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. டி லா சிட்டே பாரிசின் பழைய பகுதியாகும். ஒப்பீட்டளவில் நகரம் மட்டமானது. மிகக்குறைந்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 35 மீட்டர் (115 அடி). பாரிஸ் பல குன்றுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் உயரமானது 130 மீட்டர் (427 அடி) உயரமான மொண்ட்மார்ட்ரே ஆகும். நகரின் புறப்பகுதியில் அமைந்துள்ள பொயிஸ் டி பொலோங்னே, பொயிஸ் டி வின்சென்ஸ் என்னும் பூங்காக்களைத் தவிர்த்து, பாரிசின் பரப்பளவு 86.928 சதுர கிலோ மீட்டர்கள் (34 சதுர மைல்கள்) ஆகும். இறுதியாக 1860 ஆம் ஆண்டில் நகரத்துடன் அதன் புறத்தே அமைந்திருந்த பகுதிகளையும் இணைத்துக்கொண்டது, நகருக்கு இன்றைய வடிவத்தை அளித்தது. 1860ல் நகர எல்லை 78 சதுர கிலோ மீட்டரில் இருந்து, 1920ல் 86.9 சதுர கிலோ மீட்டர் ஆகுவரை சிறிதளவு அதிகரித்துள்ளது. 1929 ஆம் ஆண்டில் பொயிஸ் டி பொலோங்னே, பொயிஸ் டி வின்சென்ஸ் என்னும் காட்டுப் பூங்காக்கள் நகருடன் இணைக்கப்பட்டன. இதனால் பாரிசின் மொத்தப் பரப்பளவு 105.397 சதுர மீட்டர்கள் (41 சதுர மைல்கள்) ஆனது. காலநிலை பாரிஸ், பெருங்கடல் காலநிலையைக் கொண்டது. இது வட அத்திலாந்திக் நீரோட்டங்களினால் பாதிக்கப்படுகின்றது. இதனால் நகரத்தில் அதி கூடிய வெப்பநிலையையோ அதி குறைந்த வெப்பநிலையையோ காண்பது அரிது. கோடையில் சராசரி வெப்பநிலைகளாக உயர்ந்த அளவு 25 °ச (77 °ப)ம், குறைந்த அளவு 15 °ச (59 °ப) ஆகவும் இருக்கும். குளிர் காலத்தில் குளிர் அதிகமாக இருந்தாலும் வெப்பநிலை உறை நிலைக்குக் கீழ் செல்வதில்லை. சராசர் வெப்பநிலைகள் 3 °ச (37 °ப) – 8 °ச (46 °ப) ஆகக் காணப்படும். இளவேனில் மற்றும் இலையுதிர் காலங்களில் பகலில் மிதமான வெப்பநிலையும், இரவில் குளிரும் இருக்கும். ஆண்டின் எந்த நேரத்திலும் இங்கே மழை முகில்கள் காணப்படலாம். பாரிஸ் அதிக மழை கொண்ட நகரம் இல்லாவிட்டாலும், சடுதியான மழைக்கு இந் நகரம் பெயர்பெற்றது. மழை வீழ்ச்சி ஆண்டுக்கு 650 மிமீ (26 அங்) ஆக உள்ளது. ஆனால் ஓரளவு மிதமான மழை வீழ்ச்சி ஆண்டு முழுதும் பரவலாகப் பெய்யும். பெரும்பாலும் பாரிசில் பனி பெய்வதில்லை. சில மாரிகாலங்களில் இலேசாகப் பனி பெய்வது உண்டு. பாரிசில் பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான வெப்பநிலை 40.4 °ச (105 °ப). இது 1948 ஜூலை 28 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. மிகக் குறைந்த வெப்பநிலை −23.9 °ச (−11 °ப). இது 1879 டிசம்பர் 10 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது. நகரின் மையப்பகுதியில் நகர்ப்புற வெப்பத் தாக்கம் காரணமாக இரவுகளிலும் காலையிலும் மிதமான வெப்பநிலை காணப்படுகின்றது. அத்துடன் நகரின் புறப்பகுதிகளைவிடக் குறைவான பனியும் பெய்கிறது. நகர்த் தோற்றம் thumb|center|800px|அகலப்பரப்பு காட்சி thumb|1000px|மின் ஒளியில் பாரிஸ் அகலப்பரப்பு காட்சி கட்டிடக்கலை தற்காலப் பாரிஸ், பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இடம் பெற்ற பெருமெடுப்பிலான நகர மீளமைப்புத் திட்டங்களின் விளைவாகும். பல நூற்றாண்டுகளாகப் பாரிஸ் ஒடுங்கிய தெருக்களையும், மரச் சட்ட வீடுகளையும் கொண்ட நகரமாக இருந்தது. ஆனால் 1852 தொடக்கம் ஓஸ்மான் பிரபுவின் நகராக்கத் திட்டங்களினால் பல பழைய கட்டிடங்கள் உடைக்கப்பட்டுச் சாலைகள் அகலமாக்கப்பட்டதுடன், இரண்டு பக்கங்களிலும் கல்லாலான புதிய செந்நெறிப் பாணிக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. இன்று வரை நிலைத்துள்ள பழைய கட்டிடங்கள் பெரும்பாலும் இக்காலத்தனவே. அக்காலத்தில் வரையறுக்கப்பட்ட "வரிசையாக்க" (alignement) சட்டவிதிகளைப் பாரிஸ் நகரம் பல புதிய கட்டிட வேலைகளில் இன்றும் பயன்படுத்தி வருவதனால், இந்த இரண்டாம் பேரரசுத் திட்டங்கள் பல இடங்களில் இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன எனலாம். கட்டிடங்களின் உயரங்களும் அன்று வரையறுக்கப்பட்ட சாலை அகலங்களின் அடிப்படையிலேயே இன்றும் தீர்மானிக்கப்படுகின்றன. அத்துடன், உயர்ந்த கட்டிடங்களை அமைக்கும் நோக்கில் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின் கட்டிடச் சட்ட விதிகளில் சில திருத்தங்களே செய்யப்பட்டுள்ளன. thumbnail பாரிசின் எல்லைகள் மாறாமல் இருப்பதும், கட்டிடங்கள் கட்டுவதற்கான கடுமையான சட்டவிதிகளும், புதிய கட்டிடங்களுக்கான நிலங்கள் பற்றாக்குறையும் அருங்காட்சியகமாதல் (museumification'') என்னும் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது. பாரிசின் வரலாற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளும், நகர எல்லைக்குள் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய பெரிய கட்டிடங்களையும், பிற சேவை வழங்கும் கட்டமைப்புக்களையும் அமைப்பதைக் கடினமாக்கியுள்ளது. பாரிசின் பல நிறுவனங்களும், பொருளாதாரக் கட்டமைப்புகளும் ஏற்கனவே புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ளன அல்லது இடம் பெயர்வதற்குத் திட்டமிடுகின்றன. நிதி வணிகப் பகுதி, முக்கியமான உணவு மொத்த விற்பனைச் சந்தை, முக்கியமான பெயர் பெற்ற பள்ளிகள் பல, உலகப் புகழ் பெற்ற ஆய்வுக் கூடங்கள், மிகப் பெரிய விளையாட்டு ஸ்டேடியம், போக்குவரத்து அமைச்சு போன்ற சில அமைச்சகங்கள், என்பன பாரிஸ் நகருக்கு வெளியே அமைந்துள்ளன. பிரான்சின் தேசிய ஆவணக் காப்பகம் 2010 ஆம் ஆண்டுக்கு முன் வடக்குப் புறநகர்ப் பகுதிக்கு இடம் பெயர உள்ளது. பாரிசை விரிவாக்க வேண்டிய தேவையை பிரான்ஸ் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நவம்பர் 2007ல் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், எந்தப் பகுதிகளைப் பாரிசுடன் இணைப்பது என்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மேற்கோள்கள் வெளி இணைப்புகள் * பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள் பகுப்பு:பிரான்சின் நகரங்கள் பகுப்பு:ஐரோப்பியப் பண்பாடுகள் பகுப்பு:பிரான்சியப் பண்பாடு
தமிழ்நாடு
https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாடு
கேரளம்
https://ta.wikipedia.org/wiki/கேரளம்
கேரளம் (Kerala, , ) இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது. மலையாளம் கேரளத்தின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகின்றனர். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி,கோழிக்கோடு திருச்சூர் மற்றும் கோட்டயம் ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு (எழுத்தறிவு) விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது. பெயர்க் காரணம் கேரளம் என்ற சொல், தமிழ்ச் சொல்லான “சேரளம்” (மலைச் சரிவு) அல்லது சேர நாடு என்பதிலிருந்து தோன்றியது என்பது அறிஞர்களின் கூற்று. இன்றைய கேரளம், வரலாற்றுக் காலத்தில் “சேர நாடு” என்று அழைக்கப்பட்டு வந்தது. பொ.ஊ.மு. 3ஆம் நூற்றாண்டு பேரரசர் அசோகரின் கல்வெட்டில் “கேரளபுத்திரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரோமானிய வணிகன் பெரிபுளீசின் நிலவரைபடத்தில், இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்று குறிப்பிடுகின்றார். கேரள மக்கள் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். மலையில் (மேற்கு தொடர்ச்சி மலைகள்) வாழ்பவர்கள் என்பது அதன் பொருள் ஆகும். சிறப்புகள் 5 ஏப்ரல் 1957ல் ஜனநாயக முறைப்படி, ஆசியாவிலேயே முதன் முதலாக கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த முதல் மாநிலம் ஆதி சங்கரர் (பொ.ஊ. 788-820) பிறந்த இடம் காலடி இந்திய செவ்வியல் நடன வடிவம் "கதகளி"யின் பிறப்பிடம் இரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம் இந்தியாவின் நறுமணத் தோட்டம் களரிப்பயிற்று தற்காப்புக் கலையின் பிறப்பிடம் இந்தியாவின் முதல் டிஜிட்டல் மாநிலம் வளைகுடா நாடுகளில் பணி புரியும் இந்தியர்களில் கேரள மாநிலத்தவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் வெளிநாட்டு செலாவணி கேரளத்திற்கு கூடுதலாக கிடைக்கிறது. புவியமைப்பு 38,852 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகள்; மேற்கில் அரபிக் கடல்; தென்கிழக்கில் தமிழ்நாடு; வடகிழக்கில் கர்நாடகம் எல்லைகளாக அமைந்துள்ளது. ஆறுகள் நெய்யாறு, பம்பை, மணிமலை, பெரியாறு, பாரதப்புழை, சித்தாறு மற்றும் மூவாற்றுப்புழை ஆகியவை கேரளத்தின் முக்கிய ஆறுகள். வரலாறு பரசுராமரின் கோடரி கடலைப் பிளந்த தால் தோன்றிய நாடு கேரளம் என்பது புராணக் கதை.இதனை பார்க்கவ சேத்திரம் என்றும் பரசுராம சேத்திரம் என்றும் வழங்குகின்றனர்.வையவன், பக்கம் 17 போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல ஐரோப்பியர் கேரளத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். 1947வாக்கில் கேரளம் திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் என மூன்று சமஸ்தானங்களாக இருந்தது. மலபார் சீரமைப்புச் சட்டம் 1956ன் படி, திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் பகுதிகள் இணைக்கப்பட்டு, நவம்பர் 1956ல் இன்றைய கேரளம் உதயமானது. பொருளாதாரம் விவசாயம் முக்கிய தொழில். உணவுப் பொருள் சாகுபடியை விட பணப்பயிர் சாகுபடி அதிகரித்து வருகிறது. பாரம்பரிய தொழில்களான கைத்தறி, கயிறு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுகிறது. ஆட்சிப் பிரிவுகள் thumb|கேரள மாவட்டங்கள் thumb கேரளம் பதினான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன: காசர்கோடு கண்ணூர் வயநாடு கோழிக்கோடு மலைப்புரம் பாலக்காடு திருச்சூர் எர்ணாகுளம் இடுக்கி ஆலப்புழா கோட்டயம் பத்தனம்திட்டா கொல்லம் திருவனந்தபுரம் கேரளத்தில் 63 வட்டங்களும், 1634 வருவாய் ஊராட்சிகளும், 978 ஊராட்சிகளும் ஐந்து நகராட்சிகளும் உள்ளன. அரசியல் இது இருபது மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. கேரள சட்டமன்றத்திற்காக, கேரளத்தை 140 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கேரள மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 33,406,061 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 4.91% விகிதம் ஆக உயர்துள்ளது. மக்கள்தொகையில் ஆண்கள் 16,027,412 மற்றும் பெண்கள் 17,378,649 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1084 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 860 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 94.00% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 96.11% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 92.07% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,472,955 ஆக உள்ளது.http://www.census2011.co.in/census/state/kerala.html சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 18,282,492 (54.73 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 8,873,472 (26.56 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 6,141,269 (18.38 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 3,814 (0.01 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 4,489 (0.01 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 4,752 (0.01 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7,618 (0.02 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 88,155 (0.26 %) ஆகவும் உள்ளது. மொழி இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மலையாத்துடன், தமிழ், கன்னடம், உருது மற்றும் கொங்கணி மொழிகள் பேசப்படுகிறது. கலைகள் கூடியாட்டம், கதகளி, கேரள நடனம், மோகினியாட்டம், தெய்யம், துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை, களரி போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே. செண்டை மேளம் புகழ் பெற்றது. சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள் சுற்றுலா தலங்கள் தேக்கடி, பெரியார் தேசியப் பூங்கா, மூணார், வயநாடு, ஆலப்புழாவின் கட்டு வள்ளம், கொச்சி மற்றும் கொல்லம்.https://www.keralatourism.org/destination/ ஆன்மிக தலங்கள் சபரிமலை, ஆற்றுக்கால் பகவதி கோவில், சோட்டானிக்கரை பகவதி கோயில், ஆறு அய்யப்பன் கோயில்கள், மீன்குளத்தி பகவதி கோயில், குருவாயூர் குருவாயூரப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் மற்றும் மங்கலதேவி கண்ணகி கோவில் ஆகும். வைணவத் திருத்தலங்கள் 108 வைணவத் திருத்தலங்களில் 11 வைணவத் திருத்தலங்கள் கேரளத்தில் அமைந்துள்ளது. அவையாவன: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில், திருவனந்தபுரம் மாவட்டம் திருக்கடித்தானம், கோட்டயம் மாவட்டம் திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில், எர்ணாகுளம் மாவட்டம் திருமூழிக்களம், எர்ணாகுளம் மாவட்டம் திருப்புலியூர், ஆலப்புழா மாவட்டம் திருச்செங்குன்றூர், ஆலப்புழா மாவட்டம் திருவண்வண்டூர், ஆலப்புழா மாவட்டம் திருவல்லவாழ், பத்தனம்திட்டா மாவட்டம் திருவாறன்விளை, பத்தனம்திட்டா மாவட்டம் திருவித்துவக்கோடு, திருச்சூர் மாவட்டம் திருநாவாய், மலப்புறம் மாவட்டம் விழாக்கள் ஓணம் மற்றும் விஷு கேரளத்தின் முக்கிய பண்டிகைகளாகும். கிறிஸ்துமஸும் ரமலான் பெருநாளும் இங்கு கொண்டாட படுகிறது. மேலும் திருச்சூர் பூரம் திருவிழா, பெண்களின் ஐயப்பன் கோயில் எனப்படும் சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில் மகம் திருவிழா, மகர விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. இறைச்சி கேரள மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் தகவல்படி 2009–2010 ஆண்டில் மட்டும் 61 லட்சம் பசு உட்பட்ட கால்நடைகள் தமிழகம் மூலம் கேரளத்திற்கு இறைச்சிக்காகக் கொண்டு வரப்பட்டன. 18 லட்சம் கால்நடைகள் சோதனையை மீறிக் கடத்தப்பட்டவை.குமுதம் ஜோதிடம்; 5. அக்டோபர் 2012; "அனைத்து உயிர்களும் ஆண்டவனின் குழந்தைகளே..!" கட்டுரை மேலும் பார்க்க கேரள அரசு கேரள வரலாறு கேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் கேரள முதலமைச்சர்களின் பட்டியல் கேரள ஆளுநர்களின் பட்டியல் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் கேரள அரசின் அதிகார பூர்வ வலைத்தளம் கேரள முதல்வரின் அதிகார பூர்வ வலைத்தளம் கேரள சுற்றுலாத் துறை (தமிழில்) பகுப்பு:தென்னிந்தியா பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
அருணாசலப் பிரதேசம்
https://ta.wikipedia.org/wiki/அருணாசலப்_பிரதேசம்
அருணாசலப் பிரதேசம் (Arunachal Pradesh) இந்தியாவின் ஒரு மாநிலமாகும். அருணாச்சலப் பிரதேசம் 1987ல் மாநிலமாக அறிவிக்கப்படும் வரை, வட கிழக்கு எல்லைப்புற முகமை என்ற பெயரில் இயங்கியது. இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் இரண்டு முக்கிய பிரதேசங்களில் இதுவும் ஒன்று. மற்றது அக்சாய் சின். இம்மாநிலம் 12 நகரங்களையும்; 3649 கிராமங்களையும் கொண்டுள்ளது. 83,743 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 17 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தில் 20 முக்கிய இனக்குழுக்களும், பல துணை இனக்குழுக்களும் வாழுகின்றன. ஒரு பொதுக் குழுவிலிருந்து உருவானதால், இச் சமுதாயங்களிற் பெரும்பாலானவை இனரீதியில் ஒத்தவை, எனினும் புவியியல் ரீதியில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த காரணத்தால், மொழி, உடை மற்றும் பழக்க வழக்கங்களில் சில வேறுபட்ட சிறப்பியல்புகள் அவர்களிடையே இருப்பதைக் காணலாம். அவர்களுடைய சமூக-சமய ஒற்றுமையின் அடிப்படையில் இவர்களை மூன்று பண்பாட்டுக் குழுக்களாகப் பிரிக்கலாம். தவாங் மற்றும் மேற்கு கமெங் மாவட்டங்களைச் சேர்ந்த, மொன்பாஸ் மற்றும் ஷெர்டுக்பென்ஸ், லாமாயிச மரபில் வந்த மகாயான பௌத்தத்தைப் பின்பற்றுகிறார்கள். இதனால் இவர்கள் வாழும் கிராமங்களில் அதிக அளவில் அழகுபடுத்தப்பட்ட "கொம்பாஸ்" எனும் பௌத்த கோயில்களைக் காண முடியும். பெரும்பாலானவர்கள், படியமைப்புப் பயிர்ச் செய்கையைக் கைக்கொள்ளும் விவசாயிகளாக இருந்த போதிலும், இவர்களிற் பலர் கவரிமா மற்றும் மலையாட்டு மந்தை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களை ஒத்த பண்பாட்டைக் கொண்டவர்களே, வடக்கு எல்லையோரமுள்ள உயர்ந்த மலைகளில் வாழும் மெம்பாக்கள், கம்பாக்கள் போன்றவர்களாவர். மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் வாழும் கெம்ப்டி மற்றும் சிங்போ இனத்தவர்கள் தேரவாத பௌத்தர்கள். இவர்கள் தாய்லாந்து, மியன்மார் (பர்மா) ஆகிய நாடுகளிலிருந்து நீண்ட காலத்துக்கு முன் இடம் பெயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் தாயகத்தில் வழக்கிலிருந்த பண்டைய எழுத்துக்களிலிருந்து உருவான எழுத்துக்களையே இன்னும் பயன்படுத்தி வருகிறார்கள். இரண்டாவது குழுவினர், தொன்யி-போலோ, அபோ தானி என அழைக்கப்படும் சூரிய, சந்திரக் கடவுளர்களை வணங்கும், "அதி"கள், "அகா"க்கள், அப்தானிகள், பங்னிகள், நிஷிகள், மிஷ்மிகள், மிஜிகள், தொங்சாக்கள் போன்றவர்களாவர். இவர்களுடைய சமயக் கிரியைகள், பெரிதும் விவசாய வட்டங்களின் கட்டங்களுடன் பொருந்துகின்றன. அவர்கள் இயற்கைத் தேவதைகளுக்கு விலங்குகளைப் பலியிடுகிறார்கள். இவர்கள் பாரம்பரியமாக ஜும்மிங் அல்லது shifting பயிர்ச் செய்கையைக் கைக்கொள்ளுகிறார்கள். அதிகளும், அப்தானிகளும் ஈர நெற் செய்கையில் பெருமளவில் ஈடுபட்டு, குறிப்பிடத்தக்க விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். அப்தானிகள் அவர்களுடைய, நெல்லுடன்கூடிய மீன்வளர்ப்புக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள், ஒவ்வொரு நெற்பயிற் செய்கையிலும், இரண்டு முறை மீன் விளைவைப் பெறுவதில் நூற்றாண்டுகளாக அநுபவம் பெற்றவர்கள். மூன்றாவது குழுவினர், நாகலாந்தை அண்டியுள்ள திரப் மாவட்டத்தைச் சேர்ந்த நொக்டேக்கள், மற்றும் வஞ்சோக்கள் ஆவர். பாரம்பரிய கிராமத் தலைவர்கள் இன்னும் முக்கிய பங்கு வகிக்கும் இக் குழுவினர் இறுக்கமான சமூகக் கட்டமைப்பைக் கொண்ட கிராம சமுதாயத்துக்காக, அறியப்பட்டவர்கள். நொக்டேக்கள் ஆரம்பநிலை வைஷ்ணவத்தையும் பின்பற்றி வருகிறார்கள். வரலாறு வரலாற்றுக்கு முந்தைய காலம் அருணாசலப் பிரதேசத்தில் கிடைத்த புதிய கற்காலக் கருவிகளைக் கொண்டு பார்கும்போது இமயமலைப்பகுதி உள்ளிட்ட இப்பகுதியில் மக்கள் குறைந்தது பதினொரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து வாழ்ந்து வருகின்றனர் என்று உறுதியாகிறது. இப்பிராந்தியத்தில் பழங்கால மக்கள் குடியேற்றமானது பூட்டான் மற்றும் அதன் பக்கத்தில் இமயமலைப் பகுதிகளான தெற்காசியப் பகுதிகள், சிந்து சமவெளி பகுதியிலிருந்தும் மக்கள் குடியேறியுள்ளனர், இக்குடியேற்ற வரலாறு தெற்காசியாவின் வெண்கலக் காலமான பொ.ஊ.மு. 3300 க்கு முற்பட்ட காலத்தில் துவங்குகிறது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு திபெத் மற்றும் தென்சீனப் பகுதிகளிலிருந்து மற்ற இன குழுக்கள் வந்து குடியேறினர். துவக்கக்கால வரலாறு அருணாசலப் பிரதேசத்தின் துவக்கக்கால வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. வாய்மொழி வரலாற்றுத் தகவல்களின்படி இப்பகுதி பழங்குடி மக்கள் திபெத்திய-பர்மிய பகுதியில் இருந்து குடியேறியதாக தெரிகிறது, என்றாலும் இதை உறுதிப்படுத்துவது சிரமமாக உள்ளது. பொருள் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் அருணாச்சலப் பிரதேச பழங்குடிக் குழுக்கள் பர்மிய பகுதியின் மலைவாழ் பழங்குடியினர் உடன் நெருக்கமானவர்கள் என்று தெளிவாக தெரிகிறது. இப்பகுதியானது வடக்கு பர்மிய கலாச்சாரத்தின் மேற்கு நோக்கிய பரவலின் நீட்சியாக இருக்க முடியும் என்பது ஒரு உண்மை ஆகும். அருணாசலப் பிரதேச அரசாங்கத்தின் கூற்றின்படி, இந்து மத புராண நூல்களான காளிகா புராணம், மகாபாரதம் ஆகியவற்றில் இப்பிராந்தியத்தின் பிரபு மலைகள் குறிப்பிடப்படுகின்றன, மேலும் இங்குதான் பரசுராமர் தன் பாவங்களைக் கழுவியதாகவும், வியாசர் தியானித்ததாகவும், மன்னர் பீஷ்மக்கா தன் அரசை நிறுவியதாகவும், கிருட்டிணன் தன் துணைவியான ருக்மணியை மணந்ததாகவும் கூறப்படுகிறது. இப்பிராந்தியத்தின் பதிவுபெற்ற அதிகாரப்பூர்ர வரலாறு அஹோம் மற்றும் சுதியா ஆகிய வெளியார் கண்ணோட்டத்தின் மூலமாக மட்டுமே கிடைக்க பெற்றுள்ளது. இந்த பகுதியின் வடமேற்கு பாகங்கள் பொ.ஊ.மு. 500 மற்றும் பொ.ஊ. 600 ஆண்டுகளுக்கு இடையே மோன்யூலின் போன்பா பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் இப் பகுதியின், திபெத் மற்றும் பூட்டான் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. மாநிலத்தின் பிற பகுதிகள் குறிப்பாக மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதிகள், சுதியா மன்னர்களின் கட்டுப்பாட்டில் 16 ஆம் நூற்றாண்டில் அஹோம்-சுதியா போர்வரை இருந்தது. ஆங்கிலேயர்களால் இந்தியா கைப்பற்றும் காலம்வரை அஹோம் மரபினரின் கட்டுப்பாட்டின்கீழ் இப்பகுதி 1858 வரை இருந்தது. என்றாலும், பெரும்பாலான அருணாச்சலப் பழங்குடியின மக்கள் 1947 இல் இந்தியா விடுதலைப் பெற்று இப்பகுதியின் உள்நாட்டு நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வரை இம்மக்களின் தன்னாட்சி நடைமுறையில் இருந்தது. அண்மைய அகழ்வாய்வில் மேற்கு சியாங் மாவட்டப் பகுதியின் சியாங் மலைகளின் அடிவாரத்தில் 14 ஆம் நூற்றாண்டின் சுதியா அரசு காலத்திய இந்து சமய கோயில்களின் இடிபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. மெக்மோகன் கோடு வரைதல் 1913-1914 இல், சீனா, திபெத், பிரித்தானிய இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகள் எல்லைக் கோட்டை முடிவு செய்வது தெடர்பாக சிம்லாவில் சந்தித்தனர். இருப்பினும், சீனப் பிரதிநிதிகள் அங்கு உடன்படிக்கைக்கு மறுத்துவிட்டனர். இந்த உடன்படிக்கையின் நோக்கம் உள் மற்றும் வெளி திபெத் மற்றும் பிரித்தானிய இந்தியா இடையே எல்லைகளை வரையறுப்பதாக இருந்தது. பிரித்தானிய நிர்வாகி சர் ஹென்றி மெக்மகன் என்பவர் சிம்லா மாநாட்டில் 550 மைல்கள் (890 கி.மீ.) நீளமுடைய பிரித்தானிய இந்தியா மற்றும் வெளி திபெத் ஆகியவற்றுக்கு இடையிலான எல்லையாக மக்மகன் கோட்டை வரைந்தார். மாநாட்டின் முடிவுகளை திபெத் மற்றும் பிரித்தானியப் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டு, அதன்முடிவாக பிரித்தானியப் பேரரசு கேட்டதினால் தவாங் மற்றும் திபெத்தின் சில பகுதிகளை திபெத் விட்டுக்கொடுத்து. ஆனால் சீனப் பிரதிநிதி ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, வெளியேறினார். இதுவே விடுதலைக்குப் பிறகு இந்திய சீனப்போருக்கு வழிவகுத்தது. இந்திய சீனப் போர் சுதந்திர இந்தியாவால் இப்போதைய அருணாச்சலப் பிரதேசம் வடகிழக்கு முன்னணி முகமை என்ற பெயரில் 1954 இல் உருவாக்கப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட ஒரு தசாப்தம், சீன-இந்திய உறவுகள் சுமூகமாகவும் அமைதியாகவும் இருந்தது, ஆனால் அதன்பிறகு பிரச்சினை மறு எழுச்சிபெற்று 1962 இல் இந்திய சீனப் போருக்கு எல்லை ஒரு முக்கிய காரணமாக ஆனது.PM to visit Arunachal in mid-Feb மாவட்டங்கள் இந்த மாநிலத்தில் மொத்தம் 25 மாவட்டங்கள் உள்ளன. அவை பின்வருமாறு; அன்ஜாவ் மாவட்டம் சங்லங் மாவட்டம் கிழக்கு காமெங் மாவட்டம் மேற்கு காமெங் மாவட்டம் கிழக்கு சியாங் மாவட்டம் மேல் சியாங் மாவட்டம் மேற்கு சியாங் மாவட்டம் லோஹித் மாவட்டம் கீழ் சுபன்சிரி மாவட்டம் மேல் சுபன்சிரி மாவட்டம் பபும் பரே மாவட்டம் தவாங் மாவட்டம் திரப் மாவட்டம் கீழ் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் குருங் குமே மாவட்டம் லோங்டிங் மாவட்டம் ஷி யோமி மாவட்டம் பக்கே-கேசாங் மாவட்டம் லேபா ராதா மாவட்டம் சியாங் மாவட்டம் காம்லே மாவட்டம் மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அருணாசலப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,383,727 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 77.06% மக்களும், நகரப்புறங்களில் 22.94% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 26.03% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 713,912 ஆண்களும் மற்றும் 669,815 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 938 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. 83,743 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 17 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 65.38 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 72.55 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.70 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 212,188 ஆக உள்ளது. Arunachal Pradesh Population Census data 2011 சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 401,876 (29.04 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 27,045 (1.95 %) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 3,287 (0.24 %) ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 418,732 (30.26 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 771 (0.06 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 162,815 (11.77 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 362,55 (26.20 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 6,648 (0.48 %) ஆகவும் உள்ளது. மொழிகள் பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழும் இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஆங்கிலத்துடன் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. இவற்றையும் பார்க்க வடகிழக்கு எல்லைப்புற முகமை அருணாசலப் பிரதேச சட்டமன்றம் உசாத்துணை வெளி இணைப்புகள் Tourism in Arunachal Pradesh (Official) Arunachal Pradesh Territorial Dispute between India and China , Inventory of Conflict and Environment reviewNE – all things North East India STD Codes of Arunachal Pradesh Languages of Arunachal Pradesh (Roger Blench) பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும் பகுப்பு:வடகிழக்கு இந்தியா
மணிப்பூர்
https://ta.wikipedia.org/wiki/மணிப்பூர்
மணிப்பூர் (Manipur), வடகிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். மணிப்பூர் முன்னர் பிரித்தானிய இந்தியாவில் 1947 வரை முடியாட்சியுடன் கூடிய மணிப்பூர் இராச்சியமாக விளங்கியது. 1949-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956 வரை இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக இருந்தது. 1972-இல் தனி மாநிலத் தகுதி கிடைத்தது. இதன் தலை நகரம் இம்பால். மணிப்பூர், இந்திய மாநிலங்களான நாகலாந்து, மிஸோரம், அஸ்ஸாம் என்பவற்றை முறையே, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளிலும், கிழக்கில் மியன்மாருடன் அனைத்துலக எல்லையொன்றையும் கொண்டுள்ளது. இந்த மாநிலத்தில் பெரும்பாலான குடிமக்கள் மைத்தி (Meitei) இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் (Meiteilon) மணிப்பூரி என்றழைக்கப்படும் தம் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் ஆண்டில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியப் படைகளுக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற கடும்போரின் பல சண்டைகளுக்கு இப்பிரதேசம் களமாக விளங்கிற்று. ஜப்பானிய படைகள் கிழக்காசியாவில் வெற்றி கண்டு மணிப்பூர் வரை தாக்கினர். ஆனால் இம்பால் நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயலும்போது அவர்கள் தோல்வியடைந்தனர். போரின் தொடர்ச்சியில் இந்நிகழ்வு ஒரு திருப்புமுனையாய் விளங்கியது. அப்போரில் காலமான இந்திய போர்வீரர்களுக்கும் கூட்டுப்படை போர்வீரர்களுக்கும் British War Graves Commission தற்போது அங்கு இரு சுடுகாடுகளை பராமரித்து வருகின்றது. மணிப்பூர் ஒரு பதட்டமான எல்லையோர மாநிலமாகக் கருதப்படுகிறது. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் இம்மாநிலத்தினுள் செல்ல தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள வட்டார அயல்நாட்டினர் பதிவு அலுவலகத்தில் கட்டுபடுத்தப்பட்ட பகுதிக்கான நுழைவு அனுமதிச் சீட்டு பெற வேண்டும். இந்த சட்டம் மணிப்பூரில் பிறந்து பிற நாடுகளில் குடியேறிய மைத்தி மக்களுக்குங்கூட பொருந்தும். இந்த சிறப்பு அனுமதியைப் பெற்றவர்கள் பத்து நாட்களுக்கு மணிப்பூரில் தங்கலாம். அக்காலகட்டத்தில் அவர்கள் குறைந்தது மூன்று சக பயணிகளுடன் சேர்ந்து அரசாங்க உத்தரவு பெற்ற பயண அதிகாரி ஏற்பாடு செய்த பயண திட்டத்தைப் பின்பற்றிச் செல்ல வேண்டும். அத்துடன், வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தின் மூலமாய் மட்டுமே இம்பாலினுள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் இம்பால் நகரத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்ல அனுமதிக்கப் பட மாட்டார்கள். ஆட்சிப் பிரிவுகள் thumb|மணிப்பூர் மாவட்டங்கள் மணிப்பூரில் 8 டிசம்பர் 2016-க்கு முன்னர் 9 மாவட்டங்கள் மட்டும் இருந்தது. பின்னர் 8 டிசம்பர் 2016-இல் 7 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டதால் தற்போது 16 மாவட்டங்கள் உள்ளது. New 7 Districts and talukas of Manipur State – Government Order வ எண் மாவட்டம் பரப்பளவு (சதுர கி.மீ) மக்கள் தலைநகரம் வரைபடக் குறியீடு1பிஷ்ணுபூர் மாவட்டம் 496237,399பிஷ்ணுபூர் BI2சுராசாந்துபூர் மாவட்டம்4570274,143சுராசந்த்பூர் CC3சந்தேல் மாவட்டம்3313144,182 சந்தேல் CD4கிழக்கு இம்பால் மாவட்டம்709456,113பொரோம்பாட் EI5மேற்கு இம்பால் மாவட்டம்519517,992லம்பேல்பட் WI6சேனாபதி மாவட்டம்3271193,744சேனாபதி SE7தமெங்கலாங் மாவட்டம்4391140,651தமெங்கலாங் TA8தவுபல் மாவட்டம்514422,168தவுபல் TH9உக்ருல் மாவட்டம்4544183,998உக்ருல் UK10ஜிரிபாம் மாவட்டம் 43,818 ஜிரிபாம்11 காக்சிங் மாவட்டம் 1,35,481 காக்சிங் https://kakching.nic.in12 காம்ஜோங் மாவட்டம் 45,616 காம்ஜோங் 13 காங்போக்பி மாவட்டம் காங்போக்பி 14 நோனி மாவட்டம் லாங்மாய் 15 தேங்க்னோவ்பல் மாவட்டம் தேங்க்னோவ்பல் 16பெர்சவல் மாவட்டம் 2,285 47,250 பெர்சல் கலை மற்றும் பண்பாடு thumb|right|கிருஷ்ணரின் ராசலீலை காட்சிகளை விளக்கும் மணிப்புரி நடனமாடும் பெண்கள் thumb|300px|left|மணிப்புரி நடனம் thumb|right|மணிப்பூரின் பண்டைய பெனா இசைக் கருவி கிருஷ்ணன், ராதை மற்றும் கொபியர்களுடன் ஆடும் ராசலீலையை விளக்கும், மணிப்புரி நடனம் மணிப்பூர் மாநிலத்தில் பிறந்த நடனக் கலையாகும். மணிப்புரி நடனத்தை பெண்களுடன் ஆண்களும் ஆடுகின்றனர். மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மணிப்பூர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,855,794 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 70.79% மக்களும், நகரப்புறங்களில் 29.21% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 24.50% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,438,586 ஆண்களும் மற்றும் 1,417,208 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 985 பெண்கள் வீதம் உள்ளனர். 22,327 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 128 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 76.94 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 83.58 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.26 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 375,357 ஆக உள்ளது. Population Census data 2011 சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,181,876 (41.39 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 239,836 (8.40 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,179,043 (41.29 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,692 (0.06 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 7,084 (0.25 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,527 (0.05 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 233,767(8.19 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 10,969 (0.38 %) ஆகவும் உள்ளது. மொழிகள் இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மணிப்புரியம் மொழியுடன், வங்காளம், இந்தி மற்றும் இருபத்து ஒன்பது பழங்குடி இன மொழிகளும் பேசப்படுகிறது. பழங்குடிகள் மீதெய் பழங்குடி மக்கள் மணிப்பூர் மாநிலத்தின் பெரும்பான்மையின பழங்குடிகள் ஆவர். அதற்கு அடுத்து தடௌஸ் மற்றும் நாகா பழங்குடி மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளனர். குக்கி மற்றும் நாகா பழங்குடியின மக்களிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுகிறது. வரலாறு மேற்கோள்கள் வெளியிணைப்புகள் மணிப்பூர் அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும் பகுப்பு:வடகிழக்கு இந்தியா
கண்ணகி
https://ta.wikipedia.org/wiki/கண்ணகி
thumb|கண்ணகி சிலை, சென்னை கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாகக் காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையைப் பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும், அவரது மனைவியான கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, மதுரை நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில், சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தான். இவ்விழாவில் பண்டைய இலங்கை மன்னன் கஜபாகுவும் கலந்துக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. பெயராய்வு கள் போல் மயக்கும் சிரிப்பைகள் நகி (நகை = புன்னகை) உடையவள் என்னும் பொருள் விளங்கும்படி, 'கண்ணகி' என்றனர். கண்+நகி என்று பிரித்து சிரிக்கின்ற - மலர்ந்த கண்ணைக் கொண்டவள் என்றும் பொருள்காண்பர். திருமாவுண்ணி கண்ணகி போல் இருக்கவேண்டிய தலைவி தன்னிடம் சினம் கொள்கிறாளே என்று பரத்தை ஒருத்தி அங்கலாய்த்துக் கொள்கிறாள். அவள் கண்ணகி முலையை அறுத்து மதுரையை எரித்த செய்தியை நினைவுகூர்கிறாள். கண்ணகியை அவள் திருமாவுண்ணி என்று குறிப்பிடுகிறாள். அழகால் திருமகளைத் தின்றவள் என்பது இத்தொடருக்குப் பொருள்.திருமா = திருமகள்ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக் கேட்டோர் அனையராயினும், வேட்டோர் அல்லது, பிறர் இன்னாரே (நற்றிணை 216 அடி 9-11) பரவலர் பண்பாட்டில் 1942 இல் ஆர். எஸ் மணி இயக்கிய கண்ணகி என்ற தமிழ்க் காவியத் திரைப்படம் வெளியானது. இதுவே சிலப்பதிகாரக் காவியத்தை அடிப்படையாகக் கொண்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். 1964 இல் இதே போன்ற இரண்டாவது படம் பூம்புகார் என்ற பெயரில் வெளியானது. சென்னை, மெரினா கடற்கரையில், சிலப்பதிகாரத்தின் காட்சியை சித்தரிக்கும் கண்ணகியின் உருவச் சிலை நிறுவப்பட்டது. இது போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கூறி 2001 திசம்பரில் அகற்றப்பட்டது. 2006 சூனில் சிலை மீண்டும் நிறுவப்பட்டது. பத்தினி என்ற சிங்களத் திரைப்படம் 5 மே 2016 அன்று இலங்கையில் வெளியானது. பத்தினி அல்லது கண்ணகியின் பாத்திரத்தில் பூஜா உமாசங்கர் நடித்தார். 1990 களின் முற்பகுதியில் தூர்தர்சனில் உபாசனா என்ற புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பப்பட்டது. அது சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய இரட்டைக் காப்பியங்களை அடிப்படையாகக் கொண்டது. இதையும் பார்க்க இலங்கையில் கண்ணகி வழிபாடு மங்கலதேவி கண்ணகி கோவில் ஆற்றுக்கால் பகவதி கோவில் பத்தினி அடிக்குறிப்புகள் வெளி இணைப்புகள் கண்ணகி கூத்து - நோர்வே , கனடா பகுப்பு:சிலப்பதிகாரக் கதைமாந்தர்கள் பகுப்பு:இந்து பெண் தெய்வங்கள் பகுப்பு:ஆவியர் பகுப்பு:கண்ணகி
ஐம்பெருங் காப்பியங்கள்
https://ta.wikipedia.org/wiki/ஐம்பெருங்_காப்பியங்கள்
முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்திலேயே தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும். தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை மற்றும் பெரியபுராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவைகள் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன. காப்பியங்கள் அணிகலப் பெயர்கள் இந்த நூலின் பெயர்கள் அணிகலன்களின் பெயரால் அமைந்துள்ளன. சிலப்பதிகாரம் - சிலம்பு என்பது மகளிர் அணியும் காலணி - கண்ணகியின் சிலம்பால் அதிகரித்த வரலாறு மணிமேகலை - ஆடை நழுவாமலிருக்க மகளிர் இடுப்பில் அணியும் அணி - இத்தொடர் அன்மொழித்தொகையாக அதனை அணிந்த பெண்ணை உணர்த்தும். இந்தப் பெயர் இடப்பட்ட பெண்ணின் வரலாறு. குண்டலகேசி - குண்டலம் என்பது மகளிர் அணியும் காதுவளையம். - குண்டலமும் கூந்தல் அழகும் கொண்டவள் குண்டலகேசி - குண்டலகேசி என்பவளின் வரலாற்றை கூறும் நூல். வளையாபதி - வளையல் அணிந்த பெண் வளையாபதி - வளையாபதியின் வரலாறு கூறும் நூல். சீவகசிந்தாமணி - சிந்தாமணி என்பது அரசன் முடியில் (கிரீடத்தில்) பதிக்கப்படும் மணிக்கல். - சீவகனை மணிமுடியாக்கி எழுதப்பட்ட வரலாறு சிலப்பதிகாரம் சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது. சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகன் மற்றும், அவனது மனைவியாகிய கண்ணகி ஆகியோரது கதையைக் கூறுவதே இக்காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடன மாதான மாதவி, இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம், உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம், சூழ் வினைச் சிலம்பு காரணமாக, சிலப்பதிகாரம் என்னும் பெயரால் நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள் என்கிற பதிக வரிகளில், முழுக் காப்பியத்தின் முக்கியச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மணிமேகலை மணிமேகலை, ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. இதனை இயற்றியவர் சீத்தலைச் சாத்தனார்.மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால், மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்குப் பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும், உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி, புத்த சமய மடம் ஒன்றில், அவளைச் சேர்த்து வளர்த்தாள். அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன், மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு, பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள். இக் காப்பியத்தில் இருந்து சில வரிகள்: அறமெனப் படுவது யாதெனக்கேட்பின் மறவாது இதுகேள் மன்னுயிர்க்கு எல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்ட தில்லை. குண்டலகேசி தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல், ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. தன்னைக் கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டு, பௌத்த துறவியாகி, அச்சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே, இக்காப்பியத்தின் கருப்பொருளாகும்.ஆசிரியர் நாத குத்தனார் வளையாபதி தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது, சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் புதிப்பிக்கப் பட்டுள்ளன. இக்காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது. கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை, கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது. சீவக சிந்தாமணி திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காப்பியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வாதீபசிம்பனின், 'சத்திர சூடாமணி'யைப் பின்பற்றியது; அந்த மூல நூலோ, கி.பி. 898 இல் குணபத்திரன் எழுதிய 'உத்தரபுராண'த்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே, சீவக சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சிந்தாமணியைத் தந்த ஆசிரியர், சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார். சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை சனரஞ்சகமாகவும், இனக்கவர்ச்சியுடனும், கற்பனையுடனும் தமிழில் எழுத, திருத்தக்க தேவர் விரும்பினார்; அம்முயற்சியில் அவர் வெற்றிகண்டார் என்பதும் உண்மை. நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செய்யுட்கள் ஒவ்வொன்றும், நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் உடையன. ஆசிரியர், 2,700 செய்யுட்களையே செய்தார் என்று அறியப்படுகிறது. ஏனைய 445 செய்யுட்களில், சில, அவருடைய குருவாலும், வேறு சில, வேறு யாரோ ஒருவராலும் எழுதப்பட்டவை. இரண்டு செய்யுட்களை, 'இவை குருவால் எழுதப்பட்டவை' என்று உரையாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏனைய செய்யுட்களை யார் எழுதியது என்ற விவரம் இல்லை. பெரிய புராணம் எழுதப்பட, சீவக சிந்தாமணி நேரடியாகக் காரணமாக இல்லை; ஆனாலும், சீவக சிந்தாமணி, அதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று அறியப்படுகிறது.சோழர்கள் - K.A. நீலகண்ட சாஸ்திரி - பாகம் இரண்டு - பக்கம் 877. மேற்கோள்கள் பகுப்பு:தமிழ்நாட்டு பண்பாட்டு வரலாறு
சென்னை
https://ta.wikipedia.org/wiki/சென்னை
கா. ந. அண்ணாதுரை
https://ta.wikipedia.org/wiki/கா._ந._அண்ணாதுரை
காஞ்சீவரம் நடராசன் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 03 பெப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், மதராஸ் மாநிலத்தின் கடைசி முதல்வரும், தமிழகத்தின் முதலாவது முதலமைச்சருமாவார். இவர் அறிஞர் அண்ணா எனவும் பேரறிஞர் அண்ணா எனவும் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.https://tamil.oneindia.com/news/tamilnadu/today-is-the-108th-birth-anniversary-anna-262820.html பிறப்பு அண்ணாதுரை, சின்னகாஞ்சீபுரத்தில் வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில் செங்குந்தக் கைக்கோள முதலியார்https://books.google.co.in/books?id=LRduAAAAMAAJ&q=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&dq=%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4&hl=en&sa=X&ved=0ahUKEwjx7_uPtNfqAhVLWysKHS4YAJoQ6AEIKTAAhttps://books.google.co.in/books?id=ToZuAAAAMAAJ&q=Annadurai+Sengunthar&dq=Annadurai+Sengunthar&hl=en&sa=X&ved=0ahUKEwjk3un3tNfqAhUDxzgGHdb-BVEQ6AEIPjAD மரபில் கைத்தறி நெசவாளர் நடராசன் முதலியார் - பங்காரு அம்மாள் என்பவருக்கு மகனாக செளமிய ஆண்டு ஆவணித்திங்கள் 31ஆம் நாள் (1909 - செப்டம்பர் 15) பிறந்தார்.பரிமளம் சி.என்.ஏ.; அண்ணா வாழ்வும் வாக்கும்; அபிராமி பப்ளிகேஷன்ஸ், 307 லிங்கிசெட்டி தெரு, சென்னை-1; முதற்பதிப்பு 1987 திசம்பர்; பக். 11 & 12 நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்விக் கற்றார். இளமைப் பருவம் thumb|இளமை காலத்தில் அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் காஞ்சீவரம்) செப்டம்பர் 15, 1909, இல் நடராச முதலியார் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்; அண்ணாவின் அன்னை பங்காரு அம்மா, அண்ணா சிறு வயதாக இருக்கும்போது இறந்துவிட்டதால், அண்ணாவின் தந்தை நடராசன், இராசாமணி என்பவரை மறுமணம் செய்து கொண்டர். எனவே இவரை இராசமணி அம்மாள் வளர்த்துவந்தார். இவர் மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமது தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட இவரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக சிறிது காலம் பணிபுரிந்தார். கல்வி 1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்) , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சையப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார் . ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார். ஆங்கிலம் பேச மறுத்த அண்ணா அன்றைய காலகட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அதிகமிருந்தது. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது, அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம் என்று மறுத்துவிட்டார்அண்ணா பேரவை-இங்கிலீசு பேசு-3 ஆம் பக்கம் பார்த்து பரணிடப்பட்ட நாள் 20-06-2009. அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை. பேச்சாற்றலும் படைப்பாற்றலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர். இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்; சிலவற்றுள் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. இவர் பத்திரிகையாளராகவும், பத்திரிகையாசிரியராகவும் தன்னை வெளிப்படுத்தினார். மொழிப்புலமை ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர், {{cquote| "No sentence can end with because because, because is a conjunction. எந்தத்தொடரிலும் இறுதியில் வராச்சொல் 'ஏனென்றால்'. ஏனென்றால், 'ஏனென்றால்' என்பது இணைப்புச்சொல் }} என்று உடனே பதிலளித்தார். பெரியார் உடனான தொடர்புகள் அதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார். தத்துவம் அண்ணாதுரை இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரின் கோட்பாடு சமயம் சாராதவராகவே வெளிப்படுத்துகின்றது. அவர் என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தினார்.பக்கம். 66 தெற்கு மகள் - பி. சி கணேசன்பக்கம். 41 இந்தியாவில் மனித இயக்கம் -கணபதி பழனித்துரை, ஆர். தாண்டவன். என்பது அவர் கட்சியின் கொள்கை பரப்பாகவும், அவரின் தொண்டர்களாக கருதப்படும் அவரின் தம்பிகளின் கட்சி வாசகமாகவும் பின்பற்றப்பட்டது. அவர் ஒரு நேர்காணலில் ".....நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்......" என்றார்.பக்கம். 44 கருத்தரங்கம் அண்ணாதுரை மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்லை.பக்கம். 25 கா.ந. அண்ணாதுரை - பி. சி கணேசன் கடமை கண்ணியம் கட்டுபாடு அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடுகள் இவை. கட்டுப்பாடு, கடமைஅண்ணா வளர்த்த அரசியல் கண்ணியம்-டாக்டர்.அண்ணா பரிமளம்-இரா.செழியன்-சங்கொலி-அண்ணா பேரவை பார்த்து பரணிடப்பட்ட நாள் 20-06-2009 ஆகியவை தனிப்பட்டு ஓர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதபடுகின்றது. கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் - அரசியலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் காட்டிடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல், எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும். அரசியலில் நுழைவு அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935 இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நீதிக்கட்சி பிராமணரல்லாதோருக்கான அமைப்பாக 1917 இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது. பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். பி.டி. தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயர் தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் கண்டது. இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937 இல் இந்திய தேசிய காங்கிரசால் தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது) தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்.. பெரியாருடன் கருத்து வேறுபாடு thumb|200x200px|பெரியாருடன் அண்ணாதுரை பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது. இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகத்து 15, 1947 அந்த நாளை கருப்பு தினமாக எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். அண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று. இந்தியாவின் சுதந்திரம் அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது. அது வெறும் ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல என்பதை இவர் வலியுறுத்தினார். திராவிடர் கழகம் சனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் இவர் முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக 1948 இல் நடைபெற்ற கட்சிக்கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார். பெரியார் தேர்தலில் பங்குபெறுவதால் தனது பகுத்தறிவு, சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) பெரியார் விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார். இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார். திராவிட நாடு திராவிடர் கழகத்தில் அண்ணாதுரை இடம்பெற்றிருந்தபொழுது, பெரியாரின திராவிடநாடுக் கொள்கைக்கு ஆதரவு நல்கினார். திமுக வின் ஆரம்ப காலகட்ட கொள்கையிலும் இது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட ஈ.வெ.கி. சம்பத் திராவிட நாடு கொள்கையை எதிர்த்து, திராவிட நாடு கோரிக்கை நிச்சயமற்ற இலக்கை அடைய எடுக்கப்படும் வீண்முயற்சி என்று கருதி திமுகவில் இணைந்தவர் ஆவார். ஈ.வெ.கி. சம்பத்தின் கொள்கையை வலியுறுத்தும் விதமாக அண்ணாதுரை இவ்வாறு அறிவித்தார் தமிழ் திரைக்கலைஞர்களை முன் நிறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டது. இது ஈ. வெ. கி. சம்பத்திற்கு அக்கட்சியில் அதிருப்தியை உருவாக்கியது. அதன் காரணமாக திமுக விலிருந்து விலகி தமிழ் தேசியக் கட்சி என்ற தனிக்கட்சியை 1961 -ல் துவங்கினார். 1962-ல் அண்ணா மாநிலங்களைவையில் திராவிடர்கள் தங்கள் சுயமரியாதையை காத்துக்கொள்ள விரும்புகின்றனர்.. நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற தனிநாடு என்று உரையாற்றினார். இந்தியா மொழிவாரி மாநிலமாக அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என சென்னை இராசதானியிலிருந்து (மெட்ராஸ் இராஜதானி) அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த பிறகு அண்ணாதுரை திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாற்றினார். இந்திய சீனப் போர் இந்திய அரசியலமைப்பில் சில மாறுதல்களை உருவாக்கியது. இந்தியாவின் 16 வது திருத்தச் சட்டமாக (பெரும்பாலும் அனைவராலும்அறியப்படும் சட்டம் -பிரிவினைவாத தடைச்சட்டம்) பிரிவினைவாதத்தை முற்றிலும் தடைசெய்யும் விதமாக கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்படும்பொழுது அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இச்சட்டத்தை அண்ணாதுரைப் பலமாக ஆட்சேபித்தும் அச்சட்டம் நிறைவேற்றப்படுவதை அவரால் தடுக்க முடியவில்லை. அதன் விளைவாக திமுக கட்சியினர் அக்கோரிக்கையை வலியுறுத்துவதிலிருந்து தங்களை விலக்கி கொண்டனர். திமுகவின் தனித்தமிழ்நாடு நாடு கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. அதுமுதல் அண்ணாதுரை நடுவண் அரசின் இணக்கமான ஆதரவை தென்னிந்திய மாநிலங்கள் பெறும் விதமாக தன்னுடைய மாநில சுயாட்சி கொள்கையினை வலியுறுத்த ஆரம்பித்தார். தமிழகத்தின் மாநில சுயாட்சியை பெரிதும் வலியுறுத்தினார். மாநில சுயாட்சி கொள்கையில் அவர் கட்சியின் நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவுபடுத்தினார். 1953 இல் கண்டனத் தீர்மானங்கள் 1953 இல், அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி திமுக மூன்று கண்டனத்தீர்மானங்களை முன்மொழிந்தது: இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மதராஸ் மாநிலத் தலைவர்களின் மொழிக்கொள்கையை இழிவுபடுத்துகின்ற செயலை கண்டனம் தெரிவித்தது. மதராஸ் மாநில முதல்வர் சி.ராஜகோபாலச்சாரி (இராஜாஜி), அறிமுகப்படுத்திய குலக்கல்வித் திட்டம் , எதிர்மறையாக குலத்தொழிலை வலியுறுத்தும் விதமாக அமைந்திருப்பதை (குலவழிக்கல்விமுறை) எதிர்த்து கண்டனம் தெரிவித்தது. கல்லக்குடியை டால்மியாபுரம் என்ற பெயர் மாற்றியதை எதிர்த்து, மீண்டும் கல்லக்குடி என்று மாற்றக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறைத்தண்டனை வழங்கப்பட்டதை எதிர்த்து கண்டனத்தை தெரிவித்தது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் இந்தி முதன்முதலில் அலுவலக மொழிக்கான தகுதியான மொழியாக ஜவகர்லால் நேரு தலைமையிலான குழு இந்திய அரசாங்கத்திற்கு (பிரித்தானிய அரசாங்கம்) பரிந்துரைச் செய்தது. அது முதல் தமிழ் நாட்டில் பலதரப்பட்ட மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இதனால் தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக இந்தி பேசும் வட இந்தியர்களால் தமிழர்கள் வேறுபடுத்தி காட்டப்பட்டனர். 1938 இன் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 1938 இல் மதராசு இராசதானியில் காங்கிரசு அரசு சி. ராசகோபாலாச்சாரி தலைமையில் ஆட்சி நடத்தி வந்தது. தமிழகத்தில் இந்தி பயன்பாட்டை இராசாசி முன்மொழிந்து, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிவித்தார். தமிழ் ஆன்றோர்கள், தலைவர்கள், புலவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களும் வெகுண்டு எழுந்தனர். முதலாம் இந்தி எதிர்ப்பு போராட்டமும் வெடித்தது. இப்போராட்டத்தைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கானோரை இராசாசி அரசு கைது செய்தது; தடியடியில் ஈடுபட்டது. அவ்வாறு தமிழ் காக்க புறப்பட்டு சிறை சென்றோரில் ஒருத்தர் நடராசன். இளைஞர்; தாழ்த்தப்பட்டச் சமூகத்தவர். எதிர்ப்பைக் கைவிடாது 1939 ஆம் ஆண்டு, சனவரி 15 ஆம் நாள் தன் உயிரை நீத்தார். தமிழுக்காக உயிரை ஈகம் செய்தார். நடராசனின் இறப்பு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் புத்துணர்ச்சியை ஊட்டியது. அண்ணாதுரை, பாரதிதாசன் உட்பட பல தமிழறிஞர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தத் தொடங்கினர். காஞ்சிபுரத்தில் 27 பெப்ரவரி, 1938 இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை கலந்து கொண்டார். மாநாட்டை கலைக்க காவல் துறை கொடுத்த தடியடியில் பலர் காயமுற்றனர். இவர்களில் பலர் கைதும் செய்யப்பட்டனர். இதற்கிடையில், பெப்ரவரி 13 இல் நடந்த போராட்டத்தில் கைதான தாளமுத்து என்ற இன்னொரு தமிழர், மார்ச் 11 இல் காலமானார். நடராசன் - தாளமுத்து ஆகிய இருவரின் ஈகங்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டியது. காங்கிரசு அரசை அவ்வாண்டு இறுதிக்குள் பதவி விலகவும் செய்தது. பின்னர், பெப்ரவரி 1940 இல், மதராசு மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார். 1965 மதராஸ் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை: திமுக கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து 1960 இல் ஆகஸ்டில் சென்னை, கோடம்பாக்கத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு அண்ணாதுரை தலைமையில் நடத்தப்பட்டது. இந்தி திணிப்பிற்கெதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்தியக் குடியரசுத்தலைவர் வருகையின் பொழுது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவதெனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் கிளர்ச்சியையும் இந்தி எதிர்ப்பு உணர்வாளர்களின் எழுச்சியையும் கண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வண்ணம் இந்திய அரசியலமைப்பில் திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். இதனால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்படாவிட்டால் இந்தியாவின் 15 வது குடியரசு தின்த்தை 26 ஜனவரி, 1965 துக்கதினமாக அறிவிக்கப்போவதாக அண்ணாதுரை அறிவித்தார். இந்த அறிவிப்பை அன்றைய மதராஸ் மாநில முதலமைச்சரான பக்தவச்சலம் அண்ணாதுரைக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக கருப்புதின அறிவிப்பை 24 ஜனவரி அன்று மாற்றியமைத்தார். இதற்கான அறைகூவலாக அண்ணாதுரை முழங்கியவை இந்தியை ஒழித்து, இந்தியக் குடியரசு நீண்ட ஆயுளுடன் வாழ்க சட்டமன்றத்தில் அண்ணா சட்டமன்றத்தில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், ஆளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் அவர் பணி சிறந்ததாகவே கருதப்பட்டது. அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைகுனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன. 1962 இல் அண்ணாதுரை மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்ததை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றச்சாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றச்சாட்டை அண்ணாதுரை இவ்வாறு பதிலுரைத்தார். என்று குறிப்பிட்டார். தமிழ்நாடு பெயர் மாற்றம் 1967 இல் நடைபெற்ற தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் 1967 மார்ச் 6இல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிப்படுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1969 ஜனவரி 14ல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். அண்ணாதுரையை யேல் பல்கலைக்கழகம், சப் பெல்லோசிப் (Chubb Fellowship) என்ற கவுரவ விரிவுரையாளராக 1967–1968 இல் அழைத்தது.The Chubb Fellowship இந்தியர் ஒருவரை கவுரவ விரிவுரையாளராக அழைத்ததும் இதுவே முதல் முறை.List of Chubb Fellowship Fellowshttps://chubbfellowship.yale.edu/past-fellows இறுதிக்காலம் மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர்,03 பிப்ரவரி 1969 இல் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன. ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார். திமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவக்கிய இவரின் இதயக்கனி எம்.ஜி.ராமச்சந்திரன் இவரின் பெயரைக்கொண்டு உருவாக்கிய அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினால் வெற்றியைக் கொண்டு தமிழகத்தின் ஆட்சியை பின்னாளில் நடத்தினார். இலக்கிய பங்களிப்புகள் அண்ணாதுரை மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றலும் பெற்றவர். பல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கும் நாடகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர். அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்கங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம் நல்லதம்பி (1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்துள்ளார். இது ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும். இவரின் வேலைக்காரி (1949), ஒர் இரவு'' ஆகிய நாடகங்களும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ரங்கோன் ராதா, வண்டிக்காரன் மகன் ஆகிய கதைகளும் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன. வேலைக்காரியில் அண்ணாதுரை அடக்குமுறையை கையாளும் நிலச்சுவான்தாரர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் காந்தியுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை விளக்குகின்ற விதமாக எடுத்துக்காட்டப்பட்டது. இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பிராமண எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரங்களாக விளங்கின. இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள் மற்றும் திரைக்கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்கபலமாக விளங்கியவர்கள், டி.வி. நாராயணசாமி, கே. ஆர். ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ். எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன். அண்ணாவின் சில நூல்கள் மிகுந்த சர்ச்சைகளை உருவாக்கியவை. அவற்றில் ஆரிய மாயைஆரிய மாயை நூல் (அச்சு வடிவில்) (ஆரியர்களின் போலித்தோற்றம்) பிராமணர்களை கடுமையாகச் சாடியதாக விமர்சிக்கப்பட்டது. ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதபட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த நூலுக்காகவும், கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காகவும் அவருக்கு ரூபாய் 700 அபராதமும் (தண்டம்), சிறைத்தண்டனையும் அளிக்கப்பட்டது. காதல் ஜோதி, சந்திர மோகன் (சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்), கம்பரசம், தீ பரவட்டும்! பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பெரும்பாலான நூல்கள் இன்றும் அச்சில் கிடைக்கின்றனஅச்சில் கிடைக்கக்கூடியஅண்ணாவின் நூல்கள் . ஆக்கங்கள் வகித்த பொறுப்புகள் மே 1956 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி வி.ஆர்.நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின்படி இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்குகொண்டது. 1957 ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு நாடாளுமன்றத்தொகுதிகளையும் வென்றது. அண்ணாதுரையும் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. 1962 இல் திமுக மிகப்பெரியக் கட்சியாக காங்கிரசை அடுத்து உருவெடுத்திருந்தது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் திமுக 50 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியுற்றார். அதே வருடத்தில் மீண்டும் திமுக பொதுச்செயலாளர் ஆனார்.பின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கபெற்று அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். 1967 ல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் (மேலவை மூலம்) மதராஸ் மாநிலத்தின் முதலமைச்சரானார். இதழியல்பணி அண்ணாதுரைக்கு ஈ.வெ.ரா.பெரியாருடன் தொடர்பு ஏற்பட்டவுடன் குடியரசு இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் விடுதலை இதழின் ஆசிரியாரக இருந்தார். 1942ஆம் ஆண்டில் திராவிடநாடு தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் அச்சிட்டு வெளியிடுபவராகவும் இருந்தார். பெரியாரோடு பிணக்கு ஏற்பட்ட பொழுது தமது தரப்பு வாதங்களைக்கூறுவதற்காக டி. எம். பார்த்தசாரதி தொடங்கிய மாலைமணி இதழில் ஆசிரியராக இருந்தார். 1956 சூன் 15இல் தி.மு.க.விற்கென நம்நாடு என்னும் நாளிதழைத் தொடங்கியபொழுது அதன் ஆசிரியராக இருந்தார். 1963ஆம் ஆண்டில் காஞ்சி என்னும் வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார். Home Land என்ற ஆங்கில வார இதழை 2-6-1957ஆம் நாள் தொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார்.திராடவிடநாடு (இதழ்) 26-5-1957, பக்.4 மறைவு அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி, 1969 அன்று மரணமடைந்தார். அவர் புகையிலையை உட்கொள்ளும் பழக்கமுடையவராததால் (புகையிலைப் பொடி நுகரும் பழக்கம்) இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில். இடம் பெற்றுள்ளது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்துக் கொண்டு இறுதி மரியாதைச் செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நினைவுச் சின்னங்கள் thumb|right|150px|அண்ணா நினைவிடம், மெரீனா கடற்கரை, சென்னை தமிழ்நாடு அரசு அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெரீனா கடற்கரையில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பேரறிஞர் அண்ணா நினைவிடம் எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது. இங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்றும், தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் அண்ணா நகர் என்று பெயரிடப்பட்டுள்ளன. வேலூரில் உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலையரங்கம் என பெயர் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல் சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் "அண்ணா கலையரங்கம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. 2009ம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 2010ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.அண்ணாதுரையின் நினைவாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள அண்ணாதுரையின் சிலை.caption|thumb|right|200px|அண்ணாதுரையின் நினைவாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் உள்ள அண்ணாதுரையின் சிலை அண்ணாதுரை பிறந்த நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15 அன்று அரசு விழாவாக சிறப்பாக கொண்டாடுகிறது. மேலும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படைகள் அரசின் விதிகளுக்குட்பட்டு, சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். அண்ணாவைப்பற்றிய நூல்கள் அண்ணாதுரை (தொகுப்பு நூல்), 1952, கலைமன்றம், சென்னை திராவிடநாடு (இதழ்) நாள்:22-6-1952, பக்கம் 12 அண்ணாதுரை, பி.வி.ராமசாமி, 1952, கருணாநிதி பதிப்பகம், சென்னை-2 திராவிடநாடு (இதழ்) நாள்:10-8-1952, பக்கம் 3 மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் - சென்னைநூலகம்.காம் பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் அறிஞர் அண்ணாவைப் பற்றிய அனைத்துச் செய்திகளும் காலச்சுவடு இதழில் திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு எழுதிய கட்டுரை பெரியாரை சங்கடத்திற்குள்ளாக்கிய அண்ணா; அறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு பகிர்வு - விகடன் பகுப்பு:தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் பகுப்பு:தமிழறிஞர்கள் பகுப்பு:திராவிட இயக்க எழுத்தாளர்கள் பகுப்பு:1909 பிறப்புகள் பகுப்பு:1969 இறப்புகள் பகுப்பு:தமிழ்நாட்டு இறைமறுப்பாளர்கள் பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள் பகுப்பு:நாடாளுமன்ற தி. மு. க. உறுப்பினர்கள் பகுப்பு:தமிழ் சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள் பகுப்பு:நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள் பகுப்பு:தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினர்கள் பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட நபர்கள் பகுப்பு:4வது மக்களவை உறுப்பினர்கள் பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள் பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள் பகுப்பு:தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள்
ம. கோ. இராமச்சந்திரன்
https://ta.wikipedia.org/wiki/ம._கோ._இராமச்சந்திரன்
எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், 17 சனவரி 1917 – 24 திசம்பர் 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார்.எம். ஜி. ஆரின் தகப்பனார் வழி பூர்வீகம் காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.காந்தியை சந்தித்த எம்.ஜி.ஆர். - கே.பி. ராமகிருட்டிணன் 1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, இவரின் நண்பர் கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் பாெதுச்செயலாளாராக ஆக்கி, சட்டமன்ற தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர். தனிப்பட்ட வாழ்க்கை இளமைப் பருவம் இராமச்சந்திரன் இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன் - சத்யபாமா ஆகியோருக்கு 5 வது மகனாகப் பிறந்தார்.திராவிடநாடு (இதழ்) நாள்:10-8-1952, பக்கம் 3எம்.ஜி.ஆர். வாழ்க்கை அவருடைய தந்தை மருதூர் கோபாலன் மேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார், அதன் பிறகு அந்தமான்தீவில் உள்ள சிறையில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்தார். அப்போது ஆங்கிலயர்களின் அடக்கு முறை ஆட்சி என்பதால் தினமும் சுமார் 20 சிறை கைதிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்கும் குற்றவியல் நீதிபதியாக இருந்தார். பின்பு மனைவி சத்யபாமா, இந்த உயிரை எடுக்கும் வேலை நமக்கு வேண்டாம் என்று கூற அந்த நீதிபதி வேலையை இராஜினாமா செய்து விட்டார். அந்த இராஜினாமாவை ஏற்று கொள்ளாத ஆங்கிலயர்கள் பயங்கர சூழ்ச்சிக்கு கோபாலன் மேனனை ஆளாக்கினர். அதற்கு காரணமாக ஆங்கிலேயர்களுக்கு சொந்தமான ஆயுதக் கப்பலுக்கு டைனமெட் வெடி வைத்ததாகக் கூறி பொய்யான புகாரில் சிறிது காலம் கோபாலன் மேனனை சிறையில் அடைத்தனர். அதன் பிறகு அவர் குடும்பத்துடன் இலங்கையில் உள்ள கண்டிக்கு அருகே நாவலப்பிட்டியில் குடியேறினார்கள். பின்பு அவரது நண்பர் வேலுபிள்ளை அவர்கள் காவல் துறையில் பணியாற்றிவந்தார். அவரின் உதவியுடன் அங்குள்ள ஒரு சிங்கள பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆக பணிபுரிந்து வந்தார். எம். ஜி. ஆர்க்கு ராமச்சந்திரன் என்று பெயர் ஏற்பட காரணம், அவரது தந்தை கோபாலன் மேனன் தந்தை பெயர் சந்திரசேகரன் மேனன் அதில் சந்திரன் என்றும் தாயார் சத்யபாமாவின், தந்தை பெயர் சீதாராமன் நாயர் என்பதில் ராம என்பதை சேர்த்து ராமச்சந்திரன் என்று பெற்றோா்கள் அந்த பெயரை வைத்தனா். பின்பு எம். ஜி. ஆர் தனது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அவரது ஒரு அண்ணன் மற்றும் ஒரு அக்காவும் இலங்கையில் தொடர்ந்து இறந்துவிட மனவெறுப்புடன் அன்னை சத்யபாமா இலங்கையில் இருந்து வெளியேறினார்கள். பின்பு சிறிது காலம் கேரளாவிற்கு அவரது தாயார் சத்யபாமா அவர்கள் உடன் சென்று தனது கணவரின் பெற்றோர்களிடம் அவரின் பங்கை கேட்டு அதைத் தர மறுத்ததால் சத்யபாமா தனது தாயார் சரஸ்வதி உடன் கேரளாவில் சில நாட்கள் அங்கு வசித்துவந்தபோது அவரது மகள் காமாட்சியும், சத்யபாமாவின் தாயார் சரஸ்வதியும் இறந்துவிட தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் தனது தம்பி நாராயணன் உதவியுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். இல்லறம் முதல் திருமணம் எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார். இரண்டாவது திருமணம் அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். MGR Remembered – Part 2 மூன்றாவது திருமணம் left|thumb|200px|1948 மோகினி திரைப்படத்தில் எம்ஜிஆரும் வி. என். ஜானகியும் தோன்றும் காட்சி ம. கோ. இரா. இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர் தயாரித்த ராஜ முக்தி படத்தில் நடித்தார். அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். அவர் ம. கோ. இரா.வின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது ம. கோ. இரா.விற்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் கதைத் தலைவனாக ம. கோ. இரா.வும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது. அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதிபட்டிக் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம. கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.எம்.ஜி.ஆர்.; நான் ஏன் பிறந்தேன்; ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர் இத்திருமணத்தை ம. கோ. இரா.வின் அண்ணனும் நடிகருமான ம. கோ. சக்ரபாணியும், குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உடல்நலமில்லாமல் இருந்ததால் அவரை இவர்கள் இருவரும் அக்கறையுடன் கவனித்துக்கொண்டனர்.12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் சூன் 14ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து வெளியேறி இராமாவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.4 வளர்ப்பு குழந்தைகள் மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை. எனவே ஜானகி- கணபதிபட் ஆகிய இருவருக்கும் பிறந்த அப்பு என்ற சுரேந்திரனையும் ஜானகியின் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா (ராஜேந்திரன்), கீதா (மதுமோகன்), சுதா (கோபாலகிருஷ்ணன்). ஜானகி (சிவராமன்), தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார். கல்வி உதவி எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன் மற்றும் சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25இல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது. செல்லப் பிராணிகள் எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார். சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தியிருந்தார். சிறுகுட்டியாக எம்.ஜி.ஆரிடம் இருந்த கரடி வளர்ந்ததும் மருத்துவரின் உதவியுடன் மூக்கில் சங்கிலி இணைக்க ஏதுவாகத் துளையிட முயன்றபோது எதிர்பாராத விதமாக இறந்துவிட்டது. இதை நடிகர் சங்கத்தின் நாளிதழில் ஒரு பேட்டியின் போது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர். திரைப்பட வாழ்க்கை 1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த காவல்காரன் திரைப்படமானது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான ரிக்சாக்காரன் படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது. அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார். அரசியல் வாழ்க்கை ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார். 1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவரின் தொண்டர் அனகாபுத்தூர் இராமலிங்கம் ஆரம்பித்தார். அந்த கட்சியின் உறுப்பினராக சேர்ந்து அதன் தலைவராகவும்,பாெதுச்செயலாளாராகவும் பொறுப்பு ஏற்றார்.பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது. திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் மகோஇரா.1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் 2016 வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இவரது அரசியல் வாரிசு ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.[The nurturing hero Changing images of MGR Sara Dickey (2005). Appeared in Tamil Cinema: The cultural politics of India’s other film industry] இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது. திட்டங்கள் சத்துணவுத் திட்டம் விதவை ஆதரவற்ற பெண்களுக்குத் திருமண உதவி மகளிருக்கு சேவை நிலையங்கள் பணிபுரியும் பெண்களுக்குத் தங்கும் விடுதிகள் தாய் சேய் நல இல்லங்கள் இலவச சீருடை வழங்குதல் திட்டம் இலவச காலணி வழங்குதல் திட்டம் இலவச பற்பொடி வழங்குதல் திட்டம் இலவச பாடநூல் வழங்குதல் திட்டம் வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம். தமிழ் பல்கலைக் கழகம் நிறுவுதல் 1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த ம. கோ. இரா. முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 13 சூன், 1981 இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இப்பல்கலைக்கழகத்தின் உடனடித் தேவைக்கும், எதிர்கால விரிவாக்கத்திற்கும் 1000 ஏக்கர் நிலம் தேவை என முடிவு செய்யப்பட்டது. 1981 ஆகத்து 1 ஆம் நாள் தமிழக ஆளுநர் மூலம் “தமிழ்ப் பல்கலைக் கழக அவசரச் சட்டம் 1981” பிறப்பிக்கப்பட்டு தமிழ்ப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ் பல்கலைக் கழகத்திற்கு 972.7 ஏக்கர் நிலத்தை எம்.ஜி.ஆர் தலைமையினான அரசு கையகப்படுத்தி ஒதுக்கியது.ஆட்சியர் வளாகமாக மாறும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழ் ஈழம் குறித்த நிலைப்பாடு இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார். பழ நெடுமாறன் கருத்து 1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் பற்றிப் பிரபாகரன் விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலகட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார்.* எம்.ஜி.ஆர்ப் பற்றி பிரபாகரன் எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.* பழ.நெடுமாறன் மற்றும் பிரபாகரன் எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் 1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார். நாம் தமிழர் சீமான் நம்பிக்கை "முன்னாள் தமிழக முதல்வர் அமரர். எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்குத் தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்" என்று இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார். இவர் எழுதிய புத்தகங்கள் நாடோடி மன்னன் புத்தகம் எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார். இந்தப்படம் வெளிவந்தபின் வெற்றி அடைந்தால் தாம் ஒரு மன்னன் என்றும், தோல்வியுற்றால் தாம் ஒரு நாடோடி என்றும் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.http://cinema.maalaimalar.com/2009/11/16110341/nadodi-mannan.html தன் சொத்துக்களை எல்லாம் முதலீடு செய்து எம்.ஜி.ஆர். இப்படத்தை எடுத்ததால், அவருடைய நண்பர்கள் மிகவும் கவலை அடைந்தனர். இது குறித்து எம்.ஜி.ஆரிடமே நிருபர்கள் கேட்டபோது, "படம் வெற்றி பெற்றால், நான் மன்னன்; தோல்வி அடைந்தால் நாடோடி" என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். சுயசரிதைத் தொடர் ‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை.[lakshmansruthi.com] சிறப்பு விருதுகளும் பட்டங்களும் ம.கோ.இரா. என்கிற ம.கோ.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும். விருதுகள் பாரத் விருது - இந்திய அரசு அண்ணா விருது - தமிழ்நாடு அரசு பாரத ரத்னா விருது - இந்திய அரசு பத்மசிறீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு) சிறப்பு முனைவர் பட்டம் - அரிசோனா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு) வெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம். திரைச்சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும் இதயக்கனி - பேரறிஞர் அண்ணா புரட்சி நடிகர் - உடந்தை உலகப்பன் நடிக மன்னன் -சி.சுப்பிரமணியம் மக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள் பல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள் மக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள் கலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம் கலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம் கலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார் கலை மன்னன் - சென்னை ரசிகர்கள் கலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள் திரை நாயகன் - சேலம் ரசிகர்கள் அரசியல் சேவைக்கான பட்டங்களும் வழங்கியவர்களும் கொடுத்துச் சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள் கலியுகக் கடவுள் - பெங்களூர் விழா நிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள் பொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார் மக்கள் திலகம் - தமிழ்வாணன் வாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள் புரட்சித்தலைவர் - கே. ஏ. கிருஷ்ணசாமி இதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள் மக்கள் மதிவாணர் - இரா. நெடுஞ்செழியன் ஆளவந்தார் - ம. பொ. சிவஞானம் செயல்பாடுகள் 1. சனவரி 1986 அன்று அண்ணாவின் பவள விழாவின் நினைவாக அமைக்கப்பட்ட அண்ணா வளைவினை திறந்துவைத்தார் எம்.ஜி.ஆர்.http://www.dinakaran.com/News_Detail.asp?nid=24202 சென்னையின் முக்கிய அடையாளம் அண்ணா பவள விழா வளைவு இடிப்பு -தினகரன் 7.47 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட இது, எம்.ஜி.ஆரின் ஆலோசனையால் 54 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. இந்த வளைவை ஸ்தபதி கணபதி 105 நாட்களில் கட்டி முடித்தார். எம்.ஜி.ஆர் நினைவிடங்கள் எம்.ஜி.ஆர் சமாதி thumb|250px|எம்.ஜி.ஆர் நினைவிடம் தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாகச் சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா சதுக்கம் அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. அருகில் இவரது அரசியல் வாரிசான ஜெ. ஜெயலலிதா நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது. தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு மரியாதை செலுத்துகின்றனர். சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தினமும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி. கிருஷ்ணன் (ஓமலூர்) மார்ச் 2012 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கோரிக்கை விடுத்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காகப் பாடுபட்டவர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் ஏழைகளுக்குக் கோவில் போன்றது. அதனால் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல அன்னதானம் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் வழங்க வேண்டும் என்று கூறினார்.எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அன்னதானம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் thumb|250px|டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது.http://www.lakshmansruthi.com/cineprofiles/mgr_56.asp வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு - எம்.ஜி.ஆர். முத்து மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன. அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம் திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் 1800 சதுர அடி மனையில் எம்.ஜி.ஆருக்கான ஆலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன் மற்றும் சாந்தி தம்பதியினர் இந்தக் கோவிலை அமைத்துப் பாதுகாவலர்களாக உள்ளார்கள். 15.08.11 அன்று எம்.ஜி.ஆர் கோவிலுக்குக் கும்பாபிசேகமும், உற்சவர் சிலைக்குப் பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிசேகமும் நடந்தது.எம்.ஜி.ஆர்., சாமிக்கு ஜே... கோஷம் முழங்க கும்பாபிஷேகம்! மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன என்று 30, மே 2011ல் வெளிவந்த நக்கீரன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தொகுப்பு இவற்றையும் பார்க்கவும் கா. ந. அண்ணாதுரை மு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா தமிழகத் திரைப்படத்துறை எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கை எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்க்கை திருச்சியைத் தலைநகராக மாற்றும் திட்டம் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967 எம். ஜி. ஆர். திரை வரலாறு ஆதாரங்கள் வெளி இணைப்புகள் அ.தி.மு.க இணையத்தளம் எம்.ஜி.ஆர் பற்றிய இணையதளம் பகுப்பு:தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் பகுப்பு:1917 பிறப்புகள் பகுப்பு:1987 இறப்புகள் பகுப்பு:எம். ஜி. ஆர் பகுப்பு:இந்திய நடிகர்-அரசியல்வாதிகள் பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள் பகுப்பு:இந்தியத் தமிழ் நாடக நடிகர்கள் பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள் பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள் பகுப்பு:சென்னை நடிகர்கள் பகுப்பு:சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள் பகுப்பு:பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்
https://ta.wikipedia.org/wiki/இந்தியாவின்_மாநிலங்களும்_ஆட்சிப்பகுதிகளும்
இந்தியாவில் 28 மாநிலங்களும், தில்லி தேசிய தலைநகரப் பகுதி உள்ளிட்ட 8 நடுவண் அரசின் ஆட்சிப்பகுதிகளும் உள்ளன. அனைத்து மாநிலங்களிலும் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் பாண்டிச்சேரி, சம்மு காசுமீர், தில்லி தலைநகரப் பகுதி ஆகியவற்றிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுகள் உள்ளன. ஏனைய ஒன்றியப் பகுதிகள் இந்திய அரசால் நியமிக்கப்படும் ஆளுநர்களைக் கொண்ட, குடியரசுத் தலைவரின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். 1956 ஆம் ஆண்டில், மாநிலங்கள் மீளமைப்புச் சட்டத்தின் கீழ் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. அதன் பின்னர், வட இந்தியப் பகுதிகளில் சில புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. மாநிலங்களும், ஒன்றியப் பகுதிகளும், மாவட்டங்கள் என்ற சிறிய நிருவாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுமை பகுதிகள் மாநிலங்களும் அவற்றின் தலைநகரங்களும் +இந்தியாவின் மாநிலங்கள்..#பெயர்மக்கள் தொகைமொழிதலைநகரம்மிகப்பெரிய நகரம்(தலைநகரமல்லாதவை)1ஆந்திரப் பிரதேசம்49,386,799தெலுங்குஅமராவதி விசயவாடா2அருணாசலப் பிரதேசம்1,091,120ஆங்கிலம்இடாநகர்3அசாம்26,655,528அசாமியம்திசுபூர்கவுகாத்தி4பீகார்82,998,509இந்தி,உருதுபாட்னா5சத்தீசுகர்20,795,956இந்தி,சத்தீசுகரிராய்ப்பூர் 6கோவா1,400,000கொங்கணிபனாசி7குசராத்து50,671,017குசராத்திகாந்திநகர்அகமதாபாத்8அரியானா21,082,989அரியான்விசண்டிகர் (பகிர்வில்)பரிதாபாத்9இமாச்சலப் பிரதேசம்6,077,900இந்திசிம்லா10தெலுங்கானா35,193,978 தெலுங்கு,உருதுஐதராபாத்11சார்க்கண்டு26,909,428இந்திராஞ்சிசாம்செட்பூர்12கருநாடகா52,850,562கன்னடம்பெங்களூரு13கேரளா31,841,374மலையாளம்திருவனந்தபுரம்14மத்தியப் பிரதேசம்60,385,118இந்திபோபால்இந்தூர்15மகாராட்டிரம்96,752,247மராத்திமும்பை16மணிப்பூர்2,388,634மணிப்பூரிஇம்பால்17மேகாலயா2,306,069 காசி, பினார், காரோ மற்றும் ஆங்கிலம்சில்லாங்18மிசோரம்888,573மீசோஅய்சால்19நாகலாந்து1,988,636நாகா மொழிகள்கோகிமாதிமாப்பூர்20ஒடிசா36,706,920ஒரியாபுவனேசுவர்21பஞ்சாப்24,289,296பஞ்சாபிசண்டிகர்லூதியானா22இராசத்தான்56,473,122இராசத்தானிசெய்ப்பூர்23சிக்கிம்540,493கான் சீனம்காங்டாக்24தமிழ்நாடு66,396,000தமிழ்சென்னைகோயம்புத்தூர்25திரிபுரா3,199,203வங்காளம்அகர்தலா26உத்தரப்பிரதேசம்190,891,000இந்தி,உருதுலக்னோகான்பூர்27உத்தரகண்ட்8,479,562இந்திடேராடூன்28மேற்கு வங்கம்80,221,171வங்காளம்கொல்கத்தாஆசான்சோல் +ஒன்றியப் பகுதிகள்#பெயர்மக்கள் தொகைமொழிதலைநகரம்மிகப்பெரிய நகரம்(தலைநகரமல்லாதவை)Aஅந்தமான் நிக்கோபார் தீவுகள்356,152வங்காளம், தமிழ், தெலுங்கு, இந்திபோர்ட் பிளேர்Bசண்டிகர்900,635இந்தி & பஞ்சாபிசண்டிகர்C தாத்ரா & நகர் அவேலி மற்றும் தாமன் & தியூ3,78,510குசராத்திதமன் Dசம்மு காசுமீர்10,143,700கசுமீரியம்சிறிநகர் (கோடைகாலம்)சம்மு (குளிர்காலம்)Eஇலட்சத்தீவுகள்60,595மலையாளம்கவரத்தி Fதேசிய தலைநகர் பகுதி13,782,976இந்திபுது தில்லிGபுதுச்சேரி973,829தமிழ், பிரான்சியம்புதுச்சேரிHலடாக்260,000லடாக்கிலே இந்திய மாநிலங்களின் உருவாக்கம் தற்போதைய இந்தியா, பாகித்தான், வங்காளதேசம், பூட்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியிருந்த பிரித்தானிய இந்தியா இரண்டு விதமான துணை அரசியல் அலகுகளைக் கொண்டிருந்தது. மாகாணங்கள், வைசிராயினால் நியமிக்கப்பட்ட, ஆளுனர் அல்லது சிறப்பு ஆணையர் தரத்திலுள்ள பிரித்தானிய அதிகாரிகளால் நேரடியாக ஆளப்பட்டன. சம்மு காசுமீர் இராச்சியம், ஐதராபாத் இராச்சியம் போன்ற 526 சமசுதானங்கள், பிரித்தானியரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்பட்டு வந்தன. பிரித்தானிய இந்தியா 15 மாகாணங்களைக் கொண்டிருந்தது: அச்சுமேர்-மேர்வாரா, அசாம், பலூசித்தான், வங்காள மாகாணம், பிகார் மாநிலம், பம்பாய், மத்திய மாகாணம், கூர்க், தில்லி, மதராசு, வடமேற்கு எல்லை, ஒரிசா, பஞ்சாப், சிந்து, மற்றும் ஐக்கிய மாகாணங்கள். பிரித்தானிய இந்தியாவில், பல்வேறு அளவுகளில் பல சமஸ்தானங்களும் இருந்தன. இவற்றுள், ஒரு கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட ஐதராபாத் தொடக்கம், மிகச் சிறிய சமசுதானங்கள் வரை அடங்கி இருந்தன. இவற்றை விட வேறு இரு ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவில் சில நிலப்பகுதிகளை ஆண்டு வந்தன. போத்துக்கீச இந்தியா, கோவா, தமனும் தியுவும், தட்ராவும் நாகர் அவேலியும் ஆகிய கரையோரப் நிலப்பகுதிகளையும், பிரெஞ்சு இந்தியா, சண்டர்நகர், ஏனாம், பாண்டிச்சேரி, காரைக்கால், மாகே ஆகிய ஐந்து நிலப்பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தன. 1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது, மேற்படி மாகாணங்களும், சமசுதானங்களும், இரு நாடுகளுக்கும் இடையே பங்கிடப்பட்டன. பஞ்சாப், வங்காளம் ஆகிய இரண்டும் மட்டும், சமய அடிப்படையில் பிரித்து வழங்கப்பட்டன. ஐதராபாத்தின் இசுலாமிய ஆட்சியாளர் சுதந்திரமாக இருக்க முயன்றார் என்றாலும், இந்தியப் படை தலையிட்டு அதனை இந்தியாவுடன் இணைத்தது. சம்மு காசுமீருக்கு இரு நாடுகளுமே உரிமை கோரின. பெரும்பான்மை மக்கள் இசுலாமியர்களாக இருந்தார்கள். இந்துவாக இருந்த சம்மு காசுமீரின் ஆட்சியாளர் நாட்டை இந்தியாவுடன் இணைத்தார். 1950ல், இந்திய அரசியல் சட்டம் நடப்புக்கு வந்ததுடன், பலவகையான மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. முன்னர் மாகாணங்களாயிருந்த, பிரிவு A மாநிலங்கள், ஆளுனராலும், தெரிவு செய்யப்பட்ட சட்டசபையாலும் ஆளப்பட்டன. இந்தப் பிரிவில் அடங்கிய ஒன்பது மாநிலங்களாவன: அசாம், மேற்கு வங்காளம், பிகார், பம்பாய் மாகாணம், மத்தியப் பிரதேசம் (முன்னர் மத்திய மாகாணங்களும், பெராரும்), மதராஸ், ஒரிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் (முன்னாள் ஐக்கிய மாகாணங்கள்). சென்னை மாகாணத்திலிருந்து தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையின் ஒருபகுதியாக பொட்டி சிறீராமலு என்பவர் 58 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க 1953 அக்டோபர் 01 ஆம் நாள் ஆந்திரம் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதே ஆண்டில் பாசல் அலி என்பவரைத் தலைவராகவும் பணிக்கர், குன்சுரு போன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரைகளின் படி 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவில் 14 மாநிலங்கள் நிறுவப்பட்டது. இதே அடிப்படையில் மகாராட்டிராவில் இருந்து குசராத்து (1960) பிரிக்கப்பட்டது. பின்னர் வந்த ஆண்டுகளில் மேலும் பல மாநிலங்கள் உருவாயின. 1963ல் நாகாலாந்து, 1966ல் அரியானா, 1971ல் இமாச்சலப் பிரதேசம், 1972ல் திரிபுரா, மேகலா மற்றும் மணிப்பூர், 1975ல் சிக்கிம், 1987ல் மிசோரம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2000 ஆவது ஆண்டில் சத்தீசுகர், உத்தராகண்டம் மற்றும் சார்க்கண்டு என மேலும் மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. 2014 ஆவது ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலம் இந்தியாவின் 29 ஆவது மாநிலமாகும். 5 ஆகத்து 2019 அன்று, இந்திய நாடாளுமன்றத்தில் சம்மு காசுமீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019 நிறைவேற்றப்பட்டது. அதன்படி சம்மு காசுமீர் மாநிலத்தைப் பிரித்து சம்மு காசுமீர் மற்றும் லடாக் என இரு ஒன்றியப் பகுதிகளை 31 அக்டோபர் 2019 முதல் நிறுவப்பட்டது. எனவே தற்போது மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்தது.ஒன்றியங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இவற்றையும் பார்க்கவும் இந்தியாவின் ஒன்றியப் பகுதிகள் மாவட்டம் சனத்தொகை அடிப்படையில் இந்திய மாநிலங்களின் பட்டியல் வெளியிணைப்புகள் இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பிரதேங்சகளும் - காணொலி - பகுதி 1 இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பிரதேங்சகளும் - காணொலி - பகுதி 2 இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பிரதேங்சகளும் - காணொலி - பகுதி 3 வேல்டு-கெஸெடர்.கொம் இணையதளத்தில் இந்திய வரைபடம் மேப்ஸ் ஆஃப் இந்தியா. கொம் இணையதளத்தில் இந்திய வரைபடம் பகுப்பு:இந்திய ஆட்சிப் பிரிவுகள் * பகுப்பு:இந்தியப் பட்டியல்கள் பகுப்பு:இந்திய நிர்வாக அலகுகள் பகுப்பு:இந்திய அரசு
திரிபுரா
https://ta.wikipedia.org/wiki/திரிபுரா
திரிபுரா இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அகர்தலாவாகும். பேசப்படும் முக்கிய மொழிகள், வங்காள மொழியும் காக்பரோக்குமாகும். நாட்டின் மூன்றாவது மிகச்சிறிய மாநிலமான இது 10,491 கிமீ (4,051 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் மாநிலத்தில் 3,671,032 மக்கள் தொகை இருந்தனர். இது நாட்டின் மக்கள் தொகையில் 0.3% ஆகும். மேலும் வடகிழக்கு இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட இரண்டாம் மாநிலம் இதுவாாகும். வரலாறு சுதந்திரத்துக்கு முன் திரிபுரா முடியாட்சி நாடாக இருந்தது. இம் முடியாட்சிக்கு எதிராக எழுந்த கணமுக்தி பரிஷத் இயக்கம், முடியாட்சியை வீழ்த்தி, நாட்டை இந்தியாவுடன் இணைத்தது. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது பெருமளவு வங்காள இந்து மக்கள் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக வந்து திரிபுரா மாநிலத்தில் குடியேறினர். அரசியல் திரிபுரா மாநிலம் 60 சட்டமன்ற தொகுதிகளையும், இரண்டு நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளையும், ஒரு நாடாளுமன்ற மாநிலங்களவைத் தொகுதியும் கொண்டது. திரிபுரா மாநில அரசு மூன்று பிரிவுகளை உடையது. செயலாக்கப் பிரிவு, நீதிப் பிரிவு, சட்டமியற்றும் பிரிவு ஆகியவையே அவை. செயலாக்கப் பிரிவில் அமைச்சர்களும், அவர்களின் தலைவராக முதலமைச்சரும் இருப்பர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். மாநிலத்தை 60 தொகுதிகளாகப் பிரித்து, தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகள் பெற்றவர் அந்த தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் ஆவார். சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் சபாநாயகராகவும், மற்றொருவர் துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்படுவர். சபாநாயகரின் தலைமையில் சட்டமன்றக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. சபாநாயகர் இல்லாத சமயத்தில் துணை சபாநாயகர் சட்டமன்றக் கூட்டத்தை நடத்துவார். சட்டமன்ற உறுப்பினர்கள் ஐந்தாண்டு காலம் வரை பதவியில் இருப்பர். திரிபுரா நீதித்துறையின் உயர் அமைப்பாக திரிபுரா உயர் நீதிமன்றம் செயல்படும். இதன் கீழ் பல நீதிமன்றங்கள் இயங்குகின்றன ஆளுநரை இந்தியக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட . கட்சியோ, அதன் கூட்டணியோ ஆட்சி அமைக்க அழைக்கப்படுவர். இந்த மாநிலத்தில் இருந்து இரு உறுப்பினர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநிலங்களவைக்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஊர்கள் ஊராட்சித் தலைவரின் கீழும், பழங்குடியின மக்கள் வாழும் இடங்கள் அவர்களின் தன்னாட்சிக் குழுவின் ஆட்சியின் கீழும் செயல்படுகின்றன. இந்தக் குழு 527 பழங்குடியின கிராமங்களின் உள்ளாட்சிக்கு துணை புரிகிறது. மாவட்டங்கள் திரிபுரா மாநிலம் எட்டு வருவாய் மாவட்டங்களை கொண்டது. அவைகள்; தெற்கு திரிப்புரா மாவட்டம்‎ மேற்கு திரிப்புரா மாவட்டம்‎ வடக்கு திரிப்புரா மாவட்டம்‎ தலாய் மாவட்டம்‎ உனகோடி மாவட்டம்‎ கோமதி மாவட்டம்‎ கோவாய் மாவட்டம்‎ சிபாகிஜாலா மாவட்டம்‎ மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி திரிபுரா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை ஆக 3,673,917 உள்ளது. நகர்புறங்களில் 26.17% மக்களும், கிராமப்புறங்களில் 75.83% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 14.84% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,874,376 ஆண்களும் மற்றும் 1,799,541 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 960 வீதம் உள்ளனர். 10,486 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 350 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 87.22% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.53% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 82.73% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 458,014 ஆக உள்ளது. Tripura Population Census data 2011 சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 3,063,903 (83.40%) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 316,042 (8.60%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 159,882 (4.35%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,070 (0.03%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 860 (0.02%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 125,385 (3.41%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 1,514 (0.04%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 5,261 (0.14%) ஆகவும் உள்ளது. மொழிகள் இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான வங்காளத்துடன் இந்தி மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. போக்குவரத்து விமானம் அகர்தலாவிலுருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிங்கர்பில் எனுமிடத்தில் உள்ள விமான நிலையம் உள்ளது. நாட்டின் குவாஹாத்தி, கொல்கத்தா, புதுதில்லி, சென்னை, அகமதாபாத், பெங்களூரு, மும்பை போன்ற முக்கிய நகரங்களுடன் வானூர்திகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. குவாஹாத்திக்குப் பிறகு வடகிழக்கு இந்தியாவில் இரண்டாவது பரபரப்பான விமான நிலையம் ஆகும். தொடருந்து வடகிழக்கு எல்லைப்புறத் தொடருந்து மண்டலத்தில் உள்ள அகர்தலா தொடருந்து நிலையம், அசாம் மாநிலத்தின் லாம்டிங் நகரத்தின் லாம்டிங் சந்திப்பு தொடருந்து நிலையம் வழியாக புதுதில்லியுடன் இணைக்கிறது.First Commercial Broad Guage Freight Train Arrives In Tripura பேருந்துகள் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக கௌஹாத்தி, சில்லாங் மற்றும் சில்சர் நகரங்களுடன் அகர்தலா இணைக்கப்பட்டுள்ளது. மாநில பேருந்துகள் குறைந்த அளவே உள்ளன. மேலும் அகர்தலாவிலிருந்து வங்காள தேசம் நாட்டின் தலைநகர் டாக்காவிற்கு செல்வதற்கு பேரூந்துகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகள் கொல்கத்தா வரை இயக்க இந்திய - வங்காள தேச அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. தட்பவெப்ப நிலை இதனையும் காண்க திரிபுரா பழங்குடியின வட்டாரங்களுக்கான தன்னாட்சி மாவட்டக் குழு மேற்கோள்கள் வெளியிணைப்புகள் திரிபுரா அரசின் உத்தியோகபூர்வ இணையதளம் பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும் பகுப்பு:வடகிழக்கு இந்தியா
இலட்சத்தீவுகள்
https://ta.wikipedia.org/wiki/இலட்சத்தீவுகள்
thumb|இலட்சத்தீவின் வரைபடம் இலட்சத்தீவுகள் (Lakshadweep) இந்தியாவிலுள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கவரத்தி ஆகும். இது மொத்தம் 30 சதுர கி மீ பரப்பளவு கொண்ட 36 தீவுகளாக அமைந்துள்ளது. கேரளக் கரைக்கு அப்பால் 200 முதல் 300 கிமீ தூரத்தில், அரபிக் கடலில் இது உள்ளது. லட்சத்தீவுகள் கேரள உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது. முக்கிய தீவுகள் கவராட்டி, மினிக்கோய், அமினி என்பனவாகும். 10 மக்கள் வாழும் தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆகும். வரலாறு இலட்சத்தீவுகளைப் பற்றிய பழைமையான குறிப்பு தமிழ் நூலான புறநானூற்றில் காணக்கிடைக்கிறது. மற்றொரு சங்க நூலான பதிற்றுப்பத்து சேர மன்னர்களின் ஆளுகையில் இத்தீவுகள் இருந்ததைச் சுட்டுகிறது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவக் கல்வெட்டு தீப லக்ஷம் என்னும் பெயரில் பல்லவ அரசுக்குட்பட்ட பகுதியாக இருந்ததைக் காட்டுகிறது. கேரளத்தின் கடைசி சேர மன்னரான சேரமான் பெருமாள் காலத்தில் இந்த தீவுகளில் முதல் குடியேற்றங்கள் நிகழ்ந்ததாகப் புராணக்கதைகள் குறிப்பிடுகின்றன.“Lakshadweep & It's People 1992-1993” Planning Department, Govt. Secretariat, Lakshadweep Administration, Kavaratti. Page: 12. தீவுக் கூட்டத்தில் குடியேற்றங்கள் நிகழ்ந்த பழமையான குடியேற்றங்கள் அமைந்த தீவுகள் அமீனி, கால்பினி ஆண்ட்ரோட், கவரத்தி மற்றும் அகட்டி போன்றவை ஆகும். கி.பி. ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் புத்தமதம் இந்த பிராந்தியத்தில் நிலவியதாக தொல்பொருள் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இலட்சத்தீவு மக்கள் முதலில் இந்து மதத்தைப் பின்பற்றியதாகவும், 14ஆம் நூற்றாண்டுவாக்கில் இசுலாமிய மதத்தைத் தழுவியதாகவும் நம்பப்படுகிறது. பிரபலமான நம்பிக்கையின்படி, கி.பி. 661 இல் உப்பிதாலா என்ற அரேபியரால் இஸ்லாம் இலட்சத்தீவுக்கு கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகிறது. அவரது கல்லறை ஆண்ட்ரோட் தீவில் அமைந்துள்ளது. 11 ஆம் நூற்றாண்டின் போது, தீவுகள் சோழ அரசின் ஆட்சியின் கீழ் வந்தன அதன் பின்னர் கேனானோர் இராச்சியத்துக்கு உட்பட்ட பகுதியாக ஆனது. 1787 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானின் ஆட்சியின் கீழ் அமினிதிவி தீவுகள் (ஆண்ட்ரோத், அமிணி, கத்மத், கில்தான், சேத்லாத் மற்றும் பிட்ரா) வந்தன. மூன்றாம் ஆங்கில-மைசூர் போருக்குப் பின்னர் அவை பிரித்தானியக் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. அவை தென் கான்ரா நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டன. இந்த தீவுகள் பின்னர் பிரித்தானிய ஆட்சியின் போது சென்னை மாகாணத்தின் மலபார் மாவட்டத்துணன் இணைக்கப்பட்டன. விடுதலைக்குப் பின்பு 1956 நவம்பர் 1 அன்று, இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது, லட்சத்தீவுகள் சென்னை மாகாணத்தில் இருந்து பிரித்து, நிர்வாக நோக்கங்களுக்காக ஒரு தனியான யூனியன் பிரதேசமாக அமைக்கப்பட்டது. 1973 நவம்பர் 1 அன்று, லட்சத்தீவுகள், மினிகோய் மற்றும் அமிண்டிவி தீவுகள் ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து இலட்சத்தீவுகள் என அழைக்கப்பட்டது. மத்திய கிழக்கிலிருந்து இந்தியாவுக்கு வரும் முக்கிய கப்பல் பாதைகளைப் பாதுகாக்க, ஒரு இந்திய கடற்படை தளமான, ஐஎன்எஸ் டிவீரகாஷாக், கவரட்டி தீவில் அமைக்கப்பட்டது. மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இலட்சத்தீவுகளின் மொத்த மக்கள் தொகை 64,473 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 21.93% மக்களும், நகரப்புறங்களில் 78.07% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 6.30% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 33,123 ஆண்களும் மற்றும் 31,350 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 946 வீதம் உள்ளனர். 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இலட்சத்தீவுகளில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2,149 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 91.85 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 95.56 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 87.95 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,255 ஆக உள்ளது. Lakshadweep Population Census data 2011 சமயம் இலட்சத் தீவுகளில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,788 (2.77 %) ஆகவும் இசுலாமிய மலையாளிகள் மக்கள் தொகை 62,268 (96.58 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 317 (0.49 %) ஆகவும், பிற சமயத்தினர் நூற்றுக்கும் குறைவாகவே உள்ளனர். மொழிகள் இலட்சத் தீவின் ஆட்சி மொழியான மலையாள மொழியுடன், ஆங்கிலம் மற்றும் திவேகி, ஜெசெரி ஆகிய வட்டார மொழிகள் பேசப்படுகின்றன. பொருளாதரம் மீன் பிடித்தல், மீன் பதப்படுத்தம் தொழில்கள் மற்றும் மீன் ஏற்றுமதி செய்தல், இத்தீவில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. சுற்றுலா மூலம் அதிக வருவாய் ஈட்டுகிறது. போக்குவரத்து மற்றும் சுற்றுலா அகத்தி வானூர்தித் தளம் கொச்சி மற்றும் பெங்களூரு நகரங்களை வான் வழியாக இணைக்கிறது. மேலும் ஆறு பயணி கப்பல்கள் கொச்சி துறைமுகத்துடன் கடல் வழியாக இணைக்கிறது. இந்தியச் சுற்றுலா பயணிகளும் இலட்சத் தீவுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு இந்திய அரசிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலட்சத்தீவின் சில பகுதிகளுக்கு சுற்றுலா அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பங்கராம் தீவு தவிர மற்ற பகுதிகளில் மதுபானம் அருந்த தடை செய்யப்பட்டுள்ளது. மேற்கோள்கள் வெளியிணைப்புகள் பகுப்பு:இந்தியத் தீவுகள்
நாகாலாந்து
https://ta.wikipedia.org/wiki/நாகாலாந்து
நாகாலாந்து (Nagaland) இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன. இதன் மாநிலத் தலைநகரம் கோகிமா ஆகும். நாகாலாந்து பதினோறு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம் மாநிலத்தில் 16 முக்கிய இனக்குழுக்கள் வாழுகின்றன. இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மொங்கொலொயிட் இனப்பிரிவைச் சேர்ந்த நாகா இனக் குழுக்கள் ஆவார். நாகாலாந்து திசம்பர் 1, 1961இல் ல் ஒரு மாநிலமாக ஆக்கப்பட்டது. பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினத்தவராக உள்ள இம்மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) -0.58% ஆக குறைந்துள்ளது. Nagaland Population Census data 2011 இம்மாநிலத்தின் ஆட்சி மொழி ஆங்கிலம் ஆகும். வரலாறு பழமைத்தன்மை thumb|200px|right|1875 ஆம் ஆண்டைச் சேர்ந்த அங்கமி நாகா பழங்குடியினரின் ஓவியம். நாகா மக்களின் பண்டைய வரலாறு தெளிவாக இல்லை. வெவ்வேறு காலகட்டங்களில் குடியேறிய பழங்குடிகள், தற்போது வடகிழக்கு இந்தியாவாக உள்ள பகுதிகளில் குடியேறி, தங்களின் இறையாண்மை உடைய மலை நாடுகளையும் கிராமங்களையும் நிறுவியுள்ளனர். இவர்கள் வடக்கு மங்கோலியப் பகுதி, தென்கிழக்கு ஆசியா அல்லது தென்மேற்கு சீனாவிலிருந்து வந்தவர்களா என்பதற்கான எந்த பதிவும் இல்லை. தவிர, அவர்களின் தோற்றமானது இந்தியாவின் கிழக்குப் பகுதியிலிருந்தும், பொ.ஊ. 1228ஆம் ஆண்டில் அகோமின் வருகைக்கு முன்பாக இன்றைய நாகா மக்கள் குடியேறியதாக வரலாற்று பதிவுகளும் காட்டுகின்றன. 'நாகா' என்ற சொல்லின் தோற்றம் கூட தெளிவாக இல்லை. பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஆனால் சர்ச்சைக்குரிய கருத்தாக, இந்தப் பெயர் பர்மிய சொல்லான 'நாக' அல்லது 'நாகா' என்பதிலிருந்து உருவானது, அதாவது காதணிகளைக் கொண்ட மக்கள் என்பது இதன் பொருள். வேறு சிலர் அதை குத்தப்பட்ட மூக்கு என்று பொருள் கூறுகின்றனர். நாக்கா (naka) மற்றும் நாகா (naga) இரண்டும் பர்மாவில் ஒன்றுபோலவே உச்சரிக்கப்படுகிறது. நாகாலாந்தின் பழங்கால பெயர் 'நாகனச்சி' அல்லது 'நாகன்சி', இது நாகா மொழியிலிருந்து வந்தது. தெற்காசியாவில் ஐரோப்பிய காலனித்துவத்தின் வருகைக்கு முன்னர், நாகா பழங்குடியினர், மீட்டி மக்கள் போன்ற இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளின் மீது பர்மியர்களால் பல போர்கள், துன்புறுத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. படையெடுப்பாளர்கள் "தலையை வெட்டி வேட்டையாடவும்", இந்த பழங்குடி இனத்தவரின் செல்வங்களையும் தேடி வந்தனர். வடக்கு இமயமலையில் வாழும் மக்களைப் பற்றி பர்மிய வழிகாட்டிகளை பிரித்தானியர் கேட்டபோது, அவர்கள் 'நாகா' எனக் கூறினர். இது 'நாக' எனப் பதிவு செய்யப்பட்டு, அதன் பிறகு பயன்படுத்தப்பட்டது. பிரித்தானிய இந்தியா நாகா மக்கள் எந்த முடியாட்சிக்குக்கீழும் இல்லாமல் இறையாண்மையொடு பல தலைமுறைகளாக இருந்து வந்தனர். ஆனால் முதல் முறையாக பிரித்தானியர் 1832இல் அசாமிற்கும் மணிப்பூருக்கும் இடையே நேர்வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தபோது நாகாலாந்திற்குள் நுழைந்தனர். அவர்களை அப்போது அனைத்து நாகா கிராமங்களும் எதிர்த்தன. பிரித்தானியர் நாகாலாந்தை தங்கள் ஆளுமைக்குக்கீழ் கொண்டுவர எண்ணிச் செயல்பட்டனர். அவர்களால் அவ்வளவு எளிதில் அதைச் செய்யமுடியவில்லை. 1879இல் தற்போது நாகாலாந்தின் தலைநகரமாக இருக்கும் கோகிமாவிற்கு அருகில் உள்ள கிராமத்தில் நடந்த போரில் பிரித்தானியர் நாகா மக்களை முறியடித்தனர். பின்னர் 1880 இல் அமைதிப் பேச்சுவார்த்தை வழியாக நாகாலாந்து பிரித்தானியரின் ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது. பிரித்தானிய ஆட்சியின் காரணமாக, அதற்கு முன் தனித்தனி கிராமங்களாக இருந்த நாகா மக்களெல்லாம் நாகா என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். இது நாகா மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்த காரணமாயிற்று. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்துவந்த கிருத்துவ மறைபணியாளர்களால் பிரித்தானிய இந்தியாவின்,Gordon Pruett, Christianity, history, and culture in Nagaland, Indian Sociology January 1974 vol. 8 no. 1 51-65 நாகாலாந்தின் நாகா பழங்குடியினர் மற்றும் அண்டை மாநில மக்களை அவர்களின் ஆன்ம வாத சமயத்திலிருந்து கிறித்துவத்துக்கு மாற்றினர்.Tezenlo Thong, "'Thy Kingdom Come': The Impact of Colonization and Proselytization on Religion among the Nagas," Journal of Asian and African Studies, no. 45, 6: 595–609 20ஆம் நூற்றாண்டு 1944 ஆம் ஆண்டில், நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய இராணுவம் சப்பானிய இராணுவத்தின் உதவியுடன் இந்தியாவின் மீது பர்மா வழியாக படையெடுத்து. அது கோகிமா வழியாக இந்தியாவை விடுவிக்க முயன்றது. மக்கள் வெளியேற்றப்பட்டனர். பிரித்தானிய இந்திய வீரர்களால் கோகிமாவின் பகுதி 1944 சூன் மாதம் பிரித்தானியரால் விடுவிக்கப்பட்டது. இந்திய தேசிய ராணுவம் பாதி வீரர்களை இழந்து, பட்டினியால் பலரை இழந்ததுடன், பர்மா வழியாக வெளியேறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாயினர்.. நாகா இயக்கம் 1929 ஆம் ஆண்டில், சைமன் குழுவிடம் நாகா கிளப் (பின்னர் இது நாகா தேசிய அமைப்பானது) நாகா மக்களின் கோரிக்கை சமர்பித்தது. அதில் பிரித்தானிய இந்தியாவில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் புதிய வரிகளில் இருந்து தங்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வது, பிரித்தானிய இந்தியா தங்களுக்கு விடுதலை அளிக்கவேண்டுமென்று எண்ணினால் தயவுகூர்ந்து தங்களை யாரின் கீழும் விட்டுவிடாமல் நாகாலாந்து பழைய காலங்களில் எப்படி இருந்ததோ அப்படியே விட்டுவிடும்படி கேட்டுக்கொள்கிறோம். என கோரினர்.A.M. Toshi Jamir, 'A Handbook of General Knowledge on Nagaland' (2013, 10th Edition) pg. 10SK Sharma (2006), Naga Memorandum to the Simon Commission (1929), Mittal Publications, New Delhi India 1929 முதல் 1935 வரையான காலப்பகுதியில், நாகா மக்களின் இறையாண்மைப் புரிதல் என்பது பாரம்பரிய பிராந்திய வரையறை அடிப்படையில் 'சுய-ஆட்சி' ஆகும். 1935 முதல் 1945 வரையான காலப்பகுதியில், நாகர்கள் அசாமில் மட்டுமே தன்னாட்சி உரிமையைக் கோரியிருந்தனர். 1946 ஆகத்து முதல் நாள் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான நேரு, நாகா மக்கள் இந்திய ஒன்றியத்தில் சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உள்ளூர் தன்னாட்சி உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை நிர்வாகத்தின் பரந்த பகுதியினருக்கு வழங்கப்படும் என்றார். 1946க்குப் பிறகு நாகர்கள் தங்கள் தனித்தன்மை வாய்ந்த ஒரு தனி நாடாகவும் சுயாதீனமாக வாழ தங்களுக்குள்ள முழு உரிமைக்காகவும் வலியுறுத்தினர். 1947 சூலை 19, இல் இந்திய விடுதலைக்கு முன்னர் நாகா தேசிய அமைப்பின் பிரதிநிதிகள் தில்லியில் காந்தியைச் சந்தித்தனர். அவர்களுடன் நீண்ட கலந்துரையாடல் நடத்திய காந்தி, “இந்திய ஒன்றியத்துடன் இணைய விரும்பவில்லை என்றால், சுதந்திரமாக இருப்பதற்கு நாகாலாந்திற்கு அனைத்து உரிமையும் உண்டு” என்று உறுதியளித்தார். அதன்படி நாகாலாந்து 1947 ஆகத்து 14இல் தன் சுதந்திரத்தை அறிவித்தது. இதை இந்திய ஒன்றிய அரசு எதிர்த்தது. நாகா மக்களின் ஒருமித்த கருத்தை இந்தியாவிற்குத் தெரிவிக்க பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய குடியரசுத்தலைவருக்கு மனு அளிக்கப்பட்டது. அது பொருட்படுத்தப்படாததால் 1951 மே 16இல் பொது வாக்கெடுப்பு நடத்தி அந்த வாக்குச்சீட்டுகளை ஒன்றிணைத்து, 80 பவுண்ட் கொண்ட ஒரு புத்தகமாக இந்தியக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பினார்கள். 1952ல் இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றபோது நாகாலாந்து மக்கள் அதனை முழுமையாகப் புறக்கணித்தனர். 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, நாலாந்து அசாம் மாகாணத்தின் பகுதியாக ஆக்கப்பட்டிருந்தது. இதனால் நாகர்களின் ஒரு பிரிவினரிடையே தேசியவாத நடவடிக்கைகள் உருவாயின. இந்த இயக்கமானது தொடர்ந்த வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுத்தது, அது அரசாங்க மற்றும் சிவில் உள்கட்டமைப்பு சேதப்படுத்தியது, அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்களைத் தாக்கியது. இதைத் தொடர்ந்து இந்திய ஒன்றிய அரசு 1955 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தை அனுப்பியது. 1957ஆம் ஆண்டில் நாகா தலைவர்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டது அதன்படி நாகா மலைகளைக் கொண்டு ஒரு தனி பகுதியை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. இதில் திருப்தி அடையாத பழங்குடியினர், மாநிலத்துக்கள் மீண்டும் வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். பழங்குடியினர் இராணுவம் மற்றும் அரசாங்க நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றின்மீது தாக்குதல்கள்களை அதிகரித்தனர். 1958இல் நாகாலாந்தில் இந்திய அரசானது ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் இயற்றியது. மூன்று பேருக்கு ஒரு இரானுவ வீரர் என்ற விகிதத்தில் இராணுவம் அங்கு குவிக்கப்பட்டது. பின்னர் துணை இராணுவப் படையினால் பலர் கொல்லப்பட்டனர். 1960 சூலை மாதம் பிரதமர் நேரு மற்றும் நாகா மக்கள் மாநாட்டு தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர், 16- அம்ச ஒப்பந்தம் உருவானது. இதன்படி, நாகாலாந்தை இந்திய ஒன்றியத்துக்கு உட்பட்ட முழுமையான மாநிலமாக இந்திய அரசு அங்கீகரித்தது. இந்த ஒப்பந்தத்தின் இரண்டாவது அம்சத்தின்படி நாகாலாந்து இந்திய வெளியுறவுத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. வருமான வரிவிலக்கு போன்ற அம்சங்களும் இதில் அடங்கும். இந்த 16 அம்ச ஒப்பந்தம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு ‘Article371A’’ உருவாக்கப்பட்டது. அதன்படி, 1961ஆம் ஆண்டின் நாகாலாந்து இடைக்கால விதிமுறை விதிகளின் கீழ், அந்த பிரதேசமானது, பழங்குடியினர், பழக்கவழக்கங்கள் மற்றும் அந்தந்த பழங்குடியினரின் பயன்பாடு ஆகியவற்றின்படி பழங்குடியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இடைக்கால அமைப்புக்குகீழ் விடப்பட்டது. இதன் விளைவாக, நாகாலாந்து மாநிலமானது 1962ஆம் ஆண்டு நாகலாந்து மாநில சட்டம் உருவானது. 1963ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி இடைக்காலக் கால அமைப்பு கலைக்கப்பட்டு நாகலாந்து மாநிலமானது முறையாக உருவாக்கப்பட்டது 1963 திசம்பர் 1 அன்று கோகிமாவானது மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது. 1964ஆம் ஆண்டு சனவரி மாதம் நடந்த தேர்தல்களுக்குப் பிறகு, 1964 சனவரி 11, அன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாகாலாந்து சட்டமன்றம் அமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தும் கிளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்ந்தன. பேச்சுவார்த்தைகள் அறிவிக்கப்பட்டன, பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. ஆனால் இதனால் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவில்லை. 1973ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் தன்னிச்சையாக வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குக் கீழ் இருந்த நாகாலாந்தை உள்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வந்தது. நாகாலாந்து சட்டமன்றத்தில், மீண்டும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்குக் கீழ் கொண்டு வரவேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1975ஆம் ஆண்டு மார்ச் மாதம், பிரதமர் இந்திராகாந்தியால் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. 1975 நவம்பரில், மிகப்பெரும் கிளர்ச்சி குழுக்களின் தலைவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு, இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார்கள். ஆனாலும் ஒரு சிறிய குழு இதை ஏற்றுக்கொள்ளவில்லை மேலும் அவர்களது கிளர்ச்சி நடவடிக்கைகள் தொடர்ந்தன.Nagaland, Encyclopædia Britannica (2011) thumb|நாகாலாந்தின் லாங்வா கிராமத்தில் ஒரு ஹெட்ஹண்டர் மாவட்டங்கள் thumbnail|right|நாகாலாந்து மாநிலத்தின் மாவட்டங்கள் இம்மாநிலத்தை நிர்வாக வசதிக்காக 16 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்; திமாப்பூர் கிபைர் கோகிமா லோங்லெங் மோகோக்சுங் மோன் பெரேன் பேக் துவென்சங் வோக்கா சுனெபோட்டோ நோக்லாக் மாவட்டம் செமினியு சமத்தோர் நியுலாந்து சூமௌகெடிமா அரசியல் நாகாலாந்து சட்டமன்றத்தில் 60 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஏனைய மாநிலங்களைப் போலவே, முதல்வரே அரசின் தலைவராக இருப்பார். இந்த மாநிலம் முழுவதும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.. மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 16,579 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட நாகாலாந்து மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,978,502 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 71.14% மக்களும், நகரப்புறங்களில் 28.86% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் -0.58% ஆக குறைந்துள்ளது. மக்கள் தொகையில் 1,024,649 ஆண்களும் மற்றும் 953,853 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 931 வீதம் உள்ளனர். 16,579 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 119 வீதம் மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 79.55 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 82.75 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 76.11 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 291,071 ஆக உள்ளது. நாகா இன மக்கள் இம்மாநிலத்தில் பெரும்பான்மை மக்கள் ஆவார். சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 173,054 (8.75 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 48,963 (2.47 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,739,651 (87.93 %) ஆகவும்,, பௌத்த சமய மக்கள் தொகை 6,759 (0.34 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,890 (0.10 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 3,214 (0.16 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 2,316 (0.12 %) ஆகவும் உள்ளது. மொழிகள் இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் பழங்குடி இன மொழியுமான நாகா மொழி மற்றும் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. போக்குவரத்து thumb|நாகாலாந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலை இம்மாநிலத்தில் தொடருந்து மிகக் மிகக் குறைந்த அளவில் நீளத்தில் இருப்புப்பாதை கொண்டுள்ளது. நாகாலாந்து மாநில பேருந்துகள் குறைந்த அளவே உள்ளன. இம்மாநிலத்தில் தேசிய மற்றும் மாநில சாலைகள் 15,000 கி மீ நீளத்தில் உள்ளது. ஹார்ன்பில் விழா நாகாலாந்தின் பழங்குடிமக்களின் விழாவான ஹார்ன்பில் விழா உலகப்புகழ் பெற்றது. திட்டங்கள் இயற்கை வளம் செறிந்த பகுதியாக இருப்பினும் போக்குவரத்தில் முழுமையாக இணைக்கப்படாததால், இந்தியாவின் மற்ற பகுதி மக்கள் கூட இப்பகுதியைச் சுற்றுலாவிற்குத் தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை தராத சூழ்நிலை உள்ளது. எதிர்காலத்தில் வடகிழக்கு இந்திய மாணவர்களுக்கு என்று இஷான் உதய் எனும் கல்வி உதவிக்கட்டணத் திட்டமும், இந்திய நாட்டின் பிற பகுதிகளில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்ற கல்வி நிலையங்களைச் சென்று பார்க்க வருடந்தோறும் அனுமதியும் ஏற்பாடும் செய்யும் இஷான் விகாஸ் எனும் திட்டமும் செயற்படுத்தப்படும் என்றும், தகவல் தொழில்நுட்பப் பணி, அவுட்சவுர்சிங் வேலைவாய்ப்புகளை ஈர்க்கும் ஏற்பாடும் செய்யப்பட உள்ளன என்றும் குறிப்பிடப்படுகின்றது.http://indiatoday.intoday.in/story/modi-nagaland-hornbill-festival-northeast-has-natural-economic-zones/1/404568.htmlDD News; 01.12.2014; (TV channel) இதனையும் காண்க நாகா மக்கள் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளம் நாகா கிளர்ச்சிக் குழுவுடன் இந்திய அரசு அமைதி உடன்பாடு பகுப்பு:நாகாலாந்து பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும் பகுப்பு:வடகிழக்கு இந்தியா
மேகாலயா
https://ta.wikipedia.org/wiki/மேகாலயா
மேகாலயா (Meghalaya) வடகிழக்கு இந்தியாவின் அமைந்துள்ள ஏழு மாநிலங்களில் ஒன்று. இம்மாநிலத்தில் காரோ மொழி மற்றும் காசி மொழியும் பேசப்படுகிறது. அமைவிடம் இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்துக்கும், வங்காள தேசத்துக்கும் இடையில் மலைப்பாங்கான பிரதேசத்தில் ஒரு ஒடுங்கிய பட்டைபோன்று, 300 கிமீ நீளமும், 100 கிமீ அகலமும் உடையதாக உள்ளது. இதன் மொத்தப் பரப்பளவு 22,429 ச. கிமீ ஆகும். இதன் தெற்கெல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளன. இதன் தலை நகரம் ஷில்லாங் ஆகும். வரலாறு மேகாலயா ஆரம்பத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. பின்னர் அம்மாநிலத்தின் இரு மாவட்டங்களைத் தனியாகப் பிரித்து; ஐக்கிய காசி மலைகள், ஜெயின்டியா மலைகள், காரோ மலைகள் ஆகியபகுதிகளைக் கொண்டு 21 ஜனவரி 1972 ல் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. மேகாலயா முழு மாநிலத் தகுதியை அடைவதற்கு முன், 1970 இல் அரை தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டது. மேகாலயா பகுதியை பொ.ஊ. 19 ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும் காலத்திற்கு முன்பு வரை காஸி, காரோ, ஜெயின்டியா ஆகிய பழங்குடியினர் தங்கள் சொந்த அரசுகளைக் கொண்டு இருந்தன. பின்னர், பிரித்தானியர் 1835 இல் மேகாலயாவை அசாமுடன் இணைத்தனர். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் மேகாலயப் பகுதி அரை சுயாட்சி உரிமையைக் கொண்டதாக இருந்தது. கர்சன் பிரபு காலத்தில் 16 அக்டோபர் 1905 இல் மேற்கொண்ட வங்கப் பிரிவினையின்போது, மேகாலயாவானது புதிய கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. எனினும், வங்கப்பிரிவினை திரும்பப்பெறப்பட்ட 1912 இன் போது, மேகாலயா அசாம் மாகாணத்தின் ஒரு பகுதியாக மாறியது. 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், இன்றைய மேகாலயா அசாமின் இரண்டு மாவட்டங்களாக அசாம் மாநிலத்தில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட சுயாட்சியை அனுபவித்து. 1960 இல் தனி மலை மாநில இயக்கம் தொடங்கப்பட்டது.History of Meghalaya State Government of India அசாம் மறு சீரமைப்புச் (மேகாலயா) சட்டம் 1969 இன்படி மேகாலயா பகுதி சுயாட்சி அதிகாரம் கொண்ட பகுதியாக ஆனது. இச்சட்டம் 1970 ஏப்ரல் 2 இல் அமலுக்கு வந்து, இதன்பிறகு அசாமிலிருந்து மேகாலயா என்னும் தன்னாட்சி மாநிலம் பிறந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாவது அட்டவணைக்கு ஏற்ப மேகாலயா தன்னாட்சிப் பகுதியில் 37 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றம் உருவாக்கப்பட்டது. 1971-ல் இந்திய நாடாளுமன்றத்தில் வடகிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம் 1971 நிறைவேற்றப்பட்டது, இதன்பிறகு மேகாலயா சுயாட்சிப் பகுதிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. மேகாலயா மாநிலம் தனக்கான சொந்த சட்டமன்றத்தோடு, 1972 சனவரி 21 அன்று மாநிலமாக ஆனது. புவியியல் thumb|right|சேராப்புஞ்சியில் ஒரு பெயர்ப் பலகை மேகாலயாவின் காலநிலை மிதமானது, ஆனால் அதிக ஈரப்பதன் கொண்டது. ஆண்டுக்கான மழை வீழ்ச்சி இம் மாநிலத்தில் சில இடங்களில் 1200 சமீ வரை காணப்படுவதால், இந்தியாவின் அதிக ஈரமான மாநிலமாக இது உள்ளது. தலை நகர் ஷில்லாங்குக்குத் தெற்கேயுள்ள நகரமான சேராப்புஞ்சி, ஒரு மாதத்தில் உலகிலேயே மிக அதிகமான மழை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் அண்மையிலுள்ள மௌசின்ரம் என்னும் கிராமம் ஓராண்டில் உலகிலேயே அதிக மழை பெற்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் 1/3 பகுதி காடாகும். மேற்கிலுள்ள காரோ குன்றுகளும், கிழக்கிலமைந்துள்ள காசி மலைகள், சைந்தியா குன்றுகள் போன்றனவும், உயரமானவை அல்ல. இங்கே ஷில்லாங் சிகரம், 1965 மீ உயரத்துடன் அதியுயர்ந்ததாக உள்ளது. தனித்துவமான சுண்ணாம்புக்கள் அமைப்புக்களோடு கூடிய பல குகைகள் இங்கே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பண்பாடு பண்பாட்டு அடிப்படையில், சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், "காசி"கள், "சைந்தியா"க்கள், "காரோ"க்கள் என்னும் இனத்தவர்களாவர். தீவிரவாத பிரச்சனைகள் மாநில அரசு சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதில் அக்கறை காட்டினாலும், தீவிரவாத இயக்கங்கள் காரோ குன்றுகளைத் தங்களது நடவடிக்கைகளுக்கான தளமாகப் பயன்படுத்துவதால் இம் முயற்சி அதிக வெற்றியடையவில்லை. நிர்வாகம் மாவட்டங்கள் மேகாலயாவில் 12 மாவட்டங்கள் அமைந்துள்ளன. அவை கிழக்கு காரோ மலை மாவட்டம் மேற்கு காரோ மலை மாவட்டம் வடக்கு காரோ மலை மாவட்டம் தெற்கு காரோ மலை மாவட்டம் தென்மேற்கு காரோ மலை மாவட்டம் கிழக்கு ஜைந்தியா மலை மாவட்டம் மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம் கிழக்கு காசி மலை மாவட்டம் மேற்கு காசி மலை மாவட்டம் தென்மேற்கு காசி மலை மாவட்டம் ரி-போய் மாவட்டம் கிழக்கின் மேற்கு காசி மலை மாவட்டம் மக்கள் தொகையியல் 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மேகாலயா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,966,889 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 79.93% மக்களும், நகரப்புறங்களில் 20.07% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 27.95% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,491,832 ஆண்களும் மற்றும் 1,475,057 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 989 பெண்கள் வீதம் உள்ளனர். 22,429 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 132 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 74.43 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 75.95 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 72.89 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 568,536 ஆக உள்ளது. சமயம் இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 342,078 (11.53 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 130,399 (4.40 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,213,027 (74.59 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 3,045 (0.10 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 627 (0.02 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 9,864 (0.33 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 258,271 (8.71 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 9,578 (0.32 %) ஆகவும் உள்ளது. இனக் குழுக்கள் இம்மாநிலத்தில் பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்களில் காசி பழங்குடிகள் 45% ஆகவும், கோச் பழங்குடிகள் 2.8% ஆகவும், ஜெயந்தியா பழங்குடி மக்கள் 2.5% ஆகவும், ஹஜோங் பழங்குடிகள் 1.8% ஆகவும், வங்காளிகள் 18% ஆகவும், நேபாளிகள் 8.26% ஆகவும், பிற இன மக்கள் 4.7% ஆக உள்ளனர். மொழிகள் இம்மாநிலத்தில் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் நேபாள மொழி, வங்காள மொழி, அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் முதன்மை பழங்குடி மக்களின் மொழியான காசி மொழி மற்றும் கரோ மொழி கள் அதிகம் பேசப்படுகிறது. அத்துடன் பிற வட்டார பழங்குடி மக்களின் மொழிகளும் பேசப்படுகிறது. போக்குவரத்து thumb|சிரபுஞ்சி அருகில் மாநில நெடுஞ்சாலை 5 thumb|ஷில்லாங் விமான நிலையத்தின் உட்புறக் காட்சி சாலைகள் மேகாலயா மாநிலத்தில் 7,633 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் உள்ளது. மேகலயாவின் தலைநகரம் சில்லாங், அசாம் மாநிலத்தின் சில்சார் நகரையும், திரிபுரா மாநிலத்தின் அகர்தலா நகரத்தையும் சாலைகள் இணைக்கிறது. மாநில பேருந்துகள் குறைந்த அளவே உள்ளன. மேலும் மாநில பேருந்து மூலம் குவஹாத்தி, சில்சார், துரா போன்ற நகரங்கள் பேருந்து சேவை உள்ளன. தொடருந்து ஷில்லாங் நகரத்தின் மெண்டிபதர் தொடருந்து நிலையம், 103 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அசாம் மாநிலத்தின் குவஹாத்தி நகரத்துடன் இருப்புப்பாதை மூலம் இணைக்கிறது. மெண்டிபதார்‌ ரயில் நிலையம் மேகாலயா மாநிலத்தில் உள்ளது விமான நிலையம் ஷில்லாங் விமான நிலையம் மூலம் வானூர்திகள் கொல்கத்தா நகரத்துடன் வான் வழியாக இணைக்கிறது. பொருளாதாரம் மலைகளாலும் காடுகளாலும் சூழ்ந்த இம்மாநிலத்தின் பொருளாதாரம் வேளான்மைத் தொழிலையே நம்பியுள்ளது. இங்கு பழத்தோட்டங்கள், மூங்கில் மரங்கள் அதிகம் உள்ளது. பிரம்பு மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்கள் அதிகம் விற்பனையாகிறது. குறிப்பிடத்தக்க பிரமுகர்கள் அடோல்ப் லு ஹிட்லர் மராக் டாக்டர். டி. டி. லபாங் இதனையும் காண்க சேராப்புஞ்சி மேற்கோள்கள் வெளியிணைப்புகள் மேகாலயா மாநில அதிகாரப்பூர்வ இணையத்தளம் பகுப்பு:வடகிழக்கு இந்தியா பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்
கணனிகள்
https://ta.wikipedia.org/wiki/கணனிகள்
REDIRECT கணினி
வர்க்கம் (கணிதம்)
https://ta.wikipedia.org/wiki/வர்க்கம்_(கணிதம்)
வர்க்க எண் அல்லது சதுர எண் (square number) என்பது ஒரு முழு எண்ணின் வர்க்கமாகும். ஒரு முழு எண்ணின் வர்க்கம் என்பது அம்முழு எண்ணை அவ்வெண்ணாலேயே பெருக்கக் ல எடுத்துக்காட்டாக 9 ஒரு வர்க்க எண். ஏனென்றால் எண் ஒன்பதை 3 × 3 என எழுதலாம். அதாவது 3 -ன் வர்க்கம் 9. ஒரு முழு எண்ணின் வர்க்கமும் ஓர் முழு எண்ணாகவே அமையும். ஒரு வர்க்க எண்ணானது, செவ்விய வர்க்கம் (perfect square) எனவும் அழைக்கப்படுகிறது.சில எழுத்தாளர்கள் விகிதமுறு எண்களின் வர்க்கங்களையும் முழு வர்க்கங்கள் எனக் குறிக்கின்றனர் வர்க்க எண்கள் நேர்ம எண்களாகவே இருக்கும். ஒரு நேர்ம எண் வர்க்க எண்ணாக இருக்க வேண்டுமானால் அதன் வர்க்கமூலம் ஒரு முழு எண்ணாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக √9 = 3, என்பதால் 9 ஒரு வர்க்க எண். எண் 1, முதல் முழு வர்க்கமாகக் கருதப்படுகிறது. எண் 0 -ஐ (0 × 0 = 0) என்று எழுத முடியும் என்பதால் எண் 0 மும் வர்க்க எண் தான் என வாதிடுவோரும் உண்டு. வர்க்கத்தை வழக்கமாக பெருக்கல் வடிவில் எழுதுவதில்லை. மாறாக n என்ற எண்ணின் வர்க்கம் n2 என எழுதப்படுகிறது. இதனை "n ஸ்கொயர்ட்" என வாசிக்க வேண்டும். n அளவு பக்கமுடைய ஒரு சதுரத்தின் பரப்பு n × n . அதாவது n2. எனவேதான் முழு வர்க்க எண்கள், சதுர எண்கள் என அழைக்கப்பட்டு வடிவ எண்களில் ஒரு வகையாகின்றன. வர்க்கம் என்ற கருத்துருவைப் பிற எண் கணங்களுக்கும் நீட்டிக்கலாம். விகிதமுறு எண்களை எடுத்துக்கொண்டால், ஒரு விகிதமுறு வர்க்க எண் என்பது இரு வர்க்க எண்களின் விகிதமாகும். மறுதலையாக, இரு வர்க்க எண்களின் விகிதம் ஒரு விகிதமுறு வர்க்க எண்ணாகும். எடுத்துக்காட்டு: 4/9 = (2/3)2). எடுத்துக்காட்டுகள் 602 -க்கும் கீழுள்ள வர்க்க எண்கள் : 02 = 0 12 = 1 22 = 4 32 = 9 42 = 16 52 = 25 62 = 36 72 = 49 82 = 64 92 = 81 102 = 100 112 = 121 122 = 144 132 = 169 142 = 196 152 = 225 162 = 256 172 = 289 182 = 324 192 = 361 202 = 400 212 = 441 222 = 484 232 = 529 242 = 576 252 = 625 262 = 676 272 = 729 282 = 784 292 = 841 302 = 900 312 = 961 322 = 1024 332 = 1089 342 = 1156 352 = 1225 362 = 1296 372 = 1369 382 = 1444 392 = 1521 402 = 1600 412 = 1681 422 = 1764 432 = 1849 442 = 1936 452 = 2025 462 = 2116 472 = 2209 482 = 2304 492 = 2401 502 = 2500 512 = 2601 522 = 2704 532 = 2809 542 = 2916 552 = 3025 562 = 3136 572 = 3249 582 = 3364 592 = 3481 பண்புகள் m புள்ளிகளை ஒரு சதுரமாக அடுக்க முடிந்தால், முடிந்தால் மட்டுமே எண் m ஒரு வர்க்க எண்ணாகும்: m = 12 = 1Image:Square number 1.pngm = 22 = 4Image:Square number 4.pngm = 32 = 9Image:Square number 9.pngm = 42 = 16Image:Square number 16.pngm = 52 = 25Image:Square number 25.png இங்கு n -ஆம் வர்க்க எண் n2. இது முதல் n ஒற்றை எண்களின் கூட்டுத்தொகைக்குச் சமம். இக்கூற்றைப் படத்தில் காணலாம். படத்தில் ஒவ்வொரு சதுரமும் அதற்கு முந்தைய சதுரத்துடன் ஒற்றை எண்ணிக்கைப் புள்ளிகளைச் சேர்ப்பதால் உண்டாவதையும் காணலாம். எடுத்துக்காட்டு: 52 = 25 = 1 + 3 + 5 + 7 + 9. ஒரு வர்க்க எண்ணிற்கும் அதற்கு முந்தைய வர்க்க எண்ணிற்குமுள்ள தொடர்பு: . அல்லது: . மற்றொரு வாய்ப்பாடு: . எடுத்துக்காட்டு: 2 × 52 − 42 + 2 = 2 × 25 − 16 + 2 = 50 − 16 + 2 = 36 = 62. ஒரு வர்க்க எண் அடுத்தடுத்த இரு முக்கோண எண்களின் கூடுதலுக்குச் சமம். அடுத்தடுத்த இரு வர்க்க எண்களின் கூடுதல் ஒரு மையப்படுத்தப்பட்ட வர்க்க எண். ஒவ்வொரு ஒற்றை வர்க்க எண்ணும் ஒரு மையப்படுத்தப்பட்ட எண்கோண எண்ணாகவும் இருக்கும் ஒரு வர்க்க எண்ணின் வகுத்திகளின் எண்ணிக்கை ஒற்றை யெண்ணாக இருக்கும். பிற எண்களின் வகுத்திகளின் எண்ணிக்கை இரட்டை யெண்ணாக இருக்கும். பத்தடிமானத்தில், ஒரு வர்க்க எண் 0,1,4,6,9, அல்லது 25 ஆகிய இலக்கங்களைக் கொண்டு பின்வருமாறு முடிவடையும்: 0 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், இரட்டை எண்ணிக்கை கொண்ட 0 -க்களைக் கொண்டு முடிவடையும். மேலும் கடைசியில் உள்ள 0-க்களுக்கு முந்தைய இலக்கங்கள் ஒரு முழு வர்க்க எண்ணைத் தரும். 102 = 100; 202 = 400;.... 1 அல்லது 9 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 1-ஐக் கொண்டு முடிவடையும். மேலும் கடைசியில் உள்ள 1-க்கு முந்தைய இலக்கங்கள் குறிக்கும் எண் நான்கால் வகுபடும். 112 = 121; 212= 441;...... 92=81; 292 = 841;..... 2 அல்லது 8 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 4 -ஐக் கொண்டு முடியும். மேலும் கடைசியில் உள்ள 4-க்கு முந்தைய இலக்கம் இரட்டை எண்ணாக இருக்கும். 122 = 14; 222 = 484;.... 82=64; 182=324;.... 3 அல்லது 7 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 9 -ஐக் கொண்டு முடியும். மேலும் கடைசியில் உள்ள 9-க்கு முந்தைய இலக்கங்கள் குறிக்கும் எண் நான்கால் வகுபடும். 32=9; 132=169;.... 72=49; 172=289;.... 4 அல்லது 6 -ல் முடியும் எண்ணின் வர்க்கம், 6 -ஐக் கொண்டு முடியும்.மேலும் கடைசியில் உள்ள 6-க்கு முந்தைய இலக்கம் ஒற்றை எண்ணாக இருக்கும். 42=16; 142=196; 242=576;.... 62=36; 162=256; 262=676.... 5 -ஐக் கொண்டு முடியும் எண்ணின் வர்க்கம், 25 -ஐக் கொண்டு முடியும்.மேலும் கடைசியில் உள்ள 25-க்கு முந்தைய இலக்கங்கம் 0, 2, 6, 25 -ஆக இருக்கும். 52=25; 252=625; 352=1225;..... பொதுவாக ஒரு பகா எண் p , வர்க்க எண் m -ஐ வகுக்குமானால் p2 -ம் m -ஐ வகுக்கும். வர்க்க எண் ஒரு செவ்விய எண் அல்ல. வர்க்க எண்களின் கூடுதல் காணும் வாய்ப்பாடு: -தொடரின் உறுப்புகள் (வர்க்கப் பிரமிடு எண்கள்): 0, 1, 5, 14, 30, 55, 91, 140, 204, 285, 385, 506, 650, 819, 1015, 1240, 1496, 1785, 2109, 2470, 2870, 3311, 3795, 4324, 4900, 5525, 6201... . சிறப்பு வகைகள் m5 வடிவில் உள்ள எண்ணின் வர்க்கத்தின் வடிவம் n25 இதில் n = m × (m + 1) 652 = 4225 m = 6; n = 6 × (6 + 1) = 42 m0 வடிவில் உள்ள எண்ணின் வர்க்கத்தின் வடிவம் n00 இதில் n = m2. 702 = 4900. m = 7; n = 72 = 49 ஈரிலக்க 5m (m -ஒன்றினிடம்) வடிவில் உள்ள எண்ணின் வர்க்கத்தின் வடிவம் AABB இதில் AA = 25 + m மற்றும் BB = m2. 572=3249. AA = 25+7 =32 மற்றும் 72=49, ஒற்றை மற்றும் இரட்டை எண்கள் இரட்டை எண்களின் வர்க்கங்கள் இரட்டை எண்களாகும். அவை நான்கால் வகுபடும் எண்களாகவும் இருக்கும். ஒற்றையெண்களின் வர்க்கங்கள் ஒற்றையெண்கள். இதிலிருந்து இரட்டை எண்களின் வர்க்க மூலங்கள் இரட்டை எண்களாகவும் ஒற்றை எண்களின் வர்க்க மூலங்கள் ஒற்றை எண்களாகவும் இருக்கும் என்பதை அறியலாம். பயன்பாடு இரு நேர்ம மெய்யெண்களின் பெருக்குத்தொகை ஒரு நேர்ம மெய்யெண்ணாகவும் இரு எதிர்ம மெய்யெண்களின் பெருக்குத்தொகையும் ஒரு நேர்ம மெய்யெண்ணாகவும் இருக்கும் என்பதால் எந்தவொரு வர்க்க எண்ணும் எதிர்ம எண்ணாக இருக்க முடியாது. எனவே மெய்யெண்களின் கணத்தில் ஒரு எதிர்ம மெய்யெண்ணின் வர்க்க மூலத்தைக் காணமுடியாது. இதனால் மெய்யெண்கள் கணத்தில் ஒரு பற்றாக்குறை ஏற்பட்டு கணிதவியலாளர்கள் கற்பனை மூலம் i -ஐ  −1 -ன் வர்க்க மூலங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்டு கலப்பெண்களை உருவாக்கினர். புள்ளியியலில் ஒரு தரவின் திட்ட விலக்கம் காண்பதற்கு வர்க்கம் (வர்க்க மூலம்) பயன்படுகிறது குறிப்பு மேற்கோள்கள் மேலும் படிக்க Conway, J. H. and Guy, R. K. The Book of Numbers. New York: Springer-Verlag, pp. 30–32, 1996. வெளி இணைப்புகள் Learn Square Numbers . Practice square numbers up to 144 with this children's multiplication game Dario Alpern, Sum of squares. A Java applet to decompose a natural number into a sum of up to four squares. Fibonacci and Square Numbersat The first 1,000,000 perfect squares Includes a program for generating perfect squares up to 10^15. எந்த ஒரு Positive integerஐயும் நான்கு அல்லது அதற்கு குறைந்த வர்க்க எண்களின் கூட்டுத் தொகையாக மாற்ற உதவும் நிரல் பகுப்பு:எண்கள் பகுப்பு:முழுஎண் தொடர்வரிசைகள் பகுப்பு:முழு எண்கள்
விழுப்புரம்
https://ta.wikipedia.org/wiki/விழுப்புரம்
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பட்டியல்
https://ta.wikipedia.org/wiki/தமிழ்த்_திரைப்படப்_பாடலாசிரியர்களின்_பட்டியல்
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்களின் பட்டியல் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. மதுரகவி பாஸ்கர தாஸ் அவினாசி மணி அறிவுமதி அண்ணாதாசன் கவிஞர் அண்ணாமலை அகத்தியன் அ. மருதகாசி எம். கே. ஆத்மநாதன் ஆலங்குடி சோமு ஆபாவாணன் ஆற்றலரசு ஆண்டாள் பிரியதர்சினி இரா. பழனிச்சாமி இலக்குமணதாஸ் இளையராஜா ஈழத்து இரத்தினம் உடுமலை நாராயணகவி கங்கை அமரன் கண்ணதாசன் கண்மணி சுப்பு கபிலன் கபிலன் வைரமுத்து கம்பதாசன் கலைக்குமார் காமகோடியன் காளிதாசன் கா. மு. ஷெரீப் கு. சா. கிருஷ்ணமூர்த்தி கு. மா. பாலசுப்பிரமணியம் குயிலன் மகேந்திரன் குலராஜ் கே. சி. எஸ். அருணாசலம் கே. டி. சந்தானம் கே. பி. காமாட்சிசுந்தரம் சுத்தானந்த பாரதியார் சிதம்பரநாதன் சினேகன் சி. எஸ். அமுதன் சுரதா தஞ்சை ராமையாதாஸ் தமிழ்அமுதன் (எ) ஆரல் தமிழ்அமுதன் கவிதாயினி தாமரை நா. காமராசன் நா. முத்துக்குமார் கவிஞர்.வெ.மதன்குமார் பஞ்சு அருணாசலம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பழனி பாரதி பாபநாசம் சிவன் பா. விஜய் பிறைசூடன் புலமைப்பித்தன் புரட்சிதாசன் பூவை செங்குட்டுவன் பேரரசு பொத்துவில் அஸ்மின் பொன்னடியான் பொன்னரசன் மதன் கார்க்கி ஏக்நாத் மருதகாசி மாயவநாதன் முத்துக்கூத்தன் முகவை ராஜமாணிக்கம் முத்துலிங்கம் மு. கருணாநிதி மு. மேத்தா யுகபாரதி ரோஷிணாரா பேகம் வாலி வித்வான் இலட்சுமணன் விவேகா வைரமுத்து விந்தை பாரதி- கவிஞர்,பாடகர் உமாதேவி நடிகர்கள், இயக்குநர்களில் பாடலாசிரியர்கள் டி. இராஜேந்தர் ஆர். வி. உதயகுமார் பேரரசு தனுஷ் மாரி செல்வராஜ் சிவகார்த்திகேயன் மேற்கோள்கள் பகுப்பு:தமிழகப் பாடலாசிரியர்கள்
செண்டிமீட்டர்
https://ta.wikipedia.org/wiki/செண்டிமீட்டர்
செண்டிமீட்டர் அல்லது சென்டிமீட்டர் (centimetre அல்லது centimeter) அல்லது சதமமீட்டர் (இலங்கை வழக்கு) (குறியீடு செமீ (cm) என்பது மெட்ரிக் முறையில் நீளத்தின் ஓர் அலகு ஆகும். இது மீட்டரின் நூறில் ஒரு பங்கிற்குச் சமமாகும். "செண்டி" (centi) என்பது பின்னத்தின் அனைத்துலக முறை அலகு முன்னொட்டாகும். இப்போது வழக்கொழிந்த சென்டிமீட்டர்-கிராம்-செகண்ட் (சிஜிஎஸ்) அலகுகளில் நீளத்தின் அடிப்படை அலகு செண்டிமீட்டர் ஆகும். இன்று பல அளவீடுகளுக்கு, 103 காரணிகளுக்கான SI முன்னொட்டுகள் (மில்லி-, கிலோ- போன்றவை) பெரும்பாலும் தொழில்நுட்பவியலாளரகளால் விரும்பப்படுகின்றன. இம்பீரியல் அளவை முறையில் உள்ள ஓர் அங்குலம் என்பது 2.54 செண்டிமீட்டர் நீளத்துக்கு ஈடாகும். இது சற்றேறக்குறைய ஆள்காட்டி விரல் அகலம் உடையது. நீளத்தின் ஏனைய அலகுகளும் செண்டிமீட்டரும் {| |- |rowspan=4 valign=top|1 செண்டிமீட்டர் |= 10 மில்லிமீட்டர்கள் |- |= 0.01 மீட்டர்கள் |- |= 0.393700787401574803149606299212598425196850 அங்குலங்கள் |- |  (ஓர் அங்குலத்தில் சரியாக 2.54 செண்டிமீட்டர்கள் உள்ளன.) |} அனைத்துலக முறை அலகுகளில் ஒரு மில்லிலீட்டர் என்பது ஒரு கன சென்டிமீட்டருக்கு சமமாகும். ஏனைய பயன்பாடுகள் நீள அளவீட்டைத் தவிர, செண்டிமீட்டர் பின்வரும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றது: மழை அளவீடு மூலம் அளவிடப்படும் மழையின் அளவைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. செமீ.கி/செக் (CGS) வழக்கில், செண்டிமீட்டர் கொண்மத்தை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது,1 செமீ கொண்மம் = பாரடுகள் வரைபடங்களில், செண்டிமீட்டர்கள் வரைபட அளவிலிருந்து உண்மையான உலக அளவில் (கிலோமீட்டர்கள்) மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. செமீ.கி/செக் (CGS) வழக்கில் ஓர் அலகான கெய்சரின் தலைகீழ், இதனால் அலை எண்ணின் SI-அல்லாத மெட்ரிக்கு அலகு: 1 கெய்சர் = 1 அலை/சென்டிமீட்டர்; அல்லது, பொதுவாக, (கெய்சர்களில் அலை எண்) = 1/(சென்டிமீட்டரில் அலைநீளம்). அலைஎண்ணின் SI அலகு தலைகீழ் மீட்டர், m−1 ஆகும். இவற்றையும் பார்க்க அலகு மாற்றம் மேற்கோள்கள் பகுப்பு:மீட்டர் பகுப்பு:நீள அலகுகள் பகுப்பு:SI அலகுகள்
திருமால்
https://ta.wikipedia.org/wiki/திருமால்
திருமால் அல்லது பெருமாள் வைணவ சமயத்தை பின்பற்றுபவா்கள் வணங்கும் கடவுள். சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு வளர்ச்சி பெற்றது. தமிழ் இலக்கியங்களில் திருமால் தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோனை வணங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறம் கொண்டவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது. பெருமாள் கோவில்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் பாடப்பெற்ற 108 பெருமாள் கோவில்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.http://temple.dinamalar.com/KoilList.php?cat=8 வழிபாடு வடகலை மரபினர் வேதங்கள் மற்றும் பஞ்சராத்திர ஆகமங்கள் போன்ற வடமொழி நூல்களைப் பின்பற்றியும் தென்கலை மரபினர் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் போன்ற தமிழ் நூல்களைப் பின்பற்றியும் பெருமாள் கோவில்களில் வழிபடுகின்றனர். காண்க விஷ்ணு வைணவ சமயம் மேற்கோள்கள் பகுப்பு:வைணவ சமயம் பகுப்பு:இந்துக் கடவுள்கள்
திருக்கேதீச்சரம்
https://ta.wikipedia.org/wiki/திருக்கேதீச்சரம்
திருக்கேதீச்சரம் அல்லது திருக்கேதீசுவரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோயிலாகும். இது மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ளது. நாயன்மார்களின் தேவாரப் பாடல் பெற்ற இரண்டு இலங்கைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இத்தலத்தின் மீது பதிகம் பாடியுள்ளார்கள். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஈழ நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். வரலாற்றுச் சுருக்கம் கேது வழிபட்ட தலமாதலால் திருக்கேதிச்சரமாயிற்றென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கோயில் மாதோட்டம் நகரில் அமைந்துள்ளது. சூரபதுமனின் மனையாளின் பேரனார் துவட்டா துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டமையால் திருவருள் கைகூடிப் பிள்ளைப் பேறு பெற்றார். பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார். துவட்டாவில் உருவாகியமையால் துவட்டாவெனவும் காலப் போக்கில் பெருநகரமாய் திகழ்ந்தமையால் மாதுவட்டாவெனவும் வழங்கிவந்தது. இத்தலதிலமைந்துள்ள பாலாவித் தீர்த்தத்தில் நீராடி இறுதிக்கடன் புரிவோர்க்கு புண்ணியம் கிட்டுமெனவும், இத்தீர்த்ததில் நீராடுவோர்க்குப் பிரமகத்தி போன்ற பாவங்கள் தீருமென்பதும் ஐதீகம். இந்நாட்டுப் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை இத்திருக்கோயிலிற்காற்றிய பெருமையும், வன்னி, யாழ்ப்பாண அரசர்கள் நித்திய நைமித்தியங்கள் இடையறாது செய்த பெருமையுங் கொண்ட திருத்தலம் இதுவாகும். கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும். அருள்மிகு திருநாவுக்கரசு சுவாமிகள் அவர்களின் திருதாண்டகத்திலும், சேக்கிழார் பெருமானின் பெரியபுராணத்திலும் இத்திருத்தலம் சுட்டப்பட்டிருக்கிறது. இத்திருத்தலத்தை அண்டிய பகுதிகளில் பல சிவாலயங்களிருந்தமையை அகழ்வாய்வுத் தரவுகள் மூலமறிய முடிகின்றது. அன்றியும் இத்திருவிடம் உலகப் புகழ்பெற்ற பெருநகரமாகவும் பல்துறைத் தொழில் வல்லவர்கள் வாழ்ந்த நகரமாகவும் சிற்பம் கலை நுணுக்கம் நிறைந்த ஆற்றல் மிக்க கலைஞர்களைக் கொண்டு திகழ்ந்த அழகு நகரமாகவும் மிளிர்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். திருக்கேதீச்சரத் திருதலத்திற்கணித்தாய் வங்காலை என்னும் நகரமிருந்தமையும், பண்டங்கள் ஏற்றியிறக்கும் துறைமுகமாகவும வங்கமெனும் பெருங்கப்பல்கள் கட்டுமிடமாகவுமிருந்துள்ளமையயும், வேறு மாளிகைத் திடல் என்னும் பாப்பாமோட்டையென்றும் இன்றும் அழைக்கப்படும் ஊர்கள் இருப்பதையும் காணலாம். அந்தணர்கள் வாழ்விடமாய் இருந்தமையால் அது பாப்பாமோட்டையெனவும் மாடமாளிகைகள் மிளிர்ந்தமையால் மாளிகைத் திடலெனவும் அமைந்திருந்தன ஆர்வலர் ஒருவர் பகைவரால் கவரப்படாதிருத்தற் பொருட்டு கலிங்கத்தேயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புத்த தந்தத்துடன் மாதோட்டத்தின் கண்ணிறங்கி அன்று இரவினை அங்கேயே கழித்ததாகவும் வரலாறுண்டு. பத்தாம், பதிரோராம் நூற்றாண்டில் இக் கோயில் சோழமன்னர்களால் இராசராசேச்சர மாகாதேவன் கோயிலென அழைக்கப் பட்டது. வரலாற்று ரீதியாக இலங்கையின் நான்கு திசைகளிலும் நான்கு ஈச்சரங்கள் இருந்து இலங்கையைக் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள். நகுலேச்சரம் திருக்கோணேச்சரம் திருக்கேதீச்சரம் தொண்டேச்சரம் மேற்கோள்கள் பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள் பகுப்பு:மன்னார் மாவட்டத்தில் உள்ள கோயில்கள் பகுப்பு:இலங்கையில் உள்ள சிவன் கோயில்கள் பகுப்பு:பஞ்ச ஈஸ்வரங்கள் பகுப்பு:இலங்கையின் தொல்லியற்களங்கள்
அஜ்மான்
https://ta.wikipedia.org/wiki/அஜ்மான்
அஜ்மான் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் மிகச் சிறியதாகும். இதன் தலைநகரமும் அஜ்மான் ஆகும். இந்த அமீரகத்தின் பரப்பளவு 260 சதுர கிலோமீற்றர் மட்டுமே. இது பாரசீகக் குடாவையொட்டி அமைந்துள்ளது. இவற்றையும் பார்க்கவும் பாம் தீவுகள் பூர்ஜ் அல் அராப் துபை மெட்ரோ புர்ஜ் கலீஃபா கல்ப் நியூஸ் மேற்கோள்கள் பகுப்பு:ஐக்கிய அரபு அமீரகம்
நற்றிணை
https://ta.wikipedia.org/wiki/நற்றிணை
நற்றிணை என்பது தமிழ் இலக்கியத்தில் எட்டுத்தொகை என்ற சங்க இலக்கிய வகைப்பாட்டினுள் காணப்படும் ஒரு நூலாகும். இந்நூல் தனிப்பாடல்களாகப் பலராலும் பாடப்பட்டுப் பின்னர்த் தொகுக்கப்பட்டது. எட்டுத்தொகை நூல்கள் இவையெனக் குறிப்பிடும் பழைய வெண்பாவில் முதலிடம் பெற்றுத்திகழ்வது நற்றிணை ஆகும். எட்டுத்தொகை நூல்களில் "நல்" என்ற அடைமொழி பெற்ற நூல் (நல்+திணை) இதுவேயாகும். இதனை நற்றிணை நானூறு என்றும் தூதின் வழிகாட்டி என்றும் (வாப் பறை விரும்பினைஆயினும், தூச் சிறை - பாடல் எண்.54)https://www.tamilsurangam.in/literatures/ettuthogai/narrinai/narrinai_54.html கூறுவர். இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு 401 பாடல்கள் ஆசிரியப்பாவில் அமைந்துள்ளன. அவைகளில் பெரும்பான்மையானவை 9 அடி முதல் 12 அடிகள் கொண்ட பாடல்களாக அமைந்துள்ளன. இந்நூலைத் தொகுத்தவர் யாரென அறியப்படவில்லை என்றாலும் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி ஆவார். நற்றிணைப் பாடல்கள் அனைத்தும் அகப்பொருள் அமையப் பெற்ற பாடல்களாம். நற்றிணையில் 7 அடிகள் கொண்ட பாடலும் 13 அடிகள் கொண்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 7 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1 8 அடிகளில் அமைந்த பாடல்கள் - 1 9 அடிகளில் அமைந்த பாடல்கள் - 106 10 அடிகளில் அமைந்த பாடல்கள் - 96 11 அடிகளில் அமைந்த பாடல்கள் - 110 12 அடிகளில் அமைந்த பாடல்கள் - 77 13 அடிகளில் அமைந்த பாடல்கள் - 8 234-ஆவது பாடல் கிடைக்கவில்லை. பாடியோர் நற்றிணையில் உள்ள 401 பாடல்களை 275 புலவர்கள் பாடியுள்ளனர். குறுந்தொகைப் புலவர்கள் போலவே நற்றிணைப் புலவர்களும் பாடலில் இடம்பெற்றுள்ள தொடர்களால் பெயர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் - வண்ணப்புறக் கந்தத்தனார் மலையனார் தனிமகனார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் தும்பிசேர்க்கீரனார் தேய்புரிப் பழங்கயிற்றினார் மடல் பாடிய மாதங்கீரனார் என்ற எழுவராவர். மேலும் 59 பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் காணப்படவில்லை. இந்நூலில் உள்ள நானூறு பாடல்களில் 234 ஆம் பாடலும் 385 ஆம் பாடலின் ஒரு பகுதியும் கிடைக்கப்பெறவில்லை. இந்நூலினைத் திணை அடிப்படையில் ஆராயும்போது, குறிஞ்சித் திணைப் பாடல்கள்-132 பாலைத் திணைப் பாடல்கள்-104 நெய்தல் திணைப் பாடல்கள்-102 மருதத் திணைப் பாடல்கள்-32 முல்லைத் திணைப் பாடல்கள்-30 அமைந்துள்ளன. நற்றிணை காட்டும் வாழ்க்கை நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அக்கால மக்களிடம் பரவிக்கிடந்த பழக்க வழக்கங்களை அறியலாம். தலைவன் பிரிவால் வாடும் தலைவி, தன்தலைவனின் வரவைச் சுவரில் கோடிட்டுக் கணக்கிடும் பழக்கமும் காதலன் வரவைப் பல்லி கத்தும் ஓசையை வைத்துச் சகுனம் பார்க்கும் வழக்கமும் அக்காலமக்களிடம் இருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. மேலும் மகளிர் காற்பந்து விளையாடும் வழக்கமும் இருந்ததை அறியமுடிகிறது. பிற்காலத்தில் சிறந்து விளங்கிய "தூது" என்ற சிற்றிலக்கியத்திற்கு வழிகாட்டியாகக் குருவி, கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் பாங்கையும் நற்றிணையில் காணலாம். மேலும் மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத்திறம், மன்னர்களைப் பின்பற்றி மக்கள் வாழ்ந்த அறவாழ்வு ஆகியவற்றை அறியவும் நற்றிணைப் பாடல்கள் துணை செய்கின்றன. நற்றிணைக் கடவுள் வாழ்த்து திணை பாடாண் துறை கடவுள் வாழ்த்து துறைவிளக்கம்  இந்நூல் என்றும் நின்று நிலவ வேண்டிக் கடவுளை வாழ்த்துவான் எடுத்துக்கொண்ட ஆசிரியர், மாயோனே வேதமுதல்வனென ஆன்றோர் கூறுவராதலின், யாமும் அவனையே வணங்குவோமென்று வாழ்த்துக் கூறாநிற்பது. (இலக்கண விளக்கம்) “பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே நாடுங் காலை நாலிரண் டுடைத்தே” (தொல்.பாடாண். நூ.80) எனப் பெறப்பட்ட கடவுள் வாழ்த்து வகை முதலிய எட்டு வகையினுள் இது கடவுள் வாழ்த்து என்னும் வகையினுள் அடங்கும். “வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே” என்னும் விதிபற்றி ஆசிரியர் பாரதம் பாடிய பெருந்தேவனார் இந்நூற்கு ஆசிரியப்பாவாற் கடவுள் வாழ்த்துக் கூறுவாராயினர் என்க. இஃது உலகிற்குப் பயன்பட இறைவனைப் படர்க்கையில் வைத்து வாழ்த்தியபடியாம். பாடல் மாநிலஞ் சேவடி யாக தூநீர் வளைநரல் பெளவம் உடுக்கை யாக விசும்புமெய் யாக திசைகை யாக பசுங்கதிர் மதியோடு சுடர்கண் ணாக இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வன் என்ப தீதற விளங்கிய திகிரி யோனே. புலவர் : பாரதம் பாடிய பெருந்தேவனார். எடுத்துக்காட்டுப் பாடல் 1 திணை பாலை கூற்று பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது. குறை நயப்பு ஆகும். என்கைக் கொண்டு தன்கண் ஒற்றியும் தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும் அன்னை போல இனிய கூறியும் கள்வர் போலக் கொடியன் மாதோ மணி என இழிதரும் அருவி பொன் என வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில் ஓடு மழை கிழிக்கும் சென்னி கோடு உயர் பிறங்கல் மலைகிழவோனே நற்றிணை - பா.28 (பாலை) - முதுகூற்றனார் பாடல் 2 திணை நெய்தல் கூற்று பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. குறிபெயர்த்தீடும் ஆகும். விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி மறந்தனம் துறந்த கான்முளை ஆகைய நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்ப்ப நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே அம்ம!!நாணுதும் நும்மொடு நகையே! — நற்றிணை - பா.172.(நெய்தல்) பதிப்பு வரலாறு எட்டுத்தொகை நூல்களில் பழைய உரை இல்லாத ஒரே நூலான நற்றிணை என்னும் இந்நூல் முற்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் என்னும் தமிழறிஞர் இந்நூலின் பல சுவடிகளைத் தேடிக் கண்டறிந்து ஒப்பிட்டு ஆய்வுசெய்து முதன்முதலில் புத்துரையுடன் 1915-ம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டார். இப்பதிப்பிற்குப் பின்னர் வேறு பல தமிழ்ச் சான்றோரும் உரையுடன் பதிப்பித்து வெளியிட்டுள்ளனர்."சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 37 குறிப்புகள் வெளி இணைப்புகள் மதுரைத் திட்டம், மூலம் மட்டும் நற்றிணை - எட்டுத்தொகை பகுப்பு:எட்டுத்தொகை
திருமுருகாற்றுப்படை
https://ta.wikipedia.org/wiki/திருமுருகாற்றுப்படை
பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. இந்நூல் மதுரையைச் சேர்ந்த நக்கீரன் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இது கடைச்சங்க நூல்களில் ஒன்று என்பது மரபுவழிச் செய்தியாகும். இது பிற்காலத்தில் எழுந்தநூல் என்று கருதுவாருமுண்டு; எனினும், ஆய்வறிஞர்களில் பெரும்பாலானோர் கருத்து, இது சங்கநூல் என்பதேயாம். முருகப் பெருமானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது. 'ஆற்றுப்படுத்தல்' என்னும் சொல் 'வழிப்படுத்தல்' என்னும் பொருள்படும். "முருகாற்றுப்படை" எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று. தொடக்கக் காலத்தில் வெறியாட்டு அயரும் வேலன்,கட்டுவிச்சி ஆகியோர் தம் மீது முருகன் வந்து மேவுமாறு வேண்டுதலே முருகாற்றுப்படுத்துதல் என்று-"முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்" (அகம்:22) பாடல்வழி அறியமுடிகிறது.இந்நூலின் வேறுபெயர் புலவராற்றுப்படை என்பதாகும். இதன் சிறப்புக் கருதி இந்நூலினை சைவத் திருமுறைகளுள் 11-ஆம் திருமுறையில் இணைத்து வைத்துள்ளனர்.பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திற்கும் இந்நூல் காப்புச் செய்யுள் போல் அமைந்து முதல் நூலாக வைத்து எண்ணப்படுகிறது. முருகாற்றுப்படை என்னும் மரபில் மாற்றம் செய்த நக்கீரர், ஆற்றுப்படை நூலினுக்குப் பெயரிடும் மரபிலும் புதுமையினைப் புகுத்தியுள்ளார். பொருநன், சிறுபாணான், பெரும்பாணான், கூத்தர் ஆகிய ஆற்றுப்படுத்தப்படும் இரவலர் பெயரில் ஏனைய நூல்கள் அமையப்பெற்றிருக்க, திருமுருகாற்றுப்படை நூல் மட்டும் ஆற்றுப்படுத்தும் தலைவனான முருகப்பெருமான் பெயரில் அமைந்துள்ளது. திருமுருகாற்றுப்படை ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் முருகப் பெருமானின் அறுபடைவீடுகள் ஒவ்வொன்றையும் பாராட்டுவனவாக அமைந்துள்ளது. இவற்றுள் முதற்பகுதியில் திருப்பரங்குன்றமும், இரண்டாம் பகுதியில் திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயும், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் பகுதிகளில் முறையே திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்சோலை ஆகிய படைவீடுகளும் பேசப்படுகின்றன. பதிப்பு வரலாறு இந்நூலை முதன்முதலில் 1834-இல் சரவணப்பெருமாளையர் பக்திப் பாசுரமாகப் பதிப்பித்தார். 1851-இல் ஆறுமுக நாவலரும் பதிப்பாகக் கொண்டு வந்தார். ஆனால் சங்க இலக்கியம் என்னும் அடையாளத்தைக் கொண்டு பதிப்பிக்கப்படவில்லைசங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 3. உ. வே. சாமிநாதையர் அவர்களின் 1889-ஆம் ஆண்டு பத்துபாட்டுப் பதிப்பில் முதல் இலக்கியமாகத் திருமுருகாற்றுப்படை இடம் பெற்றது.சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 11 இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர். உரை விவரம்: நச்சினார்க்கினியர் உரை பரிமேலழகர் உரை உரையாசிரியர் உரை கவிப்பெருமாள் உரை பரிதிக் குறிப்புரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உரை இவற்றையும் பார்க்கவும் ஆற்றுப்படை என்னும் பெயரில் 5 நூல்கள் உள்ளன. திருமுருகாற்றுப்படை - நெடுநல்வாடை (ஒப்புநோக்கம்) திருமுருகாற்றுப்படை 1. ஞாயிறு தோன்றுவதைக் காட்டிக்கொண்டு தொடங்குகிறது. 2. அருளைப் பெற ஆற்றுப்படுத்துகிறது. பிற ஆற்றுப்படைகள் பொருளைப் பெற ஆற்றுப்படுத்துகின்றன. பொருளைப் பெற ஆற்றுப்படுத்தும் பிற ஆற்றுப்படைகள்; பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, மலைபடுகடாம் என்பனவாகும். 3. தொல்காப்பிய மரபு - 1037 | பாடாண் திணையின் துறைகளில் ஒன்று ஆற்றுப்படை. "கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும், ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ, சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்" திருமுருகாற்றுப்படை முதுவாய் இரவலனை ஆற்றுப்படுத்துகிறது. "அளியன் தானே முதுவாய் இரவலன்"- (முருகு. 284) இவனுக்கு அருள்புரிய வேண்டும் என்று கூளியர் முருகனுக்குப் பரிந்துரைப்பர் என்று குறிப்பிடப்படுவதால் இதனைப் 'புலவர் ஆற்றுப்படை' என்றும் கூறுவர். இது மலைபடுகடாம் நூலைக் 'கூத்தர் ஆற்றுப்படை' என்று கூறுவது போன்றது. நெடுநல்வாடை 1. குளிர் நடுக்கத்தைக் காட்டிக்கொண்டு தொடங்குகிறது. 2. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியதாக அதன் கொளுக்குறிப்பு கூறுகிறது. பாடலில் அவன் பெயர் இல்லை. "வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகம்" ஒன்றை வைத்துக்கொண்டு அவனது மெயக்காப்பாளன் அவனுடன் வந்தான் என்று கூறப்படுவது ஒன்றே பாண்டியன் என்று கொள்வதற்கான அடிப்படை. அரண்மனையில் அரசி பிரிவால் வாடுகிறாள். இது பாலை. பாசறையில் பாண்டியன் போரில் காயம் பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிக்கொண்டு காயம் பட்ட குதிரைகளையும் யானைகளையும் தேற்றிக்கொண்டிருக்கிறான். வாடைக்காற்று இருவரையும் வருத்துகிறது. 3. தொல்காப்பிய மரபு | "வாகை தானே பாலையது புறனே" - தொல்காப்பியம் நூ.1019. "கூதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபு" மேல் வாகைத்திணைப் பாடல் வரும் - தொல்காப்பியம் நூ.1022. இந்த நெறியில் அமைந்துள்ளது நெடுநல் வாடை திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரரும் நெடுநல்வாடை பாடிய நக்கீரரும் ஒருவரா வெவ்வேறு புலவர்களா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. சங்க இலக்கியம் ஏனைய பத்துப்பாட்டு நூல்கள் பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை முல்லைப்பாட்டு நெடுநல்வாடை மதுரைக் காஞ்சி குறிஞ்சிப் பாட்டு பட்டினப் பாலை மலைபடுகடாம் குறிப்புகள் பகுப்பு:பத்துப்பாட்டு பகுப்பு:ஆற்றுப்படைகள் பகுப்பு:சைவ சமய நூல்கள் வெளியிணைப்புகள் திருமுருகாற்றுப்படை நூல் உரை - பத்துப்பாட்டு நூல்கள்
பொருநராற்றுப்படை
https://ta.wikipedia.org/wiki/பொருநராற்றுப்படை
பொருநராற்றுப்படை என்னும் ஆற்றுப்படை நூல் கரிகால் வளவன் எனப்படும் சோழ மன்னனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்டது.https://www.projectmadurai.org/pm_etexts/pdf/pm0063.pdf முடத்தாமக் கண்ணியார் என்பது இதன் ஆசிரியர் பெயர். இது 248 அடிகளைக் கொண்ட வஞ்சியடிகள் கலந்தஆசிரியப்பாவாலானது.இது போர்க்களம் பாடும் பொருநரைப் பற்றிக் கூறும் புறத்திணை நூலாகும். +நூல் விபர அட்டவணைநூல் பொருநராற்றுப்படைஆசிரியர்முடத்தாமக்கண்ணியார்பாட்டுடைத்தலைவன்கரிகால் பெருவளத்தான்திணைபாடாண்துறைஆற்றுப்படைபாவகைஆசிரியப்பாஅடிகள்248 பொருநராற்றுப்படை அமைப்பு பொருநன் போகும் வழி (1 முதல் 13 வரை), பாடினி மகிழப் பாடும் பாணன் (16 முதல் 30 வரை), நாயின் நாக்கு போன்ற காலடி (31 முதல் 45 வரை), கல்லில் நடக்காதே கால் புண்ணாகும் (46 முதல் 59 வரை), அடியா வாயில் அடைக நீயும் (60 முதல் 75 வரை), என் வருத்தம் தீர வாரி வழங்கினான்(76 முதல் 90 வரை), இரவு பகல் தெரியாது இருந்தேன் நான் (95 முதல் 105 வரை), ஏர் உழுவது போல சோறுழுத எங்கள் பற்கள் (106 முதல் 120 வரை), பரிசு மழையில் நனைந்தோம் (121 முதல் 135 வரை), வெண்ணிப் பறந்தலை வென்றவன் (136 முதல் 150 வரை), தாயினும் மிகுந்த அன்போடு (151 முதல் 165 வரை), தேர் ஏற்றி அனுப்ப தெருவரைக்கும் வருவான் (166 முதல் 177 வரை), மயிலாடும் மருத நிலம் (178 முதல் 194 வரை), வண்டு பாட மயிலாடும் (195 முதல் 213 வரை), செங்கோல் வழுவாச் செல்வன் கரிகாலன் (214 முதல் 231 வரை), பூவிரிக்கும் காவிரி வளம் (232 முதல் 248 வரை) என்று 248 வரிகளில் இந்நூலின் கருத்து கட்டமைக்கப்படுகிறது. பொருநராற்றுப்படை சிறப்புகள் தமிழரின் பண்பாடான விருந்தினரை ஏழடி நடந்து சென்று வரவேற்றலும் வழியனுப்புதலும் குறித்து காலில் ஏழடிப் பின்சென்று(பொரு.166)என்னும் பாடல் வரியால் அறிய ,முடிகிறது. காலி னேழடிப் பின்சென்று கோலின் தாறுகளைந் தேறென் றேற்றி வீறுபெறு பேரியாழ் முறையுழிக் கழிப்பி நீர்வாய்த் தண்பணை தழீஇய தளரா விருக்கை பாடினியின் கேசாதி பாத வருணனை பொருநருடன் இருக்கும் பாடினி அழகு மிக்கோளாக இருந்தாள் என்று புகழ்ந்து அவளது தலை முதல் கால் வரை 19 உறுப்புகள் இதில் வருணிக்கப்பட்டுள்ளன.(பொருந:25-47). அவையாவன: கூந்தல், திருநுதல், புருவங்கள், கண்கள், வாய், பற்கள், காதுகள், கழுத்து, தோள்கள், முன்கைகள், மெல்விரல், நகங்கள், மார்பகங்கள், கொப்பூழ், நுண்ணிடை, அல்குல், தொடைகள், கணைக்கால், பாதங்கள் என்பன. பொருநராற்றுப்படையில் உவமைகள் நாயின் நாக்கு போன்ற காலடி பொருநனுடன் செல்லும் பாடினியின் அழகை வருணிக்கிறார் நூலாசிரியர். பாடினியின் கழுத்தோ நாணத்தால் நாணிக்கோணும். மென்முடி இருக்கும் நீண்ட முன்கையோ தோளில் அசைந்தாடும். மலை உச்சியில் பூத்த காந்தள் மலர் போலிருக்கும் அவளுடைய மெல்லிய விரல்கள், கிளியின் வாயி போலும் கூர்மையானவை அவளுடைய விரல் நகங்கள். பல மணிவடங்கள் கோத்த மேகலை அணிந்த இடையும் உடையவள் அவள். பெரிய பெண் யானையின் பெருமை உடைய துதிக்கை போல நெருங்கித் திரண்ட இரு தொடைகளையும் உடையவள். தொடையோடு பொருந்திய மயிரொழுங்குடன் கூடிய அழகிய கணைக் காலுக்கு இணையான அழகுடையது, “நாய் நாவின் பெருந்தகு சீறடி” என்ற வரியின் மூலம் ஓடி இளைத்த நாயினுடைய நாக்கைப் போன்றது அவளுடைய பாதங்கள் என்று முடத்தாமக்கண்ணியார் வருணிக்கிறார். பொருநனின் பசித்துன்பம் பொருநன் கடும் பசியில் உள்ளான் அதனைப் போக்குவதற்குக் கரிகார்பெருவளத்தான் உள்ளான் என்பதை அடையா வாயில் அடைக நீயும் என்கிறார். “ஆடுபசி உழந்த நின் இரும்பேர் ஒக்கலொடு நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று எழுமதி வாழி ஏழின் கிழவா!” (பொருநராற்றுப்படை 61-63) என்ற வரிகளின் மூலம் பொருநனின் பசித்துயரம் என்பது கொல்லுகின்ற பசித்துயரால் வருந்தும் பொருநன் உன் சுற்றத்தருடன் நீண்ட நாள் பசியைப் போக்க இன்றே புறப்படு ஏழிசை யாழ் நரம்புக்கும் உரிமை உடையவனே உடனே செல்க. ஏனெனில் உன் பசி போக வேண்டுமானால் கரிகால் பெருவளத்தானைப் பார். பசித்துன்பத்தைப் பற்றிக் கூறும் ஆசிரியர், பழத்த பழமரங்களை விரும்பித்தேடிச் செல்லும் பறவைப் போலக் கரிகால் பெருவளத்தானுடைய கோட்டை அடையா வாயிலாகக் காத்துத் திறந்திருக்கும். பொருநன் கூறுகிறான், அடையா நெடுங்கதவுடைய ஆசார வாசலை அடைந்தேன். வாயிற்காவலைனைக் கேட்காமாலே உள்ளே நுழைதேன். வயிற்றுப் பசிதீர என்னுடைய வறுமை நீங்க உண்டேன். இளைத்த என்னுடல் பருத்தது. இரையுண்ட பாம்பின் உடல் போலானது. களைப்பு நீங்கிய நான், என் கையில் இருந்த கண்ணகன்ற உடுக்கையத் தட்டி இரட்டை சீர் உடைய தடாரிப் பண்ணை தாளத்திற்கு ஏற்ப இசைத்தேன். வெள்ளி முளைக்கும் வைகறைப் பொழுதில் நான் பாடத் தொடங்கு முன்பே நட்பு கொண்ட உறவினரைப் போல் கரிகால் பெருவளத்தான் என்னை வரவேற்று உபசரித்தான். முரவை போகிய முரியா அரிசி கரிகாற்பெருவளாத்தானைக் கண்டு பரிசில் பெற சென்ற இடத்த பொருநனுக்குக் கிடைத்த உபசரிப்பு பற்றிக் கூறும் போது எங்கள் பற்கள் ஏர் உழுவது போல் சோறு உழுதன என்று ஞா. மாணிக்கவாசகன் குறிப்பிடுகிறார். இரும்புக் கோலில் கோர்த்து வேக வைத்த சூடான இறைச்சியை வாயின் இடதுபுறமும் வலது புறமும் மாற்றி வைத்து உண்ண ஓயாது உபசரித்தான். இதை மேலும் உண்ணுவதை வெறுத்து வேண்டாம் என்ற போது, முல்லை மொக்கு போன்ற தவிடு நீங்கிய முனை முறியாத விரல் நுனி போன்ற அரிசி சோற்றைப் போட்டுப் பொறிக்கறியோடு உண்ணவைத்தான். இதைத்தான் முரவை போகிய முரியா அரிசி என்று நூலாசிரயர் குறிப்பிடுகிறார். கூர்மைப் படுத்தப்பட்ட அரிசி சோறு போட்டதைப் பெருமைப் பட பொருநன் குறிப்பிடுகிறான். உரை எழுதியோர் வா.மகாதேவ முதலியார் உரை(1907) கா.ஶ்ரீ.கோபாலாச்சாரியார் உரை மொ.அ.துரையரங்கனார் திறனாய்வு உரை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் உரை(2004). திருச்சிராப்பள்ளி ப.மாதேவன் (2021) இவற்றையும் பார்க்கவும் சங்க இலக்கியம் ஏனைய பத்துப்பாட்டு நூல்கள் திருமுருகாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை முல்லைப்பாட்டு நெடுநல்வாடை மதுரைக் காஞ்சி குறிஞ்சிப் பாட்டு பட்டினப் பாலை மலைபடுகடாம் உசாத்துணைகள் ஞா.மாணிக்கவாசகன், பத்துபாட்டு மூலமும் விளக்கமும், மார்ச் 2016 மூன்றாம் பதிப்பு, உமா பதிப்பகம், சென்னை- 600001 https://ilakkiyam.com/iyal/52-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/pathupattu/3784-porunaraatrupadai http://www.tamilsurangam.in/literatures/patthu_paddu/porunaratrupadai.html https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0599.html பகுப்பு:பத்துப்பாட்டு பகுப்பு:ஆற்றுப்படைகள் வெளியிணைப்புகள் பொருநராற்றுப்படை நூல் உரை - பத்துப்பாட்டு நூல்கள்
சிறுபாணாற்றுப்படை
https://ta.wikipedia.org/wiki/சிறுபாணாற்றுப்படை
நத்தத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது சிறுபாணாற்றுப்படை எனும் இந்நூல். இது 269 அடிகளாலமைந்தது.ஓய்மான் நாட்டு மன்னனான நல்லியக்கோடன் என்பவனைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல், அம்மன்னனிடம் பரிசு பெற்ற சிறுபாணன் ஒருவன் தான் வழியிற் கண்ட இன்னொரு பாணனை அவனிடம் வழிப்படுத்துவதாக அமைந்துள்ளது. சிறுபாணாற்றுப்படை அமைப்பு சிறுப்பாணனின் வழியழகு (1 முதல் 12 அடிகள்), விறலியர் அழகு (13 முதல் 30 அடிகள்), பசி துரத்த வந்த பாணன் (31 முதல் 50 அடிகள்), சங்கம் வளர்த்த தமிழ் மதுரை (51 முதல் 67 அடிகள்), உறையூரும் வறிதானது (65 முதல் 83 அடிகள்), வள்ளலில் பெரிய வள்ளல் (84 முதல் 99 அடிகள்), வாரி வழங்கும் மாரி (100 முதல் 115 அடிகள்), பாடும் பணியே பணியாக (116 முதல் 129 அடிகள்), மானும் பேனும் பாணனின் மனைவி (130 முதல் 145 அடிகள்), நீலமணி பூக்கும் நெய்தல் (146 முதல் 163 அடிகள்), வேலூர் விருந்து (164 முதல் 177 அடிகள்), அறிவுடையார் வாழும் ஊர் ஆமூர் (178 முதல் 195 அடிகள்), நல்லவூர் நல்லியக் கோடன் ஊர் (196 முதல் 212 அடிகள்), தகுதியறிந்து தருவான் கொடை (213 முதல் 230 அடிகள்), ஈரம் கசியும் இதயம் உடையவன் (231 முதல் 245 அடிகள்), வரையாது கொடுக்கும் வான்மழை போன்றவன் (246 முதல் 261 அடிகள்), விரும்பும் பரிசு வேண்டும் மட்டும் (262 முதல் 269 அடிகள்) ஆகிய பொருண்மைகள் உள்ளடக்கியது சிறுபாணாற்றுப்படையாகும். புலவர் புலமை ஓய்மானாட்டு நல்லியக்கோடன் புகழ் பாடிப் பரிசில் பெற்ற பாணன் ஒருவன், தன் எதிர்ப்பட்ட இன்னொரு பாணனிடம் நல்லியக்கோடனின் நல் இயல்புகளையும் அவன் நாட்டின் வளத்தையும் செல்வச் செழிப்பையும் எடுத்துக் கூறுவதாக இந்நூல் அமையப் பெறுகிறது. குறிஞ்சி நாட்டுத் தலைவன் நல்லியக்கோடனைக் காண, நெய்தல் நில எயிற்பட்டினம், முல்லை நிலம், மருத நிலம் ஆகிய ஊர்களைக் கடந்து செல்லவேண்டும். இச்செய்தியைக் கூற வந்த புலவர் இந்நான்கு நிலச் சிறப்புகளை மட்டும் கூறாது மூவேந்தர்களின் தலை நகரான வஞ்சியும் உறையூரும் மதுரையும் முன்போல் செழிப்பாக இல்லை. வந்தவருக்கு வாரி வழங்கும் வன்மை அந்த அரசுக்கும் இல்லை. மேலும் கொடை கொடுப்பதில் கடையெழு வள்ளல்கள் பாரி, பேகன், காரி, ஓரி போன்றோர் கொடை வழங்குவதில் வள்ளன்மை படைத்தவர்கள் என்பதை (84-111) ஆகிய 28 வரிகளில் இலக்கியச் சிறப்பை எடுத்துக் கூறுகிறார் புலவர். இவர்களையும் விட மாஇலங்கை ஆண்ட ஓவிய மன்னர் குலத்து வந்த நல்லியக்கோடனை நாடிச் சென்றால் இவர்களைவிட அதிகமாகக் கொடை தரும் வள்ளல் குணம் உடையவன் என்று தம் இலக்கியப் புலமையைக் காணலாம். சிறுபாணாற்றுப்படை உவமை சிறுபாணாற்றுப்படையில் உவமை என்பது இலக்கியச் சிறப்பை உணர்த்துவதாகும். இவ்வகையில் இந்நூல் உவமையிலே தொடங்குகிறது, “மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல” என அழகிய உவமையை வைத்து நத்தத்தனார் இந்நூலைத் தொடங்கியுள்ளார். நிலமடந்தையின் கொங்கை மீது அசைகின்ற முத்துமாலையைப் போல, மலையின் மீதிருந்து இழியும் காட்டாற்று வெள்ளம் காட்சியளித்தது என்பதை இந்த அடிகளின் பொருளாகும். அதனைத் தொடர்ந்து, மலையினின்றும் இறங்கிய நீர், பின்னர்க் காட்டாறாகப் பெருக்கெடுத்தது. அதன் கரையோரம் கருமணல் படிந்திருந்தது. அந்தக்காட்சி, பெண்ணின் கூந்தல் விரிந்திருப்பதைப் போலக் காட்சியளிப்பதாகவும் அந்தக் கருமணல் பரப்பின் மீது, அருகில் இருந்த சோலையில் பூத்திருந்த புதிய பூக்கள் அணில்கள் குடைந்ததால் விழுந்ததாகவும், அப்படி விழுந்த புதிய மலர் வாடல்கள் மகளிர் கூந்தலில் சூடியுள்ள பூவைப்போலக் காட்சியளிப்பதாகவும் உவமை அமைத்து நல்லாதனார் நூலை அழகு படுத்தியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட உவமைகளை இந்நூலின் ஆசிரியர் கையாண்டுள்ளதனால் இந்நூலினைச் " சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை" எனத் தக்கயாகப்பரணி உரையாசிரியர் குறிப்பிடுகிறார் பாணன் நடந்து செல்லும் பாதை சிறுபாணாற்றுப்படையில் 31-50 வரிகளில் பாணன் நடந்து செல்லும் பாதை குறிப்பிடப்படிகிறது. “மடமான் நோக்கில் வாள்நுதல் விறலியர் நடை மெலிந் தசைஇ நல் மென் சீறடி கல்லா இளையர் மெல்லத் தைவர பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின் இன் குரல் சீறியாழ் இடவயின் தழீஇ” என்ற வரிகளின் மூலம் பாணனின் கூட வரும் கற்பில் சிறந்த விறலியர் மான் போலும் மருளும் கண்களை உடையவர்கள், ஒளி பொருந்திய அழகிய நெற்றியை உடையவர்கள் இவர்கள் காட்டு வழியே நடந்து வந்ததால் வருந்தி மெலிந்த பாதங்களைப் பிடித்துவிடும் இளைஞர்கள். முறுக்கேரிய இன்னிசை எழுப்பும் சிறிய யாழை தம் இடப்பக்கம் அணைத்துக் கொண்டு நட்ட பாடை என்னும் பண் இசைத்துக் கொண்டு செல்கிறான். நிலையில்லாத இவ்வுலகத்தில் பாடிப் பரிசில் பெற வருவோர்க்கு உதவி செய்து, நிலைத்தப் புகழைப் பெற்று வாழ விரும்பும் வள்ளன்மை உடையவர்களைத் தேடி நடந்து செல்கின்றனர். வருத்தும் பசித்துன்பமாகிய பகையைப் போக்கிக் கொள்ள, வறுமைத் துயர் துரத்த, வழி நடத்தும் துன்பம் தீர வந்து இங்கு இளைப்பாறும் அறிவில் சிறந்த இரவலனே! என்று புலவர் கூறுகிறார். நடந்து வரும் பாதை இவ்வளவு கொடுமையானதாக இருந்தாலும் தன் வாழ்வாதாரத்திற்காக ஓர் இனக்குழு வாழ்ந்துள்ளது. புலமையும் வறுமையும் பிரியாதது என்பதைப் போல் பாணர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. பாணனின் வறுமை சிறுபாணன் நடந்து செல்லும் பாதை கொடியது என்றாலும் தன் பசியைப் போக்கிக்கொள்ள பரிசில் தருவோரை நோக்கி செல்வது வாழ்வியல் நிலையாக உள்ளது. இத்தகைய பாண்னின் வறுமை என்பது, “இந்நாள் திறவாக் கண்ண சாய் செவிக் குருளை கறவாப் பால்முலை கவர்தல் நோனாது புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் காழ்சேர் முதுசுவர்க் கணச் சிதல் அரித்த பூழி பூத்த புழல் காளாம்பி” என்ற பாடல் வரிகளில், பாணனின் சமையல் கூடம் எவ்வறு உள்ளது என்பதை விவரிக்கிறது. கண்விழிக்காத வளைந்த நாய்க்குட்டி தாய்மடியில் வாய் வைத்துப் பால் குடிக்கிறது. தாயிடம் பால் இல்லாததால் வலி பொறுத்துகொள்ள முடியாத அப்போதுதான் குட்டி ஈன்ற தாய் நாய். இத்தகையான ஏழ்மையான வீடு பாணன் வீடு. பாணன் வீட்டு அடுப்படியில் நாய் குட்டி ஈன்று இருக்கிறது. இதுபாணனின் வறுமை நிலை. இங்கே நீண்ட நாள் அடுப்பு பயன்படுத்தப் படாததால் நாய் குட்டி போட்டுள்ளது என்று வறுமையைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர். வீட்டின் அமைப்பு மேல்கூறை இடிந்து விழுவது போல் உள்ளது. கரையான் பிடித்த சுவர். வீடெல்லாம் புழுதி. புழுதியிலே பூத்த காளான். இப்படிப்பட்ட வீட்டில் பசியில் வருந்தி ஒடுங்கிய வயிறும் வளை அணிந்த கையும் உடைய பாணனின் மனைவி. தன் கைவிரல் நகத்தால் குப்பையிலே முளைத்திருக்கிற வேளைக் கீரையை எடுத்து உப்பு கூட போட வழியில்லாமல் சமைத்த உணவு. இப்படிப்பட்ட உணவை உண்பதை மற்ற பெண்கள் பார்த்தால் நகைப்பு ஆகிவிடும் என்று கருதி வீதிக்கதவை அடைத்து வைத்துவிட்டு உப்பில்லாத குப்பைக் கீரையை சமைத்து சாப்பிட்டனர். இப்படிப்பட்ட பாணனின் வறுமை ஒரு சமூக நோயாக இருந்துள்ளது. இதைப் போக்குவதற்கு நல்லியக்கோடன் போன்ற நல்லியல்பு வள்ளல்களும் இருந்துள்ளனர். இவற்றையும் பார்க்கவும் சங்க இலக்கியம் ஏனைய பத்துப்பாட்டு நூல்கள் திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை முல்லைப்பாட்டு நெடுநல்வாடை மதுரைக் காஞ்சி குறிஞ்சிப்பாட்டு பட்டினப் பாலை மலைபடுகடாம் வெளி இணைப்புகள் சிறுபாணாற்றுப்படை நூல் உரை - பத்துப்பாட்டு நூல்கள் பகுப்பு:பத்துப்பாட்டு பகுப்பு:ஆற்றுப்படைகள்
பெரும்பாணாற்றுப்படை
https://ta.wikipedia.org/wiki/பெரும்பாணாற்றுப்படை
500 அடிகளைக் கொண்டு அமைந்தது பெரும்பாணாற்றுப்படை. பேரியாழ் (21 நரம்புகள்) வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனை வெல் வேல் கிள்ளி என்ற சோழ அரசனுக்கும் நாக கன்னிகை பீலிவளை என்பவளுக்கும் பிறந்த தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல். இதை ஆக்கியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர். இந்நூலினைச் சமுதாய பாட்டு எனத் தமிழண்ணல் அவர்கள் குறிப்பிடுவார்கள். இவற்றையும் பார்க்கவும் சங்க இலக்கியம் ஏனைய பத்துப்பாட்டு நூல்கள் திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை முல்லைப்பாட்டு நெடுநல்வாடை மதுரைக் காஞ்சி குறிஞ்சிப் பாட்டு பட்டினப் பாலை மலைபடுகடாம் மேற்கோள்கள் பகுப்பு:பத்துப்பாட்டு பகுப்பு:ஆற்றுப்படைகள் பகுப்பு:தொண்டையர் வெளியிணைப்புகள் பெரும்பாணாற்றுப்படை நூல் உரை - பத்துப்பாட்டு நூல்கள்
பரிபாடல்
https://ta.wikipedia.org/wiki/பரிபாடல்
பரிபாடல் சங்க காலத் தமிழிலக்கியத் தொகுதியான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. பரிபாடல் இலக்கணம் தொல்காப்பியம் பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகிறது. ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நான்கு வகைப்பாவில் இது பரிபாடல் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவை நான்கினுக்கும் பொதுவாய் அமைந்த யாப்பினை உடையது பரிபாடல் என அது குறிப்பிடுகிறது.'பரிபாடல்லே தொகை நிலை வகையின், "இது பா" என்னும் இயல் நெறி இன்றி, பொதுவாய் நிற்றற்கும் உரித்து' என மொழிப. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 425 செய்யுளியல்) நான்கு பாவின் உறுப்புகளும் கொண்ட பாடல்.உரையாசிரியர் இளம்பூரணர் விளக்கம் வெண்டளையும் ஆசிரியத்தளையும் விரவி வந்து துள்ளலோசைப்படச் சொல்லப்படும்.பேராசிரியர் விளக்கம் வெண்பா உறுப்பாகப் பரிபாடல் வரும்.நெடுவெண்பாட்டே, குறுவெண்பாட்டே, கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச் செய்யுளொடு, ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 423 செய்யுளியல்) கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து ஆகிய நான்கு உறுப்புக்களையும் கொண்டிருக்கும். காமப் பொருளில் வரும்.கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்தொடு, செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக, காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும். (தொல்காப்பியம் பொருளதிகாரம் 426 செய்யுளியல்) சொற்சீர் அடியும், முடுகியல் அடியம் கொள்வது உண்டு.சொற்சீர் அடியும் முடுகியல் அடியும் அப் பா நிலைமைக்கு உரிய ஆகும். (தொல்காப்பியம் பொருளதிகாரம் 427 செய்யுளியல்) 25 முதல் 400 வரை அடிகள் கொண்டிருக்கும்.பரிபாடல்லே, நால்-ஈரைம்பது உயர்பு அடி ஆக, ஐ-ஐந்து ஆகும், இழிபு அடிக்கு எல்லை. (தொல்காப்பியம் பொருளதிகாரம் 464 செய்யுளியல்) பரி(குதிரை) போல் கால்களால் பரிந்து நடைபோடும் பண்ணிசைப் பாடல்களைக் கொண்ட நூல் 'பரிபாடல்' என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்."பாய் பரிப் புரவி' (மதுரைக்காஞ்சி 689)துள்ளி நடப்பது கலிப்பா, தவ்வி நடப்பது பரிபாடல்.முனைவர் பாண்டியன் இந்நுால் 'பாிபாட்டு' எனவும் வழங்கப்படும். பரிபாடல் நூல் தொகுப்பு பரிபாடலில் அமைந்த பாடல்களின் தொகுப்பை, திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்யபரி பாடற் றிறம். மேற்கண்ட வெண்பாவின் துணைகொண்டு அறியலாகும். வெண்பாவின் விளக்கம்: பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்கள், செவ்வேளுக்கு (முருகனுக்கு) 31 பாடல்கள், காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், படிப்பதற்கு இனிமையுள்ள வையைக்கு 26 பாடல்கள், பெருநகரமாகிய மதுரைக்கு 4 பாடல்கள் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன. (ஆனால் இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.) ஆனால் இன்று, திருமாலுக்கு 6 பாடல்கள், முருகனுக்கு 8 பாடல்கள், வையைக்கு 8 பாடல்கள் என 22 பாடல்களே உள்ளன. பதிப்பு வரலாறு சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பரிமேலழகர் உரையுடன் 1918-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்."சங்க இலக்கியப் பதிப்புரைகள்.பாரதி புத்தகாலயம், பக்கம் 192 வெளியிணைப்புகள் பரிபாடல் நூல் உரை - எட்டுத்தொகை நூல்கள் மதுரைத் திட்டத்தில் பரிபாடல் பரிபாடல், முனைவர் பாண்டியன் செய்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்பு அடிக்குறிப்பு பகுப்பு:எட்டுத்தொகை பகுப்பு:சங்க இலக்கிய தமிழிசை ஆதாரங்கள்
முல்லைப்பாட்டு
https://ta.wikipedia.org/wiki/முல்லைப்பாட்டு
சங்கத் தமிழ் இலக்கியத்தில் பத்துப்பாட்டு என அழைக்கப்படும் தொகுதியின் ஒரு பகுதியே முல்லைப் பாட்டு. இத் தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படினும், தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை. பொருள் முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல், அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவியோ பிரிவுத் துயரம் தாளாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். விபரமறியச் சென்று வந்த தோழியரின் உற்சாக வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தான் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள். இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் என்னும் புலவர் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு. இது நெஞ்சாற்றுப்படை என அழைக்கப்படுகிறது. இந் நூல் குறித்து மறைமலைஅடிகள், முல்லைப்பாட்டு ஆராய்ச்சி என்ற ஓர் ஆராய்ச்சி நூலை எழுதியுள்ளார். மாதிரி மழைக்காலம் வருவதை உணர்த்தும் முல்லைப்பாட்டின் முதற்பாடல்: நனந்தலை யுலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப் பாடிமிழ் பனிக்கடல் பருகி வலனேர்பு கோடுகொண் டெழுந்த கொடுஞ்செலவு எழிலி இவற்றையும் பார்க்கவும் சங்க இலக்கியம் ஏனைய பத்துப்பாட்டு நூல்கள் திருமுருகாற்றுப்படை பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை நெடுநல்வாடை மதுரைக் காஞ்சி குறிஞ்சிப் பாட்டு பட்டினப் பாலை மலைபடுகடாம் வெளியிணைப்புகள் முல்லைப்பாட்டு நூல் உரை - பத்துப்பாட்டு நூல்கள் முல்லைப்பாட்டு மூலம், செய்தி தமிழிலும் ஆங்கிலத்திலும் முல்லைப்பாட்டு பாடலும் செய்தியும் இணை-கண்ணோட்டம் பகுப்பு:பத்துப்பாட்டு
நெடுநல்வாடை
https://ta.wikipedia.org/wiki/நெடுநல்வாடை
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு மதுரையைச் சேர்ந்த நக்கீரர் என்னும் புலவரால் இயற்றப்பட்டதே நெடுநல்வாடை என்னும் நூல். இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான இந்நூல் ஆசிரியப்பாவால் ஆன 188 அடிகளைக் கொண்டது. நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற கூதிர்ப்பாசறையின்கண் இருக்கும் தலைவனுக்கு இஃது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இது நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர். நூற்பொருள் இஃது ஒரு புறப்பொருள் நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுவாகத் தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன், தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவேதான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று. இவற்றையும் பார்க்கவும் சங்க இலக்கியம் ஏனைய பத்துப்பாட்டு நூல்கள், திருமுருகாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை பொருநராற்றுப்படை குறிஞ்சிப் பாட்டு முல்லைப்பாட்டு மதுரைக் காஞ்சி பட்டினப் பாலை மலைபடுகடாம் மேற்கோள்கள் வெளியிணைப்புகள் நெடுநல்வாடை நூல் உரை - பத்துப்பாட்டு நூல்கள் பகுப்பு:பத்துப்பாட்டு
பண்பாட்டு மானிடவியல்
https://ta.wikipedia.org/wiki/பண்பாட்டு_மானிடவியல்
சமூக பண்பாட்டு மானிடவியல் எனவும் அழைக்கப்படும் பண்பாட்டு மானிடவியல் (Cultural anthropology), பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட நான்கு மானிடவியல் துறைகளுள் ஒன்றாகும். ஓரளவுக்கு இது, "பண்பாடு" "இயற்கை" என்னும் இரண்டுக்குமிடையிலான எதிர்த் தன்மையை அடிப்படையாகக் கொண்டு முன்னர் எழுந்த மேலை நாட்டு எழுத்தாக்கங்களுக்கு எதிரான விளைவு எனலாம். மேற்சொன்ன அடிப்படையில் சில மனிதர்கள் "இயற்கை நிலையில்" வாழ்வதாகக் கொள்ளப்பட்டது. மானிடவியலாளர்களோ பண்பாடு என்பது "மனித இயற்கை" என வாதிடுகின்றனர். அத்துடன், எல்லா மக்களும் தங்கள் அனுபவங்களை வகைப்படுத்தவும், அவ் வகைப்பாடுகளைக் குறியீட்டு அடிப்படையில் ஆக்கிக்கொள்ளவும், அத்தகைய குறியீட்டு வடிவங்களை மற்றவர்களுக்குக் கற்பிக்கவும் தகுதி உள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்கின்றனர் அவர்கள். பண்பாடு என்பது கற்றுக்கொள்ளப்படுவதால் வெவ்வேறு இடங்களில் வாழ்பவர்கள் வெவ்வேறு பண்பாடுகளை உடையவர்களாக இருக்கிறார்கள். பண்பாட்டினூடாகப் பரம்பரையியல் முறைகளுக்குப் புறம்பாக மக்கள் தாங்கள் வாழுமிடங்களுக்கு ஏற்புடையவர்களாகத் தங்களை ஆக்கிக் கொள்கிறார்கள் என்றும் அதனால் வெவ்வேறு சூழல்களில் வாழுகின்ற மக்கள் மாறுபட்ட பண்பாடுகளை உடையவர்களாக உள்ளார்கள் என்றும் மனிதவியலாளர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். பெரும்பாலான மனிதவியற் கோட்பாடுகள் "இடஞ்சார்ந்த" மற்றும் "உலகம் தழுவிய" நிலைப்பாடுகளுக்கிடையேயான இழுநிலைபற்றிய மதிப்பீடு மற்றும் ஆர்வம் காரணமாகத் தூண்டப்பட்டவையே. சுருக்க வரலாறு நவீன சமூக-பண்பாட்டு மனிதவியல் 19 ஆம் நூற்றாண்டின் "இன ஒப்பாய்விய"லிலிருந்து தோற்றம் பெற்றதே. இன ஒப்பாய்வியல் (Ethnology) மனித சமூகங்களின் ஒழுங்கமைந்த ஒப்பீட்டில் ஈடுபாடு கொண்டுள்ளது. ஈ. பி. டெய்லர், ஜே. ஜி. பிரேசர் போன்ற அறிஞர்கள், சமயப் பரப்புக் குழுவினர், பயணிகள் அல்லது குடியேற்ற நாட்டு அலுவலர்கள் திரட்டிய தகவல்களின் அடிப்படையிலேயே தங்கள் ஆய்வுகளை நடத்தினர். உலகின் வெவ்வேறு பகுதிகளில் வாழுகின்ற மக்கள் சில சமயம் ஒரே மாதிரியான நம்பிக்கைகளையும் செயற்பாடுகளையும் கொண்டிருப்பது ஏன் என்று அறிவதில் இன ஒப்பாய்வியலாளர் விசேட ஆர்வம் காட்டினர். 19 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பாய்வியலாளர் கருத்து அடிப்படையில் இரு பிரிவினராகப் பிரிந்து இருந்தனர். கிராப்டன் எலியட் சிமித் (Grafton Elliot Smith) போன்றவர்கள், வெவ்வேறு குழுக்கள் மறைமுகமாகவேனும் ஏதோவொரு வகையில் ஒருவரிடமிருந்து மற்றவர் கற்றுக்கொண்டுள்ளனர், அதாவது பண்பாட்டுக் கூறுகள் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் பரவுகின்றன என்று வாதிட்டனர். வெவ்வேறு குழுவினருக்கு ஒரே மாதிரியான நம்பிக்கைகளையும் செயற்பாடுகளையும் சுதந்திரமாக உருவாக்கிக்கொள்ளக்கூடிய தகுதி உண்டு என்று மற்றவர்கள் கூறினர். மேற்படி "சுதந்திரமான புத்தாக்கம்" என்பதற்கு ஆதரவான லூயிஸ் ஹென்றி மோர்கன் போன்ற சிலர் இன்னும் மேலே சென்று பண்பாட்டுப் படிமலர்ச்சியில் (cultural evolution) வெவ்வேறு குழுக்கள் ஒரே கட்டங்களினூடு செல்வதாலேயே இம்மாதிரியான ஒரே மாதிரித் தன்மை காணப்படுகின்றது என்றனர். 20 ஆம் நூற்றாண்டு மனிதவியலாளர், எல்லா மனித சமூகங்களும் ஒரே கட்டங்களினூடாக அதே ஒழுங்கில் வளர்ச்சியடைகின்றன என்னும் கருத்தைப் பெரும்பாலும் நிராகரிக்கின்றனர். ஜூலியன் ஸ்டெவார்ட் (Julian Steward) போன்ற சில 20 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பாய்வியலாளர், ஒரே மாதிரியான சூழலில் ஒரேமாதிரியாகப் பழக்கப்படுவதாலேயே இவ்வாறான ஒருமைத் தன்மை உண்டாகின்றது என்கின்றனர். குளோட் லெவி-ஸ்ட்ராவுஸ் (Claude Lévi-Strauss) போன்ற வேறு சிலர், மேற்படி ஒரே மாதிரித் தன்மை மனித சிந்தனை அமைப்பின் அடிப்படை ஒற்றுமையைப் பிரதிபலிப்பதாக வாதிட்டனர்(structuralismபார்க்கவும்). 20 ஆம் நூற்றாண்டளவில் பெரும்பாலான சமூக-பண்பாட்டு மானிடவியலாளர்கள் இனவரைவியல் (ethnography) ஆய்வில் ஈடுபடலாயினர். இதில் மானிடவியலாளர் இன்னொரு சமூகத்தவர் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவு காலம் வாழ்ந்து அக்குழுவின் சமூக பண்பாட்டு வாழ்வில் பங்குபற்றி அவதானித்தனர். இந்த முறை துரோபிரியண்ட் தீவுகளில் கள ஆய்வு நடத்தியவரும், இங்கிலாந்தில் கற்பித்தவருமான புரோனிஸ்லா மனிலோவ்ஸ்கி (Bronislaw Malinowski) என்பவரால் உருவாக்கப்பட்டு, பாபின் தீவுகளில் (Baffin Island) கள் ஆய்வுகளையும் ஐக்கிய அமெரிக்காவில் கற்பித்தல் தொழிலையும் செய்துவந்த பிரான்ஸ் போவாஸ் (Baffin Island) என்பவரால் பிரபலப்படுத்தப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் இன ஒப்பியலாய்வாளர்கள் "பரவுகை" மற்றும் "சுதந்திரப் புத்தாக்கம்" என்பவற்றை பரஸ்பர தவிர்ப்புத் தன்மையையும், எதிர்ப்புத் தன்மையும் கொண்ட கோட்பாடுகளாகப் பார்த்த போதிலும், பெரும்பாலான இனவரைவியலாளர், இரண்டு நடைமுறைகளுமே நடைபெறுகின்றனவென்றும், இரண்டுமே பண்பாட்டிடை ஒற்றுமைத் தன்மைகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கங்களே என்றும் ஒருமித்த கருத்தை எட்டினர். ஆனாலும், இத்தகைய ஒற்றுமைத் தன்மைகள் பெரும்பாலும் மேலோட்டமானவையே என்றும், சுவறுதல் (diffusion) மூலம் பரவும் கூறுகள் விடயத்தில் கூட, ஒரு சமூகத்திலிருந்து இன்னொரு சமூகத்துக்குச் செல்லும்போது அவற்றின் பொருளும் செயற்பாடுகளும் மாறிவிடுகின்றன என்றும் சுட்டிக் காட்டினர். இந்த அடிப்படையில் இம் மானிடவியலாளர் பண்பாடுகளை ஒப்பிடுவதிலும், மனித இயல்புகளைப் பொதுமைப் படுத்துவதிலும், பண்பாடு வளர்ச்சியின் உலகளாவிய விதிகளைக் கண்டுபிடிப்பதிலும் குறைந்த அக்கறை செலுத்தியதுடன், குறிப்பிட்ட பண்பாடுகளை விளங்கிக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தினர். அவர்களும், அவர்களது மாணவர்களும் "பண்பாடுச் சார்புத்தன்மை" (cultural relativism) என்னும் கருத்தைப் பிரபலப் படுத்தினர். இக் கருத்தின்படி, ஒருவரின் நம்பிக்கைகளும், நடத்தைகளும் அவர் வாழும் பண்பாட்டுச் சூழலிலேயே விளங்கிக் கொள்ளப்பட முடியும். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சமூக-பண்பாட்டு மானிடவியல், ஐரோப்பாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும், இரு வேறு வடிவில் வளர்ந்தன. ஐரோப்பிய "சமூக மானிடவியலாளர்" அவதானிக்கப்பட்ட சமூக நடத்தைகளிலும், சமூக அமைப்புகளிலும், அதாவது, சமூக வகிபாகங்கள் மத்தியிலான தொடர்புகள் (உ.ம்: கணவன் மனைவி அல்லது பெற்றோர் பிள்ளை) மற்றும் சமூக நிறுவனங்கள் (உ.ம்: சமயம், பொருளாதாரம் மற்றும் அரசியல்) போன்றவற்றில் கவனம் செலுத்தினர். அமெரிக்க "பண்பாட்டு மானிடவியலாளர்", மக்கள் தங்களைப் பற்றியும், தங்கள் உலகத்தைப் பற்றியுமான அவர்களுடைய பார்வையை எவ்விதம் வெளிப்படுத்துகிறார்கள் என்பதுபற்றி, விசேடமாக குறியீட்டு முறையில் (உ.ம்: கலை மற்றும் பழங்கதைகள்) எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பது பற்றிக் கவனம் செலுத்தினர். இவ்விரு அணுகுமுறைகளும் பல சந்தர்ப்பங்களில் ஓரிடத்தில் குவிவடைந்தன (உ.ம்: உறவுமுறை ஒரு குறியீட்டு முறைமையும், சமூக நிறுவனமும் ஆகும்.) என்பதுடன் பொதுவாக ஒன்றுக்கொன்று --- ஆக அமைந்தன. இன்று பெரும்பாலும் எல்லா சமூக-பண்பாட்டு மானிடதவியலாளரும் இருபகுதி முன்னோடிகளின் ஆய்வுகளையுமே ஏற்றுக்கொள்வதுடன், மக்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலும், என்ன சொல்கிறார்கள் என்பதிலும் சம அளவு ஆர்வம் உள்ளவர்களாக உள்ளனர். இன்று சமூக-பண்பாட்டு மானிடவியலில் இனவரைவியலே இன்னும் ஆதிக்கம் செலுத்துகிறது. இருந்தும், பல தற்கால சமுக-பண்பாட்டு மானிடவியலாளர், இடஞ்சார் பண்பாடுகளை கட்டுப்பட்டவையாகவும், தனித்தவையாகவும் கொள்ளும், இனவரைவியலின் முன்னைய மாதிரிகளை நிராகரிக்கிறார்கள். இந்த மானிடவியலாளர்கள், எவ்வாறான வழிகளில் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்க்கையை உணர்கிறார்கள் அல்லது விளங்கிக் கொள்கிறார்கள் என்பதையே இன்னும் கவனத்தில் எடுத்துக்கொண்டாலும், இவ்வாறான வழிகள்பற்றி, இடஞ்சார் சூழல் அடிப்படையில் மட்டும் விளங்கிக்கொள்ள முடியாது என்றும், ஒருவர் இதுபற்றி பிரதேச சூழலில் மட்டுமல்லாமல் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழல் அடிப்படையிலும் ஆராயவேண்டுமென்றும் வாதிடுகிறார்கள். Notable proponents of this approach are அர்ஜுன் அப்பாதுரை, ஜேம்ஸ் கிளிபர்ட், ஜேன் கொமாரோப், ஜோன் கொமாரோப், ஜேம்ஸ் பர்குசன், அகில் குப்தா, ஜோர்ஜ், சிட்னி மிண்ட்ஸ், மைக்கேல் தௌசிக், ஜேன் விண்செண்ட், மற்றும் எரிக் வூல்ப். தொடர்புள்ள தலைப்புக்கள் கலை மானிடவியல் ஊடக மானிடவியல் மத மானிடவியல் பயன்பாட்டு மானிடவியல் பண்பாட்டிடை ஆய்வுகள் பொருளியல்சார் மானிடவியல் இரட்டை மரபுரிமைக் கோட்பாடு சூழல்சார் மானிடவியல் இனத்தாவரவியல் இனவரைவியல் இனஇசையியல் இனவிலங்கியல் படிமலர்ச்சி மானிடவியல் பெண்ணிய மானிடவியல் மனித நடத்தைச் சூழலியல் மருத்துவ மானிடவியல் உளவியல்சார் மானிடவியல் அரசியல்சார் மானிடவியல் சமுதாய மானிடவியல் குறியீட்டு மானிடவியல் நகர்ப்புற மானிடவியல் இவற்றையும் பார்க்கவும் எஸ்கிமோ அய்னு தாயக அமெரிக்கர் வேடுவர் - சேகரிப்போர் நாடோடிகள் அமெரிக்கர் பகுப்பு:மானிடவியல்
முழுதளாவியம்
https://ta.wikipedia.org/wiki/முழுதளாவியம்
முழுதளாவியம் (Holism) மற்றும் முழுதளாவிய ஆகிய சொற்கள் 1920களின் ஆரம்பத்தில் ஜான் ஸ்முட்ஸ் என்பவரால் முதலில் பயன்படுத்தப்பட்டன. ஒக்ஸ்போட் ஆங்கில அகராதியில் கண்டுள்ளபடி ஸ்முட்ஸின் முழுதளாவியத்துக்கான வரைவிலக்கணம் பின்வருமாறு உள்ளது: "படைப்புசார் படிமலர்ச்சி (creative evolution) ஊடாக, பகுதிகளின் கூட்டுத்தொகையிலும் பெரிதான முழுமையை உருவாக்க முயலும் இயற்கையிலுள்ள போக்கு" குறிப்பு: ஒன்றுலும் "பெரிதான" என்னும் சொல் பொருள் கொண்டதாக அமைய வேண்டின் ஒரு அளவீடு தேவைப்படும் என்பது வெளிப்படை. எனவே மேற்கண்டது வரைவிலக்கணம் என்பதிலும் பார்க்க ஒரு கருத்து (suggestion) என்றே கொள்ளவேண்டும். இப் பொருளற்ற பகுதியை நீக்கிவிட்டால், முழுதளாவியம் என்பது, "படைப்புசார் படிமலர்ச்சியூடாக முழுமையை உருவாக்கமுயலும் இயற்கையிலுள்ள போக்கு" எனப் பெறப்படுகின்றது. முழுதளாவியம் என்பது படைப்புவாதம் (creationism), படிமலர்ச்சிவாதம் (evolutionism) என்பவற்றின் ஒருங்கிணைப்பு என்று அவதானிக்கலாம். தற்போது விளங்கிக் கொண்டுள்ளபடி, முழுதளாவியம் என்பது ஒரு முறைமையின் இயல்புகளை அவற்றின் கூறுகளின் இயல்புகளின் கூட்டுத்தொகை மூலம் மட்டும் தீர்மானிக்கவோ விளங்கிக் கொள்ளவோ முடியாது என்ற கருத்தாகும். அறிவியல் reductionism ஐ முன்னெடுத்துச் செல்பவர்கள் இது பேராசை reductionism கொள்கைக்கே எதிரானது என்று கூறுகின்றனர். இது பெரும்பாலும் reductionism என்பதற்கு எதிரானதாகக் கொள்ளப்படுகின்றது. இவற்றையும் பார்க்கவும் முழுமை முழுதளாவிய நலம் ஊட்டம் பகுப்பு:படிவளர்ச்சி
இந்தியக் கட்டிடக்கலை
https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_கட்டிடக்கலை
இந்தியக் கட்டிடக்கலையின் பற்றியான மிக முந்திய ஆதாரங்கள், சிந்துவெளிப் பண்பாட்டுக் காலத்திலேயே காணப்பட்டது. சிந்துவெளிப் பண்பாட்டுக் காலமென்பது ஏறத்தாழ கி.மு 3500-இலிருந்து கி.மு 2000 வரையிலான காலப்பகுதியாகும். இக்காலகட்டத்தில் இருந்த மொஹெஞ்சதாரோ, ஹரப்பா போன்ற முக்கிய நகரங்களின் அழிபாடுகளிலிருந்து, அக்காலத்தின் கட்டிடக்கலையில் இந்தியர்கள் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால், கி.மு 1500 அளவில் சிந்துவெளிப் பண்பாடு அழிந்த பின்னர், ஏறத்தாழ கி.மு. 500 வரைக்கும் நிலைத்திருக்கும் வகையில் எவ்வித கட்டிடங்களும், கட்டப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வேதகாலக் கட்டிடக்கலை கி.மு 15 ஆம் நூற்றாண்டளவில் வடமேற்கு எல்லையூடாக இந்தியாவுக்குள் பெருமளவில் நுழைந்த ஆரிய இனத்தவர் நகர வாழ்வுக்குப் பழக்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. இதனால் போர் வலிமையில் உயர் நிலையில் இருந்தது போலக் கட்டிடக்கலை மற்றும் நகர அமைப்புத் துறைகளில் சிந்துவெளிப் பண்பாட்டு மக்களைப்போல் சிறப்படைந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. இக்காலத்தில் மரம், மூங்கில் என்பவற்றைக் கொண்டே கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கவேண்டும். வேத காலம் என்று பொதுவாக அழைக்கப்படும் இக்காலத்தில் மரத்தினாலான பாதுகாப்பு அரண்களைக் கொண்ட ஊர்கள் அமைக்கப்பட்டிருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். பிற்காலத்தில் நிலைத்து நிற்கக்கூடிய பொருட்களால் கட்டிடங்கள் அமைக்கப்பட்டபோதும், மரம், மூங்கில் முதலியவற்றால் அமைக்கப்பட்ட கட்டிடங்களின் மாதிரிகளையும், அமைப்பு வேலைப்பாடுகளையும் அப்படியே படியெடுத்து அமைத்தார்கள். இதனால் இப்போது நிலைத்திருக்கும் பிற்காலக் கற்கட்டிடங்களை ஆராய்வதின் மூலம் வேத காலத்துக் கட்டிட அமைப்பு முறைகளை ஓரளவுக்கு உய்த்து அறியக்கூடியதாக உள்ளது. பௌத்த கட்டிடக்கலை கி.மு 5 ஆம் நூற்றாண்டளவில் கங்கைக் கரையோரமாக மக்கள் குடியேற்றங்களும் பல சிறிய அரசுகளும் உருவாகியிருந்தன. வேதகாலப் பிராமணீயத்துக்கு மாற்றாகப் பௌத்தம், சமணம் என்னும் மதங்கள் தோன்றிச் செல்வாக்குப் பெற்றுவந்தன. அக்காலத்தில் பரந்த பலம் பொருந்திய மௌரியப் பேரரசன் அசோகச் சக்கரவர்த்தியின் ஆட்சியில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு மத்தியில் பௌத்தம் அரச சமயமாகி இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும், இந்தியாவுக்கு வெளியிலும்கூடப் பரவியபோது, அதன் வலு, செல்வாக்கு என்பன காரணமாக அச்சமயம் சார்பான பல கட்டிடங்களை நீண்டகாலம் நிலைத்திருக்கக் கூடியதாக அமைக்க முடிந்தது. இக்காலத்தைச் சேர்ந்த கட்டிடக்கலை பொதுவாகப் பௌத்தக் கட்டிடக்கலை என அழைக்கப்படுகின்றது. இக்காலம் கி.மு 250 தொடக்கம் கி.பி 600 களின் முடிவு வரையாகும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இக் காலத்தில் உருவான கட்டிடக்கலையே இந்தியப் பாரம்பரியக் கட்டிடக்கலையின் அடிப்படை எனலாம். இந்துக் கட்டிடக்கலை இந்து சமயம், பௌத்தம் தோன்றுவதற்கு முன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே வளர்ச்சியடைந்து வந்திருக்கின்றது எனினும், கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை கட்டப்பட்டிருக்கக் கூடிய இந்துக் கட்டிடங்கள் எதுவும் அறியப் படவில்லை. பௌத்த சமயம் இந்தியாவில் வீழ்ச்சியடையத் தொடங்கிய பின்னரே இந்துக் கட்டிடக்கலையின் வேகமான வளர்ச்சி ஆரம்பித்தது எனலாம். இந்துக் கட்டிடக்கலையின் கூறுகள் பலவும் பௌத்த கட்டிடக்கலையில் காணப்பட்டவையே. நிலைத்து நிற்கக்கூடியதாகக் கட்டப்பட்ட இந்துக் கட்டிடக்கலையின் ஆரம்பகாலச் சான்றாதாரங்கள் கி. பி 5 ஆம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கத் தொடங்குகின்றன. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் குப்தப் பேரரசின் கீழும், ஏறத்தாழ இதே காலத்தில் தக்காணத்தில் சாளுக்கிய அரசின் கீழும் ஏற்பட்ட இந்துமத மறுமலர்ச்சி இதற்கு வித்திட்டது எனலாம். தொடக்க கால அமைப்புக்கள் மலைப் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை கோயில்களாகவே இருந்தன. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து இந்துக் கட்டிடக்கலை இரண்டு பிரிவுகளாக வளரத்தொடங்கியது. வடபகுதிப் பாணிக்கு வடஇந்தியக் கட்டிடக்கலைப் பாணி அல்லது நாகர கட்டிடக்கலைப் பாணி என்றும், தென்னிந்தியப் பகுதிகளில் வளர்ந்த பாணிக்கு திராவிடக் கட்டிடக்கலைப் பாணி என்றும் இன்றைய ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இதை விடத் தக்காணத்தில் வளர்ந்த ஒரு கலப்புப் பாணி வேசர கட்டிடக்கலைப் பாணி என்று அழைக்கப்படுகின்றது. இந்துக் கட்டிடக்கலையின் முக்கியமான முதலிரு பிரிவுகளும் 13 ஆம் நூற்றாண்டு வரை மிக வேகமான வளர்ச்சியைக் கண்டன. வடஇந்தியக் கட்டிடக்கலை வட்டார அடிப்படையில் வேறுபாடுகளுடன் வளர்ச்சியடைந்தது. இவை முக்கியமாக ஒரிசா, மத்திய இந்தியா, ராஜபுதனம், குஜராத், தக்காணம் முதலிய வட்டாரங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. தென்னிந்தியாவில், சிறப்பாகத் தமிழ் நாட்டில் வளர்ந்த திராவிடக் கட்டிடக்கலையும் அரச குலங்களின் ஆட்சிக்கால அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. இவை முத்தரையர் காலம் (கி.பி 600 - 900), சோழர் காலம் (கி.பி 900 - 1150), பாண்டியர் காலம், (கி.பி 1100 - 1350) விஜயநகரக் காலம் (கி.பி 1350 - 1565), நாயக்கர் காலம் (கி.பி 1600 - ) என அழைக்கப்படுகின்றன. சோழர் கட்டிடக்கலை சோழர் ஆட்சி தமிழகத்தின் பொற்காலமாய் ஏறத்தாழ நான்கு நூற்றாண்டு காலம் நடைபெற்றது(கி.பி 850-1250). இந்த நீண்ட காலத்தில் தமிழ்நாடு முழுவது சிறியதும் பெரியதுமாகக் கற்கோயில்கள் கட்டப்பெற்று, குமிழ்கள் போல அவை தமிழ்நாட்டின் நிலப்பரப்பை அலங்கரித்தன. அடித்தளம் முதல் உச்சியிலுள்ள கவர்ச்சியான பகுதி வரை(உபாநாதி - ஸ்தூபி பரியந்தம்) கோயில் முழுவதும் கல்லாலேயே கட்டப்படுமாயின், அதற்கு 'கற்றளி' என்பது பெயர். கற்றளிகளைக் கட்டுவதே பெருமைக்குரியதாகக் கருதப்பட்டது. சோழர்களுடைய கட்டடக்கலைப் பாணியைப் பின்பற்றித் தமிழ்நாட்டிற்கு அப்பாலும் பல கோயில்கள் கட்டப்பட்டன. இலங்கையிலும் மைசூரிலும் ஆந்திர மாநிலத்தில் திராக்ஷாராம முதலிய இடங்களிலும் உள்ள கோயில்களைச் சான்றாகச் சொல்லலாம். தஞ்சைப் பெருவுடையார் கோயில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது இராஜராஜேஸ்சுவரம் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சைப் பெரியகோவில் எனவும் இக்கோவில் அறியப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரம் கங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரியலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது. தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் ஐராவதேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்துக் கோவில் ஆகும். இக்கோவில் இரண்டாம் ராசராசரால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப் பட்டது. இஸ்லாமியக் கட்டிடக்கலை 14 ஆம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் இஸ்லாமியரின் படையெடுப்பும் அதைத் தொடர்ந்து உருவான இஸ்லாமிய அரசுகளும், வளர்ந்து வந்த அவற்றின் வலிமையும் இஸ்லாமியப் பண்பாட்டை இந்தியாவுக்குள் கொண்டுவந்தன. மேற்கோள்கள் உசாத்துணைகள் Agarwala, Satish Chandra., Architecture and Town Planning, Dhanpat Rai & Co., Delhi. Brown, Percy., Indian Architecture (Budhist and Hindu Period), D. B. Taraporevala Sonsa and Co., Bombay, 1971. Fletcher, Banister., Cruikshank, Dan. (editor), A History of Architecture, CBS Publishers and Distributors, New Delhi, 1999. பகுப்பு:இந்தியக் கட்டிடக்கலை பகுப்பு:நாடு வாரியாகக் கட்டிடக்கலை
சிந்துவெளிப் பண்பாடு
https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளிப்_பண்பாடு
REDIRECT சிந்துவெளி நாகரிகம்
இந்தியக் குடைவரைக் கோயில்கள்
https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடைவரைக்_கோயில்கள்
பெரிய மலை(வரை)களைக் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் "குடைவரைக் கோயில்கள்" என அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் பொ.ஊ.மு. 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின் சுமார் ஆயிரம் ஆண்டுகள் வரை நீண்ட காலம் நிலைத்து நிற்காத மரம், மூங்கில், வைக்கோல், புல் வகைகள் போன்றவைகளைப் பயன்படுத்தியே கட்டிடங்களை அமைத்து வந்தார்கள் எனக் கருதப்படுகின்றது. பொ.ஊ.மு. 2-3 ஆம் நூற்றாண்டு முதல் பௌத்த மதம் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலத்தில், நிலைத்து நிற்கக் கூடிய கட்டிடங்களை அமைப்பதற்கு, பெரிய மலைப் பாறைகள் இருக்குமிடங்களில், அவற்றைக் குடைந்து கட்டிடங்களை அமைத்தார்கள்.LIST OF ROCK CUT ARCHITECTURE தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் எது என்பதில் வரலாற்று ஆய்வாளர்களிடம் ஒத்த கருத்துகள் இல்லை. பாண்டியன் செழியன் சேந்தன் கட்டிய பிள்ளையார்பட்டிக் குடைவரையும் மலையடிக்குறிச்சி குடைவரை கோயில்களே முதல் தமிழகக் குடைவரைக் கோயில்கள் என்று சிலரும் மகேந்திர பல்லவன் என்கிற பல்லவ மன்னன் செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் உருவாக்கிய குடைவரைக் கோவிலே தமிழகத்தின் முதல் குடைவரைக் கோவில் என்று சிலரும் கூறுகின்றனர். பாண்டியர்கள் தங்கள் முதலாம் பாண்டியப் பேரரசின் போது முப்பதுக்கும் மேற்பட்ட கோயில்களை கட்டி இருந்தனர். அத்துடன் மகேந்திர பல்லவனும் மாமண்டூர், திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி ஆகிய ஊர்களில் குடைவரைக் கோவில்களை அமைத்தவன் ஆவான். தமிழகத்தில் பாண்டியர், பல்லவர், முத்தரையர், அதியர் மன்னர்களின் மரபினர்களே குடைவரைக் கோவில்களை அமைத்து வழிகாட்டியுள்ளனர்.http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314225.htm#251 பல்லவர்காலம் thumb|250px|அரக்கன் மகிசாசூரனிடம் போரிடும் மகிஷாசுரமர்த்தினியின் சிற்பம், மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம் thumb|250px| பாம்புப் படுக்கையில் யோகநித்திரையில் திருமாலின் சிற்பம், மாமல்லபுரம் மகிஷாசுரமர்த்தினி மண்டபம் பாண்டியர் குடைவரைகள் thumb|கழுகுமலை வெட்டுவான் கோயில் முத்தரையர் குடைவரைகள் மலையடிப்பட்டி வாகீஸ்வரமுடையார் கோயில் விஜயசோழிஸ்வரம் நார்தாமலை http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/malaiyadi.htm கர்நாடகா thumb|பாதாமி குடைவரைக் கோவில்கள், கர்நாடகா பாதாமி குடைவரைக் கோவில்கள் - இந்து அய்கொளெ - இந்து மகாராட்டிரம் thumb|எல்லோரா கைலாசநாதர் கோவில் மத்தியப் பிரதேசம் thumb|தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில் பாக் குகைகள் உதயகிரி குகைகள் தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில் தம்நார் குகைகள் ஒடிசா குஜராத் சியோத் குகைகள் காம்பாலித குகைகள் ஜுனாகத் குடைவரைகள் ஆந்திரப் பிரதேசம் அமராவதி பெலும் குகை போஜ்ஜன்ன கொண்டா உண்டவல்லி குண்டுபள்ளி கோட்டூரு தனதிப்பலு சந்திராவரம் சாலிகுண்டம் தொட்டலகொண்டா நாகார்ஜுனகொண்டா பவிகொண்டா புத்தம் பெத்தபுரம் ராமதீர்த்தம் கண்டசாலா அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில் பிகார் பராபர் குகைகள் ஜம்மு காஷ்மீர் அமர்நாத் வைஷ்ணவ தேவி சிவகோரி ஆதாரம் வெளியிணைப்புகள் http://asi.nic.in/asi_monu_tktd_karnataka_rockbadami.asp பகுப்பு:இந்துக் கோயில் கட்டிடக்கலை பகுப்பு:இந்தியக் கட்டிடக்கலை பகுப்பு:இந்தியப் பட்டியல்கள்
துருக்கிய மொழி
https://ta.wikipedia.org/wiki/துருக்கிய_மொழி
துருக்கிய மொழி () துருக்கியர்களின் தாய்மொழியாகும். இது இச்தான்புல் துருக்கி "İstanbul Türkçesi" konulu deneme yarışması ödül töreni Turkish Language Association என்றும் அழைக்கப்படுகிறது. இது தென் கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா, காகஸஸ், மத்திய ஆசியா, ஐரோப்பாவின் பிற பகுதிகள், ஐரோப்பா ஐக்கிய நாடுகள், மசிடோனா, கிரீசு, துருக்கி, வடக்கு சைப்ரஸ், பல்கேரியா, கிரீஸ் முதலிய நாடுகளிலும், துருக்கி அங்கத்தினராக இல்லாத ஈ.யூ. மொழி பேசப்படும் நாடுகளிலும், சுமார் நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழியாகும். ஒட்டோமான் பேரரசில் அடங்கியிருந்த நாடுகளிலேயே இம்மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர். துருக்கி, சைப்பிரஸ் ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாகும். வகைப்பாடு வலது|thumb|ரஷ்யாவில், கைசில் என்ற இடத்தில் உள்ள, 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பழைய துருக்கிய எழுத்துக்களைக் கொண்ட பழைய துருக்கிய கல்வெட்டு துருக்கிய மொழிகள் அல்தாயிக் மொழித் தொகுப்பைச் சேர்ந்தவை. துருக்கிய மொழி பேசுபவர்களில் சுமார் 40% பேர்கள் உள்ளூர் துருக்கிய மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். துருக்கிய மொழி ஒஹுஸ் (Oghuz) மொழிக் குழுவில் ஓர் உறுப்பாகும், துருக்கிக் மொழிக் குழுவில், ஒஹுஸ் (Oghuz) மொழித் தொகுப்பாகும், துருக்கிய மற்றும் அசர்பைஜானி, டர்க்மென் (Turkmen), கஷ்காய் (Qashqai), ககாசு (Gagauz) மற்றும் பால்கன் ககாஸ் துருக்கி (Balkan Gagauz Turkish) உள்ளிட்ட பிற ஓகூஸ் துர்க்கி மொழிகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒற்றுமை உள்ளது. வரலாறு முன் மத்திய காலங்களில் (6 முதல் 11 ஆம் நூற்றாண்டுகள் வரை), துருக்கிய மொழி விரிவாக்கம் அடைந்தது. துருக்கிய மொழிகளில் பேசும் மக்கள், சைபீரியா, ஐரோப்பா, மத்தியதரைக்கடல் நாடுகள், மத்திய ஆசியா எனப் புவியியல் பகுதி முழுவதும் பரவியிருந்தனர். துருக்கியின் செல்ஜக் (Seljuqs) இனத்தினர், தங்கள் ஒஹுஸ் மொழியைப் பரப்பினர். ஒஹுஸ் மொழி, இன்றைய துருக்கிய மொழியின் மூல மொழி ஆகும். இது 11 ஆம் நூற்றாண்டின் அனத்தோலியா மொழியின் பகுதி ஆகும்.Findley, Turkish Language Association, July 2014 ஒட்டோமான் துர்கிஷ் ஒட்டோமான் பேரரசரின் காலத்தில் (1299-1922) பயன்பாட்டிலிருந்த, கலை, இலக்கியம் ஆகியவற்றை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ மொழி ஒட்டோமான் துருக்கிஷ் எனப்படுகிறது. இது துருக்கியம், பாரசீகம், மற்றும் அரபி ஆகிய மொழிகளின் கலவை. எனினும் தினசரி பயன்பாட்டிலுள்ள துருக்கிய மொழி இவை அனைத்திலிருந்தும் வேறுபட்டிருந்தது. அன்றாட பயன்பாட்டிலுள்ள துருக்கிய மொழி, "சுமாரான துருக்கியம்" என்று பொருள்படும் கபா டூர்க்ஸ் (kaba Türkçe) அல்லது அழைக்கப்பட்டது. இது குறைவான கல்வி பெற்ற மற்றும் கிராமப்புற சமூகத்தினர்களால் பேசப்படுகிறது. இது நவீன துருக்கிய மொழிக்கு அடிப்படையாக விளங்கியது. நவீன துருக்கிய மொழி சொற் குவியலுக்கு இதிலிருந்து அதிக சதவீத வார்த்தைகள் பெறப்பட்டன.Glenny 2001: 99 மொழி சீர்திருத்தமும் நவீன துருக்கிய மொழியும் நவீன துருக்கி நிர்மாணிக்கப்பட்ட பின்னர், 1932 ல், முஸ்தஃபா கமால் அடாடர்க் (Mustafa Kemal Atatürk) காப்புமையில், துருக்கிய மொழி சீர்திருத்தம் மேற்கொள்ள துருக்கிய மொழி சங்கம் (TDK) நிறுவப்பட்டது. துருக்கிய மொழியில் ஆராய்ச்சி நடத்துவது இதன் நோக்கம் ஆகும். அரபு மற்றும் பாரசீக மொழிகளை பிறப்பிடமாகக் கொண்ட வார்த்தைகளையும், பிற மொழிக் கடன் வார்த்தைகளையும், சமமான துருக்கிய மொழி வார்த்தைகளைக் கொண்டு பதிலீடு செய்வதும், மொழி சீர்திருத்தம் செய்வதும் இச்சங்கத்தின் பணிகளில் ஒன்றாகும்.See Lewis (2002) for a thorough treatment of the Turkish language reform. பத்திரிகைகளில் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. இதன் மூலம், துருக்கிய மொழியிலிருந்து பல நூறு வெளிநாட்டு சொற்களை நீக்கி இச்சங்கம் வெற்றி கண்டது. டி.டி.கே மூலம் மொழிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான வார்த்தைகள் புதிதாக துர்கிக் மொழி ஆதாரங்களை பெற்றிருந்தன, பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படாத பழைய துருக்கிய வார்த்தைகள் தெரிவு செய்யப்பட்டு புதுப்பிப்பட்டன. 1927 ல் அட்டாடர்க், தன் புதிய பாராளுமன்றத்திற்கான நீண்ட உரையில், ஒட்டோமான் பாணியைப் பயன்படுத்தினார். அந்த உரை கேட்பவர் அனைவருக்கும் மிகவும் அன்னியமாக இருந்தது. அவ்வுரை, 1963, 1986, 1995 ஆகிய மூன்று ஆண்டுகள் மூன்று முறை நவீன துருக்கியில் மொழிபெயர்க்கப்பட்டது.See Lewis (2002): 2–3 for the first two translations. For the third see பழைய துருக்கியிலிருந்து புதுப்பிப்பட்ட சில வார்த்தைகள் சிறப்பு அர்த்தங்களைக் கொண்டுள்ளன. உதாரணமாக "புத்தகம்" எனும் பொருளுடைய பெடிக் (betik) எனும் சொல் தற்பொழுது கணினி அறிவியலில் "எழுத்து" என்ற பொருளில் பயன்பட்டு வருகிறது. நவீன துருக்கிய சொற்களும் பழைய கடன் சொற்களும் thumb|கொசோவோவில் (கொசோவோ) உள்ள ப்ரிஸ்ரென்னில் (Prizren) அதிகாரப்பூர்வ மொழிகளில் சாலை அடையாளங்கள்: அல்பேனி (மேல்), செர்பியன் (மத்திமன்) மற்றும் துருக்கிய (கீழ்) நவீன துருக்கிய சொற்கள் மற்றும் பழைய கடன் சொற்களுக்கு இடையே உள்ள தொடர்பை சில உதாரணங்களுடன் காட்டும் அட்டவணை: ஒட்டோமான் (Ottoman) துர்கிஷ்நவீன துர்கிஷ்தமிழ் மொழிபெயர்ப்புகுறிப்புகள்müsellesüçgen முக்கோணம்பெயர்ச்சொல் கூட்டு üç பின்னொட்டு -gentayyareuçakவானூர்திuçmak என்ற வினைச்சொல்லிலிருந்து பெறப்பட்டது ("பறக்க"). இந்த வார்த்தை "விமான நிலையம்" என்ற பொருளில் முதலில் முன்மொழியப்பட்டது.nispetoran விகிதாச்சாரம்இந்தப் பழைய வார்த்தையை புதிய மொழியில் சேர்த்து இணையாகப் பயன்படுத்தப்படுகிறது. நவீன வார்த்தை பழைய துருக்கிய வினைச்சொல்லாகும் or- (வெட்டுவதற்கு).şimalkuzeyவடக்குபழைய துருக்கிய பெயர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது kuz ("குளிர்ந்த மற்றும் இருண்ட இடம்" அல்லது "நிழல்"). இந்த வார்த்தையானது மத்திய துருக்கிய மொழிகளின் பயன்பாட்டில் இருந்து மீட்டெடுக்கப்பட்டது.teşrinievvelekimஅக்டோபர் மாதம்பெயர்ச்சொல் ekim பொருள் "நடவு நடவடிக்கை", இது இலையுதிர் காலத்தில், துருக்கியில் பரவலாக தானிய விதைகளை விதைப்பதைக் குறிக்கிறது புவியியல் அடிப்படையில் பரவல் ஜேர்மனியில், துருக்கிய மொழி பேசும் இரண்டு மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அமெரிக்கா, பிரான்சு, நெதர்லாந்து, ஆஸ்திரியா, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் துருக்கிய மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர்.Gordon, Raymond G., Jr. (ed.), Ethnologue: Languages of the World, Fifteenth edition. Report for language code:tur (Turkish), 2005}} தங்க இடம் அளிக்கும் நாடுகளில் துருக்கியைச் சேர்ந்த குடியேற்றக்காரர்களும், அனைத்து இன துருக்கிய புலம்பெயர்ந்தோர்களும், கலாச்சார ஒருங்கமைவு மற்றும் பிற மொழி தாக்கத்தின் காரணமாக, சொந்த மொழியான துருக்கிய மொழியைச் சரளமாகப் பேசுவதில்லை.e.g. citations given in Cindark, Ibrahim/Aslan, Sema (2004): Deutschlandtürkisch?. Institut für Deutsche Sprache, page 3. 2005 ஆம் ஆண்டு, துருக்கியில் 93% மக்கள் துருக்கிய மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் எஞ்சியிருந்த 67 மில்லியன் மக்கள் குர்திஸ் மொழிகளைப் பயன்படுத்தினர். அதிகாரப்பூர்வ நிலை துருக்கிய மொழியியல் சங்கம், மொழி புனிதத்துவத்தின் சித்தாந்தங்களால் உந்தப்பட்டது. அதன் முக்கிய பணிகளில் சில, கடன் சொற்களை நீக்குதல், அவற்றுக்குச் சமமான துருக்கிய மொழிச் சொற்களைக் கொண்டு கடன் சொற்களை மாற்றுதல், மற்றும் துருக்கிய மொழி தோற்றத்திற்கு சமமான வெளிநாட்டு இலக்கண கட்டுமானங்களை உருவாக்கல்.The name TDK itself exemplifies this process. The words tetkik and cemiyet in the original name are both Arabic loanwords (the final -i of cemiyeti being a Turkish possessive suffix); kurum is a native Turkish word based on the verb kurmak, "set up, found". 1951 இல் துருக்கிய மொழியியல் சங்கம், ஒரு சுதந்திரமான அமைப்பாக மாறியது. அது கல்வி அமைச்சரால் தலைமை தாங்கப்பட வேண்டும் என்ற அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலை ஆகஸ்ட் 1983 வரை தொடர்ந்தது. 1980 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக் வீழ்ந்ததைத் தொடர்ந்து 1982 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் துருக்கிய மொழியியல் சங்கம், மீண்டும் ஒரு அரசியலமைப்பாக மாற்றப்பட்டது.. வட்டாரப் பேச்சுமொழிகள் நவீன தரநிலை துருக்கிய மொழியானது இஸ்தான்புல்லின் வட்டாரப் பேச்சுமொழியை அடிப்படையாகக் கொண்டது. 1930 களில் இருந்து ஊடகங்கள் மற்றும் துருக்கிய கல்வி முறைகள் மூலம் மொழித் தரநிலைகளின் அளவினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்ட போதிலும், வட்டாரப் பேச்சுமொழிகளில் மாறுபாடு தொடர்கிறது. பல்கலைக்கழகங்களாலும், துருக்கிய மொழி சங்கத்தின் அர்ப்பணிப்பு பணிக் குழுக்களாலும், துருக்கிய பேச்சுவழக்குகளை கண்டறியச் செய்யும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. துருக்கிய மொழி ஆராய்ச்சியின் ஒரு விரிவான தொகுப்பு மற்றும் வெளியீட்டிற்கான அறிக்கை தயாரிப்புப் பணி தொடர்கிறது. இதனுடன் வட்டாரப் பேச்சுமொழிகளில் உலக வரைபட நூல் தயாரிப்புப் பணியும் தற்போது நடைபெருகிறது.Özsoy மேலும் காண்க இடாய்ச்சு எசுபாஞம் இடச்சு இடானியம் இத்தாலியம் பஞ்சாபி மேற்கோள்கள் பகுப்பு:துருக்கிய மொழிகள் பகுப்பு:துருக்கி
பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
https://ta.wikipedia.org/wiki/பிரித்தானிக்கா_கலைக்களஞ்சியம்
thumb|300px|1913 விளம்பரம் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (என்சைக்கிளோபீடியா பிரிட்டானிக்கா; Encyclopædia Britannica) உலகிலேயே மிகப் பழையதும், பெரு மதிப்புடையதுமான ஆங்கில மொழிப் பொதுக் கலைக்களஞ்சியம் ஆகும். இதனுடைய கட்டுரைகள், பொதுவாகச் சரியானவையும், நம்பிக்கைக்குரியவையும், நன்றாக எழுதப்பட்டவையுமாகும் எனக் கருதப்படுகின்றன. இது சுகாட்லாந்து அறிவொளியின் (Scottish enlightenment) விளைவாக உருவாக்கப்பட்டது. வரலாறு இது முதலில் எடின்பரோவில் அடம் மற்றும் சார்லசு பிளாக் என்பவர்களினால் 18ம் நூற்றாண்டு தொடக்கம் பதிப்பிக்கப்பட்டது. பிரெஞ்சு Encyclopédie போலன்றி, பிரித்தானிக்கா பழமைவாதப் பதிப்பாகும். பிந்திய பதிப்புக்கள் வழமையாக ஆட்சியிலிருந்த சக்கரவர்த்திகளுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டன. 1870 களில், இதன் 19ம், 20ம் பதிப்புக்களின் போது இவ் வெளியீடு சுகாட்லாந்திலிருந்து இலண்டனுக்கு மாற்றப்பட்டு த டைம்சு என்னும் செய்திப் பத்திரிகையுடன் இணைக்கப்பட்டது. 11 ஆவது பதிப்புக்காக, இவ்வெளியீடு, இங்கிலாந்திலேயே, கேம்பிறிச்சு பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. 11ம் பதிப்புக்குப் பின்னர், இதனுடைய வியாபாரச் சின்னமும், பதிப்புரிமையும் சியர்சு உரோபக் (Sears Roebuck) நிறுவனத்திற்கு விற்கப்பட்டதுடன், சிகாகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டு அங்கேயே நிலைகொள்ளலாயிற்று. தற்போதைய பதிப்பாளர்கள் "என்சைக்கிளோபீடியா பிரித்தானிக்கா நிறுவனம்" (Encyclopædia Britannica Inc.) ஆகும். இந்நிறுவனம் தற்போது "Britannica" (பிரித்தானிக்கா) என்னும் சொல்லுக்கு வியாபாரச்சின்ன உரிமை பெற்றுள்ளது. 2004 நிலையின் படி, மிக முழுமையான நிலையிலுள்ள, "பிரித்தானிக்கா கலைக்களஞ்சிய" பதிப்பு, 4.4 கோடி சொற்களைக் கொண்ட 120,000 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. இது புத்தக வடிவிலும் (32 பாகங்கள், குறிக்கப்பட்டுள்ள விலை 1400 அமெரிக்க டாலர்கள், 65,000 கட்டுரைகள்), இணையத்திலும் (120,000 கட்டுரைகள், கட்டுரைகளின் சுரக்கத்தை இலவசமாகப் பார்க்க முடியும், முழுமையான கட்டுரைகளைப் பார்க்கத் தனிப்பட்டவர்களுக்கு, மாதமொன்றுக்கு 10 அமெ.டாலர்கள் அல்லது ஆண்டுக்கு 60 அமெ.டாலர்கள் செலுத்தவேண்டும்.), குறுவட்டு மற்றும் இறுவட்டிலும் (100,000க்கு மேற்பட்ட கட்டுரைகள், 50 அமெ. டாலர்கள்), பதிப்பித்து வெளியிடப்படுகின்றன. பிரித்தானிக்காவின் தற்போதைய பதிப்பு 4000 க்கு மேற்பட்டவர்களால் எழுதப்பட்டுள்ளது. இவர்களுள் பிரபல அறிஞர்களான மில்ட்டன் ஃப்ரீட்மன், கார்ல் சேகன் மற்றும் மைக்கேல் டிபேக்கே (Michael DeBakey) என்பவர்களும் அடங்குவர். 35 வீதமான கலைக்களஞ்சியத்தின் உள்ளடக்கங்கள் கடந்த இரண்டு வருடங்களுக்குள் திருத்தி எழுதப்பட்டுள்ளன. பதிப்பு வரலாறு பதிப்பு வெளியீடு அளவு 1வது 1768–1771 3 பாக. 2வது 1777–1784 10 பாக. 3வது 1788–1797, 1801 sup. 18 பாக. + 2 இணை. 4வது 1801–1809 20 பாக. 5வது 1815 20 பாகங்கள் 6வது 1820–1823, 1815–1824 sup. 20 பாக. + 2 இணை. 7வது 1830–1842 21 பாக. 8வது 1852–1860 21 பாக. + சொல்லகராதி 9வது 1870–1890 24 பாக. + சொல்லகராதி.¹ 10வது 1902–1903 9வது பதிப்பு + 9 இணை.² 11வது 1910–1911 29 பாகங்கள்³ 12வது 1921–1922 11வது பதிப்பு + 3 இணை. 13வது 1926 11வது பதி.+ 6 இணை. 14வது 1929–1973 24 பாக. 15வது 1974–1984 28 பாக. 16வது 1985– 32 பாகங்கள் பாக. = பாகங்கள், இணை. = இணைப்பு, பதி. = பதிப்பு (1)  9வது பதிப்பு, அக்காலத்தில் பிரபலமான சேம்சு கிளாக் மக்சுவெல் என்பவரால் எழுதப்பட்ட மின்னியல் மற்றும் காந்தவியல் தொடர்பான கட்டுரைகளையும், வில்லியம் தொம்சன் என்பவரால் எழுதப்பட்ட வெப்பவியல் தொடர்பான கட்டுரைகளையும் கொண்டிருந்தது. (2) 10வது பதிப்பில் ஒரு தேசப்படப் பாகமும், சொல்லகராதி (index) கொண்ட பாகமும் சேர்க்கப்பட்டிருந்தன. (3) 11வது பதிப்பு, பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் classic பதிப்பாகக் கருதப்பட்டது. இப்பதிப்பு பொதுக்கள ஆவணமாகக் கிடைக்கும் (பார்க்கவும் 1911 Encyclopædia Britannica) முதலாவது இறுவட்டுப் பதிப்பு 1994ல் வெளியிடப்பட்டது. தமிழ்ப் பதிப்பு பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் என்ற பெயரில் 'பிரிட்டானிக்கா கன்சைசு என்சைக்கிளோபீடியா' வின் தமிழ் மொழிபெயர்ப்பு மூன்று தொகுதிகளாக 3120 பக்கங்களுடன் 28,000 கட்டுரைகளுடனும் 2400 புகைப்படங்கள், ஓவியங்கள், அட்டவணைகள், வரைபடங்களுடனும் விகடன் நிறுவனம் சென்னையில் வெளியிட்டுள்ளது. குறிப்புகளும் மேற்கோள்களும் வெளியிணைப்புகள் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் — உத்தியோகபூர்வ இணையத்தளம். பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் புதுப்பொலிவு (Dusting off the Britannica) — பிஸ்னஸ் வீக் (Business Week)-லிருந்து ஒரு கட்டுரை (1997). பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் பொய்யும், புரட்டும் - எப்படி வெட்கமில்லா சக்திமிக்க ஆதிக்கவாதிகள் ஒரு புகழ்பெற்ற கலைக்களஞ்சிய நூலை அழித்தார்கள் 1947-ல் வெளியான ஜோஸ்ஃப் மெக்காபே-யின் கட்டுரை அக்காலத்திய பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் எப்படி மதச்சார்போடு விளங்கியதென்பதை எடுத்துரைக்கிறது. விக்கிபீடியாவில் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் தவறுகளின் திருத்தம் - மீட்டாவிக்கியிலிருந்து, ''பிரித்தானிக்காவில் இருந்ததாகக் கருதப்படும் பிழைகளின் பட்டியலும் விக்கிபீடியாவில் அவை எவ்வாறு திருத்தப்பட்டன என்பதுவும். பகுப்பு:ஆங்கில மொழி கலைக்களஞ்சியங்கள் பகுப்பு:பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
ஒலியியல் (மொழியியல்)
https://ta.wikipedia.org/wiki/ஒலியியல்_(மொழியியல்)
மொழியியலில் ஒலியியல் (Phonetics) என்பது, மனிதர்கள் பேசும்போது உருவாகும் ஒலிகளைப் பற்றி ஆய்வு செய்யும் ஓர் அறிவியல் துறை ஆகும். இது மொழியியலின் ஒரு துணைப்பிரிவு ஆகும். இத்துறை, பேச்சு ஒலிகளின் இயற்பியல் இயல்புகள் பற்றிக் கவனம் செலுத்துகின்றது. இத்துறையின் ஆய்வுகள், ஒலிகளின் உடலியங்கியல் சார்ந்த உற்பத்தி, அவற்றின் ஒலியியல் தன்மைகள், அவற்றைக் கேட்டுணர்தல், அவற்றின் நரம்புசார் உடலியங்கியல் சார்பான விடயங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன. ஒலியியல் ஆய்வின் கருப்பொருட்களான ஒலிகள் (Phones), மனிதர்களினால் உச்சரிக்கப்படும் உண்மையான பேச்சொலிகளாகும். எழுத்து மொழிகளும் எழுத்துக்களும் பேச்சின் ஒலிகளோடு நெருங்கிய தொடர்புடையன எனினும், உண்மையில் ஒலியியலாளர்கள் பேச்சொலிகளையே கவனத்தில் எடுக்கிறார்களேயன்றி அவைகளைக் குறிக்கும் குறியீடுகளை அல்ல. எனினும் முன் கூறிய நெருங்கிய தொடர்பு காரணமாக பல அகராதிகள் குறியீடுகள் பற்றிய ஆய்வை (சரியானது குறியியல்) ஒலியியலாய்வின் ஒரு பகுதியாகக் காட்டுகின்றன. பிரிவுகள் பேச்சொலியை ஆராயும் ஒலியியல் முறை முக்கியமான மூன்று கிளைகளைக் கொண்டது: ஒலிப் பிறப்பியல் (articulatory phonetics), பேச்சொலியை உருவாக்குவதில் உதடுகள், நாக்கு, மற்றும் ஏனைய பேச்சு உறுப்புகளின் அசைவுகள், நிலைகள் என்பன பற்றி ஆய்வு செய்வது; அலை ஒலியியல் (acoustic phonetics), ஒலி அலைகளின் இயல்புகள் பற்றி ஆராய்வதால் இதை பெளதிக ஒலியியல் என்றும் அழைப்பர்.இங்கு ஒலிகளை ஆராய அறிவியல் கருவிகள், கணிதம், இயற்பியல் ஆகியன பயன்படுகின்றன; மற்றும் கேட்பொலியியல் (auditory phonetics), பேச்சைக் கேட்டுணர்தலை அடிப்படையாகக் கொண்டு மொழியை ஆய்வு செய்வது. மொழிகளில் பேச்சொலிகள் பல நூறு வேறுபட்ட ஒலிகளை (Phones) அனைத்துலக ஒலியியல் கழகம் (International Phonetic Association)அடையாளம் கண்டு அவற்றை அவர்களுடைய அனைத்துலக ஒலியியல் எழுத்து (International Phonetic Alphabet) முறைமையில் உள்ளடக்கியுள்ளனர். மனித குரல்வளையில் உருவாக்கப்படக்கூடிய பேச்சொலிகளுள் வெவ்வேறு மொழிகள் பயன்படுத்தும் ஒலிகளின் எண்ணிக்கைகள் பெருமளவுக்கு வேறுபடுகின்றன. இரண்டு உயிரொலிகளை மட்டுமே கொண்ட அப்காசு மொழி தொடக்கம் 55 உயிரொலிகளைக் கொண்ட செடாங் மொழி வரையான மொழிகளும், ஆறு மெய்யொலிகளை மட்டுமே கொண்ட ரொடோகாசு மொழி தொடக்கம் 117 மெய்யொலிகளைக் கொண்ட க்சூ மொழி வரையான மொழிகளும் உள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கைகளாக பிராகா மொழியில் 10 ஒலியன்களும், பப்புவா நியூ கினியாவில் பேசப்படும் ரோடோகாசு மொழியில் 11 ஒலியன்களும், அவாயன் மொழியில் 12 ஒலியன்களும், சேர்பிய மொழியில் 30 ஒலியன்களும் காணப்படும் அதேவேளையில் தெற்கு ஆபிரிக்காவின் கலகாரி பாலைவனத்தில் பேசப்படும் !க்சூ மொழியில் 141 ஒலியன்கள் உள்ளன. இவற்றுள் பழக்கமான ஒலிகளான /t/, /s/, /m/ ஆகியவை தொடக்கம் அசாதாரணமான வழிகளில் உருவாக்கப்படும் மிகவும் வழமைக்கு மாறான ஒலிகள்வரை அடங்கியுள்ளன. (பார்க்கவும்: கிளிக் ஒலி, குரல்வளைச் செயல் (phonation), காற்றோட்டப் பொறிமுறை (airstream mechanism)). ஆங்கில மொழி 13 உயிர் ஒலியன்களையும், 24 மெய் ஒலியன்களையும் கொண்டது. சில கிளை மொழிகள் பல மாற்றொலிகளைக் (allophone) கொண்டுள்ளன. இது இலத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட சாதாரன வரைவிலக்கணத்துக்கு மாறுபட்டது. மேற்படி வரைவிலக்கணம் 21 மெய்களையும், 5 உயிர்களையும் கொண்டது (சில சமயம் y உம் w வும் கூட உயிர்களாகக் கருதப்படுவதுண்டு). ஒலிப்பியல் 2500 ஆண்டுகளுக்கு முன்னமே இந்தியாவில் ஆராயப்பட்டதாகத் தெரிகிறது. இவற்றையும் பார்க்கவும் ஒலியியல் தலைப்புக்களின் பட்டியல் Speech processing ஒலியியல் biometric word list பல்கலைக்கழகங்களின் ஒலியியல் பிரிவுகள் ஐபிஏ மற்றும் SAMPA. வெளி இணைப்புகளும் உசாத்துணையும் இணைய ஒலிப்பியல் பாடத்திட்டம் *
சொற்பொருளியல்
https://ta.wikipedia.org/wiki/சொற்பொருளியல்
பொதுவாக சொற்பொருளியல் என்பது பொருள் (meaning) பற்றிய ஆய்வாகும். சொற்பொருளியல் பெரும்பாலும் சொற்றொடரியலுக்கு எதிர்மறையானது, ஏனெனில், சொற்பொருளியல் ஏதாவதொன்று என்ன பொருள் குறிக்கின்றது என்பதுடன் சம்பந்தப்பட்டிருக்கும் அதேவேளை சொற்றொடரியல், ஏதாவதொரு கருத்தை வெளிப்படுத்துகின்றதன் (உ.ம் எழுத்து அல்லது பேச்சு) முறையான அமைப்பு / வடிவம் சம்பந்தப்பட்டது. இச் சொல்லுக்கான மேலும் பல பொருள்கள் உண்டு: மொழியியலில் சொற்பொருளியல், சொற்கள் (அல்லது அதன் பகுதிகள்), சொற்றொடர்கள், வசனங்கள் மற்றும் உரைகளின் பொருள் பற்றிய ஆய்வாகும் என்று வரைவிலக்கணம் கூறப்படும் மொழியியலின் ஒரு துணைத் துறையாகும். சொற்பொருளியல், கோட்பாட்டு (theoretical) முறையிலும், செயலறிவு (empirical) முறையிலும் (உ.ம் உளவியல்சார் மொழியியல்) அணுகப்படக்கூடியது. சொற்பொருள்களைப் பிரித்து ஆராயும் முறைப்படி, சொற்பொருளின் அடிப்படைக் கூறுகளை வரையறுப்பதன் மூலம் அச் சொற்பொருள்களைப் பகுத்தாய்வு செய்யமுடியும். இதன் ஒரு ஆய்வுப் பரப்பு கூட்டுச் சொற்களின் (compound) பொருள் பற்றியது; இன்னொன்று ஒலி வேற்றுமையின்றிப் பொருள் வேறுபடுதல் (homonymy), ஒலி வேற்றுமை இருப்பினும் ஒரே பொருள் தருதல் (synonymy), எதிர்ப் பொருள் தருதல் (antonymy), ஒரு சொல் பல பொருள் தருதல் (polysemy), பொது வகைப் பொருள் தருதல் (hypernymy), துணை வகைப் பொருள் தருதல் (hyponymy), முழுமைப் பொருள் குறிக்கும் சொல்லுக்கான பகுதிப் பொருட் சொல் (meronymy), பகுதிப் பொருள் குறிக்கும் சொல்லுக்கான முழுமைப் பொருட் சொல் (holonymy), கூட்டுச் சொல் கூறுகளுக்கு இல்லாத இலக்கணப் பண்புகளை உடையதாதல் (exocentric), கூட்டுச் சொல் கூறுகளில் ஒன்றின் இலக்கணப் பண்புகளையாவது உடையதாதல் (endocentric) போன்ற வெவ்வேறு மொழியியல் வெளிப்பாடுகளுக்கிடையேயான தொடர்புகள் பற்றிய ஆய்வாகும். சூழ்பொருளியல் பெரும்பாலும் சொற்பொருளியலின் ஒரு பகுதியாகக் கொள்ளப்படுகின்றது. இவற்றையும் பார்க்கவும் சொற்பொருள் இயல்பு (semantic property) சொற்பொருள் வகுப்பு (semantic class), சொற்பொருள் அம்சம் (semantic feature) சொற்பொருள் விருத்தி (semantic progression) பகுப்பு:இலக்கணம் பகுப்பு:சொற்பொருளியல் பகுப்பு:சமூகத் தத்துவங்கள்
பிருஹதீஸ்வரர் கோயில்
https://ta.wikipedia.org/wiki/பிருஹதீஸ்வரர்_கோயில்
வழிமாற்று தஞ்சைப் பெருவுடையார் கோயில்
பேர்சி பிறவுன்
https://ta.wikipedia.org/wiki/பேர்சி_பிறவுன்
பேர்சி பிறவுன் (Percy Brown, 1872-1955) என்பவர் ஒரு புகழ்பெற்ற பிரித்தானிய அறிஞரும், கலை விமர்சகரும், வரலாற்றாசிரியரும், தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் ஆவார். இவர் இந்திய கட்டிடக்கலை, கிரேக்க பாக்திரிய கலை ஆகியவை பற்றி செய்த ஆய்வுகளுக்காக நன்கு அறியப்படுகிறார். வாழ்க்கை மற்றும் தொழில் பிறவுன் 1872 இல் பர்மிங்காமில் பிறந்தார் இவர் உள்ளூர் கலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடங்கினார், பின்பு றோயல் கலைக் கல்லூரியில் படித்து 1898 இல் பட்டம் பெற்றார். அவர் 1899 முதல் 1927 வரை அதாவது 28 ஆண்டுகள் இந்தியக் கல்விச் சேவையில் பணி செய்தார். இவர் இலாகூரில் உள்ள மேயோ கலைப் பள்ளியின் (இன்று தேசிய கலைக் கல்லூரி) முதல்வராகவும், இலாகூர் அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராகவும் ஆனார். 1909 இல், பிறவுன் மேயோ கலைப் பள்ளி முதல்வர் பதவிக்காலம் முடிந்தவுடன் இலாகூரை விட்டு வெளியேறினார், இவருக்குப் பின்பு இப்பதவியை இராம் சிங் என்பவர் 1913 வரை வகித்தார். அதே ஆண்டு, கொல்கத்தாவில் உள்ள அரசு கலைப் பள்ளியின் முதல்வரானார். 1927 இல் ஓய்வு பெற்றார் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவிடத்தில் செயலாளராகவும் பொறுப்பாளராகவும் 1947 வரை பணியாற்றினார், மீதி வாழ்க்கையை சிறீநகரில் கழித்தார். குறிப்பிடத்தக்க படைப்புகள் பிரவுன் இந்திய கட்டிடக்கலை, பௌத்த கட்டிடக்கலை ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்திய முதல் எழுத்தாளர்களில் ஒருவர். 1940 இல் இரண்டு தொகுதிகள் கொண்ட ஆர்கிடெக்சர் (தொகுதி 1: புத்திசுட் அண்ட் இந்து பீரியட்சு), (தொகுதி 2 இசுலாமிக் பீரியட்) என்ற கட்டிடக்கலை சம்பந்தப்பட்ட நூலை 1940 இல் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார், இது ஒரு முக்கியமான கட்டிடக்கலை நூலாகும். மற்ற குறிப்பிடத்தக்க படைப்புகள் ஏ டிசுக்ரிப்டிவ் கைடு டு தி டிபார்ட்மெண்ட் ஆப் ஆர்க்கியாலசி அண்ட் ஆன்டிகியூட்டிஸ் (1908), பிக்சர்சுக் நேபால் (1912), இந்தியன் பெயிண்டிங் (1918), டூர்சு இன் சீக்கிம் அண்ட் தி டார்ஜிலிங் டிசுட்ரிக்ட் (1922) மேற்கோள்கள் வெளி இணைப்புகள் பகுப்பு:பிரித்தானிய இந்தியவியலாளர்கள் பகுப்பு:1955 இறப்புகள் பகுப்பு:1872 பிறப்புகள் பகுப்பு:பிரித்தானியக் கட்டிடக் கலைஞர்கள்
சிந்துவெளிக் கட்டிடக்கலை
https://ta.wikipedia.org/wiki/சிந்துவெளிக்_கட்டிடக்கலை
thumb|சிந்து சமவெளி நகரத்தின் கட்டிடக்கலை வரைபடம் சிந்துவெளிப் பண்பாடு என்பது சுமார் கி.மு 3500 அளவில் தொடங்கி கி.மு 1500 வரை இன்றைய பாகிஸ்தானில் இருக்கும் சிந்து நதிப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் செழித்தோங்கியிருந்த பண்பாட்டைக் குறிக்கும். இது உலகின் பண்டைக்கால நகரப் பண்பாடுகளுள் ஒன்று. இதன் செல்வாக்குப் பிரதேசங்களில் மேற் குறிப்பிட்ட காலப்பகுதியில் வளர்ந்த கட்டிடக்கலையே சிந்துவெளிக் கட்டிடக்கலை என்று குறிப்பிடப்படுகின்றது. மொஹெஞ்சதாரோ, ஹரப்பா என்பன இப் பண்பாட்டின் முக்கிய நகரங்களாகும். இந்த அழிந்துபோன நகரப் பகுதிகளிலும், அவற்றை அண்டிய பிரதேசங்களிலும் நடைபெற்ற அகழ்வாராச்சிகள் இப் பண்பாட்டின் நகர அமைப்பு முறைகள் மற்றும் கட்டிடக்கலை சம்பந்தமான தகவல்களைத் தருகின்றன. இவற்றையும் பார்க்கவும் இந்தியக் கட்டிடக்கலை சிந்துவெளிப் பண்பாடு வெளியிணைப்புகள் ஹரப்பா.கொம் - சிந்துவெளி பற்றிய விரிவான தகவல்கள் (ஆங்கிலம்) இந்தியக் கட்டிடக்கலை - சிந்துவெளிப் பண்பாடு (ஆங்கிலம்) பகுப்பு:கட்டிடக்கலை பகுப்பு:சிந்துவெளி நாகரிகம்
பண்டைய எகிப்தியக் கட்டிடக்கலை
https://ta.wikipedia.org/wiki/பண்டைய_எகிப்தியக்_கட்டிடக்கலை
thumb|300px| ஓரசு கடவுளின் எட்ஃபூ கோயில் எகிப்திய நாகரிகம் உலகின் மிகப் பழைய நாகரிகங்களுள் ஒன்று. இன்று காணக் கிடைக்கும் மிகப் பழைய கட்டிடங்கள் பல இப்பண்பாட்டைச் சேர்ந்தவையாகும். இக் கட்டிடங்களின் மூலம் எகிப்திய நாகரிகம் அடைந்திருந்த உயர் நிலை பற்றி அறியக் கூடியதாக உள்ளது. Ancient Egyptian architecture Ancient Egyptian Architecture நைல் நதி பள்ளத்தாக்கு ஒரு பழமையான செல்வாக்கு பெற்ற நாகரிகத்தால் உருவாக்கப்பட்ட பண்டைய எகிப்திய கட்மைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை கொண்டுள்ளது. இங்குள்ள பழமையான கீசாவின் பெரிய பிரமிடு மற்றும் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் ஆகியவை புகழ் பெற்ற கட்டிடக்கலை நினைவுச்சின்னங்களாகும். பண்டைய எகிப்து கட்டிடங்களில், மரம் பற்றாக்குறை காரணமாக, சூரிய வெப்பத்தில்-சுட்ட மண்செங்கல் மற்றும் கல் (முக்கியமாக சுண்ணாம்பு, மணற்பாறை மற்றும் கருங்கல் ஆகிய இரண்டு முக்கிய கட்டுமான பொருட்களை கணிசமான அளவு பயன்படுத்தினர். பழைய எகிப்து இராச்சிய மன்னர்கள் முதன்முதலாக கல்லறைகள் மற்றும் கோயில்கள் கட்டுவதற்கு கற்களைப் பயன்படுத்தினர். அரச அரண்மனைகள், கோட்டைகள், கோவில்கள், நகரங்களின் சுவர்கள் மற்றும் கோவில் வளாகங்களில் உள்ள துணை கட்டிடங்கள் கட்ட செங்கற்கற்களைப் பயன்படுத்தினர். thumb|300px|19 ஆம் நூற்றாண்டுச் சுற்றுப்பயணிகள் பெரிய இசுபிங்சுக்கு முன்னால் - வடகிழக்குத் திசையிலிருந்து பார்க்கும் தோற்றம், பெரிய பிரமிடு பின்னணியில் உள்ளது. கீசா பிரமிடுகளின் தொகுதி எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் எல்லைப் பகுதியில் கீசாவின் மேட்டு நிலப் பகுதியில் அமைந்துள்ளது. பண்டைக்கால நினைவுச் சின்னங்களைக் கொண்ட இத்தொகுதி நைல் நதிக்கரையில் அமைந்துள்ள பழைய கிசா நகரத்திலிருந்து 8 கிமீ (5 மைல்) தொலைவில் உட்புறமாகப் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ளது. இது, கெய்ரோ நகர மத்தியில் இருந்து தென்மேற்காக சுமார் 25 கிமீ (15மைல்) தொலைவில் உள்ளது. இத்தொகுதியிலுள்ள ஒரு நினைவுச் சின்னமான கிசாவின் பெரிய பிரமிடே பழங்கால உலகின் ஏழு அதிசயங்களில் இன்றும் அழியாமல் இருக்கும் ஒரே அதிசயமாகும். இதனையும் காண்க thumb|மன்னர் காப்ராவின் பிரமிடு மற்றும் ஸ்பிங்ஸ் thumb|இரண்டாம் ராமேசஸ் நிறுவிய கிளியோபாட்ராவின் ஊசி, பாரிஸ் ஜோசெர் பிரமிடு நெபெரிர்கரே பிரமிடு சகுரா பிரமிடு காப்ராவின் பிரமிடு செம்பிரமிடு வளைந்த பிரமிடு கருப்பு பிரமிடு கிளியோபாட்ராவின் ஊசி படக்காட்சிகள் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Ancient Egyptian Architecture in a Nutshell – Video The History of Ancient Egypt's Architecture – Video Egyptian Civilisation- Architecture, Religion, Government and Contributions- Video பண்டைய எகிப்து பகுப்பு:எகிப்திய நாகரிகம் பகுப்பு:எகிப்தியக் கட்டிடக்கலை
அசிரியக் கட்டிடக்கலை
https://ta.wikipedia.org/wiki/அசிரியக்_கட்டிடக்கலை
அசிரியப் பண்பாடு என்பது இன்றைய ஈராக் நாட்டிலுள்ள யூபிரட்டீஸ், தைகிரிஸ் ஆகிய நதிக்கரையில் வளர்ந்து செழித்திருந்த பண்பாட்டைக் குறிக்கும். இப் பண்பாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலையே அசிரியக் கட்டிடக்கலை ஆகும். இவற்றையும் பார்க்கவும் கட்டிடக்கலை வரலாறு பகுப்பு:கட்டிடக்கலை
தாளங்களின் பட்டியல்
https://ta.wikipedia.org/wiki/தாளங்களின்_பட்டியல்
இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்குப் பயன்படுவது தாளம் ஆகும். கர்நாடக இசையில் தற்போது ஏழு தாளங்கள் வழக்கிலுள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். "சப்தம்" என்பது வடமொழியில் எழு என்று பொருள்படும். ஏழு தாளங்கள் துருவ தாளம் மட்டிய தாளம் ரூபக தாளம் ஜம்பை தாளம் திரிபுடை தாளம் அட தாளம் ஏக தாளம் தாள உறுப்புக்கள் தாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன: 1. லகு 2. அனுதிருதம் 3. திருதம் 4. குரு 5. புளுதம் 6. காகபாதம் 35 தாளங்கள் ஏழு வகைத்தாளங்களின் மூலமாகவும், ஐந்து வகையான லகுவின் வகைகள் மூலமாகவும் மொத்தமாக 35 தாளங்கள் உள்ளன. எடுத்துக்காட்டிற்கு லகுவின் ஓர் ஜாதியான திஸ்ரத்தை எடுத்துக்கொண்டால் திஸ்ர ஜாதி துருவ தாளம் திஸ்ர ஜாதி மட்டிய தாளம் திஸ்ர ஜாதி ரூபக தாளம் திஸ்ர ஜாதி ஜம்பை தாளம் திஸ்ர ஜாதி திரிபுடை தாளம் திஸ்ர ஜாதி அட தாளம் திஸ்ர ஜாதி ஏக தாளம் ஆகிய ஏழு பேதங்களை ஒரு லகுவின் ஜாதி தருவதுப்பொல் ஐந்து ஜாதிகளும், ஏழு தாளவகைகளும் சேர்ந்து மொத்தமாக 35 தாளவகைகளும் உருவாகின்றன. பகுப்பு:தாளங்கள்
தாளம் (இசை)
https://ta.wikipedia.org/wiki/தாளம்_(இசை)
தாளம் இசையில் கால அளவுகளை ஒழுங்கு முறையில் அமைப்பதற்கு பயன்படுவது ஆகும். கர்நாடக இசையில் தாளங்கள் ஏழு வகைகளாக உள்ளன. இவற்றை சப்த தாளங்கள் என்றும் கூறுவர். சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும். "பாட்டின் கால அளவை சேர்த்து கையினாலாவது, வேறு கருவிகளினாலாவது தட்டுவது தாளமெனப்படும். இத்தாளத்தின் உற்பத்தியானது காலம், செய்கை, அளவு என்ற மூன்று முக்கியமான அம்சங்கள் இருக்கின்றன. இம்மூன்றும் ஒன்று சேர்ந்து இருக்கும் போதுதான் தாளத்தின் உற்பத்தி உண்டாகின்றது. காலம் என்பது கணம், இலம் முதலியன. செய்கை என்பது அடிக்கப்படும் இரண்டு பொருள்களின் சேர்க்கை. அளவென்பது செய்கைக்கு நடுவிலிருக்கும் இடைவெளியாகும்." லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). 1988. இராக, தாள வகைகளைத் தெரிந்து கொள்ளுங்கள். சென்னை: மணிமேகலை. ஏழு தாளங்கள் துருவ தாளம் மட்டிய தாளம் ரூபக தாளம் ஜம்பை தாளம் திரிபுடை தாளம் அட தாளம் ஏக தாளம் நாடிகள் தாளங்களின் அமைப்பு நாடிகள் அல்லது பிராணன் என்று சொல்லப்படும் 10 கூறுகளினால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த பத்து நாடிகள் பின்வருமாறு: நேரம் வழி செய்கை உறுப்பு எடுப்பு இனம் மாத்திரை இடைவெளி அமைப்பு விரிவு தாள உறுப்புக்கள் தாளத்துக்கு ஆறு அங்கங்கள் அல்லது உறுப்புக்கள் உண்டு. அவையாவன: லகு (|) அனுதிருதம் (U) திருதம் (O) குரு (8) புளுதம் (1/8) காகபாதம் (+) தாள உறுப்புகளின் விவரங்கள் லகு என்பது ஒரு தட்டும், அதை தொடர்ந்து வரும் விரல் எண்ணிக்கைகளும் சேர்ந்ததாகும். உள்ளங்கை கீழே பார்த்திருக்க வலது கையால் தொடையில் அல்லது மற்றக் கையில் ஒரு தட்டுத் தட்டி அதே கையின் சுட்டு விரலிலிருந்து தொடங்கி எண்ணப்படும். இந்த எண்ணிக்கை மாறுபடலாம். இங்கே ஒரு தட்டும், ஒவ்வொரு விரலெண்ணிக்கையும் சம கால அளவுகளைக் கொண்டன. இக் கால அளவு ஒரு அட்சரம் எனப்படும். வெவ்வேறான விரலெண்ணிக்கைகளின் அடிப்படையில் ஐந்து வகையான "லகு"க்கள் உள்ளன. இவை, திச்ர லகு - ஒரு தட்டும், இரண்டு விரலெண்ணிக்கைகளும் - 3 அட்சரங்கள் சதுச்ர லகு - ஒரு தட்டும், மூன்று விரலெண்ணிக்கைகளும் - 4 அட்சரங்கள் கண்ட லகு - ஒரு தட்டும், நான்கு விரலெண்ணிக்கைகளும் - 5 அட்சரங்கள் மிச்ர லகு - ஒரு தட்டும், ஆறு விரலெண்ணிக்கைகளும் - 7 அட்சரங்கள் சங்கீர்ண லகு - ஒரு தட்டும், எட்டு விரலெண்ணிக்கைகளும் - 9 அட்சரங்கள் அனுத்திருதம் ஒரு தட்டை மட்டும் கொண்டது. லகுவில் உள்ள முதல் அட்சரம் இதுவே. எனவே லகுவில் முதல் தட்டைப் போடும் விதமாகவே இதையும் போடவேண்டும். திருதம், இரண்டு அட்சர காலம் கொண்ட தாள உறுப்பு. ஒரு தட்டும், ஒரு வீச்சும் கொண்டது. வீச்சு என்பது தட்டிய பின் கையைத் தட்டிய இடத்திலிருந்து தூக்கி உள்ளங்கை மேல் நோக்கும் படி வீசுவதாகும். கையைத் திருப்பிப் புறங்கையால் தொடையில் அல்லது மற்றொருக் கைகையில் தட்டுவதும் உண்டு. இவற்றையும் பார்க்கவும் கர்நாடக சங்கீத தாளங்களின் பட்டியல் இந்திய இசை கர்நாடக இசை இராகம் மக்கள் ஆடல்கள் ஆதாரங்கள் பகுப்பு:தாளங்கள் பகுப்பு:ஆய கலைகள் அறுபத்து நான்கு
நாகரிகம்
https://ta.wikipedia.org/wiki/நாகரிகம்
thumb|right|360px|தூத்திக்குவான், மெக்சிகோவில் அமைந்துள்ள சந்திரனின் பிரமிட்டு. நாகரிகம் (civilization) என்பது, சிறிய கிராமக் குடியிருப்புகளில் வாழ்ந்துகொண்டு அல்லது நாடோடிகளாகத் திரிந்துகொண்டு உயிர் வாழ்வதற்காக வேட்டையாடலையோ அல்லது சிறிய நிலங்களில் விவசாயத்தையோ மேற்கொண்ட குலக்குழுக்கள் அல்லது பழங்குடிகள் போலன்றி, பலர் நகர வாழ்க்கையை மேற்கொண்டு விவசாயத்தைப் பயன்படுத்தும் நிலையிலுள்ள சிக்கலான சமூகங்களைக் குறிக்கும். இதற்கீடான ஆங்கிலச் சொல்லின் மூலமான civis என்னும் லத்தீன் மொழிச் சொல் "பிரஜை" அல்லது "நகரவாசி" என்னும் பொருள்கொண்டது. நவீன தொழிற் சமூகம் ஒரு நாகரிக சமூகத்தின் ஒரு வடிவமாகும். நாகரிக வளர்ச்சியின் அளவை, வேளாண்மை முன்னேற்றம், தொலைதூர வணிகம், தொழிற் சிறப்பாக்கம், சிறப்பு ஆளும் வகுப்பினர், நகரியம் என்பவற்றின் வளர்ச்சியைக் கொண்டே அளவிடப்படுகின்றது. இந்த அடிப்படையான கூறுகள் தவிர, நாகரிக வளர்ச்சியைப் பல்வேறு துணைக் கூறுகளின் சேர்மானங்களும் குறிக்கின்றன. இவற்றுள் வளர்ச்சியுற்ற போக்குவரத்து முறைமை, எழுத்து, நியம்படுத்திய அளவை முறை, நாணய முறை, சட்ட முறைமை, சிறப்பியல்பான கலை, கட்டிடக்கலை, கணிதம், மேம்பட்ட அறிவியல் விளக்கம், உலோகவியல், அரசியல் கட்டமைப்பு, ஒழுங்கமைக்கப்பட சமயம் போன்றவை அடங்கும். நாகரிகத் தோற்றம் குறித்த கருத்துகள் நாகரிகம் என்பது என்ன என்பதற்குத் தெளிவான அளவுகோல்கள் தேவை என்பது வரலாற்று அறிஞர்களின் வாதமாகும்.வெறும் தத்துவார்த்த விளக்கங்கள் மட்டும் போதாது என்றுகூறி அத்தகையோர் வேறு சில திட்டவட்டமான அளவுகோல்களை முன்வைக்க முனைந்தனர். வேட்டையாடுதல் மனிதகுலம் வேட்டையாடத் தொடங்கியபிறகே, மனிதன் கல், வெண்கலம், இரும்பு என வகை வகையான ஆயுதங்களைக் கண்டுபிடித்தான். இவற்றின் துணையோடு விவசாய வாழ்க்கையை மேற்கொண்டான். அதன் உபரி உற்பத்தி காரணமாக, மனிதன் பிறரோடு இணைந்து வாழும் சமுதாய வாழ்க்கைக்கு முன்னேற்றம் கண்டான். இதனால், ஆட்சி முறை, சட்டத் திட்டங்கள், சமுதாய நெறிகள் ஆகியவை மனித நாகரிகத்தில் தோன்றின. சமுதாய வாழ்க்கை இதன் ஆதரவாளர்கள், வேட்டையாடத் தொடங்கிய காலம்வரை பின்னோக்கிப் போகும் இந்த அணுகுமுறை சரியன்று என்று நம்பினர். இது கற்காலத்துக்கே கூட்டிகொண்டு போய்விடும் என்றனர்.மனித குலம் தோற்றுவித்த கூட்டு சமுதாய வாழ்க்கையே நாகரிகத்தின் தோற்றுவாயிலாகும். அச்சமுதாய வாழ்க்கையில், மனிதர்கள் தங்களுக்குள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து அவன் வழி நடக்க முற்பட்டனர். இதனால், தொழில் அடிப்படையிலான சமுதாயப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவினரும் தத்தம் தொழிலில் கவனத்தைச் செலுத்தினர். விவசாயம், வீடு கட்டுதல், கைவினைப் பொருட்கள் செய்தல், வணிகம் எனப் பல துறைகளில் மனிதகுலம் வளர்ச்சியும், முன்னேற்றமும் கண்டது. நகர வாழ்க்கை நகரங்கள் வந்தபிறகுதான் நாகரிகம் வந்தது என்பது இவர்கள் வாதமாகும்.லத்தீன் வார்த்தையான Civilis -ன் அடிப்படையிலானது. எழுத்துவடிவ மொழி சுமேரியாவில் கி.மு. 4000ல் க்யூனிபார்ம் என்னும் சித்திர எழுத்து முறை தோன்றியது. அதன்பின், கி.மு. 3500ல் எகிப்திலும், கி.மு. 1600ல் இஸ்ரேல், லெபனான் பகுதிகளிலும் அகரவரிசை எழுத்து மொழியும் நடைமுறைக்கு வந்தன. மனிதன் தன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வழி வகுத்தது எழுத்து வடிவ மொழிதான். எனவே, எழுத்துவடிவ மொழிதான் நாகரிகத் தொடக்கம் என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. இவை அனைத்தையும் அலசி ஆராய்ந்த கோர்டன் சைல்ட் (Gordon Childe) என்னும் இங்கிலாந்து நாட்டு வரலாற்று ஆசிரியர் பத்து அளவுகோல்களை முடிவு செய்தார். இவற்றின் அடிப்படையில்தான் நாகரிகங்களை அளக்கவும், ஒப்பிடவும் வேண்டும் என்று கூறினார். அவர் குறிப்பிடும் அம்சங்கள் இவைதாம்: 1) நகரக் குடியிருப்புகள் 2) தேர்ந்தெடுத்த சில தொழில்களில் தொழிலாளர்கள் வித்தகர்கள் ஆதல் 3) தேவைக்கு அதிகமான உற்பத்தி 4) வரையறுக்கப்பட்ட சமுதாயப் பிரிவுகள் 5) அரசாங்க அமைப்பு 6) பொதுமக்கள் பயன்படுத்துவதற்கான பெரிய கட்டடங்கள் 7) தொலைதூர வாணிபம் 8) கலைப் பொருட்கள் 9) எழுத்துக்கள், இலக்கியம் 10) கணிதம், வடிவியல் (Geometry) வானியல் ஆகிய துறைகளில் தேர்ச்சி. நதிக்கரை நாகரிகங்கள் உலகில் கூடுதலான நாகரிகங்கள் நதிக்கரையிலே ஆரம்பிக்கப்பட்டன. ஏனென்றால், விவசாயத்திற்குத் தேவையான வண்டல் மண்ணும், தேவையான அளவு நீர் கிடைத்ததாலும், காலநிலை சரியாக இருந்தததாலும் மற்றும் போக்குவரத்திற்கு இலகுவாக இருந்ததாலும் அவர்கள் நதிக் கரையோரங்களில் குடியேறினர். சில நதிக்கரை நாகரிகங்கள் யூப்பிரதீஸ் தைக்ரீஸ் இது கி.மு. 3500 தொடக்கம் கி.மு. 1500 வரை இருந்த நதிக்கரை நாகரிகமாகும்.இது மொசப்பதேமிய நாகரிகம் என்றும் சுமேரிய நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாகரிகம் ஈராக் நாட்டிற்குச் சொந்தமானது. நைல் நதி நாகரிகம் இது கி.மு.3100 தொடக்கம் 1070 வரை இருந்த நதிக்கரை நாகரிகமாகும். இது மிஸிர் நாகரிகம் என்றும் எகிப்திய நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாகரிகம் எகிப்து நாட்டிற்குச் சொந்தமானது. நாகரிகத்தின் பண்புகள் பொதுவாக நாகரிகங்கள் பின்வரும் சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன: விலங்கு வலு, சுழற்சிப் பயிர்ச் செய்கை மற்றும் நீர்ப்பாசனம் போன்ற விவசாயத் தொழில் நுட்பங்களின் உயர்நிலைப் பயன்பாடு. இது விவசாயிகளின் உயிர்வாழ்வுத் தேவைக்கு அதிகமாக மேலதிக உற்பத்திக்கு வழிசமைத்தது. தங்களுடைய உணவைத் தாங்களே உற்பத்தி செய்வதற்காக பெருமளவு நேரத்தைச் செலவு செய்யத் தேவையின்றியிருந்த குறிப்பிடத் தக்க அளவு மக்கட் பிரிவினர். இவர்கள் வேறு தொழில்களிலும், வணிகத்திலும் ஈடுபடக்கூடியதாக இருந்தது. இது "specialization of labor" எனக் குறிப்பிடப்படுகிறது. நிலையான குடியிருப்புகளில் இவ்வாறான உணவல்லாதன உற்பத்திசெய்வோரின் சேர்க்கை நகரங்கள் எனப்பட்டன. ஒரு சமூகப் படிநிலையமைப்பு. இது ஒரு பிரபுத்துவ குடும்பத்தின் அல்லது ஓர் இனக்குழுவின் தலைவன் (chieftain) மக்களை ஆளும் தலைமைமுறை அரசாகவோ (Chiefdom) அல்லது ஆளும் வர்க்கம் அரசாங்கத்தின் அல்லது அதிகார வர்க்க (bureaucracy) த்தின் ஆதரவுடன் நடத்தும் ஓர் அரச சமூகமாகவோ இருக்கலாம். அரச அதிகாரம் நகரங்களிலே குவிந்திருக்கும். சமுதாயத்தின் அன்றாட வாழ்க்கைக்கு நேரடியான ஆதாரமாக அமையாத பல்வேறு சிறப்புத் தொழில் துறை (specialized professions ) களின் உருவாக்கம். குறைந்தளவு மரபார்ந்த பாரம்பரியங்களைக் கொண்ட சமூகங்களைப் போலன்றி, ஒழுங்கமைந்த சமயம் மற்றும் கல்வி போன்ற சிக்கலான, மரபுசார் சமூக நிறுவனங்களின் உருவாக்கம். சிக்கலான பொருளாதாரப் பரிமாற்ற வடிவங்களின் வளர்ச்சி. இது பணம் மற்றும் சந்தைகளின் உருவாக்கத்துக்கு வழிவிடக்கூடிய வணிகத்தின் விரிவாக்கத்தை உள்ளடக்கும். எளிய சமூகங்களில் இருப்பதிலும் கூடிய பொருள்சார் உடைமைகளின் திரள்வு. உயிர் வாழ்வுக்காக விவசாயம் செய்யவேண்டிய தேவையில்லாதவர்கள் உருவாக்கும் கலைகளின் உயர் வளர்ச்சி. இது எழுத்துத் துறையையும் உள்ளடக்கும். இந்த வரைவிலக்கணத்தின்படி, சீனா போன்ற சில சமூகங்கள் நாகரிக சமூகங்கள் என்பது தெளிவு, அதுபோல புஷ்மென் போன்ற வேறு சமுதாயங்கள் அவ்வாறில்லை என்பதும் வெளிப்படையாகும். எனினும் இந்த வித்தியாசம் எப்பொழுதும் தெளிவாக இருப்பதில்லை. எடுத்துக் காட்டாக, பசிபிக் வடமேற்கில் பெருவளவு மீன்கள் கிடைப்பது, விவசாயம் இன்றியே மேலதிக உணவு வழங்கலை உறுதிசெய்தது. இங்கு வாழும் மக்கள் நிலையான குடியிருப்புக்களையும், சமூகப் படிமுறையையும், பொருட் செல்வத்தையும், உயர் நிலையிலான கலைகளையும் (அதிக புகழுடையதாக குலக்குறிக் கம்பங்கள்) தீவிர விவசாய வளர்ச்சி இல்லாமலேயே உருவாக்கினார்கள். அதே சமயம் தென்மேற்கு வட அமெரிக்காவின் புவேப்லோ (Pueblo) பண்பாட்டினர் உயர்நிலை விவசாயம், நீப்பாசனம், மற்றும் தாவோஸ் போன்ற நிலையான சமுதாயக் குடியிருப்புகளை உருவாக்கியிருந்தும், நாகரிகத்தோடு சம்பந்தப்பட்ட சிக்கலான நிறுவனங்கள் எதையும் உருவாக்கவில்லை. இன்று பல இனக்குழுச் சமூகங்கள் அரசுகளுக்குக் கீழ் அவ்வரசுகளின் சட்டங்களின் அடிப்படையில் வாழுகிறார்கள். நாகரிகத்தின் அரசியல் அமைப்பு அவர்களுடைய வாழ்க்கை முறையின் மேல் திணிக்கப்பட்டுள்ளது, எனவே அவர்களும் நாகரிக மற்றும் இனக்குழுச் சமூக அமைப்புகளுக்கு மத்தியிலான இடைநிலையினராகத்தான் இருக்கிறார்கள். எனவே மேலும் அச்சொட்டான, வரையறுக்கப்பட்ட வரைவிலக்கணம் தேவையாகலாம். நாகரிகத்தின் விளைவுகளை நாகரிகம் என்ற கருத்துருவுடன் குழப்பிக் கொள்ளக் கூடாது. நாகரிகம் என்பது, சட்டம் மற்றும் சொத்துரிமைகளின் அடிப்படையிலமைந்த மக்களிடையேயான அமைதிவழி ஊடாடல் (interaction) ஆகும். முதலில் உருவான நாகரிகம் சுமேரியர்களுடையதாகும். இவர்கள் கி.மு 3500 அளவில் நகரச் சமூகமாக உருவானார்கள். மனிதவரலாற்றின் சில நாகரீகங்கள் 300px|thumbnail|ஓர் எகிப்திய விவசாயி பழக்கப்பட்ட விலங்கினால் இழுக்கப்படும் கலப்பையைப் பயன்படுத்தி உழுகிறான். இவையிரண்டும் முதல் நாகரிகத்துக்கு வழிசமைத்த இரு விவசாயம் சம்பந்தப்பட்ட வளர்ச்சிகளாகும். ஆரம்ப கால நாகரிகங்கள் கற்கால நாகரிகம் தென்மேற்கு ஆசியாவின் லேவண்ட் பகுதியில் கி.மு.12000 உருவானதாக கருதப்படுகிறது.கி.மு. 8,000 முதல் 5,000 வரையிலான காலகட்டதில் நடந்த விவசாய புரட்சி காரணமாக தென்மேற்கு,தெற்கு ஆசியா, வடக்கு,மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா பகுதிகளில் நாகரிகங்கள் வளர்சியடைந்தது. வெண்கல கால நாகரிகம் வெண்கல காலத்தில் பின்வரும் பகுதிகளில் நாகரிகங்கள் உருவாகின.அவை மெசொப்பொத்தேமிய நாகரிகம் லேவண்ட்/மேற்கு செமிட்டிக் நாகரிகம் ஹிட்டைட் நாகரிகம் இந்திய நாகரிகம்: இரு வேறு சமூகங்களை கொண்டிருந்தது. சிந்துவெளி நாகரீகம் வேதகால நாகரிகம் மினோவன் சீன நாகரிகம் இரும்பு கால நாகரிகம் இக்காலத்தில் பொதுவாக இரும்பு அதிகமாக பயன்படுபட்டன இக்காலத்தில் வேறுபட்ட விவசாய நடைமுறைகள், மத நம்பிக்கைகள் மற்றும் கலை பாணிகளை உட்பட பல சமுதாய மாற்றங்கள் உருவானது. ஜெர்மன் வரலாற்று தத்துவவாதியான கார்ல் ஜாஸ்பெர்ஸ் பண்டைய நாகரிகங்கள் கி.மு. 800 முதல் கி.மு.200 வரை சீனா, இந்தியா, ஈரான் போன்ற நாடுகளில் இருந்த மத குருமார்கள், தீர்க்கதரிசிகள், மத சீர்திருத்தவாதிகள் மூலம் திசை மாறியது என குறிப்பிடார்.இவை பரவிய பகுதிகளாவன மத்தியதரை கடல் நாகரிகங்கள் கிரேக்க-உரோம நாகரிகம் மேற்கத்திய நாகரிகம்: பைசன்டைன் நாகரிகம் ஹெலினிஸ்டிக் நாகரிகம் மத்திய கிழக்கு நாகரிகங்கள் பாரசீக நாகரிகம் இரண்டாவது யூதம் கோயில் நாகரிகம் பண்டைய இந்திய நாகரிகம் பண்டைய சீனா (குயின் வம்சம், ஹான் வம்சம்) பண்டைய நாடோடிகள் (க்சியாங்னு, ஹன் இனத்தவர், கோக் துர்க் பேரரசு இடைக்கால நாகரிகங்கள் கிறித்தவ மக்கள் மற்றும் கிறித்தவ நாடுகள் மேற்கத்திய கிறித்துவம் கிழக்கு கிறித்துவம் இஸ்லாமிய நாகரிகம் இஸ்லாமிய பொற்காலம் கலிபா சோமாலியா அடல் சுல்தான்களின் பேரரசு அஜுரான் பேரரசு வாரசங்லி பேரரசு மங்கோலிய - துருக்கிய (தைமுரிட் பேரரசு) முகலாய இந்தியா ஒட்டோமான் பேரரசு ஆசியா சோழ பேரரசு, தமிழ்நாடு , இந்தியா பாண்டிய பேரரசு, தமிழ்நாடு , இந்தியா சேர பேரரசு, தமிழ்நாடு , இந்தியா பல்லவ அரசு, தமிழ்நாடு , இந்தியா சுய்,சீனா டாங்,சீனா சாங்,சீனா கொரியா மங்கோலிய பேரரசு(யுவான்) மிங்,சீனா நிலப்பிரபுத்துவ ஜப்பான் கன்ஃபூசிய வியட்நாம் தென்கிழக்காசிய நாகரிகம் சம்பா,அங்கூர் கம்போடியா அயுத்தயா இராச்சியம் , இடைகால தாய்லாந்து பேகன்,பர்மா மெசோஅமெரிக்க நாகரிகம்: டோல்டெக் ஆஸ்டெக் நாகரிகம் மாயா நாகரிகம் அண்டியன் நாகரிகம் சிமொர் கஸ்கோ/இன்கா பேரரசின் இராச்சியம் அய்மாரா ஆப்பிரிக்க நாகரிகங்கள் மாலி பேரரசின் சோங்காய் பேரரசு ஆஷாந்தி பேரரசு அபிசினியா பேரரசு பெனின் பேரரசு தற்கால நாகரிகங்கள் மேற்கத்திய உலகம் மேற்கு ஐரோப்பா வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மத்திய உலகம் கிழக்கு ஐரோப்பா ஸ்லாவிக் கிரீஸ் மத்திய கிழக்கு அரபு உலகம் ஈரானிய உலகம் இஸ்ரேல் துருக்கிய உலகம் கிழக்கத்திய உலகம் கிழக்கு ஆசியா ஜப்பானிய நாகரிகம் கொரியா தெற்கு ஆசியா தென்கிழக்கு ஆசியா மலாய் உலக சகாரா துணை நாகரிகம்,ஆப்பிரிக்கா மேற்கோள்கள் வெளியிணைப்புகள் நாகரிகத்துக்கு எதிரான கூட்டமைப்பு (Coalition Against Civilization) பகுப்பு:மானிடவியல் * பகுப்பு:பண்பாடு
குலக்குழு
https://ta.wikipedia.org/wiki/குலக்குழு
குலக்குழு (band society) என்பது மிகவும் எளிமையான மனித சமூக வடிவமாகும். ஒரு குலக்குழு பொதுவாக, கூட்டுக் குடும்பம் அல்லது குலம் என்பதிலும் பெரிதாயிராத ஒரு சிறிய உறவுமுறைக் குழுவை உள்ளடக்கியிருக்கும். குலக் குழுக்கள் ஒழுங்குமுறை சாராத தலைமைத்துவம் கொண்டவை. குலக்குழுவின் முதிர்ந்த உறுப்பினர்களின் வழிகாட்டல்களும், ஆலோசனைகளும் எதிபாக்கப்படுகின்றன ஆனால் சிக்கலான சமூகங்களில் காணப்படும் சட்டங்களோ பணியாதவர்களைப் பணியவைப்பதற்கான முறைகளோ கிடையாது. குலக்குழுக்களின் வழமைகள் எப்பொழுதும் வாய்வழியாகவே கையளிக்கப்படுகின்றன. ஒழுங்கமைவான நிறுவனங்கள் எதுவும் எரா அல்லது மிகக் குறைவாக இருக்கக்கூடும். சமயம் பொதுவாகக் குடும்ப மரபு, தனிப்பட்ட அனுபவம், அல்லது shaman இடமிருந்தான ஆலோசனையை அடியொற்றி இருக்கும். குலக்குழுச் சமூகங்கள் வழக்கமாக உணவுக்காக வேட்டை மற்றும் சேகரித்தலை மேற்கொள்வர். குலக்குழுக்கள் அளவின் அடிப்படையில் பழங்குடிகளிலிருந்து வேறுபடுகிறார்கள். பழங்குடிகள் பொதுவாகப் பல குடும்பங்களைக் கொண்ட பெரிய கூட்டத்தினராவர். பழங்குடிகள் குடித்தலைவன் (chieftain) அல்லது முதியோர்கள் போன்ற கூடுதலான சமூக நிறுவனங்களைக் கொண்டவர்கள். பழங்குடிகள் குலக் குழுக்களிலும் நிலையானவை; ஒரு சிறிய குழுவினர் விலகிவிடுவதன் மூலம் ஒரு குலக்குழு இல்லாது போய்விடலாம். உண்மையில் பல பழங்குடிகள், குலக்குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளார்கள். நவீன தேசிய அரசுகள் உலகின் எல்லா மூலைகளுக்கும் பரவுவதன் காரணமாக இன்று உண்மையான குலக்குழுக்கள் மிகக் குறைவாகவே எஞ்சியுள்ளன. வட அமெரிக்காவின் வடபகுதியில் வாழும் இனுயிட்கள், Great Basinஇன் சோஷோன்கள், தெற்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த புஷ்மென்கள், ஆஸ்திரேலியப் பழங்குடியினர் என்பவர்கள் முக்கியமான எடுத்துக்காட்டுகளாகும். பகுப்பு:சமூகவியல்
குலம் (மக்கள்)
https://ta.wikipedia.org/wiki/குலம்_(மக்கள்)
குலம் (clan) என்பது, உறவு முறைகளால்வம்சாவளி இணைக்கப்பட்டுள்ள ஒரு வம்சாவளி பாரம்பரியக் குழு "குலம்' ஆகும். பொதுவாகக் குலம் ஓரளவு பெரியது. குல வம்சாவளிகள் , பல தலைமுறைகளுக்கு முற்பட்ட ஒரு முன்னோனைக் கொண்டிருப்பார்கள் (உ.ம்: ஒரு பூட்டனையோ, கொள்ளுப் பாட்டனையோ அல்லது இன்னும் முற்பட்ட ஒரு முன்னோனையோ பொதுவாகக் கொண்டிருக்கலாம்). பாட்டன் பாட்டியை மட்டும் பொதுவாகக் கொண்ட உறவுமுறைக் குழுக்கள் கூட்டுக் குடும்பம் என்று அழைக்கப்படுமேயன்றி குலம் என்று அழைக்கப்படுவதில்லை. சில குலங்கள் மிகவும் பெரிதாகவும், பழமையானவையாகவும் இருப்பதால் அவைகள் "விதிக்கப்பட்ட" பொது முன்னோரைக் கொண்டிருப்பர்; அதாவது பொது முன்னோர் பற்றிய சான்றுகள் எதையும் கொண்டிராமல், கற்பனையான, குலத்தின் ஒருமைப்பாட்டுக்கான ஒரு குறியீடாகவே இருக்கும். சில சமூகங்களில் இந்த முன்னோர் மனிதராகக் கூட இருப்பதில்லை; ஒரு குலக்குறியாக மட்டும் இருக்கும். சில குலங்கள் தந்தைக்கால்வழிப்பட்டவை, அதாவது இதன் உறுப்பினர் ஆண் வழியால் உறவு கொண்டவர்கள். வேறு சில தாய்க்கால்வழிப்பட்டவை; இதன் உறுப்பினர் பெண் வழி உறவுமுறை உள்ளவர்கள். இன்னும் சில ஒரு பொது முன்னோரின், ஆண், பெண் இருவழியையும் சேர்ந்த சகலரையும் கொண்ட "இருவழி"யானவை. ஸ்கொட்லாந்திலுள்ள குலங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். ஒரு குலம், தந்தைக்கால்வழியோ, தாய்க்கால்வழியோ அல்லது இருவழிப்பட்டதோ என்பது குறிப்பிட்ட குலம் வாழும் பண்பாட்டின் உறவுமுறை விதிகளில் தங்கியுள்ளது. வெவ்வேறு பண்பாடுகளிலும், சந்தர்ப்பங்களிலும், ஒரு குலம் என்பது உறவுமுறையை அடிப்படையாகக் கொண்ட குழுக்களான குலக்குழுக்கள், பழங்குடிகள் தரும் அதே பொருளையே தரக்கூடும். எனினும் வழக்கமாக, குலம் என்பதை வேறுபடுத்தும் காரணி, அது பழங்குடி, குறுநிலம், அல்லது அரசு போன்ற பெரிய குழுக்களின் ஒரு பகுதியாகச் சிறிதாக இருப்பதேயாகும். இசுக்கொட்டிய, சீன, சப்பானியக் குலங்கள், முறையே அவ்வவற்றின் சமூகங்களில் உறவுமுறைக் குழுக்களாக இருப்பது இதற்கு எடுத்துக்காட்டாகும். பழங்குடிகள் குலக்குழுக்கள் என்பனகூட பெரிய சமூகங்களின் பகுதிகளாக இருக்கக்கூடும்; அராபியப் பழங்குடிகள் அராபிய சமூகத்தினுள் ஒரு பகுதியாகவும், ஒஜிப்வா குலக்குழுக்கள் ஒஜிப்வா பழங்குடியின் ஒரு பகுதியாகவும் உள்ளன. பெரும்பாலான குலங்கள் புறமண முறைமையைக் கொண்டவை, அதாவது, இக் குலங்களின் உறுப்பினர் தங்களுக்குள் மணம் செய்ய முடியாது. சில குலங்கள் தலைவன், தாய்த் தலைமை அல்லது தந்தைத் தலைமை போன்ற ஒரு தலைமைத்துவத்தையும் கொண்டிருக்கக்கூடும். தெற்காசியக் குலங்கள் சில thumb|1746 ஆம் ஆண்டு குலோடன் போர், அங்கு பிரித்தானியப் படையினர் இசுக்காட்லாந்துக் குலத்தவர்களின் இராணுவத்தைத் தோற்கடித்தனர். அகிர் பணியா பந்த் கோத்திரம் சாட் கத்ரி சத்திரியர் ரெட்டி மீனா மக்கள் முக்குலத்தோர் நாயர் பட்டிதர் பறையர் இராசபுத்திரர் செங்குந்தர் வேளாளர் யாதவர் மேற்கோள்கள் பகுப்பு:குடும்பம் பகுப்பு:மானிடவியல் பகுப்பு:சமூகவியல்
குலக்குறிக் கம்பம்
https://ta.wikipedia.org/wiki/குலக்குறிக்_கம்பம்
thumb|விக்டோரியா, பிரித்தானிய கொலம்பியாவிலுள்ள, குலக்குறிக் கம்பம் thumb|350px|குலக்குறி கம்பம், அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் குலக்குறிக் கம்பங்கள் (Totem poles), வட அமெரிக்க பசிபிக் கரையை அண்டி, பெரும்பாலும் மேற்கத்திய செஞ்செடார் (Western Redcedar) போன்ற, பெரிய மரங்களிலிருந்து செதுக்கப்படுபவையாகும். Totem pole இதனையும் காண்க குலக்குறிச் சின்னம் மேற்கோள்கள் வெளி இணைப்புகள் Native online.com Royal BC Museum, Thunderbird Park–A Place of Cultural Sharing, online interpretive tour Totem: The Return of the Gpsgolox Pole, a feature-length film by Gil Cardinal, National Film Board of Canada Article related to conservation of Pacific Northwest totem poles Totem Poles: Heraldic Columns of the Northwest Coast Essay by Robin K. Wright - University of Washington Digital Collection பகுப்பு:கலைகள் பகுப்பு:வழிபாடு பகுப்பு:பண்பாட்டு மானிடவியல்
கொழும்பு
https://ta.wikipedia.org/wiki/கொழும்பு
கொழும்பு (, ) இலங்கையின் சனத்தொகை அடிப்படையில் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை நகரமும் ஆகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியதாகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பசை நினைவுகூரும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396ஆகக் காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு, இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகும். கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50'இல் அமைந்துள்ளது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கொழும்பிலேயே அமைந்துள்ளது. இது தென்னாசியாவின் முதல் வானொலி நிலையமாகும். கொழும்பு பல்கலைக்கழகம், பௌத்த பாளி பல்கலைக்கழகம், தொழில்சார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் கொழும்பு நகர எல்லைக்குள்ளேயே அமைந்துள்ளன. மேலும், கொழும்பின் புறநகர்ப் பகுதியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், மொறட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பனவும் அமைந்துள்ளன. கொழும்பில் அமைந்துள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனம், கடற்றொழில் மற்றும் கடல்சார் பொறியியலுக்கான தேசிய நிறுவனம், சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவனம், அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரி, தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் என்பனவும் பட்டக்கல்வி வழங்கும் நிறுவனங்களாக இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தவிர சென்னைப் பல்கலைக்கழகம்,http://www.ideunom.ac.in மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொலைக்கல்வி படிப்பகங்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகங்களும், பட்டப்படிப்பு நிறுவனங்களும் அமைந்துள்ளன. சொற்பிறப்பு கொழும்பு என்ற பெயர் 1505ல் போர்த்துகீசியர்களால் முதலில் இந்நகரத்துக்கு வைக்கப்பட்டது எனக் கருதப்படுகிறது. இது பழைய சிங்களமான கொலன் தொட என்பதில் இருத்து எடுக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது. கொலன் தொட என்றால் கெலனி(களனி) ஆற்றின் துறைமுகம் என்று பொருள். கொழும்பு என்ற பெயர் சிங்கள பெயரான கொள-அம்ப-தொட்ட என்பதிலிலுருந்தும் வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் பொருள் மாந்தோப்புள்ள துறைமுகம் என்பதாகும் World Executive Colombo Hotels and City Guide கிறித்தோபர் கொலம்பசு நினைவாகக் கொழும்பு என்று பெயரிட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது . இத்தாலிய கடலோடியான கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானிய மன்னனின் சார்பாக அமெரிக்காவை கண்டுபிடிக்கும் முன் பல ஆண்டுகள் போர்ச்சுகலில் தங்கியிருந்தார். அவரின் போர்த்துகீசிய பெயர் கிறிஸ்டாவோ கொழும்பு. இவர் மேற்கு நோக்கிப் பயணித்து இந்தியாவை அடைய திட்டமிட்டார். அச்சமயத்தில் கிழக்கு நோக்கிப் பயணித்த போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோ ட காமா இந்தியாவின் கிழக்குகரையில் உள்ள கோழிக்கோடு நகரை 1498 மே 20ல் அடைந்தார். அதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே கொலம்பசு 1492 அக்டோபர் 12ல் அமெரிக்காவை கண்டுபிடித்தார். அச்சமயத்தில் போர்த்துகிசீயரான லொரன்சோ டி அல்மெய்டா காலி துறைமுகத்தை 1505ல் அடைந்தார்.Moved . Colonialvoyage.com. Retrieved on 2011-10-17. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைய சிங்கள இலக்கண நூலான சிடசங்கரவ கொழம்ப என்பதற்கு துறைமுகம் அல்லது கோட்டை என்று பொருள் கூறுகிறது. அதனால் கொழம்ப என்பதே கொழும்புவுக்கான மூலமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. வரலாறு கொழும்பு இயற்கையான ஓர் துறைமுகத்தைப் பெற்றிருப்பதால், 2000 வருடங்களுக்கு மேலாக இது கிரேக்கர், பாரசீகர், அராபியர் மற்றும் சீன வணிகர்களால் அறியப்பட்டிருந்தது. 14ம் நூற்றாண்டில் இத்தீவிற்கு பணயம் செய்த இப்னு பதூதா இதனை "கலன்பு" எனக்குறிப்பிட்டார். வர்த்தகத்தை முதன்மை ஆதாரமாகக் கொண்ட பல்லின இசுலாமியர்கள், 8ம் நூற்றாண்டுகளில் கொழும்பில் தங்கி வாழத் தொடங்கினர். அவர்களின் வியாபாரத்திற்கும், சிங்கள இராசதானிகளுக்கும் வெளியுலகுக்கும் இடையிலான வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும் துறைமுகம் உதவியது. அவர்களின் சந்ததியர் தற்போது உள்ளூர் இலங்கைச் சோனகருடன் ஒன்றாகிவிட்டனர். போத்துக்கேயர் காலம் லொரன்சோ டி அல்மெய்டா தலைமையிலான போத்துக்கேய நாடுகாண் பயணிகள் 1505இல் முதலாவதாக இலங்கையை வந்தடைந்தனர். அவர்கள் கோட்டை அரசன் எட்டாம் பராக்கிரமபாகுவுடன் (1484–1508) கறுவாய் வர்த்தகத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டமையால், கொழும்பு உட்பட்ட தீவின் கரையோரப் பகுதியில் வர்த்தகம் செய்ய அவர்களுக்கு வழியேற்பட்டது. ஒல்லாந்தர் காலம் 1638இல் ஒல்லாந்து கண்டியில் அரசாண்ட இரண்டாம் இராசசிங்க மன்னனுடன் ஒப்பந்தம் செய்தனர். அதன்படி, போர்த்துக்கேயருக்கு எதிரான போரில் அரசனுக்கு உதவியும், இலங்கைத் தீவில் பாரிய வர்த்தக பொருட்களின் ஏகபோக உரிமையும் பரிமாறப்பட்டன. போர்த்துக்கேயர் ஒல்லாந்தரையும், கண்டியினரையும் எதிர்த்தபோதும், அவர்களின் பலமிக்க இடங்கள் மெதுவாக 1639 ஆரம்பத்தில் தேற்கடிக்கப்பட்டன. ஆங்கிலேயர் காலம் 1796இல் பிரித்தானியர் கொழும்பைக் கைப்பற்றினர். இது பிரித்தானிய படைகளின் புறக்காவலாகக் கண்டி இராட்சியம் கைப்பற்றும் 1815 இல் வரை காணப்பட்டது. ஆங்கிலேயர் கொழும்பை தங்கள் புதிதாக உருவாக்கிய பிரித்தானிய இலங்கையின் முடிக்குரிய மண்டல தலைநகராக்கினர். போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் கொழும்பை முக்கிய படை அரணாகப் பாவித்ததுபோல் அல்லாமல், ஆங்கிலேயர் வீடுகளையும் மக்கள் கட்டுமானங்களையும் கோட்டையினைச் சுற்றிக் கட்டி, தற்போதைய கொழும்பு நகரை உருவாக்கினர். புவியியல் மற்றும் காலநிலை கொழும்பின் புவியியல் நிலமும் நீரும் கலந்த ஒன்றாகும். நகரத்தில் பல கால்வாய்கள் காணப்படுகின்றன. நகரத்தின் இதயப்பகுதியில் 160 ஏக்கர் பரப்பில் உள்ள பெய்ரா ஏரி காணப்படுகின்றது.The lake in the middle of Colombo , Lanka Library இவ்வேரி கொழும்பு நகரை பாதுகாக்க குடியேற்றவாதிகளால் பயன்படுத்தப்பட்டது. நகரின் வடக்கு வடகிழக்கு எல்லையானது களனி ஆற்றினால் வரையறுக்கபடுகிnறது. கொழும்பு கோப்பென் வகைப்பாட்டு முறையில் வெப்பமண்டலத்துக்குரிய காலநிலையை பெற்றுள்ளது. ஆண்டு முழுதும் அதிக வெப்பமில்லா சீரான காலநிலையை பெற்றுள்ளது. மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகமாக இதன் வெப்பநிலை 31 டிகிரி செல்சியசு அளவுக்கு இருக்கும் . பருவக்காலமான மே-ஆகத்து வரையும் அக்டோபர்-சனவரி வரையும் அதிக மழைப்பொழிவை பெறும். ஆண்டு சராசரி மழையளவு 2,400 மிமீ ஆகும் Lowest temperature recorded was 15 degrees Celsius.Weatherbase . மக்கள் தொகையியல் கொழும்பு பல்லின, பல கலாசார நகரம். கொழும்பின் சனத்தொகை சிங்களவர், தமிழர், இலங்கைச் சோனகர் போன்றோரைக் கொண்டு காணப்படுகின்றது. அத்துடன் சீனர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்துக்காரர், மலாயர், இந்திய வம்சாவழியினர் மற்றும் குறிப்பிட்டளவு வெளிநாட்டவர்களான ஐரோப்பியர்களும் எனப் பல்வேறுபட்ட இனக் குழுக்களையும் கொண்டு காணப்படுகின்றது. இது ஒரு சனத்தொகை கூடிய 642,163 மக்கள் வாழும் நகரமாகும். 1866 இல் கிட்டத்தட்ட 80,000 பேர் காணப்பட்டனர்.Port of Colombo. World Port Source. Retrieved on 2011-10-17. 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது.Department of Census and Statistics, Census 2001 , Additional source . The totals are calculated through enumerations made from Colombo Divisional Secretariat and the Thimbirigasyaya Divisional Secretariat, which is also part of Colombo Municipal Council +இலஇனம்சனத்தொகைமொத்த %1சிங்களவர்265,65741.362இலங்கைத் தமிழர்185,67228.913இலங்கைச் சோனகர்153,29923.874இலங்கையின் இந்தியத் தமிழர்13,9682.175இலங்கை மலேயர்11,1491.736பறங்கியர்5,2730.827கொழும்புச் செட்டி7400.118பரதர்4710.079மற்றவர்கள்5,9340.9610மொத்தம்642,163100 அரசு thumb|புதிய பரோக் பாணியில் கட்டப்பட்டுள்ள பழைய நாடாளுமன்ற கட்டிடம் தற்போது குடியரசுத் தலைவரின் செயலகமாக விளங்குகிறது. thumb|கறுவாத் தோட்டத்திலுள்ள கொழும்பு நகர மன்றம். மாநகராட்சி கொழும்பு தனக்கெனத் தனி அரசியலமைப்புக் கொண்ட மாநகராட்சியாகும். மேயரும் மாநகர மன்ற உறுப்பினர்களும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாநகராட்சித் தேர்தல்கள்மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக வலது சாரி ஐக்கிய தேசியக் கட்சி (UNP), ஆட்சியிலிருந்து வருகிறது. 2006ஆம் ஆண்டில் இக்கட்சியின் வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டு Colombo UNP list rejected, BBC News, February 16, 2006 இக்கட்சியின் சார்பு பெற்ற சுயேட்சைக் குழுவினர் தேர்தல்களில் வென்றனர்.Independent group wins CMC, BBC News, May 21, 2006 உவைசு மொகமது இமிதியசு கொழும்பின் மேயராக நியமிக்கப்பட்டார்.Rotational mayors as Colombo gets trishaw driver as her 1st citizen, Sunday Times, May 28, 2006 மாநகராட்சி கழிவுநீரகற்றல், சாலை பராமரிப்பு, கழிவு மேலாண்மை சேவைகளை வழங்கி வருகிறது. குடிநீர், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்புச் சேவைகளுக்குத் தொடர்புடைய தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, இலங்கை மின்சார சபை மற்றும் பல்வேறு தொலைத்தொடர்புச் சேவை நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. தேசியத் தலைநகரம் போர்த்துக்கேய, டச்சு, பிரித்தானியக் குடியேற்றப்பகுதிகளாக இருந்த கடலோரப் பகுதிகளின் தலைநகரமாக 1700 களிலிருந்து இருந்து வந்துள்ளது. 1815இல் பிரித்தானியர்கள் கண்டி உடன்பாட்டின்படி முழுமையானத் தீவிற்கும் தலைநகரமாக விளங்கியது. 1980 களில் நிருவாகத் தலைநகரை ஸ்ரீ ஜெயவர்தனபுரம் கோட்டைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டது. இதன்படி இலங்கைப் பாராளுமன்றமும் பல அமைச்சகங்களும் துறை அலுவலகங்களும் இப்பகுதியில் கட்டப்பட்ட புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்டன. இருப்பினும் இன்றளவிலும் பல அரசு அலுவலகங்கள் கொழும்பிலேயே உள்ளன.The Supreme Court Of Sri Lanka , Justice Ministry வலயங்கள் கொழும்பு 15 வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: அஞ்சல் வலயம் உள்ளடங்கிய பகுதிகள் கொழும்பு 1 கோட்டை கொழும்பு 2 கொம்பனித் தெரு மற்றும் ஒன்றிய இடம் கொழும்பு 3 கொள்ளுப்பிட்டி கொழும்பு 4 பம்பலப்பிட்டி கொழும்பு 5 ஹெவ்லொக் நகரம் மற்றும் கிருலப்பனை கொழும்பு 6 வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை கொழும்பு 7 கறுவாத் தோட்டம் கொழும்பு 8 பொரல்லை கொழும்பு 9 தெமட்டகொடை கொழும்பு 10 மருதானை, மாளிகாவத்தை மற்றும் பஞ்சிகாவத்தை கொழும்பு 11 புறக்கோட்டை கொழும்பு 12 புதுக்கடை மற்றும் வாழைத் தோட்டம் கொழும்பு 13 கொட்டாஞ்சேனை மற்றும் புளூமெண்டால் கொழும்பு 14 கிராண்டுபாஸ் கொழும்பு 15 முகத்துவாரம், மோதரை, மட்டக்குளி மற்றும் மாதம்பிட்டி பொருளாதாரம் பெரிய கூட்டுத்தாபனங்களின் தலைமையகங்கள் கொழும்பில் காணப்படுகின்றன. சில வேதியியல், ஆடைகள், கண்ணாடி, சீமெந்து, தோல் பொருட்கள், தளபாடம் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றின் தொழிற்கூடங்கள் இங்கு காணப்படுகின்றன. தெற்காசியாவின் இரண்டாவது உயரமான கட்டடமான உலக வர்த்தக மையம் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த 40 மாடி இரட்டைக் கோபுரக் கட்டடம் நகரத்தின் நரம்பு போன்ற கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. உட்கட்டமைப்பு thumb|உலக வர்த்தக மையத்தின் இரு கோபுரங்கள் மற்றும் வரலாற்றுப் புகழ் மிக்க கார்கீல்சு கட்டிடத்தின் தோற்றம் கொழும்பு ஒரு நவீன நகரத்தின் பெரும்பாலான வசதிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, கொழும்பின் உட்கட்டமைப்பு மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. மின்சாரம், தண்ணீர் மற்றும் போக்குவரத்து என்பன ஓரளவு நல்ல தரத்தில் உள்ளது. இலங்கையின் முக்கிய வணிக வளாகங்களில் பெரும்பாலானவை இங்கு உள்ளன. பல ஆடம்பரமான விடுதிகள், கூடலகங்கள் மற்றும் உணவகங்களும் இங்கு அமைந்துள்ளன. சமீப காலங்களில் நிலத்தின் விலை அதிகளவில் உயர்ந்ததன் காரணமாக அடுக்குமாடி வீடுகள் பல்கிப் பெருகி விட்டது. கொழும்பு துறைமுகம் right|thumb|200px|கொழும்பு துறையில் உள்ள கொள்கலன்கள் இலங்கையின் பெரிய துறைமுகம் இந்நகரிலேயே அமைந்துள்ளது. குடியேற்ற காலத்தில் கொழும்பு துறைமுக நகரமாகவே அமைக்கப்பட்டது. இலங்கை கடற்படையின் கடற்படைத்தளம் இத்துறைமுகத்தில் உள்ளது. 2008ல் இத்துறைமுகம் 3.75 மில்லியன் எண்ணிக்கையுள்ள 20 அடி நீளமுள்ள கொள்கலன்களை கையாண்டது. இது 2007ல் கையாண்ட அளவை விட 10.6% அதிகமாகும். 3.75 மில்லியன் கொள்கலன்களில் 817,000 இலங்கையுடையதாகும், மற்றவை இங்கு வைத்துக் கப்பல்களுக்கு இடையே மாற்றப்பட்டதாகும். கொள்கலன்களை கையாளும் திறனைத் துறைமுகம் முழுஅளவில் நெருங்கிவிட்டாதல் இடப்பற்றாக்குறையை சமாளிக்க துறைமுகத்தின் தெற்குப்பகுதியில் விரிவாக்கப்பணி நடந்து வருகிறது. .Containerisation International, p.26, January 8, 2009 போக்குவரத்து கொழும்பில் பொது போக்குவரத்து நல்ல முறையில் உள்ளது. பேருந்துகளை அரசும் தனியாரும் நடத்துகின்றனர். மூன்று முதன்மையான பேருந்து முனையங்கள் பேட்டை பகுதியில் உள்ளன. பாசுடின் மாவத்த தொலைதூர பேருந்துகளுக்கானது. மத்திய, குணசிங்கபுரா முனையங்கள் உள்ளூர் பேருந்துக்களுக்கானது. மத்திய பேருந்து நிறுத்தம் பேருந்துகளுக்கான மையமாகத் திகழ்கிறது. கொழும்பு தொடருந்து மூலம் நாட்டின் பல இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. கோட்டை தொடருந்து நிலையம் தொடருந்துகளுக்கான மையமாகத் திகழ்கிறது. 1970 வரை நகரில் டிராம் போக்குவரத்து இருந்தது. வாடகை மகிழுந்து, தானியங்கி மூவுருளி உந்து (மூன்று சக்கர வண்டி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது) போன்றவையும் நகர போக்குவரத்துக்கு உதவுகின்றன. தானியங்கி மூவுருளி உந்து தனிப்பட்டவர்களால் நடத்தப்படுகின்றன, வாடகை மகிழுந்து தனியார் நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. இரத்மலானை விமான நிலையம் அனைத்து உள்ளூர் விமான சேவைகளையும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் நகரிற்கு வழங்குகிறது. சாலைகள் ஏ-1 நெடுஞ்சாலை கொழும்பினை கண்டியுடன் இணைக்கிறது. ஏ-2 நெடுஞ்சாலை கொழும்பினை காலியுடன் இணைக்கிறது. ஏ-4 நெடுஞ்சாலை கொழும்பினை இரத்தினபுரியுடன் இணைக்கிறது. பேருந்து தொடருந்து பிரதான பாதை - கொழும்பிலிருந்து பதுளை வரை. தெற்குப் பாதை - கொழும்பிலிருந்து மாத்தறை வரை. வடக்குப் பாதை - கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையானது, இது பொல்காவல சந்தியில் பிரதான பாதை இருந்து விலகிச்செல்கிறது. தற்போது கொழும்பு - வவுனியா வரை மட்டுமே செயற்படுகிறது. புத்தளம் பாதை - கொழும்பிலிருந்து புத்தளம் வரை. களனிப் பள்ளத்தாக்குப் பாதை - கொழும்பிலிருந்து எட்டியாந்தோட்டை வரையானது, தற்போது அவிசாவெலை வரை மட்டுமே செயற்படுகிறது. மன்னார் பாதை (முன்னதாக இலங்கை-இந்தியப்பாதை)- கொழும்பிலிருந்து தலைமன்னார் வரையானது, மதவாச்சிய சந்தியிலில் வடக்குப் பாதையிலிருந்து பிரிந்து செல்கிறது - செயற்பாட்டில் இல்லை. படகுச் சேவைகள் ஓர் ஆடம்பரப் படகான ஸ்கோஷியா பிரின்ஸ், இந்தியாவின் தூத்துக்குடிக்கு ஒரு படகு சேவையை நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான படகுச் சேவைகள் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பிக்கப்பட்டுள்ளது.Tuticorin-Colombo ferry sets sail – Times Of India. Timesofindia.indiatimes.com (2011-06-14). Retrieved on 2011-10-17. கல்வி கொழும்பு கல்வி நிறுவனங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டவை. கொழும்பில் பல பொதுப் பாடசாலைகளில் சில அரசாங்கத்திற்கும் சில தனியாருக்கும் சொந்தமானவை. இவற்றில் பல பிரித்தானிய ஆட்சிக்காலமான 1800களைச் சேர்ந்தவை. கட்டடக்கலை கொழும்பு நூற்றாண்டு கால மற்றும் பலதரப்பட்ட வடிவங்களையும் கொண்டு பல கட்டடக்கலைக் கொண்டு காணப்படுகின்றது. பல குடியேற்ற கால போத்துக்கேய, ஒல்லாந்து, பிரித்தானிய கட்டடங்களுடன் உள்நாட்டு பெளத்த, இந்து, இசுலாமிய, இந்திய மற்றும் தற்கால கட்டடக்கலைகள் கொண்ட கட்டடங்கள் காணப்படுகின்றன. நகரத்தின் மையப்பகுதியான "கோட்டை" பகுதியில் பலதரப்பட்ட கட்டடங்களைக் காணலாம். இங்கு புதிய வானளாவி மற்றும் 1700களில் கட்டப்பட்ட வரலாற்றுக் கட்டடங்களையும் காணலாம். பண்பாடு வருடாந்த கலாசார நிகழ்வுகள் கொழும்பின் மிக முக்கிய பிரதான கொண்டாட்டம் புத்தரின் பிறப்பு, ஞானமடைதல் மற்றும் இறப்பு ஆகிய எல்லாம் ஒரேநாளில் நிகழும் சம்பவ தினமாகும். சிங்களத்தில் இது வெசாக் என அழைக்கப்படுகிறது. கிறித்தவம் கொழும்பு நகரில் உள்ள கிறித்தவ சபைகளுள் கத்தோலிக்க சபை ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. அங்குதான் இலங்கையின் ஒரே உயர்மறைமாவட்டமான கொழும்பு உயர்மறைமாவட்டம் அமைந்துள்ளது. அதன் கீழ் தனித்தனி ஆயர்களின் கண்காணிப்பில் உள்ள பிற மறைமாவட்டங்கள் பின்வருமாறு: அனுராதபுரம் பதுளை யாழ்ப்பாணம் மட்டக்களப்பு மன்னார் திருகோணமலை இரத்தினபுரி கண்டி காலி சிலாபம் குருணாகல் முதலில் இலங்கை முழுவதும் இந்தியாவின் கொச்சி மறைமாவட்டத்தின் பகுதியாக இருந்தது. 1834, திசம்பர் 3ஆம் நாளில் இலங்கையில் கொழும்பை மையமாகக் கொண்டு ஒரு தனி மறைமாவட்டத்தைத் திருத்தந்தை 16ஆம் கிரகோரி நிறுவினார். அம்மறைமாவட்டம் "சிலோன் மறைமாவட்டம்" என்னும் பெயரைப் பெற்றது. ஒரு சில ஆண்டுகளுக்குப் பின், 1845, பெப்ருவரி 17ஆம் நாள் சிலோன் மறைமாவட்டம் "கொழும்பு மறைமாவட்டம்" என்னும் பெயரைப் பெற்றது. 1886, செப்டம்பர் முதல் நாள் கொழும்பு மறைமாவட்டம் "உயர்மறைமாவட்டம்" (Archdiocese) என்னும் நிலைக்கு உயர்த்தப்பட்டு, பிரதேச முதன்மை மறைமாவட்டம் ஆயிற்று. அது திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது. பின்னர், திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் கொழும்பு உயர்மறைமாவட்டம் என்னும் பெயரை 1944, திசம்பர் 6ஆம் நாள் "சிலோனின் கொழும்பு உயர்மறைமாவட்டம்" (Archdiocese of Colombo in Ceylon) என்று மாற்றினார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின், திருத்தந்தை ஆறாம் பவுல் மீண்டும் பெயரை "கொழும்பு உயர்மறைமாவட்டம்" என்று மாற்றினார். அப்பெயரே இன்றுவரை நிலைத்துள்ளது. கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் கர்தினால் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் (Albert Malcolm Ranjith Patabendige Don) ஆவார். இவர் 2009இல் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்டால் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். 2010, நவம்பர் 20ஆம் நாள் மால்கம் ரஞ்சித் கர்தினால் நிலைக்கு உயர்த்தப்பட்டார். கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பரப்பளவு 3836 ச.கி.மீ (1482 ச.மைல்) ஆகும். அந்நிலப்பரப்பில் வாழ்கின்ற 5,760,148 மக்களுள் 652,200 பேர் கத்தோலிக்கர் (11.3%) என்று வத்திக்கானிலிருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ ஆண்டேடு (Annuario Pontificio) (2009) கூறுகிறது. கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் முதன்மைக் கோவில் புனித லூசியாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதனுள் "இலங்கை அன்னை மரியா" (Basilica of Our Lady of Lanka) தேவத்தா பகுதியிலும் புனித அந்தோனியார் தேசிய திருத்தலம் கொச்சிக்கடையிலும் உள்ளன. சகோதரி நகரங்கள் நாடு நகரம் மாநிலம்/மாகாணம் ஆண்டிலிருந்து சீனா 25px சாங்காய் 25px சாங்காய் மாநகராட்சி 2003 உருசியா 25px சென் பீட்டர்ஸ்பேர்க் 25px வடமேற்கு கூட்டாட்சி மாவட்டம் 1997 ஐக்கிய இராச்சியம் 25px லீட்சு 25px இங்கிலாந்து இவற்றையும் பார்க்கவும் கொழும்பு பல்கலைகழகம் கொழும்பு பங்கு சந்தை இலங்கை வானொலி வேத்தியர் கல்லூரி சாஹிரா கல்லூரி மேற்கோள்கள் மேலதிக வாசிப்பு பின்வரும் ஆங்கில நூல்கள் கொழும்பு பற்றிய பல தகவல்களைக் கொண்டுள்ளன. Changing Face of Colombo (1501–1972): Covering the Portuguese, Dutch and British Periods, By R.L. Brohier, 1984 (Lake House, Colombo) The Port of Colombo 1860–1939, K. Dharmasena, 1980 (Lake House, Colombo) Decolonizing Ceylon: Colonialism, Nationalism, and the Politics of Space in Sri Lanka, By Nihal Perera, 1999 (ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்) வெளியிணைப்புக்கள் Colombo Municipal Council, History of the City Colombo guide for travellers Aboutcolombo.lk, Everything about Colombo city City Hospitality of the Hotels in Colombo Colombo பகுப்பு:ஆசியத் தலைநகரங்கள் * பகுப்பு:முன்னாள் தேசிய தலைநகரங்கள் பகுப்பு:இலங்கை மாவட்டத் தலைநகரங்கள்
தீவு
https://ta.wikipedia.org/wiki/தீவு
thumb|250px|ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஆயிரந்தீவுகளில் ஒன்றான இதயத் தீவு, நியூயார்க் தீவு அல்லது கடலிடைக் குறை என்பது நான்கு புறமும் கடல், ஏரி, ஆறு போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்ட ஒரு நிலப்பகுதியைக் குறிக்கும். உலகில் உள்ள தீவுகளுள் கிரீன்லாந்து மிகப் பெரியதாகும். இலங்கை, அந்தமான் நிக்கோபர் போன்றவையும் தீவுகளாகும். பிற நிலப்பகுதிகளுடன் பாலங்கள் போன்ற செயற்கையான நிலத்தொடர்புகளை உருவாக்கினாலும், குறித்த நிலப்பகுதி தொடர்ந்தும் தீவு என்றே கருதப்படும். சிங்கப்பூர், புங்குடுதீவு போன்றவை இத்தகைய தீவுகள் ஆகும். உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டும் 45,000 தீவுகள் உள்ளன. தீவுகள் பொதுவாக கண்டத்தீவு, கடல் தீவு என இரு வகைப்படும். செயற்கையான தீவுகளும் உள்ளன. வகைகள் கண்டத் தீவுகள் thumb|247x247px|பிரித்தானியா தீவு ஏதேனும் ஒரு கண்டத்தை அடுத்துள்ள தீவுகளுக்குக் கண்டத்தீவுகள் என்று பெயர். இத்தீவுகள் ஒரு காலத்தில் கண்டத்துடன் இணைந்திருந்தவையாகும். இலங்கை, பிரிட்டன், சப்பானியத் தீவுகள் இவ்வகையைச் சேர்ந்தவை. கடல் தீவுகள் left|thumb|200px|ஹவாய்- எரிமலைத் தீவு கண்டத்துக்கு மிகத் தொலைவில் கடலில் காணப்படுபவை கடல் தீவுகள் ஆகும். கடலின் அடியிலுள்ள எரிமலையிலிருந்து வெளிப்படும் பாறைக் குழம்பு, மேலும் மேலும் படிவதன் காரணமாக வளர்ந்து, கடலுக்கு மேலே எழும்பி உருவானவை இத்தகைய தீவுகளாகும். ஹவாய்த் தீவு, டகீட்டித் தீவு, சமோவா தீவு ஆகியவை இத்தகைய தீவுகளாகும். பவளத் தீவு கடலில் இறந்த பவளப் பூச்சிகளின் கூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து சிறிது சிறிதாக வளர்ந்து உண்டாவது பவளத் தீவு ஆகும். தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள 'வேக் தீவு' ஒரு பவளத் தீவு ஆகும். right|thumb|230px|வேக் தீவு மண் தீவு ஆற்றின் நடுவிலோ கழிமுகத்திலோ வண்டல் மண் படிந்து கொண்டே வந்து ஒரு தீவாக மாறுவதும் உண்டு. அளவியல் கிரீன்லாந்து 21 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய தீவாகும். உலகின் சிறிய கண்டமான ஆத்திரேலியா 76 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட கண்டமாகும். இது நான்கு புறங்களும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் இதைத் தீவென்று அழைக்காமல் கண்டமென்றே அழைக்கின்றனர்.http://www.worldislandinfo.com/CONTISLAND.html இதிலிருந்து எது தீவு, எது கண்டம் என்பதற்கு அளவியல் வரைமுறை இல்லை என அறியலாம்.Brown, Mike. How I Killed Pluto and Why It Had It Coming. New York: Random House Digital, 2010. Royle, Stephen A. A Geography of Islands: Small Island Insularity. Psychology Press, 2001. pp. 7-11 உலகில் பரவலாக அறியப்படும் சில தீவுகள் தீவுகள் அமைவிடம் பரப்பளவு/ச.கி.மீ கிரீன்லாந்து வட அட்லாண்டிக் கடல் 8.40,000 நியூ ஃபின்லாந்து வட அட்லாண்டிக் கடல் 42,031 பாபுவா நியூகினி கிழக்கு இந்தியப் பெருங்கடல் 3,06,000 இலங்கை இந்தியப் பெருங்கடல் 65,610 சாவா இந்தியப் பெருங்கடல் 48,900 செவிபசு இந்தியப் பெருங்கடல் 69,000 சுமத்திரா இந்தியப் பெருங்கடல் 1,65,000 போர்னியோ கிழக்கு இந்தியப் பெருங்கடல் 2,80,100 மடகாசுக்கர் கிழக்கு இந்தியப் பெருங்கடல் 2,26,658 டாஃபின் ஆர்க்டிக் கடல் 1,95,928 விக்டோரியா ஆர்க்டிக் கடல் 83,897 எலியசுமேர் ஆர்க்டிக் கடல் 75,767 பிரிட்டன் வடகடல் 84,200 கியூபா கரீபியன் கடல் 44,218 ஹான்ஷு பசிஃபிக் பெருங்கடல் 87,805 வடக்கு நியூசிலாந்து பசிஃபிக் பெருங்கடல் 44,035 இவற்றையும் பார்க்கவும் பேக்கர் தீவு தீவு நாடு உலகின் தீவு நாடுகளின் பட்டியல் வெளி இணைப்புகள் உலகின் முக்கிய பெரிய தீவுகள். அமைந்துள்ள இடங்கள் - நிலா முற்றம் கட்டுரை மேற்கோள்கள் பகுப்பு:நில அமைப்புகள்
யாழ்நகரப் பாடசாலைகள்
https://ta.wikipedia.org/wiki/யாழ்நகரப்_பாடசாலைகள்
right|thumb|250px|ஒரு யாழ்ப்பாண தமிழ் இந்து கலவன் பாடசாலை பின்வருவன யாழ்ப்பாண நகரப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலைகளாகும். ஆண்கள் பாடசாலைகள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி யாழ் சம்பத்தரிசியார் கல்லூரி யாழ் பரி யோவான் கல்லூரி பெண்கள் பாடசாலைகள் வேம்படி மகளிர் கல்லூரி சுண்டிக்குளி மகளிர் கல்லூரி யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி யாழ் திருக்குடும்பக் கன்னியர் மடம் கலவன் பாடசாலைகள் கொக்குவில் இந்துக் கல்லூரி யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் (வண்ணார்பண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரி) வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம் யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டப் பாடசாலைகள்